<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 27 Aug 2026 21:09:59 +0000</lastBuildDate><item><title>அசைவ உணவு கேட்டதால் ஏற்பட்ட தகராறில் 30 வயது நபர் உயிரிழப்பு: பெற்றோர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/30-year-old-killed-during-heated-argument-over-non-veg-food-parents-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/30-year-old-killed-during-heated-argument-over-non-veg-food-parents-arrested#comments</comments><guid isPermaLink="false">a82ed7bc-161e-495c-a922-e39764c511e7</guid><pubDate>Thu, 27 Aug 2026 19:11:26 +0000</pubDate><atom:updated>2026-08-27T19:11:26.650Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Murder,கொலை,non-veg food,அசைவ உணவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/5ra79ne1/arrest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arrest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/5ra79ne1/arrest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஷ்ரவண் மாதத்தில் அசைவ உணவு கேட்டதற்காக தனது 30 வயது மகனை தாக்கி உயிரிழக்க செய்ததாக கூறப்படும் சம்பவத்தில், ஒரு நபர் மற்றும் அவரது மனைவி <a href="https://www.maalaimalar.com/topic/arrest">கைது</a> செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p>இச்சம்பவம் ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று வார்ஜே பகுதியில் நடைபெற்றது. உயிரிழந்தவர் மகேஷ் பகவத் கெய்க்வாட் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல் துணை ஆணையர் சாகர் கவாடே தெரிவித்தார்.</p><h2>பெற்றோருடன் தினமும் சண்டை:</h2><p>தற்காலிகத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த மகேஷ், மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என்றும், தினமும் தனது பெற்றோரான பகவத் கெய்க்வாட் (64) மற்றும் பார்வதி கெய்க்வாட் (60) ஆகியோருடன் சண்டையிட்டு வந்ததாகவும் அவர் கூறினார்.</p><p>அவரது சகோதரர் அளித்த புகாரின்படி, ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த மகேஷ், இரவு உணவிற்கு அசைவ உணவு கேட்டுள்ளார். புனிதமான மாதம் நடைபெற்று வருவதை காரணம் காட்டி அவரது தந்தை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.</p><h2>தொடர் விசாரணை:</h2><p>அப்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின்போது, ​​பகவத் தனது மகனின் தலையில் தாக்கியதில் அவன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆதாரங்களை அழிப்பதில் மகேஷின் தாயார் தனது கணவருக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.</p><p>பகவத் கெய்க்வாட் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க பொருளாதார தடையை மீறி ஈரானுக்கு அரிசி ஏற்றுமதி: இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-rice-exports-to-iran-defy-us-sanctions-association</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-rice-exports-to-iran-defy-us-sanctions-association#comments</comments><guid isPermaLink="false">cdad463e-e5c6-480b-bb44-08479893cdbd</guid><pubDate>Thu, 27 Aug 2026 16:36:25 +0000</pubDate><atom:updated>2026-08-27T16:36:25.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>US sanctions,rice export,economic d day,பொருளாதார டி தினம்,அரிசி ஏற்றுமதி,அமெரிக்க தடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/l47q6a9l/Untitled-design-22.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India rice exports under US sanctions]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/l47q6a9l/Untitled-design-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் நாட்டின் மீது <a href="https://www.maalaimalar.com/topic/அமெரிக்கா">அமெரிக்கா</a> விதித்துள்ள <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">பொருளாதார தடையை</a> மீறி, ஈரானுக்கு வழக்கம்போல அரிசி ஏற்றுமதி செய்யப்படும் என அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜய் பலோதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><p>இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இருந்து வரும் நிலையில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">ஈரானுக்கு</a> அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம், அமெரிக்கா விதிக்க இருக்கும் பொருளாதார தடையை, இந்தியா தாங்கிக் கொள்ளும் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h3><strong>ஈரானுக்கு அரிசி ஏற்றுமதி</strong></h3><p>இந்தியா, ஈரானுக்கான விற்பனையானது கடுமையான அமெரிக்க தடைகளின் அச்சுறுத்தலை தாங்கும் என்றும், விலை உயர்வு மற்றும் பல மாதங்களாக நடந்து வரும் போர்க்கால இடையூறுகள் இருந்தபோதிலும், ஏற்றுமதி சீராக நடைபெற்று வருவதாக அஜய் தெரிவித்துள்ளார்.</p><p>இந்தியா ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் அரிசியே முதன்மையானதாக உள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், ஈரானுக்கான இந்தியாவின் 1.25 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அரிசியாக உள்ளதாக அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.</p><p>பதிலுக்கு, இந்தியாவின் 11.5 பில்லியன் டாலர் உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் சுமார் 7 சதவீதத்தை ஈரான் வாங்கியுள்ளது.</p><h3><strong>அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம்</strong></h3><p>இந்த நிலையில் அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜய் பலோதியா கூறுகையில், “விலை உயர்வு மற்றும் பல மாதங்களாக நீடித்த போரினால் ஏற்பட்ட வர்த்தக இடையூறுகள் ஒருபுறம் இருந்தபோதிலும், ஈரான் உணவு பாதுகாப்பு காரணங்களுக்காக கொள்முதல் செய்து வருவதால், அந்நாட்டின் தேவை சீராக உள்ளது.</p><p>அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் திங்களன்று 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு எதிராகத் தடைகளை அறிவித்து, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அச்சுறுத்திய போதிலும், ஈரானுடனான வர்த்தகம் தடையின்றி தொடருகிறது.</p><p>மனிதாபிமான விதிவிலக்கின் கீழ் வரும் இந்த பிரதான உணவின் அத்தியாவசிய தன்மையும், மாற்று விநியோகஸ்தர்கள் குறைவாக இருப்பதும் வர்த்தகத்தைத் தக்கவைக்க உதவும்.</p><h3><strong>கடந்த கால ஏற்றுமதி</strong></h3><p>கடந்த நிதியாண்டில் ஈரான் 10 லட்சம் டன்களுக்கும் அதிகமான அரிசியைக் கொள்முதல் செய்துள்ளது, இது ஓராண்டுக்கு முந்தைய ஏற்றுமதியை விட 17% அதிகம் என அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.</p><p>சமீப காலத்தில் இந்திய ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதியையும் பணப் பரிமாற்றங்களையும் தடையின்றித் தொடர்ந்ததை இந்த உயர்வு பிரதிபலிக்கிறது; இது இரு தரப்பினருக்கும் வர்த்தகத்தை பேணுவதற்கான ஒரு ஊக்கத்தை அளிக்கிறது.</p><p>ஈரானிய வங்கிகளுடன் நேரடியாகப் பரிவர்த்தனை செய்வதற்குப் பதிலாக, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, சீனா மற்றும் சமீபத்தில் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள நிதி வழிமுறைகள் மூலம் ஈரானுடனான வர்த்தகத்திற்கான கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கான வழிகளை இந்திய வர்த்தகர்கள் கண்டறிந்துள்ளனர்.</p><p>அந்த வழிமுறைகள் இதுவரை எந்த இடையூறும் இன்றி தொடர்ந்து இயங்கி வருகின்றன. ஈரானுக்கான மற்ற முக்கிய இந்திய ஏற்றுமதிகளில் மருந்துகள், தேயிலை, வாழைப்பழங்கள், தானியங்கள், மாட்டு இறைச்சி மற்றும் சில ரசாயனப் பொருட்கள் அடங்கும்.</p><p>மனிதாபிமான விதிவிலக்கு மற்றும் குறைந்த மாற்று வழிகளைக் காரணம் காட்டி, இவற்றின் ஏற்றுமதிக்கும் தடை ஏற்பட வாய்ப்பில்லை.</p><p>இதற்கிடையில், அமெரிக்காவின் விலக்குகளால் இந்த ஆண்டு ஏற்பட்ட ஒரு குறுகிய கால வாய்ப்பை தவிர, இந்தியா 2019 முதல் ஈரானிலிருந்து எந்த கச்சா எண்ணெயையும் இறக்குமதி செய்யவில்லை” என்று அவர் கூறினார்.</p><p>ஈரான் மீதான அமெரிக்க தடைகளுக்கு முன்பு, இந்தியா அந்நாட்டுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டிருந்தது, மேலும் தெஹ்ரான் அதன் மிகப்பெரிய எண்ணெய் விநியோகஸ்தர்களில் ஒன்றாக இருந்தது.</p><h3><strong>இந்தியா ஏற்றுமதி கூட்டமைப்பு தலைவர்</strong></h3><p>ஈரானுக்கான இந்திய ஏற்றுமதிகள் பாதிக்கப்படக்கூடாது என்று இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சி. ரல்ஹான் கூறினார்.</p><p>ஈரானுக்கான ஏற்றுமதிகள் கணிசமான அளவில் இல்லை என்றாலும், ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதற்கான சில ஏற்பாடுகளுடன், மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>எலுமிச்சை பழத்தை வெட்டி மழையை நிறுத்தினேன்: பாஜக எம்பி-யின் கருத்துக்கு காங்கிரஸ் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/i_cut_a_lemon_to_stop_the_rain_bjp_mps_comment_draws_congress_response</link><comments>https://www.maalaimalar.com/news/national/i_cut_a_lemon_to_stop_the_rain_bjp_mps_comment_draws_congress_response#comments</comments><guid isPermaLink="false">45131e7d-63a1-4c7b-a1e1-a92f16014dae</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:12:04 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:12:04.970Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சத்தீஸ்கர்,BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,chattisgarh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zombj0nn/Untitled-design-23.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BJP MP’s lemon rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zombj0nn/Untitled-design-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சத்தீஸ்கர்</a> மாநிலத்தின் முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், மழை குறுக்கிட்டதால் ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி மழையை தடுத்து நிறுத்தியதாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">பாரதிய ஜனதா கட்சியின்</a> எம்.பி. போஜ்ராஜ் நாக் கூறிய கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தெளண்டி லோஹாரா பகுதியில் மஹ்தாரி வந்தன் என்ற ஒரு திட்ட நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் கலந்து கொண்டார்.   </p><h3><strong>பா.ஜ.க எம்.பி</strong></h3><p>அப்போது அந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பு வானிலை மோசமாக இருந்ததாகவும், நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முதலமைச்சரின் மருத்துவ குழு நள்ளிரவு நேரத்தில் வந்ததாக பாஜக எம்.பி. போஜ்ராஜ் நாக் கூறினார்.</p><p>இதுகுறித்து பாஜக எம்.பி நாக் கூறுகையில், நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறுவதற்காக மழையை நிறுத்தும்படி புத்ததேவர் மற்றும் மகாதேவரிடம் பிரார்த்தனை செய்து, ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டியதாக கூறினார்.</p><p>இதையடுத்து தான் ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி மழையை நிறுத்தியதாக பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் போக்ராஜ் நாக் கூறினார்.</p><p>மேலும், தற்போது இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது, மழை பெய்ய வேண்டுமென்றால் பெய்யட்டும் என்றும் பாஜக எம்.பி. கூறினார்.</p><h3><strong>சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர்</strong></h3><p>இந்த நிலையில் சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ், பாஜக எம்.பி.யின் கருத்து குறித்து விமர்சனம் செய்துள்ளார்.</p><p>இதுகுறித்து தீபக் பைஜ் கூறுகையில், “ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டினால் மழையை நிறுத்த முடியும் என்றால், சர்க்கரை விலையையும் பணவீக்கத்தையும் குறைப்பதற்கு, பாஜக எம்.பி ஒரு எலுமிச்சை பழத்தை வெட்ட வேண்டும்” என்று கூறினார்.</p><p>இதையடுத்து பாஜக எம்.பி.யின் இந்த கருத்து, மூட நம்பிக்கையையும் தவறான தகவல்களையும் பரப்புவதாகவும், இதே முறையை பயன்படுத்தி மின்சார கட்டணங்கள், எரிபொருள் விலைகள் மற்றும் வீட்டு செலவுகளை குறைக்க முடியுமா என்று சமூக ஊடகங்களில் பயனர்கள் கேள்வி எழுப்பினர்.</p>]]></content:encoded></item><item><title>கான்பூரில் விமான விபத்து - விமானி உள்பட இருவர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/training-aircraft-crash-in-kanpur-flight-instructor-and-trainee-pilot-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/training-aircraft-crash-in-kanpur-flight-instructor-and-trainee-pilot-killed#comments</comments><guid isPermaLink="false">705788c3-9f9f-4d6a-b270-fd67cd2f3d33</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:07:54 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:07:54.877Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானி,Pilot,plane crash,விமான விபத்து,flight instructor,விமான பயிற்றுநர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/84ytt10d/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanpur Training Aircraft Crash]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/84ytt10d/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேச</a> மாநிலம் கான்பூர் நகரத்தில் நான்கு இருக்கைகள் கொண்ட இரட்டை என்ஜின் பயிற்சி விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக சிக்கிய விபத்தில், விமானத்தில் பயணித்த பயிற்றுநர் மற்றும் பயிற்சி விமானி என இரண்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த விமான பயிற்றுநரான சச்சின் பாட்டியா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பயிற்சி விமானி அபிஷேக் பூஜாரி உயிரிழந்துள்ளதாக கான்பூர் காவல் ஆணையர் ரகுவீர் லால் தெரிவித்தார்.</p><h3><strong>காவல் ஆணையர் ரகுவீர் லால்</strong></h3><p>இந்த விபத்து குறித்து காவல் ஆணையர் ரகுவீர் லால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த டெக்னாம் விமானம் 2023-ஆம் ஆண்டில் பயிற்சிக்காக இங்கு கொண்டுவரப்பட்டது. விபத்தில் விமானத்தின் பயிற்றுநர் மற்றும் பயிற்சி விமானி ஆகிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>பயிற்றுவிப்பாளர் மற்றும் பயிற்சி விமானி இருவரும் இங்குள்ள கார்க் விமானப் பயிற்சி மையத்திலிருந்து காலை 11:30 மணிக்கு புறப்பட்டனர். அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, காலை 11:50 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>அந்த விமானம் நான்கு இருக்கைகள் கொண்ட, இரட்டை என்ஜின் டெக்னாம் விமானமாக இருந்தது. விமானத்தின் ஓட்டுநர் பாட்டியாவுக்கு 3,000 மணிநேரம் மட்டுமே ஓட்டுநர் அனுபவம் இருந்தது.</p><p>இந்த விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் குழு இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தும்.</p><p>விபத்து ஏற்பட்ட பகுதியை பாதுகாப்பதற்காக காவல்துறையினர் முழுப் பகுதியையும் சுற்றி வளைத்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து உடல்கள் அகற்றப்பட்டுள்ளன,” என்றும் லால் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘பணம் கொட்டும்’... சிறுமியை நிர்வாணமாக்கி பூஜை - மந்திரவாதி உட்பட 4 பேர்மீது வழக்குப்பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/money-will-pour-in-girl-stripped-naked-for-ritual-case-registered-against-4-people-including-a-sorcerer</link><comments>https://www.maalaimalar.com/news/national/money-will-pour-in-girl-stripped-naked-for-ritual-case-registered-against-4-people-including-a-sorcerer#comments</comments><guid isPermaLink="false">a5df182d-9858-49d2-89ed-5066a6938ba8</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:31:11 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:31:11.191Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra,superstition,மூட நம்பிக்கை,Puja,பூஜை,ஆந்திரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/rfrcx3zk/New-Project-2026-08-27T155759.558.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பணம் கொட்டும்’... சிறுமியை நிர்வாணமாக்கி பூஜை - மந்திரவாதி உட்பட 4 பேர்மீது வழக்குப்பதிவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/rfrcx3zk/New-Project-2026-08-27T155759.558.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்தது, பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பெண் ஒருவர் சாலையில் நின்று ஆன்மிகவாதி ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கதறி அழுதார். </p><p>ஆனால் அங்கு இருப்பவர்கள் யாரும் அவருடைய பேச்சை கேட்காமல் அந்த ஆசாமியை பார்க்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர். </p><p>இந்நிலையில் இதேபோன்ற ஒரு பாணியில் ஆந்திராவில் நடந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜை என்ற பெயரில் சிறுமி ஒருவர் ஆறு மாதங்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். </p><p>ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அனந்தபுரம் நகரத்திற்கு ஓட்டல் வைப்பதற்காக குடிபெயர்ந்துள்ளார். அப்போது மகாலட்சுமி என்ற உள்ளூர் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். மகாலட்சுமி குடும்பத்தினருடன் நன்கு பழகிய நிலையில், அவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.