<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 09 Aug 2026 04:43:07 +0000</lastBuildDate><item><title>ஜெயிலில் இருக்கும் காதலரை சந்திக்க துப்பாக்கி குண்டுகளுடன் சென்ற மைனர் காதலி: சொன்ன பதில்தான் ஹைலைட்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/10-bullets-in-pocket-up-girl-visits-jail-to-meet-lover-then-this-happens</link><comments>https://www.maalaimalar.com/news/national/10-bullets-in-pocket-up-girl-visits-jail-to-meet-lover-then-this-happens#comments</comments><guid isPermaLink="false">c0708711-71c4-413b-9cc4-ff5d94c785d0</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:29:02 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:29:02.873Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தர பிரதேசம்,jail</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/dnkz39se/PoliceStation.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹோண்டா சிறைச்சாலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/dnkz39se/PoliceStation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் உள்ள சிறையில் வாலிபர் ஒருவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஒரு நபரின் துணையோடு மைனர் பெண் ஒருவர் (பள்ளி மாணவி) சந்திக்க சென்றுள்ளார். அப்போது, போலி அடையாள அட்டையை சிறைச்சாலை நுழைவாயில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.</p><p>அப்போது, கட்டாய சோதனை என்ற அடிப்படையில் அந்த சிறுமியிடம் சோதனை நடத்தியுள்ளனர். அப்போதுதான் அவர் போலி அடையாள அட்டையுடன் வந்ததுடன், பாக்கெட்டில் 10 துப்பாக்கி குண்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.</p><p>இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, என்னுடைய காதலரை சந்திக்க வந்தது என்னுடைய அப்பாவுக்கு தெரியாது. தனது தந்தைக்கு கோபம் அதிகம். சிறையில் உள்ள தன் காதலனை சந்திக்கச் சென்றது தெரிந்தால் அவர் தீவிரமான அல்லது கடுமையான நடவடிக்கையை எடுப்பார். அதனால்தான் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை எடுத்து வந்ததாக தெரிவித்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து அந்த மைனர் பெண்ணை சிறைத்துறை அதிகாரிகள் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த பெண்ணின் தந்தை லைசென்ஸ் துப்பாக்கி வைத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்: போராட்டத்தில் பங்கேற்றவர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-pays-tribute-to-quit-india-movement-heroes</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-pays-tribute-to-quit-india-movement-heroes#comments</comments><guid isPermaLink="false">9a89ee1d-ea00-44f5-b75f-f13ae99ee45c</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:16:54 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:16:54.287Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித்ஷா,pm modi,Quit India Movement Day,PM Modi வெள்ளையனே வெளியேறு நினைவு தினம்,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/yzhxl1md/pm-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/yzhxl1md/pm-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் 'வெள்ளையனே வெளியேறு' எனும் இயக்கம் 1942-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.</p><p>பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கமான ஆகஸ்ட் புரட்சி என அழைக்கப்படும் இந்தப் போராட்டம் மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினையடுத்து 1942, ஆகஸ்ட் 9 அன்று தொடங்கப்பட்டது.</p><h2>வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்</h2><p>இதில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9-ம் தேதி 'கிராந்தி திவஸ்' எனும்  பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.</p><p>இந்நிலையில், வெள்ளையனே வெளியேறு போராட்ட தினத்தில் பங்கேற்றவர்கள் குறித்து பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.</p><p>இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><h2>நினைவு கூர்ந்த பிரதமர் மோடி</h2><p>வரலாற்றுச் சிறப்புமிக்க 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் நினைவு கூர்கிறோம். அவர்களின் துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றும் ஓர் உத்வேகமாகத் திகழும்.</p><p>மகாத்மா காந்தியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு, 'வெள்ளையனே வெளியேறு' என்ற அந்த முழக்கம் நமது விடுதலைப் போராட்டத்திற்குப் புதிய ஆற்றலை ஊட்டியது.</p><p>அத்துடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபடுவதற்கான நமது மக்களின் அசைக்க முடியாத உறுதியையும் அது வெளிப்படுத்தியது' என பதிவிட்டுள்ளார்.</p><h2>செய் அல்லது செத்து மடி</h2><p>இதேபோல், உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், வெள்ளையனே வெளியேறு இயக்கம் நமது சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று அத்தியாயமாகும், இது நாட்டு மக்களை ஒருங்கிணைத்து, ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற செய் அல்லது செத்து மடி என்ற உறுதியையும், துணிவையும் அவர்களுக்கு வழங்கியது. தேசத்தின் விடுதலைக்காக இந்த மாபெரும் போராட்டத்தில் அனைத்தையும் தியாகம் செய்த சுதந்திரப் போராளிகள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்</p>]]></content:encoded></item><item><title>பள்ளி வினாடி வினாவில் சாவர்க்கர் குறித்த கேள்வி: கேரளாவில் வெடித்தது அரசியல் சர்ச்சை</title><link>https://www.maalaimalar.com/news/national/savarkar-question-in-kerala-school-quiz-sparks-big-political-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/savarkar-question-in-kerala-school-quiz-sparks-big-political-row#comments</comments><guid isPermaLink="false">66ffb7f0-cc60-4708-a3aa-82286f15e89d</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:46:58 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:46:58.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாவர்க்கர்,Savarkar,கேரளா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/kidp19h1/Savarkar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாவர்க்கர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/kidp19h1/Savarkar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற வினாடி வினா நிகழ்ச்சியில் இடம்பெற்ற வீர சாவர்க்கர் தொடர்பான கேள்வி, தற்போது மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சாவர்க்கர்</h2><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த வினாடி வினாவில், "ஆங்கிலேயர்களால் மிகக் கடுமையான தண்டனை பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் யார்?" என்ற கேள்வி இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கான பதிலாக வி.டி. சாவர்க்கர் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p>இந்தக் கேள்வியின் வரலாற்று அணுகுமுறை குறித்து இடதுசாரி அமைப்புகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அரசியல் தரப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான கேரள அரசு, சங் பரிவார் திட்டத்தை கல்வித்துறையில் அனுமதிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளன.</p><p>இதையடுத்து, கேரள பொதுக் கல்வித்துறை அமைச்சர் என். சம்சுதீன் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த வினாடி வினா அரசின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் நடத்தப்படவில்லை என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கேள்வியைத் தயாரித்தவர்கள் யார், அதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><p>சமூக அறிவியல் மன்றம் அல்லது பொதுக் கல்வித் துறை ஆகியவற்றின் செயல்பாட்டுத் திட்டத்தில் இந்த வினாடி-வினா நிகழ்ச்சி இடம்பெறவில்லை. மேலும், கேள்விகளைத் தயாரிக்கவோ அல்லது போட்டியைத் தனிப்பட்ட முறையில் நடத்தவோ இவ்விரு அமைப்புகளும் யாரையும் அங்கீகரிக்கவில்லை என்று கல்வித்துறை அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><h2>பினராயி விஜயன்</h2><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும் கேரள முதல்வருமான பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் யு.டி.எஃப். (UDF) அரசு "கூட்டுச் சதி" செய்வதாகக் குற்றம் சாட்டினார். மேலும் சாவர்க்கரின் "உண்மையான வரலாற்றை" மறைத்து அவரைப் பெருமைப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் கூறினார். மேலும், கேரளாவில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சிகளின் பின்னணியிலும் இந்தப் பிரச்சினையைப் பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.</p><p>மாநிலத்தின் பொதுக் கல்வித் துறையை "காவிமயமாக்குவதற்கும்", சுதந்திரப் போராட்ட வரலாற்றைத் திரிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாகவே அந்த வினாடி-வினா (quiz) கேள்வி அமைந்திருந்ததாக முன்னாள் பொதுக் கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி குற்றம்சாட்டினார்.</p><p>ஆங்கிலேயர்களிடமிருந்து மிகக் கடுமையான தண்டனையைப் பெற்ற சுதந்திரப் போராட்ட வீரராகச் சாவர்க்கரைச் சித்தரிப்பது ஆட்சேபனைக்குரியது என்று கூறிய அவர், அக்கேள்வி தவறான வரலாற்றைப் பரப்பும் முயற்சியாக அமைந்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.</p><h2>சிவன்குட்டி</h2><p>விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய அந்தக் கேள்வியையும் அதற்கான பதிலையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சிவன்குட்டி வலியுறுத்தினார்.</p><p>மேலும், பொதுக் கல்வித் துறை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>காவல் பணி, பேரிடர் மீட்பு உள்ளிட்ட அரசுப் பணிகளில் ட்ரோன்கள் அறிமுகம்: டெல்லி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-drone-policy-to-enable-use-in-police-work-disaster-management-and-transport</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-drone-policy-to-enable-use-in-police-work-disaster-management-and-transport#comments</comments><guid isPermaLink="false">b2650ad9-b391-48de-8950-3e481e697f36</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:23:12 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:23:12.353Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,டெல்லி,drone policy,ட்ரோன் கொள்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/gprma12l/Untitled-design-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காவல் பணி, பேரிடர் மீட்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்கு ட்ரோன்கள் பயன்பாடு]]></media:title><media:description type="html"><![CDATA[ Delhi Drone Policy Jobs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/gprma12l/Untitled-design-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் முன்மொழியப்பட்ட ட்ரோன் கொள்கையின்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் தெரிவித்தார்.</p><p>தற்போது உருவாக்கப்பட்டு வரும் இந்தக் கொள்கையானது, ட்ரோன் ஆராய்ச்சி மையங்களை நிறுவுதல், பிரத்யேக விமானப் பரிசோதனை வசதிகளை ஏற்படுத்துதல், போக்குவரத்து மேலாண்மைக்கு ட்ரோன்களை பயன்படுத்துதல் மற்றும் ட்ரோன் சூழலமைப்பை மேம்படுத்த மானியங்கள் வழங்குதல் ஆகியவற்றை வலியுறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>டெல்லி ட்ரோன் கொள்கை</strong></h3><p>இதுகுறித்து அமைச்சர் பங்கஜ் சிங் கூறுகையில், “வேலைவாய்ப்புகளுடன், பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட ட்ரோன் செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக ஒரு விரிவான ட்ரோன் கொள்கை திட்டமிடப்பட்டு வருகிறது. கொள்கை தயாராக உள்ளது;  </p><p>ஒரு மாதத்தில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இதைச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தக் கொள்கையானது அரசாங்கத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையால் உருவாக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.</p><p>இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “தவறான பயன்பாட்டை தடுப்பதற்காக ட்ரோன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல், கண்காணிப்பு மற்றும் வரைப்படமிடலுக்காக அரசு நிறுவனங்கள் ட்ரோன்களை பயன்படுத்த வழிவகை செய்தல், மற்றும் DGCA-வின் டிஜிட்டல் ஸ்கை தளத்துடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்களாகும்.</p><p>இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கும், தேவையான துணை உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் அரசு தனி நிதி ஒதுக்கீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.</p><p>இந்த நிகழ்வுகளின் கீழ் பொது விழிப்புணர்வு மற்றும் அமலாக்கம், மக்களைச் சென்றடைதல், மண்டல அடையாளப் பலகைகள், விழிப்புணர்வு பட்டறைகள், பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்புக்கான நிலையான இயக்க நடைமுறைகள் ஆகிய ஐந்து முக்கியப் பகுதிகளை மையமாகக் கொண்டு இந்தக் கொள்கை வகுக்கப்படும்.</p><p>டெல்லி ட்ரோன் கொள்கையின் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் தலைமையில் அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது.</p><h3><strong>அரசுத் துறைகளில் ட்ரோன் பயன்பாடு</strong></h3><p>மேலும், நகருக்குள் காவல் பணி, பேரிடர் மீட்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்ட அரசாங்கப் பணிகளுக்காகவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.</p><p>ரியல் எஸ்டேட் திட்டங்கள், தொலைத்தொடர்பு மற்றும் ஊடகத் துறைகளில் ட்ரோன்களின் பயன்பாட்டைத் திட்டமிடுவதையும் இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p>டெல்லியில், பல முக்கிய பிரமுகர்களின் இருப்பிடங்கள் காரணமாக, கிட்டத்தட்ட 60 சதவீதப் பகுதி ட்ரோன் இல்லாக மண்டலமாக உள்ளன.</p><p>எனவே அந்த வரம்புகளை கருத்தில் கொண்டு, இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளிகளில் ட்ரோன் விழிப்புணர்வுப் பட்டறைகள், சிறப்பு மையங்களை உருவாக்குதல், தொலைநிலை விமானி பயிற்சி நிறுவனங்களை அமைத்தல் மற்றும் விமானி பயிற்சித் திட்டங்கள் போன்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறார் பாதுகாப்புக்காக &apos;ஷீல்டு&apos; மசோதா: மீறினால் ரூ.10 கோடி அபராதம் விதிக்க முன்மொழிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/shield-bill-for-child-safety-rs-10-crore-penalty-proposed-for-violations</link><comments>https://www.maalaimalar.com/news/national/shield-bill-for-child-safety-rs-10-crore-penalty-proposed-for-violations#comments</comments><guid isPermaLink="false">ffece0f6-cd13-4837-9f3f-09372baa2b45</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:16:22 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:16:22.930Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Violations,Child safety,அபராதம்,சிறுவர் பாதுகாப்பு,ஷீல்டு மசோதா,shield bill</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/fnqi8b3p/Baji.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/fnqi8b3p/Baji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகள் சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஆன்லைன் கேமிங் கணக்குகளைத் தொடங்க தடை விதிக்க வகை செய்யும் தனிநபர் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆவதற்கு தயார் செய்யப்பட்டு உள்ளது.</p><h2>'ஷீல்டு' மசோதா</h2><p>சமூக ஊடகங்கள் வயது வித்தியாசமின்றி அனைவரையும் கட்டிப்போடுகின்றன. இதில் சிறுவர்-சிறுமிகள் பலர் அடிமைகளாக உள்ளனர். இதனால் அவர்கள் சில நேரங்களில் ஆபாச படங்களைப் பார்க்க நேரிடுகிறது. அதுபோல ஆன்லைன் கேமிங்கில் பைத்தியம் பிடித்தவர்கள் போல ஆகிவிடுகிறார்கள். இது சமூகத்துக்கு கேடு தரும் செயலாக பார்க்கப்படுகிறது.</p><p>எனவே இதனை தடுப்பதற்காகவும், சிறார் பாதுகாப்புக்காகவும் பா.ஜ.க எம்.பி. பைஜெயந்த் பாண்டா, ஒரு தனிநபர் மசோதாவை தயார் செய்துள்ளார். இளம் டிஜிட்டல் தலைமுறையினருக்கான ஆரோக்கியமான இணையச் சூழல்களைப் பாதுகாத்தல் (ஷீல்டு) மசோதா-2025' என அந்த மசோதாவுக்கு பெயரிடப்பட்டு உள்ளது.</p><h2>கட்டுப்பாடுகள்</h2><p>13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஆன்லைன் கேமிங் கணக்குகள் தொடங்குவதற்கு இந்த மசோதா கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதற்காக, சம்பந்தப்பட்ட தளங்கள் வயது சரிபார்ப்பு, பெற்றோர் கட்டுப்பாடுகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்கள் மீதான கட்டுப்பாடுகள் போன்றவற்றை விதிக்க வேண்டும் என இந்த மசோதா வலியுறுத்துகிறது.</p><p>சிறுவர்கள் ஆபாசப் படங்கள், சூதாட்டம், பந்தயம், வன்முறை அல்லது பயங்கரவாத உள்ளடக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான உள்ளடக்கங்களை அணுகுவதைத் தடுக்க இந்தத் தளங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.</p><p>இதில் செய்யப்படும் மீறல்களுக்கு ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கவும் முன்மொழியப்பட்டு உள்ளது. மேலும் மீண்டும் மீண்டும் அல்லது வேண்டுமென்றே மீறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ-ன் கீழ் அந்த தளங்களின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம் அல்லது தடுக்கப்படலாம் என்பதையும் மசோதா முன்மொழிகிறது.</p><h2>அரிது</h2><p>இந்த மசோதாவை நேற்று முன்தினம் தாக்கல் செய்யலாம் என பைஜெயந்த் பாண்டா நினைத்திருந்தார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டதால் அது ஈடேறவில்லை. இதுபோல ஏற்கனவே 2 முறை அவர் முயற்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>மேலும், தனிநபர்களின் தத்ரூபமான சாயல்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன் படுத்துவதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் தயார் செய்யப்பட்ட ஒரு தனிநபர் மசோதாவையும் தாக்கல் செய்ய முடியவில்லை. பொதுவாக தனிநபர் மசோதாக்கள் சட்டமாக இயற்றப்படுவது அரிது.