<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 25 Aug 2026 19:46:21 +0000</lastBuildDate><item><title>கணவரை கொன்று வீட்டின் அருகே உடலை புதைத்த மனைவி அவரது காதலனுடன் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/woman-lover-held-for-killing-husband-burying-body-near-house-in-faridabad</link><comments>https://www.maalaimalar.com/news/national/woman-lover-held-for-killing-husband-burying-body-near-house-in-faridabad#comments</comments><guid isPermaLink="false">d8ee8943-3cd1-4327-a462-ae35cfbeb952</guid><pubDate>Tue, 25 Aug 2026 17:56:27 +0000</pubDate><atom:updated>2026-08-25T17:56:27.865Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>woman,கணவர்,husband,Faridabad,ஃபரிதாபாத்,பெண்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/owhc8jhk/arrest-.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Image: Arrest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/owhc8jhk/arrest-.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஃபரிதாபாத்தின் மொஜாபாத் கிராமத்தில், கணவரை கொன்று வீட்டின் அருகே உள்ள குழியில் உடலை புதைத்ததாக கூறப்படும் சம்பவத்தில், ஒரு பெண்ணும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகக் <a href="https://www.maalaimalar.com/topic/police">காவல்துறை</a> தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>காவல்துறையின் தகவலின்படி, மொஜாபாத் கிராமத்தில் உள்ள ஒரு குழியில் ஒருவர் மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டிருப்பதாகத் திகாவ் (Tigaon) காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் குழுவினர், கடமை பொறுப்பிலுள்ள நீதிபதி முன்னிலையில் உடலை மீட்டனர்.</p><h2>கொலை வழக்கு பதிவு:</h2><p>உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த தாதாவ் என்பவரும், உயிரிழந்தவரின் சகோதரருமான ராம்பீர் அளித்த புகாரின் பேரில், கொலை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.</p><p>உயிரிழந்தவர் ஹத்ராஸைச் சேர்ந்த ஷியாம்வீர் (42) என்றும், அவர் தனது மனைவியுடன் மொஜாபாத் கிராமத்தில் வசித்து வந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஷியாம்வீரின் மனைவி கேஷவ் மற்றும் அவரது காதலன் எனக் கூறப்படும் உத்தர பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தை சேர்ந்த காமத் ஆகியோர் ஆவர்.</p><p>காவல்துறையின் விசாரணையில், காமத் மொஜாபாத்தில் உள்ள ஷியாம்வீரின் வீட்டில் அவருடன் தங்கியிருந்ததும், கேஷவ்வுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது; இது ஷியாம்வீருக்குத் தெரியவந்தது. இதனால் ஷியாம்வீருக்கும் அவரது மனைவிக்கும் இடையே மதுபோதையில் தகராறுகள் ஏற்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.</p><h2>அதிர்ச்சி சம்பவம்:</h2><p>ஷியாம்வீரை ஒழித்துக்கட்ட கேஷவ் மற்றும் காமத் ஆகியோர் சதி செய்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்று மாலை, காமத் ஷியாம்வீருக்கு மது அருந்த கொடுத்து, அவர் போதையில் இருந்தபோது, ​​'இன்டர்லாக்கிங் டைல்' (interlocking tile) கல்லை கொண்டு தலையில் தாக்கி அவரை கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>இதற்கிடையில், சத்தம் வெளியே கேட்காமல் இருக்க கேஷவ் வீட்டின் கதவை வெளியில் இருந்து மூடியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சேர்ந்து ஷியாம்வீரின் உடலை வீட்டின் அருகே உள்ள குழியில் மண்ணுக்கு அடியில் புதைத்ததாககாவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>"நாங்கள் குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்," என்று குற்றப்பிரிவு ஏசிபி (ACP) அமன் யாதவ் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>உடையில்தான் கலாச்சாரம் இருக்கிறதா? - கிருத்தி சனோனுக்கு ஆதரவாக களம் இறங்கிய ராகுல் காந்தி! </title><link>https://www.maalaimalar.com/news/national/the-outfit-that-sparked-a-debate-rahul-gandhi-comes-out-in-support-of-kriti-sanon</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-outfit-that-sparked-a-debate-rahul-gandhi-comes-out-in-support-of-kriti-sanon#comments</comments><guid isPermaLink="false">4f11bfdb-35f2-4746-89d3-afe56f1fe34b</guid><pubDate>Tue, 25 Aug 2026 16:39:32 +0000</pubDate><atom:updated>2026-08-25T16:39:32.447Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,கிருத்தி சனோன்,kriti sanon,Kangana Ranaut,கங்கனா ரனாவத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/79j3fyem/New-Project-2026-08-25T220816.108.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உடையில்தான் கலாச்சாரம் இருக்கிறதா? - கிருத்தி சனோனுக்கு ஆதரவாக இறங்கிய ராகுல் காந்தி! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/79j3fyem/New-Project-2026-08-25T220816.108.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா வளர்ச்சி குறித்து பேசும் முக்கிய நாடுகளில் ஒன்று. ஆனால் உண்மையான வளர்ச்சி எதில் என்ற புரிதல் இல்லாததே இங்கு பெரும் சிக்கலாக உள்ளது. </p><p>அந்தவகையில் தற்போது ஒரு கலாச்சாரம் எதில் உள்ளது என்ற அடிப்படை புரிதல் இல்லாமல், வெறும் ஒரு விளம்பரம் பெரும் பேசுபொருளாக உள்ளது. </p><p>நடிகை கிருத்தி சனோன் ரக்ஷா பந்தன் பண்டிகையை மையப்படுத்திய ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் நடிகை கீர்த்தி சனோன் அணிந்திருந்த உடை சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்கும், ட்ரோல்களுக்கும் உள்ளானது. </p><p>பாரம்பரியமிக்க ஒரு பண்டிகைக்கு அவர் அணிந்திருந்த ஆடை தகுதியற்றது என்றும், கலாச்சாரத்தை சீரழிப்பதாகவும் கூறி சிலர் அவரை இணையத்தில் கடுமையாக விமர்சித்தனர். இதில் நடிகை கங்கனா ரனாவத்தும் அடங்குவார். </p><p>இதனைத்தொடர்ந்து அனைத்து விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கிருத்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில்.,</p><p>"பண்டிகையின் சாரம்சம் என்பது நாம் உடுத்தும் உடையில் இல்லை. அந்த பாரம்பரியத்துக்கு நாம் அளிக்கும் அர்த்தம் மற்றும் உணர்வுகளில் தான் எல்லாமே அடங்கியிருக்கிறது.</p><p>ரக்ஷா பந்தன் என்பது பாதுகாப்பைப் பற்றிய ஒரு பிணைப்பு. நானும், என் சகோதரியும் ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக் கொள்கிறோம். ஒரு சகோதரன் இருப்பதால் ஏற்படும் பாதுகாப்பு போலவே எங்களால் ஒருவரை ஒருவர் பாதுகாத்து கொள்ள முடியும் என நம்புகிறோம்.</p><p>பெண்கள் அணியும் ஆடைகளை வைத்து அவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான மரியாதையைக் கணிப்பது சரியல்ல. பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்த போகிறோம்..?</p><p>காலத்திற்கு ஏற்ப பாரம்பரிய உடைகளின் பாணியிலும் மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால், இன்றும் கலாச்சாரத்தின் மீதான மரியாதை என்பது பெண்ணின் ஆடையை வைத்தே அளவிடப்படுகிறது.</p><p>பண்பாடும், பாரம்பரியமும் ஒரு பெண்ணின் மனதில் தான் இருக்கிறதே தவிர, அவளுடைய ஆடையின் நெக்லைனில் அல்ல" என தெரிவித்திருந்தார்.</p><p>இந்நிலையில் நடிகை கிருத்தி சனோனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. கிருத்தி சனோனின் சமூக வலைதளப் பதிவை பகிர்ந்து இதுகுறித்து பேசியுள்ள ராகுல் காந்தி,</p><p>“ஒரு பெண் என்ன அணியவேண்டும், என்ன செய்யவேண்டும், எங்கு செல்லவேண்டும் என்பது அவளுடைய விருப்பம். </p><p>அவர்கள் (பெண்கள்) அவர்களுடைய சுதந்திரத்தை பயன்படுத்துவதை கேலி செய்வதை, கேள்வி கேட்பதை நிறுத்துங்கள்” என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பட்டப்பகலில் தொழிலதிபர் சுட்டுக் கொலை.. ஜார்க்கண்டில் துணிகரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">6ae726e4-6af6-4bcf-ad08-74220d72b60e</guid><pubDate>Tue, 25 Aug 2026 14:22:58 +0000</pubDate><atom:updated>2026-08-25T14:22:58.613Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,துப்பாக்கிச்சூடு,ஜார்க்கண்ட்,shooting,தொழிலதிபர்,businessman</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/sz5ri06x/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தொழிலதிபர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தொழிலதிபர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/sz5ri06x/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்டில் நடுரோட்டில் தொழிலதிபர் <a href="https://www.maalaimalar.com/news/world/indian-businessman-shot-dead-tennessee-liquor-store-robbery-turns-fatal">சுட்டுக்கொல்லப்பட்ட </a>பயங்கரம் அரங்கேறியுள்ளது. </p><p>ஜார்க்கண்ட் மாநிலம் சராய்கேலா கர்சவான் மாவட்டத்தில் சண்டில் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த கொலை நேற்று பிற்பகலில் அரங்கேறியுள்ளது. </p><h2>தாக்குதல் </h2><p>ஜாம்சத்பூரை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் ஹோட்டல் உரிமையாளருமான நிகர் சப்லோக் (33) நெற்று பிற்பகல் 3:00 முதல் 3:30 மணியளவில் அவ்வழியே சொந்த வெளியாக வாகனத்தில் சென்றுகொண்டிருந்ததார்.</p><p>அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். </p><p>தலை மற்றும் உடலில் 4 தோட்டாக்கள் பாய்ந்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.</p><p> அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.</p><h2>விசாரணை</h2><p>சம்பவ இடத்திலிருந்து சுடப்பட்ட 8 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.</p><p>கொலைக்கான காரணம் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதமா, தனிப்பட்ட பகையா அல்லது ரவுடி கும்பல்களின் பணப் பறிப்பு முயற்சியா என்ற கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. சில சந்தேக நபர்களையும் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.</p><p>கடந்த ஜனவரி 13 அன்று இதே பகுதியிலிருந்து தேவாங் காந்தி என்ற தொழிலதிபரின் மகன் கைரவ் காந்தி கடத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.</p><p>தற்போது தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஜாம்ஷெட்பூர் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை.. பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/tarun-tejpal-rape-conviction-supreme-court-orders-surrender-within-two-weeks</link><comments>https://www.maalaimalar.com/news/national/tarun-tejpal-rape-conviction-supreme-court-orders-surrender-within-two-weeks#comments</comments><guid isPermaLink="false">09289345-756e-429c-98c5-75a0fb2ab0ee</guid><pubDate>Tue, 25 Aug 2026 12:38:59 +0000</pubDate><atom:updated>2026-08-25T12:38:59.976Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,Sexual assault,Supreme Court,பத்திரிகையாளர்,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/svbdgcmy/maalai-malar2026-08-06z010yyr6tn-29.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ தருண் தேஜ்பால் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தருண் தேஜ்பால் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/svbdgcmy/maalai-malar2026-08-06z010yyr6tn-29.avif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை</a> வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில், அவர் இரண்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>வழக்கு</h2><p>மூத்த பத்திரிகையாளருமான தருண் தேஜ்பால் 'தெஹல்கா' என்ற பத்திரிகையை நடத்தி வருகிறார். இதன் ஆசிரியராகவும் அவர் இருந்தார்.</p><p>2013 நவம்பர் 7 அன்று நிகழ்வொன்றின்போது கோவாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் லிப்டில் வைத்து தன்னை தருண் தேஜ்பால் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெஹல்கா பத்திரிகையில் பணியாற்றிய இளம் பெண் பத்திரிகையாளர் புகார் அளித்தார்.</p><p>ஆனால் போதிய சான்றுகள் இல்லை எனக் கூறி, சந்தேகத்தின் பலனைத் தருண் தேஜ்பாலுக்கு வழங்கி 2021ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.</p><p>பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.</p> <h2>மேல்முறையீடு</h2><p>இத்தீர்ப்பை எதிர்த்து கோவா காவல் துறையும் அரசுத் தரப்பும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.</p><p>கோவாவுக்கு என்று தனி உயர்நீதிமன்றம் கிடையாது. பம்பாய் உய்ரநீதிமன்றத்தின் கோவா அமர்வு இந்த மேல்முறையீட்டை விசாரித்து வந்தது.</p><h2>தீர்ப்பு</h2><p>இந்த வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்றம் தவறாகக் கையாண்டதாகவும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் வாதிட்டார்.</p><p>கடந்த ஆகஸ்ட் 6 அன்று விசாரணை முடிவில், 2021ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் வழங்கிய விடுதலை உத்தரவை ரத்து செய்த பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கோவா அமர்வு தருண் தேஜ்பால் குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தது.</p><p>மேல்முறையீட்டுக்கு ஏதுவாக தீர்ப்புக்கு தடை விதிக்க தேஜ்பாலின் வழக்கறிஞர் கோரினார்.</p> <h2>உச்சநீதிமன்றம்</h2><p>இதைத்தொடர்ந்து தேஜ்பால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது கோவா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “உச்சநீதிமன்ற விதிகளின்படி ஒரு குற்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட நபர் சரணடைய வேண்டும்” என வாதிட்டார்.</p><p>தருண் தேஜ்பால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “தருண் தேஜ்பாலுக்கு எதிரான தீர்ப்புக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. எனவே, அவரை சரணடையுமாறு கோருவது பொருத்தமானதாக இருக்காது” என்றார்.</p><p>மேலும், தேஜ்பாலுக்கு விவாரணம் அளிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் கொண்டிருந்தால், அவர் சிறைக்குச் செல்ல தயாராக இருப்பதாகவும் கபில் சிபல் தெரிவித்தார்.</p><p>இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், “தருண் தேஜ்பால் முதலில் சரணடைய வேண்டும். அவர் இரண்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்” என்று உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>போர்ஷே இடையே $1.4 பில்லியன் மெகா ஒப்பந்தம்: $373 மில்லியனில் MHP நிறுவனத்தை கைகப்பற்றுகிறது TCS</title><link>https://www.maalaimalar.com/news/national/porsche-tcs-1-4-billion-mega-deal-mhp-acquisition</link><comments>https://www.maalaimalar.com/news/national/porsche-tcs-1-4-billion-mega-deal-mhp-acquisition#comments</comments><guid isPermaLink="false">f4664ffe-1450-4dd0-9fe5-5a978352a241</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:45:08 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:45:08.050Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Porsche,போர்ஷே,TCS,MHP,டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vlg34l8p/tcs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TCS acquires MHP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vlg34l8p/tcs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு விளையாட்டு கார்கள் தயாரிப்பு நிறுவனமான போர்ஷேவின் துணை நிறுவனமான 'MHP மேனேஜ்மென்ட்' அமைப்பைக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்துள்ளது. </p><p>சுமார் $373 மில்லியன் (இந்திய மதிப்பில் தோராயமாக ₹3,100 கோடிக்கும் மேல்) மதிப்பிலான இந்த கையகப்படுத்தல், இரு நிறுவனங்களுக்கும் இடையிலான $1.4 பில்லியன் மதிப்பிலான 5 ஆண்டு கால மூலோபாய கூட்டாண்மையின் ஒரு முக்கிய பகுதியாகும்.</p><h2>வாகனத் <strong>தொழில் மேம்பாடு</strong></h2><p>இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், <a href="https://www.maalaimalar.com/news/national/mandatory-marathi-test-sparks-mumbai-auto-taxi-strike">போர்ஷேவின் </a>பொறியியல், உற்பத்தி, வாடிக்கையாளர் சேவை மற்றும் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தொழில்நுட்ப மாற்றத்தைக் கொண்டு வருவதாகும். மேலும், அடுத்த தலைமுறை வாகனத் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் மென்பொருள் அடிப்படையிலான வாகன தளங்களை உருவாக்க TCS மற்றும் போர்ஷே இணைந்து செயல்படும்.</p><p>MHP நிறுவனம் ஐரோப்பாவில் டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு மற்றும் உற்பத்தி டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய துறைகளில் சிறந்த அனுபவம் கொண்டது. கையகப்படுத்தலுக்குப் பிறகும் MHP தனது சொந்த பெயரிலேயே தனித்து இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நிறுவன தலைவ<strong>ர்களின் கருத்துக்க</strong>ள்</h2><p>TCS தலைமைச் செயல் அதிகாரி கிருதிவாசன் கூறுகையில், AI மற்றும் தரவு அறிவியல் வாகனத் துறையை மறுவரையறை செய்து வரும் வேளையில், TCS-ன் AI திறன்களும் MHP-ன் வாகன ஆலோசனைக் கூர்மையும் இணைந்து போர்ஷே நிறுவனத்தில் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தும் என்றார்.</p><p>போர்ஷே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் மைக்கேல் லைட்டர்ஸ், தனது நிறுவனம் தனது முதன்மை கார்ப்பரேட் இலக்குகளில் கவனம் செலுத்துவதற்காக MHP பங்கு பரிமாற்றத்தை மேற்கொண்டதாகவும், TCS போன்ற ஒரு வலுவான தொழில்நுட்ப பங்காளியைக் கண்டறிந்துள்ளது தங்களின் உலகளாவிய போட்டியை மேலும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.</p><h2>தொழில்துறை <strong>தாக்கம்</strong></h2><p>நெதர்லாந்தில் உள்ள TCS-ன் துணை நிறுவனம் மூலம் இந்த பங்கு கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்குப் பிறகு, அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்குள் இந்த கையகப்படுத்தும் நடவடிக்கை முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உலகளாவிய கூட்டணி மூலம் TCS நிறுவனம் ஐரோப்பிய உற்பத்தி மற்றும் வாகனத் தொழில் சந்தையில் தனது AI மற்றும் தொழில்நுட்ப ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மீன் மார்க்கெட்டுக்கு பிரதமர் மோடி பெயர் சூட்டப்பட்டதால் சர்ச்சை..!