<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 13 Sep 2026 20:11:16 +0000</lastBuildDate><item><title>இந்து மத குரு காலில் விழுந்த ஈரான் அதிபர்?.. தூதரகம் தந்த விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/did-the-iranian-president-fall-at-the-feet-of-a-hindu-religious-leader-embassy-offers-an-explanation</link><comments>https://www.maalaimalar.com/news/national/did-the-iranian-president-fall-at-the-feet-of-a-hindu-religious-leader-embassy-offers-an-explanation#comments</comments><guid isPermaLink="false">0cc87104-2126-45d3-9ee2-07d2b79a67e2</guid><pubDate>Sun, 13 Sep 2026 16:12:44 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:12:44.665Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைரல் வீடியோ,ஈரான்,Iran,BRICS Summit,viral video,பிரிக்ஸ் உச்சிமாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/n5eagee1/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வைரல் வீடியோ ]]></media:title><media:description type="html"><![CDATA[ வைரல் வீடியோ ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/n5eagee1/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு இடையே நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், இந்து மத தலைவரின் காலில் விழுந்து வணங்கியதாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.</p><p>பிரிக்ஸ் மாநாட்டின் இடையே டெல்லியில் உள்ள ஓபராய் ஹோட்டலில் ஈரான் தூதரகம் சார்பில் தொழிலதிபர்கள், மதத் தலைவர்கள் மற்றும் அறிஞர்களுக்கான சிறப்புச் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/i-dont-care-trump-on-the-talks-between-the-president-of-iran-and-the-prince-of-the-united-arab-emirates-at-the-brics-conference">ஈரான் அதிபர்</a> மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி பங்கேற்ற நிகழ்ச்சியில் பல்வேறு மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p><h2>வைரல் வீடியோ</h2><p>இதில் பங்கேற்ற உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இந்து சமய தலைவரான சுவாமி சதீஷாச்சார்யாவுடன் ஈரான் அதிபர் பெசெஷ்கியான் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரெனக் கீழே குனிவது போன்ற வீடியோ வெளியானது.</p><p>ஈரான் அதிபர், இந்து மத தலைவரின் காலைத் தொட்டு ஆசி பெற்றார் எனக் கூறி இந்த வீடியோ வேகமாகப் பரப்பப்பட்டது.</p><p>ஆனால் இதுகுறித்து ஈரான் தூதரக வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன. அதிபர், தன்னிடம் கொடுக்கப்பட்ட கடிதம் கீழே விழுந்ததால் அதை எடுக்கவே குனித்ததாகவும், அது தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பப்டுவதாக விளக்கம் அளித்துள்ளது.  </p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Complete video, As always ziozist in Pak will do everything to frame <a href="https://t.co/vmy7PYvHXV">pic.twitter.com/vmy7PYvHXV</a></p>&mdash; Aizaz dinho (@Aizazdinho) <a href="https://x.com/Aizazdinho/status/2099054990275014796?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபர்</h2><p>மறுபுறம் பிரிக்ஸ் மாநாட்டின் இடையே அபுதாபி இளவரசரை சந்தித்த பிறகு பேசிய அதிபர் பெசெஷ்கியான், "ஈரானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற அண்டை வளைகுடா நாடுகளுடன் எந்தவிதப் பிரச்சனையோ அல்லது பகையோ இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.</p><p>மேலும், "ஈரான் வளைகுடா நாடுகளுக்கு எதிரானது அல்ல; மாறாக அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு எதிரானது மட்டுமே. அமெரிக்கா இங்கு வந்து அமைத்துள்ள தளங்களைப் பயன்படுத்தித் தான் எங்களது தலைவர்கள், தளபதிகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. அதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்" என பெசெஷ்கியான் கூறினார்.</p><h2>புதுடெல்லி பிரகடனம்</h2><p>பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாளான நேற்று, பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் ஒன்றிணைந்து வெளியிட்ட புதுடெல்லி பிரகடனத்தில், மத்திய கிழக்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றம் குறித்துக் கடும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வளைகுடாப் பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்தத் தூதரகப் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளையே முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என பிரிக்ஸ் கூட்டமைப்பு அந்த பிரகடனத்தில் கோரியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>என் நிலத்தை அபகரிச்சுட்டாங்க.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உதவி கோரிய பள்ளித் தோழர் - உடனே தொடங்கிய ஆக்ஷன்</title><link>https://www.maalaimalar.com/news/national/school-friend-meets-pm-modi-in-person-to-seek-help-immediate-action-initiated</link><comments>https://www.maalaimalar.com/news/national/school-friend-meets-pm-modi-in-person-to-seek-help-immediate-action-initiated#comments</comments><guid isPermaLink="false">f0de3a05-046e-4524-a3b1-031281ae0297</guid><pubDate>Sun, 13 Sep 2026 14:14:46 +0000</pubDate><atom:updated>2026-09-13T14:14:46.825Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,குஜராத்,gujarat,நில அபகரிப்பு,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/64nn40z9/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி, அஸ்கரலி வோஹ்ரா ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி, அஸ்கரலி வோஹ்ரா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/64nn40z9/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனக்கு சொந்தமான நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியின் பள்ளித் தோழர் அவரை நேரில் சந்தித்து உதவி கோரியது தெரியவந்துள்ளது.</p> <p>குஜராத் மாநிலம் வட்நகரில் உள்ள பி.என். உயர்நிலைப் பள்ளியில் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-warns-against-weaponisation-of-critical-minerals">பிரதமர் மோடியுடன்</a> பயின்ற பள்ளித் தோழர் அஸ்கரலி வோஹ்ரா (81).</p><p>இவர் தனக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.</p> <h2>ஆக்கிரமிப்பு</h2><p>மும்பை நகரின் பயந்தர் கிழக்கு நவகார் பகுதியில் அமைந்துள்ள சுமார் 2,810 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை அஸ்கரலி வோஹ்ரா கடந்த 1989ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாகப் பதிவு செய்து வாங்கியுள்ளார்.</p><p>கடந்த 2011ஆம் ஆண்டு தனது நிலம் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>தனக்கு தெரியாமல் நிலத்தை பிரித்து, 'ஸ்வயம் பில்டர்ஸ்' மற்றும் 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' ஆகிய இரு கட்டுமான நிறுவனங்களின் பெயருக்கு மாற்றப்பட்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த நில ஆக்கிரமிப்பில் 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' நிறுவனத்துடன் தொடர்புள்ள பாஜக எம்.எல்.ஏ நரேந்திர மேத்தாவுக்கு தொடர்பு இருப்பதாக வோஹ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.</p> <h2>பிரதமருடன் சந்திப்பு</h2><p>பல ஆண்டுகளாக அரசுத் அதிகாரிகளிடமும் காவல் நிலையங்களிலும் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால், கடந்த செப்டம்பர் 8 அன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த 81 வயதான வோஹ்ரா, இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.</p> <h2>விசாரணைக்கு உத்தரவு</h2><p>பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகம் இச்சம்பவத்தில் மின்னல் வேகத்தில் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.</p><p>புகார் தொடர்பாக வரும் செப்டம்பர் 16ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு 'ஸ்வயம் பில்டர்ஸ்' மற்றும் 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு உள்ளூர் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>3 நாட்களில் 15 உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி!</title><link>https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-held-bilateral-talks-with-leaders-from-15-countries-in-three-days</link><comments>https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-held-bilateral-talks-with-leaders-from-15-countries-in-three-days#comments</comments><guid isPermaLink="false">59256890-35c7-48aa-bc46-46527474fcd2</guid><pubDate>Sun, 13 Sep 2026 13:49:06 +0000</pubDate><atom:updated>2026-09-13T13:49:06.694Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,BRICS Summit,delhi,பிரிக்ஸ் உச்சிமாநாடு,பிரதமர் மோடி,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/t2ag30ma/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியுடன் தலைவர்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியுடன் தலைவர்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/t2ag30ma/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>3 நாட்களில் பிரதமர் மோடி, இந்தியா வருகை தந்த 15 நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.</p><p>டெல்லியில் 18வது<a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-modi-warning-on-critical-minerals-in-front-of-xi"> பிரிக்ஸ் உச்சி மாநாடு</a> நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இதில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், சவுதி இளவரசர், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். </p><p>புதின் கடந்த நேற்று முன் தினமே இந்தியா வந்து சேர்ந்தார். அவருடன் அன்றைய தினம் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இவ்வாறு 3 நாட்களில் பிரதமர் மோடி, இந்தியா வருகை தந்த 15 நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.   </p><p>மேலும், பல்வேறு சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுடனும் அவர் தனியாகக் கலந்துரையாடினார்.  </p><p>வணிகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், மற்றும் உலகளாவிய அமைதி குறித்த விவாதங்கள் இந்தசந்திப்புகளில் பிரதானமாக இடம் பெற்றன.  </p> <h2>வெள்ளிக்கிழமை சந்திப்பு</h2><p>செப்டம்பர் 11 அன்று புதின், பெசெஷ்கியான் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளரை மோடி சந்தித்தார்.</p><p>ரஷிய அதிபர் புதினுடன் நடந்த பேச்சுவார்த்தையில், இருநாடுகளிடையேயான வர்த்தகத்தை 2030க்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.</p><p>பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி மற்றும் உக்ரைன் - ரஷிய மோதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரமே போருக்குத் தீர்வு எனப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.</p><p>ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உடனான பேச்சுவார்த்தையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு, கடல்வழி வர்த்தகம் மற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்துப் பேசப்பட்டது.</p><p>ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்ரெஸ் உடனான பேச்சுவார்த்தையில் சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.</p> <h2>சனிக்கிழமை சந்திப்பு</h2><p>செப்டம்பர் 12, நேற்று, இந்தியா வந்து சேர்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் முதல் முறை இந்தியா வந்துள்ளார்.</p><p>சீன அதிபருடனான பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்சனை, வர்த்தக சமநிலையின்மை மற்றும் விநியோகச் சங்கிலியில் உள்ள இடர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.</p><p>இருநாடுகளின் வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது என்றும் பரஸ்பர மரியாதை மற்றும் நலன்கள் அடிப்படையில் உறவுகள் தொடர வேண்டும்" எனப் பிரதமர் மோடி சீன அதிபரிடம் வலியுறுத்தினார்.</p> <p>மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் நடத்திய பேச்சுவார்த்தையில், சேமிகண்டக்டர்,கள், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் Fintech தொழில்நுட்பம் குறித்துப் பேசப்பட்டது.</p><p>அபுதாபி இளவரசர் ஷேக் காலித் உடனான சந்திப்பில் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.</p><p>வியட்நாம் மற்றும் எத்தியோப்பியத் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான தொடர்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.</p><h2>ஞாயிறு சந்திப்பு</h2><p>மாநாட்டின் கடைசி நாளான இன்று, செப்டம்பர் 13, தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசா கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் தோகாயேவ், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், எகிப்து அதிபர் அல் சிசி, புருண்டி, உகாண்டா மற்றும் நைஜீரியப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>இந்த உச்சி மாநாடும், இருதரப்பு சந்திப்புகளும் இந்தியாவின் சர்வதேச ராஜதந்திர உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என கருதப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் 80% மக்கள் அசைவம்.. பிரிக்ஸ் மாநாட்டின் சைவ மெனு பற்றி ராகுல் கிண்டல்
</title><link>https://www.maalaimalar.com/news/national/80-of-people-in-india-eat-non-vegetarian-food-rahul-mocks-the-vegetarian-menu-at-the-brics-summit</link><comments>https://www.maalaimalar.com/news/national/80-of-people-in-india-eat-non-vegetarian-food-rahul-mocks-the-vegetarian-menu-at-the-brics-summit#comments</comments><guid isPermaLink="false">78ec26a1-328a-4369-a90f-85600f5a1306</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:25:26 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:25:26.076Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,BRICS Summit,பிரிக்ஸ் உச்சிமாநாடு,சைவம்,அசைவம்,Vegetarianism,non-vegetarianism</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/qqke5hvq/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/qqke5hvq/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நேற்று இரவு விருந்தில் சைவ உணவு வகைகள் மட்டும் பரிமாறப்பட்டது பற்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காநிதி மறைமுகமாக விமர்சித்துள்ளார். </p><p>டெல்லியில் 18வது <a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-modi-warning-on-critical-minerals-in-front-of-xi">பிரிக்ஸ்  உச்சி மாநாடு</a> இன்றுடன் நிறைவடைந்தது.  ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், சீன அதிபர் ஜி ஜின் பிங், மலேசிய பிரதமர் இப்ராஹிம் உள்ளிட்ட உறுப்பு நாட்டு தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். </p><p>இந்நிலையில் மாநாட்டின் முதல் நாளான நேற்று இரவு பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பரிமாறப்பட்ட உணவுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சிதலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். </p> <h2>ராகுல் பதிவு</h2><p>பிரிக்ஸ் மாநாட்டின் உணவுப் பட்டியல் குறித்து நேரடியாக எதையும் குறிப்பிடாத ராகுல் காந்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சகோதரி தயாரித்த 'சோலே பட்டுரே' உணவின் புகைப்படத்தைப் பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.</p><p>அதில், "ஒரு விஷயத்தை நினைவூட்ட விரும்புகிறேன்: இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அசைவ உணவு சாப்பிடுபவர்கள். இந்திய அசைவ உணவுகள் மிகவும் சுவையானவை; அதேபோல் என் சகோதரி சமைத்த இந்த சோலே பட்டுரேவும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சர்வதேச தலைவர்கள் பங்கேற்ற ஒரு விருந்தில் இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட உணவுக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்காமல், முற்றிலும் சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டதைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே ராகுல் காந்தி இந்தப் பதிவை வெளியிட்டுள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டி உள்ளது.</p> <h2>பிரதமரின் பிரிக்ஸ் சைவ விருந்து பட்டியல்</h2><p>பிரதமர் மோடி அளித்த விருந்தில் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் சிறுதானியங்களை மையமாக கொண்ட பல்வேறு சைவ உணவுகள் உலகத் தலைவர்களுக்குப் பரிமாறப்பட்டன.</p><p>காந்த்வி மில்பெயில்), காளான் கபாப், பனீர் லபாப்தார், குச்சி மார்மிக், காரட் பீன்ஸ் பொரியல், ராகி-சிறுதானிய புலாவு உள்ளிட்டவற்றுடன் பல்வேறு வகையான இந்தியப் பாரம்பரிய இனிப்பு வகைகள்ளும் பரிமாறப்பட்டன.</p><p>இந்த சிறப்பு சைவ விருந்தில் சீன அதிபர் மற்றும் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் ஆகியோர் பங்கேற்காமல் தவிர்த்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>பாஜக பதிலடி</h2><p>ராகுலின் விமர்சனத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி கொடுத்துள்ளார்.</p><p>பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்குப் பரிமாறப்பட்ட உணவு ஒரு அரசியல் பிரச்சினையாக ஆக்கப்படுவதாகவும் பரிமாறப்பட்ட உணவு சுவை, ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரியம் நிறைந்தது என்று விவரித்தார்.</p><p>விருந்தினர்கள் பரிமாறப்பட்ட இந்திய சைவ உணவு வகைகளை விரும்பி உண்டனர் என்றும் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>ராகுல், பிரியங்காவுடன் மலேசிய பிரதமர் சந்திப்பு - வீடியோ வெளியிட்ட காங்கிரஸ் </title><link>https://www.maalaimalar.com/news/national/malaysian-prime-minister-meets-rahul-and-priyanka-congress-releases-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/malaysian-prime-minister-meets-rahul-and-priyanka-congress-releases-video#comments</comments><guid isPermaLink="false">e77f064e-55d3-4393-845f-7180e6777606</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:59:29 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:59:29.938Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,malaysia,மலேசியா,BRICS Summit,Anwar Ibrahim,அன்வர் இப்ராஹிம்,பிரிக்ஸ் உச்சிமாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/8i8i01ag/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல், இப்ராஹிம், பிரியங்கா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல், இப்ராஹிம், பிரியங்கா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/8i8i01ag/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் சந்தித்து பேசியுள்ளார்.</p><p>டெல்லியில் நேற்று தொடங்கிய 18வது <a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-modi-warning-on-critical-minerals-in-front-of-xi">பிரிக்ஸ் மாநாடு</a> இன்றுடன் முடிவடைகிறது. இதில் கலந்துகொள்ள ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், பிரேசில், தென்னாப்பிரிக்கா  ஆகிய உறுப்பு நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். </p><p>குறிப்பாக மலேசிய பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D">அன்வர் இப்ராஹிம் </a>பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ளார். </p><p>இன்று காலை டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை அன்வர் இப்ராஹிம் சந்தித்து பேசியுள்ளார். </p><p>அவர்களுடன் காலை உணவு அறுத்தியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது </p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">LoP Shri <a href="https://x.com/RahulGandhi?ref_src=twsrc%5Etfw">@RahulGandhi</a> and Congress General Secretary Smt. <a href="https://x.com/priyankagandhi?ref_src=twsrc%5Etfw">@priyankagandhi</a> ji met H.E. Dato’ Seri <a href="https://x.com/anwaribrahim?ref_src=twsrc%5Etfw">@anwaribrahim</a>, Prime Minister of Malaysia today.