<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 05 Sep 2026 13:12:32 +0000</lastBuildDate><item><title>நதியை மீட்டெடுத்த இந்திய இளைஞருக்கு நெதர்லாந்து சி.இ.ஓ அளித்த வேலை வாய்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-youth-who-cleaned-polluted-river-gets-job-offer-from-dutch-ceo</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-youth-who-cleaned-polluted-river-gets-job-offer-from-dutch-ceo#comments</comments><guid isPermaLink="false">06bf141b-6098-4cd8-848b-90a84e3370c8</guid><pubDate>Sat, 05 Sep 2026 11:56:38 +0000</pubDate><atom:updated>2026-09-05T11:56:38.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madhya Pradesh,மத்தியப் பிரதேசம்,Bittu Tabahi,Ajnar River,Surendra Singh Chaudhary,சுரேந்திர சிங் சவுத்ரி,பிட்டு தபாஹி,அஜ்னார் நதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/43b34swv/river.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bittu Tabahi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/43b34swv/river.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேச மாநிலத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பயோரா பகுதியைச் சேர்ந்த 21 வயதான சுரேந்திர சிங் சவுத்ரி, சமூக வலைதளங்களில் 'பிட்டு தபாஹி' என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் தனது பகுதியில் கடுமையாக மாசடைந்திருந்த அஜ்னார் நதியைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் கடந்த ஜனவரி மாதம் முதல் தனியாளாக இறங்கினார். நதியில் தேங்கிக்கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், பாசிகள் மற்றும் பிற குப்பைகளைத் தொடர்ச்சியாக அப்புறப்படுத்தி, சில மாதங்களிலேயே அந்த நதியை முழுமையாகத் தூய்மைப்படுத்தினார்.</p><p>தனது தூய்மைப் பணிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பிட்டு தபாஹி பகிர்ந்து வந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி உலகளவில் கவனம் பெற்றன. இவரின் இந்த அசாதாரண முயற்சியைப் பார்த்த நெதர்லாந்தைச் சேர்ந்த '<a href="https://www.maalaimalar.com/news/national/dont-make-false-promises-to-me-kangana-ranaut-slams-officials">தி ஓஷன் கிளீன்அப்</a>' தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயலதிகாரியுமான போயன் ஸ்லாட், சமூக வலைதளப் பதிவு ஒன்றிற்குப் பதிலளிக்கும் விதமாக "எங்களுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள்" எனப் பகிரங்கமாக வேலை வாய்ப்பு வழங்கி அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>பிட்டு தபாஹியின் இந்த முயற்சிக்கு நெதர்லாந்து நிறுவனத்தின் அழைப்பு மட்டுமன்றி, உள்நாட்டிலும் பலதரப்பட்ட ஆதரவுகள் குவிந்து வருகின்றன. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இவரின் தூய்மைப் பணியைப் பாராட்டியுள்ளார். மேலும், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், பிட்டு தபாஹியைத் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததுடன், 'ஜல் கங்கா சம்வர்தன் அபியான்' என்ற நீர்நிலைகளைப் பாதுகாக்கும் அரசின் திட்டத்திற்கு இவரின் முயற்சி பெரும் ஊக்கமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சுமார் 30,000 ரூபாய் சொந்தப் பணத்தைச் செலவழித்து இந்த நதி மீட்புப் பணியைச் செய்துள்ளதாகக் கூறும் பிட்டு தபாஹி, இத்தகைய விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியான பிறகு பொதுமக்கள் நதியில் குப்பைகளைக் கொட்டுவது கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனி ஒருவனின் விடாமுயற்சி ஒரு நதியை மீட்டெடுத்தது மட்டுமன்றி, சர்வதேச அளவில் அவருக்கு ஒரு புதிய அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>என்னிடம் போலி வாக்குறுதிகளைக் கூறாதீர்கள்: அதிகாரிகளை கடுமையாகச் சாடிய கங்கனா ரணாவத்</title><link>https://www.maalaimalar.com/news/national/dont-make-false-promises-to-me-kangana-ranaut-slams-officials</link><comments>https://www.maalaimalar.com/news/national/dont-make-false-promises-to-me-kangana-ranaut-slams-officials#comments</comments><guid isPermaLink="false">54265f80-e617-42b7-b53e-d129d696d4fa</guid><pubDate>Sat, 05 Sep 2026 11:07:14 +0000</pubDate><atom:updated>2026-09-05T11:07:14.115Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கங்கனா ரனாவத்,Kangana Ranaut,திஷா,Disha,Mandi constituency,MPLADS,மண்டி தொகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/yiaodli6/kangana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kangana Ranaut]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/yiaodli6/kangana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மண்டி தொகுதிக்கான 11 கோடி ரூபாய் நிதியில் 50 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் செயல்பாட்டு அறிக்கை கோரியுள்ளார். </p><p>இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி தொகுதி பாஜக எம்பி கங்கனா ரணாவத், தனது தொகுதிக்கான மேம்பாட்டு நிதி முறையாகப் பயன்படுத்தப்படாதது குறித்து அரசு அதிகாரிகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். மண்டி மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், அதிகாரிகளின் அலட்சியப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.</p><h2>11 கோடியில் <strong>50 லட்சம் ம</strong>ட்டுமே செலவு</h2><p>கூட்டத்தின் போது தொகுதி <a href="https://www.maalaimalar.com/news/national/buy-me-a-bicycle-7-year-old-girl-with-amputated-leg-pleads-to-district-collector">மேம்பாட்டுத் திட்டங்கள் </a>குறித்து ஆய்வு செய்த கங்கனா ரணாவத், தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் 11 கோடி ரூபாய் வரை கைவசம் உள்ளது என்றும், ஆனால் அதில் வெறும் 50 லட்சம் ரூபாய் மட்டுமே இதுவரை செலவிடப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். பெரும்பாலான நிதி பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடப்பது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் அவர் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.</p><h2>போலி வாக்கு<strong>றுதிகளுக்குக் கண்</strong>டனம்</h2><p>முந்தைய கூட்டங்களில் தொகுதி மேம்பாட்டு நிதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் முடிந்துவிட்டதாகவும், எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அதிகாரிகள் தன்னிடம் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக அவர் குற்றம்சாட்டினார். "ஒவ்வொரு திஷா கூட்டத்திலும் என்னிடம் இதுபோன்ற போலி வாக்குறுதிகளை அளிக்காதீர்கள், இனி எனக்கு உண்மையான வேலைகளும் வெளிப்படையான செயல்பாடுகளுமே தேவை" என்று கோபத்துடன் குறிப்பிட்டார்.</p><p>தொகுதி நிதியை விரைவாகப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள வளர்ச்சிப் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிதிச் செலவினங்கள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்த முழுமையான செயல்பாட்டு அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்குக் கெடு விதித்துள்ளார். இக்கூட்டத்தில் கங்கனா ரணாவத் அதிகாரிகளைக் கடிந்துகொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>நீதிபதிகளின் ஓய்வு வயதை 62ஆக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/retirement-age-of-judges-raised-to-62</link><comments>https://www.maalaimalar.com/news/national/retirement-age-of-judges-raised-to-62#comments</comments><guid isPermaLink="false">c376eb78-af7a-4d54-8b56-e6e95ed322c9</guid><pubDate>Sat, 05 Sep 2026 10:48:32 +0000</pubDate><atom:updated>2026-09-05T10:48:32.100Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீதிபதிகள்,உச்சநீதிமன்றம்,தலைமை நீதிபதி சூர்யகாந்த்,ஒய்வு பெறும் வயது</media:keywords><media:content height="186" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/p37dhm2z/images-1.jfif" width="271"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு உட்பட இந்தியாவின் ஏழு மாநிலங்களின் மாவட்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62ஆக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/p37dhm2z/images-1.jfif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஓய்வு பெறும் வயது உயர்வு..</h2><p>மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 60இருந்து 62ஆக முறைப்படி உயர்த்த ஏழு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது, நீதித்துறையில் பல ஆண்டுகளாக  சிறப்புடனும், அனுபவத்துடனும் செயல்படும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fifteen-new-judges-take-oath-at-madras-high-court">நீதிபதிகள்</a> பணியிலிருந்து விலகுவதை  தடுக்கவும், முறைப்படி விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதையும் உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>மாநிலங்களின் ஒப்புதல் </h2><p>இந்த முன்மொழிவை அந்தந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hc-directs-centre-state-to-submit-detailed-report-on-rescue-of-missing-indians-in-nepal-floods">மாநில அரசுகள்</a> ஒப்புக்கொண்டத்தை தொடர்ந்து இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த அமர்வானது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் பிறப்பிக்கப்பட்டது.</p> <h2>சட்ட விதிகளை  திருத்த வேண்டும் </h2><p>நீதிபதிகளின் விசாரணை என்பது வெறும் கண்மூடித்தனமான மாயையாக இல்லாமல், நீதி கிடைப்பதை உறுதி செய்யவே என்றும், மேலும் இரண்டு மாதங்களுக்குள் இந்த விதிகளை திருத்த வேண்டும் என்றும் <a href="https://www.maalaimalar.com/news/national/tarun-tejpal-rape-conviction-supreme-court-orders-surrender-within-two-weeks">உச்சநீதிமன்றம்</a> உத்தரவிட்டுள்ளது. </p><p>நீதிபதிகளின் வயதுவரம்பை உய்ர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ள மாநிலங்கள், சம்பந்தப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் 60 வயதை எட்டும்போது இந்த உத்தரவை கடைப்பிடித்து ஒய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>ஓய்வு பெற முடியாது </h2><p>வழக்கானது நிலுவையில் உள்ள காரணத்தினால், இந்த ஏழு மாநிலங்களில் தற்போது 60 வயதை கடந்த அதிகாரிகள் அந்த வயதில் ஓய்வு பெற மாட்டார்கள் என்றும், இந்த உத்தரவு, மார்ச் 31, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும் பொருந்தும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. </p><p>மேலும் அவர்கள் வேறு பணியில் சேராத பட்சத்தில், நீதித்துறைப் பணிக்குத் திரும்புவதற்கான விருப்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் நீதித்துறை பணிக்கு செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முடிவு மறுபரிசீலனை</h2><p>மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது முடிவை இரண்டு வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>மேலும் இத்த உத்தரவு குறித்தான முடிவை மறுபரிசீலனை செய்து, இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஒரு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம்,அசாம், பீகார்,நாகாலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், டெல்லி , ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்து மாணவர்கள் உதவியுடன் விநாயகர் சிலை செய்து அசத்திய முஸ்லீம் மாணவர்கள்.! 
</title><link>https://www.maalaimalar.com/news/national/matha-nallinakkam-indhu-manavargal-udaviyudan-vinayagar-silai-seithu-asathiya-muslim-manavargal</link><comments>https://www.maalaimalar.com/news/national/matha-nallinakkam-indhu-manavargal-udaviyudan-vinayagar-silai-seithu-asathiya-muslim-manavargal#comments</comments><guid isPermaLink="false">b9563f20-9d2c-477a-bb39-0a3cb1a71799</guid><pubDate>Sat, 05 Sep 2026 10:38:44 +0000</pubDate><atom:updated>2026-09-05T10:38:44.981Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பள்ளி மாணவர்கள்,விநாயகர் சிலை,மதநல்லிணக்கம்,நாக்பூர்</media:keywords><media:content height="225" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/jn28zf7y/ganesh-idolsjpeg.avif" width="399"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாக்பூரில் மத நல்லிணகத்திற்கு சான்றாக , சக முஸ்லீம் மாணவர்களுக்கு இந்து மாணவர்கள் விநாயகர் சிலை வடிவமைக்க கற்று கொடுத்தனர். ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/jn28zf7y/ganesh-idolsjpeg.avif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2>மத நல்லிணக்கம்</h2><p>மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மாநகராட்சியால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மண்ணால் செய்யப்பட்ட சிலை வடிவமைக்கும் நிகழ்வில் , இந்து மாணவர்கள் பலர்,முஸ்லீம் மாணவர்களுக்கு சிலை வடிவமைக்க கற்றுகொடுத்த சம்பவம் நெக்ழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>சிறந்த தோழமை</h2><p><a href="https://www.maalaimalar.com/news/district/ranipettai-news-dmk-saplings-were-planted-on-behalf-of-the-envihttps://www.maalaimalar.com/news/district/ranipettai-news-dmk-saplings-were-planted-on-behalf-of-the-environment-team-682464ronment-team-682464">சுற்றுசூழலுக்கு </a>உகந்த முன்னெடுப்பாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்வில், 76 பள்ளிகளை சேர்ந்த 5000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்து மாணவர்கள் சக மாணவர்களுக்கு விநாயகர் சிலையை வடிவமைக்க கற்று தந்தது சிறந்த தோழமையின் சான்றாக மாறி காண்போரை நெகிழ்சியில் ஆழ்த்தியது</p><h2>மாணவர்கள் கூறியதாவது... </h2><p>இந்த பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறும்போது, தாங்கள் மிகுந்த உற்சாகம் அடைந்ததாகவும், சக மாணவர்களுடன் நேரம் செலவிட  வாய்ப்பு கிடைத்ததாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.</p><p>மேலும் நாங்கள் விநாயகர் சிலை செய்வதில்  மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுத்து கொண்டோம். ஒன்றாக பணியாற்றியது ஒருவருக்கொருவரை புரிந்துகொள்வதற்க்கு உதவியது என்றும் கூறினர்.</p> <h2>நீர் மாசுபாட்டை தடுப்பதற்கான முன்னெடுப்பு </h2><p>கணபதி பப்பா மோரியா என்ற முழக்கங்களுடன் தொடங்கிய இந்த நிகழ்வானது குறிப்பாக ஷாது களிமண் (இயற்கை களிமண்) <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-assembly-action-vinayagar-statue">சிலை</a>களை ஊக்குவிப்பதற்கும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளால்(ஜிப்சம் கனிமத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை வெள்ளை நிறத்தூள்) ஏற்படும் நீர் மாசுபாட்டைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். </p> ]]></content:encoded></item><item><title>ஸ்மார்ட்போன்களுக்குள் ஊடுருவும் ஆபாச செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்- சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/cyber-crime-police-warns-do-not-download-pornographic-apps-that-infiltrate-smartphones</link><comments>https://www.maalaimalar.com/news/national/cyber-crime-police-warns-do-not-download-pornographic-apps-that-infiltrate-smartphones#comments</comments><guid isPermaLink="false">9bfc63f4-1d24-40fa-9f8e-f00fa628daab</guid><pubDate>Sat, 05 Sep 2026 10:29:20 +0000</pubDate><atom:updated>2026-09-05T10:29:20.236Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Cyber Crime Police,சைபர் கிரைம் போலீசார்,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1u0puhp8/cybercrime.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சைபர் கிரைம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சைபர் கிரைம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1u0puhp8/cybercrime.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆபாச செயலிகள் என்ற பெயரில் இயங்கும் ஆபத்தான ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக தேசிய சைபர் கிரைம் அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு எச்சரித்துள்ளது.</strong></em> </p><p>'நைட் பிளே', 'ரிலூப்', 'கிஸ்', 'விமோ', 'ரிவோ', 'நெக்ஸோ' மற்றும் 'விக்சா' போன்ற பெயர்களில்  பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் மூலம் இந்த செயலிகள் முக்கியமாக  பரப்பப்படுகின்றன.</p><p>இந்த விளம்பரங்கள் பயனர்களை ஆபாச உள்ளடக்கங்களை கொண்ட போலி இணைய தளங்களுக்குக் கொண்டு செல்கின்றன. இந்த இணையதளங்கள் பெரும்பாலும் "லைவ்" என்ற முகவரியைக் கொண்டிருக்கின்றன. பயனர்களை கவர்ந்து, கூகுள் பிளே ஸ்டோருக்கு வெளியே இருந்து ஏபிகே கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வைக்கின்றன.</p><h2><strong>மோசடிகளுக்கு வழி வகுக்கிறது</strong></h2><p>செயலியை நிறுவியவுடன், ஆப் அப்டேட் என்ற பெயரில் இரண்டாவது தீங்கிழைக்கும் கோப்பு பதிவிறக்கம் செய்யப்படலாம். முதன்மை செயலிக்கு வழங்கப்பட்ட அனுமதிகளைப் பயன்படுத்தி, 'அணுகல்தன்மை அனுமதி' போன்ற உணர்திறன் மிக்க அனுமதிகளை பெற பயனர்களை செயலி கேட்கிறது. இந்த அனுமதி வழங்கப்பட்டதும், தீம்பொருள் சாதனத்தின் முழு  கட்டுப்பாட்டையும் தன்வசப்படுத்தி, பின்னணியில் தொடர்ந்து இயங்கி, நிதி மோசடிகளுக்கு வழிவகுக்கிறது. </p><p>சில செயலிகள் விபிஎன்ஐ., நிறுவி, இணைய  போக்குவரத்தை தாக்குபவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வர்கள் வழியே திருப்பி விட்டு, தகவல்களை திருடக்கூடும். </p><p>மேலும்  சாதாரண அமைப்புகள் மூலம் பயனர்கள் இந்தச் செயலிகளை நீக்க முடியாதவாறு தடுத்து, சாதனத்தின் கட்டுப்பாட்டை  கைப்பற்றி வங்கி மற்றும் பிற நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்துகின்றன.</p><p>கூகுள் பிளே ஸ்டோர் அல்லது நம்பகமான ஆப் ஸ்டோர்களில் இருந்து மட்டுமே செயலிகளைப் பதிவிறக்க வேண்டும். விளம்பரங்கள், சந்தேகத்திற்கிடமான இணைய தளங்கள் அல்லது இணைப்புகளில் இருந்து ஏபிகே., கோப்புகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது. தெரியாத செயலிகளுக்கு ஒருபோதும் அணுகல்தன்மை அனுமதியை வழங்கக் கூடாது. </p><h2><strong>கண்காணிக்க வேண்டும்</strong></h2><p>ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டுள்ள செயலிகளை  தவறாமல் சரி பார்த்து, அடையாளம் தெரியாதவற்றை நீக்க வேண்டும். கூகுள் பிளே ப்ரொடெக்டிவ்  வசதியை எப்போதுமே இயக்கத்தில் வைத்து, ஆண்ட்ராய்டு சாதனத்தை  தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். மேலும், வங்கி கணக்குகள் மற்றும் யுபிஐ., பரிவர்த்தனைகளில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் உள்ளதா என்பதை  தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/சைபர்-கிரைம்-போலீசார்">கண்காணிக்க</a> வேண்டும்.