என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூத்தாநல்லூர் அருகே மதுக்கடையை அகற்ற கோரி நள்ளிரவு வரை சாலை மறியல்
Byமாலை மலர்27 May 2017 2:54 PM GMT (Updated: 27 May 2017 2:54 PM GMT)
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே மதுக்கடையை அகற்ற கோரி நள்ளிரவு வரை மனித நேய மக்கள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பாண்டுகுடி என்ற இடத்தில் சாலையோரத்தில் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் மது அருந்துபவர்கள் அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு இடையூறு செய்து வந்தனர். இதனால் இந்த கடையை அகற்ற வேண்டும் என நேற்று முன்தினம் மாலை கடையின் முன்பு திரண்டு மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்களிடம் அதிகாரிகள் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாலை 5 மணி அளவில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரவு 9 மணி வரை அதிகாரிகள் தரப்பில் முறையான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இதனால் சாலை மறியலை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் போராட்டக்காரர்கள் பாண்டுகுடி மதுக்கடையில் இருந்து எழுந்து லெட்சுமாங்குடி 4 வழி சாலையில் அமர்ந்து மறியலை தொடர்ந்தனர். இந்த மறியல் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்தது. இதனால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வசந்தராதேவி மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாண்டுகுடியில் உள்ள மதுக்கடை இனிமேல் திறக்கப்படமாட்டாது என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பாண்டுகுடி என்ற இடத்தில் சாலையோரத்தில் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் மது அருந்துபவர்கள் அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு இடையூறு செய்து வந்தனர். இதனால் இந்த கடையை அகற்ற வேண்டும் என நேற்று முன்தினம் மாலை கடையின் முன்பு திரண்டு மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்களிடம் அதிகாரிகள் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாலை 5 மணி அளவில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரவு 9 மணி வரை அதிகாரிகள் தரப்பில் முறையான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இதனால் சாலை மறியலை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் போராட்டக்காரர்கள் பாண்டுகுடி மதுக்கடையில் இருந்து எழுந்து லெட்சுமாங்குடி 4 வழி சாலையில் அமர்ந்து மறியலை தொடர்ந்தனர். இந்த மறியல் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்தது. இதனால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வசந்தராதேவி மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாண்டுகுடியில் உள்ள மதுக்கடை இனிமேல் திறக்கப்படமாட்டாது என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X