<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 23 Aug 2026 17:28:36 +0000</lastBuildDate><item><title>மதுபான ஊழல் வழக்கு: ஆந்திர பிரதேச முன்னாள் அமைச்சர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/ex-andhra-minister-karumuri-nageswara-rao-arrested-in-alleged-liquor-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/ex-andhra-minister-karumuri-nageswara-rao-arrested-in-alleged-liquor-scam#comments</comments><guid isPermaLink="false">36cabb47-8162-4eb1-8976-eb0f5497191b</guid><pubDate>Sun, 23 Aug 2026 17:26:16 +0000</pubDate><atom:updated>2026-08-23T17:26:16.699Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,ஆந்திர பிரதேசம்,Liquor scam,மதுபான ஊழல்,Karumuri Nageswara Rao,கருமுரி நாகேஸ்வர ராவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/vr21rnyj/Karumuri-Nageswara-Rao.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karumuri Nageswara Rao]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/vr21rnyj/Karumuri-Nageswara-Rao.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணி அரசால் 'அரசியல் பழிவாங்கும் செயல்' எனக் கூறப்படும் <a href="https://www.maalaimalar.com/news/national">ஆந்திர பிரதேச</a> மதுபான போக்குவரத்து ஊழல் வழக்கில், அம்மாநில முன்னாள் அமைச்சர் கருமுரி வெங்கட நாகேஸ்வர ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்ச நீதிமன்றம்</a> தள்ளுபடி செய்த ஒரு மாதத்திற்கு பிறகு இந்த கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது.</p><h2>ஒப்பந்த செயல்முறை முறைகேடு:</h2><p>இந்த வழக்கு, 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் ஆந்திர பிரதேச மாநில பானங்கள் கழகத்தின் (APSBCL) மதுபான போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி செயல்முறையில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பானது.</p><p>மாநிலத்தின் முன்னாள் அமைச்சர்களான செல்லுபோயின வேணுகோபால கிருஷ்ணா, அனில் குமார் யாதவ் மற்றும் விடதலா ரஜினி ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றில், எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை குறிவைப்பதற்காக ஒரு 'பொய் வழக்கு' புனையப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><h2>மதுக்கடைகள் எண்ணிக்கை குறைப்பு:</h2><p>மூத்த தலைவரான கருமுரி நியாயமற்ற முறையில் கைது செய்யப்பட்டதாக கூறிய அவர்கள், அவரது மகன் சுனிலும் முன்னதாகவே கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியதோடு, "முழு குடும்பமும் திட்டமிட்டு குறிவைக்கப்படுகிறது" என்றும் தெரிவித்தனர்.</p><p>தங்களது கடிதத்தில், ஒய்.எஸ்.ஆர்.சி.பி. ஆட்சி காலத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை வெளிப்படையாக நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். "கள்ளச்சாராயம் கட்டுப்படுத்தப்பட்டது, மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் அரசாங்கத்தால் இயக்கப்பட்டன. அனுமதி அறைகள் மற்றும் பெல்ட் கடைகளும் ஒழிக்கப்பட்டன," என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் வழக்கில் முன்னாள் டிஜிசிஏ இயக்குநர் மற்றும் 4 விமானத்துறை நிறுவனங்கள்மீது சிபிஐ வழக்குப்பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/cbi-registers-case-against-former-dgca-director-and-four-aviation-companies-in-corruption-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/cbi-registers-case-against-former-dgca-director-and-four-aviation-companies-in-corruption-case#comments</comments><guid isPermaLink="false">869b9f9d-c7ef-4f3c-825c-ec1862ef8236</guid><pubDate>Sun, 23 Aug 2026 16:30:28 +0000</pubDate><atom:updated>2026-08-23T16:30:28.484Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,DGCA,டிஜிசிஏ,விமான நிறுவனங்கள்,aviation firms</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/fu4i3pf8/New-Project-2026-08-23T211238.212.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஊழல் வழக்கில் முன்னாள் டிஜிசிஏ இயக்குநர் மற்றும் 4 விமானத்துறை நிறுவனங்கள்மீது சிபிஐ வழக்குப்பதிவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/fu4i3pf8/New-Project-2026-08-23T211238.212.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் முன்னாள் பயிற்சி இயக்குநர் அனில் கில் மற்றும் அவருக்கு தொடர்புடைய 4 விமான நிறுவனங்கள்மீது ஊழல், அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டின்கீழ் மத்திய சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. </p><p>டிஜிசிஏவில் விமானப் பயிற்சி இயக்குநராக கேப்டன் அனில் கில் பணியாற்றியபோது, தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இயக்குநர்களாகக் கொண்டு போலி (பினாமி/ஷெல்) நிறுவனங்களை உருவாக்கி, </p><p>அதன்மூலம் பயிற்சி விமானங்களை மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்து, பின்னர் அவற்றை  எல்லைப் பாதுகாப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு அதிக விலையில் குத்தகைக்கு விட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.</p><p>இந்தக் குற்றச்சாட்டில் புளூத்ரோட் ஏரோ குளோபல் பிரைவேட் லிமிடெட், ரெட்பேர்ட் ஏவியேஷன் அகாடமி பிரைவேட் லிமிடெட், சாப்ரேஸ் கார்ப்பரேட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், சேண்ட்ஹில்ஸ் ஏவியேஷன் ஐஎஃப்எஸ்சி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p>புளூத்ரோட் ஏரோ குளோபல் பிரைவேட் லிமிடெட் இரண்டு செஸ்னா விமானங்களை முறையே ரூ.10 லட்சம் மற்றும் ரூ.37.5 லட்சத்திற்கு வாங்கியதாகவும், பின்னர் இந்த விமானங்கள், கில்லின் அதிகாரபூர்வ அனுமதியோடு 'ரெட்பேர்ட் ஏவியேஷன் அகாடமி' என்ற நிறுவனத்திற்கு அதிக விலைக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.</p><p>இதன் மூலம் 2021 முதல் 2023 வரை ரூ.2.16 கோடிக்கும் அதிகமாக குத்தகை வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 2022-ல் அனில் கில் ஒரு தேர்வுக் குழுவிற்குத் தலைமை தாங்கி, தனது உறவினரான விகாஸ் நைன் என்பவரை துணைத் தலைமை பறக்கும் பயிற்றுவிப்பாளராக நியமித்ததாகவும், அவர் பின்னர் 'ரெட்பேர்ட் ஏவியேஷன் அகாடமி'யில் மாதத்திற்கு சுமார் ரூ.6.5 லட்சம் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><p>கடந்தாண்டு ஏப்ரல் 7ம் தேதியன்று பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, நேற்று முன்தினம்தான் இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>“2035-க்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும்” - இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-will-set-up-its-own-space-station-by-2035-isro-chairman-v-narayanan</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-will-set-up-its-own-space-station-by-2035-isro-chairman-v-narayanan#comments</comments><guid isPermaLink="false">5c8e2d8f-1260-48ff-9d59-93e12b8be9b1</guid><pubDate>Sun, 23 Aug 2026 15:36:01 +0000</pubDate><atom:updated>2026-08-23T15:36:01.251Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,இஸ்ரோ,V Narayanan,Bharatiya Antariksha Station,பாரதிய அந்தரிக்ஷா நிலையம்,வி நாராயணன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/tarixyr3/New-Project-2026-08-23T210342.780.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “2035-க்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும்” - இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/tarixyr3/New-Project-2026-08-23T210342.780.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2035 ஆம் ஆண்டிற்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.</p><p>அகமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது தேசிய விண்வெளி தினக் கொண்டாட்டத்தில் பேசிய நாராயணன், இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தின் முதல் தொகுதிக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.</p><p>கொண்டாட்ட விழாவில் பேசிய அவர்.,</p><p>“இன்று, நாம் மூன்றாவது தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடுகிறோம். இதன் கருப்பொருள் மிகவும் முக்கியமானது: விண்வெளித் துறையில் புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கிய இலட்சியம். </p><p>இந்தியா 64 ஆண்டுகளுக்கு முன்பு தனது விண்வெளித் திட்டத்தைத் தொடங்கியது. இன்று நாம் புவி கண்காணிப்பு, தொலை உணர்வு, தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு, தொலைதூரக் கல்வி, பேரிடர் எச்சரிக்கை மற்றும் தணிப்பு, ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பை உறுதி செய்தல், வழிசெலுத்தல், நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தடமறிதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட துறைகளில் சாமானிய மக்களுக்குச் சேவை செய்து வருகிறோம்.</p><p>பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், பல திட்டங்கள் வரிசையில் உள்ளன. நாங்கள் ககன்யான் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். மேலும், நமது சொந்த விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தை நிறுவும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளோம்.</p><p>முதல்கட்ட பணிகளுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது, 2035-ஆம் ஆண்டுக்குள் விண்வெளி நிலையத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பரஸ்பர சம்மதத்துடன் வயது வந்தோர் இணைந்து வாழும் லிவ்-இன் உறவு திருமணத்திற்கு ஒப்பானது - டெல்லி உயர் நீதிமன்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/a-live-in-relationship-between-consenting-adults-is-akin-to-marriage-delhi-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/a-live-in-relationship-between-consenting-adults-is-akin-to-marriage-delhi-high-court#comments</comments><guid isPermaLink="false">c31ffb25-e05e-4a0f-8283-3e78b604dc5f</guid><pubDate>Sun, 23 Aug 2026 15:19:02 +0000</pubDate><atom:updated>2026-08-23T15:19:02.090Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi High Court,டெல்லி உயர் நீதிமன்றம்,Live-In Relationship,லிவ் இன் உறவுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/86og87a0/New-Project-2026-08-23T204809.876.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பரஸ்பர சம்மதத்துடன் வயது வந்தோர் இணைந்து வாழும் லிவ்-இன் உறவு திருமணத்திற்கு ஒப்பானது - டெல்லி உயர் நீதிமன்றம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/86og87a0/New-Project-2026-08-23T204809.876.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரஸ்பர சம்மதத்துடன் வயது வந்தோர் இருவர் இணைந்து வாழும் லிவ்-இன் உறவு திருமணத்திற்கு ஒப்பானது என்றும், பெற்றோர்களோ, உறவினர்களோ அவர்களின் முடிவில் தலையிடக் கூடாது என்றும், அவர்களுக்கு மிரட்டல் விடுக்கக்கூடாது எனவும் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>பெண்ணின் குடும்பத்தினரால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி லிவ்-இன் உறவில் இருக்கும் இளம் ஜோடி பாதுகாப்புக் கோரி   தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கி, வயது வந்தவர்கள் என்ற வகையில் அந்தத் தம்பதியினருக்கு, யாருடைய தலையீடும் இன்றி, தாங்கள் விரும்பும் துணையைத் தேர்ந்தெடுத்து அவருடன் வசிப்பதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு என கூறியுள்ளது.</p><p>“மனுதாரர்கள் தாங்களாகவே விரும்பி, பரஸ்பர சம்மதத்துடன் மற்றும் மிகுந்த பொறுப்புடன் சேர்ந்து வாழத் தேர்ந்தெடுத்துள்ளதால், அவர்களுடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என யாருக்கும், அவர்களின் இந்தத் தேர்வுக்கு எந்தத் தடையையும் ஏற்படுத்தவோ அல்லது அதில் தலையிடவோ உரிமையோ அதிகாரமோ இல்லை. </p><p>அதிலும் குறிப்பாக அவர்களின் உயிருக்கோ அல்லது சுதந்திரத்திற்கோ அச்சுறுத்தல் விடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை,” என்று நீதிமன்றம் கூறியது.</p><p>மனுதாரர்கள் சேர்ந்து வாழ்ந்தாலும், சட்டப்படி ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்ளவில்லை; ஆயினும், சம்மதம் தெரிவித்த வயது வந்தவர்கள் என்பதால், இது திருமணத்தைப் போன்றதே.” எனக் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>3 நாடுகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய எனக்கே இந்த நிலைமை என்றால்.. SIR செயல்பாடு குறித்து முன்னாள் தூதர் வேதனை</title><link>https://www.maalaimalar.com/news/national/ex-envoy-citizenship-row-navdeep-suri-faces-hurdles-proving-indian-nationality-in-punjab-sir-process</link><comments>https://www.maalaimalar.com/news/national/ex-envoy-citizenship-row-navdeep-suri-faces-hurdles-proving-indian-nationality-in-punjab-sir-process#comments</comments><guid isPermaLink="false">65453b23-f484-4231-b299-b36f03c394ad</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:43:29 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:43:29.627Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Election Commission,Sir,தேர்தல் ஆணையம்,எஸ்ஐஆர்,வாக்காளர் பட்டியல் திருத்தம்,Voter List Revision</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/vxzmsq1e/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நவ்தீப் சூரி]]></media:title><media:description type="html"><![CDATA[ நவ்தீப் சூரி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/vxzmsq1e/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/election-commission-sir-phase-3-40-crore-voters-under-review-518-crore-names-deleted-sparking-controversy">3 ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள்</a> (SIR) பஞ்சாப், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. </p><p>இந்நிலையில் பஞ்சாபில் எஸ்ஐஆர் நடவடிக்கையில் தனது இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பதில் தனக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இந்தியாவின் முன்னாள் தூதரான நவ்தீப் சூரி வேதனை தெரிவித்துள்ளார்.  </p><h2>பதிவு</h2><p>இதுகுறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவு இல்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>அவரது பதிவில், " பஞ்சாபில் எஸ்ஐஆர் செயல்முறையில் வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் எனது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை சமர்ப்பித்தேன்.</p><p>அப்போது அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது.</p><p>பின்னர், தன்னார்வலர் ஒருவரிடமிருந்து வந்த தகவலில், அவரது விவரங்கள் 2003ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் பதிவுகளுடன் பொருந்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் பேசிய போது, இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறினர்.</p> <p>2003 ஆம் ஆண்டில் பணி நிமித்தமாக இந்தியாவில் இல்லை எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, குடியுரிமைக்கான சான்றாகக் கடவுச்சீட்டை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் கேட்டனர்.</p><p>வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதாரைத் தவிர வேறு ஆவணங்கள் என்னிடம் உள்ளன.</p><p>ஆனால் ஒன்றை மட்டும் கேட்கத் தோன்றுகிறது. </p><p>மூன்று நாடுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிறகும், எனது குடியுரிமையை நிரூபிக்க நான் போராட வேண்டி இருந்தால், நாட்டின் சாதாரணக் குடிமகனின் நிலை என்னவாகும்? இதுதான் 'வாழ்வை எளிதாக்கும்' முறையா?" என்று பதிவிட்டுள்ளார்.</p> <h2>விதி</h2><p>எஸ்ஐஆர் விதிகளின்படி, 2002 அல்லது 2003ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் இல்லாத வாக்காளர்கள், அப்போதைய பழைய பதிவுகளுடன் தங்களை இணைத்துக் காட்டும் ஆவணங்களை வழங்க வேண்டும்.</p><p>முன்னதாக தேர்தல் ஆணையம் 11 ஆவணங்களை மட்டுமே அனுமதித்த நிலையில், உச்ச நீதிமன்ற கெடுபிடிக்கு பின்னர் ஆதார் அட்டையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>நிஜவாழ்க்கையின் ‘பேட்மேன்..!- ராகுல்காந்தியை புகழ்ந்து இளைஞர் காங்கிரசார் போஸ்டர் </title><link>https://www.maalaimalar.com/news/national/real-life-batman-youth-congress-praises-rahul-gandhi-poster</link><comments>https://www.maalaimalar.com/news/national/real-life-batman-youth-congress-praises-rahul-gandhi-poster#comments</comments><guid isPermaLink="false">8ebe1bb7-b448-4a89-9523-2c04eddc798a</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:12:22 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:12:22.198Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,Batman,பேட்மேன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/h7x3rqyi/Rahul.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Congress MP Rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/h7x3rqyi/Rahul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் எம்எபி ராகுல் காந்தியை பாராட்டி இளைஞர் காங்கிரசார் நிஜ வாழ்க்கையின் ‘பேட்மேன்’ என்று அவரை புகழ்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு போஸ்டர் ஒட்டியுள்ளது.</p><p>டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது போலீசார் பெல்லட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினார்கள். </p><h2>ராகுல்காந்தி</h2><p>இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞர் சாஹில் லோச்சவ் வக்கீலுடன் சென்று புகார் அளித்தும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி டெல்லி பாராளுமன்ற வீதியில் உள்ள துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு பாதிக்கப்பட்ட இளைஞருடன் சென்று எப்.ஐ.ஆர். பதிவு செய்து அந்த நகலை அளிக்குமாறு வலியுறுத்தினார். </p><p>அவரது கோரிக்கை ஏற்கப்படாததை தொடர்ந்து துணை கமிஷனர் அலுவலகம் முன்பு ராகுல் காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். </p><h2>பாராட்டி போஸ்டர்</h2><p>இந்தநிலையில் ராகுல்காந்தியை பாராட்டி இளைஞர் காங்கிரசார் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர். நிஜ வாழ்க்கையின் ‘பேட்மேன்’ என்று அவரை புகழ்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.