<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 20 Jul 2026 10:30:56 +0000</lastBuildDate><item><title>கேரளத்தில் தாய்-மகன் கொலை வழக்கு: முதியவருக்கு மரண தண்டனை விதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-mother-son-murder-case-elderly-man-sentenced-to-death</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-mother-son-murder-case-elderly-man-sentenced-to-death#comments</comments><guid isPermaLink="false">b2b1699c-1640-483f-97d9-7887f5314b14</guid><pubDate>Mon, 20 Jul 2026 10:27:05 +0000</pubDate><atom:updated>2026-07-20T10:27:05.728Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை வழக்கு,Murder case,kerala,மரண தண்டனை,death sentence,கேரளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/855lw4ea/Death.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kerala Double Murder]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/855lw4ea/Death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் நென்னமாரா அருகே உள்ள பொத்துண்டியைச் சேர்ந்தவர் சுதாகரன். இவரது தாயார் லட்சுமி. இவர்கள் இருவரும் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.</p><p>இந்த கொலைகள் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செந்தாமரை (வயது 61) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், சுதாகரனின் மனைவி சஜீதாவை கொலை செய்தவர் என்பதும், அதற்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற அவர், ஜாமீனில் வெளிவந்தபோது தான் சுதாகரன் மற்றும் லட்சுமியை கொலை செய்தி ருப்பதும் உறுதியானது.</p><p>இதுதொடர்பான வழக்கு பாலக்காடு கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அப்போது திட்டமிட்ட பழிவாங்கும் செயலாக கொலைகள் நடந்திருப்பதாக அரசு தரப்பில் கோர்ட்டில் வாதிடப்பட்டது.</p><p>கடந்த 2026-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி முதல் விசாரணை நடைபெற்ற நிலையில், இந்த வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த வாரம் நிறைவடைந்தன. அதன்பிறகு செந்தாமரை குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட செந்தாமரைக்கு மரண தண்டதை விதித்து தீர்ப்பு வழங்கினார்.</p><p>மேலும் அவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த நீதிபதி, அதனை இறந்த சுதாகரனின் குழந்தை களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். கொலை நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.</p><p>பிஎன்எஸ் சட்டத்தின் 103(1) மற்றும் 126(2) பிரிவுகளின் கீழ் செந்தாமரா குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறிந்தது. குற்றம் சாட்டபபட்டவர் சமூகத்திற்குப் பிரச்சனையாக இருந்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்று பல்வேறு உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. அதன் அடிப்படையில் இந்த தீர்ப்பு அளிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>டெல்லியில் பரபரப்பு: நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தால் 163 தடை உத்தரவு அமல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-parliament-siege-protest-section-163-restrictions</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-parliament-siege-protest-section-163-restrictions#comments</comments><guid isPermaLink="false">a6876ac9-2aa7-4b16-be14-903a6fa0cdca</guid><pubDate>Mon, 20 Jul 2026 10:04:27 +0000</pubDate><atom:updated>2026-07-20T10:04:27.649Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DelhiProtest,SonamWangchuk,Section163,NEETControversy,CJPProtest,நீட்தேர்வுமுறைகேடு,சோனம்வாங்சுக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/p5kp2whg/DelhiProtest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DelhiProtest  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/p5kp2whg/DelhiProtest?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், டெல்லியின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக ‘பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா’ பிரிவு 163 ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>போராட்டத்திற்கான காரணம்..</strong></h2><p>'காக்ரோச் ஜனதா கட்சி' அமைப்பு, நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் இன்று ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி</p><p>'சலோ சன்சாத்' என்ற பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.</p><h2>அனுமதி மறுப்பு &amp; கட்டுப்பாடுகள்:</h2><p>இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது குறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் சச்சின் சர்மா தனது சமூக வலைத்தள பக்கத்தில், "இந்த போராட்டத்திற்கு எந்த அனுமதியும் கோரப்படவும் இல்லை, வழங்கப்படவும் இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>கட்டுப்பாடுகள்..</strong></h2><p>உதவி போலீஸ் கமிஷனர் அஜய் சர்மா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, நாடாளுமன்ற வீதிக்கு உட்பட்ட பகுதிகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>ஜந்தர் மந்தர் தவிர மற்ற பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடவோ, பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தவோ அனுமதி இல்லை என்று தெரிவித்தது.</p><p>போராட்டக்காரர்கள் லத்திகள், கம்புகள், பதாகைகள் அல்லது எந்த விதமான ஆயுதங்களையும் எடுத்துச் செல்ல கூடாது என்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கோஷங்களை எழுப்பவோ, உரையாற்றவோ கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது 'பாரதிய நியாய சன்ஹிதா' பிரிவு 223-ன் கீழ் உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>குவியும் மக்கள் - பலத்த பாதுகாப்பு:</strong></h2><p>மறுபுறம், லடாக் விவகாரத்திற்காக உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவிக்க ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டுள்ளனர்.</p><p>இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்க டெல்லி போலீசார், துணை ராணுவப் படையினர் மற்றும் அதிரடிப்படையினர் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை</title><link>https://www.maalaimalar.com/news/national/dog-saves-family-from-snake-treatment-at-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/national/dog-saves-family-from-snake-treatment-at-hospital#comments</comments><guid isPermaLink="false">8afaeafc-f03c-48d7-b701-f6a3c6062e0e</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:37:38 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:37:38.027Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dog,snake,ஆந்திர பிரதேசம்,AP,பாம்பு,நாய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mdh5c8im/dog.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dog - Snake]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mdh5c8im/dog.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்த நாயை  பாம்பு கடித்ததால் உடலில் விஷம் ஏறியது.</p><p>ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், பிதாபுரம் அடுத்த கோத்த பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். இவர் பாக்சர் இன நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.</p><p>நேற்று முன்தினம் மாலை பக்கத்து காலி மனையில் இருந்து நாகப்பாம்பு ஒன்று ஸ்ரீனிவாஸ் வீட்டிற்குள் வந்தது. இதனைக் கண்ட ஸ்ரீனிவாஸ் குடும்பத்தினர் அலறினர். அப்போது பாம்பை கண்ட நாய் உடனடியாக உஷார் ஆனது. பாம்பை மேலும் வீட்டிற்கு நுழைய விடாமல் தடுத்தது.</p><h2>நாய் - பாம்பு சண்டை</h2><p>அப்போது நாய்க்கும், பாம்புக்கும் இடையே சிறிது நேரம் சண்டை ஏற்பட்டது. பாம்பு ஆக்ரோஷத்துடன் படம் எடுத்து நாயை கடிக்க முயன்றது. ஆனால் நாய் எதிர்பாராத விதமாக பாம்பின் தலையை கவ்வி கடித்தது. இதில் பாம்பு பரிதாபமாக இறந்தது. </p><p>பாம்பின் தலையை கடித்ததால் நாயின் உடலில் விஷம் ஏறி நிலைகுலைந்தது. செல்ல நாயை காக்கிநாடாவில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. </p>]]></content:encoded></item><item><title>திரிபுரா டிஜிபி மர்ம மரணம்... காவல்துறை விசாரணை!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/mysterious-death-of-tripura-dgp-police-investigation-underway</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/mysterious-death-of-tripura-dgp-police-investigation-underway#comments</comments><guid isPermaLink="false">cd31fccb-a62b-4f29-8f98-93883be413dc</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:29:50 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:29:50.882Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anurag Dhankar,Tripura DGP,அனுராக் தங்கர்,திரிபுரா டிஜிபி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/zbqqbo6l/New-Project-2026-07-20T144520.209.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திரிபுரா டிஜிபி மர்ம மரணம்... காவல்துறை விசாரணை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/zbqqbo6l/New-Project-2026-07-20T144520.209.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>திரிபுரா மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குநர் அனுராக் தங்கர், காவல்துறை தலைமையகத்தில் உள்ள தனது அலுவலக குளியலறையில் இருந்து இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். </p><p>உடனே போலீசார் அவரை அகர்தலா கோவிந்த் பல்லப் பந்த் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனைத்தொடர்ந்து அனுராக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர். மேலும் போலீசாரும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். </p><p>இந்தச் செய்தியைத் தொடர்ந்து, முதலமைச்சரும் மற்ற மூத்த அரசு அதிகாரிகளும் டிஜிபி அலுவலகத்திற்கு விரைந்தனர். மாநிலத்தின் உயர்மட்ட காவல் அதிகாரியின் மரணம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>அனுராக் தங்கர்</h2><p>1994-ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த இவர், திரிபுரா காவல்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார். கடந்தாண்டு மே மாதம் காவல்துறையின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் மாநிலத்தின் புலனாய்வுத் துறை தலைமை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.</p><p>மேலும் சிபிஐ, பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் மற்றும் கொசோவோவில் உள்ள ஐ.நா. அமைதி காக்கும் படையிலும் பணியாற்றியுள்ளார். சிபிஐ-யில் பணியாற்றிய காலத்தில், மோசடிக் குற்றவாளியான நீரவ் மோடி தொடர்பான விசாரணையை  வழிநடத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட டெங்கு காய்ச்சலுக்கான முதல் தடுப்பூசி: இந்தியா ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-approves-first-dengue-vaccine-qdenga</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-approves-first-dengue-vaccine-qdenga#comments</comments><guid isPermaLink="false">c844a166-94f0-497e-b207-dee752da00a1</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:29:30 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:29:30.682Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>dengue vaccine,டெங்கு தடுப்பூசி,Qdenga,DCGI,டெங்கு காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/uyrr8k5a/Untitled-design-38.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Drug regulator clears India's first Dengue Vaccine]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/uyrr8k5a/Untitled-design-38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>டெங்கு தடுப்பூசிக்கு இந்தியா அங்கீகாரம்:</strong></h3><p>இந்தியாவில் முதன் முறையாக டெங்கு காய்ச்சலுக்கு தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளது.</p><p>டகேடா பயோ பார்மசூட்கல்ஸ் என்ற இந்திய நிறுவனம் டெங்கு காய்ச்சலுக்கான க்யூடெங்கா என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.</p><p>இந்த தடுப்பூசி 4 முதல் 60 வயது வரையிலான நபர்களுக்கு செலுத்தும் வகையில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளது.</p><p>மேலும் கடந்த காலங்களில் டெங்கு நோய்த் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருந்தாலும், இந்த தடுப்பூசியை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சில டெங்கு தடுப்பூசிகளை போல் அல்லாமல், தற்போது உருவாக்கப்பட்டுள்ள கியூடெங்கா தடுப்பூசிக்கு, முன் பரிசோதனை தேவையில்லை.</p><p>இதன்மூலம் தகுதியுள்ள நபர்கள், தங்களுக்கு முன்பு டெங்கு தொற்று இருந்ததா என முதலில் பரிசோதிப்பதற்கு முன்பு, இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.</p><h3><strong>டெங்கு பரிசோதனை:</strong></h3><p>இதுகுறித்து மருந்து சந்தைகளின் தலைவர் மகேந்தர் நாயக் கூறுகையில், “க்யூடெங்கா தடுப்பூசி 2022-இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, 43 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு, உலகளவில் 32 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. </p><p>இந்த அங்கீகாரம் இந்தியாவில் டெங்கு தடுப்பை வலுப்படுத்துவதில், ஒரு முக்கிய முன்னேற்றத்தை குறிக்கிறது.</p><p>ஏழு ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட நீண்டகால தரவுகளின்படி, இந்த தடுப்பூசியானது நான்கு டெங்கு வைரஸ் வகைகளால் ஏற்படும் டெங்கு தொற்றால் பாதிக்கப்படாதவாறு பாதுகாக்கிறது.</p><p>டெங்கு பரவலாக உள்ள நாடுகள் மற்றும் மற்ற பிராந்தியங்களில், 28,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 19 முதற்கட்ட, இரண்டாம் மற்றும் மூன்றாம் மருத்துவ பசிசோதனைகளுக்கு பின்பு, இந்தியாவில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.</p><p>4 முதல் 60 வயது வரையிலான மக்களிடம் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மதிப்பீடு செய்வதற்காக, இந்தியாவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட DEN-302 மருத்துவ பரிசோதனையின் முடிவுகளும் இந்த முடிவை ஆதரித்துள்ளன.</p><h3><strong>உலக சுகாதார அமைப்பு அனுமதி:</strong></h3><p>டெங்கு காய்ச்சலுக்கு எதிரான இந்த தடுப்பூசியானது, மூன்று மாத இடைவெளியில் தோலுக்கு கீழே 0.5 மில்லி லிட்டர் அளவுள்ள இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட உள்ளது.</p><p>QDENGA தடுப்பூசியானது, உலக சுகாதார அமைப்பின் (WHO) முன் தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளது.</p><p>மேலும் UNICEF மற்றும் பான் அமெரிக்க சுகாதார அமைப்பு (PAHO) போன்ற உலகளாவிய முகமைகளில் இந்த தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பணிக்காக 50 முறை தேர்வு எழுதிய பட்டதாரி தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது</title><link>https://www.maalaimalar.com/news/national/b-tech-gold-medallist-suicide</link><comments>https://www.maalaimalar.com/news/national/b-tech-gold-medallist-suicide#comments</comments><guid isPermaLink="false">ac9077f0-4b73-4f46-bb2f-8469dc418ed4</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:06:57 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:06:57.766Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,இளைஞர் தற்கொலை,youngman suicide</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/jquxnzvn/suicide.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/jquxnzvn/suicide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு பணிக்காக 50 முறை தேர்வு எழுதிய பட்டதாரி இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.</p><p>பீகார் மாநிலம், பக்ஸாரைச் சேர்ந்தவர் ஆனந்த் குமார், 2024-ம் ஆண்டு கான்பூரில் உள்ள ஒரு முன்னணி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியலில் தனது பி.டெக் பட்டப்படிப்பை முடித்தார். </p><h2>தற்கொலை</h2><p>ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, அவர் தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். 50-க்கும் மேற்பட்ட அரசுப் பணி நியமனத் தேர்வுகளில் எழுதியும், அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், குஜ்ரன்வாலாவில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.</p><h2>மன்னிப்பு கடிதம்</h2><p>போலீசார் அவரது உடலை கைப்பற்றினர். அப்போது அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் தனது தந்தையிடம் பலமுறை மன்னிப்புக் கோரியுள்ள அந்தக் கடிதத்தில், “மன்னிக்கவும், அப்பா... நான் ஒரு அரசு வேலைக்காக 50 முறை முயற்சி செய்தேன். ஆனால் என்னால் வெற்றி பெற முடியவில்லை. தயவு செய்து என்னை மன்னியுங்கள்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>மாநிலங்களவையில் எதிரொலித்த CJP போராட்டம்.. போராட்டக் களத்தில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protests-police-lathicharge-and-tear-gas-on-students-at-jantar-mantar</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protests-police-lathicharge-and-tear-gas-on-students-at-jantar-mantar#comments</comments><guid isPermaLink="false">1cb43aff-8acd-465e-b970-b406ec103fb1</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:25:42 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:25:42.556Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rally,பேரணி,மாநிலங்களவை,rajya sabha,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mev746gb/tn-26.