<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 12 Aug 2026 18:27:22 +0000</lastBuildDate><item><title>மல்லையாவின் வழக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்: அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு </title><link>https://www.maalaimalar.com/news/national/court-orders-ed-to-clarify-mallya-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/court-orders-ed-to-clarify-mallya-case#comments</comments><guid isPermaLink="false">a275de66-4b2b-45a7-8e32-398593875326</guid><pubDate>Wed, 12 Aug 2026 16:49:06 +0000</pubDate><atom:updated>2026-08-12T16:49:06.060Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய் மல்லையா,Vijay mallaya,kingfisher,கிங்ஃபிஷர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/g6wujden/Untitled-design-40.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமலாக்கத்துறைக்கு சமரச நிலை தெளிவுபடுத்த பம்பாய் உயர்நீதிமன்றம் உத்தரவு]]></media:title><media:description type="html"><![CDATA[ Vijay Mallya Case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/g6wujden/Untitled-design-40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து நிலுவைத் தொகையை வசூலிப்பது தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைக்கு, ஒரு முடிவுகட்டப்பட வேண்டும் என்று பம்பாய் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><h3><strong>விஜய் மல்லையாவின் நீதிமன்ற வழக்கு</strong> </h3><p>ஜூலை 2015-ல், ஐடிபிஐ வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பிடமிருந்து கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பெற்ற கடன்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, மத்திய புலனாய்வுப் பிரிவின் வங்கிப் பத்திரங்கள் மற்றும் மோசடி பிரிவு மல்லையா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.</p><p>அவர் மீது குற்றச் சதி, குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் குற்றவியல் முறைகேடு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.</p><p>கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியது, மோசடி, பணமோசடி மற்றும் அந்தக் கடன்கள் தொடர்பான நிதி முறைகேடுகள் குறித்து மல்லையா இந்தியாவில் பல சட்ட வழக்குகள் தொடரப்பட்டது. </p><p>இதையடுத்து விஜய் மல்லையா, 2016 மார்ச் மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி, அன்று முதல் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதை அவர் எதிர்த்து வருகிறார்.</p><p>தலைமறைவான மல்லையாவின் கடன்களை மீட்பதற்காக அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை, எஸ்பிஐ தலைமையிலான கூட்டமைப்பு பயன்படுத்தி கொள்ள தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><p>2018-ல் வெளிநாட்டு உரிமை மீறல் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அச்சட்டத்தின் கீழ் மல்லையா மீது நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p>இங்கிலாந்து நீதிமன்றங்கள் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த ஒப்புதல் அளித்திருந்த போதிலும், அவர் அரசியல் தஞ்சம் கோருவதற்கான ஒரு விண்ணப்பத்தை பயன்படுத்தி தொடர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.</p><p>கடந்த 2020-ஆம் ஆண்டு மல்லையாவின் செலுத்தப்படாத நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக, அமலாக்க இயக்குநரகத்தால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை பயன்படுத்திக்கொள்ள, பாரத ஸ்டேட் வங்கி (SBI) தலைமையிலான கடன் வழங்கும் வங்கிகளின் கூட்டமைப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.</p><p>இந்த பணமோசடி தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, மல்லையா வழக்கு தொடர்ந்து இருந்தார்.</p><h3><strong>மல்லையா தரப்பு வழக்கறிஞர்</strong></h3><p>இந்த வழக்கில் இன்று, மல்லையா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய், சமரசப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது 2020-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதில் குறிப்பிட்ட சொத்துக்களுக்கு பாதுகாப்பு கோரப்பட்டிருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>இருப்பினும், குறிப்பிடப்பட்ட பெரும்பாலான சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டு, அவை தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டதால், அந்த மனு இனி செல்லுபடியாகாது என்றும் தேசாய் வாதிட்டார்.</p><p>மேலும் அவர், “பொதுத்துறை வங்கிகள் இந்த விஷயத்தை நிலுவையில் வைத்திருப்பது முறையானது கிடையாது. ஆரம்பத்தில் கோரப்பட்ட ரூ.6,203.35 கோடி நிலுவைத் தொகை மற்றும் வட்டிக்கு எதிராக, வங்கிகள் ஏற்கனவே மல்லையாவிடமிருந்து சுமார் ரூ.15,000 கோடியை வசூலித்துவிட்டது.