<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 19 Aug 2026 15:55:52 +0000</lastBuildDate><item><title>நாளை தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு - தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆப்சென்ட்! </title><link>https://www.maalaimalar.com/news/national/south-indian-chief-ministers-conference-tomorrow-telangana-chief-minister-revanth-reddy-absent</link><comments>https://www.maalaimalar.com/news/national/south-indian-chief-ministers-conference-tomorrow-telangana-chief-minister-revanth-reddy-absent#comments</comments><guid isPermaLink="false">841d038e-7528-435a-92cd-b01be63c157e</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:28:51 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:28:51.861Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி,CM Revanth Reddy,Southern Zonal Council meeting,தென்மண்டல கவுன்சில் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/63s5lusr/New-Project-2026-08-19T205829.039.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு - தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆப்சென்ட்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/63s5lusr/New-Project-2026-08-19T205829.039.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, நாளை நடைபெறவுள்ள தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. </p><p>பிரிட்டன் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு 10 நாட்கள் முதலீட்டுப் பயணம் மேற்கொள்வதால் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p><p>முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இல்லாததால், அம்மாநில துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமார்கா அல்லது மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் நாளை (ஆகஸ்ட் 20) தென்மண்டல கவுன்சில் குழு மாநாடு நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், ஆந்திர முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். </p>]]></content:encoded></item><item><title>“மனிதர்கள் ஏமாற்றுகிறார்கள்... நாங்கள் மாட்டிக் கொள்கிறோம்” - ம.பி.யில் மனுவில் ஒலித்த தெருநாய்களின் வேதனை!</title><link>https://www.maalaimalar.com/news/national/despite-sterilization-i-have-six-pups-humans-deceive-and-we-get-caught-the-anguish-of-stray-dogs-voiced-in-a-petition-from-madhya-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/despite-sterilization-i-have-six-pups-humans-deceive-and-we-get-caught-the-anguish-of-stray-dogs-voiced-in-a-petition-from-madhya-pradesh#comments</comments><guid isPermaLink="false">6c614fd2-8619-4c59-a7f6-6af74c6a85d9</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:58:54 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:58:54.090Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,stray dog ​​sterilization,தெருநாய்கள் கருத்தடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/45wssmgo/New-Project-2026-08-19T194444.809.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “இவர்கள் ஏமாற்றுகிறார்கள்... நாங்கள் மாட்டிக் கொள்கிறோம்” - ம.பி.யில் மனுவில் ஒலித்த தெருநாய்களின் வேதனை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/45wssmgo/New-Project-2026-08-19T194444.809.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாய் முகமூடி அணிந்து மனு அளிக்க சென்ற நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. </p><p>மாநகராட்சி பகுதியில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதில் குறைபாடு இருப்பதாகக் கூறி அலுவலகத்திற்கு மனு அளிக்கச் சென்றவர் இந்த நூதன ஆர்ப்பாட்டை முன்னெடுத்துள்ளார். </p><p>ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, வேடிக்கையாக அதே சமயம் அதிகாரிகளைச் சாடும் வகையிலான புகாரை அளித்த அந்த நபர்., “நாங்கள் அவர்களைக் கடிப்பதாக மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அதில் எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. முன்பு எங்களுக்குச் சாப்பிட ஏதாவது கிடைக்கும், ஆனால் இப்போது அது நடப்பதில்லை. அதனால், நாங்கள் நிச்சயமாக மக்களைத் துரத்திச் செல்வோம். </p><p>மாவட்ட ஆட்சியரிடம் இருந்து நாங்கள் நீதியைக் கோருகிறோம். எங்கள் பெயரில் நிதியைத் திருடி, எங்களுக்கு அவதூறு பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டேன் என்பது எனக்குத் தெரியும். எனக்கு நீதி கிடைக்கும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” என தெரிவித்தார்.</p><p>மேலும் நாய்களுக்கு முறையான அறுவை சிகிச்சை செய்யாமல், அதிகாரிகள் போலியான ரசீதுகளை மட்டும் தயாரித்து ஊழல் செய்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.</p><p>இவருக்கு துணையாக மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் தீபக் முல்லு ரத்தோரும் சென்றுள்ளார். </p><h2>ரூ. 40 லட்சம் ஊழல் குற்றச்சாட்டு </h2><p>மாநகராட்சி பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், அவற்றுக்குக் கருத்தடை சிகிச்சை செய்யவும் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ. 40 லட்சம் வரை செலவிடப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது.</p><p>ஆனால் அதே காலகட்டத்தில், 13,225 நாய் கடி வழக்குகள் பதிவு செய்யப்பட்ட்டுள்ளன.</p><p>மறுபுறம் மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர் சஞ்சய் சுக்லா, ஊழல் குற்றச்சாட்டை மறுத்தார். கருத்தடைத் திட்டம் தொடர்பான பதிவுகளும், தரவுகளும் வழங்கப்படும் என்றும் கூறினார்.</p><p>மேலும் இவ்விவகாரம் நகராட்சி ஆணையருடன் விவாதிக்கப்பட்டதாகவும், விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பெற்ற மகளையே சீரழித்த கொடூர தந்தை: போலி ஆதாரைப் பயன்படுத்தி குழந்தையை விற்ற அத்தை உள்பட 8 பேர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/cruel-father-abused-his-own-daughter</link><comments>https://www.maalaimalar.com/news/national/cruel-father-abused-his-own-daughter#comments</comments><guid isPermaLink="false">ad9cf8cd-d02f-461e-8bd7-c82b41f94435</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:41:50 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:41:50.139Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>POCSO,Raipur,போக்சோ,ChildTrafficking,AadhaarForgery,ராய்பூர்,ராய்பூர்கொடூரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/6kwcsfz3/rape.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Child Trafficking]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/6kwcsfz3/rape.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரில் மனிதநேயமற்ற, நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 16 வயதுடைய பெற்ற மகளையே சொந்தத் தந்தை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.</p><h2>கட்டாய க<strong>ருக்கலைப்பு</strong></h2><p>கடந்த 2023-ஆம் ஆண்டு பெற்ற தாய், தந்தையை விட்டுப் பிரிந்து சென்றதைத் தொடர்ந்து, மூத்த மகளான இந்த சிறுமியைத் தந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துத் தொடர்ந்து அச்சுறுத்தி <a href="https://www.maalaimalar.com/news/national/atrocity-against-14-year-old-girl-by-instagram-friend-in-mumbai">பாலியல் துன்புறுத்தலுக்கு </a>உள்ளாக்கியுள்ளார். இதனால் சிறுமி முதன்முறையாகக் கர்ப்பமடைந்தபோது, அவரது அத்தையும் தந்தையும் இணைந்து சட்டவிரோதமாகக் மாத்திரைகள் வழங்கி கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளனர்.</p><h2>மீண்<strong>டும் கர்ப்பம் அடைந்த சி</strong>றுமி</h2><p>அதன் பின்னரும் தொடர்ந்த கொடுமையால், அச்சிறுமி மீண்டும் 2025-இல் கர்ப்பமடைந்தார். இம்முறை இக்குற்றத்தை மறைப்பதற்காக, செவிலியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் சிலருடன் இணைந்து தந்தை சதித்திட்டம் தீட்டினார். சிறுமியின் உண்மையான வயதை மறைத்து, போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைத் தயாரித்து, அவருக்குத் திருமணமாகிவிட்டதாகப் பொய் சித்திரத்தை உருவாக்கியுள்ளனர்.</p><h2>குழ<strong>ந்தை விற்பனை</strong></h2><p>இதனைப் பயன்படுத்தி ஒரு தனியார் மருத்துவமனையில் அச்சிறுமியை அனுமதித்து, அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறக்க வைத்துள்ளனர். குழந்தை பிறந்தவுடனேயே, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்களின் உதவியோடு அக்குழந்தை வேறொரு நபருக்கு விற்பனை செய்துள்ளனர்.</p><h2>அத்தை உள்<strong>பட 8 பேர் கை</strong>து</h2><p>சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலமாகத் தன் தாயைத் தொடர்புகொண்ட சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை அழுது விவரித்துள்ளார். உடனடியாகத் தாய் அளித்த புகாரின் பேரில், நியூ ராஜேந்திர நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றத்தில் ஈடுபட்ட தந்தை, அத்தை, போலியான ஆவணங்களை உருவாக்க உதவிய செவிலியர்கள் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய நபர் உட்பட 8 பேரை காவல்துறையினர் போக்சோ, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் சிறுவர் நீதிச் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பழைய வாகனங்களுக்கு மீண்டும் E10 பெட்ரோல் வழங்க மத்திய அரசு ஆலோசனை!</title><link>https://www.maalaimalar.com/news/national/old-vehicles-e10-petrol-return-central-government-consideration</link><comments>https://www.maalaimalar.com/news/national/old-vehicles-e10-petrol-return-central-government-consideration#comments</comments><guid isPermaLink="false">ae2d3802-f670-4212-a5d0-1ba9be11614b</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:52:13 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:52:13.383Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>E10Petrol,E20Petrol,EthanolBlending,மத்தியஅரசு,E10 பெட்ரோல்,E20 பெட்ரோல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/4mo1b20q/e10.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ E10Petrol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/4mo1b20q/e10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் இயங்கும் பழைய வாகனங்களின் நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் E10 பெட்ரோலை வழங்குவது குறித்து மத்திய அரசின் மட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் மற்றும் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.</p><h2>எ<strong>த்தனால் கலப்பால் ஏற்ப</strong>டும் சவால்கள்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-ug-counseling-2026-round-1-seat-allotment-results-how-to-check-mbbs-bds-list">இந்தியாவில்</a> தற்போது 20% எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும், நாட்டின் சாலைகளில் இயங்கும் சுமார் 7.5 கோடி முதல் 8 கோடி பழைய இருசக்கர வாகனங்கள் 'கார்புரேட்டர்' தொழில்நுட்பம் கொண்டவை. இந்த பழைய என்ஜின்களால் E20 பெட்ரோலில் உள்ள கூடுதல் ஆக்சிஜனைச் சீரமைக்க முடிவதில்லை. இதனால் என்ஜின் விரைவில் சூடாவதோடு, பழைய ரப்பர் பாகங்களும் சேதமடைவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.</p><h2>பொ<strong>ருளாதார ஆலோசகரின் பரிந்து</strong>ரை</h2><p>மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தனது அறிக்கையில், பழைய வாகனங்களின் என்ஜின் ஆயுளைப் பாதுகாக்கவும், நுகர்வோரின் கவலையைப் போக்கவும் E10 பெட்ரோலையும் ஒரு விருப்பமாக பெட்ரோல் பங்குகளில் மீண்டும் வழங்க பரிசீலிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளார்.</p><h2>மத்திய <strong>அரசின் ப</strong>ரிசீலனை</h2><p>E20 பெட்ரோலுக்கு பொருந்தாத பழைய வாகன உரிமையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், உணவு உற்பத்தி மற்றும் எத்தனால் பயன்பாட்டிற்கு இடையேயான சமநிலையைப் பேணும் வகையிலும், மீண்டும் E10 பெட்ரோலை வழங்குவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு விரிவாக ஆலோசித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி: லாரியின் எரிவாயு தொட்டி வெடித்து விபத்து - ஒருவர் பலி... 6 பேர் கவலைக்கிடம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-truck-gas-tank-explodes-one-dead-six-critically-injured</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-truck-gas-tank-explodes-one-dead-six-critically-injured#comments</comments><guid isPermaLink="false">d1a5b2d8-d684-42c1-bf07-515bfa29a2ba</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:23:22 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:23:22.951Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,டெல்லி,CNG Cylinder Explosion,சிஎன்ஜி சிலிண்டர் வெடிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/0yp2mfy1/New-Project-2026-08-19T174621.646.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி: லாரியின் எரிவாயு தொட்டி வெடித்து விபத்து - ஒருவர் பலி... 6 பேர் படுகாயம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/0yp2mfy1/New-Project-2026-08-19T174621.646.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியின் புறநகர் பகுதியான திக்ரி கலானில் உள்ள ஒரு சிஎன்ஜி நிலையத்திற்கு லாரி ஒன்று எரிவாயு நிரப்ப வந்துள்ளது. லாரியின் எரிபொருள் தொட்டியில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக எரிபொருள் தொட்டி வெடித்துள்ளது. </p><p>இந்த விபத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த மணீஷ் (25) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வெடிவிபத்து நடந்த நேரத்தில் அருகில் நின்றுகொண்டிருந்த மேலும் ஆறு பேர் காயமடைந்ததாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.</p><p>விபத்து தொடர்பாக 3.37 மணிக்கு தங்களுக்கு தகவல் கிடைத்ததாக டெல்லி தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.</p><p>வெடிவிபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கேரளாவில் துணிகரம்: ஐபோனுக்காக தாத்தாவை கொன்ற பேத்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-teen-plots-grandfathers-murder-watches-him-suffocate-on-video-call</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-teen-plots-grandfathers-murder-watches-him-suffocate-on-video-call#comments</comments><guid isPermaLink="false">0107f92b-099d-42bc-b7e6-58db550d01b1</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:17:44 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:17:44.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>grandfather,தாத்தா,I Phone,grand daughter,ஐபோன்,பேத்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/724p6rru/sivan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sivan kutty]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/724p6rru/sivan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐபோனுக்காக தனது நண்பர்கள் உதவியுடன் தாத்தாவைக் கொலை செய்த பேத்தியின் செயல் கேரளாவில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.</p><p>கேரளம் மாநிலத்தின் ஆலப்புழாவில் சிவன்குட்டி என்ற முதியவர் (67), கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், ஒரு துணியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.</p><p>அவர் அணிந்திருந்த தங்க செயின், மோதிரம் உள்ளிட்டவை காணாமல் போயிருந்ததால் இந்த வழக்கை கொலை மற்றும் கொள்ளை வழக்காகக் கருதி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிவன்குட்டியின் பேத்தியான 13 வயது சிறுமி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.</p><p>போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்களின் விவரம் வருமாறு:</p><p>தனது காதலனான 17 வயது சிறுவன் மற்றும் அவனது நண்பர்களான 17 வயது சிறுவர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேர் சேர்ந்து சிவன்குட்டியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.</p><p>ஐபோன் மற்றும் பைக் வாங்குவதற்காக சிவன்குட்டியை கொலை செய்ததாக போலீசாரிடம் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். </p><p>சிறுமியின் காதலன், அவனது நண்பர்கள் ஆகியோர் இணைந்து கொலையை செய்ததாகவும், சிறுமி காணொலி அழைப்பில் இருந்தபடி சம்பவத்தை ஒருங்கிணைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். </p><p>மேலும், பாதிக்கப்பட்ட முதியவர் வீட்டில் தனியாக இருந்ததும், ​​ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு இந்தக் கொடூர கொலை நடந்ததும் தெரிய வந்தது. </p><p>அதற்கு முந்தைய தினம் முதியவரின் இளைய மகள் பிரசவத்திற்காக ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அவருக்கு துணையாக இருக்க முதியவரின் மனைவியும் அங்கு சென்றதும் தெரியவந்தது.</p><p>ஐபோனுக்காக தாத்தாவை பேத்தியே கொன்ற சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>1-ந்தேதி வந்து விட்டால் வாடகை செலுத்த வேண்டும்: பாஜக-வில் இருந்து வெளியேறிய ஷேசாத் பூனவாலா சொல்கிறார்</title><link>https://www.maalaimalar.com/news/national/1-%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/1-%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">9d1da023-e650-41de-b7c3-0b1dad461a89</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:01:12 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:01:12.125Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ksmbkfyw/ShehzadPoonawalla001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஷேசாத் பூனவாலா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ksmbkfyw/ShehzadPoonawalla001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ஜ.க. கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான ஷேசாத் பூனவாலா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் வெளியேறியுள்ளார்.