<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 18 Aug 2026 15:14:46 +0000</lastBuildDate><item><title>வரலாறு காணாத உச்சத்தில் சர்க்கரை விலை – வரியில்லா இறக்குமதிக்கு மத்திய அரசு அதிரடித் திட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sugar-prices-hit-unprecedented-high-centre-plans-duty-free-import</link><comments>https://www.maalaimalar.com/news/national/sugar-prices-hit-unprecedented-high-centre-plans-duty-free-import#comments</comments><guid isPermaLink="false">dde6954c-1fc4-425d-a4b7-9c227ec30bb5</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:21:39 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:21:39.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SugarPriceSpike,சர்க்கரைவிலை உயர்வு,India Sugar Imports,Duty Free Imports,வரியில்லா இறக்குமதி,Government Measures,Sugar Shortage</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/4c21yzav/Sugar-Price-Spike" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sugar Price Spike ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/4c21yzav/Sugar-Price-Spike?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் வரவிருக்கும் தொடர் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88">சர்க்கரை</a>யின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் அதன் விலை அதிரடியாக உயர்ந்து வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. </p><p>இதனைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரை விநியோகத்தை அதிகரிக்கவும் "வரியில்லா சர்க்கரை இறக்குமதி" உள்ளிட்ட பல்வேறு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81"> மத்திய அரசு</a> தீவிரமாக ஆலோசித்து வருகிறது.</p><h2>ஒரே மாதத்தில் 20% விலை உயர்வு!</h2><p>இந்தியாவின் முக்கிய சர்க்கரை வர்த்தக மையங்களில் ஒன்றான மகாராஷ்டிராவின் கோலாப்பூரில், மொத்த விற்பனையில் 100 கிலோ (ஒரு குவிண்டால்) சர்க்கரையின் விலை நடப்பு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை சுமார் 20% வரை உயர்ந்துள்ளது.</p><p>தற்போது சர்க்கரை விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.5,350 என்ற வரலாற்றுச் சாதனை அளவைத் தொட்டுள்ளது. உள்நாட்டில் சர்க்கரை இருப்பு போதுமான அளவு இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், சந்தையில் சர்க்கரைக்கான தட்டுப்பாடு நிலவுவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.</p><h2>பண்டிகைக் கால தட்டுப்பாடே காரணம்</h2><p>ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி போன்ற முக்கியப் பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால், இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் தயாரிப்பிற்கு சர்க்கரையின் தேவை மிக அதிகமாக இருக்கும். </p><p>இந்த திடீர் தேவையைச் சமாளிக்க, வெளிநாடுகளில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்வது மட்டுமே தற்போதைய ஒரே தீர்வு என மும்பை சர்க்கரை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><h2>விலையைக் குறைக்க மத்திய அரசு கையில் எடுக்கும் 4 முக்கிய ஆயுதங்கள்</h2><p>சர்க்கரை விலையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தனி ஒரு நடவடிக்கையை மட்டும் நம்பியிருக்காமல், பல்வேறு உத்திகளைப் பரிசீலித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கான இறக்குமதி வரியைக் குறைத்து, குறைந்த விலையில் சர்க்கரை கிடைக்க வழிவகை செய்தல். </p><p>இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் சர்க்கரையை பெரிய அளவில் இறக்குமதி செய்யாத நிலையில், தற்போது இந்த முடிவை எடுக்க அரசு முன்வந்துள்ளது. பெரிய மொத்த வியாபாரிகள் சர்க்கரையைப் பதுக்கி வைத்துச் செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்குவதைத் தடுக்க, அவர்கள் எவ்வளவு சர்க்கரையை இருப்பு வைக்கலாம் என்பதற்கான உச்ச வரம்பைக் குறைப்பது.</p><p>சர்க்கரை ஆலைகள் மாதந்தோறும் உள்நாட்டுச் சந்தைக்கு விடுதலை செய்யும் சர்க்கரையின் அளவை அதிகரிப்பது. அக்டோபர் முதல் தொடங்கவுள்ள புதிய கரும்புப் பருவத்தில், எத்தனால் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்படும் கரும்பின் அளவைக் குறைத்து, அதை முழுமையாகச் சர்க்கரை உற்பத்திக்குத் திருப்புவது. இதன் மூலம் சர்க்கரை உற்பத்தி இந்தியாவில் அதிகரிக்கும்.</p><p>உலகிலேயே சர்க்கரையை மிக அதிகமாகப் பயன்படுத்தும் நாடு இந்தியாதான் என்பதால், <a href="https://www.maalaimalar.com/topic/india">இந்தியா</a>வின் இந்த இறக்குமதி முடிவு சர்வதேச அளவிலும் சர்க்கரை சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இடஒதுக்கீடு இல்லை என்றால், பாஜக-வுக்கு தோல்வி: கூட்டணி கட்சி மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/if-bjp-fails-it-will-also-be-voted-out-up-minister-on-nishad-reservation</link><comments>https://www.maalaimalar.com/news/national/if-bjp-fails-it-will-also-be-voted-out-up-minister-on-nishad-reservation#comments</comments><guid isPermaLink="false">d94deba1-2f5a-427c-848a-6143df6eb218</guid><pubDate>Tue, 18 Aug 2026 12:54:58 +0000</pubDate><atom:updated>2026-08-18T12:54:58.995Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Yogi Adityanath,யோகி ஆதித்யநாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/i07b33pm/SanjayNishad.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சஞ்சய் நிஷாத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/i07b33pm/SanjayNishad.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு உ.பி.யில் நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையில் இரண்டு முறை பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க முனைப்புடன் உள்ளது.</p><p>இந்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள நிஷாத் கட்சியைச் சேர்ந்த சஞ்சய் நிஷாத் அமைச்சர், பாஜக இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் தோல்வியை சந்திக்கும் எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>நிஷாத் சமூகம்</h2><p>சஞ்சய் நிஷாத், நிஷாத் சமூகத்தை சேர்ந்தவர்கள். நிஷாத் சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p>உத்தர பிரதேச மாநில அமைச்சரவையில் இடம் பிடித்திருக்கும் மீன் வளத்துறை அமைச்சராக இருக்கும் சஞ்சய் நிஷாத் கூறியதாவது:-</p><p>யானை (பி.எஸ்.பி.), சைக்கிள் (சமாஜ்வாதி) மற்றும் கை (காங்கிரஸ்) நிஷாத் இட ஒதுக்கீட்டிற்கான கோரிக்கையை நிராகரித்தது. இதனால் அவர்கள் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள். பாஜக-வும் கோரிக்கையை நிறைவேற்ற தவறினால், அவர்களும் ஆட்சியில் இருந்து அகற்றப்படுவார்கள். எங்களுடைய மூதாதையர்கள் நாட்டின் சுதந்திரத்தை நிலைநாட்டியதுடன், அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படுவதையும் உறுதி செய்தனர்.</p><p>நாங்கள் இடஒதுக்கீட்டை விரும்புகிறோம். பாஜக அரசு இதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். முன்னதாகவே, இந்த விவகாரத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாங்கள் உங்களுடைய வழக்கறிஞர். பாஜக நீதிபதி. எனினும், எங்களுக்கு இடஒதுக்கு வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு சஞ்சய் நிஷாத் தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் சொந்த பூத்களை தயார் செய்யவும், கட்சியை வலுப்படுத்தவும் தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விவாகரத்து செய்யாமல் 2வது திருமணம் செய்தால் 20% சம்பளம் பிடித்தம் செய்யப்படும் - ஊழியர்களுக்கு அசாம் அரசு எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/20-salary-deduction-for-second-marriage-without-divorce-assam-govt-warns-employees</link><comments>https://www.maalaimalar.com/news/national/20-salary-deduction-for-second-marriage-without-divorce-assam-govt-warns-employees#comments</comments><guid isPermaLink="false">2d1a3e42-9527-4470-9fca-a93906541cfc</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:28:08 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:28:08.182Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Divorce,விவாகரத்து,Assam govt,CM Himanta Biswa Sarma,அசாம் அரசு,முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cru6yljy/New-Project-2026-08-18T164231.550.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவாகரத்து செய்யாமல் 2வது திருமணம் செய்தால் 20% சம்பளம் பிடித்தம் செய்யப்படும் - ஊழியர்களுக்கு அசாம் அரசு எச்சரிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cru6yljy/New-Project-2026-08-18T164231.550.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் பலதார மணமுறையை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. </p><p>அதன் ஒருபகுதியாக மாநிலத்தின் அரசு ஊழியர்கள் தங்களது முதல் மனைவியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அவர்களின் ஊதியத்திலிருந்து 20% பிடித்தம் செய்யப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. </p><p>பிடித்தம் செய்யப்படும் அந்தத் தொகை நேரடியாக முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இருப்பினும் இதற்காக முதல் மனைவி அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும்.</p><p>விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், சம்பளப் பிடித்தம் தொடரும். சட்டரீதியான நடவடிக்கைகள் முடியும் வரை முதல் மனைவி எந்தச் சிரமங்களையும் சந்திக்காமல் இருப்பதற்காக, அவருக்கு நிதி உதவி வழங்குவதே தங்களின் நோக்கம் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.</p><p>இந்த முடிவை தனியார் துறை ஊழியர்களுக்கும் செயல்படுத்தத் திட்டமிட்டப்பட்டுள்ளது. </p><p>ஏற்கனவே அசாமில் அரசு ஊழியர்கள் தங்களின் வயதான பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி உடன்பிறப்புகளை புறக்கணித்தால் அவர்களது சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அந்தத் தொகை நேரடியாக அவர்களின் பெற்றோர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>எச்1என்1 காய்ச்சல் அறிகுறி: 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு-பெங்களூரு பள்ளி திடீர் மூடல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/h1n1-flu-symptoms-over-500-students-affected-bengaluru-school-shuts</link><comments>https://www.maalaimalar.com/news/national/h1n1-flu-symptoms-over-500-students-affected-bengaluru-school-shuts#comments</comments><guid isPermaLink="false">8642b7aa-8662-4d7e-baf7-cc62336cce46</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:16:06 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:16:06.915Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,bengaluru,H1N1Flu,BengaluruSchoolNews,பெங்களூரு பள்ளி,எச்1என்1 காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hfd38dss/hi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ H1N1Flu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hfd38dss/hi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ரிச்சர்ட்ஸ் டவுன் பாட்டரி சாலையில் இயங்கி வரும் புகழ்பெற்ற கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் திடீரென காய்ச்சல் மற்றும் இருமல் தீவிரமாக பரவியுள்ளது. பள்ளியில் பயிலும் 2,500 மாணவர்களில் 500க்கும் மேற்பட்டோர் (சுமார் 20 சதவீதம்) காய்ச்சல், சளி, கடுமையான இருமல் மற்றும் உடல் வலியால் பாதிக்கப்பட்டு பள்ளிக்கு வரவில்லை. மேலும், 21 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் இதே அறிகுறிகளுடன் விடுப்பு எடுத்துள்ளனர்.</p><h2>உறுதியா<strong>ன எச்1என்</strong>1 தொற்றுகள்</h2><p>பள்ளியின் முதலுதவி மையத்திற்கு 137 மாணவர்கள் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக வந்ததை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு பேருக்கு H1N1 / Swine Flu வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/less-painful-lethal-injection-for-death-penalty-supreme-court-says-no">வைரஸ்</a> மேலும் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 18 வரை பள்ளி வளாகத்தில் நேரடி வகுப்புகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><h2>பள்ளி <strong>சுற்றியுள்ள சுகாதார சீர்கேடு காரண</strong>ம்?</h2><p>பள்ளி நிர்வாகம் மாநகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில், பள்ளி வளாகத்தை சுற்றி அனுமதியின்றி செயல்படும் தெருவோர உணவகங்களே இந்த சுகாதார சீர்கேட்டிற்கு காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளது. </p><p>நடைபாதைகளை ஆக்கிரமித்து விற்கப்படும் உணவுப் பொருட்கள், கொட்டப்படும் கழிவுகள் மற்றும் அதனால் சேரும் எலிகள் மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பள்ளி வளாகத்திலிருந்து 50 மீட்டர் சுற்றளவில் சுகாதாரமற்ற உணவுகள் விற்கப்படுவதைத் தடுக்கவும், சட்டவிரோத கடைகளை உடனடியாக அகற்றவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “உங்கள் வேலையை பாருங்கள்”
தமிழ்நாட்டிற்கு கர்நாடக முதலமைச்சர் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/three-tamils-shot-dead-mind-your-own-businesskarnataka-chief-minister-criticizes-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/national/three-tamils-shot-dead-mind-your-own-businesskarnataka-chief-minister-criticizes-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">8ea1d26d-22b7-44c9-8ae0-7b80f6874089</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:05:06 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:05:06.336Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,டி.கே.சிவகுமார்,joseph vijay,D.K. Shivakumar,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/nqt7ltwp/New-Project-2026-08-18T163153.791.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “உங்கள் வேலையை பாருங்கள்”
தமிழ்நாட்டிற்கு கர்நாடக முதலமைச்சர் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/nqt7ltwp/New-Project-2026-08-18T163153.791.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் விஜய் இது ஒரு படுகொலை என்றும், இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு கொடுக்கும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். </p><p>மேலும் மற்ற தமிழ்நாடு தலைவர்களும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.</p><h2>டி.கே.சிவக்குமார் கண்டனம்</h2><p>இந்நிலையில் தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளுக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:-</p><p>“இது ஒரு கூட்டாட்சி அமைப்பு. எந்தவொரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது. நான் தமிழ்நாடு விவகாரங்களில் ஒருபோதும் தலையிட்டதில்லை, மேலும் உங்கள் நிர்வாகம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவும் இல்லை.  </p><p>ஒவ்வொரு மாநிலமும் அதற்கே உரிய சவால்களை எதிர்கொள்கிறது. கர்நாடகாவின் சட்டம், ஒழுங்கு விவகாரம் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். </p><p>எங்கள் மாநிலத்தைப் பாதுகாப்பது எப்படி என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் உங்கள் வேலையை செய்யுங்கள், நாங்கள் எங்கள் வேலையைச் செய்வோம். </p><p>கர்நாடகாவின் நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு விஷயங்களில் தலையிடக் கூடாது.” என தெரிவித்தார். </p><p>இவ்வாறு டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>IT வேலையை உதறிவிட்டு காளான் விவசாயம் : மாதம் ரூ.10 லட்சம் சம்பாதிக்கும் பி.டெக் பட்டதாரி!</title><link>https://www.maalaimalar.com/news/national/btech-graduate-quits-it-job-earns-10-lakh-a-month-from-mushroom-farming</link><comments>https://www.maalaimalar.com/news/national/btech-graduate-quits-it-job-earns-10-lakh-a-month-from-mushroom-farming#comments</comments><guid isPermaLink="false">e788772d-c520-477a-a5c4-98ca0d859f06</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:28:57 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:28:57.716Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mushroom Farming,காளான் விவசாயம்,ITtoAgriculture,BTechFarmer,பிடெக் விவசாயி,Ganga Bhumi Mushrooms,Agripreneurship</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/jdtta0z7/Mushroom-Farming" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mushroom Farming ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/jdtta0z7/Mushroom-Farming?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுவாகப் பொறியியல் படிக்கும் இளைஞர்களின் இலக்கு ஒரு நல்ல ஐடி நிறுவனத்தில் சேர்ந்து கைநிறையச் சம்பாதிப்பதாகத் தான் இருக்கும். </p><p>ஆனால், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE">ஒடிசா</a>வைச் சேர்ந்த விக்ரம்தேவ் மஹாபத்ரா என்ற இளைஞர், 14 ஆண்டுகால தனது வெற்றிகரமான கார்ப்பரேட் ஐடி வாழ்க்கையைத் துறந்து, சொந்த ஊரில் காளான் விவசாயம் செய்து மாதம் 10 லட்ச ரூபாய்க்கும் மேல் லாபம் ஈட்டி சாதனை படைத்து வருகிறார்.</p><h2>14 ஆண்டுகால ஐடி வாழ்க்கை</h2><p>ஒடிசாவின் நபரங்பூர் பகுதியைச் சேர்ந்த விக்ரம்தேவ், கடந்த 2012-ஆம் ஆண்டு பிஜு பட்நாயக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 'எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்' பிரிவில் பி.டெக் முடித்தார். </p><p>படிப்பை முடித்தவுடன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">ஐடி துறை</a>யில் கால்பதித்த அவர், அடுத்த 14 ஆண்டுகளில் மைண்ட்ட்ரீ, செரோல் டெக்னாலஜிஸ் மற்றும் எல்டிஐமைண்ட்ட்ரீ போன்ற இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் பல்வேறு உயர் பொறுப்புகளில் மிக வெற்றிகரமாகப் பணியாற்றினார்.</p><h2>கார்ப்பரேட் டூ விவசாயம் எப்படி?</h2><p>கார்ப்பரேட் வாழ்க்கையில் நல்ல வருமானம் கிடைத்தாலும், சொந்த ஊருக்குச் சென்று சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் விக்ரம்தேவிடம் இருந்தது. </p><p>ஒருகட்டத்தில் தனது ஐடி வேலையை ராஜினாமா செய்த அவர், தனது சொந்த ஊரான நபரங்பூருக்குத் திரும்பினார். அங்கு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வணிக வாய்ப்புகளை ஆராய்ந்தவர், காளான் வளர்ப்பைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். </p><p>அதன்படி, 'கங்கா பூமி மஷ்ரூம்ஸ்' என்ற வணிக ரீதியிலான காளான் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் மையத்தைத் தொடங்கினார்.</p><h2>தினசரி 600 கிலோ உற்பத்தி; மாதம் 10 லட்சம் லாபம்!