என் மலர்
நீங்கள் தேடியது "விஜய்"
- மோகன் ரெட்டி, தனது உறவினரின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்தார்.
- ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, தனது உறவினரின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்தார்.
ஒய்.எஸ். சுனில் ரெட்டியின் (ஒய்.எஸ். ஜெகனின் தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் மகன்) மகன் சாஹிலின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னைக்கு வந்திருந்தார்.
சாஹில் மற்றும் வேதிகாவின் திருமணம் இன்று காலை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் உறவினர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூர்யா, கார்த்தி ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் இல்ல திருமண விழாவில் நடிகர் விஜய் பங்கேற்றார்.
- ஏற்கெனவே நகராட்சித் துறையில் வேலைக்கான தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளிவந்துள்ளன.
- தமிழ்நாட்டு இளைஞர் பட்டாளம் வெகுண்டெழுந்து, ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டுவது உறு
தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தவெக தலைவர் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
"அரசுப் பணி என்கிற கனவோடு TNPSC Group 2, 2A முதன்மைத் தேர்வை எழுதவிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைத்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.
அரசுப் பணி என்பது, இளைஞர்கள் ஒவ்வொருவரின் உயரிய கனவும் லட்சியமும் ஆகும். அதை அடைய அவர்கள் பல ஆண்டுகளாக இரவு பகலாகக் கண்விழித்துப் படித்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவார்கள். அப்படிப்பட்ட ஈடு இணையற்ற உழைப்புடன் தயாராகி, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமது எதிர்கால வாழ்வு குறித்த மிகப் பெரிய கனவுகளோடு முதன்மைத் தேர்வை எழுத வருவார்கள்.
அந்த நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டால், இவ்வளவு காலம் உழைத்த உழைப்பு வீணாகி விடுமோ என்ற அச்சம் அவர்களின் மனத்தில் ஆழப் பதிந்துவிடும். ரத்து செய்யப்பட்ட தேர்வு மீண்டும் நடத்தப்பட்டாலும் அதற்காக மீண்டும் மீண்டும் தங்களது கடின உழைப்பை முதலீடாக்கும் சூழல் உருவாகும். இதனால் இளைஞர்களின் பெறற்கரிய காலம் வீணாவதுடன் மனத்தளவில் அவர்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.
எதிர்காலம் குறித்துக் கனவுகளோடு இருந்த இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கிய இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு யாருக்காக இயங்குகிறது? இளைஞர்களுக்கு நல்லதொரு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்காத இந்த அரசு, இருந்து என்ன பயன்? இன்று TNPSC Group 2, 2A தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது, இந்தக் கபட நாடகத் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஏற்கெனவே நகராட்சித் துறையில் வேலைக்கான தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், TNPSC நடத்தும் இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் என்ன நடந்திருக்குமோ என்ற ஐயம் எழுவது இயல்பே. இன்னும் எந்த மிகப் பெரிய முறைகேட்டை மறைக்க இது நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழாமல் எப்படி இருக்கும்? இதற்கு உரியவர்கள், உண்மையை நேர்மையாகச் சொல்ல வேண்டியது அவர்கள் கடமை என்பதை மறந்துவிடக் கூடாது.
எனவே, வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழாவண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். வெற்று விளம்பரத்தினால் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு இளைஞர் பட்டாளம் வெகுண்டெழுந்து, ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டுவது உறுதி." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக அரசின் அரசாணைப்படி 10 வகை ஆவணங்களுடன் மீண்டும் அனுமதி கேட்டு மனு கொடுக்க அறிவுறுத்தினர்.
- நேற்று இரவு மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் விஜய் கூட்டத்துக்கு அனுமதி கேட்டு மீண்டும் கடிதம் கொடுத்தார்.
சேலம்:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் சேலத்தில் வருகிற 13-ந்தேதி விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு அனுமதி கேட்டு கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த வாரம் மனு கொடுத்தனர். மனுவில் மகுடஞ்சாவடி, சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் அனுமதி கேட்டு இருந்தனர்.
