search icon
என் மலர்tooltip icon

    மிதுனம் -குரோதி வருடம் வருட பலன்

    மிதுனம்

    தமிழ் புத்தாண்டு ராசிபலன்

    ராஜதந்திரத்தில் சிறந்த மிதுன ராசி யினருக்கு பிறக்கும் குரோதி வருடம் வேண்டிய வரங்களை நல்கும் தமிழ் புத்தாண்டாக அமைய நல் வாழ்த்துக்கள்.

    விரயகுருவின் சஞ்சார பலன்கள்:

    மிதுன ராசிக்கு 7, 10ம் அதிபதியான குரு பகவான் மே 1 ,2024 முதல் ராசிக்கு 12ம்மிடமான அயன, சயன, விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது 5ம் பார்வையால் ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானத்தை பார்வையிடுகிறார். சுக ஸ்தானம் என்றால் வீடு வாகனம் மட்டும் கிடையாது. ஆரோக்கியமும் சேர்ந்தது தான் சுக ஸ்தானம். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம், பணம் கொடுக்கல் வாங்கல், வம்பு, வழக்கு, ஜாமீன் போன்றவற்றில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. சில கிரகங்கள் சாதகமாகவும் சில கிரகங்கள் பாதகமாகவும் உள்ளதால் சாதகங்களும், பாதகங்களும் சேர்ந்தே நடக்கும்.வீடு, வாகனம் மற்றும் தாயின் ஆரோக்கியத்திற்காக சில விரயங்களை சந்திக்க நேரும்.

    மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.ஆடம்பரமான ஆடைகள், அணி மணிகள் வாங்கி மகிழ்வீர்கள். தனது 6ம் பார்வையால் ராசிக்கு 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு, உத்தியோக ஸ்தானத்தை பார்க்கிறார். இதுவரை நிலையான வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தரமான வேலை கிடைக்கும். சிலருக்கு அரசு உத்தியோகத்திற்கு இணையான உத்தியோகம் கிடைக்கும். சிலருக்கு கடன் சுமை கூடும். வேலைப்பளு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    குருவின் 9ம் பார்வை ராசிக்கு 8ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் பதிகிறது. எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் இன்சூரன்ஸ் பாலிசி முதிர்வு தொகை, அதிர்ஷ்டப் பணம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம், தேக வலிமை பெறும். உங்களை வாட்டிய எதிர்மறை சிந்தனைகளை நேர்மறை சிந்தனையாக மாற்றும் பயிற்சியில் ஈடுபடுவீர்கள். வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் ஏற்படலாம்.

    பாக்கிய சனியின் பலன்கள்

    மிதுன ராசிக்கு அஷ்டமாதிபதி மற்றும் பாக்கியாதிபதியான சனி பகவான் இந்த குரோதி வருடம் முழுவதும் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம் என தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் நடக்கும். தனது 3ம் பார்வையால் ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தை பார்க்கிறார். புத்திசாலித்தனமாக செயல்பட்டு, திட்டமிட்டு லாபம் சம்பாதிப்பீர்கள்.

    தொழிலில் சிறு தடைகள் இருந்தாலும் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். வேலையில் முதலாளியால், மேலதிகாரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். தனது 7ம் பார்வையால் 3ம்மிடமான சகாய ஸ்தானத்தை பார்க்கிறார்.வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் சகோதர, சகோதரிகள் ஒன்று கூடி ஆனந்தம் அடையும் சந்தர்ப்பம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடையே மனக் கசப்பு, பகை விலகும். சகோதரர்களின் கெளரவக் குறைவான நடவடிக்கைகளால் ஏற்பட்ட மனஉளைச்சல் சீராகும். தொழில், உத்தியோக நிமித்தமாக சிலர் வெளியூரில் வசிக்க நேரும்.

    வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒப்பந்த அடிப்படையிலான புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். சுய ஜாதக அடிப்படையில் புதிய தொழில் முதலீடு செய்ய சரியான காலகட்டம். வெளிநாடு, வெளிமாநில பயணம் சிறப்பாகும்,தடைபட்ட வாடகை வருமானங்கள் வந்து சேரும். தனது 10ம் பார்வையால் ருண,ரோக, சத்ரு ஸ்தானத்தை பார்க்கிறார். அரசியல் பிரமுகர்கள், அரசாங்க ஊழியர்கள் வம்பு, வழக்கு, சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டும். ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். அறிமுகம் இல்லாதவர்களுக்கு கடனுக்கு பொருள் கொடுக்கக் கூடாது. வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டு உடல் நலனை பாதுகாக்க வேண்டும்.

