<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 16 Jul 2026 12:21:05 +0000</lastBuildDate><item><title>வாங்சுக் உண்ணாவிரதம்: தேவைப்பட்டால் தலையிடுவோம்.. டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-ugc-protest-sonam-wangchuk-on-19th-day-of-fast-with-deteriorating-health</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-ugc-protest-sonam-wangchuk-on-19th-day-of-fast-with-deteriorating-health#comments</comments><guid isPermaLink="false">5337ebe5-9e72-44f8-a4a9-9ba6792d4a9d</guid><pubDate>Thu, 16 Jul 2026 08:20:44 +0000</pubDate><atom:updated>2026-07-16T08:20:44.299Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>hunger strike,டெல்லி உயர்நீதிமன்றம்,Delhi High Court,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,உண்ணாவிரதம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/a2fcm9sq/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/a2fcm9sq/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு குளறுபடி, யுஜிசி குளறுபடி, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி என தொடர் குளறுபடிகளால் கல்வித்துறை திணறி வருகிறது.</p><p>இந்த நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தீப்கேயின் தலைமையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><h2>சோனம் வாங்சுக் உடல்நிலை</h2><p>இதில் லடாக் செயல்பாட்டாளரும், கல்வியாளருமான சோனம் <a href="https://www.maalaimalar.com/news/national/day-19-89-kg-weight-loss-wangchuk-calls-for-the-july-20-rally-in-a-feeble-voice-where-is-rahul?fbclid=IwY2xjawTFa1NleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEe7fmyTMmY_I64G9-1EQLzrXE6q54wSYSAj6ZkNfDkJ-Npa7lfhGoG2lgX4dc_aem_IEua5dkjbIMYmzT78YeTjg">வாங்சுக் </a>நடத்தும் நடத்தும் உண்ணாவிரதம் 19வது நாளை எட்டியுள்ளது.</p><p>அவரது உடல் எடை 8.9 கிலோ குறைந்து தற்போது சுமார் 57 கிலோவாக உள்ளது. 59 வயதான அவரின் உடல் ரத்த அழுத்தம் 105/76 mmHg, சர்க்கரை அளவு 80 mg/dL, ஆக்ஸிஜன் அளவு 97% என்ற மோசமான நிலையில் உள்ளது.</p><p>உண்ணாவிரதத்தை கைவிட கோரி அவரை மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், சர்வதேச ஆளுமைகள் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.</p> <h2>தளர்ந்த குரல்</h2><p>ஆனால் உயிருக்கே ஆபத்தான சூழலிலும் தனது உண்ணாவிரதத்தை சோனம் வாங்சுக் கைவிட மறுத்துள்ளார்.</p><p>வரும் ஜூலை 20ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நாளில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே நேற்று ஜந்தர் மந்தரில் இருந்து வீடியோ மூலம் பேசிய சோனம் வாங்சுக், நான் நல்ல நிலைமையில் இல்லை, அதேநேரம் மோசமான நிலையிலும் இல்லை. என்னை ஆதரிப்பவர்கள் எனது உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்துவதுக்கு பதிலாக ஜூலை 20 அன்று பாராளுமன்றத்தை நோக்கி செல்லும் பேரணியில் வந்து கலந்துகொள்ளுமாறு தன் தளர்ந்த குரலில் அழைப்பு விடுத்துள்ளார்.</p> <h2>பொது நல மனு மீதான விசாரணை</h2><p>இதனிடையே வாங்சுக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுமாறு மத்திய மற்றும் டெல்லி அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, சமூக ஆர்வலர், வழக்கறிஞர் ராகேஷ் குமார் சைனி என்பவர் டெல்லி உயர்நீதிதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் தேவேந்திர குமார் உபாத்யாய் மற்றும் தேஜஸ் காரியா அமர்வில் நடைபெற்றது.</p><p>வாங்சுக் உடைய உடல்நிலையை தினந்தோறும் கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எந்த ஒரு குடிமகன் உயிரும் விலைமதிப்பற்றது என்றும் நீதிபதிகள் மத்திய அரசை வாய்மொழியாக அறிவுறுத்தினர்.</p><p>இன்றைய அமர்வில் மத்திய அரசு சார்பில் ஆஜானாரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வாங்சுக் உடல்நிலை ஏற்கனவே அரசு மருத்துவர்களாலும், மருத்துவ வல்லுநர்களாலும் கண்காணிப்பட்டு வருவதாகவும், உதவி தேவைப்படும் சூழ்நிலை எழும்பட்சத்தில் மருத்துவர்கள் ஆலோசனையின்படி மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிடும் என்றும் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.</p><p>இதன்பின் பேசிய நீதிபதிகள், மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை வரவேற்பதாக கூறி, பொது நல வழக்கை முடித்து வைத்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>குறுகிய காலத்தில் 100-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் விலகல்.. ராஜினாமா விதிகளை கடுமையாக்கிய இஸ்ரோ</title><link>https://www.maalaimalar.com/news/national/isro-scientists-exit-shock-around-120-key-staff-quit-from-gaganyaan-and-major-missions</link><comments>https://www.maalaimalar.com/news/national/isro-scientists-exit-shock-around-120-key-staff-quit-from-gaganyaan-and-major-missions#comments</comments><guid isPermaLink="false">b01923c0-bd85-4253-8f39-6c4c287f0dc3</guid><pubDate>Thu, 16 Jul 2026 06:20:31 +0000</pubDate><atom:updated>2026-07-16T06:20:31.701Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,Resignation,ISRO scientists,ராஜினாமா,இஸ்ரோ விஞ்ஞானிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/6hsqsb2k/isro.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இஸ்ரோ]]></media:title><media:description type="html"><![CDATA[ இஸ்ரோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/6hsqsb2k/isro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான <a href="https://www.maalaimalar.com/topic/isro">இஸ்ரோவில் </a>ஒரே ஆண்டில் 120 விஞ்ஞானிகள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இஸ்ரோ ராஜினமா செய்வதற்கான விதிகளை கடுமையாக்கியுள்ளது. </p><h2>விலகல் </h2><p>தகவல்களின்படி, இஸ்ரோவிலிருந்து கடந்த சில மாதங்களில் மட்டுமே 100 முதல் 120 விஞ்ஞானிகள் வரை விலகிள்ளனர். </p><p>இஸ்ரோவில் உள்ள 14,600க்கும் மேற்பட்டோர் தற்போது பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ராஜினாமாக்களின் எண்ணிக்கை சிறியதாகத் தெரியலாம். </p><p>ஆனால்  ராஜினாமா செய்தவர்கள் அனைவரும் ககன்யான், சந்திராயன் உள்ளிட்ட திட்டங்களில்  முக்கியமான பங்காற்றியவர்கள் என்பதுதான் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. </p><p>இஸ்ரோவின் மிகப்பெரிய மையமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் மட்டும் சுமார் 20 பேர் விலகியுள்ளனர். </p><p>இதில் இந்தியாவின் எல்விஎம்3  ராக்கெட் திட்ட இயக்குநர் விக்டர் ஜோசப் அடங்குவார்.</p><p>யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இங்கிருந்து சுமார் 80 விஞ்ஞானிகள் வரை ராஜினாமா செய்துள்ளனர். </p><p>இதில் விண்வெளித் துறைக்கான 'ஸ்பாடெக்ஸ்' திட்ட இயக்குநர் மற்றும் சந்திரயான்3 திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த இளம் விஞ்ஞானிகள் அடங்குவர்.</p><p>சந்திரயான் 3 விண்கலம் நிலவில் இறங்குவதை கண்காணிக்கும் குழுவின் திட்ட மேலாளராக இருந்த ஆதித்யா ரல்லபள்ளி  என்பவரும் ராஜினாமா செய்துள்ளார். </p><p>இவர் தான் பலகட்ட சோதனைகளை மேற்கொண்டு விண்கலம் தரையிறங்குவதை உறுதி செய்தவர். </p><p>இஸ்ரோவில் 2012 முதல் 2024 வரை சுமார் 700 ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.</p> <h2>இஸ்ரோ நடவடிக்கை</h2><p>விஞ்ஞானிகளின் இந்தத் தொடர் விலகலால் நாட்டின் கௌரவமிக்க விண்வெளித் திட்டங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க இஸ்ரோ, ராஜினாமா விதிகளை மாற்றியமைத்துள்ளது.</p><p>ககன்யான் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் பணியாற்றும் 'குரூப் ஏ' விஞ்ஞானிகளின் விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகளை இனிமேல் வழக்கமான முறையில் ஏற்றுக்கொள்ளக் கூடாது.</p><p>கடந்த 2020 நவம்பரில் கொண்டுவரப்பட்ட விதியின்படி, விஞ்ஞானிகளின் ராஜினாமா கடிதங்களை ஏற்கும் அதிகாரம் இஸ்ரோவின் அந்தந்த மையங்களின் இயக்குநர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது.</p><p>தற்போது அந்த அதிகாரம் பறிக்கப்பட்டு, அனைத்து ராஜினாமா விண்ணப்பங்களும் விண்வெளித் துறையின் (DoS) இறுதி முடிவுக்கே அனுப்பப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>சம்பந்தப்பட்ட திட்டங்கள் முடியும் வரை இயக்குநர்கள் இவர்களின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>இஸ்ரோ தலைவர் பேட்டி</h2><p>இந்தத் தொடர் விலகல்கள் குறித்து இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் அளித்த பேட்டியில்,</p><p>"விஞ்ஞானிகள் விலகுவது என்பது எந்தவொரு நிறுவனத்திலும் நடக்கும் இயல்பான ஒன்றுதான். ஆனால், முக்கியத் திட்டங்கள் இதனால் திடீரெனப் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>யாராவது விலகினாலும், அவர்களுக்குப் பதிலாக வேறு நபர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். இதற்கான மாற்று ஏற்பாடுகளை இஸ்ரோ திறம்படச் செய்து வருகிறது" என்று கூறியுள்ளார்.</p><p>தற்போது இஸ்ரோவின் 2025-26 ஆண்டறிக்கையின்படி, 1,050 புதிய அறிவியல் மற்றும் நிர்வாகப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>19வது நாள்: 8.9  கிலோ எடை இழப்பு.. தளர்ந்த குரலில் ஜூலை 20 பேரணிக்கு வாங்சுக் அழைப்பு - ராகுல் எங்கே?</title><link>https://www.maalaimalar.com/news/national/day-19-89-kg-weight-loss-wangchuk-calls-for-the-july-20-rally-in-a-feeble-voice-where-is-rahul</link><comments>https://www.maalaimalar.com/news/national/day-19-89-kg-weight-loss-wangchuk-calls-for-the-july-20-rally-in-a-feeble-voice-where-is-rahul#comments</comments><guid isPermaLink="false">4791a4ec-6875-44c2-8790-629ff815a629</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:59:19 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:59:19.571Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/pdxp6aoe/sonam.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Sonam wangchuk, rahul gandhi]]></media:title><media:description type="html"><![CDATA[ Sonam wangchuk, rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/pdxp6aoe/sonam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு குளறுபடி, யுஜிசி குளறுபடி, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி என தொடர் குளறுபடிகளால் கல்வித்துறை திணறி வருகிறது. </p><p>இந்த நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தீப்கேயின் தலைமையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><h2>சோனம் வாங்சுக் உடல்நிலை </h2><p>இதில் லடாக் செயல்பாட்டாளரும், கல்வியாளருமான <a href="https://www.maalaimalar.com/news/national/public-interest-litigation-filed-in-the-delhi-high-court-seeking-to-save-social-activist-sonam-wangchuk">சோனம் வாங்சுக்</a> நடத்தும் நடத்தும் உண்ணாவிரதம் 19வது நாளை எட்டியுள்ளது. </p><p>அவரது உடல் எடை 8.9  கிலோ குறைந்து தற்போது  சுமார் 57 கிலோவாக உள்ளது. 59 வயதான அவரின் உடல் ரத்த அழுத்தம் 105/76 mmHg, சர்க்கரை அளவு  80 mg/dL,  ஆக்ஸிஜன் அளவு  97% என்ற மோசமான நிலையில் உள்ளது. </p><p>உண்ணாவிரதத்தை கைவிட கோரி அவரை மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், சர்வதேச ஆளுமைகள் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். </p> <h2>தளர்ந்த குரல்</h2><p>ஆனால் உயிருக்கே ஆபத்தான சூழலிலும் தனது உண்ணாவிரதத்தை சோனம் வாங்சுக் கைவிட மறுத்துள்ளார்.</p><p>வரும் ஜூலை 20ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நாளில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே நேற்று ஜந்தர் மந்தரில் இருந்து வீடியோ மூலம் பேசிய சோனம் வாங்சுக், நான் நல்ல நிலைமையில் இல்லை, அதேநேரம் மோசமான நிலையிலும் இல்லை. என்னை ஆதரிப்பவர்கள் எனது உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்துவதுக்கு பதிலாக ஜூலை 20 அன்று பாராளுமன்றத்தை நோக்கி செல்லும் பேரணியில் வந்து கலந்துகொள்ளுமாறு தன் தளர்ந்த குரலில் அழைப்பு விடுத்துள்ளார்.</p> <h2>ராகுல் மௌனம்</h2><p>மற்ற பிரச்சனைகளுக்கும் விமர்சனங்களுக்கும் மௌனம் காப்பது போல சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் குறித்தும் மத்திய பாஜக அரசு மௌனம் காத்து வருகிறது.</p><p>வழக்காக பிரதமர் மோடி பல்வேறு விஷயங்களில் மௌனம் காப்பதாக விமர்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருகிறார்.</p><p>இந்நேரம் அவர் ஜந்தர் மந்தருக்கு சென்று சோனம் வாங்சுக்கை சந்தித்திருக்க வேண்டும் என பலரும் அபிப்ராயப்பட்டு வருகின்றனர்.</p><p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே கூறுகையில், "எதிர்க்கட்சித் தலைவர்கள் இங்கு வருகிறார்களா இல்லையா என்பது முக்கியமல்ல.</p><p>இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவும் தான் முக்கியக் கேள்விகள்" என்றார்.</p><h2>காங்கிரஸ்</h2><p>ஜந்தர் மந்தர் சர்ச்சை ஒருபுறமிருக்க, ராகுல் காந்தி தனது தேசிய அளவிலான மாணவர்களின் குரல் பிரச்சாரத்தின் அடுத்த கட்டத்திற்காக நாளை டேராடூன் செல்கிறார்.</p><p>ராஜஸ்தானின் கோட்டாவிலிருந்து தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் மூலம், நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறைகளில் உள்ள குறைபாடுகளை குறித்து மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீண்ட நேரம் செல்போனில் பேசிய பெண் கொலை - சந்தேகத்தில் கணவர் வெறிச்செயல் </title><link>https://www.maalaimalar.com/news/national/husband-arrested-for-wife-murder-case-in-andhra</link><comments>https://www.maalaimalar.com/news/national/husband-arrested-for-wife-murder-case-in-andhra#comments</comments><guid isPermaLink="false">b7190ed8-e27b-4abe-9cee-b4ee67e3ca0a</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:14:23 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:14:23.294Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,husband Arrest,கணவர் கைது,Wife murder,மனைவி கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/2t6xrk07/murder.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/2t6xrk07/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி அடுத்த அங்கலக்குடுருவை சேர்ந்தவர் நரேந்திர பாபு. இவரது மனைவி சந்தியா ராணி (வயது 27). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். நரேந்திர பாபு செஞ்சு பேட்டையில் அடகு கடை நடத்தி வந்தார். </p><h2><strong>தகராறு</strong></h2><p>நரேந்திர பாபு மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் பணம் கொடுப்பதில்லை. மாறாக மது குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்தார். </p><p>கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் சந்தியா ராணி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார்.</p><p>மாமியார் வீட்டிற்கு சென்ற நரேந்திர பாபு இனி மனைவியிடம் தகராறு செய்ய மாட்டேன் என பெரியவர்கள் முன்னிலையில் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார். </p><h2><strong>சந்தேகம்</strong></h2><p>கணவர் வீட்டுக்கு வந்த சந்தியா ராணி  செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்தார். இதனால் நரேந்திர பாபுவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி பெரிய கத்தியை வாங்கி வந்து வீட்டில் மறைத்து வைத்து இருந்தார். </p><p>நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த நரேந்திர பாபு மனைவியிடம் யாருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டு இருக்கிறாய் என கேட்டார். </p><h2><strong>கொலை</strong></h2><p>மேலும் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக வெட்டினார். தன்னை கொலை செய்ய வேண்டாம் என மனைவி கெஞ்சியும் ஈவு இரக்கம் இன்றி வெட்டி கொலை செய்தார். பின்னர் போலீசில் சரணடைந்தார். </p><p>போலீசார் நரேந்திர பாபுவை கைது செய்தனர். கொலை நடந்த அன்று காலை சந்தியா ராணி தனது பெற்றோருக்கு வீடியோ கால் செய்து கணவரின் நடத்தை மாறவில்லை. அவர் என்னை கொலை செய்து விடுவாரோ என்று பயமாக உள்ளது என தெரிவித்துள்ளார். </p><p>அவர் பயந்தபடியே அன்று இரவே அவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சார்ஜ் ஏறும்போது வெடித்த இ-ஸ்கூட்டர்.. நொய்டா கட்டிடத்தில் தீ விபத்து - 2 பேர் பலி - 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/noida-apartment-fire-ev-blast-kills-2-over-100-residents-rescued</link><comments>https://www.maalaimalar.com/news/national/noida-apartment-fire-ev-blast-kills-2-over-100-residents-rescued#comments</comments><guid isPermaLink="false">4af9c380-1185-44c7-a2f8-7796e7283ad8</guid><pubDate>Thu, 16 Jul 2026 01:50:36 +0000</pubDate><atom:updated>2026-07-16T01:50:36.394Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,fire accident,மின்சார வாகனம்,electric vehicle,நொய்டா,noida,உத்தரப் பிரதேசம்,தீ விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/1vb73izy/noida-fire.