<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 10 Sep 2026 13:28:50 +0000</lastBuildDate><item><title>2000 ரூபாய்க்காக 7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன்! தடுக்க வந்த தாய்க்கும் தாக்குதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/husband-beats-to-death-7-month-pregnant-wife-over-2000-rupees</link><comments>https://www.maalaimalar.com/news/national/husband-beats-to-death-7-month-pregnant-wife-over-2000-rupees#comments</comments><guid isPermaLink="false">65e5f13c-9dfc-4d51-8099-2aada324a36b</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:03:04 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:03:04.247Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,கர்ப்பிணி மனைவி கொலை,Pregnant woman killed,உத்தரப் பிரதேச மாநிலம்,Hardoi District,ஹர்டோய் மாவட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2vijvqvm/GGGGG.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pregnant woman killed ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2vijvqvm/GGGGG.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் பணத் தகராறு காரணமாக 7 மாத கர்ப்பிணி மனைவியை கணவனே மூங்கில் தடியால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/businessman-mystery-murder-daughter-in-law-plot-over-cctv-surveillance">ஹர்டோய் மாவட்டம்</a> பில்கிராம் காவல் எல்லைக்குட்பட்ட மயோரா கிராமத்தைச் சேர்ந்த விஷால் பால் என்பவருக்கும், 24 வயதான கிரண் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், கிரண் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். தொழிலாளியாக வேலை செய்து வந்த விஷால், இரு தினங்களுக்கு முன்பு கொடுத்த பணத்திற்கு மனைவி கிரணிடம் கணக்கு கேட்டுள்ளார்.</p><h2>தடுக்க வந்த மா<strong>மியார் மீதும்</strong> தாக்குதல்</h2><p>கைவசம் இருந்த ரூ.2,000 தொகையை உடனடியாகச் செலவழிக்காமல் குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமிக்க வேண்டும் என்று கிரண் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஷால், மதுபோதையில் மூங்கில் தடியால் கிரணை கொடூரமாகத் தாக்கத் தொடங்கினார். இதைக் கண்டு பதறிய விஷாலின் தாய் பிரேமா சண்டையைத் தடுக்க முயன்றபோது, அவரையும் விஷால் தாக்கி வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளார்.</p><h2>உத<strong>விக்கு வராத அக்கம் ப</strong>க்கத்தினர்</h2><p>பயத்தில் அலறிய மாமியார் பிரேமா, அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டு ஓடியுள்ளார். ஆனால் விஷாலின் கோபத்திற்குப் பயந்து யாரும் உதவிக்கு வரவில்லை. இறுதியில் 112 என்ற அவசர உதவி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து ஆபத்தான நிலையிலிருந்த கிரணை மீட்டு பில்கிராம் சமூக சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>மருத்துவ<strong>மனையில் பரிதாப மரணம்</strong></h2><p>மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கிரணைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான குற்றவாளி விஷாலைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி கைது செய்தனர். பிரேதப் பரிசோதனைக்காக உடலைக் கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>யூடியூப் மூலம் சாண்ட்விச் செய்ய கற்றுக்கொண்டு மாதத்திற்கு ரூ.25 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்</title><link>https://www.maalaimalar.com/news/national/young-man-earns-rs-25-lakh-a-month-selling-sandwiches-learned-from-youtube</link><comments>https://www.maalaimalar.com/news/national/young-man-earns-rs-25-lakh-a-month-selling-sandwiches-learned-from-youtube#comments</comments><guid isPermaLink="false">360a7d6a-76d5-42fa-ae33-0a6911202670</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:13:32 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:13:32.567Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தொழிலதிபர்,Sandwich,Entrepreneur,டோஃபு சாண்ட்விச்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/f4fq8z66/Untitled-design-48.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bhopal street food success story]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/f4fq8z66/Untitled-design-48.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தில் ஒரு இளைஞர் தள்ளுவண்டி கடையில் சாண்ட்விச் விற்பனை செய்து, அதன்மூலம் மாதத்திற்கு ரூபாய் 25 லட்சம் வருமானம் ஈட்டுவதாக எக்ஸ் தளத்தில் பயனர் பதிவிட்ட கருத்து வைரலாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">மத்தியப் பிரதேசத்தில்</a> உள்ள போபால் நகரத்திற்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அபிஷேக் சாஹூ என்பவர் குடிபெயர்ந்தார். </p><h3><strong>ப்ரவுசிங் செண்டர்</strong></h3><p>அந்த இளைஞர் முதலில் ஒரு சிறிய ப்ரவுசிங் செண்டரை தொடங்கினார். இந்த கடையில் பெரிதளவில் வருமானம் இல்லாததால், ஆரம்பித்த ஓராண்டுக்குள் அந்த செண்டர் மூடும் நிலைக்கு வந்தது.</p><p>முதலில் தான் ஆரம்பித்த தொழில் தோல்வியில் முடிந்தாலும், சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரை தூண்டியது.</p><p>இதையடுத்து சாஹூ யூடியூப் மூலம் சாண்ட்விச் போன்ற உடனடி உணவுகளை தயாரிப்பது குறித்து கற்றுக் கொண்டார்.</p><h3><strong>ஹரி ஹர் சாண்ட்விச்</strong></h3><p>இதற்கு முதலில் அவருக்கு ஒரு சிறிய தள்ளுவண்டி தேவைப்பட்டது. அதற்கு போதுமான அளவில் தன்னிடம் பணம் இல்லாததால் 30,000 ரூபாயை அவர் கடனாக வாங்கினார்.</p><p>சாஹூவிற்கு உணவு வியாபாரத்தில் முன் அனுபவம் இல்லாத போதிலும், யூடியூப் மூலம் சமையல் குறிப்புகளை கற்றுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சாண்ட்விச் உணவுகளை விற்பனை செய்ய தொடங்கினார்.</p><p>ஹரி ஹர் சாண்ட்விச் என்று பெயிரடப்பட்ட அந்த உணவு சிற்றுண்டி, காலப்போக்கில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்த்தது.</p><h3><strong>மாதம் ரூ.25 லட்சம் வருமானம்</strong></h3><p>இந்த சிற்றுண்டி கடையில் பொதுவாக 600க்கும் மேற்பட்ட சாண்ட்விச்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் வார இறுதி நாட்களில் 1,000க்கும் மேற்பட்ட சாண்ட்விச்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும் போபாலில் மக்கள் நடமாட்டம் அதிக உள்ள பகுதிகளில் அமைந்துள்ள இந்த சிற்றுண்டி கடை, சுமார் 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுவதாகவும் அந்த அவர் தெரிவித்துள்ளார்.</p><h3><strong>பயனர்கள் வாழ்த்து</strong></h3><p>சாஹூ ஆரம்பித்த சிற்றுண்டி குறித்து எக்ஸ் தளத்தில் பயனர் வெளியிட்ட பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் கருத்துகளை பதிவிட்டனர்.</p><p>அந்த பதிவில் ஒரு பயனர், ‘தோல்வியடைந்த ஜெராக்ஸ் கடையில் இருந்து மாதம் ரூ.25 லட்சம் வருமான ஈட்டும் தெருவோர உணவு வியாபாரம் வரை’ என்று குறிப்பிட்டு வாழ்த்துகளை கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சிறார் சமூக வலைதளப் பயன்பாட்டிற்கு பெற்றோர் அனுமதி கட்டாயம்: உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-notice-on-parental-consent-for-children-social-media-use</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-notice-on-parental-consent-for-children-social-media-use#comments</comments><guid isPermaLink="false">aa5dce5f-74aa-4625-8a90-863f1aeb9020</guid><pubDate>Thu, 10 Sep 2026 11:09:30 +0000</pubDate><atom:updated>2026-09-10T11:09:30.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,Supreme Court,social media,முகநூல்,சமூக வலைதளங்கள்,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/m14d68rq/SOC.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Social media]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/m14d68rq/SOC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முகநூல், ஸ்நாப்சாட் போன்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்கள் 13 வயதடைந்த குழந்தைகளுக்கே கணக்கு தொடங்க அனுமதி அளிக்கின்றன.</p><p>18 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கட்டாய அனுமதியை நடைமுறைப்படுத்தவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் குறித்து விரிவான விளக்கமளிக்குமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/businessman-mystery-murder-daughter-in-law-plot-over-cctv-surveillance">இந்திய ஒப்பந்தச் சட்டம் </a>1872-ன் படி, 18 வயதுக்குட்பட்ட நபர்கள் சட்டரீதியாக எந்தவொரு ஒப்பந்தத்திலும் ஈடுபட முடியாது. இருப்பினும், முகநூல், ஸ்நாப்சாட் போன்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்கள் 13 வயதடைந்த குழந்தைகளுக்கே கணக்கு தொடங்க அனுமதி அளிக்கின்றன. இது இந்திய சட்டவிதிகளுக்கு முரணாக அமைவதோடு, சிறார்களின் தனிநபர் தரவுப் பாதுகாப்பிற்கும் கேள்விக்குறியை ஏற்படுத்துகிறது என்று மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.</p><h2>மின்-கேஒய்<strong>சி மற்றும் வய</strong>து சரிபார்ப்பு முறை</h2><p>சிறார்கள் தவறான தகவல்களை வழங்கி சமூக வலைதளங்களில் நுழைவதைத் தடுக்க, மின்னணு முறையில் ஆவணங்களைச் சரிபார்க்கும் (e-KYC) கடுமையான கட்டுப்பாட்டு அமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் சரிபார்க்கப்பட்ட அனுமதி இல்லாமல் சிறார்களுக்குச் சொந்தமான கணக்குகளைச் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும், கல்வி சார்ந்த பயன்பாடுகளுக்கு மட்டுமே பெற்றோர் கட்டுப்பாட்டில் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>சமூக வலைதளங்களின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டால் சிறார்கள் இணையவழி சுரண்டல், பாலியல் துன்புறுத்தல், இணையவழி அச்சுறுத்தல் மற்றும் தவறான வழிகாட்டுதல்களுக்கு ஆளாக நேரிடுகிறது என மனுதாரர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்தியாவில் சிறார்களின் டிஜிட்டல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் அவர்களைப் பாதுகாக்கவும் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகள் மிகவும் அவசியம் என்பதை ஒப்புக்கொண்டனர்.</p><p>தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ல் தகுந்த திருத்தங்களை மேற்கொண்டு அல்லது புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கி சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவர்கள் இனி 70 வயது வரை பணியாற்றலாம் – மாநில அரசின் புதிய முடிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-extends-govt-doctors-service-reappointment-allows-practice-up-to-age-70</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-extends-govt-doctors-service-reappointment-allows-practice-up-to-age-70#comments</comments><guid isPermaLink="false">5e652059-66b9-4bb2-b958-846b8119a638</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:06:05 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:06:05.484Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தரபிரதேசம்,government doctors,Public Health,Retirement Age Extended,Doctor Shortage</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/uzap5p43/Government-Doctors" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Government Doctors ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/uzap5p43/Government-Doctors?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தர பிரதேச</a> மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவி வரும் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்காக, அரசு மருத்துவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் 70 வயது வரை பணியாற்றும் வகையில் மறு நியமனம் செய்ய அம்மாநில அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.</p><h2><strong>மருத்துவர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு</strong></h2><p>இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. இங்குள்ள <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">அரசு மருத்துவமனைகள்</a>, ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சமுதாய சுகாதார மையங்களுக்கு தினமும் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.</p><p>அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கையாளுவதற்கும், தகுதியான நிபுணத்துவ மருத்துவர்களின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கும் இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><h2><strong>65-லிருந்து 70 ஆக உயர்வு</strong></h2><p>தற்போது நடைமுறையில், உத்தர பிரதேச அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆக உள்ளது. புதிய திட்டத்தின்படி, 65 வயதை எட்டி ஓய்வு பெறும் தகுதியான மருத்துவர்கள், தங்களின் விருப்பத்தின் பேரில் மறு நியமனம் மூலம் 70 வயது வரை தங்களது சேவையைத் தொடரலாம் என்று<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81"> மத்திய அரசு</a> கூறியுள்ளது.</p><h2><strong>ஆணை பிறப்பிக்கும் பணிகள் தீவிரம்</strong></h2><p>இதுகுறித்து உத்தர பிரதேச மாநில சுகாதார அமைச்சரும், துணை முதல்வருமான <strong>பிரஜேஷ் பதக்</strong> கூறுகையில், "மாநிலத்தின் அரசு சுகாதாரக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், மூத்த மற்றும் நிபுணத்துவ மருத்துவர்களின் மருத்துவ அனுபவத்தை ஏழை எளிய நோயாளிகளுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இதற்கான அரசாணையை வெளியிடும் பணிகளைச் சுகாதாரத் துறை தற்போது தீவிரமாகத் தொடங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.</p><p>இந்த மறு நியமன முறையின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற அரசு மருத்துவமனைகளில் மூத்த மருத்துவர்களின் வழிகாட்டுதல்களும், தடையற்ற மருத்துவச் சேவைகளும் பொதுமக்களுக்குத் துரிதமாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் லாரியில் இருந்து கீழே விழுந்து வெடித்த ஆக்சிஜன் சிலிண்டர் – ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/oxygen-cylinder-explodes-after-fall-from-truck-in-delhi-one-killed-four-injured</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/oxygen-cylinder-explodes-after-fall-from-truck-in-delhi-one-killed-four-injured#comments</comments><guid isPermaLink="false">a372ac2e-b481-442b-b68a-8918e6e8cb5c</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:28:07 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:28:07.224Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>cylinder explosion,delhi,Employee dies,டெல்லி,Tragic Incident,ஆக்சிஜன் சிலிண்டர்,Industrial Accident</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/adajb08j/Cylinder-Explosion" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cylinder Explosion  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/adajb08j/Cylinder-Explosion?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>தென்கிழக்கு <a href="https://www.maalaimalar.com/topic/delhi">டெல்லியின் </a>ஓக்லா தொழில்பேட்டை பகுதி - 1 இல் உள்ள ஒரு தனியார் வணிகக் குடோனில் ஆக்சிஜன் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. </p><p>இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார் மற்றும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><h2>எப்படி நடந்தது?</h2><p>காசியாபாத்திலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரியிலிருந்து, ஊழியர்கள் சிலிண்டர்களைக் கீழே இறக்கிக் குடோனுக்குள் மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். </p><p>அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சிலிண்டர் லாரியிலிருந்து நழுவி கீழே விழுந்ததில், அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.</p><h2>பாதிப்புகள்</h2><p>இந்த வெடிப்பின் தாக்கத்தால் அருகில் வேலை செய்துகொண்டிருந்த மோஹித் சிங் (35) என்ற ஊழியர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p>படுகாயமடைந்த மற்ற 4 ஊழியர்கள் உடனடியாக மீட்கப்பட்டு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்</a> தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>நடவடிக்கை</h2><p>பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறி, டெல்லி போலீசார் குடோன் உரிமையாளரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தொழிலதிபர் மர்ம கொலை: சிசிடிவி கண்காணிப்பால் ஆத்திரமடைந்து மருமகளே தீட்டிய சதித்திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/businessman-mystery-murder-daughter-in-law-plot-over-cctv-surveillance</link><comments>https://www.maalaimalar.com/news/national/businessman-mystery-murder-daughter-in-law-plot-over-cctv-surveillance#comments</comments><guid isPermaLink="false">a02b5d3c-cec9-4fe5-8711-e0cde303458d</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:18:58 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:18:58.038Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,கான்பூர்,Kanpur,business man murder,உத்தரப் பிரதேச மாநிலம்,தொழிலதிபர் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/m5ux1enj/kill.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Business man Murder  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/m5ux1enj/kill.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாமனாரை கொலை செய்வதற்காகத் தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவரையும், மற்றொரு நபரையும் கூலிப்படையாக ஷாலு அமர்த்தியுள்ளார். </p><p>உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் முன்னணி தொழிலதிபரான வினீத் மின்சா பகுதியில் உள்ள தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தத் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.