<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 19 Jul 2026 13:36:58 +0000</lastBuildDate><item><title>நதிநீர் இணைப்புக்கு எதிராக பழங்குடியினரின் 15 நாள் போராட்டத்தை வலுக்கட்டாயமாக கலைத்த போலீஸ் | Madhya pradesh </title><link>https://www.maalaimalar.com/news/national/ken-betwa-river-link-protest-tribal-activists-detained-amid-forest-loss-corruption-allegations</link><comments>https://www.maalaimalar.com/news/national/ken-betwa-river-link-protest-tribal-activists-detained-amid-forest-loss-corruption-allegations#comments</comments><guid isPermaLink="false">89b9e496-5009-4bf5-a16b-9d5f452caf30</guid><pubDate>Sun, 19 Jul 2026 13:28:08 +0000</pubDate><atom:updated>2026-07-19T13:28:08.814Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,போராட்டம்,Madhya Pradesh,Tribals,மத்தியப் பிரதேசம்,பழங்குடியினர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/e54gfz1y/tn-5.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ போராட்டம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ போராட்டம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/e54gfz1y/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தில் கென் மற்றும் பெத்வா ஆகிய இரண்டு நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு எதிராக பழங்குடியினர் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களை இன்று போலீசார் வலுக்கட்டாயமாக கலைத்தனர். </p><p>இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி கடந்த 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் அமித் பட்நாகரை  கைது செய்த போலீசார், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக பேருந்துகளில் ஏற்றி அவர்களது சொந்த கிராமங்களுக்கு திருப்பி அனுப்பினர்.</p><h2>இந்தியாவின் முதலாவது நதி நீர் இணைப்புத் திட்டம்</h2><p>இந்தியாவின் முதலாவது நதி நீர் இணைப்புத் திட்டம் கென்-பெத்வா நதி நீர் இணைப்பு திட்டம்.  </p><p>மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள வறட்சிமிக்க புந்தேல்கண்ட் பகுதிக்கு குடிநீர் மற்றும் பாசன வசதியை வழங்குவதற்காக கென் நதியில் உள்ள உபரி நீரை பெத்வா நதிக்கு திருப்பி விடுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.</p> <h2>பாதிப்பு</h2><p>இத்திட்டத்திற்காகப் பன்னா புலி காப்பகம் உட்படப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் நீரில் மூழ்கி அழியும் அபாயம் உள்ளதாக கருதப்படுகிறது.</p><p>இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பழங்குடியின மக்களுக்கான மறுவாழ்வு நிதி வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பழங்குடியினரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.</p> <figure><img alt="போராட்டம் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/3q80381v/tn-4.jpg" /><figcaption>போராட்டம் </figcaption></figure><h2>போராட்டம் கலைப்பு</h2><p>இந்த திட்டம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள முறைகேடுகளுக்கு எதிராக கடந்த ஜூலை 3ஆம் தேதி முதல் சத்தர்பூர் மாவட்டத்தின் பரானா நதிக்கரையில் பழங்குடியினப் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து போராட்டம் நடத்தி வந்தனர்.  </p><p>போராட்டக்காரர்கள், நீரில் இறங்கிப் போராடுவது, பாடையில் படுத்துப் போராடுவது மற்றும் தூக்குக்கயிற்றை அணிந்துகொண்டு போராடுவது என பல்வேறு வகையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வந்தனர்.</p><h2>ரூ. 400 கோடி ஊழல்</h2><p>போராட்டக் குழுவின் முக்கிய தலைவரான திவ்யா அகிர்வார்,</p><p>"இந்த நதி இணைப்புத் திட்டத்தில் சுமார் 400 கோடி ரூபாய் அளவிற்குப் ஊழல் நடந்துள்ளது. இது குறித்த ஆதாரங்களுடன் நாங்கள் ஊடகங்களைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தோம்.</p><p>ஆனால், அதற்குச் சற்று முன்பாக விடியற்காலை 5 மணிக்கே மிகப்பெரிய போலீஸ் படை திரண்டு வந்து, அமித் பட்நாகர் உட்பட எங்களையெல்லாம் வலுக்கட்டாயமாகக் கைது செய்தது" என சாடியுள்ளார்.</p> <h2>போலீஸ் விளக்கம்</h2><p>இந்த போராட்டத்தில் கடந்த 11 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் இருந்ததால் அமித் பட்நாகரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதன் காரணமாகவே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.</p><p>கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆதித்யா பட்லே கூறுகையில், "கட்டுமானத்தில் உள்ள ஒரு பாலத்திற்கு அடியிலும் நதியிலும் இறங்கிப் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.</p><p>நதியில் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் ஏற்பட்ட பாதுகாப்பு அபாயங்கள் காரணமாகவே போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்" என்று தெரிவித்தார்.</p> <h2>ஒடுக்கப்படும் போராட்டங்கள்</h2><p>டெல்லியில் மத்திய அரசின் கீழ் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகிறது. </p><p>இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் <a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuks-father-undertook-a-five-day-fast-indira-gandhi-herself-traveled-to-ladakh-to-pacify-him-historical-background">சோனம் வாங்சுக்</a> நேற்று டெல்லி போலீசாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டார். </p><p>மேலும் நாளை பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும் பழங்குடியினரின் போராட்டம் ஒடுக்கப்பட்டுள்ளது விமர்சனத்தை குவித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பி.வி.சிந்துவின் சாதனை நம் இளம் வீரர்களை ஊக்குவிக்கும்..!- பிரதமர் மோடி வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-congratulates-pv-sindhu-on-historic-japan-open-title</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-congratulates-pv-sindhu-on-historic-japan-open-title#comments</comments><guid isPermaLink="false">b9639ff3-0fb4-4803-8893-18763e2ef0ed</guid><pubDate>Sun, 19 Jul 2026 13:03:30 +0000</pubDate><atom:updated>2026-07-19T13:03:30.467Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pv sindhu,பிவி சிந்து,பேட்மிண்டன்,pm modi,badminton,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/3vh0mpny/PV-sindhu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PV Sindhu- PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/3vh0mpny/PV-sindhu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜப்பான் ஓபன் சர்வதேச  பேட் மிண்டன் போட்டி டோக்கியோவில் நடை பெற்றது.   இன்று காலை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி யில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து -முன்னாள் உலக சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்) மோதினார்கள்.</p><h2>சிந்து சாம்பியன்</h2><p> இதில் 31 வயதான பி.வி.சிந்து 21-17, 21-17 என்ற நேர்செட் கணக்கில் யமா குச்சியை அதிர்ச்சிக் கர மாக வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.</p><p>தர வரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.</p><p>2024-ம் நடந்த சையது மோடி சர்வதேச போட்டியில் பெற்ற வெற்றிக்கு பிறகு  இந்த பட்டத்தை கைப்பற்றி உள்ளார். 2019-ம் ஆண்டு உலக சாம்பியனுக்கு பிறகு சிந்து கைப்பற்றிய சிறப்பான வெற்றி இதுவாகும்.</p><p>சிந்து ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கம் வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>பிரதமர் மோடி வாழ்த்து</h2><p>இந்திய பேட்மிண்டன் விளையாட்டில் வரலாற்று சாதனை படைத்த பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>இந்திய பேட்மிண்டனுக்கு ஒரு வரலாற்றுச் சாதனை!</p><p>ஜப்பான் ஓபன் 2026 போட்டியில் வெற்றி பெற்ற பி.வி. சிந்துவுக்கு வாழ்த்துகள். போட்டி முழுவதும் அவரது மனவுறுதியும் அபாரத் திறமைகளும் முழுமையாக வெளிப்பட்டன. இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் அவர் என்பது இந்தச் சாதனையை மேலும் சிறப்பாக்குகிறது. இது நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களை விளையாடி ஜொலிக்கத் தூண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>5 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் தந்தை.. லடாக்கிற்கே சென்று சமாதானம் செய்த இந்திரா காந்தி! - வரலாற்று பின்னணி</title><link>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuks-father-undertook-a-five-day-fast-indira-gandhi-herself-traveled-to-ladakh-to-pacify-him-historical-background</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuks-father-undertook-a-five-day-fast-indira-gandhi-herself-traveled-to-ladakh-to-pacify-him-historical-background#comments</comments><guid isPermaLink="false">8dc56fa9-192c-4d63-b0ec-2e898cc5e9bd</guid><pubDate>Sun, 19 Jul 2026 12:26:33 +0000</pubDate><atom:updated>2026-07-19T12:26:33.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,ladakh,Indira Gandhi,இந்திரா காந்தி,Sonam Wangchuk,பிரதமர் மோடி,சோனம் வாங்சுக்,லடாக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/cfzmdknu/tn-3.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ இந்திரா காந்தி, சோனம் வாங்யால்
]]></media:title><media:description type="html"><![CDATA[ இந்திரா காந்தி, சோனம் வாங்யால்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/cfzmdknu/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் பிற இயக்கங்களை சேர்ந்த இளைஞர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><h2>சோனம் வாங்சுக் </h2><p>இந்த போராட்டத்தில் இணைந்து கடந்த 20 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த லடாக் செயல்பாட்டார்கள் மற்றும் கல்வியாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-refuses-to-transfer-sonam-wangchuk-to-a-private-hospital">சோனம் வாங்சுக்</a> நேற்று டெல்லி காவல்துறையால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். </p><p>9 கிலோவுக்கு மேல் குறைந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தபோதும் மத்திய அரசு தரப்பில் ஆழ்ந்த மௌனம் மட்டுமே பதிலாக இருந்து வருகிறது. </p><p>இந்த சூழலில் நேற்று அவர் வலுக்கட்டாயமாக தூக்கிச்செல்லப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>சோனம் வாங்யால்</h2><p>இந்த சூழலில் 1984ம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/topic/indra-gandhi">இந்திரா காந்தியின்</a> அரசை எதிர்த்து சோனம் வாங்சுக் உடைய தந்தை சோனம் வாங்யால் லடாக் உரிமைகளுக்காக உண்ணாவிரதம் இருந்த வரலாற்று பின்னணி கவனம் பெற்று வருகிறது.</p><p>1965ல் தனது 23வது வயதிலேயே எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு, அன்றைய காலகட்டத்தில் மிக இளம் வயதில் எவரெஸ்ட் ஏறிய நபர் என்ற உலக சாதனையைப் படைத்தவர்.</p><p>பின்னர் லடாக்கின் முக்கிய அரசியல் தலைவராக உருவெடுத்து, ஜம்மு காஷ்மீர் சட்டமேலவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றினார்.</p><p>1984 இல் லடாக் மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கோரி சோனம் வாங்யால் உண்ணாவிரதம் இருந்தார். 5 நாட்களாக தொடர்ந்த அவரின் உண்ணாவிரத போராட்டம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்தை ஈர்த்தது.</p><h2>இந்திரா காந்தி</h2><p>இந்திரா காந்தி நேரடியாக லடாக்கின் லே பகுதிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். லடாக் மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து அவரின் உண்ணாவிரதத்தை முடிக்கச் செய்தார்.</p><p>ஐந்தாண்டுகளுக்கு பிறகு 1989ல் லடாக் மக்களின் நீண்டகாலக் கோரிக்கை சட்ட வடிவம் பெற்றது.</p><p>அரசியலமைப்புச் சட்டத்தின் 342வது பிரிவின் கீழ் லடாக்கில் வசிக்கும் பால்டி, பேடா, போட், ப்ரோக்பா, சாங்பா, கர்ரா, மோன் மற்றும் புரிக்பா ஆகிய 8 சமூகங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டது.</p><p>இது லடாக் வரலாற்றின் மிகப்பெரிய அரசியல் வெற்றியாகக் கருதப்படுகிறது.</p><h2>லடாக் மாநில அந்தஸ்து போராட்டம்</h2><p>ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்து வந்தது லடாக். 2019இல் ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை ரத்து செய்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை தனித்தனி யூனியன் பிரதேசமாக்கியது மத்திய பாஜக அரசு. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டுமே தங்களுக்கு மாநில அந்தஸ்து வேண்டி போராடி வருகிறது.</p><p>கடந்த ஆண்டு லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் 6வது அட்டவணையில் சேர்ப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோரி 35 நாட்கள் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் அவரின் உண்ணாவிரதம் இளைஞர்களை தூண்டிவிட்டதாக கூறி அவரை கைது செய்து பாஜக அரசு திகார் சிறையில் அடைத்தது.</p> <h2>பாகிஸ்தான் ஏஜென்ட் - பாஜக அரசு </h2><p>அவரை பாகிஸ்தான் ஏஜென்ட் என துணை ஆளுநரின் ஆளுநரின் கீழ் செயல்படும் லடாக் போலீசார் குற்றம்சாட்டினார். மாதக்கணக்கில் அவர் சிறையில் இருந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்று அவரை விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டது. கடந்த மார்ச்சில் அவர் விடுதலை ஆனார்.</p><p>இந்த சூழலில் மாணவர்கள் எதிர்காலத்தை முன்னிருத்தி அவர் உண்ணாவிரதம் தொடங்கினார். </p><p>ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவரின் கோரிக்கைகளை காதில் வாங்கவோ குறைந்தபட்சம் பேச்சுவார்த்தை நடத்தவோ முன்வரவில்லை. </p>]]></content:encoded></item><item><title>சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-refuses-to-transfer-sonam-wangchuk-to-a-private-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-refuses-to-transfer-sonam-wangchuk-to-a-private-hospital#comments</comments><guid isPermaLink="false">1fca18c7-1d3b-4cf5-b32d-59291b73ed1d</guid><pubDate>Sun, 19 Jul 2026 11:59:49 +0000</pubDate><atom:updated>2026-07-19T11:59:49.477Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi HC,Sonam Wangchuk,தனியார் மருத்துவமனை,private hospital,டெல்லி உயர் நீதிமன்றம்,சோனம் வாங்சுக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/92fm8cgu/New-Project-2026-07-19T170533.669.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/92fm8cgu/New-Project-2026-07-19T170533.669.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை சஃப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்றக்கோரிய அவரது மனைவியின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. </p><p>இப்போதைக்கு இந்த உத்தரவு தேவையற்றது என தெரிவித்த நீதிமன்றம், மூன்று நாட்களுக்குகள் சோனம் உடல்நிலை குறித்த புதிய அறிக்கையை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை ஜூலை.24ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. </p><p>வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ தொடர்ந்த இந்த வழக்கில், ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், வாங்சுக்கிற்கென தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளதையும், குடும்பத்தினர் அனைவரும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவர் அருகில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியது.</p><p>“இதைக் கருத்தில் கொண்டு, இந்தக் கட்டத்தில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை” என தெரிவித்தது. </p><h2>வாங்சுக்கின் மனைவி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டது என்ன?</h2><p>அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனவும், தனது கணவரின் உடல்நிலை மோசமடைவதற்கு முன்பு அவரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.</p><p>பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும், மருத்துவமனை அதிகாரிகள் வாங்சுக்கை டிஸ்சார்ஜ் செய்யவோ அல்லது அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றவோ அனுமதி மறுத்துவிட்டதாக அந்த மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.</p><p>வாங்சுக் அனுமதிக்கப்பட்டுள்ள தளத்தில் 30 போலீசாரும், மருத்துவமனை முழுவதும் 100கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதால் குடும்பத்தினரால் சுதந்திரமாக வாங்சுக்கை அணுக முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். </p><p>“இது மருத்துவ சிகிச்சை அல்ல. இது சட்டவிரோதக் காவலில் வைத்தல்” எனவும் கூறியுள்ளார். மேலும், தங்கள் அன்புக்குரியவர் எங்கு சிகிச்சை பெற வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, எந்தவொரு குடும்பமும் ஒரு அரசுடன் போராட வேண்டிய நிலை யாருக்கும் வரக்கூடாது எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் வாங்சுக்கின் முழுமையான ஒப்புதல் இல்லாமலோ, அவரால் ஒப்புதல் அளிக்க இயலாத பட்சத்தில், அவரது மனைவியின் ஒப்புதல் இல்லாமலோ அதிகாரிகள் எந்தவொரு சிகிச்சையையும் அளிக்கக் கூடாது என உத்தரவிடவும் மனுக் கோரியது. </p><h2>வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட சோனம் வாங்சுக்</h2><p>நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என கடந்த மாதம் முதல் கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வாங்சுக், ஜூன்.28 முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.</p><p>உண்ணாவிரதம் 15 நாட்களை தாண்டிய நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனையடுத்து வாங்சுக்கை காப்பற்றக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. </p><p>அதனைத்தொடர்ந்து வாங்சுக்கை சோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், 9 கிலோவுக்கு அதிகமான இடையை அவர் இழந்ததாகவும் அறிக்கை வெளியிட்டனர். இந்த உண்ணாவிரதம் தொடர்ந்தால் வாங்சுக் இறக்க நேரிடலாம் எனவும் வியாழன்க்கிழமை அறிக்கை வெளியிட்டனர்.</p><p>இந்நிலையில் நேற்று மத்திய அரசின் சார்பில் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர் போலீசார். இச்சூழலில் அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக்கோரி அவரது மனைவி வழக்குத் தொடர்ந்தார்.</p><p>இதனிடையே கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே உண்ணாவிரதப் போராட்டத்தை கையிலெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>பார்லரில் டாட்டூ குத்திய பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று - அதிர்ச்சி சம்பவம் </title><link>https://www.maalaimalar.com/news/national/tattoo-hiv-alert-woman-contracts-hiv-after-getting-tattoo-at-delhi-parlour</link><comments>https://www.maalaimalar.com/news/national/tattoo-hiv-alert-woman-contracts-hiv-after-getting-tattoo-at-delhi-parlour#comments</comments><guid isPermaLink="false">74cf990f-7e2e-4460-ab09-17bef9ce2ef0</guid><pubDate>Sun, 19 Jul 2026 11:34:44 +0000</pubDate><atom:updated>2026-07-19T11:34:44.722Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டாட்டூ,AIDS,tattoo,HIV,எய்ட்ஸ்,எச்ஐவி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/yhuv4261/tn-1.