<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 19 Sep 2026 16:27:50 +0000</lastBuildDate><item><title>பாலஸ்தீன குழந்தைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பெண் செயல்பாட்டாளர் வீட்டில் மும்பை போலீஸ் சோதனை.. சிக்கியது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/mumbai-police-raid-the-home-of-a-female-activist-who-spoke-up-for-palestinian-childrenwhat-was-found</link><comments>https://www.maalaimalar.com/news/national/mumbai-police-raid-the-home-of-a-female-activist-who-spoke-up-for-palestinian-childrenwhat-was-found#comments</comments><guid isPermaLink="false">12d940ba-b08b-449d-866f-326731cac1cb</guid><pubDate>Sat, 19 Sep 2026 16:23:39 +0000</pubDate><atom:updated>2026-09-19T16:23:39.557Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>palestine,காசா,gaza,மும்பை போலீஸ்,Mumbai Police,பாலஸ்தீனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/6ngvl4bt/tn-29.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாலஸதீன குழந்தை, மும்பை போலீஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/6ngvl4bt/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பையில் பாலஸ்தீனத்திற்கும் அங்கு அல்லலுறும் குழந்தைகளுக்கும் ஆதரவாக பட்டம் விடும் விழாவில் பங்காற்றிய சமூக செயல்பாட்டாளர் ஹர்ஷதா போரடே என்பவர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE">பாலஸ்தீனதிற்கு </a>ஆதரவு குரல் நல்கும் IPSP என்ற அமைப்பில் இயங்கி வரும் ஹர்ஷதா மாணவியும், கலைஞரும் ஆவார். பாலஸ்தீன குழந்தைகளுக்கு ஆதரவாக ஒரு வார சர்வதேச பட்டம் விடும் விழாவில்  ஹர்சதா பங்காற்றினார். </p><h2>சோதனை </h2><p>இந்நிலையில் நேற்று மாலை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 6-7 போலீசார் நுழைந்தனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். </p><p>அவர் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் அவர்கள் அனைத்து பொருட்களையும் களைத்து சோதனையிட்டதாக குற்றம்சாட்டியுள்ள ஹர்சதா அவர்கள் தன் மீது உடல் ரீதியான பலத்தை பிரயோகித்தாகவும் தெரிவித்துள்ளார். </p> <h2>சிக்கியது என்ன?</h2><p>இன்று அதிகாலை 2.30 மணி வரை அவர்கள் சோதனையிட்டுள்ளனர். ஆனால் இக்கிய புத்தகங்களும், புகைப்படங்களும் போஸ்டர்களும் மட்டுமே அவர்களுக்கு கிடைத்துள்ளது. மேலும் வீட்டில் பகத் சிங், சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் பொன்மொழிகளும் எழுதப்பட்டிருந்தது.</p> <h2>குற்றச்சாட்டு</h2><p>சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிடுவதாக அதிகாரிகள் தெரிவித்தாலும் கடந்த செப்டம்பர் 15 அன்று நடந்த பட்டம் விடும் விழாவை போராட்டம் என வரையறுத்து அதில் பங்காற்றியதற்காக இதுபோன்ற அத்துமீறலில் போலீசார் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>மேலும் இந்த பட்டம் விடும் திருவிழாவில் தொடர்புடையவர்களை மும்பை போலீஸ் குறிவைப்பதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. ஹர்சதா வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை மீறியுள்ள மும்பை போலீஸ் மும்பையை பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக மாற்றியுள்ளதாக அவ்வமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>3 முறை முதலமைச்சராக இருந்தவருக்கே இந்த கதியா?.. கெஜ்ரிவாலுக்கு SIR நோட்டீஸ் அனுப்பப்பட்டதை விமர்சித்த ஆம் ஆத்மி </title><link>https://www.maalaimalar.com/news/national/sir-aadmi-party-criticizes-the-notice-sent-to-kejriwal</link><comments>https://www.maalaimalar.com/news/national/sir-aadmi-party-criticizes-the-notice-sent-to-kejriwal#comments</comments><guid isPermaLink="false">67c8cbaf-ed79-4fef-a666-664f8ebc9f9b</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:50:53 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:50:53.616Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sir,எஸ்ஐஆர்,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,delhi,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/nolvoaqs/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கெஜ்ரிவால்]]></media:title><media:description type="html"><![CDATA[ கெஜ்ரிவால்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/nolvoaqs/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.</p> <p>மூன்றாம் கட்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பட்டியல் நடைமுறை டெல்லியிலும் நடந்து வருகிறது. </p><p>அங்கு<a href="https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-chairman-officially-accepted-merger-of-seven-aap-members-with-bjp"> ஆம்ஆத்மியின்</a> தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தார் 5 பேரின் பெயர் மற்றும் விவரங்கள் பழைய வாக்காளர் பட்டியலுடன் பொருந்தவில்லை (unmapped category) என விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், மகன் புல்கித் கெஜ்ரிவால் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் தந்தை கோபிந்த் ராம் கெஜ்ரிவால், தாய் கீதா தேவி ஆகியோருக்கு நோட்டீஸ் வந்துள்ளது. </p><p>நியூ டெல்லி-40 சட்டமன்ற தொகுதியில் கெஜ்ரிவால் வாக்காளராக உள்ளார். டெல்லி தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி, கெஜ்ரிவால் மற்றும் அவரின் குடும்பத்தார் 5 பேர் புது டெல்லி-40 தொகுதியில் உள்ள 'பார்ட்-51, கேஜி மார்க்' இல் வாக்களித்து வருகின்றனர். </p> <h2>ஆம் ஆத்மி விமர்சனம்</h2><p>இதை விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, " இந்த நாட்டில் நடக்கும் எல்லாமே விஸ்வகுருவை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க மட்டும் தானா? மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த்கெஜ்ரிவால் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் டெல்லி வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டது எப்படி" என தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பியுள்ளது.</p><p>மறுபுறம், டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் கொண்டோர் பட்டியலில் வந்துள்ளதால் அவருக்கும் கூட நோட்டீஸ் வழங்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.</p> <p>கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியான டெல்லியின் வரைவு வாக்களர் பட்டியலில் 47.6 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். 1.45 கோடியாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை 97.5 லட்சமாக சுருங்கியுள்ளது.</p><p>அவர்களில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆட்சேபனை தெரிவிப்போரின் புகார்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் நவம்பர் 4 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பூரண மதுவிலக்கினால் ஏற்படும் 5 தீமைகள் - குஜராத்தை சுட்டிக்காட்டி பட்டியலிட்ட உச்சநீதிமன்றம் </title><link>https://www.maalaimalar.com/news/national/5-adverse-effects-of-total-alcohol-prohibition-supreme-court-lists-them-citing-gujarat-as-an-example</link><comments>https://www.maalaimalar.com/news/national/5-adverse-effects-of-total-alcohol-prohibition-supreme-court-lists-them-citing-gujarat-as-an-example#comments</comments><guid isPermaLink="false">efaf5aaf-5b2a-44d5-8625-b6458c949902</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:17:31 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:17:31.304Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,prohibition,மதுவிலக்கு,Illicit liquor,உச்சநீதிமன்றம்,கள்ளச்சாராயம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/08x70g1j/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/08x70g1j/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுவிலக்குடன் இணைந்துள்ள 5 தீமைகளை உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">உச்சநீதிமன்ற </a>நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, மகாராஷ்டிராவில் மெத்தனால் வாங்குவதற்கும் அதை விற்பதற்கும் கட்டுப்பாடுகளை விதிக்கும் மகாராஷ்டிர அரசின் விதிகளுக்கு எதிராக ரசாயன நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்தது.</p><p>மும்பையில் 1991 இல் கள்ளச்சாராயம் குடித்து 93 பேர் உயிரிழந்ததன் விளைவாக மகாராஷ்டிரா விஷப் பொருட்கள் விதி 18A, 18B கொண்டுவரப்பட்டது. </p> <p>இந்த விதி மெத்தனால் வாங்குவதற்கும் நிறுவனங்களுக்கு விற்பதற்கும் பல கட்டுப்பாடுகளை விதித்தது. மெத்தனாலில் செயற்கை நிறமூட்டி உள்ளிட்டவற்றை சேர்த்த பின்னே மருந்து மற்றும் பிற நிறுவனங்களுக்கு விற்க வேண்டும் என்றும் அந்த விதியில் உள்ளது.</p><p>இதை எதிர்த்த மனுக்கள் மீதான விசாரணையில் அந்த விதிகளை ரத்து செய்த நீதிபதிகள், மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் வேறு வழிகளில் புரையோடியுள்ள அதனுடனிணைந்த தீமைகள் குறித்து பேசினர்.</p><p>மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தின் பாவ்நகரில் 13 பேர், மத்திய பிரதேசத்தின் சாகர் பகுதியில் 15 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதிகாரத்தில் இருப்பவர்கள் விழித்துக்கொண்டு செயல்பட வலியுறுத்தினர்.</p> <h2>கருத்து</h2><p>"மது விலக்கோடு வருவாய் இழப்பு, தடையை அமல்படுத்துவதற்காக செலவிடப்படும் பணம், காவல்துறையில் ஊழல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் மற்ற போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் ஆகியவை இணைந்துள்ளன.</p><p>பூரண மதுவிலக்கு சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்றவற்றுக்கு அதிகம் வழிவகுப்பதற்கு பல உதாரணங்களும் உள்ளன. கடுமையான மதுவிலக்கு விதிகள் கொள்கையை கொண்டுள்ள குஜராத்தில் 10 பெரிய அளவிலான கள்ளச்சாராய மரண சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இவற்றில் 600 பேர் உயிரிழந்துள்ளனர்" என தெரிவித்தனர்.</p> <p>இந்த வழக்கில், "மகாராஷ்டிர அரசின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், அரசின் மெத்தனால் குறித்த விதிகள் கள்ளசாராய மரணங்களை தடுத்துள்ளன என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. </p><p>அரசின் நோக்கம் மீது எங்களுக்கு சந்தேகமில்லை. ஆனால் ஆனால் நல்ல நோக்கம் மட்டுமே இவ்வாறான விதிகளை பொருத்தமுடையதாக்கிடாது.</p><p>இந்த விதிகள் மெத்தனால் பயன்பாட்டை ஊக்குவிப்பதை நிறுத்துகிறது என்றோ, அதன் வேதி தன்மையை மாற்றுவதன் மூலம் அது சட்டவிரோத மது தயாரிக்க பயன்படுத்த முடியாது என்பதையோ நிரூபிக்க அரசு தவறிவிட்டது. </p><p>அதுமட்டுமின்றி மெத்தனாலில் வேறு சில மூலங்களை சேர்ப்பதால் அது மரணத்தை தடுத்துவிடும் என்பதையும் அரசு நிரூபிக்கவில்லை. </p><p>சட்டவிரோத மது, மெத்தனால் அன்றி வேறு மூலங்களை வைத்து தயாரிக்கப்படுவதை தடுக்க அரசு தவறிவிட்டது" என தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>SIR பணி- அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்தினருக்கு நோட்டீஸ்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/arvind-kejriwal-his-wife-son-parents-get-sir-notices-under-unmapped-category</link><comments>https://www.maalaimalar.com/news/national/arvind-kejriwal-his-wife-son-parents-get-sir-notices-under-unmapped-category#comments</comments><guid isPermaLink="false">ed0829d7-381e-455c-876b-79b71bb2b247</guid><pubDate>Sat, 19 Sep 2026 13:28:31 +0000</pubDate><atom:updated>2026-09-19T13:28:31.736Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sir,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/e83qc415/Kejriwal0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரவிந்த் கெஜ்ரிவால்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/e83qc415/Kejriwal0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி நடைபெற்று வருகிறது. இதில் அம்மாநில முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்தினர் ஐந்து பேருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.</p><p>அதில் கடந்த முறை நடைபெற்ற SIR பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், தற்போதைய SIR பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பொருந்தவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அரவிந்த் கெஜ்ரிவால், அவருடைய மனைவி சுனிதா கெஜ்ரிவால், கெஜ்ரிவால் தந்தை கோபிந்த் ராம் கெஜ்ரிாவல், அவரது தாயார் கீதா தேவி, மகன் புல்கித் கெஜ்ரிவால் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்.. ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி வெற்றி!
</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-university-students-union-election-abvp-the-rss-student-wing-wins</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-university-students-union-election-abvp-the-rss-student-wing-wins#comments</comments><guid isPermaLink="false">41ead35a-71a8-4482-b6df-2943c6e7c766</guid><pubDate>Sat, 19 Sep 2026 12:54:21 +0000</pubDate><atom:updated>2026-09-19T12:54:21.894Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர் சங்க தேர்தல்,ஏபிவிபி,ABVP,டெல்லி பல்கலைக்கழகம்,delhi university,Student Union Election</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ixivtzt6/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஏபிவிபி ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏபிவிபி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ixivtzt6/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.</p> <p>நடப்பாண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">டெல்லி பல்கலைக்கழக </a>மாணவர் சங்கத்தில், சங்கத் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.  </p><p>இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தலைவர் பதவியை ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனப்படும் ஏபிவிபி மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பரபரப்பான 17 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ரிசல்ட் வெளியாகி உள்ளது. </p> <h2>வெற்றி</h2><p>ஏபிவிபி சார்பில் நிறுத்தப்பட்ட அதன் வேட்பாளரான யாஷ் டபாஸ் தலைவர் பதவியைக் கைப்பற்றி உள்ளார்.</p><p>எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசின் மாணவர் அணியான இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ) வேட்பாளர் விஜய் மீனா 19,651 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் யாஷ் டபாஸ் 20,151 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.</p> <p>துணைத் தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட தீபான்சு வெற்றி பெற்றுள்ளார்.</p><p>செயலாளர் பதவிக்கு ஏபிவிபி வேட்பாளர் ரியா சாவ்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இணைச் செயலாளர் பதவிக்கு ஏபிவிபியின் வேட்பாளர் லக்‌ஷயா ராஜ் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்த வெற்றியினை ஏபிவிபியினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் கொண்டாடி வருகின்றனர்.</p><p>கடந்த ஆண்டும் தலைவர், செயலாளர், துணை செயலாளர் பதவிகளை ஏபிவிபி கைப்பற்றியிருந்தது குறிப்பிடதக்கது. </p>]]></content:encoded></item><item><title>மது, முட்டை, தக்காளி - பஞ்சாப் முதல்வரின் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய பாஜக தலைவர் கைது   </title><link>https://www.maalaimalar.com/news/national/liquor-eggs-tomatoes-bjp-leader-arrested-after-causing-a-stir-at-the-punjab-chief-ministers-event</link><comments>https://www.maalaimalar.com/news/national/liquor-eggs-tomatoes-bjp-leader-arrested-after-causing-a-stir-at-the-punjab-chief-ministers-event#comments</comments><guid isPermaLink="false">1ac511d2-f6eb-43a3-a809-a0b65f48668f</guid><pubDate>Sat, 19 Sep 2026 12:22:08 +0000</pubDate><atom:updated>2026-09-19T12:22:08.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,பஞ்சாப்,Punjab,பகவந்த் மான்,Bhagwant Mann</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/0armqfsg/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிட்டு, பகவந்த் மான் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிட்டு, பகவந்த் மான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/0armqfsg/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மீது மதுபானம், முட்டைகள் மற்றும் தக்காளிகளை வீச முயன்ற முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ரவ்னீத் சிங் பிட்டுவை பஞ்சாப் காவல்துறை கைது செய்தது.</p> <p>நேற்று பாஜகவின் 'போதை இல்லாத <a href="https://www.maalaimalar.com/topic/punjab">பஞ்சாப் </a>யாத்திரை'யின் போது பிட்டுவின் வாகன அணிவகுப்பு மீது முட்டைகளும் தக்காளிகளும் வீசித் தாக்கப்பட்டது. தனது வாகன அணிவகுப்பு தாக்கப்பட்டதாகவும், அதில் இருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் பிட்டு குற்றம் சாட்டியிருந்தார்.