என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருமண பாக்கியம் தரும் திருத்தலங்கள்
Byமாலை மலர்20 July 2017 4:44 AM GMT (Updated: 20 July 2017 4:44 AM GMT)
திருமண தடை உள்ளவர்கள் பலன்தரும் பரிகாரங்களை மேற்கொண்டால், இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட வழிபாட்டு தலங்கள் பல நம் நாட்டில் உள்ளன.
வாழ்க்கைத் துணை அமையவில்லையே, வயதாகிக் கொண்டே போகின்றதே.. வரன் ஏதும் பொருத்தமானதாக வரவில்லையே என்ற கவலை இன்றைய காலகட்டத்தில் பலரின் பிரச்சினையாக இருக்கிறது. எப்படிப்பட்ட கவலையாக இருந்தாலும் பலன்தரும் பரிகாரங்களை மேற்கொண்டால், இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட வழிபாட்டு தலங்கள் பல நம் நாட்டில் உள்ளன.
திருமணஞ்சேரி வழிபாடு தித்திக்கும் திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். சுக்ர ஷேத்திரமான ஸ்ரீரங்கம் வழிபாடும், அக்னீஸ்வரர் வீற்றிருந்து அருள்வழங்கும் கஞ்சனூர், கல்யாண ஜகன்நாதர் அருள்வழங்கும் திருப்புல்லாணி, சிறுவாபுரியில் உள்ள வள்ளிமணவாளப் பெருமான், தெய்வானையை முருகப்பெருமான் மணந்த இடமான திருப்பரங்குன்றம் போன்ற இடங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டாலும் இல்லறம் நல்லறமாக முடியும்.
குருபலம் கூடி வந்தால் தான் திருமணம் முடியும். எனவே குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்றும் வழிபட்டு வரலாம். ‘வானவர்களுக்கு அரசனான வளம் தரும் குருவே’ என்ற குரு கவசத்தை, குருவின் சன்னிதியில் பாடி வழிபட்டால், தேடிவரும் வரன்கள் சிறப்பானதாக அமையும். ஆலங்குடி, திட்டை, பட்டமங்கலம் போன்ற இடங்களில் குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்கள் உள்ளன. மேலும் வியாழக்கிழமை சுண்டல் தானம் கொடுத்து தென்முகக் கடவுளை வழிபடுவதும் நல்லது.
திருமணஞ்சேரி வழிபாடு தித்திக்கும் திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். சுக்ர ஷேத்திரமான ஸ்ரீரங்கம் வழிபாடும், அக்னீஸ்வரர் வீற்றிருந்து அருள்வழங்கும் கஞ்சனூர், கல்யாண ஜகன்நாதர் அருள்வழங்கும் திருப்புல்லாணி, சிறுவாபுரியில் உள்ள வள்ளிமணவாளப் பெருமான், தெய்வானையை முருகப்பெருமான் மணந்த இடமான திருப்பரங்குன்றம் போன்ற இடங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டாலும் இல்லறம் நல்லறமாக முடியும்.
குருபலம் கூடி வந்தால் தான் திருமணம் முடியும். எனவே குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்றும் வழிபட்டு வரலாம். ‘வானவர்களுக்கு அரசனான வளம் தரும் குருவே’ என்ற குரு கவசத்தை, குருவின் சன்னிதியில் பாடி வழிபட்டால், தேடிவரும் வரன்கள் சிறப்பானதாக அமையும். ஆலங்குடி, திட்டை, பட்டமங்கலம் போன்ற இடங்களில் குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்கள் உள்ளன. மேலும் வியாழக்கிழமை சுண்டல் தானம் கொடுத்து தென்முகக் கடவுளை வழிபடுவதும் நல்லது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X