<br><br>New Delhi <a href="https://t.co/EV9PIDizwZ">pic.twitter.com/EV9PIDizwZ</a></p>&mdash; Congress (@INCIndia) <a href="https://x.com/INCIndia/status/2099032104222990816?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை</h2><p>பிரிக்ஸ் மற்றும் ஆசியான் கூட்டமைப்பில் மலேசியா முக்கிய கூட்டாளியாக திகழ்ந்து வருகிறது.</p><p>முன்னதாக பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாளான நேற்று, மலேசிய பிரதமர் இப்ராஹிமுடன் பிரதமர் மோடி வர்த்தகம், செமிகண்டக்டர், பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இரு நாட்டு ஒத்துழைப்பு குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.</p>  <h2>மன்மோகன் சிங்கிற்கு பாராட்டு</h2><p>காங்கிரசை சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2024 டிசம்பரில் உயிரிழந்தார். அவருக்கு அப்போது புகழஞ்சலி செலுத்திய இப்ராஹிம் அவரை மதிப்புமிக்க நேசமிகு நண்பர் எனவும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கை புகழ்ந்தும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.</p><p>மன்மோகன் சிங் இந்தியாவின் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வலுவான உலக பொருளாதாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் சென்றார் என கூறியிருந்தார்</p><p>இப்ராஹிம் 1990களில் மலேசியாவின் வர்த்தக அமைச்சராக இருந்தவர். மன்மோகன் சிங் அக்காலத்தில் இந்தியாவின் வர்த்தக அமைச்சராக மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களை பின்பற்றினார் இப்ராஹிம்.</p> <p>அங்கு அரசியல் நெருக்கடி காலத்தில் தான் ஜெயிலில் இருந்தபோது மன்மோகன் சிங் தன் குழந்தைகளின் படிப்புக்கு பணம் செலுத்த முன்வந்ததையும் இப்ராஹிம் முன்னொரு சமயத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.</p><p>ஊழலுக்கு எதிரான மன்மோகன் சிங்கின் போராட்டத்தையும் அவர் புகழ்ந்துள்ளார். மன்மோகன் சிங் ஒரு வினோதமான அரசியல்வாதி என்றாலும் உண்மையானவர் என்றும் அவர் எதிர்கால தலைமுறைக்கு உந்துசக்தியாக இருக்கிறார் எனவும் இப்ராஹிம் புகழ் மாலை சூட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>செயற்கை நுண்ணறிவை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது- பிரதமர் மோடி பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-warns-against-weaponisation-of-critical-minerals</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-warns-against-weaponisation-of-critical-minerals#comments</comments><guid isPermaLink="false">06d8e21d-ce76-41d4-bfa7-43799fc12395</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:24:18 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:24:18.724Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BRICS Summit,pm modi,பிரிக்ஸ் உச்சிமாநாடு,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/7l2kok2m/BRICS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/7l2kok2m/BRICS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டிஜிட்டல் வேளாண்மைக்கான பிரிக்ஸ் வலையமைப்பு விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்த முன்முயற்சியின் மூலம் செயற்கை நுண்ணறிவு, புவிசார் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவை விவசாயிகளின் தேவைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். வேளாண்மை துறையில் செயற்கை நுண்ணறிவு உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.</p><p>இந்தியா, ரஷியா, சீனா உள்பட 11 உறுப்பு நாடுகள் மற்றும் 10 நட்பு நாடுகளை கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. </p><h2><strong>உலக தலைவர்கள்</strong></h2><p>இதில் பல்வேறு நாட்டுகள் அதிபர்கள், பிரதமர்கள், துணை அதிபர்கள், மந்திரிகள் மற்றும் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உள்ளனர். உச்சி மாநாட்டில் நேற்று அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய நிர்வாகம் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் நடந்த அமர்வில் தலைவர்கள் பங்கேற்று உரையாடினர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.</p><h2><strong>டெல்லி கூட்டு பிரகடனம்</strong></h2><p>மேலும் மாநாட்டின் டெல்லி கூட்டு பிரகடனம் ஒருமனதாக ஏற்று கொள்ளப்பட்டது. 140 அம்சங்களை கொண்ட இந்த பிரகடனத்தில் காசா போர் நிறுத்தம், ஐ.நா.சபையில் சீர்திருத்தங்கள், எல்லை கடந்த பரிவர்த்தனை, எரிசக்தி பாதுகாப்பு, வரி விதிப்புக்கு எதிர்ப்பு, பருவநிலை மாற்றம், பயங்கரவாத எதிர்ப்பு, பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம், அமைதி பேச்சுவார்த்தைகள் மூலம் போர்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் உள்ளிட்டவைகள் இடம்பெற்றன.</p><h2><strong>2-வது நாள் மாநாடு</strong></h2><p>டெல்லி கூட்டு பிரகடனம் ஒருமனதாக ஏற்று கொள்ளப்பட்ட நிலையில் 2-வது மற்றும் கடைசி நாள் பிரிக்ஸ் உச்சி மாநாட்டு இன்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து பிரிக்ஸ் நாடுகளின் தலைவா்கள், நட்பு நாடுகளின் தலைவா்கள், சிறப்பு அழைப்பாளா்கள் மாநாட்டு நடைபெறும் பாரத் மண்டபத்துக்கு காலை 10 மணி முதல் வரத் தொடங்கினர். அவர்களை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். அதன்பிறகு தலைவா்கள் அதிகாரப்பூா்வமாக குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.</p><h2><strong>மீள்திறன்</strong></h2><p>பின்னர் ‘மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய வளா்ச்சிக்கான எதிர் காலத்தை வடிவமைத்தல் என்ற தலைப்பில் அமர்வு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் மீண்டும் ஓன்றுகூடி ஆலோசனை நடத்தினார்கள்.</p><h2><strong>இந்த அமர்வில் பிரதமர் மோடி பேசியதாவது:-</strong></h2><p>இந்தியாவின் தலைமை யின் கீழ் மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்ன்மை ஆகிய 4 முக்கிய அம்சங்களில் எங்கள் முழு கவனத்தையும் செலுத்தி உள்ளோம். உங்கள் ஒத்துழைப்பு-ஆதரவுடன், நமது கூட்டுப் பார்வையை அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு சூழலாக மாற்ற முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.</p><p>இன்று உலகில் பதற்றங் கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது சாமானிய மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே பிரிக்ஸ் குழுவிற்குள் மீள்திறனை வலுப்படுத்து வதற்கு நாங்கள் சிறப்பு முக்கியத்துவம் அளித்து உள்ளோம்.</p><h2><strong>பேரிடர் மேலாண்மை</strong></h2><p>இதன் அடிப்படையில், தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் அவற்றை எதிர்கொள்வதற்கும் பிரிக்ஸ் ஒருங்கிணைந்த முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு குறித்த ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் மேலாண்மைக்காக முன்கூட்டியே எச்சரிக்கும் தரவு ஒருங்கி ணைப்பு வழிகாட்டுதல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. பிரிக்ஸ் தளவாட விநி யோகச் சங்கிலி ஒத்து ழைப்புக் கட்டமைப்பு என்பது நமது விநியோகச் சங்கிலிகளை மேலும் நம்பகமானதாகவும், மீள்திறன் கொண்டதாகவும் மாற்ற உதவும்.</p><h2><strong>செயற்கை நுண்ணறிவு</strong></h2><p>டிஜிட்டல் வேளாண்மைக்கான பிரிக்ஸ் வலையமைப்பு விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்த முன்முயற்சியின் மூலம் செயற்கை நுண்ணறிவு, புவிசார் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவை விவசாயிகளின் தேவைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். வேளாண்மை துறையில் செயற்கை நுண்ணறிவு உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.</p><h2><strong>எதிர்மறை விளைவுகளை</strong></h2><p>தொழில்நுட்பம் மற்றும் முக்கிய கனிமங்களை ஆயுதமாக்குவது நமது கூட்டு முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடும். பொது வளர்ச்சிக்கு தடைகளை உருவாக்கும். செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) ஆயுதமாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். தொழில்நுட்பத்தின் பலன் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும். போர்களால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.</p><h2><strong>நம்பிக்கை அதிகரிப்பு</strong></h2><p>பிரிக்ஸ் அமைப்பின் மீதான தெற்குலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. தெற்குலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிரிக்ஸ் அமைப்பின் வலிமை என்பது நமது பன்முகத்தன்மை மற்றும் ஒத்துழைப்பில்தான் உள்ளது. நாம் வெவ்வேறு சூழல்களைச் சார்ந்த வர்களாக இருக்கலாம். ஆனால் ஒத்துழைப்பின் மூலம் ஒன்றிணைந்து உயர்ந்து, மனிதகுலத்திற்காக மலர்கிறோம். பல்வேறு கலாச்சாரங்களை இந்த கூட்டம் ஒருங்கிணைத்து உள்ளது. பிரிக்ஸ் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும்.</p><h2><strong>பிரிக்ஸ்</strong></h2><p>பிரிக்ஸ் அமைப்பின் ஒத்துழைப்பு என்பது அரசாங்கங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய முயன்று உள்ளோம். இதில் எங்கள் தொழில் முனைவோர்கள், விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சாமானிய மக்களும் தீவிரப் பங்கேற்பாளர்களாக திகழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.</p><p>இவ்வாறு மோடி பேசினார்.</p><p>இந்த அமர்வு முடிந்த பிறகு டெல்லி கூட்டு பிரகடனம் வெளியிடப்படும். அதனுடன் மாநாடு நிறைவு பெறும்.</p><h2><strong>மோடி பேச்சுவார்த்தை</strong></h2><p>இன்றைய மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி 7 நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில்ரம போசா மற்றும் கஜகஸ்தான், பிலிப்பைன்ஸ், எகிப்து, புருண்டி, உகாண்டா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி எச்சரிக்கை: சீன அதிபர் முன்னிலையில் முக்கிய கனிமங்கள் குறித்து பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/national/brics-summit-modi-warning-on-critical-minerals-in-front-of-xi</link><comments>https://www.maalaimalar.com/news/national/brics-summit-modi-warning-on-critical-minerals-in-front-of-xi#comments</comments><guid isPermaLink="false">1c7ac538-1773-4517-ab26-85a6720a19df</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:08:59 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:08:59.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BRICS Summit,pm modi,Chinese president,பிரிக்ஸ் உச்சிமாநாடு,சீன அதிபர்  ஜின்பிங்,பிரதமர் மோடி,Critical Minerals</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/mmuvyclc/mo.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/mmuvyclc/mo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமீபகாலமாக நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், தொற்றுநோய்கள் மற்றும் பருவநிலை மாற்றங்கள் உலகளவில் விநியோகச் சங்கிலியை எவ்வாறு சீர்குலைத்துள்ளன.</p><p>டெல்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்திய இந்தியப் <a href="https://www.maalaimalar.com/news/national/will-a-brics-currency-be-created-to-rival-the-dollar-here-is-the-answer">பிரதமர் நரேந்திர மோடி</a>, முக்கியக் கனிமங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஆயுதமாக்குவது உலகளாவிய பொதுவான பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமையும் என்று எச்சரித்துள்ளார்.</p><p>சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி இந்த நேரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார். உலகளவில் முக்கியக் கனிமங்கள் மற்றும் அரிதான மண் வளங்கள் விநியோகத்தில் சீனா பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில், பிரதமரின் இந்த உரை சர்வதேச அரங்கில் சீனாவுக்கான நேரடிச் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.</p><h2>வளங்களின் <strong>சமமான ப</strong>யன்பாடு</h2><p>'மீள்தன்மை,  ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை' (Resilience, Innovation, Cooperation, and Sustainability) என்ற தலைப்பிலான பிரிக்ஸ் அமர்வில் பேசிய பிரதமர் மோடி, தொழில்நுட்பங்கள் மற்றும் அத்தியாவசிய கனிம வளங்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஒரு சில நாடுகள் மட்டுமே தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கனிம வளங்களை மற்ற நாடுகளுக்கு எதிரான அரசியல் அல்லது பொருளாதார ஆயுதமாகப் பயன்படுத்துவது விநியோகச் சங்கிலியைப் பாதிப்பதுடன், அனைத்து நாடுகளின் கூட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கும் தடையை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>சமீபகாலமாக நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், தொற்றுநோய்கள் மற்றும் பருவநிலை மாற்றங்கள் உலகளவில் விநியோகச் சங்கிலியை எவ்வாறு சீர்குலைத்துள்ளன என்பதைப் பற்றிப் பிரதமர் மோடி விவரித்தார். இன்றைய உலகில் எந்தவொரு பொருளாதார நெருக்கடியும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்துடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை என்றும், அது உலகளாவிய அளவில் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, விநியோகச் சங்கிலிகளில் வெளிப்படைத்தன்மையையும் சமநிலையையும் பேணுவது அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கும் அவசியம் என்பதை இந்தியத் தரப்பு உறுதியாக எடுத்துரைத்துள்ளது.</p><p>மின்னணு சாதனங்கள், பசுமை ஆற்றல் நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பிற்கு தேவையான முக்கியக் கனிமச் சந்தையில் சீனாவே பெரும் பங்கு வகிக்கிறது. இத்தகைய சூழலில், பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக இந்தியா முன்னெடுக்கும் கொள்கைகள் அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப தழுவலில் வெளிப்படைத்தன்மையும், கூட்டுப் பங்களிப்பும் மட்டுமே உலக நாடுகளுக்கு இடையிலான பொருளாதார இடைவெளியைக் குறைக்கும் என்பதில் இந்தியா தனது உறுதியான நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாலருக்கு போட்டியாக பிரிக்ஸ் நாணயம் உருவாக்கப்படுமா? - பதில் இதுதான் </title><link>https://www.maalaimalar.com/news/national/will-a-brics-currency-be-created-to-rival-the-dollar-here-is-the-answer</link><comments>https://www.maalaimalar.com/news/national/will-a-brics-currency-be-created-to-rival-the-dollar-here-is-the-answer#comments</comments><guid isPermaLink="false">0fafc7fd-8666-4e04-beb4-d991e5ecc0f9</guid><pubDate>Sun, 13 Sep 2026 00:13:58 +0000</pubDate><atom:updated>2026-09-13T00:13:58.117Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BRICS,பிரிக்ஸ்,BRICS Summit,Dollar,டாலர்,பிரிக்ஸ் உச்சிமாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/ipwvw776/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ புதின், மோடி, ஜி ஜின்பிங் பாரத் மண்டபம் வெளியே மரம் நட்ட காட்சி 
]]></media:title><media:description type="html"><![CDATA[ புதின், மோடி, ஜி ஜின்பிங் பாரத் மண்டபம் வெளியே மரம் நட்ட காட்சி 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/ipwvw776/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாலருக்கு எதிரான பிரிக்ஸ் நாணயம் உருவாக்கப்படுமா என்ற கேள்விக்கு இந்தியா விளக்கம் அளித்துள்ளது. </p><p>சர்வதேச பொருளாதார பரிவர்த்தனைகள் டாலரின் ஆதிக்கத்தை எதிர்க்க பிரிக்ஸ் நாடுகளுக்கென்று பிரத்யேக நாணயம் உருவாக்கப்படுமா என்ற கேள்வி பல காலமாக உள்ளது. </p><p>ரஷியா, சீனா ஆகியவை அதற்கு மறைமுகமாக ஆர்வம் காட்டினாலும் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட மற்ற உறுப்பு நாடுகள் அதற்கு தயக்கம் காட்டுகின்றன. </p><p>இந்நிலையில் டெல்லியில் நேற்று தொடங்கிய 18வது<a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-xi-jinping-says-middle-east-war-causes-serious-losses"> பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் </a>இதுகுறித்து ஏதேனும் முன்னெடுப்பு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. </p><p>இந்நிலையில்  பிரிக்ஸ் அமைப்பின் நாணயக் கொள்கைகள் குறித்து  மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார செயலாளர் சுதாகர் தலேலா விளக்கம் அளித்துள்ளார்.</p> <h2>விளக்கம்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">பிரிக்ஸ் </a>கூட்டமைப்பிற்கென பொதுவான தனி நாணயம் உருவாக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று சுதாகர் தலேலா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், "உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகச் செலவைக் குறைப்பதற்காகத் தங்களின் சொந்த (உள்நாட்டு) நாணயங்களிலேயே இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்தே ஆலோசிக்கப்பட்டு வருகிறது.</p><p>உள்நாட்டு நாணயங்களில் வர்த்தகம் செய்வதும், பணம் செலுத்தும் வழிமுறைகளை எளிதாக்குவதும் சர்வதேச பணப்பரிவர்த்தனை கட்டமைப்பை  ஒட்டுமொத்தமாக மாற்றுவதற்காக அன்றி, உலகளாவிய வர்த்தகத்தை எளிதாக்கும் ஒரு துணை நடவடிக்கை மட்டுமே" என தெரிவித்தார்.&nbsp;</p> <figure>
 <blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">#WATCH | BRICS Summit 2026 | Delhi: Sudhakar Dalela, Secretary (Economic Relations), MEA says, &quot;There is no proposal in the BRICS for a BRICS currency, as of now...&quot;

