<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 15 Sep 2026 23:09:41 +0000</lastBuildDate><item><title>குழந்தை துஷ்பிரயோக விளம்பரங்கள் தொடர்பாக மெட்டா இந்தியா தலைவருக்கு மூன்றாவது முறையாக சம்மன்</title><link>https://www.maalaimalar.com/news/national/meta-india-head-summoned-for-3rd-time-over-child-abuse-advertisements</link><comments>https://www.maalaimalar.com/news/national/meta-india-head-summoned-for-3rd-time-over-child-abuse-advertisements#comments</comments><guid isPermaLink="false">f9cb11e2-0e15-42d8-95b4-7159e528913a</guid><pubDate>Tue, 15 Sep 2026 23:04:20 +0000</pubDate><atom:updated>2026-09-15T23:04:20.887Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Meta,மெட்டா,Child abuse</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zkkl130s/Meta.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Meta]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zkkl130s/Meta.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தைகள் பாலியல் சீண்டல் மற்றும் துஷ்பிரயோக உள்ளடக்கம் (CSEAM) தொடர்பானதாக கூறப்படும் விளம்பரங்கள் குறித்த தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக, <a href="https://www.maalaimalar.com/topic/meta">மெட்டா</a> இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜராக கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>இந்தியாவில், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வருவதாக பிபிசி ஐ மீடியா (BBC Eye Media) அறிக்கை கூறியதை அடுத்து இந்த வழக்கு எழுந்துள்ளது. </p><p>ஜூலை 3-ஆம் தேதியன்று, தேசிய குழந்தை நல ஆணையர் (NCPCR) இந்த வழக்கை தானாக முன்வந்து கவனத்தில் கொண்டு, அந்த தொழில்நுட்ப நிறுவனத்திடம் விளக்கம் அளிக்குமாறு கேட்டது. மெட்டா நிறுவனம் ஒரு வாரம் கழித்து தனது பதிலை சமர்ப்பித்தது.</p><h2>மெட்டா இந்தியா தலைவருக்கு சம்மன்:</h2><p>இந்த வழக்கின் உண்மைகளையும் சூழ்நிலைகளையும் கண்டறிய, NCPCR ஒரு முறையான விசாரணையை தொடங்க முடிவு செய்துள்ளது. நடைபெற்று வரும் இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, மெட்டா இந்தியா தலைவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது.</p><p>செப்டம்பர் 9 ஆம் தேதி மூத்த அதிகாரிக்கு சம்மன் அனுப்பிய ஒரு வாரத்திற்கு பிறகு இது நிகழ்ந்துள்ளது. இணையதளங்கள் மூலம் குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டும் உள்ளடக்கங்கள் கிடைப்பதாகவும், அவை ஊக்குவிக்கப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில், ஆணையத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.</p><p>சி.எஸ்.இ.ஏ.எம். (CSEAM) விவகாரத்தில் NCPCR தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் விளைவாக, குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை புகாரளிப்பது தொடர்பான தனது கொள்கையை மெட்டா நிறுவனம் திருத்தியமைத்துள்ளது. தற்போது மெட்டா நிறுவனம், இதுபோன்ற வழக்குகளை இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்திற்கும் (I4C) புகாரளிக்கத் தொடங்கியுள்ளது.</p><p>கடந்த ஜூலை மாதம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), இன்ஸ்டாகிராமில் கட்டண விளம்பரங்களில் வரும் CSEAM தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு கடுமையான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மேலும், அதுபோன்ற அனைத்து விளம்பரங்களையும் முடக்குமாறு இன்ஸ்டாகிராமை கேட்டுக்கொண்டிருந்தது.</p><h2>விளம்பர கொள்கைகளில் தடை:</h2><p>இந்தியாவில் இன்ஸ்டாகிராமில், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்கள் இயங்கி வருவதாக பிபிசி ஐ (BBC Eye) புலனாய்வில் குற்றம் சாட்டியுள்ளது. </p><p>அந்த விளம்பரங்கள், பயனர்களை டெலிகிராம் அரட்டை செயலிக்கு வழிநடத்துவதற்காக "கற்பழிப்பு வீடியோ" மற்றும் "குழந்தை வீடியோ" போன்ற சொற்களைப் பயன்படுத்தியதாக அந்த அறிக்கை தெரிவித்தது. அங்கு, பயனர்கள் அத்தகைய வீடியோக்களை ரூ.99 போன்ற குறைந்த விலையில் வாங்க முடிந்தது.</p><p>மெட்டாவின் விளம்பர கொள்கைகள் நிர்வாணம் மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்கத்தை வெளிப்படையாக தடை செய்திருந்தபோதிலும், பேஸ்புக்கில் இதுபோன்ற விளம்பரங்கள் தோன்றியதாக பிபிசி விசாரணையில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>புகை எச்சரிக்கை: டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டதால் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-bound-flight-diverted-to-lucknow-airport-after-smoke-warning</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-bound-flight-diverted-to-lucknow-airport-after-smoke-warning#comments</comments><guid isPermaLink="false">99ffd574-1b9b-4f4e-8a4c-d9f96224e708</guid><pubDate>Tue, 15 Sep 2026 18:47:29 +0000</pubDate><atom:updated>2026-09-15T18:47:29.996Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,lucknow airport,லக்னோ விமான நிலையம்,டெல்லி,Flight diverted</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/r02iuf2i/Indigo-Flight.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indigo Flight]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/r02iuf2i/Indigo-Flight.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அகர்தலாவில் இருந்து டெல்லிக்கு சென்ற <a href="https://www.maalaimalar.com/topic/indigo-flights">இண்டிகோ விமானம்</a> ஒன்றின் சரக்கு பகுதியில் புகை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த விமானம் லக்னோவின் சௌத்ரி சரண் சிங் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது.</p><p>6E6504 என்ற அந்த விமானம், 103 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களுடன் மாலை 6.29 மணிக்கு லக்னோ விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் காரணமாக எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>விமானம், பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, <a href="https://www.maalaimalar.com/news/national">லக்னோ</a> விமான நிலையம் உடனடியாக தனது அவசரகால நெறிமுறைகளை செயல்படுத்தியது. மேலும், தீயணைப்பு மற்றும் மீட்பு குழு, ஆம்புலன்ஸ் மற்றும் முனைய ஆதரவு பணிகளை மேற்கொண்டது.</p><h2>இதேபோன்று முந்தைய சம்பவங்கள்:</h2><p>புகை கண்டறியும் எச்சரிக்கையை தொடர்ந்து, டெல்லி செல்லும் மற்றொரு விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்ட சில நாட்களுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>முன்னதாக கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதியன்று, வாரணாசியில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பின்பக்க சரக்கு பகுதியில் புகை கண்டறியும் எச்சரிக்கை ஒலித்ததை தொடர்ந்து, அந்த விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டது.</p><p>155 பயணிகளை ஏற்றிச் சென்ற IX1253 விமானம், அவசரகால மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பாகத் தரையிறங்கியது. முதற்கட்ட சோதனைகளில், விமானத்தில் புகை அல்லது தீ எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. பின்னர், அந்த விமானம் தொழில்நுட்ப ஆய்வுக்காக ஹேங்கருக்கு கொண்டு செல்லப்பட்டது.</p><h2>வானிலை காரணமாக திருப்பி விடப்பட்ட விமானங்கள்:</h2><p>சமீபத்திய வாரங்களில் வானிலை தொடர்பான காரணங்களால் பல விமானங்கள் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.</p><p>செப்டம்பர் 4-ஆம் தேதியன்று, பலத்த மழை காரணமாக டெல்லி செல்லும் நான்கு விமானங்கள் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டன. மோசமான வானிலை மற்றும் குறைந்த பார்வைத்திறன் காரணமாக, செப்டம்பர் 12-ஆம் தேதியன்று டெல்லியில் இருந்து வாரணாசிக்கு சென்ற இண்டிகோ விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டது.</p><p>செப்டம்பர் 13 அன்று, மோசமான வானிலை காரணமாக மும்பையில் இருந்து டேராடூனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்றும் லக்னோவிற்குத் திருப்பி விடப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி உத்தரகண்ட் மாநிலத்தில் தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-us-joint-military-exercise-yudh-abhyas-gets-underway</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-us-joint-military-exercise-yudh-abhyas-gets-underway#comments</comments><guid isPermaLink="false">ae993ef9-016d-45dd-9ed1-0f2721705cd0</guid><pubDate>Tue, 15 Sep 2026 17:59:06 +0000</pubDate><atom:updated>2026-09-15T17:59:06.160Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>India US military exercise,இந்தியா அமெரிக்கா ராணுவ பயிற்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/94s1r7f0/Yudh-Abhyas.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India - US military exercise

]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/94s1r7f0/Yudh-Abhyas.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரு நாட்டு படைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைந்து செயல்படும் திறனை மேம்படுத்தவும், வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ளவும், அதே வேளையில் இருதரப்பு பாதுகாப்பு உறவை வலுப்படுத்தவும் நோக்கமாக கொண்ட இந்தியா மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்க</a> ராணுவங்களின் கூட்டு பயிற்சியான 'யூத் அப்யாஸ்', தொடங்கியது.</p><p>இப்பயிற்சியின் 22-ஆவது பதிப்பிற்கான தொடக்க விழா உத்தரகண்ட் மாநிலம் அவுலியில் உள்ள 'அவுலி வெளிநாட்டுப் பயிற்சி மையத்தில்' நடைபெற்றது. இப்பயிற்சி அவுலி மற்றும் ராஜஸ்தானில் உள்ள மகாஜன் கள துப்பாக்கி சூடு பயிற்சி மைதானம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்று வருவதாக <a href="https://www.maalaimalar.com/news/national">இந்திய</a> பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><h2>பயிற்சின் நோக்கம் இதுதான்:</h2><p>"மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் 'ஒருங்கிணைந்த போர் அணிகளை' பயன்படுத்துவதற்கான இரு ராணுவங்களின் கூட்டுத் திறனை மேம்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும்; இதில் காலாட்படை சார்ந்த நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது ஒருங்கிணைந்து செயல்படும் திறனை வலுப்படுத்துவதுடன், சிறந்த செயல்பாட்டு நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளவும், கூட்டு திட்டமிடல் மற்றும் செயல்பாட்டை வலுப்படுத்தவும் உதவும்," என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இரு தரப்பில் இருந்தும் தலா 600 வீரர்கள் பங்கேற்கும் இந்தப் பயிற்சியில், 14-ஆவது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அமரேஷ் குஞ்சன் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் 11-ஆவது வான்வழி பிரிவை சேர்ந்த 1-ஆவது காலாட்படை படைப்பிரிவுத் தளபதி கர்னல் பெஞ்சமின் ஜாக்மேன் ஆகியோர் பங்கேற்பாளர்களிடையே உரையாற்றினர் என்று அமைச்சகம் தெரிவித்தது.</p><h2>போர் உத்திகள், நுட்பங்கள் &amp; நடைமுறைகள்:</h2><p>தொழில்நுட்ப பயன்பாடு இதில் முக்கிய கவனம் செலுத்தும் பகுதியாக இருக்கும். கண்காணிப்பு மற்றும் உளவு பணிகளுக்காக டிரோன்கள் மற்றும் தானியங்கி அமைப்புகளை பயன்படுத்துதல் மற்றும் நவீன ஆயுத அமைப்புகளின் செயல்விளக்கம் ஆகியவை இப்பயிற்சியில் அடங்கும்; இவை மகாஜன் கள துப்பாக்கி சூடு பயிற்சி மைதானத்தில் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>"இரு ராணுவங்களை சேர்ந்த துறைசார் நிபுணர்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பல-தள போர்முறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் கருத்துக்களை பரிமாறி கொள்வார்கள்," என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.</p><p>இந்த பயிற்சியானது, இரு ராணுவங்களும் தங்கள் போர் உத்திகள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும், பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் செயல்பாட்டு சூழல்களில் ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனை மேம்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைகள் பாதுகாப்பில் அதிரடி முடிவு: இந்திய சைபர் கிரைம் போர்ட்டலுக்கு நேரடியாக தகவல் தர மெட்டா ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/meta-approves-direct-reporting-to-india-cyber-crime-portal</link><comments>https://www.maalaimalar.com/news/national/meta-approves-direct-reporting-to-india-cyber-crime-portal#comments</comments><guid isPermaLink="false">6e8c063e-88e8-4b67-8164-b595caff7cc9</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:32:26 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:32:26.107Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Meta,மெட்டா,சைபர் கிரைம்,Indian Cybercrime Coordination Centre,I4C</media:keywords><media:content height="387" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/a4tban07/images-11.jfif" width="738"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Meta]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/a4tban07/images-11.jfif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2>ஒப்புதல் </h2><p>பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெட்டா, இந்தியாவில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்களை இனி இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) நிர்வகிக்கும் சைபர் கிரைம் போர்ட்டலுக்கு நேரடியாக தெரிவிக்க ஒப்புக்கொண்டுள்ளது</p><h2>மத்திய அரசின் வலியுறுத்தல்</h2><p> மெட்டா நிறுவனம் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்திடம் (NCMEC) முதன்மையாகப் புகாரளித்து வந்தது. </p><p>ஆனால்  தற்போது குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், டீப்ஃபேக்குகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் தொடர்பான புகார்கள் தொடர்பாக மத்திய அரசு வழியுறுத்தலின் அடிப்படையில் மெட்டா இந்த முடிவை அறிவித்துள்ளது.</p><h2>புகார்</h2><p>கடந்த ஜூலை மாதம் இன்ஸ்டாகிராமில் கட்டண விளம்பரங்களில் குழந்தையை பாலியல் ரீதியாக சுரண்டப்படும் மற்றும் துஷ்பிரயோகம் செய்யு உள்ளடக்கம் இருப்பதாக கூறப்பட குற்றச்சாட்டின் பேரில் மின்னணு மற்றும் தகவல்  தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தது. </p><p>அதில் குழந்தைகளை உள்ளடக்கிய பாலியல் ரீதியான வெளிப்படையான உள்ளடக்கங்களைக் கொண்ட டெலிகிராம் சேனல்களின் விளம்பரங்களுடன், இன்ஸ்டாகிராம் பாலியல் ரீதியான ஆபாசத்தை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்களைக் கொண்டிருந்ததாக பிபிசி ஐ நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாக குறிப்பிப்பிட்டிருந்தது.</p><p>மேலும் குழந்தைகளின் இணையதளப் பாதுகாப்பு என்பது இந்தியாவில் செயல்படும் எந்தவொரு சமூகவலைதள நிறுவனத்துக்கும் அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும்; இதில் சமரசத்துக்கு இடமில்லை எனவும் எச்சரித்திருந்தது.</p> <p>இந்த நிலையில் இந்திய சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இதுபோன்ற நேரடி தொடர்பு ஏற்படுத்த முன்வந்துள்ள முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் மெட்டா நிறுவனம் முதலாவதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து மெட்டா நிறுவனத்தின்  செய்தித் தொடர்பாளர் கூறுகையில், குழந்தைகளை பாதுகாப்பது மெட்டா நிறுவனத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றும் என்றும் </p> <p>குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் இந்திய அரசுடன் இணைந்து செயல்படவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் நிறுவனம் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இனிமேல் UPI வணிக பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/upi-charges-to-be-04-for-some-payments-above-rs-2000-free-for-consumers</link><comments>https://www.maalaimalar.com/news/national/upi-charges-to-be-04-for-some-payments-above-rs-2000-free-for-consumers#comments</comments><guid isPermaLink="false">39e33159-7226-4dad-86e0-9a3ea303a7dc</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:25:18 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:25:18.020Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UPI,யுபிஐ,மத்திய நிதி அமைச்சகம்,Finance Ministry,digital money transactions,டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/qt2wk10u/UPI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UPI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/qt2wk10u/UPI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வர்த்தக ரீதியில் 2000 ரூபாய்க்கு மேல் UPI கட்டணம் செலுத்துபவர்களிடம் 0.4 சதவீதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.</strong></em></p><p>ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவை வழங்குநர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2>உத்தரவு</h2><p>மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:</p><p>ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p>குறிப்பிட்ட முறைகள் மூலம் பணம் செலுத்தும் அல்லது பெறும் ஒரு நபரிடம், எந்தவொரு வங்கியும் அல்லது பணம் செலுத்தும் முறைமை வழங்குநரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என தெரிவித்தது.</p><p>2007ன் பிரிவு 10 ஏவில் திருத்தும் செய்து கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026'வின் கீழ் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><h2>ரூ.2000-க்கு மேல் உள்ள பரிவர்த்தனை</h2><p>புதிய விதியின்படி, ரூ. 2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், ரூபே பற்று அட்டைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது.</p><p>இந்நிலையில், வணிக ரீதியில் 2000 ரூபாய்க்கு மேல் UPI கட்டணம் செலுத்துபவர்களிடம் 0.4 சதவீதம் வசூலிக்கப்படும் எனவும், இந்த நடைமுறை அக்டோபர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><h2>0.4 சதவீதம் கட்டணம்</h2><p>UPI வணிக பரிவர்த்தனைக்கு 0.4 சதவீதம் கட்டணம் மூலம் ரூ. 5000-க்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.75,000-க்கு மேல் UPI பரிவர்த்தனை செய்தால் ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும்.