<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 04 Sep 2026 15:19:36 +0000</lastBuildDate><item><title>கனமழையால் ஸ்தம்பிக்கும் டெல்லி - இயல்பு வாழ்க்கை முடக்கம்! </title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-life-paralyzed-by-heavy-rain</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-life-paralyzed-by-heavy-rain#comments</comments><guid isPermaLink="false">b85ffa44-16a9-4dd9-9af5-b7df3f75c0e6</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:14:40 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:14:40.681Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,வெள்ளப்பெருக்கு,Red Alert,ரெட் அலர்ட்,rain alert,டெல்லி கனமழை,delhi,டெல்லி</media:keywords><media:content height="452" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6uvla8lc/images-3.jfif" width="678"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனமழையால் ஸ்தம்பிக்கும் டெல்லி - இயல்பு வாழ்க்கை முடக்கம்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6uvla8lc/images-3.jfif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம் </h2><p>டெல்லியில் தொடர்ந்து பெய்தும் வரும் கனமழை காரணமாக தலைநகரின் முக்கிய இடங்களில்  <a href="https://www.maalaimalar.com/news/topnews/nepal-flash-floods-death-toll-rises-to-734">வெள்ளப்பெருக்கு</a> ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையானது முடங்கியுள்ளது.</p><h2>போக்குவரத்து சேவை பாதிப்பு </h2><p>டெல்லியின் கிழக்கு மற்றும் வடகிழக்கும் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர்.</p><p>குறிப்பாக ஆனந்த் விஹார் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றிய சாலைகளில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/puzhal-lake-appears-at-a-critically-low-level">மழைநீர்</a> பெருக்கெடுத்து ஓடியது, இதனால்  முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><h2>ரெட் அலர்ட் </h2><p>டெல்லியில் பெய்து வரும் கனழையால் நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) டெல்லியின் அனைத்து மாவட்டங்களுக்கும் உடனடி '<a href="https://www.maalaimalar.com/news/national/kerala-red-alert-for-8-districts-holiday-declared-for-schools-and-colleges-in-5-districts">ரெட் அலர்ட்</a>' எச்சரிக்கையை விடுத்துள்ளது. </p> <h2>விமான சேவை பாதிப்பு </h2><p>மோசமான வானிலை மற்றும், தொடர் கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல விமானங்கள் மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பி விடப்பட்டும் , சில விமானங்கள் தாமதமாகவும் புறப்பட்டன.</p> <h2>தேவையற்ற பயணம் வேண்டாம் </h2><p> பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடரக்கூடும் என்பதால், பொதுமக்கள் யாரும்<a href="https://www.maalaimalar.com/news/puducherry/orange-alert-for-puducherry-public-should-not-come-out-unnecessarily-797726"> வெளியே வர வேண்டாம்</a> என்றும் ,தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பள்ளிக்கூடம் செல்ல கலெக்டரிடம் சைக்கிள் கேட்ட சிறுமி: வைரலான வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/buy-me-a-bicycle-7-year-old-girl-with-amputated-leg-pleads-to-district-collector</link><comments>https://www.maalaimalar.com/news/national/buy-me-a-bicycle-7-year-old-girl-with-amputated-leg-pleads-to-district-collector#comments</comments><guid isPermaLink="false">62ff41fb-d3b3-4b78-ab64-9819f9c48bff</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:58:13 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:58:13.273Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>uttarpradesh,District Collector,மாவட்ட ஆட்சியர்,ஊனமுற்ற பெண்,physically disabled,உத்தரப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/q4k6hd71/Untitled-design-16.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ragini Disabled Girl]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/q4k6hd71/Untitled-design-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராணிபூர் என்ற கிராமத்தில் கால் ஊனமாக உள்ள சிறுமி ஒருவர், தனது வறுமையின் நிலையிலும், உடல் குறைகளை பொருட்படுத்தாமல், அந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கு ஒரு காலில் நடந்து சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேசம்</a> மாநிலம் பல்லியாவில் உள்ள ராணிபூர் என்ற கிராமத்தில் ராகினி என்ற ஏழு வயது சிறுமி பிறக்கும் போது மற்ற குழந்தைகளை போல உடல் ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளார். </p><h3><strong>7 வயது சிறுமி ராகினி</strong></h3><p>இதையடுத்து அந்த சிறுமி ஆறு மாத குழந்தையாக இருக்கும்போது, ஒரு விபத்தில் சிறுமியின் கால் கடுமையாக சேதமடைந்து நடக்க முடியாமல் போனது. அந்த சிறுமியின் குடும்பத்தினர், அவரை பல இடங்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். </p><p>ஆனால் ராகினியின் தந்தை தினக்கூலியாக வேலை பார்த்து வருவதாலும், பொருளாதார நெருக்கடி காரணமாகவும் சிறுமிக்கு உரிய மருத்துவ சிகிச்சையை அவரின் பெற்றோர்களால் வழங்க முடியாமல் போனது.</p><p>ராகினி தனது கிராமத்தில் உள்ள மற்ற குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை பார்த்து, தானும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று விரும்பியுள்ளார். தனது உடலில் குறைபாடுகள் இருந்தபோதிலும், திகோடா தொடக்கப் பள்ளியில் அந்த சிறுமி சேர்ந்து படிக்க தொடங்கினார்.</p><p>தனது வீட்டின் 400 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு, ராகினியால் ஒரு காலில் நடந்து செல்வது மிகவும் சவாலனதாக இருந்தது. </p><p>அந்த சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக இருந்ததால், அந்த சிறுமியால் ஒரு காலில் நடந்து செல்வது மேலும் கடினமானதாக இருந்தது.</p><h3><strong>மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை</strong></h3><p>இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் தனக்கு ஒரு மிதிவண்டி தருமாறு ராகினி வீடியோ காட்சி மூலம் கோரிக்கை வைத்தார். சிறுமி வெளியிட்ட அந்த வீடியோவில், ”மாவட்ட ஆட்சியர் மாமா, என் கால்களில் ஒன்று மிகவும் சேதமடைந்துள்ளது.</p><p>தயவுசெய்து எனக்கு ஒரு மிதிவண்டியை வாங்கி தாருங்கள். நான் தினமும் பள்ளிக்கு படிக்க வருவேன்” என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டார். </p><p>இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி கவனம் பெற்றதை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங், சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 26,500 நிதியுதவி வழங்கினார்.</p><p>இதையடுத்து உள்ளூர் கட்சியினரும் சிறுமிக்கு ஒரு மூன்றுசக்கர மிதிவண்டியை வாங்கி கொடுத்தனர். இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் ராகினியின் வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.</p><figure><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1037443005730852%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></figure><p>இதைத்தொடர்ந்து சிறுமிக்கு புத்தகங்கள், பள்ளி பை, பொம்மை மற்றும் சாக்லேட்டுகளை வழங்கினார். மேலும் ராகினிக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் ஏற்பாடு செய்து தருவதாக, ஆட்சியர் உறுதியளித்தார்.</p><p>மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறுமியின் கிராமத்திற்கு தேவையான சாலை வசதியும் சீரமைக்கப்பட்டது. மேலும் சிறுமியின் வீட்டிற்கு ஒரு கழிப்பறை கட்டுவதற்கு, அரசு நலத்திட்டத்தின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>பின்வாங்கிய பென்குயின் இந்தியா... சோனியா காந்தி சுயசரிதையை வெளியிடும் ஹார்பர் காலின்ஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/national/penguin-india-backs-out-harpercollins-to-publish-sonia-gandhis-autobiography</link><comments>https://www.maalaimalar.com/news/national/penguin-india-backs-out-harpercollins-to-publish-sonia-gandhis-autobiography#comments</comments><guid isPermaLink="false">2b1b002a-84da-49d0-9577-049a482f28ce</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:04:08 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:04:08.748Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>sonia gandhi,சோனியா காந்தி,Belonging A Journey of Love,Penguin India,பென்குயின் இந்தியா,HarperCollins,ஹார்பர் காலின்ஸ்,பிலாங்கிங் எ ஜர்னி ஆஃப் லவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/h741bnc3/New-Project-2026-09-04T191136.458.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பின்வாங்கிய பென்குயின் இந்தியா... சோனியா காந்தி சுயசரிதையை வெளியிடும் ஹார்பர் காலின்ஸ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/h741bnc3/New-Project-2026-09-04T191136.458.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூலான 'பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்' புத்தகத்தை இந்தியாவில் வெளியிடும் உரிமத்தை ஹார்பர் காலின்ஸ் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.</p><p>முதலில் பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் வெளியிட இருந்தநிலையில் பின் விலகியது. இந்நிலையில் ஹார்பர் காலின்ஸ் உரிமத்தை பெற்றுள்ளது.</p><h2>பென்குயின் நிறுவனம் விலகியதற்கான காரணம்</h2><p>புத்தகத்தின் சில பகுதிகளில் “எழுத்துப்பூர்வ மாற்றங்கள் மற்றும் நீக்கங்களை” மேற்கொள்ளுமாறு <a href="https://www.maalaimalar.com/news/national/sonia-gandhis-autobiography-penguin-withdrew-after-refusing-to-remove-remarks-about-modi-and-the-rss">பென்குயின் இந்தியா </a>நிறுவனம் சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. </p><p>அதாவது பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்த சோனியாவின் பகிர்வுகளை நீக்க பென்குயின் இந்தியா கேட்டுள்ளது. இதற்கு சோனியா காந்தி மறுப்பு தெரிவிக்க இந்த ஒப்பந்தத்திலிருந்து பென்குயின் இந்தியா விலகியதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. </p><p>ஆனால் இதற்கு பென்குயின் இந்தியா நிறுவனம் மறுப்பு தெரிவித்து, இது உண்மைக்கு மாறான தகவல் என தெரிவித்தது. </p><h2>ஒப்பந்தத்தை பெற்ற ஹார்பர் காலின்ஸ்</h2><p>பென்குயின் நிறுவனம் விலகியதைத் தொடர்ந்து, ஹார்பர் காலின்ஸ் இந்தியா நிறுவனம் இப்புத்தகத்தை வெளியிடுவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. </p><p>இதனைத்தொடர்ந்து திட்டமிட்டபடி இப்புத்தகம் 2026 நவம்பர் 10 அன்று இந்தியாவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்</h2><p>இப்புதக்கத்தில் சோனியா காந்தி தனது சிறுவயது வாழ்க்கை, ராஜீவ் காந்தி உடனான திருமண வாழ்க்கை, அதன் பின்னராக அரசியல் வருகை உள்ளிட்ட தனது வாழ்க்கையின் முக்கிய பகுதிகளை பகிர்ந்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் சொகுசு கப்பல் சுற்றுலாவை மேம்படுத்த ‘இ-குழு வருகை விசா’ அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/cruise-tourism-gets-a-boost-as-govt-clears-e-group-visa</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/cruise-tourism-gets-a-boost-as-govt-clears-e-group-visa#comments</comments><guid isPermaLink="false">73033bf3-2d9a-44e2-abc6-61a6182a84e3</guid><pubDate>Fri, 04 Sep 2026 11:23:48 +0000</pubDate><atom:updated>2026-09-04T11:23:48.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விசா,visa,சுற்றுலா,Tourism,சொகுசு கப்பல்,Luxury Cruise Ship</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/dw0n9pj9/ship.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/dw0n9pj9/ship.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவை உலகின் முன்னணி சொகுசுக் கப்பல் சுற்றுலாத்தலமாக மாற்றும் நோக்கில், நிர்ணயிக்கப்பட்ட பயணத்திட்டத்துடன் சொகுசு  கப்பல்களில் வரும் வெளி நாட்டு சுற்றுலா  பயணிகளுக்காக ‘இ-குழு வருகை விசா’ எனும் புதிய வசதியை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><h2><strong>மின்னணு விசா</strong></h2><p>தற்போது மின்னணு சுற்றுலா விசா பெறத் தகுதியுள்ள 172 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் இந்தத் பிரத்யேக விசா வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விசாவைப் பெறும் வெளிநாட்டுப் பயணிகள், மின்னணு விசா வசதி கொண்ட நாட்டின் 38 குறிப்பிட்ட துறைமுகங்கள் வழியாக இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். 30 நாட்கள் செல்லுபடியாகும் இந்த விசா மூலம் பலமுறை இந்தியாவிற்குள் வந்து செல்லும் வசதியும் வழங்கப்படுகிறது.</p><h2><strong>சொகுசுக் கப்பல்</strong></h2><p>சொகுசுக் கப்பல் இந்திய துறைமுகத்திற்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே, கப்பல் நிறுவனம் அல்லது அதன் முகவர் இதற்கான விண்ணப்பங்களை குறிப்பிட்ட இணையதளம் அல்லது செயலி வழியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.</p><h2><strong>கியூ.ஆர் குறியீடு</strong></h2><p>இந்த காலக்கெடுவிற்குப் பிறகு புதிய விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஒரு குழு விசாவில் எத்தனை சுற்றுலா பயணிகள் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்பதால் இதற்கு எவ்வித உச்சவரம்பும் இல்லை.</p><h2><strong>இணைய தளம்</strong></h2><p>வெளிநாட்டுப் பயணிகளின் விவரங்கள் அனைத்தும் மொத்தமாக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த விசா சான்றிதழில் கியூ.ஆர் குறியீடு இடம்பெற்றிருக்கும். இதைப் பயன்படுத்தி பயணிகள் குடிவரவு, சோதனைச்சாவடிகள் மற்றும் பயணத் திட்டத்தின் படியான உள்நாட்டுப் பயணங்களை மேற்கொள்ளலாம்.</p><h2><strong>பொருளாதார நன்மைகள்</strong></h2><p>எளிதாக்கப்பட்ட விசா மற்றும் குடிவரவு நடைமுறைகள் சர்வதேச சொகுசு கப்பல் நிறுவனங்கள் தங்களது பயணத்திட்டத்தில் இந்திய துறைமுகங்களைச் சேர்க்க ஊக்குவிக்கும் என்றும், இதன் மூலம் துறைமுகங்கள், விடுதிகள், உணவகங்கள், போக்குவரத்து மற்றும் உள்ளூர் சமூகங்களுக்குப் பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>கப்பல் சுற்றுலா</strong></h2><p>இந்தியாவின் 7,500 கி.மீ நீளமுள்ள கடற்கரை மற்றும் 400 நதிகளை இணைக்கும் உள்நாட்டு நீர்வழிகளைப் பயன்படுத்தி சொகுசு கப்பல் சுற்றுலாவை உயர்த்த அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.</p><h2><strong>சுற்றுலாத் துறை</strong></h2><p>குறிப்பாக, 2029-க்குள் சொகுசு கப்பல் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் நோக்கில் ‘க்ரூஸ் பாரத் மிஷன்’ மற்றும் கடல்சார் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கிலான திட்டங்கள் மூலம் இந்தியாவின் சுற்றுலாத் துறை புதிய உயரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கேரளத்தில் தேங்காய் பூங்கா..! வளர்ச்சி நோக்கிய முடிவு
</title><link>https://www.maalaimalar.com/news/national/coconut-park-in-kerala-development-oriented-decision</link><comments>https://www.maalaimalar.com/news/national/coconut-park-in-kerala-development-oriented-decision#comments</comments><guid isPermaLink="false">0502df9c-7b89-4bc1-b94a-02e74c0713e8</guid><pubDate>Fri, 04 Sep 2026 10:31:56 +0000</pubDate><atom:updated>2026-09-04T10:31:56.514Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேங்காய் ஏற்றுமதி,தேங்காய்,கேரளம்,V D Satheesan,விடி சதீஷன்</media:keywords><media:content height="629" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/hbaevhmn/vikatan2026-07-0840exitcafile-1.avif" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ V. D. Satheesan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/hbaevhmn/vikatan2026-07-0840exitcafile-1.avif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2>விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பு </h2><p>கேரளத்தின் வர்த்தகத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் தேங்காய் பூங்கா அமைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி <a href="https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-itself-can-build-the-dam-across-the-mullaperiyar-river-kerala-will-bear-the-entire-cost-chief-minister-saseeshan">சதீஷன்</a> கூறியுள்ளார். </p> <h2>பாரம்பரியம் டூ அறிவியல் மாற்றம் </h2><p>தென்னை விவசாயத்தை பாரம்பரிய முறையில் இருந்து அறிவியல் முறைக்கு மாற்றுவதன் மூலம் தென்னை விவசாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடியும். அதன் ஒரு செயல்முறையே இந்த  <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-vijay-tells-elephant-coconut-banana-kutti-story-and-crticks-dmk-govt-812323">தேங்காய்</a> பூங்கா என்று தெரிவித்தார்.</p> <h2>தேங்காய் சாகுபடியில் முன்னோடி </h2><p> இது குறித்து பேசிய  கேரளம் முதல் மந்திரி, வரலாற்று ரீதியாக  தேங்காய் சாகுபடியில் நாம்தான் முன்னோடியாக இருந்து வருகிறோம். ஆனால், உற்பத்தியில் பின்தங்கியுள்ளோம். எனவே மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்த தேங்காய் துறையை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு தேங்காய் பூங்கா திட்டம் உதவும்.</p><p>தேங்காயை நவீன முறையில் பதப்படுத்தி, மதிப்பு கூட்டி அதை உயர் தரத்தில் உருவாக்கினால் ஏற்றுமதி தேவையை பூர்த்தி செய்ய முடியும என்றும் தெரிவித்தார். </p> <h2>தொழில்முனைவோர் ஈர்ப்பு </h2><p>இந்த  தேங்காய் பூங்கா அமைப்பதன் மூலம் மிகுதியான தொழில்முனைவோரை ஈர்க்க முடியும் அதன் மூலம் சிறந்த வளர்ச்சி அடைந்த மாநிலமாக கேரளத்தை மாற்ற முடியும் என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கம்பத்தில் மோதிய பயணிகள் விமானம்.. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பரபரப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/passenger-plane-hits-pole-while-landing-commotion-at-srinagar-airport</link><comments>https://www.maalaimalar.com/news/national/passenger-plane-hits-pole-while-landing-commotion-at-srinagar-airport#comments</comments><guid isPermaLink="false">e50268af-e749-426a-a317-7ee47149cef8</guid><pubDate>Fri, 04 Sep 2026 10:22:57 +0000</pubDate><atom:updated>2026-09-04T10:22:57.990Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>airport,விமான நிலையம்,plane crash,விமான விபத்து,Indigo Flight,இண்டிகோ விமானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/hbtw5gwg/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கம்பத்தில் மோதிய பயணிகள் விமானம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கம்பத்தில் மோதிய பயணிகள் விமானம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/hbtw5gwg/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி வந்த இண்டிகோ விமானம் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை விமான நிலையத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு இன்று காலை 9 மணியளவில் இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று வந்தடைந்தது.