<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 26 Jul 2026 09:50:03 +0000</lastBuildDate><item><title>பாதுகாப்பு துறையில் இந்தியா புதிய உச்சம்- &apos;மன்கி பாத்&apos; நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-defence-new-peak-mann-ki-baat-modi-pride</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-defence-new-peak-mann-ki-baat-modi-pride#comments</comments><guid isPermaLink="false">2307e9f6-f01e-4e06-89f3-e07b9a0aac3a</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:44:35 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:44:35.213Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,மனதின் குரல்,pm modi,Maan Ki Baat,மன்கி பாத்,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vjx1b140/maan-ki-baat.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi in Maan ki baat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vjx1b140/maan-ki-baat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ (மன்கிபாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.</p><p>இன்று தனது 136-வது பதிவில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF" rel="nofollow">பிரதமர் மோடி</a> பேசியதாவது:-</p><p>பாதுகாப்பில் புதிய உச்சம் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு ஏற்றுமதி அல்லது நட்பு நாடுகளுடனான அரசியல் ஒத்துழைப்பு என எதுவாக இருந்தாலும்  இந்தியா தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.</p><p>இந்தியா ஒரு நம்பகரமான உலகளாவிய பாதுகாப்புத் துறை கூட்டாளியாக உருவெடுத்து வருகிறது. மேலும் தனது பாதுகாப்பு திறன்களை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் நான் இந்தோனேசியாவில் இருந்தேன்.</p><p>அங்கு பிரம்மோஸ் மற்றும் அஸ்தரா ஏவுகணைகள் தொடர்பான  ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கை வளர்ந்து வருகிறது.</p><h2><a href="https://www.maalaimalar.com/news/world/10-killed-around-100-injured-in-russian-strike-in-ukraines-kyiv" rel="nofollow">ஏவுகணை</a></h2><p>சில நாட்களுக்கு முன்பு ஐ.என்.எஸ். மகேந்திரகிரி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த நவீன போர்க்கப்பல் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் 75 சதவீதத்திற்கு அதிகமானவை உள்நாட்டிலே தயாரிக்கப்பட்டது.</p><p>இந்த மாதத்தில் நீண்ட தூரம் சென்று துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ‘பினாகா’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) வெற்றிக்கரமாக சோதித்தது.</p><p>இந்த வெற்றிக்கு பின்னால் நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கூட்டு உழைப்பு உள்ளது. 2 அல்லது 3 நாட்களுக்கு முன்புதான் டி.ஆர்.டி.ஓ. குஷா ஏவுகணையையும் வெற்றிக்கரமாக சோதித்தது.  </p><h2>சிறப்பான தருணம்</h2><p>கடந்த வாரம்  ‘<a href="https://www.maalaimalar.com/news/national/india-first-private-rocket-vikram-1-successfully-launched" rel="nofollow">விக்ரம் 1</a>’ வெற்றிக்கரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு குடிமகனும் பெருமிதம் அடைந்தனர். இந்தியாவின் விண்வெளி துறையில் நிகழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க தருணம் இதுவாகும்.</p><p>தனியார் துறையால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் இதுவாகும். ஒரு காலத்தில் கற்பனை செய்வதற்கே கடினமாக இருந்த ஒன்றை இன்று சாதித்து உள்ளனர்.</p><p>கார்கில் வெற்றி தினம் நம்மை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது. நமது துணிச்சலான வீரர்களின் அசாதாரண வீரத்தை இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது.</p><h2>மூவர்ண கொடி</h2><p>ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ந் தேதிக்கு முன்னதாக நீங்கள் எனக்கு பல்வேறு விதமான ஆலோசனைகளை அனுப்புகிறீர்கள். இந்த ஆண்டும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.</p><p>கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டிலும் <a href="https://www.maalaimalar.com/news/world/burj-khalifa-illuminated-in-colours-of-the-tricolour-on-independence-day-650270" rel="nofollow">மூவர்ண கொடி</a>  இயக்கம் ஒட்டுமொத்த தேசத்தையும் உணர்வுடன் ஒன்றிணைத்தது. ஒவ்வொரு வீட்டிலும், தெருவிலும் மூவர்ண கொடியை கொண்டாடும் சூழல் காணப்படுகிறது.</p><p>இந்த ஆண்டும் வீடுகளில் மூவர்ண கொடியை மிகுந்த மரியாதையுடன் ஏற்ற வேண்டும். பாரத ரத்னா அப்துல் கலாமின் நினைவுநாள் நாளையாகும். பெரிய கனவுகளை காணுமாறு அவர் இளைஞர்களையும், குழந்தைகளையும் ஊக்குவித்தார்.</p><p>இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்த உத்தரவிட்டது நீங்களா?  - அமித் ஷாவுக்கு ராகுல் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah#comments</comments><guid isPermaLink="false">26b3ff64-eba7-4350-b371-0028b91c9dea</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:37:20 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:37:20.886Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Amit Shah,அமித் ஷா,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/qkiouv1c/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல், சாஹில், அமித் ஷா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல், சாஹில், அமித் ஷா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/qkiouv1c/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜூலை 20 அன்று பாராளுமன்றம் நோக்கி இளைஞர்கள் அமைதியான முறையில் நடத்திய பேரணியில் டெல்லி போலீசாரும், ஆர்ஏஎப் படையினரும் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தினர். தடியடி நடத்தியும், கண்ணர் புகைகுண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். </p><p>சுமார் 60 போராட்டக்காரர்கள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக பலரின் உடலில் பெல்லட் துப்பாக்கி குண்டுகள் துளைத்த புள்ளி புள்ளியான காயம் இருந்தது கண்டறியப்பட்டது. </p><p>இவ்வகை துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏனெனில் இவை சில நேரங்களில் பார்வை, கேட்கும் திறனை இழக்கச் செய்யும். முக்கிய உடல் பாகங்களில் பட்டால் உயிரிழப்பையும் ஏற்படுத்தும். </p><p>இதுமட்டுமின்றி, சீருடையற்ற நபர்கள் அன்றைய தினம் இளைஞர்களை லத்திகளால் தாக்கிய வீடியோக்களும் சர்ச்சையை ஏற்படுத்தின. நச்சுத்தன்மை வாய்ந்த காலாவதியான கண்ணீர் புகை குண்டுகள், ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகள் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்பட்டதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><p>ஜூலை 20 அன்று இளைஞர்கள் மீதான இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. </p><p>மாணவர்களின் பிரதான கோரிக்கையான, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று ராஜினாமா செய்துவிட்டபோதிலும், ஜூலை 20 அன்று மாணவர்களை கொடூரமான முறையில் தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. </p> <h2>ராகுல் கடிதம்</h2><p>இந்த சூழலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இவ்விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர்<a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-made-excellent-arrangements-to-conduct-exams-in-mother-tongue-amit-shah"> அமித் ஷாவுக்கு</a> கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.</p><p>எக்ஸ் தளத்தில் ராகுல் பகிர்ந்துள்ள கடிதத்தின் நகலில், அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது உயிருக்கே ஆபத்து நேரும் அளவுக்குபெல்லட் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்த ஒப்புதல் கொடுத்தவர் யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>அமைதியான போராட்டம் என்பது எந்த ஒரு ஜனநாயகத்துக்கும் இன்றியமையாதது. போராடுபவர்களை பாதுகாத்து அவர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் கேட்டறிந்து அதற்கான தீர்வை காண்பது அரசின் கடமை.</p><p>ஆனால் இந்த கொடூரமான வன்முறை எல்லா நெறிகளையும் உடைத்து நாட்டை கொந்தளிக்க செய்துள்ளது. பதில்களையும், பொறுப்புகூறலையும் கேட்கும் இளைஞர்களும், மாணவர்களும் நாட்டின் எதிர்காலம். அவர்களின் குரல் கேட்கப்பட்டே தீரும்.</p><p>ஜூலை 20 அன்று அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கொலை ஆயுதங்கள் மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தி காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.</p><h2>ஒப்புதல் வழங்கியது யார்?</h2><p>நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். பெண்களும் காவல்துறையினால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அந்தரங்க உறுப்புகளும் திட்டமிட்டு தாக்குதலின்போது குறிவைக்கப்பட்டுள்ளது.</p><p>ஊடக மற்றும் சமூக வலைதள அறிக்கைகள், ஒரு செய்தியாளர் உட்பட மாணவர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. சாஹில் என்ற 19 வயது மாணவர்களை நான் சந்தித்தேன். பெல்லட் குண்டுகளால் அவர் தன் ஒரு பக்க கண்பார்வையை இழந்து மிகுந்த வலியில் உள்ளார்.</p> <p>டெல்லியில் போராட்டத்தை அடக்க அனுப்பட்ட பாதுகாப்பு படைகள் நேரிடியாக உங்களின் கீழ் தான் வருகிறது. உள்துறை அமைச்சர் என்ற முறையில் பெல்லட் துப்பாக்கிகள் உட்பட மாணவர்கள் மீது உயிரை பறிக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த நீங்கள் தான் ஒப்புதல் வழங்கினீர்களா? அல்லது வேறு யார் வழங்கினார்கள்?</p><p>சீருடையின்றி சாதாரண உடையில் மாணவர்களை லத்திகளால் தாக்கியவர்கள் போலீஸ்காரர்களாஅல்லது தன்னார்வலர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>யுனஸ்கோ பாரம்பரிய தலங்கள் பட்டியலில் உ.பி.யின் ‘சாரநாத்’ சேர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/ups-sarnath-included-in-unescos-list-of-heritage-sites</link><comments>https://www.maalaimalar.com/news/national/ups-sarnath-included-in-unescos-list-of-heritage-sites#comments</comments><guid isPermaLink="false">9c34cbb5-2b84-4967-ab38-96ab694e5df6</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:11:07 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:11:07.206Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>UNESCO,Sarnath,Buddhist Site,சாரநாத்,புத்த தலம்,யுனஸ்கோ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/gu0c31u6/New-Project-2026-07-26T144048.932.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யுனஸ்கோ பாரம்பரிய தலங்கள் பட்டியலில் உ.பி.யின் ‘சாரநாத்’ சேர்ப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/gu0c31u6/New-Project-2026-07-26T144048.932.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>யுனஸ்கோவின் உலக பாரம்பரிய தலங்கள் பட்டியலில், இந்தியாவின் பழமையான பௌத்த தலமான, உத்தரப் பிரதேசத்தின் சாரநாத் சேர்க்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் இந்தப் பட்டியலில் இணையும் இந்தியாவின் 45வது தலம் இதுவாகும். </p><h2>புத்தரின் முதல் போதனை தலம்</h2><p>கி.மு.6ம் நூற்றாண்டில் இந்த தலத்தில்தான் புத்தர் தனது முதல் போதனையை வழங்கியதாகவும், அவரது ஆரம்பகால சீடர்களைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>புத்தராலேயே நான்கு முக்கிய பௌத்த யாத்திரை தலங்களில் ஒன்றாக அடையாளம் காட்டப்பட்ட சாரநாத், அரச குடும்பத்தினர், மடாலயங்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவால் பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்தது. இதன் விளைவாக ஏராளமான தூபிகள், கோயில்கள் மற்றும் விகாரங்கள் கட்டப்பட்டன.</p><p>ஒரு முக்கிய பௌத்த மையமாக செழித்தோங்கிய சாரநாத், கி.பி.12-ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்து, 18-ஆம் நூற்றாண்டில் மீண்டும் கண்டறியப்படும் வரை மறைந்து கிடந்தது.</p><p>இன்று இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் இத்தலம், ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகவும், உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்களுக்கான யாத்திரை தலமாகவும் விளங்குகிறது. </p><h2>மத்திய அரசின் பரிந்துரை</h2><p>"2025-26 ஆம் ஆண்டிற்கான உலக பாரம்பரியக் குழுவின் பரிந்துரையில், 'சாரநாத், பழமையான பௌத்த தளம்' என்ற தலைப்பிலான ஆவணக் கோப்பை யுனெஸ்கோவிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளதாக, 2025 ஆகஸ்டில் மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>ஆக்கிரமிப்பு காஷ்மீரை தவிர பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ராஜ்நாத் சிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-talks-with-pakistan-except-on-pok-rajnath-singh-on-kargil-vijay-diwas</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-talks-with-pakistan-except-on-pok-rajnath-singh-on-kargil-vijay-diwas#comments</comments><guid isPermaLink="false">af56b7ea-d3b9-4c8c-9f28-749c6e39f4cc</guid><pubDate>Sun, 26 Jul 2026 07:18:26 +0000</pubDate><atom:updated>2026-07-26T07:18:26.039Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,Kargil Vijay Diwas,கார்கில் வெற்றி தினம்,ராஜ்நாத் சிங்,kargil war memorial,கார்கில் போர் நினைவு சின்னம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vfqnycm1/singh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rajnath singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vfqnycm1/singh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வென்றது. இப்போரில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீராகளை நினைவு கூரும் வகையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">கார்கில் வெற்றி தினம்</a> ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  இன்று கார்கில் போர் வெற்றி தின நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடந்தது.</p><h2>கார்கில் போர் நினைவிடம்</h2><p>லடாக்கின் டிராசில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது அவர் கார்கில் போர் நினைவிடத்திற்கான இணைய வழித்தளத்தை தொடங்கி வைத்தார். அதன்பின், நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:</p><h2>வீரம்-தைரியம்</h2><p>27-வது கார்கில் வெற்றி தினத்தில் நமது வீரர்களுக்கும், அவர்களின் வீரத்திற்கும் தலை வணங்குகிறேன். கார்கில் வெற்றி என்பது வெறும் ராணுவ மற்றும் ராஜதந்திர வெற்றி மட்டுமல்ல, நமது வீரர்கள் அசைக்கமுடியாத தைரியத்தையும், வீரத்தையும் ஒட்டுமொத்த உலகமும் கண்ட தருணம் ஆகும். கார்கில் வெற்றி, பாரத மாதாவின் கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரத்தைப் போன்றது.</p><p>பாகிஸ்தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு தவறான நடவடிக்கைக்கும், அவர்கள் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவுக்குக் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.</p><p>இந்தியா தரவு மையங்களை உருவாக்குகிறது. பாகிஸ்தான் பயங்கரவாத மையங்களை உருவாக்குகிறது. இந்தியா புதுமைகளைப் பின்தொடர்கிறது. பாகிஸ்தான் ஊடுருவலுக்கான புதிய வழிகளைத் தேடுகிறது. </p><p>இந்தியா கப்பல்களை வடிவமைக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளது. இந்தியா ஒரு ஸ்டார்ட்அப் சூழலை உருவாக்கும்போது, ​​பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத சூழலை உருவாக்குகிறது. </p><h2>எல்லை தாண்டி</h2><p>இந்தியா செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும்போது, ​​பாகிஸ்தான் எல்லை தாண்டி பயங்கரவாதிகளை அனுப்புவதில் ஈடுபட்டுள்ளது.</p><p>தற்போது பாகிஸ்தான் பயங்கரவாதத்தைத் தனது அரசு கொள்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளது. அங்கு ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான வேறுபாடு முற்றிலும் மறைந்துவிட்டது. அந்நாட்டு ராணுவம் பயங்கரவாத அமைப்புகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் அவர்களுடன் நெருக்கமாகவும் செயல்படுகிறது. </p><p>எனவே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசுகளையும் இந்தியா இனி தனித்தனியாகப் பார்க்காது என்பதை நாங்கள் உணர்த்தினோம்.  </p><h2>பேச்சுவார்த்தை கிடையாது</h2><p>எங்கள் நோக்கம் தெளிவாக இருக்கிறது. பாகிஸ்தானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறாது. ஒருவேளை பேச்சுவார்த்தை என்று ஒன்று நடந்தால், அது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இருக்கும். </p><p>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர பாகிஸ்தானுடன் வேறு எந்தப் பேச்சுவார்த்தையிலும் இந்தியா ஈடுபடாது என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தேர்வு முறைகேட்டில் ஈடுபடும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/new-bill-to-be-tabled-in-parliament-tomorrow-10-year-jail-rs-10-crore-fine</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-bill-to-be-tabled-in-parliament-tomorrow-10-year-jail-rs-10-crore-fine#comments</comments><guid isPermaLink="false">a255ebb1-1216-47ba-bd2a-7d9bd69f9b11</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:07:00 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:07:00.484Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>paper leak,neet protest,வினாத்தாள் கசிவு,நீட் போராட்டம்,public examinations bill,பொதுத் தேர்வுகள் மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/7nnj8q9f/Untitled-design-77.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ New amendment bill proposes 10-year jail and ₹10 crore fine to curb public exam malpractice]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/7nnj8q9f/Untitled-design-77.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய அளவிலான அரசு போட்டித்தேர்வுகளில் வினாத்தாள் கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டத்திருத்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தாக்கல் செய்ய உள்ளார்.</p><p>கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் கொண்டு வரப்பட்ட பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்கும் வகையில் பழைய சட்டம் திருத்தங்கள் செய்யப்பட உள்ளது.</p><p>இதன்மூலம் பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட உள்ளது.</p><p>டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில், பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்கும் ‘2026 சட்டத்திருத்த மசோதா’ என்ற வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.</p><h3><strong>2026 பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா:</strong></h3><p>இந்த மசோதா மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு எம்.பி.க்களுக்கு மசோதாவின் நகல் நேற்று விநியோகிக்கப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:-</p><p>வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிக பட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.