<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 11 Sep 2026 17:03:35 +0000</lastBuildDate><item><title>கைது செய்யப்பட்ட தொண்டர்கள்: காவல் நிலையத்தில் கண்ணீர் விட்ட பாஜக அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/national/up-minister-breaks-down-at-police-station-over-detention-of-bjp-workers</link><comments>https://www.maalaimalar.com/news/national/up-minister-breaks-down-at-police-station-over-detention-of-bjp-workers#comments</comments><guid isPermaLink="false">bf5b8fa6-87a9-4a2b-8c6f-6dc270cd9bcc</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:28:16 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:28:16.521Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,BJP,பாஜக,உத்தர பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m95vwfoc/RakeshRathore001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உ.பி. அமைச்சர் ராகேஷ் ரதோர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m95vwfoc/RakeshRathore001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தர பிரதேச மாநிலம் ரம்பா மஹால் என்ற இடத்தில் ஆக்கிரமிப்பை நீக்குவது தொடர்பாக பாஜக தொண்டர்களுக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இருதரப்பிற்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் பாஜக தொண்டர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.</p><p>கைது செய்தவர்களை சந்திப்பதற்காக உத்தர பிரதேச மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராகேஷ் ரதோர் குரு, தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது கண்ணீர் சிந்தினார்.</p><h2>இந்த சம்பவம் தொடர்பாக ராகேஷ் ரதோர் குரு கூறியதாவது:-</h2><p>ஏதேனும் ஒரு விஷயம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு வர வேண்டிய நிலை எனக்கு ஏற்படுவது என் வாழ்க்கையில்  இதுவே முதல் முறை. உள்ளூர் ரவுடியாக திகழும் முஜிப் அகமது மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஆனால், அவரது கைது செய்யப்பட்டு, அதிகாரிகளுடன் போட்டோ எடுத்துக் கொண்ட பிறகு விடுவிக்கப்பட்டார். ஆனால், பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அமர்வதற்கு இருக்கைகள் கூட வழங்கப்படவில்லை.</p><p>எஸ்.பி. உள்பட அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகளுடன் பேசினேன். நீண்ட நேரம் ரிலீஸ் செய்யும்படி கேட்டுக் கொண்டேன். அவர்கள் உத்தரவாதம் தந்தார்கள் தவிர, ரிலீஸ் செய்யவில்லை. வாக்குவாதத்தின்போது ஏதாவது தவறான வார்த்தைகள் பயன்படுத்தினால், அதற்காக நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இளம் வயதினர் சில சமயங்களில் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தவறலாம்; எனவே, நிர்வாகம் உணர்வுப்பூர்வமாகவும் கனிவுடனும் செயல்பட வேண்டும்.</p><p>எனது தொண்டர்களுக்கு அளிக்கும் மரியாதைக்காகவே நான் இங்கு வந்துள்ளேன். தொண்டர்கள் இல்லையென்றால், பிறகு பாஜக எங்கே இருக்கும்?</p><p>இவ்வாறு அமைச்சர் ராகேஷ் ரதோர் குரு தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பினராயி விஜயன் ஆட்சிக் காலத்தில் அதிக அளவில் தனிப்பட்ட பணியாளர்கள் நியமனம்: வி.டி. சதீசன் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/cm-satheesan-stands-by-claim-787-personal-staff-appointed-during-ldf-govt-tenure</link><comments>https://www.maalaimalar.com/news/national/cm-satheesan-stands-by-claim-787-personal-staff-appointed-during-ldf-govt-tenure#comments</comments><guid isPermaLink="false">cee95759-15f4-4649-823b-bc7455092223</guid><pubDate>Fri, 11 Sep 2026 14:51:38 +0000</pubDate><atom:updated>2026-09-11T14:51:38.458Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பினராயி விஜயன்,Pinarayi Vijayan,VD Satheesan,விடி சதீசன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/oicmjt4y/VDSatheesan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பினராயி விஜயன்- விடி சதீசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/oicmjt4y/VDSatheesan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பினராயி விஜய் ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தனிப்பட்ட பணியாளர் 787 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர் என்று தற்போதை முதலமைச்சர் வி.டி. சதீசன் குறிப்பிட்டிருந்தார். ஆனால், பினராயி விஜய் இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.</p><p>இந்த நிலையில், நான் சொன்னது உண்மை. இந்த உறுதியாக இருக்கிறேன் என்ற வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் சதீசன் கூறியிருப்பதாவது:-</p><p>பெயர்களை மட்டுமல்ல, தனிப்பட்ட பணியாளர்களின் முகவரி உள்பட அனைத்து விவரங்களையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த நியமனம் 2021-ம் ஆண்டில் இருந்து 2026-ம் ஆண்டு வரை நடைபெற்றுள்ளது.</p><h2>முதலமைச்சர் சமூக வலைத்தளங்களுக்காக 12 பேர்</h2><p>முதலமைச்சர் சமூக வலைத்தளங்களை கையாள்வதாக கூடுதலாக 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 22,290 ரூபாயில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மாதத்திற்கு 7 லட்சம் ரூபாய்க்கு மேலும், வருடத்திற்கு 84 லட்சம் ரூபாயும் சமூக வலைத்தளங்களை கையாள்வதற்காக மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது.</p><p>இதை எல்லாம் செய்தவர்கள் தற்போது எங்களது அரசை இழிவுப்படுத்த முயற்சிக்கிறது. எங்களுடைய அரசு குறிப்பிட்ட வரையறையை மீறவில்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான 478 தனிப்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இவ்வாறு சதீசன் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மோதல்களை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை, ராஜந்திரமுமே வழி: புதினிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/russian-president-putin-pm-modi-reiterated-that-dialogue-and-diplomacy-was-the-way-forward-in-resolving-conflicts</link><comments>https://www.maalaimalar.com/news/national/russian-president-putin-pm-modi-reiterated-that-dialogue-and-diplomacy-was-the-way-forward-in-resolving-conflicts#comments</comments><guid isPermaLink="false">cda22d23-20a5-4742-81e6-2ac690cc72d8</guid><pubDate>Fri, 11 Sep 2026 13:11:34 +0000</pubDate><atom:updated>2026-09-11T13:11:34.469Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Putin,புதின்,BRICS,பிரிக்ஸ்,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/n5em7ake/ModiPutin0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய பிரதமர் மோடி- ரஷிய அதிபர் புதின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/n5em7ake/ModiPutin0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்கான ரஷிய அதிபர் புதின் டெல்லி வந்துள்ளார். டெல்லி வந்துள்ள புதினை, இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.</p><p>இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து இந்தயி வெளியுறவுத்துறை அமைச்சம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-</p><p>* ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தையில், மோதல்களைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே வழி என்று பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.</p><h2>அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயார்</h2><p>* ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தையில், உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.</p><p>* அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி மற்றும் திறன் பரிமாற்றம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் விவாதித்தனர்.</p><h2>ரஷியா செல்கிறார் பிரதமர் மோடி</h2><p>* 24-வது இந்தியா- ரஷியா மாநாட்டிற்காக ரஷியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். மேலும் மோடி அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்</p><p>* மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் மற்றும் கருங்கடல் பிராந்தியத்தின் நிலைமை குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் தங்கள் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.</p><p>* BRICS உட்பட பலதரப்புத் துறையில் இந்தியா- ரஷியா ஈடுபாடு குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.</p><p>இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>“நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய முடியும்... ஆனால்’ - முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/if-i-wanted-to-i-could-arrest-jagan-mohan-reddy-in-a-minute-but-chief-minister-chandrababu-naidu</link><comments>https://www.maalaimalar.com/news/national/if-i-wanted-to-i-could-arrest-jagan-mohan-reddy-in-a-minute-but-chief-minister-chandrababu-naidu#comments</comments><guid isPermaLink="false">a7ef767b-fad8-4bff-8ac7-882a4d458b2e</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:16:54 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:16:54.354Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra,cm chandrababu naidu,ஆந்திரா,YS Jagan Mohan Reddy,முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு,ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/s0ml37q6/New-Project-2026-09-11T174015.692.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய முடியும்... ஆனால்’ - முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/s0ml37q6/New-Project-2026-09-11T174015.692.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய முடியும் என்றும், ஆனால் அத்தகைய நடவடிக்கை மக்களுக்கு பயனளிக்காது என்றும் ஆந்திர முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/national/chandrababu-naidu-to-open-rs-900-crore-projects-at-tirupati-seven-hills-temple">சந்திரபாபு நாயுடு</a> தெரிவித்துள்ளார். </p><p>கடந்த ஆட்சியில் அம்மாநில திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை நினைவுக்கூர்ந்த சந்திரபாபு நாயுடு, அது தனது வாழ்வில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திய சம்பவம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நேற்று கோனசீமா மாவட்டம், அம்பாஜிபேட்டா மண்டலத்திலுள்ள பாண்டுவாரிபேட்டா கிராமத்தில் மக்களிடையே உரையாற்றிய அவர்.,</p><p>“ஜெகன் மோகன் ரெட்டியிடம் நான் மென்மையாக நடந்துகொள்வதாக சிலர் என்னை விமர்சிக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், எனக்கு அதிக பொறுமை உண்டு.  </p><p>நான் செய்யும் எதுவாக இருந்தாலும் அது தெலுங்கு மக்களுக்கு நீதியை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும் என்றே எப்போதும் நினைக்கிறேன். </p><p>என் வாழ்நாளில் எனக்கு நடக்கவேக்கூடாது என்று நான் நினைத்த ஒன்று, நான் 53 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவித்தபோது நடந்தது. என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. </p><p>அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் என் மீதான வழக்குகளில் எந்தத் தவறும் இல்லை என்று கண்டறிந்தன. </p><p>ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை முதலமைச்சராக இருந்தபோதே, தனது மகனை பெங்களூருவில் தள்ளி வைத்திருந்தார் என்றும், அவரை ஆந்திரப் பிரதேசத்திற்கு வர அனுமதிக்கவில்லை என்றும் கூறும் உண்மையில் இருந்தே மக்கள் அவருடைய குணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.</p><p>முன்னாள் அமைச்சர் ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்டபோது, ​​நான் முதலமைச்சராகப் பணியாற்றிய போதிலும், அதற்காக என் மீது பழி சுமத்தப்பட்டது. </p><p>ஜெகன் ரெட்டி சொத்துக்காகத் தன் சொந்தத் தாயையும், சகோதரியையும் கூட ஏமாற்றியுள்ளார். இப்படிப்பட்ட ஒரு மனிதருடன் நான் அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.</p><p>என்னால் ஜெகன் மோகன் ரெட்டியை ஒரு நிமிடத்தில் கைது செய்ய முடியும். ஆனால், நான் மாநிலத்தில் எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. </p><p>உண்மை வென்றுவிட்டது. அன்றைய அந்த இருண்ட நாட்களை நினைவுகூர்கையில்... எனக்கு ஆதரவளித்த தெலுங்கு சமூகத்திற்கு மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>பழிவாங்கும் அரசியலை விடுத்து அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் ஆந்திராவை இந்தியாவின் முதன்மை மாநிலமாக கொண்டுவர கடுமையாக உழைத்து வருகிறேன். அடுத்த 25 ஆண்டுகளில் உலகளவில் தெலுங்கு மக்கள்தான் அதிக தனிநபர் வருமானத்தை பெறுவார்கள் என நான் நினைக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.</p><h2>சந்திரபாபு நாயுடு கைது</h2><p>ஆந்திரப் பிரதேச திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில், 2023ம் ஆண்டு செப்.9ம் தேதி ஆந்திராவின் தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அரசால் கைது செய்யப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் முன்னேற்றத்தை ஜீரணிக்க முடியவில்லை: பிரிக்ஸ் குறித்த காங்கிரஸ் எதிர்மறை எண்ணங்களுக்கு பாஜக பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-unable-to-digest-indias-progress-spreading-negativity-over-brics-bjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-unable-to-digest-indias-progress-spreading-negativity-over-brics-bjp#comments</comments><guid isPermaLink="false">e74dc6f8-869b-42b5-beed-93ed966855f6</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:08:51 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:08:51.386Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,BRICS,பிரிக்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/v9sikf7f/BRICSBJPCongresss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரிக்ஸ் மாநாடு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/v9sikf7f/BRICSBJPCongresss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. பிரிக்ஸ் மாநாட்டிற்கு உலக நாட்டின் தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே இந்த பிரிக்ஸ் மாநாட்டில் என்ன லாபம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.</p><p>இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னேற்றத்தை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால்தான் பிரிக்ஸ் மாநாடு தொடர்பாக எதிர்மறையாக கருத்துகளை பரப்பி வருகின்றனர் என்று பாஜக-வின் தேசிய செய்தி தொடர்பான சம்பித் பத்ரா தெரிவித்து்ளளார்.</p><h2>இது தொடர்பாக சம்பித் பத்ரா வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:-</h2><p>2011-12 காலகட்டத்தில் BRIC அமைப்பில் உள்ள `I' (இந்தியா) நிலையற்ற தன்மையை எதிர்கொண்டிருந்த நிலையில், தற்போது இந்தியா BRICS-இன் மிக வலுவான கூட்டாளிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இன்று, உலக அரங்கில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது இடத்தைப் பிடித்துள்ளது.</p><h2>BRICS-ல் வலுவான உறுப்பினராக திகழும் இந்தியா</h2><p>நினைவில் கொள்ளுங்கள், BRICS-இல் உள்ள `I' என்பது இந்தியாவைக் குறிக்கிறது. அந்த `I' இந்தியாவின் 140 கோடி மக்களையும் குறிக்கிறது. நானே இந்தியா. BRICS-இன் மிக வலுவான கூட்டாளிகளில் ஒருவனாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். இன்று, இந்தியாவின் குடிமகனாகவும், BRICS-இன் மிக வலுவான உறுப்பினராகவும் இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.</p><p>இன்று, காங்கிரஸ் கட்சியும் சில எதிர்க்கட்சிகளும் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாடு குறித்து எதிர்மறை எண்ணங்களைப் பரப்பவும், ஒரு எதிர்மறையான சூழலை உருவாக்கவும் முயற்சிக்கின்றன. அவர்களுக்கு ஒரு கண்ணாடியைக் காட்ட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.</p><p>மதிப்பீட்டு அடிப்படையில் 2012-இல் பிரிக் (BRIC) உறுப்பு நாடுகளில் மிகவும் குறைவான ஈர்ப்பைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தது என்பதை கோல்ட்மேன் சாக்ஸ் கட்டுரை தெளிவாகக் கூறுகிறது.</p><p>இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மனோஜ் ஜராங்கேவை யாராவது தொட நினைத்தால்., மகாராஷ்டிரா அரசுக்கு அபிஜீத் தீப்கே எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/dipke-urges-maharashtra-govt-to-talk-to-jarange-warns-against-forcible-intervention</link><comments>https://www.maalaimalar.com/news/national/dipke-urges-maharashtra-govt-to-talk-to-jarange-warns-against-forcible-intervention#comments</comments><guid isPermaLink="false">1257ecd6-59f2-46b7-b903-fba8f806ef8d</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:33:56 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:33:56.664Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மனோஜ் ஜராங்கே பாட்டீல்,மராத்தா இடஒதுக்கீடு,abhijeet dipke,அபிஜீத் தீப்கே,Manoj Jarange</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4u3mvnsv/AbhijeetDipke001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manoj Jarange-  Abhijeet Dipke]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4u3mvnsv/AbhijeetDipke001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உண்ணாவிரத போராட்டம் நடத்தும் ஜராங்கே உடன் மகாராஷ்டிரா அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே வலியுறுத்தியுள்ளார்.</p><h2>மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு</h2><p>மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி மனோஜ் ஜராங்கே கடந்த 14 நாட்களாக ஜால்னா மாவட்டத்தில் உள்ள அந்தவாலி சாரதி என்ற கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அவரை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே சந்தித்தார்.</p><h2>பின்னர் அபிஜீத் ஜராங்கே கூறியதாவது:-</h2><p>மகாராஷ்டிர அரசு மனோஜ் ஜராங்கே உடன் பேச்சுவார்த்தை நடத்தி அவருடைய கோரிக்கையை புரிந்து கொள்ள வேண்டும். அவரை வெளியேற்றும் வகையில் தொடுவதற்கு முயற்சிக்கக் கூடாது. ஏனென்றால், இது மகாராஷ்டிரா. அப்படி தொட்டால் விளைவுகள் ஏற்படும்.</p><p>மகாராஷ்டிரா முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?. அவர்களுடைய குழந்தைகளை படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள். ஏனென்றால், இங்குள்ள பள்ளிகள் அந்த அளவிற்கு தரமானதாக இல்லை.</p><h2>ஜராங்கேவிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்</h2><p>மனோஜ் ஜராங்கேயை நீண்ட காலம் பட்டினி கிடக்க வைக்க அரசு விரும்புகிறதா? நகைச்சுவை நடிகர்களைச் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு நேரம் இருக்கிறது, ஆனால் ஜராங்கேயிடம் பேச யாரும் வரவில்லை.