    சுகஸ்தான கேது, தொழில் ஸ்தான ராகு ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் கேதுவும், 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சுக ஸ்தானத்தில் நிற்கும் கேது நிறைந்த ஞானத்தை மாணவர்களுக்கு வழங்குவார். இதுவரை படிப்பில் நாட்டம் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். சிரத்தையுடன் படிப்பார்கள். சுமாரான வீட்டில் வசித்தவர்கள் நல்ல வசதியான வாடகை வீட்டிற்கு இடம் பெயரும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் விரும்பும் பூமி விரும்பிய விலைக்கு கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு பூர்வீகச் சொத்து கிடைக்கும்.

    சிலருக்கு புதிய நான்கு சக்கர வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து வாங்குவது அல்லது விற்பனையால் லாபம் உண்டு. பூர்வீகச் சொத்து தொடர்பாக பேச்சு வார்த்தை பலிதமாகும். சில இளவயதினர் காதல் வயப்படுவார்கள்.அரசு வேலை முயற்சி பலிதமாகும். தந்தையால் ஏற்பட்ட சிரமங்கள், விரயங்கள் படிப்படியாக குறையும். 10ல் ஒரு பாவி நிற்பது நல்லது. இப்பொழுது 10ல் நிற்கும் பாவி ராகு வெளியுலகத்திற்கு தொழில் மூலம் உங்களை அடையாளம் காண்பிக்கப் போகிறார்.

    சிலர் நிலையான நிரந்தரமான தொழில், உத்தியோகத்திற்காக வீடு அல்லது ஊர் மாற்றலாம். தொழிலில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். பணிச் சுமை சற்று அதிகரிக்கும். நேரம் காலம் பார்க்காமல் அதிகம் உழைக்க நேரும். பண வரவு சரளமாகும். கடன் பிரச்சனைகள் படிப்படியாக குறையத் துவங்கும்.

    வாடகை வருமானம் தரும் சொத்துக்கள் சேரும். 10ம்மிட ராகுவால் தொழில் வியாபார ரகசியங்கள் கசியும். தொழில் போட்டிகள் உருவாகும். 4ம்மிடம் என்பது ஆரோக்கியத்தைக் கூறுமிடம் என்பது சிலருக்கு வயிறு தொடர்பான உடல் உபாதைகள் ஏற்படலாம்.ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.தாயின் ஆரோக்கியத்தில் நிலவிய குறைபாடுகள் வைத்தியத்தில் சீராகும். தாய்வழிச் சொத்தில் நிலவிய மனக் கசப்புகள் மறையும்.

    மிருகசீரிஷம் 3, 4:

    செவ்வாய் பகவானின் ஆதிக்கம் பெற்ற மிருகசீரிஷம் 3, 4ம் பாதம் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு குரோதி வருடம் யோகமான பலனை பெற்றுத் தரும் தமிழ் புத்தாண்டாக அமையப்போகிறது.சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

    செல்வாக்கு உயரும். பற்றாக்குறை வருமானத்தில் வாழ்ந்த குடும்பம் இப்பொழுது நிறைவான வருமானத்துடன் நடக்கும். இழந்த கவுரவப் பதவிகள் மீண்டும் கிடைக்கும். உங்களின் ஆளுமைக்கு மதிப்பும், பாராட்டும் கிடைக்கும். தந்தையால் நிம்மதியும், தொழிலுக்கு அரசின் மானியம் கிடைக்கும்.பெரியோர்களிடம் மரியாதை காட்டும் குணம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மன நிறைவோடு செய்து முடிப்பீர்கள்.

    சேமிப்புகள் மற்றும் பங்குச் சந்தை முதலீடு அதிகரிக்கும். வராக் கடன்கள் வசூலாகும். சமுதாய அந்தஸ்து மிகுந்த புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். திருமணம், சுப காரிய முயற்சிகள் சாதகமாகும். வேலைப்பளு அதிகமாகும். வீடு கட்டும் பணி துரிதமாகும்.