</p><p>தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோருக்கான தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்படும். தனி நபர் குற்றங்க ளுக்கான அபராத தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>வினாத்தாள் கசிவை தொடர்ந்து செய்யும் கும்பல்களுக்கு குறைந்தபட்ச தண்டனை 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தப்படும். இவர்களுக்கான குறைந்தபட்ச அபராதம் ரூ.1 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்.</p><p>தேர்வு நடத்துதல், வினாத்தாள் அச்சிடுதல், கணினி தொழில்நுட்ப ஆதரவு போன்ற பணிகளில் ஈடுபடும் தனியார் ஏஜென்சிகளுக்கு ரூ.5 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.</p><p>அந்நிறுவனம் பொதுத் தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் தடைக்காலம் இரட்டிப்பாக்கப்படும். அதாவது 8 ஆண்டுகள் வரை பொதுத் தேர்வு நடத்த தடை விதிக்கப்படும்.</p><p>நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது உறுதியானால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 கோடி அபராதமும் விதிக்கப்படும்.</p><p>வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் காவல்துறை அல்லது மத்திய புலனாய்வு அமைப்புகள் 2 மாதங்களில் வழக்கை முடிக்க கால வரையறை நிர்ணயிக்கப்படும்.</p><p>வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணையை விரைந்து மேற்கொள்ள வசதியாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.</p><h3><strong>விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரணை:</strong></h3><p>இந்த விரைவு நீதிமன்றங்களில் வழக்கின் மீது உடனடியாக விசாரணையை தொடங்கி, தினசரி அடிப்படையில் மேற்கொள்வதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த 3 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும்.</p><p>வினாத்தாள் கசிவு தேர்வு முறைகேடு குற்றங்களை விரைந்து விசாரிப்பதற்காக எந்தவொரு அமர்வு நீதிமன்றத்தையும் சிறப்பு விரைவு நீதிமன்றமாக மாற்றியமைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்த சட்டத்திருத்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.</p><p>விரைவு நீதிமன்றங்களின் தீர்ப்பை எதிர்த்து, ஐகோர்ட்டின் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல் முறையீடு செய்யலாம். அந்த மேல்முறையீட்டு மனுக்களும் 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மேற்கண்ட சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.</p><p>இவ்வாறு அந்த மசோதா நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாஜகவிற்கு பதவியை விட நாடும், இளைஞர்களுமே முக்கியமானவர்கள்: அமித்ஷா</title><link>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-made-excellent-arrangements-to-conduct-exams-in-mother-tongue-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-made-excellent-arrangements-to-conduct-exams-in-mother-tongue-amit-shah#comments</comments><guid isPermaLink="false">28ac5ac0-73a0-46b8-b0e8-d1ca9feeab13</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:02:10 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:02:10.431Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித்ஷா,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,neet protest,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/85jw4pmk/Untitled-design-80.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amit Shah says BJP values nation and youth above posts]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/85jw4pmk/Untitled-design-80.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். </p><p>இந்த ராஜினாமா குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-</p><h3><strong>பாஜகவிற்கு நாடும், இளைஞர்களுமே முக்கியம்:</strong></h3><p>பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை எந்தவொரு பதவியையும் விட நாடும், நமது இளைஞர்களும், மாணவர்களுமே முக்கியமானவர்கள். </p><p>மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது, இந்த கொள்கைக்கு சிறந்த உதாரணமாகும்.</p><p>மோடி அரசு, இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்தவும் உறுதி பூண்டுள்ளது.</p><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மோடி எடுத்துள்ள முடிவுகள் பாராட்டுக்குரியவை. </p><p>நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இத்தகைய நடவடிக்கைகள் முழுமையான நீதியை உறுதி செய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.</p><h3><strong>தர்மேந்திர பிரதான் செய்த சீர்திருத்தங்கள்:</strong></h3><p>தர்மேந்திர பிரதான் தனது பதவிக்காலத்தில், தேசியக் கல்விக் கொள்கையை  திறம்படச் செயல்படுத்துதல், தாய்மொழியில் தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள், பிஎம் ஸ்ரீ  பள்ளிகளின் விரிவாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டார்.</p><p>மேலும் டிஜிட்டல் கல்வியை ஊக்குவித்தல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறைக்கும், கல்வித்துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் அவர் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். </p><p>தேர்வு முறை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், மாணவர் நலனை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்கான அவரது முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை. </p><p>இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் லட்சியத்தின் மீதான அவரது அர்ப்பணிப்புக்கு, அவரது பதவிக்காலம் ஒரு சான்றாகத் திகழ்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எங்களை சந்தேகித்து விமர்சனம் செய்தவர்களுக்கு நன்றி, இது வெறும் தொடக்கம்தான்: அபிஜீத் தீப்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/thanks-to-critics-this-is-just-the-beginning-abijeet-deepke</link><comments>https://www.maalaimalar.com/news/national/thanks-to-critics-this-is-just-the-beginning-abijeet-deepke#comments</comments><guid isPermaLink="false">eee9ce31-86e4-492c-84c3-f06b118c0d02</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:07:47 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:07:47.455Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>abhijeet dipke,அபிஜீத் தீப்கே,சிஜேபி,CJP Protest,CJP,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/inapr828/Untitled-design-76.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NEET Protest Leader Abhijit Deepke thanks critics]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/inapr828/Untitled-design-76.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்விற்கு எதிராக 37 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவடைந்ததை அடுத்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று ஒரு வீடியோ வெளியிட்டார்.</p><h3><strong>அபிஜீத் தீப்கே வீடியோ பதிவு:</strong></h3><p>அந்த வீடியோவில் அபிஜீத் தீப்கே கூறியிருப்பதாவது:-</p><p>உங்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. உடல்நலக் குறைபாடுகளை காரணம் காட்டி, ஜந்தர் மந்தரில் கூடியிருந்த ஆதரவாளர்களை நேரில் சந்திக்க இயலவில்லை, அதற்காக மன்னித்து கொள்ளுங்கள்.</p><p>நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஜந்தர் மந்தரில் காத்திருந்த அனைவரையும் என்னால் சந்திக்கவோ, அவர்களுக்கு நன்றி சொல்லவோ முடியவில்லை.</p><p>ஏனென்றால், உங்களுக்குத் தெரியும், எனக்கு டைபாய்டு காய்ச்சல் இருந்தது. எனது உடல் வெப்பநிலை 101 டிகிரியாக இருந்தது. அதனால்தான் நான் வீட்டிற்கு வர வேண்டியிருந்தது.</p><p>உங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும். ஜந்தர் மந்தரில் 37 நாட்கள் காத்திருந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.</p><p>இந்த நாட்டிற்காக நீங்கள் செய்ததை நான் மனதாரப் பாராட்டுகிறேன் என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் சல்யூட்.</p><p>எங்களைச் சந்தேகித்தும், விமர்சித்தும், உங்களுக்கு போராடத் தெரியவில்லை என்றும் கேள்வி எழுப்பியவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.</p><p>நீங்கள் எங்களை விமர்சிக்காமலும், கேள்வி எழுப்பாமலும் இருந்திருந்தால், எங்களால் முன்னேறியிருக்க முடியாது.</p><p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக நாங்கள் நீண்ட தூரம் பயணிப்போம். இது வெறும் தொடக்கம்தான். ஜெய் ஹிந்த்” என்று கூறியுள்ளார்.</p><h3><strong>நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்:</strong></h3><p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ-யின் கணினி வழியில் நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், காக்ரோச் ஜனதா கட்சியினர், ஜூன் 20 முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.</p><p>இந்த இயக்கம் நாடு முழுவதிலுமுள்ள மாணவர்களின் ஆதரவைப் பெற்றதுடன், பல எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெற்றது.</p><p>ஜூன் 28 முதல் ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு ஜூலை 18 அன்று காவல்துறையினரால் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.</p><p>இதையடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஜூலை 20 அன்று ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றபோது, இந்தப் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் காவல்துறையினருடன் மோதல்கள் ஏற்பட்டன.</p><h3>தர்மேந்திர பிரதான் ராஜினாமா:</h3><p>அவர்கள் போராட்டக்காரர்களைக் கலைக்கத் தடியடியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் பயன்படுத்தினர். </p><p>அன்றைய தினம் பிற்பகலில், நட்டா தனது இல்லத்தில் சிஜேபி தலைவர்களுடன் முதல் முறையாக சந்திப்பு ஒன்றை நடத்தினார். இது இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் தொடக்கத்தை குறித்தது.</p><p>இதைத்தொடர்ந்து நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து சிஜேபி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.</p><h3><strong>சிஜேபி கோரிக்கை:</strong></h3><p>இந்த நிலையில் நீட் பிரச்சினை தொடர்பாக ஜந்தர் மந்தரில் 36 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நேற்று கைவிட்டது.</p><p>தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல், போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட தங்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டதாக சிஜேபி தெரிவித்தது.</p><p>அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, நாடு முழுவதும் போராட்டம் உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக சிஜேபி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்தார்.</p><p>ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள், ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடனும் புரிதலுடனும் நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என அவர் கூறினார்.</p><h3><strong>மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை:</strong></h3><p>தங்களது கோரிக்கைகள் அடங்கிய வரைவை அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், செவ்வாய்க்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை எதிர்பார்ப்பதாகவும் செளரவ் தாஸ் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நட்டா, போராட்டத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையும், தங்களின் எஞ்சிய கோரிக்கைகளையும் கோடிட்டு காட்டும் எழுத்துப்பூர்வ வரைவை சிஜேபி-யினர் சமர்ப்பித்ததாகக் கூறினார்.</p><p>போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும், தங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் கட்சி உறுதிமொழி கோரியுள்ளதாகவும் நட்டா கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இனி வினாத்தாள் கசிவு இருக்கக் கூடாது: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு மாணவர்கள் கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/students-demand-end-to-exam-paper-leaks-from-new-education-minister-pralhad-joshi</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-demand-end-to-exam-paper-leaks-from-new-education-minister-pralhad-joshi#comments</comments><guid isPermaLink="false">94ecf578-0dec-4718-b958-6f3bf02bb806</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:59:49 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:59:49.583Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Neet exam,பிரகலாத் ஜோஷி,Pralhad Joshi,CJP,காக்ரோச் ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/0w0v5ym5/prahalad.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pralhad Joshi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/0w0v5ym5/prahalad.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக உள்ள 'பிரகலாத் ஜோஷி'க்கு கல்வித் துறையின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில்தான், புதிய கல்வி அமைச்சர் வினாத்தாள் கசிவுகளை முற்றிலுமாகத் தடுத்து, அனைவருக்கும் கட்டுப்படியாகும் வகையில் கல்வியை முறைப்படுத்த வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2><strong>தொடர் போராட்டம்:</strong></h2><p>நீட் மற்றும் யு.ஜி.சி-நெட்  தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) அமைப்பின் தலைமையிலான மாணவ அமைப்பினரும் லட்சக்கணக்கான மாணவர்களும் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். </p><p>போராட்டத்தின் உச்சகட்டமாக, வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்றுத் தர்மேந்திர பிரதான் தனது பதவி விலகல் கடிதத்தைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்தார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.</p><h2><strong>புதிய கல்வி அமைச்சர் நியமனம்:</strong></h2><p>தர்மேந்திர பிரதானின் விலகலைத் தொடர்ந்து, கர்நாடகாவின் தார்வாடு தொகுதியில் இருந்து 5 முறை எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த பாஜக தலைவரும், நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. "மிகுந்த கடமையுணர்வோடும் பணிவோடும் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்" என ஜோஷி அறிவித்துள்ளார்.</p><h2><strong>மாணவர்களின் கோரிக்கைகள்:</strong></h2><p>சி.ஜே.பி போராட்டத்தில் ஈடுபட்ட பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் சார்பில் புதிய அமைச்சருக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி:</strong></h2><p>இனிவரும் எந்தவொரு தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளிலும் வினாத்தாள் கசியாத வண்ணம் 'தேசிய தேர்வுகள் முகமையை' முற்றிலும் சீரமைக்க வேண்டும்.</p><h2><strong>கட்டுப்படியாகும் கல்வி:</strong></h2><p>ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை உறுதிசெய்யும் வகையில் கல்வி அமைப்பைக் குறைந்த செலவில் கிடைக்கச் செய்ய வேண்டும். வினாத்தாள் கசிவில் ஈடுபடும் 'தேர்வு மாஃபியாக்கள்' மீது புதிதாக முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.</p><p>தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் மாணவர்களுக்கான இழப்பீடு, போராட்ட வழக்குகள் வாபஸ் போன்ற மத்திய அரசின் உறுதிமொழிகளைத் தொடர்ந்து, 40 நாட்களுக்கும் மேலாக நீடித்த மாணவர் போராட்டம் தற்காலிகமாகக் திரும்பப் பெறப்பட்டுள்ளது. </p><p>எனினும், புதிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையிலான கல்வித் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்று கல்வியாளர்களும் மாணவர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கார்கில் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை</title><link>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-lays-wreath-at-the-kargil-war-memorial-to-pay-tribute-to-bravehearts-who-laid-down-their-lives-in-kargil-war-in-1999</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-lays-wreath-at-the-kargil-war-memorial-to-pay-tribute-to-bravehearts-who-laid-down-their-lives-in-kargil-war-in-1999#comments</comments><guid isPermaLink="false">1f64be70-bf3f-4295-af0e-cbc30c3d944e</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:45:47 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:45:47.074Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,Kargil Vijay Diwas,கார்கில் வெற்றி தினம்,ராஜ்நாத் சிங்,kargil war memorial,கார்கில் போர் நினைவு சின்னம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vxq2twiq/rajnath.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rajnath singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vxq2twiq/rajnath.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.</p><h2>கார்கில் வெற்றி தினம்</h2><p>போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த கார்கில் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 27-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.</p><p>இன்றைய தினத்தில் போர் நினைவு சின்னத்தில் தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.</p><p>கார்கில் போர் வெற்றி தின கொண்டாட்டங்கள் நாடு முழுக்க களைகட்டின. அரசியல் தலைவர்கள், ராணுவம், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் போரில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.</p><p>இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கார்கில் போர் 27வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் லடாக்கில் உள்ள டிராஸ் பகுதிக்குச் சென்றார்.</p><h2>ராஜ்நாத் சிங் மரியாதை</h2><p>அங்குள்ள போர் நினைவிடத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.</p><p>முன்னதாக, லடாக் யூனியனில் உள்ள கார்கில் பகுதியில் குளிர் காலத்தில் வெப்பநிலை மைனஸ் 48 டிகிரி செல்சியஸ். 1999 ஏப்ரலில் பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகளுடன் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 'ஆபரேஷன் விஜய்' பெயரில் இந்திய ராணுவம் போரிட்டு பாகிஸ்தானை வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விதான் இளைஞர்களின் போராட்டம்: ஜனநாயகத்திற்கான ஆக்சிஜன்- உத்தவ் தாக்கரே</title><link>https://www.maalaimalar.com/news/national/uddhav-thackeray-cjp-protest-failure-of-central-govt-opposition</link><comments>https://www.maalaimalar.com/news/national/uddhav-thackeray-cjp-protest-failure-of-central-govt-opposition#comments</comments><guid isPermaLink="false">a8c844e1-cfdb-43f1-86ad-c770437d4c21</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:39:34 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:39:34.877Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உத்தவ் தாக்கரே,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Uddav thackeray,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mjafyy7g/UddhavThackeray0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Uddhav Thackeray]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mjafyy7g/UddhavThackeray0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஏற்படும் போதெல்லாம் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பார்கள். பின்னர் அந்த பிரச்சினை அப்படியே அடங்கிவிடும்.