He also says, &quot;Discussion on trade settlement in local currency has been underway for some time in BRICS; it's not a new subject. We believe local currency settlement is a practical mechanism to reduce transaction cost in bilateral trade. This has been encouraged as complementary to global payment and settlement system, improving overall global trade across nations.&quot;</p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2098763252197118288?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>டெல்லி பிரகடனம்</h2><p>நேற்று பிரிக்ஸ் மாநாட்டில் "டெல்லி பிரகடனம்" வெளியிடப்பட்டது. அதில், ஒவ்வொரு நாட்டின் தேசிய முன்னுரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், உள்நாட்டு நாணயங்கள் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்த ஆலோசனைகள் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>எல்லை கடந்த பணப் பரிவர்த்தனைகளை அதிவேகமாகவும், குறைந்த செலவிலும், பாதுகாப்பாகவும் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை 'பிரிக்ஸ் பேமெண்ட் டாஸ்க் போர்ஸ்' ஆய்வு செய்து வருகிறது.</p> <p>உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்குப் புறம்பாக விதிக்கப்படும் ஒருதரப்பு வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு டெல்லி பிரகடனம் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.</p><p>அமெரிக்க டாலருக்கு இணையான அல்லது டாலர் சார்ந்த அழுத்தத்தை குறைக்கும் பிரிக்ஸ் நாடுகளின் இந்த முயற்சியை அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்த சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>நேற்று மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே உள்நாட்டு நாணயப் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும், பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.</p> ]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்றால்?.. ஈரான் அதிபர் விதித்த நிபந்தனைகள் </title><link>https://www.maalaimalar.com/news/national/if-the-strait-of-hormuz-should-be-opened-the-conditions-imposed-by-the-president-of-iran</link><comments>https://www.maalaimalar.com/news/national/if-the-strait-of-hormuz-should-be-opened-the-conditions-imposed-by-the-president-of-iran#comments</comments><guid isPermaLink="false">0c21eef2-68a6-4ff2-96f3-c720700df25e</guid><pubDate>Sat, 12 Sep 2026 23:32:10 +0000</pubDate><atom:updated>2026-09-12T23:32:10.424Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BRICS Summit,பிரிக்ஸ் உச்சிமாநாடு,Iran War,ஈரான் போர்,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6av7fn17/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மசூத் பெசெஷ்கியான், புதின், மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ மசூத் பெசெஷ்கியான், புதின், மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6av7fn17/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மூடப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் பேசியுள்ளார்.</p> <p>மத்திய கிழக்கில் இருந்து உலக நாடுகளுக்கு எண்ணெய், எரிவாயு  ஏற்றுமதிக்கு முக்கிய கடல்வழிப் பாதையான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ஹார்முஸ் ஜலசந்தி</a>யை அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் தன் கட்டுப்பாட்டில் வைத்து, அதன் வழியே கப்பல்கள் செல்ல கெடுபிடி காட்டி வருகிறது. </p><p>இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் <a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-xi-jinping-says-middle-east-war-causes-serious-losses">பிரிக்ஸ் மாநாட்டில் </a>கலந்துகொள்ள இந்தியா வருகை தந்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தேசிய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். </p> <p>அதில் அவர் பேசுகையில், அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ மற்றும் பொருளாதாரத் தாக்குதல்களுக்கு பதிலாகவே ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளோம்.</p><p>அமெரிக்கா இந்தப் பிராந்தியத்திற்கு ஆயுதங்களைக் கொண்டு வரலாம், கடல் வழிகளை அடைக்கலாம் என்றால், அதற்குப் பதிலடி கொடுக்காமல் ஈரான் அமைதியாக இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?</p><p>அமெரிக்காவின் எந்தவொரு அழுத்தத்திற்கும் ஈரான் பணிந்து போகாது" என தெரிவித்துள்ளார்.</p> <h2>நிபந்தனை</h2><p>தொடர்ந்து பேசிய அவர், "சர்வதேச விதிகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஈரான் தயாராக உள்ளது.</p><p>ஆனால் அதற்கு முன்பாக, அமெரிக்கா தன் மீதான பொருளாதாரப் தடைகள், கடல்சார் முற்றுகை மற்றும் தொடர் அழுத்தங்களை உடனடியாகக் கைவிட வேண்டும்" என நிபந்தனை விதித்துள்ளார்.</p><p>மேலும் "போரின் மூலம் ஈரானை அடக்க அமெரிக்கா நினைத்த இலக்குகள் தோற்றுவிட்டன. அதனாலேயே தற்போது அமெரிக்கா பொருளாதார மற்றும் கடல்சார் முற்றுகை என்ற மாற்று வழியைக் கையில் எடுத்துள்ளது" என்று அவர் சாடினார்.</p> <h2>மோடி வலியுறுத்தல் </h2><p>பாரசீக வளைகுடாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் பெரும்பகுதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே பயணிக்கிறது.</p><p>வளைகுடாவில் நிலவும் பதற்றம் மற்றும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் இந்திய வர்த்தகத்தையும், அப்பகுதியில் பயணிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்திய மாலுமிகளின் பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கின்றன.</p><p>இதன் காரணமாகவே, டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே ஈரான் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி, ஹார்முஸ் பகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தையும் மாலுமிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>ஈரான் மீதான போருக்கு எதிராவும் பிரிக்ஸ் மாநாட்டில் நிலைப்பாடு எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.   </p>]]></content:encoded></item><item><title>பாலஸ்தீனத்தை தனி நாடாக உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் ஆதரவு - இஸ்ரேலுக்கு அறிவுரை வழங்கிய  &quot;டெல்லி பிரகடனம்&quot;</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-declaration-advises-israel-to-support-brics-statehood-for-palestine</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-declaration-advises-israel-to-support-brics-statehood-for-palestine#comments</comments><guid isPermaLink="false">4b6d3455-119b-4b70-a2b5-3859fdd3556d</guid><pubDate>Sat, 12 Sep 2026 22:17:21 +0000</pubDate><atom:updated>2026-09-12T22:17:21.024Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>palestine,காசா,இஸ்ரேல்,gaza,Israel,BRICS Summit,பிரிக்ஸ் உச்சிமாநாடு,பாலஸ்தீனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/wyksrh6s/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரிக்ஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரிக்ஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/wyksrh6s/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாட்டில் எட்டப்பட்ட "டெல்லி பிரகடன"த்தில் பாலஸ்தீனம் மற்றும் லெபனான் பிரச்சனைகள் குறித்த நிலைப்பாட்டை பிரிக்ஸ் நாடுகள் அறிவித்துள்ளன.</p> <p>டெல்லியில் நடந்து வரும் 18வது<a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-xi-jinping-says-middle-east-war-causes-serious-losses"> பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் </a>முதல் நாளான நேற்று"டெல்லி பிரகடனம்" என்ற பெயரில் உறுப்பு நாடுகள் பல நிலைப்பாடுகளுக்கு கூட்டாக ஆதரவளித்துள்ளது. </p><p>சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், பிரதமர் மோடி உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் கையொப்பம் இட்டு இந்த கூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டனர். </p> <h2>பாலஸ்தீன நாடு</h2><p>அந்த பிரகடனத்தில் குறிப்பாக, இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு 'இரு நாடுகள் தீர்வே' ஒரே வழி என்றும் இஸ்ரேலுடன் இணைந்து சுதந்திரமான பாலஸ்தீன நாடு உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரிக்ஸ் நாடுகள் கூட்டு நிலைப்பாடு எடுத்துள்ளன.</p><p>1967ஆம் ஆண்டிற்கு முந்தைய எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE">காசா முனை</a>, <a href="https://www.maalaimalar.com/news/world/west-bank-violence-israeli-settlers-torch-mosques-kill-palestinians">மேற்குக் கரை</a> மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக பாலஸ்தீன நாடு அமைய வேண்டும். கிழக்கு ஜெருசலேமே அதன் தலைநகராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>பாலஸ்தீனியர்கள் தங்களது எதிர்காலத்தை சுயநிர்ணயம் செய்யும் உரிமையையும், தங்களது தாய்நாட்டிற்கு திரும்பும் உரிமையையும் கொண்டுள்ளனர்; ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு முழுமையான உறுப்பினர் தகுதி வழங்கப்பட வேண்டும் எனவும் பிரிக்ஸ் வலியுறுத்தியுள்ளது.</p> <h2>இடப்பெயர்வுக்கு தடை</h2><p>பாலஸ்தீனியர்களை தங்களது சொந்த நிலத்திலிருந்து தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ<a href="https://www.maalaimalar.com/news/world/israel-ministers-plan-to-remove-25-lakh-palestinians-from-gaza"> பலவந்தமாக வெளியேற்றும் இஸ்ரேலின் திட்டத்தை</a> பிரிக்ஸ் கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்துள்ளது.</p><p>போரின் உத்தியாக பொதுமக்களுக்கு உணவை மறுப்பதையோ, மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதையோ பிரிக்ஸ் கண்டித்துள்ளது.</p><p>ஜெருசலேமில் உள்ள புனிதச் தலங்களை மக்கள் வழிபடுவதற்கான உரிமை பாதுகாப்பப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p> <h2>லெபனான் பிரச்சனை</h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/israel-launches-barrage-of-attacks-on-lebanon-4-killedincluding-womenand-20-critically-injured">லெபனானில்</a> அமைதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1701 முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என "டெல்லி பிரகடனம்" சொல்கிறது.</p><p>லெபனானின் இறையாண்மை மற்றும் எல்லைகள் மதிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள பிரிக்ஸ், தெற்கு லெபனானில் தங்கியுள்ள இஸ்ரேலியப் படைகள் உடனடியாகத் தங்களது வீரர்களை திரும்ப அழைக்க வேண்டும் என கோரியுள்ளது.</p><p>மேலும் ஈரான் மீதான அமெரிக்காவின் போர் உலக நலனுக்கு உகந்ததல்ல என்றும் பிரிக்ஸ் நாடுகள் தெரிவித்துள்ளன. </p> ]]></content:encoded></item><item><title>டெல்லி 5 நட்சத்திர விடுதி அறையில் ஏர் இந்தியா விமானி மர்ம மரணம்</title><link>https://www.maalaimalar.com/news/national/air-india-pilot-dies-in-delhi-5-star-hotel-room</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-india-pilot-dies-in-delhi-5-star-hotel-room#comments</comments><guid isPermaLink="false">7f571e8d-d902-41b6-bb37-8ff5135641b5</guid><pubDate>Sat, 12 Sep 2026 20:08:41 +0000</pubDate><atom:updated>2026-09-12T20:08:41.209Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏர் இந்தியா,Air India,delhi,Air India Pilot,டெல்லி,ஏர் இந்தியா விமானி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/o9yzb4fd/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  ஏர் இந்தியா விமானி மர்ம மரணம்]]></media:title><media:description type="html"><![CDATA[  ஏர் இந்தியா விமானி மர்ம மரணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/o9yzb4fd/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் ஏர் இந்தியா விமானி ஓட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். </p><p>ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றி, பின்னர் <a href="https://www.maalaimalar.com/news/national/phuket-flight-pilot-who-failed-drug-test-sacked-by-air-india">ஏர் இந்தியா</a> நிறுவனத்திற்கு மாறிய அந்த விமானி, போயிங் 787 விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிக்காகப் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லிக்கு </a>வந்துள்ளார். </p><p>அவர் செப்டம்பர் 10 அன்று தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு 5 நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.</p> <h2>உயிரிழப்பு</h2><p>செப்டம்பர் 11 மாலை நேரத்தில், விமானியின் சகோதரர் தனது சகோதரருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை.</p><p>இதனால் சந்தேகமடைந்த அவர் ஓட்டல் மேலாளரை  தொடர்புகொண்டு நிலைமையை கூறியுள்ளார்.</p><p>ஓட்டல் அறை உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால், மேலாளர் மாற்றுச் சாவி மூலம் அறையை திறந்து பார்த்தபோது, விமானி சுயநினைவின்றி மயங்கிக் கிடந்தது தெரியவந்தது.</p><p>வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்திற்கு வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.</p><p>ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.</p> <h2>பிரேதப் பரிசோதனை</h2><p>அவரது உடலுக்கு இன்று புதுடெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் டற்கூறாய்வு செய்யப்பட்டது. இறுதி மருத்துவ அறிக்கை கிடைத்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியும் எனக் காவல் துறை கூறியுள்ளது.</p><p>இந்தச் சம்பவத்தில் எந்தவிதமான சதிச்செயலும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கூறிய காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p> <p>அந்த விமானி மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.</p><p>இச்சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் ஓட்டல் அறையில் எங்களது விமானி சுயநினைவின்றி மீட்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி எங்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா வழங்கி வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முரண்பாடுகள் ஒருபோதும் மோதல்களாக மாறக் கூடாது - சீன அத்திபாருடான பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/controversies-should-never-turn-into-conflicts-pm-modi-insists-in-talks-with-chinese-delegation</link><comments>https://www.maalaimalar.com/news/national/controversies-should-never-turn-into-conflicts-pm-modi-insists-in-talks-with-chinese-delegation#comments</comments><guid isPermaLink="false">073a6e25-8b64-4e1c-ac59-fd1e5df365a0</guid><pubDate>Sat, 12 Sep 2026 18:12:14 +0000</pubDate><atom:updated>2026-09-12T18:12:14.889Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,India-China,BRICS Summit,பிரிக்ஸ் உச்சிமாநாடு,பிரதமர் மோடி,இந்தியா-சீனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1da5dw11/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி, ஜி ஜின்பிங்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி, ஜி ஜின்பிங்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1da5dw11/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள சீன அதிபரிடம் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.</p> <p>2019 இல் சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டை அத்துமீறி கடந்து நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். </p><p>இதன் பின் சிக்கலில் இருந்த சீனாவுடனான உறவை பிரதமர் மோடி புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். </p><p>அதன் ஒரு பகுதியாக 7 ஆண்டுகள் கழித்து இந்தியா வருகை தந்துள்ளார் சீன அதிபர் ஜி ஜின்பிங். இன்றும் நாளையும் டெல்லியில் நடக்கும் 18வது பிரிக்ஸ் மாநாட்டில் அவர் கலந்துகொண்டுள்ளார். </p><p>அவருடன் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-urges-sustained-brics-momentum-at-delhi-summit">பிரதமர் மோடி</a> இன்று இருதரப்பு பேச்சுவார்தையையும் நடத்தி உள்ளார். </p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள சீரான முன்னேற்றத்தை இரு தலைவர்களும் வரவேற்றதாக இந்திய வெளியுறவு அமைச்சகம்  தெரிவித்துள்ளது.</p> <h2>இரு நாட்டு உறவு</h2><p>சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி, "இரு நாடுகளுக்கும் இடையிலான <a href="https://www.maalaimalar.com/news/national/chance-to-hold-bilateral-talks-with-chinese-president-prime-minister-modi-who-is-coming-to-india-to-attend-the-brics-conference">வேறுபாடுகள் </a>மற்றும் முரண்பாடுகள் ஒருபோதும் மோதல்களாக மாறக் கூடாது" என்று சுட்டிக்காட்டினார்.</p><p>இருதரப்பு உறவுகளுக்கு பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன், மற்றும் பரஸ்பர நலன் ஆகிய மூன்று முக்கிய கோட்பாடுகள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தினார்.</p> <p>எல்லைப் பகுதிகளில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவுவதே இருதரப்பு உறவுகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு அவசியமான அடிப்படை என்பதைப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.</p><p>எல்லை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் புரிதல்களை இரு நாடுகளும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.</p><p>எல்லைப் பிரச்சினைக்கு நியாயமான, தாரபூர்வமான மற்றும் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை எட்டுவதில் இரு தலைவர்களும் தங்களது உறுதியை வெளிப்படுத்தினர்.</p> <h2>வர்த்தக உறவு</h2><p>இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் குறித்தும் இருவரும் பேசினர். வர்த்தக சமனின்மை மற்றும் விநியோகச் சங்கிலிச் சிக்கல்கள் ஆகியவற்றை இரு தரப்பும் பரஸ்பரம் தீர்க்க வேண்டும் என்பதில் இருவரும் உடன்பட்டனர்.</p><p>இரு நாடுகளின் வர்த்தகங்களுக்கும் முறையான சந்தை அணுகலை வழங்குவது அவசியம் என ஒப்புக்கொள்ளப்பட்டது.</p><p>இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் சீரமைக்கும் நோக்கில் இந்த சந்திப்பு மிக முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இது தான் ஏழ்மையை ஒழிப்பதா?.. பிரிக்ஸ் மாநாட்டுக்காக டெல்லியில் குடிசைப் பகுதிகள் திரையிட்டு மறைப்பு - ஆம் ஆத்மி, காங்கிரஸ் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/is-this-how-poverty-is-eradicated-slum-areas-in-delhi-screened-off-for-the-brics-summit-aam-aadmi-party-and-congress-criticize-the-move</link><comments>https://www.maalaimalar.com/news/national/is-this-how-poverty-is-eradicated-slum-areas-in-delhi-screened-off-for-the-brics-summit-aam-aadmi-party-and-congress-criticize-the-move#comments</comments><guid isPermaLink="false">f8275ffd-da4a-4a09-92a1-39a6aa93d10c</guid><pubDate>Sat, 12 Sep 2026 17:34:19 +0000</pubDate><atom:updated>2026-09-12T17:34:19.468Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆம் ஆத்மி,BRICS Summit,delhi,Aam Aadmi,பிரிக்ஸ் உச்சிமாநாடு,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1jufqmrw/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி குடிசைப் பகுதிகள் திரையிட்டு மறைப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி குடிசைப் பகுதிகள் திரையிட்டு மறைப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1jufqmrw/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி இன்று தொடங்கி நாளை வரை இரு தினங்களுக்கு 18வது <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-urges-sustained-brics-momentum-at-delhi-summit">பிரிக்ஸ் உச்சி மாநாடு </a>நடைபெறுகிறது. </p><p>இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உள்ளிட்ட உறுப்பு நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். </p><p>பாரத் மண்டபத்தில் மாநாடு நடந்து வரும் சூழலில் தலைநகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லியில் </a>பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. </p> <p>அதேநேரம் நகரை அழகுபடுத்தி காட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன.</p><p>ஏழை மக்கள் வாழும் குடிசைப் பகுதிகளும், சேரிகளும் திரைகள் கொண்டு மறைக்கப்பட்டுள்ளன.</p><p>இதன் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன</p> <h2>ஆம் ஆத்மி விமர்சனம்</h2><p>இதனை கேலிச் சித்திரம் வெளியிட்டு விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, "சேரிப் பகுதிகளை திரையிட்டு மறைப்பதால் நிஜம் மாறப்போவதில்லை. 2.6% ஜிடிபி வளர்ச்சியை 7.8% என அழைப்பது போன்றுதான் இதுவும் ஒரு ஏமாற்று வேலை" என குற்றம் சாட்டியுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Covering slums with curtains won’t change the reality, just like calling 2.6% GDP Growth 7.8%. <a href="https://t.co/8sP55anb4f">pic.twitter.com/8sP55anb4f</a></p>&mdash; AAP (@AamAadmiParty) <a href="https://x.com/AamAadmiParty/status/2098412025965883545?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>காங்கிரஸ் விமர்சனம்</h2><p>காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, "பாஜகவிற்கு எல்லா 'ஹிஜாப்'களும் பிடிக்காமல் இல்லை; பிரதமரின் தோல்விகளையும் நாட்டின் வறுமையையும் மூடி மறைக்கும் இந்தத் திரையை தான் அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்" என்று சாடியுள்ளார்.</p><p>வறுமையை ஒழிப்பதற்குப் பதிலாக வெளிநாட்டு விருந்தினர்களிடம் இருந்து வறுமையை மறைப்பதே அரசின் நோக்கமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கு முன்பும் ஜி20 போன்ற முக்கியச் சர்வதேச நிகழ்வுகளின் போது டெல்லியின் முக்கியச் சாலைகளின் இருபுறமும் உள்ள குடிசைகளைத் திரையிட்டு மறைத்ததற்காக மத்திய அரசு விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. </p>  ]]></content:encoded></item><item><title>குஜராத்தில் 62 சிங்கங்கள் உயிரிழப்பு : மொத்த இறப்புகளில் குட்டிகளே அதிகம்