    மருமகளால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். சிலருக்கு சகோதரருடன் தொழிலில் பிரிவினை ஏற்படும் அல்லது சகோதரரின் குடும்பத்தை பராமரிக்கும் நிலை ஏற்படும். எல்லா விதத்திலும் இந்த வருடம் மிகச் சாதகமாக அமைய தினமும் கால பைரவ அஷ்டகம் படிக்க மேன்மையான பலன்கள் நடக்கும்.

    திருவாதிரை:

    ராகுவின் ஆதிக்கம் நிறைந்த திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருடம் புதிய நம்பிக்கை பிறக்கும் தமிழ் புத்தாண்டாக இருக்கும். புதிய சிந்தனைகள், எண்ணங்கள் உதயமாகும். எதிர்கால தேவைக்கு இப்பொழுதே சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறக்கும். கவனத்துடன் செயல்பட்டால் தொழில், உத்தியோகத்தில் வெற்றியடைய முடியும். குரு விரயத்தில் சஞ்சரிக்கும். காலம் என்பதால் இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். பெரிய மூலதனம் போடுவதற்கு ஏற்ற காலம் அல்ல. பூர்வீகச் சொத்தால் அனுகூலம் உண்டாகும். குடும்ப சுப செலவிற்கு எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    அலைக்கழித்த வம்பு வழக்கிலிருந்து விடுபடும் மார்க்கம் தென்படும். உடன் பிறந்தவர்களின் சந்திப்பு, அனுசரனை மகிழ்ச்சியை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பல் சிகிச்சை நல்ல பலன் தரும். தந்தை வழி சுற்றத்தால் நற்பயன் மற்றும் உதவி கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு கட்சியால் ஆதாயம் உண்டாகும். அரசியல் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். எதிர்ப்பு சக்தி கூடி உடல் நலம் சீராகும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஸ்ரீ ராமானுஜரை வழிபட இனிய மாற்றங்கள் உண்டாகும்.

    புனர்பூசம் 1, 2, 3:

    குருவின் புனர்பூசம் 1, 2, 3 மிதுன ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருட புத்தாண்டில் நன்மைகள் மிகுதியாகும்.தடைபட்ட அரைகுறையாக நின்ற பணிகள் துரிதமாக நடைபெறும். உங்கள் மீது பதிந்த வீண் சங்கடங்கள் அவமானங்கள் பழிச் சொற்கள் நீங்கும்.

    எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைத்த நிலை மாறும். தாராளமான தன வரவால் ஆடம்பரச் செலவில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். சிலருக்கு கவுரவப்பதவிகள் கிடைக்கும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்.

    சிலருக்கு உயில் எழுதி வைக்க வேண்டும் என்ற சிந்தனை அதிகமாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தொழில், வேலையில் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். சுய சம்பாத்தியம் பெருகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இழுபறி நிலைமாறி துரிதமாக காரியங்கள் நடைபெறும். உங்களின் முயற்சிக்கு பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்கள் உதவியாக இருப்பார்கள். வரவு செலவு சீராக இருக்கும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். திருமணம் நடக்கும். குழந்தை பிறக்கும். உடல் நிலை சீராகும்.

    4ல் கேது 10ல் ராகு இருப்பதால் வீட்டுப் பெரியவர்களின் ஆலோசனையை மதித்து நடப்பது அவசியம். சொத்துக்கள் மீதான வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். ஸ்ரீ ராமர் பட்டாபிசேக படம் வைத்து வழிபட நிம்மதி நிலைக்கும்.

    பெண்கள்:

    பெண்கள் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் ஆனந்தமாக இருப்பார்கள். பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் கருத்துக்களை மதித்து நடப்பீர்கள். குடும்பம் நலனுக்காக உங்கள் செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் மறைமுக வருமானம் அதிகரிக்கும்.சில பெண்களுக்கு புதிய சுய தொழில் தொடங்கும் ஆர்வம் உருவாகும். பெண்களுக்கு தாய் வழிச் சீதனம் கிடைக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்து வாழும் கணவன், மனைவி சேர்ந்து வாழ்வர்.