</p><p>ராகுல்காந்தியின் படமும், ‘பேட்மேன்’ படமும் அதில் இடம் பெற்றுள்ளது. அமைதியான பாதுகாவலர், டெல்லியின் பாதுகாவலன் என்ற வாசகம் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. ராகுலின் செயலை பாராட்டி இந்த போஸ்டரை அச்ச டித்து வெளியிட்டு உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அலுவலகங்களில் அபிஜித் தீப்கேவின் படத்தை வையுங்கள் - ஜென் இசட்களை கவரும் பாஜகவின் முயற்சி குறித்து சஞ்சய் ராவத்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjps-gen-z-outreach-sanjay-raut-mocks-fadnavis-credits-abhijit-deepkewal-for-partys-gen-z-focus</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjps-gen-z-outreach-sanjay-raut-mocks-fadnavis-credits-abhijit-deepkewal-for-partys-gen-z-focus#comments</comments><guid isPermaLink="false">3d0c7899-428f-455c-918d-84d1624cb27d</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:06:59 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:06:59.063Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜென் இசட்,Gen z,சஞ்சய் ராவத்,Sanjay Raut,அபிஜித் தீப்கே,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/cxn4pwea/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே, சஞ்சய் ராவத்]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே, சஞ்சய் ராவத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/cxn4pwea/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் <a href="https://www.maalaimalar.com/news/national/bjp-launches-gen-z-outreach-new-high-level-team-formed-under-modi-and-nitin-naveen-to-woo-youth">ஜென் இசட் </a>தலைமுறையினரைக் கவர எடுத்து வரும்  பகிரத பிரயர்த்தனத்தை உத்தவ் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கேலி செய்துள்ளார். </p><p>இந்தியாவில் ஜென் இசட் என்ற ஒரு இளம் தலைமுறை இருப்பதே கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் <a href="https://www.maalaimalar.com/news/national/maharashtra-school-fir-cjp-founder-booked-for-unauthorized-entry-and-questioning-students-in-government-school">அபிஜீத் தீப்கே</a>வால்தான் பாஜகவுக்கு தெரியவந்தது என்றும் அதற்கு அவர்கள் அவருக்குத்தான் நன்றி கடன் பட்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>நாக்பூரில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 'மந்தன் 4 யுவா' என்ற இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னணியில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத்,</p><p>"பாஜக தலைவர்கள் தங்கள் அலுவலகங்களில் அபிஜீத் தீப்கேயின் புகைப்படத்தைத் தொங்கவிட வேண்டும். ஏனென்றால், அவரால்தான் 'ஜென் இசட்' என்றொரு பிரிவு நாட்டிலிருப்பதே அவர்களுக்கு நினைவுக்கு வந்துள்ளது" என தெரிவித்தார்.</p><h2>தேவேந்திர பட்னாவிஸ்</h2><p>முன்னதாக நாக்பூர் இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ராகுல் காந்தியின் நிகழ்ச்சிகள் வெறும் திட்டமிடப்பட்ட ஈவென்ட் மட்டுமே எனக் விமர்சித்துள்ளார்.</p><p>"எங்கள் நிகழ்வுக்கு வந்த இளைஞர்கள் அனைவரும் எந்தப் பலனுமின்றி தன்னிச்சையாக, இயல்பாக வந்தவர்கள். ஆனால் ராகுல் காந்தியின் நிகழ்ச்சிக்கு காசு கொடுத்து ஆட்களைக் கூட்டியதாகத் தகவல்கள் வருகின்றன</p><p>ராகுல் காந்தி மேடைகளில் பெண்கள் அதிகாரம் பெறுவது பற்றிப் பேசினாலும், வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தவர்" என்று பட்னாவிஸ் சாடினார்.</p> <p>இதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், "ராகுல் காந்தியின் மாணவர் கூட்டம் காசு கொடுத்து கூட்டப்பட்டது என்றால், மகாராஷ்டிர சட்டசபை தேர்தலுக்கு முன்பாக 'முக்கியமந்திரி லட்கி பாகின்' திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்பட்டதை என்னவென்று சொல்வது?" எனக் கேள்வி எழுப்பினார்.</p><p>புனேவில் அண்மையில் ராகுல் காந்தி மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>முதலீடுகளை ஈர்க்க பியூஷ் கோயல் ஜப்பான் பயணம்</title><link>https://www.maalaimalar.com/news/national/piyush-goyal-japan-visit-to-attract-investments</link><comments>https://www.maalaimalar.com/news/national/piyush-goyal-japan-visit-to-attract-investments#comments</comments><guid isPermaLink="false">5465b8cb-0311-48dc-bb5a-1add2bad6b80</guid><pubDate>Sun, 23 Aug 2026 13:28:25 +0000</pubDate><atom:updated>2026-08-23T13:28:25.262Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பியூஷ் கோயல்,piyush goyal,japan,Investment,முதலீடுகள்,ஜப்பான் பயணம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/axluddid/Piyush.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Piyush Goal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/axluddid/Piyush.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 4 நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் செல்கிறார். ஆகஸ்டு 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நான்கு நாட்களில் ஜப்பானின் டோக்கியோ, நகோயா, ஒசாகா நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.</p><p>ஜப்பான் தொழில்துறை அமைச்சர், முன்னணி தொழிலதிபர்கள், ஜப்பான் வணிக கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பியூஷ் ஆலோசிக்க உள்ளார்.</p><p>உற்பத்தி, குறைக்கடத்திகள் (செமிகண்டக்டர்), தூய்மையான எரிசக்தி, எஃகு, வாகனத் துறை, நிதிச் சேவைகள், சுகாதாரம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான வர்த்தகப் பிரதிநிதிகள் கொண்ட குழு அவருடன் ஜப்பான் செல்கிறது.</p><p>அத்துடன், 1,500-க்கும் மேற்பட்ட முன்னணி ஜப்பானிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உச்ச அமைப்பான கெய்டன்ரென்(ஜப்பான் வர்த்தகக் கூட்டமைப்பு) சார்பில் நடத்தப்படும் வட்டமேசை மாநாட்டில் பியூஷ் கோயல் பங்கேற்கவுள்ளார்.</p><p>ஜப்பான் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அகசாவா ரியோசேவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் பியூஷ் கோயல், ஜப்பானிய அரசு, நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களையும் சந்திக்கிறார். மேலும், ஜப்பானில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் அவர் கலந்துரையாடுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவிகளுடன் குளித்த வீடியோ வைரல்.. அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் </title><link>https://www.maalaimalar.com/news/national/video-of-bathing-with-female-students-goes-viral-govt-school-teacher-suspended</link><comments>https://www.maalaimalar.com/news/national/video-of-bathing-with-female-students-goes-viral-govt-school-teacher-suspended#comments</comments><guid isPermaLink="false">5d363a18-d5fb-4760-add5-19d7c97374c4</guid><pubDate>Sun, 23 Aug 2026 13:28:04 +0000</pubDate><atom:updated>2026-08-23T13:28:04.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,government school,தலைமை ஆசிரியர்,Headmaster,ராஜஸ்தான்,அரசுப்பள்ளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/6qcoluxy/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சஸ்பெண்டு]]></media:title><media:description type="html"><![CDATA[ சஸ்பெண்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/6qcoluxy/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தானில் மாணவிகளுடன் அணையில் ஆடையின்றி குளித்த விவகாரத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national/maharashtra-school-fir-cjp-founder-booked-for-unauthorized-entry-and-questioning-students-in-government-school">அரசு பள்ளி</a> தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><h2>அரசுப் பள்ளி </h2><p>ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் தானாகாசி பகுதியில் ரவுபாவி படக் சப்ளி அரசு மேல்நிலைப் பள்ளி  அமைந்துள்ளது. இதன் தலைமை ஆசிரியராக  லால் சந்த் மீனா உள்ளார். </p><p>கடந்த ஆகஸ்ட் ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 200 மாணவ மாணவிகளை 2 கி.மீ தொலைவில் உள்ள படாஜ் அணைக்கு காட்டுப்பாதை வழியாக தலைமை ஆசிரியர் அழைத்துச் சென்றுள்ளார்.  </p> <h2>சுற்றுலா என்ற பெயரில்</h2><p>சுற்றுலா என்ற பெயரில் மாணவ மாணவிகளை அவர் கூட்டிச் சென்ற நிலையில் இதன்போது மாணவிகளுடன் பாதுகாப்புக்கு எந்த ஒரு பெண் ஆசிரியரும் உடன் செல்லவில்லை.</p><p>அணையில் 11 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்த நிலையில், தலைமை ஆசிரியர் மேலாடையின்றி மாணவிகளுடன் நீரில் குளித்துள்ளார். </p><p>மேலும் நீச்சல் கற்றுத்தருவதாகக் கூறி சில மாணவிகளின் கைகளை தூக்கியதாகவும் கூறப்படுகிறது.</p><p>மாணவர்கள் சிலர் இந்த காட்சிகளை தங்கள் மொபைலில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது காட்டுத்தீ போல் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.</p><h2>மக்கள் கொந்தளிப்பு</h2><p>வீடியோ வைரலானதை அடுத்து, கிராம மக்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டுத் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.</p><p>படாஜ் அணையின் கரை வெறும் 5 முதல் 6 அடி மட்டுமே அகலமுடையது என்றும், ஆபத்தான பகுதி என்பதால் கடந்த நான்கு ஆண்டுகளாக அங்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும், அப்பகுதியில் புலிகள் நடமாட்டமும் உள்ள நிலையில், முறையான பாதுகாப்பு உடைகளோ அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளோ இன்றி, நீச்சல் தெரியாத மாணவர்களை அங்கு அழைத்துச் சென்றது ஏன் என கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p> <h2>நடவ்டிக்கை</h2><p>சம்பவம் தொடர்பாகத் தானாகாசி காவல்துறையினர் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டு, தலைமை ஆசிரியரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.</p><p>வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் சூழ்நிலைகள் குறித்துப் பொலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.</p> <p>இதனிடையே, தலைமை ஆசிரியர் லால் சந்த் மீனாவின் இந்த செயல் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளுக்கு முற்றிலும் எதிரானது எனக் கூறி, கல்வி இயக்குனரகம் அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.</p><p>மேலும் அவர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காணாமல் போகவில்லை - கர்நாடகா ஐஏஎஸ் அதிகாரி ஞானேந்திர குமார் விவகாரத்தில் அமைச்சர் பிரியங்க் கார்கே விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-ias-officer-gnanendra-kumar-not-missing-priyank-kharge-explains-controversy</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-ias-officer-gnanendra-kumar-not-missing-priyank-kharge-explains-controversy#comments</comments><guid isPermaLink="false">3ff39c4f-e3f4-41be-b8c5-ea1d56cf3ac3</guid><pubDate>Sun, 23 Aug 2026 12:59:45 +0000</pubDate><atom:updated>2026-08-23T12:59:45.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Priyank Kharge,பிரியங்க் கார்கே,Gyanendra Kumar Gangwar,ஞானேந்திர குமார் காங்வார்,Karnataka IAS Officer,KPSC ED Raid,FakeNews Busted</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/xu1na94a/Gyanendra-Kumar-Gangwar" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gyanendra Kumar Gangwar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/xu1na94a/Gyanendra-Kumar-Gangwar?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்புகொள்ள முடியாமல் 'காணாமல் போய்விட்டார்' என்று ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட கர்நாடக கேடர் <a href="https://www.maalaimalar.com/topic/ias-officer">ஐஏஎஸ் அதிகாரி</a> ஞானேந்திரகுமார் காங்வார், தனது தந்தையின் அவசர மருத்துவக் காரணங்களுக்காக உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளதாக கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>கிளம்பிய வதந்திகள்</strong></h2><p>2016-ஆம் ஆண்டு பேட்ச் <a href="https://www.maalaimalar.com/topic/ias-officer">ஐஏஎஸ் அதிகாரி</a>யான ஞானேந்திர குமார், தற்போது <a href="https://www.maalaimalar.com/topic/karnataka">கர்நாடக</a> தொழில் மற்றும் வர்த்தகத் துரையின் MSME இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். </p><p>கடந்த வியாழக்கிழமை முதல் இவரது அதிகாரபூர்வ அரசு தொலைபேசி எண் செயலில் இல்லை அதனால் இவரை தொடர்புகொள்ள முடியவில்லை.</p><p>பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வரை அவர் சென்றதும், அங்கிருந்து டெல்லிக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. </p><p>அவர் கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வுக்கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றியவர் என்பதால், அங்கு நடந்த ED சோதனைகளுக்குப் பயந்து அவர் தலைமறைவாகிவிட்டார் என செய்திகள் பரவின.</p><h2><strong>அமைச்சர் விளக்கம்</strong></h2><p>இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரியங்க் கார்கே, "அதிகாரி <a href="https://www.maalaimalar.com/topic/ias-officer">ஞானேந்திர குமார்</a> எங்கும் செல்லவில்லை. இது வெறும் தகவல் தொடர்பு இடைவெளியால் ஏற்பட்ட குழப்பம். அவரது தந்தை ஒரு இதய நோயாளி. </p><p>திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அதிகாரி உடனடியாகச் சொந்த ஊருக்குக் கிளம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்றார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">There have been reports that an IAS officer in Karnataka has gone missing.<br><br>The officer concerned has since communicated with the Government and clarified that, due to a family emergency, he had sought leave and had to travel urgently to his hometown.<br><br>During this period, he was…</p>&mdash; Priyank Kharge / ಪ್ರಿಯಾಂಕ್ ಖರ್ಗೆ (@PriyankKharge) <a href="https://x.com/PriyankKharge/status/2091124522309341691?ref_src=twsrc%5Etfw">August 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>விடுப்பு கடிதம்</strong></h2><p>அதிகாரி ஞானேந்திர குமார் அவசரமாகக் கிளம்புவதற்கு முன், தனது தவிர்க்க முடியாத சூழ்நிலையைக் குறிப்பிட்டு ஒரு வார கால விடுப்பு வேண்டி கையால் எழுதப்பட்ட கடிதத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார். </p><p>ஆனால், அதற்கு முந்தைய நாள் அரசு விடுமுறை என்பதால், அரசு அலுவலகங்கள் முழுமையாகச் செயல்படவில்லை. இதனால் அந்த விடுப்புக் கடிதம் உடனடியாக நடைமுறைக்கு வரவில்லை என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><h2><strong>நான் காணாமல் போகவில்லை</strong></h2><p>அமைச்சர் பிரியங்க் கார்கே அந்த அதிகாரியைத் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது <a href="https://www.maalaimalar.com/topic/ias-officer">அதிகாரி ஞானேந்திர குமார்</a>, "தந்தையின் இக்கட்டான சூழ்நிலை மற்றும் பயணத்தில் இருந்ததால் என்னைத் தொடர்புகொள்ள முடியவில்லை. </p><p>இன்னும் சில நாட்களில் பெங்களூரு திரும்பி விடுப்புக்கான அரசு நடைமுறைகளை முடிப்பேன். என் மீது தற்போது எந்தப் புகாரும் இல்லை. அப்படியே ஏதேனும் முகமைகள் விசாரணை நடத்த உத்தரவிட்டால், அதைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.</p><p>இதன் மூலம் கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி திடீரென காணாமல் போனதாக எழுந்த அத்தனை சர்ச்சைகளுக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>8.23 லட்சம்  மத்திய அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.. RTI-யில் அம்பலம்</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-vacancies-over-823-lakh-posts-lying-vacant-across-ministries-revealed-by-rti-data</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-vacancies-over-823-lakh-posts-lying-vacant-across-ministries-revealed-by-rti-data#comments</comments><guid isPermaLink="false">35d1aaa0-b566-4e52-bf1e-3f7d1686eae7</guid><pubDate>Sun, 23 Aug 2026 12:50:25 +0000</pubDate><atom:updated>2026-08-23T12:50:25.343Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Unemployment,அரசு வேலை,government job,ஆர்டிஐ,rti,வேலையின்மை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/b7jgiwqg/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ RTI]]></media:title><media:description type="html"><![CDATA[ RTI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/b7jgiwqg/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/news/national/india-youth-jobs-crisis-rahul-gandhi-warns-on-rising-education-costs-unemployment-and-ai-risks">வேலையில்லாத் திண்டாட்டம்</a> நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மத்திய அரசின்  8.23 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக ஆர்டிஐ மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. </p><p>தகவல் அறியும் உரிமைச் சட்டமான ஆர்டிஐயின் கீழ் சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சம் தந்துள்ள பதிலில் இதன் தரவுகள் இடம்பெற்றுள்ளன. </p> <h2>தரவுகள்</h2><p>தரவுகளின்படி, நாடு முழுவதும் வெவ்வேறு துறைகளை சேர்த்து மத்திய அரசின் கீழ் 39 லட்சத்து 23 ஆயிரத்து 212 உள்ளன. ஆனால் மார்ச் 1, 2024 நிலவரப்படி 30 லட்சத்துக்கு 99 ஆயிரத்து 556 ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.</p><p>இதன் மூலம் 8 லட்சத்துக்கு 23 ஆயிரத்து 656 பணியிடங்கள், அதாவது சுமார் 21 சதவீதம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது.</p><p>ஒவ்வொரு 5 பணியிடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.</p> <h2>பாதுகாப்பு, ரெயில்வே, உள்துறை</h2><p>நாட்டின் மிகப்பெரிய துறையான பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ராணுவ வீரர்கள் அல்லாத சிவிலியன் பணியிடங்களில் 5,56,248 இடங்களில் 2,42,243 இடங்கள் (43.5%) காலியாக உள்ளன.</p><p>அதேபோல, இந்திய ரெயில்வேயில் 14,79,701 பணியிடங்களில் 2,40,125 இடங்கள் காலியாகக் கிடக்கின்றன.</p><p>இது நாட்டின் மொத்த காலியிடங்களில் 30 சதவீதமாகும். பாதுகாப்பு மற்றும் ரெயில்வே ஆகிய இவ்விரு துறைகளில் மட்டுமே 4.82 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.</p><p>மத்திய உள்துறை அமைச்சகத்தில், 11,18,233 அனுமதிக்கப்பட்ட இடங்களில் 1,10,885 பணியிடங்கள் காலியாக உள்ளன.</p><p>பாதுகாப்புத் துறை, ரெயில்வே மற்றும் உள்துறை ஆகிய மூன்றிலும் மட்டுமே சேர்த்து 5.93 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.</p><h2>பிற துறைகள்</h2><p>வருவாய்த் துறையில் 1,79,374 இடங்களில் 69,662 இடங்கள் (38.8 சதவீதம் ) காலியாக உள்ளன. அஞ்சல் துறையில் 2,53,124 இடங்களில் 61,546 இடங்கள் (24.3 சதவீதம்) காலியாக உள்ளன.</p><p>அணுசக்தித் துறையில் 37,250 இடங்களில் 10,234 இடங்கள் (27.47 சதவீதம்) காலியாக உள்ளன. விண்வெளித் துறையான இஸ்ரோவில் 19,200 இடங்களில் 4,126 இடங்கள் (21.48 சதவீதம்) காலியாக உள்ளன.</p><p>இதுபோல வெவ்வேறு துறைகளுக்கான தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் காலியிடங்கள் சேர்க்கப்படவில்லை.