</p><h2>விபத்து</h2><p>ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு நிறுத்தும் போது கம்பம் ஒன்றில் விமானம் மோதி <a href="https://www.maalaimalar.com/topic/plane-crash">விபத்து </a>ஏற்பட்டது.</p><p>அந்த கம்பம் விஷுவல் டாக்கிங் கைடன்ஸ் சிஸ்டம் எனப்படும் விமானங்கள் நிறுத்துவதற்காக வழிகாட்டுதல் அமைப்பை கொண்ட VDGS கம்பம் ஆகும்.</p><h2>காயம் ஏற்படவில்லை</h2><p>கம்பத்தில் மோதியபோது விமானத்தில் இருந்த பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>விமானத்தில் இருந்த பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் தானியங்கி படிக்கட்டுகளில் அல்லாமல், கையால் இயக்கப்படும் விமானப் படிக்கட்டு வழியாக இறக்கிவிடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.</p><p>இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை. விமானங்களின் வருகையும் புறப்பாடும் திட்டமிட்டபடி தொடர்ந்தன.</p> <h2>விசாரணை</h2><p>நடைமுறையின்படி, இந்தச் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று ஸ்ரீநகர் <a href="https://www.maalaimalar.com/topic/airport">விமான நிலைய</a> நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>விசாரணை முடிந்த பின்னரே சம்பவத்திற்கான சரியான காரணம் தெரியவரும். இந்தக் கட்டத்தில் காரணம் குறித்து எந்த முடிவுக்கும் வர முடியாது என விமான நிலையம் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிராபிக்ஸ் கார்டு ஆர்டர் செய்தவருக்கு டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி.. ரூ.30,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/detergent-powder-delivered-instead-of-ordered-graphics-card-consumer-commission-orders-30000-compensation</link><comments>https://www.maalaimalar.com/news/national/detergent-powder-delivered-instead-of-ordered-graphics-card-consumer-commission-orders-30000-compensation#comments</comments><guid isPermaLink="false">95a8d003-6680-40a3-b716-689682a39652</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:16:56 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:16:56.333Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,நுகர்வோர் ஆணையம்,Consumer Commission,ஆன்லைன் டெலிவரி,Online Delivery,west bengal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/9sw9rtqu/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/9sw9rtqu/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆன்லைனில் ரூ.1.98 லட்சம் செலுத்தி ஆர்டர் செய்த கிராபிக்ஸ் கார்டுக்கு பதிலாக டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி செய்யப்பட்ட சம்பவத்தில் வாடிக்கையாளருக்கு ரூ.30,000 வழங்க மேற்கு வங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/online-shopping-women-spend-42-percent-more-time-than-men">ஆன்லைன் ஷாப்பிங்</a> என்பது இன்று மக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக மாறி வருகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்தது ஒன்று, டெலிவரி ஆவது மற்றோரோன்றாக இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது. </p><p>அந்த வகையில் மேற்கு வங்கத்தில் ஈகாமர்ஸ் தளத்தில் ரூ.1.98 லட்சம் மதிப்பில் கணினிக்கான கிராபிக்ஸ் கார்டு ஆர்டர் செய்த நபருக்கு, 1 கிலோ துணி துவைக்கும் டிடர்ஜென்ட் பவுடர்  பாக்கெட் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் வைரலானது. </p><h2>அலைக்கழிப்பு</h2><p>இதுகுறித்து சம்பந்தப்பட்ட இகாமர்ஸ் நிறுவனத்திடம் உடனடியாக புகாரளித்தும், பலமுறை தொடர்பு கொண்டும் எவ்விதத் தீர்வும் கிடைக்கவில்லை.</p><p>இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளர், தனக்கு உரியப் பணத்தைத் திரும்பப் பெறவும், ரூ.10 லட்சம் நஷ்டஈடு கோரியும் மேற்கு வங்க <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">நுகர்வோர் ஆணையத்தை</a> அணுகினார்.</p><p>நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்ட பிறகே,  வாடிக்கையாளரின் கணக்கில் ரூ.1.98 லட்சம் தொகை முழுமையாகத் திரும்பச் செலுத்தப்பட்டது.</p><p>ஆனால் தான் அடைந்த மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கிடைக்க வேண்டும் என்பதில் வாடிக்கையாளர் உறுதியாக இருந்துள்ளார்.</p><h2>விசாரணை</h2><p>வழக்கு விசாரணையின் போது, வாடிக்கையாளர் தரப்பில் ஆன்லைன் ஆர்டர் ஸ்கிரீன்ஷாட்கள், இன்வாய்ஸ் பில், வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்கள், டெலிவரி செய்யப்பட்ட டிடர்ஜென்ட் பாக்கெட்டின் புகைப்படங்கள் மற்றும் நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் ஆவணங்கள் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.</p><p>எதிர்மனுதாரர்களான இ காமர்ஸ் நிறுவனம் மற்றும் விற்பனையாளர் நோட்டீஸ் வழங்கிய பிறகும் ஆஜராகவில்லை.</p><h2>ஆணையம் உத்தரவு</h2><p>விசாரணையின்போது, "வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகே முழு தொகையும் திருப்பியளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தவறுதலான பொருள் அனுப்பப்பட்டது உண்மைதான் என்பது நிரூபணமாகிறது.</p><p>பணத்தைத் திரும்பப் பெற வாடிக்கையாளர் பலமுறை அலையவைக்கப்பட்டுள்ளார். பெரும் தொகையைச் செலுத்திவிட்டுப் பொருளும் கிடைக்காமல் அலையவிடப்பட்டது அவருக்குக் கடுமையான மன உளைச்சலையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது" என ஆணையம் தெரிவித்தது.</p><p>பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டது என்பதால் தனியாக ரீபண்ட் உத்தரவு தேவையில்லை என்று குறிப்பிட்ட ஆணையம், மன உளைச்சலுக்கான இழப்பீடாக ரூ.15,000, வழக்கு செலவுத் தொகை இழப்பீடாக ரூ.15,000 என மொத்தம் ரூ.30,000 தொகையை இகாமர்ஸ் நிறுவனம் மற்றும் விற்பனையாளர் இணைந்து 30 நாட்களுக்குள் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கும் நுகர்வோர் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன்: 1915 எண்ணுக்கு டயல் செய்து தங்கள் புகாரை பதிவு செய்யலாம்.</p>]]></content:encoded></item><item><title>இணைய வழியில் ஆண்டிற்கு 2 கோடி குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர்- புதிய ஆய்வில் அதிர்ச்சி  தகவல் </title><link>https://www.maalaimalar.com/news/national/2-crore-children-face-online-sexual-abuse-in-a-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/2-crore-children-face-online-sexual-abuse-in-a-year#comments</comments><guid isPermaLink="false">9a2675d2-db35-49bb-a87f-d7b412d18444</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:30:36 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:30:36.661Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆய்வில் தகவல்,பாலியல் தொல்லை,பாலியல் கொடுமை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/u3ioclj8/online.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இணைய வழியில் பாலியல் கொடுமை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/u3ioclj8/online.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உலகளவில் பார்க்கும் போது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் பல கோடிகளைத் தாண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</strong></em> </p><p>உலகெங்கிலும் இணையத்தைப் பயன்படுத்தும் 12 முதல் 17 வயதுடைய சிறுவர்களில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் ஆண்டிற்குப் பலமுறை இணையவழிப் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி வருகின்றனர்.</p><h2><strong>குழந்தைகள் பாதிப்பு</strong></h2><p>21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், ஓராண்டில் மட்டும் சுமார் 2 கோடி குழந்தைகள் சமூக ஊடக தளங்கள் மற்றும் இணைய வழியில் <a href="https://www.maalaimalar.com/topic/பாலியல்-தொல்லை">பாலியல் ரீதியான</a> அச்சுறுத்தல்களையும் கொடுமைகளையும் சந்திக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.</p><p>இந்த ஆய்வின் தரவுகளின்படி, தோராயமாக 1.5 கோடி குழந்தைகள் அவர்களின் விருப்பமின்றி இணையத்தில் பாலியல் ரீதியான ஆபாச உள்ளடக்கங்களை பார்க்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். </p><p>மேலும் 90 லட்சம் குழந்தைகள் பாலியல் உரையாடல்களில் ஈடுபடவும், தங்களது ஆபாச  படங்களைப் பகிரவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, 40 லட்சம் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவர்களின் சம்மதமின்றி இணையத்தில் பிறரால் பகிரப்பட்டுப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p>உலகளவில் பார்க்கும் போது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் பல கோடிகளைத் தாண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இணையவழிப் பாலியல் குற்றங்களைத் தடுக்கவும் டிஜிட்டல் தளங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.</p><p>இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களை கவரும் வகையில் இணைய வழி குற்றவாளிகள் சமூக ஊடகங்கள் மற்றும் கேமிங் தளங்களைப் பயன்படுத்தி அவர்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்துவது பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மண்டையை உடைத்தேன்.. ஜெயிலுக்கு செல்லவில்லை - பெருமையடித்த பிரபலம் -  போராட்டத்தில் குதித்த CJP </title><link>https://www.maalaimalar.com/news/national/i-cracked-a-skull-during-the-cjp-protest-but-didnt-go-to-jail-controversy-erupts-over-instagram-celebritys-boastful-claim</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-cracked-a-skull-during-the-cjp-protest-but-didnt-go-to-jail-controversy-erupts-over-instagram-celebritys-boastful-claim#comments</comments><guid isPermaLink="false">6fc9fe6c-9fe9-4806-89a0-4979806f6196</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:57:22 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:57:22.546Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,BJP,பாஜக,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/d535idj1/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுவதந்திர பரத்வாஜ், சஞ்சய் குமார், சஞ்சய் குமாரின் மகள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சுவதந்திர பரத்வாஜ், சஞ்சய் குமார், சஞ்சய் குமாரின் மகள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/d535idj1/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் சிஜேபி போராட்டத்தின்போது மாணவி ஒருவரின் தந்தையின் தலையை உடைத்தும் தான் கைதகவில்லை என கூறிய இன்ஸ்டாகிராம் பிரபலத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>சிஜேபி போராட்டம்</h2><p>டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 25 வரை நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடிகளை கண்டித்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> (சிஜேபி) தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.</p><p>ஜூலை 20 அன்று மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் நடத்திய பேரணியில் டெல்லி போலீசார், ஆர்ஏஎப் மத்திய படையினர் தாக்குதல் நடத்தினர்.</p><p>கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்தப்பட்டது. பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதும் சீருடையற்ற சிலர் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதும் விமர்சனத்துக்கு உள்ளாகி இளைஞர்களுக்கு நாடு முழுவதும் ஆதரவு அதிகரித்தது.</p><p>கடும் அழுத்தத்தின் மத்தியில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த <a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-dharmendra-pradhan-says-ministerial-post-not-important-after-resignation-amid-student-agitation">தர்மேந்திர பிரதான்</a> ஜூலை 25 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.</p> <h2>சர்ச்சை</h2><p>இதனிடையே ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, மாணவர் செயற்பாட்டாளர் நிஷு ஆசாத்தின் தந்தையான சஞ்சய் குமார் என்பவரின் " மண்டையை உடைத்தேன், ஆனால் அதற்காக சிறைக்கு கூட செல்லவில்லை" என சுவதந்திர பரத்வாஜ் என்ற இன்ஸ்டா பிரபலம் பேசியது சர்ச்சையாகியுள்ளது.</p><p>இன்ஸ்டாகிராமில் 1.84 லட்சம் பின்தொடர்பாளர்களை கொண்ட 21 வயதான சுவதந்திர பரத்வாஜ், 'சுவதந்திர சனாதனி யோதா' எனத் தன்னை அழைத்துக்கொள்கிறார்.</p><p>அவர் பாட்காஸ்டில் பேசியதாவது,</p><p>"போராட்டக்காரரின் தந்தையின் மண்டையை நான் உடைத்தேன். அவருக்கு 60 தையல்கள் போடப்பட்டன. இது கொலை முயற்சி வழக்கு என்பது தெரியுமா? ஆம்புலன்ஸில் அவர் கிட்டத்தட்டச் சாகும் நிலையில் இருந்தார்.</p><p>ஆனால், நான் சிறையில் கூட அடைக்கப்படவில்லை. இரவெல்லாம் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தேன். உலகத்திற்கு இது தெரிய வேண்டும்" என தெரிவித்தார்.</p><p>மேலும் பாஜக தலைவர்களுடனான தனது தொடர்புகளே தன்னைத் தப்பவைத்ததாக அவர் அந்த பாட்காஸ்டில் பேசியிருக்கிறார்.</p><p>பரத்வாஜ் குறிப்பிட்ட இந்த சம்பவம் ஜூன் 23 அன்று மாலை 5.30 மணியளவில் நடந்துள்ளது. சஞ்சய் குமார் தனது கைபேசியில் போராட்டத்தைப் படமாக்கியபோது ஏற்பட்ட தகராறில் தாக்குதலானது நடைபெற்றுள்ளது. சூரஜ் குமார், பரத்வாஜ் மற்றும் சிலர் இணைந்து சஞ்சய் குமாரை தாக்கியுள்ளனர்.</p><p>பரத்வாஜ் பேசிய வீடியோ தற்போது வைரலானதை தொடர்ந்து பல தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.</p><p>பாதிக்கப்பட்ட சஞ்சய் குமாரின் மகள் நிஷு ஆசாத்    இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். </p><p>சர்ச்சை வலுத்ததையடுத்து பதிலளித்த பரத்வாஜ், "அது தற்காப்புக்காக செய்யப்பட்ட நடவடிக்கை. நான் அப்படிச் செய்யாவிட்டால், கும்பல் என்னைப் படுகொலை செய்திருக்கும். என் மீது தாக்குதல் நடத்தவே முயன்றார்கள், அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது" என விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>ராகுல் கேள்வி</h2><p>இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில்,</p><p>"அமித் ஷாவின் டெல்லி போலீஸ் ஒருபுறம் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்துகிறது. மறுபுறம், தலித் மாணவியின் தந்தையின் மண்டையை உடைத்த குற்றவாளி திறந்தவெளியில் சுதந்திரமாகச் சுற்றி திரிகிறான்.</p><p>இப்படிப்பட்ட குற்றவாளிக்கு உங்கள் கட்சியினர் ஏன் பாதுகாப்பு அளிக்கிறார்கள்? இப்போது நடவடிக்கை எடுக்கப்படுமா, அல்லது அவரைத் தொடர்ந்து பாதுகாப்பீர்களா?" என கேள்வி எழுப்பியுள்ளார்</p><h2>சிஜேபி  </h2><p>இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரை உடனடியாகக் கைது செய்யக் கோரி சிஜேபி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் இன்று காலை டெல்லி படேல் சவுக்கிலிருந்து பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையம் நோக்கிப் பேரணியாகச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி பிரிவில் வழக்குப்பதிவு செய்ய டெல்லி போலீசாரை சிஜேபி கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.</p><p>ஆனால், போலீசார் எப்ஐஆரில் அந்தப் பிரிவை சேர்க்க மறுத்துவிட்டதாக சௌரவ் தாஸ் குற்றம் சாட்டினார்.</p><p>டெல்லி போலிஸ் அளித்த விளக்கத்தில் சஞ்சய் குமாருக்கு ஏற்பட்டது சாதாரண காயம் தான் என்றும், மண்டை ஓடு எதுவும் உடையவில்லை என்றும் தெரிவித்துள்து.</p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக சூரஜ் குமார், சுவதந்திர பரத்வாஜிடம் விசாரணை நடத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆபரேஷன் தலாஷ்: காணாமல் போன 3,357 குழந்தைகள் மீட்பு - அதிரடி காட்டிய பீகார் காவல்துறை</title><link>https://www.maalaimalar.com/news/national/operation-talash-3357-missing-children-rescued-bihar-police-takes-decisive-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/operation-talash-3357-missing-children-rescued-bihar-police-takes-decisive-action#comments</comments><guid isPermaLink="false">9bbde622-a5e5-449b-a55e-24408f687151</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:43:49 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:43:49.713Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,பீகார்,Bihar,குழந்தை கடத்தல்,police,child trafficking</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/p96pvd8f/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ குழந்தைகள் மீட்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ குழந்தைகள் மீட்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/p96pvd8f/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆபரேஷன் தலாஷ் என்ற பெயரில் பீகார் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில் 3,359 காணாமல் போன குழந்தைகளை கண்டறிந்துள்ளனர். அவர்களில் 3,357 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.</p><h2>ஆபரேஷன் தலாஷ்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/why-bihar-youth-insist-on-government-jobs">பீகார் மாநிலத்தில்</a> காணாமல் போன, கடத்தப்பட்ட மற்றும் வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகளை கண்டறிந்து மீட்பதற்காக மாநிலம் தழுவிய அளவில் ஆபரேஷன் தலாஷ் மேற்கொள்ளப்படுகிறது.</p><p>பீகார் சிஐடி பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர் கே. சுஹிதா அனுபமின் வழிகாட்டுதலின் ஆகஸ்ட் 20 தொடங்கிய இந்த ஆபரேஷன் செப்டம்பர் 10 வரை நடைபெறுகிறது.</p><p>இந்தத் தேடுதல் வேட்டையில் சிறார்களுக்கான சிறப்பு சிறப்பு காவல் பிரிவினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல உதவி மையங்கள், மனித கடத்தல் தடுப்புப் பிரிவுகள், மற்றும் 'போலீஸ் தீதி', 'அபயா பிரிகேட்' போன்ற பெண் காவலர்களின் சிறப்பு படைகள் ஒருங்கிணைந்து இந்த ஆபரேஷனை மேற்கொள்கின்றன.</p> <h2>மீட்பு</h2><p>ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 2 வரை மொத்தம் 14 நாட்களில் மட்டும் மொத்தம் 3,359 குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களில் 3,357 குழந்தைகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>மீட்கப்பட்டவர்களில் 2,705 பேர் சிறுமிகள் மற்றும் 652 பேர் சிறுவர்கள் ஆவர். பெண் குழந்தைகளின் எண்ணிக்கை இதில் மிக அதிகமாக உள்ளது கவனிக்கத்தக்கது.</p> <h2>மிஷன் வாத்சல்யா</h2><p>14 நாட்களில் 'மிஷன் வாத்சல்யா' என்ற இணையதளத்தில் புதிதாக 2,254 குழந்தைகளின் விவரங்கள் பதிவேற்றப்பட்டன.</p><p>அதில் ஏற்கனவே இருந்த பதிவுகளுடன் ஒப்பிட்டு 2,787 குழந்தைகளின் விவரங்கள் துல்லியமாகப் பொருத்தப்பட்டு அடையாளம் காணப்பட்டன.</p><p>பீகார் காவல்துறையின் அறிக்கையின்படி, 'மிஷன் வாத்சல்யா' இணையதளம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை மொத்தம் 6,857 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p> <h2>தொடரும் ஆபரேஷன்</h2><p>இந்த ஆபரேஷன் வெறும் காவல் நிலையப் பதிவுகளுடன் மட்டும் நின்றுவிடாமல், சிறுவர் நீதி வாரியங்களின் அனுமதியுடன் குழந்தைகள் காப்பகங்கள், சீர்திருத்தப் பள்ளிகள் மற்றும் சிறார் இல்லங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>அங்குள்ள குழந்தைகளுடன் அதிகாரிகள் கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கி, அவர்களின் குடும்பப் பின்னணியைக் கண்டறிந்து வருகின்றனர்.