<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 25 Jul 2026 15:34:24 +0000</lastBuildDate><item><title>அடுத்த கல்வித்துறை அமைச்சர் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/next-education-minister-central-government-shock-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/national/next-education-minister-central-government-shock-announcement#comments</comments><guid isPermaLink="false">1415e9b2-5006-406a-8061-2bfc9da3e2f5</guid><pubDate>Sat, 25 Jul 2026 15:17:53 +0000</pubDate><atom:updated>2026-07-25T15:17:53.098Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,பிரகலாத் ஜோஷி,Prahlad Joshi,neet protest,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/vy4z2goz/Untitled-design-72.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dharmendra Pradhan resigns, Pralhad Joshi given additional education charge]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/vy4z2goz/Untitled-design-72.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கல்வி அமைச்சராக பதவி வகித்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, உணவு மற்றும் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><h3><strong>தர்மேந்திர பிரதான் ராஜினாமா:</strong></h3><p>டெல்லியில் நீட் தேர்விற்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதர் மோடிக்கு கடிதம் எழுதினார்.</p><p>தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.</p><p>இதையடுத்து சிஜேபி கட்சியினருடன் பாஜக மூத்த அமைச்சர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p>அப்போது சிஜேபி கட்சியின் சார்பாக மூன்று முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை  ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு தெரிவித்தது. பின்னர் போராட்டம் கைவிடப்படுவதாக சிஜேபி அறிவித்தது. </p><p>மேலும் நான்கு வார காலத்திற்குள், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.</p><p>தர்மேந்திர பிரதான் பதவி விலகியதையடுத்து, மத்திய கல்வித் துறை பதவி காலியாக இருந்தது.</p><h3><strong>கல்வித்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு:</strong></h3><p>இந்நிலையில் கர்நாடகாவின் முன்னாள் பாஜக மாநில தலைவரும், இந்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சருமான பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை இலாகா வழங்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஒருபோதும் இல்லை என்பதை விட காலதாமதம் சிறந்தது: தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து முரளி மனோகர் ஜோஷி</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-veteran-mm-joshi-says-better-late-than-never-as-pradhan-quits-had-criticised-use-of-force-on-cjp-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-veteran-mm-joshi-says-better-late-than-never-as-pradhan-quits-had-criticised-use-of-force-on-cjp-protesters#comments</comments><guid isPermaLink="false">d369b969-8e9c-445a-9268-1eb7d305d8bf</guid><pubDate>Sat, 25 Jul 2026 14:56:24 +0000</pubDate><atom:updated>2026-07-25T14:56:24.526Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Murli Manohar Joshi,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/8bxc7bry/DharmendraPradhan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான்- முரளி மனோகர் ஜோஷி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/8bxc7bry/DharmendraPradhan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி <a href="https://www.maalaimalar.com/news/national/peoples-democratic-verdict-arvind-kejriwal-on-people-power">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> சார்பில் ஜந்தர் மந்தரில் கடந்த 20-ந்தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.</p><p>மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது போராட்டத்தை கைவிட்டுள்ளது.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமா தொடர்பாக பாஜக கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான முரளி மனோகர் ஜோஷி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-</p><p>ஒருபோதும் இல்லாதது என்பதைவிட காலதாமதம் சிறந்தது. தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்துள்ளார். பிரதமரும் இதுகுறித்து உடனடி மற்றும் சரியான நேரத்தில் முடிவெடுப்பார் என்று நான் நம்புகிறேன்.</p><p>இப்போராட்டத்தை அமைதியான முறையில் நிறைவு செய்த அனைத்து மாணவர்களையும் நான் பாராட்டுகிறேன். அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியக் கல்விச் சூழலில் விரைவில் அமைதி நிலவும் என்றும், இளைஞர்கள் தங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஏற்ற ஏராளமான வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்றும் நான் நம்புகிறேன்.</p><p>இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p>பாஜக முன்னாள் தலைவரான முரளி மனோகர் ஜோஷி, தர்மேந்திர பிரதான் ராஜினாமா சரிதான் எனப் பேசியுள்ளார். அரசியல் விமர்சனம், மோடி அரசின் கொள்கை பிரச்சினை தொடர்பாக இவர் விமர்சிக்காமல் இருந்தது இல்லை.</p><h2>மத்திய அரசு பணிவதற்கான தொடக்கம்</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் கடந்த 20-ந்தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.</p> <h2>நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்</h2><p>இவர்கள் கடந்த 20-ந்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் பேரணியை நடத்தினர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தனர். தடுப்பை மீறிச் செல்ல முயன்றதால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசினர். இதில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர்.</p><p>இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும். அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால் பிரதமர் மோடி ராஜினாமா செய்யக்கோரி போராடுவேம் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தெரிவித்தது.</p><h2>மேலும் 3 கோரிக்கைகள் வைத்த கரப்பான்பூச்சி ஜனதா தளம்</h2><p>இதனைத்தொடர்ந்து மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. அதற்கு முன்னதாக இன்று மதியம் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த போதிலும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே போராட்டத்தை வாபஸ் பெறப்படாது. மேலும், 3 கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்தார்.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய பின், கராப்பான்பூச்சி ஜனதா தளம் மற்றும் மத்திய அரசு இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.</p><p>இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் அனைவரையும் நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மற்ற விசயங்கள் 4 வாரங்கள் கழித்து பேசி முடிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பதவி விலகிய தர்மேந்திர பிரதான் - பாஜக மூத்த தலைவகள் எக்ஸ் தளத்தில் உருக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/education-minister-resigns-bjp-leaders-pay-tribute-on-x</link><comments>https://www.maalaimalar.com/news/national/education-minister-resigns-bjp-leaders-pay-tribute-on-x#comments</comments><guid isPermaLink="false">674ecfaa-b2fa-41b8-a8e0-b6e4b2ab97b1</guid><pubDate>Sat, 25 Jul 2026 13:17:19 +0000</pubDate><atom:updated>2026-07-25T13:17:19.116Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நிதின் நபின்,Nitin Nabin,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Kiren Rijiju,கிரண் ரிஜிஜு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/htcnydp5/Untitled-design-66.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senior BJP leaders highlighting his education reforms]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/htcnydp5/Untitled-design-66.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினத்தாள் கசிவு காரணமாக மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.</p><p>இதையடுத்து தர்மேந்திர பிரதான், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, ராஜினாமா செய்தார்.</p><p>இந்நிலையில் கடந்த காலங்களில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆற்றிய சேவைக்காக, அவருக்கு நன்றி தெரிவித்து பாஜக மூத்த தலைவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.</p><h3><strong>பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் பதிவு:</strong></h3><p>இத்தனை ஆண்டுகளாக தேசத்தின் பரந்த நலன்களுக்கு முன்னுரிமை அளித்ததாக கூறி பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நன்றி தெரிவித்தார்.</p><p>இதுகுறித்து நிதின் நபின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சராக, இந்தியாவின் கல்வி சூழலை சீர்திருத்துவதிலும், வரலாற்று சிறப்புமிக்க தேசிய கல்வி கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும், மேலும் பல முன்னெடுப்புகளிலும் முக்கிய பங்காற்றினார்.</p><p>பரந்த நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர் பதவி விலகும் முடிவு, பொது வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய மிக உயர்ந்த நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவையை பிரதிபலிக்கிறது.</p><p>இந்த முடிவில் தர்மேந்திர பிரதானுக்கு, கட்சி உறுதுணையாக நிற்கிறது. அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.</p><h3><strong>கிரண் ரிஜிஜு எக்ஸ் தள பதிவு:</strong></h3><p>இதையடுத்து நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “உண்மையான தலைமைத்துவம் என்பது பல ஆண்டுகளின் உழைப்பால் அளவிடப்படுகிறது.</p><p>தங்களின் பயணம், பொது வாழ்விலும் மாணவர் நலனிலும், நீங்கள் வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்த ஈடுபாட்டிற்கு ஒரு சான்றாக திகழ்கிறது.</p><p>மத்திய அமைச்சரவையில் உங்களுடன் இணைந்து பணியாற்றியபோது, இந்தியாவின் கல்வி சூழலை வலுப்படுத்துவதிலும், நமது கோடிக்கணக்கான இளம் மாணவர்களை ஒவ்வொரு முடிவின் மையத்தில் வைப்பதிலும் உங்கள் அர்ப்பணிப்பை நான் பார்த்திருக்கிறேன்.</p><p>இத்தகைய ஒரு முக்கிய துறையை வழி நடத்த அளவற்ற விடாமுயற்சி தேவைப்படுகிறது. அதை நீங்கள் தையரித்துடனும், தெளிவான தொலை நோக்கு பார்வையுடனும் ஏற்றுக்கொண்டீர்கள்.</p><p>உங்களின் அயராத சேவைக்கும், சீர்திருத்தங்களுக்கான உங்களின் அர்ப்பணிப்புக்கும், வலிமையான இந்தியாவை கட்டமைப்பதில் உங்கள் பங்களிப்புக்கும் நன்றி.</p><p>இதே உறுதியுடனும் நேர்மையுடனும் நீங்கள் தொடர்ந்து தேசத்திற்கு சேவையாற்ற வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி போராட்டத்தை முடித்து கொள்வதாக சிஜேபி அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/third-round-talks-with-central-government-conclude</link><comments>https://www.maalaimalar.com/news/national/third-round-talks-with-central-government-conclude#comments</comments><guid isPermaLink="false">659223e8-fcf7-4259-8fd3-e65c99d1be3e</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:37:56 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:37:56.715Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,ஜேபி நட்டா,JP Nadda,neet,நீட்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/m58kfukh/Untitled-design-69.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NEET protest ends as Centre assures withdrawal of cases after third round of talks]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/m58kfukh/Untitled-design-69.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>இதையடுத்து காக்ரோச் ஜனதா கட்சியினர் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, அதற்கு முடிவு எட்டப்பட்டால் மட்டுமே போராட்டம் முடிவுக்கு வரும் என தெரிவித்தனர்.</p><p>இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்களான ஜே.பி. நட்டா மறும் ஜிதேந்திர சிங் ஆகியோர்களுடன் காக்ரோச் ஜனதா கட்சியினர் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர்.</p><h3><strong>மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு:</strong></h3><p>பேச்சுவார்த்தைக்கு பின்பு மத்திய அமைச்சர்களும், காக்ரோச் ஜனதா கட்சியினரும் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். </p><p>அப்போது அந்த செய்தியாளர் சந்திப்பில், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நடந்து வந்த போராட்டத்தை முடித்து கொள்வதாக காக்ரோச் ஜனதா கட்சியினர் தெரிவித்தனர்.</p><p>மேலும் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-</p><p>போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது.</p><p>மத்திய அரசுடன் நடத்திய மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டத்தை முடித்துக்கொள்கிறோம்.</p><p>இதையடுத்து நான்கு வார காலத்திற்குள் மத்திய அரசுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்.</p><p>இவ்வாறு சிஜேபி-யினர் தெரிவித்தனர்.</p><h3><strong>ஜே.பி. நட்டா பதில்:</strong></h3><p>நீட் தேர்வில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படுமா என்று மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.</p><p>அப்போது அவர், “நீட் வினாத்தாள் கசிவான சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து, இன்னும் முடிவு எட்டப்படவில்லை” என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் அளித்த ஜனநாயக தீர்ப்பு: ஆட்சியாளர்களைப் பணியவைத்த ‘மக்கள் சக்தி’ குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/peoples-democratic-verdict-arvind-kejriwal-on-people-power</link><comments>https://www.maalaimalar.com/news/national/peoples-democratic-verdict-arvind-kejriwal-on-people-power#comments</comments><guid isPermaLink="false">1cbecf56-a0a1-431c-9fad-32f279948d51</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:20:56 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:20:56.857Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,neet,நீட் ஊழல்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,CJPProtest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/lw0kpxva/aravind.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arvind Kejriwal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/lw0kpxva/aravind.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" சார்பில் போராட்டம் நடத்திய Gen Z இளைஞர்களின் தொடர் அழுத்தத்திற்குப் பின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>இப்போராட்டத்தின் வெற்றியைக் குறிப்பிட்டு, ஆத்மநிர்பார் பாரத் மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்து டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான 'அரவிந்த் கெஜ்ரிவால்' தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.</p><h2><strong>உலகமே பணியும்... பணியவைக்கும் சக்தி வேண்டும்:</strong></h2><p>தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் தனது சமூக வலைதளப் பக்கத்தில்: உலகமே பணியும், அதற்குப் பணியவைக்கும் ஆள் இருக்க வேண்டும் எனும் புகழ்பெற்ற வாசகத்தைப் பகிர்ந்து இளைஞர்களின் போராட்டத்தைப் பாராட்டியுள்ளார்.</p><h2><strong>மக்களின் அதிகாரமும் ஜனநாயகமும்:</strong></h2><p>ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள்; அரசுகளும் ஆட்சியாளர்களும் அவர்களின் பணியாளர்களே, எஜமானர்களான பொதுமக்கள் தங்கள் உரிமைகளுக்காக உறுதியுடன் எழுந்து நிற்கும்போது, எவ்வளவு பெரிய ஆட்சியாளர்களாக இருந்தாலும் அவர்கள் பணிந்துதான் ஆக வேண்டும்" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2><strong>சாதாரண மனிதனின் உறுதி:</strong></h2><p>"நாட்டின் சாதாரண குடிமகன் அல்லது இளைஞர்கள் ஒரு மாற்றத்திற்காகத் தீர்மானம் செய்துவிட்டால், இந்த உலகத்தில் உள்ள எந்தச் சக்தியாலும் அவர்களைத் தோற்கடிக்க முடியாது" என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>‘கரப்பான் பூச்சிகள்’ அமைத்த சாம்ராஜ்யம்: டெல்லியை பணியவைத்த Gen Z இளைஞர்களின் வரலாற்று நிகழ்வு!</title><link>https://www.maalaimalar.com/news/national/gen-z-youth-cockroach-party-delhi-neet-exam-scandal</link><comments>https://www.maalaimalar.com/news/national/gen-z-youth-cockroach-party-delhi-neet-exam-scandal#comments</comments><guid isPermaLink="false">20707d89-70f4-4a08-badc-114db6adbaa9</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:01:54 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:01:54.878Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட் முறைகேடு,Cockroach Janta Party,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,abhijeet dipke,CJP Protest,அபிஜித் தீப்கே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/x5iuw23b/cjp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cockroach Janta Party  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/x5iuw23b/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் தேர்வு முறைகேடுகளால் நாடு முழுவதும் எழுந்த இளைஞர்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (ஜூலை 25) தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர் பட்டாளம் நடத்திய மாபெரும் போராட்டத்திற்குப் பணிந்து, பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.