</p><p>சோனம் வாங்சுக்கிடம் நடந்ததைப் போல, மனோஜ் ஜரங்கேவிடமும் அதைச் செய்ய முயற்சிக்கக் கூடாது. இது மகாராஷ்டிரா. இங்கே அது பலிக்காது. யாராவது மனோஜ் ஜரங்கையைத் தொட்டால், ஒட்டுமொத்த மகாராஷ்டிராவும் இங்கு (அந்தர்வாலி சரதிக்கு) திரண்டு வரும்.</p><p>மனோஜ் ஜராங்கேவை அவர்கள் சாக விடப்போகிறார்களா? அரசு, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் இங்கு வந்து மனோஜ் ஜராங்கேவிடம் பேசி, அவரது கோரிக்கைகளைக் கேட்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.  ஏனெனில், அவர் தனக்காக எதையும் கேட்கவில்லை.</p><h2>சிறந்த பள்ளிகள் உள்ள ஒரு கிராமம் உள்ளதா?</h2><p>பிரதமேஷ் தேஷ்முக்கைப் (மகாராஷ்டிரா அரசு நடத்தும் தேர்வுக்காக படித்த தற்கொலை செய்து கொண்ட இளைஞர்) போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்று அரசு விரும்பினால், MPSC மற்றும் மனோஜ் ஜராங்கே எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு அது ஒரு தீர்வைக் காண வேண்டும். அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்க அரசால் இயலாத சூழலில், அவர் இடஒதுக்கீட்டைக் கோருகிறார்.</p><p>மாணவர்களுக்குச் சிறந்த பள்ளிகள், தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் ஒரு கிராமத்தைக் காட்டுங்கள். இத்தகைய வசதிகளைச் செய்து தருவதில் அரசு தோல்வியடைந்துவிட்டது; அதனால்தான் மனோஜ் ஜரங்கே போராடிக்கொண்டிருக்கிறார்.</p><p>இவ்வாறு அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம்: பணம்-காசோலை பரிவர்த்தனை முடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/national/bank-employees-across-country-on-strike-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/bank-employees-across-country-on-strike-today#comments</comments><guid isPermaLink="false">ffba3462-6f41-49a3-8161-dc671496ec7b</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:29:17 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:29:17.537Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central govt,Bank Employees Strike,வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/f2mh6g6g/bank.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ bank strike]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/f2mh6g6g/bank.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பணம், காசோலை பரிவர்த்தனை நாடு முழுவதும் இன்று முடங்கியது.</strong></em></p><p>வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.</p><h2>ஸ்டிரைக்</h2><p>வாரத்தில் 5 நாட்கள் வேலை, அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும், புதிதாக பணிக்குச் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது.</p><p>அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட 7 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.</p><p>இந்தியா முழுவதும் ஒரு லட்சம் வங்கிக் கிளைகளில் பணியாற்றும் 8 லட்சம்  ஊழியர்கள், அதிகாரிகள் பணிக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.</p><h2>தமிழகம்</h2><p>தமிழகத்தில் 18,000 கிளைகள் செயல்படுகின்றன. இதில் பணியாற்றும் 60,000 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர்.</p><p>பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்லாது தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து  கொண்டதால் வங்கி சேவை  முற்றிலும் முடங்கியது.</p><p>வங்கிக் கிளை மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் பெரும்பாலான கிளைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் வங்கிகளில் பணம், காசோலை டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் முழுவதும் நடைபெறவில்லை. </p><p>இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் தங்களது அன்றாட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டன.</p><h2>காசோலை முடங்கியது</h2><p>சென்னையில் உள்ள வங்கிகளில் ஊழியர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன. நுழைவு வாசல்கள் அடைக்கப்பட்டிருந்தன.</p><p>வங்கி ஊழியர்கள் போராட்டத்தால்  இன்று ஒரு நாள் மட்டும் பல லட்சம் கோடி காசோலை, பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டன.  லட்சக்கணக்கான காசோலைகள் தேங்கின.</p><p>சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.</p><p>போராட்டத்தின்போது சி.எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:</p><p>ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு அதனை நடைமுறைப் படுத்தவில்லை. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான 5 நாட்கள் வேலை நேரத்தில் 40  நிமிடங்கள் அதிகரிக்கும்படி கேட்டுக் கொண்டோம். இதனைச் செயல்படுத்தாததால் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். </p><p>எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்டமாக வரும் 28, 29 மற்றும் 30-ம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.</p><h2>வங்கி சேவை பாதிப்பு</h2><p>இதற்கிடையில், வேலைநிறுத்தத்தால் இன்று மூடப்பட்ட வங்கிகள் தொடர்ந்து மேலும் 3 நாட்கள் மூடப்படுகிறது. அரசு விடுமுறை  காரணமாக 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கும். ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் செயல்படாத நிலை உருவாகிறது.</p>]]></content:encoded></item><item><title>சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-recalls-swami-vivekanandas-1893-chicago-speech-as-world-marks-5th-anniversary-of-911-attacks</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-recalls-swami-vivekanandas-1893-chicago-speech-as-world-marks-5th-anniversary-of-911-attacks#comments</comments><guid isPermaLink="false">c7cfbb0b-9e72-4b9f-acb1-bb54be5788cf</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:59:39 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:59:39.046Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,Swami Vivekanandar,சுவாமி விவேகானந்தர்,chicago speech,சிகாகோ உரை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/qf7si60l/pm-modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi, vivakanandar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/qf7si60l/pm-modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுவாமி விவேகானந்தர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய தினம் இன்று என்பதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.</strong></em></p><p>சுவாமி விவேகானந்தர் கொல்கத்தாவில் 1863-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பிறந்தவர். இந்து மதத்தை உலகளாவிய மதமாக உயர்த்தியவர் என்று போற்றப்படுகிறார்.</p><p>இந்தியாவின் பாரம்பரியமிக்க வேதாந்த தத்துவங்களையும், யோகாவையும் மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதில் மிக முக்கிய பங்காற்றியவர் சுவாமி விவேகானந்தர்.</p><h2>சிகாகோ உரை</h2><p>சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நடந்த ‘சர்வதேச மதங்களின் நாடாளுமன்றம்’ என்ற மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையை, "அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே" என்ற வாக்கியத்துடன் ஆரம்பித்தார்.</p><p>அவரது உரை அங்கிருந்த சுமார் 7 ஆயிரம் பிரதிநிதிகளின் மனதை வென்றதோடு மட்டுமின்றி, இந்து மதத்திற்கான சர்வதேச அடையாளங்களில் ஒன்றாகவும் மாறியது.</p><h2>எழுச்சியூட்டும் விவேகானந்தர் உரை</h2><p>இந்நிலையில், சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய தினத்தை பிரதமர் மோடி இன்று நினைவு கூர்ந்துள்ளார். </p><p>இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 11 செப்டம்பர் 1893, சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரை, இந்தியாவின் நாகரீக நெறிமுறையைப் படம்பிடித்துக் காட்டியது. அவரது எழுச்சியூட்டும் வார்த்தைகள் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.</p><h2>25வது ஆண்டு நினைவு நாள்</h2><p>2001 செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாளை அமெரிக்கா அனுசரிக்கும் வேளையில், பிரதமர் மோடி விவேகானந்தரின் உரையை மேற்கோள் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு.. என்ன பயன்? என ப.சிதம்பரம் கேள்வி - சசி தரூர் பதில் - காங்கிரசுக்குள் கருத்து வேறுபாடு</title><link>https://www.maalaimalar.com/news/national/brics-conference-in-delhi-what-is-the-point-p-chidambarams-question-sasi-tharoors-answer-bjp-is-having-fun</link><comments>https://www.maalaimalar.com/news/national/brics-conference-in-delhi-what-is-the-point-p-chidambarams-question-sasi-tharoors-answer-bjp-is-having-fun#comments</comments><guid isPermaLink="false">4e851d21-c38b-4cf6-8e76-84dc02eaf7b7</guid><pubDate>Fri, 11 Sep 2026 05:37:24 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:37:24.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சசி தரூர்,ப. சிதம்பரம்,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8lybxlvx/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ப.சிதம்பரம் - சசி தரூர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ப.சிதம்பரம் - சசி தரூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8lybxlvx/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியினுள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.</p> <p>18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பார்த் மண்டபத்தில் நாளை (செப்டம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 13) நடைபெறவுள்ளது. </p><p>இதில் கலந்துகொள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/putin-lands-in-delhi-for-brics-summit">ரஷிய அதிபர் புதின்</a> இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தார். இன்று அவர் <a href="https://www.maalaimalar.com/news/national/brics-leaders-gather-let-us-deliberate-with-the-global-good-in-mind-prime-minister-modi">பிரதமர் மோடியை </a>சந்திக்கிறார். </p><p>சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் விரைவில் வர உள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தியா வருகிறார். </p> <p>ஈரான் அதிபர் பெசஸ்கியான், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய உறுப்பு நாட்டு தலைவர்களும் வருகை தர உள்ளனர்.</p><p>இந்த மாநாட்டிற்காக டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து காங்கிரஸுக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.</p><p>இம்மாநாடு தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன.</p><p>காங்கிரஸ் எம்பி சசி தரூர் மாநாட்டின் முக்கியத்துவத்தை ஆதரித்துள்ள நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதனால் கிடைக்கும் பலன்கள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p> <h2>ப.சிதம்பரத்தின் கேள்வி</h2><p>கடந்த இரண்டு அல்லது மூன்று பிரிக்ஸ் மாநாடுகளால் நாட்டிற்கு எந்தவொரு தெளிவான அல்லது குறிப்பிடத்தக்கப் பலன்களும் கிடைக்கவில்லை எனப் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கு பதிலளித்த பாரதிய ஜனதா கட்சி (BJP), காங்கிரஸ் கட்சி நாட்டின் சர்வதேச வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கண்டு எப்போதும் எதிர்மறையான மனநிலையையே வெளிப்படுத்துகிறது என சாடியுள்ளது.</p> <h2>சசி தரூரின் நிலப்பாடு</h2><p>ப. சிதம்பரம் கேள்வியை தொடர்ந்து சசி தரூர் தனது சமூக வலைதள பக்கத்தில் பிரிக்ஸ் மாநாட்டின் முக்கியத்துவம் பற்றி தெரிவித்துள்ளார்.</p><p>பிரிக்ஸ் அமைப்பில் உள்ள 11 உறுப்பு நாடுகள் உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியையும், உலகளாவிய GDPயில் மார் 41 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.</p><p>எனவே பிரிக்ஸ் அமைப்பு Global South எனப்படும் வளரும் நாடுகளுக்கு மிக முக்கியமான ஒரு சர்வதேச தளமாகும் என சசி தரூர் தெரிவித்துள்ளார்.</p><p>பல நாட்டுத் தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தருவது இந்தியாவின் வெளியுறவு மற்றும் தூதரகப் பலத்தைக் காட்டுகிறது என்றும், இம்மாநாட்டை இந்தியா நடத்துவது நாட்டிற்குப் பெருமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> <p>மாநாட்டின் முக்கியத்துவத்தைப் பேசிய அதே வேளையில், உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளையும் சசி தரூர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>பிரிக்ஸ் அமைப்பில் உள்ள 11 நாடுகளும் வெவ்வேறு தேசிய நலன்களைக் கொண்டுள்ளதால், அனைத்து உலகளாவிய விவகாரங்களிலும் பொதுவான ஒரு முடிவை எட்டுவது சவாலானது.</p><p>சமீபத்தில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அனைத்து நாடுகளும் ஏற்கும் வகையிலான கூட்டுப் பிரகடனத்தை வெளியிட முடியாமல் போனதைச் சுட்டிக்காட்டிய தரூர், இந்த உச்சி மாநாட்டில் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்துச் சீரான முடிவை எடுப்பது இந்தியத் தூதர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>புதிதாக 30.. ஆகமொத்தம் 190 அணு ஆயுதங்கள் இந்தியா வசம் உள்ளது - வெளியான அறிக்கை 
</title><link>https://www.maalaimalar.com/news/national/30-new-ones-added-india-now-possesses-a-total-of-190-nuclear-bombs-report-released</link><comments>https://www.maalaimalar.com/news/national/30-new-ones-added-india-now-possesses-a-total-of-190-nuclear-bombs-report-released#comments</comments><guid isPermaLink="false">29b244e1-eefb-4630-9c79-3b6df3f7bb8d</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:43:53 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:43:53.371Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அணுஆயுதம்,INDIAN ARMY,Nuclear weapon,இந்திய ராணுவம்,அணுகுண்டு,atom bomb</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/uq9gu8ee/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அணு ஆயுதங்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ அணு ஆயுதங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/uq9gu8ee/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா வசம் 190 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்காவை சேர்ந்த Federation of American Scientists என்ற ஆராய்ச்சி மையம் வெளியிட்டஅறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளது. </p><h2>அணுகுண்டுகள் </h2><p>அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள ஏவுகணைகளுக்கான 160 <a href="https://www.maalaimalar.com/news/world/responsibility-and-resilience-hiroshima-day-2026-remembering-atomic-bombing-and-call-for-a-peaceful-nuclear-free-world">அணுகுண்டுகள் </a>உள்ளன. </p><p>புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் ஏவுகணைகளுக்காக மேலும் 30 அணுகுண்டுகள் உருவாக்கப்பட்டு நாட்டின் மொத்த அணுகுண்டு இருப்பு தற்போது 190 ஆக உயர்ந்துள்ளது.</p><p>மேலும் இந்தியா தனது ராணுவத் தேவைகளுக்காக 140 முதல் 225 அணுஆயுதங்களை தயாரிப்பதற்குத் தேவையான புளுட்டோனியத்தை சேமித்து வைத்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.   </p> <p>சமீபத்திய அறிக்கையின்படி பாகிஸ்தானிடம் சுமார் 170 அணு ஆயுதங்கள் உள்ள நிலையில், இந்தியாவின் அணுஆயுத இருப்பு அதைவிட அதிகமாக வளர்ந்துள்ளது.</p><p>2 போர் விமானங்கள், 6 தரைவழி பாலிஸ்டிக் ஏவுகணைகள், 1 நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை என இந்தியா தற்போது 9 வெவ்வேறு வகையான அணுஆயுத ஏவுதல் அமைப்பை பயன்பாட்டில் வைத்துள்ளது.</p><p>மேலும் 2 புதிய ஏவுதல் அமைப்புகள் இறுதிக்கட்ட உருவாக்கத்தில் உள்ளன, அவை விரைவில் முப்படைகளில் இணையவுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்தியா தனது அணுஆயுத தரவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில்லை. எனவே அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் அரசு ஆவணங்கள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் பொதுவெளியில் கிடைக்கும் தரவுகள் மூலமே மதிப்பிடப்பட்டவை ஆகும்.</p><h2>கல்பாக்கம்</h2><p>பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் 'துருவா' அணு உலைக்குப் பிறகு, தமிழ்நாடு கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் கட்டப்பட்ட 500 மெகாவாட் PFBR அணு உலை இந்த ஆண்டு ஏப்ரலில் தனது முதன்மைக் கட்டத்தை எட்டியுள்ளது.</p><p>இந்த உலை 80% திறனுடன் இயங்கினால், ஆண்டிற்கு சுமார் 140 கிலோ புளுட்டோனியம்-239 ஐ உற்பத்தி செய்ய முடியும். இது ஆண்டிற்கு 35 புதிய அணுஆயுதங்களைத் தயாரிக்கப் போதுமானது.</p><p>கல்பாக்கத்தில் FBR-1 மற்றும் FBR-2 ஆகிய மேலும் இரண்டு வேகப்பெருக்கு அணு உலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>BRICS: ஒன்றுகூடும் தலைவர்கள்.. உலக நலனை முன்னிறுத்தி விவாதிப்போம் - பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/brics-leaders-gather-let-us-deliberate-with-the-global-good-in-mind-prime-minister-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/brics-leaders-gather-let-us-deliberate-with-the-global-good-in-mind-prime-minister-modi#comments</comments><guid isPermaLink="false">65f8ec5a-aa1a-40cb-9277-4ce8815952a9</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:14:39 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:14:39.479Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,BRICS Summit,பிரதமர் மோடி,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/c24bjje3/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/c24bjje3/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாட்டில் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி ஆக்கபூர்வமாக பேச உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.</p> <p>இந்தியாவின் தலைமையில் 18வது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">பிரிக்ஸ் </a>உச்சி மாநாடு நாளை (செப்டம்பர் 12) மற்றும்  நாளை மறுநாள் (செப்டம்பர் 13) டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. </p><p>2026 ஜனவரி 1 அன்று இந்தியா 4வது முறையாகப் பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றது.</p><p>இந்த மாநாட்டில் கலந்துகொள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/putin-lands-in-delhi-for-brics-summit">ரஷிய அதிபர் புதின்</a> இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். </p><p>சீன அதிபர் ஜி ஜின் பிங் 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவிற்கு வருகை தருகிறார்.  ஈரான் அதிபர் பெசஸ்கியானும் மாநாட்டில் கலந்துகொள்ள வருகிறார்.</p> <h2>பிரதமர் மோடி</h2><p>இதனிடையே பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,"அடுத்த சில நாட்களில் உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் பிரிக்ஸ் மாநாட்டிற்காக ஒன்றுகூடவுள்ளனர்.</p><p>உலக நலனை முன்னிறுத்தி, பல்வேறு முக்கிய விவகாரங்களில் இந்த உச்சி மாநாடு நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள விவாதங்களைக் காணும் என்பதில் நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.</p><p>இந்த மாநாட்டில் ஈரான் போர் விவகாரம், அதன் பொருளாதார தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">All set for BRICS 2026!