</p><p>ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம் விதிக்கப்படும். </p><p>தனி நபர்களுக்கு இடையிலான UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் தயாரிப்பு என போலி விளம்பரம்: பாகிஸ்தான் அழகுசாதன பொருட்களுக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-made-in-india-ads-india-warns-on-pakistan-cosmetics</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-made-in-india-ads-india-warns-on-pakistan-cosmetics#comments</comments><guid isPermaLink="false">db9fc1bb-1f23-4bd7-adfc-a3111f71d4d3</guid><pubDate>Tue, 15 Sep 2026 12:27:04 +0000</pubDate><atom:updated>2026-09-15T12:27:04.482Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Made in India,Pakistani cosmetics,Goree Beauty Cream,Chandni Whitening Cream,மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்,கோரி பியூட்டி கிரீம்,சாந்தினி ஒயிட்னிங் கிரீம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/csmztym0/face.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pakistani cosmetics]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/csmztym0/face.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆய்வகச் சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் ஆபத்தான கன உலோகங்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>இணையவழி வர்த்தக தளங்களில் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ என கூறி விற்கப்பட்டு வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பிரபல அழகுசாதனக் கிரீம்களைப் பொதுமக்கள் வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பொருட்களில் நச்சுத்தன்மை கொண்ட கன உலோகங்கள் அதிகளவில் இருப்பதும், அவசியமான இறக்குமதி உரிமம் இன்றி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>ச<strong>ட்டவிரோத இறக்குமதி</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/again-and-again-oracle-shocks-employees-with-today-is-your-last-day">மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு </a>வெளியிட்டுள்ள பொது சுகாதார அறிவிப்பின்படி, கோரி பியூட்டி கிரீம் மற்றும் சாந்தினி ஒயிட்னிங் கிரீம் ஆகிய இரு தயாரிப்புகளும் தகுதியான அதிகாரிகளிடம் எந்தவொரு இறக்குமதி பதிவுச் சான்றிதழும் பெறாமல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. .</p><p>மேலும், ஆய்வகச் சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் ஆபத்தான கன உலோகங்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கிரீம்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது தோல் நோய்கள் மட்டுமன்றி, உடலில் பல்வேறு தீவிர நச்சு விளைவுகளையும் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் என சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்</p><p>இந்த இரண்டு அழகுசாதனப் பொருட்களையும் வாடிக்கையாளர்கள் உடனடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஏற்கனவே வாங்கி வைத்திருப்பவர்கள் அவற்றை தூக்கி எறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல, வணிக நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மின்-வர்த்தக அமைப்புகள் இந்த ஆபத்தான கிரீம்களை விற்கவோ, விநியோகிக்கவோ அல்லது விளம்பரம் செய்யவோ கூடாது என்று CDSCO கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது. </p><p>அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இத்தகைய பொருட்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதை தீவிரமாகக் கண்காணித்து உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பா.ஜ.க. தலைவர்களின் மார்பை பிளந்து பார்த்தாலும்.., டி.கே. சிவக்குமார் ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-attacks-if-you-cut-open-the-chests-of-bjp-leaders</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-attacks-if-you-cut-open-the-chests-of-bjp-leaders#comments</comments><guid isPermaLink="false">6dd94f37-f5c7-4650-9629-13537ad8bc42</guid><pubDate>Tue, 15 Sep 2026 11:47:19 +0000</pubDate><atom:updated>2026-09-15T11:47:19.699Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,Congress,DK Shivakumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/rr521v5p/DKShivakumar001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/rr521v5p/DKShivakumar001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் நேற்று கொண்ாடப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள டி நரசிபுரா டவுன் காவல் நிலை இன்ஸ்பெக்டர், மசூதிக்கு முன் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். விநாயர் சிலை ஊர்வலத்தின்போது, பட்டாசு வெடிக்கக் கூடாது என்பதா? என பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பேராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் பாஜக தலைவர்களுக்கு மாநிலத்தின் நலன்கள் மீது அக்கறை இல்லை என்று கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-</h2><p>பாஜக தலைவர்களின் மார்பை பிளந்து பார்த்தால், அதில் மாநிலத்தின் நலனைக் காக்கும் அம்சம் எதுவும் இருக்காது. மாநில நலன் சார்ந்த விஷயங்களைப் பற்றி விவாதித்துவிட்டு, அதன்பிறகு அரசியல் செய்யுமாறு அவர்களிடம் கூறினாலும், அவர்களைத் திருத்த முடியாது. நீங்கள் என்ன செய்தாலும், அவர்கள் எல்லாவற்றிலும் குறைதான் காண்பார்கள்.</p><h2>எவ்வித அசம்பாவிதமும் நிகழ்ந்துவிடக் கூடாது</h2><p>காவல்துறையை பற்றிய ஒருவித அச்சமும் இருக்கத்தான் வேண்டும். அந்த காவலர் என்ன தவறு சொன்னார்? எவ்வித அசம்பாவிதமும் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன், காவல்துறைக்கே உரிய பாணியில் அவர் ஒரு எச்சரிக்கையைத்தான் விடுத்தார். ஆனால், பாஜக இந்த விவகாரத்தை வீதிக்குக் கொண்டு வந்துவிட்டது.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் இங்கிருந்து (பெங்களூருவிலிருந்து) அங்கு சென்று, மகாராஜாவையும் (மைசூரு அரச குடும்பத்தின் வாரிசும் பாஜக எம்.பி.யுமான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜா உடையாரைக் குறிப்பிட்டு) தெருவுக்கு அழைத்து வந்து காவல் நிலையத்திற்கு முன் போராட்டம் நடத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் ஒரு அரசியலமைப்பு ரீதியான பதவியை வகிக்கிறார். அவரிடமிருந்து கண்ணியமான அணுகுமுறையை நான் எதிர்பார்க்கிறேன்.</p><h2>செய்யக்கூடாத எதையும் செய்யவில்லை</h2><p>அவர் (காவல் ஆய்வாளர்) செய்யக்கூடாத எதையும் செய்யவில்லை. நான் அவர்களைக் கைவிடமாட்டேன். ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றால், நிச்சயமாக நாங்கள் அதை எடுப்போம். சட்டம்- ஒழுங்கைப் பராமரிப்பது யாருடைய பொறுப்பு? அவர்கள் (பாஜக) மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். அவர்கள் அதை நிறுத்த வேண்டும். எப்படியாவது மாநிலத்தில் அமைதியின்மையை உருவாக்கவே பாஜக விரும்புகிறது.</p><p>மாநிலத்தின் நற்பெயர் நாட்டின் பிம்பத்துடன் தொடர்புடையது என்பதையும், அது இந்தியாவையே பாதிக்கும் என்பதையும் பாஜக தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள பாஜக தலைவர்கள், நாட்டின் மீதான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>அரசியல் செய்யுங்கள், போராட்டங்களை நடத்துங்கள். ஆனால் அமைதியின்மையை உருவாக்கவோ அல்லது மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தவோ வேண்டாம் என்று பாஜக-விடம் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கடும் சரிவுடன் முடிவடைந்த பங்குச்சந்தை..!</title><link>https://www.maalaimalar.com/news/national/sensex-tanks-777points-to-settle-at-74003</link><comments>https://www.maalaimalar.com/news/national/sensex-tanks-777points-to-settle-at-74003#comments</comments><guid isPermaLink="false">26e70cab-25d8-464c-801c-1934511f34b7</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:45:18 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:45:18.054Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>share market,பங்குச் சந்தை,sensex,நிஃப்டி,சென்செக்ஸ்,NSE Nifty 50</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/s2vg5ve3/ShareMarkets0002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பங்குச் சந்தை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/s2vg5ve3/ShareMarkets0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி ஆகியவை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.</p><p>கடந்த வெள்ளக்கிழமை மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 74781.76 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. சனி, ஞாயிறு விடுமுறை. நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.</p><h2>சென்செக்ஸ் 777.94 புள்ளிகள் குறைவு</h2><p>இன்று காலை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 75,369.63 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இறுதியாக 74,003.82 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இது வெள்ளிக்கிழமை வர்த்தக நிறைவைவிட 777.94 புள்ளிகள் சரிவாகும். 1.04 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும் 1725.92 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன. இது 2.28 சதவீதம் ஆகும்.</p><h2>இந்திய பங்குச் சந்தை நிஃப்டி</h2><p>மும்பை பங்குச் சந்தை போன்று, இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டியும் கடும் சரிவை சந்தித்தது. கடந்த வெள்ளிக்கிழமை நிஃப்டி 23398.10 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று 23576.15 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது, என்றாலு் 279.50 புள்ளிகள் சரிந்து 23,118.60 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இது 1.19 சதவீதம் குறைவாகும். கடந்த 5 நாட்களில் 391.40 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன.</p><h2>சரிவை சந்தித்து பங்குகள்</h2><p>HDFC வங்கி, டாடா ஸ்டீல், இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. பாரத் எலக்ட்ரானிக்ஸ், அதானி பவர், கோடன் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், கனரா வங்கி, இந்தியன் ஆயில் கார்பரேசன், ஐசிஐசிஐ வங்கி போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.</p>]]></content:encoded></item><item><title>கூட்டணி கட்சிகளே தயாராக இல்லாத போது..! UCC விவகாரத்தில் அமித் ஷாவுக்கு உமர் அப்துல்லா கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/national/omar-abdullah-if-allies-are-not-ready-how-will-uniform-civil-code-be-implemented</link><comments>https://www.maalaimalar.com/news/national/omar-abdullah-if-allies-are-not-ready-how-will-uniform-civil-code-be-implemented#comments</comments><guid isPermaLink="false">3e51b62a-1f01-434f-8bc2-bef0e9917f3f</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:41:53 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:41:53.150Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,omar abdullah,உமர் அப்துல்லா,Uniform Civil Code,பொது சிவில் சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/8p7mdp9g/AmithshOmarabdhullah.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா- உமர் அப்துல்லா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/8p7mdp9g/AmithshOmarabdhullah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, 2029-ம் ஆண்டுக்குக்குள் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கு, பீகாரில் மாநில கூட்டணி கட்சியான நிதிஷ் குமாரின் <a href="https://www.maalaimalar.com/news/national/absolutely-not-bihar-raises-the-banner-of-revolt-against-the-implementation-of-the-uniform-civil-code">ஐக்கிய ஜனதா தளம்</a> கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது தொடர்பாக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டால் நாடு முழுவதும் சட்டமாகிவிடும். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்த பாஜக முயற்சிக்கிறது.</p><p>இந்த நிலையில் இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியதாவது:-</p><p>இது தொடர்பாக தேசிய மாநாடு (National Conference) கட்சி தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதைச் செய்வது நாடாளுமன்றத்தின் பணி என்று எங்கள் மாநிலங்களவை உறுப்பினர் ஷமி ஓபராய் கூறியுள்ளார். பல்வேறு மாநிலங்கள் மூலமாக இதை ஏன் முன்னெடுக்கிறீர்கள்? என்.டி.ஏ (NDA) கூட்டணியில் உள்ள அனைவரும் இதை ஏற்கவில்லை.</p><h2>பீகாரில் JDU எதிர்ப்பு</h2><p>பீகாரில் இதைச் செயல்படுத்த முடியாது என்று ஜே.டி.யு (JDU) கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. பொது சிவில் சட்டத்தை (UCC) அமல்படுத்த அவர்களது சொந்தக் கூட்டணியினரே தயாராக இல்லாத நிலையில், நாடு முழுவதும் அதைச் செயல்படுத்த வேண்டும் என்று இவர்களால் எப்படிச் சொல்ல முடிகிறது? நாடாளுமன்றத்தில் இவர்களால் இதை நிறைவேற்ற முடியும் என்று நான் கருதவில்லை.</p><p>இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.</p><h2>பொது சிவில் சட்டம்</h2><p>பொது சிவில் சட்டம் (Uniform Civil Code - UCC) என்பது ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, தத்தெடுத்தல் போன்ற குடும்ப விவகாரங்களுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை அமல்படுத்துவதைக் குறிக்கிறது.</p><p>பாலின சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகளை வழங்குதல் இதன் நோக்கமாகும்.</p><h2>எதிர்ப்பு</h2><p>இந்தியாவின் பல கலாச்சாரப் பன்முகத்தன்மை பாதிக்கப்படும் என்றும், சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு இது அச்சுறுத்தலாக அமையும் என்றும் எதிர்க்கப்படுகிறது</p><p>உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவுக்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனையை ரிக்ஷா ஓட்டுநர் ஆக்கிய திருமணமும் கோர எதார்த்தமும்!</title><link>https://www.maalaimalar.com/news/national/the-marriage-that-turned-a-hockey-player-who-played-for-india-into-an-auto-rickshaw-driverand-the-grim-reality-behind-it</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-marriage-that-turned-a-hockey-player-who-played-for-india-into-an-auto-rickshaw-driverand-the-grim-reality-behind-it#comments</comments><guid isPermaLink="false">0f7698c7-a83f-4b71-a6d2-799f0439770c</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:47:09 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:47:09.851Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hockey Player,ஹாக்கி,வீராங்கனை,பெண் ஆட்டோ ஓட்டுநர்,female auto rickshaw driver</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/3xzbyc90/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  மாலதி]]></media:title><media:description type="html"><![CDATA[  மாலதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/3xzbyc90/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசம் </p><p>தற்போது நடுத்தர வயதில் உள்ள மாலதிக்கு ஒரு காலத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/hockey">ஹாக்கி </a>விளையாட்டு தான் எல்லாமுமாக இருந்தது. தனது 6 வயதில் ஹாக்கி விளையாட தொடங்கிய மாலதி பல மாநிலங்களுக்கு பயணப்பட்டு தன் மாநிலத்தையும், 4 முறை சர்வதேச போட்டிகளில் நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். </p><p>லக்னோவில் உள்ள பனாரசி தாஸ் பொறியியல் கல்லூரியில் பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றி உள்ளார். </p><p>ஆனால் கடினமான திருமண வாழ்வு, பொருளாதார நெருக்கடி, மகனை வளர்க்க வேண்டிய பொறுப்பு ஆகியவற்றால் இந்த முன்னாள் ஹாக்கி வீராங்கனையின் வாழ்வு அவரை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராக்கியது. </p><p>2013 முதல் அவரது வாழ்வில் ஏற்பட்ட இந்த திருப்பம் இன்று வரை ஒருவழிபாதையாக தொடர்கிறது. லக்னோவின் முதல் ரிக்ஷா ஓட்டுநர் என ஊடகங்கள் அவருக்களித்த விளம்பரப் பட்டமே அவரது தற்போதைய அடையாளம். </p><p>15 ஆண்டுகளாக லக்னோவின் சாலைகளில் மாலதியின் ஆட்டோ ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த பொருள் ஆதாரத்தை வைத்து தான் அவருக்கும் வண்டி ஓடுகிறது. </p> <h2>காரணம்?..</h2><p>சரி, இவரை பற்றி இப்போது பேச என்ன காரணம்?.. பேசப்படாததே அவரை பற்றி பேச காரணம். மாலதியை போன்று பல பெண்கள், வீராங்கனைகள் இருக்கின்றனர். இவர் சர்வதேச போட்டிகளில் விளையாடித்தால் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் பல வீராங்கனைகளின் தொடக்கம் மாவட்டங்களோடு முடிந்துவிடுகிறது. மாலதி இண்டர்னேஷனல் செல்லும் வரை கிடையாத சுதந்திரம் இங்கு பல பெண்களுக்கு ஆரம்பக்கத்திலேயே பறிக்கப்பட்டு விடுகிறது.</p><p>ஏன் சுற்றி வளைப்பானேன்.. அண்மையில் சோனாலி சிங் என்ற இன்ஸ்டாகிராம் கன்டென்ட் கிரியேட்டர் நமது மாலதியை பேட்டி கண்டிருக்கிறார். அதில் அவர் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.</p> <h2>ஹாக்கியால் நிறைந்த சிறு பிராயம்</h2><p>தன் சிறு பிராயமும் அது ஹாக்கியால் நிறைந்திருந்ததை பற்றியும் பேசியும் மாலதி, " நான் 6 வயதிலேயே விளையாட தொடங்கிவிட்டேன். அதுவே நான் ஆழமான ஆர்வம் கொண்ட விளையாட்டாக இருந்தது. மாநில அளவிலான போட்டியில் விளையாடவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது" என்று நினைவுகூர்கிறார்.</p><p>போட்டிகளுக்காக ஆக்ரா, மத்திய பிரதேசம், ஒரிசா என சுற்றிச் சுழன்ற மாலதி, அதுவே தன் வாழ்வின் "பொன்னான நாட்கள்" என விவரிக்கிறார். அவர் எப்போதும் ஆட்டத்தில் சென்ட்ரல் பார்வேர்ட்டில் தான் விளையாடுவாராம்.</p><p>என முதல் தேசிய அளவிலான போட்டி புவனேஷ்வரில் நடந்தது. இரண்டாவது ஆக்ராவில். நான் விளையாடும் அணி மீது மக்கள் பணம் கட்டி பந்தயம் வைப்பார்கள். அது ஒரே நேரத்தில் பயமாகவும் உற்சாகமூட்டுவதாகவும் இருக்கும். ஆனால் எனது எல்லா கனவுகளும் மிக மிக எழுத்தாக நசுக்கப்பட்டு விட்டன. அதை புரிந்துகொள்வதே எனக்கு கடினமாக உள்ளது" என்கிறார் .</p><p>"என் தந்தை நான் விளையாடுவதை ஆதரிக்கவில்லை. எனக்கு அண்ணன்கள் இல்லை. எனவே எனக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைத்தால் நல்லது என்றே அவர் நினைத்தார்" என்று தற்போது நினைவுகூரும் மாலதிக்கு 2000 ஆம் ஆண்டில் அவரின் 20களின் பாதியில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.</p><h2>திருமணம்</h2><p>"அது மிகவும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை இல்லை. நான் பெரும்பாலான நேரங்களில் துன்புறுத்தப்பட்டேன். ஆனால் நான் செல்ல வேறு இடம் இல்லை. எனவே நான் அங்கேயே இருந்தேன். 2004 இல் எனக்கு மகன் பிறந்தான். அதன் பிறகும் எதுவும் மாறவில்லை. வார்த்தைகளளாலும், உடல் ரீதியாகவும் நான் துன்புறுத்தப்பட்டேன். யாரும் என் மீது இரக்கம் கொண்டு உதவ வரவில்லை.</p><p>என் மகன் பிறந்த 1 மாதத்தில் நான் என் கணவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். என் மகனும் நான் அனுபவிக்கும் கொடுமைகளை அனுபவிக்க வேண்டாம் என்று எண்ணினேன்" என்கிறார். </p><p>தன் பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய மாலதிக்கு இப்போது தன்னையும் தன் குழந்தையையும் காப்பாற்ற ஒரு வேலை தேவையாக இருந்தது.