<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 05 Aug 2026 19:25:34 +0000</lastBuildDate><item><title>மூன்று நாட்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் - அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-special-session-from-aug-16-18-for-womens-reservation</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-special-session-from-aug-16-18-for-womens-reservation#comments</comments><guid isPermaLink="false">55275c1b-2e5c-48d8-85e0-fa7f842210c9</guid><pubDate>Wed, 05 Aug 2026 18:19:37 +0000</pubDate><atom:updated>2026-08-05T18:19:37.479Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>parliament session,பாராளுமன்ற கூட்டம்,மகளிர் இடஒதுக்கீடு,Womens Reservation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/lvybt9r7/Kiren-Rijiju.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிரண் ரிஜிஜு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/lvybt9r7/Kiren-Rijiju.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவற்றை விவாதிப்பதற்காக, ஆகஸ்ட் 16 முதல் 18 வரை மூன்று நாட்கள் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை மத்திய அரசு கூட்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%81">கிரண் ரிஜிஜு</a> தெரிவித்தார்.</p><p>"நாடாளுமன்ற கூட்டத்தொடரின் தேதிகளை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை. மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீதான சிறப்பு கூட்டத்தொடர் ஆகஸ்ட் 16 முதல் 18 வரை நடைபெறும்," என ரிஜிஜு ஊடகங்களிடம் தெரிவித்தார். </p><h2>வாக்கெடுப்பு:</h2><p>2029 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிய அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா, 2026, மக்களவையில் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற தவறிய சில நாட்களுக்கு பிறகு இந்த விளக்கம் வந்துள்ளது.</p><p>மசோதாவுக்கு ஆதரவாக அரசாங்கம் 298 வாக்குகளை பெற்றது, அதே நேரத்தில் 230 உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் 528 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், இந்த சட்டம் நிறைவேற 352 வாக்குகள் தேவைப்பட்டன.</p><p>அரசியலமைப்பு திருத்த மசோதாவின்படி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை தொடர்ந்து, 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, மக்களவை இடங்கள் தற்போதைய 543-இல் இருந்து அதிகபட்சமாக 850 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.</p><h2>இரண்டு மசோதாக்கள்:</h2><p>மசோதாவின் தோல்வியை தொடர்ந்து, தொகுதி மறுவரையறை மற்றும் மக்களவையின் பலத்தை அதிகரிப்பது உள்ளிட்ட, அது தொடர்பான இரண்டு சட்ட மசோதாக்கள் வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.</p><p>முன்மொழியப்பட்ட திருத்தங்கள், புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக காத்திருக்காமல் தொகுதி மறுவரையறைக்கு அனுமதிப்பதன் மூலம், 2029 பொது தேர்தலுக்கு முன்னர் நரி சக்தி வந்தன் அதினியத்தின் விதிகளை செயல்படுத்த முற்படுகின்றன. மேலும், இட ஒதுக்கீட்டு கட்டமைப்பிற்கு இடமளிக்கும் வகையில், மக்களவையின் தற்போதைய 543 இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதையும் அவை பரிந்துரைக்கின்றன.</p><p>வியாழக்கிழமை இரவு வரை நீடித்து, வெள்ளிக்கிழமையும் தொடர்ந்த விவாதத்தின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி, இந்த சட்டத்தை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல் தேசிய நலன் கருதி ஆதரிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தினார்.</p><p>தென்னிந்திய மாநிலங்களில் தொகுதி மறுபங்கீட்டின் தாக்கம் குறித்த கவலைகளுக்கு பதிலளித்த மோடி, மக்களவையின் பலம் அதிகரிக்கப்பட்டால் அப்பகுதிக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று தாம் தனிப்பட்ட முறையில் சபையில் உறுதியளித்ததாக கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய விவகாரம்: மன்னிப்பு கேட்டது மெட்டா</title><link>https://www.maalaimalar.com/news/national/meta-apologises-over-error-restricting-pm-modi-post</link><comments>https://www.maalaimalar.com/news/national/meta-apologises-over-error-restricting-pm-modi-post#comments</comments><guid isPermaLink="false">ca69f6c7-9584-4811-a1d0-c09b9233a1bc</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:25:57 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:25:57.314Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பேஸ்புக்,Meta,மெட்டா,Facebook,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/1lankq6r/Meta00001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெட்டா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/1lankq6r/Meta00001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) நிறுவனத்தின் மூத்த அதிகாரியா உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் ஜோயல் கப்லான் இந்திய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ​​பிரதமர் நரேந்திர மோடியின் காணொளிச் செய்தி ஒன்று ஃபேஸ்புக்கிலிருந்து ஐந்து மணி நேரம் நீக்கப்பட்டிருந்ததற்காக அவர் மன்னிப்பு கோரினார்.</p><h2>மெட்டாவின் உயர் அதிகாரி ஜோயல் கப்லான்</h2><p>​​மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மெட்டா நிறுவனத்தின் தலைமை உலகளாவிய அதிகாரி ஜோயல் கப்லான் (Joel Kaplan) இந்த மன்னிப்பைத் தெரிவித்தார். பிரதமர் மோடியின் பதிவைக் கட்டுப்படுத்திய தவறுக்காக மெட்டா நிறுவனம் சார்பில் நான் அமைச்சரிடம் மன்னிப்பு கோரினேன் என்று கபிலன் கூறியதாக மெட்டா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யுமான நிஷிகாந்த் துபே, பிரதமர் மோடியின் காணொளி நீக்கப்பட்ட விவகாரத்தில் மன்னிப்பு கோர மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு மூன்று நாட்கள் அவகாசம் அளித்து, அவ்வாறு செய்யாவிட்டால் சட்டப்பூர்வமான பாதுகாப்பு (statutory immunity) ரத்து செய்யப்படும் என்று எச்சரித்ததைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பும் மன்னிப்பு கோரும் நிகழ்வும் நடைபெற்றுள்ளன.</p><h2>பிரதமர் மோடி வீடியோ 5 மணி நேரம் நீக்கம்</h2><p>ஜூலை 28 அன்று இந்திய இளைஞர்களை உரையாற்றி, வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து மோடி பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவு, அந்தத் தளத்தில் சிறிது நேரம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு மெட்டாவின் உயர்மட்ட உலகளாவிய நிர்வாகிகளை வரவழைத்திருந்தது. அந்தப் பதிவு நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை கிடைக்கவில்லை என்று துபே கூறியிருந்தார்.</p><h2>தொழில் நுட்பக்கோளாறு எனக் கூறியது பேஸ்புக்</h2><p>பரவலான மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சர்ச்சை எழுந்தது.</p><p>அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த சமூக ஊடக நிறுவனம், இந்தச் சம்பவத்திற்குக் காரணம் ஒரு தொழில்நுட்பக் கோளாறு என்று கூறி மன்னிப்புக் கோரிய நிலையில், அந்த விளக்கம் "போதுமானதாக இல்லை" என்று மெய்ட்டி (MeitY) கூறியது. ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான அந்த நிறுவனம், அந்த உள்ளடக்கம் "தவறுதலாக" அகற்றப்பட்டு, பின்னர் தளத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டதாகக் கூறியது.</p>]]></content:encoded></item><item><title>சில நேரங்களில் மக்களை ரகசியமாக சந்திக்க வேண்டியுள்ளது: கேரளம் முதல்வர் சதீசன்</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-cm-on-meeting-investors-in-kochi-sometimes-people-have-to-be-met-in-secret</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-cm-on-meeting-investors-in-kochi-sometimes-people-have-to-be-met-in-secret#comments</comments><guid isPermaLink="false">a524fe2b-e218-4a12-b084-9f6b0b645656</guid><pubDate>Wed, 05 Aug 2026 13:11:56 +0000</pubDate><atom:updated>2026-08-05T13:11:56.485Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,VD Satheesan,விடி சதீசன்,கேரளா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/m5jpxriq/VDSatheesan0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ VD Satheesan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/m5jpxriq/VDSatheesan0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் அரசுப் பணத்தில் ஹெலிகாப்டரை வாடகை எடுத்து கொச்சியில் உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வுரும் மாமனாரை (father-in-law) பார்ப்பதற்காக கொச்சி சென்றதாக வி.டி. சதீசன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், சில நேரங்களில் மக்களை ரகசியமாக சந்திக்க வேண்டியுள்ளது என்று சதீசன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சதீசன் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு வி.டி. சதீசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எர்ணாகுளம் சென்று முதலீட்டாளர்களை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><h2>எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு</h2><p>எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்த வி.டி. சதீசன் "சமீபத்தில் நான் மேற்கொண்ட பயணம் எதிர்கால முதலீட்டாளர்கள் குரூப்பை சந்திப்பதற்கானது. சில சமயம் மக்களை ரகசியமாக சந்திக்க வேண்டியுள்ளது. சில சமயம் வெளிப்படையா சந்திக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் அவர்கள் முதலமைச்சரை சந்திக்க இங்கே வருகிறார்கள்" என்றார்.</p><p>முதலமைச்சர் முதலீட்டாளர்களை சந்திதார் என்றார், அது தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளார்.</p><h2>பிரியதர்ஷினி பேருந்து பயணத் திட்டம் </h2><p>தனியார் பேருந்து உரிமையாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய போக்குவரத்துத்தறை அமைச்சர் "மாநில அரசின் இலவச பிரியதர்ஷினி பேருந்து பயணத் திட்டம் மற்றும் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தும் பெண்கள், தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதையே விரும்புகின்றனர்" எனக் கூறியிருந்தார். இது மாநிலத்தில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் வி.டி. சதீசன், "போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏற்கனவே தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, அக்கூற்றுக்காக வருத்தம் தெரிவித்து விட்டார். எனவே, இது குறித்து சர்ச்சையை உருவாக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் 20 செயற்கைக்கோள்கள் விண்வெளிப் பொருட்களுடன் மோதும் அபாயம்: மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/20-of-22-active-satellites-in-low-earth-orbit-at-higher-risk-of-collision-with-space-objects-govt</link><comments>https://www.maalaimalar.com/news/national/20-of-22-active-satellites-in-low-earth-orbit-at-higher-risk-of-collision-with-space-objects-govt#comments</comments><guid isPermaLink="false">f63e293b-9c03-4562-8354-2cdd9e4ecccd</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:40:28 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:40:28.291Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,செயற்கைக்கோள்,Satellites</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/bu75vq0p/Earth001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ satellites in low earth orbit]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/bu75vq0p/Earth001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குறைந்த புவி சுற்றுப்பாதையில் (Low Earth Orbit) செயல்படும் 22 இந்திய செயற்கைக்கோள்களில் 20 செயற்கைக்கோள்கள் விண்வெளி பொருட்களுடன் மோதும் அதிக அபாயத்தில் உள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.</p><p>மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இப்பகுதியில் விண்வெளிப் பொருட்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதால், குறைந்த புவிப்பாதையில் (2,000 கி.மீ-க்கும் குறைவான உயரத்தில்) இயங்கும் செயற்கைக்கோள்கள் மோதல் அபாயத்திற்கு அதிகம் உள்ளாகின்றன என்று குறிப்பிட்டார்.</p><h2>இது தொடர்பாக அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-</h2><p>2026-ஆம் ஆண்டில் இதுவரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஒன்பது முறை மோதலைத் தவிர்க்கும் நடவடிக்கைகளை (collision avoidance manoeuvres) மேற்கொண்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 20-ஆக இருந்தது.</p><p>மோதலைத் தவிர்க்கும் நடவடிக்கை என்பது மற்றொரு பொருள் அல்லது விண்வெளி குப்பைகளுடன் (space debris) விண்வெளியில் மோதல் ஏற்படுவதைத் தடுக்க, செயற்கைக்கோள் இயக்குபவரால் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதை மாற்றமாகும்.</p><p>விண்வெளி குப்பை மேலாண்மை தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு அமைப்புகளான 'இன்டர்-ஏஜென்சி டெப்ரிஸ் கோஆர்டினேஷன் கமிட்டி' (IADC) மற்றும் 'நீண்ட கால நிலைத்தன்மைக்கான ஐக்கிய நாடுகள் பணிக்குழு' (UN-LTS) ஆகியவற்றில் இந்தியா தீவிரமாகப் பங்கேற்று வருகிறது.</p><p>திருத்தப்பட்ட IADC விண்வெளி குப்பை குறைப்பு வழிகாட்டுதல்களுக்கு இஸ்ரோ கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் தனது கருத்துகளையும் வழங்கியுள்ளது.</p><p>விண்வெளி குப்பைகளைக் குறைப்பதற்கான தனது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, குப்பைகளற்ற விண்வெளிப் பணி (Debris Free Space Mission) முன்னெடுப்பிற்கான இந்தியாவின் நோக்கம் 2024-இல் அறிவிக்கப்பட்டது.</p><p>எதிர்காலத்தில் அரசு மற்றும் தனியார் என அனைத்து இந்தியத் தரப்பினராலும் பூஜ்ஜிய குப்பை (zero debris) என்ற இலக்கை அடைவதே இஸ்ரோவின் நோக்கம்.</p><p>இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.</p><p>4 ஆயிரம் கிலோ எடைகொண்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் ஒரு பகுதி நிலாவில் மோத உள்ளது. இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சராக பதவி ஏற்ற நாகேந்திரா ராஜினாமா செய்யவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம்: பாஜக</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-hits-out-at-cong-for-re-inducting-nagendra-in-karnataka-cabinet-seeks-resignation</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-hits-out-at-cong-for-re-inducting-nagendra-in-karnataka-cabinet-seeks-resignation#comments</comments><guid isPermaLink="false">38769198-dc8e-4927-9cae-4e359b6da2ed</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:21:20 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:21:20.018Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Karnataka congress,கர்நாடக காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/tvovgi9v/BJP00001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாகேந்திரா- சாலவாடி நாராயணசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/tvovgi9v/BJP00001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநில முதல்வராக டி.கே. சிவக்குமார் கடந்த இரணடு மாதங்களுக்கு முன்னதாக பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால் கடந்த 20-ந்தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 20 பேர் புதிதாக அமைச்சரவையில் இடம் பிடித்தனர்.</p><p>அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் பல்லாரி ஊரக காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாகேந்திராவை அமைச்சரவையில் சேர்த்ததற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><h2>89 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை</h2><p>89 கோடி ரூபாய் வால்மீகி பழங்குடியினர் மேம்பாட்டு கார்ப்பரேசன் மோசடி குற்றச்சாட்டில் பி. நாகேந்திரா கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளார். அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தொடர்ந்து பதவியில் தொடர்ந்தால், போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>இது தொடர்பாக கர்நாடக மாநில மேலவை எதிர்கட்சி தலைவரான சாலவாடி நாராயணசாமி, அமைச்சரவையில் இருந்து நாகேந்திரா நீக்கப்படவில்லை என்றால், மாநிலம் தழுவிய போராட்டத்தை பாஜக நடத்தும். ஆகஸ்ட் 13-ந்தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தை சுமூகமாக நடத்த விடமாட்டோம் என்றார்.</p><h2>அமைச்சர் பதவியை ஏலம் விட்ட காங்கிரஸ்</h2><p>அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, அப்பதவியை காங்கிரஸ் கட்சி ஏலம் விட்டது என்ற பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.</p><p>நாகேந்திரா நாராயணசாமி ஊழல் குற்றச்சாட்டு எதிர்கொண்டு வருகிறார். அவர் ஜாமினில் உள்ளார். அவருக்கு அமைச்சரவை பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், காங்கிரஸ் ஊழலுக்கு ஆதரவாக உள்ளது என்று நிரூபனமாகியுள்ளது.</p><p>நாகேந்திரா ராஜினாமா செய்யும் வரைக்கும், நாங்கள் போராட்டத்தை நிறுத்தமாட்டோம். நாகேந்திரா ராஜினாமாவை முதலமைச்சர் சிவக்குமார் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p><h2>ஊழல் குற்றச்சாட்டில் நாகேந்திரா கைது</h2><p>காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடையும் முன்பே, கர்நாடக மகரிஷி வால்மீகி பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டுக்கழக (KMVSTDCL) முறைகேடு விவகாரம் மாநிலத்தையே உலுக்கியது.</p><p>இம்முறைகேட்டிற்கு உடந்தையாக இருக்குமாறு கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி, அக்கழகத்தின் கணக்குப்பிரிவு கண்காணிப்பாளர் பி. சந்திரசேகரன் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.</p><p>இக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் கணக்கு அதிகாரி ஆகியோர் இணைந்து, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் உள்ள கழகத்தின் கணக்கில் ரூ. 