</p><h2>கொ<strong>ள்ளை நாடகம் முறி</strong>யடிப்பு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/controversy-erupts-over-trumps-lavish-gifts-to-white-house-female-aides">தொழிலதிபர் கொலை</a> செய்யப்பட்ட இடத்தில் சோதனை செய்த காவல்துறையினருக்குத் தொடக்கத்தில் இது அடையாளம் தெரியாத நபர்களால் நடந்த கொள்ளைச் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், வீட்டில் இருந்த பணமோ அல்லது விலைமதிப்பற்ற நகைகளோ எதுவும் திருடப்படவில்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால், குடும்பத்திற்குள் ஏற்பட்ட மோதல் அல்லது முன்விரோதம் காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கப்பட்டது.</p><h2>சி<strong>சிடிவி கேமரா பதிவு</strong></h2><p>போலீசாரின் தீவிர விசாரணையில், வினீத் மின்சாவின் மருமகள் ஷாலு மின் மீது சந்தேகம் வலுத்தது. விசாரணையில், வீட்டில் வினீத் மின்சா பொருத்தியிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் தன்மீது எப்போதும் தீவிர கண்காணிப்பு செலுத்தப்பட்டு வந்ததும், குடும்பத்தின் நிதி விஷயங்களில் தனக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததும் ஷாலுவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்தது. இதனால், தன் மாமனாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.</p><h2>கொ<strong>லை நடக்கும்போதே கொ</strong>ண்டாட்டம்</h2><p>மாமனாரை கொலை செய்வதற்காகத் தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவரையும், மற்றொரு நபரையும் கூலிப்படையாக ஷாலு அமர்த்தியுள்ளார். சம்பவத்தன்று அவர்கள் வீட்டிற்குள் புகுந்து வினீத் மின்சாவைக் கொலை செய்தபோது, வெளியில் எந்தச் சந்தேகமும் வராத வகையில் ஷாலு பார்ட்டியில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார். கொலை நடந்த பின்னர், ஒன்றும் அறியாதவர் போல் அழுது நாடகமாடியுள்ளார்.</p><h2> சிசிடிவி <strong>ஆதாரங்களால் கைதான மரு</strong>மகள்</h2><p>கொலை நடைபெற்ற இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள், தொலைபேசி அழைப்புப் பதிவுகள்  மற்றும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இறுதியில், ஷாலுவுக்கும் கூலிப்படைக்கும் இடையேயான தொடர்பை உறுதி செய்த போலீசார், மருமகள் ஷாலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தற்கொலையை தடுக்கும் தேவதையின் குரல்.. நடக்க இயலாத நிலையிலும் பலரின் உயிரைக் காப்பாற்றும் லட்சுமி!</title><link>https://www.maalaimalar.com/news/national/the-voice-of-the-goddess-who-prevents-suicide-lakshmi-saves-the-lives-of-many-even-when-unable-to-walk</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-voice-of-the-goddess-who-prevents-suicide-lakshmi-saves-the-lives-of-many-even-when-unable-to-walk#comments</comments><guid isPermaLink="false">6137199e-912a-4319-b834-a37733fcec90</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:34:54 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:34:54.620Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,suicide,உலக தற்கொலை தடுப்பு தினம்,World Suicide Prevention Day,தற்கொலை தடுப்பு மையம்,Suicide Prevention Center</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/mfk5mcjd/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ லட்சுமி நரசம்மா ]]></media:title><media:description type="html"><![CDATA[ லட்சுமி நரசம்மா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/mfk5mcjd/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக தற்கொலை தடுப்பு தினமான இன்று, தற்கொலை தடுப்பு மையத்தில் பணியாற்றும் லட்சுமி நரசம்மா என்ற தேவதை பற்றி காண்போம். </p><p>இன்று (செப்டம்பர் 10)  உலக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/families-being-torn-apart-by-increasing-number-of-suicides-764533">தற்கொலை </a>தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.  </p><p>இத்தினத்தின் கருப்பொருள் "<a href="https://www.maalaimalar.com/news/puducherry/puducherry-ranks-7th-in-suicide-cases-in-india">தற்கொலை </a>பற்றிய கருத்தாக்கத்தை மாற்றுவோம்", "தற்கொலை பற்றிய உரையாடலைத் தொடங்குவோம்" என்பவையாகும். </p><p>உலகளவில், குறிப்பாக இந்தியாவில் நாள்தோறும் பதிவாகும் தற்கொலைகள் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. </p><p>குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு இந்தியாவில் அண்மைக் காலமாக அதிகம் காணப்படுகிறது. </p><p>எனவே தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்ற விழிப்புணர்வு தற்காலத்தில் வேறெதையும் விட மிக மிக அவசியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. </p> <h2>தற்கொலைகளின் மூல காரணம்</h2><p>பெரும்பாலான தற்கொலைகள், குறிப்பாக இளைஞர்களின் தற்கொலைகளில் உள்ள பொதுவான விஷயம், அவர்கள் அந்த கணத்தில் தங்களின் பிரச்னையை கேட்பார் யாரும் இல்லை, நாம் உலகில் தனித்து விடப்பட்டுள்ளோம் என்று நினைப்பது தான்.</p><p>அவர்களின் இந்த எண்ணத்தை போக்க, அவர்களின் பிரச்சனையை முன்னறிந்து கேட்பது அவசியம். அவர்களே சில நேரம் யாரிடமாவது பேசினால் மன ஆறுதல் பெறலாம் என நினைப்பதுண்டு. ஆனால் அதற்கான சூழல் வாய்க்காமல் போவதும் தற்கொலைகள் நிகழ காரணம்.</p><h2>குரல்கள்</h2><p>அவ்வாறானவர்களிடம் அவர்களின் பிரச்னையை கேட்டறிந்து ஆறுதல் சொல்ல ஆலோசனை அளிக்க அரசு சார்பிலும், தன்னார்வ நிறுவனங்கள் சார்பிலும் தற்கொலை தடுப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண்கள் வாயிலாக மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.</p><p>அவ்வாறு தாங்கள் அழைத்துப் பேசும்போது மறுமுனையில் இருந்து ஆறுதலாக பேசுபர்களின் குரல்களை மட்டுமே தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் கேட்டிருப்பார்கள். </p><p>பின்னொரு கணத்தில் அந்த குரலே தங்களை தங்கள் வாழ்வின் இக்கட்டான கணத்தில் தாங்கள் எடுக்கவிருந்த விபரீத முடிவில் இருந்து காத்திருக்கின்றன என்பதை பலர் உணரலாம்.</p><p>ஆனால் அந்த குரல்கள் யாருடைவை, அவர்கள் எவ்வாறான வாழ்க்கையை வாழ்கின்றனர் என்பது பெரும்பாலும் சிந்திக்கப்படுவதில்லை. ஆனால் முகமறியா அவர்களே பலரின் உயிரைக் காப்பாற்றிய, காப்பாற்றி வரும் தேவதைகள்.</p><p>அப்படியான ஒரு தேவதையே ஐதராபாத்தை சேர்ந்த 55 வயதான லட்சுமி நரசம்மா.</p><p>பலரது வாழ்வை தற்கொலையில் இருந்து காத்துள்ள லட்சுமியின் சொந்த வாழ்க்கையே, வாழ்வின் கஷ்டங்களை எப்படி கடந்து வருவது என்ற படிப்பினையை வழங்குவதாக விளங்குகிறது.</p><h2>லட்சுமி நரசம்மாவின் கதை</h2><p>லட்சுமி நரசம்மா தனது 20வது வயதிலிருந்தே Rheumatoid Arthritis எனும் முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.</p><p>நோயின் தீவிரத்தால் 10 ஆண்டுகளாக உடல் செயலிழப்பு ஏற்பட்டு நடக்கவும் முடியாத நிலையில் வாழ்ந்து வரும் லட்சுமி நரசம்மா, தங்கள் வாழ்வில் ஒரு குறுகிய புள்ளியில் முடங்கி விபரீத முடிவை எட்டுபவர்களை ஆற்றுப்படுத்தி அவர்களின் வாழ்வை முன்னோக்கி நகர்த்த உதவுகிறார்.</p><p>கடந்த 2024 வரை லட்சமியும் ஒரு வித மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தபோதோலும் தனது பக்கத்து வீட்டுக்காரர் அளித்த ஊக்கத்தினால் தன்னார்வ ஆலோசகராகப் பயிற்சி பெற்றார்.</p><p>தற்கொலை தடுப்பு உதவி மையமான '1Life' எண்களைத் தொடர்பு கொண்டு மன உளைச்சலில் பேசுபவர்கள் பலருக்கு, மறுமுனையில் தங்களுக்கு ஆறுதல் அளிக்கும் 55 வயதான லட்சுமி நரசம்மா கடந்த 10 ஆண்டுகளாக நடக்கக்கூட முடியாமல் முடங்கியுள்ளார் என்ற உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.</p> <h2>உயிர் காக்கும் தேவதை</h2><p>"மற்றவர்களின் துன்பங்களைக் கேட்கும்போது என் சொந்த வலி மிகவும் சிறியதாகத் தோன்றுகிறது. பிரச்சனைகளை மட்டுமே சிந்தித்து மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் துணிகிறார்கள், அந்த எண்ணத்திற்குத் தடை போடுவதே எங்கள் வேலை. எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு." என கூறுகிறார் நரசம்மா.</p><p>கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட அழைப்புகளைப் பேசி லட்சுமி நரசம்மா பல உயிர்களை காத்துள்ளார்.</p><p>வேலை கிடைக்காததாலும், காதலித்த பெண்ணை மணக்க குடும்பத்தினர் எதிர்த்ததாலும் மன அழுத்தத்தில் இருந்த இளைஞருக்கு நம்பிக்கையளித்து, தோல்வி என்பது தற்காலிகமானது எனப் புரியவைத்து வாழ்வின் மீதான விருப்பத்தை மீட்டுத் தந்துள்ளார்.</p> <p>தொழில் தோல்வியால் குடும்பத்தாரால் மதிக்கப்படவில்லை என எண்ணி தற்கொலை எண்ணத்திற்குத் தள்ளப்பட்ட நபருக்கு, சிறுகச் சிறுக மீண்டும் ஒரு புதிய வேலையை தொடங்கி வாழ்க்கையை மீட்டெடுக்க வழிகாட்டியுள்ளார்.</p><p>இவ்வாறாக, விவசாயியான கணவர் மற்றும் பிள்ளைகளின் உறுதியான ஆதரவோடு, லட்சுமி நரசம்மா இன்று  நூற்றுக்கணக்கானோருக்கு நம்பிக்கையின் முகவரியாக செயல்பட்டு வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>சிறுநீரில் இருந்து யூரியாவை பிரித்து செங்கோட்டையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி - தேசிய புலனாய்வு முகமை</title><link>https://www.maalaimalar.com/news/national/terrorist-used-urea-extracted-from-urine-for-red-fort-attack-nia</link><comments>https://www.maalaimalar.com/news/national/terrorist-used-urea-extracted-from-urine-for-red-fort-attack-nia#comments</comments><guid isPermaLink="false">594f5008-b49b-45f5-a51c-92f6b36a3514</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:30:55 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:30:55.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>National Investigation Agency,Senkottai,Delhi RedFort</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/9dzwlkv5/Untitled-design-45.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi Red Fort terror attack]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/9dzwlkv5/Untitled-design-45.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி செங்கோட்டையில் கடந்த ஆண்டு கார் குண்டுவெடிப்பு மூலம் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில், வெடிகுண்டுகளை தயாரிக்க சிறுநீரில் இருந்து யூரியாவை பயன்படுத்தி இருக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88">செங்கோட்டையில்</a> 2025 நவம்பர் 10 அன்று பயங்கரவாதி உமர் உன் நபி கார் குண்டுவெடிப்பை நடத்தினான். இந்த பயங்கரவாத தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். </p><h3><strong>குற்றப்பத்திரிக்கை தாக்கல்</strong></h3><p>இதையடுத்து இந்த தாக்குதல் நடந்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.</p><p>பயங்கரவாதி உமர் உன் நபி, தாக்குதலுக்கு முந்தைய நாள் வரை சுமார் 11 நாட்களாக நூஹ் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.</p><p>பயங்கரவாதியின் முதல் இலக்கு லால் மந்திர் ஆக இருந்ததாக தெரிகிறது, அவர் மாலை 6:37 மணியளவில் சுன்ஹாரி மசூதி வாகன நிறுத்துமிடத்தில் இருந்து வெளியே நடந்ததாக கூறப்பட்டது.</p><p>இதையடுத்து அவர் தனது காரை ஓட்டி சென்று லால் மந்திர் அருகே நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் மத்திய டெல்லியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், கடைசி நிமிடத்தில் திட்டம் மாற்றப்பட்டு செங்கோட்டைக்கு சென்றுள்ளார்.</p><h3>கடைசி நேரத்தில் திட்டம் மாற்றம்</h3><p>டெல்லி செங்கோட்டையை சென்றடைந்த சில நிமிடங்களுக்கு பிறகு, மாலை 6:50 மணிக்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.</p><p>2023 முதல் 2025-ஆம் ஆண்டு காலகட்டத்திற்குள் பயங்கரவாதி, 12 முறை செங்கோட்டைக்கு சென்றுள்ளார். அவரது கடைசி பயணம் குண்டுவெடிப்புக்கு 6 மாதங்களுக்கு முன்பு, மே 1 அன்று நிகழ்ந்தது.</p><p>இதுபோன்ற பயணங்களின் போது பயங்கரவாதியும், அவரது நண்பர்களும் தங்களது கைபேசிகளை அணைத்து விடுவார்கள். இது அவர்களின் டிஜிட்டல் நடமாட்ட பதிவுகளை மறைக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டிருக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.</p><h3><strong>யூரியா நைட்ரேட் மூலம் வெடிபொருட்கள்</strong></h3><p>பயங்கரவாதிக்கு சொந்தமான பென் டிரைவ்களில் உள்ள தரவுகள், யூரியா நைட்ரேட்டை பயன்படுத்தி வெடிபொருட்கள் தயாரிக்கும் முறை குறித்து சேமிக்கப்பட்டு இருந்தது.</p><p>மேலும் சிறுநீரில் இருந்து யூரியாவை பிரித்தெடுப்பதற்கான மாற்று முறையும் அந்த தரவுகளில் இருந்துள்ளது.</p><p>பயங்கரவாதி தங்கி இருந்த அறையில் துர்நாற்றம் வீசக் காரணமாக இருந்த, சிறுநீர் நிரம்பிய ஒரு பாலித்தீன் பையை கண்டதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இவ்வாறு டெல்லி செங்கோட்டையில் பயங்கரவாதி நடத்திய தாக்குதல் குறித்து, தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் - பக்தர்களுக்கு எச்சரிக்கை 
</title><link>https://www.maalaimalar.com/news/national/leopard-movement-on-tirupati-walkway-warning-to-pilgrims</link><comments>https://www.maalaimalar.com/news/national/leopard-movement-on-tirupati-walkway-warning-to-pilgrims#comments</comments><guid isPermaLink="false">cd769f61-4d84-4d7c-835a-4f2a54175918</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:23:10 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:23:10.209Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupati temple,Leopard,சிறுத்தை நடமாட்டம்,திருப்பதி கோவில்,பக்தர்களுக்கு எச்சரிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/26jtuy4h/leopard.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Leopard]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/26jtuy4h/leopard.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>சிறுத்தை நடமாட்டம் குறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். </p><p>திருப்பதி கோவிலுக்கு ஸ்ரீவாரி மெட்டு மற்றும் அலிபிரி நடைபாதை வழியாக பக்தர்கள் செல்கின்றனர்.</p><h2>சிறுத்தை நடமாட்டம்</h2><p>நடைபாதை வழி முழுவதும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இதனால் அடிக்கடி யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடைபாதைக்குள் வருகின்றன. இதனால் பக்தர்கள் அச்சத்துடன் தரிசனத்திற்கு நடந்து செல்கின்றனர்.</p> <h2>அலிபிரி நடப்பாதை</h2><p>இந்த நிலையில் நேற்று மாலை அலிபிரி நடப்பாதை வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று கொண்டிருந்தனர். 3-வது மைலில் உள்ள ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் சாமி கோவில் அருகே சிறுத்தை ஒன்று அங்கும், இங்கும் நடமாடியது. இதனைக் கண்ட பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு மீண்டும் திரும்பிச் சென்றனர். அப்போது சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. சிறுத்தை நடமாட்டம் குறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். </p> <p>மேலும் பக்தர்களை 20, 30 பேர் குழுக்களாக அனுப்பி வைத்தனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் மிகுந்த கவனத்துடன் நடப்பாதையில் செல்லுமாறு தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.</p><h2>24 மணி நேரம்</h2><p>திருப்பதி கோவிலில் பத்கர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ரூ.3.95 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் சீன அதிபர் - பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/national/chance-to-hold-bilateral-talks-with-chinese-president-prime-minister-modi-who-is-coming-to-india-to-attend-the-brics-conference</link><comments>https://www.maalaimalar.com/news/national/chance-to-hold-bilateral-talks-with-chinese-president-prime-minister-modi-who-is-coming-to-india-to-attend-the-brics-conference#comments</comments><guid isPermaLink="false">991873f3-8c99-47c6-b1f1-0dc8785d5281</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:09:58 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:09:58.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Xi Jinping,ஜி ஜின்பிங்,India-China,BRICS Summit,பிரிக்ஸ் மாநாடு,இந்தியா-சீனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/ey9b7x7f/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/ey9b7x7f/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருகை தரும் சீன அதிபருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p> <p>இந்தியாவின் தலைமையின் கீழ் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/putin-to-visit-india-for-brics-summit-three-russian-military-aircraft-arrive-for-preparatory-and-security-operations">ரஷிய அதிபர் புதின்</a>, சீன அதிபர் ஜி ஜின் பிங், பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் நேரில் பங்கேற்கின்றனர்.</p><p>இந்த ஆண்டின் மாநாட்டு மையக்கருத்து "Building for Resilience, Innovation, Cooperation and Sustainability" என்பதாகும்.  </p> <h2>சீன அதிபருடன் பேச்சுவார்த்தை</h2><p>இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருகை தரும் சீன அதிபருடன் பிரதமர் மோடி, இரு நாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>2020ல் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, சீன அதிபர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறையாகும்.</p><p>கடைசியாக கடந்த 2019 அக்டோபரில் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற 2nd India-China Informal Summit மாநாட்டிற்கு ஜி ஜின் பிங் வந்திருந்தார்</p> <p>சீன அதிபர் வரும் சனிக்கிழமை பிற்பகலில் டெல்லி வந்தடைவார் என்றும், மாநாட்டின் முதல் நாளான அன்றைய தினமே பிரதமர் மோடியுடன் இருதரப்பு சந்திப்பு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>கல்வான் தாக்குதல் </h2><p>கடந்த 2019 இல் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் புகுந்து நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.</p><p>இதையடுத்து <a href="https://www.maalaimalar.com/news/world/ajit-doval-in-china-agreement-on-demarcation-of-india-china-border">சீனாவுடனான இந்தியாவின் உறவு</a> பின்னடைவை சந்தித்த நிலையில் அந்த கசப்புகளை மறந்து பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்திப்பு 2025 ஷாங்காய் உச்சிமாநாட்டில் நடைபெற்றது.</p><p>முன்னதாக எல்லைக் கோட்டில் இரு நாட்டு வீரர்களும் இதன்முன் தாங்கள் இருந்த நிலைகளுக்கு திரும்புவதாக 2024 இல் ஒப்புக்கொள்ளப்பட்டது.