</p><h2>கரப்பான்பூச்சி  உதயமாகிய விதம்:</h2><h2>தலைமை நீதிபதியின் கருத்து:</h2><p>நீதிமன்ற வாதத்தின் போது வேலை இல்லாத இளைஞர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் "கரப்பான்பூச்சிகள்" என மறைமுகமாகக் குறிப்பிட்டதாகக் கூறி சர்ச்சை வெடித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் வசித்து வந்த போஸ்டன் பல்கலைக்கழகப் பட்டதாரியான 'அபிஜித் தீப்கே', 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' எனும் இளைஞர் அமைப்பை மே 16 அன்று தொடங்கினார்.</p><h2><strong>கேள்வி எழுப்பிய இளைஞர்கள்:</strong></h2><p>"கரப்பான் பூச்சிகள் ஒன்றாக சேர்ந்தால் என்ன ஆகும்?" என்ற ஒற்றைக் கேள்வியோடு சமூக வலைதளங்களில் ஒன்றுதிரண்ட Gen Z இளைஞர்கள், டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 20 முதல் தீவிர முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கினர்.</p><h2><strong>சோனம் வாங்சுக் இணைவும் 26 நாள் உண்ணாநோன்பும்:</strong></h2><p>இப்போராட்டத்திற்கு ஆதரவாகப் பிரபல சமூக மற்றும் காலநிலை ஆர்வலர் 'சோனம் வாங்சுக்' ஜூன் 28 அன்று CJP அமைப்பின் மேடையில் இணைந்து 26 நாட்கள் தொடர் உண்ணாநோன்பு இருந்தார். அவரது உடல்நிலை நலிவடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் உண்ணாநோன்பைத் தொடர்ந்தார். இதனால் மாணவர் போராட்டம் இந்திய அளவில் பூதாகரமாகி, உலக ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தது.</p><h2><strong>ராஜினாமா கடிதத்தில் தர்மேந்திர பிரதான் கூறியது என்ன?</strong></h2><p>பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததாவது, "நீட் விவகாரத்தில் ஆரம்ப நாளிலிருந்தே நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். ஜந்தர் மந்தரிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் உருவெடுத்துள்ள சூழ்நிலையால் தேச விரோத சக்திகள் பயனடைந்து விடக் கூடாது. </p><p>நாட்டின் ஒற்றுமையைக் காக்கவும், மாணவர்களின் எதிர்காலம் சட்ட சிக்கல்களில் சிக்காமல் இருக்கவுமே நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்." அத்துடன், அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கணினி முறைத் தேர்வாக மாற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><h2><strong>அபிஜித் தீப்கே:</strong></h2><p>CJP தலைவர் அபிஜித் தீப்கே "இது ஜனநாயகத்தின் வெற்றி! பயப்படாமல் எதிர்த்து நின்றால் அரசைப் பணிய வைக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று. ஆனால், எங்கள் போராட்டம் இத்துடன் முடியவில்லை. நீட் முறைகேட்டால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் மற்றும் போராடிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>டெல்லி சிஜேபி போராட்டக்காரர்களுடன் மத்திய அரசு 3-வது கட்ட பேச்சுவார்த்தை!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-third-round-talks-with-cjb-protesters-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-third-round-talks-with-cjb-protesters-in-delhi#comments</comments><guid isPermaLink="false">5da1a17a-0152-4432-9f11-b44d5ac48bc1</guid><pubDate>Sat, 25 Jul 2026 11:47:25 +0000</pubDate><atom:updated>2026-07-25T11:47:25.913Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜேபி நட்டா,JPNadda,DharmendraPradhan,CJPProtest,CockroachJantaParty,EducationMinisterResigns,StudentProtest2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/c1pbc92s/JPNadda-CJP" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JPNadda - CJP ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/c1pbc92s/JPNadda-CJP?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு முறைகேடு மற்றும் கல்விச் சீர்திருத்தங்களை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' பிரதிநிதிகளுடன் மத்திய அரசு தனது 3-வது கட்ட அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை இன்று நடத்துகிறது.</p><p>மத்திய சுகாதாரத் துறை மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE">ஜே.பி.நட்டா</a> மற்றும் சிஜேபி பிரதிநிதிகளுக்கு இடையே ஏற்கனவே இருமுறை பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்றைய 3-வது கட்ட சந்திப்பு மிக முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.</p><h2>முதல்கட்டப் பேச்சுவார்த்தை</h2><p>சிஜேபி அமைப்பினர் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்திய 'சலோ சன்சாத்' பேரணியில் போலீசாருடன் கடுமையான மோதல் வெடித்தது. டெல்லியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது.</p><p>ஜூலை 20 அன்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சிஜேபி பிரதிநிதிகள் முதன்முறையாக சந்தித்தனர். சிஜேபி தரப்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் நட்டா, கோரிக்கைகளை ஆலோசித்து முடிவெடுப்பதாகக் கூறி, தற்காலிகமாகப் போராட்டத்தை வாபஸ் பெறக் கேட்டுக்கொண்டார். </p><p>ஆனால், சிஜேபி போராட்டத்தைத் தொடர்ந்தது.</p><h2>இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை</h2><p>சோனம் வாங்சுக் தனது 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டதை அடுத்து, ஜந்தர் மந்தருக்கு வெளியே 'Constitution Club' என்ற நடுநிலையான இடத்தில் பேச அரசு ஒப்புக்கொண்டது.</p><p>நேற்று மதியம் மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரை சிஜேபி முதன்மை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் சந்தித்தனர். </p><p>சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், சிஜேபியின் 3 முக்கிய கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை (மாணவர்கள் மீதான எஃப்.ஐ.ஆர் வழக்குகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல்) அமைச்சர் ஜே.பி.நட்டா கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டார். </p><p>கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து இறுதி முடிவு எடுக்க இன்று மதியம் வரை அரசு அவகாசம் கேட்டது.</p><h2>மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை</h2><p>அரசு கேட்ட அவகாசத்தின்படி, இன்று மதியம் 3-வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தைப் பிரதமர் மோடிக்கு அனுப்பியதைத் தொடர்ந்து, இன்று 3-வது நாளாக அமைச்சர் ஜே.பி.நட்டா முன்னிலையில் சிஜேபி பிரதிநிதிகளுடன் 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. </p><p>தேசிய தேர்வு முகமை மறுசீரமைப்பு மற்றும் தேர்வு தேதிகள் குறித்த இறுதி கட்ட முடிவுகள் இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பாராட்டுகள்: உங்களால் பெருமை கொள்கிறோம்- ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/congratulations-to-students-across-the-country-we-are-proud-of-you-rahul-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/congratulations-to-students-across-the-country-we-are-proud-of-you-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">ecd696cd-ee3a-4d52-908b-75c6a500b973</guid><pubDate>Sat, 25 Jul 2026 11:44:10 +0000</pubDate><atom:updated>2026-07-25T11:44:10.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/c8d3zbt5/RahulGandhi2507.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/c8d3zbt5/RahulGandhi2507.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் கடந்த 20-ந்தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.</p><h2>நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்</h2><p>இவர்கள் கடந்த 20-ந்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் பேரணியை நடத்தினர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தனர். தடுப்பை மீறிச் செல்ல முயன்றதால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசினர். இதில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர்.</p><p>இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். <a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career">தர்மேந்திர பிரதான்</a> ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும். அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால் பிரதமர் மோடி ராஜினாமா செய்யக்கோரி போராடுவேம் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தெரிவித்தது.</p><h2>மேலும் 3 கோரிக்கைகள் வைத்த கரப்பான்பூச்சி ஜனதா தளம்</h2><p>இதனைத்தொடர்ந்து மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. அதற்கு முன்னதாக இன்று மதியம் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த போதிலும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே போராட்டத்தை வாபஸ் பெறப்படாது. மேலும், 3 கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்தார்.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய பின், கராப்பான்பூச்சி ஜனதா தளம் மற்றும் மத்திய அரசு இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.</p><p>இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் அனைவரையும் நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். 20-ந்தேதி மாணவர்களுக்கு எதிராக அடக்கு முறையை கையாண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது என 3 கோரிக்கைகளை வைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்: அரசியலில் கடந்து வந்த பாதை</title><link>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career</link><comments>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career#comments</comments><guid isPermaLink="false">1cb28e7a-6886-4f60-871f-b073d823094e</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:53:46 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:53:46.517Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-08/miy1b09z/cjp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dharmendra Pradhan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-08/miy1b09z/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் பொறுப்பேற்று, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று <a href="https://www.maalaimalar.com/news/national/compensation-of-rs-1-crore-for-families-of-deceased-students">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. பின்னர் இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டமாக மாறியது.</p><h2>தர்மேந்திர பிரதான் ராஜினாமா</h2><p>கடந்த 20-ந்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் பேரணியை நடத்தினர். அப்போது போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர். இதில் பலர் காயம் அடைந்தனர். இதனால் நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது.</p><p>இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><h2>தர்மேந்திர பிரதான் அரசியலில் கடந்து வந்த பாதையை பார்ப்போம்...</h2><p>ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்த மூத்த அரசியல்வாதிகள் ஒருவர் தர்மேந்திர பிரதான். இவர் கல்லூரி காலத்தில் ஏபிவிபி-யில் செயல்பாட்டராக முதன்முதலில் தன்னை இணைத்துக் கொண்டார். 1998-ல் பாஜக-வின் இணைந்தார்.</p><p>1993-ல் ABVP மாநில செயலாளராகவும், 1995-ல் தேசிய பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். முதன்முதலில் 2000-த்தில் அதிகாரப்பூர்வமாக அரசியலில் நுழைந்தார். ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 2000 முதல் 2004-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.-வாக இருந்துள்ளார். இந்த சமயத்தில் பாஜக-வின் இளைஞர் அணி (2001) தலைவராகவும், 2002-ல் தேசிய செயலாளராகவும் இருந்துள்ளார்.</p><h2>2004-ல் மக்களவை எம்.பி.யாக தேர்வு</h2><p>2004-ம் ஆண்டு நடைபெற்ற 14-வது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக எம்.பி. ஆனார். இதே வருடத்தில் பாஜக யுவ மோர்ச்சா {(Bharatiya Janata Yuva Morcha (BJYM)} தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார்.</p><p>பாராளுமன்றத்தில் பலவேறு கமிட்டி மற்றும் நாடாளுமன்ற அமைப்புகளில் பணியாற்றியுள்ளார்.</p><p>2004-ல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் மனுக்கள் மீதான குழு மற்றும் எரிசக்தி துறைக்கான குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார்.</p><p>ஆகஸ்ட் 2007 முதல் எனர்ஜி துறைக்கான நிலைக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார்.</p><p>2012 மற்றும் 2014-க்கு இடைப்பட்ட காலத்தில் அரசு உறுதிமொழிகள் குழுவின் உறுப்பினராக இருந்தார்.</p><p>மே 2012 முதல் அக்டோபர் 2013 வரை, தொலைத்தொடர்பு உரிமங்கள் மற்றும் அலைக்கற்றை (spectrum) ஒதுக்கீடு மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான விவகாரங்களை ஆய்வு செய்த கூட்டு நாடாளுமன்றக் குழுவிலும் பணியாற்றினார்.</p><p>அவர் ஏப்ரல் 2012 முதல் 2018 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் ஜூன் 2024-ல் 18-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p>பிரதான் பல ஆண்டுகளாக மத்திய அரசில் பல்வேறு முக்கியத் துறைகளைக் கையாண்டு வந்துள்ளார்.</p><p>செப்டம்பர் 2017-ல், அவர் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சராகவும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.</p><p>மே 2019 முதல் ஜூலை 2021 வரை, அவர் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சராகவும், எஃகு துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.</p><h2>கல்வித்துறை அமைச்சர்</h2><p>ஜூலை 7, 2021 அன்று கல்வித்துறை அமைச்சராகவும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றது அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.</p><p>ஜூன் 2024-ல் 18-வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 9, 2024 அன்று அவர் மத்தியக் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.</p><p>ஒடிசா சட்டமன்றத்தின் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான விருதான 'உத்கல்மணி கோபபந்து பிரதிபா சம்மான்' விருதும் பிரதானுக்கு வழங்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>Gen Z இளைஞர்களுக்கு சோனம் வாங்சுக் பாராட்டு! IT&apos;S A Victory OF DEMOCRAZY என ட்வீட்!  </title><link>https://www.maalaimalar.com/news/national/its-a-victory-of-democracy-cjp-gen-z-youth-sonam-wangchuk-praise</link><comments>https://www.maalaimalar.com/news/national/its-a-victory-of-democracy-cjp-gen-z-youth-sonam-wangchuk-praise#comments</comments><guid isPermaLink="false">c76c344b-d8d3-4fce-b6ac-223239a1637e</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:52:28 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:52:28.046Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>NeetExam,சோனம் வாங்சுக்,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி,SonamWangchuk,CJPProtest,நீட்தேர்வுமுறைகேடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/jdsj9jew/SON.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SonamWangchuk]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/jdsj9jew/SON.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட்  வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், 'மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்'.</p><p>இப்போராட்டத்தில் முன்னணியில் நின்று குரல் கொடுத்த Gen Z இளைஞர்களுக்கு, சமூக ஆர்வலர் 'சோனம் வாங்சுக்' தனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>தர்மேந்திர பிரதான் ராஜினாமா:</strong></h2><p>நீட் தேர்வு கசிவு விவகாரத்தில் மாணவர்களின் தொடர் போராட்டம் மற்றும் எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் சமர்ப்பித்தார். "மாணவர்களின் எதிர்காலம், நாட்டின் ஒற்றுமை மற்றும் கல்வி முறையின் மீதான நம்பிக்கையைக் காக்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>Gen Z இளைஞர்களின் தீவிரப் போராட்டம்:</strong></h2><p>டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில வாரங்களாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்புகள்  தீவிர முற்றுகைப் போராட்டங்களை நடத்தி வந்தன. கல்வி அமைச்சரின் ராஜினாமா, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் மற்றும் போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.</p><h2><strong>சோனம் வாங்சுக் வாழ்த்து:</strong></h2><p>மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக 26 நாட்கள் உண்ணாநோன்பு இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், இந்த வெற்றியை இளைஞர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி எனப் பாராட்டியுள்ளார். இளைஞர்களின் இந்தத் துணிச்சலான ஜனநாயகப் போராட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக உள்ளது என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு.. மத்திய அரசுக்கு அபிஜீத் தீப்கே மூன்று கோரிக்கைகள்..</title><link>https://www.maalaimalar.com/news/national/compensation-of-rs-1-crore-for-families-of-deceased-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/compensation-of-rs-1-crore-for-families-of-deceased-students#comments</comments><guid isPermaLink="false">4911fcdf-548a-4a16-9fca-45ea035aa707</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:55:30 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:55:30.193Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>abhijeet dipke,அபிஜீத் தீப்கே,சிஜேபி,CJP Protest,CJP,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/59ztlcaj/Untitled-design-65.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Abhijit Dipke demands ₹1 crore compensation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/59ztlcaj/Untitled-design-65.