

மாப்பிள்ளை சம்பா அரிசி - ¼ கிண்ணம்,
மோர் - தேவையான அளவு,
சின்னவெங்காயம் - 5,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
மாப்பிள்ளை சம்பா அரிசியை நன்றாக கழுவி இரண்டு மணிநேரம் ஊறவைத்து பின் அதனுடன் இரு கப் நீர்விட்டு சிறுதீயில் வேகவைக்கவும்.
நன்கு வெந்துபோன சாதத்தை எடுத்து ஆறவிட்டு பின் கொஞ்சம் நீர்விட்டு மூடிவைக்கவும். இரவில் இதுபோல் செய்து கொள்ளவும்.
காலையில் எழுந்து சோற்று பானையில் மேலும் நீர்விட்டு நன்கு கரைத்து, மோர், உப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து பருகவும்.
காலை வெறும் வயிற்றில் இந்த நீராகாரம் அருந்த பல வியாதிகள் கட்டுப்படும். உடல் பலப்படும்.