</p><p>பாதிக்கப்பட்ட செயலியை நீக்க போனின் பவர் பொத்தானை அழுத்தி பிடித்து, பின்னர் 'பவர் ஆப்  விருப்பத்தை அழுத்தி  பிடிப்பதன் மூலம் போனை சேப் மோடில் ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். சேப் மோடு  திரையில் தோன்றும் போது ஓகே அல்லது ரீஸ்டார்ட்  என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சேப் மோடுக்கு  சென்றதும், செட்டிங்க்ஸ் ஆப்ஸ் பகுதிக்கு  சென்று, சந்தேகத்திற்குரிய செயலியை  தேர்ந்தெடுத்து அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும். தெரியாத பிற செயலிகளையும் நீக்கி விட்டு, சாதாரண முறையில் போனை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.</p><p>ஒருவேளை செயலியை நீக்க முடியாவிட்டால், செட்டிங்க்ஸ்-அச்ச ஸ்பிலிடி. இன்ஸ்டால்டு சர்வீசஸ், டவுன்லோ டடுஆப்ஸ்  பகுதிக்குச் சென்று, குறிப்பிட்ட செயலிக்கான அணுகல்தன்மை அனுமதியை முடக்க வேண்டும். பிறகு செட்டிங்க்ஸ், செக்யூரிட்டி பிரைவேசி, டிவைஸ் அட்மின் ஆப்ஸ் சென்று, அந்த செயலிக்கு நிர்வாக அனுமதி இருந்தால் அதைச் செயலிழக்க  செய்ய வேண்டும். பின்னர் ஆப்ஸ் பகுதிக்கு சென்று செயலியை நீக்க வேண்டும். இதன் பிறகும் செயலியை நீக்க முடியாவிட்டாலோ அல்லது போன் ரீஸ்டார்ட் ஆன பிறகு செயலி மீண்டும் வந்தாலோ, முக்கியமான தரவுகளை  பேக்கப்  செய்துவிட்டு  போனை பேக்டரி ரீசெட் செய்ய வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு தடுப்பு நடவடிக்கை: பள்ளி மாணவிகள் பாவாடைக்கு பதிலாக சுடிதார் அணிய மேற்கு வங்க அரசு பரிந்துரை!</title><link>https://www.maalaimalar.com/news/national/dengue-prevention-west-bengal-govt-urges-salwar-kameez</link><comments>https://www.maalaimalar.com/news/national/dengue-prevention-west-bengal-govt-urges-salwar-kameez#comments</comments><guid isPermaLink="false">dcbb3a1e-fc11-4923-8cd6-7dffcdb23532</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:17:14 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:17:14.266Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,Dengue,West Bengal Government,டெங்கு,Sarathwat Mukherjee,மேற்கு வங்க அரசு,சரத்வத் முகர்ஜி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/73a8g8v6/benga.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sarathwat Mukherjee]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/73a8g8v6/benga.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலத்தில் மழைக்காலத்திற்குப் பிந்தைய காலத்தில் டெங்கு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது.</p><p>மேற்கு வங்க மாநிலத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national/2-crore-children-face-online-sexual-abuse-in-a-year">டெங்கு காய்ச்சல் </a>பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பள்ளிகளில் பயிலும் மாணவிகள் சீருடை பாவாடைக்கு பதிலாக உடலை முழுமையாக மூடும் சல்வார் கமீஸ் அல்லது சுடிதார் ஆடைகளை அணிய அனுமதிக்குமாறு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சரத்வத் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><h2>கொசுக்க<strong>டியைத் தவிர்க்க புதிய</strong> நடவடிக்கை</h2><p>மாநிலத்தில் மழைக்காலத்திற்குப் பிந்தைய காலத்தில் டெங்கு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், ஸ்வஸ்த்ய பவன் தலைமையகத்தில் உயர்நில ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சரத்வத் முகர்ஜி, கொசுக்கடியிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எனக் குறிப்பிட்டார்.</p><p>அடுத்த மூன்று மாதங்களுக்கு பள்ளி மாணவர்கள் அனைவரும் முழுக்கை சட்டைகள் மற்றும் முழு நீள பேண்ட் அணிய பள்ளிகள் அனுமதிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும், வழக்கமாக பாவாடை (ஸ்கர்ட்) சீருடை அணியும் மாணவிகள், தங்கள் கால்களை முழுமையாக மூடும் வகையில் சல்வார் சூட்களுக்கு மாற தற்காலிகமாக விலக்கு அளிக்குமாறு பள்ளி நிர்வாகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.</p><h2>பள்ளிகளுக்கு விடுக்கப்<strong>பட்ட வேண்டு</strong>கோள்</h2><p>டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் பகல் நேரத்திலேயே அதிகளவில் கடிக்கும் தன்மையுடையவை என்பதால், பள்ளி நேரங்களில் மாணவர்களின் கை மற்றும் கால்கள் மூடப்பட்டிருப்பது நோய்த்தொற்று அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும். எனவே, அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் இந்தத் தற்காலிக மாற்றத்தை நடைமுறைப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கேரளாவில் கோர விபத்து-  தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-accident-8-tamil-nadu-students-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-accident-8-tamil-nadu-students-killed#comments</comments><guid isPermaLink="false">465d9349-7c0a-49da-b9ee-b11b33e8767b</guid><pubDate>Sat, 05 Sep 2026 02:18:39 +0000</pubDate><atom:updated>2026-09-05T02:18:39.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,சாலை விபத்து,road accident,student death,கேரளா,மாணவர்கள் உயிரிழப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ixbjjnez/accident.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Road Accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ixbjjnez/accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலம் திருச்சூர் அருகே கைப்பமங்கலத்தில் நின்றிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் தமிழர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>கேரளம் மாநிலம் திருச்சூர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>கைப்பமங்கலத்தில் நின்றிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>விபத்தில் உயிரிழந்த 8 பேரில் திண்டுக்கல் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>இதில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வா, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D" rel="nofollow">திண்டுக்கல்</a> மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ், யுவசஞ்சித், மதுரையைச் சேர்ந்த பிரசன்னா ஆகிய 5 பேர் குறித்து தகவல் தெரியவந்துள்ளது.</p><p>சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்சென்றனர்.</p><p>மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>விபத்துக்கான காரணம் என்ன?</h2><p>கேரளம் மாநிலத்தின் பனம்பிக்குன்னு என்ற இடத்தில் சாலை பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>மாற்றுப்பாதையில் வாகனம் திருப்பிவிடப்படுவது குறித்த எச்சரிக்கை பலகை சரியான இடத்தில் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. </p><p>500 மீட்டருக்கு முன்னரே தடுப்பு, எச்சரிக்கை பலகை வைத்திருந்தால் விபத்து நேர்ந்திருக்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அசாம் ரெயில் தண்டவாளத்தில் நிலச்சரிவு: மிசோரம் செல்லும் ரெயில் சேவைகள் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/train-services-to-mizoram-suspended-after-landslide-hits-rail-track-in-assam</link><comments>https://www.maalaimalar.com/news/national/train-services-to-mizoram-suspended-after-landslide-hits-rail-track-in-assam#comments</comments><guid isPermaLink="false">9f983ab0-776a-4951-9fd5-bb6800cb6d93</guid><pubDate>Fri, 04 Sep 2026 21:11:59 +0000</pubDate><atom:updated>2026-09-04T21:11:59.770Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>landslide,ரெயில் சேவை,train service,mizoram,நிலச்சரிவு,மிசோரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/yn335tlp/Landslide-Hits-Rail-Track.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Landslide Hits Rail Track]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/yn335tlp/Landslide-Hits-Rail-Track.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">அசாம்</a> மாநிலத்தின் ஹைலாகண்டி மாவட்டத்தில் கனமழை காரணமாக ரெயில் தண்டவாள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால், மிசோரம் மாநிலம் பைராபிக்கு செல்லும் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>வியாழக்கிழமை மாலை பெய்த இடைவிடாத மழையை தொடர்ந்து, அசாம்-<a href="https://www.maalaimalar.com/topic/mizoram">மிசோரம்</a> எல்லை பகுதியில் உள்ள ஜமீரா மற்றும் பைராபிக்கு இடையேயான ரெயில் தண்டவாளத்தின் சுமார் 50 மீட்டர் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது.</p><h2>சீரமைப்பு பணிகள் தொடக்கம்:</h2><p>பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட பகுதி வழியாக ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. </p><p>தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் தொழிலாளர்களுடன் பாதிக்கப்பட்ட இடத்திற்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன.</p><p>ரெயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ளனர், மேலும் தண்டவாளத்தை விரைவில் சீரமைப்பதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.</p><h2>ரெயில் சேவை ரத்து:</h2><p>வியாழக்கிழமை இயக்கப்பட்ட சில்சார்-பைராபி பயணிகள் ரெயில், ஜமீராவில் தனது பயணத்தை நிறைவு செய்தது. அந்த ரெயில் இன்று ஜமீராவில் இருந்து தனது திரும்பும் பயணத்தை தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. பைராபி நோக்கி பயணிக்கும் பயணிகளுக்காக மாற்று சாலை போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>கவுகாத்தி-சைராங் ரெயில் ஹைலாகண்டியில் தனது சேவையை நிறுத்திக்கொண்டது. மேலும், ஹைலாகண்டிக்கும் சைராங்கிற்கும் இடையிலான அதன் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இயக்கப்பட இருந்த பைராபி-சில்சார், சைராங்-கொல்கத்தா மற்றும் சில்சார்-சைராங் ரெயில்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><h2>சிறப்பு உதவி மையங்கள்:</h2><p>சிக்கித் தவிக்கும் பயணிகளுக்காக, வடகிழக்கு ரெயில்வே ஜமீரா, பைராபி மற்றும் சாய்ரங் நிலையங்களில் குடிநீர் மற்றும் சிற்றுண்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், பயணிகளுக்கு ரெயில் சேவைகள் குறித்த தகவல்கள், பயணச்சீட்டு தொடர்பான உதவிகள் மற்றும் பிற அத்தியாவசிய ஆதரவை வழங்குவதற்காக கவுகாத்தி, லும்டிங், நஹர்லாகுன், படர்பூர் மற்றும் சாய்ரங் நிலையங்களில் சிறப்பு உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.</p><p>வடகிழக்கு ரெயில்வே நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஹைலாகண்டி மாவட்டத்தின் ஜமீரா-பைராபி பிரிவில் சேதமடைந்த ரெயில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. ரெயில் சேவைகளை விரைவில் மீட்டெடுக்க ரெயில்வே துறை செயல்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>போதைப்பொருள் பயன்படுத்திய விமானியை பணிநீக்கம் செய்தது ஏர் இந்தியா</title><link>https://www.maalaimalar.com/news/national/phuket-flight-pilot-who-failed-drug-test-sacked-by-air-india</link><comments>https://www.maalaimalar.com/news/national/phuket-flight-pilot-who-failed-drug-test-sacked-by-air-india#comments</comments><guid isPermaLink="false">1ef19e33-8fe5-4f59-b50b-2b24565fea09</guid><pubDate>Fri, 04 Sep 2026 20:24:28 +0000</pubDate><atom:updated>2026-09-04T20:24:28.190Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏர் இந்தியா,Air India,Phuket,Flight Pilot,புக்கெட்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-02/2mt2aa30/tn-21.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-02/2mt2aa30/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி, தாய்லாந்தின் <a href="https://www.maalaimalar.com/news/world">புக்கெட்</a> நகரில் இருந்து இன்று இந்தியாவின் டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.</p><p>நடுவானில் சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென <a href="https://www.maalaimalar.com/topic/flight">விமானம்</a> சுமார் 300 அடி கீழே சரிந்தது. இதனால் சில பயணிகள் முன்னால் உள்ள இருக்கைகள் மீது மோதினர். </p><p>மேலும், பயணிகள் பலரும் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். பின்னர் விமானம் சமநிலைக்கு வந்து, பத்திரமாக டெல்லியில் தரையிறங்கியது. இந்த சம்பவத்தில் 24 பயணிகள் காயமடைந்தனர்.</p><h2>பணிநீக்க நடவடிக்கை:</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வு பணியகம் விசாரணை நடத்தியது. இதன்படி முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தின்போது தலைமை விமானி சுதீப் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது. </p><p>இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர்.</p><p>இந்த நிலையில், விமான விபத்து புலனாய்வு பணியகத்தின் முதற்கட்ட அறிக்கையை ஏற்று, தலைமை விமானி சுதீப்பை பணிநீக்கம் செய்து ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>"பூக்கெட்-டெல்லி விமானத்தின் தலைமை விமானிக்கு மனநிலையை மாற்றும் பொருள் ஒன்று இருந்தது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. பாதுகாப்பு, உடற்தகுதி அல்லது ஒழுங்குமுறை தேவைகளை மீறுவதில் ஏர் இந்தியாவின் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறைக்கு இணங்க, அந்த விமானியின் பணி உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது," என்று எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>விமான விபத்து புலனாய்வு பணியகம், தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையில், 145 பயணிகளை ஏற்றி சென்ற ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 விமானம் 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ​​அதன் மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் செயலிழந்ததாக குறிப்பிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கற்பித்தலில் ஆசிரியர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் - குடியரசு தலைவர் திரவுபதி முர்மு</title><link>https://www.maalaimalar.com/news/national/president-droupadi-murmu-urges-teachers-to-use-technology-in-education</link><comments>https://www.maalaimalar.com/news/national/president-droupadi-murmu-urges-teachers-to-use-technology-in-education#comments</comments><guid isPermaLink="false">58c11c88-acaa-4ac2-921a-0f47155bf5f1</guid><pubDate>Fri, 04 Sep 2026 18:54:33 +0000</pubDate><atom:updated>2026-09-04T18:54:33.737Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>திரவுபதி முர்மு,teachers day,ஆசிரியர் தினம்,குடியரசு தலைவர்,President,Droupadi Murmu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/eetnsyuq/Prez-droupadi-murmu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Droupadi Murmu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/eetnsyuq/Prez-droupadi-murmu.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, குடியரசு தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/droupadi-murmu">திரவுபதி முர்மு</a> நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.</p><p>தனது செய்தியில், ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படும் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை <a href="https://www.maalaimalar.com/news/national">குடியரசு தலைவர்</a> நினைவு கூர்ந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்திய அவர், ஒரு அறிஞராக, தத்துவஞானியாக மற்றும் ஆசிரியராக ஆற்றிய பங்களிப்பை பாராட்டினார்.</p><h2>ஆசிரியர்களுக்கு வாழ்த்து:</h2><p>"ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள நமது ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் தினம், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த எழுத்தாளரும் தத்துவஞானியுமான டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.</p><p>அவர் ஒரு மிகச்சிறந்த ஆசிரியராகவும் திகழ்ந்தார். இந்த நன்னாள் வேளையில், அவருக்கு எனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன். ஆசிரியர்கள், தங்கள் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் மூலம், திறமைகளை வளர்ப்பதிலும் குணநலன்களை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.</p><h2>குடியரசு தலைவர் வலியுறுத்தல்:</h2><p>மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்குவது அவர்களின் கடமையாகும். அர்ப்பணிப்பும் அக்கறையும் கொண்ட ஒரு ஆசிரியர், மாணவர்களின் தனித்துவமான ஆற்றலை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உத்வேகத்தின் ஊற்றாக திகழ்ந்து, சிறந்து விளங்க அவர்களை ஊக்குவிப்பார்.</p><p>ஆசிரியர்கள் தங்கள் அறிவை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு, புதுமையான கற்பித்தல் முறைகளைக் கையாள வேண்டும். அவர்கள் மாணவர்களிடையே சுயசிந்தனையை ஊக்குவித்து, ஆராயும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்," என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.</p><h2>ஆசிரியர்களுக்கு நன்றி:</h2><p>கல்வியாளர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, தேசத்தின் முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய எதிர்காலத் தலைமுறைகளை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உள்ளது என்று கூறினார்.</p><p>"தங்கள் பங்களிப்பிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் அறிவொளி பெற்ற தலைமுறைகளை அனைத்து ஆசிரியர்களும் உருவாக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்," என்று ஜனாதிபதி முர்மு கூறினார்.