<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 31 Jul 2026 15:33:49 +0000</lastBuildDate><item><title>பிஎம் கிசான் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/union-cabinet-approves-extension-of-pm-kisan-scheme-for-the-next-5-years</link><comments>https://www.maalaimalar.com/news/national/union-cabinet-approves-extension-of-pm-kisan-scheme-for-the-next-5-years#comments</comments><guid isPermaLink="false">b061b4a4-6626-4c92-ab0d-0c165cdac7f8</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:31:51 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:31:51.362Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Union Cabinet,மத்திய அமைச்சரவை,PM-KISAN Scheme,பிஎம் கிசான் திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/p3nkvks1/New-Project-2026-07-31T210129.448.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிஎம் கிசான் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/p3nkvks1/New-Project-2026-07-31T210129.448.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிஎம் கிசான் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி இத்திட்டம் 2030-31 நிதியாண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்காக ரூ.3,15,614 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திட்டத்திற்கு தகுதிவாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு மாதம் ரூ. 6000 நிதி உதவி தொடர்ந்து வழங்கப்படும். </p><p>2019 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், இதுவரை 23 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை ரூ.4.47 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை விவசாயிகளுக்கு நேரடியாகச் சென்றடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. </p><p>இத்திட்டத்தின் பயனாளிகளில் நான்கில் ஒருவர் பெண் என்றும், கடைசி தவணையில் மட்டும் 9.49 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்ததுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாங்கள் இருக்கிறோம்: CJP தலைவர் அபிஜீத் தீப்கேவிடம் போனில் பேசிய உத்தவ் தாக்கரே</title><link>https://www.maalaimalar.com/news/national/uddhav-thackeray-speaks-with-abhijeet-dipke-assures-him-of-opposition-backing</link><comments>https://www.maalaimalar.com/news/national/uddhav-thackeray-speaks-with-abhijeet-dipke-assures-him-of-opposition-backing#comments</comments><guid isPermaLink="false">c7045b49-92fb-4912-aacd-88d39c5d4428</guid><pubDate>Fri, 31 Jul 2026 13:21:53 +0000</pubDate><atom:updated>2026-07-31T13:21:53.043Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>uddhav Thackeray,உத்தவ் தாக்கரே,abhijeet dipke,அபிஜீத் தீப்கே,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/0xs8oe1p/AbhijeetDipke.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Abhijeet Dipke- Uddhav Thackeray]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/0xs8oe1p/AbhijeetDipke.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சரும், சிவசேனா (UBT) கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கேயிடம் செல்போன் மூலம் பேசியுள்ளார்.</p><h2>அபிஜீத் தீப்கேயிடம் பேசிய உத்தவ் தாக்கரே</h2><p>சிவசேனா (UBT) கட்சியைச் சேர்ந்த சந்திரகாத் கைரே, <a href="https://www.maalaimalar.com/news/national/third-round-talks-with-central-government-conclude">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> (CJP) தலைவர் அபிஜீத் தீப்கே வீட்டிற்கு சென்றார். அவரது செல்போன் மூலம் உத்தவ் தாக்கரே தொடர்பு கொண்டார். அதன்மூலம் அபிஜீத் தீப்கே-யிடம் உத்தவ் தாக்கரே பேசினார்.</p><p>அப்போது எதிர்க்கட்சிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தார். அதற்கு, மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் அவரை அவர்களுக்கான போராடுவேன் என்று அபிஜீத் தீப்கே பதில் தெரிவித்துள்ளார்.</p><h2>திருமணம் குறித்து கேட்ட உத்தவ் தாக்கரே</h2><p>பின்னர் உத்தவ் தாக்கரே அபிஜீத் தீப்கே தாயாரிடம் பேசியுள்ளார். அப்போது, அபிஜீத் தீப்கேயின் திருமணம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அபிஜீத் தீப்கே தாயார் "எல்லா பெற்றோர்களும் அவர்களுடைய குழந்தைகள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். முன்னதாகவே, அவனிடம் திருமணம் குறித்து கேட்டேன். ஆனால், இது முற்றிலும் அவனுடைய முடிவு" எனக் கூறியுள்ளார்.</p><p>உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேலையில்லா இளைஞர்களை கரப்பான்பூச்சி என விமர்சனம் செய்திருந்தார். இதனால் அபிஜீத் தீப்கே கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற கட்சியை தொடங்கினார். பின்னர், நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்தார். மத்திய கல்வி அமைச்சராக இருந்து தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினார்.</p><p>கடந்த 20-ந்தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இது இந்தியா முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்ப்பாக கிளம்பியது. பின்னர், தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது போராட்டத்தை முடித்துக் கொண்டது.</p><p>தற்போது இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு எதிராக போராட்டத்தின்போது போடப்பட்ட FIR-களை திரும்பப் பெற கோரிக்கை வைத்தது. ஆனால், உச்சநீதிமன்றம் கிரிமினல் பின்பலம் கொண்டவர்களை மட்டும் விடுவிக்க மறுத்துவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>‘பொறியியல் பட்டதாரிகள் ஒரு கிரிமினல் வேஸ்ட்’ - சர்ச்சையாகும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/national/engineering-graduates-are-a-criminal-waste-chief-minister-revanth-reddys-remarks-spark-controversy</link><comments>https://www.maalaimalar.com/news/national/engineering-graduates-are-a-criminal-waste-chief-minister-revanth-reddys-remarks-spark-controversy#comments</comments><guid isPermaLink="false">50499d53-ea8f-49d8-a12a-096ac5511fc6</guid><pubDate>Fri, 31 Jul 2026 12:30:11 +0000</pubDate><atom:updated>2026-07-31T12:30:11.638Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Revanth Reddy,Engineering Graduates,பொறியியல் பட்டதாரிகள்,ரேவந்த் ரெட்டி,criminal wastes,கிரிமினல் வேஸ்ட்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/2ynuxuv8/New-Project-2026-07-31T175442.392.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பொறியியல் பட்டதாரிகள் ஒரு கிரிமினல் வேஸ்ட்’ - சர்ச்சையாகும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேச்சு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/2ynuxuv8/New-Project-2026-07-31T175442.392.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆசிரியர் சங்க விழாவில் கலந்துகொண்டு பேசினார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர்.,</p><p>“ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் 1.10 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் தங்கள் படிப்பை முடிக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் ஆசிரியர்கள் ஒரு வெள்ளைத்தாளை கொடுத்து வேலைக்கான விண்ணப்பத்தை நிரப்பச் சொன்னால் முழிக்கிறார்கள். </p><p>இது கிரிமினல் வேஸ்ட். பட்டத்தை பெற்றாக்கூட ஒரு வேலைக்கு விண்ணப்பிக்க மாட்டான். திறன்களை வளர்த்துக் கொள்வதும் இல்லை.” எனப் பேசினார். </p><p>இவரின் இந்த பேச்சு மாணவர்களை இழிவுப்படுத்தும் விதமாக அமைந்ததாக பிஆர்எஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன.</p><p>“அவர் தன் வாழ்நாளில் எப்போதாவது போட்டித் தேர்வு எழுதியதுண்டா? எப்போதாவது வேலைக்கான நேர்காணலில் கலந்துகொண்டதுண்டா? எப்போதாவது ஒரு தொழில்முறைச் சூழலில் பணியாற்றியதுண்டா?” என பிஆர்எஸ் தலைவர் கே.டி.ராமராவ் கேள்வி எழுப்பினார். </p><p>மாநில பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் என்.வி. சுபாஷ், இந்த விவகாரத்தில் ரேவந்த் ரெட்டி அவரது தலைவர் ராகுல் காந்தியையே மிஞ்சுவிட்டதாக விமர்சித்தார்.</p><h2>விளக்கம்</h2><p>ரேவந்த் ரெட்டியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த, தான் மாணவர்களைக் குற்றம் சாட்டவில்லை என்றும், அவர்களை வேலைக்குத் தகுதியானவர்களாக மாற்றத் தவறிய தற்போதைய கல்வி முறையையே "கிரிமினல் வேஸ்ட்" எனக் குறிப்பிட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். </p><h2>கிரிமினல் வேஸ்ட் என்றால் என்ன?</h2><p>கிரிமினல் வேஸ்ட் என்பது ஒரு பொருளை, பணத்தை அல்லது ஒரு நன்மையை மிக அலட்சியமாக வீணாக்குவதை குறிக்கப் பயன்படும் ஒரு சொல். ஒரு காரியம் அல்லது பொருள் மிகச் சிறந்த பலனைத் தரக்கூடியதாக இருந்தும், அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் வீணடிப்பதைக் கண்டு ஏற்படும் அதிருப்தியை வெளிப்படுத்த இந்த வார்த்தை பயன்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக பா.ஜ.க. தலைவர் கொலை வழக்கு: முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம் </title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-bjp-leader-murder-case-high-court-stays-life-term-of-former-congress-mla</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-bjp-leader-murder-case-high-court-stays-life-term-of-former-congress-mla#comments</comments><guid isPermaLink="false">e35b700f-9537-4fd4-b246-40334ff17db4</guid><pubDate>Fri, 31 Jul 2026 12:19:42 +0000</pubDate><atom:updated>2026-07-31T12:19:42.565Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka High Court,கர்நாடக உயர் நீதிமன்றம்,Vinay kulkarni,Yogesh goudar,வினய் குல்கர்னி,யோகேஷ் கெளடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/8iu1vicr/Untitled-design-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Karnataka HC stays life term for Congress MLA Vinay Kulkarni in BJP leader murder case, grants bail]]></media:title><media:description type="html"><![CDATA[ Congress MLA Vinay Kulkarni]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/8iu1vicr/Untitled-design-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் பாஜக தலைவர் யோகேஷ் கௌடர் கொலை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஹுப்பள்ளி-தார்வாட் கிளை நிறுத்தி விதித்து ஜாமீன் வழங்கியது.</p><p><strong>பாஜக தலைவர் யோகேஷ் கௌடர் கொலை வழக்கு</strong></p><p>கர்நாடகாவில் தார்வாட் மாவட்ட பஞ்சாயத்தின் முன்னாள் உறுப்பினரும், பாஜக தலைவருமான யோகேஷ் கௌடர், தார்வாடில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.</p><p>சம்பவம் நடந்தபோது அமைச்சராக இருந்த குல்கர்னி, 2020-ல் கைது செய்யப்பட்டு, பின்னர் பெங்களூரு மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.</p><p>இதையடுத்து 2026 மே மாதம் கர்நாடக சட்டமன்றம் தார்வாட் தொகுதியின் பிரதிநிதியாக இருந்த குல்கர்னியை, அவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2026 ஏப்ரல் 15 முதல் தகுதி நீக்கம் செய்து அதிகாரப்பூர்வ அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.</p><p>அரசியலமைப்பின் 191(1)(e) பிரிவின் கீழும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் 8-வது பிரிவின் கீழும் குல்கர்னி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.</p><h3><strong>நீதிமன்றம் உத்தரவு</strong></h3><p>மேலும் நீதிமன்றத்தால் தண்டனைத் தீர்ப்பு நிறுத்திவைக்கப்படவில்லை என்றால், அவர் விடுதலையான பிறகு மேலும் ஆறு ஆண்டுகளுக்கு இந்தத் தகுதியிழப்பு தொடரும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டது.</p><p>நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் ஏப்ரல் மாதத்தில், குற்றம், சதி மற்றும் கொலை உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் குல்கர்னி மற்றும் 15 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்து, ஆயுள் தண்டனை விதித்தார்.</p><p>இந்த வழக்கு 2019-ல் மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது. 2020-ல் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முக்கிய குற்றவாளியாக குல்கர்னியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p>கொலை செய்யப்பட்ட கௌடரை வளர்ந்து வரும் அரசியல் போட்டியாளராகக் கருதி, கொலை செய்வதற்காக கூலிப்படையினரை நியமித்ததாகவும் கூறியது.</p><p>நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றம் ஏப்ரல் 16 அன்று, இந்த வழக்கில் காங்கிரஸ் எம்.எம்.ஏ. குல்கர்னி மற்றும் மேலும் 15 பேரைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது.</p><p>நீதிபதிகள் முகமது நவாஸ் மற்றும் ஜி. பசவராஜு ஆகியோர் அடங்கிய அமர்வு, குல்கர்னி 5 லட்சம் ரூபாய்க்கான தனிநபர் பிணைப்பத்திரத்தையும், அதே தொகைக்கு இரண்டு ஜாமீன்தாரர்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.</p><p>இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நிறுத்தி விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செப்டம்பரில் இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/chinese-president-xi-jinping-likely-to-visit-india-to-attend-the-brics-summit-in-sept</link><comments>https://www.maalaimalar.com/news/national/chinese-president-xi-jinping-likely-to-visit-india-to-attend-the-brics-summit-in-sept#comments</comments><guid isPermaLink="false">495eeb00-3ccf-4e57-a04c-5748c003ecf8</guid><pubDate>Fri, 31 Jul 2026 11:23:53 +0000</pubDate><atom:updated>2026-07-31T11:23:53.949Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>India visit,Xi Jinping,BRICS Summit,பிரிக்ஸ் உச்சி மாநாடு,அதிபர் ஜி ஜின்பிங்,இந்திய பயணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/kjf6qxnz/jingbing.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ji jingbing]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/kjf6qxnz/jingbing.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>பிரிக்ஸ் உச்சி மாநாடு</h2><p>தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகிறார்.</p><h2>சீன அதிபர் இந்தியா வருகை</h2><p>கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, சீன அதிபர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>மாமல்லபுரம் சந்திப்பு</h2><p>முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடந்த முறைசாரா உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்திருந்தார். அதன்பின், இரு நாட்டு எல்லைப் பதற்றம் காரணமாக நீண்ட நாட்களாக இருதரப்பு உறவுகளில் சுணக்கம் ஏற்பட்டு வந்தது.</p><p>எல்லையில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.</p><p>இந்த சூழ்நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை மீண்டும் சீரமைக்கும் என்பதால் சீன அதிபரின் இந்த இந்திய வருகை முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரஷிய ராணுவத்திற்காக சண்டையிட்டு உக்ரைன் போரில் கொல்லப்பட்ட இந்தியர்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-dna-matching-for-indians-killed-with-russian-army</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-dna-matching-for-indians-killed-with-russian-army#comments</comments><guid isPermaLink="false">2dc0dbac-95a8-42ed-9ac3-f7874f40b602</guid><pubDate>Fri, 31 Jul 2026 10:12:01 +0000</pubDate><atom:updated>2026-07-31T10:12:01.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் ரஷிய போர்,Supreme Court,உச்ச நீதிமன்றம்,Ukraine Russia  War,solicitor general,சொலிசிட்டர் ஜெனரல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/nr21enzr/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Supreme Court orders DNA matching, coordination and compensation support]]></media:title><media:description type="html"><![CDATA[ Indian Fighters in Russia ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/nr21enzr/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>உச்ச நீதிமன்றம் உத்தரவு</strong> </h3><p>உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் நடத்தி வரும் போர் நடவடிக்கையில், ரஷிய ராணுவத்துடன் இணைந்து போரில் காயமடைந்த அல்லது காணாமல் போன இந்தியர்களின் குடும்பத்தை ஒருங்கிணைப்பதற்காக, ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்குமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>இந்த ராணுவ மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுடன் குடும்ப உறுப்பினர்களின் டிஎன்ஏ-வை சரிபார்த்து, புது டெல்லியில் உள்ள ரஷிய தூதரகத்திற்கு இழப்பீடு கோருவதற்கு அவர்களுக்கு உதவவும் உத்தரவிடப்பட்டது.</p><p>மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்புடைய அனைத்து தகவல்களும் அவர்களின் தாய்மொழிகளில் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><h3><strong>உக்ரைன் ரஷிய போர்</strong></h3><p>ரஷிய ராணுவம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் ரஷிய ராணுவத்திற்கு ஆதரவாக இந்தியர்கள் போர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்த போரில் 217 இந்தியர்கள் ரஷிய ராணுவத்தில் சேர்ந்துள்ளதாகவும், அவர்களில் 49 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 6 பேர் போரில் காணாமல் போனதாகவும், மேலும் 23 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் மத்திய அரசு கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.