</title><link>https://www.maalaimalar.com/news/national/row-erupts-after-surat-fish-market-named-after-pm-modi-he-never-consumed-seafood-is-pure-vegetarian</link><comments>https://www.maalaimalar.com/news/national/row-erupts-after-surat-fish-market-named-after-pm-modi-he-never-consumed-seafood-is-pure-vegetarian#comments</comments><guid isPermaLink="false">bf779550-7283-4725-a8f5-0a30da339538</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:31:04 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:31:04.764Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/24eebn3v/ModiFishMarket001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நரேந்திர மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/24eebn3v/ModiFishMarket001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலம் சூரத்தில் மாநகராட்சி சார்பில் மிகப்பெரிய மீன் மார்க்கெட் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு முன், ஸ்ரீ நரேந்திர மோடி மொத்த விற்பனை மீன் மார்க்கெட் என்று பெயரிடப்பட்டுள்ளது.</p><p>பிரதமர் மோடி சுத்த சைவம். அவர் மீன் சாப்பிடமாட்டார். அப்படி இருக்கும்போது, சைவ உணவை பின்பற்றும் பிரதமர் மோடி பெயரை வைத்துள்ளது நியாயமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p>நரேந்திர மோடி தனது வாழ்நாளில் ஒருபோதும் கடல் உணவை உட்கொண்டதில்லை. அவர் ஒரு முழுமையான சைவ உணவு உண்பவர். மோடி ஒரு சைவ உணவு உண்பவர் என்பதால், இந்தப் பலகையை வைக்கக்கூடாது என்று மீன் விற்பனையாளர் சுரேந்த்ரா லஷ்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>ஆனால், சூரத் மாநகராட்சி மீன் மார்க்கெட்டிற்கான பெயர் இன்னும் பரிசீலனையில் உள்ளது. பெயர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.</p><p>அதிகாரப்பூர்வமான தீர்மானம் ஏதுமின்றி அந்தப் பலகை வைக்கப்பட்டது. இதுகுறித்து நாங்கள் அவர்களிடம் தெரிவித்தோம். அவர்களே அதை அகற்றிவிடுவதாக வாய்மொழி உறுதியளித்துள்ளனர் என்று எஸ்.எம்.சி. (SMC) மத்திய மண்டலத்தின் செயல் பொறியாளர் ஆர்.டி. கஞ்சவாலா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு - சிஐடிக்கு மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/case-regarding-the-shooting-death-of-three-tamils-by-the-karnataka-forest-department-transferred-to-the-cid</link><comments>https://www.maalaimalar.com/news/national/case-regarding-the-shooting-death-of-three-tamils-by-the-karnataka-forest-department-transferred-to-the-cid#comments</comments><guid isPermaLink="false">59ba20fe-de52-45df-8eb8-dff7da4dbb6e</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:20:19 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:20:19.699Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,தமிழர்கள்,சிஐடி,CID,Tamil Men</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/a1r4mh54/New-Project-2026-08-25T154855.638.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு - சிஐடிக்கு மாற்றம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/a1r4mh54/New-Project-2026-08-25T154855.638.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை, விரிவான விசாரணைக்காக குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் காவேரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். </p><p>இவர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டதாகவும், தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கர்நாடக வனத்துறை தெரிவித்தது.</p><p>ஆனால் இன்று வெளியான மூவரின் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அவர்களின் விலா எலும்புகள் உடைக்கப்பட்டு, கொடூரமான காயங்களுடன் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. </p><p>மேலும் மூன்று பேரும் அருகருகே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. இதனை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் சட்டமன்றத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.</p><p>இந்நிலையில் இந்த வழக்கில் உள்ள தீவிரத்தன்மையை உணர்ந்து, கர்நாடக காவல்துறை விசாரித்து வந்த இந்த வழக்கு, தற்போது சிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மராத்தி மொழித் தேர்வு : மும்பையில் ஆட்டோ, டாக்ஸி போக்குவரத்து ஸ்தம்பித்தது – ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/mandatory-marathi-test-sparks-mumbai-auto-taxi-strike</link><comments>https://www.maalaimalar.com/news/national/mandatory-marathi-test-sparks-mumbai-auto-taxi-strike#comments</comments><guid isPermaLink="false">1a1a990b-da88-4133-981a-7a6e67afc800</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:58:03 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:58:03.711Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,Maharastra,Marathi Language,Taxi Shortage,Auto Strike,Commercial VehicleRules,RTO Checking</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/thkcl915/Mumbai-Auto-Strike" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai Auto Strike ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/thkcl915/Mumbai-Auto-Strike?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பையின்</a> அடையாளமாகத் திகழும் 'காளி-பீலி' டாக்ஸிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு மராத்தி மொழி அறிந்திருப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இதன் காரணமாக பிராந்திய போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நகர் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்த சோதனைகளால் ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதோடு, நகரில் கடுமையான ஆட்டோ, டாக்ஸி தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஓட்டுநர்களின் குற்றச்சாட்டு</h2><p>பயணிகளிடம் பேசத் தேவையான அடிப்படை மராத்தி சொற்களைக் கற்றுக்கொள்ள ஓட்டுநர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. </p><p>ஆனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வாகனங்களை மறித்து சோதனை செய்யும் RTO அதிகாரிகள், தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு மிகவும் கடினமான கேள்விகளைத் தங்களைக் கேட்பதாக ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p>இதனால், பல ஆண்டுகளாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பையில்</a> வசித்து வரும் வடமாநில ஓட்டுநர்கள் மற்றும் படிக்காத முதியவர்கள் இந்தத் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.</p><h2>1,200-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு நோட்டீஸ்</h2><p>ஆகஸ்ட் 20 முதல் தொடங்கப்பட்ட இந்த அதிரடி சோதனையில், இதுவரை 8,217 ஓட்டுநர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இதில், மும்பை பெருநகரப் பகுதியில் மட்டும் 3,995 ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டதில், 604 பேருக்கு மராத்தி பேசத் தெரியவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. </p><p>மாநிலம் தழுவிய அளவில் முதல்கட்ட சோதனையிலேயே 1,268 ஓட்டுநர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்த நோட்டீஸ் பெற்றவர்கள் 1 மாதத்திற்குள் மராத்தி மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். </p><p>தவறினால், அவர்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் எச்சரித்துள்ளார்.</p><h2>ஆட்டோக்கள் தட்டுப்பாடு &amp; 3 நாள் வேலைநிறுத்தம்</h2><p>RTO அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையால் பயந்த பல ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களை இயக்காமல் நிறுத்தியுள்ளனர். </p><p>மேலும், மொழித் தேர்வின் பெயரால் ஓட்டுநர்கள் மிரட்டப்படுவதாகவும், அச்சுறுத்தப்படுவதாகவும் கூறி மும்பையின் கண்டிவாலி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.</p><p>இதன் தொடர்ச்சியாக, திங்கட்கிழமை மாலை முதல் ஆட்டோ ஓட்டுநர்கள் 3 நாட்கள் அதிரடி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் பணிக்குச் செல்லும் பொதுமக்கள், ரெயில்களில் இருந்து இறங்கும் பயணிகள் ஆட்டோ, டாக்ஸி கிடைக்காமல் 45 நிமிடங்களுக்கும் மேலாகக் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.</p><p>ஓலா, உபெர் போன்ற ஆப்-அடிப்படையிலான டாக்ஸிகளுக்கும் இந்த விதி பொருந்துவதால் ஒட்டுமொத்த மும்பையும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.</p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D">தேவேந்திர பட்னாவிஸ்</a> விளக்கம்</p><p>இந்த விவகாரம் குறித்துப் பேசிய <a href="https://www.maalaimalar.com/topic/maharashtra">மகாராஷ்டிர</a> முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், "இங்குள்ள இந்தி பேசும் சகோதரர்களை மராத்தி மொழியில் நிபுணர்களாக்குவது எங்களது நோக்கமல்ல. ஆனால், அவர்களுக்கு மராத்தி மொழியின் அடிப்படை வேலை அறிவு கண்டிப்பாக இருக்க வேண்டும். </p><p>இதற்கான காலக்கெடு ஏற்கனவே மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மொழியின் அடிப்படையில் யாருக்கும் அநீதி இழைக்கப்படுவதை எங்கள் 'மகாயுதி' அரசு அனுமதிக்காது" என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.</p><p>மும்பையில் மராத்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 36% ஆக உள்ள நிலையில், வடமாநிலப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மராத்தி மொழியைக் காக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த புதிய விதிமுறை தற்போது மும்பையை உலுக்கி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மத்தியப் பிரதேசம்: 3400 முத்தம் கொடுத்த காதலி... காதலனுக்கு ரூ.5,500 அபராதம் விதித்த காவல்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-girlfriend-plants-3400-kisses-police-fine-boyfriend-5500</link><comments>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-girlfriend-plants-3400-kisses-police-fine-boyfriend-5500#comments</comments><guid isPermaLink="false">5e97e86a-54d0-4551-8fab-ed9974ef62d0</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:34:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:34:39.513Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Traffic Police,போக்குவரத்து போலீசார்,Gwalior,குவாலியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/gmf63gz9/New-Project-2026-08-25T150417.069.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்தியப் பிரதேசம்: 3400 முத்தம் கொடுத்த காதலி... காதலனுக்கு ரூ.5,500 அபராதம் விதித்த காவல்துறை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/gmf63gz9/New-Project-2026-08-25T150417.069.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தில் காதலியின் முத்தத்தால், காதலன் ரூ.5,500 அபராதம் கட்டிய சம்பவம் இணையதளத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.  </p><p>மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், காதலியின் முத்த அடையாளங்களுடன் வலம் வந்த காரின் உரிமையாளருக்குப் போக்குவரத்துப் போலீஸார் ரூ.5,500 அபராதம் விதித்துள்ளனர். </p><p>மேலும், காரில் இருந்த அனைத்து முத்த அடையாளங்களையும் காதலனையே வைத்து அழிக்கச் சொல்லியுள்ளனர். </p><h2>3,400 லிப்ஸ்டிக் முத்தங்கள்</h2><p>வெளிநாடுகளில் நடக்கும் ஒரு ட்ரெண்டை பார்த்துவிட்டு, ஆதித்யா சிகர்வார் என்ற இளைஞரின் காதலி, அவரின் கார் முழுவதும் 3,400 லிப்ஸ்டிக் முத்த அடையாளங்களை பதித்துள்ளார். கார் முழுவதும் முத்தங்களை பதிக்க சுமார் 4 மணிநேரம் ஆனதாம். </p><p>உடல் முழுவதும் முத்தம் பதிக்கப்பட்ட காரை எடுத்துக்கொண்டு ஆதித்யா வெளியே சென்றுள்ளார். முத்த தடயங்களால் கார் சென்ற இடமெல்லாம் தனித்து தெரிந்துள்ளது. </p><h2>கார் பறிமுதல்</h2><p>உடனே சாலையில் சென்ற பலர் அதனை வீடியோ, போட்டோக்கள் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த கார் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக அதில் தெரிந்த வாகனப் பதிவு எண்ணைப் பயன்படுத்தி போலீசார் காரின் உரிமையாளரை கண்டறிந்துள்ளனர்.</p><p>மேலும் காரையும் பறிமுதல் செய்து, போக்குவரத்து விதிகளை மீறியதாக (மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், வாகனத்தின் அசல் தோற்றத்தை மாற்றியமைத்ததற்காக) ஆதித்யாவிற்கு ரூ.5,500 அபராதம் விதித்துள்ளனர்.</p><p>தொடர்ந்து ஆதித்யா மன்னிப்புக்கோர காரை கொடுத்த போலீசார், லிப்ஸ்டிக் முத்த தடயங்களை அனைத்தையும் அவரை வைத்தே அழிக்கச் சொல்லியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சீனாவின் ரோபா ராணுவம்: எச்சரித்த காங்கிரஸ்- ராகுல் காந்தியை சுட்டிக்காட்டி பதில் கொடுத்த பா.ஜ.க.</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-mp-warns-of-chinese-robot-army-bjp-fires-rahul-robot-jibe</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-mp-warns-of-chinese-robot-army-bjp-fires-rahul-robot-jibe#comments</comments><guid isPermaLink="false">75de3f33-de01-41e5-a2f5-869a2efe0af7</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:32:02 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:32:02.496Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,Usain Bolt,robot,Humanoid Robot,மனித உருவ ரோபோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/2vwfidfi/ChineseRobo0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீனா ரோபோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/2vwfidfi/ChineseRobo0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உசைன் போல்ட் சாதனையை 100மீ ஓட்டப் பந்தயத்தில் ரோபோ முறியடித்துள்ள நிலையில், சீனா தன் ராணுவத்தில் ரோபோவை இணைக்கக் கூடும் என்று காங்கிரஸ் எம்.பி. எச்சரித்துள்ளார்.</p><p>அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. சமீபத்தில் ரோபாக்களுக்கான சர்வதேச போட்டியை நடத்தியது. இதில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சீனாவின் மனித ரோபா, <a href="https://www.maalaimalar.com/sports/robot-breaks-usain-bolt-record-100m-9-39-seconds">உசைன் போல்ட்</a> சாதனையை முறியடித்தது.</p><p>இந்த நிலையில் மனித ரோபாவை சீனா ராணுவத்தில் ஈடுபடுத்தக் கூடும் என்று காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி எச்சரித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</h2><p>இந்தியா கவனமாக இல்லாவிட்டால், மிக விரைவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) ஒரு ரோபோ சீன ராணுவத்தில் (PLA) போரிட நேரிடலாம். வளர்ந்து வரும் வல்லரசு என்ற ஆரவாரங்கள் இருந்தபோதிலும், தொழில்நுட்பப் போட்டியில் சீனாவுடன் ஒப்பிடுகையில் நாம் உண்மையில் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பதை சீனாவின் பிரமிக்க வைக்கும் மனித உருவ ரோபோக்களின் வளர்ச்சி நமக்கு ஒரு யதார்த்தமான பாடத்தைக் கற்பிக்கக் கூடும். மேலும் இது அதன் வகைகளில் ஒன்று மட்டுமே.</p><p>75 கிரிட்டிக்கல் டெக்னாலாஜியில் 67-ல் அமெரிக்காவை விட சீனா முன்னோக்கி உள்ளது.</p><p>இவ்வாறு மணிஷ் திவாரி பதிவிட்டிருந்தார்.</p><p>இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா பதில் அளிக்கும் வகையில் கூறுகையில் "முதலாவதாக, உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மனநிலையை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். டோக்லாம் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ​​சீனக் கூடாரங்களுக்குள் காணப்பட்டவர்கள் அவர்கள்தான்.</p><p>சீனர்கள் நமது ராணுவத்தை அடித்து வீழ்த்திவிட்டார்கள் என்று ராகுல் காந்தி கூறினார். அவர் ஒரு சீன ரோபோ. அவரது மனநிலையை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்.</p><p>இவ்வாறு பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா பதிலடி கொடுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திரிணாமுல் காங்கிரசில் இருந்து தாவிய 20 எம்.பி.களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-political-shake-up-supreme-court-notice-to-20-tmc-mps-in-anti-defection-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-political-shake-up-supreme-court-notice-to-20-tmc-mps-in-anti-defection-case#comments</comments><guid isPermaLink="false">e1afe23f-62f5-4d10-bec0-5328556e1faa</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:02:34 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:02:34.257Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,Supreme Court,trinamool congress,உச்சநீதிமன்றம்,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/7egx82gt/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம், மம்தா ]]></media:title><media:description type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம், மம்தா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/7egx82gt/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் <a href="https://www.maalaimalar.com/news/national/bjp-insulting-netaji-and-his-legacy-mamata-banerjee-urge-people-to-protest-against">மம்தா பானர்ஜியின்</a> திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. </p><p>இதன்மூலம் மேற்கு வங்கத்தில் முதல் முறை பாஜக ஆட்சி அமைத்துள்ளது. சுவேந்து அதிகாரி முதல்வராக செயல்பட்டு வருகிறார்.</p><p>பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களில் வென்றது. </p><p>இருந்தபோதும் அதில் 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்தனர். எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்களையே சட்டமன்ற எதிர்க்கட்சியாக சட்டமன்ற சபாநாயகர் அங்கீகரித்தார். </p><h2>பிளவு</h2><p>இதனிடையே மத்தியிலும் திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை மாநிலங்களவை எம்பிக்கள் இடையே பிளவு ஏற்பட்டது. 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி என்சிபிஐ என்ற பிராந்திய கட்சியில் இணைந்து பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களின் முடிவை அங்கீகரித்தார்.