</title><link>https://www.maalaimalar.com/news/national/62-lions-dead-in-gujarat-due-to-disease-majority-cubs</link><comments>https://www.maalaimalar.com/news/national/62-lions-dead-in-gujarat-due-to-disease-majority-cubs#comments</comments><guid isPermaLink="false">b57430d2-c32b-4cd8-970a-45bf1ddb77d2</guid><pubDate>Sat, 12 Sep 2026 12:13:48 +0000</pubDate><atom:updated>2026-09-12T12:13:48.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,gujarat,lion,சிங்கம் உயிரிழப்பு,சிங்கங்கள்</media:keywords><media:content height="358" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4snx407e/newindianexpress2026-05-262uim3ljeAsiatic-lion-deaths.avif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gujarat loses 62 lions in 2026]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4snx407e/newindianexpress2026-05-262uim3ljeAsiatic-lion-deaths.avif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2>உயிரிழப்பு </h2><p>2026ஆம் ஆண்டு ஜீலை 31ம் தேதிக்கு முந்தைய ஓராண்டுக்குள் மட்டும் குஜராத்தில் நோய்கள் காரணமாக 62 சிங்கங்கள், பெண் <a href="https://www.maalaimalar.com/news/national/gir-lions-under-threat-virus-kills-7-in-gujarat-17-in-quarantine">சிங்கங்கள்</a> மற்றும் குட்டிகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நோய்</h2><p>நிமோனியா, இரத்தசோகை, சிறுநீரக மற்றும் கல்லீரல் செயலிழப்பு, பல உறுப்பு செயலிழப்பு, மாரடைப்பு மற்றும் பிற நோய்கள் ஆகியவை சிங்கங்களின் உயிரிழப்புக்கு காரணங்களாக இருக்கலாம் என அரசு பட்டியலிட்டுள்ளது. இதிலும் குட்டிகளே அதிகமாக உயிரிழந்துள்ளன. </p><h2>பாதிப்பு </h2><p>இந்த இறப்புகளில் குட்டிகளே அதிகபட்சமாக 28 சதவீதம் மரணமடைந்துள்ளன. இது மொத்த இறப்புகளில் 45.2% ஆகும். 17 ஆண் சிங்கங்களும் ,17 பெண் சிங்கங்களும் இறந்துள்ள. இது மொத்த இறப்புகளில் 27.4% ஆகும். மேலும் வயது வந்த சிங்கங்களின் எண்ணிக்கை 34 ஆக உள்ளது. </p><h2>ஆராய வேண்டும் </h2><p>இந்த தரவுகளை எச்சரிக்கையுடன் ஆராய வேண்டும் எனவும், அரசின் பதிவில் வயது வாரியான இறப்பு விகிதங்கள் அல்லது முந்தைய ஆண்டுகளில் ஒப்பீட்டுப் புள்ளிவிவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அம்மாநில எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் <a href="https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-passes-the-registration-of-births-and-deaths-amendment-bill-2026-amid-sloganeering-by-opposition">இறப்பு</a> விகிதம் அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.</p> ]]></content:encoded></item><item><title>பாலக்காடு அருகே விசித்திர தேங்காய் - காண குவிந்த மக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/rare-four-eyed-coconut-near-palakkad-draws-curious-crowds</link><comments>https://www.maalaimalar.com/news/national/rare-four-eyed-coconut-near-palakkad-draws-curious-crowds#comments</comments><guid isPermaLink="false">3a937759-6329-4ec9-8145-cbb5157836d2</guid><pubDate>Sat, 12 Sep 2026 11:58:51 +0000</pubDate><atom:updated>2026-09-12T11:58:51.490Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>coconut,Palakkad,பாலக்காடு,கேரளா,Keralam,Coconut Wonder,Miracle Coconut,அதிசய தேங்காய்,விசித்திரதேங்காய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/pqnmp0nx/Miracle-Coconut" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Miracle Coconut ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/pqnmp0nx/Miracle-Coconut?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">கேரள </a>மாநிலம் பாலக்காடு அருகே நான்கு கண்களுடன் கூடிய விசித்திரமான தேங்காய் ஒன்றை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் செல்லும் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.</p><h2><strong>ராணுவ அதிகாரியின் தோட்டத்தில் கிடைத்த அதிசயம்</strong></h2><p>பாலக்காடு மாவட்டம் மண்ணம்பட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான இவரது வீட்டுத் தோட்டத்தில் பல தென்னை மரங்கள் உள்ளன. வழக்கம்போல, இவரது தோட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">தேங்காய்களை </a>உரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.</p><p>அப்போது, ஒரு குறிப்பிட்ட தேங்காயை உரித்த போது அது மற்ற தேங்காய்களை விட வடிவம் மற்றும் அமைப்பில் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.</p><h2><strong>நான்கு கண்கள் மற்றும் உள்ளே 2 குட்டி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">தேங்காய்கள்</a></strong></h2><p>பொதுவாக ஒரு தேங்காய்க்கு மூன்று கண்கள் மட்டுமே இருப்பது இயற்கை. ஆனால், இந்த விசித்திரமான தேங்காயின் வெளிப்புறத்தில் 4 கண்கள் தெளிவாகக் காணப்பட்டன.</p><p>அதோடு மட்டுமின்றி, அந்தத் தேங்காயை உடைத்துப் பார்த்தபோது மற்றொரு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அந்தத் தேங்காயின் உள்புறத்தில் 2 சிறிய குட்டி தேங்காய்கள் முழுமையாக வளர்ந்த நிலையில் காணப்பட்டன. இந்த அபூர்வ நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்</strong></h2><p><br>இந்த விசித்திரமான தேங்காய் குறித்த தகவல் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, மண்ணம்பட்டா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஜெயராமின் வீட்டிற்குத் திரண்டு வந்து, இந்த அதிசய தேங்காயை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.</p><p>மேலும், இந்த அபூர்வ தேங்காயின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மும்பை சொத்து மோசடி: கணவன் இறந்ததாக கூறி ரூ.1.11 கோடி பிளாட்டை விற்ற மனைவி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/mumbai-property-fraud-wife-arrested-for-selling-flat-claiming-husband-dead</link><comments>https://www.maalaimalar.com/news/national/mumbai-property-fraud-wife-arrested-for-selling-flat-claiming-husband-dead#comments</comments><guid isPermaLink="false">333cab89-f622-40cc-b0ab-8a34e1bf06af</guid><pubDate>Sat, 12 Sep 2026 11:58:20 +0000</pubDate><atom:updated>2026-09-12T11:58:20.100Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,Crime,borivali,Mumbai Property Fraud,மும்பை சொத்து மோசடி,போரிவலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/9dmbzh6w/arres.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai Property Fraud]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/9dmbzh6w/arres.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஷாலினி டயானா கிராஸ்டா மற்றும் ரைன் கிராஸ்டா ஆகிய இருவருக்கும் 2007-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.</p><p>மும்பையின் போரிவலி பகுதியில் கூட்டு உரிமையில் இருந்த பிளாட்டை விற்பனை செய்வதற்காக, தனது கணவர் இறந்துவிட்டதாகக் போலி சான்றிதழ் தயாரித்து மோசடி செய்த 49 வயதான ஷாலினி டயானா கிராஸ்டா என்பவரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>ஷாலினி டயானா கிராஸ்டா மற்றும் ரைன் கிராஸ்டா ஆகிய இருவருக்கும் 2007-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதன்பின்னர் 2016-ஆம் ஆண்டில், போரிவலி எல்.எம் பாதையிலுள்ள ராஜ் வில்லா கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் ஒரு படுக்கையறை கொண்ட பிளாட் ஒன்றை இருவரும் இணைந்து வாங்கினர். இதன் வாங்குவதற்காக சுமார் ரூ.56 லட்சம் கடன் பெறப்பட்டு, இருவரின் பெயரிலும் சொத்து பதிவு செய்யப்பட்டது.</p><h2>பிரிந்து <strong>வாழ்ந்த சூழலில்</strong> அரங்கேறிய சதி</h2><p>காலப்போக்கில் தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வாழத் தொடங்கினர். இருப்பினும், அந்த வீடு இருவரின் கூட்டு உரிமையிலேயே தொடர்ந்தது. கணவர் ரைன் தொடர்ந்து அதற்கான கடன் தவணைகளை செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கணவர் ரைன் உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்துவிட்டதாகக் கூறி போலி இறப்புச் சான்றிதழை ஷாலினி தயார் செய்துள்ளார். மேலும், வீட்டுவசதி சங்கத்திடமிருந்து போலி ஆட்சேபனை இல்லா சான்றிதழ் மற்றும் ரைனின் ஒரே வாரிசு தாந்தான் எனக் கூறி போலி வாக்குமூலப் பத்திரத்தையும் உருவாக்கியுள்ளார்.</p><h2><strong>ரூ.1.11 கோடிக்கு விற்ப</strong>னை</h2><p>இந்த போலி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, 2025 ஏப்ரல் 11 அன்று தர்மேஷ் ஜெகதீஷ் டன்னா மற்றும் தாரா தர்மேஷ் டன்னா ஆகியோருக்கு அந்த பிளாட்டை ஷாலினி விற்பனை செய்தார். வீட்டை வாங்கிய புதிய நபர்கள், அந்தச் சொத்தை அடமானம் வைத்து வங்கியில் சுமார் ரூ.1.11 கோடி கடனாகப் பெற்றுள்ளனர்.</p><h2>ந<strong>ண்பர் மூலம் அம்பலமான உண்</strong>மை</h2><p>2026 மே மாதத்தில் ரைனின் நண்பரான பிரசாத் படாடே, ரைனின் பிளாட் வேறு ஒருவர் பெயரில் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக ரைனிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரைன் மற்றும் அவரது தாயார் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி விசாரணை நடத்தியபோது முழு மோசடியும் வெளிச்சத்திற்கு வந்தது. வீட்டுவசதி சங்க அதிகாரிகளிடம் <a href="https://www.maalaimalar.com/news/national/kerala-cm-vt-satheesan-jokes-about-ai-video-showing-him-dancing-better-than-mohanlal-vijay">NOC </a>சான்றிதழைக் காட்டியபோது, அது தங்களால் வழங்கப்படவில்லை என்றும் அதில் உள்ள கையெழுத்துகள் போலியானவை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.</p><h2>போலீஸ் <strong>நடவடிக்கை</strong> </h2><p>இதனைத் தொடர்ந்து ரைன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணைக்குப் பிறகு செப்டம்பர் 9 அன்று ஷாலினியைக் கைது செய்தனர். பின்னர் அவர் போரிவலி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் அடைக்கப்பட்டார். உயிருடன் இருக்கும் நபரை அரசு மற்றும் சொத்து ஆவணங்களில் இறந்தவராகக் காட்டி நடத்தப்பட்ட இந்த மோசடி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>போலி இறப்புச் சான்றிதழ் மற்றும் NOC தயார் செய்ய ஷாலினிக்கு உதவியவர்கள் யார், மேலும் இந்த விற்பனை மூலம் கிடைத்த ரூ.1.11 கோடி பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- மோகன்லால், விஜய்யை விட சிறப்பாக நடனமாடுகிறேன்: வைரல் AI வீடியோ குறித்து கேரள முதல்வர் வி.டி.சதீசன் நகைச்சுவை பதில்!</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-cm-vt-satheesan-jokes-about-ai-video-showing-him-dancing-better-than-mohanlal-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-cm-vt-satheesan-jokes-about-ai-video-showing-him-dancing-better-than-mohanlal-vijay#comments</comments><guid isPermaLink="false">7b037445-eb11-44ab-ab4a-406be737b533</guid><pubDate>Sat, 12 Sep 2026 11:26:02 +0000</pubDate><atom:updated>2026-09-12T11:26:02.862Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Vijay,மோகன்லால்,mohanlal,Kerala CM V.D.Satheesan,கேரள முதல்வர் வி.டி.சதீசன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2csr5uvm/AI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Kerala CM V.D.Satheesan    ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2csr5uvm/AI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து குழு நடனம் ஆடுவது போன்று தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>சமீபத்தில் சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று பெரிய அளவில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் ‘<a href="https://www.maalaimalar.com/news/national/missing-bengaluru-student-rescued-pregnant-aadhaar-otp-leads-cid-to-location">அலா போலே</a>’ பாடலுக்கு, நடிகை ஷம்னா காசிம் மற்றும் குழுவினரின் நடன அசைவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து குழு நடனம் ஆடுவது போன்று தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2>மின்வெட்<strong>டுக்கு எதிரான நகைச்சு</strong>வை போராட்டம்</h2><p>கேரளாவில் நிலவும் கடும் வெயில் மற்றும் மழைப்பொழிவு குறைவு காரணமாக மின் நுகர்வு அதிகரித்துள்ளதால், இரவு நேரங்களில் மின் விநியோகக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">WAIT… IS THIS ACTUALLY REAL?! <br><br>Kerala CM casually vibing to “Alabale” from Jailer 2 like this?! <br><br>AI videos are getting WAY TOO REAL now  <a href="https://t.co/PLG7L1NdGt">pic.twitter.com/PLG7L1NdGt</a></p>&mdash;   (@ItsKishoreVJ) <a href="https://x.com/ItsKishoreVJ/status/2098428983323058438?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பொதுமக்களின் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்த மின்சார வாரியத்தையும் முதலமைச்சரையும் மையப்படுத்தி இந்த ஏஐ வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் பின்னணியில் உள்ள சட்ட அம்சங்கள் மற்றும் பதிப்புரிமை குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் வி.டி.சதீசன் இது குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.</p><h2>முதலமை<strong>ச்சர் விஜய்யுட</strong>ன் ஒப்பீடு</h2><p>இந்த வைரல் வீடியோ குறித்து முதலமைச்சர் வி.டி.சதீசன் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது இசை, நடனம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். இன்று சமூக வலைதளங்களில் ஒரு சுவாரஸ்யமான வீடியோவைக் கண்டதாகவும், அதில் தாம் ஒரு குழு நடனத்திற்குத் தலைமை தாங்குவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், நடிகர் மோகன்லாலை விடவும், தமது நண்பரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய்யை விடவும் தாம் சிறப்பாக நடனமாடுவதாக அந்த வீடியோவில் உருவாக்கப்பட்டுள்ளதை கண்டு தாம் வியப்படைந்ததாக நகைச்சுவையாகத் தெரிவித்தார்.</p><h2>தொ<strong>ழில்நுட்ப வளர்ச்</strong>சி</h2><p>செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், எதிர்காலத்தில் இத்தகைய தொழில்நுட்ப உருவாக்கங்களைச் சட்டப்பூர்வமாக எப்படி வரையறை செய்வது என்பது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும் என்றார். தொழில்நுட்பத்தின் தலையீடு அதிகரித்து வருவதால், தற்போதைய சட்டக் கட்டமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும், பதிப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை மற்றும் பைரசி தொடர்பான சட்டங்கள் காலப்போக்கில் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் கூட்டமைப்பின் உத்வேகம் தொடர வேண்டும்- மாநாட்டில் பிரதமர் மோடி உரை</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-urges-sustained-brics-momentum-at-delhi-summit</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-urges-sustained-brics-momentum-at-delhi-summit#comments</comments><guid isPermaLink="false">812f7318-f95a-4478-9ef5-a9744cad5f2d</guid><pubDate>Sat, 12 Sep 2026 11:11:08 +0000</pubDate><atom:updated>2026-09-12T11:11:08.414Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Conference,பிரிக்ஸ்,pm modi,bricks,பிரதமர் மோடி,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/3197if0p/pm-modi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/3197if0p/pm-modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு புதிய அடையாளத்தை பெற்றுள்ளது. இந்த கூட்டமைப்பின் உத்வேகம் தொடர வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். </p><p>டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இந்தியாவின் BRICS தலைமைப் பொறுப்பானது,</p><p>மனிதாபிமானத்திற்கு முதலிடம் அளிக்கும் அணுகுமுறையைக் கொண்டுள்ளது. புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை எமது முன்னுரிமைகளாகும். </p><p>அதோடு, BRICS ஒத்துழைப்பை சாதாரண பொதுமக்களுடன் இணைப்பதில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்திகிறோம். அந்த இலக்கை மையமாகக் கொண்டு, 350-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.</p><h2>சீர்திருத்தங்கள்</h2><p>ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இனிமேலும் தாமதிக்க முடியாது.</p><p>உலகில் வர்த்தகத் தடைகள் அதிகரிக்கும் சூழலில், இந்தியா பிற நாடுகளுடன் பொருளாதார ரீதியான பாலங்களை அமைத்து வருகிறது.</p><p>உலகின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. பொதுமக்களை மையமாக கொண்டே பிரிக்ஸ் கூட்டமைப்பு செயல்படுகிறது.</p><h2>மனிதநேயத்திற்கு முன்னுரிமை</h2><p>மக்கள் மற்றும் மனிதநேயம், நிலைத்தன்மை என்பது தான் எங்களுக்கு முன்னுரிமை. பிரிக்ஸ் புதிய அடையாளம் பெற்றுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பின் உத்வேகம் தொடர வேண்டும்.</p><p>பிரிக்ஸ் அமைப்பில் உள்ள அனைவரும் முன்னேற்ற பாதையை நோக்கி நடைபோடுவோம். அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டத்தை வடிவமைக்க வேண்டும்.</p><p>பிரிக்ஸ் கூட்டமைப்பினர் இணைந்து உலக அளவில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்து உலக நிர்வாகத்தை சீர்திருத்தம் செய்வது பற்றிய வரைபடத்தை தயாரிப்போம்.</p><h2>நாம் பின்தங்கி உள்ளோம்</h2><p>தற்போதைய உலக நிர்வாகக் கட்டமைப்பு ஒரு 'பிரமிடு' போல இயங்குகிறது. அதன் உச்சியில் அதிகாரமும், அதற்கு அடியில் அந்த முடிவுகளால் பாதிக்கப்படும் நாடுகளும் உள்ளன.</p><p>தெற்குலக நாடுகள் உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்வதில் முன்வரிசையிலும், முடிவெடுக்கும் அதிகாரத்தில் கடைசி வரிசையிலும் தள்ளப்பட்டுள்ளன.</p><p>அந்த பிரமிடு அமைப்பை மாற்றி, அனைவருக்குமான சம தளமாகவும் கூட்டுப் பங்களிப்பாகவும் உருமாற்ற வேண்டும். அதில் ஒவ்வொரு நாட்டின் குரலுக்கு மதிப்பும், உரிமையும் இருக்க வேண்டும்.</p><h2>மாற்றும் நேரம் இது</h2><p>பிரிக்ஸ் உலக அரங்கில் ஒரு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் ஒருவருக்கொருவர் கருத்துக்களை மதிக்கிறோம், ஒருமித்த கருத்தின் மூலம் முன்னோக்கிச் செல்கிறோம். </p><p>அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்வதன் மூலமே நாம் முன்னேறப் பாடுபடுகிறோம். இப்போது நமது ஒற்றுமையையும், ஒருமித்த கருத்தையும், உலக அரங்கில் உறுதியான பலன்களாக மாற்ற வேண்டிய நேரம் இது.