<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 29 Aug 2026 09:28:05 +0000</lastBuildDate><item><title>போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ.25 கோடி சுருட்டிய முக்கிய குற்றவாளி 5 மாதங்களுக்குப் பின் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-gold-jewellery-pledged-key-conspirator-held-in-rs-25-crore-bank-fraud</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-gold-jewellery-pledged-key-conspirator-held-in-rs-25-crore-bank-fraud#comments</comments><guid isPermaLink="false">012d3481-d71b-4055-9871-ac353b5c5a78</guid><pubDate>Sat, 29 Aug 2026 08:12:47 +0000</pubDate><atom:updated>2026-08-29T08:12:47.605Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nagpur,EOW raids,நாக்பூர்,Nagpur Scam,Gold Loan Fraud,தங்கநகைமோசடி,Sachin Raut Arrested,Economic Offences Wing,பொருளாதாரகுற்றப்பிரிவு,FakeGoldLoan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/t82mjkm4/Nagpu-Gold-Loan-Fraud" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Nagpu -  Gold Loan Fraud]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/t82mjkm4/Nagpu-Gold-Loan-Fraud?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிர மாநிலம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">நாக்பூரில் </a>உள்ள ஒரு பிரபல தனியார் வங்கியில், போலி தங்க நகைகளை அசல் தங்கம் எனக் கூறி அடகு வைத்து ரூ.25 கோடி வரை சுருட்டிய மோசடி வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சச்சின் ராவத் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். </p><p>கடந்த 5 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவர் பிடிபட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.</p><h2><strong>ஆடிட்டிங்கில் அம்பலமான உண்மை</strong></h2><p>கடந்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி வங்கியின் மனிஷ் நகர் கிளையில் வழக்கமான தங்கக் கடன் தணிக்கை நடைபெற்றது. </p><p>அப்போது ஒரு குறிப்பிட்ட கணக்கில் வைக்கப்பட்ட நகைகளின் எடை மற்றும் தங்கத்தின் தரம் குறித்து தணிக்கையாளர்கள் சந்தேகம் எழுப்பினர். </p><p>இதைத் தொடர்ந்து, தந்தோலி காவல் நிலையத்தில் மார்ச் 30 அன்று அதிகாரப்பூர்வமாகப் புகார் பதிவு செய்யப்பட்டது.</p><p>விசாரணையைத் தீவிரப்படுத்திய வங்கி, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">நாக்பூரின் </a>9 வெவ்வேறு கிளைகளில் உள்ள 152 தங்கக் கடன் கணக்குகளை மறுஆய்வு செய்தபோது, மொத்தம் ரூ.23.31 கோடி முதல் ரூ.25 கோடி வரை மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.</p><h2><strong>ஒரே நெட்வொர்க்: லஞ்சம் வாங்கி சான்றிதழ் தந்த அதிகாரிகள்</strong></h2><p>டிசிபி தீபக் அகர்வால் தலைமையிலான<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81"> பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் </a>நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த மோசடி நால்வர் கூட்டணியால் சாத்தியமாகியது தெரியவந்தது.</p><p>முக்கிய குற்றவாளியான சச்சின் ராவத், ஆரம்பத்தில் (2018-19) தனது சொந்த பெயரில் முறையாகக் கடன் பெற்று வங்கியின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளார்.</p><p>பின்னர், தனது பழைய இரும்பு வியாபாரத்தில் பணிபுரியும் ஏழைத் தொழிலாளர்களின் பெயர்களைப் பயன்படுத்திப் போலி நகைகள் மூலம் பல கோடி கடன் வாங்கியுள்ளார். </p><p>இது தவிர, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் 38 போலி கடன்கள் பெறப்பட்டுள்ளன.</p><h2><strong>நகை மோசடி</strong></h2><p>வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நகை மதிப்பீட்டாளர், ஒரு போலி சான்றிதழுக்கு தலா ரூ.5,000 லஞ்சம் வாங்கிக்கொண்டு, மொத்தம் 155 போலி நகை மதிப்பீட்டு அறிக்கைகளைத் தயார் செய்து கொடுத்துள்ளார்.</p><p>வங்கியின் கிளை மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர் ஆகியோர் சச்சின் ராவத்தின் இந்த மோசடித் திட்டங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்துள்ளனர். </p><p>3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் தணிக்கையின் போது, <a href="https://www.maalaimalar.com/topic/fake-jewelry">போலி நகைகளை</a> அசல் தங்கம் தான் என்று சான்றளிக்க தணிக்கையாளர்களுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>போலீசாரின் அதிரடி நடவடிக்கை</strong></h2><p>குற்றவாளிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் லேப்டாப்கள், மொபைல் போன்கள், சொகுசு வாகனங்கள் மற்றும் போலி கடன் வாங்கியவர்களின் பட்டியல் அடங்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. </p><p>பணப் பரிமாற்றப் பாதைகளை ஆய்வு செய்த போலீசார், தற்போது இந்த நெட்வொர்க்கின் தலைவரான சச்சின் ராவத்தை சிறையில் அடைத்துள்ளனர்.</p><p>"கைதுகளோடு இந்த வழக்கு முடிந்துவிடவில்லை; மோசடி செய்யப்பட்ட ஒட்டுமொத்தப் பணத்தை மீட்பதும், இதில் தொடர்புடைய மற்ற போலி வாடிக்கையாளர்களைக் கண்டறிவதுமே எங்களின் அடுத்தகட்ட இலக்கு" எனப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் சோகம்: 3 வயது குழந்தையை பாலத்தின் மீது தவிக்கவிட்டு கோதாவரி ஆற்றில் குதித்த தம்பதி!</title><link>https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-couple-dies-by-suicide-in-godavari-leaving-toddler-on-bridge</link><comments>https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-couple-dies-by-suicide-in-godavari-leaving-toddler-on-bridge#comments</comments><guid isPermaLink="false">50be2d14-6129-4fb0-9d17-c08e29dea3b8</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:57:10 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:57:10.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆந்திரபிரதேசம்,Godavari river,கோதாவரி ஆறு,AndraPradesh,Family Tragedy,Financial Distress,Child Rescuedce</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/lf0mju7h/Family-Tragedy" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Family Tragedy ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/lf0mju7h/Family-Tragedy?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">ஆந்திரப் பிரதேச</a>த்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில், வியாழக்கிழமை இரவு தங்களின் 3 வயது ஆண் குழந்தையை பாலத்தின் மீது தனியாக தவிக்கவிட்டு, பெற்றோர் இருவரும் கோதாவரி ஆற்றில் குதித்த செய்தி நெஞ்சை உலுக்கும் சம்பவமாக அரங்கேறியுள்ளது.</p><h2><strong>நள்ளிரவில் நடந்த பயங்கரம்</strong></h2><p>வேல்புரூ கிராமத்தைச் சேர்ந்த <strong>தொட்டா சாய் (29)</strong> மற்றும் அவரது மனைவி <strong>சிரீஷா (28)</strong> ஆகிய இருவரும், வியாழக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் தங்களது 3 வயது குழந்தையுடன் ஸ்கூட்டரில் சின்சினாடா பாலத்திற்கு வந்துள்ளனர்.</p><p>அங்கு யாரும் எதிர்பாராத விதமாக, குழந்தையை ஸ்கூட்டரிலேயே அமரவைத்துவிட்டு, இருவரும் ஆற்றில் குதித்துள்ளனர்.</p><h2>"அம்மா... அப்பா..." - கதறிய குழந்தை</h2><p>இருள் சூழ்ந்த, கடுமையான குளிரில் அந்தப் பிஞ்சு குழந்தை பாலத்தின் மீது தனியாக நின்றுகொண்டிருந்தது.</p><p>தெலுங்கில் "அம்மா... அப்பா " என்று அழுதுகொண்டே கத்தியுள்ளது. அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், குழந்தை தனியாக அழுது கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். </p><p>சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையை மீட்டு அவர்களது உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.</p><h2><strong>தீவிர தேடுதல் வேட்டை</strong></h2><p>அண்மையில் பெய்த மழையால் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81">கோதாவரி ஆற்றில்</a> வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. </p><p>இதனால், ஆற்றில் குதித்த தம்பதியை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டாலும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் நீச்சல் வீரர்கள் மற்றும் படகு குழுவினர் இணைந்து ஆற்றில் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p><h2>காரணம் என்ன?</h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநராக பணிபுரிந்து வந்த தொட்டா சாய், வளைகுடா நாட்டிற்குச் சென்றுவிட்டு சமீபத்தில்தான் ஆந்திரா திரும்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p><p>அவர் கடன் சுமை மற்றும் கடுமையான நிதி நெருக்கடியால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாகவே அவர்கள் தங்களது வீட்டை விற்க முடிவெடுத்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.</p><p>எனினும், தற்கொலை முயற்சிக்கான முழுமையான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. </p><p>சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>4 நாள் பயணமாக உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!</title><link>https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-left-for-uzbekistan-and-kyrgyzstan-on-a-4-day-trip</link><comments>https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-left-for-uzbekistan-and-kyrgyzstan-on-a-4-day-trip#comments</comments><guid isPermaLink="false">c1e56c42-2fa8-434b-9d7d-021a3fbf207a</guid><pubDate>Sat, 29 Aug 2026 05:15:14 +0000</pubDate><atom:updated>2026-08-29T05:15:14.303Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,uzbekistan,பிரதமர் மோடி,உஸ்பெகிஸ்தான்,கிர்கிஸ்தான்,Kyrgyzstan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/z9jeprlk/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/z9jeprlk/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர் மோடி </a>உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாள் அரசுமுறைப் பயணமாகச் இன்று (சனிக்கிழமை) புறப்பட்டார். </p><p>இந்தப் பயணத்தின் போது முதலாவதாக அவர் உஸ்பெகிஸ்தான் செல்கிறார். </p><p>உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காத்  மிர்சியோயேவுடன் பிரதமர் மோடி, இந்தியா-உஸ்பெகிஸ்தான் மூலோபாயக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.</p><p>அங்கு இரு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டிற்காக கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் செல்கிறார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: Prime Minister Narendra Modi leaves for Tashkent, Uzbekistan<br><br>During the visit, the Prime Minister will hold delegation-level talks with President Mirziyoyev to further strengthen the strategic partnership between the two countries. The two leaders will review… <a href="https://t.co/PG3DnIXHoU">https://t.co/PG3DnIXHoU</a> <a href="https://t.co/uS1Lr8ZqDr">pic.twitter.com/uS1Lr8ZqDr</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2093549407895703611?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>மோடி பதிவு</h2><p>புறப்படுவதற்கு முன்னதாகப் பிரதமர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மத்திய ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் மூலோபாயப் பங்களிப்பை வலுப்படுத்துவதிலும், அப்பகுதியுடனான உறவுகளை ஆழப்படுத்துவதிலும் இந்தப் பயணம் கவனம் செலுத்தும் என்று தெரிவித்துள்ளார்.</p><p>"வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் இணைப்பு, பாதுகாப்பு, எரிசக்தி ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவது குறித்தும், நமது 'வளர்ச்சியடைந்த இந்தியா' மற்றும் 'புதிய உஸ்பெகிஸ்தான்' என்ற பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வைகளை முன்னோக்கி எடுத்துச் செல்வது குறித்தும் அதிபர் மிர்சியோயேவுடனான எனது பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.</p> <p>பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் செல்வது இது நான்காவது முறையாகும். தாஷ்கண்ட் மாநிலக் கிழக்கத்திய ஆய்வுகள் பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி நினைவிடம் மற்றும் மகாத்மா காந்தி மையத்திற்கும் பிரதமர் செல்லத் திட்டமிட்டுள்ளார்.</p> <h2>உச்சிமாநாடு</h2><p>தாஷ்கண்டில் இருந்து, கிர்கிஸ்தான் அதிபர் சாதிர் ஜபரோவின் அழைப்பின் பேரில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் </a>அமைப்பின் 25 ஆண்டுகளைக் குறிக்கும் 26வது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி பிஷ்கேக் செல்வார்.</p><p>இந்தியா 2017 முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு மற்றும் தீவிர உறுப்பினராக இருந்து வருகிறது.</p><p>பிஷ்கேக்கில் நடைபெறும் இந்த இரண்டு நாள் உச்சிமாநாட்டில் ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவிடம் இருந்து ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்து</title><link>https://www.maalaimalar.com/news/national/agreement-signed-to-purchase-javelin-anti-tank-missiles-from-the-us</link><comments>https://www.maalaimalar.com/news/national/agreement-signed-to-purchase-javelin-anti-tank-missiles-from-the-us#comments</comments><guid isPermaLink="false">38db2f44-0d69-4039-8e5d-b660bab57679</guid><pubDate>Sat, 29 Aug 2026 01:13:05 +0000</pubDate><atom:updated>2026-08-29T01:13:05.294Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,USA,ஏவுகணை,missile,INDIAN ARMY,இந்திய ராணுவம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/ak9kxk44/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/ak9kxk44/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்க </a>தயாரிப்பான 'ஜாவலின்' பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை வாங்குவதற்காக அமெரிக்காவுடன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">இந்திய ராணுவம்</a> ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p>இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இந்த ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தற்போது கையெழுத்தாகியுள்ளது.</p> <h2>கருத்து</h2><p>இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்புப் பங்களிப்பு மேலும் ஆழமாகவும் பலமாகவும் மாறுவதின் சான்றாகும் என்று இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்திய ராணுவத்திற்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவின் ஆழத்தை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது என்றும், இரு நாடுகளின் பாதுகாப்பு தொழில் துறைக்கான புதிய வாய்ப்புகளை இது திறந்துவிடும் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p> <h2>சிறப்பம்சங்கள்</h2><p>சுமார் 45.7 மில்லியன் டாலர் மதிப்பிலானது இந்த ஜாவலின் ஏவுகணை ஒப்பந்தம். அமெரிக்க ராணுவம் தவிர பல சர்வதேச வாடிக்கையாளர்களாலும் ஜாவலின் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>கவச வாகனங்கள் மற்றும் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அரண்களை தகர்க்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>ஆர்டிஎக்ஸ் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியான 'ஜாவலின் ஜாயிண்ட் வென்ச்சர்' இந்த ஏவுகணைகளை தயாரிக்கிறது.</p> <h2>பாதுகாப்பு</h2><p>கடந்த ஆண்டு இந்தியாவும் அமெரிக்காவும் தங்களின் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக 10 ஆண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன.</p><p>அமெரிக்க-இந்திய மூலோபாய உறவை வலுப்படுத்துவதற்கும், இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டாளியின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என்று அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை சுட்டிக்காட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>UGC-NET ஜூன் 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/national/ugc-net-june-2026-results-declared-for-84-subjects</link><comments>https://www.maalaimalar.com/news/national/ugc-net-june-2026-results-declared-for-84-subjects#comments</comments><guid isPermaLink="false">1812a18d-1642-438b-ac75-325ba7defdb7</guid><pubDate>Fri, 28 Aug 2026 19:11:18 +0000</pubDate><atom:updated>2026-08-28T19:11:18.232Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UGC,UGC-NET Results,யுஜிசி,யுஜிசி நெட் தேர்வு முடிவுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/37hrdmhi/UGC.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UGC]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/37hrdmhi/UGC.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/nta">தேசிய தேர்வு முகமை</a> 84 பாடங்களுக்கான UGC-NET ஜூன் 2026 தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. தேர்வில் பங்கேற்ற மாணவர்கள், ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ UGC-NET இணையதளம் மூலம் தங்களின் மதிப்பெண் அட்டைகளை சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><p>யுஜிசி-நெட் ஜூன் 2026 தேர்வானது, 87 பாடங்களுக்கு, ஜூன் 22 முதல் 30, 2026 வரை நடத்தப்பட்டது. ஒரு விண்ணப்பதாரர் தகுதிபெறும் பிரிவைப் பொறுத்து, இந்த தேர்வு இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை (JRF) பெறுவதற்கும், உதவி பேராசிரியராக நியமனம் பெறுவதற்கும், மற்றும் முனைவர் பட்ட படிப்புகளில் சேர்வதற்கும் உள்ள தகுதியை தீர்மானிக்கிறது.</p><h2>தேர்வு முடிவை சரிபார்ப்பது எப்படி?</h2><p>தேர்வர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றித் தங்களின் மதிப்பெண் அட்டைகளைச் சரிபார்க்கலாம்:</p><p>ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ UGC-NET இணையதளத்தை பார்வையிடவும்.</p><p>முகப்புப் பக்கத்தில் உள்ள சமீபத்திய அறிவிப்புகள் அல்லது முடிவு பகுதிக்கு செல்ல வேண்டும்.</p><p>UGC-NET ஜூன் 2026 தேர்வு முடிவு இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.</p><p>விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தேவையான உள்நுழைவு விவரங்களை உள்ளிட வேண்டும்.