</p><p>ஓட்டல் தொழிலில் பெரிதாக லாபம் வராது, எளிதாக நீங்கள் செல்வந்தர் ஆவதற்கு என்னிடம் யோசனை உள்ளது என, “உங்கள் மகள் நிர்வாணமாக அமர்ந்து சிறப்புப் பூஜைகள் செய்தால், அளவற்ற செல்வத்தையும், செழிப்பையும் பெறலாம்” என தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் பெற்றோர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்பு மகாலட்சுமியின் வற்புறுத்தலின்பேரில் ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><h2>வழிபாடு என்ற பெயரில் பாலியல் அத்துமீறல்கள்</h2><p>மகாலட்சுமியின் பேச்சை நம்பி சிறுமியை பூஜைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு ஹேமந்த் என்ற போலி மந்திரவாதி பூஜைக்காக வரவழைக்கப்பட்டு, சிறுமியை ரகசிய இடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளறனர்.</p><p>அங்கு சிறுமியின் ஆடையை முழுமையாக அகற்றி, ஹேமந்த் தவறான இடங்களில் சிறுமியை தொட்டுள்ளான். தொடர்ந்து முதல் பூஜை முடிந்தும் பலனளிக்கவில்லை என்று, மீண்டும் பூஜை செய்ய குடும்பத்தினரை சம்மதிக்க வைத்துள்ளனர். </p><p>சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு (ஆகஸ்ட் 8 அன்று), ஹேமந்த், அவனது மகன் பாலசுப்ரமணியம் மற்றும் விஜய் குமார் ஆகியோருடன் மீண்டும் அங்கு வந்து, மீண்டும் பூஜை செய்துள்ளனர். தொடர்ந்து மறுநாளே ஆக.9ம் தேதி சிறுமியையும், அவரது தாயாரையும் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். </p><p>அங்கு வெங்கடேஷ் யாதவ் என்ற மற்றொரு ஆசாமி முன்பும் வழிபாடு என்ற பெயரில் அந்த சிறுமி சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பின்னர், தாயும் மகளும் பாக்கியலட்சுமி என்ற பெண்ணின் வீட்டில் பூட்டி வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>ஆகஸ்ட் 11 ஆம் தேதி, மீண்டும் சிறுமியை வழிபாடு என்ற பெயரில் அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது நீண்ட நாட்களாக இவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த ஊர்மக்கள், சந்தேகம் கொண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். </p><p>காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அறிந்தவர்கள் சிறுமியையும், தாயையும் இறக்கிவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p><h2>போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு</h2><p>இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், கடப்பா ஒன் டவுன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. </p><p>பின்னர், சம்பவத்தின் சூழ்நிலைகளின் அடிப்படையில், இந்த வழக்கு அனந்தபுரம் ஒன் டவுன் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. </p><p>சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது மற்றும் மாந்திரீக வழிபாடு ஆகிய குற்றங்களுக்காக, மகாலட்சுமி, ஹேமந்த், பாலசுப்ரமணியம் மற்றும் வெங்கடேஷ் யாதவ் ஆகியோர் மீது போக்சோ சட்டம் மற்றும் இன்னும் சில பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. </p><p>சிறப்புப் படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடிவருகிறது. இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தெலுங்கானாவில் இறந்த சகோதரன் கையில் ராக்கி கயிறு கட்டிய தங்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/sister-ties-rakhi-thread-on-the-wrist-of-her-deceased-brother-in-telangana</link><comments>https://www.maalaimalar.com/news/national/sister-ties-rakhi-thread-on-the-wrist-of-her-deceased-brother-in-telangana#comments</comments><guid isPermaLink="false">1f268bbf-a3b4-4aa9-884e-08fda935f402</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:28:02 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:28:02.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராக்கி கயிறு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sbhsqpl4/telangana.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இறந்த சகோதரரின் கையில் ராக்கி கயிறு கட்டிய காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ இறந்த சகோதரரின் கையில் ராக்கி கயிறு கட்டிய காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sbhsqpl4/telangana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ரமேஷின் தங்கை தனலட்சுமி ராக்கி கயிறு கட்டுவதற்கு முன்பே இறந்து விட்டாயா அண்ணா என்று கதறி அழுதபடி அவரது கையில் ராக்கி கயிறு கட்டினார்.</strong></em></p><p>தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் குரவியை சேர்ந்தவர் வீரண்ணா. இவரது மகன் ரமேஷ் (வயது 36). வீரண்ணா கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்தார். </p><p>இந்நிலையில் வீரண்ணாவின் மகன் ரமேஷும் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். நேற்று ரமேஷின் இறுதி சடங்கிற்காக அவரது உடல் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டு இருந்தது. அங்கு வந்த ரமேஷின் தங்கை தனலட்சுமி ராக்கி கயிறு கட்டுவதற்கு முன்பே இறந்து விட்டாயா அண்ணா என்று கதறி அழுதபடி அவரது கையில் ராக்கி கயிறு கட்டினார்.</p><p>இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. 10 நாட்களுக்குள் தந்தையும் மகனும் அடுத்தடுத்து இறந்து போனதால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே நாளில் 10 பச்சிளம் குழந்தைகள்.. 3 வாரங்களில் 60 குழந்தைகள் - மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் பலி </title><link>https://www.maalaimalar.com/news/national/10-newborns-in-a-single-day-60-infants-in-three-weeks-deaths-at-a-government-hospital-in-malda</link><comments>https://www.maalaimalar.com/news/national/10-newborns-in-a-single-day-60-infants-in-three-weeks-deaths-at-a-government-hospital-in-malda#comments</comments><guid isPermaLink="false">d26d6672-2482-4170-8803-22526aac97d3</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:28:18 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:28:18.927Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மருத்துவமனை,Government Hospital,மேற்கு வங்கம்,Child,குழந்தை,west bengal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/bvup91j6/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ குழந்தை]]></media:title><media:description type="html"><![CDATA[ குழந்தை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/bvup91j6/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநிலம் மால்டா<a href="https://www.maalaimalar.com/topic/government-hospital"> அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்</a> இந்த ஆகஸ்ட் மாதத்தின் முதல் 3 வாரங்களில் மொத்தம் 60 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. </p><p>இச்சம்பவத்தை தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை மால்டா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. </p><p>உயிரிழந்த பல குழந்தைகள் மால்டா மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படுவதற்கு முன்பு சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் மற்றும் வட்டார அளவிலான சுகாதார மையங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p> <h2>ஒரே நாளில் 10 குழந்தைகள் பலி</h2><p>ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஒரே நாளில் 10 பிறந்த குழந்தைகள் உயிரிழந்தன. இதில் 8 குழந்தைகள் பிற அரசுக் மருத்துவமனைகள் அல்லது தனியார் நர்சிங் ஹோம்களில் பிறந்த பிறகு, மேல் சிகிச்சைக்காக மால்டா மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டவை ஆகும்.</p><p>மிகவும் ஆபத்தான நிலையிலேயே இக்குழந்தைகள் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டதாகவும், மூச்சுத்திணறல் மற்றும் இதயப் பிரச்சினைகள் காரணமாகவே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.</p> <p>மால்டா மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் பிரசென்ஜித் பார் கூறும்போது, "ஆகஸ்ட் 12 அன்று ஒரே நாளில் மால்டா மருத்துவக் கல்லூரியில் 10 குழந்தைகள் உயிரிழந்தன.</p><p>ஆனால் அவற்றில் இரண்டு குழந்தைகள் மட்டுமே இந்த மருத்துவக் கல்லூரியில் பிறந்தவை.</p><p>மற்ற குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் பிற மருத்துவமனைகளில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டவை" என்று தெரிவித்தார்.</p><p>ஒரே நாளில் உயிரிழந்த 10 குழந்தைகளில், 4 குழந்தைகளுக்குப் பிறவி இதய நோய் இருந்ததாகவும், 2 குழந்தைகளுக்கு  கடுமையான மூச்சுத்திணறல் இருந்ததாகவும் பிரசென்ஜித் பார் மேலும் விளக்கமளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்பு.. ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ரூ. 3.83 கோடி பறித்த கும்பல்</title><link>https://www.maalaimalar.com/news/national/gang-swindles-383-crore-from-retired-bank-manager-by-claiming-links-to-pahalgam-terror-attack</link><comments>https://www.maalaimalar.com/news/national/gang-swindles-383-crore-from-retired-bank-manager-by-claiming-links-to-pahalgam-terror-attack#comments</comments><guid isPermaLink="false">cc0f7513-9851-45da-9ab0-812874287ccc</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:05:29 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:05:29.157Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஜிட்டல் கைது,சைபர் மோசடி,Digital Arrest,cyber fraud,பஹல்காம் தாக்குதல்,Pahalgam attack</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/j727c4jp/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சைபர் மோசடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ சைபர் மோசடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/j727c4jp/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உங்கள் மொபைல் சிம் கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறி ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ஏமாற்றி ரூ.3.83 கோடி  பறிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><p>2025 ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். </p><h2>போலி அழைப்பு</h2><p>மும்பை ஜூஹு பகுதியை சேர்ந்த 64 வயதான ஓய்வுபெற்ற வங்கி மேலாளருக்கு போன் ஒன்று வந்துள்ளது. மறுபக்கம் பேசிய நபர் தங்களை பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள் என கூறியுள்ளார்.</p><p>பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அவரது பெயரிலான சிம் கார்டு பயன்படுத்தப்பட்டதாக கூறி அவரை பயமுறுத்தியுள்ளனர்.</p><p>கைது வாரண்ட் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் போல் சில போலி ஆவணங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.</p><p>அவர்களின் மிரட்டலுக்கு பயந்து, தனது சேமிப்பு, முதலீடுகள் மற்றும் மியூச்சுவல் பண்டுகளின் விவரங்களை அவர்களிடம் பகிர்ந்துள்ளார்.</p><p>பின்னர், லக்னோவை சேர்ந்த ஐஜி விக்ரம் சிங் என்ற மூத்த அதிகாரி பேசுவதாக மற்றொரு நபர் தொடர்பு கொண்டுள்ளார்.</p><p>ஜம்மு காஷ்மீரில் இவரது பெயரில் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் ரூ.7 கோடி ரூபாய் பயங்கரவாத நிதி கைமாறியுள்ளதாக மிரட்டியுள்ளார்.</p><p>ரிசர்வ் வங்கியின் பெயரிலான போலி கடிதத்தை அனுப்பி, அவரது அனைத்து நிதி ஆதாரங்களையும் மோசடிக்காரர்கள் கேட்டுப் பெற்றுள்ளனர்.</p><h2>டிஜிட்டல் கைது</h2><p>விசாரணைக்காக பணத்தை சரிபார்த்துவிட்டு மீண்டும் திருப்பித் தருவதாக கூறியதை நம்பிய ஓய்வுபெற்ற அதிகாரி, ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 17 வரையிலான காலகட்டத்தில் 4 கட்டங்களாக சுமார் ரூ.3.83 கோடி ரூபாயை மோசடி நபர்கள் கொடுத்த வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்துள்ளார்.</p><p>இந்த காலகட்டத்தில் அவரை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக கூறி அவரை வாட்ஸப் வீடியோ காலில் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.</p><p>பணத்தைத் திருப்பித் தராமல் மீண்டும் கூடுதல் பணம் கேட்டதால் சந்தேகமடைந்த அவர், வங்கி மேலாளர் ஒருவரை அணுகியுள்ளார்.</p><p>தான் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்த முதியவர்<a href="https://www.maalaimalar.com/news/national/rs-30000-crore-cyber-fraud-ed-arrests-two-in-mumbai"> சைபர் கிரைம் </a>உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறந்த ஆசிரியர் விருது.. போலீசிடம் சிக்காமல் 40 ஆண்டுகள் அரசு பள்ளி 
ஆசிரியராக பணியாற்றிய ஆயுள் தண்டனை கைதி! </title><link>https://www.maalaimalar.com/news/national/best-teacher-award-a-life-term-convict-who-worked-as-a-government-teacher-for-40-years-and-retired-without-ever-being-caught-by-the-police</link><comments>https://www.maalaimalar.com/news/national/best-teacher-award-a-life-term-convict-who-worked-as-a-government-teacher-for-40-years-and-retired-without-ever-being-caught-by-the-police#comments</comments><guid isPermaLink="false">6357a675-b193-4aa8-92b2-de16cd9baee6</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:59:52 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:59:52.497Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>school teacher,Telangana,Life imprisonment,ஆயுள் தண்டனை,தெலுங்கானா,பள்ளி ஆசிரியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/l7ab9agv/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கைதி]]></media:title><media:description type="html"><![CDATA[ கைதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/l7ab9agv/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/life-sentence">ஆயுள் தண்டனை</a> விதிக்கப்பட்ட கைதி ஒருவர் பரோலில் வெளியே வந்து, சுமார் 40 ஆண்டுகள் காவல்துறையின் கண்ணில் படாமல் சுதந்திரமாக வாழ்ந்துள்ள விசித்திர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. </p><p>தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தில் தண்டலபல்லி மண்டலம் பெத்தமுப்பாரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தெல வீரன்னா.</p><h2>தலைமறைவு</h2><p>இவருக்கு 1983இல் வாரங்கல் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதித்தது.</p><p>அதே ஆண்டு டிசம்பரில் பரோலில் வெளிவந்த அவர் அதன்பின் தலைமறைவானார்.</p><p>அதன் பின் இவ்வளவு காலமும் மஹபூபாபாத் மாவட்டத்திலேயே அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி, சிறந்த ஆசிரியர் விருதையும் பெற்று, பணி ஓய்வும் பெற்றுள்ளார்.</p><h2>மீண்டும் சிறையில் அடைப்பு</h2><p>சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு மே 16 அன்று வாரங்கல் மத்திய சிறை சிறப்பு அதிரடிப் படை போலிசார் வீரன்னாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><p>அவருக்கு 3 ஆண்டுகளுக்குப் பரோல் மற்றும் தண்டனைக் குறைப்பு சலுகைகளை மறுத்து சிறைத்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து வீரன்னாவின் மனைவி சாரம்மா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><h2>நீதிமன்றம்</h2><p>இம்மனுவை விசாரித்த நீதிபதி டி. மாதவி தேவி அடங்கிய அமர்வு, குற்றவாளி வேண்டுமென்றே சட்டத்தின் பிடியில் இருந்து தப்பியோடி வாழ்ந்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டி மனுவைத் தள்ளுபடி செய்தது.</p><p>சிறைத்துறையின் அலட்சியப்போக்கிற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.</p><p>ரோலில் செல்லும் கைதிகளை கண்காணிக்க டிராக்கிங் சிஸ்டம் மற்றும் புதிய வழிகாட்டுதல்களை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று சிறைத்துறைக்கு உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/auto-accident-7-dead-in-andhra</link><comments>https://www.maalaimalar.com/news/national/auto-accident-7-dead-in-andhra#comments</comments><guid isPermaLink="false">13010a50-3630-4651-999e-f794fae8d065</guid><pubDate>Thu, 27 Aug 2026 03:58:42 +0000</pubDate><atom:updated>2026-08-27T03:58:42.768Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,dead,பலி,Andhra accident,ஆந்திரா விபத்து</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ctaa7n57/accident.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ctaa7n57/accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 4 குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.</strong></em></p><p>ஆந்திர மாநிலம், சிலக்கலூரி பேட்டை மாவட்டம், ஏலூருவை சேர்ந்த 15 பேர் பாபட்லா மாவட்டம், கொண்டமஞ்சலூரில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவிற்கு நேற்றிரவு ஆட்டோவில் சென்றனர்.