</p><h2>பிரதமர் மோடி பரிந்துரை</h2><p>பிரிக்ஸ் தொடர்ச்சி மற்றும் செயலாக்க பொறிமுறையை (continuity and implementation mechanism) உருவாக்க நான் பரிந்துரைக்கிறேன்.</p><p>'ட்ரொய்கா' (Troika) ஏற்பாடு மூலம் அனைத்து முயற்சிகளையும் முடிவுகளையும் தொடர்ந்து கண்காணிக்க இது உதவும்.</p><p>மேலும், ஒவ்வொரு முடிவுடன் தொடர்புடைய மையப்புள்ளி (nodal point), காலக்கெடு மற்றும் செயலாக்க நிலையை பதிவு செய்ய பாதுகாப்பான டிஜிட்டல் களஞ்சியத்தையும் உருவாக்கலாம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | BRICS Summit: Prime Minister Narendra Modi says, &quot;The draft of the BRICS New Delhi Declaration 2026 is before us. It encapsulates the essence of our discussions and reflects our perspectives on key global and regional issues. It also outlines priorities for further… <a href="https://t.co/qZeAfoqpxy">pic.twitter.com/qZeAfoqpxy</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2098727102321431037?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஈரான் போர் உலக நலன்களுக்கு உகந்தது அல்ல: பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/national/brics-summit-xi-jinping-says-middle-east-war-causes-serious-losses</link><comments>https://www.maalaimalar.com/news/national/brics-summit-xi-jinping-says-middle-east-war-causes-serious-losses#comments</comments><guid isPermaLink="false">75f350d4-4fc7-4e51-9ba5-3973a0003e4c</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:55:16 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:55:16.805Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Xi Jinping,ஜி ஜின்பிங்,BRICS Summit,US Iran war,அமெரிக்கா ஈரான் போர்,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/mwx1jgcp/XiJinping002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Xi Jinping]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/mwx1jgcp/XiJinping002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தலைவர்கள் தற்போதைய மோதல்கள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச சமூகத்தின் மீது அவை ஏற்படுத்தும் பரந்த விளைவுகள் குறித்து விவாதித்தனர்.</p><h2>அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது:-</h2><p>* <a href="https://www.maalaimalar.com/news/national/dialogue-and-diplomacy-way-forward-brics-new-delhi-declaration-agreed">பிரிக்ஸ்</a> நாடுகள் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் முன்னோடிப் பங்காற்ற வேண்டும்</p><p>* உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் விவகாரங்களில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.</p><p>* மத்திய கிழக்கில் நடைபெறும் போர் அப்பகுதி மக்கள் மத்தியில் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களுக்கு உகந்தது அல்ல.</p><p>* மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிம்மதியை நிலைநாட்டத் தனது பங்கை ஆற்றுவதற்கு பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் இணைந்து சீனா செயல்படும்.</p><p>​​* மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் போர் ஏற்படக்கூடாது</p><p>* பிரிக்ஸ் நாடுகள் வரலாற்றின் சரியான பக்கம் உறுதியாக நிற்க வேண்டும்.</p><p>* 2027 பிரிக்ஸ் மாநாட்டை சீனா நடத்தும்.</p><p>இவ்வாறு ஜி ஜின்பிங் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>காணாமல் போன பெங்களூரு மாணவி கர்ப்பமாக மீட்பு: ஆதார் OTP மூலம் இருப்பிடத்தை கண்டுபிடித்த சிஐடி போலீசார்</title><link>https://www.maalaimalar.com/news/national/missing-bengaluru-student-rescued-pregnant-aadhaar-otp-leads-cid-to-location</link><comments>https://www.maalaimalar.com/news/national/missing-bengaluru-student-rescued-pregnant-aadhaar-otp-leads-cid-to-location#comments</comments><guid isPermaLink="false">cf570480-b6c9-49de-9627-3e5dcac0ce32</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:54:56 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:54:56.526Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,bengaluru,பெங்களூரு மாணவி,Bengaluru student rescued,AadhaarOTP,CID police,சிஐடி போலீசார்,ஆதார் OTP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/wcvx6caf/adhaer.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bengaluru student rescued]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/wcvx6caf/adhaer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவி மாயமாகி பல மாதங்கள் கடந்தும் எவ்வித தகவலும் கிடைக்காததால், அவரது பெற்றோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். </p><p>பெங்களூரு வித்யாரண்யபுரா பகுதியைச் சேர்ந்த 18 வயதான இரண்டாம் ஆண்டு பியூசி மாணவி ஒருவர், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். அவருடன் அவரது தோழியான மற்றொரு சிறுமியும் மர்மமான முறையில் மாயமானார். இருவரின் குடும்பத்தினரும் பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.</p><h2><strong>கைபேசி இல்லாமல் திட்டமிட்டுச் சென்ற மாணவிகள்</strong></h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாயமான இரு மாணவிகளும் தங்களின் மொபைல் போன்கள் மற்றும் உடைமைகளை வீட்டில் விட்டுச் சென்றது தெரியவந்தது. அவர்கள் தங்களின் கல்லூரி பைகள் மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/national/congress-unable-to-digest-indias-progress-spreading-negativity-over-brics-bjp">ஆதார் அட்டைகளை </a>மட்டுமே கையோடு எடுத்துச் சென்றிருந்தனர். பெங்களூரிலிருந்து புறப்பட்ட இருவரும் முதலில் மலை மகதேஸ்வரா மலைப்பகுதிக்குச் சென்று, பின்னர் அங்கிருந்து தனித்தனியாகப் பிரிந்து சென்றுள்ளனர்.</p><h2>ஆட்<strong>கொணர்வு மனு தா</strong>க்கல்</h2><p>மாணவி மாயமாகி பல மாதங்கள் கடந்தும் எவ்வித தகவலும் கிடைக்காததால், அவரது பெற்றோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை உடனடியாக மாநில குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. ஏப்ரல் மாதம் முதல் சிஐடி சிறப்புப் படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.</p><h2>திருப்பத்<strong>தை ஏற்படுத்திய ஆதார் OT</strong>P </h2><p>கடந்த 7 மாதங்களாக எவ்வித தடயமும் இல்லாமல் இருந்த வழக்கில், இந்த வாரம் ஒரு முக்கிய டிஜிட்டல் திருப்பம் ஏற்பட்டது. அந்த 18 வயது மாணவி, ஏதோ ஒரு சேவைக்காகத் தனது ஆதார் எண்களைப் பயன்படுத்தி, அதற்குரிய ஒருமுறை கடவுச்சொல்லைப் பெறத் தனது கணவரின் மொபைல் எண்ணைப் பதிவு செய்துள்ளார். இந்த ஆதார் டிஜிட்டல் தடத்தைக் கண்டறிந்த சிஐடி புலனாய்வுக் குழுவினர், உடனடியாக அந்த மொபைல் எண்ணைக் கண்காணித்தனர்.</p><h2>கனகபுரா <strong>கிராமத்</strong>தில் மீட்பு </h2><p>குறிப்பிட்ட மொபைல் எண்ணின் உரிமையாளரைக் கண்டுபிடித்து விசாரணை நடத்தியதில், அவர் கனகபுரா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அந்த மாணவி அவரைத் திருமணம் செய்து கொண்டு அங்கு வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், மீட்கப்பட்ட மாணவி தற்போது கர்ப்பமாக இருப்பதாக மூத்த சிஐடி அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவியைப் பத்திரமாக மீட்ட சிஐடி போலீசார், அவரை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெற்றோர் வசம் ஒப்படைத்தனர். அதே வேளையில், அவருடன் மாயமான மற்றொரு சிறுமியைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சிறையில் பிரஜ்வல் ரேவண்ணாவிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் ஆபாச படங்கள்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/movies-found-on-seized-phone-pen-drive-of-jailed-convict-prajwal-revanna</link><comments>https://www.maalaimalar.com/news/national/movies-found-on-seized-phone-pen-drive-of-jailed-convict-prajwal-revanna#comments</comments><guid isPermaLink="false">69243b4a-476f-4a8a-a99c-ff0651f72680</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:05:19 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:05:19.747Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prajwal Revanna,பிரஜ்வல் ரேவண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/a7u686j3/PrajwalRevanna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரஜ்வால் ரேவண்ணா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/a7u686j3/PrajwalRevanna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தேவேகவுடா பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி ஆயுள் தண்டனை வழங்கியது. இவர் மீது மேலும் ஏராளமான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p><h2>பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை</h2><p>இவர் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறைச்சாலையில் அணியும் ஆடையின்றி, வழக்கமான ஆடையுடன் போன் பேசுவது போன்ற வீடியோ வெளியானது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.</p><h2>செல்போன் மற்றும் பென் டிரைவ் பறிமுதல்</h2><p>அப்போது செல்போன் மற்றும் பென் டிரைவ் ஆகியவை கைப்பற்றப்பட்டன. செல்போனை ஆய்வுக்கு அனுப்பினர். அப்போது, செல்போனில் ஏராளமான ஆபாச படங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல் பென் டிரைவில் சினிமா படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவை டவுன்லோடு செய்யப்பட்டிருந்தது.</p><p>இதுகுறித்து ரேவண்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது போன் என்னுடையது அல்ல. சக கைதிகளும் பயன்படுத்தினர். சுழற்சி அடிப்படையில் ஒவ்வொருவரிடமும் போன் மாறிமாறி வரும் எனத் தெரிவித்தார். எந்தவொரு ஆபாச படத்தையும் டவுன்லோடு செய்யவில்லை என்றார்.</p><h2>பெண் நண்பருடன் பேச்சு</h2><p>சோதனையின்போது கைப்பற்றப்பட்ட குறிப்பேடு ஒன்றில், ரேவண்ணாவின் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு அறிமுகமானவர்களின் தொலைபேசி எண்கள் இருந்தன. இடைத்தரகர்கள் மூலமாக குடும்பத்தினருடன் மேற்கொள்ளப்பட்ட அனுமதியற்ற தொடர்புகளும், ஒரு பெண் நண்பருக்கு நேரடியாக மேற்கொள்ளப்பட்ட அழைப்புகளும் அழைப்புப் பதிவுகளில் (call records) தெரிய வந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணையின்போது, ​​அந்தப் பெண் நண்பருடனான தொடர்பை ரேவண்ணா ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.</p><p>தொலைபேசியின் அழைப்புப் பதிவுகளில் எண்கள் இடம்பெற்றுள்ள நபர்களுக்குக் காவல்துறை விரைவில் சம்மன் அல்லது அறிவிப்புகளை அனுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>மொபைல் போன், சிம் கார்டு, சார்ஜர், குறிப்பேடு (Notebook) ஆகியவை ஜெயில் சிறைக்குள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் விசாரணைக் கைதியான பிரதாப் ராய் மற்றும் ரேவண்ணா இருந்த அறையில் இவர் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>வார்டன் மூலம் செல்போன் கடத்தல்</h2><p>வார்டன் மூலம் செல்போனை கடத்தி வந்ததாகவும், விசாரணைக் கைதி மூலம் சிம்கார்டு பெற்றதாகவும், பிரதாப் ராய் மற்றும் ரேவண்ணா ஆகியோர் இதை பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><p>கடந்த 8-ந்தேதி இது தொடர்பாக நீதிமன்றத்தில் ரேவண்ணா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றம் 3 நாள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி அளித்தது. பின்னர் செப்டம்பர் 10-ந்தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் 18-வது பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/national/18th-brics-summit-begins-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/18th-brics-summit-begins-in-delhi#comments</comments><guid isPermaLink="false">86506be4-8006-4737-8ef9-055b19818ee5</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:04:36 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:04:36.793Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாநாடு,Conference,delhi,டெல்லி,பிரிக்ஸ் மாநாடு,Bricks conference</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/06luvrx9/bricks.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bricks conference]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/06luvrx9/bricks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் நாடுகளின் 18வது உச்சி மாநாடு தொடங்கியது.</p><p>பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா, ரஷியா, சீனா, பிரேசில், தென் ஆப்பி ரிக்கா, ஈரான், எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, எத்தியோப்பியா ஆகிய 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.</p><p>மேலும், பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ் தான், வியட்நாம் ஆகியவை நட்பு நாடுகளாக இருக்கின்றன.</p><h2>உச்சி மாநாடு</h2><p>பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு இன்று தொடங்கி  2 நாட்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது. இந்த மாநாடு இந்தியாவில் 4-வது முறையாக நடை பெறுகிறது.</p><p>மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் டெல்லியில் குவிந்து உள்ளனர். நேற்று நடந்த பிரிக்ஸ் வர்த்தக மன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.</p><h2>மாநாடு தொடங்கியது</h2><p>பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று பிற்பகல் 2.35 மணிக்கு அதிகாரபூர்வமாக தொடங்கியது. மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபி யாண்டோ, எகிப்து அதிபர் அப்தெல் பத்தாக் எல்-சிசி, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ஆர். மார்கோஸ், எத்தியோப்பிய  பிரதமர் அபி அகமது அலி, வியட்நாம் பிரதமர் லே மின் ஹங், பிரேசில் வெளியுறவுத் துறை மந்திரி மவுரோ வியரா, நைஜீரியா துணை அதிபர் செனட்டர் காஷிம் ஷெட்டிமா, உகாண்டா துணை அதிபர் ஜெசிகா அலுபோ, </p><p>புருண்டி அதிபர் எவரிஸ்ட் ண்டாயிஷிமியே, தாய்லாந்து துணைப் பிரத மர் சிகாசக் புவாங்செட் கியோ, கியூபா வெளி யுறவுத்துறை மந்திரி புருனோ ரோட்ரிக்ஸ் பரில்லா, பெலாரஸ் வெளியுறவுத் துறை மந்திரி மாக்சிம் ரைஷென்கோவ், உருகுவே  வெளியுறவு அமைச்சர் மரியோ லுபெட்கின் மற்றும் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர்  டெட்ரோஸ் அதானோம் உள்ளிட்ேடார் கலந்து கொள்கிறார்கள்.</p><p>மேலும் பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள்.</p><h2>வர்த்தகம், நிதி</h2><p>இம்மாநாட்டில் வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் மற்றும் தெற்கு உலக நாடுகளுக்கு இடையிலான மேம்பாடு, வர்த்தகம், நிதி, தொழில்நுட்பம், நிலைத் தன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.</p><p>மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய நிர்வாகம் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்ப டுத்துதல் என்ற தலைப்பில் அமர்வு நடக்கிறது. இதில் பிரிக்ஸ் தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகின்றனர்.</p><h2>மோடி-சீன அதிபர் பேச்சுவார்த்தை</h2><p>மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று காலை தலைநகர் பிஜீங்கில் இருந்து புறப்பட்டார். </p><p>அவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வர உள்ளார். கடைசியாக 2019-ம் ஆண்டு இந்தியா வுக்கு வந்த ஜின்பிங், சென்னை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஜின்பிங்குடன், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அரசியல் குழுவின் நிலைக்குழு உறுப்பினரும், அக்கட்சியின் மத்தியக் குழுவின் பொது அலுவலக இயக்குநருமான காய் கி, வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழுவினரும் வருகிறார்கள்.</p><p>இதற்கிடையே உச்சி மாநாட்டுக்கு இடையே இன்று மாலை 5.45 மணிக்கு பிரதமர் மோடி- ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.</p><p>வர்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோ சனை நடத்துகிறார்கள்.</p><h2>எல்லை பிரச்சினை</h2><p>கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு இரு நாடுகளும் உறவைச் சீராக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வரும் நிலையில்  இரு தலைவர்களின் சந்திப்பு முக்கி யத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரு தலைவர்களின் சந்திப்பில் எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.</p><p>இதற்கிடையே மோடி-ஜின்பிங் இருதரப்பு பேச்சு வார்த்தை தொடர்பாக இந்தியாவில் உள்ள சீன தூதர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி  இடையிலான இரு தரப்புச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை சீனாவும் இந்தியாவும் செய்து வருகின்றன. </p><h2>3-வது ஆண்டு</h2><p>கசான், தியான்ஜின் ஆகிய இடங்களில் நடை பெற்ற சந்திப்புகளைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் நேரில் சந்தித்துக் கொள்வது தொடர்ந்து 3-வது ஆண்டாகும்.</p><p>இரு தரப்பு உறவுகளை  நீண்ட கால கண்ணோட்டத்தில் கையாளவும், தகவல் தொடர்பை அதிகரிக்கவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும், வேறுபாடுகளைச் சரியாகக் கையாளவும், நல்ல அண்டை நாடுகளாக வும் ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவும் கூட்டாளிகளாகவும் இருக்க இந்தியாவுடன் சீனா இணைந்து செயல்படும் என்று தெரிவித்தார்.</p><h2>பிரதமர் மோடியுடன் ஆலோசனை</h2><p>இந்தநிலையில் பிரதமர் மோடி இன்று காலை எத்தியோப்பிய பிரதமர், மலேசிய பிரதமர், அபுதாபி இளவரசர், வியட்நாம் பிரதமர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார். </p><p>நேற்று ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.</p><p>இன்று மாலை 4.25 மணிக்கு பாரத் புத்தாக்க கண்காட்சியை  தலைவா்கள் பாா்வையிடுகின்றனா். பின்னா் பாரத் மண்டபத்தில் தலைவா்கள் ஒன்றாக குழு புகைப்படம் எடுக்க உள்ளனா். மேலும், தலைவா்கள் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. </p><h2>விருந்து</h2><p>பின்னர் தலைவா்களுக்கு பிரதமா் மோடி  இரவு 7.30 மணிக்கு விருந்து  அளிக்கிறார். அதனுடன் இன்றைய முதல் நாள் மாநாடு நிறைவு பெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் புது டெல்லி பிரகடனம்: இந்தியாவின் முயற்சிக்கு அனைத்து நாடுகளும் ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/dialogue-and-diplomacy-way-forward-brics-new-delhi-declaration-agreed</link><comments>https://www.maalaimalar.com/news/national/dialogue-and-diplomacy-way-forward-brics-new-delhi-declaration-agreed#comments</comments><guid isPermaLink="false">56046714-85d8-4061-b86a-003e1dbc6bdd</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:37:29 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:37:29.532Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BRICS Summit,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/t2nje2h7/BricsSummit001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரிக்ஸ் மாநாடு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/t2nje2h7/BricsSummit001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் புதுடெல்லி வந்துள்ளனர். ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர், சீன அதிபர் ஜி ஜின் பிங் உள்ளிட்ட தலைவர்கள் வந்துள்ளனர்.