@BricsIndia2026 https://t.co/nXqqoBmoAm</p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2098026841844138247?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
</figure><h2>பிரிக்ஸ்</h2><p>கோல்ட்மேன் சாக்ஸ் நிதி நிறுவன பொருளாதார நிபுணர் ஜிம் ஓநீல், 2001ல் "BRIC" (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா) என்ற சொல்லை முதன்முறையாகப் பயன்படுத்தினார்.</p><p>2006ல் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்குப் பின், 2009ல் ரஷியாவின் யெகாடெரின்பர்க்கில் முதலாவது உச்சி மாநாடு நடைபெற்றது.</p><p>2010ல் அழைப்பு விடுக்கப்பட்டு, 2011ல் தென்னாப்பிரிக்கா இணைந்தவுடன் 'BRIC' என்பது 'BRICS' ஆக மாறியது.</p> <p>2024 இல் எகிப்து, எதியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை முழு உறுப்பு நாடுகளாக இணைந்தன. 2025இல் இந்தோனேசியா 11வது முழு உறுப்பு நாடாக இணைந்தது.</p><p>மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பெலாரஸ், நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் கூட்டாண்மை நாடுகளாக சேர்க்கப்பட்டன.</p><p>வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பிரிக்ஸ் கூட்டமைப்பின் பிரதான நோக்கங்கள் ஆகும்.</p> ]]></content:encoded></item><item><title>ரஷிய அதிபர் புதின் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகை</title><link>https://www.maalaimalar.com/news/national/putin-lands-in-delhi-for-brics-summit</link><comments>https://www.maalaimalar.com/news/national/putin-lands-in-delhi-for-brics-summit#comments</comments><guid isPermaLink="false">98391dea-b57d-4772-bab4-9e849bc38724</guid><pubDate>Fri, 11 Sep 2026 00:28:05 +0000</pubDate><atom:updated>2026-09-11T00:28:05.763Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விளாடிமிர் புதின்,Vladimir Putin,BRICS Summit,pm modi,பிரதமர் மோடி,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/pv62ur7n/Vladimir-Putin.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vladimir Putin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/pv62ur7n/Vladimir-Putin.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ரஷிய அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/vladimir-putin">விளாடிமிர் புதின்</a> டெல்லி வந்துள்ளார்.</p><p>பிரதமர் மோடியும் புதினும் கடந்த வாரம் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே கடைசியாக சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது, ​​மாஸ்கோவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ரஷ்யா-<a href="https://www.maalaimalar.com/news/world">உக்ரைன்</a> மோதலைக் குறிப்பிட்டு, "முடிவற்ற போரில் இருந்து போரின் முடிவை நோக்கி" நகருமாறு பிரதமர் ரஷிய தலைவரை வலியுறுத்தினார்.</p><h2>பிரதமர் வலியுறுத்தல்:</h2><p>"நாம் 'முடிவற்ற போர்' என்ற சூழ்நிலையில் இருந்து 'போர் முடிவு' என்ற நிலைக்கு நகர வேண்டும்... இந்தப் போர் கூடிய விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே மனிதகுலத்தின் விருப்பம்," என்று பிரதமர் மோடி கூறினார்.</p><p>இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்தில், பிரம்மோஸ் ஏவுகணை மேம்பாடுகள் போன்ற பாதுகாப்பு திட்டங்கள் உட்பட, இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>எஸ்-400 வழங்க ரஷியா உறுதி:</h2><p>பிரம்மோஸ் ஏவுகணையை மேம்படுத்துவது குறித்து இந்தியாவும், ரஷியாவும் ஆராய்ந்து வருவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த வார தொடக்கத்தில் தெரிவித்தார். மேலும், ரஷ்யா தனது மீதமுள்ள எஸ்-400 அமைப்புகளை வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும், முன்மொழியப்பட்ட எஸ்யு-57 போர் விமானங்களை வழங்குவது குறித்தும் விவாதித்து வருவதாகவும் அவர் கூறினார்.</p><p>பிரம்மோஸ் ஏவுகணையை மேம்படுத்துவது குறித்து புது தில்லியும் மாஸ்கோவும் ஆராய்ந்து வருவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த வாரத் தொடக்கத்தில் தெரிவித்தார். மேலும், ரஷியா தனது மீதமுள்ள எஸ்-400 அமைப்புகளை வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும், முன்மொழியப்பட்ட எஸ்யு-57 போர் விமானங்களை வழங்குவது குறித்தும் விவாதித்து வருவதாகவும் அவர் கூறினார்.</p><p>இந்தியா நடத்தும் இரண்டு நாள் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் புதின் கலந்துகொள்கிறார். ஆண்டுதோறும் நடைபெறும் பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தின் முழு அமர்வில் அவர் உரையாற்றுவார். அதன்பிறகு, பிரதமர் மோடியுடன் இன்னோபிராம் கண்காட்சியை அவர் பார்வையிடுவார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி உள்பட பல உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-collegium-recommends-15-judges-for-delhi-3-other-high-courts</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-collegium-recommends-15-judges-for-delhi-3-other-high-courts#comments</comments><guid isPermaLink="false">581b0793-40b0-4e22-b486-25017d2b1394</guid><pubDate>Thu, 10 Sep 2026 19:38:08 +0000</pubDate><atom:updated>2026-09-10T19:38:08.815Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,judge,Collegium,கொலீஜியம்,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/hhx7264m/Supreme-Court.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/hhx7264m/Supreme-Court.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்ச நீதிமன்ற</a> கொலீஜியம், டெல்லி, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நியமனங்களை பரிந்துரைத்தது.</p><p>நீதித்துறை அதிகாரிகளான உஷாராணி, கே.எஸ். பரத் குமார் மற்றும் நேரேல வீரபத்ரையா பவானி ஆகியோரை <a href="https://www.maalaimalar.com/news/national">கர்நாடக</a> உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.</p><h2>நீதிபதிகள் நியமன வழிமுறை:</h2><p>வியாழக்கிழமை நடைபெற்ற தனது கூட்டத்தில், உச்ச நீதிமன்ற கொலீஜியம், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்வதற்காக எட்டு நீதித்துறை அதிகாரிகளின் பெயர்களையும் பரிந்துரைத்தது. பரிந்துரைக்கப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் குர்விந்தர் பால் சிங், நிவேதிதா அனில் சர்மா, நிஷா சஹாய் சக்சேனா, சஞ்சய் சர்மா, பரத் பராஷர், டாக்டர் (திருமதி) அதிதி சௌத்ரி, தினேஷ் பட் மற்றும் அருண் பரத்வாஜ் ஆவர்.</p><p>"2026 செப்டம்பர் 10-ஆம் தேதியன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டத்தில், பின்வரும் நீதித்துறை அதிகாரிகளை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது," என்று உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்ற நீதிபதியாக நீதித்துறை அதிகாரி யஷ் பால் போர்னியை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்தது.</p><p>நீதித்துறை அதிகாரிகளான மனோஜ் பிரசாத், அகில் குமார் மற்றும் ராம் சர்மா ஆகியோரை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கவும் அது பரிந்துரைத்தது.</p><h2>நடைமுறை விதிகள்:</h2><p>உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை நிர்வகிக்கும் நடைமுறை விதிகளின்படி, சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, அந்த உயர் நீதிமன்றத்தின் இரண்டு மூத்த நீதிபதிகளுடன் கலந்தாலோசித்து நியமனத்திற்கான பரிந்துரையை தொடங்குகிறார். அந்தப் பரிந்துரையை தலைமை நீதிபதி, முதலமைச்சருக்கு அனுப்புகிறார், அவர் அதை ஆளுநருக்கு அனுப்புகிறார். ஆளுநர், அந்தப் பரிந்துரையை, தொடர்புடைய உள்ளீடுகள் மற்றும் ஆவணங்களுடன் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சருக்கு அனுப்புகிறார்.</p><p>பின்னர் அந்த முன்மொழிவு மத்திய அரசால் பரிசீலிக்கப்பட்டு, இந்திய தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. அவர், பரிந்துரையை இறுதி செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளுடன் கலந்தாலோசிப்பார்.</p><p>கொலீஜியத்தின் ஒப்புதலை தொடர்ந்து, அந்த பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பப்படுகிறது. குடியரசு தலைவர் நியமன ஆணைகளில் கையொப்பமிட்டு, நீதித்துறை இந்திய அரசிதழில் அறிவிக்கையை வெளியிட்ட பின்னரே இந்த நியமனங்கள் நடைமுறைக்கு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>அரசு நிகழ்ச்சிகளில் &apos;வந்தே மாதரம்&apos; பாடலின் 2 சரணங்களை மட்டுமே பாட வேண்டும் - கர்நாடகா உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-govt-orders-singing-of-only-2-vande-mataram-stanzas-at-state-programmes</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-govt-orders-singing-of-only-2-vande-mataram-stanzas-at-state-programmes#comments</comments><guid isPermaLink="false">8be99fd7-dfc7-48ca-a3aa-4924f9bd4a94</guid><pubDate>Thu, 10 Sep 2026 17:07:19 +0000</pubDate><atom:updated>2026-09-10T17:07:19.536Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,வந்தே மாதரம்,Vande Mataram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/rdtytzsu/DK-Shivakumar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/rdtytzsu/DK-Shivakumar.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத் தலைவர், பிரதமர் அல்லது ஆளுநர் ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைத் தவிர, கர்நாடக அரசு நடத்தும் பிற நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாட வேண்டும் என்று அம்மாநிலத்திலுள்ள காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>மாநிலத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்து மாநில அமைச்சரவை எடுத்த முடிவை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்:</p><p>தேசிய கீதமான 'ஜன கண மன' மற்றும் 'வந்தே மாதரம்' ஆகிய இரண்டும் ஒன்றாக இசைக்கப்படும்போது, ​​'வந்தே மாதரம்' பாடலின் அனைத்து 6 சரணங்களையும் பாட வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.</p><p>இருப்பினும், 'வந்தே மாதரம்' பாடல் தொடர்பாக 1937-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கடைப்பிடிக்க காங்கிரஸ் செயற்குழு ஆகஸ்ட் 19 அன்று முடிவு செய்தது; அந்தத் தீர்மானத்தின்படி, கட்சியின் நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்பட வேண்டும்.</p><p>கட்சி நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாக பாடாமல் அவமதிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது பா.ஜ.க. குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.</p><p>உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்கள்:</p><p>செப்டம்பர் 8 தேதியிட்ட மாநில அரசின் உத்தரவின் முன்னுரையில், இந்திய தேசிய இயக்கத்தின் போது தேசியம், ஒற்றுமை மற்றும் தேசபக்தியை வளர்ப்பதில் 'வந்தே மாதரம்' பாடல் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>தேசிய பாடலின் அதிகாரப்பூர்வ வடிவம் மற்றும் பல்வேறு அரசு மற்றும் பொது விழாக்களில் அதனைப் பாடுவதற்கான அல்லது இசைப்பதற்கான நெறிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.</p><p>தேசிய பாடலை இசைப்பதற்கும், கூட்டாக பாடுவதற்கும் ஏற்ற நிகழ்வுகளை அந்த வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2000 ரூபாய்க்காக 7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன்! தடுக்க வந்த தாய் மீதும் தாக்குதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/husband-beats-to-death-7-month-pregnant-wife-over-2000-rupees</link><comments>https://www.maalaimalar.com/news/national/husband-beats-to-death-7-month-pregnant-wife-over-2000-rupees#comments</comments><guid isPermaLink="false">65e5f13c-9dfc-4d51-8099-2aada324a36b</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:03:04 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:03:04.247Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,கர்ப்பிணி மனைவி கொலை,Pregnant woman killed,உத்தரப் பிரதேச மாநிலம்,Hardoi District,ஹர்டோய் மாவட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2vijvqvm/GGGGG.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pregnant woman killed ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2vijvqvm/GGGGG.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் பணத் தகராறு காரணமாக 7 மாத கர்ப்பிணி மனைவியை கணவனே மூங்கில் தடியால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/businessman-mystery-murder-daughter-in-law-plot-over-cctv-surveillance">ஹர்டோய் மாவட்டம்</a> பில்கிராம் காவல் எல்லைக்குட்பட்ட மயோரா கிராமத்தைச் சேர்ந்த விஷால் பால் என்பவருக்கும், 24 வயதான கிரண் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், கிரண் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். தொழிலாளியாக வேலை செய்து வந்த விஷால், இரு தினங்களுக்கு முன்பு கொடுத்த பணத்திற்கு மனைவி கிரணிடம் கணக்கு கேட்டுள்ளார்.</p><h2>தடுக்க வந்த மா<strong>மியார் மீதும்</strong> தாக்குதல்</h2><p>கைவசம் இருந்த ரூ.2,000 தொகையை உடனடியாகச் செலவழிக்காமல் குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமிக்க வேண்டும் என்று கிரண் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஷால், மதுபோதையில் மூங்கில் தடியால் கிரணை கொடூரமாகத் தாக்கத் தொடங்கினார். இதைக் கண்டு பதறிய விஷாலின் தாய் பிரேமா சண்டையைத் தடுக்க முயன்றபோது, அவரையும் விஷால் தாக்கி வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளார்.</p><h2>உத<strong>விக்கு வராத அக்கம் ப</strong>க்கத்தினர்</h2><p>பயத்தில் அலறிய மாமியார் பிரேமா, அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டு ஓடியுள்ளார். ஆனால் விஷாலின் கோபத்திற்குப் பயந்து யாரும் உதவிக்கு வரவில்லை. இறுதியில் 112 என்ற அவசர உதவி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து ஆபத்தான நிலையிலிருந்த கிரணை மீட்டு பில்கிராம் சமூக சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>மருத்துவ<strong>மனையில் பரிதாப மரணம்</strong></h2><p>மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கிரணைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான குற்றவாளி விஷாலைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி கைது செய்தனர். பிரேதப் பரிசோதனைக்காக உடலைக் கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>யூடியூப் மூலம் சாண்ட்விச் செய்ய கற்றுக்கொண்டு மாதத்திற்கு ரூ.25 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்</title><link>https://www.maalaimalar.com/news/national/young-man-earns-rs-25-lakh-a-month-selling-sandwiches-learned-from-youtube</link><comments>https://www.maalaimalar.com/news/national/young-man-earns-rs-25-lakh-a-month-selling-sandwiches-learned-from-youtube#comments</comments><guid isPermaLink="false">360a7d6a-76d5-42fa-ae33-0a6911202670</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:13:32 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:13:32.567Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தொழிலதிபர்,Sandwich,Entrepreneur,டோஃபு சாண்ட்விச்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/f4fq8z66/Untitled-design-48.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bhopal street food success story]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/f4fq8z66/Untitled-design-48.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தில் ஒரு இளைஞர் தள்ளுவண்டி கடையில் சாண்ட்விச் விற்பனை செய்து, அதன்மூலம் மாதத்திற்கு ரூபாய் 25 லட்சம் வருமானம் ஈட்டுவதாக எக்ஸ் தளத்தில் பயனர் பதிவிட்ட கருத்து வைரலாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">மத்தியப் பிரதேசத்தில்</a> உள்ள போபால் நகரத்திற்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அபிஷேக் சாஹூ என்பவர் குடிபெயர்ந்தார். </p><h3><strong>ப்ரவுசிங் செண்டர்</strong></h3><p>அந்த இளைஞர் முதலில் ஒரு சிறிய ப்ரவுசிங் செண்டரை தொடங்கினார். இந்த கடையில் பெரிதளவில் வருமானம் இல்லாததால், ஆரம்பித்த ஓராண்டுக்குள் அந்த செண்டர் மூடும் நிலைக்கு வந்தது.</p><p>முதலில் தான் ஆரம்பித்த தொழில் தோல்வியில் முடிந்தாலும், சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரை தூண்டியது.</p><p>இதையடுத்து சாஹூ யூடியூப் மூலம் சாண்ட்விச் போன்ற உடனடி உணவுகளை தயாரிப்பது குறித்து கற்றுக் கொண்டார்.</p><h3><strong>ஹரி ஹர் சாண்ட்விச்</strong></h3><p>இதற்கு முதலில் அவருக்கு ஒரு சிறிய தள்ளுவண்டி தேவைப்பட்டது. அதற்கு போதுமான அளவில் தன்னிடம் பணம் இல்லாததால் 30,000 ரூபாயை அவர் கடனாக வாங்கினார்.</p><p>சாஹூவிற்கு உணவு வியாபாரத்தில் முன் அனுபவம் இல்லாத போதிலும், யூடியூப் மூலம் சமையல் குறிப்புகளை கற்றுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சாண்ட்விச் உணவுகளை விற்பனை செய்ய தொடங்கினார்.</p><p>ஹரி ஹர் சாண்ட்விச் என்று பெயிரடப்பட்ட அந்த உணவு சிற்றுண்டி, காலப்போக்கில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்த்தது.</p><h3><strong>மாதம் ரூ.25 லட்சம் வருமானம்</strong></h3><p>இந்த சிற்றுண்டி கடையில் பொதுவாக 600க்கும் மேற்பட்ட சாண்ட்விச்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் வார இறுதி நாட்களில் 1,000க்கும் மேற்பட்ட சாண்ட்விச்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும் போபாலில் மக்கள் நடமாட்டம் அதிக உள்ள பகுதிகளில் அமைந்துள்ள இந்த சிற்றுண்டி கடை, சுமார் 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுவதாகவும் அந்த அவர் தெரிவித்துள்ளார்.</p><h3><strong>பயனர்கள் வாழ்த்து</strong></h3><p>சாஹூ ஆரம்பித்த சிற்றுண்டி குறித்து எக்ஸ் தளத்தில் பயனர் வெளியிட்ட பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் கருத்துகளை பதிவிட்டனர்.</p><p>அந்த பதிவில் ஒரு பயனர், ‘தோல்வியடைந்த ஜெராக்ஸ் கடையில் இருந்து மாதம் ரூ.25 லட்சம் வருமான ஈட்டும் தெருவோர உணவு வியாபாரம் வரை’ என்று குறிப்பிட்டு வாழ்த்துகளை கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சிறார் சமூக வலைதளப் பயன்பாட்டிற்கு பெற்றோர் அனுமதி கட்டாயம்: உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-notice-on-parental-consent-for-children-social-media-use</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-notice-on-parental-consent-for-children-social-media-use#comments</comments><guid isPermaLink="false">aa5dce5f-74aa-4625-8a90-863f1aeb9020</guid><pubDate>Thu, 10 Sep 2026 11:09:30 +0000</pubDate><atom:updated>2026-09-10T11:09:30.