<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 10 Aug 2026 10:38:41 +0000</lastBuildDate><item><title>ஜெய்ப்பூரில் திடீரென உள்வாங்கும் சாலை: வீடுகளில் விரிசல்- அச்சத்தில் மக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/jaipur-road-collapse-leaves-residents-in-fear</link><comments>https://www.maalaimalar.com/news/national/jaipur-road-collapse-leaves-residents-in-fear#comments</comments><guid isPermaLink="false">dc7c500e-db7e-4776-8b5d-e1c5df4c8d79</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:22:09 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:22:09.926Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jaipur,Shikariyon Ki Mori,Mohammed Zakariya,ஜெய்பூர்,ஷிகாரியோன் கி மோரி,முகமது ஜக்கரியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mandgf9v/shikariyon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shikariyon Ki Mori ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mandgf9v/shikariyon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜெய்பூர் நகரின் பழைய கோட்டைப் பகுதிக்கு உட்பட்ட போடா நிக்காஸ் சாலையில் அமைந்துள்ள ஷிகாரியோன் கி மோரி பகுதியில், திடீரென சாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாலும், வீடுகளில் விரிசல்கள் விழுந்து வருவதாலும் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.</p><h2>சுவர் இடி<strong>ந்து விழுந்தது</strong></h2><p>அப்பகுதியில் ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்த வீடுகளுக்கு ஜெய்பூர் மாநகராட்சி காலி செய்யக் கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், காலி செய்யப்பட்ட வீடு ஒன்றின் சுவர் நேற்று இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, வீடு முன்கூட்டியே காலி செய்யப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.</p><h2>அதிகாரிகளி<strong>ன் அலட்சிய</strong>ம்</h2><p>சுவர் இடிந்து விழுந்த பிறகும் ஜெய்பூர் மாநகராட்சியின் எந்தவொரு உயர் அதிகாரியோ அல்லது மீட்புக் குழுவினரோ சம்பவ இடத்தைப் பார்வையிட வரவில்லை என்றும், மாநகராட்சியால் நியமிக்கப்பட்ட ஒரு பாதுகாவலர் மட்டுமே அங்கு இருந்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><h2>1000 மணல் <strong>மூட்டைகள் வீ</strong>ண்</h2><p>சுமார் 10 நாட்களுக்கு முன்பு சாலையில் சிறிய பள்ளம் ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளைப் போட்டு அதை அடைக்க முயன்றனர். ஆனால், சமீபத்தில் பெய்த பலத்த மழையால் மணல் அடித்துச் செல்லப்பட்டு பள்ளம் மேலும் பெரிதானது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டும், மழைநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு அருகில் உள்ள மகாதேவ் கோவில் கிணற்றுக்குள் மண் குவிந்து வருகிறது.</p><h2>காலி செ<strong>ய்ய நோட்டீஸ்</strong></h2><p>சாலை தொடர்ந்து உள்வாங்கி வருவதால், இதுவரை 10 முதல் 15 வீடுகளில் பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை 4-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு உடனடியாகக் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் மேலும் பல குடும்பங்கள் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றன.</p><h2>முன்னா<strong>ள் கவுன்சிலரின்</strong> ஆதங்கம்</h2><p>முன்னாள் கவுன்சிலர் முகமது ஜக்கரியா மற்றும் உள்ளூர்வாசிகள் கூறுகையில், "இங்கு எந்தவித சட்டவிரோதக் கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படவில்லை. வடிகால் வசதி சரிவர இல்லாததாலும், மழைநீர் சரியாக வெளியேறாததாலும் தான் சாலை உள்வாங்கி மண் அரிப்பு ஏற்படுகிறது. வெறும் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, பிரச்சனைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும். வீடுகளைக் காலி செய்யச் சொன்னால் நாங்கள் எங்கே செல்வது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p>தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள மேலும் பல வீடுகள் பாழாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அமித் ஷா பதில் அளிக்கும்போது அச்சப்படவோ, அவையில் இருந்து வெளியேறவோ வேண்டாம்: எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரஜிஜு வேண்டுகோள்</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-kiren-rijiju-amit-shah-gives-his-response-congress-party-and-the-opposition-not-to-be-afraid-or-run-away</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-kiren-rijiju-amit-shah-gives-his-response-congress-party-and-the-opposition-not-to-be-afraid-or-run-away#comments</comments><guid isPermaLink="false">fe6dfb46-368c-4724-99a4-12f5ae6317b1</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:18:44 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:18:44.545Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,Amit Shah,அமித் ஷா,Kiren Rijiju,கிரண் ரிஜிஜு,parliament</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/6wlndx8l/Amitshah1008026.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா- கிரண் ரிஜிஜு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/6wlndx8l/Amitshah1008026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் முறைகேடு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/national/students-protest-victory-dharmendra-pradhan-resigns">தர்மேந்திர பிரதான்</a> தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்தனர்.</p><p>இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 20-ந்தேதி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் பேரணி மேற்கொண்டனர். அப்போது அவர்கள் காவல்துறையின் தடுப்புகளை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்றதால் மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார்- மாணவர்களுக்கு இடையிலான மோதல் காரணமாக தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் மற்றும் போலீசார் காயம் அடைந்தனர்.</p><p>மாணவர்களுக்கு எதிராக போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக இரு அவைகளிலும் குரல் எழுப்பினர்.</p><p>இந்த நிலையில்தான் கிரண் ரிஜிஜி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.</p><h2>இது தொடர்பாக கிரண் ரிஜிஜு கூறியதாவது:-</h2><p>காங்கிரஸ் கட்சியினருக்கும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினருக்கும் நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன். மத்திய உள்துறை அமைச்சர் தனது பதிலை நாடாளுமன்றத்தில் வழங்கும்போது, தயவுசெய்து அச்சப்பட வேண்டாம். அவையிலிருந்து வெளியேறவோ வேண்டாம் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.</p><h2>கருத்து வேறுபாடுகளை நேருக்கு நேர் எதிர்கொள்வது</h2><p>ஜனநாயகத்தின் அடிப்படை வலிமை என்பது கருத்து வேறுபாடுகளை நேருக்கு நேர் எதிர்கொள்வதில்தான் உள்ளது. ஆளும் தரப்பு பேசும்போது எதிர்க்கட்சியும் அதைக் கேட்டு, அதில் உள்ள உண்மைகள் என்ன, தவறுகள் என்ன, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் என்ன என்பதை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். பதில் திருப்திகரமாக இல்லாவிட்டால், அதற்குப் பின்னர் வலுவான கேள்விகளையும் ஆதாரங்களையும் முன்வைத்து அரசை பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும்.</p><p>நாடாளுமன்றம் என்பது வெறும் கோஷங்களை எழுப்புவதற்கான இடம் அல்ல. மக்களின் பிரச்சினைகளை விவாதித்து, அரசின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய மிக முக்கியமான ஜனநாயக அமைப்பு. எனவே, உள்துறை அமைச்சர் அளிக்கும் பதிலை முழுமையாகக் கேட்பது எதிர்க்கட்சியின் ஜனநாயகப் பொறுப்பாகும்.</p><h2>விவாதத்தைத் தவிர்ப்பது மக்களுக்கு சரியான செய்தியை அளிக்காது</h2><p>கருத்து வேறுபாடு இருந்தால் அதைக் குரல் கொடுத்து வெளிப்படுத்துங்கள். தவறான தகவல் இருந்தால் உண்மையான தகவல்களுடன் மறுத்துப் பேசுங்கள். அரசின் பதில் போதுமானதாக இல்லை என்றால், அதற்கான விளக்கத்தை கேளுங்கள். ஆனால் விவாதத்தைத் தவிர்ப்பது மக்களுக்கு சரியான செய்தியை அளிக்காது.</p><p>எனவே, காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க்கட்சிகளும் தைரியமாக இருந்து, உள்துறை அமைச்சரின் பதிலை நேரில் எதிர்கொண்டு, ஜனநாயக ரீதியாக தங்களது கருத்துகளையும் கேள்விகளையும் வலுவாக முன்வைக்க வேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள்.</p>]]></content:encoded></item><item><title>போலந்து அகதிகளின் நினைவாக மகராஷ்டிராவில் அருங்காட்சியகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/museum-for-polish-refugees-in-maharashtra-meeting-with-chief-minister</link><comments>https://www.maalaimalar.com/news/national/museum-for-polish-refugees-in-maharashtra-meeting-with-chief-minister#comments</comments><guid isPermaLink="false">23d7f88c-0730-4d71-8f62-265526939eee</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:08:41 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:08:41.839Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போலந்து,Poland,Kolhapur,கோலாப்பூர்,valivade museum,வாலிவாடே அருங்காட்சியகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/4muv5izf/Untitled-design-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோலாப்பூர் வாலிவாடேவில் போலந்து அகதிகள் புகலிடத்தை நினைவுகூரும் மனிதநேய அருங்காட்சியகம் அமைப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ India Poland வரலாற்று நட்பு அருங்காட்சியகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/4muv5izf/Untitled-design-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரண்டாம் உலக போரின்போது போலந்து நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள், புகலிடம் தேடி மகராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரிருக்கு வந்தனர். </p><p>அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட புகலிடத்தை நினைவுகூரும் வகையில், கோலாப்பூருக்கு அருகில் உள்ள வாலிவாடேவில் ஒரு அருங்காட்சியகம் அமைய உள்ளது.</p><p>இது இந்தியாவுக்கும் போலந்துக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பஞ்சகங்கா ஆற்றின் கரையில் அமைந்து, சஹ்யாத்ரி மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ள மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரம், போலந்து நாட்டுடன் மிகவும் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. </p><h3><strong>இரண்டாம் உலகப் போர்</strong></h3><p>ஜெர்மானியப் படையெடுப்பு 1939 செப்டம்பர் 17 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வுகளின் போது, 1939 முதல் 1945 வரை  இரண்டாம் உலக போர் நீடித்தது.</p><p>அதன் விளைவாக ஆயிரக்கணக்கான போலந்து மக்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர். அப்போது முதன்முதலில் குஜராத்தில் சுமார் ஆயிரம் போலந்து நாட்டை சேர்ந்த அனாதை குழந்தைகளுக்கான குடியிறுப்பு ஒன்று நிறுவப்பட்டது.</p><p>பின்னர் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 5,000 மக்களுக்காக, கோலாப்பூருக்கு அருகிலுள்ள வாலிவாடேவில் போலந்து குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டது.</p><h3><strong>மகாராஷ்டிராவில் அருங்காட்சியகம்</strong></h3><p>இந்த நிலையில் போலந்து நாட்டை சேர்ந்த அகதிகளுக்கு வழங்கப்பட்ட புகலிடத்தை நினைவுகூரும் வகையில், வாலிவாடே மனிதநேய அருங்காட்சியகம் கோலாப்பூரில் அமையவிருக்கிறது.</p><p>கடந்த வாரம், போலந்து நாடாளுமன்ற உறுப்பினரும் மற்ற பிரதிநிதிகளும், கோலாப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த யுவராஜ் சம்பாஜி மகாராஜாவுடன் இணைந்து மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்தனர்.</p><h3><strong>கோலாப்பூர் மகாராஜா யுவராஜ் சம்பாஜி</strong></h3><p>இதையடுத்து அரச குடும்பத்தை சேர்ந்த சம்பாஜி மகாராஜா கூறுகையில், “இந்த தனித்துவமான மனிதாபிமான பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் ஆதரவளித்து வரும் மகாராஷ்டிர அரசுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.</p><p>போலந்து பிரதமரும் இந்த பகிரப்பட்ட வரலாற்றை மிகவும் உயர்வாக மதிப்பதோடு, தங்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பயணத்தில் இந்தியாவை ஒரு முக்கிய உத்திசார் நட்பு நாடாகவும் கருதுகின்றனர்.</p><p>மேலும் இந்த அருங்காட்சியகம் அமைதி, கருணை மற்றும் சர்வதேச நட்புறவை ஊக்குவிப்பதோடு, இந்த பகிரப்பட்ட பாரம்பரியத்தை வருங்கால சந்ததியினருக்காக பாதுகாக்கவும் முயல்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஹர் கர் திரங்கா&apos; இயக்கம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/har-ghar-tiranga-campaign-pm-narendra-modi-appeal-to-nation</link><comments>https://www.maalaimalar.com/news/national/har-ghar-tiranga-campaign-pm-narendra-modi-appeal-to-nation#comments</comments><guid isPermaLink="false">f7eda6c2-2751-46e2-ae6f-d991b77cc56c</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:10:22 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:10:22.956Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,narendra modi,நரேந்திர மோடி,Har Ghar Tiranga,ஹர் கர் திரங்கா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/9dbb7dp8/har-tiranga.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Har Ghar Tiranga ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/9dbb7dp8/har-tiranga.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெறும் ‘ஹர் கர் திரங்கா’ (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி) இயக்கத்தில் பொதுமக்கள் அனைவரும் உற்சாகத்துடன் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>பிரதமர் மோடி <strong>பதிவு</strong> </h2><p>இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "நம் நாட்டின் மூவர்ணக் கொடி நமது பெருமையின் அடையாளம். தேசத்திற்காக எப்போதும் நமது சிறந்த பங்களிப்பை வழங்க அது நமக்கு ஊக்கமளிக்கிறது. அனைத்து குடிமக்களும் #HarGharTiranga இயக்கத்தில் பெருமளவில் பங்கேற்று, 'வளர்ச்சியடைந்த பாரதம்' (Viksit Bharat) படைப்பதற்கான கூட்டு திட்டத்தை புதுப்பிக்க வேண்டும்."</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Our Tricolour is our pride and a constant source of inspiration to always give our best for the nation.<br><br>Let us participate enthusiastically in the <a href="https://x.com/hashtag/HarGharTiranga?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#HarGharTiranga</a> movement and renew our collective resolve to contribute towards building a Viksit Bharat. Glad that this year’s… <a href="https://t.co/XH8Z1JI6my">https://t.co/XH8Z1JI6my</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2086418385236324775?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>வந்தே மாதர<strong>ம் பாடலின் 150-வது</strong> ஆண்டு சிறப்பு</h2><p>தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ உருவாக்கப்பட்டதன் 150-வது ஆண்டை நாடு கொண்டாடும் இந்த வேளையில், இந்த ஆண்டுக்கான 'ஹர் கர் திரங்கா' பிரசாரம் 'வந்தே மாதரம்' பாடலுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.</p><h2>பிரசாரத்தின் முக்<strong>கிய அ</strong>ம்சங்கள்</h2><p>நேற்று முதல் 17 வரை நாடு முழுவதும் 'திரங்கா யாத்திரை', பேரணிகள், இசைக்கச்சேரிகள் மற்றும் வந்தே மாதரம் கூட்டுப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பொதுமக்கள் தேசியக் கொடியுடன் தங்களது சுயபடம் எடுத்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் பாலியல் வன்கொடுமையை விரும்புகிறார்கள்.. டெல்லியில் போராடிய மாணவிகள் குறித்த கருத்தால் இந்துத்துவா சித்தாந்தவாதி கைது </title><link>https://www.maalaimalar.com/news/national/hindutva-commentator-arrested-dg-mohandas-held-by-kerala-cyber-crime-for-inflammatory-remarks-on-neet-protest-at-jantar-mantar</link><comments>https://www.maalaimalar.com/news/national/hindutva-commentator-arrested-dg-mohandas-held-by-kerala-cyber-crime-for-inflammatory-remarks-on-neet-protest-at-jantar-mantar#comments</comments><guid isPermaLink="false">0e04ed40-a8ce-4dfd-8b9c-ba96525d6357</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:41:07 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:41:07.976Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வலதுசாரி,CJP Protest,சிஜேபி போராட்டம்,அரசியல் விமர்சகர்,Political commentator,right-winger</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/7k34r9rq/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டி.ஜி.மோகன்தாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.ஜி.மோகன்தாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/7k34r9rq/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவுக்கு  எதிராகப் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் </a>குறித்து அவதூறாகவும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய இந்துத்துவா சித்தாந்தவாதியும் வலதுசாரி அரசியல் விமர்சகருமான  டி.ஜி.மோகன்தாஸ் கேரளா சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  </p><p> பத்ரிகா  என்ற தனது யூடியூப் சேனலில் ஜூலை 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அவர் வெளியிட்ட வீடியோக்களில், ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து மோகன்தாஸ் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டது.  </p><h2>வீடியோ</h2><p>அந்த வீடியோவில், "நான் மட்டும் பொறுப்பில் இருந்திருந்தால், ஜந்தர் மந்தரைச் சுற்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, போராட்டக்காரர்களைக் கலைந்து போக உத்தரவிட்டிருப்பேன். அவர்கள் கேட்காவிட்டால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டு இருப்பேன். சிலர் உயிரிழந்தாலும் சூழல் சில மணிநேரங்களில் அமைதியாகிவிடும்" என்று அவர் பேசியிருந்தார்.</p><p>மேலும், டெல்லியில் மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டம் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு வழிவகுத்திருக்கும் என்றும், ஆனால் "அதுகுறித்து எந்த புகாரும் வந்திருக்காது, ஏனெனில் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் பாலியல் வன்கொடுமையை விரும்புகிறார்கள், அதுமட்டுமின்றி, சில பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை ரசிக்கவும் செய்கிறார்கள்" என வீடியோவில் கொச்சையாக பேசியிருந்தார்.