</p><p>சுதந்திரத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் 12 தனிநபர் மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு: சம்பளம் ரூ.60,000 முதல் 1,80,000 வரை</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-airports-authority-recruitment-salary-rs-60000-to-180000</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-airports-authority-recruitment-salary-rs-60000-to-180000#comments</comments><guid isPermaLink="false">024790ce-deaf-4f1a-b33c-613b266cd2c3</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:26:08 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:26:08.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காலி பணியிடம்,வேலைவாய்ப்பு,airport authority of india,AAI,Job Vacancy,இந்திய விமான நிலைய ஆணையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/qg3evdh3/Untitled-design-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Manager and Junior Executive vacancies with salary up to Rs 1.8 lakh]]></media:title><media:description type="html"><![CDATA[ AAI Recruitment 2026]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/qg3evdh3/Untitled-design-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய விமான நிலைய ஆணையம் (AAI), பல்வேறு துறைகளில் மேலாளர்கள் மற்றும் இளநிலை நிர்வாகிகள் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>இந்த அறிவிப்பின்படி, தகுதியான விண்ணப்பத்தாரர்கள் AAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த வேலைவாய்ப்பில் சிவில், எலெக்ட்ரிக்கல், நிதி, தகவல் தொழில்நுட்பம், கட்டிடக்கலை, சட்டம், தீயணைப்புத் துறை, செயல்பாடுகள் (operations), வணிகம், பெருநிறுவன தொடர்பியல் (corporate communications) மற்றும் பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கான ஆள்சேர்ப்பு முறை கணினி வழி தேர்வுகள்  மூலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>வயது வரம்பு</strong></h3><p>AI ஆட்சேர்ப்புக்கான தகுதி நிபந்தனைகள் வெளியாகியுள்ளது. அதன்படி மேலாளர் பணிக்கு, 2026 செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இளநிலை நிர்வாகி பணிக்கு, 7 செப்டம்பர் 2026 அன்று அதிகபட்சமாக 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.</p><p>மேலும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. இதில் பட்டியல் சாதியினர் (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC - Non-Creamy Layer) 3 ஆண்டுகளும் அடங்கும்.</p><p>அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு பெறலாம்.</p><p>மேலாளர் பதவிகளுக்கு, துறையைப் பொறுத்து, தொடர்புடைய இளங்கலை அல்லது முதுகலைப் பட்டத்துடன் மூன்று வருட பணி அனுபவமும் தேவைப்படுகிறது.</p><h3><strong>துறைகள்</strong></h3><p>நிதி, சட்டம், செயல்பாடுகள், மற்றும் நில அளவை மற்றும் நிலப்படவியல் ஆகிய துறைகளில் உள்ள இளநிலை நிர்வாகி பதவிகளுக்குக் குறிப்பிட்ட கல்வித் தகுதிகள் தேவைப்படுகின்றன, அதே சமயம் இந்தப் பதவிகளுக்குப் பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.</p><p>மேலாளர் (நிறுவனத் தொடர்பியல்) பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் மக்கள் தொடர்பியல், இதழியல் அல்லது அது தொடர்பான துறைகளில் இளங்கலைப் பட்டத்துடன், மூன்று வருடங்கள் தொடர்புடைய பணி அனுபவத்தையும் பெற்றிருக்கலாம்.</p><p>விண்ணப்பதாரர்கள், நிர்ணயிக்கப்பட்ட கடைசித் தேதிக்குள், அனைத்து கல்வித் தகுதி மற்றும் அனுபவத் தேவைகளையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h3><strong>சம்பளம்</strong></h3><p>மேலாளர் பதவிகளுக்கான சம்பள விகிதம் ரூ. 60,000-3%-ரூ. 1,80,000 ஆகவும், இளநிலை நிர்வாகி பதவிகளுக்கான சம்பள விகிதம் ரூ. 40,000-3%-ரூ. 1,40,000 ஆகவும் உள்ளது. மேலாளர்களுக்கான தோராயமான ஆண்டு மொத்த சம்பளம் (CTC) ரூ. 21 லட்சமாகவும், இளநிலை நிர்வாகிகளுக்கானது ரூ. 14 லட்சமாகவும் உள்ளது.</p><p>இந்திய விமான நிலைய ஆணையத்தில் மேலாளர் மற்றும் இளநிலை நிர்வாகி பதவிகளில் 389 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h3><strong>கடைசி தேதி</strong></h3><p>மொத்தம் 389 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் செப்டம்பர் 7, 2026 வரை தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>காலி பணியிடங்கள்</strong></h3><p>அதில், மேலாளர் (பொறியியல்-சிவில்) / Manager (Engineering-Civil): 145</p><p>மேலாளர் (பொறியியல்-மின்சாரம்)/(Engineering-Electrical): 16</p><p>மேலாளர் (நிதி)/(Finance): 34</p><p>மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்)/(Information Technology): 5</p><p>மேலாளர் (கட்டிடக்கலை)/(Architecture): 4</p><p>மேலாளர் (சட்டம்)/(Law): 2</p><p>மேலாளர் (தீயணைப்பு சேவைகள்)/(Fire Services): 14</p><p>மேலாளர் (செயல்பாடுகள்)/(Operations): 28</p><p>மேலாளர் (வணிகம்)/(Commercial): 9</p><p>மேலாளர் (நிறுவனத் திட்டமிடல் மற்றும் மேலாண்மை சேவைகள்)/(Corporate Planning &amp; Management Services): 1</p><p>மேலாளர் (நிறுவனத் தொடர்புகள்)/(Corporate Communications): 2</p><p>இளநிலை நிர்வாகி (நிதி)/(Finance): 36</p><p>இளநிலை நிர்வாகி (சட்டம்)/(Law): 6</p><p>இளநிலை நிர்வாகி (செயல்பாடுகள்)/(Operations): 79</p><p>இளநிலை நிர்வாகி (நில அளவை மற்றும் வரைபடவியல்)/(Survey &amp; Cartography): 8</p><p>தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை கவனமாகப் படித்து, அனைத்து விவரங்களும் ஆவணங்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையரைக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு .. பாஜகவுடன் மீண்டும் மலரும் கூட்டணி?</title><link>https://www.maalaimalar.com/news/national/akali-dal-backs-delimitation-and-womens-quota-bill-after-modi-meet-key-shift-in-punjab-politics</link><comments>https://www.maalaimalar.com/news/national/akali-dal-backs-delimitation-and-womens-quota-bill-after-modi-meet-key-shift-in-punjab-politics#comments</comments><guid isPermaLink="false">da3a6661-c71f-4cfc-8777-9c64ee4ade5a</guid><pubDate>Sat, 08 Aug 2026 23:41:39 +0000</pubDate><atom:updated>2026-08-08T23:41:39.927Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sukhbir Singh Badal,Shiromani Akali Dal,Delimitation,தொகுதி மறுவரையரை,சிரோமணி அகாலி தளம்,சுக்பீர் சிங் பாதல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5uhk3u0x/tn-52.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுக்பீர் சிங் பாதல், மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ சுக்பீர் சிங் பாதல், மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5uhk3u0x/tn-52.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பஞ்சாபில் முக்கிய மாநில கட்சியாக விளங்கும் சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் நேற்று முன் தினம் டெல்லியில் பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். </p><p>இதன் மறுநாள், அதாவது நேற்று, முக்கிய அரசியல் திருப்பமாகதொகுதி மறுவரையறை  மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு தமது கட்சி ஆதரவு அளிப்பதாக சுக்பீர் சிங் பாதல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  </p> <h2>ஆதரவு</h2><p>நேற்று சண்டிகரில் நடைபெற்ற கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு, சுக்பீர் சிங் பாதல் வெளியிட்ட அறிக்கையில்,</p><p>"நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைச் செயல்பாடுகளுக்கு அகாலி தளம் முழு ஆதரவு அளிக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் நியாயமான முறையில் இது செயல்படுத்தப்பட வேண்டும்.</p><p>அனைத்து மாநிலங்களுக்கும் சீரான முறையில் 50% நாடாளுமன்றத் தொகுதிகளை உயர்த்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள யோசனையை அகாலி தளம் ஆதரிக்கிறது.</p><p>சீக்கிய குருமார்களின் போதனைகளைப் பின்பற்றி, பெண்களுக்குச் சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் உடனடி இடஒதுக்கீடு வழங்குவதை அகாலி தளம் வலியுறுத்துகிறது." என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீட்டிற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைத் திரட்டி வரும் நிலையில், அகாலி தளத்தின் இந்த ஆதரவு நிலைப்பாடு தேசிய அரசியலிலும், பஞ்சாப் மாநில அரசியலிலும் மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. சிரோமணி அகாலி தளம் வசம் 1 எம்.பி உள்ளது குறிப்பிடத்தக்கது.</p> <h2>கூட்டணி</h2><p>2020ஆம் ஆண்டு மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அகாலி தளம் வெளியேறியது.</p><p>பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும் இரு பழைய தோழமைகளும் மீண்டும் இணைய வேண்டிய சூழல் நிலவுவதாகக் கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.</p><p>பிரதமர் மோடியுடன் சுக்பீர் சிங் பாதல் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் நேர்மறையாக அமைந்ததாகவும், பஞ்சாபின் வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டணி புதுப்பிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.</p><p>இதன் மூலம் பஞ்சாபில் பாஜக - அகாலி தளம் இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தேன் பொறியில் சிக்கிய விமானப்படை விங் கமாண்டர்.. ராணுவ ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கைது </title><link>https://www.maalaimalar.com/news/national/indian-air-force-officer-honey-trapped-and-arrested-in-delhi-for-leaking-military-secrets</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-air-force-officer-honey-trapped-and-arrested-in-delhi-for-leaking-military-secrets#comments</comments><guid isPermaLink="false">dd9a607a-af44-4c63-a680-fd9724747d85</guid><pubDate>Sat, 08 Aug 2026 23:09:29 +0000</pubDate><atom:updated>2026-08-08T23:09:29.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானப்படை,Air Force,spy,ஹனி டிராப்,Honey Trap,உளவாளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/w85906na/tn-57.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/w85906na/tn-57.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய விமானப்படை விங் கமாண்டர் ஒருவர் ஹனி டிராப் எனப்படும் தேன் பொறியில் சிக்கி நாட்டின்  ரகசியங்களை கசியவிட்ட  குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">விமானப்படையின் </a>உளவுப் பிரிவு அளித்த தகவலின் பேரில், டெல்லி காவல்துறை மே மாத இறுதியில் இவரைக் கைது செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p><p>அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின்  கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.</p> <h2>ரகசியங்கள் கசிவு</h2><p>காவல்துறை வட்டாரங்களின் கூற்றுப்படி, சோஷியல் மீடியா வாயிலாக அந்த அதிகாரிக்கு பெண் ஒருவருடன் அறிமுகம் கிடைத்துள்ளது.</p><p>ஹனி டிராப் என்பது இவ்வாறு பெண்கள் மூலம் ஒருவரை வலையில் வீழ்த்தி தங்களுக்கு தேவையானதை செய்ய வைப்பதை குறிக்கிறது.</p><p>இதற்கு விதிவிலக்கின்றி அந்த அதிகாரிக்கு ஆன்லைனில் ஏற்பட்ட இந்தப் பழக்கம், நாளடைவில் இந்திய ராணுவத்தின் வகைப்படுத்தப்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் முக்கியமான தகவல்களை அனுப்பும் அளவிற்குச் சென்றுள்ளது.</p><p>இந்தியாவின் ராணுவ ரகசியங்களைச் சேகரிப்பதற்காக நடத்தப்பட்ட பாகிஸ்தானின் உளவு வேலையின் ஒரு பகுதியே இதுவாகும்.</p> <h2>தொடரும் விசாரணை</h2><p>டெல்லி காவல்துறை ஜூலை தொடக்கத்திலேயே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டது.</p><p>பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் எந்த அளவிற்கு வெளியே கசிந்துள்ளன, இந்த உளவு வலையமைப்பில் இன்னும் யார் யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது குறித்த பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>மதுபோதையில் மலம் கழித்து மாணவர்களை அள்ளச் செய்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர் | Madhya Pradesh</title><link>https://www.maalaimalar.com/news/national/drunk-headmaster-forces-students-to-clean-his-faeces-in-mp-government-school</link><comments>https://www.maalaimalar.com/news/national/drunk-headmaster-forces-students-to-clean-his-faeces-in-mp-government-school#comments</comments><guid isPermaLink="false">2833a485-3524-40fb-b379-2a7e1fa9e0ea</guid><pubDate>Sat, 08 Aug 2026 22:38:38 +0000</pubDate><atom:updated>2026-08-08T22:38:38.150Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்தியப் பிரதேசம்,அரசுப் பள்ளி,பள்ளி ஆசிரியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/b6jo7oey/tn-54.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/b6jo7oey/tn-54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேச மாநில அரசு தொடக்கப் பள்ளியில் குடிபோதையில் தலைமையாசிரியர் பள்ளி வளாகத்தில் மலம் கழித்து அதனைப் பள்ளி மாணவர்களைக் கொண்டே சுத்தம் செய்ய வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. </p><h2>அரசுப் பள்ளி </h2><p>மத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில்  ஹர்டுவா கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட அமுவா தோலா அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக  பணியாற்றி வருபவர் சமைலால் கோல் (50)</p><p>இவர் தொடர்ந்து பள்ளிக்கு மதுபோதையில் வந்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக, அங்கு பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் நீண்ட நாட்களாகக் புகார் தெரிவித்து வந்தனர்.</p><p>பெற்றோர்களின் புகாரைத் தொடர்ந்து, கிராம பஞ்சாயத்துத் தலைவர் ராமாவதார் கோல் மற்றும் ஊர் பொதுமக்கள் நேரடியாகப் பள்ளிக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.</p> <h2>மது, குட்கா, மலம்</h2><p>ஆய்வின் போது, ஆசிரியர் சமைலால் கோல் தினமும் மது அருந்திவிட்டுப் பள்ளிக்கு வருவதை அம்மாணவர்கள் உறுதிப்படுத்தினர்.</p><p>மேலும், ஒருமுறை ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே மலம் கழித்துவிட்டு, அதைத் தங்களை விட்டுச் சுத்தம் செய்ய வைத்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.</p><p>பஞ்சாயத்துத் தலைவர் பார்வையிட்ட போது மலம் அகற்றப்பட்டிருந்த போதிலும், வகுப்பறைச் சுவர்கள் முழுவதும் ஆசிரியர் குட்கா மென்று துப்பிய கறைகளால் பாழாகியிருந்தது கண்டறியப்பட்டது.</p><p>"ஆசிரியர் தினமும் கடுமையான போதையில் இருந்திருக்கிறார். அவரது குடும்பத்தினர் தான் அவரைத் தினமும் காலையில் பள்ளியில் கொண்டு வந்து விட்டு, மாலையில் அழைத்துச் செல்கிறார்கள்" என்று பஞ்சாயத்து தலைவர் தெரிவித்துள்ளார்.</p> <h2>விசாரணை</h2><p>கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினர்.</p><p>விசாரணையைத் தொடர்ந்து சமைலால் கோலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.</p><p>பதில் பெறப்பட்ட பிறகு, அவர் மீது இடைநீக்கம் உள்ளிட்ட அடுத்தகட்டக் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ஐரோப்பாவில் கேஷியர் வேலை.. ரூ.11 லட்சம் வாங்கிக்கொண்டு 
இந்திய பெண்ணை மதுக்கடை முதலாளியிடம் விற்ற வேலைவாய்ப்பு ஏஜென்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-woman-trafficked-to-portugal-pune-agency-sells-cashier-job-seeker-to-liquor-shop-owner-after-taking-11-lakh</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-woman-trafficked-to-portugal-pune-agency-sells-cashier-job-seeker-to-liquor-shop-owner-after-taking-11-lakh#comments</comments><guid isPermaLink="false">bc358f44-2239-4479-a18c-9e5a253221ed</guid><pubDate>Sat, 08 Aug 2026 21:48:41 +0000</pubDate><atom:updated>2026-08-08T21:48:41.750Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/9ll7g7qu/tn-48.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/9ll7g7qu/tn-48.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐரோப்பிய நாட்டில் மாதம் ரூ. 1.5 லட்சம் சம்பளத்தில் சூப்பர் மார்க்கெட் கேஷியர் வேலை வாங்கி  தருவதாகக் கூறி இந்திய பெண் ஒருவர் விற்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. </p><h2>கடத்தல்</h2><p>மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த அந்த 28 வயது பெண்ணை புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தனியார் <a href="https://www.maalaimalar.com/news/national/number-of-unemployed-graduates-increases-by-67-percent-across-the-country">வேலைவாய்ப்பு </a>ஏஜென்சி போர்ச்சுகல் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.</p><p>பெண்ணிடம் ரூ. 11 லட்சத்தை இந்தியாவிலேயே வைத்து அந்த வேலைவாய்ப்பு ஏஜென்சி கட்டணமாக பெற்றுள்ளது. </p><p>போர்த்துகல் சென்றடைந்ததும், அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த கும்பல், அவரை அங்கிருந்த ஒரு பீர் மதுபானக் கடை உரிமையாளரிடம் விற்றுள்ளது. </p> <h2>கட்டாய வேலை</h2><p>அங்கு அப்பெண்ணைப் பலவந்தப்படுத்தி வேலை செய்ய வைத்து, உடலளவிலான மற்றும் மனதளவிலான சித்ரவதைகளுக்கு ஆளாக்கியுள்ளனர்.</p><p>தனது பாஸ்போர்ட்டைத் திரும்பக் கேட்டபோது, அக்கும்பல் மேலும் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளது.</p><h2>மிரட்டல்</h2><p>ஒருவழியாக இந்தியா திரும்பிய பிறகும், அக்கும்பல் அப்பெண்ணின் கணவரைத் தொடர்புகொண்டு வேறு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மேலும் ரூ. 3 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளது.</p><p>இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண், புனே குற்றப்பிரிவுகாவல்துறையை அணுகிப் புகார் அளித்தார்.</p><p>அவரது புகாரின் பேரில், மனிதக் கடத்தல், மோசடி மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புனே மற்றும் போர்ச்சுகலை சேர்ந்த 7 நபர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ஜென் Z தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.. எனக்கு பதவி பொருட்டல்ல - தர்மேந்திர பிரதான் மனம் திறப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-dharmendra-pradhan-says-ministerial-post-not-important-after-resignation-amid-student-agitation</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-dharmendra-pradhan-says-ministerial-post-not-important-after-resignation-amid-student-agitation#comments</comments><guid isPermaLink="false">852c7bfa-403e-448d-8a93-b4ff5abc2f8d</guid><pubDate>Sat, 08 Aug 2026 20:58:57 +0000</pubDate><atom:updated>2026-08-08T20:58:57.887Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/yw8m978k/tn-55.