என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தஞ்சை பெரியகோவிலில் சிறப்பு அபிஷேகம்
Byமாலை மலர்27 July 2017 3:40 AM GMT (Updated: 27 July 2017 3:40 AM GMT)
தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் உள்ள வராகிஅம்மனுக்கு ஆடிப்பூரத்தையொட்டி அபிஷேகம் செய்யப்பட்டு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.
மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் நேற்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் பெரியகோவிலில் உள்ள 108 சிவலிங்கங்கள், முருகன், வருணபகவான் உள்பட 456 சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பெரியகோவில் வளாகத்தில் உள்ள வராகிஅம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் அம்மனுக்கு தாழம்பூ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தஞ்சை கீழவாசலில் உள்ள வடபத்ர காளியம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு சிலர் வளையல்களை வழங்கினர்.
அதேபோல் தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள கோடியம்மன் கோவில், தஞ்சையை அடுத்த வல்லம் ஏகவுரியம்மன்கோவில், மானம்புச்சாவடி பிள்ளையார்கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கும் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் பெரியகோவிலில் உள்ள 108 சிவலிங்கங்கள், முருகன், வருணபகவான் உள்பட 456 சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பெரியகோவில் வளாகத்தில் உள்ள வராகிஅம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் அம்மனுக்கு தாழம்பூ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தஞ்சை கீழவாசலில் உள்ள வடபத்ர காளியம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு சிலர் வளையல்களை வழங்கினர்.
அதேபோல் தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள கோடியம்மன் கோவில், தஞ்சையை அடுத்த வல்லம் ஏகவுரியம்மன்கோவில், மானம்புச்சாவடி பிள்ளையார்கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கும் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X