search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவி பிரிந்து சென்ற வேதனையில் தொழிலாளி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
    X

    மனைவி பிரிந்து சென்ற வேதனையில் தொழிலாளி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

    மனைவி பிரிந்து சென்ற வேதனையில் கட்டிட தொழிலாளி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 50). கட்டிட தொழிலாளி. இவர் தனது மனைவியை பிரிந்து புதுவை அருகே பெரிய காட்டுப்பாளையத்தில் உள்ள தனது அக்காள் எல்லம்மாள் வீட்டில் தங்கி முதலியார்பேட்டையில் கட்டிட வேலை செய்து வந்தார்.

    இதற்கிடையே மனைவி பிரிந்து சென்றதால் ஏழுமலை விரக்தியில் இருந்து வந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த ஏழுமலை இன்று காலை காராமணிக்குப்பம் வந்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் முதலியார் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    ஆனால், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வேன் இல்லாததால் போலீசார் திண்டாடி போனார்கள்.

    இதற்கிடையே நேற்று மாலை உழந்தை ஏரி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் ரெயில் மோதி இறந்து கிடந்தார்.

    தண்டவாளத்தை கடந்த போது, அவர் ரெயில் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×