<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 24 Jul 2026 10:38:08 +0000</lastBuildDate><item><title>தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து ஆலோசனை செய்ய நாளைவரை அவகாசம் கோரிய மத்திய அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-seeks-time-until-tomorrow-to-deliberate-on-dharmendra-pradhans-resignation</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-seeks-time-until-tomorrow-to-deliberate-on-dharmendra-pradhans-resignation#comments</comments><guid isPermaLink="false">d0eba668-c359-43a3-8089-59eb80c26847</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:48:43 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:48:43.070Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,CJP,Dharmendra Pradhan Resignation,தர்மேந்திர பிரதான் பதவி விலகல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0mqej2bs/New-Project-2026-07-24T145633.015.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து ஆலோசனை செய்ய நாளைவரை அவகாசம் கோரிய மத்திய அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0mqej2bs/New-Project-2026-07-24T145633.015.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சித் தொடங்கிய நீட்டுக்கு எதிரான மற்றும் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் தொடர்பான போராட்டம் தற்போது இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ளது. </p><p>இந்நிலையில் இப்போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு கரப்பான்பூச்சி கட்சியுனருடன் பலகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.</p><p>மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் தர்மேந்திர பிரதான் பதவி விலகல், நீட் தேர்வால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம், உயர்கல்வித்துறையில் சீர்த்திருந்தங்களை மேற்கொள்ளுதல் என மூன்று கோரிக்கைகளை கரப்பான்பூச்சி கட்சியினர் முன்வைத்தனர்.</p><p>அதனைத்தொடர்ந்து இன்று இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது பிரதானின் பதவி விலகல் கோரிக்கை சமரசத்திற்கு அப்பாற்பட்டது என கரப்பான்பூச்சி கட்சியினர் மத்திய அரசின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர். </p><p>“கல்வி அமைச்சரின் ராஜினாமாவே, ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் சி.ஜே.பி. போராட்டங்களின் மையக்கருவாக இருந்து வருகிறது. பிரதான் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்” என எச்சரித்ததாக பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட சி.ஜே.பி. தேசிய செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் தெரிவித்துள்ளனர். </p><p>இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக ஆலோசிக்க நாளை மதியம் வரை மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>வந்தே மாதர பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் மசோதா மாநிலங்களவையில் அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/a-bill-proposing-a-three-year-prison-sentence-for-disrespecting-the-vande-mataram-song-has-been-introduced-in-the-rajya-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/a-bill-proposing-a-three-year-prison-sentence-for-disrespecting-the-vande-mataram-song-has-been-introduced-in-the-rajya-sabha#comments</comments><guid isPermaLink="false">16f630b6-0a09-4523-935c-2d2e13a60caa</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:22:50 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:22:50.061Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Aishwarya Rai,மாநிலங்களவை,rajya sabha,Nityanand Rai,Vande Mataram bill,வந்தே மாதரம் மசோதா,நித்யானந்தா ராய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/q8z8bwnr/New-Project-2026-07-24T145231.271.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வந்தே மாதர பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் மசோதா மாநிலங்களவையில் அறிமுகம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/q8z8bwnr/New-Project-2026-07-24T145231.271.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வந்தே மாதரப் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழிவகுக்கும், தேசிய கௌரவம் அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026 இன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் இந்த மசோதாவை அறிமுகம் செய்துவைத்தார். </p><p>இந்த மசோதா தாக்கலைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை வரும் திங்கள்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>முன்னதாக மக்களவை, எதிர்க்கட்சிகளின் அமளியால் 12.15 மணிக்கே ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மாநிலங்களவையில் மட்டும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  </p><p>மசோதா என்னக்கூறுகிறது?</p><p>1971-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய கௌரவம் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தில் (பிரிவு 3) திருத்தம் கொண்டுவரப்பட்டு, தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியவற்றுக்கு இணையாக தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கப்படுகிறது.</p><p>வந்தே மாதரம் பாடல் பாடுவதை யாராவது வேண்டுமென்றே தடுத்தாலோ, அல்லது பாடல் இசைக்கப்படும் கூட்டத்தில் இடையூறு விளைவித்தாலோ அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. </p><p>பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் இயற்றப்பட்ட வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>அரசு நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க அரசாங்கம் முயன்று வருகிறது. தேசிய கீதம் இசைக்கப்படும் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடுவது அல்லது இசைப்பது தொடர்பாக  உள்துறை அமைச்சகம் முன்னதாக வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது.</p><p>இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு முழுமையான சட்டமாக அமலுக்கு வரும்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களுக்கு எதிரான போலீசார் நடவடிக்கை தொடர்பாக மனு தாக்கல் செய்யப்படவில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி</title><link>https://www.maalaimalar.com/news/national/cji-kant-no-plea-filed-on-cjp-protest-police-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/cji-kant-no-plea-filed-on-cjp-protest-police-action#comments</comments><guid isPermaLink="false">b9c89c41-f546-4b3a-8c2d-c7dff99a8e21</guid><pubDate>Fri, 24 Jul 2026 08:44:19 +0000</pubDate><atom:updated>2026-07-24T08:44:19.142Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்சநீதிமன்றம்,CJP Protest,கரப்பான்பூச்சி கட்சி போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/06/10/1895651-supreme-court.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/06/10/1895651-supreme-court.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி போராட்டத்தை தொடங்கினர்.</p><h2>மாணவர்கள் மீது தடியடி</h2><p>கடந்த 20-ந்தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இன்றைய தினம் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என அறிவித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது போலீசார், துணை ராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><h3>அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு எனத் தகவல்</h3><p>போராட்டத்தில் ஈடுபட்ட இந்த மாணவர்களுக்கு எதிரான போலீசார் நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றம் மனுதாக்கல் செய்யப்பட்டதாகவும், அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததாகவும், எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் நேரத்தையும் வீணாக்காதீர்கள் என்று அவர் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது.</p><p>இந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை தொடர்பாக எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. விசாரிக்க மறுத்ததாக பொறுப்பற்ற வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் காட்டமான வகையில் பதில் அளித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது:-</h2><p>சமீபத்தில் எந்தவொரு ஆவணமும் தாக்கல் செய்யப்படாத நிலையில் இந்த விவகாரம் எங்கள் முன் குறிப்பிடப்பட்டது. நான் பதிவகத்தில் சரிபார்த்தேன். உச்ச நீதிமன்றத்தில் ஒரு பக்கத்தில் கூட தாக்கல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. </p><p>நீதிமன்றத்திற்கு வந்தது வெறும் ஒரு கோரிக்கை மனு மட்டுமே. மிஷ்ரா அல்லது வேறு யாரோ ஒருவரால் அனுப்பப்பட்ட ஒரு கோரிக்கை மனு மட்டுமே. அந்தக் கோரிக்கை மனுவை நான் எப்படி ஒரு ரிட் மனுவாக (writ petition) கருத முடியும்? ஆனால் மக்கள் இதைப்பற்றிப் பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிடத் தொடங்கிவிட்டனர்.</p><p>கடந்த இரண்டு நாட்களில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக முற்றிலும் பொய்யான தகவல் பரப்பப்பட்டது. அந்த வழக்கை விசாரணைப் பட்டியலிடத் தலைமை நீதிபதி மறுத்துவிட்டதாக ஊடகங்கள் எந்த பொறுப்புணர்வும் இன்றி பொறுப்பற்ற முறையில் தவறான செய்தியை வெளியிட்டன. ஆனால், காலை 10 மணி வரை ஒரு பக்கம் கூட தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை.</p><p>இவ்வாறு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.</p><p>வழக்கறிஞர் நரேந்திர மிஷ்ரா, வாய்மொழியாக உச்சநீதிமன்றம் இது தொடர்பாக தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பட்ட கடித மனுவை வழகறிஞர் மிஷ்ரா குறிப்பிட்டார். அப்போது, மாணவர்களுக்கு எதிராக காவல்துறையின் எடுத்த நடவடிக்கை தொடர்பான வீடியோக்களை பார்வையிட வேண்டும் என்றார். அப்போது தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச், அவரின் வேண்டுகோளை ஏற்க மறுத்தது. அப்போது வழக்கறிஞர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/lok-sabha-adjourned-for-the-day-amid-opposition-protest-on-various-issues</link><comments>https://www.maalaimalar.com/news/national/lok-sabha-adjourned-for-the-day-amid-opposition-protest-on-various-issues#comments</comments><guid isPermaLink="false">ca10454f-7d51-4fcf-b497-d7b1df2d9a3e</guid><pubDate>Fri, 24 Jul 2026 08:33:07 +0000</pubDate><atom:updated>2026-07-24T08:33:07.526Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>winter session,மக்களவை,Loksabha,மழைக்கால கூட்டத்தொடர்,adjourned,ஒத்திவைப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/mj2by9v4/loksabha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ lok sabha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/mj2by9v4/loksabha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு, ராமர் கோவில் நன்கொடை முறைகேடு, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் கடந்த 4 தினங்களாக நாடாளுமன்றத்தில் அலுவல் எதுவும் நடைபெறாமல் முடங்கியது.</p><h2>எதிர்க்கட்சிகள் 5-வது நாளாக அமளி</h2><p>இந்நிலையில், மழைக்காலக் கூட்டத் தொடரின் 5-ம் நாளான இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல இரு அவைகளும் கூடின. </p><p>சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும் கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு கார்கில் போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் வீரத்தைப் போற்றும் வகையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, கேள்வி நேரம் தொடங்குவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.</p><p>ஆனாலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்த ஓம் பிர்லா தொடர்ந்து முயன்றார்.</p><p>கேள்வி நேரத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். எந்த விஷயம் தொடர்பாக விவாதிக்க நீங்கள் விரும்பினாலும் அதற்கான அனுமதி உங்களுக்கு வழங்கப்படும். நேற்றும்கூட இதை நான் தெரிவித்தேன். அவையின் செயல்பாடுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள் என சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார்.</p><p>எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை தொடர்ந்து நடக்க நீங்கள் விரும்பவில்லை என்பதால் அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கிறேன் என அறிவித்தார்.</p><h2>ராகுல் காந்தியிடம் கிரண் ரிஜிஜு வேண்டுகோள்</h2><p>இதற்கிடையே, அவை நடவடிக்கைகள் தொடர ஒத்துழைக்குமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வேண்டுகோள் விடுத்தார். </p><p>ராகுல் காந்தியை நேரில் சந்தித்த கிரண் ரிஜிஜூ, அவை நடவடிக்கைகள் சுமுகமாக தொடர ஒத்துழைக்குமாறு நேரில் கேட்டுக்கொண்டார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க அரசு ஒப்புக்கொண்ட போதிலும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால் விவாதத்தை நடத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார்.</p><h2>மக்களவை ஒத்திவைப்பு</h2><p>எனினும், பகல் 12 மணிக்கு ஜகதாம்பிகா பால் தலைமையில் மக்களவை மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஜகதாம்பிகா பால் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அமளி தொடர்ந்ததால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.</p><p>சனி, ஞாயிறு என இரு நாள் விடுமுறைக்குப் பிறகு மக்களவை இனி திங்கள்கிழமை கூடுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மத்திய பிரதேசத்தில் 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி துப்பாக்கி முனையில் கொள்ளை</title><link>https://www.maalaimalar.com/news/national/400-year-old-cannon-stolen-at-gunpoint-in-madhya-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/400-year-old-cannon-stolen-at-gunpoint-in-madhya-pradesh#comments</comments><guid isPermaLink="false">4800897a-252d-4a08-8275-a5b07cd46cc1</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:31:57 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:31:57.994Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய பிரதேசம்,Madhya Pradesh,cannon,பீரங்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/srlnget2/cannon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/srlnget2/cannon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள நர்வார் கோட்டை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவு சின்னமாகும். </p><p>கச்வாஹா ராஜ்புத் மன்னர்களால் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கோட்டையில், வரலாற்று சிறப்புமிக்க 14 பீரங்கிகள் இருந்தன. இந்த பீரங்கிகள், சிந்தியா மன்னர்களின் ஆட்சி காலத்தை சேர்ந்தவை ஆகும். ஒவ்வொரு பீரங்கியும் 3.5 டன் எடை கொண்டவை.</p> <p>பழங்கால பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய சட்டவிரோத சந்தையில் இத்தகைய பீரங்கிகளுக்கு நல்ல மதிப்பு உண்டு. இதையடுத்து கோட்டையில் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அந்த பாதுகாவலர்களையும் தாண்டி, சில நாட்களுக்கு முன்பு கொள்ளை கும்பலால் ஒரு பீரங்கி திருடி செல்லப்பட்டது. </p><p>கோட்டையின் பின்புறம் வழியாக வந்த கொள்ளை கும்பல், பாதுகாப்பு பணியில் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் காட்டி மிரட்டி பீரங்கியை லாரியில் ஏற்றி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.</p> <p>கோட்டையை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் பீரங்கியை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பீரங்கியை ஏற்றி சென்ற லாரி ராஜஸ்தானுக்கு சென்றது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>சர்வதேச அளவில் பழமையான பொருட்களை கடத்தும் கும்பலுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்றும், கொள்ளை கும்பல் பீரங்கியை மண்ணில் புதைத்து வைத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.</p><p>பீரங்கியை கண்டறிவதற்காக ராஜஸ்தானின் கரவுலி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர். சந்தேகிக்கப்படும் இடங்களில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடக்கிறது. </p> <p>பரத்பூரில் இருந்து ஒரு உலோக கண்டறிதல் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்து, மின்னணு கருவிகள் மூலம் நிலத்தை ஆய்வு செய்து வருகிறது. ஜே.சி.பி. எந்திரங்களை பயன்படுத்தி பல இடங்களில் மண்ணை தோண்டி தேடும் முயற்சியும் நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு வங்காளத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/bengal-border-force-jawan-kills-2-colleagues</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengal-border-force-jawan-kills-2-colleagues#comments</comments><guid isPermaLink="false">83ea0499-b969-4f2f-b24d-1ce217d6070d</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:00:53 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:00:53.860Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்காளம்,BSF,எல்லை பாதுகாப்பு படை,west bengal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xz06gium/jawan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xz06gium/jawan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாம் ஒன்றில், காவலில் வைக்கப்பட்டு இருந்த வீரர் ஒருவர், அங்கு பணியில் இருந்த மற்றொரு வீரரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து சரமாரியாக சுட்டார்.