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டாட்டூ ]]></media:title><media:description type="html"><![CDATA[ டாட்டூ ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/yhuv4261/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள ஒரு பார்லரில் <a href="https://www.maalaimalar.com/health/naturalbeauty/tattoo-beautiful-is-it-dangerous-595944">டாட்டூ </a>குத்திய சில நாட்களிலேயே பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பெண் </h2><p>உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 32 வயதுப் பெண் பிறப்புறுப்பில் ஏற்பட்ட தொற்று காரணமாக கான்பூர் மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். </p><p>அறிகுறிகளை அறிந்து மருத்துவர்கள் அவருக்கு எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ்-பி பரிசோதனைகளை மேற்கொள்ளப் பரிந்துரைத்தனர். </p><p>அவருக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் என பரிசோதனை முடிவு வந்துள்ளது. பெண்ணுக்கு தற்போது அரசு மருத்துவமனையில் இலவச ஆண்டி ரெட்ரோவைரல் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.</p>  <h2>டாட்டூ ஊசியால் வந்த வினை</h2><p>இது குறித்து மருத்துவக் கல்லூரியின் தோல் மருத்துவப் பிரிவு இணைப் பேராசிரியர் டாக்டர் ஸ்வேதாங்க் கூறுகையில்,</p><p>"பாதிக்கப்பட்ட பெண் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் டெல்லியில் உள்ள ஒரு டாட்டூ பார்லருக்கு சென்று பச்சை குத்தியுள்ளார்.</p><p>அங்கு முறையாக ஸ்டெர்லைஸ் செய்யப்படாத அல்லது ஏற்கனவே மற்றொருவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகளை இவருக்குப் பயன்படுத்தியதே இந்த எச்.ஐ.வி தொற்றுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என நம்புகிறோம்.</p><p>எச்.ஐ.வியை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், முறையான தொடர் சிகிச்சையின் மூலம் அதைக் கட்டுப்படுத்த முடியும். இதற்காக நோயாளி வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும்" என்று தெரிவித்தார்</p> <h2>மருத்துவர்கள் எச்சரிக்கை</h2><p>முறையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத, தரம் குறைந்த டாட்டூ நிலையங்களில் பச்சை குத்திக் கொள்வது எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ்-பி போன்ற ரத்தத்தின் மூலம் பரவக்கூடிய கொடிய நோய்களுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>மேலும், டாட்டூ குத்தப் பயன்படுத்தப்படும் மைகள் தோலில் கடுமையான ஒவ்வாமை போன்ற ஆபத்தான தோல் நோய்களை ஏற்படுத்தக்கூடும்.</p><p>குறிப்பாக, டாட்டூக்களில் பயன்படுத்தப்படும் சிகப்பு மற்றும் பச்சை நிற மைகள் தான் தோலில் அரிப்பு, தடிப்பு மற்றும் கடுமையான அலர்ஜிகளை மிக எளிதாக உருவாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காஷ்மீரில் காலை முதல் தொடர் மழை- வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பரிதமாக உயிரிழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/heavy-rains-trigger-deadly-floods-and-landslides-in-kashmir</link><comments>https://www.maalaimalar.com/news/national/heavy-rains-trigger-deadly-floods-and-landslides-in-kashmir#comments</comments><guid isPermaLink="false">c0b0103f-68ce-439d-9b89-e532485fcc12</guid><pubDate>Sun, 19 Jul 2026 11:15:34 +0000</pubDate><atom:updated>2026-07-19T11:15:34.073Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காஷ்மீர்,மேகவெடிப்பு,Rajouri,jammukashmir,FlashFloods,இயற்கைசீற்றம்,RainAlert</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/q29xkrcz/JammuKashmirFlashFloods" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JammuKashmirFlashFloods   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/q29xkrcz/JammuKashmirFlashFloods?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு காஷ்மீரின் எல்லை மாவட்டங்களான பூஞ்ச் மற்றும் ரஜௌரியில் இன்று காலை முதல் பெய்த மழையில் பெரு வெள்ளம் மற்றும் மேகவெடிப்பு காரணமாக கோர விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p>அங்குள்ள முக்கிய ஆறுகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும், நிலச்சரிவிலும் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். </p><p>மேலும் பலர் வெள்ளித்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர்.</p><h2><strong>பெருக்கெடுத்த ஆற்றுவெள்ளம்...</strong></h2><p>இன்று அதிகாலை முதலே கொட்டித்தீர்த்த மழையால் தர்ஹாலி, காண்ட்லி, சுக்தோ, ஜமோலா ஆகிய முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. </p><p>சில நிமிடங்களிலேயே ஆற்று நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. ரஜௌரியின் புதிய பேருந்து நிலையம் வெள்ளத்தில் முற்றிலும் சிதைந்தது. </p><p>அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. </p><p>நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.</p><h2><strong>ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாயம்:</strong></h2><p>வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் வீடுகள் இடிந்து விழுந்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. </p><p>வெள்ளத்தில் ஒரு வீடு ஒட்டுமொத்தமாக அடித்துச் செல்லப்பட்டதில் அப்துல் ஹமீது, அவரது மனைவி ஷரீபா பேகம், மகள் அரீபா, சகோதரி மனீரா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>நூனாபந்தி கிராமத்தில் நாஜியா கௌசர் என்ற பெண் வீடு இடிந்து பலியானார். சுரான்கோட் பகுதியில் ஷாஜைப் அகமது என்ற வாலிபர் வீடு இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். </p><p>மார்ஹோட் ஆற்றுப் பகுதியில் இரம் என்ற சிறுமி வெள்ளத்தில் மூழ்கி பலியாகியுள்ளார். துந்தக் லாடூங் பாலம் அருகே அடையாளம் தெரியாத பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.</p><h2><strong>அதிவிரைவு மீட்புப் பணிகள்..</strong></h2><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், உள்ளூர் நிர்வாகம் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் இணைந்து நள்ளிரவிலும் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். </p><p>நிலைமையை கவனித்து வருவதாகக் கூறியுள்ள ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, "மக்களின் உயிரைக் காப்பதே தற்போதைய முதன்மை நோக்கம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு போர்க்கால அடிப்படையில் வழங்கும்" என உறுதியளித்துள்ளார்.</p><h2><strong>வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..</strong></h2><p>ஜம்மு காஷ்மீர் முழுவதும் வரும் ஜூலை 23 ஆம் தேதி வரை மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. </p><p>இதனால் பொதுமக்கள் ஆறுகள் மற்றும் மலைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவசர உதவிக்காகப் பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு: &quot;பிரதமரின் மவுனம் ஏற்றுக்கொள்ள முடியாதது&quot;- ராகுல்காந்தி-கார்கே கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/ayodhya-ram-temple-donation-scam-pm-silence-unacceptable-rahul-kharge-letter</link><comments>https://www.maalaimalar.com/news/national/ayodhya-ram-temple-donation-scam-pm-silence-unacceptable-rahul-kharge-letter#comments</comments><guid isPermaLink="false">58c3b890-82ce-467c-a22c-e5802959e66b</guid><pubDate>Sun, 19 Jul 2026 10:49:23 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:49:23.292Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,pm modi,அயோத்தி ராமர் கோவில்,Ayothi ramar temple,நன்கொடை முறைகேடு,பிரதமர் மவுனம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/m8wriytv/Rahul-gandhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Malligarjuna Kharghe-Rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/m8wriytv/Rahul-gandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p><p>இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு பாராளுமன்ற மக்களவை தலைவர் ராகுல்காந்தி, மேல்-சபை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கூட்டாக கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். </p><h2>கடிதம்</h2><p>கடிதத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு காரணமாக, நம்பிக்கை மற்றும் பக்தியுடன் தங்கள் கடின உழைப்பின் பணத்தை நன்கொடையாக வழங்கிய லட்சக்கணக்கான பக்தர்கள், ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். </p><p>இத்தகைய குற்றச் செயல் நடந்திருக்கும் நிலையில் நீங்கள் (பிரதமர் மோடி) மவுனம் காப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. பொறுப்புக்கூறலையும் இழப்பீட்டையும் உறுதி செய்வது உங்கள் கடமை ஆகும்.</p><p>அறக்கட்டளையின் நிதி விவகாரங்கள் குறித்தும்-ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட அனைத்து காணிக்கைகளும் கையாளப்பட்ட விதம் குறித்தும் உடனடியாக சுதந்திரமான மற்றும் விரிவான விசாரணைக்கு உத்தரவிடு மாறு உங்களை வலியுறுத்துகிறோம். </p><p>பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், விசாரணையின் முடிவுகளையும் அறக்கட்டளையின் கணக்கு விவரங்களையும் பொது வெளியில் வெளியிட வேண்டும்.</p><p>நீங்கள் எவ்வளவு வெளிப்படையாகவும், விரைவாகவும் செயல்படுகிறீர்கள் என்பதில்தான் உங்கள் அரசாங்கத்தின் மற்றும் அந்த அறக்கட்டளையின் நம்பகத்தன்மை அடங்கி உள்ளது. இதை இந்திய மக்கள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள். </p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மத்தியப் பிரதேசத்தில் மழை வேண்டி கழுதைகளுக்கு குலாப் ஜாமூன் ஊட்டி சிறப்பு வழிபாடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-rain-ritual-bhopal-donkeys-fed-gulab-jamun-in-unique-prayer-for-monsoon</link><comments>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-rain-ritual-bhopal-donkeys-fed-gulab-jamun-in-unique-prayer-for-monsoon#comments</comments><guid isPermaLink="false">ba0a618d-fdbe-40e9-9dc4-9b729b79d251</guid><pubDate>Sun, 19 Jul 2026 10:46:28 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:46:28.428Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,Bhopal,போபால்,கழுதை,donkey</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/t8dc9o50/tn.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கழுதைகளுக்கு குலாப் ஜாமூன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கழுதைகளுக்கு குலாப் ஜாமூன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/t8dc9o50/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>வழிபாடு </h2><p>மத்தியப் பிரதேச மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பலவீனமடைந்துள்ளதால் தலைநகர் போபாலில்  மழை வேண்டி கழுதைகளுக்கு குலாப் ஜாமுன் ஊட்டும் விசித்திரமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81">வழிபாடு </a>கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p> மழைக் கடவுளான இந்திரனை மகிழ்வித்து, மாநிலத்தில் போதிய மழை பொழிய வைக்க போபாலில்  கோலார் சாலைப் பகுதியில் நடந்த இந்த சடங்கில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும் மழை வேண்டி வழிபாடும் நடத்தப்பட்டது.</p><p>கழுதைகளுக்கு குலாப் ஜாமுன் ஊட்டிய விசித்திர சடங்கின் வீடியோ இணையத்தில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது</p><p>இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,</p><p>"பருவமழை தாமதமாகும் போதோ அல்லது போதிய மழை பொழியாமல் வறட்சி ஏற்படும் போதோ, எங்களது முன்னோர்கள் கடைப்பிடித்த ஒரு நீண்டகால பாரம்பரிய வழக்கத்தின்படியே இந்தச் சடங்கை நடத்தினோம்.</p><p>இந்து புராணங்களின்படி மழைக்கடவுளாகக் கருதப்படும் இந்திரனை குளிர வைக்கவும், அவரது கோபத்தைத் தணித்து நல்ல மழையைப் பெறவுமே இந்த பிரசாதம் கழுதைகளுக்கு வழங்கப்பட்டது" என்று  தெரிவித்தனர்.</p><h2>மழைப்பொழிவு</h2><p>மாநிலத்தின் மொத்தமுள்ள மாவட்டங்களில் 35 மாவட்டங்களில் இதுவரை பெய்திருக்க வேண்டிய சராசரி மழையை விட மிகக் குறைவான மழையே பதிவாகியுள்ளது. போதிய மழையின்றி வறட்சியான சூழல் நிலவுகிறது.</p><p>போபால் நகரில் இந்த பருவமழைக் காலத்தில் பெய்ய வேண்டிய சராசரி அளவை விட 44 சதவீதம் கூடுதல் மழை பதிவாகியுள்ளது.</p><p>வறண்ட மாவட்டங்களிலும் இன்று முதல் பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பரவலாக நல்ல மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது</p> ]]></content:encoded></item><item><title>மனைவி, இரண்டு மகன்கள் கொலை வழக்கு.. கணவரை விடுவித்த உயர் நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/wife-two-sons-murder-case-high-court-acquits-husband</link><comments>https://www.maalaimalar.com/news/national/wife-two-sons-murder-case-high-court-acquits-husband#comments</comments><guid isPermaLink="false">82c88d5e-8c3f-4001-bc7c-656e707064a5</guid><pubDate>Sun, 19 Jul 2026 10:27:03 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:27:03.736Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Allahabad High Court,Mathura Trail Court,அலகாபாத் உயர்நீதிமன்றம்,மதுரா விசாரணை நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/ltoh7twn/Untitled-design-37.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Allahabad High Court released acquited person]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/ltoh7twn/Untitled-design-37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தர பிரதேசத்தில் மனைவி மற்றும் இரண்டு மகன்களை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.</p><p>சூழ்நிலை சான்றுகளை மட்டுமே அடிப்படையாக கொண்ட வழக்குகளில், அரசுத் தரப்பு ஒரு நியாயமான மற்றும் நம்பத்தகுந்த நோக்கத்தை நிறுவ வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.</p><h3><strong>மனைவி மற்றும் மகன்கள் கொலை:</strong></h3><p>உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் கடந்த 2017 செப்டம்பர் 3ம் தேதி அன்று வீட்டின் உள்ளே மனைவி மற்றும் இரண்டு மகன்கள் சடலமாக கிடந்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.  </p><p>அப்போது அந்த வீட்டில் வேறு யாரும் இல்லை என சம்பவத்தை நேரில் பார்த்த உறவினர் ஒருவர் தெரிவித்தார்.</p><p>மேலும் அந்த சமயத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் அந்த வீட்டில் இல்லை எனவும், மூன்று பேர்களும் ஒரு கூர்மையான பொருளால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு கிடந்த நிலையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.</p><h3><strong>கணவர் கைது:</strong></h3><p>இதையடுத்து டெல்லியில் உயிரிழந்த பெண்ணின் கணவரான பாபுவை ரத்தக்கறை படிந்த சட்டையுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>பாபுவின் வாக்குமூலத்தின் பேரில், கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் மீட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதைத்தொடர்ந்து 2022 ஜனவரி 27ம் தேதி அன்று, மதுரா விசாரணை நீதிமன்றம் கைது செய்யப்பட்டவரை குற்றவாளி என தீர்ப்பளித்து, ஆயுள் தண்டனை விதித்தது.</p><p>இதற்கு எதிராக குற்றம்சாட்டப்பட்ட பாபு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். அப்போது இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.ஜே. முனிர் மற்றும் சஞ்சீவ் குமார் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது நீதிபதிகள், “கைது செய்யப்பட்டவர், தான் குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து, காவல்துறைக்கு தெரிவித்ததாக எந்தவொரு சுயாதீன சாட்சியும் அளிக்கவில்லை.</p><p>இத்தகைய கொடூரமான குற்றத்தை செய்வதற்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு எந்த உள்நோக்கமும் இருந்ததாக அரசுத் தரப்பு சாட்சியம் கூறவில்லை.</p><p>இதைத்தொடர்ந்து சூழ்நிலைச் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே ஒரு தனி நபரை குற்றவாளியாக்குவது முற்றிலும் பாதுகாப்பற்றது என்று சுட்டிக்காட்டி, 2022-ஆம் ஆண்டு மதுரா விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தது.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-governments-all-party-meeting-concludes</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-governments-all-party-meeting-concludes#comments</comments><guid isPermaLink="false">4dce0872-2cb5-43a0-aa11-60056ab5df56</guid><pubDate>Sun, 19 Jul 2026 09:41:27 +0000</pubDate><atom:updated>2026-07-19T09:41:27.282Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா கூட்டணி,INDIA Bloc,monsoon session,All-party meeting,அனைத்துக் கட்சிக் கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/k548rj2b/New-Project-2026-07-19T151058.268.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/k548rj2b/New-Project-2026-07-19T151058.268.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம், நிறைவடைந்தது.</p><p>நாளை (ஜூலை. 20) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அவையைச் சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க மத்திய அரசு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது</p><p>நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜுவால், நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் கூட்டப்பட்ட இந்த கூட்டத்தின் ஆலோசனைகளுக்கு இடையே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பும் செய்தன.</p><p>அதிருப்தி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.களுக்கு தனி இருக்கை ஒதுக்கியதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆம் ஆத்மி கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்டக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.</p><p>பின்னர் மீண்டும் வந்து கூட்டத்தில் கலந்துகொண்டன. இக்கூட்டத்தில் அரசின் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p><p>நாளை தொடங்கவுள்ள கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா போன்றவற்றை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரம் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>நான் தீவிர இந்து.. ஸ்ரீ ராமரை அவமதித்ததால் தீப்கே மீது மை வீசினேன் - பெண் பொறுப்பேற்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-ink-attack-woman-throws-ink-at-cockroach-janata-party-founder-abhijit-deepke-during-jantar-mantar-agitation</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-ink-attack-woman-throws-ink-at-cockroach-janata-party-founder-abhijit-deepke-during-jantar-mantar-agitation#comments</comments><guid isPermaLink="false">3624e349-ee8d-40aa-a512-1670f332b46b</guid><pubDate>Sun, 19 Jul 2026 09:09:59 +0000</pubDate><atom:updated>2026-07-19T09:09:59.791Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,CJP,அபிஜித் தீப்கே,Abhijit Dipke</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/k574bqq4/tn-13.