என் மலர்
நீங்கள் தேடியது "எல்பிஜி"
- 40,000 மெட்ரிக் டன் எல்பிஜி ஏரியாவு ஏற்றி வந்தது.
- இன்னும் இரண்டு நாட்களில் துறைமுகத்தை அடையும்
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. அந்த வழியாக செல்ல முயலும் எந்த ஒரு கப்பலும் அழிக்கப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்தது.
உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கான ஏற்றுமதி பாதையாக வளைகுடா நாடுகளை இந்த பாதையே உலகத்துடன் இணைத்து வந்தது.
எனவே எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியை இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன.
முன்னதாக இந்திய கப்பல்களுக்கு மட்டும் ஈரான் இந்த வழியாக செல்ல அனுமதி அளித்ததாக கூறப்பட்டது. பிரதமர் மோடி ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உடன் அண்மையில் தொலைபேசியில் பேசினார். மேலும் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் ஈரான் அரசாங்கம் அளித்த பாதுகாப்பு உத்தரவாதத்தைத் தொடர்ந்து, ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய 2 கப்பல்கள் பதற்றம் நிலவும் ஜலசந்தியை கடந்து பாதுகாப்பான கடற்பகுதிக்கு வந்துள்ளன.
40,000 மெட்ரிக் டன் எல்பிஜி ஏரியாவு ஏற்றி வந்த ஷிவாலிக் கப்பல் தற்போது இந்தியக் கடற்படையின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளது. இது இன்னும் இரண்டு நாட்களில் மும்பை அல்லது காண்ட்லா துறைமுகத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல அதிகளவில் எல்பிஜி ஏற்றி நந்தா தேவி கப்பலும் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்துவிட்டது.
முன்னதாக கேப்டன் மற்றும் மாலுமிகள் உயிரை பணயம் வைத்து மற்றொரு இந்திய எண்ணெய் கப்பல் ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
- சமையல் எரிவாயு உற்பத்தியை 28% அதிகரித்துள்ளோம்.
- 40 நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வருகிறது.
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் உலக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் எரிவாயு ஏற்றுமதிக்கு பிரதான பாதையாக இருந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் கப்பல்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கின்றன.
இதற்கிடையே எரிபொருள் தடுக்குப்பட்டால் இந்தியாவில் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகத்தை நிறுத்துவதாக மத்திய அரசு கடந்த மார்ச் 8 அன்று அறிவித்தது.
வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகமே முக்கியம் என்பதால் இந்த முடிவை மத்திய அரசு எடுத்தது.
இதனால் சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டது.
மேலும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. 25 நாட்களுக்கு பின்னரே அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.
சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே நிலவியது. ஆனால் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பது வதந்தி என மத்திய அரசு மறுத்தது.
இந்த சூழலில் இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டம் நடந்தது. இதன்போது மக்களவையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி பேசினார்.
அவர் கூறியதாவது, "மாற்று விநியோகப் பாதைகள் வழியாகத் தினமும் பெரிய அளவிலான திரவ இயற்கை எரிவாயு சரக்குகளை இந்தியா இறக்குமதி செய்கிறது.
நீண்ட காலப் போர் ஏற்பட்டாலும், இந்தியாவின் எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகக் கட்டமைப்புகள் இந்த நிலையைத் தக்கவைக்கப் போதுமானதாக உள்ளன.
அமெரிக்கா, நார்வே, கனடா, அல்ஜீரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து எரிவாயுவைப் பெறுவதன் மூலம் கொள்முதல் ஆதாரங்களை நாங்கள் விரிவுபடுத்தியுள்ளோம்.
இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களின் முழுத் திறனையும் பயன்படுத்தி இயங்கி வருகின்றன. பல இடங்களில் அவை 100% திறனுக்கும் அதிகமாகச் செயல்படுகின்றன.
கடந்த ஐந்து நாட்களில் மட்டும், சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவுகள் மூலம் சமையல் எரிவாயு உற்பத்தியை 28% அதிகரித்துள்ளோம்.
நாட்டில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், ஏவியேஷன் டர்பைன் ஃபியூயல் அல்லது எரிபொருள் எண்ணெய் ஆகியவற்றிற்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அல்லாமல், மாற்றுப் பாதைகள் மூலம் பெறப்படும் கச்சா எண்ணெய் இறக்குமதியை 55%-லிருந்து சுமார் 70%-ஆக உயர்த்தியுள்ளோம்.