</p><h2><strong>விபத்து</strong></h2><p>பிறந்தநாள் விழா கொண்டாட்டம் முடிந்து இன்று அதிகாலை ஆட்டோவில் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.</p><p>விஜயவாடா-திருப்பதி சாலையில் வந்தபோது எதிரே வந்த தனியார் பஸ், ஆட்டோ மீது மோதியது.</p><p>இந்த விபத்தில் ஆட்டோ முழுவதும் நொறுங்கியது. ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 4 குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.</p><p>விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு குண்டூர் மற்றும் சிலக்கலூரிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p>சிகிச்சை பலனின்றி குண்டூர் ஆஸ்பத்திரியில் 2 பேரும் சிலக்கலூரி பேட்டை ஆஸ்பத்திரியில் ஒருவரும் இறந்தனர்.</p><h2><strong>இறந்தவர்கள் விபரம் வருமாறு:-</strong></h2><p>போந்த பாபு (வயது 62), மனேம்மா (55), லட்சுமம்மா ( 75), கங்கம்மா (55), மரியம்மா (45), சம்பூர்ணம்மா (70), சுவர்த்தா (45) என தெரியவந்தது. </p><p>விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நாட்டின் 7 முக்கிய ரெயில் வழித்தடங்கள் மேலும் விரிவாக்கம்- மத்திய ரெயில்வே அமைச்சர் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/union-minister-ashwini-vaishnaw-inform-further-expansion-of-the-countrys-7-major-rail-routes</link><comments>https://www.maalaimalar.com/news/national/union-minister-ashwini-vaishnaw-inform-further-expansion-of-the-countrys-7-major-rail-routes#comments</comments><guid isPermaLink="false">d701f6be-e993-4947-8a84-059ae64ab7b9</guid><pubDate>Thu, 27 Aug 2026 03:23:01 +0000</pubDate><atom:updated>2026-08-27T03:23:01.006Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ashwini Vaishnaw,அஸ்வினி வைஷ்ணவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/qd3pyozf/vaishnaw.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்]]></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/qd3pyozf/vaishnaw.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாட்டின் 7 முக்கிய ரெயில் வழித்தடங்கள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.</strong></em></p><h2><strong>விரிவுபடுத்தும் பணி</strong></h2><p>இந்திய ரெயில்வேயில் 7 ரெயில் வழித்தடங்களில் அதிக அளவில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை நாட்டின் மொத்த ரெயில் போக்குவரத்தில் 41 சதவீதத்தை கையாள்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது. சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த வழித்தடங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அவற்றை 4 ரெயில் பாதைகளாக விரிவுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை திறம்பட கையாளும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.</p><h2><strong>7 வழித்தடங்கள்</strong></h2><p>இதுகுறித்து, மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வீடியோ வெளியிட்டு பேசியதாவது:-</p><p>டெல்லி – ஹவுரா, ஹவுரா – சென்னை, சென்னை – மும்பை, மும்பை – டெல்லி, டெல்லி – சென்னை, மும்பை – ஹவுரா மற்றும் டெல்லி – கவுகாத்தி ஆகிய 7 வழித்தடங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு 4 ரெயில் பாதைகளாக மாற்றப்பட இருக்கிறது. இதன் மூலம் நாட்டின் நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் ரெயில் சேவைகள் மேம்படுத்தப்படும். மேலும், போக்குவரத்து செலவு குறைக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறை ஊக்குவிக்கப்படும்.</p><p>இந்த முக்கிய வழித்தடங்களை 4 பாதைகளாக விரிவுபடுத்துவது, எதிர்கால பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வளர்ச்சிக்கு தேவையான கூடுதல் திறனை உருவாக்கும் முக்கிய நடவடிக்கையாகும். அதிக திறன், குறைந்த போக்குவரத்து செலவு மற்றும் தூய்மையான போக்குவரத்தை நோக்கமாகக் கொண்டு இந்திய ரெயில்வே தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ரெயில்வே துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரெயில்வேயின் இந்த உள்கட்டமைப்பு மேம்பாடு மிக முக்கியமானதாகும்.</p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: உ.பி., பீகார் முதலமைச்சர்களுடன் அமித் ஷா தீவிர ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/national/nepal-floods-amit-shah-speaks-to-cms-of-up-bihar</link><comments>https://www.maalaimalar.com/news/national/nepal-floods-amit-shah-speaks-to-cms-of-up-bihar#comments</comments><guid isPermaLink="false">23866234-3a8f-4860-8e84-d206265be935</guid><pubDate>Wed, 26 Aug 2026 18:01:16 +0000</pubDate><atom:updated>2026-08-26T18:01:16.423Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,பீகார்,Bihar,UP,Amit Shah,அமித் ஷா,Nepal Floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/vcptjbvl/Nepal-mud-debris-and-Amit-Shah.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal mud debris and Amit Shah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/vcptjbvl/Nepal-mud-debris-and-Amit-Shah.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கினால் இரு மாநிலங்களின் கீழ்மட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/amit-shah">அமித் ஷா</a> உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநில முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national">மத்திய அரசு</a> நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. </p><p>மத்திய நீர் ஆணையத்தின் (CWC) அறிவுறுத்தலின்படி, நேபாளம்-சீனா எல்லைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளம் காரணமாக, இந்திய எல்லையில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நேபாளத்தின் ஃபுர்கே கோலா பகுதியில் திரிசூலி ஆற்றில் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததாக தகவல் கிடைத்துள்ளது.</p><h2>பதற்றமான சூழல் ஏற்படவில்லை:</h2><p>நேபாள பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. பதற்றமான சூழல் எதுவும் ஏற்படவில்லை என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>"வெள்ளத்தின் தாக்கம் இந்தியாவில் உள்ள கண்டக் ஆற்றின் கீழ்மட்டப் பகுதிகளுக்குப் பரவக்கூடும்" என்று அது கூறியது.</p><p>உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இரு மாநிலங்களும் விழிப்புடன் இருக்குமாறும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது. ஏற்படக்கூடிய வெள்ள சூழலை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>முன்னேற்பாடுகள் தீவிரம்:</h2><p>"இந்தியா-நேபாள எல்லைக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் இந்திய சமூகத்தினரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுதல் மற்றும் பிற உதவிகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன" என்று அமைச்சகம் கூறியது.</p><p>இந்த பேரிடரில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அமித் ஷா, இக்கட்டான சூழலில் இந்திய அரசு நேபாளத்துடன் துணை நிற்கும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.</p><p>"நேபாளத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிகுந்த மனவேதனையை அளிக்கின்றன" என்று அவர் கூறினார்.</p><p>"நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரிடர் குறித்து பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர்களுடன் நான் பேசினேன். இதன் தாக்கம் உணரப்படக்கூடிய எல்லைப் பகுதிகளில் உள்ளூர் நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுக்களுடன் இணைந்து NDRF-ம் தீவிர விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘ஆம் ஆத்மி ஆட்சியமைந்த 5 நாட்களில் எத்தனால் பெட்ரோலுக்கு தடை... இல்லையென்றால் அரசியலை விட்டு விலகத் தயார்’ - கெஜ்ரிவால் சவால்!</title><link>https://www.maalaimalar.com/news/national/ban-on-ethanol-blended-petrol-within-5-days-of-aam-aadmi-party-forming-the-government-otherwise-ready-to-quit-politics-kejriwals-challenge</link><comments>https://www.maalaimalar.com/news/national/ban-on-ethanol-blended-petrol-within-5-days-of-aam-aadmi-party-forming-the-government-otherwise-ready-to-quit-politics-kejriwals-challenge#comments</comments><guid isPermaLink="false">108691dd-be7d-491c-afad-7a07076c1ca8</guid><pubDate>Wed, 26 Aug 2026 15:37:25 +0000</pubDate><atom:updated>2026-08-26T15:37:25.255Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,ஆம் ஆத்மி,Aam Aadmi Party,E20 petrol,எத்தனால் பெட்ரோல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/4br62vji/New-Project-2026-08-26T210413.545.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஆம் ஆத்மி ஆட்சியமைந்த 5 நாட்களில் எத்தனால் பெட்ரோலுக்கு தடை... இல்லையென்றால் அரசியலை விட்டு விலகத் தயார்’ - கெஜ்ரிவால் சவால்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/4br62vji/New-Project-2026-08-26T210413.545.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், தனது கட்சி ஆட்சி அமைத்தால், 5 நாட்களுக்குள் எத்தனால் பெட்ரோலுக்கு தடை விதிக்கப்படும் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். </p><p>இல்லையென்றால் அரசியலைவிட்டு விலக தயார் எனவும் சவால் விடுத்துள்ளார். கோவாவில் நேற்று நடைபெற்ற எத்தனால் பெட்ரோல் எரிபொருள் கொள்கைக்கு எதிரான டவுன்ஹால் கூட்டத்தில் பேசிய அவர் இந்த அதிரடி தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளார்.</p><p>கோவா மக்கள் சந்திப்புக் கூட்டம், எத்தனால் பெட்ரோலுக்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியின் நாடு தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இப்பிரச்னை தொடர்பான தேசிய மக்கள் சந்திப்பை ஆக.1ம் தேதியன்று டெல்லியில் நடத்தியது.</p><p>தொடர்ந்து மேற்கு வங்கம், குஜராத், ஹரியானா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, பீகார் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.</p><p>40 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டமன்றத்திற்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது கோவாவில் இரண்டு ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>கோட்டா: 2வது முறையாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 20 வயது மாணவி அறையில் சடலமாக மீட்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-student-preparing-for-neet-for-the-second-time-found-dead-in-her-room</link><comments>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-student-preparing-for-neet-for-the-second-time-found-dead-in-her-room#comments</comments><guid isPermaLink="false">6a6c87e4-0f48-4a8e-86d5-687a3b85455e</guid><pubDate>Wed, 26 Aug 2026 15:10:53 +0000</pubDate><atom:updated>2026-08-26T15:10:53.391Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,கோட்டா,Kota</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/lggvyge9/New-Project-2026-08-26T203155.274.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ம.பி.: 2வது முறையாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 20 வயது மாணவி அறையில் சடலமாக மீட்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/lggvyge9/New-Project-2026-08-26T203155.274.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வுக்கு இரண்டாவது முறையாக தயாராகி வந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர், ராஜஸ்தானில் தான் தங்கியிருந்த வாடகை குடியிருப்பில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>குஷ்பு படேல் என அடையாளம் காணப்பட்டுள்ள மாணவி, தனது தங்கையோடு தங்கி கோட்டாவில் உள்ள ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிப்பெற்று வந்துள்ளார். </p><p>2023 முதல் கோட்டாவில் வசித்து வந்த இருவரும் ஜூலை மாதம் லேண்ட்மார்க் சிட்டி பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றிற்கு குடிபெயர்ந்துள்ளனர். </p><p>நேற்றிரவு பயிற்சி வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்த தங்கை கதவை தட்டியுள்ளார். நீண்டநேரம் ஆகியும் கதவை திறக்காததால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, குஷ்பு அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.</p><p>தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவியின் சடலத்தை கைப்பற்றி எம்.பி.எஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உடலை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.</p><p>தொடர்ந்து குஷ்புவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கோட்டாவிற்கு விரைந்த பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் மாணவியின் அறையிலிருந்து எந்தவித தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்படவில்லை. எனினும், கடந்த முறை எழுதிய நீட் தேர்வில் <strong>450 மதிப்பெண்கள்</strong> எடுத்திருந்ததாகவும், அந்த மதிப்பெண் திருப்தி அளிக்காததால் அவர் கடுமையான மன உளைச்சலிலும், அழுத்தத்திலும் இருந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கோட்டாவில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றுவந்தவர்களில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை <strong>8 மாணவர்கள்</strong> தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>DRDO-வின் ஏவுகணைத் தயாரிப்பு தொழில்நுட்பங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-approves-transfer-of-drdos-missile-manufacturing-technologies-to-private-companies</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-approves-transfer-of-drdos-missile-manufacturing-technologies-to-private-companies#comments</comments><guid isPermaLink="false">f087fe52-cb78-410d-93c0-a807fdd4eae1</guid><pubDate>Wed, 26 Aug 2026 14:34:00 +0000</pubDate><atom:updated>2026-08-26T14:34:00.178Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,DRDO,பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு,ராஜ்நாத் சிங்,பாதுகாப்புத் துறை,Indian defence industry</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/hue5obkl/New-Project-2026-08-26T200342.532.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DRDO-வின் ஏவுகணைத் தயாரிப்பு தொழில்நுட்பங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/hue5obkl/New-Project-2026-08-26T200342.532.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய அனைத்து ஏவுகணை அமைப்புகளின் தயாரிப்பு தொழில்நுட்பங்களையும் உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>உள்நாட்டு உற்பத்தித் திறன்களை மேம்படுத்துதல், இறக்குமதியைச் சார்ந்திருப்பதை குறைத்தல், உள்நாட்டு மதிப்புக் கூட்டலை அதிகரித்தல், பாதுகாப்புத் துறைச் சார்ந்த தொழில்துறை அடித்தளத்தை வலுப்படுத்துதல், </p><p>விநியோக முறையில் இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள், இதர தொழில்நுட்பக் கூட்டாளர்களின் பங்களிப்பிற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவைகள் இதன் முக்கிய நோக்கம் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>இந்தத் தொழில்நுட்பப் பரிமாற்றம், தகுதியான உள்நாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான சான்றிதழ்கள், தகுதித் தேர்வுகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நேபாளம் வெள்ளப்பெருக்கு: மனிதாபிமான உதவிகளை வழங்க தயார்..!- பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/india-offers-humanitarian-aid-to-flood-hit-nepal-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-offers-humanitarian-aid-to-flood-hit-nepal-pm-modi#comments</comments><guid isPermaLink="false">9cd3657d-45b0-492e-ab1e-0e99d6523cef</guid><pubDate>Wed, 26 Aug 2026 12:35:48 +0000</pubDate><atom:updated>2026-08-26T12:35:48.752Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளப்பெருக்கு,pm modi,nepal flood,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/od0exevy/Nepal.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal- PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/od0exevy/Nepal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திபெத் எல்லையில் உள்ள நேபாளத்தில் மலைகளுக்கு இடையில் ஓடும் ஆற்றில் எதிர்பாராத வகையில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு எழுந்தது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.</p><p>இன்று காலை திபெத்தில் இருந்து திடீரென வெள்ளம் கரைபுரண்டு எழுந்துள்ளது. இந்த வெள்ளம் போதே கோஷி ஆற்றில் கலக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா மற்றும் தாடிங் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல் நுவாகோட் மாவட்டமும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>மீட்புப் பணியில் ராணுவம்</h2><p>நேபாள ராணுவம் மீட்பு, தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளது. நேபாளம் பெருவெள்ளத்திற்கு கோடாரி பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கமே காரணம் என கூறப்படுகிறது.