என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா 29-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்21 Jun 2017 4:36 AM GMT (Updated: 21 Jun 2017 4:36 AM GMT)
நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தேரோட்டம் 7-ந்தேதி நடைபெறுகிறது.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆனிப்பெருந்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவிழா வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது. காலை 7.30 மணி அளவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு சுவாமி, அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா செல்கின்றனர். இதை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா செல்கின்றனர். மேலும் சுவாமி சன்னதி வளாகத்தில் உள்ள நின்றசீர்நெடுமாறன் கலையரங்கில் தினமும் மாலையில் பக்தி கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
வருகிற ஜூலை மாதம் 6-ந்தேதி மாலை 4 மணிக்கு சுவாமி கங்காள நாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா செல்கிறார். அன்று இரவு 12 மணிக்கு நடராஜ பெருமான் பச்சை சாத்தி வீதிஉலாவும், இரவு சுவாமி தங்க கைசால பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் தேர் கடாட்ச வீதிஉலா நடைபெறுகிறது.
திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. காலை 8.45 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
அன்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது. காலை 7.30 மணி அளவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு சுவாமி, அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா செல்கின்றனர். இதை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா செல்கின்றனர். மேலும் சுவாமி சன்னதி வளாகத்தில் உள்ள நின்றசீர்நெடுமாறன் கலையரங்கில் தினமும் மாலையில் பக்தி கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
வருகிற ஜூலை மாதம் 6-ந்தேதி மாலை 4 மணிக்கு சுவாமி கங்காள நாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா செல்கிறார். அன்று இரவு 12 மணிக்கு நடராஜ பெருமான் பச்சை சாத்தி வீதிஉலாவும், இரவு சுவாமி தங்க கைசால பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் தேர் கடாட்ச வீதிஉலா நடைபெறுகிறது.
திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. காலை 8.45 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X