</p><p>ரிசர்வ் வங்கியின் தணிக்கை அறிக்கை, இது ஒரு விமான நிறுவனத்தின் வணிகத் தோல்வி என்று மட்டுமே கூறுகிறது. வங்கிகள் ரூ. 15,000 கோடியை எடுத்துக்கொண்டன, இப்போது மன்னிப்பு கேட்கின்றன. இது போதாது,” என்றும் மல்லையாவின் வழக்கறிஞர் வாதாடினார்.</p><h3>நீதிமன்ற உத்தரவு</h3><p>இந்த நிலையில் வழக்கு நீதிபதி ஜாதவ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “உண்மையில், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.</p><p>சமரசப் பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டதா என்பதைத் தெளிவுபடுத்தும் பிரமாணப் பத்திரத்தைத் அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வேண்டும்.</p><p>அதேவேளையில், இது மல்லையா மீதான குற்றவியல் வழக்கைப் பாதிக்காமல், தர்க்கரீதியான முடிவுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்” என்றும் நீதிமன்றம் கூறியது.</p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரி காவல்துறையினர் குண்டர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் -  செளரவ் தாஸ் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/puducheri-police-act-like-thugs-saurav-das-accusation</link><comments>https://www.maalaimalar.com/news/national/puducheri-police-act-like-thugs-saurav-das-accusation#comments</comments><guid isPermaLink="false">8c3fd852-e54a-44bb-9c34-a82b08c3a58a</guid><pubDate>Wed, 12 Aug 2026 16:47:38 +0000</pubDate><atom:updated>2026-08-12T16:47:38.797Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cockroach Janata Party,abhijeet dipke,அபிஜீத் தீப்கே,காக்ரோச் ஜனதா கட்சி,Saurav Das,செளரவ் தாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/v4d571ko/Untitled-design-41.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ புதுச்சேரி காவல்துறை குண்டர்கள் போல நடந்து கொள்கிறார்கள்.]]></media:title><media:description type="html"><![CDATA[ Saurav das - Abhijeet dhipke]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/v4d571ko/Untitled-design-41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரி காவல்துறை தனது குடும்பத்தின் வீட்டுக்கு வந்து, குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்தார்.</p><p>பாஜக அரசின் உத்தரவின் பேரில் இந்த தொந்தரவு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.</p><h3><strong>செளரவ் தாஸ் பேட்டி</strong></h3><p>இதுகுறித்து தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, புதுச்சேரி காவல்துறையினர் என் குடும்ப வீட்டிற்கு வந்து, அவர்களிடம் பலவிதமான விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p>இவ்வாறு தொந்தரவு செய்வதற்கு யார் உத்தரவிட்டது, என்ன நோக்கத்திற்காக இது நடத்தப்பட்டது. இது தான் சட்ட நடைமுறையா? </p><p>புதுச்சேரியில் உள்ள பாஜக அரசு ஏன் என் குடும்பத்தை அச்சுறுத்துகிறது? இது புதுச்சேரி அரசின் குணம் அல்ல. இது மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் செய்யப்படுகிறது.</p><p>என்னை மிரட்டி அமைதியாக்குவதே நோக்கம் என்றால், அது பலிக்காது. இது என்னை அச்சுறுத்தி பணிய வைக்காது. காவல்துறையினர் குண்டர்களைப் போல செயல்படாமல், சட்டத்தை நிலைநாட்டும் ஒரு சிறந்த அமைப்பை உருவாக்குவதற்கான எங்கள் உறுதியை இது மேலும் வலுப்படுத்துகிறது.</p><p>தலைமை நீதிபதியின் இரண்டு நாள் கூட்டத்திற்காக மகாராஷ்டிராவில் இருந்தபோது, ​​சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, 15 முதல் 20 யூடியூபர்கள் மற்றும் ஊடக சேனல்கள் தனது தனியுரிமையை மீறி டெல்லியில் உள்ள தனது வீட்டிற்குள் நுழைந்தது.</p><p>அவர்கள் உள்ளிருந்து காட்சிகளைப் பதிவுசெய்து காண்பித்துக் கொண்டிருந்தனர். இது தனது குடும்பத்திற்கு ஒரு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது.</p><h3><strong>அபிஜீத் தீப்கே பேட்டி</strong></h3><p>முன்னதாக சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே, ஜந்தர் மந்தரரின் அடுத்த கட்ட போராட்டம் விரைவில் தொடங்கும் என்று அறிவித்தார். அவர் கடந்த மாதம் டெல்லியின் ஜந்தர் மந்தரில் மாணவர்கள் தலைமையில் நடந்த போராட்டங்களைக் குறிப்பிட்டார்.</p><p>இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “ஜந்தர்-மந்தர் அடுத்த அளவிலான போராட்டம் மிக விரைவில் தொடங்கவிருக்கிறது என்பதை நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.</p><p>இன்று டெல்லியில் எங்கள் தன்னார்வலர்கள் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தோம். நாங்கள் ஒரு மண்டபத்தைத் தேடிக்கொண்டிருந்தோம், ஆனால் யாரும் எங்களுக்கு வாடகைக்கு இடம் தரவில்லை. மேல் இடத்திலிருந்து அழுத்தம் இருப்பதாக எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.