</p><p>2026-2027-ம் ஆண்டுக்கான UG மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அப்போது வினாத்தாள் லீக் ஆனது. இதனைத் தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.</p><p>இந்த முறை <a href="https://www.maalaimalar.com/news/national/cjp-volunteers-cleaning-the-streets-at-jantar-mantar">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> நீட் கசிவு பிரச்சினையை கையில் எடுத்தது. தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஜூன் 20-ந்தேதி போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் தொடர்பாக நேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வெற்றியாக கருதப்படுகிறது.</p><p>இந்த நிலையில், சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, மாணவர்களின் போராட்டம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விகளை வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:-</p><p>மக்களுக்குச் சிறை அல்லது துப்பாக்கிகளைக் கண்டு அச்சம் இல்லாதிருப்பது பாராட்டுக்குரியது. அதேவேளையில், இது ஆளும் கட்சிக்கு ஆபத்தான ஒன்றாகவும் உள்ளது.</p><h2>ஆளும் கட்சியின் தோல்விகள்</h2><p>இப்போராட்டங்கள், ஏறக்குறைய அழிவின் விளிம்பில் இருந்த ஜனநாயகத்திற்குப் புத்துயிர் அளித்துள்ளன.</p><p>CJP-யின் போராட்டம் என்பது ஆளும் கட்சியின் தோல்வி மட்டுமல்ல, எதிர்க்கட்சியின் தோல்வியும்கூட. இதை நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன். அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையை நாடு இழந்துவிட்டது.</p><p>டெல்லி முதல் மும்பை வரை, மக்கள் அச்சத்தைத் தாண்டி வந்துவிட்டதை நான் உணர்ந்துள்ளேன். இதுவரை துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த மக்கள், இப்போது தங்கள் உயிருக்கு அஞ்சும் நிலையை உதறிவிட்டு வீதிகளில் இறங்கியுள்ளனர்.</p><p>மத்திய அரசு முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது. அவர்கள் நாட்டை முற்றிலுமாகச் சீரழித்துவிட்டனர். இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும்.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமாவைத் தொடர்ந்து மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதியக் கூடாது. உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசு முன் வைக்கப்பட்டது. இதில் வழக்கு பதியப்படாது என்ற கோரிக்கை ஏறு்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தேர்தலில் போட்டியிடும் வயது வரம்பை 21 ஆக குறைக்க வேண்டும்: தெலுங்கானாவில் தீர்மானம் நிறைவேற்ற ரேவந்த் ரெட்டி முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/revanth-reddy-telangana-assembly-lower-minimum-age-to-contest-ls-assembly-polls-to-21</link><comments>https://www.maalaimalar.com/news/national/revanth-reddy-telangana-assembly-lower-minimum-age-to-contest-ls-assembly-polls-to-21#comments</comments><guid isPermaLink="false">b33059e7-c7c0-4323-a5cc-9a9992a9e7e9</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:39:38 +0000</pubDate><atom:updated>2026-07-26T03:39:38.786Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/po1qdyhg/RevanthReddy001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Revanth Reddy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/po1qdyhg/RevanthReddy001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரம் தொடர்பாக தெலுங்கானா மாநிலத்தில் மெழுகுவர்த்தி ஏந்திச் செல்லும் பேரணி நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-</p><p>ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாங்கள் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட இருக்கிறோம். எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் பதவிக்கு போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆக குறைக்கும் வகையில் அரசியலமைப்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக  விவாதம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றுவோம்.</p><h2>Gen Z போராட்டம்</h2><p>Gen Z போராட்டம் 56 இன்ஞ் மார்பு கொண்ட பிரதமர் மோடியை வீழ்த்தியுள்ளது. தர்மேந்திர பிரதானை அவரது பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கச் செய்துள்ளது.</p><p>இந்தியாவில் Gen z-ன் மக்கள் தொகை 30 சதவீதம் ஆகும். ஆனால் மக்களவையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான நபர்களே இருக்கிறார்கள். 21 வயதிற்கு மேற்பட்டோர் அமைச்சராக இருக்கும் நிலை ஏற்பட்டால், நாட்டின் எதிர்காலம் கட்டாயம் மாற்றம் அடையும்.</p><p>அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் 18 வயது இளைஞர்களால் பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக ஆக முடியும். சிங்கப்பூரில் கூட 21 வயதுடையோர் பிரதமராக முடியும்.</p><h2>Gen z குரல் உலகம் முழுவதும் கேட்க வேண்டும்</h2><p>ராகுல் காந்தி பிரதமரானால், Gen Z தலைவர் மத்திய அமைச்சர் ஆக முடியும் என்பதற்கு என்னால் உறுதி அளிக்க முடியும். நான் இந்தியா பிளாக்கிடம் பேசுவேன். ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்திப்பேன். தெருக்களில் குரல் எழுப்பிய பிறகு, வெறுமனே வீட்டிற்கு அவர்கள் திரும்பக்கூடாது. இந்த இளைஞர்கள் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். Gen z குரல் உலகம் முழுவதும் கேட்க வேண்டும்.</p> <h2>ராஜீவ் காந்தி கொண்டு வந்த மாற்றம்</h2><p>21 வயதுடையோர் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், மேயர் பதவிகளுக்கு தகுதிடையவர்கள் ஆவார்கள். ராஜீவ் காந்தி வாக்காளர்களின் வயது வரம்பை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தார். நரசிம்ம ராவ், மேயர் மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிடுபவர்களின் வயதை 21 ஆக நிர்ணயித்தார். மாணவர்களின் கோரிக்கைகளை காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் எழுப்பும்.</p><p>இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தரில் அமைதி திரும்பியது: குப்பைகளை அகற்றிய கரப்பான் பூச்சி கட்சியினர்</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-volunteers-cleaning-the-streets-at-jantar-mantar</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-volunteers-cleaning-the-streets-at-jantar-mantar#comments</comments><guid isPermaLink="false">3552fd91-3792-4067-98de-dd7db5892ca5</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:38:17 +0000</pubDate><atom:updated>2026-07-26T03:38:17.861Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,நீட் தேர்வு,Neet exam,CJP Protest,ஜந்தர் மந்தர்,jandar mandar,கரப்பான் பூச்சி கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ouoqznj8/cjp1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP cleaning]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ouoqznj8/cjp1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஜூன் மாதத் தொடக்கத்தில் அபிஜீத் தீப்கே, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களைத் திரட்டி போராட்டத்தை முன்னெடுத்தார். சிஜேபி கட்சி ஜூன் 20 அன்று காலவரையற்ற போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கியது. </p><h2>தீவிரமடைந்த போராட்டம்</h2><p>கரப்பான்பூச்சி கட்சி இளைஞர்களின் போராட்டம் காரணமாக கடந்த மாதம் 20-ம் தேதியிலிருந்து டெல்லி ஜந்தர் மந்தரில் பரபரப்பு நிலவியது.</p><p>குறிப்பாக, கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் வன்முறை ஏற்பட்ட பிறகு அவ்வப்போது இரவு நேரங்களில் கல் வீச்சு, தடியடி சம்பவங்கள் நடந்தன. இதனால், ஜந்தர் மந்தர் பகுதியே பதற்ற பூமியாக காணப்பட்டது. ஒருபுறம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிய, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இணைய சேவை துண்டிப்பு, மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் என அப்பகுதியை சார்ந்த பொதுமக்களுக்கும் சிக்கல்கள் ஏற்பட்டன.</p><h2>தர்மேந்திர பிரதான் ராஜினாமா</h2><p>இதையடுத்து, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். </p><p>மேலும், நீட் தேர்வு ரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள்மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும் மற்றும் மாணவர்களை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற 2 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தது.</p><p>இதன் அடிப்படையில் டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்களின் போராட்டம் வாபஸ் பெறுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கரப்பான் பூச்சி இளைஞர்களின் 36 நாள் போராட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.</p><h2>ஜந்தர் மந்தரில் மீண்டும் அமைதி</h2><p>இந்நிலையில், சுமார் ஒரு மாத காலத்துக்குப் பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வீடு திரும்பியதால் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் அமைதி திரும்பியது.</p><p>இரவோடு இரவாக பந்தல்களை அகற்றிய கரப்பான் பூச்சி கட்சியினர் அப்பகுதியில் சேர்ந்திருந்த குப்பைகளை எல்லாம் தாங்களே அகற்றினர். மீண்டும் அங்கு கூட்டம் கூடாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கணவன்- மனைவி தகராறுக்கு பழிவாங்க குடும்பத்தினர் மீது வழக்கு போடுவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு கவலை</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-expresses-concern-over-filing-cases-against-family-members-to-exact-revenge-in-husband-wife-disputes</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-expresses-concern-over-filing-cases-against-family-members-to-exact-revenge-in-husband-wife-disputes#comments</comments><guid isPermaLink="false">5b43e4b4-b52c-4f94-9599-fb9b33257ec4</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:27:32 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:27:32.074Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,Divorce case,உச்சநீதிமன்றம்,விவாகரத்து வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/z9uasz4c/SupremeCourt0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/z9uasz4c/SupremeCourt0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கணவன்- மனைவி இடையேயான தகராறுகளுக்கு பழிவாங்க குடும்பத்தினர் மீது வழக்கு போடுவது குறித்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/excluding-married-women-from-their-natal-families-is-unfair-supreme-court">சுப்ரீம் கோர்ட்டு</a> கவலை தெரிவித்து உள்ளது.</p><h2>விவாகரத்து பெற்ற தம்பதி</h2><p>மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த 2023-ம் ஆண்டு பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், இரட்டை பெண் குழந்தைகளும் உள்ளனர். அவர்களை பராமரிப்பது தொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே எழுந்த தகராறு காரணமாக இருவரும் அடுத்தவரின் குடும்பத்தினரை வழக்கில் சிக்க வைத்து உள்ளனர்.</p><p>அந்த வகையில் இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக தாய் மாமன் மீது அந்த கணவன் புகார் அளித்து உள்ளார். அதற்கு பதிலடியாக மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணவரின் சகோதரி மீது அந்த மனைவி புகார் அளித்தார். இந்த புகார்களின்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><h2>போக்சோ வழக்கு தள்ளுபடி</h2><p>இந்த நிலையில் தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யுமாறு சிறுவனின் அத்தை மும்பை ஐகோர்ட்டை நாடினார். ஆனால் அதை விசாரித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்தனர். இதை எதிர்த்து அவர் சுப்ரிம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதை நீதிபதிகள் பர்திவாலா, வினோத் சந்திரன் அமர்வு விசாரித்தது. பின்னர் சிறுவனின் அத்தை மீதான போக்சோ வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது நீதிபதிகள் பல்வேறு கவலைகளையும் வெளியிட்டனர்.</p><p>அவர்கள் கூறியதாவது:-</p><p>பொதுவாக திருமண வாழ்வில் கணவன்- மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் எழும் வழக்குகளில், பழி வாங்குவதற்காக மாமியார்- மாமனாரை இழுத்து வருவது சர்வ சாதாரணம். மேலும், ஒருவரையொருவர் பழிசுமத்துவதற்காகப் பிள்ளைகளும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறார்கள்.</p><h2>அதிர்ச்சி அடைந்தோம்</h2><p>ஆனால் இங்கு, தனது மகன் அவனது தந்தை வழி அத்தையால் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறான் என்று விவாகரத்து பெற்ற தாய் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.</p><h2>பழிவாங்கும் பதிலடி</h2><p>சிறுவனின் இரட்டை சகோதரிக்கு எதிராக தாய்மாமா மீது அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்த தந்தையால் பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு பதிலடியாக இந்த வழக்கானது பதியப்பட்டு உள்ளது. தாய்வழி உறவினர்களுக்கு எதிராக தந்தை வழக்கு பதிவு செய்த பின்னரே இந்த குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. இது குழந்தைகளுக்கு எதிரான உண்மையான குற்றச்சாட்டாக இல்லாமல், குழந்தை பராமரிப்பு உரிமை போராட்டத்தில் இருந்து பிறந்த ஒரு கசப்பான பழிவாங்கும் பதிலடி என்பது அம்பலமாகிறது.</p><p>இவ்வாறு நீதிபதிகள் அதிர்ச்சி மற்றும் கவலையுடன் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சபரிமலையில் புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தன் தேர்வு</title><link>https://www.maalaimalar.com/news/national/kandararu-brahmadathan-to-be-new-sabarimala-tantri</link><comments>https://www.maalaimalar.com/news/national/kandararu-brahmadathan-to-be-new-sabarimala-tantri#comments</comments><guid isPermaLink="false">ba44acd4-ab02-4d5b-87df-039682b5c0ff</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:14:17 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:14:17.341Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sabarimalai,சபரிமலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/5eafj6qi/KandararuBrahmadathan0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kandararu Brahmadathan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/5eafj6qi/KandararuBrahmadathan0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/sabarimala-ayyappa-temple-to-be-opened-this-evening">சபரிமலை</a> அய்யப்பன் கோவிலில் தற்போது தந்திரியாக கண்டரரு மகேஷ் மோகனரு உள்ளார். இவரது பணிக்காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து செங்கன்னூர் தாளமண் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை புதிய தந்திரியாக தேர்வு செய்ய திருவிதாங்கூர் தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.</p><p>இந்த நிலையில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரரு மீதான வழக்கு காரணமாகவும், உடல்நிலையை கருத்தில் கொண்டும் அவர் தந்திரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த போது அவரது மகன் கண்டரரு பிரம்ம தத்தனை நியமிக்க முன் மொழிந்து இருந்தார். இதையடுத்து தந்திரிக்கான அவரது தகுதியை உறுதி செய்ய காளிதாஸ் பட்டதிரிப்பாடு, சர்மன் வாசுவேன் பட்டதிலப்பாடு மற்றும் சுப்ரமணியன் நம் பூதிரி ஆகியோர் அடங்கிய ஆன்மிக பண்டிதர் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.</p><p>அவர்களின் சிபாரிசின் பேரில் சபரிமலை புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தனை நியமிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான தீர்மான அறிக்கையை கேரள ஐகோர்ட்டின் தனி அமர்வுக்கு அனுப்பி வைத்து அதற்கான ஆணை பெறப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.</p><p>புதிய தந்திரி அடுத்த மாதம் 18-ந்தேதி முதல் ஓராண்டு காலத்திற்கு சபரிமலை அய்யப்பன் கோவிலில் தந்திரியாக பணியாற்றுவார்.</p><p>சபரிமலையில் உள்ள காவல் தெய்வம் மற்றும் கதவுகளுக்கு தங்க தகடு பதிக்கப்பட்டபோது தங்கம் திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பலர் கைதானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>கேரள ஐயப்பன் கோவில் நெய் விற்பனை முறைகேடு</h2><p>கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா (ஐயப்பன்) கோவிலில் விற்பனை செய்யப்படும் அபிஷேக நெய்யில், கடந்த நவம்பர் 17, 2025 முதல் டிசம்பர் 27, 2025 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிதி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.</p><p>இந்த கால கட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட 16,628 பாக்கெட் நெய்யில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்கள் 43 பேர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. நெய் பாக்கெட்டின் விற்பனைத் தொகை திருவிதாங்கூர் தேவசம் போர்டு செலுத்தப்படவில்லை என்றும், இதனால் ரூ.17 லட்சத்திற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.</p><p>இதையடுத்து திருவிதாங்கூர் தேவசம் போர்டின் ஊழல் தடுப்புத் துறை அளித்த புகாரின் அடிப்படையில், கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து உடனடி குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டது.</p><h2>நீதிபதிகள் விசாரணை</h2><p>இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதிகள் வி.ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி. ஜெயக்குமார் அமர்வு, “இது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா ஆகியவற்றின் கீழ் குற்றங்களாக பதிவுசெய்யப்படும்.</p><p>குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், தண்டனைக்குரிய குற்றங்கள் ஏதேனும் நிரூபிக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்து, அந்த அறிக்கையை நான்கு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலைகளில் இந்த விவகாரத்தை வெறும் நிர்வாக அலட்சியம் அல்லது குறைபாடுள்ள பதிவேடு என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க முடியாது" என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.</p>]]></content:encoded></item><item><title>ஆர்.எஸ்.