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ CJP PROTEST]]></media:title><media:description type="html"><![CDATA[ CJP PROTEST]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mev746gb/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த கல்வியாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-sonam-wangchuk-seeks-discharge-activist-asks-hospital-to-allow-him-join-parliament-march">சோனம் வாங்சுக்</a> நேற்று முன் தினம் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். </p> <h2>பேரணி</h2><p>இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். பேரணிக்கு தடை விதித்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p>இன்று காலை தடுப்புகளை தாண்ட முயன்றவர்கள் மீது போலீசார் மற்றும் மத்திய படையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.</p> <h2>பலத்த பாதுகாப்பு</h2><p>போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் குவியத் தொடங்கியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.</p><p>ஜந்தர் மந்தரை தவிர டெல்லியின் மற்ற இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படடுத்தப்பட்டுள்ளது.</p><p>முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்ற வடக்கு வாயில் மூடப்பட்ட‌து. நாடாளுமன்ற வளாகத்தில் துணை ராணுவம், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். </p><h2>கண்ணீர் புகைகுண்டு</h2><p>இதனிடையே ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி அவர்களை கலைக்க முயன்றனர்.</p> <h2>உண்ணாவிரதம்</h2><p>இந்த போராட்டத்தில் 23 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வந்த இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த இரு மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர். நடிகர் பிரகாஷ் ராஜ், மூத்த பாலிவுட் நடிகை ஷாபனா அஸ்மி உள்ளிட்டோர் அடைய குழு நேரில் சென்று மேற்கொண்ட சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர சம்மதம் தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும் பேரணி தொடங்க உள்ள நிலையில் சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கேயும் தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.</p><p>சோனம் வாங்சுக், தன் கோரிக்கைகள் நிறைவேறும்வரை உண்ணாவிரதத்தை நிறுத்த மாட்டேன் என மருத்துவனையில் இருந்து கடிதம் எழுதியுள்ளார். மேலும் தான் நலமாக உள்ளதாகவும், பேரணியில் பங்கேற்க தன்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யுமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.</p> <h2>பேச்சுவார்த்தை</h2><p>பேச்சுவார்த்தை சிஜேபி தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் காவல்துறையினரால் துணை ஆணையர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.</p><h2>மாநிலங்களவை</h2><p>சிஜேபி போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் மாநிலங்களவை தலைவர் ஜேபி நாட்டவை தனியே சந்திக்க திட்டமிட்டுள்ளனர். சிஜேபி போராட்டம் குறித்து எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி முழக்கமிட்டதால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>அவையில் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான மல்லிகார்ஜுன கார்கே தங்களுக்கு ஆதரவாக பேசியதற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
நலமாக உள்ளேன்.. பேரணியில் பங்கேற்க என்னை டிஸ்சார்ஜ் செய்யுங்கள் - மருத்துவ அறிக்கைக்கு இடையில் வாங்சுக் வேண்டுகோள் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-sonam-wangchuk-seeks-discharge-activist-asks-hospital-to-allow-him-join-parliament-march</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-sonam-wangchuk-seeks-discharge-activist-asks-hospital-to-allow-him-join-parliament-march#comments</comments><guid isPermaLink="false">06fdd6cb-ef0d-4c7b-a9b8-bfad79c1d376</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:34:05 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:34:05.600Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>hunger strike,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party,உண்ணாவிரதம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/vzg6xcfu/tn-25.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/vzg6xcfu/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்டவற்றால் நாட்டின் கல்வித் துறையை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்ற நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி நாடு முழுவதும் குரல்கள் வலுத்து வருகின்றன.</p><p>இதனை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி கட்சியினர் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் அமைப்புகளாகவும், தன்னிச்சையாகவும் வந்து கலந்துகொண்டு 1 மாத காலமாக போராடி வருகின்றனர்.</p><p>குறிப்பாக இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் நேற்று முன் தினம் டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.</p><h2>பேரணி</h2><p>இதனையே இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள சூழலில் ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.</p><p>ஆனால் இந்த பேரணிக்கு நேற்றே தடை விதிக்கப்பட்டு அங்கு போலீசார் மற்றும் மத்திய படையினர் குவிக்கப்பட்டனர்.</p><p>பாராளுமன்றம் நோக்கி பேரணியை தொடங்க முனைப்பு காட்டி  டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி முன்னேற முயன்றதால், கூட்டத்தைக் கலைக்க போலீசார் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-youth-march-to-parliament-stopped-with-lathicharge-in-delhi">தடியடி </a>நடத்தினர்.</p><p>டெல்லி காவல்துறை ஜந்தர் மந்தரைத் தவிர பிற பகுதிகளில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், பேரணிகள் நடத்துவதற்கும் தடை விதித்து, பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. </p><p>மேலும் நகரின் 5 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் வேலைகளுக்கு செல்வோர் ரெயில் கிடைக்காமல் அவதியுற்றனர். </p><p>தடைகள் இருந்தபோதிலும் ஜந்தர் மந்தரில் அதிகளவில் கூடியுள்ள இளைஞர்கள் பேரணியை தொடங்க மும்முரம் காட்டி வருகின்றனர்.</p> <h2>சோனம் வாங்சுக் உடல்நிலை</h2><p>இன்று காலை 10 மணிக்கு சப்தர்ஜங் அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், <a href="https://www.maalaimalar.com/topic/sonam-wangchuk">சோனம் வாங்சுக் </a>உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளது. அவரின் உடல்நிலை சிறப்பு மருத்தவ நிபுணர் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.</p><h2>சோனம் வாங்சுக் ஆர்வம்</h2><p>தான் நலமாக உள்ளதாகவும் நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் தான் பங்கேற்க ஏதுவாக தன்னை டிஸ்சார்ஜ் செய்ய சோனம் வாங்சுக் கோரியுள்ளார்.</p><p>அவர் தன் எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில்,</p><p>"இன்று எனது உடல்நிலை மிகவும் சீராக, நலமாக உள்ளது. எனவே, இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் நான் கலந்துகொள்ளும் வகையில், தற்காலிகமாகவாவது என்னை மருத்துவமனையை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.</p> <h2>பேச்சுவார்த்தை</h2><p>போராட்டத்திற்கு இடையே, சிஜேபி தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் காவல்துறையினரால் துணை ஆணையர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>இது குறித்துப் பேசிய சௌரவ் தாஸ், "கல்வித் துறை சீர்திருத்தங்கள் குறித்த எங்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.</p><p>நிர்வாகத் தரப்பிலிருந்து இந்த அழைப்பு மிகவும் தாமதமாக வந்திருந்தாலும், கல்வி முறையில் உள்ள சீர்கேடுகளை தடுக்க நாங்கள் விவாதத்திற்குத் தயாராக உள்ளோம்" என்று கூறினார்.</p><h2>உண்ணாவிரதம் தொடரும்</h2><p>இதனிடையே மத்திய அரசு தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்கும் வரையோ, அல்லது இன்று தொடங்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வித் துறை குறித்து விவாதிப்போம் என்று உறுதியளிக்கும் வரையோ தனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று சோனம் வாங்சுக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>நீட், ராமர் கோவில் முறைகேடு.. எதிர்க்கட்சி அமளியால் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-lok-sabha-adjourned-amid-opposition-protests-over-neet-and-ayodhya-ram-temple-trust-funds</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-lok-sabha-adjourned-amid-opposition-protests-over-neet-and-ayodhya-ram-temple-trust-funds#comments</comments><guid isPermaLink="false">04774660-0332-4384-b7fe-ffffc97c38d6</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:14:25 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:14:25.385Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,பாராளுமன்ற கூட்டத்தொடர்,சபாநாயகர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/j5rgjnq7/tn-24.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ நாடாளுமன்றம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நாடாளுமன்றம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/j5rgjnq7/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-begin-today">நாடாளுமன்ற மழைக்காக கூட்டத்தொடர்</a> இன்று தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் மக்களவை கடும் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. </p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை முன்னிருத்தி போர்க்கோலம் பூண்டது. </p><p>இன்று அவை கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கங்கள் மற்றும் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை  நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. </p><h2>ஒத்திவைப்பு</h2><p>நீட் தேர்வு சர்ச்சை மற்றும் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை நிதி முறைகேடு புகார் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் இந்தச் சலசலப்பில் ஈடுபட்டன.</p><p>மக்களவை தொடங்கியதும், சபாநாயகர் ஓம் பிர்லா முன்னாள் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.</p><p>இரங்கல் குறிப்புகள் வாசித்து முடிக்கப்பட்ட உடனே, நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் அயோத்தி ராம ஜன்மபூமி அறக்கட்டளையின் நிதி மோசடிப் புகார் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.</p><p>அவையின் அமளிக்கு இடையே, சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்களை அமைதி காக்குமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தார்.</p><p>எனினும், முழக்கங்கள் தொடர்ந்ததால் சபாநாயகர் அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதேபோல மாநிலங்களவையும்  ஒத்திவைக்கப்பட்டது.</p><h2>காங்கிரஸ் குற்றச்சாட்டு</h2><p>இது குறித்துசெய்திலாயர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகோய், "மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இல்லை என்பது கடந்த சில நாட்களாகவே தெளிவாக புலப்படுகிறது.</p><p>ராமர் கோவில் விவகாரமோ அல்லது நீட் விவகாரமோ நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா என்பதை அவர்களால் இதுவரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.</p><p>இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முக்கியப் பிரச்சினைகள் இவைதான் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும், ஆனால் அரசிடம் முறையான திட்டம் இல்லை" என்று குற்றம் சாட்டினார்.</p><p>முன்னதாக, காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால், ராமர் கோவில் அறக்கட்டளையின் நிதி மோசடிப் புகார் குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியிருந்தார்.</p><p>அதேபோல், பல எதிர்க்கட்சித் தலைவர்களும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் குறித்து விவாதிக்கக் கோரி நோட்டீஸ் அளித்திருந்தனர்.</p><h2>ஜந்தர் மந்தரில் குழப்பம்</h2><p>இதனையே இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ள சூழலில் ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.</p><p>ஆனால் இந்த பேரணிக்கு நேற்றே தடை விதிக்கப்பட்டு அங்கு போலீசார் மற்றும் மத்திய படையினர் குவிக்கப்பட்டனர்.</p><p>இந்த சூழலில் பாராளுமன்றம் நோக்கி பேரணியை தொடங்க முனைப்பு காட்டிய டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீசார் மற்றும் மத்திய படையினர் தடியடி நடத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பயிற்சி ஐபிஎஸ் பெண் அதிகாரிக்கு ஆபாச படம் அனுப்பி பாலியல் தொல்லை- பயிற்சியாளர் மீது வழக்கு பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/female-ips-officer-sexually-harassed-via-obscene-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/female-ips-officer-sexually-harassed-via-obscene-video#comments</comments><guid isPermaLink="false">1f020b77-21f4-4eec-8f8b-53921d479fdd</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:51:32 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:51:32.442Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Harassment,case filed,பாலியல் தொல்லை,வழக்கு பதிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/c03bmetw/case.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வழக்கு பதிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/c03bmetw/case.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>பயிற்சி ஐபிஎஸ் பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. </aside><h2><strong>போலீஸ் அகாடமி பயிற்சி பள்ளி</strong></h2><p>கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் சிவராம் பள்ளியில் உள்ள தேசிய போலீஸ் அகாடமி பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார்.</p><p>இந்த பயிற்சி பள்ளியில் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், வூல்ல பாலத்தை சேர்ந்த உதய கிருஷ்ணா ரெட்டி என்பவர் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். </p><h2><strong>பாலியல் தொல்லை</strong></h2><p>கடந்த மாதம் 23-ந்தேதி பெண் பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு உதய கிருஷ்ணா ரெட்டி ஆபாச படங்களை அனுப்பி வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். தொடர்ந்து அகாடமியில் அவரது நண்பர்கள் முன்னிலையில் அவரது கண்ணியத்தை கெடுக்கும் வகையில் தெலுங்கில் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.</p><p>வேறு ஒருவருடன் கள்ளக்காதல் உள்ளதாகவும் கூறியுள்ளார். அவரது செல்போனை வலுக்கட்டாயமாக பறித்து தனிப்பட்ட தகவலை பார்த்தார். </p><h2><strong>புகார்</strong></h2><p>பெண் அதிகாரியின் தனிப்பட்ட வீடியோக்களை எடுத்து அவரது கணவருக்கு அனுப்பி வைத்தார். பயிற்சி அதிகாரியின் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்ததால் பயிற்சி ஐபிஎஸ் பெண் அதிகாரி அட்டாப்பூர் போலீசில் புகார் செய்தார். </p><p>போலீசார் முதற்கட்டமாக விசாரணை நடத்தியதில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>VIDEO: பாராளுமன்றம் நோக்கி பேரணிக்கு ஆயத்தம்.. ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மீது தடியடி </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-youth-march-to-parliament-stopped-with-lathicharge-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-youth-march-to-parliament-stopped-with-lathicharge-in-delhi#comments</comments><guid isPermaLink="false">7128e287-4e58-4a06-b295-7271896099ab</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:32:41 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:32:41.795Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>hunger strike,monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party,உண்ணாவிரதம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/bxq4zjpf/tn-23.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஜந்தர் மந்தரில் தடியடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜந்தர் மந்தரில் தடியடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/bxq4zjpf/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்டவற்றால் நாட்டின் கல்வித் துறையை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்ற நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி நாடு முழுவதும் குரல்கள் வலுத்து வருகின்றன. </p><p>இதனை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி கட்சியினர் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் அமைப்புகளாகவும், தன்னிச்சையாகவும் வந்து கலந்துகொண்டு 1 மாத காலமாக போராடி வருகின்றனர். </p><p>குறிப்பாக இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் நேற்று முன் தினம் டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். </p><h2>போலீஸ் குவிப்பு</h2><p>இதனையே இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள சூழலில் ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.</p><p>ஆனால் இந்த பேரணிக்கு நேற்றே தடை விதிக்கப்பட்டு அங்கு போலீசார்  மற்றும் மத்திய படையினர் குவிக்கப்பட்டனர்.</p><p>சற்று நேரத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி, தொடரின் முன் பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம், தொடரை ஆக்கபூர்வமாக நடத்த எதிர்கட்சியினரை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.</p><p>இந்த சூழலில் பாராளுமன்றம் நோக்கி பேரணியை தொடங்க முனைப்பு காட்டிய டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீசார் மற்றும் மத்திய படையினர் தடியடி நடத்தியுள்ளனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">LATEST: as feared, lathi charge, instances of stone pelting and total chaos at Jantar Mantar. In a democracy, the streets should never become a battlefield! Dialogue is being defeated by disorder sadly. Or is this designed to discredit what was a remarkably peaceful and organic… <a href="https://t.co/mpZs5RZTnU">pic.twitter.com/mpZs5RZTnU</a></p>&mdash; Rajdeep Sardesai (@sardesairajdeep) <a href="https://x.com/sardesairajdeep/status/2079070975715606732?