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நொய்டா]]></media:title><media:description type="html"><![CDATA[ நொய்டா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/1vb73izy/noida-fire.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் 5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். </p><h2>விபத்து </h2><p>நேற்று, நொய்டாவில் செக்டார் 66ல் உள்ள மமுரா பகுதியில் செயல்பட்டு வரும் 5 மாடிகளை கொண்ட குடியிருப்பின் தரைத்தளத்தில் சார்ஜ் போடப்பட்டிருந்த  இ-ஸ்கூட்டர் <a href="https://www.maalaimalar.com/topic/electric-vehicles">மின்சார வாகனத்தில் </a>மின்கசிவால் திடீரென வெடித்து தீப்பற்றியுள்ளது.  </p><p>அடுத்த சில நொடிகளில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற  வாகனங்களுக்கும் தீ வேகமாகப் பரவி  தரைத்தளம் முழுவதும்  தீ சூழ்ந்தது. </p><p>இதனால் அடர்ந்த நச்சுப் புகை, நிமிடங்களில் மேல் தளங்களுக்குப் பரவியது. மேல் தளங்களில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல்  முடங்கினர்.</p><p>அந்த கட்டிடத்தில் பிஜி தங்கும் விடுதியும் செயல்பட்டு வந்துள்ளது.  </p><p>பலர் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு ஓடினர். அங்கிருந்து பக்கத்து கட்டிடங்களுக்கு தாவி தப்பினர். </p><p>மேலும், அருகில் நடந்து வந்த ஒரு கட்டிடக் கட்டுமான தளத்தில் இருந்தவர்கள், தங்களின் பெரிய ஏணியை இந்தக் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு நீட்டிப் பலரைக் காப்பாற்றினர்.</p> <h2>மீட்பு</h2><p>தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.</p><p>ஏணிகள் மூலமும் ஜன்னல்களை உடைத்தும், பக்கத்து கட்டிடங்களின் வழியாகவும் 100க்கும் மேற்பட்டோரை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.</p><p>இருப்பினும் நச்சு புகையால் இருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். </p><p>ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p><p>அந்தக் கட்டிடத்தில் வசித்து வந்த சுமார் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p> <h2>கைது </h2><p>இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.</p><p>விசாரணையில் அது ஒரு சட்டவிரோத கட்டிடம் என தெரியவந்துள்ளது.  கட்டிடத்தை முறையாகப் பராமரிக்காதது மற்றும் விதிகளை மீறி குறுகிய இடத்தில் பிஜி தங்குமிடம் நடத்தியது உள்ளிட்ட பல புகார்கள் எழுந்துள்ளன. </p><p>இதனால் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் லீசுக்கு எடுத்து அங்கு பிஜி தங்குமிடம்  நடத்தி வந்த நபர் ஆகிய இருவர் மீதும் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி எப்ஐஆர் பதியப்பட்டது. </p><p>இருவரும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் இல்லத்தில் பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் முக்கிய ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-core-group-meet-at-pms-residence-ahead-of-monsoon-session-of-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-core-group-meet-at-pms-residence-ahead-of-monsoon-session-of-parliament#comments</comments><guid isPermaLink="false">54f2dda2-4d33-479f-aa92-84c00c25ed42</guid><pubDate>Thu, 16 Jul 2026 00:27:44 +0000</pubDate><atom:updated>2026-07-16T00:27:44.521Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,குளிர்கால கூட்டத்தொடர்,pm modi,Monsoon session of Parliament,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/7a6t1n4r/pm-modi-16.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/7a6t1n4r/pm-modi-16.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சித் தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட பா.ஜ.க.வின் உயர்மட்ட தலைவர்களின் முக்கிய கூட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் நேற்றிரவு (புதன்கிழமை) நடைபெற்றது.</p><p>அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், பா.ஜ.க.வின் தேசிய அமைப்பு பொது் செயலாளர் பி.எல். சந்தோஷும் கலந்துகொண்டார்.</p><p><strong>அமைச்சரவை மாற்றம்:</strong></p><p>கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.</p><p>பா.ஜ.க.வின் தேசிய பொறுப்பாளர்கள் குழுவிலும், மத்திய அமைச்சரவையிலும் மாற்றங்கள் குறித்த பரபரப்புகள் நிலவி வரும் வேளையில் இந்த கூட்டம் நிகழ்ந்துள்ளது.</p><p><strong>மழைக்கால கூட்டத்தொடர்:</strong></p><p>நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி முடிவடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>கூட்டணி அவையின் வியூகம் குறித்து விவாதிப்பதற்காக, என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளின் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதியன்று நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>மோசமாகும் வாங்சுக் உடல்நிலை: பிரதமர் மோடிக்கு சர்வதேச அமைப்பு கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/hindus-for-human-rights-urge-pm-modi-to-talk-to-sonam-wangchuk</link><comments>https://www.maalaimalar.com/news/national/hindus-for-human-rights-urge-pm-modi-to-talk-to-sonam-wangchuk#comments</comments><guid isPermaLink="false">b0526507-630a-4250-9ba4-f257cc6b21f3</guid><pubDate>Wed, 15 Jul 2026 23:46:50 +0000</pubDate><atom:updated>2026-07-15T23:46:50.783Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,pm modi,பிரதமர் மோடி,சோனம் வாங்சுக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/5y7adpgq/sonam-p-m.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/5y7adpgq/sonam-p-m.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் (NEET) தேர்வு நடத்துவதில் முறைகேடுகள் எனக் கூறப்படுபவை தொடர்பாக கடந்த 18 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய புலம்பெயர் அமைப்பு ஒன்று, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.</p><p>அமெரிக்காவை சேர்ந்த 'ஹிந்துஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ்' (Hindus for Human Rights) என்ற அமைப்பு, தேர்வு முறைகேடுகள், கல்வி நிர்வாகம், நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் மற்றும் பொது அமைப்புகள் தோல்வியடையும்போது மாணவர்கள் எதிர்கொள்ளும் விளைவுகள் குறித்து போராட்டக்காரர்கள் தீவிர கவலைகளை எழுப்பியிருப்பதாக கூறியது.</p><p><strong>பிரதமருக்கு கடிதம்:</strong></p><p>"அரசு போராட்டக்காரர்களை சந்திக்க வேண்டும்; அவர்கள் சுட்டிக்காட்டிய தேர்வு மற்றும் நிர்வாக தோல்விகளுக்கு ஆக்கபூர்வமான பதிலை அளிக்க வேண்டும்; அத்துடன் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நம்பகமான, காலக்கெடுவுடன் கூடிய செயல்முறையை உருவாக்க வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>"அரசு உடனடியாகப் போராட்டக்காரர்களைச் சந்திக்க வேண்டும்; அவர்களை இத்தகைய போராட்டத்திற்குத் தள்ளிய தோல்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்; மேலும் அலட்சியப்போக்கு ஒரு உயிரைப் பறிக்கும் முன்பே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று 'ஹிந்துஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ்' அமைப்பின் நிர்வாக இயக்குனர் சுனிதா விஸ்வநாத் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><p>வாங்சுக் மற்றும் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் தங்கள் உடல்நலத்திற்கும் உயிருக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்தது.</p>]]></content:encoded></item><item><title>தொல்லியல் ஆய்வுத் துறை உத்தரவை தொடர்ந்து ஒருமாத காலம் மூடப்படும் செங்கோட்டை வளாகம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/red-fort-to-remain-closed-to-public-from-jul-15-to-aug-15</link><comments>https://www.maalaimalar.com/news/national/red-fort-to-remain-closed-to-public-from-jul-15-to-aug-15#comments</comments><guid isPermaLink="false">34190b14-f294-4de5-8800-4acc7ce9b442</guid><pubDate>Wed, 15 Jul 2026 22:58:48 +0000</pubDate><atom:updated>2026-07-15T22:58:48.188Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செங்கோட்டை,Red Fort,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/yzzn4tul/red-fort.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/yzzn4tul/red-fort.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள புகழ்பெற்ற செங்கோட்டை வளாகம், ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 அன்று நடைபெறவுள்ள 80-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் முடியும் வரை பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவு தெரிவிக்கிறது. </p><p>செங்கோட்டை வளாகத்தில் நடைபெற்று வரும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகளை கருத்தில் கொண்டு, இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை (ASI) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. </p><p><strong>மூடல்:</strong></p><p>"பழமையான நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எச்சங்கள் விதிகள், 1959-இன் விதி 5-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, 2026-ஆம் ஆண்டு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை செங்கோட்டை பொதுமக்களுக்கும் சாதாரண பார்வையாளர்களுக்கும் மூடப்பட்டிருக்கும் என்று இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது," என்று ஜூலை 9 தேதியிட்ட அந்த உத்தரவு கூறுகிறது.</p><p>சுதந்திர தினத்திற்கு முன்னதாக ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாக மூத்த ASI அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p><strong>பாரம்பரிய சின்னம்:</strong></p><p>யுனெஸ்கோ (UNESCO) அமைப்பால் உலகப் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட செங்கோட்டை, 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்தியா பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் பிடியில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாக மாறியது முதல், நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் இடமாக திகழ்கிறது.</p><p>ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்க, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டுகளை (passes) வைத்திருப்பவர்கள் மட்டுமே செங்கோட்டை பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.62,500 கோடி மதிப்பிலான புதிய மொபைல் போன் உற்பத்தி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/union-cabinet-approves-new-mobile-phone-manufacturing-scheme-worth-rs-62500-crore</link><comments>https://www.maalaimalar.com/news/national/union-cabinet-approves-new-mobile-phone-manufacturing-scheme-worth-rs-62500-crore#comments</comments><guid isPermaLink="false">e4c55bd4-4aef-49a8-a0db-a6950382ea4a</guid><pubDate>Wed, 15 Jul 2026 14:52:09 +0000</pubDate><atom:updated>2026-07-15T14:52:09.508Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Union Cabinet,மத்திய அமைச்சரவை,Mobile Phone Manufacturing Scheme,மொபைல் போன் உற்பத்தி திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/rtxfa5cl/New-Project-2026-07-15T195304.275.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரூ.62,500 கோடி மதிப்பிலான புதிய மொபைல் போன் உற்பத்தி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/rtxfa5cl/New-Project-2026-07-15T195304.275.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அமைச்சரவை ரூ.62,500 கோடி மதிப்பிலான மொபைல் போன் உற்பத்தித் திட்டத்திற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மொபைல் உதிரி பாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்க அடுத்த 5 ஆண்டுகள் இத்திட்டம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-27 நிதியாண்டு முதல் 2030-31 வரையிலான 5 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்படும்.</p><p>முன்பு அமலில் இருந்த பி.எல்.ஐ திட்டத்தின் தொடர்ச்சியாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தில், ரூ.39 லட்சம் கோடி மதிப்பிலான மொபைல் போன்களை உற்பத்தி செய்ய  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 60 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தியாவில் கைபேசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்</p><p>இந்தியாவில் மொபைல் போன்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு தகுதியான விற்பனை மதிப்பின் அடிப்படையில் 2.25% முதல் 5% வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். </p><p>மொபைல் போனுக்கான முக்கிய உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்து பயன்படுத்துவதை ஊக்குவிக்க கூடுதலாக 1.5% வரை ஊக்கத்தொகை அளிக்கப்படும். </p><p>சொந்தமாக இந்திய மொபைல் பிராண்டுகளை உருவாக்கவும், ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை மேம்படுத்தவும் கூடுதலாக 3% ஊக்கத்தொகை வழங்கப்படும். </p><p>சர்வதேச சந்தையில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியை கணிசமாக உயர்த்தி, இந்தியாவின் உலகளாவிய மின்னணு விநியோகச் சங்கிலியை இது பலப்படுத்தும் என கூறப்படுகிறது.</p><p>இந்தியா தற்போது உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக உள்ளது. மேலும் நாட்டில் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில் கிட்டத்தட்ட 99.2% உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>இந்திய மாலுமி உயிரிழப்பு எதிரொலி: கப்பலில் பணியாற்றுபவர்களின் தகவல்களை சேகரிக்க மத்திய அரசு உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-seafarer-killed-indian-sailor-dies-in-mt-al-bahiah-attack-centre-orders-safety-measures-in-gulf-waters</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-seafarer-killed-indian-sailor-dies-in-mt-al-bahiah-attack-centre-orders-safety-measures-in-gulf-waters#comments</comments><guid isPermaLink="false">aa6c3045-bdf2-4ed5-adda-ace22d0635c3</guid><pubDate>Wed, 15 Jul 2026 14:38:10 +0000</pubDate><atom:updated>2026-07-15T14:38:10.332Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sarbananda Sonowal,இந்திய மாலுமி உயிரிழப்பு,Indian seafarer,Rohan Kumar,ரோகன் குமார்,சர்பானந்த சோனோவால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/9dmlos88/Untitled-design-12.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indian sailor dies in MT Al Bahiah attack, Centre orders safety measures in Gulf waters]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/9dmlos88/Untitled-design-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h3><strong>மாலுமி ரோகன் குமார் உயிரிழப்பு:</strong></h3><p>மேற்கு ஆசியாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பாரசீக வளைகுடா, ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமன் வளைகுடா ஆகிய பகுதிகளில், இந்திய சரக்கு கப்பல்களில் மாலுமிகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஒரு நடவடிக்கைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>ஹார்முஸ் நீரிணையில் இரண்டு வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் கடல்சார் பாதுகாப்பு நெருக்கடிக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>எம்.டி. அல் பஹியா மற்றும் எம்.டி. மொம்பாசா ஆகிய கப்பல்களில் 30 பேர் இந்திய மாலுமிகள் பயணம் செய்தனர். </p><p>மேலும் இந்த எம்.டி. அல் பஹியா கப்பல் மீதான தாக்குதலில் இந்திய மாலுமியான ரோகன் குமார் உயிரிழந்தார். அதேபோன்று, எம்.டி. மொம்பாசா கப்பலில் இருந்த ஒன்பது இந்தியர்கள் காயமடைந்தனர், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.</p><h3><strong>அமைச்சர் சர்பானந்த சோனோவால் நடவடிக்கை:</strong></h3><p>இந்நிலையில் கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் இதுகுறித்தான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p>அந்த அறிவிப்பில் அவர், “இந்த இரண்டு தாக்குதல்களில், நமது துணிச்சலான மாலுமிகளில் ஒருவரை துரதிர்ஷ்டவசமாக இழந்தது வேதனை அளிக்கிறது. துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட உத்தரவில், “பாரசீக வளைகுடா, ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமன் வளைகுடா ஆகிய பகுதிகளில் இயங்கும் ஒவ்வொரு கப்பலிலும், அவற்றின் கொடிகளை பொருட்படுத்தாமல், ஒவ்வொரு இந்தியரையும் கணக்கிடுவதற்காக கப்பல் வாரியாக ஒரு விரிவான கடுப்பாட்டு டாஷ்போர்டு நிறுவ கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்திற்கு உத்தரவிடப்படுகிறது.</p><p>கடலில் உள்ள இந்திய கப்பல் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக, இந்த முன்னெடுப்பு ஒரு முழுமையான அரசு அணுகுமுறையைக் கையாள்கிறது.