நீட் விலக்கு மசோதா விவகாரம்- தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவலை 2 ஆண்டுகளாக வெளியிடாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Published on

நீட் விலக்கு மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறக்கோரி பிரின்ஸ் கஜேந்திர பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவலை 2 ஆண்டுகளாக வெளியிடாதது ஏன்? நீட் விலக்கு பற்றி மக்கள் பரவலாக பேசி வந்த நிலையில் அரசு மவுனம் காத்தது ஏன்? மசோதா நிராகரிக்கப்பட்டால் புதிய மசோதா நிறைவேற்ற விதிகள் இருந்து அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீட் விலக்கு மசோதாக்களை திரும்ப பெற்றுக்கொண்ட அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இதுகுறித்து தமிழக அரசு ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com