</p><p>இவை அனைத்தையும் பாஜக செய்து வருகிறது. அவர்களுடைய செயல்களும் வார்த்தைகளும், அவர்கள் நாட்டின் இளைஞர்களுக்கு பயப்படுகிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.</p><p>இதுபோன்ற அற்பமான செயல்கள் எங்களைப் பயமுறுத்திவிடும் என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் மிகவும் தவறாக நினைக்கிறார்கள்.</p><p>ஆரம்பத்தில் எங்களுக்கு தேசிய கவனத்தை ஈர்த்த போராட்டங்களைத் தாண்டியும், தற்போது சிஜேபி தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.</p><p>கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு, ஆகஸ்ட் 15 அன்று தங்களின் 'பள்ளியைச் சீராக்குங்கள்' பிரச்சாரத்தை சிஜேபி அமைப்பு தொடங்கும்.</p><p>சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகும், கிராமப்புறக் குழந்தைகள் பள்ளிகளில் அடிப்படை வசதிகளுக்காகக் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை,” என்று தீப்கே கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விமான பயணியின் பையில் இருந்த குரங்கு மண்டை ஓடு: பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை</title><link>https://www.maalaimalar.com/news/national/monkey-skull-found-in-air-passengers-bag-security-officials-launch-probe</link><comments>https://www.maalaimalar.com/news/national/monkey-skull-found-in-air-passengers-bag-security-officials-launch-probe#comments</comments><guid isPermaLink="false">cb543b6c-1e55-4c8d-a45b-cb27740ca9d3</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:00:26 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:00:26.387Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CISF,சிஐஎஸ்எப்,Delhi International Airport,monkey skull,டெல்லி சர்வதேச விமான நிலையம்,குரங்கு மண்டை ஓடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wxei16pj/Untitled-design-39.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பயணியின் பையில் இருந்த குரங்கு மண்டை ஓடு பறிமுதல்]]></media:title><media:description type="html"><![CDATA[ Delhi Airport monkey skull]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wxei16pj/Untitled-design-39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்த அதிகாரிகள், ஒரு பயணியின் பையில் குரங்கின் மண்டை ஓடு இருப்பதை கண்டறிந்தனர்.</p><h3><strong>டெல்லி சர்வதேச விமான நிலையம்</strong></h3><p>டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் சந்தேகத்திற்கிடமான ஒரு பயணியை சோதனை செய்தனர்.</p><p>அந்த பயணி டெல்லியிலிருந்து ஐதராபாத் செல்லும் விமானத்தில் ஏறவிருந்தார். அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு,  பாதுகாப்பு அதிகாரிகள் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர்.</p><p>அப்போது, ​​பயணியின் கைப்பையில் சந்தேகத்திற்கிடமான ஒரு மண்டை ஓடு ஒன்று இருந்ததை சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர் அதனைத் தொடர்ந்து அவர் கொண்டு வந்த கைப்பையை முழுமையாக சோதனை செய்தனர்.</p><p>இந்த பாதுகாப்பு சோதனையின் போது மீட்கப்பட்ட மண்டை ஓடு ஒரு குரங்கினுடையது என்று அந்த பயணி தெரிவித்ததாக தொழில்துறை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h3><strong>குரங்கு மண்டை ஓடு</strong></h3><p>இதையடுத்து அந்த பயணி இறுதியில் உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் மீட்கப்பட்ட மண்டை ஓடு பரிசோதனைக்காகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.</p><p>இது வனவிலங்குகள் சம்பந்தப்பட்டுள்ளதால், 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் விதிகளின் கீழ் நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>அந்த பயணிக்கு மண்டை ஓடு எங்கிருந்து கிடைத்தது என்பதையும், அதை டெல்லியிலிருந்து ஐதராபாதுக்கு கொண்டு சென்றதன் நோக்கம் என்ன என்பதையும் கண்டறியும் பணியில் காவல்துறையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பெண்களின் வாழ்க்கையில் இல்லறம் என்பது மன உளைச்சலாக உள்ளது: கிரண் பேடி</title><link>https://www.maalaimalar.com/news/national/household-life-for-women-means-unpaid-labour-kiran-bedi</link><comments>https://www.maalaimalar.com/news/national/household-life-for-women-means-unpaid-labour-kiran-bedi#comments</comments><guid isPermaLink="false">9fe59850-6e8a-4021-a6c3-a6ddf026158a</guid><pubDate>Wed, 12 Aug 2026 14:56:14 +0000</pubDate><atom:updated>2026-08-12T14:56:14.