</p><p>ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று, ஜனாதிபதி 25 ஆசிரியர்களையும் கௌரவிக்க உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பாஜக ஆளாத மாநிலங்கள் - அதானி குழுமம் ரூ.5 லட்சம் கோடி முதலீடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/adani-group-rs-5-lakh-crore-investment-in-non-bjp-ruled-states</link><comments>https://www.maalaimalar.com/news/national/adani-group-rs-5-lakh-crore-investment-in-non-bjp-ruled-states#comments</comments><guid isPermaLink="false">eaa9e14c-15c8-49cd-ab1a-c066545e85ae</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:23:30 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:23:30.868Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,அதானி,adani group,அதானி நிறுவனம்,அதானி குழுமம்,முதலீடு</media:keywords><media:content height="225" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/95quzt8f/sm8ocnl8adani-group-logo-on-wall625x30025November24.webp" width="400"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக ஆளாத மாநிலங்கள் - அதானி குழுமம் ரூ.5 லட்சம் கோடி முதலீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/95quzt8f/sm8ocnl8adani-group-logo-on-wall625x30025November24.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>அதானி முதலீடு</h2><p>தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான  முதலீடுகளை <a href="https://www.maalaimalar.com/news/national/gujarat-court-sentences-senior-journalist-to-1-year-in-prison-for-defamation-of-adani-group-808910">அதானி குழுமம்</a> மேற்கொண்டுள்ளது. </p><h2>பாஜகவின் ஆதரவு கரம் </h2><p>மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பாஜகவிற்கு அதானி குழுமம் பல வகைகளில் ஆதரவு கரம் நீட்டி வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்கட்சிகள் தொடர் எதிர்ப்பினைவும், அதானி குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டும் தவறுகளை சுட்டிக்காட்டி குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றன.</p><p>இந்த சூழலில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அதானி குழுமம் முதலீடுகளை விரிவுப்படுத்தி உள்ளது கவனம் ஈர்த்துள்ளது. </p><h2>கேரளம் - கர்நாடகம் </h2><p>அதன்படி பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க  16.75 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படவுள்ள வடக்கு-தெற்கு சுரங்கப் பாதை பணிகளுக்கு ரூ.22,267 கோடிக்கான டெண்டா் உரிமத்தையும், மேலும் கேரளத்தில் விழிஞ்ஞம் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட பணிகள் மற்றும் விரிவுப்படுத்தல் ஆகிய செயல்பாடுகளுக்காக  ரூ.16,000 கோடி என மொத்தமாக ரூ.30,000  முதலீட்டை அதானி குழுமம் செய்துள்ளது.</p><h2>தெலங்கானா , தமிழ்நாடு </h2><p>அதானி குழுமம் ஏற்கனவே தெலங்கானாவில் 4 புரிந்துணர்வு  ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டிருக்கும் நிலையில் , புதிதாக தரவு மையங்கள், எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றில் புதிதாக முதலீடுகளை செய்துள்ளது.</p><p>தமிழ்நாட்டில் அதானி குழுமத்திற்கு வலுவான எதிர்ப்புகள் இருந்தாலும் , கணிசமான முதலீடுகளை அதானி குழுமம் ஈர்துள்ளது. </p><p>குறிப்பாக கடந்த திமுக ஆட்சியில் தரவு மையங்கள், சிமெண்ட் ஆலைகள் உள்ளிட்டவற்றை அமைக்க ரூ.42,000 கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டதாக அதானி குழுமம் அறிவித்திருந்து குறிப்பிடத்தக்கது. </p><h2>தவெக ஆட்சியிலும் நீடிப்பு </h2><p>முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சுங்கக் கட்டணம் , சாலை மேம்பாட்டு  பணிகளுக்காக ரூ.2,511 கோடியில் ஒப்பந்தத்தை அதானி குழுமம் கோரியிருந்தது, இந்த வெளிப்படையான அறிவிப்பின் மூலம் தற்போதைய ஆட்சியிலும் நீடிக்கிறது என்பது தெரிகிறது.</p><h2>மொத்தம்  ரூ.5 லட்சம் கோடி</h2><p>ஒட்டுமொத்தமாக பாஜக ஆளாத மாநிலங்களையும் சேர்த்து இந்தியா முழுவதும் ரூ.5 லட்சம் கோடி முதலீடுகளை அதானி குழுமம் மேற்கொண்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கனமழையால் ஸ்தம்பிக்கும் டெல்லி - இயல்பு வாழ்க்கை முடக்கம்! </title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-life-paralyzed-by-heavy-rain</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-life-paralyzed-by-heavy-rain#comments</comments><guid isPermaLink="false">b85ffa44-16a9-4dd9-9af5-b7df3f75c0e6</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:14:40 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:14:40.681Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,வெள்ளப்பெருக்கு,Red Alert,ரெட் அலர்ட்,rain alert,டெல்லி கனமழை,delhi,டெல்லி</media:keywords><media:content height="452" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6uvla8lc/images-3.jfif" width="678"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனமழையால் ஸ்தம்பிக்கும் டெல்லி - இயல்பு வாழ்க்கை முடக்கம்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6uvla8lc/images-3.jfif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம் </h2><p>டெல்லியில் தொடர்ந்து பெய்தும் வரும் கனமழை காரணமாக தலைநகரின் முக்கிய இடங்களில்  <a href="https://www.maalaimalar.com/news/topnews/nepal-flash-floods-death-toll-rises-to-734">வெள்ளப்பெருக்கு</a> ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையானது முடங்கியுள்ளது.</p><h2>போக்குவரத்து சேவை பாதிப்பு </h2><p>டெல்லியின் கிழக்கு மற்றும் வடகிழக்கும் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர்.</p><p>குறிப்பாக ஆனந்த் விஹார் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றிய சாலைகளில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/puzhal-lake-appears-at-a-critically-low-level">மழைநீர்</a> பெருக்கெடுத்து ஓடியது, இதனால்  முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><h2>ரெட் அலர்ட் </h2><p>டெல்லியில் பெய்து வரும் கனழையால் நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) டெல்லியின் அனைத்து மாவட்டங்களுக்கும் உடனடி '<a href="https://www.maalaimalar.com/news/national/kerala-red-alert-for-8-districts-holiday-declared-for-schools-and-colleges-in-5-districts">ரெட் அலர்ட்</a>' எச்சரிக்கையை விடுத்துள்ளது. </p> <h2>விமான சேவை பாதிப்பு </h2><p>மோசமான வானிலை மற்றும், தொடர் கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல விமானங்கள் மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பி விடப்பட்டும் , சில விமானங்கள் தாமதமாகவும் புறப்பட்டன.</p> <h2>தேவையற்ற பயணம் வேண்டாம் </h2><p> பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடரக்கூடும் என்பதால், பொதுமக்கள் யாரும்<a href="https://www.maalaimalar.com/news/puducherry/orange-alert-for-puducherry-public-should-not-come-out-unnecessarily-797726"> வெளியே வர வேண்டாம்</a> என்றும் ,தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பள்ளிக்கூடம் செல்ல கலெக்டரிடம் சைக்கிள் கேட்ட சிறுமி: வைரலான வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/buy-me-a-bicycle-7-year-old-girl-with-amputated-leg-pleads-to-district-collector</link><comments>https://www.maalaimalar.com/news/national/buy-me-a-bicycle-7-year-old-girl-with-amputated-leg-pleads-to-district-collector#comments</comments><guid isPermaLink="false">62ff41fb-d3b3-4b78-ab64-9819f9c48bff</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:58:13 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:58:13.273Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>uttarpradesh,District Collector,மாவட்ட ஆட்சியர்,ஊனமுற்ற பெண்,physically disabled,உத்தரப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/q4k6hd71/Untitled-design-16.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ragini Disabled Girl]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/q4k6hd71/Untitled-design-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராணிபூர் என்ற கிராமத்தில் கால் ஊனமாக உள்ள சிறுமி ஒருவர், தனது வறுமையின் நிலையிலும், உடல் குறைகளை பொருட்படுத்தாமல், அந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கு ஒரு காலில் நடந்து சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேசம்</a> மாநிலம் பலியாவில் உள்ள ராணிபூர் என்ற கிராமத்தில் ராகினி என்ற ஏழு வயது சிறுமி பிறக்கும் போது மற்ற குழந்தைகளை போல உடல் ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளார். </p><h3><strong>7 வயது சிறுமி ராகினி</strong></h3><p>அந்த சிறுமி ஆறு மாத குழந்தையாக இருக்கும்போது, ஒரு விபத்தில் சிறுமியின் கால் கடுமையாக சேதமடைந்து நடக்க முடியாமல் போனது. அந்த சிறுமியின் குடும்பத்தினர், அவரை பல இடங்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். </p><p>ஆனால் ராகினியின் தந்தை தினக்கூலியாக வேலை பார்த்து வருவதாலும், பொருளாதார நெருக்கடி காரணமாகவும் சிறுமிக்கு உரிய மருத்துவ சிகிச்சையை அவரின் பெற்றோர்களால் வழங்க முடியாமல் போனது.</p><p>ராகினி தனது கிராமத்தில் உள்ள மற்ற குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை பார்த்து, தானும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று விரும்பியுள்ளார். தனது உடலில் குறைபாடுகள் இருந்தபோதிலும், திகோடா தொடக்கப் பள்ளியில் அந்த சிறுமி சேர்ந்து படிக்க தொடங்கினார்.</p><p>தனது வீட்டில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு, ராகினியால் ஒரு காலில் நடந்து செல்வது மிகவும் சவாலனதாக இருந்தது. </p><p>பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக இருந்ததால், அந்த சிறுமியால் ஒரு காலில் நடந்து செல்வது மேலும் கடினமானதாக இருந்தது.</p><h3><strong>மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை</strong></h3><p>இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் தனக்கு ஒரு மிதிவண்டி தருமாறு ராகினி வீடியோ காட்சி மூலம் கோரிக்கை வைத்தார். சிறுமி வெளியிட்ட அந்த வீடியோவில், ”மாவட்ட ஆட்சியர் மாமா, என் கால்களில் ஒன்று மிகவும் சேதமடைந்துள்ளது.</p><p>தயவுசெய்து எனக்கு ஒரு மிதிவண்டியை வாங்கி தாருங்கள். நான் தினமும் பள்ளிக்கு படிக்க வருவேன்” என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டார். </p><p>இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி கவனம் பெற்றதை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங், சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 26,500 நிதியுதவி வழங்கினார்.</p><p>இதையடுத்து உள்ளூர் கட்சியினரும் சிறுமிக்கு ஒரு மூன்றுசக்கர மிதிவண்டியை வாங்கி கொடுத்தனர். இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் ராகினியின் வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.</p><figure><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1037443005730852%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></figure><p>இதைத்தொடர்ந்து சிறுமிக்கு புத்தகங்கள், பள்ளி பை, பொம்மை மற்றும் சாக்லேட்டுகளை ஆட்சியர் வழங்கினார். மேலும் ராகினிக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் ஏற்பாடு செய்து தருவதாக, ஆட்சியர் உறுதியளித்தார்.</p><p>மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறுமியின் கிராமத்திற்கு தேவையான சாலை வசதியும் சீரமைக்கப்பட்டது. மேலும் சிறுமியின் வீட்டிற்கு ஒரு கழிப்பறை கட்டுவதற்கு, அரசு நலத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>பின்வாங்கிய பென்குயின் இந்தியா... சோனியா காந்தி சுயசரிதையை வெளியிடும் ஹார்பர் காலின்ஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/national/penguin-india-backs-out-harpercollins-to-publish-sonia-gandhis-autobiography</link><comments>https://www.maalaimalar.com/news/national/penguin-india-backs-out-harpercollins-to-publish-sonia-gandhis-autobiography#comments</comments><guid isPermaLink="false">2b1b002a-84da-49d0-9577-049a482f28ce</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:04:08 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:04:08.748Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>sonia gandhi,சோனியா காந்தி,Belonging A Journey of Love,Penguin India,பென்குயின் இந்தியா,HarperCollins,ஹார்பர் காலின்ஸ்,பிலாங்கிங் எ ஜர்னி ஆஃப் லவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/h741bnc3/New-Project-2026-09-04T191136.458.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பின்வாங்கிய பென்குயின் இந்தியா... சோனியா காந்தி சுயசரிதையை வெளியிடும் ஹார்பர் காலின்ஸ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/h741bnc3/New-Project-2026-09-04T191136.458.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூலான 'பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்' புத்தகத்தை இந்தியாவில் வெளியிடும் உரிமத்தை ஹார்பர் காலின்ஸ் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.</p><p>முதலில் பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் வெளியிட இருந்தநிலையில் பின் விலகியது. இந்நிலையில் ஹார்பர் காலின்ஸ் உரிமத்தை பெற்றுள்ளது.</p><h2>பென்குயின் நிறுவனம் விலகியதற்கான காரணம்</h2><p>புத்தகத்தின் சில பகுதிகளில் “எழுத்துப்பூர்வ மாற்றங்கள் மற்றும் நீக்கங்களை” மேற்கொள்ளுமாறு <a href="https://www.maalaimalar.com/news/national/sonia-gandhis-autobiography-penguin-withdrew-after-refusing-to-remove-remarks-about-modi-and-the-rss">பென்குயின் இந்தியா </a>நிறுவனம் சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. </p><p>அதாவது பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்த சோனியாவின் பகிர்வுகளை நீக்க பென்குயின் இந்தியா கேட்டுள்ளது. இதற்கு சோனியா காந்தி மறுப்பு தெரிவிக்க இந்த ஒப்பந்தத்திலிருந்து பென்குயின் இந்தியா விலகியதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. </p><p>ஆனால் இதற்கு பென்குயின் இந்தியா நிறுவனம் மறுப்பு தெரிவித்து, இது உண்மைக்கு மாறான தகவல் என தெரிவித்தது. </p><h2>ஒப்பந்தத்தை பெற்ற ஹார்பர் காலின்ஸ்</h2><p>பென்குயின் நிறுவனம் விலகியதைத் தொடர்ந்து, ஹார்பர் காலின்ஸ் இந்தியா நிறுவனம் இப்புத்தகத்தை வெளியிடுவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. </p><p>இதனைத்தொடர்ந்து திட்டமிட்டபடி இப்புத்தகம் 2026 நவம்பர் 10 அன்று இந்தியாவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்</h2><p>இப்புதக்கத்தில் சோனியா காந்தி தனது சிறுவயது வாழ்க்கை, ராஜீவ் காந்தி உடனான திருமண வாழ்க்கை, அதன் பின்னராக அரசியல் வருகை உள்ளிட்ட தனது வாழ்க்கையின் முக்கிய பகுதிகளை பகிர்ந்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் சொகுசு கப்பல் சுற்றுலாவை மேம்படுத்த ‘இ-குழு வருகை விசா’ அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/cruise-tourism-gets-a-boost-as-govt-clears-e-group-visa</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/cruise-tourism-gets-a-boost-as-govt-clears-e-group-visa#comments</comments><guid isPermaLink="false">73033bf3-2d9a-44e2-abc6-61a6182a84e3</guid><pubDate>Fri, 04 Sep 2026 11:23:48 +0000</pubDate><atom:updated>2026-09-04T11:23:48.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விசா,visa,சுற்றுலா,Tourism,சொகுசு கப்பல்,Luxury Cruise Ship</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/dw0n9pj9/ship.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/dw0n9pj9/ship.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவை உலகின் முன்னணி சொகுசுக் கப்பல் சுற்றுலாத்தலமாக மாற்றும் நோக்கில், நிர்ணயிக்கப்பட்ட பயணத்திட்டத்துடன் சொகுசு  கப்பல்களில் வரும் வெளி நாட்டு சுற்றுலா  பயணிகளுக்காக ‘இ-குழு வருகை விசா’ எனும் புதிய வசதியை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><h2><strong>மின்னணு விசா</strong></h2><p>தற்போது மின்னணு சுற்றுலா விசா பெறத் தகுதியுள்ள 172 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் இந்தத் பிரத்யேக விசா வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விசாவைப் பெறும் வெளிநாட்டுப் பயணிகள், மின்னணு விசா வசதி கொண்ட நாட்டின் 38 குறிப்பிட்ட துறைமுகங்கள் வழியாக இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். 30 நாட்கள் செல்லுபடியாகும் இந்த விசா மூலம் பலமுறை இந்தியாவிற்குள் வந்து செல்லும் வசதியும் வழங்கப்படுகிறது.</p><h2><strong>சொகுசுக் கப்பல்</strong></h2><p>சொகுசுக் கப்பல் இந்திய துறைமுகத்திற்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே, கப்பல் நிறுவனம் அல்லது அதன் முகவர் இதற்கான விண்ணப்பங்களை குறிப்பிட்ட இணையதளம் அல்லது செயலி வழியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.</p><h2><strong>கியூ.ஆர் குறியீடு</strong></h2><p>இந்த காலக்கெடுவிற்குப் பிறகு புதிய விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஒரு குழு விசாவில் எத்தனை சுற்றுலா பயணிகள் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்பதால் இதற்கு எவ்வித உச்சவரம்பும் இல்லை.</p><h2><strong>இணைய தளம்</strong></h2><p>வெளிநாட்டுப் பயணிகளின் விவரங்கள் அனைத்தும் மொத்தமாக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த விசா சான்றிதழில் கியூ.ஆர் குறியீடு இடம்பெற்றிருக்கும். இதைப் பயன்படுத்தி பயணிகள் குடிவரவு, சோதனைச்சாவடிகள் மற்றும் பயணத் திட்டத்தின் படியான உள்நாட்டுப் பயணங்களை மேற்கொள்ளலாம்.</p><h2><strong>பொருளாதார நன்மைகள்</strong></h2><p>எளிதாக்கப்பட்ட விசா மற்றும் குடிவரவு நடைமுறைகள் சர்வதேச சொகுசு கப்பல் நிறுவனங்கள் தங்களது பயணத்திட்டத்தில் இந்திய துறைமுகங்களைச் சேர்க்க ஊக்குவிக்கும் என்றும், இதன் மூலம் துறைமுகங்கள், விடுதிகள், உணவகங்கள், போக்குவரத்து மற்றும் உள்ளூர் சமூகங்களுக்குப் பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>கப்பல் சுற்றுலா</strong></h2><p>இந்தியாவின் 7,500 கி.மீ நீளமுள்ள கடற்கரை மற்றும் 400 நதிகளை இணைக்கும் உள்நாட்டு நீர்வழிகளைப் பயன்படுத்தி சொகுசு கப்பல் சுற்றுலாவை உயர்த்த அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.</p><h2><strong>சுற்றுலாத் துறை</strong></h2><p>குறிப்பாக, 2029-க்குள் சொகுசு கப்பல் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் நோக்கில் ‘க்ரூஸ் பாரத் மிஷன்’ மற்றும் கடல்சார் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கிலான திட்டங்கள் மூலம் இந்தியாவின் சுற்றுலாத் துறை புதிய உயரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கேரளத்தில் தேங்காய் பூங்கா..! வளர்ச்சி நோக்கிய முடிவு
