<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 24 Jul 2026 18:37:50 +0000</lastBuildDate><item><title>கருங்கடலில் வர்த்தக கப்பல் மீது தாக்குதல் - இந்தியர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-killed-in-attack-on-commercial-vessel-in-black-sea</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-killed-in-attack-on-commercial-vessel-in-black-sea#comments</comments><guid isPermaLink="false">de040bdd-216e-4b1e-8a19-ce8e7942f476</guid><pubDate>Fri, 24 Jul 2026 18:06:48 +0000</pubDate><atom:updated>2026-07-24T18:06:48.774Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>black sea,கருங்கடல்,commercial vessel,வர்த்தக கப்பல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/ts1cl02n/mv-omorfi-attatcked.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MV OMORFI Attacked]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/ts1cl02n/mv-omorfi-attatcked.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கருங்கடலில் உள்ள ரஷ்யாவின் கடல் எல்லை பகுதி வழியாக சென்று கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றின் மீது ஜூலை 18 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக <a href="https://www.maalaimalar.com/topic/mea">வெளியுறவு அமைச்சகம்</a> தெரிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/ukraine">உக்ரைன்</a> கடற்கரைக்கு அப்பால் ஜூலை 19-ஆம் தேதியன்று வணிக கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், அதில் நான்கு இந்தியர்கள் அடங்குவர் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்த சில நாட்களிலேயே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>இந்தியர் உயிரிழப்பு:</h2><p>"ஜூலை 18 அன்று, 'எம்வி ஓமோர்ஃபி' (MV OMORFI) என்ற வணிக கப்பல் கருங்கடலில் - ரஷ்யாவின் கடல் எல்லைப் பகுதிக்குள் - சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்ட தகவல் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தின்போது, ​​கப்பலில் மூன்று இந்தியர்கள் உட்பட மொத்தம் 10 பணியாளர்கள் இருந்தனர்," என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது.</p><p>"கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இத்தாக்குதலில் ஒரு இந்தியர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். கப்பலில் இருந்த மற்ற இரண்டு இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று அது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முயற்சித்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.</p><h2>இந்தியா வலியுறுத்தல்:</h2><p>"வணிகக் கப்பல்களைக் குறிவைப்பதையும், அப்பாவி பணியாளர்களின் உயிரை ஆபத்துக்குள்ளாக்குவதையும் இந்தியா உறுதியாக கண்டிக்கிறது. கடல்வழி போக்குவரத்து மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் சுதந்திரம் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தீவிர கவலைக்குரிய விஷயமாகும்," என்று அது கூறியது.</p><p>"கடல்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய வர்த்தகத்தின் தடையற்ற ஓட்டத்தை உறுதி செய்வதற்கான சர்வதேச கடமைகளை நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இந்தியா வலியுறுத்துகிறது," என்றும் வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்தது.</p><p>ஜூலை 19 அன்று 'எம்வி கோல்டன் லியோ' (MV Golden Leo) கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு ரஷ்யாவின் தூதரகப் பொறுப்பாளரைசெவ்வாய்க்கிழமை அன்று வரவழைத்து விளக்கம் கேட்டிருந்தது.</p>]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தரில் தலைமை காவலர் உயிரிழக்கவில்லை! வைரல் பதிவுகளுக்கு காவல் துறை விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/claim-of-woman-head-constables-death-during-jantar-mantar-protest-fake-delhi-police</link><comments>https://www.maalaimalar.com/news/national/claim-of-woman-head-constables-death-during-jantar-mantar-protest-fake-delhi-police#comments</comments><guid isPermaLink="false">7c6f4a3d-44bc-4351-b9f2-7cb51ef37f76</guid><pubDate>Fri, 24 Jul 2026 17:14:41 +0000</pubDate><atom:updated>2026-07-24T17:14:41.411Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>police,காவல் துறை,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/1en8am6y/cjp-protest-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/1en8am6y/cjp-protest-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது பெண் தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறும் சமூக வலைதள பதிவு ஒன்றை டெல்லி <a href="https://www.maalaimalar.com/topic/police">காவல்துறை</a> போலியானது என்று அறிவித்தது.</p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக <a href="https://www.maalaimalar.com/topic/neet-exam">நீட் தேர்வு</a> வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. </p><h2>கடும் போராட்டம்:</h2><p>மேலும், நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுக்க ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கண்டன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக நாடு முழுக்க பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அமளிகளால் தினந்தோரும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.</p><p>ஒருபக்கம் ஜந்தர் மந்தர் போராட்டக்களத்தில் மாணவர்கள் மீது காவல் துறை அடக்குமுறை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன. இந்த நிலையில், ஜந்தர் மந்தர் போராட்டக்களத்தில் பெண் தலைமை காவல் உயிரிழந்ததாக கூறும் சமூக வலைதள பதிவு வேகமாக பரவியது.</p><h2>காவல் துறை விளக்கம்:</h2><p>இந்த நிலையில், அத்தகைய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பதிவு தீய நோக்கத்துடன் பரப்பப்பட்டது என்றும் தெரிவித்தது.</p><p>இத்தகைய பொய்யான தகவல்களை உருவாக்குவோர், பரப்புவோர் அல்லது மேலும் பகிர்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த காவல்துறை, சரிபார்க்கப்படாத தகவல்களை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டது.</p><h2>பணிநீக்கம்:</h2><p>முன்னதாக, "நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக தேசிய தேர்வு முகமை 47 அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கியது. இவர்களில் சில அதிகாரிகள் மீது சட்ட மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும். </p><p>வினாத்தாள் கசிவு சர்ச்சையில் சிக்கியுள்ள NTA-வின் முழுமையான சீரமைப்பின் ஒரு பகுதியே இது," என ஏ.என்.ஐ. தெரிவித்தது.</p><p>நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆதாரம் இல்லை.. 2024 நீட் வினாத்தாள் கசிவில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவருக்கு நீதிமன்றத்தில் சிபிஐ நற்சான்று</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-case-cbi-says-no-evidence-against-sanjeev-in-2024-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-case-cbi-says-no-evidence-against-sanjeev-in-2024-scam#comments</comments><guid isPermaLink="false">71900733-e92e-4e19-b5bf-8e6479d0599b</guid><pubDate>Fri, 24 Jul 2026 16:18:15 +0000</pubDate><atom:updated>2026-07-24T16:18:15.491Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,நீட் தேர்வு,Neet exam,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xl3atp2p/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சஞ்சீவ் குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ சஞ்சீவ் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xl3atp2p/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவு வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்பட்ட சஞ்சீவ் குமாருக்கு எதிராக எனது ஆதாரமும் கிடைக்கவில்லை என  சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. </p><h2> பின்னணி </h2><p>பீகாரில் 2024 நீட் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டிகளை விசாரித்த சிபிஐ, பட்னா நீதிமன்றத்தில் 45 பேருக்கு எதிராக பல குற்றப்பத்திரிகைகளை  தாக்கல் செய்தது.</p><p>தொடக்கத்தில் பீகார் மாநில காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் சஞ்சீவின் பெயர் சேர்க்கப்பட்டது.</p><p>வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட பின் சிபிஐ, பலரை விசாரணை செய்ததோடு, டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளை தீவிரமாக ஆய்வு செய்தது. </p><p>ஆனால், சஞ்சீவ் இந்தக் குற்றத்துடன் நேரடியாகத் தொடர்புபடுத்தும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என சிபிஐ தற்போது தெரிவித்துள்ளது.</p><h2>சிபிஐ</h2><p>சிபிஐ கூறியதாவது, "விசாரணையின் முதற்கட்ட கட்டத்தில் சஞ்சீவ் மீது சந்தேகம் இருந்தது உண்மைதான். அவர் வேறு சில வினாத்தாள் கசிவு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால், இதிலும் அவருக்குப் பங்கு இருக்கலாம் எனக் கருதப்பட்டு பீகார் போலீஸ் எப்ஐஆரில் பெயர் சேர்க்கப்பட்டது. </p><p>ஆனால், முறையான விசாரணைக்குப் பிறகு அவருக்கும் இந்த 2024 நீட் வினாத்தாள் கசிவுக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது." எனத் தெரிவித்துள்ளது. </p><p>இருப்பினும் வேறு சில வழக்குகளில் குற்றவாளியாக உள்ளதால் அவர் தொடர்ந்து நீதித்துறை காவலில்  இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. </p><h2>2026 நீட் வினாத்தாள் கசிவு</h2><p>ஒருபுறம் 2024 வழக்கின் விசாரணைகள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் வேளையில்,<a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-anitha-legacy-tamil-voices-at-jantar-mantar-demand-education-ministers-resignation-and-exam-exemption"> 2026 நீட் வினாத்தாள் கசிவு </a>வழக்கு தொடர்பான விசாரணையைச் சிபிஐ தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.</p><p>பல்வேறு மாநிலங்களில் இருந்து பல முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வு வினாத்தாள்களைக் கசியவிடும் நெட்வொர்க்கை உடைக்க விசாரணை விரைவாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக சிஜேபி கட்சி தலைமையில் டெல்லியில் போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் 2024 வழக்கில் முக்கிய குற்றவாளி என கருத்தப்பட்டவருக்கு சிபிஐ நற்சான்றிதழ் வழங்கியுள்ளது விவாதப்பொருளாக மாறிவருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தர் போராட்டத்தில் அனிதாவின் அண்ணன்!.. நீட் தேர்வை தடை செய்ய வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-anitha-legacy-tamil-voices-at-jantar-mantar-demand-education-ministers-resignation-and-exam-exemption</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-anitha-legacy-tamil-voices-at-jantar-mantar-demand-education-ministers-resignation-and-exam-exemption#comments</comments><guid isPermaLink="false">48d8aa31-6835-40bf-a1c7-e6f4f7b98a59</guid><pubDate>Fri, 24 Jul 2026 15:48:55 +0000</pubDate><atom:updated>2026-07-24T15:48:55.839Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Neet exam,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/eb230k8x/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ manirathnam, anitha]]></media:title><media:description type="html"><![CDATA[ manirathnam, anitha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/eb230k8x/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தின் அரியலூர் மாவாட்டத்தில் 2017-இல் அணைந்த ஓர் நெருப்பு இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் வரை கனன்றுகொண்டிருக்கிறது.</p><p>நீட் தேர்வினால் ஏற்பட்ட அழுத்தத்தில் 2017 செப்டம்பர் 1 அன்று தற்கொலை செய்துகொண்ட 17 வயது மாணவி அனிதாவை தமிழகத்தால் மறந்திருக்க முடியாது. அரசியல் கடந்து தமிழர்கள் அனைவரையும் உலுக்கிய அனிதா தற்கொலை நீட் வேண்டாம் என்ற நிலைப்பாட்டின் ஆரம்பப்புள்ளியாக மாறியது. </p><p>12ஆம் வகுப்பில் 1200 க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்று மருத்துவ படிக்குக்கான கட் ஆப்பில் 200க்கு 196.75 எடுத்திருந்தார் அனிதா. ஆனால் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் மருத்துவ கனவை அடையும் மேலும் ஒரு படியாக அத்தேர்வை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது.  ஆனால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற அனிதாவால், மத்திய அரசின் பாடத்திட்டத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு நடத்தப்பட்ட தேர்வில் போதிய மதிப்பெண் ஈட்ட முடியாமல் போனது.  </p><p>தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தவர்களின் அவரும் ஒருவர். ஆனால் நீதிமன்றம் அதற்கு இசையை மறுத்தது. இதனால மனமுடைந்த அவர் உயிரை மாய்த்துக்கொண்டார். நீட் எதிர்ப்பின் முகமாக அனிதா மாறினார்.</p><p>இன்றைய தமிழக முதல்வர் விஜயும் நடிகராக இருந்த அந்த சமயத்தில் அனிதா வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோருக்கு ஆறுத தெரிவித்திருந்தார்.</p><p>இந்நிலையில் இந்த ஆண்டு மே 3 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21 மறுதேர்வு நடத்தப்பட்டது. இதற்கிடையில் கடும் மன அழுத்தத்தில் நாடு முழுவதும் 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இவ்வாண்டு மட்டுமின்றி, கட்டாயமாக்கப்பட்டதில் இருந்து பல மாணவ மாணவிகள் நீட் தேர்வினால் தங்கள் இன்னுயிரை மாய்துகொண்டுள்ளனர்.</p> <h2>போராட்டம்</h2><p>இதனிடையே வினாத்தாள் கசிவு மாணவர்களை கோபமும் விரக்தியும் கொள்ளச் செய்தது. அது அதிகாரத்தில் இருப்போர், இந்த முறைகேடுகளுக்கு <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-row-youth-allege-brutal-police-action-as-government-denies-use">பொறுப்புக்கூற </a>மறுப்போர் மீதான கோபமாக மாறி இன்று வீதிகளில் வெளிப்பட்டு கொண்டிருக்கிறது. அமைதியான முறையில்.</p><p>நீட் மற்றும் பிற தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சிஜேபி ஜூன் 20 முதல் முன்னெடுத்த போராட்டம் வெற்றியடையும் தருவாயில் உள்ளது.</p><p>இந்த விவகாரத்தில் மௌனம் காத்த பிரதமர் மோடி நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டு, முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள், வினாத்தாள் கசிவை தடுக்க மசோதா உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். இருந்தபோதும் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என சிஜேபி அறிவித்துள்ளது.</p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டுள்ள இளைஞர்கள் சிரமங்களை புறந்தள்ளி தங்கள் மன உறுதியுடன் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அங்குள்ள இளைஞர்களில் பல தமிழர்களும் அடங்குவர். அப்படி ஒருவர் தான் மணிரத்தினம். அனிதாவின் அண்ணன். ஆம் அன்று அரியலூரில் தற்கொலை செய்துகொண்ட அதே 17 வயது மாணவியின் அண்ணன்.</p><h2> ஜந்தர் மந்தரில் மணிரத்னம்</h2><p>9 வருடங்கள் முன் தன் தங்கையை இழந்த மணிரத்னம், இன்று லட்சோபலட்சம் தங்கைகளின் எதிர்காலத்திற்காக ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார்.</p><p>போராட்டக் களத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், " வினாத்தாள் கசிவு தொடங்கி தொலைதூரத்தில் தேர்வு மையம் ஒதுக்குவது போன்ற சின்ன சின்ன தவறுகள் 25 லட்சம் பேரை (இந்தாண்டு மே 3 நீட் தேர்வு எழுதியோர் எண்ணிக்கை 25 லட்சம்- மறுதேர்வில் 20 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர்) பாதித்துள்ளது. இது ஒரு தோல்வி அடைந்த மாடல்.</p><p>கல்வி அமைச்சரின் ராஜினாமா சிறிய படி தான். அது அவரின் பொறுப்பு. ஆனால் அது மட்டும் போதாது. எங்களுக்கு நீட் தேர்வில் இருந்து முழு விலக்கு வேண்டும். நீட் தேர்வை தடை செய்யுங்கள். நீட் தேர்வு என்பது விளிம்புநிலை மக்களுக்கு எதிரானது. பொருளாதாரத்தில் நலிந்த மற்றும் கிராமப்புற மக்களுக்கு எதிரானது" என்று உறுதிபட தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு திடீர் ராஜினாமா!</title><link>https://www.maalaimalar.com/news/national/union-minister-of-state-for-railways-ravneet-singh-bittu-resigns-suddenly</link><comments>https://www.maalaimalar.com/news/national/union-minister-of-state-for-railways-ravneet-singh-bittu-resigns-suddenly#comments</comments><guid isPermaLink="false">04b3b62d-1b52-4f0c-997b-2e09926173ec</guid><pubDate>Fri, 24 Jul 2026 15:34:17 +0000</pubDate><atom:updated>2026-07-24T15:34:17.138Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>resign,ராஜினாமா,Ravneet Singh Bittu,ரவ்னீத் சிங் பிட்டு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hwidbgxh/New-Project-2026-07-24T205039.954.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய ரயில்வே இணையமைச்சர் வ்னீத் சிங் பிட்டு திடீர் ராஜினாமா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hwidbgxh/New-Project-2026-07-24T205039.954.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு தனது பதவியை இன்று (ஜூலை.24) திடீரென ராஜினாமா செய்துள்ளார்.</p><p>அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும்  உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளதாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>“இந்திய அரசியலமைப்பின் 75வது பிரிவின் (2) உட்பிரிவின் கீழ், பிரதமரின் ஆலோசனையின்படி, ரவ்னீத் சிங்  ராஜினாமாவை இந்திய குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார்,”  என்று ராஷ்டிரபதி பவன் செய்திக்குறிப்பு தெரிவித்தது.