</p><p>தன் பெயரின் பின்னால் இருக்கும் கணவன் பெயரை துறந்த மாலதி "எனக்கு எதுவும் வேண்டாம். நானே சொந்தக் காலில் நிற்பேன். என் மகனையும் நானே வளர்ப்பேன். பின்னர் ஏன் எனக்கு அந்த பெயர்" என கேக்கிறார் மாலதி.</p> <h2>வேலை</h2><p>ஹாக்கி மட்டுமே தான் அறிந்த ஒரே விஷயம் என்பதால் பயிற்சியாளர் வேலை தேட ஆரம்பித்தார். 2005 இல் பாபு பனாரசி தாஸ் கல்லூரியில் பெண்கள் அணி பயிற்சியாளராக அவரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு அவர் வேளைக்கு சேர்ந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக மகனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போக 2 ஆண்டுகளில் அந்த வேலையை விட வேண்டிய கட்டாயம் மாலதிக்கு ஏற்பட்டது.</p><p>2007 இல் பணியை விட்ட பின் செய்வதறியாது இருந்த மாலதி அதன்பின் தேர்ந்தெடுத்தது தான் ஓட்டுநர் பணி. தொண்டு நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று லக்னோவின் தெருக்களில் தான் முதல் நாள் ஆட்டோ ரிக்ஷா ஓட்டிச் சென்ற அனுபவத்தை நினைவு கூறும் மாலதி, " அது நான் உயிர்ப்போடு இருப்பதாக என்னை உணர வைத்தது. அந்த கணத்தில், எல்லாம் என் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக நான் உணர்ந்தேன். </p><p>ஆனால் ஆரம்பத்தில் என்னை பார்த்து எல்லோரும் சிரித்தனர். என் ஆட்டோவில் ஏற மறுத்தனர். ஆனால் நான் விடாப்பிடியாக பணியை தொடர்ந்தேன். காலம் கடக்க, எல்லாம் மாறியது" என்கிறார்.</p> <h2>முதல் ரிக்ஷா ஓட்டுநர்</h2><p>"நான் லக்னோவின் முதல் ரிக்ஷா ஓட்டுநர். முதலில் நான் இ ரிக்ஷா ஓட்டினேன். கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வருகிறேன். நான் ரிக்ஷா ஓட்டிய ஆரம்ப காலங்களில் பலரும் என்னை பற்றி கமெண்ட் அடிப்பார்கள். </p><p>ஆனால் நான் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. நான் சில பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட கற்றும் தந்துள்ளேன். அவர்கள் இப்போது வண்டி ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்."என்கிறார்.</p><p>தன் ஹாக்கி விளையாட்டை விட்டு ஓட்டுநர் ஆக வேண்டிய சூழல் குறித்து பேசிய அவர், " கடினமாக உழைக்கும் ஒரு பெண், இன்று ரிக்ஷா ஓட்டிக் கொண்டிருப்பதை பார்த்து அரசாங்கம் தனக்கு தானே வெட்கப்பட வேண்டும்" என்கிறார்.</p><p>ரிக்ஷா ஓட்ட வேண்டாம் என்று தனது தந்தை அழுததையும், பிறரின் புரணிகளையும் நினைவுகூர்ந்த மாலதி " நான் யாரிடமும் தோற்க விரும்பவில்லை." என தீர்க்கமுடன் கூறுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் சோகம்: பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-tragedy-fridge-blast-fire-claims-four-of-same-family</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-tragedy-fridge-blast-fire-claims-four-of-same-family#comments</comments><guid isPermaLink="false">68d9cdbc-8101-4e49-a2c8-1a420b718bd4</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:44:31 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:44:31.096Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,பெலகாவி,Fridge blast,Short Circuit</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/x24encif/frig.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Refrigerator explosion ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/x24encif/frig.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மின் கசிவு காரணமாக மின் அழுத்தம் அதிகரித்து, குளிர்சாதன பெட்டி வெடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>கர்நாடக மாநிலம் பெலகாவி நகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>பெலகாவி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சவத் காலி எனும் பகுதியில் இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த குளிர்சாதனப் பெட்டி திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் உருவான தீ, நொடிப் பொழுதில் வீடு முழுவதும் பரவியதுடன், அடர்ந்த புகையும் சூழ்ந்து கொண்டது. அந்நேரத்தில் வீட்டிலிருந்தவர்கள் வெளியேற வழி தெரியாமலும், தப்பியோட முடியாமலும் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.</p><h2><strong>4 பேர் உயிரிழப்பு</strong></h2><p>இந்த விபத்தின் காரணமாக மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த இருவரை மீட்புக் குழுவினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>மின் கசிவே காரணம்?</strong></h2><p>மின் கசிவு காரணமாக மின் அழுத்தம் அதிகரித்து, குளிர்சாதன பெட்டி வெடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது!</title><link>https://www.maalaimalar.com/news/national/grand-brahmotsavam-celebrations-begin-in-tirupati</link><comments>https://www.maalaimalar.com/news/national/grand-brahmotsavam-celebrations-begin-in-tirupati#comments</comments><guid isPermaLink="false">624a5e42-c519-48eb-9960-c6832fc11996</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:33:48 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:33:48.723Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பதி,mukesh ambani,Tirupati,tirumala,பிரம்மோற்சவ விழா,ChandraBabu Naidu,திருப்பதி ஏழுமலையான்   கோவில்,brahmotsavam,திருப்பதி கோவில்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zcn5wvv6/Tirupati-Brahmotsavam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tirupati Brahmotsavam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zcn5wvv6/Tirupati-Brahmotsavam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருப்பதி ஏழுமலையான் கோவிலின்</a> வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.</p><h2>பிரம்மோற்சவ விழா</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">பிரம்மோற்சவ விழாவை</a> முன்னிட்டு அலிபிரி சோதனை சாவடியில் இருந்து கோவில் முகத்து வாரம், மற்றும் கோவில் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்காரம் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டன் கணக்கில் மலர்கள் கொண்டுவரப்பட்டு கோவில் உள்பிரகாரம், வெளி பிரகாரம் முழுவதும் மலர் அலங்காரம் மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.</p><p>பிரம்மோற்சவ விழா தொடக்கத்தை முன்னிட்டு ஏழுமலையானின் படைத் தளபதி விஸ்வக்சேனர் நேற்று மாலை சிறப்பு அலங்காரத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் வைபவம் நடந்தது.</p><h2>கொடியேற்றம்</h2><p>விழாவின் ஒரு பகுதியாக பூமி தாய்க்கு யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அங்குரார்பனம் எனும் மண்ணில் விதை நடும் நிகழ்ச்சி நடந்தது. </p><p>இன்று மாலை 6.21 மணி முதல் 6.35 மணிக்குள் மீனலக்கனத்தில் தங்கக் கொடி மரத்தில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">கொடியேற்றம்</a> நடைபெறுகிறது.</p><h2>பட்டு சமர்ப்பணம்</h2><p>அதன் பின்னர் முதல்-மந்திரி <a href="https://www.maalaimalar.com/topic/chandrababu-naidu">சந்திரபாபு நாயுடு</a> தனது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ் ஆகியோருடன் மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.</p><p>தொழிலதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/mukesh-ambani">முகேஷ் அம்பானி</a> சார்பில் வழங்கப்பட்ட 15 மின்சார பஸ்கள் மற்றும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இரவு ஏழுமலையான் சிறப்பு அலங்காரத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம்: ஆயுத குழுக்களின் தாக்குதலால் 4 பேர் பலி; பொதுமக்கள் கடும் பீதி</title><link>https://www.maalaimalar.com/news/national/risk-of-renewed-violence-in-manipur-4-killed-in-armed-group-attacks-civilians-in-panic</link><comments>https://www.maalaimalar.com/news/national/risk-of-renewed-violence-in-manipur-4-killed-in-armed-group-attacks-civilians-in-panic#comments</comments><guid isPermaLink="false">f8cae76d-a36d-4dda-904e-b6a12a1d2bb3</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:16:15 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:16:15.744Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>manipur,மணிப்பூர்,Manipur violence,மணிப்பூர் கலவரம்,Kuki-Zo Council,குகி-சோ கவுன்சில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/u0qnonr9/manu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manipur violence   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/u0qnonr9/manu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மணிப்பூரின் தமெங்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்குள் அண்மையில் புகுந்த ஆயுதமேந்திய நாகா பயங்கரவாத குழுக்கள் அதிரடித் தாக்குதல் நடத்தின. </p><p>மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், பல்வேறு மாவட்டங்களில் ஆயுதமேந்திய குழுக்கள் மீண்டும் தங்களது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தத் தொடர் வன்முறை சம்பவங்கள் அப்பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்கியுள்ளன.</p><h2>கிராமங்<strong>கள் மீது துப்பாக்கி சூடு</strong> </h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-on-rajasthan-civic-poll-results">மணிப்பூரின்</a> தமெங்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்குள் அண்மையில் புகுந்த ஆயுதமேந்திய நாகா பயங்கரவாத குழுக்கள் அதிரடித் தாக்குதல் நடத்தின. இந்தத் திடீர் துப்பாக்கி சூட்டில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இத்தாக்குதலில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.</p><h2>குகி-சோ க<strong>வுன்சில் கடு</strong>ம் கண்டனம்</h2><p>இந்த கொடூர சம்பவத்திற்கு குகி-சோ கவுன்சில் தனது பலத்த கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அம்மாநிலத்தில் இயங்கி வரும் நாகா ஆயுதக் குழுக்களின் எல்லைமீறிய செயல்பாடுகளே வன்முறை மீண்டும் தலைதூக்குவதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 22 குகி பழங்குடியின மக்கள் இந்த ஆயுத குழுக்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளனர்.</p><h2>மத்திய அரசுக்<strong>கு கோ</strong>ரிக்கை</h2><p>ஆயுதமேந்திய குழுக்களின் இத்தகைய தடையற்ற செயல்பாடுகள் மணிப்பூரை மீண்டும் ஒரு பெரிய அளவிலான முழுமையான இனமோதலை நோக்கி தள்ளும் ஆபத்தை கொண்டுள்ளது. எனவே, மத்திய அரசும் பாதுகாப்புப் படைகளும் உடனடியாக தலையிட்டு, பயங்கரவாத குழுக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: மகாராஷ்டிராவில் ஒரு கிலோ ரூ.27 ஆயிரத்துக்கு விற்பனையாகும் &apos;தங்க கொழுக்கட்டை&apos;!</title><link>https://www.maalaimalar.com/news/national/vinayagar-chaturthi-special-golden-modak-worth-rs-27000-per-kg-in-maharashtra</link><comments>https://www.maalaimalar.com/news/national/vinayagar-chaturthi-special-golden-modak-worth-rs-27000-per-kg-in-maharashtra#comments</comments><guid isPermaLink="false">d54ab6db-b8aa-47ab-81bd-adeb19766183</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:32:57 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:32:57.773Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,விநாயகர் சதுர்த்தி,Vinayaka Chaturthi,Gold Modak,Silver Kozhukkattai,Edible Gold Leaf,தங்க கொழுக்கட்டை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/5suizf66/kkk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold Modak]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/5suizf66/kkk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாரம்பரிய சுவையுடன் கூடிய இந்த கொழுக்கட்டை முந்திரி, பாதாம், பிஸ்தா, பாலாடைக்கட்டி (கவா), குங்குமப்பூ மற்றும் தூய்மையான நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. </p><p>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் விற்பனை செய்யப்படும் 24 காரட் 'தங்க கொழுக்கட்டை' (கோல்டன் மோதக்) பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.</p><h2>ஆடம்ப<strong>ர நெய்வேத்திய</strong>ம்</h2><p>நாசிக்கின் வித்யா விகாஸ் சர்க்கிள் பகுதியில் அமைந்திருக்கும் '<a href="https://www.maalaimalar.com/news/topnews/education-is-god-go-study-bro-quirky-ganesha-statue">சாகர் ஸ்வீட்ஸ்</a>' எனும் பிரபல இனிப்பகம் விநாயக பெருமானின் நைவேத்தியத்திற்காக இந்த தங்க முலாம் பூசப்பட்ட சிறப்பு கொழுக்கட்டையைத் தயாரித்துள்ளது. சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையிலும், இந்த கொழுக்கட்டை ஒரு கிலோ ரூ.27,000 என நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தனி கொழுக்கட்டையின் விலை ரூ.540 ஆக உள்ளது.</p><h2>2<strong>4 காரட் தங்க</strong>ம்</h2><p>பாரம்பரிய சுவையுடன் கூடிய இந்த கொழுக்கட்டை முந்திரி, பாதாம், பிஸ்தா, பாலாடைக்கட்டி (கவா), குங்குமப்பூ மற்றும் தூய்மையான நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் வெளிப்புற அலங்காரத்திற்காக 24 காரட் தூய்மையான, சாப்பிடக்கூடிய தங்க தகடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடை உரிமையாளர் தீபக் சவுத்ரி தெரிவிக்கையில், விநாயகர் சதுர்த்தியின் முதல் நாளிலேயே சுமார் 10 கிலோ தங்க கொழுக்கட்டைகள் விற்பனையாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>பொதுமக்களின் பல்வேறு சுவை விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில், இந்த இனிப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட கொழுக்கட்டை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சாதாரண காஜு (முந்திரி) கொழுக்கட்டை ஒரு கிலோ ரூ. 2,000-க்கும், உலர் பழங்கள் (டிரை ஃப்ரூட்ஸ்) மற்றும் அத்திப்பழக் கொழுக்கட்டைகள் கிலோ ரூ. 1,400 முதல் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் வெள்ளி முலாம் பூசப்பட்ட 'சில்வர் கொழுக்கட்டை' கிலோ ரூ. 2,000-க்கு விற்பனையாகிறது.</p><h2>சாப்பிட<strong>க்கூடிய தங்கம்</strong></h2><p>உணவில் பயன்படுத்தப்படும் இந்த தங்கம் 'E-175' எனும் குறியீட்டின் கீழ் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். 23 முதல் 24 காரட் வரையிலான தூய்மையான தங்கம் மனித உடலின் செரிமான அமிலங்களுடன் எந்த வேதியியல் வினையும் புரியாது என்பதால், செரிமான மண்டலத்தின் வழியாக அப்படியே வெளியேறிவிடும். இதனால் இதை உட்கொள்வது பாதுகாப்பானது என கருதப்பட்டாலும், இதில் உடலுக்குத் தேவையான எந்த ஊட்டச்சத்துக்களோ மருத்துவ நன்மைகளோ இல்லை என்பதும், இது வெறும் ஆடம்பர அழகிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு ரூ.1.28 கோடி &apos;டிஜிட்டல் கைது&apos; மோசடி: புனேவில் அதிர்ச்சி சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/digital-arrest-scam-shocks-pune-retired-army-officer-cheated</link><comments>https://www.maalaimalar.com/news/national/digital-arrest-scam-shocks-pune-retired-army-officer-cheated#comments</comments><guid isPermaLink="false">8a4885bb-647c-432c-a6e7-c8bab0ced860</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:15:55 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:15:55.353Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஜிட்டல் கைது,Digital Arrest,புனே,Pune,மகாராஷ்டிரா மாநிலம்,cyber scam,Telecom Headquarters</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/9h403wnp/puu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Digital Arrest   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/9h403wnp/puu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அடுத்தடுத்த வீடியோ அழைப்புகளில், காவல் சீருடையில் தோன்றிய மோசடி கும்பல், சி.பி.ஐ அதிகாரிகள் போல நடித்து அதிகாரியை மேலும் அச்சுறுத்தியது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/mass-scream-event-at-ocean-beach-san-francisco-stress-relief-gathering">மகாராஷ்டிரா மாநிலம்</a> புனேவைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர், 'டிஜிட்டல் கைது' எனப்படும் அதிநவீன ஆன்லைன் சைபர் மோசடியில் சிக்கி தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.1.28 கோடியை இழந்துள்ளார்.</p><h2><strong>போலி அழைப்பு</strong></h2><p>கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி, தொலைத்தொடர்பு தலைமையகத்தில் இருந்து பேசுவதாக கூறி பெண் ஒருவர் ராணுவ அதிகாரியை தொடர்பு கொண்டார். அதிகாரியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து மும்பையில் சட்டவிரோத அழைப்புகளும், ஆபாச வீடியோக்களும் அனுப்பப்படுவதாக அச்ச மூட்டினார். பின்னர், இந்த வழக்கு மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறி, போலி காவல் அதிகாரியிடம் இணைப்பை வழங்கினார்.</p><p>சந்தேக நபர்கள் அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணிற்குப் போலி எஃப்.ஐ.ஆர் நகல் மற்றும் சில ஆபாச படங்களை அனுப்பி பயமுறுத்தினர். மேலும், விசாரணை என்ற பெயரில் அவரது குடும்ப பின்னணி, வங்கி கணக்குகள், நிலையான வைப்புத் தொகைகள் மற்றும் தங்கம் கையிருப்பு குறித்து விரிவான விவரங்களை சேகரித்தனர். மூத்த குடிமகன் என்பதால் நேரில் கைது செய்யாமல் 'டிஜிட்டல் கைது' முறையில் கண்காணிப்பில் வைப்பதாக கூறி மிரட்டினர்.</p><h2>போலி சி.பி.ஐ <strong>அதிகாரிகள்</strong> </h2><p>அடுத்தடுத்த வீடியோ அழைப்புகளில், காவல் சீருடையில் தோன்றிய மோசடி கும்பல், சி.பி.ஐ அதிகாரிகள் போல நடித்து அதிகாரியை மேலும் அச்சுறுத்தியது. கணக்கு சரிபார்ப்பு என்ற பெயரில், அவரது நிலையான வைப்புத் தொகைகளை உடைத்து, அவர்கள் குறிப்பிட்ட பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்புமாறு பணிக்கப்பட்டார். சட்ட நடவடிக்கைக்கும் கைதுக்கும் பயந்த அதிகாரி, ஆகஸ்ட் இறுதி வாரம் முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை பல தவணைகளில் மொத்தம் ரூ.1.28 கோடியை போலி கணக்குகளுக்கு மாற்றினார்.</p><h2>உண்மை<strong>யை அம்பலப்படுத்திய</strong> மகள்</h2><p>அடிக்கடி வெவ்வேறு கணக்குகளுக்கு பணம் அனுப்ப கோரியதால் ராணுவ அதிகாரியின் மனைவியாருக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து அவர் வெளிநாட்டில் வசிக்கும் தனது மகளுக்குத் தகவல் தெரிவித்தார். நிலைமையை உணர்ந்த மகள், பெற்றோரிடம் இது மோசடி என்பதை சுட்டிக்காட்டி உடனடியாகப் பணப்பரிவர்த்தனைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.