</p><p>கப்பலின் நிலை, உரிமையாளர், சரக்கு, பணியாளர்களின் எண்ணிக்கை, பணியாளர்களின் நலன், அச்சுறுத்தல் மதிப்பீடு, திட்டமிடப்பட்ட பயணம், அடுத்ததாகச் செல்லவிருக்கும் துறைமுகம் மற்றும் வசதிகளின் கிடைக்கும் தன்மை ஆகியவை குறித்த நிகழ்நேரத் தகவல்களை இந்த டாஷ்போர்டு வழங்கும்” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் கேரளாவில் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கும் டாடா குழுமம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/tata-group-to-set-up-a-shipyard-in-kerala-at-an-estimated-cost-of-10000-crore</link><comments>https://www.maalaimalar.com/news/national/tata-group-to-set-up-a-shipyard-in-kerala-at-an-estimated-cost-of-10000-crore#comments</comments><guid isPermaLink="false">23c0dd45-7e30-445f-81e1-3a345db960c1</guid><pubDate>Wed, 15 Jul 2026 13:33:17 +0000</pubDate><atom:updated>2026-07-15T13:33:17.321Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,Tata Group,டாடா குழுமம்,கேரளா,shipbuilding,கப்பல் கட்டும் தளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/atl2ev9i/New-Project-2026-07-15T190229.569.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் கேரளாவில் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கும் டாடா குழுமம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/atl2ev9i/New-Project-2026-07-15T190229.569.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் சுமார் ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க டாடா குழுமம் அனுமதி கோரியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.</p><p>திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சதீசன், டாடாவின் இந்த திட்டத்திற்கு மாநில அரசு நிலத்தை வழங்க உள்ளதாகவும், ஒரு மாதத்திற்குள் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். </p><p>இந்தியாவின் உள்நாட்டு கப்பல் கட்டுமான திறனை மேம்படுத்தவும், உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தில் நாட்டின் பங்கை உயர்த்தவும் இம்முயற்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>ஏற்கனவே கேளர அரசுக்கு சொந்தமான விழிஞ்சம் துறைமுகத்தை அதானி குழுமம் நிர்வகிப்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>மேலும் பின்னடைவு: அதிருப்தி குழுவில் இணைந்த மம்தாவின் நம்பிக்கை நட்சத்திரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/changed-my-room-in-assembly-madan-mitra-quits-mamata-banerjees-trinamool</link><comments>https://www.maalaimalar.com/news/national/changed-my-room-in-assembly-madan-mitra-quits-mamata-banerjees-trinamool#comments</comments><guid isPermaLink="false">ce25aeb2-ad22-42a7-bcdf-25df5ddb6247</guid><pubDate>Wed, 15 Jul 2026 13:29:33 +0000</pubDate><atom:updated>2026-07-15T13:29:33.938Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,TMC,திரிணாமுல் காங்கிரஸ்,madan mitra,மதன் மித்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/q42d635n/madan-mitra.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ madan mitra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/q42d635n/madan-mitra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மம்தா பானர்ஜியின் நம்பிக்கை நட்சத்திரமான மதன் மித்ராவும் அதிருப்தி கிளர்ச்சிக் குழுவில் இணைந்துள்ளார்.</p><p>மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவிதியை மாற்றி அமைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்தது. சுவேந்து அதிகாரி முதல் மந்திரியாக பதவியேற்றார்.</p><p>மம்தா பானர்ஜியின்மீது அதிருப்தி ஏற்பட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 80 எம்.எல்.ஏ.க்களில் 60 பேர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதிருப்தி எம்.எம்.ஏ.க்களின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கைவிட அதிகம் என்பதால் மம்தா பானர்ஜியால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.</p><p>கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை அதிருப்தி குழு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.</p><h2>மாநில தலைவர் விலகல்</h2><p>திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான சந்திரிமா பட்டாச்சார்யா மாநில தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். மாநில தலைவராக பதவியேற்ற ஒரே மாதத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><h2>மதன் மித்ரா விலகல்</h2><p>இந்நிலையில், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் நம்பிக்கை நட்சத்திரமான மதன் மித்ராவும் அதிருப்தி குழுவில் இணைந்துள்ளார்.</p><p>மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவராக இருந்த மூத்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதன் மித்ராவும் அதிருப்தி குழுவில் இணைந்தார். முன்னதாக, திரிணாமூல் காங்கிரசில் உள்ள அனைத்துப் பதவிகளிலிருந்தும் அவர் ராஜினாமா செய்திருந்தார்.</p><p>மம்தா பானர்ஜியின் மிக நெருக்கமான மற்றும் ஆரம்பகால விசுவாசிகளில் ஒருவரான மதன் மித்ரா, சாரதா ஊழல் வழக்கு போன்ற கடினமான காலங்களிலும், சிறைவாசம் சென்றபோதும் அவர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் பக்கமே நின்றார்.</p><p>கட்சி நிர்வாகிகள் பலரும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி வருகிறார்கள். இதனால் அக்கட்சி பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதுடன் மம்தா பானர்ஜியும் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்? </title><link>https://www.maalaimalar.com/news/national/will-sharad-pawars-nationalist-congress-party-support-the-constituency-delimitation-bill</link><comments>https://www.maalaimalar.com/news/national/will-sharad-pawars-nationalist-congress-party-support-the-constituency-delimitation-bill#comments</comments><guid isPermaLink="false">cb2e058b-f371-4605-9cca-162bb8f5e1d2</guid><pubDate>Wed, 15 Jul 2026 13:05:58 +0000</pubDate><atom:updated>2026-07-15T13:05:58.778Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Sharad Pawar,சரத் பவார்,NCP,தொகுதி மறுவரையறை மசோதா,Delimitation Bill</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/603tku46/New-Project-2026-07-15T183538.201.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்? ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/603tku46/New-Project-2026-07-15T183538.201.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கடந்தமுறை தாக்கல் செய்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தாலும், மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. </p><p>இந்நிலையில் இந்த மசோதாவுக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. </p><p>தேசியவாத காங்கிரஸின் இரு பிரிவுகளையும் சேர்ந்த மூத்தத் தலைவர்கள், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியானநிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது. </p><p>இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. சுப்ரியா சுலேவிடம் (சரத் பவார்)இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்க மறுத்த அவர், மசோதாவின் இறுதி வடிவத்தைப் பொறுத்தே தங்கள் அணியின் நிலைப்பாடு அமையும் என தெரிவித்தார். </p><p>“அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகளை 50 சதவீதம் அதிகரிக்க அரசு வழிவகை செய்து, அதன் செயலாக்கத்தையும் தெளிவாக விவரித்தால், நாங்கள் அதை ஆதரிப்போம்,” என்று சுலே செய்தியாளர்களிடம் கூறினார்.</p><h2>தொகுதி மறுவரையறை மசோதா</h2><p>மகளிர் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைத்து மத்திய அரசு தாக்கல் செய்த அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா ஏப்ரல் 17 அன்று, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத்தவறி மக்களவையில் தோல்வியடைந்தது. </p><p>மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் 543-ல் இருந்து 850-ஆக உயர்த்தவும், அதனுடன் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. </p><p>ஆனால் இது தென்மாநிலங்களை கடுமையாக பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இப்போது இருக்கும் இடங்களிலேயே பெண்களின் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர். </p><p>இந்நிலையில் ஜூலை.20ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதாவை மீண்டும் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில்: நாளை மறுதினம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-to-flag-off-countrys-first-hydrogen-train-from-haryana-on-july-17</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-to-flag-off-countrys-first-hydrogen-train-from-haryana-on-july-17#comments</comments><guid isPermaLink="false">cd29cd87-15aa-46f0-b493-3a9679a63e6d</guid><pubDate>Wed, 15 Jul 2026 12:06:32 +0000</pubDate><atom:updated>2026-07-15T12:06:32.719Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hydrogen train,pm modi,பிரதமர் மோடி,ஹைட்ரஜன் ரெயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/z1cz45ri/train.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ hydrogen train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/z1cz45ri/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையிலான ரெயில் என்ஜினை தயாரிக்க கடந்த 2022-ம் ஆண்டு முயற்சிகள் தொடங்கின.</p><p>கடந்த 2020-21-ம் ஆண்டில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் வடக்கு மண்டல ரயில்வே இந்தத் திட்டத்தை 2022, ஏப்ரலில் தொடங்கியது. இந்தத் திட்டத்துக்கான டெண்டர் ஐதராபாத்தைச் சேர்ந்த மேதா என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம்தான் எரிபொருட்களை சப்ளை செய்கிறது. </p><p>ஹைட்ரஜன் ரெயிலை வடிவமைக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்றன. பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து சோதனை ஓட்டங்களும் நடந்தன. இதையடுத்து, ரெயிலை அறிமுகப்படுத்த கடந்த மே மாதம் 22-ம் தேதி ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.</p><p>இந்நிலையில், ஹைட்ரஜன் ரெயிலின் அறிமுகம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. மின்மயம் ஆக்கப்படாத வழித்தடமான அரியானா மாநிலத்தின் ஜிந்த் நகரில் இருந்து சோனிபட்டுக்கு இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜெர்மனியில் முதன்முதலாக உலகின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரெயில் 2018-ம் ஆண்டில் இயக்கப்பட்டது. அதன்பின் ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகியவை தங்கள் நாட்டுகளில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரெயிலை இயக்கின என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>‘ஆக்சிஜன் சிலிண்டர்களை சுமந்து திரியும் நாள் வெகு தொலைவில் இல்லை’ - சதுப்பு நிலக்காடுகள் அழிப்பு குறித்து மும்பை உயர் நீதிமன்றம் காட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/the-day-is-not-far-off-when-we-will-have-to-carry-oxygen-cylinders-around-bombay-high-court-expresses-strong-displeasure-over-the-destruction-of-mangrove-forests</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-day-is-not-far-off-when-we-will-have-to-carry-oxygen-cylinders-around-bombay-high-court-expresses-strong-displeasure-over-the-destruction-of-mangrove-forests#comments</comments><guid isPermaLink="false">34e14a63-0bba-41eb-adec-2af656c758e2</guid><pubDate>Wed, 15 Jul 2026 11:56:35 +0000</pubDate><atom:updated>2026-07-15T11:56:35.313Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Bombay High Court,oxygen cylinders,மும்பை உயர் நீதிமன்றம்,Mangroves,ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்,சதுப்பு நிலக்காடுகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/p1c1t6c6/New-Project-2026-07-15T163630.876.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஆக்சிஜன் சிலிண்டர்களை சுமந்து திரியும் நாள் வெகு தொலைவில் இல்லை’ - சதுப்பு நிலக்காடுகள் அழிப்பு குறித்து மும்பை உயர் நீதிமன்றம் காட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/p1c1t6c6/New-Project-2026-07-15T163630.876.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>‘மக்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஆக்ஸிஜன் சிலிண்டரை தூக்கிக்கொண்டு செல்லும் நாள் இன்னும் வெகுதொலைவில் இல்லை’ என இந்தியாவில் சதுப்புநிலக் காடுகளின் பரப்பளவு குறைந்துவருவது குறித்து மும்பை உயர் நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது. </p><p>மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்காக, 847 சதுப்புநில மரங்களை வெட்ட அனுமதி கோரி மகாராஷ்டிர மாநில மின்சார பரிமாற்ற நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது, ​​பொறுப்பு தலைமை நீதிபதி ரவீந்திர குகே மற்றும் நீதிபதி கௌதம் அன்காட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தக் கருத்தைத் தெரிவித்தது.</p><p>“ஏற்கனவே மும்பையில் ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக உள்ளது. மக்கள் தங்களுக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெற, மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை ஆக்சிஜன் சிலிண்டர்களைத் தங்கள் முதுகில் சுமந்து செல்லும் நாள் தொலைவில் இல்லை.” என நீதிபதிகள் தெரிவித்தனர். </p><p>இதற்கு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் மிலிந்த் சாத்தே, வேறு இடங்களில் மரங்களை நட அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். </p><p>இந்த செயலையும் விமர்சித்த நீதிமன்றம், ‘பிரச்சனை என்னவென்றால், நீங்கள் யாரும் மீண்டும் மரங்களையோ, செடிகளையோ நடுவதில்லை. தோற்றத்திற்காக நடும் செடிகள் வாடத் தொடங்கிவிடுகின்றன. ஏதோ ஒன்றை நட்டுவிட்டீர்கள் என்ற ஒரு தோற்றத்தை மட்டுமே உருவாக்குகிறீர்கள். நட்ட பிறகு, அது உயிருடன் இருக்கிறதா என்றுக்கூட திரும்பிப் பார்ப்பதில்லை.” என தெரிவித்தது. </p><p>இதற்கு பதிலளித்த  அரசுத் தரப்பு வழக்கறிஞர், மரங்களை வேறு எங்கும் நடாமல், அதே பகுதியில் உள்ள சீரழிந்த காட்டு நிலங்களை கண்டறிந்து காடுகளை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்குச் சற்று கால அவகாசம் தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.</p><p>மேலும் மாற்றுப் பாதைகளை ஆய்வு செய்த பிறகே, காடுகளுக்குக் குறைந்தபட்ச பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த வழித்தடம் தேர்வு செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>மேலும் அக்டோபர் மாதம் பிரதமர் புல்லட் ரயில் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதால், மின் பரிமாற்ற வழித்தடம் அவசரமாகத் தேவைப்படுகிறது என்றும் அரசு சுட்டிக்காட்டியது.</p><p>அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், திட்டத்திற்கு தடை விதிக்கவில்லை என்றாலும், வெட்டப்படும் மரங்களை ஈடுசெய்யும் காடுகளை வளர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, இந்த வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. </p><p>2018-ஆம் ஆண்டின் மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, நீதிமன்ற அனுமதியின்றி சதுப்புநிலக் காடுகளை அழிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>இனி 10 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவிரி... இருக்கவே இருக்கு இன்ஸ்டாமார்ட்!</title><link>https://www.maalaimalar.com/news/national/cylinder-delivery-in-just-10-minutes-instamart-is-here</link><comments>https://www.maalaimalar.com/news/national/cylinder-delivery-in-just-10-minutes-instamart-is-here#comments</comments><guid isPermaLink="false">999be1d5-2df2-4a68-9253-32cf4ba10c8e</guid><pubDate>Wed, 15 Jul 2026 10:53:04 +0000</pubDate><atom:updated>2026-07-15T10:53:04.085Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>LPG Cylinder,எல்பிஜி சிலிண்டர்,Swiggys Instamart,HPCL,ஹிந்துஸ்தான் நிறுவனம்,இன்ஸ்டாமார்ட்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/1zfdfw4l/New-Project-2026-07-15T160417.558.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இனி 10 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவிரி... இருக்கவே இருக்கு இன்ஸ்டாமார்ட்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/1zfdfw4l/New-Project-2026-07-15T160417.558.