</p> <h2>கவலை</h2><p>இந்த ஆர்டிஐ தகவலைப் பெற்ற சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் கூறுகையில், "வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருக்கும் இந்தச் சூழலில், இத்தனை லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பது கவலையளிக்கிறது.</p><p>அரசு வேலை என்பது இளைஞர்களின் உரிமை. மத்திய அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.</p><p>இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு, அரசுத் துறைகளின் செயல்பாட்டுத் திறனையும் அதிகரிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கேடில் விழுச்செல்வம்.. 64 வயதில் எம்.டெக் தேர்ச்சி.. IIM-இல் சேர முயற்சி - சாதித்த முதியவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/inspiring-lifelong-learning-64-year-old-up-man-completes-mtech-while-working-and-rejoins-government-service</link><comments>https://www.maalaimalar.com/news/national/inspiring-lifelong-learning-64-year-old-up-man-completes-mtech-while-working-and-rejoins-government-service#comments</comments><guid isPermaLink="false">e109727f-c6c9-4e1e-aacb-14ad7b53e2f2</guid><pubDate>Sun, 23 Aug 2026 12:07:33 +0000</pubDate><atom:updated>2026-08-23T12:07:33.649Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,iim,உத்தரப் பிரதேசம்,ஐஐஎம்,எம். டெக்,M.Tech</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/5vha4boa/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  கோப்புப் படம்]]></media:title><media:description type="html"><![CDATA[  கோப்புப் படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/5vha4boa/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"கேடில் விழுச்செல்வம்  கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றவை யவை" - கல்வியை விட சிறந்த செல்வம் எதுவும் கிடையாது என்பது வள்ளுவர் வாக்கு </p><p>அவ்வகையில் வாழ்க்கையை வாழ்ந்து முடிந்துவிட்டதாக பலரும் ஓய்வெடுக்கும் வயதில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேசத்தை </a>சேர்ந்த முதியவர்கல்வியை தலைமேற்கொண்டுள்ளார். </p> <h2>ஒய்வின்றி உழைப்பு </h2><p>உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா தனது 64 வயது தந்தையின் சாதனையை எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். </p><p>அவரது 64 வயது தந்தை கடந்த 2022 இல் கடந்த அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இருப்பினும் வீட்டில் சும்மா இருக்க விரும்பாமல் உத்தரப் பிரதேசத்தின் மாநகராட்சிகளைக் கண்காணிக்கும் ஒழுங்குமுறை அமைப்பின் துணை தலைமை செயல் அதிகாரியாக மீண்டும் பணியில் இணைந்துள்ளார். </p> <h2>பணிக்கு இடையில் படிப்பு   </h2><p>பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று கள ஆய்வுகளை மேற்கொள்வது இவரது பணி என்பதால், ஒவ்வொரு வாரமும் சுமார் 1,000 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய வேண்டியிருந்தது. </p><p>பயணங்களின் இடைப்பட்ட நேரத்தை பயன்படுத்தி படித்துள்ளார். கடந்த மாதம் தனது எம் டெக் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தார். </p><p>வகுப்பில் பெரும்பாலான மாணவர்கள் இவருடைய வயதில் பாதியளவு இருந்தபோதிலும், இவர் சிறந்த 10 மாணவர்களுள் ஒருவராகத் தேர்ச்சி பெற்றுள்ளார். </p><p>64 வயதில் எம்டெக் பட்டம் பெற்றதோடு நிறுத்திவிடாமல், தனது அடுத்த இலக்காக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (IIM) லக்னோவில் உள்ள Executive Education படிப்பிற்கு விண்ணப்பிக்க முடிவெடுத்துள்ளார். </p> <h2>மகன் நெகிழ்ச்சி</h2><p>மகன் ஷஷாங்க் கூறுகையில், "வாழ்க்கையின் ஓட்டத்தில் தங்களை காலத்திற்கு ஏற்ப புதுப்பித்து கொள்வதை பெரும்பாலானோர் மறந்துவிடுகிறார்கள். </p><p>ஆனால், எனது தந்தை பணி மற்றும் வயதுச் சுமையை காரணம் காட்டாமல் படிப்புக்கு எப்போதும் முதலிடம் கொடுத்தார். </p><p>அவருடைய மகனான நான் சுய முன்னேற்றத்திற்கான ஊக்கத்தை வெளியில் தேடத் தேவையில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். </p><p>இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பலருக்கும் தங்களின் முதிய வயதிலும் கல்வி கற்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குருவாயூர் கோவிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்</title><link>https://www.maalaimalar.com/news/national/437-marriages-in-a-single-day-at-guruvayur-temple</link><comments>https://www.maalaimalar.com/news/national/437-marriages-in-a-single-day-at-guruvayur-temple#comments</comments><guid isPermaLink="false">98240968-1645-4a78-8a8e-1af486afa645</guid><pubDate>Sun, 23 Aug 2026 12:06:30 +0000</pubDate><atom:updated>2026-08-23T12:06:30.520Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,marriage,கல்யாணம்,குருவாயூர்,Guruvayur</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/zgfup8v4/guruvayur.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guruvayur temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/zgfup8v4/guruvayur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலம் திருச்சூரில் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.</p><p>மாநில மக்கள் மட்டுமின்றி, வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட மக்களும் இங்கு வந்து தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலுக்கு வந்து ஏராளமானோர் திருமணம் செய்வதும் வாடிக்கை.</p><p>அதுவும் ஆவணி மாதங்களில் வரும் முகூர்த்த நாட்கள் இங்கு பிரசித்தம் பெற்றவை. மேலும் மலையாள மாதமான சிங்கத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையாக இன்று அமைந்துள்ளது.</p><p>இந்த நாளில் குருவாயூரில் திருமணங்கள் நடத்தப்படுவது சிறப்பானதாக இருக்கும் என பக்தர்கள் கருதுகின்றனர். இதனாலேயே இந்த நாளில் குருவாயூர் கோவிலில் திருமணம் செய்ய ஏராளமான ஜோடிகள் வருவதுண்டு.</p><p>அதன்படி இந்த ஆண்டும் ஆவணி மாத முதல் முகூர்த்த நாளான இன்று திருமணம் செய்ய ஏராளமான ஜோடிகள் முன்பதிவு செய்திருந்தனர்.   நேற்று வரை 444 ஜோடிகள் திருமணத்திற்கு முன்பதிவு செய்திருந்த நிலையில் இன்று காலையும் முன்பதிவு செய்யாமல் ஏராளமான திருமண ஜோடிகள் கோவிலுக்கு வந்திருந்தனர்.</p><p>ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த ஜோடிகள், அவர்களது உறவினர்கள் என பலரும் கோவிலுக்கு வந்ததால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயிலில் அதிகாலை 4.10 மணிக்கு திருமணங்கள் தொடங்கியது.</p><p>முதல் 2 மணிநேரத்திலேயே 137 திருமணங்கள் நடத்தப்பட்டன. திருமணங்கள் நடத்தப்படுவதற்காக கோவில் முற்றத்தில் 6 மண்டபங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த மண்டபங்களில் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 60-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தப்பட்டன.</p><p>தொடர்ந்து வைபவங்கள் நடைபெற்று வந்ததால் கோவிலில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இதுதொடர்பாக குருவாயூர் கோவில் தேவஸ்தான தலைவர் கோபிநாத் கூறுகையில்,"குருவாயூரில் இன்று 437 திரு மணங்கள் நடைபெற்றுள்ளன.</p><p>குருவாயூர் கோவில் வரலாற்றில் முதல்முறையாக இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் தற்போது தான் நடை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>கோயிலில் கூட்ட நெரிசலைத தவிர்ப்ப தற்காக, மணமக்களுடன் வருபவர்களின் எண்ணிக்கையை 24-ஆக கட்டுப்படுத்தப பட்டுள்ளது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பெங்களூரு உணவகத்தில் பெயருக்கு பதிலாக ‘குண்டான நபர்’ என அச்சிடப்பட்ட பில்: ஊழியர் மீது நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/bengaluru-restaurant-bill-labels-customer-fat-man-instead-of-name-employee-punished</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengaluru-restaurant-bill-labels-customer-fat-man-instead-of-name-employee-punished#comments</comments><guid isPermaLink="false">996822a8-7569-4264-bde3-b56e30de211f</guid><pubDate>Sun, 23 Aug 2026 10:08:05 +0000</pubDate><atom:updated>2026-08-23T10:08:05.072Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bengaluru restaurant,பெங்களூரு உணவகம்,Body Shaming,Subko The Craftery,உருவக் கேலி,சுப்கோ தி கிராஃப்டரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/64ccnaxq/bangaluru.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bengaluru restaurant ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/64ccnaxq/bangaluru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெங்களூரில் உள்ள பிரபல உணவகத்தில் வாடிக்கையாளரின் பெயருக்குப் பதிலாக அவரது உடல் அமைப்பைக் குறிப்பிட்டு 'உருவக் கேலி' செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பெங்களூரு கோரமங்களா பகுதியில் இயங்கி வரும் '<a href="https://www.maalaimalar.com/news/national/removal-of-tv-ad-duration-cap-central-government">சுப்கோ தி கிராஃப்டரி'</a> என்ற பிரபல காபி உணவகத்திற்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். உணவை முடித்துவிட்டு பில் வாங்கிப் பார்த்தபோது, அதில் வாடிக்கையாளரின் பெயரோ அல்லது மேஜை எண்ணோ குறிப்பிடப்படாமல், "கருப்புச் சட்டை அணிந்த சிறு குண்டான நபர்" என்று அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த பில்லின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து தனது வேதனையை வெளிப்படுத்தினார்.</p><h2>சமூக வ<strong>லைத்தளங்களில் எழுந்த</strong> எதிர்ப்பு</h2><p>வாடிக்கையாளரை மரியாதையுடன் நடத்தாமல், அவரது உடல் உருவத்தைக் கொண்டு அவமதித்தது இணையவாசிகளிடையே பலத்த கண்டனங்களை எழுப்பியது. பாலின பாகுபாடின்றி உருவக் கேலி செய்வது கண்டிக்கத்தக்கது என்றும், கணினி அமைப்பில் வேண்டுமென்றே ஊழியர் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்றும் பயனர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.</p><h2>நிறுவனத்<strong>தின் அறிக்கை</strong> </h2><p>இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, 'சுப்கோ' காபி நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. “எங்கள் உணவகத்தில் நடந்த இந்தச் சம்பவம் மிகவும் தவறானது. உருவக் கேலியை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்துள்ள நிர்வாகம், இந்தச் செயலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட ஊழியர் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க பில்லிங் முறையில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்யப்படாத நாடாளுமன்ற கூட்டத்தொடர் - மீண்டும் அறிமுகமாகும் தொகுதி மறுவரையறை மசோதா?</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-session-not-officially-concluded-plan-to-table-the-constituency-delimitation-bill</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-session-not-officially-concluded-plan-to-table-the-constituency-delimitation-bill#comments</comments><guid isPermaLink="false">c7184ec1-6e7f-4b1a-88c4-e15ce4a90624</guid><pubDate>Sun, 23 Aug 2026 09:41:20 +0000</pubDate><atom:updated>2026-08-23T09:41:20.823Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,தொகுதி மறுவரையறை மசோதா,Constituency Delimitation Bill</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/tfm1zef7/New-Project-2026-08-23T151037.792.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்யப்படாத நாடாளுமன்ற கூட்டத்தொடர் - மீண்டும் அறிமுகமாகும் தொகுதி மறுவரையறை மசோதா?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/tfm1zef7/New-Project-2026-08-23T151037.792.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடப்பாண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை.20ம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த ஆக.13ம் தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. </p><p>இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 13 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, இவற்றில் 12 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறியது. எஃப்சிஆர்ஏ திருத்த மசோதா மட்டும் பரிசீலனைக்காக இரு கூட்டுக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. </p><h2>முடித்து வைக்கப்படவில்லை</h2><p>கூட்டத் தொடர் நிறைவு நாளின்போது நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்டு கிட்டதட்ட 10 நாட்கள் ஆகியும் மழைக்கால கூட்டத்தொடர் அதிகாரப்பூர்வமாக குடியரசுத் தலைவரால் முடித்து வைக்கப்படவில்லை.</p><h2>தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் அறிமுகம்?</h2><p>இந்நிலையில் தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதாவை கொண்டுவர மத்திய அரசு மீண்டும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகவே இந்த தாமதம் என தகவல் வெளியாகி உள்ளது.</p><h2>காங்கிரஸ் கேள்வி</h2><p>இதுதொடர்பாக, கூட்டத்தொடர் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்படாதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியதாவது:- </p><p>தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாவை  ஒரு சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்காக தேடிக் கொண்டு இருக்கிறாரா?</p><p>மக்களவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதற்கும், அது அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்படுவதற்கும் இடையிலான கால இடைவெளி பொதுவாக 2 முதல் 4 நாட்கள் வரை இருக்கும்.</p><p>இந்த மக்களவை ஒத்தி வைக்கப்பட்டு 10 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் அது முடித்து வைக்கப்பட்டது குறித்த எந்த தகவலும் இன்னும் இல்லை.” என்று கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க காலக்கெடு மேலும் நீட்டிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/deadline-extended-for-submitting-documents-for-gas-cylinder-booking</link><comments>https://www.maalaimalar.com/news/national/deadline-extended-for-submitting-documents-for-gas-cylinder-booking#comments</comments><guid isPermaLink="false">7f31f953-5bc9-4a97-b2cc-bb9535770b0d</guid><pubDate>Sun, 23 Aug 2026 09:29:03 +0000</pubDate><atom:updated>2026-08-23T09:29:03.847Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>முன்பதிவு,Gas cylinder,கியாஸ் சிலிண்டர்,Date Extended,காலக்கெடு நீட்டிப்பு,gas booking</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/odxic55j/gas.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gas Cylinder]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/odxic55j/gas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கியாஸ் நிறுவனங்கள் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் மாதம் ஒன்றுக்கு 25 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண் டர் இணைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தது.</p><h2>12 சிலிண்டர்கள்</h2><p>அதாவது மானியத்துடன் கூடிய சிலிண்டரை பெற்று வணிக பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவதாகவும், ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருப்பதாகவும், இறந்துபோன நபர்கள் பெயரில் உள்ள இணைப்புகளை வேறு சிலர் பயன்படுத்தி வருவதாகவும், 5 பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு 35 முதல் 40 நாட்கள் வரை ஒரு சிலிண்டர் போதுமானதாக இருக்கும் நிலையில், ஒரே ஒரு நபர் மட்டுமே உள்ள வீடுகளில் கூட வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் பெறப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.</p><p>இதையடுத்து கள்ளச் சந்தையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்வதை தடுக்கவும், சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கத்திலும் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு ‘இ-கே.ஒய்.சி.’ அடிப்படையில் ஆதார் உள்ளிட்ட ஆவ ணங்களை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.</p><h2>புதிய கட்டுப்பாடு</h2><p>மேலும், மத்திய கிழக்கு போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதால். சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவில் மத்திய அரசு சமீபத்தில் புதிய கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தது.</p><p>அதன்படி கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் கால அளவு உயர்த்தப்பட்டது. நகர்புறங்களில் வசிப்பவர்கள் 25 நாட்களுக்கு ஒரு முறையும், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 45 நாட்களுக்கு ஒருமுறையும் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் புதிய நடை முறை கொண்டு வரப்பட்டது.</p><p>மேலும், ‘இ-கே.ஒய்.சி.’ ஆவணங்களை ஆகஸ்டு 16-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.</p><h2>இன்று வரை கெடு</h2><p>இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பலரும் ஆன்லைன் மூலமும், சிலிண்டர் வினியோக அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும் ஆவணங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.</p><p>இந்த நிலையில் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆவணங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை மத்திய அரசு இன்று வரை நீட்டித்து இருந்தது.</p><p>வீடுகளுக்கு தற்போது மானிய விலையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் மூலம் கியாஸ் விநியோகம் செய்யப்படுகிறது.</p><p>தமிழகம் முழுவதும் சராசரியாக 85 சதவீத வாடிக்கையாளர்கள் தங்களது ஆவணங்களை பதிவேற்றம் செய்துவிட்ட நிலையில் 15 சதவீத வாடிக்கையாளர்கள் பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது.</p><h2>கோரிக்கை</h2><p>ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவதால் தமிழகம் முழுவதும் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்கள் நாளை (24-ந்தேதி) முதல் மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.</p><p>இதனால் ஆவணங்களை பதிவேற்றம் செய்யாத வாடிக்கையாளர்கள் தவித்தனர். அவர்கள் மேலும் கால அவகாசம் வழங்க என்று கோரிக்கை வைத்தனர்.</p><h2>அவகாசம் நீடிப்பு</h2><p>இதனை ஏற்று கியாஸ் சிலிண்டர்கள் பெற ஆவணங்களை சமர்ப்பிப்பது வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கியாஸ் வினியோகஸ்தர்கள் சார்பில் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியாளர்கள், தங்களிடம் உள்ள ஆண்ட்ராய்டு போனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள செயலி மூலம் வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் போது ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.</p><p>அதாவது யார் பெயரில் சிலிண்டர் இணைப்பு உள்ளதோ அவரை, மொபைல் கேமராவை பயன்படுத்தி புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்தனர். இது மிகவும் எளிமையான நடைமுறையாகும்.