</p><p>பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சர் பீன்ட் சிங்கின் பேரனான இவர், 2024-ல் பாஜகவில் இணைந்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். பின்னர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  </p><p>ஜூன் 21 ஆம் தேதியுடன் இவரது பதவிக்காலம் முடிவடைந்தது. நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒரு நபர் அதிகபட்சமாக 6 மாதங்கள் மட்டுமே அமைச்சராக நீடிக்க முடியும் என்ற விதி இருந்தாலும், அவர் தனது பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். </p><p>அடுத்த ஆண்டு பஞ்சாபில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காக தற்போது ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது. </p><p>அதேவேளையில் தற்போதைய தேர்தலில் இவருக்கு மீண்டும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தீவிரமடைந்த போராட்டம் - 47 அதிகாரிகளை கூண்டோடு தூக்கிய NTA!</title><link>https://www.maalaimalar.com/news/national/protest-intensifies-nta-removes-47-officials-en-masse</link><comments>https://www.maalaimalar.com/news/national/protest-intensifies-nta-removes-47-officials-en-masse#comments</comments><guid isPermaLink="false">295181b8-217c-4283-90ae-2091e7a3e3af</guid><pubDate>Fri, 24 Jul 2026 15:14:23 +0000</pubDate><atom:updated>2026-07-24T15:14:23.387Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>NTA,தேசிய தேர்வு முகமை,paper leaks,வினாத்தாள் கசிவுகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xq3i16e8/New-Project-2026-07-24T203316.252.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தீவிரமடைந்த போராட்டம் - 47 அதிகாரிகளை கூண்டோடு தூக்கிய NTA!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xq3i16e8/New-Project-2026-07-24T203316.252.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, கல்வித்துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் ஒரு பகுதியாக, தேசிய தேர்வு முகமை 47 அதிகாரிகளை கூண்டோடு பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>“தேசிய தேர்வு முகமை 47 அதிகாரிகளைப் பணியிலிருந்து நீக்கியுள்ளது. இவர்களில் சில அதிகாரிகள் மீது சட்ட மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும். வினாத்தாள் கசிவு சர்ச்சையில் சிக்கியுள்ள NTA-வின் முழுமையான சீரமைப்பின் ஒரு பகுதியே இது.” என ஏஎன்ஐ தெரிவித்துள்ளது. </p><p>தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் நாடு தழுவிய மாணவர் போராட்டம் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துவது குறிப்பிடத்தக்கது. </p><h2>வினாத்தாள் கசிவு வரைவு மசோதா</h2><p>வினாத்தாள் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு இனி ரூ.10 கோடி அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கும் வரைவு மசோதாவிற்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>வரும் திங்கள்கிழமையன்று மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகவும் உள்ளது. </p><p>அனுமதிக்கப்பட்ட 39 பணியிடங்களில் 24 நிரந்தர ஊழியர்கள், 73 ஒப்பந்த ஊழியர்கள், 124 வெளிப்பணியாளர்களை வைத்து தேசிய தேர்வு முகமை இயங்கி வருவதாக நேற்று முன்தினம் மத்திய கல்வி அமைச்சகம் மக்களவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நீதிமன்ற விசாரணைகளை சமூக வலைதளங்களில் பதிவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை! </title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-imposes-interim-stay-on-uploading-court-proceedings-to-social-media</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-imposes-interim-stay-on-uploading-court-proceedings-to-social-media#comments</comments><guid isPermaLink="false">497ae7fe-3965-4fb3-ab34-d19615ea893f</guid><pubDate>Fri, 24 Jul 2026 14:19:20 +0000</pubDate><atom:updated>2026-07-24T14:19:20.954Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,Court hearing,நீதிமன்ற விசாரணைகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hiw32guf/New-Project-2026-07-24T190605.266.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீதிமன்ற விசாரணைகளை சமூக வலைதளங்களில் பதிவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hiw32guf/New-Project-2026-07-24T190605.266.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீதிமன்ற விசாரணைகளின் ஒலி மற்றும் காணொலி பதிவுகளை உரிய அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கும், பகிர்வதற்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. </p><p>தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p>டிஜிட்டல் தளங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒலி மற்றும் காணொளிப் பதிவுகளைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கக்கோரி, செய்தியாளர் ஹர்ஷிதா குரோவர் தாக்கல் செய்த பொது நல மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு வந்துள்ளது.</p><p>இருப்பினும், செய்தி ஊடகங்கள் மற்றும் அறிக்கையிடல் பணிகளுக்கு இந்த உத்தரவால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2>24 மணிநேரமும் இயங்கும் பொழுதுபோக்கு ஊடகமல்ல...</h2><p>“ஒரு இடைக்கால நடவடிக்கையாக, இந்த நீதிமன்றத்தின் பொதுச் செயலாளர் அல்லது அதிகார வரம்புக்குட்பட்ட உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் முன் அனுமதியின்றி, நீதித்துறை நடவடிக்கைகளின் ஒலி-ஒளிப் பதிவுகளை சமூக ஊடகங்கள் அல்லது பிற டிஜிட்டல் தளங்களில் பதிவிடுதல், பகிர்தல், மறுபதிவிடுதல், எடிட் செய்தல், மாற்றியமைப்பது, பணமாக்குதல் ஆகியவை செய்யப்படக்கூடாது என்று உத்தரவிடப்படுகிறது.</p><p>இது நீதிமன்றத்தின் 24 மணி நேர பொழுதுபோக்கு சேனலாக இருக்க முடியாது.” என அமர்வு தெரிவித்துள்ளது. </p><p>மேலும் இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் கொண்ட அறிக்கையை சமர்பிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம்,</p><p>விசாரணை தொடர்பாக இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள், நீதித்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், நீதிமன்ற நடவடிக்கைகளைத் திரிக்கும் வகையிலும் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இமாச்சலில் திடீர் நிலச்சரிவு - 6 மாதக்குழந்தை உட்பட 13 பேர் பரிதாப பலி!</title><link>https://www.maalaimalar.com/news/national/sudden-landslide-in-himachal-13-dead-including-a-6-month-old-infant</link><comments>https://www.maalaimalar.com/news/national/sudden-landslide-in-himachal-13-dead-including-a-6-month-old-infant#comments</comments><guid isPermaLink="false">c618cadf-48d6-4f3e-90f6-8ff861812745</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:59:52 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:59:52.568Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>landslide,himachal,நிலச்சரிவு,இமாச்சல் பிரதேசம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/2149eufw/New-Project-2026-07-24T190834.113.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இமாச்சலில் திடீர் நிலச்சரிவு - 6 மாதக்குழந்தை உட்பட 13 பேர் பரிதாப பலி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/2149eufw/New-Project-2026-07-24T190834.113.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்தில், இன்று நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி 6 மாதக்குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>உதய்பூர்-கில்லர் வழித்தடத்தில் உள்ள கஹு-து நாலா அருகே இந்த விபத்து நடந்துள்ளது.  இமாச்சலில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மலையின் ஒரு பகுதி திடீரெனச் சரிந்து, குலுவிலிருந்து பாங்கிக்குச் சென்று கொண்டிருந்த டாடா சுமோ வாகனம்மீது ராட்சதப் பாறைகள் விழுந்துள்ளன. </p><p>இதில் வாகனம் சம்பவ இடத்திலேயே பாறைகளுக்கு அடியில் புதைந்துள்ளது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, மீட்புக் குழுவினர், காயமடைந்த ஒருவரைப் பத்திரமாக மீட்டனர். இருப்பினும் அவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். </p><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது பெய்து வரும் கனமழையின் போது, ​​நிலச்சரிவு அபாயம் உள்ள சாலைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், மலைப்பகுதியில் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் பார்மோர் சட்டமன்ற உறுப்பினர் ஜனக் ராஜ் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். </p><p>உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமைதிக்கு குந்தகம்.. இணைய சேவை இல்லாமலே இயங்கும் BitChat தகவல் பரிமாற்ற செயலிக்கு மத்திய அரசு தடை! </title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-bitchat-ban-centre-blocks-bluetooth-app-amid-internet-shutdown-and-neet-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-bitchat-ban-centre-blocks-bluetooth-app-amid-internet-shutdown-and-neet-row#comments</comments><guid isPermaLink="false">dcabe09b-fa94-4abd-b9f9-f0bc44ccd8c8</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:45:34 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:45:34.977Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Internet service shutdown,இணைய சேவை முடக்கம்,CJP Protest,சிஜேபி போராட்டம்,பிட்சாட்,bitchat</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/5zq7pgbb/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ BitChat ]]></media:title><media:description type="html"><![CDATA[ BitChat ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/5zq7pgbb/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் ஜூன் 20 முதல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறது. நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே அவர்களின் <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-allegations-youth-march-faces-harsh-police-crackdown-and-expired-tear-gas">பிரதான கோரிக்கை. </a></p><p>அவர்களுக்கு ஆதரவாக கடந்த ஜூன் 28 முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தார் கல்வியாளர் சோனம் வாங்சுக். </p><p>அவரின் உண்ணாவிரதத்தை 20வது நாளில் டெல்லி போலீசாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச்செல்லப்பட்டு மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டார்.  </p><p>அவருக்கு ஆதரவாகவும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும் நாடு முழுவதும் இருந்து பலர் குரல் கொடுத்தனர். </p><p>கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற இளைஞர்களை காவல்துறை மற்றும் ஆர்ஏஎப் படையினர் கொடூரமான முறையில் லத்திகளால் தாக்கினர். </p><p>கண்ணீர் புகைகுண்டுகளை பிரயோகித்து மாணவர்களை கலைக்க முயன்றனர். மேலும் பெல்லட் துப்பாக்கிகள், ஆணிகள் பொருத்திய லத்திகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. </p><p>சீருடையற்ற நபர்களும் கையில் லத்திகளுடன் மாணவர்களை தாக்கிய வீடியோக்களும் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. </p><p>இளைஞர்கள் மீதான தாக்குதலுக்கு நாடு முழுவதிலும் பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலை அடுத்து போராட்டம் மேலும் வலுப்பெற்றது. நாடு முழுதும் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்காக போராட்டங்கள் நடத்தப்படுகிறது. அழுத்தம் அதிகரித்த நிலையில் மௌனம் கலைத்த பிரதமர் மோடி, நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டார். </p> <p>அதில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் வினாத்தாள் கசிவை தடுக்க சிறப்பு மசோதா இயற்றப்படும் என்றும் வாக்குறுதியளித்தார். </p><p>இதனைதொடர்ந்து மருத்துவமனையில் ஜேபி நட்டா, ஜிதேந்திர சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் சோனம் வாங்சுக்கை சென்று சந்தித்ததை அடுத்து அவர் தனது 26 நாட்கள் போராட்டத்தை நேற்றிரவு முடித்துக்கொண்டார்.</p><p>ஜூலை 20 அன்று பேரணி சென்ற மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது என மத்திய அரசு தனக்கு உறுதியளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே, தர்மேந்திர பிராதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகும் வரை ஜந்தர் மந்தரில் தங்கள் போராட்டம் தொடரும் என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார். இன்று ஜேபி நட்டாவை சந்தித்த சிஜேபி பிரதிநிதிகள் அதேயே வலுயுறுத்தினர்.</p> <h2>இணைய சேவை முடக்கம்</h2><p>மறுபுறம் போராட்டம் தீவிரமடைவதை தடுக்க, மத்திய அரசு இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஜந்தர் மந்தர் பகுதியை சுற்றிலும் இணைய சேவை முடிக்கப்பட்டுள்ளது. இதனால் சமூக ஊடங்களின் மூலம் போராட்டத்திற்கு விடுக்கப்படும் அழைப்புகள் மூலம் அங்கு மேலும் பலர் வருவதை தடுக்கும் நோக்கத்தில் இணைய சேவைகள் முடக்கப்பட்டது.</p><p>ஆனால் இளைஞர்கள் இந்த இணைய சேவை முடக்கத்தை சாமர்த்தியமாக பைபாஸ் செய்து இணையம் தேவைப்படாத செயலிகள் மூலமும் பிற வகையிலும் வெளியுலக தொடர்பை தக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>அதிலும் குறிப்பாக கிட்ஹப் நிறுவனத்தின் பிட்சாட் செயலி இணைய தேவை இன்று முற்றிலும் புளூடூத் மூலம் இயங்கக்கூடுய ஒரு தகவல் பரிமாற்ற ஊடகம் ஆகும்.</p><p>இணையம் முற்றிலும் துண்டிக்கப்பட்ட சூழலிலும், புளூடூத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அருகிலுள்ள மொபைல் போன்களுக்கு இடையே நேரடியாக செய்திகளை பரிமாறிக் கொள்ள இது உதவுகிறது.</p><p>இந்த லூப் ஹோலை பலரும் பயன்படுத்தத்தொடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில் விழித்துக்கொண்ட மத்திய அரசு அச்செயலிக்கு தடை விதித்துள்ளது.</p><p>பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சட்டவிரோதக் கூட்டங்களை ஒருங்கிணைக்கவும் இச்செயலி பயன்படுத்தப்படும் ஆபத்து அதிகம் உள்ளதாக அந்த செயலியை வரையறுத்துள்ள மத்திய அரசு பிட் சாட்டை முடக்கக்கோரி கிட் ஹப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.</p> <h2>பிட் சாட் - ஜாக் டோர்சி</h2><p>எக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜாக் டோர்சியால் உருவாக்கப்பட்டதே இந்த 'பிட்சாட்' செயலியாகும்.</p><p>மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்'நேற்று இது தொடர்பான நோட்டீஸை அனுப்பியுள்ளது.</p><p>தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 மற்றும் ஐ.டி விதிகள் 2021ன் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>பிட்சாட்டின் பிரதான Repository மற்றும் ஆண்ட்ராய்டு பதிப்புகளை 3 மணி நேரத்திற்குள் தடையுறுத்துமாறு அனுப்பப்பட்ட அந்த நோட்டீசின் ஸ்க்ரீன் ஷாட்களை ஜாக் டோர்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.</p><p>டெல்லியில் இணையம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் பிட்சாட் செயலியைப் பயன்படுத்தினார்களா என்பது குறித்து டெல்லி காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>இருப்பினும், போராட்டக்காரர்கள் இச்செயலியைத் தான் பயன்படுத்தினார்களா என்பதை அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: ஜூலை 20 தாக்குதல்.. பெல்லட் துப்பாக்கியால் கண் பார்வை இழந்த இளைஞரை அழைத்துவந்து ராகுல் பேட்டி  </title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-row-youth-allege-brutal-police-action-as-government-denies-use</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-row-youth-allege-brutal-police-action-as-government-denies-use#comments</comments><guid isPermaLink="false">5e76b6b3-d507-456d-beba-23976ecdc029</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:01:23 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:01:23.095Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,question paper leak,வினாத்தாள் கசிவு,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0mv4303j/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல், சாஹில் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல், சாஹில் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0mv4303j/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜூலை 20 அன்று சிஜேபி தலமையில் இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றபோது டெல்லி காவல்துறை மற்றும் ரேபிட் ஆக்ஷன் போர்ஸ் உள்ளிட்ட மத்திய படையினர் கொடூராமான முறையில் தாக்குதல் நடத்தினர். </p><p>அமைதியான முறையில் முன்னேறிச் சென்ற இளைஞர்களை தடிகளால் தாக்கியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் கலைக்க முயன்றனர். சீருடையற்ற நபர்களும் கைகளில் லத்தியுடன் இளைஞர்கள் மற்றும் பெண்களை தாக்கிய காணொளிகளும் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. </p><p>காலாவதியான கண்ணீர் புகைகுண்டுகள், ஆணிகள் பொருத்திய லத்திகள், மின்சார அதிர்ச்சி தரும் லத்திகள், பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை இளைஞர்கள் மீது பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><p>இவற்றில் குறிப்பாக சர்ச்சைக்குரிய <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-allegations-youth-march-faces-harsh-police-crackdown-and-expired-tear-gas">பெல்லட் துப்பாக்கிகள் </a>பயன்படுத்தப்பட்டதற்காக ஆதாரமாக சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களின் மருத்துவ அறிக்கைகளும் புகைப்படங்களும் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>ஊடகவியலாளர் ஒருவரும் பெல்லட் துப்பாக்கியால் சுடப்படும்போது உடலில் ஏற்படும் புள்ளி புள்ளியான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைடபடங்களுடன் ஊடக அறிக்கைகள் வெளியாகின. </p><p>ஆனால் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை என டெல்லி காவல்துறையும், அரசின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பகமான PIB-யும் மறுத்துள்ளன.