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தீப்கே, பர்கா த்ரெஹான்]]></media:title><media:description type="html"><![CDATA[ தீப்கே, பர்கா த்ரெஹான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/k574bqq4/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மீது மை வீசியதற்கு பெண் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார்.  </p><h2>போராட்டம்</h2><p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றுமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-ink-attack-woman-throws-black-ink-at-abhijit-deepke-during-jantar-mantar-agitation">அபிஜித் தீப்கே </a>தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p> <h2>வாங்சுக் நிலைமை</h2><p>இதில் 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த செயல்பாட்டாளர் மற்றும் கல்வியாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-crackdown-rahul-gandhi-condemns-forced-removal-of-sonam-wangchuk">சோனம் வாங்சுக் </a>உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் வலுக்கட்டாயமாக டெல்லி போலீசாரால் சப்தர்ஜங்மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார்.</p><p>இதனால் போராட்டக் களத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. தானும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக தீப்கே அறிவித்தார்.</p> <h2>மை வீச்சு</h2><p>இதனையே தீப்கே போராட்டக்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்து வந்த பெண் ஒருவர் திடீரென மேடைக்கு அருகில் வந்து, தான் வைத்திருந்த மையை அபிஜித் தீப்கே மீது வீசினார்.</p><p>இதனால் அதிர்ச்சியடைந்த தீப்கேவின் ஆதரவாளர்கள் உடனடியாக அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தினர்.</p><p>அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் சிறிது நேரம் தடைபட்ட போராட்டம், பின்னர் மீண்டும் தொடர்ந்தது. மை வீச்சு வீடியோ வைரலாகி வருகிறது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">STORY | Chaos at Jantar Mantar as woman throws ink-like liquid at CJP founder Abhijeet Dipke<br><br>Chaos erupted at Jantar Mantar on Saturday after a woman threw an ink-like liquid at Cockroach Janata Party (CJP) founder Abhijeet Dipke while he was addressing a gathering at the… <a href="https://t.co/KW2forKlnx">https://t.co/KW2forKlnx</a></p>&mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://x.com/PTI_News/status/2078394809807741435?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>பொறுப்பேற்பு</h2><p>தீப்கே மீது மை வீசியதற்கு பர்கா த்ரெஹான் என்ற பெண் பொறுப்பேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தன் எக்ஸ் பதிவில்,</p><p>"ஆமாம், பர்கா த்ரெஹானாகிய நான் தான் அபிஜித் தீப்கே மீது மையை வீசினேன். ஏன்னென்றால், அவருடைய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் மேடையில் எனது பிரபு ஸ்ரீராமர் பகிரங்கமாக அவமதிக்கப்பட்டபோது, அதைத் தடுத்து நிறுத்தாமல் அவர் மேடையில் நின்று சிரித்துக் கொண்டிருந்தார்.</p><p>நான் ஒரு தீவிரமான இந்து. நமது கடவுள் பொதுவெளியில் இழிவுபடுத்தப்பட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை; அது என் மனதை ஆழமாகப் பாதித்தது. அதற்கு எதிராக நான் காட்டிய எதிர்ப்புதான் இந்த மை வீச்சு. எனது இந்தச் செயலை எண்ணி நான் பெருமைப்படுகிறேன், இதில் எனக்கு எந்தப் பச்சாதாபமும் இல்லை. ஜெய் ஹிந்த். ஜெய் ஸ்ரீராம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.</p> <h2>தீப்கே பதிலடி</h2><p>இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்த அபிஜித் தீப்கே, 'நீலம் எனது நிறம்... ஜெய் பீம்!' என்று பதிவிட்டுள்ளார்.</p><p>இதனிடையே சப்தர்கஞ்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனம் வாங்சுக் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>பீகாரில் தலைமுடியை வெட்டும் கொள்ளை கும்பல் - மக்களிடையே பீதி</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-robbery-gang-cuts-womens-hair</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-robbery-gang-cuts-womens-hair#comments</comments><guid isPermaLink="false">0b6bfd20-c584-4c90-848e-caac2672e616</guid><pubDate>Sun, 19 Jul 2026 09:09:46 +0000</pubDate><atom:updated>2026-07-19T09:09:46.983Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,robbery,Darbhanga,HairChoppingGang,தலைமுடிதிருட்டு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/jkfnsn28/BiharHairChoppingGang" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BiharHairChoppingGang   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/jkfnsn28/BiharHairChoppingGang?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>தலைமுடி வெட்டி சென்ற கும்பல்..</strong></h2><p>பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீடுகளில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு, இளம்பெண்களின் தலைமுடியை வெட்டிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.</p><h2><strong>முதல் சம்பவம் - டாக்டர் வீட்டில் கொள்ளை..</strong></h2><p>தர்ஹார் கிராமத்தை சேர்ந்த டாக்டர் பவன் குமார் மிஸ்ரா வீட்டில் புகுந்த கும்பல், உறங்கிக்கொண்டிருந்த அவரது மருமகள் கரிஷ்மா தேவிவை தாக்கி, கை கால்களை கட்டி போதை ஊசி போட்டுள்ளனர்.</p><p>பின்னர் ரூ.35 ஆயிரம் பணம் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளையடித்து, சத்தம் வராமல் இருக்க டி.வி.யை சத்தமாக வைத்து விட்டு செல்லும் முன் கரிஷ்மாவின் தலைமுடியை வெட்டிச் சென்றுள்ளனர். சுயநினைவின்றி கிடந்த பெண்ணை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்தனர்.</p><h2><strong>இரண்டாவது சம்பவம் - ஆசிரியர் வீட்டில்..</strong></h2><p>இதேபோல் ஒரு வாரத்திற்கு பிறகு அதே பகுதியை சேர்ந்த ஆசிரியர் சுமன் குமார் சௌத்ரி வீட்டிலும் கொள்ளை நடந்தது. மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்த கும்பல், ஆசிரியரின் இளைய மகளின் தலைமுடியையும் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.</p><h2><strong>போலீஸ் விசாரணை - மக்கள் அச்சம்</strong></h2><p>இரண்டு சம்பவங்களும் வியாழக்கிழமை நடந்ததாலும், முறைகள் ஒரே மாதிரி இருந்ததாலும் இது ஒரே கும்பலின் வேலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தடயவியல் குழுவுடன் விசாரணை நடந்து வருகிறது.</p><p>ஆனால் "தலைமுடியை வெட்டி செல்லும் கும்பல்" என்ற தகவல் தர்ஹார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;சஃப்தர்ஜங் மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை&apos;-டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார் சோனம் வாங்சுக்கின் மனைவி!</title><link>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-wife-petitions-delhi-high-court-over-safdarjung-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-wife-petitions-delhi-high-court-over-safdarjung-hospital#comments</comments><guid isPermaLink="false">83bf6735-496f-4512-8ac6-a36b321d94d0</guid><pubDate>Sun, 19 Jul 2026 09:09:43 +0000</pubDate><atom:updated>2026-07-19T09:09:43.899Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi High Court,Sonam Wangchuk,டெல்லி உயர் நீதிமன்றம்,கீதாஞ்சலி,Safdarjung hospital,சோனம் வாங்சுக்,Gitanjali J Angmo,சஃப்தர்ஜங் மருத்துவமனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/97lww7c8/sonam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sonam Wangchuk-Gitanjali J Angmo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/97lww7c8/sonam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மாணவர்களின் மரணங்களுக்கு நீதி கேட்டு டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 22 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், நேற்று டெல்லி போலீசாரால் வலுக்கட்டாயமாக சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>இந்நிலையில், சஃப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி அவரது மனைவி டாக்டர் கீதாஞ்சலி ஜே.ஆங்மோ டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில்,</p><h2><strong>மருத்துவமனை அறிக்கையில் முரண்பாடு:</strong> </h2><p>சஃப்தர்ஜங் மருத்துவமனை அதிகாரிகள், சோனம் வாங்சுக்கின் ரத்தத்தில் பொட்டாசியம் அளவு 2.9 ஆகக் குறைந்துவிட்டதாகவும், இது உயிருக்கு ஆபத்தான நிலை என்றும் எங்களிடம் கூறினர். ஆனால், அவர்கள் வெளியிட்ட பொது சுகாதார அறிக்கையில் இந்த எண்ணைக் குறிப்பிடாமல், "பொட்டாசியம் அளவு குறைந்து வருகிறது" என்று மழுப்பலாகக் குறிப்பிட்டுள்ளனர்.</p><h2><strong>தனியார் ஆய்வக அறிக்கை:</strong></h2><p>மருத்துவமனை அதிகாரிகளின் கூற்றின் மீது சந்தேகம் அடைந்து, 10 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ரத்த மாதிரியைப் பெற்று வெளியில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் சோதனை செய்தோம். அதில் பொட்டாசியம் அளவு 3.5 என்ற சாதாரண எல்லையிலேயே  உள்ளது தெரியவந்தது.</p><h2><strong>சட்டவிரோத காவலில் வாங்சுக்:</strong></h2><p>மருத்துவமனையில் அவர் தங்கியிருக்கும் தளத்தில் 30 போலீசாரும், வளாகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். எங்களை அவரைப் பார்க்க அனுமதிப்பதில்லை. இது மருத்துவச் சிகிச்சை அல்ல, 'சட்டவிரோதக் காவல்' ஆகும்.</p><p>எனது கணவருக்கு எனது சம்மதம் இன்றியோ அல்லது அவரது தனிப்பட்ட மருத்துவர்களின் ஆலோசனையின்றியோ எந்தவொரு மருந்தையோ அல்லது குளுக்கோஸையோ செலுத்தக்கூடாது என்று அதிகாரிகளிடம் திட்டவட்டமாகக் கூறியுள்ளேன்.</p><h2><strong>அரசு மற்றும் மருத்துவமனை தரப்பு விளக்கம்:</strong></h2><p>மறுபுறம், சோனம் வாங்சுக்கை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய அரசுத் தரப்பும் சஃப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகமும் மறுப்பு தெரிவித்துள்ளன. சோனம் வாங்சுக்கின் உடல்நிலையைக் கண்காணித்து, தேவைப்பட்டால் மருத்துவத் தலையீடு செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும், நிபுணர்களின் மருத்துவ ஆலோசனையின்படியுமே அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><p>நீண்ட நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதால், வாங்சுக்கின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தற்போதைய சூழலில் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என்று அரசுத் தரப்பு வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன. </p><p>சஃப்தர்ஜங் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் அடங்கிய கூட்டு மருத்துவக் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தற்போது அவர் சீரான நிலையில் இருந்தாலும் தொடர் கண்காணிப்பு அவசியம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.</p><h2><strong>மருத்துவமனையில் இருந்தபடி வாங்சுக் விடுத்த அழைப்பு:</strong></h2><p>இதற்கிடையே, மருத்துவமனைக் காவலில் இருந்தபடியே தனது மனைவி கீதாஞ்சலி மூலமாக சோனம் வாங்சுக் எக்ஸ் தளத்தில் ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில், "நாளை நாடாளுமன்றத்தை நோக்கி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பேரணி இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம். </p><p>பயமில்லாத மற்றும் அநீதியற்ற இந்தியாவை உருவாக்க இப்பேரணியை அனைவரும் பெரும் வெற்றியாக்க வேண்டும்" என்று அவர் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக இன்று விசாரிக்கப்பட வாய்ப்புள்ளதால், அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிஃபா உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டி.. கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை!</title><link>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-2026-final-kerala-school-college-holiday</link><comments>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-2026-final-kerala-school-college-holiday#comments</comments><guid isPermaLink="false">cd9e0eb8-aaf8-4ef7-a0bd-d943c494cac9</guid><pubDate>Sun, 19 Jul 2026 08:40:24 +0000</pubDate><atom:updated>2026-07-19T08:40:24.172Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உலகக்கோப்பை கால்பந்து 26,FIFAWorldCup2026,KeralaSchoolHoliday,ArgentinaVsSpain,அர்ஜென்டினாvsபெயின்,MetLifeStadium</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/kffoll27/FIFA-World-Cup-2026-final" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ FIFA World Cup 2026 final ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/kffoll27/FIFA-World-Cup-2026-final?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>நாளை நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை முன்னிட்டு, கேரளா மாநிலத்தின் எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு கேரள அரசு நாளை (ஜூலை 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நள்ளிரவில் நடப்பதால், இந்த முடிவை பள்ளி நிர்வாகங்கள் எடுத்துள்ளன.</p><h2><strong>விளையாட்டு நேரம்..</strong></h2><p>இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கால்பந்து போட்டி அமெரிக்காவின் மெட்லைஃப் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12:30 மணிக்குத் தொடங்குகிறது. </p><p>வழக்கமான நேரத்தில் முடிந்தால் கூட அதிகாலை 2:30 மணி ஆகும், பரிசு வழங்கும் விழா முடிய 3 மணி ஆகிவிடும். ஒருவேளை போட்டி கூடுதல் நேரம் அல்லது பெனால்டி ஷூட்-அவுட் வரை சென்றால் அதிகாலை வரை நீடிக்கும். </p><p>இதனால் மாணவர்கள் தூக்கமில்லாமல், சோர்வோடு பள்ளிக்கு வருவதைத் தவிர்க்கவே இந்த விடுமுறை அறிவிக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2><strong>அமைச்சரின் நெகிழ்ச்சிப் பதிவு..</strong></h2><p>கேரள பொதுக்கல்வித் துறை அமைச்சர் ந. சம்சுதீன் இந்த விடுமுறை அறிவிப்பைத் தனது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். </p><p>அதில், "இப்போது சந்தோஷமா குழந்தைகளே?" என்று மாணவர்களை நோக்கி நெகிழ்ச்சியுடன் கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>மேலும், "கால்பந்து ரசிகர்கள் மற்றும் மாணவர்களின் தொடர் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, நள்ளிரவுக்கு மேல் நடைபெறும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியைக் காணும் வகையில், பொதுக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வரலாற்றில் முதன்முறை: குடியரசுத் தலைவர் முர்முவின் முத்தரப்புப் பயணம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/president-murmus-tri-nation-tour</link><comments>https://www.maalaimalar.com/news/national/president-murmus-tri-nation-tour#comments</comments><guid isPermaLink="false">559649e5-97cf-475e-aa53-dd0472d9b41d</guid><pubDate>Sun, 19 Jul 2026 08:00:12 +0000</pubDate><atom:updated>2026-07-19T08:00:12.232Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>President Murmu,Romania,Moldova,North Macedonia,குடியரசுத் தலைவர் முர்மு,மோல்டோவா,வட மாசிடோனியா,ருமேனியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/dg4pie2d/murmu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ President Murmu's Tri-Nation Tour]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/dg4pie2d/murmu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மோல்டோவா, வட மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய மூன்று நாடுகளுக்கு இன்று (ஜூலை 19) தனது வரலாற்றுச் சிறப்புமிக்க அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்த மூன்று நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்தவும் இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.</p><h2>மோல்டோவா பயணம் (முதல் கட்டம்):</h2><p>இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர் மோல்டோவா நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறை ஆகும். இப்பயணத்தின் போது, மோல்டோவா அதிபர் மாயா சாந்துவை சந்தித்து குடியரசுத் தலைவர் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.</p><p>நாடாளுமன்றத் தலைவர் இகோர் குரோசு மற்றும் மோல்டோவா-இந்தியா நாடாளுமன்ற நட்புத் குழுவின் உறுப்பினர்களைச் சந்திக்கிறார். மேலும், அங்கு நடைபெறும் வர்த்தக மன்றக் கூட்டத்தில் உரையாற்றுவதுடன், மோல்டோவாவில் வாழும் இந்திய வம்சாவளியினரையும் நேரில் சந்தித்துக் கலந்துரையாட உள்ளார்.</p><h2><strong>வட மாசிடோனியா பயணம் (2ம் கட்டம்)</strong></h2><p>மோல்டோவாவைப் போலவே, வட மாசிடோனியா நாட்டிற்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது அரசுமுறைப் பயணம் இதுவாகும். வட மாசிடோனியா அதிபர் சிலியானோவ்ஸ்கா-டவ்கோவா, அந்நாட்டுப் பிரதமர் மற்றும் நாடாளுமன்றத் தலைவர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்.</p><p>வட மாசிடோனியா நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்புரையாற்ற உள்ளார். அத்துடன் இந்தியா-வட மாசிடோனியா வர்த்தக மன்றக் கூட்டத்திலும் பங்கேற்கிறார். வேளாண்மை, மருந்தகத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐடி சார்ந்த சேவைகள் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவதில் இந்த சந்திப்பு கவனம் செலுத்தும்.</p><h2><strong>ருமேனியா பயணம் (இறுதிக்கட்டம்)</strong></h2><p>தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவிற்கு, சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர் செல்லும் முக்கியப் பயணம் இதுவாகும். ருமேனியா அதிபர், இடைக்காலப் பிரதமர் மற்றும் செனட் சபையின் தலைவர் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார். </p><p>ருமேனியா-இந்தியா நாடாளுமன்ற நட்பு குழு உறுப்பினர்களுடனான சந்திப்பு, இந்தியா-ருமேனியா வர்த்தக மன்ற உரை மற்றும் அங்குள்ள இந்திய சமூகத்தினருடனான கலந்துரையாடல் ஆகியவை இப்பயணத்தில் இடம்பெற்றுள்ளன.