</p><p>இருந்தபோதும் லடாக் உள்ளிட்ட எல்லைகளில் சீனா, தனது ராணுவ இருப்பை தொடர்ந்து அதிகப்படுத்தியும், ராணுவ கட்டமைப்புகளை மேற்கொண்டும், இமாச்சல பிரதேசத்தின் பகுதிகளை தங்களின் நாட்டு பகுதிகளாக வரைபடம் வெளியிட்டும் இந்தியாவுக்கு அச்சறுத்தலாக இருந்து வருகிறது. </p><p> இந்நிலையில் எல்லையில் அமைதியை மீட்டெடுப்பது மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மீண்டும் சீரமைப்பது<sup> </sup>தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு இந்த சந்திப்பு ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரீல்ஸ் பார்த்ததால் நேர்ந்த கொடூரம்: காதல் மனைவியை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை!</title><link>https://www.maalaimalar.com/news/national/bengaluru-man-kills-wife-over-reels-addiction-and-dies-by-suicide</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengaluru-man-kills-wife-over-reels-addiction-and-dies-by-suicide#comments</comments><guid isPermaLink="false">321d1a2e-c5d6-4cd0-837a-20c7e1c5b407</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:05:38 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:05:38.868Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime,பெங்களூரு,Bangalore,Domestic Violence,கொலைவழக்கு,HALPolice,MurderAndSuicide,Reels Addiction</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/0wddadl8/MurderAndSuicide" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MurderAndSuicide  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/0wddadl8/MurderAndSuicide?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செல்போனில் எந்நேரமும் ரீல்ஸ் வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், 15 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த காதல் மனைவியைப் பீர் பாட்டிலால் அடித்துக் கொன்றுவிட்டு, கணவனும் தூக்குப்போட்டு தற்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> செய்துகொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>15 ஆண்டுக்கால காதல் வாழ்க்கை</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடக </a>மாநிலம் பெங்களூரு எச்.ஏ.எல். காவல் எல்லைக்கு உட்பட்ட விபூதிபுரா பகுதியில் வசித்து வந்தவர் ராகவேந்திரா (38). ஆட்டோ ஓட்டுநரான இவரும், சுருதி (34) என்பவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.</p><p>இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் இருவரும் தாவணகெரேயில் உள்ள தங்களது பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வருகின்றனர். சுருதி விபூதிபுராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.</p><h2><strong>கொலையில் முடிந்த ரீல்ஸ் விவகாரம்</strong></h2><p>ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கையில், சமீபகாலமாகப் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுருதி எந்நேரமும் தனது செல்போனில் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்ப்பதையும், அதில் மூழ்கிக் கிடப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. </p><p>இதனால் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி கடுமையான வாக்குவாதங்களும், குடும்பத் தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.</p><h2><strong>நள்ளிரவில் நடந்த கொடூரம்</strong></h2><p>வழக்கம்போல நேற்று முன்தினம் நள்ளிரவிலும் சுருதி செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்ததால், ராகவேந்திராவுக்கும் அவருக்கும் இடையே மீண்டும் கடுமையான தகராறு வெடித்தது. இதில் பெரும் ஆத்திரமடைந்த ராகவேந்திரா, சுருதியைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்.</p><p>கோபத்தின் உச்சத்துக்கே சென்ற ராகவேந்திரா, வீட்டில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து சுருதியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சுருதி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.</p><h2><strong>கணவன் தற்கொலை</strong></h2><p>ஆத்திரத்தில் தனது காதல் மனைவியைக் கொலை செய்துவிட்டதை உணர்ந்த ராகவேந்திரா, அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்தார். </p><p>சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதாலும், குற்ற உணர்ச்சியாலும் அவரும் அதே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.</p><h2><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">போலீசார் விசாரணை</a></strong></h2><p>அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், எச்.ஏ.எல். காவல் நிலைய போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர்.</p><p>முதற்கட்ட விசாரணையில், செல்போன் ரீல்ஸ் வீடியோ பார்ப்பது தொடர்பான தொடர் தகராறே இந்த இரட்டை மரணத்திற்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>சமூக வலைத்தள மோகத்தால் இரு உயிர்கள் பலியாகி, இரண்டு குழந்தைகள் அனாதையாக நின்றுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா வரும் புதின்.. முன்னெச்சரிக்கை பணிகளுக்கு 3 ரஷிய ராணுவ விமானங்கள் வருகை</title><link>https://www.maalaimalar.com/news/national/putin-to-visit-india-for-brics-summit-three-russian-military-aircraft-arrive-for-preparatory-and-security-operations</link><comments>https://www.maalaimalar.com/news/national/putin-to-visit-india-for-brics-summit-three-russian-military-aircraft-arrive-for-preparatory-and-security-operations#comments</comments><guid isPermaLink="false">3dd955a6-1040-4fe6-98d1-f279f9915051</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:23:40 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:23:40.590Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Putin,புதின்,BRICS Summit,ரஷியா,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/tewu3mqf/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரஷிய ராணுவ விமானங்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ரஷிய ராணுவ விமானங்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/tewu3mqf/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிபர் புதின் வருகைக்கு முன்னதாக 3 ரஷிய ராணுவ விமானங்கள் இந்தியா வருகை தந்துள்ளன.</p> <p>இந்தியாவின் தலைமையின் கீழ் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லியில் </a>உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.  </p><p>ரஷிய அதிபர்  புதின், பிரேசில், தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் நேரில் பங்கேற்கின்றனர்.  </p><p>இந்நிலையில் ரஷிய அதிபர் புதின் வருகைக்கு முன்னரே அவரது பாதுகாப்பை இங்கு உறுதி செய்ய மூன்று ரஷிய ராணுவ விமானங்களில் உயர் அதிகாரிகள் இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். </p>  <h2>விமானங்கள்</h2><p>நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சுமார் 5:30 மணியளவில், <a href="https://www.maalaimalar.com/topic/russia">ரஷியாவின் </a>அதிநவீன 'IL-76' போர் தளவாட போக்குவரத்து விமானம் உட்பட 3 ராணுவ விமானங்கள் நோய்டா விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கின.</p><p>இந்த விமானங்களில் ரஷியாவின் உயர் மட்டப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் தந்துள்ளனர்.</p> <p>பொதுவாகவே ரஷிய அதிபர் புதினின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு அவர் செல்லும்போது அவரின் மலத்தை சேமித்து வைக்க கூட உடன் பெட்டி ஒன்று எடுத்துச் செல்லப்படும். </p><p>அதன் மூலம் அவரின் உடல்நலன் குறித்து வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.</p> <p>இந்த சூழலில் அதிபர் புதின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விவிஐபி வாகன போக்குவரத்து வசதிகள் குறித்து இந்திய மற்றும் ரஷிய அதிகாரிகள் இணைந்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>புதின் வருகை தரும் விமானம் டெல்லியில் தரையிறங்குமா அல்லது நொய்டாவில் தரையிறங்குமா என்பது குறித்து உறுதிசெய்யப்படவில்லை.</p> <h2>நொய்டா விமான நிலையம்</h2><p>கடந்த ஜூன் 15 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த புத்தம் புது விமான நிலையத்தில் ஒரு வெளிநாட்டு ராணுவ விமானம் தரையிறங்குவது இதுவே முதன்முறையாகும்.</p><p>இதுவரை இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு ராணுவ விமானங்கள் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தையே பயன்படுத்தி வந்தன.</p><p>முதல்முறையாக நோய்டா விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டு, ரஷிய விமானங்கள் அங்கு வந்துள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>கணவன் மனைவியுடன் கட்டாய உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமா? - உச்சநீதிமன்றம் சொன்னது இதுதான்</title><link>https://www.maalaimalar.com/news/national/does-a-husband-forcing-sexual-relations-on-his-wife-amount-to-sexual-assault-here-is-what-the-supreme-court-said</link><comments>https://www.maalaimalar.com/news/national/does-a-husband-forcing-sexual-relations-on-his-wife-amount-to-sexual-assault-here-is-what-the-supreme-court-said#comments</comments><guid isPermaLink="false">46482b36-cf18-4d8f-b85e-6d948c78e90a</guid><pubDate>Thu, 10 Sep 2026 04:21:34 +0000</pubDate><atom:updated>2026-09-10T04:21:34.575Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,பாலியல் வன்கொடுமை,Sexual assault,Supreme Court,marriage,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/cvjmmxp3/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/cvjmmxp3/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கணவனால் கட்டாயப் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்படும் பெண் சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவரே என்றும் ஆனால் அதை குற்றமாக கருத சட்டத்தில் இடமில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p>பழைய இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 மற்றும் தற்போதைய பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ், திருமணத்திற்குப் பிந்தைய கட்டாய பாலியல் உறவு குற்றமாகப் கருதப்படுவதில்லை.</p><p>இந்நிலையில் வழக்கு ஒன்றில் கர்நாடக உயர் நீதிமன்றம், மனைவியைப் பாலியல் அடிமை போல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடர அனுமதி அளித்து தீர்ப்பளித்தது.</p> <h2>உச்சநீதிமன்றம் </h2><p>இந்தத் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை நேற்று <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்ச நீதிமன்ற</a> தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.</p><p>இதன்போது, "நாங்கள் நிச்சயமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவோம். கணவனால் கட்டாயப் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்படும் பெண் சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவரே.</p><p>ஆனால், பிரிவு 375ன் கீழ் நேரடியாக திருமணத்துக்கு பிந்தைய கட்டாய உறவு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை</a> ஆகாது என விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் போது ஒரு நபரை இந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகச் சேர்த்து விசாரணை நடத்துவது நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருகிறதா?</p><p>நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தில், குறிப்பிட்ட செயல் குற்றமல்ல என்று நேரடியாகக் கூறப்பட்டுள்ள போது, அதை நீதிமன்றங்கள் தனது நீதித்துறை மறுஆய்வு மூலம் குற்றமாக்க முடியுமா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.</p> <p>பாதிக்கப்பட்ட மனைவி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ஒரு பெண் பாலியல் அடிமையாக நடத்தப்படும் அதீத சூழலில் இந்த முடிவை உயர் நீதிமன்றம் எடுத்ததாக சுட்டிக்காட்டினார்.</p><p>மூத்த வழக்கறிஞர் கருணா நந்தி கூறுகையில், அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு ஏற்ப இந்தச் சட்ட விலக்கை மறுவாசிப்பு செய்யவோ அல்லது மாற்றி விளக்கவோ நீதிமன்றம் முன்வர வேண்டும் என்றார்.</p> <h2>முடிவெடுக்க வேண்டியது மக்கள் தான்</h2><p>தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "இந்த வழக்கு வெறும் சமூக ஒழுக்கம் சார்ந்த விஷயம் அல்ல; மாறாக இது முழுக்க முழுக்க அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த பிரச்சனை.</p><p>சமூக ஒழுக்கம் என்றால் என்ன? மக்கள் தங்கள் பிரதிநிதிகள் (நாடாளுமன்றம்) மூலம் பேசுவதை, நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் பரிசோதிக்கிறோம்.</p><p>முடிவெடுக்க வேண்டியது மக்கள் தான். நீதிமன்றம் தனது அரசியலமைப்பு மொழியில் மட்டுமே பேச முடியும்." என தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>SIR: பாரத ரத்னா பெற்றவருக்கே இந்த நிலைமையா?.. தேர்தல் ஆணையத்தின் கிடுக்குபிடியில் 92 வயது விஞ்ஞானி</title><link>https://www.maalaimalar.com/news/national/sir-is-this-the-plight-of-even-a-bharat-ratna-awardee-92-year-old-scientist-faces-the-election-commissions-strict-measures</link><comments>https://www.maalaimalar.com/news/national/sir-is-this-the-plight-of-even-a-bharat-ratna-awardee-92-year-old-scientist-faces-the-election-commissions-strict-measures#comments</comments><guid isPermaLink="false">97d84f96-1449-43af-89c9-086e404098d1</guid><pubDate>Thu, 10 Sep 2026 02:13:58 +0000</pubDate><atom:updated>2026-09-10T02:13:58.493Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,Election Commission,Sir,தேர்தல் ஆணையம்,எஸ்ஐஆர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/1wyq9nde/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  சி.என்.ஆர். ராவ் ]]></media:title><media:description type="html"><![CDATA[  சி.என்.ஆர். ராவ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/1wyq9nde/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/sir">வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த</a> 3 ஆம் கட்டம் நாடு முழுவதிலும் 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது. </p><p>இதில் பல குளறுபடிகள் பதிவாகி வரும் நிலையில் சாமானியர்கள் மட்டுமின்றி, நன்கறியப்பட்ட பிரபலங்களும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். </p><h2>நோட்டீஸ்</h2><p>அந்த வகையில், <a href="https://www.maalaimalar.com/topic/karnataka">கர்நாடகாவில் </a>நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் , நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' பெற்ற மூத்த விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் பெயரில் பிழை இருப்பதாகக் கூறி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாக வெளியான செய்தி விவாதத்தை கிளப்பியுள்ளது.</p><p>பழைய வாக்காளர் பதிவேட்டில் இவரது பெயர் 'Prof CNR Rao' என்று பதிவாகியிருந்த நிலையில், தற்போதைய புதிய கணினி அமைப்பில் ஆங்கிலத்தில் கூடுதல் 'f' சேர்க்கப்பட்டு 'Proff CNR Rao' எனத் தவறாகப் பதிவாகியுள்ளது.</p> <p>கணினி அமைப்பில் உள்ள இந்த  பெயர் முரண்பாடு காரணமாக, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு அவருக்கு ஆன்லைனில் நோட்டீஸ் அனுப்பட்டதாக தகவல் வெளியானது.</p><h2>விளக்கம்</h2><p>ஆனால் தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த நோட்டீஸும் நேரில் வந்து சேரவில்லை என்று சி.என்.ஆர். ராவின் அலுவலகம் தெரிவித்தது.</p><p>சர்ச்சையை தொடர்ந்து விளக்கமளித்த தேர்தல் ஆணையம், 92 வயதான விஞ்ஞானியின் மூப்பையும் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு அவருக்கு நேரில் ஆஜராகும் நோட்டீஸ் எதுவுமே அனுப்பப்படவில்லை என்றும், தேர்தல் அதிகாரிகளே நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று விவரங்களை சரிசெய்து இறுதி வாக்காளர் பட்டியலில் பெயரை தொடர நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், நடிகர் பிரகாஷ் ராஜ், ராம் ஜெத்மலானி, ராகவ் சதா உள்ளிட்டோரும் இதுபோன்ற சிக்கலை சந்தித்துள்ளனர்.</p> <h2>3 ஆம் கட்ட எஸ்ஐஆர்</h2><p>டெல்லி, மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த மே 14 அன்று இந்திய தேர்தல் ஆணையம் 3 ஆம் கட்ட சிறப்புத் தீவிர திருத்தத்தைஅறிவித்தது.</p><p>மே 30 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் இந்தப் நடவடிக்கையின் மூலம் சுமார் 36.73 கோடி வாக்காளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.</p><p>எஸ்ஐஆர் நடைபெறும் மாநிலங்களில் பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டும், எஞ்சிய 13 மாநிலங்களில் 2028 மற்றும் 2029ஆம் ஆண்டுகளிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.</p><p>முன்னதாக, முதல் மற்றும் இரண்டாம் கட்ட எஸ்ஐஆர் பணிகள் 10 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.</p> <h2>சி.என்.ஆர். ரவ்</h2><p>பெங்களூரை சேர்ந்த சி.என்.ஆர். ராவ், நாட்டின் முன்னணி வேதியியல் விஞ்ஞானிகளில் ஒருவர் ஆவார்.</p><p>1976இல் இந்திய அறிவியல் கழகத்தில் (IISc), 'Solid state and Structural chemistry' பிரிவை நிறுவிய இவர், 1984 முதல் 1994 வரை அதன் இயக்குநராகப் பணியாற்றினார்.</p><p>1,600க்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவருக்கு, நாட்டின் உயரிய 'பாரத ரத்னா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவரை போன்றோரே எஸ்ஐஆர் பணியின்கீழ் சிக்கலை எதிர்கொண்டு வரும் நிலையில் சாமானிய மக்கள் இப்பணியால் அதிக சிரமங்களை சந்திக்க நேர்ந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>குஜராத்: கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்த சாரம்.. சிக்கித் தவித்த 13 பேர் மீட்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/gujarat-scaffolding-collapses-during-construction-work-10-workers-trapped-13-rescued</link><comments>https://www.maalaimalar.com/news/national/gujarat-scaffolding-collapses-during-construction-work-10-workers-trapped-13-rescued#comments</comments><guid isPermaLink="false">9b814c8d-4771-4bd0-b5f0-cf843398997d</guid><pubDate>Thu, 10 Sep 2026 01:01:06 +0000</pubDate><atom:updated>2026-09-10T01:01:06.