</p><p>நிலநடுக்கத்தால் பனிப்பாறை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும், 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்ததாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. </p><p>இந்த வெள்ளத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 ஆண்கள், ஒரு பெண் ஆவார்கள். நான்கு பேர் உடல்களும் திரிஷுலி ஆறு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.</p><p>இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சம்பவத்தை தொடர்ந்து, இந்திய பிரதமர் மோடி உதவிக்கரம் நீட்டியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் கூறியதாவது:-</p><p>நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவிடம் தொலைபேசியில் பேசி, வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தேன். இந்த இக்கட்டான நேரத்தில், நாம் நேபாளத்தில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு உறுதுணையாக இருப்போம்</p><p>நேபாளத்திற்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய ராணுவத்திற்கு புதிய பலம்: &apos;அரவல்லி&apos; என்ஜின் தயாரிக்க HAL - பிரான்ஸ் நிறுவன ஒப்பந்தம் இறுதி!</title><link>https://www.maalaimalar.com/news/national/new-power-for-indian-army-hal-france-finalise-aravalli-engine-deal</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-power-for-indian-army-hal-france-finalise-aravalli-engine-deal#comments</comments><guid isPermaLink="false">08b3dd3a-279f-4cf2-9213-d471d4e9e92a</guid><pubDate>Wed, 26 Aug 2026 11:29:50 +0000</pubDate><atom:updated>2026-08-26T11:29:50.558Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரான்ஸ் அரசு,HAL,Hindustan Aeronautics,Aravalli,DBMRH,அரவல்லி,இந்திய பாதுகாப்புத் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/85ekl0yh/ff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hindustan Aeronautics]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/85ekl0yh/ff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய பாதுகாப்புத் துறையின் விண்வெளி மற்றும் வான்வழிப் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய மைல்கல்லாக, இந்தியாவின் முன்னணி பாதுகாப்புப் உற்பத்தி நிறுவனமான ஹெச்.ஏ.எல் மற்றும் பிரான்ஸ் நாட்டின் பிரபல 'சேஃப்ரான் ஹெலிகாப்டர் என்ஜின்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய 'அரவல்லி' ஹெலிகாப்டர் என்ஜினை தயாரிக்க இறுதிக்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள 'சாஃபால் ஹெலிகாப்டர் என்ஜின்ஸ்' நிறுவனம் மூலம் இந்த என்ஜின்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செய்யப்படவுள்ளன.</p><h2>குதிரைத்திறன் <strong>கொண்ட</strong>  என்ஜின்</h2><p>இந்தியாவின் மிக பழமையான மலைத்தொடரான '<a href="https://www.maalaimalar.com/news/world/japan-volunteers-pull-360-ton-hirosaki-castle-tower-two-meters-with-ropes">அரவல்லி</a>'யின் பெயரைத் தாங்கி உருவாகும் இந்த இஞ்ஜின், 3,500 முதல் 4,000 ‘ஷாஃப்ட் ஹார்ஸ்பவர்’ திறன் கொண்ட அடுத்த தலைமுறை உயர் திறன் கொண்ட எஞ்சினாக வடிவமைக்கப்பட உள்ளது. இந்த என்ஜின்களை உள்நாட்டிலேயே முழுமையாக வடிவமைப்பு செய்தல், தயாரித்தல், விநியோகம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வரை அனைத்துமே இந்த ஒப்பந்தத்தின் கீழ் கையாளப்படும்.</p><p>ஹெச்.ஏ.எல் நிறுவனம் இந்திய முப்படைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கி வரும் 13 டன் எடை கொண்ட இந்திய பன்முக பயன்பாட்டு ஹெலிகாப்டர் (IMRH - Indian Multi-Role Helicopter) மற்றும் கடற்படைக்கான (DBMRH - Deck-Based Multi-Role Helicopter) ரக அதிநவீன ஹெலிகாப்டர்களுக்கு இந்த அரவல்லி இஞ்ஜின் பயன்படுத்தப்படவுள்ளது. பழைய ரஷ்ய தயாரிப்பு மி-17 ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக இவை இந்திய ஆயுதப் படைகளில் இணைக்கப்பட உள்ளன.</p><h2>சிவில் ப<strong>யன்பாடு</strong>கள்</h2><p>பாதுகாப்புத் துறையில் இறக்குமதியைக் குறைத்து 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தை வலுப்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் மிக முக்கிய பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது. ராணுவ பயன்பாட்டைத் தாண்டி, எதிர்காலத்தில் இந்த அதிநவீன இஞ்ஜின் தொழில்நுட்பம் வணிக ரீதியிலான ஹெலிகாப்டர்கள், நிவாரணப் பணிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் போக்குவரத்துச் சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.... காங்கிரஸ் அல்லாத புதிய மெகா கூட்டணி? - அபிஜீத் பேச்சின் பின்னணி என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/outstanding-chief-minister-mk-stalin-a-new-non-congress-mega-alliance-what-is-the-backdrop-of-abhijits-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/national/outstanding-chief-minister-mk-stalin-a-new-non-congress-mega-alliance-what-is-the-backdrop-of-abhijits-remarks#comments</comments><guid isPermaLink="false">6fbf3571-0936-482b-a87f-bdf7b0975659</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:28:46 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:28:46.909Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பினராயி விஜயன்,Pinarayi Vijayan,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,மு.க.ஸ்டாலின்,M.k. stalin,அபிஜீத் தீப்கே,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/y0xz8lcy/New-Project-2026-08-26T155801.646.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.... காங்கிரஸ் அல்லாத புதிய மெகா கூட்டணி? - அபிஜீத் பேச்சின் பின்னணி என்ன?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/y0xz8lcy/New-Project-2026-08-26T155801.646.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் என மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே.</p><p>தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் மாநில அளவில் நல்லாட்சி செய்த தலைவர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், பினராயி விஜயனின் தலைமையில், கேரளா கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் சிறப்பான மற்றும் முன்மாதிரியான பணிகளை வெளிப்படுத்தியுள்ளது;</p><p>மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மிகச் சிறப்பாக மேம்படுத்தியுள்ளார்; டெல்லியில் பள்ளிகள் மற்றும் சுகாதாரத் துறையின் மேம்பாட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார் என மூன்று தலைவர்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். </p><h2>இந்தியாவில் உருவாகும் 3வது கூட்டணி?</h2><p>2024 மக்களவை தேர்தலுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உருவான நிலையில், அதற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி உருவானது. </p><p>திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகள் இதில் அங்கம் வகித்தன.</p><p>ஆனால் இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற பெரும் கேள்வி அப்போது எழுந்தது. காரணம் கூட்டணி உருவான சமயத்தில் மு.க.ஸ்டாலின் தலைவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற பேச்சுகள் இந்திய அளவில் அடிப்பட்டன. </p><p>இதுதொடர்பான கேள்வி மு.க.ஸ்டாலினிடம் முன்வைக்கப்பட்ட நிலையில், என் தகுதி எனக்குத் தெரியும் என பதிலளித்தார். இதனிடையே ஆம் ஆத்மி, திரிணாமுல் கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி தனித்து களம் கண்டன. </p><p>இந்நிலையில் அபிஜீத் தீப்கேவின் இந்தக் கருத்தை தொடர்ந்து காங்கிரஸ் அல்லாத இந்த முக்கிய கட்சிகளை வைத்து ஒரு புதிய கூட்டணி உருவாக உள்ளதா? என்ற கேள்விகள் இணையத்தில் உலா வருகின்றன.</p><h2>இடதுசாரிகள் ஆட்சியில் இல்லாத நிலை</h2><p>ஆனால் அபிஜீத் தீப்கே குறிப்பிட்ட மூன்று முக்கியத் தலைவர்களுமே தற்போது ஆட்சியில் இல்லை. 2026-ல் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் கேரளாவில் கம்யூனிஸ்டும், தமிழ்நாட்டில் திமுகவும் ஆட்சியை இழந்தன. கடந்தாண்டு டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்தது. </p><p>மூன்று தலைவர்களுமே தங்கள் ஆட்சிகளில் கொண்டுவந்த திட்டங்கள் மக்களுக்கு பெரும் பலனை தரவல்லதாக இருந்தாலும், சில அரசியல் காரணங்களாலும், இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் செய்தவற்றை கவனிக்க தவறியதாலும் ஆட்சியை இழந்ததாக ஒரு முக்கிய கருத்து முன்வைக்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் கனமழையால் சாலையில் உருவான ராட்சத பள்ளம்</title><link>https://www.maalaimalar.com/news/national/heavy-rain-in-delhi-gurugram-road-caves</link><comments>https://www.maalaimalar.com/news/national/heavy-rain-in-delhi-gurugram-road-caves#comments</comments><guid isPermaLink="false">6e07c42f-396b-4903-a1a7-cc8ff4a917e5</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:56:29 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:56:29.851Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>cave,delhi,Delhi Heavy Rain,டெல்லி,பள்ளம்,டெல்லியில் கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/dwil6aws/cave.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cave]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/dwil6aws/cave.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2>டெல்லியில் மழை</h2><p>கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்த மழை டெல்லியை புரட்டிப் போட்டு உள்ளது. கடந்த 2 நாளில் டெல்லியில் 107.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கனமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கின் காரணமாக நகரின் பல பகுதிகள் பாதிப்படைந்தன.</p> <p>முக்கிய சாலைகளும் சந்திப்புகளும் வெள்ளத்தில் மூழ்கியதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. </p><h2>குடிநீர் விநியோகம்</h2><p>இன்று காலை பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துவிட்டது. எனினும் கன மழையால் பெரும்பாலான இடங்களில் சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. குடிநீர் மற்றும் கழிவுநீர்க் குழாய்கள் சேதமடைந்ததால், பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.</p><h2>குருகிராம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/gurugram-rains-floods-bjp-mp-blames-congress-rule">குருகிராமில்</a> உள்ள இப்கோ சவுக்கில் பிரதான கழிவுநீர்க் குழாய் உடைந்ததைத் தொடர்ந்து சர்வீஸ் சாலையின் ஒரு பகுதி உள்நோக்கிச் சரிந்தது. இதனால், 10 அடிக்கு 10 அடி அளவிலான பள்ளம் ஒன்று உருவானது. போக்குவரத்து போலீசார் பள்ளம் ஏற்பட்ட பகுதியைத் தடுப்புகள் வைத்து மூடி, வாகனங்களை மாற்று வழிகளுக்குத் திருப்பி விட்டனர். </p> <h2>மண் அரிப்பு</h2><p>மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட இடத்தின் அருகில் மாநகராட்சி முதன்மை கழிவுநீர்க் குழாய் செல்கிறது. அந்தக் கழிவுநீர்க் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் உருவாகி இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம், மிலாடி நபியை முன்னிட்டு இன்று பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை!</title><link>https://www.maalaimalar.com/news/national/onam-milad-un-nabi-bank-holiday-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/onam-milad-un-nabi-bank-holiday-today#comments</comments><guid isPermaLink="false">e8b16d75-eacc-458a-b8e1-713faeecaf49</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:46:35 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:46:35.268Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>onam,Bank holiday,மிலாடி நபி,வங்கி விடுமுறை,eid mubarak,ஓணம்2026,Bank Close</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/81742dm0/Bank-Holiday" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bank Holiday  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/81742dm0/Bank-Holiday?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">ஓணம் </a>மற்றும் மிலாடி நபி பண்டிகை விடுமுறைகளை முன்னிட்டு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுடெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>எந்தெந்த மாநிலங்களில் வங்கிகள் மூடல்?</strong></h2><p>இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ விடுமுறைப் பட்டியலின்படி, இன்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், புதுடெல்லி, மணிப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்படாது என்றும், அதேசமயம் ஆன்லைன் பேங்கிங் மற்றும் ஏடிஎம் சேவைகள் தடையின்றி வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>பாதிக்கப்படும் வங்கிச் சேவைகள்</strong></h2><p>வங்கிகள் மூடப்பட்டிருக்கும் மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்கள், நேரடியாக வங்கி கிளைகளுக்குச் சென்று ரொக்கப் பணம் டெபாசிட் செய்தல் மற்றும் எடுத்தல், காசோலை தொடர்பான பணிகள், புதிய கணக்கு தொடங்குதல் மற்றும் பிற நேரடி வங்கிச் சேவைகளைப் பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>டிஜிட்டல் மற்றும் ஏடிஎம் சேவைகள் வழக்கம் போல் செயல்படும்!</strong></h2><p>வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்களின் அவசரத் தேவைகளுக்கான தானியங்கி பணப்பரிவர்த்தனை இயந்திரங்கள், இணைய வங்கி சேவை, மொபைல் பேங்கிங் மற்றும் யுபிஐ கூகுள் பே, ஃபோன்பே போன்ற ஆன்லைன் பணப்பரிமாற்ற டிஜிட்டல் சேவைகள் எவ்வித தடங்கலும் இன்றி வழக்கம் போல் இயங்கும்.</p><p>ஒவ்வொரு மாநிலத்தின் பிராந்திய பண்டிகைகளுக்கு ஏற்ப இந்த விடுமுறைகள் மாறுபடும் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தொழில்நுட்ப வல்லுநர்கள் வெற்றி பெற &apos;விற்பனை&apos; வித்தையைக் கற்க வேண்டும்: ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுரை!</title><link>https://www.maalaimalar.com/news/national/tech-professionals-must-learn-sales-to-succeed-sridhar-vembu</link><comments>https://www.maalaimalar.com/news/national/tech-professionals-must-learn-sales-to-succeed-sridhar-vembu#comments</comments><guid isPermaLink="false">600ef821-694e-44d1-ac9c-7555513924b8</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:09:14 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:09:14.618Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,Sridhar Vembu,ஸ்ரீதர் வேம்பு,Zoho founder,Software Industry,ஸோஹோ நிறுவனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/p1o9p9gr/sridhar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sridhar Vembu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/p1o9p9gr/sridhar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான ஸோஹோ (Zoho) அமைப்பின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, பொறியாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்ற தொழில்நுட்ப பின்புலம் கொண்ட தொழில்முனைவோர்கள் தங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த விற்பனைத் துறையில் நேரடியாகக் களம் இறங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தொழிலில் வெற்றி பெற விரும்புபவர்கள் விற்பனை அழைப்புகளை மேற்கொள்வதோடு, வாடிக்கையாளர்களின் நிராகரிப்புகளையும் எதிர்கொள்ளப் பழக வேண்டும் என்று அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.</p><h2>நிராகரிப்புகளை எ<strong>திர்கொள்வதே உ</strong>ண்மையான பாடம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/porsche-tcs-1-4-billion-mega-deal-mhp-acquisition">தொழில்நுட்பத்</a> திறமையோ அல்லது சிறந்த தரமான பொருளை உருவாக்குவதோ மட்டுமே ஒரு நிறுவனத்தை நடத்துவதற்குப் போதாது என்று ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார். வாடிக்கையாளர்களுக்கு அந்தத் தயாரிப்பு ஏன் தேவைப்படுகிறது என்பதைப் புரியவைத்து, அவர்களைப் பணம் செலுத்த வைப்பதே ஒரு நிறுவனத்தின் ஜீவாதாரமாகும்.</p><p>விற்பனை தொடர்பான உரையாடல்களில் ஈடுபடும் போது மட்டுமே தனது எண்ணங்களை மற்றவர்களுக்கு எளிதாகப் புரியவைப்பது எவ்வளவு கடினம் என்பது புலப்படும். இது தொழில்முனைவோரின் தொடர்பாடல் திறனை மேம்படுத்துவதுடன், நிறுவனத்தின் விற்பனைக் குழுவினர் சந்திக்கும் சவால்களையும் புரிந்துகொள்ள உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>விற்பனை இல்<strong>லாத தொழில் உல</strong>கத்தில் இல்லை</h2><p>எந்தவொரு தொழில் நிறுவனமும் தப்பிப் பிழைத்து வெற்றிப் பாதையில் நகர வேண்டுமானால், ஏதேனும் ஒன்றை விற்பனை செய்தே தீர வேண்டும். விற்பனை என்ற அம்சம் இல்லாத வணிகம் என எதுவுமே இல்லை என்பதால், புதிய தொழில்முனைவோர்கள் ஆரம்பக் கட்டத்திலேயே நிராகரிப்புகளைச் சந்திக்கத் தயங்கக் கூடாது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். இவரது இந்த இணையப் பதிவு சமூக வலைதளங்களில் பல தொழில்முனைவோர்கள் மற்றும் வணிக வல்லுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் தங்களது தொடக்கக் கால அனுபவங்களை இதன் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.