</p><h2><strong>பயணத்தின் நோக்கம்:</strong></h2><p>இந்த 3 நாடுகளின் பயணமானது, ஐரோப்பிய பிராந்தியத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>குறிப்பாக வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள், கல்வி மற்றும் இருநாட்டு மக்களிடையேயான கலாச்சாரப் பரிமாற்றங்களை விரிவுபடுத்துவதில் இப்பயணம் புதிய வேகத்தை ஏற்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>இணையத்தில் வைரலாகும் மத்திய அரசின் ‘ஃபேஸ் வாஷ்’: மிகக் குறைந்த விலை-எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-salicylic-acid-face-wash-goes-viral</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-salicylic-acid-face-wash-goes-viral#comments</comments><guid isPermaLink="false">064a06a6-d53c-4189-9483-34c2e10f17a1</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:48:24 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:48:24.027Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Modi,central government,மோடி,SalicylicAcid,FaceWash,சாலிசிலிக் ஆசிட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/874wgbbe/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Central Government's Face Wash]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/874wgbbe/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு புதிய அழகு சாதனப் பொருள் இந்திய அளவில் பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. அது வேறு எந்த ஒரு முன்னணி நிறுவனத்தின் தயாரிப்பும் அல்ல. </p><p>இந்திய மத்திய அரசின் ஜன அவுஷதி கேந்திராக்களில் விற்பனை செய்யப்படும் 'சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் வாஷ்' தான் அது. மிகக் குறைந்த விலையில், முகப்பருக்களைக் கட்டுப்படுத்தும் அசாத்தியமான நன்மைகளை வழங்குவதால், இளைஞர்கள் மற்றும் ஸ்கின்கேர் பிரியர்கள் மத்தியில் இந்த தயாரிப்பு காட்டுத்தீ போல பரவி வருகிறது.</p><h2><strong>வைரலாவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?</strong></h2><p>சந்தையில் முன்னணி பிராண்டுகளின் சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் வாஷ்கள் பொதுவாக ரூ.150 முதல் ரூ.500 வரை விற்கப்படுகின்றன. ஆனால், மத்திய அரசின் பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா திட்டத்தின் கீழ், இதன் 1% வேரியண்ட் ரூ.46.88-க்கும், 2% வேரியண்ட் ரூ.65.63-க்கும் மட்டுமே கிடைக்கிறது. இது சந்தை விலையை விட கிட்டத்தட்ட 70% முதல் 90% வரை குறைவாகும்.</p><h2><strong>தரத்திற்கு உத்தரவாதம்:</strong></h2><p>குறைந்த விலை என்றதும் தரம் குறைவாக இருக்குமோ என்ற ஐயம் தேவையில்லை. இந்த தயாரிப்புகள் அனைத்தும் WHO-GMP மற்றும் NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களால் சான்றளிக்கப்பட்டு, கடுமையான தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே சந்தைக்கு வருகின்றன.</p><h2><strong>முகப்பரு மற்றும் எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு தீர்வு:</strong></h2><p>சாலிசிலிக் ஆசிட் என்பது சரும துவாரங்களில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் வராமல் தடுப்பதில் மிகச்சிறந்த மருத்துவக் காரணியாகக் கருதப்படுகிறது.</p><h2><strong>ஸ்கின்கேர் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்:</strong></h2><p>நெட்டிசன்கள் பலரும் தங்களது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில், "இனி தேவையின்றி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம், அரசாங்கத்தின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது" எனப் பதிவிட்டு வருகின்றனர். மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்படும் இந்த ஃபேஸ் வாஷ், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கும் தரமான சருமப் பராமரிப்பு கிடைக்க வழிவகை செய்துள்ளது. </p><p>இது சாலிசிலிக் ஆசிட் கொண்ட ஒரு மருத்துவத் தயாரிப்பு என்பதால், உணர்திறன் மிக்க சருமம் உள்ளவர்கள் அல்லது முதன்முறையாகப் பயன்படுத்துபவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அல்லது 'பேட்ச் டெஸ்ட்' செய்து பார்ப்பது நல்லது.</p><h2><strong>எங்கு வாங்குவது?</strong></h2><p>இந்த ஃபேஸ் வாஷை உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஜன அவுஷதி கேந்திராக்களில் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு அருகிலுள்ள கடையைக் கண்டறிய Janaushadhi Official Website மற்றும் https://janaushadhi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள “Locate Kendra” பக்கத்தைப் பயன்படுத்தலாம்.</p><p>மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகளை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட ஜன அவுஷதி கேந்திராக்கள், தற்போது சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் வாஷ், புரோட்டீன் பவுடர்கள் மற்றும் ஐசோட்ரெட்டினாயின் கேப்சூல்கள் போன்ற நவீன சுகாதார மற்றும் அழகுப் பராமரிப்புத் துறையிலும் தடம் பதித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது- திமுக வெளிநடப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/monsoon-session-all-party-meeting-starts-dmk-stage-walkout</link><comments>https://www.maalaimalar.com/news/national/monsoon-session-all-party-meeting-starts-dmk-stage-walkout#comments</comments><guid isPermaLink="false">2eae477f-8fe7-454c-b5e2-bf7338f72fc1</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:08:00 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:08:00.761Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>winter session,நாடாளுமன்றம்,parliment,All Party Meeting,அனைத்து கட்சி கூட்டம்,மழைக்காலக் கூட்டத்தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/1citcrlb/BJP.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ bjp]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/1citcrlb/BJP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மொத்தம் 19 அமர்வுகளாக இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.</p><h2>அனல் பறக்கும்</h2><p>இந்தக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கலாக உள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு, மேற்காசிய தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதனால் இந்த கூட்டத்தொடர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>காங்கிரஸ்-தி.மு.க. இடையேயான கூட்டணி முறிவு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு போன்ற அரசியல் ரீதியிலான மாற்றங்களுக்கு இடையே நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடர் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>நாளை தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.</p><h2>சட்ட திருத்த மசோதா</h2><p>சமீபத்தில் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட சில அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள், இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. முக்கியமாக, வருமான வரி சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவும் அறிமுகப்படுத்தப்படும். தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத்திருத்த மசோதா, பிறப்பு-இறப்பு பதிவு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவையும் தாக்கலாக உள்ளன.</p><p>அனைத்து கட்சி கூட்டம்</p><p>பாராளுமன்ற கூட்டம் சுமூகமாக நடைபெறுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. எனவே பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துவது வழக்கம்.</p><p>இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று தொடங்கியது. </p><h2>திமுக வெளிநடப்பு</h2><p>மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கு எதிராக திரும்பி உள்ள அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றதைக் கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.</p><p>இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் பல்வேறு விஷயங்கள் பற்றி பேச உள்ளனர். குறிப்பாக, ஜந்தர்மந்தரில் இருந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை வெளியேற்றிய விவகாரம் பற்றி அனைத்து எதிர்கட்சியினரும் பேச இருக்கிறார்கள்.</p><p>மேலும், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரமும் இன்றைய கூட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மூத்த குடிமக்களுக்கு MBBS-இல் ஏன் இடஒதுக்கீடு இல்லை? அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 71 வயது முதியவர் வழக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/national/71-year-old-ashok-bahar-seeks-mbbs-quota-for-senior-citizens</link><comments>https://www.maalaimalar.com/news/national/71-year-old-ashok-bahar-seeks-mbbs-quota-for-senior-citizens#comments</comments><guid isPermaLink="false">e9b83c14-fc48-4abd-8080-07f86f0dfe4e</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:21:12 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:21:12.895Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எம்பிபிஎஸ்,MBBS,NEET UG,அலகாபாத் உயர் நீதிமன்றம்,நீட்தேர்வு,AllahabadHighCourt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/jo17jyxz/MBBS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 71 year old man]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/jo17jyxz/MBBS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கல்வி கற்பதற்கும், கனவுகளை துரத்துவதற்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், 71 வயது முதியவர் ஒருவர் மருத்துவப் படிப்பில் மூத்த குடிமக்களுக்கு இடஒதுக்கீடு கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.</p><p>உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான அசோக் பகார் என்ற முதியவர், 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்குத் தயாராகி வரும் ஒரு தீவிர மருத்துவ ஆர்வலர் ஆவார். மருத்துவராக வேண்டும் என்ற தனது 52 ஆண்டுகால நீண்ட கனவை நனவாக்க அவர் தொடர்ந்து முயன்று வருகிறார்.</p><p>தனது வயதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்வியைக் கற்கும் உரிமை மறுக்கப்படக் கூடாது என்று வாதிடும் அசோக் பகார், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் முக்கிய அம்சங்களை குறிப்பிட்டுள்ளார். </p><p>அதில், தகுதிவாய்ந்த மூத்த குடிமக்களுக்கு MBBS சேர்க்கையில் 1% சிறப்பு இடஒதுக்கீடு அல்லது தனி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் கல்வி கற்கும் உரிமை வயது முதிர்வோடு முடிந்துவிடுவதில்லை. என குறிப்பிட்டுள்ளார்.</p><p>நாடெங்கும் நீட் தேர்வு குறித்த விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், 71 வயது முதியவர் ஒருவர் தனது லட்சியத்திற்காக சட்டப் போராட்டம் நடத்துவது கல்வி வட்டாரங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த  வழக்கு வரும் ஜூலை 21 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>ஹைதராபாத்தில் பரபரப்பு: அம்மன் சிலையோடு நிர்வாணமாக ஏரியில் குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை!</title><link>https://www.maalaimalar.com/news/national/hyderabad-it-woman-jumps-naked-into-lake-with-temple-idol-dies-by-suicide</link><comments>https://www.maalaimalar.com/news/national/hyderabad-it-woman-jumps-naked-into-lake-with-temple-idol-dies-by-suicide#comments</comments><guid isPermaLink="false">cea6890d-96de-425c-ae09-eab8ca4afc24</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:18:27 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:18:27.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hyderabad,IT Employee Suicide,ஹைதராபாத்,Beerappa Temple,ஐடி ஊழியர் தற்கொலை,பீரப்பா கோயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/klvxj3wx/PERSPP.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  IT employee commits suicide]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/klvxj3wx/PERSPP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹைதராபாத் பீர்சாடிகுடா பகுதியில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர், நள்ளிரவில் நிர்வாணமாக ஓடி, அருகில் இருந்த கோயிலில் அம்மன் சிலையைத் தூக்கிக்கொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட விசித்திரமான  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஆந்திரப் பிரதேசத்தின் விசியநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி என்ற இளம் பெண், பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்த அவர், ஹைதராபாத் பீர்சாடிகுடா சங்கர் நகர் காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது தாயாருடன் வசித்து வந்தார். </p><p>நேற்று நள்ளிரவு சுமார் 2:30 மணியளவில், தேஜஸ்வினி திடீரென தனது தாயார் தூங்கிக்கொண்டிருந்த அறையை வெளிப்பக்கமாகப் பூட்டியுள்ளார். பின்னர், தனது ஆடைகள் அனைத்தையும் கழற்றிவிட்டு நிர்வாணமான நிலையில் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.</p><h2><strong>சிசிடிவி காட்சிகளில் சிக்கிய விசித்திரம்:</strong></h2><p>அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தபோது அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளிவந்துள்ளன. நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய தேஜஸ்வினி, அங்குள்ள பீரப்பா கோயிலில் நுழைந்துள்ளார். அங்கு கருவறையில் இருந்த அம்மாவாரு சிலையைக் கையில் எடுத்துக்கொண்டு, அருகில் இருந்த பீர்சாடிகுடா ஏரியை நோக்கி ஓடி, அதனுள் குதித்துள்ளார்.</p><h2><strong>காலையில் நடந்த தேடுதல் வேட்டை:</strong></h2><p>இன்று அதிகாலை தேஜஸ்வினியின் தாயார் அருணா கண்விழித்தபோது, அறை வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டினர் கதவைத் திறந்துள்ளனர். </p><p>வீட்டில் தேஜஸ்வினி இல்லாததால், தாயார் அவரைப் பல இடங்களில் தேடியுள்ளார். இதற்கிடையில், ஏரியில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பது குறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஹைதராபாத் பேரிடர் மீட்புக்குழுவினர் ஏரியிலிருந்து தேஜஸ்வினியின் உடலை மீட்டனர்.</p><h2><strong>மாயமான அம்மன் சிலை:</strong></h2><p>தேஜஸ்வினியின் உடல் மீட்கப்பட்ட போதிலும், அவர் கையில் எடுத்துச் சென்ற அம்மன் சிலை இன்னும் கிடைக்கவில்லை. பேரிடர் மீட்புப் படையினர் படகுகள் மூலம் ஏரிக்குள் இறங்கி அந்தச் சிலையைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக அச்சிலை கருதப்படுவதால் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>பெண் ஐடி ஊழியர் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார், மனநல பாதிப்பு ஏதேனும் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் மேடிபள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>சி.ஜே.பி-யின் நாடாளுமன்ற பேரணிக்கு அதிரடி தடை: ஜந்தர் மந்தரில் போலீஸ் குவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/delhi-parliament-march-ban-police-deployment-jantar-mantar</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/delhi-parliament-march-ban-police-deployment-jantar-mantar#comments</comments><guid isPermaLink="false">b95cec59-6543-4b5e-8298-6464c43fc538</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:51:42 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:51:42.548Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jantar Mantar,சிஜேபி,CJP,NEET UG 2026,Delhi Parliament,டெல்லி நாடாளுமன்றம்,ஜந்தர் மந்தர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/5lzmfjf3/cjp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cockroch janata party]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/5lzmfjf3/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய அளவிலான நீட்  தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிராக, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் சி.ஜே.பி அமைப்பினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாளை காலை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல போராட்டக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.</p><h2><strong>காவல்துறை தடை விதித்தது ஏன்?</strong></h2><p>அதி உயர் பாதுகாப்பு வளையமாக இருக்கும் நாடாளுமன்றப் பகுதியில் இந்த பேரணி நடத்தப்பட்டால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உண்டாகும் மற்றும் மத்திய டெல்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>மேலும், ஜந்தர் மந்தரில் ஒரு நாள் மட்டுமே போராட்டம் நடத்த இந்த அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் அனுமதியின்றி அவர்கள் போராட்டத்தை நீட்டித்துள்ளதால் ஒட்டுமொத்த உண்ணாவிரதப் போராட்டமுமே தற்போது சட்டவிரோதமானது என்றும் காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>பேரணிக்காக முறையான எழுத்துப்பூர்வ அனுமதியும் கோரப்படவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், தாங்கள் இதுகுறித்து ஏற்கனவே வாய்மொழியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்துவிட்டதாக சி.ஜே.பி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வைஷ்ணவி கௌர் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>சோனம் வாங்சுக் கட்டாய இடமாற்றம்:</strong></h2><p>கடந்த 21 நாட்களாக ஜந்தர் மந்தரில் தொடர் உண்ணாவிரதத்தில் இருந்த லடாக் ஆர்வலர் சோனம் வாங்சுக், நேற்று அதிகாலையில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் மருத்துவ ஆலோசனையின் பேரில் காவல்துறையினரால் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். </p><p>அவர் கடுமையான நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை கூறினாலும், இந்த சம்பவத்தின் போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.</p><p>போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகவும், சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் அபிஜீத் திப்கே தற்காலிகமாக காவலில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தடியடி மற்றும் மின்சாரத்தை துண்டித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை டெல்லி காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><h2><strong>பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு:</strong></h2><p>தற்போது ஜந்தர் மந்தர் பகுதியில் பதற்றம் நிலவுவதால், 200-க்கும் மேற்பட்ட டெல்லி போலீசார் மற்றும் விரைவு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை பேரணி நடத்த முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விதிகளை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் மீண்டும் தொடங்கும் பருவமழை: இமயமலை மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/monsoon-to-return-in-delhi-heavy-rain-alert-for-himalayan-states</link><comments>https://www.maalaimalar.com/news/national/monsoon-to-return-in-delhi-heavy-rain-alert-for-himalayan-states#comments</comments><guid isPermaLink="false">9c266baf-c269-48d1-916c-9630acf479af</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:15:58 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:15:58.631Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,டெல்லி,Delhi Monsoon,Himalayan states,டெல்லி பருவமழை,இமயமலை மாநிலங்க;ள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/upznqegv/rain.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ delhi mansoon]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/upznqegv/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் மற்றும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே பெய்த மழையால் தவித்து வந்த வட இந்தியாவில், தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.