என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பிருந்தாவனம்
Byமாலை மலர்18 May 2017 5:32 AM GMT (Updated: 18 May 2017 5:32 AM GMT)
ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி - தான்யா - விவேக் கூட்டணியில் உருவாகி இருக்கும் `பிருந்தாவனம்' படத்தின் முன்னோட்டம்.
வான்சன் மூவிஸ் ஷான் சுதர்சன் வழங்கும் படம் `பிருந்தாவனம்'.
இதில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தான்யா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இசை - விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு - எம்.எஸ்.விவேகானந்தன், கலை - கே.கதிர், வசனம் - எம்.ஆர்.பொன்பார்த்திபன், பாடல்கள் - கார்க்கி, தயாரிப்பு - ஷான் சுதர்சன்.
கதை, திரைக்கதை, இயக்கம் - ராதாமோகன்.
`மொழி', `அபியும், நானும்', `பாலைவனம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் `பிருந்தாவனம்' படம் பற்றி கூறும்போது.... `பிருந்தாவனம்' என்றாலே அங்கு ஒரு சந்தோஷம் இருக்கும். குதூகலம் காணப்படும். அதுபோன்ற கதை என்பதால் இதற்கு `பிருந்தாவனம்' என்று பெயர் வைத்திருக்கிறோம். ஊட்டியில் நடக்கும் கதை.
அருள்நிதி இதில் காது கேட்காத, வாய்பேசாத சவாலான வேடத்தில் நடித்திருக்கிறார். விவேக் நடிகராகவே வருகிறார். அருள்நிதி அவருடைய ரசிகர். இருவரும் நண்பர்களாக இந்த படத்தில் வருகிறார்கள். நாயகி தான்யா புதுமுகம் என்றாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். அருள்நிதி முடி திருத்தும் தொழிலாளியாக நடிக்க ஒரு மாதம் பயிற்சி பெற்றார்.
அன்பு, மனிதநேயம், மன்னிப்பு கொண்ட அருமையான திரைக்கதையுடன் கமர்ஷியல் படமாகவே இது உருவாகி இருக்கிறது. விவேக் நடித்திருப்பதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. என்றாலும் அவர் சென்டிமென்ட் காட்சிகளிலும் கண்கலங்க வைக்கிறார். `பிருந்தாவனம்' குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படம்'' என்றார்.
இதில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தான்யா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இசை - விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு - எம்.எஸ்.விவேகானந்தன், கலை - கே.கதிர், வசனம் - எம்.ஆர்.பொன்பார்த்திபன், பாடல்கள் - கார்க்கி, தயாரிப்பு - ஷான் சுதர்சன்.
கதை, திரைக்கதை, இயக்கம் - ராதாமோகன்.
`மொழி', `அபியும், நானும்', `பாலைவனம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் `பிருந்தாவனம்' படம் பற்றி கூறும்போது.... `பிருந்தாவனம்' என்றாலே அங்கு ஒரு சந்தோஷம் இருக்கும். குதூகலம் காணப்படும். அதுபோன்ற கதை என்பதால் இதற்கு `பிருந்தாவனம்' என்று பெயர் வைத்திருக்கிறோம். ஊட்டியில் நடக்கும் கதை.
அருள்நிதி இதில் காது கேட்காத, வாய்பேசாத சவாலான வேடத்தில் நடித்திருக்கிறார். விவேக் நடிகராகவே வருகிறார். அருள்நிதி அவருடைய ரசிகர். இருவரும் நண்பர்களாக இந்த படத்தில் வருகிறார்கள். நாயகி தான்யா புதுமுகம் என்றாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். அருள்நிதி முடி திருத்தும் தொழிலாளியாக நடிக்க ஒரு மாதம் பயிற்சி பெற்றார்.
அன்பு, மனிதநேயம், மன்னிப்பு கொண்ட அருமையான திரைக்கதையுடன் கமர்ஷியல் படமாகவே இது உருவாகி இருக்கிறது. விவேக் நடித்திருப்பதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. என்றாலும் அவர் சென்டிமென்ட் காட்சிகளிலும் கண்கலங்க வைக்கிறார். `பிருந்தாவனம்' குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படம்'' என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X