</p><p>இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷேசாத் பூனவாலா அவசரமான நிதி மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக ஷேசாத் பூனவாலா கூறியதாவது:-</p><p>எனக்கு வாடகை செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நான் பா.ஜ.க.-வில் இருப்பதற்கான, வீட்டு உரிமையாளர் வாடகை கேட்காமல் இருப்பது இல்லை. 1-ந்தேதியன்று என்னிடம் வாடகை கேட்டுவிடுவார். அரசியல் கட்சிகள் தொண்டர்களுக்கு பணம் வழங்குவதில்லை.</p><p>என்னையோ அல்லது வேறு எந்தவொரு தொண்டரையோ வாழ்வாதார ரீதியாக காப்பாற்றுவது பா.ஜ.க.-வின் பணி அல்ல. ஒரு அரசியல் இயக்கத்தில் இணையும்போது, ​​அது வெறும் வேலையாக இருப்பதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு கொள்கை மீதான ஈர்ப்பு, ஒரு தனிநபர் மீதான பற்று அல்லது அந்த அமைப்பு மீதான ஈடுபாடு ஆகியவற்றின் காரணமாகவே ஒருவர் தொண்டராக மாறுகிறார். அந்த மூன்று அம்சங்களும் இப்போதும் என்னிடம் அப்படியே உள்ளன.</p><p>இவ்வாறு ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த மேற்குவங்க நீதிமன்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-court-issues-arrest-warrant-against-trinamool-congress-mp-mahua-moitra</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-court-issues-arrest-warrant-against-trinamool-congress-mp-mahua-moitra#comments</comments><guid isPermaLink="false">2b74cb62-3a5e-47ab-b65d-be42e4b7e826</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:53:54 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:53:54.089Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Bengal court,MP Mahua Moitra,மேற்கு வங்க நீதிமன்றம்,எம்.பி. மஹூவா மொய்த்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8dqxyda4/New-Project-2026-08-19T172254.693.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த மேற்குவங்க நீதிமன்றம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8dqxyda4/New-Project-2026-08-19T172254.693.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்ட நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. </p><p>மொய்த்ரா கைது செய்யப்பட்டது தொடர்பான உத்தரவு நிறைவேற்ற அறிக்கையை ஆக.28ம் தேதி நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் கிருஷ்ணாநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>என்ன வழக்கு?</h2><p>துளசி மாலை மற்றும் இந்து மத நம்பிக்கைகள் குறித்து மொய்த்ரா பேசிய சில கருத்துக்கள் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக மேற்கு வங்கத்தின் கூர்னி பகுதியைச் சேர்ந்த 6 பெண்கள் மற்றும் பாஜகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் இந்திய ஆயுதப் படை மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, மஹுவா மொய்த்ராவுக்கு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுகளை அவமதிப்பாக கூறி கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>மஹுவா மொய்த்ரா தரப்பு விளக்கம்</h2><p>நீதிமன்றத்திற்கு வெளியே அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மஹுவா மொய்த்ரா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அவர் நீதிமன்றத்திற்கு வந்தால் கூட்டமாகச் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், அவர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. </p><p>ஆனால், நீதிமன்றம் முதலில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது.</p>]]></content:encoded></item><item><title>கும்மிடிப்பூண்டி - கூடூர் இடையே புதிய ரெயில் வழித்தடம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/kummidippundi-koodur-between-new-rail-route-union-cabinet-approval</link><comments>https://www.maalaimalar.com/news/national/kummidippundi-koodur-between-new-rail-route-union-cabinet-approval#comments</comments><guid isPermaLink="false">de831405-60d0-4e0b-8393-8802aac1dc44</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:48:21 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:48:21.448Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Union Ministry,மத்திய அமைச்சரவை ஒப்புதல்,Gummudipoondi,புதிய ரெயில் பாதை,கும்மிடிப்பூண்டி,New train track</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/gxc5ikuo/Ashwini-vaishnaw.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Union Ministry Aswini Vaishnaw]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/gxc5ikuo/Ashwini-vaishnaw.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் 410 கி.மீ தூரத்திற்கு புதிய ரெயில் பாதைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>அதன்படி, ஹவுரா- சென்னை பல்வழித்தட திட்டத்தின்கீழ் கும்மிடிப்பூண்டி முதல் கூடூர் வரை மூன்றாவது மற்றும் 4வது ரெயில்வே வழித்தடங்கள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>கும்மிடிப்பூண்டி- கூடூர் தடத்தில் ரெயில் பாதை அமைப்பதன் மூலம் தென் மாநிலங்கள், வட மாநிலங்களுக்கு இடையே பயணம் விரைவாகும்.</p><p>ரூ.2,229 கோடியில் புதிய வழித்தடங்கள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.</p><p>ரூ.13,041 கோடி மதிப்பில் 5 ரெயில்வே வழித்தட பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெண்டர் மோசடி வழக்கு - ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/tender-fraud-case-former-aam-aadmi-party-minister-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/tender-fraud-case-former-aam-aadmi-party-minister-arrested#comments</comments><guid isPermaLink="false">23132ed9-e758-49e1-a626-4821dd8b8ff0</guid><pubDate>Wed, 19 Aug 2026 09:01:31 +0000</pubDate><atom:updated>2026-08-19T09:01:31.029Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Aam Aadmi Party,ஆம் ஆத்மி கட்சி,satyendar jain,tender scam case,சத்யேந்திர ஜெயின்,டெல்லி குடிநீர் வாரியம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/cvuq7qfg/New-Project-2026-08-19T140852.117.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெண்டர் மோசடி வழக்கு - ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் கைது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/cvuq7qfg/New-Project-2026-08-19T140852.117.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி குடிநீர் வாரிய டெண்டர் ஊழல் வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உட்பட 6 பேரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்துள்ளனர்.</p><p>டெல்லி குடிநீர் வாரியத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், ஐஏஎஸ் அதிகாரியுமான உதித் பிரகாஷ் ராய், முன்னாள் ஒப்பந்த ஆலோசகர் அங்கித் ஸ்ரீவஸ்தவா, ஏஎன் எண்டர்பிரைசஸ் உரிமையாளர் நாகேந்திர யாதவ், யூரோடெக் என்விரான்மென்ட் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் ராஜா குமார் குர்ரா மற்றும் ஸ்ரீஜன்ஹார் உரிமையாளர் பங்கஜ் வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>டெல்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை  மேம்படுத்துதல் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் ரூ.1.52 கோடி லஞ்சம் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சாதகமாக டெண்டர் நிபந்தனைகளில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையால் கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. </p><p>போதிய ஆதாரங்கள் திரட்டப்பட்டதைத் தொடர்ந்து, அனைவரும் கைது செய்யப்பட்டு, டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p>சத்யேந்தர் ஜெயினின் கைதைத் தொடர்ந்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று விமர்சித்துள்ளார். அரசியல் எதிரிகளைக் குறிவைக்க, பாஜக பொய்க் குற்றச்சாட்டுகளையும், கைது நடவடிக்கையையும் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>“பாஜக ஆம் ஆத்மி கட்சிக்கு பயப்படுகிறது என்பதற்கு இன்னும் எத்தனை ஆதாரங்கள் தேவை? அந்த குடிநீர் வாரிய டெண்டர் விடப்பட்ட நேரத்தில், சத்யேந்திரா சிறையில் இருந்தார். சிறையிலிருந்து அவர் எப்படி பொறுப்பேற்றார்? </p><p>உண்மையான காரணம் என்னவென்றால், சத்யேந்திர ஜெயின் பஞ்சாபின் ஆம் ஆத்மி இணைப் பொறுப்பாளராக இருக்கிறார், மேலும் அங்கு தேர்தல்கள் வரவிருக்கின்றன.” என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஊடகப் பொறுப்பாளர் அனுராக் தண்டா எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>NEET UG Counseling 2026: முதல் கட்ட இட ஒதுக்கீடு முடிவுகள் வெளியீடு- MBBS, BDS ஒதுக்கீட்டுப் பட்டியலைப் பெறுவது எப்படி?</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-ug-counseling-2026-round-1-seat-allotment-results-how-to-check-mbbs-bds-list</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-ug-counseling-2026-round-1-seat-allotment-results-how-to-check-mbbs-bds-list#comments</comments><guid isPermaLink="false">aca361a9-d475-45dc-ab64-7f25e456fd3e</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:44:24 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:44:24.318Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இட ஒதுக்கீடு,நீட் 2026,NEETUG2026,MCCResult2026,MBBSAdmissions,MedicalCounselling,மருத்துவக் கலந்தாய்வு,நீட் யுஜி தரவரிசை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/9dbcfoxg/neeeee.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NEET 2026 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/9dbcfoxg/neeeee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>NEET 2026 கலந்தாய்வின் முதல் சுற்று இட ஒதுக்கீட்டு முடிவு mcc.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். NEET UG ஒதுக்கீட்டு முடிவுக்கான நேரம், பதிவிறக்க இணைப்பு, அறிக்கை சமர்ப்பிக்கும் தேதிகள் மற்றும் இட ஒதுக்கீட்டு முடிவைச் சரிபார்க்க வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.</p><p>மருத்துவக் கலந்தாய்வுக் குழு, MCC நீட் 2026 கலந்தாய்வின் முதல் சுற்று இட ஒதுக்கீட்டு முடிவை இன்று, ஆகஸ்ட் 19, 2026 அன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட் யுஜி முதல் சுற்று கலந்தாய்வுச் செயல்பாட்டில் பங்கேற்று , தங்களின் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு விருப்பங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ MCC கலந்தாய்வு இணையதளம் மூலம் தங்களின் ஒதுக்கீட்டு நிலையைச் சரிபார்க்கலாம். </p><p>நீட் யுஜி தரவரிசை, பூர்த்தி செய்யப்பட்ட விருப்பங்கள், பிரிவு, இடங்களின் இருப்பு மற்றும் பிற கலந்தாய்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஒதுக்கப்பட்ட மருத்துவ அல்லது பல் மருத்துவ இடத்தை நீட் 2026 முதல் சுற்று இட ஒதுக்கீட்டு முடிவு எடுத்துக்காட்டும். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/b0sjm2qv/neet.jpg" /></figure><p>முடிவு வெளியான பிறகு, இடம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒதுக்கீட்டுக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து, காலக்கெடுவுக்குள் ஒதுக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும்.</p><p>மருத்துவக் கலந்தாய்வுக் குழு 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட இட ஒதுக்கீட்டு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in, https://mcc.nic.in பக்கத்தில் வெளியிடுகிறது. அகில இந்திய ஒதுக்கீடு, மத்திய பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ், ஜிப்மர்  மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் பி.எஸ்சி நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களின் ஒதுக்கீடு நிலையை உடனடியாகச் சரிபார்க்கலாம்.</p><h2>இட ஒதுக்கீட்<strong>டுப் பட்டியலைச் சரிபா</strong>ர்க்கும் எளிய வழிமுறைகள்</h2><p>அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in, https://mcc.nic.in பக்கத்திற்குச் செல்ல வேண்டும். முகப்புப் பக்கத்தில் உள்ள 'UG Medical Counseling' பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் தோன்றும் '<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-chief-ministers-medical-insurance-coverage-raised-to-rs-25-lakh">NEET UG </a>Round 1 Seat Allotment Result 2026' என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். திரையில் தோன்றும் PDF கோப்பில் உங்களது ரோல் எண் மற்றும் பெற்ற தரவரிசையைத் தேடி ஒதுக்கீட்டை உறுதிசெய்யலாம். அதன்பின், உங்களது உள்நுழைவுத் தகவல்களைப் பயன்படுத்திக் கணக்கில் புகுந்து, அதிகாரப்பூர்வ ஒதுக்கீட்டுக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><h2>சேர்க்கை <strong>நடைமுறைகள்</strong></h2><p>இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ அல்லது பல் மருத்துவக் கல்லூரிகளில் நாளை (ஆகஸ்ட் 20) முதல் ஆகஸ்ட் 25, 2026 வரை நேரில் சென்று சேர வேண்டும். கல்லூரி அறிக்கையின் போது அசல் சான்றிதழ்கள், நீட் மதிப்பெண் சான்றிதழ், நுழைவுச் சீட்டு, அடையாளச் சான்று மற்றும் ஒதுக்கீட்டுக் கடிதம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். முதல் சுற்றில் ஒதுக்கீடு பெற்ற கல்லூரியில் சேர விரும்பாதவர்கள் 'Free Exit' முறையில் அபராதம் இன்றி விலகலாம் அல்லது ஆகஸ்ட் 24 முதல் தொடங்கவுள்ள இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்று உயர் விருப்பக் கல்லூரியைத் தேர்வு செய்ய விண்ணப்பிக்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>பி.எம்.கேர்ஸ் வசூலித்த ரூ.1,162.92 கோடியில் ரூ.16.47 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது: தணிக்கை அறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/only-16-47-crore-spent-from-1162-92-crore-pm-cares-audit-report</link><comments>https://www.maalaimalar.com/news/national/only-16-47-crore-spent-from-1162-92-crore-pm-cares-audit-report#comments</comments><guid isPermaLink="false">7884463b-b696-4de4-909e-adbb8031edba</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:32:43 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:32:43.949Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தணிக்கை அறிக்கை,audit report,pmcares,கொரோனா நிதி,பிஎம் கேர்ஸ் நிதி,Corona Fund</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/y3z86xek/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பி.எம்.கேர்ஸ் தணிக்கை அறிக்கை]]></media:title><media:description type="html"><![CDATA[ PM cares audit report]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/y3z86xek/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">பி.எம். கேர்ஸ்</a> நிதியானது கடந்த 2023-24 மற்றும் 2024-25 ஆகிய நிதியாண்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ரூ.1,162.92 கோடி நன்கொடையாக வசூல் செய்யப்பட்டது. ஆனால் இந்த காலகட்டத்தில் ரூ.16.47 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கைகள் (audit report) தெரிவித்துள்ளன.</p><h3><strong>பி.எம்.கேர்ஸ் நிவாரண முகமை</strong></h3><p>இந்தியாவில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE">கொரோனா</a> தொற்று காரணமாக பி.எம்.கேர்ஸ் (PMcares) என்ற அவசரகால நிவாரண ஆணையம் 27 மார்ச் 2020 அன்று அமைக்கப்பட்டது.</p><p>2022-23 ஆம் ஆண்டில், இந்த முகமையானது நன்கொடைகளாக ரூ. 912.21 கோடியை வசூலித்த நிலையில், ரூ. 439.38 கோடியை செலவிட்டது. இதில், பெருந்தொற்றின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக ரூ. 346 கோடியும், கிட்டத்தட்ட 1 லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகளைக் கொள்முதல் செய்வதற்காக ரூ. 91.87 கோடியும் செலவிட்டது.</p><p>பெருந்தொற்றுக்குப் பிறகு, இந்த நிதிக்கு வரும் நன்கொடைகள் குறைந்துள்ளன. 2020-21 ஆம் ஆண்டில், இந்த நிதியிலிருந்து அதிகபட்சமாக ரூ. 7,678.68 கோடி வசூலானது. மேலும் இந்த நிதியில் இருந்து ரூ. 3,976.17 கோடி செலவிடப்பட்டது.</p><p>2021-22 ஆம் ஆண்டில், செலவினம் ரூ.3,716.29 கோடியாகவும், நன்கொடைகள் ரூ. 1,936.88 கோடியாகவும் இருந்தன. 2024-25 ஆம் ஆண்டில், நன்கொடையாக ரூ. 479.97 கோடியை வசூலித்தது. அதே சமயம் கோவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக வெறும் ரூ. 87.85 லட்சத்தை மட்டுமே செலவிட்டது.</p><p>2023-24 ஆம் ஆண்டில், இது ரூ. 682.94 கோடியை வசூலித்து, ரூ. 15.59 கோடியை செலவிட்டது. 31 மார்ச், 2025 அன்று முடிவடைந்த ஆண்டுக்கான வரவுகள் மற்றும் செலவுகள் கணக்கின்படி, நிதியத்தின் கணக்குகளில் ரூ. 8,452.06 கோடி உள்ளது. இதில், ரூ. 7,846.65 கோடி நிலையான வைப்புத்தொகையில் இருந்தது.</p><h3><strong>நன்கொடைகள்</strong></h3><p>மொத்தத்தில், இந்த நிதியானது மார்ச் 2020-ல் தொடங்கப்பட்டதிலிருந்து நன்கொடையாக ரூ. 14,766.95 கோடியை வசூலித்துள்ளது மற்றும் 2024-25 வரை ரூ. 8,133.29 கோடியை செலவிட்டுள்ளது. இதில் பெரும்பாலான செலவினங்கள் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நிகழ்ந்துள்ளன.</p><h3><strong>தணிக்கை அறிக்கை</strong></h3><p>இந்த நிலையில் பிம் கேர்ஸ் நிதியின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையை (audit report) சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>மேலும் அந்த பதிவில், “கொரோனா காலத்தில் நன்கொடையாக வசூலிக்கப்பட்ட ரூ.8,452 கோடியில் வெறும் 0.01 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மாநில பொருளாதார காப்பக நிதி ஏன் இவ்வளவு பெரிய தொகையை பயன்படுத்தாமல் முடக்கி வைத்துள்ளது.</p><p>இந்த நிதியை வசூலித்த முகமைகள், ரூ.324 கோடியை திருப்பி அளித்துள்ளன (refund). ஆனால் இந்த பணம் எதற்காகவும், ஏன் திருப்பி அளிக்கப்பட்டது என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை. எந்த முகமை பணத்தை திருப்பி அளித்தது? பழுதடைந்த உபகரணங்களுக்கான பொறுப்பில் இருந்து தப்பிக்கவா இந்த பணம் திருப்பி அளிக்கப்பட்டது.