</p><p>இன்று முதல் தலைநகர் டெல்லியில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும், அதே நேரத்தில் இமயமலைப் பகுதிகளில் உள்ள மாநிலங்களுக்கு அதிதீவிர மழைக்கான எச்சரிக்கையையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.</p><p>வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய இரு பகுதிகளில் இருந்தும் வீசும் பலத்த ஈரப்பதம் கொண்ட காற்று மற்றும் பருவமழைக் காற்று வட இந்திய சமவெளிப் பகுதியை நோக்கி நகர்வது ஆகிய காரணங்களால் இந்த மழைப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாகப் போதிய மழையின்றி வறண்டு காணப்பட்ட டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று முதல் தொடர் மழைச் சுழற்சி ஆரம்பமாகிறது.</p><h2><strong>வானிலை கணிப்பு:</strong></h2><p>இன்று தொடங்கும் இந்த பரவலான மழைப்பொழிவு, அடுத்த 48 முதல் 72 மணி நேரத்தில் அதன் உச்சத்தை எட்டும் என்று வானிலை மாதிரிகள் காட்டுகின்றன. இந்த மழையினால் வெப்பம் கணிசமாகக் குறைந்து குளிர்ந்த வானிலை நிலவும். மேலும், டெல்லியின் காற்றில் உள்ள மாசுகள் சுத்திகரிக்கப்பட்டு காற்றின் தரம் மேம்படும். </p><p>இருப்பினும், திடீர் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் நகராட்சி நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.</p><h2><strong>இமயமலை மாநிலங்களுக்கு ‘ஹை அலர்ட்’:</strong></h2><p>சமவெளிப் பகுதிகளில் மழை நிம்மதியைத் தந்தாலும், இமயமலைப் பகுதிகளில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வட மற்றும் கிழக்கு இந்தியாவின் பல மலைப்பகுதிகளுக்கு IMD மிகக் கனமழை எச்சரிக்கையை நீட்டித்துள்ளது.</p><h2><strong>உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்:</strong></h2><p>பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மலை மாநிலங்களில் உள்ள உள்ளூர் நிர்வாகங்கள், நதிக்கரைகள் மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு அத்தியாவசியத் தேவையின்றி மக்கள் பயணம் செய்ய வேண்டாம் என்று கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. </p><p>இமாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் ஏற்கனவே ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் தற்காலிக உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.அதே சமயம், வட இந்திய சமவெளிப் பகுதிகளில் உள்ள உள்ளூர் அமைப்புகள், மழைநீர் தேங்குவதைத் தடுக்க வடிகால் அமைப்புகளைச் சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்: காரணம் இதுதான்</title><link>https://www.maalaimalar.com/news/national/amarnath-pilgrimage-halted-due-to-bad-weather</link><comments>https://www.maalaimalar.com/news/national/amarnath-pilgrimage-halted-due-to-bad-weather#comments</comments><guid isPermaLink="false">168ce73a-ea02-4021-9b91-7ff143054031</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:33:55 +0000</pubDate><atom:updated>2026-07-19T02:33:55.020Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amarnath yatra,அமர்நாத் யாத்திரை,Ice lingam,பனிலிங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/9d02anms/yatra.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ amarnath yatra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/9d02anms/yatra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காஷ்மீரில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை ஆகஸ்டு 28-ம் தேதி நிறைவடையும்.</p><h2>3.77 லட்சம் பேர் தரிசனம்</h2><p>இதற்கிடையே, அமர்நாத் குகைக் கோவிலை இதுவரை 3.77 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், வருடாந்திர அமர்நாத் யாத்திரைக்காக 4,640 பக்தர்களைக் கொண்ட புதிய குழு நேற்று அதிகாலை பகவதி நகர் யாத்ரி நிவாஸிலிருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>171 வாகனங்கள் கொண்ட அணிவகுப்பில் பயணிக்கும் 16-வது குழுவில், மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள குறுகிய பால்டால் வழித்தடத்தில் 1,626 பக்தர்களும், தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய பஹல்காம் வழித்தடத்தில் இருந்து 3,014 பக்தர்களும் அடங்குவர்.</p><p>அதிகாரிகளின் தகவலின்படி, பால்டால் செல்லும் வாகன அணிவகுப்பு அதிகாலை 2:42 மணிக்கும், அதைத் தொடர்ந்து பஹல்காம் செல்லும் அணிவகுப்பு அதிகாலை 3:11 மணிக்கு முகாமிலிருந்து புறப்பட்டன.</p><p>இந்த யாத்திரைக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. நபர் ஒருவர் ரூ.150 கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மருத்துவ சான்றிதழ் ஒன்றையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.</p><h2>உருகிய பனிலிங்கம்</h2><p>நடப்பு ஆண்டில் 5 நாட்களில் 90 சதவீதம் அளவுக்கு பனிலிங்கம் உருகியது என்றாலும், பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து வருகிறது.</p><p>இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.</p><p>பக்தர்களின் பாதுகாப்பு கருதி யாத்திரை நிறுத்தப்படுகிறது. அதிகாரிகளுடன் ஒத்துழைத்து அடுத்த உத்தரவு வரும் வரை பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ள வேண்டாம்.</p><p>யாத்திரை எப்போது தொடங்கும் என்பதை வானிலை குறித்த விரிவான மதிப்பீடு, வழித்தடத்தில் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய காலத்தில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>மாதா வைஷ்ணவி தேவி யாத்திரை</h2><p>இதேபோல், ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கான யாத்திரையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க அதிக அழுத்தம்: கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-dk-shivakumar-said-pressure-to-release-water-to-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-dk-shivakumar-said-pressure-to-release-water-to-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">9826222d-a7ab-4ab8-b32c-bf9ead5b0263</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:53:03 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:53:03.451Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DK Shivakumar,டிகே சிவக்குமார்,காவிரி அணை,cauvery dam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7573bbpj/19072026Shivakumar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7573bbpj/19072026Shivakumar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெங்களூரு விதானசவுதாவில் நேற்று மாலையில் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-</p><h2>அவசர மந்திரிசபை கூட்டம்</h2><p>கர்நாடக மந்திரிசபை கூட்டம் கடந்த 16-ந்தேதி நடைபெற இருந்தது. அன்றைய தினம் நான் டெல்லியில் இருந்ததால் மந்திரிசபை கூட்டம் நடைபெறவில்லை. இதனால் நாளை (அதாவது இன்று) மதியம் 3 மணிக்கு அவசர மந்திரிசபை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மந்திரிசபை கூட்டத்தில் மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்தும், இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்க உள்ளோம்.</p><p>வறட்சி குறித்து மந்திரிசபை மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசிக்கப்படும். மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தப்படும். அதன்பிறகு, மத்திய அரசுடன், மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்து தெரிவிக்கப்படும். மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்து மத்திய அரசுக்கு இதுவரை எந்த கடிதமும் எழுதவில்லை. மாநிலத்தில் எந்தெந்த மாவட்டங்களில் வறட்சி உள்ளது. வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும்.</p><p>தற்போது மாநிலத்தில் உள்ள அணைகளில் இருப்பு இருக்கும் தண்ணீரை, குடிநீருக்கு மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும், குடிநீர் தேவைக்காக மட்டுமே ஆகும். இப்போதும் சொல்கிறேன், விவசாயத்துக்கு தண்ணீரை பயன்படுத்த வேண்டாம். விவசாய தேவைக்காக அணைகளில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.</p><h2>தமிழ்நாட்டுக்கு உதவி</h2><p>அதற்கு முன்பாக அரசுக்கு விவசாயிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். குடிநீருக்காக தான் அணைகளில் தண்ணீர் திறந்து வருகிறோம். காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும்படி அதிக அழுத்தம் இருக்கிறது. துங்க பத்ரா அணையில் இருந்து தண்ணீர் திறக்க அழுத்தம் இருக்கிறது. அணைகள் நிரம்பினால் தண்ணீர் கொடுப்போம். அப்போது எந்த தொந்தரவும் ஏற்படாது.</p><p>காவிரி நதிநீர் விவகாரம்பற்றி பேச விரும்பவில்லை. அதுபற்றி நிறைய பிரச்சினை இருக்கிறது. அதனால் காவிரி நதிநீர் குறித்து விவாதிக்க விரும்பவில்லை. காவிரி நீர் நமது உரிமை. மேகதாது விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கூட தீர்ப்பு கூறியுள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்குதான் உதவியாக இருக்கும் என்பதை மீண்டும் சொல்லி கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-all-party-meeting-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-all-party-meeting-today#comments</comments><guid isPermaLink="false">9b267779-50c3-4d8f-9bc4-9642363e0541</guid><pubDate>Sun, 19 Jul 2026 00:50:20 +0000</pubDate><atom:updated>2026-07-19T00:50:20.687Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>winter session,நாடாளுமன்றம்,parliment,All Party Meeting,அனைத்து கட்சி கூட்டம்,மழைக்கால கூட்டத்தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-12/t1to0308/parliment.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ parliment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-12/t1to0308/parliment.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை தெரிவித்துள்ளது.</p><p>5 மாநில சட்டசபைத் தேர்தல்களுக்குப் பிறகு தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பரபரப்பான இந்த அரசியல் சூழலில் மழைக்கால கூட்டத்தொடர் கூட இருப்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p>காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் கட்சி இரண்டாக உடைந்தது உள்ளிட்ட பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் கூட்டத்தொடர் கூட உள்ளது.</p><p>இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் வகையில் இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.</p><p>இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு பல்வேறு விஷயங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, நேற்று ஜந்தர்மந்தரில் இருந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை வெளியேற்றிய விவகாரம் பற்றி அனைத்து எதிர்கட்சியினரும் பேச இருக்கிறார்கள்.</p><p>மேலும், அயோத்தி ராமர் கோவில் நன்கொடைகள் கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரமும் இன்றைய கூட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>முன்னதாக, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் தானாகவே முதல் மந்திரி, பிரதமர் பதவி பறிபோகும் மசோதா உள்ளிட்டவற்றை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.</p><p>இந்த மசோதாக்கள் அரசியல் அமைப்பு மசோதாக்கள் என்பதால் இவற்றில் திருத்தம் மேற்கொள்ள மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம். எனவே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது. </p>]]></content:encoded></item><item><title>தேசியவாத காங்கிரஸ் ஒன்றிணைவதற்கு சுனேத்ரா பவார் எதிர்ப்பு..  பாஜகவிடம் கறார் கண்டிஷன்?</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-ncp-merger-push-bjp-moves-to-unite-sharad-pawar-and-sunetra-pawar-factions-to-boost-nda-strength</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-ncp-merger-push-bjp-moves-to-unite-sharad-pawar-and-sunetra-pawar-factions-to-boost-nda-strength#comments</comments><guid isPermaLink="false">3bf89fb2-a3e9-435e-96d0-f807af64d8a7</guid><pubDate>Sat, 18 Jul 2026 23:55:56 +0000</pubDate><atom:updated>2026-07-18T23:55:56.908Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Sharad Pawar,சரத் பவார்,Sunetra Pawar,சுனேத்ரா பவார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/2dt81pen/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுனேத்ரா பவார்]]></media:title><media:description type="html"><![CDATA[ சுனேத்ரா பவார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/2dt81pen/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகராஷ்டிராவில் <a href="https://www.maalaimalar.com/news/national/will-sharad-pawars-nationalist-congress-party-support-the-constituency-delimitation-bill">சரத் பவார் </a>தேசியவாத காங்கிரஸ் மற்றும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ்  பிரிவுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. </p><p> பராமத்தி விமான விபத்தில் அஜித் பவார் மறைவுக்கு பின் அந்த அணி  தற்போது அவரின் மனைவியும் மகாரஷ்டிர துணை முதல்வருமான சுனேத்ரா பவார் தலைமையில் இயங்கி வருகிறது. </p> <h2>சரத் பவார்</h2><p>அஜித் பவார் அணி தற்போது என்டிஏ கூட்டணியில் உள்ள நிலையில் 8 எம்.பி.க்களை வைத்துள்ள சரத் பவார் அணியை அதனுடன் இணைத்து நாடாளுமன்றத்தில் என்டிஏ கூட்டணி பலத்தை அதிகரிப்பதே பாஜகவின் இந்த அவசர நகர்வுக்கு முக்கியக் காரணமாகும்.</p><p>இந்த இணைப்புக்கு சரத் பவார் இசைவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அண்மையில் என்டிஏவில் உள்ள சிவன்சேனா தலைவரும் மகாராஷ்டிராவின் மற்றொரு துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே உடன் சரத் பவார் சந்திப்பு இந்த ஊகங்களை வலுப்படுத்தியது.</p><p>இரு பிரிவுகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக, இரு தரப்பிற்கும் மத்திய அமைச்சரவையில் தலா ஒரு அமைச்சர் பதவியை வழங்க பாஜக முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.</p><h2>சுனேத்ரா பவார்</h2><p>இரு பிரிவுகளையும் இணைக்கும் இந்த முயற்சிக்கு சுனேத்ரா பவார் மற்றும் அவரது மகனும் மாநிலங்களவை எம்பியுமான பார்த் பவார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்த இணைப்பு நடந்தால், கட்சியின் அதிகாரம் மீண்டும் மூத்த தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/national/political-opponents-not-enemies-eknath-shinde-on-meeting-sharad-pawar">சரத் பவார் </a>மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே ஆகியோரின் கைக்குச் சென்றுவிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.</p><p>இந்த இணைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், பார்த் பவார் கடந்த வியாழன் இரவு மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்துப் பேசியுள்ளார்.</p><p>ஒருவேளை இணைப்பு தவிர்க்க முடியாததாக மாறினால், சுனேத்ரா பவாரே தொடர்ந்து துணை முதலமைச்சராகவும், கட்சியின் தேசியத் தலைவராகவும் நீடிக்க வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>இருப்பினும், தற்போதைக்கு அதிகாரப்பூர்வமாக இரு கட்சிகளுமே இந்த இணைப்புப் பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ளன.</p> <h2>பாஜக அவசரம்</h2><p>கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, போதிய பெரும்பான்மை இல்லாததால் மோடி அரசாங்கத்தின் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வியடைந்தது.</p><p>இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற பா ஜ க திட்டமிட்டுள்ளது.</p><p>மக்களவையின் மொத்த பலம் 540 ஆகும். அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை (360 வாக்குகள்) தேவை.</p> <p>தற்போது என்டிஏ கூட்டணியின் பலம் 319 ஆக உயர்ந்துள்ளது. இதில் அண்மையில் உத்தவ் சிவசேனாவின் இருந்து ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவிய 6 எம்.பிக்களும் அடங்குவர்.</p><p>சரத் பவாரின் பிரிவு  இணைந்தால் என்டிஏவின் வாக்கு எண்ணிக்கை 327 ஆக உயரும்.</p><p>இருப்பினும், 360 என்ற இலக்கை எட்ட இன்னும் 33 வாக்குகள் குறைவாக இருக்கும் என்பதால், சில எதிர்க்கட்சிகளை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகச் செய்ய முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கட்சியை விட்டுச் சென்றவர்கள் திரும்பி வந்தால் 1 மணி நேரத்தில் பதவி விலக தயார் - அபிஷேக் பானர்ஜி சவால் </title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-1-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-1-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">8b45f936-8243-4489-96e6-4c5e02a17810</guid><pubDate>Sat, 18 Jul 2026 22:58:00 +0000</pubDate><atom:updated>2026-07-18T22:58:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,trinamool congress,Abhishek Banerjee,அபிஷேக் பானர்ஜி,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/dob9ulx7/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஷேக் பானர்ஜி]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஷேக் பானர்ஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/dob9ulx7/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கட்சியை விட்டு விலகிய தலைவர்கள் மீண்டும் மம்தா பானர்ஜியின் தலைமையின் கீழ் கட்சிக்குத் திரும்பினால் தான் ஒரே மணி நேரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/abhishek-banerjee">அபிஷேக் பானர்ஜி</a>  சவால் விடுத்துள்ளார். </p><h2>அதிருப்தி </h2><p>மம்தாவின் மருமகன் என்பதால் கட்சியில் அபிஷேக் பானர்ஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும், அவரின் ஆதிக்கம் அதிகம் உள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. </p><p>குறிப்பாக கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர் அனுவ்ரதா மொண்டல் மற்றும் எம்.எல்.ஏ மதன் மித்ரா போன்றவர்கள், அபிஷேக் பானர்ஜியின் அணுகுமுறை தான் தங்களது அதிருப்திக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியிருந்தனர். </p><p>மமதா பானர்ஜி தங்களது புகார்களைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். </p> <h2>பதிலடி</h2><p>இதற்கு பதிலடி கொடுத்துள்ள அபிஷேக் பானர்ஜி,</p><p>"என் மீதுதான் உங்களுக்குப் பிரச்சினை என்றால், மம்தா பானர்ஜியின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">தலைமை </a>மீது உங்களுக்கு உண்மையான நம்பிக்கை இருந்தால், நீங்கள் முதலில் அவரிடம் திரும்பி வாருங்கள்.</p><p>நீங்கள் மதியம் 3 மணிக்குக் கட்சிக்குத் திரும்பினால், நான் மாலை 4 மணிக்குள் எனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன்.</p><p>நீங்கள் வரமாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் டெல்லியில் இருப்பவர்களுடன் டீல் பேசியிருக்கிறீர்கள்" என்று சாடியுள்ளார்.</p> <p>அரசியல் பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், மத்திய புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றின் நோட்டீஸ் வந்தவுடனேயே பயந்துபோய் தலைவர்கள் கட்சி மாறுவதாகக் குற்றம் சாட்டினார்.