</p><h2>செயலி அறிமுகம்</h2><p>ஒரு சிலர் கியாஸ் வினியோகஸ்தர்களின் அலுவலகத்திற்கு சென்று அவர்களிடம் உள்ள மொபைல் போனில் ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு எண்ணை நிறுவனங்கள் சார்பில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.</p><p>அந்த செயலியில் நுழைந்து ஆவண விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். தமிழகத்தில் இணைப்பு பெற்றுள்ள குடும்பத் தலைவர்களின் குடும்பம் தமிழகத்தில் வசித்து வரும் நிலையில், குடும்பத் தலைவர்கள் மட்டும் உலகில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.</p><p>அவர்களுக்கு இத்தகைய செயலி மொபைல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மூலம் அவர்கள் ஆவணங்களை சமர்ப்பித்தனர்.</p><p>தற்போது சிலிண்டர்களுக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க வருகிற 31-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. </p><h2>கியாஸ் நிறுவனம்</h2><p>இதுகுறித்து மதுரையை சேர்ந்த கியாஸ் நிறுவன உரிமையாளர் பாண்டி  கூறியதாவது:-</p><p>கியாஸ் முன்பதிவு செய்வதற்கு இ-கே.ஒய்.சி. எனப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்க காலக்கெடு கடந்த 16-ந்தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் இன்று (23-ந்தேதி) வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.</p><p>இதனால் நாளை முதல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் இந்த வாரம் முழுவதும், அதாவது வருகிற 31-ந்தேதி வரை ஆவணங்கள் சமர்ப்பிக்க மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று இரவுதான் எங்களுக்கு கிடைத்தது.</p><h2>தவறான தகவல்</h2><p>இதனால் இ-கே.ஒய்.சி. பதிவு தொடர்பாக வாடிக்கையாளர்கள் எந்தவித அச்சமும் படவேண்டாம். அதேபோல் இ-கே.ஒய்.சி. பதிவு என்பது தவறான முறையில் சிலிண்டர்களுக்கான மானியத்தொகை செல்லாததை தடுக்கவே உருவாக்கப்பட்டுள்ளது. தவறான பெயர்களில் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும்.</p><p>மேலும் இ-கே.ஒய்.சி. பதிவுக்காக வாடிக்கையாளர்கள் கியாஸ் நிறுவன அலுவலகத்திற்கு நேரில் செல்லவேண்டிய அவசியம் இல்லை. அதற்கான செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.</p><p>இ-கே.ஒய்.சி. புதுப்பித்தால் மட்டுமே கியாஸ் சிலிண்டர் முன்பதிவு ஆகும் என்பது தவறான தகவல். ஒருவர் தனது அங்க அடையாளங்களை தெரி விக்க விருப்பம் இல்லாத நிலையில் அவரை கட்டாயப்படுத்த முடியாது. </p><p>அதே நேரத்தில் ஒரே சிலிண்டரை 2 பேர் பயன்படுத்துவதை தடுக்கவே ஆவணங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல உரிமை.. இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராடுபவர்களுக்கு சிராக் பஸ்வான்  பாடம்</title><link>https://www.maalaimalar.com/news/national/reservation-is-a-constitutional-right-chirag-paswan-responds-to-jantar-mantar-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/reservation-is-a-constitutional-right-chirag-paswan-responds-to-jantar-mantar-protest#comments</comments><guid isPermaLink="false">1dcccb49-cff0-497e-95c2-63f204db5e80</guid><pubDate>Sun, 23 Aug 2026 09:27:47 +0000</pubDate><atom:updated>2026-08-23T09:27:47.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மல்லிகார்ஜுன கார்கே,இடஒதுக்கீடு,சிராக் பஸ்வான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/t5p3z24p/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிராக் பஸ்வான்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிராக் பஸ்வான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/t5p3z24p/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதானை மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிச் செய்ததன் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இளைஞர்களின் <a href="https://www.maalaimalar.com/topic/cjpprotest">கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் </a>வெற்றி கண்டது. </p><p>இந்த வெற்றியால் உந்தப்பட்டு உந்தப்பட்டு <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/reduced-vehicle-mileage-opposition-to-e20-petrol-in-india">இ20 பெட்ரோல் எதிர்ப்பு</a>, சாதி வாரி இடஒதுக்கீடு எதிர்ப்பு என பல ஆன்லைன் இயக்கங்கள் உருவாகின. </p> <h2>போராட்டம்</h2><p>அதில், இட ஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த சிலர் நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தினர். அவர்களை டெல்லி போலீஸ் கைது செய்தது. இருப்பினும் இன்றும் சிலர் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து மத்திய உணவு பதப்படுத்தல் தொழிலாளர் துறை அமைச்சரும் லோக் ஜனதா சக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பஸ்வான் பேசியுள்ளார்.</p><p>டெல்லிக்கு புறப்படும்முன் பீகாரின் பாட்னா விமான நிலையத்தில் சிராக் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்தார். </p><p>அப்போது டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.</p><h2>இடஒதுக்கீட்டின் தேவை</h2><p>இதற்கு பதிலளித்து பேசிய அவர்,</p><p>யாருடைய கோரிக்கையின் பேரிலும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கூடிய ஒன்று அல்ல. இட ஒதுக்கீடு என்பது தான தர்மம் கிடையாது. </p><p>தலைமுறை தலைமுறையாக சமூக பாகுபாட்டை சந்தித்து வந்த சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு உரிமை.</p><p>இட ஒதுக்கீடு என்பது எந்தவொரு அரசாங்கத்தின் விருப்பத்தின் பேரில் நீட்டிக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் சலுகை அல்ல, மாறாக அது ஒரு அரசியலமைப்புச் சட்ட விதி.</p><p>நீண்ட நெடிய காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களை பொதுச் சமூகத்துடன் இணைக்க கொண்டு வரப்பட்டதே இடதுகீடு முறை ஆகும்.</p><p>பட்டியலின, பழங்குடியின சமூகங்களை கண்டறிந்து அவற்றின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு அம்சமாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது</p> <h2>கார்கே எதிர்கொண்ட பாகுபாடு</h2><p>உத்ரகாண்டில் காங்கிரஸ் தலைவர் கார்கே ராம் லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பின் அந்த மேடையை "சுத்திகரிப்பு" செய்வதாக இந்துத்துவா அமைப்பொன்று பூஜை செய்த நிகழ்வை சுட்டிக்காட்டிய பஸ்வான், "சமூக பாகுபாடு என்பது இன்னும் நம் சமூகத்தில் புரையோடியுள்ளது. சமூக நீதியை வலிமைப்படுத்தி வேண்டிய அவசியம் இன்னும் தேவையாக உள்ளது." என்று தெரிவித்தார்.</p> <h2>பேச்சுவார்த்தை</h2><p>ஜந்தர் மந்தரில் போராட்டம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் குறித்து பேசிய அவர், யாரும் அவர்களின் கருத்தை வெளிப்படுத்த உரிமை உள்ளது. </p><p>அவர்களிடம் பேச்சுவார்த்தை மூலம் இடஒதுக்கீட்டின் நோக்கம் குறித்தும், அது ஏன் தொடர வேண்டும் என்பது குறித்தும் புரிய வைப்போம் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ராக்கெட் செலுத்துவதற்கு உலகிலேயே அதிகமாக செலவு செய்யும் இந்தியா: ஆய்வில் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-spends-most-on-rocket-launches-cambridge-university</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-spends-most-on-rocket-launches-cambridge-university#comments</comments><guid isPermaLink="false">276af2a6-66fa-4a1c-8f23-beaac4a3384b</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:14:21 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:14:21.326Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சந்திராயன்,Cambridge university,Chandraayan,national space day,தேசிய விண்வெளி தினம்,கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/9urjosya/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India Tops Rocket Launch Costs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/9urjosya/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வில் விண்வெளிக்கு ராக்கெட் செலுத்துவதில் அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகமான தொகையை உலகிலேயே இந்தியாதான் செலவழித்து வருவதாக தெரிவித்துள்ளது.</p><h3><strong>தேசிய விண்வெளி தினம்</strong></h3><p>இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன் 3 என்ற திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்திற்கு கடந்த 2023 ஆகஸ்ட் 23 அன்று ராக்கெட்டை வெற்றிகரகமாக செலுத்தியது. மேலும் இதன் வெற்றியை தொடர்ந்து, இந்தியா தனது மூன்றாவது தேசிய விண்வெளி தினத்தை இன்று கொண்டாடி வருகிறது.</p><p>இந்த நிலையில் அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் அலெசியோ டெர்சி மற்றும் இத்தாலியை சேர்ந்த பிரான்செஸ்கோ நிக்கோலி ஆகியோர் எகனாமிக் லெட்டர்ஸ் என்ற மதிப்பாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.</p><h3><strong>கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்</strong></h3><p>இந்த ஆய்வில், “இந்தியா 1960 மற்றும் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் 6,740-க்கும் மேற்பட்ட ராக்கெட் செலுத்தியுள்ளதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p>இதன்மூலம் 2025-ல் ஒரு கிலோ எடைகொண்ட சுமையை புவியின் தாழ் சுற்றுப்பாதைக்கு ஏவுவதற்கான இந்தியாவின் சராசரி செலவு ஒரு கிலோ கிராமுக்கு சுமார் $13,302 ஆக இருந்தது.</p><p>ஆனால் அமெரிக்கா ஒரு கிலோவுக்கு $3,225 என்ற மிகக் குறைந்த செலவையே பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவின் ஒரு கிலோ கிராம் சுமையை ஏவுதல்களுக்கான செலவு, அமெரிக்காவை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது” என்று அவர்கள் தெரிவித்தனர்.</p><p>கேம்பிரிட்ஜ் மற்றும் டுரின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 2025-ல் உலகளாவிய சராசரி ஏவுதல் செலவு ஒரு கிலோ கிராமுக்கு $3,868 ஆக இருந்த நிலையில், அமெரிக்காவில் சராசரியாக ஒரு கிலோ கிராமுக்கு $3,225, ஜப்பானில் $5,287, சீனாவில் $5,809, ரஷியாவில் $6,682 மற்றும் ஐரோப்பாவில் $9,897 என இருந்தது. இந்தியா ஒரு கிலோ கிராமுக்கு சுமார் பதின்மூன்று லட்சம் ரூபாய் ($13,302) செலவுடன் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்தது என்று அவர்கள் கூறினர்.</p><p>இந்தியாவின் ராக்கெட்டுகள் பொதுவாக சிறிய அளவிலான சுமைகளையே சுமந்து செல்கின்றன. அதாவது நிலையான செலவுகள் குறைவான கிலோகிராம் எடையிலேயே பரப்பப்படுகின்றன. </p><p>இதன் விளைவாக, திட்டத்தின் மொத்த செலவுகள் குறைவாக இருக்கக்கூடும் என்றபோதிலும், ஒரு கிலோ கிராமுக்கான வெளிப்படையான செலவு கணிசமாக அதிகமாவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.</p><h3><strong>இஸ்ரோ கருத்து</strong></h3><p>இந்த ஆய்வு குறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் கூறுகையில், தவறான தரவுகளை ஆய்வாளர்கள் பயன்படுத்தி உள்ளதாக கூறினார்.</p><p>இஸ்ரோவின் முன்னாள் தலைவரான டாக்டர் எஸ். சோம்நாத் கூறுகையில், அமெரிக்காவை சேர்ந்த ஃபால்கன் 9-க்கான ஒரு கிலோ கிராம் செலவு இந்தியாவை விடக் குறைவாக உள்ளது.</p><p>ஆனால் அவர்கள் அந்தப் பலன்களை யாருக்கும் வழங்காமல், தங்கள் சொந்த ஏவுதல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளுவதாக அவர் கூறினார்.</p><p>இதையடுத்து இந்தியாவின் விண்வெளி ஒழுங்குமுறை மற்றும் ஊக்குவிப்பு அமைப்பான இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (இன்ஸ்பேஸ்) மற்றும் இந்திய விண்வெளி சங்கம் (ஐஎஸ்பிஏ) ஆகிய இரண்டும், இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.</p><h3><strong>நாடாளுமன்றத்தில் அறிக்கை</strong></h3><p>இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த 2018-ல் அரசு அளித்த பதில் அறிக்கையில், ஒரு பிஎஸ்எல்வி திட்டத்திற்கு சுமார் ரூ. 204 கோடியும், அதே சமயம் ஒரு லான்ச் வெஹிக்கிள் மார்க்-3 (முன்னர் ஜிஎஸ்எல்வி மார்க் III என அழைக்கப்பட்டது) திட்டத்திற்கு ஏறக்குறைய ரூ. 434 கோடியும் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இந்தியா உலகளவில் தலைசிறந்த நாடாக உருவெடுக்கும் என்று கடந்த 2014-இல் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், “அகமதாபாத்தில் ஒரு கிலோமீட்டர் ஆட்டோ பயணத்திற்கு 10 ரூபாய் ஆகிறது, ஆனால் மங்கள்யான் திட்டத்தின் மூலம் இந்தியா ஒரு கிலோமீட்டருக்கு 7 ரூபாய் செலவில் செவ்வாய் கிரகத்தை அடைந்தது, இது உண்மையிலேயே ஆச்சரியமானது,” என்று கூறினார்.</p><p>மேலும் சமீபத்தில் ஆகஸ்ட் 21 அன்று, பிரதமர் நரேந்திர மோடி 20 இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிறுவனர்களுடன் கலந்துரையாடினார்.</p><p>அப்போது, உலகம் விண்வெளியைப் பற்றி நினைக்கும்போது இந்தியாவை நோக்கிய ஒரு சூழலையும், அதற்கான ஒரு அமைப்பையும் உருவாக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.</p><p>இந்தியாவின் விண்வெளித் துறை, உலகளாவிய திறமையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளை நாட்டிற்கு ஈர்க்கும் ஒரு காந்தமாகச் செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார்.</p><h3><strong>காரணம்</strong></h3><p>இந்த நிலையில் அமெரிக்காவின் குறைந்த அளவிலான செலவு அனுகூலத்திற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணம் மறுபயன்பாட்டு அமைப்புகளே என ஆய்வாளர்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>இந்தியா, மறுபயன்பாட்டு ஏவுகணை வாகன (RLV) தொழில்நுட்பங்களுடன் பரிசோதனை செய்து, தொழில்நுட்ப செயல்விளக்கங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.</p><p>இருப்பினும், இந்தியா இன்னும் ஒரு சுற்றுப்பாதை மறுபயன்பாட்டு ராக்கெட்டை சேவையில் ஈடுபடுத்தவில்லை. ஒரு மறுபயன்பாட்டு அமைப்பாகக் கருதப்படும், திட்டமிடப்பட்ட அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனம், இன்னும் உருவாக்க நிலையில் தான் உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மறைமுகமாக செயல்பட்டு வந்த பான் மசாலா உற்பத்தி நிறுவனம்: ரூ.160 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/rs160-crore-tax-evasion-through-pan-masala-production-factory-owner-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs160-crore-tax-evasion-through-pan-masala-production-factory-owner-arrested#comments</comments><guid isPermaLink="false">95fd4d85-caa4-43a8-aa38-a1c7b9aa197e</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:56:04 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:56:04.054Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hyderabad,Pan masala,வரி ஏய்ப்பு,tax evasion,ஹைதராபாத்,பான் மசாலா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/k51wysnb/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hyderabad Pan Masala Scam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/k51wysnb/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐதராபாத்தில் ஒரு தகரக் கொட்டகையில் ரகசியமாக பான் மசாலா மற்றும் புகையிலை உற்பத்தி செய்து, அதன்மூலம் ரூ.160 கோடி மதிப்பிலான வரி ஏய்ப்பு செய்து வந்ததை மண்டல அளவிலான மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டறிந்தனர். </p><p>இதையடுத்து அங்கு சட்டவிரோதமாக விற்பனைக்காக இருந்த புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.</p><p><strong>ஹைதராபாத் புகையிலை உற்பத்தி</strong></p><p>ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் பான் மசாலா மற்றும் புகையிலை உற்பத்தி செய்து வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த வளாகத்தில் சிஜிஏஸ்டி அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.</p><p>அப்போது, ரகசியமாக புகையிலை உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட 40 FFS (ஃபார்ம்-ஃபில்-சீல்) பேக்கிங் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அந்த சோதனையில், 56 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.</p><p>அந்த ஆலையில், பான் மசாலா மற்றும் நறுமண ஜர்தா ஆகியவற்றின் பல பிராண்டட் தயாரிப்புகள் தயாரிக்கப்பட்டு பேக்கிங் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.</p><p><strong>பறிமுதல்</strong></p><p>இந்த நடவடிக்கையில், சுமார் 5,500 கிலோ எடையுள்ள பொட்டலங்களும், ரூ. 76 லட்சம் மதிப்புள்ள சரக்குகளும், 2,015 கிலோ பான் மசாலா மற்றும் 810 கிலோ புகையிலை அடங்கிய மூலப்பொருட்களும், சட்டவிரோதப் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>மேலும், பொட்டலமிடும் பொருட்கள், 40 FFS இயந்திரங்கள் மற்றும் பிற ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.</p><p>இதுகுறித்து மத்திய வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், “கையிருப்பு, இயந்திரங்களின் அளவு, மனிதவளம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், கண்டறியப்பட்ட மொத்த சுங்க வரி மற்றும் செஸ் வரி ஏய்ப்பு சுமார் ரூ. 160 கோடி ஆகும்” என்று தெரிவித்தனர்.</p><p><strong>செஸ் வரி சட்டம்</strong></p><p>பான் மசாலா மற்றும் புகையிலைத் துறையில், 2026 பிப்ரவரி 1 முதல் கொள்ளளவு அடிப்படையிலான செஸ் மற்றும் வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.</p><p>2025-ஆம் ஆண்டின் HSNS செஸ் சட்டத்தின் கீழ், நிறுவப்பட்ட பேக்கிங் இயந்திரங்களின் எண்ணிக்கை, வகை மற்றும் கொள்ளளவின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, பான் மசாலா மீது கொள்ளளவு அடிப்படையிலான மாதாந்திர செஸ் விதிக்கப்பட்டு வருகிறது.</p><p>1944 ஆம் ஆண்டு மத்திய கலால் சட்டத்தின் கீழ், மெல்லும் புகையிலை, ஜர்தா மற்றும் குட்கா ஆகியவற்றின் மீதும் இதேபோன்று கொள்ளளவு அடிப்படையிலான மத்திய கலால் வரி விதிக்கப்படுகிறது.</p><p><strong>கைது</strong></p><p>இந்த நிலையில் ரூ.160 கோடி மதிப்பிலான சுங்க வரி மற்றும் செஸ் வரி ஏய்ப்பு செய்து, ஆலையை நிர்வகித்து வந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.</p><p>இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள பொருளாதாரக் குற்றங்களுக்கான சிறப்பு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அதிகாரிகள் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ரெயிலில் தவறவிட்ட ரூ.25,000 பணம் மற்றும் ஆவணங்களை பயணியிடம் பத்திரமாக ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/ticket-checker-praised-for-returning-rs-25000-and-documents-left-on-train</link><comments>https://www.maalaimalar.com/news/national/ticket-checker-praised-for-returning-rs-25000-and-documents-left-on-train#comments</comments><guid isPermaLink="false">7e948b85-6aab-4d0b-b577-76e50b290209</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:10:36 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:10:36.208Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Indian Railway,Ticket inspector,டிக்கெட் பரிசோதகர்,Jammu Railway,ஜம்மு ரெயில்வே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/td32uzsn/trans.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jammu Railway ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/td32uzsn/trans.