</title><link>https://www.maalaimalar.com/news/national/coconut-park-in-kerala-development-oriented-decision</link><comments>https://www.maalaimalar.com/news/national/coconut-park-in-kerala-development-oriented-decision#comments</comments><guid isPermaLink="false">0502df9c-7b89-4bc1-b94a-02e74c0713e8</guid><pubDate>Fri, 04 Sep 2026 10:31:56 +0000</pubDate><atom:updated>2026-09-04T10:31:56.514Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேங்காய் ஏற்றுமதி,தேங்காய்,கேரளம்,V D Satheesan,விடி சதீஷன்</media:keywords><media:content height="629" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/hbaevhmn/vikatan2026-07-0840exitcafile-1.avif" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ V. D. Satheesan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/hbaevhmn/vikatan2026-07-0840exitcafile-1.avif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2>விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பு </h2><p>கேரளத்தின் வர்த்தகத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் தேங்காய் பூங்கா அமைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி <a href="https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-itself-can-build-the-dam-across-the-mullaperiyar-river-kerala-will-bear-the-entire-cost-chief-minister-saseeshan">சதீஷன்</a> கூறியுள்ளார். </p> <h2>பாரம்பரியம் டூ அறிவியல் மாற்றம் </h2><p>தென்னை விவசாயத்தை பாரம்பரிய முறையில் இருந்து அறிவியல் முறைக்கு மாற்றுவதன் மூலம் தென்னை விவசாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடியும். அதன் ஒரு செயல்முறையே இந்த  <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-vijay-tells-elephant-coconut-banana-kutti-story-and-crticks-dmk-govt-812323">தேங்காய்</a> பூங்கா என்று தெரிவித்தார்.</p> <h2>தேங்காய் சாகுபடியில் முன்னோடி </h2><p> இது குறித்து பேசிய  கேரளம் முதல் மந்திரி, வரலாற்று ரீதியாக  தேங்காய் சாகுபடியில் நாம்தான் முன்னோடியாக இருந்து வருகிறோம். ஆனால், உற்பத்தியில் பின்தங்கியுள்ளோம். எனவே மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்த தேங்காய் துறையை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு தேங்காய் பூங்கா திட்டம் உதவும்.</p><p>தேங்காயை நவீன முறையில் பதப்படுத்தி, மதிப்பு கூட்டி அதை உயர் தரத்தில் உருவாக்கினால் ஏற்றுமதி தேவையை பூர்த்தி செய்ய முடியும என்றும் தெரிவித்தார். </p> <h2>தொழில்முனைவோர் ஈர்ப்பு </h2><p>இந்த  தேங்காய் பூங்கா அமைப்பதன் மூலம் மிகுதியான தொழில்முனைவோரை ஈர்க்க முடியும் அதன் மூலம் சிறந்த வளர்ச்சி அடைந்த மாநிலமாக கேரளத்தை மாற்ற முடியும் என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கம்பத்தில் மோதிய பயணிகள் விமானம்.. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பரபரப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/passenger-plane-hits-pole-while-landing-commotion-at-srinagar-airport</link><comments>https://www.maalaimalar.com/news/national/passenger-plane-hits-pole-while-landing-commotion-at-srinagar-airport#comments</comments><guid isPermaLink="false">e50268af-e749-426a-a317-7ee47149cef8</guid><pubDate>Fri, 04 Sep 2026 10:22:57 +0000</pubDate><atom:updated>2026-09-04T10:22:57.990Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>airport,விமான நிலையம்,plane crash,விமான விபத்து,Indigo Flight,இண்டிகோ விமானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/hbtw5gwg/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கம்பத்தில் மோதிய பயணிகள் விமானம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கம்பத்தில் மோதிய பயணிகள் விமானம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/hbtw5gwg/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி வந்த இண்டிகோ விமானம் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை விமான நிலையத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு இன்று காலை 9 மணியளவில் இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று வந்தடைந்தது.</p><h2>விபத்து</h2><p>ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு நிறுத்தும் போது கம்பம் ஒன்றில் விமானம் மோதி <a href="https://www.maalaimalar.com/topic/plane-crash">விபத்து </a>ஏற்பட்டது.</p><p>அந்த கம்பம் விஷுவல் டாக்கிங் கைடன்ஸ் சிஸ்டம் எனப்படும் விமானங்கள் நிறுத்துவதற்காக வழிகாட்டுதல் அமைப்பை கொண்ட VDGS கம்பம் ஆகும்.</p><h2>காயம் ஏற்படவில்லை</h2><p>கம்பத்தில் மோதியபோது விமானத்தில் இருந்த பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>விமானத்தில் இருந்த பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் தானியங்கி படிக்கட்டுகளில் அல்லாமல், கையால் இயக்கப்படும் விமானப் படிக்கட்டு வழியாக இறக்கிவிடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.</p><p>இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை. விமானங்களின் வருகையும் புறப்பாடும் திட்டமிட்டபடி தொடர்ந்தன.</p> <h2>விசாரணை</h2><p>நடைமுறையின்படி, இந்தச் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று ஸ்ரீநகர் <a href="https://www.maalaimalar.com/topic/airport">விமான நிலைய</a> நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>விசாரணை முடிந்த பின்னரே சம்பவத்திற்கான சரியான காரணம் தெரியவரும். இந்தக் கட்டத்தில் காரணம் குறித்து எந்த முடிவுக்கும் வர முடியாது என விமான நிலையம் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிராபிக்ஸ் கார்டு ஆர்டர் செய்தவருக்கு டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி.. ரூ.30,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/detergent-powder-delivered-instead-of-ordered-graphics-card-consumer-commission-orders-30000-compensation</link><comments>https://www.maalaimalar.com/news/national/detergent-powder-delivered-instead-of-ordered-graphics-card-consumer-commission-orders-30000-compensation#comments</comments><guid isPermaLink="false">95a8d003-6680-40a3-b716-689682a39652</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:16:56 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:16:56.333Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,நுகர்வோர் ஆணையம்,Consumer Commission,ஆன்லைன் டெலிவரி,Online Delivery,west bengal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/9sw9rtqu/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/9sw9rtqu/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆன்லைனில் ரூ.1.98 லட்சம் செலுத்தி ஆர்டர் செய்த கிராபிக்ஸ் கார்டுக்கு பதிலாக டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி செய்யப்பட்ட சம்பவத்தில் வாடிக்கையாளருக்கு ரூ.30,000 வழங்க மேற்கு வங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/online-shopping-women-spend-42-percent-more-time-than-men">ஆன்லைன் ஷாப்பிங்</a> என்பது இன்று மக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக மாறி வருகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்தது ஒன்று, டெலிவரி ஆவது மற்றோரோன்றாக இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது. </p><p>அந்த வகையில் மேற்கு வங்கத்தில் ஈகாமர்ஸ் தளத்தில் ரூ.1.98 லட்சம் மதிப்பில் கணினிக்கான கிராபிக்ஸ் கார்டு ஆர்டர் செய்த நபருக்கு, 1 கிலோ துணி துவைக்கும் டிடர்ஜென்ட் பவுடர்  பாக்கெட் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் வைரலானது. </p><h2>அலைக்கழிப்பு</h2><p>இதுகுறித்து சம்பந்தப்பட்ட இகாமர்ஸ் நிறுவனத்திடம் உடனடியாக புகாரளித்தும், பலமுறை தொடர்பு கொண்டும் எவ்விதத் தீர்வும் கிடைக்கவில்லை.</p><p>இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளர், தனக்கு உரியப் பணத்தைத் திரும்பப் பெறவும், ரூ.10 லட்சம் நஷ்டஈடு கோரியும் மேற்கு வங்க <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">நுகர்வோர் ஆணையத்தை</a> அணுகினார்.</p><p>நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்ட பிறகே,  வாடிக்கையாளரின் கணக்கில் ரூ.1.98 லட்சம் தொகை முழுமையாகத் திரும்பச் செலுத்தப்பட்டது.</p><p>ஆனால் தான் அடைந்த மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கிடைக்க வேண்டும் என்பதில் வாடிக்கையாளர் உறுதியாக இருந்துள்ளார்.</p><h2>விசாரணை</h2><p>வழக்கு விசாரணையின் போது, வாடிக்கையாளர் தரப்பில் ஆன்லைன் ஆர்டர் ஸ்கிரீன்ஷாட்கள், இன்வாய்ஸ் பில், வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்கள், டெலிவரி செய்யப்பட்ட டிடர்ஜென்ட் பாக்கெட்டின் புகைப்படங்கள் மற்றும் நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் ஆவணங்கள் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.</p><p>எதிர்மனுதாரர்களான இ காமர்ஸ் நிறுவனம் மற்றும் விற்பனையாளர் நோட்டீஸ் வழங்கிய பிறகும் ஆஜராகவில்லை.</p><h2>ஆணையம் உத்தரவு</h2><p>விசாரணையின்போது, "வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகே முழு தொகையும் திருப்பியளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தவறுதலான பொருள் அனுப்பப்பட்டது உண்மைதான் என்பது நிரூபணமாகிறது.</p><p>பணத்தைத் திரும்பப் பெற வாடிக்கையாளர் பலமுறை அலையவைக்கப்பட்டுள்ளார். பெரும் தொகையைச் செலுத்திவிட்டுப் பொருளும் கிடைக்காமல் அலையவிடப்பட்டது அவருக்குக் கடுமையான மன உளைச்சலையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது" என ஆணையம் தெரிவித்தது.</p><p>பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டது என்பதால் தனியாக ரீபண்ட் உத்தரவு தேவையில்லை என்று குறிப்பிட்ட ஆணையம், மன உளைச்சலுக்கான இழப்பீடாக ரூ.15,000, வழக்கு செலவுத் தொகை இழப்பீடாக ரூ.15,000 என மொத்தம் ரூ.30,000 தொகையை இகாமர்ஸ் நிறுவனம் மற்றும் விற்பனையாளர் இணைந்து 30 நாட்களுக்குள் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கும் நுகர்வோர் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன்: 1915 எண்ணுக்கு டயல் செய்து தங்கள் புகாரை பதிவு செய்யலாம்.</p>]]></content:encoded></item><item><title>இணைய வழியில் ஆண்டிற்கு 2 கோடி குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர்- புதிய ஆய்வில் அதிர்ச்சி  தகவல் </title><link>https://www.maalaimalar.com/news/national/2-crore-children-face-online-sexual-abuse-in-a-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/2-crore-children-face-online-sexual-abuse-in-a-year#comments</comments><guid isPermaLink="false">9a2675d2-db35-49bb-a87f-d7b412d18444</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:30:36 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:30:36.661Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆய்வில் தகவல்,பாலியல் தொல்லை,பாலியல் கொடுமை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/u3ioclj8/online.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இணைய வழியில் பாலியல் கொடுமை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/u3ioclj8/online.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உலகளவில் பார்க்கும் போது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் பல கோடிகளைத் தாண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</strong></em> </p><p>உலகெங்கிலும் இணையத்தைப் பயன்படுத்தும் 12 முதல் 17 வயதுடைய சிறுவர்களில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் ஆண்டிற்குப் பலமுறை இணையவழிப் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி வருகின்றனர்.</p><h2><strong>குழந்தைகள் பாதிப்பு</strong></h2><p>21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், ஓராண்டில் மட்டும் சுமார் 2 கோடி குழந்தைகள் சமூக ஊடக தளங்கள் மற்றும் இணைய வழியில் <a href="https://www.maalaimalar.com/topic/பாலியல்-தொல்லை">பாலியல் ரீதியான</a> அச்சுறுத்தல்களையும் கொடுமைகளையும் சந்திக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.</p><p>இந்த ஆய்வின் தரவுகளின்படி, தோராயமாக 1.5 கோடி குழந்தைகள் அவர்களின் விருப்பமின்றி இணையத்தில் பாலியல் ரீதியான ஆபாச உள்ளடக்கங்களை பார்க்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். </p><p>மேலும் 90 லட்சம் குழந்தைகள் பாலியல் உரையாடல்களில் ஈடுபடவும், தங்களது ஆபாச  படங்களைப் பகிரவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, 40 லட்சம் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவர்களின் சம்மதமின்றி இணையத்தில் பிறரால் பகிரப்பட்டுப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p>உலகளவில் பார்க்கும் போது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் பல கோடிகளைத் தாண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இணையவழிப் பாலியல் குற்றங்களைத் தடுக்கவும் டிஜிட்டல் தளங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.</p><p>இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களை கவரும் வகையில் இணைய வழி குற்றவாளிகள் சமூக ஊடகங்கள் மற்றும் கேமிங் தளங்களைப் பயன்படுத்தி அவர்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்துவது பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மண்டையை உடைத்தேன்.. ஜெயிலுக்கு செல்லவில்லை - பெருமையடித்த பிரபலம் -  போராட்டத்தில் குதித்த CJP </title><link>https://www.maalaimalar.com/news/national/i-cracked-a-skull-during-the-cjp-protest-but-didnt-go-to-jail-controversy-erupts-over-instagram-celebritys-boastful-claim</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-cracked-a-skull-during-the-cjp-protest-but-didnt-go-to-jail-controversy-erupts-over-instagram-celebritys-boastful-claim#comments</comments><guid isPermaLink="false">6fc9fe6c-9fe9-4806-89a0-4979806f6196</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:57:22 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:57:22.546Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,BJP,பாஜக,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/d535idj1/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுவதந்திர பரத்வாஜ், சஞ்சய் குமார், சஞ்சய் குமாரின் மகள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சுவதந்திர பரத்வாஜ், சஞ்சய் குமார், சஞ்சய் குமாரின் மகள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/d535idj1/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் சிஜேபி போராட்டத்தின்போது மாணவி ஒருவரின் தந்தையின் தலையை உடைத்தும் தான் கைதகவில்லை என கூறிய இன்ஸ்டாகிராம் பிரபலத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>சிஜேபி போராட்டம்</h2><p>டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 25 வரை நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடிகளை கண்டித்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> (சிஜேபி) தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.</p><p>ஜூலை 20 அன்று மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் நடத்திய பேரணியில் டெல்லி போலீசார், ஆர்ஏஎப் மத்திய படையினர் தாக்குதல் நடத்தினர்.</p><p>கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்தப்பட்டது. பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதும் சீருடையற்ற சிலர் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதும் விமர்சனத்துக்கு உள்ளாகி இளைஞர்களுக்கு நாடு முழுவதும் ஆதரவு அதிகரித்தது.</p><p>கடும் அழுத்தத்தின் மத்தியில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த <a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-dharmendra-pradhan-says-ministerial-post-not-important-after-resignation-amid-student-agitation">தர்மேந்திர பிரதான்</a> ஜூலை 25 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.</p> <h2>சர்ச்சை</h2><p>இதனிடையே ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, மாணவர் செயற்பாட்டாளர் நிஷு ஆசாத்தின் தந்தையான சஞ்சய் குமார் என்பவரின் " மண்டையை உடைத்தேன், ஆனால் அதற்காக சிறைக்கு கூட செல்லவில்லை" என சுவதந்திர பரத்வாஜ் என்ற இன்ஸ்டா பிரபலம் பேசியது சர்ச்சையாகியுள்ளது.</p><p>இன்ஸ்டாகிராமில் 1.84 லட்சம் பின்தொடர்பாளர்களை கொண்ட 21 வயதான சுவதந்திர பரத்வாஜ், 'சுவதந்திர சனாதனி யோதா' எனத் தன்னை அழைத்துக்கொள்கிறார்.</p><p>அவர் பாட்காஸ்டில் பேசியதாவது,</p><p>"போராட்டக்காரரின் தந்தையின் மண்டையை நான் உடைத்தேன். அவருக்கு 60 தையல்கள் போடப்பட்டன. இது கொலை முயற்சி வழக்கு என்பது தெரியுமா? ஆம்புலன்ஸில் அவர் கிட்டத்தட்டச் சாகும் நிலையில் இருந்தார்.</p><p>ஆனால், நான் சிறையில் கூட அடைக்கப்படவில்லை. இரவெல்லாம் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தேன். உலகத்திற்கு இது தெரிய வேண்டும்" என தெரிவித்தார்.</p><p>மேலும் பாஜக தலைவர்களுடனான தனது தொடர்புகளே தன்னைத் தப்பவைத்ததாக அவர் அந்த பாட்காஸ்டில் பேசியிருக்கிறார்.</p><p>பரத்வாஜ் குறிப்பிட்ட இந்த சம்பவம் ஜூன் 23 அன்று மாலை 5.30 மணியளவில் நடந்துள்ளது. சஞ்சய் குமார் தனது கைபேசியில் போராட்டத்தைப் படமாக்கியபோது ஏற்பட்ட தகராறில் தாக்குதலானது நடைபெற்றுள்ளது. சூரஜ் குமார், பரத்வாஜ் மற்றும் சிலர் இணைந்து சஞ்சய் குமாரை தாக்கியுள்ளனர்.</p><p>பரத்வாஜ் பேசிய வீடியோ தற்போது வைரலானதை தொடர்ந்து பல தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.</p><p>பாதிக்கப்பட்ட சஞ்சய் குமாரின் மகள் நிஷு ஆசாத்    இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். </p><p>சர்ச்சை வலுத்ததையடுத்து பதிலளித்த பரத்வாஜ், "அது தற்காப்புக்காக செய்யப்பட்ட நடவடிக்கை. நான் அப்படிச் செய்யாவிட்டால், கும்பல் என்னைப் படுகொலை செய்திருக்கும். என் மீது தாக்குதல் நடத்தவே முயன்றார்கள், அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது" என விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>ராகுல் கேள்வி</h2><p>இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில்,</p><p>"அமித் ஷாவின் டெல்லி போலீஸ் ஒருபுறம் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்துகிறது. மறுபுறம், தலித் மாணவியின் தந்தையின் மண்டையை உடைத்த குற்றவாளி திறந்தவெளியில் சுதந்திரமாகச் சுற்றி திரிகிறான்.