2006 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் 27 நாடுகளிலிருந்து மட்டுமே கச்சா எண்ணெயைப் பெற்று வந்த இந்தியா, தற்போது 40 நாடுகளிலிருந்து அதனைப் பெறுகிறது.
நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் போதிய கையிருப்பு உள்ளது மற்றும் விநியோகச் சங்கிலி இயல்பாகச் செயல்படுகிறது.
இந்தியாவிலுள்ள 33 கோடி குடும்பங்களின் சமையலறைகள், குறிப்பாக ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வீடுகள், எவ்விதத் தட்டுப்பாட்டையும் சந்திக்கக் கூடாது என்பதே மோடி அரசின் முதன்மையான முன்னுரிமை ஆகும்" என்று தெரிவித்தார்.
- சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
- எல்பிஜி நிரப்பும் மையங்களில் போதிய ஸ்டாக் இன்றி தட்டுப்பாடு
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. அதற்கு, ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போர் சூழல் காரணமாக, அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள பல்வேறு வணிக ரீதியான எல்பிஜி நிரப்பும் மையங்களில் போதிய ஸ்டாக் இன்றி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல மையங்கள் மூடப்பட்டுள்ளன
எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக ஆட்டோக்கள் ஓட்ட முடியாத சூழல் உருவாகியுள்ளது என்று ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எல்பிஜி கிடைக்கும் ஒரு சில மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டுநர்கள் ஆட்டோக்களுக்கு எல்பிஜி நிரப்பி வருகின்றனர்.
- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- உடன்பாடு ஏற்பட்டதால் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர்.
சேலம்:
எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ஏற்றும் லாரிகளுக்கு ஒவ்வொரு பிளாண்ட்டுகளிலும் ஒப்பந்தப்படி போதிய லோடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.பி.ஜி. சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர். இதனால் எல்.பி.ஜி. வினியோகம் தடையின்றி சீராக தொடரும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் தெரிவித்தார்.
- எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
- பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் எல்.பி.ஜி. டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டது.
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உள்பட பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய இந்த சங்கத்தில் சுமார் 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக சுமார் 6 ஆயிரம் டேங்கர் லாரிகள் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் பழைய ஒப்பந்த காலம் முடிவடைகிறது. அடுத்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 2025-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருந்தது.
அதில் பல்வேறு விதிமுறைகள் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக சங்க உறுப்பினர்களுடன் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி ஆலோசனை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சில விதிமுறைகளை தளர்த்துமாறு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து விரைவில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதனால், எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தொடர்ந்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
ஆனால், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் எல்.பி.ஜி. டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தென் மாநிலங்கள் முழுவதும் கடந்த 5 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றதால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
- கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை.
- 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என அறிவிப்பு.
தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் எல்.பி.ஜி. டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- எண்ணெய் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளில் சாதகமாக ஏதும் இல்லை.
- வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
நாமக்கல்:
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உள்பட பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய இந்த சங்கத்தில் சுமார் 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக சுமார் 6 ஆயிரம் டேங்கர் லாரிகள் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் பழைய ஒப்பந்த காலம் முடிவடைகிறது. அடுத்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 2025-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருந்தது.
அதில் பல்வேறு விதிமுறைகள் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக சங்க உறுப்பினர்களுடன் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி ஆலோசனை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சில விதிமுறைகளை தளர்த்துமாறு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து விரைவில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எண்ணெய் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளில் சாதகமாக ஏதும் இல்லை. பாதகமாகத்தான் உள்ளது. விதிமுறைகளை தளர்த்த நாங்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. புதிய ஒப்பந்தத்தின் விதிமுறையால் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். நஷ்டத்தில் எங்களால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாது. அதனால் நாளை (27-ந்தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். 4 ஆயிரம் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் இயங்காது. எரிவாயு ஏற்றும் 10 இடங்களில் லோடுகளை ஏற்றாமல் லாரிகள் நிறுத்தப்படும். இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பிற மண்டலத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம. அவர்களும் போராட தயாராக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