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,Supreme Court,social media,முகநூல்,சமூக வலைதளங்கள்,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/m14d68rq/SOC.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Social media]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/m14d68rq/SOC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முகநூல், ஸ்நாப்சாட் போன்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்கள் 13 வயதடைந்த குழந்தைகளுக்கே கணக்கு தொடங்க அனுமதி அளிக்கின்றன.</p><p>18 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கட்டாய அனுமதியை நடைமுறைப்படுத்தவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் குறித்து விரிவான விளக்கமளிக்குமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/businessman-mystery-murder-daughter-in-law-plot-over-cctv-surveillance">இந்திய ஒப்பந்தச் சட்டம் </a>1872-ன் படி, 18 வயதுக்குட்பட்ட நபர்கள் சட்டரீதியாக எந்தவொரு ஒப்பந்தத்திலும் ஈடுபட முடியாது. இருப்பினும், முகநூல், ஸ்நாப்சாட் போன்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்கள் 13 வயதடைந்த குழந்தைகளுக்கே கணக்கு தொடங்க அனுமதி அளிக்கின்றன. இது இந்திய சட்டவிதிகளுக்கு முரணாக அமைவதோடு, சிறார்களின் தனிநபர் தரவுப் பாதுகாப்பிற்கும் கேள்விக்குறியை ஏற்படுத்துகிறது என்று மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.</p><h2>மின்-கேஒய்<strong>சி மற்றும் வய</strong>து சரிபார்ப்பு முறை</h2><p>சிறார்கள் தவறான தகவல்களை வழங்கி சமூக வலைதளங்களில் நுழைவதைத் தடுக்க, மின்னணு முறையில் ஆவணங்களைச் சரிபார்க்கும் (e-KYC) கடுமையான கட்டுப்பாட்டு அமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் சரிபார்க்கப்பட்ட அனுமதி இல்லாமல் சிறார்களுக்குச் சொந்தமான கணக்குகளைச் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும், கல்வி சார்ந்த பயன்பாடுகளுக்கு மட்டுமே பெற்றோர் கட்டுப்பாட்டில் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>சமூக வலைதளங்களின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டால் சிறார்கள் இணையவழி சுரண்டல், பாலியல் துன்புறுத்தல், இணையவழி அச்சுறுத்தல் மற்றும் தவறான வழிகாட்டுதல்களுக்கு ஆளாக நேரிடுகிறது என மனுதாரர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்தியாவில் சிறார்களின் டிஜிட்டல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் அவர்களைப் பாதுகாக்கவும் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகள் மிகவும் அவசியம் என்பதை ஒப்புக்கொண்டனர்.</p><p>தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ல் தகுந்த திருத்தங்களை மேற்கொண்டு அல்லது புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கி சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவர்கள் இனி 70 வயது வரை பணியாற்றலாம் – மாநில அரசின் புதிய முடிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-extends-govt-doctors-service-reappointment-allows-practice-up-to-age-70</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-extends-govt-doctors-service-reappointment-allows-practice-up-to-age-70#comments</comments><guid isPermaLink="false">5e652059-66b9-4bb2-b958-846b8119a638</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:06:05 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:06:05.484Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தரபிரதேசம்,government doctors,Public Health,Retirement Age Extended,Doctor Shortage</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/uzap5p43/Government-Doctors" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Government Doctors ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/uzap5p43/Government-Doctors?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தர பிரதேச</a> மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவி வரும் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்காக, அரசு மருத்துவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் 70 வயது வரை பணியாற்றும் வகையில் மறு நியமனம் செய்ய அம்மாநில அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.</p><h2><strong>மருத்துவர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு</strong></h2><p>இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. இங்குள்ள <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">அரசு மருத்துவமனைகள்</a>, ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சமுதாய சுகாதார மையங்களுக்கு தினமும் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.</p><p>அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கையாளுவதற்கும், தகுதியான நிபுணத்துவ மருத்துவர்களின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கும் இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><h2><strong>65-லிருந்து 70 ஆக உயர்வு</strong></h2><p>தற்போது நடைமுறையில், உத்தர பிரதேச அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆக உள்ளது. புதிய திட்டத்தின்படி, 65 வயதை எட்டி ஓய்வு பெறும் தகுதியான மருத்துவர்கள், தங்களின் விருப்பத்தின் பேரில் மறு நியமனம் மூலம் 70 வயது வரை தங்களது சேவையைத் தொடரலாம் என்று<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81"> மத்திய அரசு</a> கூறியுள்ளது.</p><h2><strong>ஆணை பிறப்பிக்கும் பணிகள் தீவிரம்</strong></h2><p>இதுகுறித்து உத்தர பிரதேச மாநில சுகாதார அமைச்சரும், துணை முதல்வருமான <strong>பிரஜேஷ் பதக்</strong> கூறுகையில், "மாநிலத்தின் அரசு சுகாதாரக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், மூத்த மற்றும் நிபுணத்துவ மருத்துவர்களின் மருத்துவ அனுபவத்தை ஏழை எளிய நோயாளிகளுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இதற்கான அரசாணையை வெளியிடும் பணிகளைச் சுகாதாரத் துறை தற்போது தீவிரமாகத் தொடங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.</p><p>இந்த மறு நியமன முறையின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற அரசு மருத்துவமனைகளில் மூத்த மருத்துவர்களின் வழிகாட்டுதல்களும், தடையற்ற மருத்துவச் சேவைகளும் பொதுமக்களுக்குத் துரிதமாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் லாரியில் இருந்து கீழே விழுந்து வெடித்த ஆக்சிஜன் சிலிண்டர் – ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/oxygen-cylinder-explodes-after-fall-from-truck-in-delhi-one-killed-four-injured</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/oxygen-cylinder-explodes-after-fall-from-truck-in-delhi-one-killed-four-injured#comments</comments><guid isPermaLink="false">a372ac2e-b481-442b-b68a-8918e6e8cb5c</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:28:07 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:28:07.224Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>cylinder explosion,delhi,Employee dies,டெல்லி,Tragic Incident,ஆக்சிஜன் சிலிண்டர்,Industrial Accident</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/adajb08j/Cylinder-Explosion" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cylinder Explosion  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/adajb08j/Cylinder-Explosion?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>தென்கிழக்கு <a href="https://www.maalaimalar.com/topic/delhi">டெல்லியின் </a>ஓக்லா தொழில்பேட்டை பகுதி - 1 இல் உள்ள ஒரு தனியார் வணிகக் குடோனில் ஆக்சிஜன் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. </p><p>இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார் மற்றும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><h2>எப்படி நடந்தது?</h2><p>காசியாபாத்திலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரியிலிருந்து, ஊழியர்கள் சிலிண்டர்களைக் கீழே இறக்கிக் குடோனுக்குள் மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். </p><p>அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சிலிண்டர் லாரியிலிருந்து நழுவி கீழே விழுந்ததில், அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.</p><h2>பாதிப்புகள்</h2><p>இந்த வெடிப்பின் தாக்கத்தால் அருகில் வேலை செய்துகொண்டிருந்த மோஹித் சிங் (35) என்ற ஊழியர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p>படுகாயமடைந்த மற்ற 4 ஊழியர்கள் உடனடியாக மீட்கப்பட்டு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்</a> தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>நடவடிக்கை</h2><p>பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறி, டெல்லி போலீசார் குடோன் உரிமையாளரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தொழிலதிபர் மர்ம கொலை: சிசிடிவி கண்காணிப்பால் ஆத்திரமடைந்து மருமகளே தீட்டிய சதித்திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/businessman-mystery-murder-daughter-in-law-plot-over-cctv-surveillance</link><comments>https://www.maalaimalar.com/news/national/businessman-mystery-murder-daughter-in-law-plot-over-cctv-surveillance#comments</comments><guid isPermaLink="false">a02b5d3c-cec9-4fe5-8711-e0cde303458d</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:18:58 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:18:58.038Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,கான்பூர்,Kanpur,business man murder,உத்தரப் பிரதேச மாநிலம்,தொழிலதிபர் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/m5ux1enj/kill.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Business man Murder  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/m5ux1enj/kill.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாமனாரை கொலை செய்வதற்காகத் தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவரையும், மற்றொரு நபரையும் கூலிப்படையாக ஷாலு அமர்த்தியுள்ளார். </p><p>உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் முன்னணி தொழிலதிபரான வினீத் மின்சா பகுதியில் உள்ள தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தத் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.</p><h2>கொ<strong>ள்ளை நாடகம் முறி</strong>யடிப்பு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/controversy-erupts-over-trumps-lavish-gifts-to-white-house-female-aides">தொழிலதிபர் கொலை</a> செய்யப்பட்ட இடத்தில் சோதனை செய்த காவல்துறையினருக்குத் தொடக்கத்தில் இது அடையாளம் தெரியாத நபர்களால் நடந்த கொள்ளைச் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், வீட்டில் இருந்த பணமோ அல்லது விலைமதிப்பற்ற நகைகளோ எதுவும் திருடப்படவில்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால், குடும்பத்திற்குள் ஏற்பட்ட மோதல் அல்லது முன்விரோதம் காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கப்பட்டது.</p><h2>சி<strong>சிடிவி கேமரா பதிவு</strong></h2><p>போலீசாரின் தீவிர விசாரணையில், வினீத் மின்சாவின் மருமகள் ஷாலு மின் மீது சந்தேகம் வலுத்தது. விசாரணையில், வீட்டில் வினீத் மின்சா பொருத்தியிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் தன்மீது எப்போதும் தீவிர கண்காணிப்பு செலுத்தப்பட்டு வந்ததும், குடும்பத்தின் நிதி விஷயங்களில் தனக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததும் ஷாலுவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்தது. இதனால், தன் மாமனாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.</p><h2>கொ<strong>லை நடக்கும்போதே கொ</strong>ண்டாட்டம்</h2><p>மாமனாரை கொலை செய்வதற்காகத் தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவரையும், மற்றொரு நபரையும் கூலிப்படையாக ஷாலு அமர்த்தியுள்ளார். சம்பவத்தன்று அவர்கள் வீட்டிற்குள் புகுந்து வினீத் மின்சாவைக் கொலை செய்தபோது, வெளியில் எந்தச் சந்தேகமும் வராத வகையில் ஷாலு பார்ட்டியில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார். கொலை நடந்த பின்னர், ஒன்றும் அறியாதவர் போல் அழுது நாடகமாடியுள்ளார்.</p><h2> சிசிடிவி <strong>ஆதாரங்களால் கைதான மரு</strong>மகள்</h2><p>கொலை நடைபெற்ற இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள், தொலைபேசி அழைப்புப் பதிவுகள்  மற்றும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இறுதியில், ஷாலுவுக்கும் கூலிப்படைக்கும் இடையேயான தொடர்பை உறுதி செய்த போலீசார், மருமகள் ஷாலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தற்கொலையை தடுக்கும் தேவதையின் குரல்.. நடக்க இயலாத நிலையிலும் பலரின் உயிரைக் காப்பாற்றும் லட்சுமி!</title><link>https://www.maalaimalar.com/news/national/the-voice-of-the-goddess-who-prevents-suicide-lakshmi-saves-the-lives-of-many-even-when-unable-to-walk</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-voice-of-the-goddess-who-prevents-suicide-lakshmi-saves-the-lives-of-many-even-when-unable-to-walk#comments</comments><guid isPermaLink="false">6137199e-912a-4319-b834-a37733fcec90</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:34:54 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:34:54.620Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,suicide,உலக தற்கொலை தடுப்பு தினம்,World Suicide Prevention Day,தற்கொலை தடுப்பு மையம்,Suicide Prevention Center</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/mfk5mcjd/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ லட்சுமி நரசம்மா ]]></media:title><media:description type="html"><![CDATA[ லட்சுமி நரசம்மா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/mfk5mcjd/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக தற்கொலை தடுப்பு தினமான இன்று, தற்கொலை தடுப்பு மையத்தில் பணியாற்றும் லட்சுமி நரசம்மா என்ற தேவதை பற்றி காண்போம். </p><p>இன்று (செப்டம்பர் 10)  உலக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/families-being-torn-apart-by-increasing-number-of-suicides-764533">தற்கொலை </a>தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.  </p><p>இத்தினத்தின் கருப்பொருள் "<a href="https://www.maalaimalar.com/news/puducherry/puducherry-ranks-7th-in-suicide-cases-in-india">தற்கொலை </a>பற்றிய கருத்தாக்கத்தை மாற்றுவோம்", "தற்கொலை பற்றிய உரையாடலைத் தொடங்குவோம்" என்பவையாகும். </p><p>உலகளவில், குறிப்பாக இந்தியாவில் நாள்தோறும் பதிவாகும் தற்கொலைகள் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. </p><p>குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு இந்தியாவில் அண்மைக் காலமாக அதிகம் காணப்படுகிறது. </p><p>எனவே தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்ற விழிப்புணர்வு தற்காலத்தில் வேறெதையும் விட மிக மிக அவசியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. </p> <h2>தற்கொலைகளின் மூல காரணம்</h2><p>பெரும்பாலான தற்கொலைகள், குறிப்பாக இளைஞர்களின் தற்கொலைகளில் உள்ள பொதுவான விஷயம், அவர்கள் அந்த கணத்தில் தங்களின் பிரச்னையை கேட்பார் யாரும் இல்லை, நாம் உலகில் தனித்து விடப்பட்டுள்ளோம் என்று நினைப்பது தான்.</p><p>அவர்களின் இந்த எண்ணத்தை போக்க, அவர்களின் பிரச்சனையை முன்னறிந்து கேட்பது அவசியம். அவர்களே சில நேரம் யாரிடமாவது பேசினால் மன ஆறுதல் பெறலாம் என நினைப்பதுண்டு. ஆனால் அதற்கான சூழல் வாய்க்காமல் போவதும் தற்கொலைகள் நிகழ காரணம்.</p><h2>குரல்கள்</h2><p>அவ்வாறானவர்களிடம் அவர்களின் பிரச்னையை கேட்டறிந்து ஆறுதல் சொல்ல ஆலோசனை அளிக்க அரசு சார்பிலும், தன்னார்வ நிறுவனங்கள் சார்பிலும் தற்கொலை தடுப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண்கள் வாயிலாக மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.</p><p>அவ்வாறு தாங்கள் அழைத்துப் பேசும்போது மறுமுனையில் இருந்து ஆறுதலாக பேசுபர்களின் குரல்களை மட்டுமே தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் கேட்டிருப்பார்கள். </p><p>பின்னொரு கணத்தில் அந்த குரலே தங்களை தங்கள் வாழ்வின் இக்கட்டான கணத்தில் தாங்கள் எடுக்கவிருந்த விபரீத முடிவில் இருந்து காத்திருக்கின்றன என்பதை பலர் உணரலாம்.</p><p>ஆனால் அந்த குரல்கள் யாருடைவை, அவர்கள் எவ்வாறான வாழ்க்கையை வாழ்கின்றனர் என்பது பெரும்பாலும் சிந்திக்கப்படுவதில்லை. ஆனால் முகமறியா அவர்களே பலரின் உயிரைக் காப்பாற்றிய, காப்பாற்றி வரும் தேவதைகள்.</p><p>அப்படியான ஒரு தேவதையே ஐதராபாத்தை சேர்ந்த 55 வயதான லட்சுமி நரசம்மா.</p><p>பலரது வாழ்வை தற்கொலையில் இருந்து காத்துள்ள லட்சுமியின் சொந்த வாழ்க்கையே, வாழ்வின் கஷ்டங்களை எப்படி கடந்து வருவது என்ற படிப்பினையை வழங்குவதாக விளங்குகிறது.</p><h2>லட்சுமி நரசம்மாவின் கதை</h2><p>லட்சுமி நரசம்மா தனது 20வது வயதிலிருந்தே Rheumatoid Arthritis எனும் முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.</p><p>நோயின் தீவிரத்தால் 10 ஆண்டுகளாக உடல் செயலிழப்பு ஏற்பட்டு நடக்கவும் முடியாத நிலையில் வாழ்ந்து வரும் லட்சுமி நரசம்மா, தங்கள் வாழ்வில் ஒரு குறுகிய புள்ளியில் முடங்கி விபரீத முடிவை எட்டுபவர்களை ஆற்றுப்படுத்தி அவர்களின் வாழ்வை முன்னோக்கி நகர்த்த உதவுகிறார்.</p><p>கடந்த 2024 வரை லட்சமியும் ஒரு வித மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தபோதோலும் தனது பக்கத்து வீட்டுக்காரர் அளித்த ஊக்கத்தினால் தன்னார்வ ஆலோசகராகப் பயிற்சி பெற்றார்.</p><p>தற்கொலை தடுப்பு உதவி மையமான '1Life' எண்களைத் தொடர்பு கொண்டு மன உளைச்சலில் பேசுபவர்கள் பலருக்கு, மறுமுனையில் தங்களுக்கு ஆறுதல் அளிக்கும் 55 வயதான லட்சுமி நரசம்மா கடந்த 10 ஆண்டுகளாக நடக்கக்கூட முடியாமல் முடங்கியுள்ளார் என்ற உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.</p> <h2>உயிர் காக்கும் தேவதை</h2><p>"மற்றவர்களின் துன்பங்களைக் கேட்கும்போது என் சொந்த வலி மிகவும் சிறியதாகத் தோன்றுகிறது. பிரச்சனைகளை மட்டுமே சிந்தித்து மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் துணிகிறார்கள், அந்த எண்ணத்திற்குத் தடை போடுவதே எங்கள் வேலை. எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு." என கூறுகிறார் நரசம்மா.</p><p>கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட அழைப்புகளைப் பேசி லட்சுமி நரசம்மா பல உயிர்களை காத்துள்ளார்.