</p><p>இப்படிப்பட்ட குற்றவாளிக்கு உங்கள் கட்சியினர் ஏன் பாதுகாப்பு அளிக்கிறார்கள்? இப்போது நடவடிக்கை எடுக்கப்படுமா, அல்லது அவரைத் தொடர்ந்து பாதுகாப்பீர்களா?" என கேள்வி எழுப்பியுள்ளார்</p><h2>சிஜேபி  </h2><p>இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரை உடனடியாகக் கைது செய்யக் கோரி சிஜேபி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் இன்று காலை டெல்லி படேல் சவுக்கிலிருந்து பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையம் நோக்கிப் பேரணியாகச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி பிரிவில் வழக்குப்பதிவு செய்ய டெல்லி போலீசாரை சிஜேபி கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.</p><p>ஆனால், போலீசார் எப்ஐஆரில் அந்தப் பிரிவை சேர்க்க மறுத்துவிட்டதாக சௌரவ் தாஸ் குற்றம் சாட்டினார்.</p><p>டெல்லி போலிஸ் அளித்த விளக்கத்தில் சஞ்சய் குமாருக்கு ஏற்பட்டது சாதாரண காயம் தான் என்றும், மண்டை ஓடு எதுவும் உடையவில்லை என்றும் தெரிவித்துள்து.</p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக சூரஜ் குமார், சுவதந்திர பரத்வாஜிடம் விசாரணை நடத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆபரேஷன் தலாஷ்: காணாமல் போன 3,357 குழந்தைகள் மீட்பு - அதிரடி காட்டிய பீகார் காவல்துறை</title><link>https://www.maalaimalar.com/news/national/operation-talash-3357-missing-children-rescued-bihar-police-takes-decisive-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/operation-talash-3357-missing-children-rescued-bihar-police-takes-decisive-action#comments</comments><guid isPermaLink="false">9bbde622-a5e5-449b-a55e-24408f687151</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:43:49 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:43:49.713Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,பீகார்,Bihar,குழந்தை கடத்தல்,police,child trafficking</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/p96pvd8f/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ குழந்தைகள் மீட்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ குழந்தைகள் மீட்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/p96pvd8f/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆபரேஷன் தலாஷ் என்ற பெயரில் பீகார் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில் 3,359 காணாமல் போன குழந்தைகளை கண்டறிந்துள்ளனர். அவர்களில் 3,357 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.</p><h2>ஆபரேஷன் தலாஷ்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/why-bihar-youth-insist-on-government-jobs">பீகார் மாநிலத்தில்</a> காணாமல் போன, கடத்தப்பட்ட மற்றும் வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகளை கண்டறிந்து மீட்பதற்காக மாநிலம் தழுவிய அளவில் ஆபரேஷன் தலாஷ் மேற்கொள்ளப்படுகிறது.</p><p>பீகார் சிஐடி பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர் கே. சுஹிதா அனுபமின் வழிகாட்டுதலின் ஆகஸ்ட் 20 தொடங்கிய இந்த ஆபரேஷன் செப்டம்பர் 10 வரை நடைபெறுகிறது.</p><p>இந்தத் தேடுதல் வேட்டையில் சிறார்களுக்கான சிறப்பு சிறப்பு காவல் பிரிவினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல உதவி மையங்கள், மனித கடத்தல் தடுப்புப் பிரிவுகள், மற்றும் 'போலீஸ் தீதி', 'அபயா பிரிகேட்' போன்ற பெண் காவலர்களின் சிறப்பு படைகள் ஒருங்கிணைந்து இந்த ஆபரேஷனை மேற்கொள்கின்றன.</p> <h2>மீட்பு</h2><p>ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 2 வரை மொத்தம் 14 நாட்களில் மட்டும் மொத்தம் 3,359 குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களில் 3,357 குழந்தைகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>மீட்கப்பட்டவர்களில் 2,705 பேர் சிறுமிகள் மற்றும் 652 பேர் சிறுவர்கள் ஆவர். பெண் குழந்தைகளின் எண்ணிக்கை இதில் மிக அதிகமாக உள்ளது கவனிக்கத்தக்கது.</p> <h2>மிஷன் வாத்சல்யா</h2><p>14 நாட்களில் 'மிஷன் வாத்சல்யா' என்ற இணையதளத்தில் புதிதாக 2,254 குழந்தைகளின் விவரங்கள் பதிவேற்றப்பட்டன.</p><p>அதில் ஏற்கனவே இருந்த பதிவுகளுடன் ஒப்பிட்டு 2,787 குழந்தைகளின் விவரங்கள் துல்லியமாகப் பொருத்தப்பட்டு அடையாளம் காணப்பட்டன.</p><p>பீகார் காவல்துறையின் அறிக்கையின்படி, 'மிஷன் வாத்சல்யா' இணையதளம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை மொத்தம் 6,857 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p> <h2>தொடரும் ஆபரேஷன்</h2><p>இந்த ஆபரேஷன் வெறும் காவல் நிலையப் பதிவுகளுடன் மட்டும் நின்றுவிடாமல், சிறுவர் நீதி வாரியங்களின் அனுமதியுடன் குழந்தைகள் காப்பகங்கள், சீர்திருத்தப் பள்ளிகள் மற்றும் சிறார் இல்லங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>அங்குள்ள குழந்தைகளுடன் அதிகாரிகள் கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கி, அவர்களின் குடும்பப் பின்னணியைக் கண்டறிந்து வருகின்றனர்.</p><p>மேலும், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">குழந்தை திருமணங்கள்</a> தொடர்பாக நிலுவையில் உள்ள கடத்தல் வழக்குகளையும் காவல்துறையினர் இந்த ஆபரேஷனின் கீழ் தீவிரமாக மறுவிசாரணை செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவை வல்லரசு நாடாக்கும் பயணத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்- இஸ்ரோ தலைவர் </title><link>https://www.maalaimalar.com/news/topnews/gslv-rocket-isro-narayanan</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/gslv-rocket-isro-narayanan#comments</comments><guid isPermaLink="false">62be0d23-a0cd-4fc8-b5e1-59a88360d206</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:20:27 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:20:27.248Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செயற்கைக்கோள்,இஸ்ரோ தலைவர்,satellite,GSLV rocket,ஜிஎஸ்எல்வி ராக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/r63qzz60/isronarayanan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/r63qzz60/isronarayanan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2><strong>இ.ஓ.எஸ். -05 செயற்கைக்கோள்</strong></h2><p>ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரி கோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.-எப்17 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ். -05 செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. </p><h2><strong>இதையடுத்து இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது:-</strong></h2><p>நாட்டு மக்களுக்கு காலை வணக்கம். நாடு இன்று சூரிய உதயத்தை பார்ப்பதற்கு முன்பாகவே, விண்ணில் ஜி.எஸ்.எல்.வி.-எப்17 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ். -05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தி உள்ளோம். இந்த உற்சாகமான தருணத்தில், இஸ்ரோ சார்பில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>இஸ்ரோ குழுவினர்</strong></h2><p>நாட்டு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க எங்களால் முடிந்தவரை தொடர்ந்து முயற்சி செய்வோம். நாங்கள் எதிர் பார்ப்பதைவிட அதிக சாதனைகளை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த வெற்றிக்காகபாடுபட்ட இஸ்ரோ குழுவினர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>இஸ்ரோவின் முன்னாள் தலைவர்கள்</strong></h2><p>இஸ்ரோவின் முன்னாள் தலைவர்களான ராதாகிருஷ்ணன், சோம்நாத், கிரண்குமார் ஆகியோர் இந்த வெற்றியை நேரில் காண வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கும், இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>ஸ்ரீ ஹரிகோட்டாவில்</strong></h2><p>இந்த நிதியாண்டில் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முதல் ஏவுதல் இது. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், இந்த நிதியாண்டில் இங்கிருந்து மேலும் 6 ஏவுதல்களை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.</p><h2><strong>தொழில்துறை</strong></h2><p>முக்கியமான பணிகள் உள்ளிட்ட அடுத்தடுத்த ஏவுதல்களுக்கான நடவடிக்கைகள் தொழில்துறையினர் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து முறையாக நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டுள்ள ஏவுதல்களை இந்த ஆண்டிலேயே மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளோம். </p><h2><strong>பரிசு</strong></h2><p>‘அதிக வேலைக்கான பரிசு இன்னும் அதிக வேலைதான்’ என்று ஒரு பழமொழி உண்டு. நமக்கு முன்னால் ஏராளமான பணிகள் உள்ளன. அவற்றை தொடர்ந்து மேற்கொண்டு நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும் சிறந்த சேவைகளை வழங்குவோம். வரும் ஆண்டுகளில் இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக உருவாக்குவதற்கான பயணத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>FCRA மசோதாவை ஆய்வு செய்ய 31 எம்.பி.க்கள் கொண்ட கூட்டுக்குழு அமைப்பு.. பின்னணி என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/joint-committee-comprising-31-mps-formed-to-examine-the-fcra-bill</link><comments>https://www.maalaimalar.com/news/national/joint-committee-comprising-31-mps-formed-to-examine-the-fcra-bill#comments</comments><guid isPermaLink="false">f78f143f-34cc-428d-abcc-b733ecc013f5</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:17:34 +0000</pubDate><atom:updated>2026-09-04T05:17:34.600Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Joint Parliamentary Committee,FCRA Amendment Bill,எப்சிஆர்ஏ,எப்சிஆர்ஏ சட்டத்திருத்த மசோதா,நாடாளுமன்ற கூட்டுக் குழு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/79soll06/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ FCRA ]]></media:title><media:description type="html"><![CDATA[ FCRA ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/79soll06/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fcra-amendment-bill-resolution-passed-unanimously-in-tn-assembly">எப்சிஆர்ஏ சட்டத்திருத்த மசோதா</a>வை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. </p><p>அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா (<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE">எப்சிஆர்ஏ</a>)வுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. </p><p>மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ அரசாங்கம் எப்சிஆர்ஏ மசோதாவை கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வர எத்தனித்தது. </p><p>ஆனால் ஆகஸ்ட் 12 அன்று மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் விவாதங்களுக்குப் பிறகு மசோதாவானது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. </p><h2>கூட்டுக்குழு</h2><p>இந்நிலையில் எப்சிஆர்ஏ மசோதாவை ஆய்வு செய்ய 31 எம்.பிக்களை உள்ளடக்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்துள்ளார்.</p><p>இந்த கூட்டுக்குழுவில் பாஜக எம்பி சஞ்​சய் ஜெய்ஸ்வால் தலைமை வகிப்​பார்.</p><p>இதில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசை சேரந்த 5 எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர். திமுகவின் 2 எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். </p><p>சமாஜ்வாதி, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தலா 1 எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் இருவர் இடம்பெற்றுள்ளனர்.</p><p>2014 முதல் பல சர்ச்சைக்குரிய மசோதாக்களை மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. அவ்வாறான மசோதாக்களை ஆய்வு செய்ய அமைக்கப்படும் 19வது நாடாளுமன்ற கூட்டுக் குழு இது. 2024இல் இருந்து 9வது கூட்டுக்குழு இது.</p><h2>எப்சிஆர்ஏ சர்ச்சை</h2><p>கடந்த 1976 ஆம் ஆண்டு அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி ஆட்​சிக் காலத்​தில் எப்சிஆர்ஏ சட்டம் கொண்டு வரப்​பட்​டது.</p><p>கடந்த 2010 ஆம் ஆண்​டில் அப்​போதைய பிரதமர் மன்​மோகன் சிங் ஆட்​சி​யில் இந்த சட்​டத்​தில் கடுமை​யான விதி​கள் சேர்க்​கப்​பட்​டன.</p><p>கடந்த 2020 ஆம் ஆண்​டில் பிரதமர் ​திர மோடி தலைமையிலான என்டிஏ அரசின் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் எப்சிஆர்ஏவில் ​மேலும் கடுமை​யான விதி​கள் சேர்க்கப்பட்டன.</p><p>தற்​போது மேலும் அதில் மேலும் 3 முக்​கிய திருத்​தங்​கள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>3 முக்​கிய திருத்​தங்​கள்</h2><p>எப்சிஆர்ஏ உரிமம் ரத்து செய்யப்பட்ட அமைப்புகளின் சொத்துக்களை நிர்வகிக்கவும், தேவைப்பட்டால் அவற்றை விற்கவும் ஒரு தனி அதிகாரியை அரசு நியமிப்பது,</p><p>உரிமம் ரத்து செய்யப்பட்ட அமைப்புகள் தங்களின் வெளிநாட்டு நிதி மற்றும் அசையும், அசையா சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விதிகளைப் பூர்த்தி செய்யாத அமைப்புகளின் சொத்துக்களை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் எடுப்பது ஆகியவை புதிய திருத்தங்கள் ஆகும்.</p><p>இது குறித்து புதிதாக அமைக்கப்பட்ட கூட்டுக்குழு ​​ செய்து தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க உள்ளது. இதன் பின் மசோதா அடுத்த கூட்டத்தொடரில் மக்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்படும்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவுக்கு முதல் படி.. விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த GSLV-F17 ராக்கெட் - பிரதமர் மோடி பெருமிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/a-first-step-for-india-gslv-f17-rocket-successfully-launched-into-space-pm-modi-expresses-pride</link><comments>https://www.maalaimalar.com/news/national/a-first-step-for-india-gslv-f17-rocket-successfully-launched-into-space-pm-modi-expresses-pride#comments</comments><guid isPermaLink="false">ace3ef99-0306-4968-ae5f-132737a27a05</guid><pubDate>Fri, 04 Sep 2026 04:45:20 +0000</pubDate><atom:updated>2026-09-04T04:45:20.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,செயற்கைக்கோள்,Prime Minister Modi,satellite,பிரதமர் மோடி,GSLV rocket,ஜிஎஸ்எல்வி ராக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/y5pf1rq8/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/y5pf1rq8/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>GSLV-F17 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது பற்றி பிரதமர் மோடி பெருமிதம் பொங்க எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். </p><p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05-ஐ சுமந்து சென்ற <a href="https://www.maalaimalar.com/news/national/gslv-rocket-with-earth-observation-satellite-lifts-off">GSLV-F17 ராக்கெட்</a>, இன்று (வெள்ளிக்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.</p><h2>பிரதமர் மோடி பெருமிதம்</h2><p>இதற்கு வாழ்த்து தெரிவித்து <a href="https://www.maalaimalar.com/news/world/pakistan-spy-satellites-six-inclined-orbit-satellites-launched-to-continuously-monitor-indian-territory">பிரதமர் மோடி</a> வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், </p><p>"இஸ்ரோவின் மற்றொரு வியக்கத்தக்க சாதனை இது. நாட்டிற்கு பெருமை சேர்க்கும் மற்றொரு தருணமிது. </p><p>EOS-05-ஐ சுமந்து சென்ற GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. </p> <p>புவி-ஒத்திசைவு சுற்றுப்பாதையில் இருந்து செயல்படும் இந்தியாவின் முதல் படமெடுக்கும் செயற்கைக்கோளான EOS-05ஐ சுமந்து GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது இந்திய விண்வெளித் துறையின் வளர்ந்துவரும் செயல்திறனை வரையறுக்கும் புத்தாக்கமான மற்றும் பாராட்டத்தக்க விஷயம்.</p><p>இஸ்ரோ மற்றும் இந்திய தொழில்துறைக்கு இடையே வளர்ந்து வரும் கூட்டாண்மை, நமது விண்வெளித் திட்டத்திற்கு புதிய பலத்தை சேர்ப்பதுடன், ஒட்டுமொத்த விண்வெளி ஈக்கோ-சிஸ்டத்தில் இந்தியாவின் திறன்களை விரிவுபடுத்துகிறது." என தெரிவித்துள்ளார்.</p> <h2>முதல் இமேஜிங் செயற்கைக்கோள் </h2><p>EOS-05-ஐ சுமந்து சென்ற GSLV-F17 ராக்கெட் சென்னையில் இருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.</p> <p>இந்திய துணைக்கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்பட உள்ளதால் மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்டரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலம் இந்தியாவின் நிலப்பரப்பை தொடர்ந்து கண்காணித்து நிகழ்காலத்துக்கு நெருக்கமான புகைப்படங்களை வழங்கும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கிய தரவுகளை வழங்கும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவை கண்காணிக்கும் நாட்டின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ண ஜெயந்தி: ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/national/krishna-jayanthi-president-droupadi-murmu-and-pm-modi-wish</link><comments>https://www.maalaimalar.com/news/national/krishna-jayanthi-president-droupadi-murmu-and-pm-modi-wish#comments</comments><guid isPermaLink="false">ad933530-7156-49a8-a92c-b24ee984d65c</guid><pubDate>Fri, 04 Sep 2026 04:08:19 +0000</pubDate><atom:updated>2026-09-04T04:08:19.709Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திரவுபதி முர்மு,கிருஷ்ண ஜெயந்தி,krishna jayanthi,pm modi,பிரதமர் மோடி,Droupadi Murmu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/574ii6ec/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ President Droupadi murmu - PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/574ii6ec/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.</p><h2>ஜென்மாஷ்டமி</h2><p>கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது. இத்தகைய மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் பிறப்பைத் தான் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.</p> <h2>திரவுபதி முர்மு வாழ்த்து</h2><p>அந்த வகையில், நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, <a href="https://www.maalaimalar.com/news/national/pm-exhorts-auto-industry-to-chart-bold-pathway-towards-viksit-bharat">பிரதமர் மோடி</a>, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.