</p> <h2>பெல்லட் துப்பாக்கிகள்</h2><p>உலோகம், ரப்பர் அல்லது ஈயத்தால் செய்ப்பட்ட சிறிய குண்டுகள் Pellets எனப்படுகின்றன. ஒருமுறை சுட்டால் பல சிறிய குண்டுகள் ஒரே நேரத்தில் பாயும்.</p><p>இது உடலில் புள்ளி புள்ளியான காயங்களை ஏற்படுத்தும்.</p><p>கூட்டத்தைக் கலைக்கவும், கலவரங்களைக் கட்டுப்படுத்தவும் இவை குறைந்த ஆபத்துள்ள ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகின்றன.</p><p>ஆனால் சில நேரங்களில் இந்த குண்டுகள் கண் பார்வை மற்றும் கேட்கும் திறனை பறிக்கக்கூடியவை. பெல்லட் குண்டுகள் உடலின் முக்கிய பாகங்களில் பட்டால் கடுமையான காயங்கள் மற்றும் சில சமயங்களில் உயிரிழப்பும் கூட ஏற்படக்கூடும்.</p><p>இதன் காரணமாகவே பெல்லட் துப்பாக்கிகளின் பயன்பாட்டிற்கு மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><figure><img alt="ராகுல், சாஹில் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/pixk3pqi/tn-4.jpg" /><figcaption>ராகுல், சாஹில் </figcaption></figure><h2>ராகுல் காந்தி பேட்டி</h2><p>இந்த சூழலில் பெல்லட் துப்பாக்கியால் காயமுற்று சிகிச்சை பெற்ற சாஹில் என்ற 19 வயது மாணவரை உடன்வைத்துக்கொண்டு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.</p><p>முன்னதாக இளைஞர்கள் மீதான தாக்குதல், தேர்வு முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் முடங்கிய நிலையில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.</p><p>முகத்தில் உடலிலும் முகத்தில் கண்களின் அருகேயும் பெல்லெட் குண்டு தழும்புகள் கொண்ட அம்மாணவரை அருகில் வைத்துக்கொண்டு ராகுல் காந்தி செய்தியளர்களிடம் பேசுகையில், இந்த சகோதரர் (மாணவர்) கையில் தேசியக்கொடியை ஏந்தி அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்தபோது பெல்லட் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | LoP, Lok Sabha, Rahul Gandhi brings before the media a man he claims suffered pellet gun injuries during students&#39; protest<br><br>He says, &quot;I want to explain that my brother standing here was injured by a pellet gun while he was peacefully protesting, holding the Tricolour.… <a href="https://t.co/TCQJ4OZJcu">pic.twitter.com/TCQJ4OZJcu</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2080591144971297051?ref_src=twsrc%5Etfw">July 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இதனால் அவரின் ஒருபக்க கண் பார்வை பறிபோயுள்ளது. அரசு பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தவே இல்லை என கூறுகிறது. அப்படி சொன்னார்கள் தானே, அப்போது இங்கே பாருங்கள், இது என்ன, இவரின் கண் பாதிக்கப்பட்டுள்ளது. தனது பார்வையை இழந்துள்ளார்" என மாணவரின் முகத்தை சுட்டிக்காட்டி தெரிவித்தார்.</p><p>மேலும், "அரசாங்கம், தேசத்தின் எதிர்காலத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. இவர் (மாணவர்), கடினமாக படித்து போலீஸ் பணி தேர்வு எழுதியுள்ளார். ஆனால் ஒரு நாள் அவரிடம், அதன் வினாத்தாள் கசிந்துவிட்டதாக சொல்லப்பட்டது. நாட்டின் லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் இதே நிலைமை தான். அவர்களின் பெற்றோரின் கடின உழைப்பு அனைத்தும் வீணடிக்கப்பட்டுள்ளது.</p><p>அவர்களிடம் மூன்றே மூன்று கோரிக்கைகள் தான் உள்ளன. ஒன்று, யாரால் இவையெல்லாம் நிகழ்ந்ததோ அந்த கல்வி அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். இரண்டாவது, நமது எதிர்காலத்தின் மீது லத்திகளையும், பெல்லட் துப்பாக்கிகளையும் பயன்படுத்திவர்கள் நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும், மூன்றாவது, இதற்கெல்லாம் மூலகர்த்தாவான நரேந்திர மோடி, இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தர் போராட்டம்: டெல்லி காவல்துறை தடியடிக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/jantar-mantar-protest-supreme-court-agrees-to-hear-plea-against-delhi-police-lathi-charge</link><comments>https://www.maalaimalar.com/news/national/jantar-mantar-protest-supreme-court-agrees-to-hear-plea-against-delhi-police-lathi-charge#comments</comments><guid isPermaLink="false">dc07442f-ddc2-461a-b650-32bafad6faa6</guid><pubDate>Fri, 24 Jul 2026 12:51:56 +0000</pubDate><atom:updated>2026-07-24T12:51:56.804Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,Jantar Mantar,டெல்லி காவல்துறை,ஜந்தர் மந்தர்,police excesses</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/si3yk8sf/New-Project-2026-07-24T182055.533.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜந்தர் மந்தர் போராட்டம்: டெல்லி காவல்துறை தடியடிக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/si3yk8sf/New-Project-2026-07-24T182055.533.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி போராட்டத்தில் மாணவர்கள்மீது கண்மூடித்தனமான தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு எதிரான மனுவை திங்கள்கிழமையன்று (ஜூலை.27) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. </p><p>நீதிமன்றத்தில், “மாணவர்கள் போராட்டங்கள் தொடர்பாக நாங்கள் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளோம். அதற்கான டைரி எண் (தற்காலிக பதிவு எண். அதாவது மனு பெறப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ சான்று) உருவாக்கப்பட்டுவிட்டது. </p><p>இதில் அவசரம் உள்ளது. மாணவர்களுக்கு எதிராகக் காவல்துறையினர் அளவுக்கு அதிகமாகத் தடியடி நடத்தி அத்துமீறி வருகிறார்கள். </p><p>இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். நீதிமன்றம்தான் இதற்கு இடையில் நின்றுகொண்டிருக்கிறது.” என மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் தெரிவித்தார். </p><p>இதனைத்தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜெயமால்ய பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சம்மதித்துள்ளது.</p><h2>போராட்டமும், போலீசாரின் அராஜகப் போக்கும்</h2><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன்.20 முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. </p><p>போராட்டத்தின் ஒருபகுதியாக ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி "சன்சத் சலோ" பேரணி செல்ல திட்டமிடப்பட்டது. பேரணிக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று டெல்லி காவல்துறை எச்சரித்தது. இதனைத் தொடர்ந்தும் போராட்டக்காரர்கள் பேரணியில் ஈடுபட்டனர். </p><p>இதனால் போராட்டக்காரர்கள்மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அவர்களை தடுக்க கண்ணீர் புகைக் குண்டுகள், பெல்லட் துப்பாக்கிகள் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர். இதனால் 20க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>குறிப்பாக பெல்லட் துப்பாக்கியால் இளைஞர் ஒருவருக்கு கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போலீசார் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சீற்றத்தை தூண்டின.</p><p>பெண்கள்மீதும் சராமாரி தாக்குதல், அவர்களை தவறான இடங்களில் அடித்தல், நேம் பேட்ச் அணியாத காவலர்கள், குறிப்பாக சீருடை அணியாத காவலர்கள் என பல்வேறு சர்ச்சைகள் டெல்லி காவல்துறையை சூழ்ந்தது.</p><h2>நீதிமன்றத்தின் முந்தைய நிலைப்பாடு</h2><p>இச்சம்பவம் தொடர்பாக முதலில் அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட தங்களுக்கு விருப்பம் இல்லை, நேரம் இல்லை என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவிற்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழு, தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ரூ.1 கோடி அபராதம், 10 ஆண்டுகள் சிறை: வினாத்தாள் கசிவுகளுக்கு தண்டனையை கடுமையாக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-1-crore-fine-10-years-in-prison-union-cabinet-approves-bill-to-toughen-penalties-for-question-paper-leaks</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-1-crore-fine-10-years-in-prison-union-cabinet-approves-bill-to-toughen-penalties-for-question-paper-leaks#comments</comments><guid isPermaLink="false">da93b70b-4f95-43ba-a5c6-d2473e7196a1</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:59:06 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:59:06.821Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Union Cabinet,மத்திய அமைச்சரவை,paper leak cases,வினாத்தாள் கசிவுகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/p3bweqr4/New-Project-2026-07-24T172632.601.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரூ.1 கோடி அபராதம், 10 ஆண்டுகள் சிறை: வினாத்தாள் கசிவுகளுக்கு தண்டனையை கடுமையாக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/p3bweqr4/New-Project-2026-07-24T172632.601.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வினாத்தாள் கசிவுகளுக்கு கடுமையான தண்டனைகளை உறுதிசெய்யும் வரைவு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. </p><p>மத்திய கல்வி அமைச்சர் பிரதானின் பதவி விலகல், தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றல், கல்வித்துறையில் சீர்திருத்தங்கள், நீட்-யுஜி தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>வினாத்தாள் கசிவு உள்ளிட்ட திட்டமிட்ட தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை, ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது. </p><p>வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை மிக விரைவாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்குவதை உறுதி செய்ய பிரத்யேக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கவும் மசோதாவில் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. </p><p>மசோதா திங்கள்கிழமை (ஜூலை.27) நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>அதிகரிக்கும் சாலை விபத்துகள்: தமிழ்நாடு முதலிடம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-saw-513-lakh-road-accidents-in-2025-with-21-deaths-every-hour-nitin-gadkari-tells-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-saw-513-lakh-road-accidents-in-2025-with-21-deaths-every-hour-nitin-gadkari-tells-parliament#comments</comments><guid isPermaLink="false">f34b9ea1-e71d-4fbe-946a-436b8e58a4a2</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:53:51 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:53:51.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,road accident,parliment,சாலை விபத்துகள்,Nitin gadkari,நிதின் கட்கரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/s7c86dxj/accident.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/s7c86dxj/accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்றத்தின் மக்களவையில் சாலை விபத்துகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது:</p><p>இந்தியாவில் 2025-ம் ஆண்டு நிகழ்ந்த 5,13,563 சாலை விபத்துகளில் 1,83,382 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இது 2024-ம் ஆண்டில் பதிவான 1,77,175 மரணங்களுடன் ஒப்பிடுகையில் 3.5 சதவீதம் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. </p><p>மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 5.3 சதவீதம் உயர்ந்து 5,13,563 ஆக பதிவாகியுள்ளது.</p><p>நாட்டில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 59 சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அதில் 21 பேர் உயிரிழக்கின்றனர்.</p><p>தினமும் 502 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.</p><p>சாலை விபத்து மரணங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளன.</p><p>உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து மரணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. அங்கு கடந்த ஆண்டு 27,550 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். 2024-ம் ஆண்டு 24,118-ல் இருந்து 27,550 ஆக அதிகரித்துள்ளது.</p><p>தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் 18,505 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2025-ல் தமிழ்நாட்டில் 71,387 சாலை விபத்துகள் பதிவாகி உள்ளன.</p><p>பஞ்சாபில் குறைந்தபட்சமாக 3,062 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். பஞ்சாபில் சாலை விபத்து மரணங்கள் 4,759-லிருந்து 3,062 ஆக கணிசமாகக் குறைந்துள்ளன.</p><p>பீகார், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் சாலை விபத்து மரணங்கள் உயர்ந்துள்ளன. அதேவேளையில், சத்தீஸ்கர், கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என எச்சரித்த டெல்லி பல்கலைக்கழகம் - பொங்கிய ராகுல் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-crackdown-delhi-university-warns-students-against-joining-jantar-mantar-agitation</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-crackdown-delhi-university-warns-students-against-joining-jantar-mantar-agitation#comments</comments><guid isPermaLink="false">f5858d41-dc18-4ca6-b85a-4636a420e763</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:22:22 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:22:22.886Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,டெல்லி பல்கலைக்கழகம்,delhi university,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/h8pnsylw/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/h8pnsylw/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 20 முதல் <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-seeks-time-until-tomorrow-to-deliberate-on-dharmendra-pradhans-resignation">சிஜேபி </a>தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியை போலீசார் மற்றும் மத்திய படையினர் தடியடி நடத்தினர்.</p><p>கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். மேலும் பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களையும் பயன்படுத்தியதற்கான ஆதாரமாக காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் மருத்துவ அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சுமார் 60 பேர் இதில் காயமடைந்தனர். </p><p>இதனிடையே சோனம் வாங்சுக் தனது 26 உண்ணாவிரதத்தை நேற்று இரவு முடித்துக்கொண்டபோதும், முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும், சிறப்பு மசோதா நிறைவேற்றப்படும் என <a href="https://www.maalaimalar.com/news/national/change-of-higher-and-school-education-secretaries-central-government-action-after-student-protests">பிரதமர் மோடி</a> வீடியோ மூலம் அறிவித்தும், தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார். </p> <h2>டெல்லி பல்கலைக்கழகம் சுற்றறிக்கை</h2><p>இந்த சூழலில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு டெல்லி பல்கலைக்கழகம் தனது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>அந்த சுற்றறிக்கையில், "உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி ஜந்தர் மந்தர் போராட்டங்களில் பங்கேற்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி சட்டவிரோதக் கூட்டங்களில் பங்கேற்கும் மாணவர்கள் மீது நேரடியாக சட்ட நடவடிக்கை பாயும்.</p><p>அப்படி நடந்தால் மாணவர்களின் கல்வி, மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு பாதிக்கப்படும்" என நிர்வாகம் எச்சரித்துள்ளது.</p><p>மேலும், "மாணவர்களை உணர்ச்சிவசப்படுத்தவும் பதற்றத்தை அதிகரிக்கவும் இணையத்தில் போலியான வீடியோக்களும் செய்திகளும் பரப்பப்படுகின்றன. அவற்றை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>ஜனநாயக ரீதியில் போராடும் மாணவர்களின் குரலை ஒடுக்க நினைப்பதாக டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்தச் சுற்றறிக்கைக்கு மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.</p> <h2>ராகுல் காந்தி ஆவேசம்</h2><p>டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்தச் சுற்றறிக்கைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>அவரது பதிவில், "தங்களின் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தும் மாணவர்களை அச்சுறுத்தவும் மிரட்டவும் உங்களுக்கு எவ்வளவு தைரியம்?