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>பேரணிக்கு பெருகும் ஆதரவு</h2><p>தடைகள் இருந்தபோதிலும் ஜந்தர் மந்தரில் அதிகளவில் கூடியுள்ள இளைஞர்கள் பேரணியை தொடங்க மும்முரம் காட்டி வருகின்றனர்.</p><p>எதனாலும் கரப்பான்பூச்சிகளை தடுக்க முடியாது என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>பேரணிக்காக மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் தனது வாழ்த்துக்களை தெரிவித்தனுப்பியுள்ளார்.</p><p>இந்த பேரணியில் பங்கேற்க நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் ஜந்தர் மந்தர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>இதனிடையே பேரணியை அமைதியான முறையில் நடத்துமாறு சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ அழைப்பு விடுத்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Delhi: Protesters were stopped near Kerala House while attempting to proceed towards the designated protest site at Jantar Mantar <a href="https://t.co/FIkcw8aqjC">pic.twitter.com/FIkcw8aqjC</a></p>&mdash; IANS (@ians_india) <a href="https://x.com/ians_india/status/2079070558990590267?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4l9rfjwx/janthar-manthar.jpg" /></figure><h2>உண்ணாவிரதம் நிறைவு</h2><p>சோனம் வாங்சுகை போல இந்த போராட்டத்தில் கடந்த 23 நாட்களாக அகில இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த 3 மாணவ செயல்பாட்டார்கள் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் இன்று தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.</p><p>அவர்களின் உடல்நிலையும் மோசமடைந்த நிலையில் இன்று போராட்ட களத்திற்கு வந்த நடிகர் பிரகாஷ் ராஜ், பாலிவுட் மூத்த நடிகை ஷாபனா அஸ்மி, எம்.பி. மனோஜ் ஜா, அரசியல் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினர் நீண்ட அறிவுறுத்தலின் பேரில் அம்மாணவர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.</p><p>தனது நிபந்தனைகளை ஏற்றால் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக சோனம் வாங்சுக் முன்னதாக மருத்துவமனையில் இருந்து செய்தி அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு 2 ஆண்டுகளில் ரூ.261 கோடி செலவு: RTI-யில் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/261-crore-spent-on-rajya-sabha-mps-in-two-years-rti-reply</link><comments>https://www.maalaimalar.com/news/national/261-crore-spent-on-rajya-sabha-mps-in-two-years-rti-reply#comments</comments><guid isPermaLink="false">e5ab64bf-f201-41ca-8550-d9577780d25d</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:22:45 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:22:45.864Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாநிலங்களவை எம்பி,ஆர்டிஐ,rti,rajyasabha mp,செலவினம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/l9alwnys/Rajyasabha-MP.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajyasabha MPs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/l9alwnys/Rajyasabha-MP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலங்களவை எம்.பி.க்களின் சம்பளம், படிகள் மற்றும் பல்வேறு வசதிகளுக்காக கடந்த 2 நிதியாண்டுகளில் ரூ.261 கோடிக்கும் அதிகமாக அரசு செலவிட்டு உள்ளது.</p><h2>தகவல் அறியும் உரிமை சட்டம்</h2><p>மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்தர் சேகர் கவுர் என்பவர் நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் மாநிலங்களவையில் எம்.பி.க்களுக்கு செய்யப்பட்ட செலவுகள் குறித்த தகவல்களை கேட்டிருந்தார். அவருக்கு கிடைத்த பதில்களில் தெரியவந்த விவரங்கள் வருமாறு:-</p><h2>ரூ.261 கோடி</h2><p>2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களின் சம்பளம், படிகள் மற்றும் பல்வேறு வசதிகளுக்காக ரூ.261 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டு உள்ளது.</p><p>படி மற்றும் வசதிகளுக்காக 2024-25 நிதியாண்டில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக ரூ.98 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகை 2025-26 நிதியாண்டில் கணிசமாக உயர்ந்து ரூ.163 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ.65 கோடி கூடுதலாகும்.</p><h2>சம்பள செலவு</h2><p>2024-25-ல் எம்.பி.க்களின் சம்பளத்துக்காக ரூ.25.71 கோடிக்கும் அதிகமாகவும், மருத்துவச் செலவுகளுக்கு ரூ.8.2 கோடியும், சுற்றுப்பயணச் செலவுகளுக்கு ரூ.24.99 கோடியும், படிகளுக்காக ரூ.33.33 கோடிக்கும் அதிகமாகவும் செலவிடப்பட்டு உள்ளது.</p><p>அதேபோல், 2025-26-ல் சம்பளச் செலவு ரூ.44.6 கோடியாகவும். மருத்துவச் செலவு ரூ.9.6 கோடியாகவும், பயணச் செலவு ரூ.36 கோடியாகவும். படிகள் ரூ.58.78 கோடிக்கும் அதிகமாகவும் இருந்துள்ளது.</p><h2>என்னென்ன வசதிகளுக்கு அனுமதி</h2><p>மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு சம்பளம். படிகள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணம். மருத்துவ வசதி. அலுவலக செலவுகள் உள்ளிட்ட 21 வகை யான செலவுத் தலைப்புகளின் கீழ் அரசு வசதிகளை வழங்குகிறது. அச்சிடுதல், டிஜிட்டல் சாதனங்கள், எரிபொருள், பராமரிப்பு மற்றும் பிற நிர்வாகச் செலவு களும் இதில் அடங்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விண்வெளி துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது -  பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-india-has-achieved-soaring-growth-in-space-sector</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-india-has-achieved-soaring-growth-in-space-sector#comments</comments><guid isPermaLink="false">86db5eea-b71a-48ff-b13e-a8cb62e6892e</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:19:07 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:19:07.760Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,pm modi,parliament,பிரதமர் மோடி,பாராளுமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/aysa5dbo/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/aysa5dbo/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.</p><p>இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, சுப்ரீம் கோர்ட்டு (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகள் (திருத்தம்) மசோதா, தேசிய கவுரவத் துக்கு அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா (வந்தே மாதரத்துக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை விதிக்கும் மசோதா), சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி (திருத்தம்) மசோதா ஆகிய 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>இதில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா கடுமையான அரசியல் விவாதங்களை தூண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p>இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-congratulates-pv-sindhu-on-historic-japan-open-title">பிரதமர் மோடி</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் தாக்கலாக உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடி கூறியதாவது:</p><p>* நாடாளுமன்ற கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்.</p><p>* நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என நம்புகிறேன்.</p><p>* நாட்டின் வளர்ச்சிக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் அவசியமானது.</p><p>* விண்வெளித்துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது.</p> <p>* விக்ரம் 1 ராக்கெட் வெற்றியை அடுத்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பாராட்டுகள்.</p><p>* இந்திய இளைஞர்களின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.</p><p>* சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரெயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது.</p><p>* உலகின் எந்த போர்களும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது.</p><p>* நாட்டில் 3-வது செமி கண்டக்டர் ஆலை அமைய உள்ளது.</p><p>* <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">நாடாளுமன்ற</a> கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்.</p><p>* இந்தியாவில் இது இளைஞர்களுக்கான காலம். 56 வயது இளைஞர் என கூறி கொள்பவருக்கான காலம் இது இல்லை என ராகுலை மறைமுகமாக பிரதமர் மோடி விமர்சித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>இன்றே உண்ணாவிரதத்தை கைவிட தயார்.. மூன்று நிபந்தனைகள் விதித்த சோனம் வாங்சுக்!</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-sonam-wangchuk-hunger-strike-at-jantar-mantar-with-three-key-demands</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-sonam-wangchuk-hunger-strike-at-jantar-mantar-with-three-key-demands#comments</comments><guid isPermaLink="false">224c70ca-64cb-4990-b91f-cfc48a23f5d2</guid><pubDate>Mon, 20 Jul 2026 03:12:03 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:12:03.838Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,சோனம் வாங்சுக்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/sabhj1p2/tn-18.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ Sonam Wangchuk ]]></media:title><media:description type="html"><![CDATA[ Sonam Wangchuk ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/sabhj1p2/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பெற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>இதில் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த லடாக்கை சேர்ந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் நேற்று முன் தினம் போலீசாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். </p><p>அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வேண்டி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-refuses-to-transfer-sonam-wangchuk-to-a-private-hospital">நிராகரித்தது</a>. </p><h2>பேரணி</h2><p>இன்று நாடாளுமன்றம் நோக்கி போராட்டக்காரர்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டு அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ், மூத்த பாலிவுட் நடிகை சாபனா அஸ்மி ஆகியோர் ஜந்தர் மந்தர் சென்றுள்ளனர். </p><p>மருத்துவமனையில் உண்ணாவிரதத்தை தொடரும் சோனம் வாங்சுக் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறார். </p><h2>நிபந்தனைகள்</h2><p>இந்நிலையில் தனது <a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuks-father-undertook-a-five-day-fast-indira-gandhi-herself-traveled-to-ladakh-to-pacify-him-historical-background">உண்ணாவிரதத்தை </a>கைவிட வேண்டுமானால் தன் மூன்று நிபந்தனைகளை அரசு ஏற்க வேண்டும் என கோரியுள்ளார்.</p><p>ஒரு துண்டு காகிதத்தில் போலீஸ் கட்டுப்பாட்டை மீறி ரகசியமாக சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில்,</p> <p>நிபந்தனை 1:</p><p>இந்தியக் கல்வி முறையில் அண்மையில் நடந்துள்ள தொடர் தோல்விகளுக்கும், குறிப்பாக நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கும் மத்திய அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். அப்படி அரசு முறைப்படி பொறுப்பேற்று நடவடிக்கை எடுத்தால் நான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வேன்.</p><p>நிபந்தனை 2</p><p>ஒருவேளை மத்திய அரசு அதற்கு மறுக்கும் பட்சத்தில், எனக்கும் சிஜேபி கட்சி தலைமைப் பொறுப்பாளர்களுக்கும் நாடாளுமன்றத்தின் வாயில் வரை சென்று எங்களது கோரிக்கைகளை நேரடியாகச் சமர்ப்பிக்க அனுமதி வழங்க வேண்டும். அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எங்களது கோரிக்கைகளை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எழுப்புவோம் என்று நேரில் உறுதியளிக்க வேண்டும்.</p><p>நிபந்தனை 3</p><p>என்னுடைய மோசமடைந்து வரும் உடல்நிலையோ அல்லது பிற காரணங்களோ எங்களை நாடாளுமன்றம் நோக்கிச் செல்ல அனுமதிக்கவில்லை என்றால், மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நான் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனைக்கே நேரில் வந்து, கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்ற மேற்சொன்ன உறுதியை எனக்கு வழங்க வேண்டும்.</p><p>இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதால், இந்த மூன்று நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று நிறைவேற்றப்பட்டால், இன்றைய தினமே தான் உண்ணாவிரதத்தை முறித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.</p> <h2>சட்டவிரோத காவல்</h2><p>மேலும், சப்தர்ஜங் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருப்பதை 'சட்டவிரோத காவல்' என்று அவர் சாடியுள்ளார்.</p><p>தனது கடிதத்தின் முடிவில், "என்னுடைய நடமாடும் சுதந்திரம், பேச்சுரிமை மற்றும் அனைத்துத் தகவல் தொடர்பு வசதிகளும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையின் சட்டவிரோதக் காவலில் இருந்து..." என்று கையெழுத்திட்டு சோனம் வாங்சுக் தனது குறிப்பை நிறைவு செய்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-begin-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-begin-today#comments</comments><guid isPermaLink="false">7824cb9d-6d11-4fb8-8b69-3182b2e561f0</guid><pubDate>Mon, 20 Jul 2026 03:06:52 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:06:52.252Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,parliament,பாராளுமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-12/t1to0308/parliment.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ parliment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-12/t1to0308/parliment.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு, <a href="https://www.maalaimalar.com/news/national/ayodhya-ram-temple-donation-scam-pm-silence-unacceptable-rahul-kharge-letter">அயோத்தி ராமர் கோவில்</a> காணிக்கை திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் நாட்டையே உலுக்கியுள்ளன.</p><h2>நாடாளுமன்றம் கூடுகிறது</h2><p>இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.</p><p>இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, சுப்ரீம் கோர்ட்டு (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகள் (திருத்தம்) மசோதா, தேசிய கவுரவத் துக்கு அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா (வந்தே மாதரத்துக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை விதிக்கும் மசோதா). சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி (திருத்தம்) மசோதா ஆகிய 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>இதில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா கடுமையான அரசியல் விவாதங்களை தூண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>போர்க்கோலம்</h2><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை முன்னிருத்தி போர்க்கோலம் பூண்டுள்ளது.</p><p>எனவே நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்போது இது கடுமையாக எதிரொலிக்கும். காரசார விவாதங்களால் நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title> மத்தியப் பிரதேசத்தில்  பொது சிவில் சட்டம்.. அமைச்சரவை ஒப்புதல் - இன்று சட்டமன்றத்தில் தாக்கல் </title><link>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-ucc-bill-womens-rights-fixed-marriage-age-and-mandatory-registration-of-marriages-and-live-in-relationships</link><comments>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-ucc-bill-womens-rights-fixed-marriage-age-and-mandatory-registration-of-marriages-and-live-in-relationships#comments</comments><guid isPermaLink="false">44c7459f-2679-4b16-a8a1-ec3118c9c686</guid><pubDate>Mon, 20 Jul 2026 01:17:19 +0000</pubDate><atom:updated>2026-07-20T01:17:19.122Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madhya Pradesh,மோகன் யாதவ்,Mohan Yadav,Uniform Civil Code,பொது சிவில் சட்டம்,மத்தியப் பிரதேசம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/rx4lz5dg/ucc.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ucc]]></media:title><media:description type="html"><![CDATA[ ucc]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/rx4lz5dg/ucc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">பொது சிவில் சட்ட </a>மசோதாவின் வரைவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>மத்தியப் பிரதேச மாநிலத்திற்கான இந்த பொது சிவில் சட்ட வரைவை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான உயர்மட்டக் குழு தயாரித்துள்ளது.</p><p>இன்று (திங்கட்கிழமை) தொடங்கவுள்ள சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக முதல்வர் மோகன் யாதவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.</p><h2>மோகன் யாதவ் </h2><p>ஜகதீஷ்பூரில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய  <a href="https://www.maalaimalar.com/news/national/ujjain-land-scam-row-bjp-releases-mp-cm-family-property-details-amid-illegal-land-grab-charges">மோகன் யாதவ்</a>, இந்த மசோதா பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சமூக சமத்துவத்தை ஏற்படுத்துவதிலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p> இந்தச் சட்டத்தின்படி, ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>மாநிலத்தில் நடக்கும் அனைத்து திருமணங்களையும் முறைப்படி பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.</p><p>வழக்கமான திருமணங்கள் மட்டுமின்றி, லிவ்-இன் ரிலேஷன்ஷிப், தத்தெடுத்தல், வாடகைத் தாய் முறை மற்றும் ஏஆர்டி மருத்துவ முறை மூலமாகப் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான சட்டப்பூர்வ உரிமைகளை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.