</p><p>மேலும் அவர், "நோட்டீஸ் வந்ததும் நான் ஓடிவிடவில்லை. அமலாக்கத்துறை என்னை 10 முறைக்கும் மேலாக அழைத்து விசாரித்துள்ளது. சிபிஐ மற்றும் காவல்துறையினரும் விசாரித்துள்ளனர். என் மீது 20 முதல் 30 எப்.ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் துல்லியமான எண்ணிக்கை எனக்கே தெரியாது.</p><p>பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குப் பயந்து டி.எம்.சி தலைவர்கள் 'வாஷிங் மெஷின்' பாணியில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே கட்சி மாறுகிறார்கள் என்றும், மக்கள் ஆதரவு மட்டுமே தங்களுக்கு பாதுகாப்பு என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>உத்தவ் சிவசேனாவின் 6 எம்.பி.க்கள் கட்சித் தாவலை அங்கீகரித்த சபாநாயகர்.. திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.களுக்கும் தனி இருக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/speaker-recognizes-the-defection-of-six-uddhav-shiv-sena-mps-separate-seating-allotted-for-dissident-trinamool-congress-mps-as-well</link><comments>https://www.maalaimalar.com/news/national/speaker-recognizes-the-defection-of-six-uddhav-shiv-sena-mps-separate-seating-allotted-for-dissident-trinamool-congress-mps-as-well#comments</comments><guid isPermaLink="false">7b262e7d-7af9-472f-82fc-90e250beb44a</guid><pubDate>Sat, 18 Jul 2026 21:06:42 +0000</pubDate><atom:updated>2026-07-18T21:06:42.235Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>uddhav Thackeray,உத்தவ் தாக்கரே,Eknath Shinde,ஏக்நாத் ஷிண்டே,Shiv Sena,சிவசேனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/cfxx1pvv/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உத்தவ் சிவசேனா]]></media:title><media:description type="html"><![CDATA[ உத்தவ் சிவசேனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/cfxx1pvv/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/udhav-thackeray">உத்தவ் தாக்கரே</a>வின் சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற 6 அதிருப்தி மக்களவை உறுப்பினர்கள் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிண்டே சிவசேனாவுடன் இணைந்ததை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளார். </p><p>சஞ்சய் உத்தம்ராவ் தேஷ்முக், சஞ்சய் ஹரிபாவ் ஜாதவ், பாவ்சாகேப் ராஜாராம் வக்காசவ்ரே, ஓம்பிரகாஷ் பூபால்சிங் நிம்பால்கர், சஞ்சய் தினா பாட்டீல் மற்றும் நாகேஷ் பாபுராவ் பாட்டீல் அஷ்டிகர் ஆகிய 6 எம்பிக்களின் கட்சி மாற்றம் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது.</p><p>இதன்மூலம் மக்களவையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் பலம் 7லிருந்து 13 ஆக உயர்ந்துள்ளது. </p><p>இதன் மூலம் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், 16 எம்பிக்களை கொண்ட தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கூட்டணி கட்சியாக ஷிண்டேவின் சிவசேனா உருவெடுத்துள்ளது.  </p><p>மறுபுறம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் பலம் வெறும் 3 எம்பிக்களாகக் குறைந்துள்ளது. </p><p>உத்தவ் அணியில் இருந்த 9 எம்பிக்களில் 6 பேர் (மூன்றில் இரண்டு பங்கு) பிரிந்து சென்றதால், இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது என்று சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.  </p> <h2>ஆபரேஷன் டைகர்</h2><p>பண பலத்தைக் காட்டி எம்பிக்கள் விலைக்கு வாங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87">ஏக்நாத் ஷிண்டே</a>,</p><p>"தங்களது தொகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்காகவும், அரசியல் காரணங்களுக்காகவுமே அவர்கள் எங்களுடன் இணைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான வளர்ச்சி நிதியை நாங்கள் வழங்குவோம்.</p><p>அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கவும் நாங்கள் வழிவகை செய்துள்ளோம். ஒரு தலைவர் கட்சியில் இருக்கும் வரை நல்லவராகவும், வெளியேறியவுடன் கெட்டவராகவும் மாறுவது உத்தவ் அணியின் வழக்கமான ஒன்றுதான். அவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.</p> <h2>திரிணாமுல் காங்கிரஸ்</h2><p>மறுபுறம் மேற்கு வங்க எதிர்க்கட்சியான மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி தேசியவாத குடிமக்கள் கட்சியில் (NCPI) இணைந்த 20 அதிருப்தி எம்.பிக்களுக்கும் மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா, தனியிடம் ஒதுக்க சம்மதித்துள்ளார்.</p><h2>பலம்</h2><p>தற்போது பாஜகவின் என்டிஏ கூட்டணியின் பலம் 319 ஆக உள்ளது. இந்தியா கூட்டணியின் பலம் 181 ஆகவும், இதர கட்சிகள் பலம் 41 ஆகவும் உள்ளது.</p><p>மக்களவையின் மொத்த பலம் 540 ஆக உள்ள நிலையில் பாராளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை (360 வாக்குகள்) தேவைப்படுகிறது.</p> <h2>பாஜக திட்டம்</h2><p>திங்களன்று மழைக்கால கூட்டத்தொடர் கூடும் நிலையில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த ஏதுவாக மக்களவை இடங்களை 850 ஆக உயர்த்தும் 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற தனது கூட்டணியின் பலத்தை 360க்கு நெருக்கமாக கொண்டுவர பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.</p><p>மகாராஷ்டிராவில் தனது கூட்டணியில் இருக்கும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் 8 எம்.பிக்களை கொண்ட சரத் பவார் தேசியவாத காங்கிரசையும் இணைக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு சரத் பவார் சம்மதம் தெரிவிக்கலாம் என்றும் ஆனால் மறைந்த அஜித் பவரின் மனைவியும் அவ்வணியின் தலைவியுமான சுனேத்ரா பவார் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இணைப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>சரத் பவாரின் பிரிவு இணைந்தால் என்டிஏவின் வாக்கு எண்ணிக்கை 327 ஆக உயரும்.</p><p>இருப்பினும், 360 என்ற இலக்கை எட்ட இன்னும் 33 வாக்குகள் குறைவாக இருக்கும் என்பதால், சில எதிர்க்கட்சிகளை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகச் செய்ய முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title> மேற்கு வங்கத்தில் அபிஷேக் பானர்ஜி அலுவலகம் இடிப்பு.. திரிணாமுல் காங்கிரஸ் கொந்தளிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/abhishek-banerjee-office-demolished-district-says-office-built-without-approval-bulldozers-raze-structure</link><comments>https://www.maalaimalar.com/news/national/abhishek-banerjee-office-demolished-district-says-office-built-without-approval-bulldozers-raze-structure#comments</comments><guid isPermaLink="false">45e6662d-7a95-47cf-a644-79dec00d4006</guid><pubDate>Sat, 18 Jul 2026 20:18:56 +0000</pubDate><atom:updated>2026-07-18T20:18:56.935Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,trinamool congress,Abhishek Banerjee,அபிஷேக் பானர்ஜி,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/77t1xhoa/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஷேக் பானர்ஜி அலுவலகம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஷேக் பானர்ஜி அலுவலகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/77t1xhoa/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில்  திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும் மக்களவை எம்.பி.யுமான <a href="https://www.maalaimalar.com/topic/abhishek-banerjee">அபிஷேக் பானர்ஜி</a>யின் அலுவலகம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2> மாவட்ட நிர்வாகம் </h2><p>மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பரகனா மாவட்டத்தின் அம்டலா பகுதியில் இயங்கி வந்த அபிஷேக் பானர்ஜியின் அப்பகுதியின் அலுவலகம் முறையான கட்டிட அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. </p><p>இது தொடர்பாக ஜூன் 30 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து ஜூலை 7 அன்று இரண்டாவது நோட்டீஸும் அனுப்பப்பட்டு, ஜூலை 15க்குள் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அவகாசம் வழங்கப்பட்டது.</p> <h2>அபிஷேக் பானர்ஜி தரப்பு</h2><p>வழங்கப்பட்ட இரண்டு நோட்டீஸ்களுக்கும் அபிஷேக் பானர்ஜி தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. அவரும் நேரில் ஆஜராகவில்லை. இதன் காரணமாகவே சட்டப்பூர்வமாக இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு இந்த அலுவலகம் இடிக்கப்பட்டது.</p> <h2>திரிணாமுல் காங்கிரஸ் கொந்தளிப்பு</h2><p>அபிஷேக் பானர்ஜி அலுவலகம் இடிக்கப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><p>திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,</p><p>"இந்தக் கட்டிட விவகாரம் தொடர்பான வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தின் பரிசீலனையில் நிலுவையில் உள்ளது. பாஜக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததிலிருந்து வங்காளத்தில் ஒரு புதிய மோசமான கலாச்சாரத்தைப் புகுத்தி வருகிறது. அதுதான் 'புல்டோசர் கலாச்சாரம்'.</p> <p>இன்று நாம் பார்த்தது பாஜகவின் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை. அருவருப்பான, வன்முறை அரசியல் இது. மாநிலத்தில் பாஜகவின் ரவுடி ராஜ்ஜியம் முழுமையாக அரங்கேறி வருகிறது" என்று சாடியுள்ளது.</p><h2>திரிணாமுல் காங்கிரஸ் பூசல்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF">மம்தா பானர்ஜி </a>தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்க தேர்தலில் பாஜவிடம் தோற்றது. </p><p>அதன் 80 எம்எல்ஏகளில் 50க்கும் மேற்பட்டோர் தனி அணியாக பிரிந்து கட்சியை தங்களுக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனர். மேலும் பல எம்.பிக்களும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.</p><p>கட்சியில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மீது கட்சியில் அதிருப்தி நிலவுகிறது. இந்த சூழலில் அவரின் அலுவலகம் மாவட்ட நிர்வாகத்தால் இடித்து தரைமட்டக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சோனம் வாங்சுக்-ஐ வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றது தவறு - ராகுல் காந்தி 
 </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-crackdown-rahul-gandhi-condemns-forced-removal-of-sonam-wangchuk</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-crackdown-rahul-gandhi-condemns-forced-removal-of-sonam-wangchuk#comments</comments><guid isPermaLink="false">8305960d-2a34-43bc-9f68-9df481d32ff6</guid><pubDate>Sat, 18 Jul 2026 18:55:16 +0000</pubDate><atom:updated>2026-07-18T18:55:16.968Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,hunger strike,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,உண்ணாவிரதம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/hvjolzhq/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் காந்தி ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/hvjolzhq/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி போலீசார் சோனம் வாங்சுக்கை போராட்டக் களத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றியதற்கு  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்  தெரிவித்துள்ளார். </p><h2>போராட்டம் </h2><p> நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றுமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் அபிஜித் தீப்கே தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p> <h2>சோனம் வாங்சுக்</h2><p>இதில் கடந்த 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த செயல்பாட்டாளர் மற்றும் கல்வியாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-hospitalised">சோனம் வாங்சுக் </a>உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் வலுக்கட்டாயமாக டெல்லி போலீசாரால் சப்தர்ஜங்மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார்.</p><p>சப்தர்கஞ்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனம் வாங்சுக் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.</p> <h2>ராகுல் காந்தி</h2><p>சோனம் வாங்சுக் 20 நாட்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்த போதிலும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான <a href="https://www.maalaimalar.com/topic/rahul-gandhi">ராகுல் காந்தி</a> எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தது குறித்து சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.</p><p>இந்நிலையில் ராகுல் காந்தி முதல் முறையாக இவ்விவகாரத்தில் பொதுவெளியில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.</p> <p>அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,</p><p>"நாட்டில் கல்விக் கட்டணங்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதற்கும், போட்டித் தேர்வுகளை நடத்துவதில் அரங்கேறி வரும் முறைகேடுகளுக்கும் எதிராக நடக்கும் இந்தப் போராட்டம், இந்தியாவின் ஒட்டுமொத்த மாணவர்களின் எதிர்காலப் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது.</p><p>அமைதியான முறையில் நடந்த போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு, சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றியிருப்பது, உண்மை மற்றும் அகிம்சையின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது.</p><p>அநாகரிகமும் வன்முறையும்தான் இந்த மோடி அரசின் முதன்மையான கொள்கைகளாக மாறிவிட்டன.</p><p>ஆனால், எந்தவிதமான அதிகார பலத்தாலும் இந்திய மாணவர்களின் மன உறுதியை நசுக்கிவிட முடியாது. மாணவர்களின் உரிமைக்காகப் போராடுபவர்களையோ அல்லது அவர்களின் மேல் நம்பிக்கை கொண்டு ஆதரவளிக்கும் எங்களைப் போன்றவர்களையோ இத்தகைய மிரட்டல்களால் பின்வாங்கச் செய்ய முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>VIDEO: நீலம் எனது நிறம்..ஜெய் பீம்!.. பெண் தன் மீது மை வீசியது குறித்து அபிஜித் தீப்கே கருத்து  
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-ink-attack-woman-throws-black-ink-at-abhijit-deepke-during-jantar-mantar-agitation</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-ink-attack-woman-throws-black-ink-at-abhijit-deepke-during-jantar-mantar-agitation#comments</comments><guid isPermaLink="false">790ce7f0-acae-488c-9098-ce54794f0859</guid><pubDate>Sat, 18 Jul 2026 18:05:31 +0000</pubDate><atom:updated>2026-07-18T18:05:31.448Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,CJP,அபிஜித் தீப்கே,Abhijit Dipke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/osdcjcjo/abijith-deepke.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Abhijit Deepke]]></media:title><media:description type="html"><![CDATA[ Abhijit Deepke]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/osdcjcjo/abijith-deepke.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மீது பெண் ஒருவர் மை வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><h2>போராட்டம் </h2><p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றுமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் அபிஜித் தீப்கே தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p> <h2>வாங்சுக் நிலைமை</h2><p>இதில் கடந்த 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த செயல்பாட்டாளர் மற்றும் கல்வியாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-hospitalised">சோனம் வாங்சுக்</a> உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் வலுக்கட்டாயமாக டெல்லி போலீசாரால் சப்தர்ஜங்மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார்.</p><p>இதனால் போராட்டக் களத்தில் இன்று முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. தானும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக தீப்கே அறிவித்தார்.</p> <h2>மை வீச்சு</h2><p>இதனையே தீப்கே போராட்டக்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்து வந்த பெண் ஒருவர் திடீரென மேடைக்கு அருகில் வந்து, தான் வைத்திருந்த கருப்பு மையை அபிஜித் தீப்கே மீது வீசினார்.</p><p>இதனால் அதிர்ச்சியடைந்த தீப்கேவின் ஆதரவாளர்கள் உடனடியாக அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தினர்.</p><p>அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் சிறிது நேரம் தடைபட்ட போராட்டம், பின்னர் மீண்டும் தொடர்ந்தது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">STORY | Chaos at Jantar Mantar as woman throws ink-like liquid at CJP founder Abhijeet Dipke<br><br>Chaos erupted at Jantar Mantar on Saturday after a woman threw an ink-like liquid at Cockroach Janata Party (CJP) founder Abhijeet Dipke while he was addressing a gathering at the… <a href="https://t.co/KW2forKlnx">https://t.co/KW2forKlnx</a></p>&mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://x.com/PTI_News/status/2078394809807741435?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>வைரலாகும் வீடியோ</h2><p>மை வீசப்பட்ட இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.</p><p>ஒரு பெண் திடீரென மேடையில் ஏறி மையை வீசுவதும், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.</p> <h2>தீப்கே பதிலடி</h2><p>இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்த அபிஜித் தீப்கே, 'நீலம் எனது நிறம்... ஜெய் பீம்!' என்று பதிவிட்டுள்ளார்.</p><p>இதனிடையே சப்தர்கஞ்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனம் வாங்சுக் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அகமதாபாத் பட்டாசு ஆலை வெடி விபத்து: 8 தொழிலாளர்கள் பலி, 12 பேர் காயம் </title><link>https://www.maalaimalar.com/news/national/ahmedabad-fireworks-factory-blast-8-workers-killed-12-injured-in-gujarat</link><comments>https://www.maalaimalar.com/news/national/ahmedabad-fireworks-factory-blast-8-workers-killed-12-injured-in-gujarat#comments</comments><guid isPermaLink="false">7e6c3696-b636-4944-9cde-2f23af8c0b79</guid><pubDate>Sat, 18 Jul 2026 17:02:56 +0000</pubDate><atom:updated>2026-07-18T17:02:56.185Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ahmedabad,தொழிலாளர்கள்,பட்டாசு ஆலை விபத்து,Workers,Firecracker Factory Accident,அகமதாபாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/siye69wq/Ahmedabad-firecracker-factory-accident.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Ahmedabad firecracker factory accident]]></media:title><media:description type="html"><![CDATA[ Ahmedabad firecracker factory accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/siye69wq/Ahmedabad-firecracker-factory-accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">பட்டாசு ஆலையில்</a> ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி  8 தொழிலாளர்கள் பரிதாபகமாக உயிரிழந்தனர்.  