சீலநாயக்கன்பட்டியில் போலீஸ் உதவி கமிஷனர்கள் இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது வாகன நிறுத்த போதிய இடம் இல்லை என்றும், கூடுதலாக இடம் தேர்வு செய்யும் படியும் கூறினர். மேலும் தமிழக அரசின் அரசாணைப்படி 10 வகை ஆவணங்களுடன் மீண்டும் அனுமதி கேட்டு மனு கொடுக்க அறிவுறுத்தினர்.
த.வெ.க. நிர்வாகிகள் திட்டமிட்டப்படி வருகிற 13-ந்தேதி விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். நேற்று இரவு மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் விஜய் கூட்டத்துக்கு அனுமதி கேட்டு மீண்டும் கடிதம் கொடுத்தார்.
இந்நிலையில் சீலநாயக்கன்பட்டி பகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாளமுத்து நடராசர் மைதானத்தில் பிப்.13-ந்தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 13-ந்தேதி பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
- பள்ளி மாணவனிடன் போதைப்பொருள் இருக்கிறது.
- சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியில் அ.தி.மு.க. தலைமையில், 200 இடங்களில் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சி அமையும்.
சுவாமிமலை:
கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலில் விஜய் கண்டிப்பாக தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவார். விஜய்யின் வருகை தி.மு.க. கூட்டணிக்கு மிகப் பெரிய பாதிப்பாகவும், அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு சாதகமாகவும் அமையும்.
தமிழகம் தற்போது போதை வஸ்துக்களின் சர்வதே சந்தையாகவும், சர்வதேச துறைமுகமாகவும் மாறி விட்டது. பள்ளி மாணவனிடன் போதைப்பொருள் இருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டதால், அது தி.மு.க.விற்கு சாதகமாக போனது. இம்முறை அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி அ.ம.மு.க. இணைந்துள்ளதால் அந்த வாய்ப்பு தி.மு.க.விற்கு கிடைக்காது
எனவே வரும் தமிழக சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியில் அ.தி.மு.க. தலைமையில், 200 இடங்களில் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சி அமையும்.
திடீர் சாம்பார், துரித உணவுகளை போல, சில கட்சிகள் 2026 தேர்தலில் போட்டியிடுவதற்காக மாற்று கட்சியில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வேட்பாளர்களை தேடி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணி ஒற்றுமையாக இருப்பது போல் வெளியில் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. கொள்கை கூட்டணி என்கிறார்கள். கொள்கை ஒன்றாக இருந்தால் அவர்களுக்கு தனித்தனி கட்சி தேவை இல்லை. காங்கிரசை எதிர்த்து தான் தி.மு.க. உருவாக்கப்பட்டது. அதுபோல் கேரளாவில் கம்யூனிஸ்டும் காங்கிரசும் நேரடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இவர்களுக்குள் ஒற்றுமை என்பது இல்லை என்றார்.
- சென்னை புரசைவாக்கம் திமுக எம்.எல்.ஏ.வாக செயல்பட்டவர் வி.எஸ்.பாபு.
- அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வி.எஸ்.பாபு நீக்கப்பட்டார்.
வடசென்னையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.எஸ்.பாபு தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்
சென்னை புரசைவாக்கம் திமுக எம்.எல்.ஏ.வாக செயல்பட்டவர் வி.எஸ்.பாபு. இவர் வடசென்னை திமுக மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தார். பின்னர், திமுகவில் இருந்து விலகிய வி.எஸ்.பாபு அதிமுகவில் இணைந்தார்.
அவருக்கு அதிமுக வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் ஜுன் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வி.எஸ்.பாபு நீக்கப்பட்டார்.
இந்நிலையில், வி.எஸ்.பாபு இன்று தவெகவில் இணைந்தார். தவெக தலைவர் விஜய்யை இன்று நேரில் சந்தித்த வி.எஸ்.பாபு தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார்.