எஸ் பின்புலம்.. கல்வித் துறைக்கு பொறுப்பேற்கும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி யார்? கல்வித் தகுதி என்ன? </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-row-pralhad-joshi-with-rss-background-given-additional-charge-of-education-ministry</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-row-pralhad-joshi-with-rss-background-given-additional-charge-of-education-ministry#comments</comments><guid isPermaLink="false">2d662af2-a3e3-4ea4-86cb-0d1aa2124ce4</guid><pubDate>Sat, 25 Jul 2026 23:54:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T23:54:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/j6sxeoe1/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரகலாத் ஜோஷி]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரகலாத் ஜோஷி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/j6sxeoe1/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-victory-education-minister-dharmendra-pradhan-resigns-rahul-gandhi-says-time-to-oust-government">தர்மேந்திர பிரதான்</a> தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். </p><p>அவருக்கு பதில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை பொறுப்பு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. </p><p>பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். </p><p>தற்போதைய அமைச்சகப் பொறுப்புகளுடன் சேர்த்து இனி கல்வித் துறையையும் ஜோஷி கவனிப்பார்.</p>  <h2>பிரகலாத் ஜோஷி</h2><p>1962ஆம் ஆண்டு கர்நாடகாவின் விஜய்புரா பகுதியில் பிறந்த இவர், ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாகப் பணியாற்றி பின்னர் பாஜக வழியாக அரசியலுக்கு வந்தவர்.</p><p>கர்நாடகாவின் தார்வாட் மக்களவைத் தொகுதியிலிருந்து 2004ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.</p><h2>கல்வித் தகுதி</h2><p>இவர் கர்நாடகா பல்கலைக்கழகத்தின் கீழ் ஹூப்ளியில் இயங்கி வரும் கே.எஸ். ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றவர்.</p> <h2>முக்கியப் பொறுப்புகள்</h2><p>2019இல் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.</p><p>2024இல் 3வது முறையாக ஆட்சி அமைத்த மோடி அமைச்சரவையில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.</p> <h2>நிர்வாகம்</h2><p>போட்டித் தேர்வுகள், நீட் வினாத்தாள் கசிவு வழக்குகள் மற்றும் கல்வித் துறைச் சீர்திருத்த கோரிக்கைகள் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள சூழலில், மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவரான பிரகலாத் ஜோஷிக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீராக நடத்துவதிலும், எதிர்க்கட்சிகளுடன் சுமுகமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதிலும் திறமை வாய்ந்த நிர்வாகியாக அறியப்படும் ஜோஷி, கல்வித் துறையில் நிர்வாகச் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவாரா என்பதற்கு காலமே பதில் சொல்ல வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>சர்வாதிகார ஆட்சியைக்கூட மண்டியிட வைக்க முடியும் என நிரூபித்துவிட்டீர்கள் - &apos;கரப்பான்பூச்சிகளுக்கு&apos; பிரகாஷ் ராஜ் வாழ்த்து </title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">cde01987-ac05-4ea6-ac5a-9cd1b68f5314</guid><pubDate>Sat, 25 Jul 2026 23:24:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T23:24:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,prakash raj,பிரகாஷ் ராஜ்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/do8j8hw6/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரகாஷ் ராஜ்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரகாஷ் ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/do8j8hw6/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை <a href="https://www.maalaimalar.com/news/national/youth-have-reclaimed-our-country-priyanka-gandhi-elated">ராஜினாமா </a>செய்துள்ளார்.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை  நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் வரவேற்றுள்ளார்.</p><p> இந்த வெற்றி குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   </p><h2> பதிவு </h2><p>அதில், எனது அன்பான 'கரப்பான்பூச்சிகளுக்கு'  எனது வாழ்த்துகள்! அன்பிற்குரிய சோனம் வாங்சுக் சார் மற்றும் இளைஞர்களின் பக்கம் நின்ற ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள். </p><p>ஒரு சர்வாதிகார ஆட்சியைக்கூட உங்களால் மண்டியிட வைக்க முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள் என பதவிவிட்டுள்ளார். </p>  <h2>ஜந்தர் மந்தரில் பிரகாஷ் ராஜ்</h2><p>நடிகர் பிரகாஷ் ராஜ், ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கெடுத்து குறிப்பிடத்தக்கது. 23 நாட்களாக உண்ணவிரிதம் இருந்த இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த 3 மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடச் செய்ய நேரில் சென்று சமாதானம் கூறியவர்களில்  இவரும் ஒருவர். இவருடன் பாலிவுட் மூத்த நடிகை ஷாபனா அஸ்மியும் அம்மாணவர்களை உண்ணாவிரதத்தை கைவிட செய்தார்.</p> <h2>சிஜேபி நிலைப்பாடு</h2><p>இதனிடையே மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை தங்கள் பிரதான கோரிக்கையாக கொண்டு போராடிய நிலையில், தர்மேந்திர பிரதானின் விலகலை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் சோனம் வாங்சுக் ஆகியோர் வர்ணித்துள்ளனர்.</p><p>அதேநேரம், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மறுதேர்வு அழுத்தத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சிஜேபி வலியுறுத்தியுள்ளது.</p><h2>ராகுல் சொன்னது என்ன?</h2><p>முன்னதாக தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வரவேற்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் பிரியங்கா காந்தியின் சகோதரருமான ராகுல் காந்தி, இன்னும் இரண்டு கோரிக்கைகள் மிச்சம் இருப்பதாக தெரிவித்தார்.</p><p>அதாவது, குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட லட்சோபலட்சம் இளைஞர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர் போராட்டத்தில் வன்முறையை பிரயோகித்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;கரப்பான்பூச்சிகள்&apos; என அழைத்த தலைமை நீதிபதி சூர்யகாந்திற்கு நன்றி தெரிவித்த அபிஜித் தீப்கே!</title><link>https://www.maalaimalar.com/news/national/karappanpoochi-protest-victory-youth-led-cjp-movement-forces-education-minister-to-resign-over-neet-scandal</link><comments>https://www.maalaimalar.com/news/national/karappanpoochi-protest-victory-youth-led-cjp-movement-forces-education-minister-to-resign-over-neet-scandal#comments</comments><guid isPermaLink="false">2f6430f0-b391-40f2-8294-0492ceed5a45</guid><pubDate>Sat, 25 Jul 2026 22:12:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T22:12:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யகாந்த்,Suryakant,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/ztvoe8cf/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தீப்கே, சூர்யகாந்த் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தீப்கே, சூர்யகாந்த் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/ztvoe8cf/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய <a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career">CJP </a>நிறுவனர் அபிஜித் தீப்கே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்தை குறிப்பிட்டுப் பேசிய கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</p><p> தீப்கே பேசுகையில், </p><p>"தலைமை நீதிபதி சூரியகாந்த் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் எங்களை 'கரப்பான்பூச்சிகள்'  என்று அழைக்காமல் இருந்திருந்தால், நான் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியிருக்க மாட்டேன். இந்த மாபெரும் மக்கள் போராட்டமும் தொடங்கியிருக்காது!" என்று தெரிவித்தார். </p>  <h2>'கரப்பான்பூச்சி' சர்ச்சை</h2><p>மே 15 அன்று வழக்கறிஞர் ஒருவரின் மனு மீதான விசாரணையின்போது, "பணியோ அல்லது வாழ்க்கையில் சரியான இடமோ இல்லாமல் சுற்றித் திரியும் 'கரப்பான்பூச்சிகள்' போன்ற இளைஞர்கள் பலர் உள்ளனர்" என்று தலைமை நீதிபதி சூரியகாந்த் கூறிய கருத்து சர்ச்சையானது.</p><p>அடுத்த நாளே மே 16 அன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உதயமானது. அமெரிக்காவின் போஸ்டனில் படித்து வந்த அபிஜித் தீப்கே, இக்கருத்தை எதிர்த்து எக்ஸ் தளத்தில் 'ரப்பான்பூச்சி ஜனதா கட்சி' என்ற பெயரில் நையாண்டியாக ஒரு இயக்கத்தை அறிவித்தார்.</p><p>சர்ச்சை வலுத்த நிலையில் , தாம் போலி சட்டப் பட்டம் பெற்றவர்களை மட்டுமே அவ்வாறு குறிப்பிட்டதாக சூர்யகாந்த் விளக்கமளித்தார்.</p><h2>சிஜேபி</h2><p>ஆனால் அதற்குள் சிஜேபி கட்சிக்கு இணையத்தில் பாலோயர்கள் குவிந்தனர். இன்ஸ்டா உள்ளிட்ட தளங்களிலும் சிஜேபி கணக்கு உருவாகி குறுகிய காலத்தில் பாஜகவின் அதிகாரபூர்வ இன்ஸ்டா பக்கத்துக்கு இருந்த பாலோயர்களை கடந்து அதிக பாலோயர்களை பெற்றது சிஜேபி.</p> <h2>காலவரையற்ற போராட்டம்</h2><p>தொடர்ந்து நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில், ஜூன் மாதத் தொடக்கத்தில் இந்தியா திரும்பிய அபிஜீத் தீப்கே, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களைத் திரட்டி போராட்டத்தை முன்னெடுத்தார். பின்னர் அவரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவிலும், கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டம் நடத்தினார். களத்திற்கு பல இளைஞர்கள் ஆர்வமுடன் வந்தனர்.</p><p>தொடர்ந்து சிஜேபி கட்சி ஜூன் 20 அன்று முறையே காலவற்றையற்ற போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கியது. அவர்களின் பிரதான கோரிக்கை, தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதாகும்.</p><p>இப்போராட்டத்திற்கு ஆதரவாக ஜூன் 28 அன்று பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.</p> <h2>பெருகிய ஆதரவு</h2><p>ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் நடத்திய பேரணியில் போலீஸ் மற்றும் மத்திய படையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மேலும் போராட்டத்திற்கு ஆதரவு பன்மடங்கு பெருகியது. பிற மாநிலங்களிலும் போராட்டம் பரவியது.</p><h2>வெற்றி</h2><p>தொடர்ந்து மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதிகளைத் தொடர்ந்து, 26 நாட்களாக நீடித்த தனது உண்ணாவிரதப் போராட்டத்தைச் சோனம் வாங்சுக் நிறைவு செய்தார். ஆனால் பிரதான் பதவி விலகும்வரை தங்கள் போராட்டம் தொடரும் என சிஜேபி அறிவித்தது. அவர்களுடனான 3 கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு முன்னெடுத்த நிலையில் நேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினமா செய்தார்.</p><p>தலைமை நீதிபதியின் ஒரு சர்ச்சை வார்த்தையில் தொடங்கி, நாட்டின் கல்வி அமைச்சரின் ராஜினாமா வரை கொண்டு சென்ற இந்த கரப்பான்பூச்சி இயக்கத்தின் வெற்றி, இந்திய வரலாற்றில் ஒரு முக்கியப் போராட்டமாகப் பதிவாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெங்களூரு: அரசுப் பேருந்தில் பெண்ணை சீண்டிய நபருக்கு ஓட்டுநர், சக பயணிகள் தர்ம அடி - வைரல் வீடியோ 
</title><link>https://www.maalaimalar.com/news/national/bengaluru-bmtc-bus-incident-woman-confronts-molester-driver-and-passengers-thrash-accused</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengaluru-bmtc-bus-incident-woman-confronts-molester-driver-and-passengers-thrash-accused#comments</comments><guid isPermaLink="false">a1c58230-dcd7-4dfa-bb0d-713a369efa5e</guid><pubDate>Sat, 25 Jul 2026 21:04:28 +0000</pubDate><atom:updated>2026-07-25T21:04:28.393Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sexual assault,வைரல் வீடியோ,பெங்களூரு,bengaluru,பாலியல் அத்துமீறல்,viral video</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/ctnlq51w/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 
பாலியல் அத்துமீறல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ 
பாலியல் அத்துமீறல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/ctnlq51w/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசுப் பேருந்தில் பெண் பயணி ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற நபரை பேருந்து ஓட்டுநரும் சக பயணிகளும் சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><h2>அத்துமீறல் </h2><p>ஐடி காரிடார் பகுதியில் உள்ள மான்யதா டெக் பார்க் அருகே வெள்ளிக்கிழமை அன்று பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்தில் பெண் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தபோது, அருகே இருந்த நபர் ஒருவர் அவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டு தவறான முறையில் தொட்டுள்ளார்.</p><p>இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், உடனடியாக அந்த நபரை தைரியமாகத் தட்டிக்கேட்டு, அவரது கன்னத்தில் பளார் அறை விட்டுள்ளார்.</p> <h2>ஓட முயற்சி </h2><p>பயத்தில் அந்த நபர் உடனடியாகப் பேருந்தில் இருந்து இறங்கித் தப்பி ஓட முயன்றார்.</p><p>நிலமையை உணர்ந்த பேருந்து ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தின் கதவுகளை மூடி, அந்த நபர் தப்பிச் செல்வதைத் தடுத்தார்.</p><h2>தர்ம அடி </h2><p>பேருந்து ஓட்டுநர் மற்றும் சக பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த நபரைப் பிடித்துத் தர்ம அடி கொடுத்தனர். சமூக வலைத்தளங்களில் இச்சம்பவத்தின் வீடியோ வேகமாக பரவி வருகிறது.</p><p>அந்த நபர் பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துச் சம்பிகேஹள்ளி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p> <figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A woman was allegedly sexually harrassed by another passenger on a bus in Bengaluru. The incident happened on July 23. She confronted the accused, the driver intervened and stopped the man from fleeing. <a href="https://t.co/eryo4zAiLq">pic.twitter.com/eryo4zAiLq</a></p>&mdash; Vani Mehrotra (@vani_mehrotra) <a href="https://x.com/vani_mehrotra/status/2080887577532596689?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>பல இரவுகள் தூக்கமின்றி தவித்தேன்.. மகன் அபிஜித் தீப்கே வெற்றி குறித்து கண்ணீருடன் தாய் சொன்ன விஷயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-victory-education-minister-dharmendra-pradhan-resigns-after-exam-leak-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-victory-education-minister-dharmendra-pradhan-resigns-after-exam-leak-row#comments</comments><guid isPermaLink="false">6d38d937-643a-4749-a275-af715b5901aa</guid><pubDate>Sat, 25 Jul 2026 20:18:25 +0000</pubDate><atom:updated>2026-07-25T20:18:25.802Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,CJP Protest,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/d1xdql9l/tn-9.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/d1xdql9l/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><p>தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த செய்தி வெளியானதும், போராட்ட்டதை முன்னின்று நடத்திய மகாராஷ்டிராவை சேர்ந்த சிஜேபி நிறுவனர் <a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career">அபிஜீத் தீப்கே</a>வின் தாயார் அனிதா திப்கே கேமராக்களின் முன் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் சிந்தினார்.</p> <h2>தாய் பேட்டி</h2><p>அபிஜீத் திப்கேவின் தாயார் அனிதா தீப்கே கூறுகையில்,</p><p>"அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக அவன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியதிலிருந்து நான் பல இரவுகள் தூக்கமின்றித் தவித்தேன்.</p><p>முன்பு ஜெய்ப்பூரில் அவன் மீது நடந்த தாக்குதல்களும், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியபோது அவன் மீது மை வீசப்பட்ட சம்பவமும் எங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியது.</p><p>தினமும் காலையில் போனை பார்க்கவே பயமாக இருக்கும்; அவனது நண்பர்களை அழைத்து அவன் பாதுகாப்பாக இருக்கிறானா என்று விசாரித்துக் கொண்டே இருப்பேன்.</p><p>என் மகன் டெல்லி கொசுக்களுக்கு இடையே இரவுகளை கழித்தான். போராட்டத்தின் போது அவனுக்குத் டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டது.</p><p>இருப்பினும் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டான். அவனது உழைப்பிற்கும் மன உறுதிக்கும் கிடைத்த வெற்றி இது. " என்று தெரிவித்தார்.</p><p>மேலும் போராட்டத்தின் இனி இனிப்புகள் வழங்கித் தனது மகனை வரவேற்கப்போவதாகவும், இது தனது மகனின் வெற்றி மட்டுமல்ல, போராடிய அத்தனை மாணவர்களின் வெற்றி என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.</p> <figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Chhatrapati Sambhajinagar, Maharashtra | Parents of Cockroach Janta Party&#39;s Founding President Abhijeet Dipke get emotional after Union Minister Dharmendra Pradhan resigns. <a href="https://t.co/LkxTiKmLf6">pic.twitter.com/LkxTiKmLf6</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2080959156841038327?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>தந்தை பேட்டி</h2><p>அபிஜீத்தின் தந்தை பகவான்ராவ் தீப்கே பேசுகையில்,</p><p>"எங்கள் குடும்பத்தில் யாருக்கும் அரசியல் பின்னணி கிடையாது. அவன் எனது விருப்பத்திற்கு மாறாகவே இதில் இறங்கினான்.</p><p>அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்ப வேண்டாம் என்றும், கைது செய்யப்படலாம் என்றும் கெஞ்சினோம்.</p><p>அவன் மீது இருமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மகன் உயிருடன் இருக்க மாட்டானோ என்று பயந்தோம். கடவுள் புண்ணியத்தில் அவன் பாதுகாப்பாக இருக்கிறான்." என்றார்.</p> <h2>பிரதானுக்கு பாராட்டு</h2><p>மேலும், "கல்வி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து, மாணவர்களைப் படிப்பில் கவனத்தை வைக்குமாறு கேட்டுக்கொண்டது அவரது பெரிய மனதை காட்டுகிறது.</p><p>இதை யாருடைய வெற்றியோ அல்லது தோல்வியோ பார்க்கத் தேவையில்லை" என்று தெரிவித்தார்.</p><p>தர்மேந்திர பிரதானுக்குப் பாராட்டு: என்றும், என்றும் அவர் குறிப்பிட்டதுடன், மகன் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவன் ம் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்கள் நம் நாட்டை மீட்டெடுத்துள்ளனர்  - பிரியங்கா காந்தி பூரிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/youth-have-reclaimed-our-country-priyanka-gandhi-elated</link><comments>https://www.maalaimalar.com/news/national/youth-have-reclaimed-our-country-priyanka-gandhi-elated#comments</comments><guid isPermaLink="false">c429f314-bb7b-40c6-bee4-77e5828c9129</guid><pubDate>Sat, 25 Jul 2026 18:21:17 +0000</pubDate><atom:updated>2026-07-25T18:21:17.447Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,BJP Protest,Priyanka gandhi,பிரியங்கா காந்தி,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/jaz2v50j/priyanka-gandhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ priyanka gandhi.]]