</p><p>இந்த வீடியோக்கள் தொடர்பாக இந்திய மாணவர் சங்கமான எஸ்எப்ஐ மற்றும் அகில இந்திய மாணவர் பெருமன்றம் ஏஐஎஸ்எப் ஆகிய மாணவர் அமைப்புகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.</p> <h2>கைது</h2><p>கொச்சி, மட்டான்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்று மாலையில் கஸ்டடியில் எடுக்கப்பட்ட மோகன்தாஸ், நள்ளிரவில் திருவனந்தபுரம் சைபர் காவல நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டார்.</p><p>வன்முறையைத் தூண்டுதல், பொய்யான தகவல்களைப் பரப்புதல் உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>சமூக வலைதளங்களில் இருந்து அந்தச் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.</p><p>மோகன்தாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கத் திருவனந்தபுரம் சைபர் காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விபி ஜி ராம் ஜி திட்டம்.. அமலான முதல் மாதத்திலேயே மொத்த ஊரக வேலை நாட்கள் பாதியாக சரிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/rural-jobs-fall-workdays-under-new-vpg-ramji-scheme-drop-nearly-50-in-first-month</link><comments>https://www.maalaimalar.com/news/national/rural-jobs-fall-workdays-under-new-vpg-ramji-scheme-drop-nearly-50-in-first-month#comments</comments><guid isPermaLink="false">3ece3f3f-ff97-47cf-9006-39616be5caa4</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:03:59 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:03:59.159Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,central government,MGNREGA Scheme,விபி ஜி ராம் ஜி,VB G Ram G,ஊரக வேலை உறுதித் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/76h003vy/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விபிஜி ராம் ஜி திட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ விபிஜி ராம் ஜி திட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/76h003vy/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNERA) பதிலாக மத்திய அரசு,<a href="https://www.maalaimalar.com/news/national/mgnrega-renamed-as-vpg-ramji-scheme-sparks-bjp-ruled-states-protest-over-higher-state-funding-burden"> விபி ஜி ராம் ஜி</a> திட்டத்தை கொண்டு வந்தது. </p><h2>விபி ஜி ராம் ஜி </h2><p>மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியும், திட்டத்திற்காக மத்திய - மாநில நிதி பங்கீட்டில் மாற்றம் செய்தும்,வேலை நாட்களை 100 இல் இருந்து 125 நாட்களாக உயர்த்தியும் கொண்டுவரப்பட்ட இந்த விபி ஜி ராம் ஜி திட்டம் கடந்த ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது. </p><p>இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ. 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>மகாத்மா காந்தியின் பெயர் நீக்கத்திற்கும் திட்டத்தின் பிற அம்சங்களுக்கும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் முந்தைய திட்டத்தை விட விபி ஜி ராம் ஜி திட்டம் ஊரக வேலைவாய்ப்பு வழங்குவதில் தொய்வை கண்டுள்ளதாக திட்டம் அமலான கடந்த ஜூலை மாதத்திற்கான தரவுகள் தெரிவிக்கின்றன. </p> <h2>சரிவு</h2><p>MGNREGA திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் புதிய சட்டத்தின் கீழ் தடையின்றித் தொடரும் என்றும் மத்திய அரசு உறுதியளித்தபோதும் புதிய திட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாத முடிவில், ஊரக வேலைநாட்கள் பாதியாக சரிந்துள்ளது.</p><p>கடந்த ஆண்டு அமலில் இருந்த MGNREGA இன் கீழ் இதே ஜூலை மாதம் 100 நாள் வேலைத் திட்டத்தில் 15.33 வேலை நாட்களுக்கான பணி மேற்கொள்ளப்பட்டது.</p><p>ஆனால் அதற்கு மாற்றாக இந்த ஆண்டு அமலான விபி ஜி ராம் ஜி-யின் கீழ் மொத்த வேலை நாட்கள் 7.67 கோடியாக சரிந்துள்ளது. ஜூலை மாதத்தில் 68.94 லட்சம் குடும்பங்கள் மட்டுமே வேலை பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டை விட 49.94 சதவீதம் குறைவாகும்.</p>  <h2>மறுப்பு</h2><p>ஆனால் திட்ட மாற்றத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மறுத்துள்ளது. ஜூலை 22 வரை வேலை கோரிய தொழிலாளர்களில் 99.5% பேருக்கு வேலை வழங்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. </p><p>ஆனால் ஜூலை 22 க்கு பின் மாத இறுதியில் வெளியான அதிகாரப்பூர்வ தரவுகள், ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மந்தமடைந்ததை சுட்டிக்காட்டுகின்றன.</p> <h2>மந்தம்</h2><p>அதாவது, திட்டம் தொடங்கப்பட்ட முதல் மாதத்திலேயே, கடந்த ஆண்டை விட சரிபாதி அளவுக்கு வேலை நாட்களின் அளவு சரிந்துள்ளது.</p><p>இந்த வீழ்ச்சி புதிய திட்டத்திற்கு மாறியதால் ஏற்பட்ட தற்காலிகத் தேக்கமா அல்லது கிராமப்புற வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள பொதுவான மந்தநிலையா என்பது வரும் மாதங்களின் தரவுகள் மூலமே தெரியவரும்.</p>]]></content:encoded></item><item><title>விடுதி மாடியில் மாணவியின் கழுத்தை கம்பியால் இறுக்கி பாலியல் வன்கொடுமை : பாதுகாப்பு காவலர் அதிரடி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/sexual-assault-of-student-on-ahmedabad-hostel-terrace-security-guard-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/sexual-assault-of-student-on-ahmedabad-hostel-terrace-security-guard-arrested#comments</comments><guid isPermaLink="false">af0e6024-b0ab-4225-9735-9da44f5b6674</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:25:39 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:25:39.033Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime,பாலியல் வன்கொடுமை,ahmedabad,rape case,women safety,Gujarat:,அகமதாபாத்,CCTVEvidence,PGHostelSafety,PGSecurityGuardArrested</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/8c5384fs/Ahmedabad-Rape-Case" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ahmedabad Rape Case Rape Case ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/8c5384fs/Ahmedabad-Rape-Case?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத் </a>மாநிலம் <a href="https://www.maalaimalar.com/topic/ahmedabad">அகமதாபாத்</a>தில்உள்ள தங்கும் விடுதி ஒன்றின் மொட்டை மாடியில், கல்லூரி மாணவி ஒருவரைப் பாதுகாப்பு காவலர் கம்பியால் கழுத்தை நெரித்து கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>குற்றவாளியான பாதுகாப்பு காவலரை 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்துள்ளனர்.</p><h2><strong>பின்னணி:</strong></h2><p>குஜராத் பல்கலைக்கழகத்தில் இன்டீரியர் டிசைனிங் பயின்று வரும் 23 வயது மாணவி ஒருவர், அகமதாபாத் ஆனந்த்நகர் பகுதியில் உள்ள பேயிங் கெஸ்ட் தங்கும் விடுதியில் தங்கியிருந்த போது, கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் பெரும் பாதிப்புக்குள்ளான அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><h2><strong>மொட்டை மாடியில் நடந்த கொடூரம்</strong></h2><p>மாணவி இரவு நேரத்தில் விடுதியின் மொட்டை மாடிக்கு நடைப்பயிற்சிக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாதுகாப்பு காவலர் தர்மசிங், மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். </p><p>இதனால் பயந்துபோன மாணவி அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்க, காவலர் அவரது கழுத்தில் கம்பியை மாட்டி பலமாக இறுக்கியுள்ளார். </p><p>இதனால் மாணவியால் சத்தம் போட முடியாமல் போனது. அதை சாதகமாக்கிக் கொண்டு அந்த நபர் மாணவியைக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.</p><h2><strong>மீட்பு மற்றும் மருத்துவ சிகிச்சை</strong></h2><p>தாக்குதலுக்குப் பின், குற்றவாளி தப்பியோடியதை அடுத்து மாணவி மாடியில் இருந்து சத்தம் போட்டு கீழே இருந்த குடியிருப்புவாசிகளை உதவிக்கு அழைத்துள்ளார். </p><p>பொதுமக்கள் மற்றும் விடுதி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>10 தனிப்படைகள் மூலம் அதிரடி வேட்டை</strong></h2><p>இந்த சம்பவம் குறித்து ஆனந்த்நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படத்தை அடுத்து, <a href="https://www.maalaimalar.com/topic/ahmedabad">அகமதாபாத்</a> குற்றப்பிரிவு மற்றும் உள்ளூர் போலீசாரும் இணைந்து உடனடியாக 10 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். </p><p>விடுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தபோது, குற்றவாளி லிப்ட் மூலமாக மாடிக்கு செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.</p><h2><strong>குற்றவாளி குறித்த அதிர்ச்சித் தகவல்</strong></h2><p>கைது செய்யப்பட்ட குற்றவாளி தர்மசிங், உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் அந்த தங்கும் விடுதியில் பாதுகாப்பு காவலராகச் பணியில் சேர்ந்து சில நாட்களே ஆகியுள்ளது என்பதும் விசாரணையில் வெளிவந்துள்ளது.</p><p>இந்த வழக்கில் பாதுகாப்பு காவலர்களை வேலைக்கு அமர்த்தும் ஏஜென்சியின் பின்னணி மற்றும் அவர்கள் முறையான பின்னணி சரிபார்ப்பு செய்தார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தேர்வு முறைகேடு: ஜார்க்கண்ட் சட்டமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணி.. முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற எதிர்க்கட்சி தலைவர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-scam-protest-students-march-to-assembly-breaking-barricades-demanding-cbi-probe-into-jpsc-jssc-irregularities</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-scam-protest-students-march-to-assembly-breaking-barricades-demanding-cbi-probe-into-jpsc-jssc-irregularities#comments</comments><guid isPermaLink="false">a177da05-1eed-4f3b-bfa9-2ccc8d37d7ac</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:57:01 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:57:01.759Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,மாணவர்கள் போராட்டம்,ஜார்க்கண்ட்,Hemant Soren,தேர்வு முறைகேடு,Student protests,exam irregularities</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xb1vrbkg/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜார்க்கண்ட் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜார்க்கண்ட் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xb1vrbkg/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/3-jharkhand-psc-members-resign-amid-paper-leak-protests">ஜார்க்கண்ட் அரசு தேர்வாணையம்</a> (JPSC) மற்றும் பணியாளர் தேர்வாணையம் (JSSC) நடத்திய அரசுத் தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அம்மாநில மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><h2>பேரணி </h2><p>இன்று ஜார்க்கண்ட் சட்டமன்றம் கூடும் நிலையில், மாணவர்கள் அறிவித்தபடி சட்டமன்றம் நோக்கி பேரணியை தொடங்கியுள்ளனர். </p><p>மத்திய படையினர், போலீசார் முன்னரே தயார் நிலையில் நிறுத்தப்பட்டு மாணவர்களை தடுக்க பேரிகேட் தடுப்புகள் நிறுவப்பட்டன.  </p><p>இந்நிலையில் ராஞ்சியில் உள்ள பழைய சட்டமன்றக் கட்டிடத்தில் இருந்து புதிய சட்டமன்றக் கட்டிடத்தை நோக்கிப் போராட்டத்தில் ஈடுபட்ட திரளான மாணவர்கள் பேரணியாகச் சென்றனர்.  </p><p>அப்போது காவல்துறை அமைத்திருந்த பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மாணவர்கள் முன்னேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. </p><p>அசம்பாவிதங்களைத் தடுக்கக் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இருப்பினும் மாணவர்கள் தடுப்புகளை தாண்டி பேரணியை தொடரும் முனைப்பில் அணுவகுத்து சென்று கொண்டிருக்கின்றனர். </p> <h2>எதிர்க்கட்சித் தலைவர் கைது</h2><p>இதனிடையே தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, பாஜகவை சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி ஆகியோர் தலைமையில் பாஜக தொண்டர்கள் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இல்லத்தின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதையடுத்து, முதல்வர் இல்லத்தின் வெளியே போராட்டம் நடத்திய பாபுலால் மராண்டி உள்ளிட்ட பாஜக தலைவர்களை மாநிலக் காவல்துறை கைது செய்து அப்புறப்படுத்தியது.</p> <h2>பாபுலால் குற்றச்சாட்டு</h2><p>மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தீவிரப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஜார்க்கண்ட் அரசு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தேவையின்றி காலந்தாழ்த்தி வருவதாக பாபுலால் மராண்டி சாடினார்.</p><p>JPSC, JSSC மற்றும் CGL தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் முதன்மைக் கோரிக்கையை நிறைவேற்றாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே மாநில அரசு முயல்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.</p> <h2>பேச்சுவார்த்தை</h2><p>முன்னதாக போராட்டக்குழு பிரதிநிதிகளுடன் ஜார்கண்டின் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோச்சா அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.</p><p>இதில் சர்ச்சைக்குரிய 14வது JPSC சிவில் சர்வீஸ் தேர்வை ரத்து செய்ய நேற்று உடன்பாடு எட்டப்பட்டது. மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.</p><p>தொடர்ந்து JPSC ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர்.</p> <h2>தொடரும் போராட்டம்</h2><p>அரசு தங்கள் கோரிக்கைகளில் 98 சதவீதத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த போதிலும், மாணவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டனர்.</p><p>மாநில அமைப்புகளின் விசாரணை மீது நம்பிக்கையில்லை என்றும், சிபிஐ மூலமே சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் உறுதியாக உள்ளனர். JSSC-CGL தேர்வில் நடந்த முறைகேடுகளையும் கண்டித்து, அந்தத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் புகார்கள் ஜோடிக்கப்பட்டவையா?.. பிரிஜ் பூஷன் &quot;குற்றமற்றவர்&quot; என விடுவிக்கப்பட்டது எப்படி? - தீர்ப்பின் முழு விவரம் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/national/court-acquits-ex-wfi-chief-delhi-judge-calls-women-wrestlers-sexual-harassment-case-false-and-politically-motivated</link><comments>https://www.maalaimalar.com/news/national/court-acquits-ex-wfi-chief-delhi-judge-calls-women-wrestlers-sexual-harassment-case-false-and-politically-motivated#comments</comments><guid isPermaLink="false">fd418cee-ccc4-4456-b67d-0f841525a7d5</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:59:42 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:59:42.977Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய மல்யுத்த சம்மேளனம்,Wrestling Federation of India,பிரிஜ் பூஷன் சிங்,Brij Bhushan Singh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/rjticb7e/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  பிரிஜ் பூஷன்  சிங் ]]></media:title><media:description type="html"><![CDATA[  பிரிஜ் பூஷன்  சிங் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/rjticb7e/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பாஜக முன்னாள் எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான <a href="https://www.maalaimalar.com/news/national/sexual-assault-case-court-acquits-brij-bhushan-singh">பிரிஜ் பூஷன்  சிங்</a> கடந்த ஆகஸ்ட் 3 அன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தால் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். </p><p>அவருடன் இந்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்யுத்த சம்மேளன முன்னாள் உதவிச் செயலாளர் வினோத் தோமரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். </p><p>வீராங்கனைகள் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் இவ்வழக்கிலிருந்து கூடுதல் முதன்மை தலைமை பெருநகர நீதிபதி அஸ்வினி பன்வார் அவர்களை விடுவித்த நிலையில் அவர் வழங்கிய தீர்ப்பு குறித்த விரிவான விளக்கம் வெளியாகி உள்ளது. </p> <h2>தீர்ப்பில் உள்ளது என்ன?</h2><p>நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு குறித்த விரிவான தகவல்கள் இணையத்தில் தற்போது பதிவேற்றப்பட்டுள்ளன.</p><p>அதில் பிரிஜ் பூஷன் ஏன் விடுவிக்கப்பட்டார், குற்றச்சாட்டுகளை ஏன் நீதிமன்றம் புறக்கணித்தது என்பது குறித்த விரிவான விளக்கங்கள் உள்ளன.</p><p>நீதிபதி அஸ்வினி பன்வார் தனது தீர்ப்பில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் "இந்த வழக்கு பொய்யானது, ஜோடிக்கப்பட்டது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.</p> <h2>குற்றச்சாட்டுகள் போலி?</h2><p>தீர்ப்பில் கூறியுள்ளதாவது, "ஒலிம்பிக் தகுதிச் சுற்றின் போது நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தில், ஒரு வாக்குமூலத்தில் அந்தச் சம்பவம் 2015இல் துருக்கியில் நடந்ததாகக் கூறிய புகார்தாரர், மற்றொரு வாக்குமூலத்தில் அது 2016இல் மங்கோலியாவில் நடந்ததாக கூறியுள்ளார்.</p><p>நாட்டின் பெயர் மற்றும் ஆண்டிலேயே இவ்வளவு பெரிய முரண்பாடு இருக்கிறது.</p><p>அரியானாவை தளமாக கொண்ட மகாதேவ் மல்யுத்த பயிற்சி அகமெடியின் சில பயிற்சியாளர்களாலும் வீராங்கனைகளாலும் பின்னப்பட்டதாக தெரிகிறது</p> <p>2018இல் டெல்லி மைதானத்தில் குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் மற்றும் பிற வீரர்கள் முன்னிலையில் பாலியல் அத்துமீறல் நடந்ததாகக் கூறப்பட்ட போதிலும், எந்தவொரு சுயாதீன சாட்சியும் பிரீஜ் பூஷனுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க வரவில்லை.</p><p>வழக்கில் பாதிக்கப்பட்டவர்களாகக் கூறப்பட்ட 5 பெண்களில் 2 பேர் பிரிஜ் பூஷன் எந்த பாலியல் அத்துமீறலிலும் ஈடுபடவில்லை என்றும் மகாதேவ் அகாடமி பயிற்சியாளர்களின் மிரட்டல் மற்றும் வற்புறுத்தலின் பேரிலேயே தாங்கள் முன்னர் வாக்குமூலம் அளித்ததாகவும் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.</p><p>போராட்டத்தில் உட்காருவதற்கு முன்பாக எந்தவொரு பெண் மல்யுத்த வீரரும் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களையோ வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.</p><p>ஆனால், பின்னர் தேர்வு செய்யப்பட்ட பெண் மல்யுத்த வீரர்கள் முன்னால் வந்து, அலங்காரமாக ஒரே பாணியிலான தயார் செய்யப்பட்ட புகார்களைக் காவல்துறையிடம் அளித்துள்ளனர்.</p><p>அனைத்துப் புகார்களிலும் உள்ள குற்றச்சாட்டுகள் ஒரே மாதிரியாக உள்ளது.</p> <p>பாலியல் அத்துமீறல் நடந்ததாகக் கூறப்படும் காலக்கட்டத்திற்குப் பிறகும், புகாரளித்தவர்கள் பிரிஜ் பூஷனுடன் சுமூகமான உறவைப் பேணி வந்துள்ளனர். பொது நிகழ்ச்சிகளில் அவருடன் இயல்பாகப் பழகியுள்ளனர்.</p><p>நீண்ட காலத்திற்குப் பிறகு அளிக்கப்பட்ட இந்தப் புகார்கள் அனைத்தும் கற்பிக்கப்பட்டவை மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை. அரசுத் தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது.</p><p>இதனால் பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட வினோத் தோமரை நீதிமன்றம் கௌரவமாக விடுவிக்கிறது" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p> <h2>வீராங்கனைகள் போராட்டம் </h2><p>பிரிஜ் பூஷன் சிங் பாஜகவில் மிகவும் சக்திவாய்ந்த தலைவர் ஆவார். 2023 இல் அவர் மீது புகார் அளித்தும் வழக்குப் பதிய டெல்லி போலீஸ் மறுத்தது. வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 2023 ஜனவரி முதல் ஜூன் வரை போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீஸ் அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்து வந்த அழுத்தத்தின் பின் பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. </p><p>அவர் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் வழக்கில் அவர் ஆதிக்கம் செலுத்த முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதன்பின் 2024 இல் நடந்த எம்.பி தேர்தலில் அவருக்கு பதில் அவரின் மகனுக்கு சீட் வழங்கப்பட்டது. </p><p>தொடர்ந்து அவர் மீது வழக்கு நடந்து வந்த நிலையில் தற்போது அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுத்துள்ளது. பிறழ் சாட்சியம் அளிக்க கூறி பாதிக்கப்பட்டவர்களில் 2 வீராங்கனைகள் மிரட்ட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   இந்த தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>ஆர்.ஜி. கர் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு.. புதிய விசாரணைக்கு முதல்வர் சுவேந்து உத்தரவு - 3 திரிணாமுல் தலைவர்கள் மீது குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-doctor-murder-case-cm-orders-fresh-probe-into-rushed-cremation-after-second-anniversary-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-doctor-murder-case-cm-orders-fresh-probe-into-rushed-cremation-after-second-anniversary-tribute#comments</comments><guid isPermaLink="false">0c9f3aab-7670-4a83-bf52-93a650eb3a85</guid><pubDate>Mon, 10 Aug 2026 02:42:15 +0000</pubDate><atom:updated>2026-08-10T02:42:15.946Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,சுவேந்து அதிகாரி,பயிற்சி மருத்துவர் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3wwqzpqp/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதல்வர் சுவேந்து, ரத்னா தேப்நாத் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்வர் சுவேந்து, ரத்னா தேப்நாத் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3wwqzpqp/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது.  </p><h2>அஞ்சலி </h2><p>மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொல்லப்பட்ட மருத்துவருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  </p><p>இச்சம்பவத்தின் நினைவாக நடைபெற்ற கூட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் தாயாரும், பாணிஹாட்டி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான ரத்னா தேப்நாத் கலந்துகொண்டார்.</p><p>"எங்கள் மகளுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்" என அவர் கூட்டத்தில் பேசினார்.</p><p>இந்த வழக்கில் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் சஞ்சய் ராய் என்பவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. </p><p>கடந்த மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இது நடந்த நிலையில் இந்த சம்பவம் மேற்கு வங்க அரசியலில் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. </p><h2>புதிய விசாரணை</h2><p>இந்நிலையில் பெண் மருத்துவர் உடலை அவசர அவசரமாகத் தகனம் செய்தது குறித்து விசாரணை நடத்த மேற்கு வங்க முதல்வர்<a href="https://www.maalaimalar.com/topic/suvendu-adhikari"> சுவேந்து அதிகாரி</a> உத்தரவிட்டுள்ளார்.</p><p>பரேக்பூர் காவல்துறை ஆணையருக்கு முதல்வர் சுவேந்து அதிகாரி இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><p>அதில், ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை சில மணி நேரங்களிலேயே முடிக்கப்பட்டு, அன்றைய தினமே உடல் அவசர அவசரமாகத் தகனம் செய்யப்பட்டது.</p><p>தகனம் செய்ய வேண்டிய உடல்களின் பட்டியலில் அந்த உடல் 3வது இடத்தில் இருந்த நிலையில், அது விதிமுறைகளை மீறி 1வது இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.</p><p>விதிமுறைகளின்படி இறந்தவரின் குடும்பத்தினர் கட்டணம் செலுத்தி ஆவணங்களில் கையொப்பமிட வேண்டும், ஆனால் இங்கு அது நடக்கவில்லை என சுவேந்து குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>மேலும், இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ நிர்மல் கோஷ், பஞ்சாயத்து உறுப்பினர் சோமநாத் டே, உள்ளூர் தலைவர் சஞ்சீவ் முகர்ஜி ஆகிய மூவர் மீதும் குற்றம்சாட்டியுள்ள சுவேந்து அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p>இச்சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையைச் சரியாகக் கையாளாதது மற்றும் பெற்றோருக்குப் பணம் கொடுக்க முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, கொல்கத்தாவின் முன்னாள் காவல் ஆணையர் வினீத் கோயல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளைச் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு இந்த மாத தொடக்கத்தில் பணியிடை நீக்கம் செய்து அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>98 சதவீத கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக அரசு கூறுவது பொய்: ஜார்க்கண்ட் மாணவர் தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/govt-claim-of-accepting-98-pc-demands-full-of-lies-jharkhand-student-leader</link><comments>https://www.maalaimalar.com/news/national/govt-claim-of-accepting-98-pc-demands-full-of-lies-jharkhand-student-leader#comments</comments><guid isPermaLink="false">c45da76f-20a4-4448-bb9b-13fd79da1d55</guid><pubDate>Mon, 10 Aug 2026 00:11:21 +0000</pubDate><atom:updated>2026-08-10T00:11:21.883Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Jharkhand,போராட்டம்,ஜார்க்கண்ட்,JPSC</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/bu4j0d7z/JPSC-Protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/bu4j0d7z/JPSC-Protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்டில் பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி <a href="https://www.maalaimalar.com/topic/students">மாணவர்கள்</a> போராடி வருகின்றனர். மாணவர்களின் 98 சதவீத கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக அரசு அமைத்த குழு அறிவித்த சில மணிநேரங்களிலேயே, போராட்டக்காரர்கள் அரசின் கூற்றை மறுத்துள்ளனர். </p><p>மொத்தம் 13 போட்டி தேர்வுகளில் 3 தேர்வுகளை மட்டுமே ரத்து செய்ய ஒப்புக்கொண்ட <a href="https://www.maalaimalar.com/news/national">அரசு</a>, "பொய்களைப் பரப்புவதாக" அவர்கள் குற்றம் சாட்டினர்.</p><h2>அனுமதிக்க மாட்டோம்:</h2><p>தங்கள் அமைதியான ஜனநாயகப் போராட்டத்திற்கும், இன்று நடைபெறவுள்ள 'சட்டமன்றப் பேரணி'க்கும் (Vidhan Sabha March) ஆதரவளிக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p>இங்கு செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள், சமூக விரோத சக்திகள் தங்கள் ஜனநாயக போராட்டத்தை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர்.</p><h2>பொய் பிரச்சாரம்:</h2><p>"எங்கள் கோரிக்கைகளில் 98 சதவீதத்தை நிறைவேற்றியதாக ஜார்க்கண்ட் அரசு பொய் பிரச்சாரம் செய்கிறது. நாங்கள் கோரிய 13 தேர்வுகளில் 3-ஐ மட்டுமே அரசு ரத்து செய்துள்ளது. மாநிலத்தில் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளிலும் உள்ள முறைகேடுகளை வெளிக்கொண்டுவரும் வகையில் சி.பி.ஐ. (CBI) விசாரணை கோரி இன்று நடைபெறும் 'சட்டமன்றப் பேரணி'யில் ஜார்க்கண்ட் மாணவர்கள் அனைவரும் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று மாணவர் தலைவர் குற்றம் சாட்டினார்.</p><p>மற்றொரு மாணவர் தலைவரான ரவீந்திர பாஸ்வான், "முறைகேடுகளை மூடிமறைப்பதற்குப் பெயர் பெற்ற சி.ஐ.டி. (CID) விசாரணை நடத்த வேண்டும் என்பதில் அரசு பிடிவாதமாக உள்ளது" என்று குற்றம் சாட்டினார்.</p><p>தங்கள் போராட்டம் "அமைதியானதாகவும் ஜனநாயக ரீதியிலானதாகவும்" இருக்கும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.</p><p>"எங்கள் அமைதியான, ஜனநாயக போராட்டத்தை சீர்குலைக்க சமூக விரோத சக்திகளை அனுமதிக்க மாட்டோம்," என்று மற்றொரு மாணவர் தலைவர் கூறினார்.</p><h2>வேண்டுகோள்:</h2><p>இன்று நடைபெறவுள்ள போராட்டத்தை ஒரு "மக்கள் இயக்கமாக" மாற்றுமாறு மக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்; மேலும், எந்தவொரு அரசியல் கொடியும் இன்றி நடைபெறும் தங்கள் பிள்ளைகளின் போராட்டத்திற்குப் பெற்றோர்கள் தார்மீக ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர்.</p><p>"ஜார்க்கண்டில் நிலவும் வேலை விற்பனை முறையை ஒழிக்க விரும்புகிறோம்; எங்கள் போராட்டம் வன்முறையற்றது," என்று போராட்டக்காரர் ஒருவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;தூய பெட்ரோல் உங்க அப்பா வீட்டிலிருந்து வருமா?&apos; பாஜக எம்.பி. ஜனார்த்தன் மிஸ்ரா ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-mp-janardan-mishra-asks-will-pure-petrol-come-from-your-fathers-house</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-mp-janardan-mishra-asks-will-pure-petrol-come-from-your-fathers-house#comments</comments><guid isPermaLink="false">86cc44ca-c123-4f72-a119-df8dac488c10</guid><pubDate>Sun, 09 Aug 2026 21:28:29 +0000</pubDate><atom:updated>2026-08-09T21:28:29.505Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,பெட்ரோல்,Petrol,Janardan Mishra,ஜனா்தன் மிஷ்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/avhe1f67/Janardan-Mishra.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Janardan Mishra ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/avhe1f67/Janardan-Mishra.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலப்பது குறித்த சர்ச்சை நிலவி வரும் நிலையில், ரேவா தொகுதி <a href="https://www.maalaimalar.com/topic/bjp">பா.ஜ.க.</a> எம்.பி.யான ஜனார்தன் மிஸ்ரா மத்திய அரசின் எத்தனால் கொள்கையை ஆதரித்து கடுமையாக பேசினார். அப்போது அதை எதிர்ப்பவர்களிடம், "தூய பெட்ரோல் என்ன உங்கள் அப்பா வீட்டிலிருந்தா வருகிறது?" என்று அவர் காட்டமாக கேள்வி எழுப்பினார்.</p><p>ரேவாவில் இருந்து போபால் மற்றும் கொல்கத்தாவிற்கு புதிய விமான சேவைகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய மிஸ்ரா, <a href="https://www.maalaimalar.com/news/national">இந்தியா</a> தனது கச்சா எண்ணெய் தேவையில் 20 சதவீதத்தை மட்டுமே உற்பத்தி செய்வதாகவும், மீதமுள்ள 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார். </p><p>உலகளாவிய புவிசார் அரசியல் சூழலைச் சுட்டிக்காட்டிய எம்.பி. மிஸ்ரா, எண்ணெய் விநியோகத்திற்காக கப்பல்கள் சுமார் 18,000 கிலோமீட்டர்கள் கூடுதல் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்று கூறினார். </p><h2>எம்.பி. ஆவேசம்:</h2><p>"இத்தகைய சூழலில், பிரதமர் நரேந்திர மோடி பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பது பற்றிப் பேசும்போது, ​​சிலர் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்குகிறார்கள். எத்தனால் வேலை செய்யாது, தூய பெட்ரோல்தான் பயன்படும் என்று ஒரு பிரச்சாரம் நடைபெறுகிறது. தூய பெட்ரோல் என்ன உங்கள் அப்பா வீட்டிலிருந்தா வருகிறது? நாட்டில் தூய பெட்ரோல் இல்லையென்றால், அது எங்கிருந்து வரும்?" என்று அவர் கேட்டார்.</p><p>இந்தியாவில் உள்ள வாகனங்கள் எத்தனால் கலப்பு எரிபொருளில் இயங்கக்கூடியவை என்றும், ஆனால் சிலர் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறுவதாகவும் மிஸ்ரா தெரிவித்தார்.</p><p>பெட்ரோலில் எத்தனால் கலப்பதை ஆதரித்துப் பேசிய அவர், பிரேசிலில் வாகனங்கள் 100 சதவீத எத்தனாலில் இயங்குவதாகவும், அங்கு வாகனங்களில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறினார்.</p><h2>100 சதவீத எத்தனால்:</h2><p>உலகிலேயே அதிக அளவில் எத்தனால் உற்பத்தி செய்யும் நாடாக பிரேசில் இருப்பதால், அங்குள்ள வாகனங்கள் 100 சதவீத எத்தனாலில் இயங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.</p><p>சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக அடிக்கடி செய்திகளில் இடம்பிடிக்கும் மிஸ்ரா, இந்தியாவிலும் நிபுணர்கள் எத்தனால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புவதாகவும், இருப்பினும் அதற்கு "தேவையற்ற" எதிர்ப்பு இருப்பதாகவும் கூறினார்.</p><p>இன்று உலகில் பணவீக்கம் மிக குறைவாகவும், வேலைவாய்ப்பு மிக அதிகமாகவும் உள்ள ஒரு இடம் இருந்தால், அது இந்தியாதான் என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பாரமதி பயிற்சி விமான விபத்து: முதற்கட்ட விசாரணையை தொடங்கியது விமான போக்குவரத்து இயக்குநரகம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/aviation-body-launches-probe-into-baramati-trainer-aircraft-crash</link><comments>https://www.maalaimalar.com/news/national/aviation-body-launches-probe-into-baramati-trainer-aircraft-crash#comments</comments><guid isPermaLink="false">8c60b6a8-9065-4c9a-8e23-f5a7905e66e5</guid><pubDate>Sun, 09 Aug 2026 20:35:07 +0000</pubDate><atom:updated>2026-08-09T20:35:07.774Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விமான விபத்து,aircraft crash,Baramati,பாரமதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/jird3jn6/Baramati-Trainer-Aircraft-Crash.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Baramati Trainer Aircraft Crash]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/jird3jn6/Baramati-Trainer-Aircraft-Crash.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">மகாராஷ்டிரா</a> மாநிலத்தின் பாராமதி விமான நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பயிற்சியின்போது, ​​ஓடுபாதையில் இருந்து பயிற்சி <a href="https://www.maalaimalar.com/topic/airplane">விமானம்</a> விலகி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. </p><p>இந்த நிலையில், விமானம் விலகி சென்றதற்கான சூழ்நிலைகள் மற்றும் அதற்கான காரணிகளையும் கண்டறிவதற்காக, பொது விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) விமானப் பாதுகாப்பு குழு முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.</p><h2>விலகி சென்ற விமானம்:</h2><p>பாராமதி விமானத்தளத்தில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் சுமார் 12:25 மணியளவில், DGCA-ஆல் அங்கீகரிக்கப்பட்ட விமானப் பயிற்சி நிறுவனமான கார்வர் ஏவியேஷன் அகாடமியால் இயக்கப்படும் VT-SEX பதிவு எண் கொண்ட செஸ்னா C172 ரக விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற சம்பவம் நிகழ்ந்தது.</p><p>அந்த விமானம், சுற்று மற்றும் தரையிறக்க அவசரநிலை (CL அவசரநிலைகள்) பயிற்சி ஒன்றிற்காக இயக்கப்பட்டு வந்தது. அந்த விமானம், விமான பயிற்றுவிப்பாளர் கேப்டன் சிராக் சசிகாந்த் டோய்ஃபோடேவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது, அதில் பயிற்சி மாணவர் அபிஜீத் ஜுந்த்ரே பயணம் செய்தார்.</p><h2>பயிற்சி ஒத்திகை:</h2><p>திட்டமிடப்பட்ட பயிற்சி ஒத்திகைக்காக, விமானம் 12.09 மணிக்கு ஓடுபாதையில் நகர்ந்து சென்றது. ஒத்திகையின் போது, ​​விமானம் லிங்க் பிராவோ வழியாக ஓடுபாதைக்குள் நுழைந்து, ஓடுபாதை 29-இன் தொடக்கப் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டது; அங்கு, புறப்படுவதை ரத்து செய்யும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.</p><p>அதனைத் தொடர்ந்து, விமானம் ஓடுபாதை 11-இன் தொடக்கப் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டு, மற்றொரு புறப்படுவதை ரத்து செய்யும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.</p><p>பயிற்சியின் போது, ​​விமானத்தால் தார் ஓடுபாதைக்குள் நிறுத்த இயலவில்லை. அதன் விளைவாக, அது நீட்டிக்கப்பட்ட தார் பரப்பில் இருந்து விலகி, ஓடுபாதை 29-இன் தொடக்க புள்ளியை தாண்டி வலது பக்கமாக விலகி சென்றது. இதன் காரணமாக, அது ஓடுபாதையை விட்டு வெளியே சென்றது.</p><p>இந்த சம்பவத்தால் எந்தவொரு காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை. விமானத்தின் சுழலி, இயந்திர மூடி மற்றும் முன்புற தரையிறங்கும் சக்கரம் ஆகியவற்றில் சேதம் ஏற்பட்டுள்ளது. சேதம் குறித்த விரிவான மதிப்பீடு தகுந்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் ராஜினாமா</title><link>https://www.maalaimalar.com/news/national/3-jharkhand-psc-members-resign-amid-paper-leak-protests</link><comments>https://www.maalaimalar.com/news/national/3-jharkhand-psc-members-resign-amid-paper-leak-protests#comments</comments><guid isPermaLink="false">b67ef946-5d73-42e5-be68-e67224237d13</guid><pubDate>Sun, 09 Aug 2026 18:19:54 +0000</pubDate><atom:updated>2026-08-09T18:19:54.417Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Jharkhand,போராட்டம்,ஜார்க்கண்ட்,JPSC,அரசு பணியாளர் தேர்வாணையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/hag0c8l0/Jharkhand-officials-and-JPSC-aspirants.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand officials and JPSC aspirants ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/hag0c8l0/Jharkhand-officials-and-JPSC-aspirants.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">ஜார்க்கண்ட்</a> பொதுப் பணி ஆணையம் (JPSC) நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். </p><p>லோக் பவன் வெளியிட்ட அறிக்கையின்படி, அஜிதா பட்டாச்சார்யா, அனிமா ஹன்ஸ்டா மற்றும் ஜமால் அகமது ஆகியோரின் ராஜினாமாவை <a href="https://www.maalaimalar.com/topic/governor">ஆளுநர்</a> சந்தோஷ் குமார் கங்வார் ஏற்றுக்கொண்டார்.</p><h2>சி.ஐ.டி. விசாரணை:</h2><p>வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.ஐ.டி. (CID) இந்த முன்று உறுப்பினர்களுக்கும் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து இந்த ராஜினாமாக்கள் நிகழ்ந்துள்ளன.</p><p>ஜே.எம்.எம். (JMM) கட்சியின் தலைவர் சுப்ரியோ பட்டாச்சார்யாவின் மனைவியான பட்டாச்சார்யாவிடம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியும், அகமதுவிடம் ஆகஸ்ட் 12-ஆம் தேதியும், ஹன்ஸ்டாவிடம் ஆகஸ்ட் 14-ஆம் தேதியும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இந்த முன்று உறுப்பினர்களும் செப்டம்பர் 2021-இல் அப்பதவிகளில் நியமிக்கப்பட்டனர். முன்னதாக, ஜூலை 22-ஆம் தேதியன்று JPSC தலைவர் எல். கியாங்டே (L Khiangte) தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து இருந்தார்.