    திருமணம்:

    பாக்கிய ஸ்தானத்தில் நிற்கும் பாக்கியாதிபதி சனி பகவான் மிதுனத்திற்கு அவரவரின் வயதிற்கு ஏற்ப நடைபெற வேண்டிய அனைத்து பாக்கிய பலன்களை இந்த ஒரு வருடத்தில் வழங்கிவிடுவார். எனவே சுய ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும். காதல் திருமணத்திற்கு அதிக வாய்ப்பு உள்ளது. சிலருக்கு நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும். நின்று போன திருமணம் பேச்சு வார்த்தையில் வெற்றி தரும். மறுமண முயற்சி பலிக்கும்.

    பரிகாரம்:

    புதனை ராசிநாதனாக கொண்ட மிதுன ராசியினர் இந்த குரோதி வருடம் மதுரை மீனாட்சியம்மனை வழிபட வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகத கல்லால் ஆனது. இந்த ஸ்தலத்தில் மீனாட்சியம்மன் சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்றும், இந்த தலம் பூலோக கைலாசம் எனவும் அழைக்கப்படுகின்றது.

    மதுரை மாநகரை ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மன் தாயுள்ளம் கொண்டவள். இங்கு யார் எதை வேண்டி வணங்கினாலும், அவர்களுக்கு அதை அருளுவதோடு, சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கக் கூடியவள். இந்த கோயிலுக்கு வந்து மீனாட்சி அம்மன், சொக்கநாதரை தரிசித்தால் மன நிம்மதி ஏற்படும்.

    மிதுனம்

    சோபகிருது வருட பலன் 2023

    செல்வாக்கான வருடம்!

    புத்திக்கூர்மையும், அறிவாற்றலும் சாதுர்யமும் நிறைந்த மிதுன ராசியினருக்கு சோபகிருது வருடம் மேன்மையான பலன்களை வழங்க நல் வாழ்த்துக்கள். திருக்கணித பஞ்சாங்கப்படி குருபகவான் ஏப்ரல் 22 முதல் ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானம் செல்கிறார். கடந்த ஜனவரி17 முதல்சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தற்போது 11,5ம்மிடத்தில் சஞ்சரிக்கும் ராகுகேதுக்கள் அக்டோபர் 30க்குப்பிறகு 10,4 மிடத்திற்கு மாறுகிறார்கள்.வெற்றியும் மேன்மையும் உண்டாகும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். அசாத்திய துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்வீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். அதை செயல்படுத்ததேவையான நிதி உதவி கிடைக்கும்.பெரிய மனிதர்களின் தொடர்பால் கவுரவப் பதவிகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அமையும்.பட்டம்,பதவி, அதிர்ஷ்ட வாய்ப்புகள்தேடிவரும். நிலம், வீடு, வாகனம் என சொத்து சேர்க்கை உண்டாகும்.

    சிலருக்கு பணிக் காலம் முடிந்தப் பிறகும் பதவி நீடிப்புகள் ஏற்படலாம்.பித்ருக்களின் நல்லாசிகள் கிடைக்கும்.செல்வாக்குடன் திகழ்வீர்கள்.

    அரசியல் ஈடுபாடும் பிரபலமாகும் யோகமும் உண்டாகும். பொருள் கடனும், பிறவிக் கடனும் தீரும். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு சொந்த தொழில் துவங்கும் ஆர்வம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி மீண்டும் தொடரும். நிர்பந்தத்திற்காக ஊர் மாற்றம், இடமாற்றம் செய்ய நேரும். திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும்.

    குடும்பம்,பொருளாதார நிலை : குடும்ப பிரச்சனைகள் அகலும். இருளடைந்த உங்கள் வாழ்க்கையில் மீண்டும் ஒளி பிறக்கும்.மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள் விலகும். உங்கள் சிந்தனையில் வேகமும், விவேகமும் இருக்கும். குடும்ப உறவுகளிடம்ஒற்றுமை அதிகரிக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடன் பிறந்தோர்களுடன் நட்பும், நல்லுறவும் ஏற்படும்.பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை உங்களுக்கு இல்லை.வராக்கடன் வசூலாகும். அடமான நகைகள் மீண்டு வரும்.குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும்.காதல் உங்களுக்கு சாதகமாகும். நீங்கள் கண்ட கனவின் படி உங்கள் வாழ்க்கையை திருத்தி அமைத்துக் கொள்ளக் கூடிய இனிய ஆண்டாக அமையும்.