</p><p>மேலும், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">குழந்தை திருமணங்கள்</a> தொடர்பாக நிலுவையில் உள்ள கடத்தல் வழக்குகளையும் காவல்துறையினர் இந்த ஆபரேஷனின் கீழ் தீவிரமாக மறுவிசாரணை செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவை வல்லரசு நாடாக்கும் பயணத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்- இஸ்ரோ தலைவர் </title><link>https://www.maalaimalar.com/news/topnews/gslv-rocket-isro-narayanan</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/gslv-rocket-isro-narayanan#comments</comments><guid isPermaLink="false">62be0d23-a0cd-4fc8-b5e1-59a88360d206</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:20:27 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:20:27.248Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செயற்கைக்கோள்,இஸ்ரோ தலைவர்,satellite,GSLV rocket,ஜிஎஸ்எல்வி ராக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/r63qzz60/isronarayanan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/r63qzz60/isronarayanan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2><strong>இ.ஓ.எஸ். -05 செயற்கைக்கோள்</strong></h2><p>ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரி கோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.-எப்17 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ். -05 செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. </p><h2><strong>இதையடுத்து இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது:-</strong></h2><p>நாட்டு மக்களுக்கு காலை வணக்கம். நாடு இன்று சூரிய உதயத்தை பார்ப்பதற்கு முன்பாகவே, விண்ணில் ஜி.எஸ்.எல்.வி.-எப்17 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ். -05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தி உள்ளோம். இந்த உற்சாகமான தருணத்தில், இஸ்ரோ சார்பில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>இஸ்ரோ குழுவினர்</strong></h2><p>நாட்டு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க எங்களால் முடிந்தவரை தொடர்ந்து முயற்சி செய்வோம். நாங்கள் எதிர் பார்ப்பதைவிட அதிக சாதனைகளை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த வெற்றிக்காகபாடுபட்ட இஸ்ரோ குழுவினர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>இஸ்ரோவின் முன்னாள் தலைவர்கள்</strong></h2><p>இஸ்ரோவின் முன்னாள் தலைவர்களான ராதாகிருஷ்ணன், சோம்நாத், கிரண்குமார் ஆகியோர் இந்த வெற்றியை நேரில் காண வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கும், இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>ஸ்ரீ ஹரிகோட்டாவில்</strong></h2><p>இந்த நிதியாண்டில் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முதல் ஏவுதல் இது. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், இந்த நிதியாண்டில் இங்கிருந்து மேலும் 6 ஏவுதல்களை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.</p><h2><strong>தொழில்துறை</strong></h2><p>முக்கியமான பணிகள் உள்ளிட்ட அடுத்தடுத்த ஏவுதல்களுக்கான நடவடிக்கைகள் தொழில்துறையினர் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து முறையாக நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டுள்ள ஏவுதல்களை இந்த ஆண்டிலேயே மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளோம். </p><h2><strong>பரிசு</strong></h2><p>‘அதிக வேலைக்கான பரிசு இன்னும் அதிக வேலைதான்’ என்று ஒரு பழமொழி உண்டு. நமக்கு முன்னால் ஏராளமான பணிகள் உள்ளன. அவற்றை தொடர்ந்து மேற்கொண்டு நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும் சிறந்த சேவைகளை வழங்குவோம். வரும் ஆண்டுகளில் இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக உருவாக்குவதற்கான பயணத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>FCRA மசோதாவை ஆய்வு செய்ய 31 எம்.பி.க்கள் கொண்ட கூட்டுக்குழு அமைப்பு.. பின்னணி என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/joint-committee-comprising-31-mps-formed-to-examine-the-fcra-bill</link><comments>https://www.maalaimalar.com/news/national/joint-committee-comprising-31-mps-formed-to-examine-the-fcra-bill#comments</comments><guid isPermaLink="false">f78f143f-34cc-428d-abcc-b733ecc013f5</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:17:34 +0000</pubDate><atom:updated>2026-09-04T05:17:34.600Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Joint Parliamentary Committee,FCRA Amendment Bill,எப்சிஆர்ஏ,எப்சிஆர்ஏ சட்டத்திருத்த மசோதா,நாடாளுமன்ற கூட்டுக் குழு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/79soll06/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ FCRA ]]></media:title><media:description type="html"><![CDATA[ FCRA ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/79soll06/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fcra-amendment-bill-resolution-passed-unanimously-in-tn-assembly">எப்சிஆர்ஏ சட்டத்திருத்த மசோதா</a>வை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. </p><p>அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா (<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE">எப்சிஆர்ஏ</a>)வுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. </p><p>மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ அரசாங்கம் எப்சிஆர்ஏ மசோதாவை கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வர எத்தனித்தது. </p><p>ஆனால் ஆகஸ்ட் 12 அன்று மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் விவாதங்களுக்குப் பிறகு மசோதாவானது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. </p><h2>கூட்டுக்குழு</h2><p>இந்நிலையில் எப்சிஆர்ஏ மசோதாவை ஆய்வு செய்ய 31 எம்.பிக்களை உள்ளடக்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்துள்ளார்.</p><p>இந்த கூட்டுக்குழுவில் பாஜக எம்பி சஞ்​சய் ஜெய்ஸ்வால் தலைமை வகிப்​பார்.</p><p>இதில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசை சேரந்த 5 எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர். திமுகவின் 2 எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். </p><p>சமாஜ்வாதி, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தலா 1 எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் இருவர் இடம்பெற்றுள்ளனர்.</p><p>2014 முதல் பல சர்ச்சைக்குரிய மசோதாக்களை மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. அவ்வாறான மசோதாக்களை ஆய்வு செய்ய அமைக்கப்படும் 19வது நாடாளுமன்ற கூட்டுக் குழு இது. 2024இல் இருந்து 9வது கூட்டுக்குழு இது.</p><h2>எப்சிஆர்ஏ சர்ச்சை</h2><p>கடந்த 1976 ஆம் ஆண்டு அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி ஆட்​சிக் காலத்​தில் எப்சிஆர்ஏ சட்டம் கொண்டு வரப்​பட்​டது.</p><p>கடந்த 2010 ஆம் ஆண்​டில் அப்​போதைய பிரதமர் மன்​மோகன் சிங் ஆட்​சி​யில் இந்த சட்​டத்​தில் கடுமை​யான விதி​கள் சேர்க்​கப்​பட்​டன.</p><p>கடந்த 2020 ஆம் ஆண்​டில் பிரதமர் ​திர மோடி தலைமையிலான என்டிஏ அரசின் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் எப்சிஆர்ஏவில் ​மேலும் கடுமை​யான விதி​கள் சேர்க்கப்பட்டன.</p><p>தற்​போது மேலும் அதில் மேலும் 3 முக்​கிய திருத்​தங்​கள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>3 முக்​கிய திருத்​தங்​கள்</h2><p>எப்சிஆர்ஏ உரிமம் ரத்து செய்யப்பட்ட அமைப்புகளின் சொத்துக்களை நிர்வகிக்கவும், தேவைப்பட்டால் அவற்றை விற்கவும் ஒரு தனி அதிகாரியை அரசு நியமிப்பது,</p><p>உரிமம் ரத்து செய்யப்பட்ட அமைப்புகள் தங்களின் வெளிநாட்டு நிதி மற்றும் அசையும், அசையா சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விதிகளைப் பூர்த்தி செய்யாத அமைப்புகளின் சொத்துக்களை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் எடுப்பது ஆகியவை புதிய திருத்தங்கள் ஆகும்.</p><p>இது குறித்து புதிதாக அமைக்கப்பட்ட கூட்டுக்குழு ​​ செய்து தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க உள்ளது. இதன் பின் மசோதா அடுத்த கூட்டத்தொடரில் மக்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்படும்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவுக்கு முதல் படி.. விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த GSLV-F17 ராக்கெட் - பிரதமர் மோடி பெருமிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/a-first-step-for-india-gslv-f17-rocket-successfully-launched-into-space-pm-modi-expresses-pride</link><comments>https://www.maalaimalar.com/news/national/a-first-step-for-india-gslv-f17-rocket-successfully-launched-into-space-pm-modi-expresses-pride#comments</comments><guid isPermaLink="false">ace3ef99-0306-4968-ae5f-132737a27a05</guid><pubDate>Fri, 04 Sep 2026 04:45:20 +0000</pubDate><atom:updated>2026-09-04T04:45:20.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,செயற்கைக்கோள்,Prime Minister Modi,satellite,பிரதமர் மோடி,GSLV rocket,ஜிஎஸ்எல்வி ராக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/y5pf1rq8/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/y5pf1rq8/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>GSLV-F17 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது பற்றி பிரதமர் மோடி பெருமிதம் பொங்க எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். </p><p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05-ஐ சுமந்து சென்ற <a href="https://www.maalaimalar.com/news/national/gslv-rocket-with-earth-observation-satellite-lifts-off">GSLV-F17 ராக்கெட்</a>, இன்று (வெள்ளிக்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.</p><h2>பிரதமர் மோடி பெருமிதம்</h2><p>இதற்கு வாழ்த்து தெரிவித்து <a href="https://www.maalaimalar.com/news/world/pakistan-spy-satellites-six-inclined-orbit-satellites-launched-to-continuously-monitor-indian-territory">பிரதமர் மோடி</a> வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், </p><p>"இஸ்ரோவின் மற்றொரு வியக்கத்தக்க சாதனை இது. நாட்டிற்கு பெருமை சேர்க்கும் மற்றொரு தருணமிது. </p><p>EOS-05-ஐ சுமந்து சென்ற GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. </p> <p>புவி-ஒத்திசைவு சுற்றுப்பாதையில் இருந்து செயல்படும் இந்தியாவின் முதல் படமெடுக்கும் செயற்கைக்கோளான EOS-05ஐ சுமந்து GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது இந்திய விண்வெளித் துறையின் வளர்ந்துவரும் செயல்திறனை வரையறுக்கும் புத்தாக்கமான மற்றும் பாராட்டத்தக்க விஷயம்.</p><p>இஸ்ரோ மற்றும் இந்திய தொழில்துறைக்கு இடையே வளர்ந்து வரும் கூட்டாண்மை, நமது விண்வெளித் திட்டத்திற்கு புதிய பலத்தை சேர்ப்பதுடன், ஒட்டுமொத்த விண்வெளி ஈக்கோ-சிஸ்டத்தில் இந்தியாவின் திறன்களை விரிவுபடுத்துகிறது." என தெரிவித்துள்ளார்.</p> <h2>முதல் இமேஜிங் செயற்கைக்கோள் </h2><p>EOS-05-ஐ சுமந்து சென்ற GSLV-F17 ராக்கெட் சென்னையில் இருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.</p> <p>இந்திய துணைக்கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்பட உள்ளதால் மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்டரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலம் இந்தியாவின் நிலப்பரப்பை தொடர்ந்து கண்காணித்து நிகழ்காலத்துக்கு நெருக்கமான புகைப்படங்களை வழங்கும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கிய தரவுகளை வழங்கும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவை கண்காணிக்கும் நாட்டின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ண ஜெயந்தி: ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/national/krishna-jayanthi-president-droupadi-murmu-and-pm-modi-wish</link><comments>https://www.maalaimalar.com/news/national/krishna-jayanthi-president-droupadi-murmu-and-pm-modi-wish#comments</comments><guid isPermaLink="false">ad933530-7156-49a8-a92c-b24ee984d65c</guid><pubDate>Fri, 04 Sep 2026 04:08:19 +0000</pubDate><atom:updated>2026-09-04T04:08:19.709Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திரவுபதி முர்மு,கிருஷ்ண ஜெயந்தி,krishna jayanthi,pm modi,பிரதமர் மோடி,Droupadi Murmu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/574ii6ec/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ President Droupadi murmu - PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/574ii6ec/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.</p><h2>ஜென்மாஷ்டமி</h2><p>கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது. இத்தகைய மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் பிறப்பைத் தான் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.</p> <h2>திரவுபதி முர்மு வாழ்த்து</h2><p>அந்த வகையில், நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, <a href="https://www.maalaimalar.com/news/national/pm-exhorts-auto-industry-to-chart-bold-pathway-towards-viksit-bharat">பிரதமர் மோடி</a>, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.</p><p>இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், </p> <p>ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறும் செய்திகளும் இந்தியக் கலாச்சாரத்திற்கும் தத்துவத்திற்கும் புத்துணர்வை அளிக்கின்றன. கிருஷ்ணர் சத்தியம், நேர்மை, நீதி, கருணை மற்றும் தன்னலமற்ற செயல் ஆகியவற்றின் பாதையைக் காட்டினார். ஸ்ரீ கிருஷ்ணரின் கொள்கைகளை அனைவரும் ஏற்றுக்கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ச்சி பெற்ற இந்தியாவை கட்டியெழுப்புவதற்காகத் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.</p> <h2>பிரதமர் மோடி வாழ்த்து</h2><p>பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், </p><p>உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த <a href="https://www.maalaimalar.com/spirituality/krishna-jayanthi-worship-4">ஜென்மாஷ்டமி</a> நல்வாழ்த்துகள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகச் செய்திகளில் தன்னலமற்ற செயலுக்கான ஆழ்ந்த உத்வேகம் அடங்கியுள்ளது, அதுவே மனிதகுலத்தை தொடர்ந்து வழிநடத்தி வருகிறது. அவரது பக்திக்கும் வழிபாட்டிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இந்த புனிதமான நன்னாள், அனைவரின் வாழ்விலும் நேர்மறை ஆற்றலையும் வலிமையையும் ஊட்ட வேண்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! என்று தெரிவித்துள்ளார்.</p> <h2>அமித்ஷா வாழ்த்து</h2><p>மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், </p><p>'ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி' எனும் புனிதத் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.</p><p>அறம், நீதி மற்றும் பொதுநலத்தின் அடையாளமாகத் திகழும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அனைவர் மீதும் தொடர்ந்து தனது அருளைப் பொழியட்டும். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! என்று தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>நாட்டின் வளர்ச்சியில் வாகன தொழில் துறை முக்கிய தூணாக மாற வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-exhorts-auto-industry-to-chart-bold-pathway-towards-viksit-bharat</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-exhorts-auto-industry-to-chart-bold-pathway-towards-viksit-bharat#comments</comments><guid isPermaLink="false">fc63c737-261f-4885-a18b-cf0695a94627</guid><pubDate>Fri, 04 Sep 2026 00:31:21 +0000</pubDate><atom:updated>2026-09-04T00:31:21.975Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விக்சித் பாரத்,pm modi,பிரதமர் மோடி,Viksit Bharat</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xd9f9wlu/New-Project-2026-08-02T213222.327.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xd9f9wlu/New-Project-2026-08-02T213222.327.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் வாகனத் தொழில் துறை தொடர்ந்து புதுமைகளை புகுத்தவும், சிறந்து விளங்கவும், 2047-ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் தொலைநோக்கு பார்வையை நோக்கிய துணிச்சலான பாதையை முனைப்புடன் வகுக்க வேண்டும் என பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> வலியுறுத்தினார்.</p><p>நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) 2026 ஆண்டு மாநாட்டில் பிரதமர் கூறியதாவது: சமீபத்திய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் சர்வதேச சந்தைகளுக்கான பரந்த அணுகலை வழங்குவதால், ஏற்கனவே உலகின் பல பகுதிகளில் அங்கீகாரம் பெற்றுள்ள <a href="https://www.maalaimalar.com/news/national">இந்திய</a> வாகன துறை, தனது உலகளாவிய இருப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு சிறந்த நிலையில் உள்ளது.</p><h2>பிரதமர் வலியுறுத்தல்:</h2><p>"இந்திய வாகனத் தொழில் தொடர்ந்து புதுமைகளை புகுத்தவும், சிறந்து விளங்கவும், 'விக்சித் பாரத்' நோக்கிய ஒரு துணிச்சலான பாதையை முனைப்புடன் வகுக்கவும் வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று பிரதமர் தனது செய்தியில் கூறியிருந்தார்.</p><p>இந்தப் பயணம், போக்குவரத்து துறைக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் கொண்டு வருவதோடு, தேசிய வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கும் போக்குவரத்தை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் மேலும் கூறினார்.</p><p>"கடந்த பத்தாண்டுகளில், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாக இருந்து வருகிறது. நமது பொருளாதாரம் வளர வளர, போக்குவரத்துக்கான தேவையும் அதிகரித்து வருகிறது," என்று பிரதமர் குறிப்பிட்டார்.</p><h2>பொருளாதா வளர்ச்சியில் பங்கு:</h2><p>நெடுஞ்சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளின் விரைவான விரிவாக்கம், மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, வாகன தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்று மோடி சுட்டிக்காட்டினார்.</p><p>"மேம்பட்ட இணைப்பு வசதிகளும், திறமையான தளவாட போக்குவரத்தும் செலவுகளை குறைத்து, இந்திய உற்பத்தி துறையை மேலும் போட்டித்தன்மை வாய்ந்ததாக ஆக்குகின்றன. இது வாகன துறையை வலுப்படுத்தி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது," என்று அவர் கூறினார்.</p><p>தூய்மையான மற்றும் நிலையான போக்குவரத்து சூழலை நோக்கிய பயணத்தில் இந்தியாவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>"சார்ஜிங் உள்கட்டமைப்பின் விரைவான விரிவாக்கம், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதோடு, புத்தாக்கத்திற்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது," என்று பிரதமர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இருமுறை எம்.பி.யாக இருந்தவரின் பெயர் எஸ்.ஐ.ஆர்.