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய அளவில் நீட் தேர்விற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று ராஜினாமா செய்துள்ளார்.  </p><p>மத்திய கல்வி அமைச்சர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார்.</p><p>இந்நிலையில் இந்த நிகழ்விற்கு காக்ரோச் ஜனதா கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தங்களின் போராட்டம் தொடரும் எனவும் அக்கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.</p><h3><strong>அபிஜீத் தீப்கே கோரிக்கை:</strong></h3><p>இதுகுறித்து சிஜேபி-யின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறுகையில், “இந்தியாவில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு, இந்த நிகழ்வே சான்றாக உள்ளது. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார்.</p><p>நீங்கள் பயப்படாமல், இந்த அரசுக்கு அடிபணியாமல் இருந்தால், எங்களால் யார் ராஜினாமாவையும் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு இந்த ராஜினாமா சான்று.</p><p>இளைஞர்கள் பயப்படத் தேவையில்லை. இது ஜனநாயகம், அவர் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் எங்களுக்கு இன்னும் இரண்டு கோரிக்கைகள் உள்ளன.</p><p>நாங்கள் இப்படியே போகமாட்டோம். இந்த நீட் வினாத்தாள் கசிவில் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்</p><p>அவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அது அவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டும்.</p><p>இரண்டாவதாக கடந்த 20ஆம் தேதி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மூன்றாவதாக டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது.</p><p>இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எங்களுக்கு எழுத்து பூர்வமாக எழுதி தரவேண்டும். இதை நிறைவேற்றுதாக உறுதியளிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.</p><p>நினைவில் கொள்ளுங்கள் கரப்பான் பூச்சிகளுடன் விளையாடாதீர்கள்” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் போராட்டம் வெற்றி.. ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்!</title><link>https://www.maalaimalar.com/news/national/students-protest-victory-dharmendra-pradhan-resigns</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-protest-victory-dharmendra-pradhan-resigns#comments</comments><guid isPermaLink="false">f8d698f6-ab87-4aaf-afbb-f8ff4209a8c3</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:08:41 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:08:41.173Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/fqm6w1an/Untitled-design-64.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Union Education Minister Dharmendra Pradhan resigns ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/fqm6w1an/Untitled-design-64.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்விற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று ராஜினாமா செய்துள்ளார்.  </p><p>தேசிய அளவில் கடந்த 10 நாட்களாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பதவி விலக வலியுறுத்தி மாணவர்களின் போராட்டம் விரிவடைந்து வரும் சூழலில், பாதுகாப்பு காரணங்கள் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அவர் அந்த கடிதத்தில்,</p><p>கடந்த 10 நாட்களாக நாட்டில் நடந்து வரும் சம்பவங்கள் தனக்கு மிகுந்த வேதனையை கொடுப்பதாக உள்ளது.</p><p>இளைஞர்கள் குழப்பமான மனநிலையில் சிக்குவதையோ, தேசவிரோத சக்திகள் இந்த சூழலை பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும் என்பதுதான் எனது முதன்மையான நோக்கம். </p><p>மாணவர்கள் சட்ட சிக்கலில் நேரத்தை வீணடிக்காமல், படிப்பிலும் தொழில் வாய்ப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.</p><p>தனக்கு வழிகாட்டியாக இருந்து, அத்தனை ஆதரவுகளையும் அளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சரவை சகாக்களுக்கும், அதிகாரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். </p><p>பூரி ஜெகநாதரின் ஆசியுடன், ஒடிசா மக்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன். </p><h3><strong>தொடர் போராட்டம்</strong></h3><p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். </p><p>இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருவதால் போராட்டம் வலுவடைந்துள்ளது. மேலும், போராட்டக் களத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்  காரணமாக இரு தரப்பிலும் காயங்களும் ஏற்பட்டுவருகின்றன.</p><h3><strong>20 நாட்களுக்கும் மேலாக வாங்சுக் உண்ணாவிரதம்</strong></h3><p>இவ்விவகாரம் தொடர்பாக 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்துவந்த சமூக போராளி சோனம் வாங்சுக், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் நிறைவு செய்தார். மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா அவரைச் சந்தித்து மத்திய அரசு எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்ததை அடுத்து இந்தப் போராட்டத்தை அவர் முடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p><strong>கரப்பான் பூச்சி கட்சியினர் உற்சாக முழக்கம்</strong></p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமா அறிவிப்பு வெளியானதையடுத்து, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் உற்சாக முழக்கம் எழுப்பினர்.</p>]]></content:encoded></item><item><title>&apos;என்னை கைது செய்யுங்கள்&apos;: மருத்துவமனையில் போலீசாரிடம் சோனம் வாங்சுக் வாக்குவாதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-confronts-police-at-safdarjung-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-confronts-police-at-safdarjung-hospital#comments</comments><guid isPermaLink="false">7fbf156a-4038-4208-b292-a6c8a7a7db5d</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:45:14 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:45:14.291Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>NeetExam,Sonam Wangchuk,நீட் தேர்வு முறைகேடு,சோனம் வாங்சுக்,காக்ரோச் ஜனதா கட்சி,CJPProtest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/dxts1hdl/SONAM.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sonam Wangchuk ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/dxts1hdl/SONAM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா கட்சி' மற்றும் மாணவர் அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தின் போது 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் காவல்துறையினருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>காவல்துறையுடன் மோதல்:</strong></h2><p>வைரலான வீடியோவில், சோனம் வாங்சுக் நீல நிற சட்டையுடன் தனது மனைவியுடன் மருத்துவமனை நடைபாதையில் நடந்து வரும்போது, அவரை வழிமறித்த காவல்துறை அதிகாரியிடம், "என்னை கைது செய்யுங்கள். 3 மணி நேரமாக என்னை ஏன் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறீர்கள்? நான் மன அழுத்தத்தால் இறந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு" என ஆவேசமாகப் பேசுவது பதிவாகியுள்ளது.</p><h2><strong>தரையமர்ந்து போராட்டம்:</strong></h2><p>காவல்துறையினர் அவரை வெளியேற அனுமதிக்காததால், ஆத்திரமடைந்த சோனம் வாங்சுக் மருத்துவமனை தரையிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் தான் வெளியிட்ட யூடியூப் வீடியோவில் பேசிய வாங்சுக், "சப்தர்ஜங் மருத்துவமனையில் என்னை ஒரு கைதியைப் போல நடத்தினார்கள். வடகொரியாவில் இருப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2><strong>சப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகத்தின் விளக்கம்:</strong></h2><p>வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள அதிகாரப்பூர்வ விளக்கம்  அளித்துள்ளது. அதில்,</p><h2><strong>உயர் நீதிமன்ற உத்தரவு நகல்:</strong></h2><p>சோனம் வாங்சுக்கை அவர் விரும்பும் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன. அதன் அடிப்படையில் அவர் உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியேற முயன்றார்.</p><h2><strong>எழுத்துப்பூர்வ உத்தரவு தாமதம்:</strong></h2><p>இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வமான அதிகாரப்பூர்வ உத்தரவு நகல் மருத்துவமனை நிர்வாகத்திற்கு வந்து சேரும் வரை அவரை சட்டப்பூர்வமாக வெளியே அனுப்ப முடியாது என்பதால், காவல்துறை அவரைத் தடுத்து நிறுத்தியதாக மருத்துவமனை தெளிவுபடுத்தியுள்ளது. உத்தரவு நகல் கிடைத்த பிறகே அவர் விடுவிக்கப்பட்டார்.</p><h2><strong>உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு:</strong></h2><p>நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக 26 நாட்களாகப் போராடி வந்த சோனம் வாங்சுக், மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை மற்றும் போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்ற உறுதியைத் தொடர்ந்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>நீதிமன்ற உத்தரவின் நகல் கைக்குக் கிடைக்காததால் ஏற்பட்ட தாமதமே இந்த வாக்குவாதத்திற்குக் காரணம் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ள நிலையில், இந்த வீடியோ இணையத்தில் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>அதிகாரியுடன் வாக்குவாதம்: டெல்லி கேரளா ஹவுஸில் காங்கிரஸ் தலைவர் கண்ணையா  குமார் அதிரடி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/kanhaiya-kumar-arrested-after-clash-with-officer-at-delhi-kerala-house</link><comments>https://www.maalaimalar.com/news/national/kanhaiya-kumar-arrested-after-clash-with-officer-at-delhi-kerala-house#comments</comments><guid isPermaLink="false">77c2b78e-0b5e-46df-a9a3-f238bf74bc5e</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:40:16 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:40:16.896Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,RahulGandhi,Amitshah,கண்ணையா குமார்,NEETProtest,KanhaiyaKumar,KeralaHouse</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/5fyav392/KanhaiyaKumar" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ KanhaiyaKumar  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/5fyav392/KanhaiyaKumar?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொறுப்பாளரான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">கண்ணையா குமார்</a>, நேற்று டெல்லி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>டெல்லியில் உள்ள கேரளா ஹவுஸ் வளாகத்தில் அங்குள்ள உயர் அதிகாரியுடன் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நடந்தது என்ன?</h2><p>கேரளா ஹவுஸ் வட்டாரங்களின்படி, கண்ணையா குமார் தனது நண்பர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த அறைக்காக கேரளா ஹவுஸ் சென்றுள்ளார். ஆனால், அங்கு காலியாக அறைகள் எதுவும் இல்லை என ஊழியர்கள் மறுத்துள்ளனர்.</p><p>இது குறித்து விளக்கம் கேட்பதற்காக கேரளா ஹவுஸ் ஆணையர் புனீத் குமாரை கன்ஹையா குமார் அணுகியுள்ளார்.</p><p>அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உறைவிட ஆணையர் புனீத் குமார் டெல்லி போலீசாருக்குத் தகவல் கொடுத்து, கண்ணையா குமாரை வளாகத்தில் இருந்து வெளியேற்றுமாறு புகார் அளித்தார்.</p><p>அந்தப் புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் அவரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.</p><h2>"ஆளுநர்தான் ராஜா" - கண்ணையா குமார் காட்டம்</h2><p>கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசிய கண்ணையா குமார், கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கேரள இல்லத்திற்கு வருவார் என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அவர், "ஆளுநர் வருகிறார், ஆளுநர் ஒரு ராஜா" என்றும் குறிப்பிட்டார்.</p><p>மேலும், "நான் எனது நண்பரைச் சந்திக்கவே இங்கு வந்தேன். என்னை எதற்குக் கைது செய்கிறார்கள்? இது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டெல்லி போலீசாரின் அராஜகப் போக்கு" என்று கடுமையாகச் சாடினார்.</p><p>தற்போது அவர் தென்மேற்கு டெல்லியில் உள்ள ஜாஃபர்பூர் கலான் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>பின்னணி</h2><p>கேரளா ஹவுஸ் அமைந்துள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி கண்ணையா குமார் சமீப காலமாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். </p><p>"மோடி அரசு நாட்டின் கல்வி முறையை ஐசியு-வில் தள்ளிவிட்டது" என்று குற்றம் சாட்டி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதானை வேறு துறைக்கு மாற்றுவதை ஏற்க முடியாது- ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-says-transfer-of-dharmendra-pradhan-to-another-portfolio-is-unacceptable</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-says-transfer-of-dharmendra-pradhan-to-another-portfolio-is-unacceptable#comments</comments><guid isPermaLink="false">53762ecd-ed28-4fd3-8f20-e0bf968db3cc</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:38:07 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:38:07.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,CJP Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/g428kes9/rahulgandhi.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/g428kes9/rahulgandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தர்மேந்திர பிரதானை அங்கிருந்து மாற்றுவது, பின்னுக்குத் தள்ளுவது அல்லது முன்னுக்கு கொண்டு வருவது போன்ற எந்தவொரு விவாதத்திற்கும் இடமில்லை என்று கூறியுள்ளார்.</aside><p>பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று  போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>வேறு துறை</strong></h2><p>மாணவர்களுக்கு 3 கோரிக்கைகள் உள்ளன. அவை சமரசத்திற்கு இடமில்லாத கோரிக்கைகள்.  ஊழல்வாதியும், திறமையற்றவரும், பொறுப்பற்றவருமான மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்க வேண்டும்  என்பதே முதலாவது கோரிக்கை. </p><p>மோடியின் மந்திரிசபையில்  அவரை கல்வித்துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றுவதே இதற்கான தீர்வு என்று பேசப்பட்டு வருகிறது. இது  மாணவர்களுக்கு ஏற்புடையதல்ல. யாருக்கும் ஏற்புடையதல்ல. இதற்கு  காரணம், ஊழலுக்கும், இந்தியக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நேர்ந்துள்ள நிலைமைக்கும் <a href="https://www.maalaimalar.com/news/national/third-round-talks-today-in-center-and-cjp-party-members">தர்மேந்திர பிரதான்</a> தான் ஒரு அடையாளமாக  திகழ்கிறார்.</p><h2><strong>நீக்கப்பட வேண்டும்</strong></h2><p>நாட்டின் மிக மதிப்புமிக்க சொத்தான மாணவர்களையும், அவர்களின் எதிர்காலத்தையும் அழித்ததற்கான அடையாளமாக அவர் இருக்கிறார். எனவே, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">தர்மேந்திர பிரதானை</a> அங்கிருந்து மாற்றுவது, பின்னுக்குத் தள்ளுவது அல்லது முன்னுக்கு கொண்டு வருவது போன்ற எந்தவொரு விவாதத்திற்கும் இடமில்லை. தர்மேந்திர பிரதான் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.</p><p>இரண்டாவதாக போராட்டத்தின் போது இளம்பெண் காயமடைந்தார். நேற்று நான் உங்களுக்குக் கண்ணில் குண்டு பாய்ந்த ஒரு இளைஞரைக் காட்டினேன். அதுபோலவே, தடியடியால் கால்களும், தலைகளும் உடைக்கப்பட்ட, உடலில் பெல்லட் குண்டுகள் பாய்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். இதைச் செய்தவர்கள், அதாவது இதைத் திட்டமிட்டவர்கள், செயல்படுத்தியவர்கள், தண்டிக்கப்பட வேண்டும்.</p><h2><strong>மன்னிப்பு கேட்க வேண்டும்</strong></h2><p>மூன்றாவது கோரிக்கை என்னவென்றால், இந்த செயல்களைச் செய்யும் ஒட்டுமொத்த அமைப்பின் தலைவரான பிரதமர் மோடி, மாணவர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு இழைத்த செயல்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>மாணவர்களையும், இளைஞர்களையும் தாக்குவது இந்த அமைப்புதான். நான் அவர்களிடம் பேசும்போது சொன்னேன். கவலைப்படாதீர்கள். இந்திய அரசாங்கத்தின் ஒட்டு மொத்த வலிமையோ அல்லது அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபரோ நினைத்தாலும், உங்களை அங்கிருந்து (போராட்டக் களத்திலிருந்து) அசைக்க முடியாது.</p><p>அவர்கள் (அரசாங்கம்) என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அவர்கள் தடுக்க நினைத்தாலோ, மிரட்ட நினைத்தாலோ, எதை வேண்டுமானாலும் செய்யலாம். நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. அவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். மோடி இந்தியாவின் கடந்தகாலம். அவரால் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது. கடந்த காலத்தால் ஒரு போதும் எதிர்காலத்தை எதிர்த்துப் போராட முடியாது.</p><p>இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>CJP போராட்டம்: பாகிஸ்தான் சமூக வலைதள கணக்குகள் முடக்கம்-டெல்லி காவல்துறை எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-pakistan-social-media-accounts-blocked-delhi-police-warning</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-pakistan-social-media-accounts-blocked-delhi-police-warning#comments</comments><guid isPermaLink="false">e37fed5d-05a0-486b-ab71-bc45d4bc9a3e</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:22:02 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:22:02.354Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,NeetExam,நீட் வினாத்தாள் கசிவு,CJP Protest,காக்ரோச் ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/vkftipgp/delhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  CJP Protest ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/vkftipgp/delhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா கட்சி' மற்றும் மாணவர் அமைப்புகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தைப் பயன்படுத்தி, வதந்திகளையும் தவறான தகவல்களையும் பரப்பிய 400-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பின்னணி கொண்ட சமூக வலைதள கணக்குகளை டெல்லி காவல்துறை கண்டறிந்து முடக்கியுள்ளது.