187 கோடியைக் குவித்ததாகக் கூறப்படுகிறது. </p><p>போலி காசோலைகள் மற்றும் RTGS பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 89.63 கோடி மோசடியாகத் திசைதிருப்பப்பட்டது. இவ்வாறு திசைதிருப்பப்பட்ட நிதி சுமார் 600 வங்கிக் கணக்குகள் வழியாகப் பல நிலைகளில் மாற்றப்பட்டு, இறுதியில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பயன்பாட்டிற்காகப் பணம், தங்கக் கட்டிகள் மற்றும் ஆடம்பர வாகனங்களாக மாற்றப்பட்டது என்று சிபிஐ (CBI) தனது விசாரணையில் குற்றம் சாட்டியது.</p><p>இக்குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஜூன் 2024-ல் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையிலிருந்து நாகேந்திரா நீக்கப்பட்டார். ஜூலை 12, 2024 அன்று அமலாக்கத் துறையால் (ED) கைது செய்யப்பட்ட நாகேந்திரா, ஜாமின் கிடைக்கும்வரை, அதாவது அக்டோபர் 14, 2024 வரை சிறையில் இருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>கேரளா: தன்னுயிரை துறந்து வெள்ளத்தில் சிக்கிய முதியவரை காப்பாற்றிய நீச்சல் வீரர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-swimmer-saves-elderly-man-trapped-in-floodwaters</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-swimmer-saves-elderly-man-trapped-in-floodwaters#comments</comments><guid isPermaLink="false">2b57e3fc-1497-44ff-8e7b-9cc557747286</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:26:37 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:26:37.325Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,தென்மேற்கு பருவமழை,Southern monsoon,கேரளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/c370em65/New-Project-2026-08-05T142455.929.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கேரளா: தன்னுயிரை நீர்த்து வெள்ளத்தில் சிக்கிய முதியவரை காப்பாற்றிய நீச்சல் வீரர்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/c370em65/New-Project-2026-08-05T142455.929.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்துவருகிறது. கனமழையால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.</p><p>இந்நிலையில் ஆக.1ம் தேதி கண்ணூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், காரியங்கோடு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் பென்னி என்னும் 61 வயது முதியவர் சிக்கியுள்ளார். </p><p>ஆற்றங்கரையிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் சிக்கிக்கொண்டிருந்த பென்னியை மீட்க நீச்சர் வீரர் ராஜேஷ் (36) ஷிபின், ஜிதின் உள்ளிட்டோர் அடங்கிய மீட்புக்குழு சென்றுள்ளது.</p><p>மற்ற இருவரும் ஆற்றில் இறங்கிய பென்னியிடம் கயிற்றை தூக்கி வீசியுள்ளனர். அந்த கயிற்றை அருகிலுள்ள தென்னை மரத்தில் கட்ட முயன்றபோது கயிற்றில் சிக்கி அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ராஜேஷ் நீந்திசென்று முதியவரை அடைந்துள்ளார். </p><p>முதியவரை மீட்டு கரைக்கு அழைத்து வரும்போது, ராஜேஷ் தன்னிடம் இருந்த பாதுகாப்பு ஜாக்கெட்டை அந்த முதியவருக்குக் கொடுத்துள்ளார். </p><p>முதியவரைக் கரையேற்றிய பின்னர், ஆற்றைக் கடக்கப் பயன்படுத்திய கயிற்றிலிருந்து ராஜேஷின் பிடி நழுவியுள்ளது. இதில் ஆற்றின் அலைகளின் வேகம் மற்றும் கடுமையான நீரோட்டம் காரணமாக அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.</p><p>வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ராஜேஷை தீயணைப்புத் துறை, மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மூன்று நாட்களாகத் தீவிரமாக தேடியுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக நேற்று மாலை புலிங்கோம் பாலத்தின் அருகில் ராஜேஷின் உடல் மீட்கப்பட்டது. </p><p>அவரது இறப்பு கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜேஷின் உடலுக்கு கேரள முதலமைச்சர் வி.டி.சுதீஷன் அஞ்சலி செலுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன், பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். </p><h2>யார் இந்த ராஜேஷ்?</h2><p>கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கல்லியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஒரு நீச்சல் மற்றும் ராப்பெல்லிங் பயிற்றுவிப்பாளராக இருந்துவந்தார். கேளராவில் பேரிடர்கள் ஏற்படும் போதெல்லாம் தன்னார்வலராக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். </p><p>2018 கேரள வெள்ளம், 2024 வயநாடு நிலச்சரிவு பேரிடர் காலங்களில் தீவிரமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இவருக்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவரது இறப்பிற்கு கேரள மக்கள், இணையவாசிகள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி</title><link>https://www.maalaimalar.com/news/national/rbi-mpc-meeting-2026-rbi-keeps-repo-rate-steady-at-525-amid-us-iran-war</link><comments>https://www.maalaimalar.com/news/national/rbi-mpc-meeting-2026-rbi-keeps-repo-rate-steady-at-525-amid-us-iran-war#comments</comments><guid isPermaLink="false">fa7f6f00-21d1-44af-8a90-726b91ef8353</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:36:55 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:36:55.007Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,ரெப்போ வட்டி விகிதம்,repo rate,ரிசர்வ் வங்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/flja7ert/RBI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RBI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/flja7ert/RBI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். இதனால் வீடு, வாகனக் கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.</p><p>வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம் என அழைக்கப்படுகிறது.</p><p>நிதிச்சூழலுக்கு ஏற்ப இந்த வட்டி விகிதத்தை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி ஆலோசிக்கும்.</p><p>அந்த வகையில் 2026-27 நிதியாண்டுக்காக ஆகஸ்ட் 3 முதல் 5 வரை மூன்று நாட்கள் நிதிக்குழு கூட்டம் கூட்டப்பட்டது.</p><p>இன்று கூட்டத்தின் பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.</p><p>மேற்காசிய போரால் எரிபொருள், எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய பொருளாதாரத்தின் மீதான பணவீக்க அபாயங்களை உணர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p>நடப்பு 2026-27 நிதி ஆண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதம் ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>இது முன்பு கணிக்கப்பட்ட 6.6 சதவீதத்தை விட சற்று அதிகமாகும்.</p><p>முதல் காலாண்டிற்கான பணவீக்கக் கணிப்பு எதிர்பார்க்கப்பட்டதை விடக் குறைவாக உள்ளது. அதாவது, பணவீக்கம் தற்போது 5 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. இது முன்பு எதிர்பார்க்கப்பட்ட 5.1 சதவீதத்தை விட குறைவானதாகும் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நடுவானில் திடீரென 300 அடிகள் சரிந்த ஏர் இந்தியா விமானம்! மரண பயத்தில் அலறிய பயணிகள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/air-india-flight-ai2379-turbulence-incident-15-injured</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-india-flight-ai2379-turbulence-incident-15-injured#comments</comments><guid isPermaLink="false">aae474b0-db2d-40e1-a444-9a1546662172</guid><pubDate>Wed, 05 Aug 2026 07:44:20 +0000</pubDate><atom:updated>2026-08-05T07:44:20.723Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏர் இந்தியா,Air India,PhuketToDelhi,FlightAI2379,Air Turbulence,DGCA Investigation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/nyxbmrkw/Air-India" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Air India ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/nyxbmrkw/Air-India?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாய்லாந்தின் பூக்கெட்டில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI2379), நடுவானில் திடீரென கடுமையான காற்றுப் கொந்தளிப்பில் (டர்புலன்சில்) சிக்கியதால் 300 அடி உயரத்தை உடனடியாக இழந்தது. </p><p>இந்த எதிர்பாராத விபத்தில், விமானப் பணிப்பெண் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . மொத்தம் 15 பேர் காயமடைந்துள்ளனர்.</p><h2>நடுவானில் நடந்தது என்ன?</h2><p>நேற்று காலை பூக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்த, ஏர்பஸ் A320 என்ற குறுகிய வடிவ விமானம் கடுமையான வான்வழிச் சுழற்சியில் சிக்கியது. </p><p>அப்போது விமானம் தனது கட்டுப்பாட்டைச் சற்றே இழந்து, நொடிப்பொழுதில் 300 அடி கீழே சரிந்தது.</p><p>விமானம் திடீரென சரிந்தபோது, உள்ளே இருந்த சில பயணிகளும், பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களும் விமானத்தின் மேல் கூரையில் பலமாக மோதி தூக்கி வீசப்பட்டனர். இதனால் விமானத்தினுள் பெரும் பதற்றமும் பயமும் ஏற்பட்டது.</p><h2>அவசரத் தரையிறக்கம் மற்றும் முதலுதவி:</h2><p>இப்படிபட்ட இக்கட்டான சூழ்நிலையிலும், விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். </p><p>அதனைத் தொடர்ந்து, காலை 11:30 மணியளவில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.</p><p>விமானம் தரையிறங்குவதற்கு முன்பே அவசர மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். காயமடைந்த அனைவருக்கும் உடனடியாக மருத்துவப் பரிசோதனைகளும் அவசர சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. </p><p>இதில் ஒரு விமானப் பணிப்பெண்ணுக்கு மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>விமானப் போக்குவரத்து அமைச்சகம் விசாரணை:</h2><p>இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்து இந்தியாவின் தலைமை விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான DGCA தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. </p><p>வான்வழிச் சுழற்சி ஏற்படுவதற்கு முன்பாக விமானிகளுக்கு ஏதேனும் எச்சரிக்கை கிடைத்ததா அல்லது இதில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளதா என்ற கோணத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>POK தேர்தல் வெறும் நாடகம்.. 90 பேர் இறந்திருக்கிறார்கள்.. மனித உரிமை மீறலுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் - இந்தியா</title><link>https://www.maalaimalar.com/news/national/pok-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-90-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE</link><comments>https://www.maalaimalar.com/news/national/pok-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-90-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE#comments</comments><guid isPermaLink="false">20c029f7-66ee-4f4f-97aa-0732396e7237</guid><pubDate>Wed, 05 Aug 2026 00:26:10 +0000</pubDate><atom:updated>2026-08-05T00:26:10.618Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்,Ministry of External Affairs,வெளியறவு அமைச்சகம்,Pakistan-occupied Kashmir</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/aduy5uif/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ POK ]]></media:title><media:description type="html"><![CDATA[ POK ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/aduy5uif/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-human-rights-abuses-over-30-civilians-killed-in-pakistan-security-forces-firing">பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்</a> நடைபெற்று வரும் தேர்தல் மற்றும் போராட்டங்களால் நிலவும் அசாதாரண சூழல் குறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. </p><h2>நாடகம் </h2><p>நேற்று செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்படும் சட்டப்பேரவைத் தேர்தல் முழுக்க முழுக்க ஒரு போலி நாடகம்.</p><p>கடந்த ஜூன் மாதம் முதல் பாகிஸ்தான் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களில் குறைந்தது 90 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.  </p><p>மக்களின் நியாயமான எதிர்ப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு துப்பாக்கிச் சூடு, இணைய சேவை முடக்கம், மிரட்டல் மற்றும் வன்முறை மூலமே பதிலளித்து வருகிறது.  </p> <p>பாகிஸ்தானின் மனித உரிமைப் போதனைகளின் போலித்தனத்தை சர்வதேச சமூகம் உணர்ந்து, அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தானைப் பொறுப்பேற்க வைக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.</p> <h2>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்</h2><p>ஜம்மு காஷ்மீரின் 35 சதவீத நிலம் பாகிஸ்தான் வசம் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) என அழைக்கப்படும் இந்த பகுதிக்கு தனி ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது.</p><p>இங்கு மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை, உரிமைகள் மறுப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் பெருமளவில் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.</p><h2>தேர்தல்</h2><p>பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜூலை 27 முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி (JAAC) என்ற அமைப்பு மக்களை தேர்தலை புறக்கணிக்கச் செய்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.</p><p>மூன்று கட்டங்களாக நடைபெற்று வரும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவை பெருமபாலான மக்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 5, ஷேக் ஹசீனா பத்திரிகையாளர் சந்திப்பு.. வங்கதேசம் எதிர்ப்பு - &quot;தொடர்பில்லை&quot; என இந்தியா மறுப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/sheikh-hasinas-first-delhi-press-meet-india-distances-itself-as-ex-pm-to-outline-return-plan-to-bangladesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/sheikh-hasinas-first-delhi-press-meet-india-distances-itself-as-ex-pm-to-outline-return-plan-to-bangladesh#comments</comments><guid isPermaLink="false">87e2ad8b-24cb-4044-81cb-f33335526ba8</guid><pubDate>Wed, 05 Aug 2026 00:12:15 +0000</pubDate><atom:updated>2026-08-05T00:12:15.462Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்கதேசம்,Sheikh Hasina,ஷேக் ஹசீனா,தாரிக் ரகுமான்,Tarique Rahman</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s5sgrlry/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஷேக் ஹசீனா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஷேக் ஹசீனா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s5sgrlry/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/sheikh-hasina">ஷேக் ஹசீனா</a>, டெல்லியில் உள்ள 'வெளிநாட்டு செய்தியாளர்கள் சங்கத்தில்' (FCC) இணைய வழியில் வரும் ஆகஸ்ட் 5 பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். </p><h2>2 ஆண்டுகள் நிறைவு </h2><p>2023 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் வங்கதேசத்தில் அவரின் தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்ந்தது. பிரதமர் மாளிகையை போராட்டாக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்தார். </p><p>அதுமுதல் மத்திய அரசின் அடையாளத்தில் இருக்கும் அவரின் இருப்பிடம் குறித்த தகவல் பொதுவெளியில் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் பதிவுகள் மூலம் மட்டுமே அவர் வெளியுலக தொடர்பு கொண்டிருந்தார். </p><p>இந்நிலையில் ஆட்சி கவிழ்ந்து, அதாவது இந்தியாவுக்கு தப்பி வந்து ஆகஸ்ட் 5 உடன் 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அன்றைய தினம் ஹசீனா முதல் முறையாக பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார். </p> <h2>வங்கதேசம் எதிர்ப்பு</h2><p>அவர் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தடுத்து நிறுத்தும்படி, வங்கதேசத்தில் ஆட்சியில் உள்ள தார்பிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி அரசு இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.</p><p>டாக்காவில் உள்ள இந்திய உயர் ஆணையர் தினேஷ் திரிவேதியை சந்தித்த வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் வெளியுறவு ஆலோசகர் ஹுமாயூன் கபீர், இந்திய மண்ணைப் பயன்படுத்தி வங்கதேசத்தில்பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது அரசியல் கருத்துக்களைக் கூறும் வகையிலோ ஷேக் ஹசீனாவோ அல்லது பிறரோ செயல்பட அனுமதிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.</p><p>மேலும் கடந்த ஆண்டு வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஷேக் ஹசீனா மாணவர் போராட்டத்தை ஒடுக்க எடுத்த நடவடிக்கைகளுக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனவே தண்டனையை நிறைவேற்ற அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேச அரசு இந்தியாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.</p> <h2>மத்திய அரசு விளக்கம்</h2><p>இந்நிலையில் ஷேக் ஹசீனா நடத்த திட்டமிட்டுள்ள பத்திரிகையாளர் சந்திப்புடன் இந்திய அரசாங்கத்திற்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், அதில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை இந்தியா ஆதரிக்கவில்லை என்றும் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ரந்தீர் ஜெய்ஷ்வால் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "நீங்கள் குறிப்பிடும் இந்தச் சந்திப்பு ஒரு தனியார் ஊடக அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய அரசுக்கு எந்தப் பங்கோ தொடர்போ இல்லை. அதில் தெரிவிக்கப்படும் எந்தவொரு கருத்தையும் இந்திய அரசு ஆதரிக்கவோ ஏற்கவோ செய்யாது" என்று தெரிவித்துள்ளார்.</p> <h2>நாடு திரும்புதல்</h2><p>மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் வங்கதேசம் திரும்பி நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக ஹசீனா தெரிவித்திருந்தார்.