</p><h2>கா<strong>வல்துறையில் புகா</strong>ர்</h2><p>பாதிக்கப்பட்ட அதிகாரி உடனடியாக புனே சைபர் குற்றப்பிரிவு காவல்துறையையும் உதவி எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பணம் அனுப்பப்பட்ட போலி கணக்குகளை பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையோ அல்லது பிற அரசு அமைப்புகளோ ஒருபோதும் தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் 'டிஜிட்டல் கைது' செய்ய மாட்டார்கள் என்றும், பணமாற்றம் கேட்க மாட்டார்கள் என்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தேசிய பொறியாளர்கள் தினம்: விஸ்வேஸ்வரய்யாவிற்கும் பொறியாளர் தினத்திற்கு என்ன சம்பந்தம்? </title><link>https://www.maalaimalar.com/news/topnews/why-is-visvesvaraya-linked-to-national-engineers-day</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/why-is-visvesvaraya-linked-to-national-engineers-day#comments</comments><guid isPermaLink="false">d3df7cc1-86aa-4c40-8c0c-907cdf192154</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:54:15 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:54:15.777Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>IIT,Digital India,Indian engineers,National Engineers Day,தேசிய பொறியாளர்கள் தினம்,Engineers Day 2026,Mokshagundam Visvesvaraya</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/6m8orumw/Engineers-Day-2026" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Engineers Day 2026 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/6m8orumw/Engineers-Day-2026?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 அன்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">தேசிய பொறியாளர்கள் தினம் </a>மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய வரலாற்றின் மிகச்சிறந்த பொறியாளர், பொருளாதார மேதை, சிறந்த எழுத்தாளர் மற்றும் ராஜதந்திரி எனப் பன்முகத்தன்மை கொண்ட மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளைப் போற்றும் வகையிலும், நாட்டின் வளர்ச்சிக்கு பொறியாளர்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் இந்தத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.</p><h2>நவீன மைசூரின் தந்தை</h2><p>விஸ்வேஸ்வரய்யா 1861 ஆம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகாவில் </a>உள்ள முட்டெனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். தனது உயர்கல்விக்காக சென்னைக்கு இடம்பெயர்ந்த அவர், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">சென்னை பல்கலைக்கழகத்தில்</a> பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர், அறிவியல் துறைக்கு மாறிய அவர், புனேயில் உள்ள அறிவியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்துத் தேர்ந்தார்.</p><p>1912 முதல் 1918 வரை மைசூரின் திவானாகப் பொறுப்பு வகித்த அவர், பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தார். இதன் காரணமாக "நவீன மைசூரின் தந்தை" என்று அவர் போற்றப்படுகிறார்.</p><h2>பொறியியல் சாதனைகள் மற்றும் பாரத ரத்னா</h2><p>விஸ்வேஸ்வரய்யா வெள்ள மேலாண்மை, நீர்ப்பாசனம் மற்றும் பொறியியல் துறையில் செய்த சாதனைகள் இன்றும் போற்றத்தக்கவை.</p><p>1908 ஆம் ஆண்டு மூசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு, உஸ்மான் சாகர் மற்றும் ஹிமாயத் சாகர் ஆகிய நீர்த்தேக்கங்களை வடிவமைத்து வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார்.</p><p>விசாகப்பட்டினம் துறைமுகத்தைக் கடல் அரிப்பிலிருந்து பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றினார்.</p><p>மைசூரின் தலைமைப் பொறியாளராக இருந்தபோது, அந்தப் பிராந்தியத்தின் நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத்திற்கு வாழ்வாதாரமாக விளங்கும் கிருஷ்ண ராஜ சாகர் அணையைக் கட்டுவதில் முக்கியப் பங்காற்றினார். தண்ணீரைச் சீராக ஒழுங்குபடுத்த தானியங்கி மதகுகளை அறிமுகப்படுத்தினார்.</p><p>"Planned Economy for India", "Reconstructing India" மற்றும் "Memoirs of My Working Life" உள்ளிட்ட பல முக்கிய புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.</p><p>தொழில் மற்றும் பொதுப்பணித் துறையில் அவர் ஆற்றிய அசாத்திய பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசு 1955 ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய குடிமை விருதான<a href="https://www.maalaimalar.com/topic/bharat-ratna-award"> பாரத ரத்னா விருதை </a>அவருக்கு வழங்கி கௌரவித்தது.</p><h2><strong>தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளால் இயங்கும் பொறியாளர்களின் தசாப்தம்</strong></h2><p>இந்தியா ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குகிறது. நாட்டின் உள்கட்டமைப்பு, உத்திசார் தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் அமைப்புகளின் வளர்ச்சியில் பொறியாளர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.</p><p>நெடுஞ்சாலைகள், பாலங்கள், மெட்ரோ நெட்வொர்க்குகள், அணைகள் மற்றும் மின் அமைப்புகளில் இவர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆதார் , யுபிஐ மற்றும் டிஜிலாக்கர் போன்ற டிஜிட்டல் தளங்கள் பொறியாளர்களின் பெரும் உழைப்பால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.</p><p>பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி, செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் ஆகிய துறைகளிலும் பொறியாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.</p><p>2026 ஆம் ஆண்டின் நிலவரப்படி, நாட்டின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி முறையின் முக்கிய அங்கமாக 23 இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், 31 தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் 26 இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகங்கள் விளங்குகின்றன.</p><p>உலகளாவிய தொழில்நுட்பம் தற்போது AI, செமிகண்டக்டர்கள், குவாண்டம் கம்ப்யூட்டிங், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் டீப் டெக் ஆகியவற்றை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், 2047 ஆம் ஆண்டிற்குள் 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) என்ற நாட்டின் நீண்டகால இலக்கை அடைவதில் இந்தியப் பொறியாளர்கள் மிக முக்கியப் பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பெண் Biker மீது கார் மோதிய பரபரப்பு வீடியோ.. கொலை முயற்சி வழக்கில் இளைஞர் கைது </title><link>https://www.maalaimalar.com/news/national/shocking-video-of-a-car-hitting-a-female-biker-young-man-arrested-for-attempted-murder</link><comments>https://www.maalaimalar.com/news/national/shocking-video-of-a-car-hitting-a-female-biker-young-man-arrested-for-attempted-murder#comments</comments><guid isPermaLink="false">a1ace204-113d-4438-8e76-50a9fe848ae9</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:48:55 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:48:55.728Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>haryana,அரியானா,வைரல் வீடியோ,சாலை விபத்து,road accident,viral video,பைக்கர்,Biker</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/br384pg4/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வீடியோ]]></media:title><media:description type="html"><![CDATA[ வீடியோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/br384pg4/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரியானா மாநிலம் குருகிராமில் பைக்கில் சென்ற பெண்ணை காரால் இடித்துவிட்டுச் சென்ற நபர் ராஜஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டார்.</p> <p>நேற்று காலை நடந்த இந்த சம்பவத்தில் குருகிராமின் கோல்ப் கோர்ஸ் சாலையில், சியா என்று அறியப்படும் ஷிவானி சவுகான் என்ற பெண் பைக்கர் சக பைக்கர்களுடன் தனது Aprilia RS 457 பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கல்யான் பைன்ஸ்லா என்பவர் அவ்வழியே காரில் வந்துள்ளார். </p> <h2>ஹிட் அண்ட் ரன்</h2><p>அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காரை ஓட்டி வந்த பைன்ஸ்லா, சியாவின் பைக்கை பாலோ செய்துள்ளார். சியா பைக்கில் இருந்தவாறு, விலகிச் செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பைன்ஸ்லா, பின்னர் அவரது பைக்கை வேகமாக மோதிவிட்டுச் சென்றுள்ளார்.</p><p>இதில் சியா நிலைதடுமாறி பைக்குடன் நடுரோட்டில் கீழே விழுந்தார். இருப்பினும் பைக்கர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருந்ததால் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.</p> <h2>வைரல் வீடியோ</h2><p>மறுபுறம் பைன்ஸ்லாவின் கார் சக்கரம் தீப்பொறி பறக்க அங்கிருந்து சிட்டாக பறந்துவிட்டுட்டது. இந்த சம்பவத்தின் <a href="https://www.maalaimalar.com/collection/video-voxpop">வீடியோ </a>இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.</p><p>வைரல் வீடியோக்களை தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரை தொடர்ந்தும் பைன்ஸ்லா மீது திட்டமிட்ட கொலை வழக்கு பதிவு செய்த குருகிராம் போலீசார் அவரை தேடி வந்தனர்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">You got to book this car driver under “hit and run” case <a href="https://x.com/gurgaonpolice?ref_src=twsrc%5Etfw">@gurgaonpolice</a>. Bring them to justice. <br><br>Car No: HR 30Y 4949<br><br>: IG/rebelwheels_sia_ <a href="https://t.co/KngHxTZ5ke">pic.twitter.com/KngHxTZ5ke</a></p>&mdash; Yo Yo Funny Singh (@moronhumor) <a href="https://x.com/moronhumor/status/2099303842688926058?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>கைது</h2><p>இந்நிலையில் இன்று அவர் ராஜஸ்தானின் தவுசா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் பைன்ஸ்லா, தான் வேண்டுமென்றே பைக் மீது மோதவில்லை என்றும் பைக்கில் இருந்தது பெண் என்று தனக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>யு டர்ன் எடுக்கும்போது பைக் மீது தன் கார் மோதிவிட்டதாகவும், அதன்பிறகு பயம் காரணமாக நிற்காமல் சென்றுவிட்டதாகவும் அவர் தன் தரப்பு நியாயத்தை தெரிவித்துள்ளார்.</p><p>சிசிடிவி காட்சிகள் மற்றும் வாக்குமூலத்தின்படி போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.2,000 வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு தடை</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-bans-charges-on-upi-transactions-up-to-rs-2000</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-bans-charges-on-upi-transactions-up-to-rs-2000#comments</comments><guid isPermaLink="false">68bf4cb0-90a4-455f-9f20-28ff745860aa</guid><pubDate>Tue, 15 Sep 2026 05:30:13 +0000</pubDate><atom:updated>2026-09-15T05:30:13.438Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UPI,யுபிஐ,மத்திய நிதி அமைச்சகம்,digital money transactions,Union Ministry of Finance,டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/evj7yq31/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  UPI பரிவர்த்தனை]]></media:title><media:description type="html"><![CDATA[  UPI பரிவர்த்தனை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/evj7yq31/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.</p> <p>ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் <a href="https://www.maalaimalar.com/topic/upi">யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு</a> எந்தக் கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவை வழங்குநர்களுக்கு மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது.</p> <h2>உத்தரவு</h2><p>மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், "ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p>குறிப்பிட்ட முறைகள் மூலம் பணம் செலுத்தும் அல்லது பெறும் ஒரு நபரிடம், எந்தவொரு வங்கியும் அல்லது பணம் செலுத்தும் முறைமை வழங்குநரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>2007ன் பிரிவு 10 ஏவில் திருத்தும் செய்து கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026'வின் கீழ் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. </p> <h2>ரூ.2000-க்கு மேல் உள்ள பரிவர்த்தனைகள்</h2><p>புதிய விதியின்படி, ரூ. 2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், ரூபே பற்று அட்டைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது.</p><p>இருப்பினும், வணிகர் தள்ளுபடி விகிதம் செயல்படுத்தப்படாவிட்டாலும், ரூ. 2,000 ஐ தாண்டிய யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படலாம்.</p><p>2025-26 ஆம் ஆண்டில், நடந்த யு.பி.ஐ பரிவர்த்தனைகளில் ரூ. 2,000-க்கும் அதிகமான தொகைக்கு வெறும் 4% மட்டுமே பரிவர்த்தனைகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p><p>அதவாது ஒப்பீட்டளவில் ரூ.2000க்கு கீழ் பரிவர்த்தனை செய்வோரே அதிகம். எனவே இந்த வரி விலக்கு சாமானிய மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. </p><p>டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் வேகமாக அதிகரித்து வருவதால், நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையை நிதி ரீதியாக மேலும் வலுப்படுத்த<a href="https://www.maalaimalar.com/news/national/upi-mdr-charges-lok-sabha-passes-bill-empowering-centre-to-levy-fees-on-digital-payments"> கட்டணங்களை அறிமுகப்படுத்துவது </a>குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>பாதுகாப்பு குளறுபடி.. குடிவரவு சோதனையின்றி டெல்லியில்  விமானம் ஏறிச் சென்ற 3 இத்தாலியர்கள் - மத்திய அமைச்சகம் அவசர கூட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/security-lapse-three-italians-boarded-a-flight-without-immigration-checks-central-ministry-calls-urgent-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/national/security-lapse-three-italians-boarded-a-flight-without-immigration-checks-central-ministry-calls-urgent-meeting#comments</comments><guid isPermaLink="false">67606c23-7f22-445f-9847-d4b2bcb18f8b</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:12:06 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:12:06.095Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/m58i81dc/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/m58i81dc/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி விமான நிலையத்தில் குடியேற்ற சோதனைக்கு செல்லாமலேயே 3 இத்தாலியர்கள் ஜெர்மனியின் முனிச் நகருக்கு விமானத்தில் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> <p>கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி அதிகாலை இத்தாலியை சேர்ந்த 3 பேர் அமிர்தசரசில் இருந்து<a href="https://www.maalaimalar.com/news/national/air-india-pilot-dies-in-delhi-5-star-hotel-room"> ஏர் இந்தியா</a> விமானம் மூலம் டெல்லி வந்தனர். </p><p>அந்த விமானம் அதிகாலை 12.50 மணியளவில் டெல்லி வந்தடைந்தது. அதன்பின்னர் அதிகாலை 1.45 மணியளவில் டெல்லியில் இருந்து லுப்தான்சா விமானத்தில் முனிச் நகருக்கு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். </p><p>ஆனால், இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவர்கள் கட்டாய குடிவரவு சோதனைக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.</p> <p>3 இத்தாலியர்களுக்கும் அமிர்தசரசிலேயே டெல்லியில் இருந்து முனிச் செல்லும் லுப்தான்சா விமானத்துக்கான பயணச்சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.</p><p>டெல்லி வந்தபோது சர்வதேச பயணிகள் என்று அடையாளம் கண்டு, அவர்களை குடிவரவு சோதனைக்கு அனுப்பியிருக்க வேண்டும்.</p><p>ஆனால் அவர்கள் சர்வதேச பயணிகள் செல்லும் மாற்றுப்பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் குடிவரவு சோதனைக்கு செல்லாமலேயே அவர்கள் சர்வதேச புறப்பாடு பகுதிக்கு சென்று முனிச் விமானத்தில் ஏறிச் சென்றுள்ளனர். பதிவேடு சரிபார்ப்பின்போது இந்த குளறுபடி தெரியவந்துள்ளது.</p> <h2>அரசு நடவடிக்கை</h2><p>இச்சம்பவத்தில் ஏர் இந்தியாவின் அலட்சியத்தைக் சுட்டிக்காட்டி, மத்திய உள்துறை அமைச்சகம் செப்டம்பர் 12 அன்று அந்நிறுவனத்திடம் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. 7 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>மேலும் உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் அவசர கூட்டமும் இதுதொடர்பாக நாளை மாலை கூட்டப்பட்டுள்ளது. </p><p>இக்கூட்டத்தில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகச் செயலாளர், உளவுத்துறை இயக்குநர், குடிவரவுப் பணியகக் ஆணையர், ஏர் இந்தியா தலைவர் மற்றும் டெல்லி விமான நிலைய சி.இ.ஓ ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிராவின் மிகப் பணக்கார பாஜக எம்எல்ஏ பிச்சைக்காரராக மாறிய வினோதம்.. என்ன ஆனது?</title><link>https://www.maalaimalar.com/news/national/the-curious-case-of-maharashtras-richest-bjp-mla-turning-into-a-beggar-what-happened</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-curious-case-of-maharashtras-richest-bjp-mla-turning-into-a-beggar-what-happened#comments</comments><guid isPermaLink="false">566511e4-0898-409c-b4db-07240cfabd12</guid><pubDate>Tue, 15 Sep 2026 02:25:42 +0000</pubDate><atom:updated>2026-09-15T02:25:42.233Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,Beggar,பாஜக எம்எல்ஏ,bjp mla,யாசகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ywe8apxa/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பராக் ஷா]]></media:title><media:description type="html"><![CDATA[ பராக் ஷா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ywe8apxa/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிர மாநிலத்தின் மிகப் பணக்கார எம்எல்ஏக்களில் ஒருவரான பாஜகவை சேர்ந்த பராக் ஷா ஒரு நாள் முழுவதும் மும்பை வீதிகளில் பிச்சைக்காரராக வாழ்ந்துள்ளார்.</p><p>பராக் ஷா, மும்பை காட்கோபர் கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார். 2024 <a href="https://www.maalaimalar.com/topic/maharashtra">மகாராஷ்டிர </a>சட்டமன்ற தேர்தலின் போது ரூ.3,383 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பை வேட்புமனுவில் தாக்கல் செய்து, மாநிலத்தின் மிகப்பணக்கார வேட்பாளராக பராக் ஷா அறியப்பட்டார். </p> <h2>பிச்சை எடுக்க காரணம் </h2><p>பராக் ஷா குஜராத்தி ஜைன மதத்தவர் ஆவார்.</p><p>ஜைன மதப் புனித மாதத்தையொட்டி , தனது ஆன்மீகக் குருவான நம்ரமுனி என்பவரின் வழிகாட்டுதலின் பேரிலேயே பராக் ஷா பிச்சைக் கோளம் பூண முடிவு செய்தார்.</p><p>நேற்று (செப்டம்பர் 14) தனது பாதுகாவலர்கள், உதவியாளர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டு, மக்கள் தன்னை அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என்பதற்காக அழுக்காக மேக்கப் போட்டு பிச்சைக்காரர் வேடமிட்டு மும்பை தெருக்களில் சுற்றியுள்ளார்.</p> <h2>அனுபவம் </h2><p>இதுகுறித்து பின்னர் பேசிய பராக் ஷா, "நமக்குக் கிடைக்கும் அனைத்து மரியாதைகளும் நம் பதவி மற்றும் அந்தஸ்துக்காக மட்டுமே கிடைக்கிறது.</p><p>பிச்சைக்காரர் வேடத்தில் சென்றபோது, வழக்கமாக என்னைச் சந்திக்க வரிசையில் நிற்கும் அதே மனிதர்கள் என்னை விட உயர்ந்தவர்களாக உணர்ந்தனர். இதுவே வாழ்க்கையின் கசப்பான உண்மை." என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p><p>பிச்சைக்காரராக இருந்தபோது மும்பை மக்கள் தனக்குச் செய்த உதவிகளைப் பராக் ஷா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார.</p><p>ஒரு நபர் அவரிடம் ரூ.20 கொடுத்து "போய் சாப்பிடு பாபா" என்று கூறியுள்ளார். ஒரு ஏழை சமோசா வியாபாரி, அவரிடம் பணம் இல்லை என்று கூறியபோதும், சிறு சலிப்பும் இன்றி இன்முகத்துடன் இலவசமாக சமோசா வழங்கியுள்ளார்.</p><p>"மும்பை நகரம் என்பது மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய எப்போதும் தயாராக இருக்கும் ஒரு நகரம் என்பதை இந்த அனுபவம் எனக்கு உணர்த்தியது" என பராக் ஷா உணர்ச்சிபொங்க தெரிவித்தார்.</p><p>பிச்சை எடுத்து சாப்பிட்டு முடித்த பிறகு, தனது மேக்கப்பை நீக்கிவிட்டு தான் சென்ற அதே இடங்களுக்கு மீண்டும் சென்று மக்களிடம் உரையாடியுள்ளார்.</p><p>இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>முடியவே முடியாது.. பொது சிவில் சட்டம் அமலுக்கு பீகாரில் போர்க்கொடி!</title><link>https://www.maalaimalar.com/news/national/absolutely-not-bihar-raises-the-banner-of-revolt-against-the-implementation-of-the-uniform-civil-code</link><comments>https://www.maalaimalar.com/news/national/absolutely-not-bihar-raises-the-banner-of-revolt-against-the-implementation-of-the-uniform-civil-code#comments</comments><guid isPermaLink="false">7d1a5c0e-742e-46da-82c4-ef91d6052360</guid><pubDate>Tue, 15 Sep 2026 02:02:25 +0000</pubDate><atom:updated>2026-09-15T02:02:25.094Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,Amit Shah,அமித் ஷா,Uniform Civil Code,பொது சிவில் சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/7lwq88k9/tn-40.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமித் ஷா, நிதிஷ் குமார் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா, நிதிஷ் குமார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/7lwq88k9/tn-40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் 2029ஆம் ஆண்டிற்குள் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருந்த நிலையில் பீகார் அதற்கு போர்க்கொடி தூக்கியுள்ளது.</p> <p>வெவ்வேறு மதங்களுக்கு உள்ள விதிவிலக்குகளை ரத்து செய்து திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் தத்தெடுப்பு தொடர்பான ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்துவதே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">பொது சிவில் சட்டம்</a> ஆகும்.</p> <h2>அமல்</h2><p>பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலமான உத்தரகாண்டில் ஏற்கனவே பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது.</p><p>குஜராத் , மத்தியப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெற்றுள்ளது</p><p>நேற்று முன் தினம் மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய <a href="https://www.maalaimalar.com/news/national/uniform-civil-code-to-be-implemented-in-all-21-nda-ruled-states-by-2029-amit-shah">அமித் ஷா</a>, 2029ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக, என்டிஏ ஆட்சியிலுள்ள 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.</p> <h2>போர்க்கொடி</h2><p>பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆட்சியில் உள்ளது. கடந்த ஏப்ரலில் மாநிலங்கவளை எம்.பி சீட்டுக்காக மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அங்கு தற்போது பாஜகவின் சாம்ராட் சவுத்ரி முதல்வராக உள்ளார். நிதிஷ் குமாரின் மகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.</p><p>பாஜகவை சேர்ந்தவர் முதல்வராக இருந்தாலும் மக்கள் செல்வாக்கு நிதிஷ் குமாருக்கே உள்ளது. பொது சிவில் சட்டம் விஷயத்தில் ஐக்கிய ஜனதா தளம் தொடக்கம் முதல் ஒரு விசித்திர நிலைப்பாட்டில் தான் உள்ளது.</p> <p>அதாவது, நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த ஐக்கிய ஜனதா தளம், பீகாரில் அதை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நிதிஷ் குமாரும் இதுகுறித்து தன் நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்திருந்தார்.</p><p>அமித் ஷாவின் கருத்துக்கு பின் பேசிய ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் ஷியாம் ரஜக், "இவ்விவகாரம் குறித்த எங்கள் கட்சியின் நிலைப்பாடு முன்பே எங்கள் தலைவரால் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதாவை எங்கள் கட்சி ஆதரித்தாலும், பீகாரில் அதைச் செயல்படுத்துவதற்கு நாங்கள் ஆதரவாக இல்லை என்று அவர் கூறியிருந்தார்," என்று தெரிவித்தார்.</p><p>ஐக்கிய ஜனதா தள செயல் தலைவர் சஞ்சய் ஜா, "பொது சிவில் சட்டம் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசவுள்ளோம்." என தெரிவித்துள்ளார்.</p> <h2>பிற என்டிஏ கட்சிகள் நிலைப்பாடு</h2><p>பீகாரில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம் விலாஸ் எல்ஜேபி கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் பேசுகையில், "நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை இரண்டிற்கும் எங்கள் கட்சி கட்டுப்பட்டது. </p><p>அரசியலமைப்பு சட்டமே பழங்குடியினருக்கு சிறப்பு விலக்குகளை வழங்கியுள்ளது. பொது சிவில் வரைவு வெளிப்படையாக வெளியிடப்பட்டு ஆலோசனைகள் நடந்த பிறகே முடிவை அறிவிப்போம்." என தெரிவித்துள்ளார்.</p> <p>அதேநேரம் ஆந்திராவில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்று ஆட்சியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் லவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு கூறுகையில், "தற்போது இதுகுறித்து எந்த விவாதமும் இல்லை. தேவை ஏற்படும் போது, அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்கப்படும்." என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: மக்களுக்கும், தொண்டர்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-on-rajasthan-civic-poll-results</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-on-rajasthan-civic-poll-results#comments</comments><guid isPermaLink="false">01ad718a-0e1b-45a5-9a8f-30028c8809d3</guid><pubDate>Mon, 14 Sep 2026 21:11:02 +0000</pubDate><atom:updated>2026-09-14T21:11:02.800Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,pm modi,உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்,பிரதமர் மோடி,ராஜஸ்தான்,civic poll results</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-21/fzdjthpk/PMModi0001.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-21/fzdjthpk/PMModi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக பெற்ற வெற்றியைப் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> திங்கள்கிழமை வரவேற்றார். இந்த வெற்றி, "பொய்யின் எதிரொலி"க்கு எதிரான உண்மையின் வெற்றிக்குச் சான்றாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். </p><p>ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி பா.ஜ.க. முன்னிலை பெற்றது; எதிர்க்கட்சியான <a href="https://www.maalaimalar.com/topic/congress">காங்கிரஸ்</a> 3,613 வார்டுகளில் வெற்றி பெற்ற நிலையில், பா.ஜ.க. 4,179 வார்டுகளில் வெற்றி பெற்றது. மேலும், மாநிலத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் நான்கில் பா.ஜ.க. தெளிவான பெரும்பான்மையை பெற்றது.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>"ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு பெரும் வெற்றியை தேடித்தந்த மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இது பொய்யின் எதிரொலிக்கு எதிரான உண்மையின் வெற்றிக்கு சான்றாகும்," என்று பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.</p><p>'டபுள்-என்ஜின்' (மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த) ஆட்சியின் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த கொள்கைகளுக்கு மக்களின் முழு ஆதரவு உள்ளது என்பதை, மக்கள் வழங்கிய இந்த தீர்ப்பு மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார்.</p><h2>தொண்டர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்:</h2><p>இந்த வெற்றியின் மூலம், மாநிலத்தை வளர்ச்சியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வதற்கும், ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதற்கும் பா.ஜ.க. கொண்டுள்ள உறுதிப்பாடு மேலும் வலுப்பெறும் என்று மோடி குறிப்பிட்டார்.</p><p>"இந்தத் தருணத்தில், வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும், அதேபோல கட்சியின் அர்ப்பணிப்புமிக்க மற்றும் கடின உழைப்பாளிகளான தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் கேரள முதல்வர் சதீசன் சந்திப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/keralam-cm-satheesan-meets-malaysia-pm-anwar-ibrahim</link><comments>https://www.maalaimalar.com/news/national/keralam-cm-satheesan-meets-malaysia-pm-anwar-ibrahim#comments</comments><guid isPermaLink="false">0efa3562-3f7e-467c-92ce-b9bdb80da783</guid><pubDate>Mon, 14 Sep 2026 20:49:47 +0000</pubDate><atom:updated>2026-09-14T20:49:47.015Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anwar Ibrahim,அன்வர் இப்ராஹிம்,கேரளம்,Keralam,சதீசன்,Satheesan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/p9l3clgm/Keralam-CM-Satheesan-and-Malaysia-PM.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் கேரள முதல்வர் சதீசன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/p9l3clgm/Keralam-CM-Satheesan-and-Malaysia-PM.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">மலேசிய</a> பிரதமர் அன்வர் இப்ராகிம் கேரளாவில் தங்கியிருந்தபோது, ​​திங்கள்கிழமை அன்று செலம்பிராவில் உள்ள ஒரு நல்வாழ்வு மையத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national">கேரள</a> முதல்வர் வி.டி. சதீசன் அவரை சந்தித்தார். </p><p>மாலை கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து மாலத்தீவுக்குப் புறப்படுவதற்கு முன்னதாக, கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் தொழிலதிபர்களும் பிரதமர் இப்ராகிமை சந்தித்தனர். </p><p>டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, ஞாயிற்றுக்கிழமை மாலை கேரளம் வந்தடைந்த இப்ராகிம், அந்த நல்வாழ்வு மையத்தில் தங்கியிருந்தார். </p><p>கேரள மக்கள் தொடர்புத் துறை (PRD) வெளியிட்ட தகவல்களின்படி, மலேசியப் பிரதமருடனான சந்திப்பிற்காக சதீசன் பிற்பகல் 2.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் அந்த மையத்திற்கு வந்து சேர்ந்தார். </p><p>மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட புகைப்படங்களின்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களான சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்கல் மற்றும் கேரள தொழில்துறை அமைச்சரான பி.கே. குன்ஹாலிகுட்டி ஆகியோரும் இச்சந்திப்பில் உடனிருந்தனர். </p><p>சதீசன், பாரம்பரிய கதகளி கலை வடிவத்தை மையமாக கொண்ட நினைவு பரிசை இப்ராகிமுக்கு வழங்கினார்.</p><h2>சமூக வலைத்தள பதிவு:</h2><p>பின்னர், சதீசனுடனான தனது சந்திப்பு குறித்த புகைப்படங்களை இப்ராகிம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.</p><p>"குறிப்பாகப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் மலேசியா-இந்தியா உறவை வலுப்படுத்துவதில் கேரளாவின் பெரும் ஆற்றல் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள இச்சந்திப்பு வாய்ப்பளித்தது," என்று அவர் கூறினார்.</p><p>"டிஜிட்டல் பொருளாதாரம், சுகாதாரம், சுற்றுலா, கல்வி மற்றும் உயர் மதிப்புள்ள துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் வாய்ப்புகள் குறித்து நாங்கள் ஆராய்ந்தோம். வணிக உறவுகள், மக்களிடையேயான பரிமாற்றங்கள் மற்றும் நெருக்கமான வரலாற்று மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் ஆகியவை வலுப்படுத்தப்பட வேண்டும்," என்றும் அவர் மேலும் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் வெற்றியை ஒட்டுமொத்த உலகமும் கண்டது: அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/jaishankar-says-brics-summit-a-success</link><comments>https://www.maalaimalar.com/news/national/jaishankar-says-brics-summit-a-success#comments</comments><guid isPermaLink="false">71f596ad-5e29-4969-a517-5e73ef41d390</guid><pubDate>Mon, 14 Sep 2026 17:09:15 +0000</pubDate><atom:updated>2026-09-14T17:09:15.547Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jaishankar,BRICS Summit,ஜெய்சங்கர்,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/cb1d7071/Jaishankar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jaishankar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/cb1d7071/Jaishankar.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மிகவும் பிரிவினைவாத சூழல் நிலவும் உலகில் <a href="https://www.maalaimalar.com/topic/brics">பிரிக்ஸ் உச்சிமாநாடு</a> நடைபெற்றது என்றும், அந்த சூழலிலும் தாங்கள் ஒருமித்த கருத்தை உருவாக்க முடிந்தது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்வு வெற்றிகரமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/jaishankar">ஜெய்சங்கர்</a>, "பிரிக்ஸ் உச்சிமாநாடு எதிரெதிர் கருத்துக்கள் நிறைந்த உலகில் நடைபெற்றது; அங்கு இரண்டு முக்கிய மோதல்கள், பெரிய பிளவுகள் மற்றும் மிகவும் வலுவான கருத்துகள் மற்றும் நலன்கள் இருந்தன. இந்த துருவமயமாக்கலுக்கு மத்தியிலும், நாங்கள் ஒருமித்த கருத்தை உருவாக்கினோம். </p><p>உற்றுநோக்கினால், அன்றைய தினத்தின் மிகக் கடினமான விவகாரம் மேற்கு ஆசிய மோதலாக இருந்தது. ஆனால், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அறிக்கையை எங்களால் வெளியிட முடிந்தது," என்று கூறினார். </p><h2>உச்சிமாநாட்டின் வெற்றியை உலகமே கண்டது:</h2><p>தொடர்ந்து பேசிய அவர், "அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, நீண்டகால புரிதல், உலகளாவிய வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளின் சீரான இயக்கம், எரிசக்தி விநியோகம், அத்துடன் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பை பாதுகாத்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் அறிக்கை அது.</p><p>வேறு சூழல்களில் ஒருவேளை சந்தித்திருக்காத தலைவர்கள் இந்த உச்சிமாநாட்டின் போது சந்தித்தனர். இது முக்கியமான விவகாரங்கள் குறித்த உலகளாவிய கலந்துரையாடலுக்கு பெரும் பங்களிப்பை அளித்தது. பிரிக்ஸ் (BRICS) இந்தியா உச்சிமாநாட்டின் வெற்றியை ஒட்டுமொத்த தேசமும், ஏன் உலகமே கூட கண்டது," என்றும் அவர் கூறினார்.</p><h2>நாடுகளை ஒன்றிணைக்கும் கருப்பொருள்:</h2><p>இந்த உச்சிமாநாட்டிற்கெனத் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருந்தது; அது 'குளோபல் சவுத்' (Global South - வளரும் நாடுகள்) பகுதிக்கான பொருளாதாரம், மேம்பாடு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது என்று அவர் வலியுறுத்தினார்.</p><p>"'குளோபல் சவுத்' நாடுகளுக்காக குரல் கொடுப்பது – அதுவே இதில் இருந்து வெளிப்பட்ட மிக வலுவான செய்தியாக இருந்தது. இதில் இரண்டு கருப்பொருள்கள் மற்றும் இரண்டு அமர்வுகள் இருந்தன... முதல் அமர்வு சீர்திருத்தம் குறித்தும், இரண்டாவது அமர்வு மீள்திறன் குறித்தும் அமைந்திருந்தன. இவை நாடுகளை ஒன்றிணைக்கும் கருப்பொருள்களாக இருந்தன. ஒருமித்த கருத்து உருவானதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்," என்று ஜெய்சங்கர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல்: 5 மாநகராட்சிகளை கைப்பற்றி பாஜக வெற்றி </title><link>https://www.maalaimalar.com/news/national/rajasthan-local-body-election-bjp-wins-5-municipalities</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajasthan-local-body-election-bjp-wins-5-municipalities#comments</comments><guid isPermaLink="false">b500a594-11fa-4824-81a1-96e588b24ece</guid><pubDate>Mon, 14 Sep 2026 16:47:07 +0000</pubDate><atom:updated>2026-09-14T16:47:07.356Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,உள்ளாட்சி தேர்தல்,Rajasthan,Local body election,ராஜஸ்தான்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/uuv6mqyu/BJP.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BJP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/uuv6mqyu/BJP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் மாநிலத்தில்  கடந்த 9 மற்றும் 11-ந் தேதிகளில் 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (10,167 வார்டுகள்) தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. </p><p>பாஜக முன்னிலை</p><p>மொத்தம் உள்ள 10 மாநகராட்சிகளில் பாஜக 6 மாநகராட்சிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் 3 மாநகராட்சிகளிலும் முன்னிலையில் இருந்தது.</p><p>ஜெய்ப்பூர், அஜ்மீர், ஆழ்வார், உதயப்பூர், கோட்டா, பில்வாரா ஆகிய மாநகராட்சிகளில் பாஜக முன்னிலை வகித்தது. தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள 150 வார்டுகளில் பாஜக- 95, காங்கிரஸ் 43 மற்றவை-12 இடங்களில் முன்னிலையில் இருந்தது.</p><p>காங்கிரஸ் கட்சி ஜோத்பூர், பாலி, பிகானீர் ஆகிய 3 மாநகராட்சிகளில் முன்னிலையில் இருந்தது. பரத்பூர் மாநகராட்சியில் சுயேட்சைகள் அதிக வார்டுகளில் முன்னிலையில் இருந்தன.</p><p>மொத்தம் உள்ள 65 வார்டுகளில் இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள்-36, பாஜக-20, காங்கிரஸ் -9 இடங்களில் முன்னிலையில் இருந்தன.</p><p>இதுவரையில் மாநகராட்சியில் 403 வார்டுகள் உள்பட மொத்தம் 4,049 வார்டுகளை பாஜ கைப்பற்றியுள்ளது. காங்கிரசை பொறுத்தவரையில் 300 மாநகராட்சி வார்டுகள் உள்பட மொத்தம் 3,456 வார்டுகளில் வென்றுள்ளது.</p><p>2,438 சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். ஜோத்பூர் மாநகராட்சியில் இரு கட்சிகளும் சரிசமமான இடங்களைப் பிடித்துள்ளன.</p><p>ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி அடைந்ததை அடுத்து, அம்மாநில முதலமைச்சர் பஜன்லால் சர்மா, பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.</p>]]></content:encoded></item><item><title>“இப்போது டிரம்பும் எங்கள் திட்டங்களை காப்பி அடிக்கிறார்” - கர்நாடக முதலமைச்சர் சிவகுமார்!</title><link>https://www.maalaimalar.com/news/national/now-trump-is-also-copying-our-schemes-karnataka-chief-minister-shivakumar</link><comments>https://www.maalaimalar.com/news/national/now-trump-is-also-copying-our-schemes-karnataka-chief-minister-shivakumar#comments</comments><guid isPermaLink="false">88c3fffb-9581-4200-b797-6fa0a84aa5a7</guid><pubDate>Mon, 14 Sep 2026 15:45:42 +0000</pubDate><atom:updated>2026-09-14T15:45:42.780Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Donald Trump,அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,CM Shivakumar,முதலமைச்சர் சிவகுமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/9bxnj5qe/New-Project-2026-09-14T210945.376.