என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கோதண்டராமசாமி கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
Byமாலை மலர்11 Sep 2017 3:28 AM GMT (Updated: 11 Sep 2017 3:28 AM GMT)
நாகை மாவட்டம், பொறையாறு கோதண்டராமசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம், பொறையாறில் 500 ஆண்டுகள் பழமையான பெருமாள்கோவில் என்ற கோதண்டராமசாமி கோவில் உள்ளது. இங்கு கோதண்டராமசாமி, சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகிய சாமிகள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இந்த கோவிலில் 140 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து விழாக்குழுவை அமைத்தனர். இதைத்தொடர்ந்து திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 7-ந் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 8-ந் தேதி நித்யபூஜை, யாகசாலை பிரவேசம், திருமஞ்சணம், 2-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. நேற்று முன்தினம் நித்யபூஜை மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று காலை 6 மணிக்கு நித்யபூஜை, மகா பூர்ணாகுதி மற்றும் 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மேள-தாளத்துடன் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது. காலை 7.20 மணிக்கு பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்றபோது கோவில் கோபுரத்தை சுற்றி கருடன் வட்டமிட்டது. இதனால் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.
திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 7-ந் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 8-ந் தேதி நித்யபூஜை, யாகசாலை பிரவேசம், திருமஞ்சணம், 2-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. நேற்று முன்தினம் நித்யபூஜை மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று காலை 6 மணிக்கு நித்யபூஜை, மகா பூர்ணாகுதி மற்றும் 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மேள-தாளத்துடன் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது. காலை 7.20 மணிக்கு பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்றபோது கோவில் கோபுரத்தை சுற்றி கருடன் வட்டமிட்டது. இதனால் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X