</p><h2>மெ<strong>ன்பொருள் துறை மாற்றங்கள்</strong></h2><p>சமீபகாலமாக வணிக உலகம் சந்தித்து வரும் சவால்கள் குறித்தும் ஸ்ரீதர் வேம்பு பேசியுள்ளார். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால் தரவு மையங்கள் மற்றும் கணினி நினைவகங்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. இதனால் மென்பொருள்களை உருவாக்கும் முறையிலும், நிரலாக்க மொழிகளிலும் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.</p><p>நினைவகம் இலவசமாகக் கிடைக்கும் என்ற எண்ணத்தில் மென்பொருள்கள் உருவாக்கப்பட்ட காலம் முடிந்துவிட்டதாகவும், இனி குறைந்த நினைவகத்தைப் பயன்படுத்தி இயங்கும் சாஃப்ட்வேர் அமைப்புகளை உருவாக்குவதே தற்போதைய அவசியமான ஆராய்ச்சி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய மந்திரி சபையில் 12 புதுமுகங்களுக்கு வாய்ப்பு- பிரதமர் மோடி அதிரடி முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/opportunities-for-12-newcomers-in-the-union-cabinet</link><comments>https://www.maalaimalar.com/news/national/opportunities-for-12-newcomers-in-the-union-cabinet#comments</comments><guid isPermaLink="false">a5eb064a-cb4d-44b0-a553-fb7d546398e0</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:58:01 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:58:01.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,மத்திய அமைச்சரவை,Central Cabinet,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/hqqa6284/modi.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/hqqa6284/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மந்திரிசபை மாற்றத்தின் போது இளம் மந்திரிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.</strong></em>  </p><p>மத்திய மந்திரி சபையில் தற்போது பிரதமர் மோடி உள்ளிட்ட 69 பேர் இடம் பெற்றுள்ளனர். அரசியலமைப்பு சட்டப்படி அதிகபட்சமாக 81 பேர் வரை மந்திரிகளாக பதவி வகிக்க முடியும். அந்த வகையில் 12 பேரை கூடுதலாக நியமிக்க முடியும். </p><h2><strong>மத்திய மந்திரி சபை மாற்றம்</strong></h2><p>பிரதமர் மோடி கடந்த மே மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.  அவர் இந்தியா திரும்பியவுடன் மத்திய மந்திரி சபை கூட்டத்தை நடத்தினார். </p><p>அப்போதில் இருந்தே <a href="https://www.maalaimalar.com/topic/மத்திய-அமைச்சரவை">மத்திய மந்திரி சபையில்</a> மாற்றம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் உடனடியாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. சமீபத்தில் பா.ஜ.க.வின் கட்சி அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது. புதிய தேசிய நிர்வாக குழு அமைக்கப்பட்டது.</p><p>அதன் அடிப்படையிலும், 2029 பாராளுமன்ற தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் அடிப்படையில் மத்திய மந்திரி சபையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு தீவிரமாக உள்ளது. </p><h2><strong>12 புதுமுகங்கள்</strong></h2><p>அதன்படி மத்திய மந்திரி சபையில் காலியாக இருக்கும் 12 இடங்களுக்கு புதுமுகங்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிதாக சேர்க்கப்படுபவர்கள் வயது அடிப்படையில் இடம்பெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. </p><p>2025-ல் மோடி பிரதமராக பதவி ஏற்ற போது 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட மந்திரிகள் 51 முதல் 70 வயதை கொண்டவர்களாகவும், 24 சதவீதம் பேர் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருந்தனர்.</p><h2><strong>70 வயது</strong></h2><p>தற்போது 12 மத்திய மந்திரிகள் மற்றும் இணை மந்திரிகள் 70 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த இந்துஸ்தானி அவாம் மோர்சா கட்சியின் ஜிதன்ராவ் மாஞ்சிக்கு 81 வயதாகிறது. மத்திய மந்திரிகளில் இளையவராக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம்மோகன் நாயுடு உள்ளார். </p><p>மந்திரிசபை மாற்றத்தின் போது இளம் மந்திரிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  </p><h2><strong>கூட்டணி கட்சிகள்</strong></h2><p>மேலும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் இமாச்சல பிரதேசம், கர்நாடகாவை சேர்ந்த எம்.பி.க்கள் மந்திரிகளாக வாய்ப்பு உள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களும் இந்த பட்டியலில்  உள்ளதாக தெரிகிறது. </p><p>உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும்  அடுத்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெற உள்ளது. மந்திரி சபை விரிவாக்கத்தின் போது கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.</p><h2><strong>ஏக்நாத் ஷிண்டேயின் மகன்</strong> </h2><p>மகாராஷ்டிராவில் துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் 13 எம்.பி.க்கள் உள்ளனர். சமீபத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியில் இருந்து சில எம்.பி.க்கள் இணைந்ததை தொடர்ந்து அதன் பலம் அதிகரித்தது. இதனால் ஏக்நாத் ஷிண்டேயின் மகன் ஸ்ரீகாந்துக்கு மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளது. </p><p>விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாபில் ஷிரோன்மணி அகாலி தளம் கட்சிக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம். அந்த கட்சியுடன் மீண்டும் கூட்டணி உருவானால் ஹர்ஷிம்ரத் கவ் பாதல் மீண்டும் மந்திரியாகலாம். </p><h2><strong>ஆம்ஆத்மி</strong></h2><p>ராகவ் சந்தா தலைமையில் 7 மேல்சபை எம்.பி.க்கள் சமீபத்தில் ஆம்ஆத்மியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். இதனால் அவர்களில் சிலருக்கு மந்திரி சபையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படலாம். இந்த குழுவை சேர்ந்த சந்தீப் பதக் ஏற்கனவே பா.ஜ.க.வில் செயலாளர் பொறுப்பை ஏற்றுள்ளார். </p><p>மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேர் உள்ளனர். வேறொரு கட்சியில் இணைந்த இவர்களுக்கும் மத்திய மந்திரி சபையில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய தி.மு.க.வும் மத்திய மந்திரி சபையில் இடம்பெறக்கூடும் என பேச்சுக்கள் உள்ளன. </p><p>மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரசும், பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து மத்திய மந்திரி சபையில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.</p><h2><strong>பணிச்சுமை</strong></h2><p>அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட 14 மத்திய மந்திரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளை கவனித்து வருகின்றனர். மத்திய மந்திரி சபை மாற்றத்தின் போது இந்த பணிச்சுமையை பிரித்து சில துறைகளை புதிய மந்திரிகளுக்கு ஒப்படைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவும் மத்திய மந்திரி சபை விஸ்தரிப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம். </p><p>நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி மந்திரி பதவியில் இருந்து விலகினார். மேல்சபை பதவி காலம் முடிவடைந்தை தொடர்ந்து சிறுபான்மை விவகாரத்துறை இணை மந்திரி ஜார்ஜ் குரியன் பதவி விலகினார். ரெயில்வே இணை மந்திரி ரவ்நீத் சிங் மேல் சபை பதவி காலமும் முடிவடைந்துள்ளது.</p><h2><strong>நீக்கம்</strong></h2><p>பா.ஜ.க.வில் புதிய பொறுப்புகளை பெற்றுள்ள மத்திய மந்திரிகளும் மந்திரி பதவியில் இருந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஹர்ஷ் மல்கோத்ரா, பங்கஜ் சவுத்ரி, புதிய பொறுப்புகளை ஏற்று உள்ளனர். </p><p>பெட்ரோலியத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, சமூக நீதி துறை இணை மந்திரி பி.எல்.வர்மா ஆகியோரின் மேல்சபை எம்.பி. பதவி காலமும் நவம்பர் மாதத்தில் முடிவடைகிறது. செயல்பாடுகள் காரணமாகவும் சில மந்திரிகள் நீக்கப்படலாம் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. </p><h2><strong>ஒருவருக்கு ஒரு பதவி</strong></h2><p>ஒருவருக்கு ஒரு பதவி என்ற நடைமுறையை பா.ஜ.க. பின்பற்றுகிறது. அதன்படி மத்திய மந்திரி சபையில் இடம் பெறுவார்கள் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்ட சில தலைவர்களுக்கு அதற்கு பதிலாக கட்சி அமைப்பில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.</p><p>அவர்களில் ஸ்மிருதி இரானி, வினோத் தாவ்டே, சதீஷ் பூனியா, தருண் சுக் ஆகியோர் அடங்குவர். </p><h2><strong>நிதின்கட்கரி</strong></h2><p>மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள மூத்த மந்திரிகளில் ஒருவர் நிதின்கட்கரி. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அவர் இளம் தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது என்று தெரிவித்து இருந்தார். இதனால் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம் என்று கருதப்படுகிறது.  </p><p>புதுமுகங்கள், பெண்கள், கூட்டணி கட்சிகள், தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்கள், கட்சி பொறுப்பு பெற்ற மந்திரிகளை விடுவித்தல், மந்திரிகளின் பணிச்சுமைகளை குறைத்தல் ஆகியவை மத்திய மந்திரி சபை மாற்றத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன்படி மத்திய மந்திரி சபை விரைவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தெலுங்கானாவில் லாரி மீது பஸ் மோதி விபத்து - 6 பேர் பலி </title><link>https://www.maalaimalar.com/news/national/bus-crashes-to-truck-six-killed-near-telangana</link><comments>https://www.maalaimalar.com/news/national/bus-crashes-to-truck-six-killed-near-telangana#comments</comments><guid isPermaLink="false">5b5e6f63-9ef0-44a8-8126-86327a8d82f5</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:49:29 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:49:29.347Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death,Telangana,accident,விபத்து,தெலுங்கானா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/4ecn3zyk/bus.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/4ecn3zyk/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து 42 பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று நேற்று இரவு ஆந்திர மாநிலம் ஏலூருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.</p><p>இன்று அதிகாலை சூர்யா பேட்டை மாவட்டம், கொடடா அடுத்த தோர குண்டா புறநகர் பகுதியில் வந்தபோது சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. </p><p>இந்த விபத்தில் 5 பெண் பயணிகள் உட்பட 6 பேர் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 20 பயணிகள் காயமடைந்தனர். </p><p>விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு கொடடா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>குருகிராமில் மழை வெள்ளம்: காங்கிரஸ் ஆட்சியைக் குற்றம்சாட்டும் பாஜக எம்பி!</title><link>https://www.maalaimalar.com/news/national/gurugram-rains-floods-bjp-mp-blames-congress-rule</link><comments>https://www.maalaimalar.com/news/national/gurugram-rains-floods-bjp-mp-blames-congress-rule#comments</comments><guid isPermaLink="false">577d9f7a-e8b0-4d83-947b-494c7f3e6a6c</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:29:47 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:29:47.304Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,Congress,gurugram,Rao Inderjit Singh,Gurugram flood,குருக்கிராம்,ராவ் இந்தர்ஜித் சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/sumejfee/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rao Inderjit Singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/sumejfee/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹரியானாவின் முன்னணி தொழில்நகரமான குருகிராமில் அண்மையில் பெய்த கனமழையால் நகரின் முக்கியச் சாலைகளும், குடியிருப்புப் பகுதிகளும் நீரில் மூழ்கிப் பெரும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், நகரின் தற்போதைய நிலைக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் தவறான உள்கட்டமைப்பு திட்டமிடலே காரணம் என குருகிராமின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராவ் இந்தர்ஜித் சிங் கூறியிருப்பது பெரும் காரசாரமான அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.</p><h2><strong>சுரங்கப்பாதை திட்டம்</strong> </h2><p>நகரின் வெள்ளப் பெருக்கு குறித்துப் பேசிய மத்திய இணை அமைச்சரும் <a href="https://www.maalaimalar.com/news/national/flooded-gurugram-again-who-is-to-blame-for-citys-infrastructure-collapse">குருக்கிராமின்</a> எம்பியுமான ராவ் இந்தர்ஜித் சிங், "தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் அனைத்தும் காயத்திற்கு போடப்படும் சாதாரண பிளாஸ்டர் போன்ற தற்காலிகமான தீர்வே ஆகும். ஆரவல்லி மலையிலிருந்து யமுனை நதிக்குத் தண்ணீரை எடுத்துச் சென்ற பழமையான இயற்கை வடிகால்களை அடைத்து, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களே தற்போதைய வெள்ளப் பெருக்குக்கு முக்கியக் காரணம்." என்று குற்றம்சாட்டினார்.</p><p>இதற்கு நிரந்தரத் தீர்வாக, மெட்ரோ ரெயில் பாதைகளைப் போல பழைய வடிகால் பாதைகளின் வழியே நிலத்தடி சுரங்கப்பாதைகளை (Underground Tunnels) அமைத்து மழைநீரை வெளியேற்ற வேண்டும் என்றும், அதற்கான நிதியைத் திரட்டும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>பாஜக எம்பியின் இந்தக் குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் கட்சி உடனடி மற்றும் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளது. குருக்கிராமில் கடந்த சில ஆண்டுகளில் உள்கட்டமைப்பிற்காக ரூ.1,400 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டும் நகரின் கட்டமைப்பு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் சாடியுள்ளது.</p><p>மேலும், 2009-ஆம் ஆண்டு முதல் குரு்கிராமின் நாடாளுமன்ற உறுப்பினராக ராவ் இந்தர்ஜித் சிங் பொறுப்பில் இருந்து வருகிறார். அதுமட்டுமன்றி, அவர் குற்றம்சாட்டும் அதே காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் அவரே எம்பியாகவும், ஹரியானா மற்றும் மத்திய அரசில் அமைச்சராகவும் பதவி வகித்தார். 2014-ல் பாஜகவிற்கு மாறிய அவர், தொடர்ச்சியாக குருகிராம் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவியில் இருந்துவிட்டு முந்தைய ஆட்சியைக் குற்றம்சாட்டுவது தனது சொந்தத் தோல்வியை மறைக்கும் செயலாகும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.</p><h2>முடங்<strong>கிய குருக்கிராம்</strong></h2><p>குருகிராமில் சில நிமிடங்களில் கொட்டித் தீர்த்த 70 மி.மீ முதல் 75 மி.மீ வரையிலான கனமழையால் நகரின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் 2 அடிக்கும் மேலாக மழைநீர் தேங்கியதால் பள்ளிக் குழந்தைகள் சென்ற பேருந்துகள் மற்றும் அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள் மணி கணக்கில் போக்குவரத்தில் சிக்கித் தவித்தன. இதனால் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தின.</p><p>இதற்கிடையே, டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே இஃப்கோ சவுக்கில் பிரதான கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 10 அடி அகலத்திற்குப் பாதாளப் பிளவு ஏற்பட்டு வீதி உள்வாங்கியது. இதனால் போக்குவரத்தும், சில பகுதிகளில் குடிநீர் விநியோகமும் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. பல நூறு கோடி செலவழிக்கப்பட்டும் ஒவ்வொரு மழைக்காலத்திலும் குருக்கிராம் நகரம் தத்தளிப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குளுகுளு ஏசி வசதியுடன் 1 ரூபாய் வாடகை திருமண மண்டபம்</title><link>https://www.maalaimalar.com/news/national/air-conditioned-wedding-hall-with-a-rental-fee-of-rs-1</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-conditioned-wedding-hall-with-a-rental-fee-of-rs-1#comments</comments><guid isPermaLink="false">422ec911-c07e-4ed4-94c2-4260ea12d6e8</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:09:04 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:09:04.338Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமண மண்டபம்,Marriage hall</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/w4pyq0mm/marriagehall.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ குளுகுளு ஏசி வசதியுடன் 1 ரூபாய் வாடகை திருமண மண்டபம்]]></media:title><media:description type="html"><![CDATA[ குளுகுளு ஏசி வசதியுடன் 1 ரூபாய் வாடகை திருமண மண்டபம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/w4pyq0mm/marriagehall.