-க்கு பிறகு இடம்பெறாததால் அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/two-time-punjab-mp-dharamvira-gandhi-name-not-on-draft-electoral-rolls-after-sir</link><comments>https://www.maalaimalar.com/news/national/two-time-punjab-mp-dharamvira-gandhi-name-not-on-draft-electoral-rolls-after-sir#comments</comments><guid isPermaLink="false">278b5fda-023e-4d4b-96f2-14ccc827cdd2</guid><pubDate>Thu, 03 Sep 2026 23:27:41 +0000</pubDate><atom:updated>2026-09-03T23:27:41.768Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sir,எஸ்ஐஆர்,பஞ்சாப்,Punjab,MP Dharamvira Gandhi,எம்பி தரம்வீர காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/znb4047a/Dharamvira-Gandhi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dharamvira Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/znb4047a/Dharamvira-Gandhi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டியாலாவின் இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் தரம்வீர காந்தியின் பெயர், சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளுக்கு பிறகு பஞ்சாபின் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.</p><p>முன்னதாக <a href="https://www.maalaimalar.com/topic/aam-admi-party">ஆம் ஆத்மி கட்சி</a> சார்பில் பாட்டியாலா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த காங்கிரஸ் தலைவர், "என்னுடைய வாக்கு உட்பட என் குடும்பத்தினரின் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இல்லை" என்று கூறினார்.</p><h2>பெயர்கள் இடம்பெறவில்லை:</h2><p>அவர் மேலும் கூறுகையில், "நான் சுமார் 2000-ஆம் ஆண்டு முதல் இந்த முகவரியில் வசித்து வருகிறேன். நான் மூன்று மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, அவற்றில் இரண்டில் இதே வீட்டில் இருந்துதான் வெற்றி பெற்றுள்ளேன். </p><p>அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் இதுவே எனது நிரந்தர முகவரியாக இருந்து வருகிறது. அப்படி இருந்தும், எனது பெயர் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை" என்றார்.</p><p>இறுதி வாக்காளர் பட்டியலில் தனது மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தாம் ஏற்கனவே ஆட்சேபனைகளை எழுப்பி, தேவையான ஆவணங்களையும் சமர்ப்பித்துவிட்டதாக டாக்டர் காந்தி மேலும் கூறினார்.</p><h2>ஆதாரங்கள் சமர்பிப்பு:</h2><p>"நேற்று, எனக்கும், என் மனைவி ஜகதம்பா கௌஷல், என் மகன் நிவேந்து பிரஷார் மற்றும் என் மகள் ரோகிணி பிரஷார் ஆகியோருக்குமான கடவுச்சீட்டு, 10-ஆம் வகுப்பு சான்றிதழ் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களை ஆதாரமாக மாவட்ட ஆட்சியர்-மற்றும்-மாவட்டக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பித்தேன்," என்று அவர் கூறினார்.</p><p>கிடைத்துள்ள தகவல்களின்படி, பஞ்சாபில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செயல்பாட்டின்போது டாக்டர் காந்தி சமர்ப்பித்த ஆவணங்களும், 2003-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உள்ள அவரது விவரங்களும் பொருந்தவில்லை என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அவரது தனிப்பட்ட வழக்கு குறித்து அதிகாரிகள் இன்னும் எதிர்வினையாற்றவில்லை. வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம்பெறாத குடிமக்கள், அதற்கான உறுதிமொழி பத்திரம் மற்றும் துணை ஆவணங்களுடன், ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 12 வரை தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது</title><link>https://www.maalaimalar.com/news/national/gslv-rocket-with-earth-observation-satellite-lifts-off</link><comments>https://www.maalaimalar.com/news/national/gslv-rocket-with-earth-observation-satellite-lifts-off#comments</comments><guid isPermaLink="false">3184e708-2f28-4f62-a5d3-6e35566cb939</guid><pubDate>Thu, 03 Sep 2026 21:51:20 +0000</pubDate><atom:updated>2026-09-03T21:51:20.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செயற்கைக்கோள்,satellite,GSLV rocket,ஜிஎஸ்எல்வி ராக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/394m04ql/GSLV-F17.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GSLV F17]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/394m04ql/GSLV-F17.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05-ஐ சுமந்து சென்ற GSLV ராக்கெட், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலைக்கு முந்தைய நேரத்தில் விண்ணில் ஏவப்பட்டது.</p><p>சென்னையில் இருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, 51.7 மீட்டர் உயரமுள்ள GSLV-F17 ராக்கெட், முன்னரே திட்டமிடப்பட்டபடி அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் பாய்ந்தது; மழையையும் பொருட்படுத்தாமல் ராக்கெட் கிளம்பியபோது அது இருண்ட வானத்தை ஒளிரச் செய்தது.</p><h2>படமெடுக்கும் செயற்கைக்கோள்:</h2><p>அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த புவி கண்காணிப்பு விண்கலம், புவி-ஒத்திசைவு சுற்றுப்பாதையில் இருந்து செயல்படும் இந்தியாவின் முதல் படமெடுக்கும் செயற்கைக்கோளாக அமையும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு தொடங்கப்பட்ட 27 மணி நேர 'கவுண்ட்டவுன்' நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.</p><h2>முதல் இமேஜிங் செயற்கைக்கோள்:</h2><p>இந்திய துணைக்கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்பட உள்ளதால் மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்டரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலம் இந்தியாவின் நிலப்பரப்பை தொடர்ந்து கண்காணித்து நிகழ்காலத்துக்கு நெருக்கமான புகைப்படங்களை வழங்கும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கிய தரவுகளை வழங்கும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவை கண்காணிக்கும் நாட்டின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>GDP 7.8 சதவீதம் வளர்ந்துள்ள நிலையில் வேலைவாய்ப்புகள் எங்கே? - ஆதித்யா தாக்கரே</title><link>https://www.maalaimalar.com/news/national/aaditya-thackeray-questions-where-are-the-jobs-if-gdp-is-growing-at-78-pc</link><comments>https://www.maalaimalar.com/news/national/aaditya-thackeray-questions-where-are-the-jobs-if-gdp-is-growing-at-78-pc#comments</comments><guid isPermaLink="false">4f5cb253-b021-48f2-93a7-93a7e359272c</guid><pubDate>Thu, 03 Sep 2026 19:09:04 +0000</pubDate><atom:updated>2026-09-03T19:09:04.843Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Aaditya Thackeray,GDP,pm modi,பிரதமர் மோடி,ஆதித்தயா தாக்கரே,ஜிடிபி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/iib1m2nl/aditya-thackeray.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aditya Thackeray]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/iib1m2nl/aditya-thackeray.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் <a href="https://www.maalaimalar.com/topic/gdp">ஜிடிபி</a> 7.8 சதவீத வளர்ச்சியை கண்டிருந்தால், அது பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் எதிரொலிக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே கூறினார்.</p><p>செய்தியாளர் சந்திப்பில் பேசிய தாக்கரே, ஜிடிபி அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தங்கத்தை வாங்க வேண்டாம் என்று பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> ஏன் வலியுறுத்துகிறார் என்று கேள்வி எழுப்பினார். "ஜிடிபி 7.8 சதவீதம் வளர்வது போல அது எதிரொலிக்க வேண்டும்," என்று தாக்கரே கூறினார். </p><h2>7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சி:</h2><p>போர்கள், நிலையற்ற தன்மை மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகள் இருந்தபோதிலும் 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை எட்டியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மக்களைப் பாராட்டினார்.</p><p>இருப்பினும், இந்த புள்ளிவிவரங்கள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் கார்க், கடந்த ஆண்டின் ஜிடிபி மதிப்பீடு சுமார் ரூ. 86 லட்சம் கோடியில் இருந்து ரூ. 80 லட்சம் கோடியாக குறைக்கப்படாமல் இருந்திருந்தால், தற்போதைய விலையின் அடிப்படையில் ஜிடிபி வளர்ச்சி சுமார் 2.6 சதவீதமாகவே இருந்திருக்கும் என்று கூறியிருந்தார்.</p><p>கார்க் உண்மைகளை முன்வைத்து, ஜிடிபி வளர்ச்சி குறித்த கூற்றை அம்பலப்படுத்தியுள்ளார் என்று தாக்கரே கூறினார். "வளர்ச்சி இருந்தால், ஏன் வேலைவாய்ப்புகள் இல்லை?" என்று தாக்கரே கேள்வி எழுப்பினார்.</p><h2>இடஒதுக்கீடு குறித்து கருத்து:</h2><p>மராத்தா இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜரங்கே மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் குறித்து பேசிய தாக்கரே, யாருடைய உரிமையையும் பறிக்காமல், இடஒதுக்கீடு கோருபவர்களுக்கு அது வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.</p><p>மராத்தா, ஓபிசி அல்லது தங்கர் என யாராக இருந்தாலும், தேர்தலுக்கு முன் அரசாங்கம் வெறும் வாக்குறுதிகளை மட்டுமே அளித்துவிட்டு, பின்னர் மக்களை ஏமாற்றுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.</p><p>விவசாயிகளுக்கு தார்மீக ஆதரவை அளிக்குமாறும், பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய விவசாய முறையை நோக்கிச் செயல்படுமாறும் தாக்கரே வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>ஒடிசாவில் பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த 3 வயது யானைக்குட்டி - பொதுமக்கள் கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/three-year-old-elephant-calf-rescued-from-abandoned-well-in-odisha</link><comments>https://www.maalaimalar.com/news/national/three-year-old-elephant-calf-rescued-from-abandoned-well-in-odisha#comments</comments><guid isPermaLink="false">16234945-b8d7-42ed-aea9-3b9f1a9a9086</guid><pubDate>Thu, 03 Sep 2026 16:37:16 +0000</pubDate><atom:updated>2026-09-03T16:37:16.441Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Odisha,ஒடிஷா,rescue operation,elephant rescued,யானைக்குட்டி மீட்பு,மீட்பு நடவடிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/mdot1h0q/Untitled-design-10.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Odisha Elephant Rescue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/mdot1h0q/Untitled-design-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒடிசாவில் ஊருக்கு வெளியே பாழடைந்த நிலையில் ஒரு கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது ஆண் யானை குட்டியை, அந்த பகுதியில் வசிக்கும் கிராமத்தினர், வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உதவியுடன், பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர்.</p><h3><strong>பாழடைந்த கிணறு</strong></h3><p>ஒடிசா மாநிலம் தேன்கனால் மாவட்டத்தில உள்ள பஹண்டேய் கிராமத்தில், 3 வயது ஆண் யானை ஒன்று செப்டம்பர் 1-ஆம் தேதி பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. </p><p>இதையடுத்து வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து பல அடி ஆழம் உள்ள கிணற்றில் இருந்த யானையின் உடலில் மீட்பு படை வீரர்கள், கயிறு ஒன்றை கட்டினர்.</p><p>இதைத்தொடர்ந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மீட்பு குழுவினர் ஒன்றிணைந்து செயல்பட்டு, யானைக்குட்டியை கிணற்றிலிருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.</p><p>கிணற்றிலிருந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட யானைக்கு, கால்நடை மருத்துவப் பணியாளர்கள் முதலுதவி அளித்தனர்.</p><p>இதையடுத்து கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அந்த யானைக்குட்டி, யானை மீட்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h3><strong>தேன்கானல் வன அதிகாரி</strong></h3><p>இந்த நடவடிக்கை குறித்து தேன்கனால் கோட்ட வன அதிகாரி ஒருவர் கூறுகையில், வனத்துறை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் கிராம மக்களின் விரைவான செயலாலும் ஒருங்கிணைந்த நடவடிக்கையாலும், இந்த மீட்பு பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>மேலும் மீட்கப்பட்ட யானைக்குட்டி மேல் சிகிச்சைக்காக, யானைகள் மீட்பு மையத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு வன ஊழியர்களின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.</p><p>வனவிலங்கின் பாதுகாப்பிற்காக உடனடியாகச் செயல்பட்டு, ஒருங்கிணைந்து, அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முழு மீட்புக் குழுவினருக்கும் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று வனத்துறை அதிகாரி கூறினார்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"> WILDLIFE RESCUE OPERATION | DHENKANAL<br><br> Bahandei Village, Kaunriapala Beat, Gadasila Section, Dhenkanal Range<br> 01.09.2026 | 1:00 PM<br><br>A male wild elephant, approximately 3–4 years old, was found trapped in an abandoned open well near Bahandei Village.<br><br> The RRT of… <a href="https://t.co/XMjXHwdUGO">pic.twitter.com/XMjXHwdUGO</a></p>&mdash; DFO DHENKANAL (@DfoDhenkanal) <a href="https://x.com/DfoDhenkanal/status/2095064152058503305?ref_src=twsrc%5Etfw">September 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h3>கோரிக்கை</h3><p>இந்த மீட்பு நடவடிக்கை இணையத்தில் பரவி வைரலானதை தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு பயனர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p><p>மேலும் இதுபோன்ற பள்ளங்கள் மற்றும் பாழடைந்த கிணற்றை சுற்றி தடுப்புகளை அமைத்தோ அல்லது அதை முழுவதுமாக மண்ணால் நிரப்பியோ, அசம்பாவித சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வந்தே மாதரம் பாடப்படும் போது உதடுகள் கட்டாயம் அசைய வேண்டும் : சுவேந்து அதிகாரி</title><link>https://www.maalaimalar.com/news/national/schools-that-dont-sing-full-vande-mataram-will-lose-funding-suvendu-adhikari</link><comments>https://www.maalaimalar.com/news/national/schools-that-dont-sing-full-vande-mataram-will-lose-funding-suvendu-adhikari#comments</comments><guid isPermaLink="false">fc3a0b5c-d1c3-461f-9f16-1382853d4626</guid><pubDate>Thu, 03 Sep 2026 16:34:50 +0000</pubDate><atom:updated>2026-09-03T16:34:50.310Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,வந்தே மாதரம்,Vande Mataram,சுவேந்து அதிகாரி,WestBengal,suvendhu adhikari</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ed71lkv0/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Suvendu Adhikari warns]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ed71lkv0/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில் பள்ளி பிரார்த்தனைகளின் போது வந்தே மாதரத்தின் முழு பதிப்பையும் பாடாத பள்ளிகளுக்கு, அரசு நிதியுதவி மற்றும் இதர அரசு உதவிகள் நிறுத்தப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.</p><p>மேற்கு வங்கத்தில் கடந்த கால ஆட்சியில், மாநிலத்தின் கல்வி முறை அழிவின் விளிம்பிற்கு கொண்டுவரப்பட்டதாகவும் சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டினார்.</p><p>மேலும் பள்ளி கல்வியில் இந்திய கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் தேசியவாத விழுமியங்களை மீட்டு எடுப்பதற்காக, தற்போதைய பாரதிய ஜனதா கட்சி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். </p><h3><strong>பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்</strong></h3><p>கொல்கத்தாவிம் கோல்பார்க்கில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் விவேகானந்தா வித்யா பாரதி விகாஸ் பரிஷத்தின் ஆண்டு நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி உரையாற்றினார்.</p><p>அப்போது அவர், “வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலரிடம், அரசு உதவி நிறுத்தப்படும் என்று அவர்களிடம் கூறினேன்.</p><p>அதன் பிறகு அவர்கள் அதனை முழுமையாக பாடுவதற்கு ஓரளவு சம்மதித்தார்கள். வந்தே மாதரம் ஒலிக்கப்பட்ட போது அவர்கள் எழுந்து நின்றார்கள், ஆனால் உதடுகளை அசைக்கவில்லை. அப்போது நான் அவர்களிடம் உதடுகளும் அசைய வேண்டும் என்று கூறினேன்.</p><p>பள்ளிப் பாடத்திட்டங்களில் 'மா', 'ஜல்' மற்றும் 'ஆகாஷ்' போன்ற வார்த்தைகள் மாற்றம் செய்யப்பட்டு முறையே 'அம்மா', 'பானி' மற்றும் 'அஸ்மான்' என்று மாற்றம் செய்யப்பட்டள்ளன.</p><p>ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் மற்றும் சுவாமி விவேகானந்தர் போன்ற ஆளுமைகளின் கற்பித்தல் கருத்துக்களுக்கு மாறாக இந்த "நுட்பமான மாற்றங்கள்" இருந்தது.</p><p>கல்வி நிறுவனங்களில் தேசிய மாணவர் படையை (என்.சி.சி) தடை செய்ததன் மூலம், முந்தைய அரசு மன்னிக்க முடியாத குற்றத்தை செய்துள்ளது.</p><h3><strong>ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை</strong></h3><p>நான் சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தேன். முதலாவதாக, மாநிலத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் ராணுவத்தை மையமாக கொண்ட பல உயர்நிலை ‘சைனிக்’ பள்ளிகளைக் கட்டுமாறு அவரை வலியுறுத்தினேன்.</p><p>இரண்டாவதாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் என்.சி.சி-யைக் கட்டாயமாக்க அனுமதி கோரி அவருக்குக் கடிதம் எழுதுவேன் என்று கூறினேன்.</p><p>நான் ஏற்கனவே அவருக்கு அந்தக் கடிதத்தை அனுப்பிவிட்டேன். தேவையானதைச் செய்வதாக அவரிடமிருந்து உறுதிமொழியையும் பெற்றுள்ளேன்.</p><p>மாற்றத்தை கொண்டு வருவதிலும், வாய்ப்புகளை வழங்குவதிலும் மேற்கு வங்க மக்கள் கால அவகாசம் அளிக்கிறார்கள்.</p><p>சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸுக்கு அவர்கள் கால அவகாசம் கொடுத்தார்கள், அதைத் தொடர்ந்து வந்த ஐக்கிய முன்னணி மற்றும் இடது முன்னணி அரசுகளுக்குப் போதுமான வாய்ப்புகளை வழங்கினார்கள்.</p><h3><strong>சரியான நேரத்தில் மாற்றம்</strong></h3><p>மேலும் கடந்த 15 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸுக்கும் கால அவகாசம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் சரியான நேரத்தில் மாநிலத்தில் மாற்றத்தை கொண்டு வந்தார்கள்.</p><p>திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் கடைசி பத்தாண்டுகளில் பின்பற்றப்பட்ட கல்விக் கொள்கை இன்னும் சில காலம் தொடர்ந்திருந்தால், நமது விழுமியங்கள், நமது பாரம்பரியம், நாட்டுப்பற்று மற்றும் தேசியம் ஆகியவை என்றென்றைக்குமாக அழிந்துபோகும் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருக்கும்.</p><p>மாநிலத்தில் மக்கள் சரியான நேரத்தில் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர்; கல்வி முறையை மீட்டெடுக்கவும் இளைஞர்களிடையே தேசபக்தியை வளர்க்கவும் சீர்திருத்தங்கள் தேவையாக உள்ளது.</p><p>பள்ளி சேர்க்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான முன்னாள் மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், குதிராம் போஸ் மற்றும் மாதங்கினி ஹஸ்ரா போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களைப் பாடப்புத்தகங்களில் காண்பது கடினமாக இருந்தது” என்று சுவேந்து அதிகாரி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திரிணாமுல் கட்சி அலுவலகத்தை சூறையாடிய மர்ம நபர்கள்: பா.