</h2><p>நவீன தொழில்நுட்பங்களை விவசாயத்தில் புகுத்திய விக்ரம்தேவின் பண்ணை, தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இவரது பண்ணையில் ஒரு நாளைக்குச் சுமார் 500 முதல் 600 கிலோ வரை காளான்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. </p><p>இது ஒரு மாதத்திற்கு 15 முதல் 18 டன்கள் ஆகும். இங்கு விளையும் காளான்கள் ஒடிசா மாநிலத்தின் முக்கிய நகரங்களான பெர்ஹாம்பூர், புவனேசுவர் போன்ற பெரிய சந்தைகளுக்கு நேரடியாகக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. </p><p>அனைத்துப் பராமரிப்பு மற்றும் இதர செலவுகளும் போக, இந்த காளான் பண்ணை மூலம் மட்டுமே இவருக்கு மாதம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் நிகர லாபம் கிடைக்கிறது.</p><h2>24 கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு</h2><p>விக்ரம்தேவ் தனக்கான வருமானத்தை உருவாக்கியதோடு நிறுத்திக்கொள்ளாமல், தனது பகுதியைச் சேர்ந்த 24 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளார். மிக முக்கியமாக, அவரது பண்ணையில் பணிபுரியும் 24 ஊழியர்களில் 18 பேர் பெண்கள். </p><p>இதன் மூலம் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு அவர் வழிவகை செய்துள்ளார். பெருநகரங்களை நோக்கி வேலைக்காக ஓடாமல், சரியான திட்டமிடலும் சந்தை தேவையைப் புரிந்துகொள்ளும் திறனும் இருந்தால், நவீன விவசாயம் மூலம் சொந்த ஊரிலேயே மிகப்பெரிய தொழிலதிபராக மாற முடியும் என்பதற்கு விக்ரம்தேவ் மஹாபத்ராவின் இந்த பயணம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.</p>]]></content:encoded></item><item><title>ஞானேஷ் குமாரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லுங்கள்: டிரம்ப் பாராட்டிய நிலையில் காங்கிரஸ் பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/national/take-gyanesh-kumar-to-us-congress-jibe-after-trump-praises-indian-polls</link><comments>https://www.maalaimalar.com/news/national/take-gyanesh-kumar-to-us-congress-jibe-after-trump-praises-indian-polls#comments</comments><guid isPermaLink="false">320eeadc-b12a-41b0-8f53-d7146911a14e</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:05:38 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:05:38.960Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,டொனால்டு டிரம்ப்,Donald Trump,ஞானேஷ் குமார்,Gyanesh Kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/4z4drtwb/DonaldTrumpPawanKherra.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டொனால்டு டிரம்ப்- பவன் கெர்ரா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/4z4drtwb/DonaldTrumpPawanKherra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய தேர்தல் ஆணையத்தையும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரையும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெகுவாக பாராட்டியிருந்தார்.</p><p>டொனால்டு டிரம்ப் பாராட்டிய நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான பவன் கெர்ரா அதற்கு பதில் கொடுத்துள்ளார்.</p><h2>பவன் கெர்ரா</h2><p>பவன் கெர்ரா "அமெரிக்க அதிபர் டிரம்ப் ஞானேஷ் குமாரை அழைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் வாக்கு இயந்திரங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக பவன் கெர்ரா வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>அன்புள்ள டொனால்டு டிரம்ப் அவர்களே, தயவு செய்து ஞானேஷ் குமாரை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லுங்கள். அவரையே அங்கேயே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக கிடைக்கும் விமானத்தில் எங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் (EVMs) நாங்கள் அனுப்பி வைக்கிறோம். நீங்கள் எங்களுக்கு இழைத்த அவமானங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்குப் பதிலாக, நாங்கள் உங்களுக்குச் செய்யக்கூடிய மிகச்சிறிய கைமாறு இதுவே. அன்புடன் இந்தியா.</p><p>இவ்வாறு பவன் கெர்ரா தெரிவித்துள்ளார்.</p><h2>டொனால்டு டிரம்ப்</h2><p>முன்னதாக டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் "இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ் குமார் எங்கள் நிர்வாகத்திடம் ஒரு கேள்வியை எழுப்பினார். அது செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படித் தேர்தல்களை நடத்த முடியும்? என்பதுதான்.</p><p>இந்தியாவின் கடந்த தேர்தலில் 64 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்றனர். ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே தபால் மூலம் வாக்களித்தனர். அதேவேளையில், ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள ஆவணத்தை கொண்டிருப்பது கட்டாயமாக இருந்தது. நாம் அமெரிக்காவை காக்கும் சட்டத்தை (The Save America Act) இப்போதே நிறைவேற்ற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.</p><p>வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி, கூட்டாட்சி தேர்தல்களை தீர்மானிப்பதில் அமெரிக்க குடிமக்கள் மட்டுமே பங்கேற்பதை உறுதி செய்வதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.</p><p>கூட்டாட்சி தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்வதற்கு முன்பு, வாக்காளர்கள் தங்கள் குடியுரிமைக்கான ஆதாரத்துடன், செல்லுபடியாகும் அடையாள அட்டையையும் வழங்க வேண்டும். அமெரிக்க தேர்தல்களை அமெரிக்கக் குடிமக்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என Save சட்ட முன்மொழிவு வலியுறுத்துகிறது.</p><h2>இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்</h2><p>இந்திய தேர்தல் ஆணையராக இருக்கும் ஞானேஷ் குமார், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது, சேர்த்தது தொடர்பாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டார் என காங்கிரஸ் விமர்சனம் செய்தது. அத்துடன் SIR மூலம் வாக்குகள் நீக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மரண தண்டனையை விஷ ஊசியால் நிறைவேற்ற உத்தரவிடக்கோரி மனு: &apos;No&apos; சொன்ன உச்சநீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/less-painful-lethal-injection-for-death-penalty-supreme-court-says-no</link><comments>https://www.maalaimalar.com/news/national/less-painful-lethal-injection-for-death-penalty-supreme-court-says-no#comments</comments><guid isPermaLink="false">dae5db6a-c9de-4c15-8abf-0739f37fa61a</guid><pubDate>Tue, 18 Aug 2026 09:28:59 +0000</pubDate><atom:updated>2026-08-18T09:28:59.018Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,மரண தண்டனை,Death Penalty,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/gsbw0c7k/SupremeCourt001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/gsbw0c7k/SupremeCourt001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் கொடூர குற்றத்திற்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் பல விதமாக மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மரண தண்டனை தூக்கு மூலம் நிறைவேற்றப்படுகிறது. இதனால் இந்தியாவில் மரண தண்டனை தூக்குத் தண்டனையாகவே அழைக்கப்படுகிறது.</p><h2>மரண தண்டனையை வேறு வழியில் நிறைவேற்ற வேண்டும்</h2><p>இந்த நிலையில் வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தூக்கு மூலம் தண்டனை நிறைவேற்றப்படுவதற்குப் பதிலாக விஷ ஊசி, துப்பாக்கியால் சுட்டு, மின்சாரம் பாய்ச்சு அல்லது வாயு அறை ஆகிய வழிகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட பரிந்துரை செய்யலாம்.</p><p>தூக்கு மூலம் தண்டனை நிறைவேற்றுவதன் மூலம் அதிகப்படியான வலி குற்றவாளிக்கு ஏற்படும். இது மனிதாபிமானமற்றது. கொடூரமானது. தூக்கு போட்ட பிறகு, சுமார் 40 நிமிடம் கழித்து அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்படும். இது துப்பாக்கியால் சுட்டு அல்லது விஷ ஊசி செலுத்தி நிறைவேற்றப்பட்டால் 5 நிமிடங்கள் போதுமானது.</p><h2>வலி அதிகமானது தூக்கு</h2><p>மரண தண்டனை விதிக்கப்படும்போது அது மிகக் குறைந்த அளவிலான வேதனையை ஏற்படுத்தும் வகையிலேயே நிறைவேற்றப்பட வேண்டும் என ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.</p><p>வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா தாக்கல் செய்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.</p><p>தூக்கிலிடுவதன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதன் அரசியலமைப்பு சட்ட செல்லுபடியை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போதைக்கு நாட்டில் தூக்கிலிடப்படும் முறையே தொடரும் எனத் தெரிவித்தனர்.</p><p>அத்துடன் தங்கள் தீர்ப்பே இறுதியானது அல்ல என்றும், மத்திய அரசு விரும்பினால் மாற்று வழிமுறைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நகர வாழ்க்கையை விட்டு மலை கிராமத்திற்கு சென்ற ஜென் இசட் இளைஞருக்கு கிடைத்த அனுபவங்கள்! </title><link>https://www.maalaimalar.com/news/national/the-experiences-of-a-gen-z-youth-who-left-city-life-for-a-mountain-village</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-experiences-of-a-gen-z-youth-who-left-city-life-for-a-mountain-village#comments</comments><guid isPermaLink="false">2d5d7047-c15a-4dd4-be6f-4c9f4b19605b</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:50:28 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:50:28.722Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜென் இசட்,Gen z,சுற்றுலா,Tourism,வைரல்,viral</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/akm1jt4x/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அஜய் சர்மா]]></media:title><media:description type="html"><![CDATA[ அஜய் சர்மா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/akm1jt4x/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வாழ்க்கை அதிவேகமாக செல்லும் மெட்ரோபோலிடன்களால் களைப்புற்று தொலைதூர பகுதியில் அமைதியான வேலையை தேட பலர்  விரும்புகின்றனர். </p><p>பலர் அப்படி நினைப்பதோடு நிறுத்திக்கொள்ளும் வேலையில் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிய ஜென் இசட் <a href="https://www.maalaimalar.com/topic/viral">கண்டெட் கிரியேட்டரான</a> அஜய் சர்மா, டெல்லியின் பரபரப்பான வாழ்க்கையை உதறிவிட்டு இமாச்சல பிரதேசத்தின் மனாலியில் உள்ள மலை கிராமமான சியால் கிராமத்திற்கு இந்த ஆண்டு மே மாதம் இடம்பெயர்ந்தார்.  </p><p>சரியாக 71 நாட்கள்  அங்கு கழித்து ஆகஸ்ட் 2 இல் டெல்லி திரும்பிய அஜய் சர்மா, அங்கு கழித்த நாட்களில் 55 வீடியோக்கள் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். </p><p>தற்போது மீண்டும் டெல்லி திரும்பியுள்ளது பற்றி அவர் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மனாலியில்  தான் இருந்த நாட்களை குறித்தும் அங்கிருந்த எளிமையான வாழ்க்கை முறை குறித்தும், சேகரித்த நினைவுகள் குறித்தும் அவர் விவரிக்கிறார்.  </p><h2>புதிய வாழ்க்கை</h2><p>யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மனாலிக்கு சென்ற புதிதில் பரீட்சயம் இல்லாத சாலைகளும் பரீட்சயமானதாகின. மலைகள் வீட்டில் இருக்கும் உணர்வை தரத் தொடங்கின. மறக்க முடியாத ஞாபகங்கள் கிடைத்தன. </p><p>ஆனால் மீண்டும் டெல்லி திரும்பியபோது நகர வாழ்க்கைக்கு தகவமைத்து கொள்வது கடினமானதாக ஆகிவிட்டது. இரண்டு மாதங்கள் ஒரு இடத்தில் இருந்துவிட்டு அதை விட்டு வருவது இத்தனை கடினமானது என்று நினைக்கவில்லை என கூறுகிறார் அஜய்.</p><p>ஆனால் தொடங்கப்படும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் இரு முடிவு இருக்கிறது. தற்போது தன் வாழ்வின் புதிய கட்டத்தை தொடங்கியது போல் உள்ளது என்றும் ஒப்புக்கொள்கிறார் அவர்.</p> <h2>அன்றாட செலவுகள்</h2><p>மனாலியின் அந்த கிராமத்தில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் மாதம் ரூ.14000 வாடகைக்கு (வை பை - கரண்ட் பில் சேர்த்து) செலவழித்திருக்கிறார்.</p><p>செலவை குறைக்க மாதம் ரூ.3500 க்கு பலசரக்கு வாங்கி வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டிருக்கிறார். சமைக்க தோணாத நாட்களில் வெளியே சாப்பிட வாரம் ரூ.500 மட்டும் ஒதுக்கியிருக்கிறார்.</p><p>உள்ளூரில் உள்ள ஒரு ஜிம்மிலும் அவர் சேர்ந்திருக்கிறார். அதற்கு கட்டணம் ரூ.1800. பேரம் பேசி ரூ.1500 என்று குறைத்திருக்கிறார். எங்கு சென்றாலும் நடந்தே செல்வதால் போக்குவரத்துக்கு பெரிதாக செலவாகவில்லை.</p><p>மொத்தமாக மாதம் அவருக்கு ரூ.21000 தான் செலவாகி உள்ளது.</p> <h2>இடர்பாடுகள்</h2><p>இந்த வாழ்க்கை அவருக்கு முழுவதும் சொர்கமாகவும் இல்லை. மலைக் காட்சி, காலை சூரியோதயம், பச்சைப் பசேல் இடங்களின் ஊடே செல்லும் சாலைகள், உள்ளூர் உணவுகள், நெருப்பை சுற்றி அமர்ந்திருக்கும் புதிய மனிதர்கள் என்பதே அவர் எதிர்பார்ப்பு.</p><p>அதில் பெரும்பாலானவற்றை அவர் பார்த்தபோதும், மலைகளுக்கு சுற்றுலா பயணியாக செல்வது என்பதும் அங்கேயே வாழ்வது என்பதும் முற்றிலும் வேறுபட்டது என்று அவர் உணர்ந்துள்ளார். அதையே அவரை சமூக வலைத்தளத்தில் பின்பற்றிய பலரும் கூறியுள்ளனர்.</p> <p>எந்த நேரத்திலும் இணையம் கிடைக்காமல் போகும். எதிர்பாராத நேரத்தில் மழை பேசியத் தொடங்கும், தானாகவே சமைத்து, அனைத்தையும் நிர்வகிக்க வேண்டும், மழைக்காகதில் சாலைகளின் மோசமான நிலை, சுற்றுலா தலங்களுக்கு நீண்ட மலையேற்றம் செய்ய வேண்டி இருப்பது, நடந்து செல்ல வேண்டியது ஆகியவற்றை அசௌகர்யமாக கருத்தியுள்ளார்.</p><p>டெல்லி திரும்பியதும் ஜூலை 3 அன்று தனது பயணம் குறித்த இந்த வீடியோவை அவர் பதிவிட்டுள்ள நிலையில் இதற்கு பலவிதமான கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>மேற்கு வங்கத்தின் இந்த நகரங்கள் ஆகஸ்ட் 18-இல் இந்தியாவுடன் இணைந்த தினத்தை கொண்டாடுவது ஏன்? - 1947இல் நடந்தது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-border-confusion-nadia-malda-and-dinajpur-mark-delayed-independence-on-august-18-as-bharat-bhukti-diwas</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-border-confusion-nadia-malda-and-dinajpur-mark-delayed-independence-on-august-18-as-bharat-bhukti-diwas#comments</comments><guid isPermaLink="false">439d426f-9d7c-41b7-9fbd-c13b79abb185</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:39:40 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:39:40.330Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,இந்தியா பாகிஸ்தான்,Independence Day,சுதந்திர தினம்,west bengal,India-Pakistan,partition,தேசப் பிரிவினை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cb37hw49/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுதந்திர தினம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சுதந்திர தினம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cb37hw49/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆகஸ்ட் 14 பாகிஸ்தானும், ஆகஸ்ட் 15 இந்தியாவும் தனது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இரு நாடுகளுக்கும் இது 80வது சுதந்திர தினம். 1947 <a href="https://www.maalaimalar.com/news/national/partition-horrors-remembrance-day-india-pakistan-division-victims-honoured-and-national-unity-stressed">தேசப் பிரிவினையால்</a> இந்தியா - பாகிஸ்தான் பிரிந்ததன் பின்னணியில் இந்த தேதி வித்தியாசம். </p><p>ஆனால் இந்தியாவின் மேற்கு வங்கத்தில்  உள்ள சில நகரங்கள் மட்டும் வருடந்தோறும் தாமதமாகவே சுதந்திர இந்தியாவில் இணைந்ததை கொண்டாடுகின்றன.</p> <h2>ஏன்?</h2><p>சர் சிரில் ராட்கிளிப் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோடுகளை வரையறுத்தார்.</p><p>ஒருங்கிணைந்த வங்காளமும் இந்த பிரிவினையால் துண்டாடப்பட்டது. கிழக்கில் இந்தியாவுக்குள் இருக்கும் வங்கம் மேற்கு வாங்கமாகவும், மறுபுறம் பாகிஸ்தானுக்கு சொந்தமானது கிழக்கு பாகிஸ்தானாகவும் பிரிக்கப்பட்டது.</p> <h2>குழப்பம்</h2><p>மேற்கு வங்கத்தின் நாடியா, மால்டா மற்றும் தினாஜ்பூர் (இப்போதைய பெயர்கள்) ஆகிய நகரங்களின் பெரும் பகுதிகள்  தாங்கள் இந்தியாவுக்குள் வருகிறோமா அல்லது கிழக்கு பாகிஸ்தானுக்குள் வருகிறோமா என்பது தெரியாமல் குழம்பின.</p><p>எல்லைக்கோடுகள் எங்கு பிரிக்கப்பட்டுள்ளன என்பது அதிகாரப்பூர்வமாக தெரியாததால், அப்பகுதிகள் கிழக்கு பாகிஸ்தானுடன் இணையக்கூடும் என கருதப்பட்டது. அங்கு 1947 சுதந்திரத்தின்போது பாகிஸ்தான் கொடிகளே ஏற்றப்பட்டன.</p><p>1947, ஆகஸ்ட் 17 மாலை வரை இந்தப் பகுதிகள் எந்த நாட்டிற்கு சொந்தம் என்பதில் பெரும் குழப்பம் நிலவியது.</p> <h2>கொடியேற்றம்</h2><p>அன்றைய தினம் இரவு ஆல் இந்தியா ரேடியோவில், சர் சிரில் ராட்கிளிப் தயாரித்த எல்லைப் வரையறை அறிக்கை வாசிக்கப்பட்டபோது தான், அவை இந்தியாவுக்குள் வருவது தெரியவந்தது.</p><p>நாடியாவின் ஆகிய மெஹெர்பூர், சுவாடங்கா, குஷ்டியா3 உட்பிரிவுகள் மட்டுமே கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்றன.</p><p>இதனைத் தொடர்ந்து, 1947, ஆகஸ்ட் 18 மதியம், அதாவது இந்தியாவின் பிற பகுதிகள் சுதந்திரம் அடைந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, அப்பகுதிகளில் பறந்த பாகிஸ்தான் கொடிகள் இறக்கப்பட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.</p><p>இன்றும் இந்த பகுதிகளில் ஆகஸ்ட் 18ஆம் தேதி, 'பாரத் புக்தி திவாஸ்' (பாரதத்துடன் சேர்ந்த நாள்) என்ற பெயரில் சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.</p><h2>கட்டுக்கதை</h2><p>சர் ராட்க்ளிப் தவறுதலாக இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளை கிழக்கு பாகிஸ்தானுக்கு ஒதுக்கி வரைபடம் வரைந்ததாகவும் அதை அறிந்த வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு, உடனடியாக வரைபடத்தை திருத்தி வரைய உத்தரவிட்டதால் தான் அறிவிப்பு தாமதமானதாகவும் ஒரு கதை கூறப்படுகிறது. ஆனால் அது பொய்யானது என வரலாற்றாய்வாளர்கள் மறுக்கின்றனர்.</p><h2>தாமதம் ஏன்?</h2><p>ராட்கிளிப் தனது எல்லைப் வரையறை அறிக்கையை வைஸ்ராய் மவுண்ட் பேட்டனிடம் ஆகஸ்ட் 12லேயே கையெழுத்திட்டு சமர்ப்பித்துவிட்டார்.</p><p>எல்லைப் பகிர்வை சுதந்திரத்திற்கு முன்பே அறிவித்தால் ஏற்கனவே நடந்து வந்த மதக் கலவரம் தீவிரமடையும் என மவுண்ட் பேட்டன் கருதினார். </p><p>இதனால் ராட்கிளிப் அறிக்கை ஆகஸ்ட் 17 அன்று 'தி கெஸட் ஆப் இந்தியா எக்ஸ்ட்ராஆர்டினரி' இதழில் வெளியிடப்படும் வரை ரகசியமாக வைக்கப்பட்டது.</p><p>எல்லை குறித்த தகவல்கள் இல்லாத அந்த 3 நாட்களில் முஸ்லிம் லீக் தொண்டர்கள் பல இடங்களில் பாகிஸ்தான் கொடிகளை ஏற்றினர்.  