

உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்த தொற்று, மனித குலத்தை அழிக்கும் கொடிய நோய் அல்ல என சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று உலக அளவில் பரவிவரும் ஒரு வைரஸ் என்றாலும், இது மனித குலத்தை அழிக்கும் கொடிய நோய் அல்ல என்று கூறிய லூங், எதிர்கால தொற்றுநோய்களை எதிர்கொள்வதற்கு தற்போதைய நெருக்கடி நிலையின் பாடங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.