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,gujarat,கட்டிட விபத்து,construction work,கட்டுமான பணி,building  collapse</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/kwg1ihis/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ குஜராத்]]></media:title><media:description type="html"><![CDATA[ குஜராத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/kwg1ihis/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத்தில் கட்டுமானத்தில் இருந்த வணிக வளாகத்தில் சாரம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் உள்ளே சிக்கயுள்ளனர்.</p> <p>குஜராத் மாநிலம் காந்திநகர் அருகிலுள்ள குடாசன் பகுதியில், 'பாஸ்கி தி எம்பயர்' என்ற வணிக வளாக கட்டுமான பணி நடந்து வந்துள்ளது. </p><p>நேற்று (புதன்கிழமை) இரவு 9:30 மணியளவில் <a href="https://www.maalaimalar.com/news/national/1133-buildings-collapsed-and-98-people-lost-their-lives-in-delhi-over-three-years-residents-living-in-fear">கட்டிடத்தின் </a>தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது, எடைக் தாங்காமல் சாரக் கூரை சரிந்து விழுந்தது. அப்போது அங்கிருந்த பெரிய கிரேன் ஒன்றும் இடிபாடுகளின் மீது சாய்ந்தது.</p> <h2>தொழிலாளர்கள்</h2><p>இதன்போது பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பலரும் <a href="https://www.maalaimalar.com/topic/building-collapse">இடிபாடுகளுக்குள்ளும்</a> கிரேனின் அடியயேயும் சிக்கிக்கொண்டனர்.</p><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றுவதற்காக மற்றொரு பெரிய கிரேன் வரவழைக்கப்பட்டது.</p> <p>இதுவரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 12 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். </p><p> மேலும் 10 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணி நள்ளிரவையும் தாண்டி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  </p><p>இதுவரை இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என மண்டல போலீஸ் ஐஜி வீரேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.  </p><h2>நேரில் ஆய்வு</h2><p>சம்பவ இடத்திற்கு குஜராத் மாநில துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்வி மற்றும் காந்திநகர் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.</p><p>கட்டிட விபத்து குறித்துக் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, முறையான பாதுகாப்பு விதிகளுடன் கட்டுமானம் நடைபெற்றதா என்பது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது.</p><p>அண்மையில் டெல்லியில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த  5 மாடி பிஜி தங்கும் விடுதி இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் கொல்லப்பட்ட நிலையில் தற்போதைய விபத்து அரங்கேறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்</title><link>https://www.maalaimalar.com/news/national/arvind-kejriwal-unanimously-re-elected-as-aap-national-convenor</link><comments>https://www.maalaimalar.com/news/national/arvind-kejriwal-unanimously-re-elected-as-aap-national-convenor#comments</comments><guid isPermaLink="false">49dce3fc-0062-4e6a-a551-bd986fec9a00</guid><pubDate>Wed, 09 Sep 2026 21:18:52 +0000</pubDate><atom:updated>2026-09-09T21:18:52.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,AAP,ஆம் ஆத்மி கட்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/02/26/9756962-kejriwal26022025.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aravind Kejriwal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/02/26/9756962-kejriwal26022025.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காணொளி வாயிலாக நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/aam-admi-party">ஆம் ஆத்மி</a> கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் 330 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .</p><p>கட்சி தனது <a href="https://www.maalaimalar.com/news/national">தேசிய</a> செயலாளராக பங்கஜ் குப்தாவைத் தேர்ந்தெடுத்தது, அதே நேரத்தில் என்.டி. குப்தா தேசிய பொருளாளராகத் தொடர்வார். இக்கூட்டத்தில் 23 உறுப்பினர்களை கொண்ட புதிய தேசிய செயற்குழுவும் அமைக்கப்பட்டது.</p><h2>போராட்டத்திற்கு தயாராக இருக்கிறோம்:</h2><p>ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஊடக பொறுப்பாளர் அனுராக் தண்டா, கெஜ்ரிவாலுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவரது தலைமையில் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள கட்சி தயாராக உள்ளது என்றும் கூறினார்.</p><p>"ஆம் ஆத்மி கட்சியின் புதிதாக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலால் தேசிய ஒருங்கிணைப்பாளராக ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் ஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் வழிகாட்டுதலின் கீழ், நாங்கள் ஒவ்வொரு போராட்டத்திற்கும் தயாராக இருக்கிறோம்," என்று அனுராக் தண்டா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>சமீபத்திய ஆண்டுகளில் கட்சி சந்தித்த தேர்தல் பின்னடைவுகளுக்கு பிறகும், தொடர்ந்து கட்சியை வழிநடத்தி வரும் நிலையில் கெஜ்ரிவால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியின் முன்னாள் முதலமைச்சரான கெஜ்ரிவால், வெளிப்படைத்தன்மை, தகவல் அறியும் உரிமை மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றை மையமாக கொண்ட பல ஆண்டுகால செயல்பாடுகளுக்கு பிறகு அரசியலில் நுழைந்தார்.</p><h2>நன்கொடை வழங்கினார்:</h2><p>தேர்தல் அரசியலில் நுழைவதற்கு முன்பு, பொது விநியோக அமைப்பு, பொதுப் பணிகள், சமூக நலத் திட்டங்கள், வருமான வரி மற்றும் மின்சாரம் தொடர்பான பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக கெஜ்ரிவால் பரிவர்த்தன் என்ற தன்னார்வ அமைப்பை நிறுவினார்.</p><p>அவர் 2006-இல் வருமான வரித் துறையில் இருந்து ராஜினாமா செய்து, தனது ரமோன் மக்சேசே விருது பணத்தை பொது காரண ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவுவதற்காக நன்கொடையாக வழங்கினார்.</p><p>2012 அக்டோபர் 2 அன்று, இந்தியா அகென்ஸ்ட் கரப்ஷன் இயக்கத்தின் மற்ற முன்னாள் உறுப்பினர்களுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சியை நிறுவுவதற்கு முன்பே, கெஜ்ரிவால் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முக்கிய முகங்களில் ஒருவராக உருவெடுத்தார் .</p><p>அவர் 2013-இல் டெல்லி சட்டமன்ற தொகுதியில் தனது முதல் தேர்தலில் போட்டியிட்டு, மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஷீலா தீட்சித்தை 22,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மதிய உணவு வழங்குவதில் தகராறு: தலைமை ஆசிரியரை அடித்து உதைத்த மாணவர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">bf69ddd9-b72d-4a01-bdd6-a6366aa6c6c6</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:43:40 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:43:40.971Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,west bengal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/e1bs0d6p/Students0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேற்கு வங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/e1bs0d6p/Students0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி 150 ஆண்டு கால பழமையான பள்ளிக் கூடம் உள்ளது. இந்த பள்ளிக் கூடத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆசிரியர் தினத்தன்று சிறப்பு மதிய உணவு வழங்கப்படும்.</p><p>அதன்படி நேற்று உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது போதுமான சாப்பாடு மற்றும் சிக்கன் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் மாணவர்கள் கோபம் அடைந்தனர்.</p><p>அப்போது சாப்பாடு வழங்கும் இடத்திற்கு தலைமை ஆசிரியர் வந்துள்ளார். அவருக்கும் மாணவர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தலைமை ஆசிரியரை கீழே தள்ளிவிட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.</p><p>அதோடு மட்டுமல்லாமல் தலைமை ஆசிரியர் அறை, உணவு தயார் செய்யப்படும் அறை ஆகியவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க, உடனடியாக அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p>இது தொடர்பாக மாவட்ட பள்ளிகள் ஆய்வாளர் தலைமை ஆசிரியர் அறை, மதிய உணவு தயார் செய்யப்பட்ட இடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்துள்ளார்.</p><p>இது பள்ளிக் கூடத்தின் உள் விவகாரம். விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது இதுகுறித்து சொல்ல முடியாது என்றார்.</p><p>இந்த பள்ளிக்கூடம் 1876-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் தீபக் பர்மன், பள்ளிக்கூடம் சென்று ஆய்வு செய்வார் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரக்கோணம்- ரேணிகுண்டா இடையே 3, 4 ரெயில் வழித்தடத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!</title><link>https://www.maalaimalar.com/news/national/approval-for-arakkonam-renigunta-3rd-4th-rail-line</link><comments>https://www.maalaimalar.com/news/national/approval-for-arakkonam-renigunta-3rd-4th-rail-line#comments</comments><guid isPermaLink="false">0f3d7eaf-103b-461b-aa7b-a2b5263ce33d</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:18:28 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:18:28.048Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில்,indian railways,Ministry of Railways,அஸ்வினி வைஷ்ணவி,அரக்கோணம் ரேணிகுண்டா</media:keywords><media:content height="423" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/5vhqaj6y/images-3.jfif" width="723"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arakkonam – Renigunta ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/5vhqaj6y/images-3.jfif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2>ஒப்புதல் </h2><p>தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள 17 மாவட்டங்களை உள்ளடக்கிய ஐந்து பல்தடத் திட்டங்களுக்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்திய ரெயில்வேயின் தற்போதைய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/5-passenger-train-including-chennai-central-sulurpet-cancelled">ரெயில் </a>பாதை வலையமைப்பு சுமார் 540 கி.மீ. அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திட்டம் </h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/har-ghar-tiranga-campaign-pm-narendra-modi-appeal-to-nation">நரேந்திர மோடி</a> தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் ரெயில்வே அமைச்சகத்தின் சுமார் ரூ. 10,021 கோடி மொத்த மதிப்பிலான ஐந்து திட்டங்களுக்கு இன்று ஒப்புதலை வழங்கியுள்ளது </p><p>அதன்படி அரக்கோணம் – ரேணிகுண்டா 3வது மற்றும் 4வது வழித்தடம் – 77 கி.மீ.</p><p>வைட்ஃபீல்ட் – பங்காரப்பேட்டை 3வது மற்றும் 4வது வழித்தடம் – 47 கி.மீ.</p><p>ஓசூர் – ஓமலூர் இரட்டிப்புப் பாதை – 147 கி.மீ.</p><p>சேலம் - கரூர் - திண்டுக்கல் இரட்டிப்பு - 159 கி.மீ ஆகிய வழித்தடங்களுக்கு ஒப்புதலானது வழங்கப்பட்டுள்ளது </p> <h2>தற்சார்பு </h2><p>இந்த புதிய வழித்திட்டங்கள் மூலம் முறையான செயல்பாடுகளை செயல்படுத்தவும், நெரிசலை குறைக்கவும், இந்த புதிய திட்டமானது பிரதமர் மோடியின் புதிய இந்தியா <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-hails-visionary-budget">தொலைநோக்கு</a> பார்வைக்கு இணங்க அமைந்துள்ளன. இந்த வழித்தடங்கள் அமைவதன் மூலம் அப்பகுதிகளில் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில்  வாய்ப்புகளை உருவாக்கி தற்சார்பு நிலையை இது உருவாக்குகிறது.</p><h2>மேம்பாடு </h2><p>குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 17 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த ஐந்து திட்டங்களுக்கான அறிவிப்பானது  இந்திய ரெயில்வேயின் தற்போதைய வலையமைப்பை சுமார் 540 கி.மீ. அளவுக்கு அதிகரிக்கும். </p><p>மேலும் அங்கீகரிக்கப்பட்ட இந்த பலவழித் திட்டங்கள், சுமார் 52 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஏறத்தாழ 2,121 கிராமங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும். </p><h2>வழித்தடம் </h2><p>இந்த புதிய வழித்தடங்கள் அமைவதன் மூலம், திருப்பதி, சுப்பிரமணிய சுவாமி கோயில் (திருத்தணி), ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கோயில் (திருச்சானூர்), கோட்டிலிங்கேஸ்வர தேவாலயம், ஸ்ரீ சீதி பைரவேஸ்வர சுவாமி கோயில், பங்காரு திருப்பதி, </p><p>கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ், ஹோகன்னக்கல் ஃபார்டால்ஸ், ஹோகன்னக்கல், ஹோகன்னக்கல் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு ரெயில் இணைப்பை மேம்படுத்த வழிவகை செய்கிறது. </p><p>மலைகள், சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், நாமக்கல் கோட்டை, கல்யாண பசுபதேஸ்வரர் கோவில், யாதகிரிகுட்டா கோவில், போங்கீர் கோட்டை, சுரேந்திரபுரி, ஸ்வர்ணகிரி கோவில் மற்றும் நிலக்கரி, சிமெண்ட், இரும்பு மற்றும் எஃகு, கொள்கலன்கள், வாகனங்கள், உணவு தானியங்கள், பெட்ரோலியப் பொருட்கள், உரங்கள் போன்ற சரக்குகளின் போக்குவரத்திற்கு இந்த புதிய வழித்தடமானது முக்கியமான ஒன்றாக அமைய இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சரிவை சந்தித்த பங்குச்சந்தை: ஐ.டி., நிதிச்சேவை நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி..!</title><link>https://www.maalaimalar.com/news/national/sensex-tumbles-813-points-to-3-month-low-amid-escalating-tensions-in-west-asia-oil-price-surge</link><comments>https://www.maalaimalar.com/news/national/sensex-tumbles-813-points-to-3-month-low-amid-escalating-tensions-in-west-asia-oil-price-surge#comments</comments><guid isPermaLink="false">d0cbe68f-de38-4704-8f0a-2c6772e46fb6</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:00:46 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:00:46.106Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>share market,NIFTY,BSE Sensex</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/91cuz68r/Sharemarket0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பங்குச் சந்தை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/91cuz68r/Sharemarket0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் சென்செக்ஸ் 813 புள்ளிகள் சரிந்து கடந்த 3 மாதங்களில் குறைந்த புள்ளிகளை எட்டின.</p><p>மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது. இதன் தாக்கத்தாலும், தகவல் தொழில்நுட்பம் (IT), நுகர்வோர் பொருட்கள் (FMCG), நிதிச் சேவைகள் மற்றும் எண்ணெய் &amp; எரிவாயு துறைப் பங்குகள் மீதான விற்பனை அழுத்தத்தாலும், முக்கிய பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிந்து, 813 புள்ளிகள் குறைந்து மூன்று மாதக் குறைந்தபட்ச நிலையை அடைந்தது. நிஃப்டி குறியீடு 23,450-க்குக் கீழே சென்று நிறைவடைந்தது.</p><p>30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 813.35 புள்ளிகள் அல்லது 1.08 சதவீதம் சரிந்து, இன்றைய குறைந்தபட்ச அளவான 74,764.23-ல் முடிவடைந்தது. இது கடந்த மூன்று மாதங்களில் மிகக் குறைந்த நிறைவு நிலையாகும். கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி 73832 புள்ளியாக இருந்தது.</p><h2>நிஃப்டி</h2><p>50 பங்குகளைக் கொண்ட என்எஸ்இ (NSE) நிஃப்டி 203.60 புள்ளிகள் அல்லது 0.86 சதவீதம் சரிந்து, மூன்று மாதக் குறைந்தபட்ச அளவான 23,431.50-ல் முடிவடைந்தது. இக்குறியீடு இதற்கு முன் ஜூன் 11 அன்று இதே அளவை ஒட்டிய நிலையில் முடிவடைந்திருந்தது.</p><p>சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில், ஹெச்.சி.எல். டெக் (HCL Tech) அதிகபட்சமாக 4.55 சதவீதம் சரிந்தது. இன்ஃபோசிஸ் (Infosys) 4.43 சதவீதமும், டெக் மஹிந்திரா (Tech Mahindra) 3.87 சதவீதமும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) 2.26 சதவீதமும் சரிந்தன. HDFC வங்கி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவையும் சரிவைச் சந்தித்த முக்கிய நிறுவனங்களாகும்.</p><h2>அதானி போர்ட்ஸ்</h2><p>அதானி போர்ட்ஸ் (Adani Ports) 3.67 சதவீதம் உயர்ந்து அதிக லாபம் ஈட்டிய நிறுவனமாகத் திகழ்ந்தது. டாடா ஸ்டீல், ட்ரெண்ட் (Trent) மற்றும் என்டிபிசி (NTPC) ஆகியவையும் லாபம் ஈட்டிய நிறுவனங்கள் ஆகும்.</p><p>உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அளவுகோலான ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 2.67 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 100.5 அமெரிக்க டாலராக அதிகரித்தது.</p><p>சந்தை தரவுகளின்படி, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) செவ்வாயன்று ரூ. 123.19 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றனர்.</p><p>நேற்று சென்செக்ஸ் 555.23 புள்ளிகள் (0.73 சதவீதம்) சரிந்து 75,577.58 புள்ளிகளில் நிலைபெற்றது. நிஃப்டி 144.05 புள்ளிகள் (0.61 சதவீதம்) சரிந்து 23,635.10 புள்ளிகளில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தலின்போது பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பெற்ற நிதி எவ்வளவு?</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-received-rs-1473-crore-during-last-5-state-polls-over-7-times-more-than-congress</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-received-rs-1473-crore-during-last-5-state-polls-over-7-times-more-than-congress#comments</comments><guid isPermaLink="false">7b85257b-2a2a-4d70-b822-98ace2b5a168</guid><pubDate>Wed, 09 Sep 2026 11:28:19 +0000</pubDate><atom:updated>2026-09-09T11:28:19.840Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,Election Commission of India</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/38xezqrp/BJPCogress.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/38xezqrp/BJPCogress.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தலின்போது, கட்சி நிதி (நன்கொடை) பெறுவது உண்டு. இந்த பணம் கட்சிகளுக்கு அக்கவுண்ட் மன்றும் நக்கொடை பத்திரம் மூலமாகவும் வழங்கப்படுகிறது. கடைசியாக தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.</p><h2>பாஜக 1473 கோடி ரூபாய்</h2><p>அப்போது பாஜக தேர்தல் நிதியாக 1473 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இந்த தொகை அனைத்தும் மத்திய தலைமையகத்திற்கு வந்துள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சிக்கு 207 கோடி ரூபாய் மட்டுமே தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள தேர்தல் வரவு செலவு கணக்கு அறிக்கையின் மூலம் இந்த தரவு கிடைக்கப்பெற்றுள்ளது.