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “இப்போது டிரம்பும் எங்களைப் பார்த்து காப்பி அடிக்கிறார்” - கர்நாடக முதலமைச்சர் சிவகுமார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/9bxnj5qe/New-Project-2026-09-14T210945.376.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர்<a href="https://www.maalaimalar.com/news/national/india-said-no-to-the-press-conference-trump-initially-agreed-but-later-changed-his-tune-an-incident-at-the-g7-summit"> டொனால்ட் ட்ரம்ப்</a>, காங்கிரஸ் திட்டங்களை காப்பி அடிப்பதா கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். </p><p>பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்து பேசிய சிவகுமார், முதலில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்கள் தங்கள் திட்டங்களை பின்பற்றியதாகவும், தற்போது டிரம்பும் தங்களை பின்வற்றுவதாகவும் தெரிவித்தார். </p><p>“இதுதான் காங்கிரஸ் கட்சியின் பலம். இன்று ஒட்டுமொத்த உலகமும் நமது அரசியலமைப்பை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.” என தெரிவித்தார். </p><h2>டிரம்பின் அறிவிப்பு</h2><p>அமெரிக்காவில் குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டால், ஒவ்வொரு வயது வந்த அமெரிக்க குடிமகனுக்கும் $5,000 (சுமார் ரூ.4.79 லட்சம்) உதவித்தொகை வழங்கப்படும் என டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார்.</p><p>செப்டம்பர் 9 அன்று டெக்சாஸின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டுப் பேரணியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.</p><h2>சிவகுமாரின் ஒப்பீடு</h2><p>இந்த திட்டத்தை கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வரும் ‘ஐந்து கேரண்டி’ திட்டங்களுடன் ஒப்பிட்டு சிவகுமார் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விமானத்தில் இருந்து இறங்கி வந்து இந்திய ஓட்டுநரிடம் பேசிய அபுதாபி இளவரசர்- வைரலாகும் வீடியோ </title><link>https://www.maalaimalar.com/news/national/abu-dhabi-prince-thanks-indian-driver-at-airport</link><comments>https://www.maalaimalar.com/news/national/abu-dhabi-prince-thanks-indian-driver-at-airport#comments</comments><guid isPermaLink="false">f143d16e-9db3-47f0-96c9-69e4088ffa1a</guid><pubDate>Mon, 14 Sep 2026 14:40:18 +0000</pubDate><atom:updated>2026-09-14T14:40:18.634Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி விமான நிலையம்,Abu Dhabi,அபுதாபி,Delhi Airport,BRICS,பிரிக்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/1c17g1zl/Untitled-design-61.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Abu Dhabi Crown Prince thanks Indian driver]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/1c17g1zl/Untitled-design-61.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், மாநாட்டை முடித்துக் கொண்டு அபுதாபிக்கி கிளம்புவதற்கு முன்பு தனது கார் ஓட்டுநருக்கு நன்றி தெரிவிக்கும் காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.</p><p>தலைநகர் டெல்லியில் 18-வது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">பிரிக்ஸ் உச்சிமாநாடு</a> செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்</p><p>“மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மையை உருவாக்குதல்” என்ற கருப்பொருளின் கீழ் மாநாடு நடைபெற்றது.</p><h3><strong>பிரிக்ஸ் மாநாடு தலைவர்கள் பங்கேற்பு</strong></h3><p>இந்த மாநாட்டில் 13 உலகத் தலைவர்களும் 17 தூதுக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்த பிரிக்ஸ் மாநாட்டில் ஐக்கிய அரப அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கலந்துகொள்ளவில்லை. </p><p>இதன்காரணமாக அந்நாட்டின் பிரதிநிதியாக பட்டத்து இளவரசரான ஷேக் காலித் மாநாட்டில் கலந்துகொண்டார்.</p><p>இந்தப் பேச்சுவார்த்தைகளில் எரிசக்தி விநியோகம், வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, நிதி ஒத்துழைப்பு, கல்வி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் விவாதிக்கப்பட்டன.</p><h3><strong>மாநாட்டில் விவாதம்</strong></h3><p>மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில் நிலவும் பிராந்தியப் பாதுகாப்பு கவலைகள், இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் பிரிக்ஸ் கட்டமைப்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்கேற்பு ஆகியவை குறித்தும் இந்த விவாதங்களில் விவாதிக்கப்பட்டது.</p><p>உச்சிமாநாட்டை ஒட்டி நடைபெற்ற தனது நிகழ்ச்சிகளின்போது, பிரதமர் மோடி பல உலகத் தலைவர்களை முறைப்படியான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளுக்காகச் சந்தித்தார்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Crown Prince Sheikh Khalid bin Mohammed bin Zayed Al Nahyan<br>of <a href="https://x.com/hashtag/AbuDhabi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AbuDhabi</a>, Upon departing <a href="https://x.com/hashtag/India?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#India</a> and before boarding the plane, turns around and goes to bid farewell to the Indian driver who was with him <a href="https://t.co/oj5Fs6DRJ1">pic.twitter.com/oj5Fs6DRJ1</a></p>&mdash; Siddhant Mishra (@siddhantvm) <a href="https://x.com/siddhantvm/status/2099147010842718433?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h3>டிரைவரை பாராட்டிய இளவரசர்</h3><p>இந்த நிலையில் மாநாடு முடிந்து தனது நாட்டிற்கு திரும்புவதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு ஷேக் காலித் தனது காரிலிருந்து இறங்கி வந்தார். அப்போது அவர் புறப்படுவதற்கு தயாராக தனது விமானத்தில் ஏற முயன்றார்.</p><p>விமானம் புறப்படவிருந்த நேரத்தில், அதன் படிகளில் ஏறிய அவர், திடீரென விமானத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது அவர் திரும்பி, காரை நோக்கி நடந்து சென்று இந்திய ஓட்டுநருடன் கைகுலுக்கி, புறப்படுவதற்கு முன்பு அவரிடம் சில வார்த்தைகளை பேசினார்.</p><p>இதையடுத்து அவரது இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர், தனது ஓட்டுநரை நேரில் அங்கீகரிக்க நேரம் ஒதுக்கியதற்காக அவரை பயனர்கள் பாராட்டி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நாகலாந்தில் கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/nine-dead-after-toxic-hooch-in-nagaland</link><comments>https://www.maalaimalar.com/news/national/nine-dead-after-toxic-hooch-in-nagaland#comments</comments><guid isPermaLink="false">b102b441-9b0b-4bfd-b871-ee560e5fdb88</guid><pubDate>Mon, 14 Sep 2026 14:34:32 +0000</pubDate><atom:updated>2026-09-14T14:34:32.358Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மது,investigation,Nagaland,விஷச்சாராயம்,Spurious Liquor,நாகலாந்து</media:keywords><media:content height="360" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/uyja6tlu/kmbq765sonline-liquor625x30007August26.webp" width="640"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nagaland,spurious liquor]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/uyja6tlu/kmbq765sonline-liquor625x30007August26.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கள்ளச்சாராயம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamil-news-6-terrorists-of-rebel-group-killed-in-encounter">நாகலாந்தின்</a> துயென்சாங் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் போலியானது என சந்தேகிக்கப்படும் மதுபானங்களை அருந்தியதாக 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது பேரும் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>எச்சரிக்கை </h2><p>9 பேர் பலியானதை அடுத்து, அம்மாநில காவல்துறை அடையாளம் தெரியாத அல்லது அங்கீகரிக்கப்படாத மூலங்களிலிருந்து பெறப்பட்ட மதுபானங்களை தவிர்க்குமாறு மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2>இது குறித்து அம்மாநில அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது </h2><p>மரணங்களுக்கான உறுதியான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், பாதிக்கபட்டவர்கள் கலப்படமான <a href="https://www.maalaimalar.com/news/puducherry/10-people-fined-rs-45000-for-selling-liquor-on-the-black-market">மதுபானம்</a> அருந்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக  நாகலாந்து டிஜிபி  ரூபின் சர்மா தெரிவித்தார்.</p><p>தற்போது கிடைத்துள்ள தகவலின் படி நேரடியாகவும் , மறைமுகமாகவும் மது அருந்தியதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. அதற்கேற்ப விசாரணை நடைப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.</p><h2>விழிப்புணர்வு</h2><p>சந்தேகிக்கப்படும் மூலங்களிலிருந்து பெறப்பட்ட மதுபானத்தை அருந்துவதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக தகவல் பரப்புதல் மற்றும் பொது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-awareness-campaign-in-pallikaranai-chennai-on-wetland-protection">விழிப்புணர்வு</a> முயற்சிகளும் அம்மாநில காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>குஜராத்தில்  பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம் சாதனை: செயற்கை சூரியனை உருவாக்கும் இந்தியாவின் கனவு நனவாகிறது!</title><link>https://www.maalaimalar.com/news/national/plasma-research-institute-breakthrough-in-gujarat</link><comments>https://www.maalaimalar.com/news/national/plasma-research-institute-breakthrough-in-gujarat#comments</comments><guid isPermaLink="false">b340c265-30ad-48fc-bee6-2457d1dc1e2c</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:03:38 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:03:38.632Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,gujarat,Artificial Sun,செயற்கை சூரியன்,Nuclear Fusion,Plasma Research,Gyrotron,SST-1,பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/h3st248l/gujrat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ artificial sun]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/h3st248l/gujrat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அணுக்கரு இணைவு ஆற்றலை பெற வேண்டுமானால், பொருளின் நான்காவது நிலையான 'பிளாஸ்மா'வை மிக அதிக வெப்பநிலைக்கு உயர்த்த வேண்டும். </p><p>சூரியனில் ஆற்றல் உருவாகும் அதே அணுக்கரு இணைவு முறையை பயன்படுத்தி, பூமியிலேயே முடிவில்லாத தூய்மையான ஆற்றலை உருவாக்கும் "<a href="https://www.maalaimalar.com/news/world/brics-china-dominance-but-india-fastest-growth-last-five-years-report">செயற்கை சூரியன்</a>" திட்டத்தில் இந்தியா மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. குஜராத்தின் காந்திநகரில் உள்ள பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் இயங்கி வரும் 'எஸ்.எஸ்.டி-1' டோகாமாக் அணுக்கரு இணைவு உலையில் 82.6 ஜிகாஹெர்ட்ஸ், 400 கிலோவாட் திறன் கொண்ட புதிய 'கைரோட்ரான்' சாதனம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு இயக்கப்பட்டுள்ளது.</p><h2>பிளாஸ்<strong>மா வெப்பநி</strong>லை </h2><p>அணுக்கரு இணைவு ஆற்றலை பெற வேண்டுமானால், பொருளின் நான்காவது நிலையான 'பிளாஸ்மா'வை மிக அதிக வெப்பநிலைக்கு உயர்த்த வேண்டும். இந்திய விஞ்ஞானிகள் ஏற்கனவே 20 கோடி டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான பிளாஸ்மா வெப்பநிலையை எட்டி சாதனை படைத்துள்ளனர். இது சூரியனின் மையப்பகுதியை விட சுமார் 20 மடங்கு அதிக வெப்பமாகும்.</p><p>இருப்பினும், இந்த மிக அதிக வெப்பநிலையை கொண்ட பிளாஸ்மாவை நீண்ட நேரம் சீராகப் பராமரிப்பதே விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த சவாலை எதிர்கொள்ளவே 'கைரோட்ரான்' என்ற உயர் சக்தி மைக்ரோவேவ் சாதனம் நிறுவப்பட்டுள்ளது. இது பிளாஸ்மாவை அதிவேகமாகவும் சீராகவும் வெப்பப்படுத்த உதவும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.</p><h2>20 <strong>மீட்டர் ஒலிபரப்பு பாதை</strong> </h2><p>புதிய கைரோட்ரான் சாதனம் 20 மீட்டர் நீளமுள்ள அலைக்கற்றை கடத்தும் பாதை வழியாக எஸ்.எஸ்.டி-1 உலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. உயர் மின்னழுத்த சோதனைகள், குளிர்ந்த நீர் சுழற்சி அமைப்புகள் மற்றும் மின் இணைப்புகள் அனைத்தும் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு இந்த சாதனம் வெற்றிகரமாகச் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. </p><p>சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, 150 முதல் 300 கிலோவாட் மின் திறனை பயன்படுத்தி பிளாஸ்மாவைத் தயாரிக்கும் கட்டத்திலும் வெப்பப்படுத்தும் கட்டத்திலும் இக்கருவி சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. மேலும், காந்தப்புலத்தின் மாறுபட்ட அளவுகளிலும் இந்த அமைப்பு துல்லியமான முடிவுகளை வழங்கி சாதனை படைத்துள்ளது.</p><h2>இந்தியா<strong>வின் பங்களிப்</strong>பு</h2><p>இந்த அதிநவீனத் தொழில்நுட்பம் இந்தியா சொந்தமாக ஆற்றல் உற்பத்தியில் தற்சார்பு அடைய உதவுவதுடன், உலகளாவிய அணுக்கரு இணைவு ஆராய்ச்சியிலும் இந்தியாவின் இடத்தை உயர்த்தியுள்ளது. பிரான்ஸில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய 'ஈட்டர்' சர்வதேச செயற்கை சூரியன் திட்டத்திலும் இந்தியா முக்கியப் பங்கு வகித்து வருகிறது. குஜராத்தில் எட்டப்பட்டுள்ள இந்த முன்னேற்றம், எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் மாசற்ற, வரம்பற்ற மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பேபி ஜான் காலமானார்!</title><link>https://www.maalaimalar.com/news/national/marxist-communist-party-senior-leader-baby-john-dies</link><comments>https://www.maalaimalar.com/news/national/marxist-communist-party-senior-leader-baby-john-dies#comments</comments><guid isPermaLink="false">bf072f7d-36ca-4ae3-a928-5319517a22a0</guid><pubDate>Mon, 14 Sep 2026 08:54:53 +0000</pubDate><atom:updated>2026-09-14T08:54:53.941Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>marxist communist,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி,திருச்சூர்,baby john,பேபி ஜான்,கேரளம்,Keralam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ie4buzn5/Baby-John" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Baby John]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ie4buzn5/Baby-John?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்திய கம்யூனிஸ்ட் கட்சி</a> (மார்க்சிஸ்ட்) - சிபிஐ(எம்) அமைப்பின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலக உறுப்பினருமான பேபி ஜான் (வயது 74), உடல்நலக் குறைவு காரணமாகத் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். </p><p>அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தொழிலாள வர்க்க அமைப்புகளும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.</p><h2><strong>நீண்ட நாள் உடல்நலக் குறைவு</strong></h2><p>கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வு மற்றும் தீவிர உடல்நலப் பாதிப்புகள் காரணமாக, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருச்சூரில் </a>உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். </p><p>எனினும், நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து பேபி ஜான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>இடதுசாரி இயக்கத்தின் அச்சாணி</strong></h2><p>கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தைக்குளத்தில் 1952-ஆம் ஆண்டு பிறந்தவர் பேபி ஜான். பள்ளி ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 1969-ஆம் ஆண்டிலேயே இடதுசாரி மாணவர் இயக்கங்கள் வழியாகப் பொது வாழ்க்கைக்குள் நுழைந்தார். </p><p>பின்னர் 1971-இல் கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியின் லட்சியங்களுக்காக உழைக்க வேண்டி, 1991-ஆம் ஆண்டில் தனது ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று முழுநேர அரசியல்வாதியாக மாறினார்.</p><p>ஜூலை 2006-இல் சிபிஐ(எம்) கட்சியின் திருச்சூர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுப் பல ஆண்டுகள் திறம்பட பணியாற்றினார். </p><p>மேலும், இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து, தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்தவர்.</p><h2><strong>இன்று மாலை இறுதிச்சடங்கு</strong></h2><p>பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, அவரது உடல் இன்று காலை திருச்சூரில் உள்ள சிபிஐ(எம்) மாவட்டக் குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.</p><p>இதனைத் தொடர்ந்து, அவரது உடல் இன்று மாலை சாவக்காடு பொது மயானத்தில் இறுதி சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1.5 கோடி.. நம்பி ஏமாந்த ஓனர்.. வீட்டில் கைவரிசை காட்டிய சமையல்கார ஜோடி </title><link>https://www.maalaimalar.com/news/national/12-years-cook-couple-arrested-rs-1-5-crore-jewellery-theft-bihar</link><comments>https://www.maalaimalar.com/news/national/12-years-cook-couple-arrested-rs-1-5-crore-jewellery-theft-bihar#comments</comments><guid isPermaLink="false">d8de6f29-e3d7-4c06-8256-d15fbcc710ec</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:36:08 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:36:08.737Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,gold theft,நகை திருட்டு,லக்னோ,lucknow</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/h8b6r3k8/Untitled-design-58.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Cook Couple Jewellery Heist]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/h8b6r3k8/Untitled-design-58.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் உள்ள ஒருவரின் வீட்டில் இருந்து சுமார் 50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை திருடப்பட்ட வழக்கில், அந்த வீட்டில் வேலை செய்து வந்த விபா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h3><strong>சமையல் வேலை</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகார்</a> பேபர் மில் காலனியில் உள்ள ஷாலினி மிஷ்ரா என்பவரின் வீட்டில் ஜிதேந்திர பண்டிட் மற்றும் அவரின் மனைவி விபா தேவி ஆகியோர் 12 ஆண்டுகளாக சமையல் வேலை பார்த்து வந்தனர்.    </p><p>இதையடுத்து அந்த தம்பதியினர் வீட்டு உரிமையாளர்களிடம் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் உள்ள படுக்கை அறை வரையிலும் செல்லும் அதிகாரம் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது.</p><h3><strong>நகை திருட்டு</strong></h3><p>இதனை தவறாக பயன்படுத்தி கொண்ட அந்த தம்பதிகள் தங்களது சொந்த ஊரான லக்னோவிற்கு செல்லும் போது, உரிமையாளரின் வீட்டில் இருந்த மதிப்புமிக்க பொருட்களை திருடி சென்றுள்ளனர்.</p><p>திருடிச் சென்ற பொருட்களை விற்று, அதன்மூலம் கிடைத்த பணத்தை தங்கள் வங்கிகளில் வரவு வைத்துள்ளனர்.</p><p>இதையடுத்து சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் காணாமல் போனதாக ஆகஸ்ட் 12 அன்று வீட்டின் உரிமையாளர் மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.</p><p>மேலும் வீட்டின் உரிமையாளர் சமையல் வேலை பார்த்து வந்த ஜிதேந்திரா மற்றும் விபா ஆகியோர்களை குற்றவாளிகளாக குறிப்பிட்டனர்.</p><h3><strong>போலீசார் வழக்கு பதிவு</strong></h3><p>இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், பீகாரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த விபாவை கைது செய்தனர். அப்போது அவரிடம் சுமார் 55.4 கிராம் எடையுள்ள இரண்டு தங்க வளையல்களும், ரூ.25,000 ரொக்கமும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>மேலும் அந்த நகைகளும் ரொக்கமும் திருடப்பட்ட பொருட்களுடன் தொடர்புடையவை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, தலைமறைவாகியுள்ள விபாவின் கணவரை புலனாய்வு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title> ரூ.5600 கோடி சைபர் மோசடி.. 18 மாநிலங்களில் கைவரிசை காட்டிய நெட்வொர்க் அம்பலம்  
