என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பெங்களூர் ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி
Byமாலை மலர்14 Oct 2017 7:10 AM GMT (Updated: 14 Oct 2017 7:10 AM GMT)
அனைவருக்கும் விருப்பமான பிரியாணியில் பல்வேறு வெரைட்டி உள்ளது. இன்று பெங்களூர் ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1 கிலோ
அரிசி - 1 கிலோ
எண்ணெய் - 100 கிராம்
தக்காளி - அரை கிலோ
வெங்காயம் - அரை கிலோ
தயிர் - 1 கப்
சிகப்பு மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
நெய் - 150 கிராம்
இஞ்சி விழுது - 1 1/2 ஸ்பூன்
பூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன்
கொத்தமமல்லி தழை - 1 கப்
புதினா - 1 1/2 கப்
ப. மிள்காய் - 10
பட்டை பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு
தனியா தூள் - 1 தேக்கரண்டி
கலர் பொடி - 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் - 1.
செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பாதி வெங்காயத்தை போட்டு பொன்னிறமா பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின்னர் அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஏலக்காய் போட்டு தாளித்ததும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் பாதி கொத்தமல்லி, புதினாவை போட்டு கிளறவும்.
அடுத்து பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு வதங்கியவுடன் சிக்கன், தயிர், தனியாபொடி, 1/2 மூடி எலுமிச்சை சாறு தக்காளி மீதி கொத்தமல்லி, புதினாவையும் போட்டு வேக விடவும்.
சிக்கன் நன்றாக வெந்ததும் எண்ணெய் பிரிந்து வரும் போது 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் சூடு நீர் ஊற்றி கொதிக்கவிடவும்
தண்ணீர் நன்றாக கொதித்ததும் கலர் பொடி, உப்பு போடவும்.
அடுத்து அரிசியை போட்டு நன்றாக கிளறவும். அரிசி பாதி வேகும் வரை தீயை வேகமாக வைக்க வேண்டும்.
அரிசி முக்கால் பகுதி வெந்தவுடன் தீயை குறைக்கவும் பாதி எலுமிச்சை சாறு ஊற்றவும். சட்டி்யை சுற்றிலும் துணி கட்டி மூடி தம்மில் போடவும். 10 நிமிடங்கள் கழித்து சுவையான பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிக்கன் - 1 கிலோ
அரிசி - 1 கிலோ
எண்ணெய் - 100 கிராம்
தக்காளி - அரை கிலோ
வெங்காயம் - அரை கிலோ
தயிர் - 1 கப்
சிகப்பு மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
நெய் - 150 கிராம்
இஞ்சி விழுது - 1 1/2 ஸ்பூன்
பூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன்
கொத்தமமல்லி தழை - 1 கப்
புதினா - 1 1/2 கப்
ப. மிள்காய் - 10
பட்டை பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு
தனியா தூள் - 1 தேக்கரண்டி
கலர் பொடி - 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் - 1.
செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பாதி வெங்காயத்தை போட்டு பொன்னிறமா பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின்னர் அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஏலக்காய் போட்டு தாளித்ததும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் பாதி கொத்தமல்லி, புதினாவை போட்டு கிளறவும்.
அடுத்து பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு வதங்கியவுடன் சிக்கன், தயிர், தனியாபொடி, 1/2 மூடி எலுமிச்சை சாறு தக்காளி மீதி கொத்தமல்லி, புதினாவையும் போட்டு வேக விடவும்.
சிக்கன் நன்றாக வெந்ததும் எண்ணெய் பிரிந்து வரும் போது 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் சூடு நீர் ஊற்றி கொதிக்கவிடவும்
தண்ணீர் நன்றாக கொதித்ததும் கலர் பொடி, உப்பு போடவும்.
அடுத்து அரிசியை போட்டு நன்றாக கிளறவும். அரிசி பாதி வேகும் வரை தீயை வேகமாக வைக்க வேண்டும்.
அரிசி முக்கால் பகுதி வெந்தவுடன் தீயை குறைக்கவும் பாதி எலுமிச்சை சாறு ஊற்றவும். சட்டி்யை சுற்றிலும் துணி கட்டி மூடி தம்மில் போடவும். 10 நிமிடங்கள் கழித்து சுவையான பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X