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுமார் 2 ஏக்கர் பரப்பளவில், 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தை நெல்லூர் மாநகராட்சி சார்பில் ரூ.1.40 கோடி செலவில் கட்டி முடித்துள்ளனர்.</strong></em></p><p>ஆந்திர மாநிலம் நெல்லூர் மாநகராட்சி சார்பில் ஏ.சி. வசதியுடன் கூடிய சொகுசு திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் 24 மணி நேர வாடகை ரூ.1-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது திருமண மண்டபங்களின் வாடகை பல லட்சமாக உள்ளது. இடத்திற்குத் தகுந்தாற்போல் வெறும் 24 மணி நேரத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வாடகை மட்டுமே கொடுக்க வேண்டியுள்ளது.</p><figure><img alt="குளுகுளு ஏசி வசதியுடன் 1 ரூபாய் வாடகை திருமண மண்டபம்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/9epbid2j/marriagehaal0.jpg" /><figcaption>குளுகுளு ஏசி வசதியுடன் 1 ரூபாய் வாடகை திருமண மண்டபம்</figcaption></figure><p>இதுதவிர மேடை, முகப்பு அலங்காரம், சமையல் பாத்திரங்களுக்கான தனி வாடகை என லட்சக்கணக்கில் செலவாகிறது. இத்தகைய மண்டபங்களில் திருமணம் செய்ய நடுத்தர வர்க்கத்தினரே அஞ்சும் நிலையில், ஏழைகளால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத சூழ்நிலை உள்ளது. </p><p>இதனைக் கருத்தில் கொண்டு, நெல்லூர் மாநகராட்சியினர் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் பிள்ளைகளுக்கான திருமணச் செலவை வெகுவாகக் குறைக்க தீர்மானித்தனர்.</p><p>அதன்படி, நெல்லூரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில், 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தை நெல்லூர் மாநகராட்சி சார்பில் ரூ.1.40 கோடி செலவில் கட்டி முடித்துள்ளனர்.</p><p>திருமண மண்டபத்தில் ஏ.சி. அறைகள், பளிங்குத் தரைகள், பரந்த கார் பார்க்கிங் வசதி, குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>இந்த திருமண மண்டபத்திற்கு ஒரு நாள் வாடகையாக வெறும் 1 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண மண்டபத்தை வருகிற செப்டம்பர் 16-ந்தேதி அமைச்சர் நாராயணா திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திர கோவில் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/five-members-of-the-same-family-commit-suicide-at-an-andhra-temple-guesthouse</link><comments>https://www.maalaimalar.com/news/national/five-members-of-the-same-family-commit-suicide-at-an-andhra-temple-guesthouse#comments</comments><guid isPermaLink="false">44888b87-56d3-426c-9e5b-7f9279586bb3</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:50:41 +0000</pubDate><atom:updated>2026-08-26T04:50:41.272Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,suicide</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/5o8l9jqx/suicide.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தற்கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/5o8l9jqx/suicide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அறையில் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</strong></em></p><p>ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் பட்டலப்பள்ளியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 36). இவரது தாய் கோகிலா லட்சுமி (50). சகோதரிகள் மல்லேஸ்வரி (45), ஸ்ரீதேவி (33), மல்லேஸ்வரியின் மகன் மணிகண்டா (15). </p><h2><strong>நிதி நெருக்கடி</strong></h2><p>சுதாகருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரது சகோதரிகளுக்கு திருமணமாகி இருவரும் கணவர்களை விட்டு பிரிந்து சுதாகர் வீட்டில் வசித்து வந்தனர்.</p><p>சுதாகர் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 28-ந்தேதி குடும்பத்தினர் அனைவரும் ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலுக்கு சொந்தமான விடுதியில் அறை எடுத்து தங்கினர். </p> <p>கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுதாகர், மணிகண்டா இருவரும் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சுதாகரின் தாய் கோகுலா ஆதி லட்சுமி, அவரது சகோதரிகள் மல்லேஸ்வரி, ஸ்ரீதேவி ஆகியோர் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நேற்று சுதாகர் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. </p><p>இது குறித்து விடுதி மேலாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். </p><p>அறையில் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நபிகள் நாயகத்தின் உன்னதமான கொள்கைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்: குடியரசு தலைவர் - பிரதமர் மோடி வாழ்த்து </title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-and-president-murmu-extend-milad-un-nabi-greetings</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-and-president-murmu-extend-milad-un-nabi-greetings#comments</comments><guid isPermaLink="false">b8b034f4-d646-4e62-8369-1f6d1cad3948</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:40:08 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:40:08.787Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>President Droupadi Murmu,miladi nabi,pm modi,மிலாடி நபி,பிரதமர் மோடி,குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/9pum935b/Untitled-design-18.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Milad-un-Nabi: President and Prime Minister ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/9pum935b/Untitled-design-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF">மிலாடி நபி</a> கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.</p><p><strong>மிலாடி நபி</strong>  </p><p>இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான மிலாடி நபி, நபிகள் நாயகம் முஹம்மதுவின் பிறப்பைக் குறிக்கிறது. </p><p>இஸ்லாமியர்களுக்கு நபிகள் நாயகம் முஹம்மது அவர்களின் பிறந்தநாள் ஒரு புனிதமான நாளாக கொண்டாடப்படுகிறது.</p><p>அவரது போதனைகள், உலகம் முழுவதும் பலரால் பின்பற்றப்பட்டு, தன்னலமற்ற தன்மையையும் மன்னிக்கும் குணத்தையும் கடைபிடிக்குமாறு வலியுறுத்திகிறது.   </p><p>உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு, இந்த நாள் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் கருணையை போற்றும் ஒரு சிந்தனை மற்றும் நன்றியுணர்வின் தருணமாக அமைகிறது.</p><p>இஸ்லாமிய மக்கள் மிலாடி நபி கொண்டாட்டங்களை காலைத் தொழுகைகள் மற்றும் மசூதிகளில் கூடி கொண்டாடப்படுகின்றனர்.</p><p>இந்த ஆண்டு, மிலாடி நபி இந்தியாவில் இன்று கொண்டாடப்படுகிறது.</p><h3><strong>குடியரசுத் தலைவர்</strong></h3><p>முன்னதாக குடியரசுத் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81">திரெளபதி முர்மு</a> வெளியிட்ட செய்தி குறிப்பில், “மிலாடி நபி நன்னாளில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் தீவிரமாக பங்களிக்க, நபிகள் நாயகத்தின் உன்னதமான கொள்கைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்,” என்று தெரிவித்துள்ளார்.</p><p><strong>பிரதமர் மோடி</strong></p><p>இந்த நிலையில், மிலாடி நபி கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a> வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மிலாடி நபி நல்வாழ்த்துகள்.</p><p>இந்த தினமானது நம்மிடையே ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் மேலும் வளர்க்கட்டும். மேலும், கருணை மற்றும் சமுதாயத்திற்கு திருப்பிக் கொடுக்கும் மனப்பான்மை எப்போதும் நமக்கு வழிகாட்டட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை மகிழ்ச்சி, ஒற்றுமை, செழிப்பு ஆகிய உணர்வுகளை வலுப்படுத்தட்டும்: பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/onam-festival-bring-joy-unity-prosperity-says-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/onam-festival-bring-joy-unity-prosperity-says-pm-modi#comments</comments><guid isPermaLink="false">1d675a57-9327-48c7-9788-e3feed6cd23e</guid><pubDate>Wed, 26 Aug 2026 02:29:07 +0000</pubDate><atom:updated>2026-08-26T02:29:07.585Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஓணம் பண்டிகை,onam festival,pm modi,பிரதமர் மோடி,கேரளம்,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/baoafdpv/Untitled-design-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஓணம்]]></media:title><media:description type="html"><![CDATA[ Onam Festival - PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/baoafdpv/Untitled-design-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஓணம் பண்டிகை</h2><p>கேரளாவில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">ஓணம்</a> பண்டிகை என்பது மலையாள சூரிய நாட்காட்டியின்படி ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில், பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் 10 நாள் பண்டிகையாகும். </p><p>இது அறுவடை காலத்தை குறிப்பதால், மாநிலத்தின் செழிப்பு மற்றும் விவசாய உற்பத்தியுடன் தொடர்புடையது மட்டுமல்லாமல், பண்டைய சாஸ்திரங்களின்படி, ஓணம் மகாபலி மன்னனின் மீள்வருகையுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. </p><h2>ஓணம் கொண்டாட்டங்கள்</h2><p>இந்த ஆண்டு, ஓணம் கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 16 அன்று தொடங்கி, இன்று திருவோணத்துடன் நிறைவடைகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">கேரள</a> மக்களிடையே ஓணம் பண்டிகைக்கு மிகுந்த மத முக்கியத்துவம் உண்டு.</p><p>இந்தப் பண்டிகையை கொண்டாடுவதன் மூலம், நல்ல விளைச்சலை தந்த பூமிக்கு மக்கள் தங்கள் நன்றியை வெளிப்படுத்துகிறார்கள். </p><h2>மகாபலி மன்னர்</h2><p>மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக, வாமன பெருமானையும் தங்களுக்குப் பிரியமான மகாபலி மன்னரையும் வழிபடுகிறார்கள்.</p><p><strong>பிரதமர் மோடி வாழ்த்து</strong></p><p>இந்த நிலையில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் நரேந்திர மோடி</a> ஓணம் பண்டிகையை கொண்டாடும் கேரள மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துகள். இது உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஒரு துடிப்பான பண்டிகை.</p><p>இந்த பண்டிகை மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் செழிப்பு ஆகிய உணர்வுகளை மேலும் வலுப்படுத்தட்டும்” என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஓராண்டிற்குள் புதிய குற்றவியல் சட்டங்களை 100% அமல்படுத்த வேண்டும்! மத்திய அமைச்சர் அமித் ஷா</title><link>https://www.maalaimalar.com/news/national/amit-shah-sets-one-year-deadline-for-100-pc-implementation-of-new-criminal-laws</link><comments>https://www.maalaimalar.com/news/national/amit-shah-sets-one-year-deadline-for-100-pc-implementation-of-new-criminal-laws#comments</comments><guid isPermaLink="false">b549892b-f2c8-4be6-9f2c-2ece4b7e826a</guid><pubDate>Tue, 25 Aug 2026 23:39:15 +0000</pubDate><atom:updated>2026-08-25T23:39:15.111Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,Criminal Law,குற்றவியல் சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/l60n38v0/Amit-Shah-in-Meeting.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amit Shah in Meeting]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/l60n38v0/Amit-Shah-in-Meeting.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை 100 சதவீதம் அமல்படுத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஓராண்டு காலக்கெடு நிர்ணயித்தார். இந்த நடவடிக்கை, குற்றவியல் வழக்குகளை <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்ச நீதிமன்றம்</a> வரையிலான நிலையில் மூன்று ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டுவரவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதத்தை 25 சதவீதம் அதிகரிக்கவும் உதவும் என்று அவர் கூறினார்.</p><p>உளவுத்துறையின் இரண்டு நாள் 'தேசிய பாதுகாப்பு உத்திகள் மாநாடு 2026'-இன் நிறைவு விழாவில் உரையாற்றிய <a href="https://www.maalaimalar.com/topic/amit-shah">அமித் ஷா</a>, தேசிய பாதுகாப்பு உத்திகள் அமைப்பு 15-20 ஆண்டுகளுக்குப் பிறகான பாதுகாப்பு சவால்களை முன்கூட்டியே கணித்து, அவை பெரிய அச்சுறுத்தல்களாக மாறுவதை தடுப்பதற்கான உத்திகளை வகுக்க வேண்டும் என்று கூறினார்.</p><h2>ஓராண்டு இலக்கு:</h2><p>பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நாகரி சுரக்ஷா சன்ஹிதா (BNSS) மற்றும் பாரதிய சாக்ஷ்ய அதிநியம் (BSA) ஆகியவை ஜூலை 1, 2024 அன்று நடைமுறைக்கு வந்தன. இந்த புதிய சட்டங்கள் முறையே பிரிட்டிஷ் காலத்து இந்திய தண்டனை சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறை சட்டம் (CrPC) மற்றும் இந்திய சாட்சிய சட்டம் (Indian Evidence Act) ஆகியவற்றை மாற்றியமைத்தன.</p><p>"அடுத்த ஓராண்டில் மூன்று புதிய சட்டங்களும் 100 சதவீதம் அமல்படுத்தப்படும்; இதன் மூலம் குற்றவியல் வழக்குகளை உச்ச நீதிமன்றம் வரையிலான நிலையில் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கவும், தண்டனை விகிதத்தை 25 சதவீதம் அதிகரிக்கவும் முடியும்," என்று உள்துறை அமைச்சர் கூறினார்.</p><p>குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் நெட்வொர்க் மற்றும் அமைப்புகள், ஒன்றிணைந்து செயல்படக்கூடிய குற்றவியல் நீதி அமைப்பு, NatGrid மற்றும் தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தரவுத் தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><h2>மத்திய அமைச்சர் பாராட்டு:</h2><p>எதிர்கால சவால்களை தடுக்கும் வகையில், இளம் அதிகாரிகள் அனைவரும் தரவு ஒருங்கிணைப்பு, பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் குற்ற செயல்பாட்டு முறைகளை கண்டறிதல் ஆகியவற்றின் வாயிலாக செயல்படக்கூடிய உளவு தகவல்களை உருவாக்க வேண்டும் என்று ஷா கூறினார்.</p><p>நக்சலைட்டுகள், ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாதம் மற்றும் வடகிழக்கு கிளர்ச்சி ஆகிய மூன்று முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு சிக்கல்களால் ஏற்பட்ட சவால்களை அரசு "முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்று கூறிய அவர், இந்த சாதனைக்கு அனைத்து மாநிலக் காவல் படைகள், மத்திய முகமைகள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகள் ஆகியவற்றின் பங்களிப்பே காரணம் என்று பாராட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>உ.பி. ஆளுநர் பயணித்த வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசியவர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/man-detained-for-throwing-stones-at-vande-bharat</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-detained-for-throwing-stones-at-vande-bharat#comments</comments><guid isPermaLink="false">76e1e8b3-b86a-44f3-b167-ae77f8ceebe5</guid><pubDate>Tue, 25 Aug 2026 23:01:09 +0000</pubDate><atom:updated>2026-08-25T23:01:09.536Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Vande Bharat,கல்வீச்சு,man,வந்தே பாரத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/97xiv3os/vande-Bharat-and-Anandi-Ben-Patel.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vande Bharat and Anandi Ben Patel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/97xiv3os/vande-Bharat-and-Anandi-Ben-Patel.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">உத்தர பிரதேச</a> மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் பயணம் செய்துகொண்டிருந்த மும்பை-அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது, சூரத் அருகே ஒருவர் கல் எறிந்ததாகக் கூறப்படுகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். </p><p>இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த நபர் லேசான மனநிலை பாதிப்பு உடையவர் என்றும், சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அவர் <a href="https://www.maalaimalar.com/topic/arrest">கைது</a> செய்யப்பட்டார் என்றும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.</p><h2>மர்ம நபர் கைது:</h2><p>யூனியன் பிரதேச நிர்வாகம் தமனில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபெல் படேல் வாபி ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் ஏறினார்.</p><p>சூரத் மாவட்டத்தில் உள்ள உத்ரான் காவல் நிலையத்தின் வரம்பிற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், அந்த நபர் ரெயில்வே பாதுகாப்புப் படையினரால் (RPF) பிடிக்கப்பட்டதாகவும் வதோதரா கோட்டத்திற்கான மேற்கு ரெயில்வேயின் காவல் கண்காணிப்பாளர் (SP) அபய் சோனி தெரிவித்தார். சம்பவத்திற்குப் பிறகு அந்த நபர் RPF ரோந்து பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என்று அவர் கூறினார்.</p><h2>சதி முயற்சி அறிகுறி இல்லை:</h2><p>"அவரது பையில் கற்கள் கண்டெடுக்கப்பட்டன. விசாரணையின் போது, ​​அவர் ஒரு நாய் மீது கற்களை எறிந்ததாக ரெயில்வே பாதுகாப்புப் படையினரிடம் கூறினார். முன்னதாக கடந்து சென்ற ஒரு சரக்கு ரெயில் மீதும் அவர் கற்களை எறிந்ததாக கூறப்படுகிறது," என்று சோனி தெரிவித்தார்.