</p><p>மோடி தலைமையிலான என்டிஏ எம்பிக்கள் கூட்டத்திலும் இந்த 20 பேர் பங்கேற்றனர். இதனிடையே கட்சி மாறிய எம்பிக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திரிணாமுல் காங்கிரசில் மம்தா தலைமையிலான அணி சபாநாயகரை அணுகியது.</p><p>மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி இதுதொடர்பாக சபாநாயகரை அணுகிறார்.</p><h2>கைவிரித்த சபாநாயகர்</h2><p>இந்த 20 எம்பிக்களையும் தகுதிநீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஜூனில் மனு அளித்தும், ஆகஸ்டில் நேரில் சந்தித்தும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டதால், அபிஷேக் பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p>திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 20 மக்களவை எம்பிக்கள் வேறு கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது அல்லது இணைவது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என அவரது மனுவில் தெரிவித்தார்.</p><h2>உச்சநீதிமன்றம் தலையீடு</h2><p>இந்த மனு இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி. மோஹனா ஆகியோர் அடங்கிய <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்சநீதிமன்ற </a>அமர்வில் விசாரணைக்கு வந்தது.</p><p>வழக்கு தொடர்பாகத் தங்களது விளக்கத்தை அளிக்குமாறு 20 எம்பிக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடப்பட்டது.</p><p>இந்த விவாகரத்தில் சபாநாயகரின் காலதாமதத்தை சுட்டிக்காட்டியபோதும் மக்களவை சபாநாயகர் ஒரு அரசியலமைப்புப் பதவி என்பதால் அவருக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது</p><p>சபாநாயகர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சபாநாயகர் ஏற்கனவே இது தொடர்பாக நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: செயற்கைக்கோள் தரவுகளை வெளியிட்டு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/southwest-monsoon-intensifies-again-imd-warning-with-satellite-data</link><comments>https://www.maalaimalar.com/news/national/southwest-monsoon-intensifies-again-imd-warning-with-satellite-data#comments</comments><guid isPermaLink="false">b29bd25e-0b46-4cee-b236-a1b86f06bf0f</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:22:01 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:22:01.032Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய வானிலை ஆய்வு மையம்,India Meteorological Department,Southwest Monsoon,தென்மேற்கு பருவமழை,delhi,டெல்லி,INSAT-3DS</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/8cfkkrsc/climate.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  India Meteorological Department  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/8cfkkrsc/climate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு <a href="https://www.maalaimalar.com/news/national/flooded-gurugram-again-who-is-to-blame-for-citys-infrastructure-collapse">தென்மேற்கு பருவமழை </a>மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நாட்டின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் திரண்டுள்ள பெரும் மேகக் கூட்டங்களை இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட INSAT-3DS வானிலை செயற்கைக்கோள் துல்லியமாகப் படம்பிடித்து அனுப்பியுள்ளது. இதன் மூலம் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>INSAT-3DS செயற்கைக்கோளின் தெர்மல் அகச்சிவப்பு படங்கள், வங்கக் கடலின் வடபகுதியிலிருந்து தொடங்கி ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் இந்தோ-கங்கைச் சமவெளி வரை பரந்து விரிந்த அடர்ந்த மேகக் கூட்டங்களைக் காட்டுகின்றன. ஆழமான வெப்பச்சலனம் காரணமாக உருவாகியுள்ள இந்த 'கியுமுலோநிம்பஸ்' ரக மேகங்கள், இடி மின்னலுடன் கூடிய மிகக் கனமழையை உருவாக்கும் திறன் கொண்டவை.</p><h2>ம<strong>ழைப்பொழிவு</strong> </h2><p>வரவிருக்கும் இந்த மழைப் பொழிவு நாடு முழுவதும் ஒரே சீராக இருக்காது என்று வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கிழக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகள் அதிக அளவு மழைப்பொழிவைப் பெறவுள்ள நிலையில், நாட்டின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகள் ஒப்பீட்டளவில் குறைவான அல்லது மிதமான மழையையே சந்திக்கும். டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பரவலான புதுமழைக்கான வாய்ப்புகள் நிலவுகின்றன.</p><h2>அணை<strong>களின் நீர்மட்டம் உயர்வு</strong></h2><p>பருவமழையின் இந்த மீட்சி, குறிப்பாக 'காரிஃப்' பருவச் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. நெல், பருத்தி, கரும்பு போன்ற பயிர்களுக்குத் தேவையான நீர் ஆதாரத்தை இது உறுதிசெய்யும். மேலும், மத்திய மற்றும் கிழக்கு இந்திய அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. தொடர் மழை எச்சரிக்கை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>கேரளத்தில் கால் பதிக்கும் த.வெ.க.- மாநில தலைவர் ஆகிறார் நடிகர் தேவன்</title><link>https://www.maalaimalar.com/news/national/tvk-entered-in-kerala-actor-devan-joining</link><comments>https://www.maalaimalar.com/news/national/tvk-entered-in-kerala-actor-devan-joining#comments</comments><guid isPermaLink="false">03219221-93ca-473a-95c9-fb351bc8a654</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:21:29 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:21:29.878Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேவன்,தவெக,விஜய்,vijay,tvk,Devan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/i3uyw1ww/deva.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தமிழக முதலமைச்சர் விஜய்- நடிகர் தேவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக முதலமைச்சர் விஜய்- நடிகர் தேவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/i3uyw1ww/deva.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>செப்டம்பர் 8-ந்தேதியுடன் முடிவடையும் தமிழக சட்டசபை  கூட்டத்தொடருக்கு  பிறகு, 10-ந்தேதிக்கு மேல் சென்னையில் விஜய்யை நேரில் சந்தித்து  பேசிய பிறகே இறுதி முடிவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.</strong></em></p><p>பாரதிய ஜனதா கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய மலையாள திரைப்பட நடிகர் தேவன், முதலமைச்சர்  விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தனக்கு  கேரள மாநிலத் தலைவர் பதவியை வழங்க முன்வந்துள்ளதாக தெரி வித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டை  தளமாக  கொண்ட  <a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க</a>., கட்சி கேரளத்திலும் தனது அரசியலை விரிவாக்கம் செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.</p><p>பா.ஜ.க.வில் சுமார் 5  ஆண்டுகள் இருந்தும் தமக்கு எவ்வித முக்கிய  பொறுப்பும் வழங்கப்படாததால், மக்களுக்கு பங்காற்ற முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாகவே கடந்த ஆகஸ்ட் 16-ந்தேதி அன்று அந்த அமைப்பில் இருந்து விலகியதாக தேவன்  சுட்டிக்காட்டினார். </p><p>தாம் விலகிய தகவலை அறிவித்த மறுநாளே விஜய்யின் அலுவலகத்தில் இருந்து  தம்மைத் தொடர்பு கொண்டு பேச விருப்பம் தெரிவித்ததாகவும், அன்றைய தினமே  த.வெ.க. பிரதிநிதிகள் 2 பேர்  நடிகை பிரியங்காவுடன் சாலக்குடியில் உள்ள தமது இல்லத்திற்கு நேரில் வந்து சுமார் 3  மணி நேரம் விரிவாக ஆலோசனை நடத்தியதாகவும் கூறினார். </p><h2><strong>த.வெ.க.வில் இணைகிறார்</strong></h2><p>அதனைத்தொடர்ந்து  த.வெ.க.வின்  மூத்த தலைவர்கள் கூகுள் மீட் வழியாகவும் மேல்நிலைப் பேச்சுகளை நடத்தினர். இந்த ஆலோசனைகளின் மூலம் தனக்கும் விஜய்க்கும் இடையே எண்ணங்கள், கொள்கைகள் மற்றும் மக்கள் நலப்பணிகளில் ஒரே மாதிரியான பார்வைகள் இருப்பது தெளிவானதாக தேவன் தெரிவித்துள்ளார். எனவே இணைந்து செயல்படுவதில் எவ்விதச் சிக்கலும் இல்லை என்றும், தம்மை கேரள மாநிலத் தலைவராக  பொறுப்பேற்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும்   கூறினார்.</p><p>காங்கிரஸ் கட்சி உள்பட சில உள்ளூர் அமைப்புகளும் தம்மை  தொடர்புகொண்டு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் தாம் அவற்றை ஏற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். </p><h2><strong>விஜய்யுடன் சந்திப்பு</strong> </h2><p>திரைத்துறையில் விஜய்யுடன் 6 திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள தேவன், கேரளம் அரசியலில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பா.ஜ.க., ஆகிய முன்னணி அமைப்புகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக இளைஞர்கள் த.வெ.க.வை ஒரு புதிய மாற்றாகப் பார்க்க  தொடங்கியுள்ள தாக  தெரிவித்தார். செப்டம்பர் 8-ந்தேதியுடன் முடிவடையும் தமிழக சட்டசபை  கூட்டத்தொடருக்கு  பிறகு, 10-ந்தேதிக்கு மேல் சென்னையில் விஜய்யை நேரில் சந்தித்து  பேசிய பிறகே இறுதி முடிவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பீகார் அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவு.. முதலமைச்சர் இல்லம் நோக்கி மாணவர்கள் பேரணியால் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/bpsc-exam-scam-protest-patna-students-march-to-cm-residence-police-use-water-cannons-to-stop-rally</link><comments>https://www.maalaimalar.com/news/national/bpsc-exam-scam-protest-patna-students-march-to-cm-residence-police-use-water-cannons-to-stop-rally#comments</comments><guid isPermaLink="false">848123fc-266d-4032-81e9-d3783883cf80</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:17:26 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:17:26.168Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,மாணவர்கள் போராட்டம்,தேர்வு முறைகேடு,Student protests,exam irregularities</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vpwyz3p4/tn.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vpwyz3p4/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநில அரசு நடத்தும் பிபிஎஸ்சி தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் தலைநகர் பாட்னாவில்  பேரணி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  </p><h2>தேர்வு முறைகேடு </h2><p>நடந்து முடிந்த 70வது பிபிஎஸ்சி தேர்வில் முறைகேடு மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/national/government-to-introduce-exam-irregularities-bill-lok-sabha-today">வினாத்தாள் கசிவு </a>நடந்ததாக குற்றம்சாட்டி மாணவர்கள் காந்தி மைதானத்தில் இருந்து முதல்வர் இல்லம் நோக்கி இன்று தங்கள் பேரணியை தொடங்கினர். </p><p>செல்லும் வழி நெடுகிலும் கோஷங்களை எழுப்பியவண்ணம் சென்ற அவர்கள்  போலீசாரால் போடப்பட்ட தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றனர். </p><p>மாணவர்ளை தடுக்க அங்கு குவிக்கப்பட்ட போலீசார் மற்றும் மத்திய படையினர் முயன்று வருகின்றனர். மாணவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் தடுக்க முயன்றபோதும் அவர்கள் முதலமைச்சர் இல்லத்தை நெருங்கியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. </p><p>முன்னதாக நேற்று போராட்டக்குழு மாணவர்களின் பிரதிநிதிகளிடம் பீகார் என்டிஏ அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதில் தீர்வு  எட்டப்படாததால் இன்று பேரணி நடத்தப்பட்டது. </p><h2>மாணவர்கள் கோரிக்கை</h2><p>மாணவர் தலைவர் சவுரவ் குமார் அரசுடனான பேச்சுவார்த்தை நேர்மறையாக அமைந்ததாகவும் இருப்பினும் தங்கள் கோரிக்கை நிறைவடையும் வரை தங்கள் எதிர்ப்பு செயல்பாடுகளை தொடரப்போவதாகவும் தெரிவித்தார்.</p><p>"நாங்கள் பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரியை சந்திக்க விரும்புகிறோம். இதுவரை எங்களிடம் கீழ்நிலை அதிகாரிகளே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முதல்வரை சந்தித்தால் தான் தீர்வுகிடைக்கும் . </p><p>எங்களுக்கு முதல்வரை சந்திக்க வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்தால் நாங்கள் போராட்டத்தை கைவிட தயார்" எனவும் அவர் குறிப்பிட்டார்.</p> <p>மேலும் " எங்களின் முதன்மை கோரிக்கை முதலமைச்சரை சந்திப்பதுதான். அது சாத்தியப்படவில்லை என்றால் இரண்டாவது பட்சமாக நாங்கள் கல்வி அமைச்சரை சந்திக்க ஒப்புக்கொள்கிறோம். </p><p>ஆனால் இவர்கள் இருவரை தவிர வேறு யாரையும் நாங்கள் சந்திக்க தயாராக இல்லை" எனவும் அவர் தெரிவித்தார்.</p> <h2>அரசின் முன்னெடுப்பு</h2><p>இதனிடையே மாணவர்களின் குறைகளை கேட்டறிய, "வித்யார்தி சாயோக் சிவிர்" (மாணவர் உதவி முகாம்) மாதந்தோறும் நடத்தப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது.</p><p>கல்வி நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் 4 வது செவ்வாய்கிழமை இந்த முகாம்கள் நடத்தப்படும் என்றும் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாணவர்களின் குறைகள் சென்று சேரும் என்றும் முதலமைச்சர் சவுத்ரி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>"மாணவர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய ஒரு இணைய போர்டல் உருவாக்கப்படும். அதில் மாணவர்கள் புகார்களை பதிவு செய்து அது எந்த கட்டத்தில் உள்ளது என்பதை அறியலாம். மேலும் 1100 என்ற உதவி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ சரக்கு ரெயில்கள் இயக்கம்: மத்திய அரசு நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/gandha-express-freight-trains-to-control-onion-prices</link><comments>https://www.maalaimalar.com/news/national/gandha-express-freight-trains-to-control-onion-prices#comments</comments><guid isPermaLink="false">951d76a4-aca2-4ab9-abd4-16e15f95ceb4</guid><pubDate>Tue, 25 Aug 2026 07:22:12 +0000</pubDate><atom:updated>2026-08-25T07:22:12.047Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,Guwahati,கவுகாத்தி,வெங்காய விலை உயர்வு,Kanda Express,Onionprice,கந்தா எக்ஸ்பிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xfpp5p0t/ONION.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanda Express]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xfpp5p0t/ONION.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடெங்கிலும் சமையல் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் சில்லறை விற்பனை விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விலையைக் கட்டுப்படுத்தவும் சந்தையில் விநியோகத்தைச் சீர்செய்யவும் மத்திய அரசு 'கந்தா எக்ஸ்பிரஸ்' சிறப்புச் சரக்கு ரெயில்களை இயக்கத் தொடங்கியுள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.</p><h2>கிடுகி<strong>டுவென உயர்ந்த</strong> வெங்காய விலை</h2><p>கடந்த சில வாரங்களாக நாட்டின் முக்கிய நகரங்களில் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அகில இந்திய அளவில் வெங்காயத்தின் சராசரி சில்லறை விலை கிலோவுக்கு ரூ.42 முதல் ரூ.44 வரை உயர்ந்துள்ள நிலையில், டெல்லியிலும் சென்னையிலும் கிலோ ரூ.58 முதல் ரூ.65 வரை விற்பனை செய்யப்படுகிறது. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/night-time-electric-trains-cancelled-starting-today">மகாராஷ்டிரா</a> உள்ளிட்ட உற்பத்தி மையங்களில் நிலவும் வரத்து குறைவே இந்த விலை உயர்வுக்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.</p><h2><strong>‘கந்தா எக்ஸ்பிரஸ்’ மூலம் ரெயில்களில் மொத்த விநியோகம்</strong></h2><p>விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள அரசு கையிருப்பு மையங்களில் இருந்து ஆயிரக்கணக்கான டன் வெங்காயத்தைச் சிறப்புச் சரக்கு ரெயில்கள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை, மதுரை, டெல்லி, எர்ணாகுளம் மற்றும் கவுகாத்தி ஆகிய முக்கிய நுகர்வு நகரங்களுக்கு இந்த ரெயில்கள் மூலம் வெங்காயம் கொண்டு செல்லப்படுகிறது.</p><h2><strong>மலிவு விலையில் கிடைக்க ஏற்பாடு</strong></h2><p>ரெயில்கள் மூலம் வரும் வெங்காயம் நேரடியாக மொத்த விற்பனைச் சந்தைகளுக்கும் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படும். இதன் மூலம் வெளிச்சந்தையில் செயற்கையாக உருவாக்கப்படும் பற்றாக்குறை தவிர்க்கப்பட்டு, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் மேலும் பல நகரங்களுக்கும் இந்த சேவை விரிவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி லட்டில் நூலா? - தேவஸ்தானம் விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/tirupati-laddu-thread-rumour-devastanam-warning</link><comments>https://www.maalaimalar.com/news/national/tirupati-laddu-thread-rumour-devastanam-warning#comments</comments><guid isPermaLink="false">737f9a62-0a1b-437b-868f-fbab97c799ae</guid><pubDate>Tue, 25 Aug 2026 07:15:41 +0000</pubDate><atom:updated>2026-08-25T07:15:41.302Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பதி,Tirupati,திருப்பதி லட்டு,லட்டு பிரசாதம்,Laddu Rumors,TTD Clarification,Laddu Prasadam,FakeVideoAlert</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/6ob4offp/Tirupati-LadduRumors" width="1500"><media:title type="html"><![CDATA[ Tirupati ]]></media:title><media:description type="html"><![CDATA[ Tirupati LadduRumors]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/6ob4offp/Tirupati-LadduRumors?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருப்பதி ஏழுமலையான் கோவிலில்</a> பக்தர்களுக்கு வழங்கப்படும் உலகப் புகழ்பெற்ற ‘திருப்பதி லட்டு’ பிரசாதத்தில் நூல் இருந்ததாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ முற்றிலும் உண்மைக்கு மாறானது என திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது.</p><p>மேலும், இத்தகைய வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><h2><strong>வதந்தி வீடியோவும் தேவஸ்தான விளக்கமும்</strong></h2><p>சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அதில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாங்கப்பட்ட லட்டு ஒன்றில் நூல் போன்ற பொருள் இருப்பதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் தேவஸ்தான அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில், திருப்பதி தேவஸ்தானத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் லட்டு பிரசாதம் குறித்து பக்தர்களிடையே தவறான எண்ணங்களை உருவாக்கும் விதமாக வீடியோ ஒன்றை உருவாக்கி அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது சரியல்ல. </p><p>பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2><strong>பக்தர்களுக்கு வேண்டுகோள்</strong></h2><p>பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் இத்தகைய போலியான மற்றும் சரிபார்க்கப்படாத வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிரவோ, மற்றவர்களுக்கு அனுப்பவோ வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.</p><p>ஏதேனும் குறைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், அதைச் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைத் தவிர்த்து, உடனடியாக தேவஸ்தான கண்காணிப்புத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு மட்டுமே பக்தர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தெருநாய்கள் கருணைக்கொலை: கேரள அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-street-dogs-mercy-killing-new-guidelines</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-street-dogs-mercy-killing-new-guidelines#comments</comments><guid isPermaLink="false">cf9d8dc5-a34e-4da8-90d0-2d0084f77efc</guid><pubDate>Tue, 25 Aug 2026 07:04:11 +0000</pubDate><atom:updated>2026-08-25T07:04:11.943Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,stray dogs,கேரள அரசு,Rabies,தெருநாய்கள்,Euthanasia of stray dogs,தெருநாய்கள் கருணைக்கொலை,வெறிநாய் கடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/d5wti9hh/STRAY-DOGS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Euthanasia of stray dogs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/d5wti9hh/STRAY-DOGS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரள மாநிலத்தில் தெருநாய்களின் பெருக்கம் மற்றும் வெறிநாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஆபத்தான தெருநாய்களைக் கருணைக்கொலை செய்ய அம்மாநில அரசு முறைப்படி அனுமதி வழங்கி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>கருணைக்<strong>கொலை செய்யப்படுவதற்</strong>கான தகுதிகள்</h2><p>மாநில உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/national/216-tortoises-rescued-from-mumbai-trafficking-rewilded-in-tadoba">கால்நடை பராமரிப்புத் துறை</a> மூலம் செயல்படுத்தப்படும் இந்த நடவடிக்கையில், அனைத்து தெருநாய்களும் கொல்லப்பட மாட்டாது. குணப்படுத்த முடியாத தீவிர நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், வெறிநாய் கடி (Rabies) நோயால் பாதிக்கப்பட்டவை, மற்றும் பொதுமக்களுக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தலாகவும் வன்முறையாகவும் நடந்துகொள்ளும் நாய்கள் மட்டுமே கருணைக்கொலை செய்ய அனுமதிக்கப்படும். </p><p>ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் 'தெருநாய் மேலாண்மைக் குழு' அமைக்கப்படும். இந்த அமைப்பின் தலைவர் மற்றும் தகுதி வாய்ந்த அரசு கால்நடை மருத்துவரின் எழுத்துப்பூர்வப் பரிந்துரைக்குப் பிறகே ஒரு நாயைக் கருணைக்கொலை செய்ய அனுமதி அளிக்கப்படும்.</p><h2>மருத்து<strong>வ முறைகள்</strong> </h2><p>நாய்களைப் பிடிக்கும்போதும், கருணைக்கொலை செய்யும்போதும் எவ்வித கொடூரமான அல்லது வன்முறை முறைகளையும் கையாளக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.</p><p>* துப்பாக்கியால் சுட்டோ, நஞ்சு கொடுத்தோ அல்லது தடியால் அடித்தோ கொல்லக் கண்டிப்பாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>* தகுதிவாய்ந்த கால்நடை மருத்துவர் மூலமாக, நரம்பு வழியே குறிப்பிட்ட மருத்துவ மருந்துகளைச் செலுத்தி மட்டுமே வலியற்ற முறையில் உயிர் பிரிக்கப்பட வேண்டும்.</p><p>* பிற நாய்களின் முன்னிலையில் கருணைக்கொலை நிகழ்வை நடத்தக் கூடாது.</p><p>பிடிக்கப்படும் தெருநாய்கள் உடனடியாகக் கொல்லப்பட மாட்டாது. அவை 2 முதல் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்படும். அந்த நேரத்தில் விலங்கு நல அமைப்புகளோ அல்லது தனிநபர்களோ அந்த நாய்களைத் தத்தெடுக்க விரும்பினால், அவற்றை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்று வளர்க்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை மூலமாக மாநிலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, விலங்கு நல விதிகளையும் முறைப்படி பின்பற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குருக்ராமை மீண்டும் சூழ்ந்த வெள்ளம்: நகரின் உள்கட்டமைப்பு சீர்குலைவுக்கு யார் காரணம்?</title><link>https://www.maalaimalar.com/news/national/flooded-gurugram-again-who-is-to-blame-for-citys-infrastructure-collapse</link><comments>https://www.maalaimalar.com/news/national/flooded-gurugram-again-who-is-to-blame-for-citys-infrastructure-collapse#comments</comments><guid isPermaLink="false">f85763c9-cd77-46fe-abc1-d572cdee2936</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:34:37 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:34:37.276Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>gurugram,Gurugram Floods,Gurugram  municipal,குருக்ராம்,குருக்ராம் கனமழை,பேரிடர் மேலாண்மை வாரியம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/847rt79s/gurugram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gurugram Floods ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/847rt79s/gurugram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாகத் திகழும் குருக்ராம் நகரில், நேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து பிரதான சாலைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நகரம் ஸ்தம்பித்தது.</p><h2>பள்ளிப் பேருந்<strong>துகளில் முடங்கிய குழந்தைக</strong>ள்</h2><p>சுபாஷ் சௌக் மற்றும் சோஹ்னா சாலை ஆகிய பகுதிகளில் நீர் தேங்கியதால், பள்ளிப் பேருந்துகள் நான்கு மணி நேரத்திற்கும் மேலாகச் செல்ல முடியாமல் முடங்கின. உணவு மற்றும் தண்ணீர் வசதியின்றி வாகனங்களுக்குள்ளேயே குழந்தைகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. பெற்றோர்களும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், குழந்தைகளை உடனே மீட்க முடியாமல் தவித்தனர்.</p><h2>Work Fr<strong>om Home அறிவுறுத்தல்</strong></h2><p>நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்ட <a href="https://www.maalaimalar.com/news/national/protests-in-manipur-over-inclusion-of-2-non-muslim-members-in-waqf-board">பேரிடர் மேலாண்மை வாரியம்</a> (DDMA) தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு உடனடியாக வீடுகளில் இருந்தே பணிபுரியும் முறையை அமல்படுத்துமாறு அறிவுறுத்தியது. சாலை சீரமைப்பு மற்றும் வடிகால் அடைப்புகளை நீக்கும் பணிகளைச் சீராக மேற்கொள்ளவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p>குருக்ராம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும்போது எந்த அமைப்பைக் குற்றம் சாட்டுவது என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. நகரின் உள்கட்டமைப்பு ஒரே ஒரு நகராட்சி அமைப்பின் கீழ் செயல்படாமல், பல அரசு நிறுவனங்களிடையே பிரிக்கப்பட்டுள்ளது.</p><p>GMDA: பிரதான நகரக் உள்கட்டமைப்பு, பெரிய வடிகால்கள் மற்றும் முதன்மைச் சாலைகளைப் பராமரிக்கிறது.</p><p>MCG: குடியிருப்புப் பகுதிகள் மற்றும் உள்ளூர் சாலைப் பராமரிப்புப் பொறுப்புகளைக் கொண்டுள்ளது.</p><p>HSVP &amp; HSIIDC: திட்டமிடப்பட்ட துறைகள் மற்றும் தொழிற்பேட்டைப் பகுதிகளின் உள்கட்டமைப்பை நிர்வகிக்கின்றன.</p><p>NHAI &amp; PWD: தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிற முக்கிய இணைப்புச் சாலைகளைப் பராமரிக்கின்றன. </p><h2>ஒருங்கிணை<strong>ப்பு இல்லாததால் ஏற்</strong>படும் பாதிப்புகள்</h2><p>ஒரு சாலை ஒரு அமைப்பின் பராமரிப்பிலும், அதன் அருகிலுள்ள சாக்கடை வடிகால் மற்றொரு அமைப்பின் கட்டுப்பாட்டிலும் இருப்பதால், அவசரக் காலத்தில் துரித நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. ஒரு சில மணி நேர கனமழைக்கே நகரின் ஒட்டுமொத்தப் போக்குவரத்தும் செயலிழப்பது, இந்த அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததையே காட்டுகிறது. "மில்லினியம் சிட்டி" என்று அழைக்கப்படும் குருக்ராம், முறையான வடிகால் வசதியும் ஒருங்கிணைந்த நிர்வாக அமைப்பும் இல்லாததால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் நிலைகுலைந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் மிலாது நபி நாளை அனுசரிப்பு: நபிகளாரின் புகழ்பாடும் ஈத்-ஏ-மீலாத் சிறப்புத் தொகுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/milad-un-nabi-observance-in-india-tomorrow-special-eid-e-milad-feature</link><comments>https://www.maalaimalar.com/news/national/milad-un-nabi-observance-in-india-tomorrow-special-eid-e-milad-feature#comments</comments><guid isPermaLink="false">bb63be1b-1b5f-44e2-905e-ee1658664259</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:41:53 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:41:53.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,நபிகள் நாயகம்,மிலாது நபி,MiladunNabi,EideMilad,Muhammad,ஈத்-ஏ-மீலாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/rlmhxn8k/eid.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  EideMilad  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/rlmhxn8k/eid.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் மிலாது நபி  (ஈத்-ஏ-மீலாத்) திருநாள், இந்தியாவில் நாளை (ஆகஸ்ட் 26) அன்று அனுசரிக்கப்படுகிறது. இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் நிலவு தென்படுவதன் அடிப்படையில் இந்த புனித நாள் தீர்மானிக்கப்படுகிறது. சுன்னி பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ரபி உல் அவ்வல் மாதத்தின் 12-ஆம் நாளிலும், ஷியா பிரிவினர் 17-ஆம் நாளிலும் இந்நிகழ்வைக் குறிக்கின்றனர்.</p><h2>மிலா<strong>து நபி வரலாறு</strong> </h2><p>கி.பி 570-ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் உள்ள புனித மக்கா நகரில் நபிகள் நாயகம் பிறந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. தொடக்க காலத்தில் இந்நாள் அவரது மறைவை நினைவுகூரும் அமைதியான நாளாகவே கருதப்பட்டது. பின்னர் 10 மற்றும் 11-ஆம் நூற்றாண்டுகளில் பாத்திமித் ஆட்சியாளர்களின் காலத்தில், நபிகளாரின் வாழ்க்கை வரலாறு, போதனைகள் மற்றும் இறை வழிபாடுகளை முன்னிறுத்தி பொது நிகழ்வாகக் கொண்டாடத் தொடங்கப்பட்டது. காலப்போக்கில் இது உலகெங்கிலும் உள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/protests-in-manipur-over-inclusion-of-2-non-muslim-members-in-waqf-board">முஸ்லிம்களால்</a> தங்களது ஆன்மீக நெறிமுறைகளைப் புதுப்பிக்கும் சிறப்புமிக்க நாளாக மாறியது.</p><h2>புனித நா<strong>ளின் முக்கியத்து</strong>வம்</h2><p>மிலாது நபி என்பது வெறும் பண்டிகை மட்டுமே அல்லாமல், நபிகள் நாயகம் மனிதகுலத்திற்குப் போதித்த அன்பு, அமைதி, கருணை, நேர்மை மற்றும் சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளை மீண்டும் நினைவுகூரும் புனித நாளாகும். ஏழை எளியவர்களுக்கு உதவுதல், பசித்தோருக்கு உணவளித்தல் மற்றும் மனிதநேயப் பணிகளை மேற்கொள்வது இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.</p><h2>இந்தியாவில் <strong>கொண்டாடப்படும் மு</strong>றைகள்</h2><p>இந்நாளில் மசூதிகள் மற்றும் வீடுகள் மின் விளக்குகளாலும் பசுமை நிறக் கொடிகளாலும் அலங்கரிக்கப்படும். இஸ்லாமிய பெருமக்கள் அதிகாலையிலேயே மசூதிகளுக்குச் சென்று சிறப்புத் தொழுகைகளில் ஈடுபடுவர். நபிகளாரின் புகழைப் பாடும் 'நாத்' பாடல்கள் இசைக்கப்படுவதும், அவரது வரலாற்றுப் போதனைகள் (சீரா) குறித்த சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படுவதும் வழக்கம். பல இடங்களில் அமைதிப் பேரணிகள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் ஆகியவை சிறப்பாக நடத்தப்படும்.</p>]]></content:encoded></item><item><title>நச்சுத்தன்மையுள்ள &apos;ஊமத்தங்காய்&apos; விற்பனை: அமேசான், இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் உணவு உரிமங்கள் தற்காலிக ரத்து!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/toxic-datura-sales-amazon-instamart-bigbasket-licenses-suspended</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/toxic-datura-sales-amazon-instamart-bigbasket-licenses-suspended#comments</comments><guid isPermaLink="false">052bf9cc-2218-4241-8069-ad4598b281ed</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:15:52 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:15:52.162Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,அமேசான்,Amazon,பிக்பாஸ்கெட்,Bigbasket,இன்ஸ்டாமார்ட்,Datura fruit,Instamart,ஊமத்தங்காய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/e9cwinnw/swiggy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Datura fruit ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/e9cwinnw/swiggy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்களை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. மனிதர்கள் உண்பதற்குப் பொருத்தமற்ற, ஆபத்தான 'ஊமத்தங்காய்' மற்றும் அதன் விதைகளை உணவுப் பொருளாகத் தங்களது தளங்களில் காட்சிப்படுத்தி விற்பனை செய்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆபத்தான ஊ<strong>மத்தங்காய்</strong> விற்பனை</h2><p>பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் <a href="https://www.maalaimalar.com/news/national/27-students-fall-ill-after-consuming-mid-day-meal-at-rajasthan-school">உணவு பாதுகாப்புத் துறை</a> அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் மற்றும் விதைகள், FSSAI உணவு பாதுகாப்பு உரிம எண்களுடன் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, இந்த ஆன்லைன் நிறுவனங்களின் சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. ஊமத்தங்காய் உட்கொள்வது மனித உயிருக்குத் தீவிர ஆபத்தை விளைவிக்கும் என்றும், இது கோமா நிலைக்கு அல்லது உயிரிழப்பிற்கு வழிவகுக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><p>இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், அமேசான் நிறுவனம் எந்தவொரு முறையான பதிலும் அளிக்கவில்லை. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனம் விளக்க ஆவணங்களைச் சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரியது. பிக்பாஸ்கெட் நிறுவனம், ஊமத்தங்காய் விற்பனையை ஆன்லைனில் உடனடியாக நிறுத்திவிட்டதாகவும், இனிவரும் காலங்களில் 'மனித நுகர்வுக்கு உகந்தது அல்ல' என்ற எச்சரிக்கை லேபிளுடன் மட்டுமே மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவித்தது.</p><p>இருப்பினும், இந்நிறுவனங்களின் பதில்கள் திருப்திகரமாக இல்லை எனக் கூறிய உணவு பாதுகாப்புத் துறை, ஆன்லைன் உணவு வணிக உரிமங்களை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், இந்த ஆன்லைன் தளங்களுக்கு ஊமத்தங்காய்களை விநியோகம் செய்த விற்பனையாளர்களின் உரிமங்களும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் பட்டியல்களைத் தங்களது செயலிகளிலிருந்து உடனடியாக நீக்குமாறு அரசு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு - ராஜஸ்தானில் சோகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/27-students-fall-ill-after-consuming-mid-day-meal-at-rajasthan-school</link><comments>https://www.maalaimalar.com/news/national/27-students-fall-ill-after-consuming-mid-day-meal-at-rajasthan-school#comments</comments><guid isPermaLink="false">8c2f36ae-e4f7-4502-aee6-0eef072e52f0</guid><pubDate>Tue, 25 Aug 2026 00:23:28 +0000</pubDate><atom:updated>2026-08-25T00:23:28.166Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,Students,மாணவர்கள்,மதிய உணவு திட்டம்,mid-day meal,ராஜஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/174ka39a/Students-Ill.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Students Ill]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/174ka39a/Students-Ill.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">ராஜஸ்தான்</a> மாநிலத்தின் கோட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட 27 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். </p><p>அதிகாரிகளின் கூற்றுப்படி, உணவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குழந்தைகளுக்கு தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் வாந்தி ஏற்பட்டது. சிகிச்சையை மேற்பார்வையிட மருத்துவ கல்லூரிக்கு வந்த மாவட்டக் கல்வி அதிகாரி (DEO) ரூப் சிங் மீனா, மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க உடனடியாக ஒரு மருத்துவ குழு பள்ளிக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.</p><h2>மருத்துவ குழு அமைப்பு:</h2><p>"சுமார் 27 குழந்தைகள் உடல்நலக்குறைவாகவும், தலைவலியுடனும் இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இவர்களில் 10 முதல் 12 குழந்தைகள் மருத்துவ கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டதை அறிந்ததும், நானும் இங்கு வந்தேன். ஏற்கனவே நான்கு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர், மற்றவர்களை கவனிப்பதற்காக ஒரு மருத்துவ குழு அனுப்பப்பட்டது," என்று மீனா கூறினார்.