</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-5600-crore-cyber-fraud-network-that-operated-across-18-states-exposed</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-5600-crore-cyber-fraud-network-that-operated-across-18-states-exposed#comments</comments><guid isPermaLink="false">b9077c81-0568-459d-b009-20aa118e6d73</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:14:56 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:14:56.628Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சைபர் மோசடி,Online Fraud,மோசடி கும்பல்,Fraud Gang,இணையவழி மோசடி,Cyber ​​Fraud</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ty93il53/tn-36.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சைபர் மோசடி]]></media:title><media:description type="html"><![CDATA[ சைபர் மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ty93il53/tn-36.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>18 மாநிலங்களில் ரூ.5600 கோடிக்கு நடந்த இணையவழி மோசடி கும்பல் உத்தரப் பிரதேசத்தில் பிடிபட்டுள்ளது.</p> <p>முகமது ஷதாப் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உத்தரப் பிரதேச காவல்துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">மோசடி </a>வழக்குப் பதிவு செய்தது. </p><p>ஷாஜேப் வாரிஸ், சல்மான் மற்றும் ஆரிப் ஆகியோர் தன்னிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஷதாப் குற்றம் சாட்டினார்.</p><p>இதன் பின்னர் நடந்த விசாரணையில் ஷாஜேப் தலைமையில் இயங்கி வந்த மோசடி கும்பல் குறித்த திடுக்கிடும் தகவல்களை  போலீசார் கண்டறிந்துள்ளனர். </p> <h2>வங்கிக் கணக்குகள்</h2><p>காவல்துறை கிட்டத்தட்ட 10,000 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், இந்தக் கும்பலுக்கு 14 வங்கிகளில் 77 கணக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. அவற்றை முடக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><p>காவல்துறை ஆணையர் ரகுபீர் லால் கூற்றுப்படி, இந்த கணக்குகளில் சுமார் 5,600 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.</p><p>சில கணக்குகளிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, ஹவாலா மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூன்று கணக்குகளில் 200 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும், ஆறு கணக்குகளில் 100 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும், எட்டு கணக்குகளில் 50 முதல் 100 கோடி ரூபாய்க்குள்ளும், 41 கணக்குகளில் 1 லட்சம் முதல் 50 கோடி ரூபாய்க்குள்ளும் பணம் இருந்தது.</p> <h2>வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு</h2><p>இந்த மோசடியில் சில வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.</p><p>ஒரு பெரிய அரசு வங்கியின் சர்வேயர் ஒருவரின் பெயர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர், போலி ஆவணங்களின் அடிப்படையில் கும்பல் உறுப்பினர் ஆரிப்க்கு ரூ.1.75 கோடி கடன் வழங்கியுள்ளார். அதற்கு ஈடாக, அவர் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார்.  </p> <h2>இணையவழி மோசடி</h2><p>முன்னதாக, இரண்டு பெரிய இணையவழி மோசடி வழக்குகளில் வங்கி ஊழியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.</p><p>இந்தக் கும்பல் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றியுள்ளது.</p><p>தேசிய இணையக் குற்ற புகார் பதிவு இணையதளத்தில் (NCRP) பெறப்பட்ட 86 புகார்களிலும் ஷாஜேபின் பெயர் இடம்பெற்றிருந்தது. அவர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது கூட்டாளி சல்மானும் பிடிபட்டார்.</p><p>அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 14 இணையவழி மோசடியாளர்களின் பெயர்கள் தெரியவந்தன. இவர்களில் இருவர் சிறையில் உள்ளனர்.</p> <h2>மோசடி வலையமைப்பு </h2><p>இந்தக் கும்பலின் உறுப்பினர்களில் ஒருவரான இக்லக், ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரின் மகன் ஆவார்.</p><p>அவரும் அவரது கூட்டாளியான ஆரிபும் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இக்லாக் கான்பூரில் ஒரு ஹோட்டலை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து இந்த மோசடி வலையமைப்பை இயக்கி வந்துள்ளார்.</p><p>இந்தக் காலகட்டத்தில், அவர் ஷாஜேபுடன் தொடர்பு கொண்டார். இக்லாக், கடன் வாங்கித் தருவதாகக் கூறி மக்களிடமிருந்து ஆவணங்களைப் பெற்று, போலி நிறுவனங்களைப் பதிவுசெய்து, வங்கிக் கணக்குகளை திறப்பார்.</p> <p>மோசடி செய்யப்பட்ட நிதிகள் இந்தக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டன. அவருடைய ஐந்து கணக்குகளில் சுமார் ரூ.41 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன. இக்லாக்கின் மாமனாரும் ஒரு உதவி ஆய்வாளர் ஆவார்.</p><p>தனது மாமனாரின் உதவியுடன், பழைய இரும்பு வியாபாரிகள், தோல் பதனிடும் ஆலை நடத்துபவர்கள் மற்றும் இறைச்சிக் கூட நிறுவனங்களுக்கு சொந்தமான கணக்குகளைப் பெற்று, மோசடி செய்யப்பட்ட நிதியை அவர்களுக்கு மாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.</p><p>2024ஆம் ஆண்டில் எட்டு நாட்களுக்குள் இக்லாக்கின் பேங்க் ஆப் பரோடா கணக்கிலிருந்து ரூ.180 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. அவரையும் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>மணிப்பூரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை.. குண்டடிபட்ட 6 வயது சிறுவன் கவலைக்கிடம்</title><link>https://www.maalaimalar.com/news/national/tension-returns-to-manipur-4-people-including-2-women-shot-dead</link><comments>https://www.maalaimalar.com/news/national/tension-returns-to-manipur-4-people-including-2-women-shot-dead#comments</comments><guid isPermaLink="false">ae6e15ce-6681-4ce7-8595-e5a055590ce4</guid><pubDate>Mon, 14 Sep 2026 05:55:04 +0000</pubDate><atom:updated>2026-09-14T05:55:04.406Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,shooting,manipur,மணிப்பூர்,Manipur violence,மணிப்பூர் வன்முறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ijs0nj6a/tn-34.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுட்டுக் கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ சுட்டுக் கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ijs0nj6a/tn-34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மணிப்பூரில் ஒரே நாளில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>மணிப்பூர் மாநிலத்தின் தமேங்லாங் மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 13) நடைபெற்ற இரண்டு வெவ்வேறான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் குக்கி சமூகத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். </p><h2>முதல் சம்பவம்</h2><p>நேற்று காலை 5:30 மணியளவில் கைமாய் காவல் எல்லைக்குட்பட்ட டோலன் கிராமத்தில் ஆயுதமேந்திய கும்பல் தாக்குதல் நடத்தியது.</p><p>இத்தாக்குதலில் லிங்ஜங் சிங்சிட் (46) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் சேனே சிங்சிட் மற்றும் அவர்களின் 6 வயது மகன் ஆகியோர் குண்டடிபட்டு பலத்த காயமடைந்தனர்.</p><p>மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கணவர் சேனே உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் உள்ள 6 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p> <h2>இரண்டாவது சம்பவம்</h2><p>முதல் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, பிற்பகல் 3 மணியளவில் நுங்பா காவல் எல்லைக்குட்பட்ட லாங்பி கிராமத்தில் இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.</p><p>இத்தாக்குதலில் ஜிலி சிங்சன் மற்றும் ரியோல் கங்டே என இருவர் கொல்லப்பட்டதாக 'வெஸ்டர்ன் வில்லேஜ் வாலண்டியர்' என்ற குக்கி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இத்தாக்குதலில் நாகா கிளர்ச்சி அமைப்புகளுக்குத் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.</p><p>காவல் நிலையத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள இக்கிராமத்திற்குச் செல்லும் சாலைகள் மோசமாக இருந்ததால், காவல்துறையினரால் நேற்று சம்பவ இடத்தை உடனடியாக அடைய முடியவில்லை. எனவே இன்று ஆய்வு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> <h2>கருப்பு தினம்</h2><p>1990களின் நாகா-குக்கி மோதலின் போது உயிரிழந்த 1,000 க்கும் மேற்பட்டவர்களின் நினைவாகக் குக்கி சமூகத்தினர் நேற்று (செப்டம்பர் 13ஆம் தேதியை) 'கருப்பு தினமாக' அனுசரித்தபோது இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>உத்தர பிரதேச தேர்தலில் புதிய வியூகம்: நீல நிற ஆடை கலாச்சாரத்தை கையில் எடுத்த அகிலேஷ் யாதவ்!</title><link>https://www.maalaimalar.com/news/national/new-strategy-in-uttar-pradesh-elections-akhilesh-yadav-embraces-blue-attire-culture</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-strategy-in-uttar-pradesh-elections-akhilesh-yadav-embraces-blue-attire-culture#comments</comments><guid isPermaLink="false">6f392f66-b91f-4e5e-8bf8-4ca387b7ea3b</guid><pubDate>Mon, 14 Sep 2026 04:32:38 +0000</pubDate><atom:updated>2026-09-14T04:32:38.136Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தர பிரதேசம்,அகிலேஷ் யாதவ்,Akhilesh Yadav,பகுஜன் சமாஜ்,Uttar Pradesh elections,Samajwadi Chatra Sabha</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/vgnck5ap/akil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Akhilesh Yadav ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/vgnck5ap/akil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த மக்களவைத் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை உள்ளடக்கிய ‘பிடிஏ’ என்ற முழக்கத்தின் மூலம் சமாஜ்வாதி கட்சி பெரும் வெற்றியைக் கண்டது. </p><p>உத்தர பிரதேச மாநிலத்தில் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். கட்சியின் மாணவர் அமைப்பான ‘<a href="https://www.maalaimalar.com/news/national/mamata-not-contesting-by-election-trinamool-congress-announces-candidates-what-does-the-dissident-faction-say">சமாஜ்வாதி சத்ர சபா</a>’ உறுப்பினர்களுக்கு நீல நிற டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் உடைகளுடன் கூடிய புதிய சீருடையை அவர் முறைப்படி அறிமுகப்படுத்தியுள்ளார். சிவப்புக் தொப்பியுடன் கூடிய இந்த புதிய தோற்றம், வழக்கமான சிவப்பு மற்றும் பச்சை நிற அரசியல் அடையாளத்திலிருந்து விலகி ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.</p><h2>நீல நிற <strong>அரசியல்</strong></h2><p>நீல நிறம் என்பது இந்தியாவின் அரசியல் களத்தில் அம்பேத்கர் கொள்கைகள் மற்றும் பகுஜன் சமாஜ் இயக்கத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் பிரதான நிறமாக நீலம் இருந்துவரும் நிலையில், அந்த வண்ணத்தை சமாஜ்வாதி கட்சி கையில் எடுத்திருப்பது பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது. </p><p>இதுகுறித்து பேசிய அகிலேஷ் யாதவ், நீல நிறம் என்பது வெறுமனே ஒரு வண்ணம் அல்ல, அது இந்திய அரசியல் சாசனம், ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை குறிக்கும் அடையாளம் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் தொழிலாளர்களின் வரலாற்றுப் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் ஜீன்ஸ் உடை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.</p><h2>அகிலேஷ் திட்டமி<strong>டும் ‘பிடிஏ’ வியூ</strong>கம்</h2><p>கடந்த மக்களவைத் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை உள்ளடக்கிய ‘பிடிஏ’ என்ற முழக்கத்தின் மூலம் சமாஜ்வாதி கட்சி பெரும் வெற்றியைக் கண்டது. அதே கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மாயாவதியின் ஆதரவு தளமாக விளங்கும் தலித் இளைஞர்களைத் தன் பக்கம் ஈர்க்க அகிலேஷ் யாதவ் இந்த புதிய உத்தியைக் கையாள்கிறார். பகுஜன் கொள்கைகளைப் பேசுவதன் மூலமும் தலித் மக்களின் அடையாளங்களைப் பிரதிபலிப்பதன் மூலமும், உத்தரப் பிரதேசத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே தலைவராக உருவெடுக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக களமிறங்கியுள்ளார்.</p><p>பாரம்பரியமான கதர் ஆடைகளுக்குப் பதிலாக நவீன டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் உடைகளைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இன்றைய Gen Z இளைஞர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்த சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் இரு வார மாணவர் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளனர். பாரதிய ஜனதா கட்சிக்கு வலுவான போட்டியைக் கொடுக்கவும், 2027 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கவும் அகிலேஷ் யாதவ் வகுத்து வரும் இந்த புதிய வண்ண அரசியல் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் மம்தா போட்டியில்லை.. வேட்பாளர்களை அறிவித்த திரிணாமுல் காங்கிரஸ் - அதிருப்தி பிரிவு என்ன சொல்கிறது?</title><link>https://www.maalaimalar.com/news/national/mamata-not-contesting-by-election-trinamool-congress-announces-candidates-what-does-the-dissident-faction-say</link><comments>https://www.maalaimalar.com/news/national/mamata-not-contesting-by-election-trinamool-congress-announces-candidates-what-does-the-dissident-faction-say#comments</comments><guid isPermaLink="false">89806f9d-9378-4dbe-98fe-ff0712d7e25b</guid><pubDate>Mon, 14 Sep 2026 04:02:07 +0000</pubDate><atom:updated>2026-09-14T04:02:07.945Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,மேற்கு வங்கம்,trinamool congress,west bengal,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/fm0avnyo/tn-30.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மம்தா]]></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/fm0avnyo/tn-30.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில் உள்ள நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை முன்னாள் முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.</p><p>நந்திகிராம் தொகுதியில் சஞ்சிதா பிரதானையும், ரெஜிநகர் தொகுதியில் ரபியுல் ஆலம் சௌத்ரியையும் அக்கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. </p><p>இரு தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அக்டோபர் 9-ஆம் தேதி  வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.</p><p>இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல்களும் மேற்கு வங்க அரசியலில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF">மம்தா பானர்ஜி </a> சட்டமன்ற தேர்தலில்<a href="https://www.maalaimalar.com/topic/suvendu-adhikari"> சுவேந்து அதிகாரி</a>யிடம் பவானிப்பூர் தொகுதியில் தோற்றார். எனவே நந்திகிராம் இடைத்தேர்தலில் மம்தா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அத்தொகுதிக்கு சஞ்சிதா பிரதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். </p> <h2>நந்திகிராம் - ரெஜிநகர்</h2><p>முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தேர்தலில் பவானிபூர், நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார்.</p><p>அவர் பவானிபூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்ததால் நந்திகிராமில் இடைத்தேர்தல் நடக்கிறது.</p><p>ரெஜிநகர் மற்றும் நவதா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ஆம் ஜனதா உன்னயன் கட்சியின் நிறுவனர் ஹுமாயூன் கபீர், நவதா தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டதால் ரெஜிநகர் தொகுதி காலியானது.</p>  <h2>அதிருப்தி பிரிவினர் நிலைப்பாடு</h2><p>மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 207 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்கள் மட்டுமே வென்றது. தோல்வியால் 80 இல் 50க்கும் மேற்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிரிந்து ரிதர்ப்பா பானர்ஜி தலைமையில் தனி அணியாக செயல்படுகின்றனர். அவரிடமே பெரும்பான்மை உள்ளதால் ரிதர்ப்பாவை மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் அங்கீகரித்தார்.</p><p>மம்தா தலைமையிலான பிரிவு தாங்களே கட்சி என உறுதியாக உள்ளது. கிளர்ச்சி அணி, மம்தாவே தங்கள் தலைவி என்றும் கட்சிக்குள் இருக்கும் ஒரு சிலரின் ஆதிக்கத்தை எதிர்ப்பவதாகவும் முன்னரே தெரிவித்திருந்தது. மேலும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தினால் தாங்கள் வேட்பாளர்களை இடைத்தேர்தலில் நிறுத்த மாட்டோம் என கிளர்ச்சி அணி கூறியிருக்கிறது.</p> <h2>இடைத்தேர்தல்</h2><p>மேற்கு வங்காளத்துடன் சேர்த்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள தட்டஞ்சாவடி தொகுதியிலும் ஒரே கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும்.</p><p>பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோய் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அசாமின் நாகோன் தொகுதி காலியானது. எனவே நாகோன் மக்களவைத் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.</p><p>அனைத்துத் தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும்.</p>]]></content:encoded></item><item><title>2029-க்குள் என்டிஏ ஆளும்  21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் - அமித் ஷா 