</p><h3><strong>கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்</strong></h3><p>இதையடுத்து வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி கூறுகையில்,</p><p>“இறப்புகளை உறுதிபடுத்தவும், காணாமல் போனவர்களை கண்டறியவும், ராணுவ சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் நாடு திரும்புவதற்கு உரிய வசதிகளை செய்யவும், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம், ரஷிய அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து வருகிறது.</p><p>ரஷிய ஆயுத படைகளில் இருந்து, இதுவரை 139 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு, அவர்களை இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது” என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>மேலும், “சுமார் 5,000 அமெரிக்க டாலர் கையெழுத்து ஊக்கத்தொகை, 2,500 அமெரிக்க டாலர் மாத சம்பளம், ரஷிய குடியுரிமைக்கான வாக்குறுதிகள் ஆகியவையும் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>போரில் மரணம் ஏற்பட்டால் சுமார் 1,68,000 அமெரிக்க டாலர் இழப்பீடு மற்றும் நிதிச் சலுகைகளை அளித்து ரஷிய அதிகாரிகள் வெளிநாட்டினரை பணியில் சேர ஈர்த்துள்ளனர்.</p><p>மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண உதவும் வகையில் 21 பேரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ரஷ்ய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.</p><p>இந்தியத் தூதரகம் வாயிலாகப் பல இழப்பீட்டுக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, சில குடும்பங்களுக்கு ஏற்கனவே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுவிட்டது,” என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது: கே.ஆர்.எஸ். அணை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட எடியூரப்பா</title><link>https://www.maalaimalar.com/news/national/cauvery-issues-mandya-karnataka-bjp-leader-former-cm-bs-yediyurappa</link><comments>https://www.maalaimalar.com/news/national/cauvery-issues-mandya-karnataka-bjp-leader-former-cm-bs-yediyurappa#comments</comments><guid isPermaLink="false">039d617e-720c-48bc-91d1-e687242dffa2</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:48:19 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:48:19.248Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,Cauvery water,Cauvery Issue,காவிரி விவகாரம்,மேகதாது அணை விவகாரம்,BS Yediyurappa,பிஎஸ் எடியூரப்பா,mekedatu dam issue</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/f5gvqay4/BSYediyurappa0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BS Yediyurappa]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/f5gvqay4/BSYediyurappa0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரியில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடக மாநில அரசு முறையாக திறந்து விடுவதில்லை. மழை அதிகமாக பொழியும் காலத்தில் மட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து சேரும்.</p><p>இந்த ஆண்டு எல் நினோ காரணமாக தென்மேற்கு பருவமழை குறைவாகத்தான் பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காவிரி பகுதியில் சரியாக மழை பெய்யவில்லை. தமிழகத்திறகு மாதந்தோறும் திறந்த விடக்கூடிய நீரை திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வருகிறது.</p><h2>தண்ணீர் இல்லாமல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணை</h2><p>மேட்டூர் அணையில் நீர் இல்லாததால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு தண்ணீர் திறந்த விட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், கர்நாடக மாநில முதல்வர் டி.கே. சிவக்குமார் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூறி வருகிறார்.</p><h2>காவிரி மேலாண்மை ஆணையம்</h2><p>இந்த நிலையில்தான் காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட காவிரி நீர் மேலாண்மை ஆணைத்திற்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி விதம் நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக மாநில அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.</p><p>இதனால் கர்நாடக மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டி.கே. சிவக்குமார் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.</p><h2>கர்நாடகாவில் போராட்டம்</h2><p>இதற்கிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று கர்நாடகாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாளை டி.கே. சிவக்குமார் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.</p><h2>எடியூரப்பா போராட்டம்</h2><p>இந்த நிலையில் இன்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரான எடியூரப்பா, ஆதரவார்களுடன் கே.ஆர்.எஸ். அணைப் பகுதிக்கு சென்றார். இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர். அணை அருகே சென்ற அவர், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | | Mandya, Karnataka: BJP workers stage a protest near the KRS dam against the state government over the Cauvery water dispute. <a href="https://t.co/CnGQJyNhuv">pic.twitter.com/CnGQJyNhuv</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2083067030673203273?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>கர்நாடக மாநில பாஜக தலைவரான பி.ஒய். விஜயேந்திரா "டி.கே. சிவக்குமார் மந்திர சபை விரிவாக்கத்தில் பிசியாக இருக்கிறார். காவிரி தொடர்பாக சட்டப்பூர்வ வல்லுநர்களை சந்திக்க நேரமில்லை" எனக் குற்றம்சாட்டியுள்ளார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அவரும் கைது செய்யப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தற்போதைய சூழலில் முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார்
</title><link>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-says-tn-cm-vijay-should-not-visit-karnataka-in-current-situation</link><comments>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-says-tn-cm-vijay-should-not-visit-karnataka-in-current-situation#comments</comments><guid isPermaLink="false">8ab296c2-96de-4527-a6a6-9ac898c2d554</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:22:59 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:22:59.120Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Karnataka,TN,mekedatu dam,மேகதாது அணை,DK Shivakumar,டிகே சிவக்குமார்,cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gyffvl7j/dkshivakumar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vijay - DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gyffvl7j/dkshivakumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தற்போதைய சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.</strong></em> </p> <h2>மேகதாது விவகாரம்</h2><p>கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், அது தமிழக விவசாயத்தை பாதிக்கும் என்பதால் தமிழகம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p> <h2>காவிரி நீர் ஒழுங்காற்று குழு</h2><p>இதற்கிடையே, தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடக  விவசாயிகள், கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>கர்நாடக-தமிழகம் இடையே காவிரி நீரைப் பகிர்வதில் நிலவி வரும் நீண்டகாலப் பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-consultation">முதலமைச்சர் விஜய்</a> கருதுகிறார். இதற்காக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரைச் சந்தித்து பேச முடிவு செய்து அவர் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், வருகிற 3-ந்தேதி அவர் பெங்களூரு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.</p> <p>இதையடுத்து, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a> பிரச்சனை குறித்து முதலமைச்சர் விஜய், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தலைமை செயலாளர் உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.</p><h2>கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்</h2><p>இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். </p> <p>இதுதொடர்பாக டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:</p><p>* தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகா வருவதாக கூறி உள்ளார். ஆனால் இன்னும் உறுதியாகவில்லை.</p><p>* தமிழக முதல்வர் விஜயும் தானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் இருக்கிறோம்.</p> <p>* கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜகவும் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது.</p><p>* காவிரிநீர் கோரிக்கையுடன் தமிழ்நாடு முதலமைச்சர் வந்தால் பெங்களூரு விமான நிலையம் முற்றுகையிடப்படும் என கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>* கர்நாடகாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் தற்போதைக்கு முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா திடீர் விலகல்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/shehzad-poonawalla-quits-bharatiya-janata-party</link><comments>https://www.maalaimalar.com/news/national/shehzad-poonawalla-quits-bharatiya-janata-party#comments</comments><guid isPermaLink="false">d0c557f8-55e8-4034-a103-e7aab3192ca4</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:11:42 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:11:42.200Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Shehzad Poonawalla,ஷேசாத் பூனவாலா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/54rwiyfd/ShehzadPoonawalla0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shehzad Poonawalla]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/54rwiyfd/ShehzadPoonawalla0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ஜ.க.-வின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்து வந்தவர் ஷேசாத் பூனவாலா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் தேர்தல் தொட்ரபாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பின்னர் பாஜக-வின் இணைந்தார்.</p><h2>காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தவர் ஷேசாத் பூனவாலா</h2><p>பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஆதரவாளராக திகழந்து வந்தார். சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்து வந்தார். காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக சார்பில் பதில் கொடுப்பதில் முன்னணி தலைவராக விளங்கி வந்தார்.</p><p>இந்த நிலையில் திடீரென தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி மட்டும் அல்ல, பாஜக-வில் இருந்தே விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், தனது எக்ஸ் Bio-வில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் என்பதை நீக்கியுள்ளார்.</p><p>பாஜக தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் "நரேந்திர மோடி ஜி போன்ற, சொந்த முயற்சியால் முன்னேறிய ஒருவரை பாஜகவால் மட்டுமே உங்களுக்குத் தர முடியும்; மற்றவர்களோ தங்கள் வாரிசுகளையும் குடும்ப ஆதிக்கத்தையுமே முன்னிறுத்துவார்கள். எனவே, இளைஞர்களுக்கு பாஜகவே மிகச் சிறந்த தேர்வாகத் திகழ்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.</p><p>சமீபத்தில் அவர் பதிவிட்டிருந்த வீடியோக்கள், அரசியலில் இருந்து ஒதுங்குவது குறிப்பது போன்று இருந்ததாக கூறப்படுகிறது.</p><p>தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகியதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், கட்சிக்குள் நிலவிய அதிருப்தி, கருத்து வேறுபாடுகள், மரியாதைக் குறைவு போன்றவையும் காரணங்களாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அயோத்தி நன்கொடை திருட்டு விவகாரம்: நூதன போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள்</title><link>https://www.maalaimalar.com/news/national/pappu-yadav-stages-unique-protest-in-parliament-over-ram-temple-donation-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/pappu-yadav-stages-unique-protest-in-parliament-over-ram-temple-donation-row#comments</comments><guid isPermaLink="false">aee1690c-f946-419e-bf3d-95036c26e39d</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:08:27 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:08:27.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,நாடாளுமன்றம்,parliment,ராமர் கோவில் நன்கொடை,Ram Temple Donation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/e777v0vi/rahul.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/e777v0vi/rahul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம், தங்கம் உள்ளிட்டவை கோடிக்கணக்கில் சுருட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.</p><h2>8 பேர் கைது</h2><p>விசாரணையில் அங்குள்ள ஊழியர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 77 லட்சம் ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டது.</p><p>இந்த முறைகேடுகளுக்கு தார்மிக பொறுப்பேற்று, ராம ஜென்ம பூமி ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த சம்பத் ராயிடமும், போலீசார் விசாரணை நடத்தினர்.</p><p>ராமர் கோவில் நன்கொடை திருட்டுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.</p><h2>நூதன போராட்டம்</h2><p>இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் உண்டியல் மற்றும் நன்கொடை நிதியில் முறைகேடு நடந்ததாகக் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இந்தப் போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.</p><p>பப்பு யாதவ் எம்.பி. காவி உடை அணிந்து சாமியார் வேடத்தில் நன்கொடை பெறுவதாகவும், ராகுல் காந்தி போராட்டத்தில் பங்கேற்று உண்டியலில் காணிக்கை செலுத்துவது போல் நடித்தனர். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>தெலுங்கானா உருவாக்கத்தில் பங்காற்றிய பிஆர்எஸ் கட்சி முக்கியத் தலைவர் பெத்தி சுதர்ஷன் ரெட்டி மறைவு </title><link>https://www.maalaimalar.com/news/national/telangana-brs-leader-dies-senior-leader-bethi-sudarshan-reddy-passes-away-at-51-after-heart-attack</link><comments>https://www.maalaimalar.com/news/national/telangana-brs-leader-dies-senior-leader-bethi-sudarshan-reddy-passes-away-at-51-after-heart-attack#comments</comments><guid isPermaLink="false">a1a1e69b-163b-4ff6-9a33-ab5894478f95</guid><pubDate>Fri, 31 Jul 2026 07:02:36 +0000</pubDate><atom:updated>2026-07-31T07:02:36.047Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிஆர்எஸ்,Telengana,தெலுங்கானா,பெத்தி சுதர்ஷன் ரெட்டி,Peddi Sudarshan Reddy,BRS</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/hnmjd81q/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெத்தி சுதர்ஷன் ரெட்டி]]></media:title><media:description type="html"><![CDATA[ பெத்தி சுதர்ஷன் ரெட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/hnmjd81q/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநில உருவாக்கத்தில் பங்காற்றிய தலைவர் பெத்தி சுதர்ஷன் ரெட்டி காலமானார். அவருக்கு வயது 51. </p><p>2014 இல் ஆந்திரா - தெலுங்கானா தனித்தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டதன் பின்னால் பல ஆண்டுகளாக போராட்டங்களின் வரலாறு அடங்கியுள்ளது. </p><p>இந்த போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது கே.சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்). </p><p>ஐதராபாத்தை தலைமை இடமாக கொண்டு உருவான தெலுங்கானாவுக்கு முதல் இரண்டு ஆட்சிக் காலத்தில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் ஆட்சியே நடைபெற்றது. 2023 இல் முதல் முறையாக காங்கிரஸ் வெற்றி பெற்று ரேவந்த் ரெட்டி முதல்வர் ஆனார். </p><h2>பெத்தி சுதர்ஷன் ரெட்டி</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D">பிஆர்எஸ் </a>கட்சியின் மூத்த தலைவரும் தெலங்கானாவின் நர்சம்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெத்தி சுதர்ஷன் ரெட்டிக்கு கடந்த வாரம் ஹனுமகோண்டாவில் உள்ள தனது இல்லத்தில் வைத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.</p><p>உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு 5 நாள் தொடர் சிகிச்சைக்கு பிறகு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p> <h2>தனித் தெலுங்கானா</h2><p>1974இல் வாரங்கல் மாவட்டத்தின் நல்லபெல்லி கிராமத்தில் பிறந்த பெத்தி சுதர்ஷன் ரெட்டி, நல்லபெல்லி மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். </p><p>2001இல் பிஆர்எஸ் தொடங்கப்பட்டபோது (அப்போது தெலுங்கானா ராஷ்டிர சமிதி) அதில் இணைந்தார். 2006 முதல் 2014 வரை வாரங்கல் மாவட்ட பிஆர்எஸ் தலைவராகப் பணியாற்றியதுடன் கட்சியின் அரசியல் விவகாரக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.</p><p>தனித் தெலுங்கானா மாநில உருவாக்கப் போராட்டங்களில் வாரங்கல் மாவட்டத் தலைவராகப் பல போராட்டங்களை முன்னெடுத்தார்.</p> <h2>தேர்தல்</h2><p>சந்திரசேகர் ராவின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளரான இவர், 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் நர்சம்பேட்டை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.