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மளிகை, வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்களை 10 நிமிடங்களில் வீட்டில் டெலிவிரி செய்யும் ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் நிறுவனம், இனி சிலிண்டரும் தங்கள் செயலியில் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. </p><p>இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஸ்விக்கி இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. முதற்கட்டமாக பெங்களூவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>அங்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, விரைவில் சென்னை உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும்.</p><h2>10, 5 கிலோ சிலிண்டர்கள் விநியோகம்</h2><p>10 கிலோ ஹெச்பி நவ்யா சிலிண்டரும், சிறிய தேவைகளுக்கான 5 கிலோ எடையுள்ள வழக்கமான மெட்டல் சிலிண்டரும் இதில் கிடைக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதனை வாங்க ஏற்கனவே சிலிண்டர் இணைப்பு இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் வழக்கமான முறையைப் போலவே முதல்முறை வாங்கும்போது காலி சிலிண்டர் தரவேண்டாம், அடுத்தடுத்த முறை காலி சிலிண்டர்களை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. </p><p>இளைஞர்கள், மாணவர்கள், வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் சிறிய குடும்பங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்கள் மூலமே இந்த சிலிண்டர்கள் பாதுகாப்பாக டெலிவரி செய்யப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>எத்தனால் பெட்ரோல் தொடர்பாக நிதின் கட்கரியை விமர்சித்த 4 சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் மீது வழக்குப் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/case-registered-against-four-social-media-influencers-who-criticized-nitin-gadkari-regarding-ethanol-blended-petrol</link><comments>https://www.maalaimalar.com/news/national/case-registered-against-four-social-media-influencers-who-criticized-nitin-gadkari-regarding-ethanol-blended-petrol#comments</comments><guid isPermaLink="false">196f0fbc-0e03-4885-a64e-0e66ac5ee914</guid><pubDate>Wed, 15 Jul 2026 10:16:29 +0000</pubDate><atom:updated>2026-07-15T10:16:29.103Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,bharatiya janata party,Nitin gadkari,நிதின் கட்கரி,எத்தனால் பெட்ரோல்,social media influencers,E20 fuel,இன்ஃப்ளூயன்சர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/29j4utkg/New-Project-2026-07-15T153202.192.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எத்தனால் பெட்ரோல் தொடர்பாக நிதின் கட்கரியை விமர்சித்த 4 இன்ஃப்ளூயன்சர்கள் மீது வழக்குப் பதிவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/29j4utkg/New-Project-2026-07-15T153202.192.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்த விவாதம் இந்தியாவில் சூடிபிடித்துள்ள நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியை உள்ளடக்கி, எத்தனால் பெட்ரோல் தொடர்பாக தவறாக வீடியோ வெளியிட்டதாக, பீகாரைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மனிஷ் காஷ்யப் உட்பட 4 சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் மீது நாக்பூர் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். </p><p>பாஜகவின் சமூக ஊடகப் பிரிவின் நாக்பூர் நகரத் தலைவர் ஷிஷிர் திரிபாதி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>அந்தப் புகாரில் எத்தனால் பெட்ரோல் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதாகவும், நிதின் கட்கரியின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதை நோக்கமாக கொண்டு இவ்வாறு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  </p><p>தவறான தகவல்களைப் பரப்புதல், பொது அமைதியைக் குலைத்தல் மற்றும் மத்திய அமைச்சருக்கு அவதூறு ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் மனிஷ் காஷ்யப், தேசி பாய்ஸ், ஹிர்ஷித் ரதி, அங்க்லேஷ் இன்வாதி ஆகியோர் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை காப்பாற்றக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு!</title><link>https://www.maalaimalar.com/news/national/public-interest-litigation-filed-in-the-delhi-high-court-seeking-to-save-social-activist-sonam-wangchuk</link><comments>https://www.maalaimalar.com/news/national/public-interest-litigation-filed-in-the-delhi-high-court-seeking-to-save-social-activist-sonam-wangchuk#comments</comments><guid isPermaLink="false">19cbbbcb-ed8a-47af-a8fc-378f2abeca03</guid><pubDate>Wed, 15 Jul 2026 09:58:07 +0000</pubDate><atom:updated>2026-07-15T09:58:07.387Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>hunger strike,Delhi HC,Sonam Wangchuk,உண்ணாவிரதப் போராட்டம்,டெல்லி உயர் நீதிமன்றம்,சோனம் வாங்சுக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/q2krm4al/New-Project-2026-07-15T152738.632.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை காப்பாற்றக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/q2krm4al/New-Project-2026-07-15T152738.632.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு, பொதுத்தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியுடன் இணைந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஜூன்.28ம் தேதிமுதல் போராட்டத்தில் ஈடுபட்டு, உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.</p><p>இதனால் அவருக்கு உடல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வாங்சுக் 8.5 கிலோ குறைந்துவிட்டதாகவும், இந்த உண்ணாவிரதத்தை அவர் நீட்டித்தால் இரண்டு நாட்களில் உயிரிழந்துவிடுவார் என எச்சரித்தனர். </p><p>இந்நிலையில் இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு, வாங்சுக்கிற்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கவேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>வாங்சுக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுமாறு மத்திய மற்றும் டெல்லி அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, சமூக ஆர்வலர், வழக்கறிஞர் ராகேஷ் குமார் சைனி இந்த பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p>அவர் காலமானால், அது நாட்டிற்கும் உலகிற்கும் பெரும் அவமானமாக அமையும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அரசு வாங்சுக்கை ஒரு கொடூரக் குற்றவாளி, பயங்கரவாதி அல்லது தேசத்துரோகி போல நடத்துவதாகவும், அவர் மீது சிறிதும் அக்கறை காட்டவில்லை என்றும் அந்தப் பொதுநல மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>கரப்பான்பூச்சி கட்சி ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>கப்பல் மீது ஈரான் தாக்குதல்: மாயமான இந்திய மாலுமி உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/iran-strike-missing-indian-sailor-death</link><comments>https://www.maalaimalar.com/news/national/iran-strike-missing-indian-sailor-death#comments</comments><guid isPermaLink="false">613a6997-318d-401d-a375-94f57e2a9df8</guid><pubDate>Wed, 15 Jul 2026 09:25:15 +0000</pubDate><atom:updated>2026-07-15T09:25:15.202Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Iran attack,Indian sailor,ஈரான் தாக்குதல்,இந்திய மாலுமி உயிரிழப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/j2fv2lne/HerambhKarmarkar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Herambh Karmarkar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/j2fv2lne/HerambhKarmarkar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கிழக்கில் ஈரான் -அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் வெடித்து உள்ளதால் பதற்றம் அதிகரித்து உள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் தாங்கள் அறிவித்துள்ள பாதையில் செல்லாமல், வேறு பாதையில் பயணிக்கும் வர்த்தக கப்பல்கள் மீது <a href="https://www.maalaimalar.com/news/world/strait-of-hormuz-attack">ஈரான்</a> தாக்குதல் நடத்தியது. </p><p>கடந்த 12-ந்தேதி ஓமன் கடற்பகுதியில் எம்.வி.ஜி.எப்.எஸ் கேலக்சி என்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கப்பலின் இயந்திர அறையில் தீப்பிடித்து எரிந்தது. அந்தக் கப்பலில் 11 இந்தியர்கள் உள்பட 24 மாலுமிகள் இருந்தனர். தகவல் அறிந்ததும் ஓமன் கடற்படை விரைந்து சென்று 23 மாலுமிகளை மீட்டது. </p><p>தாக்குதல் நடந்தபோது இயந்திர அறைக்கு அருகில் பணியாற்றிய இந்திய மாலுமியான புனேவை சேர்ந்த ஹேராம்ப் கர்மர்கர் மாயமாகி இருந்தார். அவரை தேடும் பணி நடந்து வந்தது. </p> <p>இந்த நிலையில் ஹேராம்ப் கர்மர்கர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் பலியாகி உள்ளதாக தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.  என்ஜினீயரான ஹேராம்ப் கர்மர்கர் கடைசியாக 12-ந்தேதி அதிகாலை 2.49 மணிக்கு தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்து விட்டதாக  தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பின் நடந்த தாக்குதலில் சிக்கி பலியாகி உள்ளார். </p><p>இதற்கிடையே நேற்று ஹோர்முஸ் ஜலசந்தியில் ஐக்கிய அரபு எமிரேட்சின் 2 கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். அவர் பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த  ரோஹன் குமார் (வயது 31) என்பது தெரியவந்தது. அவரது  உடலை சொந்த ஊருக்கு  கொண்டு வருவதற்கான நடைமுறைகளை தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு - இலவச தரிசன டிக்கெட் வினியோகம் நிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/national/devotees-crowds-at-tirupati-temple-free-darshan-ticket-distribution-stopped</link><comments>https://www.maalaimalar.com/news/national/devotees-crowds-at-tirupati-temple-free-darshan-ticket-distribution-stopped#comments</comments><guid isPermaLink="false">5bc23d8d-876a-4217-b371-d6cc910c134a</guid><pubDate>Wed, 15 Jul 2026 09:10:12 +0000</pubDate><atom:updated>2026-07-15T09:10:12.183Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupati temple,Devotees crowd,பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு,திருப்பதி கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/z6hnp347/tirupati.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tirupati temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/z6hnp347/tirupati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2>திருப்பதி கோவில்</h2><p>திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. காத்திருப்பு அறைகளை தாண்டி பக்தர்கள் நீண்ட தூரம் வரிசையில் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். </p><p>நேரடி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் சிரமத்தை போக்க தேவஸ்தானம் சார்பில் நிவாசம், ஸ்ரீனிவாசன், பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட 3 இடங்களில் நேர ஒதுக்கீடு இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு 8 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டன.</p><h2>பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு</h2><p>இந்த நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் இன்று நேர ஒதுக்கீடு இலவச தரிசன டிக்கெட் வாங்குவது நிறுத்தப்பட்டது. ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு 2 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.</p> <p>நேற்று முன்தினம் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் இன்று பிற்பகல் முதல் இரவு 10 மணி வரை தரிசனம் செய்வார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். நாளை தரிசன டிக்கெட் வழக்கம் போல் வழங்கப்பட உள்ளது.</p><h2>20 மணி நேரம்</h2><p>திருப்பதியில் நேற்று 75,485 பேர் தரிசனம் செய்தனர். 30,939 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.36 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 3.70 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி</title><link>https://www.maalaimalar.com/news/national/new-low-pressure-area-formed-over-bay-of-bengal-2</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-low-pressure-area-formed-over-bay-of-bengal-2#comments</comments><guid isPermaLink="false">ec398d94-229d-44c3-9c7c-f79512ffe68e</guid><pubDate>Wed, 15 Jul 2026 08:50:44 +0000</pubDate><atom:updated>2026-07-15T08:50:44.581Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>IMD,Rain,இந்திய வானிலை ஆய்வு மையம்,bay of bengal,கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/88szjbce/imd.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/88szjbce/imd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கக்கடலின் வடக்கு மற்றும் அதனையொட்டிய தெற்கு வங்காள தேச பகுதிகளில் நேற்று வளி மண்டல சுழற்சி இருந்தது.</p><p>இந்த தீவிர வளி மண்டல சுழற்சியின் தாக்கத்தால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது. வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடற்கரைக்கு அப்பால் வடமேற்கு வங்கக்கடலில் இன்று காலை 5.30 மணிக்கு  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>இதன் தொடர்புடைய வளி மண்டல சுழற்சியானது கடல் மட்டத்தில் இருந்து 7.6 கி.மீ. உயரம் வரை பரவி உள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 தினங்களுக்கு வடக்கு ஒடிசா மற்றும் கங்கை சமவெளி பகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்காளம் வழியாக மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். </p><p>காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 4 மணி நேரத்தில் ஒடிசா மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பலத்த மழை காரணமாக பூரி மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் -  பிரதமர் மோடி புகழாரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/kamarajar-birthday-pm-modi-pays-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/national/kamarajar-birthday-pm-modi-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">40d7b8e4-7de1-44a3-a52d-e67964b3d7bb</guid><pubDate>Wed, 15 Jul 2026 05:40:52 +0000</pubDate><atom:updated>2026-07-15T05:40:52.350Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமராஜர்,kamarajar,காமராஜர் பிறந்தநாள்,Kamarajar Birthday,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/79b9qzvo/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kamarajar - PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/79b9qzvo/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் முன்னாள் முதலமைச்சரும், ‘கல்வி கண் திறந்தவர்’ என்று அழைக்கப்படுபவருமான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. காமராஜர் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி விருதுநகரில் பிறந்தார். ஏழை குழந்தைகளின் கல்விக்காக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய இவரது பிறந்தநாள், தமிழ்நாட்டில் 'கல்வி வளர்ச்சி நாளாக' கொண்டாடப்படுகிறது.</p><p>காமராஜரின் பிறந்தநாளையொட்டி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a> வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kamarajs-fame-will-last-till-tamil-nadu-mk-stalin">காமராஜர்</a> அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறோம். </p><p>இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், சிறந்த பொதுவாழ்வு ஆளுமையாகவும் திகழ்ந்த அவர், தனது வாழ்வை தேசக் கட்டமைப்பிற்காக அர்ப்பணித்தார். கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பின்தங்கிய மக்களின் நலன் அவர் கொண்டிருந்த உறுதியான அர்ப்பணிப்பு, தலைமுறைகளுக்கு தொடர்ந்து வழிகாட்டியாக உள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>IRCTC புது இணையதளம் - இனி முன்பதிவு ரொம்ப ஈஸி! 