ஆகஸ்ட் 17 இந்தியா ரேடியோவில் அறிவிக்கப்பட்ட பின் தெளிவு ஏற்பட்டு ஆகஸ்ட் 18 இந்திய கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. </p>]]></content:encoded></item><item><title>மும்பையில் இன்ஸ்டாகிராம் நண்பனால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை- 17 வயது சிறுவர்கள் இருவர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/atrocity-against-14-year-old-girl-by-instagram-friend-in-mumbai</link><comments>https://www.maalaimalar.com/news/national/atrocity-against-14-year-old-girl-by-instagram-friend-in-mumbai#comments</comments><guid isPermaLink="false">14a37b8c-93a7-4333-8646-7b1c2fbca5f1</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:35:23 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:35:23.290Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sexual assault,போக்சோ சட்டம்,POCSOAct,MumbaiNews,SocialMediaSafety,InstagramWarning,மும்பை செய்திகள்,இன்ஸ்டாகிராம் எச்சரிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/mtfuqwic/pocso.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sexual assault of a minor girl]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/mtfuqwic/pocso.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-schools-major-reforms-vocational-education-class-9-third-language-mandatory">மும்பை</a> பெருநகரப் பகுதிக்கு உட்பட்ட பால்கர் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக 17 வயது சிறுவன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11-ஆம் தேதி, அவசர விஷயமாகப் பேச வேண்டும் எனக் கூறி, அந்தச் சிறுவன் சிறுமியை உள்ளூர் சால் பகுதிக்கு வரவழைத்துள்ளான்.</p><h2>பாலி<strong>யல் அத்துமீறல்</strong></h2><p>சிறுமி அங்கே சென்றபோது, அந்தச் சிறுவனும் அவனது 17 வயது நண்பனும் சேர்ந்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தை அவர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். </p><p>இச்சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது கூறினால், சிறுமியின் சகோதரனைக் கொன்றுவிடுவதாக இரு சிறுவர்களும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த சிறுமி யாரிடமும் இதுபற்றித் தெரிவிக்காமல் அமைதியாக இருந்துள்ளார்.</p><h2>வெளிச்ச<strong>த்திற்கு வந்த</strong> கொடூரம் </h2><p>இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி சிறுமியின் தாய்மாமன் இணையதளத்தில் உலாவிக் கொண்டிருந்த, அச்சிறுமி பாதிக்கப்பட்ட வீடியோவை ஆன்லைனில் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து சிறுமியிடம் விசாரிக்கப்பட்டு, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. </p><p>சிறுமியின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பால்கர் காவல்துறையினர், பாரதிய நியாய சன்ஹிதா, போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்து, குற்றச் செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவர்கள் இருவரையும் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி பள்ளிகளில் அதிரடி மாற்றம் : 9-ஆம் வகுப்பில் தொழிற்கல்வி... 3-வது மொழி கட்டாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-schools-major-reforms-vocational-education-class-9-third-language-mandatory</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-schools-major-reforms-vocational-education-class-9-third-language-mandatory#comments</comments><guid isPermaLink="false">79f89a32-95a0-408f-84ca-b599228627db</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:03:51 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:03:51.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,vocational education,டெல்லி,delhi EducationReform,Class9 Assessment,தொழிற்கல்வி கட்டாயம்,Third LanguageMandatory,DoECircular,Advanced MathsScience</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9w23ajv2/Delhi-EducationReform" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi EducationReform ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9w23ajv2/Delhi-EducationReform?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/delhi">டெல்லி</a> அரசுப் பள்ளிகளில் பயிலும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மற்றும் தேர்ச்சி முறையில் அதிரடி மாற்றங்களை டெல்லி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் 2026-27 கல்வியாண்டு முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளன.</p><p>மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அறிவை வளர்க்கும் நோக்கில் இந்த புதிய பாடத்திட்டமும், தேர்வு முறையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>6 முக்கிய பாடங்கள் கட்டாயம்</h2><p>புதிய கல்வி முறையின்படி, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் இனி 6 முக்கிய பாடங்களை கட்டாயம் படிக்க வேண்டும். மொழிப்பாடம் - 1, மொழிப்பாடம் - 2, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் தொழிற்கல்வி ஆகிய பாடங்களை கட்டாயம் பயில வேண்டும்.</p><p>மாணவர்கள் 10-ஆம் வகுப்பிற்கு தேர்ச்சி பெறுவதை இந்த 6 முக்கிய பாடங்களின் மதிப்பெண்களே தீர்மானிக்கும். மாணவர்களுக்கு சிறுவயதிலேயே வேலைவாய்ப்பு மற்றும் திறன் சார்ந்த கல்வியை வழங்க தொழிற்கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><h2>3-வது மொழி கட்டாயம்!</h2><p>8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படித்த அதே மூன்று மொழிகள் கொண்ட கூட்டணியே 9-ஆம் வகுப்பிலும் தொடரும். அதில் ஒரு மொழி 3-வது மொழியாக கருதப்படும்.இந்த 3-வது மொழிக்கான தேர்வு பள்ளி அளவிலேயே நடத்தப்படும். </p><p>மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்களுக்குப் பதிலாக 'தகுதி பெற்றார்' அல்லது 'தகுதி பெறவில்லை' என்பது மட்டும் குறிப்பிடப்படும்.</p><p>இதில் முக்கியமாக 9-ஆம் வகுப்பில் இந்த 3-வது மொழியில் தேர்ச்சி பெறாவிட்டாலும், மற்ற பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் மாணவர்கள் 10-ஆம் வகுப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்படுவார்கள். </p><p>ஆனால்,10-ஆம் வகுப்பில் படிக்கும்போதே 9-ஆம் வகுப்பின் இந்த மொழித்தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். 3-வது மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.</p><h2>கணிதம், அறிவியலில் புதிய 'Advanced' தேர்வுகள்</h2><p>தற்போது நடைமுறையில் உள்ள 'Mathematics Basic' மற்றும் 'Mathematics Standard' முறைகள் 2026-27 கல்வியாண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு நீக்கப்படுகின்றன. ஆனால், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பழைய முறை 2026-27-ல் தொடரும்.</p><p>அதற்குப் பதிலாக புதிய முறை அறிமுகமாகிறது. அனைத்து மாணவர்களுக்கும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் பொதுவான தேர்வு நடத்தப்படும். பாடப்புத்தகத்தைத் தாண்டி, கூடுதல் திறனை வளர்த்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள் Mathematics Advanced அல்லது Science Advanced (அல்லது இரண்டையும்) தேர்வு செய்து எழுதலாம். இந்த 'Advanced' தேர்வுகள் 25 மதிப்பெண்களுக்கு, 1 மணி நேரம் நடக்கும். </p><p>இதில் சிந்தனைத் திறனை சோதிக்கும் கேள்விகள் கேட்கப்படும். இதில் பெறும் மதிப்பெண்கள் மாணவர்களின் தேர்ச்சிக்கோ அல்லது மொத்த மதிப்பெண் சதவீதத்திற்கோ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. </p><p>ஆனால், இந்த 'Advanced' தேர்வில் 50% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் சாதனை அவர்களது மதிப்பெண் சான்றிதழில் தனியாகப் பதிவு செய்யப்படும்.</p><h2>புதிய பாடங்கள் மற்றும் AI அறிமுகம்</h2><p>'சமூகத்தில் தனிநபர்கள்', கலைக் கல்வி, உடற்கல்வி மற்றும் நல்வாழ்வு ஆகிய துறைகளும் பள்ளி அளவிலான மதிப்பீடுகளுடன் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. </p><p>கணினி சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடங்கள் 2026-27-ல் ஒரு சிறப்புப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் 2027-28 கல்வியாண்டு முதல் கட்டாயப் பாடமாக மாற்றப்படும்.</p><h2>தேர்ச்சி பெறுவதற்கான புதிய விதிகள் என்ன?</h2><p>9-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ஆம் வகுப்பிற்குச் செல்ல மாணவர்கள் 6 முக்கிய பாடங்களிலும், அகமதிப்பீடு மற்றும் எழுத்துத் தேர்வு ஆகிய இரண்டிலும் தனித்தனியாகக் குறைந்தது 33% மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆண்டு இறுதித் தேர்வில் மட்டும் குறைந்தது 25% மதிப்பெண்கள் எடுத்திருப்பது அவசியமாகும்.</p><h2>தோல்வி அடைந்தால் என்ன நடக்கும்?</h2><p>6 முக்கிய பாடங்களில் 3 பாடங்கள் வரை தோல்வி அடையும் மாணவர்கள், துணைத் தேர்வு எழுத தகுதியுடையவர்கள் ஆவர். துணைத் தேர்விலும் தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது தேர்ச்சி பெற முற்றிலும் தகுதி இல்லாத மாணவர்கள் 'Essential Repeat' (கட்டாய மறுபடி) பிரிவின் கீழ் வைக்கப்பட்டு, மீண்டும் அதே 9-ஆம் வகுப்பிலேயே படிக்க நேரிடும்.</p>]]></content:encoded></item><item><title>முற்றிலும் மாறுபட்ட உலகத்தைக் கண்டேன்: இந்தியாவின் கல்வி மற்றும் பண்பாட்டைப் பாராட்டிய ஜிம்பாப்வே இளைஞர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/i-saw-a-completely-different-world-zimbabwean-youth-praises-indias-education-and-culture</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-saw-a-completely-different-world-zimbabwean-youth-praises-indias-education-and-culture#comments</comments><guid isPermaLink="false">4ae704c0-eab5-430a-9263-67b5eba003eb</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:49:23 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:49:23.261Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,ஜிம்பாப்வே,Zimbabwean,India&apos;s medical sector,இந்திய மருத்துவத் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/m2phmwrk/india.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Zimbabwean ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/m2phmwrk/india.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கத்திய நாடுகளைத் தாண்டி தரமான கல்வியும், வாழ்க்கையை மாற்றும் வாய்ப்புகளும் இந்தியாவில் நிறைந்துள்ளன என்பதைத் தனது அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளதாகக் கூறுகிறார் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த கலும்பா முவாலே.</p><h2>வாய்ப்புகளை க<strong>ண்டு வியப்பு</strong></h2><p>உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா அல்லது ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளையே முதன்மையாகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், <a href="https://www.maalaimalar.com/news/national/aadi-month-over-wife-mother-in-law-surprise">இந்தியா</a>வுக்கு உயர்கல்விக்காக வந்த கலும்பா முவாலே, இங்குள்ள வாய்ப்புகளைக் கண்டு வியப்படைந்துள்ளார். </p><p>தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜிம்பாப்வேவில் பல்கலைக்கழகங்களில் சேருவது மிகவும் கடினமானது மற்றும் கடுமையான போட்டி நிறைந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பல்வேறு கட்டண அமைப்புகளில், எண்ணற்ற பாடப் பிரிவுகளுடன் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் செயல்பட்டு வருவதை அவர் பாராட்டியுள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவில் பயின்று வருவதைக் கண்டு தான் ஆச்சரியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>உலகத்த<strong>ரம் வாய்ந்த மருத்</strong>துவம் </h2><p>கல்வியைத் தவிர இந்தியாவின் மருத்துவத் துறை மற்றும் உணவு முறையையும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். ஜிம்பாப்வே நாட்டில் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் பெறுவது கடினம் மற்றும் அதிக செலவு பிடிக்கக்கூடியது என்றும், ஆனால் இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த உயர்தர சிகிச்சை மிக எளிதாகக் கிடைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>உணவு முறையைப் பொறுத்தவரை, ஜிம்பாப்வேயில் சாட்சா, அரிசி சாதம் மற்றும் காரத்திற்காக மிளகாய் மட்டுமே சேர்க்கப்பட்ட உணவுகள் பிரதானமாக இருக்கும். ஆனால் இந்தியாவில் தினமும் ஒரு புதிய சுவையை அனுபவிக்க முடியும் என்றும், சுவைகளின் பிரம்மாண்ட உலகமே இந்தியாவில் உணவில் நிறைந்துள்ளது என்றும் அவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.</p><h2>இணைய<strong>வாசிகளின் வரவே</strong>ற்பு</h2><p>கலும்பா முவாலே பகிர்ந்துள்ள இந்த வீடியோ 53 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்துள்ள பல இந்திய இணையவாசிகள், அவருக்கு நெகிழ்ச்சியான வரவேற்பை அளித்து வருகின்றனர். "அன்பும் பரபரப்பும் நிறைந்த இந்தியாவிற்கு உங்களை வரவேற்கிறோம், உங்கள் இந்திய வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள் என்று நம்புகிறோம்" எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1 கோடி கடத்தல் வழக்கு: 26 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-rs-1-crore-smuggling-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-rs-1-crore-smuggling-case#comments</comments><guid isPermaLink="false">3ec6c0bc-f350-433e-8be5-d8f55c4d9607</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:54:52 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:54:52.476Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கடத்தல் வழக்கு,delhi,Ghaziabad,டெல்லி,smuggling case,மீரட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cpdac862/smugling.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ smuggling case ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cpdac862/smugling.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற கடத்தல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாக காவல்துறையிடம் இருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த அமித் யாதவ் (57) என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டேராடூனில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.</p><h2>31 ஆண்டுகளு<strong>க்கு முந்தைய</strong> கடத்தல் சம்பவம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-death-penalty-row-muzaffarnagar-fast-track-judge-ravi-kumar-diwakar-awards-death-sentence-to-22-convicts-in-10-cases">டெல்லி </a>படேல் நகரைச் சேர்ந்த தொழிலதிபரின் மகனான ரிஷி சேத்தி என்பவர், 1995-ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று எய்ம்ஸ் இயக்குனர் குடியிருப்பு அருகே தனது காரில் அமர்ந்திருந்தபோது 3 முதல் 4 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டுக் கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் அவரை ரகசிய இடத்தில் அடைத்து வைத்து, அவரது குடும்பத்தினரிடம் 1 கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்டனர்.</p><h2>பொறி வைத்<strong>து பிடித்த</strong> போலீசார்</h2><p>காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, மீரட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் 10 லட்சம் ரூபாய் பணத்தை வைப்பதாகக் கடத்தல்காரர்களிடம் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 16, 1995 அன்று அப்பணத்தைப் பெற வந்த அமித் யாதவை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், காசியாபாத்தில் உள்ள வீட்டின் சேமிப்பு அறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த ரிஷி சேத்தி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.</p><h2>இ<strong>டைக்கால ஜாமீனில் தப்பித்</strong>தல்</h2><p>இந்த வழக்கில் 1999-ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றம் அமித் யாதவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, 2000-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவருக்கு ஒரு மாத இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் ஜாமீன் காலம் முடிந்ததும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பியோடினார்.</p><h2>பில்<strong>டர் வாழ்</strong>க்கை</h2><p>தலைமறைவான அமித் யாதவ், காசியாபாத் வாடகை வீட்டைக்காலி செய்துவிட்டு, பாக்பத்தில் இருந்த தனது பூர்வீகச் சொத்துகளை விற்றார். டெல்லி காவல்துறையின் பிடியிலிருந்து தப்ப ரிஷிகேஷிற்குச் சென்று அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். பின்னர் 2001-இல் டேராடூனுக்குச் சென்று தனது அடையாளத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டு, புதிய பெயரில் கட்டிட ஒப்பந்ததாரராக உருவெடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.</p><h2>பயோ<strong>மெட்ரிக்</strong> ஆதாரம்</h2><p>சமீபத்திய புகைப்படங்கள் எதுவுமில்லாத நிலையில், 1999-ஆம் ஆண்டு தண்டனையின் போது பதிவு செய்யப்பட்ட பழைய பயோமெட்ரிக் மற்றும் கைரேகை பதிவுகளை குற்றப்பிரிவு போலீசார் மீட்டெடுத்தனர். அதன் மூலம் தீவிர விசாரணை நடத்தி டேராடூனில் அவர் இருக்கும் இடத்தை உறுதிசெய்து, கடந்த 13ம் தேதி அன்று அதிரடி சோதனை நடத்தி அவரைப் பிடித்தனர். தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>4 மாதங்கள்.. 10 வழக்குகள்..  22 பேருக்கு மரண தண்டனை - வைரலாகும் நீதிபதி</title><link>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-death-penalty-row-muzaffarnagar-fast-track-judge-ravi-kumar-diwakar-awards-death-sentence-to-22-convicts-in-10-cases</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-death-penalty-row-muzaffarnagar-fast-track-judge-ravi-kumar-diwakar-awards-death-sentence-to-22-convicts-in-10-cases#comments</comments><guid isPermaLink="false">e0c0af9e-a802-43dc-8a29-289d5c6465a7</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:51:52 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:51:52.432Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,மரண தண்டனை,judge,Death Penalty,உத்தரப் பிரதேசம்,நீதிபதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/yxldx39a/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரவி குமார் திவாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரவி குமார் திவாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/yxldx39a/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேச </a>மாநிலம் முசாபர்நகர் விரைவு நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர் கடந்த நான்கு மாதங்களில் 10 வெவ்வேறு வழக்குகளில் 22 குற்றவாளிகளுக்கு ரவி குமார் திவாகர் மரண தண்டனை விதித்துள்ளார். </p>  <h2>மரண தண்டனைகள்</h2><p>ஆகஸ்ட் 13 அன்று, 12 ஆண்டுகளுக்கு முன்பு ஷாம்லி மாவட்டத்தில் நடந்த பவன் குமார் என்பவரது கொலை வழக்கில் ராம்வீர், ராஜீவ், ராகுல், ஹரேந்தர் குமார் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு அபராதத்துடன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">மரண தண்டனை</a> விதித்தார்.</p><p>1999ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் பிணை கேட்டு தொழிலதிபர் சலீம் என்பவரை கடத்திக் கழுத்தை அறுத்துக் கொன்ற வழக்கில், முதன்மை குற்றவாளியான ஷாநவாஸு என்பவருக்கு அண்மையில் மரண தண்டனை வழங்கினார்.</p><p>2011இல் நடந்த விவசாயி கொலை வழக்கு, 2010 பஞ்சாயத்து தேர்தல் முன்விரோதக் கொலை வழக்கு, பணியில் இருந்த ஹோம் கார்டு குத்திக் கொல்லப்பட்ட வழக்கு மற்றும் பல இரட்டைக்கலை வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.</p> <p>குற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை என ஒரு தரப்பினர் இத்தீர்ப்புகளை ஆதரித்தாலும், குறுகிய காலத்தில் இத்தனை பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது குறித்து மனித உரிமை ஆர்வலர்களும் சட்ட வல்லுநர்களும் கவலைகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p> <h2>ரவி குமார் திவாகர்</h2><p>லக்னோவைச் சேர்ந்த 46 வயதான நீதிபதி ரவி குமார் திவாகர் முதன்முதலில், 2009ஆம் ஆண்டு அசாம்கரில் கூடுதல் சிவில் நீதிபதியாக பொறுப்பேற்றார்.</p><p>தொடர்ந்து சுல்தான்பூர் உட்படப் பல இடங்களில் பணியாற்றிய இவர், 2025 நவம்பர் முதல் முசாபர்நகரில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.</p><p>முன்னதாக, 2022இல் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோகிராபி ஆய்வு நடத்த உத்தரவிட்டதன் மூலமும் இவர் நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>செயற்கை சுவையூட்டிகளுக்கு தடை: ராயல் சேலஞ்ச், மெக்டவல்ஸ் மதுபானங்களின் பார்முலா மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-food-safety-authority-forces-formula-change-for-royal-challenge-mcdowells-spirits</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-food-safety-authority-forces-formula-change-for-royal-challenge-mcdowells-spirits#comments</comments><guid isPermaLink="false">74611483-60c4-4af3-a1e7-69648b0a7366</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:08:41 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:08:41.652Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FSSAI,Royal Challenge,McDowell&apos;s,Antiquity Blue,ராயல் சேலஞ்ச்,மெக்டவல்ஸ்,ஆண்டிகுவிட்டி ப்ளூ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/359w3z4c/drug.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ royal challange