</p><p>2018 தேர்தலில் நர்சம்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2023 தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட போதிலும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.</p><p>ஹனுமகோண்டாவில் வசித்து வந்த சுதர்ஷன் ரெட்டிக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.</p><p>அவரது மறைவுச் செய்தி பிஆர்எஸ் தொண்டர்கள் மற்றும் வாரங்கல் மாவட்ட மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை - அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/environmental-clearance-not-been-granted-for-mekedatu-project-central-government-clarifies-in-response-to-anbumanis-question</link><comments>https://www.maalaimalar.com/news/national/environmental-clearance-not-been-granted-for-mekedatu-project-central-government-clarifies-in-response-to-anbumanis-question#comments</comments><guid isPermaLink="false">dcc85fe2-d793-4961-92d6-baadde17541b</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:47:46 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:47:46.016Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,மேகதாது அணை,Cauvery water,central government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/a57593ga/anbumani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cauvery water - Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/a57593ga/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேகதாது திட்டத்திற்கு இறுதி சுற்றுச்சூழல் அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.</strong></em></p><p>காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகத்துக்கு இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது.</p> <h2>மேகதாது விவகாரம்</h2><p>கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-consultation">மேகதாது</a> என்ற இடத்தில் புதிய அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், அது தமிழக விவசாயத்தை பாதிக்கும் என்பதால் தமிழகம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p><p>நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், மேகதாது அணை குறித்து எழுத்துப்பூர்வமாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.</p> <h2>மத்திய மந்திரி ராஜ் பூஷண்</h2><p>இதற்கு மத்திய ஜல்சக்தி துறை இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், காவிரி நீர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு, கர்நாடக மாநிலம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.</p> <p>மத்திய மந்திரியின் இந்த பதில் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பதிலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.</p><h2>மத்திய அரசு</h2><p>இந்நிலையில், பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணியின் கேள்விக்கு<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81"> மத்திய அமைச்சர்</a> எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். அதில், </p> <p>* மேகதாது திட்டத்திற்கு இறுதி சுற்றுச்சூழல் அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை. </p><h2>காவிரி மேலாண்மை ஆணையம்</h2><p>* மேகதாது அணை விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணைய ஒப்புதல் கிடைக்கும் வரை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படாது.</p><p>* வன அனுமதிக்கான விண்ணப்பமும் தற்போது பரிசீலனையில் இல்லை.</p> <p>* மேகதாது குடிநீர், சமநிலை நீர்த்தேக்கத் திட்டத்திற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி 2019-ல் கர்நாடகா விண்ணப்பித்துள்ளது.</p><h2>இரு மாநில பிரச்சனை</h2><p>* இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனை என்பதால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒப்புதல் தரும் வரை ToR முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>* ஜல்சக்தி அமைச்சகம் விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்து CWMA ஒப்புதல் அளித்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சிக்கு காவி நிறம்- பிரியங்கா காந்தி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-hockey-team-jersey-gets-saffron-priyanka-gandhi-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-hockey-team-jersey-gets-saffron-priyanka-gandhi-condemns#comments</comments><guid isPermaLink="false">d11093b8-2bb5-40e2-ac87-774ec922fee0</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:35:50 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:35:50.144Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய ஹாக்கி அணி,காவி நிறம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/dsqzfb72/priyanka.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indian Hockey Team- Priyanka Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/dsqzfb72/priyanka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி நீல நிறத்தில் இருந்து, காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>தற்போது ஹாக்கி மைதானங்களும் (நீல நிறம்), வீரர்களின் ஜெர்சியும் ஒரேநிறத்தில் இருப்பதால், பந்தை பாஸ் செய்வது, வீரர்களை அடையாளம் காண்பது சிரமமாக இருப்பதாக பயிற்சியாளர்களும், வீரர்களும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனையொட்டியே, மாற்று நிறங்களாக மஞ்சள் அல்லது காவி நிறத்தைப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டதாகவும், அதில் காவி இந்தியாவின் தேசிய கொடியில் இருப்பதால், தைரியம், தியாகம் மற்றும் தேசியப் பெருமிதத்தை அடையாளப்படுத்துவதால் அந்த நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஹாக்கி இந்தியா விளக்கம் அளித்துள்ளது.</p><h2>நிறம் மாற்றம்</h2><p>2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 30 வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள FIH உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கும் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு இந்த புதிய காவி நிற ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.</p><p>இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக இதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>பிரியங்கா காந்தி கண்டனம்</h2><p>இந்திய ஆக்கி அணியின் சீருடை நீல நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>ஆடை நெறிமுறைகள் மற்றும் கல்விக் கொள்கைகள் மூலமாக வரலாற்றை மீண்டும் மாற்றி எழுத மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி குறித்து இழிவான ஏஐ சித்தரிப்புகள்.. மெட்டா இந்திய தலைமை அதிகாரி மீது வழக்குப்பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/modi-ai-defamation-fir-filed-naming-meta-india-head-in-telangana-cyber-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-ai-defamation-fir-filed-naming-meta-india-head-in-telangana-cyber-case#comments</comments><guid isPermaLink="false">8ed2972a-e536-4ea4-9e40-513e03ff193f</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:33:23 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:33:23.919Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Meta,மெட்டா,AI Video,ஏஐ வீடியோ,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/4ktrtfjo/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அருண் ஸ்ரீனிவாஸ், பிரதமர் மோடி  ]]></media:title><media:description type="html"><![CDATA[ அருண் ஸ்ரீனிவாஸ், பிரதமர் மோடி  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/4ktrtfjo/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> முன்னெடுத்த போராட்டங்களின் போது, பிரதமர் மோடியின் உருவத்தை ஆபாசமாகவும் இழிவாகவும் சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. </p><p>இதுபற்றி தெலுங்கானா மாநில பாஜக நிர்வாகி சாய்கிரண்  புகாரின் அடிப்படையில் ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் எப்ஐஆர் பதிந்துள்ளனர். அதில் மெட்டா மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி இணை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p> <h2>எப்ஐஆர்</h2><p>சாய்கிரண் அளித்த புகாரில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை ஏஐ மூலம் இழிவாக சித்தரிக்கும் வகையில் இருந்த 20 பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகளின் (ரீல்ஸ்களின்) இணைப்பை பகிர்ந்துள்ளார்.</p><p>பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், அந்த சமூக வலைதள கணக்குகளை வைத்திருந்தவர்கள் மீது வழக்குபதியப்பட்டுள்ளது.</p> <h2>அருண் ஸ்ரீனிவாஸ்</h2><p>குறிப்பாக இத்தகைய உள்ளடக்கங்களை அனுமதிக்க உதவியதாக கூறி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உடைய தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி அருண் ஸ்ரீனிவாஸ் இணை குற்றவாளியாக அந்த எப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><p>புகாரில் குறிப்பிடப்பட்ட பதிவுகள் குறித்து மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த போலி வீடியோக்கள் மற்றும் படங்களைப் பதிவேற்றிய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.</p> <h2>மோடி</h2><p>தேர்வு முறைகேடு தொடர்பாகப் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பேஸ்புக்கிலிருந்து தவறாக நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் அண்மையில் மன்னிப்பு கோரியது.</p><p>இந்த விவகாரங்களைத் தொடர்ந்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ். கிருஷ்ணன், மெட்டா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நகைக்கடையில் தங்க, வைர நகைகளை திருடிசென்று பதுக்கிய கில்லாடி எலி - சிசிடிவியில் குட்டு அம்பலம்</title><link>https://www.maalaimalar.com/news/national/rats-stole-gold-rings-chains-in-bizarre-karnataka-heist</link><comments>https://www.maalaimalar.com/news/national/rats-stole-gold-rings-chains-in-bizarre-karnataka-heist#comments</comments><guid isPermaLink="false">9723d03f-e9ba-4e64-a01b-68e7ec0d06f4</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:08:24 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:08:24.878Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>rat,Jewelry Shop,எலி,நகைக்கடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/j2tw89hc/rat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/j2tw89hc/rat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>துமகூரு நகைக்கடையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகளை ஒரு எலி திருடி சென்று பதுக்கியது. இந்த குட்டு கண்காணிப்பு கேமராவால் அம்பலமானது.</aside><h2><strong>துமகூரு நகைக்கடை</strong></h2><p>பொதுவாக வீடுகள், நகைக்கடைகளை உடைத்து தங்க நகைகள், பணத்தை மர்மநபர்கள் திருடி செல்வது வழக்கம். ஆனால் நகைக்கடை ஒன்றில் தங்கம், வைர நகைகளை எலி திருடி சென்ற ருசிகர சம்பவம் கர்நாடக மாநிலம் துமகூருவில் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-</p><p>துமகூரு (மாவட்டம்) டவுன் கால் டெக்ஸ் சர்க்கிளில் விஸ்வாஷ் ஜூவல்லரி என்ற பெயரில் ஒரு நகைக்கடை உள்ளது. நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரத்துக்காக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வந்தனர்.</p><h2><strong>ரூ.10 லட்சம் நகைகள் திருட்டு</strong></h2><p>எப்போதும் கடையை திறந்ததும் நகைகள் அனைத்தும் சரியாக உள்ளதா? என உரிமையாளர், ஊழியர்கள் சரி பார்ப்பது வழக்கம். அதுபோல், சரி பார்த்த போது கடையில் வாடிக்கையாளர்களுக்கு தெரியும் விதமாக கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த 10 வைர மோதிரங்கள், 2 தங்க சங்கிலிகள் காணாமல் போய் இருப்பதை கண்டு உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.</p><p>நகைக்கடையின் இரும்பு கதவும் உடைக்கப்படாமல் இருந்தது. அதே வேளையில் நகைக்கடை சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்து மர்மநபர்கள் நகைகளை திருடி சென்றதற்கான எந்த அடையாளமும் இல்லை. அப்படி இருந்தும் ரூ.10 லட்சம் மதிப்பிலான 10 வைர மோதிரங்கள். 2 தங்க சங்கிலிகள் மர்மமான முறையில் திருட்டுப் போனதால் உரிமையாளர் செய்வது அறியாமல் திகைத்தார். இதையடுத்து, துமகூரு டவுன் போலீசில் புகார் அளிக்கவும் உரிமையாளர் தயாரானார்.</p><h2><strong>எலியின் கைவரிசை</strong></h2><p>அதே நேரத்தில் கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் யாரும் கைவரிசை காட்டினார்களா? என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது. இதையடுத்து, போலீசில் புகார் அளிக்கும் முன்பாக நகைகள் எப்படி திருட்டுப்போனது என்பதை பார்க்க, கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை உரிமையாளர் ஆய்வு செய்தார். அப்போது உரிமையாளருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.</p><p>அதாவது கடையில் இருந்த நகைகளை எந்தவொரு திருடர்களோ அல்லது ஊழியர்களோ திருடி செல்லவில்லை. ஒரு கில்லாடி எலி தான் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. நகைக்கடைக்குள் ஒரு எலி இரவில் சுற்றி திரிந்தது. அந்த எலி தான், வியாபாரத்துக்காக வைக்கப்பட்டு இருந்த மோதிரங்கள், தங்க சங்கிலியை ஒவ்வொன்றாக வாயில் கவ்வி எடுத்து செல்லும் காட்சிகள் கேமராவில் பதிவாகி இருந்தது.</p><h2><strong>நகைகள் மீட்பு</strong></h2><p>இதையடுத்து, அந்த நகைகளை எலி எங்கே கொண்டு சென்று வைத்தது? எலி எங்கு தங்கி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ஆசாரியை அழைத்து வந்து நகைக்கடையில் மரப்பலகையால் அமைக்கப்பட்ட அலமாரிகள் திறந்து பரிசோதித்து பார்க்கப்பட்டது. அப்போது ஒரு மரப்பலகை பின்னால் இருந்த வலையில் (துளையில்) காணாமல் போன தங்க நகைகள் இருப்பதை கண்டு உரிமையாளர் நிம்மதி அடைந்தார்.</p><p>நகைக்கு மேல் ஒட்டி இருந்த விலை பட்டியலை மட்டுமே எலி தின்று இருந்தது. மோதிரங்கள், தங்க சங்கிலியை விழுங்காமல் பத்திரமாக எலி பதுக்கி வைத்திருந்தது. எலி திருடி சென்ற நகைகளை சுமார் 13 மணிநேரம் போராடி உரிமையாளர் மீட்டு இருந்தார். நகைகளை எலி திருடி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p><h2><strong>எலி சிக்கவில்லை</strong></h2><p>ரூ.10 லட்சம் நகைகள் கிடைத்தாலும், இதற்கு காரணமான அந்த கில்லாடி எலி மட்டும் எங்களிடம் இன்னும் சிக்கவில்லை. அதனை தேடிவருகிறோம். இனி எச்சரிக்கையாக இருப்போம் என்று கடை உரிமையாளர் தெரிவித்தார்.</p><p>தமிழில் நடிகர் முரளி நடிப்பில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் படத்தில் எலி நடிகர் வடிவேலுவின் பாஸ்போர்ட்டை கடித்து தின்றுவிடும். இதனால் அந்த எலியை பிடிக்க அவர் நூதன முறைகளை கடைப்பிடித்தும் அந்த எலி சிக்காமல் தப்பிவிடும். அதே பாணியில் நகைக்கடையில் திருட்டுப்போன நகை சிக்கிவிட்டது. இன்னும் அந்த கில்லாடி எலி சிக்காமல் இருப்பது ருசிகர விவாதமாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிராவில் இடிந்து விழுந்த 4 மாடி குடியிருப்பு கட்டிடம்..  8 பேர் சடலங்களாக  மீட்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/thane-building-collapse-four-storey-residential-block-falls-eight-people-dead</link><comments>https://www.maalaimalar.com/news/national/thane-building-collapse-four-storey-residential-block-falls-eight-people-dead#comments</comments><guid isPermaLink="false">7621a630-ceb6-47c5-9030-f647af507091</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:52:07 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:52:07.008Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,உயிரிழப்பு,கட்டிட விபத்து,Building Collapse,Fatalities</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/cn2u3ln2/tn-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்]]></media:title><media:description type="html"><![CDATA[ இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/cn2u3ln2/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலம் தானேவில்  4 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடித்த <a href="https://www.maalaimalar.com/topic/accident">விபத்தில் </a>8 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>தானேவில் உள்ள பிவாண்டி பாலாஜி நகரின் கங்காராம் வாடா பகுதியில் உள்ள கோஹினூர் பில்டிங் என்ற அந்த  குடியிருப்பு கட்டடத்தின் ஒரு பகுதி நேற்று இரவு 11:00 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.</p> <h2>விபத்து</h2><p>ஒவ்வொரு தளத்திற்கும் 12 அறைகள் வீதம் 48 அறைகளை கொண்ட இந்த கட்டிடம் பாதுகாப்பற்றது என பிவாண்டி நகராட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது. இருந்தபோதும் அங்கு மக்கள் வாசித்துள்ளனர். மேலும் கீழ் தளத்தில் பழுது பார்க்கும் பணிகளும் நடந்து வந்துள்ளன.</p><p>நேற்று இரவு 9 மணி அளவிலேயே கட்டிடத்தில் பலத்த சத்தங்கள் கேட்டுள்ளன. இதனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் கட்டிடத்தில் இருந்த குடும்பங்கள் வெளியேறின. இருப்பினும் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் உட்பட சிலர் உள்ளேயே சிக்கியுள்ளனர்.</p><p>இரவு 11 - 11.30 மணியளவில் கட்டிடத்தின் பி-விங் பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது. தகவலறிந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்க இரவு முழுவதும் போராடினர்.</p><p>ஆனால் துரதிஷ்டவசமாக இதுவரை 8 பேர் சடலங்களாக மட்டுமே மீட்டப்பட்டுள்ளனர்.