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kiran Bedi,women life,பெண்கள் வாழ்க்கை,கிரண் பேடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/0txu7r6l/Untitled-design-38.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருமணத்தால் பெண்கள் வாழ்க்கையில் ஏற்படும் மனஅழுத்தம் குறித்து கிரண் பேடி கருத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ Women Empowerment - Kiran bedi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/0txu7r6l/Untitled-design-38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் திருமணம் என்பது குடும்ப பெயரை மாற்றுவது அல்லது புதிய வீட்டிற்கு குடிபெயர்வதை விட, பெண்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி தெரிவித்தார்.</p><p>திருமணத்திற்கு பிறகு இந்தியாவில் உள்ள பெண்கள் தங்கள் பெற்றொர் வீட்டை விட்டு வெளியேறும்போது, அவர்கள் எவற்றையெல்லாம் கடந்து செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.</p><h3><strong>முன்னாள் ஐ.ஏ.எஸ் கிரண் பேடி</strong></h3><p>கிரண் பேடி ஒரு முன்னாள் டென்னிஸ் வீராங்கனையும் மற்றும் 1972-ல் ஐபிஎஸ்-இல் சேர்ந்த முதல் இந்தியப் பெண் அதிகாரி ஆவார். </p><p>அவர் மே 28, 2016 முதல் பிப்ரவரி 16, 2021 வரை புதுச்சேரியின் 24-வது துணைநிலை ஆளுநராகப் பணியாற்றினார்.</p><p>இந்த நிலையில் இந்திய பெண்களின் திருமண வாழ்க்கை குறித்து ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவர் தனியார் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், </p><p>“இந்திய பெண்களுக்கு திருமணம் என்பது ஒரு மன உளைச்சலாக உள்ளது. ஒரு பெண் தனக்கு நன்கு அறிமுகமான மனிதர்கள், அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் உறவுகளை கொண்ட தங்கள் வீட்டை பிரிந்து செல்லும் சூழல் ஏற்படுகின்றது.</p><p>அப்போது அவர்கள் மற்றொரு குடும்பத்தில் விரைவாக இணைந்து, அந்த குடும்பத்திற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பெண்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.</p><h3><strong>பெண்களின் திருமண வாழ்க்கை</strong></h3><p>பெண்கள் தங்களின் திருமணத்திற்கு பிறகு, புதிய உறவுகளை ஆரம்பத்தில் இருந்து கட்டியெழுப்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது.</p><p>தனது மாமியாரை அழைப்பது போன்ற ஒரு சிறிய விஷயம் கூட, பெண்களை உணர்ச்சி ரீதியில் மிகவும் பாதிக்கிறது.</p><p>ஒரு பெண் தன் கணவனின் குடும்பம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவர்களை தன் சொந்த குடும்பமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவள் மீது எதிர்ப்பார்ப்பு அதிகாக இருக்கிறது.</p><p>அதற்காக அந்த பெண் சில கஷ்டங்களையும் அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறாள்.</p><p>பெண்களின் வாழ்க்கையில் இல்லறம் என்பது சம்பளமே இல்லாத வேலையை உள்ளடக்கியதாக உள்ளது.</p><p>ஒரு திருமணத்தின் போது ஊர்வலம் மிகுந்த ஆடம்பரத்துடனும் கோலாகலத்துடனும் மணமகள் அழகாக இருக்கிறாள். ஆனால் திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் தனது பாதுகாப்பான, அன்பான, ஆதரவான வீட்டை விட்டுப் பிரிந்து செல்லும்போது அது ஒரு மன உளைச்சலாக மாறுகிறது.</p><h3><strong>பெண்களின் இல்லற வாழ்க்கை</strong></h3><p>பல வீடுகளில் பெண்கள் உணவு சமைத்தல், பொருட்களை சுத்தம் செய்தல், குடும்பத்திற்கான பொருட்களை வாங்குதல், குழந்தைகளின் தேவைகள், குடும்ப நிகழ்வுகள் மற்றும் வீட்டை சீராக இயங்க வைக்கும் அன்றாட நிகழ்வுகளை கவனித்து கொள்பவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.</p><p>ஒரு பெண், திருமணத்திற்குப் பிறகும் தான் தொடர்ந்து வேலை செய்வேன் என்றும், வீட்டு வேலைக்கு ஒருவரை அமர்த்திக்கொள்வேன் என்றும், இருவரும் சேர்ந்து குடும்பத்தை நடத்த முடியும் என்றும் கூற வேண்டும். அப்போதுதான் அப்பெண் தனது வேலையை விட வேண்டிய அவசியம் ஏற்படாது.</p><p>ஆண்கள் தங்கள் வேலையை விட வேண்டியதில்லை, ஆனால் பெண்கள் அவ்வாறு செய்ய வேண்டும் என்றும், பல நேரங்களில் அது அவர்களுக்கு நிர்பந்தமாக உள்ளது.</p><p>கணவர்கள் ஆதரவாக இல்லை என்று பெண்கள் உணர்ந்தால், திருமணத்திற்குப் பிறகு அவர்கள் தங்கள் பெற்றோருடன் வாழ்வதற்குத் தேவையான தைரியமும் பொருளாதாரச் சுதந்திரமும் அவர்களிடம் இருக்க வேண்டும்.