</p><p>மக்களைக் கைது செய்வதாலோ அல்லது வழக்குகள் பதிவு செய்வதாலோ மக்களின் குரலை அடக்க முடியாது என்று பிட்டு பின்னர் முகநூல் பதிவில் தெரிவித்தார். </p> <h2>மது, முட்டை, தக்காளி</h2><p>இந்நிலையில் இன்று 'கிசான் மேளா'வில் பங்கேற்பதற்காக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">பகவந்த் மான்</a> பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு வந்தபோது ஒரு கையில் மது பாட்டிலையும், மறுகையில் முட்டை மற்றும் தக்காளியையும் ஏந்தியபடி நுழைவாயிலில் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்திய பிட்டு, வாகன அணிவகுப்பு கடந்து சென்றபோது முதலமைச்சரை நோக்கி மது பாட்டிலை உயர்த்தினார்.</p><p>நேற்றைய தாக்குதலுக்குப் பின்னால் பகவந்த் மான் அரசு இருப்பதாகக் குற்றம் சாட்டிய பிட்டு, முட்டைகளையும் தக்காளிகளையும் திருப்பிக் கொடுக்கவே இன்று முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு வந்ததாகக் கூறினார்.</p> <p>அந்த பாட்டிலை பகவந்த் மானிடம் திருப்பி தருவதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் அமர்ந்துகொண்டு பஞ்சாபைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும்போது முதலமைச்சர் பகவந்த் மான் மது அருந்தி மகிழ வேண்டும் என்றும் பிட்டு எள்ளலாக தெரிவித்தார். அங்கு ஆதரவாளர்களுடன் அமளியில் ஈடுபட்ட பிட்டுவை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வெயிட் லாஸ் சிகிச்சை: பெண் டாக்டர் போல் நடித்து பெண்ணின் ஆபாச படங்களை பெற்று மிரட்டியதுடன், பணம் பறித்த வாலிபர்</title><link>https://www.maalaimalar.com/news/national/up-man-poses-as-female-doctor-on-social-media-obtains-private-pics-of-woman</link><comments>https://www.maalaimalar.com/news/national/up-man-poses-as-female-doctor-on-social-media-obtains-private-pics-of-woman#comments</comments><guid isPermaLink="false">c00350c9-da15-4503-921d-48f8a97e3c3a</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:55:18 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:55:18.879Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பணம் பறித்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/mtaz3fqz/0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/mtaz3fqz/0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹிமான்ஷு தயால் என்ற ஷமி. இவர் பேஸ்புக் சமூக வலைளத்தளத்தில் போலி அக்கவுண்ட் ஒன்று உருவாக்கியுள்ளார். அதில் தன்னை பெண் டாக்டர் என்று முன்னிலைப்படுத்திக் கொண்டார். இந்த அக்கவுண்ட் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p>அப்போது, அந்த பெண்ணிடம் நீங்கள் அதிக எடையுடன் உள்ளீர்கள். நாங்கள் உங்கள் எடையை குறைத்து, கட்டுக்கோப்பான உடலாக உருவாக்குகிறேன். இதற்கு குறைந்த ஆடைகள் அணிந்த போட்டோக்களை அனுப்புங்கள் எனக் கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் சற்று தயங்கியுள்ளார். ஆனால், நான் ஒரு பெண், மேலும் டாக்டர். டாக்டர் முன் உடலை காட்ட ஏன் வெட்கப்படனும்? என பேசியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அறைகுறை ஆடைகளுடன் கூடிய தன்னுடைய போட்டோக்களை அவருக்கு அனுப்பியுளு்ளார்.</p><p>போட்டோவை பெற்றுக்கொண்ட ஷமி, அந்த படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன். உன் மகனை கொண்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண் ஷமி சொல்வதையெல்லாம் கேட்டுள்ளார். இதை பயன்படுத்தி அந்த பெண்ணிடம் 5.20 லட்சம் ரூபாய் பறித்துள்ளார். மேலும், 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.</p><p>இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் போலீசார் பெண் டாக்டர் எனக் கூறி ஏமாற்றிய ஷமியை கைது செய்துள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட ஷேமியிடம் இருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் ஒரு லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் பெண்ணை மிரட்டி பறித்த பணம் மூலம் வாங்கிய பைக், இன்வெர்ட்டர், ஏசி, டி.வி. ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட ஷமியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>சமூகமும் அரசும் முழுமையாக தோற்றுவிட்டது.. டெல்லி சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - கொலை குறித்து பிரியங்கா காட்டம் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/priyanka-expresses-strong-condemnation-regarding-the-gang-rape-and-murder-of-the-delhi-girl</link><comments>https://www.maalaimalar.com/news/national/priyanka-expresses-strong-condemnation-regarding-the-gang-rape-and-murder-of-the-delhi-girl#comments</comments><guid isPermaLink="false">c262a267-ccf1-41ab-9dd4-58af3aeb2faa</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:46:27 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:46:27.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறுமி பாலியல் வன்கொடுமை,டெல்லி,பிரியங்கா காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/p7hfaip4/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரியங்கா]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரியங்கா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/p7hfaip4/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கில் மைனர் சிறுவர்கள் மூவர் மற்றும் அவர்களின் 19 வயது நண்பன் கைது செய்ப்பட்டுள்ளனர்.</p> <p>டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">கூட்டுப் பாலியல் வன்கொடுமை </a>செய்யப்பட்டு 6 முறை கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சிறுமியின் சடலம் 2 நாட்கள் கழித்து ஸ்வரூப் நகரில் Kushak சாலையில் திறந்த வெளியில் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. </p><p>சிறுமியின் உடல் அழுகிய நிலையில் நாய்கள் குதறிய நிலையில் இருந்தது.  சிறுமியின் இடது கரத்தில் இருந்த 3 நட்சத்திரம் பொறித்த டாட்டூவை வைத்து போலீசார் சிறுமியை அடையாளம் கண்டனர். </p> <h2>சிறுமிக்கு நேர்ந்த கொடுமை</h2><p>சிறுமி செப்டம்பர் 10 ஆம் தேதியே காணாமல் போயிருந்தபோதும் பெற்றோர் போலீசில் புகார் அளிக்கவில்லை. போலீசார் தாமாக முன்வந்து செய்த விசாரணையில் 50 சிசிடிவி கேமராக்கள் ஆராயப்பட்டு சரக்கு வண்டியில் வந்து அந்த இடத்தில் உடல் போடப்படத்தை கண்டறிந்தனர்.</p><p>அந்த வாகனத்தின் நம்பர் பிளேட் ஐ வைத்து அதன் உரிமையாரை அடையாளம் கண்டனர். அந்த நபர் தனது 17 வயது தம்பி தன் வாகனத்தை எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார். அந்த சிறுவனை விசாரித்தபோது அவன் உண்மையை ஒப்புக்கொண்டு மற்ற மூவரின் பெயர்களையும் கூறியுள்ளான். நால்வரும் சிறுமிக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள் ஆவர்.</p><p>கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின் சிறுமி, போலீசில் புகார் அளிக்கப் போவதாக மிரட்டியதால் பயந்து சிறுமியை ஏற்கனவே அவர்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொன்றதாக சிறுவனை வாக்கு மூலம் அளித்துள்ளான். மேலும் சிறுமி தன்னை திருமணம் செய்ய விரும்பியதாகவும் ஆனால் அதற்கு தான் சம்மதிக்கவில்லை என்றும் சிறுவன் கூறியுள்ளான்.</p>  <h2>வழக்கு</h2><p>வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்த போலீசார் 19 வயது இளைஞரை நீதிமன்ற காவலிலும், 16, 17 வயது நிரம்பிய 3 சிறுவர்களை சிறார் கூர்நோக்கு மையத்திலும் அடைத்தனர்.</p><p>இந்த சம்பவத்தில் 3 சிறுவர்களையும் வயது வந்தவர்களாக கருதி விசாரணை நடத்தப்படும் என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. அவர்களின் பள்ளிச் சான்றிதழ் மூலம் மைனர்கள் என வரையறுக்கப்பட்டபோதும் அவர்களின் வயதை நிர்ணயிக்க bone ossification டெஸ்ட் நடந்த போலீஸ் திட்டமிட்டுள்ளது.</p><p>மூவரையும் வயது வந்தவர்களாக கருதி விசாரிக்க, டெல்லி நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் இன்னும் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>பிரியங்கா கண்டன்ம்</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,</p><p>"டெல்லியில் 17 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் அனைத்து எல்லைகளும் மீறப்பட்டுள்ளது. சில நாட்கள் முன்னர் தான் மற்றொரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள். நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்க யாரும் தயாராக இல்லை. பெண்கள் முன்னேற்றம் பற்றிய வேற்று பேச்சுக்கள் தான் இருக்கிறது.</p><p>நூற்றுக்கணக்கான பெண்கள் தின்தோறும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் குற்றவாளிகள் மீது எந்தவித தீர்க்கமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை கூட அவர்களுக்கு ஏற்படவில்லை. எப்ஐஆர்கள் கூட பதியப்படுவதில்லை. சமூகமும் அரசாங்கமும் பெண்களுக்கு பாதுகாப்பு, சுதந்திரம், சமத்துவத்துக்குக்கான உரிமையை வழங்குவதில் முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெண் தோழியுடன் வெளிநாடு செல்ல முயற்சி: பாஸ்போர்ட்டால் வெளியான தொழில் அதிபரின் திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/pune-man-hides-malaysia-trip-with-woman-friend-from-wife-a-passport-issue-busts-him</link><comments>https://www.maalaimalar.com/news/national/pune-man-hides-malaysia-trip-with-woman-friend-from-wife-a-passport-issue-busts-him#comments</comments><guid isPermaLink="false">e3f0e07f-f548-4487-9499-4f86c3056f37</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:16:09 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:16:09.735Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மகாராஷ்டிரா,புனே,Maharastra</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/faoxgzpo/MumbaiAirport.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மும்பை விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/faoxgzpo/MumbaiAirport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புனேவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், தன்னுடைய மனைவியிடம் மலேசியாவின் கோலாலம்பூருக்கு தொழில் தொடர்பாக சென்று வருவதாக கூறி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். ஆனால், விமான நிலையத்திற்கு பெண் தோழி ஒருவரை அழைத்து வந்துள்ளார்.</p><h2>பழைய பாஸ்போர்ட்</h2><p>அதிகாரிகள் இருவருடைய பாஸ்போர்ட்டையும் சோதிக்கும்போது, அந்த பெண்ணின் பாஸ்போர்ட் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதை பரிசோதிக்கும்போது, அந்த பெண் ஏற்கனவே தன்னுடைய பாஸ்போர்ட் தொலைந்து போய்விட்டது என புகார் அளித்துள்ளார். அந்த பாஸ்போர்ட்டை எடுத்து வந்ததாக தெரியவந்துள்ளது.</p><p>இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த தொழில் அதிபர், அந்த பெண்ணுடன் கோலாலம்பூர் செல்ல இருந்த பயணத்தை ரத்து செய்தார். பின்னர், மனைவி கேட்டால் என்ன செய்வது என்று யோசித்த அவர், போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, விமான நிலையத்தில் உள்ள டெலிபோனில் இருந்து மனைவிக்கு போன் செய்து பாஸ்போர்ட் பிரச்சினை. அதனால் செல்போனை வாங்கி வைத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>கடத்தல் புகார் அளித்த மனைவி</h2><p>அதன்பின் இருவரும் ரெயில்வே நிலையம் வந்துள்ளனர். பின்னர் அடுத்த நாள் காலை தனது மனைவிக்கு போன் செய்து அதே வார்த்தையை வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் தெரிவித்துள்ளார். அதேவேளையில் அவருடைய மனைவியால் கணவரின் போனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அந்த பெண், தனது கணவரை காணவில்லை. கடத்தப்பட்டிருக்கலாம் என்று புகார் அளித்துள்ளார். இதனைத் தொர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.</p><p>இது குறித்து தகவல் அறிந்ததும், காவல் நிலையத்திற்கு சென்று, தான் பெண் தோழியுடன் வெளிநாடு செல்ல இருந்ததை அதிகாரிளிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்தான் மனைவியை சமாளிக்க இவர் பாஸ்போர்ட் பிரச்சினை என்று பொய்யான ஒரு கதையை உருவாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.</p><p>மனைவிக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணுடன் வெளிநாடு செல்ல இருந்தவரை, அந்த பெண்ணின் பாஸ்போர்ட் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாலை போடவில்லை என்றால் வாக்கு போடமாட்டோம்: எச்சரித்த நபருக்கு மத்திய அமைச்சர் அளித்த பதில்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/man-warns-scindia-with-vote-denial-over-no-road-minister-response-is-viral</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-warns-scindia-with-vote-denial-over-no-road-minister-response-is-viral#comments</comments><guid isPermaLink="false">b8d8b95d-84be-46f2-a8ab-2101901c995d</guid><pubDate>Sat, 19 Sep 2026 10:53:11 +0000</pubDate><atom:updated>2026-09-19T10:53:11.255Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>jyotiraditya scindia,ஜோதிராதித்யா சிந்தியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/z00u90sw/Scindia001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜோதிராதித்யா சிந்தியா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/z00u90sw/Scindia001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இதுபோன்ற வார்த்தைகளை ஒருபோதும் என்னிடம் பயன்படுத்தாதீர்கள். புரிந்ததா?. நான் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வந்து கோரிக்கைகளை வையுங்கள் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்தார்.</p><p>மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா. இவர் மத்திய பிரதேசம் குனா மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பாதுகாப்பு வாகனங்களுடன் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தார்.</p><p>அப்போது ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள் திடீரென அமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களை இடைமறித்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அவர்கள் தங்கள் கிராமத்தில் சாலைகள் சரியான வகையில் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ளது. அதை சரி செய்து தர வேண்டும் என்று குரல் எழுப்பினர். அத்துடன் சாலை இல்லை எனில், வாக்கு இல்லை என குரல் எழுப்பினார்.</p><p>இதனால் ஜோதிராதித்யா சிந்தியா, மக்கள் தங்களுடைய வேண்டுகோளை வைப்பதற்குப் பதிலாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசுவதா? அந்த பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்குமாறும், அதை தான் நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.</p><p>"இதுபோன்ற வார்த்தைகளை ஒருபோதும் என்னிடம் பயன்படுத்தாதீர்கள். புரிந்ததா?. நான் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வந்து கோரிக்கைகளை வையுங்கள். வேலைகளை முடித்து தருவது என்னுடைய பொறுப்பு" என்று அமைச்சர் பதில் அளித்தார்.</p><p>இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலான நிலையில், பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிந்தியா "சாலை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். குனா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்னலால் ஷக்யாவின் ஒதுக்கீட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றார்.</p><p>மேலும், மழைக்காலம் முடிந்த பிறகு சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியருக்கு சிந்தியா உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிப் படிக்கட்டில் இறங்கும்போது தலைகுப்புற விழுந்து  4ஆம் வகுப்பு 
