search icon
என் மலர்tooltip icon

    கும்பம் - ஆண்டு பலன் - 2024

    கும்பம்

    புத்தாண்டு ராசிபலன்கள்-2024

    உழைப்பில் ஆர்வம் மிகுந்த கும்ப ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    இந்த ஆங்கிலப் புத்தாண்டில் ராசி அதிபதி சனி பகவான் ராசியில் ஆட்சி. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் ராகு. அஷ்டம ஸ்தானத்தில் கேது. ஏப்ரல் வரை முயற்சி ஸ்தான குரு. ஏப்ரலுக்குப் பிறகு சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். எனவே முயற்சிகள் வெற்றியாகும். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வீர்கள். 2024ம் ஆண்டு மனக்கவலைகள் விலகும் மகத்தான ஆண்டாக அமையப்போகிறது.

    குருவின் சஞ்சார பலன்கள்

    கும்ப ராசிக்கு 2,11ம் அதிபதியான குரு பகவான் ஏப்ரல் 21 வரை முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் அகலும். தொலைந்த பொருள்கள் தென்படும். குருப் பெயர்ச்சிக்குப் பிறகு சுக ஸ்தானத்திற்கு மாறும் குரு பகவான் தனது 5ம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் தொழில் ஸ்தானத்தையும் 9-ம் பார்வையால் விரய ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். குடும்பத்தில் நிலவிய கூச்சல் குழப்பம் மறைந்து அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். இலாகா மாற்றம் மற்றும் இடமாற்றம் கவலையைத் தரும்.

    அரசியலில் ஈடுபட்டோருக்கு விபரீத ராஜ யோகம் தரும் காலமாகும். சிலர் பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். வெளிநாட்டு வேலை, பயணம் திட்டமிட்டபடி நடக்கும். செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும்.தம்பதிகள் ஒருவர் விஷயங்களில் பிறர் குறிக்கிடாமல் இருப்பது நல்லது. கண்களில் சிறு உபாதைகள் இருந்தால் உரிய சிகிச்சையை பெற வேண்டும். திருமண முயற்சி வெற்றியாகும். ஆரோக்கியம் சீராகும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும் வாழ்க்கை துணையின் வைத்தியச் செலவு குறையும்.

    சனியின் சஞ்சார பலன்கள்

    கும்ப ராசிக்கு ராசி அதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் ராசியில் நின்று ஜென்மச் சனியாக பலன் தருகிறார். ராசியில் நின்று 3-ம் பார்வையால் சகாய ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் கர்ம ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். புதிய தொழில் முயற்சிகள் ஒப்பந்தங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். தொழில் உத்தியோக அனுகூலம் நல்ல விதமாக இருந்தாலும் பணிச்சுமை மிகைப்படுத்தலாக இருக்கும். விரயங்கள் சற்று கூடுதலாக இருக்கும்.எனவே இந்த காலகட்டத்தில் நகை வாங்குவது, வீடு கட்டுவது, பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சேமிப்பது என உங்கள் விரயத்தை சுபமாக மாற்றுவது உங்கள் கையில்தான் உள்ளது.

    அவசியம் அநாவசியம் எது என பகுத்துணர்ந்து செயல்பட்டால் விரயத்தை தவிர்க்கலாம். அத்துடன் தொழில், வேலைக்காக பலர் குடும்பத்தை பிரிந்து வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். சிலருக்கு கால் அல்லது கண் பிரச்சனைக்காக வைத்தியம் செய்ய நேரும். வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகும் நிலை ஏற்படும். சிலர் மதம் மாறி வேறு மத வழிபாடு செய்வார்கள். பாதங்களில் எரிச்சல் இருக்கும்.

    ராகு-கேதுவின் சஞ்சார பலன்கள்

    ஆண்டு முழுவதும் ராசிக்கு 2ல் ராகுவும், 8ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். 2ம்மிடமான குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து குரு பகவானைப் போலவே செயல்படப்போகிறார். திடீர் தன வரவை ஏற்படுத்தும் சக்தி ராகுவிற்கு உண்டு என்பதால் பொருளாதார வசதி அதிகரிக்கும் பல வழிகளில் இருந்தும் பணம் வரும். வெளிநாட்டுப் பணம் கையில் பணம் புரளும். பொன்னும், பொருளும் சேரும். துன்பங்கள் பொசுங்கி விடும். நல்ல மாற்றங்கள், திடீர் திருப்பங்கள் ஏற்படும். இழந்த அனைத்தையும் திரும்பப்பெறப் போகிறீர்கள்.

    நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும். அஷ்டம கேதுவால் குபேர யோகம் கிடைக்கப்போகிறது. கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து விபரீத ராஜ யோகத்தை கொடுக்கப்போகிறார். ஒரு சிலருக்கு விபத்து, கண்டம், சர்ஜரி, அவமானம், வம்பு, வழக்கு போன்ற அசுப பலன்களும் ஏற்படும்.பெரிய அளவில் முதலீடு செய்து அகலக்கால் வைக்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணத்தை கடனாக வாங்கித்தர வேண்டாம் இருப்பதை தக்கவைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு மனபாரம் இருந்தாலும் படுத்த அடுத்த நொடி நிம்மதியாக கவலை மறந்து நிம்மதியாக தூங்கி விடுவீர்கள்.

    அவிட்டம் 3,4

    முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் வருடம். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும்.புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சமுதாயத்தில் கவுரவமான நிலையை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு என்று தனி முத்திரை பதிப்பீர்கள்.வெளியே சொல்லமுடியாமல் தவித்த பிரச்சனையிலிருந்து மீள்வீர்கள். ஜாமீன் வழக்கு சாதகமாகும். கொடுக்கல், வாங்கல் சீராகும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள்.

    நோய்கள் நீங்கும். தன வரவு அதிகரிப்பதால் மன அழுத்தங்கள் நீங்கும். அவசரப்படாமல் பொறுமையோடும் நிதானத்தோடும் செயல்பட்டால் இந்த வருடம் பொற்காலமாக இருக்கும்.தொட்டது துலங்க விரயத்தை சுபமாக்க மஞ்சள் அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.

    சதயம்

    உண்மையான உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் வருடம்.பேச்சில் தைரியம், தன் நம்பிக்கை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும்.சொல் வலிமை, வாக்குப் பலிதம் ஏற்படும். எவராலும் சாதிக்க முடியாத செயல்களை செய்து முடிப்பீர்கள். போட்டி பொறாமை குறையும். கடன் பிரச்சினைகள் தீரும். வெளியில் தெரியாமல் புதைந்து கிடந்த அனைத்து திறமைகளும் வெளிப்படும்.

    அஞ்சாமல் தைரியமாக எல்லா முயற்சியிலும் ஈடுபடுவீர்கள். உடன் பிறப்புகளிடையே ஒற்றுமை உண்டாகும். தொழிலில் புதுமை புகுத்தி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். வீடு, வாகனயோகம், குழந்தைப்பேறு, திருமணம் போன்ற பாக்கிய பலன்கள் கைகூடும்.தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். ராகு காலத்தில் துர்க்கை, காளியை வழிபடவும்.

    பூரட்டாதி 1,2,3

    நெருக்கடி நிலை மாறும் வருடம் யாரும் செய்யத் தயங்கும் செயல்களை துணிச்சலுடன் செய்து முடிக்கும் வல்லமை உண்டாகும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். புத்திர பாக்கியம் உண்டாகும். பங்கு சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். மாணவர்களுக்கு நல்ல கல்லூரியில் இணைந்து படிக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும். சம்பந்திகள் சண்டை முடிவிற்கு வரும். புதிய சொத்துக்கள், உயர்ரக வாகனங்கள் சேரும்.

    வங்கி கடன் மூலம் புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும்.வீட்டில் மேளச் சத்தம் கேட்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமணத்தை நடத்தி ஆனந்தம் அடைவீர்கள்.கவுரவப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை நிம்மதி ஏற்படும். சிலர் குடியிருப்பை மாற்றம் செய்யலாம்.பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம். சர்க்கரை பொங்கல் படைத்து அம்பிகையை வழிபடவும்

    திருமணம்

    குடும்ப ஸ்தானத்தில் ராகு எட்டில் கேது என்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தால் திருமணம் தடைபட வாய்ப்பு உள்ளது. எட்டாமிடம் என்பது பெண்ணிற்கு மாங்கல்ய ஸ்தானம் என்பதால் சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப திருமணத்தை நடத்துவது நல்லது

    பெண்கள்

    கடன் தொல்லை குறையும். ஆரோக்கியம் சீராகும்.பிரிந்த கணவன், மனைவியர் ஒன்று சேர்ந்து வாழ்வர். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாடாகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிறருடன் பழகுவதில் உங்களுக்கென்று தனித்துவத்தை ஏற்படுத்துவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட பெரிய செயல்களைக் கூட எளிதாக செய்து முடித்து வெற்றியைக் கொண்டாடுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் வேதனைகளும், துயரங்களும் விலகும். ஜென்மச் சனியின் காலம் என்பதால் வீட்டிற்கு தெரியாமல் நகைச் சீட்டு, ஏலச்சீட்டு கட்டுவதை தவிர்த்து அரசுடைமை வங்கிகளில் சேமிக்கவும்.