</p><h2>நான்கு முறை விசாரணை:</h2><p>JPSC தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; அதேவேளையில், ஜூலை 28-ஆம் தேதி முதல் கியாங்டேவிடம் இதுவரை நான்கு முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.</p><p>ஜூலை 28-ஆம் தேதியன்று ஒன்பது மணி நேரமும், ஜூலை 29 மற்றும் ஜூலை 31 ஆகிய தேதிகளில் தலா எட்டு மணி நேரமும் சி.ஐ.டி. அதிகாரிகள் கியாங்டேவிடம் விசாரணை நடத்தினர்.</p><p>தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்பாக கியாங்டேவின் அதிகாரப்பூர்வ இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு முந்தைய நாள் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><h2>தேர்வுகள் ஒத்திவைப்பு:</h2><p>இந்த விவகாரம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவே "தானாக முன்வந்து ராஜினாமா செய்ததாக" கியாங்டே கூறியிருந்தார்.</p><p>மாநிலத்தின் தலைமை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் இந்த பதவியில் நியமிக்கப்பட்டார்.</p><p>எதிர்ப்புகளுக்கு மத்தியில், "தவிர்க்க முடியாத சூழ்நிலைகள்" காரணமாக, ஜூலை 25 முதல் ஜூலை 27 வரை நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமை பணிகள் முதன்மைத் தேர்வை (Combined Civil Services Mains Exam) JPSC முன்னதாக ஒத்திவைத்திருந்தது.</p>]]></content:encoded></item><item><title>அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீன்  பதவிக் காலம் ஓராண்டு நீட்டிப்பு.. யார் இவர்? </title><link>https://www.maalaimalar.com/news/national/ed-director-tenure-extended-rahul-navin-to-head-enforcement-directorate-till-august-2027</link><comments>https://www.maalaimalar.com/news/national/ed-director-tenure-extended-rahul-navin-to-head-enforcement-directorate-till-august-2027#comments</comments><guid isPermaLink="false">4a1fa83d-df49-4f0b-85c0-f346c2fc14ca</guid><pubDate>Sun, 09 Aug 2026 16:15:11 +0000</pubDate><atom:updated>2026-08-09T16:15:11.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Enforcement Directorate,central government,அமலாக்கத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/gwcoq563/tn-71.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் நவீன்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் நவீன்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/gwcoq563/tn-71.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">அமலாக்கத்துறையின் </a>இயக்குநர் ராகுல் நவீனின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>இதன் மூலம் அவர் 2027 ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை இப்பதவியில் தொடர்வார்.  </p><p>மத்திய பணியாளர், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, அமைச்சரவையின் நியமனக் குழு  இந்த நீட்டிப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>இதன்படி ராகுல் நவீனின் ஓய்வுபெறும் தேதி 2026 ஜூலை 31 ஆக இருந்த அது ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. </p><p>கூடுதல் பணிக்காலத்துடன் சேர்த்து அவர் ஆகஸ்ட் 13, 2027 வரை அந்த பதவியில் நீடிப்பார். </p><h2>ராகுல் நவீன்</h2><p>பீகார் மாநிலத்தை சேர்ந்த 59 வயதான ராகுல் நவீன், 1993ஆம் ஆண்டு பேட்ச் இந்திய வருமானத்துறை (IRS) அதிகாரி ஆவார்.</p><p>ஐஐடி கான்பூரில் பிடெக் மற்றும் எம்டெக் பட்டங்களையும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஸ்வின்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.</p><p>வருமான வரித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இவர்.</p> <h2>அமலாக்கத்துறை பொறுப்புகள்</h2><p>2019 நவம்பரில் அமலாக்கத்துறையில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட் இவர் 2020 நவம்பரில் அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநராக பொறுப்பேற்றார்.</p><p>செப்டம்பர் 15, 2023 இல் அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குநராக பொறுப்பேற்றார்.</p><p>ஆகஸ்ட் 14, 2024 இல் முழுநேர அமலாக்கத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.</p><p>விதிகளின்படி, அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்கு ஆரம்பத்தில் 2 ஆண்டுகள் நியமனமும், அதைத் தொடர்ந்து 3 முறை தலா ஓராண்டு பணி நீட்டிப்பும் வழங்கப்படலாம்.</p><p>இதன் அடிப்படையில் தற்போது ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மெட்ரோவில் பெண் பயணிகளை ரகசிய படம் பிடித்து வசமாக சிக்கிய ஆசாமி - வைரல் வீடியோ </title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-outrage-man-secretly-records-women-passengers-video-sparks-public-anger</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-outrage-man-secretly-records-women-passengers-video-sparks-public-anger#comments</comments><guid isPermaLink="false">35be2591-5df7-4568-a011-d4915a7b167e</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:40:53 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:40:53.893Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைரல் வீடியோ,Metro Rail,delhi,viral video,டெல்லி,மெட்ரோ ரெயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/aohl8201/tn-70.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி மெட்ரோ]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி மெட்ரோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/aohl8201/tn-70.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பெண் பயணிகளை நபர் ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மாலையில் லோக் நாயக் பவன் மெட்ரோ நிலையத்திலிருந்து கிரீன் பார் நோக்கிச் செல்லும் ரெயிலில் இரு பெண்கள் பயணம் செய்துள்ளனர்.</p><p>அப்போது அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயது நபர் ஒருவர், தங்களை ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதாக அந்தப் பெண்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.</p><p>தன்னை பெண்கள் கவனிப்பதை உணர்ந்த பிறகும், அந்த நபர் தொடர்ந்து அவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p>சந்தேகமடைந்த பெண்கள் அந்த நபருடன் வாக்குவாதம் செய்து, அவரது மொபைல் போனை காட்டுமாறு வற்புறுத்தியுள்ளனர்.</p> <h2>வாக்குவாதம்</h2><p>தான் வீடியோ எதுவும் எடுக்கவில்லை என மறுத்த அந்த நபர், அவர்களுக்கு முன்னாலேயே அவசர அவசரமாகத் தனது போனில் இருந்த சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் டெலிட் செய்துள்ளார்.</p><p>டெலிட் செய்த பிறகு, போனில் எதுவும் இல்லை எனக் கூறி அவர்களிடம் போனைக் காட்டியுள்ளார்.</p><p>ஆனால், சாதுரியமாகச் செயல்பட்ட அந்தப் பெண்கள், போனின் ரீசைக்கிள் பின்-ஐ சோதித்தபோது, தங்களை ரகசியமாக எடுத்த வீடியோ அங்கு இருந்ததைக் கண்டு பிடித்துள்ளனர்.</p> <h2>வைரல்</h2><p>அந்த நபரை அந்த இரு பெண்கள் தட்டிக் கேட்கும் வீடியோ காட்சி உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B"> வைரலாகி </a>வருகிறது.</p><p>ரெயிலில் சக பயணிகள் யாரும் அந்த நபரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததையும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.</p><p>இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.</p> <figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbxwM-XTCDE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbxwM-XTCDE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>
பீகாரில் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது.. மக்களை ஏமாற்றி ரூ.100 கோடி சொத்து சேர்த்து சொகுசாக வாழ்ந்தது அம்பலம்</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-ias-officer-arrested-bihar-man-held-for-100-crore-fraud-luxury-cars-and-assets-seized</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-ias-officer-arrested-bihar-man-held-for-100-crore-fraud-luxury-cars-and-assets-seized#comments</comments><guid isPermaLink="false">ee77dbc2-e1d7-4f17-85b6-94bf17d7014a</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:24:01 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:24:01.282Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,ஐஏஎஸ் அதிகாரி,IAS officer,மோசடி,Fraud</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/y1xk3frc/tn-68.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மணீஷ் குமார் குப்தா]]></media:title><media:description type="html"><![CDATA[ மணீஷ் குமார் குப்தா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/y1xk3frc/tn-68.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகாரில் </a>மக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கைது செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தின் கோக்ரி பகுதியைச் சேர்ந்த மணீஷ் குமார் குப்தா என்கிற சிக்கு ஆவார். </p> <h2>கைது</h2><p>நேற்று இரவு கோக்ரி காவல் எல்லைக்குட்பட்ட ஜமால்பூர் சந்தைப் பகுதியில், இந்திய அரசு என பெயர் பலகை பொருத்திய வாகனத்தில் வளம் வந்த மணீஷ் குப்தாவை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பிடித்தனர்.</p><p>போலீசார் விசாரித்தபோது, பதற்றமடையாமல் தனது மொபைல் போனில் இருந்த ஒரு போலி ஐஏஎஸ் ஐடி கார்டைக் காட்டியிருக்கிறார்.</p><p>மேலும், தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ரகசிய ஏஜென்ட் என்று காவல்துறையினரிடமே வாதிட்டுள்ளார்.</p><p>அவர் பொய் சொல்வது உறுதி செய்யப்பட்டதும், ககாரியா எஸ்பி பானு பிரதாப் சிங் உத்தரவின் பேரில், அவரது வீட்டை போலீசார் சோதனையிட்டனர்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/t7g11w6j/tn-69.jpg" /></figure><h2>ஆடம்பரம்</h2><p>அவரது வீட்டின் வெளியே இந்திய அரசு என்ற பலகை பொருத்தப்பட்ட இரண்டு ஆடம்பர கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.</p><p>மேலும், மணீஷ் குப்தாவின் வீட்டிலிருந்து டெஸ்லா உள்ளிட்ட சொகுசு கார்கள், பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் 23 கிரெடிட் கார்டுகள் மற்றும் 8 டெபிட் கார்டுகள், 4 வங்கிகளின் செக் புக்குகள், 5 ஐபோன்கள், விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள், 2 கலைமான் கொம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>மக்களை மிரட்டியும் ஏமாற்றியும் மணீஷ் குப்தா சட்டவிரோத சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்துள்ளதாக ககாரியா எஸ்பி பானு பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை வீட்டுக்கு அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி - இன்ஸ்டாவில் செல்பி வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-meets-medal-winning-boxers-prime-minister-interacts-with-indian-commonwealth-champions-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-meets-medal-winning-boxers-prime-minister-interacts-with-indian-commonwealth-champions-in-delhi#comments</comments><guid isPermaLink="false">d8328c4a-224b-4a08-8608-9f8c0ee4d884</guid><pubDate>Sun, 09 Aug 2026 14:47:33 +0000</pubDate><atom:updated>2026-08-09T14:47:33.512Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,வீடியோ,Video,பிரதமர் மோடி,2026 காமன்வெல்த் போட்டி,2026 Commonwealth Games</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/1vi3yn5k/tn-66.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/1vi3yn5k/tn-66.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/2026-commonwealth-games-conclude-notable-achievements">2026 காமன்வெல்த் போட்டிகளில்</a> வென்று நாடு திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி சந்தித்துள்ளார். </p><h2>சந்திப்பு </h2><p>இன்று (ஆகஸ்ட் 9) டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வீரர் வீராங்கனைகளை நேரில் வரவேற்ற பிரதமர் மோடி, அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தார். </p><p>இந்தச் சந்திப்பின் வீடியோ ஒன்றை  தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில்  மோடி பகிர்ந்துள்ளார்.  </p><h2>வீடியோ</h2><p>வீடியோவில், செல்பி கேமராவைப் பிடித்திருக்கும், தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை சாக்ஷி சவுத்ரி, பிரதமரை சில வார்த்தைகள் பேசுமாறு கோருகிறார்.</p><p>அதற்குப் புன்னகையுடன் பதிலளித்த பிரதமர் மோடி, "Jo Khelega, Wo Khilega" (விளையாடுபவர் எவரோ, அவரே பிரகாசிப்பார்). Always Cheer For Bharat, பாரத மாதா கி ஜே! என்று கூறுவது இடம்பெற்றுள்ளது.</p> <h2>2026 காமன்வெல்த் போட்டிகள்</h2><p>காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்ற2026 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா மொத்தம் 39 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்தது.</p><p>39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் அடங்கும்.</p><p>இம்முறை இந்தியாவின் வெற்றியில் குத்துச்சண்டை மிக முக்கியப் பங்கு வகித்தது.</p><p>குத்துச்சண்டையில் மட்டும் இந்தியா 7 தங்கம், 3 வெள்ளி உட்பட 10 பதக்கங்களை ள்ளிக் குவித்து வரலாற்று சாதனை படைத்தது.</p><p>சாக்ஷி சவுத்ரி, பிரீதி பவார், ஜாஸ்மின் லம்போரியா உள்ளிட்டோர் தங்கன் வெல்ல, லவ்லினா போர்கோஹெய்ன் உள்ளிட்டோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.</p><p>காமன்வெல்த் வரலாற்றில் ஒரே தொடரில் ஒரு நாடு குத்துச்சண்டையில் வென்ற அதிகபட்ச தங்கப் பதக்கம் இதுவே ஆகும்.</p>]]></content:encoded></item><item><title>“பாஜகவின் விரக்திக்கு இதுவே சாட்சி”: மம்தா கார் மீதான தாக்குதலுக்கு கெஜ்ரிவால் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/this-is-proof-of-the-bjps-desperation-kejriwal-condemns-attack-on-mamatas-car</link><comments>https://www.maalaimalar.com/news/national/this-is-proof-of-the-bjps-desperation-kejriwal-condemns-attack-on-mamatas-car#comments</comments><guid isPermaLink="false">5e0d5c83-03e0-4bca-b935-60a742915a0e</guid><pubDate>Sun, 09 Aug 2026 14:11:20 +0000</pubDate><atom:updated>2026-08-09T14:11:20.838Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,மம்தா பானர்ஜி,Mamata Banerjee,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/xofknukq/New-Project-2026-08-09T194059.368.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “பாஜகவின் விரக்திக்கு இதுவே சாட்சி”: மம்தா கார் மீதான தாக்குதலுக்கு கெஜ்ரிவால் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/xofknukq/New-Project-2026-08-09T194059.368.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவை விமர்சித்துள்ள அவர், மம்தா பானர்ஜியுடன் உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார். </p><h2>மம்தா கார்மீது தாக்குதல்</h2><p>போலீஸ் காவலில் உயிரிழந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க வட 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹல்சிஹாஹர் எனும் கிராமத்திற்கு சென்றுள்ளார் மம்தா பானர்ஜி. அப்போது வழியில் திரண்டிருந்த கும்பல், அவரது வாகனத்தின் மீது கற்கள், தண்ணீர்ப் பாட்டில்கள் மற்றும் காலணிகளை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். </p><p>சம்பவம் தொடர்பாக, காரின் ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். </p><p>இந்நிலையில் தோல்வி பயத்தின் காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பாஜக இத்தகைய வன்முறைகளையும், தாக்குதல்களையும் ஏவி விடுவதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,</p><p>இந்தச் சம்பவம் முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது. மம்தா அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர். அவரது காரைத் தாக்கும் இந்த குண்டர்களின் துணிச்சலைப் பாருங்கள். நாங்கள் உங்களுடன் உறுதியாக நிற்கிறோம். </p><p>மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்தவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் ஆளும் பாஜக திட்டமிட்டே சட்டம்-ஒழுங்கு நிலையைச் சீர்குலைத்துள்ளது. மோடி அரசின் செல்வாக்கு சரிந்து வருவதால், பாஜகவின் பதற்றமும், விரக்தியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் JPSC தேர்வு ரத்து-மாணவர்கள் CBI விசாரணைக்கு தீவிர கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-jpsc-exam-cancelled-students-demand-cbi-probe</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-jpsc-exam-cancelled-students-demand-cbi-probe#comments</comments><guid isPermaLink="false">20856042-e794-4010-9cc2-584a0928f80b</guid><pubDate>Sun, 09 Aug 2026 13:55:28 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:55:28.591Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,ஜார்க்கண்ட்,Jharkhand JPSC exam,JPSC exam cancelled,JPSC தேர்வு ரத்து,JPSC தேர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/wrjtwvse/jarkand.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand JPSC exam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/wrjtwvse/jarkand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்ட் அரசு தேர்வாணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வாணையம் (JSSC) நடத்திய அரசுத் தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அம்மாநில மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாணவர் பிரதிநிதிகளுடன் ஜார்க்கண்ட் அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.</p><h2>14-வது JPSC தே<strong>ர்வு ரத்து</strong></h2><p>சர்ச்சைக்குரிய 14-வது JPSC சிவில் சர்வீஸ் தேர்வை ரத்து செய்ய அரசு அதிகாரப்பூர்வமாக சம்மதித்துள்ளது. முறைகேட்டின் குற்றவியல் அம்சங்களை மாநில குற்றப்புலனாய்வுத் துறையும், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்புகளை அமலாக்கத்துறையும் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. </p><p>குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. எதிர்காலத் தேர்வுகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த IIT-ISM, IIM ராஞ்சி மற்றும் XLRI அமைப்புகளின் நிபுணர்களைக் கொண்ட சீர்திருத்தக் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மாணவர்கள் <strong>போராட்டத்தை கை</strong>விட மறுப்பது ஏன்?</h2><p>அரசு தங்கள் கோரிக்கைகளில் 98 சதவீதத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த போதிலும், மாணவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டனர். மாநில அமைப்புகளின் விசாரணை மீது நம்பிக்கையில்லை என்றும், மத்திய புலனாய்வு அமைப்பு மூலமே சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் உறுதியாக உள்ளனர். JSSC-CGL தேர்வில் நடந்த முறைகேடுகளையும் கண்டித்து, அந்தத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.