</p> <h2>தகவல்</h2><p>இதுகுறித்து பிவாண்டி தீயணைப்பு அதிகாரி நிதின் சவான் கூறுகையில், "உள்ளூர்வாசிகளின் தகவல்படி, கட்டடத்தில் வசித்த 6 பேர் மற்றும் பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் காணாமல் போயிருந்தனர்.</p><p>இதுவரை இடிபாடுகளிலிருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டு ஐ.ஜி.எம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த தொழிலாளர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.</p><p>சம்பவ இடத்தில் மோப்ப நாய்கள், ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களுடன் மீட்புப் படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.  </p>]]></content:encoded></item><item><title>நாட்டின் எதிர்காலத்தை விட உங்கள் தோல் தான் பிரகாசமாக இருக்கிறது -  பிரதமர் மோடியின் செல்பி வீடியோ குறித்து தீப்கே </title><link>https://www.maalaimalar.com/news/national/exam-paper-leak-law-modi-insta-video-strict-penalties-face-strong-cjp-opposition</link><comments>https://www.maalaimalar.com/news/national/exam-paper-leak-law-modi-insta-video-strict-penalties-face-strong-cjp-opposition#comments</comments><guid isPermaLink="false">32f04fbe-c084-4d0c-9a41-4f04244e91c7</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:31:36 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:31:36.712Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,BJP Protest,பிரதமர் மோடி,அபிஜித் தீப்கே,Abhijit Dipke,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/42zq1vjh/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தீப்கே, மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ தீப்கே, மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/42zq1vjh/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/abhijit-deepke">அபிஜித் தீப்கேவின்</a> சிஜேபி தலைமையில் ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தை அடுத்து கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். </p><p>பிரதமர் மோடி, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகள் குறித்து மௌனம் கலைத்து, விரைவு நீதிமன்றங்கள், சிறப்பு மசோதா, உயர்மட்ட குழு உள்ளிட்ட அறிவிப்புகளை அடுத்தடுத்து  இன்ஸ்டா வீடியோவாக பேசி வெளியிட்டார். </p><p>'<a href="https://www.maalaimalar.com/news/national/manusmriti-promotes-caste-discrimination-rss-dominance-in-the-education-system-kharges-remarks-expunged-in-the-rajya-sabha">பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்தச் சட்ட மசோதா - 2026</a>'  நேற்று முன் தினம் மக்கலவையிலும், நேற்று மாநிலங்களவையிலும் நிரைவேற்றப்பட்டது. அதன் பின் பிரகலாத் ஜோஷி கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.</p><p>முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.50 லட்சம் தண்டனை உள்ளிட்ட 'கடுமையான' தண்டனைகள் வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. தண்டனைகளை அதிகரிப்பது மட்டும் முறைகேடுகளை தடுக்காது என நேற்று இந்த மசோதா மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவர் கார்கே சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.</p> <h2>செல்பி வீடியோ</h2><p>இதனிடையே மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் மோடி மீண்டும் ஒரு செல்பி பாணியில் வீடியோ பேசி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.</p><p>அந்த வீடியோவில் பேசிய அவர், 'வினாத்தாள் கசிவு' மாபியாக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நவீன தொழில்நுட்பம் மற்றும் கடுமையான சட்டங்கள் மூலம் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் தொடரும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.</p><p>இன்ஸ்டாகிராமில் வெளியான அவரின் வீடியோ பதிவில் கமண்ட் செய்த சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே, "நாட்டின் எதிர்காலத்தை விட உங்கள் தோல் தான் பிரகாசமாக இருக்கிறது" என்று கிண்டலாகக் பதிவிட்டுள்ளார்.</p> <h2>சிஜேபி எதிர்ப்பு</h2><p>இந்தச் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்பிருந்தே சிஜேபி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.</p><p>இது தொடர்பாக சிஜேபி தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா கூறுகையில், "வினாத்தாள் கசிவை முன்கூட்டியே எவ்வாறு தடுப்பது என்பதற்குப் பதிலாக, கசிவு நடந்த பிறகு வழங்கப்படும் தண்டனைகளில் மட்டுமே இந்தச் சட்டம் கவனம் செலுத்துகிறது" என்று குற்றம் சாட்டினார்.</p><p>அத்துடன் தேசிய தேர்வு முகமையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p> <h2>தீப்கே பேட்டி</h2><p>இதுகுறித்து நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் தீப்கே, "நாட்டில் தொடர்ந்து சட்டங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் எண்ணம் சரியாக இல்லாத வரை எதுவுமே மாறாது.</p><p>வினாத்தாள் கசிவு வழக்குகளுக்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் எனப் பிரதமர் அறிவித்தார். ஆனால், சிபிஐ வழக்கறிஞர் ஆஜராகாததால் இதன் முதல் விசாரணையே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>சட்டங்களை இயற்றுவதை விட அதை அமல்படுத்துபவர்களின் செயல்பாடே இங்கு முக்கியம்." 4என தெரிவித்தார்.</p><p>மேலும் பிரதமர் மோடியின் தொடர்ச்சியான இன்ஸ்டா வீடியோ பதிவுகளை <a href="https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-dharmendra-pradhan-quits-as-abhijit-deepke-slams-pm-modi">விமர்சித்த தீப்கே</a>, "மோடி பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர சமூக ஊடக Influence-ராக மாறலாம்" என்றும் சாடினார்.</p>]]></content:encoded></item><item><title>நாட்டின் இளைய முதலமைச்சர் யார்?.. யார் மேல் அதிக குற்ற வழக்குகள்? சொத்து மதிப்பு என்ன?  - ADR அறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/india-cms-report-adr-reveals-wealth-criminal-cases-age-education</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-cms-report-adr-reveals-wealth-criminal-cases-age-education#comments</comments><guid isPermaLink="false">bca7c227-7ade-4637-9743-6ea924d576f4</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:00:10 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:00:10.552Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,முதல்வர்கள்,குற்றவியல் வழக்குகள்,ஏடிஆர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/fy0sjytu/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரேவந்த் ரெட்டி, விஜய், பகவந்த் மான் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ரேவந்த் ரெட்டி, விஜய், பகவந்த் மான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/fy0sjytu/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இவற்றை தற்போது ஆளும் 31 முதலமைச்சர்களின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) மற்றும் நேஷனல் எலக்ஷன் வாட்ச் ஆகிய அமைப்புகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.</p><h2>சொத்து மதிப்பு</h2><p>அதன்படி, 31 முதலமைச்சர்களின் மொத்தச் சொத்து மதிப்பு ரூ.3,660 கோடி ஆகும். சராசரியாக ஒரு முதலமைச்சரின் சொத்து மதிப்பு ரூ.118.07 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.</p><p>கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமார் ரூ.1,413 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் மிகவும் பணக்கார முதல்வராக உள்ளார். ரூ.931.83 கோடியுடன் இரண்டாம் இடத்தில் ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு உள்ளார். </p><p>ரூ.648.85 கோடி சொத்து மதிப்புடன் தமிழக முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய் </a>மூன்றாம் இடத்தில் உள்ளார்.  அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு  ரூ.332.56 கோடியுடன் நான்காம் இடத்தில் உள்ளார். </p><p>ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மிகக் குறைந்த அளவாக ரூ.55.24 லட்சம் மட்டுமே சொத்து உள்ளதாக அறிவித்துள்ளார்.</p><h2>குற்றவியல் வழக்குகள் </h2><p>ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 31 முதல்வர்களில் 14 பேர் (45%) தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். </p><p>இதில் 11 பேர் (35%) மீது தீவிரமான குற்ற வழக்குகள் உள்ளன. தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி மீது அதிகபட்சமாக 89 வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p>மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி மீது 29 வழக்குகளும், டி.கே. சிவகுமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மீது தலா 19 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.</p> <h2>கல்வி, வயது, பாலினம்</h2><p>நாட்டின் 31 முதலமைச்சர்களில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மட்டுமே ஒரே பெண் முதலமைச்சராக பணியாற்றுகிறார்.</p><p>31 முதலமைச்சர்களில் 9 பேர் முதுகலை, 7 பேர் இளங்கலை, 6 பேர் தொழிற்கல்விப் பட்டம் மற்றும் 3 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.</p><p>31 பேரில் 17 முதலமைச்சர்கள் 51 முதல் 60 வயதுடையவர்கள். புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி (75 வயது) மிகவும் மூத்த முதலமைச்சராகவும், அருணாச்சலப் பிரதேசத்தின் பெமா கண்டு (44 வயது) மற்றும் மேகாலயாவின் கான்ராட் சங்மா (44 வயது) ஆகியோர் மிகவும் இளைய முதலமைச்சர்களாகவும் உள்ளனர்.</p><p>உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் 50 வயதுடன் 3ஆம் இடத்திலும், தமிழக முதல்வர் விஜய், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இருவரும் 52 வயதுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>இந்தியாவில் தங்கத்தின் தேவை 6 சதவீதம் சரிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-gold-demand-falls-drops-6-percent</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-gold-demand-falls-drops-6-percent#comments</comments><guid isPermaLink="false">7a4d56b3-3745-4c93-970d-0e4a07d23f2d</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:26:47 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:26:47.225Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,pm modi,தங்கம் விலை,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/11/01/1975038-goldbiscuts.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/11/01/1975038-goldbiscuts.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>இந்தியாவில் தங்கத்தின் தேவை 6 சதவீதம் சரிவு அடைந்துள்ளது. ஆனால் விற்பனை மதிப்பு ரூ.1.98 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.</em></p><h2>விலை உயர்வு</h2><p>உலக தங்க கவுன்சில், 2026-ம் ஆண்டின் 2-வது காலாண்டுக்கான (ஏப்ரல்-ஜூன்) அறிக்கையை வெளியிட்டுள்ளது.  அதில் கூறியிருப்பதாவது:-</p> <h2>தங்கத்தின் தேவை</h2><p>இந்தியாவில் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் தங்கத்தின் மொத்த தேவை 131.4 டன்னாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்த 139,7 டன்னுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் குறைவாகும்.</p><h2>பிரதமர் மோடி</h2><p>பருவகால அடிப்படையில் விற்பனை குறைந்தது. இறக்குமதி சுங்க வரி உயர்வு மற்றும் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-said-wont-spare-gangs-playing-with-future-of-children">பிரதமர் மோடி</a> விடுத்திருந்த வேண்டுகோள் ஆகியவை தங்கத்தின் தேவை குறைய முக்கிய காரணங்களாக கூறப்பட்டுள்ளன.</p> <h2>புதிய சாதனை</h2><p>ஆனால், தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்ததால், வாங்கப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலத்தில் ரூ.1.32,500 கோடியாக இருந்த தங்க விற்பனை மதிப்பு, இந்த ஆண்டு 50 சதவீதம் அதிகரித்து ரூ.1,98,100 கோடியாக உயர்ந்துள்ளது.</p> <h2>முதலீடு</h2><p>தங்க நகைகளுக்கான தேவை 15 சதவீதம் குறைந்து 75.1 டன்னாக பதிவாகியுள்ளது. இருப்பினும், விலை உயர்வு காரணமாக நகை விற்பனையின் மதிப்பு 34 சதவீதம் உயர்ந்து ரூ.1,13,210 கோடியாக உள்ளது. அட்சய திருதியை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு நகை வாங்கும் பழக்கம் தொடர்ந்தாலும், அதிக விலையால் மக்கள் குறைந்த எடையிலான மற்றும் குறைந்த காரட் நகைகளை அதிகம் வாங்கியதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.</p> <h2>கோல்டு இ.டி.எப். முதலீடு</h2><p>மறுபுறம், முதலீட்டு நோக்கில் வாங்கப்படும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்க கட்டிகள்</a> மற்றும் தங்க நாணயங்களின் தேவை 9 சதவீதம் அதிகரித்து 50,3 டன்னாக உயர்ந்துள்ளது. அதேபோல், கோல்டு இ.டி.எப். முதலீடும் 49 சதவீதம் அதிகரித்து 4.2 டன்னாக பதிவாகியுள்ளது. இது தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மக்கள் தொடர்ந்து கருதுவதை காட்டுகிறது. </p> <p>இந்தியாவின் தங்க இறக்குமதி 23 சதவீதம் குறைந்து 98.1 டன்னாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 127.4 டன்னாக இருந்தது. பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்து பயன்படுத்திய அளவும் 17 சதவீதம் குறைந்து 19.2 டன்னாக பதிவாகியுள்ளது.</p><p>இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடியை &apos;கோமிய நிபுணர்&apos; என விமர்சித்த பிரியங்கா காந்திக்கு 215 கல்வியாளர்கள் கண்டன கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-reforms-row-215-academics-condemn-priyankas-remarks-on-iit-m-director-kamakoti</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-reforms-row-215-academics-condemn-priyankas-remarks-on-iit-m-director-kamakoti#comments</comments><guid isPermaLink="false">3df3ce6c-d12e-478b-a134-bdee4a39dc75</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:20:15 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:20:15.866Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கோமியம்,காமகோடி,Priyanka gandhi,Kamakoti,பிரியங்கா காந்தி,Gomiyam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/blv74pls/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரியங்கா காந்தி, காமகோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரியங்கா காந்தி, காமகோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/blv74pls/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பசுவின் சிறுநீரில் (கோமியத்தில்) மருத்துவ குணம் உள்ளதாக ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடி பேசியது சர்ச்சையாகி இருந்தது. அது தற்போது மீண்டும் விவாதப்பொருளாகி உள்ளது. </p><h2>காமகோடி </h2><p>2025இல் சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது, சன்னியாசி ஒருவர் காய்ச்சலின் போதுகோமியம் அருந்தி குணமடைந்ததாக அறிவியல் ஆய்வுக் கட்டுரையில் தாம் படித்ததாக  மேற்கோள்காட்டி பேசியிருந்தார். </p><h2>உயர்மட்ட குழு </h2><p>இதனிடையே நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக சிஜேபி தலைமையில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக பல மாதங்களுக்கு பின் மௌனம் கலைத்த<a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-said-wont-spare-gangs-playing-with-future-of-children"> பிரதமர் மோடி</a>, இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, தேர்வு முறைகேடுகளை தடுப்பது குறித்து ஆராய இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலகேனி தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைப்பதாக அறிவித்தார். இதில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.</p><p>குறிப்பாக இதில் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமக்கோடியும் இடம்பெற்றுள்ளார். </p> <h2>பிரியங்கா</h2><p>மக்களவையில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வுச் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி "புதிய குழுக்களை அமைப்பதால் மட்டும் எந்தப் பயனும் இல்லை. தேர்வுச் சீர்திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட புதிய குழுவில், ஒரு ஐடி நிறுவன உரிமையாளர் மற்றும் ஒரு 'கோமிய நிபுணர்' கூட சேர்க்கப்பட்டுள்ளார்" என்று விமர்சித்திருந்தார்</p><p>இந்நிலையில் பிரியங்கா காந்தி, காமகோடி குறித்து தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து 215 கல்வியாளர்கள் அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.</p> <h2>கடிதம்</h2><p>பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் மற்றும் மூத்த பேராசிரியர்கள் உட்பட 215 கல்வியாளர்கள் பிரியங்கா காந்திக்கு எழுதியுள்ள இந்த கடிதத்தில்,</p><p>"இந்தியாவின் முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக பேராசிரியர் வி. காமகோடி விளங்குகிறார்.</p><p>ஒரு கல்வியாளராகத் தனது கருத்துகளையோ அல்லது பாரம்பரிய அறிவைப் பற்றிய உரையாடல்களையோ முன்வைக்க அவருக்கு முழு உரிமை உண்டு.