</p><h2>எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்</h2><p>இந்த சம்பவத்தில், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். மற்றொருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் மால்டா மாவட்டம், பைஷ்ணப்நகர் பகுதியில் உள்ள 119-வது பட்டாலியன் தலைமையகத்தில் நடந்தது. இந்த சம்பவத்தில் சக வீரர் சிவம்குமார் மிஸ்ரா என்பவர் ஈடுபட்டுள்ளார். இவர் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p> <p>இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-</p><p>எல்லை பாதுகாப்பு படை வீரர் சிவம்குமார் மிஸ்ரா ராணுவ கோர்ட்டு உத்தரவின்பேரில் 119-வது பட்டாலியன் தலைமையகத்தில் காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.</p><p>நேற்று மாலை அவர் பணியில் இருந்த வீரர் வைத்திருந்த துப்பாக்கியை வலுக்கட்டாயமாக பறித்தார். பின்னர் அந்த துப்பாக்கியால் அருகில் இருந்த ராணுவ முகாம்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 3 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் குண்டு பாய்ந்து காயமடைந்தனர்.</p> <h2>பாதுகாப்புப் படையினர் கைது</h2><p>உடனடியாக அவர்கள் மால்டா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 2 உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நடந்த உடனேயே, சிவம்குமார் மிஸ்ராவை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.</p> <p>இந்த சம்பவத்தில் பலியான எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பீகாரை சேர்ந்த அஜய்குமார் சிங் (வயது 51), மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அம்படார் சுரேஷ் (36) என அடையாளம் காணப்பட்டு உள்ளது. காயம் அடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் பிகாஸ் பிரம்மா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>குஜராத்தை துவம்சம் செய்த இடைவிடாத கனமழை: 1200 பேர் மீட்பு, 22 ஆயிரம் பேர் இடம்பெயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/national/flood-like-situation-worsens-in-gujarat-22000-relocated-1200-rescued-as</link><comments>https://www.maalaimalar.com/news/national/flood-like-situation-worsens-in-gujarat-22000-relocated-1200-rescued-as#comments</comments><guid isPermaLink="false">1ed662b2-557f-4802-a067-949d43e34fb3</guid><pubDate>Fri, 24 Jul 2026 06:22:54 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:22:54.175Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வெள்ளம்,Heavy Rain,குஜராத்,gujarat,Gujarat Rains,கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/brq33tpe/GujaratRains0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குஜராத் மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/brq33tpe/GujaratRains0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத், அகமதாபாத், கேடா தபி மற்றும் டாங்ஸ், வால்சாட் உள்ளிட்ட மாவட்டங்களில் புதன்கிழமையில் இருந்து இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று மாலை வரையிலும் இந்த கனமழை நீடித்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.</p><h2>1200 மி.மீ. மழை</h2><p>குறிப்பாக வால்சாட் மாவட்டத்தில் உள்ள உம்பேர்கான் தாலுகா இந்த கனமழையால் கடுமையாக பாதித்தது. இங்கு 36 மணி நேரத்தில் 1200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.</p><p>வால்சாட் பகுதிகளில் இருந்து 1200 பேர் மீட்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை காரணமாக 22 ஆயிரம் பேர் சொந்த இடங்களில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.</p><h2>மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் NDRF மற்றும் SDRF</h2><p>பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக்குழு (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழு (SDRF) குவிக்கப்பட்டுள்ளது. நவ்சாரி மற்றும் வால்சாட் மாவட்டங்களில் ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நிவாரணப்பணி, மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><figure><img alt="குஜராத் மழை" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/yh037wsx/GujaratRains0002.jpg" /></figure> <p>மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்து. பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேலிடம் இது தொடர்பாக பேசியுள்ளார். சாத்தியமான அனைத்து வகை உதவிகளும் மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.</p><p>வால்சாட் மற்றும் நவ்சாரி மற்றும் சூரத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருகில் உள்ள இடங்கள் மற்றும் கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.</p><h2>ரெட் அலர்ட் எச்சரிக்கை</h2><p>அகமதாபாத்தில் உள்ள 22 தாலுக்காவில் 12 மணி நேரத்தில் 200 மி.மீ.-க்கு அதிகமான மழை பதிவாகியுள்ளது. </p><p>இந்திய வானிலை மையம், இன்று வரை கனமழை முதல் அதிகன மழை பெய்யக்கூடும் என பரூச், சூரத், நவ்சாரி, வால்சாட், டாங்ஸ், நர்மதா, வதோதரா, சோட்டா உதேபூர், பஞ்ச்மஹால், தாஹோத் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உயர்கல்வித் துறை செயலாளர் மாற்றம்.. மாணவர்கள் போராட்டத்தால் மத்திய அரசு நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/change-of-higher-and-school-education-secretaries-central-government-action-after-student-protests</link><comments>https://www.maalaimalar.com/news/national/change-of-higher-and-school-education-secretaries-central-government-action-after-student-protests#comments</comments><guid isPermaLink="false">6a11c37c-9ce1-475c-be2d-6d1377479fca</guid><pubDate>Fri, 24 Jul 2026 04:46:44 +0000</pubDate><atom:updated>2026-07-24T04:46:44.157Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>paper leak,கல்வி அமைச்சகம்,Ministry of Education,neet protest,நீட் வினாத்தாள் கசிவு,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/gkfde24o/Untitled-design-60.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Centre shifts Higher Education Secretary amid student protests]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/gkfde24o/Untitled-design-60.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்படி, மாணவர்கள் போராடி வரும் சூழலில், உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷியை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h3><strong>எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:</strong></h3><p>தேசிய அளவில் நடைபெற்ற நீட் தேர்வில், வினாத்தாள் கசிந்ததையடுத்து பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>மேலும் நீட் வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.</p><p>இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.</p><p>மேலும் சிபிஎஸ்இ நடத்திய பொதுத் தேர்வு மதிப்பீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்தும் தேசிய தேர்வு முகமையின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p>இந்நிலையில் உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷியை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>ஜோஷி இதற்கு முன்னர் தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநராகவும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.</p><h3><strong>புதிய அதிகாரிகள் நியமனம்:</strong></h3><p>இவர் 2023-ல் மணிப்பூரில் இன மோதல் மோசமடைந்ததை தொடர்ந்து, தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் இவர் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தற்காலிகத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.</p><p>இதையடுத்து பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய இரு துறைகளின் உயர் பதவிகளுக்கும் புதிய அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.</p><p>நரேஷ் குமார் கங்வார் என்பவர் தற்போது உயர்கல்விச் செயலாளராகவும், டி.கே.அனில் குமார் என்பவர் பள்ளிக்கல்விச் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நரேஷ் கங்வார் முன்னதாக கால்நடை வளர்ப்பு அமைச்சகத்தில் செயலாளராகவும், அனில் குமார் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றி வந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜூலை 20-ந்தேதி போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குகள் கிடையாது: மத்திய அரசின் உத்தரவாதத்தை பகிர்ந்த வாங்சுக்</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-wangchuk-shares-govt-assurance-no-cases-against-peaceful-july-20-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-wangchuk-shares-govt-assurance-no-cases-against-peaceful-july-20-protesters#comments</comments><guid isPermaLink="false">87ee1a4f-55fd-4fa1-8457-05dce568fddf</guid><pubDate>Fri, 24 Jul 2026 04:30:28 +0000</pubDate><atom:updated>2026-07-24T04:30:28.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/y3t8jkm7/Wangchuk0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sonam Wangchuk]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/y3t8jkm7/Wangchuk0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரில் சந்தித்தோ அல்லது கடிதங்கள் மூலமாகவோ உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதாக வாங்சுக் தெரிவித்தார்.</p><p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த ஜூன் 20-ந்தேதி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தினர். அப்போது, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான பல்வேறு உயர்க்கல்வி தொடர்பான முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.</p><h2>பாராளுமன்றம் முற்றுகை போராட்டம்</h2><p>கடந்த 20-ந்தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது பாராளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் மாணவர்கள் பேரணி மேற்கொண்டனர். அவர்கள் நாடாளுமன்றத்தை நெருங்கியதால், மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்படும் நிலை உருவானது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி பேரணியை கலைத்தனர்.</p><p>இதில் மாணவர்கள், இளைஞர்கள், காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்திற்குப் பிறகு மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது. என்ன இருந்தாலும் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் கரப்பான்பூச்சி ஜனதா தளம் உறுதியாக உள்ளது.</p><h2>மத்திய அரசு உறுதி அளிப்பு- போராட்டத்தை கைவிட்ட வாங்சுக்</h2><p>இதற்கிடையே ஜூன் 28-ந்தேதில் முதல் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசடைய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் அவரும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். நேற்று மத்திய அமைச்சர்கள் அவரை சென்று சந்தித்தனர். அப்போது கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று மத்திய அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.</p><p>ஜூலை 20-ந்தேதி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டால் எதிர்காலம் கேள்விக்குறி ஆகும். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என வாங்சுக் கோரிக்்கை வைத்தார். மத்திய அரசு அதை ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொட்ரபாக அவரிடம் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>மருத்துவமனையில் இருக்கும் அவர், அமைதியான ஜூலை 20 போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த வழக்கும் கிடையாது என எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு வழங்கியுள்ள அந்த உத்தரவாதத்தை அவர் பகிர்ந்துள்ளார்.</p><h2>வாங்சுக் பதிவு</h2><p>பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரில் சந்தித்தோ அல்லது கடிதங்கள் மூலமாகவோ உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதாக வாங்சுக் தெரிவித்தார்.</p><p>பல்வேறு நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், நாட்டில் ஏற்படக்கூடிய வன்முறையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த நிபந்தனைகள் குறித்த விவரங்களை விரைவில் ஒரு தனி காணொளியில் விளக்குவேன். அதேவேளையில், எங்கும் எந்தவிதமான வன்முறையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது, பொறுப்புக்கூறுல் தொடங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வீடியோ வெளியிட்டு அவமதிப்பதா? - தர்மேந்திர பிரதானை முதலில் நீக்குங்கள்: மோடிக்கு ராகுல் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-urges-modi-remove-dharmendra-pradhan-first</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-urges-modi-remove-dharmendra-pradhan-first#comments</comments><guid isPermaLink="false">9c940b94-969d-4c69-8419-9721f2619208</guid><pubDate>Fri, 24 Jul 2026 03:56:53 +0000</pubDate><atom:updated>2026-07-24T03:56:53.144Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,pm modi,பிரதமர் மோடி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/3chf2ii3/rahulgandhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi - Rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/3chf2ii3/rahulgandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்குங்கள். மாணவர்களை தாக்கியவர்களை தண்டியுங்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.</strong></em></p><h2>கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாட்டில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் முதலில் வலியுறுத்தினர்.</p> <p>தற்போது 'இந்தியா' கூட்டணியும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பதவி விலகலுக்கான வலியுறுத்தல்கள் தினம்தோறும் வைக்கப்பட்டு வருகிறது.</p><h2>விரைவு கோர்ட்டுகள்</h2><p>நீட் முறைகேடு வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்படும் என்று நேற்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.</p> <h2>பிரதமர் மோடி</h2><p>சிஜேபி போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில்  மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி நள்ளிரவில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,</p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவு குறித்து விசாரிப்பதற்காக  விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். தேர்வு முறையை மாற்றியமைப்பது தொடர்பாக அமைச்சரவை  கூட்டத்தில் விவாதிக்கப்படும். </p> <h2>மசோதா</h2><p>நீட் வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான மசோதாவை விரைந்து நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a> உறுதி அளித்துள்ளார்.</p><h2>ராகுல் காந்தி</h2><p>இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>பிரதமர் மோடி அவர்களே, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எங்கள் <a href="https://www.maalaimalar.com/news/national/modi-govt-treating-students-seeking-accountability-as-enemies-of-nation-sonia-gandhi">மாணவர்கள்</a> வலியுறுத்துகின்றனர்.</p> <p>நள்ளிரவில் வெளியிடப்பட்ட வீடியோ மூலம் அவர்களின் புத்திசாலித்தனத்தை அவமதிக்காதீர்கள்.</p><p>1. பிரதானை பதவியிலிருந்து நீக்குங்கள்.</p><p>2. மாணவர்களை தாக்கியவர்களை தண்டியுங்கள்.</p><p>3. மன்னிப்பு கேளுங்கள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Mr. Modi, our students are demanding Dharmendra Pradhan’s resignation.<br><br>Don’t insult their intelligence with this pathetic midnight video. <br><br>1.  Sack Pradhan.<br>2. Punish those who beat students.<br>3. ⁠Apologise <a href="https://t.co/7SLB6pQqZx">https://t.co/7SLB6pQqZx</a></p>&mdash; Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://x.com/RahulGandhi/status/2080375315063566480?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>உத்தரகாண்ட் பல்கலைக்கழகத்தில் பி.டெக் தேர்வு வினாத்தாள் கசிவு.. உதவி பேராசிரியர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/uttarakhand-university-btech-exam-paper-leak-assistant-professor-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttarakhand-university-btech-exam-paper-leak-assistant-professor-arrested#comments</comments><guid isPermaLink="false">96bbc831-8746-4ff3-89da-85ff2e36bf78</guid><pubDate>Fri, 24 Jul 2026 03:40:20 +0000</pubDate><atom:updated>2026-07-24T03:40:20.590Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>paper leak,uttarakhand university,வினாத்தாள் கசிவு,உத்தரகாண்ட் பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/9a03ohol/Untitled-design-59.