</p><h2>காங்கிரஸ் கட்சிக்கு 207.17 கோடி ரூபாய்</h2><p>காங்கிரஸ் கட்சிக்கு 207.17 கோடி ரூபாய் கிடைக்கப் பெற்ற நிலையில், 248.55 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. மார்ச் 15-ந்தேதியில் இருந்து மே 15-ந்தேதி வரையிலான தேர்தல் காலத்தின் வரவு செலவை இது காட்டுகின்றன.</p><p>கேரளம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் கட்சிகள் செலவழித்துள்ள தொகை எவ்வளவு என்று பாஜக இன்னும்  வெளியிடவில்லை.</p><h2>பாஜக-வின் கையிருப்பு அதிகரிப்பு</h2><p>பா.ஜ.க. செலவு செய்தாலும், மார்ச் 15-ந்தேதி 6,722.6 கோடி ரூபாயாக இருந்த கையிருப்பு, தேர்தலுக்கு பின் மார்ச் 6-ந்தேதி 7627.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.</p><p>காங்கிரஸ் கட்சியின் கணக்கில் 169.06 (கையிருப்பு 22.9 கோடி ரூபாய், வங்கி கணக்கில் 146.1 கோடி ரூபாய்) இருந்தது. தேர்தல் முடிவடைந்த பிறகு அந்த தொகை 103.2 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.</p><h2>தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம்</h2><p>தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநில தேர்தலுக்காக பா.ஜ.க. 159.7 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. பொதுவான கட்சி பிரச்சாரத்திற்கு மட்டும் 130.4 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. மீதமுள்ளவை வேட்பாளர்கள் மற்றும் அது தொடர்பான செலவினங்களாகும்.</p><p>அசாம் மாநிலத்திற்கு மட்டும் 96.27 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. பொதுவான கட்சிப் பிரச்சாரத்திற்கு மட்டும் 76.73 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. 19.54 கோடி ரூபாய் வேட்பாளர்கள் மற்றும் அது தொடர்பான செலவினங்களாகும்.</p><p>விளம்பரைம் மற்றும் நட்சத்திர வேட்பாளர்களின் டிராவல் ஆகியவற்றிற்கு அதிகப்பட்டியாக செலவினம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>தமிழ்நாடு</h2><p>தமிழ்நாட்டில் பாஜக 51.56 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதில் 44.51 கோடி ரூபாய் பொது பிரசாரம், 7.05 கோடி ரூபாய் வேட்பாளர்கள் செலவினம் ஆகும்.</p><p>புதுச்சேரியில் பாஜக 11.90 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. இதில் 9.19 கோடி ரூபாய் பொது பிரசாரம், 2.71 கோடி ரூபாய் வேட்பாளர்கள் செலவினம் ஆகும்.</p><p>ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பொது பிரசாரம் என்ற வகையில் 143 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது, வேட்பாளர்கள் செலவினம் என 105.55 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.</p><p>காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைமையகம் 40.52 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. மாநில காங்கிரஸ் சார்பில் 102.49 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் தீவிரமடையும் உணவுப் பாதுகாப்பு சோதனைகள்: வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மைகள்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-food-safety-crackdown-shocking-findings</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-food-safety-crackdown-shocking-findings#comments</comments><guid isPermaLink="false">be12144b-b7c4-4b61-a041-9cd039c90d26</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:15:20 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:15:20.057Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,FSSAI,பாமாயில்,Food Safety,warning labels,லண்டன் சந்தை,மேகி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/tuvoh0zo/food.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Food Safety  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/tuvoh0zo/food.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாக்கெட்டின் முன்பகுதியில் சர்க்கரை அல்லது கொழுப்பு அளவு குறித்த எச்சரிக்கை லேபிள்களை ஒட்டுவதற்கு உணவு உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். </p><p>இந்தியாவில் பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனைத் துறை $100 பில்லியனுக்கும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ள நிலையில், அதனைக் கண்காணிக்கும் ஒழுங்குமுறை அமைப்புகளின் செயல்பாடுகளையும் மீறி பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவது அண்மைய சோதனைகளில் தெரியவந்துள்ளது. </p><p>நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவுப் பாதுகாப்புத் துறை சோதனைகளில், காலாவதி தேதிகளை மாற்றி அமைத்தல், நுகர்வோரை திசை திருப்பும் பொய்யான லேபிள்கள் மற்றும் சுத்தமின்மை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><h2>இ<strong>ரட்டை நிலைக</strong>ள்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/fake-currency-worth-rs-17-29-crore-seized-at-punjab-national-bank-manager-arrested">இந்தியாவில் </a>விற்பனை செய்யப்படும் பிரபல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள், வெளிநாடுகளில் விற்கப்படும் அதே தயாரிப்புகளோடு ஒப்பிடும்போது ஊட்டச்சத்து அளவிலும் தயாரிப்பு முறையிலும் பெருமளவு வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, லண்டன் சந்தையில் விற்கப்படும் 'பாண்டா' பானத்தைக் காட்டிலும் இந்தியாவில் விற்கப்படும் பானத்தில் சுமார் மூன்று மடங்கு கூடுதல் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. </p><p>அதேபோல், பிரித்தானியாவில் விற்பனையாகும் 'மேகி' நூடுல்ஸ் தயாரிப்பில் சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்தப்பட்டு, அட்டையின் முன்பகுதியில் எச்சரிக்கை குறியீடுகளும் இடம்பெறுகின்றன. ஆனால், இந்திய பதிப்பில் பாமாயில் பயன்படுத்தப்படுவதோடு, எவ்வித முன்பக்க எச்சரிக்கைக் குறியீடுகளும் இடம்பெறுவதில்லை.</p><p>இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தற்போதைய விதிகளின்படி, பாக்கெட்டின் பின்பகுதியில் சிறிய எழுத்துக்களில் பொருட்களின் பட்டியலை அச்சிட்டால் போதுமானது. பாக்கெட்டின் முன்பகுதியில் சர்க்கரை அல்லது கொழுப்பு அளவு குறித்த எச்சரிக்கை லேபிள்களை ஒட்டுவதற்கு உணவு உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும், பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2026-இல் உணவு பாக்கெட்டுகளின் முன்பகுதியிலேயே ஊட்டச்சத்து எச்சரிக்கை லேபிள்களைக் கட்டாயமாக்கும் புதிய முன்மொழிவை அரசு கொண்டுவந்தது.</p><p>மகாராஷ்டிர மாநிலத்தில் உணவுப் பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டே தலைமையிலான குழு, மே மாதத்தில் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளது. மும்பை கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த உணவுப் பொருட்களில் போலி ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலான ஊட்டச்சத்து லேபிள்களும், தவறான காலாவதி தேதிகளும் ஒட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, கனடா நாட்டின் உணவு ஆய்வு முகமையும் இதன் பின்னணியைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.</p><h2><strong>நுகர்வோர் பாதுகாப்</strong>பு  </h2><p>2020-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு ஆய்வுகளில், பரிசோதிக்கப்பட்ட 1,00,000-க்கும் மேற்பட்ட உணவு மாதிரிகளில் சுமார் 20 சதவீதம் பாதுகாப்பற்றவையாகவும், தரம் குறைந்தவையாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், விரைவு விநியோக முறையில் செயல்படும் வணிகச் சேவைகளின் சேமிப்புக் கிடங்குகளில் கரப்பான் பூச்சிகள், எலிகள் மற்றும் அழுகிய காய்கறிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அத்துறையின் மீதும் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. </p><p>உணவு சந்தை அதிவேகமாக விரிவடைந்து வரும் சூழலில், நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உணவுப் பாதுகாப்புத் துறை இன்னும் கடுமையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>6 ஆண்டுகளுக்கு பிறகு லிபுலேக் கணவாய் திறப்பு :இந்தியா திபெத் இடையே மீண்டும் வர்த்தகம் தொடக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/six-years-lipulekh-pass-reopens-india-tibet-trade</link><comments>https://www.maalaimalar.com/news/national/six-years-lipulekh-pass-reopens-india-tibet-trade#comments</comments><guid isPermaLink="false">bf22dbf0-6f4d-46c6-aacc-49e446e25585</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:01:50 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:01:50.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,Trade,திபெத்,வணிகம்,லிபுலேக் கண்வாய்,Lipulekh</media:keywords><media:content height="480" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/romf7lng/newindianexpress2026-09-0818p30b9g131448417.avif" width="640"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India-Tibet border ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/romf7lng/newindianexpress2026-09-0818p30b9g131448417.avif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2>திறப்பு </h2><p>இந்தியா <a href="https://www.maalaimalar.com/news/world/tibet-glacier-collapse-disaster-chinese-researchers-shocking-report">திபெத் </a>இடையே லிபுலேக் கணவாய் வழியாக  வர்த்தகமானது மீண்டும் தொடங்கியுள்ளது. லிபுலேக் கணவாயானது 17,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் அமைந்திருக்கும் ஒரு வர்த்தகப்பாதை ஆகும். </p><h2>லிபுலேக் </h2><p>லிபுலேக் கணவாயானது 1962-ஆம் ஆண்டு இந்தியா-சீனா போருக்குப் பிறகு மூடப்பட்டது. அதன்பின்னர் 1992-ல் வர்த்தகம் மீண்டும் தொடங்கியது, பிறகு கோவிட் <a href="https://www.maalaimalar.com/news/world/man-who-plotted-to-hide-covid-pandemic-records-appears-in-us-court">பெருந்தொற்று </a>காரணமாக 2019-ல் மீண்டும் இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லை தாண்டிய வர்த்தகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. </p><h2>தக்லகோட்</h2><p>இந்த வழித்தடமானது திறக்கப்பட்டதை அடுத்து ஒன்பது  வர்த்தகர்கள் மற்றும் எட்டு உதவியாளர்கள் உட்பட 17 பேர் கொண்ட குழு தக்லகோட் பகுதிக்கு வரத்த்கத்திற்காக சென்றுள்ளது. குறிப்பாக தக்லகோட் பாரம்பரியமாகவே இமயமலையில் உள்ள வர்த்தக சமூகங்களை இணைக்கும் ஒரு முக்கிய  வணிக சந்தையாகும். இந்த  நிலையில் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வர்த்தகமானது மீண்டும் தொடங்கியுள்ளது.</p><h2>இறக்குமதி </h2><p>இந்திய வர்த்தகர்கள் பெரும்பாலும் மசாலாப் பொருட்கள், தேயிலை, வெல்லம், சர்க்கரை மிட்டாய், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றனர். </p><p>மேலும் கம்பளி, பஷ்மினா, யாக் முடி, ஆடைகள், காலணிகள் மற்றும் பிற உள்ளூர் தயாரிப்புகளை இறக்குமதி செய்து வருகின்றனர்.</p><h2>வாழ்வாதாரம் </h2><p>இந்த வழித்தடமானது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் தார்ச்சுலா மற்றும் அதன் அருகில் உள்ள எல்லை கிராமங்கள் புத்துயிர் பெறுவதோடு மட்டுமல்லாமல் வணிகர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், சுமைத்தூக்கும் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதரத்திற்கு இந்த வழித்தடதிறப்பு ஆதரவளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.17.29 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் - வங்கி மேலாளர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-currency-worth-rs-17-29-crore-seized-at-punjab-national-bank-manager-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-currency-worth-rs-17-29-crore-seized-at-punjab-national-bank-manager-arrested#comments</comments><guid isPermaLink="false">19aedd30-9f85-4002-bf38-4d1697a7d063</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:53:10 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:53:10.711Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fake currency,பஞ்சாப் நேஷனல் வங்கி,கள்ள நோட்டுகள்,Punjab National Bank</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/75d6z4bi/Untitled-design-44.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PNB fake currency racket]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/75d6z4bi/Untitled-design-44.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூபாய் 17.29 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை புலனாய்வு துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து அந்த வங்கியின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான மூன்று வங்கி ஊழியர்களுக்கு எதிராக அதிகாரிகள் தேடுதல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேசம்</a> மாநிலம் சஹாரன்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூபாய் 17.29 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். </p><p>இந்த விசாரணையில் கடந்த ஜூலை 6 அன்று, பணப் பரிமாற்ற வலையமைப்பு மூலம் சஹாரன்பூரிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கியின் ஜெய்ப்பூர் அலுவலகத்திற்கு ரூபாய் 111 கோடி ரொக்கம் அனுப்பப்பட்டுள்ளது. </p><h3>வங்கி மேலாளர் கைது</h3><p>பணத்தில் ரூ. 500 கள்ள நோட்டுகளைக் கொண்ட 1,900 கட்டுகளும், ரூ. 200 கள்ள நோட்டுகளைக் கொண்ட 800 கட்டுகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p>இந்த வழக்கில் பி.என்.பி வங்கியின் ஜகத்ரி கிளை மேலாளரான அமித் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.</p><p>இதைத்தொடர்ந்து சிரேஷ்ட கோட்ட மேலாளர் ரவி குமார் கான்சே மற்றும் சோபியா மார்க்கெட் பணப் பெட்டக மேலாளர் சுஷில் குமார் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</p><h3>அதிகாரிகள் சோதனை</h3><p>அதனைத் தொடர்ந்து, புலனாய்வுக் குழு அதிகாரிகள் மூன்று வங்கியின் மேலாளர்களின் இல்லங்களில் சோதனை நடத்தி, மின்னணு சாதனங்களையும் ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.</p><p>நேபாள எல்லைக்கு அருகிலோ அல்லது எல்லையை கடந்தோ செயல்படும் குழுக்களுடன், வங்கி மேலாளர்கள் மூவருக்கும் தொடர்பு இருந்ததா என்பதை அறிவதற்காக, அவர்களின் தொடர்புகளையும் நடமாட்டங்களையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.</p><h3><strong>வங்கி மேலாளர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்</strong></h3><p>இந்த நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட வங்கி மேலாளர்கள் நேபாளத்திற்கு தப்பி செல்லக்கூடும் என்பதால், அவர்களுக்கு எதிராக புலனாய்வு துறை அதிகாரிகள் தேடுதல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.</p><p>வங்கியின் பணப் பெட்டிக்குள் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள் எவ்வாறு புழக்கத்திற்குள் வந்தன என்பது குறித்தும், அவற்றில் சில பின்னர் முறையான வங்கி வழிமுறைகள் வழியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்க முடியுமா என்பது குறித்தும் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.9,825 கோடி நிதி திரட்டும் அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனம்: உலகளாவிய முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/adani-airports-raises-rs-9825-crore</link><comments>https://www.maalaimalar.com/news/national/adani-airports-raises-rs-9825-crore#comments</comments><guid isPermaLink="false">05d6bd69-7896-4d3a-8bcf-ac5f6a75022c</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:30:12 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:30:12.430Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமான நிலையம்,Adani Airports,அதானி ஏர்போர்ட்ஸ்,Airport Infrastructure,Adani Enterprises Ltd</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/1qxi83qt/Adani-Airports" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Adani Airports ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/1qxi83qt/Adani-Airports?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத் </a>மாநிலம் அகமதாபாத்தில் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், சர்வதேச மற்றும் உள்நாட்டு முன்னணி முதலீட்டாளர்களிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 9,825 கோடி) நிதியை முதன்மைப் பங்குகள் மூலம் திரட்டுவதற்கான இறுதி ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.</p><p>இந்த முதலீட்டாளரின் மூலம், அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>முதலீடு செய்யும் முன்னணி நிறுவனங்கள்</h2><p>டெமாசெக், பிளாக்ராக், ஆல்ஃபா வேவ் குளோபல் மற்றும் பிரேம்ஜி இன்வெஸ்ட் ஆகிய முக்கிய நிறுவனங்கள் அடங்கிய ஒரு முதலீட்டுக் கூட்டமைப்பு, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF">அதானி </a>ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தில் மூன்று கட்டங்களாக புதிய பங்குகளைப் பெறவுள்ளது. </p><p>இந்த முதலீட்டின் இறுதி கட்டம் ஜூலை 2027க்குள் நிறைவடைய உள்ள நிலையில், இதன் மூலம் அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தில் இந்த கூட்டமைப்பிற்கு மொத்தம் 5.54 சதவீத பங்குகள் கிடைக்கும்.</p><h2>இந்த நிதி எதற்காகப் பயன்படுத்தப்படும்?</h2><p>இதில் திரட்டப்படும் ரூ.9,825 கோடி நிதி மூன்று முக்கிய திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளது.</p><p> முதலாவதாக, ஆண்டுக்கு கிட்டத்தட்ட 20 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் விமான நிலைய உள்கட்டமைப்பை நவீனப்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் செய்தல்.</p><p>இரண்டாவதாக, <a href="https://www.maalaimalar.com/topic/international-airport">விமான நிலையங்களை</a> ஒட்டியுள்ள பகுதிகளில் முதற்கட்டமாக 22 மில்லியன் சதுர அடி பரப்பளவில் வணிக மற்றும் குடியிருப்பு பயன்பாட்டு இடங்களை உள்ளடக்கிய பிரம்மாண்ட அதானி ஏர்போர்ட் சிட்டி ரியல் எஸ்டேட் வளாகங்களை உருவாக்குதல்.</p><p>மூன்றாவதாக, தரைவழி கையாளுதல் மற்றும் விமானப் போக்குவரத்து அல்லாத இதர வணிக செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக இந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படும்.</p><h2>நிறுவனத்தின் முக்கியப் புள்ளிகள் கூறுவது என்ன?