12 பேர் காயமடைந்தனர். </p><h2>விபத்து </h2><p>குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மஹ்மூத்புரா  பகுதியில் இயங்கி வந்த மெஹுல் தோடியா என்பவருக்கு சொந்தமான டேலண்ட் பயர்ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில்  இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. </p><p>தொழிலாளர்கள் இன்று பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் தப்பிக்க முடியாமல் ஆலைக்குள்ளேயே சிக்கினர். </p><p> விபத்து குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். </p><p>காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.</p><h2>மேயர்</h2><p>விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட அகமதாபாத் மேயர் ஹிதேஷ் பாரோட் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த பட்டாசு தொழிற்சாலை ஒரு தற்காலிக குடிசை போன்ற இடத்தில் இயங்கி வந்துள்ளது. அதுவே தீ மிக வேகமாகப் பரவக் காரணமாக அமைந்துள்ளது" என்று தெரிவித்தார்.</p> <h2>மோடி இரங்கல்</h2><p>அகமதாபாத் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,</p><p>"குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மக்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்தத் துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் யாவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடனேயே உள்ளன.</p><p>காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.</p><p>இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000-மும் நிவாரண தொகையாக வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தாக்குதலுக்கு சதி: குஜராத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் 5 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/five-arrested-over-links-to-jaish-e-mohammed-terror-outfit</link><comments>https://www.maalaimalar.com/news/national/five-arrested-over-links-to-jaish-e-mohammed-terror-outfit#comments</comments><guid isPermaLink="false">dd4a5ee1-c7c0-45c0-8a8c-f60d0681ee68</guid><pubDate>Sat, 18 Jul 2026 11:24:09 +0000</pubDate><atom:updated>2026-07-18T11:24:09.496Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gujarat ATS,Jaish-e-Mohammed,குஜராத் ஏடிஎஸ்,ஜெய்ஷ்-இ-முகமது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/xdq8blq3/Untitled-design-29.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gujarat ATS Arrests Five linked to Jaish-e-Mohammed]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/xdq8blq3/Untitled-design-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவின் மூலம் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாக ஐந்து பேரை, குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை (ATS) கைது செய்தது.</p><p>குஜராத்தில் அகமதாபாத் மற்றும் சித்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிலால் அபித் ஷேரா, முகமது அய்யூப் கடிவாலா, முகமது ஷஃபி முகி, முகமது ஹசன் கரடியா மற்றும் முகமது அய்யூப் சுனசரா ஆகிய ஐந்து பேர்களை சந்தேகத்தின் பேரில் ஏடிஎஸ் அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் சிலர் மதராஸாவில் படித்து வந்துள்ளனர்.</p><p>இவர்களில் குறைந்தது இருவராவது ஏகே-47 ரக துப்பாக்கிகளை கையாளுவதற்கான பயிற்சியை பெறுவதற்காக காஷ்மீருக்கு பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>மேலும் இவர்கள் வெடிகுண்டுகள் மற்றும் நச்சுவாயு தயாரிக்க கற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்த மாத தொடக்கத்தில் சதி வேலைக்கு திட்டமிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு, சதிதிட்டம் முறியடிக்கப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அந்த 8 பேருடன் நெருக்கமாக செயல்பட்டு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>2023 முதல் 2026 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், சந்தேக நபர்கள் வெவ்வேறு இடங்களில் டைமர் (timer) செயல்முறையை பயன்படுத்தி வெடிகுண்டு முறைகளை ஆராய்ந்து, அவற்றை செயல்படுத்த தீவிரமாக முயன்றதாகவும் ஏடிஎஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கொடி, பயங்கரவாதி மசூத் அசார் எழுதிய புத்தகங்களின் முழு அச்சுப் பிரதி மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதியால் நிதியளிக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.1.30 லட்சம் பணத்தையும் போலீசார் மீட்டனர்.</p><p>மேலும் இதுகுறித்து காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் சுனில் ஜோஷி கூறுகையில், “ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நிறுவனரான மசூத் அசாரின் புத்தகங்கள் மற்றும் பேச்சுகளாலும், இவர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். </p><p>கைது செய்யப்பட்டவர்கள் புத்தகத்தின் உள்ளடக்கத்தை படித்துவிட்டு, மற்ற மதராஸா மாணவர்களையும் அமைப்பில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்படுவதற்கும் குடியுரிமை இழப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை-உச்ச நீதிமன்றம் </title><link>https://www.maalaimalar.com/news/national/sir-activities-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/sir-activities-supreme-court#comments</comments><guid isPermaLink="false">9aa2feed-4fc2-4d4f-a3d6-1e1050938b9b</guid><pubDate>Sat, 18 Jul 2026 10:03:32 +0000</pubDate><atom:updated>2026-07-18T10:03:32.461Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Election Commission,Sir,தேர்தல் ஆணையம்,Supreme Court,உச்ச நீதிமன்றம்,citizenship,தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்,இந்தியக் குடியுரிமை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/72msx6qh/supreme.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court-Election Commission ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/72msx6qh/supreme.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வாக்காளர் பட்டியலிலிருந்து ஒருவரது பெயர் நீக்கப்படுவதால் மட்டுமே அவர் தனது இந்தியக் குடியுரிமையை இழந்துவிட மாட்டார் என்றும், ஒருவரது குடியுரிமையைத் தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p>மேற்கு வங்காளத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட 'தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த' நடவடிக்கையின் போது, லட்சக்கணக்கான மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அவ்வாறு பெயர் நீக்கப்பட்டவர்களுக்குப் பொது விநியோகத் திட்டம், 'அன்னபூர்ணா யோஜனா' போன்ற சமூக நலத் திட்டங்களின் பலன்கள் மற்றும் சாதிச் சான்றிதழ்கள் மறுக்கப்படுவதாகக் கூறி, காங்கிரஸ் பிரமுகர் பிரசென்ஜித் போஸ் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><h2><strong>தேர்தல் ஆணையத்திற்கு இறுதி அதிகாரமில்லை:</strong></h2><p>வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கவும், சந்தேகத்திற்குரிய நபர்களின் பெயர்களை நீக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால், ஒரு நபர் இந்தியக் குடிமகனா இல்லையா என்பதை இறுதி செய்யும் அதிகாரம் அதற்கு இல்லை. குடியுரிமைச் சட்டத்தின்படி அதனைத் தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது.</p><h2><strong>தானாகவே குடியுரிமை பறிபோகாது:</strong></h2><p>வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்ட உடனே ஒருவரது குடியுரிமை தானாகவே ரத்தாகிவிடாது. தேர்தல் ஆணையம் ஒருவரது குடியுரிமை குறித்து சந்தேகம் கொண்டால், அந்த விவகாரத்தை உரிய விசாரணைக்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்குத்தான் பரிந்துரைக்க வேண்டும்.</p><h2><strong>சமூக நலத்திட்ட பலன்களைப் பறிக்கக் கூடாது:</strong></h2><p>மத்திய அரசு இறுதி முடிவை அறிவிக்கும் வரை, வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்ட நபர்களுக்கான சமூக நலத்திட்ட உதவிகளையும், இதர சிவில் உரிமைகளையும் மாநில அரசுகள் நிறுத்தக் கூடாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><h2><strong>33 லட்சத்திற்கும் அதிகமான மேல்முறையீடுகள் நிலுவை:</strong></h2><p>மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், "மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 34 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் சிறப்பு தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ளன. இதுவரை வெறும் 38,000 மனுக்கள் மட்டுமே விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன. </p><p>இதில் ஆச்சரியம் என்னவென்றால், விசாரிக்கப்பட்ட மனுக்களில் 70% பேரின் பெயர்கள் தவறாக நீக்கப்பட்டது தெரியவந்து, அவை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, முறையான விசாரணை முடியும் முன்பே ஏழை எளிய மக்களின் ரேஷன் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பறிப்பது சட்டவிரோதமானது" என்று சுட்டிக்காட்டினார். </p><p>இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளிக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், மேற்குவங்க அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குஜராத் அரசு பள்ளி விடுதியில் கிச்சடி, கோதுமை ரொட்டி சாப்பிட்ட 147 மாணவிகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/national/147-girls-hospitalised-after-hostel-meal-in-gujarat</link><comments>https://www.maalaimalar.com/news/national/147-girls-hospitalised-after-hostel-meal-in-gujarat#comments</comments><guid isPermaLink="false">ad6a4274-bc27-4f4a-9333-eb01febd68cc</guid><pubDate>Sat, 18 Jul 2026 09:31:43 +0000</pubDate><atom:updated>2026-07-18T09:31:43.342Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>food poisoning,Kasturba Gandhi Vidyala,Gujarat school,கஸ்தூரிபா காந்தி வித்யாலயா,குஜராத் பள்ளி,உணவு ஒவ்வாமை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/ax7ckvt4/Untitled-design-28.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 147 hostel girls admitted to hospital in Gujarat Govt School ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/ax7ckvt4/Untitled-design-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத்தில் உள்ள ஒரு அரசு உறைவிட பள்ளியில், இரவு உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p>சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி விடுதியில் 215 மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.</p><p>நேற்றிரவு உணவு சாப்பிட்ட இவர்களில் 147 பேருக்கு இன்று காலை வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டு சூடா சமூக சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.</p><p>அவர்களில் 45 மாணவிகளுக்கு உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து, சுரேந்திர நகரில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.</p><p>இதுகுறித்து மாவட்ட தலைமை சுகாதார அதிகாரி பி.ஜி. கோஹில் கூறுகையில், “நேற்று இரவு பள்ளியின் விடுதியில் சப்ஜி, கோதுமை ரொட்டி, கிச்சடி மற்றும் கீர் ஆகிய உணவுகளை சாப்பிட்ட மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.</p><p>அந்த உணவு மாதிரிகள் தற்போது பகுப்பாய்விற்காக சேகரிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.</p><p>இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் தங்களுக்கு நேரடியாக எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என பெற்றோர் ஒருவர் தெரிவித்தார்.</p><p>மேலும் இந்த பள்ளி விடுதியில் பயிலும் தனது இரண்டு மகள்களில் ஒருவருக்கு நேற்று உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.</p><p>ஆனால் இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தனக்கு எந்தவிதமான தகவலையும் தெரிவிக்கவில்லை என அந்த மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டினார்.</p><p>தற்போது மாணவிகள் அனைவருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பணம் இனி கிழியாது நனையாது:இந்தியாவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/plastic-rupee-notes-to-be-introduced-in-india-no-more-torn-or-wet-money</link><comments>https://www.maalaimalar.com/news/national/plastic-rupee-notes-to-be-introduced-in-india-no-more-torn-or-wet-money#comments</comments><guid isPermaLink="false">2d359d41-1d4b-4116-891b-347bb22397be</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:45:13 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:45:13.339Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,இந்திய ரிசர்வ் வங்கி,Plastic banknotes,Paper banknotes,காகித ரூபாய் நோட்டுகள்,பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/teglev9a/rbi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Plastic banknotes ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/teglev9a/rbi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய பிளாஸ்டிக் (Polymer) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான முதற்கட்ட பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி தீவிரப்படுத்தியுள்ளது. இதன் தொடக்கமாக, அடுத்த ஆண்டு முதல் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை சோதனை முறையில் புழக்கத்தில் விட ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது.</p><h2><strong>உலகளாவிய டெண்டர் அறிவிப்பு:</strong></h2><p>ஆர்பிஐ-இன் நாணய அச்சடிப்பு நிறுவனமான பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரான் பிரைவேட் லிமிடெட், இந்த பிளாஸ்டிக் நோட்டுகளை தயாரிப்பதற்கான பிரத்யேக 'பாலிமர் சப்ஸ்ட்ரேட்' தாள்களை வழங்க உலகளாவிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துடெண்டர் வெளியிட்டுள்ளது. </p><p>இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 18 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 68,000 ரீம்கள் பாலிமர் தாள்கள் முதற்கட்டமாக கோரப்பட்டுள்ளன. 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளுக்கு தலா 34,000 ரீம்கள் பயன்படுத்தப்படும் (ஒரு ரீம் என்பது 500 தாள்களைக் கொண்டது).</p><h2><strong>பிளாஸ்டிக் நோட்டுகள் ஏன்?</strong></h2><p>இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்த போதிலும், ரொக்கப் பணத்தின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்கவே இந்த மாற்றம் கொண்டுவரப்படுகிறது.</p><h2><strong>நீடித்த உழைப்பு:</strong></h2><p>சாதாரண காகித நோட்டுகளை விட பிளாஸ்டிக் நோட்டுகள் 4 முதல் 5 மடங்கு அதிக காலம் உழைக்கும். இவை எளிதில் கிழியாது; தண்ணீர், எண்ணெய் போன்றவற்றால் பாதிக்கப்படாது.</p><h2><strong>அழுக்கு மற்றும் கிருமி எதிர்ப்பு:</strong></h2><p>காகித நோட்டுகள் எளிதில் அழுக்கடைந்து 'அழுக்கு நோட்டுகளாக' மாறிவிடுகின்றன. ஆனால், பாலிமர் நோட்டுகள் ஈரப்பதம் மற்றும் பாக்டீரியாக்களை உறிஞ்சாது என்பதால் எப்போதும் சுத்தமாக இருக்கும்.</p><h2><strong>செலவு குறைப்பு:</strong></h2><p> ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பழைய காகித நோட்டுகளை அழித்துவிட்டு, புதிய நோட்டுகளை அச்சடிக்க ஆர்பிஐ ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலவிடுகிறது. பிளாஸ்டிக் நோட்டுகள் நீண்ட காலம் உழைக்கும் என்பதால், இந்த அச்சடிப்புச் செலவு பெருமளவு குறையும்.</p><h2><strong>கள்ள நோட்டுகளைத் தடுத்தல்:</strong></h2><p> இந்த பாலிமர் நோட்டுகளில் வெளிப்படையான விண்டோ, உலோக எண்கள், காந்த இழை போன்ற அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும். இதனால் கள்ள நோட்டுகளைத் தயாரிப்பது முற்றிலும் சாத்தியமற்றதாக மாறும்.</p><h2><strong>கடுமையான பாதுகாப்பு நிபந்தனைகள்:</strong></h2><p>நாட்டின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு, இந்த டெண்டரில் பங்கேற்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆர்பிஐ கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.</p><p>* சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் எந்தவொரு வணிகத் தொடர்பும் இல்லாத நிறுவனங்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும்.</p><p>* மூலப்பொருட்களை இந்த இரு நாடுகளிலிருந்தும் பெறக்கூடாது.</p><p>* இதற்கு முன் சீனா அல்லது பாகிஸ்தானில் பணியாற்றிய ஊழியர்களை இந்த இந்தியத் திட்டத்தில் பணியமர்த்தக் கூடாது.</p><h2><strong>எப்போது முழுமையாக புழக்கத்திற்கு வரும்?</strong></h2><p>இந்த பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகமான உடனே பழைய காகித நோட்டுகள் செல்லாததாகிவிடாது. இரண்டுமே ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருக்கும். அடுத்த ஆண்டு தொடங்கும் இந்த சோதனை ஓட்டத்தின் வெற்றி மற்றும் மக்களின் வரவேற்பைப் பொறுத்து, 2027-ஆம் ஆண்டிற்குப் பிறகு நாடு முழுவதும் அனைத்து நோட்டுகளும் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றப்படும் எனத் தெரிகிறது.</p><p>ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த பாலிமர் பிளாஸ்டிக் கரன்சி முறையைப் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>புனேவில் பரவும் கொரோனா தொற்று: மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/coronavirus-spread-on-pune</link><comments>https://www.maalaimalar.com/news/national/coronavirus-spread-on-pune#comments</comments><guid isPermaLink="false">08531ce1-495e-457d-8536-6933544b5765</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:42:02 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:42:02.819Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Coronavirus,கொரோனா வைரஸ்,மருத்துவ நிபுணர்கள்</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/uwhm2aul/coronavirus.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ கொரோனா வைரஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ கொரோனா வைரஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/uwhm2aul/coronavirus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகையே உலுக்கிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">கொரோனா</a> பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்ட நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனினும், இது புதிய அலைக்கான அறிகுறி அல்ல என்றும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய பாதிப்புகள் அனைத்தும் லேசான அறிகுறிகளுடனேயே காணப்படுகின்றன.