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு ரெயில்வே கோட்டத்தில் பணிபுரியும் ரெயில் பயணி ஒருவர் தவறுதலாக விட்டுச் சென்ற 25,000 ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பையை, டிக்கெட் பரிசோதனை ஊழியர் சுதாரிப்புடன் செயல்பட்டு மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) அன்று ஸ்ரீ மாதா வைஷ்ணவோ தேவி கத்ரா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரெயில் எண் 26402-ல் இந்தச் சம்பவம் நடைபெற்றது. பயணி ஒருவர் கத்ரா நிலையத்தில் இறங்கியபோது, தான் பயணித்த C-11 பெட்டியின் இருக்கை எண்கள் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றில் தனது பயணப்பையை தவறுதலாக விட்டுச் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த ரெயில்வே கட்டுப்பாட்டு அறை, உடனடியாக ரெயிலில் பணியில் இருந்த ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தது.</p><h2>பரிசோதகரின் <strong>விரைவான</strong> நடவடிக்கை</h2><p>கட்டுப்பாட்டு அறையின் தகவலைத் தொடர்ந்து, அன்றைய தினம் பணியில் இருந்த <a href="https://www.maalaimalar.com/news/national/bihar-student-credit-card-scheme-rs-4-lakh-loan-not-reduced-state-government-clarification">டிக்கெட் பரிசோதகர்</a> தினேஷ் குமார் உடனடியாக C-11 பெட்டிக்கு விரைந்தார். அங்கு யாருமின்றி தனியாக இருந்த பையைப் பத்திரமாகக் கைப்பற்றினார். பின்னர், தன்னிடம் இருந்த ஹேண்ட் ஹெல்ட் டெர்மினல் மூலம் பயணச்சீட்டு விவரங்களைச் சரிபார்த்து, சம்பந்தப்பட்ட பயணியின் தொடர்பெண்ணைக் கண்டறிந்து அவரைத் தொடர்புகொண்டார். தான் விட்டுச் சென்ற பையில் பணம் மற்றும் முக்கியமான ஆவணங்கள் இருப்பதாகப் பயணி உறுதிப்படுத்தினார்.</p><h2>பத்திரமா<strong>க ஒப்படைக்க</strong>ப்பட்ட பணம் </h2><p>பையைச் சரிபார்த்தபோது அதில் ரூ.24,980 ரொக்கப் பணம், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் பிற அடையாள அட்டைகள் ஆகியவை பத்திரமாக இருந்தது தெரியவந்தது. ரெயில்வே விதிமுறைகளின்படி, அனைத்துப் பொருட்களும் சரிபார்க்கப்பட்டு ரெயில்வே பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் உரிய பயணியிடம் பாதுகாப்பாக வழங்கி வைக்கப்பட்டது. தனது உடைமைகளும் பணமும் எவ்வித சேதமுமின்றி திரும்பக் கிடைத்ததால், அந்தப் பயணி ஜம்மு ரெயில்வே கோட்டத்திற்கும் நேர்மையுடன் செயல்பட்ட ஊழியர் தினேஷ் குமாருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.</p><h2>ரெயில்வே <strong>அதிகாரி</strong>களின் பாராட்டு</h2><p>டிக்கெட் பரிசோதகரின் இந்தச் சிறப்பான சேவையைப் பாராட்டிய ஜம்மு கோட்ட முதுநிலை வணிக மேலாளர், ஊழியர்களின் நேர்மையும் விரைவான செயல்பாடும் பாராட்டுக்குரியது என்றும், பயணிகளின் பாதுகாப்பிற்கும் அவர்களின் உடைமைகளுக்கும் ரெயில்வே நிர்வாகம் எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்றும் கூறினார். மேலும் பயணிகள் தங்களின் உடைமைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், ஏதேனும் அவசர உதவிக்கு 139 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>பீகார் மாணவர் கடன் அட்டை திட்டம்: ரூ. 4 லட்சம் கடன் தொகை குறைக்கப்படவில்லை- மாநில அரசு விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-student-credit-card-scheme-rs-4-lakh-loan-not-reduced-state-government-clarification</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-student-credit-card-scheme-rs-4-lakh-loan-not-reduced-state-government-clarification#comments</comments><guid isPermaLink="false">fccb8a45-74f1-43b0-a808-f5a729e7c820</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:51:26 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:51:26.221Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Educationloan,BiharGovernment,BiharStudentCreditCard,PMVidyaLakshmi,மாணவர் கடன் அட்டை திட்டம்,வணிக வங்கிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/eely5qik/bihar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Student CreditCard]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/eely5qik/bihar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநில அரசு செயல்படுத்தி வரும் மிகவும் பிரபலமான 'மாணவர் கடன் அட்டை திட்டத்தில்' கடன் நிதி உதவிக்கான வரம்பு ரூ. 4 லட்சத்தில் இருந்து குறைக்கப்பட்டுள்ளதாக பரவி வந்த தகவல்களை அம்மாநில உயர்கல்வித் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான நிதி ஆதாரங்களை விரிவுபடுத்தவே புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளனவே தவிர, கடன் தொகை குறைக்கப்படவில்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2>புதிய <strong>நிதிப் பகிர்வு முறை</strong> </h2><p>முந்தைய விதிகளின்படி, மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 4 லட்சம் வரையிலான முழு கடன் தொகையும் '<a href="https://www.maalaimalar.com/news/national/tragedy-in-mumbai-22-foot-ganesha-idol-collapses-2-dead-5-injured">பீகார் மாநில கல்வி நிதிக் கழகம்</a>'  மூலமாக மட்டுமே நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையின் கீழ், பீகார் மாநில கல்வி நிதிக் கழகம் மூலமாக நேரடியாக மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும். </p><p>வணிக வங்கிகள் மூலமாக மாணவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். வங்கிகளை இத்திட்டத்தில் இணைப்பதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் கடன் வசதி சென்று சேரும் என கல்வித் துறை செயலர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>மத்திய <strong>அரசு திட்டங்கள்</strong></h2><p>மாணவர்கள் எளிதாகக் கல்விக்கடன் பெறும் வகையில் இத்திட்டம் 'பிரதமரின் வித்யாலக்ஷ்மி திட்டம்' மற்றும் வணிக வங்கிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ரூ. 10 லட்சம் வரை கல்விக்கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><p>மேலும், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை பீகார் அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது. 2025-26 நிதியாண்டில் ரூ.886 கோடியாக இருந்த ஒதுக்கீடு, 2026-27 நிதியாண்டிற்கு ரூ.950 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ. 64 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டிருப்பது, அரசு இத்திட்டத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.</p> ]]></content:encoded></item><item><title>மும்பையில் சோகம்: 22 அடி உயர விநாயகர் சிலை சரிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/tragedy-in-mumbai-22-foot-ganesha-idol-collapses-2-dead-5-injured</link><comments>https://www.maalaimalar.com/news/national/tragedy-in-mumbai-22-foot-ganesha-idol-collapses-2-dead-5-injured#comments</comments><guid isPermaLink="false">21128e92-4984-4394-a0b3-429cdf0a3cf3</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:13:11 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:13:11.808Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மும்பை,விநாயகர்சதுர்த்தி,MumbaiTragedy,GaneshFestival,Bhuleshwar,மும்பைசெய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/5iml6vs8/mumbai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai Tragedy Death]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/5iml6vs8/mumbai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெற்கு மும்பையின் பூலேஷ்வர் பகுதியில் அமைந்திருக்கும் 'பூலேஷ்வராச்சா ராஜா' விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற போது  நேற்று இரவு சுமார் 10 மணியளவில் எதிர்பாராத துயரம் நேரிட்டது. </p><p>பலராம் மெர்ச்சன்ட் சாலையில் உள்ள கபூதர்கானா அருகே ஜெய் அம்பே சௌக் வழியே ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது, 22 அடி உயரமுள்ள பிரம்மாண்ட <a href="https://www.maalaimalar.com/news/national/husband-kills-wife-after-dispute-arrests-made">விநாயகர் சிலை </a>தாங்கி நிற்கும் இரும்புச் சட்டகத்தில் இருந்த போல்ட்டுகள் மற்றும் நட்டுகள் தளர்ந்ததால் சிலை அப்படியே நிலைகுலைந்து பக்தர்கள் கூட்டத்தின் மீது சரிந்தது.</p><h2>இருவர் உயிரிழப்பு</h2><p>இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சங்கேத் நெவ்சே (33) மற்றும் பிரிஜேஷ் ஹேமந்த் ஜோஷி (30) ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், வைபவ் கெனந்த் (38), பவன் சௌராசியா (25), குணால் காஷித் (26) மற்றும் லாவண்யா (5), திவ்யா (7) ஆகிய இரு சிறுமிகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் நிலை தற்போது சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வழ<strong>க்குப் பதிவு</strong> </h2><p>தகவல் அறிந்ததும் மும்பை தீயணைப்புத் துறை, காவல்துறை, போக்குவரத்து காவலர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக வி.பி.ரோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விநாயகர் சிலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இரும்பு சட்டகத்தின் தரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கொலை வழக்கில் 40 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த தனிப்படை போலீசார்</title><link>https://www.maalaimalar.com/news/national/special-squad-arrests-man-missing-40-years-in-murder-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/special-squad-arrests-man-missing-40-years-in-murder-case#comments</comments><guid isPermaLink="false">1cfaef94-c5e0-4b0a-8291-dfa010e75a2b</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:51:08 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:51:08.344Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>uttarpradesh,abscond,உத்தரப் பிரதேசம்,natthulal,நத்துலால்,தலைமறைவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/nd4y5fjd/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi 1984 murder case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/nd4y5fjd/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் கடந்த 1984-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்த 65 வயது நபரை, உத்தரப் பிரதேச குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தது.</p><h3><strong>1984 கொலை வழக்கு</strong></h3><p>உத்தரப் பிரதேச மாநிலம் விகாஸ்புரியில் உள்ள ஒரு பூங்காவில் கடந்த 1984 ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி இரவு அசோக் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.</p><p>இந்த கொலையை அடுத்து ஹர்தோய் பகுதியை சேர்ந்த நத்து என்ற 23 வயது நத்துலால் என்பவரை ஜனக்புரி காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர்.</p><p>அசோக் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், சீதாபூரை சேர்ந்த பாபூதி பிரசாத் என்பருக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.</p><p>மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம், கொலைக்காக பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பறிமுதல் செய்தனர். இருப்பினும் நத்து என்ற நத்துலாலை கைது செய்ய முடியாமல் காவல்துறை திணறி வந்தது.</p><h3><strong>தனிப்படை அமைப்பு</strong></h3><p>இதையடுத்து நத்துலாலை கண்டுபிடிக்கும் பணியை குற்றப்பிரிவு தீவிரப்படுத்தியது. ஒரு குழு அமைக்கப்பட்டு, பழைய வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்து, சீதாபூர் மற்றும் ஹர்தோய் மாவட்டங்களில் குற்றம் சாட்டப்பட்டவரின் நடமாட்டம் இருப்பதாக காவல்துறை உறுதி செய்தது.</p><p>ஹர்தோயின் பாலி பகுதியில் நடத்திய சோதனையின்போது, நத்துலால் உயிருடன் இருப்பதாகவும், அவ்வப்போது தனது சொந்த கிராமத்திற்குச் சென்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் அறிந்துகொண்டனர்.</p><p>ஆகஸ்ட் 17 அன்று, அவரது அடையாளங்களுடன் பொருந்தக்கூடிய ஒருவர் கிராமத்தில் தென்பட்டதை அடுத்து, அந்த கிராமத்தை சுற்றிவளைத்து காவல்துறை நத்துலாலை கைது செய்தது.</p><h3><strong>கைது நடவடிக்கை</strong></h3><p>இதுகுறித்து காவல்துறை கூறுகையில், “நத்துலாலும் பிரசாத்தும் நண்பர்கள், மேலும் இறந்தவரும் பிரசாத்தும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். </p><p>பிரசாத்தின் மனைவியிடம் கொலை செய்யப்பட்ட அசோக் குமார் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்கு காரணமாக உள்ளது.</p><p>சம்பவம் நடந்த அன்று இரவு, நத்துலாலும் பிரசாத்தும் ஒரு பூங்காவில் ஒன்றாக மது அருந்தி, பின்னர் அசோக்கை கொலை செய்யும் நோக்கில், அவரை பிந்தொடர்ந்து கொலை செய்துள்ளனர்.</p><p>நத்துலால் தலைமறைவாக இருந்தபோது, உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மொத்த காய்கறிச் சந்தைகளில் பணிபுரிந்து வந்து, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்துள்ளார். மேலும், அவர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்தார்.</p><p>2005-ஆம் ஆண்டு ஃபரூக்காபாத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலும் அவர் பெயர் இடம்பெற்றிருந்தது” என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தொலைக்காட்சி சேனல்களுக்கு விளம்பர கால அளவு நீக்கம்: மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/removal-of-tv-ad-duration-cap-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/national/removal-of-tv-ad-duration-cap-central-government#comments</comments><guid isPermaLink="false">e36cba4b-0e50-4d51-b833-ec24018ab206</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:04:44 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:04:44.940Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,central government,advertisements,television channel,தொலைக்காட்சி சேனல்,விளம்பரங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/mjz53owe/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TV]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/mjz53owe/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொலைக்காட்சி சேனல்களில் ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிட நேரம் விளம்பரம் ஒளிபரப்பப்படும் விதிகளை நீக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p><h3><strong>தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்</strong></h3><p>தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், ‘கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் (திருத்தம்) விதிகள், 2026-ஐ திருத்தம் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>அந்த அறிவிப்பில், “1994-ஆம் ஆண்டின் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் விதிகளில், விதி 7-இல் உள்ள துணை விதி (11) நீக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.</p><p>இந்த துணை விதி ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிடங்கள் என தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு வரம்பு விதித்திருந்தது.</p><p>1994 ஆம் ஆண்டின் கேபிள் தொலைக்காட்சி வலையமைப்பு விதிகளின் கீழ், 2026 ஆம் ஆண்டில் விளம்பர கால வரம்பு அறிமுகப்படுத்தப்பட்டது.</p><p>அதன் பின்னர், தொலைக்காட்சி ஒளிபரப்பு துறையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் அடைந்துள்ளதாக அமைக்ககம் தெரிவித்துள்ளது.</p><p>தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செய்தி குறிப்பில், 2006-ஆம் ஆண்டில் 62 தொலைக்காட்சி அலைவரிசைகள் மட்டுமே இருந்தன எனவும், ஆனால் தற்போது 900-க்கும் மேற்பட்ட அலைவரிசைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p><p>கேபிள் டிவி துறையின் முழுமையான டிஜிட்டல் மயமாக்கலை தொடர்ந்து, DTH, கேபிள் டிவி, HITS மற்றும் IPTV உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சி விநியோக தளங்களும், தற்போது 300 முதல் 500 க்கும் மேற்பட்ட அலைவரிசைகளை கொண்டுள்ளன.</p><p>இந்த வகையான தொலைக்காட்சி ஒளிபரப்பு துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ந்து, விளம்பர கால அளவு தொடர்பான விதிமுறைகளை மறுபரீசிலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.</p><p>இந்தியாவில் ஒரு சேனல் கட்டண சேனலாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அது பெருமளவில் விளம்பரங்களை சார்ந்துள்ளது.</p><p>தொலைக்காட்சி துறைக்கும் டிஜிட்டல் ஊடகங்களுக்கும் இடையே சந்தையில் போதுமான போட்டி நிலவுவதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கருதுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் சந்தையில் நியாயமான போட்டியை ஏற்படுத்தவும், வணிகம் செய்வதை எளிதாக்கவும் விளம்பர கால வரம்பை நீக்கி மத்திய அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விமான பயணிகள் கவனத்திற்கு.. செப்டம்பர் 1 முதல் வருகிறது சூப்பர் மாற்றம்! </title><link>https://www.maalaimalar.com/news/national/india-immigration-boarding-pass-stamping-scrapped-at-international-airports-digital-process-from-september-1</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-immigration-boarding-pass-stamping-scrapped-at-international-airports-digital-process-from-september-1#comments</comments><guid isPermaLink="false">0772e7df-42df-4772-8e7a-0629b884b504</guid><pubDate>Sun, 23 Aug 2026 00:12:35 +0000</pubDate><atom:updated>2026-08-23T00:12:35.284Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>airport,விமான நிலையம்,சர்வதேச விமான நிலையம்,international airport,Air passengers,விமான பயணிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/9uponci6/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விமான பயணிகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ விமான பயணிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/9uponci6/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றத்தின் மூலம், இந்தியாவின் சர்வதேச <a href="https://www.maalaimalar.com/topic/airport">விமான நிலையங்களில்</a> போர்டிங் பாஸ்களில் முத்திரை குத்தும் முறை முழுமையாகக் கைவிடப்படுகிறது.</p><p>மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடிவரவு பணியகமான BOI இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.,</p> <h2>காரணம்</h2><p>இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பயணிகள் Immigration சோதனையின் போது தங்கள் காகித போர்டிங் பாஸ்களில் முத்திரை குத்திக் கொள்ளும் நடைமுறை தலைவலியாக இருந்து வந்தது.