</p><h2><strong>போலி செய்திகள் மூலம் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு:</strong> </h2><p>மத்திய மாவட்ட டெல்லி காவல்துறை துணை ஆணையர் ரோஹித் ராஜ்பீர் சிங் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,</p><h2><strong>400+ கணக்குகள் முடக்கம்:</strong></h2><p>மாணவர் போராட்டத்தை முதன்மைப்படுத்தி, போலியான செய்திகள் மற்றும் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களைப் பரப்பி அமைதியைக் குலைக்க முயன்ற 400-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக வலைதளக் கணக்குகள் முடுக்கப்பட்டுத் தடை செய்யப்பட்டுள்ளன.</p><h2><strong>பொதுமக்களுக்கு வேண்டுகோள்:</strong></h2><p>அடையாளம் தெரியாத அல்லது சரிபார்க்கப்படாத சமூக வலைதளக் கணக்குகளில் வரும் தகவல்களைப் பார்த்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தூண்டப்பட வேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.</p><h2><strong>கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்:</strong></h2><p>போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தர் பகுதியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, பல அடுக்கு இரும்புத் தடுப்புகள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுப் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், குற்றப் பின்னணி கொண்டவர்களைக் கண்டறிய புகைப்பட அங்கீகார கேமராக்கள்  மூலம் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.</p><h2><strong>மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை:</strong></h2><p>மத்திய அரசுக்கும் CJP பிரதிநிதிகளான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோருக்கும் இடையே இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை CJP உறுதியாகக் கோரி வருகிறது. ஆனால், "பொறுப்பிலிருந்து விலகி ஓடுவது தீர்வாகாது; மக்களுக்கு அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றும்" என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><h2><strong>எதிர்க்கட்சிகள் கண்டனம்:</strong></h2><p>மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர், மாணவர் போராட்டங்களை ஒடுக்க முனையும் அரசு, வினாத்தாள் கசிவைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.</p><p>போலி தகவல்கள் பரப்புவதைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ள டெல்லி காவல்துறை, ஜந்தர் மந்தரில் பாதுகாப்பை உச்சகட்ட அளவில் பலப்படுத்தியுள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து CJP தங்களின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அசாமில் தொடரும் பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு-7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-deluge-claims-61-lives-705000-people-impacted</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-deluge-claims-61-lives-705000-people-impacted#comments</comments><guid isPermaLink="false">e08682d3-e45a-479f-ab6b-20f3abb9542c</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:50:05 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:50:05.886Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Himanta Biswa Sarma,cloudburst,மேகவெடிப்பு,ஹிமந்த பிஸ்வா சர்மா,Assam Floods,அசாம் பெருவெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/inhiflag/assam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam Floods  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/inhiflag/assam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் பெருவெள்ளம்  மாநிலத்தில் தொடரும் கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்த நிலையில், வெள்ளத்திற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை '61' ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தின் 12 மாவட்டங்களைச் சேர்ந்த '7.05 லட்சத்திற்கும்' அதிகமான மக்கள் பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>வெள்ளப் பெருக்கு காரணமாக இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிவசாகர் மாவட்டத்தில் ஒருவர் காணாமல் போயுள்ளார். 37 வருவாய் வட்டங்களில் உள்ள 856 கிராமங்களைச் சேர்ந்த '7,05,000-க்கும் மேற்பட்டோர்' வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். மாநில அரசால் அமைக்கப்பட்ட 363 நிவாரண முகாம்களில் 3.15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். </p><p>அவர்களுக்கு உணவு, தப்பிப்பிழைப்பதற்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படை , மாநில பேரிடர் மீட்புப் படை  மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இணைந்து கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் சிக்கிய சுமார்  1,000 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.</p><h2><strong>கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்:</strong></h2><p>அசாமில் பல மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், சிவசாகர், சரைடியோ, ஜோர்ஹாட் 3 ஆகிய மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளன. மேலும் கோலாகாட், திப்ரூகர், ஹோஜாய், நகோன், பிஸ்வநாத், தேமாஜி, சோனித்பூர், கம்ரூப் (மெட்ரோ) மற்றும் கர் பி ஆங்லாங் ஆகிய மாவட்டங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.</p><p>மேலும், சுமார் 56,606 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி, பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,107 கால்நடைகள் மற்றும் கோழிகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் 3.34 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் தீவனமும் தங்குமிடமும் இன்றி பாதிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>முதலமைச்சர் நேரில் ஆய்வு:</strong></h2><p>அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெர்கான் பகுதியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமிற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வெள்ள நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். </p><p>பக்கத்து மாநிலமான நாகாலாந்தில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பு காரணமாகவே அசாமின் பல மாவட்டங்களில் இந்த அளவுக்குப் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டார். தற்போது பிரம்மபுத்திரா நதியும் அதன் துணை நதிகளும் பல இடங்களில் அபாயக் கட்டத்தைத் தாண்டிப் பெருக்கெடுத்து ஓடுவதால், மீட்புக் குழுவினர் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>5-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை!</title><link>https://www.maalaimalar.com/news/national/medical-student-dies-by-suicide-jumping-from-5th-floor</link><comments>https://www.maalaimalar.com/news/national/medical-student-dies-by-suicide-jumping-from-5th-floor#comments</comments><guid isPermaLink="false">6a059e56-88b4-41ab-bc27-035ca3aae105</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:24:53 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:24:53.466Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,suicide,Telangana,Medical student,தெலுங்கானா,மருத்துவ மாணவி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/2ftbkbiy/suicide.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Medical student suicide attempt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/2ftbkbiy/suicide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநிலம், மெட்சல் மாவட்டம், கீசரா, மேற்கு காந்தி நகரை சேர்ந்தவர் தீக்ஷிதா (வயது26). இவர் பெங்களூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதுகலை கண் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.</p><p>நேற்று வீட்டில் இருந்த தீக்ஷிதா திடீரென 5-வது மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே குதித்தார். படுகாயம் அடைந்த தீக்ஷிதா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.</p><p>போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீக்ஷிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? - இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை</title><link>https://www.maalaimalar.com/news/national/third-round-talks-today-in-center-and-cjp-party-members</link><comments>https://www.maalaimalar.com/news/national/third-round-talks-today-in-center-and-cjp-party-members#comments</comments><guid isPermaLink="false">83b7c160-46d8-4fca-a9a8-ee3fbffd2e4f</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:37:36 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:37:36.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,நீட் தேர்வு,Neet exam,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/a5x4k31z/pradhan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ dharmendra pradhan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/a5x4k31z/pradhan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சி தொடங்கிய நீட் தேர்வுக்கு எதிரான மற்றும் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் தொடர்பான போராட்டம் தற்போது இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ளது.</p><p>இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கரப்பான்பூச்சி கட்சியினருடன் இரு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.</p><h2>மந்திரி பதவி விலக கோரிக்கை</h2><p>மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் தர்மேந்திர பிரதான் பதவி விலகல், நீட் தேர்வால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம், உயர்கல்வித்துறையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளுதல் என 3 கோரிக்கைகளை கரப்பான்பூச்சி கட்சியினர் முன்வைத்தனர்.</p><p>நேற்று 2-வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை இரு தரப்பினருக்கும் பொதுவாக அரசியல் சாசன கிளப்பில் நடைபெற்றது. அரசாங்கம் தரப்பில் சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக மந்திரி ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். கரப்பான் பூச்சி ஜனதா தரப்பில் இருந்து அதன் செய்தி தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் பங்கேற்றனர். கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.</p><p>இந்தப் பேச்சுவார்த்தையின்போது தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் கோரிக்கை சமரசத்திற்கு அப்பாற்பட்டது என சி.ஜே.பி. தேசிய செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமைச்சர்களிடம் தெரிவித்தனர்.</p><h2>அவகாசம் கேட்ட மத்திய அரசு</h2><p>இதுதொடர்பாக ஆலோசிக்க நாளை (இன்று) மதியம் வரை மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. </p><h2>3வது கட்ட பேச்சுவார்த்தை</h2><p>இந்நிலையில், இன்று பிற்பகல் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>பதவி விலகுங்கள் தர்மேந்திர பிரதான் - நடிகை ஜோதிகா இன்ஸ்டா பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/jyothika-backs-students-protest-against-neet-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/jyothika-backs-students-protest-against-neet-scam#comments</comments><guid isPermaLink="false">0d4995d9-bae9-4720-91a4-f0a090d494f6</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:58:10 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:58:10.377Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜோதிகா,Jyothika,neet protest,CJP Protest,சிஜேபி போராட்டம்,நீட் போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/i078vcr7/Jyothika.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actress Jyothika]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/i078vcr7/Jyothika.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் முறைகேட்டை கண்டித்து டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சியினர் நடத்தும் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு தெரிவித்துள்ளார்.</p><p>நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஜோதிகா பதிவிட்டுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள். ராஜினாமா செய்யுங்கள்.</p><p>நான் மாணவர்களுடனும் நமது தேசத்தின் எதிர்காலத்துடனும் துணையாக நிற்கிறேன்!</p><p>நான் பொறுப்புணர்வுடன் நிற்கிறேன்!</p><p>நான் ஒரு ஜனநாயக இந்தியாவிற்காக நிற்கிறேன்!</p><p>நான் ஒரு சீர்திருத்தக் கல்விக்காக நிற்கிறேன்!</p><p>சோனம் வாங்சுக், அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ் மற்றும் தாய்மார்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளை உங்களைப் போல வளர்க்க விரும்புகிறோம்..</p><p>தடையின்றி வெளிப்படையாக இருக்கும் ஜென் Z தலைமுறையினரே, உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம்..</p><p>நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்ததுதான் இந்தியா என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்..</p><p>அழுத்தத்தை உடைத்ததற்கு நன்றி.. எங்களை அச்சமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி சிஜேபி</p><p>ஜெய் ஹிந்த்</p><p>இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே வாலிபரை திருமணம் செய்த 3 இளம்பெண்கள்: உத்தரப்பிரதேசத்தில் வினோதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/3-sisters-in-up-marry-the-same-man-wedding-goes-viral</link><comments>https://www.maalaimalar.com/news/national/3-sisters-in-up-marry-the-same-man-wedding-goes-viral#comments</comments><guid isPermaLink="false">0b980225-b35b-4970-b72b-215e82626ba2</guid><pubDate>Sat, 25 Jul 2026 03:42:20 +0000</pubDate><atom:updated>2026-07-25T03:42:20.119Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,marriage,சமூகவலைத்தளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/gw9t3z0n/up.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உத்தரபிரதேசத்தில் வாலிபரை திருமணம் செய்து கொண்ட 3 பெண்கள்.]]></media:title><media:description type="html"><![CDATA[ உத்தரபிரதேசத்தில் வாலிபரை திருமணம் செய்து கொண்ட 3 பெண்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/gw9t3z0n/up.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>உத்தரபிரதேசத்தில் 3 இளம்பெண்கள் ஒரே வாலிபரை ஒன்றாக திருமணம் செய்து கொண்ட வினோதம் நடந்துள்ளது. சிறுவயதில் இருந்தே சேர்ந்து வாழ்வதால் பிரிய மனம் இல்லை என்று மணப்பெண்கள் தெரிவித்து உள்ளனர்.</aside><h2><strong>வீடியோ வெளியிடும் பெண்கள்</strong></h2><p>உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில், 2 உடன் பிறந்த சகோதரிகளும், அவர்களது உறவுப்பெண்ணும் ஒரே வாலிபரை மணந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சமூக வலைதளங்களில் உள்ளடக்கங்களை உருவாக்குபராக உள்ளவர் சரோஜ் (வயது 20). இவர் சகோதரி சாவித்ரி ராணி (19) மற்றும் உறவுப்பெண் சந்தோஷ் கடக்வன்ஷி (18) ஆகியோருடன் இணைந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர்களின் வீடியோக்களை கேமராமேன் விகாஸ் சாமுண்டா (20) என்பவர் படம் பிடித்து வந்தார்.</p><h2><strong>ஒரே ஆணை மணந்தனர்</strong></h2><p>இந்த நிலையில் அந்த 3 இளம்பெண்களும், கேமராமேனை ஒன்றாக திருமணம் செய்து கொண்ட வினோதம் நடந்துள்ளது. அங்குள்ள கோவிலில் சமீபத்தில் அவர்கள் திருமணம் நடந்துள்ளது. அதுபற்றிய வீடியோக்கள், புகைப்படங்களையும் அவர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். அதில் மணமகன் யாக குண்டத்தில் நெருப்பு வளர்ப்பதையும். 3 மணமகள்களும் அவருடன் சேர்ந்து நெருப்புமூட்டி திருமண பந்தத்தில் இணைவது, மணமகனின் காலை மூவரும் ஒன்றாக தொட்டு வணங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன.</p><h2><strong>வாழ்ந்தால் சேர்ந்து வாழ்வோம்</strong></h2><p>வினோதமான இந்த திருமணம் பற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. அதுகுறித்து மணப்பெண்களில் ஒருவரான சரோஜ் கூறியதாவது:-</p><p>சிறுவயது முதல் நாங்கள் மூவரும் ஒன்றாகவே வளர்ந்தோம். திருமணம் எங்களைப் பிரித்துவிடும் என்று தெரிந்தபோது, பிரிந்து வாழ்வதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. பிரிந்து வாழ்ந்தால் தற்கொலை கூட செய்து கொள்ளலாம் என்று சிந்தித்து உள்ளோம். ஆனால் இறப்பதைவிட ஒரே நபரைத் திருமணம் செய்து ஒன்றாக வாழலாம் என்று முடிவு செய்தோம். எங்கள் விருப்பத்தை விகாசிடம் தெரிவித்தோம். அவரும் அதற்கு சம்மதித்தார். நாங்கள் அனைவரும் வயது வந்தவர்கள். இந்த முடிவை எங்கள் விருப்பப்படி எடுத்தோம்.</p><p>இவ்வாறு சரோஜ் கூறியுள்ளார்.</p><h2><strong>திருமணம் செல்லுமா?