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Uttarakhand B.Tech exam cancelled after question paper leak]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/9a03ohol/Untitled-design-59.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>உத்தரகாண்ட் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிவு:</strong></h3><p>தேசிய அளவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் காரணமாக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், உத்தரகாண்ட் பல்கலைக்கழகத்தில் பி.டெக் தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவை தொடர்ந்து, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வீர மாதோ சிங் பண்டாரி உத்தரகாண்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.</p><p>இங்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான பி.டெக் மின்னணுவியல் பாடப்பிரிவை சேர்ந்த வினாத்தாள்கள் வாட்ஸ்அப்பில் கசிந்தது. இதை தொடர்ந்து, பி.டெக் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வி.கே.படேல் கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில் உதவி பேராசிரியர் ஆஷிஷ் குமார் குப்தா வாட்ஸ்அப்பில் பகிர்ந்த கேள்விகள், இறுதி தேர்வு வினாத்தாளுடன் 95 சதவீதம் வரை ஒத்துப்போனது கண்டறியப்பட்டுள்ளது” என்று கூறினார்.</p><p>இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேராசிரியர் பணியாற்றி வந்த இரண்டாம் ஆண்டு மின்காந்த புலக் கோட்பாடு தேர்வையும் அதிகாரிகள் ரத்து செய்தனர்.</p><h3><strong>பல்கலைக்கழகம் சுற்றறிக்கை:</strong></h3><p>இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், “தேர்வு முறையின் நம்பகத்தன்மை, தூய்மை மற்றும் மாணவர் நலனை காப்பதற்காக, இந்த ரத்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இரண்டாம் ஆண்டு பயிலும் 355 மாணவர்கள் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் 22 மாணவர்களுக்கான ரத்து செய்யப்பட்ட தேர்வுகள், 2026 ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் மறுபடியும் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளது.</p><h3><strong>உதவி பேராசிரியர் கைது:</strong></h3><p>பல்கலைக்கழகத்தின் புகாரை தொடர்ந்து, கல்லூரியின் உதவி பேராசிரியர் குப்தா இடைநீக்கம் செய்யப்பட்டு, நேற்று கைது செய்யப்பட்டார்.</p><p>இதையடுத்து இந்திய தேசிய மாணவர் சங்கம் மற்றும் இளைஞர் குழுக்களின் உறுப்பினர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.</p><p>மேலும் தொடர்ந்து நிகழும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள், மாணவர்களின் கடின உழைப்பு, நேரம் மற்றும் எதிர்காலத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மோடி அரசு மாணவர்களை நாட்டின் எதிரிகளாக நடத்துகிறது: சோனியா காந்தி குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/modi-govt-treating-students-seeking-accountability-as-enemies-of-nation-sonia-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-govt-treating-students-seeking-accountability-as-enemies-of-nation-sonia-gandhi#comments</comments><guid isPermaLink="false">8a67db5e-897d-494e-9e89-cb8110e39646</guid><pubDate>Fri, 24 Jul 2026 03:31:49 +0000</pubDate><atom:updated>2026-07-24T03:31:49.453Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>sonia gandhi,pm modi,பிரதமர் மோடி,சோனியா காந்தி,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/ntbi9ljk/SoniaGandhi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sonia Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/ntbi9ljk/SoniaGandhi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய அரசிடமிருந்து பொறுப்புக்கூறல் மற்றும் கல்விச் சீர்திருத்தத்தை கேட்டார்கள். நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அவர்களின் துணிச்சலுக்குக் கோழைத்தனத்துடனும் கொடூரத்துடனும் பதிலளித்துள்ளது. அவர்களை எதிர்காலத்தின் வாரிசுகளாகக் கருதாமல், நாட்டின் எதிரிகளாகவே நடத்தியுள்ளது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.</p><h2>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உயர்க்கல்வியில் உள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் மத்திய அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று <a href="https://www.maalaimalar.com/news/national/removing-pradhan-is-the-strictest-action-cjp-to-pm-modi">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> வலியுறுத்தி வந்தன. ஆனால், இரண்டு வலியுறுத்தலுக்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இதனால், கடந்த ஜூன் 20-ந்தேதி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வந்தது.</p><h2>நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் பேரணி</h2><p>கடந்த 20-ந்தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. அன்றைய தினம் நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.</p><p>அப்போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டு வீசி பேரணியை கலைத்தனர். ஜந்தர் மந்தரில் தொடர்ந்து பேராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மீதான தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாணவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.</p><p>இதனால் மத்திய அரசு, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. பிரதமர் மோடி, வினாத்தாள் லீக் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி முடிக்கும் வகையில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.</p> <h2>தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்</h2><p>ஆனால், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், தர்மேந்திர பிரதான் பதவி விலகியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். டெல்லி போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நீடித்துள்ளது. கைது செய்யப்படும் நபர்களை வழக்குப் பதிவு செய்யப்படாமலேயே ஒரு வருடம் சிறையில் அடைக்க முடியும். மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுது்த மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.</p><p>இதற்கிடையே, மாணவர்கள் போராட்டத்தை தூண்டு விடுவதாகவும், அவர்களை தேசவிரோதிகள் என்ற முத்திரை குத்தவும் முயற்சி நடைபெற்ற வருவதாக குற்றமும் சாட்டப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்புக்கூறல் வேண்டும் என்று மாணவர்கள் கேட்டு வரும் நிலையில், அவர்களை அவர்களை தேசவிரோதிகள் போன்று நடத்துகிறது என்று சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>இது தொடர்பாக சோனியா காந்தி கூறியதாவது:-</h2><p>மாணவர்கள் போராட்டங்கள் என்பவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சில காரணிகளின் இயல்பான விளைவுகளாகும். அதாவது, நம்பிக்கையற்ற சூழலை மட்டுமே உருவாக்கும் இன்றைய கல்விச் சூழல் மற்றும் பொறுப்புக்கூறவோ அல்லது ஆக்கபூர்வமாகச் செயல்படவோ விரும்பாத மோடி அரசாங்கத்தின் வழக்கமான ஆணவம் ஆகியவையே அக்காரணிகளாகும்.</p><p>2020-ஆம் ஆண்டு குடியுரிமை (திருத்த) சட்டம்- தேசிய குடிமக்கள் பதிவேடு போராட்டங்களின்போது, ​​ஆயுதமேந்திய காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் பல்கலைக்கழக வளாகங்களை எவ்வாறு சூறையாடினர் என்பது நம் அனைவருக்கும் தெளிவாக நினைவிருக்கிறது. இந்தியாவின் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஏற்றுக்கொள்ள முடியாத அத்துமீறல்களை நம் நினைவுகளிலிருந்து ஒருபோதும் அழிக்க முடியாது.</p><p>மாணவர்களின் கோரிக்கைகள் மிகத் தெளிவானவை மற்றும் நேரடியானவை. இந்திய அரசிடமிருந்து பொறுப்புக்கூறல் மற்றும் கல்விச் சீர்திருத்தத்தை கேட்டார்கள்.<a href="https://www.maalaimalar.com/news/national/neet-exam-paper-leak-issue-key-decision-to-be-taken-at-cabinet-meeting-pm-modi"> நரேந்திர மோடி</a> தலைமையிலான அரசு, அவர்களின் துணிச்சலுக்குக் கோழைத்தனத்துடனும் கொடூரத்துடனும் பதிலளித்துள்ளது. அவர்களை எதிர்காலத்தின் வாரிசுகளாகக் கருதாமல், நாட்டின் எதிரிகளாகவே நடத்தியுள்ளது.</p><p>இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்: இன்று அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் - பிரதமர் மோடி
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-exam-paper-leak-issue-key-decision-to-be-taken-at-cabinet-meeting-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-exam-paper-leak-issue-key-decision-to-be-taken-at-cabinet-meeting-pm-modi#comments</comments><guid isPermaLink="false">c8880c1e-599b-468e-a18a-93833d8822a7</guid><pubDate>Fri, 24 Jul 2026 02:59:25 +0000</pubDate><atom:updated>2026-07-24T02:59:25.479Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hmxn2zlt/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hmxn2zlt/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.</p><h2>கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாட்டில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</a>யினர் முதலில் வலியுறுத்தினர்.</p> <h2>இந்தியா கூட்டணி</h2><p>தற்போது 'இந்தியா' கூட்டணியும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பதவி விலகலுக்கான வலியுறுத்தல்கள் தினம்தோறும் வைக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் இதுகுறித்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-</p> <h2>விரைவு கோர்ட்டுகள்</h2><p>நமது இளைஞர்களின் நலனையும், எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு கோர்ட்டுகளை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.</p><p>இதுதொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம்.</p> <p>மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். நமது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பவர்கள் தப்பிக்க விடப்பட மாட்டார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.</p><h2>சிஜேபி போராட்டம்</h2><p>இந்நிலையில்<a href="https://www.maalaimalar.com/news/national/removing-pradhan-is-the-strictest-action-cjp-to-pm-modi"> சிஜேபி </a>போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில்  மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி நள்ளிரவில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,</p> <h2>அமைச்சரவை கூட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவு குறித்து விசாரிப்பதற்காக  விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். தேர்வு முறையை மாற்றியமைப்பது தொடர்பாக அமைச்சரவை  கூட்டத்தில் விவாதிக்கப்படும்.</p> <h2>மசோதா </h2><p>நீட் வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான மசோதாவை விரைந்து நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Promising more strict action against paper leak, Prime Minister Narendra Modi said, &quot;... The departments presented me with the draft late at night. This draft, along with the provision for a fast-track court and harsh punishment, will be discussed in the cabinet tomorrow. After… <a href="https://t.co/1yo90YT0Hz">pic.twitter.com/1yo90YT0Hz</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2080369672109556212?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதான் நீக்கப்படுவதே கடுமையான நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு CJP வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/removing-pradhan-is-the-strictest-action-cjp-to-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/removing-pradhan-is-the-strictest-action-cjp-to-pm-modi#comments</comments><guid isPermaLink="false">1eef9a1a-7609-442c-80f3-72ef57f3fa93</guid><pubDate>Thu, 23 Jul 2026 23:49:47 +0000</pubDate><atom:updated>2026-07-23T23:49:47.206Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,pm modi,பிரதமர் மோடி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/hed6basj/pro-pmo.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protest Site & PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/hed6basj/pro-pmo.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> அறிவித்ததைத் தொடர்ந்து, 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளது. </p><p>தேர்வு முறைகேடுகள் தொடர்பாக அரசு எடுக்கக்கூடிய "மிகக் கடுமையான நடவடிக்கை" என்பது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்குவதுதான் என்று அக்கட்சி கூறியுள்ளது. </p><h2>கடுமையான நடவடிக்கை:</h2><p>பிரதமரின் கருத்துகளுக்கு பதிலளித்த <a href="https://www.maalaimalar.com/topic/cjp-protest">சி.ஜே.பி.</a>-யின் தேசிய செய்தி தொடர்பாளர் அஷூதோஷ் ரன்கா, "மோடி ஜி, நாளைக்கே தர்மேந்திர பிரதானை நீக்குங்கள். அதுதான் நீங்கள் எடுக்கக்கூடிய மிக கடுமையான நடவடிக்கையாக இருக்கும்" என்று கூறினார்.</p><p>பிரதமரின் அறிவிப்பு குறித்து CJP-யின் நிறுவனர் அபிஜீத் டிப்கேவும் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்தார். முன்மொழியப்பட்ட சட்டத்தை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், சுற்றுச்சுவர்கள் இல்லாத ஒரு வளாகத்தின் நுழைவாயிலை ஒருவர் பூட்டுவது போன்ற படத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.</p><h2>மசோதா:</h2><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வகை செய்யும் மசோதா, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகு அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் மோடி நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தார்.</p><p>நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, விரைவு நீதிமன்றங்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே எடுத்துள்ளதாக கூறிய அவர், இதற்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் உறுதியாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்ததில் நிம்மதி, ஆனாலும் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடரும்! கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உறுதி</title><link>https://www.maalaimalar.com/news/national/relieved-wangchuk-ended-fast-jantar-mantar-protest-will-continue-said-cjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/relieved-wangchuk-ended-fast-jantar-mantar-protest-will-continue-said-cjp#comments</comments><guid isPermaLink="false">31778b79-5f8a-4a6a-9362-7b4194051e87</guid><pubDate>Thu, 23 Jul 2026 23:14:42 +0000</pubDate><atom:updated>2026-07-23T23:14:42.834Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CJP Protest,Wangchuk,சிஜேபி போராட்டம்,வாங்சுக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/92dhqdi2/CJP-Protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/92dhqdi2/CJP-Protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதில் "நிம்மதியும் நன்றியும்" அடைந்துள்ளதாக 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) தெரிவித்துள்ளது; அதேவேளையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை டெல்லியின் ஜந்தர் மந்தரில் தங்கள் அமைதியான போராட்டம் தொடரும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியது. </p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் டிப்கே, "சோனம் ஐயா 26 நாட்களுக்குப் பிறகு தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதில் நாங்கள் நிம்மதியும் நன்றியும் கொள்கிறோம். உங்கள் அசாத்தியமான துணிச்சலுக்கும் தியாகத்திற்கும் நன்றி ஐயா. </p><p>உங்கள் உயிரைப் பணயம் வைத்து, ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியையும் நீங்கள் தட்டி எழுப்பினீர்கள். இந்த நாட்டிற்கு உங்கள் உயிர் மிகவும் விலைமதிப்பற்றது. தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி'யின் அமைதியான போராட்டம் தொடரும்," என்று டிப்கே கூறினார். </p><h2>உண்ணாவிரதம் நிறைவு:</h2><p>அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், தேர்வு சீர்திருத்தங்கள் மற்றும் நீட் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட அவரது முக்கிய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, வாங்சுக் வியாழக்கிழமை இரவு தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.</p><p>வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், "சோனம் ஜி மருத்துவர்களின் அறிவுரைப்படி தனது அன்றாட நடைமுறைகளை பின்பற்றி, விரைவில் தனது உடல் எடையை மீட்டெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சோனம் ஜி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன்," என்றும் பிரதமர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்&quot; அரசு உறுதியை தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் வாங்சுக்</title><link>https://www.maalaimalar.com/news/national/wangchuk-ends-hunger-strike-after-govt-assures-him-of-meeting-his-demands</link><comments>https://www.maalaimalar.com/news/national/wangchuk-ends-hunger-strike-after-govt-assures-him-of-meeting-his-demands#comments</comments><guid isPermaLink="false">c9d1a9ce-32fd-47ce-a89b-1aef1c0c0d8e</guid><pubDate>Thu, 23 Jul 2026 22:38:19 +0000</pubDate><atom:updated>2026-07-23T22:38:19.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CJP Protest,Wangchuk,சிஜேபி போராட்டம்,வாங்சுக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/wkbt969u/wangchuck.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Wangchuk ends hunger strike