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/yw8m978k/tn-55.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை எதிர்த்து மாணவர்கள் நடத்திய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">போராட்டத்தால் </a>மத்தியக் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான், தனது ராஜினாமா குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார்.</p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த தீவிர போராட்டங்களுக்கு மத்தியில் ஜூலை 25 அன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர், இரு வாரங்களுக்குப் பிறகு நேற்று புவனேஸ்வரில் உள்ள ஜிஎம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார். </p> <h2>தர்மேந்திர பிரதான்</h2><p>அவர் பேசியதாவது,</p><p>"ஜென் Z  நமது குழந்தைகள். ஆனால் நீட் விவகாரத்தின் போது சில சக்திகள் அவர்களைத் தவறாக வழிநடத்த முயன்றன. எனக்கு அப்போது தனிப்பட்ட சுயநலன்கள் எதுவும் இருக்கவில்லை.</p><p>இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2 கோடி குழந்தைகள் பிறக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 2 கோடி குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களுக்குப் பல கனவுகளும் லட்சியங்களும் உள்ளன. அவர்கள்தான் இந்தியாவை உலகின் வழிகாட்டியாக மாற்றுவார்கள். எனக்கு இந்த அமைச்சர் பதவி முக்கியமில்லை" என்று தெரிவித்தார்.</p><p>விமான நிலையம் அருகே பிஜேடி இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினர் "தர்மேந்திர பிரதான் திரும்பிப் போ" என முழக்கமிட்டு நடத்திய போராட்டத்தைக் குறிப்பிட்ட அவர், "நான் ஒரு விவசாயியின் மகன். நீங்கள் திரும்பிப் போகச் சொன்னாலும், நான் மீண்டும் மீண்டும் வருவேன்" என்றார்.</p><p>பிஜேடி இளைஞர் மற்றும் மாணவர் அணியினர் சுமார் 30 பேரை சம்பல்பூர் காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.</p> <h2>ஜந்தர் மந்தர் போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும் என்ற முழக்கத்துடன் அபிஜித் தீப்கேவின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய 1 மாத கால போராட்டம் கடந்த வாரம் வெற்றி பெற்றது.</p><p>அழுத்தத்தின் பேரில் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அதேநேரம், பிரதமர் மோடியும் தனது நீண்ட நெடிய மௌனத்தை களைத்து கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் இதுபற்றி பேசினார்.</p><p>தேர்வு முறைகேடுகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு அதிக தண்டனை விதிக்கும் சிறப்பு மசோதா ஆகிய அறிவுப்புகளை அவர் அடுத்தடுத்து வெளியிட்டார்.</p><p>இதனிடையே ஜூலை 20 நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை மற்றும் ஆர்ஏஎப் படையால் பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றால் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் சர்ச்சையாகி வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சக்ரவியூகத்தில் சிக்கிய இளைஞர்கள்.. பட்டம் பெற்றும் வேலை இல்லை..  கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டன - ராகுல்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-youth-jobs-crisis-rahul-gandhi-warns-on-rising-education-costs-unemployment-and-ai-risks</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-youth-jobs-crisis-rahul-gandhi-warns-on-rising-education-costs-unemployment-and-ai-risks#comments</comments><guid isPermaLink="false">4c8934c7-9dd1-40e1-9159-47f159f38452</guid><pubDate>Sat, 08 Aug 2026 19:58:21 +0000</pubDate><atom:updated>2026-08-08T19:58:21.974Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Unemployment,Employment,Education,கல்வி,வேலைவாய்ப்பு,வேலையின்மை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/o008moc4/tn-50.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/o008moc4/tn-50.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள கே.பி. மைதானத்தில் நேற்று நடைபெற்ற ‘சத்ரோன் கி கூஞ்ச்’  என்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மாணவர் </a>கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். </p><h2>கல்வி </h2><p>அப்போது பேசிய அவர், "அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவின் வல்லமையைப் பற்றி உலக அளவில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள சுமார் 40 கோடி இளைஞர்களே நாட்டின் உண்மையான மற்றும் இணையற்ற ஆற்றலாகத் திகழ்கின்றனர்.</p><p>இந்த பிரயாக்ராஜ் முற்காலத்தில் நாட்டின் மிக முக்கியமான கல்வி மையமாகத் திகழ்ந்தது. அலகாபாத் பல்கலைக்கழகம் நாட்டின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது.</p><p>ஆனால், தற்போதைய சூழலில் இந்திய இளைஞர்கள் ஒரு சக்ரவியூகத்தில் மாட்டியுள்ளனர்.</p><p>கல்வியின் செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.</p><p>ஒரு நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் தங்களின் வாழ்வில் பல ஆண்டுகளையும், பெற்றோரின் பெருந்தொகையையும் செலவிட்டுப் படிக்கின்றனர். ஆனால் பட்டம் பெற்ற பிறகும் தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதில்லை.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/37yva6c2/tn-49.jpg" /></figure><h2>வேலையின்மை</h2><p>இந்தியாவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன.</p><p>நாட்டின் உற்பத்தித் துறை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இளைஞர்கள் சுயதொழில் தொடங்கவோ அல்லது வணிகம் செய்யவோ வங்கிகளில் கடன் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது.</p><p>அரசுப் பணிகளுக்கான அரசுப் தேர்வு வினாத்தாள்கள் தொடர்ந்து கசிவது தகுதியான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குகிறது.</p><p>ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் இருக்கும் வேலைகளும் பறிபோகும் அபாயம் எழுந்துள்ளது.</p><p>மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரி கொள்கைகள் நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சீரழித்துவிட்டன.</p><p>சிறு நிறுவனங்களுக்குத் தேவையான கடன் உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்த பொதுத்துறை வங்கிகள் தவறிவிட்டன.</p><p>பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்ந்து தனியார்மயமாக்குவது வேலைவாய்ப்புகளை மேலும் சுருக்குகிறது.</p><p>முறையான வேலைகள் இல்லாததால் இளைஞர்கள் அதிகளவில் பகுதிநேர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான கிக் வேலைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள். தனியார் துறையிலும் ஏஐ பயன்பாடு அதிகரிக்கும் போது இந்த வேலைகளும் குறையக்கூடும்.</p> <h2>இந்தியரின் தரவுகள்</h2><p>செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் அனைத்தும் மக்களின் தரவுகளைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன.</p><p>எனவே இந்தியர்களின் தரவுகள் இந்தியர்களுக்கே சொந்தமான சொத்தாகக் கருதப்பட வேண்டும்.</p><p>நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் திறமையில் மட்டுமல்லாமல், அவர்கள் உருவாக்கும் தரவுகளின் மீதும் சார்ந்துள்ளது.</p><p>தொழில்நுட்ப மாற்றங்களால் உருவாகும் புதிய பொருளாதாரத்தின் நன்மைகள் இளைஞர்களைச் சென்றடையாவிட்டால், அந்தத் தொழில்நுட்பமே அவர்களுக்குப் புதிய வேலைகளைத் தருவதற்குப் பதிலாக இருக்கும் வேலையையும் பறித்துவிடும்.</p> <h2>ஆதிக்கம்</h2><p>நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம் ஒருசிலரின் கைகளில் மட்டுமே குவிந்துள்ளது. நாட்டின் பெருநிறுவனங்கள் , அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை இந்தியாவின் முக்கிய நிறுவனங்களின் மீது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன.</p><p>நாட்டின் பொருளாதார வளங்கள், புதிய தொழில்நுட்பம் மூலம் உருவாகும் சொத்துக்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் நாட்டின் இளைஞர்களுக்கும் சமமான பங்கு கிடைக்க வேண்டும் என்பதே எனது முதன்மை நோக்கம்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மும்பை சித்திவிநாயகர் கோவில் நன்கொடையில் முறைகேடு - விரிவான விசாரணைக்கு முதல்வர் பட்நாவிஸ் உத்தரவு </title><link>https://www.maalaimalar.com/news/national/mumbai-siddhivinayak-temple-donation-scam-18-crore-irregularities-alleged-9-staff-arrested-as-maharashtra-cm-orders-audit-of-5-years-trust-finances</link><comments>https://www.maalaimalar.com/news/national/mumbai-siddhivinayak-temple-donation-scam-18-crore-irregularities-alleged-9-staff-arrested-as-maharashtra-cm-orders-audit-of-5-years-trust-finances#comments</comments><guid isPermaLink="false">e3dc798c-532d-494f-aa06-8fbdcf2b375e</guid><pubDate>Sat, 08 Aug 2026 18:03:26 +0000</pubDate><atom:updated>2026-08-08T18:03:26.813Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,சித்திவிநாயகர் கோவில்,அயோத்தி ராமர் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pwz0yg5y/tn-47.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மும்பை சித்திவிநாயர் கோவில், பட்நாவிஸ்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ மும்பை சித்திவிநாயர் கோவில், பட்நாவிஸ்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pwz0yg5y/tn-47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE">மகாராஷ்டிரா </a>மாநிலம் மும்பையில் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோவில் அமைந்துள்ளது.</p><p>செல்வத்தை அள்ளித்தருவதாக நம்பப்படும் இந்த சித்திவிநாயகர் கோவிலின் நன்கொடைப் பணத்தில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. </p><h2>பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் நன்கொடை திருட்டுகள்</h2><p>உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் நன்கொடை படம் பெருமளவு அறக்கட்டளை ஊழியர்களால் திருடப்பட்ட விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மகாராஷ்டிராவிலும் நன்கொடை திருட்டு புகார்கள் வந்துள்ளன.</p><p>பாஜக ஆட்சி நடக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் நன்கொடை திருட்டு புகார்கள் எழுந்த நிலையில் இதுதொடர்பான விசாரணையில் கோவிலின் காவலாளி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.</p> <h2>சித்தி விநாயகர் கோவில் திருட்டு</h2><p>மும்பையிலுள்ள இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் காணிக்கை வருகிறது. இந்த ஆண்டு ரூ. 182 கோடியும் கடந்த ஆண்டு ரூ. 137 கோடியும் வந்துள்ளது.</p><p>சித்திவிநாயகர் கோவில் நன்கொடைத் தொகையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.18 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா லைவர் ராஜ் தாக்கரே பரபரப்பு குற்றச்சாட்டைக் முன்வைத்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கோவிலின் 9 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நன்கொடை முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.</p><p>கடந்த 5 ஆண்டுகால கோவில் அறக்கட்டளையின்அனைத்து நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் ஆவணங்களை விரிவாகத் தணிக்கை செய்யத் தொடர்புடைய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கடந்த வியாழக்கிழமை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸைச் சந்தித்து, 2023 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தின் நன்கொடை விவரங்களைச் சமர்ப்பித்தனர். இந்த விவரங்களை ஆய்வு செய்த பிறகே, கடந்த 5 ஆண்டுகளின் அனைத்து ஆவணங்களையும் தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து 4,052 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்: அமைச்சர் சர்பானந்த சோனோவால்</title><link>https://www.maalaimalar.com/news/national/4052-sailors-rescued-safely-from-hormuz-strait-says-minister-sarbananda-sonowal</link><comments>https://www.maalaimalar.com/news/national/4052-sailors-rescued-safely-from-hormuz-strait-says-minister-sarbananda-sonowal#comments</comments><guid isPermaLink="false">f5b037ef-501d-4510-9b45-e0a5cb003e63</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:26:48 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:26:48.041Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய மாலுமிகள்,Sarbananda Sonowal,சர்பானந்த சோனாவால்,Hormuz,ஹார்முஸ் ஜலசந்தி,Indian seafarer</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/rusxbwom/Untitled-design-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வளைகுடா மோதலுக்கு மத்தியில் 4,052 இந்திய மாலுமிகள் தாயகம் திரும்பினர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ Hormuz ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/rusxbwom/Untitled-design-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வளைகுடாப் பகுதியிலிருந்து இதுவரையில் 4,052 மாலுமிகள் தாயகம் திரும்பி அழைத்து வரப்பட்டுள்ளதாக, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.</p><h3><strong>இந்திய மாலுமிகள் மீட்பு</strong></h3><p>இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “ஆகஸ்ட் 3 நிலவரப்படி, இந்தியாவை நோக்கி வந்த 62 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்துள்ளன. இவற்றில், இந்தியாவை சேர்ந்த 23 கப்பல்களும், வெளிநாட்டை சேர்ந்த 39 கப்பல்களும் அடங்கும்.</p><p>மாறிவரும் கடல்சார் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, கடல்சார் நிர்வாக தலைமை இயக்குநரகம் (DGMA) தனது அறிவுரைகளைத் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது.</p><p>இந்திய மாலுமிகளை ஏற்றிச் செல்லும் இந்திய மற்றும் வெளிநாட்டுக் கொடி கொண்ட கப்பல்களுக்கு, கூடுதல் எச்சரிக்கை, பயணத்திற்கேற்ற பாதுகாப்பு மதிப்பீடுகள், பாதுகாப்பு அறிவுரைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுதல் மற்றும் சம்பவங்களை உடனடியாகத் தெரிவித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி DGMA ஓர் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.</p><p>மேலும், பாப்-எல்-மண்டேப் ஜலசந்தி, தெற்கு செங்கடல் மற்றும் அதை ஒட்டிய ஏமன் கடல் பகுதிகளில் இயங்கும் கப்பல்களுக்கு ஓர் அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>அதில், கப்பல் உரிமையாளர்கள் மற்றும் மாலுமிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும், பாதுகாப்பு மற்றும் நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும், கூடுதல் இடர் தணிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்புச் சூழல் தொடங்கியதிலிருந்தே, இந்திய மாலுமிகளைப் பாதுகாப்பதற்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>இவற்றில், 24x7 செயல்படும் ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறையை நிறுவுதல், நிகழ்நேரக் கப்பல் மற்றும் பணியாளர் தரவுத்தளத்தைப் பராமரித்தல், மற்றும் கப்பல்கள், இந்திய மாலுமிகளின் நடமாட்டம், சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகளைக் கண்காணிக்க ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் ஒரு சூழ்நிலை அறிக்கையை வெளியிடுதல் ஆகியவை அடங்கும்.</p><p>உடனடி அறிக்கை அளிப்பதையும் பதிலளிப்பதையும் உறுதி செய்வதற்காக, கடல்சார் விபத்துகள் குறித்து புகாரளித்தல், நெருக்கடி மேலாண்மை மற்றும் மாலுமிகளின் குறைகளை தீர்த்தல் ஆகியவற்றிற்காக பிரத்யேக 24x7 டிஜிட்டல் தளத்தையும் கடல்சார் மேலாண்மை இயக்குநரகம் உருவாக்கியுள்ளது.</p><p>கடல்சார் தலைமை இயக்குநர், வெளியுறவு அமைச்சகம், இந்திய கடற்படை மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுடன் முகமைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைப் பேணி வருகிறார்.</p><p>இது தவிர, சர்வதேச கடல்சார் அமைப்பு, இங்கிலாந்து கடல்சார் போக்குவரத்து ஆணையம், கடல்சார், கடலோர மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு முகமை மையம் மற்றும் கடலோர நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டு வழிமுறையின் மூலம், சிக்கித் தவிக்கும் மாலுமிகளை மீட்பதற்காக சர்வதேச ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>பாதிக்கப்பட்ட மாலுமிகளின் குடும்பத்தினருடன் நெருங்கிய மற்றும் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதன் மூலம் நலத்திட்டங்களும் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.</p><p>மேலும், உயிரிழப்பு ஏற்படும் சூழல்களில் இழப்பீடும் அளிக்கப்படுகிறது. மாலுமிகள் நலநிதி சங்கம் மூலம் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டும் வருகிறது," என்று அமைச்சர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பீகாரில் மதுவிலக்கிற்கு பிறகும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மீண்டும் கொண்டு வரலாம்- NCAER</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-liquor-ban-fails-crimes-against-women-up-ncaer-report</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-liquor-ban-fails-crimes-against-women-up-ncaer-report#comments</comments><guid isPermaLink="false">a648d70f-0ce4-46f3-abe8-1cace8801955</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:52:49 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:52:49.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,alcohol,மதுவிலக்கு,பொருளாதார ஆலோசனைக் குழு,NCAER</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2d9qpeuc/Untitled-design-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மதுவிலக்கு தோல்வி, கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு உயர்வு]]></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Liquor Ban ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2d9qpeuc/Untitled-design-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பதில் மதுவிலக்கு தோல்வியடைந்துள்ளதாலும், அது கள்ளச்சாராயம் மற்றும் மாற்று போதைப்பொருட்களின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாலும், பீகார் தனது மதுவிலக்கை திரும்பப் பெற வேண்டும் என்று தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி மன்றம் (NCAER) என்ற பொருளாதார சிந்தனைக் குழுவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.