என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி"

    • இந்தியா, அமெரிக்கா மீதான வரிகளையும் தளர்த்தும் என்று தெரிவித்தார்.
    • 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயத் தயாரிப்புகளை இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    பிரதமர் மோடியுடன் நேற்று தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்தார்.

    ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதி அளித்ததால், இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25 பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்த டிரம்ப், இந்தியா, அமெரிக்கா மீதான வரிகளையும் தளர்த்தும் என்று தெரிவித்தார்.

    அதேநேரம், அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாய  பொருட்களை  இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் இந்தியாவுடனான ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என அமெரிக்க விவசாயத்துறை செயலாளர் தெரிவித்தார். இது இந்திய விவசாயிகளைப் பாதிக்குமோ என்ற கவலை எழுந்தது.

    இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் இந்திய விவசாயிகளின் நலன்களை எவ்விதத்திலும் பாதிக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    அதாவது, அமெரிக்காவிலிருந்து பெரும்பாலும் பருத்தி, பாதாம், மற்றும் வால்நட்ஸ் போன்ற இந்தியாவில் தேவை அதிகமாக உள்ள பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும், அரிசி அல்லது கோதுமை போன்ற இந்திய விவசாயிகள் அதிகம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குப் பாதிப்பு இருக்காது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.   

    • அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்
    • இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்போவதாக டிரம்ப் அறிவிப்பு

    பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. பட்ஜெட்டில், பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான வரி சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முதியீட்டாளர்கள் பீதியடைந்தனர்.

    எனவே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்தது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    டிரம்பின் இந்த அறிவிப்பால் இன்று இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3657 புள்ளிகள் வரையும் தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 1220 புள்ளிகள் வரையும் உயர்ந்து உயர்வுடன் தொடங்கியது.

    இந்நிலையில், இன்றைய பங்குச்சந்தை முடிவில் சென்செக்ஸ் 2072 புள்ளிகள் உயர்ந்து 83,739 புள்ளிகளிலும் நிஃப்டி 639 புள்ளிகள் உயர்ந்து 25,727 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

    • உள்ளாட்சி தேர்தல் உள்பட பல்வேறு தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வெற்றி பெற்றுள்ளது.
    • இந்த வெற்றிகள் மக்கள் நலன் கொள்கைகள் மற்றும் கடின உழைப்பால் கிடைத்தவை.

    தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) நாடாளுமன்ற கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி "உள்ளாட்சி தேர்தல் உள்பட பல்வேறு தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிகள் மக்கள் நலன் கொள்கைகள் மற்றும் கடின உழைப்பால் கிடைத்தவை. இந்த வெற்றிகளால் என்.டி.ஏ. திருப்தியடைந்து விடக் கூடாது. சிறந்த பணிகளை தொடர வேண்டும்" என்று கூறியதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    இந்த கூட்டத்தில் 39 நாடுகளுடன் வெற்றிகரமாக வர்த்தக ஒப்பந்தம் செய்ததாக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

    • நரேந்திர மோடியின் பிம்பம் சேதமடையக்கூடும்.
    • அதானி ஜி மீது அமெரிக்காவில் ஒரு வழக்கு உள்ளது.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பிரதமர் மோடி நாட்டை விற்றுவிட்டார் என கூறினார்.

    இது குறித்து பேசிய ராகுல் காந்தி, "மோடி ஜி கலக்கமடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடந்த (அமெரிக்க-இந்தியா) வர்த்தக ஒப்பந்தத்தில் நரேந்திர மோடி நேற்று இரவு கையெழுத்திட்டார். அவர் மீது கடுமையான அழுத்தம் உள்ளது. நரேந்திர மோடியின் பிம்பம் சேதமடையக்கூடும்."

    "முக்கிய விஷயம் என்னவென்றால், நமது பிரதமர் சமரசத்திற்கு உள்ளாகியுள்ளார். இதைப்பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும். முதல் முறையாக, குடியரசு தலைவர் உரை குறித்து பேச எதிர்க்கட்சி தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நரேந்திர மோடி ஜி சமரசத்திற்கு உள்ளாகியிருப்பதால், இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் உங்கள் உழைப்பை விற்றுவிட்டார். அவர் நாட்டை விற்றுவிட்டார்."

    "நரேந்திர மோடி ஜி பயப்படுகிறார், ஏனென்றால் அவருடைய பிம்பத்தை உருவாக்கியவர்களே இப்போது அந்த பிம்பத்தை உடைக்கிறார்கள். அதானி ஜி மீது அமெரிக்காவில் ஒரு வழக்கு உள்ளது, அது உண்மையில் மோடி ஜி மீதான வழக்குதான். எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும் வெளியிடாத பல விஷயங்கள் உள்ளன. அதன் காரணமாகவும் அழுத்தம் உள்ளது. இவைதான் அந்த இரண்டு அழுத்த புள்ளிகள். இதை நாடு புரிந்துகொள்ள வேண்டும்," என்றார்.