மாணவி பலி - அதிர்ச்சி வீடியோ  </title><link>https://www.maalaimalar.com/news/national/4th-grade-girl-dies-after-falling-headfirst-while-getting-off-school-bus-shocking-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/4th-grade-girl-dies-after-falling-headfirst-while-getting-off-school-bus-shocking-video#comments</comments><guid isPermaLink="false">ab5c62bd-3d37-41f2-8132-a1b4c883878d</guid><pubDate>Sat, 19 Sep 2026 10:06:32 +0000</pubDate><atom:updated>2026-09-19T10:06:32.705Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Telangana,தனியார் பள்ளி,private school,Girl,சிறுமி,தெலுங்கானா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/y6fsgcpi/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வீடியோ]]></media:title><media:description type="html"><![CDATA[ வீடியோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/y6fsgcpi/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானாவில் தனியார் பள்ளியில் படிக்கட்டுகளில் இருந்து இடறி விழுந்து 4ஆம் வகுப்பு சிறுமி உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/telangana">தெலுங்கானா </a>மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. </p><p>அங்குள்ள இந்தியன் ஹைட்ஸ் என்ற தனியார் பள்ளியில் 4 வகுப்பு படித்து வந்த வர்னிகா என்ற 12 வயது சிறுமி பள்ளி படிக்கட்டில் வந்துகொண்டிருந்தபோது கால் இடறி கீழே விழுந்திருக்கிறாள். </p><p>இதில் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக வர்னிகாவை பள்ளி ஊழியர்களும் தலைமை ஆசிரியரும் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். </p><p>அங்கு சிச்சை அளிக்கப்பட்டபோதும் உடல்நிலையில் முன்னேற்றம் இன்றி நேற்று சிறுமி பரிதமாக உயிரிழந்தாள். </p><h2>சிசிடிவி வீடியோ</h2><p>சிறுமி பள்ளிப் படிக்கட்டுகளில் இருந்து இடறி விழுந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. </p><p>அதில் சிறுமி படிக்கட்டுகளில் இறங்கி கீழே வந்துகொண்டிருப்பதும் எதிர்பாராத கணத்தில் கால் இடறி தலைகுப்புற கீழே விழுவதும் அவளுக்கு மற்ற மாணவர்கள் உதவ முனைவதும், அதில் ஒரு மாணவன் ஆசியாரை அழைப்பதும் ஆசிரியர் அங்கு வந்து சிறுமியின் நிலையை சோதிப்பதும் இடம்பெற்றுள்ளது</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Tragic incident in Shadnagar, Telangana: A 9-year-old Class 4 girl, Varnika, died after losing balance and falling from school stairs at Indian Public School. The fall was captured on CCTV. She succumbed to injuries during treatment on Friday.<a href="https://x.com/hashtag/Telangana?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Telangana</a> <a href="https://x.com/hashtag/Shadnagar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Shadnagar</a> <a href="https://x.com/hashtag/Tragedy?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Tragedy</a> <a href="https://t.co/atgvMvXTm5">pic.twitter.com/atgvMvXTm5</a></p>&mdash; Gummalla Lakshmana (@GUMMALLALAKSHM3) <a href="https://x.com/GUMMALLALAKSHM3/status/2100904753740050713?ref_src=twsrc%5Etfw">September 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>விசாரணை</h2><p>சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சம்பவத்தின் தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இந்த சம்பவத்தில் புகார் ஏதும் வழங்கப்படவில்லை.</p><p>சிறுமிக்கு ஏற்கனவே உடல்நலக்கோளாறு இருந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். </p><p>அதேநேரம் சிறுமி விழுந்தது குறித்து பள்ளி நிர்வாகம் தங்களிடம் சரியான நேரத்தில் தகவல் அளிக்கவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.</p> <p>தகவல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் தான் தங்கள் குழந்தைக்கு உரிய மருத்துவ சிகிச்சையை கிடைக்க செய்ய முடியாமல் போனது என அவர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>ஆனால் பள்ளி நிர்வாகம் இதனை மறுத்துள்ளது. உரிய நேரத்தில் சிறுமி அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்தாக தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவிலுக்கு செல்லும் வழியில் சோகம்.. கரைபுரண்ட ஓடை நீரில் கார் அடித்துச் செல்லப்பட்டதில் 8 பேர் பலி  </title><link>https://www.maalaimalar.com/news/national/tragedy-on-the-way-to-the-temple-8-killed-as-car-is-swept-away-by-overflowing-canal-waters</link><comments>https://www.maalaimalar.com/news/national/tragedy-on-the-way-to-the-temple-8-killed-as-car-is-swept-away-by-overflowing-canal-waters#comments</comments><guid isPermaLink="false">4c9d84f6-b4fd-48f1-993b-812f8b75c6e0</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:44:37 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:44:37.205Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கார் விபத்து,Car accident,Madhya Pradesh,devotees,பக்தர்கள்,மத்தியப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/swyro0ei/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அடித்துச் செல்லப்பட்ட கார் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அடித்துச் செல்லப்பட்ட கார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/swyro0ei/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய பிரதிஷ்டத்தில் பக்தர்கள் சென்ற வாகனம் ஓடை நீரில் அடித்துச் உள்ளத்தில் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.</p> <p>ஒடிசாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர்<a href="https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-fuel-pumps-to-stop-upi-payments-above-rs-2000-from-october-16"> மத்திய பிரதேசத்துக்கு</a> ஆன்மீக பயணம் வந்துள்ளனர். </p><p>உஜ்ஜைனுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து டாக்சி மூலம் அகார் மால்வா மாவட்டத்தில் உள்ள நால்கேதாவில் உள்ள கோவிலுக்கு இன்று சென்றுகொண்டிருந்தனர். </p> <h2>விபத்து</h2><p>டாக்சி வாகனம் மா பாக்லாமுகி கோவில் அருகே சென்றபோது கரைபுரண்டு ஓடிய ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்டு விபத்தில் சிக்கியது.</p><p>இதில் 2 பெண்கள், 2 ஆண்டுகள், 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும், டாக்சி ஓட்டுனரும் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.</p><p>தகவலறிந்து விரைந்த மீட்புப்படையினர் வாகனத்தை ஓடையில் இருந்து வெளியே தூக்கி உள்ளே இருந்தவர்களின் உடல்களை மீட்டனர்.</p><p>அவர்களின் அடையாளத்தை அறியும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது .</p> <h2>மழை</h2><p>மாவட்ட ஆட்சியர் சேர் சிங் மீனா கூறுகையில், இந்த பகுதியில் 37 மிமி அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது. </p><p>இது அபாயகரமான மழைப்பொழிவு இல்லை என்றாலும் இதனால் கோவிலின் முன் இருந்த ஓடை நீர் அபாயகரமான அளவில் அதிகரித்து கரைபுரண்டுள்ளது என தெரிவித்தார்.</p><p>இந்த சம்பவத்தை தொடர்ந்து கால்வாயை கடக்க பாலமும் அப்பகுதியில் உரிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவும் வலியுறுத்தி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>கஃபே திறப்பதற்காக ரூ.15 லட்சம் சம்பள வேலையை விட்ட ஜென் Z இளம்பெண் - வியாபாரம் நஷ்டத்தில் போவதாக வேதனை</title><link>https://www.maalaimalar.com/news/national/gen-z-woman-quits-15-lakh-job-opens-cafe-faces-losses</link><comments>https://www.maalaimalar.com/news/national/gen-z-woman-quits-15-lakh-job-opens-cafe-faces-losses#comments</comments><guid isPermaLink="false">1162d143-fe7e-4d47-9ab7-7441c91b1779</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:19:27 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:19:27.238Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gen z,தொழில்முனைவோர்,Cafe,corporate,ஜென் சி,உணவகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/qjfmncmn/Untitled-design-19.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi Gen Z quits ₹15 lakh job to open café]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/qjfmncmn/Untitled-design-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் சிறுகதை ஆசிரியராக மாதத்திற்கு சுமார் 1 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கி வந்த 21 வயது பெண் ஒருவர், தனது வேலையை விட்டுவிட்டு ஒரு உணவகம் திறந்த நிலையில், தற்போது கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லியில்</a> உள்ள பெண் ஒருவர் 17 வயதில் இருந்தே சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இவர் சிறுகதை ஆசிரியராக ஒப்பந்த அடிப்படையில் (comic freelancer) பணிபுரிந்து வந்துள்ளார்.</p><p>ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் வரை கார்ப்பரேட் நிறுவனத்தில் சம்பளம் வாங்கி வந்துள்ளார். </p><p>இதையடுத்து இவர் தனது சேமிப்பில் இருந்து சொந்தமாக ஒரு தொழிலை தொடங்க முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து டெல்லி ஹட்சன் லேனில் ஒரு கஃபே கடையை தொடங்கினார்.</p><p>இந்த நிறுவனம் தொடங்கி தற்போது ஓராண்டு நிறைவு செய்துள்ள நிலையில், தனது சேமிப்பு முழுவதுமாக செலவழிந்து, தனது நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>மேலும் தனது உணவகத்தில் உணவு தரமாகவும், சுவையாகவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் உணவகத்தில் சில வசதி குறைபாடு உள்ளதால் அது நஷ்டத்தில் இயங்குவதாகவும், அதை சரி செய்வதற்கு தற்போது பணம் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார்.</p><p>இந்த நிலையில் இவர் பதிவிட்ட கருத்து இணையத்தில் பயனர்களிடம் இருந்து பல்வேறு ஆலோசனைகளை பெற்றுள்ளது.</p><p>இந்த பதிவிற்கு பயனர் ஒருவர், “நான் அந்த பகுதியிலிருந்து 2 நிமிடத் தொலைவில் வசிக்கிறேன், அங்குள்ள பெரும்பாலான காபி கடைகளுக்கு சென்று பார்த்திருக்கிறேன்.</p><p>உங்கள் சிறப்பு காபி என்றால், அது பெயரிலோ அல்லது வெளியிலுள்ள தோற்றத்திலோ அவ்வளவாகத் தெரிவதில்லை.</p><p>உள்ளே சென்று எதையாவது முயற்சித்து பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. </p><p>மிகவும் நெரிசலான சந்தையில் மற்றுமொரு கடையாக இருப்பதைத் தவிர, நீங்கள் வேறு என்ன விற்கிறீர்கள் என்பது கூடத் தெளிவாகத் தெரியவில்லை” என்று பதிவிட்டார்.</p><p>இதையடுத்து மற்றொரு நபர், “கஃபேவில் நீங்கள் விற்பனை செய்யும் காபியின் விலை, அதன் தரத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இல்லையென்றால் அது ஹட்சன் லேனில் உள்ள மற்றுமொரு கஃபேவாக மட்டுமே இருக்கும்.</p><p>ஏற்கெனவே ஒரு வருடம் ஆகிவிட்டதால், நீங்கள் அடிப்படைகளைக் கண்டறிந்திருப்பீர்கள் என்று நான் கருதுகிறேன்?” என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சோதனை மேல் சோதனை.. மம்தா அறிவித்த மற்றொரு வேட்பாளரும் வாபஸ் வாங்குவதாக அறிவிப்பு - அடுத்த நடந்த டுவிஸ்ட் </title><link>https://www.maalaimalar.com/news/national/a-shock-for-mamata-announcement-that-the-second-candidate-is-also-withdrawing-from-the-by-election-and-the-twist-that-followed</link><comments>https://www.maalaimalar.com/news/national/a-shock-for-mamata-announcement-that-the-second-candidate-is-also-withdrawing-from-the-by-election-and-the-twist-that-followed#comments</comments><guid isPermaLink="false">07b8b836-41a7-4a46-a5ed-78dfe437f855</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:15:58 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:15:58.132Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,மேற்கு வங்கம்,trinamool congress,west bengal,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/9o90005t/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மம்தா ]]></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/9o90005t/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க ரெஜிநகர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா தரப்பு வேட்பாளர் வாபஸ் பெறுவதாக அறிவித்து பின் 3 மணி நேரத்தில் யு டர்ன் அடித்துள்ளார்.</p> <p>ஆட்சியை இழந்தததில் இருந்து மேற்கு வங்கத்தில் முன்னாள் முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF">மம்தா பானர்ஜிக்கு </a>சோதனை மேல் சோதனையாக நடந்து வருகிறது. </p><p>294 இடங்களில் 207 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சியை பிடித்து <a href="https://www.maalaimalar.com/topic/suvendu-adhikari">சுவேந்து அதிகாரி</a> முதலமைச்சர் ஆனார். அதேநேரம் 80 இடங்களில் மட்டுமே 15 ஆண்டுகளாக அங்கு ஆட்சியில் இருந்த மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. </p><p>அதிலும் 58-60 எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்தனர். அவர்களுக்கே சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. கிளர்ச்சி அணியின் ரிதர்பா பானர்ஜி எதிர்க்கட்சி தலைவர் ஆனார். </p> <p>கிளர்ச்சி அணி தாங்களே உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என கூறி வருகிறது. அதேநேரம் திரிணாமுல் காங்கிரசின் 28 நாடாளுமன்ற எம்பிகளில் 20 பேர் விலகிச் சென்று பெயருக்கு என்சிபிஐ என்ற பிராந்திய கட்சியில் இணைந்து பாஜகவின் என்டிஏவுக்கு ஆதரவு நல்கினர்.</p><p>இதனிடையே தேர்தல் ஆணையத்தில் மம்தா தரப்பும் கிளர்ச்சி எம்எல்ஏக்கள் தரப்பும் கட்சிக்கு உரிமை கொண்டாட இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. தற்போது மேற்கு வங்கத்தின் நந்திகிராம், ரெஜிநகர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6 வாக்குப்பதிவு நடைபெற்று 9 ஆம் தேதி எண்ணப்படும்.</p><p>இந்த சூழலில் இடைத்தேர்தலில் இரு தரப்பும் போட்டியிட முடிவெடுத்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சினத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரு தரப்புக்கும் தற்காலிக பெயர், சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2>இடைத்தேர்தல் இடி</h2><p>இதனிடையே இன்று ரெஜிநகரில் மம்தா தரப்பால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரைபுல் ஆலம் சவுத்ரி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என பின்வாங்கினார். ஆனால் 3 மணி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.</p><p>ஏற்கனவே நந்திகிராம் தொகுதியில் மம்தா தரப்பு அறிவித்த மிலான் பிரதான் சுவேந்து அதிகாரியை சந்தித்த பின் வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தது மம்தாவுக்கு பேரிடியாக அமைந்திருந்த நிலையில் ரெஜிநகர் தொகுதியிலும் தான் நிறுத்திய வேட்பாளர் வாபஸ் பெறுவதாக அறிவித்தது அவருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><h2>யு டர்ன்</h2><p>எனவே அவர் வாபஸ் பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து மம்தா பானர்ஜி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் பின்னரே சவுத்ரியின் மனமாற்றம் நடந்துள்ளது.</p><p>"சின்னம் புதுசு. மக்கள் சின்னத்தை அடையாளம் கண்டு எனக்கு ஓட்டு போட சிரமப்பாடுவாங்க. அதனால தான் நான் வாபஸ் வாங்க முடிவு பண்ணேன். ஆனா மம்தா பானர்ஜிகிட்ட பேசுனப்போ, அவங்க, 'உங்களால முடிஞ்ச சிறந்ததை கொடுங்க'ங்கு சொன்னாங்க" என தன் மனமாற்றம் குறித்து விவரித்தார் சவுத்ரி.</p><p>மேலும் தன்னை யாரும் மிரட்டியோ, அழுத்தம் கொடுத்தே வாபஸ் பெற வற்புறுத்தவில்லை என தெரிவித்த சவுத்ரி, மம்தா தரப்பினர் களத்தில் இறங்கி வேலை செய்யும்போது மற்றவர்களால் மிரட்டப்படுகிறார்கள் எனவும் ஆதங்கம் தெரிவித்தார்</p> <p>மனம் மாறி மீண்டும் போட்டியிட முடிவெடுத்த சவுத்ரி வரும் சனிக்கிழமை முதல் தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் தொடங்க உள்ளார். </p><p>இருப்பினும் நந்திகிராம் தொகுதியில் மம்தா நிறுத்திய வேட்பாளர் வாபஸ் பெற்றது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது</p><p>இதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் பெயர் - சின்னம் முடக்கப்பட்டதை எதிர்த்து மம்தா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>2 கி.மீ. தூரத்தை கடக்க 2 மணி நேரம்! மகளின் பள்ளி செல்லும் பயண நேரத்தை பகிர்ந்து தந்தை வேதனை.! </title><link>https://www.maalaimalar.com/news/national/2-km-distance-takes-2-hours-father-shares-daughters-school-commute-woes</link><comments>https://www.maalaimalar.com/news/national/2-km-distance-takes-2-hours-father-shares-daughters-school-commute-woes#comments</comments><guid isPermaLink="false">f885906e-c29e-4efa-9a90-ca927b8c7090</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:48:57 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:48:57.284Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bengaluru,heavy traffic jam,பெங்களுர்,வாகன போக்குவரத்து நெரிசல்</media:keywords><media:content height="414" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/rfz96esn/images-14.jfif" width="738"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bengaluru traffic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/rfz96esn/images-14.jfif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2>போக்குவரத்து நெரிசல் </h2><p>சாலைகளும் போக்குவரத்து நெரிசலும் சிக்கலாகும்போது, ​​ஒரு சிறிய தூரத்தைக் கடப்பதற்கே சில சமயங்களில் அதிக நேரம் ஆகிவிடும். இந்த சூழலில் பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர், தனது மகளின் பள்ளிப் பேருந்துப் பயணம் குறித்த விரக்தியான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.</p><h2>விரக்தி பதிவு </h2><p>பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், <a href="https://www.maalaimalar.com/news/national/teenage-boys-rescue-woman-jumping-into-canal">பள்ளி</a> பேருந்தில் சென்ற தனது மகள் 2 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 2 மணி நேரம் ஆனதாக தந்தை ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.</p><p>பெங்களூருவின் வர்தூர்–கஞ்சூர் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது மகள் பள்ளி முடிந்து பேருந்தில் வீடு திரும்பியபோது, கடுமையான போக்குவரத்து நெரிசலில் பேருந்து சிக்கியுள்ளது. வெறும் 2 கி.