></media:title><media:description type="html"><![CDATA[ priyanka gandhi.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/jaz2v50j/priyanka-gandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வயநாடு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வரவேற்றுள்ளார்.  </p><h2> பிரியங்கா பேட்டி </h2><p>வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, "கடந்த 10-12 ஆண்டுகளாக நமது நாட்டின் இளைஞர்கள் எப்போது விழித்துக் கொள்வார்கள், குரல் எழுப்புவார்கள் என்று நான் பலமுறை எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டதுண்டு. </p><p>இன்று நாட்டின் இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்கள் குரலை உரக்கப் பதிவு செய்துள்ளனர். அவர்களின் குரல் அரசுக்குக் கேட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. </p><p>ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது சித்தாந்தத்தால் நாட்டின் ஒட்டுமொத்தக் கல்வி முறையையும் ஆக்கிரமிக்க முயல்கிறது. நமது முன்னோர்களின் கொள்கைகள் திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்டு வருகின்றன.</p><p>ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது அரசு தனது அதிகார பலத்தைப் பிரயோகித்தது. </p><p>ஆனால், ஆட்சியாளர்களை விட மக்களே நாட்டின் மிக உயர்ந்த சக்தி என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது. இன்று நமது நாட்டை இளைஞர்கள் மீட்டெடுத்துள்ளனர்." என தெரிவித்தார். </p> <h2>ராகுல் சொன்னது என்ன?</h2><p>முன்னதாக தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வரவேற்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் பிரியங்கா காந்தியின் சகோதரருமான <a href="https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-victory-education-minister-dharmendra-pradhan-resigns-rahul-gandhi-says-time-to-oust-government?fbclid=IwY2xjawTR01tleHRuA2FlbQIxMABicmlkETFPdXJ6VjhhT2J2WG9KZnlHc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHjXj2mFgxWQcFWVrX3_Xg7udAxq50qzKepdfsWZ5_CaQSmrigLGj2mU5uR7y_aem_Zlv7sVZVl6tCQWfp2hTrPg">ராகுல் காந்தி</a>, இன்னும் இரண்டு கோரிக்கைகள் மிச்சம் இருப்பதாக தெரிவித்தார்.</p><p>அதாவது, குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட லட்சோபலட்சம் இளைஞர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர் போராட்டத்தில் வன்முறையை பிரயோகித்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p> <h2>சிஜேபி நிலைப்பாடு</h2><p>இதனிடையே மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை தங்கள் பிரதான கோரிக்கையாக கொண்டு போராடிய நிலையில், தர்மேந்திர பிரதானின் விலகலை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் சோனம் வாங்சுக் ஆகியோர் வர்ணித்துள்ளனர்.</p><p>அதேநேரம், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மறுதேர்வு அழுத்தத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சிஜேபி வலியுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அடுத்து பாஜக அரசை அகற்றும் நேரம் வந்துவிட்டது - ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-victory-education-minister-dharmendra-pradhan-resigns-rahul-gandhi-says-time-to-oust-government</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-victory-education-minister-dharmendra-pradhan-resigns-rahul-gandhi-says-time-to-oust-government#comments</comments><guid isPermaLink="false">8bd4393c-db76-4f76-8dc7-a44f40c80b5d</guid><pubDate>Sat, 25 Jul 2026 17:02:44 +0000</pubDate><atom:updated>2026-07-25T17:02:44.375Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,BJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/l6lv38kd/Rahul-gandhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Rahul gandhi]]></media:title><media:description type="html"><![CDATA[ Rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/l6lv38kd/Rahul-gandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/national/bjp-veteran-mm-joshi-says-better-late-than-never-as-pradhan-quits-had-criticised-use-of-force-on-cjp-protesters">தர்மேந்திர பிரதான்</a> தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். </p><p>இதை வரவேற்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "அடுத்து இந்த அரசை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது" என  தெரிவித்துள்ளார். </p><p>தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவாக பேசி வெளியிட்டுள்ள ராகுல், </p><h2>முதல் வெற்றி </h2><p>"முதலாவதாக, இது நமது <a href="https://www.maalaimalar.com/news/national/peoples-democratic-verdict-arvind-kejriwal-on-people-power">மாணவர்களின் வெற்றி</a>. இது இந்தியாவின் எதிர்காலம். நமது பெருமையாக இருந்த, உலகமே வியந்து பாராட்டிய நமது கல்வி முறை பல ஆண்டுகளாகத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தது. அது கைப்பற்றப்பட்டு, தனியார்மயமாக்கப்பட்டு வந்தது. அதற்கு எதிரான எதிர்வினை தான் இது.  </p><p>தர்மேந்திர பிரதான் ஒரு குறியீடு. அவர் ஊழலின் குறியீடு, கல்வி முறையின் அழிவின் குறியீடு, திறமையின்மையின் குறியீடு. </p><p>கல்வி அமைப்பை மறுசீரமைப்பதை நோக்கிய ஒரு மிகப்பெரிய முதல் அடிதான் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா. </p><p>நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள்; உங்களை நினைத்து நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம். </p><p> மாணவர்களின் அசைக்க முடியாத உறுதியான போராட்டமே நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அவர்களின் எதிர்காலம் ஆகியவற்றைப் பாதுகாத்துள்ளது . </p><h2></h2><h2>ராஜினாமா போதாது</h2><p>கல்வி அமைச்சரின் ராஜினாமா மட்டுமே இறுதித் தீர்வாகாது. மேலும் இரு முக்கிய கோரிக்கைகள் மிச்சம் உள்ளன.</p><p>நாட்டின் எதிர்காலமாகத் திகழும் மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த இளைஞர்களிடமும் பிரதமர் மோடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>டெல்லி மற்றும் பிற பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கொடூரமான வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p> <h2>நேரம் வந்துவிட்டது</h2><p>இந்த நாடு இந்திய மக்களுக்குச் சொந்தமானது. இது இந்திய அரசியலமைப்புக்குச் சொந்தமானது. இந்த நிறுவனங்கள் எதுவும் உங்களுக்குச் சொந்தமானவை அல்ல.</p><p>நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் தங்களின் உரிமைகளுக்காக அரசியலமைப்பு வழியில் தொடர்ந்து போராட வேண்டும்.</p><p>பயப்படாதீர்கள். இந்தியாவைத் தாக்கி, நமது அரசியலமைப்பை அழித்து, நமது அனைத்து நிறுவனங்களையும் தாக்கும் இந்த அரசாங்கத்தை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது." என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அசாமில் பாகிஸ்தான் ISI ஸ்லீப்பர் செல்லுடன் தொடர்புடைய 3 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/three-arrested-linked-to-pakistan-isi-terror-network-in-assam</link><comments>https://www.maalaimalar.com/news/national/three-arrested-linked-to-pakistan-isi-terror-network-in-assam#comments</comments><guid isPermaLink="false">10e37756-5b1d-440f-8da1-ce71cc7f254c</guid><pubDate>Sat, 25 Jul 2026 16:01:40 +0000</pubDate><atom:updated>2026-07-25T16:01:40.340Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐஎஸ்ஐ,ISI,அசாம்,Assam,special task force,சிறப்பு அதிரடி படை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/tf9yrv4p/Untitled-design-71.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Three linked to Pakistan-based Shazad Bhatti terror network arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/tf9yrv4p/Untitled-design-71.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாமில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஷாசாத் பட்டி நெட்வொர்க் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் மூன்று பேரை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர்.</p><p>அசாமில் புலனாய்வு தகவல்களின் அடிப்படையில், சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் ஒருங்கிணைந்த நடவடிக்கை ஒன்றை நேற்று மேற்கொண்டனர்.</p><h3><strong>ஷாசாத் பட்டி ஐஎஸ்எஸ் பயங்கரவாத அமைப்பு:</strong>   </h3><p>அப்போது பாகிஸ்தானின் ஷாசாத் பயங்கரவாத அமைப்பு இணையவழியில் தீவிரவாதத்தைப் பரப்புவது, உளவு பார்த்தல், சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கொள்முதல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது.</p><p>இந்த அமைப்பு பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்புடன் (ISI) தொடர்புடைய பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.</p><p>காலிஸ்தான் ஆயுதப் படை, காலிஸ்தான் விடுதலை இராணுவம், ஷேர்-இ-பஞ்சாப் படைப்பிரிவு மற்றும் தெஹ்ரிக்-இ-தாலிபான் ஹிந்துஸ்தான் உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளுடன் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை கூறியது.</p><p>2026 பிப்ரவரி 22 மற்றும் மே 24 ஆகிய தேதிகளில் நடந்த தனித்தனி சம்பவங்களில் இரண்டு பஞ்சாப் காவல்துறை பணியாளர்களின் கொலைகளுக்கு, இந்த பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றதாகவும் காவல்துறை தெரிவித்தது.</p><h3><strong>காவல்துறை அறிக்கை:</strong></h3><p>இந்நிலையில் கைது நடவடிக்கைக்கு பிறகு காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஷாஜாத் பட்டி நெட்வொர்க், இந்தியாவில் ஸ்லீப்பர் செல்களை நிறுவ முயற்சி செய்து வருகிறது.</p><p>அதன் மூலம் அந்த அமைப்பு நாசவேலைத் திட்டங்கள் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.</p><p>இந்த நெட்வொர்க் ஆரம்பத்தில் பஞ்சாப், ஹரியானா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது.</p><p>2026-ஆம் ஆண்டில், அசாம் மற்றும் வடகிழக்கில் அதன் நடவடிக்கைகள் எங்கள் கவனத்திற்கு வந்தன. அதன் அடிப்படையில், சிறப்பு அதிரடிப்படை துப்ரி, சிரங் மற்றும் பர்பேட்டாவில் ஒரே நேரத்தில் நடவடிக்கைகளை தொடங்கியது.</p><h3><strong>மூன்று பேர் கைது:</strong></h3><p>இதன் விளைவாக, இந்த நெட்வொர்க்கைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் அக்ரமுல் இஸ்லாம், அமினுர் ரஹ்மான் மற்றும் அப்துல் ஹுசைன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.</p><p>இவர்களிடமிருந்து ஐந்து கைபேசிகள், ஏழு சிம் கார்டுகள், ஆதார் அட்டைகள், வங்கி பாஸ்புக்குகள், பற்று அட்டைகள் மற்றும் பிற ஆவணங்களை புலனாய்வாளர்கள் கைப்பற்றினர்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைகளை சமூக ஊடகங்களில் இருந்து விலக்கி வையுங்கள்.. பெற்றோர்களுக்கு மோகன் பகவத் அறிவுரை</title><link>https://www.maalaimalar.com/news/national/keep-children-away-from-social-media-mohan-bhagwat-advice-to-parents</link><comments>https://www.maalaimalar.com/news/national/keep-children-away-from-social-media-mohan-bhagwat-advice-to-parents#comments</comments><guid isPermaLink="false">d28ccfad-eb49-4c6e-8006-44f879e74403</guid><pubDate>Sat, 25 Jul 2026 15:54:09 +0000</pubDate><atom:updated>2026-07-25T15:54:09.670Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RSS,மோகன் பகவத்,Mohan Bagwat,ஆர்.எஸ்.எஸ். தலைவர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/lebzn3e8/Untitled-design-73.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mohan Bhagwat advises parents to lead by example and protect kids ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/lebzn3e8/Untitled-design-73.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இளைஞர்கள் தோல்வியடையும்போது விமர்சனத்தை விட அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவே தேவை என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.</p><p>விஸ்வமங்கள்ய சபா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், பெற்றோர்கள் குழந்தைகளின் ஆரம்ப ஆண்டுகளில் அவர்களின் குணநலன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி, அவர்கள் வளரும்போது படிப்படியாக அதிக சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.</p><h3><strong>குழந்தைகள் வளர்ப்பு அறிவுரை:</strong></h3><p>சமூக ஊடகங்களின் தாக்கத்தைக் கையாள்வதில் பெற்றோர்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றும், குழந்தைகள் வீட்டில் பார்ப்பதைப் பின்பற்றுவதாகவும், பெரியவர்களைக் கவனிப்பதன் மூலம் தங்கள் குணநலன்களை வளர்த்துக் கொள்வதாகவும் அவர் வலியுறுத்தினார்.</p><p>இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “இன்றைய சொற்கள் நுண்ணறிவை (IQ) பற்றிப் பேசுகின்றன. ஆனால், உணர்ச்சி நுண்ணறிவுதான் உண்மையில் முக்கியமானது. </p><p>பின்னடைவுகளைச் சமாளிக்க முடியாமல் வாழ்க்கையில் தோல்வியடையும் திறமையானவர்களை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்.</p><p>மதிப்புகளைத் திணிக்க முடியாது. பெரியோர்களின் நடத்தையைக் கவனிப்பதன் மூலம் அவை இயல்பாகவே உள்வாங்கப்படுகின்றன. </p><p>இது நல்லது, எனவே இதைச் செய்யுங்கள் என்று யாரோ சொல்வதால் மட்டும் அவை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. </p><p>கவனிப்பதாலும், பின்பற்றுவதாலும் மட்டுமே அவை ஒருவரின் குணத்தின் ஒரு பகுதியாக மாறுகின்றன. ஐந்து வயது வரை குழந்தைகளை சின்னஞ்சிறு ராஜாக்கள் மற்றும் ராணிகளைப் போல நடத்த வேண்டும். </p><p>ஐந்து முதல் பதினாறு வயதுக்குள் அவர்களை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டும்; பதினாறு வயதுக்குப் பிறகு, அவர்களை நண்பர்களைப் போல நடத்த வேண்டும் என்று எங்கள் முன்னோர்கள் கூறுவார்கள். </p><p>ஏனென்றால், அந்த வயதில், இளம் வயதினர் சுயமாகப் புரிந்துகொள்ளவும் சிந்திக்கவும் கூடிய திறனை வளர்த்துக் கொள்கிறார்கள்.</p><h3><strong>பெற்றோர்களுக்கு அறிவுரை:</strong></h3><p>ஒரு குழந்தை தேர்வில் தோல்வியுற்றால், தான் தோல்வியடைந்துவிட்டோம் என்பது அக்குழந்தைக்கு ஏற்கெனவே தெரியும். அதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை.</p><p>மாறாக, தங்களுடன் யாரோ ஒருவர் துணை நிற்கிறார் என்பதை அக்குழந்தை உணர வேண்டும். பெற்றோர்கள் குழந்தையிடம், கவலைப்படாதே.</p><p>நாங்கள் உன்னுடன் இருக்கிறோம், அடுத்த முறை நீ வெற்றி பெறுவாய். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம் என்று சொல்ல வேண்டும். அதுதான் குழந்தைகளுக்குத் தேவை.</p><p>விழுந்தாலும் எழுந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு குழந்தைக்கும் கற்பிக்கப்பட வேண்டும். அந்த நம்பிக்கை குடும்பத்திடமிருந்து வர வேண்டும்.</p><p>குடும்பங்கள் அத்தகைய ஆதரவை வழங்கினால், குழந்தைகள் இயல்பாகவே வலிமையானவர்களாகவும் திறமையானவர்களாகவும் மாறுவார்கள்.</p><p>குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் மிகவும் நெருக்கமாகப் பிணைந்திருப்பதாக உணர வேண்டும், அப்போதுதான் அவர்களால் தயக்கமின்றி தங்கள் பெற்றோரிடம் பேச முடியும்.</p><h3><strong>சமூக ஊடகப் பொறுப்பு:</strong> </h3><p>உங்கள் பிள்ளைகள் திரைப்படங்களில் வரும் சில உள்ளடக்கங்களைப் பார்ப்பதையோ அல்லது இழிவான வார்த்தைகளைக் கேட்பதையோ நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்களும் அதைப் பார்க்கவோ கேட்கவோ கூடாது.</p><p>எல்லாவற்றிற்கும் மேலாக, அதைத் தவிர்ப்பதால் நாம் என்ன இழக்கப் போகிறோம்? குழந்தைகள் தாங்கள் பார்ப்பதைப் பின்பற்றுகிறார்கள்.</p><p>நாம் சரியான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தால், அவர்கள் இயல்பாகவே அதைப் பின்பற்றுவார்கள், படிப்படியாக அது அவர்களின் குணத்தின் ஒரு பகுதியாகி விடும்,” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அடுத்த கல்வித்துறை அமைச்சர் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/next-education-minister-central-government-shock-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/national/next-education-minister-central-government-shock-announcement#comments</comments><guid isPermaLink="false">1415e9b2-5006-406a-8061-2bfc9da3e2f5</guid><pubDate>Sat, 25 Jul 2026 15:17:53 +0000</pubDate><atom:updated>2026-07-25T15:17:53.098Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,பிரகலாத் ஜோஷி,Prahlad Joshi,neet protest,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/vy4z2goz/Untitled-design-72.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dharmendra Pradhan resigns, Pralhad Joshi given additional education charge]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/vy4z2goz/Untitled-design-72.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கல்வி அமைச்சராக பதவி வகித்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, உணவு மற்றும் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><h3><strong>தர்மேந்திர பிரதான் ராஜினாமா:</strong></h3><p>டெல்லியில் நீட் தேர்விற்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதர் மோடிக்கு கடிதம் எழுதினார்.</p><p>தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.</p><p>இதையடுத்து சிஜேபி கட்சியினருடன் பாஜக மூத்த அமைச்சர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p>அப்போது சிஜேபி கட்சியின் சார்பாக மூன்று முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை  ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு தெரிவித்தது. பின்னர் போராட்டம் கைவிடப்படுவதாக சிஜேபி அறிவித்தது. </p><p>மேலும் நான்கு வார காலத்திற்குள், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.</p><p>தர்மேந்திர பிரதான் பதவி விலகியதையடுத்து, மத்திய கல்வித் துறை பதவி காலியாக இருந்தது.</p><h3><strong>கல்வித்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு:</strong></h3><p>இந்நிலையில் கர்நாடகாவின் முன்னாள் பாஜக மாநில தலைவரும், இந்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சருமான பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை இலாகா வழங்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஒருபோதும் இல்லை என்பதை விட காலதாமதம் சிறந்தது: தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து முரளி மனோகர் ஜோஷி</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-veteran-mm-joshi-says-better-late-than-never-as-pradhan-quits-had-criticised-use-of-force-on-cjp-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-veteran-mm-joshi-says-better-late-than-never-as-pradhan-quits-had-criticised-use-of-force-on-cjp-protesters#comments</comments><guid isPermaLink="false">d369b969-8e9c-445a-9268-1eb7d305d8bf</guid><pubDate>Sat, 25 Jul 2026 14:56:24 +0000</pubDate><atom:updated>2026-07-25T14:56:24.526Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Murli Manohar Joshi,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/8bxc7bry/DharmendraPradhan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான்- முரளி மனோகர் ஜோஷி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/8bxc7bry/DharmendraPradhan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி <a href="https://www.maalaimalar.com/news/national/peoples-democratic-verdict-arvind-kejriwal-on-people-power">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> சார்பில் ஜந்தர் மந்தரில் கடந்த 20-ந்தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.