</p><p>சில போர்டிங் பாஸ்களில் தவறான அல்லது தெளிவற்ற முறையில் முத்திரை குத்தப்படுவதால், பார்கோடு போன்ற விவரங்களைப் படிப்பதில் இயந்திரங்களுக்கு பிழைகள் மற்றும் சிக்கல்கள் ஏற்பட்டன</p><p>இதனால் பயணிகள் அசௌகரியத்தை சந்தித்து வந்ததாலும் சீல் வைப்பதால் ஏற்படும் தாமதங்கள் மற்றும் தவறுகளைத் தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p> <h2>விளக்கம்</h2><p>பயணிகள் இனி காகித போர்டிங் பாஸ் மட்டுமல்லாது தங்கள் ஸ்மார்ட்போன்களில் மின்னணு முறையிலான போர்டிங் பாஸ்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் விமான நிலையப் பயணம் எளிதாகும்.</p><p>ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தற்போது இ போர்டிங் பாஸ்களை வழங்குவதால், ஒட்டுமொத்தப் பயணத்தையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றுவது எளிதாகிறது.</p> <p>அப்படி, செப்டம்பர் 1 முதல் காகித போர்டிங் பாஸ்களைப் பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தினாலும், அதில் குடியேற்றத் துறை அதிகாரிகளால் இனி எந்த முத்திரையும் குத்தப்படாது.</p><p>தனிநபர் உடற்பரிசோதனையின் போதும் போர்டிங் பாஸ்களில் சீல் வைக்கும் நடைமுறை ஏற்கனவே கைவிடப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.</p> <h2>பாஸ்போர்ட்</h2><p>போர்டிங் பாஸ் சீல் ரத்து செய்யப்படுவதைத் தொடர்ந்து, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு பாஸ்போர்ட்டில் வைக்கப்படும் Immigration Entry மற்றும் Exit முத்திரையையும் முழுமையாக நீக்குவதற்கான சோதனை முயற்சிகள் தற்போது நடந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் வழக்கை மறைக்க ரூ.5 கோடி லஞ்சம்.. தன் மீது குற்றம்சுமத்திய முன்னாள் நீதிபதிக்கு பஞ்சாப் முதலமைச்சரின் மனைவி நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/punjab-cms-wife-sends-legal-notice-to-ex-judge-over-bribery-allegation-in-sexual-abuse-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/punjab-cms-wife-sends-legal-notice-to-ex-judge-over-bribery-allegation-in-sexual-abuse-case#comments</comments><guid isPermaLink="false">d0475189-c7b6-4d60-86dd-bc8c9c18ecbf</guid><pubDate>Sat, 22 Aug 2026 22:39:18 +0000</pubDate><atom:updated>2026-08-22T22:39:18.754Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பஞ்சாப்,Punjab,ஆம் ஆத்மி,பகவந்த் மான்,Bhagwant Mann,Aam Aadmi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/a34rmre7/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பஞ்சாப் முதலமைச்சர், மனைவி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பஞ்சாப் முதலமைச்சர், மனைவி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/a34rmre7/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றை மூடி மறைப்பதற்காக பஞ்சாப் முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">பகவந்த் மானின் </a>மனைவி குர்ப்ரீத் கவுர் ரூ. 5 கோடி லஞ்சம் கேட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சித் சிங் என்பவர் குற்றம்சாட்டியிருந்தார். </p><p>இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஞ்சித் சிங்கிற்கு குர்ப்ரீத் கவுர் சட்டப்பூர்வ நோட்டீஸ்அனுப்பியுள்ளார்.</p> <h2>நோட்டீஸ்</h2><p>நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் அவர் பதில் அளிக்க வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்கத் தவறினால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருக்கும் என்றும், சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>காங்கிரஸ் தலைவர் சுக்பால் சிங் கைராவின் மைத்துனரே ரஞ்சித் சிங் ஆவார். எனவே அவரின் இந்த குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது என ஆளும் <a href="https://www.maalaimalar.com/topic/aam-aadmi">ஆம் ஆத்மி </a>தெரிவித்துள்ளது.</p> <h2>மனித உரிமைகள் ஆணையம் </h2><p>முன்னதாக, இக்குற்றச்சாட்டு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்து, பஞ்சாப் மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது.</p><p>புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியது.</p><p>இந்நிலையில் குர்ப்ரீத் கவுர், தன் மீது குற்றம்சாட்டிய முன்னாள் நீதிபதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்.. பள்ளி மாணவி 5 மாத கர்ப்பம் - கருக்கலைப்பு முயற்சியில் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-school-horror-teacher-rapes-minor-student-for-months-illegal-abortion-attempt-leads-to-death</link><comments>https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-school-horror-teacher-rapes-minor-student-for-months-illegal-abortion-attempt-leads-to-death#comments</comments><guid isPermaLink="false">6a38cc81-39df-4094-844f-6ddb212e0ba5</guid><pubDate>Sat, 22 Aug 2026 21:51:15 +0000</pubDate><atom:updated>2026-08-22T21:51:15.317Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,Sexual assault,government school,ஜம்மு காஷ்மீர்,அரசுப் பள்ளி,Jammu &amp; Kashmir</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/47ezu93y/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாலியல் வன்கொடுமை]]></media:title><media:description type="html"><![CDATA[ பாலியல் வன்கொடுமை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/47ezu93y/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு காஷ்மீரில் அரசுப் பள்ளி மாணவி  உயிரிழந்த சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் பல மாதங்களாக அந்த மாணவியை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை </a>செய்து கர்ப்பமாக்கிய அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. </p> <h2>பாலியல் வன்கொடுமை</h2><p>ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் மாவட்டத்தில் சத்ரூ பகுதியிலுள்ள பமல்போரா அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகவும் பொறுப்புத் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வந்த காலித் உசேன் என்ற ஆசிரியர், அதே பள்ளியில் படித்த மாணவியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.</p><p>இதனால் மாணவி 5 மாத கர்ப்பமானார். இதையறிந்த ஆசிரியர், தனது சகோதரர் தாரிக் என்பவரின் உதவியுடன் சட்டவிரோதமாக சில மாத்திரைகளைக் கொடுத்து மாணவிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார்.</p><p>இதனால் மாணவியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கிஷ்த்வார் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்தார்.</p> <h2>பிரேதப் பரிசோதனை</h2><p>மாணவி சுமார் 5 மாத கர்ப்பமாக இருந்தது பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து சத்ரூ மற்றும் கிஷ்த்வார் பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு நீதி வேண்டி போராட்டங்களில் ஈடுபட்டனர்.</p><p>பிரதான குற்றவாளியான ஆசிரியர் காலித் உசேன் மற்றும் அவரது சகோதரர் தாரிக் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>  <h2>கைது</h2><p>குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் காலித் உசேன் உடனடியாகப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்தச் சட்டவிரோதக் கருக்கலைப்பு முயற்சியில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.</p><p>போலி மாத்திரைகளை வழங்கிய மருந்தக உரிமையாளர் மற்றும் சில உறவினர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசுப் பள்ளியில் அத்துமீறி ஆய்வு.. அபிஜித் தீப்கே மீது வழக்குப்பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-school-fir-cjp-founder-booked-for-unauthorized-entry-and-questioning-students-in-government-school</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-school-fir-cjp-founder-booked-for-unauthorized-entry-and-questioning-students-in-government-school#comments</comments><guid isPermaLink="false">bf1f2c53-619b-4e6f-8987-650cfa965fbc</guid><pubDate>Sat, 22 Aug 2026 21:01:29 +0000</pubDate><atom:updated>2026-08-22T21:01:29.547Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிஜேபி,CJP Protest,CJP,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/wigo3xz1/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/wigo3xz1/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் அரசுப் பள்ளிக்குள் அனுமதியின்றி நுழைந்து, மாணவர்களிடம் கேள்வி கேட்டு இடையூறு ஏற்படுத்திய புகாரின் பேரில் கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் <a href="https://www.maalaimalar.com/news/national/abijeet-dipke-warns-of-massive-delhi-jantar-mantar-style-protest-in-jaipur">அபிஜித் திப்கே</a> மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><h2>புகார்</h2><p> புகாரின்படி, ஆகஸ்ட் 20 அன்று பிற்பகல் 1 மணியளவில் அபிஜித் திப்கே மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டம் ஔசா பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர்.  அனுமதியின்றி வகுப்பறைகளுக்குள் சென்ற அவர்கள், மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை அங்கே நேரத்தைச் செலவிட்டுள்ளனர். மேலும் வகுப்பறை நிகழ்வுகளைப் புகைப்படமும் எடுத்துள்ளனர்.</p><h2>வாக்குவாதம்</h2><p>பள்ளியில் முழுமையான வருகைப்பதிவு மற்றும் சிறப்பான சூழல் இருப்பது போலக் காட்டுவதற்காக வேறொரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களை இந்த பள்ளியின் வகுப்பறையில் அமர வைத்தது தொடர்பாக ஆசிரியர்களுக்கும் சிஜேபினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  அப்போது ஆசிரியர்களை அவதூறாகப் பேசி, அவர்களைப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய வைப்பதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. </p><p>பள்ளி ஆசிரியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஔசா காவல் நிலையப் போலிஸார் அபிஜித் திப்கே உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.  </p><h2>நாய்களுக்கு நல்ல வசதி</h2><p>முன்னதாக பள்ளியை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது மாணவர்களின் வாழ்க்கைப் பிரச்சனை. மக்கள் பிரதிநிதிகள் மாணவர்களுக்காக எதுவுமே செய்யப்போவதில்லை என்றால், அவர்களுக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?</p><p>ஹெலிகாப்டரில் மட்டுமே பறப்பதற்காகவா மக்கள் வாக்களிக்கிறார்கள்? மக்கள் தங்கள் குழந்தைகள் எந்தச் சூழ்நிலையில் படிக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.</p><p>இந்த அமைச்சர்களின் நாய்களுக்குக்கூட மாணவர்களை விட சிறந்த வசதிகள் கிடைக்கின்றன.</p><p>சில பள்ளிகளில் மாணவர்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகின்றனர்.</p><p>போதிய வகுப்பறைகள், பெஞ்சுகள், கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பான சாலை வசதிகள் இல்லாத பள்ளிகளின் அவலநிலைக்கு மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர்களுமே பொறுப்பேற்க வேண்டும்.</p><p>கல்விக்காகப் பணியாற்றாத வரை எங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்க வர வேண்டாம் என்று அவர்களிடம் கூறுங்கள்.</p><p>அரசியலுக்காக சாதி, சமூகக் கொடிகளைப் பிடித்துக்கொண்டு நாம் வெளியே வருகிறோம்.</p><p>அதேபோல் நமது குழந்தைகளின் பள்ளிகளுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.</p> <h2>ஆபத்தில் மதம்</h2><p>அரசியல் தலைவர்கள் மதம் ஆபத்தில் உள்ளது என்று தொடர்ச்சியாக கூறுவதை குறிப்பிட்ட அவர், "இத்தனை ஆண்டுகளாக அழியாத மதம், உங்கள் ஆட்சிக் காலத்திலா அழியப் போகிறது? மதம் எங்கும் போய்விடாது.</p><p>ஆனால் நமது குழந்தைகளின் எதிர்காலம் கண்டிப்பாகப் பாதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.</p> <h2>ராஜினாமா செய்</h2><p>தாதா பூசே பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக தொடர வேண்டுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "பள்ளிகளின் அவலநிலையைப் பார்த்தால், கல்வி அமைச்சர் அந்தப் பதவியில் தொடரக்கூடாது என்றே தோன்றுகிறது.</p><p>அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்தால்தான் அங்குள்ள உண்மையான பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முடியும்" என தீப்கே பதிலளித்தார்.</p> <p>பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் ஆளும் அரசு, அரசுப் பள்ளிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரத் தவறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.</p><p>School Thik Karo (பள்ளிகளைச் சரிசெய்) என்ற பெயரில் சிஜேபி கடந்த வாரம் பிரசார இயக்கம் ஒன்றை தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பாஜக புதிய நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து.. ஜென் இசட் இளைஞர்களை கவர தனி குழு அமைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-launches-gen-z-outreach-new-high-level-team-formed-under-modi-and-nitin-naveen-to-woo-youth</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-launches-gen-z-outreach-new-high-level-team-formed-under-modi-and-nitin-naveen-to-woo-youth#comments</comments><guid isPermaLink="false">42c7d364-9939-4954-bdf6-0972b6be2744</guid><pubDate>Sat, 22 Aug 2026 20:20:33 +0000</pubDate><atom:updated>2026-08-22T20:20:33.599Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Prime Minister Modi,ஜென் இசட்,Gen z,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bu9nwjxm/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bu9nwjxm/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற <a href="https://www.maalaimalar.com/news/national/modi-govt-campus-outreach-ministers-to-visit-universities-daily-under-one-day-one-university-campaign-to-engage-gen-z-students">பிரதமர் மோடி</a>, கட்சியின் தலைவர் நிதின் நபின் தலைமையிலான புதிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.</p><h2>புதிய நிர்வாகிகள் </h2><p>பாஜகவின் 65 உறுப்பினர்கள் கொண்ட புதிய நிர்வாகி பட்டியல் ஆகஸ்ட் 17 அன்று அறிவிக்கப்பட்டது. இதில் 51 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p>ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் புதிய அமைப்பில் முக்கியப் பங்காற்ற உள்ளனர். </p> <h2>இளைஞர்களை கவர குழு</h2><p>14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இளைஞர்களை சென்றடையும் வகையில் பெரிய அளவிலான இயக்கத்தை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.</p><p>அந்த வகையில் ஜென் இசட் தலைமுறையினரை சென்றடைவதற்காக சிறப்பு 'ஜென் ஜி அவுட்ரீச் திட்டத்தை' பாஜக கையில் எடுத்துள்ளது.</p><p>இதற்காக தனித்துவமான உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், தேசியப் பொதுச்செயலாளர்களான ஸ்மிருதி இரானி மற்றும் வினோத் தாவ்டே ஆகியோருக்கு இந்த குழுவில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>மேலும், குஜராத் மாநில அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, சத்தீஸ்கர் மாநில அமைச்சர் ஓ.பி. சவுத்ரி உள்ளிட்ட பல முக்கிய இளம் தலைவர்களும் இந்த குழுவில் பணியாற்றவுள்ளனர்.</p> <h2>பாடம் கற்ற பாஜக </h2><p>தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய போராட்டம், தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வழிவகுத்தது.</p><p>இதைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட பிரதமர் மோடி, இன்ஸ்டாகிராமில் மாணவர்களை கவரும் வேலையில் இறங்கியுள்ளார். கட்சியினரையும் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.</p><p>அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றியை தீர்மானிப்பதில் ஜென் இசட் முக்கிய காரணியாக மாறும் சூழலில், அவர்களை கவர பல்வேறு விஷயங்களை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. பாஜகவின் சிந்தாந்த தலைமையாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஜென் இசட் சந்திப்புகளை நடத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஒடிசா அருகே வங்கக்கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் - 2 மாலுமிகள் மீட்பு - 22 பேரை தேடும் பணி தீவிரம்
</title><link>https://www.maalaimalar.com/news/national/cargo-ship-sinks-near-odisha-mv-ocean-winner-goes-down-in-bay-of-bengal-search-on-for-22-missing-crew</link><comments>https://www.maalaimalar.com/news/national/cargo-ship-sinks-near-odisha-mv-ocean-winner-goes-down-in-bay-of-bengal-search-on-for-22-missing-crew#comments</comments><guid isPermaLink="false">5f847ce9-cae5-4c9d-a07a-b17016f322f7</guid><pubDate>Sat, 22 Aug 2026 19:36:29 +0000</pubDate><atom:updated>2026-08-22T19:36:29.824Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒடிசா,Odisha,Indian Navy,இந்திய கடற்படை,cargo ship,சரக்கு கப்பல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/53c50an7/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கப்பல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கப்பல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/53c50an7/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒடிசா அருகே <a href="https://www.maalaimalar.com/news/national/indian-sailors-safe-22-indians-on-two-hijacked-merchant-ships-off-yemen-and-somalia-reported-unharmed">சரக்குக் கப்பல்</a> மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மூழ்கிய கப்பல்</h2><p>நேற்று முன் தினம் ஒடிசா கடற்கரையிலிருந்து சிங்கப்பூருக்கு இரும்புத் தாதை சுமந்து கொண்டு பனாமா நாட்டு கொடியுடன் எம்.வி. ஓஷன் வின்னர் என்ற சரக்கு கப்பல் புறப்பட்டது.</p><p>நேற்று, ஒடிசாவின் பாரதீப் கடற்கரையிலிருந்து சுமார் 240 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றபோது வங்கக்கடலில் கப்பல் மூழ்கியது.</p><p>தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவை இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.</p> <h2>பணியாளர்கள்</h2><p>இக்கப்பலில் 20 சீனா, 3 மியான்மர் மற்றும் 1 வங்கதேசத்தைச் சேர்ந்த மாலுமி என மொத்தம் 24 பணியாளர்கள் இருந்தனர். கடலில் மிதந்த 2 மாலுமிகள் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>எஞ்சிய 22 பணியாளர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் செல்லும் பிற கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தேடுதல் பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடத்தப்பட்ட 2 வணிகக் கப்பல்கள்.. 