</p><p>UGC-NET தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் அட்டையைக் காண விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கம் செய்து, எதிர்கால சேர்க்கை அல்லது ஆட்சேர்ப்பு தொடர்பான தேவைகளுக்காக ஒரு நகலை வைத்துக்கொள்ள வேண்டும்.</p><h2>மறுதேர்வு விவரம்:</h2><p>2026 செப்டம்பர் 09 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மறுதேர்வு நடத்தப்படவுள்ள ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடப்பிரிவுகளை சேர்ந்த தேர்வர்கள், UGC-NET ஜூன் 2026 மதிப்பெண் அட்டையை அணுக முயற்சிக்கும்போது, ​​"தவறான விண்ணப்ப எண்/கடவுச்சொல்" என்ற செய்தியைப் பெறக்கூடும்.</p><p>இந்த தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்வு முடிவுகள், அவர்களுக்கான மறுதேர்வு நடத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படும்.</p><p>NTA, ஆங்கிலப் பாடத்திற்கான மறுதேர்வை செப்டம்பர் 9 (ஷிப்ட் 1) அன்றும், வணிகவியல் பாடத்திற்கு செப்டம்பர் 9 (ஷிப்ட் 2) அன்றும், சமூகவியல் பாடத்திற்கு செப்டம்பர் 10 (ஷிப்ட் 1) அன்றும் திட்டமிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: 320 இந்தியர்கள் மாயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/nepal-flash-floods-320-indians-missing</link><comments>https://www.maalaimalar.com/news/national/nepal-flash-floods-320-indians-missing#comments</comments><guid isPermaLink="false">edfea9ba-1269-404b-bf86-1a71f58d56bf</guid><pubDate>Fri, 28 Aug 2026 17:13:51 +0000</pubDate><atom:updated>2026-08-28T17:13:51.050Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>indians,Nepal Floods,இந்தியர்கள்,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/dwcjdnd1/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/dwcjdnd1/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/nepal-floods">நேபாள</a>-திபெத் எல்லையில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, குறைந்தது 320 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர் மற்றும் 400 பேர் சீன பகுதியில் சிக்கியுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது. </p><p>இந்த சூழ்நிலையை சமாளிக்க காத்மாண்டுவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க <a href="https://www.maalaimalar.com/news/national">இந்தியா</a> தயாராக இருப்பதாகவும் அமைச்சகம் கூறியது. </p><p>சீன பகுதியில் சிக்கியிருந்த 153 இந்தியர்கள் பாதுகாப்பாக நேபாளத்திற்கு வந்து சேர்ந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. </p><p>நேபாளத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து காத்மாண்டுவை அடைந்த மறுநாளான இன்று மதியம், 21 இந்தியர்கள் டெல்லிக்கு வந்து சேர்ந்தனர் என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். </p><h2>அதிகரிக்கும் உயிரிழப்புகள்:</h2><p>தமிழ்நாட்டை சேர்ந்த அந்த இந்தியர்கள், தலைநகரில் உள்ள விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரால் வரவேற்கப்பட்டனர்.</p><p>நேபாள அதிகாரிகளின் சமீபத்திய தகவல்களின்படி, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டதால், புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 579-ஆக உயர்ந்துள்ளது.</p><h2>காணாமல் போன இந்தியர்கள்:</h2><p>"தொடர்பு கொள்ள முடியாத அல்லது காணாமல் போன இந்தியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, தற்போதைய நிலவரப்படி அந்த எண்ணிக்கை 320-ஆக உள்ளது," என்று ஜெய்ஸ்வால் கூறினார்.</p><p>திரிசூலி-ஒன் நீர்மின் திட்டத்தில் பணிபுரிந்த 63 இந்தியர்களும் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். "தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுமார் 100 பேரும் உள்ளனர். இவர்கள் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக சென்றிருக்கக்கூடிய இந்திய வம்சாவளியினர், ஆனால் அவர்கள் வேறு நாடுகளின் குடியுரிமை பெற்றவர்கள்," என்று அவர் கூறினார்.</p><h2>தீவிர ஆலோசனை:</h2><p>400 இந்தியர்கள் சீனப் பகுதியில் சிக்கியிருந்தாலும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.</p><p>"அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளனர். எங்கள் தூதரகம் அவர்களில் பலருடன் தொடர்பில் உள்ளது. பெய்ஜிங்கில் உள்ள எங்கள் தூதரகம் இயக்கும் உதவி எண் சேவைகள் மூலமாகவும் அவர்களது குடும்பத்தினர் பலர் எங்களைத் தொடர்பு கொண்டனர்."</p><p>"சீனாவில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் எங்கள் தூதரகம் தொடர்பில் உள்ளது; அங்குள்ளவர்களை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்து அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்," என்று அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த மாணவர் - ரூ.13,000 அபராதம் கேட்ட பரிசோதனை அதிகாரி</title><link>https://www.maalaimalar.com/news/national/student-fined-13000-rupees-for-travelling-without-bus-ticket</link><comments>https://www.maalaimalar.com/news/national/student-fined-13000-rupees-for-travelling-without-bus-ticket#comments</comments><guid isPermaLink="false">a4748172-f4e4-4447-94a5-4c30dc8a56f2</guid><pubDate>Fri, 28 Aug 2026 16:42:05 +0000</pubDate><atom:updated>2026-08-28T16:42:05.177Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Government Bus,அரசு பேருந்து,Ticket Examiner,டிக்கெட் பரிசோதகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/m3x7btyj/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pune Bus Fine Controversy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/m3x7btyj/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் அரசு பேருந்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த மாணவர் ஒருவரிடம் அபராத தொகையாக, புனே மாநகர பயணச்சீட்டு சோதனை அதிகாரி ரூ.7,000 வலுக்கட்டாயமாக வசூலித்ததாக அந்த மாணவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>மேலும் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யும் நபர்களிடம் வசூலிக்கப்படும் அபராதம் ரூ.500-ஆக இருக்கும்போது தன்னிடம் இருந்து பணத்தை பறித்துவிட்டதாக மாணவர் கூறியுள்ளார்.</p><p>புனேவில் கடந்த செவ்வாய்க்கிழமை வகாடி பேருந்து நிலையத்தில் இருந்து கத்ராஜூக் பகுதிக்கு அரசுப் பேருந்தில் மாணவர் ஒருவர் பயணம் செய்தார். அப்போது அந்த பேருந்தை சோதனை செய்த பயணச்சீட்டு அதிகாரி, மாணவரிடம் பயணச்சீட்டு கேட்டுள்ளார்.</p><p>பின்னர் மாணவர் தனது செல்போனில் காலை 9:15 மணி முதல் 10:30 மணி வரை இணையவழியில் தோல்வியடைந்த பயணச்சீட்டு பணப்பரிவர்த்தனைகளை காண்பித்துள்ளார்.</p><p>இந்த நிலையில் தோல்வியடைந்த பரிவர்த்தனைகள் பயணச்சீட்டு இல்லாத பயணமாக கருதப்பட்டதாகவும், அதன் காரணமாக ஆரம்பத்தில் தன்னிடம் ரூபாய் 13,000 செலுத்தும்படி டிக்கெட் பரிசோதனை அதிகாரி கேட்டதாகவும் மாணவர் கூறினார்.</p><p>பின்னர் அந்தத் தொகை ரூ.10,000 ஆகக் குறைக்கப்பட்டு, இறுதியாக ரூ.7,000 வசூலிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அபராதத் தொகையை எவ்வாறு பேரம் பேச முடியும் என்றும், அவ்வாறு செய்வதற்கு பயணச்சீட்டு சோதனை அதிகாரிக்கு அதிகாரம் உள்ளதா என்றும் அந்த மாணவர் கூறினார்.</p><p>இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசு பேருந்தின் (PMPML) கணக்கிற்கு பதிலாக, டிக்கெட் பரிசோதகரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.7,000 மாற்றப்பட்டதாக மாணவர் கூறினார்.</p><p>மேலும் அதற்கான ரசீது தனக்கு வழங்கும்போது, ரூ.7,000 அபராத தொகையை தானாக முன்வந்து செலுத்துவதாக தன்னை எழுத வைத்ததாகவும் அந்த மாணவர் கூறினார்.</p><p>இந்த நிலையில் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில், டிக்கெட் இல்லாத பயணம் அனுமதிக்கப்படாது; அதே சமயம், அபராதம் வசூலிக்கும்போது எங்கள் ஊழியர்கள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.</p><p>ஒரு பயணி ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டாலோ அல்லது தவறான தொகை வசூலிக்கப்பட்டதாக நம்பினாலோ, நாங்கள் டிக்கெட் மற்றும் கட்டணப் பதிவுகளை சரிபார்ப்போம் என்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையை மீறும் எந்தவொரு ஊழியர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புனே போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சகோதரனின் கையை பிடித்து ராக்கி கட்டும்போது 20 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி</title><link>https://www.maalaimalar.com/news/national/girl-falls-into-20-foot-borewell-while-tying-rakhi-to-brother</link><comments>https://www.maalaimalar.com/news/national/girl-falls-into-20-foot-borewell-while-tying-rakhi-to-brother#comments</comments><guid isPermaLink="false">1bb5466d-f80f-44ab-9bd6-3b98700406e6</guid><pubDate>Fri, 28 Aug 2026 16:40:15 +0000</pubDate><atom:updated>2026-08-28T16:40:15.370Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>uttarpradesh,Rakhi,ரக்‌ஷா பந்தன்,ராக்கி கயிறு,Raksha Bhandan,உத்தரப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/wzbrw9n9/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Uttar Pradesh Raksha Bandhan tragedy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/wzbrw9n9/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேசத்தில்</a> சகோதரனின் கையில் ராக்கி கட்டுவதற்காக தனது வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டிருந்த 16 வயது சிறுமி ஒருவர், தவறி 20 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில், பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் அவரை வெளியில் எடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Kanpur, UP: Rescue operation underway after a 16-year-old girl falls into a borewell. <a href="https://t.co/zV6TYtK769">pic.twitter.com/zV6TYtK769</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2093248103721955470?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் சுமார் 35 கி.மீ. தொலைவில் புர்வாமிர் என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் சுட்சி ஷர்மா என்ற 16 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் முற்றத்தில் ரக்‌ஷ பந்தனை கொண்டாடும் வகையில் தனது சகோதரனின் கையில் ராக்கி கட்டுவதற்காக நின்று கொண்டிருந்தார்.</p><p>காலை 6:40 மணியளவில் அந்த சிறுமி தனது சகோதரனின் கையை பிடித்து ராக்கி கட்ட முயன்றபோது, வீட்டின் முற்றத்திற்கு அருகில் மூடாமல் இருந்த 20 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். </p><p>இதையடுத்து சிறுமியின் சகோதரன் கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் வந்து ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்க முயற்சி செய்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மகாராஜ்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) வீரர்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.</p><p>மீட்பு பணி குறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி தீபக் சர்மா கூறுகையில், தீயணைப்புத் துறையைச் சேர்ந்த குழுக்கள் உதவியுடன் சிறுமியை மீட்கும் பணியில் சுமார் 60 மீட்புபடை வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறினார்.</p><p>ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை சென்றடைவதற்காக, மீட்புக் குழுவினர் அருகில் ஒரு குழியைத் தோண்டினர்.</p><p>ஆழ்துளை கிணற்றையும் வீட்டையும் சுற்றியுள்ள தரை உறுதியற்றதாக இருந்ததாலும், மேலும் ஒரு சரிவு ஏற்படக்கூடும் என்ற கவலைகள் எழுந்ததாலும், இந்த மீட்புப் பணியை கவனமாக மீட்பு படை வீரர்கள் மேற்கொண்டனர்.</p><p>இதற்கிடையில் பல மணி நேர போராட்ட முயற்சிக்குப் பிறகு, மீட்புக் குழுவினர் அந்த சிறுமியை ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்து, அருகில் இருந்த சர்சால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.</p><p>அங்கு அந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><p>இந்த நிலையில் சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்தது குறித்து குடும்பத்தினர் கூறுகையில், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முற்றத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. ஆனால் பணியை முடிக்க முடியாததால் அது கைவிடப்பட்டது.</p><p>பின்னர் மற்றொரு இடத்தில் இரண்டாவது ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறு மண்ணைப் பலவீனப்படுத்தியதால், சமீபத்திய மழையின் காரணமாக மண் சரிந்து விழுந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சோனியா காந்தி சுயசரிதை: பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் குறித்த கருத்துகளை நீக்க மறுத்ததால் பின்வாங்கிய பென்குயின் நிறுவனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sonia-gandhis-autobiography-penguin-withdrew-after-refusing-to-remove-remarks-about-modi-and-the-rss</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonia-gandhis-autobiography-penguin-withdrew-after-refusing-to-remove-remarks-about-modi-and-the-rss#comments</comments><guid isPermaLink="false">76119be1-69e7-4a7c-be9f-1961735cc8da</guid><pubDate>Fri, 28 Aug 2026 16:04:51 +0000</pubDate><atom:updated>2026-08-28T16:04:51.740Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>RSS,ஆர்எஸ்எஸ்,Modi,sonia gandhi,பிரதமர் மோடி,சோனியா காந்தி,Penguin India,பென்குயின் இந்தியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/bkk99c7j/New-Project-2026-08-28T213234.782.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சோனியா காந்தி சுயசரிதை: மோடி, ஆர்எஸ்எஸ் குறித்த கருத்துகளை நீக்க மறுத்ததால் பின்வாங்கிய பென்குயின் நிறுவனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/bkk99c7j/New-Project-2026-08-28T213234.782.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சோனியா காந்தியின் சுயசரிதைப் புத்தகமான   ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ புத்தகத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கான ஒப்பந்தத்தில் இருந்து விலகியதாக <a href="https://www.maalaimalar.com/news/national/sonia-gandhis-autobiography-penguin-withdraws-from-publication">பென்குயின் ரேண்டம் ஹவுஸ்</a>  இந்தியா பதிப்பகம் தெரிவித்திருந்தது.</p><p>புத்தகத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள சோனியா காந்தி ஒப்புக்கொள்ளாததால் இந்தியாவில் அதன் வெளியீட்டிலிருந்து பென்குயின் பதிப்பகம் பின்வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு பென்குயின் நிறுவனம் மறுப்பு தெரிவித்திருந்தது. </p><p>இந்நிலையில் இந்தக் காரணம்தான் உண்மை என்றும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்ஆஸ் குறித்த தகவல்களை எடுக்க சோனியா காந்தி மறுத்ததால்தான் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் புத்தக வெளியீட்டில் இருந்து பின்வாங்கியதாக காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.</p><p>இதுதொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேசியுள்ள பெயர் குறிப்பிடாத சோனியா காந்தியின் உதவியாளர்களில் ஒருவர்.,</p><p>“சோனியா காந்தியின்மீதான மோடியின் விமர்சனங்களை அவர் விரிவாக இப்புதகத்தில் பகிர்ந்திருந்தாகவும், 2004-ல் குஜராத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சோனியாவை ‘ஜெர்சி மாடு’ என்று அழைத்த ஒரு கருத்தையும் அவர் மேற்கோள் காட்டியதாகவும்” கூறியுள்ளார். </p><p>ஒரு அரசியல்வாதியாக, இந்த விவகாரம் எவ்வாறு கையாளப்பட்டது என்பதை அவர் குறிப்பிடுகிறார், ஆனால் பதிப்பாளர்களுக்கு அதில் சிக்கல்கள் இருந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>"பிலாங்கிங்: தி ஜர்னி ஆஃப் லவ்"(Belonging: A Journey of Love)</h2><p>சோனியா காந்தி இத்தாலியின் ஒரு சிறிய நகரில் கழித்த தனது குழந்தைப் பருவம் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை நினைவுகள், ராஜீவ் காந்தி உடனான திருமணம், அவரது இழப்பு என தனது வாழ்வின் முக்கிய அங்கங்களை இதில் பகிர்ந்துள்ளார்.</p><h2>'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி'</h2><p>கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவின் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற சுயசரிதை நூலை வெளியிடுவதில் இருந்தும் பென்குயின் நிறுவனம் பின்வாங்கியது.</p><p>இந்நூலை குறிப்பிட்டு, 2020-ல் லடாக்கில் நடந்த இந்தியா-சீனா ராணுவ மோதல் குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் விவாதித்திருந்தார். அந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்த, அப்புதக வெளியீட்டில் இருந்து விலகியது பென்குயின் நிறுவனம்.</p>]]></content:encoded></item><item><title>நான் தலித் என்பதால் டார்கெட்: ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர் சொல்கிறார்</title><link>https://www.maalaimalar.com/news/national/targeted-because-i-am-dalit-minister-b-nagendra-to-resign-amid-corruption-charges</link><comments>https://www.maalaimalar.com/news/national/targeted-because-i-am-dalit-minister-b-nagendra-to-resign-amid-corruption-charges#comments</comments><guid isPermaLink="false">3b986995-e888-49b9-82a5-746dde98daaf</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:08:15 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:08:15.001Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,B Nagendra,பி நாகேந்திரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/7b0rb5a5/BNagendra001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ B Nagendra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/7b0rb5a5/BNagendra001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வால்மீகி கார்ப்பரேசன் நிதி தொடர்பான மோசடி வழக்கு தொடர்பாக மந்திரி பதவியை இழந்தவருக்கு, மீண்டும் பதவி வழங்கப்பட்டதால் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தனது பதவியை பி நாகேந்திரா ராஜினாமா செய்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/it-was-the-congress-that-asked-me-to-step-down-basavaraj-horatti-who-resigned-as-karnataka-legislative-council-chairman">கர்நாடகாவில்</a> சித்தராமையா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டிருந்த பி. நாகேந்திரா, சிவக்குமார் தலைமையில் கடந்த மாதம் அமைக்கப்பட்ட மந்திரி சபையில் இடம் பிடித்திருந்தார். வால்மீகி கார்ப்பரேசன் முறைகே வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அமைச்சரவையில் இருந்த விலக வேண்டும் என்ற பாஜக வலியுறுத்தி வந்தது.