</p><p>பொதுவாக மாநாட்டின் போது உலகளவில் பாதிக்கப்படக்கூடிய ஒரு குறிப்பிட்ட சம்பவம் குறித்து பொது கருத்து ஒற்றுமையுடன் பிரகடனம் வெளியிடப்படும். தற்போது உலகளவில் அமெரிக்கா- ஈரான் போர், உக்ரைன்- ரஷியா போர் சண்டை நடைபெற்று வருகிறது. அதேபோல் ஹவுதி- சவுதி அரேபியா இடையே சண்டை நடைபெறுகிறது.</p><h2>பிரகடனம்</h2><p>இந்த நிலையில் எந்தவொரு நாட்டையும் குறிப்பிடாமல் எந்த வகையான ஆக்கிரமிப்பையும் வன்மையாக கண்டிக்கும் வகையில் ஒருமித்த கருத்துடன் பிரகடனம் வெளியிட இந்தியா முயற்சி மேற்கொண்டது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் அனைத்து நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.</p><p>இதன் அடிப்படையில் மோதலை முடிவுக்கு கொண்டு வர உரையாடலும் ராஜதந்திரமுமே முன்னேற்றத்திற்கான வழி என்பதை மையமாக வைத்து பிரிக்ஸ் புது டெல்லி பிரகடனம் வெளியிடப்பட இருக்கிறது. இதற்கு அனைத்து நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.</p><p>இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு பிரகடனம் வெளியிடப்பட இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>கொச்சி விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் ரோபோ அறிமுகம்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/cial-introduces-passenger-assistance-robot-at-kochi-airport</link><comments>https://www.maalaimalar.com/news/national/cial-introduces-passenger-assistance-robot-at-kochi-airport#comments</comments><guid isPermaLink="false">e6d4591f-f88c-4734-a8ac-c1b43ce68772</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:58:01 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:58:01.722Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ரோபோ,கொச்சி விமான நிலையம்,robot,cochin airport</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/ogqlupp3/Robot0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொச்சி விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/ogqlupp3/Robot0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரள மாநிலமை் கொச்சின் விமான நிலையத்தில் முதல் கட்டமாக, உள்நாட்டுப் பிரிவு பாதுகாப்புப் பகுதியில் (Domestic Security Hold Area) அமைந்துள்ள கலங்கன் (Kalangan) எனும் கலை அருங்காட்சியகத்தில் பயணிகளுக்கு உதவும் ரோபோ ஒன்று பணியமர்த்தப்பட்டுள்ளதாக CIAL தெரிவித்துள்ளது. CIAL-ன் நிர்வாக இயக்குநர் எஸ். சுஹாஸ் (IAS) இந்த ரோபோ சேவையைத் தொடங்கி வைத்தார்.</p><h2>பயணிகளை வரவேற்கும் ரோபோ</h2><p>இந்த ரோபா பயணிகளை வரவேற்பது, வழிமுறைகள் வழங்குவது, விமானத்தின் நேரம் குறித்த தகவல்களை வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்யும். அத்துடன் பயணிகளை விமானத்தில் ஏறும் வாயில்கள் (boarding gates) மற்றும் பிற விமான நிலைய வசதிகளுக்கு அழைத்துச் செல்கிறது.</p><p>CIAL சேவைகள், விமான அட்டவணைகள் மற்றும் வாயில் எண்கள் உள்ளிட்ட பயணம் தொடர்பான உதவிகளைப் பெற பயணிகள் இந்த ரோபோவுடன் உரையாடலாம்.</p><p>கதகளி மற்றும் ஒட்டன்துள்ளல் போன்ற பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் கலங்கன் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிற்பங்கள், கலைப்படைப்புகள் பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் கேரளாவின் கலாச்சார பாரம்பரியத்தையும் இந்த ரோபோ முன்னிலைப்படுத்தும்.</p><h2>செக்-இன் கூடங்களிலும் பணியமர்த்த திட்டம்</h2><p>மேலும், இது பயணிகளை அந்தந்தக் கலைக் கண்காட்சிப் பகுதிகளுக்கு வழிநடத்திச் செல்லும். அடுத்த கட்டமாக, விமான நிலையத்தின் செக்-இன் (check-in) கூடங்களிலும் பயணிகளுக்கு உதவும் ரோபோக்களைப் பணியமர்த்த CIAL திட்டமிட்டுள்ளது.</p><p>அத்துடன், முனையத்திற்குள் பயணிகளுக்கு நேரடியாக உணவு மற்றும் பிற பொருட்களைக் கொண்டு வந்து சேர்க்கக்கூடிய 'டெலிவரி ரோபோக்களை' (delivery robots) அறிமுகப்படுத்துவது குறித்தும் விமான நிலைய நிர்வாகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>புனேவைச் சேர்ந்த கைனடிக்ஸ் ரோபோட்டிக்ஸ் (Kinetics Robotics) நிறுவனம் CIAL-க்காக இந்த ரோபோவை உருவாக்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராணுவ முகாமில் புகுந்து AK-203 துப்பாக்கிகள், 1900 தோட்டாக்களை சுருட்டிய ஓய்வுபெற்ற ஹவில்தார்!</title><link>https://www.maalaimalar.com/news/national/ex-soldier-arrested-for-theft-of-ak-203-rifles-and-1900-rounds</link><comments>https://www.maalaimalar.com/news/national/ex-soldier-arrested-for-theft-of-ak-203-rifles-and-1900-rounds#comments</comments><guid isPermaLink="false">501f3234-047a-43ed-90c2-d8b2a04751d4</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:54:23 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:54:23.430Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hyderabad,ஐதராபாத்,Army Theft,Army Havildar Arrested,துப்பாக்கிகொள்ளை,Army Rescue,Military Security Lapse,Military Rifles</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/zmdmxf07/Military-Rifles" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Military Rifles]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/zmdmxf07/Military-Rifles?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">ஐதராபாத் </a>செகந்திராபாத் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள அதீத பாதுகாப்பு நிறைந்த பொல்லாரம் ராணுவ முகாமில் இருந்து, துப்பாக்கிகள் மற்றும் சுமார் 1,900 தோட்டாக்களைத் திருடிய ஓய்வு பெற்ற ராணுவ ஹவில்தார் ஒருவரை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>பிடிபட்ட நபர் யார்?</h2><p>கைது செய்யப்பட்ட நபர் 20 பட்டாலியன் மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் ஹவில்தாராகப் பணியாற்றிய உப்புதொல்லா மல்லேஷ் (37) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். </p><p>2010-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர், கடந்த ஜூன் 30 அன்று ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். </p><p>தனக்கு வழங்கப்பட்ட முன்கூட்டிய ஓய்வு காரணமாக ஏற்பட்ட அதிருப்தியே இந்தத் திருட்டுக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>துணிகர திருட்டு மற்றும் கடத்தல்</h2><p>ஓய்வு பெற்று சில மாதங்களே ஆன நிலையில், கடந்த ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில் மல்லேஷ் இந்தத் திருட்டை அரங்கேற்றியுள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">ராணுவ முகாமின்</a> ஆயுதக் கிடங்கு மற்றும் பாதுகாப்புப் பெட்டகங்களை உடைத்து ஆயுதங்களை சூறையாடியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.</p><h2>திருடப்பட்ட ஆயுதங்களின் பட்டியல்</h2><p>4 AK-203 ரக துப்பாக்கிகள்,1 இன்சாஸ் ரக துப்பாக்கி, 7 பிஸ்டல்கள், துப்பாக்கி குண்டுகள் நிரப்பும் மேகசின்கள், 1 இரவு நேரக் கண்காணிப்பு பைனாகுலர் போன்ற சுமார் 1,900 ரவுண்ட் தோட்டாக்கள் திருடப்பட்டுள்ளன.</p><h2>போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற தருணம்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE">தெலங்கானா </a>டிஜிபி சி.வி. ஆனந்த் இதுகுறித்துத் தெரிவிக்கையில், மல்லேஷ் ஆயுதங்களைத் திருடிவிட்டு அதிகாலை 4:34 மணியளவில் பாலாஜி நகரிலுள்ள தனது வீட்டிற்குச் சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.</p><p>பின்னர், தனக்குச் சொந்தமான வெள்ளை நிற பிரெஸ்ஸா காரில் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு அச்சம்பேட்டை நோக்கிப் புறப்பட்டார். </p><p>போலீசாரின் சோதனச் சாவடிகள் மற்றும் சுங்கச்சாவடிகளை தவிர்ப்பதற்காக அவர் ஸ்ரீசைலம் சாலையைப் பயன்படுத்தாமல், வெளிவட்டச் சாலை, சாகர் ரிங் ரோடு மற்றும் பெங்களூரு கேட் சாலை வழியாகப் பயணித்துள்ளார்.</p><h2>காரில் பயணிகளை ஏற்றி நாடகம்</h2><p>ராணுவப் பணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, மல்லேஷ் தனது காரை வாடகைக்கு ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். </p><p>இந்தத் திருட்டுப் பயணத்தின் போது, போலீசாருக்குத் தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவும், தான் வேறு வேலைக்காகத் தான் அச்சம்பேட்டை சென்றேன் என்பதைக் காட்டுவதற்காகவும் வழியில் பயணிகளை காரில் ஏற்றியுள்ளார்.</p><p>சாகர் ரிங் ரோடு டாக்ஸி பாயிண்ட் அருகே 4 பயணிகளை ஏற்றி தேவராக்கொண்டாவில் இறக்கிவிட்டு அவர்களிடம் பணத்தைப் பெற்றுள்ளார். தொடர்ந்து திண்டி பகுதியில் மேலும் 2 பயணிகளை ஏற்றி இறக்கியுள்ளார். ஆகஸ்ட் 31 மதியம் 1:15 மணியளவில் அவர் அச்சம்பேட்டையை சென்றடைந்துள்ளார்.</p><h2>சிக்கியது எப்படி? ஆயுதங்கள் மீட்பு!</h2><p>மல்லேஷ் மீது போலீசாருக்குச் சந்தேகம் வலுத்ததை அடுத்து, பயந்துபோன அவர் செப்டம்பர் 6 அன்று ஆயுதங்களை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளார். எனினும், தீவிர விசாரணையில் செப்டம்பர் 10 அன்று மல்லேஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.</p><p>அவரது ஒப்புதல் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, ஐதராபாத் டாஸ்க் ஃபோர்ஸ் போலீசார் மற்றும் டிசிபி தலைமையிலான குழுவினர், திருடப்பட்ட அனைத்து AK-203 துப்பாக்கிகள், பிஸ்டல்கள் மற்றும் 1,900 தோட்டாக்கள் அடங்கிய ஒட்டுமொத்த ஆயுதக் குவியலையும் பத்திரமாக மீட்டனர். </p><p>இந்தத் திருட்டின் பின்னணியில் வேறு ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் மாநாடு: இந்தியா வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/brics-summit-chinese-president-xi-lands-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/brics-summit-chinese-president-xi-lands-in-delhi#comments</comments><guid isPermaLink="false">22abc559-c71b-4650-b9cc-ad85c699faf5</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:59:02 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:59:02.616Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Xi Jinping,ஜி ஜின்பிங்,BRICS Summit,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1yhfr7sd/XiJinping001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜி ஜின்பிங்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1yhfr7sd/XiJinping001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்கி நாளை வரை நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் இந்திய வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் பெசெஸ்கியன் உள்ளிட்ட தலைவர்கள் வந்தனர்.</p><p>இந்த நிலையில் இன்று மதியம் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்தடைந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜி ஜின்பிங் இந்தியா வந்துள்ளார்.</p><h2>பிரதமர் மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பு</h2><p>பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையே இந்திய பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.</p><p>நேற்று ரஷிய அதிபர் புதின் உடன் இந்திய பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது புதினிடம் உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.</p><p>மேலும், அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி மற்றும் திறன் பரிமாற்றம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் விவாதித்தனர். அத்துடன் மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் மற்றும் கருங்கடல் பிராந்தியத்தின் நிலைமை குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் தங்கள் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>உதவியாளர் வீட்டில் பணம், நகைகளை கைப்பற்றிய ED: கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகிய காங்கிரஸ் தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-leader-harish-rawat-quits-party-posts-after-cash-jewellery-recovered-from-aide-house</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-leader-harish-rawat-quits-party-posts-after-cash-jewellery-recovered-from-aide-house#comments</comments><guid isPermaLink="false">20aa8128-3a8c-4e4a-8580-061e4c28324e</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:30:51 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:30:51.209Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Harish Rawat,ஹரிஷ் ராவத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/8wtq2lz5/Rawatquits001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹரிஷ் ராவத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/8wtq2lz5/Rawatquits001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரகாண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத். இவர் ஏற்கனவே உத்தரகாண்ட் மாநில முதல்வராக இருந்துள்ளார். இவரின் 2014 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான முதல்வர் பதவி காலத்தில், சிறப்புப்பணி அதிகாரியாக செயல்பட்டவர் சந்தன் சிங் ஜீனா. தற்போது தனிப்பட்ட உதவியாளராக (PA) உள்ளார்.</p><h2>32 லட்சம் ரூபாய் பணம்</h2><p>இவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது 32 லட்சம் ரூபாய் பணம் மற்று 12-க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கடிகாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்.</p><p>உதவியாளர் வீட்டில் இருந்து பணம் மற்றும் நகை கைப்பற்றப்பட்ட நிலையில், ஹாரிஷ் ராவத், காங்கிரஸ் கட்சியில் தனது அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>6 வருடத்திற்குப் பிறகு குவாங்சூ- டெல்லி இடையே விமான சேவையை தொடங்கும் சீன நிறுவனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/china-southern-airlines-to-resume-guangzhou-to-delhi-flights-after-6-years</link><comments>https://www.maalaimalar.com/news/national/china-southern-airlines-to-resume-guangzhou-to-delhi-flights-after-6-years#comments</comments><guid isPermaLink="false">cd975128-8cb1-4b60-b0b5-157366eba254</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:51:13 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:51:13.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா சீனா,India China,விமான போக்குவரத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/7mlzyq5l/ChinaSouther-Airlines.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ China Southern Airlines]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/7mlzyq5l/ChinaSouther-Airlines.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவின் China Southern Airlines நிறுவனம், இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு சீனாவின் குவாங்சூவில் இருந்து விமானப் போக்குவரத்து வருகிற 21-ந்தேதியில் இருந்து தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது.</p><h2>வாரத்திற்கு 100 விமானங்கள்</h2><p>China Southern Airlines நிறுவனத்தின் தலைமையகம் சீனாவின் தெற்கு குவாங்டோங் பிராந்தியத்தின் குவாங்சூவில் உள்ளது. சீனாவில் உள்ள முக்கியமான விமான சேவை நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இருவழிப் பாதையில் வாரத்திற்கு 100 விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.</p><p>இந்தியாவில் இன்று பிரிக்ஸ் மாநாடு தொடங்க இருக்கிறது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><h2>கொரோனாவில் தடைபட்டு விமான சேவை</h2><p>கடந்த 6 வருடத்திற்கு முன்னதாக கொரோனா தொற்று காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின் எல்லையில் மோதல் ஏற்பட்டு பதற்றம் நிலவியதால் விமான சேவை தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தது.</p><h2>மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பால் மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவை</h2><p>இந்திய பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கடந்த 2024 மற்றும் 2025-ம் ஆண்டு நேரடியாக சந்தித்து பேசினார். அதனடிப்படையில் படிப்படியாக இருநாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டு வருகிறது.</p><p>கடந்த மார்ச் மாதம் இண்டிகோ நிறுவுனம் ஷாங்காய்- கொல்கத்தா இடையே தினசரி விமான சேவையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மண்டல, மகர விளக்கு சீசன் - சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணையை இருப்பு வைக்க நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/mandala-pooja-and-makaravilakku-measures-taken-to-stock-70-lakh-tins-of-aravana-at-sabarimala</link><comments>https://www.maalaimalar.com/news/national/mandala-pooja-and-makaravilakku-measures-taken-to-stock-70-lakh-tins-of-aravana-at-sabarimala#comments</comments><guid isPermaLink="false">c1282dc9-45e1-4fa7-8646-ef4b8fbba0a3</guid><pubDate>Sat, 12 Sep 2026 02:47:50 +0000</pubDate><atom:updated>2026-09-12T02:47:50.956Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சபரிமலை கோவில்,Sabarimala temple,makaravilakku pooja,Mandala Pooja,அரவணை,மண்டல - மகரவிளக்கு பூஜை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2wy6suhs/aravana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ aravana payasam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2wy6suhs/aravana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீசனுக்கு முன்னதாக சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.</p> <p>சபரிமலையில் நடப்பு மண்டல <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">மகரவிளக்கு சீசன்</a> வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதனையொட்டி திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி வி.டி.சதீசன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் அவர் கூறியதாவது:-</p> <p>சபரிமலை சன்னிதானத்தில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும். சபரிமலையில் பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். பொதுப்பணித்துறை சார்பில் சீசனுக்கு முன்னதாக ரூ.551 கோடியில் சாலை மற்றும் கட்டுமான பணிகள் நிறைவேற்றப்படும். </p> <p>பம்பை ஆற்றில் தேங்கி கிடக்கும் துணிகள் உள்பட அனைத்து அசுத்தங்களும் அகற்றப்படும். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 500 பஸ்கள் குத்தகைக்கு எடுத்து இயக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">சபரிமலையில்</a> அரவணை உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சீசனுக்கு முன்னதாக சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் உச்சிமாநாடு: டெல்லி காவல்துறை போக்குவரத்து அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/brics-summit-delhi-police-issues-traffic-advisory-for-september-12</link><comments>https://www.maalaimalar.com/news/national/brics-summit-delhi-police-issues-traffic-advisory-for-september-12#comments</comments><guid isPermaLink="false">e4749c5f-f43b-45f8-86ac-505356563c8e</guid><pubDate>Fri, 11 Sep 2026 23:31:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T23:31:00.337Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்குவரத்து மாற்றம்,Delhi Police,BRICS Summit,பிரிக்ஸ் உச்சி மாநாடு,டெல்லி காவல் துறை,traffic advisory</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/x7itvt2z/Brics-DL-Map.