</p><h2>அரசின் <strong>விளக்க</strong>ம்</h2><p>CGL தேர்வு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியாகிப் பணியமர்த்தலும் முடிந்துவிட்டதால், அதைத் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது என அரசு தெரிவித்துள்ளது. இதற்கு மாற்றாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்க அரசு முன்வந்ததை மாணவர்கள் நிராகரித்தனர்.</p><h2>சட்டமன்<strong>ற முற்று</strong>கை</h2><p>தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என அறிவித்துள்ள மாணவர்கள், நாளை ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். இத்தேர்வு முறைகேடுகள் தொடர்பாக CBI விசாரணை நடத்தக் கோரியும், தேர்வை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>என் தலையே பிளந்திருக்கும்.. மம்தா பானர்ஜியின் கார் மீது தாக்குதல் - மேற்கு வங்கத்தில் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-violence-mamata-banerjee-convoy-attacked-with-mud-and-stones</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-violence-mamata-banerjee-convoy-attacked-with-mud-and-stones#comments</comments><guid isPermaLink="false">a2f56612-4c22-429f-bad4-eac4a1479e70</guid><pubDate>Sun, 09 Aug 2026 12:35:28 +0000</pubDate><atom:updated>2026-08-09T12:35:28.521Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,மேற்கு வங்கம்,trinamool congress,west bengal,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ie8n1yue/tn-63.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மம்தா பானர்ஜி]]></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா பானர்ஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ie8n1yue/tn-63.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF">மம்தா பானர்ஜி</a>யின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஹல்சிஹாஹர் என்ற ஊரில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த பிர்ஜு கியோட் என்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழியரின் குடும்பத்தினரை மம்தா இன்று சந்திக்க சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.  </p><p>தகவலின்படி, மம்தா வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திய சிலர், அவரின் கான்வாய் காரை மறித்துள்ளனர். காரின் மீது சேற்றை வாரி இறைத்தும், கற்கள், தண்ணீர் பாட்டில்கள், காலணிகளை வீசியும் தாக்கியுள்ளனர். </p><p>மேலும் மம்தாவை வசைபாடி கோஷமிட்ட கும்பல், அவரை, திருடி என்றும் கொள்ளையர்களின் தலைவி என்றும் முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. </p> <h2>திரிணாமுல் ஊழியர் கஸ்டடி மரணம்</h2><p>திரிணாமுல் கட்சி ஊழியர் பிர்ஜு கியோட், முறைகேடு, பணம் பறிப்பு ஆகிய குற்றசாட்டுகளில் கைதாகி கஸ்டடியில் இருந்தார்.</p><p>அப்போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழநதார்.</p><p>அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவித்தபோதும் கஸ்டடியில் போலீசாரால் தாக்கப்பட்டு பிர்ஜு கியோட் கொல்லப்பட்டதாக அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் போராட்டங்கள் வெடித்துள்ளன.</p> <h2>தலை பிளந்திருக்கும்</h2><p>இந்த சூழலில்தான் மம்தா இன்று ஹாலிஸ்ஹாஹருக்கு, உயிரிழந்த தொண்டரின் குடும்பத்தை சந்திக்க வருகை தந்துள்ளார்.</p><p>ஆனால் தொண்டரின் வீட்டை அடையும் முன் கும்பலால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவரின் வாகனம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.</p><p>போலீசார் நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்து மம்தாவை பத்திரமாக அவ்விடத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.</p><p>இதுகுறித்து குற்றம்சாட்டியுள்ள மம்தா, " போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட கட்சித் தொண்டரை சந்திக்க சென்றபோது என் வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p>ஒரு வேளை கார் கண்ணாடி திறந்திருந்தால், என் தலையே பிளந்திருக்கும். காவல்துறையினர் கண் முன்னே இது நடந்தது. அவர்கள் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தனர். பாஜகவினருக்கு அவர்கள் பாதுகாப்பு வழங்குகின்றனர்" என தெரிவித்தார்.</p> <h2>பாஜக விளக்கம்</h2><p>இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க பாஜக மாநில தலைவர் சமிக் பட்டாச்சார்யா, தங்கள் கட்சித் தொண்டர்கள் இதில் ஈடுபடவில்லை என மறுத்துள்ளார். பாஜக கல்வீச்சு, சேறு, செருப்பு வீச்சை ஊக்குவிக்காது என்றும் அது மேற்கு வங்கத்தின் இமேஜுக்கு களங்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>பாஜக பெயரை சொல்லி அப்படி யாராவது செய்திருந்தால் அது தவறு என்று தெரிவித்தார்.</p><p>மம்தா பானர்ஜியின் ஆட்சி காலத்தின்தான் அரசியல் எதிரிகள் மீது அரசு ஆதரவுடன் இதுபோன்ற சேறு, மை, செருப்பு வீச்சுகள் அரங்கேறியதாக அவர் விமர்சித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஏர் இந்தியா விமான பயணிகள் காயமடைந்த சம்பவத்தில் திருப்பம்  - போதைப்பொருள் பயன்படுத்தினாரா  விமானி? - சோதனையில் ஷாக்</title><link>https://www.maalaimalar.com/news/national/air-india-turbulence-phuket-delhi-flight-drops-300-feet-17-injured-and-captain-faces-psychoactive-substance-test-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-india-turbulence-phuket-delhi-flight-drops-300-feet-17-injured-and-captain-faces-psychoactive-substance-test-row#comments</comments><guid isPermaLink="false">698d0cc7-b3f4-4343-b134-726625ea4077</guid><pubDate>Sun, 09 Aug 2026 11:22:56 +0000</pubDate><atom:updated>2026-08-09T11:22:56.025Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏர் இந்தியா,விமானி,Air India,Pilot,போதைப்பொருள்,Drugs</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2rum5ne1/tn-60.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஏர் இந்தியா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏர் இந்தியா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2rum5ne1/tn-60.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆகஸ்ட் 4 அன்று தாய்லாந்தின் பூக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்த <a href="https://www.maalaimalar.com/news/national/air-india-flight-ai2379-turbulence-incident-15-injured">ஏர் இந்தியா விமானம்</a>, வந்துகொண்டிருந்தபோது நடுவானில் திடீரென டர்புலன்ஸ் காரணமாக சுமார் 300 அடி கீழே இறங்கியது. </p><h2>காயம்</h2><p>விமானம் குலுங்கியதில் அதிலிருந்த  137 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களில் பலருக்கு காயம் ஏற்பட்டது. </p><p>தகவலின்படி, 13 பயணிகள் மற்றும் 4 கேபின் க்ரூ உறுப்பினர்கள் உட்பட 17 பேர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்பட்டனர். சீட் பெல்ட் அணியாததே அவர்களுக்கு காயம் ஏற்பட காரணம். </p><p>டெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிறகு, விமானத்தை இயக்கிய விமானிகளுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பிரீத் அனலைசர் பரிசோதனையில் மது அருந்தவில்லை என முடிவு வந்தது.</p><h2>போதைப்பொருள் பரிசோதனை</h2><p>இருப்பினும் சந்தேகம் தீராத நிலையில் விமான விபத்து புலனாய்வு அமைப்பு 'சைக்கோஆக்டிவ் சப்ஸ்டன்ஸ்' எனும் போதைப்பொருள் பயன்பாடு பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.</p><p>இந்நிலையில் விமானத்தை ஓட்டிய 30 வயதுடைய கேப்டனுக்கு நடத்தப்பட்ட இந்த போதைப்பொருள் பரிசோதனையில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இருப்பினும் Confirmatory Test எனும் இறுதி பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே கேப்டன் மீதான குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும்.</p><p>விமானி மருத்துவக் காரணங்களுக்கான உட்கொண்ட வழக்கமான மருந்துகள் இந்த முடிவுக்குக் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><h2>ஏர் இந்தியா விளக்கம்</h2><p>இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர், "விமானிகளுக்கு வழக்கமான போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது உண்மைதான்.</p><p>ஆனால், அந்தப் பரிசோதனையின் அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்னும் ஏர் இந்தியாவிடம் பகிரப்படவில்லை. எனவே, இது குறித்து இப்போது கருத்து தெரிவிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், விசாரணை நிலுவையில் உள்ளதால், விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட விமானிகள் பணி செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஐதராபாத் நால்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: தலைமை நீதிபதி வருகைக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/hyderabad-nalsar-convocation-students-protest-chief-justice</link><comments>https://www.maalaimalar.com/news/national/hyderabad-nalsar-convocation-students-protest-chief-justice#comments</comments><guid isPermaLink="false">a5d84e88-39b8-407c-8930-705323b2cef5</guid><pubDate>Sun, 09 Aug 2026 10:22:49 +0000</pubDate><atom:updated>2026-08-09T10:22:49.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hyderabad University,ஐதராபாத்,NALSAR University,Surya Kanth,நால்சார் பல்கலைக்கழகம்,சூர்யா காந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/9t8kphcq/naalsar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NALSAR University -Surya Kanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/9t8kphcq/naalsar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற தேசிய சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் (NALSAR) 2026-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு, இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்தை முதன்மை விருந்தினராக அழைத்துள்ளதற்கு 450-க்கும் மேற்பட்ட இறுதி ஆண்டு மாணவர்கள் அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பதிவாளர் மற்றும் பேராசிரியர்களுக்கு மாணவர்கள் எழுதியுள்ள கூட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்,</p><h2>ஜந்தர் மந்தர் <strong>போராட்டம் மீதான</strong> விசாரணை</h2><p>ஜூலை 20, 2026 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதல் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி சூர்யா காந்த் கையாண்ட விதம் தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><h2>நீதிமன்றத்தி<strong>ன் அணுகுமு</strong>றை</h2><p>விசாரணையின் போது காவல்துறை வன்முறை தொடர்பான வீடியோ ஆதாரங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுத்தது மற்றும் அமைதியான வழியில் போராடிய மாணவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் தார்மீக ரீதியாக ஏற்புடையதல்ல என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>பட்டங்களைப் <strong>பெற மறுப்பு</strong></h2><p>அரசமைப்புச் சட்ட மதிப்புகள் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட நீதிபதியிடமிருந்து பட்டங்களைப் பெறத் தங்களுக்கு விருப்பமில்லை என்றும், விருந்தினர் முடிவை நிர்வாகம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><h2>தற்போதைய <strong>நிலை</strong></h2><p>சட்டக் கல்வியில் முதன்மை நிறுவனமாக விளங்கும் நால்சார் பல்கலைக்கழக மாணவர்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கை, கல்வி மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், இக்கோரிக்கை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவையும் அறிவிக்கவில்லை.</p>]]></content:encoded></item><item><title>தனியாரிடம் ஒப்படைக்கப்படும் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளம் - கிளம்பும் எதிர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/indias-second-rocket-launch-site-to-be-handed-over-to-the-private-sector-opposition-mounts</link><comments>https://www.maalaimalar.com/news/national/indias-second-rocket-launch-site-to-be-handed-over-to-the-private-sector-opposition-mounts#comments</comments><guid isPermaLink="false">6fcdec84-8801-4e25-8981-2ed883500973</guid><pubDate>Sun, 09 Aug 2026 10:18:26 +0000</pubDate><atom:updated>2026-08-09T10:18:26.203Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,குலசேகரப்பட்டினம்,SLC,IN-SPACe,இன்-ஸ்பேஸ்,சிறிய செயற்கைக்கோள் ஏவுதளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/djfrs2qy/New-Project-2026-08-09T154424.565.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தனியாரிடம் ஒப்படைக்கப்படும் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளம் - கிளம்பும் எதிர்ப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/djfrs2qy/New-Project-2026-08-09T154424.565.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவால் கட்டமைக்கப்பட்டு வரும், இந்தியாவின் இரண்டாவது விண்வெளி ஏவுதளத்தை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகளை இன்-ஸ்பேஸ் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.</p><p>சிறிய ஏவுகணைகளை, ராக்கெட்டுகளை ஏவுவதற்கென அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய ஏவுதளத்தை இயக்கவும், நிர்வகிக்கவும் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>சுமார் 2,233 ஏக்கர் பரப்பளவில், ரூ.986 கோடியில் உருவாகி வரும் இந்த ஏவுதளம் செயல்பாட்டுக்கு வந்தப்பிறகு, ராக்கெட்டுகளை ஏவுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளவுள்ளன. </p><p>இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு தேவையான ஆரம்பகால தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ஆதரவை இஸ்ரோ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>2027-ல் செயல்பாட்டுக்கு வரும் ஏவுதளம்</h2><p>தற்போதுவரை இஸ்ரோ அலுவலகம், ராக்கெட் ஏவுதளக் கட்டிடம், பராமரிப்புப் பணிமனை மற்றும் ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர்கள் தரையிறங்கக்கூடிய ஹெலிபேட் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. வரும் 2027 மார்ச் மாதத்திற்குள் இந்த ஏவுதளம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>தூத்துக்குடியிலிருந்து சுமார் 55 கி.மீ தொலைவில், கடற்கரையில் அமைந்துள்ள குலசேகரப்பட்டினம் தளம், நிலநடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கிருந்து ஏவப்படும் சிறிய ராக்கெட்டுகள் இலங்கை வான்பரப்பைச் சுற்றி வளைக்காமல், நேரடியாகத் தெற்கு நோக்கி இந்தியப் பெருங்கடல் மேல் பாய முடியும். </p><p>இதனால் ராக்கெட்டுகளின் எரிபொருள் பெருமளவு சேமிக்கப்பட்டு, கூடுதல் எடையைச் சுமந்து செல்ல முடியும்.</p><h2>எதிர்ப்பு </h2><p>முழுக்க முழுக்க நாட்டின் பொதுத்துறை நிதியிலும், இஸ்ரோவின் தொழில்நுட்பத்திலும் உருவாக்கப்பட்டு வரும் இந்த விண்வெளி உள்கட்டமைப்பைத் தனியார் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசின் இந்த திடீர் முடிவிற்கு, இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியும், பலத்த எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மானிய விலை அரிசியில் ரூ.22,000 கோடி ஊழல்.. டெல்லி பாஜக அரசு மீது ஆம் ஆத்மி பரபரப்பு குற்றசாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-bjp-govt-accused-of-diverting-subsidised-rice-to-private-firm-in-22000-crore-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-bjp-govt-accused-of-diverting-subsidised-rice-to-private-firm-in-22000-crore-scam#comments</comments><guid isPermaLink="false">a6308916-fed0-4250-a671-bebd8e8ed15a</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:40:17 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:40:17.759Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆம் ஆத்மி,Saurabh Bharadwaj,delhi,Aam Aadmi,Corruption,டெல்லி,ஊழல்,சௌரப் பரத்வாஜ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ey0o1gpb/tn-59.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரேகா குப்தா, சௌரப் பரத்வாஜ்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ ரேகா குப்தா, சௌரப் பரத்வாஜ்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ey0o1gpb/tn-59.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏழைகளுக்கு வழங்க வேண்டிய மானிய விலையிலான அரிசியை தனியார் நிறுவனத்திற்கு விற்று ரூ.22,000 கோடி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D">ஊழல் </a>செய்ய ரேகா குப்தா தலைமையிலான டெல்லி பாஜக அரசு திட்டமிட்டதாக ஆம் ஆத்மி டெல்லி மாநிலத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சௌரப் பரத்வாஜ்  குற்றச்சாட்டியுள்ளார். </p><p>எக்ஸ் பக்கத்தில் வீடியோ மூலம் பேசிய சௌரப், </p> <h2>மானிய விலை அரிசி</h2><p>டெல்லி அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா தலைமையிலான உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை மற்றும் பாஜக ஆளும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கார்ப்பரேஷன் இணைந்து இந்திய உணவுக் கழகத்திடம் மானிய விலையிலான அரிசியைக் கோரியுள்ளன.</p><p>டெல்லியில் உள்ள ரேஷன் கார்டு இல்லாத ஏழை மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு விநியோகிப்பதற்காக வாரத்திற்கு 31,000 மெட்ரிக் டன் அரிசி வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் இந்திய உணவுக் கழகம் மூலம் பல வாரங்களாக அரிசி அனுப்பப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், இந்த மானிய விலை அரிசி டெல்லியில் உள்ள எந்தவொரு ஏழை மக்களுக்கும் சென்றடையவில்லை.</p> <h2>ரூ.22,000 கோடி ஊழல்</h2><p>இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து பெறப்பட்ட அரிசி முழுவதும் அசாமுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அரியானாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு அதிக லாபத்திற்கு சட்டவிரோதமாக விற்கப்பட்டுள்ளது.</p><p>இதன் மூலம் அந்த அசாம் கார்ப்பரேஷன் வாரத்திற்கு ரூ.70 கோடி கமிஷன் ஈட்டியுள்ளது.</p><p>வாரத்திற்கு ரூ.143 கோடி வீதம், 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.22,000 கோடிக்கு லாபம் ஈட்ட திட்டமிடப்பட்டு இந்த ஊழல் நடத்தப்பட்டு வந்துள்ளது.</p> <h2>அம்பலம் </h2><p>மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை இதை கண்டறிந்து பிடித்த பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும், இதன் பேரில் சில அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சௌரப் பரத்வாஜ் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>எனினும் அசாமை சேர்ந்த அந்த கார்ப்பரேஷன் என்னவென்று அவர் விளக்கவில்லை.