search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடங்கியது
    X

    தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடங்கியது

    தஞ்சை பெரியகோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஆண்டு தோறும் நடத்தப்படும் ஆஷாட நவராத்திரி பெருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    தஞ்சை பெரியகோவிலில் வராகி அம்மனுக்கு தனியாக சன்னதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா நேற்றுகாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து கணபதி, வராகி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் வராகி அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படும்.

    அதன்படி முதல்நாளான நேற்றுமாலையில் வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று(சனிக்கிழமை) வராகி அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) குங்கும காப்பு அலங்காரமும், 26-ந் தேதி சந்தன காப்பு அலங்காரமும், 27-ந் தேதி தேங்காய்ப்பூ அலங்காரமும் செய்யப்படுகிறது.



    28-ந் தேதி மாதுளை அலங்காரமும், 29-ந் தேதி நவதானிய அலங்காரமும், 30-ந் தேதி வெண்ணெய் காப்பு அலங்காரமும் நடக்கிறது. அடுத்த ஜூலை மாதம் 1-ந் தேதி கனிவகை அலங்காரமும், 2-ந் தேதி காய்கறி அலங்காரமும், 3-ந் தேதி மலர் அலங்காரமும் செய்யப்படுகிறது. மேலும் 3-ந் தேதி மாலை 5 மணிக்கு கேரள ஜெண்டை வாத்தியம், நாதஸ்வரம் முழங்க கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் வாணவேடிக்கையுடன் நான்கு ராஜவீதிகளில் வராகி அம்மன் வீதிஉலா நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 8 மணிக்கு சிறப்பு வராகி ஹோமமும், 10 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது. தினமும் மாலை 6.30 மணிக்கு இசைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    Next Story
    ×