</p><p>காலம் வரும்போது இதற்கெல்லாம் நீங்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!" என்று சாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து ஆலோசனை செய்ய நாளைவரை அவகாசம் கோரிய மத்திய அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-seeks-time-until-tomorrow-to-deliberate-on-dharmendra-pradhans-resignation</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-seeks-time-until-tomorrow-to-deliberate-on-dharmendra-pradhans-resignation#comments</comments><guid isPermaLink="false">d0eba668-c359-43a3-8089-59eb80c26847</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:48:43 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:48:43.070Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,CJP,Dharmendra Pradhan Resignation,தர்மேந்திர பிரதான் பதவி விலகல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0mqej2bs/New-Project-2026-07-24T145633.015.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து ஆலோசனை செய்ய நாளைவரை அவகாசம் கோரிய மத்திய அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0mqej2bs/New-Project-2026-07-24T145633.015.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சித் தொடங்கிய நீட்டுக்கு எதிரான மற்றும் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் தொடர்பான போராட்டம் தற்போது இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ளது. </p><p>இந்நிலையில் இப்போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு கரப்பான்பூச்சி கட்சியுனருடன் பலகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.</p><p>மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் தர்மேந்திர பிரதான் பதவி விலகல், நீட் தேர்வால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம், உயர்கல்வித்துறையில் சீர்த்திருந்தங்களை மேற்கொள்ளுதல் என மூன்று கோரிக்கைகளை கரப்பான்பூச்சி கட்சியினர் முன்வைத்தனர்.</p><p>அதனைத்தொடர்ந்து இன்று இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது பிரதானின் பதவி விலகல் கோரிக்கை சமரசத்திற்கு அப்பாற்பட்டது என கரப்பான்பூச்சி கட்சியினர் மத்திய அரசின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர். </p><p>“கல்வி அமைச்சரின் ராஜினாமாவே, ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் சி.ஜே.பி. போராட்டங்களின் மையக்கருவாக இருந்து வருகிறது. பிரதான் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்” என எச்சரித்ததாக பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட சி.ஜே.பி. தேசிய செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் தெரிவித்துள்ளனர். </p><p>இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக ஆலோசிக்க நாளை மதியம் வரை மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>வந்தே மாதர பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் மசோதா மாநிலங்களவையில் அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/a-bill-proposing-a-three-year-prison-sentence-for-disrespecting-the-vande-mataram-song-has-been-introduced-in-the-rajya-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/a-bill-proposing-a-three-year-prison-sentence-for-disrespecting-the-vande-mataram-song-has-been-introduced-in-the-rajya-sabha#comments</comments><guid isPermaLink="false">16f630b6-0a09-4523-935c-2d2e13a60caa</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:22:50 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:22:50.061Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Aishwarya Rai,மாநிலங்களவை,rajya sabha,Nityanand Rai,Vande Mataram bill,வந்தே மாதரம் மசோதா,நித்யானந்தா ராய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/q8z8bwnr/New-Project-2026-07-24T145231.271.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வந்தே மாதர பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் மசோதா மாநிலங்களவையில் அறிமுகம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/q8z8bwnr/New-Project-2026-07-24T145231.271.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வந்தே மாதரப் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழிவகுக்கும், தேசிய கௌரவம் அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026 இன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் இந்த மசோதாவை அறிமுகம் செய்துவைத்தார். </p><p>இந்த மசோதா தாக்கலைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை வரும் திங்கள்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>முன்னதாக மக்களவை, எதிர்க்கட்சிகளின் அமளியால் 12.15 மணிக்கே ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மாநிலங்களவையில் மட்டும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  </p><p>மசோதா என்னக்கூறுகிறது?</p><p>1971-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய கௌரவம் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தில் (பிரிவு 3) திருத்தம் கொண்டுவரப்பட்டு, தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியவற்றுக்கு இணையாக தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கப்படுகிறது.</p><p>வந்தே மாதரம் பாடல் பாடுவதை யாராவது வேண்டுமென்றே தடுத்தாலோ, அல்லது பாடல் இசைக்கப்படும் கூட்டத்தில் இடையூறு விளைவித்தாலோ அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. </p><p>பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் இயற்றப்பட்ட வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>அரசு நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க அரசாங்கம் முயன்று வருகிறது. தேசிய கீதம் இசைக்கப்படும் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடுவது அல்லது இசைப்பது தொடர்பாக  உள்துறை அமைச்சகம் முன்னதாக வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது.</p><p>இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு முழுமையான சட்டமாக அமலுக்கு வரும்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களுக்கு எதிரான போலீசார் நடவடிக்கை தொடர்பாக மனு தாக்கல் செய்யப்படவில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி</title><link>https://www.maalaimalar.com/news/national/cji-kant-no-plea-filed-on-cjp-protest-police-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/cji-kant-no-plea-filed-on-cjp-protest-police-action#comments</comments><guid isPermaLink="false">b9c89c41-f546-4b3a-8c2d-c7dff99a8e21</guid><pubDate>Fri, 24 Jul 2026 08:44:19 +0000</pubDate><atom:updated>2026-07-24T08:44:19.142Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்சநீதிமன்றம்,CJP Protest,கரப்பான்பூச்சி கட்சி போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/06/10/1895651-supreme-court.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/06/10/1895651-supreme-court.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி போராட்டத்தை தொடங்கினர்.</p><h2>மாணவர்கள் மீது தடியடி</h2><p>கடந்த 20-ந்தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இன்றைய தினம் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என அறிவித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது போலீசார், துணை ராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><h3>அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு எனத் தகவல்</h3><p>போராட்டத்தில் ஈடுபட்ட இந்த மாணவர்களுக்கு எதிரான போலீசார் நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றம் மனுதாக்கல் செய்யப்பட்டதாகவும், அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததாகவும், எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் நேரத்தையும் வீணாக்காதீர்கள் என்று அவர் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது.</p><p>இந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை தொடர்பாக எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. விசாரிக்க மறுத்ததாக பொறுப்பற்ற வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் காட்டமான வகையில் பதில் அளித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது:-</h2><p>சமீபத்தில் எந்தவொரு ஆவணமும் தாக்கல் செய்யப்படாத நிலையில் இந்த விவகாரம் எங்கள் முன் குறிப்பிடப்பட்டது. நான் பதிவகத்தில் சரிபார்த்தேன். உச்ச நீதிமன்றத்தில் ஒரு பக்கத்தில் கூட தாக்கல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. </p><p>நீதிமன்றத்திற்கு வந்தது வெறும் ஒரு கோரிக்கை மனு மட்டுமே. மிஷ்ரா அல்லது வேறு யாரோ ஒருவரால் அனுப்பப்பட்ட ஒரு கோரிக்கை மனு மட்டுமே. அந்தக் கோரிக்கை மனுவை நான் எப்படி ஒரு ரிட் மனுவாக (writ petition) கருத முடியும்? ஆனால் மக்கள் இதைப்பற்றிப் பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிடத் தொடங்கிவிட்டனர்.</p><p>கடந்த இரண்டு நாட்களில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக முற்றிலும் பொய்யான தகவல் பரப்பப்பட்டது. அந்த வழக்கை விசாரணைப் பட்டியலிடத் தலைமை நீதிபதி மறுத்துவிட்டதாக ஊடகங்கள் எந்த பொறுப்புணர்வும் இன்றி பொறுப்பற்ற முறையில் தவறான செய்தியை வெளியிட்டன. ஆனால், காலை 10 மணி வரை ஒரு பக்கம் கூட தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை.</p><p>இவ்வாறு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.</p><p>வழக்கறிஞர் நரேந்திர மிஷ்ரா, வாய்மொழியாக உச்சநீதிமன்றம் இது தொடர்பாக தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பட்ட கடித மனுவை வழகறிஞர் மிஷ்ரா குறிப்பிட்டார். அப்போது, மாணவர்களுக்கு எதிராக காவல்துறையின் எடுத்த நடவடிக்கை தொடர்பான வீடியோக்களை பார்வையிட வேண்டும் என்றார். அப்போது தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச், அவரின் வேண்டுகோளை ஏற்க மறுத்தது. அப்போது வழக்கறிஞர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/lok-sabha-adjourned-for-the-day-amid-opposition-protest-on-various-issues</link><comments>https://www.maalaimalar.com/news/national/lok-sabha-adjourned-for-the-day-amid-opposition-protest-on-various-issues#comments</comments><guid isPermaLink="false">ca10454f-7d51-4fcf-b497-d7b1df2d9a3e</guid><pubDate>Fri, 24 Jul 2026 08:33:07 +0000</pubDate><atom:updated>2026-07-24T08:33:07.526Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>winter session,மக்களவை,Loksabha,மழைக்கால கூட்டத்தொடர்,adjourned,ஒத்திவைப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/mj2by9v4/loksabha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ lok sabha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/mj2by9v4/loksabha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு, ராமர் கோவில் நன்கொடை முறைகேடு, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் கடந்த 4 தினங்களாக நாடாளுமன்றத்தில் அலுவல் எதுவும் நடைபெறாமல் முடங்கியது.</p><h2>எதிர்க்கட்சிகள் 5-வது நாளாக அமளி</h2><p>இந்நிலையில், மழைக்காலக் கூட்டத் தொடரின் 5-ம் நாளான இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல இரு அவைகளும் கூடின. </p><p>சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும் கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு கார்கில் போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் வீரத்தைப் போற்றும் வகையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, கேள்வி நேரம் தொடங்குவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.</p><p>ஆனாலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்த ஓம் பிர்லா தொடர்ந்து முயன்றார்.</p><p>கேள்வி நேரத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். எந்த விஷயம் தொடர்பாக விவாதிக்க நீங்கள் விரும்பினாலும் அதற்கான அனுமதி உங்களுக்கு வழங்கப்படும். நேற்றும்கூட இதை நான் தெரிவித்தேன். அவையின் செயல்பாடுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள் என சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார்.</p><p>எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை தொடர்ந்து நடக்க நீங்கள் விரும்பவில்லை என்பதால் அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கிறேன் என அறிவித்தார்.</p><h2>ராகுல் காந்தியிடம் கிரண் ரிஜிஜு வேண்டுகோள்</h2><p>இதற்கிடையே, அவை நடவடிக்கைகள் தொடர ஒத்துழைக்குமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வேண்டுகோள் விடுத்தார். </p><p>ராகுல் காந்தியை நேரில் சந்தித்த கிரண் ரிஜிஜூ, அவை நடவடிக்கைகள் சுமுகமாக தொடர ஒத்துழைக்குமாறு நேரில் கேட்டுக்கொண்டார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க அரசு ஒப்புக்கொண்ட போதிலும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால் விவாதத்தை நடத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார்.</p><h2>மக்களவை ஒத்திவைப்பு</h2><p>எனினும், பகல் 12 மணிக்கு ஜகதாம்பிகா பால் தலைமையில் மக்களவை மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஜகதாம்பிகா பால் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அமளி தொடர்ந்ததால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.</p><p>சனி, ஞாயிறு என இரு நாள் விடுமுறைக்குப் பிறகு மக்களவை இனி திங்கள்கிழமை கூடுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மத்திய பிரதேசத்தில் 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி துப்பாக்கி முனையில் கொள்ளை</title><link>https://www.maalaimalar.com/news/national/400-year-old-cannon-stolen-at-gunpoint-in-madhya-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/400-year-old-cannon-stolen-at-gunpoint-in-madhya-pradesh#comments</comments><guid isPermaLink="false">4800897a-252d-4a08-8275-a5b07cd46cc1</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:31:57 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:31:57.994Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய பிரதேசம்,Madhya Pradesh,cannon,பீரங்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/srlnget2/cannon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/srlnget2/cannon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள நர்வார் கோட்டை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவு சின்னமாகும். </p><p>கச்வாஹா ராஜ்புத் மன்னர்களால் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கோட்டையில், வரலாற்று சிறப்புமிக்க 14 பீரங்கிகள் இருந்தன. இந்த பீரங்கிகள், சிந்தியா மன்னர்களின் ஆட்சி காலத்தை சேர்ந்தவை ஆகும். ஒவ்வொரு பீரங்கியும் 3.5 டன் எடை கொண்டவை.</p> <p>பழங்கால பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய சட்டவிரோத சந்தையில் இத்தகைய பீரங்கிகளுக்கு நல்ல மதிப்பு உண்டு. இதையடுத்து கோட்டையில் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அந்த பாதுகாவலர்களையும் தாண்டி, சில நாட்களுக்கு முன்பு கொள்ளை கும்பலால் ஒரு பீரங்கி திருடி செல்லப்பட்டது. </p><p>கோட்டையின் பின்புறம் வழியாக வந்த கொள்ளை கும்பல், பாதுகாப்பு பணியில் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் காட்டி மிரட்டி பீரங்கியை லாரியில் ஏற்றி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.</p> <p>கோட்டையை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் பீரங்கியை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பீரங்கியை ஏற்றி சென்ற லாரி ராஜஸ்தானுக்கு சென்றது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>சர்வதேச அளவில் பழமையான பொருட்களை கடத்தும் கும்பலுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்றும், கொள்ளை கும்பல் பீரங்கியை மண்ணில் புதைத்து வைத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.</p><p>பீரங்கியை கண்டறிவதற்காக ராஜஸ்தானின் கரவுலி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர். சந்தேகிக்கப்படும் இடங்களில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடக்கிறது. </p> <p>பரத்பூரில் இருந்து ஒரு உலோக கண்டறிதல் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்து, மின்னணு கருவிகள் மூலம் நிலத்தை ஆய்வு செய்து வருகிறது. ஜே.சி.பி. எந்திரங்களை பயன்படுத்தி பல இடங்களில் மண்ணை தோண்டி தேடும் முயற்சியும் நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு வங்காளத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/bengal-border-force-jawan-kills-2-colleagues</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengal-border-force-jawan-kills-2-colleagues#comments</comments><guid isPermaLink="false">83ea0499-b969-4f2f-b24d-1ce217d6070d</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:00:53 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:00:53.860Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்காளம்,BSF,எல்லை பாதுகாப்பு படை,west bengal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xz06gium/jawan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/xz06gium/jawan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாம் ஒன்றில், காவலில் வைக்கப்பட்டு இருந்த வீரர் ஒருவர், அங்கு பணியில் இருந்த மற்றொரு வீரரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து சரமாரியாக சுட்டார்.