</p><p>இந்த நிலையில்தான் அமைச்சர் பதவியை பி. நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக பி. நாகேந்திரா கூறியதாவது:-</p><p>வால்மீகி பரிமாற்றத்தில் என்னுடைய கையெழுத்து எங்கேயாவது இருக்கிறதா?. நான் தலித் என்பதால் டார்கெட் செய்யப்பட்டுள்ளேன். குறிப்பிட்ட பணப் பரிவர்த்தனைகளில் வங்கிகள் சம்பந்தப்பட்டிருக்கும்போது, ​​தன்னை ஏன் இதற்கெல்லாம் பொறுப்பாக்குகிறார்கள். அப்படியானால் மத்திய நிதியமைச்சர்தான் இதற்குப் பொறுப்பா?. கர்நாடக மக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனக்கு எதிராகத் தினமும் ஆயிரம் பொய்கள் சொல்லப்படுகின்றன.</p><p>இவ்வாறு பி. நாகேந்திரா தெரிவித்துள்ளார்.</p><p>இந்த சர்ச்சை எழுந்தபோது பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த நாகேந்திரா, ஜூன் 2024-ல் அமைச்சரவையிலிருந்து விலகினார். பின்னர் ஆகஸ்ட் 3, 2026 அன்று திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறையின் அமைச்சராக அவர் மீண்டும் நியமிக்கப்பட்டார். இது அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளது.</p><p>தான் பதவி விலகப்போவதாக வெளியான தகவல்களை நாகேந்திரா முன்னரே மறுத்திருந்தார். மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அவர் கூறி வந்தார். அத்துடன், பாஜக-வைக் குறிக்கும் வகையில் "மனுவாதிகள்" (Manuvadis) என்பவர்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பி.எஸ்.என்.எல். கேபிள் குழாய் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் உயிரிழப்பு: புனேயில் சோகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/two-workers-die-in-bsnl-pipeline-work-police-investigation</link><comments>https://www.maalaimalar.com/news/national/two-workers-die-in-bsnl-pipeline-work-police-investigation#comments</comments><guid isPermaLink="false">9570546f-cd8c-4972-8cda-e0c284e45501</guid><pubDate>Fri, 28 Aug 2026 14:59:09 +0000</pubDate><atom:updated>2026-08-28T14:59:09.210Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,பிஎஸ்என்எல்,BSNL,fire department,தீயணைப்புத் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/q8vb1hcm/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BSNL Pipe Work Worker Deaths]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/q8vb1hcm/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/மகாராஷ்டிரா">மகாராஷ்டிராவில்</a> பி.எஸ்.என்.எல். பணிக்காக நிலத்தடி குழாய் பதித்து கொண்டிருந்த இரண்டு துப்புரவு பணியாளர்கள் மயக்கமடைந்த நிலையில் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். </p><p>இதையடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><h3><strong>நிலத்தடி குழாய் பதிப்பு</strong></h3><p>மகாராஷ்டிராவின் நிக்டி பிரதிகரன் பகுதியில் உள்ள லோக்மான்யா மருத்துவமனைக்கு அருகே ஒரு நிலத்தடிக்குள், சித்தேஷ்வர் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான மனோஜ் பாபுராவ் ஷிண்டே மற்றும் 19 வயதான அமோல் அசோக் ஷிண்டே ஆகியோர் குழாய் பதிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.</p><p>இதையடுத்து குழிக்குள் சென்றவர்கள் மேலே வராததால், இரவு 11:45 மணியளவில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் மீட்புப் பணியை தொடங்கினர்.</p><p>பின்னர் குழிக்குள் மயங்கிய நிலையில் இருந்தவர்களை மீட்டு யஷ்வந்த்ராவ் சவான் நினைவு (ஒய்.சி.எம்) மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.</p><p>அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><h3><strong>காவல் ஆய்வாளர்</strong></h3><p>இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து நிக்டி காவல் ஆய்வாளர் மகேஷ் பன்சோடே கூறுகையில், “நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று, அவர்களை மீட்டு ஒய்.சி.எம். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். இருப்பினும், அவர்கள் மருத்துவமனைக்கு வந்தடைந்தபோதே இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.</p><p>இறந்தவர்கள் எந்த சூழ்நிலையில் குழிக்குள் சென்றார்கள் மற்றும் அந்த பணிக்கு யார் பொறுப்பு என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்.</p><p>அந்த குழாய் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் தொடர்புடையதாக அறியப்படுகிறது, காவல்துறையினர் பிஎஸ்என்எல் அதிகாரிகளிடமும் விசாரித்து வருகின்றனர்.</p><p>இருப்பினும், இறந்தவர்கள் பிஎஸ்என்எல் தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தனரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.</p><p>மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.</p><p>தொழிலாளர்கள் மூச்சுத்திணறல், ஆக்சிஜன் பற்றாக்குறை, நச்சு வாயுக்களின் தாக்கம் அல்லது பிற காரணங்களால் இறந்தார்களா என்பதை கண்டறிய, காவல்துறை மருத்துவ மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளுக்காக காத்திருக்கிறது.</p><p>கடந்த ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக நிக்டி காவல் நிலையத்தில் கவனக்குறைவான மரணம் விளைவித்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.</p><p>தற்போது பதிவான இரண்டு மரணங்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.</p><h3><strong>உயிரிழப்பு 5-ஆக உயர்வு</strong></h3><p>கடந்த ஆகஸ்ட் 15, 2025 அன்று, சின்ச்வாடைச் சேர்ந்த 35 வயதான லக்கன் தவாரே மற்றும் 38 வயதான தத்தாத்ரே வனாலே மற்றும் பிஜலிநகரைச் சேர்ந்த 35 வயதான சாஹேப்ராவ் கீர்ஷேட்டே ஆகிய மூன்று பேர் குழாய் பணியில் ஈடுபட்டிருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.</p><p>இந்த நிலையில் தற்போது நிகழ்ந்துள்ள இந்த சம்பவம், நிலத்தடி பயன்பாட்டு குழிக்குள் நுழையும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேசிய தேர்வு முகமையின் புதிய இயக்குநராக ஐஏஎஸ் பிரசன்ன வெங்கடேஷ் நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/ias-officer-prasanna-venkatesh-appointed-as-the-new-director-of-the-national-testing-agency</link><comments>https://www.maalaimalar.com/news/national/ias-officer-prasanna-venkatesh-appointed-as-the-new-director-of-the-national-testing-agency#comments</comments><guid isPermaLink="false">d737b6a5-255e-4a0e-a929-a69ff58c3a72</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:45:15 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:45:15.261Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,தேசிய தேர்வு முகமை,National Testing Agency,Prasanna Venkatesh,பிரசன்ன வெங்கடேஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/qesr02zi/New-Project-2026-08-28T191015.172.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தேசிய தேர்வு முகமையின் புதிய இயக்குநராக ஐஏஎஸ் பிரசன்ன வெங்கடேஷ் நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/qesr02zi/New-Project-2026-08-28T191015.172.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/protest-intensifies-nta-removes-47-officials-en-masse">தேசிய தேர்வு முகமை</a>யின் புதிய இயக்குநராக ஆந்திராவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பிரசன்ன வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்த பணியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>பிரசன்ன வெங்கடேஷ் இதற்கு முன்னர் ஏலூர் மாவட்ட ஆட்சியராகவும், விஜயவாடா மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.</p><p>நிர்வாகக் கட்டமைப்பை பலப்படுத்த பிரசன்ன வெங்கடேஷுடன் சேர்த்து, ஐபிஎஸ் அதிகாரி ரவிக்குமார் சிங் மற்றொரு இயக்குநராகவும், ஐஆர்எஸ் அதிகாரி அமித் சம்தாரியா இணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>நீட் சர்ச்சை</h2><p>யுஜி - நீட் மற்றும் யுசிஜி நெட் உள்ளிட்ட தேசிய அளவிலான உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த அதிரடி சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை  மேற்கொண்டுள்ளது.</p><p>மூன்று பேரும், மூன்று வாரங்களுக்குள் பொறுப்பேற்க வேண்டும் என்று பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணியில் சேரத் தவறினால், மத்திய பணியாளர் திட்டத்திலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>எகிறிய வெங்காய விலை: கிலோ ரூ.35-க்கு விற்க மத்திய அரசு நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/centre-intervenes-onion-to-be-sold-at-rs35-per-kg</link><comments>https://www.maalaimalar.com/news/national/centre-intervenes-onion-to-be-sold-at-rs35-per-kg#comments</comments><guid isPermaLink="false">9104ba1a-133f-484b-aa68-df934fd3df7d</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:13:55 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:13:55.540Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,onion price,கவுகாத்தி,வெங்காய விலை உயர்வு,guwahati train,Kanda Express,கந்தா எக்ஸ்பிரஸ்.</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4jc9jirc/Onion" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Onion ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4jc9jirc/Onion?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான உணவுப் பொருள்களில் ஒன்றான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">வெங்காயத்தின் விலை</a> கடந்த சில நாட்களாகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. இது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது.</p><h2>சில்லறை விற்பனையில் 59% விலை உயர்வு</h2><p>இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் விளைவாக, முக்கிய வெங்காய உற்பத்தி மாநிலங்களில் விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது. </p><p>இதனால் சந்தைகளுக்கு வரும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வெங்காயத்தின்</a> வரத்து சரிந்து, நாடு முழுவதும் சில்லறை விற்பனையில் இதன் விலை சுமார் 59 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.</p><p>தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.</p> <h2>டெல்லி வந்தடைந்த 'கந்தா எக்ஸ்பிரஸ்'</h2><p>வெங்காய விலையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் தடையின்றி வெங்காயம் கிடைக்கவும் மத்திய அரசு தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>அதன்படி, மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து 'கந்தா எக்ஸ்பிரஸ்' சிறப்பு சரக்கு ரயில் மூலம் முதற்கட்டமாக 400 டன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வெங்காயம் </a>டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.</p><p>மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி காரே இந்த மானிய விலை வெங்காய விநியோகப் பணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.</p> <h2><strong>கிலோ ரூ.35-க்கு மானிய விலை வெங்காயம்</strong></h2><p>மத்திய அரசின் இந்த வெங்காயங்கள் நுகர்வோர் கூட்டுறவு அமைப்புகளான,<strong> இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் நாபெட் </strong>ஆகியவற்றின் நடமாடும் வாகனங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் <strong>ஒரு கிலோ ரூ.35 என்ற மானிய விலையில்</strong> பொதுமக்களுக்கு நேரடி விற்பனை செய்வதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><h2>விரைவில் சென்னை, மதுரைக்கு சிறப்பு ரயில்கள்!</h2><p>தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து, விலை அதிகமாக உள்ள நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு சரக்கு ரயில்கள் மூலம் வெங்காயத்தை விநியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>அதன்படி, சென்னை, மதுரை, எர்ணாகுளம் (கொச்சி) மற்றும் கவுகாத்தி ஆகிய நான்கு முக்கிய மையங்களுக்கு விரைவில் 'கந்தா எக்ஸ்பிரஸ்' ரயில்கள் மூலம் வெங்காயம் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு மலிவு விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனால் தமிழகத்தில் விரைவில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">வெங்காய விலை</a> குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் சிக்கிய எஞ்சியவர்களை மீட்க போராடி வருகிறோம்- அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/national/minister-rajmohan-says-efforts-underway-to-rescue-remaining-tamils-in-nepal</link><comments>https://www.maalaimalar.com/news/national/minister-rajmohan-says-efforts-underway-to-rescue-remaining-tamils-in-nepal#comments</comments><guid isPermaLink="false">67e8d169-7b9a-4a65-8472-fe9f4b142030</guid><pubDate>Fri, 28 Aug 2026 12:37:43 +0000</pubDate><atom:updated>2026-08-28T12:37:43.221Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,nepal flood,டெல்லி,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/djub84ut/Raj-mohan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/djub84ut/Raj-mohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் இருந்து தமிழர்கள் மீட்கப்பட்டது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>நேபாளம் வெள்ளப்பெருக்கில் சிக்கி மீட்கப்பட்ட 21 பேருடன் காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்ட விமானம் 3.45-க்கு டெல்லி வந்தடைந்தது. </p><p>இதனைதொடர்ந்து, தமிழர்களை மீட்டு அழைத்துவர முதலமைச்சர் விஜய் அமைத்த அமைச்சர்கள் குழு நேபாளத்தில் இருந்து  மீட்டு வரப்பட்ட 21 பேரையும் டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தனர்.</p><p>அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் ஆகியோர் தப்பிப்பிழைத்து 21 தமிழர்களுடன் சந்தித்து பேசினர்.</p><p>மீட்கப்பட்ட 21 பேரும் டெல்லி விமான நிலையத்தில் இருந்து, இன்று இரவு 8 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:-</p><p>நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்களுடன் பத்திரமாக டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>நேபாளத்தில் தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதால் எஞ்சியவர்களை மீட்க போராடுகிறோம்.</p><p>மீட்கப்பட்டவர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களும் உடல் நலத்துடன் உள்ளனர். பலர் வெள்ளத்தில் பாஸ்போர்டுகளை இழந்துள்ளனர்.</p><p>மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்ட 21 தமிழர்களும் இன்றிரவு விமானம் மூலம் சென்னை அழைத்து செல்லப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.19,694.33 கோடி கடன் மோசடி வழக்கு: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் துணைத் தலைவருக்கு ஜாமீன்</title><link>https://www.maalaimalar.com/news/national/vishwanath-rao-granted-bail-in-rcom-19694-crore-loan-fraud-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/vishwanath-rao-granted-bail-in-rcom-19694-crore-loan-fraud-case#comments</comments><guid isPermaLink="false">22fd239b-91f3-4194-b178-3060f2e4169b</guid><pubDate>Fri, 28 Aug 2026 12:24:43 +0000</pubDate><atom:updated>2026-08-28T12:24:43.977Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,ரிலையன்ஸ்,Reliance,Bombay High Court,பம்பாய் உயர்நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/chjsmx0g/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Reliance Loan Default Case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/chjsmx0g/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/ரிலையன்ஸ்">ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்</a> நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரான விஸ்வநாத் ராவ், வங்கிகளை ஏமாற்றி கடன் பெற்று, 26 இந்திய வங்கிகள் அடங்கிய குழுமத்திற்கு ரூ.19,694.33 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ-யில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பொதுவான மற்றும் கற்பனையான வாதங்களை ஏற்க முடியாது என்று கூறி அவருக்கு ஜாமீன் வழங்கி பம்பாய் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><h3><strong>ரிலையன்ஸ் நிறுவனம்</strong></h3><p>ரிலையன்ஸ கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தில் 2000-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைநிலை மேலாண்மை பதவியில் விஸ்வநாத் ராவ் என்பவர் பணியில் சேர்ந்துள்ளார்.</p><p>அவர் ஒரு மூத்த மேலாளராக, வரவு செலவு திட்டங்கள், மேலாண்மை தகவல் அமைப்பு மற்றும் பணப்புழக்க அறிக்கைகளை தயாரித்தல், திட்டம் தொடர்பான செலவினங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் வழக்கமான வங்கி பரிவர்த்தனைகளை செயல்படுத்துதல் உள்ளிட்ட வணிக மற்றும் வங்கி செயல்பாடுகளை கண்காணித்து வந்துள்ளார்.</p><h3><strong>எஸ்.பி.ஐ வங்கி புகார்</strong></h3><p>கடந்த 2013-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமம் அரசுக்கு சொந்தமான வங்கியை பல்வேறு கடன் வசதிகளை வழங்க தூண்டி, இறுதியில் ரூ.2,929.05 கோடி தவறான இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி சிபிஐ-யிடம் பாரத ஸ்டேட் வங்கி புகார் அளித்தது.</p><p>இந்த புகாரின் அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில மூத்த நிர்வாகிகளுக்கு எதிராக ஆகஸ்ட் 21, 2025 அன்று முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.</p><h3><strong>ரூ.19,694.33 கோடி கடன் மோசடி</strong></h3><p>மேலும் 26 இந்திய வங்கிகள் அடங்கிய குழுமத்திடம் இருந்து ரூ.19,694.33 கோடி கடன் பெற்று, அதனை திரும்ப செலுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.</p><p>இதையடுத்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விஸ்வநாத் ராவை மத்திய புலனாய்வு பிரிவு கைது செய்தது.