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/wkbt969u/wangchuck.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு உறுதியளித்ததை தொடர்ந்து, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார்.</p><h2>உண்ணாவிரதம் நிறைவு:</h2><p>நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு வாக்கில் மேடான்டா மருத்துவமனையில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் அவரை சந்தித்து அரசின் உறுதிமொழிகளை தெரிவித்த பிறகு, அவர் தனது உண்ணாவிரதத்தை முடிப்பதாக அறிவித்தார்.</p><p>"மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் லே-லடாக் 'அபெக்ஸ் பாடி' (Apex Body) அமைப்பின் மூத்த தலைவர்கள் முன்னிலையில், 26 நாட்களுக்குப் பிறகு நான் எனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டேன்," என்று வாங்சுக் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><h2>பிரதமர் கோரிக்கை:</h2><p>வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடிப்பதாக அறிவித்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி 'எக்ஸ்' தளத்தில், "சோனம் ஜி மருத்துவர்களின் அறிவுரைப்படி தனது அன்றாட நடைமுறைகளை பின்பற்றி, விரைவில் தனது உடல் எடையை மீட்டெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சோனம் ஜி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன்," என்றும் பிரதமர் கூறினார்.</p><p>மருத்துவமனையில் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ மற்றும் பிறர் முன்னிலையில் அரசு அளித்த உறுதிமொழிகளை வாசித்துக்காட்டிய நட்டா, "டெல்லியின் ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராடுபவர்கள் மற்றும் ஜூலை 20, 2026 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யாதது குறித்து அரசு சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது," என்று கூறினார்.</p><p>தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று அரசு ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p><p>"அதுமட்டுமின்றி, சமீபத்திய நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பத்தினருக்குப் பொருத்தமான இழப்பீடு வழங்குவது குறித்தும் அரசு சாதகமாக பரிசீலித்து வருகிறது," என்று நட்டா மேலும் கூறினார்.</p><h2>வாங்சுக் பதிவு:</h2><p>பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரில் சந்தித்தோ அல்லது கடிதங்கள் மூலமாகவோ உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தியதாக வாங்சுக் தெரிவித்தார்.</p><p>"பல்வேறு நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், நாட்டில் ஏற்படக்கூடிய வன்முறையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த நிபந்தனைகள் குறித்த விவரங்களை விரைவில் ஒரு தனி காணொளியில் விளக்குவேன். அதேவேளையில், எங்கும் எந்தவிதமான வன்முறையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>தேர்வு முறைகேடுகள் தொடர்பான பொறுப்புக்கூறல், கல்வி முறையில் சீர்திருத்தங்கள் மற்றும் அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) தலைமையிலான போராட்டம் ஜூன் 20 அன்று தொடங்கியது. </p><p>ஜூன் 28 அன்று போராட்டத்தில் இணைந்த வாங்சுக், அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது எந்தவிதத் தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அரசு உறுதியளித்து, போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றினால் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாகக் கூறியிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அமைச்சர்களை சந்திக்கும் சிஜேபி குழு</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-delegation-will-meet-with-govt-ministers-on-friday-sources</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-delegation-will-meet-with-govt-ministers-on-friday-sources#comments</comments><guid isPermaLink="false">26aae3fb-1df9-40e8-b1c1-a3405a2a6da8</guid><pubDate>Thu, 23 Jul 2026 20:50:52 +0000</pubDate><atom:updated>2026-07-23T20:50:52.090Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர்கள்,CJP protests,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்,govt ministers</media:keywords><media:content height="3288" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/dectr06l/PTI07232026000377B.jpg" width="4800"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/dectr06l/PTI07232026000377B.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சி.ஜே.பி.) பிரதிநிதிகள் குழு அரசு அமைச்சர்களை இன்று (வெள்ளிக்கிழமை) சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>இந்த சந்திப்பு மதியம் 12.30 மணிக்கு நடைபெறும், ஆனால் அது நடைபெறும் இடம் வெளியிடப்படவில்லை.</p><h2>பேச்சுவார்த்தை:</h2><p>நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டுவர நடந்த தீவிர திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இது நடைபெறுவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் மற்றும் கல்வி முறையில் முழுமையான சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரி, சி.ஜே.பி. இங்குள்ள ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறது.</p><p>இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து 'நீட்' விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.</p><h2>ராகுல் காந்தி போராட்டம்: </h2><p>நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசும் போது, "நம் நாட்டு மாணவர்கள் வீதிகளில் இறங்கி உள்ளனர். எனவே எதிர்கட்சியினரும் வீதிகளில் இறங்க வேண்டும் என நாங்கள் உணர்ந்தோம்.முதலில் எதிர்கட்சி எம்.பி.க்களான நாங்கள் அனைவரும் இந்தியா கேட் செல்ல விரும்பினோம். ஆனால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.</p><p>பின்னர் நாங்கள் காந்தி நினைவகத்திற்கு சென்று கொண்டிருந்தோம், ஆனால் எங்கள் பேருந்து நிறுத்தப்பட்டது.</p><p>மாணவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம். நாம் இழந்த மாணவர்களை நினைவுகூரச் செல்கிறோம். நீட் தேர்வுத்தாள் கசிவுக்கு பிறகு, தற்கொலைக்கு தள்ளப்பட்ட அந்த பிள்ளைகளை நினைவுகூர செல்கிறோம்.</p><p>நீதியை நிலை நாட்டும்படி அமைதியாக போராடிய மாணவர்கள் தாக்கப்பட்டு, இன்று காயங்களுடன் அவதிபட்டு வருகின்றனர். அவர்களுக்கு துணையாக நிற்க செல்கிறோம்.</p><p>இந்திய மாணவர்கள் தனியாக இல்லை, ஒட்டுமொத்த எதிர்கட்சியும் அவர்களுடனும் அவர்களின் கோரிக்கைகளுடனும் துணை நிற்கிறது. நீங்கள் மறக்கப்பட மாட்டீர்கள், நாங்கள் மெளனமாக இருக்கமாட்டோம்," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: ஆக. 3-இல் தமிழ்நாடு - கர்நாடக முதலமைச்சர்கள் சந்திப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-cm-dk-shivakumar-likely-to-meet-tn-cm-vijay-on-aug-3</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-cm-dk-shivakumar-likely-to-meet-tn-cm-vijay-on-aug-3#comments</comments><guid isPermaLink="false">4bcfe524-05f2-4611-8205-16c5689dedae</guid><pubDate>Thu, 23 Jul 2026 20:04:19 +0000</pubDate><atom:updated>2026-07-23T20:04:19.252Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DK Shivakumar,டிகே சிவகுமார்,cm vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/8s9pywkz/vj-dk-s.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay & DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/8s9pywkz/vj-dk-s.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டுடன் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், சந்திப்புக்கான நேரம் கோரி தமிழ்நாடு முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/cm-vijay">ஜோசப் விஜய்</a> விடுத்த வேண்டுகோளை ஏற்று, அவரை ஆகஸ்ட் 3-ஆம் தேதி சந்திக்க கர்நாடக முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/dk-shivakumar">டி.கே. சிவகுமார்</a> முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>கடிதம்:</h2><p>முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், விஜய் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு சந்திப்பு கோரி சிவகுமாருக்குக் கடிதம் எழுதி இருந்ததாகவும், ஆகஸ்ட் 03-ஆம் தேதி வருமாறு சிவகுமார் அனுப்பிய கடிதம் அந்த வேண்டுகோளுக்கான பதில் மட்டுமே என்றும் தெரிவித்தன.</p><p>இந்த சந்திப்புக்கான ஏற்பாடு குறித்து தமிழ்நாடு தரப்பில் இருந்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் மேலும் கூறினர். சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, தமிழ்நாடு முதல்வர் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதி, அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்து அதற்கான நேரம் ஒதுக்குமாறு கோரியிருந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.</p><h2>உறுதிப்படுத்தவில்லை:</h2><p>"ஜோசப் விஜய் தனது வருகையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. சிவகுமார் அவரது கடிதத்திற்கு பதில் மட்டுமே அளித்துள்ளார்," என்று சிவகுமாருக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.</p><p>காவிரி நதிநீர் பகிர்வு மற்றும் சிவகுமாரின் சட்டமன்ற தொகுதியான கனகபுராவில் அமையவுள்ள மேகதாது சமநிலை நீர்த்தேக்க திட்டம் (தமிழ்நாடு இத்திட்டத்தை வலுவாக எதிர்த்து வருகிறது) உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இந்த சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>தீர்மானம்:</h2><p>முன்னதாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழக சட்டசபையிலும், அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><p>இதுதவிர மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுப்பது குறித்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோருடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>போராடும் மாணவர்களுக்கு அவசர கோரிக்கை விடுத்த வாங்சுக்</title><link>https://www.maalaimalar.com/news/national/wangchuk-urges-protesters-to-remain-peaceful</link><comments>https://www.maalaimalar.com/news/national/wangchuk-urges-protesters-to-remain-peaceful#comments</comments><guid isPermaLink="false">c9a4557f-505d-4c79-a1bf-0ecb3594d3a3</guid><pubDate>Thu, 23 Jul 2026 18:48:38 +0000</pubDate><atom:updated>2026-07-23T18:48:38.609Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,மாணவர்கள் போராட்டம்,Wangchuk,வாங்சுக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/m7q5ja7e/wnagchuk.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/m7q5ja7e/wnagchuk.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டம் அமைதியாக நடைபெற்று வரும் நிலையில், வேறு இடங்களில் "சமூக விரோத சக்திகள்" வன்முறையை தூண்ட முயற்சிப்பதாக வரும் செய்திகள் தனக்கு வேதனையளிப்பதாக கூறிய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நடைபெற்று வரும் மாணவர் இயக்கத்தின் ஆதரவாளர்கள் அமைதியை கடைப்பிடிக்க வலியுறுத்தினார்.</p><h2><strong>மரபை கைவிடாதீர்கள்:</strong></h2><p>தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் 26-வது நாளைக் குறிக்கும் வகையில், 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட வாங்சுக், "அமைதி, அமைதி மட்டுமே எனது வழி. </p><p>ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் அமைதியாக நடைபெற்று வரும் வேளையில், வேறு சில இடங்களில் சமூக விரோத சக்திகள் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்ட முயற்சிப்பதாக அறிவது எனக்கு வேதனையளிக்கிறது. </p><p>எதிர் தரப்பினர் என்ன செய்தாலும், நமது பதில் மலர்களை போல மென்மையாகவே இருக்க வேண்டும். தயவுசெய்து எக்காரணம் கொண்டும் இந்த மரபை கைவிடாதீர்கள்," என்று வாங்சுக் கூறினார்.</p><h2><strong>குற்றச்சாட்டு:</strong></h2><p>ஜூலை 20 அன்று நடைபெற்ற 'சன்சத் சலோ' போராட்டத்திற்குப் பிறகு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த பேரணியின்போது, ​​நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை டெல்லி காவல்துறை கண்ணீர்ப்புகை மற்றும் தடியடி மூலம் தடுத்தது. பெல்லட் துப்பாக்கிகள் மற்றும் டேஸர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>இந்த கடுமையான நடவடிக்கையை தொடர்ந்து, மாணவர் இயக்கத்தை வன்முறை சார்ந்ததாக சித்தரிக்கவும், தலைநகரின் பிற பகுதிகளில் நடந்த சம்பவங்களுடன் அதை தொடர்புபடுத்தவும் முயற்சிகள் நடப்பதாக 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை காவல்துறை மறுத்தது.</p><h2><strong>மாணவர்களுக்கு ஆதரவு:</strong></h2><p>முன்னதாக, வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி அங்மோ வெளியிட்ட 'எக்ஸ்' தள பதிவில், "கடந்த சில நாட்களாக இந்தியாவின் 'ஜென்-இசட்' (Gen Z - தற்போதைய இளம் தலைமுறை) இளைஞர்களை பார்ப்பது எனக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. அந்நியர்களை குடும்பத்தினர் போல கவனித்துக்கொண்டனர், உணவு மற்றும் தண்ணீரை பகிர்ந்துகொண்டனர், தங்கள் போராட்ட இடங்களை சுத்தப்படுத்தினர், முதியவர்களை கவனித்துக்கொண்டனர்.</p><p>'ஜன கண மன' மற்றும் நம்பிக்கையூட்டும் பாடல்களை ஒன்றிணைந்து பாடினர், கடும் தூண்டுதல்களுக்கு மத்தியிலும் கட்டுப்பாட்டுடன் இருந்தனர். எண்ணற்ற தன்னலமற்ற சேவைகள்" மூலம் இந்த இயக்கத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருந்தனர்," என்று கூறினார்.</p><p>இந்த போராட்டத்தில் ஜூன் 28-ஆம் தேதியன்று இணைந்த வாங்சுக், அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் குருகிராமில் உள்ள மேடான்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>இப்போராட்டத்தில் பங்கேற்ற அமைதியான போராட்டக்காரர்கள் மீது எந்தவிதத் தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு உறுதியளித்தால், தனது உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களை புரிந்து கொள்ள முடிகிறது - நீட் போராட்டம் குறித்து சச்சின் டெண்டுல்கர் அறிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/students-disappointment-understandable-tendulkar-statement-on-neet-agitation</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-disappointment-understandable-tendulkar-statement-on-neet-agitation#comments</comments><guid isPermaLink="false">9ca30d29-f80c-40c5-870f-6f4a0ea379f0</guid><pubDate>Thu, 23 Jul 2026 17:50:34 +0000</pubDate><atom:updated>2026-07-23T17:50:34.342Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sachin Tendulkar,சச்சின் டெண்டுல்கர்,நீட் எதிர்ப்பு போராட்டம்,NEET agitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/v20efpw7/S-T.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சச்சின் டெண்டுல்கர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/v20efpw7/S-T.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள்கள் தொடர்ச்சியாக கசிவதற்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆதரவு தெரிவித்தார். மாணவர்களின் ஏமாற்றம் புரிந்துகொள்ளக்கூடியது என்றும், அவர்கள் "மீண்டும் இத்தகைய உணர்வுக்கு ஆளாகாதவாறு" பார்த்துக்கொள்வது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்றும் அவர் கூறினார். </p><p>இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட டெண்டுல்கர், "என் தந்தை ஒரு பேராசிரியராக இருந்தார். அவர் பல இளம் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் திகழ்ந்தார். அவர் எனக்கு ஆரம்பத்திலேயே கற்றுக்கொடுத்த ஒரு பாடம் இதுதான்: "தோல்வி அடைவதில் தவறில்லை, ஆனால் ஏமாற்றுவது தவறு. ஒருபோதும் குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்காதீர்கள்."</p><h2>ஏமாற்றம் இயல்பானது:</h2><p>சமூகத்தில் முதிர்ந்த குடிமக்களாக, கலாச்சாரத்தை வடிவமைக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. உழைப்பை விட முடிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கும் ஒரு சமூகம், தகுதியின் அடிப்படையில் முன்னேறுவதை விடுத்து குறுக்கு வழிகளையே நாடும்.</p><p>தங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்காதபோது மாணவர்கள் ஏமாற்றமடைவது இயல்பானதே; அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் அவர்களுக்கு அத்தகைய உணர்வு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.</p><h2>வெற்றி கிடைக்கும்:</h2><p>இன்றைய இளம் இந்தியா கனவுகளாலும் ஆற்றலாலும் நிறைந்துள்ளது. அவர்களே நமது வெற்றியின் உந்துசக்தியாக திகழ்கிறார்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பள்ளிகள் மற்றும் நிர்வாகத்தினர் என சமூகம் சார்ந்த அனைவரும், நமது இளைஞர்கள் தொடர்ந்து ஊக்கத்துடனும் ஆற்றலுடனும் இருப்பதை உறுதி செய்வதில் பெரும் பொறுப்பையும் வெவ்வேறு பங்குகளையும் கொண்டுள்ளோம்.