</p><p>இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா அல்லது டெல்லி அரசிடமிருந்து பதில்கள் எதுவும் இன்னும் வரவில்லை.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அரசு பேருந்து வசதி..! திருவிழா போல் கொண்டாடிய கிராம மக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/rajasthan-village-celebrates-first-government-bus-like-festival</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajasthan-village-celebrates-first-government-bus-like-festival#comments</comments><guid isPermaLink="false">6d1881f3-5638-4e5b-9677-edecd1b3b65a</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:38:57 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:38:57.469Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,கிராம மக்கள்,village people,ராஜஸ்தான்,அரசு பேருந்து வசதி,Govt bus facility</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/zaa979ad/bus.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ First Govt Bus]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/zaa979ad/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகள் ஆகிவிட்டது. பஸ்களில் இலவச பயணம், கட்டண சலுகை என்று விதவிதமான அறிவிப்புகளை ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் அறிவித்து வருவது இனிப்பான தகவல்களாக இருக்கிறது.</p><p>அதேநேரம் இன்னும் பஸ் வசதிகளையே பார்த்திராத கிராமங்களும் இருக்கத்தான் செய்கிறது என்பதை கேள்விப்படும்போது அந்த கிராம மக்களின் நிலைமை எப்படி இருக்கும்?</p><p>அப்படித்தான் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள குர்தால் கிராமத்திற்கு சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அரசு பஸ் வசதி கிடைக்கவில்லை.</p><p>இந்தகிராமத்து மக்கள் அருகில் உள்ள நகரங்கள், சந்தைகள், மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டுமென்றால் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு நடந்தே பயணித்துள்ளார்கள்.</p><p>இப்போதுதான் முதல் முறையாக அரசு பஸ் அந்த கிராமத்துக்கு சென்றுள்ளது. தங்கள் கிராமத்திற்கு பஸ் வந்ததை பார்த்ததும் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அடைந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை. அந்த பஸ் குர்தால் கிராமத்திற்குள் நுழைந்தபோது மழை கொட்டிக் கொண்டு இருந்தது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் சின்னஞ்சிறுசுகள் முதல் பெரியவர்கள் வரை திரண்டு வந்து பஸ்சை வரவேற்று சுற்றி நின்று ஆடிப்பாடி ஆரவாரம் செய்தனர்.</p><p>சிலர் தங்கள் செல்போன்களில் வீடியோக்களாக பதிவு செய்துக் கொண்டார்கள். மேளதாளங்கள் முழங்க அந்த கிராமத்தில் திருவிழா நடந்தது போல் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர். பஸ் வசதி கிடைத்ததை தொடர்ந்து இனி அருகில் உள்ள நகரங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், சந்தைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தங்கள் பயணம் எளிதாகிவிடும் என்று அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.</p><p>இதுவரை நடந்தும், ஒரு சில தனியார் வாகனங்கள் மூலமும் அதிக கட்டணங்கள் கொடுத்து தங்கள் தேவைகளுக்காக நகரங்களுக்கு சென்று வந்ததாகவும் தெரிவித்தார்கள்.</p><p>சுதந்திர இந்தியாவில் 79 ஆண்டுகள் வரை ஒரு கிராமம் பஸ் வசதியே இல்லாமல் இருந்திருப்பது அதிர்ச்சியான விஷயம். இதேபோல் நாடு முழுவதும் அடிப்படை தேவைகளான சாலை, போக்குவரத்து, மின்விளக்கு, குடிநீர் வசதி இல்லாத கிராமங்களை கண்டறிந்து தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி படத்தை வைத்து நள்ளிரவில் சடங்கு செய்த நபர்: சத்தீஸ்கரில் விநோதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/man-uses-chhattisgarh-chief-justice-photo-in-ritual-to-get-relative-bail</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-uses-chhattisgarh-chief-justice-photo-in-ritual-to-get-relative-bail#comments</comments><guid isPermaLink="false">0b080231-b413-45b7-ada1-86b6afa9e5b6</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:32:16 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:32:16.145Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சத்தீஸ்கர்,chattisgarh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/wmenza9d/Chhattisgarh0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சத்தீஸ்கர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/wmenza9d/Chhattisgarh0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள தேவ்ரி கிராமத்தில் உள்ள உடல் தகனம் செய்யும் இடத்தில் 4 பேர் அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தனர். அந்த இடத்தில் வசிக்கும் கிராம மக்களுக்கு இது சந்தேகத்தை எழுப்பியது. இதனால் என்ன நடக்கிறது என்று பார்க்க, அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களில் 3 பேர் தப்பித்தால் போதும் என ஓடிவிட்டனர். ரிஷிகேஷ் குமார் என்பவர் மட்டும் சிக்கிக் கொண்டார்.</p><h2>விநோத சடங்கு</h2><p>கிராம மக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது விநோதமான பதில் கிடைத்துள்ளது.</p><p>ரிஷிகேஷ் குமாரின் உறவினர் ஒருவர் கத்திக்குத்து வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மற்றவர்களின் ஜாமின் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.</p><p>இந்த நிலையில்தான் தனது நண்பருக்கு ஜாமின் கிடைக்க வேண்டும் என்றால் மயானத்தில் சடங்கு செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளனர்.</p><h2>உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி போட்டோ</h2><p>இதனால் கத்திக்குத்தில் பாதிக்கப்பட்டவர், சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 பேர் படத்தை வைத்து, அத்துடன் மீன், எலுமிச்சை பழம், குங்குமம் வைத்து சடங்கு செய்துள்ளனர். போலீசார் சடங்குக்கான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.</p><p>மேலும், இதுபோன்ற சடங்குகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், இப்படி சடங்கு நடத்தினால் ஜாமின் கிடைத்துவிடாது. குற்றவாளிகள் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கேரளாவில் வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்படாது: காங்கிரஸ் எம்.பி. உன்னிதன்</title><link>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-will-not-be-sung-in-full-in-kerala-in-this-lifetime-cong-mp-unnithan</link><comments>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-will-not-be-sung-in-full-in-kerala-in-this-lifetime-cong-mp-unnithan#comments</comments><guid isPermaLink="false">4ccc9c73-0b3a-4d48-b004-0b820bdb1c56</guid><pubDate>Sun, 09 Aug 2026 07:44:52 +0000</pubDate><atom:updated>2026-08-09T07:44:52.070Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/aevxgrxx/CongressMpRajmohanUnnithan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் எம்.பி. உன்னிதன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/aevxgrxx/CongressMpRajmohanUnnithan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசியப் பாடலான வந்தே மாதரம் முழுமையாகப் பாடுவது குறித்து தலைமைச் செயலாளர் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தாரா என்பது தனக்குத் தெரியாது என்று கூறிய உன்னிதன், "நரேந்திர மோடி எங்களைச் சுட்டுக் கொல்வதாக மிரட்டினாலும்" முழுமையாகப் பாடப்படாது என்று கூறினார். இதுவரை பாடப்பட்டு வந்த முறையிலேயே அது பாடப்படும். அதற்கு மேல் எதுவும் பாடப்படாது என்று அவர் உறுதியாகக் கூறினார்.</p><h2>லோக் பவன்கள் தரங்கெட்ட அரசியலின் மையங்களாக மாறிவிட்டது</h2><p>மேலும், லோக் பவன்கள் (கவர்னர் மாளிகை) தரங்கெட்ட அரசியலின் மையங்களாக மாறிவிட்டதாகவும், ஆளுநர்கள் இப்போது பண பலத்தைக் கொண்டு ஜனநாயகத்தைச் சீர்குலைக்க செயல்படுகிறது. அப்படியிருக்க, ஆளுநர்களிடமிருந்து நாம் என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்? அவர்கள் அனைவரும் மத்திய அரசின் அடிவருடிகளாக மாறிவிட்டனர். வந்தே மாதரத்தை முழுமையாகப் பாடுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வாழ்நாளில் அது நடக்காது. என்றார்.</p><p>2022-ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை போற்றும் வகையில் ஆசாதி கா அமரித் மஹோத்சவ் என்ற பிரசாரம் தொடங்கப்பட்டது. இந்த பிரசாத்தின்நோக்கம், ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்பதுதான். தேசியக்கொடி ஏற்றி அதன் வீடியோவை பதவிடலாம் என மத்திய அரசு தெரிவித்தது.</p><h2>வந்தே மாதரம் பாடல் உருவாகி 150 வருடம்</h2><p>இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடல் உருவாகி 150 வருடம் ஆகிறது. இதை சிறப்பிக்கும் வகையில் கொடி ஏற்றுவதுடன் வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டும் என்று மத்திய கலாச்சார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் கேரள மாநில தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.</p><p>இதன் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கிடையே தேசியப் பாடலை முழுமையாகப் பாடுமாறு உத்தரவிட்டு வெளியிடப்பட்ட இந்தக் கடிதத்தை எதிர்க்கட்சியான சிபிஐ (எம்) விமர்சித்துள்ளதுடன், அதைத் திரும்பப் பெறுமாறும் கோரியுள்ளது. அத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிப்பதன் மூலம் மாநில அரசு ஆர்எஸ்எஸ்-இன் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்து வருவதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கார் வர தாமதமானதால் ஆட்டோவில் பயணித்த மத்திய மந்திரி சுரேஷ்கோபி! </title><link>https://www.maalaimalar.com/news/national/suresh-gopi-travels-by-auto-as-official-car-delayed-in-alappuzha-event</link><comments>https://www.maalaimalar.com/news/national/suresh-gopi-travels-by-auto-as-official-car-delayed-in-alappuzha-event#comments</comments><guid isPermaLink="false">43580e86-7864-4f2f-9773-2107fe6c83f6</guid><pubDate>Sun, 09 Aug 2026 07:38:29 +0000</pubDate><atom:updated>2026-08-09T07:38:29.627Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>alappuzha,Sureshgopi,சுரேஷ்கோபி,Vandebharat,CentralMinister,AutoRide,ஆட்டோபயணம்,TrichurMP</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/nx724bos/Suresh-Gopi" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Suresh Gopi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/nx724bos/Suresh-Gopi?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலம் திருச்சூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும், மத்திய மந்திரியுமான சுரேஷ்கோபி, மிக எளிமையான தனது செயல்பாட்டால் பலரையும் ஈர்த்து வருகிறார். </p><p>அதனை நிரூபிக்கும் வகையில் ஆலப்புழாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><h2><strong>ஆலப்புழா நிகழ்ச்சியில் என்ன நடந்தது?</strong></h2><p>ஆலப்புழாவில் நடைபெற்ற ஒரு தனியார் நிறுவன திறப்பு விழாவில் மத்திய மந்திரி சுரேஷ்கோபி பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவர், தனது கார் வராததால் சிறிது நேரம் காத்திருந்தார். இருப்பினும் அவருக்கான அதிகாரபூர்வ வாகனம் வரவில்லை.</p><h2>ஆட்டோவில் பயணம் - பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி:</h2><p>இதனால் சிறிதும் கவலை கொள்ளாத அவர், அந்த வழியாக வந்த ஆட்டோவை அழைத்து அதில் ஏறி பயணம் செய்தார். இதனை கண்ட அவருடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்சி அடைந்தனர். "கார் விரைவில் வந்து விடும்" என அவர்கள் கூறினர். இருப்பினும் மத்திய மந்திரி சுரேஷ்கோபி ஆட்டோவில் தனது பயணத்தை தொடர்ந்தார்.</p><h2><strong>பாதுகாப்பு வாகனங்கள் - டிரைவருக்கு ரூ.1000:</strong></h2><p>இதனை தொடர்ந்து அந்த ஆட்டோவிற்கு பாதுகாப்பு அளித்து பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. இதனை கவனித்த உள்ளூர் மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். </p><p>ஆட்டோவில் முன்னாள் எம்.பி. ஆரிப் வீட்டிற்கு சென்ற மத்திய மந்திரி சுரேஷ்கோபி, ஆட்டோவில் இருந்து இறங்கியதும், டிரைவருக்கு ரூ. 1000 கொடுத்துச் சென்றார்.</p><h2><strong>திருவனந்தபுரம் பயணம்:</strong></h2><p>பின்னர் அவர் முன்னாள் எம்.பி.ஆரிப்பை சந்தித்து பேசினார். அப்போது அவரது அதிகாரப்பூர்வ வாகனம் வந்தது. பின்னர் அதில் ஏறி அவர் ஆலப்புழா ரெயில் நிலையம் சென்றார். அங்கிருந்து வந்தேபாரத் ரெயில் மூலம் திருவனந்தபுரம் சென்றார்.</p><h2><strong>இதற்கு முன்பும் இதே போன்ற அனுபவம்:</strong></h2><p>கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருச்சூரில் உள்ள வடக்குநாதன் கோவில் அருகிலும், ஹரிப்பாட்டில் உள்ள மன்னாரசாலை கோவிலில் பங்கு கொண்ட நிகழ்ச்சிகளிலும் மத்திய மந்திரி சுரேஷ்கோபிக்கு இது போன்ற அனுபவம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>போலீசார் விளக்கம்:</strong></h2><p>இதற்கிடையில் மத்திய மந்திரிக்கான பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதா? என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் ஏற்படவில்லை. மராரியில் உள்ள ஓட்டலில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அவர் பயணம் செய்வதற்காக, ஒரு வழிகாட்டி வாகனமும் ஒரு துணையாளரும் வழங்கப்பட்டிருந்தனர். </p><p>ஆனால் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, அதிகாரப்பூர்வ கார் ஜவுளிக் கடையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. </p><p>கடையிலிருந்து வெளியே வந்த மத்திய மந்திரி கார் அருகில் இல்லாததால் ஒரு ஆட்டோவில் சென்றார்" என தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பணியிடத்தில் மனரீதியாக துன்புறுத்திய மேனேஜர்  - விஷம் குடித்த பெண்</title><link>https://www.maalaimalar.com/news/national/woman-drinks-poison-after-workplace-harassment-by-manager-in-mysuru</link><comments>https://www.maalaimalar.com/news/national/woman-drinks-poison-after-workplace-harassment-by-manager-in-mysuru#comments</comments><guid isPermaLink="false">9c5e0152-7834-413f-9d61-cd3dd0931d11</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:41:53 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:41:53.405Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,தற்கொலை,suicide,Mysuru,மைசுர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/evbtb7c5/Untitled-design-22.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karnataka]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/evbtb7c5/Untitled-design-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மைசூரில் 45 வயது பெண் ஒருவர், தான் வேலை செய்த இடத்தில் மேற்பார்வையாளர் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.</p><p>கர்நாடகா மாநில மைசூரில் நகேஸ்வரி என்பவர் பல ஆண்டுகளாக ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு மேற்பார்வையாளர் தான் வாராந்திர விடுப்புகள் கேட்டபோது அதை மறுத்துவந்ததாக கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.</p><h3><strong>பணியிடத்தில் மன உளைச்சல்</strong></h3><p>மேலும் ஆரம்பத்தில் இருந்தே தன் மீது தவறுகள் இல்லாதபோதிலும், தவறுகளை ஒப்புக்கொள்ளும்படி வருபுறுத்தியதாகவும், உடல்நலக்குறைவு காரணமாக இரண்டு மூன்று நாட்கள் பணிக்கு வராததால், திடீரென தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் நாகேஸ்வரி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.    </p><p>பணியிடத்தில் தனக்கு அளிக்கப்பட்ட மன உளைச்சலால், இந்த விபரீத முடிவை எடுக்க தான் நிர்பந்திக்கப்பட்டதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.</p><h3>கணவர் புகார்</h3><p>முன்னதாக இதுகுறித்து நாகேஸ்வரியின் கணவர் அசோக் கூறுகையில், “நான் மதியம் முழுவதும் அவளிடம் பேச பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அப்போது எந்தவிதமான பதிலும் எனக்கு கிடைக்கவில்லை.</p><p>இதனால் நான் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தேன். அப்பொழுது அவள், தரையில் மயங்கிய நிலையில் கிடந்தார். நான் உடனே எனது மனைவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்.</p><p>அங்கு என் மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவள் இறந்துவிட்டதாக கூறினார்கள். இதையடுத்து என் மனைவி வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்” என்று கூறினார்.</p><p>இந்த நிலையில் அசோக் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சபல புத்தி கொண்ட ஆண்களுக்கு வலைவிரித்து கோடிகளில் புரண்ட இளம்பெண்</title><link>https://www.maalaimalar.com/news/national/cheating-case-police-inquiry-woman</link><comments>https://www.maalaimalar.com/news/national/cheating-case-police-inquiry-woman#comments</comments><guid isPermaLink="false">eeda8bf9-f65c-46e2-9632-e11834d60f0b</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:30:57 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:30:57.024Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வழக்கு,மோசடி,money,Case,உல்லாசம்,cheating,பணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2oogxp7q/moeny.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cheating]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2oogxp7q/moeny.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>ஆன்லைன்</strong></h2><p>ஆன்லைன் மூலமாக இன்று அத்தனையையும் பெற்று விட முடிகிறது. இதனால் இளைஞர்களும், இளம் பெண்களும் வேறு விதமாகவும் சிந்திக்கிறார்கள். சமூக வலைதளங்கள் மூலமாக இளைஞர்கள் பல்வேறு தவறான வழிகளிலும் திசைமாறி சென்றுக் கொண்டு இருக்கிறார்கள். </p><h2><strong>கலாசார சீரழிவு</strong></h2><p>ஒரு ஆண்ணும், பெண்ணும் பேசி பழகி தான் வெளியில் செல்ல வேண்டும் என்கிற நிலை எல்லாம் இப்போது இல்லை. வெளியில் ஒன்றாக சுற்றுவதற்கு இளம்பெண்களை ஆன்லைனிலேயே தேர்வு செய்யும் அளவுக்கு கலாசார சீரழிவு ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>உல்லாசம்</strong></h2><p>பல்வேறு செயலிகள் இதற்காக தொடங்கப்பட்டு ஆண்களுக்கும், பெண்களுக்கும் வலைவிரித்து கொண்டுள்ளன. குறிப்பாக செயலிகள் மூலமாக பெண்களை தேர்வு செய்து அவர்களுடன் வெளியில் தங்கி உல்லாசமாக வாழ்வதையும் இளைஞர்கள் வழக்கப்படுத்தி வைத்துள்ளனர்.</p><h2><strong>மாநிலம்</strong></h2><p>தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே ஆபாச செயலிகள் மூலமாக பலரும் பணத்தை இழந்து வருகிறார்கள். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சபல புத்தி கொண்ட ஆண்களுக்கு வலைவிரித்து கோடிகளில் புரண்டுள்ளார்.