</p><p>அவர் மேலும் கூறுகையில், "யாருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக அவர்கள் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுவிட்டது, மேலும் அவர்களின் முக்கிய உடல் செயல்பாடுகள் இயல்பாக இருப்பதையும், உடல்நிலை மோசமடையாமல் இருப்பதையும் உறுதிசெய்ய நாங்கள் அவர்களை கண்காணித்து வருகிறோம்," என்றார்.</p><h2>களத்தில் இறங்கிய அமைச்சர்:</h2><p>ராஜஸ்தான் அமைச்சர் மதன் திலாவரும் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்திப்பதற்கும் மருத்துவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் மருத்துவமனைக்கு சென்றார். அனைத்து குழந்தைகளும் தற்போது நலமாகவும் அபாயமின்றியும் இருப்பதாக அவர் உறுதியளித்தார்.</p><p>"தற்போது நான் மருத்துவக் கல்லூரியில் இருக்கிறேன். நான் இப்போதுதான் எல்லா குழந்தைகளையும் சந்தித்தேன், அனைவரும் நலமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வாந்தியும் தலைசுற்றலும் ஏற்பட்டதாக என்னிடம் கூறினார்கள். இப்போது அனைவரும் நலமாக இருக்கிறார்கள்," என்று மதன் திலாவர் செய்தியாளர்களிடம் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தனித்து களம் காணும் பாஜ.க.</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-says-will-contest-all-seats-in-punjab-assembly-polls</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-says-will-contest-all-seats-in-punjab-assembly-polls#comments</comments><guid isPermaLink="false">5e07a772-c040-43c5-b310-114e469fbe84</guid><pubDate>Mon, 24 Aug 2026 21:12:04 +0000</pubDate><atom:updated>2026-08-24T21:12:04.874Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,ஆம் ஆத்மி,AAP,பஞ்சாப் சட்டசபை தேர்தல்,Punjab Assembly Polls</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/h0bc1m1b/BJP.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bjp]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/h0bc1m1b/BJP.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"<a href="https://www.maalaimalar.com/news/national">பஞ்சாப்</a> மாற்றத்திற்கு முழுமையாகத் தயாராக உள்ளது, அதை நனவாக்க பா.ஜ.க.வும் முழுமையாக தயாராக இருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், பஞ்சாபில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளிலும் <a href="https://www.maalaimalar.com/topic/bjp">பா.ஜ.க.</a> போட்டியிட்டு, வெற்றி பெற்ற பிறகு மாநிலத்தில் தனது ஆட்சியை அமைக்கும்," என்று பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் பி.எல். சந்தோஷ் கூறினார்.</p><p>பஞ்சாப் மாநிலத்திற்கு அவர் மேற்கொண்ட இரண்டு நாள் அமைப்பு பயணத்தின் முதல் நாளில், பாட்டியாலாவில் நடைபெற்ற முதல் மண்டலக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.</p><p>நேற்று காலை மொஹாலி விமான நிலையத்தில் பி.எல். சந்தோஷை, மாநில பா.ஜ.க. தலைவர் சர்தார் கேவல் சிங் தில்லன் மற்றும் பஞ்சாப் இணை பொறுப்பாளர் சர்தார் நரேந்திர சிங் ரெய்னா ஆகியோர் வரவேற்றனர்.</p><h2>தேர்தல் ஆயத்த பணிகள்:</h2><p>தனது பயணத்தின் போது சந்தோஷ், பஞ்சாபின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் அமைப்பு பொறுப்பாளர்களுடன் மண்டல கூட்டங்கள் நடத்தி, அமைப்பின் செயல்பாடுகளையும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளையும் ஆய்வு செய்வார்.</p><p>இந்தக் கூட்டங்கள், வாக்குச்சாவடி நிலை வரை அமைப்பை வலுப்படுத்துவதிலும், கட்சியின் கொள்கைகளையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை பஞ்சாப் மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் குறிப்பாக கவனம் செலுத்தும்.</p><p>நேற்று சந்தோஷ் பாட்டியாலா மற்றும் பதிண்டாவில் நடைபெற்ற அமைப்புக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். இன்று (ஆகஸ்ட் 25), லூதியானா, ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸில் மண்டல கூட்டங்கள் நடைபெறும்கின்றன. மாநில பொது செயலாளர்களுடன் தனியாக ஒரு கூட்டமும் அமிர்தசரஸில் நடைபெறும்.</p><h2>வெற்றி பெற முடியாது:</h2><p>"பா.ஜ.க. தனித்து போட்டியிட்டாலும் சரி, யாருடனாவது கூட்டணி அமைத்தாலும் சரி, பஞ்சாபில் அதனால் வெற்றி பெற முடியாது," என மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தெரிவித்தார்.</p><p>"மார்ச் 2022-க்கு முன்பு, எங்கள் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் ஐந்து வாக்குறுதிகளை அளித்தனர். அந்த ஐந்து வாக்குறுதிகளையும் நாங்கள் நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி இருக்கிறோம். </p><p>எனவே, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியுடன் எந்த அரசியல் கட்சியும் போட்டியிட முடியாது. இது ஒரு நேரடி போட்டி, மேலும் 2022-ல் நாங்கள் அடைந்த செயல்திறனை விட சிறப்பாகச் செயல்படுவோம்," என்று அவர் மேலும் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வக்பு வாரிய விவகாரம்: மணிப்பூரில் வலுக்கும் போராட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/protests-in-manipur-over-inclusion-of-2-non-muslim-members-in-waqf-board</link><comments>https://www.maalaimalar.com/news/national/protests-in-manipur-over-inclusion-of-2-non-muslim-members-in-waqf-board#comments</comments><guid isPermaLink="false">cdaaf527-b050-4ff2-9e55-eacd65d369cd</guid><pubDate>Mon, 24 Aug 2026 17:28:32 +0000</pubDate><atom:updated>2026-08-24T17:28:32.180Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Waqf Board,போராட்டம்,manipur,மணிப்பூர்,வக்பு வாரியம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/r8upqi8b/Manipur-Protests.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manipur Protests]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/r8upqi8b/Manipur-Protests.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதிதாக அமைக்கப்பட்ட 8-ஆவது <a href="https://www.maalaimalar.com/news/national">மணிப்பூர்</a> வக்பு வாரிய குழுவில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதை கண்டித்து, மணிப்பூர் முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/protest">போராட்டம்</a> தீவிரமடைந்தது. கடந்த மூன்று நாட்களாக சோரா, லிலோங் மற்றும் க்ஷேத்ரிகாவ் ஆகிய இடங்களில் பேரணிகள் நடைபெற்றன.</p><p>இந்த பேரணி, முதலமைச்சர் யும்னம் கேம்சந்த் சிங்கை மெய்தி பங்கல் சமூக பிரதிநிதிகளை சந்தித்து, வக்பு வாரியத்தின் அமைப்பு குறித்த அவர்களின் கவலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்க வலியுறுத்தி நடத்தப்பட்டது.</p><h2>முதல் பேரணி:</h2><p>மணிப்பூரின் 8-ஆவது வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை சேர்ப்பதற்கு எதிரான கூட்டு குழு (JCAINMM-WB), முஸ்லிம் அமைப்புகள், உள்ளூர் மன்றங்கள் மற்றும் சிவில் சமூக குழுக்களுடன் இணைந்து சமீபத்திய போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. மாநிலம் தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, முதல் பேரணி ஆகஸ்ட் 20 அன்று காக்சிங் மாவட்டத்தின் சோராவில் நடைபெற்றது.</p><p>கூட்டுக் குழு, அஞ்சுமன் நஸ்ருல் இஸ்லாம் சோரா, அனைத்து சோரா கிளப்களின் ஒருங்கிணைப்பு குழு, சோரா, பூண்ட்ரே மற்றும் கீராக் ஆகிய ஜமியத்துல் உலமா கிளைகள் மற்றும் கீராக் மக்கா சமூக நலக் கழகம் ஆகியவை இணைந்து இந்தப் பேரணியை ஏற்பாடு செய்தன.</p><p>முஸ்லிம் அல்லாத இரு உறுப்பினர்களை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பியும் பெருந்திரளான மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.</p><h2>ரத்து செய்ய கோரிக்கை:</h2><p>கூட்டத்தில் உரையாற்றிய ஜமியத்-உல்-உலமா சோரா கிளை தலைவர் எம்.எல். சுல்பிகார் ஆலம் ஷேக், வக்பு வாரியத்தை முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு முக்கியமான நிறுவனம் என்று விவரித்ததோடு, முஸ்லிம் அல்லாத இரு உறுப்பினர்களை சேர்க்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.</p><p>கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க தவறினால், மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்பு தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) புதுப்பிப்பதற்கும் ஷேக் ஆதரவு தெரிவித்தார்.</p><p>கூட்டுக் குழுவின் தலைவர் எம்.வி. அத்தாவுர் ரஹ்மான், முஸ்லிம் அல்லாத இரு உறுப்பினர்களை நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக முஸ்லிம் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.</p>]]></content:encoded></item><item><title>மும்பை கடத்தலில் மீட்கப்பட்ட 216 ஆமைகள் - வனவிலங்கு காப்பகத்தில் மீள்குடியேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/216-tortoises-rescued-from-mumbai-trafficking-rewilded-in-tadoba</link><comments>https://www.maalaimalar.com/news/national/216-tortoises-rescued-from-mumbai-trafficking-rewilded-in-tadoba#comments</comments><guid isPermaLink="false">ca070cb7-6ab6-425c-909e-4472cef185d4</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:33:22 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:33:22.270Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,ஆமை,tortoise,Star Tortoise,நட்சத்திர ஆமை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b90vm5tt/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 216 trafficked star tortoises rescued from Mumbai ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b90vm5tt/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் வனவிலங்கு பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய நடவடிக்கையாக, மும்பை மற்றும் தானே பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 216 இந்திய நட்சத்திர ஆமைகள் தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில் (TATR) பத்திரமாக மீள்குடியேற்றப்பட்டன.</p><p>கடத்தப்பட்ட ஊர்வனவற்றை அவற்றின் இயற்கை வாழ்விடங்களுக்கு மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட வனத்துறை மற்றும் RAWW-இன் பிரத்யேக முயற்சியான, 'திட்டம் ஸ்ட்ரைப்ஸ்' (Project STRIPES - Star Tortoise Repatriation Initiative Protecting Endangered Species) அதிகாரப்பூர்வ தொடக்கத்தை ஒட்டி இந்த மாபெரும் மீள்குடியேற்றம் நடைபெற்றது.</p><p>இதுகுறித்து ரெஸ்கிங்க் வனவிலங்கு நலச் சங்கத்தின் (RAWW) நிறுவனரும், மாநில வனத்துறையின் கௌரவ வனவிலங்கு காப்பாளருமான பவன் சர்மா கூறுகையில், “மும்பை மற்றும் எம்.எம்.ஆர் பகுதிகளில் தொடர்ந்து மீட்கப்பட்டு, கைப்பற்றப்படும் நட்சத்திர ஆமைகளின் தொடர்ச்சியான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p>இதன் மூலம், அவற்றை ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் அறிவியல் பூர்வமாக நிர்வகிக்கப்படும் கட்டமைப்பின் கீழ், குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுவாழ்வு பயிற்சிக்காக அவற்றின் இயற்கை வாழ்விடத்தில் மீண்டும் அறிமுகப்படுத்த முடியும்.</p><p>வனவிலங்கு நிபுணர்கள் மற்றும் மகாராஷ்டிர வனத்துறையின் மும்பை சரகம் மற்றும் RAWW-ஐச் சேர்ந்த பணியாளர்களை உள்ளடக்கிய, 10 பேர் கொண்ட கூட்டுக்குழுவால் இந்த வெற்றிகரமான நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது.</p><p>இந்த முழுப் பணியும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (PCCF) மற்றும் தலைமை வனவிலங்கு பாதுகாவலர் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.</p><p>மேலும், தானே நகரத்தை சேர்ந்த துணை வனப் பாதுகாவலர், தானே உதவி வனப் பாதுகாவலர் மற்றும் வனத்துறையின் பிராந்தியப் பிரிவின் சரக வன அதிகாரி (மும்பை) ஆகியோர் முன்னிலையில் இது மேற்பார்வையிடப்பட்டது.</p><p>சட்டவிரோத வனவிலங்கு கடத்தலுக்கு எதிரான பல்வேறு சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் போதும், மும்பை மற்றும் தானே பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி மீட்பு நடவடிக்கைகளின் போதும் இந்த 216 ஆமைகள் முன்னதாகப் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>இவற்றில் 150 நட்சத்திர ஆமைகள் RAWW-இன் மறுவாழ்வு மற்றும் பராமரிப்பில் இருந்தன. மீதமுள்ளவை, வனத்துறையின் தானே TTC (இடைநிலை சிகிச்சை மையம்), TCPCA, PAWS மற்றும் WWA ஆகியவற்றின் வசம் இருந்தன.</p><p>அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அந்த ஊர்வன RAWW-இன் சிறப்பு வனவிலங்கு ஆம்புலன்ஸ் மூலம் 800 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.</p><p>மெத்தைகள் வைக்கப்பட்ட, காற்றோட்ட வசதியுள்ள வண்டிகளில் அவைகள் கொண்டு செல்லப்பட்டன; அப்போது, அவர்களின் உடல்நலம் மற்றும் நீரேற்ற அளவுகளை கண்காணிப்பதற்காக, போக்குவரத்து குழுவினர் திட்டமிட்டபடி சீரான இடைவெளியில் நிறுத்தங்களை மேற்கொண்டனர்.</p><p>தடோபா காப்பகத்திற்கு வந்தடைந்ததும், அந்த ஆமைகளுக்கு ஒரு விரிவான மருத்துவ மறுபரிசோதனையும், ஓர் இரவு ஓய்வும் அளிக்கப்பட்டது.</p><p>கடுமையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அவற்றின் நீண்டகால இனப்பெருக்க நிலைத்தன்மையை ஆதரிக்கும் வகையில், அறிவியல் பூர்வமாக கணக்கிடப்பட்ட ஆண்-பெண் விகிதத்துடன், அவை தொகுதி தொகுதியாக நியமிக்கப்பட்ட வனப்பகுதிகளில் விடுவிக்கப்பட்டன.</p><p>இந்த வெற்றிகரமான மறுவாழ்வு, வனவிலங்கு குற்றங்களை எதிர்த்துப் போராடுவதிலும், சட்டவிரோத செல்லப்பிராணி வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெற்றிகரமாக மீண்டும் காட்டுக்குள் மீள்குடியேற்றப்படுவதை உறுதி செய்வதிலும் மாநில வனத்துறையின் தீவிரமான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>குப்பை கிடங்கை சீர்படுத்தும் பயோ மைனிங் திட்டத்திற்கு மகாராஷ்டிர அரசு ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/partial-clearance-for-15000-mt-theonar-legacy-waste-biomining-in-maharashtra</link><comments>https://www.maalaimalar.com/news/national/partial-clearance-for-15000-mt-theonar-legacy-waste-biomining-in-maharashtra#comments</comments><guid isPermaLink="false">52b2cc11-b277-4676-9920-151d74fe0653</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:04:51 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:04:51.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,waste management,திடக்கழிவு மேலாண்மை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/jcgcr2a9/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai Waste Management]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/jcgcr2a9/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிர மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தியோனார் பழைய கழிவு உயிரிச் சுரங்கத் திட்டம் செயல்படுவதற்கான பகுதி அனுமதியை வழங்கியுள்ளது.</p><p>இந்த ஒப்புதலானது ஒரு நாளைக்கு 15,000 மெட்ரிக் டன்கள் என்ற அனுமதிக்கப்பட்ட கொள்ளளவிலான உயிரிச் சுரங்கச் செயல்பாடுகளை உள்ளடக்கியது. </p><p>மேலும் இது, தியோனாரில் ஏறத்தாழ 110 ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுக்கும் பெரும் நோக்கத்துடன், சுமார் 185 லட்சம் டன்கள் அளவிலான கழிவுகளை அறிவியல் ரீதியாக சுத்திகரிக்க உள்ளது.</p><p>மும்பையில் தினந்தோறும் சுமார் 7,000 மெட்ரிக் டன்கள் திடக்கழிவுகள் உருவாகின்றன. உயிரிச் சுரங்க செயல்முறையின் மூலம் தேங்கியுள்ள கழிவுகள் பல்வேறு பயனுள்ள மற்றும் எஞ்சிய கூறுகளாகப் பிரிக்கப்படும்.</p><p>இவற்றில் கழிவுவழி எரி பொருள் (RDF), பதப்படுத்தப்பட்ட உரம், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் எஞ்சிய பொருட்கள் ஆகியவை அடங்கும்.</p><p>மீட்கப்பட்ட பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகங்கள், கந்தல் துணிகள் மற்றும் துணி போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சிக்கு அனுப்பப்படும்.</p><p>அதே சமயம் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை சாலைகள் அமைத்தல் பணிகளுக்கும், RDF அலகுகள் அல்லது சிமெண்ட் ஆலைகளுக்கு பணிகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.</p><p>மண் போன்ற துகள்கள் மற்றும் மண் சார்ந்த கூறுகள் நில வடிவமைப்பு, தோட்டக்கலை, சாலை நடுப்பகுதிகள் மற்றும் பசுமைப் பகுதிகளை மேம்படுத்துவதற்கும் இந்த கழிவுகள் பயன்படுத்தப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசு - செப்.5 போராட்டப் பேரணியை அறிவித்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-fails-to-fulfill-promises-cockroach-janata-party-announces-rally-for-september-5</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-fails-to-fulfill-promises-cockroach-janata-party-announces-rally-for-september-5#comments</comments><guid isPermaLink="false">164982ca-3209-4d8c-b9e4-6ad08ed2a0d3</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:55:26 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:55:26.820Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Centre,Protest march,Cockroach Janta Party,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,போராட்டப் பேரணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/fec8oz44/New-Project-2026-08-24T212502.656.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசு - செப்.5 போராட்டப் பேரணியை அறிவித்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/fec8oz44/New-Project-2026-08-24T212502.656.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள இந்திய நுழைவாயிலில் இருந்து டெல்லி காவல்துறை தலைமையகம் வரை, செப்.5ம் தேதி போராட்டப் பேரணி நடத்தவுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.</p><p>ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்படுவதற்கு வழிவகுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி செப்.5ம் தேதி இளைஞர் போராட்டப் பேரணியை அறிவித்துள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.</p><p>இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.,</p><p>“ஜூலை 25 அன்று இந்தியாவின் இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, குறிப்பாக மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெறுவது தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மத்திய அரசை ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ வன்மையாகக் கண்டிக்கிறது.