</p><p>அந்த நபர் "சற்று மனநிலை சரியில்லாதவராக" தோன்றியதாக கூறிய அவர், இந்த சம்பவத்தின் பின்னணியில் எந்தவொரு திட்டமிட்ட அல்லது சதி முயற்சி இருந்ததற்கான அறிகுறியும் இல்லை என்றும் மேலும் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கேரளா இன்றுமுதல் கேரளம் ஆனது... பெயர் மாற்றத்தை  அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-is-now-officially-keralam-centre-notifies-new-name</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-is-now-officially-keralam-centre-notifies-new-name#comments</comments><guid isPermaLink="false">22c98af5-2f98-4f91-bda2-5b280c006160</guid><pubDate>Tue, 25 Aug 2026 19:19:43 +0000</pubDate><atom:updated>2026-08-25T19:19:43.699Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,kerala,central government,கேரளம்,கேரளா,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/6eor3d52/Parliment-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Parliment ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/6eor3d52/Parliment-2.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய உள்துறை அமைச்சகம், தென்னிந்திய மாநிலமான கேரளாவிற்கு செவ்வாய்க்கிழமை முதல் '<a href="https://www.maalaimalar.com/topic/keralam">கேரளம்</a>' எனப் புதிய பெயரை அறிவித்துள்ளது.</p><p>செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அரசிதழ் அறிவிப்பில், உள்துறை அமைச்சகம், “கேரளா (பெயர் மாற்றம்) சட்டம், 2026-இன் பிரிவு 1-இன் துணை பிரிவு (2) வழங்கிய அதிகாரங்களை பயன்படுத்தி, <a href="https://www.maalaimalar.com/news/national">மத்திய அரசு</a>, ஆகஸ்ட் 25, 2026-ஐ, மேற்கூறிய சட்டத்தின் விதிகள் நடைமுறைக்கு வரும் தேதியாக இதன்மூலம் நியமிக்கிறது” என்று கூறியுள்ளது. </p><h2>குடியரசு தலைவர் ஒப்புதல்:</h2><p>இந்த மாத தொடக்கத்தில், கேரளாவை கேரளம் என பெயர் மாற்றும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து, அந்த சட்டத்தை ஒரு சட்டமாக மாற்றினார்.</p><p>ஆகஸ்ட் 11-ஆம் தேதியன்று மக்களவை கேரள (பெயர் மாற்றம்) மசோதாவை நிறைவேற்றியது, அதனை தொடர்ந்து மறுநாள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.</p><p>மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்றுவதற்கான சட்டத்தை கொண்டுவருமாறு மத்திய அரசை வலியுறுத்தி, கேரள சட்டமன்றம் 2024-ஆம் ஆண்டில் ஒரு தர்மானத்தை நிறைவேற்றியதாக கூறினார்.</p><h2>தீர்மானம் நிறைவேற்றம்:</h2><p>"இந்த மசோதாவின்படி, கேரள மாநிலம் 'கேரளம்' என அழைக்கப்படும். எனவே, கேரளா என்பதை 'கேரளம்' என பெயர் மாற்றும் திட்டம் உள்ளது," என்று அவர் கூறினார். பெயர் மாற்றம் தொடர்பாக மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, கேரள அரசு 2024 ஜூன் மாதம் மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தது.</p><p>அதனைத் தொடர்ந்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அந்த மசோதாவை மாநில சட்டமன்றத்தின் கருத்துக்களுக்காக பரிந்துரைத்தார். அதனை தொடர்ந்து, சட்டமன்றம் அந்த மசோதாவை ஏற்றுக்கொண்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.</p><p>கேரள (பெயர் மாற்ற) சட்டம், அரசியலமைப்பு சட்டம் மற்றும் அதன் விளைவான விதிகளில் தேவையான திருத்தங்களை செய்து, மாநிலத்தின் பெயரை மாற்றுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கணவரை கொன்று வீட்டின் அருகே உடலை புதைத்த மனைவி அவரது காதலனுடன் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/woman-lover-held-for-killing-husband-burying-body-near-house-in-faridabad</link><comments>https://www.maalaimalar.com/news/national/woman-lover-held-for-killing-husband-burying-body-near-house-in-faridabad#comments</comments><guid isPermaLink="false">d8ee8943-3cd1-4327-a462-ae35cfbeb952</guid><pubDate>Tue, 25 Aug 2026 17:56:27 +0000</pubDate><atom:updated>2026-08-25T17:56:27.865Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>woman,கணவர்,husband,Faridabad,ஃபரிதாபாத்,பெண்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/owhc8jhk/arrest-.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Image: Arrest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/owhc8jhk/arrest-.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஃபரிதாபாத்தின் மொஜாபாத் கிராமத்தில், கணவரை கொன்று வீட்டின் அருகே உள்ள குழியில் உடலை புதைத்ததாக கூறப்படும் சம்பவத்தில், ஒரு பெண்ணும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகக் <a href="https://www.maalaimalar.com/topic/police">காவல்துறை</a> தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>காவல்துறையின் தகவலின்படி, மொஜாபாத் கிராமத்தில் உள்ள ஒரு குழியில் ஒருவர் மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டிருப்பதாகத் திகாவ் (Tigaon) காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் குழுவினர், கடமை பொறுப்பிலுள்ள நீதிபதி முன்னிலையில் உடலை மீட்டனர்.</p><h2>கொலை வழக்கு பதிவு:</h2><p>உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த தாதாவ் என்பவரும், உயிரிழந்தவரின் சகோதரருமான ராம்பீர் அளித்த புகாரின் பேரில், கொலை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.</p><p>உயிரிழந்தவர் ஹத்ராஸைச் சேர்ந்த ஷியாம்வீர் (42) என்றும், அவர் தனது மனைவியுடன் மொஜாபாத் கிராமத்தில் வசித்து வந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஷியாம்வீரின் மனைவி கேஷவ் மற்றும் அவரது காதலன் எனக் கூறப்படும் உத்தர பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தை சேர்ந்த காமத் ஆகியோர் ஆவர்.</p><p>காவல்துறையின் விசாரணையில், காமத் மொஜாபாத்தில் உள்ள ஷியாம்வீரின் வீட்டில் அவருடன் தங்கியிருந்ததும், கேஷவ்வுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது; இது ஷியாம்வீருக்குத் தெரியவந்தது. இதனால் ஷியாம்வீருக்கும் அவரது மனைவிக்கும் இடையே மதுபோதையில் தகராறுகள் ஏற்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.</p><h2>அதிர்ச்சி சம்பவம்:</h2><p>ஷியாம்வீரை ஒழித்துக்கட்ட கேஷவ் மற்றும் காமத் ஆகியோர் சதி செய்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்று மாலை, காமத் ஷியாம்வீருக்கு மது அருந்த கொடுத்து, அவர் போதையில் இருந்தபோது, ​​'இன்டர்லாக்கிங் டைல்' (interlocking tile) கல்லை கொண்டு தலையில் தாக்கி அவரை கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>இதற்கிடையில், சத்தம் வெளியே கேட்காமல் இருக்க கேஷவ் வீட்டின் கதவை வெளியில் இருந்து மூடியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சேர்ந்து ஷியாம்வீரின் உடலை வீட்டின் அருகே உள்ள குழியில் மண்ணுக்கு அடியில் புதைத்ததாககாவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>"நாங்கள் குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்," என்று குற்றப்பிரிவு ஏசிபி (ACP) அமன் யாதவ் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>உடையில்தான் கலாச்சாரம் இருக்கிறதா? - கிருத்தி சனோனுக்கு ஆதரவாக களம் இறங்கிய ராகுல் காந்தி! </title><link>https://www.maalaimalar.com/news/national/the-outfit-that-sparked-a-debate-rahul-gandhi-comes-out-in-support-of-kriti-sanon</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-outfit-that-sparked-a-debate-rahul-gandhi-comes-out-in-support-of-kriti-sanon#comments</comments><guid isPermaLink="false">4f11bfdb-35f2-4746-89d3-afe56f1fe34b</guid><pubDate>Tue, 25 Aug 2026 16:39:32 +0000</pubDate><atom:updated>2026-08-25T16:39:32.447Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,கிருத்தி சனோன்,kriti sanon,Kangana Ranaut,கங்கனா ரனாவத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/79j3fyem/New-Project-2026-08-25T220816.108.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உடையில்தான் கலாச்சாரம் இருக்கிறதா? - கிருத்தி சனோனுக்கு ஆதரவாக இறங்கிய ராகுல் காந்தி! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/79j3fyem/New-Project-2026-08-25T220816.108.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா வளர்ச்சி குறித்து பேசும் முக்கிய நாடுகளில் ஒன்று. ஆனால் உண்மையான வளர்ச்சி எதில் என்ற புரிதல் இல்லாததே இங்கு பெரும் சிக்கலாக உள்ளது. </p><p>அந்தவகையில் தற்போது ஒரு கலாச்சாரம் எதில் உள்ளது என்ற அடிப்படை புரிதல் இல்லாமல், வெறும் ஒரு விளம்பரம் பெரும் பேசுபொருளாக உள்ளது. </p><p>நடிகை கிருத்தி சனோன் ரக்ஷா பந்தன் பண்டிகையை மையப்படுத்திய ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் நடிகை கீர்த்தி சனோன் அணிந்திருந்த உடை சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்கும், ட்ரோல்களுக்கும் உள்ளானது. </p><p>பாரம்பரியமிக்க ஒரு பண்டிகைக்கு அவர் அணிந்திருந்த ஆடை தகுதியற்றது என்றும், கலாச்சாரத்தை சீரழிப்பதாகவும் கூறி சிலர் அவரை இணையத்தில் கடுமையாக விமர்சித்தனர். இதில் நடிகை கங்கனா ரனாவத்தும் அடங்குவார். </p><p>இதனைத்தொடர்ந்து அனைத்து விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கிருத்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில்.,</p><p>"பண்டிகையின் சாரம்சம் என்பது நாம் உடுத்தும் உடையில் இல்லை. அந்த பாரம்பரியத்துக்கு நாம் அளிக்கும் அர்த்தம் மற்றும் உணர்வுகளில் தான் எல்லாமே அடங்கியிருக்கிறது.</p><p>ரக்ஷா பந்தன் என்பது பாதுகாப்பைப் பற்றிய ஒரு பிணைப்பு. நானும், என் சகோதரியும் ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக் கொள்கிறோம். ஒரு சகோதரன் இருப்பதால் ஏற்படும் பாதுகாப்பு போலவே எங்களால் ஒருவரை ஒருவர் பாதுகாத்து கொள்ள முடியும் என நம்புகிறோம்.</p><p>பெண்கள் அணியும் ஆடைகளை வைத்து அவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான மரியாதையைக் கணிப்பது சரியல்ல. பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்த போகிறோம்..?</p><p>காலத்திற்கு ஏற்ப பாரம்பரிய உடைகளின் பாணியிலும் மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால், இன்றும் கலாச்சாரத்தின் மீதான மரியாதை என்பது பெண்ணின் ஆடையை வைத்தே அளவிடப்படுகிறது.</p><p>பண்பாடும், பாரம்பரியமும் ஒரு பெண்ணின் மனதில் தான் இருக்கிறதே தவிர, அவளுடைய ஆடையின் நெக்லைனில் அல்ல" என தெரிவித்திருந்தார்.</p><p>இந்நிலையில் நடிகை கிருத்தி சனோனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. கிருத்தி சனோனின் சமூக வலைதளப் பதிவை பகிர்ந்து இதுகுறித்து பேசியுள்ள ராகுல் காந்தி,</p><p>“ஒரு பெண் என்ன அணியவேண்டும், என்ன செய்யவேண்டும், எங்கு செல்லவேண்டும் என்பது அவளுடைய விருப்பம். </p><p>அவர்கள் (பெண்கள்) அவர்களுடைய சுதந்திரத்தை பயன்படுத்துவதை கேலி செய்வதை, கேள்வி கேட்பதை நிறுத்துங்கள்” என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பட்டப்பகலில் தொழிலதிபர் சுட்டுக் கொலை.. ஜார்க்கண்டில் துணிகரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">6ae726e4-6af6-4bcf-ad08-74220d72b60e</guid><pubDate>Tue, 25 Aug 2026 14:22:58 +0000</pubDate><atom:updated>2026-08-25T14:22:58.613Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,துப்பாக்கிச்சூடு,ஜார்க்கண்ட்,shooting,தொழிலதிபர்,businessman</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/sz5ri06x/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தொழிலதிபர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தொழிலதிபர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/sz5ri06x/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்டில் நடுரோட்டில் தொழிலதிபர் <a href="https://www.maalaimalar.com/news/world/indian-businessman-shot-dead-tennessee-liquor-store-robbery-turns-fatal">சுட்டுக்கொல்லப்பட்ட </a>பயங்கரம் அரங்கேறியுள்ளது. </p><p>ஜார்க்கண்ட் மாநிலம் சராய்கேலா கர்சவான் மாவட்டத்தில் சண்டில் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த கொலை நேற்று பிற்பகலில் அரங்கேறியுள்ளது. </p><h2>தாக்குதல் </h2><p>ஜாம்சத்பூரை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் ஹோட்டல் உரிமையாளருமான நிகர் சப்லோக் (33) நெற்று பிற்பகல் 3:00 முதல் 3:30 மணியளவில் அவ்வழியே சொந்த வெளியாக வாகனத்தில் சென்றுகொண்டிருந்ததார்.</p><p>அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். </p><p>தலை மற்றும் உடலில் 4 தோட்டாக்கள் பாய்ந்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.</p><p> அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.</p><h2>விசாரணை</h2><p>சம்பவ இடத்திலிருந்து சுடப்பட்ட 8 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.</p><p>கொலைக்கான காரணம் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதமா, தனிப்பட்ட பகையா அல்லது ரவுடி கும்பல்களின் பணப் பறிப்பு முயற்சியா என்ற கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. சில சந்தேக நபர்களையும் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.</p><p>கடந்த ஜனவரி 13 அன்று இதே பகுதியிலிருந்து தேவாங் காந்தி என்ற தொழிலதிபரின் மகன் கைரவ் காந்தி கடத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.</p><p>தற்போது தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஜாம்ஷெட்பூர் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை.. பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/tarun-tejpal-rape-conviction-supreme-court-orders-surrender-within-two-weeks</link><comments>https://www.maalaimalar.com/news/national/tarun-tejpal-rape-conviction-supreme-court-orders-surrender-within-two-weeks#comments</comments><guid isPermaLink="false">09289345-756e-429c-98c5-75a0fb2ab0ee</guid><pubDate>Tue, 25 Aug 2026 12:38:59 +0000</pubDate><atom:updated>2026-08-25T12:38:59.976Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,Sexual assault,Supreme Court,பத்திரிகையாளர்,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/svbdgcmy/maalai-malar2026-08-06z010yyr6tn-29.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ தருண் தேஜ்பால் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தருண் தேஜ்பால் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/svbdgcmy/maalai-malar2026-08-06z010yyr6tn-29.avif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை</a> வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில், அவர் இரண்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>வழக்கு</h2><p>மூத்த பத்திரிகையாளருமான தருண் தேஜ்பால் 'தெஹல்கா' என்ற பத்திரிகையை நடத்தி வருகிறார். இதன் ஆசிரியராகவும் அவர் இருந்தார்.</p><p>2013 நவம்பர் 7 அன்று நிகழ்வொன்றின்போது கோவாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் லிப்டில் வைத்து தன்னை தருண் தேஜ்பால் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெஹல்கா பத்திரிகையில் பணியாற்றிய இளம் பெண் பத்திரிகையாளர் புகார் அளித்தார்.</p><p>ஆனால் போதிய சான்றுகள் இல்லை எனக் கூறி, சந்தேகத்தின் பலனைத் தருண் தேஜ்பாலுக்கு வழங்கி 2021ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.</p><p>பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.</p> <h2>மேல்முறையீடு</h2><p>இத்தீர்ப்பை எதிர்த்து கோவா காவல் துறையும் அரசுத் தரப்பும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.</p><p>கோவாவுக்கு என்று தனி உயர்நீதிமன்றம் கிடையாது. பம்பாய் உய்ரநீதிமன்றத்தின் கோவா அமர்வு இந்த மேல்முறையீட்டை விசாரித்து வந்தது.</p><h2>தீர்ப்பு</h2><p>இந்த வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்றம் தவறாகக் கையாண்டதாகவும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் வாதிட்டார்.</p><p>கடந்த ஆகஸ்ட் 6 அன்று விசாரணை முடிவில், 2021ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் வழங்கிய விடுதலை உத்தரவை ரத்து செய்த பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கோவா அமர்வு தருண் தேஜ்பால் குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தது.</p><p>மேல்முறையீட்டுக்கு ஏதுவாக தீர்ப்புக்கு தடை விதிக்க தேஜ்பாலின் வழக்கறிஞர் கோரினார்.</p> <h2>உச்சநீதிமன்றம்</h2><p>இதைத்தொடர்ந்து தேஜ்பால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது கோவா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “உச்சநீதிமன்ற விதிகளின்படி ஒரு குற்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட நபர் சரணடைய வேண்டும்” என வாதிட்டார்.</p><p>தருண் தேஜ்பால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “தருண் தேஜ்பாலுக்கு எதிரான தீர்ப்புக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. எனவே, அவரை சரணடையுமாறு கோருவது பொருத்தமானதாக இருக்காது” என்றார்.