</title><link>https://www.maalaimalar.com/news/national/irctc-new-website-launch-rail-ticket-booking-capacity-boosted-to-15-lakh-tickets-per-minute-with-faster-simpler-interface</link><comments>https://www.maalaimalar.com/news/national/irctc-new-website-launch-rail-ticket-booking-capacity-boosted-to-15-lakh-tickets-per-minute-with-faster-simpler-interface#comments</comments><guid isPermaLink="false">4ab3572f-aa31-432f-9680-8ddeac9cf260</guid><pubDate>Wed, 15 Jul 2026 00:19:51 +0000</pubDate><atom:updated>2026-07-15T00:19:51.629Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில்வே,Railways,Ticket Booking,IRCTC,ஐஆர்சிடிசி,ரெயில் டிக்கெட் முன்பதிவு,IRCTC new website</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/t62atikc/IRCTC.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ IRCTC ]]></media:title><media:description type="html"><![CDATA[ IRCTC ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/t62atikc/IRCTC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆன்லைனில் ரெயில் டிக்கெட் பதிவது மக்களுக்கு என்றும் தலைவலியான விஷயமாக இருந்து வருகிறது. ரெயில்வேயின் <a href="https://www.maalaimalar.com/topic/irctc">ஐஆர்சிடி </a>இணையதளமும் செயலியும் பலராலும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.</p><h2>புதிய இணையதளம் </h2><p>இந்த சூழலில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சந்திக்கும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு  மாற்றங்களுடன் கூடிய புத்தம் புதிய இணையதளத்தை  ஐஆர்சிடிசி இன்று அறிமுகப்படுத்த உள்ளது. </p><p>இன்று (ஜூலை 15) முதல் இந்த புதிய இணையதளம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய <a href="https://www.maalaimalar.com/news/national/irctc-luxury-saloon-car-puja-row-northern-railway-clarifies-viral-train-video-says-no-rule-violation">ரெயில்வே </a>அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.</p>  <h2>புதிய அம்சங்கள்</h2><p>தற்போது ஒரு நிமிடத்திற்கு 32,000 டிக்கெட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. புதிய தளம் மூலம் இனி ஒரு நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகளை கையாளும் வகையில் 5 மடங்கு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது நிமிடத்திற்கு 4 லட்சம் டிக்கெட் நிலவரம் குறித்த Enquiry-களை மட்டுமே தளம் தாங்கும். இனி ஒரே நேரத்தில் 40 லட்சம் Enquiry-களை இணையதளம் எந்தவித தொய்வுமின்றி உடனுக்குடன் வழங்கும்.</p><p>விளம்பரங்கள் மற்றும் தேவையற்ற பாப் அப்கள், கிராபிக்ஸ் பக்கங்கள் இல்லாமல் புதிய இணையதளம் மிகவும் எளிமையாக மாற்றப்பட்டுள்ளது.</p><p>பயணிகள் வெவ்வேறு தேதிகளுக்கான டிக்கெட் கட்டணங்களை ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்து தங்களுக்கு சாதகமான தேதியைத் தேர்வு செய்யலாம்.</p><p>ரெயிலின் அனைத்து வகுப்புகளுக்கான இருக்கை இருப்பு விபரங்களையும் தனித்தனியாகத் தேடாமல், Single Screen-இல் பார்த்துக் கொள்ளலாம்.</p><p>பயணிகள் தங்களுக்கு விருப்பமான இருக்கை அல்லது படுக்கை வசதியை எளிதாகத் தேர்வு செய்யும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.</p><p>புதிய தளத்தில் மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கான சிறப்புச் சலுகை அடிப்படையிலான சேவைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>மேலும், பல இந்திய மொழிகளில் இந்தத் தளத்தைப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.198 கோடி.. பீகார் இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரசாந்த் கிஷோர் சொத்து விவரம் </title><link>https://www.maalaimalar.com/news/national/prashant-kishor-assets-bankipur-bypoll-candidate-couple-declare-197-crore-wealth-and-577-crore-loan</link><comments>https://www.maalaimalar.com/news/national/prashant-kishor-assets-bankipur-bypoll-candidate-couple-declare-197-crore-wealth-and-577-crore-loan#comments</comments><guid isPermaLink="false">28297a72-9374-495b-8e67-edfae12afbbd</guid><pubDate>Wed, 15 Jul 2026 00:04:07 +0000</pubDate><atom:updated>2026-07-15T00:04:07.219Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,பிரசாந்த் கிஷோர்,Prashant Kishor,சொத்து விவரம்,asset details</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/l6ajnj2z/PRASANT-KISHOR.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரசாந்த் கிஷோர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரசாந்த் கிஷோர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/l6ajnj2z/PRASANT-KISHOR.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரின் பாங்கிபூர் இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி தலைவரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான <a href="https://www.maalaimalar.com/news/national/bihar-elections-were-rigged-but-prashant-kishor-interview-798725">பிரசாந்த் கிஷோர் </a>போட்டியிடுகிறார். </p><p>இந்நிலையில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிட்ட தனது சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளன.  </p> <h2>விவரம்</h2><p>பிரஷாந்த் கிஷோர் அசையும் சொத்துக்களாக ரூ. 22.19 கோடி, அசையா சொத்துக்களாக ரூ. 73.87 கோடி என மொத்தம் ரூ. 96.06 கோடி சொத்துக்களை வைத்துள்ளார்.</p><p>பிரஷாந்த் கிஷோரின் மனைவி ஜாஹ்னவி தாஸ், அசையும் சொத்துக்களாக ரூ. 89.51 கோடி, அசையா சொத்துக்களாக ரூ. 12.42 கோடி என மொத்தம் ரூ. 101.93 கோடி சொத்து வைத்துள்ளார்.</p><p>தம்பதியரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 197.99 கோடி. மேலும், பிரஷாந்த் கிஷோர் தன் மீது ரூ. 5.77 கோடி வங்கி கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p> <h2>வழக்குகள்</h2><p>பிரசாந்த் கிஷோர் தன் மீது அவதூறு வழக்கு, அரசுப் பணியை தடுத்தல் மற்றும் மோசடி உள்ளிட்ட மொத்தம் 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், ஆனால் இதுவரை எந்த வழக்கிலும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை என்றும் பிரமாண பாத்திரத்தில் கூறியுள்ளார்.</p><p>தான் உரிமையாளராக உள்ள 'வேதா வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம், 2024-25 நிதியாண்டில் 'ஜன் சுராஜ்' கட்சிக்கு ரூ. 85 கோடி நன்கொடை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p> <h2>பீகார் அரசியல் நிலவரம்</h2><p>தேர்தல் வியூகங்களை வகுப்பதில் நிபுணராக இருந்தாலும் கடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதல் முறை களம் கண்ட அவரின் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் பீகார் முதல்வராக இருந்த ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் பதவியை துறந்து தேசிய அரசியலுக்கு சென்றதால் கூட்டணியில் உள்ள பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்திரி தற்போது முதல்வராக உள்ளார்.</p><p>நிதிஷ் குமாருக்கு வாக்களித்துவிட்டு இப்போது பாஜகவால் பீகாரின் முதன்மை அதிகாரம் கைப்பற்றப்பட்டது அங்குள்ள மக்கள் மனநிலையில் பிரதிபலிக்கும் என்பதால் தற்போது பிரசாந்த் கிஷோருக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.</p> <h2>பாஜக வாபஸ்</h2><p>பிரசாந்த் கிஷோர் போட்டியிடும் பாங்கிபூர் தொகுதியில் அவருக்கு எதிராக நின்ற <a href="https://www.maalaimalar.com/news/national/bankipur-bypoll-bjp-candidate-pulls-out-forcing-last-minute-rethink-against-prashant-kishor">பாஜக வேட்பாளர் வாபஸ்</a> பெற்று சென்றதும் இதன் முன்னோட்டமாக பார்ப்படுகிறது. பாஜகவின் வரலாற்றிலேயே ஒரு வேட்பாளர் வாபஸ் வாங்கி ஓடியது இதுவே முதல் முறை என பிரசாந்த் கிஷோரும் இது குறித்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>குஜராத்தில் ரூ.400 கோடி மோசடி.. பங்குச்சந்தையில் லாப ஆசை காட்டி 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை  ஏமாற்றிய இருவர் கைது </title><link>https://www.maalaimalar.com/news/national/massive-ponzi-fraud-bjp-functionary-accused-of-rs-300-400-crore-investment-scam-across-30-gujarat-villages</link><comments>https://www.maalaimalar.com/news/national/massive-ponzi-fraud-bjp-functionary-accused-of-rs-300-400-crore-investment-scam-across-30-gujarat-villages#comments</comments><guid isPermaLink="false">bb42864b-91af-4e8e-9144-a9683c71b4fd</guid><pubDate>Tue, 14 Jul 2026 23:40:26 +0000</pubDate><atom:updated>2026-07-14T23:40:26.272Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,gujarat,மோசடி,Fraud,Stock Market,பங்குச்சந்தை,பாஜக நிர்வாகி,BJP functionary</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/e3dofpue/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோசடி]]></media:title><media:description type="html"><![CDATA[ மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/e3dofpue/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத்தில் பங்குச்சந்தையில் முதலீட்டின்  மூலம் மாதம் 20% வரை உறுதியான லாபம் தருவதாகக் கூறி 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்களிடம் சுமார் ரூ. 300 முதல் 400 கோடி வரை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-100-crore-land-scam-complaint-filed-seeking-action-against-those-spreading-false-and-defamatory-allegations-against-minister-ramesh">மோசடி </a>நடைபெற்றுள்ளது. </p><p>குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள கிராமங்களில் நடந்த இந்த மோசடியில் அங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த யோகேஷ் தமேச்சா மற்றும் அவரது நெருங்கிய உறவினரான சஞ்சய் தமேச்சா முக்கிய குற்றவாளிகள் ஆவர். </p> <h2>மோசடி</h2><p>இவர்களை நம்பி ஆரம்பத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அவர்கள் வாக்குறுதி அளித்தபடியே 20% லாபத்தை வழங்கியுள்ளனர்.</p><p>ஆனால், அந்தப் பணம் அவர்களுக்குக் கிடைத்த லாபம் அல்ல. மாறாக, புதிய முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தைக் கொண்டு பழைய முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுத்துள்ளனர்.</p><p>அதை தங்கள் முதலீட்டுக்கு கிடைத்த லாபம் என நம்பி பலர் அந்த செய்தியை தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறியுள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு கிராமமாக செய்தி பரவ, சௌராஷ்டிராவின் 30க்கும் மேற்பட்ட கிராம மக்களை இவ்வாறு நம்ப வைத்துள்ளனர்.</p> <h2>கைது</h2><p>கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே இவர்களது இந்த மோசடி அம்பலமாக தொடங்கியதும், முதலீட்டாளர்களின் கோடிக்கணக்கான ரூபாயை எடுத்துக்கொண்டு இருவரும் தலைமறைவாகினர். சுமார் ரூ. 300 முதல் 400 கோடி வரை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-100-crore-land-scam-complaint-filed-seeking-action-against-those-spreading-false-and-defamatory-allegations-against-minister-ramesh"> </a>அவர்கள் சுருட்டியிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.  </p><p>பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், தற்போது இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <h2>பாஜக நிர்வாகி</h2><p>கைதான யோகேஷ் தமேச்சா கடந்த 2  ஆண்டுகளாக பாவ்நகர் மாவட்ட பாஜக அமைப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p>ஆளும் கட்சியில் தனக்கிருந்த செல்வாக்கையும், அதிகாரப் பதவியையும் காட்டியே யோகேஷ் தமேச்சா சாமானிய மக்களிடம் மிக எளிதாக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.</p><p>தற்போது வரை 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் நேரடியாகப் புகார்களை அளித்துள்ளனர்.</p><p>இருப்பினும், இந்த மோசடியில் சிக்கியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ராஜஸ்தான் அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின் பின் 18 பெண்கள் மரணம்.. 7 பேருக்கு சிறுநீரக செயலிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/rajasthan-maternal-deaths-18-mothers-die-post-delivery-kidney-failures-under-high-level-probe-in-government-hospitals</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajasthan-maternal-deaths-18-mothers-die-post-delivery-kidney-failures-under-high-level-probe-in-government-hospitals#comments</comments><guid isPermaLink="false">b4dbd1cd-7789-4ff6-9484-7154e88d4c2e</guid><pubDate>Tue, 14 Jul 2026 22:54:16 +0000</pubDate><atom:updated>2026-07-14T22:54:16.422Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மருத்துவமனை,Government Hospital,Rajasthan,பிரசவம்,childbirth,kidney failure,சிறுநீரக செயலிழப்பு,ராஜஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/z26s6njf/maternity.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரசவம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரசவம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/z26s6njf/maternity.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தானில் பிரசவத்திற்குப் பின் 18 தாய்மார்கள் அடுத்தடுத்து மரணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  </p><h2>மரணங்கள் </h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D"> ராஜஸ்தான் </a>மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் கடந்த மே மாதம் முதல் <a href="https://www.maalaimalar.com/health/warning-signs-that-child-birth-is-imminent">பிரசவத்திற்கு  </a>பிறகு 18 தாய்மார்கள் அடுத்தடுத்து மரணமடைந்த புள்ளிவிவரம் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. </p><p>மேலும் பிரசவத்தின் பின் 7 பெண்கள் சிறுநீரக செயலிழப்புக்கு  ஆளாகி டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. </p><p>இந்தத் தொடர் மரணங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த மாநில பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2>அமைச்சர் விளக்கம்</h2><p>இந்தத் தொடர் மரணங்கள் குறித்து ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சர் பேசுகையில்,</p><p>"இந்த மரணங்கள் குறுகிய கால இடைவெளியில் நிகழ்வது பெரும் ஆச்சரியமாக உள்ளது. இதற்கான துல்லியமான காரணம் என்னவென்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.</p><p>ஆரம்பத்தில், வெப்ப அலை காரணமாக இந்த உயிரிழப்புகள் நேரிட்டிருக்கலாம் என்று நாங்கள் கருதினோம். ஆனால், தற்போது வெயிலின் தாக்கம் குறைந்துவிட்ட நிலையிலும் பாதிப்புகள் தொடர்கின்றன."</p><p>உயிரிழந்த பெண்களின் இரத்தப் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தும் சீராக உள்ளன. மற்ற மருத்துவக் காரணிகளும் சரியாகவே இருப்பதாக தோன்றும் நிலையில், இந்தத் தொடர் மரணங்களின் பின்னணியில் உள்ள மூலக் காரணத்தை கண்டறிய உயர்மட்ட மருத்துவ நிபுணர்களின் உதவியை அரசு நாடியுள்ளது.</p> <p>இந்த விவகாரத்தில் ஏதேனும் மருத்துவ அலட்சியம் அல்லது குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.</p><p>இதற்காகத் தகுதிவாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, பாதிப்பு ஏற்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்று தெரிவித்துள்ளார்.</p> <p>அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள் அடுத்தடுத்து உயிரிழப்பதும் உயிர் பிழைத்தவர்கள் சிறுநீரகப் பாதிப்புடன் போராடுவதும் ராஜஸ்தான் மக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘ஒரு மொழியை கற்றுக்கொள்வது ஒருபோதும் வீணாகாது’ - மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து!</title><link>https://www.maalaimalar.com/news/national/learning-a-language-is-never-a-waste-supreme-court-observes-on-the-three-language-policy-issue</link><comments>https://www.maalaimalar.com/news/national/learning-a-language-is-never-a-waste-supreme-court-observes-on-the-three-language-policy-issue#comments</comments><guid isPermaLink="false">20143b24-58a1-41a2-ba10-5959609ec4c1</guid><pubDate>Tue, 14 Jul 2026 14:50:53 +0000</pubDate><atom:updated>2026-07-14T14:50:53.632Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,CBSE,3 language policy</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/c8drb1zj/New-Project-2026-07-14T202032.925.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஒரு மொழியை கற்றுக்கொள்வது ஒருபோதும் வீணாகாது’ - மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/c8drb1zj/New-Project-2026-07-14T202032.925.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால், நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கைக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. </p><p>அதேசமயம் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது. </p><p>மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பல்வேறு வாதங்களை முன்வைத்தனர். குறிப்பாக இதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை எடுத்துக்கூறினர்.</p><p>அதாவது பல இந்திய மொழிகள் இருந்தாலும், 3 மொழிகளுக்கான பாடப்புத்தகங்கள் மட்டுமே NCERT-ல் கிடைப்பதாக குறிப்பிட்டனர். இது மொழித்திணிப்பிற்கு வழிவகுக்கும் என தெரிவித்தனர். </p><p>மேலும் மற்ற மொழிப் பாடத்திட்டங்களை திடீரென நிறுத்தும்போது அந்த மொழி ஆசிரியர்கள் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும். இந்திய மொழி கற்பித்தலுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.