</p><p>கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும், நேர்மை ஊக்குவிக்கப்படும் மற்றும் தகுதிக்கு வெற்றி கிடைக்கும் ஒரு கலாச்சாரத்தை நாம் உருவாக்க வேண்டும். நமது குழந்தைகளின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பாதுகாக்கும் தீர்வுகளை நாம் அனைவரும் கண்டறிவோம் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது," என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் தங்களுக்கு முன்னேற வழியே இல்லை என்று உணர்வதை அறிந்து இதயம் நொறுங்கியது: மம்மூட்டி மற்றும் துல்கர்</title><link>https://www.maalaimalar.com/news/national/students-feel-no-way-forward-heartbreaking-mammootty-dulquer</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-feel-no-way-forward-heartbreaking-mammootty-dulquer#comments</comments><guid isPermaLink="false">c6fbf4c1-3b2b-4237-8e8e-72c49934ee24</guid><pubDate>Thu, 23 Jul 2026 16:31:23 +0000</pubDate><atom:updated>2026-07-23T16:31:23.533Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dulquer Salmaan,Mamootty</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/euy6ynag/Untitled-design-58.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mammootty and Dulquer voice support for NEET protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/euy6ynag/Untitled-design-58.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய அளவில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்ட நிலையில், அதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>72 வது தேசிய விருதில் பிரம்மயுகம் திரைப்படத்திற்காக தனது நான்காவது தேசிய விருதை வென்ற மம்மூட்டி, தற்போது நாடு முழுவதும் நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும்  மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.</p><h3><strong>மாணவர்களுக்கு ஆதரவாக மம்மூட்டி பதிவு:</strong></h3><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இளைஞர்கள் நமது தேசத்தின் பொக்கிஷம்; அவர்களின் குரலுக்கு செவி சாயுங்கள்.</p><p>அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்; அவர்களுக்கு வலுவூட்டுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.</p><p>முன்னதாக நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான், ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.</p><h3><strong>மாணவர்களுக்கு ஆதரவாக துல்கர் பதிவு:</strong></h3><p>நடிகர் துல்கர் சல்மான் அந்த பதிவில்:-</p><p>ஜந்தர் மந்தரில் நடப்பது, சற்று நின்று செவிமடுத்து புரிதலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கான ஒரு நினைவூட்டலாகும்.</p><p>கல்வி என்பது எப்போதுமே நம்பிக்கை, வாய்ப்பு மற்றும் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான வாக்குறுதியை பற்றியதாகவே இருந்து வந்துள்ளது.</p><p>இளம் வயதினர் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வதை காண்பது மனதை பிழிவதாக உள்ளது.</p><p>சில மாணவர்கள் தங்களுக்கு முன்னேற வழியே இல்லை என்று உணர்வதை அறிந்து என் இதயம் நொறுங்கியது.</p><p>மாணவர்களின் தற்கொலை செய்திகளை கேட்பது வேதனை அளிக்கிறது. பெற்றோர்கள் தங்களின் கனவுகள் நனவாவதை உறுதிசெய்ய, வலி மற்றும் கடன் என்ற இரட்டை சுமையை சுமக்க வேண்டியுள்ளது.</p><p>ஒவ்வொரு கருத்திற்கும் அப்பால், இரக்கத்திற்கும் மரியாதைக்கும் தகுதியான கனவுகள், லட்சியங்கள், குடும்பங்கள் மற்றும் நம்பிக்கைகளை கொண்ட தனி நபர்கள் உள்ளனர்.</p><p>அர்த்தமுள்ள உரையாடல்கள், அமைதியான தீர்வுகள் மற்றும் ஞானம் ஆகியவற்றால் வழி நடத்தப்படும் முடிவுகள் ஏற்பட வேண்டும்.</p><p>பிரிவினை மற்றும் வன்முறையின் மீது கட்டப்பட்ட எதிர்காலத்தை விட, புரிதலின் மீது கட்டப்பட்ட எதிர்காலம் எப்போதும் வலிமையானதாக இருக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>“தர்மேந்திர பிரதான் பதவி விலகாவிட்டால் பிரதமர் மோடியும் விலக நேரிடும்” - அபிஜித் தீப்கே எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/if-dharmendra-pradhan-does-not-resign-modi-will-also-have-to-step-down-abhijit-deepke-warns</link><comments>https://www.maalaimalar.com/news/national/if-dharmendra-pradhan-does-not-resign-modi-will-also-have-to-step-down-abhijit-deepke-warns#comments</comments><guid isPermaLink="false">fba49b52-e0ae-4ca4-aa3c-5167c9314db0</guid><pubDate>Thu, 23 Jul 2026 16:18:44 +0000</pubDate><atom:updated>2026-07-23T16:18:44.993Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,pm modi,பிரதமர் மோடி,abhijeet dipke,அபிஜித் தீப்கே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/vuvf5yt8/New-Project-2026-07-23T214811.973.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “தர்மேந்திர பிரதான் பதவி விலகாவிட்டால் மோடியும் விலக நேரிடும்” - அபிஜித் தீப்கே எச்சரிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/vuvf5yt8/New-Project-2026-07-23T214811.973.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை அரசு ஏற்கத் தவறினால், பிரதமர் மோடியின் ராஜினாவைக் கோரும் நிலைக்கு போராட்டம் செல்லும் என கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் நடுவே பேசிய அவர்,.</p><p>“பிரதமர் மோடி அவர்களே, தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு நான் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், இந்தப் பிரச்சனை தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுடன் மட்டும் நின்றுவிடாது; அது உங்கள் ராஜினாமாவைக் கோரும் நிலைக்குச் செல்லும். </p><p>திறமையற்ற மற்றும் தோல்வியடைந்த ஒரு அமைச்சரை விட, இந்நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்கள் முக்கியமானவர்கள் அல்லவா? கோடிக்கணக்கான மாணவர்களை விடத் தோல்வியடைந்த, திறமையற்ற ஒரு அமைச்சருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்: இந்தியாவில் யாரும் உங்களுக்குத் தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள்.</p><p>அரசு தர்மேந்திர பிரதானை பாதுகாப்பது  வெட்கக்கேடானது.” என தெரிவித்தார். </p><p>டெல்லியில் சிஜேபி தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் இருந்து, பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்தார். </p><p>ஆனால் சிஜேபி இந்த பேச்சுவார்த்தை கோரிக்கையை நிராகரித்துள்ளது. அரசு அலுவலங்களிலோ, அதிகாரிகள் இல்லங்களிலோ பேச்சுவார்த்தைக் கூடாது எனவும், பொதுவான ஒரு இடத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என சிஜேபியினர் தெரிவிக்கின்றனர்.</p><h2>எதற்காக இந்தப் போராட்டம்?</h2><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி கட்சியினர் ஜூன்.20ம் தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் தனியாக இல்லை, நாங்கள் அவர்களுக்கு துணையாக இருக்கிறோம்: ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/students-are-not-alone-we-stand-with-them-rahul-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-are-not-alone-we-stand-with-them-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">6a358d6d-0acb-453d-a414-e766fd2b0aa7</guid><pubDate>Thu, 23 Jul 2026 15:45:20 +0000</pubDate><atom:updated>2026-07-23T15:45:20.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,neet,நீட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/vlzx4qnh/Untitled-design-57.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi joins NEET Exam Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/vlzx4qnh/Untitled-design-57.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் பல முக்கிய இடங்களில் நீட் தேர்விற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், புது டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது இல்லத்தில் இருந்து காந்தி நினைவிடத்திற்கு காங்கிரஸ் கட்சியினருடன் பேரணியாக சென்றார்.</p><p>அப்போது பேரணியாக சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரின் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.</p><h3><strong>நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி:</strong></h3><p>அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-</p><p>நம் நாட்டு மாணவர்கள் வீதிகளில் இறங்கி உள்ளனர். எனவே எதிர்கட்சியினரும்  வீதிகளில் இறங்க வேண்டும் என நாங்கள் உணர்ந்தோம்.</p><p>முதலில் எதிர்கட்சி எம்.பி.க்களான நாங்கள் அனைவரும் இந்தியா கேட் செல்ல விரும்பினோம். ஆனால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.</p><p>பின்னர் நாங்கள் காந்தி நினைவகத்திற்கு சென்று கொண்டிருந்தோம், ஆனால் எங்கள் பேருந்து நிறுத்தப்பட்டது.</p><p>மாணவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம்.</p><p>நாம் இழந்த மாணவர்களை நினைவுகூரச் செல்கிறோம். நீட் தேர்வுத்தாள் கசிவுக்கு பிறகு, தற்கொலைக்கு தள்ளப்பட்ட அந்த பிள்ளைகளை நினைவுகூர செல்கிறோம்.</p><p>மேலும் நீதியை நிலை நாட்டும்படி அமைதியாக போராடிய மாணவர்கள் தாக்கப்பட்டு, இன்று காயங்களுடன் அவதிபட்டு வருகின்றனர். அவர்களுக்கு துணையாக நிற்க செல்கிறோம்.</p><p>இந்திய மாணவர்கள் தனியாக இல்லை, ஒட்டுமொத்த எதிர்கட்சியும் அவர்களுடனும் அவர்களின் கோரிக்கைகளுடனும் துணை நிற்கிறது.</p><p>நீங்கள் மறக்கப்பட மாட்டீர்கள், நாங்கள் மெளனமாக இருக்கமாட்டோம்.</p><p>இவ்வாறு மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>‘இந்தியாவை நேபாளமாக மாற்றுவது ஜனநாயகமல்ல’ - போராட்டம் குறித்து சூர்யகுமார் யாதவின் மனைவி கருத்து!</title><link>https://www.maalaimalar.com/news/national/turning-india-into-nepal-is-not-democracy-suryakumar-yadavs-wife-comments-on-the-protests</link><comments>https://www.maalaimalar.com/news/national/turning-india-into-nepal-is-not-democracy-suryakumar-yadavs-wife-comments-on-the-protests#comments</comments><guid isPermaLink="false">3fc186b5-e3a2-4683-85ef-d848d820926a</guid><pubDate>Thu, 23 Jul 2026 14:49:10 +0000</pubDate><atom:updated>2026-07-23T14:49:10.931Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Suryakumar Yadav,சூர்யகுமார் யாதவ்,CJP Protest,Devisha Shetty,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்,தேவிஷா ஷெட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/wz8ccsse/New-Project-2026-07-23T201843.552.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘இந்தியாவை நேபாளமாக மாற்றுவது ஜனநாயகமல்ல’ - போராட்டம் குறித்து சூர்யகுமார் யாதவின் மனைவி கருத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/wz8ccsse/New-Project-2026-07-23T201843.552.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போராட்டம் என்ற பெயரில் இந்தியாவை நேபாளமாக மாற்றுவது ஜன நாயகம் அல்ல என தற்போது நாடு முழுவதும் வெடித்துள்ள நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ்வின் மனைவி தேவிஷா ஷெட்டி கருத்து தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ள அவர்.,</p><p>“நீட் தேர்வுக்கான போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்; கல்வித் துறையில் பெரும் சீர்திருத்தங்கள் தேவை; ஒரு மாணவர் கூட உயிரிழந்திருக்கக் கூடாது. ஆனால், கல்வீச்சுச் சம்பவங்கள் போராட்டத்தை வலுப்படுத்தாது என்றும் நான் கூறுகிறேன்.</p><p>பிரிவு 370-ஐக் கோருவது நீட் தேர்வு விவகாரம் சார்ந்ததல்ல; இந்தியாவை நேபாளமாக மாற்றுவது ஜனநாயகமும் அல்ல; ஒரு மதத்தை மட்டும் இழிவுபடுத்துவது நீட் தேர்வுக்கான போராட்டம் ஆகாது;</p><p>‘அல்லாஹ்வின் பெயர் நிலைத்திருக்கட்டும்’ போன்ற முழக்கங்கள் இதற்குத் தீர்வு காணாது. ஆனால் உங்களால் கண்டிக்க முடியுமா?இதில் எதையாவது... அல்லது மோடி மீதான வெறுப்பு என்ற பெயரில் நாம் நம்முடைய முதுகெலும்பை இழந்துவிட்டோமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் சி.ஜே.பி போராட்டம்: கலவரத்தில் ஈடுபட்டால் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய  காவல்துறை நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-in-delhi-passports-of-rioters-to-be-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-in-delhi-passports-of-rioters-to-be-cancelled#comments</comments><guid isPermaLink="false">bedbe312-cb0c-49ea-83ed-aba8d8438ea0</guid><pubDate>Thu, 23 Jul 2026 14:13:16 +0000</pubDate><atom:updated>2026-07-23T14:13:16.700Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட் தேர்வு,CJP Protest,சி.ஜே.பி போராட்டம்,Passport cancellation,பாஸ்போர்ட் ரத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/y2xb529j/del.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protest ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/y2xb529j/del.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நடைபெற்ற 'சலோ சன்சாத்' (பாராளுமன்றத்தை நோக்கி பேரணி) போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. இதன்படி, கலவரத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்ட நபர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறை விரைவில் தொடங்கவுள்ளது.</p><p>சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) சார்பாக பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து செல்ல முயன்றனர்.</p><p>பேரணி கட்டுப்பாட்டை மீறி வன்முறையாக மாறியதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். இக்கலவரத்தில் பல காவல்துறையினரும், போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். மேலும், கட்சியின் நிறுவனர் 'அபிஜீத் தீப்கே' உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.</p><h2><strong>டெல்லி காவல்துறை கடும் எச்சரிக்கை:</strong></h2><p>வழக்கமாக பதிவு செய்யப்படும் குற்றவியல் வழக்குகளைத் தவிர்த்து, இந்த முறை கூடுதல் நடவடிக்கையாக கலவரக்காரர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அல்லது புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்களை நிராகரிக்க மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு (RPO) சிபாரிசு செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது. </p><p>போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களின் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது மற்றும் அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இத்தகைய கடும் நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><h2><strong>நாடு தழுவிய போராட்டத்திற்கு சி.ஜே.பி அழைப்பு:</strong></h2><p>மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, 'சி.ஜே.பி' கட்சி சார்பாக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் இச்சம்பவம் குறித்து கலவையான விவாதங்கள் உருவாகியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பாலிவுட் பிரபலங்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/bollywood-celebrities-voice-their-support-for-the-cjp-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/bollywood-celebrities-voice-their-support-for-the-cjp-protest#comments</comments><guid isPermaLink="false">93649ed5-07b1-462e-a558-f77c983c3b6b</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:01:38 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:01:38.136Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Cockroach Party protest,Bollywood celebrities,கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்,பாலிவுட் பிரபலங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/3lwtrzdi/New-Project-2026-07-23T183112.978.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பாலிவுட் பிரபலங்கள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/3lwtrzdi/New-Project-2026-07-23T183112.978.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். </p><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20 முதல் போராட்டம் நடத்திவருகிறது. </p><p>தற்போது இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் இந்தப் போராட்டத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். </p><h2>நடிகர் சல்மான்கான்</h2><p>போராட்டம் தொடர்பாக பதிவிட்டுள்ள சல்மான் கான்,  </p><p>“இந்தப் போராட்டம் சரியான அணுகுமுறை; மாணவர்கள் இதை அமைதியான முறையில் முன்னெடுத்துள்ளனர். இது அவர்களின் துணிச்சலையும், வீரத்தையும் வெளிப்படுத்துகிறது. கல்வியின் மீது மிகுந்த ஆர்வமும் உத்வேகமும் கொண்ட இந்தத் தலைமுறை இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும்.</p><p>அரசு அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அளித்து, கல்வி முறையை மேலும் வலுப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.</p><p>கல்வி அடுத்தக்கட்டத்திற்கு செல்லவேண்டும். எந்த அளவுக்கு என்றால் வெளிநாட்டினர் கல்வி பயில இந்தியாவுக்கு வரும் நிலையும், இந்தியா ஒரு முக்கியக் கல்வி மையமாகத் திகழும் நிலையும் உருவாக வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><h2>நடிகை ஆலியா பட்,</h2><p>“உறுதியுடன் நிலைத்து நிற்கும் ஒவ்வொரு மாணவருக்குப் பின்னாலும் ஒரு கனவு, ஒரு குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் எண்ணற்ற தியாகங்கள் நிறைந்த ஒரு பயணம் உள்ளது. அவர்கள் தங்களை மட்டுமல்ல, தங்களுக்குத் துணையாக நின்ற அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்; அதேவேளையில், தங்களுக்குப் பின் வருபவர்களுக்காக ஒரு சிறந்த பாதையையும் உருவாக்குகிறார்கள்.