</p> <h2>முஸ்லிம்கள்</h2><p>இந்தச் சட்டத்திற்கு பொதுமக்களிடையே, குறிப்பாக சிறுபான்மையினர் மத்தியில் பெரும் ஆதரவு இருப்பதாக முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.</p><p>அவர் கூறுகையில், "முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 80 சதவீதப் பெண்களும், 40 சதவீத ஆண்களும் இந்த பொது சிவில் சட்ட மசோதாவை முழுமையாக ஆதரிக்கின்றனர்.</p><p>சமூக நல்லிணக்கம், பெண் மேம்பாடு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதாவிற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது அரசியல் லாபங்களைக் கடந்து ஆதரவு அளிக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.</p><h2>காங்கிரஸ்</h2><p>இந்த விவகாரத்தை வெறும் 'இந்து-முஸ்லிம்' மதக் கண்ணோட்டத்திலும், வாக்கு வங்கி அரசியலாகவும் மட்டுமே பார்ப்பதாக காங்கிரசை முதல்வர் மோகன் யாதவ் சாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் வாரிசு.. ஏபிவிபி முதல் மத்திய கல்வி அமைச்சர் வரை - யார் இந்த தர்மேந்திர பிரதான்? </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-growing-demand-for-dharmendra-pradhans-resignation</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-growing-demand-for-dharmendra-pradhans-resignation#comments</comments><guid isPermaLink="false">fe0a269a-1cda-445e-b499-709ac75736de</guid><pubDate>Sun, 19 Jul 2026 15:56:36 +0000</pubDate><atom:updated>2026-07-19T15:56:36.249Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,நீட் வினாத்தாள் கசிவு,த சோனம் வாங்சுக்,Sonam Wangchuck,NEET Question Paper Leaked</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/06b9fln7/tn-10.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான்]]></media:title><media:description type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/06b9fln7/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கல்வி அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">தர்மேந்திர பிரதான்</a> அண்மையில் நடந்து முடிந்த நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய அழுத்தம் அதிகரித்து வருகிறது. </p><p>குறிப்பாக, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டது தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. </p><p>இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நேற்று போலீசாரால் தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். </p><p>தொடர்ந்து அழுத்தம் இருந்தபோதிலும் தர்மேந்திர பிரதான் தொடர்ந்து கல்வி அமைச்சராக நீடித்து வருகிறார். இந்த சூழலில் பாஜக அவருக்கு அளிக்கும் முக்கியத்துவத்தின் பின்னணி குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. </p> <h2>தர்மேந்திர பிரதான்</h2><p>1969, ஜூன் 26 அன்று ஒடிசாவின் தால்செர் பகுதியில் பிறந்த தர்மேந்திர பிரதான், முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரதானின் மகன் ஆவார்.</p><p>பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஏபிவிபி மூலமாக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.</p> <h2>அரசியல் பயணம்</h2><p>2004ம் ஆண்டு ஒடிசாவின் தியோகர் தொகுதியிலிருந்து முதன்முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p>பின்னர், 2012ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.</p><p>2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்திய ஆட்சியை பொறுப்பேற்றதிலிருந்து, தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சரவையில் முக்கியமான தூணாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.</p><p>2014 - 2021 வரையிலான காலகட்டத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சராக பணியாற்றினார்.</p><p>சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே அந்த துறையில் நீண்டகாலம் அமைச்சராக பதவி வகித்த பெருமை இவருக்கு உண்டு. இக்காலகட்டத்தில் எக்குத் துறையின் கூடுதல் பொறுப்பையும் அவர் கவனித்துக்கொண்டார்.</p> <h2>கல்வி அமைச்சர்</h2><p>2021 ஜூலை மாதம் மத்திய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2024 தேர்தலில் ஒடிசாவின் சம்பல்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரான அவர் மீண்டும் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்று தற்போது வரை அந்த பதவியில் நீடித்து வருகிறார்.</p><p>தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்க அழுத்தம் கொடுக்கும் வகையில் மத்திய அரசு கல்வி நிதியை முடக்கியது. இந்த சமயத்தில் தர்மேந்திர பிரதான், திமுக அரசு, அரசியலுக்காக மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறது என கூறி தொடர் வார்தைப்போரில் ஈடுபட்டார்.</p> <h2>பேரணி</h2><p>நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி என பல்வேறு தேர்வு குளறுபடிகள் இவரின் நிர்வாக தோல்வியால் நடந்தவை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வந்தபோதிலும் தர்மேந்திர பிரதான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><p>நாளை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்த இருந்த பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் ஒட்டுமொத்த இந்தியக் கல்வித் துறையையும் உலுக்கியுள்ள நிலையில் தேசிய தேர்வு முகமையை முறையாகக் கண்காணிக்கத் தவறியதாகக் கூறி தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>நாகாலாந்தில் கனமழையால் நிலச்சரிவு.. 8 பேர் உயிரிழப்பு  </title><link>https://www.maalaimalar.com/news/national/disaster-8-killed-and-15-houses-destroyed-after-heavy-rain-and-flash-floods</link><comments>https://www.maalaimalar.com/news/national/disaster-8-killed-and-15-houses-destroyed-after-heavy-rain-and-flash-floods#comments</comments><guid isPermaLink="false">f19fe4c6-a2f5-4f58-b808-adbee6ac0009</guid><pubDate>Sun, 19 Jul 2026 15:00:50 +0000</pubDate><atom:updated>2026-07-19T15:00:50.055Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>landslides,heavy rains,Nagaland,கனமழை,நிலச்சரிவு,நாகலாந்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/xeey11y0/tn-9.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ நாகாலாந்து நிலச்சரிவு]]></media:title><media:description type="html"><![CDATA[ நாகாலாந்து நிலச்சரிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/xeey11y0/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாகாலாந்தில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/national/wayanad-tunnel-landslide-four-workers-killed-as-heavy-rain-triggers-collapse-at-anakkampoyil-kalladi-meppadi-project-site">நிலச்சரிவில் </a>சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.  </p><p>நாகாலாந்து மாநிலத்தின் Mon மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.  </p><h2>நிலச்சரிவு</h2><p>இந்த நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளிலிருந்து இதுவரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p>மேலும் 4 பேரின் உடல்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>தற்போது மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, அஸ்ஸாம் ரைபிள்ஸ் உள்ளூர் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>நிலச்சரிவால் சுமார் 15க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்து முழுமையாக சேதமடைந்தன.</p><p>நிலச்சரிவைத் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் மீட்புப் பணிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.</p><p>நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 74,000 மருத்துவ நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பாதிப்பு</h2><p>மான் மாவட்டம் மட்டுமன்றி, மொகோக்ச்சுங் மாவட்டத்தின் துலி உள்ளிட்ட நாகாலாந்தின் பல பகுதிகளும் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.</p><p>பல்வேறு உள்கட்டமைப்புகள் மற்றும் பொது சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>எச்சரிக்கை</h2><p>தொடர்ந்து மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், விழிப்புடன் இருக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அவசர சிகிச்சை பிரிவில் சீலிங் காற்றாடி கழன்று விழுந்து நோயாளி பலி.. டெல்லி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-govt-hospital-accident-patient-dies-after-ceiling-fan-falls-in-emergency-ward</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-govt-hospital-accident-patient-dies-after-ceiling-fan-falls-in-emergency-ward#comments</comments><guid isPermaLink="false">9db4fc95-c100-41e0-a1d2-fa597105e842</guid><pubDate>Sun, 19 Jul 2026 14:36:24 +0000</pubDate><atom:updated>2026-07-19T14:36:24.803Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மருத்துவமனை,Government Hospital,நோயாளி,patient,delhi,டெல்லி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/hamt42tz/tn-8.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டெல்லி அரசு மருத்துவமனை]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி அரசு மருத்துவமனை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/hamt42tz/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற குரு தேக் பகதூர் <a href="https://www.maalaimalar.com/topic/government-hospital">அரசு மருத்துவமனை</a>யில் அவசர சிகிச்சை வார்டில் சீலிங் காற்றாடி கழன்று விழுந்ததில் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. </p><h2>விபத்து </h2><p>உயிரிழந்த நோயாளி 42 வயதான முகமது அக்பர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். </p><p>கடும் நிமோனியா காய்ச்சல் மற்றும் அதிக ரத்த அழுத்தம் காரணமாக அவர் நேற்று தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில், அவசர சிகிச்சை வார்டில் இருந்த அக்பருக்கு அங்கிருந்த செவிலியர் ஒருவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். </p><p>அப்போது, அவர்களுக்கு மேலே சுற்றிக் கொண்டிருந்த சீலிங் காற்றாடி திடீரென அடியோடு கழன்று அக்பர் மற்றும் அந்த செவிலியர் இருவர் மீதும் விழுந்துள்ளது.</p><p>இந்த விபத்து நடந்த அடுத்த 3 மணி நேரத்திற்குள் நள்ளிரவில் அக்பர் பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>மருத்துவமனை நிர்வாகம் வழங்கிய இறப்புச் சான்றிதழில், அக்பர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நிமோனியா மற்றும் ரத்த அழுத்த நோய்களால்தான் உயிரிழந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>இருப்பினும், காற்றாடி விழுந்த அதிர்ச்சியும் காயமும் தான் அவர் மரணத்துக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p> <h2>குரு தேக் பகதூர் அரசு மருத்துவமனை</h2><p>டெல்லியின் டிரான்ஸ் யமுனா பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர்நாடியாக இந்த ஜிடிபி மருத்துவமனை விளங்கி வருகிறது.</p><p>1991ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மருத்துவமனையின் உள்கட்டமைப்பு தற்போது மிகவும் மோசமடைந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.</p><p>கடந்த மாதம் தான், இந்த மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டர் அமைந்துள்ள பகுதியில் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.</p>]]></content:encoded></item><item><title>‘தாய்மொழியை தாண்டி அனைவரும் கூடுதலாக ஒரு இந்திய மொழியையாவது கற்றுகொள்ள வேண்டும்’ - அமித்ஷா </title><link>https://www.maalaimalar.com/news/national/everyone-should-learn-an-additional-indian-language-besides-their-mother-tongue-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/national/everyone-should-learn-an-additional-indian-language-besides-their-mother-tongue-amit-shah#comments</comments><guid isPermaLink="false">4b156c34-8626-446d-a3ba-ea55bc6dae53</guid><pubDate>Sun, 19 Jul 2026 14:34:45 +0000</pubDate><atom:updated>2026-07-19T14:34:45.101Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தாய்மொழி,Mother tongue,hm amit shah,Indian language,இந்திய மொழி,உள்துறை அமைச்சர் அமித்ஷா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/676iqqau/New-Project-2026-07-19T195124.759.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘தாய்மொழியை தாண்டி அனைவரும் கூடுதலாக ஒரு இந்திய மொழியையாவது கற்றுகொள்ள வேண்டும்’ - அமித்ஷா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/676iqqau/New-Project-2026-07-19T195124.759.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் வகையில், மாணவர்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியுடன் சேர்த்து, கூடுதலாக ஒரு இந்திய மொழியையாவது கற்றுக் கொள்ளவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். </p><p>கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலக வளாகத்தில், ‘மொழிகளுக்கான அருங்காட்சியம்’  திறப்பு விழாவில் கலந்துகொண்டு, மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,</p><p>“இந்த அருங்காட்சியகம் 22 இந்திய மொழிகளின் பரிணாம வளர்ச்சியை காட்சிப்படுத்தும். இந்த அருங்காட்சியகத்திற்கான அறிவிப்பை 2020-ல் பிரதமர் மோடி வெளியிட்டார். நம் நாட்டில் குறுகிய மனப்பான்மைக்கு இடமில்லை. குறுகிய எண்ணங்கள் இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாக இருக்க முடியாது.</p><p>இந்தியாவின் மொழி பன்முகத்தன்மை நாட்டின் வளமான பாரம்பரியத்தைத் தாங்கி நிற்கிறது.  மொழியின் மூலமாக மட்டுமே ஒரு நாட்டின் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ள முடியும்.  எனவே, ஒவ்வொரு மாணவரும் தங்களது தாய்மொழியைத் தாண்டி, கூடுதலாக ஒரு இந்திய மொழியையாவது கற்றுக்கொள்வது அவசியமாகும்.” என தெரிவித்தார். </p><p>இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியும் கலந்துகொண்டார். </p>]]></content:encoded></item><item><title>2 மணி நேரத்தில் 540-லிருந்து 167 ஆகக் குறைந்த மதிப்பெண்.. நீட் மறுதேர்வு ரிசல்டில் குளறுபடி - மாணவி குற்றச்சாட்டு </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-re-exam-row-student-alleges-omr-number-change-and-drastic-score-variation</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-re-exam-row-student-alleges-omr-number-change-and-drastic-score-variation#comments</comments><guid isPermaLink="false">5f2aab51-8de6-4609-aa0f-de0488d2d21d</guid><pubDate>Sun, 19 Jul 2026 14:11:36 +0000</pubDate><atom:updated>2026-07-19T14:11:36.841Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Neet exam,தேசிய தேர்வு முகமை,National Testing Agency,நீட் மறுதேர்வு,NEET re examination</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/6htrwirp/tn-6.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஆரியா சிங் 

]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆரியா சிங் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/6htrwirp/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/worried-about-neet-results-tamil-nadu-government-mental-health-helpline">நீட் மறுதேர்வு முடிவுகள்</a> வெளியாகி உள்ள நிலையில், மதிப்பெண்களில் குளறுபடிகள் உள்ளதாக புகார்கள் எழுந்து வருகின்றன. </p><p>உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ஆரியா சிங் என்ற மாணவி  இந்த ஆண்டு நீட் மறுதேர்வு எழுதியிருந்தார். </p><p>முடிவுகள் வெளியாவதற்கு முன்பு, தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் முதலில் வெளியான ஓஎம்ஆர் நகலில் கேள்விகளின் வரிசை மாறியிருந்தது. இது குறித்து ஆரியா சிங் எழுப்பிய புகாரை ஏற்றுக்கொண்ட தேசிய தேர்வு முகமை, ஓஎம்ஆர் நகலைத் திருத்தியது.  </p> <h2>முடிவுகளில் குளறுபடி</h2><p>தேசிய தேர்வு முகமை வெளியிட்ட இறுதி விடைக்குறிப்பின்படி கணக்கிட்ட போது ஆரியா சிங்கிற்கு 609 மதிப்பெண்கள் வர வேண்டும்.</p><p>ஆனால், தேர்வு முடிவுகள் வெளியான இரவு, முதலில் அவரது மதிப்பெண் 540 எனக் காட்டியுள்ளது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மீண்டும் சோதித்த போது, அது 167 ஆக மாறியுள்ளது.</p><p>திருத்தத்திற்கு முன்பாக 3823333 ஆக இருந்த ஓஎம்ஆர் தாளின் வரிசை எண், திருத்தத்திற்குப் பிறகு 3824338 என மாறியுள்ளதாக அவர் வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளார்.</p> <h2>புகார்</h2><p>தற்போது தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் ஆரியா சிங்கிற்கு 167 மதிப்பெண்கள் மட்டுமே காட்டுவதால் மனமுடைந்த அவரும் அவரது குடும்பத்தினரும் பிரதமர் அலுவலகம், மத்திய கல்வி அமைச்சர் மற்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுக்கு ஆதாரங்களுடன் மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியுள்ளனர்.</p><p>மாணவி ஆரியா சிங்கின் வீடியோ வாக்குமூலத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.</p><p>ஆம் ஆத்மி தனது எக்ஸ் பக்கத்தில், "தேசிய தேர்வு முகமை நாட்டின் 'தேசிய அதிர்ச்சி முகமை' ஆக மாறிவிட்டது. இந்த ஆவணங்கள் ஏதேனும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலியாக உருவாக்கப்பட்டவையா? நாடு இதற்குப் பதில் கேட்கிறது" என்று சாடியுள்ளது.</p><p>காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், "கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களே... நீட் மறுதேர்வு நடத்துவதற்காக நீங்கள் விமானப் படையை எல்லாம் பயன்படுத்தி ஏற்பாடு செய்த சிஸ்டம் இதுதானா?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"> Another student named Arya singh from Kanpur has claimed that there is a discrepancy in her result<br><br>She claims that her calculated score was 609 then in NTA&#39;s result it was 540 which was changed to 167 in just two hours<br><br>Ban NTA and sack Ddharmendra pradhan as soon as… <a href="https://t.co/7td1W71jZ0">pic.twitter.com/7td1W71jZ0</a></p>&mdash; Youth Against Silence (@YouthofIndia99) <a href="https://x.com/YouthofIndia99/status/2078692212200935568?