</p><p>அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தொடர்ந்து தாமதம் செய்து வருவதாலும், அவற்றைச் செயல்படுத்தாமல் தவிர்த்து வருவதாலும், அமைதியான முறையில் மக்களைத் திரட்டும் போராட்டத்தை மீண்டும் தொடங்க CJP-யின் தேசிய செயற்குழு முடிவு செய்துள்ளது.</p><p>நீட் (NEET) தேர்வால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காவல் துறையின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தலைமையில், செப்டம்பர் 5 அன்று டெல்லியில் உள்ள இந்தியா நுழைவாயில் முதல் டெல்லி காவல் துறை தலைமையகம் வரை அமைதியான இளைஞர் பேரணியை CJP நடத்தவுள்ளது.</p><p>அரசு தான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். எங்கள் பொறுமையை பலவீனம் என்று தவறாகக் கருதக்கூடாது.” என தெரிவித்துள்ளது.</p><h2>அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன?</h2><p>நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற மூன்று முக்கிய வாக்குறுதிகளை மத்திய அரசிடம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்வைத்தது. </p><p>இதில் தர்மேந்திர பிரதான் பதவி விலகம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற இரண்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற நினைவுறுத்தி இந்த போராட்டப் பேரணியை கரப்பான்பூச்சி கட்சி முன்னெடுக்கிறது. </p>]]></content:encoded></item><item><title>செய்தியாளர் சந்திப்புக்கு நோ சொன்ன இந்தியா... முதலில் ஓகே சொல்லி பின்னர் கதையை மாற்றிய ட்ரம்ப் - ஜி7 மாநாட்டில் நடந்த சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-said-no-to-the-press-conference-trump-initially-agreed-but-later-changed-his-tune-an-incident-at-the-g7-summit</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-said-no-to-the-press-conference-trump-initially-agreed-but-later-changed-his-tune-an-incident-at-the-g7-summit#comments</comments><guid isPermaLink="false">1680b078-630d-411e-b008-81dbc1c5c689</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:20:31 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:20:31.703Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,அமெரிக்கா,pm modi,Press Meet,us,பத்திரிக்கையாளர் சந்திப்பு,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/5jftlav3/New-Project-2026-08-24T195359.627.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செய்தியாளர் சந்திப்புக்கு நோ சொன்ன இந்தியா... முதலில் ஓகே சொல்லி பின்னர் கதையை மாற்றிய ட்ரம்ப் - ஜி7 மாநாட்டில் நடந்த சம்பவம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/5jftlav3/New-Project-2026-08-24T195359.627.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரான்சில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ட்ரம்பின் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பை தவிர்க்குமாறு அமெரிக்காவை இந்தியா கேட்டுக்கொண்டதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.</p><p>ஆரம்பத்தில் டொனால்ட் ட்ரம்ப் இந்த கோரிக்கைக்கு ஓகே சொல்லிவிட்டு பின்னர் கிட்டதட்ட 45 நிமிடங்கள் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். </p><h2>இந்தியாவின் கோரிக்கை</h2><p>மோடி - டிரம்ப் சந்திப்பின் போது ஊடகங்களை அனுமதிக்கலாம், ஆனால் செய்தியாளர்கள் எவ்வித கேள்விகளும் கேட்கக் கூடாது என்ற நிபந்தனையை இந்தியா முன்வைத்துள்ளது.</p><h2>முதலில் ஓகே சொல்லிய ட்ரம்ப் </h2><p>டெல்லியில் நடைபெற்ற ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட செர்ஜியோ கோர் இதுதொடர்பாக பேசியதாவது;</p><p>“செய்தியாளர் சந்திப்புக்கு முன்பு நானும் (செர்ஜியா கோர்), அதிபர் ட்ரம்பும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் இந்தியா எதைப் பற்றி பேசப் போகிறார்கள் என என்னிடம் கேட்டார். நான் சில விவகாரங்கள் குறித்து அவரிடம் தெரிவித்தேன்.</p><p>அவர்களிடம் ஏதேனும் கோரிக்கைகள் உள்ளதா என்று அவர் கேட்டார். வெளியுறவு அமைச்சகம் மட்டும் ஒரு கோரிக்கையை வைத்துள்ளது. ‘ஊடகங்களை முழுமையாக அனுமதிப்போம். ஆனால் செய்தியாளர் சந்திப்பை நடத்தவேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டுள்ளனர் என தெரிவித்தேன்.</p><p>அதற்கு அவர் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களின் முன்னிலையில் இருதலைவர்களின் சந்திப்பும் தொடங்கியது. மோடியும், டிரம்ப்பும் ஒருவருக்கொருவர் எதிரெதிரே அமர்ந்து தங்களது தொடக்க உரைகளை ஆற்றினர். </p><p>ஆனால் ட்ரம்பின் பேச்சு முடிந்த உடன் அவர் கேமராக்களை நோக்கித் திரும்பி, செய்தியாளர்களிடம், "ஏதேனும் கேள்விகள் உள்ளதா?" என்று கேட்டார். அதன் பிறகு அனைத்தும் சுலபமாகிவிட்டது. 45 நிமிட பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லாமே வெளிப்படையாகப் பேசப்பட்டன.” என தெரிவித்தார்.</p><p>இவரின் இந்த தகவல் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. </p><h2>இந்தியா விளக்கம்</h2><p>முக்கிய தலைவர்கள் சந்திக்கும் போது, அவர்களின் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முன்கூட்டியே திட்டமிடுவது ஒரு சாதாரண தூதரக நடைமுறைதான் என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>ஜி7 உச்சி மாநாடு</h2><p>கிழக்கு பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக , ஜூன் 17 அன்று பிரதமர் மோடி, ட்ரம்பை சந்தித்தார். ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல் மீது அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றது. </p><p>இந்த சந்திப்பின்போது இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து மோடி வலியுறுத்தினார். மேலும் இந்த சந்திப்பின் போதுதான் அதிபர் ட்ரம்ப், இந்தியா மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா நிச்சயம் வந்து நிற்கும். ஆனால் அப்போது மோடி பிரதமராக இருந்தால் மட்டுமே, வேறு யாராவது இருந்தால் எங்களுக்கு உறுதியாக தெரியாது என தெரிவித்திருந்தார். </p>]]></content:encoded></item><item><title>ரூ.30,000 கோடி இணையவழி பண மோசடி புகார்: இரண்டு பேரை கைது செய்த அமலாக்கத்துறை</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-30000-crore-online-fraud-case-two-arrested-by-ed</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-30000-crore-online-fraud-case-two-arrested-by-ed#comments</comments><guid isPermaLink="false">cd0b9387-c318-4c96-92a0-99f5afdf3649</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:42:25 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:42:25.220Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Enforcement Directorate,சைபர் மோசடி,cyber fraud,online scam,இணையவழி மோசடி,அமலாக்கத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j5rsucrf/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rs 30,000 Crore Online Fraud]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j5rsucrf/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் தேசிய அளவில் நடந்த இணையவழி பணமோசடி புகாரில், ரூ. 30,000 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்ததாக இரண்டு நபர்களை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.</p><p>கோவாவை சேர்ந்த பெண் ஒருவர் இணையவழி மோசடி நபர்களால் ஏமாற்றப்பட்டு, மே முதல் ஜூன் 2025 வரையிலான காலகட்டத்தில் ரூ.2.60 இழந்ததாக கூறிய புகாரை தொடர்ந்து, ஃபஹீம் மொய்ன் ஹூசைன் சையத் மற்றும் நயீம் முயீன் சையத் ஆகியோர்களை மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.</p><h3><strong>அமலாக்கத்துறை நடவடிக்கை</strong></h3><p>தேசிய அளவில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 300-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த புகார் மற்றும் 150-160 முதல் தகவல் அறிக்கைகளில் (FIR) அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.</p><p>இந்த சைபர் மோசடி கும்பல், ரூ.27,000 கோடி மதிப்பிலான வங்கி பரிவர்த்தனைகளையும், ரூ.3,000 கோடி மதிப்பிலான ரொக்க பரிவர்த்தனைகளையும் செய்திருக்க வாய்ப்புள்ளதாக புகார்கள் எழுந்தன.</p><p>இந்த வழக்கில், அமலாக்கத்துறை கடந்த ஜூலை மாதம் கோவாவிலும் மும்பையிலும் இரண்டு கட்டங்களாக சோதனைகளை நடத்தியது. கடைசியாக ஆகஸ்ட் 21 அன்று நடத்தப்பட்ட சோதனையில், மோசடி நபர்களிடம் இருந்த சுமார் ரூ.3.25 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.</p><p>இணையவழி மோசடி மூலம் பணத்தை இழந்தவர்களின் கணக்குகளை ஆராய்ந்ததில், சம்பந்தப்பட்ட போலி மற்றும் ஏமாற்று நிறுவனங்களில், ஓட்டுநர்களும் ஊழியர்களும் ஒற்றை அறை குடியிருப்புகளில் இயக்குநர்களாக வசித்து வந்தது தெரியவந்தது.</p><h3><strong>கைது செய்யப்பட்டவர்கள்</strong></h3><p>இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஃபஹீம் மொய்ன் மற்றும் நயீம் முயீன் ஆகியோர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பறிக்கப்பட்ட பணம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு, ரொக்கமாக எடுக்கப்பட்டு, பின்னர் இந்திய ரிசர்வ் வங்கியால் உரிமம் பெற்ற பணமாற்று நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு நாணயமாக மாற்றப்பட்டது தெரியவந்தது.</p><p>மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை முகமை, அவர்களை மும்பையில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்ட (PMLA) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.</p><h3><strong>கோவா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்</strong></h3><p>அதனைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கோவாவிற்கு அவர்களை அழைத்துச் செல்வதற்காக, அவர்களின் இடைக்காலக் காவலை அமலாக்கத்துறைக்கு (ED) நீதிமன்றம் ஒப்படைத்தது.</p><p>இதையடுத்து அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க, கோவாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவர்களை அதிகாரிகள் ஆஜர்படுத்த உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வாகனங்களின் ஹெட்லைட்டுக்கான விதிகளை கடுமையாக்கும் மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/govt-to-tighten-vehicle-lighting-rules-low-beam-only-bikes-reduced-headlamp-glare</link><comments>https://www.maalaimalar.com/news/national/govt-to-tighten-vehicle-lighting-rules-low-beam-only-bikes-reduced-headlamp-glare#comments</comments><guid isPermaLink="false">ea8d014a-cda2-4417-8e24-ce97080a4526</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:38:25 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:38:25.834Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/15bvr98s/HeadLight0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாகன ஹெட்லைட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/15bvr98s/HeadLight0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சாலைகளில் இரவு நேர பயணத்தின்போது விபத்துகளை தடுக்கும் வகையில் ஹெட்லைட் முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர மத்திய மோட்டார் வாகனத்துறை முடிவு செய்துள்ளது.</p><p>இருசக்கர வாகனங்களில் உள்ள தானியங்கி முகப்பு விளக்குகள் (automatic headlamps) இனி பாஸிங் பீம் (குறைந்த ஒளி வீச்சு அல்லது Low-beam) முறையில் மட்டுமே செயல்படும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. மேலும், இரவு நேரங்களிலும் மோசமான வானிலையிலும் வாகனங்கள் தெளிவாகத் தெரியும் வகையில், பேருந்துகள் மற்றும் பிற கனரக வாகனங்களில் தரமான பிரதிபலிப்பு டேப்கள் (reflective tapes) பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளது.</p><p>அதேவேளையில், மற்ற வாகன ஓட்டிகளின் பார்வையை மறைக்கும் அல்லது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலான அதிக செறிவு கொண்ட முகப்பு விளக்குகளின் பயன்பாடும் அனைத்து வகையான வாகனங்களிலும் கட்டுப்படுத்தப்படவுள்ளது.</p><p>மத்திய மோட்டார் வாகன விதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பாக சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இம்மாற்றங்களைப் முன்மொழிந்துள்ளது. இந்த புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரவுள்ளன. </p><p>'லோ பீம்' முறையைப் பயன்படுத்துவதன் அவசியத்தை ஓட்டுநர்களுக்கு உணர்த்தவும், அவர்களை அதைப் பின்பற்றச் செய்யவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தராத நிலையில், வாகனத் தரநிலைகளில் இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p>தானியங்கி முகப்பு விளக்கு தொடர்பான இந்த விதிமுறைகள் புதிய இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்குப் பொருந்தாது. தற்போதுள்ள தானியங்கி முகப்பு விளக்கு (AHO) அமைப்பானது, வாகனத்தின் அமைப்பைப் பொறுத்து 'லோ பீம்' அல்லது 'ஹை பீம்' (அதிக ஒளி வீச்சு) ஆகிய இரண்டிலும் செயல்படக்கூடியது. ஆனால், முன்மொழியப்பட்ட புதிய விதியின்படி, இந்த தானியங்கி அமைப்பு செயல்படும்போது முகப்பு விளக்கு 'லோ பீம்' முறையில் மட்டுமே எரிய வேண்டும்.</p><p>அதிக செறிவு கொண்ட முகப்பு விளக்குகளைப் பொறுத்தவரை, இருசக்கர வாகனங்களுக்கான அதிகபட்ச ஒளிச் செறிவு வரம்பு 1.5 லட்சம் கேண்டெலா (cd - ஒளிச் செறிவின் அடிப்படை அலகு) என்பதிலிருந்து 1 லட்சம் cd-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><p>நான்கு சக்கர வாகனங்களுக்கான (கார்கள்) அதிகபட்ச ஒளிச் செறிவு வரம்பு 2.25 லட்சம் cd-லிருந்து 1.5 லட்சம் cd-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><p>ஆய்வுகளின்படி, அதிக வண்ண வெப்பநிலை (colour temperature) கொண்ட முகப்பு விளக்குகள் மற்றும் முன்பக்க மூடுபனி விளக்குகளிலிருந்து (fog lamps) வெளிப்படும் வெண்மையான ஒளி சாலைப் பயனாளர்களுக்குக் கடுமையான கண் கூச்சலையும் (glare), அசௌகரியத்தையும், பார்வைத்திறன் குறைபாட்டையும் ஏற்படுத்துகிறது. இப்பிரச்சினையைச் சரிசெய்ய, அதிகபட்ச வண்ண வெப்பநிலை 6,500 கெல்வின் (K) ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும், மெயின் பீம் (முக்கிய ஒளி வீச்சு) முகப்பு விளக்குகளைப் பொருத்தும் உயரமானது, 'பாஸிங் பீம்' முகப்பு விளக்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட உயரத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தியாவில் இரவு நேர சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றைச் சரிசெய்வதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும். நகர்ப்புறங்களில் ஓட்டுநர்கள் 'ஹை பீம்' முறையில் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்துவதால், எதிரே வரும் வாகன ஓட்டிகளின் பார்வை தற்காலிகமாக மறைக்கப்பட்டு, விபத்து அபாயம் அதிகரிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு என்ன பிரச்சனை? உச்சநீதிமன்றம் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/national/what-is-karnatakas-problem-in-releasing-tamil-nadus-due-water-asks-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/what-is-karnatakas-problem-in-releasing-tamil-nadus-due-water-asks-supreme-court#comments</comments><guid isPermaLink="false">ad064248-68bf-4706-a4b1-98e3dcf66c66</guid><pubDate>Mon, 24 Aug 2026 11:53:47 +0000</pubDate><atom:updated>2026-08-24T11:53:47.386Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,Cauvery Water Issue,காவிரி நதிநீர் பங்கீடு,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/knjkn2aa/CauveryWater0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி நீர் பிரச்சினை- உச்சநீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/knjkn2aa/CauveryWater0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்கக் கூடிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டதில் இவ்வாறு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.</p><p>காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.</p><h2>கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் அளவு எவ்வளவு?</h2><p>அப்போது, தமிழ்நாடு அரசு வாதிடுகையில், "கர்நாடக அணைகளில் 78 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. விகிதாச்சாரப்படி எங்களுக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட தண்ணீர் வந்து விட்டாலும், முந்தைய பற்றாக்குறை நீரை ஈடுசெய்ய போதிய உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை" என வாதிடப்பட்டது.</p><p>கர்நாடக அரசு தரப்பில், "காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நாளை நடைபெற உள்ளது. எங்களை பொறுத்தவரை நீர் பங்கீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை" என வாதிட்டது.</p><p>அப்போது, தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து உரிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு என்ன பிரச்சனை என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. மேலும், தற்போதைய சூழல் குறித்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருதரப்பும் புதிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். கூடுதல் கோரிக்கைகள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடலாம் எனவும் திறக்கப்பட்ட நீர், பெறப்பட்ட நீரின் அளவு பற்றி அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வருகிற 31-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச சந்தை அழுத்தங்களுக்கு இடையே இந்திய ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/reserve-bank-steps-to-support-indian-rupee-amid-forex-volatility</link><comments>https://www.maalaimalar.com/news/national/reserve-bank-steps-to-support-indian-rupee-amid-forex-volatility#comments</comments><guid isPermaLink="false">5bb5950e-285b-4b39-a7c1-e122f09d272d</guid><pubDate>Mon, 24 Aug 2026 11:53:01 +0000</pubDate><atom:updated>2026-08-24T11:53:01.761Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,indian rupee,reserve bank of india,international market,இந்திய ரிசர்வ் வங்கி,சர்வதேச சந்தை,US-Iran War</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7h8a7do2/reserve.