- த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
- தொண்டர்கள் குவிந்ததால் பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு அக்கட்சி இன்று முதல் விருப்ப மனு வழங்குவதாக அறிவித்து இருந்தது. அதன்படி இன்று மதியம் 12.00 மணி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டது. த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் விருப்ப மனு விநியோகம் நிறுத்தப்பட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு காலியானதால் தொண்டர்களை நாளைக்கு வரும்படி நிர்வாகிகள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் பனையூர் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என்று பலர் விருப்பமனு கொடுத்தது பற்றி கேள்வி எழுப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சீமான், "தவெகவில் இருப்பது சின்ன பிள்ளைகள். பனையூர் தொகுதி இல்லைனு அவங்களுக்கு தெரியல. விற்பனை பண்டம் போல நினைத்து விருப்ப மனு வாங்கியுள்ளார்
- இணையதளத்தில் இருந்து இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
- தற்போது வசிக்கும் முகவரி, நிரந்தர முகவரி ஆகிய விபரங்களுடன் கட்டண தொகைக்கான டி.டி. எண்ணும் கேட்கப்பட்டு உள்ளது.
த.வெ.க.வில் விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. பொது தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ரூ.100 கொடுத்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். முதல் நாளான நேற்று 10 ஆயிரம் படிவங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.
முதல் நாளிலேயே ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வந்து மனுக்களை வாங்கினார்கள். அதில் பலர் விஜய் பெயரிலேயே மனுக்களை வாங்கினார்கள். 10 ஆயிரம் மனுக்களும் 1½ மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.
கூட்டம் அதிக அளவில் திரண்டு சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் யாரும் விருப்ப மனு வாங்க நேரில் வர வேண்டாம். இணையதளத்தில் இருந்து இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த விருப்ப மனுவில் 36 கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது.
பெயர், தந்தை-கணவர் பெயர், பிறந்ததேதி (வயது), பாலினம், கல்வி தகுதி, தற்போதைய கழகப் பதவி, எந்த ஆண்டில் இருந்து உறுப்பினராக இருக்கிறீர்கள், ஆதார் எண், வாக்காளர் அட்டை எண், அலை பேசி எண், மாற்று அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, தாய்மொழி, பேசும் திறன் உள்ள மொழிகள்,
உங்கள் வெற்றி வாய்ப்புகளை சுருக்கமாக விவரிக்கவும், சட்டமன்ற அல்லது பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டிருந்தால், அது பற்றிய தகவல்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டிருந்தால், அது பற்றிய தகவல்கள், கழகத்தில் இணைவதற்கு முன்பு வேறு ஏதாவது கட்சியில், கட்சிகளில் உறுப்பினராக இருந்தீர்களா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள், தங்கள் பெயரின் மீது காவல் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா? ஆம் எனில், அதுபற்றிய தகவல்கள், தங்களின் குடும்ப உறுப்பினர் மீது காவல் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள்
டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்களின் விபரம், தொழில், ஆண்டு வருமானம், தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், கணவர், மனைவி மற்றும் குழந்தைகள் பற்றிய விவரம் -குடும்ப விபரம், நீங்கள் போட்டியிட விரும்பும் சட்டமன்றத் தொகுதி, நீங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியில் எஸ்.ஐ.ஆர்.க்கு பின் உள்ள மொத்த வாக்காளர்களின் விவரம், நீங்கள் இதே தொகுதியில் வசித்து வருகிறீர்களா?
இல்லை எனில், தாங்கள் வசிக்கும் தொகுதி, உங்கள் வாக்குரிமை இதே தொகுதியில் உள்ளதா? இல்லை எனில், தங்கள் வாக்குரிமை உள்ள தொகுதி, நீங்கள் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான முக்கிய காரணங்கள், தங்களின் சொத்து விவரம், குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரம், தங்கள் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை ஏதேனும் தயார் செய்துள்ளீர்களா? ஆம் எனில், குறிப்பிடவும்.