</p><p>மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது போராட்டத்தை கைவிட்டுள்ளது.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமா தொடர்பாக பாஜக கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான முரளி மனோகர் ஜோஷி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-</p><p>ஒருபோதும் இல்லாதது என்பதைவிட காலதாமதம் சிறந்தது. தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்துள்ளார். பிரதமரும் இதுகுறித்து உடனடி மற்றும் சரியான நேரத்தில் முடிவெடுப்பார் என்று நான் நம்புகிறேன்.</p><p>இப்போராட்டத்தை அமைதியான முறையில் நிறைவு செய்த அனைத்து மாணவர்களையும் நான் பாராட்டுகிறேன். அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியக் கல்விச் சூழலில் விரைவில் அமைதி நிலவும் என்றும், இளைஞர்கள் தங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஏற்ற ஏராளமான வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்றும் நான் நம்புகிறேன்.</p><p>இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p>பாஜக முன்னாள் தலைவரான முரளி மனோகர் ஜோஷி, தர்மேந்திர பிரதான் ராஜினாமா சரிதான் எனப் பேசியுள்ளார். அரசியல் விமர்சனம், மோடி அரசின் கொள்கை பிரச்சினை தொடர்பாக இவர் விமர்சிக்காமல் இருந்தது இல்லை.</p><h2>மத்திய அரசு பணிவதற்கான தொடக்கம்</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் கடந்த 20-ந்தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.</p> <h2>நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்</h2><p>இவர்கள் கடந்த 20-ந்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் பேரணியை நடத்தினர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தனர். தடுப்பை மீறிச் செல்ல முயன்றதால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசினர். இதில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர்.</p><p>இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும். அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால் பிரதமர் மோடி ராஜினாமா செய்யக்கோரி போராடுவேம் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தெரிவித்தது.</p><h2>மேலும் 3 கோரிக்கைகள் வைத்த கரப்பான்பூச்சி ஜனதா தளம்</h2><p>இதனைத்தொடர்ந்து மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. அதற்கு முன்னதாக இன்று மதியம் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த போதிலும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே போராட்டத்தை வாபஸ் பெறப்படாது. மேலும், 3 கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்தார்.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய பின், கராப்பான்பூச்சி ஜனதா தளம் மற்றும் மத்திய அரசு இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.</p><p>இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் அனைவரையும் நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மற்ற விசயங்கள் 4 வாரங்கள் கழித்து பேசி முடிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பதவி விலகிய தர்மேந்திர பிரதான் - பாஜக மூத்த தலைவர்கள் எக்ஸ் தளத்தில் உருக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/education-minister-resigns-bjp-leaders-pay-tribute-on-x</link><comments>https://www.maalaimalar.com/news/national/education-minister-resigns-bjp-leaders-pay-tribute-on-x#comments</comments><guid isPermaLink="false">674ecfaa-b2fa-41b8-a8e0-b6e4b2ab97b1</guid><pubDate>Sat, 25 Jul 2026 13:17:19 +0000</pubDate><atom:updated>2026-07-25T13:17:19.116Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நிதின் நபின்,Nitin Nabin,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Kiren Rijiju,கிரண் ரிஜிஜு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/htcnydp5/Untitled-design-66.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senior BJP leaders highlighting his education reforms]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/htcnydp5/Untitled-design-66.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினத்தாள் கசிவு காரணமாக மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.</p><p>இதையடுத்து தர்மேந்திர பிரதான், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, ராஜினாமா செய்தார்.</p><p>இந்நிலையில் கடந்த காலங்களில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆற்றிய சேவைக்காக, அவருக்கு நன்றி தெரிவித்து பாஜக மூத்த தலைவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.</p><h3><strong>பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் பதிவு:</strong></h3><p>இத்தனை ஆண்டுகளாக தேசத்தின் பரந்த நலன்களுக்கு முன்னுரிமை அளித்ததாக கூறி பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நன்றி தெரிவித்தார்.</p><p>இதுகுறித்து நிதின் நபின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சராக, இந்தியாவின் கல்வி சூழலை சீர்திருத்துவதிலும், வரலாற்று சிறப்புமிக்க தேசிய கல்வி கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும், மேலும் பல முன்னெடுப்புகளிலும் முக்கிய பங்காற்றினார்.</p><p>பரந்த நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர் பதவி விலகும் முடிவு, பொது வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய மிக உயர்ந்த நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவையை பிரதிபலிக்கிறது.</p><p>இந்த முடிவில் தர்மேந்திர பிரதானுக்கு, கட்சி உறுதுணையாக நிற்கிறது. அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.</p><h3><strong>கிரண் ரிஜிஜு எக்ஸ் தள பதிவு:</strong></h3><p>இதையடுத்து நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “உண்மையான தலைமைத்துவம் என்பது பல ஆண்டுகளின் உழைப்பால் அளவிடப்படுகிறது.</p><p>தங்களின் பயணம், பொது வாழ்விலும் மாணவர் நலனிலும், நீங்கள் வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்த ஈடுபாட்டிற்கு ஒரு சான்றாக திகழ்கிறது.</p><p>மத்திய அமைச்சரவையில் உங்களுடன் இணைந்து பணியாற்றியபோது, இந்தியாவின் கல்வி சூழலை வலுப்படுத்துவதிலும், நமது கோடிக்கணக்கான இளம் மாணவர்களை ஒவ்வொரு முடிவின் மையத்தில் வைப்பதிலும் உங்கள் அர்ப்பணிப்பை நான் பார்த்திருக்கிறேன்.</p><p>இத்தகைய ஒரு முக்கிய துறையை வழி நடத்த அளவற்ற விடாமுயற்சி தேவைப்படுகிறது. அதை நீங்கள் தையரித்துடனும், தெளிவான தொலை நோக்கு பார்வையுடனும் ஏற்றுக்கொண்டீர்கள்.</p><p>உங்களின் அயராத சேவைக்கும், சீர்திருத்தங்களுக்கான உங்களின் அர்ப்பணிப்புக்கும், வலிமையான இந்தியாவை கட்டமைப்பதில் உங்கள் பங்களிப்புக்கும் நன்றி.</p><p>இதே உறுதியுடனும் நேர்மையுடனும் நீங்கள் தொடர்ந்து தேசத்திற்கு சேவையாற்ற வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி போராட்டத்தை முடித்து கொள்வதாக சிஜேபி அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/third-round-talks-with-central-government-conclude</link><comments>https://www.maalaimalar.com/news/national/third-round-talks-with-central-government-conclude#comments</comments><guid isPermaLink="false">659223e8-fcf7-4259-8fd3-e65c99d1be3e</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:37:56 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:37:56.715Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,ஜேபி நட்டா,JP Nadda,neet,நீட்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/m58kfukh/Untitled-design-69.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NEET protest ends as Centre assures withdrawal of cases after third round of talks]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/m58kfukh/Untitled-design-69.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>இதையடுத்து காக்ரோச் ஜனதா கட்சியினர் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, அதற்கு முடிவு எட்டப்பட்டால் மட்டுமே போராட்டம் முடிவுக்கு வரும் என தெரிவித்தனர்.</p><p>இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்களான ஜே.பி. நட்டா மறும் ஜிதேந்திர சிங் ஆகியோர்களுடன் காக்ரோச் ஜனதா கட்சியினர் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர்.</p><h3><strong>மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு:</strong></h3><p>பேச்சுவார்த்தைக்கு பின்பு மத்திய அமைச்சர்களும், காக்ரோச் ஜனதா கட்சியினரும் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். </p><p>அப்போது அந்த செய்தியாளர் சந்திப்பில், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நடந்து வந்த போராட்டத்தை முடித்து கொள்வதாக காக்ரோச் ஜனதா கட்சியினர் தெரிவித்தனர்.</p><p>மேலும் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-</p><p>போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது.</p><p>மத்திய அரசுடன் நடத்திய மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டத்தை முடித்துக்கொள்கிறோம்.</p><p>இதையடுத்து நான்கு வார காலத்திற்குள் மத்திய அரசுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்.</p><p>இவ்வாறு சிஜேபி-யினர் தெரிவித்தனர்.</p><h3><strong>ஜே.பி. நட்டா பதில்:</strong></h3><p>நீட் தேர்வில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படுமா என்று மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.</p><p>அப்போது அவர், “நீட் வினாத்தாள் கசிவான சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து, இன்னும் முடிவு எட்டப்படவில்லை” என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் அளித்த ஜனநாயக தீர்ப்பு: ஆட்சியாளர்களைப் பணியவைத்த ‘மக்கள் சக்தி’ குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/peoples-democratic-verdict-arvind-kejriwal-on-people-power</link><comments>https://www.maalaimalar.com/news/national/peoples-democratic-verdict-arvind-kejriwal-on-people-power#comments</comments><guid isPermaLink="false">1cbecf56-a0a1-431c-9fad-32f279948d51</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:20:56 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:20:56.857Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,neet,நீட் ஊழல்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,CJPProtest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/lw0kpxva/aravind.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arvind Kejriwal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/lw0kpxva/aravind.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" சார்பில் போராட்டம் நடத்திய Gen Z இளைஞர்களின் தொடர் அழுத்தத்திற்குப் பின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>இப்போராட்டத்தின் வெற்றியைக் குறிப்பிட்டு, ஆத்மநிர்பார் பாரத் மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்து டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான 'அரவிந்த் கெஜ்ரிவால்' தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.</p><h2><strong>உலகமே பணியும்... பணியவைக்கும் சக்தி வேண்டும்:</strong></h2><p>தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் தனது சமூக வலைதளப் பக்கத்தில்: உலகமே பணியும், அதற்குப் பணியவைக்கும் ஆள் இருக்க வேண்டும் எனும் புகழ்பெற்ற வாசகத்தைப் பகிர்ந்து இளைஞர்களின் போராட்டத்தைப் பாராட்டியுள்ளார்.</p><h2><strong>மக்களின் அதிகாரமும் ஜனநாயகமும்:</strong></h2><p>ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள்; அரசுகளும் ஆட்சியாளர்களும் அவர்களின் பணியாளர்களே, எஜமானர்களான பொதுமக்கள் தங்கள் உரிமைகளுக்காக உறுதியுடன் எழுந்து நிற்கும்போது, எவ்வளவு பெரிய ஆட்சியாளர்களாக இருந்தாலும் அவர்கள் பணிந்துதான் ஆக வேண்டும்" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2><strong>சாதாரண மனிதனின் உறுதி:</strong></h2><p>"நாட்டின் சாதாரண குடிமகன் அல்லது இளைஞர்கள் ஒரு மாற்றத்திற்காகத் தீர்மானம் செய்துவிட்டால், இந்த உலகத்தில் உள்ள எந்தச் சக்தியாலும் அவர்களைத் தோற்கடிக்க முடியாது" என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>‘கரப்பான் பூச்சிகள்’ அமைத்த சாம்ராஜ்யம்: டெல்லியை பணியவைத்த Gen Z இளைஞர்களின் வரலாற்று நிகழ்வு!</title><link>https://www.maalaimalar.com/news/national/gen-z-youth-cockroach-party-delhi-neet-exam-scandal</link><comments>https://www.maalaimalar.com/news/national/gen-z-youth-cockroach-party-delhi-neet-exam-scandal#comments</comments><guid isPermaLink="false">20707d89-70f4-4a08-badc-114db6adbaa9</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:01:54 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:01:54.878Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட் முறைகேடு,Cockroach Janta Party,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,abhijeet dipke,CJP Protest,அபிஜித் தீப்கே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/x5iuw23b/cjp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cockroach Janta Party  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/x5iuw23b/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் தேர்வு முறைகேடுகளால் நாடு முழுவதும் எழுந்த இளைஞர்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (ஜூலை 25) தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர் பட்டாளம் நடத்திய மாபெரும் போராட்டத்திற்குப் பணிந்து, பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.</p><h2>கரப்பான்பூச்சி  உதயமாகிய விதம்:</h2><h2>தலைமை நீதிபதியின் கருத்து:</h2><p>நீதிமன்ற வாதத்தின் போது வேலை இல்லாத இளைஞர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் "கரப்பான்பூச்சிகள்" என மறைமுகமாகக் குறிப்பிட்டதாகக் கூறி சர்ச்சை வெடித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் வசித்து வந்த போஸ்டன் பல்கலைக்கழகப் பட்டதாரியான 'அபிஜித் தீப்கே', 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' எனும் இளைஞர் அமைப்பை மே 16 அன்று தொடங்கினார்.</p><h2><strong>கேள்வி எழுப்பிய இளைஞர்கள்:</strong></h2><p>"கரப்பான் பூச்சிகள் ஒன்றாக சேர்ந்தால் என்ன ஆகும்?" என்ற ஒற்றைக் கேள்வியோடு சமூக வலைதளங்களில் ஒன்றுதிரண்ட Gen Z இளைஞர்கள், டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 20 முதல் தீவிர முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கினர்.</p><h2><strong>சோனம் வாங்சுக் இணைவும் 26 நாள் உண்ணாநோன்பும்:</strong></h2><p>இப்போராட்டத்திற்கு ஆதரவாகப் பிரபல சமூக மற்றும் காலநிலை ஆர்வலர் 'சோனம் வாங்சுக்' ஜூன் 28 அன்று CJP அமைப்பின் மேடையில் இணைந்து 26 நாட்கள் தொடர் உண்ணாநோன்பு இருந்தார். அவரது உடல்நிலை நலிவடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் உண்ணாநோன்பைத் தொடர்ந்தார். இதனால் மாணவர் போராட்டம் இந்திய அளவில் பூதாகரமாகி, உலக ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தது.</p><h2><strong>ராஜினாமா கடிதத்தில் தர்மேந்திர பிரதான் கூறியது என்ன?</strong></h2><p>பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததாவது, "நீட் விவகாரத்தில் ஆரம்ப நாளிலிருந்தே நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். ஜந்தர் மந்தரிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் உருவெடுத்துள்ள சூழ்நிலையால் தேச விரோத சக்திகள் பயனடைந்து விடக் கூடாது. </p><p>நாட்டின் ஒற்றுமையைக் காக்கவும், மாணவர்களின் எதிர்காலம் சட்ட சிக்கல்களில் சிக்காமல் இருக்கவுமே நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்." அத்துடன், அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கணினி முறைத் தேர்வாக மாற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><h2><strong>அபிஜித் தீப்கே:</strong></h2><p>CJP தலைவர் அபிஜித் தீப்கே "இது ஜனநாயகத்தின் வெற்றி! பயப்படாமல் எதிர்த்து நின்றால் அரசைப் பணிய வைக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று. ஆனால், எங்கள் போராட்டம் இத்துடன் முடியவில்லை. நீட் முறைகேட்டால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் மற்றும் போராடிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>டெல்லி சிஜேபி போராட்டக்காரர்களுடன் மத்திய அரசு 3-வது கட்ட பேச்சுவார்த்தை!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-third-round-talks-with-cjb-protesters-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-third-round-talks-with-cjb-protesters-in-delhi#comments</comments><guid isPermaLink="false">5da1a17a-0152-4432-9f11-b44d5ac48bc1</guid><pubDate>Sat, 25 Jul 2026 11:47:25 +0000</pubDate><atom:updated>2026-07-25T11:47:25.913Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜேபி நட்டா,JPNadda,DharmendraPradhan,CJPProtest,CockroachJantaParty,EducationMinisterResigns,StudentProtest2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/c1pbc92s/JPNadda-CJP" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JPNadda - CJP ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/c1pbc92s/JPNadda-CJP?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு முறைகேடு மற்றும் கல்விச் சீர்திருத்தங்களை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' பிரதிநிதிகளுடன் மத்திய அரசு தனது 3-வது கட்ட அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை இன்று நடத்துகிறது.</p><p>மத்திய சுகாதாரத் துறை மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE">ஜே.பி.நட்டா</a> மற்றும் சிஜேபி பிரதிநிதிகளுக்கு இடையே ஏற்கனவே இருமுறை பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்றைய 3-வது கட்ட சந்திப்பு மிக முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.</p><h2>முதல்கட்டப் பேச்சுவார்த்தை</h2><p>சிஜேபி அமைப்பினர் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்திய 'சலோ சன்சாத்' பேரணியில் போலீசாருடன் கடுமையான மோதல் வெடித்தது. டெல்லியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது.</p><p>ஜூலை 20 அன்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சிஜேபி பிரதிநிதிகள் முதன்முறையாக சந்தித்தனர். சிஜேபி தரப்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் நட்டா, கோரிக்கைகளை ஆலோசித்து முடிவெடுப்பதாகக் கூறி, தற்காலிகமாகப் போராட்டத்தை வாபஸ் பெறக் கேட்டுக்கொண்டார். </p><p>ஆனால், சிஜேபி போராட்டத்தைத் தொடர்ந்தது.</p><h2>இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை</h2><p>சோனம் வாங்சுக் தனது 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டதை அடுத்து, ஜந்தர் மந்தருக்கு வெளியே 'Constitution Club' என்ற நடுநிலையான இடத்தில் பேச அரசு ஒப்புக்கொண்டது.</p><p>நேற்று மதியம் மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரை சிஜேபி முதன்மை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் சந்தித்தனர். </p><p>சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், சிஜேபியின் 3 முக்கிய கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை (மாணவர்கள் மீதான எஃப்.ஐ.ஆர் வழக்குகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல்) அமைச்சர் ஜே.பி.நட்டா கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டார். </p><p>கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து இறுதி முடிவு எடுக்க இன்று மதியம் வரை அரசு அவகாசம் கேட்டது.</p><h2>மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை</h2><p>அரசு கேட்ட அவகாசத்தின்படி, இன்று மதியம் 3-வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தைப் பிரதமர் மோடிக்கு அனுப்பியதைத் தொடர்ந்து, இன்று 3-வது நாளாக அமைச்சர் ஜே.பி.நட்டா முன்னிலையில் சிஜேபி பிரதிநிதிகளுடன் 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. </p><p>தேசிய தேர்வு முகமை மறுசீரமைப்பு மற்றும் தேர்வு தேதிகள் குறித்த இறுதி கட்ட முடிவுகள் இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பாராட்டுகள்: உங்களால் பெருமை கொள்கிறோம்- ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/congratulations-to-students-across-the-country-we-are-proud-of-you-rahul-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/congratulations-to-students-across-the-country-we-are-proud-of-you-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">ecd696cd-ee3a-4d52-908b-75c6a500b973</guid><pubDate>Sat, 25 Jul 2026 11:44:10 +0000</pubDate><atom:updated>2026-07-25T11:44:10.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/c8d3zbt5/RahulGandhi2507.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/c8d3zbt5/RahulGandhi2507.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் கடந்த 20-ந்தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.</p><h2>நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்</h2><p>இவர்கள் கடந்த 20-ந்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் பேரணியை நடத்தினர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தனர். தடுப்பை மீறிச் செல்ல முயன்றதால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசினர். இதில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர்.</p><p>இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். <a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career">தர்மேந்திர பிரதான்</a> ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும். அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால் பிரதமர் மோடி ராஜினாமா செய்யக்கோரி போராடுவேம் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தெரிவித்தது.</p><h2>மேலும் 3 கோரிக்கைகள் வைத்த கரப்பான்பூச்சி ஜனதா தளம்</h2><p>இதனைத்தொடர்ந்து மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. அதற்கு முன்னதாக இன்று மதியம் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த போதிலும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே போராட்டத்தை வாபஸ் பெறப்படாது. மேலும், 3 கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்தார்.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய பின், கராப்பான்பூச்சி ஜனதா தளம் மற்றும் மத்திய அரசு இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.</p><p>இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் அனைவரையும் நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். 20-ந்தேதி மாணவர்களுக்கு எதிராக அடக்கு முறையை கையாண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது என 3 கோரிக்கைகளை வைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்: அரசியலில் கடந்து வந்த பாதை</title><link>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career</link><comments>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career#comments</comments><guid isPermaLink="false">1cb28e7a-6886-4f60-871f-b073d823094e</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:53:46 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:53:46.517Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-08/miy1b09z/cjp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dharmendra Pradhan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-08/miy1b09z/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் பொறுப்பேற்று, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று <a href="https://www.maalaimalar.com/news/national/compensation-of-rs-1-crore-for-families-of-deceased-students">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. பின்னர் இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டமாக மாறியது.</p><h2>தர்மேந்திர பிரதான் ராஜினாமா</h2><p>கடந்த 20-ந்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் பேரணியை நடத்தினர். அப்போது போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர். இதில் பலர் காயம் அடைந்தனர். இதனால் நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது.</p><p>இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><h2>தர்மேந்திர பிரதான் அரசியலில் கடந்து வந்த பாதையை பார்ப்போம்...</h2><p>ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்த மூத்த அரசியல்வாதிகள் ஒருவர் தர்மேந்திர பிரதான். இவர் கல்லூரி காலத்தில் ஏபிவிபி-யில் செயல்பாட்டராக முதன்முதலில் தன்னை இணைத்துக் கொண்டார். 1998-ல் பாஜக-வின் இணைந்தார்.</p><p>1993-ல் ABVP மாநில செயலாளராகவும், 1995-ல் தேசிய பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். முதன்முதலில் 2000-த்தில் அதிகாரப்பூர்வமாக அரசியலில் நுழைந்தார். ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 2000 முதல் 2004-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.-வாக இருந்துள்ளார். இந்த சமயத்தில் பாஜக-வின் இளைஞர் அணி (2001) தலைவராகவும், 2002-ல் தேசிய செயலாளராகவும் இருந்துள்ளார்.</p><h2>2004-ல் மக்களவை எம்.பி.யாக தேர்வு</h2><p>2004-ம் ஆண்டு நடைபெற்ற 14-வது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக எம்.பி. ஆனார். இதே வருடத்தில் பாஜக யுவ மோர்ச்சா {(Bharatiya Janata Yuva Morcha (BJYM)} தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார்.</p><p>பாராளுமன்றத்தில் பலவேறு கமிட்டி மற்றும் நாடாளுமன்ற அமைப்புகளில் பணியாற்றியுள்ளார்.</p><p>2004-ல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் மனுக்கள் மீதான குழு மற்றும் எரிசக்தி துறைக்கான குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார்.</p><p>ஆகஸ்ட் 2007 முதல் எனர்ஜி துறைக்கான நிலைக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார்.</p><p>2012 மற்றும் 2014-க்கு இடைப்பட்ட காலத்தில் அரசு உறுதிமொழிகள் குழுவின் உறுப்பினராக இருந்தார்.</p><p>மே 2012 முதல் அக்டோபர் 2013 வரை, தொலைத்தொடர்பு உரிமங்கள் மற்றும் அலைக்கற்றை (spectrum) ஒதுக்கீடு மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான விவகாரங்களை ஆய்வு செய்த கூட்டு நாடாளுமன்றக் குழுவிலும் பணியாற்றினார்.</p><p>அவர் ஏப்ரல் 2012 முதல் 2018 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் ஜூன் 2024-ல் 18-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p>பிரதான் பல ஆண்டுகளாக மத்திய அரசில் பல்வேறு முக்கியத் துறைகளைக் கையாண்டு வந்துள்ளார்.</p><p>செப்டம்பர் 2017-ல், அவர் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சராகவும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.</p><p>மே 2019 முதல் ஜூலை 2021 வரை, அவர் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சராகவும், எஃகு துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.</p><h2>கல்வித்துறை அமைச்சர்</h2><p>ஜூலை 7, 2021 அன்று கல்வித்துறை அமைச்சராகவும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றது அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.</p><p>ஜூன் 2024-ல் 18-வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 9, 2024 அன்று அவர் மத்தியக் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.</p><p>ஒடிசா சட்டமன்றத்தின் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான விருதான 'உத்கல்மணி கோபபந்து பிரதிபா சம்மான்' விருதும் பிரதானுக்கு வழங்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>Gen Z இளைஞர்களுக்கு சோனம் வாங்சுக் பாராட்டு! IT&apos;S A Victory OF DEMOCRAZY என ட்வீட்!  </title><link>https://www.maalaimalar.com/news/national/its-a-victory-of-democracy-cjp-gen-z-youth-sonam-wangchuk-praise</link><comments>https://www.maalaimalar.com/news/national/its-a-victory-of-democracy-cjp-gen-z-youth-sonam-wangchuk-praise#comments</comments><guid isPermaLink="false">c76c344b-d8d3-4fce-b6ac-223239a1637e</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:52:28 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:52:28.046Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>NeetExam,சோனம் வாங்சுக்,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி,SonamWangchuk,CJPProtest,நீட்தேர்வுமுறைகேடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/jdsj9jew/SON.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SonamWangchuk]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/jdsj9jew/SON.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட்  வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், 'மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்'.</p><p>இப்போராட்டத்தில் முன்னணியில் நின்று குரல் கொடுத்த Gen Z இளைஞர்களுக்கு, சமூக ஆர்வலர் 'சோனம் வாங்சுக்' தனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>தர்மேந்திர பிரதான் ராஜினாமா:</strong></h2><p>நீட் தேர்வு கசிவு விவகாரத்தில் மாணவர்களின் தொடர் போராட்டம் மற்றும் எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் சமர்ப்பித்தார். "மாணவர்களின் எதிர்காலம், நாட்டின் ஒற்றுமை மற்றும் கல்வி முறையின் மீதான நம்பிக்கையைக் காக்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>Gen Z இளைஞர்களின் தீவிரப் போராட்டம்:</strong></h2><p>டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில வாரங்களாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்புகள்  தீவிர முற்றுகைப் போராட்டங்களை நடத்தி வந்தன. கல்வி அமைச்சரின் ராஜினாமா, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் மற்றும் போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.</p><h2><strong>சோனம் வாங்சுக் வாழ்த்து:</strong></h2><p>மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக 26 நாட்கள் உண்ணாநோன்பு இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், இந்த வெற்றியை இளைஞர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி எனப் பாராட்டியுள்ளார். இளைஞர்களின் இந்தத் துணிச்சலான ஜனநாயகப் போராட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக உள்ளது என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு.. மத்திய அரசுக்கு அபிஜீத் தீப்கே மூன்று கோரிக்கைகள்..</title><link>https://www.maalaimalar.com/news/national/compensation-of-rs-1-crore-for-families-of-deceased-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/compensation-of-rs-1-crore-for-families-of-deceased-students#comments</comments><guid isPermaLink="false">4911fcdf-548a-4a16-9fca-45ea035aa707</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:55:30 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:55:30.193Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>abhijeet dipke,அபிஜீத் தீப்கே,சிஜேபி,CJP Protest,CJP,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/59ztlcaj/Untitled-design-65.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Abhijit Dipke demands ₹1 crore compensation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/59ztlcaj/Untitled-design-65.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய அளவில் நீட் தேர்விற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று ராஜினாமா செய்துள்ளார்.  </p><p>மத்திய கல்வி அமைச்சர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார்.</p><p>இந்நிலையில் இந்த நிகழ்விற்கு காக்ரோச் ஜனதா கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தங்களின் போராட்டம் தொடரும் எனவும் அக்கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.</p><h3><strong>அபிஜீத் தீப்கே கோரிக்கை:</strong></h3><p>இதுகுறித்து சிஜேபி-யின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறுகையில், “இந்தியாவில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு, இந்த நிகழ்வே சான்றாக உள்ளது. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார்.</p><p>நீங்கள் பயப்படாமல், இந்த அரசுக்கு அடிபணியாமல் இருந்தால், எங்களால் யார் ராஜினாமாவையும் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு இந்த ராஜினாமா சான்று.</p><p>இளைஞர்கள் பயப்படத் தேவையில்லை. இது ஜனநாயகம், அவர் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் எங்களுக்கு இன்னும் இரண்டு கோரிக்கைகள் உள்ளன.</p><p>நாங்கள் இப்படியே போகமாட்டோம். இந்த நீட் வினாத்தாள் கசிவில் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்</p><p>அவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அது அவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டும்.</p><p>இரண்டாவதாக கடந்த 20ஆம் தேதி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மூன்றாவதாக டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது.</p><p>இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எங்களுக்கு எழுத்து பூர்வமாக எழுதி தரவேண்டும். இதை நிறைவேற்றுதாக உறுதியளிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.</p><p>நினைவில் கொள்ளுங்கள் கரப்பான் பூச்சிகளுடன் விளையாடாதீர்கள்” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் போராட்டம் வெற்றி.. ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்!</title><link>https://www.maalaimalar.com/news/national/students-protest-victory-dharmendra-pradhan-resigns</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-protest-victory-dharmendra-pradhan-resigns#comments</comments><guid isPermaLink="false">f8d698f6-ab87-4aaf-afbb-f8ff4209a8c3</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:08:41 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:08:41.173Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/fqm6w1an/Untitled-design-64.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Union Education Minister Dharmendra Pradhan resigns ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/fqm6w1an/Untitled-design-64.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்விற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று ராஜினாமா செய்துள்ளார்.  </p><p>தேசிய அளவில் கடந்த 10 நாட்களாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பதவி விலக வலியுறுத்தி மாணவர்களின் போராட்டம் விரிவடைந்து வரும் சூழலில், பாதுகாப்பு காரணங்கள் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அவர் அந்த கடிதத்தில்,</p><p>கடந்த 10 நாட்களாக நாட்டில் நடந்து வரும் சம்பவங்கள் தனக்கு மிகுந்த வேதனையை கொடுப்பதாக உள்ளது.</p><p>இளைஞர்கள் குழப்பமான மனநிலையில் சிக்குவதையோ, தேசவிரோத சக்திகள் இந்த சூழலை பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும் என்பதுதான் எனது முதன்மையான நோக்கம். </p><p>மாணவர்கள் சட்ட சிக்கலில் நேரத்தை வீணடிக்காமல், படிப்பிலும் தொழில் வாய்ப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.</p><p>தனக்கு வழிகாட்டியாக இருந்து, அத்தனை ஆதரவுகளையும் அளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சரவை சகாக்களுக்கும், அதிகாரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். </p><p>பூரி ஜெகநாதரின் ஆசியுடன், ஒடிசா மக்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன். </p><h3><strong>தொடர் போராட்டம்</strong></h3><p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். </p><p>இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருவதால் போராட்டம் வலுவடைந்துள்ளது. மேலும், போராட்டக் களத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்  காரணமாக இரு தரப்பிலும் காயங்களும் ஏற்பட்டுவருகின்றன.</p><h3><strong>20 நாட்களுக்கும் மேலாக வாங்சுக் உண்ணாவிரதம்</strong></h3><p>இவ்விவகாரம் தொடர்பாக 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்துவந்த சமூக போராளி சோனம் வாங்சுக், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் நிறைவு செய்தார். மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா அவரைச் சந்தித்து மத்திய அரசு எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்ததை அடுத்து இந்தப் போராட்டத்தை அவர் முடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p><strong>கரப்பான் பூச்சி கட்சியினர் உற்சாக முழக்கம்</strong></p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமா அறிவிப்பு வெளியானதையடுத்து, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் உற்சாக முழக்கம் எழுப்பினர்.