</p><p>திருமணத்திற்குப் பிறகு பெற்றோரைப் பராமரிப்பதற்காக அவர்களுடன் தங்க விரும்பும் ஒரு பெண்ணை தாழ்வாகக் கருதக்கூடாது, மாறாக அது கொண்டாடப்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் போராட்டம் தொடர்பாக விவாதம்: அமித் ஷா வைத்த முன்மொழிவு- நிராகரித்த எதிர்க்கட்சிகள்</title><link>https://www.maalaimalar.com/news/national/govt-offers-to-hold-debate-on-student-protests-opposition-rejects-proposal</link><comments>https://www.maalaimalar.com/news/national/govt-offers-to-hold-debate-on-student-protests-opposition-rejects-proposal#comments</comments><guid isPermaLink="false">3346f6b5-8153-4160-a230-e2658ede5bd2</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:14:38 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:14:38.872Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,நாடாளுமன்றம்,Amit Shah,அமித் ஷா,parliament</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/yfm3mrg1/AmitshahRahulGandhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா- ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/yfm3mrg1/AmitshahRahulGandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவர்கள் போராட்டத்தில் அடக்குமுறை மேற்கொண்டது தொடர்பான விவகாரத்திற்கு தான் தயார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வைத்த முன்மொழிவை எதிர்க்கட்சியினர் நிராகரித்தனர்.</p><p>நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தனர். கடந்த 20-ந்தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது.</p><h2>மாணவர்கள் மீது தடியடி</h2><p>அப்போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது மாணவர்கள் தடுப்புகளை தாண்டி நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்றனர். அப்போது போலீசாடி தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி அவர்களை கலைத்தனர். அப்போது வெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.</p><p>இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட அடக்குமுறை நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.</p><h2>விவாத்திற்கு தயார் என அமித் ஷா அறிவிப்பு</h2><p>நாடாளுமன்ற விவகாரத்துறை, அமைச்சர் கிரண் ரிஜிஜு, "அமித் ஷா விவாகத்தில் கலந்து கொள்ள தயாராக உள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் அவையில் வெளிநடப்பு செய்யக்கூடாது" என்று வேண்டுகோள் விடுத்தார்.</p><p>இன்று காலை அவை தொடங்குவதற்கு முன்னதா அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இன்று கூட, அவர்கள் (எதிர்க்கட்சிகள்) 2 மணிக்குள் சபாநாயரிடம் கடிதம் வழங்க வேண்டும். இன்று மதியம் 3 மணியில் இருந்து நாளை மதியம் 3 மணி வரைக்கும் அனைத்து வகையிலான விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.</p><p>நாளையுடன் மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைய இருக்கிறது.</p><h2>ராகுல் காந்தி சொல்வது என்ன?</h2><p>அமித் ஷா கூறிய நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி அமித் ஷாவின் முன்மொழிவை நிராகரித்துள்ளார். பெல்லட் துப்பாக்கிகள் மூலம் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவு போட்டது யார் என்பதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்றார்.</p><p>நாடாளுமன்றத்தில் அமித் ஷாவின் கற்பனையான கருத்துகளையும் அவர் வழங்கும் விரிவுரையையும் கேட்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை. மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஷா உத்தரவிட்டிருந்தால் அவர் குற்றவாளி. அவ்வாறு உத்தரவிடவில்லை என்றால் அவர் திறமையற்றவர். எந்தச் சூழலாக இருந்தாலும் அவர் பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.</p><p>அதனைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பாக சபாநாயகருக்குக் கடிதம் எழுதினார். </p><p>"எதிர்க்கட்சியினருடன் கலந்தாலோசிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அனைவரின் ஒப்புதலுடனும், விவாதத்திற்குத் தேவையான அளவு நேரத்தை ஒதுக்குங்கள். விவாதத்தின்போது நடைபெறும் முழு விவாதத்திலும் நான் பங்கேற்பேன். அத்துடன் எதிர்க்கட்சியினர் எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிப்பேன்," என்று ஷா கூறினார்.</p><p>மேலும், ஜனநாயகத்தில் தீர்வு காண்பதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தைகளும் கலந்தாய்வுகளுமே. ஜனநாயகத்தின் மீதும் ஜனநாயக அமைப்புகளின் மீதும் தனக்கு முழு நம்பிக்கை உள்ளது. மாணவர் போராட்டங்கள் தொடர்பான முக்கிய விவகாரத்தில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை வெளிப்படுத்த இந்த விவாதம் வழிவகுக்க வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்தார்.</p><h2>நாடாளுமன்றம் ஒத்திவைப்பு</h2><p>ஆனால் அவையில் அமளி தொடர்ந்தது. இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு பிற்பகல் 3 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியபோது, ​​எதிர்க்கட்சியினரின் கூச்சல் மற்றும் போராட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்தன.