search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவானைக்காவல் கோவிலில் வருகிற 28-ந்தேதி ஆடி தெப்பத்திருவிழா
    X

    திருவானைக்காவல் கோவிலில் வருகிற 28-ந்தேதி ஆடி தெப்பத்திருவிழா

    திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம் 17-ந்தேதி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தெப்பத்திருவிழா 28-ந்தேதி நடைபெற உள்ளது.
    திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்-அகிலாண்டேசுவரி கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூர உற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர விழா கொடியேற்றம் ஜூலை 17-ந்தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. இதனை தொடர்ந்து அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தெப்பத்திருவிழா வருகிற 28-ந்தேதி மாலை நடைபெற உள்ளது. மேலும் ஆடி வெள்ளிக் கிழமை பக்தாகள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் சிறப்பு ஏற் பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    Next Story
    ×