search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் 19-ந்தேதி நடக்கிறது
    X

    ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் 19-ந்தேதி நடக்கிறது

    தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவைகளான திருப்பாவாடை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 19-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. அன்று அதிகாலை 2.30 மணியில் இருந்து 3.30 மணிவரை சுப்ரபாத சேவை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து தோமால சேவை, அர்ச்சனை, நைவேத்தியம் ஆகியவை ஏகாந்தமாக நடக்கிறது. நைவேத்தியம் செய்த பொருட்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை தங்க வாசல் அருகில் கண்டா மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்பசாமியை சர்வ பூபால வாகனத்திலும், உற்சவர் சேனாதிபதி விஸ்வசேனரை தங்க திருச்சி வாகனத்திலும் எழுந்தருள செய்து ஆஸ்தானம் நடக்கிறது.

    தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி கோவிலில் 19-ந்தேதி ஆர்ஜித சேவைகளான திருப்பாவாடை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. அன்று மாலை நேரத்தில் சகஸ்ர தீபலங்கார சேவை வழக்கம்போல் நடக்கிறது. இந்தத் தகவலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×