    வியாபாரிகள்

    தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வாடிக்கை யாளர்க கள் உருவாகுவார்கள். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. வாய்ப்புகள் வாசல் கதவை தட்டும்.பேச்சை தொழிலாக கொண்டவர்களான வக்கீல்கள், ஆசிரியர்கள், சொற்பொழி வாளர்கள் , ஜோதிடர்களின் தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். ஜென்மச் சனியின் தாக்கம் இருப்பதால் புதிய தொழில் ஒப்பந்தம், முதலீடுகளை தவிர்த்தல் நலம்.

    உத்தியோகஸ்தர்கள்

    உத்தியோகஸ்தர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும். தகுதி திறமைக்கு ஏற்ற உயர்வு கிடைக்கும். இடமாற்றங்கள் ஏற்படும்.வாக்கு வன்மையால் புகழ் பெறுவீர்கள்.அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணி நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம். வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றிதரும்.வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் உறவினர்கள் பெயரில் சொத்துக்கள் வாங்குவதை தவிர்க்கவும். தேவையற்ற பயத்தைத் தவிர்த்து சுய ஜாதக தசா புத்திக்கு தகுந்த வழிபாட்டு முறைகளை கடைபிடித்து பயன் பெற வாழ்த்துக்கள்.

    அரசியல்வாதிகள்

    வாக்கு ஸ்தானத்தில் ராகு அஷ்டம ஸ்தானத்தில் கேது. எனவே வாக்குறுதியில் மிகுந்த கவனம் தேவை. உங்களின் வாக்கே உங்களை கட்டம் கட்டி கூண்டில் ஏற்றும் .யாரிடம் பேசினாலும் வார்த்தைப்பிரயோகம் சரியாக இருக்க வேண்டும்.நிதானம் தவறினால் உங்களின் பல ஆண்டு கால உழைப்பை இழக்க நேரும்.புத்தியை பயன்படுத்த வேண்டிய நேரம்.ஒரு சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வேறு கட்சிக்கு மாறவும் வாய்ப்புள்ளது.

    பரிகாரம்

    வெற்றிலையில், பாக்குடன் தயிர் சாதம் வைத்து சனிக்கிழமை இஷ்ட குலதெய்வம், பைரவரை வழிப்பட்டால் கவலை தீரும்.

    கும்பம்

    ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

    புகழை விரும்பும் கும்ப ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களின் கவுரவம், செல்வாக்கு உயரக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். ஜென்மச் சனியின் காலம் என்பதால் சில நேரங்களில் யோசிக்காமல் சில விசயங்களில் ஈடுபட்டு அதனால் சங்கடங்களை சந்திக்க நேரும். எத்தகைய இடைஞ்சல்கள் வந்தாலும் அவற்றை விரட்டிய டித்திடக்கூடிய வலிமை உண்டாகும். சிந்தித்து நிதானமாக செயல்பட்டால் உங்கள் முயற்சிகள் வெற்றி தரும் நல்ல ஆண்டாக அமையும் என்பதில் ஐயமில்லை.

    குருவின் சஞ்சார பலன்கள்:

    கும்ப ராசிக்கு 2, 11ம் அதிபதியான குரு பகவான் ஏப்ரல் 22, 2023 வரை மீனத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். அதன் பிறகு 3ம்மிடம் சென்று ராகுவுடன் இணைந்து சனி பார்வை பெறுகிறார்.மிகுதியான பொருள் வரவு இருக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு தொட்டது துலங்கும். இரட்டிப்பு வருமானம் உண்டாகும். தொழிலில் நிலையான நிரந்தரமான வருமானம் கிடைக்கும். இதுவரை வேலைக்கு செல்லாமல் இருந்தவர்கள் கூட வேலைக்கு சென்று குடும்பத்தை கவனிப்பார்கள்.

    குடும்ப உறவுகளுடன் ஒட்டாமல் வாழ்ந்தவர்கள் உறவுகளின் அவசியத்தை புரிந்து கொள்வார்கள். அடிப்படை தேவைக்கு திணறியவர்கள் தாராள தன வரவால் தன்நிறைவு அடைவார்கள். தம்மைச் சார்ந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.

    பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். உற்றார், உறவினர், குடும்ப உறவுகள் அண்டை, அயலார் மத்தியில் உங்கள் பேச்சிற்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வாக்கு வன்மை பெறும். கண், பல் தொடர்பான பிரச்சனைக்கு வைத்தியம் செய்ய நேரும்.சுப காரியங்கள் நடக்கும். சிலருக்கு நேரத்திற்கு உண்ண முடியாமல் வேலைப்பளு மிகுதியாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    சனியின் சஞ்சார பலன்கள்:

    கும்ப ராசி அதிபதி மற்றும் விரயாதிபதியாகிய சனி பகவான் ஜனவரி 17, 2023 முதல் ஜென்மச் சனியாக ராசியில் அமர்கிறார். ஜென்மச் சனி மிகவும் துயரமான காலம் தான். மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நல்லது. பூர்வீகம் தொடர்பாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வருவதில் சற்று கால தாமதம் ஏற்படும். பொருளாதார நிலையில் கடுமையான ஏற்றத்தாழ்வு இருக்கும். ஏற்றத் தாழ்வை சமாளிக்க கடன் பெறும் சூழல் உருவாகும். ராகு கேது மற்றும் குருவால் மறைமுக நெருக்கடிகள், கடன் தொடர்பான சர்ச்சைகள் முழுமையாக விலகி தொழிலில் பல்வேறு வெற்றிகளை அடைவீர்கள்.

    தொழிலில், நிலவி வந்த சிக்கல்கள் நீங்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தவிர்க்கவும். இயன்றவரை வேலையை மாற்றாமல் இருப்பது நல்லது. சுபச் செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். உடல் சோர்வால் எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். தாய் மாமன் உறவுகளால் அனுகூலம் கிடைக்கும்.

    ராசி அதிபதி சனி ஏப்ரல் மாதத்திற்கு மேல் தனலாப அதிபதி குருவை பார்வையிடுவதால் தொழில் அபிவிருத்தி உண்டாகும். வர வேண்டிய தொகைகள் வந்து சேரும்.உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொழில் மாற்றமும் .இட மாற்றமும் ஏற்படலாம். அரசுப் பணியாளர்கள் ஆதாயம் அடைவார்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். வீடு கட்டுதல், மற்றும் வாங்குதல் தொடர்பான பணிகள் தடையில்லாமல் நடந்து முடியும். வங்கியில் கடன் உதவி பெறுவதற்கு ஏற்ற காலம் .

    ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்:

    அக்டோபர் 30, 2023 வரை ராசிக்கு 3ல் ராகுவும், 9ல் கேதுவும் நிற்கிறார்கள். அதன் பிறகு ராசிக்கு 2ல் ராகுவும், 8ல் கேதுவும் மாறுகிறார்கள்.வழக்கு வெற்றிகள் சாதகமாகும் அல்லது தள்ளிப்போகும். இடைக்கால நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், புதையல் லாட்டரி , உயில் மூலம் எதிர்பாராத வகையில் பண வரவு வரும். தந்தை வழி சுற்றத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு அதிகரிக்கும். தொழிலை தக்க வைத்துக்கொள்ள சில முதலீடுகள் செய்ய நேரிடும்.

    நண்பர்களுக்காக பணம் கடன் வாங்கி கொடுத்து அந்த கடனை நீங்களே ஏற்றுக் கொள்ள நேரும். பத்திர அடமானத்தின் மேல் கடன் பெற்று தவணை முறையில் அசலையும் , வட்டியையும் கட்டி அடமானப் பொருளை இழக்க நேரும என்பதால் அதிக கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. கணவன் மனைவியர் தங்களின் பிரச்சனையை தாங்களே அடுத்தவர்களின் தலையீடு இல்லாமல் சரி செய்து கொள்வது உயர்வைத் தரும்.

    திருமணம்: ஜென்ம ராசியில் நிற்கும் சனியின் ஏழாம் பார்வை களத்திர ஸ்தானத்தில் பதிவதால் சுய ஜாதக கிரகங்களின் வலிமையை பொருத்தே திருமண வாய்ப்பு கூடி வரும்.காதல் விவகாரங்கள் ஒத்திப்போடுவது நல்லது.

    பெண்கள்: பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியாது எதுவுமே இல்லை. சோதனைகளை சாதனைகளாக மாற்றும் வலிமை பெற்றவர்கள் பெண்கள். பெண்களின் சுய தொழில் முயற்சி கைமேல் பலன் கிடைக்கும். விரயம் என்பது முடிவாகிவிட்ட ஒன்று என்பதால் வீடு, மனை,வாகனம், கல்யாணம், நகை என்று சுப விரயமாக மாற்றுவது உங்கள் கையில் தான் இருக்கிறது. அதனால் இந்த புத்தாண்டை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் உங்கள் கையில் தான் உள்ளது.

