search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காக்காயந்தோப்பு முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
    X

    காக்காயந்தோப்பு முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

    காக்காயந்தோப்பு முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    புதுவை காக்காயந் தோப்பில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 73-ம் ஆண்டு செடல் உற்சவ விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து உபயதாரர்கள் சார்பில் தினமும் இரவு சாமி வீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத் தேரோட்டம் இன்று காலை நடந்தது. தேரோட்டத்தை ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடை பெற்றது. பின்னர் காலை 6 மணிக்கு சாமி வீதி உலா நடந்தது.

    இன்று மாலை 3 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது. இதில், ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.

    இன்று மாலை 6.30 மணிக்கு ஆடல்- பாடலும், கலை நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. நாளை (சனிக் கிழமை) காலை 8 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவமும், இரவு 7 மணிக்கு தெப்பல் உற்சவமும் நடக் கிறது. மேலும் ஆடல்- பாடல் நிகழ்ச்சியும் நடைபெறு கிறது.

    விழாவுக்கான ஏற் பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சங்கர், துணை தலைவர் ரத்தினவேலு, செயலாளர் நடராஜன், பொருளாளர் மேகநாதன், உறுப்பினர் அரிகிருஷ்ணன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.


    Next Story
    ×