</p><p>அனைத்து வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, ஒரு மொழியை கற்பது ஒருபோதும் வீணாகாது என தெரிவித்து, ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டால், அவர்களை மீண்டும் நாங்கள் பணியில் அமர்த்துகிறோம் என பதிலளித்தது. </p><p>தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு வார கால அவகாசம் கோரியநிலையில், 10 நாட்களுக்குள் பதில் மனுத்தாக்கல் செய்யவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-condemns-strait-of-hormuz-attacks-after-indian-seafarer-killed-demands-end-to-attacks-on-commercial-vessels</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-condemns-strait-of-hormuz-attacks-after-indian-seafarer-killed-demands-end-to-attacks-on-commercial-vessels#comments</comments><guid isPermaLink="false">bb663feb-95a2-452d-a662-d23e3c60bb4c</guid><pubDate>Tue, 14 Jul 2026 11:29:13 +0000</pubDate><atom:updated>2026-07-14T11:29:13.509Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,ஈரான்,Iran,ஹார்முஸ் நீரிணை,straight of hormuz,</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/beuthz7b/ship.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ships]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/beuthz7b/ship.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்தும் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தி உள்ளது.</p><p>ஓமன் நாட்டின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த 'மொம்பாசா' மற்றும் 'அல் பாஹியா' ஆகிய இரண்டு அமீரக எண்ணெய் சூப்பர் டாங்கர் கப்பல்கள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை குரூஸ் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.</p><p>மொம்பாசா கப்பலில் பணியாற்றி வந்த இந்திய மாலுமி ஒருவர் இந்த கொடூர தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார். 6 இந்தியர்கள், 2 உக்ரைன் நாட்டினர் உட்பட மொத்தம் 8 மாலுமிகள் காயமடைந்தனர். இவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.</p><p>ஏவுகணை வீச்சால் இரு கப்பல்களிலும் ஏற்பட்ட தீ விபத்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.</p><p>இத்தாக்குதல் குறித்து விளக்கமளித்துள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, தவறு கப்பல் ஊழியர்கள் பக்கமே இருப்பதாகக் கூறியது.</p><p>விதிமீறலில் ஈடுபட்ட அந்த இரு சூப்பர் டாங்கர் கப்பல்களும் தங்களது திசைகாட்டி மற்றும் கடல்சார் வழிசெலுத்தல் அமைப்புகளை வேண்டுமென்றே அணைத்துவிட்டன. ஆபத்தான கண்ணிவெடிகள் நிறைந்த கடல் பகுதியில் பயணிக்க முயன்ற அவற்றுக்கு எங்களது படைகள் தொடர்ந்து எச்சரிக்கைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கின.</p><p>ஆனால், அவர்கள் அதை முழுமையாகப் புறக்கணித்ததாலேயே கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டு முடக்கப்பட்டன. மேலும், அமெரிக்காவின் தூண்டுதலின் பெயரிலேயே இந்தக் கப்பல்கள் சட்டவிரோதப் பாதையைப் பயன்படுத்தியதாகவும், இந்த பதற்றத்திற்கு அமெரிக்காவே முழு பொறுப்பு என்றும் ஈரான் குற்றம் சாட்டியது.</p><p>இந்தத் தாக்குதலை "வெளிப்படையான அராஜகத் தாக்குதல்" எனக் கடுமையாகக் கண்டித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், இதற்கு தகுந்த முறையில் பதிலடி கொடுக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.</p><p>நடப்பு 2026 பிப்ரவரி முதல் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் தீவிர மோதல் போக்கு, தற்போதைய இந்த கப்பல் தாக்குதல் மற்றும் அமெரிக்காவின் கடல் முற்றுகை காரணமாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலை, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாட்டையும், விலை உயர்வையும் ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.</p><p>இந்நிலையில், சரக்கு கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என ஈரானுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சராசரி கார் உரிமையாளர், வீட்டில் இருந்தபடியே மைலேஜை கணக்கிட முடியாது: எத்தனால் பெட்ரோல் சர்ச்சைக்கு நிதின் கட்கரி பதில்!</title><link>https://www.maalaimalar.com/news/national/the-average-car-owner-cannot-calculate-mileage-from-home-nitin-gadkari-responds-to-the-ethanol-petrol-controversy</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-average-car-owner-cannot-calculate-mileage-from-home-nitin-gadkari-responds-to-the-ethanol-petrol-controversy#comments</comments><guid isPermaLink="false">fbeddd23-92d3-4894-aaa2-2f90f77fff71</guid><pubDate>Tue, 14 Jul 2026 11:08:45 +0000</pubDate><atom:updated>2026-07-14T11:08:45.195Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Nitin gadkari,மைலேஜ்,Mileage,நிதின் கட்கரி,E20 petrol,எத்தனால் பெட்ரோல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/9bgsrv86/New-Project-2026-07-14T163824.340.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சராசரி கார் உரிமையாளர், வீட்டில் இருந்தபடியே மைலேஜை கணக்கிட முடியாது: எத்தனால் பெட்ரோல் சர்ச்சைக்கு நிதின் கட்கரி பதில்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/9bgsrv86/New-Project-2026-07-14T163824.340.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ள எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டிற்கு வந்தபிறகு, வாகனங்களின் மைலேஜ் குறைவதாக புகார்கள் எழுந்துவரும் நிலையில், </p><p>ஒரு சாதாரண கார் உரிமையாளரால் தனது காரின் மைலேஜை தானாக கணக்கிட முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். </p><p>நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவரிடம் மைலேஜ் குறைவுத் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,</p><p>“நீங்களோ, நானோ வீட்டில் இருந்தபடி மைலேஜைச் சரிபார்க்க முடியாது. நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களின் சிறப்புப் பரிசோதனைக் கருவிகள் மூலமே துல்லியமான மைலேஜை அளவிட முடியும்” என தெரிவித்தார். </p><p>தொடர்ந்து பெட்ரோலை விட எத்தனாலின் கலோரிஃபிக் மதிப்பு குறைவு என்பதால் மைலேஜில் சிறிதளவு குறைவு ஏற்படுவது இயல்பானதுதான் என்றும் ஒப்புக்கொண்டார்.</p><h2>வீட்டிலிருந்தபடியே வாகனத்தின் மைலேஜை துல்லியமாகச் சரிபார்க்க முடியாதா?</h2><p>இல்லை. கணினி மூலம் காட்டப்படும் மைலேஜ் ஒரு தோராயமான மதிப்பீடே தவிர, 100% துல்லியமானது அல்ல. சுயமதிப்பீடு, உண்மையான மதிப்பீட்டிலிருந்து 2-5% வரை வேறுபடும் எனக் கூறப்படுகிறது. </p><h2>ஃபுல் டேங்க் முறை: </h2><p>மறுபுறம் கார் ஓட்டிகள் பொதுவாகப் பயன்படுத்தும், டேங்கை முழுமையாக நிரப்பி, கிலோமீட்டரைக் கணக்கிடும் ஃபுல் டேங்க் முறை ஓரளவிற்கு நிஜ மைலேஜ் விபரத்தைத் தரும் என்று ஆட்டோமொபைல் நிபுணர்கள் கூறுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘பெண்ணின் மார்பை கசக்குவது, ஆடையை கழற்ற முயல்வது பாலியல் வன்கொடுமை முயற்சி ஆகாது’ - பாட்னா உயர் நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/squeezing-a-womans-breast-or-attempting-to-remove-her-clothes-does-not-constitute-an-attempt-at-sexual-assault-patna-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/squeezing-a-womans-breast-or-attempting-to-remove-her-clothes-does-not-constitute-an-attempt-at-sexual-assault-patna-high-court#comments</comments><guid isPermaLink="false">03236b40-ad06-42c4-9a25-374005c62666</guid><pubDate>Tue, 14 Jul 2026 09:45:56 +0000</pubDate><atom:updated>2026-07-14T09:45:56.754Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,Rape,Patna HC,Modesty,பாட்னா உயர் நீதிமன்றம்,மானப்பங்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/u4lu48a4/New-Project-2026-07-14T151527.453.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பெண்ணின் மார்பை கசக்குவது, ஆடையை கழற்ற முயல்வது பாலியல் வன்கொடுமை முயற்சி ஆகாது’ - பாட்னா உயர் நீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/u4lu48a4/New-Project-2026-07-14T151527.453.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒரு பெண்ணின் மார்பை பிடித்து கசக்குவதோ, அவள் அணிந்திருக்கும் கீழ் ஆடையை கழற்ற முயல்வதோ பாலியல் வன்கொடுமை முயற்சியாகாது என பாட்னா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. </p><p>ஒரு உயர் நீதிமன்றம், இத்தகைய செயல்கள் அப்பெண்ணை மானப்பங்கப்படுத்துதல் என்ற செயலின்கீழ் வருமே தவிர, கற்பழிப்பு முயற்சியில் வராது என தீர்ப்பளித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>வழக்கு</h2><p>கடந்த 2008ம் ஆண்டு பெண் ஒருவர் தனது தந்தையுடன் புகைப்படம் எடுக்க ஸ்டூடியோவிற்கு சென்றுள்ளார். புகைப்படம் எடுத்தப்பின் எப்படி இருக்கிறது என்பதை கணினியில் பார்க்க முயன்றபோது, பெண்ணின் தந்தையை வெளியே இருக்குமாறு குற்றம் சாட்டப்பட்ட புகைப்பட ஸ்டுடியோவின் உரிமையாளர் ஹிமான்ஷு குமார் கூறியுள்ளார்.</p><p>இதனையடுத்து பெண்ணின் தந்தை கடைக்கு வெளியே நிற்க, அங்கிருந்த அறையின் கதைவை மூடி, அப்பெண்ணின் ஆடைகளைக் கலைந்து, கீழ் அணிந்திருந்த ஆடையையும் கழற்ற முயன்றுள்ளார். </p><p>மேலும் அப்பெண்ணின் மார்பகங்களையும் பிடித்து அழுத்தியுள்ளார். இதனால் அப்பெண் கூச்சலிட அவரது தந்தையும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ஓடிவர, ஹிமான்ஷு அங்கிருந்து தப்பியுள்ளார்.  </p><p>இந்த வழக்கில் 2013ம் ஆண்டு ஹிமான்ஷுவை குற்றவாளி என தீர்ப்பளித்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது  விசாரணை நீதிமன்றம். </p><p>இந்த தண்டனையை எதிர்த்து ஹிமான்ஷு மேல்முறையீடு செய்ய, மருத்துரீதியான ஆதராங்கள் இல்லை எனக்கூறி நீதிபதி பூர்ணேந்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்து, தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். </p><h2>விசாரணையில் நீதிமன்றம் கூறியது என்ன?</h2><p>இந்த வழக்கில் பெண்ணின் உடலுக்குள் பாலியல் ரீதியான ஊடுருவல் (Penetration) நடந்ததற்கோ அல்லது அதற்கான தெளிவான மருத்துவ ஆதாரங்களோ இல்லை என இந்த தண்டனை குறைப்புக்கு காரணம் தெரிவித்துள்ளார் நீதிபதி பூர்ணேந்து சிங். </p><p>கற்பழிப்பு முயற்சி எனக் கருதுவதற்கு, குற்றம் தயாரிப்பு நிலையைத் தாண்டி, குற்றத்தைப் பூர்த்தி செய்யும் இறுதி நிலைக்குச் சென்றதற்கான உறுதியான சான்றுகள் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். </p><p>குற்றம் சாட்டப்பட்டவரின் செயல்கள் கண்டிக்கத்தக்கவை மற்றும் பெண்ணின் கண்ணியத்தைக் குலைப்பவை என்பதால், அது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354-இன் கீழ் (மானபங்கம்) மட்டுமே வரும் எனக் கூறி, </p><p>அதாவது பாலியல் குற்றங்களில் 'மானபங்கம்' மற்றும் 'கற்பழிப்பு முயற்சி' ஆகியவற்றிற்கு இடையேயான சட்டபூர்வமான வேறுபாடுகளை குறிப்பிட்டு, </p><p>அவர் ஏற்கனவே அனுபவித்த சிறைக்காலத்தைக் கணக்கில் கொண்டு முதன்மைக் குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றம் அவரை விடுவித்தது.</p>]]></content:encoded></item><item><title>9, 10-ஆம் வகுப்புகளில் 3-வது மொழித் தேர்வு தேர்ச்சி இனி கட்டாயம்: சிபிஎஸ்இ உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/new-rule-applied-for-cbse</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-rule-applied-for-cbse#comments</comments><guid isPermaLink="false">59b726ac-c3a1-438e-9b01-59687153b174</guid><pubDate>Tue, 14 Jul 2026 09:24:46 +0000</pubDate><atom:updated>2026-07-14T09:24:46.927Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஎஸ்இ,மும்மொழி கொள்கை,CBSE,தேசிய கல்விக் கொள்கை,NEP,ThreeLanguage Formula</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/wsglb1kq/cbse.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ new rule applied for CBSE ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/wsglb1kq/cbse.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், தேசிய கல்விக் கொள்கை  2020-இன் கீழ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் 3-வது மொழிக்கான பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டுத் தேர்வில்  தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p>மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற வேண்டுமானால், இந்த 3-வது மொழித் தேர்வின் உள் மதிப்பீட்டில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தனது புதிய சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2><strong>பொதுத்தேர்வு எழுதத் தேவையில்லை:</strong></h2><p>சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, 2027-28 கல்வியாண்டு முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இந்த 3-வது மொழிக்கு தனியாக வாரிய அளவிலான பொதுத்தேர்வு ஏதும் நடத்தப்படாது. </p><p>இந்தத் தேர்வு முழுமையாகப் பள்ளிகளிலேயே உள் மதிப்பீட்டுத் தேர்வாக நடத்தப்படும். இதில் மாணவர்கள் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களைப் பெற வேண்டியது அவசியமாகும்.</p><h2><strong>மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு:</strong></h2><p>ஒருவேளை 10-ஆம் வகுப்பில் ஒரு மாணவர் இந்த உள் மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறினால், 10-ஆம் வகுப்பு இறுதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே, பள்ளிகள் அந்த மாணவருக்கு மறுதேர்வு நடத்தி தேர்ச்சி பெற வழிவகை செய்ய வேண்டும்.</p><h2><strong>9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விதிமுறைகள்:</strong></h2><p>9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விதிகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளன. 9-ஆம் வகுப்பில் 3-வது மொழித் தேர்வில் ஒரு மாணவர் தேர்ச்சி பெறத் தவறினாலும், அவர் 10-ஆம் வகுப்பிற்குத் தகுதி உயர்த்தப்படுவார்.</p><p>இருப்பினும், அவர் 10-ஆம் வகுப்பில் படிக்கும்போதே, 9-ஆம் வகுப்பில் நிலுவையில் உள்ள அந்த 3-வது மொழித் தேர்வை எழுதி கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.</p><h2><strong>மும்மொழி கொள்கை என்றால் என்ன?</strong></h2><p>தேசிய கல்விக் கொள்கை 2020-இன் படி, மும்மொழிக் கொள்கையை சிபிஎஸ்இ அமல்படுத்துகிறது. மாணவர்கள் படிக்கும் மூன்று மொழிகளில், குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். (உதாரணமாக: தமிழ், இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் போன்றவை). ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், அரபிக், ஸ்பானிஷ் போன்ற மொழிகள் அன்னிய/இந்தியரல்லாத மொழிகளாகக் கருதப்படும்.</p><p>ஏற்கனவே 7, 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் ஆங்கிலத்துடன் பிரெஞ்சு அல்லது ஜெர்மன் போன்ற அன்னிய மொழிகளைத் தேர்ந்தெடுத்துப் படித்து வரும் மாணவர்களுக்கு ஒருமுறை மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த மொழிகளைத் தொடரலாம், ஆனால் 3-வது மொழியாக ஏதேனும் ஒரு இந்திய மொழியைக் கூடுதலாகப் படிக்க வேண்டும்.</p><h2><strong>நடப்பு 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொருந்துமா?</strong></h2><p>சிபிஎஸ்இ இந்த புதிய விதியை படிப்படியாக அமல்படுத்துகிறது. தற்போதைய கல்வியாண்டில் (2026-27) 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாது. அவர்கள் தற்போதிருக்கும் இருமொழி கொள்கையின் படியே பொதுத்தேர்வு எழுதுவார்கள்.</p><p>2026-27 கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பில் இணையும் மாணவர்களுக்கும், அவர்கள் 2027-28-இல் 10-ஆம் வகுப்புக்குச் செல்லும்போதுமே இந்த புதிய 3-வது மொழித் தேர்ச்சி விதிமுறை முழுமையாகப் பொருந்தும்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி கலவரம்: உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொலை வழக்கில் தாஹிர் உசேன் குற்றவாளி என தீர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/ankit-sharma-murder-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/ankit-sharma-murder-case#comments</comments><guid isPermaLink="false">2fc66ed7-a564-44c3-a86f-959da681e0f1</guid><pubDate>Tue, 14 Jul 2026 07:18:20 +0000</pubDate><atom:updated>2026-07-14T07:18:20.439Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi riots,டெல்லி கலவரம்,Tahir Hussain,Ankit Sharma,அங்கித் சர்மா கொலை,தாஹிர் உசேன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/xlefw62n/ankit-sharma.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ankit Sharma murder case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/xlefw62n/ankit-sharma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 2020-ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறையின் போது, உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசேன் மற்றும் பலர் குற்றவாளிகள் என்று டெல்லி கர்கர்டூமா நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.