search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கெடுபலன்கள் வராமல் தடுக்கும் ராகு கவசம்
    X

    கெடுபலன்கள் வராமல் தடுக்கும் ராகு கவசம்

    அவரவர் ஜாதகப்படி ராகு வழங்கும் பலன்கள் எதிர்மறையாக அமையுமானால் அவற்றின் வீரியத்தைக் குறைக்கவும், கெடுபலன்கள் செய்யாத படி ஸ்லோகங்களைப் பாராயணம் செய்யலாம்.
    அவரவர் ஜாதகப்படி ராகு வழங்கும் பலன்கள் எதிர்மறையாக அமையுமானால் அவற்றின் வீரியத்தைக் குறைக்கவும், கெடுபலன்கள் அதிகரிக்காதபடியும் செய்ய அந்த கிரகங்களை மகிழ்விக்கும் சில ஸ்லோகங்களைப் பாராயணம் செய்யலாம்.  

    வாகு சேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு
    அமுதம் ஈய
    ஏகி நீ நடுவிருக்க இருசிரம் அற்று வெய்ய

    பாகுசேர் மொழியாள் பங்கன் பரன் கையில்
    சிரமே பெற்ற
    ராகுவே உன்னைத் துதித்தேன்
    ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!
    அரவெனும் ராகு ஐயனே போற்றி
    கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி

    ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
    ராகுக் கனியே ரம்யா போற்றி.
    வெம்கடு உமிழ்முகம் விளங்கு
    பாம்பு உருப் பொங்கொளி மணி
    முடி பூண்ட பொற்சிடம் அங்கு அமை வடிவொடும்
    அன்பர் போற்றி செய் சிங்கிகை அளித்திடு சேயைப்
    போற்றுவோம்.

    பொலியு நீலாம்பரத்தோன்
    பொற்பு உறு சிரம் புரக்க
    நலிவுறும் உலகம் போற்றும்
    நாயகன் நெற்றி காக்க
    மலிபுகழ் இராகு நாட்டம்

    வரம்படப் புரக்க கன்னம்
    மெலிவுறும் பாதி மேனி
    வித்தகம் மேவிக்காக்க
    நஞ்சு உமிழ் பவள வாயான்
    நாசிகை புரக்க கண்டம்
    விஞ்சு எழில் சூலபாணி

    விழைவொடு புரக்க
    செவ்வாய்
    வஞ்சி சிம்ஹிகை தன்
    மைந்தன்
    மருவினன் புரக்க கண்டம்
    துஞ்சு உறு கண்டம் உண்போன்

    தொலைவறப் புறந்து காக்க
    பொன்பொலி புயங்கநாதன்
    புயவரை புரக்க பூங்கை
    மின்பொலி நீலமாலை
    வித்தகன் புரக்க மார்பம்
    மன்பொலி தவமே என்றும்
    வடிவு எனக் கொள்வோன் காக்க

    தென்பொலி உந்தி என்றும்
    செழுமதி உண்போன் காக்க
    நயம்படு விகடச் செல்வன்
    நற்கடி தடம் புரக்க
    பயம் படுவானோர் போற்றும்

    பண்ணவன் தொடை புரக்க
    வயம்படு முழந்தாள் கோல
    மலிசுவர்ப் பானு காக்க
    சயம்படு நாக வேந்தன்
    தளாவறு கணைக்கால் காக்க

    விண்ணெழு கிரகநாதன்
    விளங்கு ஒளிப்பரடு காக்க
    மன்னறு மடி இரண்டும்
    மலி புகழ்க் கோர ரூபன்
    நண்ணினன் புரந்து காக்க

    நயக்குமென் அங்கமெல்லாம்
    தண்ணிய நீலச் சாந்தம்
    தரிப்பவன் புரந்து காக்க
    தண்ணமரும் புனலாடிச் சந்திமுதல்
    கடல் அனைத்தும் தவறாது ஓம்பி
    விண்ணமரும் மதிவிழுங்கும் ராகுகவசம்

    புகல்வோன் விரும்பும் உள்ளத்து
    எண்ணம் வரும் அவை பெறுவன் புகழ்பெறுவன்
    செல்வம் எலாம் எய்தி வாழ்வன்
    மண்ணமரு நோய் அகன்று வளர்ந்து ஏறும்
    பேராயுள் மருவி வாழ்வன்.

    Next Story
    ×