</p><p>தணிக்கை அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள குறிப்புகள் ஏன் பதிவேற்றப்படவில்லை. பேரிடர்களின் போது குடிமக்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு முகமை, வெளிநாட்டு ஆதாரங்கள் உட்பட ஆயிரக்கணக்கான கோடிகளை திரட்டியுள்ளது.</p><p>ஆனால் அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. பி.எம்.கேர்ஸ் நிதியானது தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு தகவல்களை தெரிவிக்க மறுப்பதன் மூலம், பொதுமக்களின் பார்வையில் இருந்து தொடர்ந்து தப்பித்து வருகிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எஸ்.பி.ஐ ஏடிஎம் ரூ.1.93 கோடி மோசடி வழக்கு: முன்னாள் வங்கி அதிகாரியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது குஜராத் உயர் நீதிமன்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sbi-atm-rs-1-93-crore-fraud-case-gujarat-high-court-rejects-bail-of-former-bank-officer</link><comments>https://www.maalaimalar.com/news/national/sbi-atm-rs-1-93-crore-fraud-case-gujarat-high-court-rejects-bail-of-former-bank-officer#comments</comments><guid isPermaLink="false">59a0579b-9890-40e8-a729-9c3ee58505ec</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:19:52 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:19:52.198Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cybercrime,GujaratHighCourt,FinancialCrime,CrimeNews,ATMScam,குஜராத்உயர்நீதிமன்றம்,ஏடிஎம்மோசடி,வங்கிமோசடி,நிதிமுறைகேடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/yw68y88s/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GujaratHighCourt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/yw68y88s/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா மாவட்டம் ராஜ்பிப்லா எஸ்பிஐ கிளை ஏடிஎம் மற்றும் வங்கி மென்பொருளில் மோசடி செய்து ரூ.1.93 கோடியை சுருட்டிய வங்கி அதிகாரியின் இரண்டாவது ஜாமீன் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.</p><h2>வங்கி<strong>யில் நடந்த முறைகே</strong>டு </h2><p>குஜராத் ராஜ்பிப்லா <a href="https://www.maalaimalar.com/news/national/103-year-old-woman-donates-life-savings-for-assam-flood-victims">எஸ்பிஐ</a> கிளையில் கேஷ் ஆஃபீசராக பணியாற்றிய பாங்மோய் சக்ரவர்த்தி, வங்கியின் பணக் பெட்டகத்திலிருந்து பணத்தை எடுத்து ஏடிஎம் மற்றும் ரொக்க வைப்பு இயந்திரங்களில் நிரப்பும் பொறுப்பில் இருந்தார். அவர் தனது நிர்வாக அதிகாரப்பூர்வ உள்நுழைவு சான்றுகளைப் பயன்படுத்தி, ஏடிஎம் அமைப்பில் குறைந்தபட்ச இருப்புத் தொகை காட்டுவது போல் மென்பொருளை மாற்றி அமைத்து, பெரும் தொகையை ரகசியமாகத் திருடி வந்துள்ளார். மேலும், இந்த முறைகேட்டை மறைப்பதற்காக வங்கியின் மைய வங்கியியல் அமைப்பில் போலி வைப்புத் தொகைப் பதிவுகளை அவர் உருவாக்கியுள்ளார்.</p><h2>எந்தெந்த ஏ<strong>டிஎம்களில் எவ்வள</strong>வு பணம் கைமாறியது?</h2><p>விசாரணையில் அவர் நான்கு முக்கிய ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.1.93 கோடியைச் சுருட்டியது கண்டறியப்பட்டது, ராஜ்பிப்லா ஸ்டேஷன் ரோட்டில் உள்ள ஏடிஎம்மில் ரூ.39.98 லட்சம், போய்ச்சாவில் உள்ள சுவாமிநாராயண் குருகுல் ஏடிஎம்மில் ரூ.39.92 லட்சம், ஏடிஎம் எண் 465624-ல் இருந்து ரூ.62 லட்சம், சந்தோஷ் சவுக்தி ஏடிஎம் எண் 465625-ல் இருந்து ரூ.51.64 லட்சம் கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>பணப்ப<strong>ரிமாற்றம்</strong></h2><p>சக்ரவர்த்தி திருடிய தொகையை உத்ரபிரதேசம், பீஹார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள தனது உறவினர்களின் வங்கிச் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். அங்கிருந்து UPI, RTGS மற்றும் NEFT மூலமாக ஐசிஐசிஐ வங்கி கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பியுள்ளார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் ரூ.2.34 கோடி மதிப்பிலான பணப்பரிவர்த்தனைகள் சந்தேகத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>அக்டோபர் 17, 2025 அன்று அவர் நஸ்வாடி கிளைக்கு மாற்றப்பட்ட போதிலும், நவம்பர் 6 வரை அவரது கேஷ் ஆஃபீசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் செயல்பாட்டில் இருந்துள்ளது. இதன் மூலம் அக்டோபர் 28, 30 மற்றும் நவம்பர் 3 ஆகிய தேதிகளில் முறைகேடான பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. ஏடிஎம்களில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் அவரது மொபைல் இருப்பிடத் தரவு ஆகியவை குற்றத்தை உறுதிப்படுத்தும் வலுவான ஆதாரங்களாக அமைந்தன.</p><h2>நீதி<strong>மன்றம் உத்தரவு</strong></h2><p>பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நவம்பர் 28, 2025 முதல் சிறையில் இருக்கும் பாங்மோய் சக்ரவர்த்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் கோரினார். ஆனால், நீதிபதி எச்.டி.சுதார் அடங்கிய அமர்வு, "பொருளாதாரக் குற்றங்கள் திட்டமிட்டு நடத்தப்படும் வெள்ளைச் சட்டைக் குற்றங்கள்" என்று சுட்டிக்காட்டியது. மின்னணு மற்றும் நிதி ஆதாரங்கள் இதில் அடங்கியிருப்பதால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது எனக் கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.</p> ]]></content:encoded></item><item><title>போபாலில் &apos;ஜென் ஆல்பா&apos; பள்ளி மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/gen-alpha-students-protest-in-bhopal-over-school-merger-plan</link><comments>https://www.maalaimalar.com/news/national/gen-alpha-students-protest-in-bhopal-over-school-merger-plan#comments</comments><guid isPermaLink="false">0b1ccab4-6c18-4c4b-8612-0cecac126f01</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:14:49 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:14:49.118Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>NCERT,கேந்திரிய வித்யாலயா,Bhopal Protest,போபால் போராட்டம்,Gen Alpha Protest,Kendriya Vidyalaya Merger,DMS Bhopal,மாணவர்கள் எதிர்ப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ifecjnf4/Gen-Alpha-Protest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gen Alpha Protest ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ifecjnf4/Gen-Alpha-Protest?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">மத்திய பிரதேச</a> மாநிலம் போபாலில் உள்ள புகழ்பெற்ற பிராந்திய மாதிரிப் பள்ளியை, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE">கேந்திரிய வித்யாலயா </a>சங்கத்துடன் இணைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக, அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் வீதியில் இறங்கி தங்களின் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.</p><p>மத்திய அரசின் இந்தத் திடீர் முடிவால், பல தசாப்தங்கலாகத் தனித்துவமாகச் செயல்பட்டு வரும் தங்களது நிறுவனத்தின் நோக்கம் முற்றிலும் சிதைந்துவிடும் என்று மாணவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p><h2>முழக்கமிட்ட 'ஜென் ஆல்பா' தலைமுறை:</h2><p>போபாலில் உள்ள 'டெமான்ஸ்ட்ரேஷன் மல்டிபர்ப்பஸ் பள்ளி' வளாகத்திற்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள், கைகளில் பதாகைகளை ஏந்தி, இணைப்புத் திட்டத்திற்கு எதிராக ஆக்ரோஷமாக முழக்கங்களை எழுப்பினர். </p><p>தற்போதைய நவீனத் தலைமுறையைச் சேர்ந்த பள்ளி சிறுவர்கள், தங்களின் கல்வி உரிமைக்காகவும், பள்ளியின் தனித்துவத்திற்காகவும் திரண்டது போபால் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>போராட்டத்திற்கான காரணம் என்ன?</h2><p>மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மூலம் கடந்த 1965ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ரீஜனல் பள்ளிகள் தொடங்கப்பட்டன.</p><p>இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் (போபால், அஜ்மீர், மைசூர் மற்றும் புவனேஸ்வர்) மட்டுமே இத்தகைய மாதிரிப் பள்ளிகள் நிறுவப்பட்டன. வழக்கமான கல்வி முறையைப் பின்பற்றாமல், புதிய கற்பித்தல் முறைகளை உருவாக்குவதற்கும், கல்வியில் புதுமையான ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகளைச் செய்வதற்கும் இந்த ரீஜனல் பள்ளிகள் பிரத்யேகமாகத் தோற்றுவிக்கப்பட்டன. </p><p>தற்போது இந்தப் பள்ளியைப் பொதுவான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுடன் இணைப்பதன் மூலம், இதன் ஆராய்ச்சித் தன்மையும், தனித்துவமான அடையாளமும் முற்றிலும் அழிந்துவிடும் என்று மாணவர்கள் தரப்பில் கூறிவருகின்றனர்.</p><h2>பள்ளி முதல்வரிடம் மனு - தீவிரமடையும் போராட்டம்:</h2><p>போராட்டத்தின் இறுதியாக, மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிராந்தியக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எஸ்.கே. குப்தாவைச் சந்தித்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் அதிகாரப்பூர்வக் கோரிக்கை மனுவை அளித்தனர்.</p><p>அந்த மனுவில், "இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தங்களது பள்ளியை மேலும் வலுப்படுத்தி, கல்வி ஆராய்ச்சி மையமாகவே தொடர அனுமதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.</p><p>மேலும், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் உடனடியாகச் செவிசாய்க்கவில்லை எனில், அடுத்தடுத்த கட்டங்களாகத் தங்களது போராட்டத்தை மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகளை நோக்கித் தீவிரப்படுத்தப் போவதாகவும் பள்ளி மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து.. வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/fire-accident-in-multi-storey-hotel-9-killed-including-bangladeshis</link><comments>https://www.maalaimalar.com/news/national/fire-accident-in-multi-storey-hotel-9-killed-including-bangladeshis#comments</comments><guid isPermaLink="false">c6f27add-2c89-466e-9240-1065efd801ad</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:53:53 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:53:53.066Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,கொல்கத்தா,Kolkata,hotel fire accident,west bengal,தீ விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/tvbtkpha/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ Kolkata Hotel Fire]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/tvbtkpha/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்கத்தில்</a> 5 மாடி ஹோட்டலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வயது குழந்தை உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>கொல்கத்தாவில் தீ விபத்து</strong></h3><p>மேற்கு வங்க மாநிலம் கொல்கதாவில் உள்ள ஹோட்டலில் இன்று அதிகாலை 1:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.</p><p>இதையடுத்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தீ விபத்து</a> ஏற்பட்ட பகுதிக்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு,  காவல்துறையினரும் பேரிடர் மேலாண்மை துறையினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.</p><h3>வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் உயிரிழப்பு</h3><p>இந்த விபத்து குறித்து பேசிய அமைச்சர் கெளஷிக் செளத்ரி, “நாங்கள் இறந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த முயற்சித்து வருகிறோம். விபத்து ஏற்பட்ட இந்த கட்டிடத்தின் நிலை மிக மோசமாக உள்ளது.</p><p>தீ விபத்தில் நமது நாட்டை சேர்ந்தவர்களும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.</p><p>இந்த கட்டிடத்திற்குள் பல ஹோட்டல்கள் உள்ளன. இங்கு என்ன நடக்கிறது என்பதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.</p><p>தீ விபத்திற்கான காரணம் மின்கசிவாக இருக்கலாம். ஆனால் தடயவியல் பரிசோதனை மூலம்தான் தீ விபத்துக்கான தெளிவான காரணம் தெரியவரும்.</p><p>கட்டிட நிர்வாகம் அடிப்படை பாதுகாப்பு மற்றும் கட்டுமான விதிமுறைகளை பின்பற்றவில்லை. ஹோட்டலின் செயல்பாட்டில் பல முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.</p><h3><strong>மீட்பு நடவடிக்கை</strong></h3><p>கொல்கத்தாவில் நடந்த தீ விபத்து குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து 80 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>அடர்த்தியான புகை காரணமாக தீயணைப்பு வீரர்கள் படிக்கட்டுகளில் ஏறி மேல் தளங்களை அடைவது கடினமாக உள்ளது.</p><p>விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. </p><p>சிக்கியவர்களை மீட்பதும், தீ விபத்திற்கான காரணங்களை கண்டறிவதுமே எங்களின் முன்னுரிமையாக உள்ளது.</p><p>கட்டிட உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவருக்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறை தொடங்கி உள்ளது” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>103 வயதில் ரூ.1.54 லட்சம் நிதி உதவி அளித்த மூதாட்டி - தனது வாழ்நாள் சேமிப்பை அப்படியே வழங்கினார்! </title><link>https://www.maalaimalar.com/news/national/103-year-old-woman-donates-life-savings-for-assam-flood-victims</link><comments>https://www.maalaimalar.com/news/national/103-year-old-woman-donates-life-savings-for-assam-flood-victims#comments</comments><guid isPermaLink="false">57656c8e-3f5e-4615-abb8-f5d42b5b2181</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:51:21 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:51:21.129Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நிதியுதவி,Assam Flood,அசாம் வெள்ளம்,kanaklatha das,flood donation,கனக்லதா தாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/zq750yas/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அசாம் வெள்ள நிதியுதவி]]></media:title><media:description type="html"><![CDATA[ Assam Flood Relief]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/zq750yas/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">அசாமில்</a> வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நன்கொடையாக 1.54 லட்சம் ரூபாயை 103 வயது மூதாட்டி அளித்துள்ளார்.</p><h3>கமிஷனர் அலுவலகம் சென்ற மூதாட்டி</h3><p>அசாம் மாநிலம் சிராஜூலியில் உள்ள மஜ்ரோய்மாரி கிராமத்தில் கனக்லதா தாஸ் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். </p><p>சமீபத்தில் கிழக்கு அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து அந்த பகுதி மக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் குறித்து அறிந்து, 264 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கமிஷனர் அலுவலத்திற்கு மூதாட்டி சென்றார்.</p><h3>நிதி உதவி</h3><p>தான் பல ஆண்டுகளாக சேமித்த 1.54 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு கமிஷனர் அலுவலத்திற்கு நேரில் சென்றார்.</p><p>அங்கு, ஆணையர் மிருதுல் யாதவை நேரில் சந்தித்து, தனது வாழ்நாள் சேமிப்பில் இருந்து முழுவதுமாக எடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 77 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2,000 வீதம் நிதி உதவியாக வழங்கினார்.</p><h3><strong>மூதாட்டியிடம் ஆசி பெற்ற மாவட்ட ஆணையர்</strong></h3><p>மூதாட்டி அளித்த இந்த நிதியுதவி குறித்து மாவட்ட ஆணையர் கூறுகையில், “எனது இத்தனை ஆண்டுகால சேவையில், இத்தகைய தூய்மையான மற்றும் தன்னலமற்ற மனிதநேயமிக்க செயலை நான் அரிதாகவே பார்த்துள்ளேன்.</p><p>உண்மையான கருணை மற்றும் குடிமை பொறுப்பு என்றால் என்ன என்பதை கனகலதா தாஸ் எங்களுக்கு கற்று கொடுத்துள்ளார்.</p><p>இன்று எனக்கு இவர் அளித்த ஆசி, நான் பெறக்கூடிய எந்தவொரு கெளரவத்தையும் விட மதிப்பு வாய்ந்தது” என்று ஆணையர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சத்துணவில் உப்புக்கு பதிலாக டிடர்ஜென்ட் பவுடர் - 40 பள்ளி மாணவர்களின் உடல்நலம் பாதிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/detergent-mistaken-for-salt-in-school-meal-40-students-hospitalised</link><comments>https://www.maalaimalar.com/news/national/detergent-mistaken-for-salt-in-school-meal-40-students-hospitalised#comments</comments><guid isPermaLink="false">1b2b3180-62e6-4a7b-b3e3-297cdda77c4b</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:01:43 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:01:43.299Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,food poisoning,MidDay MealHorror,சத்துணவுவிபத்து,NalandaSchool,DetergentInFood,SchoolStudentsIll,மதியஉணவுஅலட்சியம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/m9373txt/Food-Poisoning" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Food Poisoning ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/m9373txt/Food-Poisoning?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகார் </a>மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய சத்துணவில், உப்புக்கு பதிலாக தவறுதலாக டிடர்ஜென்ட் பவுடர் கலக்கப்பட்டதால், உணவை உண்ட 40-க்கும் மேற்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பள்ளி மாணவர்கள்</a> கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>என்ன நடந்தது?</h2><p>நாலந்தா மாவட்டம் நூர்சராய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரசி நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது. அன்றைய தினம் மாணவர்களுக்கு சோயாபீன்ஸ் கூட்டு பரிமாறப்பட்டது.</p><p>உணவை சாப்பிட்ட மாணவர்கள், அதில் உப்பு குறைவாக இருப்பதாக சமையலரிடமும் ஆசிரியர்களிடமும் கூறியுள்ளனர். அப்போது, சமையல் அறையில் இருந்த ஊழியர்கள், உப்புக்கு பதிலாக அங்கிருந்த டிடர்ஜென்ட் பவுடரை தவறுதலாக எடுத்து மாணவர்களுக்குப் பரிமாறியுள்ளனர். </p><p>அது சலவை தூள் என்று தெரியாமல் மாணவர்களும் உணவோடு சேர்த்து அதனைச் சாப்பிட்டுள்ளனர்.</p><h2>மருத்துவமனையில் குவிந்த பெற்றோர்:</h2><p>டிடர்ஜென்ட் பவுடர் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, மாணவர்களுக்கு அடுத்தடுத்து கடுமையான வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 40 மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பள்ளியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.