</strong></h2><p>மணமகன் விகாசும் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் கூறும்போது, "மூவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பாசத்தை நான் அறிந்திருந்தேன். அவர்கள் பிரிய விரும்பவில்லை. அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்தே இந்த முடிவை ஏற்றுக்கொண்டேன். எங்கள் முடிவை அனைவரும் மதிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் </p><p>எனினும், இந்த திருமணம் இந்து திருமணச் சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது குறித்து சட்ட ரீதியான விவாதம் எழுந்துள்ளது. சமூக வலைத்தளத்தில் அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. </p>]]></content:encoded></item><item><title>நீட் போராட்டம் எதிரொலி: டெல்லியில் 4-வது நாளாக மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-curbs-enter-4th-day-18-stations-closed-today-as-security-tightens-over-neet-protests</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-curbs-enter-4th-day-18-stations-closed-today-as-security-tightens-over-neet-protests#comments</comments><guid isPermaLink="false">65d2b84b-ee75-4aca-988c-d48ed474f6ab</guid><pubDate>Sat, 25 Jul 2026 02:56:11 +0000</pubDate><atom:updated>2026-07-25T02:56:11.086Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,போராட்டம்,neet,நீட் தேர்வு,Delhi Metro,டெல்லி மெட்ரோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/28u0kv50/metro.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ delhi metro]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/28u0kv50/metro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவர்களின் போராட்டத்தால் தலைநகர் டெல்லியில் நான்காவது நாளாக இன்றும் 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டது.</p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.</p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><h2>4-வது நாளாக</h2><p>தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு மற்றும் போராட்டக்காரர்களின் கல்வீச்சு போன்ற சம்பவங்களால் டெல்லி பதற்றம் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. இந்தப் போராட்டத்தை கலைப்பதற்கும், கூட்டம் அதிகரிப்பதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் கடந்த 2 நாளாக 15க்கு மேற்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.</p><p>இந்நிலையில், மாணவர் போராட்டத்தையடுத்து தொடர்ந்து நான்காவது நாளாக டெல்லியில் இன்று 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இன்று காலை 7.30 மணி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><h2>18 மெட்ரோ நிலையங்கள்</h2><p>இதன்படி லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சவுக், படேல் சவுக், ராமகிருஷ்ணா ஆசிரம மார்க், பாரகாம்பா சாலை, சுப்ரீம் கோர்ட், சேவா தீர்த்தம், ஜன்பத், மண்டி ஹவுஸ், மத்திய செயலகம், ஐ.டி.ஓ., டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக், சிவாஜி ஸ்டேடியம், ஜாண்டேவலன் மற்றும் நியூ டெல்லி ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.</p><p>அதே சமயம் ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரட்டேரியட் மெட்ரோ நிலையங்களில் இன்டர்சேஞ்ச் வசதி மட்டும் வழக்கம்போல் தொடர்ந்து கிடைக்கும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>6 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய அமர்நாத் யாத்திரை!</title><link>https://www.maalaimalar.com/news/national/amarnath-yatra-resumes-after-6-day-weather-halt-over-6000-pilgrims-leave-jammu</link><comments>https://www.maalaimalar.com/news/national/amarnath-yatra-resumes-after-6-day-weather-halt-over-6000-pilgrims-leave-jammu#comments</comments><guid isPermaLink="false">58631784-5697-4930-b470-45b0f5d937db</guid><pubDate>Sat, 25 Jul 2026 02:26:44 +0000</pubDate><atom:updated>2026-07-25T02:26:44.684Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amarnath yatra,அமர்நாத் யாத்திரை,Pilgrims,Ice lingam,பக்தர்கள்,பனிலிங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/9yctg02s/yatra.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ amarnath yatra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/9yctg02s/yatra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காஷ்மீரில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை ஆகஸ்டு 28-ம் தேதி நிறைவடையும்.</p><h2>3.77 லட்சம் பேர் தரிசனம்</h2><p>அமர்நாத் குகைக் கோவிலை 3.77 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2>யாத்திரை நிறுத்தம்</h2><p>இதற்கிடையே, மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை கடந்த 19-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது. </p><p>இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி யாத்திரை நிறுத்தப்படுகிறது. அடுத்த உத்தரவு வரும் வரை பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ள வேண்டாம். யாத்திரை எப்போது தொடங்கும் என்பதை வானிலை குறித்த விரிவான மதிப்பீடு, வழித்தடத்தில் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய காலத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.</p><p>இதேபோல், ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கான யாத்திரையும் நிறுத்தி வைக்கப்பட்டது.</p><h2>சீரடைந்த வானிலை</h2><p>இந்நிலையில், வானிலை சீரடைந்ததை தொடர்ந்து அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது.</p><p>பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், அமர்நாத் யாத்திரைக்கான 18வது குழு 6,269 பக்தர்களைக் கொண்ட புதிய குழு இன்று அதிகாலை பால்டால் முகாமில் இருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 25 குழந்தைகள், 1470 பெண்கள், 54 சாதுக்கள் உள்ளிட்டோரும் அடங்குவர். 223 வாகனங்கள் கொண்ட அணிவகுப்பில் 18வது குழு பயணித்துள்ளது.</p><p>முன்னதாக, அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. நபர் ஒருவர் ரூ.150 கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மருத்துவ சான்றிதழ் ஒன்றையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.</p><p>நடப்பு ஆண்டில் 5 நாட்களில் 90 சதவீதம் அளவுக்கு பனிலிங்கம் உருகியது என்றாலும், பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஒடுக்குமுறைக்கு அஞ்சியே உண்ணாவிரதம் முடித்துக்கொள்ளப்பட்டது: வாங்சுக்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-deal-with-centre-ended-fast-fearing-crackdown-like-ladakh-wangchuk</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-deal-with-centre-ended-fast-fearing-crackdown-like-ladakh-wangchuk#comments</comments><guid isPermaLink="false">8270f9e5-d078-4a4f-9234-5ba6d3453d80</guid><pubDate>Fri, 24 Jul 2026 23:06:31 +0000</pubDate><atom:updated>2026-07-24T23:06:31.067Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CJP Protest,Wangchuk,சிஜேபி போராட்டம்,வாங்சுக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/90fgbr1d/Sonam-Wangchuck.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/90fgbr1d/Sonam-Wangchuck.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போராட்டக்காரர்கள் மீது உடனடி ஒடுக்குமுறை ஏவப்படலாம் என்ற அச்சம் மற்றும் வன்முறையை தவிர்க்கும் நோக்கில், மத்திய அரசிடமிருந்து எழுத்துப்பூர்வமான உறுதிமொழிகளை பெற்ற பிறகு தனது 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்ததாக சமூக ஆர்வலர் <a href="https://www.maalaimalar.com/topic/wangchuk">சோனம் வாங்சுக்</a> தெரிவித்தார். </p><p>அப்போது, ​​செப்டம்பர் 24, 2025 அன்று லடாக்கில் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/shoot-out">துப்பாக்கிச் சூடு</a> சம்பவத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்.  வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வெளியிடப்பட்ட யூடியூப் வீடியோவில், அரசாங்கத்துடன் தான் ஏதேனும் ஒப்பந்தம் செய்துகொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை வாங்சுக் மறுத்தார்.</p><h2>முதன்மை நோக்கம்:</h2><p>போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வன்முறைக்கோ அல்லது சட்டரீதியான விளைவுகளுக்கோ ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதே தனது முதன்மை நோக்கம் என்று அவர் வலியுறுத்தினார்.</p><p>பேச்சுவார்த்தையின் போது கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தான் கோரவில்லை என்றும், போராட்டக்காரர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை தடுப்பதே தனது முன்னுரிமையாக இருந்தது என்றும் அவர் விளக்கினார். பிரதான் இறுதியில் பதவி விலகுவார் என்ற நம்பிக்கையையும் வாங்சுக் வெளிப்படுத்தினார்.</p><h2>ஒடுக்குமுறை மேற்கொள்ளப்படலாம்:</h2><p>இதுகுறித்து பேசிய வாங்சுக், "நேற்று நள்ளிரவு வாக்கில், அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்க ஒப்புக்கொண்டதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் நிலவிய சூழல் காரணமாக நான் அவசரமாக செயல்பட வேண்டியிருந்தது; ஒரு பெரிய ஒடுக்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் இருந்தது.</p><p>செய்திகளைப் பார்த்தபோது, ​​செப்டம்பர் 24, 2025 அன்று லடாக் இளைஞர்கள் மீது காவல் துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப். (CRPF) வீரர்கள் இரக்கமின்றி துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் நினைவுக்கு வந்தது. இங்கும் அதுபோன்ற ஒன்று நடக்கக்கூடுமோ என்று நான் அஞ்சினேன். உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு அமைதிக்கு அழைப்பு விடுத்தால், சூழல் தணியக்கூடும் என்று நான் கருதினேன்.</p><p>நான் ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வேண்டியிருந்திருந்தால், 26 நாட்கள் பட்டினியாக இருந்திருப்பேனா? டெல்லியின் வெப்பத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்கு பதிலாக, குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்தே ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கலாமே?</p><h2>எழுத்துப்பூர்வ உறுதிமொழி:</h2><p>அவர்கள் ஆரம்பத்தில் இழப்பீடு மற்றும் நாடாளுமன்ற விவாதத்திற்கு ஒப்புக்கொண்டனர், ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படாது என்று உறுதியளிக்க தயாராக இல்லை. அவர்கள் வாய்மொழி உறுதிமொழியை மட்டுமே அளித்தனர். நான் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை வலியுறுத்தினேன்; அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளும் வரை நான் பணியவில்லை.</p><p>மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதிலேயே என் கவனம் இருந்தது. சட்ட நடவடிக்கைகள் மற்றும் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்படுவது குறித்தே நான் அதிகம் கவலைப்பட்டேன். அமைச்சரின் பதவி விலகலை நான் தனிப்பட்ட முறையில் உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கவில்லை.</p><p>எனக்கு ஆதரவளிக்க வந்திருந்த எனது சகாக்கள், மாணவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான் உண்ணாவிரதத்தை முடிக்கும்போது அங்கு இருக்க முடியாமல் போனதுதான் என் மனதிற்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது," என்று அவர் கூறினார்.</p><h2>காலவரையற்ற உண்ணாவிரதம்:</h2><p>அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யாதது குறித்தும், தேர்வு சீர்திருத்தங்கள் மற்றும் வினாத்தாள் கசிவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்துவது குறித்தும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் சாதகமான நிலைப்பாட்டை மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததை தொடர்ந்து, வியாழக்கிழமை நள்ளிரவுக்கு பிறகு வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.</p><p>போட்டி தேர்வுகளில் முறைகேடுகள், கல்வி முறையில் சீர்திருத்தங்கள் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 'காக்ரோச் ஜனதா கட்சி' தலைமையிலான போராட்டத்தில் இணைந்த பிறகு, ஜூன் 28-ஆம் தேதி முதல் அவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் குறித்து நீதித்துறை விசாரணை: ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் குழு கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/retired-civil-servants-seek-judicial-probe-into-use-of-pellet-guns-on-student-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/retired-civil-servants-seek-judicial-probe-into-use-of-pellet-guns-on-student-protesters#comments</comments><guid isPermaLink="false">56b995e6-95d1-4823-9a13-8b9a807a0a2b</guid><pubDate>Fri, 24 Jul 2026 22:27:54 +0000</pubDate><atom:updated>2026-07-24T22:27:54.924Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CJP Protest,சிஜேபி போராட்டம்,ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்,Retired civil servants</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/jjeprs78/cjp-protestors.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போராட்டக்காரர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/jjeprs78/cjp-protestors.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் ஜூலை 20-ஆம் தேதியன்று <a href="https://www.maalaimalar.com/topic/cjp-protest">மாணவர் போராட்டக்காரர்கள்</a> மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து சுதந்திரமான நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும் என 93 ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அடங்கிய குழு கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் பெல்லட் துப்பாக்கிகள், மின்சார தடியடிகள் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை சட்டவிரோதமாகவும், வரம்பு மீறியும் பலத்தை பயன்படுத்திய <a href="https://www.maalaimalar.com/topic/police">அதிகாரிகள்</a> மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 'அரசியலமைப்பு நடத்தை குழு' அழைப்பு விடுத்துள்ளது.</p><h2>குழுவினர் விவரம்:</h2><p>பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா மற்றும் டெல்லி காவல்துறை ஆணையர் எஸ்.பி.கே. சிங் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், கடந்த திங்களன்று நடைபெற்ற 'சன்சத் சலோ' பேரணியின் போதும் அதற்கு பின்னரும் டெல்லி காவல்துறை மற்றும் விரைவு அதிரடி படையினர் வரம்பு மீறிய பலத்தை பயன்படுத்தியதாகவும், இதனால் பல போராட்டக்காரர்கள் படுகாயம் அடைந்ததாகவும் அந்த அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>கையெழுத்திட்டவர்களில் டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன், பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் சிறப்பு அதிகாரி ஏ.எஸ். துலத், பஞ்சாபின் முன்னாள் டி.ஜி.பி. ஜூலியோ ரிபேரோ, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஷ் மந்தர் மற்றும் பல ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். மற்றும் பிற மூத்த அரசு அதிகாரிகள் அடங்குவர்.</p><h2>அறுவை சிகிச்சை:</h2><p>கண் மற்றும் கழுத்தில் இருந்து பெல்லட்களை அகற்ற ஒரு இளம் போராட்டக்காரருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது என்றும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 வயது குழந்தையும் அடங்கும் என்றும் அந்த குழு கூறியது.</p><p>"டெல்லி காவல்துறை மற்றும் விரைவு அதிரடிப் படை (RAF) வீரர்கள், போராட்டக்காரர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகள், மின்சார தடியடிகள் மற்றும் கண்ணீர்ப் புகை குண்டுகளை பயன்படுத்தியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. </p><p>இதன் விளைவாக, கண் மற்றும் கழுத்தில் இருந்து பெல்லட்களை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்பட்ட ஒரு இளம் போராட்டக்காரர் உட்பட பல இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 வயது குழந்தையும் அடங்கும்," என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.</p><h2>பாலியல் இடையூறு:</h2><p>முன்னாள் அரசு ஊழியர்கள் மேலும் கூறுகையில், பெயர் அடையாள அட்டை இல்லாதவர்கள் மற்றும் சாதாரண உடையில் இருந்தவர்கள் உட்பட பல டெல்லி காவல்துறை மற்றும் RAF வீரர்கள், ஆணிகள் பதிக்கப்பட்ட தடிகளால் போராட்டக்காரர்களை "இரக்கமின்றி" தாக்கியதாக குற்றம் சாட்டினர்.</p><p>மேலும், குறைந்தது ஒரு காவலராவது பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியதுடன், அந்த அதிகாரியை அடையாளம் கண்டு அவருக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினர்.</p><p>கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தபோதிலும் போராட்ட இடத்திற்கு அருகில் "கற்கள் நிரம்பிய லாரி" ஒன்று இருந்தது குறித்தும், காவல்துறையினர் கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்தும், மேலும் போராட்டக்காரர்கள் வளைத்து பிடிக்கப்பட்டு வழக்கறிஞர்களை சந்திக்க வாய்ப்பளிக்கப்படாமலேயே ஒரு காவல் நிலையத்தில் இருந்து மற்றொரு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டனர் என்பது குறித்தும் அந்த கடிதம் கேள்வி எழுப்பியது.</p>]]></content:encoded></item><item><title>ராமர் உட்பட அனைத்தையும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். வணிகமாக மாற்றுகின்றன: சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/cpim-gen-secy-said-sangh-parivar-bjp-rss-turn-everything-into-business</link><comments>https://www.maalaimalar.com/news/national/cpim-gen-secy-said-sangh-parivar-bjp-rss-turn-everything-into-business#comments</comments><guid isPermaLink="false">6c11c8d4-6108-45f4-a872-be7e5d11f768</guid><pubDate>Fri, 24 Jul 2026 21:10:47 +0000</pubDate><atom:updated>2026-07-24T21:10:47.329Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,CPI(M),CJP Protest,சிஜேபி போராட்டம்,சிபிஐ எம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0wk6ku0v/ma-baby.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ma baby]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0wk6ku0v/ma-baby.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆகியவை அனைத்தையும் வணிக அல்லது வர்த்தக நடவடிக்கையாக மாற்றுவதாகவும், இது ஊழலுக்கு வழிவகுப்பதாகவும் <a href="https://www.maalaimalar.com/topic/cpim">சி.