ஜ.க.வை சாடிய அபிஷேக் பானர்ஜி</title><link>https://www.maalaimalar.com/news/national/tmc-office-vandalised-in-kolkata-abhishek-banerjee-alleges-bjp-role</link><comments>https://www.maalaimalar.com/news/national/tmc-office-vandalised-in-kolkata-abhishek-banerjee-alleges-bjp-role#comments</comments><guid isPermaLink="false">5d03839b-09ee-42ba-935b-554c8e68ba10</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:24:06 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:24:06.388Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Abhishek Banerjee,BJP,பாஜக,TMC,அபிஷேக் பானர்ஜி,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/cgmsfe4f/abhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ abhishek banerjee]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/cgmsfe4f/abhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.</strong></em></p><p>மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. அதன்பின், அந்தக் கட்சி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அணிக்குச் சென்றுவிட்டனர்.</p><h2>கட்சி அலுவலகம் சூறை</h2><p>இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆபீசுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று அலுவலகத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.</p><p>அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். சிலர் அலுவலகத்தில் இருந்த டிவி மற்றும் கம்ப்யூட்டர் மானிட்டர்களைத் தூக்கிச்சென்றது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.</p><h2>அபிஷேக் பானர்ஜி கண்டனம்</h2><p>இதுதொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>அதிகாலை 4.30 மணியளவில் கொல்கத்தாவின் மையத்தில் உள்ள எங்கள் கட்சி அலுவலகத்தை ஆயுதங்களுடன் பா.ஜ.க. குண்டர்கள் முற்றுகையிட்டனர்.</p><p>அவர்கள் எங்கள் கட்சி தொண்டர்களைத் தாக்கினர், அவர்களின் தொலைபேசிகளைப் பறித்து, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். வளாகத்தைச் சூறையாடி மின்னணு உபகரணங்களைச் சேதப்படுத்தினர்.</p><p>கொல்கத்தா காவல்துறை எங்கே இருந்தது? கிட்டத்தட்ட 2 மணி நேரம், எங்கள் கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்கள் பலமுறை போன் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றும் எந்த பதிலும் இல்லை. இது மூர்க்கத்தனமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வாட்ஸ்அப்பில் அறிமுகமானது &apos;Bill payment&apos; வசதி: மின்சாரம், கியாஸ் சிலிண்டர் கட்டணங்களை இனி எளிதாகச் செலுத்தலாம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/whatsapp-introduces-bill-payment-feature</link><comments>https://www.maalaimalar.com/news/national/whatsapp-introduces-bill-payment-feature#comments</comments><guid isPermaLink="false">c52944ea-25c3-42cd-acc6-2c183befc9d3</guid><pubDate>Thu, 03 Sep 2026 13:06:39 +0000</pubDate><atom:updated>2026-09-03T13:06:39.149Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,WhatsApp,FASTag,WhatsApp Bill payment,Bill payment,பாரத் கணெக்ட் நெட்வொர்க்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p411oewb/whats.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ WhatsApp Bill payment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p411oewb/whats.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>WhatsApp இந்தியாவில் மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் குடிநீர் போன்ற மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்துவதற்கான புதிய ‘Bill Payments’ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் இனி பிற செயலிகளுக்கு மாறாமல், <a href="https://www.maalaimalar.com/news/national/maharashtra-incident-disabled-man-crosses-tracks-with-walker">வாட்ஸ்அப் </a>தளத்திலேயே தங்களின் அனைத்து வீட்டுக் கட்டணங்களையும் எளிதாகக் கையாள முடியும்.</p><h2><strong>பாரத் கணெக்ட் இணை</strong>ப்பு </h2><p>பாரத் கணெக்ட் நெட்வொர்க் மூலமாகச் செயல்படும் இந்த புதிய வசதி, 30-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் இயங்கும் 22,722-க்கும் அதிகமான சேவை வழங்குநர்களை ஒன்றிணைக்கிறது. மின்சாரம், எரிவாயு, குடிநீர் கட்டணங்கள் தவிர்த்து, பாஸ்டேக் ரீசார்ஜ், காப்பீட்டுத் தவணைகள், கடன் மறுசெலுத்துதல் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் செலுத்தக்கூடிய தகவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>எளிமை<strong>யான பயன்பாட்டு</strong> முறை</h2><p>வாட்ஸ்அப் முகப்புத் திரையின் மேல் பகுதியில் காணப்படும் ரூபாய் (₹) குறியீட்டைத் தொடுவதன் மூலம் பயனர்கள் கட்டணப் பிரிவுக்குச் செல்லலாம். அங்கு தங்களுக்குத் தேவையான சேவை அமைப்பைத் தேர்ந்தெடுத்து, கணக்கு விவரங்களைப் பதிவிட்டால் கட்டணத் தொகை திரையில் தோன்றும். அதனைத் தொடர்ந்து யுபிஐ (UPI), டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலமாகப் பணப் பரிவர்த்தனையை நிறைவு செய்யலாம்.</p><h2>கூடுத<strong>ல் வசதிக</strong>ள் </h2><p>கடந்த காலத்தில் செலுத்திய கட்டண விவரங்கள் மற்றும் வரவிருக்கும் கட்டண நிலுவைகளைக் கண்காணிக்கும் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரே சேவை நிறுவனத்தின் கீழ் வீடு மற்றும் அலுவலகம் எனப் பல கணக்குகளைச் சேர்த்துப் பராமரிக்கும் வசதியும் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ‘Bill Payments’ சேவை தற்போது கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்கும் முழுமையாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>8 மாத குழந்தையின் டயப்பரில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய தந்தை கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/father-held-for-smuggling-rs-1-crore-gold-in-babys-diaper</link><comments>https://www.maalaimalar.com/news/national/father-held-for-smuggling-rs-1-crore-gold-in-babys-diaper#comments</comments><guid isPermaLink="false">61800aff-d7e3-4b53-9565-28b40be531dd</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:41:21 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:41:21.284Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold smuggling,தங்க கடத்தல்,Kozhikode airport,கேரளம்,Keralam,கோழிக்கோடு விமான நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/12t5nydj/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold Smuggling in Diaper]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/12t5nydj/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் எட்டு மாத குழந்தையின் டயப்பருக்குள் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மறைத்து வைத்து, தங்க கடத்தலில் ஈடுபட்ட குழந்தையின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.</p><h3><strong>கோழிக்கோடு விமான நிலையம்</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">கேரளம்</a> மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தனது ஆறு வயது குழந்தை, நான்கு வயது குழந்தை மற்றும் எட்டு மாத குழந்தையுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமாஹ் விமான நிலையத்தில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.</p><p>அப்போது விமான நிலையத்தில் பயணம் செய்யும் நபர் ஒருவர், தங்க கடத்தலில் ஈடுபடுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சந்தேகத்திற்கிடமான அந்த குடும்பத்திடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.</p><h3><strong>அதிகாரிகள் சோதனை</strong></h3><p>விமான நிலையத்திற்கு தந்தை தூக்கிவந்த எட்டு மாத குழந்தையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.</p><p>அப்போது குழந்தையின் டயப்பருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>இதையடுத்து தங்க கடத்தலில் ஈடுபட்ட தந்தையை புலானாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.</p><h3><strong>மனைவி கைது</strong></h3><p>முன்னதாக கைது செய்யப்பட்ட நபரின் மனைவி, தான் அணிந்து வந்த சானிட்டரி நாப்கினில் மறைத்து வைத்திருந்த சுமார் 1.7 கிலோ மதிப்பிலான தங்கத்தை நெடும்பாசேரி விமான நிலையத்தில் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.</p><h3><strong>புலனாய்வுத் துறை அதிகாரிகள்</strong></h3><p>இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் குடும்பத்தினரிடம் சோதனை குறைவாக இருக்கும் என்பதால், விமான நிலைய சோதனையை தவிர்ப்பதற்காக, குழந்தையின் தந்தை இவ்வாறு செயல்பட்டதாக தெரிவித்தனர்.</p><p>மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் தொடர்பாக, கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளும் காணும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இதையடுத்து சர்வதேச வழிகள் மூலமாக இந்தியாவிற்குள் கொண்டுவரப்படும் வெளிநாட்டு தங்கம் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிராவில் விபரீதம்: ரெயில் வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் வாக்கர் உதவியுடன் தண்டவாளத்தைக் கடந்த மாற்றுத்திறனாளி</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-incident-disabled-man-crosses-tracks-with-walker</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-incident-disabled-man-crosses-tracks-with-walker#comments</comments><guid isPermaLink="false">7041ee87-9ae7-4615-bfe1-90522f05159b</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:29:07 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:29:07.067Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,indian railways,இந்தியன் ரெயில்வே,ரெயில்வே நிர்வாகம்,RAILWAY ADMINISTRATION,DisabilityPerson,அம்பர்நாத் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/jf91iu3k/pp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Railway Administration ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/jf91iu3k/pp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர், வாக்கர் உதவியுடன் ரெயில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்ல முயன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>மகாராஷ்டிராவின் அம்பர்நாத் ரெயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ராகுல் பங்கர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், கால்களில் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி ஒருவர் அடுத்த நடைமேடைக்குச் செல்வதற்காகச் சிரமப்பட்டு தண்டவாளத்தில் இறங்கி நடப்பது பதிவாகியுள்ளது.</p><p>ரெயில் நிலையத்திற்குள் ரெயில் வரவிருப்பதை அறிவிக்கும் ஒலி பெருக்கியின் சத்தமும், தூரத்தில் ரெயில் வரும் சத்தமும் கேட்கும் நிலையிலும், அவர் வாக்கரின் ஆதரவோடு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மெதுவாகத் தண்டவாளத்தைக் கடந்து செல்கிறார். </p><p>இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, தண்டவாளங்களைக் கடப்பது எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்தும், ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் எந்த அளவிற்குப் பின்தங்கியுள்ளன என்பது குறித்தும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். </p><p>இருப்பினும், மற்றொரு புறம் இந்திய ரெயில்வே நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் எந்த அளவிற்குப் போதுமானதாக இருக்கின்றன என்ற முக்கியமான விவாதத்தையும் இது கிளப்பியுள்ளது.</p><p>நடைமேடைகளுக்கு இடையே செல்வதற்கு மின்தூக்கி அல்லது சாய்வுப் பாதை வசதிகள் முறையாக இயங்காததே அல்லது இல்லாததே இதுபோன்ற அபாயகரமான முடிவுகளை எடுக்க மக்களைத் தள்ளுகிறது எனப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். ரெயில்வே நிர்வாகம் ஆபத்தான தண்டவாளக் குறுக்கீடுகளைத் தடுப்பதோடு, மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாகப் பயணிக்கத் தேவையான அடிப்படை வசதிகளை அனைத்து நிலையங்களிலும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரஷியா - உக்ரைன் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயார் - அமைச்சர் ஜெய்சங்கர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/ready-to-act-as-a-mediator-between-russia-and-ukraine-minister-jaishankar</link><comments>https://www.maalaimalar.com/news/national/ready-to-act-as-a-mediator-between-russia-and-ukraine-minister-jaishankar#comments</comments><guid isPermaLink="false">17929000-ab86-4d33-aaad-fed4b67d034f</guid><pubDate>Thu, 03 Sep 2026 10:43:55 +0000</pubDate><atom:updated>2026-09-03T10:43:55.310Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Ukraine,Jaishankar,ரஷியா,உக்ரைன்,ஜெய்சங்கர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/14ctkzfw/New-Project-2026-09-03T161330.510.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரஷியா - உக்ரைன் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயார் - அமைச்சர் ஜெய்சங்கர்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/14ctkzfw/New-Project-2026-09-03T161330.510.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/city-got-angry-humanoid-robot-tried-to-attack-after-being-pushed-by-its-owner-in-russia">ரஷியா</a> - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா எந்த வகையிலும் உதவ தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். </p><p>உக்ரைன் தலைநகர் கீவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இன்று உக்ரைன் வெளியுறவுத் அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.</p><h2>மத்தியஸ்தம் செய்யத் தயார்</h2><p>செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியாவால் எந்த வகையிலாவது உதவ முடியும் என்றால், நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம்” என்றுக்கூறி, தேவைப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தராகச் செயல்படவும் இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். </p><h2>உக்ரைன் பயணம்</h2><p>வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது உக்ரைன் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது, ​​அவர் தனது உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் போலந்து துணைப் பிரதமர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி ஆகியோருடன் இருதரப்பு ஆலோசனைகளை நடத்துகிறார்.</p><h2>வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்</h2><p>சமீப நாட்களாக கருங்கடல் பகுதியில் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில் வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் தீவிரமாக விவாதித்தனர்.</p><p>இந்தியர்கள் மற்றும் பிற நாட்டு மாலுமிகளின் பாதுகாப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ள இந்தியா, பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவரவும் வலியுறுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வாரணாசியில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் லக்னோவில் அவசர தரையிறக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/air-india-express-flight-from-varanasi-to-delhi-makes-emergency-landing-in-lucknow</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-india-express-flight-from-varanasi-to-delhi-makes-emergency-landing-in-lucknow#comments</comments><guid isPermaLink="false">f0515a68-9a2a-46d5-bcef-95f0245ffccf</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:48:40 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:48:40.397Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வாரணாசி,varanasi,ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்,Air India Express,delhi,டெல்லி,உத்தரப்பிரதேச மாநிலம்,Cargo Hold</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/puy6re1d/air.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Air India Express  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/puy6re1d/air.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நடுவானில் எழுந்த புகை எச்சரிக்கை காரணமாக லக்னோவில் உள்ள செளத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.</p><p>விமானம் உயரே பறந்து கொண்டிருந்தபோது, அதன் சரக்கு வைக்கும் பகுதியில் புகை வருவதற்கான எச்சரிக்கை மணிகள் ஒலித்துள்ளன. இதையடுத்து எச்சரிக்கையான விமானி, உடனடியாக லக்னோ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, காலை 8:52 மணியளவில் விமானம் லக்னோ விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 155 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் காலை 9:02 மணியளவில் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.</p><p>உடனடியாகச் செயல்பட்ட விமான நிலைய அவசரகால மீட்புக் குழு மற்றும் தீயணைப்புப் படையினர் விமானத்தைச் சோதனையிட்டனர். முதற்கட்ட ஆய்வில் சரக்குப் பகுதியில் புகையோ அல்லது தீப்பிடித்ததற்கான சுவடுகளோ எதுவும் கண்டறியப்படவில்லை. போலியான எச்சரிக்கை மணி ஒழித்ததா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்துப் பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தே விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டதாகத் தெரிவித்துள்ள <a href="https://www.maalaimalar.com/news/world/us-passport-rule-shakeup-parents-must-prove-citizenship-for-kids">ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்</a> நிறுவனம், பயணிகள் டெல்லி செல்வதற்கு மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோவாவில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானம் ஒன்றின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு பயணிகள் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் விமானப் பயணிகள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>போலவரம் கால்வாய் வழியாக வட ஆந்திராவிற்குள் பாயும்  கோதாவரி நீர்...</title><link>https://www.maalaimalar.com/news/topnews/godavari-water-flows-into-north-andhra-through-polavaram-canal</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/godavari-water-flows-into-north-andhra-through-polavaram-canal#comments</comments><guid isPermaLink="false">1fecfd2f-ac5c-4f94-a1a0-ff4de9a6d8ca</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:23:14 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:23:14.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,ChandraBabu Naidu,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,Polavaram project,போலவரம் கால்வாய்,Godavari Water,கோதாவரி நீர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/boac4qo0/Chandrababu-Naidu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chandrababu Naidu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/boac4qo0/Chandrababu-Naidu?