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Reserve Bank of India ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7h8a7do2/reserve.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய அந்நிய செலாவணி சந்தையில் பெரும் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. இதன் தாக்கம் இந்திய நிதிச்சந்தையையும் பாதித்துள்ள சூழலில், அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நேரடியாக தலையிட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். </p><p>இன்றைய வர்த்தகத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் பெரும் வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுக்க மத்திய வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.</p><h2>டாலர் விற்ப<strong>னையில் பொதுத்துறை வ</strong>ங்கிகள்</h2><p>அமெரிக்க டாலருக்கு எதிரான <a href="https://www.maalaimalar.com/news/national/withdrawing-the-entire-pf-amount-before-completing-10-years-means-no-pension-epfos-new-rule">இந்திய ரூபாயின்</a> மதிப்பு சற்று சரிவைக் கண்டு 95.6425 என்ற அளவில் குறுகிய வரம்பிற்குள் வர்த்தகமானது. இந்த அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பாக நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகள் அந்நிய செலாவணி சந்தையில் டாலர்களை விற்பனை செய்யத் தொடங்கியதாக சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதன் மூலம் டாலருக்கான தேவையைச் சமாளித்து, ரூபாய் மதிப்பு திடீரென கடுமையான வீழ்ச்சியைச் சந்திப்பதைத் தடுக்க முடிந்துள்ளது.</p><p>மத்திய கிழக்கில் நிலவும் அமைதியின்மை ஒருபுறமிருக்க, இந்திய நிறுவனங்கள் தங்களது எதிர்கால வர்த்தகப் பாதுகாப்பிற்காக பெருமளவில் டாலர்களை வாங்கத் தொடங்கியுள்ளன. ஒரே நேரத்தில் நிறுவனங்களின் இந்த நகர்வும் சர்வதேச காரணியும் இணைந்து ரூபாய் மதிப்பு மீது அழுத்தத்தை ஏற்படுத்தின. இருப்பினும், இந்தியாவின் செலுத்துகைச் சமநிலையை வலுப்படுத்த எடுக்கப்பட்ட கொள்கை ரீதியான நடவடிக்கைகளால் வலுவான அந்நிய செலாவணி வரத்து கிடைத்துள்ளது.</p><h2>ரூபாயி<strong>ன் ஸ்திரத்தன்மை</strong></h2><p>வலுவான அந்நிய செலாவணி கையிருப்பு காரணமாக, ரிசர்வ் வங்கியால் சந்தையில் திறம்பட தலையிட்டு ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த முடிகிறது. சர்வதேச சந்தை கொந்தளிப்புகள் தொடரும் பட்சத்தில், ரூபாயின் மதிப்பில் தேவையில்லாத மாற்றங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க மத்திய வங்கி தனது தலையீட்டைத் தொடர்ந்து நீட்டிக்கும் என்று நிதித்துறை சார்ந்த வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>2036-க்குள் செல்வந்த நுகர்வோரின் எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்குத் தள்ளுகிறது இந்தியா!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-to-overtake-china-in-wealthy-consumers-by-2036</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-to-overtake-china-in-wealthy-consumers-by-2036#comments</comments><guid isPermaLink="false">7794869b-21d6-4a6b-a117-50301a46ba9b</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:53:57 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:53:57.592Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,China,சீனா,அமெரிக்கா,wealthy consumers,Affluent Consumers,செல்வந்த நுகர்வோர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/pgvgu7kr/china.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  wealthy consumers china]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/pgvgu7kr/china.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2036-ஆம் ஆண்டிற்குள் அதிக நுகர்வு திறன் கொண்ட செல்வந்த நுகர்வோரின் எண்ணிக்கையில் இந்தியா சீனாவை விட முந்திச் செல்லும் என்று NielsenIQ மற்றும் World Data Lab இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் இந்திய நுகர்வோரின் பங்கு மிக முக்கியமான நிலையை எட்டும் என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><h2>எண்<strong>ணிக்கை உய</strong>ர்வு </h2><p>தற்போது 2026-ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 2.6 கோடி செல்வந்த நுகர்வோர்கள் உள்ள நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளில் இது 8.2 கோடி அதிகரித்து 10.8 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே காலகட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national/ex-envoy-citizenship-row-navdeep-suri-faces-hurdles-proving-indian-nationality-in-punjab-sir-process">சீனாவின் </a>செல்வந்த நுகர்வோர் எண்ணிக்கை 6.2 கோடி உயர்ந்து 10.3 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சர்வதேச அளவில் அதிக அளவிலான புதிய செல்வந்த நுகர்வோர்களை சேர்க்கும் நாடாக இந்தியா உருவெடுக்கிறது. இருப்பினும், அமெரிக்கா 23.1 கோடி செல்வந்த நுகர்வோர்களுடன் சர்வதேச அளவில் முதலிடத்தில் தொடரும்.</p><h2>நுகர்<strong>வோர் வரம்பு</strong> </h2><p>இந்த அறிக்கையின்படி, ஒரு நாளைக்கு 90 டாலருக்கும் அதிகமாகச் செலவழிப்பவர்கள் 'செல்வந்த நுகர்வோர்' என்று வரையறுக்கப்படுகிறார்கள். இது நபர்களின் வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல், அவர்களின் தினசரி நுகர்வு திறனை அடிப்படையாகக் கொண்ட அளவீடாகும். மேலும், ஒரு நாளைக்கு 13 டாலர் முதல் 90 டாலர் வரை செலவிடும் "மைய நுகர்வோர்கள்"  இந்தியாவில் 2026-இல் 64.9 கோடியாக உள்ளனர். </p><p>உலகளவில் 2036-க்குள் செல்வந்த நுகர்வோரின் மொத்த எண்ணிக்கை 102.5 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், இந்த உயர் நுகர்வுப் பிரிவு பொருளாதாரத்தில் மிகப்பெரிய செலவுத் திறனைக் கட்டுப்படுத்துகிறது.</p><h2>சந்தையின் <strong>புதிய மாற்றங்க</strong>ள்</h2><p>நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை உயர்வு காரணமாக இந்தியாவை ஒரு "அளவு சார்ந்த வளர்ச்சி" கொண்ட சந்தையாக இந்த அறிக்கை வகைப்படுத்துகிறது. நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்து வருவதால், நிறுவனங்கள் தரமான, சொகுசான மற்றும் மதிப்புமிக்க பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிரா அரசு மருத்துவமனை தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் 3 பேர் பலி – 6 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை!</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-amravati-nicu-fire-3-babies-dead-6-critical</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-amravati-nicu-fire-3-babies-dead-6-critical#comments</comments><guid isPermaLink="false">1b34f6fd-6d8b-495d-af69-7dc52c31c7e9</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:47:05 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:47:05.984Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மகாராஷ்டிரா,fire accident,Hospital fire,maharastra CM,Ventilator Explosion,Medical Negligence</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7y6onjqh/Maharastra-Fire-Accident" width="1500"><media:title type="html"><![CDATA[ Maharastra ]]></media:title><media:description type="html"><![CDATA[ Maharastra Fire Accident ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7y6onjqh/Maharastra-Fire-Accident?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/maharashtra">மகாராஷ்டிர </a>மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள மாவட்டப் பெண்கள் அரசு மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தீ விபத்தில்</a>, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பச்சிளம் குழந்தைகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். </p><p>மேலும் 6 குழந்தைகள் மீட்கப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>அதிகாலையில் வெடித்த வென்டிலேட்டர்</h2><p>அமராவதி மாவட்டப் பெண்கள் மருத்துவமனையின் புதிய கட்டடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள 'புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">தீவிர சிகிச்சைப் பிரிவு</a>' (NICU)-ல் இன்று அதிகாலை சுமார் 4:00 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p>அங்கு வைக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவி ஒன்று திடீரென வெடித்ததே தீ விபத்துக்குக் காரணம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடித்த சில நிமிடங்களிலேயே தீ மற்றும் அடர்ந்த புகை அந்தப் பிரிவு முழுவதும் அதிவேகமாகப் பரவியது.</p><h2>3 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி</h2><p>விபத்து நடந்த புதிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">மருத்துவமனை</a>க் கட்டடத்தில் தலா 13 படுக்கைகள் கொண்ட 3 தனித்தனி தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (மொத்தம் 39 படுக்கைகள்) செயல்பட்டு வருகின்றன.</p><p>விபத்து நேரிட்ட குறிப்பிட்ட அந்தப் பிரிவில் மொத்தம் 12 கைக்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தன. தீப்பிடித்த உடனே அங்கு பணியில் இருந்த செவிலியர்களும் மருத்துவப் பணியாளர்களும் துணிச்சலாகச் செயல்பட்டு குழந்தைகளை வெளியேற்ற முயன்றனர்.</p><p>இருப்பினும், அடர்ந்த புகையை சுவாசித்ததால் மூன்று குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் குறைப்பிரசவத்தில் பிறந்த, மிகக் குறைந்த எடையுடைய மற்றும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிஞ்சுகள் ஆவர்.</p><h2>மாற்று மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்ட 6 குழந்தைகள்</h2><p>தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட மற்ற குழந்தைகளில் 6 குழந்தைகள் உடனடியாகத் தீவிர சிகிச்சைக்காக அருகில் உள்ள வேறு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">மருத்துவமனை</a>களுக்கு மாற்றப்பட்டனர். </p><p>சிலர் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கும், மற்றவர்கள் டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.</p><h2>தற்போதைய நிலவரம்</h2><p>மாவட்ட முதன்மை மருத்துவர் டாக்டர் வினோத் பவார் அளித்துள்ள தகவலின்படி, மீட்கப்பட்ட குழந்தைகளில் ஒரு குழந்தையின் கை மற்றும் கால்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அதன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. </p><p>மற்ற மூன்று குழந்தைகளுக்கும் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன, தற்போது அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது.</p><p><strong>7 ஆண்டுகளுக்கு முன்பும் இதே விபத்து</strong></p><p>தற்போது விபத்து நேரிட்ட இந்த புதிய கட்டடத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டு ஒரு வருடம்தான் ஆகிறது. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு இதே மருத்துவமனையின் பழைய கட்டடத்தில் மின் கசிவு ஏற்பட்டு இதேபோன்ற விபத்து ஏற்பட்டது.</p><p>இன்றைய விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.30,000 கோடி சைபர் மோசடி: மும்பையில் இருவரை கைது செய்தது அமலாக்கத்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-30000-crore-cyber-fraud-ed-arrests-two-in-mumbai</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-30000-crore-cyber-fraud-ed-arrests-two-in-mumbai#comments</comments><guid isPermaLink="false">c81fa9a7-d58c-4e9a-bc49-b1ba3b9bc940</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:39:41 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:39:41.801Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Enforcement Directorate,டிஜிட்டல் கைது,சைபர் மோசடி,Digital Arrest,cyber fraud,mumbai,மும்பை,அமலாக்கத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/zs1hqem6/ED.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Enforcement Directorate  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/zs1hqem6/ED.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு தழுவிய அளவில் நடைபெற்ற மிகப்பெரிய டிஜிட்டல் கைது மற்றும் இணையதள நிதி மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை (ED) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. சுமார் 30,000 கோடி ரூபாய் அளவிலான சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய இந்த கும்பலின் பின்னணியை கண்டறியும் முயற்சியில், மும்பையைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.</p><h2>மும்பையி<strong>ல் கைதான இரு</strong>வர்</h2><p>கைது செய்யப்பட்டவர்கள் ஃபஹீம் மொயின் ஹுசைன் சயீத் மற்றும் நயீம் முயீன் சயீத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-lutyens-ministers-bungalows-maintenance-cost-rti-reveals-rs-92-crore-spent-in-2025-26">மும்பை</a>யில் வைத்து கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சிறப்பு PMLA நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கோவா மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் பனாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.</p><h2>ரூ.2.60 கோடி இ<strong>ழப்பால் அம்பலமான கு</strong>ம்பல்</h2><p>கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவரை 'டிஜிட்டல் கைது' செய்வதாக மிரட்டி, 'ரகசிய மேற்பார்வை கணக்குகள்' என்ற பெயரில் 2.60 கோடி ரூபாயை மோசடி கும்பல் பறித்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட விசாரணையில்தான், நாடு முழுவதும் பரந்து விரிந்த இந்த மிகப்பெரிய மோசடி நெட்வொர்க் வெளிச்சத்திற்கு வந்தது.</p><h2>போலி நிறுவ<strong>னங்கள் மூலம் சர்வதேச பரி</strong>வர்த்தனை</h2><p>பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகையை வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்து, பின்னர் ரொக்கமாக திரும்பப் பெற்றுள்ளனர். அந்தப் பணத்தை ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்ற அந்நிய செலாவணி முகவர்கள் மூலம் வெளிநாட்டு பணமாக மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழை ஓட்டுநர்கள் மற்றும் எளிய பணியாளர்களை இயக்குநர்களாகக் காட்டி பல போலி நிறுவனங்களை உருவாக்கி இந்த பணமோசடியை அரங்கேற்றியுள்ளனர்.</p><p>இந்த நெட்வொர்க் மூலம் ரூ.27,000 கோடி வங்கி பரிவர்த்தனைகளும், ரூ.3,000 கோடி ரொக்கப் பரிவர்த்தனைகளும் நடைபெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவான 150-க்கும் மேற்பட்ட எஃப்.ஐ.ஆர் மற்றும் 300-க்கும் மேற்பட்ட புகார்கள் இதனுடன் தொடர்புடையவை. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மும்பை மற்றும் கோவாவில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.3.25 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கர்ப்பமாக இருந்த பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரி மரணம்: புகுந்த வீட்டினர் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-pregnant-officer-death-harassment-allegations</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-pregnant-officer-death-harassment-allegations#comments</comments><guid isPermaLink="false">8eb72ca2-5780-4d20-b24f-4ee7cdc1f515</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:31:35 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:31:35.385Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Harassment,Defence Ministry,Domestic Violence,dwarka,துவாரகா,delhi,டெல்லி,Nazia Khanam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/k9ktotrw/Nazia-Khanam" width="1500"><media:title type="html"><![CDATA[ Nazia Khanam ]]></media:title><media:description type="html"><![CDATA[ Nazia Khanam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/k9ktotrw/Nazia-Khanam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லி </a>துவாரகா பகுதியில் வசித்து வந்த 30 வயதான கர்ப்பிணி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">அரசு உயர் அதிகாரி</a> ஒருவர் அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். </p><p>அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியாரால் அவர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><h2><strong>வழக்கின் பின்னணி</strong></h2><p>பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அதிகாரியாக பணிபுரிந்து வந்த நாஜியா கானம், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி ஆசாம் அலி கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.</p><p> திருமணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் நாஜியா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். திருமணத்திற்குப் பிறகு அவரது கணவர் ஆசாம் அலி கான், மாமியார் சமீன் நிஷா, மாமனார் பாபர் அலி கான் ஆகியோர் தன்னைத் தொடர்ந்து கொடுமைப்படுத்துவதாகவும், வீட்டை விட்டு விரட்டி விடுவதாக கொலை மிரட்டல் விடுப்பதாகவும் நாஜியா தனது குடும்பத்தினரிடம் பலமுறை கூறியுள்ளார்.</p><h2><strong>சம்பவத்தன்று நடந்தது என்ன?</strong></h2><p>கடந்த ஆகஸ்ட் 21 அன்று அதிகாலை 4 மணியளவில், நாஜியா தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. </p><p>ஆனால், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நாஜியாவை கொலை செய்துவிட்டு, அதை தற்கொலை என நாடகமாடுவதாக பெண்ணின் தந்தை தவாப் கான் சந்தேகம் எழுப்பியுள்ளார். </p><p>மேலும் இதற்கு காரணமான கணவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2><strong>கணவரின் விளக்கம்</strong></h2><p>நாஜியாவின் கணவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு நாஜியா அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டதாகவும் கூறியுள்ளார். </p><p>பின்னர் கதவைத் திறந்து பார்த்தபோது அவர் ஜன்னலில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.