என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடங்கல் ஏற்படுபவர்களுக்கான பரிகாரங்கள்
Byமாலை மலர்21 Sep 2017 9:27 AM GMT (Updated: 21 Sep 2017 9:27 AM GMT)
செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் நடைபெறக் காலதாமதமானால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும். என்னென்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் நடைபெறக் காலதாமதமானால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும். என்னென்ன பரிகாரம் செய்யலாம் என்ற விபரம் வருமாறு:-
செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருப்பதால் நல்லவை நடைபெறும். 41 செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். விரத நாள் அன்று அதிகாலை எழுந்து நீராடி சிவப்பு கலரில் உடை உடுத்தி, செவ்வாய் கிரகத்திற்கு செண்பகப்பூ, சிவப்பு அலரி ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
விரதம் பூர்த்தி செய்யும் தினத்தன்று ஐந்து பேருக்கு விருந்து அளிக்க வேண்டும். அவர்களுக்கு சிவப்பு நிற ஆடை, செம்புச் சொம்பு, தம்ளர் மற்றும் தாழ்பூலத்துடன் தட்சணையும் அளித்து அவர்களை வணங்கி ஆசி பெற வேண்டும்.
செவ்வாய் தோஷமுள்ள பெண்ணுக்குத் திருமணம் தடங்கலாகிக் கொண்டே வந்தால் வளர்பிறையில் வந்த செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நீராடி சிவப்பு ஆடை உடுத்தி மாங்கலயத்தை தெய்வத்தின் முன் மஞ்சள் சரட்டில் கோத்து வைத்து வணங்கி எடுத்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.
செவ்வாய்க்கிழமை முழுவதும் மாங்கல்யத்தை அவிழ்க்கக் கூடாது. மறுநாள் காலை நீராடி நெற்றியில் குங்குமமிட்டு தெய்வத்தை வணங்கி மாங்கல்யத்தை அவிழ்த்து ஏதாவது ஓர் ஆலயத்தின் உண்டியலில் சிறிது காணிக்கை சேர்த்து சமர்ப்பித்து விட வேண்டும். சிவப்பு நிற ஆடையை யாருக்காவது தானம் செய்து விட வேண்டும். இவ்விதம் செய்தால் தடையின்றி விரைவாக திருமணம் நடைபெற்று விடும்.
செவ்வாய்க்கிழமையில் வரும் மிருகசீரிட நட்சத்திரத்தில் (மிருகசீரிடம் நட்சத்திரம் சகல தோசங்களுக்கும் அப்பாற்பட்டது) அவரவர்கள் சக்திக்கேற்ப, துவரை தானம் செய்ய வேண்டும். துவரையை ஒரு சிவப்புத் துணியில் முடிந்து, வெற்றிலை பாக்கு, மஞ்சள், பூ, பழம், தேங்காய், வெல்லம் இவற்றை ஒரு தட்டில் வைத்து துர்கா பூஜை செய்து ஒரு ஏழையை அழைத்து பூஜையில் முழு மனதுடன் ஈடுபட்டு, பூஜை முடிந்தவுடன், தட்டில் உள்ளவற்றை தானமாகக் கொடுத்து காணிக்கையும் அதில் வைத்து கொடுக்க வேண்டும். அந்த ஏழைக்கு உணவு கொடுத்து அனுப்ப வேண்டும். இந்த பரிகாரத்தால் உடனே திருமணம் கை கூடும்.
செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருப்பதால் நல்லவை நடைபெறும். 41 செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். விரத நாள் அன்று அதிகாலை எழுந்து நீராடி சிவப்பு கலரில் உடை உடுத்தி, செவ்வாய் கிரகத்திற்கு செண்பகப்பூ, சிவப்பு அலரி ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
விரதம் பூர்த்தி செய்யும் தினத்தன்று ஐந்து பேருக்கு விருந்து அளிக்க வேண்டும். அவர்களுக்கு சிவப்பு நிற ஆடை, செம்புச் சொம்பு, தம்ளர் மற்றும் தாழ்பூலத்துடன் தட்சணையும் அளித்து அவர்களை வணங்கி ஆசி பெற வேண்டும்.
செவ்வாய் தோஷமுள்ள பெண்ணுக்குத் திருமணம் தடங்கலாகிக் கொண்டே வந்தால் வளர்பிறையில் வந்த செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நீராடி சிவப்பு ஆடை உடுத்தி மாங்கலயத்தை தெய்வத்தின் முன் மஞ்சள் சரட்டில் கோத்து வைத்து வணங்கி எடுத்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.
செவ்வாய்க்கிழமை முழுவதும் மாங்கல்யத்தை அவிழ்க்கக் கூடாது. மறுநாள் காலை நீராடி நெற்றியில் குங்குமமிட்டு தெய்வத்தை வணங்கி மாங்கல்யத்தை அவிழ்த்து ஏதாவது ஓர் ஆலயத்தின் உண்டியலில் சிறிது காணிக்கை சேர்த்து சமர்ப்பித்து விட வேண்டும். சிவப்பு நிற ஆடையை யாருக்காவது தானம் செய்து விட வேண்டும். இவ்விதம் செய்தால் தடையின்றி விரைவாக திருமணம் நடைபெற்று விடும்.
செவ்வாய்க்கிழமையில் வரும் மிருகசீரிட நட்சத்திரத்தில் (மிருகசீரிடம் நட்சத்திரம் சகல தோசங்களுக்கும் அப்பாற்பட்டது) அவரவர்கள் சக்திக்கேற்ப, துவரை தானம் செய்ய வேண்டும். துவரையை ஒரு சிவப்புத் துணியில் முடிந்து, வெற்றிலை பாக்கு, மஞ்சள், பூ, பழம், தேங்காய், வெல்லம் இவற்றை ஒரு தட்டில் வைத்து துர்கா பூஜை செய்து ஒரு ஏழையை அழைத்து பூஜையில் முழு மனதுடன் ஈடுபட்டு, பூஜை முடிந்தவுடன், தட்டில் உள்ளவற்றை தானமாகக் கொடுத்து காணிக்கையும் அதில் வைத்து கொடுக்க வேண்டும். அந்த ஏழைக்கு உணவு கொடுத்து அனுப்ப வேண்டும். இந்த பரிகாரத்தால் உடனே திருமணம் கை கூடும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X