    மாணவர்கள்: ஜென்மச் சனியின் காலமாக இருந்தாலும் கல்வியில் எந்த தடங்களும், தடையும் இருக்காது என்பதால் பெற்றோர்களும், மாணவர்களும் பயப்படத் தேவையில்லை. கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். எதிர் காலத்தை நோக்கி உங்கள் சிந்தனை இருக்கும். தேர்வில் முழு கவனம் இருக்கும்.

    அவிட்டம் 3, 4: திட்டமிட்டு செயல்படுவீர்கள்.எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிப்பு போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

    உங்களின் தனித்துவம் மிகுந்த பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். அரசில்வாதிகள் தேர்தல் கால வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு அற்புதமான நல்ல நேரம். வருமானம் உயரும் . வேலை செய்யுமிடத்தில் விரும்பிய மாற்றங்கள் உண்டு. ஏழரைச் சனியின் தாக்கம் வெகுவாக அதிகரிக்கும்.. சகோதர்களால் வீண் விரயம் உண்டு. குழந்தைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். கருத்து வேறுபாட்டால் இழந்த பழைய வேலை மீண்டும் கிடைக்கும்.

    அரசிடமிருந்து வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும்.சில சமூக ஆர்வளர்க்களுக்கு அரச கவுரவம் கிடைக்கும்.வயது முதிர்ந்தவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். விவசாய நிலத்திற்கு புதிய ஒப்பந்ததாரர், குத்தகைதாரர்கள் கிடைப்பார்கள்.

    பரிகாரம்: சஷ்டி திதியில் விநாயகருக்கு எருக்கம் பூ மாலை சாற்றி வழிபடவும்.

    சதயம்: சுப விரயங்கள் செய்ய உகந்த காலம். அரசியல் பிரமுகர்கள் அதிக நன்மை பெறுவார்கள்.. கடன் பெற்று சொந்த வீடு வாங்குவீர்கள். நிலைமை சீராகும் போது கடன் தானாக அடைபட்டு விடும். அலைச்சலும், அசதியுமான உள்ளுர், வெளியூர், வெளிநாட்டு தொழில் பயணங்கள் உண்டாகும். பிராயணங்களால் ஆதாயம் உண்டு.சிலருக்கு வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் உண்டாகும்.வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். உடல் நிலை மேம்படும். மறுமண முயற்சி சித்திக்கும். மாமனாரின் மூலம் உதவி கிடைக்கும்.எதிரிகளின் பலம் குறையும். தொழிலால், தொழில் கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். பெற்றோர்கள், உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். சுருக்கமாக பல விதமான நற்பலன்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

    பரிகாரம்: வாயில்லா ஜீவன்களுக்கு இயன்ற உணவு வழங்க நிதி நெருக்கடி குறையும்.

    பூரட்டாதி 1, 2, 3: சகாயமான வருடம். அடமானச் சொத்துக்கள் மீண்டு வரும்.பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாம். லஞ்சம் கொடுத்து அரசு வேலைக்கு முயற்சி செய்யும் சிந்தனை தோன்றும். குடும்பத்தில் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும்.தொழில் உத்தியோகம் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் சிறு சுணக்கம் உண்டாகும். அக்கம் பக்கத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை மாறும்.எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. நாணயம் நீடிக்கும். அரசியல்வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்சியைத் தரும்.

    பிள்ளைகளால் மகிழ்சியும் பெருமையும் உண்டாகும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். வாழ்க்கையை நகர்த்துவதில் எந்தவித சிரமமும் இருக்காது. உங்களுடைய முயற்சியால் எல்லாவற்றையும் சரி செய்வீர்கள்.

    பரிகாரம்: வெள்ளிக்கிழமை விரதமிருந்து மகாலட்சுமியை வழிபட தன, தானிய விருத்தி உண்டாகும். குடும்ப ஒற்றுமை பலப்படும்.

    ஆங்கிலப் புத்தாண்டில் கும்ப ராசியினர் சென்று வழிபட வேண்டிய ஸ்தலம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிள்ளையார்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது. விநாயகருக்கு ஒரு கணபதி ஹோமமும், பால் அபிஷேகமும் செய்து வழிபட செல்வ வளம் பெருகும். பிரச்சனைகள் முற்றிலும் தீர்ந்து வாழ்வில் வசந்தம் வீசும். ஜென்மச் சனியின் பாதிப்பிலிருந்து விடுபட கும்ப ராசியினர் பிள்ளையார் பட்டி சென்று வருவது சிறப்பு.