</p><p>கடந்த 2020 பிப்ரவரி மாதத்தில் வடகிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது கடுமையான மதக் கலவரம் வெடித்தது.</p><h2><strong>அங்கித் சர்மா படுகொலை:</strong></h2><p>இந்த வன்முறையின் போது, உளவுத்துறை பாதுகாப்பு உதவியாளராகப் பணியாற்றி வந்த 26 வயதான அங்கித் சர்மா மாயமானார். </p><p>அதனைத் தொடர்ந்து, சாந்த் பாக் பகுதியில் உள்ள ஒரு வடிகால் சாக்கடையில் இருந்து அவரது உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இக்கொலை வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>தாஹிர் உசேன் மீதான குற்றச்சாட்டுகள்:</strong></h2><p>முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசேன் கொலை மற்றும் கலவரம் தொடர்பான பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், அவர் மீதான 'சதித் திட்டம் தீட்டுதல்' என்ற குற்றச்சாட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.</p><p>இக்கொலை வழக்கில் தாஹிர் உசேனுடன் சேர்த்து நாசிம், காஷிம், அனஸ் மற்றும் ஜாவேத் ஆகியோரும் கொலை, கடத்தல், மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் பகைமையை தூண்டுதல் மற்றும் கலவரத்தில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். </p><p>இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் 6 நபர்களை போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.</p><p>குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் குறித்த வாதங்களை நீதிமன்றம் மற்றொரு தேதியில் விரிவாகக் கேட்கவுள்ளது. அதன் பின்னரே இவர்களுக்கான இறுதி தண்டனை அறிவிக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்த லாவா நிறுவனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/vietnam-boat-tragedy-lava-to-provide-rs-25l-to-victims-family</link><comments>https://www.maalaimalar.com/news/national/vietnam-boat-tragedy-lava-to-provide-rs-25l-to-victims-family#comments</comments><guid isPermaLink="false">1a4f45ba-cb6b-41e0-b134-ddb4e02cbb3c</guid><pubDate>Tue, 14 Jul 2026 06:39:25 +0000</pubDate><atom:updated>2026-07-14T06:39:25.216Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>vietnam,வியட்நாம்,படகு விபத்து,LAVA,லாவா,Boat Accident</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/sppk5rr4/boat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ boat accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/sppk5rr4/boat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என லாவா நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p>தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து மொத்தம் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் வியட்நாமுக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். ஜூலை 11-ம் தேதி மதியம் 1 மணியளவில் வியட்நாமின் புகழ்பெற்ற ஃபூ குவொக் தீவிற்கு அருகே உள்ள 'ஹான் மே ரட் நிகோய்' தீவிலிருந்து 'அன் தோய்' துறைமுகத்தை நோக்கி அதிவேக சுற்றுலாப் படகில் அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.</p><p>துறைமுகத்திற்கு 500 மீட்டர் தொலைவே இருந்தபோது, கடலில் திடீரென எழுந்த ராட்சத அலை ஒன்று மோதியதில், நிலைதடுமாறிய படகு தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><p>இதில் 15 இந்தியப் பயணிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர் ஆந்திராவையும், 2 பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள் ஆவர்.</p><p>விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் 'லாவா' செல்போன் நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் ஆவர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறந்த முறையில் வணிகம் செய்ததற்காக, அவர்களது பணியைப் பாராட்டி, நிறுவனம் சார்பாக இந்த இலவச வியட்நாம் சுற்றுலாவுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.</p><p>விபத்து நடந்தவுடன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் வியட்நாம் தூதரகத்துடன் அவசரத் தொடர்புகொண்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.</p><p>இந்த கோர விபத்து குறித்து வியட்நாம் பிரதமர் லே மின் ஹன் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டார். முதல்கட்ட விசாரணையில், மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றத்திற்கு இடையேயும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி படகை இயக்கியதாகக் கூறி, அந்தப் படகின் கேப்டன் நுயென் ஹாங் ஹாய் என்பவரை வியட்நாம் போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.</p><p>வியட்நாமில் பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பிறகு, 15 இந்தியர்களின் உடல்களும் நேற்றிரவு வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் முதலில் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து அந்தந்த மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன், தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரின் உடல்களும் இன்று காலை சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்குக் கொண்டு வரப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.</p><p>இந்நிலையில், லாவா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:</p><p>இந்தக் கடினமான சூழலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் துணையாக நிற்கும் வகையில், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 'லாவா' நிறுவனம் ரூ.25 லட்சம் நிதியுதவியை வழங்கும். தேவையான சரிபார்ப்பு மற்றும் ஆவண நடைமுறைகளுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிதியுதவி நேரடியாக வழங்கப்படும். மனிதாபிமான அடிப்படையில், தாமாக முன்வந்து இந்த உதவி வழங்கப்படுகிறது.</p><p>உயிரிழந்தவர்கள் 'லாவா' குடும்பத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களாகத் திகழ்ந்தவர்கள். ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் உறுதுணையாக நிற்பதோடு,  இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் வழங்குகிறோம் என தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் ஆச்சரியம்: 6 தலைமுறையாக சேர்ந்து வாழும் 83 பேர் கொண்ட கூட்டுக் குடும்பம்</title><link>https://www.maalaimalar.com/news/national/6-generations-one-family-83-members-andhra-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/6-generations-one-family-83-members-andhra-pradesh#comments</comments><guid isPermaLink="false">b027e3ca-ba42-420e-96c0-4fa33655016f</guid><pubDate>Tue, 14 Jul 2026 06:35:14 +0000</pubDate><atom:updated>2026-07-14T06:35:14.180Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,ஆந்திர பிரதேசம்,Joint family,கூட்டுக்குடும்பம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/01vowv4i/ap.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 83 Members Family ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/01vowv4i/ap.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாகப்பா குடும்பம், கூட்டுக் குடும்பப் பாரம்பரியத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. 83 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குடும்பம் ஒன்றாகச் சமைத்து சாப்பிடுகின்றனர். அனைத்துப் பணிகளும் ஒன்றாக, நல்லிணக்கத்துடன் செய்யப்படுகின்றன. </p><p>தலைமுறை தலைமுறையாக, இவர்கள் விவசாயம் செய்வதோடு, இதர வேலைகளையும் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர். பெண்கள் ஒன்றாகச் சமைக்கிறார்கள், ஆண்கள் ஒன்றாக வேலைக்குச் செல்கிறார்கள். நாகப்பா குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ்ந்து வருகிறது. </p> <p>இந்தக் குடும்பம் சமுதாயத்திற்கே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இருப்பினும், இத்தனை உறுப்பினர்கள் இருப்பதால், அனைவரும் ஒரே வீட்டில் வசிப்பது சாத்தியமில்லை. </p><p>எனவே, அவர்கள் அருகருகே உள்ள 4 வீடுகளில் வசிக்கின்றனர். ஆனாலும், அந்தக் குடும்பம் முழுவதும் ஒரே இல்லமாகச் செயல்படுகிறது. உணவு, வருமானம் மற்றும் பொறுப்புகள் அனைத்தும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.</p><p>அனைவரும் ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாகச் சிரித்து, துக்கங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். யாரும் தனிமையாகவோ அல்லது மன அழுத்தத்துடனோ உணரவில்லை. அத்தகைய குடும்பங்களில் குழந்தைகள் மிகவும் எளிதாக வளர்க்கப்படுகின்றனர். </p><p>கூட்டுக் குடும்பப் பாரம்பரியம் நாட்டிலிருந்து முற்றிலுமாக மறைந்துவிடவில்லை. பல இடங்களில், தலைமுறைகளாக ஒன்றாக வாழ்ந்து வரும் குடும்பங்கள் இன்றும் இருக்கின்றன. இந்த கூட்டுக் குடும்பத்தின் படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>&apos;உங்கள் உயிர் முக்கியம்&apos;: போராட்டத்தை கைவிடுமாறு சோனம் வாங்சுக்கை வலியுறுத்திய மஹுவா மொய்த்ரா!</title><link>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-mahua-moitra</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-mahua-moitra#comments</comments><guid isPermaLink="false">d560c946-e6cd-4321-af72-719f3e8728ee</guid><pubDate>Tue, 14 Jul 2026 06:10:14 +0000</pubDate><atom:updated>2026-07-14T06:10:14.489Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,மஹுவா மொய்த்ரா,Mahua Moitra,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/58qw16qa/sonam-wangchuck.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sonam Wangchuk-Mahua Moitra  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/58qw16qa/sonam-wangchuck.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசின் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்  ஜூன் 28 அன்று தொடங்கி 17-வது நாளை எட்டியுள்ளது.</p><p>இந்நிலையில், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைக் கைவிடுமாறு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மற்றும் நாட்டின் பல முன்னணி ஆளுமைகள் அவருக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><h2><strong>உங்கள் போராட்டம் இலக்கை அடைந்துவிட்டது:</strong></h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் சோனம் வாங்சுக்கிற்கு விடுத்துள்ள செய்தியில், "சோனம் சார், உங்களுடைய இந்த உண்ணாவிரதப் போராட்டம் நீதிக்காகப் போராடும் நாட்டின் இளைஞர்களை ஒன்றிணைத்துள்ளது. உங்கள் இலக்கு எட்டப்பட்டுவிட்டது. </p><p>இந்த அரசுக்கு உங்கள் உயிரைப் பற்றியோ, அல்லது கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றியோ கவலையில்லை. ஆனால், உங்கள் உயிர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. தயவுசெய்து உங்களது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, தொடர்ந்து உங்களது போராட்டத்தை வேறு வழிகளில் முன்னெடுங்கள்.</p><h2><strong>பிரபலங்கள் வேண்டுகோள்:</strong></h2><p>முன்னதாக, புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், நடிகர்கள் நசீருதீன் ஷா, ரத்னா பதக் ஷா மற்றும் பொருளாதார அறிஞர் ஜெயதி கோஷ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இணைந்து, மாணவர்களின் எதிர்காலத்திற்காகப் போராடும் இப்போராட்டத்திற்கு தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துகூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்,</p><p>மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். "இந்தப் போராட்டம் என்பது ஒரு குறுகிய ஓட்டப்பந்தயம் அல்ல, அது ஒரு மாரத்தான் பயணம். எதிர்காலப் போராட்டங்களை வழிநடத்த உங்கள் உடல்நலமும், வலிமையும் எங்களுக்குத் தேவை" எனக் கூறி உண்ணாவிரதத்தை முடிக்குமாறு வாங்சுக்கை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><h2><strong>சோனம் வாங்சுக்கின் தற்போதைய உடல்நிலை:</strong></h2><p>உண்ணாவிரத போராட்டம் தொடங்கி 17 நாட்கள் கடந்துள்ள நிலையில், சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவரது  உடல் எடை சுமார் 8.2 கிலோகிராம் குறைந்துள்ளது. </p><p>ரத்த அழுத்தம் 107/70 mmHg தொட்டுள்ளது. ரத்த சர்க்கரை அளவு 67 mg/dL ஆக உள்ளது. இது தொட்ர்ந்தால் உயிரிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>அதே வேளையில், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற 'ஐசா' மாணவர் அமைப்பைச் சேர்ந்த தீபக் என்ற மாணவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2><strong>2011 அண்ணா ஹசாரே போராட்டத்துடன் ஒப்பீடு:</strong></h2><p>தற்போதைய போராட்ட நிலவரங்களை ஒப்பிட்டுப் பேசிய சி.ஜே.பி அமைப்பின் நிறுவனர் அபிஜித் திப்கே, "2011-ல் அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தபோது, 12 நாட்களுக்குள் அன்றைய அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை பரிசீலிக்க குழு அமைத்தது. ஆனால் இன்றைய இந்தியாவில், மனித உயிர்களுக்கு அரசு மதிப்பளிப்பதில்லை."</p><p>மகசேசே விருது பெற்ற உலகப் புகழ்பெற்ற கல்வியாளரும், கண்டுபிடிப்பாளருமான சோனம் வாங்சுக்கின் உடல்நிலை இவ்வளவு மோசமடைந்தும், மத்திய அரசு இதுவரை எவ்வித பேச்சுவார்த்தைக்கும் முன்வரவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.</p> ]]></content:encoded></item><item><title>42 நரேந்திர மோடி ஸ்டேடியம் பரப்பளவிலான ரெயில்வே நிலங்கள் ஆக்கிரமிப்பு: RTI-ல் அதிர்ச்சித் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/railways-land-encroachment</link><comments>https://www.maalaimalar.com/news/national/railways-land-encroachment#comments</comments><guid isPermaLink="false">ff5aeb62-a17e-4e5d-a9e8-a1391fdba91f</guid><pubDate>Tue, 14 Jul 2026 04:43:09 +0000</pubDate><atom:updated>2026-07-14T04:43:09.331Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>indian railways,ஆர்டிஐ,rti,Railways Land,ரெயில்வே நிலங்கள்,இந்தியன் ரயில்வேய்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/a93dga71/railway.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Railways Land Encroachment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/a93dga71/railway.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய ரயில்வே துறைக்குச் சொந்தமான சுமார் 1,068.54 ஹெக்டேர் நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய ரெயில்வே வாரியம் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. </p><p>இந்த ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் ஒட்டுமொத்த பரப்பளவானது, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் 'நரேந்திர மோடி ஸ்டேடியத்தின்' 42 மடங்கு பரப்பளவிற்குச் சமம் அல்லது சுமார் 1,496 சர்வதேச கால்பந்து மைதானங்களின் பரப்பளவிற்குச் சமம் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>5 ஆண்டுகளில் 32% அதிகரிப்பு:</strong></h2><p>ஊடகம் ஒன்று தாக்கல் செய்த RTI விண்ணப்பத்திற்கு ரெயில்வே வாரியத்தின் நிலம் மற்றும் வசதிகள் இயக்குநரகம்  அளித்துள்ள பதிலில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில்வே நில ஆக்கிரமிப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளது அம்பலமாகியுள்ளது.</p><p>2020-21 நிதியாண்டு: 810.31 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பு.</p><p>2023-24 நிதியாண்டு: ஒரே ஆண்டில் 268 ஹெக்டேர் நிலம் கூடுதலாக ஆக்கிரமிக்கப்பட்டு, 1,078.55 ஹெக்டேராக உயர்ந்தது.</p><p>2024-25 நிதியாண்டு: சிறிய சரிவுடன் 1,068.54 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பில் நீடிக்கிறது.</p><p>ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரயில்வே நில ஆக்கிரமிப்பு 32 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் அரசு தாக்கல் செய்த தரவுகளின்படி, இந்திய ரெயில்வேயிடம் உள்ள மொத்தம் 4.99 லட்சம் ஹெக்டேர் நிலத்தில், சுமார் 0.21% நிலம் தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளது.</p><h2><strong>நத்தை வேகத்தில் நிலம் மீட்பு நடவடிக்கை:</strong></h2><p>ஒருபுறம் ஆக்கிரமிப்புகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், அவற்றை மீட்கும் பணி மிக மந்தமாகவே நடைபெற்று வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரெயில்வே துறையினரால் வெறும் 98.02 ஹெக்டேர் நிலம் மட்டுமே ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.</p><h2><strong>மீட்கப்பட்ட நிலங்களின் பயன்பாடு</strong>:</h2><p>ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் நிலங்கள், ரெயில்வேயின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களான பல வழித்தடப் பணிகள் , புதிய ரெயில் பணிமனைகள், பயணிகள் மற்றும் சரக்கு முனையங்கள் அமைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உடனடிப் பயன்பாடு இல்லாத நிலங்கள் வணிக ரீதியிலான மேம்பாட்டிற்காக 'ரெயில் நில மேம்பாட்டு ஆணையத்திடம்' ஒப்படைக்கப்படுகின்றன.</p><h2><strong>ரயில்வே வாரியத்தின் அலட்சியம்?