</h2><p>"இந்தக் கூட்டுத்தொழில் அதானி ஏர்போர்ட்ஸ் தளத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய மைல்கல். </p><p>இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை, நாட்டின் GDP வளர்ச்சிக்கு மிக முக்கியமான உந்துசக்தியாக உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் உலகின் முன்னணி ஒருங்கிணைந்த விமான நிலைய தளமாக நாங்கள் உருவெடுப்போம்."</p><p>"இந்திய நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்து வரும் வேளையிலும், நாட்டின் முக்கிய நகரங்களில் எங்களது நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தி வரும் சூழலிலும், அதானி ஏர்போர்ட்ஸை உலகின் மிகப்பெரிய விமான நிலைய தளமாக மாற்றுவதே எங்களது இலக்கு" என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் பன்சால் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீதிமன்ற உத்தரவை மீற எவ்வளவு தைரியம்?- கிரேட்டர் நொய்டா நீதிபதிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-raps-greater-noida-judge-for-defying-order-on-student-arrests</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-raps-greater-noida-judge-for-defying-order-on-student-arrests#comments</comments><guid isPermaLink="false">d843bc4a-a9e0-4e06-9a6c-2c94a0d4436f</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:28:20 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:28:20.563Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,Greater Noida,CJP,உச்சநீதிமன்ற நீதிபதி,Chief Justice Surya Kanth,கிரேட்டர் நொய்டா,தலைமை நீதிபதி சூரிய காந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/10h18cor/surya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Justice Surya Kanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/10h18cor/surya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இது தொடர்பாகக் கௌதம புத்தா நகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாக நீதிபதியிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.</p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்களுக்கு எதிராக எந்தவொரு கடுமையான அல்லது பிடியாணை நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் 1-ம் தேதி தெளிவான உத்தரவைப் பிறப்பித்திருந்தது. </p><p>இந்நிலையில், கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம புத்தா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவர் அக்ஷத் திரிபாதிக்கு ரூ.5 லட்சம் பிணைப்பத்திரம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தெளிவான உத்தரவையும் மீறிச் செயல்பட்ட கிரேட்டர் நொய்டா நிர்வாக நீதிபதியின் இந்த நடவடிக்கைக்கு இந்திய தலைமை நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வு மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><h2>நீதிமன்றத்<strong>தின் தடையை</strong>யும் மீறி அனுப்பப்பட்ட நோட்டீஸ்</h2><p>கௌதம புத்தா பல்கலைக்கழக மாணவர் அக்ஷத் திரிபாதி, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற 'காக்ரோச் ஜனதா கட்சி' அமைப்பின் போராட்டத்தில் மாணவர்களைப் பங்கேற்கத் தூண்டியதாகவும், அரசுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பியதாகவும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-pay-panel-consultation-over-3-5-million-central-govt-staff-may-benefit">நொய்டா </a>காவல்துறையினர் அறிக்கை அளித்திருந்தனர். இதன் அடிப்படையில், கிரேட்டர் நொய்டா நிர்வாக நீதிபதி செப்டம்பர் 4 அன்று நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அதில், அமைதியை நிலைநாட்ட ரூ.5 லட்சத்திற்கான தனிப்பட்ட பிணைப்பத்திரத்தையும், தலா ரூ.5 லட்சத்திற்கு இரு நபர் உத்தரவாதத்தையும் ஏன் வழங்கக் கூடாது என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.</p><p>இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஏற்கனவே அமலில் இருந்ததாலும், நொய்டா காவல்துறையின் விசாரணையில் அந்தத் தகவல் தவறானது என்றும், நோட்டீஸ் அனுப்பப்பட்ட காலத்தில் மாணவர் விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரில் இருந்தார் என்றும் தெரியவந்ததையடுத்து, அந்த நோட்டீஸ் அடுத்தநாளே திரும்பப் பெறப்பட்டது.</p><h2>தலைமை நீதி<strong>பதியின்</strong> சீற்றம்</h2><p>இந்த விவகாரத்தை மூத்த வழக்கறிஞர் பிஸ்வஜித் பட்டாச்சார்யா, தலைமை நீதிபதி சூரிய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் முறையிட்டார். மாணவர்கள் மீது எந்தவிதக் கட்டுப்பாடோ அல்லது சட்ட நடவடிக்கையோ எடுக்கக் கூடாது என்று செப்டம்பர் 1-ல் அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்ததை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர், இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்துவதோடு நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் வாதிட்டார்.</p><p>முறையீட்டைக் கேட்ட தலைமை நீதிபதி சூரிய காந்த், "எங்கள் உத்தரவை மீறி நோட்டீஸ் அனுப்ப ஒரு நீதிபதிக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? எந்தவொரு மாணவருக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நாங்கள் மிகத் தெளிவாகக் கூறியிருந்தோம். உச்சநீதிமன்ற உத்தரவை மீற எந்தவொரு நீதிபதிக்கும் அதிகாரமில்லை" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.</p><h2>விளக்கம் <strong>கேட்க உச்சநீதிமன்</strong>றம் முடிவு</h2><p>மாணவர் மீதான நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தெளிவாக இருந்தும் மாநில நிர்வாகம் இவ்வாறு செயல்பட்டது குறித்து அதிருப்தி வெளியிட்ட நீதிபதிகள், இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளனர். இது தொடர்பாகக் கௌதம புத்தா நகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாக நீதிபதியிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் நோட்டீஸின் நகலை நீதிமன்றப் பதிவேட்டில் தாக்கல் செய்யுமாறு மனுதாரரின் வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>5 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் 11-ம்தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/national/bank-employees-nationwide-strike-on-11th-demanding-five-day-workweek-and-various-demands</link><comments>https://www.maalaimalar.com/news/national/bank-employees-nationwide-strike-on-11th-demanding-five-day-workweek-and-various-demands#comments</comments><guid isPermaLink="false">e98000c2-3b38-4ec3-be7b-2e64b573e360</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:31:21 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:31:21.979Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வங்கி ஊழியர்கள்,Bank employees,Bank Employees Strike,வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்,Indian Banks&apos; Association,National Pension System</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/d0uobwc2/bank.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bank employees strike  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/d0uobwc2/bank.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. </p><p>வங்கிகளின் கூட்டமைப்பான 'யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்' (UFBU), வாரத்தில் 5 நாட்கள் வேலை மற்றும் ஊதிய சீரமைப்பு உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பர் 11-ம் தேதி நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தொழிலாளர் நலத்துறை மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடைபெற்ற சமரசப் பேச்சுகளி‌ல் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்த வங்கி ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.</p><h2>5 நாள் வ<strong>ங்கி வேலைத்திட்டம்</strong></h2><p>திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணியாற்றுவதற்கு ஊழியர்கள் ஒப்புக்கொண்ட நிலைகளிலும், அனைத்து சனிக்கிழமைகளுக்கும் விடுமுறை அளிக்கும் 5 நாள் <a href="https://www.maalaimalar.com/news/national/andhra-government-appoints-chiranjeevi-daughter-to-key-post">வங்கி வேலை</a> கோரிக்கை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.</p><h2>ஊக்கத்<strong>தொகை சீர</strong>மைப்பு</h2><p>அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் சமமான ஊக்கத்தொகை வழங்கும் பழைய முறையை மாற்றி, உயர் அதிகாரிகளுக்கு மட்டும் அதிக ஊக்கத்தொகை அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட பாகுபாடான புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. பயனாளிகளின் ஓய்வூதியத் தொகையை தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப உயர்த்துவதுடன், தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><h2>ஊக்க<strong>த்தொகை இடை</strong>நிறுத்தம்</h2><p>வங்கி சங்கங்களின் தொடர் எதிர்ப்பை அடுத்து, பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படவிருந்த செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை அறிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து வரவிருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ள போதிலும், 5 நாள் வேலை உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளில் தெளிவான அறிவிப்பு வராததால் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற போரட்டம் அழைப்பு விடுத்த அமைப்புகள் மறுத்துவிட்டன.</p><p>செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் செப்டம்பர் 28 முதல் 30 வரை தொடர்ந்து 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தமும், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் வார இறுதி விடுமுறை நாட்களால், பொதுத்துறை வங்கிகளில் காசோலை பரிவர்த்தனை மற்றும் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட நேரடி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டாவில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் விளம்பரங்கள்- மெட்டாவுக்கு சம்மன்</title><link>https://www.maalaimalar.com/news/national/instagram-child-sexual-abuse-ads-meta-summoned</link><comments>https://www.maalaimalar.com/news/national/instagram-child-sexual-abuse-ads-meta-summoned#comments</comments><guid isPermaLink="false">f6c50ab0-324d-4882-9d21-1584e9c7469a</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:26:42 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:26:42.056Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Instagram,Meta,Child abuse,பாலியல் துஷ்பிரயோகம்,இன்ஸ்டாகிராம்,மெட்டா சம்மன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/gv30dbmc/insta.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ META CEO (INDIA)]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/gv30dbmc/insta.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மெட்டா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் இன்று (புதன்கிழமை) நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.</p><p>இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தை உள்ளடக்கியதாக கூறப்படும் விளம்பரங்கள் தொடர்பாக மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் பெறுமாறு மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%8D" rel="nofollow">அஸ்வினி வைஷ்ணவ்</a> அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.</p><p>இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக மெட்டா நிறுவனத்திடம் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது.</p><p>இந்த விவகாரத்தில் மெட்டா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் இன்று (புதன்கிழமை) நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.</p><p>ஆன்லைன் தளங்கள் மூலம் குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் கிடைப்பதாகவும், அவை விளம்பரப்படுத்தப்படுவதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசு ஏற்கனவே மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கோரியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திர அரசாங்கத்தில் நடிகர் சிரஞ்சீவியின் மகளுக்கு கிடைத்த உயரிய பொறுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/andhra-government-appoints-chiranjeevi-daughter-to-key-post</link><comments>https://www.maalaimalar.com/news/national/andhra-government-appoints-chiranjeevi-daughter-to-key-post#comments</comments><guid isPermaLink="false">3c0b926b-f86d-4334-878e-f80c532901cd</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:55:22 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:55:22.234Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பவன் கல்யாண்,Chiranjeevi,ஆந்திர அரசு,நடிகர் சிரஞ்சீவி,ChandraBabu Naidu,Andhra Government,Konidela Sushmita,கொனிடெலா சுஷ்மிதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/bu57lmrj/cheeran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chiranjeevi-Konidela Sushmita ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/bu57lmrj/cheeran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல திரைப்பட நடிகரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான சிரஞ்சீவியின் மகளும் திரைப்பட தயாரிப்பாளருமான கொனிடெலா சுஷ்மிதாவுக்கு ஆந்திரப் பிரதேச அரசு முக்கியமான புதிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது.</p><p>விஜயவாடா இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சுவாமி வர்லா தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக சுஷ்மிதா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஆந்திர மாநில தேவாலய மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் கே.கன்ன பாபு இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>இந்த நியமனத்தின் மூலம் தேவஸ்தானத்தின் மேம்பாட்டுப் பணிகளிலும், பக்தர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் சுஷ்மிதா முக்கியப் பங்கு வகிப்பார். மேலும், கோயில் அறங்காவலர் குழுவிற்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் தனது அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனைகளை வழங்குவார். தொடர்ந்து, நவராத்திரி மற்றும் முக்கிய திருவிழாக்கள், ஜாத்திரை காலங்களில் கோயிலின் நிர்வாக நடவடிக்கைகளுக்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்கி உதவுவார்.</p><h2><strong>நன்றி தெரிவித்த </strong>சு<strong>ஷ்மிதா</strong></h2><p>தனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுஷ்மிதா, முதல்வர் <a href="https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-said-sri-lanka-a-close-friend-india-stands-by-it">என்.சந்திரபாபு நாயுடு</a> மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். கனக துர்க்கை அம்மனின் சேவையில் மிகுந்த பக்தியுடனும் நேர்மையுடனும் பணியாற்றுவேன் என அவர் உறுதி அளித்துள்ளார்.</p><h2>சிரஞ்<strong>சீவி குடும்பத்தி</strong>ன் ஆதிக்கம்</h2><p>சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திரைப்படத் துறை மட்டுமன்றி தெலுங்கு மாநிலங்களின் ஆன்மீக மற்றும் அரசியல் தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகின்றனர். சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். மற்றொரு சகோதரர் நாகபாபு சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார். </p><p>சிரஞ்சீவியின் மனைவி சுரேகா கொனிடெலா, சமீபத்தில் தெலங்கானாவில் உள்ள புகழ்பெற்ற யாதகிரி குட்டா லக்ஷ்மி நரசிம்ம சுவாமி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். திரைத்துறையில் ஆடை வடிவமைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றி நடைபோடும் சுஷ்மிதா கொனிடெலா, தற்போது ஆந்திர அரசு வழங்கியுள்ள இந்த ஆன்மீகப் பொறுப்பின் மூலம் பொதுவாழ்விலும் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமேசானில் மாதத்திற்கு சுமார் ரூ.4 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த பொறியாளர்</title><link>https://www.maalaimalar.com/news/national/engineer-quits-rs-4-lakh-amazon-job-joins-indian-army</link><comments>https://www.maalaimalar.com/news/national/engineer-quits-rs-4-lakh-amazon-job-joins-indian-army#comments</comments><guid isPermaLink="false">1fa84c6d-77af-4b5e-90fd-6b1d8c43f531</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:46:55 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:46:55.731Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமேசான்,Amazon,software engineer,Indian Army officer,இந்திய ராணுவ அதிகாரி,பொறியாளர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/v7j8s2uk/Untitled-design-41.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Engineer Tiwari joined Indian Army]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/v7j8s2uk/Untitled-design-41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர், அமேசான் நிறுவனத்தில் மாதம் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கி கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த வேலையை விட்டுவிட்டு இந்திய ராணுவ பணியில் சேர்ந்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேசம்</a> மாநிலம் லக்னோவை பூர்வீகமாக கொண்ட 27 வயதான திவாரி தனது பள்ளிப்படிப்பை கேந்திரியா வித்யாலயாவில் முடித்துவிட்டு, பின்னர் சண்டிகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். </p><p>இதையடுத்து வருடத்திற்கு சுமார் 46 லட்சம் ரூபாய் சம்பளத்தில் அமேசான் கிளவுட் நிறுவனத்தில் அவர் பொறியாளராக பணியில் சேர்ந்தார். </p><h3><strong>திவாரியின் தந்தை</strong></h3><p>திவாரியின் தந்தையான ராஜ் குமார் திவாரி, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">இந்திய ராணுவத்தில்</a> 36 ஆண்டுகள் பணியாற்றினார். சிறுவயதில் இருந்தே தனது தந்தையை பார்த்து வளர்ந்த திவாரிக்கு, ஆயுத படையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.</p><p>திவாரியை பொறுத்தவரை அதிக வருமான தரும் ஒரு பணியை விட, ஒழுக்கம், தியாகம் மற்றும் சேவை ஆகியவற்றில் ஈடுபடும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணமே அதிகாக இருந்துள்ளது.