மீ. தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் ஆனதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><h2>வேதனை</h2><p>இதுகுறித்து ஹரி என்ற அந்த தந்தை வெளியிட்டுள்ள பதிவில், மகள் பேருந்தில் சிக்கியிருந்த அந்த 2 மணி நேரமும் தான் மிகவும் உதவியற்ற நிலையில் காத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>தானும் தனது மனைவியும் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வரி செலுத்துவதாகவும், மகளின் பள்ளிக்கு அருகில் வீடு இருக்க வேண்டும் என்பதற்காக பெரிய அளவில் வீட்டுக்கடன் பெற்றதாகவும் அவர்  தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.</p><h2>பாதுகாப்பான சாலை வேண்டும்</h2><p>சாலையின் நிலை மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/festival-holiday-severe-traffic-congestion-from-last-night-until-this-morning">போக்குவரத்து நெரிசல்</a> குறித்து பொதுமக்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல்  புகார்கள் மூலம் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் அந்த பதிவில் போக்குவரத்து நெரிசலை விட , ஒரு பொறுப்புள்ள குடிமகனாக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்த போதிலும், என் சொந்த குழந்தையைப் பாதுகாக்க எனக்கு சிறிதும் சக்தி இல்லாமல் போய்விட்டது என்ற உணர்வுதான் என்னை மிகவும் மனம் உடைய செய்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.</p><p>இவரின் இந்த பதிவிற்கு சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>எல்.ஐ.சி-க்கு ரூ.2,684 கோடி மோசடி - அனில் அம்பானி மீது சி.பி.ஐ வழக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/national/cbi-files-corruption-case-anil-ambani-lic-loss</link><comments>https://www.maalaimalar.com/news/national/cbi-files-corruption-case-anil-ambani-lic-loss#comments</comments><guid isPermaLink="false">7a8b8761-3707-4aa8-9053-6290e06fd6d6</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:33:19 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:33:19.847Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>cbi,Anil Ambani,அனில் அம்பானி,reliance group,LIC India,Financial Scam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/i2dctq0h/Anil-Ambani" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anil Ambani ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/i2dctq0h/Anil-Ambani?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல தொழிலதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF">அனில் அம்பானி</a> மற்றும் அவரது ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனம், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கு சுமார் ரூ.2,684.57 கோடி நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, மத்திய புலனாய்வு அமைப்பு புதிய ஊழல் மற்றும் முறைகேடு வழக்கைப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் இந்திய கார்ப்பரேட் மற்றும் நிதியியல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>எல்.ஐ.சி-யின் பிரம்மாண்ட முதலீடும் முறைகேடும்</h2><p>கடந்த 2012 முதல் 2018-ஆம் ஆண்டு வரை அனில் அம்பானியின் <a href="https://www.maalaimalar.com/topic/reliance">ரிலையன்ஸ் </a>கேபிட்டல் நிறுவனத்தில் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி பல்வேறு கட்டங்களாகச் சுமார் ரூ.3,900 கோடி வரை முதலீடு செய்தது.</p><p>இருப்பினும், இந்த முதலீட்டுத் தொகையை நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல், திட்டமிட்டபடி விதிமுறைகளை மீறி முறைகேடான வழிகளில் வேறு சில தனியார் நிறுவனங்களின் கணக்குகளுக்கு ரிலையன்ஸ் கேபிட்டல் நிர்வாகம் மாற்றியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><h2>எல்.ஐ.சி-க்கு ஏற்பட்ட பிரம்மாண்ட இழப்பு</h2><p>நிறுவனத்தின் இந்த நிதி முறைகேடு மற்றும் மோசடி காரணமாக, எல்.ஐ.சி நிறுவனத்திற்கு நேரடியாகச் சுமார் <strong>ரூ.2,684.57 கோடி</strong> அளவுக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த நிதியிழப்பு தொடர்பாக எல்.ஐ.சி நிறுவனம் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில் தற்போது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">சி.பி.ஐ</a> தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.</p><h2>யார் யார் மீது வழக்குப்பதிவு?</h2><p>சி.பி.ஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனம், நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அனில் அம்பானி, முன்னாள் நிர்வாக இயக்குனர் சதிஷ் சேத் மற்றும் இந்த முறைகேட்டிற்குத் துணையாக இருந்த அடையாளம் தெரியாத சில அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><h2>அனில் அம்பானி தரப்பு விளக்கம்</h2><p>இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள தொழிலதிபர் அனில் அம்பானி, "இந்த முதலீட்டு விவகாரத்திலோ அல்லது ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தின் செயல்பாடுகளிலோ எந்தவிதமான முறைகேடோ அல்லது சட்ட விரோதப் பணப் பரிமாற்றமோ நடைபெறவில்லை" என்று கூறி தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளார்.</p><p>இருப்பினும், எல்.ஐ.சி மற்றும் பொதுமக்களின் வரிப்பணம் சம்பந்தப்பட்ட பெரிய தொகை என்பதால் சி.பி.ஐ அதிகாரிகள் இந்த வழக்கின் பின்னணியில் உள்ள நிதிப் பரிமாற்றங்களை மிகத் தீவிரமாகத் தணிக்கை செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய பிரதேசம்: அக் -16 முதல் பெட்ரோல் பங்குகளில் ரூ.2,000-க்கு மேல் UPI கிடையாது?</title><link>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-fuel-pumps-to-stop-upi-payments-above-rs-2000-from-october-16</link><comments>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-fuel-pumps-to-stop-upi-payments-above-rs-2000-from-october-16#comments</comments><guid isPermaLink="false">549cabbf-fa1f-4b89-8ef0-bb46ecf6ed45</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:28:33 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:28:33.589Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய பிரதேசம்,Madhya Pradesh,Petrol Price,digital payment,UPI Tax,Cash Payment</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/0bcea2a0/Cash-ayment" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cash Payment ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/0bcea2a0/Cash-ayment?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் <a href="https://www.maalaimalar.com/topic/upi">யு.பி.ஐ. பரிவர்த்தனை</a>களுக்குக் கட்டணம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, மத்திய பிரதேச மாநில பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் ஒரு அதிரடியான கூட்டு முடிவை  அறிவித்துள்ளது.</p><h2>புதிய கட்டுப்பாடு</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">மத்திய பிரதேசத்தில்</a> உள்ள பெட்ரோல் பங்குகளில் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. </p><p>இந்த நடைமுறை மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 4,700 பெட்ரோல் பங்குகளிலும் ஒரே நேரத்தில் அமலுக்கு வர உள்ளது.</p><h2>இந்த முடிவுக்கு என்ன காரணம்?</h2><p>சமீபத்தில் குறிப்பிட்ட தொகையைத் தாண்டும் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு எம்.டி.ஆர். கட்டணம் அல்லது சேவை வரி விதிக்கப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p>இதன் காரணமாக, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">டிஜிட்டல் பரிவர்த்தனைகளை</a> ஏற்கும் போது அவர்களுக்குக் கூடுதல் நிதி இழப்பு மற்றும் லாப வரம்பில் பெரிய பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.</p><h2>வாடிக்கையாளர்களின் கோரிக்கை</h2><p>பெட்ரோல் மற்றும் டீசல் போடும் வாகன ஓட்டிகள் பொதுவாகப் பெரிய தொகையை யு.பி.ஐ. மூலம் செலுத்தி வந்த நிலையில், இந்த புதிய கட்டுப்பாடு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>"மத்திய அரசு இந்த எம்.டி.ஆர். வரி விதிப்பு முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் மத்திய அரசுக்குக் கடுமையான கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>அரசு இந்த முடிவைத் திரும்பப் பெறாவிட்டால், அக்டோபர் 16 முதல் வாடிக்கையாளர்கள் ரூ.2,000-க்கு மேல் பெட்ரோல் போட ரொக்கப் பணத்தையோ அல்லது பிற வழிமுறைகளையோ மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>கருட சேவையை தரிசிக்க குவிந்த பக்தர்கள்- திருப்பதி மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு </title><link>https://www.maalaimalar.com/spirituality/restrictions-on-vehicle-movement-on-the-tirupati-hill-road</link><comments>https://www.maalaimalar.com/spirituality/restrictions-on-vehicle-movement-on-the-tirupati-hill-road#comments</comments><guid isPermaLink="false">110a3246-d830-4c4c-b789-cadcb7c646c3</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:03:32 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:03:32.313Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>devotees,Tirupati temple,பிரம்மோற்சவ விழா,திருப்பதி கோவில்,பக்தர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/0em978js/tirupati.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் பவனி வந்த காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் பவனி வந்த காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/0em978js/tirupati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கருட சேவையை காண மதியம் முதலே பக்தர்கள் 4 மாட வீதிகளில் குவிய தொடங்கினர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் டீ, காபி, பால், மோர் உள்ளிட்டவை தேவஸ்தான தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டது. மாட வீதிகளில் கருட சேவையை காண 1.80 லட்சம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/திருப்பதி-கோவில்">திருப்பதி ஏழுமலையான் கோவில்</a> பிரம்மோற்சவ விழாவில் 5-வது நாளான இன்று காலை ஏழுமலையான் மோகினி அவதாரத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். </p><h2><strong>கருட சேவை</strong></h2><p>மாலை 6.30 மணிக்கு கருட சேவை உற்சவம் தொடங்குகிறது. தங்க கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.</p><p>பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான கருட சேவையை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருப்பதி மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>வாகனங்களுக்கு தடை</strong> </h2><p>போக்குவரத்து நெரிசலை குறைக்க திருப்பதி மலை உள்ளிட்ட சாலைகளில் 10 இடங்களில் சிறப்பு வாகன நிறுத்தங்களை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்து உள்ளது. </p><p>பிரம்மோற்சவ விழாவை காண வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தி விட்டு பஸ்களில் திருப்பதி மலைக்கு வர வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேபோல் இன்று காலை முதல் நள்ளிரவு வரை மலை பாதையில் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>கருட சேவையை காண மதியம் முதலே பக்தர்கள் 4 மாட வீதிகளில் குவிய தொடங்கினர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் டீ, காபி, பால், மோர் உள்ளிட்டவை தேவஸ்தான தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டது. மாட வீதிகளில் கருட சேவையை காண 1.80 லட்சம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.</p><h2><strong>சிறப்பு ரெயில்கள்</strong></h2><p>கருட சேவை காண வரும் பக்தர்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பதியில் இருந்து வேலூர் கன்டோன்ன்மென்ட் வரையும் திருப்பதியில் இருந்து சென்னை கடற்கரை, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.</p><h2><strong>20 மணி நேரம்</strong></h2><p>திருப்பதியில் நேற்று 76,060 பேர் தரிசனம் செய்தனர். 32, 248 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.56 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>Honeymoon சென்ற புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த சோகம் - பார்பிக்யூ சமைத்த போது நேர்ந்த விபரீதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/honeymoon-tragedy-newlywed-couple-barbecue-accident</link><comments>https://www.maalaimalar.com/news/national/honeymoon-tragedy-newlywed-couple-barbecue-accident#comments</comments><guid isPermaLink="false">7be03907-8c88-4121-b623-92cc015b62a8</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:59:55 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:59:55.841Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,புதுமண தம்பதி,Honey Moon,ஹனிமூன்,தீ விபத்து,Newly married couple</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/oy7o7u26/Fire-Accident" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fire Accident ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/oy7o7u26/Fire-Accident?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்காளத்தில்</a> Hoonymoon கொண்டாடச் சென்ற புதுமணத் தம்பதியின் வாழ்வில் பார்பிக்யூ தீ விபத்து காரணமாகப் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. கணவன் கண்முன்னே தீப்பற்றி எரிந்ததில் இளம்பெண் ஒருவர் 60 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2>ஹனிமூன் பயணத்தில் நேர்ந்த விபரீதம்</h2><p>மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் பகுதியைச் சேர்ந்த <strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">சவுவிக் தாஸ்</a></strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF"> என்பவருக்கும், </a><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">நிகிதா சாஹா</a></strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF"> </a>என்ற பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. </p><p>இந்த புதுமணத் தம்பதியினர் தங்களது ஹனிமூனை கொண்டாடுவதற்காக டார்ஜிலிங் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சிட்டாங் மலைவாசஸ்தலத்திற்குச் சென்றிருந்தனர்.</p><p>அங்குள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது, அங்கிருந்த பார்பிக்யூ சமையல் வசதியைப் பயன்படுத்தத் திட்டமிட்டனர். சமையல் நடக்கும் இடத்திற்கு மிக அருகில் இந்த தம்பதியினர் அமர்ந்திருந்தனர்.</p><h2>கண்ணிமைக்கும் நேரத்தில் பற்றிய தீ</h2><p>அங்கு பணிபுரிந்த விடுதி ஊழியர் ஒருவர், பார்பிக்யூ அடுப்பை வேகமாக எரியூட்டுவதற்காக ஒரு பிளாஸ்டிக் கேனில் இருந்த எரியக்கூடிய திரவத்தை அடுப்பில் ஊற்றியுள்ளார். </p><p>அப்போது எதிர்பாராத விதமாகத் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தீ கொளுந்துவிட்டு</a> எரியத் தொடங்கி, அருகில் அமர்ந்திருந்த நிகிதாவின் உடலுக்குப் பரவியது.</p><p>கண்ணிமைக்கும் நேரத்தில் நிகிதாவின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. </p><p>அதிர்ச்சியடைந்த கணவர் சவுவிக் தாஸும், சம்பந்தப்பட்ட ஊழியரும் தங்களது ஆடைகளைக் கழற்றி தீயை அணைக்கப் போராடினர். இருப்பினும் நிகிதாவின் உடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.</p><h2>தற்போதைய நிலை</h2><p>நிகிதாவின் உடலில் <strong>60 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள்</strong> ஏற்பட்டுள்ளதால், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p><p>இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சொகுசு விடுதியின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியர் தகுதி தேர்வு டெட் வினாத்தாள்களை காலணிக்குள் மறைத்து கடத்திய ஊழியர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/national/teachers-qualification-exam-question-papers-smuggled-in-shoes-16-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/teachers-qualification-exam-question-papers-smuggled-in-shoes-16-arrested#comments</comments><guid isPermaLink="false">06ad9cb9-0a98-4f10-bd66-2dac1d5a7463</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:20:36 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:20:36.521Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆசிரியர் தகுதி தேர்வு,TET Exam,paper leak,Exam Question Paper,வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/vzxavr7s/Untitled-design-16.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Maharashtra TET exam paper leak]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/vzxavr7s/Untitled-design-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள்களை அச்சகத்தில் இருந்து காலணிகளில் கடத்தி, 8,000 ரூபாய்க்கு விற்பனை செய்த வழக்கில், மொத்தம் 18 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.