</p><p>இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், </p> <p>ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறும் செய்திகளும் இந்தியக் கலாச்சாரத்திற்கும் தத்துவத்திற்கும் புத்துணர்வை அளிக்கின்றன. கிருஷ்ணர் சத்தியம், நேர்மை, நீதி, கருணை மற்றும் தன்னலமற்ற செயல் ஆகியவற்றின் பாதையைக் காட்டினார். ஸ்ரீ கிருஷ்ணரின் கொள்கைகளை அனைவரும் ஏற்றுக்கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ச்சி பெற்ற இந்தியாவை கட்டியெழுப்புவதற்காகத் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.</p> <h2>பிரதமர் மோடி வாழ்த்து</h2><p>பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், </p><p>உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த <a href="https://www.maalaimalar.com/spirituality/krishna-jayanthi-worship-4">ஜென்மாஷ்டமி</a> நல்வாழ்த்துகள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகச் செய்திகளில் தன்னலமற்ற செயலுக்கான ஆழ்ந்த உத்வேகம் அடங்கியுள்ளது, அதுவே மனிதகுலத்தை தொடர்ந்து வழிநடத்தி வருகிறது. அவரது பக்திக்கும் வழிபாட்டிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இந்த புனிதமான நன்னாள், அனைவரின் வாழ்விலும் நேர்மறை ஆற்றலையும் வலிமையையும் ஊட்ட வேண்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! என்று தெரிவித்துள்ளார்.</p> <h2>அமித்ஷா வாழ்த்து</h2><p>மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், </p><p>'ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி' எனும் புனிதத் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.</p><p>அறம், நீதி மற்றும் பொதுநலத்தின் அடையாளமாகத் திகழும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அனைவர் மீதும் தொடர்ந்து தனது அருளைப் பொழியட்டும். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! என்று தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>நாட்டின் வளர்ச்சியில் வாகன தொழில் துறை முக்கிய தூணாக மாற வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-exhorts-auto-industry-to-chart-bold-pathway-towards-viksit-bharat</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-exhorts-auto-industry-to-chart-bold-pathway-towards-viksit-bharat#comments</comments><guid isPermaLink="false">fc63c737-261f-4885-a18b-cf0695a94627</guid><pubDate>Fri, 04 Sep 2026 00:31:21 +0000</pubDate><atom:updated>2026-09-04T00:31:21.975Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விக்சித் பாரத்,pm modi,பிரதமர் மோடி,Viksit Bharat</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xd9f9wlu/New-Project-2026-08-02T213222.327.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xd9f9wlu/New-Project-2026-08-02T213222.327.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் வாகனத் தொழில் துறை தொடர்ந்து புதுமைகளை புகுத்தவும், சிறந்து விளங்கவும், 2047-ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் தொலைநோக்கு பார்வையை நோக்கிய துணிச்சலான பாதையை முனைப்புடன் வகுக்க வேண்டும் என பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> வலியுறுத்தினார்.</p><p>நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) 2026 ஆண்டு மாநாட்டில் பிரதமர் கூறியதாவது: சமீபத்திய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் சர்வதேச சந்தைகளுக்கான பரந்த அணுகலை வழங்குவதால், ஏற்கனவே உலகின் பல பகுதிகளில் அங்கீகாரம் பெற்றுள்ள <a href="https://www.maalaimalar.com/news/national">இந்திய</a> வாகன துறை, தனது உலகளாவிய இருப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு சிறந்த நிலையில் உள்ளது.</p><h2>பிரதமர் வலியுறுத்தல்:</h2><p>"இந்திய வாகனத் தொழில் தொடர்ந்து புதுமைகளை புகுத்தவும், சிறந்து விளங்கவும், 'விக்சித் பாரத்' நோக்கிய ஒரு துணிச்சலான பாதையை முனைப்புடன் வகுக்கவும் வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று பிரதமர் தனது செய்தியில் கூறியிருந்தார்.</p><p>இந்தப் பயணம், போக்குவரத்து துறைக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் கொண்டு வருவதோடு, தேசிய வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கும் போக்குவரத்தை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் மேலும் கூறினார்.</p><p>"கடந்த பத்தாண்டுகளில், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாக இருந்து வருகிறது. நமது பொருளாதாரம் வளர வளர, போக்குவரத்துக்கான தேவையும் அதிகரித்து வருகிறது," என்று பிரதமர் குறிப்பிட்டார்.</p><h2>பொருளாதா வளர்ச்சியில் பங்கு:</h2><p>நெடுஞ்சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளின் விரைவான விரிவாக்கம், மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, வாகன தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்று மோடி சுட்டிக்காட்டினார்.</p><p>"மேம்பட்ட இணைப்பு வசதிகளும், திறமையான தளவாட போக்குவரத்தும் செலவுகளை குறைத்து, இந்திய உற்பத்தி துறையை மேலும் போட்டித்தன்மை வாய்ந்ததாக ஆக்குகின்றன. இது வாகன துறையை வலுப்படுத்தி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது," என்று அவர் கூறினார்.</p><p>தூய்மையான மற்றும் நிலையான போக்குவரத்து சூழலை நோக்கிய பயணத்தில் இந்தியாவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>"சார்ஜிங் உள்கட்டமைப்பின் விரைவான விரிவாக்கம், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதோடு, புத்தாக்கத்திற்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது," என்று பிரதமர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இருமுறை எம்.பி.யாக இருந்தவரின் பெயர் எஸ்.ஐ.ஆர்.-க்கு பிறகு இடம்பெறாததால் அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/two-time-punjab-mp-dharamvira-gandhi-name-not-on-draft-electoral-rolls-after-sir</link><comments>https://www.maalaimalar.com/news/national/two-time-punjab-mp-dharamvira-gandhi-name-not-on-draft-electoral-rolls-after-sir#comments</comments><guid isPermaLink="false">278b5fda-023e-4d4b-96f2-14ccc827cdd2</guid><pubDate>Thu, 03 Sep 2026 23:27:41 +0000</pubDate><atom:updated>2026-09-03T23:27:41.768Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sir,எஸ்ஐஆர்,பஞ்சாப்,Punjab,MP Dharamvira Gandhi,எம்பி தரம்வீர காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/znb4047a/Dharamvira-Gandhi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dharamvira Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/znb4047a/Dharamvira-Gandhi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டியாலாவின் இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் தரம்வீர காந்தியின் பெயர், சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளுக்கு பிறகு பஞ்சாபின் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.</p><p>முன்னதாக <a href="https://www.maalaimalar.com/topic/aam-admi-party">ஆம் ஆத்மி கட்சி</a> சார்பில் பாட்டியாலா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த காங்கிரஸ் தலைவர், "என்னுடைய வாக்கு உட்பட என் குடும்பத்தினரின் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இல்லை" என்று கூறினார்.</p><h2>பெயர்கள் இடம்பெறவில்லை:</h2><p>அவர் மேலும் கூறுகையில், "நான் சுமார் 2000-ஆம் ஆண்டு முதல் இந்த முகவரியில் வசித்து வருகிறேன். நான் மூன்று மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, அவற்றில் இரண்டில் இதே வீட்டில் இருந்துதான் வெற்றி பெற்றுள்ளேன். </p><p>அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் இதுவே எனது நிரந்தர முகவரியாக இருந்து வருகிறது. அப்படி இருந்தும், எனது பெயர் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை" என்றார்.</p><p>இறுதி வாக்காளர் பட்டியலில் தனது மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தாம் ஏற்கனவே ஆட்சேபனைகளை எழுப்பி, தேவையான ஆவணங்களையும் சமர்ப்பித்துவிட்டதாக டாக்டர் காந்தி மேலும் கூறினார்.</p><h2>ஆதாரங்கள் சமர்பிப்பு:</h2><p>"நேற்று, எனக்கும், என் மனைவி ஜகதம்பா கௌஷல், என் மகன் நிவேந்து பிரஷார் மற்றும் என் மகள் ரோகிணி பிரஷார் ஆகியோருக்குமான கடவுச்சீட்டு, 10-ஆம் வகுப்பு சான்றிதழ் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களை ஆதாரமாக மாவட்ட ஆட்சியர்-மற்றும்-மாவட்டக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பித்தேன்," என்று அவர் கூறினார்.</p><p>கிடைத்துள்ள தகவல்களின்படி, பஞ்சாபில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செயல்பாட்டின்போது டாக்டர் காந்தி சமர்ப்பித்த ஆவணங்களும், 2003-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உள்ள அவரது விவரங்களும் பொருந்தவில்லை என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அவரது தனிப்பட்ட வழக்கு குறித்து அதிகாரிகள் இன்னும் எதிர்வினையாற்றவில்லை. வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம்பெறாத குடிமக்கள், அதற்கான உறுதிமொழி பத்திரம் மற்றும் துணை ஆவணங்களுடன், ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 12 வரை தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது</title><link>https://www.maalaimalar.com/news/national/gslv-rocket-with-earth-observation-satellite-lifts-off</link><comments>https://www.maalaimalar.com/news/national/gslv-rocket-with-earth-observation-satellite-lifts-off#comments</comments><guid isPermaLink="false">3184e708-2f28-4f62-a5d3-6e35566cb939</guid><pubDate>Thu, 03 Sep 2026 21:51:20 +0000</pubDate><atom:updated>2026-09-03T21:51:20.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செயற்கைக்கோள்,satellite,GSLV rocket,ஜிஎஸ்எல்வி ராக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/394m04ql/GSLV-F17.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GSLV F17]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/394m04ql/GSLV-F17.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05-ஐ சுமந்து சென்ற GSLV ராக்கெட், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலைக்கு முந்தைய நேரத்தில் விண்ணில் ஏவப்பட்டது.</p><p>சென்னையில் இருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, 51.7 மீட்டர் உயரமுள்ள GSLV-F17 ராக்கெட், முன்னரே திட்டமிடப்பட்டபடி அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் பாய்ந்தது; மழையையும் பொருட்படுத்தாமல் ராக்கெட் கிளம்பியபோது அது இருண்ட வானத்தை ஒளிரச் செய்தது.</p><h2>படமெடுக்கும் செயற்கைக்கோள்:</h2><p>அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த புவி கண்காணிப்பு விண்கலம், புவி-ஒத்திசைவு சுற்றுப்பாதையில் இருந்து செயல்படும் இந்தியாவின் முதல் படமெடுக்கும் செயற்கைக்கோளாக அமையும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு தொடங்கப்பட்ட 27 மணி நேர 'கவுண்ட்டவுன்' நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.</p><h2>முதல் இமேஜிங் செயற்கைக்கோள்:</h2><p>இந்திய துணைக்கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்பட உள்ளதால் மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்டரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலம் இந்தியாவின் நிலப்பரப்பை தொடர்ந்து கண்காணித்து நிகழ்காலத்துக்கு நெருக்கமான புகைப்படங்களை வழங்கும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கிய தரவுகளை வழங்கும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவை கண்காணிக்கும் நாட்டின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>GDP 7.8 சதவீதம் வளர்ந்துள்ள நிலையில் வேலைவாய்ப்புகள் எங்கே? - ஆதித்யா தாக்கரே</title><link>https://www.maalaimalar.com/news/national/aaditya-thackeray-questions-where-are-the-jobs-if-gdp-is-growing-at-78-pc</link><comments>https://www.maalaimalar.com/news/national/aaditya-thackeray-questions-where-are-the-jobs-if-gdp-is-growing-at-78-pc#comments</comments><guid isPermaLink="false">4f5cb253-b021-48f2-93a7-93a7e359272c</guid><pubDate>Thu, 03 Sep 2026 19:09:04 +0000</pubDate><atom:updated>2026-09-03T19:09:04.843Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Aaditya Thackeray,GDP,pm modi,பிரதமர் மோடி,ஆதித்தயா தாக்கரே,ஜிடிபி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/iib1m2nl/aditya-thackeray.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aditya Thackeray]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/iib1m2nl/aditya-thackeray.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் <a href="https://www.maalaimalar.com/topic/gdp">ஜிடிபி</a> 7.8 சதவீத வளர்ச்சியை கண்டிருந்தால், அது பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் எதிரொலிக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே கூறினார்.</p><p>செய்தியாளர் சந்திப்பில் பேசிய தாக்கரே, ஜிடிபி அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தங்கத்தை வாங்க வேண்டாம் என்று பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> ஏன் வலியுறுத்துகிறார் என்று கேள்வி எழுப்பினார். "ஜிடிபி 7.8 சதவீதம் வளர்வது போல அது எதிரொலிக்க வேண்டும்," என்று தாக்கரே கூறினார். </p><h2>7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சி:</h2><p>போர்கள், நிலையற்ற தன்மை மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகள் இருந்தபோதிலும் 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை எட்டியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மக்களைப் பாராட்டினார்.</p><p>இருப்பினும், இந்த புள்ளிவிவரங்கள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் கார்க், கடந்த ஆண்டின் ஜிடிபி மதிப்பீடு சுமார் ரூ. 86 லட்சம் கோடியில் இருந்து ரூ. 80 லட்சம் கோடியாக குறைக்கப்படாமல் இருந்திருந்தால், தற்போதைய விலையின் அடிப்படையில் ஜிடிபி வளர்ச்சி சுமார் 2.6 சதவீதமாகவே இருந்திருக்கும் என்று கூறியிருந்தார்.</p><p>கார்க் உண்மைகளை முன்வைத்து, ஜிடிபி வளர்ச்சி குறித்த கூற்றை அம்பலப்படுத்தியுள்ளார் என்று தாக்கரே கூறினார். "வளர்ச்சி இருந்தால், ஏன் வேலைவாய்ப்புகள் இல்லை?" என்று தாக்கரே கேள்வி எழுப்பினார்.</p><h2>இடஒதுக்கீடு குறித்து கருத்து:</h2><p>மராத்தா இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜரங்கே மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் குறித்து பேசிய தாக்கரே, யாருடைய உரிமையையும் பறிக்காமல், இடஒதுக்கீடு கோருபவர்களுக்கு அது வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.</p><p>மராத்தா, ஓபிசி அல்லது தங்கர் என யாராக இருந்தாலும், தேர்தலுக்கு முன் அரசாங்கம் வெறும் வாக்குறுதிகளை மட்டுமே அளித்துவிட்டு, பின்னர் மக்களை ஏமாற்றுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.</p><p>விவசாயிகளுக்கு தார்மீக ஆதரவை அளிக்குமாறும், பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய விவசாய முறையை நோக்கிச் செயல்படுமாறும் தாக்கரே வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>ஒடிசாவில் பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த 3 வயது யானைக்குட்டி - பொதுமக்கள் கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/three-year-old-elephant-calf-rescued-from-abandoned-well-in-odisha</link><comments>https://www.maalaimalar.com/news/national/three-year-old-elephant-calf-rescued-from-abandoned-well-in-odisha#comments</comments><guid isPermaLink="false">16234945-b8d7-42ed-aea9-3b9f1a9a9086</guid><pubDate>Thu, 03 Sep 2026 16:37:16 +0000</pubDate><atom:updated>2026-09-03T16:37:16.441Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Odisha,ஒடிஷா,rescue operation,elephant rescued,யானைக்குட்டி மீட்பு,மீட்பு நடவடிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/mdot1h0q/Untitled-design-10.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Odisha Elephant Rescue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/mdot1h0q/Untitled-design-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒடிசாவில் ஊருக்கு வெளியே பாழடைந்த நிலையில் ஒரு கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது ஆண் யானை குட்டியை, அந்த பகுதியில் வசிக்கும் கிராமத்தினர், வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உதவியுடன், பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர்.</p><h3><strong>பாழடைந்த கிணறு</strong></h3><p>ஒடிசா மாநிலம் தேன்கனால் மாவட்டத்தில உள்ள பஹண்டேய் கிராமத்தில், 3 வயது ஆண் யானை ஒன்று செப்டம்பர் 1-ஆம் தேதி பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. </p><p>இதையடுத்து வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து பல அடி ஆழம் உள்ள கிணற்றில் இருந்த யானையின் உடலில் மீட்பு படை வீரர்கள், கயிறு ஒன்றை கட்டினர்.</p><p>இதைத்தொடர்ந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மீட்பு குழுவினர் ஒன்றிணைந்து செயல்பட்டு, யானைக்குட்டியை கிணற்றிலிருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.</p><p>கிணற்றிலிருந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட யானைக்கு, கால்நடை மருத்துவப் பணியாளர்கள் முதலுதவி அளித்தனர்.</p><p>இதையடுத்து கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அந்த யானைக்குட்டி, யானை மீட்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h3><strong>தேன்கானல் வன அதிகாரி</strong></h3><p>இந்த நடவடிக்கை குறித்து தேன்கனால் கோட்ட வன அதிகாரி ஒருவர் கூறுகையில், வனத்துறை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் கிராம மக்களின் விரைவான செயலாலும் ஒருங்கிணைந்த நடவடிக்கையாலும், இந்த மீட்பு பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>மேலும் மீட்கப்பட்ட யானைக்குட்டி மேல் சிகிச்சைக்காக, யானைகள் மீட்பு மையத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு வன ஊழியர்களின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.</p><p>வனவிலங்கின் பாதுகாப்பிற்காக உடனடியாகச் செயல்பட்டு, ஒருங்கிணைந்து, அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முழு மீட்புக் குழுவினருக்கும் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று வனத்துறை அதிகாரி கூறினார்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"> WILDLIFE RESCUE OPERATION | DHENKANAL<br><br> Bahandei Village, Kaunriapala Beat, Gadasila Section, Dhenkanal Range<br> 01.09.2026 | 1:00 PM<br><br>A male wild elephant, approximately 3–4 years old, was found trapped in an abandoned open well near Bahandei Village.