

இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பெகாசஸ், வேளாண் சட்டங்கள் என எந்த பிரச்சினைக்கும் அர்த்தமுள்ள விவாதத்துக்கு பா.ஜனதா தயாராக இருக்கிறது. பெகாசஸ் விவகாரத்தில் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிக்கை தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சிகள் விளக்கம் கேட்டிருந்தால், அப்போதே விவாதம் நடந்திருக்கும். ஆனால் அவர்கள் அறிக்கையை கிழித்து விட்டனர்’ என குற்றம் சாட்டினார்.