    கும்பம்

    ஆங்கில ஆண்டு பலன் - 2022

    சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தும் கும்ப ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டில் வருட கிரகங்களின் சஞ்சாரம் ஒரளவு சாதகமாகவே உள்ளது. உழைத்து, களைத்த உங்களின் உழைப்பிற்கு ஏற்ற பலன் கைகூடும் நேரம். மிகப் பெரிய மாற்றங்கள் திடீர் திருப்பங் கள் என நீங்கள் செய்யும் செயல் கள் எல்லாம் வெற்றியைத் தரப்போகிறது. இழந்ததை மீண்டும் பெறும் முயற்சிகள் பலிதமாகும். விரயச் சனியின் காலம் என்பதால் பண வரவு தாராளமாக இருந்தாலும் விரயமும் இருக்கத்தான் செய்யும். யாரையும் நம்பி பொறுப்பை ஒப்படைக்காமல் முனைப்போடு செயல்பட்டால் இந்த புத்தாண்டில் சாதனைகள் படைக்க முடியும்.

    குரு சஞ்சார பலன்: ஆண்டின் தொடக்கத்தில் தனலாபாதி குரு ராசியில் சஞ்சாரம் செய்வதால். தொழிலில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால் நிம்மதி பெருமூச்சு விடலாம். துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உறவினர்களோடு நிலவிய கருத்து வேறுபாடு மாறும்.

    வாழ்க்கையின் துணையின் மூலம் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும்.பிள்ளைகளின் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். பிள்ளைகள் மூலம் உண்டாகும் வருமானம் நிம்மதியை அதிகரிக்கும். மாப்பிள்ளை மைத்துனர் பகைமை மறையும். பாகப்பிரிவினைக்கு தடையாக இருந்த உடன் பிறப்பு தற்போது இணங்குவார். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும் அல்லது கார்ப்ரேட் கம்பெனியில் வேலை கிடைக்கும்.

    மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டாகும். உங்கள் இல்ல சுப செலவை மூத்த சகோதரர் ஏற்று இன்ப அதிர்ச்சி தரலாம். அடகு நகைகளை மீட்கும் சந்தர்ப்பம் உருவாகும். மொத்தத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் பற்றாக்குறை நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

    ஏப்ரல் 13,2022ல் குரு தன ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறும் போது கொடுக்கல் வாங்கல் சீராகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். வசதி வாய்ப்புகள் கூடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வராக் கடன்கள் வசூவாகும். பிள்ளைகளின் மேற்படிப்பு முயற்சி வெற்றி தரும். நீங்கள் வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். பங்குச் சந்தை வர்த்தகத்தில் நல்ல லாபம் உண்டாகும். தொழில் தொடர்பான வழக்குகள் சாதகமாகும். தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட இடர்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்சியான தகவல் கிடைக்கும். தந்தை வழி உறவில் நெருக்கம் ஏற்படும். மொத்தத்தில் ஏழரைச் சனியையும் மீறிய சுபபலன்கள் உண்டாகும்.

    சனியின் சஞ்சார பலன்கள்: இந்த சனிப்பெயர்ச்சியில் பெரும்பான்மையாக அனுபவிக்கப் போகும் பிரச்சனை விரயம். கடுமையான விரயமாக இருக்கும். வருமானத்திற்கு மீறிய செலவு ஏற்படும். அத்தியாவசிய தேவைக்கு கடன் பெற்றே ஆக வேண்டிய சூழல் உருவாகலாம். நாளைய வருமானத்திற்குரிய செலவு இன்றே முடிவு செய்யப்படும். எனவே விரையத்தை சுபமாக மாற்ற ஒருவரின் அவசிய தேவையான வீடு, வாகன யோகத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

    ஏற்கனவே சொந்த வீட்டில் இருப்பவர்கள் வீட்டிற்கு பராமரிப்பு வேலை செய்து புதிதாக மாற்றலாம். சற்று வசதி அதிகமாக இருப்பவர்கள் குடியிருப்பு வீடுகள் கட்டி வாடகைக்கு விடலாம். சிலர் பிழைப்பிற்காக வெளியூர் வெளி மாநிலம் அல்லது வெளிநாடு செல்ல நேரும். பலருக்கு இந்த வாய்ப்பு திருப்பு முனையாகவும் இருக்கும். மனதில் தேவையற்ற எண்ணங்களை அசை போட்டு தூக்கமே இல்லாமல் இருக்க செய்யும்.சிலர் துக்கம் தாழாமல் திருவண்ணாமலைக்கு சென்று முக்திக்கு முயல்வார்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வீர்கள். பக்தி பெருகும். ஆன்மீக நாட்டம் மிகும். அறப்பணியில் ஈடுபாடு அதிகரிக்கும்.