</p><p>இதற்கிடையில் ராவ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், “ராவ் இயக்குநர் குழுவில் உறுப்பினராகவோ, கருவூலம் அல்லது நிதிக் கொள்கை படிநிலையின் ஒரு பகுதியாகவோ இல்லாததால், நிதிகளை தன்னிச்சையாக அனுமதிக்கவோ, கட்டமைக்கவோ அல்லது பயன்படுத்தவோ அவருக்கு அதிகாரம் இல்லை.</p><p>மேலும், அவர் கடன் வழங்குபவர்களுடனான பேச்சுவார்த்தைகளிலோ அல்லது கடன் வாங்கும் உத்தியை வகுப்பதிலோ பங்கேற்கவில்லை என்றும், அவரால் பயன்படுத்தப்பட்ட கையொப்பமிடும் அதிகாரம் முற்றிலும் நடைமுறை சார்ந்தது மற்றும் செயல்பாட்டுத் தேவையிலிருந்து உருவானது” என்றும் ராவ் தனது ஜாமீன் மனுவில் கூறினார்.</p><p>இருப்பினும், சிறப்பு நீதிமன்றம் ராவின் ஜாமீன் மனுவை நிராகரித்ததால், அவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார்.</p><p>அங்கு, அவரது வழக்கறிஞர்களான பி.கே. சங்ராஜ்கா மற்றும் ஸ்ரீசங்கர் பிரஜாபதி ஆகியோர், 67 வயதான அவர் கட்டுப்படுத்த முடியாத வகை-2 நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய தமனி நோயால் அவதிப்படுவதாகவும், இந்த ஆண்டு பிப்ரவரியில் ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் சுட்டிக்காட்டினர்.</p><p>ராவ் ஒரு ரூபாய் கூட பயனாளியாக இருக்கவில்லை என்றும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொதுவானவை என்றும், குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்ட 20 நபர்களில் மூன்று பேரை மட்டுமே சிபிஐ கைது செய்துள்ளது என்றும் ராவின் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.</p><h3>சிபிஐ வழக்கறிஞர்</h3><p>சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் முண்டே, ஜாமீன் மனுவை எதிர்த்து, விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட வங்கிப் பதிவுகள், தகவல் தொடர்புகள், பரிவர்த்தனைகள் மற்றும் சாட்சி வாக்குமூலங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள், கடன் அனுமதி விதிமுறைகளை மீறி, கடன் நிதியைத் திசைதிருப்புவதாக கூறினார்.</p><p>மேலும் வசதியாக வடிவமைக்கப்பட்ட அடுக்குமுறை பரிவர்த்தனைகள், பில் தள்ளுபடி ஏற்பாடுகள் மற்றும் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் மூலம் நிதியை வழிப்படுத்துவதில் ராவ்-இன் நேரடி மற்றும் தீவிர ஈடுபாட்டை முதற்கட்டமான சுட்டிக்காட்டுகின்றன எனவும் சிபிஐ வழக்கறிஞர் வாதிட்டார்.</p><p>ராவ் பணிபுரிந்த ஆர் காம் நிறுவனம், நிதியைச் சுற்றி வளைத்து அனுப்பிய சிக்கலான பரிவர்த்தனைகள் மூலம் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டு, ஜாமீன் மனுவை நிராகரிக்குமாறும் சிபிஐ வழக்கறிஞர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.</p><h3><strong>பம்பாய் உயர்நீதிமன்றம்</strong></h3><p>இந்த வழக்கு நீதிபதி மிலிந்த் ஜாதவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பொதுவான மற்றும் கற்பனையான வாதங்களை ஏற்க மறுத்து, விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டதாலும், அவரை மேலும் காவலில் வைப்பதால் எந்த பயனும் இல்லை என்பதாலும் ராவுக்கு பிணை (bail) வழங்கி உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>சோனியா காந்தியின் சுயசரிதை: வெளியீட்டில் இருந்து விலகியது பென்குயின் நிறுவனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sonia-gandhis-autobiography-penguin-withdraws-from-publication</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonia-gandhis-autobiography-penguin-withdraws-from-publication#comments</comments><guid isPermaLink="false">505a2ea2-6735-42d7-a411-8385023d1363</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:32:33 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:32:33.012Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>sonia gandhi,சோனியா காந்தி,Penguin Random House India,Belonging A Journey of Love,பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா,பிலாங்கிங் எ ஜெர்னி ஆஃப் லவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/jwhcvt6t/New-Project-2026-08-28T160612.230.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சோனியா காந்தியின் சுயசரிதை: வெளியீட்டில் இருந்து விலகியது பென்குயின் நிறுவனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/jwhcvt6t/New-Project-2026-08-28T160612.230.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகமான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) நூலை இந்தியாவில் வெளியிடுவதிலிருந்து பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா (Penguin Random House India) பதிப்பகம் விலகியுள்ளது.</p><p>மேலும், புத்தகத்தில் சில மாற்றங்களை செய்ய பதிப்பதகம் கோரிய நிலையில், அதற்கு சோனியா காந்தி மறுப்பு தெரிவித்ததால் பதிப்பகம் விலகியதாக பரவும் தகவல்களுக்கும் மறுப்பு தெரிவித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக பதிப்பகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கச் செய்தியில்.,</p><p>“இந்தியாவில் 'Belonging' (பிலாங்கிங்) நூலை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா வெளியிடவில்லை. ஆசிரியர் பதிப்புரீதியான மாற்றங்களை ஏற்க மறுத்ததால் நிறுவனம் நூலை வெளியிட வேண்டாம் என்று முடிவெடுத்ததாகக் கூறப்படும் கருத்து, உண்மைக்கு புறம்பானது.</p><p>ஒரு பதிப்பாளராக, புத்தகங்களில் கொடுக்கப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதும், புத்தகத்திற்கு தேவையான பரிந்துரையை எழுத்தாளருக்கு வழங்குவதும் எங்கள் உரிமையும், பொறுப்பும் ஆகும். இது ஒரு புத்தக வெளியீட்டில் நடைபெறும் சாதாரண நடைமுறை.</p><p>இந்த விவகாரம் தொடர்பான அனைத்து கலந்துரையாடல்களிலும் புத்தகத்தை வெளியீட வேண்டும் என்பதே ‘பெங்குவின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா’வின் நிலைப்பாடாக இருந்தது.</p><p>ஆசிரியருடனான ரகசிய விவாதங்கள் குறித்து நாங்கள் மேலும் எந்தக் கருத்தும் தெரிவிக்க மாட்டோம்.” எனக் குறிப்பிட்டுள்ளது. </p><p>பென்குயின் நிறுவனம் விலகியதை அடுத்து, ‘ஹார்ப்பெர் காலின்ஸ்’ (HarperCollins) நிறுவனம் இப்புத்தகத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><h2>சர்வதேச வெளியீடு </h2><p>இந்த விலகல் இந்தியாவின் பதிப்புரிமையை மட்டுமே பாதிக்கும். சர்வதேச அளவில் அமெரிக்காவின் புகழ்பெற்ற 'ஆல்ஃபிரட் ஏ. நாஃப்' (Alfred A. Knopf) நிறுவனம் மூலம் நவம்பர் 10 ஆம் தேதி இப்புத்தகம் வெளியாகிறது. </p><h2>“பிலாங்கிங்: தி ஜர்னி ஆஃப் லவ்” (Belonging: A Journey of Love)</h2><p>சோனியா காந்தி இத்தாலியின் ஒரு சிறிய நகரில் கழித்த தனது குழந்தைப் பருவம் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை நினைவுகள், <a href="https://www.maalaimalar.com/news/national/it-has-been-35-years-since-i-last-saw-you-and-father-together-rahul-gandhis-emotional-words-about-his-mother-sonia">ராஜீவ் காந்தி உடனான திருமணம்</a>, அவரது இழப்பு என தனது வாழ்வின் முக்கிய அங்கங்களை இதில் பகிர்ந்துள்ளார்.</p><h2>'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' </h2><p>கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவின் <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-police-notice-mukund-naravane-opens-up-about-the-book-for-the-first-time-808959">'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி'</a> என்ற சுயசரிதை நூலை வெளியிடுவதில் இருந்தும் பென்குயின் நிறுவனம் பின்வாங்கியது.</p><p>இந்நூலை குறிப்பிட்டு, 2020-ல் லடாக்கில் நடந்த இந்தியா-சீனா ராணுவ மோதல் குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் விவாதித்திருந்தார். அந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்த, அப்புதக வெளியீட்டில் இருந்து விலகியது பென்குயின் நிறுவனம். </p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் இருந்து டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களை சந்தித்த அமைச்சர்கள் குழு</title><link>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-ministers-welcome-21-rescued-tamils-from-nepal</link><comments>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-ministers-welcome-21-rescued-tamils-from-nepal#comments</comments><guid isPermaLink="false">e2a7406a-3abe-401d-8160-c09d5a5d176c</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:10:36 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:10:36.049Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அமைச்சர்கள்,டெல்லி,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/cw6zg72a/Adhav.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamizhans in Delhi airport]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/cw6zg72a/Adhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் இருந்து  மீட்டு வரப்பட்ட 21 பேரையும், தமிழர்களை மீட்டு அழைத்துவர முதலமைச்சர் விஜய் அமைத்த அமைச்சர்கள் குழு டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தனர்.</p><p>கைலாஷ் மானசரோவர் யாத்திரை எனப் பல்வேறு பயணங்களுக்காக நேபாளம் சென்றிருந்த 101 தமிழர்களை மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.</p><p>இந்த மீட்பு பணிகள் தொடர்பாக ராஜ்மோகன், ஆதவ் அர்ஜூனா, தென்னரசு உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் நேற்று டெல்லி விரைந்தனர். தொடர்ந்து, தமிழர்களை மீட்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.</p><p>இதற்கிடையே, நேபாள வெள்ளப்பெருக்கால் அங்கு சிக்கியுள்ள 21 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. அவர்கள் விமானம் மூலம் இன்று இரவு சென்னை திரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.</p><p>மத்திய அமைச்சகம் அறிவித்த தகவலின்படி, மீட்கப்பட்ட 21 பேரும் இன்று தமிழ்நாடு வரவுள்ளனர். </p><p>இந்நிலையில் மீட்கப்பட்ட 21 பேருடன் காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்ட விமானம் 3.45க்கு டெல்லி வந்தடைந்தது. </p><p>இதனைதொடர்ந்து, நேபாளத்தில் இருந்து  மீட்டு வரப்பட்ட 21 பேரிடம், தமிழர்களை மீட்டு அழைத்துவர முதலமைச்சர் விஜய் அமைத்த அமைச்சர்கள் குழு டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தனர்.</p><p>அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் ஆகியோர் தப்பிப்பிழைத்து 21 தமிழர்களுடன் சந்தித்து பேசினர்.</p><p>மீட்கப்பட்ட 21 பேரும் டெல்லி விமான நிலையத்தில் இருந்து, இன்று இரவு 8 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>பி.எம். கிசான் திட்டத்தில் ரூ.60 கோடி மோசடி கண்டுபிடிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-kisan-scheme-rs-60-crore-fraud-fake-farmer-records</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-kisan-scheme-rs-60-crore-fraud-fake-farmer-records#comments</comments><guid isPermaLink="false">aecdd55a-c779-466e-afc1-1e57a27ff819</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:52:43 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:52:43.025Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தரப் பிரதேசம்,Kunda tehsil,PM Kisan,குண்டா தாலுகா,பி.எம்.கிசான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/yv18uans/Untitled-design-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM-Kisan scam in UP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/yv18uans/Untitled-design-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் விவசாயிகள் பயனடைவதற்காக மத்திய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் (தகுதியான விவசாயிகளுக்கு வருடந்தோறும் 6 ரூபாய் நிதியுதவி திட்டம்) ரூபாய் 60 கோடிக்கும் அதிகமான அளவில் மோசடி நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. </p><p>இதையடுத்து துறை ரீதியான விசாரணையையை மேற்கொள்ளுமாறு வேளாண்மை துறை இயக்குநர் அஷ்வினி குமார் சிங் காவல்துறையிடம் புகார் அளித்தார்.</p><h3><strong>பிரதன் மந்திரி கிசான் சம்மான் நிதி</strong></h3><p>இந்தியாவில் மத்திய அரசால் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் தகுதியுள்ள விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது.</p><p>மேலும் இந்த தொகையானது நேரடி பணப் பறிமாற்றம் மூலம் விவசாயிகளின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.</p><p>இந்த திட்டத்தின் கீழ் பலன்களை பெற விரும்பும் விவசாயிகள், தங்களது கைபேசிகள் மூலமாகவோ அல்லது ஜன் சேவா கேந்திரங்கள் வழியாகவோ பதிவு செய்ய வேண்டும்.</p><p>இதையடுத்து விண்ணப்பங்கள் முதலில் தாலுகா அளவில் பரிசீலிக்கப்பட்டு, பின்னர் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்படுகின்றன. </p><p>மாவட்ட, மாநில மற்றும் மத்திய அளவில் சரிபார்க்கப்பட்ட பிறகு, தகுதியுள்ள பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவியை பெறுகிறார்கள்.</p><h3><strong>உத்தரப் பிரதேசத்தில் மோசடி</strong></h3><p>இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள குண்டா தாலுகாவில் வழக்கமான செயல்முறையின் மூலம் பதிவு செய்ய முடியாத விவசாயிகள் பலன்பெறும் வகையில், தாலுகா அளவில் நேரடி நுழைவு வசதி அறிமுகம் செய்யப்பட்டது.</p><p>இந்த திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள், வழக்கமான சரிபார்ப்பு வழிமுறையை தவிர்த்து, நேரடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து இதன் பதிவுகளை ஆய்வு செய்தபோது, குண்டா தாலுகாவில் பெருமளவிலான சந்தேகத்திற்கிடமான பதிவுகள் இடம்பெற்றிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>மேலும் இந்த வழிமுறை வழியாக பதிவு செய்திருந்த பல பயனாளிகள், சிறார்கள் எனவும் மாவட்டத்திற்கு வெளியேயும் மாநிலத்திற்கு வெளியேயும் வசிப்பவர்கள் எனவும் தெரியவந்தது.</p><p>இந்த முறைகேடுகளை தொடர்ந்து நடத்தப்பட்ட துறைசார் விசாரணையில், நேரடி பதிவு வசதியை பயன்படுத்தி 3,18,846 பதிவுகள் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது. </p><p>இந்த பதிவுகள் தொடர்பாக கூறப்படும் மோசடி பணப்பட்டுவாடா மதிப்பு ரூ.60 கோடியை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதைத் தொடர்ந்து இணையத்தில் இருந்து நேரடி நுழைவு வசதி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து வேளாண்மை துறை துணை இயக்குநர் அஷ்வினி குமார் சிங் காவல்துறையிடம் புகார் அளித்தார்.</p><p>அதனைத் தொடர்ந்து 1700 ஐபி முகவரிகள் மற்றும் போலி பயனாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தீபக் பூக்கர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மராத்தி கற்க ஒரு வருடம் அவகாசம் - ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு நிம்மதி அளித்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்! </title><link>https://www.maalaimalar.com/news/national/one-year-grace-period-to-learn-marathi-chief-minister-devendra-fadnavis-brings-relief-to-auto-and-taxi-drivers</link><comments>https://www.maalaimalar.com/news/national/one-year-grace-period-to-learn-marathi-chief-minister-devendra-fadnavis-brings-relief-to-auto-and-taxi-drivers#comments</comments><guid isPermaLink="false">603021bd-c0e3-4648-9c06-7927ca04e2c9</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:33:18 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:33:18.832Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,Marathi,மராத்தி,Taxi Drivers,டாக்சி ஓட்டுநர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/vsmxcs7y/New-Project-2026-08-28T153842.583.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மராத்தி கற்க ஒரு வருடம் அவகாசம் - ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு நிம்மதி அளித்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/vsmxcs7y/New-Project-2026-08-28T153842.583.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/hindi-takes-first-place-in-maharashtra-marathi-ranks-second-actor-riteish-deshmukh-expresses-dismay">மராத்தி மொழி</a> கற்பதற்கு ஒரு வருடம் அவகாசம் அளிக்கப்படுவதாகவும், அதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். </p><p>கடந்தாண்டு மும்மொழிக் கொள்கை விவகாரம் தீவிரமடைந்த நிலையில், மகாராஷ்டிராவில் மராத்தி மொழி கற்றல் தொடர்பான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக அங்கு பணிபுரியும் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. </p><h2>ஓட்டுநர் உரிமம் ரத்து</h2><p>அண்மையில் நடத்தப்பட்ட சோதனைகளில் மராத்தி தெரியாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒரு மாதத்திற்குள் மொழியைக் கற்காவிட்டால் 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது.</p><p>போக்குவரத்துத் துறை அமைச்சரும் சிவசேனா தலைவருமான பிரதாப் சர்நாயக்கின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. </p><h2>அவகாசத்தை நீட்டித்த மகாராஷ்டிர அரசு</h2><p>பாஜக போக்குவரத்துப் பிரிவுத் தலைவர் ஹாஜி அராஃபத் ஷேக் தலைமையிலான ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் குழு, நேற்று முதலமைச்சர் பட்னாவிஸை சந்தித்து. </p><p>அப்போது, ஏராளமான ஓட்டுநர்களுக்கு மராத்தி பேசத் தெரியாது என்றும், வெறும் மூன்று மாதங்களில் அவர்களால் மொழியை மொத்தமாக கற்க இயலாது என்றும் நடைமுறையில் இருக்கும் சிக்கலை சுட்டிக் காட்டினர்.</p><p>இக்கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த பட்னாவிஸ்.,</p><p>“இன்று மதியம், ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் அடங்கிய ஒரு குழுவினர் என்னைச் சந்தித்து, மராத்தி மொழியைக் கற்றுக்கொள்ள கூடுதல் அவகாசம் கோரினர்.