</p><p>இதன்காரணமாக இவர் தனது பொறியாளர் வேலையை விட்டுவிட்டு, விண்வெளி துறையின் முன்னணி நிறுவனமான ஏர்பஸ்ஸால்-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p>இருப்பினும் இந்திய ராணுவத்திற்கு அதிகாரியாக சேர்வதற்காக, திவாரி மேற்கொண்ட முயற்சிகள் முதலில் தோல்வியடைந்தன.</p><h3>பீகார் அதிகாரிகள் பயிற்சி மையம்</h3><p>இறுதியில் பீகார் மாநிலம் கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில், திவாரி ராணுவ அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மூத்த துணை அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார்.</p><p>திவாரியை பொறுத்தவரையில் வெற்றி என்பது எப்போதுமே சம்பளத்தின் அளவை கொண்டு அளவிடப்படாமல், உண்மையிலேயே தனது மனது விரும்பும் ஒன்றை துரத்திச் செல்வதில் தான் இருக்கிறது என்பதை உணர்த்துவதாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒடிசா வனப்பகுதியில் 5 அரிய வகை ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு: வனவிலங்கு கடத்தல் கும்பலின் சதியா?</title><link>https://www.maalaimalar.com/news/topnews/odisha-forest-rescue-raises-orangutan-trafficking-suspicions</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/odisha-forest-rescue-raises-orangutan-trafficking-suspicions#comments</comments><guid isPermaLink="false">04e987cb-32e1-4b0b-8cd0-9fb9592f708f</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:06:02 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:06:02.394Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,orangutan infants,Orangutans,Odisha forest,ஒடிசா வனப்பகுதி,ஒராங்குட்டான்,ஒராங்குட்டான் குட்டிகள்,பாலசோர் மாவட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/rpzk2cqq/korangu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ orangutan infants]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/rpzk2cqq/korangu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>வனத்துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சட்டவிரோத சர்வதேச கடத்தல் கும்பல் மூலம் கப்பல் அல்லது வாகனங்கள் வாயிலாக இவை கொல்கத்தா வழியே கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. </p><p>ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் போகராய் பகுதியில் உள்ள ரணகதா வனப்பகுதியில், மரக்கிளைகளில் ஐந்து சிறிய விலங்குகள் தாவி விளையாடுவதை அப்பகுதி கிராம மக்கள் கண்டனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. </p><p>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், மீட்புப் பணிகளை மேற்கொண்டு அந்த 5 விலங்குகளையும் பாதுகாப்பாக மீட்டனர். அப்போதுதான் மீட்புக் குழுவினருக்கு அந்த பேரதிர்ச்சி காத்திருந்தது. மீட்கப்பட்ட ஐந்து விலங்குகளும் இந்திய காடுகளில் காணப்படாத அரிய வகை '<a href="https://www.maalaimalar.com/news/national/corporations-new-initiative-free-distribution-of-133-lakh-clay-idols">ஒராங்குட்டான்</a>' குட்டிகள் என்பது தெரியவந்தது.</p><h2>தென்கி<strong>ழக்கு ஆசியா</strong>வின் பூர்வீகம்</h2><p>ஒராங்குட்டான்கள் இந்தியாவில் இயற்கையாக வாழும் உயிரினம் அல்ல. இவை இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அடர்ந்த மழைக்காடுகளை மட்டுமே பூர்வீகமாகக் கொண்டவை. இவை தானாக வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைய எவ்வித இயற்கை வழியோ அல்லது வனப்பாதை இணைப்போ கிடையாது. சர்வதேச அளவில் மிகக் கடுமையாக அழிவின் விளிம்பில் உள்ள இந்த உயிரினங்கள், சர்வதேச வனவிலங்கு கடத்தல் கும்பல் மூலம் கடல் வழியாகக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பலமான சந்தேகம் எழுந்துள்ளது.</p><h2>போலீஸ் சோ<strong>தனைக்கு அஞ்சி</strong> கைவிடப்பட்டதா</h2><p>வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், சட்டவிரோத சர்வதேச கடத்தல் கும்பல் மூலம் கப்பல் அல்லது வாகனங்கள் வாயிலாக இவை கொல்கத்தா வழியே கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. </p><p>தேசிய நெடுஞ்சாலை 16-க்கு அருகே இவை மீட்கப்பட்டுள்ளதால், சோதனைச் சாவடிகள் அல்லது காவல்துறையின் தீவிர ரோந்து பணிக்கு அஞ்சிய கடத்தல்காரர்கள், பிடிபடாமல் தப்பிப்பதற்காக இந்த குட்டிகளை வனப்பகுதியில் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பன்னாட்டுச் சந்தையில் ஒரு ஒராங்குட்டான் குட்டியின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்பதால், பெரிய அளவிலான சட்டவிரோத நெட்வொர்க் இதன்பின்னால் இயங்கி வரலாம்.</p><h2>நந்தன்கானன் உ<strong>யிரியல் பூங்கா</strong>வுக்கு மாற்றம்</h2><p>மீட்கப்பட்ட 5 ஒராங்குட்டான் குட்டிகளில் 2 பெண் மற்றும் 3 ஆண் குட்டிகள் அடங்கும். வனத்துறை கால்நடை மருத்துவக் குழு உடனடியாக அவற்றுக்கு உடல் பரிசோதனை மேற்கொண்டு, பழங்கள் மற்றும் நீர்ச்சத்து பானங்களை வழங்கி பராமரித்து வருகிறது. நான்கு குட்டிகள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள நிலையில், ஒரு குட்டிக்கு நீர்ச்சத்து குறைபாடு காரணமாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்காலிகப் பராமரிப்பிற்குப் பிறகு, இந்த ஐந்து குட்டிகளும் புபனேஸ்வரில் உள்ள புகழ்பெற்ற 'நந்தன்கானன் உயிரியல் பூங்காவிற்கு' கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் வைக்கப்பட உள்ளன.</p><p>இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஒடிசா மாநில வனத்துறை மத்திய வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டுப் பிரிவின் உதவியை நாடியுள்ளது. மாநில வனத்துறையின் சிறப்புப் படையும், WCCB அதிகாரிகளும் இணைந்து சர்வதேச கடத்தல் கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் வேறு ஏதேனும் அரிய வகை விலங்குகள் கைவிடப்பட்டுள்ளதா என்பதை அறிய வனப்பகுதியில் தேடுதல் வேட்டையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>1.33 லட்சம் களிமண் சிலைகள் இலவசமாக விநியோகம்- மாநகராட்சி புதிய முயற்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/corporations-new-initiative-free-distribution-of-133-lakh-clay-idols</link><comments>https://www.maalaimalar.com/news/national/corporations-new-initiative-free-distribution-of-133-lakh-clay-idols#comments</comments><guid isPermaLink="false">f3ae0987-4736-4786-b6e9-294e7117a9e5</guid><pubDate>Wed, 09 Sep 2026 04:36:57 +0000</pubDate><atom:updated>2026-09-09T04:36:57.833Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,Vinayagar statue,விநாயகர் சிலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/c2xr0yh8/vinayagar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ களிமண் சிலைகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ களிமண் சிலைகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/c2xr0yh8/vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>1.33 லட்சம் களிமண் சிலைகளில், 53,000 சிலைகள் ஒரு அடி உயரமும், 80 ஆயிரம் சிலைகள் 8 அங்குல உயரமும் கொண்டவை.</strong></em> </p><p>நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/விநாயகர்-சதுர்த்தி">விநாயகர் சதுர்த்தி</a> பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஐதராபாத் மாநகரப் பகுதியில் நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் ஐதராபாத் மாநகரப் பகுதியில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) மற்றும் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளுக்குப் பதிலாக, களிமண் சிலைகளை நிறுவ வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><h2><strong>இலவசமாக விநியோகம்</strong></h2><p>இதன் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் நலன் கருதி இன்று முதல் மாநகரவாசிகளுக்கு 1.33 லட்சம் களிமண் விநாயகர் சிலைகள் இலவசமாக விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>களிமண் விநாயகர் சிலைகளை விநியோகிப்பதற்காக, நகரம் முழுவதும் 34 பகுதிகளில் அதிகாரிகள் சிறப்பு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p>1.33 லட்சம் களிமண் சிலைகளில், 53,000 சிலைகள் ஒரு அடி உயரமும், 80 ஆயிரம் சிலைகள் 8 அங்குல உயரமும் கொண்டவை. களிமண் சிலைகள் இலவசமாக விநியோகிக்கப்படுவதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இலங்கை நெருக்கமான நட்பு நாடு, இந்தியா அதற்கு துணை நிற்கிறது - அமைச்சர் ராஜ்நாத் சிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-said-sri-lanka-a-close-friend-india-stands-by-it</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-said-sri-lanka-a-close-friend-india-stands-by-it#comments</comments><guid isPermaLink="false">6426cda7-6d03-4e85-a1cf-bbd676f774a1</guid><pubDate>Tue, 08 Sep 2026 23:47:26 +0000</pubDate><atom:updated>2026-09-08T23:47:26.541Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,இலங்கை,Sri Lanka,Rajnath Singh,ராஜ்நாத் சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/cwurrsrm/Rajnath-Singh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajnath Singh ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/cwurrsrm/Rajnath-Singh.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய நண்பர்கள் என்றும், அந்தத் தீவு நாடு நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா எப்போதும் இலங்கையுடன் உறுதியாக நிற்கும் என்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/rajnath-singh">ராஜ்நாத் சிங்</a> கொழும்பில் தெரிவித்தார்.</p><p>இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ராஜ்நாத் சிங், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு பாதுகாப்பு மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்காக <a href="https://www.maalaimalar.com/topic/sri-lanka">இலங்கை</a> சென்ற முதல் இந்திய பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 1988-இல் இதுபோன்ற பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கை சென்ற பாதுகாப்பு அமைச்சர் கே.சி. பந்த் ஆவார். </p><h2>உறுதியுடன் இருக்கிறோம்:</h2><p>"இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, பகிரப்பட்ட வரலாறு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம், மேலும் இரு நாடுகளின் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியுடன் இருக்கிறோம்," என்று ராஜ்நாத் சிங் கூறினார்.</p><p>இரு நாடுகளும் நெருங்கிய கலாச்சார மற்றும் நாகரிகப் பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், அவை இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளன என்றும் அவர் கூறினார். வலுவான பிராந்திய கூட்டணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், "இங்கு வந்த பிறகு நான் ஒரு சொந்த உணர்வை அனுபவிக்கிறேன்," என்றார்.</p><p>இந்தியாவின் விரிவடைந்து வரும் உலகளாவிய செல்வாக்கையும் பொருளாதார வலிமையையும் அவர் எடுத்துரைத்ததோடு, புலம்பெயர்ந்த இந்தியர்கள் ஆற்றிய பணிகளையும் பாராட்டினார்.</p><p>கொழும்பு புறப்படுவதற்கு முன்பு, ராஜ்நாத் சிங் எக்ஸ் தளத்தில், "எங்களின் நீண்டகாலக் கூட்டாண்மை மற்றும் ஆழமான வரலாற்று, நாகரிக தொடர்புகளுக்கு அப்பால், 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' மற்றும் 'மகாசாகர்' ஆகிய முன்னெடுப்புகளின் கீழ் இலங்கை எங்களின் மிக முக்கியமான பங்காளிகளில் ஒன்றாகும்" என்று பதிவிட்டார்.</p><h2>இந்திய பொருளாதார வளர்ச்சி:</h2><p>வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே உரையாற்றிய ராஜ்நாத் சிங், இந்தியாவின் விரைவான பொருளாதார மாற்றத்தை எடுத்துரைத்து, உலகின் அதிவேகமாக வளரும் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும், உலகளாவிய வளர்ச்சிக்கு 16% க்கும் அதிகமாகப் பங்களிப்பதாகவும் கூறினார்.</p><p>2014-இல் 2 டிரில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் பொருளாதாரம், கடந்த பத்தாண்டுகளில் இரட்டிப்பாகி, 4 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா தற்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/former-delhi-chief-secretary-rakesh-mehta-commits-suicide</link><comments>https://www.maalaimalar.com/news/national/former-delhi-chief-secretary-rakesh-mehta-commits-suicide#comments</comments><guid isPermaLink="false">8a8d3e9c-2ead-4579-ab75-0238951bc92e</guid><pubDate>Tue, 08 Sep 2026 17:07:41 +0000</pubDate><atom:updated>2026-09-08T17:07:41.671Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,suicide,delhi,டெல்லி,Rakesh Mehta,ராகேஷ் மேத்தா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/zlfo3pkg/rakesh-mehta.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rakesh Mehta]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/zlfo3pkg/rakesh-mehta.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் ஆட்சிக்காலத்தில் பணியாற்றிய டெல்லியின் முன்னாள் தலைமை செயலாளர் ராகேஷ் மேத்தா, நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>1975-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராகேஷ் மேத்தா, தான் எடுத்த இந்த தீவிர முடிவுக்கு "மனநலம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள்" தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்த தற்கொலை குறிப்பு ஒன்றை <a href="https://www.maalaimalar.com/news/national">நொய்டா</a> போலீஸார் கைப்பற்றினர். </p><h2>முக்கிய திட்டங்களில் ராகேஷ் மேத்தா பங்கு:</h2><p>செப்டம்பர் 6-ஆம் தேதி நொய்டாவின் செக்டார் 82-ல் உள்ள அவரது இல்லத்தில், அவர் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.</p><p>74 வயதான மேத்தா, தீட்சித்தின் பதவிக்காலத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக டெல்லியின் தலைமை செயலாளராக பணியாற்றினார். இவரது பதவிக்காலத்தில் தான் 2010-இல் டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.</p><h2>டெல்லி மாநகராட்சி ஆணையராக ராகேஷ் மேத்தா:</h2><p>நகரின் முக்கிய போக்குவரத்து, மின்சாரம் மற்றும் குடிமை உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தியதில் மேத்தாவுக்கு முக்கிய பங்கு இருந்தது.</p><p>டெல்லி அரசில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், டெல்லி மாநகராட்சியின் (MCD) ஆணையராகவும் பணியாற்றியதாக அவரது முன்னாள் சக ஊழியர்கள் தெரிவித்தனர். இவர் 2007-இல் தலைமை செயலாளராக பொறுப்பேற்று, 2010 நவம்பரில் ஓய்வு பெற்றார். திங்களன்று லோதி சாலை தகன மையத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>பண மோசடி வழக்கு: பினராயி விஜயன், அவரது மகள் மீது FIR பதிவு செய்ய கேரளம் டிஜபி-க்கு ED கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/cmrl-case-ed-writes-to-keralam-dgp-seeking-fir-against-ex-cm-vijayan-daughter-and-son-in-law</link><comments>https://www.maalaimalar.com/news/national/cmrl-case-ed-writes-to-keralam-dgp-seeking-fir-against-ex-cm-vijayan-daughter-and-son-in-law#comments</comments><guid isPermaLink="false">f5ac964d-deb9-47c3-b3e8-5f09e6175b88</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:40:13 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:40:13.026Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பினராயி விஜயன்,Pinarayi Vijayan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/bnf0svei/Pinarayivijayan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வீணா- பினராயி விஜயன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/bnf0svei/Pinarayivijayan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன். இவரது மகள் வீணா. இவரது ஆட்சிக் காலத்தில் கேரளாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனமான கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் (CMRL), தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் என்ற பெயரில் வீணாவின் நிறுவனமான எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் (Exalogic Solutions) நிறுவனத்திற்கு 2.78 கோடி ரூபாய் மதிப்பிலான முறையற்ற பணப் பரிமாற்றங்களை செய்ததாக அமலாக்கத் துறை (ED) குற்றம் சாட்டியுள்ளது.</p><h2>FIR பதிவு செய்ய டிஜிபிக்கு கடிதம்</h2><p>வீணாவின் நிறுவனம், போலியான பண பரிமாற்றங்களை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு கார்ப்பரேட் கருவி (corporate vehicle) என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலையில் விசாரணை அடிப்படையில் பணமோசடி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதனால் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் உள்பட 13 பேர் மீது FIR பதிவு செய்ய வேண்டும் என கேரளம் DGP-க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.</p><p>கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் நிறுவனத்திற்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் வழங்கியது எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம். இதற்காக CMRL நிறுவனத்தில் இருந்து 2.78 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் (தற்போது இல்லை) பினராயி விஜயன் மகள் வீணா தொடங்கியது. அரசு பணத்தை முறைகேடாக பெறுவதற்காக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட பணம், முறைகேடாக துபாய்க்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.</p><p>இது தொடர்பாக அமலாக்கத்துறை பல இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது பண மோசடிக்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தது. அதேவேளையில், தங்கள் கைகள் சுத்தமானவை என்று கேரளம் முதல்வர் பினராயி விஜய் தெரிவித்திருந்தார்.</p><p>FIR பதிவு செய்ய அமலாக்கத்துறை DGP-க்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், "எங்கள் தரப்பில் எந்த தவறும் நடக்கவில்லை. எந்த வகையான விசாரணையையும் நடத்தலாம் என்று சிபிஐ(எம்) தலைவர் பி.ஏ. முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் போலி அடையாள அட்டை, துப்பாக்கியுடன் வந்த வாலிபர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-id-gun-youth-arrested-at-pm-modi-event</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-id-gun-youth-arrested-at-pm-modi-event#comments</comments><guid isPermaLink="false">663fc79d-cca8-43b9-8341-f6abd8c91605</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:07:21 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:07:21.