பி.ஐ. எம்</a> பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி குற்றம் சாட்டினார்.</p><p>டெல்லியில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) அமைப்புக்கு ஆதரவாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேபி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/bjp">பா.ஜ.க.</a> ஆகியவை ராமர் விவகாரத்தை கூட வணிகமயமாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.</p><h2>குற்றச்சாட்டு:</h2><p>இது குறித்து பேசிய சி.பி.ஐ.(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, "அயோத்தியில் ராமர் கோயில் ஏன் கட்டப்பட்டது என்பது நம் அனைவருக்கும் தெரியும். மத ரீதியான பிளவுகளை உருவாக்கியது மட்டுமின்றி, அது ஊழலுக்கும் வழிவகுத்தது என்பதை நாம் சமீபத்தில் கண்டோம். சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆகியவை அனைத்தையும் வணிகமாக மாற்றுகின்றன," என்று கூறினார்.</p><p>கோயிலுக்கு வழங்கப்பட்ட பக்தர்கள் காணிக்கைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>டெல்லியில் மாணவர்கள் மற்றும் சி.ஜே.பி. (CJP) ஆர்வலர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு கூட, நுழைவு தேர்வுகளை நடத்துவதில் நிலவும் ஊழலே அடிப்படை காரணம் என்று கூறிய பேபி, அந்த தேர்வுகளும் "வணிகமாக மாற்றப்பட்டுவிட்டன" என்று தெரிவித்தார்.</p><h2>சிஜேபி போராட்டம்:</h2><p>நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுக்க ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கண்டன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்த சம்பவம் காரணமாக நாடு முழுக்க பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அமளிகளால் தினந்தோரும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.</p><p>ஒருபக்கம் ஜந்தர் மந்தர் போராட்டக்களத்தில் மாணவர்கள் மீது காவல் துறை அடக்குமுறை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன. மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுக்க பரபரப்பான சழல் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டா வீடியோவுக்கு நல்ல வரவேற்பு: பொது மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-thanks-people-for-responses-positive-suggestions-received-for-midnight-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-thanks-people-for-responses-positive-suggestions-received-for-midnight-video#comments</comments><guid isPermaLink="false">d37af75b-70f7-4467-8f51-c043122118e5</guid><pubDate>Fri, 24 Jul 2026 19:24:18 +0000</pubDate><atom:updated>2026-07-24T19:24:18.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Inside Out 2,Modi,Instagram,Instagram Post,pm modi,Instagram reel,பிரதமர் மோடி,இன்ஸ்டாகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/esuf4zvg/pm-modi-15.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/esuf4zvg/pm-modi-15.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபடுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டத்தை கொண்டுவருவதற்கான அரசின் முடிவை அறிவித்து பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> வெளியிட்ட காணொளிக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்காக அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/topic/paper-leaks">வினாத்தாள் கசிவு</a> விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான அம்சங்களை உள்ளடக்கிய புதிய மசோதா ஒன்று, அடுத்த வாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அந்த காணொளி செய்தியில் மோடி குறிப்பிட்டார்.</p><h2>இன்ஸ்டா ரீல்:</h2><p>வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் பிரதமர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில் அறிவித்த மசோதாவின் வரைவுக்கு, வெள்ளிக்கிழமையன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.</p><p>"நண்பர்களே, நன்றி. நள்ளிரவில் உங்களுடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனது காணொளிக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்கு அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பு தொடர்ந்து கிடைக்கட்டும்; நம்மிடையேயான உறவு மேலும் வலுப்பெறட்டும். நன்றி, நன்றி நண்பர்களே," என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக வெளியிடப்பட்ட புதிய காணொளி செய்தியில் அவர் கூறினார்.</p><h2>புதிய சாதனை:</h2><p>24 மணி நேரத்தில் ஒரு 'ரீல்' காணொளிக்கு அதிகபட்ச பார்வைகளைப் பெற்றதன் மூலம் மோடி புதிய உலக சாதனை படைத்துள்ளார்; இதுவரை இக்காணொளி 303 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்கு முந்தைய சாதனை 300 மில்லியன் பார்வைகளாக இருந்தது.</p><p>தேர்வு தொடர்பான முறைகேடுகள் புகாரை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) தலைமையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் 'சான்சத் சலோ' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு நாட்களுக்கு பிறகு, மோடி இந்த காணொளியை வெளியிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>கருங்கடலில் வர்த்தக கப்பல் மீது தாக்குதல் - இந்தியர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-killed-in-attack-on-commercial-vessel-in-black-sea</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-killed-in-attack-on-commercial-vessel-in-black-sea#comments</comments><guid isPermaLink="false">de040bdd-216e-4b1e-8a19-ce8e7942f476</guid><pubDate>Fri, 24 Jul 2026 18:06:48 +0000</pubDate><atom:updated>2026-07-24T18:06:48.774Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>black sea,கருங்கடல்,commercial vessel,வர்த்தக கப்பல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/ts1cl02n/mv-omorfi-attatcked.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MV OMORFI Attacked]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/ts1cl02n/mv-omorfi-attatcked.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கருங்கடலில் உள்ள ரஷ்யாவின் கடல் எல்லை பகுதி வழியாக சென்று கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றின் மீது ஜூலை 18 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக <a href="https://www.maalaimalar.com/topic/mea">வெளியுறவு அமைச்சகம்</a> தெரிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/ukraine">உக்ரைன்</a> கடற்கரைக்கு அப்பால் ஜூலை 19-ஆம் தேதியன்று வணிக கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், அதில் நான்கு இந்தியர்கள் அடங்குவர் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்த சில நாட்களிலேயே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>இந்தியர் உயிரிழப்பு:</h2><p>"ஜூலை 18 அன்று, 'எம்வி ஓமோர்ஃபி' (MV OMORFI) என்ற வணிக கப்பல் கருங்கடலில் - ரஷ்யாவின் கடல் எல்லைப் பகுதிக்குள் - சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்ட தகவல் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தின்போது, ​​கப்பலில் மூன்று இந்தியர்கள் உட்பட மொத்தம் 10 பணியாளர்கள் இருந்தனர்," என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது.</p><p>"கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இத்தாக்குதலில் ஒரு இந்தியர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். கப்பலில் இருந்த மற்ற இரண்டு இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று அது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முயற்சித்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.</p><h2>இந்தியா வலியுறுத்தல்:</h2><p>"வணிகக் கப்பல்களைக் குறிவைப்பதையும், அப்பாவி பணியாளர்களின் உயிரை ஆபத்துக்குள்ளாக்குவதையும் இந்தியா உறுதியாக கண்டிக்கிறது. கடல்வழி போக்குவரத்து மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் சுதந்திரம் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தீவிர கவலைக்குரிய விஷயமாகும்," என்று அது கூறியது.</p><p>"கடல்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய வர்த்தகத்தின் தடையற்ற ஓட்டத்தை உறுதி செய்வதற்கான சர்வதேச கடமைகளை நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இந்தியா வலியுறுத்துகிறது," என்றும் வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்தது.</p><p>ஜூலை 19 அன்று 'எம்வி கோல்டன் லியோ' (MV Golden Leo) கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு ரஷ்யாவின் தூதரகப் பொறுப்பாளரைசெவ்வாய்க்கிழமை அன்று வரவழைத்து விளக்கம் கேட்டிருந்தது.</p>]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தரில் தலைமை காவலர் உயிரிழக்கவில்லை! வைரல் பதிவுகளுக்கு காவல் துறை விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/claim-of-woman-head-constables-death-during-jantar-mantar-protest-fake-delhi-police</link><comments>https://www.maalaimalar.com/news/national/claim-of-woman-head-constables-death-during-jantar-mantar-protest-fake-delhi-police#comments</comments><guid isPermaLink="false">7c6f4a3d-44bc-4351-b9f2-7cb51ef37f76</guid><pubDate>Fri, 24 Jul 2026 17:14:41 +0000</pubDate><atom:updated>2026-07-24T17:14:41.411Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>police,காவல் துறை,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/1en8am6y/cjp-protest-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/1en8am6y/cjp-protest-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது பெண் தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறும் சமூக வலைதள பதிவு ஒன்றை டெல்லி <a href="https://www.maalaimalar.com/topic/police">காவல்துறை</a> போலியானது என்று அறிவித்தது.</p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக <a href="https://www.maalaimalar.com/topic/neet-exam">நீட் தேர்வு</a> வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. </p><h2>கடும் போராட்டம்:</h2><p>மேலும், நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுக்க ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கண்டன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக நாடு முழுக்க பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அமளிகளால் தினந்தோரும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.</p><p>ஒருபக்கம் ஜந்தர் மந்தர் போராட்டக்களத்தில் மாணவர்கள் மீது காவல் துறை அடக்குமுறை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன. இந்த நிலையில், ஜந்தர் மந்தர் போராட்டக்களத்தில் பெண் தலைமை காவல் உயிரிழந்ததாக கூறும் சமூக வலைதள பதிவு வேகமாக பரவியது.</p><h2>காவல் துறை விளக்கம்:</h2><p>இந்த நிலையில், அத்தகைய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பதிவு தீய நோக்கத்துடன் பரப்பப்பட்டது என்றும் தெரிவித்தது.</p><p>இத்தகைய பொய்யான தகவல்களை உருவாக்குவோர், பரப்புவோர் அல்லது மேலும் பகிர்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த காவல்துறை, சரிபார்க்கப்படாத தகவல்களை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டது.</p><h2>பணிநீக்கம்:</h2><p>முன்னதாக, "நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக தேசிய தேர்வு முகமை 47 அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கியது. இவர்களில் சில அதிகாரிகள் மீது சட்ட மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும். </p><p>வினாத்தாள் கசிவு சர்ச்சையில் சிக்கியுள்ள NTA-வின் முழுமையான சீரமைப்பின் ஒரு பகுதியே இது," என ஏ.என்.ஐ. தெரிவித்தது.</p><p>நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆதாரம் இல்லை.. 2024 நீட் வினாத்தாள் கசிவில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவருக்கு நீதிமன்றத்தில் சிபிஐ நற்சான்று</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-case-cbi-says-no-evidence-against-sanjeev-in-2024-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-case-cbi-says-no-evidence-against-sanjeev-in-2024-scam#comments</comments><guid isPermaLink="false">71900733-e92e-4e19-b5bf-8e6479d0599b</guid><pubDate>Fri, 24 Jul 2026 16:18:15 +0000</pubDate><atom:updated>2026-07-24T16:18:15.491Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,நீட் தேர்வு,Neet exam,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xl3atp2p/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சஞ்சீவ் குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ சஞ்சீவ் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xl3atp2p/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவு வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்பட்ட சஞ்சீவ் குமாருக்கு எதிராக எனது ஆதாரமும் கிடைக்கவில்லை என  சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. </p><h2> பின்னணி </h2><p>பீகாரில் 2024 நீட் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டிகளை விசாரித்த சிபிஐ, பட்னா நீதிமன்றத்தில் 45 பேருக்கு எதிராக பல குற்றப்பத்திரிகைகளை  தாக்கல் செய்தது.</p><p>தொடக்கத்தில் பீகார் மாநில காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் சஞ்சீவின் பெயர் சேர்க்கப்பட்டது.</p><p>வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட பின் சிபிஐ, பலரை விசாரணை செய்ததோடு, டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளை தீவிரமாக ஆய்வு செய்தது. </p><p>ஆனால், சஞ்சீவ் இந்தக் குற்றத்துடன் நேரடியாகத் தொடர்புபடுத்தும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என சிபிஐ தற்போது தெரிவித்துள்ளது.</p><h2>சிபிஐ</h2><p>சிபிஐ கூறியதாவது, "விசாரணையின் முதற்கட்ட கட்டத்தில் சஞ்சீவ் மீது சந்தேகம் இருந்தது உண்மைதான். அவர் வேறு சில வினாத்தாள் கசிவு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால், இதிலும் அவருக்குப் பங்கு இருக்கலாம் எனக் கருதப்பட்டு பீகார் போலீஸ் எப்ஐஆரில் பெயர் சேர்க்கப்பட்டது. </p><p>ஆனால், முறையான விசாரணைக்குப் பிறகு அவருக்கும் இந்த 2024 நீட் வினாத்தாள் கசிவுக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது." எனத் தெரிவித்துள்ளது. </p><p>இருப்பினும் வேறு சில வழக்குகளில் குற்றவாளியாக உள்ளதால் அவர் தொடர்ந்து நீதித்துறை காவலில்  இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. </p><h2>2026 நீட் வினாத்தாள் கசிவு</h2><p>ஒருபுறம் 2024 வழக்கின் விசாரணைகள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் வேளையில்,<a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-anitha-legacy-tamil-voices-at-jantar-mantar-demand-education-ministers-resignation-and-exam-exemption"> 2026 நீட் வினாத்தாள் கசிவு </a>வழக்கு தொடர்பான விசாரணையைச் சிபிஐ தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.</p><p>பல்வேறு மாநிலங்களில் இருந்து பல முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வு வினாத்தாள்களைக் கசியவிடும் நெட்வொர்க்கை உடைக்க விசாரணை விரைவாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக சிஜேபி கட்சி தலைமையில் டெல்லியில் போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் 2024 வழக்கில் முக்கிய குற்றவாளி என கருத்தப்பட்டவருக்கு சிபிஐ நற்சான்றிதழ் வழங்கியுள்ளது விவாதப்பொருளாக மாறிவருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தர் போராட்டத்தில் அனிதாவின் அண்ணன்!.. நீட் தேர்வை தடை செய்ய வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-anitha-legacy-tamil-voices-at-jantar-mantar-demand-education-ministers-resignation-and-exam-exemption</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-anitha-legacy-tamil-voices-at-jantar-mantar-demand-education-ministers-resignation-and-exam-exemption#comments</comments><guid isPermaLink="false">48d8aa31-6835-40bf-a1c7-e6f4f7b98a59</guid><pubDate>Fri, 24 Jul 2026 15:48:55 +0000</pubDate><atom:updated>2026-07-24T15:48:55.839Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Neet exam,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/eb230k8x/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ manirathnam, anitha]]></media:title><media:description type="html"><![CDATA[ manirathnam, anitha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/eb230k8x/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தின் அரியலூர் மாவாட்டத்தில் 2017-இல் அணைந்த ஓர் நெருப்பு இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் வரை கனன்றுகொண்டிருக்கிறது.</p><p>நீட் தேர்வினால் ஏற்பட்ட அழுத்தத்தில் 2017 செப்டம்பர் 1 அன்று தற்கொலை செய்துகொண்ட 17 வயது மாணவி அனிதாவை தமிழகத்தால் மறந்திருக்க முடியாது. அரசியல் கடந்து தமிழர்கள் அனைவரையும் உலுக்கிய அனிதா தற்கொலை நீட் வேண்டாம் என்ற நிலைப்பாட்டின் ஆரம்பப்புள்ளியாக மாறியது. </p><p>12ஆம் வகுப்பில் 1200 க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்று மருத்துவ படிக்குக்கான கட் ஆப்பில் 200க்கு 196.75 எடுத்திருந்தார் அனிதா. ஆனால் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் மருத்துவ கனவை அடையும் மேலும் ஒரு படியாக அத்தேர்வை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது.  ஆனால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற அனிதாவால், மத்திய அரசின் பாடத்திட்டத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு நடத்தப்பட்ட தேர்வில் போதிய மதிப்பெண் ஈட்ட முடியாமல் போனது.  </p><p>தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தவர்களின் அவரும் ஒருவர். ஆனால் நீதிமன்றம் அதற்கு இசையை மறுத்தது. இதனால மனமுடைந்த அவர் உயிரை மாய்த்துக்கொண்டார். நீட் எதிர்ப்பின் முகமாக அனிதா மாறினார்.</p><p>இன்றைய தமிழக முதல்வர் விஜயும் நடிகராக இருந்த அந்த சமயத்தில் அனிதா வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோருக்கு ஆறுத தெரிவித்திருந்தார்.</p><p>இந்நிலையில் இந்த ஆண்டு மே 3 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21 மறுதேர்வு நடத்தப்பட்டது. இதற்கிடையில் கடும் மன அழுத்தத்தில் நாடு முழுவதும் 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இவ்வாண்டு மட்டுமின்றி, கட்டாயமாக்கப்பட்டதில் இருந்து பல மாணவ மாணவிகள் நீட் தேர்வினால் தங்கள் இன்னுயிரை மாய்துகொண்டுள்ளனர்.</p> <h2>போராட்டம்</h2><p>இதனிடையே வினாத்தாள் கசிவு மாணவர்களை கோபமும் விரக்தியும் கொள்ளச் செய்தது. அது அதிகாரத்தில் இருப்போர், இந்த முறைகேடுகளுக்கு <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-row-youth-allege-brutal-police-action-as-government-denies-use">பொறுப்புக்கூற </a>மறுப்போர் மீதான கோபமாக மாறி இன்று வீதிகளில் வெளிப்பட்டு கொண்டிருக்கிறது. அமைதியான முறையில்.</p><p>நீட் மற்றும் பிற தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சிஜேபி ஜூன் 20 முதல் முன்னெடுத்த போராட்டம் வெற்றியடையும் தருவாயில் உள்ளது.</p><p>இந்த விவகாரத்தில் மௌனம் காத்த பிரதமர் மோடி நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டு, முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள், வினாத்தாள் கசிவை தடுக்க மசோதா உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். இருந்தபோதும் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என சிஜேபி அறிவித்துள்ளது.</p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டுள்ள இளைஞர்கள் சிரமங்களை புறந்தள்ளி தங்கள் மன உறுதியுடன் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அங்குள்ள இளைஞர்களில் பல தமிழர்களும் அடங்குவர். அப்படி ஒருவர் தான் மணிரத்தினம். அனிதாவின் அண்ணன். ஆம் அன்று அரியலூரில் தற்கொலை செய்துகொண்ட அதே 17 வயது மாணவியின் அண்ணன்.</p><h2> ஜந்தர் மந்தரில் மணிரத்னம்</h2><p>9 வருடங்கள் முன் தன் தங்கையை இழந்த மணிரத்னம், இன்று லட்சோபலட்சம் தங்கைகளின் எதிர்காலத்திற்காக ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார்.</p><p>போராட்டக் களத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், " வினாத்தாள் கசிவு தொடங்கி தொலைதூரத்தில் தேர்வு மையம் ஒதுக்குவது போன்ற சின்ன சின்ன தவறுகள் 25 லட்சம் பேரை (இந்தாண்டு மே 3 நீட் தேர்வு எழுதியோர் எண்ணிக்கை 25 லட்சம்- மறுதேர்வில் 20 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர்) பாதித்துள்ளது. இது ஒரு தோல்வி அடைந்த மாடல்.</p><p>கல்வி அமைச்சரின் ராஜினாமா சிறிய படி தான். அது அவரின் பொறுப்பு. ஆனால் அது மட்டும் போதாது. எங்களுக்கு நீட் தேர்வில் இருந்து முழு விலக்கு வேண்டும். நீட் தேர்வை தடை செய்யுங்கள். நீட் தேர்வு என்பது விளிம்புநிலை மக்களுக்கு எதிரானது. பொருளாதாரத்தில் நலிந்த மற்றும் கிராமப்புற மக்களுக்கு எதிரானது" என்று உறுதிபட தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு திடீர் ராஜினாமா!</title><link>https://www.maalaimalar.com/news/national/union-minister-of-state-for-railways-ravneet-singh-bittu-resigns-suddenly</link><comments>https://www.maalaimalar.com/news/national/union-minister-of-state-for-railways-ravneet-singh-bittu-resigns-suddenly#comments</comments><guid isPermaLink="false">04b3b62d-1b52-4f0c-997b-2e09926173ec</guid><pubDate>Fri, 24 Jul 2026 15:34:17 +0000</pubDate><atom:updated>2026-07-24T15:34:17.138Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>resign,ராஜினாமா,Ravneet Singh Bittu,ரவ்னீத் சிங் பிட்டு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hwidbgxh/New-Project-2026-07-24T205039.954.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய ரயில்வே இணையமைச்சர் வ்னீத் சிங் பிட்டு திடீர் ராஜினாமா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hwidbgxh/New-Project-2026-07-24T205039.954.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு தனது பதவியை இன்று (ஜூலை.24) திடீரென ராஜினாமா செய்துள்ளார்.</p><p>அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும்  உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளதாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>“இந்திய அரசியலமைப்பின் 75வது பிரிவின் (2) உட்பிரிவின் கீழ், பிரதமரின் ஆலோசனையின்படி, ரவ்னீத் சிங்  ராஜினாமாவை இந்திய குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார்,”  என்று ராஷ்டிரபதி பவன் செய்திக்குறிப்பு தெரிவித்தது.</p><p>பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சர் பீன்ட் சிங்கின் பேரனான இவர், 2024-ல் பாஜகவில் இணைந்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். பின்னர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  </p><p>ஜூன் 21 ஆம் தேதியுடன் இவரது பதவிக்காலம் முடிவடைந்தது. நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒரு நபர் அதிகபட்சமாக 6 மாதங்கள் மட்டுமே அமைச்சராக நீடிக்க முடியும் என்ற விதி இருந்தாலும், அவர் தனது பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். </p><p>அடுத்த ஆண்டு பஞ்சாபில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காக தற்போது ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது. </p><p>அதேவேளையில் தற்போதைய தேர்தலில் இவருக்கு மீண்டும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தீவிரமடைந்த போராட்டம் - 47 அதிகாரிகளை கூண்டோடு தூக்கிய NTA!</title><link>https://www.maalaimalar.com/news/national/protest-intensifies-nta-removes-47-officials-en-masse</link><comments>https://www.maalaimalar.com/news/national/protest-intensifies-nta-removes-47-officials-en-masse#comments</comments><guid isPermaLink="false">295181b8-217c-4283-90ae-2091e7a3e3af</guid><pubDate>Fri, 24 Jul 2026 15:14:23 +0000</pubDate><atom:updated>2026-07-24T15:14:23.387Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>NTA,தேசிய தேர்வு முகமை,paper leaks,வினாத்தாள் கசிவுகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xq3i16e8/New-Project-2026-07-24T203316.252.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தீவிரமடைந்த போராட்டம் - 47 அதிகாரிகளை கூண்டோடு தூக்கிய NTA!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xq3i16e8/New-Project-2026-07-24T203316.252.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, கல்வித்துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் ஒரு பகுதியாக, தேசிய தேர்வு முகமை 47 அதிகாரிகளை கூண்டோடு பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>“தேசிய தேர்வு முகமை 47 அதிகாரிகளைப் பணியிலிருந்து நீக்கியுள்ளது. இவர்களில் சில அதிகாரிகள் மீது சட்ட மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும். வினாத்தாள் கசிவு சர்ச்சையில் சிக்கியுள்ள NTA-வின் முழுமையான சீரமைப்பின் ஒரு பகுதியே இது.” என ஏஎன்ஐ தெரிவித்துள்ளது. </p><p>தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் நாடு தழுவிய மாணவர் போராட்டம் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துவது குறிப்பிடத்தக்கது. </p><h2>வினாத்தாள் கசிவு வரைவு மசோதா</h2><p>வினாத்தாள் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு இனி ரூ.10 கோடி அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கும் வரைவு மசோதாவிற்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>வரும் திங்கள்கிழமையன்று மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகவும் உள்ளது. </p><p>அனுமதிக்கப்பட்ட 39 பணியிடங்களில் 24 நிரந்தர ஊழியர்கள், 73 ஒப்பந்த ஊழியர்கள், 124 வெளிப்பணியாளர்களை வைத்து தேசிய தேர்வு முகமை இயங்கி வருவதாக நேற்று முன்தினம் மத்திய கல்வி அமைச்சகம் மக்களவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நீதிமன்ற விசாரணைகளை சமூக வலைதளங்களில் பதிவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை! </title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-imposes-interim-stay-on-uploading-court-proceedings-to-social-media</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-imposes-interim-stay-on-uploading-court-proceedings-to-social-media#comments</comments><guid isPermaLink="false">497ae7fe-3965-4fb3-ab34-d19615ea893f</guid><pubDate>Fri, 24 Jul 2026 14:19:20 +0000</pubDate><atom:updated>2026-07-24T14:19:20.954Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,Court hearing,நீதிமன்ற விசாரணைகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hiw32guf/New-Project-2026-07-24T190605.266.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீதிமன்ற விசாரணைகளை சமூக வலைதளங்களில் பதிவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hiw32guf/New-Project-2026-07-24T190605.266.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீதிமன்ற விசாரணைகளின் ஒலி மற்றும் காணொலி பதிவுகளை உரிய அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கும், பகிர்வதற்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. </p><p>தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p>டிஜிட்டல் தளங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒலி மற்றும் காணொளிப் பதிவுகளைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கக்கோரி, செய்தியாளர் ஹர்ஷிதா குரோவர் தாக்கல் செய்த பொது நல மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு வந்துள்ளது.</p><p>இருப்பினும், செய்தி ஊடகங்கள் மற்றும் அறிக்கையிடல் பணிகளுக்கு இந்த உத்தரவால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2>24 மணிநேரமும் இயங்கும் பொழுதுபோக்கு ஊடகமல்ல...</h2><p>“ஒரு இடைக்கால நடவடிக்கையாக, இந்த நீதிமன்றத்தின் பொதுச் செயலாளர் அல்லது அதிகார வரம்புக்குட்பட்ட உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் முன் அனுமதியின்றி, நீதித்துறை நடவடிக்கைகளின் ஒலி-ஒளிப் பதிவுகளை சமூக ஊடகங்கள் அல்லது பிற டிஜிட்டல் தளங்களில் பதிவிடுதல், பகிர்தல், மறுபதிவிடுதல், எடிட் செய்தல், மாற்றியமைப்பது, பணமாக்குதல் ஆகியவை செய்யப்படக்கூடாது என்று உத்தரவிடப்படுகிறது.</p><p>இது நீதிமன்றத்தின் 24 மணி நேர பொழுதுபோக்கு சேனலாக இருக்க முடியாது.” என அமர்வு தெரிவித்துள்ளது. </p><p>மேலும் இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் கொண்ட அறிக்கையை சமர்பிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம்,</p><p>விசாரணை தொடர்பாக இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள், நீதித்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், நீதிமன்ற நடவடிக்கைகளைத் திரிக்கும் வகையிலும் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இமாச்சலில் திடீர் நிலச்சரிவு - 6 மாதக்குழந்தை உட்பட 13 பேர் பரிதாப பலி!</title><link>https://www.maalaimalar.com/news/national/sudden-landslide-in-himachal-13-dead-including-a-6-month-old-infant</link><comments>https://www.maalaimalar.com/news/national/sudden-landslide-in-himachal-13-dead-including-a-6-month-old-infant#comments</comments><guid isPermaLink="false">c618cadf-48d6-4f3e-90f6-8ff861812745</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:59:52 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:59:52.568Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>landslide,himachal,நிலச்சரிவு,இமாச்சல் பிரதேசம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/2149eufw/New-Project-2026-07-24T190834.113.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இமாச்சலில் திடீர் நிலச்சரிவு - 6 மாதக்குழந்தை உட்பட 13 பேர் பரிதாப பலி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/2149eufw/New-Project-2026-07-24T190834.113.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்தில், இன்று நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி 6 மாதக்குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>உதய்பூர்-கில்லர் வழித்தடத்தில் உள்ள கஹு-து நாலா அருகே இந்த விபத்து நடந்துள்ளது.  இமாச்சலில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மலையின் ஒரு பகுதி திடீரெனச் சரிந்து, குலுவிலிருந்து பாங்கிக்குச் சென்று கொண்டிருந்த டாடா சுமோ வாகனம்மீது ராட்சதப் பாறைகள் விழுந்துள்ளன. </p><p>இதில் வாகனம் சம்பவ இடத்திலேயே பாறைகளுக்கு அடியில் புதைந்துள்ளது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, மீட்புக் குழுவினர், காயமடைந்த ஒருவரைப் பத்திரமாக மீட்டனர். இருப்பினும் அவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். </p><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது பெய்து வரும் கனமழையின் போது, ​​நிலச்சரிவு அபாயம் உள்ள சாலைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், மலைப்பகுதியில் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் பார்மோர் சட்டமன்ற உறுப்பினர் ஜனக் ராஜ் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். </p><p>உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமைதிக்கு குந்தகம்.. இணைய சேவை இல்லாமலே இயங்கும் BitChat தகவல் பரிமாற்ற செயலிக்கு மத்திய அரசு தடை! </title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-bitchat-ban-centre-blocks-bluetooth-app-amid-internet-shutdown-and-neet-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-bitchat-ban-centre-blocks-bluetooth-app-amid-internet-shutdown-and-neet-row#comments</comments><guid isPermaLink="false">dcabe09b-fa94-4abd-b9f9-f0bc44ccd8c8</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:45:34 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:45:34.977Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Internet service shutdown,இணைய சேவை முடக்கம்,CJP Protest,சிஜேபி போராட்டம்,பிட்சாட்,bitchat</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/5zq7pgbb/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ BitChat ]]></media:title><media:description type="html"><![CDATA[ BitChat ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/5zq7pgbb/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் ஜூன் 20 முதல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறது. நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே அவர்களின் <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-allegations-youth-march-faces-harsh-police-crackdown-and-expired-tear-gas">பிரதான கோரிக்கை. </a></p><p>அவர்களுக்கு ஆதரவாக கடந்த ஜூன் 28 முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தார் கல்வியாளர் சோனம் வாங்சுக். </p><p>அவரின் உண்ணாவிரதத்தை 20வது நாளில் டெல்லி போலீசாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச்செல்லப்பட்டு மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டார்.  </p><p>அவருக்கு ஆதரவாகவும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும் நாடு முழுவதும் இருந்து பலர் குரல் கொடுத்தனர். </p><p>கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற இளைஞர்களை காவல்துறை மற்றும் ஆர்ஏஎப் படையினர் கொடூரமான முறையில் லத்திகளால் தாக்கினர். </p><p>கண்ணீர் புகைகுண்டுகளை பிரயோகித்து மாணவர்களை கலைக்க முயன்றனர். மேலும் பெல்லட் துப்பாக்கிகள், ஆணிகள் பொருத்திய லத்திகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. </p><p>சீருடையற்ற நபர்களும் கையில் லத்திகளுடன் மாணவர்களை தாக்கிய வீடியோக்களும் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. </p><p>இளைஞர்கள் மீதான தாக்குதலுக்கு நாடு முழுவதிலும் பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலை அடுத்து போராட்டம் மேலும் வலுப்பெற்றது. நாடு முழுதும் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்காக போராட்டங்கள் நடத்தப்படுகிறது. அழுத்தம் அதிகரித்த நிலையில் மௌனம் கலைத்த பிரதமர் மோடி, நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டார். </p> <p>அதில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் வினாத்தாள் கசிவை தடுக்க சிறப்பு மசோதா இயற்றப்படும் என்றும் வாக்குறுதியளித்தார். </p><p>இதனைதொடர்ந்து மருத்துவமனையில் ஜேபி நட்டா, ஜிதேந்திர சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் சோனம் வாங்சுக்கை சென்று சந்தித்ததை அடுத்து அவர் தனது 26 நாட்கள் போராட்டத்தை நேற்றிரவு முடித்துக்கொண்டார்.</p><p>ஜூலை 20 அன்று பேரணி சென்ற மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது என மத்திய அரசு தனக்கு உறுதியளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே, தர்மேந்திர பிராதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகும் வரை ஜந்தர் மந்தரில் தங்கள் போராட்டம் தொடரும் என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார். இன்று ஜேபி நட்டாவை சந்தித்த சிஜேபி பிரதிநிதிகள் அதேயே வலுயுறுத்தினர்.</p> <h2>இணைய சேவை முடக்கம்</h2><p>மறுபுறம் போராட்டம் தீவிரமடைவதை தடுக்க, மத்திய அரசு இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஜந்தர் மந்தர் பகுதியை சுற்றிலும் இணைய சேவை முடிக்கப்பட்டுள்ளது. இதனால் சமூக ஊடங்களின் மூலம் போராட்டத்திற்கு விடுக்கப்படும் அழைப்புகள் மூலம் அங்கு மேலும் பலர் வருவதை தடுக்கும் நோக்கத்தில் இணைய சேவைகள் முடக்கப்பட்டது.