    பெண்கள்: மன வலிமை அதிகரிக்கும்.மனக் கவலைகள் மறந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். பெண்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பார்கள். தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு சீராகும்.

    மிருகசீரிஷம் 3, 4 : நன்மைகள் அதிகரிக்கும் வருடம். வேதனைகளும் சோதனைகளும் தீரும். வீடு மாற்றம், ஊர் மாற்றம் போன்ற நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படும். தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும். வேலைப்பளுவும் அலைச்சலும் அதிகரிக்கும்.புதிய நட்பு வட்டாரம் உருவாகும். பூர்வீகம் தொடர்பான விசயங்கள் விரைவில்நல்ல முடிவிற்கு வரும். அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். தொழிலில்உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். மூத்த சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு.அண்டை அயலாருடன் ஏற்பட்டமனபேதம் சீராகும்.செளக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். வம்பு, வழக்குகளிலிருந்து மீள்வீர்கள். தினமும் கந்தகுரு கவசம் கேட்கவும்.

    திருவாதிரை: அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும் வருடம். சோதனைகள் சாதனைகளாக மாறும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு கடல் கடந்து வேலைக்கு செல்லும் யோகம் உண்டாகும்.அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்புகள் அதிகரிக்கும்.புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம்.

    மனைவி மூலம் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். சிலர் வாடகைக்கு வசிக்கும் குடியிருப்பை வாங்குவார்கள். அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடைவார்கள்.கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். மூதாதையர் சொத்தில் நிலவிய குழப்பங்கள் பேச்சு வார்த்தையில் திருப்பம் ஏற்படும். தினமும் மகிஷாசுரமர்தினி ஸ்தோத்திரம் கேட்கவும்.

    புனர்பூசம் 1,2,3 : புண்ணிய பலன்கள் நடக்கும் காலம்.வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி வாழ்க்கைக்கு, ஜீவனத்திற்கு தேவையான, வருவாய் கிடைக்கத் துவங்கும்.உங்கள் வாழ்க்கை வளர்ச்சியும், எழுச்சியும் கொண்டதாக இருக்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை போன்ற சுப செலவு உண்டாகும்.

    குழந்தை இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்து பாக்கிய பலன்களை அதிகரிப்பீர்கள். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும். தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். தினமும் குரு கவசம் படிக்கவும்.

    பரிகாரம்:மிதுன ராசியினர் சிதம்பரம்தில்லை நடராஜரையும், சிவகாமித் தாயாரையும் வணங்க வேண்டும். அங்கு சித்திர சபையில் உற்சவ மூர்த்தியாக இருக்கும் சொர்ணபைரவரை வழிபட்டு வர தளர்வில்லாத வளர்ச்சி உண்டாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    சுபகிருது வருட பலன் - 2023

    திட்டம் தீட்டுவதில் வல்லவர்களான மிதுன ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டு காரிய சித்தி வழங்க நல் வாழ்த்துக்கள்.

    உங்கள் ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கிறார். 5ம் இடத்தில் கேது பகவான் சஞ்சாரம் செய்கிறார்.குருபகவான் 10ம் இடத்தில் நிற்கிறார். சனி பகவான் 8.9 ம் இடங்களில் உலா வரப்போகிறார். இந்த சுப கிருத வருடத்தில் உங்களின் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் பிறருக்கு உதவி செய்து உங்கள் பாக்கிய பலனை அதிகரித்துக் கொள்வீர்கள். பொது வாழ்வில் ஏற்பட்ட வீண் பலிகள் அகலும். அஷ்டமச் சனியாலும் விரய ராகுவாலும் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும்.