    • அமெரிக்காவின் விவசாய பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
    • இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

    இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்க விவசாயிகளுக்காக மீண்டும் ஒரு சிறப்புமிக்க ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் கொடுத்துள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை செயலாளர் புரூக் ரோலின்ஸ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வழியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சந்தைக்கு அதிகப்படியான அமெரிக்க விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும். இதன் மூலம் அமெரிக்காவின் கிராமப்புற பொருளாதாரம் பெரும் வளர்ச்சியடையும்.

    2024 ஆம் ஆண்டில், இந்தியாவுடனான அமெரிக்காவின் விவசாய வர்த்தக பற்றாக்குறை 1.3 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் வளர்ந்து வரும் மக்கள்தொகை அமெரிக்க விவசாய பொருட்களுக்கு ஒரு முக்கியமான சந்தையாகும், மேலும் இன்றைய ஒப்பந்தம் இந்தப் பற்றாக்குறை சரி செய்யப்படும்" என்று தெரிவித்தார். 

    • வர்த்தக ஒப்பந்த விவகாரம் தேசிய அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.
    • ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த விவகாரம் தேசிய அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது. இரு நாடுகள் இடையிலான ஒப்பந்தம் குறித்து இந்தியா அறிவிப்பதற்கு முன்பே அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன.

    இந்த நிலையில், வர்த்தக ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். சுய நம்பிக்கை என்பது எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் சக்தி என்றும், அது விக்சித் பாரத் கனவை நனவாக்க உதவும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

    இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "சுய நம்பிக்கை என்பது எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் ஒரு சக்தி. அதன் உதவியால் எல்லாமே சாத்தியமாகும். நாட்டு மக்களின் இந்த சக்தியே, வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் மிகவும் பயனுள்ளதாக அமையும்," என தெரிவித்துள்ளார்.

    • வர்த்தக ஒப்பந்தம் 'மோடியின் கோரிக்கையின் பேரில்' செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
    • இந்திய தொழில், வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும்.

    புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சி கவலை தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்றும், இது இந்திய விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையை எவ்வாறு பாதிக்கும் என்பதை விரிவாக விளக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ x தளப் பதிவில், "போர் நிறுத்தத்தை போல, இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் வெளியிட்டார். இந்த வர்த்தக ஒப்பந்தம் 'மோடியின் கோரிக்கையின் பேரில்' செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    • அமெரிக்காவிற்கு எதிரான சுங்க வரி மற்றும் சுங்க வரி அல்லாத தடைகளை இந்தியா 'பூஜ்ஜியமாகக்' குறைக்கும் என்று டிரம்ப் கூறுகிறார். அமெரிக்காவிற்காக நமது சந்தையை முழுமையாக திறக்க இந்தியா ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இது இந்திய தொழில், வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும்.

    • அந்த அறிக்கையில் விவசாய துறையை அமெரிக்காவிற்காக திறப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உண்மையில் என்ன? நமது விவசாயிகளின் பாதுகாப்பும் நலன்களும் எவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளன?

    • மோடி அரசாங்கம் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காமல், அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து வாங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைக்கு மோடி அரசாங்கம் ஒப்புக்கொண்டதா?

    • மேலும், அமெரிக்காவிடம் இருந்து அதிக பொருட்களை வாங்குவது குறித்தும் பேசப்படுகிறது. அப்படியானால், 'மேக் இன் இந்தியா' திட்டம் என்ன ஆனது?

    இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்களை தெரிந்துகொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு.

    மோடி அரசாங்கம் பாராளுமன்றத்தையும் ஒட்டுமொத்த நாட்டையும் நம்பிக்கையில் எடுத்துக்கொண்டு, அனைத்து விவரங்களையும் பகிர வேண்டும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
    • அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் இட்டனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

    இன்று பாராளுமன்றம் தொடங்கிய நிலையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் இட்டனர்.

    அவையின் மையப்பகுதிக்கு சென்று எதிர்க்கட்சியினர் முழக்கமிட்ட நிலையில் இருக்கைக்கு செல்ல சபாநாயகர் அறிவுறுத்தினார்.

    இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் அமளியால் மக்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

    • அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
    • அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. பட்ஜெட்டில், பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான வரி சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முதியீட்டாளர்கள் பீதியடைந்தனர்.

    எனவே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்தது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    டிரம்பின் இந்த அறிவிப்பால் இன்று இந்திய பங்குச்சந்தை தாறுமாறாக உயர்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 4000 புள்ளிகள் வரையும் தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 1200 புள்ளிகள் வரையும் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

    11 மணிநேர நிலவரப்படி சென்செக்ஸ் 84,000 புள்ளிகளிலும் நிஃப்டி 25,750 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது.

    • வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
    • அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

    இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்தார்.

    இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், " "எனது இனிய நண்பர் அதிபர் டிரம்ப் உடன் பேசியது மகிழ்ச்சி.

    Made in India திட்டத்தின் கீழ் தயாராகும் பொருட்களுக்கான வரி 18%-ஆகக் குறைக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற NDA நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்த உடன்படிக்கைக்காக பிரதமர் மோடிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் நன்றி தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து எம்.பி.க்கள் மரியாதை செலுத்தினர்.

    • அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
    • புதுச்சேரி வரும் பிரதமர் மோடி அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக ரங்கசாமி உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க தற்போதே காய் நகர்த்தி வருகிறது. இதற்காக மத்திய மந்திரிகள் அடிக்கடி புதுச்சேரிக்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் முதலமைச்சர் ரங்கசாமியையும் சந்தித்து பேசுகின்றனர்.

    புதுச்சேரி மாநிலத்தில் தேர்தலை முன்வைத்து கடந்த பொங்கல் பண்டிகையின்போது அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும், ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்புகளுடன் தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இதே போல் குடும்ப தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் முதியோர், உதவித்தொகை ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது. அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் கோரிக்கை விடுத்து வந்தனர். பிரதமர் மோடியும் புதுச்சேரிக்கு வருவதாக உறுதி அளித்திருந்தார்.

    இந்த நிலையில் அவர் வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுச்சேரி வரும் பிரதமர் மோடி அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

    • அமெரிக்கா சென்ற மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பை சந்தித்தார். அதன் பின் இஸ்ரேல் சென்றார்.
    • உங்கள் அழகிய தீவிலிருந்து நீங்கள் திரும்பியதும் கூறுங்கள், உங்களுடன் சிறிது நேரம் பேச விரும்புகிறேன்.

    சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்காக தனி தீவு ஒன்றையே எப்ஸ்டீன் வைத்திருந்தார். 

    கடந்த 2019 இல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

    நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    கடந்த வாரம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 35 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது.

    மேலும் உலக பணக்காரர் பில் கேட்ஸ், ரஷிய பெண்களுடன் உறவு வைத்து பால்வினை நோய்க்கு ஆளாகி அதற்கான மருந்துகளை ரகசியமாக எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

    எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோரின் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

    அதேநேரம் எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் இடம்பெற்றுள்ளது.

    2017 ஜூன் 25, 26 தேதிகளில் அமெரிக்கா சென்ற மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பை சந்தித்தார். அதன்பின் அதே வருடம் ஜூலை 4 - 6 வரை பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

    எப்ஸ்டீன் கோப்புகளில், ஜூலை 9, 2017 தேதியிட்ட மின்னஞ்சல் ஒன்றில், "இந்திய பிரதமர் மோடி ஆலோசனை பெற்றார், இஸ்ரேலில் அமெரிக்க அதிபரின் நலனுக்காகத் தேவையான எல்லாவற்றையும் (danced and sanged) செய்தார். அது நல்ல பலனளித்தது" என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே, தொழிலதிபர் அனில் அம்பானி 2017 மார்ச் 16 அன்று எப்ஸ்டீனுக்கு அனுப்பிய செய்தியில், அதிபர் டிரம்ப்புடனான பிரதமர் மோடியின் சந்திப்புக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.

     மேலும், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, 2014 டிசம்பரில், எப்ஸ்டீனுக்கு, "உங்கள் அழகிய தீவிலிருந்து நீங்கள் திரும்பியதும் கூறுங்கள், உங்களுடன் சிறிது நேரம் பேச விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

    பிரதமர் மோடி குறித்து கேப்புகளில் உள்ள விவரங்களுக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை, பிரதமர் மோடி, 2017 இல் இஸ்ரேலுக்கு பயணம் செய்தார் என்பது மட்டும் தான் உண்மை, மற்ற அனைத்தும் எப்ஸ்டீனின் கற்பனையே என்று தெரிவித்துள்ளது. 

    இதற்கிடையே காங்கிரஸ், "குழந்தைகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பிரதமர் மோடிக்கு இருக்கும் ஆழமான மற்றும் நீண்டகாலத் தொடர்பு தெளிவாகியுள்ளது. இது நாட்டுக்கே அவமானகரமானது.

    பிரதமர் நரேந்திர மோடி எப்ஸ்டீனிடம் இருந்து என்ன மாதிரியான ஆலோசனைகளைப் பெற்றார்?, மோடியின் இஸ்ரேல் பயணத்தின் மூலம் டிரம்ப்புக்கு என்ன நன்மை கிடைத்தது?

    அது பலனளித்தது! என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டிருந்ததன் பொருள் என்ன? ஆகிய மூன்று கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். இது தேசத்தின் கண்ணியம் தொடர்பான விஷயம்" என தெரிவித்துள்ளது.  

    ×