</p><p>ஆனால் இளைஞர்கள் இந்த இணைய சேவை முடக்கத்தை சாமர்த்தியமாக பைபாஸ் செய்து இணையம் தேவைப்படாத செயலிகள் மூலமும் பிற வகையிலும் வெளியுலக தொடர்பை தக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>அதிலும் குறிப்பாக கிட்ஹப் நிறுவனத்தின் பிட்சாட் செயலி இணைய தேவை இன்று முற்றிலும் புளூடூத் மூலம் இயங்கக்கூடுய ஒரு தகவல் பரிமாற்ற ஊடகம் ஆகும்.</p><p>இணையம் முற்றிலும் துண்டிக்கப்பட்ட சூழலிலும், புளூடூத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அருகிலுள்ள மொபைல் போன்களுக்கு இடையே நேரடியாக செய்திகளை பரிமாறிக் கொள்ள இது உதவுகிறது.</p><p>இந்த லூப் ஹோலை பலரும் பயன்படுத்தத்தொடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில் விழித்துக்கொண்ட மத்திய அரசு அச்செயலிக்கு தடை விதித்துள்ளது.</p><p>பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சட்டவிரோதக் கூட்டங்களை ஒருங்கிணைக்கவும் இச்செயலி பயன்படுத்தப்படும் ஆபத்து அதிகம் உள்ளதாக அந்த செயலியை வரையறுத்துள்ள மத்திய அரசு பிட் சாட்டை முடக்கக்கோரி கிட் ஹப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.</p> <h2>பிட் சாட் - ஜாக் டோர்சி</h2><p>எக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜாக் டோர்சியால் உருவாக்கப்பட்டதே இந்த 'பிட்சாட்' செயலியாகும்.</p><p>மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்'நேற்று இது தொடர்பான நோட்டீஸை அனுப்பியுள்ளது.</p><p>தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 மற்றும் ஐ.டி விதிகள் 2021ன் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>பிட்சாட்டின் பிரதான Repository மற்றும் ஆண்ட்ராய்டு பதிப்புகளை 3 மணி நேரத்திற்குள் தடையுறுத்துமாறு அனுப்பப்பட்ட அந்த நோட்டீசின் ஸ்க்ரீன் ஷாட்களை ஜாக் டோர்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.</p><p>டெல்லியில் இணையம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் பிட்சாட் செயலியைப் பயன்படுத்தினார்களா என்பது குறித்து டெல்லி காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>இருப்பினும், போராட்டக்காரர்கள் இச்செயலியைத் தான் பயன்படுத்தினார்களா என்பதை அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: ஜூலை 20 தாக்குதல்.. பெல்லட் துப்பாக்கியால் கண் பார்வை இழந்த இளைஞரை அழைத்துவந்து ராகுல் பேட்டி  </title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-row-youth-allege-brutal-police-action-as-government-denies-use</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-row-youth-allege-brutal-police-action-as-government-denies-use#comments</comments><guid isPermaLink="false">5e76b6b3-d507-456d-beba-23976ecdc029</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:01:23 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:01:23.095Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,question paper leak,வினாத்தாள் கசிவு,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0mv4303j/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல், சாஹில் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல், சாஹில் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0mv4303j/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜூலை 20 அன்று சிஜேபி தலமையில் இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றபோது டெல்லி காவல்துறை மற்றும் ரேபிட் ஆக்ஷன் போர்ஸ் உள்ளிட்ட மத்திய படையினர் கொடூராமான முறையில் தாக்குதல் நடத்தினர். </p><p>அமைதியான முறையில் முன்னேறிச் சென்ற இளைஞர்களை தடிகளால் தாக்கியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் கலைக்க முயன்றனர். சீருடையற்ற நபர்களும் கைகளில் லத்தியுடன் இளைஞர்கள் மற்றும் பெண்களை தாக்கிய காணொளிகளும் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. </p><p>காலாவதியான கண்ணீர் புகைகுண்டுகள், ஆணிகள் பொருத்திய லத்திகள், மின்சார அதிர்ச்சி தரும் லத்திகள், பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை இளைஞர்கள் மீது பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><p>இவற்றில் குறிப்பாக சர்ச்சைக்குரிய <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-allegations-youth-march-faces-harsh-police-crackdown-and-expired-tear-gas">பெல்லட் துப்பாக்கிகள் </a>பயன்படுத்தப்பட்டதற்காக ஆதாரமாக சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களின் மருத்துவ அறிக்கைகளும் புகைப்படங்களும் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>ஊடகவியலாளர் ஒருவரும் பெல்லட் துப்பாக்கியால் சுடப்படும்போது உடலில் ஏற்படும் புள்ளி புள்ளியான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைடபடங்களுடன் ஊடக அறிக்கைகள் வெளியாகின. </p><p>ஆனால் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை என டெல்லி காவல்துறையும், அரசின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பகமான PIB-யும் மறுத்துள்ளன.</p> <h2>பெல்லட் துப்பாக்கிகள்</h2><p>உலோகம், ரப்பர் அல்லது ஈயத்தால் செய்ப்பட்ட சிறிய குண்டுகள் Pellets எனப்படுகின்றன. ஒருமுறை சுட்டால் பல சிறிய குண்டுகள் ஒரே நேரத்தில் பாயும்.</p><p>இது உடலில் புள்ளி புள்ளியான காயங்களை ஏற்படுத்தும்.</p><p>கூட்டத்தைக் கலைக்கவும், கலவரங்களைக் கட்டுப்படுத்தவும் இவை குறைந்த ஆபத்துள்ள ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகின்றன.</p><p>ஆனால் சில நேரங்களில் இந்த குண்டுகள் கண் பார்வை மற்றும் கேட்கும் திறனை பறிக்கக்கூடியவை. பெல்லட் குண்டுகள் உடலின் முக்கிய பாகங்களில் பட்டால் கடுமையான காயங்கள் மற்றும் சில சமயங்களில் உயிரிழப்பும் கூட ஏற்படக்கூடும்.</p><p>இதன் காரணமாகவே பெல்லட் துப்பாக்கிகளின் பயன்பாட்டிற்கு மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><figure><img alt="ராகுல், சாஹில் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/pixk3pqi/tn-4.jpg" /><figcaption>ராகுல், சாஹில் </figcaption></figure><h2>ராகுல் காந்தி பேட்டி</h2><p>இந்த சூழலில் பெல்லட் துப்பாக்கியால் காயமுற்று சிகிச்சை பெற்ற சாஹில் என்ற 19 வயது மாணவரை உடன்வைத்துக்கொண்டு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.</p><p>முன்னதாக இளைஞர்கள் மீதான தாக்குதல், தேர்வு முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் முடங்கிய நிலையில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.</p><p>முகத்தில் உடலிலும் முகத்தில் கண்களின் அருகேயும் பெல்லெட் குண்டு தழும்புகள் கொண்ட அம்மாணவரை அருகில் வைத்துக்கொண்டு ராகுல் காந்தி செய்தியளர்களிடம் பேசுகையில், இந்த சகோதரர் (மாணவர்) கையில் தேசியக்கொடியை ஏந்தி அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்தபோது பெல்லட் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | LoP, Lok Sabha, Rahul Gandhi brings before the media a man he claims suffered pellet gun injuries during students&#39; protest<br><br>He says, &quot;I want to explain that my brother standing here was injured by a pellet gun while he was peacefully protesting, holding the Tricolour.… <a href="https://t.co/TCQJ4OZJcu">pic.twitter.com/TCQJ4OZJcu</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2080591144971297051?ref_src=twsrc%5Etfw">July 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இதனால் அவரின் ஒருபக்க கண் பார்வை பறிபோயுள்ளது. அரசு பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தவே இல்லை என கூறுகிறது. அப்படி சொன்னார்கள் தானே, அப்போது இங்கே பாருங்கள், இது என்ன, இவரின் கண் பாதிக்கப்பட்டுள்ளது. தனது பார்வையை இழந்துள்ளார்" என மாணவரின் முகத்தை சுட்டிக்காட்டி தெரிவித்தார்.</p><p>மேலும், "அரசாங்கம், தேசத்தின் எதிர்காலத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. இவர் (மாணவர்), கடினமாக படித்து போலீஸ் பணி தேர்வு எழுதியுள்ளார். ஆனால் ஒரு நாள் அவரிடம், அதன் வினாத்தாள் கசிந்துவிட்டதாக சொல்லப்பட்டது. நாட்டின் லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் இதே நிலைமை தான். அவர்களின் பெற்றோரின் கடின உழைப்பு அனைத்தும் வீணடிக்கப்பட்டுள்ளது.</p><p>அவர்களிடம் மூன்றே மூன்று கோரிக்கைகள் தான் உள்ளன. ஒன்று, யாரால் இவையெல்லாம் நிகழ்ந்ததோ அந்த கல்வி அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். இரண்டாவது, நமது எதிர்காலத்தின் மீது லத்திகளையும், பெல்லட் துப்பாக்கிகளையும் பயன்படுத்திவர்கள் நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும், மூன்றாவது, இதற்கெல்லாம் மூலகர்த்தாவான நரேந்திர மோடி, இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தர் போராட்டம்: டெல்லி காவல்துறை தடியடிக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/jantar-mantar-protest-supreme-court-agrees-to-hear-plea-against-delhi-police-lathi-charge</link><comments>https://www.maalaimalar.com/news/national/jantar-mantar-protest-supreme-court-agrees-to-hear-plea-against-delhi-police-lathi-charge#comments</comments><guid isPermaLink="false">dc07442f-ddc2-461a-b650-32bafad6faa6</guid><pubDate>Fri, 24 Jul 2026 12:51:56 +0000</pubDate><atom:updated>2026-07-24T12:51:56.804Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,Jantar Mantar,டெல்லி காவல்துறை,ஜந்தர் மந்தர்,police excesses</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/si3yk8sf/New-Project-2026-07-24T182055.533.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜந்தர் மந்தர் போராட்டம்: டெல்லி காவல்துறை தடியடிக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/si3yk8sf/New-Project-2026-07-24T182055.533.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி போராட்டத்தில் மாணவர்கள்மீது கண்மூடித்தனமான தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு எதிரான மனுவை திங்கள்கிழமையன்று (ஜூலை.27) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. </p><p>நீதிமன்றத்தில், “மாணவர்கள் போராட்டங்கள் தொடர்பாக நாங்கள் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளோம். அதற்கான டைரி எண் (தற்காலிக பதிவு எண். அதாவது மனு பெறப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ சான்று) உருவாக்கப்பட்டுவிட்டது. </p><p>இதில் அவசரம் உள்ளது. மாணவர்களுக்கு எதிராகக் காவல்துறையினர் அளவுக்கு அதிகமாகத் தடியடி நடத்தி அத்துமீறி வருகிறார்கள். </p><p>இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். நீதிமன்றம்தான் இதற்கு இடையில் நின்றுகொண்டிருக்கிறது.” என மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் தெரிவித்தார். </p><p>இதனைத்தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜெயமால்ய பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சம்மதித்துள்ளது.</p><h2>போராட்டமும், போலீசாரின் அராஜகப் போக்கும்</h2><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன்.20 முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. </p><p>போராட்டத்தின் ஒருபகுதியாக ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி "சன்சத் சலோ" பேரணி செல்ல திட்டமிடப்பட்டது. பேரணிக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று டெல்லி காவல்துறை எச்சரித்தது. இதனைத் தொடர்ந்தும் போராட்டக்காரர்கள் பேரணியில் ஈடுபட்டனர். </p><p>இதனால் போராட்டக்காரர்கள்மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அவர்களை தடுக்க கண்ணீர் புகைக் குண்டுகள், பெல்லட் துப்பாக்கிகள் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர். இதனால் 20க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>குறிப்பாக பெல்லட் துப்பாக்கியால் இளைஞர் ஒருவருக்கு கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போலீசார் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சீற்றத்தை தூண்டின.</p><p>பெண்கள்மீதும் சராமாரி தாக்குதல், அவர்களை தவறான இடங்களில் அடித்தல், நேம் பேட்ச் அணியாத காவலர்கள், குறிப்பாக சீருடை அணியாத காவலர்கள் என பல்வேறு சர்ச்சைகள் டெல்லி காவல்துறையை சூழ்ந்தது.</p><h2>நீதிமன்றத்தின் முந்தைய நிலைப்பாடு</h2><p>இச்சம்பவம் தொடர்பாக முதலில் அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட தங்களுக்கு விருப்பம் இல்லை, நேரம் இல்லை என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவிற்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழு, தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ரூ.1 கோடி அபராதம், 10 ஆண்டுகள் சிறை: வினாத்தாள் கசிவுகளுக்கு தண்டனையை கடுமையாக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-1-crore-fine-10-years-in-prison-union-cabinet-approves-bill-to-toughen-penalties-for-question-paper-leaks</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-1-crore-fine-10-years-in-prison-union-cabinet-approves-bill-to-toughen-penalties-for-question-paper-leaks#comments</comments><guid isPermaLink="false">da93b70b-4f95-43ba-a5c6-d2473e7196a1</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:59:06 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:59:06.821Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Union Cabinet,மத்திய அமைச்சரவை,paper leak cases,வினாத்தாள் கசிவுகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/p3bweqr4/New-Project-2026-07-24T172632.601.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரூ.1 கோடி அபராதம், 10 ஆண்டுகள் சிறை: வினாத்தாள் கசிவுகளுக்கு தண்டனையை கடுமையாக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/p3bweqr4/New-Project-2026-07-24T172632.601.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வினாத்தாள் கசிவுகளுக்கு கடுமையான தண்டனைகளை உறுதிசெய்யும் வரைவு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. </p><p>மத்திய கல்வி அமைச்சர் பிரதானின் பதவி விலகல், தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றல், கல்வித்துறையில் சீர்திருத்தங்கள், நீட்-யுஜி தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>வினாத்தாள் கசிவு உள்ளிட்ட திட்டமிட்ட தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை, ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது. </p><p>வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை மிக விரைவாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்குவதை உறுதி செய்ய பிரத்யேக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கவும் மசோதாவில் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. </p><p>மசோதா திங்கள்கிழமை (ஜூலை.27) நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>அதிகரிக்கும் சாலை விபத்துகள்: தமிழ்நாடு முதலிடம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-saw-513-lakh-road-accidents-in-2025-with-21-deaths-every-hour-nitin-gadkari-tells-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-saw-513-lakh-road-accidents-in-2025-with-21-deaths-every-hour-nitin-gadkari-tells-parliament#comments</comments><guid isPermaLink="false">f34b9ea1-e71d-4fbe-946a-436b8e58a4a2</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:53:51 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:53:51.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,road accident,parliment,சாலை விபத்துகள்,Nitin gadkari,நிதின் கட்கரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/s7c86dxj/accident.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/s7c86dxj/accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்றத்தின் மக்களவையில் சாலை விபத்துகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது:</p><p>இந்தியாவில் 2025-ம் ஆண்டு நிகழ்ந்த 5,13,563 சாலை விபத்துகளில் 1,83,382 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இது 2024-ம் ஆண்டில் பதிவான 1,77,175 மரணங்களுடன் ஒப்பிடுகையில் 3.5 சதவீதம் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. </p><p>மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 5.3 சதவீதம் உயர்ந்து 5,13,563 ஆக பதிவாகியுள்ளது.</p><p>நாட்டில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 59 சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அதில் 21 பேர் உயிரிழக்கின்றனர்.</p><p>தினமும் 502 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.</p><p>சாலை விபத்து மரணங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளன.</p><p>உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து மரணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. அங்கு கடந்த ஆண்டு 27,550 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். 2024-ம் ஆண்டு 24,118-ல் இருந்து 27,550 ஆக அதிகரித்துள்ளது.</p><p>தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் 18,505 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2025-ல் தமிழ்நாட்டில் 71,387 சாலை விபத்துகள் பதிவாகி உள்ளன.</p><p>பஞ்சாபில் குறைந்தபட்சமாக 3,062 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். பஞ்சாபில் சாலை விபத்து மரணங்கள் 4,759-லிருந்து 3,062 ஆக கணிசமாகக் குறைந்துள்ளன.</p><p>பீகார், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் சாலை விபத்து மரணங்கள் உயர்ந்துள்ளன. அதேவேளையில், சத்தீஸ்கர், கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item></channel></rss>