என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மனைவி பிரிந்து சென்ற வேதனையில் தொழிலாளி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
புதுச்சேரி:
மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 50). கட்டிட தொழிலாளி. இவர் தனது மனைவியை பிரிந்து புதுவை அருகே பெரிய காட்டுப்பாளையத்தில் உள்ள தனது அக்காள் எல்லம்மாள் வீட்டில் தங்கி முதலியார்பேட்டையில் கட்டிட வேலை செய்து வந்தார்.
இதற்கிடையே மனைவி பிரிந்து சென்றதால் ஏழுமலை விரக்தியில் இருந்து வந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த ஏழுமலை இன்று காலை காராமணிக்குப்பம் வந்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் முதலியார் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ஆனால், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வேன் இல்லாததால் போலீசார் திண்டாடி போனார்கள்.
இதற்கிடையே நேற்று மாலை உழந்தை ஏரி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் ரெயில் மோதி இறந்து கிடந்தார்.
தண்டவாளத்தை கடந்த போது, அவர் ரெயில் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்