    துணிந்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இறை வழிபாட்டின் மூலம் நல்ல மாற்றங்களை வரவழைத்துக் கொள்வீர்கள்.உங்கள் முயற்சியல் சிறு தடை, தாமதம் நிலவினாலும் முடிவில் பெற்றி உங்களுக்கே உண்டாகும்.பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் கன்சல்டிங் நிறுவனம் நடத்துபவர்களுக்கு கவ பொற்காலமாக அமையும். இந்த ஆண்டில் குரு மற்றும் ராகு/கேதுக்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. 17.1.2023க்குப் பிறகு அஷ்டமச் சனியிலிருந்து முழுமையாக விடுபடுவர்கள்.

    குடும்பம்: இரண்டாமிடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் குடும்ப ஸ்தானம் பலம் பெறுகிறது. இந்த வருடம் குடும்ப உறவுகளுக்கு இனிய காலமாக அமையப் போகிறது. அஷ்டமச் சனியால் விலகிச் சென்ற உறவுகளை குருபகவான் மீட்டுத் தருவார்.

    உறவுகள் பகை மறந்து ஒன்றாக இணைந்து செயல்படுவார்கள். உறவுகளிடம் கோள் மூட்டி வேடிக்கை பார்த்தவர்கள் விலகி ஓடுவார்கள்.உங்கள் வார்த்தைக்கு குடும்பம் கட்டுப்படும். குடும்ப முன்னேற்றத்திற்கான அனைத்து தேவைகளை நிறைவாகும். பிள்ளைகளால் மன நிறைவு, நிம்மதி கிடைக்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும். பல வருடங்களாக தீராத முன்னோர்களின் பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் அகலும். பூர்வீக சொத்துகள் தொடர்பாக நிலுவையிலிருந்த வழக்குகள் சாதகமாகும். பாகப் பிரிவினைகள் மத்தியஸ்தர்கள் மூலம் பேசப்பட்டு சுமூகமாக முடியும். வெளிநாட்டிலிருந்து பூர்வீகம் வந்து செல்வதிலிருந்த தடைகள் அகலும். குடும்பத்துடன் குல, இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    ஆரோக்கியம்:6ம் இடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் சிறு சிறு ஆரோக்கிய குறைபாடு வந்தாலும் உடனே சரியாகி விடும். போதிய ஓய்வு, நிறைந்த சந்தோஷம், நிம்மதியான தூக்கம் கிடைக்கும். டென்ஷன் குறையும். 8ம் இடத்தில் சனி பகவான் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் ஆயுள் தீர்க்கம். வண்டி வாகனங்களை இயக்கும் போது கவனமாக செயல்படவும்.

    திருமணம்: ஜனன கால ஜாதக தசா புக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் சனி பகவான் 29.4.2022 முதல் 12.7.2022 வரை அதி சாரமாக கும்ப ராசிக்கு செல்லும் காலத்தில் திருமணம் நடைபெறும் சாத்தியக் கூறுகள் உள்ளன. மற்றவர்களுக்கு 2023 ஜனவரியில் சனிப் பெயர்ச்சிக்கு பிறகு திருமணம் நடக்கும்.

    பெண்கள்: பிறந்த வீட்டாரும், புகுந்த வீட்டாரும் போட்டி போட்டு கவனிப்பார்கள்.குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். கணவரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். குடும்ப உறவுகளிடையே சந்தோஷம் நிலைக்கும். 8ல் கோட்சார சனி இருப்பதால் மாங்கல்யத்தை அடிக்கடி கழட்ட கூடாது. புதிய செயின் மாற்ற விரும்புபவர்கள் 17.1.2023க்கு பிறகு மாற்றலாம்.

    மாணவர்கள்: ராசிநாதன் புதன் என்பதால் இயல்பாகவே சிறப்பாக படிக்கும் மிதுன ராசி மாணவர்களுக்கு கல்வி முன்னோற்றம் சிறப்பாக இருக்கும். 4ம் இடமான கல்வி ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் தேர்வில் நீங்கள் எதிர்பார்த்ததை விட பிரமாண்ட வெற்றி கிடைக்கும். நீங்கள் விரும்பும் கல்லுரிக்கு உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டம் தொடர்பான போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசு கிடைக்கும்.