</p><p>ஒரு அறிஞரின் கருத்துகளை ஆரோக்கியமாக விவாதிப்பதற்குப் பதிலாக, இப்படிப்பட்ட முத்திரைகளைக் குத்தி அவரை நிராகரிப்பது, நாட்டின் அரசியலமைப்பு வலியுறுத்தும் Scientific Temper-ஐ சீர்குலைக்கும் செயலாகும். எள்ளல் பேச்சுக்கள் ஒருபோதும் நியாயமான உரையாடலுக்கு மாற்றாக முடியாது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சாதிப் பாகுபாடு செய்யும் மனுஸ்மிருதி.. கல்வி முறையில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் - மாநிலங்களவையில் கார்கே பேச்சு நீக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/manusmriti-promotes-caste-discrimination-rss-dominance-in-the-education-system-kharges-remarks-expunged-in-the-rajya-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/manusmriti-promotes-caste-discrimination-rss-dominance-in-the-education-system-kharges-remarks-expunged-in-the-rajya-sabha#comments</comments><guid isPermaLink="false">193d65b5-ae6a-4bbe-8cde-2b37d6162fb2</guid><pubDate>Fri, 31 Jul 2026 02:05:42 +0000</pubDate><atom:updated>2026-07-31T02:05:42.827Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாநிலங்களவை,rajya sabha,கார்கே,Kharge,ஜே.பி. நட்டா,J.P. Nadda</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ahuwzyd8/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கார்கே, ராதாகிருஷ்ணன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கார்கே, ராதாகிருஷ்ணன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ahuwzyd8/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிஜேபி தலைமையில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக மத்திய அரசு, <a href="https://www.maalaimalar.com/news/national/parliament-passes-anti-paper-leak-amendment-bill-with-stricter-punishment">பொதுத்தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) மசோதா 2026</a> ஐ கொண்டுவந்துள்ளது. நேற்று முன் தினம் மக்களவையிலும் நேற்று மாநிலங்களவையில் 8 மணி நேரத்திற்கும் மேலான விவாதத்தின் பின்னரும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. </p><h2>மசோதாவின் முக்கிய அம்சங்கள் </h2><p>வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 50 லட்சம் வரை அபராதம் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது.</p><p>திட்டமிட்டு முறைகேடு செய்யும் அமைப்புகளுக்கு ரூ.10 கோடி வரை அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.</p><p>வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் மற்றும் சிறப்புத் புலனாய்வுக் குழு அமைக்கப்படும்.</p> <h2>ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்</h2><p>முன்னதாக விவாதத்தின்போது மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் கார்கே மத்திய அரசின் கல்வி முறையை கடுமையாக விமர்சித்தார்.</p><p>பள்ளி மற்றும் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதை குறிப்பிட்டு பேசிய அவர், தற்போதைய கல்வி முறை மனுஸ்மிருதியின் சிந்தனைகளை நினைவூட்டும் வகையில் சாதிப் பாகுபாட்டையும் சமத்துவமின்மையையும் ஊக்குவிப்பதாக சாடினார்.</p><p>பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களே நியமிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.</p> <h2>தேர்வு முறைகேடுகள்</h2><p>விவாதத்தின் கருப்பொருளான தேர்வு முறைகேடுகள் கமசோதா குறித்து பேசிய கார்கே, வெறும் தண்டனைகளையும் அபராதங்களையும் அதிகரிப்பதன் மூலம் மட்டும் வினாத்தாள் கசிவைத் தடுத்துவிட முடியாது, தேர்வு முகமைகளில் முழுமையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p> <h2>நட்டா பதில்</h2><p>அவைத் தலைவர் ஜே.பி. நட்டா கார்கேவுக்கு பதிலளித்து பேசுகையில், மனுஸ்மிருதி தொடர்பான தனது கூற்றுகளுக்கு கார்கே தகுந்த ஆதாரங்களை அளிக்க வேண்டும் என சவால் விடுத்தார்.</p><p>உணர்ச்சிவசப்பட்டோ அல்லது அவைக்குப் புறம்பான வார்த்தைகளையோ எதிர்க்கட்சித் தலைவர் பயன்படுத்தக் கூடாது என்று கூறிய நட்டா, கார்கேவின் குறிப்பிட்ட கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் எனச் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.</p><h2>சபாநாயகர் தலையீடு</h2><p>இருதரப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் எழுந்ததை தொடர்ந்து தலையிட்ட மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மனுஸ்மிருதி தொடர்பாக கார்கே கூறிய கருத்துகள் மற்றும் மேற்கோள்கள் நாடாளுமன்ற அவைக் குறிப்பில் இடம்பெறாது என உத்தரவிட்டார்.</p><p>சி.பி. ராதாகிருஷணன் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>மத்திய கிழக்கு மோதல் தொடங்கியதில் இருந்து 16 இந்தியர்கள் உயிரிழப்பு: மத்திய அரசு தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/16-indians-have-lost-lives-since-conflict-began-in-middle-east-this-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/16-indians-have-lost-lives-since-conflict-began-in-middle-east-this-year#comments</comments><guid isPermaLink="false">87b4e77e-29e8-4278-82f7-669dcab8733d</guid><pubDate>Thu, 30 Jul 2026 21:52:44 +0000</pubDate><atom:updated>2026-07-30T21:52:44.423Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>indians,இந்தியர்கள்,மத்திய கிழக்கு,Middle East</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/3phie3xe/middle-east-conflict.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/3phie3xe/middle-east-conflict.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கிழக்கில் இந்த ஆண்டு மோதல் தொடங்கியதில் இருந்து, 10 மாலுமிகள் உட்பட 16 <a href="https://www.maalaimalar.com/topic/indians">இந்தியர்கள்</a> உயிரிழந்துள்ளதாக அரசு நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்தது.</p><p>மாநிலங்களவையில் சி.பி.ஐ.(எம்) எம்.பி. ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இதனை தெரிவித்தார்.</p><p>மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதலால் கொல்லப்பட்ட, காயமடைந்த, சிக்கிக்கொண்ட அல்லது வெளியேற்றப்பட்ட இந்திய மாலுமிகள் மற்றும் பிற இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் கேட்கப்பட்டிருந்தது.</p><h2>இந்தியர்கள் உயிரிழப்பு:</h2><p>"மத்திய கிழக்கில் மோதல் தொடங்கியதில் இருந்து, 10 மாலுமிகள் உட்பட 16 இந்தியர்கள் அங்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 75 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர் (ஐக்கிய அரபு அமீரகத்தில் 32 பேர்; ஓமனில் 24 பேர்; கத்தாரில் நால்வர்; குவைத்தில் 13 பேர்; சவுதி அரேபியாவில் ஒருவர்; மற்றும் இஸ்ரேலில் ஒருவர்)," என்று சிங் கூறினார்.</p><p>தாக்குதல்கள் தொடர்பில்லாத தனிப்பட்ட விபத்து ஒன்றில், கத்தாரில் உள்ள ராஸ் லஃபான் எரிவாயு நிலையத்தில் 12 இந்தியர்கள் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை விரைவாக இந்தியாவுக்கு கொண்டுவருவதற்காக, சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகளுடன் இணைந்து, அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.</p><h2>ரூ. 10 லட்சம் இழப்பீடு:</h2><p>காயமடைந்த இந்தியர்களுக்கு உள்ளூர் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்திய தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்து அவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களை தொடர்ந்து அறிந்தன.</p><p>அத்துடன் குடும்பத்தினருடன் தொடர்பை ஏற்படுத்துதல், பயண வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல் மற்றும் பாதுகாப்பாக இந்தியா திரும்புதல் போன்ற தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கின என்று இணையமைச்சர் கூறினார்.</p><p>"போர் மண்டல சம்பவங்கள் தொடர்பான அனைத்து நிகழ்வுகளிலும், DGMA நலத்திட்டத்தின் கீழ், ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. உரிய பரிசீலனை மற்றும் சரிபார்ப்புக்கு பிறகு, பாதிக்கப்பட்ட கடல்சார் பணியாளர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இந்த தொகை அரசால் விரைவாக வழங்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வினாத்தாள் கசிவைத் தடுக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-passes-anti-paper-leak-amendment-bill-with-stricter-punishment</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-passes-anti-paper-leak-amendment-bill-with-stricter-punishment#comments</comments><guid isPermaLink="false">184060a7-913f-4c26-a06a-f89d4617cb3e</guid><pubDate>Thu, 30 Jul 2026 20:15:43 +0000</pubDate><atom:updated>2026-07-30T20:15:43.092Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>parliament,பாராளுமன்றம்,exam bill,தேர்வு வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gtyxh7u6/New-Project-2026-07-30T210545.938.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மக்களவை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gtyxh7u6/New-Project-2026-07-30T210545.938.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் எதிர்காலமாக திகழும் மாணவர்களின் நலன்களை பாதுகாக்க தேவையான கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/central-government">அரசு</a>, வினாத்தாள் கசிவை தடுக்கும் சட்டத்தை மேலும் கடுமையாக்கும் மசோதாவை நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.</p><p>'இந்தியா' கூட்டணியை சேர்ந்த பல எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், 'பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா 2026', மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. <a href="https://www.maalaimalar.com/topic/parliment">மக்களவை</a> இந்த மசோதாவை புதன்கிழமையன்று நிறைவேற்றி இருந்தது.</p><h2>பிரதமர் உறுதி:</h2><p>மசோதா நிறைவேற்றப்பட்ட உடனேயே, பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்; அதில், வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான சட்டத்தை உருவாக்கும் முக்கிய பணி நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.</p><p>வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வு முறையை மேம்படுத்துவது அவசியமாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.</p><p>மாணவர்களின் எதிர்காலத்துடன் வினாத்தாள் கசிவு தொடர்பான எந்தவொரு கும்பலும் விளையாடாத வகையில் அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.</p><h2>ரூ. 10 கோடி அபராதம்:</h2><p>திருத்தப்பட்ட மசோதாவின்படி, வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், 50 லட்சம் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.</p><p>திட்டமிட்ட குற்றங்களை பொறுத்தவரை, குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 கோடி ரூபாய்க்கு குறையாத அபராதமும் விதிக்கப்பட வேண்டும் என்று மசோதா முன்மொழிகிறது.</p><h2>அரசு உறுதி:</h2><p>மசோதா மீதான ஏழு மணி நேர விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், பொது தேர்வுகள் வெளிப்படையானதாகவும், நம்பகமானதாகவும், தகுதியின் அடிப்படையில் அமைந்ததாகவும் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் மாணவர்களின் உண்மையான முயற்சிகள் பாதுகாக்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளதாக கூறினார்.</p><p>மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதோடு, பொது தேர்வுகளில் முறையற்ற நடைமுறைகளை தடுப்பதற்கான சட்ட கட்டமைப்பை இந்த திருத்தங்கள் மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.</p><p>வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் கசிவு, விடைத்தாள்கள் மற்றும் கணினி அமைப்புகளில் முறைகேடு செய்தல், தேர்வு நடைமுறைகளை திரித்தல், போலி இணையதளங்கள் மற்றும் அனுமதி அட்டைகளை உருவாக்குதல் முதல் தேர்வுகளில் முறையற்ற நடைமுறைகளுக்கு உதவும் திட்டமிட்ட முயற்சிகள் வரை பல்வேறு குற்றங்களை இச்சட்டம் விரிவாக கையாள்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடும்&apos; கும்பல்கள் தப்ப முடியாது: பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-said-wont-spare-gangs-playing-with-future-of-children</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-said-wont-spare-gangs-playing-with-future-of-children#comments</comments><guid isPermaLink="false">8f227b3f-d719-41ae-bc9f-6ba45b8d65a3</guid><pubDate>Thu, 30 Jul 2026 18:48:34 +0000</pubDate><atom:updated>2026-07-30T18:48:34.533Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,paper leaks,பிரதமர் மோடி,வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/u448l57y/PM-Modi-17.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/u448l57y/PM-Modi-17.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் வினாத்தாள் கசிவு பிரச்சினையை எதிர்கொள்ளும் அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடுமையான வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். </p><p>இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புதிய வீடியோ பதிவில், பல்வேறு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு என்பது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களுக்கும் ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது என்று மோடி கூறினார். </p><p>எனவே, இந்த பிரச்சினையை கையாளும் வகையில் கல்வி முறையில் விரிவான மாற்றங்களை கொண்டுவருவது அவசியமாகிவிட்டது என்று அவர் குறிப்பிட்டார்.</p><h2>விட்டுவைக்க மாட்டோம்:</h2><p>இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, "மத்திய அரசும் பல மாநிலங்களும் பல ஆண்டுகளாக வினாத்தாள் கசிவு பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. </p><p>வினாத்தாள் கசிவு கும்பல்கள், வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் யாரையும் நாங்கள் விட்டுவைக்க மாட்டோம்," என்று பிரதமர் கூறினார்.</p><p>தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "வினாத்தாள் கசிவு சம்பவங்கள் கட்டுப்பாடின்றி தொடர அனுமதிக்கப்படாது. இந்த பிரச்சினைக்கு எதிரான எங்கள் போராட்டம் எதிர்காலத்திலும் தொடரும்," என்று கூறினார்.</p><h2>மசோதா நிறைவேற்றம்:</h2><p>நாட்டின் எதிர்காலமாக திகழும் மாணவர்களின் நலன்களை பாதுகாக்க தேவையான கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உறுதிபூண்டுள்ள நிலையில், வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டத்தில் கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றம் வியாழக்கிழமை நிறைவேற்றியது.</p><p>'பொது தேர்வுகள் திருத்த மசோதா 2026' இந்தியா (INDIA) கூட்டணியை சேர்ந்த பல எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>சி.ஜே.பி. போராட்டத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த 25 வயது பெண் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/25-year-old-woman-charged-for-remarks-against-pm-modi-at-paper-leak-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/25-year-old-woman-charged-for-remarks-against-pm-modi-at-paper-leak-protest#comments</comments><guid isPermaLink="false">ce465db2-b232-415d-8b8f-ac9145173c1e</guid><pubDate>Thu, 30 Jul 2026 17:18:52 +0000</pubDate><atom:updated>2026-07-30T17:18:52.932Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/51oztf38/CJP-Protest-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protests]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/51oztf38/CJP-Protest-2.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக <a href="https://www.maalaimalar.com/topic/CJP">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> முன்னெடுத்த போராட்டங்களின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 25 வயது பெண் ஒருவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ய வழிவகுத்துள்ளது.</p><p>ஜூலை 23-ஆம் தேதியன்று ஜந்தர் மந்தரில் ருச்சிகா சிங் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததை அடுத்து, புதன்கிழமை அன்று புகார் அளிக்கப்பட்டது. அவரது கருத்துக்கள் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர்</a> அலுவலகத்தின் கண்ணியத்தை அவமதிப்பதாகவும், பொது அமைதியை குலைக்கக்கூடும் என்றும் புகார்தாரர் குறிப்பிட்டார்.</p><h2>வழக்குப்பதிவு:</h2><p>நொய்டாவில் உள்ள எக்ஸ்பிரஸ்வே காவல் நிலையத்தில், அமைதியை குலைக்கும் வகையில் தூண்டுதல், பொது குழப்பத்தை விளைவிக்கும் அறிக்கைகள் மற்றும் அவதூறு [பாரதிய நியாய சம்ஹிதாவின் பிரிவுகள் 352, 353(1) மற்றும் 356(1)] தொடர்பான பிரிவுகளின் கீழ் ஒரு ஜீரோ முதல் தகவல் அறிக்கை (குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடத்தை பொருட்படுத்தாமல், எந்த காவல் நிலையத்திலும் தாக்கல் செய்யப்படும்) பதிவு செய்யப்பட்டது.</p><p>முதல் தகவல் அறிக்கை பார்லிமென்ட் ஸ்டிரீட் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது, அங்கு இந்த விவகாரம் தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும்.</p><h2>கண்டிக்கத்தக்கது:</h2><p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ், "சிங்கின் கருத்துக்கள் தவறாக இருக்கலாம் என்று கூறியபோதிலும், இதுபோன்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.</p><p>நிச்சயமாக, இழிவான தன்மையுடைய ஏதேனும் மொழி பயன்படுத்தப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட நபர் அவருக்கு எதிராக உரிமையியல் அவதூறு மற்றும் குற்றவியல் அவதூறு வழக்குகளை தொடர சுதந்திரம் உண்டு. இருப்பினும், போராட்டக்காரர்களுக்கு எதிராக குற்றவியல் இயந்திரத்தை பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது, மேலும் ஆட்சேபனைக்குரிய எந்தவொரு மொழிக்காகவும் யாரும் தண்டிக்கப்படக்கூடாது.</p><p>அந்த மொழி சரியானது என்று நான் கூறவில்லை. அந்த மொழி தவறாக இருக்கலாம், அது யாருக்காவது ஆட்சேபனைக்குரியதாக இருக்கலாம், ஆனால் அதற்காக அத்தகையவர்களுக்கு எதிராக குற்றவியல் இயந்திரத்தை ஏவுவதற்கு எந்த காரணமும் இல்லை. இது ஒருவித அச்சமூட்டும் விளைவை ஏற்படுத்துகிறது. இது யாருக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார்.