</p><p>இந்த அமளிக்கு மத்தியிலும், மாணவர் போராட்டம் குறித்த விவாதத்தை உடனடியாகத் தொடங்க அரசு தயாராக இருப்பதாகவும், இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ஷா ஏற்கனவே சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அவையில் அறிவித்தார்.</p><p>எதிர்க்கட்சியினரின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க உள்துறை அமைச்சர் தயாராக இருக்கும் நிலையில், அவர்கள் விவாதத்திலிருந்து விலகிச் செல்லக்கூடாது என்று அவர் கூறினார். </p><p>ஆனால் அமைச்சரின் வேண்டுகோள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை. </p><p>முழக்கங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், அவையை வழி நடத்திய ஜகதம்பிகா பால், விவாதத்திற்கான அரசின் முன்மொழிவை ஏற்றுக் கொள்ளுமாறு எதிர்க்கட்சியினரைத் தொடர்ந்து வலியுறுத்தினார். அவரது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>போலீசில் சிக்காமல் திருடுவது எப்படி என கற்றுக்கொண்ட இன்ஃபார்மர்: நடிகை வீட்டில் கைவரிசை!</title><link>https://www.maalaimalar.com/news/national/informer-turned-thief-targets-actress-home</link><comments>https://www.maalaimalar.com/news/national/informer-turned-thief-targets-actress-home#comments</comments><guid isPermaLink="false">c5085bef-02ca-47c3-bb61-4b789971e04a</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:43:51 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:43:51.790Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,police informer,Mumbai Burglary,ChandanMukhiya,BiharPolice Arrest,Santacruz Theft</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/z9i5s21f/Mumbai-Burglary" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai Burglary ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/z9i5s21f/Mumbai-Burglary?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல பாலிவுட் நடிகையும், 2016 அழகிப் போட்டியின் ரன்னர் - அப்புமான லோபாமுத்ரா ராவத் என்பவரின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பை </a>வீட்டில் புகுந்து ரூ. 1 கோடி பாதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்த சந்தன் முகியா (26) என்ற வாலிபர் பீகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>பிடிபட்ட நபர், முன்பு போலீசாருக்கு தூது கொடுக்கும் 'இன்ஃபார்மராக' இருந்து கொண்டே, இப்போது திருட்டு தொழிலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.</p><h2>போலீசிடமே 'டியூஷன்' படித்த திருடன்:</h2><p>கைது செய்யப்பட்டுள்ள சந்தன் முகியாவின் கடந்த காலப் பின்னணி போலீசாரையே தலைசுற்ற வைத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் மும்பை காம்தேவி பகுதி போலீசார் ஒரு திருட்டு வழக்கை விசாரித்தபோது, அவர்களுக்கு இன்ஃபார்மராக இருந்து சந்தன் முகியா உதவினார். </p><p>இது போன்ற பல சமயங்களில் போலீசாருக்கு உதவி செய்ததால் சந்தனை போலீசார் கூடவே வைத்துக்கொண்டனர். </p><p>அப்போது போலீசாருக்கு நெருக்கமாக இருந்த சந்தன், போலீஸ் எப்படி ஆதாரம் திரட்டுகிறது? சிசிடிவி-யை எப்படி ஆய்வு செய்கிறது? குற்றவாளிகளை எப்படி டிராக் செய்கிறது? போன்ற அத்தனை ரகசியங்களையும் உன்னிப்பாகக் கவனித்து, அப்படியே தனக்கான திருட்டுப் பாடமாகக் கற்றுக்கொண்டுள்ளார்.</p><p>இதன் பிறகு, அதே 2021-ல் தனது முதலாளியான வைர வியாபாரி வீட்டில் ரூ.1.8 கோடியைச் சுருட்டினார். பின்னர் 2025-ல் மற்றொரு திருட்டு வழக்கில் கைதாகி, இந்த ஆண்டு ஜனவரியில் தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.</p><h2>நடிகை வீட்டில் ஸ்கெட்ச் போட்டது எப்படி?</h2><p>ஜாமீனில் வந்த பிறகு மும்பை சென்ட்ரல் பகுதியில் தங்கியிருந்தபடி, நகரின் முக்கிய இடங்களை நோட்டமிட்டுள்ளார். </p><p>அப்போது சாந்தாகுரூஸ் பகுதியில் உள்ள நடிகையின் வீட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் பழுதுபார்க்கும் பணிகளுக்காக மூங்கில் சாரம் கட்டப்பட்டிருப்பதை கவனித்துள்ளார்.</p><p>கடந்த ஜூலை 14 அன்று அதிகாலை 4 முதல் 5 மணிக்குள், அந்த மூங்கில் சாரம் வழியாக ஏறி, 5-வது மாடியில் உள்ள நடிகையின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். </p><p>உள்ளே ஒரு மணி நேரம் நிதானமாகத் தேடி, ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், விலை உயர்ந்த வாட்ச்கள் மற்றும் ரொக்கப் பணத்தை அள்ளிக்கொண்டு தப்பியுள்ளார். சிசிடிவி கேமராவில் ஒரே ஒரு பிரேமில் மட்டுமே முகம் தெரியும்படி மிக சாமர்த்தியமாக தப்பியோடியுள்ளார்.</p><h2>நடிகைக்கு அதிர்ச்சி &amp; போலீஸ் ஆபரேஷன்:</h2><p>சொந்த ஊரான நாக்பூருக்குச் சென்றிருந்த நடிகை, ஜூலை 27 அன்று மும்பை திரும்பியபோது வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தார். கட்டிட ஊழியர் ஒருவர் பால்கனி வழியாக உள்ளே சென்று கதவைத் திறந்தபோது தான் கொள்ளை போனது தெரிந்தது.