</p><p>வேலை கிடைக்காததாலும், காதலித்த பெண்ணை மணக்க குடும்பத்தினர் எதிர்த்ததாலும் மன அழுத்தத்தில் இருந்த இளைஞருக்கு நம்பிக்கையளித்து, தோல்வி என்பது தற்காலிகமானது எனப் புரியவைத்து வாழ்வின் மீதான விருப்பத்தை மீட்டுத் தந்துள்ளார்.</p> <p>தொழில் தோல்வியால் குடும்பத்தாரால் மதிக்கப்படவில்லை என எண்ணி தற்கொலை எண்ணத்திற்குத் தள்ளப்பட்ட நபருக்கு, சிறுகச் சிறுக மீண்டும் ஒரு புதிய வேலையை தொடங்கி வாழ்க்கையை மீட்டெடுக்க வழிகாட்டியுள்ளார்.</p><p>இவ்வாறாக, விவசாயியான கணவர் மற்றும் பிள்ளைகளின் உறுதியான ஆதரவோடு, லட்சுமி நரசம்மா இன்று  நூற்றுக்கணக்கானோருக்கு நம்பிக்கையின் முகவரியாக செயல்பட்டு வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>சிறுநீரில் இருந்து யூரியாவை பிரித்து செங்கோட்டையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி - தேசிய புலனாய்வு முகமை</title><link>https://www.maalaimalar.com/news/national/terrorist-used-urea-extracted-from-urine-for-red-fort-attack-nia</link><comments>https://www.maalaimalar.com/news/national/terrorist-used-urea-extracted-from-urine-for-red-fort-attack-nia#comments</comments><guid isPermaLink="false">594f5008-b49b-45f5-a51c-92f6b36a3514</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:30:55 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:30:55.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>National Investigation Agency,Senkottai,Delhi RedFort</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/9dzwlkv5/Untitled-design-45.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi Red Fort terror attack]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/9dzwlkv5/Untitled-design-45.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி செங்கோட்டையில் கடந்த ஆண்டு கார் குண்டுவெடிப்பு மூலம் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில், வெடிகுண்டுகளை தயாரிக்க சிறுநீரில் இருந்து யூரியாவை பயன்படுத்தி இருக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88">செங்கோட்டையில்</a> 2025 நவம்பர் 10 அன்று பயங்கரவாதி உமர் உன் நபி கார் குண்டுவெடிப்பை நடத்தினான். இந்த பயங்கரவாத தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். </p><h3><strong>குற்றப்பத்திரிக்கை தாக்கல்</strong></h3><p>இதையடுத்து இந்த தாக்குதல் நடந்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.</p><p>பயங்கரவாதி உமர் உன் நபி, தாக்குதலுக்கு முந்தைய நாள் வரை சுமார் 11 நாட்களாக நூஹ் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.</p><p>பயங்கரவாதியின் முதல் இலக்கு லால் மந்திர் ஆக இருந்ததாக தெரிகிறது, அவர் மாலை 6:37 மணியளவில் சுன்ஹாரி மசூதி வாகன நிறுத்துமிடத்தில் இருந்து வெளியே நடந்ததாக கூறப்பட்டது.</p><p>இதையடுத்து அவர் தனது காரை ஓட்டி சென்று லால் மந்திர் அருகே நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் மத்திய டெல்லியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், கடைசி நிமிடத்தில் திட்டம் மாற்றப்பட்டு செங்கோட்டைக்கு சென்றுள்ளார்.</p><h3>கடைசி நேரத்தில் திட்டம் மாற்றம்</h3><p>டெல்லி செங்கோட்டையை சென்றடைந்த சில நிமிடங்களுக்கு பிறகு, மாலை 6:50 மணிக்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.</p><p>2023 முதல் 2025-ஆம் ஆண்டு காலகட்டத்திற்குள் பயங்கரவாதி, 12 முறை செங்கோட்டைக்கு சென்றுள்ளார். அவரது கடைசி பயணம் குண்டுவெடிப்புக்கு 6 மாதங்களுக்கு முன்பு, மே 1 அன்று நிகழ்ந்தது.</p><p>இதுபோன்ற பயணங்களின் போது பயங்கரவாதியும், அவரது நண்பர்களும் தங்களது கைபேசிகளை அணைத்து விடுவார்கள். இது அவர்களின் டிஜிட்டல் நடமாட்ட பதிவுகளை மறைக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டிருக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.</p><h3><strong>யூரியா நைட்ரேட் மூலம் வெடிபொருட்கள்</strong></h3><p>பயங்கரவாதிக்கு சொந்தமான பென் டிரைவ்களில் உள்ள தரவுகள், யூரியா நைட்ரேட்டை பயன்படுத்தி வெடிபொருட்கள் தயாரிக்கும் முறை குறித்து சேமிக்கப்பட்டு இருந்தது.</p><p>மேலும் சிறுநீரில் இருந்து யூரியாவை பிரித்தெடுப்பதற்கான மாற்று முறையும் அந்த தரவுகளில் இருந்துள்ளது.</p><p>பயங்கரவாதி தங்கி இருந்த அறையில் துர்நாற்றம் வீசக் காரணமாக இருந்த, சிறுநீர் நிரம்பிய ஒரு பாலித்தீன் பையை கண்டதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இவ்வாறு டெல்லி செங்கோட்டையில் பயங்கரவாதி நடத்திய தாக்குதல் குறித்து, தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் - பக்தர்களுக்கு எச்சரிக்கை 
</title><link>https://www.maalaimalar.com/news/national/leopard-movement-on-tirupati-walkway-warning-to-pilgrims</link><comments>https://www.maalaimalar.com/news/national/leopard-movement-on-tirupati-walkway-warning-to-pilgrims#comments</comments><guid isPermaLink="false">cd769f61-4d84-4d7c-835a-4f2a54175918</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:23:10 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:23:10.209Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupati temple,Leopard,சிறுத்தை நடமாட்டம்,திருப்பதி கோவில்,பக்தர்களுக்கு எச்சரிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/26jtuy4h/leopard.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Leopard]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/26jtuy4h/leopard.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>சிறுத்தை நடமாட்டம் குறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். </p><p>திருப்பதி கோவிலுக்கு ஸ்ரீவாரி மெட்டு மற்றும் அலிபிரி நடைபாதை வழியாக பக்தர்கள் செல்கின்றனர்.</p><h2>சிறுத்தை நடமாட்டம்</h2><p>நடைபாதை வழி முழுவதும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இதனால் அடிக்கடி யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடைபாதைக்குள் வருகின்றன. இதனால் பக்தர்கள் அச்சத்துடன் தரிசனத்திற்கு நடந்து செல்கின்றனர்.</p> <h2>அலிபிரி நடப்பாதை</h2><p>இந்த நிலையில் நேற்று மாலை அலிபிரி நடப்பாதை வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று கொண்டிருந்தனர். 3-வது மைலில் உள்ள ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் சாமி கோவில் அருகே சிறுத்தை ஒன்று அங்கும், இங்கும் நடமாடியது. இதனைக் கண்ட பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு மீண்டும் திரும்பிச் சென்றனர். அப்போது சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. சிறுத்தை நடமாட்டம் குறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். </p> <p>மேலும் பக்தர்களை 20, 30 பேர் குழுக்களாக அனுப்பி வைத்தனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் மிகுந்த கவனத்துடன் நடப்பாதையில் செல்லுமாறு தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.</p><h2>24 மணி நேரம்</h2><p>திருப்பதி கோவிலில் பத்கர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ரூ.3.95 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் சீன அதிபர் - பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/national/chance-to-hold-bilateral-talks-with-chinese-president-prime-minister-modi-who-is-coming-to-india-to-attend-the-brics-conference</link><comments>https://www.maalaimalar.com/news/national/chance-to-hold-bilateral-talks-with-chinese-president-prime-minister-modi-who-is-coming-to-india-to-attend-the-brics-conference#comments</comments><guid isPermaLink="false">991873f3-8c99-47c6-b1f1-0dc8785d5281</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:09:58 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:09:58.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Xi Jinping,ஜி ஜின்பிங்,India-China,BRICS Summit,பிரிக்ஸ் மாநாடு,இந்தியா-சீனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/ey9b7x7f/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/ey9b7x7f/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருகை தரும் சீன அதிபருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p> <p>இந்தியாவின் தலைமையின் கீழ் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/putin-to-visit-india-for-brics-summit-three-russian-military-aircraft-arrive-for-preparatory-and-security-operations">ரஷிய அதிபர் புதின்</a>, சீன அதிபர் ஜி ஜின் பிங், பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் நேரில் பங்கேற்கின்றனர்.</p><p>இந்த ஆண்டின் மாநாட்டு மையக்கருத்து "Building for Resilience, Innovation, Cooperation and Sustainability" என்பதாகும்.  </p> <h2>சீன அதிபருடன் பேச்சுவார்த்தை</h2><p>இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருகை தரும் சீன அதிபருடன் பிரதமர் மோடி, இரு நாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>2020ல் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, சீன அதிபர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறையாகும்.</p><p>கடைசியாக கடந்த 2019 அக்டோபரில் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற 2nd India-China Informal Summit மாநாட்டிற்கு ஜி ஜின் பிங் வந்திருந்தார்</p> <p>சீன அதிபர் வரும் சனிக்கிழமை பிற்பகலில் டெல்லி வந்தடைவார் என்றும், மாநாட்டின் முதல் நாளான அன்றைய தினமே பிரதமர் மோடியுடன் இருதரப்பு சந்திப்பு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>கல்வான் தாக்குதல் </h2><p>கடந்த 2019 இல் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் புகுந்து நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.</p><p>இதையடுத்து <a href="https://www.maalaimalar.com/news/world/ajit-doval-in-china-agreement-on-demarcation-of-india-china-border">சீனாவுடனான இந்தியாவின் உறவு</a> பின்னடைவை சந்தித்த நிலையில் அந்த கசப்புகளை மறந்து பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்திப்பு 2025 ஷாங்காய் உச்சிமாநாட்டில் நடைபெற்றது.</p><p>முன்னதாக எல்லைக் கோட்டில் இரு நாட்டு வீரர்களும் இதன்முன் தாங்கள் இருந்த நிலைகளுக்கு திரும்புவதாக 2024 இல் ஒப்புக்கொள்ளப்பட்டது.</p><p>இருந்தபோதும் லடாக் உள்ளிட்ட எல்லைகளில் சீனா, தனது ராணுவ இருப்பை தொடர்ந்து அதிகப்படுத்தியும், ராணுவ கட்டமைப்புகளை மேற்கொண்டும், இமாச்சல பிரதேசத்தின் பகுதிகளை தங்களின் நாட்டு பகுதிகளாக வரைபடம் வெளியிட்டும் இந்தியாவுக்கு அச்சறுத்தலாக இருந்து வருகிறது. </p><p> இந்நிலையில் எல்லையில் அமைதியை மீட்டெடுப்பது மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மீண்டும் சீரமைப்பது<sup> </sup>தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு இந்த சந்திப்பு ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரீல்ஸ் பார்த்ததால் நேர்ந்த கொடூரம்: காதல் மனைவியை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை!</title><link>https://www.maalaimalar.com/news/national/bengaluru-man-kills-wife-over-reels-addiction-and-dies-by-suicide</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengaluru-man-kills-wife-over-reels-addiction-and-dies-by-suicide#comments</comments><guid isPermaLink="false">321d1a2e-c5d6-4cd0-837a-20c7e1c5b407</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:05:38 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:05:38.868Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime,பெங்களூரு,Bangalore,Domestic Violence,கொலைவழக்கு,HALPolice,MurderAndSuicide,Reels Addiction</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/0wddadl8/MurderAndSuicide" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MurderAndSuicide  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/0wddadl8/MurderAndSuicide?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செல்போனில் எந்நேரமும் ரீல்ஸ் வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், 15 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த காதல் மனைவியைப் பீர் பாட்டிலால் அடித்துக் கொன்றுவிட்டு, கணவனும் தூக்குப்போட்டு தற்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> செய்துகொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>15 ஆண்டுக்கால காதல் வாழ்க்கை</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடக </a>மாநிலம் பெங்களூரு எச்.ஏ.எல். காவல் எல்லைக்கு உட்பட்ட விபூதிபுரா பகுதியில் வசித்து வந்தவர் ராகவேந்திரா (38). ஆட்டோ ஓட்டுநரான இவரும், சுருதி (34) என்பவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.</p><p>இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் இருவரும் தாவணகெரேயில் உள்ள தங்களது பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வருகின்றனர். சுருதி விபூதிபுராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.</p><h2><strong>கொலையில் முடிந்த ரீல்ஸ் விவகாரம்</strong></h2><p>ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கையில், சமீபகாலமாகப் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுருதி எந்நேரமும் தனது செல்போனில் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்ப்பதையும், அதில் மூழ்கிக் கிடப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. </p><p>இதனால் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி கடுமையான வாக்குவாதங்களும், குடும்பத் தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.</p><h2><strong>நள்ளிரவில் நடந்த கொடூரம்</strong></h2><p>வழக்கம்போல நேற்று முன்தினம் நள்ளிரவிலும் சுருதி செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்ததால், ராகவேந்திராவுக்கும் அவருக்கும் இடையே மீண்டும் கடுமையான தகராறு வெடித்தது. இதில் பெரும் ஆத்திரமடைந்த ராகவேந்திரா, சுருதியைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்.</p><p>கோபத்தின் உச்சத்துக்கே சென்ற ராகவேந்திரா, வீட்டில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து சுருதியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சுருதி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.</p><h2><strong>கணவன் தற்கொலை</strong></h2><p>ஆத்திரத்தில் தனது காதல் மனைவியைக் கொலை செய்துவிட்டதை உணர்ந்த ராகவேந்திரா, அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்தார். </p><p>சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதாலும், குற்ற உணர்ச்சியாலும் அவரும் அதே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.</p><h2><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">போலீசார் விசாரணை</a></strong></h2><p>அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், எச்.ஏ.எல். காவல் நிலைய போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர்.</p><p>முதற்கட்ட விசாரணையில், செல்போன் ரீல்ஸ் வீடியோ பார்ப்பது தொடர்பான தொடர் தகராறே இந்த இரட்டை மரணத்திற்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>சமூக வலைத்தள மோகத்தால் இரு உயிர்கள் பலியாகி, இரண்டு குழந்தைகள் அனாதையாக நின்றுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா வரும் புதின்.. முன்னெச்சரிக்கை பணிகளுக்கு 3 ரஷிய ராணுவ விமானங்கள் வருகை</title><link>https://www.maalaimalar.com/news/national/putin-to-visit-india-for-brics-summit-three-russian-military-aircraft-arrive-for-preparatory-and-security-operations</link><comments>https://www.maalaimalar.com/news/national/putin-to-visit-india-for-brics-summit-three-russian-military-aircraft-arrive-for-preparatory-and-security-operations#comments</comments><guid isPermaLink="false">3dd955a6-1040-4fe6-98d1-f279f9915051</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:23:40 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:23:40.590Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Putin,புதின்,BRICS Summit,ரஷியா,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/tewu3mqf/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரஷிய ராணுவ விமானங்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ரஷிய ராணுவ விமானங்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/tewu3mqf/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிபர் புதின் வருகைக்கு முன்னதாக 3 ரஷிய ராணுவ விமானங்கள் இந்தியா வருகை தந்துள்ளன.</p> <p>இந்தியாவின் தலைமையின் கீழ் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லியில் </a>உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.  </p><p>ரஷிய அதிபர்  புதின், பிரேசில், தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் நேரில் பங்கேற்கின்றனர்.  </p><p>இந்நிலையில் ரஷிய அதிபர் புதின் வருகைக்கு முன்னரே அவரது பாதுகாப்பை இங்கு உறுதி செய்ய மூன்று ரஷிய ராணுவ விமானங்களில் உயர் அதிகாரிகள் இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். </p>  <h2>விமானங்கள்</h2><p>நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சுமார் 5:30 மணியளவில், <a href="https://www.maalaimalar.com/topic/russia">ரஷியாவின் </a>அதிநவீன 'IL-76' போர் தளவாட போக்குவரத்து விமானம் உட்பட 3 ராணுவ விமானங்கள் நோய்டா விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கின.</p><p>இந்த விமானங்களில் ரஷியாவின் உயர் மட்டப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் தந்துள்ளனர்.</p> <p>பொதுவாகவே ரஷிய அதிபர் புதினின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு அவர் செல்லும்போது அவரின் மலத்தை சேமித்து வைக்க கூட உடன் பெட்டி ஒன்று எடுத்துச் செல்லப்படும். </p><p>அதன் மூலம் அவரின் உடல்நலன் குறித்து வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.</p> <p>இந்த சூழலில் அதிபர் புதின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விவிஐபி வாகன போக்குவரத்து வசதிகள் குறித்து இந்திய மற்றும் ரஷிய அதிகாரிகள் இணைந்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>புதின் வருகை தரும் விமானம் டெல்லியில் தரையிறங்குமா அல்லது நொய்டாவில் தரையிறங்குமா என்பது குறித்து உறுதிசெய்யப்படவில்லை.</p> <h2>நொய்டா விமான நிலையம்</h2><p>கடந்த ஜூன் 15 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த புத்தம் புது விமான நிலையத்தில் ஒரு வெளிநாட்டு ராணுவ விமானம் தரையிறங்குவது இதுவே முதன்முறையாகும்.</p><p>இதுவரை இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு ராணுவ விமானங்கள் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தையே பயன்படுத்தி வந்தன.