</p><h2>ஏற்றுக்கொள்ள முடியாதது:</h2><p>தொடர்ந்து பேசிய சௌரவ் தாஸ், "இளைய தலைமுறையினர் அனைவரும் தங்கள் வார்த்தைகளிலும், பொதுவாக மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் அவமதிப்புகள் மற்றும் வாக்கியங்களிலும் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதோடு, குற்றச் செயல்களில் ஈடுபடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது முற்றிலும் கூடாது. அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, அது நடக்கவே கூடாது.</p><p>காவல்துறையினரும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் தங்கள் அதிகாரங்களை தவறாக பயன்படுத்த கூடாது என்றும் நாங்கள் கூற விரும்புகிறோம்," என்று மேலும் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மக்களவையிலும் வந்தே மாதர மசோதா நிறைவேற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-bill-passed-in-the-lok-sabha-too</link><comments>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-bill-passed-in-the-lok-sabha-too#comments</comments><guid isPermaLink="false">3f941de1-a435-4dc4-97a5-1fa561764e2b</guid><pubDate>Thu, 30 Jul 2026 15:37:50 +0000</pubDate><atom:updated>2026-07-30T15:37:50.316Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,Lok Sabha,Vande Mataram bill,வந்தே மாதர மசோதா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gtyxh7u6/New-Project-2026-07-30T210545.938.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மக்களவையிலும் வந்தே மாதர மசோதா நிறைவேற்றம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gtyxh7u6/New-Project-2026-07-30T210545.938.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026' நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மக்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரும்பட்சத்தில் சட்டமாக நிறைவேறும்.</p><h2>தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து</h2><p>1971-ஆம் ஆண்டின் தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ், தேசியக் கொடி, அரசமைப்புச் சட்டம் மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றிற்கு உள்ள அதே சட்டப் பாதுகாப்பு மற்றும் அந்தஸ்து இனி 'வந்தே மாதரம்' பாடலுக்கும் வழங்கப்படும்.</p><h2>3 ஆண்டுகள் சிறைத்தண்டனை</h2><p>வந்தே மாதரம் பாடல் பாடுவதை வேண்டுமென்றே தடுப்பது, இடையூறு விளைவிப்பது அல்லது அவமதிப்பு செய்யும் செயல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.</p><h2>எதிர்ப்பு</h2><p>மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட போது, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். குறிப்பாக திமுக இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. </p>]]></content:encoded></item><item><title>நீட் போராட்டக்காரர்களுக்கு நிம்மதி: வழக்குகள் கைவிடல்... கைதானவர்களை விடுவிக்க டெல்லி அரசு உத்தரவு! </title><link>https://www.maalaimalar.com/news/national/relief-for-neet-protesters-cases-dropped-delhi-government-orders-release-of-those-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/relief-for-neet-protesters-cases-dropped-delhi-government-orders-release-of-those-arrested#comments</comments><guid isPermaLink="false">5dcc3a8d-7137-45bb-8c38-77dfcacc1cd5</guid><pubDate>Thu, 30 Jul 2026 13:01:10 +0000</pubDate><atom:updated>2026-07-30T13:01:10.047Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி அரசு,Delhi govt,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,CJP,நீட் போராட்டம்,NEET paper leak protesters</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/w3lfx7p9/New-Project-2026-07-30T174650.702.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் போராட்டக்காரர்களுக்கு நிம்மதி: வழக்குகள் கைவிடல்... கைதானவர்கள் விடுவிக்க டெல்லி அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/w3lfx7p9/New-Project-2026-07-30T174650.702.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக, எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கிணங்க குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு இது பொருந்தாது எனவும் தெளிவுப்படுத்தியுள்ளது. </p><p>மேலும் இந்தப் போராட்டம் தொடர்பாக டெல்லி காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட  13 வழக்குகளையும் டெல்லி அரசு முடித்து வைத்துள்ளது. இப்போராட்டம் தொடர்பாக ஏற்கனவே கைது அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்களை, உரிய ஆய்வுக்குப் பிறகு விரைவாக விடுதலை செய்ய டெல்லி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இந்த விவகாரம் இதோடு முடித்துக் கொள்ளப்படுவதாகவும், இது தொடர்பாக எதிர்காலத்தில் எந்த விசாரணையோ அல்லது தொடர் நடவடிக்கைகளோ இருக்காது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. </p><h2>போராட்டம்</h2><p>நீட்- யுஜி தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் சமீபத்தில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பு சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன்.20 முதல் போராட்டம் தொடங்கியது. </p><p>போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததையடுத்து, ஜூலை.25 முடிவுக்கு வந்தது. இதனிடையே இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்து, சிலரை கைது செய்தது. </p><p>கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறவேண்டும் எனவும், இல்லையென்றால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என கரப்பான்பூச்சி அமைப்பு எச்சரித்தது. இதனைத்தொடர்ந்து தற்போது அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல்துறை ரத்து செய்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பிரபல இன்சூரன்ஸ் நிறுவனத்தை ரூ.4,500 கோடி ஒப்பந்தத்தில் வாங்க உள்ள பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/patanjali-ayurveda-to-acquire-major-insurance-firm-in-rs-4500-crore-deal</link><comments>https://www.maalaimalar.com/news/national/patanjali-ayurveda-to-acquire-major-insurance-firm-in-rs-4500-crore-deal#comments</comments><guid isPermaLink="false">e7fde140-b979-455e-be53-4cbc9db0f85c</guid><pubDate>Thu, 30 Jul 2026 12:42:31 +0000</pubDate><atom:updated>2026-07-30T12:42:31.113Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Patanjali,பதஞ்சலி நிறுவனம்,பாபா ராம்தேவ்,Baba Ramdev,IRDAI,ஐஆர்டிஏஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/38krn375/Untitled-design-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  Patanjali to acquire Magma General Insurance in ₹4,500 crore IRDAI-approved takeover]]></media:title><media:description type="html"><![CDATA[ Patanjali Insurance Deal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/38krn375/Untitled-design-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், காப்பீட்டு  நிறுவனத்திலும் விரைவில் கால்பதிக்க உள்ளது.</p><p>பதஞ்சலி ஆயுர்வேதம் நிறுவனம், நுகர்வோர் பொருட்கள் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.</p><h3><strong>இன்சூரன்ஸ் நிறுவனத்தை வாங்கவுள்ள பதஞ்சலி</strong></h3><p>இந்நிலையில், மக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை சுமார் 4,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்குவதற்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">பதஞ்சலி நிறுவனம்</a> கையெழுத்திட்டுள்ளது.</p><p>இந்த ஒப்பந்தம் பிரபல உணவு விற்பனை நிறுவனமான டி.எஸ் குழுமத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>மேக்மா இன்சூரன்ஸ் நிறுவனத்தை பதஞ்சலி கையகப்படுத்துவதற்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>இதன்மூலம் வேகமாக வளர்ந்து வரும் பொதுக் காப்பீட்டு சந்தையில் பதஞ்சலி நிறுவனம் இணைந்துள்ளது.</p><p>இந்த ஒப்பந்தத்தின்படி பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், மக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 73.56 சதவீத பங்குகளையும், டி.எஸ் குழுமம் 24.5 சதவீத பங்குகளையும் பெற்றுள்ளது.</p><h3><strong>ஐ.ஆர்.டி.ஏ.ஐ காலக்கெடு</strong></h3><p>இந்த ஒப்பந்தத்திற்கான பணப் பரிவர்த்தனையை மூன்று மாத காலத்திற்குள் முடிக்குமாறு ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) தெரிவித்துள்ளது.</p><p>மக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் சமீபத்திய ஆண்டுகளில் தனது வணிகத்தை சீராக விரிவுபடுத்தி உள்ளது.</p><p>இந்த காப்பீட்டு நிறுவனத்தின் மொத்த பிரீமியம் முந்தைய நிதியாண்டில் ரூ.3,334.4 கோடியாக இருந்த நிலையில், தற்போது இந்த நிதியாண்டில் இதன் பிரீமியம் ரூ.3,615.48 கோடியாக அதிகரித்துள்ளது.</p><p>இந்த ஒழுங்குமுறை பரிவர்த்தனை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவடையும் பட்சத்தில், பதஞ்சலி நிறுவனம் இந்தியாவின் பொதுக் காப்பீட்டுத் துறை நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுக்க உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உணவு தாமதமானதால் கோபம் - மனைவியின் தலையை வெட்டி மரத்தில் தொங்கவிட்ட கணவர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/husband-beheads-wife-over-delayed-meal</link><comments>https://www.maalaimalar.com/news/national/husband-beheads-wife-over-delayed-meal#comments</comments><guid isPermaLink="false">ac3419d6-4de9-43be-bc40-914fe711cdff</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:20:33 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:20:33.322Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime,பீகார்,Bihar,Murder,கொலை,கிரைம்,போலீஸ்விசாரணை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/g3qr32sv/Bihar-Murder" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Murder ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/g3qr32sv/Bihar-Murder?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/bihar">பீகார்</a> மாநிலம் ஜெஹனாபாத்தை சேர்ந்த குணால் குமார், வயது 25 மனைவி அன்ஷூ தேவியை உணவு தாமதமான கோபத்தில் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>என்ன நடந்தது?</h2><p>குணால் குமார் வேலைக்கு செல்லாமல் எப்போதும் மது போதையில் சுற்றி வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற் பட்டது.</p><p>இந்த நிலையில் நேற்று குணால் குமாரின் குடும்பத் தினர் விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்றனர். அவரது மனைவி மட்டும் வீட்டில் இருந்தார். அவர் குடும்பத்தினருக்காக மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்தார்.</p><p>அந்த நேரத்தில் வெளியே சென்ற குணால் குமார் நண்பர்களுடன் மது குடித்தார். </p><p>போதை தலைக் கேறியதும் அவருக்கு பசி ஏற்பட்டது. உடனே அவர் வீட்டிற்கு வந்தார். அவரது மனைவி அன்ஷூ தேவியி டம் உடனே சாப்பாடு வேண்டும் என கேட்டார். அவரது மனைவி சமையல் செய்து கொண்டிருக்கிறேன். சிறிது நேரத்தில் தயாராகி விடும் என கூறினார். </p><p>இதனைக் கேட்டதும் குணால் குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ஏன் தாமதமாக சமையல் செய்து கொண்டி ருக்கிறாய் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதற்கு மனைவி சிறிது நேரத்தில் உணவு தயாராகி விடும் என தெரிவித்தார். </p><p>இதனைக் கேட்டதும் குணால் குமாருக்கு மனைவி மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.</p><h2>கோடாரியால் கொடூர கொலை</h2><p>வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து மனைவியை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார். அவரது மனைவி தன்னை எதுவும் செய்து விட வேண் டாம் என கெஞ்சினார். இருப்பினும் கோடாரியால் மனைவியின் கழுத்தில் வெட்டினார். இதில் தலை துண்டித்து 10 அடி தூரத்தில் விழுந்தது. </p><p>வீடு முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சிய ளித்தது. இறந்த மனைவியின் தலையை ஒரு கயிற்றில் கட்டி வீட்டின் முன்பாக உள்ள மரத்தில் தொங்க விட்டார். எங்கும் தப்பித்து செல்லாமல் மரத்துக்கு அடி யிலேயே அமர்ந்திருந்தார். </p><h2>போலீஸ் நடவடிக்கை</h2><p>இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். </p><p>போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்ஷூ தேவியின் தலை யையும் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.<br><br>குணால் குமாரை கைது செய்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>‘ஓரளவு சேதம் ஏற்படலாம்’ - எத்தனால் பெட்ரோல் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்!</title><link>https://www.maalaimalar.com/news/national/some-degree-of-damage-is-possible-central-governments-reply-in-parliament-regarding-ethanol-blended-petrol</link><comments>https://www.maalaimalar.com/news/national/some-degree-of-damage-is-possible-central-governments-reply-in-parliament-regarding-ethanol-blended-petrol#comments</comments><guid isPermaLink="false">80bcb85c-14ed-4f50-a377-bcc22263ca33</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:49:22 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:49:22.323Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>minister nitin gadkari,எத்தனால் பெட்ரோல்,E20 fuel,அமைச்சர் நிதின் கட்கரி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/0ynepucg/New-Project-2026-07-30T151907.453.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஓரளவு சேதம் ஏற்படலாம்’ - எத்தனால் பெட்ரோல் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/0ynepucg/New-Project-2026-07-30T151907.453.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில மாதங்களாக எத்தனால் பெட்ரோல் விவகாரம் இந்தியாவில் பெரும் விவாதத்திற்கு வழிவகுத்துள்ள நிலையில், எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களின் இன்ஜின் சேதம் அடைவதாகவோ அல்லது மைலேஜ் குறைவதாகவோ எந்தவொரு அறிவியல் ஆய்வும் உறுதிப்படுத்தவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><p>இருப்பினும், ஏப்ரல் 2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட, அதாவது 2005 ஏப்ரல் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு, 2016-க்கு முன்னர் தயாரிக்கப்பட்ட பழைய BS-III மற்றும் E10 இன்ஜின்கள் கொண்ட வாகனங்களில் மட்டும் சில ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கெட்டுகளை மாற்ற வேண்டியிருக்கலாம். அது ஒரு சாதாரண வேலையே என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். </p><p>எத்தனால் பெட்ரோல் தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, எத்தனால் பெட்ரோலால் மைலேஜ் குறையாது என்றும், வாகனத்தின் மைலேஜ் என்பது எரிபொருளைத் தாண்டி பல்வேறு காரணிகளால் அடிவாங்குகிறது என்றும் விளக்கம் அளித்துள்ளார். </p><h2>எத்தனால் பெட்ரோல் மீதான விவாதம் என்ன?</h2><p>எத்தனாலாற்றலின் அடர்த்தி பெட்ரோலை விடக் குறைவு என்பதால், வாகனங்களின் மைலேஜ் 3% முதல் 10% வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மார்ச் 2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய வாகனங்களின் என்ஜின்கள் மற்றும் எரிபொருள் குழாய்கள் எத்தனாலின் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையால் துருப்பிடிக்கவோ அல்லது சேதமடையவோ வாய்ப்புள்ளது.</p><p>ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க அதிக அளவு தண்ணீர் தேவைப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்ற கவலையும் எழுந்துள்ளது. அரசு சொல்வதுபோல கரும்பு, உடைந்த அரிசி போன்ற பொருட்களில் இருந்து எத்தனால் தயாரிக்கப்பட்டாலும் அதனை விளைவிக்கவும் தண்ணீர் என்பது மிக அவசியம். </p><p>ஏற்கனவே இந்தியாவில் கோடைக்காலங்களில் குடிநீருக்கே அல்லல்படும் நிலை இருக்கும்போது, இதன் பயன்பாடும் தண்ணீர் பற்றாக்குறையை அதிகப்படுத்தும்.</p><p>எதிர்க்கட்சிகள், நுகர்வோர் என பலதரப்பட்ட மக்களின் வாதங்கள் மேற்குறிப்பிட்டவை. ஆனால் மத்திய அரசு அனைத்திற்கு விளக்கம் அளித்து இந்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>முதுமையிலும் ஓயாத ஓட்டம்.. 80 வயதில் 16 மணி நேரம் டாக்ஸி ஓட்டும் முதியவர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/80-year-old-kolkata-taxi-driver-works-16-hours</link><comments>https://www.maalaimalar.com/news/national/80-year-old-kolkata-taxi-driver-works-16-hours#comments</comments><guid isPermaLink="false">e56adff3-e993-470d-a512-c0f0ea614633</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:52:01 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:52:01.299Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொல்கத்தா,Kolkata,TaxiDriver,RabindranathSarkar,டாக்ஸிடிரைவர்,SupportSarkar,ரவீந்திரநாத்சர்க்கார்,SeniorCitizens,ElderMan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/r43t1wuo/Kolkata-TaxiDriver" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kolkata TaxiDriver]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/r43t1wuo/Kolkata-TaxiDriver?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொல்கத்தாவை சேர்ந்த 80 வயது டாக்சி டிரைவர் சைதாலி போஸ் என்ற பயனர் 80 வயதான டிரைவர் ரவீந்திரநாத் சர்க்கார் என்ற டிரைவரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி உள்ளார். </p><p>தினமும் காலை 6 மணிக்கு, ரவீந்திரநாத் சர்க்கார் வாடகை டாக்சியில் கொல்கத்தா வீதிகளில் பயணிக்க தொடங்குகிறார்.