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/359w3z4c/drug.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுபானங்களின் தயாரிப்பு முறையில் மாற்றம் செய்ய டியாஜியோ ஒப்புக் கொண்டுள்ளது. ராயல் சேலஞ்ச், ஆண்டிகுவிட்டி ப்ளூ மற்றும் மெக்டவல்ஸ் எண் 1 ஆகிய பிரபல மதுபானங்களின் தயாரிப்பு முறைகளை மாற்றப் போவதாக அந்த நிறுவனம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் (FSSAI) உறுதி அளித்துள்ளது.</p><p>உணவுப் பாதுகாப்பு அமைப்பின் அதிரடி நடவடிக்கை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac">மதுபானங்களில் </a>செயற்கை சுவையூட்டிகளைச் சேர்ப்பதைக் கட்டுப்படுத்தும் விதமாக சில மாநிலங்களில் இந்த பானங்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது தயாரிப்பு முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><h2>தடைக்<strong>கான காரணம்</strong></h2><p>இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் மதுபான தயாரிப்பில் உள்ள சில விதிமீறல்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>* விஸ்கி பானத்தில் பிரத்யேக விஸ்கி சுவையையோ அல்லது ரம் பானத்தில் செயற்கையான ரம் சுவையையோ தனியாகச் சேர்ப்பது சர்வதேச உற்பத்தி நடைமுறைகளுக்கு எதிரானது என ஆணையம் தெரிவித்தது.</p><p>* பழைய மரப் பீப்பாய்களில் முறைப்படி சேமித்து வைக்கப்பட்டுப் பதப்படுத்தப்படுவதற்குப் பதிலாக, நடுநிலையான தானிய மதுபானத்துடன் செயற்கை சுவையூட்டிகளைச் சேர்த்துத் தயாரிப்பது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயலாகும் என எச்சரிக்கப்பட்டது.</p><p>* ராயல் சேலஞ்ச் மற்றும் ஆண்டிகுவிட்டி ப்ளூ ஆகியவை மத்தியப் பிரதேசத்திலும், மெக்டவல்ஸ் எண் 1 ரம் மகாராஷ்டிராவிலும் உள்ள உற்பத்தி மையங்களில் விதிகளுக்குப் புறம்பாகச் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.</p><h2>டியா<strong>ஜியோ நிறுவனத்தின் புதிய மு</strong>டிவுகள்</h2><p>கட்டுப்பாட்டு அமைப்பின் நடவடிக்கையை அடுத்து, டியாஜியோ நிறுவனம் இந்தியா முழுவதற்கும் பொருந்தக்கூடிய சில முக்கிய மாற்றங்களைச் செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.</p><p>* தனது பிரபல மதுபானங்களில் தனியாகச் சேர்க்கப்பட்டு வந்த விஸ்கி மற்றும் ரம் சுவையூட்டிகளை முற்றிலுமாக நிறுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.</p><p>* அடுத்த 3 மாத கால அவகாசத்திற்குள் அனைத்துப் பிராண்டுகளின் தயாரிப்பு விதிகளையும் மாற்றி அமைக்க டியாஜியோ திட்டமிட்டுள்ளது.</p><p>* புதிய தயாரிப்பு முறை நடைமுறைக்கு வரும் வரை, பாட்டில்களின் முன்பகுதியில் என்ன சுவையூட்டி சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நுகர்வோர் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் லேபிளிங் செய்யப்படும்.</p><h2>விற்பனைத் <strong>தடை விலக்கப்படுமா</strong></h2><p>நிறுவனம் தயாரிப்பு முறையை மாற்றுவதற்கும், பாட்டில்களில் சரியான விவரங்களைக் குறிப்பிடுவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளதால், விதிக்கப்பட்ட தடையை வாபஸ் பெற உணவுப் பாதுகாப்பு ஆணையம் பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு லட்சக்கணக்கான கேஸ்கள் விற்பனையாகும் இந்த முக்கிய பிராண்டுகளின் தயாரிப்பு மாற்றம், நாட்டின் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள மதுபான சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>என்னை நிம்மதியாக சாக விடுங்கள்.. த்விஷா சர்மா தற்கொலைக்கு கணவர் - மாமியாரே காரணம் - சிபிஐ குற்றப்பத்திரிகை  </title><link>https://www.maalaimalar.com/news/national/twisha-sharma-suicide-case-husband-and-mother-in-laws-harassment-drove-model-actress-to-death</link><comments>https://www.maalaimalar.com/news/national/twisha-sharma-suicide-case-husband-and-mother-in-laws-harassment-drove-model-actress-to-death#comments</comments><guid isPermaLink="false">91194dc3-72ba-4885-b493-b89515d507bf</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:55:06 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:55:06.743Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வரதட்சணை கொடுமை,மாமியார்,Dowry harassment,mother-in-law,த்விஷா சர்மா,tiwsha sharma</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/39henela/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ த்விஷா சர்மா, கணவர் - மாமியார் ]]></media:title><media:description type="html"><![CDATA[ த்விஷா சர்மா, கணவர் - மாமியார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/39henela/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/twisha-sharma">த்விஷா ஷர்மா </a>மாடல் அழகியாகவும் நடிகையாகவும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.</p><p>கடந்த மே 13 அன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் கட்டாரா மலைப்பகுதியில் உள்ள கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் த்விஷா ஷர்மாவின் உடல் மீட்கப்பட்டது.</p> <h2>குற்றச்சாட்டு</h2><p>தனது மகளை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">வரதட்சணை </a>தொடர்பாக துன்புறுத்தி கொன்றுவிட்டதாகவும், அவர் வசித்து வந்த வீட்டின் கேமரா காட்சிகளில் முரண்பாடு உள்ளதாகவும் பெண்ணின் தந்தை நவ்நீதி ஷர்மா குற்றம்சாட்டியிருந்தார்.</p><p>இதையடுத்து தலைமறைவான பெண்ணின் கணவர் சமர்த் சிங் மற்றும் முன்னாள் மாவட்ட நீதிபதியான சமர்த்தின் தாயார் கிரிபலா சிங் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.</p> <h2>சிபிஐ குற்றப்பத்திரிகை</h2><p>இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ போபால் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.</p><p>அதில், கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோர் அளித்த தொடர் மன உளைச்சல் மற்றும் கொடுமைகள் காரணமாக த்விஷா சர்மா தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லாமல் போயுள்ளது என்று சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது</p><p>த்விஷா சர்மா பெற்ற மனநல ஆலோசனை குறித்த ஆவணங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவை இதற்கு முக்கிய ஆதாரங்களாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.</p> <h2>மன உளைச்சல்</h2><p>குற்றப்பத்திரிக்கையின்படி, திருமணத்திற்குப் பிறகு த்விஷா சர்மா தொடர்ந்து மன ரீதியாக சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். கணவர் சமர்த் சிங் அவரைப் பலமுறை அவமானப்படுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.</p><p>மகனின் இந்த தவறான நடவடிக்கைகளுக்கு தாய் கிரிபாலா சிங் முழு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தியுள்ளார். கணவர் மீது த்விஷா புகார் கூறும்போதெல்லாம் , கிரிபாலா தன் மகனுக்கு ஆதரவாக நின்று அவரைப் பாதுகாத்துள்ளார்.</p><p>த்விஷாவிற்கு நீண்டகாலம் மன உளைச்சலை ஏற்படுத்துவதே இருவரின் முதன்மை நோக்கமாகவும் திட்டமாகவும் இருந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> <h2>கர்ப்பம்</h2><p>2026 ஏப்ரல் மாதத்தில் த்விஷா கர்ப்பமானார். ஆனால், குடும்பத்தில் நிலவிய தொடர் கசப்பான சூழல், திருமண வாழ்க்கையின் மீது ஏற்பட்ட விரக்தி மற்றும் விரிசல் காரணமாக, கர்ப்பத்தை தொடர்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவர் இருந்துள்ளார்</p><p>இறுதியாக தனது கர்ப்பத்தைக் கலைக்க த்விஷா முடிவெடுத்தார். இந்த முடிவால் த்விஷா, அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோருக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்தது. தொடர் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.</p> <h2>நிம்மதியாக சாக விடுங்கள்</h2><p>மே 12, இரவு 9:36 மணியளவில் த்விஷா தற்கொலை செய்துகொள்வதற்குச் சற்று முன்பு தனது நாத்தனார் ராஷி அப்ரோலுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் குறுஞ்செய்தியில், "உன் அண்ணனிடம் (சமர்த்) அவரது மனைவியின் எஞ்சிய உடலை வந்து எடுத்துக்கொள்ளச் சொல். </p><p>ஆனால் நாளைக்கு வந்து எடுக்கச் சொல். இப்போது என்னை நிம்மதியாக சாக விடுங்கள்" என்று மெசேஜ் செய்திருக்கிறார்.</p> <p>இந்த வாட்ஸ்அப் குறுஞ்செய்திதான், த்விஷா தீவிர மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு தற்கொலைக்கு முயன்றார் என்பதற்கான மிக முக்கிய ஆதாரமாக சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வழக்கின் விசாரணை இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. த்விஷாவின் ஐபோன், சிசிடிவி மற்றும் குரல் மாதிரிகளின் தடயவியல் பரிசோதனை முடிவுகளுக்காக சிபிஐ காத்திருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>குற்ற வழக்குகளை சந்திக்கும் 14 முதலமைச்சர்கள், 326 எம்.பி.க்கள் - சுப்ரீம் கோர்ட்டில் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/14-cm-and-326-mps-facing-criminal-cases-information-revealed-in-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/14-cm-and-326-mps-facing-criminal-cases-information-revealed-in-supreme-court#comments</comments><guid isPermaLink="false">b1442748-58f1-452b-8c67-a5b34878e24e</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:46:20 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:46:20.698Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சுப்ரீம் கோர்ட்,CM,எம்பிக்கள்,MPs,criminal cases,குற்ற வழக்குகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/7jjepzho/supremecourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/7jjepzho/supremecourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாட்டில் 14 முதல்-மந்திரிகள், 326 எம்.பி.க்கள் ஆகியோர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.</strong></em></p> <h2>சுப்ரீம் கோர்ட்</h2><p>எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிடக்கோரி வக்கீல் அஸ்வினி உபாத்யாயா <a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-to-release-cauvery-water-state-assures-12000-cusecs-per-day-to-tamil-nadu-in-supreme-court">சுப்ரீம் கோர்ட்டில்</a> ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.</p><p>அந்த வழக்கில், கோர்ட்டுக்கு உதவுவதற்காக மூத்த வக்கீல் விஜய் ஹன்சாரியா நியமிக்கப்பட்டார். அவர் ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.</p> <p>அதில் அவர் கூறியிருப்பதாவது:-</p><h2>ரேவந்த் ரெட்டி</h2><p>நாட்டில் மொத்தம் உள்ள 28 மாநிலங்களில், 14 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு எதிராக அதிகபட்சமாக 89 வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p> <h2>குற்றவியல் வழக்குகள்</h2><p>மேற்கு வங்காள முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி மீது 29 வழக்குகளும், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மீது 19 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.</p><p>முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 4 ஆயிரத்து 192 குற்றவியல் வழக்குகள் இருக்கின்றன. மொத்தம் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களில், 251 பேர் குற்றவியல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர். அவற்றில் 170 வழக்குகள், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்கவை ஆகும்.</p> <p>மொத்தம் உள்ள 233 மாநிலங்களவை எம்.பி.க்களில் 75 பேர் (33 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவற்றில் 40 வழக்குகள், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்கவை ஆகும்.</p><h2>கேரளம், தமிழ்நாடு</h2><p>மாநிலவாரியாக பார்த்தால், கேரளாவின் மொத்த எம்.பி.க்கள் 20 பேரில் 19 பேர் குற்றவியல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர். அவர்களில் 11 பேர் மீது கடுமையான வழக்குகள் உள்ளன.</p> <h2>உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா</h2><p>17 தெலுங்கானா எம்.பி.க்களில் 14 பேர் மீதும், 21 ஒடிசா எம்.பி.க்களில் 16 பேர் மீதும், 14 ஜார்கண்ட் எம்.பி.க்களில் 10 பேர் மீதும், 39 தமிழக எம்.பி.க்களில் 26 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளன. </p><p>உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், பீகார், கர்நாடகா, ஆந்திரா ஆகிய பெரிய மாநிலங்களின் சுமார் 50 சதவீத எம்.பி.க்கள் குற்றவியல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.</p><p>கடந்த ஆண்டு, 1.243 குற்றவியல் வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. அதே ஆண்டில் 1,050 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p>  <p>எம்.பி.. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை விரைவாக விசாரிக்க அவற்றை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">சுப்ரீம் கோர்ட்டு</a> கண்காணிக்க வேண்டும். அந்த வழக்குகளின் விசாரணையை முடித்த பிறகுதான் மற்ற வழக்குகளை தனிக்கோர்ட்டுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.</p> <p>எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் முடிந்த பிறகுதான் மற்ற வழக்குகளை தனிக்கோர்ட்டுக்கு மாவட்ட நீதிபதிகள் ஒதுக்க வேண்டும். அந்த வழக்குகளின் முன்னேற்றத்தை ஐகோர்ட்டுகள் மாதந்தோ றும் கண்காணிக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட ஓராண்டுக்குள் விசாரணை முடிவடைய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;ப. சிதம்பரம் உண்மையான நக்ஸலைட்..&quot; விசாரணை நடத்த அசாம் முதல்வர் வலியுறுத்தல் </title><link>https://www.maalaimalar.com/news/national/naxalism-political-row-chidambaram-and-himanta-trade-barbs-over-modis-dimagi-naxal-remark</link><comments>https://www.maalaimalar.com/news/national/naxalism-political-row-chidambaram-and-himanta-trade-barbs-over-modis-dimagi-naxal-remark#comments</comments><guid isPermaLink="false">eef3e399-8cf9-4d4b-b68a-0b7afc7732f8</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:42:53 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:42:53.213Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Naxalite,ஹிமாந்தா பிஸ்வா சர்மா,Himanta Biswa Sarma,p. chidambaram,ப. சிதம்பரம்,நக்ஸலைட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2cvn9rd4/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ப. சிதம்பரம், ஹிமாந்தா பிஸ்வா]]></media:title><media:description type="html"><![CDATA[ ப. சிதம்பரம், ஹிமாந்தா பிஸ்வா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2cvn9rd4/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>80வது சுதந்திர தினமான கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் உரையாற்றுகையில் நாட்டில் ஆயுதமேந்திய நக்ஸலைட்டுகளை ஒழித்துவிட்டோம் ஆனால் <a href="https://www.maalaimalar.com/news/national/dimaki-naxal-row-modis-independence-day-speech-sparks-opposition-backlash">திமாகி நக்சல்கள் </a>(அறிவுஜீவி நக்சல்கள்) இன்னும் இருக்கிறார்கள் என பேசியிருந்தார். </p> <h2>திமாகி நக்சல்</h2><p>இது கேள்வி கேட்டும் எதிர்கட்சிகளை நோக்கி பிரதமர் பயன்படுத்திய வார்த்தையாக பார்க்கப்பட்டது. இதற்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/national/proud-to-be-dimagi-naxal-congs-p-chidambaram-hits-back-at-pm">ப. சிதம்பரம் </a>தான் ஒரு திமாகி நக்சலாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.</p><p>மறுபுறம் திமாகி நக்சல் என பிரதமர் குறிப்பிட்டது எதிர்கட்சிகளை அல்ல, நாட்டை பிரிக்க நினைக்கும் பிரிவினைவாதிகளை என்று விளக்கம் அளித்தார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ.</p><p>இந்த சூழலில் ப. சிதம்பரம் கருத்துக்கு பாஜகவை சேர்ந்த அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா எதிர்வினை ஆற்றியுள்ளார்.</p> <h2>ஹிமாந்தா பிஸ்வா</h2><p>நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய சர்மா, ப. சிதம்பரம் வெறும் 'திமாகி நக்சல்' அல்ல, அவர் ஒரு ‘பியூர் நக்சல்’ (உண்மையான நக்சல்)</p><p>ப. சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நாட்டில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் தொடர்ந்தபோதிலும், அவர் வேண்டுமென்றே நக்சலிசத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்தாரா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.