</p><h2><strong>போலீஸ் விசாரணை</strong></h2><p>நாஜியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. </p><p>மரணத்தில் சந்தேகம் இருப்பதால் பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் பெண்ணின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>இச்சம்பவம் குறித்து <a href="https://www.maalaimalar.com/topic/delhi-police">போலீசார் </a>வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் குடும்பத்தினரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>இமாச்சல பிரதேசம், லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/national/successive-earthquakes-in-ladakh-and-himachal-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/successive-earthquakes-in-ladakh-and-himachal-pradesh#comments</comments><guid isPermaLink="false">2c168b2e-d3da-4440-a7e4-bee964652214</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:54:37 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:54:37.899Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Earthquake,ladakh,இமாச்சல பிரதேசம்,Himachal Pradesh,லடாக்,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/yl11vnlt/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிலநடுக்கம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நிலநடுக்கம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/yl11vnlt/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லடாக் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை அடுத்தடுத்து <a href="https://www.maalaimalar.com/topic/earthquake">நிலநடுக்கம் </a>ஏற்பட்டுள்ளது. </p><h2>லடாக் </h2><p>தேசிய நில அதிர்வு மையம் தகவல்படி,  இன்று காலை 8:25 மணியளவில் லடாக்கின் லே பகுதியில் ரிக்டர் அளவில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவானது. </p><p>இது  பூமிக்கு அடியில் 120 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  இதனால் லே பகுதியில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டன. </p><h2>இமாச்சலப் பிரதேசம்</h2><p>இன்று, லடாக் நிலநடுக்கத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அதிகாலை 3:40 மணியளவில், இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவானது.</p><p>பூமிக்கு அடியில் 8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.</p><h2>முந்தைய நிலநடுக்கம்</h2><p>முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் பிற்பகல் 3:34 மணியளவில் லடாக்கில் லே பகுதியில் இதைவிடச் சற்று வலுவான நிலநடுக்கம் பதிவானது. </p><p>இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 150 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.</p><p>இந்த நிலநடுக்கங்களால் உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவிலான பொருள் சேதங்களோ ஏற்பட்டதாக உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.</p><h2>ஜப்பான் நிலைநடுக்கம்</h2><p>முன்னதாக நேற்று <a href="https://www.maalaimalar.com/news/world/japan-earthquake-59-magnitude-quake-hits-ibaraki-region-near-tokyo-injuring-37-and-disrupting-water-supply-and-traffic">ஜப்பானில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் </a>ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் அதிகாலையில் 5.9 ரிக்டர் அளவில் பதிவானது. தொடர்ந்து பிற்பகலில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.</p><p>இரண்டு நிலநடுக்கங்களையும் சேர்ந்து 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஒரே வீட்டில் கணவருடனும், காதலனுடனும் வாழ்வேன் என அடம்பிடித்த இளம்பெண்</title><link>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-affair</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-affair#comments</comments><guid isPermaLink="false">a04bad1e-7822-43a3-9fa8-25f44f1e50c7</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:38:57 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:38:57.794Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>police,கள்ளக்காதல்,போலீசார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/kf41xp01/Tirupathi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/kf41xp01/Tirupathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப்பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டம், மஹ்மூதாபாத்தை சேர்ந்தவர் சுபம் வர்மா, இவரது மனைவி அஞ்சு. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த நிதின் என்பவருடன் அஞ்சுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. கணவன் இல்லாத நேரத்தில் அஞ்சுவின் வீட்டிற்கு நிதின் அடிக்கடி வந்து சென்றார். </p><h2><strong>கள்ளக்காதல்</strong></h2><p>இந்த விவகாரம் கணவருக்கு தெரிந்ததால் அவர் கண்டித்தார். ஆனால் அஞ்சு கள்ளக்காதலை கைவிடவில்லை. கணவர் எதிர்ப்பை மீறி தனது வீட்டிற்கு கள்ளக்காதலன் நிதினை அழைத்து வந்தார்.</p><h2><strong>தகராறு</strong></h2><p>இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த விவகாரம் தெரிந்த உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சுபம் அங்குள்ள போலீசில் புகார் அளித்தார்.</p><h2><strong>பேச்சுவார்த்தை</strong></h2><p>போலீசார் கணவன்-மனைவி, கள்ளக்காதலன் ஆகியோரை போலீஸ் நிலையம் வரவழைத்தனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சுபம் தனது மனைவி என்னுடன் அல்லது அவரது காதலனுடன் இருக்க வேண்டும். இருவருடன் சேர்ந்து இருக்க முடியாது. வேண்டுமென்றால் நான் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறேன் என கூறினார். ஆனால் அஞ்சு தனது கணவரும் வேண்டும், காதலனும் வேண்டும். இருவருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்றார். இதனை கேட்டதும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.</p><h2><strong>போலீசார்</strong></h2><p>போலீசார் 3 பேரிடமும் தனித்தனியாக பேசினர். இந்த விவகாரத்தில் ஒரு பரஸ்பர உடன்பாட்டிற்கு வர முயன்றனர். ஆனால் நீண்ட விவாதத்திற்குப் பிறகும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. அஞ்சு தன் கணவர் சுபம் மற்றும் காதலன் நிதின் ஆகிய இருவருடனும் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.</p><h2><strong>உடன்பாடு எட்டப்படவில்லை</strong></h2><p>பல மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகும் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து அஞ்சு இருவரும் வேண்டும் என அடம் பிடித்ததால் போலீசார் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>10 ஆண்டுகள் நிறைவடையும் முன் முழு PF பணத்தையும் எடுத்தால் ஓய்வூதியம் வராது - செக் வைத்த EPFO </title><link>https://www.maalaimalar.com/news/national/withdrawing-the-entire-pf-amount-before-completing-10-years-means-no-pension-epfos-new-rule</link><comments>https://www.maalaimalar.com/news/national/withdrawing-the-entire-pf-amount-before-completing-10-years-means-no-pension-epfos-new-rule#comments</comments><guid isPermaLink="false">3423c53a-6b27-47b3-85d8-e5a008b48a31</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:26:11 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:26:11.036Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central govt,Pension,ஓய்வூதியம்,EPFO,வருங்கால வைப்புநிதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/g500j19f/tn-41.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ EPFO]]></media:title><media:description type="html"><![CDATA[ EPFO]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/g500j19f/tn-41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம் பெற தகுதி பெற வேண்டும் என்றால், ஊழியகர்கள் கட்டாயமாக 10 ஆண்டுகள் வரை PF நிதியில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும் என்றும் இடையில் முழு பணத்தை எடுக்க கூடாது என்றும் தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிவுறுத்தியுள்ளது. </p><h2>வைப்பு நிதி</h2><p>தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் குறிப்பிட்ட தொகை, அவர்களின் எதிர்கால தேவைக்காக தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதியில் சேமிக்கப்படுகிறது. அதற்கு ஆண்டுதோறும் வட்டி வழங்கப்படுகிறது.</p><h2>இடைவெளி </h2><p>இந்நிலையில் 10 ஆண்டுகள் நிறைவடையும் முன்பே வைப்பு நிதி பணத்தை முழுமையாக எடுப்பது, ஊழியரின் மொத்த பணிக்காலத்தின் தொடர்ச்சியை பாதிக்கும்.</p><p>இதனால் இடைவெளி ஏற்பட்டு, 10 ஆண்டுகள் கணக்கில் வராமல் போகலாம். </p><p>இறுதியில் ஓய்வுக்குப் பின் மாதாந்திர ஓய்வூதியம் பெறும் தகுதியை உறுப்பினர்கள் இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2>மொத்த பணமும் எடுக்கக்கூடாது</h2><p>எனவே அவசர தேவைகளுக்காக PF நிதியை எடுப்பதற்கு முன், அது எதிர்கால ஓய்வூதியத் தகுதியைப் பாதிக்குமா என்பதை உணர்ந்து உறுப்பினர்கள் முடிவெடுக்க வேண்டும்.</p><p>தங்களின் EPF கணக்கு பதிவுகள் மற்றும் Service recordஐ அவ்வப்போது சரிபார்த்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>வட்டி விகிதம் உயர்வு </h2><p>தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி அமைப்பின் உயரிய அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரியம், ஆண்டுதோறும் வட்டி விகிதத்தை முடிவு செய்கிறது.</p><p>2025-2026 நிதியாண்டுக்கு <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-approves-epf-8-25-percent-interest-rate">8.25 சதவீத வட்டிவிகிதம்</a> வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் இந்த மாதம் அளித்தது.</p><p>இதையடுத்து, மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் உத்தரவுப்படி, 7 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களின் கணக்குகளுக்கு 8.25 சதவீத வட்டி விகிதம் இம்மாதம் வரவு வைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>இதன்மூலம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கு 2023-2024 நிதியாண்டில் இருந்து தொடர்ந்து 3-வது ஆண்டாக 8.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஐகோர்ட், மாவட்ட கோர்ட்டுகளில் மத்திய அரசு வக்கீல்களை நியமிக்க புதிய வழிகாட்டுதல் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/national/new-guidelines-issued-for-the-appointment-of-central-government-counsel-in-high-courts-and-district-courts</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-guidelines-issued-for-the-appointment-of-central-government-counsel-in-high-courts-and-district-courts#comments</comments><guid isPermaLink="false">01514e92-3a06-415e-9c65-109fdaf026ca</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:05:32 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:05:32.695Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central govt,சென்னை ஐகோர்ட்,Supreme Court,Madras HC,சுப்ரீம் கோர்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/jhlrfssp/advocate.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வக்கீல்]]></media:title><media:description type="html"><![CDATA[ வக்கீல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/jhlrfssp/advocate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட், மாவட்ட கோர்ட்டுகளில் மத்திய அரசு சார்பில் ஆஜராகும் வக்கீல்களை நியமனம் செய்வதற்கு மத்திய அரசின் சட்ட அமைச்சகம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.</strong></em></p><h2><strong>அந்த வழிகாட்டுதலில் கூறியிருப்பதாவது:-</strong></h2><p>சுப்ரீம் கோர்ட்டை பொறுத்தமட்டில் மத்திய அரசு சார்பில் ஆஜராகும் வக்கீல்களின் குரூப்-ஏ பட்டியலில் இடம்பெற 5 ஆண்டுகள் சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீலாக பணியாற்றி இருக்க வேண்டும். குரூப்-பி பட்டியலுக்கு 4 ஆண்டுகளும், குரூப்-சி பட்டியலுக்கு 3 ஆண்டுகளும் பணி அனுபவம் இருக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-ஐகோர்ட்">சென்னை ஐகோர்ட்</a> மற்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் நியமிக்கப்படும் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் பதவியை பொறுத்தமட்டில் 10 ஆண்டு அனுபவமும், மத்திய அரசின் மூத்த வக்கீலாக பணியாற்ற 5 ஆண்டுகளும், மத்திய அரசு வக்கீலாக பணியாற்ற 4 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.</p><p>மாவட்ட கோர்ட் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் மத்திய அரசு வக்கீலாக நியமிக்கப்படுபவர்களுக்கு 5 ஆண்டுகளும், கூடுதல் மத்திய அரசு வக்கீலாக நியமிக்கப்படுபவர்களுக்கு 3 ஆண்டுகளும் வக்கீலாக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். இவர்களுக்கு ஒதுக்கப்படும் வழக்குகளை அரசின் முன் அனுமதியின்றி மற்றவர்களுக்கு மாற்றக்கூடாது.</p><p>ஆவணங்களின் ரகசியத்தன்மையை பாதுகாக்க வேண்டும். வழக்கு ஒதுக்கீடு என்பது சட்ட அமைச்சகத்தின் முடிவுக்கு உட்பட்டது. பதவியில் இருந்து விலக விரும்பினால் ஒரு மாதத்திற்கு முன் நோட்டீஸ் வழங்க வேண்டும். அரசின் அறிவுறுத்தல்களை மீறினால் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>12 ஆண்டுகளில் ரூ.547 கோடி.. 2025-26இல் மட்டும் ரூ.92 கோடி - மத்திய அமைச்சர்களின் பங்களாக்கள் பராமரிப்பு செலவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-lutyens-ministers-bungalows-maintenance-cost-rti-reveals-rs-92-crore-spent-in-2025-26</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-lutyens-ministers-bungalows-maintenance-cost-rti-reveals-rs-92-crore-spent-in-2025-26#comments</comments><guid isPermaLink="false">bc5ccff5-0228-465e-87bf-d37685881ee8</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:09:59 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:09:59.534Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Union Minister,ஆர்டிஐ,central government,rti,மத்திய அமைச்சர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/fphp8i08/tn-36.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மத்திய அமைச்சர் பங்களா]]></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய அமைச்சர் பங்களா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/fphp8i08/tn-36.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி  லுட்யன்ஸ் பகுதியில் <a href="https://www.maalaimalar.com/news/national/modi-govt-campus-outreach-ministers-to-visit-universities-daily-under-one-day-one-university-campaign-to-engage-gen-z-students">மத்திய அமைச்சர்களின் </a>அதிகாரப்பூர்வ பங்களாக்கள் அமைந்துள்ளன. இவ்வாற்றை பராமரிக்கவும், புதுப்பிக்கவும் 2025-26 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.92.35 கோடி செலவிடப்பட்டுள்ளது ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. </p><h2>ஆடிஐ</h2><p>தகவல் அறியும் உரிமைச் சட்டமான <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-vacancies-over-823-lakh-posts-lying-vacant-across-ministries-revealed-by-rti-data">ஆடிஐயின் கீழ் எழுப்பப்பட்ட கேள்வி</a>க்கு மத்திய பொதுப்பணித் துறை அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இதற்கான தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>அதன்படி, பராமரிப்பு, புதுப்பிப்பு, பழுதுபார்க்கும் பணிக்காக 2025-26 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.92.35 கோடி செலவிடப்பட்டுள்ளது.</p><p>கடந்த 2014-15 ஆம் நிதியாண்டில் இந்தச் செலவு ரூ.27.47 கோடியாக இருந்த நிலையில், தற்போது அது 3 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.</p> <h2>ஒப்பீடு</h2><p>மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த 2014-15 முதல் 2025-26 வரையிலான 12 நிதியாண்டுகளில் இந்த பங்களாக்களின் பராமரிப்பிற்காக மொத்தம் ரூ.547.68 கோடி செலவிடப்பட்டுள்ளது. </p><p>2014 - 2019 நிதியாண்டில் ரூ.26.78 கோடி, 2019 - 2024 நிதியாண்டில் ரூ.50 கோடி, 2024 - 2025 நிதியாண்டில் ரூ. 71.98 கோடி செலவிடப்பட்டுள்ளது.</p><p>மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சர்களுடன் சேர்த்து சுமார் 70 முதல் 72 அமைச்சர்கள் உள்ளனர்.</p><p>இதன் அடிப்படையில் கணக்கிட்டால், 2025-26 இல் ஒரு அமைச்சரின் பங்களாவிற்குச் சராசரியாக ரூ.1.2 கோடி செலவிடப்பட்டுள்ளது என கணக்கிடலாம்.</p><p>2004 முதல் 2009 வரையிலான 5 ஆண்டுகள் முழுவதும் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் பங்களாக்களுக்கு சேர்த்து மொத்தம் ரூ.93.50 கோடி செலவிடப்பட்டது.</p><p>ஆனால், தற்போது ஒரே ஆண்டில் அமைச்சர்களின் பங்களாக்களுக்கு மட்டும் அந்த அளவிற்கு செலவாகியுள்ளது கவனிக்கத்தக்கது.</p><h2>செலவு அதிகரிக்கக் காரணம் என்ன?</h2><p>லுட்யன்ஸ் பகுதியில் உள்ள இந்த கட்டிடங்கள் பலவும் ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தை சேர்ந்ததாகும்.</p><p>1912 முதல் 1930 காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த பங்களாக்கள் தற்போது 80 முதல் 100 ஆண்டுகள் பழமை நிலைமையை எட்டியுள்ளன.</p><p>நீர் கசிவு, கரையான் அரிப்பு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. பழமையான மின்சார அமைப்புகள் மற்றும் குழாய் அமைப்புகளை பராமக்க வேண்டிய தேவை அடிக்கடி எழுகிறது.</p> <p>சில கட்டிடங்கள் பலவீனமடைந்துள்ளதால் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.</p><p>மின்விசிறிகள், எல்.இ.டி விளக்குகள், குழாய் அமைப்புகளை மாற்றுவது மற்றும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தரையில் பாதிக்கப்பட்டுள்ள டைல்ஸ் மாற்றுவது போன்றவற்றிற்கும் தொடர் செலவுகள் ஏற்படுகின்றன.</p><p>தற்போது வழங்கப்பட்டுள்ள ஆர்டிஐ தரவுகளில் அமைச்சர்களாக இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களா பராமரிப்புச் செலவுகள் சேர்க்கப்படவில்லை.</p>]]></content:encoded></item></channel></rss>