</p><h3><strong>மகாராஷ்டிரா டெட் தேர்வு</strong></h3><p>ஆக்ராவில் உள்ள மஹிம் பத்ரன் பிரைவேட் லிமிடெட் என்ற அச்சகத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஆசிரியர் தகுதி தேர்வுக்கான</a> வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு வந்தன. </p><p>அப்போது அந்த அச்சகத்தில் வேலை பார்த்துவந்த இரண்டு ஊழியர்கள் வினாத்தாள்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.</p><p>இதையடுத்து அவர்கள் அச்சகத்தில் பாதுகாப்பு சோதனைகள் அதிகமாக இருந்ததால், தங்கள் காலணிகளில் மறைத்து வைத்து வினாத்தாள்களை வெளியே கொண்டு வந்துள்ளனர்.</p><p>தேர்வின் நேர்மையை பாதுகாப்பதற்காக, தேர்வு நாளன்று தேர்வர்கள் தங்கள் வினாத்தாள்களை தேர்ந்தெடுக்கும் வகையில் நான்கு தனித்தனி தொகுப்புகளாக தயாரித்திருந்தனர்.</p><p>ஆனால் அச்சகத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் மற்றும் ஒரு முன்னாள் பணியாளரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி, அந்த நான்கு வினாத்தாள் தொகுப்புகளையும் தங்கள் காலணிகளுக்குள் மடித்து வைத்து திருட்டுத்தனமாக வெளியே கொண்டு வந்துள்ளனர்.</p><p>இதையடுத்து ஊழியர்கள் அந்த வினாத்தாள்களை 8,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><h3>3 பேர் கைது</h3><p>மகாராஷ்டிராவில் பிவண்டி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள்களை விற்பனை செய்ய முயன்றபோது, மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.</p><p>முன்னாள் பயிற்சி வகுப்பு ஆசிரியரான குப்தா என்பவரை மாநிலங்களுக்கு இடையேயான மோசடியின் முக்கிய குற்றவாளியாக போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p>அவருக்கு ஒடிசாவில் முன்னதாக நடந்த மற்றொரு தேர்வுத்தாள் கசிவு வழக்கிலும் தொடர்பு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h3><strong>குற்றப்பத்திரிகை தாக்கல்</strong></h3><p>இதைத்தொடர்ந்து பிவண்டியில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், 18 பேர் குற்றவாளிகளாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>இந்த வழக்கில் இதுவரையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான அசோக் சாவ் மற்றும் பிரகாஷ் மிசாலை போலீசார் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி கலப்பட நெய் மோசடி: சுகிருதி ஃபுட்ஸ் உரிமையாளரை கைது செய்த அமலாக்கத்துறை</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-96-crore-adulterated-ghee-scam-in-tirupati-ed-arrests-sukruthi-foods-owner</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-96-crore-adulterated-ghee-scam-in-tirupati-ed-arrests-sukruthi-foods-owner#comments</comments><guid isPermaLink="false">ae3b3d6d-0243-46d9-9d2f-d47f6fa88e0d</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:49:57 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:49:57.238Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Enforcement Directorate,திருப்பதி,Tirupati,அமலாக்கத்துறை,Tirumala Devasthanam,திருமலை தேவஸ்தானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/8m78rr9t/Untitled-design-14.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tirupati adulterated ghee scam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/8m78rr9t/Untitled-design-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படும் செய்ததாக கூறப்படும் பணமோசடி வழக்கில், சுகிருதி ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கைலாஷ் சந்த் மங்களா என்பவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">திருப்பதி</a> லட்டு தயாரிக்கும் நெய்யில் கலப்படம் செய்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், </p><h3><strong>கலப்பட நெய்</strong></h3><p>திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கலப்படம் செய்யப்பட்ட நெய்யானது, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், பாம் கெர்னல் ஆயில், பாமோலின் மற்றும் எம்ஜி-90, மோனோகிளிசரைடுகள், மைவாசெட் சாஃப்ட் 400, அசிட்டிக் அமில எஸ்டர் உள்ளிட்ட ரசாயணங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. </p><p>பின்னர் இவை, அக்மார்க் ஸ்பெஷல் கிரேடு பசு நெய் என்ற பெயரில் திமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.</p><h3><strong>96 கோடி மோசடி</strong></h3><p>2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மோசடியாக வழங்கப்பட்ட நெய்யின் மதிப்பு ரூபாய் 230 கோடியாக உள்ளது. அதில் 96 கோடி ரூபாய் மதிப்புள்ள கலப்பட நெய், மங்களாவால் தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த வழக்கில் மங்களா என்பவர், கலப்பட பொருட்களை பெற உதவியதோடு தனது தொழிற்சாலை வளாகத்தில் கலப்பட நெய்யையும் தயாரித்துள்ளார்.</p><p>ஸ்ரீ வைஷ்ணவி டெய்ரி ஸ்பெஷாலிட்டிஸ், மல்கங்கா மில்க் &amp; அக்ரோ ப்ராடக்ட்ஸ் மற்றும் ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் உள்ளிட்ட பல்வேறு போலி நிறுவனங்கள் மூலம் கலப்படம் செய்யப்பட்ட நெய் விநியோகத்தையும் மங்களா ஒருங்கிணைத்துள்ளார்.</p><p>மேலும், கலப்படங்களின் உண்மையான பயன்பாட்டை மறைத்து, அசல் பசு நெய்யின் முறையான உற்பத்தி மற்றும் விநியோகம் போன்ற தோற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன், நெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் விற்பனை மற்றும் கொள்முதல் தொடர்பான போலிப் பதிவுகளை மங்களா உருவாக்கியுள்ளார் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.</p><h3><strong>சுகிருதி ஃபுட்ஸ் நிறுவன உரிமையாளர் கைது</strong></h3><p>இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகளின் பேரில், செப்டம்பர் 17 அன்று ஐதராபாத்தில் உள்ள அலுவலகத்தில் மங்களா காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>பின்னர் அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேர்வில் ChatGPT பயன்படுத்திய IIT மாணவர் தற்கொலை - சக மாணவர்கள் போராட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/iit-student-dies-by-suicide-after-using-chatgpt-in-exam</link><comments>https://www.maalaimalar.com/news/national/iit-student-dies-by-suicide-after-using-chatgpt-in-exam#comments</comments><guid isPermaLink="false">add3af77-e73b-4e93-a0a8-49f44fe21b7e</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:02:00 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:02:00.982Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>students protest,student suicide,மாணவர் தற்கொலை,IIT Bombay,பாம்பே,BTech Student</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/lnftci1f/IIT-Student-Suicide" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IIT Student Suicide ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/lnftci1f/IIT-Student-Suicide?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பையில் </a>உள்ள புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வந்த மாணவர் ஒருவர், தேர்வின் போது மொபைல் போனில் ChatGPT செயலியைப் பயன்படுத்தியதாகப் பிடிபட்டதைத் தொடர்ந்து, தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். </p><p>இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஐஐடி பவாய் வளாகத்தில் நேற்று இரவு முழுவதும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு விடிய விடிய தீவிர போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>தேர்வில் முறைகேடு புகார் - என்ன நடந்தது?</strong></h2><p>ஐஐடி பாம்பேயில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாமாண்டு பி.டெக் படித்து வந்த மாணவர் சாஹில் வாகோடே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருவத் தேர்வின் போது , சாஹில் தனது மொபைல் போனைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் தேர்வுத்தாளினைக் புகைப்படம் எடுத்து <a href="https://www.maalaimalar.com/topic/chatgpt">ChatGPT </a>தளத்தில் பதிவேற்றி, அதற்கான விடைகளைத் தேடியதாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேர்வு அறைக் கண்காணிப்பாளர் அவரிடமிருந்த மொபைல் போனைப் பறிமுதல் செய்துள்ளார்.</p><h2><strong>கல்லூரி நிர்வாகத்தின் விளக்கம்</strong></h2><p>இந்த விவகாரம் தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/topic/iit">ஐஐடி </a>பாம்பே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p>மாணவர் மீது உடனடி ஒழுங்குமுறை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.</p><p>தேர்வு முடிந்ததும், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் ஆகியோர் மாணவரை அழைத்து ஆலோசனை வழங்கியுள்ளனர்.</p><p>இந்தச் சம்பவத்தால் அவருடைய கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று கூறி அவரைத் தேற்றி அனுப்பியுள்ளனர்.</p><p>அதன் பின்னர் தனது விடுதி அறைக்குத் திரும்பிய மாணவர், மாலை நேரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் என்பதும் தெரிய வந்துள்ளது.</p><h2><strong><a href="https://www.maalaimalar.com/topic/student-protest">கொந்தளித்த மாணவர்கள் - வளாகத்தில் போராட்டம்</a></strong></h2><p>மாணவர் சாஹிலின் மரணச் செய்தி வெளியானதும், ஐஐடி வளாகத்தில் இருந்த மாணவர்கள் நள்ளிரவில் திரண்டு நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டத்தில் குதித்தனர்.</p><h2><strong>மாணவர்களின் குற்றச்சாட்டு</strong></h2><p>கல்லூரி நிர்வாகம் உண்மையை மறைப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>சாஹிலுக்கு ஒரு வருடக் கல்வி இடைநீக்கம் வழங்கப்படும் என்றும், அவர் விடுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அதிகாரிகள் மிரட்டியதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.</p><p>இத்தகைய நடவடிக்கையால் நான்கு ஆண்டு பொறியியல் படிப்பு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என்ற பயமும், கடுமையான மன அழுத்தமுமே மாணவரை இந்த எல்லைக்குத் தள்ளியிருக்கலாம் என்று சக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>தேர்வுகள் ஒத்திவைப்பு:</strong></h2><p>மாணவர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, ஐஐடி பாம்பே இயக்குனர் பேராசிரியர் சிரீஷ் கேதாரே மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். </p><p>நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது நடந்து வரும் அனைத்து பருவத் தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>6 மாதங்களில் 3-வது தற்கொலை</strong></h2><p>ஐஐடி பாம்பே வளாகத்தில் கடந்த 6 மாதங்களில் நடக்கும் 3-வது தற்கொலைச் சம்பவம் இதுவாகும் (இந்த ஆண்டில் 4-வது சம்பவம்). கடந்த பிப்ரவரி மற்றும் ஜூலை மாதங்களிலும் இரண்டு மாணவர்கள் இதேபோல் தற்கொலை செய்து கொண்டனர். </p><p>தொடர்ந்து மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் ஐஐடி நிறுவனங்களில் நிலவும் கல்வி அழுத்தங்கள் மற்றும் மாணவர்களின் மனநலம் குறித்த பல்வேறு விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.</p><p>இச்சம்பவம் குறித்து பவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் டெங்கு காய்ச்சல் தடுப்பூசி அடுத்த ஆண்டு அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/dengue-vaccine-to-be-launched-in-india-next-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/dengue-vaccine-to-be-launched-in-india-next-year#comments</comments><guid isPermaLink="false">4671c38e-d6ff-4155-a64c-5a8d6cfddfaf</guid><pubDate>Sat, 19 Sep 2026 03:31:04 +0000</pubDate><atom:updated>2026-09-19T03:31:04.463Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தடுப்பூசி,dengue fever,டெங்கு காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/692fnnqk/dengue.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெங்கு காய்ச்சல் தடுப்பூசி]]></media:title><media:description type="html"><![CDATA[ டெங்கு காய்ச்சல் தடுப்பூசி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/692fnnqk/dengue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்தியாவில் டெங்கு காய்ச்சலுக்கான முதல் தடுப்பூசி அடுத்த ஆண்டு அறிமுகம் ஆகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.</strong></em></p><h2><strong>முதலாவது தடுப்பூசி</strong></h2><p>டெங்கு நோய்த்தடுப்பு, கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான இந்தியாவின் முயற்சிகளை வலுப்படுத்துவதின் முக்கிய நடவடிக்கையாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், ஜெர்மனியின் டகேடா ஜி.எம்.பி.எச். நிறுவனம் தயாரித்துள்ள டெங்கு டெட்ராவேலண்ட் தடுப்பூசிகளை (கியூடெங்கா) இறக்குமதி செய்து சந்தைப்படுத்துவதற்கு கடந்த ஜூலை மாதம் அனுமதி அளித்தது.</p><p>இது நாட்டில் <a href="https://www.maalaimalar.com/topic/டெங்கு-காய்ச்சல்">டெங்கு காய்ச்சல்</a> தடுப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட முதலாவது தடுப்பூசி ஆகும். மருந்துகள், அழகுசாதனப்பொருட்கள் சட்டம்-1940 மற்றும் மருந்து விதிமுறைகள்-1945 ஆகியவற்றின்படி தடுப்பூசிகளின் தரம், பாதுகாப்பு, திறன் ஆகியவற்றின் விரிவான அறிவியல் ரீதியான மதிப்பீட்டுக்குப் பிறகே இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. </p><h2><strong>3 கட்டங்களாக...</strong></h2><p>இந்த தடுப்பூசியை 4 வயது முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு செலுத்தலாம். இதன் செயல்திறன் குறித்து பிரேசில், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் 4 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு 3 கட்டங்களாக இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. டெங்கின் 4 வகைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது.</p><p>இத்தடுப்பூசிக்கு ஏற்கனவே ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், சுவிட்சர்லாந்து, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 42 நாடுகளில் ஒப்புதல் கிடைத்துள்ளது. அத்துடன் உலக சுகாதார அமைப்பின் முன் தகுதியையும் பெற்றுள்ளது. உலகம் முழுவதும், 2.4 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.</p><h2><strong>ஒப்பந்தம் கையெழுத்து</strong></h2><p>இந்நிலையில் இந்தியாவில் இதனை சந்தைப்படுத்துவதற்கும், வினியோகிப்பதற்குமான உரிமையை ஐதராபாத்தின் டாக்டர் ரெட்டிஸ் லேபரிட்டரிஸ் நிறுவனம் பெற்று இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்தானது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் இந்த தடுப்பூசி சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை விவரம் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.</p><p>இதுபற்றி, டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவனம், “2027-ம் ஆண்டின் முதல் பாதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும், இந்தியாவின் முதல், அங்கீகாரம் பெற்ற டெங்கு தடுப்பூசியான கியூடெங்காவை சந்தைப்படுத்தவும், வினியோகிக்கவும் டகேடா நிறுவனத்துடன் நாங்கள் ஒரு பிரத்தியேக ஒப்பந்தம் செய்துள்ளோம்" என சமூக வலைத்தள பதிவு ஒன்றில் தெரிவித்து உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பாஸ்போர்ட் பெறும் நடைமுறையில் புதிய மாற்றம் செய்த மத்திய அரசு   </title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-introduces-new-changes-to-the-passport-application-process</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-introduces-new-changes-to-the-passport-application-process#comments</comments><guid isPermaLink="false">68ea346e-8499-40a0-b7f1-f7fa6b6c2b5e</guid><pubDate>Sat, 19 Sep 2026 00:16:49 +0000</pubDate><atom:updated>2026-09-19T00:16:49.957Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,பாஸ்போர்ட்,Passport,central government,கடவுச்சீட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ynfxtfwv/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாஸ்போர்ட் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பாஸ்போர்ட் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ynfxtfwv/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெறுவதில் மாற்றங்களை செய்து மத்திய வெளியுறவு அமைச்சகம் 'கடவுச்சீட்டு (திருத்த) விதிகள், 2026'-ஐ அறிவித்துள்ளது.</p><p>இந்த புதிய விதிகள், செப்டம்பர் 15ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட உடனேயே நடைமுறைக்கு வந்தன. </p> <h2>குழந்தைகளுக்கு</h2><p>15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட், 5 ஆண்டுகள் அல்லது குழந்தைக்கு 15 வயது பூர்த்தியாகும் வரை (இவற்றில் எது முந்துகிறதோ அதுவரை) மட்டுமே செல்லுபடியாக இருந்தது.</p><p>புதிய விதியின்படி 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வழக்கமான 36 பக்க பாஸ்போர்ட் இனி அது வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது குழந்தைக்கு 18 வயது பூர்த்தியாகும் வரை செல்லுபடியாகும். இதில் எது முதலில் வருகிறதோ அதுவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.</p><p>வயது வரம்பு 15ல் இருந்து 18 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>உதாரணமாக 14 வயதில் பாஸ்போர்ட் பெறும் ஒரு குழந்தைக்கு, 5 ஆண்டுகள் நிறைவடையாவிட்டாலும் 18 வயது பூர்த்தியாகும் போதே அந்த பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலம் முடிவுக்கு வந்துவிடும்.