</p><h2><strong>வாழ்வாதாரத்திற்காகத் தொடரும் போராட்டம்:</strong></h2><p>கொல்கத்தாவைச் சேர்ந்த 80 வயது டாக்ஸி ஓட்டுநர் ரவீந்திரநாத் சர்க்காரின் கடினமான வாழ்க்கை நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. </p><p>சைதாலி போஸ் என்ற பயனர், இந்த மூத்த ஓட்டுநரின் அன்றாட வாழ்க்கையையும், அவரது 77 வயது மனைவியுடன் வசிக்கும் எளிய சூழலையும் நேரில் கண்டு பகிர்ந்துள்ளார்.</p><h2><strong>அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஓயாத உழைப்பு:</strong></h2><p>தினமும் காலை 6 மணிக்குத் தனது வாடகை டாக்ஸியில் கொல்கத்தா வீதிகளில் பயணிக்கத் தொடங்கும் ரவீந்திரநாத், சுமார் 16 மணி நேரக் கடுமையான வேலைக்குப் பிறகு இரவு 10 அல்லது 11 மணி அளவிலேயே தனது வீட்டிற்குத் திரும்புகிறார்.</p><h2><strong>தினசரிச் செலவுகள்:</strong></h2><p>கடந்த 52 ஆண்டுகளாகத் தொடர்ந்து டாக்ஸி ஓட்டி வரும் இவர், சொந்த வாகனம் இல்லாததால் தினசரி ஒரு குறிப்பிட்ட தொகையை வாகன வாடகையாகச் செலுத்த வேண்டும். </p><p>அதோடு எரிபொருள் செலவுகளையும் அவரே ஏற்பதால், இச்செலவுகளுக்குப் பின் கையில் மிகக் குறைந்த பணமே எஞ்சுகிறது.</p><h2><strong>மருந்து வாங்கக்கூடப் பணமின்றித் தவிப்பு:</strong></h2><p>வயதான காரணமாகக் கைகள் நடுங்கினாலும், மூச்சுவிடச் சிரமப்பட்டாலும் பசியற்ற வாழ்க்கைக்காக மிகுந்த சிரமத்துடன் அவர் வாகனம் ஓட்டி வருகிறார். </p><p>கையில் போதியப் பணம் இல்லாததால், தனக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளைக்கூட அவரால் வாங்க முடிவதில்லை.</p><h2><strong>"உங்களுக்குச் சரியெனத் தோன்றும் தொகையைக் கொடுங்கள்":</strong></h2><p>கட்டணத்தைப் பொறுத்தவரை, இவர் பயணிகளிடம் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கேட்டு வற்புறுத்துவதில்லை. மாறாக, அவர்களிடம் மிகுந்த எளிமையுடன், "உங்களுக்குச் சரியெனத் தோன்றும் தொகையைக் கொடுங்கள்" என்று கூறி நெகிழ வைக்கிறார்.</p><h2><strong>முதிய தம்பதிக்குக் குவியும் நெட்டிசன்களின் ஆதரவு:</strong></h2><p>இந்த முதிய தம்பதியின் வறுமை நிலையை அறிந்த பலர், அவர்களுக்கு உதவ முன்வருமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். </p><p>இதைப் பார்த்த சமூக வலைத்தளவாசிகள் பலர், அந்த முதிய தம்பதிக்குத் தங்களால் இயன்ற நிதி உதவிகளையும், ஆதரவையும் வழங்கி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>3 மாநில இடைத்தேர்தல் விறுவிறுப்பு.. பிரசாந்த் கிஷோர் போட்டியிடும் தொகுதியில் பரபரப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-bypoll-tension-jan-suraaj-leaders-held-in-pankipur-as-prashant-kishor-challenges-bjp-stronghold</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-bypoll-tension-jan-suraaj-leaders-held-in-pankipur-as-prashant-kishor-challenges-bjp-stronghold#comments</comments><guid isPermaLink="false">117936ed-f3e7-4ebc-834f-0802e6fc7b0b</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:20:23 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:20:23.328Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,by election,பிரசாந்த் கிஷோர்,Prashant Kishor,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/hbbqqaly/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரசாந்த் கிஷோர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரசாந்த் கிஷோர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/hbbqqaly/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார், குஜராத், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் ஆகஸ்ட் 3ம் அன்று எண்ணப்படுகின்றன. </p><h2>காலியான தொகுதிகள்  </h2><p>பீகார் மாநிலத்தின் பங்கிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் பாஜகவைச் சேர்ந்த நிதின் நபின். இவர் மாநிலங்களவை எம்.பி.யாக சமீபத்தில் பதவியேற்றார். இதனால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p><p>மத்திய பிரதேத்தின் தாட்டியா தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரசைச் சேர்ந்த ராஜேந்திர பாரதி தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p><p>குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான யோகேஷ்பாய் நரேந்தாஸ் படேல் சமீபத்தில் காலமானார். இதனால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p> <h2>இடைத்தேர்தல்</h2><p>இதைத்தொடர்ந்து அந்த தொகுதிகளுக்கு அறிவித்தபடி இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வருகிறது.</p><p>இதில் குறிப்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பங்கிபூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் போட்டியிடுகிறார்.</p><p>முன்னதாக அவரை எதிர்த்து பாஜக சார்பில் அபிஷேக் குமார் சின்ஹா என்பவர் போட்டியிட இருந்த நிலையில் அவர் குடும்ப காரணங்களை தெரிவித்து வாபஸ் பெற்றார். அவருக்கு மாற்றாக நீரஜ் குமார் சின்ஹா என்பவரை பாஜக களம் இறக்கியது.</p><h2>கைது</h2><p>இதனிடையே இன்று வாக்குப்பதிவு தொடங்குவதற்கும் உன் நேற்று இரவே ஜன் சுராஜ் கட்சியின் நிர்வாகிகள் 20 பேர் பாட்னா காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>கைது செய்யப்பட்டவர்கள் வாக்குபதிவில் சலசலப்பை ஏற்படுத்த முயன்றதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>செய்தி அறிந்ததும் நள்ளிரவிலேயே பிரசாந்த் கிஷோர் தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.</p><p>இதுகுறித்து பேட்டியளித்த அவர், "எங்கள் கட்சியின் தொண்டர்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்கள்.</p><p>தோல்வி பயத்தால் பீகார் அரசு நடுங்கிக்கொண்டிருக்கிறது. நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட காரணத்தை காவல்துறை உடனடியாக விளக்க வேண்டும். இல்லையெனில் காவல்துறை மீதே கடத்தல் வழக்கு தொடருவோம்" என எச்சரித்தார்.</p> <h2>பீகார் வாக்குப்பதிவு</h2><p>பங்கிபூர் இடைத்தேர்தலில் 422 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை தொடரும்.</p><p>காலை 11 மணி வரை சுமார் 11.5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.</p><p>பல ஆண்டுகளாக பாஜக பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வந்த ஒரு தொகுதியில், கிஷோரின் நுழைவு போட்டியை விறுவிறுப்பாக்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும்.. அமளியால் மக்களவை ஒத்திவைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-clash-opposition-uproar-over-july-20-student-protest-crackdown-stalls-lok-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-clash-opposition-uproar-over-july-20-student-protest-crackdown-stalls-lok-sabha#comments</comments><guid isPermaLink="false">93e51114-076f-47e3-8ff2-be2f8295f63c</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:15:15 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:15:15.226Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,Lok Sabha,monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/rt0vh3sn/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மக்களவை ]]></media:title><media:description type="html"><![CDATA[ மக்களவை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/rt0vh3sn/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் கடந்த திங்கள் கிழமை தொடங்கிய நிலையில் வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெறுகிறது. </p><p>இன்றைய கூட்டமும் வழக்கம்போல அமளியால் முடங்கியுள்ளது. ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி <a href="https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security">பேரணி </a>வந்த இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறைக்கு மற்றும் ஆர்ஏஎப் மத்திய படை தடியடி, கண்ணீர் புகை உள்ளிட்டவையால் தாக்கியது. மேலும் பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பயன்படுத்ததட்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. </p><p>இந்த தாக்குதல் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p> <h2>ராகுல் காந்தி குற்றச்சாட்டு</h2><p>ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.</p><p>உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு நேரில் வந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.</p> <h2>இந்தியா கூட்டணி போராட்டம்</h2><p>நாடாளுமன்றத்தின் மகார் துவார் பகுதியில் திரண்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கும், அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நன்கொடை முறைகேடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.</p><h3>சபாநாயகர்</h3><p>முன்னதாக மக்களவை தொடங்கியபோது கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்திய வீரர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து தெரிவித்தார்</p><p>இன்று நடந்த நீளம் தாண்டுதல் பிரிவு போட்டியில் 8.09 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.</p><p>மாற்றுத்திறனாளிகளுக்கான ஆண்களுக்கான 100 மீட்டர் T47 ஓட்டப்பந்தயத்தில் திலீப் மகாது கவித் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.</p><p>அதே 100 மீட்டர் T47 பிரிவில் முகமது பாசில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளப்பெருக்கில் உயிரிழப்பு எண்ணிக்கை 78 ஆக உயர்வு: கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-flood-death-toll-rises-to-78-heavy-rain-warning-issued</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-flood-death-toll-rises-to-78-heavy-rain-warning-issued#comments</comments><guid isPermaLink="false">276f876d-26ee-4abf-9785-18502a6d7c8c</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:58:14 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:58:14.408Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,Meteorological Department,கனமழை எச்சரிக்கை,Assam Floods,அசாம் வெள்ளப்பெருக்கு,இந்திய வானிலை மையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/lv0dejsi/rain.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam floods ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/lv0dejsi/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 78 ஆக உயர்ந்துள்ளது என அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>சிவசாகர் மாவட்டத்தில் இருவரும், கோலாகாட் மாவட்டத்தில் ஒருவரும் என புதிதாக 3 பேர் வெள்ளத்திற்கு பலியானதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.  மாநிலம் முழுவதும் '3,00,031 பேர்' வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>பாதிக்கப்பட்ட பகுதிகள்:</strong></h2><p>சிவசாகர், சராடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நகோன், பிஸ்வநாத் மற்றும் கம்ரூப் மெட்ரோபொலிட்டன் ஆகிய 7 முக்கிய மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மொத்தம் 21 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 551 கிராமங்கள் வெள்ள நீரில் தவித்து வருகின்றன. மேலும் 21,523 ஹெக்டேர் விவசாய நிலங்கள் முற்றிலும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.</p><h2><strong>கனமழை எச்சரிக்கை:</strong></h2><p>அசாம் மற்றும் அதன் சுற்றியுள்ள வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மீண்டும் பெய்யும் கனமழையால் நகர்ப்புற நீர் தேக்கம், ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடிய ஆபத்தான பகுதிகளில் மேலும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்:</strong></h2><p>வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளில் மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.</p><p>அசாமில் பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தற்போதைய வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மோடி பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர Influencer ஆக மாறலாம் - தீப்கே காட்டம்
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-dharmendra-pradhan-quits-as-abhijit-deepke-slams-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-dharmendra-pradhan-quits-as-abhijit-deepke-slams-pm-modi#comments</comments><guid isPermaLink="false">de79404e-bce0-4c70-a012-2098f7a8d12b</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:09:43 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:09:43.603Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,பிரதமர் மோடி,CJP,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/2t6rjrkz/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தீப்கே, மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ தீப்கே, மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/2t6rjrkz/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும் என்ற முழக்கத்துடன் அபிஜித் தீப்கேவின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய 1 மாத கால <a href="https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security">போராட்டம் </a>கடந்த வாரம் வெற்றி பெற்றது. </p><h2>போராட்டம் வெற்றி </h2><p>அழுத்தத்தின் பேரில் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அதேநேரம், பிரதமர் மோடியும் தனது நீண்ட நெடிய மௌனத்தை களைத்து கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் இதுபற்றி பேசினார். </p><p>தேர்வு முறைகேடுகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு அதிக தண்டனை விதிக்கும் சிறப்பு மசோதா ஆகிய அறிவுப்புகளை அவர் அடுத்தடுத்து வெளியிட்டார். </p><p>இதன்படி நேற்று, பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. </p><p>போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.  </p> <h2>பேட்டி </h2><p>அங்கு ஊடகங்களிடம் பேசிய அவர் மாணவர்களை ஈர்ப்பதற்காக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைத்தள வீடியோக்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>தீப்கே கூறியதாவது, "பிரதமர் மோடி இப்போது ஒரு இன்புளூயன்சராக மாறலாம். அவர் அந்த வேலையை மிகவும் சிறப்பாகச் செய்கிறார். எனவே, அவர் பிரதமர் பதவியை விட்டுவிட்டு முழுநேர இன்புளூயன்சராக மாறட்டும். நாட்டின் ஆட்சியை வேறு ஏதேனும் தலைவர் கவனிக்கட்டும்" என்று கூறினார்.</p> <h2>நடவடிக்கை</h2><p>மேலும், போராட்டம் வாபஸ் பெறப்பட்ட பின்னரும், பல்வேறு மாநில அரசுகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறிந்து அச்சுறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார்.</p><p>ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது தடியடி நடத்தவும், பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தவும் உத்தரவிட்ட அமித் ஷா உட்படப் பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், "மாணவர்கள் ஒன்றும் தீவிரவாதிகள் அல்ல. மத்திய அரசு தனது அடக்குமுறையைக் கைவிடாவிட்டால், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது போல, அடுத்து ஆட்சியையே மாற்றுவோம்" என்றும், அடுத்தகட்டப் போராட்டம் இதைவிட மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் எச்சரித்தார்.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த பின் சிஜேபி உறுப்பினர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசிய தீப்கே, 36 நாட்கள் வெயிலிலும் மழையிலும் போராடிய தன்னார்வலர்களைக் கௌரவிக்கவே அந்த நிகழ்வு நடத்தப்பட்டது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>CJP புதிய போராட்டம் எச்சரிக்கை: டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் உச்சகட்ட பாதுகாப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security#comments</comments><guid isPermaLink="false">8aeda57e-cce2-41dd-96ef-33317819aeea</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:52:46 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:52:46.808Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jantar Mantar,delhi,டெல்லி,காக்ரோச் ஜனதா கட்சி,ஜந்தர் மந்தர்,CJPProtest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/va7atry1/jantar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jantar Mantar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/va7atry1/jantar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, 36 நாட்கள் நீடித்த போராட்டத்தை கடந்த 25ஆம் தேதி அன்று தற்காலிகமாக முடித்துக்கொள்வதாக 'காக்ரோச் ஜனதா கட்சி' அறிவித்திருந்தது.</p><p>ஆனால், போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட FIR-ஐ திரும்பப் பெறுவது குறித்த வாக்குறுதியை மத்திய அரசு மீறிவிட்டதாகக் கூறி, CJP கட்சி மீண்டும் போராட்டக் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து புதுடெல்லியிலுள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் டெல்லி காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகத் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><h2><strong>இரும்புத் தடுப்புகள்:</strong></h2><p>முந்தைய போராட்டங்களின் போது போராட்டக்காரர்கள் தடுப்புகளை அகற்றிவிட்டு நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்றனர். இதைத் தவிர்க்கும் வகையில், தற்போது ஜந்தர் மந்தரின் இரு புறங்களிலும் வைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளை அகற்றிவிட முடியாதபடி, அவற்றை இரும்பு வெல்டிங் செய்து ஒன்றாக இணைத்து பலப்படுத்தி வருகின்றனர்.