</p><p>சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோதுதான், சத்தீஸ்கரில் மூத்த காங்கிரஸ் தலைவர் வி.சி. சுக்லா உட்படப் பல காங்கிரஸ் தலைவர்கள் நக்சல் தாக்குதலில் உயிரிழந்தனர்.</p> <p>இவ்வளவு பெரிய இழப்புகள் ஏற்பட்ட பிறகும், நக்சலிசத்தை அழிக்கக் காங்கிரஸ் அரசு எந்த உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.</p><p>நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தி, அதைப் பயன்படுத்தி 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவே காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது.</p><p>பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான ஆட்சியில், ஆயுதமேந்திய நக்சலிசம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>குடிநீர் குழாய்களில் பாக்டீரியா.. நாட்டின் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளே இல்லை - சிஏஜி அறிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/national/cag-report-flags-poor-passenger-amenities-and-contaminated-drinking-water-at-major-railway-stations</link><comments>https://www.maalaimalar.com/news/national/cag-report-flags-poor-passenger-amenities-and-contaminated-drinking-water-at-major-railway-stations#comments</comments><guid isPermaLink="false">d8bb99c5-2639-42b2-a846-a459f439b9db</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:03:25 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:03:25.835Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில்வே,Railways,railway stations,CAG Report,ரெயில் நிலையங்கள்,சிஏஜி அறிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/030opsjm/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரெயில் நிலையம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் நிலையம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/030opsjm/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் உள்ள <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/another-ac-electric-train-in-chennai">ரெயில் </a>நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளில் கடும் குறைபாடு இருப்பதாக சிஏஜி அறிக்கை  வெளியாகியுள்ளது. </p><p>பல்வேறு <a href="https://www.maalaimalar.com/topic/railway-stations">ரெயில்வே </a>மண்டலங்களில் உள்ள 512 புறநகர் அல்லாத வெளியூர் ரெயில்கள் இயக்கப்படும் ரெயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>கோயம்புத்தூர், பாலக்காடு, ஐதராபாத், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரெயில் நிலையம் ஆகியவை இதில் அடங்கும்.</p> <h2>பாக்டீரியா</h2><p>அறிக்கையின்படி, 2022-23 நிதியாண்டில் 8 மண்டலங்களில் உள்ள 49 ரெயில் நிலையங்களின் பிளாட்பார குடிநீர் குழாய்களில் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் Total Coliform என்ற பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது.</p><p>2023-24 நிதியாண்டில் 9 மண்டலங்களில் உள்ள 56 ரெயில் நிலையங்களில் வாட்டர் கூலர்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் E. coli பாக்டீரியா கண்டறியப்பட்டது.</p><p>E. coli பாக்டீரியா பொதுவாக மனித அல்லது விலங்கு கழிவு மாசுபாட்டால் நீரினுள் ஊடுருவக்கூடிய ஒன்றாகும்.</p>  <h2>அடிப்படை வசதிகள்</h2><p>ஆய்வு செய்யப்பட்ட 512 ரெயில் நிலையங்களில் 458 நிலையங்களில், அதாவது சுமார் 90% நிலையங்களில் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய அத்தியாவசிய வசதிகள் கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது.</p><p>மும்பை சென்ட்ரல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், ஹவுரா - சீல்டா மற்றும் டெல்லி போன்ற நாட்டின் மிகப்பெரிய ரெயில் நிலையங்களிலும் கூட இருக்கை வசதி, தூய்மை, குப்பைத் தொட்டிகள் மற்றும் மின்னணு தகவல் பலகைகள் அமைப்பதில் பெருமளவு குறைபாடுகள் பதிவாகியுள்ளன.</p> <h2>பரிந்துரை</h2><p>ரெயில்வே வாரியம் ஏப்ரல் 2018இல் NSG-1 முதல் NSG-6 வகையை சேர்ந்த அனைத்து ரெயில் நிலையங்களிலும் குறைந்தபட்ச வசதிகளை உறுதி செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.</p><p>எனவே, ரெயில் நிலையங்களில் குடிநீர் விநியோக அமைப்புகளைத் தொடர்ந்து ஆய்வு செய்யவும், குடிநீரின் தரத்தைச் சோதிக்க நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை தீவிரமாக எடுத்துக்கொண்டு பின்பற்றவும் ரெயில்வே நிர்வாகத்திற்கு சிஏஜி பரிந்துரை செய்துள்ளது.</p> <p>NSG-1 முதல் NSG-3 வரை அதிக வருமானம் ஈட்டும் மிக முக்கியப் பெருநகர நிலையங்கள் எனவும், NSG-4 முதல் NSG-6 வரை நடுத்தர மற்றும் சிறிய அளவிலான ரெயில் நிலையங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தேர்வுகள் ரத்து - உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்ட மாணவர் தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-devendra-nath-mahto-ends-hunger-strike-after-jssc-cgl-exam-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-devendra-nath-mahto-ends-hunger-strike-after-jssc-cgl-exam-cancelled#comments</comments><guid isPermaLink="false">701adfe1-747c-4d29-8220-eb83f701a286</guid><pubDate>Tue, 18 Aug 2026 00:19:45 +0000</pubDate><atom:updated>2026-08-18T00:19:45.972Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்வுகள் ரத்து,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்,Exams Cancelled</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/a4y3aunq/Devendra-Nath-Mahto.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Devendra Nath Mahto]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/a4y3aunq/Devendra-Nath-Mahto.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், JSSC-CGL தேர்வு மற்றும் 2014 முதல் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக <a href="https://www.maalaimalar.com/topic/jharkhand">ஜார்க்கண்ட்</a> முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார்.</p><p>JSSC-CGL தேர்வு மற்றும் TDPL மூலம் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/hemant-soren">ஹேமந்த் சோரன்</a> அறிவித்ததைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் அமைச்சர்கள் தீபிகா பாண்டே சிங் மற்றும் இர்பான் அன்சாரி ஆகியோர் முன்னிலையில், ராஞ்சியில் உள்ள சதார் மருத்துவமனையில் மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். </p><h2>கடுமையான சட்டங்கள் தேவை:</h2><p>மாநிலத்தில் ஆட்சேர்ப்பு தேர்வு நடைமுறைகள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக மஹ்தோ இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார். </p><p>செய்தியாளர்களிடம் பேசிய மஹ்தோ, தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதற்காக முதல்வர் சோரன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் மாநில அமைச்சர்கள் தீபிகா பாண்டே மற்றும் இர்பான் அன்சாரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.</p><p>தேர்வுகளை கண்காணிக்கவும், வினாத்தாள் கசிவை தடுக்கவும் கடுமையான சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.</p><p>இது குறித்து பேசும் போது மஹ்தோ கூறியதாவது: "இன்று உண்ணாவிரத போராட்டத்தின் 16-வது நாள்; இந்தப் போராட்டம் ஜூலை 2-ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 20-ஆம் தேதி முதல்வருடனான சந்திப்பை தொடர்ந்து, ஜூலை 28-ஆம் தேதி சிஐடி (CID) விசாரணை தொடங்கப்பட்டது. முன்னாள் தலைமைச் செயலாளர் மற்றும் JPSC தலைவர் போன்ற உயர்மட்டப் பொறுப்பில் உள்ளவர்கள் உட்பட யாரையும் விட்டுவைக்காமல், இந்த விசாரணை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><h2>துணிச்சலான நடவடிக்கை:</h2><p>இத்தகைய முக்கிய முடிவை எடுப்பதற்கான துணிச்சலை காட்டிய ஜார்க்கண்ட் அரசுக்கு நான் நன்றி கூறுகிறேன். ஒரு தேர்வை ரத்து செய்வது என்பது மிகப்பெரிய சவாலான காரியமாகும். JSSC CGL தேர்வுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை ஏற்கனவே பணி நியமனம் பெறும் நிலையை எட்டியிருந்ததாலும், பல மாணவர்கள் ஏற்கனவே தங்கள் இடங்களை உறுதி செய்திருக்கக்கூடும் என்பதாலும், இது எளிதான முடிவாக இருக்கவில்லை.</p><p>இருப்பினும், இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மாணவர்களுக்காக அரசு இந்த துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டது... ஜார்க்கண்ட் அரசு, முதல்வர் ஹேமந்த் சோரன், ராகுல் காந்தி, எங்கள் எம்.எல்.ஏ., அமைச்சர் தீபிகா பாண்டே, இர்பான் அன்சாரி, மாணவர்கள், ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் போராட்டத்தின் போது நள்ளிரவு 1 அல்லது 2 மணிக்கு எங்களுக்குத் தண்ணீர் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கிய அறிமுகம் இல்லாத நபர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சீ கார்டியன் டிரோன்களை குத்தகைக்கு எடுக்கும் இந்திய கடற்படை - ரூ. 1,943 கோடியில் ஒப்பந்தம்</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-navy-to-get-2-mq-9b-sea-guardian-drones-in-rs-1943-cr-lease-deal</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-navy-to-get-2-mq-9b-sea-guardian-drones-in-rs-1943-cr-lease-deal#comments</comments><guid isPermaLink="false">e590a10a-cc5d-4a68-b414-42faa82edfe2</guid><pubDate>Mon, 17 Aug 2026 18:51:47 +0000</pubDate><atom:updated>2026-08-17T18:51:47.637Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DRONES,Indian Navy,இந்திய கடற்படை,டிரோன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/te8irl5d/MQ-9B-SeaGuardian-Drone.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MQ-9B SeaGuardian Drone]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/te8irl5d/MQ-9B-SeaGuardian-Drone.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கடற்படைக்காக, அதிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கக்கூடிய ஆளில்லா விமானங்களான (UAV) இரண்டு MQ-9B சீ கார்டியன் (Sea Guardian) ரக டிரோன்களை, அமெரிக்காவின் முன்னணி பாதுகாப்பு நிறுவனமான 'ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிக்கல் சிஸ்டம்ஸ்'-இடம் இருந்து ரூ. 1,943 கோடிக்கு குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.</p><p>ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுக்கப்பட்ட இரண்டு சீ கார்டியன் டிரோன்களை கடற்படை இயக்கி வருகிறது. அமெரிக்காவுடனான 4 பில்லியன் டாலர் மதிப்பிலான கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் இது போன்ற 31 டிரோன்களை இந்தியா பெற காத்திருக்கும் நிலையில், கூடுதலாக இரண்டு MQ-9B சீ கார்டியன் டிரோன்களை குத்தகைக்கு எடுக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>ஒப்பந்த மதிப்பு:</h2><p>இந்த டிரோன்கள் 35 மணி நேரத்திற்கும் மேலாக வானில் பறக்கும் திறன் கொண்டவை. மேலும் இவை நான்கு 'ஹெல்ஃபயர்' (Hellfire) ஏவுகணைகளையும், சுமார் 450 கிலோ எடையுள்ள குண்டுகளையும் சுமந்து செல்லும் திறன் கொண்டவை. </p><p>கடல்சார் கண்காணிப்பு, நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர் மற்றும் எல்லைக்கு அப்பால் உள்ள இலக்குகளை குறிவைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை என்பதால் இந்த சீ கார்டியன் டிரோன்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.</p><p>தொலைவில் இருந்து இயக்கப்படும் இந்த விமானங்களுக்காக 'ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிக்கல் சிஸ்டம்ஸ்' நிறுவனத்துடன் 30 மாத காலத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்தது.</p><p>"இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ. 1,943 கோடியாகும். பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலாளர் மற்றும் தலைமை இயக்குநர் (கொள்முதல்) முன்னிலையில் இது கையெழுத்தானது," என்று அது கூறியது.</p><h2>கடல்சார் விழிப்புணர்வு:</h2><p>MQ-9B சீ கார்டியன் தொலைவில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் மேம்பட்ட அமைப்புகள், அதிநவீன சென்சார்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இந்திய கடற்படையின் கடல்சார் விழிப்புணர்வு திறனை கணிசமாக மேம்படுத்தும் என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>"இந்த அமைப்புகள் கடல்சார் பகுதிகளில் பரந்த பரப்பளவில் தொடர்ச்சியான உளவு தகவல் சேகரிப்பு, கண்காணிப்பு மற்றும் உளவு பார்த்தல் (ISR) ஆகிய சேவைகளை வழங்கும். இதன் மூலம் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஏற்படும் நிகழ்வுகளை கண்காணிக்கவும், அவற்றுக்கு எதிர்வினையாற்றவும் இந்தியாவின் திறன் வலுப்படுத்தப்படும்," என்று அது கூறியது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வுகளை ரத்து செய்தது ஜார்க்கண்ட் அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-cancels-jssc-cgl-all-exams-conducted-since-2014-by-outsourced-agency-tdpl</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-cancels-jssc-cgl-all-exams-conducted-since-2014-by-outsourced-agency-tdpl#comments</comments><guid isPermaLink="false">7425eea3-6495-43e3-a927-eada104d7316</guid><pubDate>Mon, 17 Aug 2026 17:58:20 +0000</pubDate><atom:updated>2026-08-17T17:58:20.321Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்வுகள் ரத்து,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்,Exams Cancelled</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/3nj3so0f/Jharkhand-Protestors.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Protestors]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/3nj3so0f/Jharkhand-Protestors.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், JSSC-CGL தேர்வு மற்றும் 2014 முதல் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக <a href="https://www.maalaimalar.com/news/national">ஜார்க்கண்ட்</a> முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார்.</p><p>தேர்வு ரத்து மற்றும் சி.பி.ஐ. விசாரணை கோரி <a href="https://www.maalaimalar.com/topic/jharkhand-protest">மாணவர்கள் போராட்டம்</a> மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><h2>அமைச்சரவை கூட்டம்:</h2><p>முதல்வர் சோரன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையின் நீண்ட நேர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றான ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வை (JSSC-CGL) ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.</p><p>மேலும், வெளிமுகமை நிறுவனமான TDPL (TSR Data Processing Pvt Ltd) நடத்திய அனைத்துத் தேர்வுகளையும், அந்த நிறுவனம் வெளியிட்ட தேர்வு முடிவுகளையும் ரத்து செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு சோரன் கூறினார்.</p><h2>தேர்வு சீர்திருத்த குழு:</h2><p>மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமிதாப் கௌஷல் தலைமையில் தேர்வு சீர்திருத்த குழு ஒன்றை அமைப்பதாகவும் அவர் அறிவித்தார். பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வரும் வேலை தேடுபவர்கள், சி.பி.ஐ. விசாரணை மற்றும் JSSC-CGL தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.</p><p>இந்தப் போராட்டம் இன்றுடன் (திங்கள்கிழமை) 24-ஆவது நாளை எட்டியது; இதில் ஆறு போராட்டக்காரர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>பேச்சுவார்த்தை:</h2><p>முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பிரதிநிதிகளுடன் ஜார்க்கண்ட் மாநில அரசு இன்றும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஏற்கனவே பலக்கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இன்றும் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், மாணவர்களின் கோரிக்கைகளில் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அரசு தற்போது அறிவித்து இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>அசாமில் பழங்குடியின மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நபர் மீது துப்பாக்கிச்சூடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/shock-in-assam-tribal-schoolgirl-sexual-assault-accused-shot</link><comments>https://www.maalaimalar.com/news/national/shock-in-assam-tribal-schoolgirl-sexual-assault-accused-shot#comments</comments><guid isPermaLink="false">4a3885cc-3049-4421-984b-b31fbd6ca81f</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:50:26 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:50:26.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,Sexual assault,துப்பாக்கிச்சூடு,அசாம்,Assam,Kajalkhan Police Station</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/qv7v9o41/gun.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/qv7v9o41/gun.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அது தொடர்பான வீடியோவை இணையத்தில் பரப்பிய குற்றச்சாட்டில் கைதான நபர், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பிக்க முயன்றதால் காவல்துறை அவரைக் காலில் சுட்டுப் பிடித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>கை<strong>து நடவடிக்கை</strong></h2><p>அசாம் மாநிலம் சிராங் மாவட்டத்திற்குட்பட்ட காஜல்கான் காவல் எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த நசிருல் ஷேக் என்பவன், தனது கூட்டாளிகளான பீர் முகமது மற்றும் ஹாருனுல் ஹசன் ஆகியோருடன் இணைந்து <a href="https://www.maalaimalar.com/news/national/bengaluru-toddler-critical-after-fall-two-year-old-boy-severely-injured-in-third-floor-apartment-grille-accident">பழங்குடியின</a>த்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.</p><p>மேலும், அந்த கொடூரமான சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சிராங் மாவட்ட காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, முதன்மை குற்றவாளியான நசிருல் ஷேக் உட்பட மூன்று பேரையும் கைது செய்தது.</p><h2>விசாரணை<strong>யின் போது தப்பியோ</strong>ட முயற்சி</h2><p>கைது செய்யப்பட்ட நசிருல் ஷேக்கை, நீதிமன்ற உத்தரவின்படி மூன்று நாள் காவலில் எடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக, வழக்கு தொடர்பான ஆதாரங்களைச் சேகரிக்க காஜல்கான் மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புமேஸ்வர் மலைப் பகுதிக்கு நசிருல் ஷேக்கை காவல்துறையினர் நேற்று அழைத்துச் சென்றனர்.</p><p>அப்போது, நசிருல் ஷேக் திடீரென பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை பலமாகத் தள்ளிவிட்டு, அடர்ந்த காட்டுப்பகுதியை நோக்கித் தப்பியோட முயன்றுள்ளான்.