search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கஷ்டங்களை கடவுளிடம் சொல்வது ஏன்?
    X

    கஷ்டங்களை கடவுளிடம் சொல்வது ஏன்?

    என் மனமறிந்து நான் யாருக்கும் எந்தக்கேடும் செய்யவில்லையே, அப்படியிருந்தும் ஏன் இந்தக் கஷ்டம்?' என்றால், முற்பிறவியில் செய்ததன் பலனை அனுபவிப்பீர்கள்.
    நம் பாவத்துக்கு பலனாக கஷ்டங்கள் வருகின்றன. ""என் மனமறிந்து நான் யாருக்கும் எந்தக்கேடும் செய்யவில்லையே, அப்படியிருந்தும் ஏன் இந்தக் கஷ்டம்?'' என்றால், முற்பிறவியில் செய்ததன் பலனை அனுபவிப்பீர்கள்.

    அப்படியானால் கஷ்டம் நிஜம் என்று ஆனபிறகு, கடவுளை வணங்குவானேன்! அதை அனுபவித்து விட்டு போய்விடுவோமே என்றால், கஷ்டத்தை தாங்கும் சக்தியில்லை.

    புற்றுநோய் வந்து குடம் குடமாய் ரத்தம் வெளியேறுகிறது. மரணபயம் ஆட்டிப்படைக்கிறது. இந்த சமயத்தில் நாம் கடவுளை துணைக்கு அழைக்கலாம். எப்படி தெரியுமா?

    நீலகண்டதீட்சிதர், அன்னை மீனாட்சியை துணைக்கு அழைத்த மாதிரி! ஆனந்த ஸாகர ஸ்தவம் என்ற தனது நூலில், அவர், ""அம்மா மீனாட்சி, உன்னிடம் எதையும் சொல்லவே வேண்டாம்.

    சகலமும் தெரிந்தவள் நீ. ஆனாலும், உன்னிடம் கஷ்டங்களை வாய்விட்டு சொல்லாவிட்டால், மனம் புண்ணாகிறது.

    வாய்விட்டுச் சொல்லிவிட்டாலோ தற்காலிகமாக ஒரு ஆறுதலாக, தெம்பாக இருக்கிறது. அதனாலேயே உனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் நான் என் குறைகளைச் சொல்கிறேன்,'' என்கிறார்.

    நாமும், நம் கஷ்டங்களை தெய்வத்திடம் முறையிட்டு மனதில் இருக்கும் பாரத்தைக் குறைப்போம். மனச்சாந்தி பெறுவோம்.
    Next Story
    ×