</p><h2>எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்</h2><p>இந்த சம்பவத்தில், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். மற்றொருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் மால்டா மாவட்டம், பைஷ்ணப்நகர் பகுதியில் உள்ள 119-வது பட்டாலியன் தலைமையகத்தில் நடந்தது. இந்த சம்பவத்தில் சக வீரர் சிவம்குமார் மிஸ்ரா என்பவர் ஈடுபட்டுள்ளார். இவர் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p> <p>இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-</p><p>எல்லை பாதுகாப்பு படை வீரர் சிவம்குமார் மிஸ்ரா ராணுவ கோர்ட்டு உத்தரவின்பேரில் 119-வது பட்டாலியன் தலைமையகத்தில் காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.</p><p>நேற்று மாலை அவர் பணியில் இருந்த வீரர் வைத்திருந்த துப்பாக்கியை வலுக்கட்டாயமாக பறித்தார். பின்னர் அந்த துப்பாக்கியால் அருகில் இருந்த ராணுவ முகாம்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 3 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் குண்டு பாய்ந்து காயமடைந்தனர்.</p> <h2>பாதுகாப்புப் படையினர் கைது</h2><p>உடனடியாக அவர்கள் மால்டா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 2 உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நடந்த உடனேயே, சிவம்குமார் மிஸ்ராவை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.</p> <p>இந்த சம்பவத்தில் பலியான எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பீகாரை சேர்ந்த அஜய்குமார் சிங் (வயது 51), மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அம்படார் சுரேஷ் (36) என அடையாளம் காணப்பட்டு உள்ளது. காயம் அடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் பிகாஸ் பிரம்மா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>குஜராத்தை துவம்சம் செய்த இடைவிடாத கனமழை: 1200 பேர் மீட்பு, 22 ஆயிரம் பேர் இடம்பெயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/national/flood-like-situation-worsens-in-gujarat-22000-relocated-1200-rescued-as</link><comments>https://www.maalaimalar.com/news/national/flood-like-situation-worsens-in-gujarat-22000-relocated-1200-rescued-as#comments</comments><guid isPermaLink="false">1ed662b2-557f-4802-a067-949d43e34fb3</guid><pubDate>Fri, 24 Jul 2026 06:22:54 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:22:54.175Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வெள்ளம்,Heavy Rain,குஜராத்,gujarat,Gujarat Rains,கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/brq33tpe/GujaratRains0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குஜராத் மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/brq33tpe/GujaratRains0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத், அகமதாபாத், கேடா தபி மற்றும் டாங்ஸ், வால்சாட் உள்ளிட்ட மாவட்டங்களில் புதன்கிழமையில் இருந்து இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று மாலை வரையிலும் இந்த கனமழை நீடித்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.</p><h2>1200 மி.மீ. மழை</h2><p>குறிப்பாக வால்சாட் மாவட்டத்தில் உள்ள உம்பேர்கான் தாலுகா இந்த கனமழையால் கடுமையாக பாதித்தது. இங்கு 36 மணி நேரத்தில் 1200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.</p><p>வால்சாட் பகுதிகளில் இருந்து 1200 பேர் மீட்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை காரணமாக 22 ஆயிரம் பேர் சொந்த இடங்களில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.</p><h2>மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் NDRF மற்றும் SDRF</h2><p>பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக்குழு (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழு (SDRF) குவிக்கப்பட்டுள்ளது. நவ்சாரி மற்றும் வால்சாட் மாவட்டங்களில் ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நிவாரணப்பணி, மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><figure><img alt="குஜராத் மழை" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/yh037wsx/GujaratRains0002.jpg" /></figure> <p>மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்து. பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேலிடம் இது தொடர்பாக பேசியுள்ளார். சாத்தியமான அனைத்து வகை உதவிகளும் மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.</p><p>வால்சாட் மற்றும் நவ்சாரி மற்றும் சூரத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருகில் உள்ள இடங்கள் மற்றும் கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.</p><h2>ரெட் அலர்ட் எச்சரிக்கை</h2><p>அகமதாபாத்தில் உள்ள 22 தாலுக்காவில் 12 மணி நேரத்தில் 200 மி.மீ.-க்கு அதிகமான மழை பதிவாகியுள்ளது. </p><p>இந்திய வானிலை மையம், இன்று வரை கனமழை முதல் அதிகன மழை பெய்யக்கூடும் என பரூச், சூரத், நவ்சாரி, வால்சாட், டாங்ஸ், நர்மதா, வதோதரா, சோட்டா உதேபூர், பஞ்ச்மஹால், தாஹோத் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உயர்கல்வித் துறை செயலாளர் மாற்றம்.. மாணவர்கள் போராட்டத்தால் மத்திய அரசு நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/change-of-higher-and-school-education-secretaries-central-government-action-after-student-protests</link><comments>https://www.maalaimalar.com/news/national/change-of-higher-and-school-education-secretaries-central-government-action-after-student-protests#comments</comments><guid isPermaLink="false">6a11c37c-9ce1-475c-be2d-6d1377479fca</guid><pubDate>Fri, 24 Jul 2026 04:46:44 +0000</pubDate><atom:updated>2026-07-24T04:46:44.157Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>paper leak,கல்வி அமைச்சகம்,Ministry of Education,neet protest,நீட் வினாத்தாள் கசிவு,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/gkfde24o/Untitled-design-60.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Centre shifts Higher Education Secretary amid student protests]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/gkfde24o/Untitled-design-60.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்படி, மாணவர்கள் போராடி வரும் சூழலில், உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷியை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h3><strong>எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:</strong></h3><p>தேசிய அளவில் நடைபெற்ற நீட் தேர்வில், வினாத்தாள் கசிந்ததையடுத்து பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>மேலும் நீட் வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.</p><p>இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.</p><p>மேலும் சிபிஎஸ்இ நடத்திய பொதுத் தேர்வு மதிப்பீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்தும் தேசிய தேர்வு முகமையின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p>இந்நிலையில் உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷியை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>ஜோஷி இதற்கு முன்னர் தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநராகவும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.</p><h3><strong>புதிய அதிகாரிகள் நியமனம்:</strong></h3><p>இவர் 2023-ல் மணிப்பூரில் இன மோதல் மோசமடைந்ததை தொடர்ந்து, தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் இவர் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தற்காலிகத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.</p><p>இதையடுத்து பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய இரு துறைகளின் உயர் பதவிகளுக்கும் புதிய அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.</p><p>நரேஷ் குமார் கங்வார் என்பவர் தற்போது உயர்கல்விச் செயலாளராகவும், டி.கே.அனில் குமார் என்பவர் பள்ளிக்கல்விச் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நரேஷ் கங்வார் முன்னதாக கால்நடை வளர்ப்பு அமைச்சகத்தில் செயலாளராகவும், அனில் குமார் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றி வந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜூலை 20-ந்தேதி போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குகள் கிடையாது: மத்திய அரசின் உத்தரவாதத்தை பகிர்ந்த வாங்சுக்</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-wangchuk-shares-govt-assurance-no-cases-against-peaceful-july-20-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-wangchuk-shares-govt-assurance-no-cases-against-peaceful-july-20-protesters#comments</comments><guid isPermaLink="false">87ee1a4f-55fd-4fa1-8457-05dce568fddf</guid><pubDate>Fri, 24 Jul 2026 04:30:28 +0000</pubDate><atom:updated>2026-07-24T04:30:28.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/y3t8jkm7/Wangchuk0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sonam Wangchuk]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/y3t8jkm7/Wangchuk0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரில் சந்தித்தோ அல்லது கடிதங்கள் மூலமாகவோ உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதாக வாங்சுக் தெரிவித்தார்.</p><p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த ஜூன் 20-ந்தேதி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தினர். அப்போது, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான பல்வேறு உயர்க்கல்வி தொடர்பான முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.</p><h2>பாராளுமன்றம் முற்றுகை போராட்டம்</h2><p>கடந்த 20-ந்தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது பாராளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் மாணவர்கள் பேரணி மேற்கொண்டனர். அவர்கள் நாடாளுமன்றத்தை நெருங்கியதால், மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்படும் நிலை உருவானது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி பேரணியை கலைத்தனர்.</p><p>இதில் மாணவர்கள், இளைஞர்கள், காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்திற்குப் பிறகு மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது. என்ன இருந்தாலும் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் கரப்பான்பூச்சி ஜனதா தளம் உறுதியாக உள்ளது.</p><h2>மத்திய அரசு உறுதி அளிப்பு- போராட்டத்தை கைவிட்ட வாங்சுக்</h2><p>இதற்கிடையே ஜூன் 28-ந்தேதில் முதல் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசடைய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் அவரும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். நேற்று மத்திய அமைச்சர்கள் அவரை சென்று சந்தித்தனர். அப்போது கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று மத்திய அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.</p><p>ஜூலை 20-ந்தேதி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டால் எதிர்காலம் கேள்விக்குறி ஆகும். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என வாங்சுக் கோரிக்்கை வைத்தார். மத்திய அரசு அதை ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொட்ரபாக அவரிடம் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>மருத்துவமனையில் இருக்கும் அவர், அமைதியான ஜூலை 20 போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த வழக்கும் கிடையாது என எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு வழங்கியுள்ள அந்த உத்தரவாதத்தை அவர் பகிர்ந்துள்ளார்.</p><h2>வாங்சுக் பதிவு</h2><p>பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரில் சந்தித்தோ அல்லது கடிதங்கள் மூலமாகவோ உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதாக வாங்சுக் தெரிவித்தார்.</p><p>பல்வேறு நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், நாட்டில் ஏற்படக்கூடிய வன்முறையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த நிபந்தனைகள் குறித்த விவரங்களை விரைவில் ஒரு தனி காணொளியில் விளக்குவேன். அதேவேளையில், எங்கும் எந்தவிதமான வன்முறையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது, பொறுப்புக்கூறுல் தொடங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வீடியோ வெளியிட்டு அவமதிப்பதா? - தர்மேந்திர பிரதானை முதலில் நீக்குங்கள்: மோடிக்கு ராகுல் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-urges-modi-remove-dharmendra-pradhan-first</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-urges-modi-remove-dharmendra-pradhan-first#comments</comments><guid isPermaLink="false">9c940b94-969d-4c69-8419-9721f2619208</guid><pubDate>Fri, 24 Jul 2026 03:56:53 +0000</pubDate><atom:updated>2026-07-24T03:56:53.144Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,pm modi,பிரதமர் மோடி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/3chf2ii3/rahulgandhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi - Rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/3chf2ii3/rahulgandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்குங்கள். மாணவர்களை தாக்கியவர்களை தண்டியுங்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.</strong></em></p><h2>கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாட்டில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் முதலில் வலியுறுத்தினர்.</p> <p>தற்போது 'இந்தியா' கூட்டணியும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பதவி விலகலுக்கான வலியுறுத்தல்கள் தினம்தோறும் வைக்கப்பட்டு வருகிறது.</p><h2>விரைவு கோர்ட்டுகள்</h2><p>நீட் முறைகேடு வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்படும் என்று நேற்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.</p> <h2>பிரதமர் மோடி</h2><p>சிஜேபி போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில்  மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி நள்ளிரவில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,</p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவு குறித்து விசாரிப்பதற்காக  விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். தேர்வு முறையை மாற்றியமைப்பது தொடர்பாக அமைச்சரவை  கூட்டத்தில் விவாதிக்கப்படும். </p> <h2>மசோதா</h2><p>நீட் வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான மசோதாவை விரைந்து நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a> உறுதி அளித்துள்ளார்.</p><h2>ராகுல் காந்தி</h2><p>இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>பிரதமர் மோடி அவர்களே, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எங்கள் <a href="https://www.maalaimalar.com/news/national/modi-govt-treating-students-seeking-accountability-as-enemies-of-nation-sonia-gandhi">மாணவர்கள்</a> வலியுறுத்துகின்றனர்.</p> <p>நள்ளிரவில் வெளியிடப்பட்ட வீடியோ மூலம் அவர்களின் புத்திசாலித்தனத்தை அவமதிக்காதீர்கள்.</p><p>1. பிரதானை பதவியிலிருந்து நீக்குங்கள்.</p><p>2. மாணவர்களை தாக்கியவர்களை தண்டியுங்கள்.</p><p>3. மன்னிப்பு கேளுங்கள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Mr. Modi, our students are demanding Dharmendra Pradhan’s resignation.<br><br>Don’t insult their intelligence with this pathetic midnight video. <br><br>1.  Sack Pradhan.<br>2. Punish those who beat students.<br>3. ⁠Apologise <a href="https://t.co/7SLB6pQqZx">https://t.co/7SLB6pQqZx</a></p>&mdash; Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://x.com/RahulGandhi/status/2080375315063566480?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>உத்தரகாண்ட் பல்கலைக்கழகத்தில் பி.டெக் தேர்வு வினாத்தாள் கசிவு.. உதவி பேராசிரியர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/uttarakhand-university-btech-exam-paper-leak-assistant-professor-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttarakhand-university-btech-exam-paper-leak-assistant-professor-arrested#comments</comments><guid isPermaLink="false">96bbc831-8746-4ff3-89da-85ff2e36bf78</guid><pubDate>Fri, 24 Jul 2026 03:40:20 +0000</pubDate><atom:updated>2026-07-24T03:40:20.590Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>paper leak,uttarakhand university,வினாத்தாள் கசிவு,உத்தரகாண்ட் பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/9a03ohol/Untitled-design-59.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Uttarakhand B.Tech exam cancelled after question paper leak]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/9a03ohol/Untitled-design-59.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>உத்தரகாண்ட் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிவு:</strong></h3><p>தேசிய அளவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் காரணமாக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், உத்தரகாண்ட் பல்கலைக்கழகத்தில் பி.டெக் தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவை தொடர்ந்து, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வீர மாதோ சிங் பண்டாரி உத்தரகாண்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.