</p><p>அவர்களின் துணிச்சல் என்னுள் பணிவை ஏற்படுத்துகிறது. அவர்களின் மன உறுதி நம் அனைவருக்கும் ஒரு கண்ணாடியாகத் திகழ்கிறது; இந்நாட்டின் நாளைய எதிர்காலத்தை வடிவமைக்கவிருக்கும் அந்த மனிதர்களின் குரலை நாம் உண்மையிலேயே செவிமடுக்கிறோமா என்று அது நம்மை வினவுகிறது.</p><p>மாணவர்களுக்காக... மாணவர்களால்... எதிர்காலம் அவர்களுக்கே உரியது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><h2>நடிகை அனன்யா பாண்டே,</h2><p>“Gen Z தலைமுறையினர் இப்படித்தான் என எப்போதுமே ஒரு லேபிள் ஒட்டப்படுகிறது. ஆனால், அவர்கள் உண்மையில் யார் என்பதைப் புரிந்துகொள்ள இதுவே சரியான தருணம். எப்போதுமே இப்படித்தான் என்ற வாதத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவர்கள் குறுக்கு வழிகளைக் கேட்கவில்லை; நியாயமே அடிப்படையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.</p><p>கேள்வி கேட்பது மரியாதைக் குறைவு அல்ல; குரல் கொடுப்பது கலகமும் அல்ல. மாற்றம் இப்படித்தான் தொடங்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘ராகுல் காந்தியின் போராட்டம் நேர்மையற்றது’ - சோனம் வாங்சுக்கின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhis-protest-is-dishonest-sonam-wangchuks-wife-makes-sensational-allegation</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhis-protest-is-dishonest-sonam-wangchuks-wife-makes-sensational-allegation#comments</comments><guid isPermaLink="false">17b88a2d-0a42-43c3-8bb9-9d52edb53504</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:15:27 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:15:27.321Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,Gitanjali Angmo,கீதாஞ்சலி ஆங்மோ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/n4l5ll7z/New-Project-2026-07-23T173301.035.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ராகுல் காந்தியின் போராட்டம் நேர்மையற்றது’ - சோனம் வாங்சுக்கின் மனைவி பரபர குற்றச்சாட்டு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/n4l5ll7z/New-Project-2026-07-23T173301.035.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20 முதல் போராட்டம் நடத்திவருகிறது.</p><p>இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாள் (ஜூலை.20) ‘சலோ சன்சத்’ என்ற பெயரில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியை களைக்க போலீசார் மாணவர்கள், போராட்டக்காரர்கள்மீது போலீசார் சராமாரி தடியடி நடத்தினர்.</p><p>போலீசாரின் இந்த அராஜகப்போக்கை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி தலைமையில் மறுநாள் (ஜூலை.21) டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தைத் தொடர்ந்து ராகுல் காந்தி, சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p>இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்தப் போராட்டம் நேர்மையற்றது என சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், </p><p>“பிரதமரின் இல்லத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தில் நேர்மை இல்லை. பொதுமக்களை இனி ஏமாற்ற முடியாது. இது விழித்தெழுந்த இந்தியா. நேர்மையற்றவர்கள் இளைஞர்களால் தூக்கி எறியப்படுவார்கள்.</p><p>சொன்னதைச் செய்தாக வேண்டும் என்பதை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் காட்டியுள்ளது. அவர்களால் இனிமேலும் பொய் பேசவோ அல்லது நேர்மையற்றவர்களாக இருக்கவோ முடியாது.” என தெரிவித்தார். </p><p>மேலும் அரசியல் கட்சிகள் தங்களை இதனுடன் இணைத்துக் கொள்ள முயன்றபோதிலும், இந்தப் போராட்டம் அரசியல் சார்பற்றதாகவே நீடிக்கிறது என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>‘போராட்டத்தில் பாஜகவினர் கல்லெறிந்துவிட்டு எங்கள்மீது பழிபோடுகிறார்கள்’ - அபிஜீத் தீப்கே!</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-members-pelted-stones-during-the-protest-and-are-shifting-the-blame-onto-us-abhijit-deepke</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-members-pelted-stones-during-the-protest-and-are-shifting-the-blame-onto-us-abhijit-deepke#comments</comments><guid isPermaLink="false">0c575166-fee7-4024-b6b9-ed599285e01b</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:00:44 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:00:44.074Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Cockroach Janta Party,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,NEET-UG paper leak,நீட்-யுஜி வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/6ts1ieh6/New-Project-2026-07-23T172843.724.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘போராட்டத்தில் பாஜகவினர் கல்லெறிந்துவிட்டு எங்கள்மீது பழிபோடுகிறார்கள்’ - அபிஜீத் தீப்கே!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/6ts1ieh6/New-Project-2026-07-23T172843.724.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடந்து வரும் மாணவர் போராட்டத்தை வேண்டுமென்றே சீர்குலைப்பதற்காக வெளியிலிருந்து ஆட்கள் அனுப்பப்படுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே குற்றம் சாட்டியுள்ளார். </p><p>மேலும், பாஜகத் தொண்டர்கள் போராட்டக்காரர்கள் மீது கல் எறிந்துவிட்டு, எங்கள் பெயரை கெடுக்க முயற்சிக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய அபிஜீத்,</p><p>“போராட்டத்தை வேண்டுமென்றே சீர்குலைப்பதற்காக வெளியிலிருந்து ஆட்கள் அனுப்பப்படுகிறார்கள். நாங்கள் ஒரு மாதமாக இங்கே அமர்ந்திருக்கிறோம். ஒரு மாதத்தில் இதுபோன்ற எந்தச் சம்பவமும் நடக்கவில்லை. ஆனால் இப்போது, ​​இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், மக்களை வேண்டுமென்றே தூண்டிவிடுவதற்காக பாஜகவால் வெளியிலிருந்து குண்டர்கள் அனுப்பப்படுகிறார்கள்.</p><p>கற்களை வீசுபவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். காவல்துறை லாரிகளில் கற்களை இங்கு கொண்டு வருகிறது. பாஜக குண்டர்கள் வந்து, கற்களை வீசி, பின்னர் எங்களின் பெயரை கெடுக்க முயற்சிக்கின்றனர். </p><p>தடியடி பற்றி நான் ஏற்கனவே பேசியுள்ளேன். தடியடி நடத்திய காவல்துறையினரை நீதிமன்றம் முன் நிறுத்துவோம். இன்று எங்கள் போராட்டத்தின் 34வது நாள். சோனம் சாரின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. இன்று அவரது உண்ணாவிரதப் போராட்டத்தின் 26வது நாள், எனவே எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.</p><p>இருப்பினும், சோனம் வாங்சுக் உயிர் இழப்பதை எங்களால் தாங்க முடியாது என்பதால், அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.” என தெரிவித்தார். </p><p>புதன்கிழமை (ஜூலை.22) மாலை நடந்த கல்வீச்சு சம்பவத்தில், உதவி காவல் ஆணையர் ஜெய் பிரகாஷ், கன்னாட் பிளேஸ் உதவி காவல் ஆணையர் விவேக் பகத், ஆய்வாளர் நந்த் கிஷோர் மற்றும் மேலும் நான்கு காவலர்கள் காயமடைந்ததாக டெல்லு காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. </p><p>தொடர்ந்து இந்த கல்வீச்சு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும்நிலையில் அபிஜீத் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காரணம் கூறாமல் 3 மாதங்கள் சிறையில் அடைக்கலாம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/national-security-act-in-delhi-for-three-months-not-linked-to-student-protests</link><comments>https://www.maalaimalar.com/news/national/national-security-act-in-delhi-for-three-months-not-linked-to-student-protests#comments</comments><guid isPermaLink="false">76097f2f-587c-4e3a-935f-cd1c67305fae</guid><pubDate>Thu, 23 Jul 2026 11:46:33 +0000</pubDate><atom:updated>2026-07-23T11:46:33.536Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi Police,டெல்லி காவல்துறை,National Security Act,Cockroach Janata Party,காக்ரோச் ஜனதா கட்சி,தேசிய பாதுகாப்பு சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/7cazn6pm/Untitled-design-54.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi NSA extension amid NEET protests]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/7cazn6pm/Untitled-design-54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி காவல்துறை ஆணையருக்கு, 1980 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA) கீழ் மூன்று மாத காலத்திற்கு, தடுப்புக் காவல் அதிகாரியின் அதிகாரங்களைப் பயன்படுத்த டெல்லி உள்துறை அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. </p><p>இந்த அதிகாரம் ஜூலை 19, 2026 முதல் அக்டோபர் 18, 2026 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தனி நபர்களை காரணம் கூறாமல் 3 மாதம் வரை சிறையில் அடைக்க முடியும். </p><p>பொது ஒழுங்கைப் பேணுதல், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகிய நிகழ்வுகளில், நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு தடுப்புக் காவல் சட்டத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p><strong>டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்:</strong></p><p>இதுகுறித்து டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், “இந்த அறிவிப்பு என்பது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களை, காலாண்டுக்கு ஒருமுறை நீட்டிக்கும் ஒரு வழக்கமான செயல்முறை ஆகும்.</p><p>இது வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் புதுப்பிக்கப்படுகிறது. </p><p>தற்போதைய புதுப்பித்தல் உத்தரவு, சிஜேபி போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்பே, 07.07.2026 அன்று, 19.07.2026 முதல் 18.10.2026 வரையிலான காலத்திற்கு பிறப்பிக்கப்பட்டது. </p><p>இந்த காலகட்டத்தில், டெல்லி காவல்துறை ஆணையர், தேசிய பாதுகாப்பு சட்டம் பிரிவு 3, துணைப் பிரிவு (2)-இன் கீழ் தடுப்புக் காவல் அதிகாரங்களையும் பயன்படுத்தலாம்.</p><p>சமீபத்திய நிகழ்வுகள் தொடர்பாக எந்தவொரு சிறப்பு கோரிக்கையோ அல்லது உத்தரவோ தொடங்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், “இந்த அறிவிப்பு, தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களுடன் தொடர்புடையது கிடையாது. சரிபார்க்கப்படாத தகவல்களை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம்” என்றும் காவல்துறை கூறியுள்ளது.</p><p>நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தேசிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றும் வரும் சூழலில், இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இணையத்தில் பரவலான யூகங்கள் பரவி வரும் நிலையில் இந்த விளக்கத்தை காவல்துறை அளித்துள்ளது.</p><h3><strong>டெல்லி மாணவர்கள் போராட்டம் பின்னணி:</strong></h3><p>காக்ரோச் ஜனதா கட்சியால் வழிநடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள், இந்த வாரத் தொடக்கத்தில் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றபோது தீவிரமடைந்தன, இது காவல்துறையினருடன் மோதல்களுக்கு வழிவகுத்தது.</p><p>தேர்வு சீர்திருத்தங்கள், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் தேர்வுத்தாள் கசிவைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு ஆகியவற்றை போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.</p><p>தேர்வுத்தாள் கசிவுகள் காரணமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், பின்னர் அரசாங்கத்தின் மீதும், வேலையின்மை மற்றும் இளம் இந்தியர்களுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டும் பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிவசேனாவில் இருந்து கட்சித் தாவிய 6 எம்.பி.க்கள் - மக்களவை சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-notice-to-lok-sabha-speaker-over-defection-of-6-mps</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-notice-to-lok-sabha-speaker-over-defection-of-6-mps#comments</comments><guid isPermaLink="false">0b917d1c-b7f9-43ce-a113-41ac8de5265d</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:51:50 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:51:50.981Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உத்தவ் தாக்கரே,Om Birla,ஓம் பிர்லா,Shiv Sena,Uddhav Thackery,சிவ சேனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/53adfyne/Untitled-design-53.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SC notice to Lok Sabha Speaker over approval of 6 MPs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/53adfyne/Untitled-design-53.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஸ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியுடன் ஆறு எம்.பி.க்கள் இணைந்ததை அங்கீகரித்த மக்களவை சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.</p><p>மகாராஸ்டிராவில் சமீபத்தில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் எம்.பி.க்களான சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தினா பாட்டீல், நாகேஷ் பாட்டீல், ஓம்பிரகாஷ் ராஜேனிம்பல்கர் மற்றும் பெளசாஹேப் வக்செளரே ஆகிய ஆறு பேர் இணைந்தனர்.</p><h3><strong>கட்சித் தாவிய சிவசேனா எம்பிக்கள்:</strong> </h3><p>இந்த இணைப்பிற்கு பிறகு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் மக்களவை பலம், மூன்று எம்.பி.க்களாக குறைந்தது. </p><p>அதேவேளையில் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் பலம் 13 எம்.பி.க்களாக அதிகரித்தது. </p><p>இதன்மூலம், பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்தபடியாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்றாவது பெரிய அங்கமாக சிவசேனா மாறியது. </p><p>இதுகுறித்து மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதிகளின் வளர்ச்சியை பாதுகாப்பதற்காகவே எனது கட்சியில் இணைந்துள்ளனர். மற்றபடி தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அல்ல” என்று கூறினார்.</p><h3><strong>சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்:</strong></h3><p>இந்நிலையில் எம்.பி.க்களின் இணைவிற்கு ஒப்புதல் அளித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் முடிவை எதிர்த்து, உத்தவ் தாக்கரே சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.</p><p>நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட சபாநாயகரின் முடிவுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த கண்பத் சாவந்த் மனு தாக்கல் செய்தார்.</p><p>இதை அவசர வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்துமாறும், நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.</p><p>இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை செயலாளர் மற்றும் ஆறு எம்.பி.க்களுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.</p><p>மேலும் சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு, நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே அமர்வு உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>தீவிரமடையும் நீட் எதிர்ப்பு போராட்டம்: டெல்லி கனாட் பிளேஸில் அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/connaught-place-shops-close-630pm-amid-neet-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/connaught-place-shops-close-630pm-amid-neet-protest#comments</comments><guid isPermaLink="false">2b7dbfc8-d8ba-49f6-a719-9eed4350e0d6</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:50:14 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:50:14.262Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,டெல்லி ஜந்தர் மந்தர்,neet protest,நீட் எதிர்ப்பு போராட்டம்,Connaught Place,கனாட் பிளேஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xi1s9nfz/DELHI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Connaught Place]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xi1s9nfz/DELHI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.</p><p>டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் பாராளுமன்ற வீதிப் பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகரின் இதயப் பகுதியாகவும் முக்கிய வர்த்தக மையமாகவும் விளங்கும் 'கனாட் பிளேஸ்' பகுதியில் நிலவும் சிக்கலான சூழல் காரணமாக, அங்குள்ள அனைத்துக் கடைகள், உணவகங்கள் மற்றும் அலுவலகங்களை இன்று மாலை 6:30 மணிக்குள் மூடுமாறு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>அவசர உத்தரவு:</strong></h2><p>கனாட் பிளேஸில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், உணவகங்கள் அனைத்தும் இன்று மாலை 6:30 மணிக்குள் முழுமையாக அடைக்கப்பட வேண்டும். புதுடெல்லி நகராட்சி மன்ற தலைவரின் நேரடித் தொலைபேசி அறிவுறுத்தலின் பேரில், ‘புதுடெல்லி வர்த்தகர்கள் சங்கம்’ தனது உறுப்பினர்களுக்கு இந்த அவசர எச்சரிக்கை அறிக்கையை அனுப்பியுள்ளது.