</p><p>மேலும், தேஜ்பாலுக்கு விவாரணம் அளிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் கொண்டிருந்தால், அவர் சிறைக்குச் செல்ல தயாராக இருப்பதாகவும் கபில் சிபல் தெரிவித்தார்.</p><p>இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், “தருண் தேஜ்பால் முதலில் சரணடைய வேண்டும். அவர் இரண்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்” என்று உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>போர்ஷே இடையே $1.4 பில்லியன் மெகா ஒப்பந்தம்: $373 மில்லியனில் MHP நிறுவனத்தை கைகப்பற்றுகிறது TCS</title><link>https://www.maalaimalar.com/news/national/porsche-tcs-1-4-billion-mega-deal-mhp-acquisition</link><comments>https://www.maalaimalar.com/news/national/porsche-tcs-1-4-billion-mega-deal-mhp-acquisition#comments</comments><guid isPermaLink="false">f4664ffe-1450-4dd0-9fe5-5a978352a241</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:45:08 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:45:08.050Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Porsche,போர்ஷே,TCS,MHP,டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vlg34l8p/tcs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TCS acquires MHP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vlg34l8p/tcs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு விளையாட்டு கார்கள் தயாரிப்பு நிறுவனமான போர்ஷேவின் துணை நிறுவனமான 'MHP மேனேஜ்மென்ட்' அமைப்பைக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்துள்ளது. </p><p>சுமார் $373 மில்லியன் (இந்திய மதிப்பில் தோராயமாக ₹3,100 கோடிக்கும் மேல்) மதிப்பிலான இந்த கையகப்படுத்தல், இரு நிறுவனங்களுக்கும் இடையிலான $1.4 பில்லியன் மதிப்பிலான 5 ஆண்டு கால மூலோபாய கூட்டாண்மையின் ஒரு முக்கிய பகுதியாகும்.</p><h2>வாகனத் <strong>தொழில் மேம்பாடு</strong></h2><p>இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், <a href="https://www.maalaimalar.com/news/national/mandatory-marathi-test-sparks-mumbai-auto-taxi-strike">போர்ஷேவின் </a>பொறியியல், உற்பத்தி, வாடிக்கையாளர் சேவை மற்றும் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தொழில்நுட்ப மாற்றத்தைக் கொண்டு வருவதாகும். மேலும், அடுத்த தலைமுறை வாகனத் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் மென்பொருள் அடிப்படையிலான வாகன தளங்களை உருவாக்க TCS மற்றும் போர்ஷே இணைந்து செயல்படும்.</p><p>MHP நிறுவனம் ஐரோப்பாவில் டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு மற்றும் உற்பத்தி டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய துறைகளில் சிறந்த அனுபவம் கொண்டது. கையகப்படுத்தலுக்குப் பிறகும் MHP தனது சொந்த பெயரிலேயே தனித்து இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நிறுவன தலைவ<strong>ர்களின் கருத்துக்க</strong>ள்</h2><p>TCS தலைமைச் செயல் அதிகாரி கிருதிவாசன் கூறுகையில், AI மற்றும் தரவு அறிவியல் வாகனத் துறையை மறுவரையறை செய்து வரும் வேளையில், TCS-ன் AI திறன்களும் MHP-ன் வாகன ஆலோசனைக் கூர்மையும் இணைந்து போர்ஷே நிறுவனத்தில் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தும் என்றார்.</p><p>போர்ஷே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் மைக்கேல் லைட்டர்ஸ், தனது நிறுவனம் தனது முதன்மை கார்ப்பரேட் இலக்குகளில் கவனம் செலுத்துவதற்காக MHP பங்கு பரிமாற்றத்தை மேற்கொண்டதாகவும், TCS போன்ற ஒரு வலுவான தொழில்நுட்ப பங்காளியைக் கண்டறிந்துள்ளது தங்களின் உலகளாவிய போட்டியை மேலும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.</p><h2>தொழில்துறை <strong>தாக்கம்</strong></h2><p>நெதர்லாந்தில் உள்ள TCS-ன் துணை நிறுவனம் மூலம் இந்த பங்கு கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்குப் பிறகு, அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்குள் இந்த கையகப்படுத்தும் நடவடிக்கை முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உலகளாவிய கூட்டணி மூலம் TCS நிறுவனம் ஐரோப்பிய உற்பத்தி மற்றும் வாகனத் தொழில் சந்தையில் தனது AI மற்றும் தொழில்நுட்ப ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மீன் மார்க்கெட்டுக்கு பிரதமர் மோடி பெயர் சூட்டப்பட்டதால் சர்ச்சை..!</title><link>https://www.maalaimalar.com/news/national/row-erupts-after-surat-fish-market-named-after-pm-modi-he-never-consumed-seafood-is-pure-vegetarian</link><comments>https://www.maalaimalar.com/news/national/row-erupts-after-surat-fish-market-named-after-pm-modi-he-never-consumed-seafood-is-pure-vegetarian#comments</comments><guid isPermaLink="false">bf779550-7283-4725-a8f5-0a30da339538</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:31:04 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:31:04.764Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/24eebn3v/ModiFishMarket001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நரேந்திர மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/24eebn3v/ModiFishMarket001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலம் சூரத்தில் மாநகராட்சி சார்பில் மிகப்பெரிய மீன் மார்க்கெட் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு முன், ஸ்ரீ நரேந்திர மோடி மொத்த விற்பனை மீன் மார்க்கெட் என்று பெயரிடப்பட்டுள்ளது.</p><p>பிரதமர் மோடி சுத்த சைவம். அவர் மீன் சாப்பிடமாட்டார். அப்படி இருக்கும்போது, சைவ உணவை பின்பற்றும் பிரதமர் மோடி பெயரை வைத்துள்ளது நியாயமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p>நரேந்திர மோடி தனது வாழ்நாளில் ஒருபோதும் கடல் உணவை உட்கொண்டதில்லை. அவர் ஒரு முழுமையான சைவ உணவு உண்பவர். மோடி ஒரு சைவ உணவு உண்பவர் என்பதால், இந்தப் பலகையை வைக்கக்கூடாது என்று மீன் விற்பனையாளர் சுரேந்த்ரா லஷ்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>ஆனால், சூரத் மாநகராட்சி மீன் மார்க்கெட்டிற்கான பெயர் இன்னும் பரிசீலனையில் உள்ளது. பெயர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.</p><p>அதிகாரப்பூர்வமான தீர்மானம் ஏதுமின்றி அந்தப் பலகை வைக்கப்பட்டது. இதுகுறித்து நாங்கள் அவர்களிடம் தெரிவித்தோம். அவர்களே அதை அகற்றிவிடுவதாக வாய்மொழி உறுதியளித்துள்ளனர் என்று எஸ்.எம்.சி. (SMC) மத்திய மண்டலத்தின் செயல் பொறியாளர் ஆர்.டி. கஞ்சவாலா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு - சிஐடிக்கு மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/case-regarding-the-shooting-death-of-three-tamils-by-the-karnataka-forest-department-transferred-to-the-cid</link><comments>https://www.maalaimalar.com/news/national/case-regarding-the-shooting-death-of-three-tamils-by-the-karnataka-forest-department-transferred-to-the-cid#comments</comments><guid isPermaLink="false">59ba20fe-de52-45df-8eb8-dff7da4dbb6e</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:20:19 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:20:19.699Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,தமிழர்கள்,சிஐடி,CID,Tamil Men</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/a1r4mh54/New-Project-2026-08-25T154855.638.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு - சிஐடிக்கு மாற்றம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/a1r4mh54/New-Project-2026-08-25T154855.638.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை, விரிவான விசாரணைக்காக குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் காவேரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். </p><p>இவர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டதாகவும், தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கர்நாடக வனத்துறை தெரிவித்தது.</p><p>ஆனால் இன்று வெளியான மூவரின் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அவர்களின் விலா எலும்புகள் உடைக்கப்பட்டு, கொடூரமான காயங்களுடன் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. </p><p>மேலும் மூன்று பேரும் அருகருகே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. இதனை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் சட்டமன்றத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.</p><p>இந்நிலையில் இந்த வழக்கில் உள்ள தீவிரத்தன்மையை உணர்ந்து, கர்நாடக காவல்துறை விசாரித்து வந்த இந்த வழக்கு, தற்போது சிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மராத்தி மொழித் தேர்வு : மும்பையில் ஆட்டோ, டாக்ஸி போக்குவரத்து ஸ்தம்பித்தது – ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/mandatory-marathi-test-sparks-mumbai-auto-taxi-strike</link><comments>https://www.maalaimalar.com/news/national/mandatory-marathi-test-sparks-mumbai-auto-taxi-strike#comments</comments><guid isPermaLink="false">1a1a990b-da88-4133-981a-7a6e67afc800</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:58:03 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:58:03.711Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,Maharastra,Marathi Language,Taxi Shortage,Auto Strike,Commercial VehicleRules,RTO Checking</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/thkcl915/Mumbai-Auto-Strike" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai Auto Strike ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/thkcl915/Mumbai-Auto-Strike?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பையின்</a> அடையாளமாகத் திகழும் 'காளி-பீலி' டாக்ஸிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு மராத்தி மொழி அறிந்திருப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இதன் காரணமாக பிராந்திய போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நகர் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்த சோதனைகளால் ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதோடு, நகரில் கடுமையான ஆட்டோ, டாக்ஸி தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஓட்டுநர்களின் குற்றச்சாட்டு</h2><p>பயணிகளிடம் பேசத் தேவையான அடிப்படை மராத்தி சொற்களைக் கற்றுக்கொள்ள ஓட்டுநர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. </p><p>ஆனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வாகனங்களை மறித்து சோதனை செய்யும் RTO அதிகாரிகள், தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு மிகவும் கடினமான கேள்விகளைத் தங்களைக் கேட்பதாக ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p>இதனால், பல ஆண்டுகளாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பையில்</a> வசித்து வரும் வடமாநில ஓட்டுநர்கள் மற்றும் படிக்காத முதியவர்கள் இந்தத் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.</p><h2>1,200-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு நோட்டீஸ்</h2><p>ஆகஸ்ட் 20 முதல் தொடங்கப்பட்ட இந்த அதிரடி சோதனையில், இதுவரை 8,217 ஓட்டுநர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இதில், மும்பை பெருநகரப் பகுதியில் மட்டும் 3,995 ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டதில், 604 பேருக்கு மராத்தி பேசத் தெரியவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. </p><p>மாநிலம் தழுவிய அளவில் முதல்கட்ட சோதனையிலேயே 1,268 ஓட்டுநர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்த நோட்டீஸ் பெற்றவர்கள் 1 மாதத்திற்குள் மராத்தி மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். </p><p>தவறினால், அவர்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் எச்சரித்துள்ளார்.</p><h2>ஆட்டோக்கள் தட்டுப்பாடு &amp; 3 நாள் வேலைநிறுத்தம்</h2><p>RTO அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையால் பயந்த பல ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களை இயக்காமல் நிறுத்தியுள்ளனர். </p><p>மேலும், மொழித் தேர்வின் பெயரால் ஓட்டுநர்கள் மிரட்டப்படுவதாகவும், அச்சுறுத்தப்படுவதாகவும் கூறி மும்பையின் கண்டிவாலி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.</p><p>இதன் தொடர்ச்சியாக, திங்கட்கிழமை மாலை முதல் ஆட்டோ ஓட்டுநர்கள் 3 நாட்கள் அதிரடி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் பணிக்குச் செல்லும் பொதுமக்கள், ரெயில்களில் இருந்து இறங்கும் பயணிகள் ஆட்டோ, டாக்ஸி கிடைக்காமல் 45 நிமிடங்களுக்கும் மேலாகக் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.</p><p>ஓலா, உபெர் போன்ற ஆப்-அடிப்படையிலான டாக்ஸிகளுக்கும் இந்த விதி பொருந்துவதால் ஒட்டுமொத்த மும்பையும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.</p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D">தேவேந்திர பட்னாவிஸ்</a> விளக்கம்</p><p>இந்த விவகாரம் குறித்துப் பேசிய <a href="https://www.maalaimalar.com/topic/maharashtra">மகாராஷ்டிர</a> முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், "இங்குள்ள இந்தி பேசும் சகோதரர்களை மராத்தி மொழியில் நிபுணர்களாக்குவது எங்களது நோக்கமல்ல. ஆனால், அவர்களுக்கு மராத்தி மொழியின் அடிப்படை வேலை அறிவு கண்டிப்பாக இருக்க வேண்டும். </p><p>இதற்கான காலக்கெடு ஏற்கனவே மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மொழியின் அடிப்படையில் யாருக்கும் அநீதி இழைக்கப்படுவதை எங்கள் 'மகாயுதி' அரசு அனுமதிக்காது" என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.</p><p>மும்பையில் மராத்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 36% ஆக உள்ள நிலையில், வடமாநிலப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மராத்தி மொழியைக் காக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த புதிய விதிமுறை தற்போது மும்பையை உலுக்கி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மத்தியப் பிரதேசம்: 3400 முத்தம் கொடுத்த காதலி... காதலனுக்கு ரூ.5,500 அபராதம் விதித்த காவல்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-girlfriend-plants-3400-kisses-police-fine-boyfriend-5500</link><comments>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-girlfriend-plants-3400-kisses-police-fine-boyfriend-5500#comments</comments><guid isPermaLink="false">5e97e86a-54d0-4551-8fab-ed9974ef62d0</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:34:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:34:39.513Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Traffic Police,போக்குவரத்து போலீசார்,Gwalior,குவாலியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/gmf63gz9/New-Project-2026-08-25T150417.069.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்தியப் பிரதேசம்: 3400 முத்தம் கொடுத்த காதலி... காதலனுக்கு ரூ.5,500 அபராதம் விதித்த காவல்துறை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/gmf63gz9/New-Project-2026-08-25T150417.069.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தில் காதலியின் முத்தத்தால், காதலன் ரூ.5,500 அபராதம் கட்டிய சம்பவம் இணையதளத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.  </p><p>மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், காதலியின் முத்த அடையாளங்களுடன் வலம் வந்த காரின் உரிமையாளருக்குப் போக்குவரத்துப் போலீஸார் ரூ.5,500 அபராதம் விதித்துள்ளனர். </p><p>மேலும், காரில் இருந்த அனைத்து முத்த அடையாளங்களையும் காதலனையே வைத்து அழிக்கச் சொல்லியுள்ளனர். </p><h2>3,400 லிப்ஸ்டிக் முத்தங்கள்</h2><p>வெளிநாடுகளில் நடக்கும் ஒரு ட்ரெண்டை பார்த்துவிட்டு, ஆதித்யா சிகர்வார் என்ற இளைஞரின் காதலி, அவரின் கார் முழுவதும் 3,400 லிப்ஸ்டிக் முத்த அடையாளங்களை பதித்துள்ளார். கார் முழுவதும் முத்தங்களை பதிக்க சுமார் 4 மணிநேரம் ஆனதாம். </p><p>உடல் முழுவதும் முத்தம் பதிக்கப்பட்ட காரை எடுத்துக்கொண்டு ஆதித்யா வெளியே சென்றுள்ளார். முத்த தடயங்களால் கார் சென்ற இடமெல்லாம் தனித்து தெரிந்துள்ளது. </p><h2>கார் பறிமுதல்</h2><p>உடனே சாலையில் சென்ற பலர் அதனை வீடியோ, போட்டோக்கள் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த கார் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக அதில் தெரிந்த வாகனப் பதிவு எண்ணைப் பயன்படுத்தி போலீசார் காரின் உரிமையாளரை கண்டறிந்துள்ளனர்.</p><p>மேலும் காரையும் பறிமுதல் செய்து, போக்குவரத்து விதிகளை மீறியதாக (மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், வாகனத்தின் அசல் தோற்றத்தை மாற்றியமைத்ததற்காக) ஆதித்யாவிற்கு ரூ.5,500 அபராதம் விதித்துள்ளனர்.</p><p>தொடர்ந்து ஆதித்யா மன்னிப்புக்கோர காரை கொடுத்த போலீசார், லிப்ஸ்டிக் முத்த தடயங்களை அனைத்தையும் அவரை வைத்தே அழிக்கச் சொல்லியுள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>