</p><p>மேற்கு மண்டல டிசிபி மோஹித் கார்க் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி மற்றும் நெட்வொர்க் டிராக்கிங் மூலம் குற்றவாளி சந்தன் முகியா என அடையாளம் காணப்பட்டனர்.</p><p>அவர் கொள்ளையடித்த உடனே ரெயிலில் ஏறி இந்தியா-நேபாள எல்லைக்கு அருகில் உள்ள பீகார் தர்பங்கா கிராமத்திற்கு ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு விரைந்த போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.</p><h2>திருட்டுப் பணத்தில் ரியல் எஸ்டேட் பிசினஸ்:</h2><p>கைது செய்யப்பட்ட சந்தன் முகியாவிடமிருந்து ரூ.76.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், கொள்ளையடித்த வெறும் 10 நாட்களுக்குள், சந்தன் மற்றும் அவரது மாமா லாலு முகியா ஆகியோர் திருட்டுப் பணத்தில் ரூ.22 லட்சத்தை முதலீடு செய்து, தங்கள் கிராமத்திற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கும் இடம் உட்பட இரண்டு நிலங்களை வாங்கிய அதிர்ச்சித் தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>போலீஸ் அதிகாரி கூறுகையில், "இவனது ஒட்டுமொத்த குடும்பமுமே வீட்டு வேலைக்குச் சேர்ந்து திருடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. </p><p>பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆட்களை வேலைக்கு வைப்பதற்கு முன்பு அவர்களின் பின்னணியை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும்" என எச்சரித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நாளை மாநிலம் தழுவிய கடை அடைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-bandh-tomorrow-over-cauvery-mekedatu-issues</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-bandh-tomorrow-over-cauvery-mekedatu-issues#comments</comments><guid isPermaLink="false">57f2d07b-e196-4282-845d-b08085eaa182</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:42:44 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:42:44.750Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,bandh,Cauvery,முழு அடைப்பு போராட்டம்,காவேரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/l4abssef/Untitled-design-37.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காவிரி, மேகதாது நீர்திட்டங்களை வலியுறுத்தி ஆகஸ்ட் 13 மாநிலம் தழுவிய போராட்டம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ Kaveri Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/l4abssef/Untitled-design-37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகா மாநிலத்தில் காவிரி நதிநீர் தொடர்பாக, நாளை (ஆகஸ்ட் 13) மாநிலம் தழுவிய முழு கடை அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>கர்நாடகாவில் முழு அடைப்பு</strong></h3><p>தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மஹதாயி மற்றும் கலச பண்டுரி போன்ற நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கன்னட ஆதரவு அமைப்புகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.</p><p>கர்நாடகா தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது.  </p><p>இதன் காரணமாக கர்நாடகாவில் நாளை பள்ளிகள் தொடர்ந்து வழக்கம்போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>கர்நாடகாவில் நாளை நடைபெற இருக்கும் முழு அடைப்பு காரணமாக, எல்லையோர தமிழ்நாடு மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.</p><h3><strong>காவிரி ஒழுங்கு நீர் மேலாண்மை</strong></h3><p>முன்னதாக தமிழ்நாட்டிற்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட டி.எம்.சி அளவில் தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி ஒழுங்கு நீர் மேலாண்மை உத்தரவிட்டிருந்தது.</p><p>ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகா அரசு தீவிரமாக செயல்பட வலியுறுத்தியும் நாளை போராட்டம் நடைபெற உள்ளது.</p><p>தமிழகத்திற்கு உபரி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருவதால், முழு அடைப்பு போராட்டத்தில் அமைப்புகள் ஈடுபட வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/caste-census-anbumani-ramadoss-letter-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/caste-census-anbumani-ramadoss-letter-pm-modi#comments</comments><guid isPermaLink="false">2fba0993-4f1e-41f1-b785-107446522b80</guid><pubDate>Wed, 12 Aug 2026 11:58:58 +0000</pubDate><atom:updated>2026-08-12T11:58:58.549Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,pm modi,பிரதமர் மோடி,சாதிவாரி