</p><p>முதல்முறையாக நோய்டா விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டு, ரஷிய விமானங்கள் அங்கு வந்துள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>கணவன் மனைவியுடன் கட்டாய உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமா? - உச்சநீதிமன்றம் சொன்னது இதுதான்</title><link>https://www.maalaimalar.com/news/national/does-a-husband-forcing-sexual-relations-on-his-wife-amount-to-sexual-assault-here-is-what-the-supreme-court-said</link><comments>https://www.maalaimalar.com/news/national/does-a-husband-forcing-sexual-relations-on-his-wife-amount-to-sexual-assault-here-is-what-the-supreme-court-said#comments</comments><guid isPermaLink="false">46482b36-cf18-4d8f-b85e-6d948c78e90a</guid><pubDate>Thu, 10 Sep 2026 04:21:34 +0000</pubDate><atom:updated>2026-09-10T04:21:34.575Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,பாலியல் வன்கொடுமை,Sexual assault,Supreme Court,marriage,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/cvjmmxp3/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/cvjmmxp3/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கணவனால் கட்டாயப் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்படும் பெண் சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவரே என்றும் ஆனால் அதை குற்றமாக கருத சட்டத்தில் இடமில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p>பழைய இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 மற்றும் தற்போதைய பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ், திருமணத்திற்குப் பிந்தைய கட்டாய பாலியல் உறவு குற்றமாகப் கருதப்படுவதில்லை.</p><p>இந்நிலையில் வழக்கு ஒன்றில் கர்நாடக உயர் நீதிமன்றம், மனைவியைப் பாலியல் அடிமை போல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடர அனுமதி அளித்து தீர்ப்பளித்தது.</p> <h2>உச்சநீதிமன்றம் </h2><p>இந்தத் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை நேற்று <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்ச நீதிமன்ற</a> தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.</p><p>இதன்போது, "நாங்கள் நிச்சயமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவோம். கணவனால் கட்டாயப் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்படும் பெண் சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவரே.</p><p>ஆனால், பிரிவு 375ன் கீழ் நேரடியாக திருமணத்துக்கு பிந்தைய கட்டாய உறவு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை</a> ஆகாது என விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் போது ஒரு நபரை இந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகச் சேர்த்து விசாரணை நடத்துவது நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருகிறதா?</p><p>நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தில், குறிப்பிட்ட செயல் குற்றமல்ல என்று நேரடியாகக் கூறப்பட்டுள்ள போது, அதை நீதிமன்றங்கள் தனது நீதித்துறை மறுஆய்வு மூலம் குற்றமாக்க முடியுமா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.</p> <p>பாதிக்கப்பட்ட மனைவி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ஒரு பெண் பாலியல் அடிமையாக நடத்தப்படும் அதீத சூழலில் இந்த முடிவை உயர் நீதிமன்றம் எடுத்ததாக சுட்டிக்காட்டினார்.</p><p>மூத்த வழக்கறிஞர் கருணா நந்தி கூறுகையில், அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு ஏற்ப இந்தச் சட்ட விலக்கை மறுவாசிப்பு செய்யவோ அல்லது மாற்றி விளக்கவோ நீதிமன்றம் முன்வர வேண்டும் என்றார்.</p> <h2>முடிவெடுக்க வேண்டியது மக்கள் தான்</h2><p>தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "இந்த வழக்கு வெறும் சமூக ஒழுக்கம் சார்ந்த விஷயம் அல்ல; மாறாக இது முழுக்க முழுக்க அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த பிரச்சனை.</p><p>சமூக ஒழுக்கம் என்றால் என்ன? மக்கள் தங்கள் பிரதிநிதிகள் (நாடாளுமன்றம்) மூலம் பேசுவதை, நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் பரிசோதிக்கிறோம்.</p><p>முடிவெடுக்க வேண்டியது மக்கள் தான். நீதிமன்றம் தனது அரசியலமைப்பு மொழியில் மட்டுமே பேச முடியும்." என தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>SIR: பாரத ரத்னா பெற்றவருக்கே இந்த நிலைமையா?.. தேர்தல் ஆணையத்தின் கிடுக்குபிடியில் 92 வயது விஞ்ஞானி</title><link>https://www.maalaimalar.com/news/national/sir-is-this-the-plight-of-even-a-bharat-ratna-awardee-92-year-old-scientist-faces-the-election-commissions-strict-measures</link><comments>https://www.maalaimalar.com/news/national/sir-is-this-the-plight-of-even-a-bharat-ratna-awardee-92-year-old-scientist-faces-the-election-commissions-strict-measures#comments</comments><guid isPermaLink="false">97d84f96-1449-43af-89c9-086e404098d1</guid><pubDate>Thu, 10 Sep 2026 02:13:58 +0000</pubDate><atom:updated>2026-09-10T02:13:58.493Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,Election Commission,Sir,தேர்தல் ஆணையம்,எஸ்ஐஆர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/1wyq9nde/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  சி.என்.ஆர். ராவ் ]]></media:title><media:description type="html"><![CDATA[  சி.என்.ஆர். ராவ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/1wyq9nde/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/sir">வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த</a> 3 ஆம் கட்டம் நாடு முழுவதிலும் 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது. </p><p>இதில் பல குளறுபடிகள் பதிவாகி வரும் நிலையில் சாமானியர்கள் மட்டுமின்றி, நன்கறியப்பட்ட பிரபலங்களும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். </p><h2>நோட்டீஸ்</h2><p>அந்த வகையில், <a href="https://www.maalaimalar.com/topic/karnataka">கர்நாடகாவில் </a>நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் , நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' பெற்ற மூத்த விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் பெயரில் பிழை இருப்பதாகக் கூறி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாக வெளியான செய்தி விவாதத்தை கிளப்பியுள்ளது.</p><p>பழைய வாக்காளர் பதிவேட்டில் இவரது பெயர் 'Prof CNR Rao' என்று பதிவாகியிருந்த நிலையில், தற்போதைய புதிய கணினி அமைப்பில் ஆங்கிலத்தில் கூடுதல் 'f' சேர்க்கப்பட்டு 'Proff CNR Rao' எனத் தவறாகப் பதிவாகியுள்ளது.</p> <p>கணினி அமைப்பில் உள்ள இந்த  பெயர் முரண்பாடு காரணமாக, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு அவருக்கு ஆன்லைனில் நோட்டீஸ் அனுப்பட்டதாக தகவல் வெளியானது.</p><h2>விளக்கம்</h2><p>ஆனால் தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த நோட்டீஸும் நேரில் வந்து சேரவில்லை என்று சி.என்.ஆர். ராவின் அலுவலகம் தெரிவித்தது.</p><p>சர்ச்சையை தொடர்ந்து விளக்கமளித்த தேர்தல் ஆணையம், 92 வயதான விஞ்ஞானியின் மூப்பையும் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு அவருக்கு நேரில் ஆஜராகும் நோட்டீஸ் எதுவுமே அனுப்பப்படவில்லை என்றும், தேர்தல் அதிகாரிகளே நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று விவரங்களை சரிசெய்து இறுதி வாக்காளர் பட்டியலில் பெயரை தொடர நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், நடிகர் பிரகாஷ் ராஜ், ராம் ஜெத்மலானி, ராகவ் சதா உள்ளிட்டோரும் இதுபோன்ற சிக்கலை சந்தித்துள்ளனர்.</p> <h2>3 ஆம் கட்ட எஸ்ஐஆர்</h2><p>டெல்லி, மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த மே 14 அன்று இந்திய தேர்தல் ஆணையம் 3 ஆம் கட்ட சிறப்புத் தீவிர திருத்தத்தைஅறிவித்தது.</p><p>மே 30 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் இந்தப் நடவடிக்கையின் மூலம் சுமார் 36.73 கோடி வாக்காளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.</p><p>எஸ்ஐஆர் நடைபெறும் மாநிலங்களில் பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டும், எஞ்சிய 13 மாநிலங்களில் 2028 மற்றும் 2029ஆம் ஆண்டுகளிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.</p><p>முன்னதாக, முதல் மற்றும் இரண்டாம் கட்ட எஸ்ஐஆர் பணிகள் 10 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.</p> <h2>சி.என்.ஆர். ரவ்</h2><p>பெங்களூரை சேர்ந்த சி.என்.ஆர். ராவ், நாட்டின் முன்னணி வேதியியல் விஞ்ஞானிகளில் ஒருவர் ஆவார்.</p><p>1976இல் இந்திய அறிவியல் கழகத்தில் (IISc), 'Solid state and Structural chemistry' பிரிவை நிறுவிய இவர், 1984 முதல் 1994 வரை அதன் இயக்குநராகப் பணியாற்றினார்.</p><p>1,600க்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவருக்கு, நாட்டின் உயரிய 'பாரத ரத்னா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவரை போன்றோரே எஸ்ஐஆர் பணியின்கீழ் சிக்கலை எதிர்கொண்டு வரும் நிலையில் சாமானிய மக்கள் இப்பணியால் அதிக சிரமங்களை சந்திக்க நேர்ந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>குஜராத்: கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்த சாரம்.. சிக்கித் தவித்த 13 பேர் மீட்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/gujarat-scaffolding-collapses-during-construction-work-10-workers-trapped-13-rescued</link><comments>https://www.maalaimalar.com/news/national/gujarat-scaffolding-collapses-during-construction-work-10-workers-trapped-13-rescued#comments</comments><guid isPermaLink="false">9b814c8d-4771-4bd0-b5f0-cf843398997d</guid><pubDate>Thu, 10 Sep 2026 01:01:06 +0000</pubDate><atom:updated>2026-09-10T01:01:06.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,gujarat,கட்டிட விபத்து,construction work,கட்டுமான பணி,building  collapse</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/kwg1ihis/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ குஜராத்]]></media:title><media:description type="html"><![CDATA[ குஜராத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/kwg1ihis/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத்தில் கட்டுமானத்தில் இருந்த வணிக வளாகத்தில் சாரம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் உள்ளே சிக்கயுள்ளனர்.</p> <p>குஜராத் மாநிலம் காந்திநகர் அருகிலுள்ள குடாசன் பகுதியில், 'பாஸ்கி தி எம்பயர்' என்ற வணிக வளாக கட்டுமான பணி நடந்து வந்துள்ளது. </p><p>நேற்று (புதன்கிழமை) இரவு 9:30 மணியளவில் <a href="https://www.maalaimalar.com/news/national/1133-buildings-collapsed-and-98-people-lost-their-lives-in-delhi-over-three-years-residents-living-in-fear">கட்டிடத்தின் </a>தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது, எடைக் தாங்காமல் சாரக் கூரை சரிந்து விழுந்தது. அப்போது அங்கிருந்த பெரிய கிரேன் ஒன்றும் இடிபாடுகளின் மீது சாய்ந்தது.</p> <h2>தொழிலாளர்கள்</h2><p>இதன்போது பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பலரும் <a href="https://www.maalaimalar.com/topic/building-collapse">இடிபாடுகளுக்குள்ளும்</a> கிரேனின் அடியயேயும் சிக்கிக்கொண்டனர்.</p><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றுவதற்காக மற்றொரு பெரிய கிரேன் வரவழைக்கப்பட்டது.</p> <p>இதுவரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 12 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். </p><p> மேலும் 10 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணி நள்ளிரவையும் தாண்டி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  </p><p>இதுவரை இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என மண்டல போலீஸ் ஐஜி வீரேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.  </p><h2>நேரில் ஆய்வு</h2><p>சம்பவ இடத்திற்கு குஜராத் மாநில துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்வி மற்றும் காந்திநகர் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.</p><p>கட்டிட விபத்து குறித்துக் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, முறையான பாதுகாப்பு விதிகளுடன் கட்டுமானம் நடைபெற்றதா என்பது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது.</p><p>அண்மையில் டெல்லியில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த  5 மாடி பிஜி தங்கும் விடுதி இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் கொல்லப்பட்ட நிலையில் தற்போதைய விபத்து அரங்கேறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்</title><link>https://www.maalaimalar.com/news/national/arvind-kejriwal-unanimously-re-elected-as-aap-national-convenor</link><comments>https://www.maalaimalar.com/news/national/arvind-kejriwal-unanimously-re-elected-as-aap-national-convenor#comments</comments><guid isPermaLink="false">49dce3fc-0062-4e6a-a551-bd986fec9a00</guid><pubDate>Wed, 09 Sep 2026 21:18:52 +0000</pubDate><atom:updated>2026-09-09T21:18:52.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,AAP,ஆம் ஆத்மி கட்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/02/26/9756962-kejriwal26022025.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aravind Kejriwal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/02/26/9756962-kejriwal26022025.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காணொளி வாயிலாக நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/aam-admi-party">ஆம் ஆத்மி</a> கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் 330 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .</p><p>கட்சி தனது <a href="https://www.maalaimalar.com/news/national">தேசிய</a> செயலாளராக பங்கஜ் குப்தாவைத் தேர்ந்தெடுத்தது, அதே நேரத்தில் என்.டி. குப்தா தேசிய பொருளாளராகத் தொடர்வார். இக்கூட்டத்தில் 23 உறுப்பினர்களை கொண்ட புதிய தேசிய செயற்குழுவும் அமைக்கப்பட்டது.</p><h2>போராட்டத்திற்கு தயாராக இருக்கிறோம்:</h2><p>ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஊடக பொறுப்பாளர் அனுராக் தண்டா, கெஜ்ரிவாலுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவரது தலைமையில் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள கட்சி தயாராக உள்ளது என்றும் கூறினார்.</p><p>"ஆம் ஆத்மி கட்சியின் புதிதாக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலால் தேசிய ஒருங்கிணைப்பாளராக ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் ஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் வழிகாட்டுதலின் கீழ், நாங்கள் ஒவ்வொரு போராட்டத்திற்கும் தயாராக இருக்கிறோம்," என்று அனுராக் தண்டா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>சமீபத்திய ஆண்டுகளில் கட்சி சந்தித்த தேர்தல் பின்னடைவுகளுக்கு பிறகும், தொடர்ந்து கட்சியை வழிநடத்தி வரும் நிலையில் கெஜ்ரிவால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியின் முன்னாள் முதலமைச்சரான கெஜ்ரிவால், வெளிப்படைத்தன்மை, தகவல் அறியும் உரிமை மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றை மையமாக கொண்ட பல ஆண்டுகால செயல்பாடுகளுக்கு பிறகு அரசியலில் நுழைந்தார்.</p><h2>நன்கொடை வழங்கினார்:</h2><p>தேர்தல் அரசியலில் நுழைவதற்கு முன்பு, பொது விநியோக அமைப்பு, பொதுப் பணிகள், சமூக நலத் திட்டங்கள், வருமான வரி மற்றும் மின்சாரம் தொடர்பான பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக கெஜ்ரிவால் பரிவர்த்தன் என்ற தன்னார்வ அமைப்பை நிறுவினார்.</p><p>அவர் 2006-இல் வருமான வரித் துறையில் இருந்து ராஜினாமா செய்து, தனது ரமோன் மக்சேசே விருது பணத்தை பொது காரண ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவுவதற்காக நன்கொடையாக வழங்கினார்.</p><p>2012 அக்டோபர் 2 அன்று, இந்தியா அகென்ஸ்ட் கரப்ஷன் இயக்கத்தின் மற்ற முன்னாள் உறுப்பினர்களுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சியை நிறுவுவதற்கு முன்பே, கெஜ்ரிவால் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முக்கிய முகங்களில் ஒருவராக உருவெடுத்தார் .</p><p>அவர் 2013-இல் டெல்லி சட்டமன்ற தொகுதியில் தனது முதல் தேர்தலில் போட்டியிட்டு, மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஷீலா தீட்சித்தை 22,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மதிய உணவு வழங்குவதில் தகராறு: தலைமை ஆசிரியரை அடித்து உதைத்த மாணவர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">bf69ddd9-b72d-4a01-bdd6-a6366aa6c6c6</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:43:40 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:43:40.971Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,west bengal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/e1bs0d6p/Students0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேற்கு வங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/e1bs0d6p/Students0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி 150 ஆண்டு கால பழமையான பள்ளிக் கூடம் உள்ளது. இந்த பள்ளிக் கூடத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆசிரியர் தினத்தன்று சிறப்பு மதிய உணவு வழங்கப்படும்.</p><p>அதன்படி நேற்று உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது போதுமான சாப்பாடு மற்றும் சிக்கன் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் மாணவர்கள் கோபம் அடைந்தனர்.</p><p>அப்போது சாப்பாடு வழங்கும் இடத்திற்கு தலைமை ஆசிரியர் வந்துள்ளார். அவருக்கும் மாணவர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தலைமை ஆசிரியரை கீழே தள்ளிவிட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.</p><p>அதோடு மட்டுமல்லாமல் தலைமை ஆசிரியர் அறை, உணவு தயார் செய்யப்படும் அறை ஆகியவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க, உடனடியாக அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p>இது தொடர்பாக மாவட்ட பள்ளிகள் ஆய்வாளர் தலைமை ஆசிரியர் அறை, மதிய உணவு தயார் செய்யப்பட்ட இடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்துள்ளார்.</p><p>இது பள்ளிக் கூடத்தின் உள் விவகாரம். விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது இதுகுறித்து சொல்ல முடியாது என்றார்.</p><p>இந்த பள்ளிக்கூடம் 1876-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் தீபக் பர்மன், பள்ளிக்கூடம் சென்று ஆய்வு செய்வார் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரக்கோணம்- ரேணிகுண்டா இடையே 3, 4 ரெயில் வழித்தடத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!