    26. 2. 2022 முதல் 6. 4. 2022 வரை ராசிக்கு 12ல் ராசி அதிபதி சனியுடன் 3,10ம் அதிபதி செவ்வாய் இணைகிறது. 3ம் இடம் இளைய சகோதரம், வீரம், வேலையாள் செய்தி தொடர்பு, ஆவணங்கள் போன்றவற்றை குறிக்கும். செவ்வாய் இளைய சகோதரரை குறிக்கும் என்பதால் இளைய சகோதரரால் தொழில் விரயம் அல்லது தொழிலில் முடக்கம், தொழிலில் வில்லங்கம் ஏற்படலாம்.

    ஏழரை சனியின் தாகத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சனி உங்களின் ராசி அதிபதி என்பதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டு. இது விரையச் சனியின் காலம் என்பதால் முதலீட்டாளர்கள் இயன்றவரை பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் கட்டாய சூழ்நிலையால் மனைவி மற்றும் குழந்தைகளை நினைத்து மனம் வாடும்.

    ராகு/கேது பெயர்ச்சி: நான்கில் ராகு பத்தில் கேது இருப்பதால் தாயின் ஆரோக்கியம் சீராகும். அழகு, ஆடம்பர வீட்டு உபயோக பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் அதிக ஆர்வம் உண்டாகும். சில தாய், தந்தையர் கருத்து வேறுபாட்டால் பிரியலாம்.பணிபுரியும் துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நினைவாகும்.புதிய நண்பர்கள், தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

    நண்பர்களால் ஆதாயம் உண்டு.நல்ல புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள். தொழில் கூட்டாளிகளிடையே நல்லிணக்கம். நீடிக்கும். தகுதியும் திறமையும் நிறைந்த புதிய தொழில் பங்குதாரர் கிடைப்பார்கள். நீண்ட நாட்களாக தொடர்பில்லாத பள்ளி, கல்லுரி மற்றும் அக்கம் பக்க பால்ய நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியைத் தரும். கணவன் மனைவி உறவு மகிழ்வை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலிருந்த குறைபாடுகள் அகலும். சிலரின் வாழ்க்கை துணைக்கு அரசு வேலை கிடைக்கும். சம்பந்திகள் சண்டை முடிவுக்கு வரும்.

    ஏப்ரல் 12, 2022ல் ராகு 3ம் இடத்திற்கும் கேது 9ம் இடத்திற்கும் பெயர்ச்சியாகிறார்.தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும். மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். யூ டியுப் விளம்பர மீடியாக்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாகும் வாய்ப்பு உள்ளது. கண், காது, மூக்கு தொடர்பான பாதிப்புகள் சிகிச்சையில் குணமாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும்.

    சகோதரருக்கும் உங்க ளுக்கும் பாகப்பிரிவினை ஏற்படும். பலருக்கு இளைய சகோதரரின் குடும்பத்தை பராமரிக்கும் நிலை ஏற்படும். சகோதரரின் இழிவான நட வடிக்கைகளால் இது வரை நீங்கள் கட்டிக் காத்து வந்த கவுரவம் மட்டுப்படும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், வேலை மாற்றம் என எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். கும்பாபிஷேகம் போன்ற ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்கும் பாக்கியம் கிட்டும். கேதார்நாத், பத்ரிநாத், ரிஷிகேஷ் போன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். மகான் களின் நல் ஆசிகள் கிடைக்கும்.

    சிலர் கோவில், தர்ம ஸ்தாபனங்களில் சேவை புரியும் வாய்ப்பு கிட்டும். திருமணம்: கும்ப ராசியினருக்கு கோட்சார குரு, சனி ராகு/கேது வால் திருமணத் தடையில்லை. 2023ல் சனி கும்பத்திற்கு பெயர்ச்சியாகும் போது ஜென்மச் சனி மற்றும் ராகு கேதுவால் திருமணத் தடை உருவாகலாம். திருமண வயதில் உள்ள அனைத்து கும்பராசியினருக்கும் 2022ல் திருமணம் எந்த தடையும் இன்றி எளிமையாக நடந்து முடியும். வரன் பற்றிய மிகைப்படுத்தலான எதிர்பார்ப்பு இன்றி திருமண முயற்சி செய்வது நல்லது. நேரம், காலம் சாதகமாக இருக்கும் பொழுது சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும்.

    பெண்கள்: நீங்கள் பணி புரியும் துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். கணவன் மனைவி உறவு மகிழ்வை தரும் விதமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். வங்கியில் பணி புரிபவர்கள் எச்சரிக்கையுடன் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் இல்லையேல் வீண் பழி ஏற்படும். இந்த ராசிப் பெண்களுக்கு கால்வலி, வயிறு உபாதை மற்றம் முதுகு வலியால் அவஸ்தை ஏற்படும்.