</strong></h2><p>இந்த RTI பதிலில் நில ஆக்கிரமிப்பை விடவும், ரெயில்வே வாரியம் தரவுகளைப் பராமரிக்கும் லட்சணம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கடந்த 25 ஆண்டுகளில் எவ்வளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்ற வரலாற்றைக் கேட்டதற்கு, தங்களிடம் "கடந்த 5 ஆண்டுகாலத் தரவுகள் மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகின்றன" என ரெயில்வே வாரியம் கைகளைக் கழுவியுள்ளது. </p><p>இதன் மூலம், பல தசாப்தங்களாகத் தொடரும் இந்த தேசியப் பிரச்சனையைக் கண்காணிக்க மத்திய அரசிடம் முறையான நீண்டகாலத் தரவுத்தளம் இல்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2><strong>மாநில வாரியான விபரங்கள் இல்லை:</strong></h2><p>எந்தெந்த மாநிலங்களில் அதிக அளவில் ரெயில்வே நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு, "இடங்கள் வாரியான ஆக்கிரமிப்பு விவரங்கள் இந்தத் தலைமை அலுவலகத்தில் இல்லை; அந்தந்த மண்டல ரெயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்" எனத் தகவல் தந்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன் தாலியை கழற்றி காண்பித்து அழுத பெண்ணால் பரபரப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/woman-removes-mangalsutra-in-supreme-court-hyderabad-litigant-breaks-down-over-15-year-old-case-delay</link><comments>https://www.maalaimalar.com/news/national/woman-removes-mangalsutra-in-supreme-court-hyderabad-litigant-breaks-down-over-15-year-old-case-delay#comments</comments><guid isPermaLink="false">740fe39c-fa6c-4222-9a01-73db7467a99e</guid><pubDate>Mon, 13 Jul 2026 23:48:03 +0000</pubDate><atom:updated>2026-07-13T23:48:03.816Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சூர்யகாந்த்,Chief Justice,தலைமை நீதிபதி,உச்சநீதிமன்றம்,Surya Kant</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-13/cvhbaj2o/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம்]]></media:title><media:description type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-13/cvhbaj2o/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உச்ச நீதிமன்றத்தில் விசாரணையின்போது  தலைமை நீதிபதி <a href="https://www.maalaimalar.com/news/national/from-pegasus-to-sir-important-judgments-given-by-suryakanth-after-taking-charge-as-the-chief-justice-of-the-supreme-court-798927">சூர்யகாந்த் </a>முன்பு பெண் ஒருவர் தனது தாலியை கழற்றிக் காட்டி அழுத சம்பவம் நிகழ்ந்துள்ளது.  </p><h2>விசாரணை</h2><p>15 ஆண்டுகால பழைய வழக்கு ஒன்றில் ஐதராபாத்தை சேர்ந்த அந்த நடுத்தர வயது பெண், வக்கீல்கள் எவருமின்றி தன் தரப்பு வாதத்தை தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன் எடுத்துரைத்தார். </p><p>அப்போது அவர், அழுதபடியே, கடந்த 15 ஆண்டுகளாக நிம்மதியாக வாழவில்லை என்றும் தனது ஒட்டுமொத்த குடும்பமும் சீர்குலைந்துவிட்டது என்றும் தெரிவித்தார்.  </p><p>இந்த வழக்கு விசாரணையை அடுத்த திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பதாக கூறிய தலைமை நீதிபதி சூர்ய காந்த், இதற்காக ஐதராபாத்தில் இருந்து இவ்வளவு தூரம் பணம் செலவழித்து நேரில் வரத் தேவையில்லை என்றும் ஆன்லைன் மூலமாகவே பங்கேற்கலாம்  எனவும் அறிவுறுத்தினார். </p><p>ஆனால் அவரிடம் தனது நிலையை கண்ணீருடன் மேலும் எடுத்துரைத்த அப்பெண், தனது வேதனை ஆன்லைன் மூலம் விவரிக்கும் அளவை விடப் பெரியது என்று கூறிய அந்தப் பெண் தன் குழந்தைகளுக்கு உணவளிக்க கூட முடியவில்லை என்றும்  அவர்களின் கல்விக் கட்டணத்தையும் செலுத்த முடிவதில்லை என்று தெரிவித்தார். </p><p>தொடர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தபோது, இப்போது என் கழுத்தில் எதுவும் மிஞ்சவில்லை என கூறி தன் கழுத்தில் அணிந்திருந்த தாலியை சுட்டிக்காட்டிய அவர் திடீரென அதை கழுத்தில் இருந்து கழற்றி காண்பித்தார்.</p><p>இது தலைமை நீதிபதி உட்பட அங்கிருந்தோரை நிலைகுலைய செய்தது.</p><p>அந்தப் பெண்ணின் நிலையை உணர்ந்து அவரை அமைதிப்படுத்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த், அவரது வழக்கு அடுத்த வாரமே சிறப்பு அமர்வில் முன்னுரிமை தந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.</p><p>அப்பெண் குறித்தும், அவரின் வழக்கு என்ன என்பது குறித்தும் தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் அவர் நீதிமன்ற அறையில் தாலியை கழற்றி காண்பித்த சம்பவம் அதிகம் பேசப்பட்டு வருகிறது.</p><h2>சீர்திருத்தம்</h2><p>தலைமை நீதிபதி சூர்யகாந்த், சீர்திருத்த முயற்சியாக <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்ச நீதிமன்றத்தில்</a> பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் 800 பழைய சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை விரைந்து விசாரிக்க நான்கு சிறப்பு டிவிஷன் அமர்வுகளை உருவாக்கினார். அதில் இரு வழக்காக அப்பெண்ணின் வழக்கு இருக்கலாம் என கருதப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. பஞ்சாயத்தில் குற்றவாளியிடம் ரூ.20,000 வசூலித்து மது விருந்து நடத்திய கிராமத்தினர்</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-panchayat-outrage-3-year-old-girl-sexually-assaulted-accused-fined-and-villagers-feast-on-penalty-money</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-panchayat-outrage-3-year-old-girl-sexually-assaulted-accused-fined-and-villagers-feast-on-penalty-money#comments</comments><guid isPermaLink="false">ee816fa1-fee4-40d8-aaa2-124ee34c4dcc</guid><pubDate>Mon, 13 Jul 2026 23:26:44 +0000</pubDate><atom:updated>2026-07-13T23:26:44.732Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,ஜார்க்கண்ட்,சிறுமி பாலியல் வன்கொடுமை,பஞ்சாயத்து,panchayat,minor sexual assault</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-13/bhyokt6f/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிறுமி பாலியல் வன்கொடுமை]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறுமி பாலியல் வன்கொடுமை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-13/bhyokt6f/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்கண்டில் 3 வயது <a href="https://www.maalaimalar.com/news/national/pune-child-abuse-case-fast-track-court-awards-death-sentence-to-65-year-old-for-rape-and-murder-of-3-year-old-girl">சிறுமி பாலியல் வன்கொடுமை </a>செய்யப்பட்டதும் அதற்கு தண்டனையாக பஞ்சாயத்தில் ரூ.1 லட்சம் அபராதம் வசூலித்து கிராமத்தினர் விருந்து நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>சிறுமி வன்கொடுமை </h2><p>ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் காக்ரா  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்மா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சுனில் லோஹ்ரா என்ற நபர் தனக்கு அறிமுகமான ஒருவரின் வீட்டிற்கு  சென்றுள்ளார்.  </p><p>அங்கு சிறுமியும் அவரது தாயும் இருந்துள்ளனர். சிறுமியின் தாய் வீட்டு வேலைகளில்  மும்முரமாக இருந்ததால் குழந்தையை தான் பார்த்துக் கொள்வதாக கூறி ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.</p><p>சிறுமி திடீரென கத்தி அழுததைக் கேட்டு ஓடிவந்த தாய், சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். </p><p>சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். சிறுமிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p> <h2>பஞ்சாயத்து</h2><p>இந்தக் சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்காமல், சம்பவம் நடந்த அடுத்த நாள், அதாவது ஞாயிற்றுக்கிழமை, கிராமப் பஞ்சாயத்து கூட்டத்தை கூட்டி இந்த விவகாரத்தை அங்கேயே முடிக்க முயற்சி நடந்துள்ளது.</p><p>பஞ்சாயத்தில் குற்றவாளி சுனில் லோஹ்ராவுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அதை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.</p><p>குற்றவாளி உடனடியாகத் தன் கைவசம் இருந்த 20,000 ரூபாயைப் பஞ்சாயத்திடம் கொடுத்துள்ளார்.</p><p>அதைப் பெற்றுக்கொண்ட சில பஞ்சாயத்து உறுப்பினர்கள், அந்தப் பணத்தை வைத்து அன்றே கிராமத்தில் மட்டன் சமைத்து, மது வாங்கி பெரிய விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p> <h2>போலீஸ் நடவடிக்கை</h2><p>இந்த விவகாரம் குறித்துக் கிராமவாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் அன்றே கிராமத்திற்குள் வந்த போலீசார், விருந்து நடந்துகொண்டிருந்தபோதே குற்றவாளி சுனில் லோஹ்ராவை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.</p><p>பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம் வாக்குமூலம் பெறப்பட்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>பஞ்சாயத்து தலைவர் இதுகுறித்து கூறுகையில், "இந்தக் கூட்டம் குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை; போலீசார் வந்த பிறகே எனக்கு இந்த விவகாரம் தெரியவந்தது" எனத் தெரிவித்துள்ளார்.</p><p>கும்லா மாவட்ட எஸ்பி ஹரிஸ் ஜமான் பேசுகையில், பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உண்மையை மறைக்க முயன்றது உறுதியாகும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஓடும் ரெயிலில் பூஜை.. சர்ச்சை வீடியோவுக்கு ரெயில்வே விளக்கம்  </title><link>https://www.maalaimalar.com/news/national/irctc-luxury-saloon-car-puja-row-northern-railway-clarifies-viral-train-video-says-no-rule-violation</link><comments>https://www.maalaimalar.com/news/national/irctc-luxury-saloon-car-puja-row-northern-railway-clarifies-viral-train-video-says-no-rule-violation#comments</comments><guid isPermaLink="false">131c5f78-bbb6-4755-8ed4-6352b754eb4c</guid><pubDate>Mon, 13 Jul 2026 22:46:06 +0000</pubDate><atom:updated>2026-07-13T22:46:06.832Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில்வே,Railways,வைரல் வீடியோ,பயணிகள் ரெயில்,passenger train,viral video</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-13/uk3t4swj/railway.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரெயிலில் சிறப்பு பூஜை]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயிலில் சிறப்பு பூஜை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-13/uk3t4swj/railway.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஓடும் ரயிலில் பூஜை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் நிலையில் அதற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது. </p><p>எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஓடும் ரெயிலின் உள்ளே தரையில் அமர்ந்து பூசாரி ஒருவர் பஜனை பாடல்களுடன் பூஜைகளை மேற்கொள்கிறார். </p><p>வெள்ளை நிற உடை அணிந்த பக்தர்களும் அந்தப் பூஜையில் கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபடுவது பதிவாகியிருந்தது.</p><p>இந்த வீடியோ சர்ச்சையானதை தொடர்ந்து, வடக்கு ரயில்வே தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இதற்கான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. </p><p>இந்த பூஜை பயணிகள் இருக்கும் ரெயிலின் பொதுப் பெட்டியின் உள்ளே நடைபெறவில்லை என்றும் இது ஐஆர்சிடிசி தளம் மூலம் ஒரு தனிநபரால் காசு கொடுத்துப் பதிவு செய்யப்பட்ட சலூன் கார் எனப்படும் தனிப்பட்ட சொகுசுப் பெட்டி என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>சலூன் கார்</h2><p>ரெயில்வேயின் சலூன் கார் என்பது பொதுவாக விஐபிக்கள் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சொகுசு ரயில் பெட்டியாகும்.</p><p>இதில் குளிரூட்டப்பட்ட படுக்கையறைகள், சிறிய சமையலறை, ஓய்வறை மற்றும் டைனிங் ஹால், தனிப்பட்ட கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து ஒரு வீட்டில் இருக்கும் அனைத்து வசதிகளும் அடங்கியிருக்கும்.</p><p>இந்தத் தனிப் பெட்டியைப் பொதுமக்களும் கட்டணம் செலுத்திப் புக் செய்துகொள்ளலாம்.</p> <h2>சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி</h2><p>கடந்த ஜூலை 8 அன்று ஐஆர்சிடிசி மூலம் இந்தச் சலூன் கார் பதிவு செய்யப்பட்டதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.</p><p>இதற்காகச் சம்பந்தப்பட்ட நபர் ரூ. 3,08,580 முன்பணமாக ரெயில்வேக்கு செலுத்தியுள்ளார்.</p><p>இந்த சொகுசுப் பெட்டியானது, கடந்த ஜூலை 10 அன்று டெல்லியிலிருந்து மும்பைக்குச் சென்ற பஸ்சிம் எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் ஒருவழிப் பயணத்திற்காக இணைக்கப்பட்டிருந்தது.</p> <p>தனி நபர் ஒருவரால் முழு கட்டணமும் செலுத்தப்பட்டுப் புக் செய்யப்பட்ட சொகுசுப் பெட்டி என்பதால், அதில் தங்களின் தனிப்பட்ட மத வழிபாடுகளை அவர்கள் நடத்தியதில் எவ்வித விதிமீறலும் இல்லை என ரெயில்வே சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.</p><p>முன்னதாக புதுமண தம்பதிகளின் தேனிலவுக்கு ஏற்றாற்போல ஓடும் ரெயிலில் ஒரு கோச்சில் அலங்கரிக்கப்பட்டுருந்த வீடியோ வைரலான நிலையில் இந்த சலூன் கோச் வீடியோ சர்ச்சை எழுந்து அடங்கியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>VIDEO: அருணாச்சலப் பிரதேசத்தில் பேய் மழை.. வெள்ளத்தில் மூழ்கிய பள்ளி, தேவாலயங்கள் </title><link>https://www.maalaimalar.com/news/national/northeast-india-heavy-rains-bridges-washed-away-and-transport-disrupted-in-arunachal-pradesh-and-assam</link><comments>https://www.maalaimalar.com/news/national/northeast-india-heavy-rains-bridges-washed-away-and-transport-disrupted-in-arunachal-pradesh-and-assam#comments</comments><guid isPermaLink="false">35d9f1ae-f4c2-4e4f-ad3d-b7c29d454943</guid><pubDate>Mon, 13 Jul 2026 20:04:53 +0000</pubDate><atom:updated>2026-07-13T20:04:53.513Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வெள்ளம்,floods,அசாம்,Assam,அருணாச்சல பிரதேசம்,Arunachal Pradesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-13/memczkf2/flood.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அருணாச்சலப் பிரதேச வெள்ளம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அருணாச்சலப் பிரதேச வெள்ளம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-13/memczkf2/flood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. </p><h2>அருணாச்சல பிரதேசம் </h2><p>அருணாச்சல பிரதேசத்தில் அதி கனமழை பெய்து வருவதால் குருங் குமே மாவட்டத்தில் உள்ள குமே ஆற்றையொட்டிய பகுதிகளில் திடீர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">வெள்ளப்பெருக்கு </a>ஏற்பட்டுள்ளது.</p><p>அங்கு வெள்ளப்பெருக்கால் பார்சி-பார்லோ மற்றும் தாமின் ஆகிய பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p>பொதுமக்களின் போக்குவரத்துக்கு பிரதானமாக விளங்கிய இரண்டு 3 பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.</p><p>பார்சி பார்லோ பகுதியில் இரண்டு வீடுகள், ஒரு பள்ளி, 3 தேவாலயங்கள் வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயப் பயிர்களும் நாசமாகியுள்ளன.</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணை ராணுவப் படை, எல்லை சாலைகள் அமைப்பு மற்றும் போலீசார்  இணைந்து  நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  </p><p>இதனிடையே அருணாச்சல பிரதேசத்தின் மற்ற மாவட்டங்களிலும்  மழை காரணமாக போக்குவரத்து கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>பக்கே கேசாங் மாவட்டம்  பக்ரோ கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து முடங்கியுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"> Arunachal Pradesh Flood Update<br>Heavy rainfall triggered severe flash flooding in Parsi Parlo area of Kurung Kumey district, Arunachal Pradesh today.<br><br>The Kumey River overflowed, inundating houses, schools, government buildings and churches. Several roads and bridges have been… <a href="https://t.co/PRIHcCqjd3">pic.twitter.com/PRIHcCqjd3</a></p>&mdash; Shining India News (@shiningindnews) <a href="https://x.com/shiningindnews/status/2076676204686684527?ref_src=twsrc%5Etfw">July 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>அசாம்</h2><p>அண்டை மாநிலமான அசாமில், சிவசாகர், லக்கிம்பூர், தர்ராங், சோனித்பூர், தேமாஜி மற்றும் ஜோர்ஹத் ஆகிய மாவட்டங்கள் <a href="https://www.maalaimalar.com/news/national/3000-gas-cylinders-float-in-river-as-flood-water-breaches-hpcl-plant">வெள்ளத்தால் </a>கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவல்படி, 61 கிராமங்களை சேர்ந்த 9,616 மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு தலைநகர் கௌஹாத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p><p>எனவே தாழ்வான பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இரு மாநிலங்களிலும் வெள்ள பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை அதிகாரபூர்வமாக இன்னும் வெளியாகவில்லை.</p>]]></content:encoded></item></channel></rss>