<br><br> The RRT of… <a href="https://t.co/XMjXHwdUGO">pic.twitter.com/XMjXHwdUGO</a></p>&mdash; DFO DHENKANAL (@DfoDhenkanal) <a href="https://x.com/DfoDhenkanal/status/2095064152058503305?ref_src=twsrc%5Etfw">September 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h3>கோரிக்கை</h3><p>இந்த மீட்பு நடவடிக்கை இணையத்தில் பரவி வைரலானதை தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு பயனர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p><p>மேலும் இதுபோன்ற பள்ளங்கள் மற்றும் பாழடைந்த கிணற்றை சுற்றி தடுப்புகளை அமைத்தோ அல்லது அதை முழுவதுமாக மண்ணால் நிரப்பியோ, அசம்பாவித சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வந்தே மாதரம் பாடப்படும் போது உதடுகள் கட்டாயம் அசைய வேண்டும் : சுவேந்து அதிகாரி</title><link>https://www.maalaimalar.com/news/national/schools-that-dont-sing-full-vande-mataram-will-lose-funding-suvendu-adhikari</link><comments>https://www.maalaimalar.com/news/national/schools-that-dont-sing-full-vande-mataram-will-lose-funding-suvendu-adhikari#comments</comments><guid isPermaLink="false">fc3a0b5c-d1c3-461f-9f16-1382853d4626</guid><pubDate>Thu, 03 Sep 2026 16:34:50 +0000</pubDate><atom:updated>2026-09-03T16:34:50.310Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,வந்தே மாதரம்,Vande Mataram,சுவேந்து அதிகாரி,WestBengal,suvendhu adhikari</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ed71lkv0/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Suvendu Adhikari warns]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ed71lkv0/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில் பள்ளி பிரார்த்தனைகளின் போது வந்தே மாதரத்தின் முழு பதிப்பையும் பாடாத பள்ளிகளுக்கு, அரசு நிதியுதவி மற்றும் இதர அரசு உதவிகள் நிறுத்தப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.</p><p>மேற்கு வங்கத்தில் கடந்த கால ஆட்சியில், மாநிலத்தின் கல்வி முறை அழிவின் விளிம்பிற்கு கொண்டுவரப்பட்டதாகவும் சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டினார்.</p><p>மேலும் பள்ளி கல்வியில் இந்திய கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் தேசியவாத விழுமியங்களை மீட்டு எடுப்பதற்காக, தற்போதைய பாரதிய ஜனதா கட்சி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். </p><h3><strong>பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்</strong></h3><p>கொல்கத்தாவிம் கோல்பார்க்கில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் விவேகானந்தா வித்யா பாரதி விகாஸ் பரிஷத்தின் ஆண்டு நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி உரையாற்றினார்.</p><p>அப்போது அவர், “வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலரிடம், அரசு உதவி நிறுத்தப்படும் என்று அவர்களிடம் கூறினேன்.</p><p>அதன் பிறகு அவர்கள் அதனை முழுமையாக பாடுவதற்கு ஓரளவு சம்மதித்தார்கள். வந்தே மாதரம் ஒலிக்கப்பட்ட போது அவர்கள் எழுந்து நின்றார்கள், ஆனால் உதடுகளை அசைக்கவில்லை. அப்போது நான் அவர்களிடம் உதடுகளும் அசைய வேண்டும் என்று கூறினேன்.</p><p>பள்ளிப் பாடத்திட்டங்களில் 'மா', 'ஜல்' மற்றும் 'ஆகாஷ்' போன்ற வார்த்தைகள் மாற்றம் செய்யப்பட்டு முறையே 'அம்மா', 'பானி' மற்றும் 'அஸ்மான்' என்று மாற்றம் செய்யப்பட்டள்ளன.</p><p>ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் மற்றும் சுவாமி விவேகானந்தர் போன்ற ஆளுமைகளின் கற்பித்தல் கருத்துக்களுக்கு மாறாக இந்த "நுட்பமான மாற்றங்கள்" இருந்தது.</p><p>கல்வி நிறுவனங்களில் தேசிய மாணவர் படையை (என்.சி.சி) தடை செய்ததன் மூலம், முந்தைய அரசு மன்னிக்க முடியாத குற்றத்தை செய்துள்ளது.</p><h3><strong>ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை</strong></h3><p>நான் சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தேன். முதலாவதாக, மாநிலத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் ராணுவத்தை மையமாக கொண்ட பல உயர்நிலை ‘சைனிக்’ பள்ளிகளைக் கட்டுமாறு அவரை வலியுறுத்தினேன்.</p><p>இரண்டாவதாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் என்.சி.சி-யைக் கட்டாயமாக்க அனுமதி கோரி அவருக்குக் கடிதம் எழுதுவேன் என்று கூறினேன்.</p><p>நான் ஏற்கனவே அவருக்கு அந்தக் கடிதத்தை அனுப்பிவிட்டேன். தேவையானதைச் செய்வதாக அவரிடமிருந்து உறுதிமொழியையும் பெற்றுள்ளேன்.</p><p>மாற்றத்தை கொண்டு வருவதிலும், வாய்ப்புகளை வழங்குவதிலும் மேற்கு வங்க மக்கள் கால அவகாசம் அளிக்கிறார்கள்.</p><p>சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸுக்கு அவர்கள் கால அவகாசம் கொடுத்தார்கள், அதைத் தொடர்ந்து வந்த ஐக்கிய முன்னணி மற்றும் இடது முன்னணி அரசுகளுக்குப் போதுமான வாய்ப்புகளை வழங்கினார்கள்.</p><h3><strong>சரியான நேரத்தில் மாற்றம்</strong></h3><p>மேலும் கடந்த 15 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸுக்கும் கால அவகாசம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் சரியான நேரத்தில் மாநிலத்தில் மாற்றத்தை கொண்டு வந்தார்கள்.</p><p>திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் கடைசி பத்தாண்டுகளில் பின்பற்றப்பட்ட கல்விக் கொள்கை இன்னும் சில காலம் தொடர்ந்திருந்தால், நமது விழுமியங்கள், நமது பாரம்பரியம், நாட்டுப்பற்று மற்றும் தேசியம் ஆகியவை என்றென்றைக்குமாக அழிந்துபோகும் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருக்கும்.</p><p>மாநிலத்தில் மக்கள் சரியான நேரத்தில் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர்; கல்வி முறையை மீட்டெடுக்கவும் இளைஞர்களிடையே தேசபக்தியை வளர்க்கவும் சீர்திருத்தங்கள் தேவையாக உள்ளது.</p><p>பள்ளி சேர்க்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான முன்னாள் மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், குதிராம் போஸ் மற்றும் மாதங்கினி ஹஸ்ரா போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களைப் பாடப்புத்தகங்களில் காண்பது கடினமாக இருந்தது” என்று சுவேந்து அதிகாரி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திரிணாமுல் கட்சி அலுவலகத்தை சூறையாடிய மர்ம நபர்கள்: பா.ஜ.க.வை சாடிய அபிஷேக் பானர்ஜி</title><link>https://www.maalaimalar.com/news/national/tmc-office-vandalised-in-kolkata-abhishek-banerjee-alleges-bjp-role</link><comments>https://www.maalaimalar.com/news/national/tmc-office-vandalised-in-kolkata-abhishek-banerjee-alleges-bjp-role#comments</comments><guid isPermaLink="false">5d03839b-09ee-42ba-935b-554c8e68ba10</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:24:06 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:24:06.388Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Abhishek Banerjee,BJP,பாஜக,TMC,அபிஷேக் பானர்ஜி,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/cgmsfe4f/abhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ abhishek banerjee]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/cgmsfe4f/abhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.</strong></em></p><p>மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. அதன்பின், அந்தக் கட்சி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அணிக்குச் சென்றுவிட்டனர்.</p><h2>கட்சி அலுவலகம் சூறை</h2><p>இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆபீசுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று அலுவலகத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.</p><p>அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். சிலர் அலுவலகத்தில் இருந்த டிவி மற்றும் கம்ப்யூட்டர் மானிட்டர்களைத் தூக்கிச்சென்றது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.</p><h2>அபிஷேக் பானர்ஜி கண்டனம்</h2><p>இதுதொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>அதிகாலை 4.30 மணியளவில் கொல்கத்தாவின் மையத்தில் உள்ள எங்கள் கட்சி அலுவலகத்தை ஆயுதங்களுடன் பா.ஜ.க. குண்டர்கள் முற்றுகையிட்டனர்.</p><p>அவர்கள் எங்கள் கட்சி தொண்டர்களைத் தாக்கினர், அவர்களின் தொலைபேசிகளைப் பறித்து, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். வளாகத்தைச் சூறையாடி மின்னணு உபகரணங்களைச் சேதப்படுத்தினர்.</p><p>கொல்கத்தா காவல்துறை எங்கே இருந்தது? கிட்டத்தட்ட 2 மணி நேரம், எங்கள் கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்கள் பலமுறை போன் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றும் எந்த பதிலும் இல்லை. இது மூர்க்கத்தனமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வாட்ஸ்அப்பில் அறிமுகமானது &apos;Bill payment&apos; வசதி: மின்சாரம், கியாஸ் சிலிண்டர் கட்டணங்களை இனி எளிதாகச் செலுத்தலாம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/whatsapp-introduces-bill-payment-feature</link><comments>https://www.maalaimalar.com/news/national/whatsapp-introduces-bill-payment-feature#comments</comments><guid isPermaLink="false">c52944ea-25c3-42cd-acc6-2c183befc9d3</guid><pubDate>Thu, 03 Sep 2026 13:06:39 +0000</pubDate><atom:updated>2026-09-03T13:06:39.149Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,WhatsApp,FASTag,WhatsApp Bill payment,Bill payment,பாரத் கணெக்ட் நெட்வொர்க்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p411oewb/whats.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ WhatsApp Bill payment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p411oewb/whats.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>WhatsApp இந்தியாவில் மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் குடிநீர் போன்ற மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்துவதற்கான புதிய ‘Bill Payments’ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் இனி பிற செயலிகளுக்கு மாறாமல், <a href="https://www.maalaimalar.com/news/national/maharashtra-incident-disabled-man-crosses-tracks-with-walker">வாட்ஸ்அப் </a>தளத்திலேயே தங்களின் அனைத்து வீட்டுக் கட்டணங்களையும் எளிதாகக் கையாள முடியும்.</p><h2><strong>பாரத் கணெக்ட் இணை</strong>ப்பு </h2><p>பாரத் கணெக்ட் நெட்வொர்க் மூலமாகச் செயல்படும் இந்த புதிய வசதி, 30-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் இயங்கும் 22,722-க்கும் அதிகமான சேவை வழங்குநர்களை ஒன்றிணைக்கிறது. மின்சாரம், எரிவாயு, குடிநீர் கட்டணங்கள் தவிர்த்து, பாஸ்டேக் ரீசார்ஜ், காப்பீட்டுத் தவணைகள், கடன் மறுசெலுத்துதல் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் செலுத்தக்கூடிய தகவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>எளிமை<strong>யான பயன்பாட்டு</strong> முறை</h2><p>வாட்ஸ்அப் முகப்புத் திரையின் மேல் பகுதியில் காணப்படும் ரூபாய் (₹) குறியீட்டைத் தொடுவதன் மூலம் பயனர்கள் கட்டணப் பிரிவுக்குச் செல்லலாம். அங்கு தங்களுக்குத் தேவையான சேவை அமைப்பைத் தேர்ந்தெடுத்து, கணக்கு விவரங்களைப் பதிவிட்டால் கட்டணத் தொகை திரையில் தோன்றும். அதனைத் தொடர்ந்து யுபிஐ (UPI), டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலமாகப் பணப் பரிவர்த்தனையை நிறைவு செய்யலாம்.</p><h2>கூடுத<strong>ல் வசதிக</strong>ள் </h2><p>கடந்த காலத்தில் செலுத்திய கட்டண விவரங்கள் மற்றும் வரவிருக்கும் கட்டண நிலுவைகளைக் கண்காணிக்கும் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரே சேவை நிறுவனத்தின் கீழ் வீடு மற்றும் அலுவலகம் எனப் பல கணக்குகளைச் சேர்த்துப் பராமரிக்கும் வசதியும் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ‘Bill Payments’ சேவை தற்போது கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்கும் முழுமையாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>8 மாத குழந்தையின் டயப்பரில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய தந்தை கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/father-held-for-smuggling-rs-1-crore-gold-in-babys-diaper</link><comments>https://www.maalaimalar.com/news/national/father-held-for-smuggling-rs-1-crore-gold-in-babys-diaper#comments</comments><guid isPermaLink="false">61800aff-d7e3-4b53-9565-28b40be531dd</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:41:21 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:41:21.284Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold smuggling,தங்க கடத்தல்,Kozhikode airport,கேரளம்,Keralam,கோழிக்கோடு விமான நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/12t5nydj/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold Smuggling in Diaper]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/12t5nydj/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் எட்டு மாத குழந்தையின் டயப்பருக்குள் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மறைத்து வைத்து, தங்க கடத்தலில் ஈடுபட்ட குழந்தையின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.</p><h3><strong>கோழிக்கோடு விமான நிலையம்</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">கேரளம்</a> மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தனது ஆறு வயது குழந்தை, நான்கு வயது குழந்தை மற்றும் எட்டு மாத குழந்தையுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமாஹ் விமான நிலையத்தில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.</p><p>அப்போது விமான நிலையத்தில் பயணம் செய்யும் நபர் ஒருவர், தங்க கடத்தலில் ஈடுபடுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சந்தேகத்திற்கிடமான அந்த குடும்பத்திடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.</p><h3><strong>அதிகாரிகள் சோதனை</strong></h3><p>விமான நிலையத்திற்கு தந்தை தூக்கிவந்த எட்டு மாத குழந்தையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.</p><p>அப்போது குழந்தையின் டயப்பருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>இதையடுத்து தங்க கடத்தலில் ஈடுபட்ட தந்தையை புலானாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.</p><h3><strong>மனைவி கைது</strong></h3><p>முன்னதாக கைது செய்யப்பட்ட நபரின் மனைவி, தான் அணிந்து வந்த சானிட்டரி நாப்கினில் மறைத்து வைத்திருந்த சுமார் 1.7 கிலோ மதிப்பிலான தங்கத்தை நெடும்பாசேரி விமான நிலையத்தில் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.</p><h3><strong>புலனாய்வுத் துறை அதிகாரிகள்</strong></h3><p>இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் குடும்பத்தினரிடம் சோதனை குறைவாக இருக்கும் என்பதால், விமான நிலைய சோதனையை தவிர்ப்பதற்காக, குழந்தையின் தந்தை இவ்வாறு செயல்பட்டதாக தெரிவித்தனர்.</p><p>மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் தொடர்பாக, கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளும் காணும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இதையடுத்து சர்வதேச வழிகள் மூலமாக இந்தியாவிற்குள் கொண்டுவரப்படும் வெளிநாட்டு தங்கம் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிராவில் விபரீதம்: ரெயில் வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் வாக்கர் உதவியுடன் தண்டவாளத்தைக் கடந்த மாற்றுத்திறனாளி</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-incident-disabled-man-crosses-tracks-with-walker</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-incident-disabled-man-crosses-tracks-with-walker#comments</comments><guid isPermaLink="false">7041ee87-9ae7-4615-bfe1-90522f05159b</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:29:07 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:29:07.067Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,indian railways,இந்தியன் ரெயில்வே,ரெயில்வே நிர்வாகம்,RAILWAY ADMINISTRATION,DisabilityPerson,அம்பர்நாத் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/jf91iu3k/pp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Railway Administration ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/jf91iu3k/pp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர், வாக்கர் உதவியுடன் ரெயில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்ல முயன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>மகாராஷ்டிராவின் அம்பர்நாத் ரெயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ராகுல் பங்கர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், கால்களில் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி ஒருவர் அடுத்த நடைமேடைக்குச் செல்வதற்காகச் சிரமப்பட்டு தண்டவாளத்தில் இறங்கி நடப்பது பதிவாகியுள்ளது.</p><p>ரெயில் நிலையத்திற்குள் ரெயில் வரவிருப்பதை அறிவிக்கும் ஒலி பெருக்கியின் சத்தமும், தூரத்தில் ரெயில் வரும் சத்தமும் கேட்கும் நிலையிலும், அவர் வாக்கரின் ஆதரவோடு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மெதுவாகத் தண்டவாளத்தைக் கடந்து செல்கிறார். </p><p>இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, தண்டவாளங்களைக் கடப்பது எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்தும், ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் எந்த அளவிற்குப் பின்தங்கியுள்ளன என்பது குறித்தும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். </p><p>இருப்பினும், மற்றொரு புறம் இந்திய ரெயில்வே நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் எந்த அளவிற்குப் போதுமானதாக இருக்கின்றன என்ற முக்கியமான விவாதத்தையும் இது கிளப்பியுள்ளது.