    விவசாயிகள்: பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் விளை பொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபம் கிடைக்கும். நவீன முறைகளை பயன்படுத்தி விளைச்சலை அதிகரிப்பீர்கள். வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்காமல் பணிகள் தேங்கும் வாய்ப்பு உள்ளது. பயிர்களுக்கு புழு, பூச்சி தொல்லை ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். அரசு வழி ஆதாயம் உள்ளதால் எதையும் எளிதாக சமாளித்து விடுவீர்கள்.

    உத்தியோகஸ்தர்கள்: பணிபுரியும் இடத்தில் ஊதிய உயர்வுடன் கேட்ட சலுகையும் கிடைக்கும். அரசு உழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்திற்காக குடும்பத்தை பிரித்தவர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணைவார்கள்.அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் லஞ்ச ஒழிப்பு துறையிடம் மாட்டி இடைக்கால பதவி நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது. பதவியை தக்க வைத்துக் கொள்ள சிவ வழிபாடு மிக அவசியம்.

    முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்: 12 ம் இடம் விரய ஸ்தானம் என்பதால் மறைமுக தொழில் எதிர்ப்புகள் உண்டாகும்.வெகு சிலருக்கு வெளிநாட்டு தொழில் ஒப்பந்தங்கள் வரலாம். வாய்ப்புகள் கிடைத்தாலும் நிறைய போட்டிகளை சந்திக்க நேரும். சிலருக்கு முதலீடே காணாமல் போகலாம். அதிக மூதலீட்டில் தொழில் செய்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் முதலீடு, புதிய தொழில் ஒப்பந்தம் செய்பவர்கள் நம்பிக்கையான வாடிக்கையாளர்களை பயன் படுத்தினால் முதலீட்டை காப் பாற்றலாம்.

    அரசியல்வாதிகள்: அரசியல் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மேலிடம் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பகை உணர்வு மேம் படும். வாக்கு ஸ்தானத்திற்கு சனி பார்வை இருப்பதால் மிகவும் கவனத்துடன் பேச வேண்டும். எதிர்ப்புகளை சமாளித்து ஆர்ப் பாட்டம் நடத்தி மனம் நொந்த சிலர் ஆரோக்கியத்தை காரணம் காட்டி அரசியலை விட்டு ஒதுங்குவார்கள்.

    மாணவர்கள்: ஒரு சில மாண வர்களுக்கு பள்ளியை மாற்றம் செய்ய நேரலாம். பள்ளி, மற்றும் கல்லுரியில் படிக்கும் மாணவ மாணவி கள் படிக்கும் வேலையை மட்டும் பார்தால் எதிர்காலம் சிறக்கும். சிலர் ஹாஸ்டலில் தங்கி படிப்பார்கள். உயர் ஆராய்ச்சி கல்வி படிப்பவர்கள் மேற்படிப்பை தொடரும் வாய்ப்பு உண்டாகும். சிலர் வெளியூர், வெளிநாடு சென்று ஆராய்ச்சி படிப்பை தொடரலாம்.

    அவிட்டம் 3,4: தொழில் விரிவாக்கம், வீடு கட்டும் பணி, குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற தேவைக்கும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற் படும். மீட்டர் வட்டி, கந்து வட்டி வாங்காமல் அரசுடைமை வங்கிகளின் உதவியை நாட வேண்டும். சிவன் கோவில் மூல ஸ்தானத்தில் எரியும் விளக்கிற்கு நல்லெண்ணெய் வாங்கித் தரவும்.

    சதயம்: பொருளாதர வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு மிகுதியாக இருக்கும். வாக்கு ஸ்தானத்திற்கு சனி பார்வை இருப்பதால் வாக்கில் நிதானம் தேவை. நீங்கள் எதர்த்தமாக பேசும் வார்த்தைகள் கூட சொல் அம்பாக மாறும். பொறுமையாக நிதானமாக இருக்க வேண்டிய காலம் . ஞாயிற்று கிழமைகளில் நடராஜரை வழிபடவும்.

    பூரட்டாதி 1,2,3: குல தெய்வ வழிபாட்டில் ஈடுபடு வீர்கள். தடைபட்ட முன்னோர்கள் செய்து வந்த பூஜை, புண்ணிய காரியங்களை தொடர்வீர்கள். தியானத்தில் ஈடுபட்டு மனதை கட்டுப்படுத்த முயல்வீர்கள். ஏழை குழந்தைகளின் கல்விச் செலவிற்கு உதவவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×