</p><p>உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் அனைத்து மாணவர்களையும் மீட்டு 'பீகார் ஷெரீஃப் மாதிரி மருத்துவமனைக்கு' சிகிச்சைக்காக அவசர அவசரமாக அனுமதித்தனர். </p><p>இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>அமைச்சரின் அதிரடி ஆய்வு மற்றும் எச்சரிக்கை:</h2><p>பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நாலந்தா மாவட்ட சிவில் சர்ஜன் டாக்டர் ஜெய் பிரகாஷ் சிங் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். "தற்போது அனைத்து குழந்தைகளும் ஆபத்து கட்டத்தைத் தாண்டி பாதுகாப்பாக உள்ளனர். தொடர்ந்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று சிவில் சர்ஜன் தெரிவித்துள்ளார்.</p><p>இச்சம்பவம் குறித்து அறிந்த பீகார் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷ்ரவண் குமார் நேரடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று, சிகிச்சை பெற்று வரும் மாணவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.</p><p>செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஷ்ரவண் குமார், "மாணவர்களுக்குத் தரமான சிகிச்சை வழங்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>பள்ளி மதிய உணவு தயாரிப்பிலும், அதனைப் பரிமாறுவதிலும் இவ்வளவு பெரிய அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.</p><h2>கேள்விக்குறியாகும் மாணவர்களின் பாதுகாப்பு:</h2><p>மதிய உணவு சமைக்கும் இடத்தில், உணவுப் பொருட்களுக்கு அருகில் டிடர்ஜென்ட் பவுடர் ஏன் வைக்கப்பட்டது? மற்றும் அதனைச் சோதிக்காமல் மாணவர்களுக்கு எப்படிப் பரிமாறினார்கள் என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் உயிருடன் விளையாடிய இந்த அலட்சியப் போக்கு பீகாரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பேய் பீதியால் அரசு விடுதியை காலி செய்து ஓடிய 600 மாணவர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/national/600-students-flee-maharashtra-ashram-school-amid-ghost-rumours</link><comments>https://www.maalaimalar.com/news/national/600-students-flee-maharashtra-ashram-school-amid-ghost-rumours#comments</comments><guid isPermaLink="false">8e38b867-a9de-4cd7-b185-b0331a24cf69</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:40:00 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:40:00.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள்,அரசு விடுதி,பேய் பீதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/6nbo4gct/ghost.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/6nbo4gct/ghost.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அரசு விடுதியில் பேய் உலாவுவதாக எழுந்த வதந்தியால் ஒரே நாளில் 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.</strong></em></p><h2><strong>நள்ளிரவில் கொலுசு சத்தம்</strong></h2><p>மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்தின் மேல்காட் மலைப்பகுதியில் உள்ள சிகல்தாராவில் டோமா அரசு பழங்குடியின உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவ- மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த மாதம் 22-ந்தேதி முதல், இந்த விடுதியில் தங்கியிருந்த சில மாணவிகள் தங்களுக்கு நள்ளிரவில் விசித்திரமான சத்தங்கள் கேட்பதாக பயத்துடன் காப்பாளரிடம் கூறினர். குறிப்பாக, நள்ளிரவு வேளையில் யாரோ கொலுசு அணிந்து நடப்பது போன்ற சத்தமும். விசித்திரமான முனங்கல்களும் கேட்பதாக தெரிவித்தனர்.</p><p>இந்தநிலையில் சில மாணவிகள் விசித்திரமாக நடந்து கொள்ள தொடங்கினர். சிலர் திடீரென மயங்கி விழுந்தும், சிலர் அழுதுகொண்டே ஆக்ரோஷமாக பயங்கர சத்தத்துடன் சிரிக்கும் விசித்திரமான அறிகுறிகளை வெளிப்படுத்தினர். இதனை நேரில் பார்த்த மற்ற மாணவர்களுக்கும், கிராம மக்களுக்கும் விடுதிக்குள் அமானுஷ்ய சக்தி அல்லது பேய் புகுந்துவிட்டதாக கூறிய வதந்தி காட்டுத்தீயாக பரவியது. எஸ்டேட் பகுதியில் உள்ள மரத்தை வெட்டியதால் தான் பேய் கோபமடைந்துவிட்டது என உள்ளூர் மக்களும் தங்களுக்குள் திகில் கதைகளை கிளப்பினர்.</p><h2><strong>ஒரே நாளில் காலியான விடுதி</strong></h2><p>பயம் உச்சக்கட்டத்தை எட்டியதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பற்ற சூழல் என நினைத்து ஒரே நாளில் அவசரமாக அழைத்துச்சென்றனர். 345 மாணவிகள், 263 மாணவர்கள் என மொத்தம் 608 பேர் தங்களது உடைமைளை தூக்கிக்கொண்டு இரவோடு இரவாக விடுதியை விட்டு வெளியேறி தங்களது சொந்த ஊர்களுக்கு ஓட்டம் பிடித்தனர்.</p><p>600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரே நாளில் மாயமாய் மறைந்து விடுதியே வெறிச்சோடியது மாவட்ட அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><h2><strong>மனநல நிபுணர்கள் விளக்கம்</strong></h2><p>இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து மாவட்ட அரசு பொது மருத்துவமனையின் மனநல மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் உடனடியாக அந்தப்பள்ளிக்கு விரைந்தனர். பாதிக்கப்பட்ட மாணவிகளை தீவிரமாக பரிசோதித்த டாக்டர்கள், அங்கு எந்தவொரு அமானுஷ்ய சக்தியோ அல்லது பேயோ இல்லை என்பதை திட்டவட்டமாக கூறினர். இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், "மாணவிகளுக்கு ஏற்பட்டது பேய் பிடிப்பு அல்ல; இது கடுமையான மனஅழுத்தம் மற்றும் பயத்தினால் உண்டாகும் 'மாஸ் ஹிஸ்டீரியா' (கூட்டு மனப்பிராந்தி) என்ற தற்காலிக மனநல பாதிப்பாகும். ஒருவர் பயப்படுவதை பார்த்து மற்றவர்களும் அதேபோல் கற்பனை செய்துகொண்டு பயப்படும் ஒரு மனநிலை இது" என்று அறிவியல் பூர்வமாக விளக்கினர். </p><p>இதனையடுத்து தற்போது சில மாணவர்கள் மீண்டும் விடுதிக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஐதராபாத்தில் 36 டன் கலப்பட நெய் பறிமுதல் - &apos;100 சதவீதம் சுத்தமான நெய்&apos; என்று விற்பனை செய்தது அம்பலம்</title><link>https://www.maalaimalar.com/news/national/36-tonnes-of-adulterated-ghee-seized-in-hyderabad</link><comments>https://www.maalaimalar.com/news/national/36-tonnes-of-adulterated-ghee-seized-in-hyderabad#comments</comments><guid isPermaLink="false">e250de10-e200-4167-84ef-f9e6fe0a31c8</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:10:12 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:10:12.080Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hyderabad,Telangana,Adulterated Ghee,ஐதராபாத்,தெலுங்கானா,கலப்பட நெய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/w6efsyif/ghee.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ghee]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/w6efsyif/ghee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தெலுங்கானாவில் 130 நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 36 டன் கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டது. 100 சதவீதம் சுத்தமான நெய் என்ற பெயரில் விற்பனை செய்தது அம்பலமானது.</strong></em></p> <h2>130 இடங்களில் சோதனை</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D">கலப்பட நெய்</a> தயாரிக்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து வந்த தகவலின்பேரில், ஐதராபாத்தில் சட்டவிரோதமாக கலப்பட நெய் தயாரிக்கும் மற்றும் வினியோகிக்கும் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.</p><p>உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து ஐதராபாத் உணவு கலப்பட கண்காணிப்பு குழு இச்சோதனையில் ஈடுபட்டது.</p> <p>39 நெய் தயாரிப்பு ஆலைகள், 91 நெய் விற்பனை கடைகள் உள்பட 130 இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது.</p><h2>சுத்தமான நெய்</h2><p>சோதனையின்போது, செயற்கையாக நெய் தயாரிப்பதற்கு கலப்படமான, தரம்குறைந்த உபகரணங்கள். கெடுதலான, அங்கீகாரம் பெறாத ரசாயன சேர்க்கை பொருட்கள் ஆகியவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.</p> <p>பால் அல்லாத பொருட்களான பாமாயில், வனஸ்பதி, கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர், ஸ்டார்ச், சுத்தமான நெய் போன்ற சுவை, மணம் அளிக்கும் செயற்கை வாசனை பொருட்கள் ஆகியவற்றை கலந்து நெய் தயாரித்தது தெரிய வந்தது.</p><p>100 சதவீதம் சுத்தமான நெய்', 'பிரீமியம் நெய்', இயற்கை நெய் என்ற போலியான பெயர்களில் இந்த நெய் சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பாக்கெட்டுகளில், பேட்ச் எண், உணவு தர நிர்ணய ஆணையத்தின் உரிமம், பகுப்பாய்வு சான்றிதழ், உற்பத்தி தேதி, பேக்கிங் மற்றும் காலாவதி தேதி போன்ற விவரங்கள் இடம்பெறவில்லை.</p> <p>தமிழ்நாட்டில் இருந்து வந்த மில்க் கிரீம் கலப்பட நெய்யில் 10 சதவீதம் முதல் 40 சதவீதம்வரை கலப்பட அளவு இருந்தது. கலப்படத்தின் அளவுக்கேற்ப உணவகம், டிபன் சென்டர்கள், இனிப்பு உற்பத்தி நிறுவனங்கள், ஆயுர்வேத கடைகள் ஆகியவற்றுக்கு விற்பனை செய்துள்ளனர்.</p><h2>கலப்பட நெய்</h2><p>கலப்பட நெய் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட மில்க் கிரீம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வினியோகஸ்தர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/telangana-rice-mills-raid-government-recovers-rs-700-crore-paddy-dues">தெலுங்கானா</a> மற்றும் அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது, மக்களின் உடல்நலனுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>பறிமுதல்</h2><p>மலிவான பொருட்களை வைத்து குறைந்த செலவில் தயாரித்து, அசல் நெய் என்று அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் ஈட்டி உள்ளனர்.</p> <p>36 டன் கலப்பட நெய், மில்க் கிரீம், பாமாயில், வனஸ்பதி, செயற்கை நெய் வாசனை பொருட்கள், ஸ்டார்ச், ரசாயன சேர்க்கை பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.</p><p>விரிவான ஆய்வுக்கூட ஆய்வுக்காக மாதிரிகளை சேகரித்து அனுப்பினர். வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>எங்களை தூக்கிலிட்டாலும் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவோம் - கர்நாடக காங்கிரஸ் தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/hang-us-we-will-sing-only-first-two-verses-of-vande-mataram-karnataka-congress-chief</link><comments>https://www.maalaimalar.com/news/national/hang-us-we-will-sing-only-first-two-verses-of-vande-mataram-karnataka-congress-chief#comments</comments><guid isPermaLink="false">c8f79eff-be88-464e-ac3f-59c0d320a4f1</guid><pubDate>Wed, 19 Aug 2026 02:47:39 +0000</pubDate><atom:updated>2026-08-19T02:47:39.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,கர்நாடகா,Karnataka,வந்தே மாதரம்,Vande Mataram,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/0jacagwa/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஹரி பிரசாத்]]></media:title><media:description type="html"><![CDATA[ Karnataka Congress Leader Hariprasath]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/0jacagwa/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ்</a> கட்சி எப்போதுமே வந்தே மாதரத்தின் இரண்டு சரணங்களை மட்டுமே பாடி வந்துள்ளது என்றும் இனிமேலும்  தொடர்ந்து அவ்வாறே பாடும் என்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.கே. ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார்.</strong></em></p><h3><strong>வந்தே மாதரம் சர்ச்சை</strong></h3><p>முன்னதாக <a href="https://www.maalaimalar.com/news/national/bjp-claims-sonia-gandhi-tried-to-stop-singing-of-vande-mataram-congress-denies">சுதந்திர தினத்தன்று</a> காங்கிரஸ் தலைமையகத்தில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டபோது, அந்த பாடலை பாடியவர் இரண்டு சரணங்களுக்கு மேல் பாடியபோது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கையை நீட்டி சைகை காட்டினார்.</p><p>இதையடுத்து வந்தே மாதரம் தேசிய பாடலை, பாடகர்களை முழுமையாக பாட அனுமதிக்காமல் சோனியா காந்தி தடுத்ததாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டினர்.</p><h3><strong>கர்நாடக காங்கிரஸ் தலைவர்</strong></h3><p>இதையடுத்து இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் ஹரி பிரசாத் கூறுகையில், “அவர்கள் ஏன் ஆசாத் ஹிந்த் ஜிந்தாபாத் அல்லது இன்குலாப் ஜிந்தாபாத் போன்ற முழக்கங்களை எழுப்புவதில்லை என்பதை விளக்கட்டும்.</p><p>வந்தே மாதரத்தின் முழு பதிப்பையும் பாடுமாறு மக்களை கட்டாயப்படுத்துவதன் மூலம், பாரதிய ஜனதா கட்சி ’ஜன கன மன’ என்ற தேசிய கீதத்தை அவமதிக்கிறது.</p><p>வந்தே மாதரத்தை தேசிய கீதமாக மாற்றுவதற்கு சங் பரிவார் திட்டமிட்டு வருகிறது.</p><p>பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தங்களது அலுவலகங்களில் இந்த பாடலை எத்தனை முறை பாடுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும்.</p><p>அவர்கள் எங்களை தூக்கில் இடட்டும், நாங்கள் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவோம். அந்த பாடலின் இரண்டு சரணங்களுக்கு மேல் நாங்கள் ஒருபோதும் பாடமாட்டோம்.</p><p>ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட்டிலும் நாங்கள் இரண்டு சரணங்களை மட்டுமே பாடியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் விஜய்?</title><link>https://www.maalaimalar.com/news/national/south-chief-ministers-conference-cm-vijay-likely-to-attend</link><comments>https://www.maalaimalar.com/news/national/south-chief-ministers-conference-cm-vijay-likely-to-attend#comments</comments><guid isPermaLink="false">6c92a152-8fc3-40f0-970c-5a3523dab5a9</guid><pubDate>Wed, 19 Aug 2026 00:27:32 +0000</pubDate><atom:updated>2026-08-19T00:27:32.969Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,cm vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/7k1ycajg/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/7k1ycajg/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய <a href="https://www.maalaimalar.com/news/national">உள்துறை அமைச்சகம்</a> சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. எனினும், கடந்த 2022-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறாமல் இருந்தது. </p><p>இந்தநிலையில், 31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு இன்று (புதன்கிழமை) சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதியில் தொடங்குகிறது.</p><p>இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்குகிறார். இதில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், கேரளம் முதலமைச்சர் திரி சதீசன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.</p><h2>முக்கிய விவகாரங்கள் விவாதம்:</h2><p>தென் மாநில முதலமைச்சர்களுடன், அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.</p><p>மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வள பகிர்வு, கல்வி, சுகாதாரம், தக வல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.</p><h2>சென்னையில் மத்திய அமைச்சர்:</h2><p>தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார்.</p><p>அதன்டி இன்று மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக சென்னை புறப்படும் மத்திய அமைச்சர் அமித் ஷா இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வரவேற்கிறார்கள். பின்னர் அவர், கார் மூலம் சாலை மார்க்கமாக கோவளம் செல்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>ரத்து செய்யப்பட்ட 44 பணி நியமனத் தேர்வுகளின் பட்டியலை வெளியிட்டது ஜார்க்கண்ட் அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-44-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-44-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">3c1b696c-f420-4468-b0b2-32bd543bcd8f</guid><pubDate>Tue, 18 Aug 2026 23:00:03 +0000</pubDate><atom:updated>2026-08-18T23:00:03.195Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்வுகள் ரத்து,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்,Exams Cancelled</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/vlamcen1/Jharkhand-protest-4.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/vlamcen1/Jharkhand-protest-4.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவர்களின் போராட்டங்களுக்கு மத்தியில், முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட 44 பணி நியமன தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியிட்டது.</p><p>இரவு நேரத்தில் எட்டு அறிவிப்புகளை வெளியிட்ட ஜார்க்கண்ட் அரசு, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளில் 2014-ஆம் ஆண்டு முதல் ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையம் (JPSC) மற்றும் வெளிமுகமை நிறுவனமான 'டி.எஸ்.ஆர். டேட்டா பிராசஸிங் பிரைவேட் லிமிடெட்' (TDPL) ஆகியவற்றால் நடத்தப்பட்ட தேர்வுகள் அடங்கும் என்று தெரிவித்தது.</p><h2>பட்டியல் சுருக்கம்:</h2><p>மருந்து ஆய்வாளர்கள், உதவி பேராசிரியர்கள், துணை ஆட்சியர்கள், பல் மருத்துவர்கள், உதவி பொறியாளர்கள், உரிமையியல் நீதிபதிகள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் வன வரம்பு அலுவலர்கள் (Forest Range Officers) உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வுகள் இதில் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றான 'ஜே.எஸ்.எஸ்.சி.-கூட்டுப் பட்டதாரி நிலை' (JSSC-CGL) தேர்வையும், அத்துடன் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகள் மற்றும் அதனால் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளையும் ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்தது.</p><h2>முதலமைச்சர் அறிவிப்பு:</h2><p>பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், JSSC-CGL தேர்வு மற்றும் 2014 முதல் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார்.</p><p>JSSC-CGL தேர்வு மற்றும் TDPL மூலம் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்ததைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் அமைச்சர்கள் தீபிகா பாண்டே சிங் மற்றும் இர்பான் அன்சாரி ஆகியோர் முன்னிலையில், ராஞ்சியில் உள்ள சதார் மருத்துவமனையில் மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.