</p><h2><strong>சாட்டிங்</strong></h2><p>உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற அந்த இளம்பெண் பல்வேறு பெயர்களில் சமூக வலைதள கணக்குகளை தொடங்கி அதில் சுறுசுறுப்பாக செயல்பட்டு உள்ளார். முகம் தெரியாத ஆண்களிடம் ஆரம்பத்தில் சாட்டிங்கில் பேசத் தொடங்கும் இவர் நாளடைவில் ஆபாசமான பேச்சுக்களையும் அள்ளி வீசியுள்ளார்.</p><h2>புகைப்படம்</h2><p>பல்லவி சிங்கின் இந்த மயக்கும் பேச்சில் வாலிபர்கள் பலர் கிறங்கி போய் கிடந்துள்ளனர். அதனை பயன்படுத்தி அவர்களோடு வெளியில் சென்று தனியறையில் தங்கியுள்ள பல்லவி சிங் அரைகுறை ஆடைகளோடு இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ரகசியமாக படம் பிடித்துள்ளார்.</p><h2><strong>பணம்</strong></h2><p>இதுபோன்ற ஆபாச வீடியோக்களை பயன்படுத்தி இதற்கு முன்னரும் பெண்கள் பலர் மிரட்டி பணம் பறித்துள்ள சம்பவங்கள் அரங்கேறியுள்ள போதிலும் பல்லவி சிங் அதன் மூலமாக பல கோடிகளை ரூபாயை பறித்து இருப்பது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.</p><h2><strong>வீடியோக்கள்</strong></h2><p>வசதிப் படைத்தவர்கள் வலையில் விழுந்ததும் பல்லவி சிங் தனது வேலையை காட்டத் தொடங்கிவிடுவார். உன்னுடைய ஆபாச வீடியோக்கள் என்னிடம் நிறைய உள்ளது. அதையெல்லாம் வெளியில் விட்டால் மானம் போய்விடும் என்று தன்னிடம் சிக்கும் வாலிபர்களிடம் பேசி அவர்களிடம் இருந்து அதிகளவில் பணத்தை கறப்பதே வாடிக்கையாக வைத்திருந்த பல்லவி சிங் ரூ.6 கோடி வரையில் சுருட்டி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை வீட்டில் ஒரு அறையில் அடுக்கி அதனை மெத்தையாகவும் மாற்றி இருக்கிறார்.</p><h2><strong>துப்பாக்கி</strong></h2><p>பின்னர் அந்த பண மெத்தையில் படுத்து புரளுவது போன்ற வீடியோக்களையும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த படி பல்லவி சிங் எடுத்த புகைப்படமும் அவரது பண மெத்தை வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனது மிரட்டலுக்கு பணியாத ஆண்களை பல்லவி சிங் சிறையிலும் தள்ளி இருக்கிறார்.</p><h2><strong>பாலியல் வன்கொடுமை</strong></h2><p>பணம் தர மறுத்து அடம்பிடிப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்து உள்ளார். இதுபோன்று 5 பேர் வரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றசாட்டுகள் கூறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>சிறை</strong></h2><p>பணம் தர மறுத்த பலரிடம் ஒழுங்காக தான் சொல்வதை கேட்காவிட்டால் சிறைக்கு தான் செல்ல வேண்டும். ஏற்கனவே 5 பேரை சிறையில் அடைத்துள்ளேன் என்று மிரட்டுவதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனால் பல்லவி சிங்குடன் தொடர்பில் இருந்த பெரிய மனிதர்கள் பலர் எங்கே தங்கள் மானம் போய்விடுமோ என்கிற பயத்தில் கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள்.</p><h2><strong>மோசடி</strong></h2><p>சுவீட்டி திவாரி என்கிற பெயரிலும் தனியாக சமூக வலைதள கணக்கை தொடங்கி அதன் மூலமாகவும் பல வாலிபர்களை பல்லவி சிங் தனது வலையில் வீழ்த்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவரது இந்த மோசடிக்கு மேலும் தோழிகள் இருவரும், ஆண் நண்பர்கள் 2 பேரும் பெரிய அளவில் உதவிகளை செய்து வந்துள்ளனர்.</p><h2><strong>கருத்து</strong></h2><p>இவர்கள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பல்லவி சிங்கின் இந்த செயல் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமுக வலைதளங்களில் அவரது இந்த செயலை பலரும் விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் சிலர் இப்படி எல்லாம் ஏமாற்ற முடியுமா? வாழ்ந்தா இப்படி வாழனும் என்பது போன்ற கருத்துக்களையும் கிண்டலுடன் பதிவிட்டு உள்ளனர்.</p><h2><strong>போலீசார்</strong></h2><p>இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உத்தரபிரதேச மாநில போலீசார் சமூக வலைதளங்களை பயன் படுத்துபவர்கள் தேவையில்லாமல், அறிமுகமில்லாம் நபர்களோடு பழகினால் இதுபோன்ற ஆபத்துகளில் சிக்க நேரிடும் என்றும் எனவே முன்பின் அறிமுகம் இல்லாதவர்களோடு ஆன்லைன் மூலமாக எந்த தொடர்பும் வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளனர். ஆபாச டேட்டிங் செயலியில் யாருடனாவது தொடர்பில் இருக்கிறீர்களா?... உஷார்.</p>]]></content:encoded></item><item><title>தாம்பத்தியத்தில் ஈடுபடாத கணவர் மீது வழக்கு தொடர்ந்த மனைவி - உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/marital-discord-cannot-be-treated-as-cruelty-karnataka-hc</link><comments>https://www.maalaimalar.com/news/national/marital-discord-cannot-be-treated-as-cruelty-karnataka-hc#comments</comments><guid isPermaLink="false">0c284109-dc28-48ab-b716-7200b23f8cb7</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:04:32 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:04:32.102Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Karnataka High Court,marriage,கர்நாடகா உயர் நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/j5svnm83/Untitled-design-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தாம்பத்தியம் இல்லாதது மட்டும் கொடுமை வழக்காகாது என்று நீதிமன்றம் தெளிவு ]]></media:title><media:description type="html"><![CDATA[ Karnataka High Court ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/j5svnm83/Untitled-design-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருமண வாழ்வில் பொருந்தாமை, இல்லறத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் அல்லது தாம்பத்திய உறவு முழுமையடையாமை ஆகியவற்றை, கொடுமைக்கான வழக்காக மாற்றுவதற்கு குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>கர்நாடகாவில் காவல்துறையில் பணிபுரியும் தம்பதிகளுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது.</p><p>திருமணமாகி நான்கு மாதங்களான நிலையில், அவர்களுக்குள் தாம்பத்தியம் நடைபெறவில்லை என்று கூறி திருமண உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து கர்நாடகாவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் திருமணமான அந்த பெண் அதிகாரி வழக்கு தொடர்ந்தார்.</p><p>இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 498A, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் பெண்ணின் கணவர் மீது காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.</p><h3><strong>உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்</strong></h3><p>இதைத்தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட கணவர் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது அவர், இந்திய தண்டனை சட்டம் 498A பிரிவின் கீழ், முழுமையடையாத திருமண உறவை ஒருபோதும் கொடுமைக்கான குற்றமாக பார்க்க முடியாது என்று வாதிட்டார்.</p><p>மறுபுறம் கணவர் குறித்து அவரின் மனைவி கூறுகையில், “நாம் நண்பர்களாக மட்டும் இருப்போம் என்று என் கணவர் தொடர்ந்து கூறி வந்தார். மேலும் அவர் மற்றொரு பெண்ணுடன் உறவில் இருக்கிறார்” என்று கூறினார்.</p><p>இந்த மனு நீதிபதி எம். நாகபிரசன்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொது நீதிபதி, “குறுகிய கால திருமண வாழ்வில் கணவர் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை என்ற ஒரே ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கின் முழு கட்டமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>நீதிபதி தீர்ப்பு</strong></h3><p>திருமண பொருத்தமின்மை, திருமண வாழ்வில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் அல்லது தாம்பத்திய உறவு முழுமையடையாமை ஆகியவற்றை கொடுமைக்கான வழக்காக மாற்றுவதற்கு குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது” என்று தீர்ப்பளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஜெயிலில் இருக்கும் காதலரை சந்திக்க துப்பாக்கி குண்டுகளுடன் சென்ற மைனர் காதலி: சொன்ன பதில்தான் ஹைலைட்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/10-bullets-in-pocket-up-girl-visits-jail-to-meet-lover-then-this-happens</link><comments>https://www.maalaimalar.com/news/national/10-bullets-in-pocket-up-girl-visits-jail-to-meet-lover-then-this-happens#comments</comments><guid isPermaLink="false">c0708711-71c4-413b-9cc4-ff5d94c785d0</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:29:02 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:29:02.873Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தர பிரதேசம்,jail</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/dnkz39se/PoliceStation.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹோண்டா சிறைச்சாலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/dnkz39se/PoliceStation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் உள்ள சிறையில் வாலிபர் ஒருவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஒரு நபரின் துணையோடு மைனர் பெண் ஒருவர் (பள்ளி மாணவி) சந்திக்க சென்றுள்ளார். அப்போது, போலி அடையாள அட்டையை சிறைச்சாலை நுழைவாயில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.</p><p>அப்போது, கட்டாய சோதனை என்ற அடிப்படையில் அந்த சிறுமியிடம் சோதனை நடத்தியுள்ளனர். அப்போதுதான் அவர் போலி அடையாள அட்டையுடன் வந்ததுடன், பாக்கெட்டில் 10 துப்பாக்கி குண்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.</p><p>இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, என்னுடைய காதலரை சந்திக்க வந்தது என்னுடைய அப்பாவுக்கு தெரியாது. தனது தந்தைக்கு கோபம் அதிகம். சிறையில் உள்ள தன் காதலனை சந்திக்கச் சென்றது தெரிந்தால் அவர் தீவிரமான அல்லது கடுமையான நடவடிக்கையை எடுப்பார். அதனால்தான் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை எடுத்து வந்ததாக தெரிவித்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து அந்த மைனர் பெண்ணை சிறைத்துறை அதிகாரிகள் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த பெண்ணின் தந்தை லைசென்ஸ் துப்பாக்கி வைத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்: போராட்டத்தில் பங்கேற்றவர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-pays-tribute-to-quit-india-movement-heroes</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-pays-tribute-to-quit-india-movement-heroes#comments</comments><guid isPermaLink="false">9a89ee1d-ea00-44f5-b75f-f13ae99ee45c</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:16:54 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:16:54.287Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித்ஷா,pm modi,Quit India Movement Day,PM Modi வெள்ளையனே வெளியேறு நினைவு தினம்,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/yzhxl1md/pm-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/yzhxl1md/pm-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் 'வெள்ளையனே வெளியேறு' எனும் இயக்கம் 1942-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.</p><p>பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கமான ஆகஸ்ட் புரட்சி என அழைக்கப்படும் இந்தப் போராட்டம் மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினையடுத்து 1942, ஆகஸ்ட் 9 அன்று தொடங்கப்பட்டது.</p><h2>வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்</h2><p>இதில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9-ம் தேதி 'கிராந்தி திவஸ்' எனும்  பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.</p><p>இந்நிலையில், வெள்ளையனே வெளியேறு போராட்ட தினத்தில் பங்கேற்றவர்கள் குறித்து பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.</p><p>இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><h2>நினைவு கூர்ந்த பிரதமர் மோடி</h2><p>வரலாற்றுச் சிறப்புமிக்க 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் நினைவு கூர்கிறோம். அவர்களின் துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றும் ஓர் உத்வேகமாகத் திகழும்.</p><p>மகாத்மா காந்தியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு, 'வெள்ளையனே வெளியேறு' என்ற அந்த முழக்கம் நமது விடுதலைப் போராட்டத்திற்குப் புதிய ஆற்றலை ஊட்டியது.</p><p>அத்துடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபடுவதற்கான நமது மக்களின் அசைக்க முடியாத உறுதியையும் அது வெளிப்படுத்தியது' என பதிவிட்டுள்ளார்.</p><h2>செய் அல்லது செத்து மடி</h2><p>இதேபோல், உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், வெள்ளையனே வெளியேறு இயக்கம் நமது சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று அத்தியாயமாகும், இது நாட்டு மக்களை ஒருங்கிணைத்து, ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற செய் அல்லது செத்து மடி என்ற உறுதியையும், துணிவையும் அவர்களுக்கு வழங்கியது. தேசத்தின் விடுதலைக்காக இந்த மாபெரும் போராட்டத்தில் அனைத்தையும் தியாகம் செய்த சுதந்திரப் போராளிகள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்</p>]]></content:encoded></item><item><title>பள்ளி வினாடி வினாவில் சாவர்க்கர் குறித்த கேள்வி: கேரளாவில் வெடித்தது அரசியல் சர்ச்சை</title><link>https://www.maalaimalar.com/news/national/savarkar-question-in-kerala-school-quiz-sparks-big-political-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/savarkar-question-in-kerala-school-quiz-sparks-big-political-row#comments</comments><guid isPermaLink="false">66ffb7f0-cc60-4708-a3aa-82286f15e89d</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:46:58 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:46:58.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாவர்க்கர்,Savarkar,கேரளா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/kidp19h1/Savarkar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாவர்க்கர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/kidp19h1/Savarkar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற வினாடி வினா நிகழ்ச்சியில் இடம்பெற்ற வீர சாவர்க்கர் தொடர்பான கேள்வி, தற்போது மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சாவர்க்கர்</h2><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த வினாடி வினாவில், "ஆங்கிலேயர்களால் மிகக் கடுமையான தண்டனை பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் யார்?" என்ற கேள்வி இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கான பதிலாக வி.டி. சாவர்க்கர் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p>இந்தக் கேள்வியின் வரலாற்று அணுகுமுறை குறித்து இடதுசாரி அமைப்புகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அரசியல் தரப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான கேரள அரசு, சங் பரிவார் திட்டத்தை கல்வித்துறையில் அனுமதிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளன.</p><p>இதையடுத்து, கேரள பொதுக் கல்வித்துறை அமைச்சர் என். சம்சுதீன் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த வினாடி வினா அரசின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் நடத்தப்படவில்லை என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கேள்வியைத் தயாரித்தவர்கள் யார், அதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><p>சமூக அறிவியல் மன்றம் அல்லது பொதுக் கல்வித் துறை ஆகியவற்றின் செயல்பாட்டுத் திட்டத்தில் இந்த வினாடி-வினா நிகழ்ச்சி இடம்பெறவில்லை. மேலும், கேள்விகளைத் தயாரிக்கவோ அல்லது போட்டியைத் தனிப்பட்ட முறையில் நடத்தவோ இவ்விரு அமைப்புகளும் யாரையும் அங்கீகரிக்கவில்லை என்று கல்வித்துறை அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><h2>பினராயி விஜயன்</h2><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும் கேரள முதல்வருமான பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் யு.டி.எஃப். (UDF) அரசு "கூட்டுச் சதி" செய்வதாகக் குற்றம் சாட்டினார். மேலும் சாவர்க்கரின் "உண்மையான வரலாற்றை" மறைத்து அவரைப் பெருமைப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் கூறினார். மேலும், கேரளாவில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சிகளின் பின்னணியிலும் இந்தப் பிரச்சினையைப் பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.</p><p>மாநிலத்தின் பொதுக் கல்வித் துறையை "காவிமயமாக்குவதற்கும்", சுதந்திரப் போராட்ட வரலாற்றைத் திரிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாகவே அந்த வினாடி-வினா (quiz) கேள்வி அமைந்திருந்ததாக முன்னாள் பொதுக் கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி குற்றம்சாட்டினார்.</p><p>ஆங்கிலேயர்களிடமிருந்து மிகக் கடுமையான தண்டனையைப் பெற்ற சுதந்திரப் போராட்ட வீரராகச் சாவர்க்கரைச் சித்தரிப்பது ஆட்சேபனைக்குரியது என்று கூறிய அவர், அக்கேள்வி தவறான வரலாற்றைப் பரப்பும் முயற்சியாக அமைந்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.</p><h2>சிவன்குட்டி</h2><p>விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய அந்தக் கேள்வியையும் அதற்கான பதிலையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சிவன்குட்டி வலியுறுத்தினார்.</p><p>மேலும், பொதுக் கல்வித் துறை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>காவல் பணி, பேரிடர் மீட்பு உள்ளிட்ட அரசுப் பணிகளில் ட்ரோன்கள் அறிமுகம்: டெல்லி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-drone-policy-to-enable-use-in-police-work-disaster-management-and-transport</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-drone-policy-to-enable-use-in-police-work-disaster-management-and-transport#comments</comments><guid isPermaLink="false">b2650ad9-b391-48de-8950-3e481e697f36</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:23:12 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:23:12.353Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,டெல்லி,drone policy,ட்ரோன் கொள்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/gprma12l/Untitled-design-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காவல் பணி, பேரிடர் மீட்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்கு ட்ரோன்கள் பயன்பாடு]]></media:title><media:description type="html"><![CDATA[ Delhi Drone Policy Jobs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/gprma12l/Untitled-design-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் முன்மொழியப்பட்ட ட்ரோன் கொள்கையின்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் தெரிவித்தார்.