</p><h2><strong>சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு:</strong></h2><p>அசம்பாவிதங்கள், சொத்து சேதங்கள் மற்றும் பொதுமக்கள் காயமடைவதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் அனைவரும் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.</p><h2><strong>கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு:</strong></h2><p>ஜந்தர் மந்தர், ஜனபத் மற்றும் கனாட் பிளேஸை இணைக்கும் முக்கியச் சாலைகளில் டெல்லி காவல் துறை மற்றும் துணைப் ராணுவப் படையினர் (CRPF, RAF) ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். பேரணியாக வர முயன்ற கூட்டத்தைக் கலைக்க ஆங்காங்கே கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டு தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>மெட்ரோ போக்குவரத்து பாதிப்பு:</strong></h2><p>பாதுகாப்பு கருதி கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள ராஜீவ் சவுக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் சில நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து பலத்த கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் பேரணி மற்றும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க முன்னெச்சரிக்கையாகக் கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களை இன்று மாலை 6:30 மணிக்குள் மூடுமாறு NDMC மற்றும் வர்த்தகர் சங்கம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘நீட் விவகாரத்தில் அரசு பதிலளித்தது... குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்’ - நிர்மலா சீதாராமன்</title><link>https://www.maalaimalar.com/news/national/government-has-responded-to-the-neet-irregularities-the-culprits-have-been-arrested-nirmala-sitharaman</link><comments>https://www.maalaimalar.com/news/national/government-has-responded-to-the-neet-irregularities-the-culprits-have-been-arrested-nirmala-sitharaman#comments</comments><guid isPermaLink="false">3a96aa62-ce50-41dc-8286-7a3900a2a717</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:19:43 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:19:43.306Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்மலா சீதாராமன்,nirmala Sitharaman,நீட் வினாத்தாள் கசிவு,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockraoch Janta Party protest,NEET leak</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/fz0n1w7t/New-Project-2026-07-23T154911.353.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நீட் குளறுபடிகளுக்கு அரசு பதிலளித்தது... குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்’ - நிர்மலா சீதாராமன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/fz0n1w7t/New-Project-2026-07-23T154911.353.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடப்பாண்டு நீட் -யுஜி தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளால் நாடு முழுவதும் வெடித்துள்ளப் போராட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகளாவது;</p><p>“அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களிடத்திலும் சென்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார் எனவும் தெரிவித்துள்ளனர். அரசு முழுமையான விவாதத்தை நடத்தத் தயாராக இருக்கும் நிலையில், மேலும் பல நிபந்தனைகளை விதித்து அவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வது சரியல்ல. நீட் விவகாரத்தையும், இளம் மாணவர்களையும் முன்னிறுத்தி, காங்கிரஸ் கட்சி தனது வழக்கமான பாணியில் அவையை முடக்கப் பார்க்கிறது.</p><p>விவாதம் நடந்தால் உண்மை வெளிவந்துவிடும், அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தெரியவந்துவிடும் என்பதால் விவாதத்தைத் தவிர்க்கிறார்கள். எனவே, அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. அவர்கள் விவாதத்தை விரும்புவதில்லை, அதனால்தான் இடையூறு செய்கிறார்கள். </p><p>காங்கிரஸ் நியாயமான விவாதத்தை விரும்பவில்லை; ஏனெனில் உண்மை வெளிவந்தால், நாட்டின் இளைஞர்கள் சார்ந்த இந்த உணர்வுபூர்வமான விவகாரத்தை அரசியல் ஆக்குவது அவர்கள்தான் என்பது தெரியவந்துவிடும்.</p><p>இப்போதும் கூட, எதிர்க்கட்சிகளிடமும், குறிப்பாக காங்கிரஸ் கட்சியிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்: வாருங்கள், விரிவான விவாதத்தில் ஈடுபடுங்கள், பிரச்சினைகளை இங்கே விவாதியுங்கள். கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்பட்டால் அரசு அதற்கான பதில்களை இங்கே அளிக்கும், ஆனால் முதலில் விவாதியுங்கள். </p><p>பதிலளிக்கத் தயாராக இருக்கும் அமைச்சர்களைக் கூச்சலிட்டுப் பேசவிடாமல் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. அவையின் தலைவர் பேசத் தயாராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் நோக்கம் இடையூறு செய்வது மட்டுமே; அவர்களுக்குத் தீர்வுகள் தேவையில்லை. </p><p>வினாத்தாள் கசிவு என்பது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். அரசு இதில் அக்கறை காட்டாமலோ அல்லது பதில் தெரிவிக்காமலோ இருந்திருந்தால், எதிர்க்கட்சிகள் இத்தகைய கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் வினாத்தாள்களை வெளியே விட்டவர்கள், வாங்கியவர்கள், விற்றவர்கள் என இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நோக்கியிருந்த பெற்றோருக்கு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற நம்பிக்கையை பிரதமரின் அறிவிப்பு அளித்துள்ளது. நாட்டின் இளம் தலைமுறைக்கு எதிராக குற்றம் செய்தவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்றும், இதற்கான விரைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் இன்று அறிவித்துள்ளார்.</p><p>சரியான நேரத்தில் கைது நடவடிக்கைகள், மறுதேர்வு மற்றும் முடிவுகள் அறிவிப்பு ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு அரசு செவிசாய்த்து வருகிறது. அதேவேளையில், உயர்கல்விக்கான நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் கட்டத்தில் உள்ள இளைஞர்களும் இச்சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p>வினாத்தாள் கசிவு முதலில் மனவேதனையை அளித்தாலும், அதைப் பயன்படுத்தி இன்னும் சிறப்பாகத் தயாராகி, சிறந்த தேர்ச்சி பெற்ற இளைஞர்களும் உள்ளனர்; சவால்களை ஏற்றுக்கொண்டு வெற்றிகண்டவர்களும் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசும், பிரதமரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களுக்கு ஆதரவாக மவுன போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே</title><link>https://www.maalaimalar.com/news/national/anna-hazare-silent-protest-supporting-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/anna-hazare-silent-protest-supporting-students#comments</comments><guid isPermaLink="false">76845079-8df8-4efb-a2ec-45d6d8e1562f</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:48:33 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:48:33.502Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,students protest,அன்னா ஹசாரே,Anna Hazare,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/by9lbn4t/hazare.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ anna hazare]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/by9lbn4t/hazare.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><h2>மாணவர்கள் பேரணி</h2><p>இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் ஜூலை 20 அன்று கரப்பான்பூச்சி கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகளை வீசி இளைஞர்களை கலைக்க முயன்றனர். அப்போது, 60 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். 116 போலீசார் காயமுற்றனர். 70 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><p>மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்த பல அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகி, அமைதியான முறையில் பேரணி நடத்திய இளைஞர்கள் மீதான அரசின் அடக்குமுறை குறித்த விமர்சனங்களை எழுப்பியது.</p><h2>பிரபலங்கள் ஆதரவு</h2><p>இதையடுத்து, பிரபலங்கள் உள்பட பலரும் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.</p><p>இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை. மாணவர்களின் நலனைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர் என பதிவிட்டுள்ளார்.</p><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிராகரித்துள்ளது.</p><p>மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டிப்பாக பதவி விலக வேண்டும் என பிரதமரின் எக்ஸ் தள பதிவை குறிப்பிட்டு காக்ரோச் ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.</p><h2>மவுன போராட்டம்</h2><p>இந்நிலையில், சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிராவின் அஹில்யா நகரில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மவுன போராட்டத்தில் ஈடுபட்டார் என அவரது உதவியாளர் தத்தா அவாரி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றமே நேரடியாகத் தலையிடும் என எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-stations-closure-supreme-court-warns-of-direct-intervention</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-stations-closure-supreme-court-warns-of-direct-intervention#comments</comments><guid isPermaLink="false">3dd9f69a-541c-4487-b733-f8895c3703ca</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:43:57 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:43:57.081Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SupremeCourt,Suryakant,தலைமை நீதிபதி சூர்யகாந்த்,டெல்லிமெட்ரோ,DelhiMetro,CJIProtest,MetroStationClosed</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/8mpboo18/SuryaKant" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SuryaKant ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/8mpboo18/SuryaKant?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதால் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் எதிர்கொள்ளும் கடுமையான போக்குவரத்துச் சிக்கல்களுக்கு அதிகாரிகள் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும், தவறினால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் எச்சரித்துள்ளார்.</p><h2>வழக்கறிஞர்கள் சங்கம் முறையீடு:</h2><p>தலைநகர் டெல்லியில் நிலவி வரும் அரசியல் போராட்டத்தின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, உச்ச நீதிமன்றம், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் உள்ளிட்ட 16 முக்கிய மெட்ரோ நிலையங்களை டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளது.</p><p>இதனால் உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு வர முடியாமல் வழக்கறிஞர்களும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர்.</p><p>இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் விகாஸ் சிங், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன் அவசர வழக்காக கொண்டு சென்றார்.</p><p>அப்போது பேசிய அவர், "மெட்ரோ நிலையங்களை ஒட்டுமொத்தமாக மூடுவதற்குப் பதிலாக, உச்ச நீதிமன்ற அடையாள அட்டைகளைச் சரிபார்த்து வழக்கறிஞர்களையும், ஊழியர்களையும் மட்டும் மெட்ரோ நிலையத்திற்குள் அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.</p><h2>தலைமை நீதிபதியின் அதிரடி உத்தரவுகள்:</h2><p>வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>அதில், இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண அதிகாரிகளுக்கு ஏற்கனவே நிர்வாக ரீதியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>அதிகாரிகள் இதற்குச் சரியான தீர்வைக் கொண்டு வராவிட்டால், உச்ச நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு, இந்த வழக்கை சட்ட ரீதியாகக் கையில் எடுத்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என்று தெரிவித்தார்.</p><p>போக்குவரத்து நெரிசல் மற்றும் மெட்ரோ முடக்கம் காரணமாக வழக்கறிஞர்கள் குறித்த நேரத்திற்கு நீதிமன்றத்திற்கு வர முடியாமல் போனால், அவர்களின் வழக்குகளுக்கு எதிராக எந்தவொரு பாதகமான உத்தரவுகளையும் பிறப்பிக்கக் கூடாது என அனைத்து நீதிமன்றங்களுக்கும் நிர்வாகச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.</p><p>மேலும், உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையத்தை மட்டும் முதலில் திறக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி வலியுறுத்தினார்</p><h2>பின்னணி</h2><p>டெல்லியில் தற்போது நடந்து வரும் போராட்டங்கள் காரணமாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>முன்னதாக, போராட்டத்தில் போலீசாரின் அத்துமீறல் நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட அவசரக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் இது தொடர்பான பொதுநல வழக்குகளை விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சோனம் ரகுவன்ஷியின் ஜாமினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-cancellation-of-sonam-raghuvanshis-bail</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-cancellation-of-sonam-raghuvanshis-bail#comments</comments><guid isPermaLink="false">219cc9f0-fdff-4c48-9458-ae0f847664e7</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:31:01 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:31:01.877Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,ஜாமின்,bail,Sonam Raghuvanshi,சோனம் ரகுவன்ஷி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/zr184z9f/New-Project-2026-07-23T150015.563.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் ரகுவன்ஷியின் ஜாமினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/zr184z9f/New-Project-2026-07-23T150015.563.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஆண்டு இந்தியாவையே உலுக்கிய, மேகாலயா தேனிலவு கொலைவழக்கின் முக்கிய குற்றவாளியான சோனம் ரகுவன்ஷிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு, சோனம் மீதான குற்றச்சாட்டுகள் “மிகவும் தீவிரமானவை” என்று குறிப்பிட்டு, விசாரணை நடவடிக்கைகள் முடிவடையவில்லை என்றால், ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து ஜாமினை ரத்து செய்தனர். </p><p>ஜாமின் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சோனம் காவல்துறையிடம் சரணடைவதற்கு 3 வார கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. </p><h2>மேகாலயா தேனிலவு கொலை வழக்கு</h2><p>மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த சோனம் ரகுவன்ஷி மற்றும் ராஜா ரகுவன்ஷிக்கு கடந்த ஆண்டு மே.11ம் தேதி திருமணம் நடைப்பெற்றது. </p><p>இதனைத்தொடர்ந்து மே 20ம் தேதி மேகாலயாவின் சோஹ்ராவிற்கு இருவரும் தேனிலவுக்கு சென்றனர்.</p><p>தேனிலவுக்கு சென்றவர்கள் மே.23அன்று தாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியேறினர். </p><p>ஆனால் வீடு திரும்பாததால் உறவினர்கள், இருவரும் காணவில்லை என போலீசில் புகார் அளித்தனர்.</p><p>புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய போலீசார், ஜூன் 2ம் தேதி 200 அடி பள்ளத்தில் இருந்து ராஜா ரகுவன்ஷியை பிணமாக கண்டறிந்தனர்.</p><p>இதனையடுத்து அவரது மனைவி சோனம் என்ன ஆனார் என கேள்வி எழு, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் தொலைபேசி சிக்னலை வைத்து சோனத்தை உ.பி.யின் காசிபூரில் கண்டறிந்தனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரிக்க முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.</p><p>தொடர் விசாரணையில் தனது காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை அமைத்து ராஜா ரகுவன்ஷியை சோனம் போட்டு தள்ளியது தெரியவந்தது. இதனையடுத்து சோனமும், அவளது காதலர் ராஜ் சிங் குஷ்வாஹாவும் கைது செய்யப்பட்டனர். சுமார் 10 மாதங்கள் நீதிமன்றக் காவலுக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 27ம் தேதி சோனத்திற்கு ஷில்லாங் மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.</p><p>சோனத்தின் கைதுக்கான காரணங்களை புலனாய்வு அமைப்பு சரியாகத் தெரிவிக்கத் தவறிவிட்டது என்று, நடைமுறை குறைபாட்டை சுட்டிக்காட்டி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.</p><p>காவல்துறையின் கைது ஆவணங்களில் கொலைக்கான சட்டப்பிரிவான 103(1)-க்கு பதிலாக 403(1) எனத் தட்டச்சுப் பிழையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் மேகாலயா அரசு இந்த ஜாமினை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.</p><p>ஆனால் உயர் நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து, ஜாமினை உறுதி செய்தது. இதை எதிர்த்து மேகாலயா அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்தார்.</p><p>இம்மாத தொடக்கத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜாமினை ரத்து செய்ய மறுத்து விசாரணையை ஒத்திவைத்தது.</p><p>அதனைத்தொடர்ந்து இந்த வாரத் தொடக்கத்தில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது சரணடைவது அல்லது ஜாமினை ரத்து செய்வது என்ற இரண்டு வாய்ப்புகள் சோனத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய விசாரணையில் ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பெல்லட் துப்பாக்கிகள்.. சீருடையற்ற நபர்கள்.. காலாவதியான கண்ணீர் புகைகுண்டுகள் - இளைஞர்கள் மீதான தாக்குதலில் தொடர் சர்ச்சை 