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,Prime Minister Modi,mumbai,பிரதமர் மோடி.,Bandra Kurla,மகாராஷ்டிர மாநிலம்,மும்பை பாந்த்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y4sbyvs8/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Prime Minister Modi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y4sbyvs8/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி, துப்பாக்கியுடன் நுழைய முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p><p>மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/people-of-manipur-suffering-both-within-and-outside-state-under-modi-sarkar-kharge">நீதா முகேஷ் அம்பானி</a> கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதமர் வருகையை முன்னிட்டு அந்தப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும், தீவிரக் கண்காணிப்பும் போடப்பட்டிருந்தது.</p><h2>போ<strong>லி அடையாள அட்</strong>டை</h2><p>நிகழ்ச்சி வளாகத்தின் நுழைவுப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிரச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, 24 வயதான ரோஹன் பாரேக் என்ற இளைஞர் உள்ளே செல்ல முயன்றார். அவர் தன்னை 'பிரதமர் அலுவலக அதிகாரி' என அறிமுகப்படுத்திக் கொண்டு அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார். ஆனால், சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரது அடையாள அட்டையைத் தீவிரமாகப் பரிசோதித்தபோது, அது முற்றிலும் போலி என்பது தெரியவந்தது.</p><h2>துப்பாக்கி<strong>யுடன் சிக்கிய</strong> பாதுகாவலர்</h2><p>ரோஹன் பாரேக் தனியாக வரவில்லை; அவருடன் ஒரு தனியார் பாதுகாவலரும் வந்திருந்தார். சோதனையின் போது அந்தப் பாதுகாவலரிடமிருந்து ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரையும் உடனடியாகக் கைது செய்த காவல்துறையினர், அவர்களை பாந்த்ரா குர்லா வளாக காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.</p><h2>போலீசார் தீ<strong>விர விசார</strong>ணை</h2><p>பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி, துப்பாக்கியுடன் நுழைய முயன்றதன் பின்னணியில் என்ன திட்டம் இருந்தது என்பது குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் போர், புதிய அணுமின் நிலையம், ஆயுதம் கொள்முதல்: புதின்- பிரதமர் மோடி பேசப்போவது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/russia-will-welcome-indias-efforts-toward-peaceful-resolution-of-ukraine-conflict-peskov</link><comments>https://www.maalaimalar.com/news/national/russia-will-welcome-indias-efforts-toward-peaceful-resolution-of-ukraine-conflict-peskov#comments</comments><guid isPermaLink="false">60e73132-cbfe-4979-9065-6502bd35cba3</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:42:36 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:42:36.056Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Putin,புதின்,உக்ரைன் ரஷியா போர்,ukraine russia war,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/us7f9ts2/PutinModi001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரஷிய அதிபர் புதின்- பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/us7f9ts2/PutinModi001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>இந்தியாவில் வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 18-வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு பாரத் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொள்கிறார். மாநாட்டிற்கிடையே, இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.</p><p>இது தொடர்பாக ரஷிய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தெரியும். அது பெருமளவுக்கு எங்கள் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. ஏனெனில், உக்ரைன் விவகாரத்திற்கு அமைதியான வழிகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம்.</p><h2>புதிய அணுமின் நிலையம்</h2><p>புதிய அணுமின் நிலையங்களை அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா காத்திருக்கிறது. Su-57 ரக விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதும் நிகழ்ச்சி நிரலில் உள்ளது.</p><p>இவ்வாறு பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்கா 100 சதவீதம் வரி எச்சரிக்கை</h2><p>மேலும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, அமெரிக்காவின் அறிவிப்பு சட்டவிரோதம் மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சபாநாயகருக்கு எதிராக இழிவான பேச்சு: இரண்டு எம்.எல்.ஏ.-க்கள் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/two-brs-mlcs-held-over-alleged-remarks-against-telangana-assembly-speaker</link><comments>https://www.maalaimalar.com/news/national/two-brs-mlcs-held-over-alleged-remarks-against-telangana-assembly-speaker#comments</comments><guid isPermaLink="false">bd0b34b2-f2e6-405f-94a8-35cf1f479757</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:59:21 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:59:21.047Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Telangana,தெலங்கானா,சபாநாயகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/1kia4hs0/Telangana001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தெலங்கானா சபாநாயகர் கதம் பிரசாத் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/1kia4hs0/Telangana001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநில சட்டசபைக்குள் நேற்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.-க்கள் நுழைய முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பி.ஆர்.எஸ். மேலவை எம்.எல்.ஏ.-க்கள் தத்தா மதுசூதன் மற்றும் நவீன் குமார், சபாநாயகர் கதம் பிரசாத் குமாருக்கு எதிராக இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக தெரிகிறது.</p><p>இது தொடர்பாக சட்டசபை சபாநாயகருக்கான சிறப்புப் பணி ஆதிகாரி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் இரண்டு எம்.எல்.ஏ.-க்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p>அவர்கள் (இரண்டு BRS சட்டமன்ற உறுப்பினர்கள்) சபாநாயகரின் நேர்மை, அதிகாரம் மற்றும் அரசியலமைப்பு ரீதியான நடத்தையை பகிரங்கமாக கேள்விக்குட்படுத்தியுள்ளனர். சமூகப் பின்னணி மற்றும் அரசியலமைப்புப் பாத்திரத்தின் காரணமாக அவரை அவமானப்படுத்தவும், இழிவுபடுத்தவும், தரக்குறைவாக நடத்தவும், அவரது தனிப்பட்ட மற்றும் சமூக அந்தஸ்தைக் குறைக்கவும் திட்டமிட்ட சொற்களை வேண்டுமென்றே பயன்படுத்தினர் என புகாரில் கூறப்பட்டிருந்தது.</p><h2>சபாநாயகர் கதம் பிரசாத் குமார்</h2><p>நேற்று தலித் தலைவரான சபாநாயகர் கதம் பிரசாத் குமாருக்கு எதிராக இருவரும் இழிவுப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது பெரிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இரண்டு பேரின் கருத்து 4 கோடி மக்களை இழிவுப்படுத்துவதாகும் என்றார். என்றாலும், இருவரும் சபாநாயருக்கு எதிராக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்று தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடியின் இயலாமையால் மணிப்பூர் மக்கள் மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவதிப்படுகிறார்கள்: கார்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/people-of-manipur-suffering-both-within-and-outside-state-under-modi-sarkar-kharge</link><comments>https://www.maalaimalar.com/news/national/people-of-manipur-suffering-both-within-and-outside-state-under-modi-sarkar-kharge#comments</comments><guid isPermaLink="false">a55dc196-cc8d-49db-b062-acaffe35197b</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:36:51 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:36:51.376Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கார்கே,Kharge,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/n2o7uggc/Kharge001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கார்கே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/n2o7uggc/Kharge001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மணிப்பூரை சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் சோங்தம் விக்ரம் சிங், டெல்லியில் ஒரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான கார்கே, பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.</p><p>இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவியில் கூறியிருப்பதாவது:-</p><p>மோடி அரசின் "இயலாமை" காரணமாக மணிப்பூர் மக்கள் மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் துன்பத்திற்கு ஆளாகியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார். </p><h2>மணிப்பூர் இசைக்கலைஞர் கொலை</h2><p>மணிப்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் சோங்தம் விக்ரம் சிங் ஒரு கும்பலால் இரக்கமின்றி அடித்துக் கொல்லப்பட்டது, பாஜக ஆட்சியின் கீழ் நிலவும் முழுமையான சட்டமின்மையை நினைவூட்டும் மற்றொரு அதிர்ச்சிகரமான நிகழ்வாகும்.</p><p>மாணவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். பெண்கள் தினமும் கொடுமைகளை எதிர்கொள்கின்றனர். வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த மக்கள் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர்.</p><h2>டெல்லி குற்றங்களின் தலைநகராக மாறியுள்ளது</h2><p>உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கண்காணிப்பில், டெல்லி குற்றங்களின் தலைநகராக மாறியுள்ளது. தேசிய தலைநகரில் குற்றங்கள் மிக அதிக அளவில் நடைபெறுவதை என்சிஆர்பி (NCRB) ஆண்டுதோறும் பதிவு செய்து வருகிறது.</p><p>அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மோடி அரசின் இயலாமை காரணமாக மணிப்பூர் மக்கள் தங்கள் மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவதிப்படுகின்றனர்.</p><p>இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்</p><p>டெல்லியில் வீட்டிற்கு வெளியே மது அருந்தியபடி சத்தம் எழுப்பியதை தட்டிக்கேட்டதால் மணிப்பூர் இசைக்களைஞர் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் குரல் அல்ல, பொய்களின் சூழ்ச்சி: காங்கிரசை கிண்டல் செய்த பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-mocks-congress-chhatron-ki-goonj-campaign-dubs-it-jooth-ki-goonj</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-mocks-congress-chhatron-ki-goonj-campaign-dubs-it-jooth-ki-goonj#comments</comments><guid isPermaLink="false">65a39026-bb1b-4ae9-bd84-44dfeafcd82e</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:56:26 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:56:26.963Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/8vbefhg0/RahulGandhi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi- PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/8vbefhg0/RahulGandhi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலம் வதோதராவில் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பல்வேறு திட்டங்களை திறந்து வைத்ததுடன், அடிக்கல் நாட்டினார்.</p><h2>அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-</h2><p>எல்லா இடங்களிலும் பொய்யான சூழ்ச்சி மூலம் உங்களை திசை திருப்ப முயற்சிக்கும் மனிதர்களைக் காண்பீர்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் உண்மையின் பக்கம் நிற்பார்கள்.</p><p>நாட்டின் இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் நிபுணர்களாக மாற வேண்டும். அவர்கள் இத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.</p><p>சூரிய சக்தி, காற்றாலை, நீர் மின்சாரம் மற்றும் அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுவதில் அரசாங்கம் எவ்வளவு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்பதை இளைஞர்களால் காண முடிகிறது.</p><p>இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.</p><h2>ராகுல் காந்தியின் மாணவர்கள் குரல் பிரசாரம்</h2><p>காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மாணவர்களின் குரல் (Chhatron Ki Goonj) என்ற பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். வினாத்தாள் கசிவு, மாநில வேலைவாய்ப்பு தேர்வில் உள்ள முறைகேடு தொடர்பாக முக்கிய நகரங்களில் உள்ள இளைஞர்களை சந்தித்து உரையாடி வருகிறார்.</p><p>இந்த நிலையில்தான் பிரதமர் மோடி இவ்வாறு கிண்டல் செய்துள்ளார். அதேவேளையில் ராகுல் காந்தியின் முன்னெடுப்பை கண்டு பாஜக அஞ்சுகிறது என்று காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: சத்தம் எழுப்பியதை தட்டிக்கேட்ட பிரபல மணிப்பூர் இசைக்கலைஞர் டெல்லியில் அடித்துக் கொலை - 8 பேர் கைது 
</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-manipuri-musician-beaten-to-death-after-objecting-to-noise-8-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-manipuri-musician-beaten-to-death-after-objecting-to-noise-8-arrested#comments</comments><guid isPermaLink="false">291a463a-9576-4776-bf06-f35f99997efa</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:43:06 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:43:06.243Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை,இசைக்கலைஞர்,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/0ng51qin/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விக்ரம் சிங்]]></media:title><media:description type="html"><![CDATA[ விக்ரம் சிங்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/0ng51qin/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் மணிப்பூரை சேர்ந்த கிட்ட்டார் இசைக்கலைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/manipur">மணிப்பூரை  </a>சேர்ந்த 55 வயது விக்ரம் சிங், கடந்த 17 ஆண்டுகளாக டெல்லியில் தங்கித் இசை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். </p><p>தென்கிழக்கு <a href="https://www.maalaimalar.com/news/national/1133-buildings-collapsed-and-98-people-lost-their-lives-in-delhi-over-three-years-residents-living-in-fear">டெல்லியின் </a>கிலோகரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 3வது தளத்தில் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். </p><p>நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11:30 மணியளவில் குப்பைகளை கொட்டுவதற்காக விக்ரம் சிங் வீட்டின் 3ஆம் தளத்திலிருந்து கீழே இறங்கியுள்ளார். </p> <h2>தாக்குதல்</h2><p>அப்போது அருகில் உள்ள தாபா உணவகங்களில் பணியாற்றும் சிலர் அவர் குடியிருக்கும் கட்டிடத்தின் வெளியே உரக்கச் சத்தமிட்டு குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர்.</p><p>அவர்களின் இந்த செயலை விக்ரம் சிங் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் அவருடன் தகராறில் ஈடுபட்டது.</p><p>அவர்கள் தாக்க முயன்றதால் பயந்துபோன விக்ரம் சிங் தனது வீட்டை நோக்கி ஓடியபோது, அக்கும்பல் அவரை 3வது தளம் வரை துரத்திச் சென்று, காரிடாரில் வைத்து சரமாரியாக தாக்கிவிட்டுத் தப்பியோடியது.</p><h2>உயிரிழப்பு</h2><p>காயமடைந்த விக்ரம் சிங்கை அவருடைய குடும்பத்தினர் ஓக்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><p>ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்தார்.</p> <h2>கைது</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட பரத் குமார் (19), பிரமோத் (26), ரம்ஜான் கான் (22), விஜய் (36), தீபன்ஷு (21), மோகன் விஸ்வகர்மா (32), மன்னு (26) ஆகிய 7 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஒரு 15 வயது சிறுவனும் பிடிபட்டுள்ளான்.</p> <h2>போராட்டம்</h2><p>இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் டெல்லியில் வாழும் நூற்றுக்கணக்கான வடகிழக்கு மாநில மக்கள் கிலோகரி பகுதியில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் நடத்தினர்.</p> <p>மணிப்பூர் முன்னாள் முதல்வர் பைரன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், "இசைக்கலைஞர் விக்ரம் சிங்கின் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>டெல்லி காவல்துறை இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டுத் தீவிர விசாரணை நடத்தி, விரைந்து நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Deeply saddened by the tragic passing of renowned Manipuri guitarist and Western music pioneer, Shri Chongtham Vikram Singh, and deeply concerned by the incident in which he was allegedly assaulted near his residence in southeast Delhi. <br><br>Shri Vikram Singh’s invaluable… <a href="https://t.co/MH49Pcdh8A">pic.twitter.com/MH49Pcdh8A</a></p>&mdash; N. Biren Singh (@NBirenSingh) <a href="https://x.com/NBirenSingh/status/2096952980566376849?ref_src=twsrc%5Etfw">September 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>யார் இந்த விக்ரம் சிங்?</h2><p>மணிப்பூரின் இம்பால் மேற்குப் பகுதியை சேர்ந்த விக்ரம் சிங், மணிப்பூரின் பல முன்னணி இசைக்குழுக்களில் முதன்மை கிட்டார் கலைஞராகப் பணியாற்றியுள்ளார்.</p><p>கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லிக்கு இடம்பெயர்ந்த அவர், அங்குத் தனியாக இசைப்பள்ளி ஒன்றை நிறுவி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார். </p> <p>பல இசைக்கச்சேரிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.</p><p>விக்ரம் சிங் பாரம்பரியமான கலைக் குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரது தாயார் 86 வயதான சொங்தாம் ஓங்பி கமலா தேவி மணிப்பூரின் புகழ்பெற்ற பாரம்பரிய பாடகி ஆவார்.</p><p>விக்ரம் சிங், இந்தியாவின் முதல் BAFTA விருதை வென்ற Boong திரைப்படத்தின் இயக்குநர் லக்ஷ்மிபிரியா தேவியின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.</p><p>விக்ரம் சிங்கிற்கு ஜோத்சனா (54) என்ற மனைவியும், யைபாபா (20) என்ற மகனும் உள்ளனர். மகன் யைபாபா சட்டம் பயின்று வரும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item></channel></rss>