</p><p>மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமிதாப் கௌஷல் தலைமையில் தேர்வு சீர்திருத்த குழு ஒன்றை அமைப்பதாகவும் அவர் அறிவித்தார். பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வரும் வேலை தேடுபவர்கள், சி.பி.ஐ. விசாரணை மற்றும் JSSC-CGL தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>குருகிராமில் மலைபோல் குவிந்த குப்பைகள்: பொதுமக்கள் கடும் அவதி..!</title><link>https://www.maalaimalar.com/news/national/garbage-piles-up-at-gurugram-waste-points-amid-delay-in-lifting</link><comments>https://www.maalaimalar.com/news/national/garbage-piles-up-at-gurugram-waste-points-amid-delay-in-lifting#comments</comments><guid isPermaLink="false">e6c04dde-d943-4989-96c4-a84b11945409</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:26:50 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:26:50.344Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Garbage,gurugram,குருகிராம்,குப்பைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/xpnwd9vr/GarbageGurugram001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குர்கிராம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/xpnwd9vr/GarbageGurugram001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் மாநகராட்சி கண்ட்ஸா (Khandsa) பகுதியில் உள்ள உள்ளூர் இரண்டாம் நிலை குப்பை சேகரிப்பு மையத்திலிருந்து (SCP) பல மாதங்களாகக் குப்பைகள் முறையாக அகற்றப்படாததால், அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>நகரம் முழுவதும் உள்ள இரண்டாம் நிலை குப்பை சேகரிப்பு மையங்களில் (SCPs) குப்பைகள் மலைபோல் குவிந்து வருவதை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குப்பைகளை அகற்றுவதில் ஏற்படும் கடும் தாமதத்தால், குடியிருப்புப் பகுதிகள் சுகாதாரமற்ற சூழலாகவும், நோய்க்கிருமிகள் பெருகும் இடமாகவும் மாறியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><h2>குருகிராம் மாநகராட்சி</h2><p>குருகிராம் மாநகராட்சி (MCG) அதிகாரிகளின் கூற்றுப்படி, நகரின் 14 சேகரிப்பு மையங்களில் 12 மையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. பிரேம் பூரியில் உள்ள மையம் சில மாதங்களுக்கு முன்பே மூடப்பட்டது. செக்டார் 70-ல் உள்ள டுலிப் சௌக் (Tulip Chowk) அருகிலுள்ள மையமும் மூடப்பட்டு, அங்கிருந்து அகற்றப்பட வேண்டிய குப்பைகள் இனி 'பெரி வாலா பாக்' (Beri Wala Bagh) பகுதிக்கு மாற்றப்பட்டு அகற்றப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>வீடு வீடாகச் சேகரிக்கப்படும் குப்பைகள், பதப்படுத்துவதற்காக பந்த்வாரி (Bandhwari) பகுதிக்கு அனுப்பப்படுவதற்கு முன்னதாக, தரம் பிரிப்பதற்காகக் கொண்டு வரப்படும் இடைநிலை மையங்களாக இந்த SCP-கள் செயல்படுகின்றன.</p><p>கண்ட்ஸா பகுதியில், உள்ளூர் சேகரிப்பு மையத்திலிருந்து பல மாதங்களாகக் குப்பைகள் முறையாக அகற்றப்படாததால், அங்கு குப்பைகள் பெருமளவில் குவிந்துள்ளதாக மக்கள் கூறினர்.</p><p>"நான் அந்தச் சேகரிப்பு மையத்திற்கு அருகில் வசிக்கிறேன்.  குப்பைகள் போதுமான அளவு அகற்றப்படாததால் அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளதை நான் கவனித்திருக்கிறேன்," என்று அப்பகுதிவாசியான பிரசாந்த் குமார் கூறினார்.</p><p>சமீபத்திய மாதங்களில் பலமுறை தீ விபத்துகள் ஏற்பட்டதால், இந்த இடம் தீ விபத்து அபாயம் கொண்ட இடமாகவும் மாறியுள்ளது. கண்ட்ஸா மையத்தில் ஒரே வாரத்தில் இரண்டு முறை தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், ஒவ்வொன்றையும் அணைக்க 24 மணி நேரத்திற்கும் மேலான நேரம் தேவைப்பட்டதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகின.</p><p>செக்டார் 110 மற்றும் பாலம் விஹார் (Palam Vihar) பகுதிகளிலிருந்தும் இதேபோன்ற புகார்கள் எழுந்துள்ளன. அங்குள்ள 'பாஜ்கேரா' (Bajghera) சேகரிப்பு மையத்தில், குப்பை சேகரிப்பிற்கும் அதை அகற்றுவதற்கும் இடையே பெரும் இடைவெளி (சமச்சீரற்ற நிலை) இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.</p><p>"குப்பையைக் கொட்டுவதற்கு ஐந்து லாரிகள் வந்தால், அதை அகற்றுவதற்கு ஒரே ஒரு லாரி மட்டுமே வருகிறது. மழைக்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகிறது. அந்த இடம் முழுவதும் தண்ணீர் தேங்கிவிடுவதால், அப்பகுதி மக்களுக்கும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அது ஆபத்தானதாகவும் சுகாதாரமற்றதாகவும் மாறுகிறது" என்று செக்டார் 110-ஐச் சேர்ந்த பாரத் நைன் கூறினார்.</p><p>செக்டார் 21-ல், கார்டர்புரி (Carterpuri) சேகரிப்பு மையத்தில் தண்ணீர் தேங்கியதால், பல நாட்களாக வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது. "மழைநீரால் அந்த இடத்தின் நிலை மோசமாக இருந்ததால், புதிதாகக் குப்பைகளைக் கொட்ட முடியவில்லை என்று தொழிலாளர்கள் கூறினர்" என்று செக்டார் 21 குடியிருப்போர் நலச் சங்கத்தின் (RWA) பொதுச் செயலாளர் குந்தன் லால் சர்மா தெரிவித்தார். தண்ணீர் வெளியேற்றப்பட்ட பின்னரே அந்த இடத்தில் குப்பைகளைக் கொட்டும் பணியை மீண்டும் தொடங்க முடிந்தது என்று ஷர்மா மேலும் கூறினார்.</p><p>NH-48 சாலையில் அமைந்துள்ள, நகரத்தின் மிகப்பெரிய குப்பை சேகரிப்பு மையமான பெரி வாலா பாக், குடியிருப்பு வளாகங்களிலிருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது என்றும், அங்கு டிராக்டர்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன என்றும் அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>வரலாறு காணாத உச்சத்தில் சர்க்கரை விலை – வரியில்லா இறக்குமதிக்கு மத்திய அரசு அதிரடித் திட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sugar-prices-hit-unprecedented-high-centre-plans-duty-free-import</link><comments>https://www.maalaimalar.com/news/national/sugar-prices-hit-unprecedented-high-centre-plans-duty-free-import#comments</comments><guid isPermaLink="false">dde6954c-1fc4-425d-a4b7-9c227ec30bb5</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:21:39 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:21:39.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SugarPriceSpike,சர்க்கரைவிலை உயர்வு,India Sugar Imports,Duty Free Imports,வரியில்லா இறக்குமதி,Government Measures,Sugar Shortage</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/4c21yzav/Sugar-Price-Spike" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sugar Price Spike ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/4c21yzav/Sugar-Price-Spike?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் வரவிருக்கும் தொடர் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88">சர்க்கரை</a>யின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் அதன் விலை அதிரடியாக உயர்ந்து வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. </p><p>இதனைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரை விநியோகத்தை அதிகரிக்கவும் "வரியில்லா சர்க்கரை இறக்குமதி" உள்ளிட்ட பல்வேறு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81"> மத்திய அரசு</a> தீவிரமாக ஆலோசித்து வருகிறது.</p><h2>ஒரே மாதத்தில் 20% விலை உயர்வு!</h2><p>இந்தியாவின் முக்கிய சர்க்கரை வர்த்தக மையங்களில் ஒன்றான மகாராஷ்டிராவின் கோலாப்பூரில், மொத்த விற்பனையில் 100 கிலோ (ஒரு குவிண்டால்) சர்க்கரையின் விலை நடப்பு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை சுமார் 20% வரை உயர்ந்துள்ளது.</p><p>தற்போது சர்க்கரை விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.5,350 என்ற வரலாற்றுச் சாதனை அளவைத் தொட்டுள்ளது. உள்நாட்டில் சர்க்கரை இருப்பு போதுமான அளவு இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், சந்தையில் சர்க்கரைக்கான தட்டுப்பாடு நிலவுவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.</p><h2>பண்டிகைக் கால தட்டுப்பாடே காரணம்</h2><p>ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி போன்ற முக்கியப் பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால், இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் தயாரிப்பிற்கு சர்க்கரையின் தேவை மிக அதிகமாக இருக்கும். </p><p>இந்த திடீர் தேவையைச் சமாளிக்க, வெளிநாடுகளில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்வது மட்டுமே தற்போதைய ஒரே தீர்வு என மும்பை சர்க்கரை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><h2>விலையைக் குறைக்க மத்திய அரசு கையில் எடுக்கும் 4 முக்கிய ஆயுதங்கள்</h2><p>சர்க்கரை விலையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தனி ஒரு நடவடிக்கையை மட்டும் நம்பியிருக்காமல், பல்வேறு உத்திகளைப் பரிசீலித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கான இறக்குமதி வரியைக் குறைத்து, குறைந்த விலையில் சர்க்கரை கிடைக்க வழிவகை செய்தல். </p><p>இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் சர்க்கரையை பெரிய அளவில் இறக்குமதி செய்யாத நிலையில், தற்போது இந்த முடிவை எடுக்க அரசு முன்வந்துள்ளது. பெரிய மொத்த வியாபாரிகள் சர்க்கரையைப் பதுக்கி வைத்துச் செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்குவதைத் தடுக்க, அவர்கள் எவ்வளவு சர்க்கரையை இருப்பு வைக்கலாம் என்பதற்கான உச்ச வரம்பைக் குறைப்பது.</p><p>சர்க்கரை ஆலைகள் மாதந்தோறும் உள்நாட்டுச் சந்தைக்கு விடுதலை செய்யும் சர்க்கரையின் அளவை அதிகரிப்பது. அக்டோபர் முதல் தொடங்கவுள்ள புதிய கரும்புப் பருவத்தில், எத்தனால் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்படும் கரும்பின் அளவைக் குறைத்து, அதை முழுமையாகச் சர்க்கரை உற்பத்திக்குத் திருப்புவது. இதன் மூலம் சர்க்கரை உற்பத்தி இந்தியாவில் அதிகரிக்கும்.</p><p>உலகிலேயே சர்க்கரையை மிக அதிகமாகப் பயன்படுத்தும் நாடு இந்தியாதான் என்பதால், <a href="https://www.maalaimalar.com/topic/india">இந்தியா</a>வின் இந்த இறக்குமதி முடிவு சர்வதேச அளவிலும் சர்க்கரை சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இடஒதுக்கீடு இல்லை என்றால் பாஜக-வுக்கு தோல்வி: கூட்டணி கட்சி மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/if-bjp-fails-it-will-also-be-voted-out-up-minister-on-nishad-reservation</link><comments>https://www.maalaimalar.com/news/national/if-bjp-fails-it-will-also-be-voted-out-up-minister-on-nishad-reservation#comments</comments><guid isPermaLink="false">d94deba1-2f5a-427c-848a-6143df6eb218</guid><pubDate>Tue, 18 Aug 2026 12:54:58 +0000</pubDate><atom:updated>2026-08-18T12:54:58.995Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Yogi Adityanath,யோகி ஆதித்யநாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/i07b33pm/SanjayNishad.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சஞ்சய் நிஷாத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/i07b33pm/SanjayNishad.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு உ.பி.யில் நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையில் இரண்டு முறை பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க முனைப்புடன் உள்ளது.</p><p>இந்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள நிஷாத் கட்சியைச் சேர்ந்த சஞ்சய் நிஷாத் அமைச்சர், பாஜக இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் தோல்வியை சந்திக்கும் எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>நிஷாத் சமூகம்</h2><p>சஞ்சய் நிஷாத், நிஷாத் சமூகத்தை சேர்ந்தவர்கள். நிஷாத் சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p>உத்தர பிரதேச மாநில அமைச்சரவையில் இடம் பிடித்திருக்கும் மீன் வளத்துறை அமைச்சராக இருக்கும் சஞ்சய் நிஷாத் கூறியதாவது:-</p><p>யானை (பி.எஸ்.பி.), சைக்கிள் (சமாஜ்வாதி) மற்றும் கை (காங்கிரஸ்) நிஷாத் இட ஒதுக்கீட்டிற்கான கோரிக்கையை நிராகரித்தது. இதனால் அவர்கள் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள். பாஜக-வும் கோரிக்கையை நிறைவேற்ற தவறினால், அவர்களும் ஆட்சியில் இருந்து அகற்றப்படுவார்கள். எங்களுடைய மூதாதையர்கள் நாட்டின் சுதந்திரத்தை நிலைநாட்டியதுடன், அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படுவதையும் உறுதி செய்தனர்.</p><p>நாங்கள் இடஒதுக்கீட்டை விரும்புகிறோம். பாஜக அரசு இதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். முன்னதாகவே, இந்த விவகாரத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாங்கள் உங்களுடைய வழக்கறிஞர். பாஜக நீதிபதி. எனினும், எங்களுக்கு இடஒதுக்கு வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு சஞ்சய் நிஷாத் தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் சொந்த பூத்களை தயார் செய்யவும், கட்சியை வலுப்படுத்தவும் தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விவாகரத்து செய்யாமல் 2வது திருமணம் செய்தால் 20% சம்பளம் பிடித்தம் செய்யப்படும் - ஊழியர்களுக்கு அசாம் அரசு எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/20-salary-deduction-for-second-marriage-without-divorce-assam-govt-warns-employees</link><comments>https://www.maalaimalar.com/news/national/20-salary-deduction-for-second-marriage-without-divorce-assam-govt-warns-employees#comments</comments><guid isPermaLink="false">2d1a3e42-9527-4470-9fca-a93906541cfc</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:28:08 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:28:08.182Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Divorce,விவாகரத்து,Assam govt,CM Himanta Biswa Sarma,அசாம் அரசு,முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cru6yljy/New-Project-2026-08-18T164231.550.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவாகரத்து செய்யாமல் 2வது திருமணம் செய்தால் 20% சம்பளம் பிடித்தம் செய்யப்படும் - ஊழியர்களுக்கு அசாம் அரசு எச்சரிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cru6yljy/New-Project-2026-08-18T164231.550.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் பலதார மணமுறையை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. </p><p>அதன் ஒருபகுதியாக மாநிலத்தின் அரசு ஊழியர்கள் தங்களது முதல் மனைவியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அவர்களின் ஊதியத்திலிருந்து 20% பிடித்தம் செய்யப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. </p><p>பிடித்தம் செய்யப்படும் அந்தத் தொகை நேரடியாக முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இருப்பினும் இதற்காக முதல் மனைவி அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும்.</p><p>விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், சம்பளப் பிடித்தம் தொடரும். சட்டரீதியான நடவடிக்கைகள் முடியும் வரை முதல் மனைவி எந்தச் சிரமங்களையும் சந்திக்காமல் இருப்பதற்காக, அவருக்கு நிதி உதவி வழங்குவதே தங்களின் நோக்கம் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.</p><p>இந்த முடிவை தனியார் துறை ஊழியர்களுக்கும் செயல்படுத்தத் திட்டமிட்டப்பட்டுள்ளது. </p><p>ஏற்கனவே அசாமில் அரசு ஊழியர்கள் தங்களின் வயதான பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி உடன்பிறப்புகளை புறக்கணித்தால் அவர்களது சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அந்தத் தொகை நேரடியாக அவர்களின் பெற்றோர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>எச்1என்1 காய்ச்சல் அறிகுறி: 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு-பெங்களூரு பள்ளி திடீர் மூடல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/h1n1-flu-symptoms-over-500-students-affected-bengaluru-school-shuts</link><comments>https://www.maalaimalar.com/news/national/h1n1-flu-symptoms-over-500-students-affected-bengaluru-school-shuts#comments</comments><guid isPermaLink="false">8642b7aa-8662-4d7e-baf7-cc62336cce46</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:16:06 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:16:06.915Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,bengaluru,H1N1Flu,BengaluruSchoolNews,பெங்களூரு பள்ளி,எச்1என்1 காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hfd38dss/hi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ H1N1Flu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hfd38dss/hi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ரிச்சர்ட்ஸ் டவுன் பாட்டரி சாலையில் இயங்கி வரும் புகழ்பெற்ற கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் திடீரென காய்ச்சல் மற்றும் இருமல் தீவிரமாக பரவியுள்ளது. பள்ளியில் பயிலும் 2,500 மாணவர்களில் 500க்கும் மேற்பட்டோர் (சுமார் 20 சதவீதம்) காய்ச்சல், சளி, கடுமையான இருமல் மற்றும் உடல் வலியால் பாதிக்கப்பட்டு பள்ளிக்கு வரவில்லை. மேலும், 21 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் இதே அறிகுறிகளுடன் விடுப்பு எடுத்துள்ளனர்.</p><h2>உறுதியா<strong>ன எச்1என்</strong>1 தொற்றுகள்</h2><p>பள்ளியின் முதலுதவி மையத்திற்கு 137 மாணவர்கள் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக வந்ததை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு பேருக்கு H1N1 / Swine Flu வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/less-painful-lethal-injection-for-death-penalty-supreme-court-says-no">வைரஸ்</a> மேலும் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 18 வரை பள்ளி வளாகத்தில் நேரடி வகுப்புகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><h2>பள்ளி <strong>சுற்றியுள்ள சுகாதார சீர்கேடு காரண</strong>ம்?</h2><p>பள்ளி நிர்வாகம் மாநகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில், பள்ளி வளாகத்தை சுற்றி அனுமதியின்றி செயல்படும் தெருவோர உணவகங்களே இந்த சுகாதார சீர்கேட்டிற்கு காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளது. </p><p>நடைபாதைகளை ஆக்கிரமித்து விற்கப்படும் உணவுப் பொருட்கள், கொட்டப்படும் கழிவுகள் மற்றும் அதனால் சேரும் எலிகள் மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பள்ளி வளாகத்திலிருந்து 50 மீட்டர் சுற்றளவில் சுகாதாரமற்ற உணவுகள் விற்கப்படுவதைத் தடுக்கவும், சட்டவிரோத கடைகளை உடனடியாக அகற்றவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “உங்கள் வேலையை பாருங்கள்”