22 இந்திய மாலுமிகளின் நிலை குறித்து மத்திய அரசு விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-sailors-safe-22-indians-on-two-hijacked-merchant-ships-off-yemen-and-somalia-reported-unharmed</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-sailors-safe-22-indians-on-two-hijacked-merchant-ships-off-yemen-and-somalia-reported-unharmed#comments</comments><guid isPermaLink="false">6c872f7f-a3a5-4e19-bd7b-1d3a223fee11</guid><pubDate>Sat, 22 Aug 2026 18:19:53 +0000</pubDate><atom:updated>2026-08-22T18:19:53.525Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yemen,ஏமன்,கடற்கொள்ளையர்கள்,சோமாலியா,Somalia,Pirates</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/85v512tz/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கப்பல்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ கப்பல்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/85v512tz/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதிகளில் அடுத்தடுத்து <a href="https://www.maalaimalar.com/news/world/indian-crew-hostage-two-merchant-ships-hijacked-off-yemen-and-somalia-22-indians-in-peril">கடற்கொள்ளையர்கள் </a>கடத்திய  2 வணிகக் கப்பல்களில் சிக்கியுள்ள 22 இந்திய மாலுமிகளும் தற்போது பாதுகாப்பாக உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.</p> <h2>கடத்தல்</h2><p>எரித்திரியா நாட்டுக்கு கொடியுடன் எண்ணெய் பொருட்களை ஏற்றிச் சென்ற எம்டி ஷிபு 1 என்ற வணிக கப்பல் 20 பணியாளர்களுடன் ஏமன் கடற்கரைக்கு 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்தபோது ஆயுதமேந்திய 6 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கடற்கொள்ளையர்களால் </a>கடத்தப்பட்டுள்ளது. அதிலிருந்த 20 பணியாளர்களில் 16 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.</p><p>முன்னதாக எம்வி லுடிப் என்ற கேமரூன் கொடியுடன் கூடிய வணிக கப்பல் சோமாலியாவின் பன்ட்லேண்ட் கடற்கரைக்கு அருகே கடந்த திங்களன்று கடத்தப்பட்டுள்ளது.</p> <p>அதில் இருந்த மொத்தம் 10 பணியாளர்களில் 6 பேர் இந்தியர்கள் ஆவர். சோமாலிய அதிகாரி ஒருவரின் கூற்றை மேற்கோள் காட்டி அசோசியேட் பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.</p><p>இந்த கப்பலானது பண்ட்லேண்ட்டில் உள்ள Eyl மாவட்டத்தில் உள்ள மராரையாவுக்கு 3.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் வைத்து கடத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து வடக்கு சோமாலியாவில் உள்ள Nugaal கடற்கரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக அந்த சோமாலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.</p> <p>இந்த கப்பல் போலார் மூவ்மென்ட் ஷிப்பிங் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் சோமாலியாவில் உள்ள துருக்கி ராணுவ பயிற்சி மையத்திற்கு ஆயுதங்கள், பயிற்சி உபகரணங்கள், சேட்டிலைட் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளை கொண்டு சென்று கொண்டிருந்தது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p>கப்பலை 8 கடற்கொள்ளையர்கள் சேர்ந்து கடத்தியதாக நம்பப்படுகிறது. இவர்கள் முன்னதாக கடந்த ஏப்ரலில் எம்வி ஸ்வார்ட் என்ற கப்பலை கடத்தியர்வர்கள் என்று அந்த சோமாலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.</p> <h2>விளக்கம்</h2><p>இதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், "கடத்தப்பட்ட கப்பல்களில் உள்ள அனைத்து இந்திய மாலுமிகளும் காயங்களின்றி பாதுகாப்பாக உள்ளனர். </p><p>அவர்களை பத்திரமாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று உறுதியளித்துள்ளார்.</p> <p>சோமாலிய அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து மாலுமிகளை மீட்பதற்கான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை நைரோபியில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளது.</p><p>கடத்தப்பட்ட கப்பல்களின் நடமாட்டத்தை சர்வதேச கடற்படைக் கப்பல்களும், டிரோன்களும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>ம.பி. மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தீ விபத்து.. பிறந்த குழந்தை பலி - இரு குழந்தைகள்  காயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/infant-dies-after-fire-in-madhya-pradesh-govt-hospital-nicu-cradle-warmer-short-circuit-sparks-blaze-dozens-of-babies-evacuated-safely</link><comments>https://www.maalaimalar.com/news/national/infant-dies-after-fire-in-madhya-pradesh-govt-hospital-nicu-cradle-warmer-short-circuit-sparks-blaze-dozens-of-babies-evacuated-safely#comments</comments><guid isPermaLink="false">147ce48f-def8-4eda-9ca3-63957b7a3f22</guid><pubDate>Sat, 22 Aug 2026 17:17:55 +0000</pubDate><atom:updated>2026-08-22T17:17:55.501Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,அரசு மருத்துவமனை,Government Hospital,Madhya Pradesh,தீவிபத்து,மத்தியப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/jt8w8bit/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ம.பி. மருத்துவமனை தீ விபத்து ]]></media:title><media:description type="html"><![CDATA[ ம.பி. மருத்துவமனை தீ விபத்து ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/jt8w8bit/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/madhya-pradesh">மத்தியப் பிரதேசத்தில்</a> அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81"> தீவிபத்தில் </a>பச்சிளம் குழந்தை பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><h2>அரசு மருத்துவமனை</h2><p>மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்ட அரசு மருத்துவமனையி இன்று அதிகாலை 1:50 மணியளவில் இந்த தீ விபத்து நிகழ்ந்தது.  </p><p>புதிதாக பிறக்கும் குறைந்த எடையுள்ள மற்றும் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் உடல் வெப்பநிலையைப் பராமரிக்கப் பயன்படும் Cradle Warmer இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகத் தீப்பொறி உருவானதாகக் கூறப்படுகிறது.  </p><h2>தீ பரவல்</h2><p>வார்மர் இயந்திரத்தில் பற்றி எரிந்த தீ, அங்கிருந்த படுக்கை விரிப்புகளுக்கும் பரவியது.</p><p>தீ பரவுவதைக் கண்டவுடன் அங்குப் பணியிலிருந்த ஊழியர்கள், எரியும் வார்மர் இயந்திரத்தை மற்ற குழந்தைகளிடமிருந்து தள்ளி நகர்த்தினர்.</p><p>அதே பிரிவில் சிகிச்சையில் இருந்த 33 குழந்தைகளும், அருகிலுள்ள வெளிப்புறப் பிரிவில் இருந்த 30 குழந்தைகளும் பத்திரமாக வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.</p><p>மேலும், தீ மேல் தளத்திலிருந்த மகப்பேறு வார்டுக்குப் பரவாமலும் தடுக்கப்பட்டது.</p><p>இருப்பினும் தீ விபத்து ஏற்பட்ட பிரிவில் ஆக்சிஜன் உதவியுடன் இருந்த 3 குழந்தைகள் தீக்காயமடைந்துள்ளன.</p> <h2>உயிரிழப்பு</h2><p>காயமடைந்த 3 குழந்தைகளும் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.</p><p>அங்கு சிகிச்சையில் இருந்த ஒரு குழந்தை உயிரிழந்தது. எனினும், குழந்தையின் உடற்கூறாய்வு அறிக்கையில் அக்குழந்தை தீக்காயங்களால் இறக்கவில்லை என்றும், பிறப்பிலேயே இருந்த தீவிர சுவாசக் கோளாறு பிரச்சனையாலேயே உயிரிழந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>லேசான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மற்ற இரு குழந்தைகள் தற்போது சீரான உடல்நிலையுடன் உள்ளனர்.</p> <h2>விசாரணை</h2><p>இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உமங் சிங்கார், மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உடனடியாக தீவிபத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தணிக்கை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் குறித்த மனுஸ்மிருதியின் விதிமுறை வெட்கக்கேடானது- ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/women-are-not-owned-by-husbands-or-sons-rahul-gandhi-on-manusmriti</link><comments>https://www.maalaimalar.com/news/national/women-are-not-owned-by-husbands-or-sons-rahul-gandhi-on-manusmriti#comments</comments><guid isPermaLink="false">7c0749ae-c81e-4872-a3d5-9169de0ca044</guid><pubDate>Sat, 22 Aug 2026 16:33:17 +0000</pubDate><atom:updated>2026-08-22T16:33:17.692Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,மனுஸ்மிருதி,manusmriti</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/kt3x6te8/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi slams Manusmriti’s control over women]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/kt3x6te8/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெண்கள் தங்களுக்கு தாங்களே சொந்தமானவர்கள் என்றும் தங்கள் தந்தைக்கோ, கணவனுக்கோ அல்லது மகன்களுக்கோ சொந்தமானவர்கள் கிடையாது என்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி</a> கூறினார். </p><p>மேலும், ஒரு பெண் தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆண் உறவினர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்க வேண்டும் என்ற மனுஸ்மிருதியின் விதிமுறை வெட்கக்கேடானது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் நலத் திட்டமான 'சத்ரோன் கி கூஞ்ச்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களவை எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.</p><p>அப்போது அவர் கூறுகையில், “இந்தியப் பெண்களின் 70 கோடி தனித்துவமான பயணங்கள், தனித்துவமான கற்பனைத்திறன், தனித்துவமான கனவுகள் தான் இந்தியாவின் மிகப்பெரிய பலமாக உள்ளது.</p><p>குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் தன் தந்தைக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும், இளமைப் பருவத்தில் அவள் தன் கணவனுக்குச் சொந்தமானவள், அவளது கணவன் இறந்த பிறகு, அவள் தன் மகன்களுக்குச் சொந்தமானவள் என்று மனுஸ்மிருதி தெளிவாகக் கூறுகிறது.</p><p>ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருக்கக்கூடாது. இந்த வார்த்தைகள் வெட்கக்கேடானவை. இந்த வார்த்தைகள் பேசப்பட்டிருக்கவே கூடாது.</p><p>நீங்கள் உங்களைத் தவிர வேறு யாருக்கும் சொந்தமானவர் அல்ல. உங்கள் தந்தை, சகோதரர், கணவர், மகன் ஆகியோருடன் உங்களுக்கு உறவு இருக்கலாம், ஆனால் நீங்கள் அவர்களுக்கு சொந்தமானவர் அல்ல, நீங்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவர்.</p><p>நான் சொற்பொழிவாற்றவோ அல்லது அரசியல் விவாதிக்கவோ இங்கு வரவில்லை; மாறாக, இளைஞர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், கருத்துக்களைக் கலந்துரையாடவும் ஒரு வாய்ப்பை வழங்குவதற்காகவே வந்துள்ளேன்.</p><p>கூண்டைத் தகர்த்தெறியுங்கள் என்ற கூட்டத்தில் பேச எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெண்களாகிய நீங்கள் தனித்துவமானவர், நீங்கள் சிறப்பானவர், நீங்கள் ஒரு தனிநபர், மேலும் உங்களுக்கென சொந்தக் கனவும் தொலைநோக்குப் பார்வையும் உண்டு.</p><p>பெண்கள் இயல்பாகவே ஆண்களை விட அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், மென்மையானவர்கள், கருணையுள்ளவர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் என்பதே எனது வாதம்.</p><p>பெண்கள் பெரும்பாலும் மகள், மனைவி அல்லது தாய் என்ற மூன்று அடையாளங்களுக்குள் முடக்கப்பட்டனர்; இந்த உறவுகளில் தவறொன்றுமில்லை என்றாலும், இவை மட்டுமே அவர்களின் ஒரே அடையாளமாக இருக்க முடியாது.</p><p>பெண்கள் தொழில் வல்லுநர்களாகவும் விளையாட்டு வீராங்கனைகளாகவும் பல்வேறு துறைகளில் தீவிரமாகச் செயல்பட்டாலும், அவர்களின் அடையாளங்கள் பெரும்பாலும் ஆண்களுடனான உறவுகளின் மூலமே வரையறுக்கப்படுகின்றன” என்று ராகுல் காந்தி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட 53 வயது யானைக்கு வந்தாராவில் சிறப்பு சிகிச்சை: விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது</title><link>https://www.maalaimalar.com/news/national/flood-rescued-elephant-joymoti-airlifted-to-vantara-for-specialised-treatment</link><comments>https://www.maalaimalar.com/news/national/flood-rescued-elephant-joymoti-airlifted-to-vantara-for-specialised-treatment#comments</comments><guid isPermaLink="false">17fd6b82-3ba2-454d-8caf-96d74be59be1</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:08:17 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:08:17.622Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Assam Flood,அசாம் வெள்ளம்,Vantara,வந்தாரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/uxiurava/Elephant001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யானை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/uxiurava/Elephant001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாகலாந்து மற்றும் அசாமில் கடந்த மாதம் 2-வது வாரத்தில் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் 53 வயதான பெண் யானை (ஜோய்மோதி) அடித்துச் செல்லப்பட்டது. நாகலாந்து அதிகாரிகள் உள்ளூர் மக்கள் உதவியுடன் இந்த யானையை மீட்டனர்.</p><h2>காயத்துடன் அவதிப்பட்ட யானை</h2><p>ஆனால் யானையின் உடம்பில் பெரும்பாலான இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. ஒரு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு கண்ணீர் வடிந்த வண்ணம் உள்ளது. உள்ளூர் பகுதியில் கால்நடை மருத்துவர்கள் காயங்களுக்கு மருந்து வைத்து கட்டினார்கள். என்றாலும், நீண்ட நேரம் நிற்க முடியாமல் ஜோய்மோதி அவதிப்பட்டது. மேலும், சரியாக உணவு சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டது.</p><p>இதனால் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள அம்பானியின் வந்தாராவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டால் நீண்ட நேரம் ஆகும் என்பதால் வான்வழியாக வந்தாரா கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><h2>வந்தாரா</h2><p>வந்தாரா ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆனந்த் அம்பானி மூலம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தொடங்கப்பட்ட ஒரு பெரிய வனவிலங்கு பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமாகும். காயம்பட்ட, துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மற்றும் ஆபத்தில் உள்ள விலங்குகளுக்கு இது அடைக்கலம் அளிக்கிறது.</p><p>வனவிலங்குகளுக்கான அவசர சிகிச்சையில் உள்ளூர் திறனை வலுப்படுத்தும் நோக்கில், அசாமில் மூன்று வனவிலங்கு கால்நடை மருத்துவப் பராமரிப்பு மையங்களை (அதில் ஒன்று யானைகளுக்கென பிரத்யேகமாக அமைக்கப்படவுள்ளது) நிறுவ 'வந்தாரா' (Vantara) முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்தின்படி, இந்த மையங்கள் அந்தந்த விலங்கினங்களுக்கு ஏற்ற உள்கட்டமைப்பு மற்றும் கால்நடை மருத்துவ வசதிகளைக் கொண்டிருக்கும்; மேலும் இவை அசாம் வனத்துறையால் தன்னாட்சி முறையில் இயக்கப்படும்.</p><p>அசாமில் உள்ள யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கு, அவசரநிலை ஏற்படும் இடங்களுக்கு அருகிலேயே சிறப்பு மருத்துவ சிகிச்சையை வழங்குவதே இம்மையங்களை அமைப்பதன் நோக்கமாகும்; இதன் மூலம் விலங்குகளை நீண்ட தூரம் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் குறையும்.</p>]]></content:encoded></item><item><title>மார்க்கெட்டில் உலாவும் செயற்கை பனீர்: கர்நாடக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-bans-sale-of-analogue-paneer-marketed-as-paneer-for-one-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-bans-sale-of-analogue-paneer-marketed-as-paneer-for-one-year#comments</comments><guid isPermaLink="false">0ec7c8e3-896d-44ef-a1d9-447547e85b99</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:34:18 +0000</pubDate><atom:updated>2026-08-22T14:34:18.968Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Paneer,பனீர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7c08kici/Paneer0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செயற்கை பனீர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7c08kici/Paneer0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புரோட்டீன் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பனீரை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பயன்படுத்தில் பால் அல்லாத தாவர எண்ணெய் போன்ற பொருட்களில் இருந்த போலியாக செயற்கை பனீர் சந்தைகளில் உலாவருகின்றன. இது பொதுமக்களில் சுகாதாரத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மகாராஷ்டிரா அரசு அனலாக பனீர் என அழைக்கப்படும் செயற்கை பனீருக்கு தடைவிதித்திருந்தது. அந்த வகைியல் தற்போது கர்நாடக அரசு ஒரு வருடம் தடைவிதித்துள்ளது.</p> <p>கர்நாடக அரசு உண்மையான பனீருக்கு மாற்றாக தயாரிக்கப்பட்டு பனீர் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் அனலாக் பனீர் அல்லது Non-Dairy Paneer தயாரிப்பு சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனைக்கு மாநிலம் முழுவதும் ஓராண்டு தடை விதித்துள்ளது. பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிட்ட அரசு அறிவிப்பில் இந்தத் தடை குறிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தி, பதப்படுத்துதல், பேக்கிங், சேமிப்பு, போக்குவரத்து, மொத்த மற்றும் சில்லறை விற்பனை, விற்பனைக்காகக் காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை பொருந்தும்.</p><h2>போலி பனீர்</h2><p>பாலில் இருந்து தயாரிக்கப்படும் உண்மையான பனீரில் பால் கொழுப்பு மற்றும் பால் திடப்பொருட்கள் முக்கியமானவை. ஆனால், அனலாக் பனீரில் பால் கொழுப்புக்கு பதிலாக தாவர எண்ணெய், தாவர கொழுப்பு, மாவுச்சத்து, எமல்சிபையர்கள் மற்றும் பிற பால் அல்லாத பொருட்கள் பயன்படுத்தப்படலாம்.</p><p>உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின்படி, இத்தகைய தயாரிப்புகளை ‘பனீர்’ என்ற பெயரில் லேபிள் செய்வது (பொருட்கள் மீது விவரம் அடங்கிய அட்டை அல்லது அச்சிடுதல்), விளம்பரப்படுத்துவது அல்லது விற்பனை செய்வது அனுமதிக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>எனினும், FSSAI தனித்தனி தரநிலைகளை ஏற்கனவே நிர்ணயித்துள்ள Frozen Dessert, Processed Cheese, Mixed Fat Spread போன்ற தயாரிப்புகளுக்கு இந்தத் தடை பொருந்தாது.</p><p>மேலும், உணவுத் தயாரிப்புகளில் அனலாக் பனீரை மூலப்பொருளாகப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறாமல் உணவு நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு: உறவினரை அழைத்து வந்து கணவரை அடித்துக் கொலை செய்த மனைவி</title><link>https://www.maalaimalar.com/news/national/husband-kills-wife-after-dispute-arrests-made</link><comments>https://www.maalaimalar.com/news/national/husband-kills-wife-after-dispute-arrests-made#comments</comments><guid isPermaLink="false">dd9facbe-d79a-41d9-b438-9a1d21188031</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:44:40 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:44:40.632Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மனைவி கைது,Wife Arrested,delhi,software engineer,டெல்லி,மென்பொருள் பொறியாளர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/1bn5boru/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi software engineer murder]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/1bn5boru/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவரை தனது மருமகள் வீட்டார் அடித்து கொலை செய்து விட்டதாக, உயிரிழந்த பொறியாளரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மனைவி உள்பட நான்கு பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.