</p><p>இங்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான பி.டெக் மின்னணுவியல் பாடப்பிரிவை சேர்ந்த வினாத்தாள்கள் வாட்ஸ்அப்பில் கசிந்தது. இதை தொடர்ந்து, பி.டெக் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வி.கே.படேல் கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில் உதவி பேராசிரியர் ஆஷிஷ் குமார் குப்தா வாட்ஸ்அப்பில் பகிர்ந்த கேள்விகள், இறுதி தேர்வு வினாத்தாளுடன் 95 சதவீதம் வரை ஒத்துப்போனது கண்டறியப்பட்டுள்ளது” என்று கூறினார்.</p><p>இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேராசிரியர் பணியாற்றி வந்த இரண்டாம் ஆண்டு மின்காந்த புலக் கோட்பாடு தேர்வையும் அதிகாரிகள் ரத்து செய்தனர்.</p><h3><strong>பல்கலைக்கழகம் சுற்றறிக்கை:</strong></h3><p>இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், “தேர்வு முறையின் நம்பகத்தன்மை, தூய்மை மற்றும் மாணவர் நலனை காப்பதற்காக, இந்த ரத்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இரண்டாம் ஆண்டு பயிலும் 355 மாணவர்கள் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் 22 மாணவர்களுக்கான ரத்து செய்யப்பட்ட தேர்வுகள், 2026 ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் மறுபடியும் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளது.</p><h3><strong>உதவி பேராசிரியர் கைது:</strong></h3><p>பல்கலைக்கழகத்தின் புகாரை தொடர்ந்து, கல்லூரியின் உதவி பேராசிரியர் குப்தா இடைநீக்கம் செய்யப்பட்டு, நேற்று கைது செய்யப்பட்டார்.</p><p>இதையடுத்து இந்திய தேசிய மாணவர் சங்கம் மற்றும் இளைஞர் குழுக்களின் உறுப்பினர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.</p><p>மேலும் தொடர்ந்து நிகழும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள், மாணவர்களின் கடின உழைப்பு, நேரம் மற்றும் எதிர்காலத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மோடி அரசு மாணவர்களை நாட்டின் எதிரிகளாக நடத்துகிறது: சோனியா காந்தி குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/modi-govt-treating-students-seeking-accountability-as-enemies-of-nation-sonia-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-govt-treating-students-seeking-accountability-as-enemies-of-nation-sonia-gandhi#comments</comments><guid isPermaLink="false">8a67db5e-897d-494e-9e89-cb8110e39646</guid><pubDate>Fri, 24 Jul 2026 03:31:49 +0000</pubDate><atom:updated>2026-07-24T03:31:49.453Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>sonia gandhi,pm modi,பிரதமர் மோடி,சோனியா காந்தி,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/ntbi9ljk/SoniaGandhi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sonia Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/ntbi9ljk/SoniaGandhi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய அரசிடமிருந்து பொறுப்புக்கூறல் மற்றும் கல்விச் சீர்திருத்தத்தை கேட்டார்கள். நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அவர்களின் துணிச்சலுக்குக் கோழைத்தனத்துடனும் கொடூரத்துடனும் பதிலளித்துள்ளது. அவர்களை எதிர்காலத்தின் வாரிசுகளாகக் கருதாமல், நாட்டின் எதிரிகளாகவே நடத்தியுள்ளது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.</p><h2>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உயர்க்கல்வியில் உள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் மத்திய அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று <a href="https://www.maalaimalar.com/news/national/removing-pradhan-is-the-strictest-action-cjp-to-pm-modi">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> வலியுறுத்தி வந்தன. ஆனால், இரண்டு வலியுறுத்தலுக்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இதனால், கடந்த ஜூன் 20-ந்தேதி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வந்தது.</p><h2>நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் பேரணி</h2><p>கடந்த 20-ந்தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. அன்றைய தினம் நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.</p><p>அப்போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டு வீசி பேரணியை கலைத்தனர். ஜந்தர் மந்தரில் தொடர்ந்து பேராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மீதான தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாணவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.</p><p>இதனால் மத்திய அரசு, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. பிரதமர் மோடி, வினாத்தாள் லீக் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி முடிக்கும் வகையில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.</p> <h2>தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்</h2><p>ஆனால், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், தர்மேந்திர பிரதான் பதவி விலகியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். டெல்லி போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நீடித்துள்ளது. கைது செய்யப்படும் நபர்களை வழக்குப் பதிவு செய்யப்படாமலேயே ஒரு வருடம் சிறையில் அடைக்க முடியும். மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுது்த மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.</p><p>இதற்கிடையே, மாணவர்கள் போராட்டத்தை தூண்டு விடுவதாகவும், அவர்களை தேசவிரோதிகள் என்ற முத்திரை குத்தவும் முயற்சி நடைபெற்ற வருவதாக குற்றமும் சாட்டப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்புக்கூறல் வேண்டும் என்று மாணவர்கள் கேட்டு வரும் நிலையில், அவர்களை அவர்களை தேசவிரோதிகள் போன்று நடத்துகிறது என்று சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>இது தொடர்பாக சோனியா காந்தி கூறியதாவது:-</h2><p>மாணவர்கள் போராட்டங்கள் என்பவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சில காரணிகளின் இயல்பான விளைவுகளாகும். அதாவது, நம்பிக்கையற்ற சூழலை மட்டுமே உருவாக்கும் இன்றைய கல்விச் சூழல் மற்றும் பொறுப்புக்கூறவோ அல்லது ஆக்கபூர்வமாகச் செயல்படவோ விரும்பாத மோடி அரசாங்கத்தின் வழக்கமான ஆணவம் ஆகியவையே அக்காரணிகளாகும்.</p><p>2020-ஆம் ஆண்டு குடியுரிமை (திருத்த) சட்டம்- தேசிய குடிமக்கள் பதிவேடு போராட்டங்களின்போது, ​​ஆயுதமேந்திய காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் பல்கலைக்கழக வளாகங்களை எவ்வாறு சூறையாடினர் என்பது நம் அனைவருக்கும் தெளிவாக நினைவிருக்கிறது. இந்தியாவின் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஏற்றுக்கொள்ள முடியாத அத்துமீறல்களை நம் நினைவுகளிலிருந்து ஒருபோதும் அழிக்க முடியாது.</p><p>மாணவர்களின் கோரிக்கைகள் மிகத் தெளிவானவை மற்றும் நேரடியானவை. இந்திய அரசிடமிருந்து பொறுப்புக்கூறல் மற்றும் கல்விச் சீர்திருத்தத்தை கேட்டார்கள்.<a href="https://www.maalaimalar.com/news/national/neet-exam-paper-leak-issue-key-decision-to-be-taken-at-cabinet-meeting-pm-modi"> நரேந்திர மோடி</a> தலைமையிலான அரசு, அவர்களின் துணிச்சலுக்குக் கோழைத்தனத்துடனும் கொடூரத்துடனும் பதிலளித்துள்ளது. அவர்களை எதிர்காலத்தின் வாரிசுகளாகக் கருதாமல், நாட்டின் எதிரிகளாகவே நடத்தியுள்ளது.</p><p>இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்: இன்று அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் - பிரதமர் மோடி
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-exam-paper-leak-issue-key-decision-to-be-taken-at-cabinet-meeting-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-exam-paper-leak-issue-key-decision-to-be-taken-at-cabinet-meeting-pm-modi#comments</comments><guid isPermaLink="false">c8880c1e-599b-468e-a18a-93833d8822a7</guid><pubDate>Fri, 24 Jul 2026 02:59:25 +0000</pubDate><atom:updated>2026-07-24T02:59:25.479Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hmxn2zlt/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/hmxn2zlt/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.</p><h2>கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாட்டில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</a>யினர் முதலில் வலியுறுத்தினர்.</p> <h2>இந்தியா கூட்டணி</h2><p>தற்போது 'இந்தியா' கூட்டணியும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பதவி விலகலுக்கான வலியுறுத்தல்கள் தினம்தோறும் வைக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் இதுகுறித்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-</p> <h2>விரைவு கோர்ட்டுகள்</h2><p>நமது இளைஞர்களின் நலனையும், எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு கோர்ட்டுகளை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.</p><p>இதுதொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம்.</p> <p>மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். நமது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பவர்கள் தப்பிக்க விடப்பட மாட்டார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.</p><h2>சிஜேபி போராட்டம்</h2><p>இந்நிலையில்<a href="https://www.maalaimalar.com/news/national/removing-pradhan-is-the-strictest-action-cjp-to-pm-modi"> சிஜேபி </a>போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில்  மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி நள்ளிரவில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,</p> <h2>அமைச்சரவை கூட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவு குறித்து விசாரிப்பதற்காக  விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். தேர்வு முறையை மாற்றியமைப்பது தொடர்பாக அமைச்சரவை  கூட்டத்தில் விவாதிக்கப்படும்.</p> <h2>மசோதா </h2><p>நீட் வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான மசோதாவை விரைந்து நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Promising more strict action against paper leak, Prime Minister Narendra Modi said, &quot;... The departments presented me with the draft late at night. This draft, along with the provision for a fast-track court and harsh punishment, will be discussed in the cabinet tomorrow. After… <a href="https://t.co/1yo90YT0Hz">pic.twitter.com/1yo90YT0Hz</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2080369672109556212?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதான் நீக்கப்படுவதே கடுமையான நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு CJP வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/removing-pradhan-is-the-strictest-action-cjp-to-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/removing-pradhan-is-the-strictest-action-cjp-to-pm-modi#comments</comments><guid isPermaLink="false">1eef9a1a-7609-442c-80f3-72ef57f3fa93</guid><pubDate>Thu, 23 Jul 2026 23:49:47 +0000</pubDate><atom:updated>2026-07-23T23:49:47.206Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,pm modi,பிரதமர் மோடி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/hed6basj/pro-pmo.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protest Site & PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/hed6basj/pro-pmo.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> அறிவித்ததைத் தொடர்ந்து, 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளது. </p><p>தேர்வு முறைகேடுகள் தொடர்பாக அரசு எடுக்கக்கூடிய "மிகக் கடுமையான நடவடிக்கை" என்பது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்குவதுதான் என்று அக்கட்சி கூறியுள்ளது. </p><h2>கடுமையான நடவடிக்கை:</h2><p>பிரதமரின் கருத்துகளுக்கு பதிலளித்த <a href="https://www.maalaimalar.com/topic/cjp-protest">சி.ஜே.பி.</a>-யின் தேசிய செய்தி தொடர்பாளர் அஷூதோஷ் ரன்கா, "மோடி ஜி, நாளைக்கே தர்மேந்திர பிரதானை நீக்குங்கள். அதுதான் நீங்கள் எடுக்கக்கூடிய மிக கடுமையான நடவடிக்கையாக இருக்கும்" என்று கூறினார்.</p><p>பிரதமரின் அறிவிப்பு குறித்து CJP-யின் நிறுவனர் அபிஜீத் டிப்கேவும் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்தார். முன்மொழியப்பட்ட சட்டத்தை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், சுற்றுச்சுவர்கள் இல்லாத ஒரு வளாகத்தின் நுழைவாயிலை ஒருவர் பூட்டுவது போன்ற படத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.</p><h2>மசோதா:</h2><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வகை செய்யும் மசோதா, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகு அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் மோடி நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தார்.</p><p>நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, விரைவு நீதிமன்றங்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே எடுத்துள்ளதாக கூறிய அவர், இதற்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் உறுதியாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்ததில் நிம்மதி, ஆனாலும் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடரும்! கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உறுதி</title><link>https://www.maalaimalar.com/news/national/relieved-wangchuk-ended-fast-jantar-mantar-protest-will-continue-said-cjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/relieved-wangchuk-ended-fast-jantar-mantar-protest-will-continue-said-cjp#comments</comments><guid isPermaLink="false">31778b79-5f8a-4a6a-9362-7b4194051e87</guid><pubDate>Thu, 23 Jul 2026 23:14:42 +0000</pubDate><atom:updated>2026-07-23T23:14:42.834Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CJP Protest,Wangchuk,சிஜேபி போராட்டம்,வாங்சுக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/92dhqdi2/CJP-Protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/92dhqdi2/CJP-Protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதில் "நிம்மதியும் நன்றியும்" அடைந்துள்ளதாக 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) தெரிவித்துள்ளது; அதேவேளையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை டெல்லியின் ஜந்தர் மந்தரில் தங்கள் அமைதியான போராட்டம் தொடரும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியது. </p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் டிப்கே, "சோனம் ஐயா 26 நாட்களுக்குப் பிறகு தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதில் நாங்கள் நிம்மதியும் நன்றியும் கொள்கிறோம். உங்கள் அசாத்தியமான துணிச்சலுக்கும் தியாகத்திற்கும் நன்றி ஐயா. </p><p>உங்கள் உயிரைப் பணயம் வைத்து, ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியையும் நீங்கள் தட்டி எழுப்பினீர்கள். இந்த நாட்டிற்கு உங்கள் உயிர் மிகவும் விலைமதிப்பற்றது. தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி'யின் அமைதியான போராட்டம் தொடரும்," என்று டிப்கே கூறினார். </p><h2>உண்ணாவிரதம் நிறைவு:</h2><p>அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், தேர்வு சீர்திருத்தங்கள் மற்றும் நீட் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட அவரது முக்கிய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, வாங்சுக் வியாழக்கிழமை இரவு தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.</p><p>வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், "சோனம் ஜி மருத்துவர்களின் அறிவுரைப்படி தனது அன்றாட நடைமுறைகளை பின்பற்றி, விரைவில் தனது உடல் எடையை மீட்டெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சோனம் ஜி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன்," என்றும் பிரதமர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்&quot; அரசு உறுதியை தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் வாங்சுக்</title><link>https://www.maalaimalar.com/news/national/wangchuk-ends-hunger-strike-after-govt-assures-him-of-meeting-his-demands</link><comments>https://www.maalaimalar.com/news/national/wangchuk-ends-hunger-strike-after-govt-assures-him-of-meeting-his-demands#comments</comments><guid isPermaLink="false">c9d1a9ce-32fd-47ce-a89b-1aef1c0c0d8e</guid><pubDate>Thu, 23 Jul 2026 22:38:19 +0000</pubDate><atom:updated>2026-07-23T22:38:19.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CJP Protest,Wangchuk,சிஜேபி போராட்டம்,வாங்சுக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/wkbt969u/wangchuck.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Wangchuk ends hunger strike