</title><link>https://www.maalaimalar.com/news/national/uniform-civil-code-to-be-implemented-in-all-21-nda-ruled-states-by-2029-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/national/uniform-civil-code-to-be-implemented-in-all-21-nda-ruled-states-by-2029-amit-shah#comments</comments><guid isPermaLink="false">1f9ee204-7308-460e-9d6d-e508fc6a9d71</guid><pubDate>Mon, 14 Sep 2026 01:58:11 +0000</pubDate><atom:updated>2026-09-14T01:58:11.943Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Amit Shah,அமித் ஷா,பொது சிவில் சட்டம்,UCC</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/lz3jmr7i/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமித் ஷா ]]></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/lz3jmr7i/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் 2029ஆம் ஆண்டிற்குள் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.</p> <p>மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/amit-shah">அமித் ஷா</a> இதை தெரிவித்தார். </p><h2>பொது சிவில் சட்டம்</h2><p>வெவ்வேறு மதங்களுக்கு உள்ள விதிவிலக்குகளை ரத்து செய்து திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் தத்தெடுப்பு தொடர்பான ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்துவதே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">பொது சிவில் சட்டம்</a> ஆகும்.</p><p>பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலமான உத்தரகாண்டில் ஏற்கனவே பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது.</p><p>குஜராத் , மத்தியப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெற்றுள்ளது.</p><h2></h2><p>கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அவற்றை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.</p><p>இந்நிலையில் 2029ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக, என்டிஏ ஆட்சியிலுள்ள 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமித் ஷா மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.</p> <h2>பொருளாதார வளர்ச்சி</h2><p>தொடர்ந்து பேசிய அமித் ஷா, "2014க்கு முன்னிருந்த ஊழல், வாரிசுஅரசியல் மற்றும்பலவீனமான பொருளாதார நிலையிலிருந்து விடுபட்டு, தற்போது இந்தியா உலகின் முதல் 5 பொருளாதார நாடுகளுக்குள் இணைந்துள்ளது.</p><p>முதல் காலாண்டில் 7.8% ஜிடிபி வளர்ச்சியைப் பதிவு செய்து, சர்வதேச அளவில் முன்னணி பொருளாதார நாடுகளை இந்தியா வழிநடத்துகிறது.</p> <p>'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் எதிரிகளின் எல்லைக்குள் சென்று தாக்குவதன் மூலம் இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.</p><p>நாட்டில் உள்ள சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதில் அரசு உறுதியாக உள்ளது." என்று தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/national/amit-shah-greets-indian-womens-cricket-team-for-winning-asia-cup</link><comments>https://www.maalaimalar.com/news/national/amit-shah-greets-indian-womens-cricket-team-for-winning-asia-cup#comments</comments><guid isPermaLink="false">b93af372-d369-46f6-9811-de5b0c5e7b2f</guid><pubDate>Sun, 13 Sep 2026 23:29:49 +0000</pubDate><atom:updated>2026-09-13T23:29:49.600Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,Women&apos;s Asia Cup,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/hw6254ko/Amit-Shah-and-IND-W-Team.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amit Shah and IND W Team]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/hw6254ko/Amit-Shah-and-IND-W-Team.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியைத் திறம்பட வீழ்த்தி, 8-ஆவது முறையாக <a href="https://www.maalaimalar.com/topic/womens-asia-cup">மகளிர் ஆசியக் கோப்பைை</a> வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்தார்.</p><h2>எக்ஸ் தளப் பதிவு:</h2><p>இது குறித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பதிவில் மத்திய அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/amit-shah">அமித் ஷா</a> பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "ஆசிய கிரிக்கெட்டில் இந்தியா மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. 8-ஆவது மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற நமது வெற்றியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். </p><p>இந்தத் தொடர் முழுவதும் உங்கள் அசைக்க முடியாத ஆதிக்கத்தால் தேசத்தையே உற்சாகப்படுத்தியதோடு, லட்சக்கணக்கானோருக்கு உத்வேகம் அளிக்கும் பாதையையும் அமைத்துள்ளீர்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கோப்பையைக் கைப்பற்றியது.</p><h2>இந்திய அணி திட்டவட்டம்:</h2><p>இதைத் தொடர்ந்து இலங்கையை வென்ற இந்திய அணி, ஆசிய மகளிர் கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து பெற்றுக்கொள்ள மறுத்தது. இந்திய ஆடவர் அணியிடம் ஆசிய கோப்பையை ஒப்படைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மறுத்த ஓராண்டுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>இலங்கைக்கு எதிரான தனது இறுதி வெற்றியை இந்தியா உறுதி செய்துகொண்டிருந்தபோது, ​​ஆட்டத்தின் பிற்பகுதியில் மொஹ்சின் நக்வி பிரமுகர்களுடன் அமர்ந்திருந்ததை கேமராக்கள் பதிவு செய்தன. ஆட்டம் முடிந்து இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, ​​அவர் பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா, செயலாளர் தேவாஜித் சைகியா மற்றும் பிறருக்கு அருகில் அமர்ந்திருப்பது காணப்பட்டது.</p><p>மேடையில் இருந்த நக்வி, இரண்டாம் இடத்திற்கான காசோலையை இலங்கை கேப்டன் சமரி அட்டப்பட்டுவிடம் வழங்கினார். அட்டப்பட்டு, ஃபார்வெஸ் மஹரூஃபுடன் பேசிய உடனேயே, பரிசளிப்பு விழா முடிவுக்கு வந்தது.</p>]]></content:encoded></item><item><title>இந்து மத குரு காலில் விழுந்த ஈரான் அதிபர்?.. தூதரகம் தந்த விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/did-the-iranian-president-fall-at-the-feet-of-a-hindu-religious-leader-embassy-offers-an-explanation</link><comments>https://www.maalaimalar.com/news/national/did-the-iranian-president-fall-at-the-feet-of-a-hindu-religious-leader-embassy-offers-an-explanation#comments</comments><guid isPermaLink="false">0cc87104-2126-45d3-9ee2-07d2b79a67e2</guid><pubDate>Sun, 13 Sep 2026 16:12:44 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:12:44.665Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைரல் வீடியோ,ஈரான்,Iran,BRICS Summit,viral video,பிரிக்ஸ் உச்சிமாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/n5eagee1/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வைரல் வீடியோ ]]></media:title><media:description type="html"><![CDATA[ வைரல் வீடியோ ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/n5eagee1/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு இடையே நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், இந்து மத தலைவரின் காலில் விழுந்து வணங்கியதாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.</p><p>பிரிக்ஸ் மாநாட்டின் இடையே டெல்லியில் உள்ள ஓபராய் ஹோட்டலில் ஈரான் தூதரகம் சார்பில் தொழிலதிபர்கள், மதத் தலைவர்கள் மற்றும் அறிஞர்களுக்கான சிறப்புச் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/i-dont-care-trump-on-the-talks-between-the-president-of-iran-and-the-prince-of-the-united-arab-emirates-at-the-brics-conference">ஈரான் அதிபர்</a> மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி பங்கேற்ற நிகழ்ச்சியில் பல்வேறு மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p><h2>வைரல் வீடியோ</h2><p>இதில் பங்கேற்ற உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இந்து சமய தலைவரான சுவாமி சதீஷாச்சார்யாவுடன் ஈரான் அதிபர் பெசெஷ்கியான் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரெனக் கீழே குனிவது போன்ற வீடியோ வெளியானது.</p><p>ஈரான் அதிபர், இந்து மத தலைவரின் காலைத் தொட்டு ஆசி பெற்றார் எனக் கூறி இந்த வீடியோ வேகமாகப் பரப்பப்பட்டது.</p><p>ஆனால் இதுகுறித்து ஈரான் தூதரக வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன. அதிபர், தன்னிடம் கொடுக்கப்பட்ட கடிதம் கீழே விழுந்ததால் அதை எடுக்கவே குனித்ததாகவும், அது தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பப்டுவதாக விளக்கம் அளித்துள்ளது.  </p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Complete video, As always ziozist in Pak will do everything to frame <a href="https://t.co/vmy7PYvHXV">pic.twitter.com/vmy7PYvHXV</a></p>&mdash; Aizaz dinho (@Aizazdinho) <a href="https://x.com/Aizazdinho/status/2099054990275014796?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபர்</h2><p>மறுபுறம் பிரிக்ஸ் மாநாட்டின் இடையே அபுதாபி இளவரசரை சந்தித்த பிறகு பேசிய அதிபர் பெசெஷ்கியான், "ஈரானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற அண்டை வளைகுடா நாடுகளுடன் எந்தவிதப் பிரச்சனையோ அல்லது பகையோ இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.</p><p>மேலும், "ஈரான் வளைகுடா நாடுகளுக்கு எதிரானது அல்ல; மாறாக அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு எதிரானது மட்டுமே. அமெரிக்கா இங்கு வந்து அமைத்துள்ள தளங்களைப் பயன்படுத்தித் தான் எங்களது தலைவர்கள், தளபதிகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. அதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்" என பெசெஷ்கியான் கூறினார்.</p><h2>புதுடெல்லி பிரகடனம்</h2><p>பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாளான நேற்று, பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் ஒன்றிணைந்து வெளியிட்ட புதுடெல்லி பிரகடனத்தில், மத்திய கிழக்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றம் குறித்துக் கடும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வளைகுடாப் பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்தத் தூதரகப் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளையே முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என பிரிக்ஸ் கூட்டமைப்பு அந்த பிரகடனத்தில் கோரியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>என் நிலத்தை அபகரிச்சுட்டாங்க.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உதவி கோரிய பள்ளித் தோழர் - உடனே தொடங்கிய ஆக்ஷன்</title><link>https://www.maalaimalar.com/news/national/school-friend-meets-pm-modi-in-person-to-seek-help-immediate-action-initiated</link><comments>https://www.maalaimalar.com/news/national/school-friend-meets-pm-modi-in-person-to-seek-help-immediate-action-initiated#comments</comments><guid isPermaLink="false">f0de3a05-046e-4524-a3b1-031281ae0297</guid><pubDate>Sun, 13 Sep 2026 14:14:46 +0000</pubDate><atom:updated>2026-09-13T14:14:46.825Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,குஜராத்,gujarat,நில அபகரிப்பு,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/64nn40z9/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி, அஸ்கரலி வோஹ்ரா ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி, அஸ்கரலி வோஹ்ரா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/64nn40z9/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனக்கு சொந்தமான நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியின் பள்ளித் தோழர் அவரை நேரில் சந்தித்து உதவி கோரியது தெரியவந்துள்ளது.</p> <p>குஜராத் மாநிலம் வட்நகரில் உள்ள பி.என். உயர்நிலைப் பள்ளியில் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-warns-against-weaponisation-of-critical-minerals">பிரதமர் மோடியுடன்</a> பயின்ற பள்ளித் தோழர் அஸ்கரலி வோஹ்ரா (81).</p><p>இவர் தனக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.</p> <h2>ஆக்கிரமிப்பு</h2><p>மும்பை நகரின் பயந்தர் கிழக்கு நவகார் பகுதியில் அமைந்துள்ள சுமார் 2,810 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை அஸ்கரலி வோஹ்ரா கடந்த 1989ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாகப் பதிவு செய்து வாங்கியுள்ளார்.</p><p>கடந்த 2011ஆம் ஆண்டு தனது நிலம் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>தனக்கு தெரியாமல் நிலத்தை பிரித்து, 'ஸ்வயம் பில்டர்ஸ்' மற்றும் 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' ஆகிய இரு கட்டுமான நிறுவனங்களின் பெயருக்கு மாற்றப்பட்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த நில ஆக்கிரமிப்பில் 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' நிறுவனத்துடன் தொடர்புள்ள பாஜக எம்.எல்.ஏ நரேந்திர மேத்தாவுக்கு தொடர்பு இருப்பதாக வோஹ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.</p> <h2>பிரதமருடன் சந்திப்பு</h2><p>பல ஆண்டுகளாக அரசுத் அதிகாரிகளிடமும் காவல் நிலையங்களிலும் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால், கடந்த செப்டம்பர் 8 அன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த 81 வயதான வோஹ்ரா, இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.</p> <h2>விசாரணைக்கு உத்தரவு</h2><p>பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகம் இச்சம்பவத்தில் மின்னல் வேகத்தில் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.</p><p>புகார் தொடர்பாக வரும் செப்டம்பர் 16ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு 'ஸ்வயம் பில்டர்ஸ்' மற்றும் 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு உள்ளூர் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>3 நாட்களில் 15 உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி!</title><link>https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-held-bilateral-talks-with-leaders-from-15-countries-in-three-days</link><comments>https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-held-bilateral-talks-with-leaders-from-15-countries-in-three-days#comments</comments><guid isPermaLink="false">59256890-35c7-48aa-bc46-46527474fcd2</guid><pubDate>Sun, 13 Sep 2026 13:49:06 +0000</pubDate><atom:updated>2026-09-13T13:49:06.694Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,BRICS Summit,delhi,பிரிக்ஸ் உச்சிமாநாடு,பிரதமர் மோடி,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/t2ag30ma/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியுடன் தலைவர்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியுடன் தலைவர்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/t2ag30ma/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>3 நாட்களில் பிரதமர் மோடி, இந்தியா வருகை தந்த 15 நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.</p><p>டெல்லியில் 18வது<a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-modi-warning-on-critical-minerals-in-front-of-xi"> பிரிக்ஸ் உச்சி மாநாடு</a> நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இதில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், சவுதி இளவரசர், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். </p><p>புதின் கடந்த நேற்று முன் தினமே இந்தியா வந்து சேர்ந்தார். அவருடன் அன்றைய தினம் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இவ்வாறு 3 நாட்களில் பிரதமர் மோடி, இந்தியா வருகை தந்த 15 நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.   </p><p>மேலும், பல்வேறு சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுடனும் அவர் தனியாகக் கலந்துரையாடினார்.  </p><p>வணிகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், மற்றும் உலகளாவிய அமைதி குறித்த விவாதங்கள் இந்தசந்திப்புகளில் பிரதானமாக இடம் பெற்றன.  </p> <h2>வெள்ளிக்கிழமை சந்திப்பு</h2><p>செப்டம்பர் 11 அன்று புதின், பெசெஷ்கியான் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளரை மோடி சந்தித்தார்.</p><p>ரஷிய அதிபர் புதினுடன் நடந்த பேச்சுவார்த்தையில், இருநாடுகளிடையேயான வர்த்தகத்தை 2030க்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.</p><p>பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி மற்றும் உக்ரைன் - ரஷிய மோதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரமே போருக்குத் தீர்வு எனப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.</p><p>ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உடனான பேச்சுவார்த்தையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு, கடல்வழி வர்த்தகம் மற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்துப் பேசப்பட்டது.</p><p>ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்ரெஸ் உடனான பேச்சுவார்த்தையில் சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.</p> <h2>சனிக்கிழமை சந்திப்பு</h2><p>செப்டம்பர் 12, நேற்று, இந்தியா வந்து சேர்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் முதல் முறை இந்தியா வந்துள்ளார்.</p><p>சீன அதிபருடனான பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்சனை, வர்த்தக சமநிலையின்மை மற்றும் விநியோகச் சங்கிலியில் உள்ள இடர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.</p><p>இருநாடுகளின் வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது என்றும் பரஸ்பர மரியாதை மற்றும் நலன்கள் அடிப்படையில் உறவுகள் தொடர வேண்டும்" எனப் பிரதமர் மோடி சீன அதிபரிடம் வலியுறுத்தினார்.</p> <p>மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் நடத்திய பேச்சுவார்த்தையில், சேமிகண்டக்டர்,கள், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் Fintech தொழில்நுட்பம் குறித்துப் பேசப்பட்டது.</p><p>அபுதாபி இளவரசர் ஷேக் காலித் உடனான சந்திப்பில் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.</p><p>வியட்நாம் மற்றும் எத்தியோப்பியத் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான தொடர்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.</p><h2>ஞாயிறு சந்திப்பு</h2><p>மாநாட்டின் கடைசி நாளான இன்று, செப்டம்பர் 13, தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசா கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் தோகாயேவ், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், எகிப்து அதிபர் அல் சிசி, புருண்டி, உகாண்டா மற்றும் நைஜீரியப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>இந்த உச்சி மாநாடும், இருதரப்பு சந்திப்புகளும் இந்தியாவின் சர்வதேச ராஜதந்திர உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என கருதப்படுகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>