search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல் அருகே கார் கவிழ்ந்து பெண் பலி
    X

    நாமக்கல் அருகே கார் கவிழ்ந்து பெண் பலி

    சேலத்தில் இருந்து நாமக்கல் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக கவிழ்ந்ததில் பெண் பரிதாபமாக உயிரிந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் அருகில் உள்ள எர்ணாபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம். இவரது மனைவி கலைச்செல்வி (39). இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் காரில் சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு வந்தனர்.

    அப்போது நாமக்கல் அருகில் உள்ள செல்லப்பம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்தனர். அப்போது அங்குள்ள மேம்பாலத்தில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக நிலைத்தடுமாறி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரில் இருந்து கலைச்செல்வி, பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். கலைச்செல்வியை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும்வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் காயம் அடைந்த பன்னீர்செல்வத்தை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×