</p><p>8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்குப் புதிய பாஸ்போர்ட் பெறுவதில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>கட்டணம் உயர்வு</h2><p>முன்னதாக ஜூலை 1 முதல் அமலுக்கு வந்த விதிகளின்படி, முன்பு 1,500 ரூபாயாக இருந்த பெரியவர்களுக்கான 36 பக்க பாஸ்போர்ட்டின் கட்டணம் இப்போது ரூ. 2,500 ஆக உயர்ந்துள்ளது. முன்பு 2,000 ரூபாயாக இருந்த 60 பக்க பாஸ்போர்ட்டின் கட்டணம் இப்போது ரூ. 3,500 ஆக உயர்ந்துள்ளது.</p><p>மேலும், முன்பு 3,500 ரூபாயாக இருந்த 36 பக்க 'தட்கல்' பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் இப்போது ரூ. 5,000ஆக உயர்ந்துள்ளது. முன்பு 4,000 ரூபாயாக இருந்த 60 பக்க 'தட்கல்' பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் இப்போது ரூ. 6,000 ஆக உயர்ந்துள்ளது.</p><p>60 பக்க பாஸ்போர்ட் தொலைந்துபோனாலோ அல்லது சேதமடைந்தாலோ அதை உடனடியாக மாற்றுவதற்கான கட்டணம் 5,500 ரூபாயில் இருந்து ரூ. 8,500 ஆக உயர்ந்துள்ளது.</p><p>சிறார்களுக்கு 36 பக்கங்கள்கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் 1,000 ரூபாயில் இருந்து 1,750 ரூபாயாகவும் 36 பக்கங்கள் தட்கல் பாஸ்போர்ட் கட்டணம் 3,000 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>5 வயது மகளை கொன்று பிரிட்ஜில் வைத்துவிட்டு தற்கொலை செய்த தந்தை </title><link>https://www.maalaimalar.com/news/national/father-kills-5-year-old-daughter-places-her-in-the-fridge-and-commits-suicide</link><comments>https://www.maalaimalar.com/news/national/father-kills-5-year-old-daughter-places-her-in-the-fridge-and-commits-suicide#comments</comments><guid isPermaLink="false">0fb637aa-3c57-458e-a5fd-ab84eab8c437</guid><pubDate>Fri, 18 Sep 2026 22:50:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T22:50:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,suicide,குஜராத்,gujarat,Murder,கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/50np98yo/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தற்கொலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ தற்கொலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/50np98yo/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத்தில் கடன் சுமை காரணமாக 5 வயது மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்த சோகம் நிகழ்ந்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/gujarat">குஜராத் </a>மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் ராஜுலா பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் தனக் (40). </p><p>கடந்த செப்டம்பர் 14 அன்று இவரது மனைவி மஞ்சுபென் தங்கள் 5 வயது மகள் ஹிமான்ஷியை கிஷோரிடம் விட்டுவிட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார்.</p><p>புதன்கிழமை அன்று கிஷோரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோது அழைப்பை அவர் ஏற்காததால், மஞ்சுபென் தனது சகோதரரை வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். </p><p>பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கிஷோர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.</p><p>காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட சோதனையில், படுக்கையில் கிஷோர் எழுதி வைத்திருந்த 3 தற்கொலைக் கடிதங்கள் கைப்பற்றப்பட்டன.</p> <h2>தற்கொலை - கொலை</h2><p>கடன் பெற்று, அந்தப் பணத்தைக் கட்டுமானப் பணிகளில் முதலீடு செய்திருந்ததாகவும், தொழிலதிபர் நண்பர்களிடமிருந்து தனக்கு வர வேண்டிய ரூ.7.25 லட்சம் பணம் இன்னும் வந்து சேரவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். பணப் பிரச்சனையால் வேறு வழி தெரியாமல் மகளுடன் தற்கொலை செய்வதாக எழுதியிருந்தார்.</p><p>தனது இறப்பிற்கு பிறகு மகள் கஷ்டப்படக் கூடாது என்பதால் அவளைக் கொன்றதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ள கிஷோர், மகளின் உடலைப் பிரிட்ஜில் வைத்திருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தார். இதை வாசித்த பின் அதிர்ந்த போலீசார் பிரிட்ஜை சோதனையிட்டபோது அதில் சிறுமி ஹிமான்ஷியின் சடலம் இருந்துள்ளது.</p> <h2>கடைசி கொண்டாட்டம்</h2><p>தற்கொலைக்கு முன்பாகத் தனது மகள் ஹிமான்ஷிக்கு பிறந்தநாள் போல அந்த அறையைப் பலூன்கள் மற்றும் மெழுகுவர்த்திகளால் கிஷோர் அலங்கரித்துள்ளார்.</p><p>மகளுக்குப் புதிய வெள்ளை நிற ஆடைகளை அணிவித்து, தலையில் துப்பட்டா போட்டு, உதடுகளில் துளசி இலைகளை வைத்துப் பூஜை செய்துள்ளார்.</p><p>அறையிலும் பிரிட்ஜூகுள்ளும் சாக்லேட்டுகளை வைத்து, பிரிட்ஜ் கதவில் "ஹேப்பி பர்த்டே ஹிமான்ஷி" என்று காகிதத்தில் எழுதி ஒட்டியுள்ளார்.</p><p>அன்று குழந்தைக்குப் பிறந்தநாள் இல்லை என்றபோதிலும் அவர் இப்படி செய்துள்ளார். இதைச் செய்து பின், மகளை மூச்சு திணறச் செய்து கொன்று பிரிட்ஜில் வைத்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்துள்ள ராஜுலா காவல்துறை, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.</p><h2>தற்கொலை தீர்வல்ல</h2><p>தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். </p><p>தற்கொலை எண்ணங்கள், மனநல பிரச்சனைகளில் இருந்து விடுபட, உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.</p><p>சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரமும் செயல்படும்)</p><p>மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம் செயல்படும்)</p><p>சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019</p> ]]></content:encoded></item><item><title>திரிணாமுல் காங்கிரஸ் பெயர் - சின்னம் முடக்கம்.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மம்தா </title><link>https://www.maalaimalar.com/news/national/trinamool-congress-name-and-symbol-frozen-mamata-moves-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/trinamool-congress-name-and-symbol-frozen-mamata-moves-supreme-court#comments</comments><guid isPermaLink="false">5ee7450d-592b-43bb-a99d-a8791c1c6bea</guid><pubDate>Fri, 18 Sep 2026 19:52:40 +0000</pubDate><atom:updated>2026-09-18T19:52:40.310Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,Supreme Court,trinamool congress,உச்சநீதிமன்றம்,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/yf9y4fa7/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மம்தா ]]></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/yf9y4fa7/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கியதை எதிர்த்து, கட்சியின் நிறுவனர் மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p> <p>மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D"> திரிணாமுல் காங்கிரஸ் </a>படுதோல்வியை சந்தித்தது. </p><p>அதன்பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. சுமார் 60 எம்.எல்.ஏ.-க்கள் (மூன்றில் இரண்டு பங்கு) தனியாக செயல்பட முடிவு செய்தனர். இவர்கள் அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்பில் செயல்பட தொடங்கினர்.</p><p>அதேவேளையில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என மம்தா பானர்ஜி தரப்பு கூறி வந்தது. இதற்கிடையே, திரிணாமுல் கட்சி எம்.பி.க்கள் 20 பேர், வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்.</p> <h2>இடைத்தேர்தல்</h2><p>மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தின் முறையிடப்பட்டனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் (இரட்டைப் பூக்கள்) சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.</p>  <h2>மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்</h2><p>இரண்டு தரப்பிலும் பரிந்துரை செய்த கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மம்தா பிரிவுக்கு மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அத்துடன் கால்பந்து வீரர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.</p><h2>ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்</h2><p>அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்புக்கு ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த தரப்புக்கு அஞ்சல் உறை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>மேற்கு வங்கம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட இந்த கட்சியின் பெயரில் இருதரப்பினரும் செயல்படுவார்கள்.</p><p>மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால், கட்சிக்கு உரிமை கொண்டாடும் தரப்பிற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.</p> <h2>உச்சநீதிமன்றம் சென்ற மம்தா</h2><p>இதனிடையே தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளார்.</p><p>தேர்தல் ஆணையத்தின் இந்த இடைக்கால உத்தரவு சட்டவிரோதமானது என்றும், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தும் உரிமையை பறிக்க முடியாது என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவியை மருத்துவமனையில் வைத்தே சரமாரியாக தாக்கிய கணவன்</title><link>https://www.maalaimalar.com/news/national/husband-brutally-assaults-wife-right-at-the-hospital-after-she-gives-birth-to-a-baby-girl</link><comments>https://www.maalaimalar.com/news/national/husband-brutally-assaults-wife-right-at-the-hospital-after-she-gives-birth-to-a-baby-girl#comments</comments><guid isPermaLink="false">a3ba24d1-e8fc-4bd3-ac9a-8741f7713539</guid><pubDate>Fri, 18 Sep 2026 18:47:33 +0000</pubDate><atom:updated>2026-09-18T18:47:33.313Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவன்-மனைவி,husband and wife,பிரசவம்,childbirth,பெண் குழந்தை,Girl child</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/tfcm38fx/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தாக்குதலுக்கு உள்ளான மனைவி ]]></media:title><media:description type="html"><![CDATA[ தாக்குதலுக்கு உள்ளான மனைவி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/tfcm38fx/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தில் பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவியை மருத்துவமனையில் வைத்தே கணவன் சரமாரியாக தாக்கிய கொடூரம் அரங்கேறியுள்ளது.</p> <p>மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கமலா ராஜா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவப் பிரிவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. </p><h2>பிரசவம் </h2><p>35 வயதான அந்தப் பெண் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் ஒரு பெண் - ஒரு ஆண் குழந்தை என <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">இரட்டைக் குழந்தைகளை</a> பெற்றெடுத்தார். </p><p>குழந்தை பிறப்புக்கு பின் மருத்துவமனை மகப்பேறு வார்டுக்குள் வந்த 45 வயது கணவன், </p><p>ஆண் குழந்தையை பெற்ற அதே வேளை  ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததால் மனைவி மீது ஆத்திரம் அடைந்துள்ளார். </p><p>தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அவரைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் அப்பெண்ணின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன.</p> <h2>விசாரணை</h2><p>அப்பெண்ணின் தந்தை, காவல்துறையிடம் அளித்த புகாரில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தியுள்ளார்.</p><p>கூர்மையான ஆயுதத்தால் அப்பெண் தாக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>ஆனால் அவர் தாக்குதலின்போது தனது மனைவியின் வாயை இறுக்கமாக மூடியதாகவும், அப்போது அவரின் மோதிரம் மற்றும் நகங்களால் அப்பெண்ணின் முகத்தைக் கீறியதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இச்சம்பவம் குறித்த விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முகத்தில் கேக் பூசிய  நண்பனை வெட்டிக் கொன்ற இளைஞன் </title><link>https://www.maalaimalar.com/news/national/enraged-after-having-cake-smeared-on-his-face-during-a-birthday-celebration-a-young-man-hacked-his-friend-to-death</link><comments>https://www.maalaimalar.com/news/national/enraged-after-having-cake-smeared-on-his-face-during-a-birthday-celebration-a-young-man-hacked-his-friend-to-death#comments</comments><guid isPermaLink="false">8c750727-d84b-4417-984d-58d6d2b42294</guid><pubDate>Fri, 18 Sep 2026 18:14:41 +0000</pubDate><atom:updated>2026-09-18T18:14:41.864Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜம்மு காஷ்மீர்,Murder,கொலை,BirthDay Celebration,பிறந்தநாள் கொண்டாட்டம்,Jammu &amp; Kashmir</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/o8cem7du/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கொலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கொலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/o8cem7du/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முகத்தில் கேக் பூசப்பட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், நண்பனை இளைஞர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.</p> <p>ஜம்மு காஷ்மீர் ஜானுபூரில் அமைந்துள்ள லோயர் ரூப்நகர் பகுதியில் நேற்று இரவு சாலையோரத்தில் நீரஜ் என்ற 'அன்ஷு' தனது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. </p><p>நீரஜின் சகோதரர் ரிஷு, நண்பர்கள் பவன் நாயர் என்கிற சமீர்,  ஜான் சோத்ரா, கௌரவ் சிங் மற்றும் சுகந்த் பட்டி உள்ளிட்ட நண்பர்கள் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். </p> <p>கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நீரஜ் கேக் வெட்டிக்கொண்டிருந்தபோது, ​​பவன் நாயர் நீரஜின் முகத்தில் கேக்கை பூசினார். இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.</p><p>மற்ற நண்பர்கள் தலையிட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முயன்றபோதிலும், கோபமடைந்த நீரஜ் கத்தியை எடுத்து பவன் நாயரின் கழுத்தை வெட்டினார்.</p> <p>படுகாயமடைந்த பவன், உடனடியாக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.</p><p>ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக நீரஜ் மற்றும் அவரது சகோதரர் ரிஷுவை ஜெயின்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">குற்றத்தில் </a>பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>நந்திகிராம் இடைத்தேர்தல்: மம்தா ஆதரவு தெரிவித்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் அதிரடி கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-nandigram-pick-arrested-after-mamata-banerjee-announces-support</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-nandigram-pick-arrested-after-mamata-banerjee-announces-support#comments</comments><guid isPermaLink="false">87fb0aaf-2fc5-4ad9-a968-5824a0d3bd81</guid><pubDate>Fri, 18 Sep 2026 16:29:50 +0000</pubDate><atom:updated>2026-09-18T16:29:50.941Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,மேற்கு வங்கம்,west bengal,Nandigram,நந்திகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/qgevzmyc/CongressParty001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் வேட்பாளர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/qgevzmyc/CongressParty001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கம் மாநிலம் நந்திகிராம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்துள்ளது. மம்தா பானர்ஜி, மம்தா அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற பெயரில் கட்சியை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.</p><h2>2007-ம் ஆண்டு கொலை வழக்கில் கைது</h2><p>இதற்கிடையே நந்திகிராம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். இவர் தெரிவித்த சில மணி நேரங்களில் நந்திகிராம் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானை போலீசார் கைது செய்துள்ளது. அவர் மீதான பழைய கொலை வழக்கில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளார்.</p><p>2007-ம் ஆண்டு நந்திகிராம் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.</p><p>இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் கூறுகையில் "பாஜக-வின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் 'வென்டிலேட்டர்' உதவியுடன் உயிர்வாழும் நிலையில் உள்ளது. எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியாவை (Opposition-Mukt Bharat) உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நமது மகத்தான அரசியலமைப்பு சார்ந்த ஜனநாயகத்தை ஒரு கேலிக்கூத்தான நாடாக (Banana Republic) மாற்றும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது.</p><h2>ஜனநாயகத்தைக் கைப்பற்ற பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்- காங்கிரஸ்</h2><p>மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்த சில நிமிடங்களிலேயே, 2007-ம் ஆண்டைச் சேர்ந்த, நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த ஒரு வழக்கை கையில் எடுத்து எங்கள் வேட்பாளரை கைது செய்தது, ஜனநாயகத்தைக் கைப்பற்ற பா.