என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் 19-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்12 Oct 2017 3:50 AM GMT (Updated: 12 Oct 2017 3:50 AM GMT)
தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவைகளான திருப்பாவாடை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 19-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. அன்று அதிகாலை 2.30 மணியில் இருந்து 3.30 மணிவரை சுப்ரபாத சேவை நடக்கிறது.
அதைத்தொடர்ந்து தோமால சேவை, அர்ச்சனை, நைவேத்தியம் ஆகியவை ஏகாந்தமாக நடக்கிறது. நைவேத்தியம் செய்த பொருட்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை தங்க வாசல் அருகில் கண்டா மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்பசாமியை சர்வ பூபால வாகனத்திலும், உற்சவர் சேனாதிபதி விஸ்வசேனரை தங்க திருச்சி வாகனத்திலும் எழுந்தருள செய்து ஆஸ்தானம் நடக்கிறது.
தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி கோவிலில் 19-ந்தேதி ஆர்ஜித சேவைகளான திருப்பாவாடை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. அன்று மாலை நேரத்தில் சகஸ்ர தீபலங்கார சேவை வழக்கம்போல் நடக்கிறது. இந்தத் தகவலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து தோமால சேவை, அர்ச்சனை, நைவேத்தியம் ஆகியவை ஏகாந்தமாக நடக்கிறது. நைவேத்தியம் செய்த பொருட்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை தங்க வாசல் அருகில் கண்டா மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்பசாமியை சர்வ பூபால வாகனத்திலும், உற்சவர் சேனாதிபதி விஸ்வசேனரை தங்க திருச்சி வாகனத்திலும் எழுந்தருள செய்து ஆஸ்தானம் நடக்கிறது.
தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி கோவிலில் 19-ந்தேதி ஆர்ஜித சேவைகளான திருப்பாவாடை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. அன்று மாலை நேரத்தில் சகஸ்ர தீபலங்கார சேவை வழக்கம்போல் நடக்கிறது. இந்தத் தகவலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X