</p><p>நடைமேடைகளுக்கு இடையே செல்வதற்கு மின்தூக்கி அல்லது சாய்வுப் பாதை வசதிகள் முறையாக இயங்காததே அல்லது இல்லாததே இதுபோன்ற அபாயகரமான முடிவுகளை எடுக்க மக்களைத் தள்ளுகிறது எனப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். ரெயில்வே நிர்வாகம் ஆபத்தான தண்டவாளக் குறுக்கீடுகளைத் தடுப்பதோடு, மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாகப் பயணிக்கத் தேவையான அடிப்படை வசதிகளை அனைத்து நிலையங்களிலும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரஷியா - உக்ரைன் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயார் - அமைச்சர் ஜெய்சங்கர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/ready-to-act-as-a-mediator-between-russia-and-ukraine-minister-jaishankar</link><comments>https://www.maalaimalar.com/news/national/ready-to-act-as-a-mediator-between-russia-and-ukraine-minister-jaishankar#comments</comments><guid isPermaLink="false">17929000-ab86-4d33-aaad-fed4b67d034f</guid><pubDate>Thu, 03 Sep 2026 10:43:55 +0000</pubDate><atom:updated>2026-09-03T10:43:55.310Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Ukraine,Jaishankar,ரஷியா,உக்ரைன்,ஜெய்சங்கர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/14ctkzfw/New-Project-2026-09-03T161330.510.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரஷியா - உக்ரைன் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயார் - அமைச்சர் ஜெய்சங்கர்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/14ctkzfw/New-Project-2026-09-03T161330.510.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/city-got-angry-humanoid-robot-tried-to-attack-after-being-pushed-by-its-owner-in-russia">ரஷியா</a> - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா எந்த வகையிலும் உதவ தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். </p><p>உக்ரைன் தலைநகர் கீவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இன்று உக்ரைன் வெளியுறவுத் அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.</p><h2>மத்தியஸ்தம் செய்யத் தயார்</h2><p>செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியாவால் எந்த வகையிலாவது உதவ முடியும் என்றால், நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம்” என்றுக்கூறி, தேவைப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தராகச் செயல்படவும் இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். </p><h2>உக்ரைன் பயணம்</h2><p>வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது உக்ரைன் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது, ​​அவர் தனது உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் போலந்து துணைப் பிரதமர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி ஆகியோருடன் இருதரப்பு ஆலோசனைகளை நடத்துகிறார்.</p><h2>வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்</h2><p>சமீப நாட்களாக கருங்கடல் பகுதியில் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில் வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் தீவிரமாக விவாதித்தனர்.</p><p>இந்தியர்கள் மற்றும் பிற நாட்டு மாலுமிகளின் பாதுகாப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ள இந்தியா, பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவரவும் வலியுறுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வாரணாசியில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் லக்னோவில் அவசர தரையிறக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/air-india-express-flight-from-varanasi-to-delhi-makes-emergency-landing-in-lucknow</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-india-express-flight-from-varanasi-to-delhi-makes-emergency-landing-in-lucknow#comments</comments><guid isPermaLink="false">f0515a68-9a2a-46d5-bcef-95f0245ffccf</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:48:40 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:48:40.397Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வாரணாசி,varanasi,ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்,Air India Express,delhi,டெல்லி,உத்தரப்பிரதேச மாநிலம்,Cargo Hold</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/puy6re1d/air.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Air India Express  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/puy6re1d/air.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நடுவானில் எழுந்த புகை எச்சரிக்கை காரணமாக லக்னோவில் உள்ள செளத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.</p><p>விமானம் உயரே பறந்து கொண்டிருந்தபோது, அதன் சரக்கு வைக்கும் பகுதியில் புகை வருவதற்கான எச்சரிக்கை மணிகள் ஒலித்துள்ளன. இதையடுத்து எச்சரிக்கையான விமானி, உடனடியாக லக்னோ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, காலை 8:52 மணியளவில் விமானம் லக்னோ விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 155 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் காலை 9:02 மணியளவில் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.</p><p>உடனடியாகச் செயல்பட்ட விமான நிலைய அவசரகால மீட்புக் குழு மற்றும் தீயணைப்புப் படையினர் விமானத்தைச் சோதனையிட்டனர். முதற்கட்ட ஆய்வில் சரக்குப் பகுதியில் புகையோ அல்லது தீப்பிடித்ததற்கான சுவடுகளோ எதுவும் கண்டறியப்படவில்லை. போலியான எச்சரிக்கை மணி ஒழித்ததா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்துப் பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தே விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டதாகத் தெரிவித்துள்ள <a href="https://www.maalaimalar.com/news/world/us-passport-rule-shakeup-parents-must-prove-citizenship-for-kids">ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்</a> நிறுவனம், பயணிகள் டெல்லி செல்வதற்கு மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோவாவில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானம் ஒன்றின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு பயணிகள் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் விமானப் பயணிகள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>போலவரம் கால்வாய் வழியாக வட ஆந்திராவிற்குள் பாயும்  கோதாவரி நீர்...</title><link>https://www.maalaimalar.com/news/topnews/godavari-water-flows-into-north-andhra-through-polavaram-canal</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/godavari-water-flows-into-north-andhra-through-polavaram-canal#comments</comments><guid isPermaLink="false">1fecfd2f-ac5c-4f94-a1a0-ff4de9a6d8ca</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:23:14 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:23:14.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,ChandraBabu Naidu,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,Polavaram project,போலவரம் கால்வாய்,Godavari Water,கோதாவரி நீர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/boac4qo0/Chandrababu-Naidu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chandrababu Naidu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/boac4qo0/Chandrababu-Naidu?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>வட ஆந்திர மக்களின் பல தசாப்த கனவு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக நேற்று நனவாகியுள்ளது. </p><p>போலவரம் இடது பிரதான கால்வாய் மூலமாக உத்தர ஆந்திராவிற்குள் நுழைந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81">கோதாவரி நதிநீரை</a>, ஆந்திர மாநில முதல்-மந்திரி <a href="https://www.maalaimalar.com/topic/chandrababu-naidu">என். சந்திரபாபு நாயுடு</a> அனகாபள்ளி மாவட்டம் பாயகாராவுபேட்டா மண்டலத்தின் சீதாரம்புரத்தில் முறைப்படி ‘ஜல ஹாரத்தி’ எடுத்து மலர் தூவி வரவேற்றார்.</p><h2>பொறியியல் சாதனை: 213 கி.மீ நீளப் பிரம்மாண்ட கால்வாய்</h2><p>கிழக்குத் தொடர்ச்சி மலையின் மிகக் கடினமான நிலப்பரப்புகளைக் கடந்து, சுரங்கப் பாதைகள், நீர் பாலங்கள் மற்றும் ஏலேரு ஆற்றின் அடிவாரத்தில் அமைக்கப்பட்ட பிரத்யேக சைஃபோன் கட்டமைப்பு போன்ற பல கடினமான பொறியியல் சவால்களைக் கடந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த 213 கிலோமீட்டர் நீளமுள்ள இடது பிரதான கால்வாய், பாசனம், குடிநீர் மற்றும் தொழில்துறை தேவைகளுக்காக 23.44 டிஎம்சி கோதாவரி நீரை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டத்திற்காக இதுவரை சுமார் ரூ.4,192 கோடி செலவிடப்பட்டுள்ளது.</p><h2>முதல் கட்டத்தால் பயன்பெறும் மாவட்டங்களும், விவசாய நிலங்களும்</h2><p>இந்த முதற்கட்ட நீர் வெளியீட்டின் மூலம் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5.23 லட்சம் மக்களும், 2.87 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும் நேரடியாகப் பயன்பெறவுள்ளனர்.</p><p>அனகாபள்ளி மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் கிடைக்கும். இந்த நீர் பகிர்வு ஏலேரு கால்வாய் மற்றும் அப்பகுதியில் உள்ள 110 ஏரிகளை நிரப்பப் பயன்படுத்தப்படும். மேலும், ஏலேரு, பம்பா, தாண்டவா, வராஹா, சாரதா ஆகிய நதி அமைப்புகளின் வழியாக இந்த நீர் பயணிக்கும். </p><p>புஷ்கரா பாசன மண்டலத்தின் கீழ் 1.48 லட்சம் ஏக்கர் நிலங்கள் இதனால் ஸ்திரத்தன்மை பெறும். இதில் ஏலேருவின் கீழ் 80,700 ஏக்கர், பம்பா கீழ் 12,000 ஏக்கர், மற்றும் தாண்டவா, வராஹா, மாமிடி கெட்டா மண்டலங்களில் 46,620 ஏக்கர் நிலங்கள் அடங்கும்.</p><h2>"உத்தர ஆந்திரா இனி வளர்ச்சி மையம்" - முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேச்சு</h2><p>பாயகாராவுபேட்டாவில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்:</p><p>இந்த இடது பிரதான கால்வாய் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, 'உத்தராந்திர சுஜல ஸ்ரவந்தி' திட்டத்துடன் இணைக்கப்படும். இதன் மூலம் அனகாபள்ளி, விசாகப்பட்டினம், விஜயநகரம், பார்வதிபுரம் மன்யம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டங்களின் மேட்டுப்பாங்கான பகுதிகளுக்கும் கோதாவரி நீர் கொண்டு செல்லப்படும்.</p><p>"இனி வாழ்வாதாரத்திற்காக மக்கள் உத்தர ஆந்திராவை விட்டு வெளியேற மாட்டார்கள், மாறாக மற்ற பகுதிகளில் இருந்து மக்கள் உத்தர ஆந்திராவை நோக்கி வேலை தேடி புலம்பெயர்ந்து வருவார்கள்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். </p><p>கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நீர்ப்பாசனத்திற்காக அரசு ரூ. 25,000 கோடி செலவிட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி செலவில் 36 முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்கள் முழுமையாக நிறைவு செய்யப்படும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசுத் துறைகளில் 70,584 ஊழல் புகார்: வங்கி மற்றும் ரெயில்வே துறைகள் முதலிடம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/70584-corruption-complaints-against-central-government-departments-banks-and-railways-top-list</link><comments>https://www.maalaimalar.com/news/national/70584-corruption-complaints-against-central-government-departments-banks-and-railways-top-list#comments</comments><guid isPermaLink="false">c8a6a4a5-4efd-46aa-bd84-45217ca53c88</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:18:06 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:18:06.987Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,central government,Corruption,ஊழல் புகார்கள்,Delhi administration,Railway sectors,ரெயில்வே துறைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/plrry401/CURRUPTI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Corruption]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/plrry401/CURRUPTI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரெயில்வே துறை ஆகியவை அதிக அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-gdp-growth-claims-challenged-ex-finance-secretary-subhash-chandra-garg-says-real-growth-below-2-5-percent">மத்திய ஊழல் கண்காணிப்பு </a>ஆணையத்தின் (CVC) 2025-ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் 70,584 ஊழல் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரெயில்வே துறை ஆகியவை அதிக அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளன. பெறப்பட்ட மொத்த புகார்களில் வங்கித் துறை தொடர்பாக 9,933 புகார்களும், ரெயில்வே துறை தொடர்பாக 9,381 புகார்களும் பதிவாகி முதலிடத்தில் உள்ளன. இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மீது 6,531 புகார்களும், உள்ளாட்சி அமைப்புகள் மீது 4,834 புகார்களும், நிலக்கரித் துறை பணியாளர்கள் மீது 4,118 புகார்களும், நிதித் துறை மீது 3,107 புகார்களும் பதிவாகியுள்ளன.</p><p>டெல்லி நிர்வாகத்திற்கு எதிராக 2,804 புகார்களும, பெட்ரோலிய அமைச்சகத்திற்கு எதிராக 2,722 புகார்களும் வந்துள்ளன. டெல்லி காவல்துறையினருக்கு எதிராக 2,633 புகார்கள் பெறப்பட்ட வேளையில், மத்திய உள்துறை அமைச்சகம் (டெல்லி காவல்துறை நீங்கலாக) தொடர்பாக 2,036 புகார்கள் பதிவாகியுள்ளன.</p><p>கூடுதலாக, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மீது 2,139 புகார்கள், மனிதவள மேம்பாட்டுத் துறை மீது 2,030 புகார்கள், தொழிலாளர் நல அமைச்சகம் மீது 1,894 புகார்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மீது 1,536 புகார்கள் மற்றும் தொலைத்தொடர்புத் துறை மீது 1,469 புகார்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்புத் துறை (1,410), நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத் துறை (1,123), எஃகு துறை (1,023) மற்றும் அஞ்சல் துறை (1,003) ஆகியவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.</p><h2>புகார்<strong>கள் மீதான நட</strong>வடிக்கை </h2><p>பதிவு செய்யப்பட்ட 70,584 புகார்களில், டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி 64,905 புகார்கள் பரிசீலிக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5,679 புகார்கள் தற்போது விரிவான விசாரணையில் உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. பொதுவாக, ஊழல் தொடர்பான புகார்கள் மீது மூன்று மாதங்களுக்குள் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;சுத்திகரிப்பு&apos; சடங்கு செய்தவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.. ஜே.பி நட்டாவுக்கு கார்கே கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-action-has-been-taken-yet-against-those-who-performed-the-purification-ritual-kharge-writes-to-jp-nadda</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-action-has-been-taken-yet-against-those-who-performed-the-purification-ritual-kharge-writes-to-jp-nadda#comments</comments><guid isPermaLink="false">5cefd9ae-1746-4073-9a73-71a8808de9ee</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:44:59 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:44:59.777Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,மல்லிகார்ஜுன கார்கே,mallikarjun kharge,ஜேபி நட்டா,JP Nadda</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/wovwf945/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜே.பி நட்டா, கார்கே ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜே.பி நட்டா, கார்கே ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/wovwf945/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தான் பேசிச்சென்ற இடத்தை சுத்தம் செய்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களவை தலைவர் ஜே.பி நட்டாவுக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.</p><h2></h2><h2>மல்லிகார்ஜூன கார்கே </h2><p>உத்​த​ராகண்ட் மாநிலம் ஹல்த்​வானி​யில் உள்ள ராம்​லீலா மைதானத்​தில் கடந்த 8ந் தேதி நடை​பெற்ற  பொதுக்​கூட்​டத்​தில் காங்​கிரஸ்  தலை​வர் <a href="https://www.maalaimalar.com/topic/mallikarjuna-kharge">மல்​லி​கார்​ஜுன கார்கே</a> பங்​கேற்​றார்.</p><p>அதனைத் தொடர்ந்​து 10ந் தேதி அந்த மைதானத்​தில் வலது​சாரி அமைப்​பினர் மற்​றும் பா.ஜ.க. - ஆர்​.எஸ்.​எஸ். ஆதர​வாளர்​கள் ‘சுத்​தி​கரிப்​பு’ (புனிதப்​படுத்​தும்) சடங்​கு​களை மேற்​கொண்​ட​தாக குற்​றச்​சாட்டு  எழுந்தது.</p><p>இந்த விவ​காரத்தை காங்​கிரஸ் செயற்​குழு கூட்​டத்​தி​லும், பாராளுமன்றத்திலும் கார்​கேவே நேரடி​யாக எழுப்​பி தனது ஆதங்​கத்​தைப் பதிவு செய்து இருந்​தார்.</p><p>இதுதொடர்பாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அவர் மீது உத்தரகாண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். </p> <h2>கடிதம்</h2><p>இந்த நிலையில் மல்லிகார்ஜூன கார்கே, மாநிலங்களவை தலைவரும் மத்திய மந்திரியுமான ஜே.பி. நட்டாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.</p><p>அதில் புனிதப்படுத்தும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.</p> <h2>பதிவு</h2><p>இது தொடர்பாக கார்கே தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது,</p><p>"ஹல்த்வானியில் நான் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு பிறகு ராம்லீலா மைதானத்தில் மேற் கொள்ளப்பட்ட புனிதப்படுத்துதல் நடவடிக்கை தொடர்பான விவகாரம் குறித்து மேல் சபையின் அவைத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு நான் ஒரு கடிதம் எழுதியுள்ளேன்.</p><p>அவையில் அவர் அளித்து இருந்த உறுதியை அவருக்கு நினைவூட்டியதுடன் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளேன்.</p> <h2>பாடம் புகட்டுவது அவசியம்</h2><p>24 நாட்கள் ஆன பிறகும் இந்த இழிவான செயலுக்கு காரணமானவர்கள் மற்றும் அமைப்புகள் மீது இதுவரை எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் ( எப். ஐ. ஆர்.) பதிவு செய்யப்படவில்லை.</p><p>அந்தக் கடிதத்தில், இந்த விவகாரம் என்னையோ அல்லது காங்கிரசின் தலைவராக எனது பதவியையோ மட்டும் சார்ந்ததல்ல.</p> <p>ஒவ்வொரு நாளும் இத்தகைய கொடூரமான யதார்த்தத்தை எதிர்கொள்ளும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுடன் பரந்த அளவில் இது தொடர்புடையது. இத்தகைய தவறு செய்பவர்களுக்கு பாடம் புகட்டுவது அவசியமாகும்.</p><p>இந்த உண்மைகள் மற்றும் மேல் சபையில் அளிக்கப்பட்ட உறுதியின் அடிப்படை யில் ஹல்த்வானியில் எனது பொதுக்கூட்டத்திற்கு பிறகு ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ‘சுத்திகரிப்பு’ சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரகண்ட் முதல்வருக்கு ஜேபி நட்டா அறிவுறுத்த வேண்டும்" என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>