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>எச்சரிக்கை</h2><p>நாடு முழுவதும் பல்வேறு மாணவர்களிடமிருந்தும் மதிப்பெண் குளறுபடிகள் குறித்த புகார்கள் வரும் நிலையில், தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.</p><p>மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை உயர்த்துவதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட ஓஎம்ஆர் தாள்களைப் புகார்களாக சமர்ப்பித்து வருவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.</p><p>தங்களது சரிபார்ப்பு முறையில் இத்தகைய போலி ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைபாயும் என்றும் எச்சரித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நதிநீர் இணைப்புக்கு எதிராக பழங்குடியினரின் 15 நாள் போராட்டத்தை வலுக்கட்டாயமாக கலைத்த போலீஸ் | Madhya pradesh </title><link>https://www.maalaimalar.com/news/national/ken-betwa-river-link-protest-tribal-activists-detained-amid-forest-loss-corruption-allegations</link><comments>https://www.maalaimalar.com/news/national/ken-betwa-river-link-protest-tribal-activists-detained-amid-forest-loss-corruption-allegations#comments</comments><guid isPermaLink="false">89b9e496-5009-4bf5-a16b-9d5f452caf30</guid><pubDate>Sun, 19 Jul 2026 13:28:08 +0000</pubDate><atom:updated>2026-07-19T13:28:08.814Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,போராட்டம்,Madhya Pradesh,Tribals,மத்தியப் பிரதேசம்,பழங்குடியினர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/e54gfz1y/tn-5.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ போராட்டம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ போராட்டம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/e54gfz1y/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தில் கென் மற்றும் பெத்வா ஆகிய இரண்டு நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு எதிராக பழங்குடியினர் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களை இன்று போலீசார் வலுக்கட்டாயமாக கலைத்தனர். </p><p>இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி கடந்த 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் அமித் பட்நாகரை  கைது செய்த போலீசார், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக பேருந்துகளில் ஏற்றி அவர்களது சொந்த கிராமங்களுக்கு திருப்பி அனுப்பினர்.</p><h2>இந்தியாவின் முதலாவது நதி நீர் இணைப்புத் திட்டம்</h2><p>இந்தியாவின் முதலாவது நதி நீர் இணைப்புத் திட்டம் கென்-பெத்வா நதி நீர் இணைப்பு திட்டம்.  </p><p>மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள வறட்சிமிக்க புந்தேல்கண்ட் பகுதிக்கு குடிநீர் மற்றும் பாசன வசதியை வழங்குவதற்காக கென் நதியில் உள்ள உபரி நீரை பெத்வா நதிக்கு திருப்பி விடுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.</p> <h2>பாதிப்பு</h2><p>இத்திட்டத்திற்காகப் பன்னா புலி காப்பகம் உட்படப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் நீரில் மூழ்கி அழியும் அபாயம் உள்ளதாக கருதப்படுகிறது.</p><p>இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பழங்குடியின மக்களுக்கான மறுவாழ்வு நிதி வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பழங்குடியினரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.</p> <figure><img alt="போராட்டம் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/3q80381v/tn-4.jpg" /><figcaption>போராட்டம் </figcaption></figure><h2>போராட்டம் கலைப்பு</h2><p>இந்த திட்டம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள முறைகேடுகளுக்கு எதிராக கடந்த ஜூலை 3ஆம் தேதி முதல் சத்தர்பூர் மாவட்டத்தின் பரானா நதிக்கரையில் பழங்குடியினப் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து போராட்டம் நடத்தி வந்தனர்.  </p><p>போராட்டக்காரர்கள், நீரில் இறங்கிப் போராடுவது, பாடையில் படுத்துப் போராடுவது மற்றும் தூக்குக்கயிற்றை அணிந்துகொண்டு போராடுவது என பல்வேறு வகையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வந்தனர்.</p><h2>ரூ. 400 கோடி ஊழல்</h2><p>போராட்டக் குழுவின் முக்கிய தலைவரான திவ்யா அகிர்வார்,</p><p>"இந்த நதி இணைப்புத் திட்டத்தில் சுமார் 400 கோடி ரூபாய் அளவிற்குப் ஊழல் நடந்துள்ளது. இது குறித்த ஆதாரங்களுடன் நாங்கள் ஊடகங்களைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தோம்.</p><p>ஆனால், அதற்குச் சற்று முன்பாக விடியற்காலை 5 மணிக்கே மிகப்பெரிய போலீஸ் படை திரண்டு வந்து, அமித் பட்நாகர் உட்பட எங்களையெல்லாம் வலுக்கட்டாயமாகக் கைது செய்தது" என சாடியுள்ளார்.</p> <h2>போலீஸ் விளக்கம்</h2><p>இந்த போராட்டத்தில் கடந்த 11 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் இருந்ததால் அமித் பட்நாகரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதன் காரணமாகவே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.</p><p>கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆதித்யா பட்லே கூறுகையில், "கட்டுமானத்தில் உள்ள ஒரு பாலத்திற்கு அடியிலும் நதியிலும் இறங்கிப் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.</p><p>நதியில் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் ஏற்பட்ட பாதுகாப்பு அபாயங்கள் காரணமாகவே போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்" என்று தெரிவித்தார்.</p> <h2>ஒடுக்கப்படும் போராட்டங்கள்</h2><p>டெல்லியில் மத்திய அரசின் கீழ் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகிறது. </p><p>இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் <a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuks-father-undertook-a-five-day-fast-indira-gandhi-herself-traveled-to-ladakh-to-pacify-him-historical-background">சோனம் வாங்சுக்</a> நேற்று டெல்லி போலீசாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டார். </p><p>மேலும் நாளை பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும் பழங்குடியினரின் போராட்டம் ஒடுக்கப்பட்டுள்ளது விமர்சனத்தை குவித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பி.வி.சிந்துவின் சாதனை நம் இளம் வீரர்களை ஊக்குவிக்கும்..!- பிரதமர் மோடி வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-congratulates-pv-sindhu-on-historic-japan-open-title</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-congratulates-pv-sindhu-on-historic-japan-open-title#comments</comments><guid isPermaLink="false">b9639ff3-0fb4-4803-8893-18763e2ef0ed</guid><pubDate>Sun, 19 Jul 2026 13:03:30 +0000</pubDate><atom:updated>2026-07-19T13:03:30.467Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pv sindhu,பிவி சிந்து,பேட்மிண்டன்,pm modi,badminton,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/3vh0mpny/PV-sindhu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PV Sindhu- PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/3vh0mpny/PV-sindhu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜப்பான் ஓபன் சர்வதேச  பேட் மிண்டன் போட்டி டோக்கியோவில் நடை பெற்றது.   இன்று காலை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி யில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து -முன்னாள் உலக சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்) மோதினார்கள்.</p><h2>சிந்து சாம்பியன்</h2><p> இதில் 31 வயதான பி.வி.சிந்து 21-17, 21-17 என்ற நேர்செட் கணக்கில் யமா குச்சியை அதிர்ச்சிக் கர மாக வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.</p><p>தர வரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.</p><p>2024-ம் நடந்த சையது மோடி சர்வதேச போட்டியில் பெற்ற வெற்றிக்கு பிறகு  இந்த பட்டத்தை கைப்பற்றி உள்ளார். 2019-ம் ஆண்டு உலக சாம்பியனுக்கு பிறகு சிந்து கைப்பற்றிய சிறப்பான வெற்றி இதுவாகும்.</p><p>சிந்து ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கம் வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>பிரதமர் மோடி வாழ்த்து</h2><p>இந்திய பேட்மிண்டன் விளையாட்டில் வரலாற்று சாதனை படைத்த பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>இந்திய பேட்மிண்டனுக்கு ஒரு வரலாற்றுச் சாதனை!</p><p>ஜப்பான் ஓபன் 2026 போட்டியில் வெற்றி பெற்ற பி.வி. சிந்துவுக்கு வாழ்த்துகள். போட்டி முழுவதும் அவரது மனவுறுதியும் அபாரத் திறமைகளும் முழுமையாக வெளிப்பட்டன. இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் அவர் என்பது இந்தச் சாதனையை மேலும் சிறப்பாக்குகிறது. இது நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களை விளையாடி ஜொலிக்கத் தூண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>5 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் தந்தை.. லடாக்கிற்கே சென்று சமாதானம் செய்த இந்திரா காந்தி! - வரலாற்று பின்னணி</title><link>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuks-father-undertook-a-five-day-fast-indira-gandhi-herself-traveled-to-ladakh-to-pacify-him-historical-background</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuks-father-undertook-a-five-day-fast-indira-gandhi-herself-traveled-to-ladakh-to-pacify-him-historical-background#comments</comments><guid isPermaLink="false">8dc56fa9-192c-4d63-b0ec-2e898cc5e9bd</guid><pubDate>Sun, 19 Jul 2026 12:26:33 +0000</pubDate><atom:updated>2026-07-19T12:26:33.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,ladakh,Indira Gandhi,இந்திரா காந்தி,Sonam Wangchuk,பிரதமர் மோடி,சோனம் வாங்சுக்,லடாக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/cfzmdknu/tn-3.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ இந்திரா காந்தி, சோனம் வாங்யால்
]]></media:title><media:description type="html"><![CDATA[ இந்திரா காந்தி, சோனம் வாங்யால்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/cfzmdknu/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் பிற இயக்கங்களை சேர்ந்த இளைஞர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><h2>சோனம் வாங்சுக் </h2><p>இந்த போராட்டத்தில் இணைந்து கடந்த 20 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த லடாக் செயல்பாட்டார்கள் மற்றும் கல்வியாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-refuses-to-transfer-sonam-wangchuk-to-a-private-hospital">சோனம் வாங்சுக்</a> நேற்று டெல்லி காவல்துறையால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். </p><p>9 கிலோவுக்கு மேல் குறைந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தபோதும் மத்திய அரசு தரப்பில் ஆழ்ந்த மௌனம் மட்டுமே பதிலாக இருந்து வருகிறது. </p><p>இந்த சூழலில் நேற்று அவர் வலுக்கட்டாயமாக தூக்கிச்செல்லப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>சோனம் வாங்யால்</h2><p>இந்த சூழலில் 1984ம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/topic/indra-gandhi">இந்திரா காந்தியின்</a> அரசை எதிர்த்து சோனம் வாங்சுக் உடைய தந்தை சோனம் வாங்யால் லடாக் உரிமைகளுக்காக உண்ணாவிரதம் இருந்த வரலாற்று பின்னணி கவனம் பெற்று வருகிறது.</p><p>1965ல் தனது 23வது வயதிலேயே எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு, அன்றைய காலகட்டத்தில் மிக இளம் வயதில் எவரெஸ்ட் ஏறிய நபர் என்ற உலக சாதனையைப் படைத்தவர்.</p><p>பின்னர் லடாக்கின் முக்கிய அரசியல் தலைவராக உருவெடுத்து, ஜம்மு காஷ்மீர் சட்டமேலவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றினார்.</p><p>1984 இல் லடாக் மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கோரி சோனம் வாங்யால் உண்ணாவிரதம் இருந்தார். 5 நாட்களாக தொடர்ந்த அவரின் உண்ணாவிரத போராட்டம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்தை ஈர்த்தது.</p><h2>இந்திரா காந்தி</h2><p>இந்திரா காந்தி நேரடியாக லடாக்கின் லே பகுதிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். லடாக் மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து அவரின் உண்ணாவிரதத்தை முடிக்கச் செய்தார்.</p><p>ஐந்தாண்டுகளுக்கு பிறகு 1989ல் லடாக் மக்களின் நீண்டகாலக் கோரிக்கை சட்ட வடிவம் பெற்றது.</p><p>அரசியலமைப்புச் சட்டத்தின் 342வது பிரிவின் கீழ் லடாக்கில் வசிக்கும் பால்டி, பேடா, போட், ப்ரோக்பா, சாங்பா, கர்ரா, மோன் மற்றும் புரிக்பா ஆகிய 8 சமூகங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டது.</p><p>இது லடாக் வரலாற்றின் மிகப்பெரிய அரசியல் வெற்றியாகக் கருதப்படுகிறது.</p><h2>லடாக் மாநில அந்தஸ்து போராட்டம்</h2><p>ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்து வந்தது லடாக். 2019இல் ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை ரத்து செய்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை தனித்தனி யூனியன் பிரதேசமாக்கியது மத்திய பாஜக அரசு. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டுமே தங்களுக்கு மாநில அந்தஸ்து வேண்டி போராடி வருகிறது.</p><p>கடந்த ஆண்டு லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் 6வது அட்டவணையில் சேர்ப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோரி 35 நாட்கள் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் அவரின் உண்ணாவிரதம் இளைஞர்களை தூண்டிவிட்டதாக கூறி அவரை கைது செய்து பாஜக அரசு திகார் சிறையில் அடைத்தது.</p> <h2>பாகிஸ்தான் ஏஜென்ட் - பாஜக அரசு </h2><p>அவரை பாகிஸ்தான் ஏஜென்ட் என துணை ஆளுநரின் ஆளுநரின் கீழ் செயல்படும் லடாக் போலீசார் குற்றம்சாட்டினார். மாதக்கணக்கில் அவர் சிறையில் இருந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்று அவரை விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டது. கடந்த மார்ச்சில் அவர் விடுதலை ஆனார்.</p><p>இந்த சூழலில் மாணவர்கள் எதிர்காலத்தை முன்னிருத்தி அவர் உண்ணாவிரதம் தொடங்கினார். </p><p>ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவரின் கோரிக்கைகளை காதில் வாங்கவோ குறைந்தபட்சம் பேச்சுவார்த்தை நடத்தவோ முன்வரவில்லை. </p>]]></content:encoded></item><item><title>சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-refuses-to-transfer-sonam-wangchuk-to-a-private-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-refuses-to-transfer-sonam-wangchuk-to-a-private-hospital#comments</comments><guid isPermaLink="false">1fca18c7-1d3b-4cf5-b32d-59291b73ed1d</guid><pubDate>Sun, 19 Jul 2026 11:59:49 +0000</pubDate><atom:updated>2026-07-19T11:59:49.477Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi HC,Sonam Wangchuk,தனியார் மருத்துவமனை,private hospital,டெல்லி உயர் நீதிமன்றம்,சோனம் வாங்சுக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/92fm8cgu/New-Project-2026-07-19T170533.669.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/92fm8cgu/New-Project-2026-07-19T170533.669.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை சஃப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்றக்கோரிய அவரது மனைவியின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. </p><p>இப்போதைக்கு இந்த உத்தரவு தேவையற்றது என தெரிவித்த நீதிமன்றம், மூன்று நாட்களுக்குகள் சோனம் உடல்நிலை குறித்த புதிய அறிக்கையை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை ஜூலை.24ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. </p><p>வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ தொடர்ந்த இந்த வழக்கில், ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், வாங்சுக்கிற்கென தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளதையும், குடும்பத்தினர் அனைவரும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவர் அருகில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியது.</p><p>“இதைக் கருத்தில் கொண்டு, இந்தக் கட்டத்தில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை” என தெரிவித்தது. </p><h2>வாங்சுக்கின் மனைவி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டது என்ன?</h2><p>அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனவும், தனது கணவரின் உடல்நிலை மோசமடைவதற்கு முன்பு அவரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.</p><p>பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும், மருத்துவமனை அதிகாரிகள் வாங்சுக்கை டிஸ்சார்ஜ் செய்யவோ அல்லது அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றவோ அனுமதி மறுத்துவிட்டதாக அந்த மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.</p><p>வாங்சுக் அனுமதிக்கப்பட்டுள்ள தளத்தில் 30 போலீசாரும், மருத்துவமனை முழுவதும் 100கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதால் குடும்பத்தினரால் சுதந்திரமாக வாங்சுக்கை அணுக முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். </p><p>“இது மருத்துவ சிகிச்சை அல்ல. இது சட்டவிரோதக் காவலில் வைத்தல்” எனவும் கூறியுள்ளார். மேலும், தங்கள் அன்புக்குரியவர் எங்கு சிகிச்சை பெற வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, எந்தவொரு குடும்பமும் ஒரு அரசுடன் போராட வேண்டிய நிலை யாருக்கும் வரக்கூடாது எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் வாங்சுக்கின் முழுமையான ஒப்புதல் இல்லாமலோ, அவரால் ஒப்புதல் அளிக்க இயலாத பட்சத்தில், அவரது மனைவியின் ஒப்புதல் இல்லாமலோ அதிகாரிகள் எந்தவொரு சிகிச்சையையும் அளிக்கக் கூடாது என உத்தரவிடவும் மனுக் கோரியது. </p><h2>வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட சோனம் வாங்சுக்</h2><p>நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என கடந்த மாதம் முதல் கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வாங்சுக், ஜூன்.28 முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.