கழகத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் ஆற்றிய பணிகள் குறித்த தகவல்கள், கழகப் போராட்டங்களில் பங்கேற்றுச் சிறைக்குச் சென்றுள்ளீர்களா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள், கழக விதிகளுக்கு எதிராக நடந்ததற்காக உங்கள் மீது ஏதாவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள், சாதிச் சங்கங்கள் அல்லது சமூக அமைப்புகளுடன் உங்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள்.
மேலும் தெரிவிக்க விரும்பும் வேறு ஏதேனும் கூடுதல் விவரங்கள், தற்போது வசிக்கும் முகவரி, நிரந்தர முகவரி ஆகிய விபரங்களுடன் கட்டண தொகைக்கான டி.டி. எண்ணும் கேட்கப்பட்டு உள்ளது.
இந்த விபரங்களை பூர்த்தி செய்து புகைப்படத்தையும் ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டை, உயர்கல்வித் தகுதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, கடந்த 3 ஆண்டுகளின் வருமான வரித் தாக்கல் ஆவணங்கள், கடந்த 3 ஆண்டுகளின் குடும்ப உறுப்பினர்களின் வருமான வரித் தாக்கல் ஆவணங்கள், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவண நகல்களையும் இணைக்க வேண்டும்.
- மாநாடு நடந்த இடத்தில் விஜய் கொடியேற்றிய 100 அடி உயர கொடிக்கம்பம் அதில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
- வயல் வெளியில் வானளாவிய உயரத்தில் த.வெ.க. கொடி பறக்கும் கம்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கிறது. 234 தொகுதிகளிலும் களம் இறங்கும் அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக நடிகர் விஜய் முன்னிறுத்தப்பட்டு உள்ளார்.
ஆட்சியை பிடித்தே தீருவோம் என்ற நம்பிக்கையோடு தேர்தலை சந்திக்கும் த.வெ.க.வில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட தகுதியான வேட்பாளர் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.
விஜய் போட்டியிட போகும் தொகுதி பற்றியும் ஆலோசித்து வருகிறார்கள். விஜய் கட்சி தொடங்கும் போதே வெற்றியை குறிக்கும் வகையில் முதல் எழுத்தான 'வி'யில் தொடங்கும் ஊர்களை தேர்வு செய்து மாநாட்டை நடத்த முடிவு செய்தார்.
அதன்படி விக்கிரவாண்டி, வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய 3 தொகுதிகள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் விக்கிரவாண்டி தொகுதியை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியில் உள்ள வி.சாலையில் தான் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடத்தப்பட்டது.

மாநாடு நடந்த இடத்தில் விஜய் கொடியேற்றிய 100 அடி உயர கொடிக்கம்பம் அதில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. வயல் வெளியில் வானளாவிய உயரத்தில் த.வெ.க. கொடி பறக்கும் இந்த கம்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்றும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பயனிக்கும் பலர் வி.சாலை வழியாக அங்கு சென்று கொடிக்கம்பத்தை பார்வையிட்டும் விஜய் படத்துடன் இடம் பெற்றுள்ள கல்வெட்டு அருகே நின்று புகைப்படம் எடுத்தும் செல்கிறார்கள்.
த.வெ.க. வரலாற்றில் முதல் முத்திரை பதித்த இந்த தொகுதியையே விஜய் முதல் தேர்வாக வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தொகுதியில் போட்டியிட்டால் தனது தொகுதியில் பிரசாரம் செய்வதோடு மாநிலத்தின் இதர பகுதிகளுக்கும் எளிதாக பிரசாரம் செய்ய சென்று வரலாம் என்று கருதுவதாக கூறப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி. 103 ஊராட்சிகள் மற்றும் விக்கிரவாண்டி, காணை, கோலியனூர், கண்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் அடங்கி உள்ளன.
2011 தொகுதி மறுசீரமைப்பை தொடர்ந்து தற்போதைய விக்கிரவாண்டி தொகுதி செயல்பட்டு வருகிறது.
- நள்ளிரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறேன்.
- நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சமாதானப்படுத்த அமைதியானார்.