</p><p>எனவே தனது நாடு திரும்பும் திட்டம் மற்றும் எதிர்காலம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஹசீனா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>முதல் முறையாக கடலை பார்த்த 80 வயது தந்தை.. அழைத்து வந்த மகன் பகிர்ந்த வீடியோ  - நெட்டிசன்கள் நெகிழ்ச்சி  </title><link>https://www.maalaimalar.com/news/national/odisha-viral-video-emotional-moment-as-80-year-old-father-sees-the-sea-for-the-first-time</link><comments>https://www.maalaimalar.com/news/national/odisha-viral-video-emotional-moment-as-80-year-old-father-sees-the-sea-for-the-first-time#comments</comments><guid isPermaLink="false">2d88c257-e164-4a12-a1f4-81cf9380dacd</guid><pubDate>Wed, 05 Aug 2026 00:01:39 +0000</pubDate><atom:updated>2026-08-05T00:01:39.080Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒடிசா,Odisha,வைரல் வீடியோ,viral video,Father-son,தந்தை-மகன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/iug6ctu4/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வீடியோ  ]]></media:title><media:description type="html"><![CDATA[ வீடியோ  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/iug6ctu4/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒடிசாவில் கடற்கரைக்கு தனது 80 வயது தந்தையை அழைத்து வந்த மகன் ஒருவர், அவருக்குக் கடலை முதன்முறையாக காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B">வைரலாகி</a> வருகிறது. </p><h2>ஒடிசா</h2><p>ஒடிசா மாநிலம் கோணார்க்கில் புகழ்பெற்ற சந்திரபாகா கடற்கரை அமைந்துள்ளது. </p><p>இங்கு ஸ்ரீகாந்த் என்ற நபர், வாழ்நாள் முழுவதும் கடலையே பார்த்திராத தனது 80 வயது தந்தையை அழைத்துச் சென்றுள்ளார். கடலை முதல் முறை பார்க்கும் தந்தையை படம்பிடித்து அந்த வீடியோவை ஸ்ரீகாந்த் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். </p><h2>வீடியோ</h2><p>அந்த வீடியோவில், 80 வயதில் முதன்முறையாக கடலைப் பார்த்த அந்தப் பெரியவர், சிறு குழந்தையின் மகிழ்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் அலைகளை பார்த்த வண்ணம் இருக்கிறார். </p><p>மேலும், கடலைத் தொட்டு வணங்கித் தனது மரியாதையைச் செலுத்திய தருணம் காண்போரைக் நெகிழ்ச்சி செய்துள்ளது.</p><p>"இது எனது வாழ்க்கையின் பொன்னான தருணம். 80 வயதில் என் தந்தையின் முகத்தில் இந்தச் சிரிப்பைக் காண்பதே எங்கள் மிகப்பெரிய பொக்கிஷம்" என மகன் ஸ்ரீகாந்த் பதிவிட்டுள்ளார்.</p> <h2>நெட்டிசன்கள் நெகிழ்ச்சி  </h2><p>இந்த வீடியோ 4.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது.</p><p>"கடல் கூட இன்று மகிழ்ச்சியடைந்திருக்கும், முதல்முறையாக ஒருவர் காலால் மிதிக்காமல், கைகளால் தொட்டு வணங்கி அதற்கு மரியாதை செலுத்தியுள்ளார்" என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>"இயற்கையைத் தெய்வமாக மதித்து வணங்கும் அந்தப் பெரியவரின் செயல் இயற்கையின் மதிப்பை உணர்த்துகிறது" என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.</p><p>இவ்வளவு அன்பைப் பொழியும் மக்களின் கருத்துக்களை தனது தந்தைக்கு படித்துக் காண்பித்து அவரையும் மகிழ்ச்சியடைய செய்வதாக ஸ்ரீகாந்த் நன்றியுடன் தெரிவித்துள்ளார்.</p> <figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbiHmeaM6k4/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbiHmeaM6k4/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>பதக்கங்கள் வெல்வது அரியானா... பயன்பெறுவது குஜராத்.. 2030 காமன்வெல்த் போட்டி குறித்து காங்கிரஸ் எம்.பி கருத்து </title><link>https://www.maalaimalar.com/sports/haryana-mps-demand-hosting-commonwealth-games-2030-in-medal-winning-state</link><comments>https://www.maalaimalar.com/sports/haryana-mps-demand-hosting-commonwealth-games-2030-in-medal-winning-state#comments</comments><guid isPermaLink="false">0335ad3a-8a56-4444-9620-2d6995d282e1</guid><pubDate>Tue, 04 Aug 2026 22:10:59 +0000</pubDate><atom:updated>2026-08-04T22:10:59.412Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>haryana,அரியானா,குஜராத்,gujarat,Commonwealth games,காமன்வெல்த் போட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qsdpb1bt/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காமன்வெல்த் போட்டி ]]></media:title><media:description type="html"><![CDATA[ காமன்வெல்த் போட்டி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qsdpb1bt/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரில் நடப்பாண்டின் <a href="https://www.maalaimalar.com/sports/commonwealth-games-medal-tally-india-finishes-fourth-with-39-medals-in-glasgow">காமென்வெல்த் போட்டிகள் </a>கடந்த ஆஜிஸ்ட் 2 அன்று முடிந்தன. இதில் 39 பதக்கங்களுடன் இந்தியா 4 ஆம் இடம் பிடித்தது. </p><p>இந்தியா வென்ற 39 பதக்கங்களில் 10 பதக்கங்களை (13 தங்கங்களில் 7 தங்கம் உட்பட) அரியானா வீரர்கள் பெற்று தந்தனர்.</p><p>இதனிடையே, 2030 காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்க உள்ளன. </p><h2>போராட்டம் </h2><p>இந்நிலையில் இந்திய விளையாட்டுத் துறையில் அதிக பங்களிக்கும் அரியானாவில் காமன்வெல்த் போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று பாராளுமன்ற வளாகத்தில் அம்மாநில காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p> எம்.பி தீபேந்தர் சிங் ஹூடாவுடன், அரியானாவை சேர்ந்த பிற காங்கிரஸ் எம்பிக்களான ஜெய் பிரகாஷ், வருண் முல்லானா, சத்பால் பிரம்மச்சாரி மற்றும் கர்மபீர் பௌத் ஆகியோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.  </p><p>பதக்கங்களை அரியானா தருகிறது, ஆனால் போட்டிகளை நடத்த குஜராத் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்று தீபேந்திர சிங் ஹூடா குற்றம்சாட்டினார். </p> <h2>தீபேந்தர் சிங் ஹூடா</h2><p>இதுகுறித்து தீபேந்தர் சிங் ஹூடா பேசுகையில், "நாட்டின் மொத்த மக்கள்தொகையில் அரியானா சிறிய பங்கைக் கொண்டிருந்தாலும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களைப் பெற்றுத் தரும் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.</p><p>மல்யுத்தம், பாக்ஸிங், தடகளம், துப்பாக்கிச் சூடு மற்றும் ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் ஒலிம்பிக், ஆசியப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் அரியானா வீரர்கள் தொடர்ந்து வரலாற்றுச் சாதனைகளை படைத்து வருகின்றனர்.</p> <p>அரியானா வீரர்களின் இணையற்ற பங்களிப்பையும், மாநிலத்தின் விளையாட்டுத் திறனையும் அங்கீகரிக்கும் வகையில், 2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் முதன்மை மாநிலமாக அல்லது இணை மாநிலமாக அரியானாவை அறிவிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>இருப்பினும், நாட்டின் விளையாட்டு மையமாகத் திகழும் அரியானாவிற்கு இப்போட்டியை நடத்தும் வாய்ப்பு வழங்குவதே தகுதியான முடிவாக இருக்கும் என அரியானா காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டில் துறவிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை -  யோகி ஆதித்யநாத் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/ayodhya-donation-scam-probe-finds-no-involvement-of-monks-says-yogi-adityanath</link><comments>https://www.maalaimalar.com/news/national/ayodhya-donation-scam-probe-finds-no-involvement-of-monks-says-yogi-adityanath#comments</comments><guid isPermaLink="false">43c21fd8-5e45-44c7-ae7a-d59045a4ba4a</guid><pubDate>Tue, 04 Aug 2026 20:33:56 +0000</pubDate><atom:updated>2026-08-04T20:33:56.774Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yogi Adityanath,Ayodhya Ram Temple,யோகி ஆதித்யநாத்,அயோத்தி ராமர் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/miqbhzbk/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  யோகி ஆதித்யநாத் ]]></media:title><media:description type="html"><![CDATA[  யோகி ஆதித்யநாத் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/miqbhzbk/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/pappu-yadav-stages-unique-protest-in-parliament-over-ram-temple-donation-row">அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டு</a> முறைகேட்டில் எந்த ஒரு துறவிக்கும் தொடர்பில்லை என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.</p><h2>விசாரணை</h2><p>அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் வழங்கிய நன்கொடை திருடப்பட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>கோவிலை நிர்வகித்து வரும் ராம ஜென்மபூமி அறக்கட்டளையை சேர்ந்த ஊழியர்கள் உட்பட 8 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டை எழுந்த புகாரை  சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது. </p><p>இதில் தொடர்புடைய கூடுதல் நபர்கள் மற்றும் சொத்துக்களை கண்டறிய முழு நிதிப் பரிவர்த்தனைகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.</p> <h2>யோகி ஆதித்யநாத்</h2><p>இந்நிலையில் சிறப்பு விசாரணை குழுவின் முதற்கட்ட அறிக்கையில் இந்த முறைகேட்டில் எந்த ஒரு துறவிக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகி உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "சிறப்பு விசாரணை குழுவின் முதற்கட்ட அறிக்கையின்படி, நன்கொடை முறைகேட்டில் எந்தவொரு சாதுவுக்கோ அல்லது துறவிக்கோ தொடர்பிருப்பது கண்டறியப்படவில்லை" என்று தெரிவித்தார்</p><p>மேலும், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உத்தரபிரதேசத்தின் பிம்பத்தை சீர்குலைக்க முயல்வதாக யோகி குற்றம் சாட்டினார்.</p><p>"எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புக்கும் எதிரானது. இது  அம்பேத்கர் மற்றும் சனாதன உணர்வுகளை இழிவுபடுத்தும் செயலாகும்."</p><p>ஒரு காலத்தில் ஸ்ரீ ராமர் மற்றும் கிருஷ்ணரின் இருப்பையே கேள்வி கேட்டவர்கள், இன்று நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறார்கள். அயோத்தியின் வீதிகளையும் சரயு நதியையும் ரத்தத்தால் கறைபடுத்திய பாவத்தை செய்தது சமாஜ்வாதி அரசுதான்" என்று சாடினார்.</p> ]]></content:encoded></item><item><title>சக வீரர்கள் இருவரை சுட்டுக் கொன்று சிஆர்பிஎப் வீரர் தற்கொலை.. அசாமில் பயங்கரம் </title><link>https://www.maalaimalar.com/news/national/assam-crpf-camp-shooting-officer-kills-two-colleagues-and-then-himself</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-crpf-camp-shooting-officer-kills-two-colleagues-and-then-himself#comments</comments><guid isPermaLink="false">217028bc-b8b8-4ca4-92a3-2bb08cc1a71f</guid><pubDate>Tue, 04 Aug 2026 19:24:40 +0000</pubDate><atom:updated>2026-08-04T19:24:40.573Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,சிஆர்பிஎப்,சிஆர்பிஎப் வீரர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/g9rzo6wt/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிஆர்பிஎப் வீரர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிஆர்பிஎப் வீரர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/g9rzo6wt/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D">சிஆர்பிஎப் </a>முகாமில், அதிகாரி  ஒருவர் சக வீரர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><h2>சம்பவம் </h2><p>நேற்று காலை 7 மணியளவில், அசாமின் நகோன் மாவட்டம் கதிமாரி பகுதியில் உள்ள சிஆர்பிஎப் 34-வது பட்டாலியன் முகாமின் வாயிலில் இச்சம்பவம் நடந்துள்ளது.</p><p>ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பல்லானி பிரேமாம்பரம் என்பவர், பணியில் இருந்த சக வீரர்கள் மீது திடீரெனத் தனது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார்.</p><p>இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு வீரர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> சக வீரர்களைச் சுட்ட பிறகு, அதிகாரி பிரேமாம்பரம் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.</p> <h2>விசாரணை</h2><p>இச் சம்பவத்தை தொடர்ந்து முகாமில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. தகவலறிந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை தொடங்கினர்.</p><p>அதிகாரி மன அழுத்தத்தால் இவ்வாறு செய்தாரா அல்லது வீரர்களுக்கு இடையே ஏதேனும் தகராறு ஏற்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <p>மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட,</p><p>சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரம்)</p><p>மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம்)</p><p>சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019</p>]]></content:encoded></item><item><title> குஜராத்தை மிரட்டும் சண்டிபுரா வைரஸ் தொற்று.. 22 குழந்தைகள் பலி!
</title><link>https://www.maalaimalar.com/news/national/gujarat-sandipura-virus-outbreak-22-children-dead-as-encephalitis-spreads-across-multiple-districts</link><comments>https://www.maalaimalar.com/news/national/gujarat-sandipura-virus-outbreak-22-children-dead-as-encephalitis-spreads-across-multiple-districts#comments</comments><guid isPermaLink="false">3208b623-864b-4ea9-b29b-1b8360e8c8af</guid><pubDate>Tue, 04 Aug 2026 17:06:45 +0000</pubDate><atom:updated>2026-08-04T17:06:45.881Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Children,குஜராத்,gujarat,Chandipura virus,Viral infection,குழந்தைகள்,வைரஸ் தொற்று</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/80tfxqdx/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சண்டிபுரா வைரஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சண்டிபுரா வைரஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/80tfxqdx/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா <a href="https://www.maalaimalar.com/topic/virus">வைரஸ் </a>தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரபுல் பனஷேரியா தெரிவித்துள்ளார்.</p><h2>பாதிப்பு </h2><p>ஜூலை முதல் வாரத்தில் இருந்து  இந்த வைரஸ் குஜராத்தில் பரவி வருகிறது. </p><p>தரவுகளின்படி, குஜராத்தில் இதுவரை 184 பேருக்குச் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் 35 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>தொற்று உறுதியானவர்களில் 7 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  6 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகஸ்ட் 3 நிலவரப்படி மேலும் 11 பேரின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளன.</p><p>பாதிக்கப்பட்ட அனைவரும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆவர். இந்தத் தொற்று குறிப்பிட்ட ஒரு கிராமத்திற்கோ அல்லது பகுதிக்கு மட்டும் வரையறுக்கப்படவில்லை; மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளது.</p> <h2>சண்டிபுரா வைரஸ்</h2><p>'சண்டிபுரா என்செபாலிடிஸ்' என்று அழைக்கப்படும் சண்டிபுரா வைரஸ் என்பது மூளையைத் தாக்கி அழற்சியை உண்டாக்கும் ஒரு ஆபத்தான வைரஸ் தொற்றாகும்.</p><p>ஈக்கள் மற்றும் டெங்குவை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் உள்ளிட்ட பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது.</p><p>காய்ச்சல், வாந்தி, மயக்கம், வலிப்பு, வயிற்றுப்போக்கு, நரம்பியல் பிரச்சினைகள் மற்றும் மூளை வீக்கம் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.</p> <h2>அரசு கோரிக்கை</h2><p>சண்டிபுரா வைரஸ் தொற்றைத் தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ தற்போது பிரத்யேக தடுப்பூசியோ அல்லது மருந்தோ இல்லை.</p><p>எனவே, குழந்தைகளுக்குக் காய்ச்சல், வாந்தி, வலிப்பு அல்லது நரம்பியல் சார்ந்த உடல்நலக்குறைவு அறிகுறிகள் தென்பட்டால், பெற்றோர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கேரளா: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-red-alert-for-8-districts-holiday-declared-for-schools-and-colleges-in-5-districts</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-red-alert-for-8-districts-holiday-declared-for-schools-and-colleges-in-5-districts#comments</comments><guid isPermaLink="false">f9e4b174-ffc2-40e8-b7f5-dc76c6bcbc11</guid><pubDate>Tue, 04 Aug 2026 14:42:11 +0000</pubDate><atom:updated>2026-08-04T14:42:11.991Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,Red Alert,ரெட் அலர்ட்,இந்திய வானிலை ஆய்வு மையம்,India Meteorological Department,கேரளா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/59l55ta4/New-Project-2026-08-04T195137.824.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கேரளா: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/59l55ta4/New-Project-2026-08-04T195137.824.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. </p><p>அதன்படி, பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 204 மில்லி மீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>மலப்புறம், பாலக்காடு, திருச்சூர் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>இதனிடையே கடந்த மூன்று நாட்களில் மழை மற்றும் நிலச்சரிவு தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. </p><p>மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நாளை (ஆக.4) 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, காசர்கோடு, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களிலும் உள்ள ஐடிஐ உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தகத்தை வெளியிட்டார் ராகுல் காந்தி!</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-released-the-book-vaiko-in-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-released-the-book-vaiko-in-parliament#comments</comments><guid isPermaLink="false">e95baf03-70e8-4391-adb7-a0af397c7280</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:55:13 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:55:13.866Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Vaiko in Parliament,MDMK chief Vaiko,மதிமுக தலைவர் வைகோ,நாடாளுமன்றத்தில் வைகோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a5c11ckc/New-Project-2026-08-04T182201.797.