</title><link>https://www.maalaimalar.com/news/national/approval-for-arakkonam-renigunta-3rd-4th-rail-line</link><comments>https://www.maalaimalar.com/news/national/approval-for-arakkonam-renigunta-3rd-4th-rail-line#comments</comments><guid isPermaLink="false">0f3d7eaf-103b-461b-aa7b-a2b5263ce33d</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:18:28 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:18:28.048Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில்,indian railways,Ministry of Railways,அஸ்வினி வைஷ்ணவி,அரக்கோணம் ரேணிகுண்டா</media:keywords><media:content height="423" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/5vhqaj6y/images-3.jfif" width="723"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arakkonam – Renigunta ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/5vhqaj6y/images-3.jfif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2>ஒப்புதல் </h2><p>தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள 17 மாவட்டங்களை உள்ளடக்கிய ஐந்து பல்தடத் திட்டங்களுக்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்திய ரெயில்வேயின் தற்போதைய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/5-passenger-train-including-chennai-central-sulurpet-cancelled">ரெயில் </a>பாதை வலையமைப்பு சுமார் 540 கி.மீ. அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திட்டம் </h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/har-ghar-tiranga-campaign-pm-narendra-modi-appeal-to-nation">நரேந்திர மோடி</a> தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் ரெயில்வே அமைச்சகத்தின் சுமார் ரூ. 10,021 கோடி மொத்த மதிப்பிலான ஐந்து திட்டங்களுக்கு இன்று ஒப்புதலை வழங்கியுள்ளது </p><p>அதன்படி அரக்கோணம் – ரேணிகுண்டா 3வது மற்றும் 4வது வழித்தடம் – 77 கி.மீ.</p><p>வைட்ஃபீல்ட் – பங்காரப்பேட்டை 3வது மற்றும் 4வது வழித்தடம் – 47 கி.மீ.</p><p>ஓசூர் – ஓமலூர் இரட்டிப்புப் பாதை – 147 கி.மீ.</p><p>சேலம் - கரூர் - திண்டுக்கல் இரட்டிப்பு - 159 கி.மீ ஆகிய வழித்தடங்களுக்கு ஒப்புதலானது வழங்கப்பட்டுள்ளது </p> <h2>தற்சார்பு </h2><p>இந்த புதிய வழித்திட்டங்கள் மூலம் முறையான செயல்பாடுகளை செயல்படுத்தவும், நெரிசலை குறைக்கவும், இந்த புதிய திட்டமானது பிரதமர் மோடியின் புதிய இந்தியா <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-hails-visionary-budget">தொலைநோக்கு</a> பார்வைக்கு இணங்க அமைந்துள்ளன. இந்த வழித்தடங்கள் அமைவதன் மூலம் அப்பகுதிகளில் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில்  வாய்ப்புகளை உருவாக்கி தற்சார்பு நிலையை இது உருவாக்குகிறது.</p><h2>மேம்பாடு </h2><p>குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 17 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த ஐந்து திட்டங்களுக்கான அறிவிப்பானது  இந்திய ரெயில்வேயின் தற்போதைய வலையமைப்பை சுமார் 540 கி.மீ. அளவுக்கு அதிகரிக்கும். </p><p>மேலும் அங்கீகரிக்கப்பட்ட இந்த பலவழித் திட்டங்கள், சுமார் 52 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஏறத்தாழ 2,121 கிராமங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும். </p><h2>வழித்தடம் </h2><p>இந்த புதிய வழித்தடங்கள் அமைவதன் மூலம், திருப்பதி, சுப்பிரமணிய சுவாமி கோயில் (திருத்தணி), ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கோயில் (திருச்சானூர்), கோட்டிலிங்கேஸ்வர தேவாலயம், ஸ்ரீ சீதி பைரவேஸ்வர சுவாமி கோயில், பங்காரு திருப்பதி, </p><p>கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ், ஹோகன்னக்கல் ஃபார்டால்ஸ், ஹோகன்னக்கல், ஹோகன்னக்கல் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு ரெயில் இணைப்பை மேம்படுத்த வழிவகை செய்கிறது. </p><p>மலைகள், சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், நாமக்கல் கோட்டை, கல்யாண பசுபதேஸ்வரர் கோவில், யாதகிரிகுட்டா கோவில், போங்கீர் கோட்டை, சுரேந்திரபுரி, ஸ்வர்ணகிரி கோவில் மற்றும் நிலக்கரி, சிமெண்ட், இரும்பு மற்றும் எஃகு, கொள்கலன்கள், வாகனங்கள், உணவு தானியங்கள், பெட்ரோலியப் பொருட்கள், உரங்கள் போன்ற சரக்குகளின் போக்குவரத்திற்கு இந்த புதிய வழித்தடமானது முக்கியமான ஒன்றாக அமைய இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சரிவை சந்தித்த பங்குச்சந்தை: ஐ.டி., நிதிச்சேவை நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி..!</title><link>https://www.maalaimalar.com/news/national/sensex-tumbles-813-points-to-3-month-low-amid-escalating-tensions-in-west-asia-oil-price-surge</link><comments>https://www.maalaimalar.com/news/national/sensex-tumbles-813-points-to-3-month-low-amid-escalating-tensions-in-west-asia-oil-price-surge#comments</comments><guid isPermaLink="false">d0cbe68f-de38-4704-8f0a-2c6772e46fb6</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:00:46 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:00:46.106Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>share market,NIFTY,BSE Sensex</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/91cuz68r/Sharemarket0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பங்குச் சந்தை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/91cuz68r/Sharemarket0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் சென்செக்ஸ் 813 புள்ளிகள் சரிந்து கடந்த 3 மாதங்களில் குறைந்த புள்ளிகளை எட்டின.</p><p>மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது. இதன் தாக்கத்தாலும், தகவல் தொழில்நுட்பம் (IT), நுகர்வோர் பொருட்கள் (FMCG), நிதிச் சேவைகள் மற்றும் எண்ணெய் &amp; எரிவாயு துறைப் பங்குகள் மீதான விற்பனை அழுத்தத்தாலும், முக்கிய பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிந்து, 813 புள்ளிகள் குறைந்து மூன்று மாதக் குறைந்தபட்ச நிலையை அடைந்தது. நிஃப்டி குறியீடு 23,450-க்குக் கீழே சென்று நிறைவடைந்தது.</p><p>30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 813.35 புள்ளிகள் அல்லது 1.08 சதவீதம் சரிந்து, இன்றைய குறைந்தபட்ச அளவான 74,764.23-ல் முடிவடைந்தது. இது கடந்த மூன்று மாதங்களில் மிகக் குறைந்த நிறைவு நிலையாகும். கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி 73832 புள்ளியாக இருந்தது.</p><h2>நிஃப்டி</h2><p>50 பங்குகளைக் கொண்ட என்எஸ்இ (NSE) நிஃப்டி 203.60 புள்ளிகள் அல்லது 0.86 சதவீதம் சரிந்து, மூன்று மாதக் குறைந்தபட்ச அளவான 23,431.50-ல் முடிவடைந்தது. இக்குறியீடு இதற்கு முன் ஜூன் 11 அன்று இதே அளவை ஒட்டிய நிலையில் முடிவடைந்திருந்தது.</p><p>சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில், ஹெச்.சி.எல். டெக் (HCL Tech) அதிகபட்சமாக 4.55 சதவீதம் சரிந்தது. இன்ஃபோசிஸ் (Infosys) 4.43 சதவீதமும், டெக் மஹிந்திரா (Tech Mahindra) 3.87 சதவீதமும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) 2.26 சதவீதமும் சரிந்தன. HDFC வங்கி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவையும் சரிவைச் சந்தித்த முக்கிய நிறுவனங்களாகும்.</p><h2>அதானி போர்ட்ஸ்</h2><p>அதானி போர்ட்ஸ் (Adani Ports) 3.67 சதவீதம் உயர்ந்து அதிக லாபம் ஈட்டிய நிறுவனமாகத் திகழ்ந்தது. டாடா ஸ்டீல், ட்ரெண்ட் (Trent) மற்றும் என்டிபிசி (NTPC) ஆகியவையும் லாபம் ஈட்டிய நிறுவனங்கள் ஆகும்.</p><p>உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அளவுகோலான ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 2.67 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 100.5 அமெரிக்க டாலராக அதிகரித்தது.</p><p>சந்தை தரவுகளின்படி, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) செவ்வாயன்று ரூ. 123.19 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றனர்.</p><p>நேற்று சென்செக்ஸ் 555.23 புள்ளிகள் (0.73 சதவீதம்) சரிந்து 75,577.58 புள்ளிகளில் நிலைபெற்றது. நிஃப்டி 144.05 புள்ளிகள் (0.61 சதவீதம்) சரிந்து 23,635.10 புள்ளிகளில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தலின்போது பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பெற்ற நிதி எவ்வளவு?</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-received-rs-1473-crore-during-last-5-state-polls-over-7-times-more-than-congress</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-received-rs-1473-crore-during-last-5-state-polls-over-7-times-more-than-congress#comments</comments><guid isPermaLink="false">7b85257b-2a2a-4d70-b822-98ace2b5a168</guid><pubDate>Wed, 09 Sep 2026 11:28:19 +0000</pubDate><atom:updated>2026-09-09T11:28:19.840Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,Election Commission of India</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/38xezqrp/BJPCogress.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/38xezqrp/BJPCogress.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தலின்போது, கட்சி நிதி (நன்கொடை) பெறுவது உண்டு. இந்த பணம் கட்சிகளுக்கு அக்கவுண்ட் மன்றும் நக்கொடை பத்திரம் மூலமாகவும் வழங்கப்படுகிறது. கடைசியாக தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.</p><h2>பாஜக 1473 கோடி ரூபாய்</h2><p>அப்போது பாஜக தேர்தல் நிதியாக 1473 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இந்த தொகை அனைத்தும் மத்திய தலைமையகத்திற்கு வந்துள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சிக்கு 207 கோடி ரூபாய் மட்டுமே தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள தேர்தல் வரவு செலவு கணக்கு அறிக்கையின் மூலம் இந்த தரவு கிடைக்கப்பெற்றுள்ளது.</p><h2>காங்கிரஸ் கட்சிக்கு 207.17 கோடி ரூபாய்</h2><p>காங்கிரஸ் கட்சிக்கு 207.17 கோடி ரூபாய் கிடைக்கப் பெற்ற நிலையில், 248.55 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. மார்ச் 15-ந்தேதியில் இருந்து மே 15-ந்தேதி வரையிலான தேர்தல் காலத்தின் வரவு செலவை இது காட்டுகின்றன.</p><p>கேரளம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் கட்சிகள் செலவழித்துள்ள தொகை எவ்வளவு என்று பாஜக இன்னும்  வெளியிடவில்லை.</p><h2>பாஜக-வின் கையிருப்பு அதிகரிப்பு</h2><p>பா.ஜ.க. செலவு செய்தாலும், மார்ச் 15-ந்தேதி 6,722.6 கோடி ரூபாயாக இருந்த கையிருப்பு, தேர்தலுக்கு பின் மார்ச் 6-ந்தேதி 7627.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.</p><p>காங்கிரஸ் கட்சியின் கணக்கில் 169.06 (கையிருப்பு 22.9 கோடி ரூபாய், வங்கி கணக்கில் 146.1 கோடி ரூபாய்) இருந்தது. தேர்தல் முடிவடைந்த பிறகு அந்த தொகை 103.2 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.</p><h2>தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம்</h2><p>தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநில தேர்தலுக்காக பா.ஜ.க. 159.7 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. பொதுவான கட்சி பிரச்சாரத்திற்கு மட்டும் 130.4 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. மீதமுள்ளவை வேட்பாளர்கள் மற்றும் அது தொடர்பான செலவினங்களாகும்.</p><p>அசாம் மாநிலத்திற்கு மட்டும் 96.27 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. பொதுவான கட்சிப் பிரச்சாரத்திற்கு மட்டும் 76.73 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. 19.54 கோடி ரூபாய் வேட்பாளர்கள் மற்றும் அது தொடர்பான செலவினங்களாகும்.</p><p>விளம்பரைம் மற்றும் நட்சத்திர வேட்பாளர்களின் டிராவல் ஆகியவற்றிற்கு அதிகப்பட்டியாக செலவினம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>தமிழ்நாடு</h2><p>தமிழ்நாட்டில் பாஜக 51.56 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதில் 44.51 கோடி ரூபாய் பொது பிரசாரம், 7.05 கோடி ரூபாய் வேட்பாளர்கள் செலவினம் ஆகும்.</p><p>புதுச்சேரியில் பாஜக 11.90 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. இதில் 9.19 கோடி ரூபாய் பொது பிரசாரம், 2.71 கோடி ரூபாய் வேட்பாளர்கள் செலவினம் ஆகும்.</p><p>ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பொது பிரசாரம் என்ற வகையில் 143 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது, வேட்பாளர்கள் செலவினம் என 105.55 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.</p><p>காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைமையகம் 40.52 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. மாநில காங்கிரஸ் சார்பில் 102.49 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் தீவிரமடையும் உணவுப் பாதுகாப்பு சோதனைகள்: வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மைகள்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-food-safety-crackdown-shocking-findings</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-food-safety-crackdown-shocking-findings#comments</comments><guid isPermaLink="false">be12144b-b7c4-4b61-a041-9cd039c90d26</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:15:20 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:15:20.057Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,FSSAI,பாமாயில்,Food Safety,warning labels,லண்டன் சந்தை,மேகி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/tuvoh0zo/food.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Food Safety  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/tuvoh0zo/food.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாக்கெட்டின் முன்பகுதியில் சர்க்கரை அல்லது கொழுப்பு அளவு குறித்த எச்சரிக்கை லேபிள்களை ஒட்டுவதற்கு உணவு உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். </p><p>இந்தியாவில் பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனைத் துறை $100 பில்லியனுக்கும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ள நிலையில், அதனைக் கண்காணிக்கும் ஒழுங்குமுறை அமைப்புகளின் செயல்பாடுகளையும் மீறி பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவது அண்மைய சோதனைகளில் தெரியவந்துள்ளது. </p><p>நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவுப் பாதுகாப்புத் துறை சோதனைகளில், காலாவதி தேதிகளை மாற்றி அமைத்தல், நுகர்வோரை திசை திருப்பும் பொய்யான லேபிள்கள் மற்றும் சுத்தமின்மை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><h2>இ<strong>ரட்டை நிலைக</strong>ள்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/fake-currency-worth-rs-17-29-crore-seized-at-punjab-national-bank-manager-arrested">இந்தியாவில் </a>விற்பனை செய்யப்படும் பிரபல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள், வெளிநாடுகளில் விற்கப்படும் அதே தயாரிப்புகளோடு ஒப்பிடும்போது ஊட்டச்சத்து அளவிலும் தயாரிப்பு முறையிலும் பெருமளவு வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, லண்டன் சந்தையில் விற்கப்படும் 'பாண்டா' பானத்தைக் காட்டிலும் இந்தியாவில் விற்கப்படும் பானத்தில் சுமார் மூன்று மடங்கு கூடுதல் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. </p><p>அதேபோல், பிரித்தானியாவில் விற்பனையாகும் 'மேகி' நூடுல்ஸ் தயாரிப்பில் சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்தப்பட்டு, அட்டையின் முன்பகுதியில் எச்சரிக்கை குறியீடுகளும் இடம்பெறுகின்றன. ஆனால், இந்திய பதிப்பில் பாமாயில் பயன்படுத்தப்படுவதோடு, எவ்வித முன்பக்க எச்சரிக்கைக் குறியீடுகளும் இடம்பெறுவதில்லை.</p><p>இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தற்போதைய விதிகளின்படி, பாக்கெட்டின் பின்பகுதியில் சிறிய எழுத்துக்களில் பொருட்களின் பட்டியலை அச்சிட்டால் போதுமானது. பாக்கெட்டின் முன்பகுதியில் சர்க்கரை அல்லது கொழுப்பு அளவு குறித்த எச்சரிக்கை லேபிள்களை ஒட்டுவதற்கு உணவு உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும், பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2026-இல் உணவு பாக்கெட்டுகளின் முன்பகுதியிலேயே ஊட்டச்சத்து எச்சரிக்கை லேபிள்களைக் கட்டாயமாக்கும் புதிய முன்மொழிவை அரசு கொண்டுவந்தது.</p><p>மகாராஷ்டிர மாநிலத்தில் உணவுப் பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டே தலைமையிலான குழு, மே மாதத்தில் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளது. மும்பை கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த உணவுப் பொருட்களில் போலி ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலான ஊட்டச்சத்து லேபிள்களும், தவறான காலாவதி தேதிகளும் ஒட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, கனடா நாட்டின் உணவு ஆய்வு முகமையும் இதன் பின்னணியைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.</p><h2><strong>நுகர்வோர் பாதுகாப்</strong>பு  </h2><p>2020-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு ஆய்வுகளில், பரிசோதிக்கப்பட்ட 1,00,000-க்கும் மேற்பட்ட உணவு மாதிரிகளில் சுமார் 20 சதவீதம் பாதுகாப்பற்றவையாகவும், தரம் குறைந்தவையாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், விரைவு விநியோக முறையில் செயல்படும் வணிகச் சேவைகளின் சேமிப்புக் கிடங்குகளில் கரப்பான் பூச்சிகள், எலிகள் மற்றும் அழுகிய காய்கறிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அத்துறையின் மீதும் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. </p><p>உணவு சந்தை அதிவேகமாக விரிவடைந்து வரும் சூழலில், நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உணவுப் பாதுகாப்புத் துறை இன்னும் கடுமையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>6 ஆண்டுகளுக்கு பிறகு லிபுலேக் கணவாய் திறப்பு :இந்தியா திபெத் இடையே மீண்டும் வர்த்தகம் தொடக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/six-years-lipulekh-pass-reopens-india-tibet-trade</link><comments>https://www.maalaimalar.com/news/national/six-years-lipulekh-pass-reopens-india-tibet-trade#comments</comments><guid isPermaLink="false">bf22dbf0-6f4d-46c6-aacc-49e446e25585</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:01:50 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:01:50.