</p><p>தற்போது உருவாக்கப்பட்டு வரும் இந்தக் கொள்கையானது, ட்ரோன் ஆராய்ச்சி மையங்களை நிறுவுதல், பிரத்யேக விமானப் பரிசோதனை வசதிகளை ஏற்படுத்துதல், போக்குவரத்து மேலாண்மைக்கு ட்ரோன்களை பயன்படுத்துதல் மற்றும் ட்ரோன் சூழலமைப்பை மேம்படுத்த மானியங்கள் வழங்குதல் ஆகியவற்றை வலியுறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>டெல்லி ட்ரோன் கொள்கை</strong></h3><p>இதுகுறித்து அமைச்சர் பங்கஜ் சிங் கூறுகையில், “வேலைவாய்ப்புகளுடன், பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட ட்ரோன் செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக ஒரு விரிவான ட்ரோன் கொள்கை திட்டமிடப்பட்டு வருகிறது. கொள்கை தயாராக உள்ளது;  </p><p>ஒரு மாதத்தில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இதைச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தக் கொள்கையானது அரசாங்கத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையால் உருவாக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.</p><p>இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “தவறான பயன்பாட்டை தடுப்பதற்காக ட்ரோன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல், கண்காணிப்பு மற்றும் வரைப்படமிடலுக்காக அரசு நிறுவனங்கள் ட்ரோன்களை பயன்படுத்த வழிவகை செய்தல், மற்றும் DGCA-வின் டிஜிட்டல் ஸ்கை தளத்துடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்களாகும்.</p><p>இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கும், தேவையான துணை உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் அரசு தனி நிதி ஒதுக்கீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.</p><p>இந்த நிகழ்வுகளின் கீழ் பொது விழிப்புணர்வு மற்றும் அமலாக்கம், மக்களைச் சென்றடைதல், மண்டல அடையாளப் பலகைகள், விழிப்புணர்வு பட்டறைகள், பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்புக்கான நிலையான இயக்க நடைமுறைகள் ஆகிய ஐந்து முக்கியப் பகுதிகளை மையமாகக் கொண்டு இந்தக் கொள்கை வகுக்கப்படும்.</p><p>டெல்லி ட்ரோன் கொள்கையின் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் தலைமையில் அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது.</p><h3><strong>அரசுத் துறைகளில் ட்ரோன் பயன்பாடு</strong></h3><p>மேலும், நகருக்குள் காவல் பணி, பேரிடர் மீட்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்ட அரசாங்கப் பணிகளுக்காகவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.</p><p>ரியல் எஸ்டேட் திட்டங்கள், தொலைத்தொடர்பு மற்றும் ஊடகத் துறைகளில் ட்ரோன்களின் பயன்பாட்டைத் திட்டமிடுவதையும் இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p>டெல்லியில், பல முக்கிய பிரமுகர்களின் இருப்பிடங்கள் காரணமாக, கிட்டத்தட்ட 60 சதவீதப் பகுதி ட்ரோன் இல்லாக மண்டலமாக உள்ளன.</p><p>எனவே அந்த வரம்புகளை கருத்தில் கொண்டு, இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளிகளில் ட்ரோன் விழிப்புணர்வுப் பட்டறைகள், சிறப்பு மையங்களை உருவாக்குதல், தொலைநிலை விமானி பயிற்சி நிறுவனங்களை அமைத்தல் மற்றும் விமானி பயிற்சித் திட்டங்கள் போன்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறார் பாதுகாப்புக்காக &apos;ஷீல்டு&apos; மசோதா: மீறினால் ரூ.10 கோடி அபராதம் விதிக்க முன்மொழிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/shield-bill-for-child-safety-rs-10-crore-penalty-proposed-for-violations</link><comments>https://www.maalaimalar.com/news/national/shield-bill-for-child-safety-rs-10-crore-penalty-proposed-for-violations#comments</comments><guid isPermaLink="false">ffece0f6-cd13-4837-9f3f-09372baa2b45</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:16:22 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:16:22.930Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Violations,Child safety,அபராதம்,சிறுவர் பாதுகாப்பு,ஷீல்டு மசோதா,shield bill</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/fnqi8b3p/Baji.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/fnqi8b3p/Baji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகள் சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஆன்லைன் கேமிங் கணக்குகளைத் தொடங்க தடை விதிக்க வகை செய்யும் தனிநபர் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆவதற்கு தயார் செய்யப்பட்டு உள்ளது.</p><h2>'ஷீல்டு' மசோதா</h2><p>சமூக ஊடகங்கள் வயது வித்தியாசமின்றி அனைவரையும் கட்டிப்போடுகின்றன. இதில் சிறுவர்-சிறுமிகள் பலர் அடிமைகளாக உள்ளனர். இதனால் அவர்கள் சில நேரங்களில் ஆபாச படங்களைப் பார்க்க நேரிடுகிறது. அதுபோல ஆன்லைன் கேமிங்கில் பைத்தியம் பிடித்தவர்கள் போல ஆகிவிடுகிறார்கள். இது சமூகத்துக்கு கேடு தரும் செயலாக பார்க்கப்படுகிறது.</p><p>எனவே இதனை தடுப்பதற்காகவும், சிறார் பாதுகாப்புக்காகவும் பா.ஜ.க எம்.பி. பைஜெயந்த் பாண்டா, ஒரு தனிநபர் மசோதாவை தயார் செய்துள்ளார். இளம் டிஜிட்டல் தலைமுறையினருக்கான ஆரோக்கியமான இணையச் சூழல்களைப் பாதுகாத்தல் (ஷீல்டு) மசோதா-2025' என அந்த மசோதாவுக்கு பெயரிடப்பட்டு உள்ளது.</p><h2>கட்டுப்பாடுகள்</h2><p>13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஆன்லைன் கேமிங் கணக்குகள் தொடங்குவதற்கு இந்த மசோதா கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதற்காக, சம்பந்தப்பட்ட தளங்கள் வயது சரிபார்ப்பு, பெற்றோர் கட்டுப்பாடுகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்கள் மீதான கட்டுப்பாடுகள் போன்றவற்றை விதிக்க வேண்டும் என இந்த மசோதா வலியுறுத்துகிறது.</p><p>சிறுவர்கள் ஆபாசப் படங்கள், சூதாட்டம், பந்தயம், வன்முறை அல்லது பயங்கரவாத உள்ளடக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான உள்ளடக்கங்களை அணுகுவதைத் தடுக்க இந்தத் தளங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.</p><p>இதில் செய்யப்படும் மீறல்களுக்கு ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கவும் முன்மொழியப்பட்டு உள்ளது. மேலும் மீண்டும் மீண்டும் அல்லது வேண்டுமென்றே மீறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ-ன் கீழ் அந்த தளங்களின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம் அல்லது தடுக்கப்படலாம் என்பதையும் மசோதா முன்மொழிகிறது.</p><h2>அரிது</h2><p>இந்த மசோதாவை நேற்று முன்தினம் தாக்கல் செய்யலாம் என பைஜெயந்த் பாண்டா நினைத்திருந்தார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டதால் அது ஈடேறவில்லை. இதுபோல ஏற்கனவே 2 முறை அவர் முயற்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>மேலும், தனிநபர்களின் தத்ரூபமான சாயல்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன் படுத்துவதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் தயார் செய்யப்பட்ட ஒரு தனிநபர் மசோதாவையும் தாக்கல் செய்ய முடியவில்லை. பொதுவாக தனிநபர் மசோதாக்கள் சட்டமாக இயற்றப்படுவது அரிது.</p><p>சுதந்திரத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் 12 தனிநபர் மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு: சம்பளம் ரூ.60,000 முதல் 1,80,000 வரை</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-airports-authority-recruitment-salary-rs-60000-to-180000</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-airports-authority-recruitment-salary-rs-60000-to-180000#comments</comments><guid isPermaLink="false">024790ce-deaf-4f1a-b33c-613b266cd2c3</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:26:08 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:26:08.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காலி பணியிடம்,வேலைவாய்ப்பு,airport authority of india,AAI,Job Vacancy,இந்திய விமான நிலைய ஆணையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/qg3evdh3/Untitled-design-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Manager and Junior Executive vacancies with salary up to Rs 1.8 lakh]]></media:title><media:description type="html"><![CDATA[ AAI Recruitment 2026]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/qg3evdh3/Untitled-design-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய விமான நிலைய ஆணையம் (AAI), பல்வேறு துறைகளில் மேலாளர்கள் மற்றும் இளநிலை நிர்வாகிகள் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>இந்த அறிவிப்பின்படி, தகுதியான விண்ணப்பத்தாரர்கள் AAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த வேலைவாய்ப்பில் சிவில், எலெக்ட்ரிக்கல், நிதி, தகவல் தொழில்நுட்பம், கட்டிடக்கலை, சட்டம், தீயணைப்புத் துறை, செயல்பாடுகள் (operations), வணிகம், பெருநிறுவன தொடர்பியல் (corporate communications) மற்றும் பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கான ஆள்சேர்ப்பு முறை கணினி வழி தேர்வுகள்  மூலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>வயது வரம்பு</strong></h3><p>AI ஆட்சேர்ப்புக்கான தகுதி நிபந்தனைகள் வெளியாகியுள்ளது. அதன்படி மேலாளர் பணிக்கு, 2026 செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இளநிலை நிர்வாகி பணிக்கு, 7 செப்டம்பர் 2026 அன்று அதிகபட்சமாக 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.</p><p>மேலும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. இதில் பட்டியல் சாதியினர் (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC - Non-Creamy Layer) 3 ஆண்டுகளும் அடங்கும்.</p><p>அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு பெறலாம்.</p><p>மேலாளர் பதவிகளுக்கு, துறையைப் பொறுத்து, தொடர்புடைய இளங்கலை அல்லது முதுகலைப் பட்டத்துடன் மூன்று வருட பணி அனுபவமும் தேவைப்படுகிறது.</p><h3><strong>துறைகள்</strong></h3><p>நிதி, சட்டம், செயல்பாடுகள், மற்றும் நில அளவை மற்றும் நிலப்படவியல் ஆகிய துறைகளில் உள்ள இளநிலை நிர்வாகி பதவிகளுக்குக் குறிப்பிட்ட கல்வித் தகுதிகள் தேவைப்படுகின்றன, அதே சமயம் இந்தப் பதவிகளுக்குப் பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.</p><p>மேலாளர் (நிறுவனத் தொடர்பியல்) பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் மக்கள் தொடர்பியல், இதழியல் அல்லது அது தொடர்பான துறைகளில் இளங்கலைப் பட்டத்துடன், மூன்று வருடங்கள் தொடர்புடைய பணி அனுபவத்தையும் பெற்றிருக்கலாம்.</p><p>விண்ணப்பதாரர்கள், நிர்ணயிக்கப்பட்ட கடைசித் தேதிக்குள், அனைத்து கல்வித் தகுதி மற்றும் அனுபவத் தேவைகளையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h3><strong>சம்பளம்</strong></h3><p>மேலாளர் பதவிகளுக்கான சம்பள விகிதம் ரூ. 60,000-3%-ரூ. 1,80,000 ஆகவும், இளநிலை நிர்வாகி பதவிகளுக்கான சம்பள விகிதம் ரூ. 40,000-3%-ரூ. 1,40,000 ஆகவும் உள்ளது. மேலாளர்களுக்கான தோராயமான ஆண்டு மொத்த சம்பளம் (CTC) ரூ. 21 லட்சமாகவும், இளநிலை நிர்வாகிகளுக்கானது ரூ. 14 லட்சமாகவும் உள்ளது.</p><p>இந்திய விமான நிலைய ஆணையத்தில் மேலாளர் மற்றும் இளநிலை நிர்வாகி பதவிகளில் 389 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h3><strong>கடைசி தேதி</strong></h3><p>மொத்தம் 389 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் செப்டம்பர் 7, 2026 வரை தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>காலி பணியிடங்கள்</strong></h3><p>அதில், மேலாளர் (பொறியியல்-சிவில்) / Manager (Engineering-Civil): 145</p><p>மேலாளர் (பொறியியல்-மின்சாரம்)/(Engineering-Electrical): 16</p><p>மேலாளர் (நிதி)/(Finance): 34</p><p>மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்)/(Information Technology): 5</p><p>மேலாளர் (கட்டிடக்கலை)/(Architecture): 4</p><p>மேலாளர் (சட்டம்)/(Law): 2</p><p>மேலாளர் (தீயணைப்பு சேவைகள்)/(Fire Services): 14</p><p>மேலாளர் (செயல்பாடுகள்)/(Operations): 28</p><p>மேலாளர் (வணிகம்)/(Commercial): 9</p><p>மேலாளர் (நிறுவனத் திட்டமிடல் மற்றும் மேலாண்மை சேவைகள்)/(Corporate Planning &amp; Management Services): 1</p><p>மேலாளர் (நிறுவனத் தொடர்புகள்)/(Corporate Communications): 2</p><p>இளநிலை நிர்வாகி (நிதி)/(Finance): 36</p><p>இளநிலை நிர்வாகி (சட்டம்)/(Law): 6</p><p>இளநிலை நிர்வாகி (செயல்பாடுகள்)/(Operations): 79</p><p>இளநிலை நிர்வாகி (நில அளவை மற்றும் வரைபடவியல்)/(Survey &amp; Cartography): 8</p><p>தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை கவனமாகப் படித்து, அனைத்து விவரங்களும் ஆவணங்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையரைக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு .. பாஜகவுடன் மீண்டும் மலரும் கூட்டணி?</title><link>https://www.maalaimalar.com/news/national/akali-dal-backs-delimitation-and-womens-quota-bill-after-modi-meet-key-shift-in-punjab-politics</link><comments>https://www.maalaimalar.com/news/national/akali-dal-backs-delimitation-and-womens-quota-bill-after-modi-meet-key-shift-in-punjab-politics#comments</comments><guid isPermaLink="false">da3a6661-c71f-4cfc-8777-9c64ee4ade5a</guid><pubDate>Sat, 08 Aug 2026 23:41:39 +0000</pubDate><atom:updated>2026-08-08T23:41:39.927Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sukhbir Singh Badal,Shiromani Akali Dal,Delimitation,தொகுதி மறுவரையரை,சிரோமணி அகாலி தளம்,சுக்பீர் சிங் பாதல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5uhk3u0x/tn-52.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுக்பீர் சிங் பாதல், மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ சுக்பீர் சிங் பாதல், மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5uhk3u0x/tn-52.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பஞ்சாபில் முக்கிய மாநில கட்சியாக விளங்கும் சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் நேற்று முன் தினம் டெல்லியில் பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். </p><p>இதன் மறுநாள், அதாவது நேற்று, முக்கிய அரசியல் திருப்பமாகதொகுதி மறுவரையறை  மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு தமது கட்சி ஆதரவு அளிப்பதாக சுக்பீர் சிங் பாதல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  </p> <h2>ஆதரவு</h2><p>நேற்று சண்டிகரில் நடைபெற்ற கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு, சுக்பீர் சிங் பாதல் வெளியிட்ட அறிக்கையில்,</p><p>"நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைச் செயல்பாடுகளுக்கு அகாலி தளம் முழு ஆதரவு அளிக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் நியாயமான முறையில் இது செயல்படுத்தப்பட வேண்டும்.</p><p>அனைத்து மாநிலங்களுக்கும் சீரான முறையில் 50% நாடாளுமன்றத் தொகுதிகளை உயர்த்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள யோசனையை அகாலி தளம் ஆதரிக்கிறது.</p><p>சீக்கிய குருமார்களின் போதனைகளைப் பின்பற்றி, பெண்களுக்குச் சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் உடனடி இடஒதுக்கீடு வழங்குவதை அகாலி தளம் வலியுறுத்துகிறது." என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீட்டிற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைத் திரட்டி வரும் நிலையில், அகாலி தளத்தின் இந்த ஆதரவு நிலைப்பாடு தேசிய அரசியலிலும், பஞ்சாப் மாநில அரசியலிலும் மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. சிரோமணி அகாலி தளம் வசம் 1 எம்.பி உள்ளது குறிப்பிடத்தக்கது.</p> <h2>கூட்டணி</h2><p>2020ஆம் ஆண்டு மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அகாலி தளம் வெளியேறியது.</p><p>பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும் இரு பழைய தோழமைகளும் மீண்டும் இணைய வேண்டிய சூழல் நிலவுவதாகக் கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.</p><p>பிரதமர் மோடியுடன் சுக்பீர் சிங் பாதல் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் நேர்மறையாக அமைந்ததாகவும், பஞ்சாபின் வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டணி புதுப்பிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.</p><p>இதன் மூலம் பஞ்சாபில் பாஜக - அகாலி தளம் இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தேன் பொறியில் சிக்கிய விமானப்படை விங் கமாண்டர்.. ராணுவ ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கைது </title><link>https://www.maalaimalar.com/news/national/indian-air-force-officer-honey-trapped-and-arrested-in-delhi-for-leaking-military-secrets</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-air-force-officer-honey-trapped-and-arrested-in-delhi-for-leaking-military-secrets#comments</comments><guid isPermaLink="false">dd9a607a-af44-4c63-a680-fd9724747d85</guid><pubDate>Sat, 08 Aug 2026 23:09:29 +0000</pubDate><atom:updated>2026-08-08T23:09:29.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானப்படை,Air Force,spy,ஹனி டிராப்,Honey Trap,உளவாளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/w85906na/tn-57.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/w85906na/tn-57.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய விமானப்படை விங் கமாண்டர் ஒருவர் ஹனி டிராப் எனப்படும் தேன் பொறியில் சிக்கி நாட்டின்  ரகசியங்களை கசியவிட்ட  குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">விமானப்படையின் </a>உளவுப் பிரிவு அளித்த தகவலின் பேரில், டெல்லி காவல்துறை மே மாத இறுதியில் இவரைக் கைது செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p><p>அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின்  கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.</p> <h2>ரகசியங்கள் கசிவு</h2><p>காவல்துறை வட்டாரங்களின் கூற்றுப்படி, சோஷியல் மீடியா வாயிலாக அந்த அதிகாரிக்கு பெண் ஒருவருடன் அறிமுகம் கிடைத்துள்ளது.</p><p>ஹனி டிராப் என்பது இவ்வாறு பெண்கள் மூலம் ஒருவரை வலையில் வீழ்த்தி தங்களுக்கு தேவையானதை செய்ய வைப்பதை குறிக்கிறது.</p><p>இதற்கு விதிவிலக்கின்றி அந்த அதிகாரிக்கு ஆன்லைனில் ஏற்பட்ட இந்தப் பழக்கம், நாளடைவில் இந்திய ராணுவத்தின் வகைப்படுத்தப்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் முக்கியமான தகவல்களை அனுப்பும் அளவிற்குச் சென்றுள்ளது.</p><p>இந்தியாவின் ராணுவ ரகசியங்களைச் சேகரிப்பதற்காக நடத்தப்பட்ட பாகிஸ்தானின் உளவு வேலையின் ஒரு பகுதியே இதுவாகும்.</p> <h2>தொடரும் விசாரணை</h2><p>டெல்லி காவல்துறை ஜூலை தொடக்கத்திலேயே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டது.</p><p>பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் எந்த அளவிற்கு வெளியே கசிந்துள்ளன, இந்த உளவு வலையமைப்பில் இன்னும் யார் யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது குறித்த பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p> ]]></content:encoded></item></channel></rss>