தமிழ்நாட்டிற்கு கர்நாடக முதலமைச்சர் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/three-tamils-shot-dead-mind-your-own-businesskarnataka-chief-minister-criticizes-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/national/three-tamils-shot-dead-mind-your-own-businesskarnataka-chief-minister-criticizes-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">8ea1d26d-22b7-44c9-8ae0-7b80f6874089</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:05:06 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:05:06.336Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,டி.கே.சிவகுமார்,joseph vijay,D.K. Shivakumar,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/nqt7ltwp/New-Project-2026-08-18T163153.791.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “உங்கள் வேலையை பாருங்கள்”
தமிழ்நாட்டிற்கு கர்நாடக முதலமைச்சர் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/nqt7ltwp/New-Project-2026-08-18T163153.791.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் விஜய் இது ஒரு படுகொலை என்றும், இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு கொடுக்கும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். </p><p>மேலும் மற்ற தமிழ்நாடு தலைவர்களும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.</p><h2>டி.கே.சிவக்குமார் கண்டனம்</h2><p>இந்நிலையில் தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளுக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:-</p><p>“இது ஒரு கூட்டாட்சி அமைப்பு. எந்தவொரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது. நான் தமிழ்நாடு விவகாரங்களில் ஒருபோதும் தலையிட்டதில்லை, மேலும் உங்கள் நிர்வாகம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவும் இல்லை.  </p><p>ஒவ்வொரு மாநிலமும் அதற்கே உரிய சவால்களை எதிர்கொள்கிறது. கர்நாடகாவின் சட்டம், ஒழுங்கு விவகாரம் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். </p><p>எங்கள் மாநிலத்தைப் பாதுகாப்பது எப்படி என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் உங்கள் வேலையை செய்யுங்கள், நாங்கள் எங்கள் வேலையைச் செய்வோம். </p><p>கர்நாடகாவின் நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு விஷயங்களில் தலையிடக் கூடாது.” என தெரிவித்தார். </p><p>இவ்வாறு டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>IT வேலையை உதறிவிட்டு காளான் விவசாயம் : மாதம் ரூ.10 லட்சம் சம்பாதிக்கும் பி.டெக் பட்டதாரி!</title><link>https://www.maalaimalar.com/news/national/btech-graduate-quits-it-job-earns-10-lakh-a-month-from-mushroom-farming</link><comments>https://www.maalaimalar.com/news/national/btech-graduate-quits-it-job-earns-10-lakh-a-month-from-mushroom-farming#comments</comments><guid isPermaLink="false">e788772d-c520-477a-a5c4-98ca0d859f06</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:28:57 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:28:57.716Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mushroom Farming,காளான் விவசாயம்,ITtoAgriculture,BTechFarmer,பிடெக் விவசாயி,Ganga Bhumi Mushrooms,Agripreneurship</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/jdtta0z7/Mushroom-Farming" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mushroom Farming ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/jdtta0z7/Mushroom-Farming?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுவாகப் பொறியியல் படிக்கும் இளைஞர்களின் இலக்கு ஒரு நல்ல ஐடி நிறுவனத்தில் சேர்ந்து கைநிறையச் சம்பாதிப்பதாகத் தான் இருக்கும். </p><p>ஆனால், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE">ஒடிசா</a>வைச் சேர்ந்த விக்ரம்தேவ் மஹாபத்ரா என்ற இளைஞர், 14 ஆண்டுகால தனது வெற்றிகரமான கார்ப்பரேட் ஐடி வாழ்க்கையைத் துறந்து, சொந்த ஊரில் காளான் விவசாயம் செய்து மாதம் 10 லட்ச ரூபாய்க்கும் மேல் லாபம் ஈட்டி சாதனை படைத்து வருகிறார்.</p><h2>14 ஆண்டுகால ஐடி வாழ்க்கை</h2><p>ஒடிசாவின் நபரங்பூர் பகுதியைச் சேர்ந்த விக்ரம்தேவ், கடந்த 2012-ஆம் ஆண்டு பிஜு பட்நாயக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 'எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்' பிரிவில் பி.டெக் முடித்தார். </p><p>படிப்பை முடித்தவுடன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">ஐடி துறை</a>யில் கால்பதித்த அவர், அடுத்த 14 ஆண்டுகளில் மைண்ட்ட்ரீ, செரோல் டெக்னாலஜிஸ் மற்றும் எல்டிஐமைண்ட்ட்ரீ போன்ற இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் பல்வேறு உயர் பொறுப்புகளில் மிக வெற்றிகரமாகப் பணியாற்றினார்.</p><h2>கார்ப்பரேட் டூ விவசாயம் எப்படி?</h2><p>கார்ப்பரேட் வாழ்க்கையில் நல்ல வருமானம் கிடைத்தாலும், சொந்த ஊருக்குச் சென்று சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் விக்ரம்தேவிடம் இருந்தது. </p><p>ஒருகட்டத்தில் தனது ஐடி வேலையை ராஜினாமா செய்த அவர், தனது சொந்த ஊரான நபரங்பூருக்குத் திரும்பினார். அங்கு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வணிக வாய்ப்புகளை ஆராய்ந்தவர், காளான் வளர்ப்பைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். </p><p>அதன்படி, 'கங்கா பூமி மஷ்ரூம்ஸ்' என்ற வணிக ரீதியிலான காளான் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் மையத்தைத் தொடங்கினார்.</p><h2>தினசரி 600 கிலோ உற்பத்தி; மாதம் 10 லட்சம் லாபம்!</h2><p>நவீன தொழில்நுட்பங்களை விவசாயத்தில் புகுத்திய விக்ரம்தேவின் பண்ணை, தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இவரது பண்ணையில் ஒரு நாளைக்குச் சுமார் 500 முதல் 600 கிலோ வரை காளான்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. </p><p>இது ஒரு மாதத்திற்கு 15 முதல் 18 டன்கள் ஆகும். இங்கு விளையும் காளான்கள் ஒடிசா மாநிலத்தின் முக்கிய நகரங்களான பெர்ஹாம்பூர், புவனேசுவர் போன்ற பெரிய சந்தைகளுக்கு நேரடியாகக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. </p><p>அனைத்துப் பராமரிப்பு மற்றும் இதர செலவுகளும் போக, இந்த காளான் பண்ணை மூலம் மட்டுமே இவருக்கு மாதம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் நிகர லாபம் கிடைக்கிறது.</p><h2>24 கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு</h2><p>விக்ரம்தேவ் தனக்கான வருமானத்தை உருவாக்கியதோடு நிறுத்திக்கொள்ளாமல், தனது பகுதியைச் சேர்ந்த 24 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளார். மிக முக்கியமாக, அவரது பண்ணையில் பணிபுரியும் 24 ஊழியர்களில் 18 பேர் பெண்கள். </p><p>இதன் மூலம் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு அவர் வழிவகை செய்துள்ளார். பெருநகரங்களை நோக்கி வேலைக்காக ஓடாமல், சரியான திட்டமிடலும் சந்தை தேவையைப் புரிந்துகொள்ளும் திறனும் இருந்தால், நவீன விவசாயம் மூலம் சொந்த ஊரிலேயே மிகப்பெரிய தொழிலதிபராக மாற முடியும் என்பதற்கு விக்ரம்தேவ் மஹாபத்ராவின் இந்த பயணம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.</p>]]></content:encoded></item><item><title>ஞானேஷ் குமாரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லுங்கள்: டிரம்ப் பாராட்டிய நிலையில் காங்கிரஸ் பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/national/take-gyanesh-kumar-to-us-congress-jibe-after-trump-praises-indian-polls</link><comments>https://www.maalaimalar.com/news/national/take-gyanesh-kumar-to-us-congress-jibe-after-trump-praises-indian-polls#comments</comments><guid isPermaLink="false">320eeadc-b12a-41b0-8f53-d7146911a14e</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:05:38 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:05:38.960Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,டொனால்டு டிரம்ப்,Donald Trump,ஞானேஷ் குமார்,Gyanesh Kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/4z4drtwb/DonaldTrumpPawanKherra.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டொனால்டு டிரம்ப்- பவன் கெர்ரா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/4z4drtwb/DonaldTrumpPawanKherra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய தேர்தல் ஆணையத்தையும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரையும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெகுவாக பாராட்டியிருந்தார்.</p><p>டொனால்டு டிரம்ப் பாராட்டிய நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான பவன் கெர்ரா அதற்கு பதில் கொடுத்துள்ளார்.</p><h2>பவன் கெர்ரா</h2><p>பவன் கெர்ரா "அமெரிக்க அதிபர் டிரம்ப் ஞானேஷ் குமாரை அழைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் வாக்கு இயந்திரங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக பவன் கெர்ரா வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>அன்புள்ள டொனால்டு டிரம்ப் அவர்களே, தயவு செய்து ஞானேஷ் குமாரை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லுங்கள். அவரையே அங்கேயே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக கிடைக்கும் விமானத்தில் எங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் (EVMs) நாங்கள் அனுப்பி வைக்கிறோம். நீங்கள் எங்களுக்கு இழைத்த அவமானங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்குப் பதிலாக, நாங்கள் உங்களுக்குச் செய்யக்கூடிய மிகச்சிறிய கைமாறு இதுவே. அன்புடன் இந்தியா.</p><p>இவ்வாறு பவன் கெர்ரா தெரிவித்துள்ளார்.</p><h2>டொனால்டு டிரம்ப்</h2><p>முன்னதாக டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் "இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ் குமார் எங்கள் நிர்வாகத்திடம் ஒரு கேள்வியை எழுப்பினார். அது செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படித் தேர்தல்களை நடத்த முடியும்? என்பதுதான்.</p><p>இந்தியாவின் கடந்த தேர்தலில் 64 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்றனர். ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே தபால் மூலம் வாக்களித்தனர். அதேவேளையில், ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள ஆவணத்தை கொண்டிருப்பது கட்டாயமாக இருந்தது. நாம் அமெரிக்காவை காக்கும் சட்டத்தை (The Save America Act) இப்போதே நிறைவேற்ற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.</p><p>வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி, கூட்டாட்சி தேர்தல்களை தீர்மானிப்பதில் அமெரிக்க குடிமக்கள் மட்டுமே பங்கேற்பதை உறுதி செய்வதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.</p><p>கூட்டாட்சி தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்வதற்கு முன்பு, வாக்காளர்கள் தங்கள் குடியுரிமைக்கான ஆதாரத்துடன், செல்லுபடியாகும் அடையாள அட்டையையும் வழங்க வேண்டும். அமெரிக்க தேர்தல்களை அமெரிக்கக் குடிமக்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என Save சட்ட முன்மொழிவு வலியுறுத்துகிறது.</p><h2>இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்</h2><p>இந்திய தேர்தல் ஆணையராக இருக்கும் ஞானேஷ் குமார், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது, சேர்த்தது தொடர்பாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டார் என காங்கிரஸ் விமர்சனம் செய்தது. அத்துடன் SIR மூலம் வாக்குகள் நீக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மரண தண்டனையை விஷ ஊசியால் நிறைவேற்ற உத்தரவிடக்கோரி மனு: &apos;No&apos; சொன்ன உச்சநீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/less-painful-lethal-injection-for-death-penalty-supreme-court-says-no</link><comments>https://www.maalaimalar.com/news/national/less-painful-lethal-injection-for-death-penalty-supreme-court-says-no#comments</comments><guid isPermaLink="false">dae5db6a-c9de-4c15-8abf-0739f37fa61a</guid><pubDate>Tue, 18 Aug 2026 09:28:59 +0000</pubDate><atom:updated>2026-08-18T09:28:59.018Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,மரண தண்டனை,Death Penalty,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/gsbw0c7k/SupremeCourt001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/gsbw0c7k/SupremeCourt001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் கொடூர குற்றத்திற்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் பல விதமாக மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மரண தண்டனை தூக்கு மூலம் நிறைவேற்றப்படுகிறது. இதனால் இந்தியாவில் மரண தண்டனை தூக்குத் தண்டனையாகவே அழைக்கப்படுகிறது.</p><h2>மரண தண்டனையை வேறு வழியில் நிறைவேற்ற வேண்டும்</h2><p>இந்த நிலையில் வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தூக்கு மூலம் தண்டனை நிறைவேற்றப்படுவதற்குப் பதிலாக விஷ ஊசி, துப்பாக்கியால் சுட்டு, மின்சாரம் பாய்ச்சு அல்லது வாயு அறை ஆகிய வழிகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட பரிந்துரை செய்யலாம்.</p><p>தூக்கு மூலம் தண்டனை நிறைவேற்றுவதன் மூலம் அதிகப்படியான வலி குற்றவாளிக்கு ஏற்படும். இது மனிதாபிமானமற்றது. கொடூரமானது. தூக்கு போட்ட பிறகு, சுமார் 40 நிமிடம் கழித்து அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்படும். இது துப்பாக்கியால் சுட்டு அல்லது விஷ ஊசி செலுத்தி நிறைவேற்றப்பட்டால் 5 நிமிடங்கள் போதுமானது.</p><h2>வலி அதிகமானது தூக்கு</h2><p>மரண தண்டனை விதிக்கப்படும்போது அது மிகக் குறைந்த அளவிலான வேதனையை ஏற்படுத்தும் வகையிலேயே நிறைவேற்றப்பட வேண்டும் என ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.</p><p>வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா தாக்கல் செய்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.</p><p>தூக்கிலிடுவதன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதன் அரசியலமைப்பு சட்ட செல்லுபடியை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போதைக்கு நாட்டில் தூக்கிலிடப்படும் முறையே தொடரும் எனத் தெரிவித்தனர்.</p><p>அத்துடன் தங்கள் தீர்ப்பே இறுதியானது அல்ல என்றும், மத்திய அரசு விரும்பினால் மாற்று வழிமுறைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நகர வாழ்க்கையை விட்டு மலை கிராமத்திற்கு சென்ற ஜென் இசட் இளைஞருக்கு கிடைத்த அனுபவங்கள்! </title><link>https://www.maalaimalar.com/news/national/the-experiences-of-a-gen-z-youth-who-left-city-life-for-a-mountain-village</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-experiences-of-a-gen-z-youth-who-left-city-life-for-a-mountain-village#comments</comments><guid isPermaLink="false">2d5d7047-c15a-4dd4-be6f-4c9f4b19605b</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:50:28 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:50:28.722Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜென் இசட்,Gen z,சுற்றுலா,Tourism,வைரல்,viral</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/akm1jt4x/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அஜய் சர்மா]]></media:title><media:description type="html"><![CDATA[ அஜய் சர்மா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/akm1jt4x/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வாழ்க்கை அதிவேகமாக செல்லும் மெட்ரோபோலிடன்களால் களைப்புற்று தொலைதூர பகுதியில் அமைதியான வேலையை தேட பலர்  விரும்புகின்றனர். </p><p>பலர் அப்படி நினைப்பதோடு நிறுத்திக்கொள்ளும் வேலையில் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிய ஜென் இசட் <a href="https://www.maalaimalar.com/topic/viral">கண்டெட் கிரியேட்டரான</a> அஜய் சர்மா, டெல்லியின் பரபரப்பான வாழ்க்கையை உதறிவிட்டு இமாச்சல பிரதேசத்தின் மனாலியில் உள்ள மலை கிராமமான சியால் கிராமத்திற்கு இந்த ஆண்டு மே மாதம் இடம்பெயர்ந்தார்.  </p><p>சரியாக 71 நாட்கள்  அங்கு கழித்து ஆகஸ்ட் 2 இல் டெல்லி திரும்பிய அஜய் சர்மா, அங்கு கழித்த நாட்களில் 55 வீடியோக்கள் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். </p><p>தற்போது மீண்டும் டெல்லி திரும்பியுள்ளது பற்றி அவர் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மனாலியில்  தான் இருந்த நாட்களை குறித்தும் அங்கிருந்த எளிமையான வாழ்க்கை முறை குறித்தும், சேகரித்த நினைவுகள் குறித்தும் அவர் விவரிக்கிறார்.  </p><h2>புதிய வாழ்க்கை</h2><p>யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மனாலிக்கு சென்ற புதிதில் பரீட்சயம் இல்லாத சாலைகளும் பரீட்சயமானதாகின. மலைகள் வீட்டில் இருக்கும் உணர்வை தரத் தொடங்கின. மறக்க முடியாத ஞாபகங்கள் கிடைத்தன. </p><p>ஆனால் மீண்டும் டெல்லி திரும்பியபோது நகர வாழ்க்கைக்கு தகவமைத்து கொள்வது கடினமானதாக ஆகிவிட்டது. இரண்டு மாதங்கள் ஒரு இடத்தில் இருந்துவிட்டு அதை விட்டு வருவது இத்தனை கடினமானது என்று நினைக்கவில்லை என கூறுகிறார் அஜய்.</p><p>ஆனால் தொடங்கப்படும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் இரு முடிவு இருக்கிறது. தற்போது தன் வாழ்வின் புதிய கட்டத்தை தொடங்கியது போல் உள்ளது என்றும் ஒப்புக்கொள்கிறார் அவர்.</p> <h2>அன்றாட செலவுகள்</h2><p>மனாலியின் அந்த கிராமத்தில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் மாதம் ரூ.14000 வாடகைக்கு (வை பை - கரண்ட் பில் சேர்த்து) செலவழித்திருக்கிறார்.</p><p>செலவை குறைக்க மாதம் ரூ.3500 க்கு பலசரக்கு வாங்கி வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டிருக்கிறார். சமைக்க தோணாத நாட்களில் வெளியே சாப்பிட வாரம் ரூ.500 மட்டும் ஒதுக்கியிருக்கிறார்.</p><p>உள்ளூரில் உள்ள ஒரு ஜிம்மிலும் அவர் சேர்ந்திருக்கிறார். அதற்கு கட்டணம் ரூ.1800. பேரம் பேசி ரூ.1500 என்று குறைத்திருக்கிறார். எங்கு சென்றாலும் நடந்தே செல்வதால் போக்குவரத்துக்கு பெரிதாக செலவாகவில்லை.