</p><h2><strong>புள்ளி விவரம்</strong></h2><p>மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டில் இதுவரை மாநிலம் முழுவதும் 48 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்றின் காரணமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், 2026-ம் ஆண்டு வரை இந்த தொற்று படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது. இந்த ஆண்டின் கணக்குப்படி ஜனவரியில் 3, பிப்ரவரியில் 1, ஜூன் மாதத்தில் 11 மற்றும் ஜூலை மாதத்தில் 21 என பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா பரிசோதனைகளை தாமாக முன்வந்து செய்து கொண்டவர்களை விட, வேறு நோய்களுக்கான அறுவை சிகிச்சைக்கு முந்தைய உடற்தகுதி பரிசோதனைகளின் போதே பலருக்கு தொற்று இருப்பது தற்செயலாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தற்போது வழக்கமான இன்ப்ளூயன்ஸா காய்ச்சலை போன்ற ஒரு போக்கை நோக்கி மாறியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><h2><strong>அறிகுறி</strong></h2><p>2023-ம் ஆண்டிற்கு பிறகு <a href="https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-reports-4-covid-19-deaths-12-cases-in-less-than-a-month">கொரோனா</a> பாதிப்பால் ஏற்பட்டுள்ள முதல் குறிப்பிடத்தக்க உயர்வு இதுவென்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். </p><p>இது குறித்து ஜஹாங்கீர் மருத்துவமனையின் தொற்று நோய்கள் நிபுணர் டாக்டர் பியூஷ் சௌத்ரி பேசுகையில், கடந்த சில நாட்களில் கொரோனா மற்றும் இன்ப்ளூயன்ஸா ஆகிய இரு பாதிப்புகளும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தங்கள் மருத்துவமனையில் மட்டும் அண்மை நாட்களில் 7 முதல் 8 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஒரு மருத்துவ மையத்திலேயே இந்த அளவு பாதிப்பு இருந்தால், நகரம் முழுவதும் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. </p><p>இந்தத் தொற்றானது ஓமிக்ரான் வகையை விடவும் லேசானதாகவே உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முதல் 5 நாட்கள் வரை இருமல், சளி, தொண்டை வலி மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. தீவிர அறிகுறிகள் காரணமாக அல்லாமல், பிற மருத்துவ பிரச்சனைகளுக்காக பரிசோதனை செய்து கொண்ட போதே பலருக்கு தொற்று உறுதியானது. லேசான சளி உள்ள பலர் பரிசோதனை செய்து கொள்ளாததால், சமூகத்தில் உண்மையான பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்றும், மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.</p><h2><strong>பரிசோதனை</strong></h2><p>சிம்பயோசிஸ் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் ஜூபிடர் மருத்துவமனையின் தொற்று நோய்கள் ஆலோசகர் டாக்டர் சுஜாதா ரெகே கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா தொற்று ஆங்காங்கே நிலவி வந்தாலும், பரிசோதனைகள் குறைந்திருந்ததால் அது வெளியில் தெரியவில்லை என்றார். பொதுவாக பயன்படுத்தப்படும் கீழ் சுவாச பாதை மல்டிபிளக்ஸ் சோதனைகளில் இந்தத் தொற்று கண்டறியப்படுவதில்லை. ஆனால் மேல் சுவாசப் பாதை சோதனைகள் மூலம் இது எளிதாகக் கண்டறியப்படுகிறது. ஒரே மாதிரியிலிருந்து பல்வேறு வைரஸ்களைக் கண்டறியும் மேம்பட்ட மூலக்கூறு சோதனைகள் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், கொரோனா பாதிப்புகள் மீண்டும் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலைமை புதிய அலையை ஒத்திருக்கவில்லை என்று உறுதியளித்த அவர், இது கூடிக்குறைந்து வரும் ஒரு சாதாரண சுவாச வைரஸ் தொற்று போன்றதே என்றார். இதனுடன் சேர்த்து மருத்துவமனைகளில் இன்ப்ளூயன்ஸா, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் டைபாய்டு காய்ச்சல்களும் தற்போது அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>கண்காணிப்பு</strong></h2><p>ஜூபிடர் மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஷ்ரத்தா குல்கர்னி தெரிவிக்கையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த சில நாட்களில் கொரோனா நோயாளிகளை தாம் எதிர்கொண்டதாக கூறினார். ஏற்கனவே சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டு, பின்னர் காய்ச்சல் ஏற்பட்டு வந்த நோயாளிகளை பரிசோதித்த போது இந்தத் தொற்று உறுதியானது. தற்போது வரை அனைத்து பாதிப்புகளும் லேசானவையாகவே இருந்தாலும், அடுத்த சில வாரங்களுக்கு இந்தத் தொற்றின் பரவல் போக்கை உன்னிப்பாக கண்காணிப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 7 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வியூகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/strategy-to-pass-7-important-bills-during-the-monsoon-session-of-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/national/strategy-to-pass-7-important-bills-during-the-monsoon-session-of-parliament#comments</comments><guid isPermaLink="false">1b7987f5-57c1-4c96-8c20-0e991acefc96</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:14:19 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:14:19.736Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>parliament,மசோதாக்கள்,பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்,பாராளுமன்றம்</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/sp7uej98/parliament.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ பாராளுமன்றம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பாராளுமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/sp7uej98/parliament.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள் (20-ந்தேதி) தொடங்குகிறது. ஆகஸ்டு 13-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் சமீபத்தில் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட சில அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.</aside><h2><strong>வருமான வரி சட்ட திருத்தம்</strong></h2><p>முக்கியமாக இந்த கூட்டத்தொடரில் வருமான வரி சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. ரூபாயின் மீதான அழுத்தத்தை சமாளிப்பதற்காக வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும் நோக்கத்தில், அரசு பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் மூலதன ஆதாயங்கள் மீதான வருமான வரியில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.</p><p>மேலும், தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலுக்கு அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்ட திருத்த மசோதாவும் இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்படுகிறது.</p><h2><strong>வருமான வரி சட்ட திருத்தம்</strong></h2><p>முக்கியமாக இந்த கூட்டத்தொடரில் வருமான வரி சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. ரூபாயின் மீதான அழுத்தத்தை சமாளிப்பதற்காக வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும் நோக்கத்தில், அரசு பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் மூலதன ஆதாயங்கள் மீதான வருமான வரியில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.</p><p>மேலும், தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலுக்கு அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்ட திருத்த மசோதாவும் இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்படுகிறது.</p><h2><strong>7 மசோதாக்கள்</strong></h2><p>பிறப்பு - இறப்பு பதிவு சட்ட திருத்த <a href="https://www.maalaimalar.com/topic/பாராளுமன்றம்">மசோதா</a>, வெளிநாட்டு பங்களிப்பு முறைப்படுத்துதல் திருத்த சட்ட மசோதா உள்ளிட்டவையும் இந்த கூட்டத்தொடரில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ல் இருந்து 37 ஆக அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்து இருந்தது. தற்போது அதற்கான மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது.</p><p>தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு அமலாக்கத்துக்கான அரசமைப்பு சட்ட திருத்த மசோதா மீண்டும் கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>தற்போதைய சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கு ஏற்பவும், எளிதாக தொழில் செய்வதற்கும், 2006-ம் ஆண்டு சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்காக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி திருத்த மசோதா கொண்டு வரப்பட உள்ளது. மொத்தம் 7 மசோதாக்களை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.</p><h2><strong>ஆலோசனை கூட்டம்</strong></h2><p>இந்த நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான வியூகம் குறித்து ஆலோசிப்பதற்காக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மந்திரிகள் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.</p><p>டெல்லி கடமை பவனில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி அன்னபூர்ணா தேவி, கூட்டணி கட்சிகளை சேர்ந்த மத்திய மந்திரிகள் லாலன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்), ஜெயந்த் சவுத்ரி (ராஷ்ட்ரீய லோக் தளம்), கே.ராம் மோகன் நாயுடு (தெலுங்கு தேசம்) உள்ளி ட்டோர் பங்கேற்றனர்.</p><h2><strong>வியூகம்</strong></h2><p>பாராளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றுவதற்காக ஆளும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கடைப்பிடிக்க வேண்டிய வியூகம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. காங்கிரஸ்– சமாஜ்வாடி கட்சிகளை தவிர, பிற எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன், தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.</p><p>மேலும் நீட் வினாத்தாள் கசிவு, மேற்காசிய தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு, பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அவர்களுக்கு பதிலடி தருவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>லிஃப்டில் சிக்கிய சசி தரூர் எம்பி: ஹைட்ராலிக் கருவி மூலம் பத்திரமாக மீட்ட கேரள தீயணைப்புத்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/national/shashi-tharoor-stuck-in-lift-rescued-by-kerala-fire-force</link><comments>https://www.maalaimalar.com/news/national/shashi-tharoor-stuck-in-lift-rescued-by-kerala-fire-force#comments</comments><guid isPermaLink="false">f8e4db8a-58be-4622-af54-724e4ceaa8ec</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:13:00 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:13:00.907Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சசிதரூர்,Thiruvananthapuram,ShashiTharoor,LiftRescue,CongressMP,HydraulicSpreader,கேரளதீயணைப்புத்துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/is2wbycj/ShashiTharoor" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ShashiTharoor]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/is2wbycj/ShashiTharoor?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் லிஃப்டில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D"> சசி தரூர் </a>மற்றும் அவருடன் சென்றவர்கள் திடீரென சிக்கிக்கொண்டனர். </p><p>சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான சுழலுக்குப் பிறகு, விரைந்த வந்த தீயணைப்புத் துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.</p><h2><strong>நிகழ்ந்தது என்ன?</strong></h2><p>திருவனந்தபுரம் கிழக்கு ரோட்டரி கிளப் அமைப்பின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சசி தரூர் எம்பி அங்குள்ள தனியார் ஹோட்டலுக்கு வருகை தந்தார். </p><p>அவர் அங்கிருந்த மின்தூக்கியில் பயணித்தபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நின்றுவிட்டது. ஹோட்டல் ஊழியர்கள் கதவை திறக்க முயன்றும் முடியாததால், தீயணைப்பு மற்றும் மீட்புப் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.</p><h2><strong>அதிநவீன கருவி மூலம் மீட்பு..</strong></h2><p>தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். லிஃப்ட் கதவுகள் பலமாகப் பூட்டியிருந்ததால், அவர்கள் 'ஹைட்ராலிக் ஸ்பெரெட்டர்' எனப்படும் அதிநவீன கதவு விரிக்கும் கருவியைப் பயன்படுத்தினர். </p><p>இதன் மூலம் லிஃப்ட் கதவுகளுக்கு இடையே இடைவெளியை உருவாக்கி, உள்ளே சிக்கியிருந்த சசி தரூர் உள்ளிட்ட அனைவரையும் எவ்வித காயமின்றி பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.</p><h2><strong>சசி தரூர் பாராட்டு மற்றும் கௌரவிப்பு..</strong></h2><p>மீட்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், "அரை மணி நேரம் லிஃப்டிற்குள் இருந்தது எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், அமைச்சரைச் சந்திக்கும் அப்பாயிண்ட்மென்ட் உட்பட எனது அடுத்தடுத்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கு இதனால் தாமதமாகிவிட்டது" என்று கூறினார்.</p><p>இருப்பினும், தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே வந்து, அதீத திறமையுடன் தங்களை மீட்ட கேரள தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் வேகமான செயல்பாட்டை சசி தரூர் பாராட்டினார். தொடர்ந்து, தான் கலந்துகொண்ட ரோட்டரி கிளப் மேடையிலேயே, தன்னை மீட்ட தீயணைப்பு வீரர்களை நேரில் அழைத்து அவர்களுக்குப் பொதுவெளியில் சசி தரூர் எம்பி நன்றி கூறி கௌரவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;தனியார் ராக்கெட் ஏவும் திறன் பெற்ற 3வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது&quot;- பிரதமர் மோடி பெருமிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-emerges-as-third-country-with-private-rocket-launch-capability-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-emerges-as-third-country-with-private-rocket-launch-capability-pm-modi#comments</comments><guid isPermaLink="false">4811dc25-2c86-4bfd-b81e-5b7fa9d437f0</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:00:17 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:00:17.886Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,pm modi,பிரதமர் மோடி,Rocket Vikram 1,ராக்கெட் விக்ரம் 1</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/pruipi5l/PM-Modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/pruipi5l/PM-Modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் விஞ்ஞாணிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><h2>தனியார் ராக்கெட்</h2><p>தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது.</p><p>இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விக்ரம்-1 விண்ணில் ஏவப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 11.30 மணிக்கு ஏவப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகியது.</p><p>உடனடியாக தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதையடுத்து 20 நிமிட கவுண்டவுன் மீண்டும் தொடங்கியது. 12.05-க்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.</p><p>இந்நிலையில் இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விக்ரம்-1 நண்பகல் 12.05-க்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.</p><h2>வெற்றிகரமாக பாய்ந்த விக்ரம்-1</h2><p>இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 எடுத்துச்சென்ற செயற்கைக்கோள் புவிவட்டப்பாதையில் செலுத்தப்பட்டது. </p><p>விக்ரம்-1 ஆனது கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்டின் சொந்த ஸ்கோப் ஆகியவற்றிலிருந்து தொழில்நுட்ப விளக்க ஆய்வு கருவிகளை எடுத்துச் செல்கிறது. அத்துடன், காஸ்மோஸ் டயமண்ட்ஸின் கலைப்படைப்பான 'காஸ்மிக் புளூம்' மற்றும் ஒரு மைக்ரோ-ஆர்ட் பீஸ் கொண்டு செல்கிறது.</p><p>விக்ரம்-1 ராக்கெட் சுமந்து சென்ற சிறு செயற்கைக்கோள்கள் நிர்ணயித்த தூரம், புவிவட்டப்பதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.</p><h2>பிரதமர் மோடி வாழ்த்து</h2><p>இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் விஞ்ஞாணிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>தொலைபேசியில் அவர்," விக்ரம்-1 திட்டத்தின் விஞ்ஞானிகள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவன விக்ரம்-1 வெற்றியால் தனியார் ராக்கெட் ஏவும் திறன் பெற்ற 3வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது" என்று விக்ரம்-1 ராக்கெட்டை தயாரித்துள்ள ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பாராட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி: சப்தர்ஜங் ஊழியர்களுடன் அவரது மனைவி வாக்குவாதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-hospitalised</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-hospitalised#comments</comments><guid isPermaLink="false">b6cac199-773f-4071-a998-3c7b4a3e1879</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:09:00 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:09:00.022Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,delhi,கீதாஞ்சலி,சோனம் வாங்சுக்,டெல்லி,GitanjaliJAngmo</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/yfcn9brr/sonam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sonam Wangchuk]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/yfcn9brr/sonam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 21 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல்நிலை நலிவடைந்ததை அடுத்து டெல்லி போலீசாரால் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். </p><p>இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலிக்கும், அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>மொபைல் போனுக்கு தடை:</strong> </h2><p>மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக்கை காண்பதற்காக அவரது மனைவி கீதாஞ்சலி ஜே.ஆங்மோ சென்றார். அப்போது, அவசரப் பிரிவுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல அங்கிருந்த பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.</p><p>இதனால் ஆத்திரமடைந்த கீதாஞ்சலி, "ஏன் என்னால் எனது கைப்பேசியை உள்ளே கொண்டு செல்ல முடியாது?" என்று அங்கிருந்த ஊழியர்களிடம் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். இந்த வாய்மொழித் தகராறு தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.</p><h2><strong>மருத்துவ அறிக்கை தர மறுப்பா?</strong></h2><p>பரவி வரும் அந்த வீடியோவில், கீதாஞ்சலியுடன் வந்த மற்றொரு பெண்ணும் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது. சோனம் வாங்சுக்கின் தற்போதைய உடல்நிலை குறித்த மருத்துவப் பரிசோதனை அறிக்கையின் நகலை தங்களுக்கு வழங்காதது ஏன் என்றும் அவர்கள் அங்குள்ள அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p>முன்னதாக, தனது கணவருக்கு தங்களின் அல்லது தங்களை கண்காணித்து வந்த மருத்துவர்களின் அனுமதியின்றி எந்தவொரு வாய்வழி மருந்தையோ அல்லது குளுக்கோஸ் மூலமான சிகிச்சையையோ அளிக்கக் கூடாது என கீதாஞ்சலி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>சோனம் வாங்சுக்கின் தற்போதைய உடல்நிலை:</strong></h2><p>சப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, நீண்ட நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால் சோனம் வாங்சுக் உடல் மிகவும் பலவீனமடைந்து, நீர்ச்சத்து குறைபாட்டுடன் காணப்படுகிறார்.</p><p>அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு மற்றும் ரத்த சர்க்கரை குறைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அவரது இதயத் துடிப்பு மற்றும் இசிஜி பரிசோதனை முடிவுகள் சீராக உள்ளன. அவர் தற்போது சுயநினைவுடன் உள்ளார்.</p><p>டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படியும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரிலுமே சோனம் வாங்சுக் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக டெல்லி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>