</p><h2>கா<strong>லில் துப்பாக்கி</strong>ச்சூடு</h2><p>காவல்துறையினர் உடனடியாக எச்சரிக்கை விடுத்தும் அவன் நிற்காமல் தொடர்ந்து ஓடியதால், வேறு வழியின்றி அவனைக் கட்டுப்படுத்த துப்பாக்கியால் சுட்டனர். இதில் நசிருல் ஷேக்கின் காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தான். உடனடியாக மீட்கப்பட்ட அவன், காஜல்கானில் உள்ள ஜே.எஸ்.பி சிவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். </p><p>தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிராங் மாவட்ட சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் துருபா போரா தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் </title><link>https://www.maalaimalar.com/news/national/keralas-name-changed-to-keralam-with-presidents-assent</link><comments>https://www.maalaimalar.com/news/national/keralas-name-changed-to-keralam-with-presidents-assent#comments</comments><guid isPermaLink="false">a70bcaa1-eef1-4365-8902-3fe611c8f11c</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:34:16 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:34:16.008Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,Draupadi Murmu,திரெளபதி முர்மு,கேரளம்,கேரளா,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/lg2uhq54/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கேரளா இனி ‘கேரளம்’: குடியரசுத் தலைவர் ஒப்புதல்]]></media:title><media:description type="html"><![CDATA[ Kerala Name Change]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/lg2uhq54/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE">கேரளா</a> மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது அந்த மசோதாவை சட்டமாக மாற்றி குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>கேரள அரசு கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் கேரளாவின் பெயரை கேரளம் என பெயர் மாற்றம் செய்ய கேரள சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.</p><h3><strong>கேரளாவில் தீர்மானம்</strong></h3><p>கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தில், “மலையாள மொழியில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்'-ஆக உள்ளது. 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. </p><p>கேரளா உருவான தினமும் நவம்பர் 1 ஆம் தேதியே கொண்டாடப்படுகிறது. தேசிய சுதந்திர போராட்ட காலம் முதலே, மலையாள மொழி பேசும் மக்களுக்காக ஒருங்கிணைந்த கேரளாவை உருவாக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை இருந்து வருகிறது.</p><p>ஆனால், அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் 'கேரளா' என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>அரசியலமைப்பின் 3 ஆம் பிரிவின்படி, பெயரை 'கேரளம்' என மாற்றுவதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை இந்த சட்டமன்றம் ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டது.</p><p>அரசியலமைப்பு பிரிவு 3-ன் கீழ், ஒரு மாநிலத்தின் பெயர் அல்லது எல்லையை மாற்றும் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய குடியரசுத் தலைவரின் முன்அனுமதி (Prior Recommendation) கட்டாயமாகும்.</p><p>அதன்படி குடியரசுத் தலைவர் இந்த மசோதாவை கேரள சட்டமன்றத்தின் கருத்து அறிவதற்காக அனுப்பி வைத்தார். இதையடுத்து கேரள சட்டமன்றம் குறிப்பிட்ட காலத்திற்குள் தன் கருத்துகளைத் தெரிவித்து அதை மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது.</p><p>குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு பின், மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.</p><p><strong>குடியரசுத் தலைவர் ஒப்புதல்</strong></p><p>இந்த மசோதா கடந்த செவ்வாய்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அடுத்த நாள் மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றப்பட்டது.</p><p>இதையடுத்து இந்த மசோதா சட்டமாக மாற்றப்படுவதற்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டமாக மாற்றப்படுவதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.</p><h3><strong>சட்ட திருத்தம்</strong></h3><p>இந்த மசோதாவானது மாநிலத்தின் பெயரை கேரளா என்பதில் இருந்து, கேரளம் என மாற்றுவதற்கும், அதற்கேற்ப அரசியலைப்பின் முதல் அட்டவணையை 3-வது பிரிவின் கீழ் திருத்துவதற்கும் வழிவகை செய்கிறது.</p><p>இந்த நிலையில் கேரளா மாநிலத்தின் பெயர் திருத்தம் செய்யப்பட்டு, ‘கேரளம்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆடி மாதம் முடிஞ்சுடுச்சு.. மகளை அழைத்துச் செல்ல வந்த புதுமாப்பிள்ளைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாமியார்</title><link>https://www.maalaimalar.com/news/national/aadi-month-over-wife-mother-in-law-surprise</link><comments>https://www.maalaimalar.com/news/national/aadi-month-over-wife-mother-in-law-surprise#comments</comments><guid isPermaLink="false">bb459491-9bbe-40a2-bdb0-482a534996d0</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:43:17 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:43:17.674Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Telangana,தெலங்கானா,ஆடி மாதம்,Aadi,ஆடி விருந்து,Aadi feast</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/g44y7y4u/Aadi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadi feast]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/g44y7y4u/Aadi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநிலம், நர்சி பட்டினத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார் - கலாவதி தம்பதி. அவரது மகள் நவ்யாவிற்கும், ஸ்ரீ ஹர்ஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது.</p><p>ஆடி மாதம் என்பதால் நவ்யா தனது தாய் வீட்டிற்கு வந்து இருந்தார். ஆடி மாதம் முடிந்ததால் ஸ்ரீஹர்ஷா மனைவியை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல நேற்று மாமியார் வீட்டிற்கு வந்தார்.</p><p>மருமகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க மாமியார் வீட்டினர் தடல் புடலான ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி, வீட்டுக்கு வெளியில் இருந்து பூக்களால் ஒவ்வொரு அடிக்கும் இதயப்பூர்வமாக வரவேற்றனர். புது மாப்பிள்ளை ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போது வெள்ளி சாமி சிலை பணமுடிப்பு உள்ளிட்ட பரிசுகளை வழங்கினர். </p><p>பின்னர் மருமகனின் கண்ணைக் கட்டி மேசைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருமகனின் கண்ணில் கட்டப்பட்டிருந்த துணியை அகற்றினர். மேஜையில் அடிக்கி வைக்கப்பட்டு இருந்த உணவுப் பொருட்களைக் கண்டு ஸ்ரீஹர்ஷா திக்குமுக்காடி போனார். </p><p>மேஜையில் இட்லி வடை, பூரி, பொங்கல், உப்புமா மற்றும் இனிப்பு வகைகள் என 100-க்கும் மேற்பட்ட உணவுகளை அடுக்கி வைத்திருந்தனர்.</p><p>மாமனார், மாமியார், மனைவி ஆகியோர் ஸ்ரீஹர்ஷாவுக்கு உணவுகளை ஊட்டி விட்டனர். </p><p>இதுபோல் மாமனார் மாமியார் மனைவி கிடைப்பதற்கு பாக்கியம் செய்து இருக்க வேண்டும் என ஸ்ரீஹர்ஷா தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>பாஜக-வின் தேசிய துணைத் தலைவர்களாக 13 பேர் நியமனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-appoints-13-national-vice-presidents-piyush-goyal-named-national-treasurer</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-appoints-13-national-vice-presidents-piyush-goyal-named-national-treasurer#comments</comments><guid isPermaLink="false">2cd9f0c9-7c79-4046-a18c-0098ac88e3da</guid><pubDate>Mon, 17 Aug 2026 11:41:09 +0000</pubDate><atom:updated>2026-08-17T11:41:09.087Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/8zlnxomu/Untitled-design-70.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாஜகவில் 13 தேசிய துணைத் தலைவர்கள் நியமனம்]]></media:title><media:description type="html"><![CDATA[ BJP National Leadership ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/8zlnxomu/Untitled-design-70.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் செயல்படவுள்ள தேசிய துணைத் தலைவர்கள், பொது செயலாளர்கள் மற்றும் தேசிய செயலாளர்கள் உள்ளிட்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த பட்டியலில் பொருளாளர்கள், மத்திய அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஆகிய உயர் பதவிகளுக்கு பொறுப்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி நியமித்துள்ளது.</p><p>உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தின் பொதுச் செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக இருந்த பியூஷ் கோயல், கட்சியின் தேசிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h3><strong>தேசிய துணைத் தலைவர்கள்</strong></h3><p>பாஜக-வின் தேசிய துணைத் தலைவர்களாக 13 பேர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>வசுந்தரா ராஜே சிந்தியா, தீரத் சிங் ராவத், ராம் மாதவ், பைஜ்யந்த் ஜெய் பாண்டா, டி புரந்தேஸ்வரி, ரேகா வர்மா, வர்ஷாபென் நரேந்திரபாய் தோஷி, பார்தி பிரவின் பவார், மன்பிரீத் சிங் பாதல், லால் சிங் ஸ்ம்ரி ஆர்யா, நாகராஜா, தாரிக் மன்சூர் மற்றும் மதுசந்திர கர் உள்ளிட்ட 13 பேர் தேசிய துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>பி.எல். சந்தோஷ் தேசிய பொதுச் செயலாளராக தொடர்ந்து நீடிக்கிறார். வினாத் தாவ்டே மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் எட்டு தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சமூக ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த அமித் மால்வியாவிற்கு பதிலாக சத்தீஸ்கரைச் சேர்ந்த தீபக் மஸ்கே அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h3><strong>சமூக ஊடகம்</strong></h3><p>அதேசமயம், அனில் பலூனி பாஜகவின் ஊடக ஒருங்கிணைப்பாளராகத் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரீத்தி காந்தி, டெல்லியைச் சேர்ந்த சிவானந்த் திவேதி, உத்தரகாண்டைச் சேர்ந்த அலோக் பட் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த அருண் யாதவ் ஆகியோர் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மேலும், யுவ மோர்ச்சா தலைவராக பெங்களூரு தெற்கு எம்பி தேஜஸ்வி சூர்யாவுக்கு பதிலாக ஹேமங் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>சத்தீஸ்கரைச் சேர்ந்த ரூப் குமாரி சௌத்ரி மகளிர் அணியின் புதிய தலைவராகவும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குன்வர் பாசித் அலி சிறுபான்மையினர் அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>21 சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் ஒரு நாளைக்கு 63,810 டன் எல்பிஜி உற்பத்தி: மத்திய அரசு திட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/national/india-63-810-tonnes-lpg-daily-output-from-21-refineries-petroleum-ministry</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-63-810-tonnes-lpg-daily-output-from-21-refineries-petroleum-ministry#comments</comments><guid isPermaLink="false">e26566d2-7952-4a75-9ce1-8d67f06e5501</guid><pubDate>Mon, 17 Aug 2026 10:58:32 +0000</pubDate><atom:updated>2026-08-17T10:58:32.337Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>LPG,எல்பிஜி,ministry of petroleum,பெட்ரோலிய அமைச்சகம்,LPG production,எல்பிஜி உற்பத்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/1rrdvnul/Untitled-design-69.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இந்தியாவில் எல்பிஜி உள்நாட்டு உற்பத்தி உயர்வு]]></media:title><media:description type="html"><![CDATA[ India LPG Production]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/1rrdvnul/Untitled-design-69.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இறக்குமதி செய்யப்படும் எல்.பி.ஜி. தேவையும் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையில் எல்.பி.ஜி. வெளிநாட்டு விநியோகத்தில் தடைகள் ஏற்படும்போது, அதனை சமாளிக்கும் வகையில் உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்திக்கான ஒரு புதிய மாற்று கட்டமைப்பை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>இந்த நடவடிக்கை வீடுகளில் சமையல் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்வதையும், திடீர் இறக்குமதி பற்றாக்குறையால் நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதை குறைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.</p><p>பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் ஆகஸ்ட் 13 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 21 சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மூல உற்பத்தியாளர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 63,810 டன் ஒருங்கிணைந்த எல்பிஜி உற்பத்தி திறன் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>இது இந்தியாவின் வழக்கமான உள்நாட்டு உற்பத்தி அளவை விட கணிசமான அளவில் அதிகமாகும். மேலும் இந்த உற்பத்தி நாட்டின் தினசரி எல்.பி.ஜி. தேவையில் 70 சதவீதத்தை நோக்கமாக கொண்டு உற்பத்தி செய்யப்பட உள்ளது.</p><h3><strong>எல்பிஜி தட்டுப்பாடு</strong></h3><p>மேற்கு ஆசியாவில் சமீப காலமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தால் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்தியை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.</p><p>இந்தியாவில் எரிவாயு உற்பத்தி செய்வதை விட, மிக அதிகளவில் எல்பிஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p><h3><strong>எல்பிஜி தேவை</strong></h3><p>கடந்த 2025-2026ஆம் நிதியாண்டில், நாடு சுமார் 33.2 மில்லியன் டன் எல்பிஜி-யை பயன்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தி தோராயமாக 13.1 மில்லியன் டன்களாக இருந்தது.</p><p>எனவே இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில், வெளிநாட்டில் இருந்து கணிசமான அளவில் எல்.பி.ஜி. இறக்குமதி செய்யப்பட்டது.</p><p>இந்தியா கடந்த நிதியாண்டில் சுமார் 21.3 மில்லியன் டன் எல்பிஜியை இறக்குமதி செய்துள்ளது. இது உள்நாட்டு சந்தை, வெளிநாட்டு விநியோகங்களை எந்த அளவிற்கு சார்ந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.</p><p>இந்தியாவில் 2026 நிதியாண்டில் சராசரி உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்தி ஒரு நாளைக்கு சுமார் 35,900 டன்களாக இருந்தது. இதனை கருத்தில் கொண்டு ஒரு நாளைக்கு சுமார் 63,810 டன்கள் என்ற அதிகபட்ச கொள்ளளவு ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>ரிலையன்ஸ் உள்நாட்டு உற்பத்தி</strong></h3><p>இந்த கட்டமைப்பின் கீழ் ரிலையன்ஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலைக்கு மிகப்பெரிய தனிப்பட்ட அளவில் ஒரு நாளைக்கு சுமார் 18,000 டன் எல்பிஜி உற்பத்தி திறன் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் இயக்கப்படும் 18 சுத்திகரிப்பு நிலையங்கள் ஒன்றிணைந்து ஒரு நாளைக்கு சுமார் 31,470 டன்கள் எண்ணெயை சுத்திகரிக்கின்றன.</p><p>நயாரா எனர்ஜியின் வதினார் சுத்திகரிப்பு ஆலைக்கு ஒரு நாளைக்குச் சுமார் 4,480 டன்கள் உற்பத்தி பணி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>இத்திட்டத்தின் கீழ், ONGC மற்றும் GAIL இந்தியா உள்ளிட்ட மூல உற்பத்தி மற்றும் எரிவாயுத்துறை உற்பத்தியாளர்கள் இணைந்து, ஒரு நாளைக்கு மேலும் சுமார் 6,460 டன்கள் உற்பத்தி செய்கின்றனர்.</p><p>இந்த விநியோகமானது, அவசர காலங்களில் கூடுதல் வீட்டு உபயோக எல்.பி.ஜி. எங்கிருந்து கிடைக்கக்கூடும் என்பது குறித்து அதிகாரிகளுக்கு ஒரு தெளிவான கண்ணோட்டத்தை அளிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு வங்கத்தில் உள்ள உணவகத்தில் பயங்கர தீ விபத்து- 7 பேர் உடல் கருகி பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-hotel-fire-7-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-hotel-fire-7-killed#comments</comments><guid isPermaLink="false">5659cbcd-755c-4924-8f32-b0c48ad52d65</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:42:50 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:42:50.285Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,fire accident,dead,மேற்குவங்கம்,west bengal,தீ விபத்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/wya52dbj/Fire.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fire accident in westbengal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/wya52dbj/Fire.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்காள மாநிலம் பீபூம் மாவட்டத்தில் உள்ள தாரா பீத்தில் 4 மாடியில் ஒரு ஓட்டல் உள்ளது.  தாராபீடக் கோவிலுக்கு சிராவண மற்றும் நாக பஞ்சமி மாதங்களின் கடைசி திங்கட்கிழமை என்பதால் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.</p><h2>பயங்கர தீ விபத்து</h2><p>இதனால் ஓட்டல் முழுவதும்  ஏராளமான பக்தர்கள் தங்கி இருந்தார்கள். இங்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீடீரென்று தீ பிடித்தது. தரைத்தளத்தில் உள்ள வரவேற்புப் பகுதியில் தீ பிடிக்க தொடங்கியது.  பின்னர் தீ மள மளவென பரவி எரிந்தது.</p><p>தரைத்தளத்தில் இருந்த செயற்கைக் கூரைகள், பைபர் கிளாஸ் மற்றும் பிற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் காரணமாக, புகையும் தீயும் மேல் தளங்களுக்கு வேகமாகப் பரவின.</p><p>ஓட்டலில் தங்கி இருந்தவர்கள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்களால் ஓட்டலைவிட்டு வெளியேற முடியவில்லை. </p><h2>7 பேர் பலி</h2><p>பலரும் தீ பற்றி எரிந்த ஓட்டலுக்குள் சிக்கிகொண்டனர். இந்த பயங்கர தீவிபத்தில் 7 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.  இறந்தவர்களில் சிலர் சுற்றுலாப் பயணிகள் என்றும் மற்றவர்கள் ஊழியர்கள் என கூறப்பட்டுள்ளது.</p><p>தீக்காயங்களாலும், தீயால் ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறல் காரணமாகவும் உயிரிழப்பு நேர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.</p><p>ஓட்டலில் புகை மண்டலமாக காணப்பட்டதால் போலீசார், தீயணைப்பு படையினரால் உடனடியாக சம்பவ இடத்துக்குள் நுழைய முடியவில்லை.  எனினும் கதவுகளை உடைத்து உள்ளே சிக்கியவர்களை மீட்டனர்.</p><p>வெகுநேரம் போராடி தீயை அணைத்து ஓட்டலுக்குள் சிக்கியவர்களை மீட்டு ராம்பூர்ஹாட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>விசாரணை தீவிரம்</h2><p>தீ விபத்து நடந்த ஓட்டலில் அடிப்படை தீயணைப்பு கருவிகள் மிகக் குறைவாக இருந்தன. பின்பக்கக் கதவு பூட்டப்பட்டிருந்ததால் ஒட்டலில் இருந்த தப்பிப்பது கடினமாக இருந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். </p><p>உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.