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/wkbt969u/wangchuck.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு உறுதியளித்ததை தொடர்ந்து, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார்.</p><h2>உண்ணாவிரதம் நிறைவு:</h2><p>நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு வாக்கில் மேடான்டா மருத்துவமனையில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் அவரை சந்தித்து அரசின் உறுதிமொழிகளை தெரிவித்த பிறகு, அவர் தனது உண்ணாவிரதத்தை முடிப்பதாக அறிவித்தார்.</p><p>"மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் லே-லடாக் 'அபெக்ஸ் பாடி' (Apex Body) அமைப்பின் மூத்த தலைவர்கள் முன்னிலையில், 26 நாட்களுக்குப் பிறகு நான் எனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டேன்," என்று வாங்சுக் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><h2>பிரதமர் கோரிக்கை:</h2><p>வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடிப்பதாக அறிவித்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி 'எக்ஸ்' தளத்தில், "சோனம் ஜி மருத்துவர்களின் அறிவுரைப்படி தனது அன்றாட நடைமுறைகளை பின்பற்றி, விரைவில் தனது உடல் எடையை மீட்டெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சோனம் ஜி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன்," என்றும் பிரதமர் கூறினார்.</p><p>மருத்துவமனையில் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ மற்றும் பிறர் முன்னிலையில் அரசு அளித்த உறுதிமொழிகளை வாசித்துக்காட்டிய நட்டா, "டெல்லியின் ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராடுபவர்கள் மற்றும் ஜூலை 20, 2026 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யாதது குறித்து அரசு சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது," என்று கூறினார்.</p><p>தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று அரசு ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p><p>"அதுமட்டுமின்றி, சமீபத்திய நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பத்தினருக்குப் பொருத்தமான இழப்பீடு வழங்குவது குறித்தும் அரசு சாதகமாக பரிசீலித்து வருகிறது," என்று நட்டா மேலும் கூறினார்.</p><h2>வாங்சுக் பதிவு:</h2><p>பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரில் சந்தித்தோ அல்லது கடிதங்கள் மூலமாகவோ உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தியதாக வாங்சுக் தெரிவித்தார்.</p><p>"பல்வேறு நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், நாட்டில் ஏற்படக்கூடிய வன்முறையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த நிபந்தனைகள் குறித்த விவரங்களை விரைவில் ஒரு தனி காணொளியில் விளக்குவேன். அதேவேளையில், எங்கும் எந்தவிதமான வன்முறையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>தேர்வு முறைகேடுகள் தொடர்பான பொறுப்புக்கூறல், கல்வி முறையில் சீர்திருத்தங்கள் மற்றும் அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) தலைமையிலான போராட்டம் ஜூன் 20 அன்று தொடங்கியது. </p><p>ஜூன் 28 அன்று போராட்டத்தில் இணைந்த வாங்சுக், அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது எந்தவிதத் தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அரசு உறுதியளித்து, போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றினால் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாகக் கூறியிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அமைச்சர்களை சந்திக்கும் சிஜேபி குழு</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-delegation-will-meet-with-govt-ministers-on-friday-sources</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-delegation-will-meet-with-govt-ministers-on-friday-sources#comments</comments><guid isPermaLink="false">26aae3fb-1df9-40e8-b1c1-a3405a2a6da8</guid><pubDate>Thu, 23 Jul 2026 20:50:52 +0000</pubDate><atom:updated>2026-07-23T20:50:52.090Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர்கள்,CJP protests,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்,govt ministers</media:keywords><media:content height="3288" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/dectr06l/PTI07232026000377B.jpg" width="4800"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/dectr06l/PTI07232026000377B.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சி.ஜே.பி.) பிரதிநிதிகள் குழு அரசு அமைச்சர்களை இன்று (வெள்ளிக்கிழமை) சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>இந்த சந்திப்பு மதியம் 12.30 மணிக்கு நடைபெறும், ஆனால் அது நடைபெறும் இடம் வெளியிடப்படவில்லை.</p><h2>பேச்சுவார்த்தை:</h2><p>நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டுவர நடந்த தீவிர திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இது நடைபெறுவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் மற்றும் கல்வி முறையில் முழுமையான சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரி, சி.ஜே.பி. இங்குள்ள ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறது.</p><p>இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து 'நீட்' விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.</p><h2>ராகுல் காந்தி போராட்டம்: </h2><p>நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசும் போது, "நம் நாட்டு மாணவர்கள் வீதிகளில் இறங்கி உள்ளனர். எனவே எதிர்கட்சியினரும் வீதிகளில் இறங்க வேண்டும் என நாங்கள் உணர்ந்தோம்.முதலில் எதிர்கட்சி எம்.பி.க்களான நாங்கள் அனைவரும் இந்தியா கேட் செல்ல விரும்பினோம். ஆனால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.</p><p>பின்னர் நாங்கள் காந்தி நினைவகத்திற்கு சென்று கொண்டிருந்தோம், ஆனால் எங்கள் பேருந்து நிறுத்தப்பட்டது.</p><p>மாணவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம். நாம் இழந்த மாணவர்களை நினைவுகூரச் செல்கிறோம். நீட் தேர்வுத்தாள் கசிவுக்கு பிறகு, தற்கொலைக்கு தள்ளப்பட்ட அந்த பிள்ளைகளை நினைவுகூர செல்கிறோம்.</p><p>நீதியை நிலை நாட்டும்படி அமைதியாக போராடிய மாணவர்கள் தாக்கப்பட்டு, இன்று காயங்களுடன் அவதிபட்டு வருகின்றனர். அவர்களுக்கு துணையாக நிற்க செல்கிறோம்.</p><p>இந்திய மாணவர்கள் தனியாக இல்லை, ஒட்டுமொத்த எதிர்கட்சியும் அவர்களுடனும் அவர்களின் கோரிக்கைகளுடனும் துணை நிற்கிறது. நீங்கள் மறக்கப்பட மாட்டீர்கள், நாங்கள் மெளனமாக இருக்கமாட்டோம்," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: ஆக. 3-இல் தமிழ்நாடு - கர்நாடக முதலமைச்சர்கள் சந்திப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-cm-dk-shivakumar-likely-to-meet-tn-cm-vijay-on-aug-3</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-cm-dk-shivakumar-likely-to-meet-tn-cm-vijay-on-aug-3#comments</comments><guid isPermaLink="false">4bcfe524-05f2-4611-8205-16c5689dedae</guid><pubDate>Thu, 23 Jul 2026 20:04:19 +0000</pubDate><atom:updated>2026-07-23T20:04:19.252Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DK Shivakumar,டிகே சிவகுமார்,cm vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/8s9pywkz/vj-dk-s.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay & DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/8s9pywkz/vj-dk-s.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டுடன் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், சந்திப்புக்கான நேரம் கோரி தமிழ்நாடு முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/cm-vijay">ஜோசப் விஜய்</a> விடுத்த வேண்டுகோளை ஏற்று, அவரை ஆகஸ்ட் 3-ஆம் தேதி சந்திக்க கர்நாடக முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/dk-shivakumar">டி.கே. சிவகுமார்</a> முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>கடிதம்:</h2><p>முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், விஜய் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு சந்திப்பு கோரி சிவகுமாருக்குக் கடிதம் எழுதி இருந்ததாகவும், ஆகஸ்ட் 03-ஆம் தேதி வருமாறு சிவகுமார் அனுப்பிய கடிதம் அந்த வேண்டுகோளுக்கான பதில் மட்டுமே என்றும் தெரிவித்தன.</p><p>இந்த சந்திப்புக்கான ஏற்பாடு குறித்து தமிழ்நாடு தரப்பில் இருந்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் மேலும் கூறினர். சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, தமிழ்நாடு முதல்வர் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதி, அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்து அதற்கான நேரம் ஒதுக்குமாறு கோரியிருந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.</p><h2>உறுதிப்படுத்தவில்லை:</h2><p>"ஜோசப் விஜய் தனது வருகையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. சிவகுமார் அவரது கடிதத்திற்கு பதில் மட்டுமே அளித்துள்ளார்," என்று சிவகுமாருக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.</p><p>காவிரி நதிநீர் பகிர்வு மற்றும் சிவகுமாரின் சட்டமன்ற தொகுதியான கனகபுராவில் அமையவுள்ள மேகதாது சமநிலை நீர்த்தேக்க திட்டம் (தமிழ்நாடு இத்திட்டத்தை வலுவாக எதிர்த்து வருகிறது) உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இந்த சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>தீர்மானம்:</h2><p>முன்னதாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழக சட்டசபையிலும், அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><p>இதுதவிர மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுப்பது குறித்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோருடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>போராடும் மாணவர்களுக்கு அவசர கோரிக்கை விடுத்த வாங்சுக்</title><link>https://www.maalaimalar.com/news/national/wangchuk-urges-protesters-to-remain-peaceful</link><comments>https://www.maalaimalar.com/news/national/wangchuk-urges-protesters-to-remain-peaceful#comments</comments><guid isPermaLink="false">c9a4557f-505d-4c79-a1bf-0ecb3594d3a3</guid><pubDate>Thu, 23 Jul 2026 18:48:38 +0000</pubDate><atom:updated>2026-07-23T18:48:38.609Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,மாணவர்கள் போராட்டம்,Wangchuk,வாங்சுக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/m7q5ja7e/wnagchuk.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/m7q5ja7e/wnagchuk.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டம் அமைதியாக நடைபெற்று வரும் நிலையில், வேறு இடங்களில் "சமூக விரோத சக்திகள்" வன்முறையை தூண்ட முயற்சிப்பதாக வரும் செய்திகள் தனக்கு வேதனையளிப்பதாக கூறிய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நடைபெற்று வரும் மாணவர் இயக்கத்தின் ஆதரவாளர்கள் அமைதியை கடைப்பிடிக்க வலியுறுத்தினார்.</p><h2><strong>மரபை கைவிடாதீர்கள்:</strong></h2><p>தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் 26-வது நாளைக் குறிக்கும் வகையில், 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட வாங்சுக், "அமைதி, அமைதி மட்டுமே எனது வழி. </p><p>ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் அமைதியாக நடைபெற்று வரும் வேளையில், வேறு சில இடங்களில் சமூக விரோத சக்திகள் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்ட முயற்சிப்பதாக அறிவது எனக்கு வேதனையளிக்கிறது. </p><p>எதிர் தரப்பினர் என்ன செய்தாலும், நமது பதில் மலர்களை போல மென்மையாகவே இருக்க வேண்டும். தயவுசெய்து எக்காரணம் கொண்டும் இந்த மரபை கைவிடாதீர்கள்," என்று வாங்சுக் கூறினார்.</p><h2><strong>குற்றச்சாட்டு:</strong></h2><p>ஜூலை 20 அன்று நடைபெற்ற 'சன்சத் சலோ' போராட்டத்திற்குப் பிறகு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த பேரணியின்போது, ​​நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை டெல்லி காவல்துறை கண்ணீர்ப்புகை மற்றும் தடியடி மூலம் தடுத்தது. பெல்லட் துப்பாக்கிகள் மற்றும் டேஸர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>இந்த கடுமையான நடவடிக்கையை தொடர்ந்து, மாணவர் இயக்கத்தை வன்முறை சார்ந்ததாக சித்தரிக்கவும், தலைநகரின் பிற பகுதிகளில் நடந்த சம்பவங்களுடன் அதை தொடர்புபடுத்தவும் முயற்சிகள் நடப்பதாக 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை காவல்துறை மறுத்தது.</p><h2><strong>மாணவர்களுக்கு ஆதரவு:</strong></h2><p>முன்னதாக, வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி அங்மோ வெளியிட்ட 'எக்ஸ்' தள பதிவில், "கடந்த சில நாட்களாக இந்தியாவின் 'ஜென்-இசட்' (Gen Z - தற்போதைய இளம் தலைமுறை) இளைஞர்களை பார்ப்பது எனக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. அந்நியர்களை குடும்பத்தினர் போல கவனித்துக்கொண்டனர், உணவு மற்றும் தண்ணீரை பகிர்ந்துகொண்டனர், தங்கள் போராட்ட இடங்களை சுத்தப்படுத்தினர், முதியவர்களை கவனித்துக்கொண்டனர்.</p><p>'ஜன கண மன' மற்றும் நம்பிக்கையூட்டும் பாடல்களை ஒன்றிணைந்து பாடினர், கடும் தூண்டுதல்களுக்கு மத்தியிலும் கட்டுப்பாட்டுடன் இருந்தனர். எண்ணற்ற தன்னலமற்ற சேவைகள்" மூலம் இந்த இயக்கத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருந்தனர்," என்று கூறினார்.</p><p>இந்த போராட்டத்தில் ஜூன் 28-ஆம் தேதியன்று இணைந்த வாங்சுக், அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் குருகிராமில் உள்ள மேடான்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>இப்போராட்டத்தில் பங்கேற்ற அமைதியான போராட்டக்காரர்கள் மீது எந்தவிதத் தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு உறுதியளித்தால், தனது உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களை புரிந்து கொள்ள முடிகிறது - நீட் போராட்டம் குறித்து சச்சின் டெண்டுல்கர் அறிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/students-disappointment-understandable-tendulkar-statement-on-neet-agitation</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-disappointment-understandable-tendulkar-statement-on-neet-agitation#comments</comments><guid isPermaLink="false">9ca30d29-f80c-40c5-870f-6f4a0ea379f0</guid><pubDate>Thu, 23 Jul 2026 17:50:34 +0000</pubDate><atom:updated>2026-07-23T17:50:34.342Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sachin Tendulkar,சச்சின் டெண்டுல்கர்,நீட் எதிர்ப்பு போராட்டம்,NEET agitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/v20efpw7/S-T.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சச்சின் டெண்டுல்கர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/v20efpw7/S-T.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள்கள் தொடர்ச்சியாக கசிவதற்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆதரவு தெரிவித்தார். மாணவர்களின் ஏமாற்றம் புரிந்துகொள்ளக்கூடியது என்றும், அவர்கள் "மீண்டும் இத்தகைய உணர்வுக்கு ஆளாகாதவாறு" பார்த்துக்கொள்வது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்றும் அவர் கூறினார். </p><p>இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட டெண்டுல்கர், "என் தந்தை ஒரு பேராசிரியராக இருந்தார். அவர் பல இளம் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் திகழ்ந்தார். அவர் எனக்கு ஆரம்பத்திலேயே கற்றுக்கொடுத்த ஒரு பாடம் இதுதான்: "தோல்வி அடைவதில் தவறில்லை, ஆனால் ஏமாற்றுவது தவறு. ஒருபோதும் குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்காதீர்கள்."</p><h2>ஏமாற்றம் இயல்பானது:</h2><p>சமூகத்தில் முதிர்ந்த குடிமக்களாக, கலாச்சாரத்தை வடிவமைக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. உழைப்பை விட முடிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கும் ஒரு சமூகம், தகுதியின் அடிப்படையில் முன்னேறுவதை விடுத்து குறுக்கு வழிகளையே நாடும்.</p><p>தங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்காதபோது மாணவர்கள் ஏமாற்றமடைவது இயல்பானதே; அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் அவர்களுக்கு அத்தகைய உணர்வு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.</p><h2>வெற்றி கிடைக்கும்:</h2><p>இன்றைய இளம் இந்தியா கனவுகளாலும் ஆற்றலாலும் நிறைந்துள்ளது. அவர்களே நமது வெற்றியின் உந்துசக்தியாக திகழ்கிறார்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பள்ளிகள் மற்றும் நிர்வாகத்தினர் என சமூகம் சார்ந்த அனைவரும், நமது இளைஞர்கள் தொடர்ந்து ஊக்கத்துடனும் ஆற்றலுடனும் இருப்பதை உறுதி செய்வதில் பெரும் பொறுப்பையும் வெவ்வேறு பங்குகளையும் கொண்டுள்ளோம்.</p><p>கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும், நேர்மை ஊக்குவிக்கப்படும் மற்றும் தகுதிக்கு வெற்றி கிடைக்கும் ஒரு கலாச்சாரத்தை நாம் உருவாக்க வேண்டும். நமது குழந்தைகளின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பாதுகாக்கும் தீர்வுகளை நாம் அனைவரும் கண்டறிவோம் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது," என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் தங்களுக்கு முன்னேற வழியே இல்லை என்று உணர்வதை அறிந்து இதயம் நொறுங்கியது: மம்மூட்டி மற்றும் துல்கர்</title><link>https://www.maalaimalar.com/news/national/students-feel-no-way-forward-heartbreaking-mammootty-dulquer</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-feel-no-way-forward-heartbreaking-mammootty-dulquer#comments</comments><guid isPermaLink="false">c6fbf4c1-3b2b-4237-8e8e-72c49934ee24</guid><pubDate>Thu, 23 Jul 2026 16:31:23 +0000</pubDate><atom:updated>2026-07-23T16:31:23.533Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dulquer Salmaan,Mamootty</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/euy6ynag/Untitled-design-58.