</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-allegations-youth-march-faces-harsh-police-crackdown-and-expired-tear-gas</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-allegations-youth-march-faces-harsh-police-crackdown-and-expired-tear-gas#comments</comments><guid isPermaLink="false">a5440d6d-6dbf-4200-a803-04ba0d415258</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:31:03 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:31:03.200Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,டெல்லி,சிஜேபி,CJP Protest,CJP,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2guwfaxp/tn-29.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ CJP]]></media:title><media:description type="html"><![CDATA[ CJP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2guwfaxp/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் ஜூலை 20 அன்று கரப்பான்பூச்சி கட்சியின் முன்னெடுப்பில் நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் நடத்திய பேரணியில் போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். </p><p>கண்ணீர் புகைகுண்டுகளை வீசி இளைஞர்களை கலைக்க முயன்றனர். இதன்போது 60 போராட்டக்காரர்கள் காயமுற்றனர். 116 போலீசாரும் காயமுற்றனர்.  70 பேர் கைது செய்யப்பட்டனர். </p><p>காயமுற்ற இளைஞர்களில் ஒரு இளம்பெண் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீரடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>ஜூலை 20 தாக்குதல் குறித்த பல அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகி அமைதியான முறையில் பேரணி நடத்திய இளைஞர்கள் மீதான அரசின் அடக்குமுறை குறித்த விமர்சனங்களை எழுப்பியது. </p><p>பலர் களத்தில், தாங்களும் உங்கள் மகன் - மகள்களின் வயதுடையவர்கள்தான், எங்களை எப்படி உங்களால் மனசாட்சியின்றி தாக்க முடிகிறது என போலீசாரையும் மத்திய படையினரையும் பார்த்து இளைஞர்கள் கேள்வி எழுப்பிய வீடியோக்களும் வைரலாகின. </p><h2>சீருடையற்ற நபர்கள்</h2><p>சீருடையில் இல்லாதவர்களும் கையில் தடிகளுடன் இளைஞர்களை தாக்கியது சர்ச்சையாகி வருகிறது. அவர்கள் மத்திய பாஜக அரசு மற்றும் ஆர்எஸ்எஸ்-ஆல் ஏவிவிடப்பட்ட குண்டர்களா என எதிர்க்கட்சி தரப்பினர் பலர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.</p><p>சீருடை இன்றி வந்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த நபர்களே மாணவிகள் உட்படப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கொடூரமாகத் தாக்கியதாக சிஜேபி தலைவர் அபிஜீத் திப்கேவும் குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2>பெல்லட் துப்பாக்கிகள் </h2><p>ஜூலை 20 போராட்டத்தின்போது இளைஞர்களை Pellet guns எனப்படும் துப்பாக்கிகளை கொண்டு போலீசார் மற்றும் ஆர்ஏஎப் உள்ளிட்ட மத்திய படையினர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>தொடக்கத்தில் டெல்லி காவல்துறை இக்குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்திருந்த போதிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த போராட்டக்காரர்களை உடலிலிருந்து பெல்லட் குண்டுகள் அகற்றப்பட்டதாக மருத்துவ அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p>டெல்லி லேடி ஹார்டிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் படுகாயமடைந்த ஷேக் இர்ஷாத் மன்சூரி என்ற போராட்டக்காரரின் உடலில் இருந்து பெல்லட் குண்டுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதை அமைச்சர் ஜே.பி. நட்டா நேரில் பார்த்ததாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>ஏர் கன் எனப்படும் விசைத் துப்பாக்கி மூலம் ஒருமுறை சுட்டால் நூற்றுக்கணக்கான Lead pellets குண்டுகள் உடலில் பாயும்.</p><p>இதனால் சுடப்பட்ட நபர் உடலில் புள்ளி புள்ளிகளாக காயங்கள் ஏற்படும். இதுபோன்று அன்றைய பேரணியில் காயமுற்றவர்கள் புகைப்படங்கள் பலவும் வெளியாகியுள்ளன.</p><p>பெல்லட் குண்டுகளால் பார்வை மற்றும் கேட்கும் திறனை பறிபோகும் அபாயமும் உண்டு.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/dn0iom5v/tn-28.jpg" /></figure><h2>காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகள்</h2><p>போராட்டக்காரர்களை கலைக்க, கடந்த டிசம்பர் மாதமே காலாவதியான நச்சுத் தன்மை கொண்ட கண்ணீர்ப்புகை குண்டுகளைக் காவல்துறையினர் பயன்படுத்தியுள்ளனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகளின் உடைந்த பாகங்களைச் ஆதாரமாக காட்டிய சிஜேபி அமைப்பினர், மாணவர்களுக்கு கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தவே இத்தகைய குண்டுகள் திட்டமிட்டு வீசப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><h2>ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகள்</h2><p>ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகளைப் பயன்படுத்தியதை போலீஸ் மறுத்த நிலையில், விஷால் தோமர் என்ற காவலர் ஆணி பொறிக்கப்பட்ட லத்தியுடன் நிற்பதை மாணவர்களே மடக்கிப் பிடித்துக் கேள்வி கேட்கும் வீடியோவை சிஜேபி வெளியிட்டது.</p><p>மற்றும் Shock batons எனப்படும் உடலில் மின்சார அதிர்வை ஏற்படுத்தும் லத்திகளும் அன்றை தினம் இளைஞர்கள் மீது பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><h2>பெண்கள் மீது தாக்குதல்</h2><p>ஜூலை 20 சம்பவத்தில் இளம் பெண் போராட்டக்காரர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.</p><p>போராட்டம் நடந்த இடத்திலிருந்து வெளியேற முயன்ற ஒரு பெண்ணின் பின்புறத்தில் காவலர் ஒருவர் லத்தியால் குத்தும் வீடியோ வைரலானது.</p><p>"பெண்களின் உணர்வுப்பூர்வமான உடற்பகுதிகளில் தாக்குதல் நடத்த இவர்களுக்கு எப்படித் தைரியம் வந்தது?" என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் கேள்வி எழுப்பியிருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-delhi-violence-raf-woman-officers-cockroach-remark-sparks-outrage">போராட்டத்தில்12 வயது சிறுமி</a> ஒருவரும் போலீஸ் தாக்குதலில் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  </p><h2>போலி வீடியோக்கள்</h2><p>டெல்லி போராட்டத்தில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுப்பட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது போல சித்தரிக்கும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகின. </p><p>இவை நாட்டின் பிற பகுதிகளில் முன்பு நடந்த வன்முறைகளின் பழைய வீடியோக்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>வெகு மக்களின் கோபத்தை போராட்டக்காரர்கள் மீது திருப்ப, பாஜக செய்யும் தந்திரம் இதுவென, ஜந்தர் மந்தர் போராட்டக்காரர்களும் எதிர்கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.</p><p>மற்றொரு வீடியோவில், காவல்துறையினரே தங்களது சொந்த வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவற்றின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படவில்லை.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று - 32 பேர் பாதிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/rising-covid-19-infections-in-andhra-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/rising-covid-19-infections-in-andhra-pradesh#comments</comments><guid isPermaLink="false">1404eebb-5d42-4839-9a80-89c7c19e4385</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:41:43 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:41:43.079Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,ஆந்திர பிரதேசம்,கொரோனா வைரஸ்,Covid 19</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2fxfe3k7/covid19.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Covid-19]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2fxfe3k7/covid19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆந்திரா மாநிலம் முழுவதும் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</strong></em> </p><h2>கொரோனா தொற்று</h2><p>ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் கடும் காய்ச்சல், சளி, இருமல் தொற்று பாதிப்புக்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தனர். சிகிச்சைக்கு வந்தவர்களின் சளி மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வில் அவர்களுக்கு ஓமிக்கிரான் ஆர்.எப் 5 வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது.</p> <h2>மக்கள் அச்சம்</h2><p>இதேபோல் சிகிச்சைக்கு வந்த 19 பேருக்கு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81">கொரோனா தொற்று</a> இருப்பது தெரிய வந்தது. மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுக்கு கொரோனா வார்டுகளை தயார் செய்ய வேண்டும். முக கவசம், சானிடைசர் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டது. கொரோனா தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்த 4 பேர் இறந்தனர். </p> <h2>கொரோனா பாதிப்பு உயர்வு</h2><p>இந்த நிலையில் விசாகப்பட்டினம் மற்றும் ராஜ முந்திரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் முழுவதும் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>30 வருடங்கள் முன் வினாத்தாள் கசிவை எதிர்த்துப் போராடி போலீஸ் தாக்குதலில் காயமுற்ற தர்மேந்திர பிரதான்.. இன்று அதே சர்ச்சையில்! </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-students-demand-resignation-of-dharmendra-pradhan-over-exam-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-students-demand-resignation-of-dharmendra-pradhan-over-exam-scam#comments</comments><guid isPermaLink="false">36a90374-deaa-4e1f-b80d-486e5a3bd9ae</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:02:52 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:02:52.314Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,question paper leak,வினாத்தாள் கசிவு,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/umtm0rnp/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான்]]></media:title><media:description type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/umtm0rnp/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தொடர் தேர்வு முறைகேடுகளால் நிர்வாக தோல்விக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லியில்<a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-fast-track-court-plan-opposed-by-cockroach-janata-party"> சிஜேபி </a>கட்சி தலைமையில் இளைஞர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். </p><p>கல்வியாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் 25வது நாளை எட்டியுள்ளது. கடந்த ஜூலை 20 பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்ற இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் அடக்குமுறையில் ஈடுபட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சுமார் 60 போராட்டக்காரர்கள் காயமுற்றனர். </p><p>இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில் தர்மேந்திர பிரதானே ஒரு காலத்தில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடி காவல்துறை தாக்குதலில் காயமுற்றவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  </p> <h2>போராட்டம்</h2><p>1990களில் பாஜகவின் மாணவர் அமைப்பான பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் மாணவர் தலைவராக தர்மேந்திர பிரதான் இருந்தார்.</p><p>1994 முதல் 1997 வரை அவர் இரண்டு முறை ஏபிவிபி அமைப்பின் தேசியச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.</p><p>1997 இல் ஒடிசாவில் ஜானகி வல்லப் பட்நாயக் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது.</p><p>அங்குள்ள உயர்கல்வித் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. அதை எதிர்த்து மாநில தலைமைச் செயலகம் மற்றும் முதலமைச்சர் இல்லம் அருகே நடைபெற்ற பிரம்மாண்ட மாணவர் போராட்டத்தில் தர்மேந்திர பிரதான் முன்னின்று பங்கேற்றார்.</p><p>புவனேஸ்வரில் உள்ள RMD கல்லூரியின் தற்போதைய முதல்வரும், அன்று தர்மேந்திர பிரதானின் ஜூனியராகப் போராட்டத்தில் பங்கேற்றவருமான ராவ் என்பவர் அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.</p> <p>அவர் கூறுகையில், "அன்று ஒடிசா அரசுக்கு எதிராகப் போராட நாங்கள் தலைமைச் செயலகத்திற்குச் சென்றோம். எங்களுடன் சுமார் 1,500 மாணவர்கள் திரண்டனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய எங்கள் மீது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தினார்கள். அந்தத் தடியடியில் தர்மேந்திர பிரதானும் காயமடைந்தார்." என்று தெரிவித்தார்.</p><p>அன்று வினாத்தாள் கசிவை எதிர்த்துத் தடியடி வாங்கிய மாணவர் தலைவரான தர்மேந்திர பிரதான், இன்று நாட்டின் கல்வி அமைச்சராகப் பொறுப்பில் இருக்கும் போது அதே வினாத்தாள் கசிவுப் புகாரில் அவருக்கு எதிராகவே போராட்டம் நடைபெறுவது நகைமுரணமாக பார்க்கப்படுகிறது.</p><p>ஒரு காலத்தில் தான் எதற்காகப் போராடினாரோ, இன்று அதே விவகாரத்தில் பொறுப்பேற்காமல் அவர் இருந்து வருவதும் பலராலும் ஒப்பப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடியின் அறிவிப்பை நிராகரித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-fast-track-court-plan-opposed-by-cockroach-janata-party</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-fast-track-court-plan-opposed-by-cockroach-janata-party#comments</comments><guid isPermaLink="false">8aea37bb-d966-4a55-860f-2b4b12cea2f7</guid><pubDate>Thu, 23 Jul 2026 05:51:02 +0000</pubDate><atom:updated>2026-07-23T05:51:02.486Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,Cockroach Janata Party,சிஜேபி,CJP,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/4idzxnr8/CJP.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/4idzxnr8/CJP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வினாத்தாள் கசிவு விவகாரத்தை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிராகரித்துள்ளது.</p><h2>போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><p>இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p><p>கடந்த 20-ந் தேதி இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது.</p><p>போலீஸ் தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்த பிறகும் ஜந்தர் மந்தரில் இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>பிரதமர் மோடி</h2><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF" rel="nofollow">பிரதமர் மோடி</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.</p><p>* மாணவர்களின் நலனை பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>* தேர்வுத்தாள் கசிவில் தொடர்புடையோருக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டிப்பாக பதவி விலக வேண்டும் என பிரதமரின் எக்ஸ் தள பதிவை குறிப்பிட்டு காக்ரோஜ் ஜனதா தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஐதராபாத்தில் தலை ஒட்டி பிறந்த சகோதரிகள் வங்கி தேர்வு எழுதுவதில் சிக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/national/hyderabad-conjoined-twins-face-hurdles-in-taking-bank-exam</link><comments>https://www.maalaimalar.com/news/national/hyderabad-conjoined-twins-face-hurdles-in-taking-bank-exam#comments</comments><guid isPermaLink="false">094e778d-7ed3-4624-9528-8cc00c1baa6b</guid><pubDate>Thu, 23 Jul 2026 05:21:36 +0000</pubDate><atom:updated>2026-07-23T05:21:36.597Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SBI,twins,பாரத ஸ்டேட் வங்கி,இரட்டையர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/9kv1r9q3/twins.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ twins veena and vani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/9kv1r9q3/twins.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>பாரத ஸ்டேட் வங்கியின் பயிற்சி அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பித்துள்ள தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு ஒரே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அறைகள் வேறு ஒதுக்கப்பட்டுள்ளன.</em></p><p>தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் வீணா, வாணி. தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். இவர்கள் அமீர்பேட்டை அருகே உள்ள சிசு விஹார் என்ற அரசு இல்லத்தில் வசித்து வருகின்றனர். </p><p>அவர்கள் கடந்த ஆண்டு பி.காம் வணிகப் பகுப்பாய்வுப் படிப்பை சிறப்புத் தகுதியுடன் முடித்தனர். </p> <p>தற்போது பாரத ஸ்டேட் வங்கியின் பயிற்சி அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 1-ந்தேதி நடைபெற உள்ளது. அவர்கள் தங்களது தேர்வு நுழைவுச் சீட்டுகளையும் பெற்றுள்ளனர். </p><p>அவர்கள் அப்துல்லாபூர்மெட்டில் உள்ள டி.சி.எஸ் அயான் டிஜிட்டல் மையத்தில் தேர்வு எழுத வேண்டும். அவர்களுக்கு ஒரே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அறைகள் வெவ்வேறாக ஒதுக்கப்பட்டுள்ளன. </p><p>தலை ஒட்டி உள்ளதால் அவர்களால் தனித்தனியாக அமர்ந்து தேர்வு எழுத முடியாது. எனவே ஒரே அறையில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.</p> ]]></content:encoded></item></channel></rss>