</p><p>மொத்தமாக மாதம் அவருக்கு ரூ.21000 தான் செலவாகி உள்ளது.</p> <h2>இடர்பாடுகள்</h2><p>இந்த வாழ்க்கை அவருக்கு முழுவதும் சொர்கமாகவும் இல்லை. மலைக் காட்சி, காலை சூரியோதயம், பச்சைப் பசேல் இடங்களின் ஊடே செல்லும் சாலைகள், உள்ளூர் உணவுகள், நெருப்பை சுற்றி அமர்ந்திருக்கும் புதிய மனிதர்கள் என்பதே அவர் எதிர்பார்ப்பு.</p><p>அதில் பெரும்பாலானவற்றை அவர் பார்த்தபோதும், மலைகளுக்கு சுற்றுலா பயணியாக செல்வது என்பதும் அங்கேயே வாழ்வது என்பதும் முற்றிலும் வேறுபட்டது என்று அவர் உணர்ந்துள்ளார். அதையே அவரை சமூக வலைத்தளத்தில் பின்பற்றிய பலரும் கூறியுள்ளனர்.</p> <p>எந்த நேரத்திலும் இணையம் கிடைக்காமல் போகும். எதிர்பாராத நேரத்தில் மழை பேசியத் தொடங்கும், தானாகவே சமைத்து, அனைத்தையும் நிர்வகிக்க வேண்டும், மழைக்காகதில் சாலைகளின் மோசமான நிலை, சுற்றுலா தலங்களுக்கு நீண்ட மலையேற்றம் செய்ய வேண்டி இருப்பது, நடந்து செல்ல வேண்டியது ஆகியவற்றை அசௌகர்யமாக கருத்தியுள்ளார்.</p><p>டெல்லி திரும்பியதும் ஜூலை 3 அன்று தனது பயணம் குறித்த இந்த வீடியோவை அவர் பதிவிட்டுள்ள நிலையில் இதற்கு பலவிதமான கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>மேற்கு வங்கத்தின் இந்த நகரங்கள் ஆகஸ்ட் 18-இல் இந்தியாவுடன் இணைந்த தினத்தை கொண்டாடுவது ஏன்? - 1947இல் நடந்தது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-border-confusion-nadia-malda-and-dinajpur-mark-delayed-independence-on-august-18-as-bharat-bhukti-diwas</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-border-confusion-nadia-malda-and-dinajpur-mark-delayed-independence-on-august-18-as-bharat-bhukti-diwas#comments</comments><guid isPermaLink="false">439d426f-9d7c-41b7-9fbd-c13b79abb185</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:39:40 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:39:40.330Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,இந்தியா பாகிஸ்தான்,Independence Day,சுதந்திர தினம்,west bengal,India-Pakistan,partition,தேசப் பிரிவினை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cb37hw49/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுதந்திர தினம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சுதந்திர தினம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cb37hw49/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆகஸ்ட் 14 பாகிஸ்தானும், ஆகஸ்ட் 15 இந்தியாவும் தனது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இரு நாடுகளுக்கும் இது 80வது சுதந்திர தினம். 1947 <a href="https://www.maalaimalar.com/news/national/partition-horrors-remembrance-day-india-pakistan-division-victims-honoured-and-national-unity-stressed">தேசப் பிரிவினையால்</a> இந்தியா - பாகிஸ்தான் பிரிந்ததன் பின்னணியில் இந்த தேதி வித்தியாசம். </p><p>ஆனால் இந்தியாவின் மேற்கு வங்கத்தில்  உள்ள சில நகரங்கள் மட்டும் வருடந்தோறும் தாமதமாகவே சுதந்திர இந்தியாவில் இணைந்ததை கொண்டாடுகின்றன.</p> <h2>ஏன்?</h2><p>சர் சிரில் ராட்கிளிப் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோடுகளை வரையறுத்தார்.</p><p>ஒருங்கிணைந்த வங்காளமும் இந்த பிரிவினையால் துண்டாடப்பட்டது. கிழக்கில் இந்தியாவுக்குள் இருக்கும் வங்கம் மேற்கு வாங்கமாகவும், மறுபுறம் பாகிஸ்தானுக்கு சொந்தமானது கிழக்கு பாகிஸ்தானாகவும் பிரிக்கப்பட்டது.</p> <h2>குழப்பம்</h2><p>மேற்கு வங்கத்தின் நாடியா, மால்டா மற்றும் தினாஜ்பூர் (இப்போதைய பெயர்கள்) ஆகிய நகரங்களின் பெரும் பகுதிகள்  தாங்கள் இந்தியாவுக்குள் வருகிறோமா அல்லது கிழக்கு பாகிஸ்தானுக்குள் வருகிறோமா என்பது தெரியாமல் குழம்பின.</p><p>எல்லைக்கோடுகள் எங்கு பிரிக்கப்பட்டுள்ளன என்பது அதிகாரப்பூர்வமாக தெரியாததால், அப்பகுதிகள் கிழக்கு பாகிஸ்தானுடன் இணையக்கூடும் என கருதப்பட்டது. அங்கு 1947 சுதந்திரத்தின்போது பாகிஸ்தான் கொடிகளே ஏற்றப்பட்டன.</p><p>1947, ஆகஸ்ட் 17 மாலை வரை இந்தப் பகுதிகள் எந்த நாட்டிற்கு சொந்தம் என்பதில் பெரும் குழப்பம் நிலவியது.</p> <h2>கொடியேற்றம்</h2><p>அன்றைய தினம் இரவு ஆல் இந்தியா ரேடியோவில், சர் சிரில் ராட்கிளிப் தயாரித்த எல்லைப் வரையறை அறிக்கை வாசிக்கப்பட்டபோது தான், அவை இந்தியாவுக்குள் வருவது தெரியவந்தது.</p><p>நாடியாவின் ஆகிய மெஹெர்பூர், சுவாடங்கா, குஷ்டியா3 உட்பிரிவுகள் மட்டுமே கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்றன.</p><p>இதனைத் தொடர்ந்து, 1947, ஆகஸ்ட் 18 மதியம், அதாவது இந்தியாவின் பிற பகுதிகள் சுதந்திரம் அடைந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, அப்பகுதிகளில் பறந்த பாகிஸ்தான் கொடிகள் இறக்கப்பட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.</p><p>இன்றும் இந்த பகுதிகளில் ஆகஸ்ட் 18ஆம் தேதி, 'பாரத் புக்தி திவாஸ்' (பாரதத்துடன் சேர்ந்த நாள்) என்ற பெயரில் சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.</p><h2>கட்டுக்கதை</h2><p>சர் ராட்க்ளிப் தவறுதலாக இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளை கிழக்கு பாகிஸ்தானுக்கு ஒதுக்கி வரைபடம் வரைந்ததாகவும் அதை அறிந்த வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு, உடனடியாக வரைபடத்தை திருத்தி வரைய உத்தரவிட்டதால் தான் அறிவிப்பு தாமதமானதாகவும் ஒரு கதை கூறப்படுகிறது. ஆனால் அது பொய்யானது என வரலாற்றாய்வாளர்கள் மறுக்கின்றனர்.</p><h2>தாமதம் ஏன்?</h2><p>ராட்கிளிப் தனது எல்லைப் வரையறை அறிக்கையை வைஸ்ராய் மவுண்ட் பேட்டனிடம் ஆகஸ்ட் 12லேயே கையெழுத்திட்டு சமர்ப்பித்துவிட்டார்.</p><p>எல்லைப் பகிர்வை சுதந்திரத்திற்கு முன்பே அறிவித்தால் ஏற்கனவே நடந்து வந்த மதக் கலவரம் தீவிரமடையும் என மவுண்ட் பேட்டன் கருதினார். </p><p>இதனால் ராட்கிளிப் அறிக்கை ஆகஸ்ட் 17 அன்று 'தி கெஸட் ஆப் இந்தியா எக்ஸ்ட்ராஆர்டினரி' இதழில் வெளியிடப்படும் வரை ரகசியமாக வைக்கப்பட்டது.</p><p>எல்லை குறித்த தகவல்கள் இல்லாத அந்த 3 நாட்களில் முஸ்லிம் லீக் தொண்டர்கள் பல இடங்களில் பாகிஸ்தான் கொடிகளை ஏற்றினர்.  ஆகஸ்ட் 17 இந்தியா ரேடியோவில் அறிவிக்கப்பட்ட பின் தெளிவு ஏற்பட்டு ஆகஸ்ட் 18 இந்திய கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. </p>]]></content:encoded></item><item><title>மும்பையில் இன்ஸ்டாகிராம் நண்பனால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை- 17 வயது சிறுவர்கள் இருவர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/atrocity-against-14-year-old-girl-by-instagram-friend-in-mumbai</link><comments>https://www.maalaimalar.com/news/national/atrocity-against-14-year-old-girl-by-instagram-friend-in-mumbai#comments</comments><guid isPermaLink="false">14a37b8c-93a7-4333-8646-7b1c2fbca5f1</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:35:23 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:35:23.290Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sexual assault,போக்சோ சட்டம்,POCSOAct,MumbaiNews,SocialMediaSafety,InstagramWarning,மும்பை செய்திகள்,இன்ஸ்டாகிராம் எச்சரிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/mtfuqwic/pocso.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sexual assault of a minor girl]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/mtfuqwic/pocso.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-schools-major-reforms-vocational-education-class-9-third-language-mandatory">மும்பை</a> பெருநகரப் பகுதிக்கு உட்பட்ட பால்கர் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக 17 வயது சிறுவன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11-ஆம் தேதி, அவசர விஷயமாகப் பேச வேண்டும் எனக் கூறி, அந்தச் சிறுவன் சிறுமியை உள்ளூர் சால் பகுதிக்கு வரவழைத்துள்ளான்.</p><h2>பாலி<strong>யல் அத்துமீறல்</strong></h2><p>சிறுமி அங்கே சென்றபோது, அந்தச் சிறுவனும் அவனது 17 வயது நண்பனும் சேர்ந்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தை அவர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். </p><p>இச்சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது கூறினால், சிறுமியின் சகோதரனைக் கொன்றுவிடுவதாக இரு சிறுவர்களும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த சிறுமி யாரிடமும் இதுபற்றித் தெரிவிக்காமல் அமைதியாக இருந்துள்ளார்.</p><h2>வெளிச்ச<strong>த்திற்கு வந்த</strong> கொடூரம் </h2><p>இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி சிறுமியின் தாய்மாமன் இணையதளத்தில் உலாவிக் கொண்டிருந்த, அச்சிறுமி பாதிக்கப்பட்ட வீடியோவை ஆன்லைனில் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து சிறுமியிடம் விசாரிக்கப்பட்டு, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. </p><p>சிறுமியின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பால்கர் காவல்துறையினர், பாரதிய நியாய சன்ஹிதா, போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்து, குற்றச் செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவர்கள் இருவரையும் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி பள்ளிகளில் அதிரடி மாற்றம் : 9-ஆம் வகுப்பில் தொழிற்கல்வி... 3-வது மொழி கட்டாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-schools-major-reforms-vocational-education-class-9-third-language-mandatory</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-schools-major-reforms-vocational-education-class-9-third-language-mandatory#comments</comments><guid isPermaLink="false">79f89a32-95a0-408f-84ca-b599228627db</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:03:51 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:03:51.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,vocational education,டெல்லி,delhi EducationReform,Class9 Assessment,தொழிற்கல்வி கட்டாயம்,Third LanguageMandatory,DoECircular,Advanced MathsScience</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9w23ajv2/Delhi-EducationReform" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi EducationReform ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9w23ajv2/Delhi-EducationReform?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/delhi">டெல்லி</a> அரசுப் பள்ளிகளில் பயிலும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மற்றும் தேர்ச்சி முறையில் அதிரடி மாற்றங்களை டெல்லி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் 2026-27 கல்வியாண்டு முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளன.</p><p>மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அறிவை வளர்க்கும் நோக்கில் இந்த புதிய பாடத்திட்டமும், தேர்வு முறையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>6 முக்கிய பாடங்கள் கட்டாயம்</h2><p>புதிய கல்வி முறையின்படி, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் இனி 6 முக்கிய பாடங்களை கட்டாயம் படிக்க வேண்டும். மொழிப்பாடம் - 1, மொழிப்பாடம் - 2, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் தொழிற்கல்வி ஆகிய பாடங்களை கட்டாயம் பயில வேண்டும்.</p><p>மாணவர்கள் 10-ஆம் வகுப்பிற்கு தேர்ச்சி பெறுவதை இந்த 6 முக்கிய பாடங்களின் மதிப்பெண்களே தீர்மானிக்கும். மாணவர்களுக்கு சிறுவயதிலேயே வேலைவாய்ப்பு மற்றும் திறன் சார்ந்த கல்வியை வழங்க தொழிற்கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><h2>3-வது மொழி கட்டாயம்!</h2><p>8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படித்த அதே மூன்று மொழிகள் கொண்ட கூட்டணியே 9-ஆம் வகுப்பிலும் தொடரும். அதில் ஒரு மொழி 3-வது மொழியாக கருதப்படும்.இந்த 3-வது மொழிக்கான தேர்வு பள்ளி அளவிலேயே நடத்தப்படும். </p><p>மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்களுக்குப் பதிலாக 'தகுதி பெற்றார்' அல்லது 'தகுதி பெறவில்லை' என்பது மட்டும் குறிப்பிடப்படும்.</p><p>இதில் முக்கியமாக 9-ஆம் வகுப்பில் இந்த 3-வது மொழியில் தேர்ச்சி பெறாவிட்டாலும், மற்ற பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் மாணவர்கள் 10-ஆம் வகுப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்படுவார்கள். </p><p>ஆனால்,10-ஆம் வகுப்பில் படிக்கும்போதே 9-ஆம் வகுப்பின் இந்த மொழித்தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். 3-வது மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.</p><h2>கணிதம், அறிவியலில் புதிய 'Advanced' தேர்வுகள்</h2><p>தற்போது நடைமுறையில் உள்ள 'Mathematics Basic' மற்றும் 'Mathematics Standard' முறைகள் 2026-27 கல்வியாண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு நீக்கப்படுகின்றன. ஆனால், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பழைய முறை 2026-27-ல் தொடரும்.</p><p>அதற்குப் பதிலாக புதிய முறை அறிமுகமாகிறது. அனைத்து மாணவர்களுக்கும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் பொதுவான தேர்வு நடத்தப்படும். பாடப்புத்தகத்தைத் தாண்டி, கூடுதல் திறனை வளர்த்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள் Mathematics Advanced அல்லது Science Advanced (அல்லது இரண்டையும்) தேர்வு செய்து எழுதலாம். இந்த 'Advanced' தேர்வுகள் 25 மதிப்பெண்களுக்கு, 1 மணி நேரம் நடக்கும். </p><p>இதில் சிந்தனைத் திறனை சோதிக்கும் கேள்விகள் கேட்கப்படும். இதில் பெறும் மதிப்பெண்கள் மாணவர்களின் தேர்ச்சிக்கோ அல்லது மொத்த மதிப்பெண் சதவீதத்திற்கோ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. </p><p>ஆனால், இந்த 'Advanced' தேர்வில் 50% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் சாதனை அவர்களது மதிப்பெண் சான்றிதழில் தனியாகப் பதிவு செய்யப்படும்.</p><h2>புதிய பாடங்கள் மற்றும் AI அறிமுகம்</h2><p>'சமூகத்தில் தனிநபர்கள்', கலைக் கல்வி, உடற்கல்வி மற்றும் நல்வாழ்வு ஆகிய துறைகளும் பள்ளி அளவிலான மதிப்பீடுகளுடன் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. </p><p>கணினி சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடங்கள் 2026-27-ல் ஒரு சிறப்புப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் 2027-28 கல்வியாண்டு முதல் கட்டாயப் பாடமாக மாற்றப்படும்.</p><h2>தேர்ச்சி பெறுவதற்கான புதிய விதிகள் என்ன?</h2><p>9-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ஆம் வகுப்பிற்குச் செல்ல மாணவர்கள் 6 முக்கிய பாடங்களிலும், அகமதிப்பீடு மற்றும் எழுத்துத் தேர்வு ஆகிய இரண்டிலும் தனித்தனியாகக் குறைந்தது 33% மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆண்டு இறுதித் தேர்வில் மட்டும் குறைந்தது 25% மதிப்பெண்கள் எடுத்திருப்பது அவசியமாகும்.</p><h2>தோல்வி அடைந்தால் என்ன நடக்கும்?</h2><p>6 முக்கிய பாடங்களில் 3 பாடங்கள் வரை தோல்வி அடையும் மாணவர்கள், துணைத் தேர்வு எழுத தகுதியுடையவர்கள் ஆவர். துணைத் தேர்விலும் தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது தேர்ச்சி பெற முற்றிலும் தகுதி இல்லாத மாணவர்கள் 'Essential Repeat' (கட்டாய மறுபடி) பிரிவின் கீழ் வைக்கப்பட்டு, மீண்டும் அதே 9-ஆம் வகுப்பிலேயே படிக்க நேரிடும்.</p>]]></content:encoded></item><item><title>முற்றிலும் மாறுபட்ட உலகத்தைக் கண்டேன்: இந்தியாவின் கல்வி மற்றும் பண்பாட்டைப் பாராட்டிய ஜிம்பாப்வே இளைஞர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/i-saw-a-completely-different-world-zimbabwean-youth-praises-indias-education-and-culture</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-saw-a-completely-different-world-zimbabwean-youth-praises-indias-education-and-culture#comments</comments><guid isPermaLink="false">4ae704c0-eab5-430a-9263-67b5eba003eb</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:49:23 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:49:23.261Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,ஜிம்பாப்வே,Zimbabwean,India&apos;s medical sector,இந்திய மருத்துவத் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/m2phmwrk/india.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Zimbabwean ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/m2phmwrk/india.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கத்திய நாடுகளைத் தாண்டி தரமான கல்வியும், வாழ்க்கையை மாற்றும் வாய்ப்புகளும் இந்தியாவில் நிறைந்துள்ளன என்பதைத் தனது அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளதாகக் கூறுகிறார் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த கலும்பா முவாலே.</p><h2>வாய்ப்புகளை க<strong>ண்டு வியப்பு</strong></h2><p>உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா அல்லது ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளையே முதன்மையாகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், <a href="https://www.maalaimalar.com/news/national/aadi-month-over-wife-mother-in-law-surprise">இந்தியா</a>வுக்கு உயர்கல்விக்காக வந்த கலும்பா முவாலே, இங்குள்ள வாய்ப்புகளைக் கண்டு வியப்படைந்துள்ளார். </p><p>தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜிம்பாப்வேவில் பல்கலைக்கழகங்களில் சேருவது மிகவும் கடினமானது மற்றும் கடுமையான போட்டி நிறைந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பல்வேறு கட்டண அமைப்புகளில், எண்ணற்ற பாடப் பிரிவுகளுடன் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் செயல்பட்டு வருவதை அவர் பாராட்டியுள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவில் பயின்று வருவதைக் கண்டு தான் ஆச்சரியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>உலகத்த<strong>ரம் வாய்ந்த மருத்</strong>துவம் </h2><p>கல்வியைத் தவிர இந்தியாவின் மருத்துவத் துறை மற்றும் உணவு முறையையும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். ஜிம்பாப்வே நாட்டில் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் பெறுவது கடினம் மற்றும் அதிக செலவு பிடிக்கக்கூடியது என்றும், ஆனால் இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த உயர்தர சிகிச்சை மிக எளிதாகக் கிடைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>உணவு முறையைப் பொறுத்தவரை, ஜிம்பாப்வேயில் சாட்சா, அரிசி சாதம் மற்றும் காரத்திற்காக மிளகாய் மட்டுமே சேர்க்கப்பட்ட உணவுகள் பிரதானமாக இருக்கும். ஆனால் இந்தியாவில் தினமும் ஒரு புதிய சுவையை அனுபவிக்க முடியும் என்றும், சுவைகளின் பிரம்மாண்ட உலகமே இந்தியாவில் உணவில் நிறைந்துள்ளது என்றும் அவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.