    உத்தியோகஸ்தர்கள்: 10ல் குரு வருவதால் பதவி பறி போகுமோ என்ற பயம் தேவையில்லை. 10ம் அதிபதியாகிய குரு 10ல் ஆட்சி பலம் பெறுவது சிறப்பு. குருவிற்கு சனி பார்வையும் கிடைப்பதால் தர்மகர்மாதிபதி யோகத்தால் உத்தியோகத்தில் நிலவிய நெருக்கடிகள் சீராகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி. செய்பவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும்.

    முதலீட்டாளர்கள்:10ம் அதிபதி குரு 10ல் ஆட்சி பலம் பெறுவதால் உங்கள் சிந்தனை முழுவதும் தொழில் பற்றியே இருக்கும்.இதுவரை ஒரு தொழிலில் செய்தவர்களுக்கு இரண்டு தொழில் செய்யும் எண்ணம் வரும். லாப ஸ்தான ராகுவால் தொழிலில் நிலவிய மந்த நிலை மாறி லாபம் உண்டாகும். சிலருக்கு தொழில் விரிவாக்க சிந்தனை தோன்றும். வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.

    அரசியல்வாதிகள்:10ல் குரு ஆட்சி பலம் பெற்றதால் பெயர், புகழ் உயரக்கூடிய காலம். மக்கள் சேவையே மகேசன் சேவை என பல மிது ராசியினருக்கு அரசியல் ஆர்வம் அதிகரித்து அரசியல் களத்தில் இருங்குவார்கள். கட்சிக்காக அலைச்சல் மிகுந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். 14.6.2022க்குப் பிறகு புதிய மாற்றங்கள் உருவாகும். கலைஞர்கள்:கலைத்துறையினருக்கு அற்புதமான நல்ல காலம். பல புதிய நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.15.6.2022 முதல் 20 .2.2023 வரை புதிய படப்பிற்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பெயர், புகழ், செல்வாக்கு கொடி கட்டி பறக்கும்.

    விவசாயிகள்:விவசாயிகளுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அஷ்டமச் சனி மற்றும் கொரோனா கால இழப்புகளை ஈடு செய்ய முடியும். ராகு 11ம் இடத்தை கடக்கும் முன்பு உங்கள் கடனை அடைத்து விடுவார்.பயிர் கடன்கள் முற்றிலும்அடைபடும்.

    ராகு/கேது: 21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 11,5ம் இடத்தில் கோட்சார ராகு| கேதுக்கள் சஞ்சரிப்பதால் தவறான எண்ண அலைகளால் மனக் குழப்பம் ஏற்படும். தார்மீக உணர்வோடு உழைத்து முன்னேறியவர்களுக்கு சிறிய பேராசை துளிர் விடும்.குறுக்கு வழியில் சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட்டு அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக மாற்ற முயற்சித்து சட்டத்தின் பிடியில் திக்கலாம். சிலருக்கு சட்டத்திற்கு எதிரான இரண்டாம் திருமணம் நடக்கும். செயற்கை கருத்தரிப்பு முறை தோல்வியில் முடியும். உடன் பிறந்த மூத்த சகோதர, சகோதரிகளிடம் மனக்கசப்பு உண்டாகும். பிள்ளைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும்.

    குரு: 29.7.2022 முதல் 23.11. 2022 வரைராரிக்கு 8ல் சஞ்சரிக்கும் கோட்சார சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் தொழில், வேலை நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். எதிர்பார்பார்ப்புகளில் தடை தாமதம் உண்டாகும். தொழில் ஒப்பந்தங்கள் கை மாறிப் போகலாம். வழக்குகள் இழுபறியாகும்.

    பரிகாரம்:புதன்கிழமை காலை 6 --7 மணி வரையான புதன் ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபட நிம்மதி அதிகரிக்கும்.

    சொகுசு வாழ்க்கை

    தன வரவில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும். எவ்வளவு தாழ்ந்த நிலையில் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இல்லை என்ற நிலை இல்லை. முன்பு இருந்ததை விட வருமான உயர்வு அதிகமாகவே இருக்கும்.வட்டிக்கு வட்டி கட்டிய கடன் பிரச்சனைகள் குறையும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டு.4ம் இடமான சுக ஸ்தானத்திற்கு குருப் பார்வை பதிவதால் சொகுசு வாழ்க்கை வாழப் போகிறீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதிலும், ஆபரணங்கள் வாங்கவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×