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,Trade,திபெத்,வணிகம்,லிபுலேக் கண்வாய்,Lipulekh</media:keywords><media:content height="480" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/romf7lng/newindianexpress2026-09-0818p30b9g131448417.avif" width="640"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India-Tibet border ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/romf7lng/newindianexpress2026-09-0818p30b9g131448417.avif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2>திறப்பு </h2><p>இந்தியா <a href="https://www.maalaimalar.com/news/world/tibet-glacier-collapse-disaster-chinese-researchers-shocking-report">திபெத் </a>இடையே லிபுலேக் கணவாய் வழியாக  வர்த்தகமானது மீண்டும் தொடங்கியுள்ளது. லிபுலேக் கணவாயானது 17,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் அமைந்திருக்கும் ஒரு வர்த்தகப்பாதை ஆகும். </p><h2>லிபுலேக் </h2><p>லிபுலேக் கணவாயானது 1962-ஆம் ஆண்டு இந்தியா-சீனா போருக்குப் பிறகு மூடப்பட்டது. அதன்பின்னர் 1992-ல் வர்த்தகம் மீண்டும் தொடங்கியது, பிறகு கோவிட் <a href="https://www.maalaimalar.com/news/world/man-who-plotted-to-hide-covid-pandemic-records-appears-in-us-court">பெருந்தொற்று </a>காரணமாக 2019-ல் மீண்டும் இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லை தாண்டிய வர்த்தகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. </p><h2>தக்லகோட்</h2><p>இந்த வழித்தடமானது திறக்கப்பட்டதை அடுத்து ஒன்பது  வர்த்தகர்கள் மற்றும் எட்டு உதவியாளர்கள் உட்பட 17 பேர் கொண்ட குழு தக்லகோட் பகுதிக்கு வரத்த்கத்திற்காக சென்றுள்ளது. குறிப்பாக தக்லகோட் பாரம்பரியமாகவே இமயமலையில் உள்ள வர்த்தக சமூகங்களை இணைக்கும் ஒரு முக்கிய  வணிக சந்தையாகும். இந்த  நிலையில் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வர்த்தகமானது மீண்டும் தொடங்கியுள்ளது.</p><h2>இறக்குமதி </h2><p>இந்திய வர்த்தகர்கள் பெரும்பாலும் மசாலாப் பொருட்கள், தேயிலை, வெல்லம், சர்க்கரை மிட்டாய், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றனர். </p><p>மேலும் கம்பளி, பஷ்மினா, யாக் முடி, ஆடைகள், காலணிகள் மற்றும் பிற உள்ளூர் தயாரிப்புகளை இறக்குமதி செய்து வருகின்றனர்.</p><h2>வாழ்வாதாரம் </h2><p>இந்த வழித்தடமானது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் தார்ச்சுலா மற்றும் அதன் அருகில் உள்ள எல்லை கிராமங்கள் புத்துயிர் பெறுவதோடு மட்டுமல்லாமல் வணிகர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், சுமைத்தூக்கும் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதரத்திற்கு இந்த வழித்தடதிறப்பு ஆதரவளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.17.29 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் - வங்கி மேலாளர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-currency-worth-rs-17-29-crore-seized-at-punjab-national-bank-manager-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-currency-worth-rs-17-29-crore-seized-at-punjab-national-bank-manager-arrested#comments</comments><guid isPermaLink="false">19aedd30-9f85-4002-bf38-4d1697a7d063</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:53:10 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:53:10.711Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fake currency,பஞ்சாப் நேஷனல் வங்கி,கள்ள நோட்டுகள்,Punjab National Bank</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/75d6z4bi/Untitled-design-44.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PNB fake currency racket]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/75d6z4bi/Untitled-design-44.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூபாய் 17.29 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை புலனாய்வு துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து அந்த வங்கியின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான மூன்று வங்கி ஊழியர்களுக்கு எதிராக அதிகாரிகள் தேடுதல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேசம்</a> மாநிலம் சஹாரன்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூபாய் 17.29 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். </p><p>இந்த விசாரணையில் கடந்த ஜூலை 6 அன்று, பணப் பரிமாற்ற வலையமைப்பு மூலம் சஹாரன்பூரிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கியின் ஜெய்ப்பூர் அலுவலகத்திற்கு ரூபாய் 111 கோடி ரொக்கம் அனுப்பப்பட்டுள்ளது. </p><h3>வங்கி மேலாளர் கைது</h3><p>பணத்தில் ரூ. 500 கள்ள நோட்டுகளைக் கொண்ட 1,900 கட்டுகளும், ரூ. 200 கள்ள நோட்டுகளைக் கொண்ட 800 கட்டுகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p>இந்த வழக்கில் பி.என்.பி வங்கியின் ஜகத்ரி கிளை மேலாளரான அமித் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.</p><p>இதைத்தொடர்ந்து சிரேஷ்ட கோட்ட மேலாளர் ரவி குமார் கான்சே மற்றும் சோபியா மார்க்கெட் பணப் பெட்டக மேலாளர் சுஷில் குமார் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</p><h3>அதிகாரிகள் சோதனை</h3><p>அதனைத் தொடர்ந்து, புலனாய்வுக் குழு அதிகாரிகள் மூன்று வங்கியின் மேலாளர்களின் இல்லங்களில் சோதனை நடத்தி, மின்னணு சாதனங்களையும் ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.</p><p>நேபாள எல்லைக்கு அருகிலோ அல்லது எல்லையை கடந்தோ செயல்படும் குழுக்களுடன், வங்கி மேலாளர்கள் மூவருக்கும் தொடர்பு இருந்ததா என்பதை அறிவதற்காக, அவர்களின் தொடர்புகளையும் நடமாட்டங்களையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.</p><h3><strong>வங்கி மேலாளர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்</strong></h3><p>இந்த நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட வங்கி மேலாளர்கள் நேபாளத்திற்கு தப்பி செல்லக்கூடும் என்பதால், அவர்களுக்கு எதிராக புலனாய்வு துறை அதிகாரிகள் தேடுதல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.</p><p>வங்கியின் பணப் பெட்டிக்குள் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள் எவ்வாறு புழக்கத்திற்குள் வந்தன என்பது குறித்தும், அவற்றில் சில பின்னர் முறையான வங்கி வழிமுறைகள் வழியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்க முடியுமா என்பது குறித்தும் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.9,825 கோடி நிதி திரட்டும் அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனம்: உலகளாவிய முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/adani-airports-raises-rs-9825-crore</link><comments>https://www.maalaimalar.com/news/national/adani-airports-raises-rs-9825-crore#comments</comments><guid isPermaLink="false">05d6bd69-7896-4d3a-8bcf-ac5f6a75022c</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:30:12 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:30:12.430Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமான நிலையம்,Adani Airports,அதானி ஏர்போர்ட்ஸ்,Airport Infrastructure,Adani Enterprises Ltd</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/1qxi83qt/Adani-Airports" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Adani Airports ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/1qxi83qt/Adani-Airports?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத் </a>மாநிலம் அகமதாபாத்தில் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், சர்வதேச மற்றும் உள்நாட்டு முன்னணி முதலீட்டாளர்களிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 9,825 கோடி) நிதியை முதன்மைப் பங்குகள் மூலம் திரட்டுவதற்கான இறுதி ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.</p><p>இந்த முதலீட்டாளரின் மூலம், அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>முதலீடு செய்யும் முன்னணி நிறுவனங்கள்</h2><p>டெமாசெக், பிளாக்ராக், ஆல்ஃபா வேவ் குளோபல் மற்றும் பிரேம்ஜி இன்வெஸ்ட் ஆகிய முக்கிய நிறுவனங்கள் அடங்கிய ஒரு முதலீட்டுக் கூட்டமைப்பு, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF">அதானி </a>ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தில் மூன்று கட்டங்களாக புதிய பங்குகளைப் பெறவுள்ளது. </p><p>இந்த முதலீட்டின் இறுதி கட்டம் ஜூலை 2027க்குள் நிறைவடைய உள்ள நிலையில், இதன் மூலம் அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தில் இந்த கூட்டமைப்பிற்கு மொத்தம் 5.54 சதவீத பங்குகள் கிடைக்கும்.</p><h2>இந்த நிதி எதற்காகப் பயன்படுத்தப்படும்?</h2><p>இதில் திரட்டப்படும் ரூ.9,825 கோடி நிதி மூன்று முக்கிய திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளது.</p><p> முதலாவதாக, ஆண்டுக்கு கிட்டத்தட்ட 20 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் விமான நிலைய உள்கட்டமைப்பை நவீனப்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் செய்தல்.</p><p>இரண்டாவதாக, <a href="https://www.maalaimalar.com/topic/international-airport">விமான நிலையங்களை</a> ஒட்டியுள்ள பகுதிகளில் முதற்கட்டமாக 22 மில்லியன் சதுர அடி பரப்பளவில் வணிக மற்றும் குடியிருப்பு பயன்பாட்டு இடங்களை உள்ளடக்கிய பிரம்மாண்ட அதானி ஏர்போர்ட் சிட்டி ரியல் எஸ்டேட் வளாகங்களை உருவாக்குதல்.</p><p>மூன்றாவதாக, தரைவழி கையாளுதல் மற்றும் விமானப் போக்குவரத்து அல்லாத இதர வணிக செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக இந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படும்.</p><h2>நிறுவனத்தின் முக்கியப் புள்ளிகள் கூறுவது என்ன?</h2><p>"இந்தக் கூட்டுத்தொழில் அதானி ஏர்போர்ட்ஸ் தளத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய மைல்கல். </p><p>இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை, நாட்டின் GDP வளர்ச்சிக்கு மிக முக்கியமான உந்துசக்தியாக உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் உலகின் முன்னணி ஒருங்கிணைந்த விமான நிலைய தளமாக நாங்கள் உருவெடுப்போம்."</p><p>"இந்திய நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்து வரும் வேளையிலும், நாட்டின் முக்கிய நகரங்களில் எங்களது நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தி வரும் சூழலிலும், அதானி ஏர்போர்ட்ஸை உலகின் மிகப்பெரிய விமான நிலைய தளமாக மாற்றுவதே எங்களது இலக்கு" என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் பன்சால் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீதிமன்ற உத்தரவை மீற எவ்வளவு தைரியம்?- கிரேட்டர் நொய்டா நீதிபதிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-raps-greater-noida-judge-for-defying-order-on-student-arrests</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-raps-greater-noida-judge-for-defying-order-on-student-arrests#comments</comments><guid isPermaLink="false">d843bc4a-a9e0-4e06-9a6c-2c94a0d4436f</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:28:20 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:28:20.563Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,Greater Noida,CJP,உச்சநீதிமன்ற நீதிபதி,Chief Justice Surya Kanth,கிரேட்டர் நொய்டா,தலைமை நீதிபதி சூரிய காந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/10h18cor/surya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Justice Surya Kanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/10h18cor/surya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இது தொடர்பாகக் கௌதம புத்தா நகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாக நீதிபதியிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.</p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்களுக்கு எதிராக எந்தவொரு கடுமையான அல்லது பிடியாணை நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் 1-ம் தேதி தெளிவான உத்தரவைப் பிறப்பித்திருந்தது. </p><p>இந்நிலையில், கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம புத்தா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவர் அக்ஷத் திரிபாதிக்கு ரூ.5 லட்சம் பிணைப்பத்திரம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தெளிவான உத்தரவையும் மீறிச் செயல்பட்ட கிரேட்டர் நொய்டா நிர்வாக நீதிபதியின் இந்த நடவடிக்கைக்கு இந்திய தலைமை நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வு மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><h2>நீதிமன்றத்<strong>தின் தடையை</strong>யும் மீறி அனுப்பப்பட்ட நோட்டீஸ்</h2><p>கௌதம புத்தா பல்கலைக்கழக மாணவர் அக்ஷத் திரிபாதி, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற 'காக்ரோச் ஜனதா கட்சி' அமைப்பின் போராட்டத்தில் மாணவர்களைப் பங்கேற்கத் தூண்டியதாகவும், அரசுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பியதாகவும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-pay-panel-consultation-over-3-5-million-central-govt-staff-may-benefit">நொய்டா </a>காவல்துறையினர் அறிக்கை அளித்திருந்தனர். இதன் அடிப்படையில், கிரேட்டர் நொய்டா நிர்வாக நீதிபதி செப்டம்பர் 4 அன்று நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அதில், அமைதியை நிலைநாட்ட ரூ.5 லட்சத்திற்கான தனிப்பட்ட பிணைப்பத்திரத்தையும், தலா ரூ.5 லட்சத்திற்கு இரு நபர் உத்தரவாதத்தையும் ஏன் வழங்கக் கூடாது என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.</p><p>இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஏற்கனவே அமலில் இருந்ததாலும், நொய்டா காவல்துறையின் விசாரணையில் அந்தத் தகவல் தவறானது என்றும், நோட்டீஸ் அனுப்பப்பட்ட காலத்தில் மாணவர் விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரில் இருந்தார் என்றும் தெரியவந்ததையடுத்து, அந்த நோட்டீஸ் அடுத்தநாளே திரும்பப் பெறப்பட்டது.</p><h2>தலைமை நீதி<strong>பதியின்</strong> சீற்றம்</h2><p>இந்த விவகாரத்தை மூத்த வழக்கறிஞர் பிஸ்வஜித் பட்டாச்சார்யா, தலைமை நீதிபதி சூரிய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் முறையிட்டார். மாணவர்கள் மீது எந்தவிதக் கட்டுப்பாடோ அல்லது சட்ட நடவடிக்கையோ எடுக்கக் கூடாது என்று செப்டம்பர் 1-ல் அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்ததை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர், இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்துவதோடு நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் வாதிட்டார்.</p><p>முறையீட்டைக் கேட்ட தலைமை நீதிபதி சூரிய காந்த், "எங்கள் உத்தரவை மீறி நோட்டீஸ் அனுப்ப ஒரு நீதிபதிக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? எந்தவொரு மாணவருக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நாங்கள் மிகத் தெளிவாகக் கூறியிருந்தோம். உச்சநீதிமன்ற உத்தரவை மீற எந்தவொரு நீதிபதிக்கும் அதிகாரமில்லை" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.</p><h2>விளக்கம் <strong>கேட்க உச்சநீதிமன்</strong>றம் முடிவு</h2><p>மாணவர் மீதான நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தெளிவாக இருந்தும் மாநில நிர்வாகம் இவ்வாறு செயல்பட்டது குறித்து அதிருப்தி வெளியிட்ட நீதிபதிகள், இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளனர். இது தொடர்பாகக் கௌதம புத்தா நகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாக நீதிபதியிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் நோட்டீஸின் நகலை நீதிமன்றப் பதிவேட்டில் தாக்கல் செய்யுமாறு மனுதாரரின் வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>5 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் 11-ம்தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/national/bank-employees-nationwide-strike-on-11th-demanding-five-day-workweek-and-various-demands</link><comments>https://www.maalaimalar.com/news/national/bank-employees-nationwide-strike-on-11th-demanding-five-day-workweek-and-various-demands#comments</comments><guid isPermaLink="false">e98000c2-3b38-4ec3-be7b-2e64b573e360</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:31:21 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:31:21.979Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வங்கி ஊழியர்கள்,Bank employees,Bank Employees Strike,வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்,Indian Banks&apos; Association,National Pension System</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/d0uobwc2/bank.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bank employees strike  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/d0uobwc2/bank.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. </p><p>வங்கிகளின் கூட்டமைப்பான 'யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்' (UFBU), வாரத்தில் 5 நாட்கள் வேலை மற்றும் ஊதிய சீரமைப்பு உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பர் 11-ம் தேதி நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தொழிலாளர் நலத்துறை மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடைபெற்ற சமரசப் பேச்சுகளி‌ல் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்த வங்கி ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.</p><h2>5 நாள் வ<strong>ங்கி வேலைத்திட்டம்</strong></h2><p>திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணியாற்றுவதற்கு ஊழியர்கள் ஒப்புக்கொண்ட நிலைகளிலும், அனைத்து சனிக்கிழமைகளுக்கும் விடுமுறை அளிக்கும் 5 நாள் <a href="https://www.maalaimalar.com/news/national/andhra-government-appoints-chiranjeevi-daughter-to-key-post">வங்கி வேலை</a> கோரிக்கை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.</p><h2>ஊக்கத்<strong>தொகை சீர</strong>மைப்பு</h2><p>அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் சமமான ஊக்கத்தொகை வழங்கும் பழைய முறையை மாற்றி, உயர் அதிகாரிகளுக்கு மட்டும் அதிக ஊக்கத்தொகை அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட பாகுபாடான புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. பயனாளிகளின் ஓய்வூதியத் தொகையை தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப உயர்த்துவதுடன், தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><h2>ஊக்க<strong>த்தொகை இடை</strong>நிறுத்தம்</h2><p>வங்கி சங்கங்களின் தொடர் எதிர்ப்பை அடுத்து, பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படவிருந்த செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை அறிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து வரவிருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ள போதிலும், 5 நாள் வேலை உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளில் தெளிவான அறிவிப்பு வராததால் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற போரட்டம் அழைப்பு விடுத்த அமைப்புகள் மறுத்துவிட்டன.</p><p>செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் செப்டம்பர் 28 முதல் 30 வரை தொடர்ந்து 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தமும், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் வார இறுதி விடுமுறை நாட்களால், பொதுத்துறை வங்கிகளில் காசோலை பரிவர்த்தனை மற்றும் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட நேரடி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>