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தகத்தை வெளியிட்டார் ராகுல் காந்தி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a5c11ckc/New-Project-2026-08-04T182201.797.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய, ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தகத்தை வெளியிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. </p><p>டெல்லி கான்ஸ்டிடியூசன் கிளப்பில் நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவில், ராகுல் காந்தி வெளியிட்ட முதல் பிரதியை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார். </p><p>30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் வைகோ ஆற்றிய உரைகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில் தவெக சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டார். </p><p>புத்தகத்தை வெளியிட்டு நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி,</p><p>“வைகோ அவர்களை, அவரது உரைகள் அல்லது அவர் எழுதிய நூலுக்காக மட்டும் நான் பாராட்டவில்லை. அவரது பொதுவாழ்வுப் பயணம் முழுவதும் அவர் வெளிப்படுத்திய மன உறுதிக்காகவும் நான் பாராட்ட விரும்புகிறேன். ஒரு அரசியல்வாதியை நான் மதிப்பிடும்போதெல்லாம், நான் உற்றுநோக்கும் முதல் மற்றும் மிக முக்கியமான அம்சம் 'நிலைத்தன்மை. அதில் அவர் எப்போதும் உள்ளார்.” என வைகோவை பாராட்டினார்.</p><p>தொடர்ந்து பிரதமர் மோடி தொடர்பாக பேசிய ராகுல் காந்தி.,</p><p>“நமது நாடு ஒரு விசித்திரமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் வீதிகளில் இறங்கி, கடும் வேதனையுடன், தேர்வுகளில் நியாயத்தையும், முறையாகச் செயல்படும் ஒரு கல்வி முறையையும் கோரி வருகின்றனர். </p><p>மறுபுறம், அவர்களை 'மன்னிக்க' முற்படும் பிரதமரை நாம் காண்கிறோம். அவர்களை மன்னிப்பதற்கு அவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியாவின் எதிர்காலத்தையே மன்னிக்கும் உரிமை தனக்கு இருப்பதாக அவர் எந்த அடிப்படையில் கருதுகிறார் என்பதும் எனக்குப் புரியவில்லை. </p><p>ஆனால், அவர் அதைத்தான் செய்யத் துணிகிறார். பிரதமரின் சிந்தனைக்கும், அவரது சகாக்களின் - குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்-இன் - சிந்தனைக்கும் பின்னால் மிகவும் ஆபத்தான மற்றும் விஷத்தன்மை வாய்ந்த ஒரு கருத்து ஒளிந்திருக்கிறது. அதாவது, இந்த நாடு பன்முகத்தன்மையின் வெளிப்பாடு அல்ல.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>நேதாஜியையும் அவரது பாரம்பரியத்தையும் அவமதிக்கும் பாஜக-வுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: மம்தா பானர்ஜி</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-insulting-netaji-and-his-legacy-mamata-banerjee-urge-people-to-protest-against</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-insulting-netaji-and-his-legacy-mamata-banerjee-urge-people-to-protest-against#comments</comments><guid isPermaLink="false">081ac366-f986-4d8b-abf3-fe910ab4059c</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:32:14 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:32:14.797Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,மம்தா பானர்ஜி,Mamata Banerjee,TMC,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/g0nqr179/Mamata0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா பானர்ஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/g0nqr179/Mamata0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது பாரம்பரியத்தை அவமதித்ததற்காக பாஜக-வை கடுமையாகச் சாடிய திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தலைவர் மம்தா பானர்ஜி, இத்தகைய கருத்துகளுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p><h2>நேதாஜி கொள்ளுப் பேரன் சந்திர குமார் போஸ்</h2><p>திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நேதாஜியின் கொள்ளுப் பேரனான சந்திர குமார் போஸ், முக்கிய அரசியல் கட்சிகள் மீது ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், ஆளும் பாஜக மற்றும் மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சி ஆகியவற்றின் அரசியல் செயல்பாடுகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><p>இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த பாஜக-வின் மேற்கு வங்க தலைவர் கருத்துக்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக மம்தா பானர்ஜி தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:-</h2><p>நமது தேசிய நாயகனான நேதாஜி குறித்து பாஜக தலைவர்கள் பேசிய விதம் என்னைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நேதாஜி சுபாஷ் போஸ் அவமதிக்கப்படும் விதம் குறித்து நான் மிகுந்த ஏமாற்றமும் மனவேதனையும் அடைகிறேன். இது வங்காளத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கே இழைக்கப்பட்ட அவமதிப்பாகும்.</p><h2>மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்</h2><p>நேதாஜிக்கு இழைக்கப்படும் அவமதிப்புக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா சமீபத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜிக்கும் சங் பரிவாரின் கொள்கை வழிகாட்டியான சியாமா பிரசாத் முகர்ஜிக்கும் இடையிலான அரசியல் கருத்து வேறுபாடுகள் குறித்த சூழலில், நேதாஜியால் உருவாக்கப்பட்ட ஃபார்வர்ட் பிளாக் (Forward Bloc) கட்சியின் உறுப்பினர்களை குண்டர்கள் என்று விமர்சித்திருந்தார்.</p><p>இக்கருத்து எதிர்க்கட்சிகள் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினரிடையே விமர்சனங்களை எழுப்பியது. அவர்கள் இதனை மரியாதையற்ற செயல் என்று வர்ணித்தனர்.</p><p>நேதாஜி மீது எந்தவிதமான அவமரியாதையும் காட்டப்படவில்லை என்று பாஜக மறுத்துள்ளது.</p><h2>தேசவிரோதிகள் என முத்திரை குத்தப்படும் Gen-Z</h2><p>தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய இளம் தலைமுறையினர் (Gen-Z) தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களின் குடும்பங்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டிய மம்தா, அந்த இயக்கத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.</p><p>தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வங்காளத்தில் ஆயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், பாஜக ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஒரு மிகப்பெரிய சிறைச்சாலையாக மாற்றிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>ராமர் கோவில் நன்கொடை திருட்டு, மாணவர்கள் விவகாரம்: விவாதிக்க பயப்படும் பிரதமர், அமித் ஷா- கார்கே குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/kharge-says-pm-modi-shah-scared-insulting-parliament-by-evading-answers-on-donation-theft-students-issue</link><comments>https://www.maalaimalar.com/news/national/kharge-says-pm-modi-shah-scared-insulting-parliament-by-evading-answers-on-donation-theft-students-issue#comments</comments><guid isPermaLink="false">3b21ade8-252f-45e6-a711-3086322f9269</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:25:55 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:25:55.857Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,கார்கே,Kharge,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/l5m6hztf/Kharge0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி, அமித் ஷா- கார்கே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/l5m6hztf/Kharge0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம் மற்றும் ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை குறித்து பதிலளிக்காமல் தவிர்ப்பதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் "பயத்தில்" உள்ளனர் அல்லது நாடாளுமன்றத்தை அவமதிக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.</p><p>எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் இந்த விவகாரம் தொடர்பாகப் போராட்டம் நடத்தி வருவதோடு, நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் முடக்கியுள்ளனர்.</p><p>மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள கார்கே, அவையில் இந்த விஷயத்தை எழுப்ப முயன்றாலும் அவருக்குப் பேச அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தை எழுப்பிய அவர், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாகம், நிலம் வாங்குதல், பண நன்கொடைகள் மற்றும் மதிப்புமிக்க காணிக்கைகளை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><h2>மேலும், இது தொடர்பாக கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</h2><p>ராமர் கோவில் நன்கொடை திருட்டு விவகாரம் கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம்.  ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. பிரதமர் மோடியே நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட முறையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.</p><p>மத்திய அரசு 70 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை இந்த அறக்கட்டளையிடம் ஒப்படைத்தார். பூமி பூஜை முதல் கும்பாபிஷேக விழா வரையிலான ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும் மோடி பங்கேற்றார்.</p><h2>பிரதமர் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது</h2><p>இத்தகைய சூழலில், காணிக்கைகள் திருடப்பட்டது உள்ளிட்ட தீவிரமான குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. அமலாக்கத்துறை (ED), சிபிஐ (CBI), வருமான வரித்துறை மற்றும் பிற புலனாய்வு அமைப்புகள் எங்கே உள்ளன என்பதை அவர் அவையில் விளக்க வேண்டும்.</p><p>ராமர் பெயரில் கொள்ளையடிப்பவர்கள் ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் நாட்டைத் தவறாக வழி நடத்துவதை நிறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு கார்கே தெரிவித்திருந்தார்.</p><h2>பயப்படும் பிரதமர் மோடி, அமித் ஷா</h2><p>பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, நாடாளுமன்றம் சுமூகமாகச் செயல்பட மோடியும் ஷாவும் அவைக்கு வர வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்று கூறினார்.</p><p>நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம். இரு அவைகளிலும் விவாதம் நடத்த அவைத் தலைவரும் (மாநிலங்களவை) சபாநாயகரும் (மக்களவை) அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ராமர் கோயில் நன்கொடை திருட்டு மற்றும் மாணவர்கள் மீதான வன்முறை குறித்து விவாதம் நடந்தால் உண்மை தானாகவே வெளிவரும். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அரசு பீதியடைந்திருப்பதாகத் தெரிகிறது.</p><p>அதோடு மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவைக்கு வரவில்லை. அவர்கள் பயப்படுகிறார்கள் அல்லது இங்கு வராததன் மூலம் நாடாளுமன்றத்தை அவமதிக்க விரும்புகிறார்கள்" என்றார்.</p><p>காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அந்த இரண்டு விவகாரங்கள் குறித்தும் பதிலளிக்கக் கோரி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பின.</p>]]></content:encoded></item><item><title>E20 போராட்டம் மூலம் அரசியல் தோல்வியை உயிர்ப்பிக்க முயற்சிக்கும் கெஜ்ரிவால்: பாஜக விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/kejriwal-trying-to-revive-his-failed-politics-through-e20-protest-bjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/kejriwal-trying-to-revive-his-failed-politics-through-e20-protest-bjp#comments</comments><guid isPermaLink="false">acbedea6-eebc-4bef-aa12-972ee18fd759</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:56:12 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:56:12.659Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,எத்தனால் கலந்த எரிபொருள்,E20 fuel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/f3mzdjxm/KejriwalTarun0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கெஜ்ரிவால்- தருண் சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/f3mzdjxm/KejriwalTarun0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>E20 எரிபொருளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை நோக்கிப் பேரணி நடத்த முயன்ற ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தேசிய ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/aap-agitation-against-e20-fuel-to-continue-people-must-join-protest-kejriwal">அரவிந்த் கெஜ்ரிவாலை</a> பாஜக கடுமையாக கடுமையாக சாடியுள்ளது. கெஜ்ரிவால் இந்திய விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும், தனது தோல்வியடைந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.</p><h2>கெஜ்ரிவால் பேரணி</h2><p>தொடர்பான 2.30 லட்சத்திற்கும் அதிகமான மனுக்களைச் சமர்ப்பிப்பதற்காக கெஜ்ரிவால் சுமார் 100 பேருடன் இந்தப் பேரணியை மேற்கொண்டிருந்தார். பிரதமரின் இல்லத்தை நோக்கிப் பேரணியாகச் சென்ற கெஜ்ரிவால் மற்றும் அவருடன் சென்றவர்களை டெல்லி காவல்துறை ஃபெரோஸ் ஷா சாலையில் தடுத்து நிறுத்தியது.</p><h2>இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் கூறியதாவது:-</h2><p>அரவிந்த் கெஜ்ரிவாலின் பேரணி அபத்தமானது, பொறுப்பற்றது மற்றும் அர்த்தமற்றது. அனைத்தும் அறிவியல் பூர்வமான முறையிலேயே செய்யப்பட்டுள்ளன. இச்செயல்முறை முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. யாரும் எந்தப் புகாரையும் எழுப்பவில்லை.</p><p>கெஜ்ரிவாலின் பிரசாரம் இந்தியாவின் விவசாயிகளுக்கு எதிரானது. கெஜ்ரிவால் அவர்களே, நீங்கள் விவசாயிகளின் வருமானத்தைப் பறிக்க முயற்சிக்கிறீர்கள். மக்காச்சோளம், கரும்பு மற்றும் பிற விவசாய விளைபொருட்களிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது.</p><p>உலகம் முழுவதும் பல நாடுகளில் பல தசாப்தங்களாக எத்தனால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதன் பயன்பாடு அறிவியல் பூர்வமான முறையிலேயே செயல்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>சர்ச்சையை உருவாக்க முயலும் கெஜ்ரிவால்</h2><p>ஆனால் கெஜ்ரிவால் தேவையற்ற சர்ச்சையை உருவாக்கவே விரும்புகிறார். எப்படியாவது அரசியல் செய்யவே அவர் விரும்புகிறார். தேசமோ, வாகனங்களோ அல்லது மக்களின் பிரச்சினைகளோ அவருக்கு முக்கியமல்ல. அவர் தனது தோல்வியடைந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பிக்கவே முயற்சிக்கிறார். அவரது வாதங்களுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை.</p><p>பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாஜக தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. ஒரு வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது.</p><p>இவ்வாறு தருண் சுக் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>E20 எரிபொருளுக்கு எதிரான AAP-யின் போராட்டம் தொடரும்: மக்கள் இதில் இணைய வேண்டும்: கெஜ்ரிவால்</title><link>https://www.maalaimalar.com/news/national/aap-agitation-against-e20-fuel-to-continue-people-must-join-protest-kejriwal</link><comments>https://www.maalaimalar.com/news/national/aap-agitation-against-e20-fuel-to-continue-people-must-join-protest-kejriwal#comments</comments><guid isPermaLink="false">7e5571ea-8de6-4676-b1d2-91378159dd04</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:16:22 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:16:22.448Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,ஆம் ஆத்மி,AAP,எத்தனால் கலந்த எரிபொருள்,E20 fuel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a5hwau5d/arvindKejriwal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a5hwau5d/arvindKejriwal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/some-degree-of-damage-is-possible-central-governments-reply-in-parliament-regarding-ethanol-blended-petrol">E20</a> எரிபொருளுக்கு எதிரான தங்கள் கட்சியின் பிரசாரம் தொடரும் என்றும், இதன் அமலாக்கத்தை மக்கள் தடுக்க விரும்பினால் பெருமளவில் இந்தப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சியின்  தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.</p><h2>E20 எரிபொருள்</h2><p>E20 எரிபொருளுக்கு எதிரான 2.30 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களைச் சமர்ப்பிக்க, சுமார் 100 பேருடன் பிரதமர் இல்லத்தை நோக்கிச் செல்ல முயன்ற கெஜ்ரிவால் மற்றும் பிற கட்சித் தலைவர்களை டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதனால் அவர்கள் ஃபிரோஸ் ஷா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>அப்போது கெஜ்ரிவால் கூறியதாவது:-</h2><p>தங்கள் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள மாநிலங்களிலும் இக்கொள்கையை அமல்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்போம்.</p><p>கோவா மற்றும் குஜராத்தில் எங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அங்கே E20 நடைமுறைக்கு வருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைகளில் இதை எதிர்ப்பார்கள்.</p><h2>மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்</h2><p>இன்று நடைபெற்ற பேரணியில் சுமார் 100 பேர் மட்டுமே பங்கேற்றாலும், சமூக ஊடகங்களில் விமர்சனங்களையும் கேலிப் பேச்சுகளையும் எதிர்கொண்ட போதிலும் அவர்கள் துணிச்சலுடன் பங்கேற்றனர்.</p><p>மக்கள் E20-லிருந்து விடுபட விரும்பினால், அவர்கள் பெருமளவில் வீதிகளுக்கு வந்து போராட வேண்டும்.</p><p>எத்தனால் உற்பத்தியால் இந்திய விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைக்காது என்றும், மாறாக இக்கொள்கை அமெரிக்க விவசாயிகளுக்கே பயனளிக்கும். இந்திய விவசாயிகளை விட வெளிநாட்டு நலன்களுக்கே இக்கொள்கை முன்னுரிமை அளிப்பதாக உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தை எதிர்த்து நின்று அமெரிக்காவிலிருந்து எத்தனால் இறக்குமதி செய்வதை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.