</p><p>‘பீகாரின் வளர்ச்சி சாதனைகள், முடிக்கப்படாத செயல்திட்டங்கள் மற்றும் முன்னோக்கிய பாதை குறித்த பேரியல் கண்ணோட்டம்’ என்ற தலைப்பிலான அந்த ஆய்வறிக்கை, மதுபான மீதான கலால் வரி தடையை மீட்டெடுப்பது, மாநிலத்தின் வருவாயை 14 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது.</p><p><strong>பீகாரில் மதுவிலக்கு</strong></p><p>பீகாரில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மதுவிலக்கு கொள்கையை, ரத்னா சஹாய் தலைமையிலான பொருளாதார நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது.</p><p>இதையடுத்து அந்த நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கையில், “பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பதில் மதுவிலக்கு தோல்வியடைந்துள்ளது. </p><p>மது அருந்துதல் குடும்ப வன்முறைக்கு கணிசமாக பங்களிக்கிறது என்ற நம்பிக்கையும், குடும்பங்கள் முன்பு மதுவுக்காக செலவழித்த பணத்தை அதிக பயனுள்ள தேவைகளுக்குத் திருப்பிவிடும் என்ற நம்பிக்கையுமே மதுவிலக்கை அறிமுகப்படுத்துவதற்கான முதன்மைக் காரணங்களாக இருந்தது.</p><p>மகளிர் அமைப்புகளும் ஆர்வலர்களும் கூட, மதுவிலக்கு மது தொடர்பான துஷ்பிரயோகத்தைக் குறைக்கும் என்று வாதிட்டு, இந்தத் தடையை வலுவாக ஆதரித்திருந்தனர்.</p><p>இந்தத் தடை பயனுள்ளதாக இருந்ததா என்பதை மதிப்பிடுவதற்கு இப்போது எங்களிடம் போதுமான தரவுகளும் தகவல்களும் உள்ளன. மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பீகாரில் பெண்களுக்கு எதிரான பதிவான குற்றங்கள் குறையவில்லை.</p><h3><strong>பொருளாதார சிந்தனைக் குழு அறிக்கை</strong></h3><p>மாறாக 2016-க்குப் பிந்தைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான மொத்தப் பதிவான குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஆய்வின்படி, மதுவிலக்குக்கு பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பரவலாகக் குறைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை.</p><p>அதே சமயம், சட்டவிரோத மதுபான வர்த்தகம் கணிசமாக அதிகரித்ததால், மது அருந்துதல் அதிகரித்தது. குற்றம் மற்றும் ஊழல் பெருகியது. மேலும் சட்டவிரோத போதைப்பொருட்கள் போன்ற மாற்றுச் சேர்க்கைப் பொருட்களின் பயன்பாடும் அதிகரித்தது.</p><p>மதுவிலக்கு மாநில வருவாயையும் பாதித்துள்ளது. மதுவிலக்குப் பிறகு பீகார் குறிப்பிடத்தக்க நிதிப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. தடைக்கு முந்தைய மூன்று ஆண்டுகளில், மதுபானத்தின் மீதான கலால் வரி மாநிலத்தின் சொந்த வருவாயில் சுமார் 14 சதவீதமாக இருந்தது.</p><p>அதே நேரத்தில், கண்காணிப்பு, அமலாக்கம் மற்றும் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் அதிக செலவினங்களை மேற்கொண்டது. இது நிதி நெருக்கடிகளை மேலும் அதிகரித்தது.</p><p>மதுபான மீதான கலால் வரியை அதன் முந்தைய நிலைகளுக்கு மீண்டும் கொண்டுவந்தால், மாநில வருவாயில் அந்த வரியின் பங்களிப்பை சுமார் 14 சதவீதமாக மீட்டெடுக்க உதவும்” என்று ஆய்வறிக்கை குறிப்பிட்டது.</p><h3><strong>பீகாரில் மீண்டும் மதுபான விற்பனை</strong></h3><p>இந்தத் தடை உத்தரவு அதன் நோக்கம் கொண்ட நோக்கங்களை அடையவில்லை என்றும் மாறாக அது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கும், மாநில வருவாய் இழப்பிற்கும், அமலாக்கச் செலவினங்கள் உயர்வதற்கும் வழிவகுத்துள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கை முடிவு செய்தது.</p><p>பீகார் மாநிலம் நாட்டின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகவும், அதே சமயம் மிகவும் ஏழ்மையான மாநிலமாகவும் நீடிக்கிறது என்பதையும் குறிப்பிட்டது.</p><p>அந்த ஆய்வறிக்கையின்படி, 2026-ல் பீகாரின் மக்கள் தொகை 13.2 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மக்கள் தொகையில் 9 சதவீதத்திற்கும் அதிகமாகும். மேலும், இறையாண்மை கொண்ட நாடுகளைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் மக்கள் தொகையை விடவும், பீகாரில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது என்றும் அது குறிப்பிட்டது.</p>]]></content:encoded></item><item><title>விளிம்புநிலை மக்களை சமூகத்தில் முதன்மையான இடத்திற்கு கொண்டு வருவது அவசியம்: மோகன் பகவத்</title><link>https://www.maalaimalar.com/news/national/bringing-marginalised-communities-to-the-mainstream-is-essential-mohan-bhagwat</link><comments>https://www.maalaimalar.com/news/national/bringing-marginalised-communities-to-the-mainstream-is-essential-mohan-bhagwat#comments</comments><guid isPermaLink="false">5104cf2d-cedf-442e-98af-897d3982d76b</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:20:04 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:20:04.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mohan Bhagwat,RSS,மோகன் பகவத்,ஆர்எஸ்எஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5mjpnqfe/Untitled-design-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ RSS சமூக நீதி விளிம்புநிலை மக்களுக்கு முதன்மை: மோகன் பகவத் பர்தி சமூக முன்னேற்றம் வலியுறுத்தல்]]></media:title><media:description type="html"><![CDATA[ Mohan bhagwat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5mjpnqfe/Untitled-design-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டை உண்மையான அர்த்தத்தில் (விஸ்வகுரு) ஆக்குவதற்கு, விளிம்புநிலை மக்களை சமூகத்தில் முதன்மையான இடத்திற்கு கொண்டு வருவது அவசியம் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.</p><p>மகாராஷ்டிராவின் புல்டானா மாவட்டத்தில் பர்தி சமூகத்தினருக்கான பள்ளியில் மூன்று விளையாட்டு மைதானங்களை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் திறந்து வைத்தார். </p><p>அப்போது உரையாற்றிய அவர், “இன்று நாம் ‘அறிவிப்பு நீக்கப்பட்டவர்கள்’(de-notified) அல்லது 'பட்கே-விமுக்த்' என்று அழைக்கும் சமூகம், ஒரு காலத்தில் அறிவு வழங்குபவர்களாக இருந்தனர்.</p><p>அவர்கள் தங்கள் அறிவை தன்னலமின்றி பகிர்ந்துகொள்ள முன்வந்தனர்; ஆனால் காலப்போக்கில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதால், ஒட்டுமொத்த பர்தி சமூகமும் ஒரு குற்றப் பழங்குடியினர் என்று முத்திரை குத்தப்பட்டது.</p><p>இது அவர்களை வளர்ச்சியில் வெகுதூரம் பின்தங்கச் செய்தது. இந்திய சமூகம் ஒரு காலத்தில் முழுமையாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது, ஆனால் அது வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களால் அடிமைப்படுத்தப்பட்டதால், பிளவுபட்டது.</p><p>இதன் விளைவாக, சமூகத்தில் விளிம்புநிலை குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அப்படியிருந்தும், இந்த சமூகங்கள் ஒருபோதும் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை; அவர்கள் சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடினர்.</p><p>இந்த ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம், பர்த்தி சமூகத்தின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறது” என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சிவசேனா (யுபிடி) தலைவர் அம்பாதாஸ் தான்வே உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>பொது நிதியில் இருந்து 2192 கோடி ரூபாய் ஒதுக்கீடு: 62% நிறுவனங்களுக்கு தேர்வுக்குழுவுடன் தொடர்பு எனக் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-2192-crore-cleared-62-percent-for-firms-linked-to-government-tech-fund-panel</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-2192-crore-cleared-62-percent-for-firms-linked-to-government-tech-fund-panel#comments</comments><guid isPermaLink="false">bd6b09cc-71b0-40ec-ba52-2e93f1d61a17</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:04:25 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:04:25.073Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ccogpui5/Tech0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Deep Tech]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ccogpui5/Tech0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆழ்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகள், பொறியியல் புத்தாக்கங்கள் அல்லது ஆராய்ச்சித் துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட, தொழில்துறைகள், பொருளாதாரங்கள் மற்றும் வாழ்க்கையை அடியோடு மாற்றியமைக்கும் ஆற்றலைக் கொண்ட, அதிநவீன மற்றும் பெரும்பாலும் புரட்சிகரமான தொழில்நுட்பங்களே ஆழ் தொழில்நுட்பம் (Deep tech) எனப்படுகின்றன.</p><p>இதியாவின் ஆழ் தொழில்நுட்பத் துறையை ஊக்குவிக்கும் விதமாக தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடன் உதவி வழங்க முடிவு செய்தது. இதன் நோக்கில் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமை நிதியின் (RDI Fund) முதல் கட்டத்தில் 22 தனியார் நிறுவனங்களுக்கு ரூ.2,192 கோடி மதிப்பிலான மென்மையான கடன்கள் (Soft Loans) வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. விண்வெளி, எரிசக்தி, செமிகண்டக்டர், மருத்துவம் உள்ளிட்ட முன்னேறிய தொழில்நுட்பத் துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.</p><h2>12 பேர் கொண்ட குழு</h2><p>இந்த நிறுவனங்களை தேர்வு செய்ய 12 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு 124 விண்ணபங்களை ஆய்வு செய்து, 22 நிறுவனங்களை தேர்வு செய்தது. இந்த 12 நிறுவனங்களுக்கு 2,192 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.</p><p>இந்த நிலையில்தான் நலன் முரண்பாடு (Conflict of Interest) குறித்த கேள்வி எழுந்துள்ளது. 22 நிறுவனங்களைத் தேர்வு செய்த 12 பேர் கொண்ட முதலீட்டுக் குழுவில் இடம் பெற்றிருந்த 7 உறுப்பினர்களுடன், நிதிபெற்ற 15 நிறுவனங்களுக்கு முதலீட்டு அல்லது தொழில் ரீதியான தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 15 நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.1,377 கோடிக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>நிறுவனங்களுடன் குழுவில் உள்ளவர்களுக்கு தொடர்பு</h2><p>குழுவின் தலைவர் சௌரப் ஸ்ரீவாஸ்தவாவுடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள் பல தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. அதேபோல், குழுவின் பிற உறுப்பினர்களுக்கும் சில பயனாளி நிறுவனங்களில் பங்குகள் அல்லது முந்தைய தொழில் தொடர்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கு பதிலளித்த குழு உறுப்பினர்கள், தங்களுடைய நலன்கள் முன்கூட்டியே அரசிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், தொடர்புடைய நிறுவனங்களின் மதிப்பீடு மற்றும் முடிவெடுப்பு நடவடிக்கைகளில் தாங்கள் விலகியதாகவும் கூறியுள்ளனர். </p><p>அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும், நிறுவனங்கள் தகுதியின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டதாகவும், நலன் முரண்பாடு கொண்ட உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட முடிவுகளில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.</p><p>இந்த விவகாரம், பொதுநிதி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை, நலன் முரண்பாடுகளைத் தவிர்த்தல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்தல் ஆகியவை எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் பதிவு செய்யும் போலியான துன்புறுத்தல் வழக்குகள் விஷயத்தில் கருத்து கூற முடியாது: தலைமை நீதிபதி</title><link>https://www.maalaimalar.com/news/national/cannot-comment-on-fake-harassment-cases-filed-by-women-chief-justice</link><comments>https://www.maalaimalar.com/news/national/cannot-comment-on-fake-harassment-cases-filed-by-women-chief-justice#comments</comments><guid isPermaLink="false">2c4994be-4286-4c00-9905-6e445a1d998a</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:39:31 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:39:31.409Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,தலைமை நீதிபதி,Chief Justice of India,Surya Kant,சூர்ய காந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5ag1ca4t/Untitled-design-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெண்கள் போலி துன்புறுத்தல் வழக்குகள்: ஒவ்வொரு வழக்கும் தனித்த உண்மை, பொதுவான கருத்து கூற முடியாது]]></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court CJI Surya kant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5ag1ca4t/Untitled-design-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டில் தேங்கி நிலுவையில் இருக்கும் நீதிமன்ற வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல இப்போது இல்லை என்று இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.</p><p>மேலும், வழக்குகளை விரைவாக முடிப்பதற்காக தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மிகச் சிறந்த பலன்களை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த்-இடம், நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். </p><h3><strong>இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த்</strong></h3><p>அப்போது அவர், “தேங்கியிருக்கும் வழக்குகளுக்கு பல காரணங்கள் உள்ளன; அவை படிப்படியாக ஒரு திட்டமிட்ட முறையில் தீர்க்கப்பட்டு வருகின்றன.</p><p>நாட்டில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை, 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப்போல் இப்போது இல்லை. தொழில்நுட்பத்தின் மூலம் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்காக நாங்கள் ஏராளமான திட்டங்களை வகுத்துள்ளோம், அவை மிகவும் நல்ல பலன்களை அளித்துள்ளன” என்று கூறினார்.</p><h3><strong>போலி வழக்குகள்</strong></h3><p>மேலும், “பெண்கள் பதிவு செய்யும் பல துன்புறுத்தல் வழக்குகள் போலியானவை என நிரூபிக்கப்படுவது குறித்த விஷயத்தில் பொதுவான கருத்தைக் கூற முடியாது. ஒவ்வொரு வழக்கும் அதன் குறிப்பிட்ட உண்மைகளைப் பொறுத்தது.</p><p>நீதிபதிகள் நியமனத்திற்காக உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை மத்திய அரசு மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்புவது குறித்து பத்திரிக்கையாளர்கள் இங்கே பேசக்கூடாது.</p><p>இது சட்ட சேவைகள் ஆணையத்தின் ஒரு நிகழ்ச்சி" என்று கூறினார்.</p><p>முன்னதாக, தலைமை நீதிபதி இங்கு நடைபெற்ற தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் மேற்கு மண்டல மாநாட்டில் உரையாற்றினார்.</p><p>மாநாட்டின் தொடக்க அமர்வில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் மற்றும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் கலந்துகொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>குஜராத்தில் மர்ம கிணறு: தானாக தளும்பும் நீர்- வைரலாகும் வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/video-gujarat-village-haunted-well-starts-moving-on-its-own-again</link><comments>https://www.maalaimalar.com/news/national/video-gujarat-village-haunted-well-starts-moving-on-its-own-again#comments</comments><guid isPermaLink="false">0665aedc-02b8-4dfe-bdb1-395908e585f9</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:24:49 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:24:49.586Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,gujarat</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3bnx4201/0808Well0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மர்ம கிணறு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3bnx4201/0808Well0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலம் மொர்பி தாலுகாவில் உள்ள வீரபத்ரா கிராமத்தில் உள்ள மர்மமான கிணறு ஒன்று உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனென்றால், கடந்த வியாழக்கிழமை, கடல் நீர் தளும்புவதுபோல் இந்த கிணற்றில் உள்ள தண்ணீரும் தளும்பியதுதான் இதற்கு காரணம்.</p><p>கடந்த வியாழக்கிழமைக்கு முன்னதாக இந்த கிணற்றில் உள்ள நீர் திடீரென தானாகவே தளும்ப ஆரம்பித்தது. பின்னர் இது படிப்படியாக வியாழக்கிழமை காலை சகஜ நிலைக்கு திரும்பியது. பின்னர், மீண்டும் தளும்ப ஆரம்பித்தது. இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.</p><p>இந்த தகவலை அருந்த அருகில் உள்ள கிராம மக்களும் அப்பகுதிக்கு விரைந்து வந்து கிணற்றை பார்வையிட்டனர்.</p><h2>நிலநடுக்கத்திற்கான அறிகுறியா? என மக்கள் அச்சம்</h2><p>இந்தச் செயல்பாட்டிற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை. இப்பகுதி நிலநடுக்க அபாயம் கொண்ட தன்மையைக் கொண்டிருப்பதாலும், கடந்த காலங்களில் இங்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாலும், இந்த நிகழ்வு அதனுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சில குடியிருப்பாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், அதிகாரிகள் இதுவரை இது குறித்து அதிகாரப்பூர்வமான விளக்கத்தை அளிக்கவில்லை.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | A mysterious well in Virparda village of Morbi taluka, Gujarat, has once again shown unusual activity, with its water appearing to move on its own. The phenomenon resumed around 3:00 PM today after a similar disturbance, observed two days ago, had subsided earlier in the… <a href="https://t.co/maNyjKIs0o">pic.twitter.com/maNyjKIs0o</a></p>&mdash; NDTV (@ndtv) <a href="https://x.com/ndtv/status/2085539960548180384?ref_src=twsrc%5Etfw">August 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>மார்பியில் உள்ள ஒரு கிணற்றில் வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள் காணப்பட்டதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து, காந்திநகரிலிருந்து ஒரு குழு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நிலநடுக்கம் தொடர்பான செயல்பாடுகள் ஏதுமிருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று மார்பி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சிஜேபி-யின் அடுத்த சீர்திருத்தம் மாநிலங்களில் நடைபெறும் தேர்வு முறைகேடுகள்: அபிஜீத் தீப்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-next-reform-exam-scams-in-states-abhijeet-dipke</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-next-reform-exam-scams-in-states-abhijeet-dipke#comments</comments><guid isPermaLink="false">0960d40d-47a6-4301-84d3-68ec1429f669</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:50:08 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:50:08.256Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>upsc,abhijeet dipke,அபிஜீத் தீப்கே,சிஜேபி,CJP,யுபிஎஸ்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/sogurrxs/Untitled-design-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாநில அரசுத் தேர்வுகளில் பெரும் முறைகேடு: சிஜேபி கவனம் பொது சேவை ஆணைய ஊழல், இளைஞர் எதிர்ப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ Abhijeet dipke]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/sogurrxs/Untitled-design-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் யுஜி வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா செய்த பிறகு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, பல்வேறு மாநிலங்களில் பொது சேவை ஆணையத்தின் மூலம் நடத்தப்படும் அரசுத் தேர்வு முறைகேடுகள் குறித்து தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.