</p>]]></content:encoded></item><item><title>&apos;என்னை கைது செய்யுங்கள்&apos;: மருத்துவமனையில் போலீசாரிடம் சோனம் வாங்சுக் வாக்குவாதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-confronts-police-at-safdarjung-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-confronts-police-at-safdarjung-hospital#comments</comments><guid isPermaLink="false">7fbf156a-4038-4208-b292-a6c8a7a7db5d</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:45:14 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:45:14.291Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>NeetExam,Sonam Wangchuk,நீட் தேர்வு முறைகேடு,சோனம் வாங்சுக்,காக்ரோச் ஜனதா கட்சி,CJPProtest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/dxts1hdl/SONAM.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sonam Wangchuk ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/dxts1hdl/SONAM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா கட்சி' மற்றும் மாணவர் அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தின் போது 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் காவல்துறையினருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>காவல்துறையுடன் மோதல்:</strong></h2><p>வைரலான வீடியோவில், சோனம் வாங்சுக் நீல நிற சட்டையுடன் தனது மனைவியுடன் மருத்துவமனை நடைபாதையில் நடந்து வரும்போது, அவரை வழிமறித்த காவல்துறை அதிகாரியிடம், "என்னை கைது செய்யுங்கள். 3 மணி நேரமாக என்னை ஏன் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறீர்கள்? நான் மன அழுத்தத்தால் இறந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு" என ஆவேசமாகப் பேசுவது பதிவாகியுள்ளது.</p><h2><strong>தரையமர்ந்து போராட்டம்:</strong></h2><p>காவல்துறையினர் அவரை வெளியேற அனுமதிக்காததால், ஆத்திரமடைந்த சோனம் வாங்சுக் மருத்துவமனை தரையிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் தான் வெளியிட்ட யூடியூப் வீடியோவில் பேசிய வாங்சுக், "சப்தர்ஜங் மருத்துவமனையில் என்னை ஒரு கைதியைப் போல நடத்தினார்கள். வடகொரியாவில் இருப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2><strong>சப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகத்தின் விளக்கம்:</strong></h2><p>வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள அதிகாரப்பூர்வ விளக்கம்  அளித்துள்ளது. அதில்,</p><h2><strong>உயர் நீதிமன்ற உத்தரவு நகல்:</strong></h2><p>சோனம் வாங்சுக்கை அவர் விரும்பும் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன. அதன் அடிப்படையில் அவர் உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியேற முயன்றார்.</p><h2><strong>எழுத்துப்பூர்வ உத்தரவு தாமதம்:</strong></h2><p>இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வமான அதிகாரப்பூர்வ உத்தரவு நகல் மருத்துவமனை நிர்வாகத்திற்கு வந்து சேரும் வரை அவரை சட்டப்பூர்வமாக வெளியே அனுப்ப முடியாது என்பதால், காவல்துறை அவரைத் தடுத்து நிறுத்தியதாக மருத்துவமனை தெளிவுபடுத்தியுள்ளது. உத்தரவு நகல் கிடைத்த பிறகே அவர் விடுவிக்கப்பட்டார்.</p><h2><strong>உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு:</strong></h2><p>நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக 26 நாட்களாகப் போராடி வந்த சோனம் வாங்சுக், மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை மற்றும் போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்ற உறுதியைத் தொடர்ந்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>நீதிமன்ற உத்தரவின் நகல் கைக்குக் கிடைக்காததால் ஏற்பட்ட தாமதமே இந்த வாக்குவாதத்திற்குக் காரணம் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ள நிலையில், இந்த வீடியோ இணையத்தில் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>அதிகாரியுடன் வாக்குவாதம்: டெல்லி கேரளா ஹவுஸில் காங்கிரஸ் தலைவர் கண்ணையா  குமார் அதிரடி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/kanhaiya-kumar-arrested-after-clash-with-officer-at-delhi-kerala-house</link><comments>https://www.maalaimalar.com/news/national/kanhaiya-kumar-arrested-after-clash-with-officer-at-delhi-kerala-house#comments</comments><guid isPermaLink="false">77c2b78e-0b5e-46df-a9a3-f238bf74bc5e</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:40:16 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:40:16.896Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,RahulGandhi,Amitshah,கண்ணையா குமார்,NEETProtest,KanhaiyaKumar,KeralaHouse</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/5fyav392/KanhaiyaKumar" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ KanhaiyaKumar  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/5fyav392/KanhaiyaKumar?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொறுப்பாளரான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">கண்ணையா குமார்</a>, நேற்று டெல்லி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>டெல்லியில் உள்ள கேரளா ஹவுஸ் வளாகத்தில் அங்குள்ள உயர் அதிகாரியுடன் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நடந்தது என்ன?</h2><p>கேரளா ஹவுஸ் வட்டாரங்களின்படி, கண்ணையா குமார் தனது நண்பர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த அறைக்காக கேரளா ஹவுஸ் சென்றுள்ளார். ஆனால், அங்கு காலியாக அறைகள் எதுவும் இல்லை என ஊழியர்கள் மறுத்துள்ளனர்.</p><p>இது குறித்து விளக்கம் கேட்பதற்காக கேரளா ஹவுஸ் ஆணையர் புனீத் குமாரை கன்ஹையா குமார் அணுகியுள்ளார்.</p><p>அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உறைவிட ஆணையர் புனீத் குமார் டெல்லி போலீசாருக்குத் தகவல் கொடுத்து, கண்ணையா குமாரை வளாகத்தில் இருந்து வெளியேற்றுமாறு புகார் அளித்தார்.</p><p>அந்தப் புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் அவரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.</p><h2>"ஆளுநர்தான் ராஜா" - கண்ணையா குமார் காட்டம்</h2><p>கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசிய கண்ணையா குமார், கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கேரள இல்லத்திற்கு வருவார் என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அவர், "ஆளுநர் வருகிறார், ஆளுநர் ஒரு ராஜா" என்றும் குறிப்பிட்டார்.</p><p>மேலும், "நான் எனது நண்பரைச் சந்திக்கவே இங்கு வந்தேன். என்னை எதற்குக் கைது செய்கிறார்கள்? இது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டெல்லி போலீசாரின் அராஜகப் போக்கு" என்று கடுமையாகச் சாடினார்.</p><p>தற்போது அவர் தென்மேற்கு டெல்லியில் உள்ள ஜாஃபர்பூர் கலான் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>பின்னணி</h2><p>கேரளா ஹவுஸ் அமைந்துள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி கண்ணையா குமார் சமீப காலமாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். </p><p>"மோடி அரசு நாட்டின் கல்வி முறையை ஐசியு-வில் தள்ளிவிட்டது" என்று குற்றம் சாட்டி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதானை வேறு துறைக்கு மாற்றுவதை ஏற்க முடியாது- ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-says-transfer-of-dharmendra-pradhan-to-another-portfolio-is-unacceptable</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-says-transfer-of-dharmendra-pradhan-to-another-portfolio-is-unacceptable#comments</comments><guid isPermaLink="false">53762ecd-ed28-4fd3-8f20-e0bf968db3cc</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:38:07 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:38:07.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,CJP Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/g428kes9/rahulgandhi.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/g428kes9/rahulgandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தர்மேந்திர பிரதானை அங்கிருந்து மாற்றுவது, பின்னுக்குத் தள்ளுவது அல்லது முன்னுக்கு கொண்டு வருவது போன்ற எந்தவொரு விவாதத்திற்கும் இடமில்லை என்று கூறியுள்ளார்.</aside><p>பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று  போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>வேறு துறை</strong></h2><p>மாணவர்களுக்கு 3 கோரிக்கைகள் உள்ளன. அவை சமரசத்திற்கு இடமில்லாத கோரிக்கைகள்.  ஊழல்வாதியும், திறமையற்றவரும், பொறுப்பற்றவருமான மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்க வேண்டும்  என்பதே முதலாவது கோரிக்கை. </p><p>மோடியின் மந்திரிசபையில்  அவரை கல்வித்துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றுவதே இதற்கான தீர்வு என்று பேசப்பட்டு வருகிறது. இது  மாணவர்களுக்கு ஏற்புடையதல்ல. யாருக்கும் ஏற்புடையதல்ல. இதற்கு  காரணம், ஊழலுக்கும், இந்தியக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நேர்ந்துள்ள நிலைமைக்கும் <a href="https://www.maalaimalar.com/news/national/third-round-talks-today-in-center-and-cjp-party-members">தர்மேந்திர பிரதான்</a> தான் ஒரு அடையாளமாக  திகழ்கிறார்.</p><h2><strong>நீக்கப்பட வேண்டும்</strong></h2><p>நாட்டின் மிக மதிப்புமிக்க சொத்தான மாணவர்களையும், அவர்களின் எதிர்காலத்தையும் அழித்ததற்கான அடையாளமாக அவர் இருக்கிறார். எனவே, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">தர்மேந்திர பிரதானை</a> அங்கிருந்து மாற்றுவது, பின்னுக்குத் தள்ளுவது அல்லது முன்னுக்கு கொண்டு வருவது போன்ற எந்தவொரு விவாதத்திற்கும் இடமில்லை. தர்மேந்திர பிரதான் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.</p><p>இரண்டாவதாக போராட்டத்தின் போது இளம்பெண் காயமடைந்தார். நேற்று நான் உங்களுக்குக் கண்ணில் குண்டு பாய்ந்த ஒரு இளைஞரைக் காட்டினேன். அதுபோலவே, தடியடியால் கால்களும், தலைகளும் உடைக்கப்பட்ட, உடலில் பெல்லட் குண்டுகள் பாய்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். இதைச் செய்தவர்கள், அதாவது இதைத் திட்டமிட்டவர்கள், செயல்படுத்தியவர்கள், தண்டிக்கப்பட வேண்டும்.</p><h2><strong>மன்னிப்பு கேட்க வேண்டும்</strong></h2><p>மூன்றாவது கோரிக்கை என்னவென்றால், இந்த செயல்களைச் செய்யும் ஒட்டுமொத்த அமைப்பின் தலைவரான பிரதமர் மோடி, மாணவர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு இழைத்த செயல்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>மாணவர்களையும், இளைஞர்களையும் தாக்குவது இந்த அமைப்புதான். நான் அவர்களிடம் பேசும்போது சொன்னேன். கவலைப்படாதீர்கள். இந்திய அரசாங்கத்தின் ஒட்டு மொத்த வலிமையோ அல்லது அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபரோ நினைத்தாலும், உங்களை அங்கிருந்து (போராட்டக் களத்திலிருந்து) அசைக்க முடியாது.</p><p>அவர்கள் (அரசாங்கம்) என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அவர்கள் தடுக்க நினைத்தாலோ, மிரட்ட நினைத்தாலோ, எதை வேண்டுமானாலும் செய்யலாம். நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. அவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். மோடி இந்தியாவின் கடந்தகாலம். அவரால் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது. கடந்த காலத்தால் ஒரு போதும் எதிர்காலத்தை எதிர்த்துப் போராட முடியாது.</p><p>இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>CJP போராட்டம்: பாகிஸ்தான் சமூக வலைதள கணக்குகள் முடக்கம்-டெல்லி காவல்துறை எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-pakistan-social-media-accounts-blocked-delhi-police-warning</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-pakistan-social-media-accounts-blocked-delhi-police-warning#comments</comments><guid isPermaLink="false">e37fed5d-05a0-486b-ab71-bc45d4bc9a3e</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:22:02 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:22:02.354Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,NeetExam,நீட் வினாத்தாள் கசிவு,CJP Protest,காக்ரோச் ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/vkftipgp/delhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  CJP Protest ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/vkftipgp/delhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா கட்சி' மற்றும் மாணவர் அமைப்புகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தைப் பயன்படுத்தி, வதந்திகளையும் தவறான தகவல்களையும் பரப்பிய 400-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பின்னணி கொண்ட சமூக வலைதள கணக்குகளை டெல்லி காவல்துறை கண்டறிந்து முடக்கியுள்ளது.</p><h2><strong>போலி செய்திகள் மூலம் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு:</strong> </h2><p>மத்திய மாவட்ட டெல்லி காவல்துறை துணை ஆணையர் ரோஹித் ராஜ்பீர் சிங் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,</p><h2><strong>400+ கணக்குகள் முடக்கம்:</strong></h2><p>மாணவர் போராட்டத்தை முதன்மைப்படுத்தி, போலியான செய்திகள் மற்றும் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களைப் பரப்பி அமைதியைக் குலைக்க முயன்ற 400-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக வலைதளக் கணக்குகள் முடுக்கப்பட்டுத் தடை செய்யப்பட்டுள்ளன.</p><h2><strong>பொதுமக்களுக்கு வேண்டுகோள்:</strong></h2><p>அடையாளம் தெரியாத அல்லது சரிபார்க்கப்படாத சமூக வலைதளக் கணக்குகளில் வரும் தகவல்களைப் பார்த்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தூண்டப்பட வேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.</p><h2><strong>கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்:</strong></h2><p>போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தர் பகுதியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, பல அடுக்கு இரும்புத் தடுப்புகள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுப் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், குற்றப் பின்னணி கொண்டவர்களைக் கண்டறிய புகைப்பட அங்கீகார கேமராக்கள்  மூலம் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.</p><h2><strong>மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை:</strong></h2><p>மத்திய அரசுக்கும் CJP பிரதிநிதிகளான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோருக்கும் இடையே இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை CJP உறுதியாகக் கோரி வருகிறது. ஆனால், "பொறுப்பிலிருந்து விலகி ஓடுவது தீர்வாகாது; மக்களுக்கு அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றும்" என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><h2><strong>எதிர்க்கட்சிகள் கண்டனம்:</strong></h2><p>மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர், மாணவர் போராட்டங்களை ஒடுக்க முனையும் அரசு, வினாத்தாள் கசிவைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.</p><p>போலி தகவல்கள் பரப்புவதைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ள டெல்லி காவல்துறை, ஜந்தர் மந்தரில் பாதுகாப்பை உச்சகட்ட அளவில் பலப்படுத்தியுள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து CJP தங்களின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அசாமில் தொடரும் பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு-7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-deluge-claims-61-lives-705000-people-impacted</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-deluge-claims-61-lives-705000-people-impacted#comments</comments><guid isPermaLink="false">e08682d3-e45a-479f-ab6b-20f3abb9542c</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:50:05 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:50:05.886Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Himanta Biswa Sarma,cloudburst,மேகவெடிப்பு,ஹிமந்த பிஸ்வா சர்மா,Assam Floods,அசாம் பெருவெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/inhiflag/assam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam Floods  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/inhiflag/assam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் பெருவெள்ளம்  மாநிலத்தில் தொடரும் கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்த நிலையில், வெள்ளத்திற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை '61' ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தின் 12 மாவட்டங்களைச் சேர்ந்த '7.05 லட்சத்திற்கும்' அதிகமான மக்கள் பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>வெள்ளப் பெருக்கு காரணமாக இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிவசாகர் மாவட்டத்தில் ஒருவர் காணாமல் போயுள்ளார். 37 வருவாய் வட்டங்களில் உள்ள 856 கிராமங்களைச் சேர்ந்த '7,05,000-க்கும் மேற்பட்டோர்' வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். மாநில அரசால் அமைக்கப்பட்ட 363 நிவாரண முகாம்களில் 3.15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். </p><p>அவர்களுக்கு உணவு, தப்பிப்பிழைப்பதற்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படை , மாநில பேரிடர் மீட்புப் படை  மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இணைந்து கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் சிக்கிய சுமார்  1,000 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.</p><h2><strong>கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்:</strong></h2><p>அசாமில் பல மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், சிவசாகர், சரைடியோ, ஜோர்ஹாட் 3 ஆகிய மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளன. மேலும் கோலாகாட், திப்ரூகர், ஹோஜாய், நகோன், பிஸ்வநாத், தேமாஜி, சோனித்பூர், கம்ரூப் (மெட்ரோ) மற்றும் கர் பி ஆங்லாங் ஆகிய மாவட்டங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.</p><p>மேலும், சுமார் 56,606 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி, பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,107 கால்நடைகள் மற்றும் கோழிகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் 3.34 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் தீவனமும் தங்குமிடமும் இன்றி பாதிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>முதலமைச்சர் நேரில் ஆய்வு:</strong></h2><p>அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெர்கான் பகுதியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமிற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வெள்ள நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். </p><p>பக்கத்து மாநிலமான நாகாலாந்தில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பு காரணமாகவே அசாமின் பல மாவட்டங்களில் இந்த அளவுக்குப் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டார். தற்போது பிரம்மபுத்திரா நதியும் அதன் துணை நதிகளும் பல இடங்களில் அபாயக் கட்டத்தைத் தாண்டிப் பெருக்கெடுத்து ஓடுவதால், மீட்புக் குழுவினர் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>