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mammootty and Dulquer voice support for NEET protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/euy6ynag/Untitled-design-58.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய அளவில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்ட நிலையில், அதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>72 வது தேசிய விருதில் பிரம்மயுகம் திரைப்படத்திற்காக தனது நான்காவது தேசிய விருதை வென்ற மம்மூட்டி, தற்போது நாடு முழுவதும் நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும்  மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.</p><h3><strong>மாணவர்களுக்கு ஆதரவாக மம்மூட்டி பதிவு:</strong></h3><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இளைஞர்கள் நமது தேசத்தின் பொக்கிஷம்; அவர்களின் குரலுக்கு செவி சாயுங்கள்.</p><p>அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்; அவர்களுக்கு வலுவூட்டுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.</p><p>முன்னதாக நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான், ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.</p><h3><strong>மாணவர்களுக்கு ஆதரவாக துல்கர் பதிவு:</strong></h3><p>நடிகர் துல்கர் சல்மான் அந்த பதிவில்:-</p><p>ஜந்தர் மந்தரில் நடப்பது, சற்று நின்று செவிமடுத்து புரிதலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கான ஒரு நினைவூட்டலாகும்.</p><p>கல்வி என்பது எப்போதுமே நம்பிக்கை, வாய்ப்பு மற்றும் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான வாக்குறுதியை பற்றியதாகவே இருந்து வந்துள்ளது.</p><p>இளம் வயதினர் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வதை காண்பது மனதை பிழிவதாக உள்ளது.</p><p>சில மாணவர்கள் தங்களுக்கு முன்னேற வழியே இல்லை என்று உணர்வதை அறிந்து என் இதயம் நொறுங்கியது.</p><p>மாணவர்களின் தற்கொலை செய்திகளை கேட்பது வேதனை அளிக்கிறது. பெற்றோர்கள் தங்களின் கனவுகள் நனவாவதை உறுதிசெய்ய, வலி மற்றும் கடன் என்ற இரட்டை சுமையை சுமக்க வேண்டியுள்ளது.</p><p>ஒவ்வொரு கருத்திற்கும் அப்பால், இரக்கத்திற்கும் மரியாதைக்கும் தகுதியான கனவுகள், லட்சியங்கள், குடும்பங்கள் மற்றும் நம்பிக்கைகளை கொண்ட தனி நபர்கள் உள்ளனர்.</p><p>அர்த்தமுள்ள உரையாடல்கள், அமைதியான தீர்வுகள் மற்றும் ஞானம் ஆகியவற்றால் வழி நடத்தப்படும் முடிவுகள் ஏற்பட வேண்டும்.</p><p>பிரிவினை மற்றும் வன்முறையின் மீது கட்டப்பட்ட எதிர்காலத்தை விட, புரிதலின் மீது கட்டப்பட்ட எதிர்காலம் எப்போதும் வலிமையானதாக இருக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>“தர்மேந்திர பிரதான் பதவி விலகாவிட்டால் பிரதமர் மோடியும் விலக நேரிடும்” - அபிஜித் தீப்கே எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/if-dharmendra-pradhan-does-not-resign-modi-will-also-have-to-step-down-abhijit-deepke-warns</link><comments>https://www.maalaimalar.com/news/national/if-dharmendra-pradhan-does-not-resign-modi-will-also-have-to-step-down-abhijit-deepke-warns#comments</comments><guid isPermaLink="false">fba49b52-e0ae-4ca4-aa3c-5167c9314db0</guid><pubDate>Thu, 23 Jul 2026 16:18:44 +0000</pubDate><atom:updated>2026-07-23T16:18:44.993Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,pm modi,பிரதமர் மோடி,abhijeet dipke,அபிஜித் தீப்கே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/vuvf5yt8/New-Project-2026-07-23T214811.973.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “தர்மேந்திர பிரதான் பதவி விலகாவிட்டால் மோடியும் விலக நேரிடும்” - அபிஜித் தீப்கே எச்சரிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/vuvf5yt8/New-Project-2026-07-23T214811.973.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை அரசு ஏற்கத் தவறினால், பிரதமர் மோடியின் ராஜினாவைக் கோரும் நிலைக்கு போராட்டம் செல்லும் என கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் நடுவே பேசிய அவர்,.</p><p>“பிரதமர் மோடி அவர்களே, தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு நான் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், இந்தப் பிரச்சனை தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுடன் மட்டும் நின்றுவிடாது; அது உங்கள் ராஜினாமாவைக் கோரும் நிலைக்குச் செல்லும். </p><p>திறமையற்ற மற்றும் தோல்வியடைந்த ஒரு அமைச்சரை விட, இந்நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்கள் முக்கியமானவர்கள் அல்லவா? கோடிக்கணக்கான மாணவர்களை விடத் தோல்வியடைந்த, திறமையற்ற ஒரு அமைச்சருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்: இந்தியாவில் யாரும் உங்களுக்குத் தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள்.</p><p>அரசு தர்மேந்திர பிரதானை பாதுகாப்பது  வெட்கக்கேடானது.” என தெரிவித்தார். </p><p>டெல்லியில் சிஜேபி தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் இருந்து, பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்தார். </p><p>ஆனால் சிஜேபி இந்த பேச்சுவார்த்தை கோரிக்கையை நிராகரித்துள்ளது. அரசு அலுவலங்களிலோ, அதிகாரிகள் இல்லங்களிலோ பேச்சுவார்த்தைக் கூடாது எனவும், பொதுவான ஒரு இடத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என சிஜேபியினர் தெரிவிக்கின்றனர்.</p><h2>எதற்காக இந்தப் போராட்டம்?</h2><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி கட்சியினர் ஜூன்.20ம் தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் தனியாக இல்லை, நாங்கள் அவர்களுக்கு துணையாக இருக்கிறோம்: ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/students-are-not-alone-we-stand-with-them-rahul-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-are-not-alone-we-stand-with-them-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">6a358d6d-0acb-453d-a414-e766fd2b0aa7</guid><pubDate>Thu, 23 Jul 2026 15:45:20 +0000</pubDate><atom:updated>2026-07-23T15:45:20.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,neet,நீட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/vlzx4qnh/Untitled-design-57.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi joins NEET Exam Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/vlzx4qnh/Untitled-design-57.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் பல முக்கிய இடங்களில் நீட் தேர்விற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், புது டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது இல்லத்தில் இருந்து காந்தி நினைவிடத்திற்கு காங்கிரஸ் கட்சியினருடன் பேரணியாக சென்றார்.</p><p>அப்போது பேரணியாக சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரின் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.</p><h3><strong>நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி:</strong></h3><p>அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-</p><p>நம் நாட்டு மாணவர்கள் வீதிகளில் இறங்கி உள்ளனர். எனவே எதிர்கட்சியினரும்  வீதிகளில் இறங்க வேண்டும் என நாங்கள் உணர்ந்தோம்.</p><p>முதலில் எதிர்கட்சி எம்.பி.க்களான நாங்கள் அனைவரும் இந்தியா கேட் செல்ல விரும்பினோம். ஆனால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.</p><p>பின்னர் நாங்கள் காந்தி நினைவகத்திற்கு சென்று கொண்டிருந்தோம், ஆனால் எங்கள் பேருந்து நிறுத்தப்பட்டது.</p><p>மாணவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம்.</p><p>நாம் இழந்த மாணவர்களை நினைவுகூரச் செல்கிறோம். நீட் தேர்வுத்தாள் கசிவுக்கு பிறகு, தற்கொலைக்கு தள்ளப்பட்ட அந்த பிள்ளைகளை நினைவுகூர செல்கிறோம்.</p><p>மேலும் நீதியை நிலை நாட்டும்படி அமைதியாக போராடிய மாணவர்கள் தாக்கப்பட்டு, இன்று காயங்களுடன் அவதிபட்டு வருகின்றனர். அவர்களுக்கு துணையாக நிற்க செல்கிறோம்.</p><p>இந்திய மாணவர்கள் தனியாக இல்லை, ஒட்டுமொத்த எதிர்கட்சியும் அவர்களுடனும் அவர்களின் கோரிக்கைகளுடனும் துணை நிற்கிறது.</p><p>நீங்கள் மறக்கப்பட மாட்டீர்கள், நாங்கள் மெளனமாக இருக்கமாட்டோம்.</p><p>இவ்வாறு மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>‘இந்தியாவை நேபாளமாக மாற்றுவது ஜனநாயகமல்ல’ - போராட்டம் குறித்து சூர்யகுமார் யாதவின் மனைவி கருத்து!</title><link>https://www.maalaimalar.com/news/national/turning-india-into-nepal-is-not-democracy-suryakumar-yadavs-wife-comments-on-the-protests</link><comments>https://www.maalaimalar.com/news/national/turning-india-into-nepal-is-not-democracy-suryakumar-yadavs-wife-comments-on-the-protests#comments</comments><guid isPermaLink="false">3fc186b5-e3a2-4683-85ef-d848d820926a</guid><pubDate>Thu, 23 Jul 2026 14:49:10 +0000</pubDate><atom:updated>2026-07-23T14:49:10.931Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Suryakumar Yadav,சூர்யகுமார் யாதவ்,CJP Protest,Devisha Shetty,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்,தேவிஷா ஷெட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/wz8ccsse/New-Project-2026-07-23T201843.552.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘இந்தியாவை நேபாளமாக மாற்றுவது ஜனநாயகமல்ல’ - போராட்டம் குறித்து சூர்யகுமார் யாதவின் மனைவி கருத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/wz8ccsse/New-Project-2026-07-23T201843.552.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போராட்டம் என்ற பெயரில் இந்தியாவை நேபாளமாக மாற்றுவது ஜன நாயகம் அல்ல என தற்போது நாடு முழுவதும் வெடித்துள்ள நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ்வின் மனைவி தேவிஷா ஷெட்டி கருத்து தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ள அவர்.,</p><p>“நீட் தேர்வுக்கான போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்; கல்வித் துறையில் பெரும் சீர்திருத்தங்கள் தேவை; ஒரு மாணவர் கூட உயிரிழந்திருக்கக் கூடாது. ஆனால், கல்வீச்சுச் சம்பவங்கள் போராட்டத்தை வலுப்படுத்தாது என்றும் நான் கூறுகிறேன்.</p><p>பிரிவு 370-ஐக் கோருவது நீட் தேர்வு விவகாரம் சார்ந்ததல்ல; இந்தியாவை நேபாளமாக மாற்றுவது ஜனநாயகமும் அல்ல; ஒரு மதத்தை மட்டும் இழிவுபடுத்துவது நீட் தேர்வுக்கான போராட்டம் ஆகாது;</p><p>‘அல்லாஹ்வின் பெயர் நிலைத்திருக்கட்டும்’ போன்ற முழக்கங்கள் இதற்குத் தீர்வு காணாது. ஆனால் உங்களால் கண்டிக்க முடியுமா?இதில் எதையாவது... அல்லது மோடி மீதான வெறுப்பு என்ற பெயரில் நாம் நம்முடைய முதுகெலும்பை இழந்துவிட்டோமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் சி.ஜே.பி போராட்டம்: கலவரத்தில் ஈடுபட்டால் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய  காவல்துறை நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-in-delhi-passports-of-rioters-to-be-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-in-delhi-passports-of-rioters-to-be-cancelled#comments</comments><guid isPermaLink="false">bedbe312-cb0c-49ea-83ed-aba8d8438ea0</guid><pubDate>Thu, 23 Jul 2026 14:13:16 +0000</pubDate><atom:updated>2026-07-23T14:13:16.700Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட் தேர்வு,CJP Protest,சி.ஜே.பி போராட்டம்,Passport cancellation,பாஸ்போர்ட் ரத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/y2xb529j/del.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protest ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/y2xb529j/del.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நடைபெற்ற 'சலோ சன்சாத்' (பாராளுமன்றத்தை நோக்கி பேரணி) போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. இதன்படி, கலவரத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்ட நபர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறை விரைவில் தொடங்கவுள்ளது.</p><p>சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) சார்பாக பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து செல்ல முயன்றனர்.</p><p>பேரணி கட்டுப்பாட்டை மீறி வன்முறையாக மாறியதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். இக்கலவரத்தில் பல காவல்துறையினரும், போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். மேலும், கட்சியின் நிறுவனர் 'அபிஜீத் தீப்கே' உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.</p><h2><strong>டெல்லி காவல்துறை கடும் எச்சரிக்கை:</strong></h2><p>வழக்கமாக பதிவு செய்யப்படும் குற்றவியல் வழக்குகளைத் தவிர்த்து, இந்த முறை கூடுதல் நடவடிக்கையாக கலவரக்காரர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அல்லது புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்களை நிராகரிக்க மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு (RPO) சிபாரிசு செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது. </p><p>போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களின் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது மற்றும் அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இத்தகைய கடும் நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><h2><strong>நாடு தழுவிய போராட்டத்திற்கு சி.ஜே.பி அழைப்பு:</strong></h2><p>மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, 'சி.ஜே.பி' கட்சி சார்பாக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் இச்சம்பவம் குறித்து கலவையான விவாதங்கள் உருவாகியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பாலிவுட் பிரபலங்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/bollywood-celebrities-voice-their-support-for-the-cjp-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/bollywood-celebrities-voice-their-support-for-the-cjp-protest#comments</comments><guid isPermaLink="false">93649ed5-07b1-462e-a558-f77c983c3b6b</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:01:38 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:01:38.136Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Cockroach Party protest,Bollywood celebrities,கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்,பாலிவுட் பிரபலங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/3lwtrzdi/New-Project-2026-07-23T183112.978.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பாலிவுட் பிரபலங்கள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/3lwtrzdi/New-Project-2026-07-23T183112.978.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். </p><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20 முதல் போராட்டம் நடத்திவருகிறது. </p><p>தற்போது இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் இந்தப் போராட்டத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். </p><h2>நடிகர் சல்மான்கான்</h2><p>போராட்டம் தொடர்பாக பதிவிட்டுள்ள சல்மான் கான்,  </p><p>“இந்தப் போராட்டம் சரியான அணுகுமுறை; மாணவர்கள் இதை அமைதியான முறையில் முன்னெடுத்துள்ளனர். இது அவர்களின் துணிச்சலையும், வீரத்தையும் வெளிப்படுத்துகிறது. கல்வியின் மீது மிகுந்த ஆர்வமும் உத்வேகமும் கொண்ட இந்தத் தலைமுறை இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும்.</p><p>அரசு அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அளித்து, கல்வி முறையை மேலும் வலுப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.</p><p>கல்வி அடுத்தக்கட்டத்திற்கு செல்லவேண்டும். எந்த அளவுக்கு என்றால் வெளிநாட்டினர் கல்வி பயில இந்தியாவுக்கு வரும் நிலையும், இந்தியா ஒரு முக்கியக் கல்வி மையமாகத் திகழும் நிலையும் உருவாக வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><h2>நடிகை ஆலியா பட்,</h2><p>“உறுதியுடன் நிலைத்து நிற்கும் ஒவ்வொரு மாணவருக்குப் பின்னாலும் ஒரு கனவு, ஒரு குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் எண்ணற்ற தியாகங்கள் நிறைந்த ஒரு பயணம் உள்ளது. அவர்கள் தங்களை மட்டுமல்ல, தங்களுக்குத் துணையாக நின்ற அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்; அதேவேளையில், தங்களுக்குப் பின் வருபவர்களுக்காக ஒரு சிறந்த பாதையையும் உருவாக்குகிறார்கள்.</p><p>அவர்களின் துணிச்சல் என்னுள் பணிவை ஏற்படுத்துகிறது. அவர்களின் மன உறுதி நம் அனைவருக்கும் ஒரு கண்ணாடியாகத் திகழ்கிறது; இந்நாட்டின் நாளைய எதிர்காலத்தை வடிவமைக்கவிருக்கும் அந்த மனிதர்களின் குரலை நாம் உண்மையிலேயே செவிமடுக்கிறோமா என்று அது நம்மை வினவுகிறது.</p><p>மாணவர்களுக்காக... மாணவர்களால்... எதிர்காலம் அவர்களுக்கே உரியது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><h2>நடிகை அனன்யா பாண்டே,</h2><p>“Gen Z தலைமுறையினர் இப்படித்தான் என எப்போதுமே ஒரு லேபிள் ஒட்டப்படுகிறது. ஆனால், அவர்கள் உண்மையில் யார் என்பதைப் புரிந்துகொள்ள இதுவே சரியான தருணம். எப்போதுமே இப்படித்தான் என்ற வாதத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவர்கள் குறுக்கு வழிகளைக் கேட்கவில்லை; நியாயமே அடிப்படையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.</p><p>கேள்வி கேட்பது மரியாதைக் குறைவு அல்ல; குரல் கொடுப்பது கலகமும் அல்ல. மாற்றம் இப்படித்தான் தொடங்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item></channel></rss>