</p><p>தீ விபத்து நடந்த ஓட்டலில் அடிப்படை தீயணைப்பு கருவிகள் மிகக் குறைவாக இருந்தன. பின்பக்கக் கதவு பூட்டப்பட்டிருந்ததால் ஒட்டலில் இருந்த தப்பிப்பது கடினமாக இருந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். </p><p>உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>3வது மாடியில் இருந்து கீழே விழுந்த 2 வயது சிறுவன்.. விளையாடிக் கொண்டிருந்தபோது விபரீதம் </title><link>https://www.maalaimalar.com/news/national/bengaluru-toddler-critical-after-fall-two-year-old-boy-severely-injured-in-third-floor-apartment-grille-accident</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengaluru-toddler-critical-after-fall-two-year-old-boy-severely-injured-in-third-floor-apartment-grille-accident#comments</comments><guid isPermaLink="false">73e2d8cd-0b11-47aa-8e3a-f2d2ce950fce</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:28:47 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:28:47.410Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,bengaluru,அடுக்குமாடி குடியிருப்பு,accident,விபத்து,apartment complex</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/d7kh9id2/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/d7kh9id2/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் <a href="https://www.maalaimalar.com/topic/bangalore">பெங்களூருவில்</a> 2 வயது சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பின் 3 ஆம் தளத்தில் இருந்த கீழே விழுந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.  </p><h2>பெங்களூரு</h2><p>பெங்களூருவின் சிக்கா அடுகோடி பகுதியில் நேற்று காலை 10.50 மணியளவில் மூன்றாம் மாடியில் இருந்த தனது வீட்டின் வெளியே அமைக்கப்பட்டுள்ள கிரீல் மீது சிறுவன் ஏறியபோது தவறி கீழே விழுந்துள்ளான். அப்போது பெற்றோர் யாரும் உடனிருக்கவில்லை.</p> <h2>காயம்</h2><p>நேரில் கண்டவர்கள் சாட்சிபடி, சிறுவன் விழுந்த வேகத்தில் அவன் பின்புறம் தரையில் மோதி அதன் தாக்கத்தால் மேலே எம்பியுள்ளான். </p><p>இதனால் சிறுவனுக்கு அதிக காயம் ஏற்பட்டுள்ளது. அருகே ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த இரு பெண்கள் சிறுவன் விழுந்ததை பார்த்து அங்கு ஓடிச் சென்றுள்ளனர்.</p><h2>மீட்பு </h2><p>மேலும் குடியிருப்பு வாசிகளும் அங்கு விரையவே, சிறுவனை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்று கோராமங்களாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். </p><p>அங்கு சிறுவன் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். அவனது உடனல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>பெற்றோர்</h2><p>சிறுவனின் பெற்றோர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சிறுவனின் தந்தை சமையளாலாக வேலை பார்த்து வருகிறார்.</p><p>இதுவரை இந்த சம்பவம் குறித்து எந்த புகாரும் வரவில்லை என்றும் சிறுவன் விழுந்த சூழ்நிலை குறித்து விசாரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டுக்கு முழு தண்ணீரும் வழங்கப்படும்.. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்த கர்நாடகா </title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-to-release-cauvery-water-state-assures-12000-cusecs-per-day-to-tamil-nadu-in-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-to-release-cauvery-water-state-assures-12000-cusecs-per-day-to-tamil-nadu-in-supreme-court#comments</comments><guid isPermaLink="false">dde0ca9e-4dca-4cfc-a7d1-d09d2c687431</guid><pubDate>Mon, 17 Aug 2026 07:42:31 +0000</pubDate><atom:updated>2026-08-17T07:42:31.300Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Supreme Court,Tamil Nadu government,காவிரி நீர்,Cauvery water,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/v9dxr7e7/tn-20.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/v9dxr7e7/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8000-cusecs-flow-in-hogenakkal-cauvery">காவிரி </a>நீரை கர்நாடகா திறந்துவிடாததை எதிர்த்து தமிழக அரசு, திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. </p><h2>தமிழ்நாடு தரப்பு </h2><p><a href="https://www.maalaimalar.com/topic/kaveri-river">காவிரி</a> ஒழுங்குமுறை குழு  மற்றும் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்த அளவை விடக் கர்நாடகா மிகக் குறைந்த அளவே நீரைத் திறந்துவிட்டதாக மனுக்களில் தெரிவிகிக்கப்பட்டிருந்தன. </p><h2>கர்நாடகா தரப்பு</h2><p>இந்த சூழலில் இன்றைய விசாரணையில் கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், தமிழகத்திற்கு நாள்தோறும் 12,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீரை திறந்துவிட  காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றும் என உறுதியளித்துள்ளார்.</p><p>அவர் கூறியதாவது, "கடுமையான சூழல் நிலவியபோதிலும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி 12,000 கனஅடி தண்ணீரை தமிழகத்திற்குத் திறந்துவிடுவதை உறுதிசெய்ய முயன்றுள்ளோம்.</p><p>ஆரம்பத்தில் சில நாட்களில் திறந்துவிடப்பட்ட நீரின் அளவு 6,000 கனஅடியாக குறைந்திருந்தாலும், தட்டுப்பாட்டை சரிசெய்து வரும் நாட்களில் முழு அளவிலான தண்ணீரும் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.</p><h2>உத்தரவு</h2><p>இதைத்தொடர்ந்து நீர் திறப்பு நிலவரம் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>மேலும், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.</p><h2>காவிரி நீர் திறப்பு நிலவரம் </h2><p>நேற்றைய நிலவரப்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர் வரத்து 6500 கன அடியிலிருந்து 8000 கன அடியாக உயர்ந்துள்ளது.</p><p>சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 4385 கன அடியில் இருந்து 6,179 கன அடியாக அதிகரித்துள்ளது.</p><p>மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 81.31 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 43.27 மில்லியன் கன அடியாக உள்ளது.</p><p>மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 6,179 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நரம்பில் ஏறிய பாம்பு விஷம்.. தம்பியின் கன்னத்தில் 150 அறை கொடுத்து உயிர் காத்த அண்ணன்</title><link>https://www.maalaimalar.com/news/national/brothers-150-slaps-save-sibling-after-venomous-snake-bite-in-uttar-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/brothers-150-slaps-save-sibling-after-venomous-snake-bite-in-uttar-pradesh#comments</comments><guid isPermaLink="false">fa5b7cf6-00d2-426b-950e-70ae13ac8d99</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:48:20 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:48:20.087Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உத்தரப் பிரதேசம்,பாம்புக் கடி,அண்ணன்-தம்பி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/2hq6w4x8/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உத்தரப் பிரதேசம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ உத்தரப் பிரதேசம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/2hq6w4x8/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தில் தம்பியின் உயிரை காப்பாற்றும் சகோதரனின் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/independence-day-tragedy-boy-killed-as-school-roof-collapses-during-flag-event-in-uttar-pradesh">உத்தரப் பிரதேசத்தின் </a>ஹார்டோய் மாவட்டத்தில் அருண் (21) என்பவர் அண்மையில் மதிய வேளையில் வயலில் வைக்கோல் கட்டுகளை எடுக்கும்போது, அதற்குள் இருந்த பாம்பு அவரின் கையில் கடித்தது.</p><h2>உடலில் ஏறிய விஷம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/cobra-venom-worth-6-crore-seized-in-surat-7-arrested-806042">விஷம் </a>உடலில் பரவியதால் அவருக்குக் மயக்கமும் அசெளகரியமும் ஏற்படத் தொடங்கியது.</p><p>அவரின் மூத்த சகோதரன் ஆகாஷ், உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.</p> <p>மருத்துவமனையில் அருணைப் பரிசோதித்த மருத்துவர்கள், நரம்பு மண்டலத்தைப் பாம்பு விஷம் பாதித்துள்ளதாகவும் மயக்கம் காரணமாக அவர் சுயநினைவை இழக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்தனர்.</p><p>அருணைத் தூங்க விடாமலும், சுயநினைவு தப்பாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கண்டிப்புடன் அறிவுறுத்தினர்.</p><h2>150 அறை</h2><p>மருத்துவர்களின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக அருண் கண்ணை மூடத் தொடங்கும்போதெல்லாம், ஆகாஷ் அவரது கன்னத்தில் அறைந்து எழுப்பிக் கொண்டே இருந்தார்.</p><p>இவ்வாறு ஒரு மணி நேரத்திற்குள் 150க்கும் மேற்பட்ட முறை தனது தம்பியின் கன்னத்தில் அறைந்துள்ளார்.</p><h2>விஷமுறிவு</h2><p>அதே நேரத்தில், மருத்துவர்கள் அருணிற்கு 15 விஷமுறிவு ஊசிகளை செலுத்தினர்.</p><p>சகோதரனின் அசைக்க முடியாத முயற்சியும் மருத்துவர்களின் சிகிச்சையும் இணைந்து அருணை மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்டெடுத்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>அதிகாலையிலேயே திரண்ட 50,000 பக்தர்கள்.. பீகார் சிவன் கோவிலில் கூட்டநெரிசல் - 7 பேர் பலி - பலர் படுகாயம் </title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-shiva-temple-stampede-after-electric-pole-collapse-kills-7-devotees</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-shiva-temple-stampede-after-electric-pole-collapse-kills-7-devotees#comments</comments><guid isPermaLink="false">1742118e-b6af-4442-a0b7-0a17920451e6</guid><pubDate>Mon, 17 Aug 2026 03:57:54 +0000</pubDate><atom:updated>2026-08-17T03:57:54.031Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,stampede,சிவன் கோவில்,Shiva temple,கூட்டநெரிசல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/11i0d9f4/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பீகார் சிவன் கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ பீகார் சிவன் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/11i0d9f4/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநிலம் லஹிசாராய் மாவட்டத்தில் அசோக்தாம் என்ற சிவன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">கோவில் </a>அமைந்துள்ளது. </p><p>புனித ஸ்ராவன் மாதத்தில் மூன்றாம் திங்களான இன்று (ஆகஸ்ட் 17) காலையிலேயே சிவனை தரிசித்து ஜல அபிஷேகம்  செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அசோக்தாம் கோவிலில் திரண்டனர். </p> <h2>கூட்ட நெரிசல்</h2><p>காலை 6.30-6.45 மணியளவில் சுமார் 50,000 பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்த நிலையில் அருகில் இருந்த மின்சார கம்பம் சாய்ந்து மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. </p><p>கரண்ட் ஷாக் அடித்துவிடும் என்ற அச்சத்தால் ஏற்பட்ட பீதியில் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சிதறி ஓடத் தொடங்கினர்.</p><p>இதன்போது பலர் கூட்ட <a href="https://www.maalaimalar.com/news/world/death-toll-hits-57-in-mass-refugee-crossing-to-spain">நெரிசலுக்கு </a>இடையில் சிக்கி கீழே விழுந்தனர். அவர்களை மற்றோர் ஏறி மிதித்துச் சென்றனர்.</p> <h2>மீட்பு</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.</p><p>காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு லஹிசாராய் சர்தார் மருத்துவமனையிலும் அருகில் உள்ள மற்ற மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p> <h2>உயிரிழப்பு </h2><p>இதுவரை இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. </p><p>இந்த சம்பவம் தொடர்பாக சிலர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.</p><p>கோவில் வளாகத்தை கட்டுப்பாட்டில் எடுத்த காவல்துறை பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் நடந்த சூழ்நிலை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலதிக தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>தனியாக வசிக்கும் பெண்கள் தான் குறி.. மைனர் மகனுடன் சேர்ந்து கொலைகளை அரங்கேற்றிய சீரியல் கில்லர் தாய்</title><link>https://www.maalaimalar.com/news/national/telangana-mother-son-duo-targeted-lone-women-for-serial-murder-and-robbery-in-siddipet</link><comments>https://www.maalaimalar.com/news/national/telangana-mother-son-duo-targeted-lone-women-for-serial-murder-and-robbery-in-siddipet#comments</comments><guid isPermaLink="false">8fc47dfb-b03b-42ac-bfba-318274a2a68f</guid><pubDate>Mon, 17 Aug 2026 03:03:55 +0000</pubDate><atom:updated>2026-08-17T03:03:55.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Murder,கொலை,Telangana,கொள்ளை,robbery,தெலுங்கானா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/hiidix93/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/hiidix93/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலங்கானாவின் சித்திபேட் பகுதியில் தாயும் மைனர் மகனும் சேர்ந்து தனியே வாழும் பெண்களை குறிவைத்து தொடர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-three-people-including-plus-two-student-brutally-killed-two-arrested">கொலை</a>, கொள்ளையில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. </p><h2>சடலம்</h2><p>துப்பாக் மண்டலத்தில் உள்ள ராமக்கபேட் கிராமத்திற்கு வெளியே ஒரு விவசாய நிலத்தில், பூபள்ளியைச் சேர்ந்த விஜயா என்பவரின் பாதி எரிந்த சடலத்தை ஆகஸ்ட் 8 ஆம் தேதி காவல்துறையினர் மீட்டனர்.</p><p>சித்திபேட் காவல்துறை ஆணையர் ரேஷ்மி பெருமாள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் விபரங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.</p><p>சம்பவம் நடந்த அன்று மாலை பூபள்ளியை சேர்ந்த சக்கலி ரஜிதா (38) என்பவரது மாளிகைக் கடைக்குள் விஜயா செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன. மேலும் அவர்கள் விஜயாவின் உடலுடன் பைக்கில் செல்லும் காட்சிகளும் கிடைத்தன.</p><p>இதன் அடிப்படையில் ரஜிதாவையும் அவரது மைனர் மகனையும் விசாரித்ததில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.</p>  <h2>கொலைகள்  </h2><p>தனியாக வாழ்ந்து வந்த விஜயாவை ரஜிதா மற்றும் அவரது மைனர் மகன் தங்கள் மளிகைக் கடைக்கு வந்தபோது மூச்சுத் திணறச் செய்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88">கொன்று</a>, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். </p><p>பின்னர் சடலத்தைப் பைக்கில் ஏற்றிச் சென்று ராமக்கபேட் பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.</p><p>விசாரணை செய்ததில், அவர்கள் முன்னதாக செய்த மற்ற குற்றங்களும் அம்பலமாயின. </p><p>மே 28 அன்று, பூபள்ளி குவாட்டர்ஸில் தனியே வசித்து வந்த குந்தா ரேகா என்ற பெண்ணைக் கொலை செய்து, அவரது சடலத்தை அச்சமய்யப்பள்ளி வனப்பகுதிக்குக் கொண்டு சென்று எரித்துள்ளனர்.</p><p>2025  ஜூன் மாதம், காலை நடைப்பயிற்சி சென்ற பூபள்ளியைச் சேர்ந்த அன்னபூர்ணா என்பவரைதாக்கி, அவரது தங்க தாலியை பறித்துச் சென்றுள்ளனர். </p> <h2>இலக்கு</h2><p>ரஜிதா டீக் கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். அங்கு வரும் வாடிக்கையாளர்களின் பொருளாதார நிலை மற்றும் குடும்பப் பின்னணியைக் கூர்ந்து கவனித்துள்ளனர்.</p><p>முக்கியமாக தனிமையில் வாழ்பவர்கள் அல்லது குடும்பப் பிரச்சனை உள்ள பெண்களையே இலக்காகக் கொண்டுள்ளனர்.</p><p>இவர்களைக் கொன்றால் சந்தேகம் மற்றவர்கள் மீது திரும்பும் எனக் கணக்கிட்டுச் செயல்பட்டுள்ளனர்.</p><p>ரஜிதாவின் கணவர் உட்பட மேலும் 4 பேரைக் கொலை செய்ய இவர்கள் திட்டமிட்டிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p> <h2>கைது</h2><p>குற்றவாளிகளிடமிருந்து தங்க, வெள்ளி நகைகள், ரூ.1.03 லட்சம் ரொக்கம், மொபைல் போன்கள், சடலத்தை கடத்தப் பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>தற்போது ரஜிதா நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மைனர் மகன்அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>யுஜிசி நெட் தேர்வில் குளறுபடிகள்.. 3 பாடங்களுக்கு மறுதேர்வு அறிவித்த தேசியத் தேர்வு முகமை!</title><link>https://www.maalaimalar.com/news/national/ugc-net-retest-english-commerce-and-sociology-exams-to-be-reconducted-after-question-paper-errors</link><comments>https://www.maalaimalar.com/news/national/ugc-net-retest-english-commerce-and-sociology-exams-to-be-reconducted-after-question-paper-errors#comments</comments><guid isPermaLink="false">32acb490-28e1-4122-8d43-de847d47cee6</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:15:19 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:15:19.442Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>என்டிஏ,NTA,Re-examination,ugc net,யுஜிசி நெட்,மறுதேர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/s4de3qog/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ யுஜிசி நெட் தேர்வில் குளறுபடிகள்