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>வட ஆந்திர மக்களின் பல தசாப்த கனவு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக நேற்று நனவாகியுள்ளது. </p><p>போலவரம் இடது பிரதான கால்வாய் மூலமாக உத்தர ஆந்திராவிற்குள் நுழைந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81">கோதாவரி நதிநீரை</a>, ஆந்திர மாநில முதல்-மந்திரி <a href="https://www.maalaimalar.com/topic/chandrababu-naidu">என். சந்திரபாபு நாயுடு</a> அனகாபள்ளி மாவட்டம் பாயகாராவுபேட்டா மண்டலத்தின் சீதாரம்புரத்தில் முறைப்படி ‘ஜல ஹாரத்தி’ எடுத்து மலர் தூவி வரவேற்றார்.</p><h2>பொறியியல் சாதனை: 213 கி.மீ நீளப் பிரம்மாண்ட கால்வாய்</h2><p>கிழக்குத் தொடர்ச்சி மலையின் மிகக் கடினமான நிலப்பரப்புகளைக் கடந்து, சுரங்கப் பாதைகள், நீர் பாலங்கள் மற்றும் ஏலேரு ஆற்றின் அடிவாரத்தில் அமைக்கப்பட்ட பிரத்யேக சைஃபோன் கட்டமைப்பு போன்ற பல கடினமான பொறியியல் சவால்களைக் கடந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த 213 கிலோமீட்டர் நீளமுள்ள இடது பிரதான கால்வாய், பாசனம், குடிநீர் மற்றும் தொழில்துறை தேவைகளுக்காக 23.44 டிஎம்சி கோதாவரி நீரை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டத்திற்காக இதுவரை சுமார் ரூ.4,192 கோடி செலவிடப்பட்டுள்ளது.</p><h2>முதல் கட்டத்தால் பயன்பெறும் மாவட்டங்களும், விவசாய நிலங்களும்</h2><p>இந்த முதற்கட்ட நீர் வெளியீட்டின் மூலம் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5.23 லட்சம் மக்களும், 2.87 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும் நேரடியாகப் பயன்பெறவுள்ளனர்.</p><p>அனகாபள்ளி மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் கிடைக்கும். இந்த நீர் பகிர்வு ஏலேரு கால்வாய் மற்றும் அப்பகுதியில் உள்ள 110 ஏரிகளை நிரப்பப் பயன்படுத்தப்படும். மேலும், ஏலேரு, பம்பா, தாண்டவா, வராஹா, சாரதா ஆகிய நதி அமைப்புகளின் வழியாக இந்த நீர் பயணிக்கும். </p><p>புஷ்கரா பாசன மண்டலத்தின் கீழ் 1.48 லட்சம் ஏக்கர் நிலங்கள் இதனால் ஸ்திரத்தன்மை பெறும். இதில் ஏலேருவின் கீழ் 80,700 ஏக்கர், பம்பா கீழ் 12,000 ஏக்கர், மற்றும் தாண்டவா, வராஹா, மாமிடி கெட்டா மண்டலங்களில் 46,620 ஏக்கர் நிலங்கள் அடங்கும்.</p><h2>"உத்தர ஆந்திரா இனி வளர்ச்சி மையம்" - முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேச்சு</h2><p>பாயகாராவுபேட்டாவில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்:</p><p>இந்த இடது பிரதான கால்வாய் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, 'உத்தராந்திர சுஜல ஸ்ரவந்தி' திட்டத்துடன் இணைக்கப்படும். இதன் மூலம் அனகாபள்ளி, விசாகப்பட்டினம், விஜயநகரம், பார்வதிபுரம் மன்யம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டங்களின் மேட்டுப்பாங்கான பகுதிகளுக்கும் கோதாவரி நீர் கொண்டு செல்லப்படும்.</p><p>"இனி வாழ்வாதாரத்திற்காக மக்கள் உத்தர ஆந்திராவை விட்டு வெளியேற மாட்டார்கள், மாறாக மற்ற பகுதிகளில் இருந்து மக்கள் உத்தர ஆந்திராவை நோக்கி வேலை தேடி புலம்பெயர்ந்து வருவார்கள்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். </p><p>கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நீர்ப்பாசனத்திற்காக அரசு ரூ. 25,000 கோடி செலவிட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி செலவில் 36 முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்கள் முழுமையாக நிறைவு செய்யப்படும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசுத் துறைகளில் 70,584 ஊழல் புகார்: வங்கி மற்றும் ரெயில்வே துறைகள் முதலிடம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/70584-corruption-complaints-against-central-government-departments-banks-and-railways-top-list</link><comments>https://www.maalaimalar.com/news/national/70584-corruption-complaints-against-central-government-departments-banks-and-railways-top-list#comments</comments><guid isPermaLink="false">c8a6a4a5-4efd-46aa-bd84-45217ca53c88</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:18:06 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:18:06.987Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,central government,Corruption,ஊழல் புகார்கள்,Delhi administration,Railway sectors,ரெயில்வே துறைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/plrry401/CURRUPTI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Corruption]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/plrry401/CURRUPTI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரெயில்வே துறை ஆகியவை அதிக அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-gdp-growth-claims-challenged-ex-finance-secretary-subhash-chandra-garg-says-real-growth-below-2-5-percent">மத்திய ஊழல் கண்காணிப்பு </a>ஆணையத்தின் (CVC) 2025-ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் 70,584 ஊழல் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரெயில்வே துறை ஆகியவை அதிக அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளன. பெறப்பட்ட மொத்த புகார்களில் வங்கித் துறை தொடர்பாக 9,933 புகார்களும், ரெயில்வே துறை தொடர்பாக 9,381 புகார்களும் பதிவாகி முதலிடத்தில் உள்ளன. இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மீது 6,531 புகார்களும், உள்ளாட்சி அமைப்புகள் மீது 4,834 புகார்களும், நிலக்கரித் துறை பணியாளர்கள் மீது 4,118 புகார்களும், நிதித் துறை மீது 3,107 புகார்களும் பதிவாகியுள்ளன.</p><p>டெல்லி நிர்வாகத்திற்கு எதிராக 2,804 புகார்களும, பெட்ரோலிய அமைச்சகத்திற்கு எதிராக 2,722 புகார்களும் வந்துள்ளன. டெல்லி காவல்துறையினருக்கு எதிராக 2,633 புகார்கள் பெறப்பட்ட வேளையில், மத்திய உள்துறை அமைச்சகம் (டெல்லி காவல்துறை நீங்கலாக) தொடர்பாக 2,036 புகார்கள் பதிவாகியுள்ளன.</p><p>கூடுதலாக, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மீது 2,139 புகார்கள், மனிதவள மேம்பாட்டுத் துறை மீது 2,030 புகார்கள், தொழிலாளர் நல அமைச்சகம் மீது 1,894 புகார்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மீது 1,536 புகார்கள் மற்றும் தொலைத்தொடர்புத் துறை மீது 1,469 புகார்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்புத் துறை (1,410), நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத் துறை (1,123), எஃகு துறை (1,023) மற்றும் அஞ்சல் துறை (1,003) ஆகியவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.</p><h2>புகார்<strong>கள் மீதான நட</strong>வடிக்கை </h2><p>பதிவு செய்யப்பட்ட 70,584 புகார்களில், டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி 64,905 புகார்கள் பரிசீலிக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5,679 புகார்கள் தற்போது விரிவான விசாரணையில் உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. பொதுவாக, ஊழல் தொடர்பான புகார்கள் மீது மூன்று மாதங்களுக்குள் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;சுத்திகரிப்பு&apos; சடங்கு செய்தவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.. ஜே.பி நட்டாவுக்கு கார்கே கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-action-has-been-taken-yet-against-those-who-performed-the-purification-ritual-kharge-writes-to-jp-nadda</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-action-has-been-taken-yet-against-those-who-performed-the-purification-ritual-kharge-writes-to-jp-nadda#comments</comments><guid isPermaLink="false">5cefd9ae-1746-4073-9a73-71a8808de9ee</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:44:59 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:44:59.777Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,மல்லிகார்ஜுன கார்கே,mallikarjun kharge,ஜேபி நட்டா,JP Nadda</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/wovwf945/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜே.பி நட்டா, கார்கே ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜே.பி நட்டா, கார்கே ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/wovwf945/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தான் பேசிச்சென்ற இடத்தை சுத்தம் செய்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களவை தலைவர் ஜே.பி நட்டாவுக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.</p><h2></h2><h2>மல்லிகார்ஜூன கார்கே </h2><p>உத்​த​ராகண்ட் மாநிலம் ஹல்த்​வானி​யில் உள்ள ராம்​லீலா மைதானத்​தில் கடந்த 8ந் தேதி நடை​பெற்ற  பொதுக்​கூட்​டத்​தில் காங்​கிரஸ்  தலை​வர் <a href="https://www.maalaimalar.com/topic/mallikarjuna-kharge">மல்​லி​கார்​ஜுன கார்கே</a> பங்​கேற்​றார்.</p><p>அதனைத் தொடர்ந்​து 10ந் தேதி அந்த மைதானத்​தில் வலது​சாரி அமைப்​பினர் மற்​றும் பா.ஜ.க. - ஆர்​.எஸ்.​எஸ். ஆதர​வாளர்​கள் ‘சுத்​தி​கரிப்​பு’ (புனிதப்​படுத்​தும்) சடங்​கு​களை மேற்​கொண்​ட​தாக குற்​றச்​சாட்டு  எழுந்தது.</p><p>இந்த விவ​காரத்தை காங்​கிரஸ் செயற்​குழு கூட்​டத்​தி​லும், பாராளுமன்றத்திலும் கார்​கேவே நேரடி​யாக எழுப்​பி தனது ஆதங்​கத்​தைப் பதிவு செய்து இருந்​தார்.</p><p>இதுதொடர்பாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அவர் மீது உத்தரகாண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். </p> <h2>கடிதம்</h2><p>இந்த நிலையில் மல்லிகார்ஜூன கார்கே, மாநிலங்களவை தலைவரும் மத்திய மந்திரியுமான ஜே.பி. நட்டாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.</p><p>அதில் புனிதப்படுத்தும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.</p> <h2>பதிவு</h2><p>இது தொடர்பாக கார்கே தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது,</p><p>"ஹல்த்வானியில் நான் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு பிறகு ராம்லீலா மைதானத்தில் மேற் கொள்ளப்பட்ட புனிதப்படுத்துதல் நடவடிக்கை தொடர்பான விவகாரம் குறித்து மேல் சபையின் அவைத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு நான் ஒரு கடிதம் எழுதியுள்ளேன்.</p><p>அவையில் அவர் அளித்து இருந்த உறுதியை அவருக்கு நினைவூட்டியதுடன் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளேன்.</p> <h2>பாடம் புகட்டுவது அவசியம்</h2><p>24 நாட்கள் ஆன பிறகும் இந்த இழிவான செயலுக்கு காரணமானவர்கள் மற்றும் அமைப்புகள் மீது இதுவரை எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் ( எப். ஐ. ஆர்.) பதிவு செய்யப்படவில்லை.</p><p>அந்தக் கடிதத்தில், இந்த விவகாரம் என்னையோ அல்லது காங்கிரசின் தலைவராக எனது பதவியையோ மட்டும் சார்ந்ததல்ல.</p> <p>ஒவ்வொரு நாளும் இத்தகைய கொடூரமான யதார்த்தத்தை எதிர்கொள்ளும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுடன் பரந்த அளவில் இது தொடர்புடையது. இத்தகைய தவறு செய்பவர்களுக்கு பாடம் புகட்டுவது அவசியமாகும்.</p><p>இந்த உண்மைகள் மற்றும் மேல் சபையில் அளிக்கப்பட்ட உறுதியின் அடிப்படை யில் ஹல்த்வானியில் எனது பொதுக்கூட்டத்திற்கு பிறகு ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ‘சுத்திகரிப்பு’ சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரகண்ட் முதல்வருக்கு ஜேபி நட்டா அறிவுறுத்த வேண்டும்" என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வான்வெளியில் நாட்டைக் காத்த போர் நாயகன் இனி பயணிகள் விமானியாக பயணம்: விங் கமாண்டர் அபினந்தனின் புதிய அத்தியாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/air-hero-who-guarded-nation-in-sky-now-flies-as-commercial-pilot-abhinandans-new-chapter</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-hero-who-guarded-nation-in-sky-now-flies-as-commercial-pilot-abhinandans-new-chapter#comments</comments><guid isPermaLink="false">90135768-df83-4f59-83b1-c3512a0d9875</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:04:42 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:04:42.745Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய விமானப்படை,Wing Commander Abhinandan,Vir Chakra,wing commander abhinandan varthman,MiG-21 Bison,விங் கமாண்டர் அபினந்தன்,வீர சக்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/l7izbow3/abinandhan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Wing Commander Abhinandan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/l7izbow3/abinandhan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வீர சக்ரா விருதாளர் குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான் தனியார் பயணிகள் விமானத்தின் விமானியாக இணைந்தார்.</p><p>கடந்த 2019-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி நாட்டிற்கே பெருமை சேர்த்த இந்திய விமானப்படையின் வீர சக்ரா விருதாளர் குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான், இந்திய விமானப்படைப் பணியில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தனியார் பயணிகள் விமான நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார். &nbsp;</p><p>சுமார் 22 ஆண்டுகாலம் இந்திய விமானப்படையில் தீவிர சேவைக்கு பின், கடந்த மார்ச் மாதத்தில் ஓய்வு பெற்ற இவர், தற்போது கோவாவை தளமாகக் கொண்டு இயங்கும் 'FLY91' என்ற பிராந்திய பயணிகள் விமான நிறுவனத்தில் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2><strong>பாகிஸ்தான் சிறைப்பிடிப்பு</strong></h2><p>பிப்ரவரி 2019-ல் நடைபெற்ற புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, <a href="https://www.maalaimalar.com/news/national/retired-air-marshal-jitendra-mishra-appointed-as-ceo-of-the-ayodhya-ram-temple-trust">இந்திய விமானப்படை</a> பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து மறுநாள் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியப் படை எதிர்த்துத் தாக்கியது. &nbsp; </p><p>அப்போது ஸ்ரீநகர் விமானப்படை தளத்திலிருந்து மிஃக்-21 பைசன் போர் விமானத்தில் புறப்பட்ட அப்போதைய விங் கமாண்டர் அபினந்தன் வர்த்தமான், தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி ராணுவ வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். &nbsp; </p><p>இருப்பினும், இந்த வான்வழி மோதலின் போது இவரது விமானமும் எதிரி படையின் ஏவுகணையால் தாக்கப்பட்டு சேதமடைந்ததால், அபினந்தன் விமானத்தில் இருந்து அவசரமாக வெளியேறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தார். அங்கிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்ட அவர், கடுமையான விசாரணைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நடுவிலும் காட்டிய மனவுறுதியும் தைரியமும் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் நெகிழ வைத்தது. இந்தியாவின் தீவிர அழுத்தத்தை அடுத்து சுமார் 60 மணி நேரத்திற்குப் பின் பாகிஸ்தான் அவரை தாயகம் திருப்பி அனுப்பியது. </p><h2>தாயக மரி<strong>யாதை</strong></h2><p>தாயகம் திரும்பிய அவருக்கு, எதிரியின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் காட்டிய இணையற்ற வீரத்திற்காக இந்தியாவின் மூன்றாவது உயரிய போர் விருதான 'வீர சக்ரா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர், இந்திய விமானப்படை அவருக்கு 'குரூப் கேப்டன்' என்ற உயரிய பதவி உயர்வை அளித்தது. &nbsp; </p><h2>ப<strong>யணிகள்</strong> விமானத்தில் புதிய அத்தியாயம்</h2><p>விமானப்படையில் இருந்து முறைப்படி ஓய்வுபெற்ற 43 வயதான அபினந்தன், ஃப்ளை91 நிறுவனத்தின் ஏடிஆர் 72-600 (ATR 72-600) ரக பயணிகள் விமானங்களை இயக்குவதற்காக சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 2024 மார்ச் முதல் செயல்பட்டு வரும் இந்த தனியார் நிறுவனம், கோவா மற்றும் ஐதராபாத்தை முக்கிய மையங்களாகக் கொண்டு நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே விமான சேவைகளை வழங்கி வருகிறது. வான்வெளியில் நாட்டைக் காத்த நாயகன் தற்போது பயணிகள் விமானத்தின் மூலம் சிவிலியன் சேவையில் தடம் பதித்திருப்பது நாடு முழுவதிலும் உள்ள மக்களுக்குப் பெருமகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் வரவழைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சொத்தை விற்றதால் ஆத்திரம்:  பெற்றோரை வீதியில் வைத்து தடியால் தாக்கிய மகன்கள்- புனேயில் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/sons-beat-elderly-parents-on-street-over-land-sale-in-pune</link><comments>https://www.maalaimalar.com/news/national/sons-beat-elderly-parents-on-street-over-land-sale-in-pune#comments</comments><guid isPermaLink="false">f1e95ed9-a16f-41a7-ba8c-a52d1d352574</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:47:26 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:47:26.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,புனே,Pune,property dispute,மகாராஷ்டிரா மாநிலம்,இந்தாப்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p0pwfgjq/onsters.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sons attack parents ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p0pwfgjq/onsters.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் நில விற்பனை தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், வயதான பெற்றோரையே வீதியில் வைத்து இரண்டு மகன்கள் தடியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>புனே மாவட்டம் இந்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த 65 வயதான துகாராம் கிசான் ராவத் என்பவரும், அவரது மனைவி அஞ்சனாவும் வழக்கம்போல் மாலை நேரத்தில் வீதியின் வழியே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த அவர்களின் மகன்களான சஞ்சய் மற்றும் ராஜேந்திர ராவத் ஆகியோர், பெற்றோரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>தனது மனைவியின் பெயரில் இருந்த நிலத்தை துகாராம் விற்பனை செய்ததே இந்த மோதலுக்குக் காரணம் எனத் தெரிகிறது. நிலத்தை விற்றதால் ஆத்திரமடைந்த மகன்கள் இருவரும், பெற்றோரிடம் தகாத வார்த்தைகளால் பேசி, உடனடியாக அந்த நிலப் பரிவர்த்தனையை ரத்து செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.</p><p>விவாதம் முற்றிய நிலையில், தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த மரத்தடிகளால் <a href="https://www.maalaimalar.com/news/national/barefoot-mother-wins-marathon-to-fund-daughters-studies">பெற்றோர் </a>இருவரையும் மகன்கள் இரக்கமின்றி சரமாரியாகத் தாக்கினர். இந்த கொடூரத் தாக்குதலில் துகாராமின் முதுகு, முகம், தொடைகள் மற்றும் இடது தோள்பட்டையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும் அவரது மனைவி அஞ்சனாவுக்கு மணிக்கட்டு மற்றும் இடுப்புப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p>இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த காவலர்கள் காயமடைந்த தம்பதிய மீட்டெடுத்து, சிகிச்சைக்காக இந்தாப்பூர் துணை மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.</p><p>பாதிக்கப்பட்ட துகாராம் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மகன்கள் சஞ்சய் மற்றும் ராஜேந்திர ராவத் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் பெற்றோரையே மகன்கள் தடியால் தாக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>6 நாட்கள் இடைவெளி.. 