</p> <h2>சஞ்சய் சிங் எம்.பி.</h2><p>நாடாளுமன்றத்தில் தான் இந்த விவகாரத்தை எழுப்பியதாகவும், E20-ஐ அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதை உணர்த்தும் வகையிலான பதிலை பெற்றதாகவும் ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.</p><p>இது தொடர்பாக சஞ்சய் சிங் கூறுகையில் "இன்று நாடாளுமன்றத்தில் நான் இந்தக் கேள்வியை எழுப்பினேன். அரசு E20-ஐ அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்பதை அந்தப் பதில் தெளிவுபடுத்துகிறது" என்றார்.</p><p>எத்தனால் கலந்த பெட்ரோலால் மைலேஜ் குறைவாக கிடைப்பதாகவும், என்ஜின் பராமரிப்பு செலவு கூடுவதாகவும் வாகன ஒட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவையில் பிறப்பு-இறப்பு பதிவுகள் (திருத்தம்) மசோதா தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-passes-the-registration-of-births-and-deaths-amendment-bill-2026-amid-sloganeering-by-opposition</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-passes-the-registration-of-births-and-deaths-amendment-bill-2026-amid-sloganeering-by-opposition#comments</comments><guid isPermaLink="false">29ed327f-41c0-4775-9a33-c4ad060b33a0</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:55:59 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:55:59.055Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாநிலங்களவை,rajya sabha,opposition parties,நாடாளுமன்றம்,parliment,எதிர்க்கட்சிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/kz7a30ro/rajya-sabha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rajya sabha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/kz7a30ro/rajya-sabha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கிய முதல் நாள் முதலே எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்து வருகிறது.</p><p>இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 12-வது நாளான இன்று நீட் முறைகேடு விவகாரம், மாணவர் போராட்டங்கள் மீதான போலீஸ் நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பினர்.</p><p>மேலும், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தொடக்கத்திலேயே ஏற்பட்ட அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோஷங்களால் அவை பாதிக்கப்பட்டது. தொடர் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இதற்கிடையே, மாநிலங்களவையில் பிறப்பு-இறப்பு பதிவுகள் (திருத்தம்) மசோதா 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின், எதிர்க்கட்சியினரின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.</p><p>கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிறப்பு-இறப்பு பதிவுகள் (திருத்தம்) மசோதா 2026 தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p>நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால், அவையில் தொடர்ந்து அமளி நீடித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ராமர் கோவில் நன்கொடை திருட்டு, மாணவர்கள் போராட்டம்தான் பாஜக-வின் இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம்: சஞ்சய் ராவத்</title><link>https://www.maalaimalar.com/news/national/sanjay-raut-ayodhya-temple-loot-police-action-on-student-protesters-cost-bjp-bankipur-seat</link><comments>https://www.maalaimalar.com/news/national/sanjay-raut-ayodhya-temple-loot-police-action-on-student-protesters-cost-bjp-bankipur-seat#comments</comments><guid isPermaLink="false">ca688ec4-03e1-4925-b23e-9836fff5230b</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:52:43 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:52:43.306Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரசாந்த் கிஷோர்,Prashant Kishor,ஜன் சுராஜ் கட்சி,சஞ்சய் ராவத்,Sanjay Raut,Jan Suraaj Party</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s8l3oyjv/SanjayRaut0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சஞ்சய் ராவத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s8l3oyjv/SanjayRaut0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயோத்தி கோவில் விவகாரத்தில் நடந்த கொள்ளை மற்றும் மாணவர் போராட்டக்காரர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை ஆகியவை பாங்கிபூர் தொகுதியில் பாஜக-வின் தோல்விக்குக் காரணமாக அமைந்தன என்ற சிவசேனா (UBT) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.</p><h2>பாங்கிபூர் இடைத்தேர்தல்</h2><p>பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் பாஜக கட்சியின் தேசிய தலைவராக பதவி ஏற்றதால், பாங்கிபூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.</p><p>தேர்தல் வியூகம் அமைப்பாளரான பிரசாந்த் கிஷோர், தனது கட்சியான ஜன் சுராஜ் சார்பில் போட்டியிட்டார். இதில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார். பீகார் மாநில சட்டசபை தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.</p><h2>இந்த நிலையில் சிவசேனா (UBT) கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-</h2><p>ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் மற்றும் இளம் போராட்டக்காரர்கள் மீது காவல் துறை எடுத்த நடவடிக்கை, அயோத்தி ராமர் கோவிலில் நடந்ததாகக் கூறப்படும் நன்கொடை திருட்டு ஆகியவை குறித்து பாஜக தலைமை மௌனம் காத்தது ஆகியவை பாஜக-வின் கோட்டையான பாங்கிபூரில் அதன் தோல்விக்குக் காரணங்களாக அமைந்தன.</p><p>லக்னோவில் கட்சித் தலைவர் நிதின் நபினை வரவேற்கும் நிகழ்வின்போது, ​​இந்து கடவுளான அனுமன் வேடமணிந்த ஒருவர் பாஜக கொடியை அசைத்து நடனமாடிய வீடியோ மக்களின் மனதைப் புண்படுத்தியது.</p><h2>எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை அதிகரிப்பு</h2><p>இந்த இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 1988-ல் நடிகர் அமிதாப் பச்சன் பதவி விலகியதால் அலகாபாத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வி.பி. சிங் வெற்றி பெற்றார். அவரது வெற்றி நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியின் தொடக்கமாக அமைந்தது.</p><p>உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஐந்து முறை வென்ற கோரக்பூர் மக்களவைத் தொகுதியை, 2018-ல் நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சியிடம் பாஜக இழந்தது.</p><h2>Gen Z</h2><p>மும்பையில் உள்ள நீடா அம்பானி கலாச்சார மையத்தில் (NMACC) இந்த வாரம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 'ஜென்-இசட்' (Gen Z) தலைமுறையினருடன் மேற்கொள்ளவிருக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள், பாஜக தலைவர்கள் அல்லது சங்கத்தின் பிரதிநிதிகளின் பிள்ளைகள் அல்லது பேரக்குழந்தைகளாகவே இருப்பார்கள்.</p><p>அங்கு வேறு யார் செல்வார்கள்? அதில் பங்கேற்பவர்கள் ஜென்-இசட் (Gen Z) தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்கள், கண்ணீர்ப்புகை மற்றும் தடியடியை எதிர்கொண்டவர்கள் ஆகியோரே 'ஜென்-இசட்' தலைமுறையினர். ஆர்எஸ்எஸ் (RSS) தலைவரின் நிகழ்ச்சிக்கு அவர்களே அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.</p><p>இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும்: அதிருப்தி எம்.எல்.ஏ.-க்களுக்கு டி.கே. சிவக்குமார் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-cong-mlas-party-is-important-resignations-will-be-accepted</link><comments>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-cong-mlas-party-is-important-resignations-will-be-accepted#comments</comments><guid isPermaLink="false">611a59ae-11f5-420c-8636-b82329fc3c0c</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:26:10 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:26:10.923Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,கர்நாடகா,Karnataka,DK Shivakumar,டிகே சிவக்குமார்,​​Congress</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7573bbpj/19072026Shivakumar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7573bbpj/19072026Shivakumar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் கிடைக்காததால் ராஜினாமா செய்வதாக மிரட்டும் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்குக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். அத்துடன் கட்சியே முக்கியம், அவர்கள் ராஜினாமா செய்தால் சில நிமிடங்களிலேயே அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.</p><p>டி.கே. சிவக்குமார் கர்நாடக மாநில முதல்வராக பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 19 அமைச்சர்களைச் சேர்த்துத் தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார்.</p><h2>அதிருப்தி எம்.எல்.ஏ.-க்கள் ராஜினாமா மிரட்டல்</h2><p>நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் இறுதியாக நடந்தேறிய நிலையில், அது ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அமைச்சர் பதவி கிடைக்காத சிலர் ராஜினாமா செய்வதாகத் தெரிவித்தனர்.</p><p>இண்டி (Indi) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான யஷ்வந்தராயகௌடா வி. பாட்டீல், திங்களன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.</p> <p>அமைச்சரவையில் இடம்பெற விரும்பும் பலரின் ஆதரவாளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர். முதலமைச்சர் உட்பட கர்நாடக அமைச்சரவையின் அனுமதிக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 34 ஆகும். திங்களன்று மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து, தற்போது அதில் ஒரு அமைச்சர் பதவி காலியாக உள்ளது.</p><h2>அதிருப்தி எம்.எல்.ஏ.-க்கள் விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-</h2><p>நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். அரசியலில் ராஜினாமாக்கள் நிகழ்வது இயல்பு. ராஜினாமா செய்பவர்களை யாரும் தடுக்க முடியாது. கட்சி மற்றும் தங்கள் எதிர்காலம் முக்கியம் என்று கருதினால், கட்சிதான் முதன்மையானது. கட்சி இருந்தால்தான் மற்ற அனைத்தும் சாத்தியம்.</p><p>தரம் சிங் மற்றும் சித்தராமையா ஆகியோர் முதல்வராக இருந்தபோது எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அப்போதே நானும் ராஜினாமா செய்திருக்கலாமே? பரமேஸ்வரா (துணை முதல்வர்) மற்றும் நான் பொறுமை காக்கவில்லையா? வீரேந்திர பாட்டீல் முதல்வராக இருந்தபோது பங்காரப்பா, கார்கே (ஏஐசிசி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே) மற்றும் தரம் சிங் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஆனால், பின்னர் பங்காரப்பா மற்றும் சிங் முதல்வர்களாகவில்லையா? ஒருவருக்குப் பொறுமை அவசியம்.</p><h2>ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும்</h2><p>யாராவது ராஜினாமா செய்தால், சில நிமிடங்களிலேயே அதை ஏற்றுக்கொள்வேன். முன்பு வாரியங்கள் மற்றும் கழகங்களின் உறுப்பினர்களாகவும் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களிடம், அவர்களின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே என்று கூறப்பட்டிருந்தது.</p><p>ஏற்கனவே இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதலில் அந்தப் பதவிகளில் இருப்பவர்களை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு, புதியவர்களை நியமிப்பேன். அதன் பிறகு எம்.எல்.ஏ-க்களுடன் தனித்தனியாகப் பேசுவேன்.</p><p>இவ்வாறு டி.கே. சிவக்குமார் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>FSSAI அதிரடி: டாபர் நிறுவனத்தின் 100% தூய்மை விளம்பரங்களுக்குத் தடை!</title><link>https://www.maalaimalar.com/news/national/fssai-crackdown-ban-on-dabur-100-percent-purity-ads</link><comments>https://www.maalaimalar.com/news/national/fssai-crackdown-ban-on-dabur-100-percent-purity-ads#comments</comments><guid isPermaLink="false">6abac9e7-2574-4d36-b92e-f3a0a82ef725</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:52:17 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:52:17.068Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FSSAI,Dabur India Limited,டாபர்,DaburHoney,FoodSafety,Misleading Ads,Consumer Rights,Organic Food</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qbph1n8l/FSSAI-Dabur" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ FSSAI - Dabur]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qbph1n8l/FSSAI-Dabur?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாபர் நிறுவனம் தனது தயாரிப்புகளான தேன், நெய், எண்ணெய் மற்றும் வினிகர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் '100 சதவீதம் தூய்மையானது' என்று விளம்பரம் செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.</p><h2>விவகாரம் என்ன?</h2><p>டாபர் நிறுவனம் தனது இணையதளத்திலும், தயாரிப்பு லேபிள்களிலும் "100% இயற்கை", "100% ஆர்கானிக்", "100% தூய்மைக்கு உத்திரவாதம்" போன்ற வாசகங்களைப் பயன்படுத்தி வந்தது. </p><p>இந்த '100%' என்ற வார்த்தை நுகர்வோரை திசைதிருப்பும் வகையிலும், சட்டவிதிகளுக்குப் புறம்பாகவும் இருப்பதாக FSSAI தெரிவித்துள்ளது.</p><h2>முக்கியக் காரணங்கள்:</h2><p>எந்தவொரு உணவுப் பொருளையும் '100% தூய்மையானது' என்று முழுமையாக நிரூபிக்க முடியாது என்பதால், இந்த வாசகங்கள் மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளன. </p><p>டாபரின் ஆர்கானிக் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவற்றில், உரிய அனுமதியின்றி 'ஜெவிக் பாரத்' என்ற ஆர்கானிக் முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. </p><p>கடந்த 2020 மே மாதமே இது போன்ற '100% விளம்பரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒட்டுமொத்த உணவு நிறுவங்களுக்கும் FSSAI எச்சரிக்கை விடுத்திருந்தது. </p><p>டாபர் நிறுவனத்திற்குத் தனியாக நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>தயாரிப்புகள் ஆபத்தானவையா?</h2><p>டாபர் நிறுவனத்தின் இந்த பொருட்கள் தரமற்றவை என்றோ அல்லது சாப்பிடப் பாதுகாப்பற்றவை என்றோ FSSAI கூறவில்லை. </p><p>இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க அவர்கள் லேபிளிங் செய்த விதம் மற்றும் தவறான விளம்பர உத்திக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அடுத்தகட்ட நடவடிக்கை:</h2><p>குறிப்பிட்ட அந்த தயாரிப்புகளைச் சந்தையில் விற்பனை செய்வதை டாபர் நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் FSSAI உத்தரவிட்டுள்ளது. </p><p>டாபர் நிறுவனம் இந்த நோட்டீசை ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு வங்கம் , பீகாரின் முன்னாள் ஆளுநர் டி. ஒய். பாட்டீல் காலமானார்</title><link>https://www.maalaimalar.com/news/national/dy-patil-passes-away-educationist-and-former-bihar-governor-dies-in-kolhapur</link><comments>https://www.maalaimalar.com/news/national/dy-patil-passes-away-educationist-and-former-bihar-governor-dies-in-kolhapur#comments</comments><guid isPermaLink="false">bcf36ac0-2dd1-4262-b2b5-3927e70be9aa</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:56:56 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:56:56.605Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,DY Patil,டி.ஒய். பாட்டீல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/cvgjk1gq/D-Y-Patil.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ D Y Patil]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/cvgjk1gq/D-Y-Patil.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கல்வியாளரும் முன்னாள் ஆளுநருமான டி.ஒய். பாட்டீல், <a href="https://www.maalaimalar.com/topic/maharashtra">மகாராஷ்டிரா</a> மாநிலத்தின் கோலாப்பூரில் தனது 90வது வயதில் காலமானார்.</p><p>பாட்டீல் 2009 முதல் 2013 வரை திரிபுராவின் ஆளுநராகவும், 2013 முதல் 2014 வரை பீகாரின் ஆளுநராகவும் பணியாற்றினார், மேலும் 2014-இல் சிறிது காலம் மேற்கு வங்க ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.</p><p>1991-இல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், மும்பை, நவி மும்பை, புனே மற்றும் கோலாப்பூர் ஆகிய இடங்களில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உட்பட 150-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் டி.ஒய். பாட்டீல் குழுமத்தின் நிறுவனராகப் பரவலாக அறியப்பட்டார்.</p><h2>அரசியலில் பாட்டீல்:</h2><p>1935 அக்டோபர் 22-ஆம் தேதியன்று கோலாப்பூரில் பிறந்த பாட்டீல், மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கி, பின்னர் கல்வி மற்றும் அறப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். </p><p>முன்னதாக காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடையவராக இருந்த அவர், பின்னர் 2018-ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.</p><h2>இரங்கல்:</h2><p>காங்கிரஸ் தலைவர் டாக்டர் நிதின் ராவத் எகஸ் தள பதிவில், கல்வித்துறை "ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட சிற்பியை" இழந்துவிட்டது என்றும், பாட்டீலின் மரணம் "கல்வி, சமூக சேவை மற்றும் பொது வாழ்க்கைக்கு ஒரு பெரும் இழப்பு" என்றும், அவரது பணிகள் "பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்" என்றும் குறிப்பிட்டார்.</p><p>திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹாவும் பாட்டிலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவரை "ஒரு தலைசிறந்த கல்வியாளர், திரிபுரா மற்றும் பீகாரின் முன்னாள் ஆளுநர்" என்றும், "ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட நிறுவனங்களை உருவாக்கியவர், கொடையாளர் மற்றும் மதிக்கப்படும் பொது ஆளுமை" என்றும், "கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுச் சேவைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளின் மூலம் ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டு</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 87-ஆக உயர்வு, சுமார் 1.3 லட்சம் பேர் பாதிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-flood-toll-rises-to-87-with-2-more-deaths</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-flood-toll-rises-to-87-with-2-more-deaths#comments</comments><guid isPermaLink="false">8f0360f6-399c-4aef-b338-a5ce4da0e26b</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:09:51 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:09:51.788Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அசாம்,Assam,அசாம் வெள்ளம்,Assam Floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/8y3om06t/Guwahati-Floods-Rescue.