ஜ.க. எந்த எல்லைக்கும் செல்லும் என்பதையே காட்டுகிறது. அடக்குமுறை மிக்க ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடி அவர்களை வெளியேற்றிய கட்சி எங்களுடையது. எனவே, அவர்களைப் போலச் செயல்படும் இவர்களின் இத்தகைய மலிவான மிரட்டல் உத்திகள் எங்களை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது. அதிகாரத்தின் இந்த தவறான பயன்பாட்டை எதிர்த்து நாங்கள் உறுதியாக நிற்போம். அத்துடன் பாஜகவின் தோல்வியையும் உறுதி செய்வோம்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>3 கோடி மதிப்பிலான நகைகளை திருடி 5 அடி ஆழத்தில் புதைத்த கொள்ளையர்கள் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/terror-in-delhi-rs-3-crore-jewellery-robbery-3-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/terror-in-delhi-rs-3-crore-jewellery-robbery-3-arrested#comments</comments><guid isPermaLink="false">3a3dac5d-c104-472c-8a8f-8e35c8476e40</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:16:45 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:16:45.610Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொள்ளை,நகை கொள்ளை,delhi,Burglary,Burglary by breaking the lock,டெல்லி</media:keywords><media:content height="225" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/lvv4pax5/sah-l-is-a-vegetable-vendor-from-supaul-kamat-c-is-a-house-servant-from-supaul.avif" width="400"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ delhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/lvv4pax5/sah-l-is-a-vegetable-vendor-from-supaul-kamat-c-is-a-house-servant-from-supaul.avif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2>கொள்ளை சம்பவம் </h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/chinese-president-collapsed-after-suffering-a-stroke-upon-arriving-in-delhi-for-the-brics-summit-news-spreading-like-wildfire">டெல்லி</a> மால் ரோடு பகுதியில் உள்ள ரிவியரா அடுக்குமாடி குடியிருப்பில் உரிமையாளர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருந்த நிலையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.</p><h2>அதிர்ச்சி </h2><p>வீட்டின் உரிமையாளர்  தனது பயணத்தை முடித்துக்கொண்டு வீட்டிற்கு சென்றபோது வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததையும், பீரோக்கள் திறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ.4.3 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.</p><h2>காவல் விசாரணை</h2><p>இந்த கொள்ளை சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வடக்கு மாவட்ட குற்றப்பிரிவு குழுவினர் வீட்டை ஆய்வு செய்தனர். </p><p>வீட்டில் புதிதாக பணியில் சேர்ந்திருந்த 2 வீட்டு வேலைக்காரர்களும் காணாமல் போயிருந்ததுடன், அவர்களின் செல்போன்களும் துண்டிக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.</p><h2>கைது</h2><p>வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள், சுமார் 5 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொள்ளை தொடர்பாக வீட்டு வேலைக்காரர் உள்பட 3 பேரை<a href="https://www.maalaimalar.com/news/puducherry/trafic-cops-fined-puducherry-mla-for-violation"> காவல் துறை</a> கைது செய்துள்ளது.</p><p>கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் 2 பைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. அவர்கள் ஆட்டோ மூலம் ஐ.எஸ்.பி.டி. சென்று, அங்கிருந்து வேறு வாகனத்தில் நியூடெல்லி ரெயில் நிலையத்துக்கு சென்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>கண்காணிப்பு மூலம் பீகார் மாநிலம் சுபால் பகுதியைச் சேர்ந்த அனில் காமத் (22), ஜார்க்கண்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை டெல்லி காவல்துறை  கைது செய்துள்ளது.</p> <h2>நகைகள் மீட்பு </h2><p>இதனிடையே  சந்தேக நபரான அனில் காமத்தின் மாமனார் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது  வீட்டின் மற்றொரு அறையின் தரைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான இடம் இருப்பதை போலீசார் கண்டனர். அந்த இடத்தில் சுமார் 5 அடி ஆழம் தோண்டியபோது, பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொள்ளையடிக்கப்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sivakasi-near-home-robbery-police-inquiry-2">நகைகள் </a>மீட்கப்பட்டன.</p><h2>ஓட்டல் தொடங்க திட்டம்</h2><p>இந்த கொள்ளையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அனில் காமத், கொள்ளையடித்த பணத்தை பயன்படுத்தி நேபாளத்துக்கு தப்பிச் சென்று அங்கு ஓட்டல் அல்லது கஃபே தொடங்க திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><p>அனில் காமத் செப்டம்பர் 16-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரது மாமனார் தேவ் சந்திர சா (49) என்பவரும் கொள்ளை பொருட்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சிவசேனா, என்சிபி வரிசையில் திரிணாமுல்: கட்சி திருட்டு என பாஜகவை சாடிய ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/first-shiv-sena-ncp-now-tmc-rahul-gandhi-sees-ec-bjp-pattern-in-theft-of-parties</link><comments>https://www.maalaimalar.com/news/national/first-shiv-sena-ncp-now-tmc-rahul-gandhi-sees-ec-bjp-pattern-in-theft-of-parties#comments</comments><guid isPermaLink="false">6d4f0dde-6a09-41fe-bc94-67762d4b6c64</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:07:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:07:00.138Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,BJP,பாஜக,தேர்தல் ஆணையம்,Election commision,TMC,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/d9hapwyd/rahul.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/d9hapwyd/rahul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலில் சிவசேனா, பிறகு தேசியவாத காங்கிரஸ், இப்போது திரிணாமுல் காங்கிரஸ் என பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தைச் சாடியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.</strong></em></p><p>மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தின் முறையிடப்பட்டனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் (இரட்டைப் பூக்கள்) சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.</p><p>தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ராகுல் காந்தி</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>முதலில் சிவசேனா, பிறகு தேசியவாத காங்கிரஸ், இப்போது திரிணாமுல் காங்கிரஸ்.</p><p>ஒவ்வொரு முறையும் அதே பாணிதான். ஒரு கட்சியைப் பிளவுபடுத்த பா.ஜ.க.வும் தேர்தல் ஆணையமும் கைகோர்க்கின்றன. பின்னர், அக்கட்சியின் தேர்தல் சின்னம் பறிக்கப்படுகிறது.</p><p>ஒரு முழு கட்சியையே அபகரிக்க முடியும் என்றால், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குகளும் திருடப்படக்கூடும் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.</p><p>வாக்குத் திருட்டு, அரசுத் திருட்டு. இப்போது கட்சித் திருட்டு. இவை அனைத்தும் நமது ஜனநாயக சரிவின் அடையாளங்களாக மாறிவிட்டன.</p><p>மக்களின் தீர்ப்பை பாதுகாப்பதே தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு சார்ந்த கடமை. ஆனால் அதற்கு மாறாக, மக்களின் தீர்ப்பை தலைகீழாக மாற்றும் சக்திகளுக்கே அது துணை நிற்கிறது.</p><p>இந்தப் போராட்டம் மம்தா பானர்ஜியுடையது மட்டுமல்ல. சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை விரும்பும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு வாக்காளருக்குமான போராட்டம் இது என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மம்தா பானர்ஜி தரப்புக்கு புதிய கட்சி பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் அங்கீகாரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/football-vs-envelope-mamata-banerjee-party-rebels-get-new-name-symbol</link><comments>https://www.maalaimalar.com/news/national/football-vs-envelope-mamata-banerjee-party-rebels-get-new-name-symbol#comments</comments><guid isPermaLink="false">7fadf310-195c-4dd0-801d-b373d01a759a</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:46:13 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:46:13.074Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,Trinamool Congress Party,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/0i0pgvku/Mamata0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா பானர்ஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/0i0pgvku/Mamata0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் <a href="https://www.maalaimalar.com/news/national/ec-bars-rival-tmc-factions-from-using-party-name-symbol-in-west-bengal-bypolls">திரிணாமுல் காங்கிரஸ்</a> படுதோல்வியை சந்தித்தது. அதன்பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. சுமார் 60 எம்.எல்.ஏ.-க்கள் (மூன்றில் இரண்டு பங்கு) தனியாக செயல்பட முடிவு செய்தனர். இவர்கள் அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்பில் செயல்பட தொடங்கினர்.</p><p>அதேவேளையில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என மம்தா பானர்ஜி தரப்பு கூறி வந்தது. இதற்கிடையே, திரிணாமுல் கட்சி எம்.பி.க்கள் 20 பேர், வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தின் முறையிடப்பட்டனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் (இரட்டைப் பூக்கள்) சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.</p><h2>மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்</h2><p>இந்த நிலையில் இரண்டு தரப்பிலும் பரிந்துரை செய்த கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மம்தா பிரிவுக்கு மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அத்துடன் கால்பந்து வீரர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.</p><h2>ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்</h2><p>அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்புக்கு ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த தரப்புக்கு அஞ்சல் உறை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>மேற்கு வங்கம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட இந்த கட்சியின் பெயரில் இருதரப்பினரும் செயல்படுவார்கள்.</p><p>மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால், கட்சிக்கு உரிமை கொண்டாடும் தரப்பிற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாதிக்க எதுவும் தடையில்லை: 45 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மாற்றுத்திறனாளி தாய்</title><link>https://www.maalaimalar.com/news/national/at-45-speech-and-hearing-impaired-jammu-woman-clears-class-10-exam-with-82-percent</link><comments>https://www.maalaimalar.com/news/national/at-45-speech-and-hearing-impaired-jammu-woman-clears-class-10-exam-with-82-percent#comments</comments><guid isPermaLink="false">c17c3d74-db8e-4879-94e5-3ba190f51d67</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:53:41 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:53:41.228Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Class 10,பத்தாம் வகுப்பு,jammu women,renu hans,naman kaul,ஜம்மு பெண்மணி,ரேணு ஹான்ஸ்,நமன் கவுல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rl2lij02/naman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Renu, Naman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rl2lij02/naman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சாதனைக்கு வயதோ, உடலோ எதுவும் தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் ஜம்முவைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி பெண்.</strong></em></p><p>ஜம்முவைச் சேர்ந்த 45 வயதுடைய் பேசும் மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி பெண்மணி ஒருவர், தனது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 82 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.</p><p>ஜம்முவின் ரூப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணு ஹான்ஸ் (45). பேசும் மற்றும் கேட்கும் திறனற்றவர்.</p><p>கடந்த 2002-ம் ஆண்டு தனது 10-ம் வகுப்பு தேர்வை எழுதினார். எதிர்பாரா விதமாக கணிதத்தில் தோல்வி அடைந்தார். அதன்பின், திருமணம், குடும்பம், குழந்தைகள் என அவரது கல்விப் பயணம் முடங்கியது.</p><p>ஆனாலும், எப்படியாவது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் ஆழமாக இருந்தது.</p><h2>தாய்க்கு ஆசிரியரான மகன்</h2><p>ரேணுவின் கனவை நனவாக்க அவரது 12-ம் வகுப்பு படிக்கும் மகன் நமன் கவுல் முன்வந்தார். சைகை மொழியை நன்கறிந்த நமன், தனது தாய்க்கு தானே ஆசிரியராக மாறினார்.</p><p>மாலையில் பள்ளி முடிந்து வந்ததும், நமன் தனது தாய்க்கு பாடங்களை சைகை மொழி மூலம் பொறுமையுடன் கற்றுக் கொடுத்தார். </p><p>கேட்கும் திறனற்ற ஒருவருக்கு கடினமான அறிவியல் மற்றும் கணிதக் கோட்பாடுகளைப் புரிய வைப்பது கடும் சவாலாக இருந்தது.</p><h2>82 சதவீதத்துடன் தேர்ச்சி</h2><p>ஜம்மு காஷ்மீர் திறந்தநிலைப் பள்ளி மூலம் கடந்த ஏப்ரல் மாதம் ரேணு ஹான்ஸ் தேர்வு எழுதினார். தேர்வு மையத்துக்குச் சென்ற ரேணுவுக்கு கொஞ்சம் டென்ஷனாகவே இருந்திருக்கிறது.</p><p>தன்னைவிட மிகவும் இளைய மாணவர்களும், வயதானவர்களும் அங்கு இருந்ததைப் பார்த்து முதலில் தயங்கினார். அவரது மகன் கொடுத்த ஊக்கத்தினால் தேர்வு எழுதினார்.</p><p>கடந்த 10-ம் தேதி அன்று வெளியான தேர்வு முடிவுகளில் அவர் 500-க்கு 410 மதிப்பெண்கள் (82 சதவீதம்) பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்.</p><h2>கனவு நனவானது</h2><p>இதுதொடர்பாக ரேணு ஹான்ஸ் கூறுகையில், இன்று என் கனவு நனவாகி உள்ளது. என் மகனால்தான் இவை அனைத்தும் சாத்தியமானது என பெருமிதத்துடன் தெரிவித்தார்.</p><p>மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கேற்ப முறையான வழிகாட்டுதலும், தளராத நம்பிக்கையும் இருந்தால் மாற்றுத் திறனாளிகளாலும் எந்த சாதனையையும் படைக்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்த ரேணு ஹான்சுக்கு நாமும் ஒரு வாழ்த்து சொல்லலாமே.</p>]]></content:encoded></item><item><title>அழகு நிலையத்தில் போதைப்பொருள் விற்பனை - பேராசிரியை உள்பட 4 பேர் கைது