</p><p>உண்ணாவிரதம் 15 நாட்களை தாண்டிய நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனையடுத்து வாங்சுக்கை காப்பற்றக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. </p><p>அதனைத்தொடர்ந்து வாங்சுக்கை சோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், 9 கிலோவுக்கு அதிகமான இடையை அவர் இழந்ததாகவும் அறிக்கை வெளியிட்டனர். இந்த உண்ணாவிரதம் தொடர்ந்தால் வாங்சுக் இறக்க நேரிடலாம் எனவும் வியாழன்க்கிழமை அறிக்கை வெளியிட்டனர்.</p><p>இந்நிலையில் நேற்று மத்திய அரசின் சார்பில் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர் போலீசார். இச்சூழலில் அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக்கோரி அவரது மனைவி வழக்குத் தொடர்ந்தார்.</p><p>இதனிடையே கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே உண்ணாவிரதப் போராட்டத்தை கையிலெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>பார்லரில் டாட்டூ குத்திய பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று - அதிர்ச்சி சம்பவம் </title><link>https://www.maalaimalar.com/news/national/tattoo-hiv-alert-woman-contracts-hiv-after-getting-tattoo-at-delhi-parlour</link><comments>https://www.maalaimalar.com/news/national/tattoo-hiv-alert-woman-contracts-hiv-after-getting-tattoo-at-delhi-parlour#comments</comments><guid isPermaLink="false">74cf990f-7e2e-4460-ab09-17bef9ce2ef0</guid><pubDate>Sun, 19 Jul 2026 11:34:44 +0000</pubDate><atom:updated>2026-07-19T11:34:44.722Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டாட்டூ,AIDS,tattoo,HIV,எய்ட்ஸ்,எச்ஐவி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/yhuv4261/tn-1.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டாட்டூ ]]></media:title><media:description type="html"><![CDATA[ டாட்டூ ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/yhuv4261/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள ஒரு பார்லரில் <a href="https://www.maalaimalar.com/health/naturalbeauty/tattoo-beautiful-is-it-dangerous-595944">டாட்டூ </a>குத்திய சில நாட்களிலேயே பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பெண் </h2><p>உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 32 வயதுப் பெண் பிறப்புறுப்பில் ஏற்பட்ட தொற்று காரணமாக கான்பூர் மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். </p><p>அறிகுறிகளை அறிந்து மருத்துவர்கள் அவருக்கு எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ்-பி பரிசோதனைகளை மேற்கொள்ளப் பரிந்துரைத்தனர். </p><p>அவருக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் என பரிசோதனை முடிவு வந்துள்ளது. பெண்ணுக்கு தற்போது அரசு மருத்துவமனையில் இலவச ஆண்டி ரெட்ரோவைரல் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.</p>  <h2>டாட்டூ ஊசியால் வந்த வினை</h2><p>இது குறித்து மருத்துவக் கல்லூரியின் தோல் மருத்துவப் பிரிவு இணைப் பேராசிரியர் டாக்டர் ஸ்வேதாங்க் கூறுகையில்,</p><p>"பாதிக்கப்பட்ட பெண் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் டெல்லியில் உள்ள ஒரு டாட்டூ பார்லருக்கு சென்று பச்சை குத்தியுள்ளார்.</p><p>அங்கு முறையாக ஸ்டெர்லைஸ் செய்யப்படாத அல்லது ஏற்கனவே மற்றொருவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகளை இவருக்குப் பயன்படுத்தியதே இந்த எச்.ஐ.வி தொற்றுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என நம்புகிறோம்.</p><p>எச்.ஐ.வியை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், முறையான தொடர் சிகிச்சையின் மூலம் அதைக் கட்டுப்படுத்த முடியும். இதற்காக நோயாளி வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும்" என்று தெரிவித்தார்</p> <h2>மருத்துவர்கள் எச்சரிக்கை</h2><p>முறையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத, தரம் குறைந்த டாட்டூ நிலையங்களில் பச்சை குத்திக் கொள்வது எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ்-பி போன்ற ரத்தத்தின் மூலம் பரவக்கூடிய கொடிய நோய்களுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>மேலும், டாட்டூ குத்தப் பயன்படுத்தப்படும் மைகள் தோலில் கடுமையான ஒவ்வாமை போன்ற ஆபத்தான தோல் நோய்களை ஏற்படுத்தக்கூடும்.</p><p>குறிப்பாக, டாட்டூக்களில் பயன்படுத்தப்படும் சிகப்பு மற்றும் பச்சை நிற மைகள் தான் தோலில் அரிப்பு, தடிப்பு மற்றும் கடுமையான அலர்ஜிகளை மிக எளிதாக உருவாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காஷ்மீரில் காலை முதல் தொடர் மழை- வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பரிதமாக உயிரிழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/heavy-rains-trigger-deadly-floods-and-landslides-in-kashmir</link><comments>https://www.maalaimalar.com/news/national/heavy-rains-trigger-deadly-floods-and-landslides-in-kashmir#comments</comments><guid isPermaLink="false">c0b0103f-68ce-439d-9b89-e532485fcc12</guid><pubDate>Sun, 19 Jul 2026 11:15:34 +0000</pubDate><atom:updated>2026-07-19T11:15:34.073Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காஷ்மீர்,மேகவெடிப்பு,Rajouri,jammukashmir,FlashFloods,இயற்கைசீற்றம்,RainAlert</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/q29xkrcz/JammuKashmirFlashFloods" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JammuKashmirFlashFloods   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/q29xkrcz/JammuKashmirFlashFloods?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு காஷ்மீரின் எல்லை மாவட்டங்களான பூஞ்ச் மற்றும் ரஜௌரியில் இன்று காலை முதல் பெய்த மழையில் பெரு வெள்ளம் மற்றும் மேகவெடிப்பு காரணமாக கோர விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p>அங்குள்ள முக்கிய ஆறுகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும், நிலச்சரிவிலும் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். </p><p>மேலும் பலர் வெள்ளித்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர்.</p><h2><strong>பெருக்கெடுத்த ஆற்றுவெள்ளம்...</strong></h2><p>இன்று அதிகாலை முதலே கொட்டித்தீர்த்த மழையால் தர்ஹாலி, காண்ட்லி, சுக்தோ, ஜமோலா ஆகிய முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. </p><p>சில நிமிடங்களிலேயே ஆற்று நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. ரஜௌரியின் புதிய பேருந்து நிலையம் வெள்ளத்தில் முற்றிலும் சிதைந்தது. </p><p>அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. </p><p>நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.</p><h2><strong>ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாயம்:</strong></h2><p>வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் வீடுகள் இடிந்து விழுந்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. </p><p>வெள்ளத்தில் ஒரு வீடு ஒட்டுமொத்தமாக அடித்துச் செல்லப்பட்டதில் அப்துல் ஹமீது, அவரது மனைவி ஷரீபா பேகம், மகள் அரீபா, சகோதரி மனீரா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>நூனாபந்தி கிராமத்தில் நாஜியா கௌசர் என்ற பெண் வீடு இடிந்து பலியானார். சுரான்கோட் பகுதியில் ஷாஜைப் அகமது என்ற வாலிபர் வீடு இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். </p><p>மார்ஹோட் ஆற்றுப் பகுதியில் இரம் என்ற சிறுமி வெள்ளத்தில் மூழ்கி பலியாகியுள்ளார். துந்தக் லாடூங் பாலம் அருகே அடையாளம் தெரியாத பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.</p><h2><strong>அதிவிரைவு மீட்புப் பணிகள்..</strong></h2><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், உள்ளூர் நிர்வாகம் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் இணைந்து நள்ளிரவிலும் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். </p><p>நிலைமையை கவனித்து வருவதாகக் கூறியுள்ள ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, "மக்களின் உயிரைக் காப்பதே தற்போதைய முதன்மை நோக்கம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு போர்க்கால அடிப்படையில் வழங்கும்" என உறுதியளித்துள்ளார்.</p><h2><strong>வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..</strong></h2><p>ஜம்மு காஷ்மீர் முழுவதும் வரும் ஜூலை 23 ஆம் தேதி வரை மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. </p><p>இதனால் பொதுமக்கள் ஆறுகள் மற்றும் மலைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவசர உதவிக்காகப் பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு: &quot;பிரதமரின் மவுனம் ஏற்றுக்கொள்ள முடியாதது&quot;- ராகுல்காந்தி-கார்கே கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/ayodhya-ram-temple-donation-scam-pm-silence-unacceptable-rahul-kharge-letter</link><comments>https://www.maalaimalar.com/news/national/ayodhya-ram-temple-donation-scam-pm-silence-unacceptable-rahul-kharge-letter#comments</comments><guid isPermaLink="false">58c3b890-82ce-467c-a22c-e5802959e66b</guid><pubDate>Sun, 19 Jul 2026 10:49:23 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:49:23.292Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,pm modi,அயோத்தி ராமர் கோவில்,Ayothi ramar temple,நன்கொடை முறைகேடு,பிரதமர் மவுனம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/m8wriytv/Rahul-gandhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Malligarjuna Kharghe-Rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/m8wriytv/Rahul-gandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p><p>இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு பாராளுமன்ற மக்களவை தலைவர் ராகுல்காந்தி, மேல்-சபை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கூட்டாக கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். </p><h2>கடிதம்</h2><p>கடிதத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு காரணமாக, நம்பிக்கை மற்றும் பக்தியுடன் தங்கள் கடின உழைப்பின் பணத்தை நன்கொடையாக வழங்கிய லட்சக்கணக்கான பக்தர்கள், ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். </p><p>இத்தகைய குற்றச் செயல் நடந்திருக்கும் நிலையில் நீங்கள் (பிரதமர் மோடி) மவுனம் காப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. பொறுப்புக்கூறலையும் இழப்பீட்டையும் உறுதி செய்வது உங்கள் கடமை ஆகும்.</p><p>அறக்கட்டளையின் நிதி விவகாரங்கள் குறித்தும்-ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட அனைத்து காணிக்கைகளும் கையாளப்பட்ட விதம் குறித்தும் உடனடியாக சுதந்திரமான மற்றும் விரிவான விசாரணைக்கு உத்தரவிடு மாறு உங்களை வலியுறுத்துகிறோம். </p><p>பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், விசாரணையின் முடிவுகளையும் அறக்கட்டளையின் கணக்கு விவரங்களையும் பொது வெளியில் வெளியிட வேண்டும்.</p><p>நீங்கள் எவ்வளவு வெளிப்படையாகவும், விரைவாகவும் செயல்படுகிறீர்கள் என்பதில்தான் உங்கள் அரசாங்கத்தின் மற்றும் அந்த அறக்கட்டளையின் நம்பகத்தன்மை அடங்கி உள்ளது. இதை இந்திய மக்கள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள். </p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மத்தியப் பிரதேசத்தில் மழை வேண்டி கழுதைகளுக்கு குலாப் ஜாமூன் ஊட்டி சிறப்பு வழிபாடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-rain-ritual-bhopal-donkeys-fed-gulab-jamun-in-unique-prayer-for-monsoon</link><comments>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-rain-ritual-bhopal-donkeys-fed-gulab-jamun-in-unique-prayer-for-monsoon#comments</comments><guid isPermaLink="false">ba0a618d-fdbe-40e9-9dc4-9b729b79d251</guid><pubDate>Sun, 19 Jul 2026 10:46:28 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:46:28.428Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,Bhopal,போபால்,கழுதை,donkey</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/t8dc9o50/tn.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கழுதைகளுக்கு குலாப் ஜாமூன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கழுதைகளுக்கு குலாப் ஜாமூன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/t8dc9o50/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>வழிபாடு </h2><p>மத்தியப் பிரதேச மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பலவீனமடைந்துள்ளதால் தலைநகர் போபாலில்  மழை வேண்டி கழுதைகளுக்கு குலாப் ஜாமுன் ஊட்டும் விசித்திரமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81">வழிபாடு </a>கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p> மழைக் கடவுளான இந்திரனை மகிழ்வித்து, மாநிலத்தில் போதிய மழை பொழிய வைக்க போபாலில்  கோலார் சாலைப் பகுதியில் நடந்த இந்த சடங்கில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும் மழை வேண்டி வழிபாடும் நடத்தப்பட்டது.</p><p>கழுதைகளுக்கு குலாப் ஜாமுன் ஊட்டிய விசித்திர சடங்கின் வீடியோ இணையத்தில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது</p><p>இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,</p><p>"பருவமழை தாமதமாகும் போதோ அல்லது போதிய மழை பொழியாமல் வறட்சி ஏற்படும் போதோ, எங்களது முன்னோர்கள் கடைப்பிடித்த ஒரு நீண்டகால பாரம்பரிய வழக்கத்தின்படியே இந்தச் சடங்கை நடத்தினோம்.</p><p>இந்து புராணங்களின்படி மழைக்கடவுளாகக் கருதப்படும் இந்திரனை குளிர வைக்கவும், அவரது கோபத்தைத் தணித்து நல்ல மழையைப் பெறவுமே இந்த பிரசாதம் கழுதைகளுக்கு வழங்கப்பட்டது" என்று  தெரிவித்தனர்.</p><h2>மழைப்பொழிவு</h2><p>மாநிலத்தின் மொத்தமுள்ள மாவட்டங்களில் 35 மாவட்டங்களில் இதுவரை பெய்திருக்க வேண்டிய சராசரி மழையை விட மிகக் குறைவான மழையே பதிவாகியுள்ளது. போதிய மழையின்றி வறட்சியான சூழல் நிலவுகிறது.</p><p>போபால் நகரில் இந்த பருவமழைக் காலத்தில் பெய்ய வேண்டிய சராசரி அளவை விட 44 சதவீதம் கூடுதல் மழை பதிவாகியுள்ளது.</p><p>வறண்ட மாவட்டங்களிலும் இன்று முதல் பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பரவலாக நல்ல மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது</p> ]]></content:encoded></item><item><title>மனைவி, இரண்டு மகன்கள் கொலை வழக்கு.. கணவரை விடுவித்த உயர் நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/wife-two-sons-murder-case-high-court-acquits-husband</link><comments>https://www.maalaimalar.com/news/national/wife-two-sons-murder-case-high-court-acquits-husband#comments</comments><guid isPermaLink="false">82c88d5e-8c3f-4001-bc7c-656e707064a5</guid><pubDate>Sun, 19 Jul 2026 10:27:03 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:27:03.736Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Allahabad High Court,Mathura Trail Court,அலகாபாத் உயர்நீதிமன்றம்,மதுரா விசாரணை நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/ltoh7twn/Untitled-design-37.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Allahabad High Court released acquited person]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/ltoh7twn/Untitled-design-37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தர பிரதேசத்தில் மனைவி மற்றும் இரண்டு மகன்களை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.</p><p>சூழ்நிலை சான்றுகளை மட்டுமே அடிப்படையாக கொண்ட வழக்குகளில், அரசுத் தரப்பு ஒரு நியாயமான மற்றும் நம்பத்தகுந்த நோக்கத்தை நிறுவ வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.</p><h3><strong>மனைவி மற்றும் மகன்கள் கொலை:</strong></h3><p>உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் கடந்த 2017 செப்டம்பர் 3ம் தேதி அன்று வீட்டின் உள்ளே மனைவி மற்றும் இரண்டு மகன்கள் சடலமாக கிடந்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.  </p><p>அப்போது அந்த வீட்டில் வேறு யாரும் இல்லை என சம்பவத்தை நேரில் பார்த்த உறவினர் ஒருவர் தெரிவித்தார்.</p><p>மேலும் அந்த சமயத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் அந்த வீட்டில் இல்லை எனவும், மூன்று பேர்களும் ஒரு கூர்மையான பொருளால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு கிடந்த நிலையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.</p><h3><strong>கணவர் கைது:</strong></h3><p>இதையடுத்து டெல்லியில் உயிரிழந்த பெண்ணின் கணவரான பாபுவை ரத்தக்கறை படிந்த சட்டையுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>பாபுவின் வாக்குமூலத்தின் பேரில், கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் மீட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதைத்தொடர்ந்து 2022 ஜனவரி 27ம் தேதி அன்று, மதுரா விசாரணை நீதிமன்றம் கைது செய்யப்பட்டவரை குற்றவாளி என தீர்ப்பளித்து, ஆயுள் தண்டனை விதித்தது.</p><p>இதற்கு எதிராக குற்றம்சாட்டப்பட்ட பாபு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். அப்போது இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.ஜே. முனிர் மற்றும் சஞ்சீவ் குமார் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது நீதிபதிகள், “கைது செய்யப்பட்டவர், தான் குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து, காவல்துறைக்கு தெரிவித்ததாக எந்தவொரு சுயாதீன சாட்சியும் அளிக்கவில்லை.</p><p>இத்தகைய கொடூரமான குற்றத்தை செய்வதற்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு எந்த உள்நோக்கமும் இருந்ததாக அரசுத் தரப்பு சாட்சியம் கூறவில்லை.</p><p>இதைத்தொடர்ந்து சூழ்நிலைச் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே ஒரு தனி நபரை குற்றவாளியாக்குவது முற்றிலும் பாதுகாப்பற்றது என்று சுட்டிக்காட்டி, 2022-ஆம் ஆண்டு மதுரா விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தது.