</p><h2>இணைய<strong>வாசிகளின் வரவே</strong>ற்பு</h2><p>கலும்பா முவாலே பகிர்ந்துள்ள இந்த வீடியோ 53 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்துள்ள பல இந்திய இணையவாசிகள், அவருக்கு நெகிழ்ச்சியான வரவேற்பை அளித்து வருகின்றனர். "அன்பும் பரபரப்பும் நிறைந்த இந்தியாவிற்கு உங்களை வரவேற்கிறோம், உங்கள் இந்திய வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள் என்று நம்புகிறோம்" எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1 கோடி கடத்தல் வழக்கு: 26 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-rs-1-crore-smuggling-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-rs-1-crore-smuggling-case#comments</comments><guid isPermaLink="false">3ec6c0bc-f350-433e-8be5-d8f55c4d9607</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:54:52 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:54:52.476Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கடத்தல் வழக்கு,delhi,Ghaziabad,டெல்லி,smuggling case,மீரட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cpdac862/smugling.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ smuggling case ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cpdac862/smugling.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற கடத்தல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாக காவல்துறையிடம் இருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த அமித் யாதவ் (57) என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டேராடூனில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.</p><h2>31 ஆண்டுகளு<strong>க்கு முந்தைய</strong> கடத்தல் சம்பவம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-death-penalty-row-muzaffarnagar-fast-track-judge-ravi-kumar-diwakar-awards-death-sentence-to-22-convicts-in-10-cases">டெல்லி </a>படேல் நகரைச் சேர்ந்த தொழிலதிபரின் மகனான ரிஷி சேத்தி என்பவர், 1995-ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று எய்ம்ஸ் இயக்குனர் குடியிருப்பு அருகே தனது காரில் அமர்ந்திருந்தபோது 3 முதல் 4 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டுக் கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் அவரை ரகசிய இடத்தில் அடைத்து வைத்து, அவரது குடும்பத்தினரிடம் 1 கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்டனர்.</p><h2>பொறி வைத்<strong>து பிடித்த</strong> போலீசார்</h2><p>காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, மீரட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் 10 லட்சம் ரூபாய் பணத்தை வைப்பதாகக் கடத்தல்காரர்களிடம் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 16, 1995 அன்று அப்பணத்தைப் பெற வந்த அமித் யாதவை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், காசியாபாத்தில் உள்ள வீட்டின் சேமிப்பு அறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த ரிஷி சேத்தி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.</p><h2>இ<strong>டைக்கால ஜாமீனில் தப்பித்</strong>தல்</h2><p>இந்த வழக்கில் 1999-ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றம் அமித் யாதவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, 2000-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவருக்கு ஒரு மாத இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் ஜாமீன் காலம் முடிந்ததும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பியோடினார்.</p><h2>பில்<strong>டர் வாழ்</strong>க்கை</h2><p>தலைமறைவான அமித் யாதவ், காசியாபாத் வாடகை வீட்டைக்காலி செய்துவிட்டு, பாக்பத்தில் இருந்த தனது பூர்வீகச் சொத்துகளை விற்றார். டெல்லி காவல்துறையின் பிடியிலிருந்து தப்ப ரிஷிகேஷிற்குச் சென்று அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். பின்னர் 2001-இல் டேராடூனுக்குச் சென்று தனது அடையாளத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டு, புதிய பெயரில் கட்டிட ஒப்பந்ததாரராக உருவெடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.</p><h2>பயோ<strong>மெட்ரிக்</strong> ஆதாரம்</h2><p>சமீபத்திய புகைப்படங்கள் எதுவுமில்லாத நிலையில், 1999-ஆம் ஆண்டு தண்டனையின் போது பதிவு செய்யப்பட்ட பழைய பயோமெட்ரிக் மற்றும் கைரேகை பதிவுகளை குற்றப்பிரிவு போலீசார் மீட்டெடுத்தனர். அதன் மூலம் தீவிர விசாரணை நடத்தி டேராடூனில் அவர் இருக்கும் இடத்தை உறுதிசெய்து, கடந்த 13ம் தேதி அன்று அதிரடி சோதனை நடத்தி அவரைப் பிடித்தனர். தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>4 மாதங்கள்.. 10 வழக்குகள்..  22 பேருக்கு மரண தண்டனை - வைரலாகும் நீதிபதி</title><link>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-death-penalty-row-muzaffarnagar-fast-track-judge-ravi-kumar-diwakar-awards-death-sentence-to-22-convicts-in-10-cases</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-death-penalty-row-muzaffarnagar-fast-track-judge-ravi-kumar-diwakar-awards-death-sentence-to-22-convicts-in-10-cases#comments</comments><guid isPermaLink="false">e0c0af9e-a802-43dc-8a29-289d5c6465a7</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:51:52 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:51:52.432Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,மரண தண்டனை,judge,Death Penalty,உத்தரப் பிரதேசம்,நீதிபதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/yxldx39a/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரவி குமார் திவாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரவி குமார் திவாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/yxldx39a/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேச </a>மாநிலம் முசாபர்நகர் விரைவு நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர் கடந்த நான்கு மாதங்களில் 10 வெவ்வேறு வழக்குகளில் 22 குற்றவாளிகளுக்கு ரவி குமார் திவாகர் மரண தண்டனை விதித்துள்ளார். </p>  <h2>மரண தண்டனைகள்</h2><p>ஆகஸ்ட் 13 அன்று, 12 ஆண்டுகளுக்கு முன்பு ஷாம்லி மாவட்டத்தில் நடந்த பவன் குமார் என்பவரது கொலை வழக்கில் ராம்வீர், ராஜீவ், ராகுல், ஹரேந்தர் குமார் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு அபராதத்துடன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">மரண தண்டனை</a> விதித்தார்.</p><p>1999ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் பிணை கேட்டு தொழிலதிபர் சலீம் என்பவரை கடத்திக் கழுத்தை அறுத்துக் கொன்ற வழக்கில், முதன்மை குற்றவாளியான ஷாநவாஸு என்பவருக்கு அண்மையில் மரண தண்டனை வழங்கினார்.</p><p>2011இல் நடந்த விவசாயி கொலை வழக்கு, 2010 பஞ்சாயத்து தேர்தல் முன்விரோதக் கொலை வழக்கு, பணியில் இருந்த ஹோம் கார்டு குத்திக் கொல்லப்பட்ட வழக்கு மற்றும் பல இரட்டைக்கலை வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.</p> <p>குற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை என ஒரு தரப்பினர் இத்தீர்ப்புகளை ஆதரித்தாலும், குறுகிய காலத்தில் இத்தனை பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது குறித்து மனித உரிமை ஆர்வலர்களும் சட்ட வல்லுநர்களும் கவலைகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p> <h2>ரவி குமார் திவாகர்</h2><p>லக்னோவைச் சேர்ந்த 46 வயதான நீதிபதி ரவி குமார் திவாகர் முதன்முதலில், 2009ஆம் ஆண்டு அசாம்கரில் கூடுதல் சிவில் நீதிபதியாக பொறுப்பேற்றார்.</p><p>தொடர்ந்து சுல்தான்பூர் உட்படப் பல இடங்களில் பணியாற்றிய இவர், 2025 நவம்பர் முதல் முசாபர்நகரில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.</p><p>முன்னதாக, 2022இல் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோகிராபி ஆய்வு நடத்த உத்தரவிட்டதன் மூலமும் இவர் நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>செயற்கை சுவையூட்டிகளுக்கு தடை: ராயல் சேலஞ்ச், மெக்டவல்ஸ் மதுபானங்களின் பார்முலா மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-food-safety-authority-forces-formula-change-for-royal-challenge-mcdowells-spirits</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-food-safety-authority-forces-formula-change-for-royal-challenge-mcdowells-spirits#comments</comments><guid isPermaLink="false">74611483-60c4-4af3-a1e7-69648b0a7366</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:08:41 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:08:41.652Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FSSAI,Royal Challenge,McDowell&apos;s,Antiquity Blue,ராயல் சேலஞ்ச்,மெக்டவல்ஸ்,ஆண்டிகுவிட்டி ப்ளூ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/359w3z4c/drug.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ royal challange
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/359w3z4c/drug.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுபானங்களின் தயாரிப்பு முறையில் மாற்றம் செய்ய டியாஜியோ ஒப்புக் கொண்டுள்ளது. ராயல் சேலஞ்ச், ஆண்டிகுவிட்டி ப்ளூ மற்றும் மெக்டவல்ஸ் எண் 1 ஆகிய பிரபல மதுபானங்களின் தயாரிப்பு முறைகளை மாற்றப் போவதாக அந்த நிறுவனம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் (FSSAI) உறுதி அளித்துள்ளது.</p><p>உணவுப் பாதுகாப்பு அமைப்பின் அதிரடி நடவடிக்கை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac">மதுபானங்களில் </a>செயற்கை சுவையூட்டிகளைச் சேர்ப்பதைக் கட்டுப்படுத்தும் விதமாக சில மாநிலங்களில் இந்த பானங்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது தயாரிப்பு முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><h2>தடைக்<strong>கான காரணம்</strong></h2><p>இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் மதுபான தயாரிப்பில் உள்ள சில விதிமீறல்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>* விஸ்கி பானத்தில் பிரத்யேக விஸ்கி சுவையையோ அல்லது ரம் பானத்தில் செயற்கையான ரம் சுவையையோ தனியாகச் சேர்ப்பது சர்வதேச உற்பத்தி நடைமுறைகளுக்கு எதிரானது என ஆணையம் தெரிவித்தது.</p><p>* பழைய மரப் பீப்பாய்களில் முறைப்படி சேமித்து வைக்கப்பட்டுப் பதப்படுத்தப்படுவதற்குப் பதிலாக, நடுநிலையான தானிய மதுபானத்துடன் செயற்கை சுவையூட்டிகளைச் சேர்த்துத் தயாரிப்பது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயலாகும் என எச்சரிக்கப்பட்டது.</p><p>* ராயல் சேலஞ்ச் மற்றும் ஆண்டிகுவிட்டி ப்ளூ ஆகியவை மத்தியப் பிரதேசத்திலும், மெக்டவல்ஸ் எண் 1 ரம் மகாராஷ்டிராவிலும் உள்ள உற்பத்தி மையங்களில் விதிகளுக்குப் புறம்பாகச் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.</p><h2>டியா<strong>ஜியோ நிறுவனத்தின் புதிய மு</strong>டிவுகள்</h2><p>கட்டுப்பாட்டு அமைப்பின் நடவடிக்கையை அடுத்து, டியாஜியோ நிறுவனம் இந்தியா முழுவதற்கும் பொருந்தக்கூடிய சில முக்கிய மாற்றங்களைச் செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.</p><p>* தனது பிரபல மதுபானங்களில் தனியாகச் சேர்க்கப்பட்டு வந்த விஸ்கி மற்றும் ரம் சுவையூட்டிகளை முற்றிலுமாக நிறுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.</p><p>* அடுத்த 3 மாத கால அவகாசத்திற்குள் அனைத்துப் பிராண்டுகளின் தயாரிப்பு விதிகளையும் மாற்றி அமைக்க டியாஜியோ திட்டமிட்டுள்ளது.</p><p>* புதிய தயாரிப்பு முறை நடைமுறைக்கு வரும் வரை, பாட்டில்களின் முன்பகுதியில் என்ன சுவையூட்டி சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நுகர்வோர் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் லேபிளிங் செய்யப்படும்.</p><h2>விற்பனைத் <strong>தடை விலக்கப்படுமா</strong></h2><p>நிறுவனம் தயாரிப்பு முறையை மாற்றுவதற்கும், பாட்டில்களில் சரியான விவரங்களைக் குறிப்பிடுவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளதால், விதிக்கப்பட்ட தடையை வாபஸ் பெற உணவுப் பாதுகாப்பு ஆணையம் பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு லட்சக்கணக்கான கேஸ்கள் விற்பனையாகும் இந்த முக்கிய பிராண்டுகளின் தயாரிப்பு மாற்றம், நாட்டின் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள மதுபான சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>என்னை நிம்மதியாக சாக விடுங்கள்.. த்விஷா சர்மா தற்கொலைக்கு கணவர் - மாமியாரே காரணம் - சிபிஐ குற்றப்பத்திரிகை  </title><link>https://www.maalaimalar.com/news/national/twisha-sharma-suicide-case-husband-and-mother-in-laws-harassment-drove-model-actress-to-death</link><comments>https://www.maalaimalar.com/news/national/twisha-sharma-suicide-case-husband-and-mother-in-laws-harassment-drove-model-actress-to-death#comments</comments><guid isPermaLink="false">91194dc3-72ba-4885-b493-b89515d507bf</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:55:06 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:55:06.743Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வரதட்சணை கொடுமை,மாமியார்,Dowry harassment,mother-in-law,த்விஷா சர்மா,tiwsha sharma</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/39henela/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ த்விஷா சர்மா, கணவர் - மாமியார் ]]></media:title><media:description type="html"><![CDATA[ த்விஷா சர்மா, கணவர் - மாமியார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/39henela/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/twisha-sharma">த்விஷா ஷர்மா </a>மாடல் அழகியாகவும் நடிகையாகவும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.</p><p>கடந்த மே 13 அன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் கட்டாரா மலைப்பகுதியில் உள்ள கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் த்விஷா ஷர்மாவின் உடல் மீட்கப்பட்டது.</p> <h2>குற்றச்சாட்டு</h2><p>தனது மகளை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">வரதட்சணை </a>தொடர்பாக துன்புறுத்தி கொன்றுவிட்டதாகவும், அவர் வசித்து வந்த வீட்டின் கேமரா காட்சிகளில் முரண்பாடு உள்ளதாகவும் பெண்ணின் தந்தை நவ்நீதி ஷர்மா குற்றம்சாட்டியிருந்தார்.</p><p>இதையடுத்து தலைமறைவான பெண்ணின் கணவர் சமர்த் சிங் மற்றும் முன்னாள் மாவட்ட நீதிபதியான சமர்த்தின் தாயார் கிரிபலா சிங் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.</p> <h2>சிபிஐ குற்றப்பத்திரிகை</h2><p>இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ போபால் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.</p><p>அதில், கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோர் அளித்த தொடர் மன உளைச்சல் மற்றும் கொடுமைகள் காரணமாக த்விஷா சர்மா தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லாமல் போயுள்ளது என்று சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது</p><p>த்விஷா சர்மா பெற்ற மனநல ஆலோசனை குறித்த ஆவணங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவை இதற்கு முக்கிய ஆதாரங்களாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.</p> <h2>மன உளைச்சல்</h2><p>குற்றப்பத்திரிக்கையின்படி, திருமணத்திற்குப் பிறகு த்விஷா சர்மா தொடர்ந்து மன ரீதியாக சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். கணவர் சமர்த் சிங் அவரைப் பலமுறை அவமானப்படுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.</p><p>மகனின் இந்த தவறான நடவடிக்கைகளுக்கு தாய் கிரிபாலா சிங் முழு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தியுள்ளார். கணவர் மீது த்விஷா புகார் கூறும்போதெல்லாம் , கிரிபாலா தன் மகனுக்கு ஆதரவாக நின்று அவரைப் பாதுகாத்துள்ளார்.</p><p>த்விஷாவிற்கு நீண்டகாலம் மன உளைச்சலை ஏற்படுத்துவதே இருவரின் முதன்மை நோக்கமாகவும் திட்டமாகவும் இருந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> <h2>கர்ப்பம்</h2><p>2026 ஏப்ரல் மாதத்தில் த்விஷா கர்ப்பமானார். ஆனால், குடும்பத்தில் நிலவிய தொடர் கசப்பான சூழல், திருமண வாழ்க்கையின் மீது ஏற்பட்ட விரக்தி மற்றும் விரிசல் காரணமாக, கர்ப்பத்தை தொடர்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவர் இருந்துள்ளார்</p><p>இறுதியாக தனது கர்ப்பத்தைக் கலைக்க த்விஷா முடிவெடுத்தார். இந்த முடிவால் த்விஷா, அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோருக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்தது. தொடர் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.</p> <h2>நிம்மதியாக சாக விடுங்கள்</h2><p>மே 12, இரவு 9:36 மணியளவில் த்விஷா தற்கொலை செய்துகொள்வதற்குச் சற்று முன்பு தனது நாத்தனார் ராஷி அப்ரோலுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் குறுஞ்செய்தியில், "உன் அண்ணனிடம் (சமர்த்) அவரது மனைவியின் எஞ்சிய உடலை வந்து எடுத்துக்கொள்ளச் சொல். </p><p>ஆனால் நாளைக்கு வந்து எடுக்கச் சொல். இப்போது என்னை நிம்மதியாக சாக விடுங்கள்" என்று மெசேஜ் செய்திருக்கிறார்.</p> <p>இந்த வாட்ஸ்அப் குறுஞ்செய்திதான், த்விஷா தீவிர மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு தற்கொலைக்கு முயன்றார் என்பதற்கான மிக முக்கிய ஆதாரமாக சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வழக்கின் விசாரணை இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. த்விஷாவின் ஐபோன், சிசிடிவி மற்றும் குரல் மாதிரிகளின் தடயவியல் பரிசோதனை முடிவுகளுக்காக சிபிஐ காத்திருக்கிறது.</p>]]></content:encoded></item></channel></rss>