</p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டது, நீட் முறைகேடுக்கு எதிராக மட்டுமல்ல பலவேறு மாநிலங்களில் நடைபெற்ற பொதுப்பணி ஆணையத் தேர்வுகளில் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்தான் என்று அபிஜீத் கூறினார்.</p><h3><strong>அபிஜீத் தீப்கே பேட்டி</strong></h3><p>மகாராஷ்டிராவில் சிஜேபி நிறுவனரும், ஒருங்கிணைப்பாளருமான அபிஜீத் திப்கே கூறுகையில், “நாங்கள் பீகாருக்குச் செல்வதற்குக் காரணம் என்னவென்றால், ஜந்தர் மந்தரில் கூடியிருந்த கூட்டத்தில் பெரும்பாலானோர் பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதால்தான்.</p><p>இந்த மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் தங்களின் சமூக முன்னேற்றத்திற்காக பொது சேவைகள் என்ற மாநில அரசு தேர்வுகளை சார்ந்துள்ளனர்.</p><h3><strong>அரசு பணியாளர் தேர்வு சீர்திருத்தம்</strong></h3><p>இந்த மாணவர்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர். நாங்கள் ஏன் நீட் தேர்வைப் பற்றி மட்டும் பேசுகிறோம், அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளைப் பற்றி பேசவில்லை என்று அவர்கள் எங்களிடம் கேட்டார்கள்.</p><p>இது இந்தியா முழுவதும் ஒரு பெரும் கவலையாக உள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் மற்றும் அரசுப் பணியிட நியமனங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்த புகார்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ளது.</p><p>தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் நோக்கில், சி.ஜே.பி. அமைப்பு ‘க்யா போல்டி பப்ளிக்’ என்ற அகில இந்திய மக்கள் தொடர்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட குடிமக்களின் குறைகளைக் கேட்பதற்காக அவர்கள் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்வார்கள்.</p><p>மக்களின் கருத்துக்களைக் கேட்கும் கலாச்சாரத்திற்குப் புத்துயிர் அளிப்பதே இதன் நோக்கமாக இருக்கும்.</p><p>பொதுப்பணித் தேர்வுகள் தொடர்பான கவலைகளைக் களைவதற்காக, பீகார் மாணவர்கள் தலைமை நீதிபதியைத் தங்கள் மாநிலத்திற்கு அழைத்திருந்தனர்.</p><p>மேலும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) ஆட்சேர்ப்பு விதிமுறைகள் சுமார் 2012-ஆம் ஆண்டில் மாற்றப்பட்டதால், அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கில மொழிப் பின்னணியில் இருந்து அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் சேர்க்கப்படுகின்றனர்.</p><p>இது மானுடவியல் மற்றும் வட்டார மொழிக் கல்வி பயின்றவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சி மையங்களில் UPSC தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், நகரங்களில் உள்ள மோசமான அறைகளில் தங்க வேண்டியிருப்பதாலும், வீட்டு உரிமையாளர்களிடமிருந்து துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாலும், தங்குமிடச் சவால்களையும் சந்தித்து வருகின்றனர்.</p><p>சமூகம் மேம்படுவதால், கிக் வேலை என்ற கருத்து மேற்கத்திய நாடுகளுக்கு நல்லது. இந்தியாவில், கிக் வேலை என்பது தொழிலாளர் சுரண்டலைத் தவிர வேறொன்றுமில்லை. அவர்களுக்கு ஒரு பெரிய கொள்கை சீர்திருத்தமும், ஒரு பாதுகாப்பு வலையும் தேவை.</p><p>ஒரு சிறிய ஊக்கத்தொகைக்காக அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். நாங்கள் அரசியல் உரையாடலை மாற்ற விரும்புகிறோம். சமூகத்தில் பரிவும் இரக்கமும் குறைந்து வருகின்றன. நாம் பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணும் மனநோயாளிகளாக மாறத் தொடங்கிவிட்டோம்.</p><p>ஒரு காலத்தில் நமது சமூகம் லட்சியம் நிறைந்ததாக இருந்தது. ஊழலுக்கு எதிரான இந்தியா போன்ற இயக்கங்கள் ஒரு சிறந்த தேசத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.</p><p>அந்த இந்தியா முன்னேற விரும்பியது, ஆனால் இன்றைய இந்தியா, தான் தப்பி பிழைப்பதிலேயே திருப்தி அடைகிறது. இப்போது, குடிமக்களுக்கு அவ்வளவாக லட்சியம் இல்லை. இந்த மனநிலை இந்தியாவைப் பல ஆண்டுகளுக்கு பின்தங்க செய்கிறது” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்விகி, சொமேட்டோ, செப்டோ டெலிவரி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு - மின்சார வாகனம் கட்டாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-new-rules-for-swiggy-zomato-zepto-electric-vehicles-compulsory</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-new-rules-for-swiggy-zomato-zepto-electric-vehicles-compulsory#comments</comments><guid isPermaLink="false">bdbbc1a2-4f25-48a9-91d8-70be0aa6be07</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:43:09 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:43:09.001Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Swiggy,Zomato,Zepto,ElectricVehicles,மின்சாரவாகனம்,DriverWelfareFund,2PercentContribution</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/05dv2932/Electric-Vehicles" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Electric Vehicles ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/05dv2932/Electric-Vehicles?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆன்லைன் உணவு மற்றும் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களான ஸ்விக்கி, சொமாட்டோ மற்றும் செப்டோ போன்ற தளங்களை ஒழுங்குமுறைப்படுத்த மகாராஷ்டிரா அரசு புதிய விதிகளைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. </p><p>மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் தலைமையிலான குழு, இதற்கான 'பைக் டாக்ஸி விதிகள் 2025' திருத்த வரைவைச் சட்டத்துறையின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது.</p><p>இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி, டெலிவரி நிறுவனங்கள் தங்களது வாகனக் கூட்டமைப்பை முழுமையாக மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆர்டர் கட்டணத்திலிருந்தும் 2% தொகையை ஓட்டுநர்களின் நல நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்படவுள்ளன.</p><h2>டெலிவரி சேவை வழங்குநர்:</h2><p>இதுவரை ஓலா, உபெர், ராபிடோ போன்ற பயணியர் பைக் டாக்ஸி சேவைகளுக்கு மட்டுமே மகாராஷ்டிராவில் தனி விதிமுறைகள் இருந்தன. </p><p>இனிமேல் பார்சல்கள், உணவுப் பொருட்கள் அல்லது இதர பேக்கேஜ்களை விநியோகம் செய்யும் அனைத்து நிறுவனங்களும் 'டெலிவரி சேவை வழங்குநர்' என்ற புதிய வரம்பிற்குள் கொண்டு வரப்படும். </p><p>இதன் மூலம் ஸ்விக்கி, பிளின்கிட், செப்டோ போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களை மாநில அரசின் போக்குவரத்துத் துறை நேரடியாகக் கண்காணிக்க வழிவகை ஏற்படும்.</p><h2>புதிய முக்கிய நிபந்தனைகள் என்னென்ன?</h2><p>இந்த வரைவுச் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட பின், டெலிவரி நிறுவனங்கள் சில விதிகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். </p><p>டெலிவரிக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பைக்குகளும் மின்சார வாகனங்களாக மட்டுமே இருக்க வேண்டும். அனைத்து டெலிவரி வாகனங்களிலும் ஜிபிஎஸ் டிராக்கர்கள் பொருத்தப்பட வேண்டும்.</p><p>வாகனங்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் முறையான காப்பீடு இருக்க வேண்டும். பிராந்திய போக்குவரத்து ஆணையம் நிர்ணயிக்கும் கட்டண உச்சவரம்பைப் பின்பற்றியே டெலிவரி கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும். </p><p>ஒவ்வொரு நிறுவனமும் மாநில அரசிடம் பிரத்யேக உரிம அடையாளச் சான்றைப் பெற வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.</p><h2>2% ஓட்டுநர் நல நிதி:</h2><p>இந்தச் சட்டத்தின் மிக முக்கியமான அம்சமாக, ஒவ்வொரு டெலிவரி கட்டணத்திலிருந்தும் 2% பங்களிப்புத் தொகை ஓட்டுநர்களின் நல வாரியத்திற்குச் செல்லும். </p><p>இந்த நிதியானது ஓட்டுநர்களின் ஓய்வூதியம், விபத்துக் காப்பீடு, மின்சார வாகனக் கடன்கள், குழந்தைகளின் கல்வி உதவித்தொகை போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படும்.</p><h2>உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை:</h2><p>அமைச்சர் பிரதாப் சர்நாயக் முன்னதாக சட்டப்பேரவையில் தெரிவித்தபடி, பைக் டாக்ஸி மற்றும் டெலிவரி ஓட்டுநர்கள் அனைவரும் இருப்பிடச் சான்றிதழ் மற்றும் பொது சேவை வாகன பேட்ஜ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும். </p><p>இந்த நடவடிக்கை மாநிலத்தைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று அரசு நம்புகிறது.</p><p>தற்போது இந்த நிறுவனங்கள் மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு குறியீட்டின் கீழ் மட்டுமே இயங்கி வருவதால், ஏதேனும் புகார்கள் எழும்போது மாநில அரசால் தலையிட முடியாமல் இருந்தது. </p><p>இந்தப் புதிய கொள்கை ஒப்புதல் பெற்றவுடன், 15 கிலோமீட்டர் வரையிலான அனைத்து பைக் டெலிவரி பயணங்களுக்கும் இந்த விதிகள் முழுமையாகப் பொருந்தும்.</p>]]></content:encoded></item><item><title>சீனா வெளியிட்ட புதிய வரைபடம் – இந்தியா ஏன் எதிர்ப்பு?</title><link>https://www.maalaimalar.com/news/national/why-india-opposes-chinas-new-map</link><comments>https://www.maalaimalar.com/news/national/why-india-opposes-chinas-new-map#comments</comments><guid isPermaLink="false">67b4fe1e-d689-4126-959e-cea235044d7a</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:32:10 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:32:10.087Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>arunachala pradesh,IndiaChinaBorder,இந்தியாசீனா,MapWar,வரைபடப்போர்,SurveyOfIndia,அருணாச்சலபிரதேசம்,இந்தியராணுவம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/l8g75ox6/India-China" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India - China]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/l8g75ox6/India-China?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அருணாச்சலப் பிரதேசத்தின் மீது உரிமை கோரும் வகையில் சீனா தொடர்ந்து இந்தியப் பகுதிகளுக்குச் சொந்தமாகப் பெயரிட்டு வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அருணாச்சலப் பிரதேசத்தின் 27 முக்கிய இடங்களுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாகப் பெயரிட்டுப் புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.</p><p>'இந்திய நில அளவைத் துறை' வெளியிட்டுள்ள இந்த வரைபடத்தில், எல்லையோரப் பகுதிகளின் புவியியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை மக்கள் துல்லியமாக அறியும் வகையில் இந்தப் பெயர்கள் முறையாகப் பதியப்பட்டுள்ளன.</p><p>"அருணாச்சலப் பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, சீனாவின் இத்தகைய வீண் முயற்சிகள் கள யதார்த்தத்தை மாற்றிவிட முடியாது" என்று இந்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p><h2>எல்லையோரப் போர் நினைவிடங்கள் மற்றும் முக்கிய இடங்கள்:</h2><p>சீனாவுடன் நேரடியாக மோதல் ஏற்பட்ட மற்றும் ராணுவ ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 27 இடங்கள் இந்த வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p>லாங்ஜூ 1962 போருக்கு முன்பாகவே, அதாவது 1959-லேயே இந்திய-சீன ராணுவங்களுக்கு இடையே முதன்முதலில் மோதல் வெடித்த மிக முக்கியமான எல்லைப் பகுதி மேஜா கிராமம். மேல் சுபன்சிரி மாவட்டத்தில், லாங்ஜூ பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள எல்லையோரக் கிராமம்.</p><p>தக் லா கணவாய் 1962 இந்திய-சீனப் போரின் தொடக்கக் கட்டத்தில் மிகக் கடுமையான போர்கள் நடைபெற்ற உயரமான மலைப் பகுதி. ஜெய்ராம்பூர் சாங்லாங் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரம், இந்தியப் படைகள் கிழக்கு அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மியான்மர் எல்லைக்கு விரைந்து செல்ல உதவும் முக்கிய ராணுவத் தளவாட மையமாகும்.</p><p>ராணுவ வீரர்களின் நினைவிடங்கள் 1962 போரின் நாயகர்களான ஜஸ்வந்த் சிங் ராவத்தை கௌரவிக்கும் 'ஜஸ்வந்த் கர்' மற்றும் த்ரிலோக் சிங் தாப்பாவை கௌரவிக்கும் 'ஷேர்-இ-தாப்பா நினைவிடம்' ஆகியவையும் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.</p><p>வரைபடத்தில் சேர்க்கப்பட்ட மற்ற இடங்களில் உயரமான ஏரியான சம்போ சரோவர், பாரா குண்டுன், சோட்டா குண்டுன், தன் பாரி, பிரித்நகர், டெரிட்நகர், ராம்நகர், சாகர், பத்மா, ஜோதிநகர், பைசாகி, சோட்டா ரோபுக், பரா ரோபுக், சன்புரா, ஷிவாஜி நகர், சன்புரா ஆகியவை அடங்கும்.</p><h2>சீனாவின் 'வரைபட அரசியல்' பின்னணி!</h2><p>அருணாச்சலப் பிரதேசத்தை 'ஸாங்னான்' என்று அழைத்து வரும் சீனா, கடந்த சில ஆண்டுகளாக அங்குள்ள பகுதிகளுக்குத் தன்னிச்சையாகச் சீனப் பெயர்களைச் சூட்டி வரைபடங்களை வெளியிட்டு வருகிறது.</p><p>தரப்படுத்தப்பட்ட ஆறு பெயர்களைக் கொண்ட பட்டியலை 2017-ல் முதன்முதலில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, 2021-ல் 15 இடங்களை உள்ளடக்கிய இரண்டாவது பட்டியலையும். 2023-ல் 11 இடங்களைக் கொண்ட மற்றொரு பட்டியலையும் வெளியிட்டது.</p><h2>இந்தியாவின் எச்சரிக்கை:</h2><p>சீனாவின் இத்தகைய கற்பனையான பெயரிடும் முறைகள் இரு நாடுகளுக்கு இடையேயான சுமுக உறவை மேலும் பாதிக்கும் என்றும், இந்தியாவின் இறையாண்மையை யாராலும் அசைக்க முடியாது என்றும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.</p><p>சீனா, அருணாச்சலப் பிரதேசத்தைக் குறிப்பிட 'ஸாங்னான்' என்ற பெயரைப் பயன்படுத்துகிறது. இந்தக் கூற்றை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>கேள்வி மட்டும் கேட்காதீர்கள், விடையைக் கண்டறியுங்கள்: ஐ.ஐ.டி. விழாவில் பிரதமர் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-message-to-gen-zs-at-iit-event-have-courage-to-seek-solutions</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-message-to-gen-zs-at-iit-event-have-courage-to-seek-solutions#comments</comments><guid isPermaLink="false">b9a2ce6a-c5c7-4228-9b48-4905ad44e3c2</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:44:14 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:44:14.428Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gen z,pm modi,IIT Delhi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/r1zqvvtd/PMModi0808.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/r1zqvvtd/PMModi0808.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி IIT-யின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>இன்றைய இளைஞர்கள் சவால்களைக் கண்டு பின்வாங்காமல், அவற்றுக்கான தீர்வுகளைத் தேடும் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும் இளைஞர்களின் புதுமையான சிந்தனையும் தொழில்நுட்ப அறிவும் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானவை.</p><h2>இளைஞர்கள் கேள்விகளை எழுப்ப வேண்டும்</h2><p>சிக்கல்கள் வரும்போது, இது முடியாது என்று கூறுவதற்குப் பதிலாக, இதை எப்படிச் செய்ய முடியும்? என்ற கேள்வியை இளைஞர்கள் எழுப்ப வேண்டும். தோல்வி குறித்த பயத்தைத் தாண்டி புதிய முயற்சிகளை மேற்கொள்வதும், தேவையான இடங்களில் ஆபத்தை ஏற்றுக்கொள்வதும் வெற்றிக்கான முக்கியப் பாதைகள் என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>இன்றைய Gen-Z தலைமுறை செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, செமிகண்டக்டர், பசுமை எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும். குறிப்பாக, சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்பம் மற்றும் புதுமை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் வளர்க்க வேண்டும்.</p><h2>Gen Z இளைஞர்கள் சவால்களைப் பார்த்து அஞ்சக்கூடாது</h2><p>கல்வி என்பது வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான கருவியாக மட்டும் இருக்கக் கூடாது. புதிய சிந்தனைகளை உருவாக்கி, நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறனை வளர்க்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். இந்தியாவின் இளம் தலைமுறையிடம் நம்பிக்கை இருப்பதாகக் கூறிய பிரதமர், அவர்களின் துணிச்சல், நம்பிக்கை மற்றும் புதுமை ஆகியவை நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என தெரிவித்துள்ளார்.</p><p>எனவே, சவால்களைப் பார்த்து அஞ்சாமல், அவற்றை வாய்ப்புகளாக மாற்றி, புதிய பாதைகளை உருவாக்குவதே Gen-Z இளைஞர்களின் மிகப்பெரிய பொறுப்பாகும்.</p><p>கேள்வி மட்டும் கேட்காதீர்கள், விடையைக் கண்டறியுங்கள். இந்தியாவின் ஸ்டார்ட்அப் (தொடக்கநிலை நிறுவனங்கள்) புரட்சியை வடிவமைத்து, அதற்கு வலுசேர்த்தவர்கள் உங்களைப் போன்ற, இதே தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.</p><h2>சிப்கள் முதல் கப்பல்கள் வரை</h2><p>ஒரு தனி நிறுவனமே இவ்வளவு சாதனைகளைச் செய்ய முடியுமென்றால், நாடு முழுவதும் உருவாக்கப்பட்டு வரும் அந்த மாபெரும் சக்தியைச் சற்றே கற்பனை செய்து பாருங்கள்.</p><p>சிப்புகள் முதல் கப்பல்கள் வரை அனைத்தும் உங்கள் கைகளால் இங்கேயே தயாரிக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.</p><p>இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>மிக நீண்ட கூந்தலுடன் கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்