</title><link>https://www.maalaimalar.com/news/national/drug-sales-beauty-parlour-4-arrested-near-keralam</link><comments>https://www.maalaimalar.com/news/national/drug-sales-beauty-parlour-4-arrested-near-keralam#comments</comments><guid isPermaLink="false">b20d43c2-c29a-4584-a839-4304ba157deb</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:27:43 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:27:43.269Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>beauty parlour,போதைப்பொருள் பறிமுதல்,drug seized,அழகு நிலையம்,கேரளம்,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rxjtly8d/arrested1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rxjtly8d/arrested1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலத்தில் அழகு நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர். </p> <p>கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் செயல்பட்டு வந்த ஒரு அழகு நிலையத்தில் போதை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குறிப்பிட்ட அழகு நிலையத்தை நிலம்பூர் போலீசாரும், போதைத் தடுப்பு போலீசாரும் ரகசியமாக கண்காணித்தனர்.</p><p>இதில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவது உறுதியாகவே அதிரடியாக அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கியிருந்த எம்.டி.எம்.ஏ. போதைப் பொருளை போலீசார் கைப்பற்றினர். அதனை விற்றதாக அழகு நிலைய உரிமையாளர் சுப்பிரமணியன் (வயது 38), சுஹைல் பெரிங்கோடன் (31), பத்திரியலைச் சேர்ந்த டி.என். ரீனா மற்றும் கல்லெம்படத்தை சேர்ந்த விவேக் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.</p>  <p>தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சுப்ரமணியன் தான் சுஹைல், விவேக் மற்றும் ரீனா ஆகியோருக்கு தொடர்ந்து எம்.டி.எம்.ஏ.வை வழங்கியிருப்பது தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்ட சுஹைல் பெரிங்கோடன், கல்லூரி பேராசிரியர் என்பதும், இவர் மாணவர்களுக்கு போதைப் பொருளை விற்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது. அவர், கடந்த 3 ஆண்டுகளாக இதனை செயல்படுத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மருந்து கடைகளில் கண்காணிப்பு கேமரா- மத்திய அமைச்சகம் பரிந்துரை</title><link>https://www.maalaimalar.com/news/national/health-ministry-proposes-cctv-in-medical-shops-to-monitor-prescription-drug-sales</link><comments>https://www.maalaimalar.com/news/national/health-ministry-proposes-cctv-in-medical-shops-to-monitor-prescription-drug-sales#comments</comments><guid isPermaLink="false">44bab348-e49c-458f-909e-47f8c0d42c2e</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:29:53 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:29:53.370Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Union Ministry,மத்திய அமைச்சகம்,சிசிடிவி கேமரா,CCTV camera,மருந்து கடை,pharmacies</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jkvvzudv/CCTV.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CCTV Camera]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jkvvzudv/CCTV.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மருந்து விதிகள் 1945-ல் பல்வேறு திருத்தங்களை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த திருத்தங்களுடன் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.</p><p>இதில் முக்கியமாக சரியான மருந்துச்சீட்டுகள் அல்லது டாக்டரின் பரிந்துரைச்சீட்டு இன்றி அட்டவணை எச்., எச்.1 மற்றும் எக்ஸ் பட்டியலில் உள்ள மருந்துகளை பெறுவதையும், விற்பனை செய்வதையும் தடுப்பதை இந்த திருத்தம் நோக்கமாக கொண்டுள்ளது.</p><p>எனவே டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து விற்பதை கண்காணிக்க மருந்து கடைகளில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE" rel="nofollow">கண்காணிப்பு கேமரா</a> வைக்க சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது. </p><p>இந்த நடவடிக்கை பொது சுகாதாரத்துக்கான ஒழுங்குமுறை மேற்பார்வை மற்றும் பாதுகாப்புகளை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதி என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>6 மாத குழந்தையை கடித்த பிட்புல் நாய்: அரியானாவில் கொடூரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/pitbull-dog-bites-6-month-old-baby-walking-on-road</link><comments>https://www.maalaimalar.com/news/national/pitbull-dog-bites-6-month-old-baby-walking-on-road#comments</comments><guid isPermaLink="false">9699ebf0-031a-4334-a4ca-b03b1047de8e</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:05:09 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:05:09.345Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Pitbull,haryana,அரியானா,dog bite,நாய் கடி,பிட்புல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ib241ttf/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pitbull Attack in Haryana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ib241ttf/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரியானாவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணையும் அவருடன் இருந்த ஆறு மாத குழந்தையையும் பிட்புல் நாய் ஒன்று கடித்ததை அடுத்து, படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE">அரியானாவின்</a> சோனிபட் பகுதியில் ஆறு மாத குழந்தையுடன், அவரின் அத்தை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் இருந்த வீட்டு உரிமையாளரின் பிட்புல் நாய் ஒன்று அவிழ்த்து வெளியே விடப்பட்டிருந்தது. </p><p>இதையடுத்து குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை, திடீரென பார்த்து பிட்புல் நாய் ஆக்ரோஷமாக குரைக்க ஆரம்பித்தது.</p><p>இதனால் பதற்றம் அடைந்த அந்த பெண்மணி, அங்கிருந்து செல்ல முயன்றபோது, அந்த நாய் அவர்கள் மேலே தாவியது.</p><p>அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த பெண்ணை, பிட்புல் நாய் கை மற்றும் கால்களில் கடித்தது. இதையடுத்து அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், நாயை விரட்டிவிட்டு படுகாயமடைந்த பெண்ணையும், குழந்தையையும் ரோத்தக் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><h3><strong>சிறுவனின் காதை கடித்த பிட்புல் நாய்</strong></h3><p>இதேபோன்று டெல்லியின் வினய் என்கிளேவ் பகுதியில் ஆறு வயது சிறுவனின் வலது காதின் ஒரு பகுதியை பிட்புல் நாய் கடித்து குதறியது.</p><p>இதையடுத்து ஆக்ரோஷமான நாயை கட்டி வைக்காமல் அலட்சியமாக செயல்பட்ட நாய் உரிமையாளர் மீது, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Pitbull pet attacks 6 month old kid in Sonipat Haryana.<br><br>Check how relaxed is the Pitbull owner, sorry parent, while the dog was brutally attacking the kid.<br><br>Kid is severely injured, in hospital.<br><br>But Dog Lovers will still defend it. Justify it by saying dog must be hungry,… <a href="https://t.co/K2LSXf8tUK">pic.twitter.com/K2LSXf8tUK</a></p>&mdash; Ankur Singh (@AnkurSingh) <a href="https://x.com/AnkurSingh/status/2100638076108521967?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இதைத்தொடர்ந்து நாய் உரிமையாளர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.</p><h3><strong>சமூக ஆர்வலர்கள் கோரிக்கை</strong></h3><p>இந்த நிலையில் இந்தியாவில் காசியாபாத், சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்ரோஷமான நாய் இனத்தை சேர்ந்த பிட்புல் மற்றும் ராட்வீலர் உள்ளிட்ட சில நாய்கள், வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பஞ்சாப்பில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/police-officer-on-duty-shot-dead-in-punjab</link><comments>https://www.maalaimalar.com/news/national/police-officer-on-duty-shot-dead-in-punjab#comments</comments><guid isPermaLink="false">3fd40481-5ae6-4e15-94ad-3782f78b8aba</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:04:51 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:04:51.923Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுட்டுக்கொலை,gun shot,பஞ்சாப்,Punjab,போலீஸ் அதிகாரி,Police officer</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y9jwgver/punjab.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sub inspector ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y9jwgver/punjab.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பஞ்சாப்பில் பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஹர்ஜித் சிங் (வயது 50). இவர் இன்று அதிகாலை அம்ரித்சரின் கேட் ஹகிமா பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தார்.</p><h2>சுட்டுக்கொலை</h2><p>அப்போது, துப்பாக்கியுடன் பைக்கில் வந்த இருவர் போலீஸ் அதிகாரி ஹர்ஜித் சிங் மீது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81" rel="nofollow">துப்பாக்கி சூடு</a> நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.</p><p>இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஹர்ஜித் சிங்கை மீட்ட சக போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். </p><p>அங்கு ஹர்ஜித் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றவர்களை தேடி வருகின்றனர். மேலும், இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>அதேவேளை, சுட்டுக்கொல்லப்பட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங்கின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய விமானப்படைக்கு புதிய LCA Mk-1A ரக போர் விமானம் - ஆண்டு இறுதிக்குள் வழங்க ஹிந்துஸ்தான் முடிவு </title><link>https://www.maalaimalar.com/news/national/india-air-force-new-lca-mk-1a-fighter-by-year-end</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-air-force-new-lca-mk-1a-fighter-by-year-end#comments</comments><guid isPermaLink="false">caaf3f92-1f75-4e27-aadd-841a841a89d1</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:57:48 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:57:48.370Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போர் விமானம்,Aircraft,Indian Air Force,HAL,இந்திய விமான படை,ஹிந்துஸ்தான் நிறுவனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/7u0h3gbt/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ LCA Mk-1A Delivery]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/7u0h3gbt/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய விமானப்படைக்கு இலகுரக LCA Mk-1A ரக போர் விமானத்தை வழங்கும் என அதன் இயக்குநர் கே. ரவி தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">இந்திய விமானப்படை</a> ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் 83 போர் விமானங்களை வாங்குவதற்கு முதல் கட்டமாக ஒப்பந்தம் செய்தது. </p><h3><strong>ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பில் ஒப்பந்தம்</strong></h3><p>அதைத்தொடர்ந்து செப்டம்பர் 2025-இல் 97 போர் விமானங்களை வாங்குவதற்கு இரண்டாவது கட்டமாக ஒப்பந்தம் செய்தது. மொத்தம் 180 எம்.கே-1ஏ ரக போர் விமானங்கள் ரூபாய் 1.1 லட்சம் கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டன.</p><p>இதையடுத்து 2021-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட விமானங்களை, 2024-இல் ஹிந்துஸ்தான் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.</p><p>ஆனால் அமெரிக்க நிறுவனமான GE ஏரோஸ்பேஸ், F404-IN20 என்ஜின்களை உரிய நேரத்தில் வழங்க தவறியதால், போர் விமானங்கள் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டது.</p><p>இந்த நிலையில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இயக்குநர் கே.ரவி, போர் விமானத்தில் சரி செய்யவேண்டிய ரேடார் உள்ளிட்ட சில சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் இறுதிகட்ட ஆயுத ஒருங்கிணைப்பு சோதனை நிலுவையில் உள்ளதாகவும், சுமார் ஒரு மாதத்திற்குள் இந்த சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு, விமானம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.</p><h3><strong>ஹிந்துஸ்தான் தலைமை நிர்வாகி</strong></h3><p>இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “GE ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து 10 என்ஜின்கள் பெறப்பட்டுள்ளன; மேலும் 27 LCA Mk-1A விமானக் கட்டமைப்புகள் தயாராக உள்ளன.</p><p>எங்களால் நிச்சயமாக 10 விமானங்களை வழங்க முடியும். ஆண்டுக்கு 24 Mk-1A ரக விமானங்களை உற்பத்தி செய்யும் எங்கள் திறனைக் கருத்தில் கொண்டு, அந்தக் காலக்கெடுவுக்குள் எங்களால் அவற்றை வழங்க முடியும்.</p><p>என்ஜின்கள் கிடைப்பதை பொருட்படுத்தாமல் நாங்கள் உற்பத்தியை நிறுத்தப் போவதில்லை. என்ஜின்கள் வந்தவுடன் விமானங்களைத் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யும் வகையில், நாங்கள் விமானக் கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறோம்.</p><p>97 Mk-1A ரக விமானங்களில், உத்தம் AESA (செயல்திறன் மிக்க மின்னணு முறையில் ஸ்கேன் செய்யப்படும் வரிசை) ரேடார் மற்றும் ஸ்வயம் ரக்ஷா கவச் (மின்னணுப் போர் அமைப்பு) உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு அமைப்புகள் இருக்கும்.</p><p>இரண்டாவது ஒப்பந்தத்தை நாங்கள் செயல்படுத்தும்போது, முதல் 83 விமானங்களில் உள்ள சுமார் 40 இறக்குமதி செய்யப்பட்ட அமைப்புகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்.</p><p>விமானத்தின் உடற்பகுதிகள் இணைக்கப்பட்டு, விமானத்தின் கட்டமைப்பு தயாராக உள்ளது. 2027 மார்ச் மாதத்திற்குள் முதல் தரை சோதனையை நடத்த இலக்கு வைத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: சிறார்கள் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/16-year-old-girl-raped-and-murdered-in-delhi-minors-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/16-year-old-girl-raped-and-murdered-in-delhi-minors-arrested#comments</comments><guid isPermaLink="false">20bc33b5-9be7-4de3-a696-d968ef7ce761</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:06:57 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:06:57.437Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,சிறுமி கொலை,gang rape,delhi,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ljd3357p/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi minor girl rape-murder case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ljd3357p/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவரை மூன்று சிறார்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், சிறார்கள் உட்பட 19 வயது இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லி</a> ஸ்வரூப் நகரில் உள்ள குஷக் சாலைக்கு அருகில் உள்ள ஒரு வயல் பகுதியில் சிறுமி ஒருவரின் சடலம் கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. </p><p>இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தின் வலது கை காணாமல் போயிருந்ததையும், முகம் மற்றும் வயிறு பகுதிகள் சிதைந்து இருந்ததையும் கண்டறிந்தனர்.</p><p>இதுகுறுத்து காவல்துறையினர் அதிகாரிகள் கூறுகையில், “சிறுமி இறந்து இரண்டு நாட்களே ஆகியிருந்தபோதிலும், அந்த உடல் மிக வேகமாக சிதைந்து கொண்டிருந்தது.</p><p>இது பெரும்பாலும் இயற்கை சீற்றங்களுக்கு உள்ளானதால் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. சிறுமியின் முகத்தை அடையாளம் காண முடியவில்லை.</p><p>மருத்துவ அறிக்கை பாலியல் வன்புணர்வை உறுதி செய்ததுடன், அவரது உடலில் எட்டு இடங்களில் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>மேலும் உயிரிழந்த சிறுமி பலமுறை கத்தியால் குத்தப்பட்டிருந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.</p><p>இதையடுத்து கூடுதல் துணை காவல் ஆணையர் லோகேஸ்வரன் மற்றும் உதவி காவல் ஆணையர் ரவீந்தர் ஆகியோர் தலைமையிலான குழுவினர், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.</p><p>அப்போது சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டபோது, லாரி ஓட்டுநர் ஒருவரை விசாரணை செய்தனர். இதையடுத்து அந்த ஓட்டுநர் தனது 17 வயது தம்பி அந்த வாகனத்தை அடிக்கடி பயன்படுத்தி வருவதாக கூறினார்.</p><p>இதையடுத்து லாரியின் சிசிடிவி காட்சிகளை காவல் ஆணையர் ஷோபித் சக்ஸேனா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அந்த லாரிக்குள் நான்கு சிறுவர்கள் இருந்தது தெரியவந்தது.</p><p>இதைத்தொடர்ந்து 19 வயதான சிவம் கணேஷ் மற்றும் 18 வயதுக்கு கீழ் இருந்த மூன்று சிறார்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, கொலைக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தெலுங்கானாவில் 3 ஏ.டி.எம் எந்திரங்கள் எரிந்து சேதம் </title><link>https://www.maalaimalar.com/news/national/three-atm-machines-damaged-by-fire-in-telangana</link><comments>https://www.maalaimalar.com/news/national/three-atm-machines-damaged-by-fire-in-telangana#comments</comments><guid isPermaLink="false">8e5cfa35-021c-44c3-ad3a-1b0bc8bb2667</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:22:34 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:22:34.525Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,ஏடிஎம்,ATM,ATM Machines,தீவிபத்து,ஏடிஎம் எந்திரங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/h8nflo63/ATM.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஏ.டி.எம் எந்திரங்கள் எரிந்து சேதம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏ.டி.எம் எந்திரங்கள் எரிந்து சேதம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/h8nflo63/ATM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>போலீசார் தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து சமூக விரோதிகள் யாராவது ஏ.டி.எம் எந்திரங்களுக்கு தீ வைத்தார்களா? அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.</strong></em></p><p>தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் ஜோகி பேட்டை காய்கறி மார்க்கெட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்று இரவு ஏ.டி.எம் எந்திரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.</p><p>தீ மளமளவென அருகில் இருந்த ஏ.டி.எம் எந்திரத்திற்கும் பரவியது. ஏ.டி.எம் எந்திரம் தீப்பிடித்து எரிந்ததால் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த பாதுகாப்பு அலாரம் அடித்தது. சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர். ஏ.டி.எம் எந்திரங்கள் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.</p><p>தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் 2 ஏ.டி.எம் எந்திரங்களும் முழுமையாக எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து வங்கி அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஏடிஎம் மையத்தில் எவ்வளவு பணம் எரிந்து போனது என சோதனை செய்து வருகின்றனர். </p><p>போலீசார் தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து சமூக விரோதிகள் யாராவது ஏ.டி.எம் எந்திரங்களுக்கு தீ வைத்தார்களா? அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>