]]></media:title><media:description type="html"><![CDATA[ யுஜிசி நெட் தேர்வில் குளறுபடிகள்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/s4de3qog/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை ஜூன் மாதத்ம் நடத்திய யுஜிசி நெட் (UGC NET) தேர்வில்  நடந்த குளறுபடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p><p>ஆங்கிலம், வணிகவியல், மற்றும் சமூகவியல்  வினாத்தாள்களில்  தவறுகள் கண்டறியப்பட்டதை அடுத்து அந்த மூன்று பாடங்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.</p> <h2>தவறுகள்</h2><p>நிபுணர் குழு நடத்திய ஆய்வில் வினாத்தாளில் பல்வேறு குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p>வழங்கப்பட்ட தகவல்களில் தவறுகள் மற்றும் அச்சடிப்புப் பிழைகள், மொழிபெயர்ப்பு தவறுகள் மற்றும் இலக்கணப் பிழைகள் இருந்துள்ளன. முக்கிய அறிஞர்களின் பெயர்கள் மற்றும் புத்தகங்களின் பெயர்கள் விடுபட்டிருந்தது.</p><p>கேள்விகளின் வாக்கிய அமைப்பில் தவறுகள் மற்றும் எண்களில் குளறுபடி, தெளிவில்லாத விடைகள் மற்றும் ஒரே கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது.</p><p>இத்தனை தவறுகள் இருப்பதால், சில கேள்விகளை மட்டும் நீக்கிவிட்டு மதிப்பெண் வழங்குவது சாத்தியமில்லை என்பதால் மறுதேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது.</p> <h2>அட்டவணை</h2><p>செப்டம்பர் 9 அன்று காலை ஆங்கிலம், மதியம் வணிகவியல், செப்டம்பர் 10 காலை சமூகவியல் மறுதேர்வு நடைபெறும் என என்டிஏ அறிவித்துள்ளது.</p><p>காலை தேர்வு 9:00 - 12:00 மணி வரையும் மதியம் 3:00 - 6:00 மணி வரையும் தேர்வு நடைபெறும் மறுதேர்வு</p><p>மறுதேர்வை எழுதும் மாணவர்களிடம் இருந்து எந்தக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.</p> <h2>விடைக்குறிப்பு</h2><p>மறுதேர்வு அறிவிக்கப்பட்ட மூன்று பாடங்களை தவிர்த்து மீதமுள்ள 84 பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்பை என்டிஏ வெளியிட்டுள்ளது.</p><p>மாணவர்கள் விடைக்குறிப்பு தொடர்பான தங்களின் ஆட்சேபனைகளை ஆகஸ்ட் 18 அன்று இரவு 11:59 மணி வரை பதிவு செய்யலாம். ஒரு கேள்விக்கு ஆட்சேபனை தெரிவிக்க ரூ.200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p> <h2>யுஜிசி நெட்</h2><p>இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் இளநிலை ஆய்வு உதவித்தொகை (JRF) பெறுவதற்கான தகுதியை நிர்ணயிக்கவும், Phd சேர்க்கைக்கான தகுதியை உறுதிப்படுத்தவும் யுஜிசி நெட் தேர்வு ஆண்டுதோறும் இருமுறை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>&apos;திமாகி நக்சல்&apos; என்பதில் பெருமை கொள்கிறேன்: பிரதமருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/national/proud-to-be-dimagi-naxal-congs-p-chidambaram-hits-back-at-pm</link><comments>https://www.maalaimalar.com/news/national/proud-to-be-dimagi-naxal-congs-p-chidambaram-hits-back-at-pm#comments</comments><guid isPermaLink="false">d27c2330-36c5-4b66-9507-7bb4bc6ee561</guid><pubDate>Sun, 16 Aug 2026 23:49:46 +0000</pubDate><atom:updated>2026-08-16T23:49:46.064Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>P Chidambaram,ப சிதம்பரம்,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/38cdp0di/P-Chidambaram-and-PM-Modi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ P Chidambaram and PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/38cdp0di/P-Chidambaram-and-PM-Modi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சுதந்திர தின உரை:</h2><p>பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> குறிப்பிட்ட 'திமாகி நக்சல்' (சிந்தனையளவில் நக்சல் ஆதரவாளர்கள்) என்ற கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பதிலடி கொடுத்தார். "நான் ஒரு 'திமாகி நக்சல்' என்பதில் பெருமை கொள்கிறேன்" என்று அவர் கூறினார். </p><p>சனிக்கிழமையன்று சுதந்திர தின உரையின்போது, ​​அமைப்பிற்குள் ஊடுருவி, கொள்கைகளை தங்களுக்குச் சாதகமாக மாற்றி அமைப்பதன் மூலம் சமூகத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக விளங்கும் 'திமாகி நக்சல்கள்' குறித்து மோடி எச்சரித்தார். அவர்களை "அடையாளம் கண்டு தனிமைப்படுத்த" வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.</p><p>செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர் மோடி, காடுகளில் ஆயுதம் ஏந்திய நக்சலிசத்தை ஒழிப்பதில் நாடு வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறினார்; ஆனால், அதன் கருத்தியல் ஆதரவாளர்கள் வன்முறையையும் குழப்பத்தையும் பரப்ப வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் எச்சரித்தார்.</p><h2>சிதம்பரம் பதிலடி:</h2><p>பிரதமரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ப சிதம்பரம் எக்ஸ் தளத்தில், "நான் ஒரு 'திமாகி நக்சல்' என்பதில் பெருமை கொள்கிறேன்!" என்று பதிவிட்டார்.</p><p>மற்றொரு பதிவில், முன்னாள் உள்துறை அமைச்சரான அவர், "திமாகி நக்சல்கள்" என்பது பா.ஜ.க.வின் பழைய குற்றச்சாட்டுகளான "நகர்ப்புற நக்சல்கள்", "அந்தோலன்ஜீவி" மற்றும் "துக்டே துக்டே கேங்" ஆகியவற்றின் புதிய வடிவம் என்று கூறினார். "நகர்ப்புற நக்சல்கள் யார்? அந்தோலன்ஜீவிகள் யார்? துக்டே துக்டே கும்பல் யார்? அந்த பழைய வசவுகள் அனைத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை நோக்கியே முன்வைக்கப்பட்டன," என்று அவர் கூறினார். "திமாகி நக்சல்கள்" என்பது அந்த வசவுகளின் ஒரு புதிய வடிவம் என்று சிதம்பரம் குறிப்பிட்டார்.</p><h2>அமைச்சர் விளக்கம்:</h2><p>பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர்களை "திமாகி நக்சல்கள்" என்று குறிப்பிடவில்லை என்றும், மாவோயிஸ்டுகள் மற்றும் பிரிவினைவாதிகளை ஆதரிப்பவர்களையும் இந்திய அரசியலமைப்பை நிராகரிப்பவர்களையுமே அவ்வாறு குறிப்பிட்டார் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு கூறினார்.</p><p>சிதம்பரத்தின் 'எக்ஸ்' பதிவை பகிர்ந்த ரிஜிஜு, இந்தியாவின் மதிப்பிற்குரிய முன்னாள் உள்துறை அமைச்சரிடம் இருந்து வந்த மிகவும் துரதிர்ஷ்டவசமான மற்றும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கருத்து இது என்று கூறினார்.</p><p>"எதிர்க்கட்சித் தலைவர்கள் 'திமாகி நக்சல்கள்' என்று பிரதமர் நரேந்திர மோடி ஜி கூறவில்லை," என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் போராட்டம்: மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அம்மாநில அரசு அழைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-government-invites-student-protesters-for-fresh-talks-on-monday</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-government-invites-student-protesters-for-fresh-talks-on-monday#comments</comments><guid isPermaLink="false">43df95e4-64ae-4886-bbdd-36ff783ebd46</guid><pubDate>Sun, 16 Aug 2026 22:07:31 +0000</pubDate><atom:updated>2026-08-16T22:07:31.543Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Students,மாணவர்கள்,அரசு,Government,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/hpoq4806/Jharkhand-protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/hpoq4806/Jharkhand-protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை, புதிய சுற்று பேச்சுவார்த்தைக்காக <a href="https://www.maalaimalar.com/news/national">ஜார்க்கண்ட்</a> அரசு அழைத்துள்ளதாக அதிகாரி தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தை இன்று (திங்கள் கிழமை) நடைபெறுகிறது.</p><p>போராட்டம் நடைபெற்ற இடமான ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், துணைப் பிரிவு அதிகாரி மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மாணவர்களுடன் நடத்திய கூட்டத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.</p><h2>பேச்சுவார்த்தை:</h2><p>"ஆகஸ்ட் 17-ஆம் தேதியன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு போராட்டக்காரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் தங்களது சட்ட ஆலோசகருடன் கலந்துரையாடலில் பங்கேற்கலாம் என்ற முன்மொழிவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது," என்று அந்த அதிகாரி கூறினார்.</p><p>முன்னதாக, ஜார்க்கண்ட் அரசுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கும் இடையே ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.</p><p>போராட்டத்தை முன்னின்று நடத்தும் முக்கிய மாணவர் அமைப்பான 'ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்தக் குழு', மாநில விருந்தினர் மாளிகையில் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அரசின் முன்மொழிவை போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர், ஆனால் அவர்கள் தங்கள் கோரிக்கைகளில் இருந்து பின்வாங்க மாட்டார்கள் என்று கூறியுள்ளது.</p><p>போராடி வரும் மாணவர்களின் சட்ட ஆலோசகர் முன்னிலையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என 'ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்தக் குழு' தலைவர் ரவீந்திர பஸ்வான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p><h2>கோரிக்கைகளில் உறுதி:</h2><p>இது குறித்து பேசிய பஸ்வான், "நாங்கள் இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதால், நிச்சயமாக பேச்சுவார்த்தைக்கு செல்வோம். ஆனால், ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை மற்றும் ஜே.எஸ்.எஸ்.சி-சி.ஜி.எல் (ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையம்-ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை) தேர்வுகளை ரத்து செய்வது ஆகிய இரண்டு கோரிக்கைகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்று பஸ்வான் கூறினார்.</p><p>அரசு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள தூதுக்குழுவில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.</p><p>ஆகஸ்ட் 9 அன்று நடைபெற்ற கடைசி சுற்றுப் பேச்சுவார்த்தையில் எந்தவொரு திருப்புமுனையும் ஏற்படவில்லை. ஞாயிற்றுக்கிழமையன்று போராட்டங்கள் 23-வது நாளை எட்டின.</p>]]></content:encoded></item><item><title>மெட்ரோ ரெயிலில் சர்ச்சை - சி.ஐ.எஸ்.எஃப். வீரரை சுற்றி வளைத்த பயணிகளால் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/chaos-in-delhi-metro-after-paramilitary-official-allegedly-takes-womans-pic</link><comments>https://www.maalaimalar.com/news/national/chaos-in-delhi-metro-after-paramilitary-official-allegedly-takes-womans-pic#comments</comments><guid isPermaLink="false">91b5e382-3282-476e-9b2c-b2f3d1186f1f</guid><pubDate>Sun, 16 Aug 2026 19:50:40 +0000</pubDate><atom:updated>2026-08-16T19:50:40.706Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi Metro,டெல்லி மெட்ரோ,Paramilitary Official,துணை ராணுவ அதிகாரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/icpglxs7/Delhi-Metro-incident-scrn.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi Metro incident screenshot]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/icpglxs7/Delhi-Metro-incident-scrn.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி <a href="https://www.maalaimalar.com/topic/metro-train">மெட்ரோ ரயில்</a> பெட்டிக்குள் ஒரு பெண்ணை ரகசியமாக புகைப்படம் எடுத்ததாக துணை ராணுவ அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, பயணிகள் அவரை எதிர்கொண்டு, அந்த படங்களை நீக்குமாறு வற்புறுத்த முயன்றனர்.</p><p>சனிக்கிழமை இரவு தாமதமாக நடந்த இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் வைரலானது. இது உண்மையாக நிரூபிக்கப்பட்டால், அது மிகுந்த கவலைக்குரிய விஷயமாக இருக்க வேண்டும் என்று மக்கள் சுட்டிக்காட்டினர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national">டெல்லி</a> மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் உள்ள எய்ம்ஸ் மெட்ரோ நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><h2>அதிர்ச்சி சம்பவம்:</h2><p>சமூக வலைத்தளங்களில் வைரலானதாக கூறப்படும் அந்த சம்பவத்தின் காணொளியில், டெல்லி மெட்ரோ பயணிகள் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) வீரரிடம் முறையிடுவது போன்ற காட்சி இடம்பெற்று இருக்கிறது. அவர் ஆரம்பத்தில், புகைப்படங்கள் எடுத்ததை மறுத்துள்ளார்.</p><p>இருப்பினும், மெட்ரோவுக்குள் இருந்த அந்த பெண்ணும் மற்ற பயணிகளும் அவரது ஸ்மார்ட்போனின் புகைப்பட தொகுப்பை காட்டும்படி கேட்டபோது, ​​அவர்தான் அந்த படங்களை எடுத்திருந்தார் என்பது தெரியவந்தது.</p><p>இது மேலும் ஒரு மோதலுக்கு வழிவகுத்தது, அது விரைவாக கைகலப்பாக மாறியது. அப்பெண், "இது என்ன? என் புகைப்படங்களை நீக்குங்கள்" என்று கூறுவது கேட்கப்பட்டது. பயணிகள் சி.ஐ.எஸ்.எஃப். வீரரின் கைபேசியை பறிக்க முயன்றபோது, ​​அவர் அதை எதிர்த்தார்.</p><h2>தீவிர விசாரணை:</h2><p>சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே குற்றம் சாட்டப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்று சி.ஐ.எஸ்.எஃப். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p><p>மெட்ரோ ரயில் ஒன்றில் பெண் பயணி ஒருவரிடம் சி.ஐ.எஸ்.எஃப். வீரர் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து புகார் வந்துள்ளது. சி.ஐ.எஸ்.எஃப். இந்த விஷயத்தை உயர் மட்டங்களில் மிகுந்த தீவிரத்துடன் கருதியுள்ளது. </p><p>சம்பந்தப்பட்ட வீரர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மேலும் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது," என்று சி.ஐ.எஸ்.எஃப்.-இன் டெல்லி மெட்ரோ பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிறுவனம் மேலும் குறிப்பிட்டது.</p>]]></content:encoded></item><item><title>காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டெடுப்பு - பெரும் சதித்திட்டம் முறியடிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/cops-find-bomb-timer-in-suspicious-packet-in-amritsar</link><comments>https://www.maalaimalar.com/news/national/cops-find-bomb-timer-in-suspicious-packet-in-amritsar#comments</comments><guid isPermaLink="false">766d4f5c-b018-497a-8d6f-342b8d1aea97</guid><pubDate>Sun, 16 Aug 2026 18:08:00 +0000</pubDate><atom:updated>2026-08-16T18:08:00.485Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வெடிகுண்டு,Amritsar,காவல் துறை,bomb,Cops,அம்ரித்சரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/8gfxywce/Punjab-Police.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Punjab Police]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/8gfxywce/Punjab-Police.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>690 கிராம் எடை கொண்ட <a href="https://www.maalaimalar.com/topic/bomb">வெடிகுண்டு</a> மற்றும் மின்னணு வெடிகுண்டு கருவியை மீட்டெடுத்ததன் மூலம், காவல் நிலையம் ஒன்றை குறிவைத்து நடத்தப்பட இருந்த பயங்கரவாத சதியை முறியடித்ததாக <a href="https://www.maalaimalar.com/news/national">அமிர்தசரஸ்</a> ஊரக காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>சனிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடைப்பட்ட இரவில் இந்தப் பறிமுதல் மேற்கொள்ளப்பட்டது.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>"அமிர்தசரஸ் ஊரக காவல்துறை, ஒரு காவல் நிலையத்தை குறிவைத்த பயங்கரவாத சதியை முறியடித்து, 690 கிராம் எடையுள்ள மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு (IED), அதனுடன் ஒரு மின்னணு வெடிப்பி, மின்கலம், டைமர் மற்றும் இரும்பு பெட்டி ஆகியவற்றை மீட்டெடுத்தது.</p><p>கைப்பற்றப்பட்ட பிறகு, அந்த வெடிபொருள் நிறுவப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளின்படி கையாளப்பட்டு, வெடிகுண்டு அகற்றும் குழுவினரால் செயலிழக்க செய்யப்பட்டது," என்று பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) கௌரவ் யாதவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>அமிர்தசரஸ் ஊரக காவல்துறை, தேசவிரோத சக்திகளின் சதித்திட்டத்தை முறியடித்து, பொது பாதுகாப்பிற்கு ஏற்பட இருந்த அச்சுறுத்தலை தடுத்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.</p><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு நிறுவனங்களும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமிர்தசரஸ் ஊரக மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி.) கன்வல்பிரீத் சிங் சஹால் தெரிவித்தார்.</p><h2>வழக்குப்பதிவு:</h2><p>ஆகஸ்ட் 15-16 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் குல்பீர் சிங் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​கக்கோமஹால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான, மெழுகால் சுற்றப்பட்ட கருப்பு நிறப் பொட்டலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதை ஆய்வு செய்ததில், ஒரு மின்னணு வெடிகுண்டு, ஒரு மின்கலம், ஒரு டைமர் மற்றும் ஒரு இரும்புப் பெட்டி ஆகியவை அதில் இருந்தது கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.</p><p>வெடிகுண்டு அகற்றும் குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டுகள் அங்கேயே பாதுகாப்பாக செயலிழக்க செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சஹால் கூறினார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக, அமிர்தசரஸ் ஊரகத்தில் உள்ள ராம்டாஸ் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர்.. காரணம் இதுதான்</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-bjp-leader-resigns-actor-devan-quits-post-and-primary-membership</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-bjp-leader-resigns-actor-devan-quits-post-and-primary-membership#comments</comments><guid isPermaLink="false">77cb16d7-16f9-473d-9302-aa5671f6a371</guid><pubDate>Sun, 16 Aug 2026 16:25:02 +0000</pubDate><atom:updated>2026-08-16T16:25:02.956Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,கேரளா,கேரள நடிகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/t3mrk5s5/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தேவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தேவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/t3mrk5s5/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரைப்பட நடிகரும் கேரளா <a href="https://www.maalaimalar.com/topic/bjp">பாஜக </a>மாநில  துணைத் தலைவருமான தேவன், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். </p><p>கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.</p> <h2>அறிவிப்பு</h2><p>ஆலப்புழாவில் உள்ள கணச்சுகுளங்கரை தேவி கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவன் கலந்துகொண்டார்.</p><p>இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் பொதுச்செயலாளர் வெள்ளாப்பள்ளி நடேசன் மற்றும் பாஜக தலைவர் பி. ராதாகிருஷ்ணன் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தேவன் தனது விலகலை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.</p> <p>சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைகள், தத்துவங்கள் மற்றும் திட்டங்களை உள்ளடக்கிய அரசியலையே தான் விரும்புவதாகத் தேவன் குறிப்பிட்டார்.</p><p>கடந்த 5 ஆண்டுகளாக கேரளா பாஜகவில் பணியாற்றிய பிறகு, அந்த லட்சியங்களை அடைய முடியவில்லை என்றும், தன் பாதை வேறு என்பதை உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார்.</p> <h2>அரசியல் பின்னணி</h2><p>'<a href="https://www.maalaimalar.com/topic/kerala">கேரளா </a>பீப்பிள்ஸ் பார்ட்டி' என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வந்த தேவன் , 2020இல் அதனை 'நவ கேரளா பீப்பிள்ஸ் பார்ட்டி' எனப் பெயர் மாற்றினார்.</p><p>2021இல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.</p><p>2024 மக்களவை தேர்தலில் திருவனந்தபுரத்தில் ராஜீவ் சந்திரசேகர் பெற்ற கணிசமான வாக்குகளுக்கும் வெற்றிக்கும் தனது உழைப்பு முக்கியப் பங்காற்றியதாகத் தேவன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.</p> <h2>பாஜக அதிருப்தி</h2><p>தேவன் ராஜினாமாவை கோவில் நிகழ்வு மேடையில் அறிவித்தது குறித்து பாஜக தலைவர் பி. ராதாகிருஷ்ணன் மேனன் அதிருப்தி தெரிவித்தார்.</p><p>2047க்குள் இந்தியாவை உலகின் முதன்மை நாடாக மாற்றப் பாஜக எடுக்கும் முயற்சிகளில் இருந்து விலக தேவன் எடுத்த முடிவுக்கான காரணம் தெரியவில்லை என்றும், ஆனால் இத்தகைய முடிவை அறிவிப்பதற்கு இந்த மேடை உகந்தது அல்ல என்றும் அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item></channel></rss>