</p><h3><strong>பொறியாளர் வினய் குப்தா</strong></h3><p>வினய் நொய்டாவில் உள்ள அடோப் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்று வந்துள்ளார்.</p><p>இவர், மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரேகா என்பவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.</p><p>டெல்லியில் உள்ள வீட்டில், வினய்-யும் அவரது மனைவியும் மூன்றாவது மாடியிலும், வினய்யின் பெற்றோர்கள் கீழ்தளத்திலும் வசித்து வந்துள்ளனர்.</p><p>இதையடுத்து இன்று காலை வினய் குப்தாவுக்கும் அவரது மனைவி ரேகாவுக்கும் இடையே, தங்கள் குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><p>அப்போது ரேகா வீட்டில் இருந்து வெளியேறி, தனது தந்தை, இரண்டு சகோதரர்கள், மாமா என குடும்ப உறுப்பினர்களை வினய் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.</p><p>இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. அதைத் தொடர்ந்து ரேகாவின் குடும்ப உறுப்பினர்கள் வினயை தாக்க தொடங்கியுள்ளனர்.</p><h3><strong>பொறியாளரின் தாய் குற்றச்சாட்டு</strong></h3><p>இன்று நடந்த சம்பவம் குறித்து வினய்யின் தாய் கூறுகையில், ”மருமகளின் குடும்பத்தினருக்கு தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி வருவதற்காக வெளியே சென்றேன்.</p><p>நான் திரும்பி வந்தபோது, என் மகனை மருமகளின் வீட்டார் தாக்கிக்கொண்டு இருந்தனர். நான் உடனே தாக்குதலை நிறுத்துமாறு அவர்களிடம் கெஞ்சினேன். ஆனால் என் மகன் மீது தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டது.</p><p>மருமகளின் வீட்டார், எனது மகனின் கழுத்தை நெரித்து, மார்பில் உதைத்து தாக்கினர். இந்த சம்பவத்தை முன்கூட்டியே திட்டம் தீட்டி, எனது வீட்டில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ரேகா அணைத்துவிட்டார்” என்று அவர் கூறினார்.</p><p>தாக்குதல் நடந்த சில நிமிடங்களுக்கு பிறகு, வினய்-யின் பக்கத்து வீட்டுக்காரர் உள்ளே வந்து, அவரை தோளில் சுமந்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வினய் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.</p><h3><strong>மனைவி குடும்பத்தார்கள் கைது</strong></h3><p>இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ரேகா, அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் அண்ணி என நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறையில் இருக்கும் ரவுடியுடன் வீடியோ காலில் பேசியபடி ஆடைகளை கழற்றிய இன்ஸ்பெக்டர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/inspector-strips-on-video-call-with-jailed-rowdy</link><comments>https://www.maalaimalar.com/news/national/inspector-strips-on-video-call-with-jailed-rowdy#comments</comments><guid isPermaLink="false">284a5926-5def-470c-b0a6-d1766be09561</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:07:41 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:07:41.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,பெண் இன்ஸ்பெக்டர்,karnataka police,woman inspector,Rowdy Saikumar,Hindalga Jail,ஹிண்டல்கா சிறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/0eqwoyqj/Woman-Inspector" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Woman Inspector]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/0eqwoyqj/Woman-Inspector?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81">பெங்களூரு</a>வில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ சமூக வலை தளங்களில் வெளியானது. அதில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் போனில் பேசிக்கொண்டே தனது ஆடைகளை கழற்றுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. </p><p>இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து அந்த பெண் அதிகாரி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பொதுமக்களிடமும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.</p><h2><strong>பெண் இன்ஸ்பெக்டர்</strong></h2><p>இதனைதொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீடியோவில் இருப்பது கர்நாடக மாநில தொழிலல் துறை பாதுகாப்புப் படையை சேர்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">பெண் இன்ஸ்பெக்டர்</a> என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.</p><h2><strong>புகார் விசாரணை</strong></h2><p>பெண் இன்ஸ்பெக்டர் ஹிண்டல்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தனது நண்பரான ரவுடி சாய்குமார் என்பவருடன் வீடியோ காலில் பேசிய போது ஆடைகளை கழற்றியது தெரியவந்தது. இதையடுத்து பெண் இன்ஸ் பெக்டர், சாய்குமார் மற்றும் சிலர் மீது கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.</p><p>இதையடுத்து போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனைகள் பெற்று வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-</p><p>வீடியோவில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் புகார் அளித்து விட்டு தற்போது விடுமுறையில் சென்று விட்டார். இந்த வீடியோ கடந்த 2024-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ரவுடிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெண் இன்ஸ்பெக்டரின் நண்பரான சாய்குமார் துமகூரு மாவட்டம் குனிகல் பகுதியை சேர்ந்தவர்.</p><h2><strong>சிறை தொடர்பு அம்பலம்</strong></h2><p>இந்த வீடியோ எடுத்த காலக்கட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஹிண்டல்கா மத்திய சிறையில் பணியில் இருந்தார். அந்த சிறையில் தான் சாய்குமாரும் அடைக்கப்பட்டு இருந்தார். </p><p>அவர்சிறையில் இருந்த போது இன்ஸ்பெக்டர், ரவுடி தொடர்பு கொண்டு ஆபாசமான அழைப்புகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சாய்குமார் அந்த அழைப்பை பதிவு செய்து கொண்டு அதை சமீபத்தில் கசிய விட்டுள்ளார்.</p><h2><strong>ரவுடியின் லஞ்ச புகார்</strong></h2><p>மேலும் ரவுடி சாய்குமாரும், பெண் இன்ஸ்பெக்டர் மீது புகார் அளித்து உள்ளார். அதில் சிறைக்குள் தன்னிடம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம் </a>பெற்றுக்கொண்டு தொலைபேசிகள், மது பானம் மற்றும் பிற ஆடம்பர பொருட்களை அவர் வழங்கியதாக குற்றம் சாட்டி உள்ளார். அதே கைபேசி தான் வீடியோ அழைப்புகளை பதிவு செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>சிறையில் நடக்கும் முறை கேடுகளை அம்பலப்படுத்துபவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படும் என மிரட்டப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><h2><strong>பெண் இன்ஸ்பெக்டர் சர்ச்சை</strong></h2><p>அவரது புகாரின் அடிப்படையில் பெண் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான விசாரணை நடை பெற்று வருகிறது. இதற்கிடையே சிறை அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளுடன் ஒரு வீடியோ இன்ஸ்டா கிராமில் பகிரப்பட்டது.</p><p>அந்த பதிவை தொடர்ந்து சிறை அதிகாரிகள் பெலகாவி சிஇஎன் போலீசில் நிலையத்தில் புகார் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பெண் போலீஸ் வீடியோ வேகமாக பரவி வருவதால் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகா</a>வில் பரபரப்பு நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>நாக்பூரில்  36 டன் தாய் கெளுத்தி மீன்கள் அழிப்பு: காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/11-ponds-raided-36-tonnes-of-banned-thai-mangur-destroyed-in-nagpur</link><comments>https://www.maalaimalar.com/news/national/11-ponds-raided-36-tonnes-of-banned-thai-mangur-destroyed-in-nagpur#comments</comments><guid isPermaLink="false">ab21c3d0-c9c3-4bea-aff8-c96b7922996e</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:43:18 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:43:18.635Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மகாராஷ்டிரா,நாக்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/0rxwuzsf/CatFish001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கெளுத்தி மீன்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/0rxwuzsf/CatFish001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் மீன்வளத்துறை சார்பில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்கள் குளங்கள் அமைத்து தாய் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>அப்போது 11 குளங்களில் வளர்க்கப்பட்டு வந்த சுமார் 36 டன்கள் தாய் கெளுத்தி (தாய் மங்கூர்) மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதை லாரிகள் ஏற்று, சுற்றுச்சூழல் பாதிப்படையாக இடத்தில் பெரிய பள்ளம் தோண்டி, அதில் கொட்டி மூடினர்.</p><p>அதிகாரிகளுக்கு வந்த புகார் அடிப்படையில் பர்ஷிவ்னி தாலுகாவில் உள்ள சிசோலி-மகதுலா பகுதியில் குளங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">11 Ponds Raided, 36 Tonnes Of Banned Thai Mangur Destroyed In Nagpur<a href="https://t.co/uXenI0Aa0G">https://t.co/uXenI0Aa0G</a> <a href="https://t.co/zSGf2zFFCZ">pic.twitter.com/zSGf2zFFCZ</a></p>&mdash; NDTV (@ndtv) <a href="https://x.com/ndtv/status/2090700292941889635?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>உள்ளூரைச் சேர்ந்த 25 மீனவர்கள் உதவியுடன் இந்த மீன்கள் குளத்தில் இருந்து அகற்றப்பட்டன. கடந்த 3 மாதங்களில் 51 டன் மீன்கள் அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அழிக்கப்பட்டது மிகப்பெரிய அளவிலானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த வகை தாய் கெளுத்தி மீன்கள் சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதால், இந்தியாவில் இவற்றை வளர்க்க அரசாங்கம் தடை விதித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவல்துறையில் ஓய்வுபெற்ற நாய்களை இனிமேல் தத்தெடுக்க அனுமதி கிடையாது: தேவேந்திர பட்னாவிஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/retired-police-dogs-no-longer-allowed-for-adoption-devendra-fadnavis</link><comments>https://www.maalaimalar.com/news/national/retired-police-dogs-no-longer-allowed-for-adoption-devendra-fadnavis#comments</comments><guid isPermaLink="false">c01902b7-9d2d-47b0-9c0d-49c219587c31</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:32:00 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:32:00.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,தேவேந்திர பட்னாவிஸ்,devendra fadnavis,police dog,காவல் நாய்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/c1hy9e6c/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Maharashtra Police Retired Dogs Adoption Ban]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/c1hy9e6c/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற காவல் நாய்கள் இனி மூன்றாம் தரப்பினருக்கு தத்தெடுப்புக்காக வழங்கப்படாது என அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று அறிவித்தார்.</p><p>காவல்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற நாய்கள், தங்கள் பணியை நிறைவு செய்த பிறகு பொதுவாக தத்தெடுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்த வகையான காவல் நாய்களுக்கு, தங்கள் பராமரிப்பாளர்களிடம் இருந்தும், வழக்கமான பழக்கவழக்கங்களில் இருந்தும் திடீரென பிரிவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியது.</p><p>இதன் விளைவாக, பல நாய்கள் மன அதிர்ச்சிக்கு உள்ளாகி, தங்களின் புதிய சூழல்களில் உணவை உண்பதற்கு மறுத்து வந்தன.</p><p>இந்த நிலையில், பணி ஓய்வு பெற்ற காவல் நாய்களின் நலன் குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் புதிய அறிவிப்பை பிறப்பித்துள்ளார்.</p><h3><strong>மகாராஷ்டிர முதலமைச்சர்</strong></h3><p>அவர் அந்த அறிவிப்பில், மகாராஷ்டிர காவல்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு நாய், தனது பணி ஓய்வுக்கு பிறகு துன்பப்படக்கூடாது. அத்தகைய விலங்குகள் நன்கு பராமரிக்கப்பட்டு, தங்கள் வாழ்நாளின் எஞ்சிய காலத்தை வசதியாக வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.</p><p>பணி ஓய்வு பெற்ற நாய்கள், தங்களின் நீண்டகால பொறுப்பாளர்களுடன் காவல் துறையிலேயே தொடர்ந்து பணியாற்றும், அவர்களது வாழ்க்கை மற்றும் மருத்துவ செலவுகள் அனைத்தும் உள்துறை அமைச்சகத்தால் முழுமையாக நிதியளிக்கப்படும் என்றார்.</p><h3><strong>ஓய்வுபெற்ற காவல் நாய்கள்</strong></h3><p>இதன்படி காவல் நாய்கள் 10 வருட சேவைக்கு பிறகு, செயல்பாட்டு பணிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறும், ஆனால் அவற்றின் எஞ்சிய ஆண்டுகளை கழிப்பதற்காக படையில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.</p><p>பத்தாண்டு கால சேவையின் போது காவல் நாய்களுக்கும் அதன் பயிற்றுவிப்பாளருக்கும் இடையில் உருவான வலுவான பிணைப்பு தடையின்றி நீடிப்பதை இந்த கொள்கை உறுதி செய்கிறது.</p><p>ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை தேவைகள் உள்ளிட்ட ஓய்வுக்கு பிந்தைய அனைத்து செலவுகளுக்கும் மகாராஷ்டிர உள்துறை நேரடியாக நிதியளிக்க உள்ளது.</p><p>பணி ஓய்வு பெற்ற நாய்கள் முழுமையான அரசு ஆதரவுடனான வாழ்நாள் பராமரிப்புக்கு மாறுவதன் மூலம், அந்த நாய்கள் தங்கள் சேவையை நிறைவு செய்தபிறகு, அவற்றுக்கு தேவையான ஆறுதலும் பழக்கமான சூழலும் பெறுவது உறுதி செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஈக்கள், கரப்பான்பூச்சிகள்: மகாராஷ்டிராவில் மெக்டொனால்டு உள்பட 12 முக்கிய உணவகங்களின் லைசென்ஸ் ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-fda-suspends-licences-of-mcdonalds-12-others-after-flies-cockroaches-found</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-fda-suspends-licences-of-mcdonalds-12-others-after-flies-cockroaches-found#comments</comments><guid isPermaLink="false">f6d782c5-2eb9-4969-9acd-055e31f3fb2b</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:20:15 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:20:15.085Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>McDonald,மெக்டொனால்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/l8k4ikjz/FDA0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுகாதாரமற்ற உணவு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/l8k4ikjz/FDA0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்மாநிலத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) பல்வேறு இடங்களில் உள்ள முக்கியமான உணவகங்கள், பேக்கரிகள், கிளப்கள் போன்றவற்றில் உணவு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். கடந்த சில நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு உணவகங்களில் தூய்மை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>இதனால் தூய்மை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மேம்படுத்துமாறு 71 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், 13 கடைகளின் உணவகங்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மறு உத்தரவு வரும் வரை உணவுகள் விநியோகம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>கடந்த 19-ந்தேதி பாம்பே பிரசிடென்சி ரேடியோ கிளப்பில் சோதனை நடத்தப்பட்டது. இதில் விதிமுறையை 47 சதவீதம் வரை கூட கடைபிடிக்கவில்லை என தெரியவந்தது. இதனால் இந்த கிளப் உணவு விநியோகம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ரேடியோ கிளப்</h2><p>சமையலறையில் ஏராளமான ஈக்கள் பறந்து கொண்டிருந்ததாகவும், செத்துப்போன கரப்பான்பூச்சிகள் ஆங்காங்கே காணப்பட்டதாகவும் FDA இன்ஸ்பெக்டர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் உணவு தயாரிக்கும் இடங்களுக்கு மேலே உள்ள கூரையில் வண்ணப்பூச்சு மற்றும் சாந்து உதிர்ந்து இருப்பதையும், உணவுக்கு அருகில் சலவைத்தூள் மற்றும் பிற ரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதையும், உணவுப் பொருட்கள் நேரடியாகத் தரையில் வைக்கப்பட்டிருப்பதையும், அசைவ உணவுகளுக்காக பயன்படுத்தப்பட்ட தூய்மையற்ற குளிர்சாதன பெட்டிகள் இருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>மேலும் பூச்சிகளும் அசுத்தங்களும் உள்ளே நுழையக்கூடிய வகையில் சமையலறைக் கதவு சரியாக மூடப்படாமல் இருந்ததையும், சமையல் அடுப்புகளுக்கு அருகில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்ததையும், வளாகத்தில் எச்சில் துப்பியதற்கான தடயங்களையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><h2>மெக்டொனால்டு கிளை</h2><p>ஹார்ட்கஸில் ரெஸ்டாரண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Hardcastle Restaurants Pvt Ltd) நிறுவனத்தால் இயக்கப்படும் கொலாபாவில் உள்ள மெட்ரோ ஹவுஸ் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் FSSAI உரிமம் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.</p><p>ஆகஸ்ட் 19-ந்தேதி நடத்தப்பட்ட மறுஆய்வின் போது, ​​முன்னதாக வழங்கப்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த 20 குறைபாடுகளில் 18 குறைபாடுகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்று FDA தெரிவித்துள்ளது.</p><p>இந்த ஆய்வின்போது, ​​சரியாக அளவீடு செய்யப்படாத குளிரூட்டும் சாதனங்கள், உயிருள்ள கரப்பான் பூச்சிகள், பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பொறிகள் இல்லாமை, சமையலறைத் தரையில் அழுகிய உணவுக்கழிவுகள், அழுக்கான துப்புரவுத் துணிகள் மற்றும் பாதுகாப்பு உறைகள் இல்லாத தூசி படிந்த விளக்குகள் ஆகியவை கண்டறியப்பட்டன. மேலும், அழுக்கான காலணிகள் மற்றும் துப்புரவுத் துணிகளைத் தொட்ட பிறகு கைகளைக் கழுவாமல், உடனடியாக உண்ணக்கூடிய உணவை ஊழியர்கள் கையாண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இந்த உணவகம் ஆகஸ்ட் 12 அன்று 148 பக்கங்கள் கொண்ட விதிமுறை இணக்க அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.  இருப்பினும், மறுஆய்வின் போது பெரும்பாலான தீவிரமான குறைபாடுகள் இன்னும் சரிசெய்யப்படாமல் இருந்ததாக FDA கூறியது.</p><p>உண்மையான சீஸ் மற்றும் பனீர் (paneer) பயன்படுத்தப்படுவதாக வாடிக்கையாளர்களிடம் கூறப்பட்டிருந்தாலும், "GO Cheese SAUCE" எனப்படும் பதப்படுத்தப்பட்ட பால் அல்லாத அல்லது அனலாக் (மாற்று) தயாரிப்பு பயன்படுத்தப்பட்டதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.</p><p>மெக்டொனால்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெளியிட்ட அறிக்கையில், உணவுப் பாதுகாப்பு விவகாரங்களில் நிறுவனம் 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' (zero-tolerance) கொள்கையைக் கொண்டிருப்பதாகவும், ஒழுங்குமுறை நடைமுறைகளை மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகவும், உண்மையான சீஸ் மற்றும் பனீர் பயன்பாடு உட்பட உணவுத் தரம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான கடுமையான தரநிலைகளைத் தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>