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guwahati Floods Rescue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/8y3om06t/Guwahati-Floods-Rescue.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் மேலும் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 87-ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/assam-floods">வெள்ளம்</a> சூழ்ந்த பெரும்பாலான பகுதிகளில் நீர்மட்டம் குறைந்து வந்தாலும், இன்னும் சுமார் 1.3 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இருப்பினும், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயாவில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மிக <a href="https://www.maalaimalar.com/topic/heavy-rain">கனமழை</a> பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது; இது அம்மாநிலங்களின் எல்லையை ஒட்டியுள்ள அசாமின் பல மாவட்டங்களை பாதிக்கக்கூடும்.</p><h2>கனமழை எச்சரிக்கை:</h2><p>"மேகாலயாவின் கிழக்கு காசி மலைகள், மேற்கு ஜெயின்டியா மலைகள் மற்றும் கிழக்கு ஜெயின்டியா மலைகள் ஆகிய பகுதிகள் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பாபும்பரே, குருங் குமே, கிழக்கு காமெங், கிழக்கு சியாங், லோஹித் மற்றும் சாங்லாங் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை (ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கைகள்) பெய்யக்கூடும். இது அசாமின் அண்டை மாவட்டங்களை பாதிக்கலாம்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>நாகாலாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' (கண்காணிப்பு) விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அசாமின் சாரைடியோ, சிவசாகர், ஜோர்ஹாட் மற்றும் கோலாகாட் மாவட்டங்களை பாதிக்கக்கூடும் என்றும் அது கூறியது.</p><p>நேற்று (திங்கள்கிழமை) இரவு வெளியிடப்பட்ட அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) அறிக்கைப்படி, கடந்த 24 மணி நேரத்தில் சிவசாகர் மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளுடன், இந்த ஆண்டு வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87-ஐ எட்டியுள்ளது.</p><h2>நீர்மட்டம் குறைவு:</h2><p>"வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேல் அசாம் மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் இரவு நேரத்தில் மழை பெய்ததாகத் தகவல்கள் வந்தாலும், வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் கிராம மக்களுக்குச் சற்று நிம்மதி கிடைத்துள்ளது" என்று ASDMA அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>மொத்தம் ஆறு மாவட்டங்களில் 1,28,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிவசாகர் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது அதை தொடர்ந்து சாரைடியோ மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்கள் உள்ளன.</p><p>ஐந்து மாவட்டங்களில் 55 நிவாரண முகாம்கள் மற்றும் நிவாரண விநியோக மையங்களை நிர்வாகம் நடத்தி வருவதாகவும், தற்போது 11,250 பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ASDMA தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு வெள்ள நிவாரண பணிகளுக்காக, மருத்துவ மற்றும் கால்நடை மருத்துவ குழுக்கள் உட்பட பல அமைப்புகள் களமிறக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>அரியானாவில் பயங்கரம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை 27 முறை குத்திக் கொலை!</title><link>https://www.maalaimalar.com/news/national/horror-in-haryana-teacher-stabbed-27-times-on-school-campus</link><comments>https://www.maalaimalar.com/news/national/horror-in-haryana-teacher-stabbed-27-times-on-school-campus#comments</comments><guid isPermaLink="false">bcc8f0fc-a32a-4d96-ba62-47ee0647eaa9</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:05:01 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:05:01.194Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>haryana,Teacher Murder,ஆசிரியை கொலை,ஹரியானா,Sikrona,பரிதாபாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/pgf1mfzi/murder.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Haryana Teacher murder ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/pgf1mfzi/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில், 29 வயது ஆசிரியை ஒருவர் முகமூடி அணிந்த நபரால் 27 முறை கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக 21 வயது இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது.</p><p>சந்தியா (29) என்ற இளம்பெண் ஃபரிதாபாத்தின் சிக்ரோனா கிராமத்தில் உள்ள சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம்போல் காலை 9:30 மணியளவில் ஆசிரியை சந்தியா பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது, முகத்தை வெள்ளைத் துணியால் மூடியபடி வந்த ஒரு நபர், அவரைப் பார்க்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.</p><h2><strong>கொலைச் சம்பவம்:</strong></h2><p>பள்ளி ஊழியர்கள் தகவலளித்ததை அடுத்து, ஆசிரியை முதன்மை வாயில் அருகே வந்தபோது, மறைந்திருந்த அந்த நபர் திடீரென அவர் மீது பாய்ந்து, இழுத்துச் சென்று கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இக்கொடூரத் தாக்குதல் முழுவதும் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, ஆசிரியையின் முகம், கழுத்து, நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் 27 முறை கத்திக் குத்துகள் விழுந்துள்ளதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அமித்(21)  என்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில் இக்கொலை பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக, அமித் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஆசிரியை சந்தியா காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அமித், பழிவாங்கும் நோக்கத்துடன் திட்டமிட்டுப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.</p><p>சம்பவம் நடந்த அடுத்த 2 மணி நேரத்திற்குள் குற்றவாளி அமித்தை ஃபரிதாபாத் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகப் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பாடங்களை சேர்க்கும் மகாராஷ்டிரா - முதலமைச்சர் பட்னாவிஸ் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/fadnavis-orders-anti-drug-lessons-in-maharashtra-school-curriculum</link><comments>https://www.maalaimalar.com/news/national/fadnavis-orders-anti-drug-lessons-in-maharashtra-school-curriculum#comments</comments><guid isPermaLink="false">c75c96b4-9c89-4632-942d-cfd7e5c00b35</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:21:39 +0000</pubDate><atom:updated>2026-08-04T04:21:39.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,தேவேந்திர பட்னாவிஸ்,devendra fadnavis,school curriculum,பள்ளி பாடத்திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/kfksu7w3/devendra-fadnavis.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Devendra Fadnavis]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/kfksu7w3/devendra-fadnavis.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநில பள்ளி பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் போதை மீட்பு தொடர்பான பாடங்களை சேர்க்க அம்மாநில முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/devendra-fadnavis">தேவேந்திர பட்னாவிஸ்</a> அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>பள்ளிக் கல்வியில் நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக <a href="https://www.maalaimalar.com/topic/maharashtra">மகாராஷ்டிரா</a> தொடர்ந்து திகழ்கிறது என்றும், கல்வித் தரம், மராத்தி மொழியை ஊக்குவித்தல், வரலாற்றை பாதுகாத்தல் மற்றும் நவீன வசதிகள் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை பேணுவதன் மூலம் மாணவர்-மையக் கல்வி முறையை மாநிலம் வலுப்படுத்தி வருகிறது என்றும் பட்னாவிஸ் தெரிவித்தார்.</p><p>பள்ளிக் கல்வித் துறையின் ஆய்வு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அவர், போதைப்பொருள் தடுப்பு மற்றும் மீட்பு தொடர்பான பாடங்களை பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்கும் செயல்முறையை தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.</p><h2>போதை இல்லா பள்ளி:</h2><p>பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக்கான குழுக்களை அமைக்கவும், "போதைப்பொருள் இல்லாத பள்ளி" (Drug-Free School) என்ற பிரச்சாரத்தை தொடங்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.</p><p>பள்ளி பாதுகாப்பை வலுப்படுத்தவும், மாணவர்களிடையே இணையவழி மோசடிகள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.</p><p>மாநில அரசின் முயற்சிகளை தொடர்ந்து, என்.சி.இ.ஆர்.டி. (NCERT) பாடப்புத்தகங்களில் 17-ஆம் நூற்றாண்டின் வீர மன்னரான சத்ரபதி சிவாஜி மகாராஜின் வரலாறுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று பட்னாவிஸ் சுட்டிக்காட்டினார். புகழ்பெற்ற மராட்டிய மன்னரின் வரலாற்றையும் சாதனைகளையும் பரவலாக உள்ளடக்கும் வகையில் பாடத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.</p><h2>புதுமையான முன்னெடுப்புகள்:</h2><p>மாநிலம் முழுவதும் உள்ள எஸ்.எஸ்.சி. (SSC), சி.பி.எஸ்.இ. (CBSE), ஐ.சி.எஸ்.இ. (ICSE) மற்றும் ஐ.பி. (IB) வாரியங்களின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழியை கற்பிப்பதும், அம்மொழியிலேயே தேர்வுகள் நடத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்தனர்.</p><p>பள்ளிக் கல்விக்கான தேசிய செயல்திறன் தரவரிசை குறியீட்டில் (PGI 2.0) மகாராஷ்டிராா தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது என்று கூறிய பட்னாவிஸ், 'பி.எம். ஸ்ரீ' (PM SHRI) பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் புதுமையான முன்னெடுப்புகளை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.</p><p>பள்ளி மாணவர்களின் ஆதார் சரிபார்ப்பு, கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் 35 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விச் சலுகைகள், 'பவித்ரா' (Pavitra) ஆசிரியர் பணி நியமன இணையதளம் மற்றும் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 உள்ளிட்ட முக்கியத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.</p><h2>அதிகாரிகள் விளக்கம்:</h2><p>கூட்டத்தில் அளிக்கப்பட்ட விளக்கக் காட்சியின்படி, நாட்டின் மொத்த பள்ளிகளில் 9.34 சதவீதமும், ஆசிரியர்களில் 8.84 சதவீதமும், மாணவர்களில் 7.69 சதவீதமும் மகாராஷ்டிராவில் உள்ளனர். இம்மாநிலத்தில் 1,08,065 பள்ளிகள் உள்ளன; இவற்றில் 2,20,48,443 மாணவர்கள் பயில்கின்றனர், மேலும் மாணவர்-ஆசிரியர் விகிதம் 28:1 ஆகப் பராமரிக்கப்படுகிறது.</p><p>இப்பள்ளிகளில் 64,341 அரசு பள்ளிகள் மற்றும் 29,486 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உள்ளன; மீதமுள்ளவை சுயநிதி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு பள்ளிகளாகும்.</p><p>பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்காக 'நிபுண் மகாராஷ்டிரா இயக்கம்' (Nipun Maharashtra Mission), 'ராஷ்ட்ரிய பிரதம்' (Rashtriya Pratham) பிரச்சாரம், "மாஜி ஷாலா சுந்தர் ஷாலா" (எனது பள்ளி, அழகான பள்ளி) திட்டம் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களை தாக்கும்போது எங்கே போனீர்கள்?.. ஜென் இசட் சந்திப்பு நடத்தும் ஆர்எஸ்எஸ் தலைவரிடம் ஆதித்யா தாக்கரே நறுக்</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protests-rss-plans-outreach-to-gen-z-and-gen-alpha-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protests-rss-plans-outreach-to-gen-z-and-gen-alpha-students#comments</comments><guid isPermaLink="false">78173dff-0c44-4e49-b4c1-ae816b0a0168</guid><pubDate>Tue, 04 Aug 2026 00:40:44 +0000</pubDate><atom:updated>2026-08-04T00:40:44.245Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RSS,ஆர்எஸ்எஸ்,ஜென் இசட்,Gen z,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/lyfkmu46/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆதித்யா தாக்கரே, மோகன் பகவத்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதித்யா தாக்கரே, மோகன் பகவத்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/lyfkmu46/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி தலைமையில் <a href="https://www.maalaimalar.com/news/national/modi-apology-row-cjp-founder-demands-pm-apologise-for-police-assault-on-12-year-old-girls">இளைஞர்கள் நடத்திய போராட்டம்</a>, தர்மேந்திர பிரதான், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வழிவகுத்தது. </p><p>இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவு. எனவே இளைஞர்கள், மாணவர்களை கரும் முயற்சியில் பாஜக மற்றும் இந்துத்துவா வலதுசாரிகள் மெனக்கிட்டு வருகின்றனர். பாஜகவினர் இன்ஸ்டாவில் தீவிரமாக செயல்படும்படி கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். அவரும் தினம் தினம் இன்ஸ்டாவில் செல்பி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். </p><p>இந்நிலையில் பாஜகவின் சித்தாந்த தலைமையாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இளைய தலைமுறையை கவரும் முயற்சியில் இறங்கியுள்ளது. </p> <h2>சந்திப்பு</h2><p>ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகஸ்ட் 6 அன்று நாடு முழுவதும் உள்ள ஜென் இசட் மற்றும் ஜென் ஆல்பா மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.</p><p>மும்பையில் உள்ள நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.</p><p>India's International Movement to Unite Nations என்ற அமைப்பின் 15வது ஆண்டு நிறைவு மாநாட்டின் தொடக்க விழாவில் இது நடைபெறுகிறது</p><p>15 முதல் 19 வயதுக்குட்பட்ட 2,000க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் நேரடியாகப் பங்கேற்கின்றனர்.</p><p>"உலகை ஒன்றிணைப்பதில் இளைஞர்களின் பங்கு - இந்திய வழி" என்ற பொருண்மையில் இது நடக்கிறது.</p> <h2>எங்கே போனீரகள்?</h2><p>மாணவர் போராட்டங்களுக்கு பிறகு திடீரென தலைவர்கள் ஜென் இசட் இளைஞர்களுடன் கலந்துரையாட ஆர்வம் காட்டுவதை சிவ சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே கிண்டல் செய்துள்ளார்.</p><p>"திடீரென்று அனைவரும் ஜென் இசட் மற்றும் ஜென் ஆல்பா இளைஞர்களுடன் கலந்துரையாட விரும்புகிறார்கள்.</p><p>சமூக வலைதளங்களில் அவர்களுக்கு பண்பாட்டைக் கற்றுக்கொடுக்க வருகிறார்கள். அவர்களுக்கு நான் கேட்கும் எளிய கேள்வி ஒன்றுதான்.</p><p>அமைதியான முறையில் போராட்டம் நடத்திய அந்த மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர்ப்புகை, கைது நடவடிக்கைகள் பாய்ந்த போதும், பெண்கள் தரக்குறைவாக நடத்தப்பட்ட போதும் நீங்கள் எங்கே போனீர்கள்?</p><p>அவர்களைக் காப்பாற்ற ஏன் அப்போது தலையிடவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க மார்க் ஜூக்கர்பெர்க் சதி.. நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் - நிஷிகாந்த் தூபே</title><link>https://www.maalaimalar.com/news/national/meta-pm-video-removal-row-bjp-mp-demands-direct-apology-from-zuckerberg-warns-it-act-safe-harbour-withdrawal</link><comments>https://www.maalaimalar.com/news/national/meta-pm-video-removal-row-bjp-mp-demands-direct-apology-from-zuckerberg-warns-it-act-safe-harbour-withdrawal#comments</comments><guid isPermaLink="false">962c0455-7dc7-48d7-8aac-610b1a2c4525</guid><pubDate>Mon, 03 Aug 2026 21:27:00 +0000</pubDate><atom:updated>2026-08-03T21:27:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mark Zuckerberg,Nishikant Dubey,மார்க் ஜுக்கர்பெர்க்,நிஷிகாந்த் தூபே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/0sywo86a/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிஷிகாந்த் தூபே, மோடி, மார்க் ஜூக்கர்பெர்க் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நிஷிகாந்த் தூபே, மோடி, மார்க் ஜூக்கர்பெர்க் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/0sywo86a/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர் மோடியின் </a>வீடியோ பேஸ்புக்கில்  தற்காலிகமாக நீக்கப்பட்டது தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்.பியும் நாடாளுமன்ற  தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பக் குழுத் தலைவர் நிஷிகாந்த் துபே எச்சரித்துள்ளார்.</p> <h2>பிரதமர் வீடியோ நீக்கம்</h2><p>தேர்வு வினாத்தாள் கசிவு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பேசிய வீடியோ, பேஸ்புக் பக்கத்தில் இருந்து சுமார் 5 மணி நேரம் நீக்கப்பட்டிருந்தது. தொழில்நுட்பக் கோளாறால் இது நடந்ததாக மெட்டா விளக்கம் அளித்தது.</p><p>நாடாளுமன்றக் குழு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மெட்டா, யூடியூப், எக்ஸ், ஸ்னாப்சாட், கூகுள் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும், மத்திய உள்துறை மற்றும் ஐடி அமைச்சக அதிகாரிகளும் பங்கேற்றனர்.</p><p>இச்சம்பவம் தொடர்பாக 10 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p> <h2>துபே எச்சரிக்கை</h2><p>இச்சம்பவத்திற்காக மெட்டா பிரதிநிதிகள் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகக் கூறியபோதிலும், இந்த மன்னிப்பை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்கே நேரடியாக கேட்க வேண்டும் என நிஷிகாந்த் துபே வலியுறுத்தியுள்ளார்.