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-governments-all-party-meeting-concludes</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-governments-all-party-meeting-concludes#comments</comments><guid isPermaLink="false">4dce0872-2cb5-43a0-aa11-60056ab5df56</guid><pubDate>Sun, 19 Jul 2026 09:41:27 +0000</pubDate><atom:updated>2026-07-19T09:41:27.282Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா கூட்டணி,INDIA Bloc,monsoon session,All-party meeting,அனைத்துக் கட்சிக் கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/k548rj2b/New-Project-2026-07-19T151058.268.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/k548rj2b/New-Project-2026-07-19T151058.268.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம், நிறைவடைந்தது.</p><p>நாளை (ஜூலை. 20) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அவையைச் சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க மத்திய அரசு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது</p><p>நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜுவால், நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் கூட்டப்பட்ட இந்த கூட்டத்தின் ஆலோசனைகளுக்கு இடையே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பும் செய்தன.</p><p>அதிருப்தி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.களுக்கு தனி இருக்கை ஒதுக்கியதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆம் ஆத்மி கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்டக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.</p><p>பின்னர் மீண்டும் வந்து கூட்டத்தில் கலந்துகொண்டன. இக்கூட்டத்தில் அரசின் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p><p>நாளை தொடங்கவுள்ள கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா போன்றவற்றை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரம் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>நான் தீவிர இந்து.. ஸ்ரீ ராமரை அவமதித்ததால் தீப்கே மீது மை வீசினேன் - பெண் பொறுப்பேற்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-ink-attack-woman-throws-ink-at-cockroach-janata-party-founder-abhijit-deepke-during-jantar-mantar-agitation</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-ink-attack-woman-throws-ink-at-cockroach-janata-party-founder-abhijit-deepke-during-jantar-mantar-agitation#comments</comments><guid isPermaLink="false">3624e349-ee8d-40aa-a512-1670f332b46b</guid><pubDate>Sun, 19 Jul 2026 09:09:59 +0000</pubDate><atom:updated>2026-07-19T09:09:59.791Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,CJP,அபிஜித் தீப்கே,Abhijit Dipke</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/k574bqq4/tn-13.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தீப்கே, பர்கா த்ரெஹான்]]></media:title><media:description type="html"><![CDATA[ தீப்கே, பர்கா த்ரெஹான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/k574bqq4/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மீது மை வீசியதற்கு பெண் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார்.  </p><h2>போராட்டம்</h2><p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றுமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-ink-attack-woman-throws-black-ink-at-abhijit-deepke-during-jantar-mantar-agitation">அபிஜித் தீப்கே </a>தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p> <h2>வாங்சுக் நிலைமை</h2><p>இதில் 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த செயல்பாட்டாளர் மற்றும் கல்வியாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-crackdown-rahul-gandhi-condemns-forced-removal-of-sonam-wangchuk">சோனம் வாங்சுக் </a>உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் வலுக்கட்டாயமாக டெல்லி போலீசாரால் சப்தர்ஜங்மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார்.</p><p>இதனால் போராட்டக் களத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. தானும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக தீப்கே அறிவித்தார்.</p> <h2>மை வீச்சு</h2><p>இதனையே தீப்கே போராட்டக்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்து வந்த பெண் ஒருவர் திடீரென மேடைக்கு அருகில் வந்து, தான் வைத்திருந்த மையை அபிஜித் தீப்கே மீது வீசினார்.</p><p>இதனால் அதிர்ச்சியடைந்த தீப்கேவின் ஆதரவாளர்கள் உடனடியாக அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தினர்.</p><p>அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் சிறிது நேரம் தடைபட்ட போராட்டம், பின்னர் மீண்டும் தொடர்ந்தது. மை வீச்சு வீடியோ வைரலாகி வருகிறது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">STORY | Chaos at Jantar Mantar as woman throws ink-like liquid at CJP founder Abhijeet Dipke<br><br>Chaos erupted at Jantar Mantar on Saturday after a woman threw an ink-like liquid at Cockroach Janata Party (CJP) founder Abhijeet Dipke while he was addressing a gathering at the… <a href="https://t.co/KW2forKlnx">https://t.co/KW2forKlnx</a></p>&mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://x.com/PTI_News/status/2078394809807741435?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>பொறுப்பேற்பு</h2><p>தீப்கே மீது மை வீசியதற்கு பர்கா த்ரெஹான் என்ற பெண் பொறுப்பேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தன் எக்ஸ் பதிவில்,</p><p>"ஆமாம், பர்கா த்ரெஹானாகிய நான் தான் அபிஜித் தீப்கே மீது மையை வீசினேன். ஏன்னென்றால், அவருடைய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் மேடையில் எனது பிரபு ஸ்ரீராமர் பகிரங்கமாக அவமதிக்கப்பட்டபோது, அதைத் தடுத்து நிறுத்தாமல் அவர் மேடையில் நின்று சிரித்துக் கொண்டிருந்தார்.</p><p>நான் ஒரு தீவிரமான இந்து. நமது கடவுள் பொதுவெளியில் இழிவுபடுத்தப்பட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை; அது என் மனதை ஆழமாகப் பாதித்தது. அதற்கு எதிராக நான் காட்டிய எதிர்ப்புதான் இந்த மை வீச்சு. எனது இந்தச் செயலை எண்ணி நான் பெருமைப்படுகிறேன், இதில் எனக்கு எந்தப் பச்சாதாபமும் இல்லை. ஜெய் ஹிந்த். ஜெய் ஸ்ரீராம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.</p> <h2>தீப்கே பதிலடி</h2><p>இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்த அபிஜித் தீப்கே, 'நீலம் எனது நிறம்... ஜெய் பீம்!' என்று பதிவிட்டுள்ளார்.</p><p>இதனிடையே சப்தர்கஞ்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனம் வாங்சுக் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>பீகாரில் தலைமுடியை வெட்டும் கொள்ளை கும்பல் - மக்களிடையே பீதி</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-robbery-gang-cuts-womens-hair</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-robbery-gang-cuts-womens-hair#comments</comments><guid isPermaLink="false">0b6bfd20-c584-4c90-848e-caac2672e616</guid><pubDate>Sun, 19 Jul 2026 09:09:46 +0000</pubDate><atom:updated>2026-07-19T09:09:46.983Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,robbery,Darbhanga,HairChoppingGang,தலைமுடிதிருட்டு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/jkfnsn28/BiharHairChoppingGang" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BiharHairChoppingGang   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/jkfnsn28/BiharHairChoppingGang?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>தலைமுடி வெட்டி சென்ற கும்பல்..</strong></h2><p>பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீடுகளில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு, இளம்பெண்களின் தலைமுடியை வெட்டிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.</p><h2><strong>முதல் சம்பவம் - டாக்டர் வீட்டில் கொள்ளை..</strong></h2><p>தர்ஹார் கிராமத்தை சேர்ந்த டாக்டர் பவன் குமார் மிஸ்ரா வீட்டில் புகுந்த கும்பல், உறங்கிக்கொண்டிருந்த அவரது மருமகள் கரிஷ்மா தேவிவை தாக்கி, கை கால்களை கட்டி போதை ஊசி போட்டுள்ளனர்.</p><p>பின்னர் ரூ.35 ஆயிரம் பணம் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளையடித்து, சத்தம் வராமல் இருக்க டி.வி.யை சத்தமாக வைத்து விட்டு செல்லும் முன் கரிஷ்மாவின் தலைமுடியை வெட்டிச் சென்றுள்ளனர். சுயநினைவின்றி கிடந்த பெண்ணை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்தனர்.</p><h2><strong>இரண்டாவது சம்பவம் - ஆசிரியர் வீட்டில்..</strong></h2><p>இதேபோல் ஒரு வாரத்திற்கு பிறகு அதே பகுதியை சேர்ந்த ஆசிரியர் சுமன் குமார் சௌத்ரி வீட்டிலும் கொள்ளை நடந்தது. மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்த கும்பல், ஆசிரியரின் இளைய மகளின் தலைமுடியையும் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.</p><h2><strong>போலீஸ் விசாரணை - மக்கள் அச்சம்</strong></h2><p>இரண்டு சம்பவங்களும் வியாழக்கிழமை நடந்ததாலும், முறைகள் ஒரே மாதிரி இருந்ததாலும் இது ஒரே கும்பலின் வேலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தடயவியல் குழுவுடன் விசாரணை நடந்து வருகிறது.</p><p>ஆனால் "தலைமுடியை வெட்டி செல்லும் கும்பல்" என்ற தகவல் தர்ஹார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;சஃப்தர்ஜங் மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை&apos;-டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார் சோனம் வாங்சுக்கின் மனைவி!</title><link>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-wife-petitions-delhi-high-court-over-safdarjung-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-wife-petitions-delhi-high-court-over-safdarjung-hospital#comments</comments><guid isPermaLink="false">83bf6735-496f-4512-8ac6-a36b321d94d0</guid><pubDate>Sun, 19 Jul 2026 09:09:43 +0000</pubDate><atom:updated>2026-07-19T09:09:43.899Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi High Court,Sonam Wangchuk,டெல்லி உயர் நீதிமன்றம்,கீதாஞ்சலி,Safdarjung hospital,சோனம் வாங்சுக்,Gitanjali J Angmo,சஃப்தர்ஜங் மருத்துவமனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/97lww7c8/sonam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sonam Wangchuk-Gitanjali J Angmo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/97lww7c8/sonam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மாணவர்களின் மரணங்களுக்கு நீதி கேட்டு டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 22 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், நேற்று டெல்லி போலீசாரால் வலுக்கட்டாயமாக சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>இந்நிலையில், சஃப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி அவரது மனைவி டாக்டர் கீதாஞ்சலி ஜே.ஆங்மோ டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில்,</p><h2><strong>மருத்துவமனை அறிக்கையில் முரண்பாடு:</strong> </h2><p>சஃப்தர்ஜங் மருத்துவமனை அதிகாரிகள், சோனம் வாங்சுக்கின் ரத்தத்தில் பொட்டாசியம் அளவு 2.9 ஆகக் குறைந்துவிட்டதாகவும், இது உயிருக்கு ஆபத்தான நிலை என்றும் எங்களிடம் கூறினர். ஆனால், அவர்கள் வெளியிட்ட பொது சுகாதார அறிக்கையில் இந்த எண்ணைக் குறிப்பிடாமல், "பொட்டாசியம் அளவு குறைந்து வருகிறது" என்று மழுப்பலாகக் குறிப்பிட்டுள்ளனர்.</p><h2><strong>தனியார் ஆய்வக அறிக்கை:</strong></h2><p>மருத்துவமனை அதிகாரிகளின் கூற்றின் மீது சந்தேகம் அடைந்து, 10 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ரத்த மாதிரியைப் பெற்று வெளியில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் சோதனை செய்தோம். அதில் பொட்டாசியம் அளவு 3.5 என்ற சாதாரண எல்லையிலேயே  உள்ளது தெரியவந்தது.</p><h2><strong>சட்டவிரோத காவலில் வாங்சுக்:</strong></h2><p>மருத்துவமனையில் அவர் தங்கியிருக்கும் தளத்தில் 30 போலீசாரும், வளாகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். எங்களை அவரைப் பார்க்க அனுமதிப்பதில்லை. இது மருத்துவச் சிகிச்சை அல்ல, 'சட்டவிரோதக் காவல்' ஆகும்.</p><p>எனது கணவருக்கு எனது சம்மதம் இன்றியோ அல்லது அவரது தனிப்பட்ட மருத்துவர்களின் ஆலோசனையின்றியோ எந்தவொரு மருந்தையோ அல்லது குளுக்கோஸையோ செலுத்தக்கூடாது என்று அதிகாரிகளிடம் திட்டவட்டமாகக் கூறியுள்ளேன்.</p><h2><strong>அரசு மற்றும் மருத்துவமனை தரப்பு விளக்கம்:</strong></h2><p>மறுபுறம், சோனம் வாங்சுக்கை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய அரசுத் தரப்பும் சஃப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகமும் மறுப்பு தெரிவித்துள்ளன. சோனம் வாங்சுக்கின் உடல்நிலையைக் கண்காணித்து, தேவைப்பட்டால் மருத்துவத் தலையீடு செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும், நிபுணர்களின் மருத்துவ ஆலோசனையின்படியுமே அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><p>நீண்ட நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதால், வாங்சுக்கின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தற்போதைய சூழலில் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என்று அரசுத் தரப்பு வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன. </p><p>சஃப்தர்ஜங் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் அடங்கிய கூட்டு மருத்துவக் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தற்போது அவர் சீரான நிலையில் இருந்தாலும் தொடர் கண்காணிப்பு அவசியம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.</p><h2><strong>மருத்துவமனையில் இருந்தபடி வாங்சுக் விடுத்த அழைப்பு:</strong></h2><p>இதற்கிடையே, மருத்துவமனைக் காவலில் இருந்தபடியே தனது மனைவி கீதாஞ்சலி மூலமாக சோனம் வாங்சுக் எக்ஸ் தளத்தில் ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில், "நாளை நாடாளுமன்றத்தை நோக்கி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பேரணி இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம். </p><p>பயமில்லாத மற்றும் அநீதியற்ற இந்தியாவை உருவாக்க இப்பேரணியை அனைவரும் பெரும் வெற்றியாக்க வேண்டும்" என்று அவர் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக இன்று விசாரிக்கப்பட வாய்ப்புள்ளதால், அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிஃபா உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டி.. கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை!</title><link>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-2026-final-kerala-school-college-holiday</link><comments>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-2026-final-kerala-school-college-holiday#comments</comments><guid isPermaLink="false">cd9e0eb8-aaf8-4ef7-a0bd-d943c494cac9</guid><pubDate>Sun, 19 Jul 2026 08:40:24 +0000</pubDate><atom:updated>2026-07-19T08:40:24.172Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உலகக்கோப்பை கால்பந்து 26,FIFAWorldCup2026,KeralaSchoolHoliday,ArgentinaVsSpain,அர்ஜென்டினாvsபெயின்,MetLifeStadium</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/kffoll27/FIFA-World-Cup-2026-final" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ FIFA World Cup 2026 final ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/kffoll27/FIFA-World-Cup-2026-final?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>நாளை நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை முன்னிட்டு, கேரளா மாநிலத்தின் எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு கேரள அரசு நாளை (ஜூலை 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நள்ளிரவில் நடப்பதால், இந்த முடிவை பள்ளி நிர்வாகங்கள் எடுத்துள்ளன.</p><h2><strong>விளையாட்டு நேரம்..</strong></h2><p>இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கால்பந்து போட்டி அமெரிக்காவின் மெட்லைஃப் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12:30 மணிக்குத் தொடங்குகிறது. </p><p>வழக்கமான நேரத்தில் முடிந்தால் கூட அதிகாலை 2:30 மணி ஆகும், பரிசு வழங்கும் விழா முடிய 3 மணி ஆகிவிடும். ஒருவேளை போட்டி கூடுதல் நேரம் அல்லது பெனால்டி ஷூட்-அவுட் வரை சென்றால் அதிகாலை வரை நீடிக்கும். </p><p>இதனால் மாணவர்கள் தூக்கமில்லாமல், சோர்வோடு பள்ளிக்கு வருவதைத் தவிர்க்கவே இந்த விடுமுறை அறிவிக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2><strong>அமைச்சரின் நெகிழ்ச்சிப் பதிவு..</strong></h2><p>கேரள பொதுக்கல்வித் துறை அமைச்சர் ந. சம்சுதீன் இந்த விடுமுறை அறிவிப்பைத் தனது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். </p><p>அதில், "இப்போது சந்தோஷமா குழந்தைகளே?" என்று மாணவர்களை நோக்கி நெகிழ்ச்சியுடன் கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>மேலும், "கால்பந்து ரசிகர்கள் மற்றும் மாணவர்களின் தொடர் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, நள்ளிரவுக்கு மேல் நடைபெறும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியைக் காணும் வகையில், பொதுக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வரலாற்றில் முதன்முறை: குடியரசுத் தலைவர் முர்முவின் முத்தரப்புப் பயணம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/president-murmus-tri-nation-tour</link><comments>https://www.maalaimalar.com/news/national/president-murmus-tri-nation-tour#comments</comments><guid isPermaLink="false">559649e5-97cf-475e-aa53-dd0472d9b41d</guid><pubDate>Sun, 19 Jul 2026 08:00:12 +0000</pubDate><atom:updated>2026-07-19T08:00:12.232Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>President Murmu,Romania,Moldova,North Macedonia,குடியரசுத் தலைவர் முர்மு,மோல்டோவா,வட மாசிடோனியா,ருமேனியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/dg4pie2d/murmu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ President Murmu's Tri-Nation Tour]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/dg4pie2d/murmu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மோல்டோவா, வட மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய மூன்று நாடுகளுக்கு இன்று (ஜூலை 19) தனது வரலாற்றுச் சிறப்புமிக்க அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்த மூன்று நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்தவும் இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.