</p><p>அவர்களில் பெரும்பாலானோர் அதிகம் படித்தவர்கள் அல்ல, எனவே அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படும். அவர்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்க நான் முடிவு செய்துள்ளேன். இன்றிலிருந்து ஓராண்டுக்கு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது,” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>‘எந்தக் குழந்தையும் சாதியால் அடையாளம் காணப்படக் கூடாது’ - பள்ளி சேர்க்கை படிவங்களில் இருந்து சாதிப் பத்தியை நீக்க இமாச்சல் அரசு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/no-child-should-be-identified-by-caste-himachal-government-orders-removal-of-the-caste-column-from-school-admission-forms</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-child-should-be-identified-by-caste-himachal-government-orders-removal-of-the-caste-column-from-school-admission-forms#comments</comments><guid isPermaLink="false">67030a98-13a7-45e8-922c-2c9f906bc015</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:54:30 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:54:30.403Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>schools,பள்ளிகள்,சாதி,Himachal Pradesh,இமாச்சலப் பிரதேசம்,caste column,CM Sukhvinder Singh Sukhu,முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/b3w2vbqh/New-Project-2026-08-28T152345.328.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘எந்தக் குழந்தையும் சாதியால் அடையாளம் காணப்படக் கூடாது’ - பள்ளி சேர்க்கை படிவங்களில் இருந்து சாதிப் பத்தியை நீக்க இமாச்சல் அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/b3w2vbqh/New-Project-2026-08-28T152345.328.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2027-28 கல்வியாண்டு முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் மாணவர் சேர்க்கை படிவத்தில் உள்ள, சாதி விவரங்களை கோரும் பகுதியை நீக்கவேண்டும் என இமாச்சலப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் ஆக.26ம் தேதி நடைபெற்ற பட்டியல் சாதியினர் நல வாரியக் கூட்டத்தில் இந்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>சாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் குறைத்து, சமூகத்தில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் மேம்படுத்துவதே இந்த முடிவின் நோக்கம் என்று முதலமைச்சர் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.</p><p>பள்ளி சேர்க்கைப் படிவங்களிலிருந்து சாதிப் பகுதியை நீக்குவது, குழந்தைகள் தங்கள் சாதியின் அடிப்படையில் தாழ்வு மனப்பான்மை கொள்வதைத் தடுக்கவும் உதவும் என்றும் அவர் கூறினார்.</p><h2>சலுகைகள் தொடரும்</h2><p>இந்த உத்தரவால் மாணவர்களுக்கான அரசு சலுகைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் அரசு உறுதி அளித்துள்ளது.</p><p>சேர்க்கை படிவங்களில் சாதிப் பத்தி நீக்கப்பட்டாலும், அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை, இடஒதுக்கீடு மற்றும் இதர நலத்திட்டங்களைப் பெற விரும்பும் தகுதியுடைய மாணவர்கள் தங்களின் சாதி சான்றிதழ் விவரங்களைத் தனியாகச் சமர்ப்பித்து சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>&quot;பாசம் எப்போதும் நிலைத்திருக்கட்டும்&quot; – பிரதமர் மோடி ரக்ஷா பந்தன் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/national/nationwide-raksha-bandhan-celebrations-pm-modi-amit-shah-and-cms-extend-greetings</link><comments>https://www.maalaimalar.com/news/national/nationwide-raksha-bandhan-celebrations-pm-modi-amit-shah-and-cms-extend-greetings#comments</comments><guid isPermaLink="false">2b75f41e-36af-4d89-ab5d-812ba2969d09</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:33:29 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:33:29.946Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amitshah,raksha bandhan,pm modi,பிரதமர் மோடி,Droupadi Murmu,ரக்ஷா பந்தன்,Indian Festivals</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/3fb8do7z/Raksha-Bandhan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Raksha Bandhan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/3fb8do7z/Raksha-Bandhan?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் இன்று <a href="https://www.maalaimalar.com/topic/raksha-bandhan">ரக்ஷா பந்தன்</a> பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சகோதர-சகோதரிகளுக்கு இடையேயான அன்பையும், பாதுகாப்பையும் பலப்படுத்தும் இந்த உன்னத நாளில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட நாட்டின் முக்கியத் தலைவர்கள் மக்களுக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.</p><h2>பாரம்பரியத்தை நினைவூட்டிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு</h2><p>ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81">திரௌபதி முர்மு</a> விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அங்கமாக ரக்ஷா பந்தன் விளங்கி வருகிறது.</p><p>நம்பிக்கையுடன் மணிக்கட்டில் கட்டப்படும் 'ராகி' கயிறு, பாதுகாப்பின் புனிதமான பிணைப்பாகக் கருதப்படுகிறது. 'ரக்‌ஷே, மா சலா, மா சலா' என்ற மந்திர வரிகள், இந்த பாதுகாப்பு பிணைப்பு என்றென்றும் தொடர வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.</p><p>ஒவ்வொரு உறவும் நம்பிக்கை, உணர்திறன், பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றின் தூண்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை இப்பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது. </p><p>குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த இந்த நன்னாளில் நாம் உறுதியேற்போம். 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) நோக்கிய பயணத்தில் ஆக்கப்பூர்வமான சிந்தனையோடு நாம் முன்னோக்கிச் செல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.</p><h2>"பாசம் எப்போதும் நிலைத்திருக்கட்டும்" – பிரதமர் மோடி</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் நரேந்திர மோடி</a> தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ரக்ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இந்த புனிதமான பண்டிகை உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மகிழ்ச்சி, வளம் மற்றும் வெற்றியைக் கொண்டுவரட்டும். </p><p>சகோதரத்துவத்தின் மீதான பாசம், அன்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை என்றென்றும் உடையாத பிணைப்பாக நீடிக்க வேண்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">रक्षाबंधन की बहुत-बहुत शुभकामनाएं। <br><br>यह पावन पर्व आप सभी के जीवन में खुशहाली, समृद्धि और सफलता लेकर आए। <br><br>स्नेह, अपनत्व और आपसी विश्वास की डोर सदैव अटूट बनी रहे, यही कामना है। <a href="https://t.co/bfH7GRVwUe">pic.twitter.com/bfH7GRVwUe</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2093158719052005705?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>"அன்பின் அடையாளம்" – மத்திய அமைச்சர் அமித் ஷா</h2><p>மத்திய உள்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE">அமித் ஷா </a>விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அசைக்க முடியாத அன்பு மற்றும் நம்பிக்கையைப் போற்றும் புனிதமான ரக்ஷா பந்தன் திருநாளில், சக நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். </p><p>இந்த திருவிழா ஒவ்வொருவரின் வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வர பிரார்த்திக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">समस्त देशवासियों को भाई-बहन के अटूट स्नेह और विश्वास को समर्पित ‘रक्षाबंधन’ के पावन पर्व की हार्दिक शुभकामनाएँ।<br><br>यह पर्व सभी के जीवन में सुख, शांति और समृद्धि लेकर आए। <a href="https://t.co/iOVnSZT2l5">pic.twitter.com/iOVnSZT2l5</a></p>&mdash; Amit Shah (@AmitShah) <a href="https://x.com/AmitShah/status/2093161949454623013?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடிய டெல்லி முதல்வர்</h2><p>டெல்லி முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE">ரேகா குப்தா</a>, பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தார். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பள்ளி மாணவிகள், முதல்வருக்கு ராகி கயிறுகளைக் கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.</p><p>இதுகுறித்து முதல்வர் கூறுகையில், "டெல்லி முழுவதும் உள்ள விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள், 'முக்கியமந்திரி ஜன சேவா சதன்' இல்லத்திற்கு வந்து ராக்கி கயிறுகளைக் கட்டினர். அவர்களின் புன்னகையும், உற்சாகமும், அவர்கள் வெளிப்படுத்திய அன்பும் இந்நிகழ்வை மிகவும் சிறப்பானதாக மாற்றின.</p><p>டெல்லியின் வீதிகளிலும் சந்துகளிலும் எண்ணற்ற குழந்தைகள் வளர்கிறார்கள்; அவர்களின் எதிர்காலம் இன்னும் எழுதப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது. </p><p>இந்த ரக்ஷா பந்தன் நன்னாளில், ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பான குழந்தைப் பருவம், தரமான கல்வி, முறையான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றைப் பெறுவதையும், முன்னேறுவதற்கான அனைத்து வாய்ப்புகளை கொண்டிருப்பதையும் உறுதி செய்வதே எனது முக்கிய நோக்கமாகும். அனைவருக்கும் ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Children from marginalised communities across Delhi came to Mukhyamantri Jan Seva Sadan to tie rakhis. Their smiles, their excitement and the affection with which they celebrated made the occasion deeply special.<br><br>In Delhi’s streets and lanes, countless children are growing up… <a href="https://t.co/jKEjEeHjWG">pic.twitter.com/jKEjEeHjWG</a></p>&mdash; Rekha Gupta (@gupta_rekha) <a href="https://x.com/gupta_rekha/status/2093187496527950299?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>பீகார் 'ஜீவிகா திதி'களுக்கு சூரிய ஒளி மின்சார திட்டம் – முதல்வர் சாம்ராட் சௌத்ரி பரிசு</h2><p>பீகார் மாநில முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF">சாம்ராட் சௌத்ரி</a>, ரக்ஷா பந்தனை முன்னிட்டு அம்மாநிலத்தைச் சேர்ந்த 'ஜீவிகா திதி'களுக்கு (சுயஉதவிக் குழுப் பெண்கள்) சூரிய ஒளி மின்சார திட்டம் என்ற சிறப்பான பரிசை அறிவித்துள்ளார்.</p><p>மேலும் அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ரக்ஷா பந்தன் எனும் இந்த நன்னாளில், என் சகோதரிகள் அன்போடும் ஆசிகளோடும் ரக்ஷியைக் கட்டியுள்ளனர். நமது சகோதரிகள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் ஆனந்தம் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">इस पवित्र धागे में सिमटा है स्नेह अपार<br><br>आज रक्षाबंधन के पावन अवसर पर मेरी बहनों ने स्नेह और आशीर्वाद से मेरी कलाई पर राखी बाँधी।<br><br>ईश्वर से कामना है कि हमारी सभी बहनों के जीवन में सुख, शांति, समृद्धि और खुशियाँ सदैव बनी रहें। रक्षाबंधन की सभी प्रदेशवासियों को हार्दिक शुभकामनाएँ।… <a href="https://t.co/rV9Mdxyvc4">pic.twitter.com/rV9Mdxyvc4</a></p>&mdash; Samrat Choudhary (@samrat4bjp) <a href="https://x.com/samrat4bjp/status/2093206343385805220?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>பள்ளிக் கல்வியின் தரத்தில் முதல் 10 மாநிலங்கள்.. தமிழ்நாட்டிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/national/top-10-states-in-school-education-quality-do-you-know-what-rank-tamil-nadu-holds</link><comments>https://www.maalaimalar.com/news/national/top-10-states-in-school-education-quality-do-you-know-what-rank-tamil-nadu-holds#comments</comments><guid isPermaLink="false">4242df54-2c81-4bbb-b47d-33257bd604c9</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:18:18 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:18:18.826Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,kerala,School Education,கேரளா,தமிழ்நாடு,பள்ளிக் கல்வி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/5npnunn1/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பள்ளி]]></media:title><media:description type="html"><![CDATA[ பள்ளி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/5npnunn1/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2025-26 ஆம் ஆண்டிற்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பள்ளிக் கல்வி</a> வளர்ச்சிப் குறியீடு பட்டியல் வெளியாகி உள்ளது. </p><p>அதில், இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் அங்கு வழங்கப்படும் கல்வித் தரம் மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில்  தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. </p><p>பள்ளி கல்விக்கான அணுகல், பங்களிப்பு, தக்கவைப்பு, தரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. </p><p>பள்ளிகள் கிடைக்கும் தன்மை, சேர்க்கை மற்றும் சமத்துவம், மாணவர் தக்கவைப்பு, கற்றல் முடிவுகள் மற்றும் பள்ளி வசதிகள் உள்ளிட்ட காரணிகளும் அடங்கும்.</p><h2>பட்டியல்</h2><p>அதன்படி இந்த குறியீட்டில் டாப் 10 பட்டியலில் யூனியன் பிரதேசமான சண்டிகர் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் நம் அண்டை மாநிலமான கேரளா உள்ளது.</p><p>பட்டியலில் புதுச்சேரி 3வது இடத்தையும், கோவா 4வது இடத்தையும், டெல்லி 5வது இடத்தையும், பஞ்சாப் 6வது இடத்தையும் பிடித்துள்ளது.</p> <h2>தமிழ்நாடு</h2><p>இந்த பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது தமிழ்நாடு. கடந்த முறையைவிட 0.018 மதிப்பெண் தமிழ்நாட்டிற்கு அதிகரித்தாலும், 7 வது இடத்தையே தக்கவைத்துள்ளது.</p><p>பட்டியலில் அடுத்தாக அந்தமான் நிகோபார் தீவு 8வது இடத்திலும் லட்சத்தீவு 9வது இடத்திலும், அரியானா 10வது இடத்திலும் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் ரேஸில் மோடி, ராகுலுக்கு அடுத்து 3ஆம் இடத்தில் முதல்வர் விஜய் - சர்வே </title><link>https://www.maalaimalar.com/news/national/chief-minister-vijay-ranks-third-behind-modi-and-rahul-in-the-race-for-prime-minister-survey</link><comments>https://www.maalaimalar.com/news/national/chief-minister-vijay-ranks-third-behind-modi-and-rahul-in-the-race-for-prime-minister-survey#comments</comments><guid isPermaLink="false">266af11b-adc0-4252-bc72-dd57c8696017</guid><pubDate>Fri, 28 Aug 2026 05:19:55 +0000</pubDate><atom:updated>2026-08-28T05:19:55.152Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,விஜய்,vijay,Prime Minister Modi,கருத்துக்கணிப்பு,opinion poll,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/w7g4lkxp/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல், விஜய், மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல், விஜய், மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/w7g4lkxp/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகளே உள்ளது.  </p><p>இந்நிலையில் தமிழக முதல்வரும் தமிழக வெற்றி தமிழக தலைவருமான <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய்</a>, நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ள தலைவர்களின் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். </p><h2>கருத்துக்கணிப்பு</h2><p>'இந்தியா டுடே - சிவோட்டர்' அமைப்பு நடத்திய 'மூட் ஆப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக விஜய் இடம் பெற்றுள்ளார்.  </p><p>ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரை 25,184 பேரிடம் நேரடியாக  கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. </p><p>மேலும்  சிவோட்டர்  அமைப்பு கடந்த 6 மாதங்களில் 91,795 பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பு தரவுகளும் இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.  </p><h2>ரிசல்ட் </h2><p>கருத்துக்கணிப்பில், அடுத்த பிரதமராக யாரைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 9.2% பேர் விஜய்யின் பெயரைப் பரிந்துரைத்துள்ளனர். மோடிக்கு 48.7% மற்றும் ராகுல் காந்திக்கு 27.1% ஆதரவு கிடைத்துள்ளது.</p><p>மேற்கு வங்கமுன்னாள் முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு 2%, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 1.7%, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு 1.3% மற்றும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 1.2% பேர் ஆதரவளித்துள்ளனர்</p><p>2024இல் அரசியலில் களமிறங்கிய விஜய் வெறும் இரண்டே ஆண்டுகளில் மாநில அரசியலையும் தாண்டி தேசிய அரசியலின் சென்சேஷனாக மாறியுள்ளதாக சர்வே கூறுகிறது.</p><h2>எதிர்க்கட்சி தலைவர்</h2><p>எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வழிநடத்தத் தற்போது எந்தத் தலைவர் பொருத்தமானவர் என்ற கேள்விக்கம் விஜய்க்கு குறிப்பிடத்தக்க ஆதரவு கிடைத்துள்ளது.</p><p>இப்பட்டியலில் ராகுல் காந்தி 29% ஆதரவுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், விஜய் 12.2% ஆதரவுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.</p><p>எதிரணியை வழிநடத்த மம்தா பானர்ஜி 8.5%, அரவிந்த் கெஜ்ரிவால் 7.5% மற்றும் அகிலேஷ் யாதவ் 6.9% ஆதரவைப் பெற்றுள்ளனர்.</p><h2>தேசிய முகம்</h2><p>தமிழகத்தில் தவெகவுடன் காங்கிரஸ் பயணிக்கும் நிலையில் விஜயின் தேசிய பிம்பம் அக்கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தவெகவை சேர்ந்த அமைச்சர்கள், விஜய்க்கு பிரதமர் ஆக முழு தகுதியும் உள்ளது என கூறிவருகின்றனர்.</p><p>வட மாநிலங்களிலும் விஜய் தளபதி என்ற பெயர் அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.=</p>]]></content:encoded></item><item><title>மணிப்பூர்: கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் பள்ளி முதல்வர் உட்பட 4 பேர் பலி </title><link>https://www.maalaimalar.com/news/national/four-people-including-a-school-principal-killed-in-a-militant-attack-in-manipur</link><comments>https://www.maalaimalar.com/news/national/four-people-including-a-school-principal-killed-in-a-militant-attack-in-manipur#comments</comments><guid isPermaLink="false">7f6296ae-079d-4bf5-bf84-31a6cc48756b</guid><pubDate>Fri, 28 Aug 2026 02:45:42 +0000</pubDate><atom:updated>2026-08-28T02:45:42.031Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,manipur,கலவரம்,firing,மணிப்பூர்,unrest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/c2d70nfe/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மணிப்பூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மணிப்பூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/c2d70nfe/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/manipur">மணிப்பூரில் </a>கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் நாகா சமூகத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். </p><p>காங்போக்பி மாவட்டத்தில் குக்கி  இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் மகுய் அஷாங்  மற்றும் தபாம்பா நாகா  கிராமங்களுக்கு இடைப்பட்ட காட்டுப் பகுதியில் நேற்று காலை 8:30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.  </p><p>தனியார் பள்ளி நிறுவனர் மற்றும் முதல்வர் தட்சோங்போ ரிங்காங்மாய், சவாங்கிணிங் கிராம நிர்வாகத் தலைவர் விசோபூ சாரேனமாய், எம். விஜுனமாய், அனில் விஜுனமாய் ஆகியோர் உயிரிழந்தனர். கெய்காமங் ரிங்காங்மாய் என்பவர் காயமடைந்தார். </p><p>பலியான 5 பேரும் 'லியாங்மை நாகா' சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களின் சடலங்கள் அருகில் உள்ள சேனாபதி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.</p><p>இதில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதல்வர் ஒய். கேம்சந்த் சிங் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><h2>கிளர்ச்சி</h2><p>மணிப்பூரின் நாகா சமூகத்தின் உச்ச அமைப்பான 'ஐக்கிய நாகா பேரவை' இந்தத் தாக்குதலுக்குக் குக்கி கிளர்ச்சி அமைப்புகளே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>இதனிடையே, மே 3, 2023 அன்று பழங்குடியினர் பேரணிக்குப் பிறகு வெடித்த கலவரத்தின் பின்னணி குறித்து ஆராய அரசு அமைத்த விசாரணை ஆணையத்திற்கு, மத்திய அரசு மேலும் 6 மாத கால அவகாசம் அளித்து நவம்பர் 20 வரை காலநீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.</p> <h2>மணிப்பூர் வன்முறை</h2><p>மே 2023 முதல் பள்ளத்தாக்கில் வாழும் மெய்தி மற்றும் மலைப்பகுதியில் வாழும் குக்கி இனமக்களுக்கு இடையே ஏற்பட்ட இனக்கலவரத்தில் இதுவரை 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 58,800க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.</p><p>தொடர் கலவரம் மற்றும் அப்போதைய முதல்வர் என். பிரேன் சிங் ராஜினாமாவைத் தொடர்ந்து, 2025 பிப்ரவரி 13 முதல் 2026 பிப்ரவரி 4 வரை மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது.</p>]]></content:encoded></item><item><title>அசைவ உணவு கேட்டதால் ஏற்பட்ட தகராறில் 30 வயது நபர் உயிரிழப்பு: பெற்றோர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/30-year-old-killed-during-heated-argument-over-non-veg-food-parents-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/30-year-old-killed-during-heated-argument-over-non-veg-food-parents-arrested#comments</comments><guid isPermaLink="false">a82ed7bc-161e-495c-a922-e39764c511e7</guid><pubDate>Thu, 27 Aug 2026 19:11:26 +0000</pubDate><atom:updated>2026-08-27T19:11:26.650Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Murder,கொலை,non-veg food,அசைவ உணவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/5ra79ne1/arrest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arrest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/5ra79ne1/arrest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஷ்ரவண் மாதத்தில் அசைவ உணவு கேட்டதற்காக தனது 30 வயது மகனை தாக்கி உயிரிழக்க செய்ததாக கூறப்படும் சம்பவத்தில், ஒரு நபர் மற்றும் அவரது மனைவி <a href="https://www.maalaimalar.com/topic/arrest">கைது</a> செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p>இச்சம்பவம் ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று வார்ஜே பகுதியில் நடைபெற்றது. உயிரிழந்தவர் மகேஷ் பகவத் கெய்க்வாட் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல் துணை ஆணையர் சாகர் கவாடே தெரிவித்தார்.</p><h2>பெற்றோருடன் தினமும் சண்டை:</h2><p>தற்காலிகத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த மகேஷ், மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என்றும், தினமும் தனது பெற்றோரான பகவத் கெய்க்வாட் (64) மற்றும் பார்வதி கெய்க்வாட் (60) ஆகியோருடன் சண்டையிட்டு வந்ததாகவும் அவர் கூறினார்.</p><p>அவரது சகோதரர் அளித்த புகாரின்படி, ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த மகேஷ், இரவு உணவிற்கு அசைவ உணவு கேட்டுள்ளார். புனிதமான மாதம் நடைபெற்று வருவதை காரணம் காட்டி அவரது தந்தை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.</p><h2>தொடர் விசாரணை:</h2><p>அப்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின்போது, ​​பகவத் தனது மகனின் தலையில் தாக்கியதில் அவன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆதாரங்களை அழிப்பதில் மகேஷின் தாயார் தனது கணவருக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.</p><p>பகவத் கெய்க்வாட் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க பொருளாதார தடையை மீறி ஈரானுக்கு அரிசி ஏற்றுமதி: இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-rice-exports-to-iran-defy-us-sanctions-association</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-rice-exports-to-iran-defy-us-sanctions-association#comments</comments><guid isPermaLink="false">cdad463e-e5c6-480b-bb44-08479893cdbd</guid><pubDate>Thu, 27 Aug 2026 16:36:25 +0000</pubDate><atom:updated>2026-08-27T16:36:25.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>US sanctions,rice export,economic d day,பொருளாதார டி தினம்,அரிசி ஏற்றுமதி,அமெரிக்க தடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/l47q6a9l/Untitled-design-22.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India rice exports under US sanctions]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/l47q6a9l/Untitled-design-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் நாட்டின் மீது <a href="https://www.maalaimalar.com/topic/அமெரிக்கா">அமெரிக்கா</a> விதித்துள்ள <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">பொருளாதார தடையை</a> மீறி, ஈரானுக்கு வழக்கம்போல அரிசி ஏற்றுமதி செய்யப்படும் என அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜய் பலோதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><p>இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இருந்து வரும் நிலையில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">ஈரானுக்கு</a> அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம், அமெரிக்கா விதிக்க இருக்கும் பொருளாதார தடையை, இந்தியா தாங்கிக் கொள்ளும் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h3><strong>ஈரானுக்கு அரிசி ஏற்றுமதி</strong></h3><p>இந்தியா, ஈரானுக்கான விற்பனையானது கடுமையான அமெரிக்க தடைகளின் அச்சுறுத்தலை தாங்கும் என்றும், விலை உயர்வு மற்றும் பல மாதங்களாக நடந்து வரும் போர்க்கால இடையூறுகள் இருந்தபோதிலும், ஏற்றுமதி சீராக நடைபெற்று வருவதாக அஜய் தெரிவித்துள்ளார்.</p><p>இந்தியா ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் அரிசியே முதன்மையானதாக உள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், ஈரானுக்கான இந்தியாவின் 1.25 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அரிசியாக உள்ளதாக அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.</p><p>பதிலுக்கு, இந்தியாவின் 11.5 பில்லியன் டாலர் உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் சுமார் 7 சதவீதத்தை ஈரான் வாங்கியுள்ளது.</p><h3><strong>அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம்</strong></h3><p>இந்த நிலையில் அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜய் பலோதியா கூறுகையில், “விலை உயர்வு மற்றும் பல மாதங்களாக நீடித்த போரினால் ஏற்பட்ட வர்த்தக இடையூறுகள் ஒருபுறம் இருந்தபோதிலும், ஈரான் உணவு பாதுகாப்பு காரணங்களுக்காக கொள்முதல் செய்து வருவதால், அந்நாட்டின் தேவை சீராக உள்ளது.</p><p>அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் திங்களன்று 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு எதிராகத் தடைகளை அறிவித்து, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அச்சுறுத்திய போதிலும், ஈரானுடனான வர்த்தகம் தடையின்றி தொடருகிறது.</p><p>மனிதாபிமான விதிவிலக்கின் கீழ் வரும் இந்த பிரதான உணவின் அத்தியாவசிய தன்மையும், மாற்று விநியோகஸ்தர்கள் குறைவாக இருப்பதும் வர்த்தகத்தைத் தக்கவைக்க உதவும்.</p><h3><strong>கடந்த கால ஏற்றுமதி</strong></h3><p>கடந்த நிதியாண்டில் ஈரான் 10 லட்சம் டன்களுக்கும் அதிகமான அரிசியைக் கொள்முதல் செய்துள்ளது, இது ஓராண்டுக்கு முந்தைய ஏற்றுமதியை விட 17% அதிகம் என அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.</p><p>சமீப காலத்தில் இந்திய ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதியையும் பணப் பரிமாற்றங்களையும் தடையின்றித் தொடர்ந்ததை இந்த உயர்வு பிரதிபலிக்கிறது; இது இரு தரப்பினருக்கும் வர்த்தகத்தை பேணுவதற்கான ஒரு ஊக்கத்தை அளிக்கிறது.</p><p>ஈரானிய வங்கிகளுடன் நேரடியாகப் பரிவர்த்தனை செய்வதற்குப் பதிலாக, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, சீனா மற்றும் சமீபத்தில் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள நிதி வழிமுறைகள் மூலம் ஈரானுடனான வர்த்தகத்திற்கான கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கான வழிகளை இந்திய வர்த்தகர்கள் கண்டறிந்துள்ளனர்.</p><p>அந்த வழிமுறைகள் இதுவரை எந்த இடையூறும் இன்றி தொடர்ந்து இயங்கி வருகின்றன. ஈரானுக்கான மற்ற முக்கிய இந்திய ஏற்றுமதிகளில் மருந்துகள், தேயிலை, வாழைப்பழங்கள், தானியங்கள், மாட்டு இறைச்சி மற்றும் சில ரசாயனப் பொருட்கள் அடங்கும்.</p><p>மனிதாபிமான விதிவிலக்கு மற்றும் குறைந்த மாற்று வழிகளைக் காரணம் காட்டி, இவற்றின் ஏற்றுமதிக்கும் தடை ஏற்பட வாய்ப்பில்லை.</p><p>இதற்கிடையில், அமெரிக்காவின் விலக்குகளால் இந்த ஆண்டு ஏற்பட்ட ஒரு குறுகிய கால வாய்ப்பை தவிர, இந்தியா 2019 முதல் ஈரானிலிருந்து எந்த கச்சா எண்ணெயையும் இறக்குமதி செய்யவில்லை” என்று அவர் கூறினார்.</p><p>ஈரான் மீதான அமெரிக்க தடைகளுக்கு முன்பு, இந்தியா அந்நாட்டுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டிருந்தது, மேலும் தெஹ்ரான் அதன் மிகப்பெரிய எண்ணெய் விநியோகஸ்தர்களில் ஒன்றாக இருந்தது.</p><h3><strong>இந்தியா ஏற்றுமதி கூட்டமைப்பு தலைவர்</strong></h3><p>ஈரானுக்கான இந்திய ஏற்றுமதிகள் பாதிக்கப்படக்கூடாது என்று இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சி. ரல்ஹான் கூறினார்.</p><p>ஈரானுக்கான ஏற்றுமதிகள் கணிசமான அளவில் இல்லை என்றாலும், ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதற்கான சில ஏற்பாடுகளுடன், மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>எலுமிச்சை பழத்தை வெட்டி மழையை நிறுத்தினேன்: பாஜக எம்பி-யின் கருத்துக்கு காங்கிரஸ் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/i_cut_a_lemon_to_stop_the_rain_bjp_mps_comment_draws_congress_response</link><comments>https://www.maalaimalar.com/news/national/i_cut_a_lemon_to_stop_the_rain_bjp_mps_comment_draws_congress_response#comments</comments><guid isPermaLink="false">45131e7d-63a1-4c7b-a1e1-a92f16014dae</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:12:04 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:12:04.970Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சத்தீஸ்கர்,BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,chattisgarh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zombj0nn/Untitled-design-23.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BJP MP’s lemon rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zombj0nn/Untitled-design-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சத்தீஸ்கர்</a> மாநிலத்தின் முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், மழை குறுக்கிட்டதால் ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி மழையை தடுத்து நிறுத்தியதாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">பாரதிய ஜனதா கட்சியின்</a> எம்.பி. போஜ்ராஜ் நாக் கூறிய கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தெளண்டி லோஹாரா பகுதியில் மஹ்தாரி வந்தன் என்ற ஒரு திட்ட நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் கலந்து கொண்டார்.   </p><h3><strong>பா.ஜ.க எம்.பி</strong></h3><p>அப்போது அந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பு வானிலை மோசமாக இருந்ததாகவும், நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முதலமைச்சரின் மருத்துவ குழு நள்ளிரவு நேரத்தில் வந்ததாக பாஜக எம்.பி. போஜ்ராஜ் நாக் கூறினார்.</p><p>இதுகுறித்து பாஜக எம்.பி நாக் கூறுகையில், நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறுவதற்காக மழையை நிறுத்தும்படி புத்ததேவர் மற்றும் மகாதேவரிடம் பிரார்த்தனை செய்து, ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டியதாக கூறினார்.</p><p>இதையடுத்து தான் ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி மழையை நிறுத்தியதாக பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் போக்ராஜ் நாக் கூறினார்.</p><p>மேலும், தற்போது இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது, மழை பெய்ய வேண்டுமென்றால் பெய்யட்டும் என்றும் பாஜக எம்.பி. கூறினார்.</p><h3><strong>சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர்</strong></h3><p>இந்த நிலையில் சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ், பாஜக எம்.பி.யின் கருத்து குறித்து விமர்சனம் செய்துள்ளார்.</p><p>இதுகுறித்து தீபக் பைஜ் கூறுகையில், “ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டினால் மழையை நிறுத்த முடியும் என்றால், சர்க்கரை விலையையும் பணவீக்கத்தையும் குறைப்பதற்கு, பாஜக எம்.பி ஒரு எலுமிச்சை பழத்தை வெட்ட வேண்டும்” என்று கூறினார்.</p><p>இதையடுத்து பாஜக எம்.பி.யின் இந்த கருத்து, மூட நம்பிக்கையையும் தவறான தகவல்களையும் பரப்புவதாகவும், இதே முறையை பயன்படுத்தி மின்சார கட்டணங்கள், எரிபொருள் விலைகள் மற்றும் வீட்டு செலவுகளை குறைக்க முடியுமா என்று சமூக ஊடகங்களில் பயனர்கள் கேள்வி எழுப்பினர்.</p>]]></content:encoded></item><item><title>கான்பூரில் விமான விபத்து - விமானி உள்பட இருவர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/training-aircraft-crash-in-kanpur-flight-instructor-and-trainee-pilot-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/training-aircraft-crash-in-kanpur-flight-instructor-and-trainee-pilot-killed#comments</comments><guid isPermaLink="false">705788c3-9f9f-4d6a-b270-fd67cd2f3d33</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:07:54 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:07:54.877Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானி,Pilot,plane crash,விமான விபத்து,flight instructor,விமான பயிற்றுநர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/84ytt10d/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanpur Training Aircraft Crash]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/84ytt10d/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேச</a> மாநிலம் கான்பூர் நகரத்தில் நான்கு இருக்கைகள் கொண்ட இரட்டை என்ஜின் பயிற்சி விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக சிக்கிய விபத்தில், விமானத்தில் பயணித்த பயிற்றுநர் மற்றும் பயிற்சி விமானி என இரண்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த விமான பயிற்றுநரான சச்சின் பாட்டியா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பயிற்சி விமானி அபிஷேக் பூஜாரி உயிரிழந்துள்ளதாக கான்பூர் காவல் ஆணையர் ரகுவீர் லால் தெரிவித்தார்.</p><h3><strong>காவல் ஆணையர் ரகுவீர் லால்</strong></h3><p>இந்த விபத்து குறித்து காவல் ஆணையர் ரகுவீர் லால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த டெக்னாம் விமானம் 2023-ஆம் ஆண்டில் பயிற்சிக்காக இங்கு கொண்டுவரப்பட்டது. விபத்தில் விமானத்தின் பயிற்றுநர் மற்றும் பயிற்சி விமானி ஆகிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>பயிற்றுவிப்பாளர் மற்றும் பயிற்சி விமானி இருவரும் இங்குள்ள கார்க் விமானப் பயிற்சி மையத்திலிருந்து காலை 11:30 மணிக்கு புறப்பட்டனர். அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, காலை 11:50 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>அந்த விமானம் நான்கு இருக்கைகள் கொண்ட, இரட்டை என்ஜின் டெக்னாம் விமானமாக இருந்தது. விமானத்தின் ஓட்டுநர் பாட்டியாவுக்கு 3,000 மணிநேரம் மட்டுமே ஓட்டுநர் அனுபவம் இருந்தது.</p><p>இந்த விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் குழு இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தும்.</p><p>விபத்து ஏற்பட்ட பகுதியை பாதுகாப்பதற்காக காவல்துறையினர் முழுப் பகுதியையும் சுற்றி வளைத்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து உடல்கள் அகற்றப்பட்டுள்ளன,” என்றும் லால் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘பணம் கொட்டும்’... சிறுமியை நிர்வாணமாக்கி பூஜை - மந்திரவாதி உட்பட 4 பேர்மீது வழக்குப்பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/money-will-pour-in-girl-stripped-naked-for-ritual-case-registered-against-4-people-including-a-sorcerer</link><comments>https://www.maalaimalar.com/news/national/money-will-pour-in-girl-stripped-naked-for-ritual-case-registered-against-4-people-including-a-sorcerer#comments</comments><guid isPermaLink="false">a5df182d-9858-49d2-89ed-5066a6938ba8</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:31:11 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:31:11.191Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra,superstition,மூட நம்பிக்கை,Puja,பூஜை,ஆந்திரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/rfrcx3zk/New-Project-2026-08-27T155759.558.