</p><p>ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்கத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79ன் கீழ் சமூக ஊடகங்களுக்கு அளிக்கப்படும் 'பாதுகாப்பு அந்தஸ்து' திரும்பப் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த அந்தஸ்து இருந்தால் மட்டுமே பயனாளர்களின் பதிவுகளுக்குத் தளம் சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்கத் தேவையில்லை எனும் விலக்கு அந்த நிறுவனத்திற்கு கிடைக்கும்.</p> <p>அமைதியை சீர்குலைக்க சதி </p><p>தூபே இதுகுறித்து பேசுகையில், "2024 இந்திய தேர்தல் முடிவுகள் குறித்து கடந்த ஜனவரியில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து பின்னர் மன்னிப்பு கேட்ட ஜுக்கர்பெர்க், தற்போது பிரதமரின் வீடியோவை நீக்கியுள்ளது இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தையே காட்டுகிறது" என்று சாடியுள்ளார்.</p><p>மேலும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் மொத்த Viewership, 23 மில்லியனாக மட்டுமே இருக்கும் நிலையில், பதிவு செய்யப்படாத அமைப்புகள் மற்றும் புதிய கணக்குகளின் பார்வைகள் 27 மில்லியனாக செயற்கையாக உயர்த்தப்படுவதாக மெட்டா, யூடியூப் மற்றும் எக்ஸ் தளங்களின் அல்காரிதம் மீது குற்றம் சாட்டினார்.</p> ]]></content:encoded></item><item><title>ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்.. EPF ஊதிய உச்சவரம்பை ரூ.25,000 ஆக உயர்த்த  மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/epfo-pf-wage-ceiling-hiked-mandatory-pf-for-employees-earning-up-to-rs-25000</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/epfo-pf-wage-ceiling-hiked-mandatory-pf-for-employees-earning-up-to-rs-25000#comments</comments><guid isPermaLink="false">765aefe8-69bd-4898-953e-6cb16c5fa221</guid><pubDate>Mon, 03 Aug 2026 18:12:08 +0000</pubDate><atom:updated>2026-08-03T18:12:08.625Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊழியர்கள்,ஓய்வூதியம்,வருங்கால வைப்பு நிதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/82kefnc7/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ EPFO]]></media:title><media:description type="html"><![CDATA[ EPFO]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/82kefnc7/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (<a href="https://www.maalaimalar.com/topic/epfo">EPFO</a>)இன் கீழ், ஊழியர்களுக்கு ஓய்வூதியம் (EPF) பணம் பிடித்தத்திற்கான அடிப்படை சம்பள உச்சவரம்பை மாதம் ரூ.15,000 லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது</p><p>மத்திய அமைச்சரவையின் இறுதி ஒப்புதல் பெற்ற பிறகு இது அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வர உள்ளது. ஏப்ரல் 1, 2027 முதல் அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <h2>வரம்பு உயர்வு</h2><p>2014இல் இந்த சம்பள வரம்பு ரூ.6,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது.</p><p>இதன்படி, தற்போது மாதம் ரூ.15,000 வரை அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மட்டுமே PF பிடித்தம் செய்யும் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p>12 ஆண்டுகளுக்குப் பின், இந்த வரம்பை ரூ.30,000 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்டு நிலையில் தற்போது ரூ.25,000 ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.</p> <h2>நடைமுறை என்ன?</h2><p>தற்போது, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.15,000 மற்றும் அதற்கும் கீழ் இருந்தால் அந்த ஊழியர்கள் கட்டாயமாக EPF திட்டத்தில் சேர வேண்டும்.</p><p>இதன் மூலம் சம்பளத்தில் ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணம் பணி ஓய்வின் போது மொத்த தொகையாக கிடைக்கும்.</p><p>இந்த வரம்பை 25,000 ரூபாயாக உயர்த்துவதால், மாத அடிப்படை சம்பளம் 25,000 ரூபாய் வரை கொண்டிருக்கும் அனைத்து ஊழியர்களுக்கு பிஎப் பிடித்தம் கட்டாயம் ஆகும்.</p><h2>பயன் என்ன?</h2><p>தனியார் துறையில் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை அடிப்படை சம்பளம் வாங்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள் கட்டாய EPFO மற்றும் ஓய்வூதிய சமூக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.</p><p>ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்கிற்கு நிறுவனத்தின் 8.33% பங்களிப்புடன் மத்திய அரசும் 1.16% தொகையை வழங்கி வருகிறது.</p><p>இந்த வரம்பு உயர்வால் அரசுக்கு நிதிப் சுமை அதிகரிக்கும். 2026-27 நிதியாண்டில் ஓய்வூதியத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.11,144 கோடி ஒதுக்கியுள்ளது.</p><p>20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு பிஎப் பங்களிப்பு கட்டாயமாகும். 20க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் விருப்பத்தின்பேரில் EPFO தளத்தில் பதிவு செய்து பிஎப் திட்டத்தில் ஊழியர்களை இணைக்கலாம்</p> ]]></content:encoded></item><item><title>முதல் வெற்றியை சுவைத்த பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/national/prashant-kishor-wins-purnia-bypoll-with-big-margin-as-stalin-hails-jan-suraj-partys-maiden-victory</link><comments>https://www.maalaimalar.com/news/national/prashant-kishor-wins-purnia-bypoll-with-big-margin-as-stalin-hails-jan-suraj-partys-maiden-victory#comments</comments><guid isPermaLink="false">01ddc5f7-addc-41bc-9d3a-ae45216b442e</guid><pubDate>Mon, 03 Aug 2026 17:06:34 +0000</pubDate><atom:updated>2026-08-03T17:06:34.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,மு.க. ஸ்டாலின்,பிரசாந்த் கிஷோர்,ஜன் சுராஜ்,Prashant Kishor,Jan suraaj,M.k. stalin</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/xhe0s5kx/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/xhe0s5kx/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநிலத்தில் பங்கிபூர் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது இத்தொகுதியில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் 64,151 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.</p><p>இதன் மூலம், பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹாவை விட 19,324 வாக்குகள் அதிகம் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றார்.</p> <h2>ஸ்டாலின் வாழ்த்து</h2><p>இந்நிலையில் அவருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தனது எக்ஸ் தள பதிவில், "பங்கிப்பூர் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு வாழ்த்துகள். இது ஜன் சுராஜ் கட்சியின் முதல் தேர்தல் வெற்றி.</p><p>பங்கிப்பூர் தொகுதி மக்களுக்கும் பிகார் மாநில மக்களுக்கும் அவர் ஆற்றும் சேவையில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.</p> <h2>பிரசாந்த் கிஷோர் பேட்டி</h2><p>இதனிடையே தனது வெற்றி குறித்து<a href="https://www.maalaimalar.com/news/national/purnia-bypoll-prashant-kishor-leads-bjp-candidate-in-early-counting-rounds"> பிரசாந்த் கிஷோர்</a> இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதால் பங்கிபூர் பெங்களூருவாக மாறிவிடாது, ஆனால் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் இங்கு சில முன்னேற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.</p><p>மக்கள் என்மேல் வைத்த நம்பிக்கையை காப்பாற்றி, பங்கிபூரை மேம்படுத்துவதே எனது முதல் பணியாக இருக்கும். அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் நீங்கள் மாற்றங்களைக் காண்பீர்கள். நான் பெரிய தற்பெருமை பேச விரும்பவில்லை.</p><p>இந்தப் போராட்டம் தனிப்பட்டதல்ல, சாம்ராட் சௌத்ரியின் நடத்தை, குணம் மற்றும் முகம் ஆகியவை பொதுவெளியில் உள்ளன. ஒரு குற்றவாளியை பீகாரின் முதலமைச்சராக ஆக்கினால், பீகார் முன்னேற முடியாது.</p> <p>எங்கள் போராட்டம் எந்தவொரு தனிநபருடனும் கிடையாது. பெரும்பான்மையினர் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள், எனவே முதலமைச்சர் பதவி அவர்களுக்கே கிடைக்கும்.</p><p>பீகார் முன்னேறவும், மக்கள் பீகாரியாக இருப்பதில் பெருமை கொள்ளவும், திறமையான, நல்ல குணநலன்கள் கொண்ட ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று நாங்கள் மோடிஜியிடம் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இந்த தேர்தல் பங்கிபூரின் தெருக்கள் மற்றும் வடிகால்களுக்காக நடத்தப்படவில்லை. பீகாரை யார் வழிநடத்த வேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்டது. பங்கிபூர் மக்கள் பாஜக தலைமைக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர். ஒரு நல்ல மனிதரை முதலமைச்சராக்குங்கள்” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ரெயில்களில் உணவுத் தரம் குறித்த புகாரில் ரூ.5.13 கோடி அபராதம்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-5-13-crore-fine-over-poor-food-quality-in-trains-says-minister-ashwini-vaishnaw</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-5-13-crore-fine-over-poor-food-quality-in-trains-says-minister-ashwini-vaishnaw#comments</comments><guid isPermaLink="false">1066b5fd-7ec6-46d7-86b2-0380e7f03461</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:54:56 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:54:56.259Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில்வே,Ashwini Vaishnaw,IRCTC,ஐஆர்சிடிசி,அஷ்வினி வைஷ்ணவ்,Railway</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/2eh55leo/Untitled-design-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Indian Railways Food Quality Penalty: ₹5.13 crore fine imposed on firms over poor onboard meals]]></media:title><media:description type="html"><![CDATA[ Indian Railways]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/2eh55leo/Untitled-design-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய ரெயில்வேயில் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படும் உணவின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக புகார்கள் வந்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, ரெயில்களில் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு, இந்திய ரெயில்வே ரூ.5.13 கோடி அபராதம் விதித்துள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.</p><h3><strong>காங்கிரஸ் எம்.பி. சந்திரகாந்த் ஹண்டோர் கேள்வி</strong></h3><p>மத்திய ரெயில்வே அமைச்சர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்திய ரெயில்வே ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 58 கோடி எண்ணிக்கை உணவுகளை வழங்குகிறது என்றும், அவற்றில் சராசரியாக 0.0008 சதவீத புகார்கள் மட்டுமே பெறப்படுகின்றன என்றும் கூறினார்.</p><p>கடந்த மூன்று ஆண்டுகளில் பிரீமியம் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மோசமான உணவுத் தரம், சுகாதாரமற்ற சமையலறைப் பெட்டிகள் மற்றும் உபசரிப்புக் குறைபாடுகள் தொடர்பாகப் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை குறித்தும்,</p><p>அதிகக் கட்டணம் வசூலித்தல், தரமற்ற உணவு வழங்குதல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அளவை விடக் குறைவாக வழங்குதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட ஐ.ஆர்.சி.டி.சி உரிமைதாரர்கள் மீது எடுக்கப்பட்ட சட்டரீதியான நடவடிக்கை குறித்தும் காங்கிரஸ் எம்.பி. சந்திரகாந்த் ஹண்டோர் விவரங்களைக் கோரியிருந்தார்.</p><h3><strong>அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்</strong></h3><p>பிரீமியம் ரெயில்களில் உணவின் தரம் குறித்துக் கவலை தெரிவித்திருந்த காங்கிரஸ் எம்.பி. ஹண்டோரின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார்.</p><p>இதுகுறித்து அமைச்சர் வைஷ்ணவ் கூறுகையில், “கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தப் புகார்கள் மீதான விசாரணையின் அடிப்படையில், ரூ. 5.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி பயணிகளுக்கு நல்ல தரமான மற்றும் சுகாதாரமான உணவுப் பொருட்களை வழங்க ரெயில்வே தொடர்ந்து முயன்று வருகின்றது. அதை உறுதி செய்வதற்காக அவ்வப்போது தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரப்படுகிறது.</p><p>ரெயில்களில் வழங்கப்படும் உணவின் தரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட சமையலறைகளில் இருந்து உணவை வழங்குதல்,</p><p>அடையாளம் காணப்பட்ட இடங்களில் நவீன அடிப்படை புதிய சமையலறைகளை அமைத்தல், மற்றும் உணவுத் தயாரிப்பை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதற்காக சமையலறைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.</p><p>ரெயில்களில் மின்னணு கட்டண முறை மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்படும். டிஜிட்டல் கட்டண முறை மற்றும் பணமில்லாப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக,</p><p>சமையலறை பெட்டிகளில் பாயிண்ட் ஆஃப் சேல் (POS) இயந்திரங்களை நிறுவுவது, அத்துடன் UPI, QR குறியீடுகள் மற்றும் ஸ்வைப் இயந்திரங்கள் போன்ற பல விருப்பங்களும் இதில் அடங்கும்” என்று பதிலளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>LIC-யின் 6.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/govt-to-sell-up-to-6-point-5-pc-stake-in-life-insurance-corporation-at-floor-price-of-rs-382-share</link><comments>https://www.maalaimalar.com/news/national/govt-to-sell-up-to-6-point-5-pc-stake-in-life-insurance-corporation-at-floor-price-of-rs-382-share#comments</comments><guid isPermaLink="false">48d03b9b-34c5-4aaf-84fb-0cb38422d152</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:46:39 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:46:39.980Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,share market,பங்குச் சந்தை,LIC,எல்ஐசி பங்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/uyks9gyb/LIC0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ LIC]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/uyks9gyb/LIC0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் மிகப்பெரிய பொது நிறுவனங்களில் ஒன்று லைஃப் இன்சூரன்ஸ் ஆஃப் இந்தியா (LIC). இந்த நிறுவனத்தின் மார்க்கெட் மூலதனத்தின் மதிப்பு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் ஆகும். எல்.ஐ.சி. நிறுவனத்தின் 96.50 சதவீதம் பங்குகளை இந்திய அரசு வைத்துள்ளது.</p><h2>பொதுமக்களிடம் 2.06 சதவீதம் பங்கு</h2><p>வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 0.44 சதவீதம் பங்குகளையும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 0.99 சதவீதம் பங்குகளையும், பொதுமக்கள் 2.06 பங்குகளையும் வைத்துள்ளனர்.</p><p>இந்த நிலையில் மத்திய அரசு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதிதிரட்டும் வகையில் 1.5 சதவீதம் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியானது.</p><h2>ஒரு பங்கின் விலை 382 ரூபாய்</h2><p>இந்த நிலையில் 6.5 சதவீதம் வரை பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரு பங்கின் விலையை 382 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இரண்டு நாட்கள் என்ற அடிப்படையில் பங்குகளை விற்பனை செய்கிறது.</p><p>மார்க்கெட் மூலதனத்தின் மதிப்பு அடிப்படையில் 1 சதவீதம் என்றாலே 6 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். 6.5 சதவீதம் என்றால் சுமார் 40 கோடி ரூபாய் ஆகும்.</p><p>இன்றைய நிலவரப்படி எல்.ஐ.சி.யின் ஒரு பங்கு 424.40 ரூபாயாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பங்கிபூர் மக்கள் பாஜக தலைமைக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர்: இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரசாந்த் கிஷோர்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-leadership-gets-message-from-panchipura-people-prashant-kishor</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-leadership-gets-message-from-panchipura-people-prashant-kishor#comments</comments><guid isPermaLink="false">cc1187dd-69d9-488d-baf7-b85cace85a50</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:12:49 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:12:49.562Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரசாந்த் கிஷோர்,prashanth Kihsore,bihar election,Bankipur</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/530d08r5/Untitled-design-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Bihar By-election Message: Prashant Kishor wins Pangaibour, voters urge BJP to appoint a clean CM.]]></media:title><media:description type="html"><![CDATA[ Prashant Kishor]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/530d08r5/Untitled-design-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் பங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனது முதல் வெற்றியை பெற்ற, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர், பீகார் ஒரே இரவில் பெங்களூராக மாறிவிடாது என்றும் ஆனால் மக்கள் கண்கூடாக பார்க்கும் மாற்றங்கள் வரவிருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>பீகார் மாநிலத்தில் பங்கிபூர் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது இத்தொகுதியில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் 64,151 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். </p><p>இதன் மூலம், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹாவை விட 19,324 வாக்குகள் அதிகம் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றார்.