</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-woman-guinness-record-for-longest-hair</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-woman-guinness-record-for-longest-hair#comments</comments><guid isPermaLink="false">5e6fa39f-8dd6-4b71-97ec-44073964f853</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:28:08 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:28:08.479Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கின்னஸ் சாதனை,Guinness record,Renu Dhariyal,Long Hair,ரேணு தரியல்,நீண்ட கூந்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/m6hbgou1/renu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Renu Dhariyal ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/m6hbgou1/renu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உலகிலேயே மிக நீண்ட கூந்தலை கொண்டவர் என்கிற கின்னஸ் சாதனைக்கு உத்தரகாண்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் படைத்துள்ளார்.</strong></em> </p> <h2>கின்னஸ் சாதனை</h2><p>சமீப காலமாக சிறுவர்கள் முதல் இளைஞர்கள், பெண்கள், முதியோர் என பலதரப்பினரும் பல்வேறு வகைகளில் தங்கள் திறமைகளை நிரூபித்து <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">கின்னஸ் சாதனை</a> படைத்து வருகின்றனர். </p><h2>ரேணு தரியல்</h2><p>அந்தவகையில் உலகிலேயே மிக நீண்ட கூந்தலை கொண்டவர் என்கிற கின்னஸ் சாதனைக்கு உத்தரகாண்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் படைத்துள்ளார். அவரது பெயர் ரேணு தரியல். யூட்யூபரான இவர் சமீபத்தில் உலகிலேயே மிக நீண்ட கூந்தலை கொண்டவர் என்கிற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரரானார். இவருடைய கூந்தலின் நீளம் 271.50 செ.மீ (8 அடி 10 அங்குலம்) ஆகும். </p> <p>ரேணுவின் கூந்தல் ஹல்த்வானியில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமாக அளவிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் அலீயா நசிரோவாவை பின்னுக்குத் தள்ளி அவர் இந்த கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். </p><p>அலீயா நசிரோவாவின் கூந்தலின் நீளம் 257.33 செ.மீ (8 அடி 5.3 அங்குலம்) ஆகும். ரேணு 2015-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தனது முடியை வளர்த்து வருகிறார். இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. </p> <p>தனது சாதனை குறித்து ரேணு தரியல் கூறுகையில், நான் 2015 முதல் தொடர்ந்து என் முடியை வளர்த்து வருகிறேன். இந்திய கலாச்சாரத்தில், நீண்ட கூந்தல் என்பது பாரம்பரியத்தின் அடையாளமாகவும், மிகுந்த அழகாகவும் கருதப்படுகிறது. இதுவே எனது முடியை இவ்வளவு நீளமாக வளர்க்க எனக்கு ஊக்கமளித்தது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: போர்ச்சுக்கல் மதுபான கடையில் விற்கப்பட்ட மும்பை பெண்</title><link>https://www.maalaimalar.com/news/national/job-scam-woman-sold-to-liquor-shop-in-portugal</link><comments>https://www.maalaimalar.com/news/national/job-scam-woman-sold-to-liquor-shop-in-portugal#comments</comments><guid isPermaLink="false">477944e2-1a29-4b59-8265-02c4368578e0</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:26:32 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:26:32.617Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,வேலை மோசடி,job scam,job consultancy,ஆள் சேர்ப்பு நிறுவனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/sfjucql0/Untitled-design-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வெளிநாட்டு வேலை மோசடி: மும்பை பெண் போர்ச்சுக்கல் மதுபான கடையில் விற்கப்பட்ட அதிர்ச்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ Job Scam Abroad]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/sfjucql0/Untitled-design-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புனேவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், நாக்பூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி, போர்ச்சுகலில் உள்ள ஒரு பீர் கடை உரிமையாளரிடம் விற்றுள்ளது.</p><h3><strong>ஆள் சேர்ப்பு நிறுவனம்</strong></h3><p>மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மாதம், இன்ஸ்டாகிராம் மூலம் ‘வி மைக்ரேட்’ என்ற ஆலோசனை நிறுவனம் வெளிநாட்டில் சேலை வாங்கி தருவதாக ஆள் சேர்ப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.</p><p>அப்போது அந்த நிறுவனத்தை 28 வயது பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைக்காக தொடர்பு கொண்டபோது, அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அவருக்கு மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் போர்ச்சுக்கல் நாட்டில், காசாளர் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளனர்.</p><p>மேலும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் அந்த பெண்ணிடம் அவர்கள் கூறியுள்ளனர்.</p><p>இதையடுத்து விசா மற்றும் இதர ஆவணங்கள் என்ற பெயரில், அந்த பெண்ணிடுமிருந்து மொத்தம் 11 லட்சம் ரூபாயை தவணை முறையில் பறித்துள்ளனர்.</p><h3><strong>மதுபான கடையில் வேலை</strong></h3><p>பின்னர் அந்த பெண் போர்ச்சுக்கல் நாட்டிற்கு சென்றபோது, அங்குள்ள ஏஜென்டுகள் அந்த பெண்ணின் பாஸ்போர்ட்டை பறித்து கொண்டு, இரண்டு நாட்கள் ஒரு அறையில் அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை ஒரு மதுபான கடை உரிமையாளரிடம் விற்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணை வேலை செய்ய கட்டாயப்படுத்தி கடுமையான மன உளைச்சலுக்கும், உடல் ரீதியான சித்திரவதைகளுக்கும் ஆளாக்கியுள்ளனர்.</p><p>ஒரு கட்டத்தில் அந்த பெண் மோசடிக்காரர்களிடம் தனது பாஸ்போர்ட்டை திருப்பி தருமாறு கேட்டுள்ளார், ஆனால் அவர்கள் அதற்கு மேலும் பணம் கேட்டுள்ளனர்.</p><p>இதையடுத்து அந்த பெண் லிஸ்பன் நாட்டிற்கு தப்பிச் சென்று, பின்னர் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகருக்கு தப்பி சென்றுள்ளார்.</p><p>அங்கிருந்து அவர் கத்தார் வழியாக இந்தியாவிற்கு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் புனே காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.</p><h3><strong>காவல்துறை விசாரணை</strong></h3><p>அப்போது வி மைக்ரேட் நிறுவனத்தின் மேனேஜர் உள்பட எட்டு பேர் மீது ஆட்கடத்தல், மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், புனே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கேரளத்தில் தொடரும் கனமழை - 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/national/heavy-rain-continue-in-kerala-orange-alert-for-7-districts</link><comments>https://www.maalaimalar.com/news/national/heavy-rain-continue-in-kerala-orange-alert-for-7-districts#comments</comments><guid isPermaLink="false">e69b3604-3d90-4686-b596-6604ec2cf9cb</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:13:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:13:19.302Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,orange alert,ஆரஞ்சு எச்சரிக்கை,கேரளம்,Keralam,கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/oyopoj5g/Rain.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kerala Rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/oyopoj5g/Rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கேரளத்தில் தொடரும் கனமழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>கேரளம் மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">கனமழை</a> பெய்து வருகிறது. இந்த மழையினால் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை சேதங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக மாநிலத்தில் 28 பேர் உயிரிழந்து உள்ளனர். ஏராளமானோர் வீடு மற்றும் உடமைகளை இழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 440 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 41 ஆயிரத்து 773 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p> <h2>ஆரஞ்சு எச்சரிக்கை</h2><p>இந்த நிலையில் மழையின் தாக்கம் இன்றும் தொடர்கிறது. மழையின்போது பலத்த காற்றும் வீசியது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.</p> <h2>கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை</h2><p>தொடர் மழை மற்றும் நிலச்சரிவு, வெள்ள அபாயம் நிலவி வருவதால், திருச்சூர், பத்தனம்திட்டா, கோழிக்கோடு, கோட்டயம், வயநாடு, கண்ணூர், காசர்கோடு மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாட்டில் உள்ள பாய்ஸ் டவுன்–பாலசுரம் சாலையில் இரவு நேர போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>இமாச்சல் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 7 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/himachal-pradesh-mountain-road-bus-accident-7-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/himachal-pradesh-mountain-road-bus-accident-7-killed#comments</comments><guid isPermaLink="false">a395039a-0153-410c-a28f-c1edc7b14e3e</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:00:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:00:00.441Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,bus accident,dead,Himachal Pradesh,தனியார் பேருந்து விபத்து,இமாச்சல் பிரதேசம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2djbhjt0/bus.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bus accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2djbhjt0/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள மலைப்பாதையில் தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.</p><h2>பேருந்து கவிழ்ந்து விபத்து</h2><p>குறுகிய பாதை மற்றும் செங்குத்தான சரிவுகளுக்கு பெயர் பெற்ற சுரா பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சலூச்மோர் வளைவு அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்து கவிழ்ந்தது. காலை 7.15 மணியளவில் இந்த விபத்து நடந்தது.</p><p>பேருந்தில் இருந்த பயணிகள் அலறினார்கள். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் உதவிக்கு ஓடி வந்தார்கள். தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை, ஊர்க் காவல் படை, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.</p><h2>7 பேர் பலி</h2><p>பேருந்து கவிழ்ந்ததில் 7 பேர் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர். பலத்த காயம் அடைந்த 6 பேர் சம்பாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>அந்த பேருந்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. பேருந்து இடிபாடுகளுக்கு அடியில் பயணிகள் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். </p><h2>இதுவரை 78 பேர் பலி</h2><p>விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஜூன் 30-ந்தேதி முதல் நேற்று வரை பருவ மழைக்காலத்தில் சாலை விபத்தில் 78 பேர் பலியாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.</p><h2>பிரதமர் மோடி இரங்கல்</h2><p>இமாச்சல் பேருந்து விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பேருந்து விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கட்டணம் யாருக்கெல்லாம் பொருந்தும்?-குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்மலா சீதாராமன்!</title><link>https://www.maalaimalar.com/news/national/who-will-pay-upi-transaction-fees-nirmala-sitharaman-clarifies</link><comments>https://www.maalaimalar.com/news/national/who-will-pay-upi-transaction-fees-nirmala-sitharaman-clarifies#comments</comments><guid isPermaLink="false">e5b8e549-dd82-4c4e-954d-dbee67d3a6eb</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:34:57 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:34:57.717Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்மலா சீதாராமன்,ஜெய்ராம் ரமேஷ்,Jairam Ramesh,nirmala Sitharaman,UPI Transaction,யுபிஐ பணப்பரிவர்த்தனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/unkfdyqj/nirmala.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Nirmala Sitharaman  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/unkfdyqj/nirmala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுமக்களின் அன்றாட யுபிஐ (UPI) டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதமானக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும், இது முற்றிலும் இலவசமாகவே தொடரும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, 'பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு நடைமுறைகள் சட்டம் 2007'-இன் பிரிவு 10A-இல் உள்ள 'பூஜ்யக் கட்டணம்' (Zero MDR) விதிகளைத் திருத்துவதற்கு வழிவகை செய்கிறது. இதையடுத்து, "யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது; இது பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும்" என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.</p><h2><strong>பொதுமக்களுக்கு முற்றிலும் இல</strong>வசம்</h2><p>சாதாரணக் நுகர்வோர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக மேற்கொள்ளும் நபர்-நபர் மற்றும் வணிகர்களுக்கானக் கட்டணங்கள்  போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எவ்வித சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படாது.</p><h2>வணி<strong>கர்களுக்கு மட்டுமே</strong> </h2><p>எம்டிஆர் (MDR) என்பது நுகர்வோருக்கானது அல்ல. ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமாகப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் பெரிய அளவிலான வணிகர்களிடம் மட்டுமே குறிப்பிட்ட குறைந்தபட்சக் கட்டணம் (0.05% முதல் 0.5% வரை) விதிப்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.</p><h2>நிதிக் கட்டமைப்பை <strong>மேம்படுத்த</strong> நடவடிக்கை</h2><p>சாலையோர வியாபாரிகள், சிறு வணிகர்கள் மற்றும் பெட்டிக் கடைக்காரர்களுக்கு இந்த MDR கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும். பெரிய வணிகர்களிடமிருந்து திரட்டப்படும் இந்தச் சேவைக் கட்டணம், வங்கி அமைப்புகள் மற்றும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களின் டிஜிட்டல் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சைபர் மோசடித் தடுப்பு நடவடிக்கைகளில் முதலீடு செய்யப் பயன்படும். </p><p>நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா முழுமையாக நிறைவேறிய பிறகே, இந்திய தேசிய பரிவர்த்தனைக் கழகம் (NPCI) தலைமையிலான யுபிஐ வழிகாட்டுதல் குழு இதுகுறித்த இறுதி முடிவை எடுக்கும்.</p><h2>சீதாராமன் <strong>பதிலடி</strong></h2><p>காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "வணிகர்கள் மீது விதிக்கப்படும் கட்டணச் சுமை இறுதியில் பொருட்களின் விலை உயர்வு மூலம் பொதுமக்கள் மீதே சுமத்தப்படும்" எனக் குற்றம் சாட்டினார்.  இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர், வதந்திகளை பரப்பும் முன் காங்கிரஸ் தலைவர்கள் சில உண்மைகளை புரிந்துகொண்டு ஆக்கப் பூர்வமாக விவாதிக்க முன்வர வேண்டும். இது தவறான வதந்தி என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களின் பாதுகாப்பை அதிகரிக்கவே இத்தகைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>உனது தந்தைக்கு அடுத்து நீதான்.. ஜீஷான் சித்திக் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்</title><link>https://www.maalaimalar.com/news/national/death-threat-audio-targeting-mla-zeeshan-siddique-goes-viral</link><comments>https://www.maalaimalar.com/news/national/death-threat-audio-targeting-mla-zeeshan-siddique-goes-viral#comments</comments><guid isPermaLink="false">32b0266b-ea92-4774-8249-16a52b5fd6c1</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:11:20 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:11:20.975Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாபா சித்திக்,தேசியவாத காங்கிரஸ் கட்சி,ஜீஷான் சித்திக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/qm3e2ado/sid1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/qm3e2ado/sid1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உனது தந்தைக்கு அடுத்து நீ தான்' என ஜீஷான் சித்திக் எம்.எல்.ஏ.வுக்கு ஆடியோவில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>ஆடியோவில் மிரட்டல்</h2><p>முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான பாபா சித்திக் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை பாந்திரா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான ஜிஷான் அக்தர் என்பவரின் பெயரில் தற்போது ஒரு மிரட்டல் ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. </p><p>அதில் பாபா சித்திக்கின் மகனும், எம்.எல்.ஏ.வுமான ஜீஷான் சித்திக்கை மிரட்டும் வகையில் இந்தி மொழியில் உள்ள அந்த ஆடியோவில் கூறப்பட்டு இருப்பதாவது:-</p><h2>ஜீஷான் சித்திக்</h2><p>"உன்னுடைய தந்தையை நான்தான் கொன்றேன். இப்போது உனக்கான மரண வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு விட்டது. உன்னுடைய பாதுகாப்பை எவ்வளவு வேண்டுமானாலும் பலப்படுத்திக்கொள். கடந்த முறை நீ அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டாய், ஆனால் இந்த முறை எங்களிடம் இருந்து தப்பவே முடியாது."</p><p>இவ்வாறு அந்த ஆடியோவில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.</p><h2>போலீசார் தீவிர விசாரணை</h2><p>இந்த ஆடியோ குறித்து ஜீஷான் சித்திக்கின் சகோதரி பாந்திரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கி உள்ளனர். மிரட்டல் விடுக்கப்பட்ட அந்த ஆடியோ பதிவின் உண்மைத்தன்மை என்ன? </p><p>அது நிஜமாகவே தலைமறைவாக உள்ள குற்றவாளி ஜிஷான் அக்தர் பேசியதுதானா? மற்றும் அது எந்த ஐ.பி முகவரியிலிருந்து இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டது? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.</p><p>இந்த கொலை மிரட்டல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/upi-payments-to-remain-free-for-consumers-says-pci</link><comments>https://www.maalaimalar.com/news/national/upi-payments-to-remain-free-for-consumers-says-pci#comments</comments><guid isPermaLink="false">4b2f29f2-4bb5-49de-aaf4-6458c6908c72</guid><pubDate>Fri, 07 Aug 2026 23:29:24 +0000</pubDate><atom:updated>2026-08-07T23:29:24.864Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>UPI,யுபிஐ,UPI Payments,யுபிஐ பரிவர்த்தனை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/04/18/11813782-upi.