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பணம் கொட்டும்’... சிறுமியை நிர்வாணமாக்கி பூஜை - மந்திரவாதி உட்பட 4 பேர்மீது வழக்குப்பதிவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/rfrcx3zk/New-Project-2026-08-27T155759.558.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்தது, பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பெண் ஒருவர் சாலையில் நின்று ஆன்மிகவாதி ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கதறி அழுதார். </p><p>ஆனால் அங்கு இருப்பவர்கள் யாரும் அவருடைய பேச்சை கேட்காமல் அந்த ஆசாமியை பார்க்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர். </p><p>இந்நிலையில் இதேபோன்ற ஒரு பாணியில் ஆந்திராவில் நடந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜை என்ற பெயரில் சிறுமி ஒருவர் ஆறு மாதங்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். </p><p>ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அனந்தபுரம் நகரத்திற்கு ஓட்டல் வைப்பதற்காக குடிபெயர்ந்துள்ளார். அப்போது மகாலட்சுமி என்ற உள்ளூர் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். மகாலட்சுமி குடும்பத்தினருடன் நன்கு பழகிய நிலையில், அவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.</p><p>ஓட்டல் தொழிலில் பெரிதாக லாபம் வராது, எளிதாக நீங்கள் செல்வந்தர் ஆவதற்கு என்னிடம் யோசனை உள்ளது என, “உங்கள் மகள் நிர்வாணமாக அமர்ந்து சிறப்புப் பூஜைகள் செய்தால், அளவற்ற செல்வத்தையும், செழிப்பையும் பெறலாம்” என தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் பெற்றோர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்பு மகாலட்சுமியின் வற்புறுத்தலின்பேரில் ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><h2>வழிபாடு என்ற பெயரில் பாலியல் அத்துமீறல்கள்</h2><p>மகாலட்சுமியின் பேச்சை நம்பி சிறுமியை பூஜைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு ஹேமந்த் என்ற போலி மந்திரவாதி பூஜைக்காக வரவழைக்கப்பட்டு, சிறுமியை ரகசிய இடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளறனர்.</p><p>அங்கு சிறுமியின் ஆடையை முழுமையாக அகற்றி, ஹேமந்த் தவறான இடங்களில் சிறுமியை தொட்டுள்ளான். தொடர்ந்து முதல் பூஜை முடிந்தும் பலனளிக்கவில்லை என்று, மீண்டும் பூஜை செய்ய குடும்பத்தினரை சம்மதிக்க வைத்துள்ளனர். </p><p>சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு (ஆகஸ்ட் 8 அன்று), ஹேமந்த், அவனது மகன் பாலசுப்ரமணியம் மற்றும் விஜய் குமார் ஆகியோருடன் மீண்டும் அங்கு வந்து, மீண்டும் பூஜை செய்துள்ளனர். தொடர்ந்து மறுநாளே ஆக.9ம் தேதி சிறுமியையும், அவரது தாயாரையும் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். </p><p>அங்கு வெங்கடேஷ் யாதவ் என்ற மற்றொரு ஆசாமி முன்பும் வழிபாடு என்ற பெயரில் அந்த சிறுமி சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பின்னர், தாயும் மகளும் பாக்கியலட்சுமி என்ற பெண்ணின் வீட்டில் பூட்டி வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>ஆகஸ்ட் 11 ஆம் தேதி, மீண்டும் சிறுமியை வழிபாடு என்ற பெயரில் அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது நீண்ட நாட்களாக இவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த ஊர்மக்கள், சந்தேகம் கொண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். </p><p>காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அறிந்தவர்கள் சிறுமியையும், தாயையும் இறக்கிவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p><h2>போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு</h2><p>இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், கடப்பா ஒன் டவுன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. </p><p>பின்னர், சம்பவத்தின் சூழ்நிலைகளின் அடிப்படையில், இந்த வழக்கு அனந்தபுரம் ஒன் டவுன் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. </p><p>சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது மற்றும் மாந்திரீக வழிபாடு ஆகிய குற்றங்களுக்காக, மகாலட்சுமி, ஹேமந்த், பாலசுப்ரமணியம் மற்றும் வெங்கடேஷ் யாதவ் ஆகியோர் மீது போக்சோ சட்டம் மற்றும் இன்னும் சில பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. </p><p>சிறப்புப் படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடிவருகிறது. இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தெலுங்கானாவில் இறந்த சகோதரன் கையில் ராக்கி கயிறு கட்டிய தங்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/sister-ties-rakhi-thread-on-the-wrist-of-her-deceased-brother-in-telangana</link><comments>https://www.maalaimalar.com/news/national/sister-ties-rakhi-thread-on-the-wrist-of-her-deceased-brother-in-telangana#comments</comments><guid isPermaLink="false">1f268bbf-a3b4-4aa9-884e-08fda935f402</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:28:02 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:28:02.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராக்கி கயிறு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sbhsqpl4/telangana.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இறந்த சகோதரரின் கையில் ராக்கி கயிறு கட்டிய காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ இறந்த சகோதரரின் கையில் ராக்கி கயிறு கட்டிய காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sbhsqpl4/telangana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ரமேஷின் தங்கை தனலட்சுமி ராக்கி கயிறு கட்டுவதற்கு முன்பே இறந்து விட்டாயா அண்ணா என்று கதறி அழுதபடி அவரது கையில் ராக்கி கயிறு கட்டினார்.</strong></em></p><p>தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் குரவியை சேர்ந்தவர் வீரண்ணா. இவரது மகன் ரமேஷ் (வயது 36). வீரண்ணா கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்தார். </p><p>இந்நிலையில் வீரண்ணாவின் மகன் ரமேஷும் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். நேற்று ரமேஷின் இறுதி சடங்கிற்காக அவரது உடல் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டு இருந்தது. அங்கு வந்த ரமேஷின் தங்கை தனலட்சுமி ராக்கி கயிறு கட்டுவதற்கு முன்பே இறந்து விட்டாயா அண்ணா என்று கதறி அழுதபடி அவரது கையில் ராக்கி கயிறு கட்டினார்.</p><p>இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. 10 நாட்களுக்குள் தந்தையும் மகனும் அடுத்தடுத்து இறந்து போனதால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே நாளில் 10 பச்சிளம் குழந்தைகள்.. 3 வாரங்களில் 60 குழந்தைகள் - மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் பலி </title><link>https://www.maalaimalar.com/news/national/10-newborns-in-a-single-day-60-infants-in-three-weeks-deaths-at-a-government-hospital-in-malda</link><comments>https://www.maalaimalar.com/news/national/10-newborns-in-a-single-day-60-infants-in-three-weeks-deaths-at-a-government-hospital-in-malda#comments</comments><guid isPermaLink="false">d26d6672-2482-4170-8803-22526aac97d3</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:28:18 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:28:18.927Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மருத்துவமனை,Government Hospital,மேற்கு வங்கம்,Child,குழந்தை,west bengal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/bvup91j6/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ குழந்தை]]></media:title><media:description type="html"><![CDATA[ குழந்தை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/bvup91j6/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநிலம் மால்டா<a href="https://www.maalaimalar.com/topic/government-hospital"> அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்</a> இந்த ஆகஸ்ட் மாதத்தின் முதல் 3 வாரங்களில் மொத்தம் 60 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. </p><p>இச்சம்பவத்தை தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை மால்டா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. </p><p>உயிரிழந்த பல குழந்தைகள் மால்டா மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படுவதற்கு முன்பு சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் மற்றும் வட்டார அளவிலான சுகாதார மையங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p> <h2>ஒரே நாளில் 10 குழந்தைகள் பலி</h2><p>ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஒரே நாளில் 10 பிறந்த குழந்தைகள் உயிரிழந்தன. இதில் 8 குழந்தைகள் பிற அரசுக் மருத்துவமனைகள் அல்லது தனியார் நர்சிங் ஹோம்களில் பிறந்த பிறகு, மேல் சிகிச்சைக்காக மால்டா மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டவை ஆகும்.</p><p>மிகவும் ஆபத்தான நிலையிலேயே இக்குழந்தைகள் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டதாகவும், மூச்சுத்திணறல் மற்றும் இதயப் பிரச்சினைகள் காரணமாகவே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.</p> <p>மால்டா மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் பிரசென்ஜித் பார் கூறும்போது, "ஆகஸ்ட் 12 அன்று ஒரே நாளில் மால்டா மருத்துவக் கல்லூரியில் 10 குழந்தைகள் உயிரிழந்தன.</p><p>ஆனால் அவற்றில் இரண்டு குழந்தைகள் மட்டுமே இந்த மருத்துவக் கல்லூரியில் பிறந்தவை.</p><p>மற்ற குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் பிற மருத்துவமனைகளில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டவை" என்று தெரிவித்தார்.</p><p>ஒரே நாளில் உயிரிழந்த 10 குழந்தைகளில், 4 குழந்தைகளுக்குப் பிறவி இதய நோய் இருந்ததாகவும், 2 குழந்தைகளுக்கு  கடுமையான மூச்சுத்திணறல் இருந்ததாகவும் பிரசென்ஜித் பார் மேலும் விளக்கமளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்பு.. ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ரூ. 3.83 கோடி பறித்த கும்பல்</title><link>https://www.maalaimalar.com/news/national/gang-swindles-383-crore-from-retired-bank-manager-by-claiming-links-to-pahalgam-terror-attack</link><comments>https://www.maalaimalar.com/news/national/gang-swindles-383-crore-from-retired-bank-manager-by-claiming-links-to-pahalgam-terror-attack#comments</comments><guid isPermaLink="false">cc0f7513-9851-45da-9ab0-812874287ccc</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:05:29 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:05:29.157Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஜிட்டல் கைது,சைபர் மோசடி,Digital Arrest,cyber fraud,பஹல்காம் தாக்குதல்,Pahalgam attack</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/j727c4jp/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சைபர் மோசடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ சைபர் மோசடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/j727c4jp/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உங்கள் மொபைல் சிம் கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறி ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ஏமாற்றி ரூ.3.83 கோடி  பறிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><p>2025 ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். </p><h2>போலி அழைப்பு</h2><p>மும்பை ஜூஹு பகுதியை சேர்ந்த 64 வயதான ஓய்வுபெற்ற வங்கி மேலாளருக்கு போன் ஒன்று வந்துள்ளது. மறுபக்கம் பேசிய நபர் தங்களை பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள் என கூறியுள்ளார்.</p><p>பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அவரது பெயரிலான சிம் கார்டு பயன்படுத்தப்பட்டதாக கூறி அவரை பயமுறுத்தியுள்ளனர்.</p><p>கைது வாரண்ட் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் போல் சில போலி ஆவணங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.</p><p>அவர்களின் மிரட்டலுக்கு பயந்து, தனது சேமிப்பு, முதலீடுகள் மற்றும் மியூச்சுவல் பண்டுகளின் விவரங்களை அவர்களிடம் பகிர்ந்துள்ளார்.</p><p>பின்னர், லக்னோவை சேர்ந்த ஐஜி விக்ரம் சிங் என்ற மூத்த அதிகாரி பேசுவதாக மற்றொரு நபர் தொடர்பு கொண்டுள்ளார்.</p><p>ஜம்மு காஷ்மீரில் இவரது பெயரில் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் ரூ.7 கோடி ரூபாய் பயங்கரவாத நிதி கைமாறியுள்ளதாக மிரட்டியுள்ளார்.</p><p>ரிசர்வ் வங்கியின் பெயரிலான போலி கடிதத்தை அனுப்பி, அவரது அனைத்து நிதி ஆதாரங்களையும் மோசடிக்காரர்கள் கேட்டுப் பெற்றுள்ளனர்.</p><h2>டிஜிட்டல் கைது</h2><p>விசாரணைக்காக பணத்தை சரிபார்த்துவிட்டு மீண்டும் திருப்பித் தருவதாக கூறியதை நம்பிய ஓய்வுபெற்ற அதிகாரி, ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 17 வரையிலான காலகட்டத்தில் 4 கட்டங்களாக சுமார் ரூ.3.83 கோடி ரூபாயை மோசடி நபர்கள் கொடுத்த வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்துள்ளார்.</p><p>இந்த காலகட்டத்தில் அவரை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக கூறி அவரை வாட்ஸப் வீடியோ காலில் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.</p><p>பணத்தைத் திருப்பித் தராமல் மீண்டும் கூடுதல் பணம் கேட்டதால் சந்தேகமடைந்த அவர், வங்கி மேலாளர் ஒருவரை அணுகியுள்ளார்.</p><p>தான் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்த முதியவர்<a href="https://www.maalaimalar.com/news/national/rs-30000-crore-cyber-fraud-ed-arrests-two-in-mumbai"> சைபர் கிரைம் </a>உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறந்த ஆசிரியர் விருது.. போலீசிடம் சிக்காமல் 40 ஆண்டுகள் அரசு பள்ளி 
ஆசிரியராக பணியாற்றிய ஆயுள் தண்டனை கைதி! </title><link>https://www.maalaimalar.com/news/national/best-teacher-award-a-life-term-convict-who-worked-as-a-government-teacher-for-40-years-and-retired-without-ever-being-caught-by-the-police</link><comments>https://www.maalaimalar.com/news/national/best-teacher-award-a-life-term-convict-who-worked-as-a-government-teacher-for-40-years-and-retired-without-ever-being-caught-by-the-police#comments</comments><guid isPermaLink="false">6357a675-b193-4aa8-92b2-de16cd9baee6</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:59:52 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:59:52.497Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>school teacher,Telangana,Life imprisonment,ஆயுள் தண்டனை,தெலுங்கானா,பள்ளி ஆசிரியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/l7ab9agv/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கைதி]]></media:title><media:description type="html"><![CDATA[ கைதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/l7ab9agv/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/life-sentence">ஆயுள் தண்டனை</a> விதிக்கப்பட்ட கைதி ஒருவர் பரோலில் வெளியே வந்து, சுமார் 40 ஆண்டுகள் காவல்துறையின் கண்ணில் படாமல் சுதந்திரமாக வாழ்ந்துள்ள விசித்திர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. </p><p>தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தில் தண்டலபல்லி மண்டலம் பெத்தமுப்பாரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தெல வீரன்னா.</p><h2>தலைமறைவு</h2><p>இவருக்கு 1983இல் வாரங்கல் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதித்தது.</p><p>அதே ஆண்டு டிசம்பரில் பரோலில் வெளிவந்த அவர் அதன்பின் தலைமறைவானார்.</p><p>அதன் பின் இவ்வளவு காலமும் மஹபூபாபாத் மாவட்டத்திலேயே அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி, சிறந்த ஆசிரியர் விருதையும் பெற்று, பணி ஓய்வும் பெற்றுள்ளார்.</p><h2>மீண்டும் சிறையில் அடைப்பு</h2><p>சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு மே 16 அன்று வாரங்கல் மத்திய சிறை சிறப்பு அதிரடிப் படை போலிசார் வீரன்னாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><p>அவருக்கு 3 ஆண்டுகளுக்குப் பரோல் மற்றும் தண்டனைக் குறைப்பு சலுகைகளை மறுத்து சிறைத்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து வீரன்னாவின் மனைவி சாரம்மா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><h2>நீதிமன்றம்</h2><p>இம்மனுவை விசாரித்த நீதிபதி டி. மாதவி தேவி அடங்கிய அமர்வு, குற்றவாளி வேண்டுமென்றே சட்டத்தின் பிடியில் இருந்து தப்பியோடி வாழ்ந்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டி மனுவைத் தள்ளுபடி செய்தது.</p><p>சிறைத்துறையின் அலட்சியப்போக்கிற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.</p><p>ரோலில் செல்லும் கைதிகளை கண்காணிக்க டிராக்கிங் சிஸ்டம் மற்றும் புதிய வழிகாட்டுதல்களை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று சிறைத்துறைக்கு உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/auto-accident-7-dead-in-andhra</link><comments>https://www.maalaimalar.com/news/national/auto-accident-7-dead-in-andhra#comments</comments><guid isPermaLink="false">13010a50-3630-4651-999e-f794fae8d065</guid><pubDate>Thu, 27 Aug 2026 03:58:42 +0000</pubDate><atom:updated>2026-08-27T03:58:42.768Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,dead,பலி,Andhra accident,ஆந்திரா விபத்து</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ctaa7n57/accident.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ctaa7n57/accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 4 குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.</strong></em></p><p>ஆந்திர மாநிலம், சிலக்கலூரி பேட்டை மாவட்டம், ஏலூருவை சேர்ந்த 15 பேர் பாபட்லா மாவட்டம், கொண்டமஞ்சலூரில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவிற்கு நேற்றிரவு ஆட்டோவில் சென்றனர்.