</p><h2>மோல்டோவா பயணம் (முதல் கட்டம்):</h2><p>இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர் மோல்டோவா நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறை ஆகும். இப்பயணத்தின் போது, மோல்டோவா அதிபர் மாயா சாந்துவை சந்தித்து குடியரசுத் தலைவர் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.</p><p>நாடாளுமன்றத் தலைவர் இகோர் குரோசு மற்றும் மோல்டோவா-இந்தியா நாடாளுமன்ற நட்புத் குழுவின் உறுப்பினர்களைச் சந்திக்கிறார். மேலும், அங்கு நடைபெறும் வர்த்தக மன்றக் கூட்டத்தில் உரையாற்றுவதுடன், மோல்டோவாவில் வாழும் இந்திய வம்சாவளியினரையும் நேரில் சந்தித்துக் கலந்துரையாட உள்ளார்.</p><h2><strong>வட மாசிடோனியா பயணம் (2ம் கட்டம்)</strong></h2><p>மோல்டோவாவைப் போலவே, வட மாசிடோனியா நாட்டிற்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது அரசுமுறைப் பயணம் இதுவாகும். வட மாசிடோனியா அதிபர் சிலியானோவ்ஸ்கா-டவ்கோவா, அந்நாட்டுப் பிரதமர் மற்றும் நாடாளுமன்றத் தலைவர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்.</p><p>வட மாசிடோனியா நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்புரையாற்ற உள்ளார். அத்துடன் இந்தியா-வட மாசிடோனியா வர்த்தக மன்றக் கூட்டத்திலும் பங்கேற்கிறார். வேளாண்மை, மருந்தகத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐடி சார்ந்த சேவைகள் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவதில் இந்த சந்திப்பு கவனம் செலுத்தும்.</p><h2><strong>ருமேனியா பயணம் (இறுதிக்கட்டம்)</strong></h2><p>தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவிற்கு, சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர் செல்லும் முக்கியப் பயணம் இதுவாகும். ருமேனியா அதிபர், இடைக்காலப் பிரதமர் மற்றும் செனட் சபையின் தலைவர் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார். </p><p>ருமேனியா-இந்தியா நாடாளுமன்ற நட்பு குழு உறுப்பினர்களுடனான சந்திப்பு, இந்தியா-ருமேனியா வர்த்தக மன்ற உரை மற்றும் அங்குள்ள இந்திய சமூகத்தினருடனான கலந்துரையாடல் ஆகியவை இப்பயணத்தில் இடம்பெற்றுள்ளன.</p><h2><strong>பயணத்தின் நோக்கம்:</strong></h2><p>இந்த 3 நாடுகளின் பயணமானது, ஐரோப்பிய பிராந்தியத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>குறிப்பாக வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள், கல்வி மற்றும் இருநாட்டு மக்களிடையேயான கலாச்சாரப் பரிமாற்றங்களை விரிவுபடுத்துவதில் இப்பயணம் புதிய வேகத்தை ஏற்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>இணையத்தில் வைரலாகும் மத்திய அரசின் ‘ஃபேஸ் வாஷ்’: மிகக் குறைந்த விலை-எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-salicylic-acid-face-wash-goes-viral</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-salicylic-acid-face-wash-goes-viral#comments</comments><guid isPermaLink="false">064a06a6-d53c-4189-9483-34c2e10f17a1</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:48:24 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:48:24.027Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Modi,central government,மோடி,SalicylicAcid,FaceWash,சாலிசிலிக் ஆசிட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/874wgbbe/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Central Government's Face Wash]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/874wgbbe/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு புதிய அழகு சாதனப் பொருள் இந்திய அளவில் பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. அது வேறு எந்த ஒரு முன்னணி நிறுவனத்தின் தயாரிப்பும் அல்ல. </p><p>இந்திய மத்திய அரசின் ஜன அவுஷதி கேந்திராக்களில் விற்பனை செய்யப்படும் 'சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் வாஷ்' தான் அது. மிகக் குறைந்த விலையில், முகப்பருக்களைக் கட்டுப்படுத்தும் அசாத்தியமான நன்மைகளை வழங்குவதால், இளைஞர்கள் மற்றும் ஸ்கின்கேர் பிரியர்கள் மத்தியில் இந்த தயாரிப்பு காட்டுத்தீ போல பரவி வருகிறது.</p><h2><strong>வைரலாவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?</strong></h2><p>சந்தையில் முன்னணி பிராண்டுகளின் சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் வாஷ்கள் பொதுவாக ரூ.150 முதல் ரூ.500 வரை விற்கப்படுகின்றன. ஆனால், மத்திய அரசின் பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா திட்டத்தின் கீழ், இதன் 1% வேரியண்ட் ரூ.46.88-க்கும், 2% வேரியண்ட் ரூ.65.63-க்கும் மட்டுமே கிடைக்கிறது. இது சந்தை விலையை விட கிட்டத்தட்ட 70% முதல் 90% வரை குறைவாகும்.</p><h2><strong>தரத்திற்கு உத்தரவாதம்:</strong></h2><p>குறைந்த விலை என்றதும் தரம் குறைவாக இருக்குமோ என்ற ஐயம் தேவையில்லை. இந்த தயாரிப்புகள் அனைத்தும் WHO-GMP மற்றும் NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களால் சான்றளிக்கப்பட்டு, கடுமையான தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே சந்தைக்கு வருகின்றன.</p><h2><strong>முகப்பரு மற்றும் எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு தீர்வு:</strong></h2><p>சாலிசிலிக் ஆசிட் என்பது சரும துவாரங்களில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் வராமல் தடுப்பதில் மிகச்சிறந்த மருத்துவக் காரணியாகக் கருதப்படுகிறது.</p><h2><strong>ஸ்கின்கேர் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்:</strong></h2><p>நெட்டிசன்கள் பலரும் தங்களது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில், "இனி தேவையின்றி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம், அரசாங்கத்தின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது" எனப் பதிவிட்டு வருகின்றனர். மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்படும் இந்த ஃபேஸ் வாஷ், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கும் தரமான சருமப் பராமரிப்பு கிடைக்க வழிவகை செய்துள்ளது. </p><p>இது சாலிசிலிக் ஆசிட் கொண்ட ஒரு மருத்துவத் தயாரிப்பு என்பதால், உணர்திறன் மிக்க சருமம் உள்ளவர்கள் அல்லது முதன்முறையாகப் பயன்படுத்துபவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அல்லது 'பேட்ச் டெஸ்ட்' செய்து பார்ப்பது நல்லது.</p><h2><strong>எங்கு வாங்குவது?</strong></h2><p>இந்த ஃபேஸ் வாஷை உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஜன அவுஷதி கேந்திராக்களில் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு அருகிலுள்ள கடையைக் கண்டறிய Janaushadhi Official Website மற்றும் https://janaushadhi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள “Locate Kendra” பக்கத்தைப் பயன்படுத்தலாம்.</p><p>மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகளை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட ஜன அவுஷதி கேந்திராக்கள், தற்போது சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் வாஷ், புரோட்டீன் பவுடர்கள் மற்றும் ஐசோட்ரெட்டினாயின் கேப்சூல்கள் போன்ற நவீன சுகாதார மற்றும் அழகுப் பராமரிப்புத் துறையிலும் தடம் பதித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது- திமுக வெளிநடப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/monsoon-session-all-party-meeting-starts-dmk-stage-walkout</link><comments>https://www.maalaimalar.com/news/national/monsoon-session-all-party-meeting-starts-dmk-stage-walkout#comments</comments><guid isPermaLink="false">2eae477f-8fe7-454c-b5e2-bf7338f72fc1</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:08:00 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:08:00.761Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>winter session,நாடாளுமன்றம்,parliment,All Party Meeting,அனைத்து கட்சி கூட்டம்,மழைக்காலக் கூட்டத்தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/1citcrlb/BJP.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ bjp]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/1citcrlb/BJP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மொத்தம் 19 அமர்வுகளாக இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.</p><h2>அனல் பறக்கும்</h2><p>இந்தக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கலாக உள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு, மேற்காசிய தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதனால் இந்த கூட்டத்தொடர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>காங்கிரஸ்-தி.மு.க. இடையேயான கூட்டணி முறிவு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு போன்ற அரசியல் ரீதியிலான மாற்றங்களுக்கு இடையே நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடர் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>நாளை தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.</p><h2>சட்ட திருத்த மசோதா</h2><p>சமீபத்தில் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட சில அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள், இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. முக்கியமாக, வருமான வரி சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவும் அறிமுகப்படுத்தப்படும். தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத்திருத்த மசோதா, பிறப்பு-இறப்பு பதிவு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவையும் தாக்கலாக உள்ளன.</p><p>அனைத்து கட்சி கூட்டம்</p><p>பாராளுமன்ற கூட்டம் சுமூகமாக நடைபெறுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. எனவே பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துவது வழக்கம்.</p><p>இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று தொடங்கியது. </p><h2>திமுக வெளிநடப்பு</h2><p>மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கு எதிராக திரும்பி உள்ள அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றதைக் கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.</p><p>இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் பல்வேறு விஷயங்கள் பற்றி பேச உள்ளனர். குறிப்பாக, ஜந்தர்மந்தரில் இருந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை வெளியேற்றிய விவகாரம் பற்றி அனைத்து எதிர்கட்சியினரும் பேச இருக்கிறார்கள்.</p><p>மேலும், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரமும் இன்றைய கூட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மூத்த குடிமக்களுக்கு MBBS-இல் ஏன் இடஒதுக்கீடு இல்லை? அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 71 வயது முதியவர் வழக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/national/71-year-old-ashok-bahar-seeks-mbbs-quota-for-senior-citizens</link><comments>https://www.maalaimalar.com/news/national/71-year-old-ashok-bahar-seeks-mbbs-quota-for-senior-citizens#comments</comments><guid isPermaLink="false">e9b83c14-fc48-4abd-8080-07f86f0dfe4e</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:21:12 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:21:12.895Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எம்பிபிஎஸ்,MBBS,NEET UG,அலகாபாத் உயர் நீதிமன்றம்,நீட்தேர்வு,AllahabadHighCourt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/jo17jyxz/MBBS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 71 year old man]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/jo17jyxz/MBBS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கல்வி கற்பதற்கும், கனவுகளை துரத்துவதற்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், 71 வயது முதியவர் ஒருவர் மருத்துவப் படிப்பில் மூத்த குடிமக்களுக்கு இடஒதுக்கீடு கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.</p><p>உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான அசோக் பகார் என்ற முதியவர், 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்குத் தயாராகி வரும் ஒரு தீவிர மருத்துவ ஆர்வலர் ஆவார். மருத்துவராக வேண்டும் என்ற தனது 52 ஆண்டுகால நீண்ட கனவை நனவாக்க அவர் தொடர்ந்து முயன்று வருகிறார்.</p><p>தனது வயதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்வியைக் கற்கும் உரிமை மறுக்கப்படக் கூடாது என்று வாதிடும் அசோக் பகார், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் முக்கிய அம்சங்களை குறிப்பிட்டுள்ளார். </p><p>அதில், தகுதிவாய்ந்த மூத்த குடிமக்களுக்கு MBBS சேர்க்கையில் 1% சிறப்பு இடஒதுக்கீடு அல்லது தனி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் கல்வி கற்கும் உரிமை வயது முதிர்வோடு முடிந்துவிடுவதில்லை. என குறிப்பிட்டுள்ளார்.</p><p>நாடெங்கும் நீட் தேர்வு குறித்த விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், 71 வயது முதியவர் ஒருவர் தனது லட்சியத்திற்காக சட்டப் போராட்டம் நடத்துவது கல்வி வட்டாரங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த  வழக்கு வரும் ஜூலை 21 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>ஹைதராபாத்தில் பரபரப்பு: அம்மன் சிலையோடு நிர்வாணமாக ஏரியில் குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை!</title><link>https://www.maalaimalar.com/news/national/hyderabad-it-woman-jumps-naked-into-lake-with-temple-idol-dies-by-suicide</link><comments>https://www.maalaimalar.com/news/national/hyderabad-it-woman-jumps-naked-into-lake-with-temple-idol-dies-by-suicide#comments</comments><guid isPermaLink="false">cea6890d-96de-425c-ae09-eab8ca4afc24</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:18:27 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:18:27.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hyderabad,IT Employee Suicide,ஹைதராபாத்,Beerappa Temple,ஐடி ஊழியர் தற்கொலை,பீரப்பா கோயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/klvxj3wx/PERSPP.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  IT employee commits suicide]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/klvxj3wx/PERSPP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹைதராபாத் பீர்சாடிகுடா பகுதியில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர், நள்ளிரவில் நிர்வாணமாக ஓடி, அருகில் இருந்த கோயிலில் அம்மன் சிலையைத் தூக்கிக்கொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட விசித்திரமான  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஆந்திரப் பிரதேசத்தின் விசியநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி என்ற இளம் பெண், பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்த அவர், ஹைதராபாத் பீர்சாடிகுடா சங்கர் நகர் காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது தாயாருடன் வசித்து வந்தார். </p><p>நேற்று நள்ளிரவு சுமார் 2:30 மணியளவில், தேஜஸ்வினி திடீரென தனது தாயார் தூங்கிக்கொண்டிருந்த அறையை வெளிப்பக்கமாகப் பூட்டியுள்ளார். பின்னர், தனது ஆடைகள் அனைத்தையும் கழற்றிவிட்டு நிர்வாணமான நிலையில் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.</p><h2><strong>சிசிடிவி காட்சிகளில் சிக்கிய விசித்திரம்:</strong></h2><p>அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தபோது அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளிவந்துள்ளன. நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய தேஜஸ்வினி, அங்குள்ள பீரப்பா கோயிலில் நுழைந்துள்ளார். அங்கு கருவறையில் இருந்த அம்மாவாரு சிலையைக் கையில் எடுத்துக்கொண்டு, அருகில் இருந்த பீர்சாடிகுடா ஏரியை நோக்கி ஓடி, அதனுள் குதித்துள்ளார்.</p><h2><strong>காலையில் நடந்த தேடுதல் வேட்டை:</strong></h2><p>இன்று அதிகாலை தேஜஸ்வினியின் தாயார் அருணா கண்விழித்தபோது, அறை வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டினர் கதவைத் திறந்துள்ளனர். </p><p>வீட்டில் தேஜஸ்வினி இல்லாததால், தாயார் அவரைப் பல இடங்களில் தேடியுள்ளார். இதற்கிடையில், ஏரியில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பது குறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஹைதராபாத் பேரிடர் மீட்புக்குழுவினர் ஏரியிலிருந்து தேஜஸ்வினியின் உடலை மீட்டனர்.</p><h2><strong>மாயமான அம்மன் சிலை:</strong></h2><p>தேஜஸ்வினியின் உடல் மீட்கப்பட்ட போதிலும், அவர் கையில் எடுத்துச் சென்ற அம்மன் சிலை இன்னும் கிடைக்கவில்லை. பேரிடர் மீட்புப் படையினர் படகுகள் மூலம் ஏரிக்குள் இறங்கி அந்தச் சிலையைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக அச்சிலை கருதப்படுவதால் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>பெண் ஐடி ஊழியர் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார், மனநல பாதிப்பு ஏதேனும் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் மேடிபள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item></channel></rss>