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UPI ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/04/18/11813782-upi.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/upi">யு.பி.ஐ.</a> (UPI) பரிவர்த்தனைகளில் வணிகர்களுக்கான கட்டணங்களின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், நுகர்வோர் தொடர்ந்து யு.பி.ஐ. சேவையை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும், இந்த தளம் மூலம் பணம் பெறுவதற்கு சிறு வணிகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் இந்திய பேமன்ட் கார்ப்பரேஷன் (PCI) தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>யு.பி.ஐ. கட்டணங்கள் குறித்து இந்திய பேமன்ட் கார்ப்பரேஷன் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்த எக்ஸ் தள பதவில், 2016-இல் தொடங்கப்பட்டதில் இருந்து யு.பி.ஐ. நுகர்வோருக்கு இலவசமாகவே இருந்து வருவதாகவும், இந்த தளத்தை பயன்படுத்தும் தனிநபர்களிடம் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.</p><h2>அதிகாரப்பூர்வ விளக்கம்:</h2><p>சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அணுகக்கூடியதாக மாற்றுவதற்காக யு.பி.ஐ. வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை சூழலமைப்பில் அது தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது என்று இந்திய பேமன்ட் கார்ப்பரேஷன் மேலும் கூறியது.</p><p>"2016-ல் தொடங்கப்பட்டதில் இருந்து யு.பி.ஐ. நுகர்வோருக்கு எப்போதும் இலவசமாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் எந்தவித பரிவர்த்தனை கட்டணமும் செலுத்தாமல் உடனடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம்," என்று அது கூறியது.</p><p>நாட்டின் அதிவேகமாக விரிவடைந்து வரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பை இயக்குவதன் நிலைத்தன்மை குறித்த விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>பில்லியன் பரிவர்த்தனை:</h2><p>இந்த விவாதம் நுகர்வோரிடம் கட்டணம் வசூலிப்பது பற்றியது அல்ல, மாறாக ஒவ்வொரு மாதமும் பில்லியன் கணக்கான பரிவர்த்தனைகளை செயலாக்கும் ஒரு சூழல் அமைப்புக்கு நீண்டகால ஆதரவை உறுதி செய்வது பற்றியது என்று பி.சி.ஐ. கூறியது.</p><p>யு.பி.ஐ. பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு சிறு வணிகர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. அத்தகைய வணிகங்களை பாதுகாப்பது அந்த தளத்தின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி உத்தியின் மையமாக தொடர்கிறது.</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 98-ஆக உயர்வு; 13 மாவட்டங்களில் 1.55 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-floods-toll-rises-to-98-over-155-lakh-people-affected-across-13-districts</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-floods-toll-rises-to-98-over-155-lakh-people-affected-across-13-districts#comments</comments><guid isPermaLink="false">9f74ca36-82cf-4a2b-9efd-d061998161cb</guid><pubDate>Fri, 07 Aug 2026 19:59:07 +0000</pubDate><atom:updated>2026-08-07T19:59:07.457Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death toll,அசாம் வெள்ளம்,Assam Floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/jd1nit23/assam-floods-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ assam floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/jd1nit23/assam-floods-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாமில் வெள்ள சூழல் மோசமாகவே நீடித்தது. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பலி எண்ணிக்கை 98-ஐ எட்டியுள்ளது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 13-ஆகவும், பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 1.55 லட்சமாகவும் குறைந்துள்ளது.</p><p>சாரைடியோ (Charaideo) மாவட்டத்தில் உள்ள மஹ்மோரா வருவாய் வட்டத்தில்தான் இந்த சமீபத்திய உயிரிழப்பு பதிவாகி இருப்பதாக <a href="https://www.maalaimalar.com/topic/assam-floods">அசாம்</a> மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) அறிக்கை தெரிவிக்கிறது.</p><h2>33 வட்டங்களில் பாதிப்பு:</h2><p>சிவசாகர், கோலாகாட், நாகான், ஹோஜாய், சோனித்பூர், தேமாஜி, தர்ராங், பிஸ்வநாத், காம்ரூப் (மெட்ரோ), லக்கிம்பூர், உதல்குரி, ஜோர்ஹாட் மற்றும் சாரைடியோ ஆகிய 13 மாவட்டங்கள் வெள்ளத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன; இதனால் 33 வருவாய் வட்டங்களும் 464 கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>மாநிலத்தில் மொத்தம் 1,55,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கோலாகாட் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சிவசாகர் மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்கள் உள்ளன. கடந்த வியாழக்கிழமையன்று 15 மாவட்டங்களும், 1.68 லட்சத்துக்கும் அதிகமான மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர்.</p><h2>சேத விவரம்:</h2><p>நிர்வாகம் 55 நிவாரண முகாம்களை நடத்தி வருகிறது; இவற்றில் இடம்பெயர்ந்த 10,000-க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 நிவாரண பொருட்கள் விநியோக மையங்களும் செயல்பட்டு வருகின்றன.</p><p>கோலாகாட் மாவட்டத்தில் உள்ள கோலாகாட் நகரம் மற்றும் நுமாலிகர் ஆகிய இடங்களில் தன்சிரி ஆறும், ஸ்ரீபூமி மாவட்டத்தில் குஷியாரா ஆறும் அபாய அளவைத் தாண்டி ஓடுகின்றன.</p><p>10,748.64 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன; அதேவேளையில் 47,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் அரசுடன் பேச்சுவார்த்தை நிறைவு: கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர மாணவர்கள் முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/students-to-continue-agitation-despite-talks-with-jharkhand-govt</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-to-continue-agitation-despite-talks-with-jharkhand-govt#comments</comments><guid isPermaLink="false">038701dc-5e0f-439f-b596-8c8bb64c4a6a</guid><pubDate>Fri, 07 Aug 2026 18:20:05 +0000</pubDate><atom:updated>2026-08-07T18:20:05.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Jharkhand,போராட்டம்,ஜார்க்கண்ட்,Students,மாணவர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/kfwgmmh7/Ranchi-Students-Protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ranchi Students Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/kfwgmmh7/Ranchi-Students-Protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/jharkhand">ஜார்க்கண்ட்</a> பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் தங்கள் போராட்டத்தை தொடரப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/student-protest">மாணவர்கள்</a> தெரிவித்தனர். </p><p>14-ஆவது JPSC தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்றும் அவர்கள் கூறினர். ஞாயிற்றுக்கிழமைக்குள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாநில சட்டமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.</p><h2>போராட்டம் தொடரும்:</h2><p>அரசுக்கும், 'JPSC/JSSC சீர்திருத்த மன்றத்தின்' 10 பேர் கொண்ட குழுவுக்கும் இடையிலான முதல் கட்டப் பேச்சுவார்த்தை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது.</p><p>"ஜார்க்கண்ட் அரசுடனான கூட்டம் சுமூகமான சூழலில் நடைபெற்றது. எங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அரசு உறுதியளித்தது. இருப்பினும், 14-ஆவது JPSC தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளோம்," என்று கூட்டத்திற்குப் பிறகு 'JPSC/JSSC சீர்திருத்த மன்றத்தின்' தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார்.</p><h2>விரைவில் தீர்வு:</h2><p>மாணவர்களின் கவலைகள் குறித்து அரசு உணர்வுப்பூர்வமாக செயல்படுவதாக மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி துறை அமைச்சர் சுதிவ்யா குமார் தெரிவித்தார்.</p><p>"போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் குழுவை நாங்கள் சந்தித்தோம். அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு உணர்வுப்பூர்வமாக உள்ளது மற்றும் அவற்றை அனுதாபத்துடன் பரிசீலிக்க தயாராக உள்ளது. இதற்கான தீர்வு விரைவில் தெரியவரும்," என்று குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.</p><p>மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் குழுவினர் எடுத்துரைத்துள்ளதாக அமைச்சர் தீபிகா பாண்டே சிங் தெரிவித்தார்.</p><h2>சுதந்திர விசாரணை:</h2><p>"முதலமைச்சர் மாணவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளார், விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும்," என்று அவர் கூறினார்.</p><p>இதற்கிடையில், கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தேவேந்திர மஹ்தோ தலைமையிலான மற்றொரு போராட்ட குழு, பேச்சுவார்த்தைக்காக அரசிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாக தெரிவித்தது.</p><p>பேச்சுவார்த்தைக்காக எட்டு பேர் கொண்ட குழுவின் பெயர்களை அரசுக்கு அளித்துள்ளதாக மஹ்தோ தலைமையிலான குழு கூறியது. 14-ஆவது JPSC தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ. அல்லது மாநிலத்திற்கு வெளியேயுள்ள ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை கொண்டு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.</p><p>ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையத்தின் (JPSC) பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான போராட்டம் வெள்ளிக்கிழமையுடன் 14-வது நாளை எட்டியது; இதில் ஆறு போராட்டக்காரர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 பைசா உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/national/rupee-settles-with-5-paise-gain-at-95-point-17-against-us-dollar</link><comments>https://www.maalaimalar.com/news/national/rupee-settles-with-5-paise-gain-at-95-point-17-against-us-dollar#comments</comments><guid isPermaLink="false">34411ebc-11cc-4d9e-8c1a-0038a48c6b6f</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:49:57 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:49:57.185Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்க டாலர்,இந்திய ரூபாய் மதிப்பு,Indian Rupee Value,US dollar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/2ekev7bv/IndianRupee001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய ரூபாயின் மதிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/2ekev7bv/IndianRupee001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறை வர்த்தக சூழல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு வரவு ஆகியவற்றின் ஆதரவால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா உயர்ந்து, ஒரு டாலருக்கு ₹95.17 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.</p><p>அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் சற்று வலுவான நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. நாள் முழுவதும் டாலருக்கு எதிராக ரூபாய் குறுகிய வரம்பில் ஏற்ற, இறக்கத்துடன் நகர்ந்தாலும், இறுதியில் முந்தைய வர்த்தக நாளை விட 5 பைசா உயர்வுடன் முடிவடைந்தது.</p><h2>ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள்</h2><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மாற்றம், அமெரிக்க டாலரின் வலிமை, உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் முதலீட்டாளர்களின் வர்த்தக மனநிலை ஆகியவை ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக உள்ளன. அதே நேரத்தில், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் காணப்பட்ட உற்சாகமான வர்த்தகம் மற்றும் சில வெளிநாட்டு முதலீட்டு வரவுகள் ரூபாயின் மதிப்பை ஆதரித்ததாக நாணய சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.</p><p>இருப்பினும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் கொள்கை குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் சர்வதேச நிதிச் சந்தைகளின் போக்கு ஆகியவை வரும் நாட்களில் ரூபாயின் நகர்வை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும் என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சிகளை குறிவைத்து ரிஜிஜு பேசிய கருத்துகள் மக்களவைக் குறிப்பில் இருந்து நீக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/remarks-made-by-rijiju-in-ls-targeting-opposition-expunged</link><comments>https://www.maalaimalar.com/news/national/remarks-made-by-rijiju-in-ls-targeting-opposition-expunged#comments</comments><guid isPermaLink="false">855700a4-39e1-49b2-8223-a3b5423bccfe</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:09:24 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:09:24.785Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,Amit Shah,அமித் ஷா,Kiren Rijiju,கிரண் ரிஜிஜு,parliament</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/9fo0reur/KirenRijiju0708.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிரண் ரிஜிஜு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/9fo0reur/KirenRijiju0708.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களவையில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியபோது, எதிர்க்கட்சிகளை விமர்சித்து தெரிவித்த சில கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவை நடவடிக்கைகளின் போது, அரசின் செயல்பாடுகள் மற்றும் மசோதாக்கள் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ரிஜிஜு, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது.</p><p>இதையடுத்து, ரிஜிஜுவின் சில கருத்துகள் அவை விதிமுறைகளுக்கு முரணானவை என்றும், அவை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மக்களவைத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவை மரபுகளுக்கும் விதிகளுக்கும் ஒவ்வாத சில வார்த்தைகள் மற்றும் குறிப்புகளை அதிகாரப்பூர்வ பதிவிலிருந்து நீக்க உத்தரவிட்டார்.</p><h2>அவைக்கு வராத அமித் ஷா</h2><p>நாடாளுமன்ற நடைமுறைகளின்படி, அவையில் பேசப்படும் கருத்துகள் அவதூறாகவோ, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாகவோ அல்லது அவையின் கண்ணியத்தை பாதிக்கும் வகையிலோ இருந்தால், அவற்றை பதிவிலிருந்து நீக்குவதற்கு மக்களவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. நீக்கப்பட்ட கருத்துகள் அதிகாரப்பூர்வ அவைக் குறிப்பில் இடம்பெறாது.</p><p>இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், நாடாளுமன்ற விவாதங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற வேண்டும் என்பதையும், அவை மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டியது அவசியம் என்பதையும் இந்த நடவடிக்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.</p><h2>தகாத வார்த்தையை பயன்படுத்திய கிரண் ரிஜிஜு</h2><p>உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவை மற்றும் மாநிலங்களைவக்கு வராதது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு நாடளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் ரிஜிஜு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், எந்த அமைச்சர் அவைக்கு வர வேண்டும் என்பதை எதிர்க்கட்சியால் தீர்மானிக்க முடியாது என்று ரிஜிஜு என்றார். அப்போது சில வார்த்தைகளை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.</p><p>அமித் ஷா தினந்தோறும் நாடாளுமன்றத்திற்கு வருகை தருகிறார். நள்ளிரவு வரை அங்கேயே இருக்கிறார் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது, இரவு நேரத்தில் போனில் அழைக்கக் கூடாது: வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-threats-no-late-night-calls-rbi-issues-new-rules-for-loan-recovery</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-threats-no-late-night-calls-rbi-issues-new-rules-for-loan-recovery#comments</comments><guid isPermaLink="false">e1143381-cfe8-4b80-8081-bd8eea8152cf</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:44:37 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:44:37.583Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,வங்கி கடன்,Bank loan,ஆர்பிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/yq6wplxz/RBI0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RBI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/yq6wplxz/RBI0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடன் வசூல் நடவடிக்கைகளில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் தொல்லைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளன. கடன் வசூல் நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், மனிதநேயத்துடனும் நடைபெற வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.</p><h2>இரவு நேரங்களில் போனில் அழைக்கக் கூடாது</h2><p>புதிய விதிகளின்படி, கடன் வசூல் முகவர்கள் கடன் வாங்கியவர்களை மிரட்டவோ, அவமதிக்கவோ, தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தவோ கூடாது. அதிகாலை அல்லது இரவு நேரங்களில் தொடர்ந்து அழைத்து தொந்தரவு செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து வசூல் அழைப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், வசூல் முகவர்கள் தங்களது அடையாளத்தை தெளிவாக தெரிவிக்க வேண்டும். அவர்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். கடன் வாங்கியவரின் தனியுரிமையை மதித்து, தொழில்முறை முறையில் மட்டுமே நடந்து கொள்ள வேண்டும் என RBI வலியுறுத்தியுள்ளது. அடமானச் சொத்துகளை கைப்பற்றுவதற்கும் தெளிவான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.</p><h2>கடன் வசூல் நடவடிக்கைகள் நியாயமானதாக இருக்க வேண்டும்</h2><p>இந்த புதிய விதிகள் மூலம் கடன் வாங்கியவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வசூல் நடைமுறைகளும் ஒழுங்குபடுத்தப்படும் என்று RBI தெரிவித்துள்ளது. இதனால் கடன் வசூல் நடவடிக்கைகள் நியாயமான, வெளிப்படையான மற்றும் மரியாதையான முறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஏன் ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடக்கூடாது? - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆலோசனை!</title><link>https://www.maalaimalar.com/news/national/why-shouldnt-the-jantar-mantar-protest-site-be-closed-delhi-high-court-suggests-to-the-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/national/why-shouldnt-the-jantar-mantar-protest-site-be-closed-delhi-high-court-suggests-to-the-central-government#comments</comments><guid isPermaLink="false">377c946f-a425-497d-84ff-7664e43b0e0d</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:40:49 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:40:49.746Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Centre,Delhi High Court,Jantar Mantar,டெல்லி உயர் நீதிமன்றம்,ஜந்தர் மந்தர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/a9ua8oyk/New-Project-2026-08-07T201024.121.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஏன் ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடக்கூடாது? - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆலோசனை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/a9ua8oyk/New-Project-2026-08-07T201024.121.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை ஏன் மூடக்கூடாது எனவும், அதனை ஏன் பரிசீலிக்கவில்லை எனவும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி, கேள்வியும் எழுப்பியுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.</p><p>போராட்டங்கள் மூலம் ஒட்டுமொத்த தேசிய தலைநகரையும் “முன்னெச்சரிக்கையின்றி முடக்குவது அல்லது பணயக்கைதியாக மாற்றுவது” ஏன் அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி அமித் மகாஜன் கேள்வி எழுப்பியுள்ளார். </p><h2>வழக்கு</h2><p>ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது டெல்லி காவல்துறை பதிலளிக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய தலித் கிறிஸ்தவ உரிமைகள் பாதுகாப்புக் குழு தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது நீதிபதி மகாஜன் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் கோஸ் , காவல்துறை தங்கள் மனுவை நிராகரிக்கவும் இல்லை, போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவும் இல்லை, கிடப்பில் போட்டுள்ளது என தெரிவித்தார். </p><p>இதற்கு,“என் கருத்துப்படி, நீங்கள் ஏன் இதை மூடிவிடக் கூடாது? இது டெல்லிக்குள் நடக்கக் கூடாது” என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மாவிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். </p><p>அதற்கு, டெல்லியில் எந்தவிதமான போராட்டங்களும் நடைபெறக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடா என்று கோஸ் கேள்வி எழுப்பினார்.</p><p>அதற்கு பதிலளித்த நீதிபதி மகாஜன், “அதை காவல்துறையினர்தான் முடிவு செய்ய வேண்டும். நகரத்திற்குள் போராட்டங்களை நடத்த அனுமதிக்கும் வசதி அல்லது சூழல் அவர்களுக்கு இல்லை என்றால் முடிவு அவர்களுடையது” என்றார்.</p><p>உடனே, “சரி, டெல்லியில் ஜனநாயகப்பூர்வமான, அமைதியான போராட்டங்கள் நடத்தப்படாது என்று அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கட்டும். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.” என கோஸ் பதிலளித்தார்.  </p><p>இந்தப் போராட்டங்கள் ஜனநாயகமானவையா அல்லது ஜனநாயகமற்றவையா என்பதைப் பற்றித் தாம் பேசவில்லை என்றும், மாறாக "நகரம் ஏன் பணயக் கைதியாக வைக்கப்பட வேண்டும்?" என்பதைப் பற்றியே பேசுவதாகவும் நீதிபதி மகாஜன் கூறினார்.</p><p>இதற்கிடையில், அப்பகுதியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 அமலில் உள்ளதாகவும், ஆகஸ்ட் 15 நெருங்கி வருவதாகவும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சர்மா தெரிவித்தார்.</p><p>“பாதுகாப்புப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. 75 பேர் எப்போது 75,000 பேராக மாறுவார்கள் என்று எங்களுக்குத் தெரியாது” என்றும் ஷர்மா கூறினார்.</p><p>தொடர்ந்து “தனிப்பட்ட முறையில் நீங்கள் என்னிடம் கேட்டால், எனக்கு வேறுபட்ட கருத்து உள்ளது. ஆம்புலன்ஸ்கள் ஆகட்டும் அல்லது வேறு எதுவாகட்டும், நகரம் முழுவதும் முடங்கிக் கிடக்கும்போது, ​​போராட்டம் ஏன் நகரத்தில் நடக்க வேண்டும்?” என்று நீதிபதி மகாஜன் மீண்டும் வலியுறுத்தினார். </p><p>இறுதியாக, மனுமீது நாளைக்குள் (ஆக.8) முடிவெடுக்குமாறு உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய - சீன எல்லைப் பிரச்னைகள்: தூதரக மற்றும் ராணுவ பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண இருநாடுகளும் ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-china-border-issues-both-nations-agree-to-seek-a-resolution-through-diplomatic-and-military-talks</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-china-border-issues-both-nations-agree-to-seek-a-resolution-through-diplomatic-and-military-talks#comments</comments><guid isPermaLink="false">64484378-c931-45ef-8502-f5fcca7ab39e</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:23:05 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:23:05.616Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,China,சீனா,border issues,எல்லைப் பிரச்னைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/xewecfl0/New-Project-2026-08-07T171716.651.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய - சீன எல்லைப் பிரச்னைகள்: தூதரக மற்றும் ராணுவ பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண இருநாடுகளும் ஒப்புதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/xewecfl0/New-Project-2026-08-07T171716.651.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே இருக்கும் தீர்க்கமுடியாத எல்லைப் பிரச்னைகளை களைய தூதரக மற்றும் ராணுவ ரீதியிலான வழிமுறைகளை தொடர்ந்து மேற்கொள்ள இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. </p><p>டெல்லியில் நேற்று (ஆக.6) நடைபெற்ற இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் குறித்த ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயற்குழுவின் 36வது கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. </p><p>கூட்டத்தில் எல்லை நிர்ணயம், எல்லை மேலாண்மை, எல்லைத் தாண்டிய ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தியக் குழுவிற்கு வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜித் கோஷ் தலைமை தாங்கினார். அதே சமயம் சீனத் தரப்பிற்கு சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல்சார் விவகாரங்கள் துறையின் தலைமை இயக்குநர் ஹூ யான்சி தலைமை தாங்கினார்.</p><p>எல்லை தாண்டிய ஆறுகள் தொடர்பான நிபுணர் மட்டக் குழுவின் கூட்டம் விரைவில் நடைபெற வேண்டியதன் அவசியமும், மேல்நிலைத் திட்டங்கள் தொடர்பான தொழில்நுட்ப விவரங்களைப் பகிர்ந்துகொள்ளவும் இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது. </p><h2>35வது WMCC சந்திப்பு</h2><p>முன்னதாக 35வது மேற்கு ஆசிய ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டம் மே 27 அன்று பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில், இரு தரப்பினரும் இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்ததுடன், எல்லைப் பகுதிகளில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மூன்று நாட்கள் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்: காங்கிரஸ் கொறடா உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-issues-whip-to-its-mps-in-rs-ls-asks-them-to-be-present-on-aug-10-to-12</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-issues-whip-to-its-mps-in-rs-ls-asks-them-to-be-present-on-aug-10-to-12#comments</comments><guid isPermaLink="false">2cd471a7-7ac9-42e9-998f-89e8bf4735c3</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:17:48 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:17:48.945Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,நாடாளுமன்றம்,parliament,தொகுதி மறுவரையறை மசோதா,Delimitation Bill</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/aq0aoqma/Parliament0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாடாளுமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/aq0aoqma/Parliament0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மிக முக்கியமான விவகாரங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதால், மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள தங்கள் கட்சி உறுப்பினர்கள் ஆகஸ்ட் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அவையில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கொறடாக்கள் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இந்த மூன்று நாட்களிலும் தங்கள் கட்சி உறுப்பினர்கள் அவையில் இருப்பதை உறுதி செய்யுமாறு இந்தியா (INDIA) கூட்டணியில் உள்ள அனைத்துக் கூட்டணி கட்சிகளிடமும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>தொகுதி வரையறை மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு</h2><p>சர்ச்சைக்குரிய வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 (FCRA Bill) அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கும் நிறைவேற்றத்திற்கும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என்ற தகவல்களுக்கு மத்தியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாவையும் அரசு பரிசீலித்து வருவதாகப் பேசப்படுகிறது.</p><p>மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா (Chief Whip) ஜெய்ராம் ரமேஷ் பிறப்பித்த three-line உத்தரவில், "திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (அதாவது ஆகஸ்ட் 10, 11 மற்றும் 12 தேதிகளில்) மாநிலங்களவையில் மிக முக்கியமான விவகாரங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.</p><p>மாநிலங்களவையில் உள்ள காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அனைவரும், ஆகஸ்ட் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் (திங்கள், செவ்வாய் மற்றும் புதன்) காலை 11 மணி முதல் அவை ஒத்திவைக்கப்படும் வரை தவறாமல் அவையில் இருக்கவும், கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிக முக்கியமான விஷயமாகக் கருதப்பட வேண்டும்," என்று ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதேபோன்றதொரு உத்தரவை மக்களவையில் உள்ள கட்சி உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா கே. சுரேஷ் பிறப்பித்தார்.</p><h2>தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற 3-ல் 2 பங்கு ஆதரவு தேவை</h2><p>அடுத்த வாரத்திற்கான அரசின் தற்காலிக அலுவல் பட்டியலை குறிப்பிடும்போது, ​​பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், FCRA மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்துவதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.</p><p>FCRA மசோதாவை நிறைவேற்ற எளிய பெரும்பான்மை போதுமானது. ஆனால் அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை இந்தக் கூட்டத்தொடரில் கொண்டுவராவிட்டால் அடுத்த கூட்டத்தொடரில் கொண்டுவரலாம் என்றும், அப்படியிருந்தாலும் 2029 மக்களவைத் தேர்தலுக்குள் அதைச் செயல்படுத்தப் போதுமான நேரம் இருக்கும் என்றும் அரசாங்கத் தரப்பில் ஒரு கருத்து நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>‘காங்கிரஸ்தான் என்னை விலகுமாறு கேட்டுக்கொண்டது’ -  கர்நாடகா சட்டசபை மேலவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பசவராஜ் ஹொரட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/national/it-was-the-congress-that-asked-me-to-step-down-basavaraj-horatti-who-resigned-as-karnataka-legislative-council-chairman</link><comments>https://www.maalaimalar.com/news/national/it-was-the-congress-that-asked-me-to-step-down-basavaraj-horatti-who-resigned-as-karnataka-legislative-council-chairman#comments</comments><guid isPermaLink="false">d60d128d-a22a-4752-bd84-45ef5d9c4973</guid><pubDate>Fri, 07 Aug 2026 09:23:53 +0000</pubDate><atom:updated>2026-08-07T09:23:53.220Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,கர்நாடகா,Karnataka,Basavaraj Horatti,பசவராஜ் ஹொரட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/6uw452rz/New-Project-2026-08-07T143703.962.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘என்னை ஏன் காங்கிரஸ் விலகச்சொன்னது எனத் தெரியவில்லை’ - சட்டசபைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பசவராஜ் ஹொரட்டி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/6uw452rz/New-Project-2026-08-07T143703.962.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளை ஏற்று, கர்நாடக சட்டசபை மேலவைத் தலைவர் பதவியை பசவராஜ் ஹொரட்டி ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்.,</p><p>“ஆளும் கட்சி நான் பதவி விலக வேண்டும் என விரும்புகிறது. முதலமைச்சர் (டி.கே.சிவகுமார்) என்னிடம் தொலைபேசியில் இரண்டு முறை பேசினார். நேற்று, அவர் என்னை நேரில் சந்தித்து, நான் பதவி விலகுமாறு கூறும்படி கட்சியின் மேலிடம் தனக்கு உத்தரவிட்டதாகத் தெரிவித்தார். </p><p>நான் பதவி விலகாவிட்டால், எனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என்றும் அவர் கூறினார்.” என தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், தாம் ‘மரியாதையுடன்’ பதவி விலக விரும்புவதாகவும், ஆகஸ்ட் 14  அன்று ராஜினாமா செய்ய இருந்ததாகவும், இந்த நிகழ்வுகளால் தான் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் சட்டசபை மேலவைத் தலைவரையும், சட்டமன்ற சபாநாயகரையும் தேர்ந்தெடுப்பது சபையின் தனிப்பட்ட உரிமை என்றும், கட்சியின் மேலவைத் தலைமையின் உரிமையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். </p>]]></content:encoded></item><item><title>மேகவெடிப்பால் கடும்பாதிப்பு: பிரதமர் மோடியை சந்தித்து நிவாரண தொகுப்பு கேட்பேன்- உமர் அப்துல்லா</title><link>https://www.maalaimalar.com/news/national/cm-omar-to-personally-take-flood-package-for-rajouri-poonch-with-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/cm-omar-to-personally-take-flood-package-for-rajouri-poonch-with-pm-modi#comments</comments><guid isPermaLink="false">6fe65dc1-f493-4274-abbd-bdd0083639cd</guid><pubDate>Fri, 07 Aug 2026 09:21:31 +0000</pubDate><atom:updated>2026-08-07T09:21:31.266Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜம்மு காஷ்மீர்,jammu kashmir,omar abdullah,உமர் அப்துல்லா,heavy rains,pm modi,பிரதமர் மோடி,கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/el0vcs0y/Omar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உமர் அப்துல்லா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/el0vcs0y/Omar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதோடு மேகவெடிப்பு (cloudbursts) ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் பலர் உயிரிழந்தனர். வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.</p><p>இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பாதிக்கப்பட்ட இடத்தை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். பின்னர், சேதமதிப்புகளை மதிப்பிட்டு, சிறப்பு நிதி வழங்கும்படி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.</p><p>வெள்ள பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம், மறுவாழ்வு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தபின், செய்தியாளர்களை சந்தித்தார்.</p><h2>அப்போது உமர் அப்துல்லா கூறியதாவது:-</h2><p>சில விஷயங்களை நம்மால் சுயமாக சமாளிக்க முடியும் என்றாலும், சீரமைப்பு பணிகளுக்கான முழுச் செலவையும் ஏற்கும் நிதித்திறன் ஜம்மு காஷ்மீரிடம் இல்லை என்பதே யதார்த்தம். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு, ஜம்மு காஷ்மீருக்காக மத்திய அரசு சுமார் 1400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத் தொகுப்பிற்கு ஒப்புதல் அளித்தது. இந்த முறையும், நாங்கள் ஒரு விரிவான திட்டத் தொகுப்பைத் தயாரித்து, மத்திய அரசின் உதவியைக் கோருவோம்.</p><h2>பிரதமரை நேரில் சென்று சந்திப்பேன்- உமர் அப்துல்லா</h2><p>வெள்ளம், திடீர் வெள்ளம் மற்றும் மேகவெடிப்பு ஆகியவை இயற்கை பேரிடர்களாகக் கருதப்படுகின்றன. எனவே, மத்திய அரசின் உதவியைக் கோருவதற்கு முன்னதாக இவை குறித்து தனியாக அறிவிப்பு ஏதும் வெளியிடத் தேவையில்லை. மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு தேவையான நிதியுதவியைக் கோரும் வகையிலான முன்மொழிவு தயாரானதும், அதை நானே நேரில் சென்று பிரதமரிடம் சமர்ப்பிப்பேன்.</p><p>ஜூலை 19-ந்தேதி கனமழை ஏற்பட்டது நிவாரணம், மறுவாழ்வு மற்றும் சீரமைப்பு ஆகிய 3 வடிவுகளில் மீட்புப் பணி நடைபெற்றது. மனித உயிரிழப்புகளை குறைப்பதே எங்களின் முதல் முன்னுரிமையாக இருந்தது. இந்த மாவட்டத்தில் நான்கு விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானதை எண்ணி வருந்துகிறோம். மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் இரவோடு இரவாக உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கக் கூடும்.</p><p>உயிரிழப்புகளை குறைப்பதே முதல் முன்னுரிமையாக இருந்தது. அதன்பிறகு, காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டறிவதன் மூலம் அவர்களை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது நாங்கள் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்புப் பணிக்கான கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறோம். இக்கட்டத்தில், தற்காலிக மற்றும் நிரந்தர நடவடிக்கைகள் மூலம் சேதமடைந்த உள்கட்டமைப்புகளும் வாழ்வாதாரங்களும் சீரமைக்கப்படும்.</p><h2>SDRF நிவாரணத் தொகையை உயர்த்த முடிவு</h2><p>தற்போதைய SDRF இழப்பீட்டு விகிதங்கள் ஏழு முதல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டவை. அதன்பிறகு, பணவீக்கம் மற்றும் கட்டுமானச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மிகவும் யதார்த்தமான இழப்பீடு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், SDRF நிவாரணத் தொகையை உயர்த்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.</p><p>இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>