</p><h3><strong>பிரசாந்த் கிஷோர் பேட்டி</strong></h3><p>இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதால் பங்கிபூர் பெங்களூருவாக மாறிவிடாது, ஆனால் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் இங்கு சில முன்னேற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.</p><p>மக்கள் என்மேல் வைத்த நம்பிக்கையை காப்பாற்றி, பங்கிபூரை மேம்படுத்துவதே எனது முதல் பணியாக இருக்கும். அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் நீங்கள் மாற்றங்களைக் காண்பீர்கள். நான் பெரிய தற்பெருமை பேச விரும்பவில்லை.</p><p>இந்தப் போராட்டம் தனிப்பட்டதல்ல, சாம்ராட் சௌத்ரியின் நடத்தை, குணம் மற்றும் முகம் ஆகியவை பொதுவெளியில் உள்ளன. ஒரு குற்றவாளியை பீகாரின் முதலமைச்சராக ஆக்கினால், பீகார் முன்னேற முடியாது.</p><p>எங்கள் போராட்டம் எந்தவொரு தனிநபருடனும் கிடையாது. பெரும்பான்மையினர் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள், எனவே முதலமைச்சர் பதவி அவர்களுக்கே கிடைக்கும்.</p><p>பீகார் முன்னேறவும், மக்கள் பீகாரியாக இருப்பதில் பெருமை கொள்ளவும், திறமையான, நல்ல குணநலன்கள் கொண்ட ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று நாங்கள் மோடிஜியிடம் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இந்த தேர்தல் பங்கிபூரின் தெருக்கள் மற்றும் வடிகால்களுக்காக நடத்தப்படவில்லை. பீகாரை யார் வழிநடத்த வேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்டது. பங்கிபூர் மக்கள் பாஜக தலைமைக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர். ஒரு நல்ல மனிதரை முதலமைச்சராக்குங்கள்,” என்று அவர் கூறினார்.</p><h3><strong>பீகார் முதல்வர் வாழ்த்து</strong></h3><p>இதையடுத்து பீகார் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி, மக்களின் தீர்ப்பை மதிப்பதாகக் கூறி, கிஷோரின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.</p><p>மேலும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழாவான பாங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில், மக்கள் ஜன் சுராஜைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.</p><p>மக்களின் முடிவை மதித்து, பிரசாந்த் கிஷோர் அவர்களின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று சௌத்ரி பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எனக்கும் ஒருமுறை அமைச்சர் பதவி கை நழுவியது!-அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் சமாதானம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-recalls-losing-minister-post-urges-patience-amid-karnataka-cabinet-expansion-anger</link><comments>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-recalls-losing-minister-post-urges-patience-amid-karnataka-cabinet-expansion-anger#comments</comments><guid isPermaLink="false">c7b009fc-af1f-4c58-955b-5cfb24fb463e</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:39:11 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:39:11.821Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,டி.கே.சிவகுமார்,Karnataka Cabinet,D.K.Shivakumar,கர்நாடகா அமைச்சரவை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/hk8la167/karnataka.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ D.K.Shivakumar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/hk8la167/karnataka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். இருப்பினும், புதிய அமைச்சரவையில் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் காங்கிரஸின் மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற முதல்வர் டி.கே.சிவகுமார், "அனைவருக்கும் ஒரே நேரத்தில் வாய்ப்பளிக்க முடியாது, பொறுமை காக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><h2><strong>டி.கே.சிவகுமார் சமாதானம்:</strong></h2><p>அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கட்சியில் பல எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஒரே நேரத்தில் அனைவரும் அமைச்சரவையில் இடம்பெறுவது சாத்தியமற்றது. கடந்த காலத்தில் சித்தராமையாவின் அமைச்சரவையில் எனக்கும் கூட அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது நினைவிருக்கலாம். </p><p>ஆனால், அதற்குப் பிறகு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையா? அதேபோலத் தான், இப்போது வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் எதிர்காலத்தில் நிச்சயம் உரிய வாய்ப்புகள் வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்றார்.</p><h2><strong>19 புதிய அமைச்சர்கள்:</strong></h2><p>டி.கே. சிவகுமார் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 19 புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.</p><h2><strong>காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா:</strong></h2><p>அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் கடும் அதிர்ச்சியடைந்த இண்டி தொகுதி எம்.எல்.ஏ யஷவந்தராயகவுடா பாட்டீல் மற்றும் சாகர் தொகுதி எம்.எல்.ஏ பேலூர் கோபாலகிருஷ்ணா ஆகிய இரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.</p><p>வாய்ப்பு மறுக்கப்பட்ட மூத்த தலைவர்களான டி.பி.ஜெயச்சந்திரா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோரின் ஆதரவாளர்கள் பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். டி.பி. ஜெயச்சந்திராவின் இல்லத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அவசர ஆலோசனையிலும் ஈடுபட்டனர். </p><p>இறுதி நேரத்தில் ஏற்பட்ட குழப்பங்களால் எம்.எல்.சி காயத்ரி சாந்தேகவுடா பதவியேற்காததால், விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த அமைச்சரவையில் பெண் அமைச்சர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>கட்சியின் நிலைப்பாடு:</strong></h2><p>எம்.எல்.ஏ.க்களின் வெளிப்படையான எதிர்ப்பும் ராஜினாமாவும் சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு அரசியல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. இருப்பினும், அதிருப்தியில் உள்ள தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும், வாரியப் பதவிகள் மற்றும் பிற பொறுப்புகளை வழங்கி அவர்களைச் சமாதானப்படுத்தவும் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் நிறைவேறியது!</title><link>https://www.maalaimalar.com/news/national/the-bill-to-increase-the-number-of-supreme-court-judges-to-38-has-been-passed-in-the-lok-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-bill-to-increase-the-number-of-supreme-court-judges-to-38-has-been-passed-in-the-lok-sabha#comments</comments><guid isPermaLink="false">e33d60f3-835b-4199-ab85-80b955bdbed9</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:27:31 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:27:31.773Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,Lok Sabha,Supreme Court Bill,உச்ச நீதிமன்ற மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/whjve5am/New-Project-2026-08-03T195710.887.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் நிறைவேறியது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/whjve5am/New-Project-2026-08-03T195710.887.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திருத்த மசோதா இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா, உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்துகிறது.</p><p>மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர்  அர்ஜுன் ராம் மேக்வால் முன்மொழிந்த இந்த மசோதா, 1956-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற சட்டத்தை மாற்றியமைக்கிறது.</p><p>வழக்குகளை விரைவில் முடிக்கவேண்டும் என்ற முக்கிய காரணத்திற்காக இந்த மசோதாவை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்த கூடுதல் நீதிபதிகளுக்கான ஆண்டுச் செலவு ரூ.10.57 கோடி எனவும், அவர்களுக்கு வழங்கப்படும் அலுவல் இல்லங்கள் மற்றும் கார் என ஒருமுறை செலவு ரூ.3.47 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>1950-ல் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டபோது, ​​தலைமை நீதிபதி உட்பட 8 நீதிபதிகள் இருந்தனர். இந்த எண்ணிக்கை 1956-ல் 11 ஆகவும், 1960-ல் 14 ஆகவும், 1977-ல் 18 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. 1979-ஆம் ஆண்டின் இறுதி வரை அமைச்சரவையால் நீதிபதிகளின் எண்ணிக்கை 15 ஆகக் கட்டுப்படுத்தப்பட்டது. </p><p>பின்னர், அப்போதைய தலைமை நீதிபதியின் வேண்டுகோளின் பேரில் அந்தக் கட்டுப்பாடு விலக்கிக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, 1986-ல் 18-லிருந்து 26 ஆகவும், 2009-ல் 26-லிருந்து 31 ஆகவும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் வழக்குகளில் தொடர்புடைய 112 அரசு அதிகாரிகள் இன்னும் பணியில் உள்ளனர்: RTI-ல் அதிர்ச்சி தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/rti-revelation-112-corruption-accused-officials-still-on-duty</link><comments>https://www.maalaimalar.com/news/national/rti-revelation-112-corruption-accused-officials-still-on-duty#comments</comments><guid isPermaLink="false">a87b2fdb-2c51-4f16-86c3-1d86bbd07ede</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:25:24 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:25:24.576Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,RTI Act,மும்பை மாநகராட்சி,ஆர்.டி.ஐ. தகவல்,Brihanmumbai Municipal Corporation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/dpq1vslq/Untitled-design-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Mumbai Corruption Cases Shock: 112 accused officials still in service]]></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai municipal corporation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/dpq1vslq/Untitled-design-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>தகவல் அறியும் உரிமை சட்டம்</strong></h3><p>மும்பை மாநகராட்சியைச் சேர்ந்த 207 அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புப் பணியகத்தின் தகவல் அறியும் உரிமை ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.</p><p>மேலும் அவர்களில், 112 பேர் இன்னும் பணியில் உள்ளதாகவும், 68 பேர் தங்கள் வழக்குகளுக்கு இறுதித் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><h3><strong>மும்பை மாநகராட்சி</strong></h3><p>மகராஷ்டிராவில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளின் சுயவிவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2026 ஏப்ரல் 30 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.</p><p>அரசு பணிகளில் ஊழியர்களில் 207 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் 27 அதிகாரிகள் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தெரிவித்துள்ளது.</p><p>இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் சுமார் 87 சதவீதம் பேர், விசாரணை முடிவடையாத நிலையில் இன்னும் பணியில் உள்ளதாகவும், சில நபர்கள் ஓய்வு பெற்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>சமூக ஆர்வலர்</strong></h3><p>இதுகுறித்து தி யங் விசிலோப்ளவர்ஸ் ஃபவுண்டேஷன் அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜீதேந்திர கட்கே கூறுகையில், “ஒவ்வொரு ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கையும் முடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடு இருக்க வேண்டும். ஊழல் வழக்குத் தொடர அனுமதிப்பது தொடர்பான முடிவுகள் உடனடியாக எடுக்கப்பட்டு, மேலும் ஊழல் வழக்குகளில் எடுக்கப்படும் நடவடிக்கை முற்றிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும்,” என்று கூறினார்.</p><p>மேலும், “ஊழல் தடுப்புப் பிரிவால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், விசாரணைகள் ஏன் இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன என்பது குறித்து மகாராஷ்டிர அரசும் சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளும் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.</p><p>தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கண்டுபிடிப்புகளின்படி, மும்பை மாநகராட்சி பொறியியல் துறைதான் ஊழல் வழக்குகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>அரசு ஊழியர்கள்</strong></h3><p>மேலும் அதில், 33 துணைப் பொறியாளர்கள், 13 உதவிப் பொறியாளர்கள், 13 இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் பல மூத்த பொறியியல் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குகளில் நான்காம் நிலை ஊழியர்களான 48 துப்புரவுப் பணியாளர்கள், 24 கூலியாட்கள், 6 மேற்பார்வையாளர்கள், 6 பியூன்கள் மற்றும் பல களப் பணியாளர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p>இந்தியா முழுவதும் நிலுவையில் உள்ள மிகப் பழமையான ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கு 2005-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. மேலும், சில சமயங்களில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகியும் இறுதித் தீர்ப்பு எதுவும் எட்டப்படாமல் உள்ளது.</p><p>இது வெறும் தனிப்பட்ட லஞ்ச சம்பவங்களை மட்டுமல்ல, புலனாய்வு அமைப்பின் ஒரு கடுமையான தோல்வியையே பிரதிபலிக்கிறது என ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்கள் வாதிட்டு வருகின்றனர்.</p><p>இவர்கள் மீது ஊழல் வழக்குத் தொடர அனுமதி இல்லாமல் குற்றவியல் நடவடிக்கைகளைத் திறம்பட முன்னெடுத்துச் செல்ல முடியாது. இந்த நிர்வாகத் தாமதங்களால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது அடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.</p><p>கொரோனா பெருந்தொற்று காலத்தில், தனிமைப்படுத்தல் மையங்களுக்கும் அவசர சேவைகளுக்கும் பணியாளர்கள் தேவைப்படுவதைக் காரணம் காட்டி, முன்னர் இடைநீக்கம் செய்யப்பட்ட 43 அரசு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தி உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டி.கே. சிவக்குமார் தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் எம்.எல்.ஏ. ராஜினாமா</title><link>https://www.maalaimalar.com/news/national/karntaka-cabinet-congress-mla-yashavantaraya-gouda-patil-resigns</link><comments>https://www.maalaimalar.com/news/national/karntaka-cabinet-congress-mla-yashavantaraya-gouda-patil-resigns#comments</comments><guid isPermaLink="false">19951f68-ea2d-4623-ae69-41d532546605</guid><pubDate>Mon, 03 Aug 2026 13:07:41 +0000</pubDate><atom:updated>2026-08-03T13:07:41.315Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,DK Shivakumar,டிகே சிவக்குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/g5oerw4m/DKShivakumar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டி.கே. சிவக்குமார்- யஷ்வந்தராயகௌடா பாட்டீல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/g5oerw4m/DKShivakumar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநில மந்திரி சபை விரிவாக்கத்தில் இடம் கிடைக்காததால், அதிருப்தி அடைந்த யஷ்வந்தராய கௌடா பாட்டீல் என்ற எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><h2>யஷ்வந்தராய கௌடா பாட்டீல்</h2><p>கர்நாடக மாநில முதல்வராக <a href="https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-cm-requests-karnataka-cm-dk-shivakumar-to-release-9-9-tmc-water-in-cauvery">டி.கே. சிவக்குமார்</a> பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இன்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. இதில் புதிதாக 20 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.</p><p>இந்த நிலையில் அமைச்சரவை பட்டியலில் இடம் இல்லாத குறித்தும், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது குறித்தும் யஷ்வந்தராயகௌடா பாட்டீல் கூறியதாவது:-</p><p>இன்று காலை வரை அமைச்சரவைக்கான பட்டியலில் தனது பெயர் இருந்தது. தனக்கு அது குறித்த தகவல் கூட வந்திருந்தது. ஆனால் கட்சி வெளியிட்ட இறுதிப் பட்டியலில் தனது பெயர் இடம்பெறவில்லை.</p><p>கட்சிக்குள் நடக்கும் நிகழ்வுகளை நான் கவனித்து வருகிறேன். இறுதியில், இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, ​​நமது தலைமை அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டது. எனவே, வேறு வழியின்றி நான் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டேன்.</p><p>இது என் மனசாட்சிக்கு ஏற்புடையதல்ல. விஜயபுரா மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் விசுவாசத்திற்கும் நேர்மைக்கும் மதிப்பில்லை என்ற சூழலே நிலவுகிறது. எனக்கு வேறு வழியில்லை. எனது ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுடன் பேசி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன்.</p><h2>அமைச்சர் பதவி தருவதாக உறுதி</h2><p>2023 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே எனக்கு அமைச்சர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அரசு அமைக்கப்பட்டபோது, ​​இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும் அவர்கள் அந்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டனர். எனக்கு வேறு வழியில்லை. நான் கட்சியிலிருந்து விலகவில்லை, ஆனால் என்னை ராஜினாமா செய்யத் தூண்டும் சூழலை அவர்களே உருவாக்கிவிட்டனர்.</p><p>நான் எட்டுத் தேர்தல்களைச் சந்தித்த ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதி. நான் எடுத்த முடிவுகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை. இது எனது தொகுதி வாக்காளர்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை.</p><p>இவ்வாறு யஷ்வந்தராயகௌடா வி. பாட்டீல் தெரிவித்தார்.</p><p>யஷ்வந்தராயகௌடா வி. பாட்டீல் தனது ராஜினாமா கடிதத்தை பெங்களூருவில் உள்ள விதான சௌதாவில் சட்டமன்ற துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானியிடம் சமர்ப்பித்தார்.</p><p>இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>]]></content:encoded></item></channel></rss>