14வது மாடியிலிருந்து விழுந்து பலி - சுஷாந்த் சிங் மேலாளர் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/a-gap-of-six-days-death-after-a-fall-from-the-14th-floor-sushant-singhs-managers-death-case-transferred-to-the-cbi</link><comments>https://www.maalaimalar.com/news/national/a-gap-of-six-days-death-after-a-fall-from-the-14th-floor-sushant-singhs-managers-death-case-transferred-to-the-cbi#comments</comments><guid isPermaLink="false">d54d4e34-87e1-413f-9b8b-01c064a3ec31</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:23:51 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:23:51.381Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sushanth Singh Rajput,சிபிஐ,cbi,பாலிவுட்,Bollywood,சுஷாந்த் சிங் ராஜ்புத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p62rnz8x/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திஷா சாலியன், சுஷாந்த் சிங் ராஜ்புத் ]]></media:title><media:description type="html"><![CDATA[ திஷா சாலியன், சுஷாந்த் சிங் ராஜ்புத் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p62rnz8x/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மறைந்த நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/sushant-singh-rajput">சுஷாந்த் சிங் ராஜ்புத்தின்</a> மேலாளர் திஷா சாலியன் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p> <p>2020ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி இரவு மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து விழுந்து திஷா சாலியன் உயிரிழந்தார்.  </p> <h2>சுஷாந்த் தற்கொலை</h2><p>தீஷா உயிரிழந்த 6 நாட்களுக்கு பிறகு நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்ராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தற்கொலை செய்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.</p><p>பட வாய்ப்புகள் இல்லாமல் போனது அவரது தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்டது. அதேநேரம் சுஷாந்தின் முன்னாள் காதலி மற்றும் நடிகை <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sushant-singhs-suicide-girlfriend-rhea-chakraborty-has-no-connection-cbi-final-report-794276">ரியா சக்கரபர்த்தி </a>அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் பணத்தை கையாடல் செய்ததாவும் குற்றச்சாட்டு எழுந்தது.</p><p>இதுகுறித்து சிபிஐ நடத்திய 5 ஆண்டு விசாரணைக்கு பின் ரியா நிரபராதி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p> <h2>திஷா சாலியன் சர்ச்சை</h2><p>இதனிடையே சுஷாந்த் தற்கொலை செய்துகொள்வதற்கு 6 நாட்களுக்கு முன் 26 வயதான அவரின் மேலாளர் திஷா சாலியன் 14 வது மாடியில் இருந்து விழுந்து இறந்ததன் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பின.</p><p>அவர் தற்கொலை செய்ததாக மும்பை போலீஸ் தனது விசாரணைக்கு பின் தெரிவித்தது.</p> <p>ஆனால் திஷாவின் தந்தை சதீஷ் சாலியன் தன் மகள் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டி, அவரது தந்தை கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த மனு மீதான முந்தைய விசாரணையில் திஷா சாலியன் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும், அவரது குடும்பத்தினருக்கு உடற்கூறாய்வு அறிக்கை நகல்கள் வழங்கப்படாததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். </p><p>மேலும் பெற்றோர் முன்வைத்த கொலை குற்றச்சாட்டு தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படாதது குறித்தும் காவல்துறையை கண்டித்தனர்.</p> <h2>சிபிஐ விசாரணை</h2><p>இதைதொடர்ந்து நேற்று நடந்த விசாரணையில் நீதிபதிகள் சாரங் கோட்வால் மற்றும் ரஞ்சித்சிங் ராஜா போன்ஸ்லே ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது, திஷா சாலியன் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.</p><p>எப்ஐஆர் பதிவு செய்து அதிகாரியை நியமித்து விசாரணையை தொங்க சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் சதீஷ் சாலியனின் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது</p><p>மேலும் எந்தவொரு நபர் மீதும் போதுமான ஆதாரங்களை விசாரணை அதிகாரி கண்டறியும் வரை, யாரையும் குற்றவாளியாகக் கருதக்கூடாது என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியினர்.</p>]]></content:encoded></item><item><title>பழிவாங்குறாங்க.. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் - பஞ்சாப் அரசு மீது ராகவ் சதா பாய்ச்சல்</title><link>https://www.maalaimalar.com/news/national/controversy-over-names-removed-from-punjab-voters-list-raghav-chadha-levels-allegations-against-the-aam-aadmi-government</link><comments>https://www.maalaimalar.com/news/national/controversy-over-names-removed-from-punjab-voters-list-raghav-chadha-levels-allegations-against-the-aam-aadmi-government#comments</comments><guid isPermaLink="false">f319897b-7420-4050-95d8-7827896cc1a2</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:25:55 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:25:55.049Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sir,எஸ்ஐஆர்,பஞ்சாப்,Punjab,ஆம் ஆத்மி,Raghav Chadha,ராகவ் சதா,Aam Aadmi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/vm8gibkb/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகவ் சதா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகவ் சதா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/vm8gibkb/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாஜக மாநிலங்களவை எம்.பி ராகவ் சதா பெயர் பஞ்சாப் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>கடந்த ஏப்ரலில் ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு தாவியவர் மாநிலங்களவை எம்.பி ராகவ் சதா. பஞ்சாபை சேர்ந்தவர் இவர்.</p><p>அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வரும் நிலையில்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE"> ராகவ் சதாவின் </a>பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p> <h2>ராகவ் சதா தாவல்</h2><p>2022 இல் ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாபில் இருந்து மாநிலங்களவைக்கு ராகவ் சதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/aam-aadmi">ஆம் ஆத்மியில்</a> இருந்தபோது ராகவ் சதா கட்சியின் நிலைப்பாட்டை அவையில் எதிரொலிக்கவில்லை என கூறி அவரின் மாநிலங்களவை எம்.பிக்கள் குழு துணை தலைவர் பதவியை பறித்தது ஆம் ஆத்மி.</p><p>எனவே அதிருப்தி அடைந்த அவரும் ஸ்வாதி மலிவால் உள்ளிட்ட மேலும் 6 ஆம் ஆத்மி அதிருப்தி எம்பிக்களும் பாஜகவில் இணைந்தனர்.</p><p>ஒரு காலத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை தீவிரமாக விமர்சித்து வந்த ராகவ் சதா தற்போது தலைகீழாக ஆதரித்து வருகிறார்.</p><h2>பெயர் நீக்கம்</h2><p>பஞ்சாபில் வாக்களர் பட்டியல் தீவிர திருத்த பணி நடந்து வரும் சூழலில், அவர் பஞ்சாபில் இருந்து நிரந்தரமாக குடிபெயர்ந்து சென்றுவிட்டதாக கூறி அவரின் பெயரானது நீக்கப்பட்டுள்ளது</p><p>கடந்த ஆகஸ்ட் 13 வெளியான வரைவு பட்டியலில் இடம்பெயர்ந்தவர்கள் லிஸ்டில் அவர் பெயர் உள்ளது. நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர் என அவரின் பெயர் நீக்கத்திற்கு காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>அவருடன் 20.66 லட்சம் பேரின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சிறப்பு தீவிர திருத்தம் மூலம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது பஞ்சாப் மொத்தம் வாக்காளர்கள் சதவீதத்தில் 9.7 சதவீதம் ஆகும்.</p><h2>ராகவ் சதா குற்றச்சாட்டு</h2><p>பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடந்து வரும் நிலையில் வரைவு பட்டியலில் தனது பெயர் நீக்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி மீது ராகவ் சதா குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட ராகவ் சதா, "இது சாதராண அலுவல் பிழையாக தெரியவில்லை. இது அரசியல் பழிவாங்கல். </p><p>ஊழல் நிறைந்த ஆம் ஆத்மியில் இருந்து நான் விலகியதில் இருந்தே என்மீது அதன் தலைமை ஆத்திரத்தால் வயிறெரிந்துகொண்டிருக்கிறது. </p><p>கட்சியில் இருந்து விலகியவர்களை பழிவாங்க தனக்கு இருக்கும் மாநில அரசு நிர்வாக அதிகாரத்தை ஆம் ஆத்மி பயன்படுத்தி வருகிறது" என குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>தனது பெயர் பஞ்சாபின் மொஹாலி தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்ததாவும், மக்கள் பிரதிநிதிகளுக்கு எஸ்ஐஆர் விதிமுறைகளில் வழங்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p> <p>இது வரைவு பட்டியல் மட்டுமே ஆகும். இதில் ஆட்சேபனை தெரிவிக்க செப்டம்பர் 12 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தவறை சரிசெய்ய ஆவன செய்ய உள்ளதாக ராகவ் சதா மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள பஞ்சாபில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும்.</p>]]></content:encoded></item><item><title>கல்வி என்பது சலுகையல்ல, ஒவ்வொரு மாணவரின் உரிமை - ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-meets-delegation-of-tribal-students-in-nashik</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-meets-delegation-of-tribal-students-in-nashik#comments</comments><guid isPermaLink="false">5b29904a-e9e4-403f-92a8-4f649d4cbf5d</guid><pubDate>Thu, 03 Sep 2026 00:09:12 +0000</pubDate><atom:updated>2026-09-03T00:09:12.873Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Nashik,Tribal Students,நாசிக்,பழங்குடி மாணவர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/sdjy931s/Rahul-Gandhi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi with Students]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/sdjy931s/Rahul-Gandhi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">மகாராஷ்டிரா</a> மாநிலத்தின் நாசிக் நகருக்கு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பழங்குடியின மாணவர் குழுவொன்றை சந்தித்து பேசினார். இக்குழுவில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களும் அடங்குவர். </p><p>அப்போது பேசிய அவர், கல்வி என்பது ஒரு சலுகை அல்ல, மாறாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவரின் உரிமை என்று குறிப்பிட்டார். மேலும், விளிம்புநிலை சமூகங்களைசேர்ந்த மாணவர்கள் நிர்வாக அமைப்பால் புறக்கணிக்கப்பட கூடாது என்றும் அவர் கூறினார்.</p><p>மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான <a href="https://www.maalaimalar.com/topic/rahul-gandhi">ராகுல் காந்தி</a>, ஒவ்வொரு மாணவருக்கும் கண்ணியமான, பாதுகாப்பான மற்றும் கல்விக்கு உகந்த சூழலில் படிப்பதற்கான உரிமை உண்டு என்று கூறினார். </p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "இன்று மகாராஷ்டிராவின் நாசிக்கில், பழங்குடியின மாணவர் குழுவொன்றை சந்தித்தேன்; இதில் தங்கள் கோரிக்கைகளுக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களும் அடங்குவர். அவர்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் நான் கவனமாகக் கேட்டறிந்தேன்.</p><p>விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிர்வாக அமைப்பால் புறக்கணிக்கப்பட கூடாது; அவர்களுக்கு அமைப்பின் ஆதரவும் சாத்தியமான அனைத்து உதவிகளும் தேவை," என்று காந்தி குறிப்பிட்டார்.</p><h2>கல்வி ஒவ்வொரு மாணவரின் உரிமை:</h2><p>கல்வி என்பது சலுகையல்ல; அது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவரின் உரிமை என்றும் அவர் மேலும் கூறினார்.</p><p>பழங்குடியினருக்கான ஆசிரம பள்ளிகளின் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.</p><p>நேற்று (புதன்கிழமைய) நாசிக்கில் இருந்த ராகுல் காந்தி, மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அளவிலான தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ​​கட்சியின் கொள்கைகளில் உறுதியாக நிற்கவும், மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவும் அவர் அவர்களை வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதம் அல்ல, நடப்பு விலையில் 2.5 சதவீதத்திற்கும் குறைவு: முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் குற்றச்சாட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-gdp-growth-claims-challenged-ex-finance-secretary-subhash-chandra-garg-says-real-growth-below-2-5-percent</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-gdp-growth-claims-challenged-ex-finance-secretary-subhash-chandra-garg-says-real-growth-below-2-5-percent#comments</comments><guid isPermaLink="false">75ae1f00-656b-4ac2-8289-866df011e835</guid><pubDate>Wed, 02 Sep 2026 15:19:43 +0000</pubDate><atom:updated>2026-09-02T15:19:43.298Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,ஜிடிபி வளர்ச்சி,GDP,GDP Growth,மோடி,Subhash Chandra,சுபாஷ் சந்திர கார்க்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bvcctfq5/suba.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Subhash Chandra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bvcctfq5/suba.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து விளக்கிய சுபாஷ் சந்திர கார்க், கடந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான நடப்பு விலை ஜிடிபி தரவுகளை அரசு பெருமளவில் மாற்றியமைத்து திருத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். </p><p>இந்தியாவின் <a href="https://www.maalaimalar.com/news/national/100-billion-dollar-fcnr-deposits-boost-indias-forex-reserves">உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி</a> (GDP) முதல் காலாண்டில் 7.8 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் முதல் பார்வையில் ஈர்க்கக்கூடியதாகத் தெரிந்தாலும், உண்மையான பொருளாதார நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது என்று நாட்டின் முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் கூறியுள்ளார். மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த புள்ளிவிவரங்களின் பின்னணியில் உள்ள கணக்கீடுகள் குறித்து தீவிரமாக ஆராய வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2><strong>'ஜிடிபி' மாயாஜாலம்</strong></h2><p>ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து விளக்கிய சுபாஷ் சந்திர கார்க், கடந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான நடப்பு விலை ஜிடிபி தரவுகளை அரசு பெருமளவில் மாற்றியமைத்து திருத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். முந்தைய ஆண்டின் ஜிடிபி மதிப்பில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் வரை குறைக்கப்பட்டதால், நடப்பு ஆண்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் செயற்கையாக அதிகரித்து 10.3 சதவீத நாமினல் வளர்ச்சியாகக் காட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.</p><h2>உண்<strong>மையான வளர்</strong>ச்சி 2.5 சதவீதத்திற்கும் குறைவு</h2><p>மத்திய அரசு முந்தைய ஆண்டின் ஜிடிபி எண்களை கீழ்நோக்கி மாற்றியமைக்காமல் இருந்திருந்தால், நடப்பு விலையில் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதம் வெறும் 2.5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்திருக்கும் என கார்க் கணக்கிட்டுக் காட்டியுள்ளார். அடிப்படை எண்களை மாற்றியமைத்ததன் மூலமே 7.8 சதவீத உண்மை வளர்ச்சி சாத்தியமானது போல் தோற்றம் அளிப்பதாகவும், எனவே இந்த 7.8 சதவீத வளர்ச்சி எண் உண்மையான பொருளாதார நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கிறதா என்பதில் தமக்கு வலுவான சந்தேகம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>மத்திய அ<strong>ரசைத் தாக்கும் எதிர்க்கட்சி</strong>கள்</h2><p>முன்னாள் நிதிச் செயலாளரின் இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மத்திய மோடி அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. விளம்பரங்கள் மூலம் புள்ளிவிவரப் படத்தை வேண்டுமானால் அழகாக்க முடியுமே தவிர, நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை மாற்ற முடியாது என்று காங்கிரஸ் தலைவர்கள் சாடியுள்ளனர். எனினும், இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள மத்திய புள்ளியியல் அமைச்சகம், புதிய அடிப்படை ஆண்டு மாற்றங்களின் அடிப்படையிலேயே கணக்கீடுகள் முறைப்படி செய்யப்பட்டுள்ளதாகவும், 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சி முற்றிலும் சரியானது என்றும் விளக்கமளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வெளிநாடு வாழ் இந்தியர்களின் 100 பில்லியன் டாலர் முதலீடு: வரலாற்று உச்சத்தை தொட்டது இந்திய ரிசர்வ் வங்கி!</title><link>https://www.maalaimalar.com/news/national/100-billion-dollar-fcnr-deposits-boost-indias-forex-reserves</link><comments>https://www.maalaimalar.com/news/national/100-billion-dollar-fcnr-deposits-boost-indias-forex-reserves#comments</comments><guid isPermaLink="false">d4a968fe-53f9-4cc5-8690-10378ab788bc</guid><pubDate>Wed, 02 Sep 2026 14:30:39 +0000</pubDate><atom:updated>2026-09-02T14:30:39.760Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,NRI,இந்திய ரிசர்வ் வங்கி,FCNR,Non-Resident Indians,வெளிநாடு வாழ் இந்தியர்கள்,எஃப்.சி.என்.ஆர்,வைப்புநிதித் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/x8nmbu35/fcnr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ FCNR  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/x8nmbu35/fcnr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், இந்த 100 பில்லியன் டாலர் நிதியோட்டம் இந்திய பொருளாதாரத்திற்குப் பெரும் பலமாக உருவெடுத்துள்ளது. </p><p>வெளிநாடு வாழ் இந்தியர்களைக் கவரும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய 'எஃப்.சி.என்.ஆர்(பி)' வைப்புநிதித் திட்டம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. வெறும் மூன்று மாதங்களில் 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக முதலீடுகள் குவிந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்ட காலக்கெடுவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே இத்திட்டத்தை ரிசர்வ் வங்கி நிறைவு செய்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/india-rs-20000-crore-crypto-fraud-sc-says-extradite-main-accused-subhash-sharma">ரிசர்வ் வங்கியின்</a> இந்த வெளிநாட்டுச் செலாவணி அல்லாத வங்கி வைப்புத் திட்டம் ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டு செப்டம்பர் 30 வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் 80 பில்லியன் டாலர் வரை மட்டுமே முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 31 அன்றே 100 பில்லியன் டாலரைத் தாண்டி சாதனை படைத்தது. அதிகப்படியான நிதியோட்டத்தைக் கையாளவும், எதிர்காலப் பொருளாதார சமநிலையைப் பேணவும் ஆகஸ்ட் 31 தேதியே ரிசர்வ் வங்கி நிறைவு செய்துள்ளது.