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Brics Delhi Map]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/x7itvt2z/Brics-DL-Map.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>18-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/brics">பிரிக்ஸ்</a> (BRICS) தலைவர்கள் உச்சிமாநாடு நடைபெறவுள்ளதையொட்டி, இன்று (செப்டம்பர் 12) தலைநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீரமைக்கப்படவுள்ளது. இதற்காக காலை 9:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றுப் பாதைகள் அமலில் இருக்கும் என்று <a href="https://www.maalaimalar.com/news/national">டெல்லி</a> காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>போக்குவரத்து குறித்த இந்த அறிவிப்பு வரைபடம், மத்திய டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சாலைகள், தடைசெய்யப்பட்ட பகுதிகள், மாற்று பாதைகள் மற்றும் போக்குவரத்து திருப்பி விடப்படும் இடங்களை அடையாளம் காட்டுகிறது.</p><h2>போக்குவரத்து சீரமைப்பு:</h2><p>குறிப்பாக பாரத் மண்டபம்/பிரகதி மைதானம் பகுதியை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் இருக்கும்; மேலும் மத்திய டெல்லி மண்டலத்தை வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு டெல்லியுடன் இணைக்கும் பல முக்கிய வழித்தடங்களிலும் போக்குவரத்து சீரமைக்கப்படும்.</p><p>இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய வழித்தடங்களில் ரிங் ரோடு, மதுரா ரோடு, பைரோன் மார்க், திலக் மார்க், இந்தியா கேட்/சி-ஹெக்ஸகன் பகுதி, சர்தார் படேல் மார்க், படேல் ரோடு, தேசிய நெடுஞ்சாலை-48 (NH-48) மற்றும் பரேட் ரோடு ஆகியவை அடங்கும்; அத்துடன் லுட்யன்ஸ் டெல்லி (Lutyens' Delhi) பகுதியிலுள்ள பல சாலைகளும் இதில் அடங்கும்.</p><h2>காவல்துறை அறிவுறுத்தல்:</h2><p>பயணிகள் சிரமத்தை தவிர்க்க, தங்கள் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளுமாறும், முடிந்தவரை மெட்ரோ ரயிலை பயன்படுத்துமாறும், ஒதுக்கப்பட்ட மாற்று பாதைகளை பின்பற்றுமாறும் மற்றும் போக்குவரத்து காவலர்களின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியுமாறும் டெல்லி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.</p><p>அவசர மற்றும் அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் செல்ல அனுமதி அளிக்கப்படும். அறிவிப்பு வரைபடத்தில் மாற்றுப் பாதைகள் நீல நிறத்திலும், கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சாலைகள் ஆரஞ்சு நிறத்திலும், தடைசெய்யப்பட்ட பகுதிகள் ஊதா நிறத்திலும், போக்குவரத்து திருப்பி விடப்படும் இடங்கள் சிவப்பு நட்சத்திரக் குறியீட்டிலும் குறிக்கப்பட்டுள்ளன.</p><p>இதன் மூலம் உச்சிமாநாட்டின் போது பயணிகள் எங்கு கட்டுப்பாடுகள் அல்லது போக்குவரத்து மாற்றங்களைச் சந்திக்க நேரிடும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை இந்தியா புது தில்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்துகிறது.</p>]]></content:encoded></item><item><title>அச்சுறுத்தல்களுக்கு ஈரான் ஒருபோதும் பணியாது: ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான்</title><link>https://www.maalaimalar.com/news/national/iran-will-not-surrender-to-bullies-president-masoud-pezeshkian-in-new-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/iran-will-not-surrender-to-bullies-president-masoud-pezeshkian-in-new-delhi#comments</comments><guid isPermaLink="false">c59ca25f-1d7f-43e1-a139-9e43b3244ce2</guid><pubDate>Fri, 11 Sep 2026 21:14:03 +0000</pubDate><atom:updated>2026-09-11T21:14:03.936Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,மசூத் பெசஸ்கியான்,Masoud Pezeshkian</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/48ea20dq/Masoud-Pezeshkian.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Masoud Pezeshkian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/48ea20dq/Masoud-Pezeshkian.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு ஆசியாவில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நேரடியாக விடுத்த செய்தியில், <a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> அதிபர் மசூத் பெசஸ்கியான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், "அச்சுறுத்தல்" மற்றும் "அதிகாரத் திமிருக்கு" ஈரான் ஒருபோதும் பணியாது என்றும், தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க உறுதியுடன் நிற்கும் என்றும் அவர் கூறினார். </p><p>மதத் தலைவர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய பெசெஸ்கியான், வளைகுடா பிராந்தியத்திற்கான ஈரானின் தொலைநோக்கு பார்வையை விளக்கினார். அமைதியான சகவாழ்வுக்கான அர்ப்பணிப்பை வலியுறுத்திய அவர், அதேவேளையில் ஈரானிய சமூகத்திற்குள் "கருத்து வேறுபாடுகளை தூண்டும்" வெளிநாட்டு சக்திகளை முறியடிப்பதாகவும் உறுதியளித்தார். </p><h2>உண்மையான தீவிரவாதிகள்:</h2><p>இதுகுறித்து பேசிய மசூத் பெசஸ்கியான், "நாங்கள் அடக்குமுறைக்கு ஒருபோதும் பணியமாட்டோம். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் அடிபணியாததாலேயே அவற்றை எதிர்த்து நிற்கிறோம்; அவர்கள் எங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினால், நாங்களும் அவர்களை திருப்பி தாக்குவோம்," என்று ஈரான் அதிபர் கூறினார்.</p><p>தெற்கு ஈரானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 168 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளை "உண்மையான தீவிரவாதிகள்" என்று சாடினார்.</p><h2>ஈரானியர்கள் பணியமாட்டார்கள்:</h2><p>"மருத்துவமனைகள், உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களை இலக்கு வைப்பதற்கு பதிலாக, அவர்கள் எங்கள் ராணுவ வீரர்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டால் மக்கள் பணிந்துவிடுவார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்; ஆனால் ஈரானிய மக்கள் ஒருபோதும் பணியமாட்டார்கள்," என்று அவர் கூறினார்.</p><p>ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா புதிய வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ள சூழலிலும், கடுமையான பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானுக்கு நெருக்கடி கொடுக்க வாஷிங்டன் முயற்சிக்கும் நிலையிலும், மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் பெசஸ்கியானின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.</p><p>பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக ஈரான் அதிபர் பெசஸ்கியான் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை டெல்லி வந்தடைந்தார். இந்த நிகழ்வுக்கு முன்னதாக, ஈரான் அதிபர் பிரதமர் நரேந்திர மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்; இதில் மேற்கு ஆசியாவின் ஒட்டுமொத்த சூழல் மற்றும் இருதரப்பு உறவுகள் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>கைது செய்யப்பட்ட தொண்டர்கள்: காவல் நிலையத்தில் கண்ணீர் விட்ட பாஜக அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/national/up-minister-breaks-down-at-police-station-over-detention-of-bjp-workers</link><comments>https://www.maalaimalar.com/news/national/up-minister-breaks-down-at-police-station-over-detention-of-bjp-workers#comments</comments><guid isPermaLink="false">bf5b8fa6-87a9-4a2b-8c6f-6dc270cd9bcc</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:28:16 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:28:16.521Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,BJP,பாஜக,உத்தர பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m95vwfoc/RakeshRathore001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உ.பி. அமைச்சர் ராகேஷ் ரதோர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m95vwfoc/RakeshRathore001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தர பிரதேச மாநிலம் ரம்பா மஹால் என்ற இடத்தில் ஆக்கிரமிப்பை நீக்குவது தொடர்பாக பாஜக தொண்டர்களுக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இருதரப்பிற்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் பாஜக தொண்டர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.</p><p>கைது செய்தவர்களை சந்திப்பதற்காக உத்தர பிரதேச மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராகேஷ் ரதோர் குரு, தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது கண்ணீர் சிந்தினார்.</p><h2>இந்த சம்பவம் தொடர்பாக ராகேஷ் ரதோர் குரு கூறியதாவது:-</h2><p>ஏதேனும் ஒரு விஷயம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு வர வேண்டிய நிலை எனக்கு ஏற்படுவது என் வாழ்க்கையில்  இதுவே முதல் முறை. உள்ளூர் ரவுடியாக திகழும் முஜிப் அகமது மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஆனால், அவரது கைது செய்யப்பட்டு, அதிகாரிகளுடன் போட்டோ எடுத்துக் கொண்ட பிறகு விடுவிக்கப்பட்டார். ஆனால், பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அமர்வதற்கு இருக்கைகள் கூட வழங்கப்படவில்லை.</p><p>எஸ்.பி. உள்பட அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகளுடன் பேசினேன். நீண்ட நேரம் ரிலீஸ் செய்யும்படி கேட்டுக் கொண்டேன். அவர்கள் உத்தரவாதம் தந்தார்கள் தவிர, ரிலீஸ் செய்யவில்லை. வாக்குவாதத்தின்போது ஏதாவது தவறான வார்த்தைகள் பயன்படுத்தினால், அதற்காக நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இளம் வயதினர் சில சமயங்களில் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தவறலாம்; எனவே, நிர்வாகம் உணர்வுப்பூர்வமாகவும் கனிவுடனும் செயல்பட வேண்டும்.</p><p>எனது தொண்டர்களுக்கு அளிக்கும் மரியாதைக்காகவே நான் இங்கு வந்துள்ளேன். தொண்டர்கள் இல்லையென்றால், பிறகு பாஜக எங்கே இருக்கும்?</p><p>இவ்வாறு அமைச்சர் ராகேஷ் ரதோர் குரு தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பினராயி விஜயன் ஆட்சிக் காலத்தில் அதிக அளவில் தனிப்பட்ட பணியாளர்கள் நியமனம்: வி.டி. சதீசன் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/cm-satheesan-stands-by-claim-787-personal-staff-appointed-during-ldf-govt-tenure</link><comments>https://www.maalaimalar.com/news/national/cm-satheesan-stands-by-claim-787-personal-staff-appointed-during-ldf-govt-tenure#comments</comments><guid isPermaLink="false">cee95759-15f4-4649-823b-bc7455092223</guid><pubDate>Fri, 11 Sep 2026 14:51:38 +0000</pubDate><atom:updated>2026-09-11T14:51:38.458Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பினராயி விஜயன்,Pinarayi Vijayan,VD Satheesan,விடி சதீசன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/oicmjt4y/VDSatheesan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பினராயி விஜயன்- விடி சதீசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/oicmjt4y/VDSatheesan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பினராயி விஜய் ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தனிப்பட்ட பணியாளர் 787 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர் என்று தற்போதை முதலமைச்சர் வி.டி. சதீசன் குறிப்பிட்டிருந்தார். ஆனால், பினராயி விஜய் இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.</p><p>இந்த நிலையில், நான் சொன்னது உண்மை. இந்த உறுதியாக இருக்கிறேன் என்ற வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் சதீசன் கூறியிருப்பதாவது:-</p><p>பெயர்களை மட்டுமல்ல, தனிப்பட்ட பணியாளர்களின் முகவரி உள்பட அனைத்து விவரங்களையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த நியமனம் 2021-ம் ஆண்டில் இருந்து 2026-ம் ஆண்டு வரை நடைபெற்றுள்ளது.</p><h2>முதலமைச்சர் சமூக வலைத்தளங்களுக்காக 12 பேர்</h2><p>முதலமைச்சர் சமூக வலைத்தளங்களை கையாள்வதாக கூடுதலாக 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 22,290 ரூபாயில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மாதத்திற்கு 7 லட்சம் ரூபாய்க்கு மேலும், வருடத்திற்கு 84 லட்சம் ரூபாயும் சமூக வலைத்தளங்களை கையாள்வதற்காக மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது.</p><p>இதை எல்லாம் செய்தவர்கள் தற்போது எங்களது அரசை இழிவுப்படுத்த முயற்சிக்கிறது. எங்களுடைய அரசு குறிப்பிட்ட வரையறையை மீறவில்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான 478 தனிப்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இவ்வாறு சதீசன் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மோதல்களை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை, ராஜந்திரமுமே வழி: புதினிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/russian-president-putin-pm-modi-reiterated-that-dialogue-and-diplomacy-was-the-way-forward-in-resolving-conflicts</link><comments>https://www.maalaimalar.com/news/national/russian-president-putin-pm-modi-reiterated-that-dialogue-and-diplomacy-was-the-way-forward-in-resolving-conflicts#comments</comments><guid isPermaLink="false">cda22d23-20a5-4742-81e6-2ac690cc72d8</guid><pubDate>Fri, 11 Sep 2026 13:11:34 +0000</pubDate><atom:updated>2026-09-11T13:11:34.469Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Putin,புதின்,BRICS,பிரிக்ஸ்,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/n5em7ake/ModiPutin0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய பிரதமர் மோடி- ரஷிய அதிபர் புதின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/n5em7ake/ModiPutin0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்கான ரஷிய அதிபர் புதின் டெல்லி வந்துள்ளார். டெல்லி வந்துள்ள புதினை, இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.</p><p>இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து இந்தயி வெளியுறவுத்துறை அமைச்சம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-</p><p>* ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தையில், மோதல்களைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே வழி என்று பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.</p><h2>அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயார்</h2><p>* ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தையில், உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.</p><p>* அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி மற்றும் திறன் பரிமாற்றம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் விவாதித்தனர்.</p><h2>ரஷியா செல்கிறார் பிரதமர் மோடி</h2><p>* 24-வது இந்தியா- ரஷியா மாநாட்டிற்காக ரஷியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். மேலும் மோடி அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்</p><p>* மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் மற்றும் கருங்கடல் பிராந்தியத்தின் நிலைமை குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் தங்கள் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.</p><p>* BRICS உட்பட பலதரப்புத் துறையில் இந்தியா- ரஷியா ஈடுபாடு குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.</p><p>இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>“நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய முடியும்... ஆனால்’ - முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/if-i-wanted-to-i-could-arrest-jagan-mohan-reddy-in-a-minute-but-chief-minister-chandrababu-naidu</link><comments>https://www.maalaimalar.com/news/national/if-i-wanted-to-i-could-arrest-jagan-mohan-reddy-in-a-minute-but-chief-minister-chandrababu-naidu#comments</comments><guid isPermaLink="false">a7ef767b-fad8-4bff-8ac7-882a4d458b2e</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:16:54 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:16:54.354Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra,cm chandrababu naidu,ஆந்திரா,YS Jagan Mohan Reddy,முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு,ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/s0ml37q6/New-Project-2026-09-11T174015.692.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய முடியும்... ஆனால்’ - முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/s0ml37q6/New-Project-2026-09-11T174015.692.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய முடியும் என்றும், ஆனால் அத்தகைய நடவடிக்கை மக்களுக்கு பயனளிக்காது என்றும் ஆந்திர முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/national/chandrababu-naidu-to-open-rs-900-crore-projects-at-tirupati-seven-hills-temple">சந்திரபாபு நாயுடு</a> தெரிவித்துள்ளார். </p><p>கடந்த ஆட்சியில் அம்மாநில திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை நினைவுக்கூர்ந்த சந்திரபாபு நாயுடு, அது தனது வாழ்வில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திய சம்பவம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நேற்று கோனசீமா மாவட்டம், அம்பாஜிபேட்டா மண்டலத்திலுள்ள பாண்டுவாரிபேட்டா கிராமத்தில் மக்களிடையே உரையாற்றிய அவர்.,</p><p>“ஜெகன் மோகன் ரெட்டியிடம் நான் மென்மையாக நடந்துகொள்வதாக சிலர் என்னை விமர்சிக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், எனக்கு அதிக பொறுமை உண்டு.  </p><p>நான் செய்யும் எதுவாக இருந்தாலும் அது தெலுங்கு மக்களுக்கு நீதியை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும் என்றே எப்போதும் நினைக்கிறேன். </p><p>என் வாழ்நாளில் எனக்கு நடக்கவேக்கூடாது என்று நான் நினைத்த ஒன்று, நான் 53 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவித்தபோது நடந்தது. என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. </p><p>அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் என் மீதான வழக்குகளில் எந்தத் தவறும் இல்லை என்று கண்டறிந்தன. </p><p>ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை முதலமைச்சராக இருந்தபோதே, தனது மகனை பெங்களூருவில் தள்ளி வைத்திருந்தார் என்றும், அவரை ஆந்திரப் பிரதேசத்திற்கு வர அனுமதிக்கவில்லை என்றும் கூறும் உண்மையில் இருந்தே மக்கள் அவருடைய குணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.</p><p>முன்னாள் அமைச்சர் ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்டபோது, ​​நான் முதலமைச்சராகப் பணியாற்றிய போதிலும், அதற்காக என் மீது பழி சுமத்தப்பட்டது. </p><p>ஜெகன் ரெட்டி சொத்துக்காகத் தன் சொந்தத் தாயையும், சகோதரியையும் கூட ஏமாற்றியுள்ளார். இப்படிப்பட்ட ஒரு மனிதருடன் நான் அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.</p><p>என்னால் ஜெகன் மோகன் ரெட்டியை ஒரு நிமிடத்தில் கைது செய்ய முடியும். ஆனால், நான் மாநிலத்தில் எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. </p><p>உண்மை வென்றுவிட்டது. அன்றைய அந்த இருண்ட நாட்களை நினைவுகூர்கையில்... எனக்கு ஆதரவளித்த தெலுங்கு சமூகத்திற்கு மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>பழிவாங்கும் அரசியலை விடுத்து அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் ஆந்திராவை இந்தியாவின் முதன்மை மாநிலமாக கொண்டுவர கடுமையாக உழைத்து வருகிறேன். அடுத்த 25 ஆண்டுகளில் உலகளவில் தெலுங்கு மக்கள்தான் அதிக தனிநபர் வருமானத்தை பெறுவார்கள் என நான் நினைக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.