'பத்ரி', 'ரோஜாக்கூட்டம்', 'சில்லுனு ஒரு காதல்' போன்ற படங்களில் நடித்தவர் பூமிகா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது அக்கா, அண்ணி வேடங்களில் நடித்து வரும் பூமிகா 'யுபோரியா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஐதராபாத்தில் நடந்த இதன் பட விழாவில் பூமிகா பங்கேற்று பேசும்போது ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டார்.
"இந்த படத்தில் நடிக்கத் தொடங்கியது முதல் என்னால் நிம்மதியாக தூங்கமுடியவில்லை. நள்ளிரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறேன்" என்று பேசிக்கொண்டே தேம்பி தேம்பி அழ தொடங்கிவிட்டார். இதையடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சமாதானப்படுத்த அமைதியானார். இது நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

'யுபோரியா' படம் சிறுமிகள்- பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் சம்பந்தப்பட்ட உண்மை சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். குணசேகர் இயக்கியுள்ள இப்படத்தில் பூமிகா, சாரா அர்ஜூன், பிருத்வி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடத்துள்ளனர். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானதை அடுத்து படவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- தமிழக சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்டது.
- விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பனையூரில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு அக்கட்சி இன்று முதல் விருப்ப மனு வழங்குவதாக அறிவித்தது.
அதன்படி, இன்று மதியம் 12.00 மணி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டது. த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் பனையூரில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, விருப்ப மனு விநியோகம் நிறுத்தப்பட்டது.
விருப்பமனு விநியோகம் 12 மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில் 2.30 மணிக்குள் மனுக்கள் காலியானதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், தவெக பொதுச் செயலாளர் என் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருப்ப மனுக்கள் பெறுவதற்காக தொண்டர்கள் யாரும் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூருக்கு வரவேண்டாம். விருப்ப மனுக்களை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருப்ப மனுவை பூர்த்தி செய்து பிப்ரவரி 14-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம் என தெரிவித்துள்ளார்.
- த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
- பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு அக்கட்சி இன்று முதல் விருப்ப மனு வழங்குவதாக அறிவித்து இருந்தது. அதன்படி இன்று மதியம் 12.00 மணி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டது. த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் விருப்ப மனு விநியோகம் நிறுத்தப்பட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு காலியானதால் தொண்டர்களை நாளைக்கு வரும்படி நிர்வாகிகள் அறிவுறுத்தினர்.
விருப்பமனு விநியோகம் 12 மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில் 2.30 மணிக்குள் மனுக்கள் காலியானதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று மட்டும் சுமார் 2.30 மணி நேரத்திற்குள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட த.வெ.க.வினர் ஆர்வமுடன் விருப்ப மனுக்களை வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
விருப்ப மனுக்கள் காலியானதைத் தொடர்ந்து தொண்டர்கள் வருகையை தவிர்க்கவும், ஏற்கனவே கூடியவர்கள் அங்கிருந்து புறப்பட ஏதுவாகவும் த.வெ.க. தலைமை அலுவலகத்தை அக்கட்சி நிர்வாகிகள் பூட்டி தொண்டர்களை அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- த.வெ.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ.100 மட்டும் செலுத்தி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம்.
- பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகி உள்ளது. தற்போது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் த.வெ.க. ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், தேர்தலை தனித்து சந்திப்பதா? கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்று த.வெ.க. முடிவு செய்யாத நிலையில் இருந்து வருகிறது.
இந்தநிலையில் த.வெ.க. விருப்ப மனு வினியோகம் இன்று தொடங்கியது. த.வெ.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ.100 மட்டும் செலுத்தி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம்.
விருப்ப மனு திருப்பி அளிக்கும்போது பொதுத்தொகுதிக்கு ரூ.10,000 செலுத்த வேண்டும். 14-ந்தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம்.
இதற்கான பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வாங்கப்பட உள்ளது.
மனுக்களை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை வாங்குவதற்காக மாநில நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.