</p><h2>வரலாறு கா<strong>ணாத கையி</strong>ருப்பு</h2><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், இந்த 100 பில்லியன் டாலர் நிதியோட்டம் இந்திய பொருளாதாரத்திற்குப் பெரும் பலமாக உருவெடுத்துள்ளது. இதன் விளைவாக இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 729.3 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற எக்காலத்தும் இல்லாத வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தை எட்டியுள்ளது.</p><p>எஃப்.சி.என்.ஆர்(பி) திட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது டாலர் சேமிப்புகளை இந்திய வங்கிகளில் வட்டி இழப்பின்றி டெபாசிட் செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்த பிரம்மாண்ட டாலர் வரத்து இந்திய ரிசர்வ் வங்கிக்குச் அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட்டு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தவும், நாட்டின் கணக்கு பற்றாக்குறையைச் சீர்செய்யவும் மிகப்பெரிய பலத்தை வழங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளைக்கு சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல்  ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! </title><link>https://www.maalaimalar.com/news/national/retired-air-marshal-jitendra-mishra-appointed-as-ceo-of-the-ayodhya-ram-temple-trust</link><comments>https://www.maalaimalar.com/news/national/retired-air-marshal-jitendra-mishra-appointed-as-ceo-of-the-ayodhya-ram-temple-trust#comments</comments><guid isPermaLink="false">d9a779de-6e1e-441a-bc16-8790b894b94b</guid><pubDate>Wed, 02 Sep 2026 13:34:44 +0000</pubDate><atom:updated>2026-09-02T13:34:44.901Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>CEO,Ram temple trust,Jeetendra Mishra,ராமர் கோயில் அறக்கட்டளை,தலைமைச் செயல் அதிகாரி,ஜிதேந்திர மிஸ்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/du58lc8r/New-Project-2026-09-02T190425.432.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அயோத்தி ராமர் கோவிலின் அறக்கட்டளைக்கு சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல்  ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/du58lc8r/New-Project-2026-09-02T190425.432.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின்  (ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை) முதல் தலைமைச் செயல் அதிகாரியாக ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தியில் நடைபெற்ற அறக்கட்டளைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இப்பதவிக்காக பெறப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்வுக்குழு இறுதியாக இவரை தேர்வு செய்துள்ளது.</p><p>ஜிதேந்திர மிஸ்ரா இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். </p><p>சமீபத்தில் கோவில் உண்டியல் காணிக்கை மற்றும் நிதி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, நிர்வாக வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க இந்த சிஇஓ பதவி உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>புதிய சிஇஓ கோவிலின் ஒட்டுமொத்த நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகள், கூட்ட நெரிசல் மேலாண்மை, பணியாளர்கள் மற்றும் நிதிச் செயல்பாடுகளைக் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்மீக மற்றும் மத சடங்குகளில் அவர் தலையிட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் அறக்கட்டளையின் இடைக்காலப் பொதுச் செயலாளர் கிருஷ்ண மோகனுக்குப் பதிலாக, தற்போது அதன் பொருளாளராக இருக்கும் கோவிந்த் தேவ் கிரி, பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மகேஷ் பக்சந்த்கா புதிய பொருளாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>எதற்கு இந்த திடீர் நியமனம்?</h2><p>ராமர் கோவில் அறக்கட்டளையின் நன்கொடை கையாடல் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து அதன் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க இந்த பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை எட்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சம்பத் ராய் ராஜினாமா செய்துள்ளார்.</p><p>மேலும் இரண்டு அறங்காவலர்களும் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.</p><p>இந்நிலையில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், சுவாமி கமல்நாயன் தாஸ், தற்காலிக பொதுச் செயலாளர் டாக்டர் கிருஷ்ண மோகன், அறங்காவலர் மஹந்த் தினேந்திர தாஸ், பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி உள்ளிட்டோர் கலந்து ஒரு கூட்டத்தைக் கூட்டி இந்த சிஇஓ பதவியை கொண்டு வந்துள்ளனர். </p><h2>யார் இந்த மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா?</h2><p>உத்தரப் பிரதேசத்தின் தியோரியாவைச் சேர்ந்த மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா பல்வேறு விருதுகளைப் பெற்ற ஒரு ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். 38 ஆண்டுகளாக விமானப்படை பிரிவில் பணியாற்றியுள்ளார்.</p><p>இவர்தான் ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையின் போது இந்தியாவின் மேற்கு விமானப் படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார். </p>]]></content:encoded></item><item><title>தங்கக் கொள்முதல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க பிரதமர் மோடி வலியுறுத்துவது ஏன்? சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/modis-call-to-cut-gold-buying-and-overseas-trips-sridhar-vembu-on-the-economic-reasons</link><comments>https://www.maalaimalar.com/news/national/modis-call-to-cut-gold-buying-and-overseas-trips-sridhar-vembu-on-the-economic-reasons#comments</comments><guid isPermaLink="false">173fdaa3-deef-4963-9a94-1bb1995e1d19</guid><pubDate>Wed, 02 Sep 2026 12:36:57 +0000</pubDate><atom:updated>2026-09-02T12:36:57.250Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,Prime Minister Modi,Sridhar Vembu,ஸ்ரீதர் வேம்பு,ZOHO,GDP,பிரதமர் மோடி,சோஹோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/qlj3bdmq/sri.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sridhar Vembu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/qlj3bdmq/sri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீத என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், நாடு தனது அந்நியச் செலாவணி கையிருப்பை எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது அவசியம் என்று ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) 7.8 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையிலும், தங்கம் வாங்குவது, வெளிநாட்டுச் சுற்றுலா செல்வது மற்றும் வெளிநாடுகளில் திருமணங்களை நடத்துவது ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமரின் இந்த வேண்டுகோளுக்குப் பின்னணியில் உள்ள பொருளாதாரக் காரணங்கள் குறித்து 'சோஹோ' நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விரிவான விளக்கம் அளித்துள்ளார்.</p><p>இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீத என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், நாடு தனது அந்நியச் செலாவணி கையிருப்பை எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது அவசியம் என்று <a href="https://www.maalaimalar.com/news/national/tech-professionals-must-learn-sales-to-succeed-sridhar-vembu">ஸ்ரீதர் வேம்பு</a> சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நாட்டின் பொருளாதாரம் வேகமடையும் போது, இறக்குமதிக்கான தேவையும் கூடவே அதிகரிக்கும். இந்தியா தற்போதும் கணிசமான அளவு எரிசக்தி மற்றும் அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களுக்காக பிற நாடுகளை சார்ந்துள்ளதால், அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>ஜப்பான், தென்கொரியா, தைவான் மற்றும் சீனா ஆகிய கிழக்காசிய நாடுகள் தங்களது அதிவேக வளர்ச்சிக் கட்டத்தில் இருந்தபோது, இதேபோன்று அந்நியச் செலாவணியைச் சேமிப்பதில் மிகக் கடுமையாகச் செயல்பட்டதாக ஸ்ரீதர் வேம்பு நினைவு கூர்ந்துள்ளார். இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்து வந்தாலும், அந்த ஏற்றுமதிப் பொருட்களின் தயாரிப்பிற்குத் தேவையான அதிநவீன இயந்திரங்கள், சிபியு , ஜிபியு மற்றும் மென்பொருட்களை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. எனவே தங்கம் வாங்குதல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக அந்நியச் செலாவணி வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.</p><h2>சுயசார்<strong>பு இலக்கு</strong></h2><p>இந்தியாவின் தற்போதைய சூழ்நிலையை வேகமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனத்துடன் ஒப்பீட்டுப் பேசியுள்ளார் ஸ்ரீதர் வேம்பு. ஒரு நிறுவனம் தனது தொழில் விரிவாக்கத்திற்கு முதலைச் சேமித்து முதலீடு செய்வதைப் போல, இந்தியாவும் தன் வளர்ச்சிக்குத் தேவையான மூலதனத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அதிநவீன தொழில்நுட்பங்களை சொந்தமாக உருவாக்கும் வரை இந்த அந்நியச் செலாவணி பாதுகாப்பு முறை அவசியமானது என்றும், அதற்குச் சில தசாப்தங்கள் ஆகலாம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜாஜர் ரெயில்வே தண்டவாளம் அருகே பறவை ஆர்வலரின் கண்டுபிடிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/discovery-of-red-backed-shrike-near-jhajjar-railway-track</link><comments>https://www.maalaimalar.com/news/national/discovery-of-red-backed-shrike-near-jhajjar-railway-track#comments</comments><guid isPermaLink="false">0f3a809b-c2e7-4c07-80bc-594a61b0a324</guid><pubDate>Wed, 02 Sep 2026 10:46:16 +0000</pubDate><atom:updated>2026-09-02T10:46:16.084Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>haryana,ஹரியானா,Jhajjar Bird,ஜாஜர் பறவை,Red-backed Shrike,ரெட்-பாக்டு ஸ்ட்ரைக்,Siberian Bird,சைபீரிய பறவை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/cp8e21r6/Jhajjar-Bird" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jhajjar Bird]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/cp8e21r6/Jhajjar-Bird?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/haryana">ஹரியானா </a>ஜாஜர் ரெயில் தண்டவாளம் அருகே ராகேஷ் அஹ்லாவத் ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவையை கண்டறிந்தார். இது சைபீரியாவிலிருந்து வழிதவறி வந்த இளம் பறவை என்று கண்டறியப்பட்டது.</p><p>ஹரியானா மாநிலம் ஜாஜர் மாவட்டத்தின் டிகல் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே, பறவை ஆர்வலரான ராகேஷ் அஹ்லாவத் என்பவர் தனது வழக்கமான பறவை கண்காணிப்பு பயணத்தின் போது ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் இந்த அரிய பறவையைக் கண்டறிந்துள்ளார்.</p><p>அங்குள்ள ஒரு புதரின் மீது அமர்ந்திருந்த இந்த பறவையின் தனித்துவமான தோற்றம் அவரை உடனடியாகக் கவர்ந்தது.</p><h2>வித்தியாசமான பறவை</h2><p>இதுகுறித்து ராகேஷ் அஹ்லாவத் கூறுகையில், "பொதுவாக நமது பகுதியில் நாம் காணும் ஸ்ட்ரைக் பறவைகள் நீண்ட வாலையும், பழுப்பு நிற முதுகையும் கொண்டிருக்கும். </p><p>ஆனால், ரெட்-பாக்டு ஸ்ட்ரைக்  பறவை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இதன் மேல் பகுதி பழுப்பு நிறத்திலும், கீழ் பகுதி வெளிறிய நிறத்திலும், உடல் முழுவதும் செதில் போன்ற கருமையான அமைப்புகளையும் கொண்டிருந்தது." என்றார். </p><p>மேலும், இந்தப் பறவை தனது வாலை அடிக்கடி விரித்து மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் அசைத்த விசித்திரமான நடத்தையும் அவரது கவனத்தை ஈர்த்துள்ளது.</p><h2>ரஷ்யாவில் இருந்து வந்த குட்டி வேட்டைக்காரன்</h2><p>இந்த ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவைகள் மத்திய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE">ரஷ்யா </a>மற்றும் சைபீரியா போன்ற குளிர்ந்த பகுதிகளில் இருந்து இலையுதிர்காலமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியாவுக்குப் புலம்பெயர்கின்றன. </p><p>இந்தியாவில் இவை வழக்கமாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத்தின் </a>கட்ச் பகுதியில்தான் அதிகம் காணப்படும்.</p><h2>பறவையின் சிறப்பம்சங்கள்</h2><p>இவை சிறிய அளவிலான வேட்டைப் பறவைகளாகும். முட்கள் நிறைந்த புதர்கள் மற்றும் திறந்தவெளிப் பிரதேசங்களில் அமர்ந்து கொண்டு பெரிய பூச்சிகள், சிறிய பறவைகள் மற்றும் எலிகளை வேட்டையாடும்.</p><p>வேட்டைப் பறவையாக இருந்தாலும், இவை புதர்களில் மிக அமைதியாக அமர்ந்திருக்கக் கூடியவை. இதனால் எளிதில் மனிதர்களின் கண்களுக்குத் தட்டுப்படாது.</p><p>ஜாஜரில் காணப்பட்ட இந்த பறவை இன்னும் முழு வளர்ச்சியடையாத இளம் பறவையாகும். இது தனது வழக்கமான பயணப் பாதையிலிருந்து வழிதவறி ஹரியானாவிற்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.</p><h2>ஹரியானாவின் முதல் அதிகாரப்பூர்வ பதிவு</h2><p>டெல்லி பறவைகள் சங்கத்தின் மூத்த பறவை ஆய்வாளரான பங்கஜ் குப்தா இதுகுறித்து தெரிவிக்கையில், "ஹரியானாவில் ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவை ஆவணப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்பதால், இது பறவையியல் துறையில் ஒரு மிக முக்கியமான பதிவாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>ரெயில்வே தண்டவாளத்தின் ஓரங்களில் உள்ள முள் புதர்கள் மற்றும் திறந்தவெளிகள் இந்த பறவைகள் வேட்டையாடுவதற்கு ஏற்ற சூழலை வழங்கியதால், இது தற்காலிகமாக இங்கு தங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட் மற்றும் ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்த 12-ஆம் வகுப்பு கேரள மாணவர் - ஐஐடியில் பொறியாளராக நியமனம் </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-iit-website-hacked-by-class-12-student-hired-as-iit-engineer</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-iit-website-hacked-by-class-12-student-hired-as-iit-engineer#comments</comments><guid isPermaLink="false">a558adbe-a0ed-44d9-8fa0-3968a13f0e2a</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:51:35 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:51:35.567Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,IIT,JEE Advanced,ஐஐடி,ஜேஇஇ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/t0qr48jn/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IIT Kanpur cyber security hire]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/t0qr48jn/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கேரளாவை சேர்ந்த 16 வயதான இளைஞர் ஒருவர், கடந்த ஜூன் மாதத்தில் நீட் மறுதேர்வு இணையதளத்திலும், ஐஐடி ரூர்க்கி பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஜே.இ.இ அட்வான்ஸ்டு இணையதளத்திலும் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, தற்போது அந்த இளைஞரை ஐஐடி கான்பூர் நிறுவனம் சைபர் பாதுகாப்பு பொறியாளராக பணியில் சேர்த்துள்ளது.</strong></em></p><h3><strong>கேரள இளைஞர்</strong></h3><p>கேரளாவில் உள்ள திருவல்லைக்கு அருகில் உள்ள மன்னாரை பூர்வீகமாக கொண்ட ரைலன் அணில் தற்போது தனது பெற்றோர்களுடன் துபாயில் வசித்து வருகிறார். 16 வயதான அணில் துபாயில் உள்ள சிபிஎஸ்இ தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.</p><p>இவரது தந்தை 1999-இல் துபாய்க்கு குடிபெயர்ந்து, அல்-பூஃட்டைம் என்ற நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அணில் தனது சிறுவயதில் இருந்தே ஹாலிவுட் படங்களான ‘தி மேட்ரிக்ஸ்’ மற்றும் ‘மிஸ்டர் ரோபோட்’ ஆகிய கதைகளில் வரும் ஹேக்கர்களால் ஈர்க்கப்பட்டுள்ளார்.</p><p>இதன் காரணமாக இவர் 8-ஆம் வகுப்பு முதலே ஹேக்கிங்-இல் தீவிரமாக ஆர்வம் கொண்டு, அதனை கற்க தொடங்கினார். இதையடுத்து இவர் 10-ஆம் வகுப்பில் Grubby.ai என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள குறைகளை கண்டறிந்து, அதுகுறித்து புகார் அளித்தார்.</p><p>இந்த அனுபவத்தின் மூலம் அவர் ஹேக்கிங் துறையில் மிக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து இவர் கடந்த ஜூன் மாதத்தில் நடந்த <a href="https://www.maalaimalar.com/topic/நீட்-தேர்வு">நீட்</a> மறுதேர்வு இணையதளத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்தார்.</p><h3><strong>நீட் இணையதளம்</strong></h3><p>அந்த இணையதளத்தில் நீட் தேர்வு மையங்களை நிர்வகிப்பது மற்றும் பார்வையாளர்கள் தொடர்பான தகவல்களை அணுகுவது உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட தகவல்கள் இருந்ததை அவர் கண்டறிந்தார்.</p><h3><strong>ஜேஇஇ அட்வான்ஸ்டு இணையதளம்</strong></h3><p>மேலும் ஐஐடி ரூர்க்கி பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தளத்துடன் தொடர்புடைய கிளவுட் சேமிப்பில் இருந்த குறைபாடுகளையும் அவர் கண்டறிந்தார்.</p><p>ஜேஇஇ இணையதளத்தில் தேர்வர்களின் அனுமதி அட்டைகளை (ஹால் டிக்கெட்) மற்றும் தேர்வு முடிவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை பாதுகாப்பற்ற முறையில் இருந்தது அவருக்கு தெரியவந்தது</p><p>இதையடுத்து இணையதளத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து, அவர் உரிய நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து அதற்கு உரிய பதில் கிடைக்காததால், அதில் இருந்த குறைபாடுகளை பொதுவெளியில் தெரிவித்தார்.</p><p>இதற்கிடையில் அவர் பொதுவெளியில் தெரிவித்த சில நாட்களுக்குள், இணையதளத்தில் இருந்த குறைபாடுகள் சரி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.</p><h3><strong>ஐஐடி ரூர்க்கி</strong></h3><p>இதுகுறித்து ஐஐடி ரூர்க்கி கூறுகையில், இணையதளத்தில் உள்ள சேமிப்பகம் படிக்க மட்டுமே முடியும் என்றும், அதன் தரவுகளை மாற்றவோ அல்லது நீக்கவோ முடியாது என்று பதிலளித்தது.</p><p>இந்த நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள ஐஐடி கான்பூர் பல்கலைக்கழகம், 16 வயது இளைஞர் அணிலை அணுகி, அதன் சைபர் பாதுகாப்பு புத்தாக்க மையமான C31Hub-இல் இளநிலை சைபர் பாதுகாப்பு பொறியாளராக பணி அமர்த்தியுள்ளது.</p><h3><strong>ஐஐடி கான்பூர் இயக்குநர்</strong></h3><p>இதுகுறித்து ஐஐடி கான்பூர் இயக்குநர் மனிந்திர அகர்வால் கூறுகையில், “அனிலின் பணியையும் திறமைகளையும் கண்ட பிறகு, ஐஐடி கான்பூர் குழு அவரை அணுகியது. எங்கள் பொறியாளர்கள் அவருடன் கலந்துரையாடியபோது, சைபர் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான துறைகளில் அவருக்கு வலுவான திறன்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.</p><p>அதைத் தொடர்ந்து, அவரைப் பணியில் அமர்த்த முடிவு செய்தோம். அவர் துபாயில் வசிப்பதாலும், தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வருவதாலும், ஆலோசகராகத் தொலைவிலிருந்து பணிபுரிகிறார். அவரால் முழுநேரமாகப் பணியாற்ற முடியாது. பல்வேறு இணையதளங்களின் பாதுகாப்பு பகுப்பாய்வு செய்வதே அவரது முதன்மை பொறுப்பாகும்.</p><p>அனில் ஒரு சிறுவன் என்பதால், இந்த ஒப்பந்தம் நிறைவடைய கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது. அவரது தந்தை அனில் ஆபிரகாம், அவனது பாதுகாவலராகவும் இணைப் பொறுப்பாளர் உள்ளிட்ட கடமைகளை உள்ளடக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.</p><p>அவரது பணிகள், மேற்பார்வையிடப்பட்ட, அபாயமற்ற கல்வி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.</p><p>ஐஐடி-க்களில் இதுவரையில் பணியமர்த்தப்பட்டவர்களில் மிக இளைய வயதுடையவர் இவர்தான்” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>