</p><h2><strong>விபத்து</strong></h2><p>பிறந்தநாள் விழா கொண்டாட்டம் முடிந்து இன்று அதிகாலை ஆட்டோவில் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.</p><p>விஜயவாடா-திருப்பதி சாலையில் வந்தபோது எதிரே வந்த தனியார் பஸ், ஆட்டோ மீது மோதியது.</p><p>இந்த விபத்தில் ஆட்டோ முழுவதும் நொறுங்கியது. ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 4 குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.</p><p>விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு குண்டூர் மற்றும் சிலக்கலூரிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p>சிகிச்சை பலனின்றி குண்டூர் ஆஸ்பத்திரியில் 2 பேரும் சிலக்கலூரி பேட்டை ஆஸ்பத்திரியில் ஒருவரும் இறந்தனர்.</p><h2><strong>இறந்தவர்கள் விபரம் வருமாறு:-</strong></h2><p>போந்த பாபு (வயது 62), மனேம்மா (55), லட்சுமம்மா ( 75), கங்கம்மா (55), மரியம்மா (45), சம்பூர்ணம்மா (70), சுவர்த்தா (45) என தெரியவந்தது. </p><p>விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நாட்டின் 7 முக்கிய ரெயில் வழித்தடங்கள் மேலும் விரிவாக்கம்- மத்திய ரெயில்வே அமைச்சர் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/union-minister-ashwini-vaishnaw-inform-further-expansion-of-the-countrys-7-major-rail-routes</link><comments>https://www.maalaimalar.com/news/national/union-minister-ashwini-vaishnaw-inform-further-expansion-of-the-countrys-7-major-rail-routes#comments</comments><guid isPermaLink="false">d701f6be-e993-4947-8a84-059ae64ab7b9</guid><pubDate>Thu, 27 Aug 2026 03:23:01 +0000</pubDate><atom:updated>2026-08-27T03:23:01.006Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ashwini Vaishnaw,அஸ்வினி வைஷ்ணவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/qd3pyozf/vaishnaw.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்]]></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/qd3pyozf/vaishnaw.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாட்டின் 7 முக்கிய ரெயில் வழித்தடங்கள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.</strong></em></p><h2><strong>விரிவுபடுத்தும் பணி</strong></h2><p>இந்திய ரெயில்வேயில் 7 ரெயில் வழித்தடங்களில் அதிக அளவில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை நாட்டின் மொத்த ரெயில் போக்குவரத்தில் 41 சதவீதத்தை கையாள்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது. சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த வழித்தடங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அவற்றை 4 ரெயில் பாதைகளாக விரிவுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை திறம்பட கையாளும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.</p><h2><strong>7 வழித்தடங்கள்</strong></h2><p>இதுகுறித்து, மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வீடியோ வெளியிட்டு பேசியதாவது:-</p><p>டெல்லி – ஹவுரா, ஹவுரா – சென்னை, சென்னை – மும்பை, மும்பை – டெல்லி, டெல்லி – சென்னை, மும்பை – ஹவுரா மற்றும் டெல்லி – கவுகாத்தி ஆகிய 7 வழித்தடங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு 4 ரெயில் பாதைகளாக மாற்றப்பட இருக்கிறது. இதன் மூலம் நாட்டின் நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் ரெயில் சேவைகள் மேம்படுத்தப்படும். மேலும், போக்குவரத்து செலவு குறைக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறை ஊக்குவிக்கப்படும்.</p><p>இந்த முக்கிய வழித்தடங்களை 4 பாதைகளாக விரிவுபடுத்துவது, எதிர்கால பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வளர்ச்சிக்கு தேவையான கூடுதல் திறனை உருவாக்கும் முக்கிய நடவடிக்கையாகும். அதிக திறன், குறைந்த போக்குவரத்து செலவு மற்றும் தூய்மையான போக்குவரத்தை நோக்கமாகக் கொண்டு இந்திய ரெயில்வே தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ரெயில்வே துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரெயில்வேயின் இந்த உள்கட்டமைப்பு மேம்பாடு மிக முக்கியமானதாகும்.</p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: உ.பி., பீகார் முதலமைச்சர்களுடன் அமித் ஷா தீவிர ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/national/nepal-floods-amit-shah-speaks-to-cms-of-up-bihar</link><comments>https://www.maalaimalar.com/news/national/nepal-floods-amit-shah-speaks-to-cms-of-up-bihar#comments</comments><guid isPermaLink="false">23866234-3a8f-4860-8e84-d206265be935</guid><pubDate>Wed, 26 Aug 2026 18:01:16 +0000</pubDate><atom:updated>2026-08-26T18:01:16.423Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,பீகார்,Bihar,UP,Amit Shah,அமித் ஷா,Nepal Floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/vcptjbvl/Nepal-mud-debris-and-Amit-Shah.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal mud debris and Amit Shah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/vcptjbvl/Nepal-mud-debris-and-Amit-Shah.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கினால் இரு மாநிலங்களின் கீழ்மட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/amit-shah">அமித் ஷா</a> உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநில முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national">மத்திய அரசு</a> நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. </p><p>மத்திய நீர் ஆணையத்தின் (CWC) அறிவுறுத்தலின்படி, நேபாளம்-சீனா எல்லைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளம் காரணமாக, இந்திய எல்லையில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நேபாளத்தின் ஃபுர்கே கோலா பகுதியில் திரிசூலி ஆற்றில் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததாக தகவல் கிடைத்துள்ளது.</p><h2>பதற்றமான சூழல் ஏற்படவில்லை:</h2><p>நேபாள பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. பதற்றமான சூழல் எதுவும் ஏற்படவில்லை என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>"வெள்ளத்தின் தாக்கம் இந்தியாவில் உள்ள கண்டக் ஆற்றின் கீழ்மட்டப் பகுதிகளுக்குப் பரவக்கூடும்" என்று அது கூறியது.</p><p>உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இரு மாநிலங்களும் விழிப்புடன் இருக்குமாறும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது. ஏற்படக்கூடிய வெள்ள சூழலை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>முன்னேற்பாடுகள் தீவிரம்:</h2><p>"இந்தியா-நேபாள எல்லைக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் இந்திய சமூகத்தினரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுதல் மற்றும் பிற உதவிகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன" என்று அமைச்சகம் கூறியது.</p><p>இந்த பேரிடரில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அமித் ஷா, இக்கட்டான சூழலில் இந்திய அரசு நேபாளத்துடன் துணை நிற்கும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.</p><p>"நேபாளத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிகுந்த மனவேதனையை அளிக்கின்றன" என்று அவர் கூறினார்.</p><p>"நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரிடர் குறித்து பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர்களுடன் நான் பேசினேன். இதன் தாக்கம் உணரப்படக்கூடிய எல்லைப் பகுதிகளில் உள்ளூர் நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுக்களுடன் இணைந்து NDRF-ம் தீவிர விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘ஆம் ஆத்மி ஆட்சியமைந்த 5 நாட்களில் எத்தனால் பெட்ரோலுக்கு தடை... இல்லையென்றால் அரசியலை விட்டு விலகத் தயார்’ - கெஜ்ரிவால் சவால்!</title><link>https://www.maalaimalar.com/news/national/ban-on-ethanol-blended-petrol-within-5-days-of-aam-aadmi-party-forming-the-government-otherwise-ready-to-quit-politics-kejriwals-challenge</link><comments>https://www.maalaimalar.com/news/national/ban-on-ethanol-blended-petrol-within-5-days-of-aam-aadmi-party-forming-the-government-otherwise-ready-to-quit-politics-kejriwals-challenge#comments</comments><guid isPermaLink="false">108691dd-be7d-491c-afad-7a07076c1ca8</guid><pubDate>Wed, 26 Aug 2026 15:37:25 +0000</pubDate><atom:updated>2026-08-26T15:37:25.255Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,ஆம் ஆத்மி,Aam Aadmi Party,E20 petrol,எத்தனால் பெட்ரோல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/4br62vji/New-Project-2026-08-26T210413.545.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஆம் ஆத்மி ஆட்சியமைந்த 5 நாட்களில் எத்தனால் பெட்ரோலுக்கு தடை... இல்லையென்றால் அரசியலை விட்டு விலகத் தயார்’ - கெஜ்ரிவால் சவால்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/4br62vji/New-Project-2026-08-26T210413.545.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், தனது கட்சி ஆட்சி அமைத்தால், 5 நாட்களுக்குள் எத்தனால் பெட்ரோலுக்கு தடை விதிக்கப்படும் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். </p><p>இல்லையென்றால் அரசியலைவிட்டு விலக தயார் எனவும் சவால் விடுத்துள்ளார். கோவாவில் நேற்று நடைபெற்ற எத்தனால் பெட்ரோல் எரிபொருள் கொள்கைக்கு எதிரான டவுன்ஹால் கூட்டத்தில் பேசிய அவர் இந்த அதிரடி தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளார்.</p><p>கோவா மக்கள் சந்திப்புக் கூட்டம், எத்தனால் பெட்ரோலுக்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியின் நாடு தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இப்பிரச்னை தொடர்பான தேசிய மக்கள் சந்திப்பை ஆக.1ம் தேதியன்று டெல்லியில் நடத்தியது.</p><p>தொடர்ந்து மேற்கு வங்கம், குஜராத், ஹரியானா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, பீகார் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.</p><p>40 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டமன்றத்திற்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது கோவாவில் இரண்டு ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>கோட்டா: 2வது முறையாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 20 வயது மாணவி அறையில் சடலமாக மீட்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-student-preparing-for-neet-for-the-second-time-found-dead-in-her-room</link><comments>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-student-preparing-for-neet-for-the-second-time-found-dead-in-her-room#comments</comments><guid isPermaLink="false">6a6c87e4-0f48-4a8e-86d5-687a3b85455e</guid><pubDate>Wed, 26 Aug 2026 15:10:53 +0000</pubDate><atom:updated>2026-08-26T15:10:53.391Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,கோட்டா,Kota</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/lggvyge9/New-Project-2026-08-26T203155.274.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ம.பி.: 2வது முறையாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 20 வயது மாணவி அறையில் சடலமாக மீட்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/lggvyge9/New-Project-2026-08-26T203155.274.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வுக்கு இரண்டாவது முறையாக தயாராகி வந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர், ராஜஸ்தானில் தான் தங்கியிருந்த வாடகை குடியிருப்பில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>குஷ்பு படேல் என அடையாளம் காணப்பட்டுள்ள மாணவி, தனது தங்கையோடு தங்கி கோட்டாவில் உள்ள ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிப்பெற்று வந்துள்ளார். </p><p>2023 முதல் கோட்டாவில் வசித்து வந்த இருவரும் ஜூலை மாதம் லேண்ட்மார்க் சிட்டி பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றிற்கு குடிபெயர்ந்துள்ளனர். </p><p>நேற்றிரவு பயிற்சி வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்த தங்கை கதவை தட்டியுள்ளார். நீண்டநேரம் ஆகியும் கதவை திறக்காததால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, குஷ்பு அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.</p><p>தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவியின் சடலத்தை கைப்பற்றி எம்.பி.எஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உடலை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.</p><p>தொடர்ந்து குஷ்புவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கோட்டாவிற்கு விரைந்த பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் மாணவியின் அறையிலிருந்து எந்தவித தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்படவில்லை. எனினும், கடந்த முறை எழுதிய நீட் தேர்வில் <strong>450 மதிப்பெண்கள்</strong> எடுத்திருந்ததாகவும், அந்த மதிப்பெண் திருப்தி அளிக்காததால் அவர் கடுமையான மன உளைச்சலிலும், அழுத்தத்திலும் இருந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கோட்டாவில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றுவந்தவர்களில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை <strong>8 மாணவர்கள்</strong> தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>DRDO-வின் ஏவுகணைத் தயாரிப்பு தொழில்நுட்பங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-approves-transfer-of-drdos-missile-manufacturing-technologies-to-private-companies</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-approves-transfer-of-drdos-missile-manufacturing-technologies-to-private-companies#comments</comments><guid isPermaLink="false">f087fe52-cb78-410d-93c0-a807fdd4eae1</guid><pubDate>Wed, 26 Aug 2026 14:34:00 +0000</pubDate><atom:updated>2026-08-26T14:34:00.178Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,DRDO,பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு,ராஜ்நாத் சிங்,பாதுகாப்புத் துறை,Indian defence industry</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/hue5obkl/New-Project-2026-08-26T200342.532.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DRDO-வின் ஏவுகணைத் தயாரிப்பு தொழில்நுட்பங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/hue5obkl/New-Project-2026-08-26T200342.532.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய அனைத்து ஏவுகணை அமைப்புகளின் தயாரிப்பு தொழில்நுட்பங்களையும் உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>உள்நாட்டு உற்பத்தித் திறன்களை மேம்படுத்துதல், இறக்குமதியைச் சார்ந்திருப்பதை குறைத்தல், உள்நாட்டு மதிப்புக் கூட்டலை அதிகரித்தல், பாதுகாப்புத் துறைச் சார்ந்த தொழில்துறை அடித்தளத்தை வலுப்படுத்துதல், </p><p>விநியோக முறையில் இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள், இதர தொழில்நுட்பக் கூட்டாளர்களின் பங்களிப்பிற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவைகள் இதன் முக்கிய நோக்கம் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>இந்தத் தொழில்நுட்பப் பரிமாற்றம், தகுதியான உள்நாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான சான்றிதழ்கள், தகுதித் தேர்வுகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நேபாளம் வெள்ளப்பெருக்கு: மனிதாபிமான உதவிகளை வழங்க தயார்..!- பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/india-offers-humanitarian-aid-to-flood-hit-nepal-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-offers-humanitarian-aid-to-flood-hit-nepal-pm-modi#comments</comments><guid isPermaLink="false">9cd3657d-45b0-492e-ab1e-0e99d6523cef</guid><pubDate>Wed, 26 Aug 2026 12:35:48 +0000</pubDate><atom:updated>2026-08-26T12:35:48.752Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளப்பெருக்கு,pm modi,nepal flood,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/od0exevy/Nepal.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal- PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/od0exevy/Nepal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திபெத் எல்லையில் உள்ள நேபாளத்தில் மலைகளுக்கு இடையில் ஓடும் ஆற்றில் எதிர்பாராத வகையில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு எழுந்தது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.</p><p>இன்று காலை திபெத்தில் இருந்து திடீரென வெள்ளம் கரைபுரண்டு எழுந்துள்ளது. இந்த வெள்ளம் போதே கோஷி ஆற்றில் கலக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா மற்றும் தாடிங் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல் நுவாகோட் மாவட்டமும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>மீட்புப் பணியில் ராணுவம்</h2><p>நேபாள ராணுவம் மீட்பு, தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளது. நேபாளம் பெருவெள்ளத்திற்கு கோடாரி பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கமே காரணம் என கூறப்படுகிறது.</p><p>நிலநடுக்கத்தால் பனிப்பாறை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும், 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்ததாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. </p><p>இந்த வெள்ளத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 ஆண்கள், ஒரு பெண் ஆவார்கள். நான்கு பேர் உடல்களும் திரிஷுலி ஆறு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.</p><p>இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சம்பவத்தை தொடர்ந்து, இந்திய பிரதமர் மோடி உதவிக்கரம் நீட்டியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் கூறியதாவது:-</p><p>நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவிடம் தொலைபேசியில் பேசி, வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தேன். இந்த இக்கட்டான நேரத்தில், நாம் நேபாளத்தில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு உறுதுணையாக இருப்போம்</p><p>நேபாளத்திற்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>