</p><h2>சந்திரபாபு நாயுடு கைது</h2><p>ஆந்திரப் பிரதேச திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில், 2023ம் ஆண்டு செப்.9ம் தேதி ஆந்திராவின் தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அரசால் கைது செய்யப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் முன்னேற்றத்தை ஜீரணிக்க முடியவில்லை: பிரிக்ஸ் குறித்த காங்கிரஸ் எதிர்மறை எண்ணங்களுக்கு பாஜக பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-unable-to-digest-indias-progress-spreading-negativity-over-brics-bjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-unable-to-digest-indias-progress-spreading-negativity-over-brics-bjp#comments</comments><guid isPermaLink="false">e74dc6f8-869b-42b5-beed-93ed966855f6</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:08:51 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:08:51.386Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,BRICS,பிரிக்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/v9sikf7f/BRICSBJPCongresss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரிக்ஸ் மாநாடு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/v9sikf7f/BRICSBJPCongresss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. பிரிக்ஸ் மாநாட்டிற்கு உலக நாட்டின் தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே இந்த பிரிக்ஸ் மாநாட்டில் என்ன லாபம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.</p><p>இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னேற்றத்தை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால்தான் பிரிக்ஸ் மாநாடு தொடர்பாக எதிர்மறையாக கருத்துகளை பரப்பி வருகின்றனர் என்று பாஜக-வின் தேசிய செய்தி தொடர்பான சம்பித் பத்ரா தெரிவித்து்ளளார்.</p><h2>இது தொடர்பாக சம்பித் பத்ரா வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:-</h2><p>2011-12 காலகட்டத்தில் BRIC அமைப்பில் உள்ள `I' (இந்தியா) நிலையற்ற தன்மையை எதிர்கொண்டிருந்த நிலையில், தற்போது இந்தியா BRICS-இன் மிக வலுவான கூட்டாளிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இன்று, உலக அரங்கில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது இடத்தைப் பிடித்துள்ளது.</p><h2>BRICS-ல் வலுவான உறுப்பினராக திகழும் இந்தியா</h2><p>நினைவில் கொள்ளுங்கள், BRICS-இல் உள்ள `I' என்பது இந்தியாவைக் குறிக்கிறது. அந்த `I' இந்தியாவின் 140 கோடி மக்களையும் குறிக்கிறது. நானே இந்தியா. BRICS-இன் மிக வலுவான கூட்டாளிகளில் ஒருவனாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். இன்று, இந்தியாவின் குடிமகனாகவும், BRICS-இன் மிக வலுவான உறுப்பினராகவும் இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.</p><p>இன்று, காங்கிரஸ் கட்சியும் சில எதிர்க்கட்சிகளும் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாடு குறித்து எதிர்மறை எண்ணங்களைப் பரப்பவும், ஒரு எதிர்மறையான சூழலை உருவாக்கவும் முயற்சிக்கின்றன. அவர்களுக்கு ஒரு கண்ணாடியைக் காட்ட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.</p><p>மதிப்பீட்டு அடிப்படையில் 2012-இல் பிரிக் (BRIC) உறுப்பு நாடுகளில் மிகவும் குறைவான ஈர்ப்பைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தது என்பதை கோல்ட்மேன் சாக்ஸ் கட்டுரை தெளிவாகக் கூறுகிறது.</p><p>இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மனோஜ் ஜராங்கேவை யாராவது தொட நினைத்தால்., மகாராஷ்டிரா அரசுக்கு அபிஜீத் தீப்கே எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/dipke-urges-maharashtra-govt-to-talk-to-jarange-warns-against-forcible-intervention</link><comments>https://www.maalaimalar.com/news/national/dipke-urges-maharashtra-govt-to-talk-to-jarange-warns-against-forcible-intervention#comments</comments><guid isPermaLink="false">1257ecd6-59f2-46b7-b903-fba8f806ef8d</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:33:56 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:33:56.664Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மனோஜ் ஜராங்கே பாட்டீல்,மராத்தா இடஒதுக்கீடு,abhijeet dipke,அபிஜீத் தீப்கே,Manoj Jarange</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4u3mvnsv/AbhijeetDipke001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manoj Jarange-  Abhijeet Dipke]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4u3mvnsv/AbhijeetDipke001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உண்ணாவிரத போராட்டம் நடத்தும் ஜராங்கே உடன் மகாராஷ்டிரா அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே வலியுறுத்தியுள்ளார்.</p><h2>மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு</h2><p>மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி மனோஜ் ஜராங்கே கடந்த 14 நாட்களாக ஜால்னா மாவட்டத்தில் உள்ள அந்தவாலி சாரதி என்ற கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அவரை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே சந்தித்தார்.</p><h2>பின்னர் அபிஜீத் ஜராங்கே கூறியதாவது:-</h2><p>மகாராஷ்டிர அரசு மனோஜ் ஜராங்கே உடன் பேச்சுவார்த்தை நடத்தி அவருடைய கோரிக்கையை புரிந்து கொள்ள வேண்டும். அவரை வெளியேற்றும் வகையில் தொடுவதற்கு முயற்சிக்கக் கூடாது. ஏனென்றால், இது மகாராஷ்டிரா. அப்படி தொட்டால் விளைவுகள் ஏற்படும்.</p><p>மகாராஷ்டிரா முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?. அவர்களுடைய குழந்தைகளை படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள். ஏனென்றால், இங்குள்ள பள்ளிகள் அந்த அளவிற்கு தரமானதாக இல்லை.</p><h2>ஜராங்கேவிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்</h2><p>மனோஜ் ஜராங்கேயை நீண்ட காலம் பட்டினி கிடக்க வைக்க அரசு விரும்புகிறதா? நகைச்சுவை நடிகர்களைச் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு நேரம் இருக்கிறது, ஆனால் ஜராங்கேயிடம் பேச யாரும் வரவில்லை.</p><p>சோனம் வாங்சுக்கிடம் நடந்ததைப் போல, மனோஜ் ஜரங்கேவிடமும் அதைச் செய்ய முயற்சிக்கக் கூடாது. இது மகாராஷ்டிரா. இங்கே அது பலிக்காது. யாராவது மனோஜ் ஜரங்கையைத் தொட்டால், ஒட்டுமொத்த மகாராஷ்டிராவும் இங்கு (அந்தர்வாலி சரதிக்கு) திரண்டு வரும்.</p><p>மனோஜ் ஜராங்கேவை அவர்கள் சாக விடப்போகிறார்களா? அரசு, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் இங்கு வந்து மனோஜ் ஜராங்கேவிடம் பேசி, அவரது கோரிக்கைகளைக் கேட்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.  ஏனெனில், அவர் தனக்காக எதையும் கேட்கவில்லை.</p><h2>சிறந்த பள்ளிகள் உள்ள ஒரு கிராமம் உள்ளதா?</h2><p>பிரதமேஷ் தேஷ்முக்கைப் (மகாராஷ்டிரா அரசு நடத்தும் தேர்வுக்காக படித்த தற்கொலை செய்து கொண்ட இளைஞர்) போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்று அரசு விரும்பினால், MPSC மற்றும் மனோஜ் ஜராங்கே எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு அது ஒரு தீர்வைக் காண வேண்டும். அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்க அரசால் இயலாத சூழலில், அவர் இடஒதுக்கீட்டைக் கோருகிறார்.</p><p>மாணவர்களுக்குச் சிறந்த பள்ளிகள், தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் ஒரு கிராமத்தைக் காட்டுங்கள். இத்தகைய வசதிகளைச் செய்து தருவதில் அரசு தோல்வியடைந்துவிட்டது; அதனால்தான் மனோஜ் ஜரங்கே போராடிக்கொண்டிருக்கிறார்.</p><p>இவ்வாறு அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம்: பணம்-காசோலை பரிவர்த்தனை முடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/national/bank-employees-across-country-on-strike-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/bank-employees-across-country-on-strike-today#comments</comments><guid isPermaLink="false">ffba3462-6f41-49a3-8161-dc671496ec7b</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:29:17 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:29:17.537Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central govt,Bank Employees Strike,வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/f2mh6g6g/bank.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ bank strike]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/f2mh6g6g/bank.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பணம், காசோலை பரிவர்த்தனை நாடு முழுவதும் இன்று முடங்கியது.</strong></em></p><p>வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.</p><h2>ஸ்டிரைக்</h2><p>வாரத்தில் 5 நாட்கள் வேலை, அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும், புதிதாக பணிக்குச் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது.</p><p>அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட 7 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.</p><p>இந்தியா முழுவதும் ஒரு லட்சம் வங்கிக் கிளைகளில் பணியாற்றும் 8 லட்சம்  ஊழியர்கள், அதிகாரிகள் பணிக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.</p><h2>தமிழகம்</h2><p>தமிழகத்தில் 18,000 கிளைகள் செயல்படுகின்றன. இதில் பணியாற்றும் 60,000 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர்.</p><p>பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்லாது தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து  கொண்டதால் வங்கி சேவை  முற்றிலும் முடங்கியது.</p><p>வங்கிக் கிளை மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் பெரும்பாலான கிளைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் வங்கிகளில் பணம், காசோலை டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் முழுவதும் நடைபெறவில்லை. </p><p>இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் தங்களது அன்றாட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டன.</p><h2>காசோலை முடங்கியது</h2><p>சென்னையில் உள்ள வங்கிகளில் ஊழியர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன. நுழைவு வாசல்கள் அடைக்கப்பட்டிருந்தன.</p><p>வங்கி ஊழியர்கள் போராட்டத்தால்  இன்று ஒரு நாள் மட்டும் பல லட்சம் கோடி காசோலை, பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டன.  லட்சக்கணக்கான காசோலைகள் தேங்கின.</p><p>சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.</p><p>போராட்டத்தின்போது சி.எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:</p><p>ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு அதனை நடைமுறைப் படுத்தவில்லை. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான 5 நாட்கள் வேலை நேரத்தில் 40  நிமிடங்கள் அதிகரிக்கும்படி கேட்டுக் கொண்டோம். இதனைச் செயல்படுத்தாததால் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். </p><p>எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்டமாக வரும் 28, 29 மற்றும் 30-ம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.</p><h2>வங்கி சேவை பாதிப்பு</h2><p>இதற்கிடையில், வேலைநிறுத்தத்தால் இன்று மூடப்பட்ட வங்கிகள் தொடர்ந்து மேலும் 3 நாட்கள் மூடப்படுகிறது. அரசு விடுமுறை  காரணமாக 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கும். ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் செயல்படாத நிலை உருவாகிறது.</p>]]></content:encoded></item><item><title>சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-recalls-swami-vivekanandas-1893-chicago-speech-as-world-marks-5th-anniversary-of-911-attacks</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-recalls-swami-vivekanandas-1893-chicago-speech-as-world-marks-5th-anniversary-of-911-attacks#comments</comments><guid isPermaLink="false">c7cfbb0b-9e72-4b9f-acb1-bb54be5788cf</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:59:39 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:59:39.046Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,Swami Vivekanandar,சுவாமி விவேகானந்தர்,chicago speech,சிகாகோ உரை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/qf7si60l/pm-modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi, vivakanandar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/qf7si60l/pm-modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுவாமி விவேகானந்தர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய தினம் இன்று என்பதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.</strong></em></p><p>சுவாமி விவேகானந்தர் கொல்கத்தாவில் 1863-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பிறந்தவர். இந்து மதத்தை உலகளாவிய மதமாக உயர்த்தியவர் என்று போற்றப்படுகிறார்.</p><p>இந்தியாவின் பாரம்பரியமிக்க வேதாந்த தத்துவங்களையும், யோகாவையும் மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதில் மிக முக்கிய பங்காற்றியவர் சுவாமி விவேகானந்தர்.</p><h2>சிகாகோ உரை</h2><p>சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நடந்த ‘சர்வதேச மதங்களின் நாடாளுமன்றம்’ என்ற மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையை, "அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே" என்ற வாக்கியத்துடன் ஆரம்பித்தார்.</p><p>அவரது உரை அங்கிருந்த சுமார் 7 ஆயிரம் பிரதிநிதிகளின் மனதை வென்றதோடு மட்டுமின்றி, இந்து மதத்திற்கான சர்வதேச அடையாளங்களில் ஒன்றாகவும் மாறியது.</p><h2>எழுச்சியூட்டும் விவேகானந்தர் உரை</h2><p>இந்நிலையில், சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய தினத்தை பிரதமர் மோடி இன்று நினைவு கூர்ந்துள்ளார். </p><p>இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 11 செப்டம்பர் 1893, சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரை, இந்தியாவின் நாகரீக நெறிமுறையைப் படம்பிடித்துக் காட்டியது. அவரது எழுச்சியூட்டும் வார்த்தைகள் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.</p><h2>25வது ஆண்டு நினைவு நாள்</h2><p>2001 செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாளை அமெரிக்கா அனுசரிக்கும் வேளையில், பிரதமர் மோடி விவேகானந்தரின் உரையை மேற்கோள் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு.. என்ன பயன்? என ப.சிதம்பரம் கேள்வி - சசி தரூர் பதில் - காங்கிரசுக்குள் கருத்து வேறுபாடு</title><link>https://www.maalaimalar.com/news/national/brics-conference-in-delhi-what-is-the-point-p-chidambarams-question-sasi-tharoors-answer-bjp-is-having-fun</link><comments>https://www.maalaimalar.com/news/national/brics-conference-in-delhi-what-is-the-point-p-chidambarams-question-sasi-tharoors-answer-bjp-is-having-fun#comments</comments><guid isPermaLink="false">4e851d21-c38b-4cf6-8e76-84dc02eaf7b7</guid><pubDate>Fri, 11 Sep 2026 05:37:24 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:37:24.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சசி தரூர்,ப. சிதம்பரம்,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8lybxlvx/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ப.சிதம்பரம் - சசி தரூர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ப.சிதம்பரம் - சசி தரூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8lybxlvx/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியினுள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.</p> <p>18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பார்த் மண்டபத்தில் நாளை (செப்டம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 13) நடைபெறவுள்ளது. </p><p>இதில் கலந்துகொள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/putin-lands-in-delhi-for-brics-summit">ரஷிய அதிபர் புதின்</a> இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தார். இன்று அவர் <a href="https://www.maalaimalar.com/news/national/brics-leaders-gather-let-us-deliberate-with-the-global-good-in-mind-prime-minister-modi">பிரதமர் மோடியை </a>சந்திக்கிறார். </p><p>சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் விரைவில் வர உள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தியா வருகிறார். </p> <p>ஈரான் அதிபர் பெசஸ்கியான், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய உறுப்பு நாட்டு தலைவர்களும் வருகை தர உள்ளனர்.</p><p>இந்த மாநாட்டிற்காக டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து காங்கிரஸுக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.</p><p>இம்மாநாடு தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன.</p><p>காங்கிரஸ் எம்பி சசி தரூர் மாநாட்டின் முக்கியத்துவத்தை ஆதரித்துள்ள நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதனால் கிடைக்கும் பலன்கள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p> <h2>ப.சிதம்பரத்தின் கேள்வி</h2><p>கடந்த இரண்டு அல்லது மூன்று பிரிக்ஸ் மாநாடுகளால் நாட்டிற்கு எந்தவொரு தெளிவான அல்லது குறிப்பிடத்தக்கப் பலன்களும் கிடைக்கவில்லை எனப் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கு பதிலளித்த பாரதிய ஜனதா கட்சி (BJP), காங்கிரஸ் கட்சி நாட்டின் சர்வதேச வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கண்டு எப்போதும் எதிர்மறையான மனநிலையையே வெளிப்படுத்துகிறது என சாடியுள்ளது.</p> <h2>சசி தரூரின் நிலப்பாடு</h2><p>ப. சிதம்பரம் கேள்வியை தொடர்ந்து சசி தரூர் தனது சமூக வலைதள பக்கத்தில் பிரிக்ஸ் மாநாட்டின் முக்கியத்துவம் பற்றி தெரிவித்துள்ளார்.</p><p>பிரிக்ஸ் அமைப்பில் உள்ள 11 உறுப்பு நாடுகள் உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியையும், உலகளாவிய GDPயில் மார் 41 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.</p><p>எனவே பிரிக்ஸ் அமைப்பு Global South எனப்படும் வளரும் நாடுகளுக்கு மிக முக்கியமான ஒரு சர்வதேச தளமாகும் என சசி தரூர் தெரிவித்துள்ளார்.</p><p>பல நாட்டுத் தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தருவது இந்தியாவின் வெளியுறவு மற்றும் தூதரகப் பலத்தைக் காட்டுகிறது என்றும், இம்மாநாட்டை இந்தியா நடத்துவது நாட்டிற்குப் பெருமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> <p>மாநாட்டின் முக்கியத்துவத்தைப் பேசிய அதே வேளையில், உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளையும் சசி தரூர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>பிரிக்ஸ் அமைப்பில் உள்ள 11 நாடுகளும் வெவ்வேறு தேசிய நலன்களைக் கொண்டுள்ளதால், அனைத்து உலகளாவிய விவகாரங்களிலும் பொதுவான ஒரு முடிவை எட்டுவது சவாலானது.</p><p>சமீபத்தில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அனைத்து நாடுகளும் ஏற்கும் வகையிலான கூட்டுப் பிரகடனத்தை வெளியிட முடியாமல் போனதைச் சுட்டிக்காட்டிய தரூர், இந்த உச்சி மாநாட்டில் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்துச் சீரான முடிவை எடுப்பது இந்தியத் தூதர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item></channel></rss>