</p><h2><strong>சிஜேபி விடுத்துள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்:</strong></h2><h2><strong>வாக்குறுதி மீறல்:</strong></h2><p>போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையோ, வழக்குப்பதிவோ செய்யப்பட மாட்டாது என கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு உறுதியளித்ததாக சிஜேபி செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா தெரிவித்துள்ளார். ஆனால், பாஜனதா ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக சிஜேபி குற்றம் சாட்டியுள்ளது.</p><h2><strong>கட்சியின் கோரிக்கைகள்:</strong></h2><p>* அனைத்து FIR வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.</p><p>* கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.</p><p>* டெல்லி போலீஸ் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் புதிய வழக்குகளைப் பதிவு செய்யக் கூடாது.</p><p>* அரசுடன் எட்டப்பட்ட ஒப்பந்த நகலை உடனடியாகப் பகிரங்கமாக வெளியிட வேண்டும்.</p><h2><strong>சட்ட உதவிகள் மற்றும் நிதியுதவி:</strong></h2><p>போராட்டத்தில் பாதிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவ CJP கட்சி "SAAKSHI" என்ற ஆன்லைன் தளத்தையும், தேசிய அளவிலான சட்ட உதவி மையத்தையும் தொடங்கியுள்ளது. மேலும், மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல், பாதிக்கப்பட்ட மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு உதவ ரூ.1 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ளார்.</p><h2><strong>CJP நிறுவனர் அபிஜீத் திப்கே எச்சரிக்கை:</strong></h2><p>மகாராஷ்டிராவில் செய்தியாளர்களைச் சந்தித்த CJP நிறுவனர் அபிஜீத் திப்கே, "மாணவர்களை மீண்டும் வீதிக்கு வர அரசு வற்புறுத்துகிறது. மாணவர்களின் கோபம் இன்னும் தணியவில்லை. அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் மாணவர்கள் அதைச் செய்வார்கள்" என எச்சரித்துள்ளார்.</p><p>NEET தேர்வுத் தாள்கள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ மதிப்பீட்டு குளறுபடிகளைக் கண்டித்து CJP அமைப்பினர் நடத்திய தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை மையமாக வைத்து மீண்டும் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் குற்றச்சாட்டின் பேரில் பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/trainee-ips-officer-accused-of-sexual-assault-arrested-in-hyderabad</link><comments>https://www.maalaimalar.com/news/national/trainee-ips-officer-accused-of-sexual-assault-arrested-in-hyderabad#comments</comments><guid isPermaLink="false">0ab2b520-7134-4c5d-a397-df4c247369e0</guid><pubDate>Wed, 29 Jul 2026 23:31:42 +0000</pubDate><atom:updated>2026-07-29T23:31:42.712Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Sexual assault,Trainee IPS,பயிற்சி ஐஏஎஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/r0jswnkx/arrest-4.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/r0jswnkx/arrest-4.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவலர் பயிற்சி மையத்தில் தன்னுடன் பயிற்சி பெறும் பெண் அதிகாரியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பயிற்சி <a href="https://www.maalaimalar.com/topic/ips">ஐ.பி.எஸ்.</a> அதிகாரி கைது செய்யப்பட்டார்.</p><p>ஆந்திர பிரதேச மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த உதய கிருஷ்ண ரெட்டி (33), சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் பயிற்சி மையத்தில் சக பெண் பயிற்சியாளரை பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஜூலை 18-ஆம் தேதியன்று வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், <a href="https://www.maalaimalar.com/topic/arrest">கைது</a> செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.</p><h2>யு.பி.எஸ்.சி. தேர்ச்சி:</h2><p>அவர் 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதாக ஐதராபாத் காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஐ.பி.எஸ். பயிற்சி அதிகாரி, முன்னதாக காவலராக பணியாற்றி, பின்னர் 2025-இல் யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ்.-இல் சேர்ந்தார். அவர் டிசம்பர் 2025 முதல் பயிற்சி பெற்று வந்தார்.</p><p>ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தனது பயணம் குறித்த குற்றஞ்சாட்டியவரின் பதிவிற்கு, சக ஐ.பி.எஸ். அதிகாரி பயிற்சியாளரான பாதிக்கப்பட்ட பெண் பதிலளித்ததை தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டின் மத்தியில் சமூக வலைதளங்கள் மூலம் அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்பு கொண்டார்.</p><p>தொடர்பு விவரங்களை பரிமாறிக்கொண்டு, தனது எளிமையான பின்னணி குறித்து உரையாடி ஒரு நல்லுறவை ஏற்படுத்திக்கொண்ட பிறகு, குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்டவரும் ஓர் உறவில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்தது.</p><h2>காவல் துறை விளக்கம்:</h2><p>காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் மீண்டும் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியதுடன், ஆயுதங்களை காட்டி, அவரை அவமதித்து, "பல உறவுகளை" வைத்துக்கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தியதுடன், அவரது மடிக்கணினியை தூக்கி எறிந்து சேதப்படுத்துவது, தடுக்கப்பட்ட பிறகும் போலியான சமூக வலைதள கணக்குகளை உருவாக்குவது, தனிப்பட்ட உரையாடல்களை வெளியிடுவதாக மிரட்டுவது, மற்றும் அவரது அனுமதியின்றி குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களை தொடர்புகொள்வது உள்ளிட்ட துன்புறுத்தல் செயல்களிலும் ஈடுபட்டார்.</p><p>"இந்தத் தாங்க முடியாத மனப்பான்மையால், பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டப்பட்டவருடனான உறவை முறித்துக்கொண்டு வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டார்," என்று காவல்துறை தெரிவித்தது.</p><p>இதை அறிந்த குற்றவாளி, தனது கணக்கு முடக்கப்பட்ட பிறகு போலி சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி, தனிப்பட்ட உரையாடல்களை வெளியிடுவதாக மிரட்டி, அவரது அனுமதியின்றி குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களைத் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்டவர் மற்றும் பிற சாட்சிகளால் கூறப்பட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டார் என்று அவர்கள் தெரிவித்தனர்.</p><h2>பாலியல் புகார்:</h2><p>புகாரைத் தொடர்ந்து, அட்டப்பூர் போலீசார், பெண்ணின் மானபங்கத்திற்கு உள்ளாக்கும் நோக்கத்துடன் அவர் மீது தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்தை பயன்படுத்துதல், பாலியல் துன்புறுத்தல், மற்றும் அவமதிக்கும் நோக்கம் கொண்ட சொற்கள், சைகைகள் அல்லது செயல்கள் உள்ளிட்ட பாரதிய நியாய சம்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.</p><p>அதன்படி, ஜூலை 28 ஆம் தேதி ஆராம்கர் எக்ஸ் ரோடு அருகே அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. சட்ட விதிகளுக்கு இணங்க இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p>இந்த வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் சூழ்நிலைகளையும் கண்டறிய தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டப்படி உரிய நடவடிக்கை கடுமையாக எடுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><h2>கைது நடவடிக்கை:</h2><p>ஐதராபாத் காவல் ஆணையரால் அமைக்கப்பட்ட சிறப்புக்குழு, ஐதராபாத் மகளிர் பாதுகாப்பு பிரிவின் துணை ஆணையர் பி. லாவண்யா நாயக் ஜாதவின் மேற்பார்வையில் இந்த கைது நடவடிக்கையையும் விசாரணையையும் மேற்கொண்டதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவித்தது.</p><p>வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர் சமூக ஊடகப் பதிவு ஒன்றில், புகாரும் வதந்திகளும் "ஆதாரமற்றவை" என்று கூறியிருந்தார்.</p><p>அதனை தொடர்ந்து அவர், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரி தெலங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். இவ்வழக்கை நான்கு வாரங்களுக்கு பிறகு மீண்டும் விசாரணைக்கு நீதிமன்றம் புதன்கிழமை ஒத்திவைத்தது.</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ள பாதிப்பு: ஆய்வு பணிகளை முடித்தது மத்தியக் குழு!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-team-concludes-visit-to-assess-assam-flood-situation</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-team-concludes-visit-to-assess-assam-flood-situation#comments</comments><guid isPermaLink="false">0b673865-8b3d-4dc3-a6f2-2c2f4910a0ef</guid><pubDate>Wed, 29 Jul 2026 17:09:45 +0000</pubDate><atom:updated>2026-07-29T17:09:45.600Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Central team,அசாம் வெள்ளம்,Assam Floods,மத்தியக் குழு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/owgad3p8/Minister-Keshab-Mahanta.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Keshab Mahanta]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/owgad3p8/Minister-Keshab-Mahanta.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள சூழலை ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நான்கு நாள் பயணத்தை <a href="https://www.maalaimalar.com/topic/central-team">மத்தியக் குழு</a> (IMCT) இன்று (புதன்கிழமை) நிறைவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>இங்கு நடைபெற்ற கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் ராமச்சந்திருடு தலைமையிலான மத்தியக் குழுவிடம் தலைமை செயலாளர் ரவி கோட்டா விரிவான விளக்கங்களை அளித்தார்.</p><h2>விளக்கம்:</h2><p>அசாம் மற்றும் அண்டை மாநிலங்களில், குறிப்பாக நாகாலாந்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழை மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளில் பெய்த அதீத மழையினால் ஏற்பட்ட பெரும் சேதங்கள் குறித்து மத்தியக் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது.</p><p>SDRF, NDRF, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை, இந்திய ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்தும், அத்துடன் கரைகள், பாலங்கள், சாலைகள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு ஏற்பட்ட பெரும் சேதங்கள் குறித்தும் இக்குழுவுக்கு விளக்கப்பட்டது.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>"அமைச்சகங்களுக்கு இடையிலான மத்தியக் குழு (IMCT), மேல் அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, வெள்ள சூழல் மற்றும் நடைபெற்று வரும் நிவாரணம், மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தது" என்று முதலமைச்சரின் அலுவலகம் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளது.</p><p>"மாநில முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா அறிவுறுத்தலின்படி, சிவசாகர், சாரைடியோ, ஜோர்ஹாட் மற்றும் கோலாகாட் ஆகிய மாவட்டங்களை கடுமையாக பாதித்த, முன்னெப்போதும் இல்லாத வகையிலான திடீர் வெள்ளம் குறித்த விரிவான கண்ணோட்டத்தை தலைமை செயலாளர் மத்தியக் குழுவிடம் சமர்ப்பித்தார்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>"மாவட்ட வாரியான மறுசீரமைப்பு திட்டத்திற்கு மத்திய அரசின் கூடுதல் ஆதரவு தேவைப்படுவது; கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிவசாகர், சாரைடியோ, ஜோர்ஹாட் மற்றும் கோலாகாட் மாவட்டங்களுக்குச் சிறப்பு உதவிகள் வழங்குவது; உடைந்த கரைகளை சீரமைத்து வலுப்படுத்துவது; மற்றும் உள்கட்டமைப்பை மீட்டெடுத்து நீண்டகால வெள்ள தடுப்பு திறனை மேம்படுத்த 'சிறந்த முறையில் மீண்டும் கட்டமைத்தல்' கொள்கைகளை கடைப்பிடிப்பது ஆகியவை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது" என்று முதலமைச்சரின் அலுவலகம் மேலும் தெரிவித்தது.</p><p>இந்த ஆண்டு அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3.32 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பிரகாஷ்ராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-mla-issues-threat-to-prakash-raj</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-mla-issues-threat-to-prakash-raj#comments</comments><guid isPermaLink="false">f9ed6e45-0c3a-47ef-9b42-69bfba7abd8a</guid><pubDate>Wed, 29 Jul 2026 14:12:08 +0000</pubDate><atom:updated>2026-07-29T14:12:08.652Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,பிரகாஷ்ராஜ்,Prakshraj,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/a5w6yorg/prakash.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ prakshraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/a5w6yorg/prakash.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் பிரகாஷ்ராஜுக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த வாரம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் பிரபல நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ்ராஜ் பங்கேற்றார். அப்போது பேசிய பிரகாஷ்ராஜ், மத்திய அரசின் கல்விக் கொள்கையை கடுமையாக விமர்சித்து பேசினார்.</p><h2>கண்டன ஆர்ப்பாட்டம்</h2><p>இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக உடுப்பியில் பா.ஜ.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. </p><p>இதில், இந்தியா கூட்டணி தலைவர்களான ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோரின் முகங்களுடன் கரப்பான்பூச்சி படங்கள் ஒட்டப்பட்ட விளம்பரப் பலகைகள் மீது பா.ஜ.க. தலைவர்கள் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்து தங்களது எதிர்ப்பைப் பதிவிட்டனர்.</p><p>இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ. யஷ்பால் சுவர்ணா பேசியதாவது:</p><h2>அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாக மாறுவார்</h2><p>நடிகர்களின் மனதில் நஞ்சை விதைப்பதை பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாக மாறுவார்.</p><p>வெளிநாட்டு நிதியுதவியைப் பெற்றுக்கொண்டு நாட்டில் வன்முறையைத் தூண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முயல்கிறது.</p><p>ஜந்தர் மந்தரில் நடந்த நீட் தேர்வு தொடர்பான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உண்மையான மாணவர்கள் அல்ல; அவர்களின் பின்னணியைச் சோதித்தால் உண்மை வெளிவரும்.</p><p>இத்தகைய அரசியலைத் தொடர்ந்தால் பா.ஜ.க. தொண்டர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>7,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி - அனைத்து கல்லூரிகளிலும் ஹெச்.ஐ.வி. சோதனை நடத்த கர்நாடக அரசு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/infection-confirmed-in-over-7000-students-karnataka-government-orders-hiv-testing-in-all-colleges</link><comments>https://www.maalaimalar.com/news/national/infection-confirmed-in-over-7000-students-karnataka-government-orders-hiv-testing-in-all-colleges#comments</comments><guid isPermaLink="false">38366375-eed5-44d9-b4e5-a2432c6555bb</guid><pubDate>Wed, 29 Jul 2026 14:08:27 +0000</pubDate><atom:updated>2026-07-29T14:08:27.487Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,HIV,ஹெச்ஐவி,HIV camps,பரிசோதனை முகாம்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/w41lg8mc/New-Project-2026-07-29T193734.470.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 7,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி - அனைத்து கல்லூரிகளிலும் ஹெச்.ஐ.வி. சோதனை நடத்த கர்நாடக அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/w41lg8mc/New-Project-2026-07-29T193734.470.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அனைத்து கல்லூரிகளிலும் ஹெ.ஐ.வி. பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்களை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>கர்நாடக அரசு மற்றும் விஸ்வேஷ்வராய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த பரிசோதனை முகாம்களை ஏற்பாடு செய்கின்றன.</p><p>கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசு, உதவிபெறும் மற்றும் தனியார் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும் மருத்துவ முகாம்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>ஏன் கர்நாடகாவில் இந்த திடீர் சோதனை?</h2><p>கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்புச் சங்கத்தின் தரவுகளின்படி, அங்கு 18 முதல் 35 வயதுக்குட்பட்ட மக்களிடையே எச்.ஐ.வி தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த வயதினரிடையே எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2023-24ல் 44,500 ஆக இருந்தநிலையில், 2025-26ல் 66,600 ஆக அதிகரித்துள்ளது.</p><p>மேலும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் கர்நாடகா 3-வது இடத்தில் உள்ளது. </p><p>மாநிலத்தில் சுமார் 2.60 லட்சம் பேர் எச்.ஐ.வி பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர் என தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 54 ஆயிரம் பேர் பாதிப்பு இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர்.</p><h2>QR குறியீடு அடிப்படையிலான கருவிகள் பயன்பாடு</h2><p>மாணவர்களின் ரகசியம் மற்றும் தனித்தன்மையை காக்கும் பொருட்டு, க்யூஆர் கோட் அடிப்படையிலான அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை எளிதாகக் கேட்டுத் தெளிவுபெறலாம்.</p><p>இந்த முகாம்கள் கல்லூரிகளில் நடத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டாலும், தனிநபரின் அல்லது மாணவர்களின் சம்மதம் இல்லாமல் எந்தப் பரிசோதனையும் செய்யப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>