கணக்கெடுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/yp61saof/PMModiAnbumani0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/yp61saof/PMModiAnbumani0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், இந்திய பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>இந்தியாவில் முழுமையான சமூக நீதியை ஏற்படுத்தும் நோக்குடன், 2021-ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2026-27ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று தங்களின் அரசு அறிவித்திருப்பதற்காக எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வந்த கோரிக்கைகளை தாங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள். இதன் காரணமாக சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இது இந்தியாவில் சமூக நீதியை பாதுகாப்பதில் நீண்ட காலத்திற்கு ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைக்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>அதேநேரத்தில், இந்தக் கணக்கெடுப்பை நடத்துவதில் கடைபிடிக்கப்படும் சில நடைமுறைகளால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுவிடக் கூடும் என்பதால், அது குறித்த எனது கவலைகளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமான வீட்டுப்பட்டியல் தயாரிப்பு பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.</p><h2>மக்கள் குறிப்பிடும் சாதியின் பெயரை அப்படியே பதிவு செய்யும் முறை</h2><p>அடுத்தக்கட்டமாக, மக்களை எண்ணும் பணிகள் மலைப்பிரதேசங்களில் உள்ள மாநிலங்களில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதலும், மற்ற மாநிலங்களில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதலும் நடைபெறவுள்ளன. இந்த பணியின்போது, சாதி என்ற கேள்விக்கான பதிலை குறிப்பிடும் பகுதியை காலியாக விட்டு விடுவதென்றும், அந்த இடத்தில் மக்கள் குறிப்பிடும் சாதியின் பெயரை அப்படியே பதிவு செய்வதென்றும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் இந்தியத் தலைமைப் பதிவாளர் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில்  செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>இந்த முறையில் மக்களின் சாதி விவரம் சேகரிக்கப்பட்டால், நிறைய சிக்கல்கள் ஏற்படும். நாடு முழுவதும் ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. பெரும்பான்மையான மக்கள் சாதியின் பெயரைக் கடந்து உள்பிரிவுகளால் தங்களை அழைத்துக் கொள்வார்கள். ஆனால், அந்த உட்பிரிவுகளின் பெயர்கள் அரசால் பயன்படுத்தப்படும் சாதிகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. இத்தகைய சூழலில், மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அப்படியே நிரப்பி, அது சாதியின் பெயராக இல்லாமல், உட்பிரிவின் பெயராக இருந்தால், ஒரு அரசின் பட்டியலில் உள்ள சாதிகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிக சாதிகள் இருப்பதாக கணக்கில் காட்டப்படும். இது சரி செய்ய முடியாத குழப்பத்தை உண்டாக்கி, இந்தக் கணக்கெடுப்பின் தரவுகளை பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கிவிடும்.</p><h2>2011-ல் இது போன்ற நடைமுறைதான் இருந்தது</h2><p>2011-ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் நடத்தப்பட்டது. அதற்கான வினாக்கள் பட்டியலில் இதே போல்தான் சாதி என்ற வினாவுக்கு எதிரில் காலியிடம் விடப்பட்டு, மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அதில் குறிப்பிடும் முறை பின்பற்றப் பட்டது.</p><p>அதன் விளைவு அந்தக் கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 46 லட்சத்து 70 ஆயிரம் சாதிகள் இருப்பதாக தெரியவந்தது. இந்தியாவில் 1931-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் 4147 சாதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், 2011 கணக்கெடுப்பில் 46.70 லட்சம் சாதிகள் இருப்பதாகக் கூறப்பட்டது விமர்சனங்களுக்கு உள்ளானது. அதனால், அந்தக் கணக்கெடுப்பு தரவுகள் சமூக நீதிக்காக பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டு விட்டன.</p><p>இந்த சிக்கலுக்கான தீர்வு மிகவும் எளிதானது. இந்தியாவில் என்னென்ன சாதிகள் உள்ளன? என்பது குறித்த பட்டியல் மத்திய அரசிடமும், மாநில அரசுகளிடமும் உள்ளன. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தேசிய அளவில் மத்திய அரசால் நடத்தப்படும் நிலையில், அந்தப் பட்டியலை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான செயலியின் மென்பொருளில் இணைத்து, அந்தப் பட்டியலில் இருந்து மக்கள் தங்கள் சாதியை தேர்வு செய்யும் முறையை பின்பற்றுவதுதான் சரியான தீர்வாகும்.</p><h2>பீகார் மாநில சாதிவாரி சர்வேயில் துல்லியமான விவரங்கள்</h2><p>கடந்த 2023-ஆம் ஆண்டு பீகார் மாநிலத்திலும், 2024-ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்திலும் நடத்தப்பட்ட சாதிவாரி சர்வேயில், அரசின் பட்டியலில் உள்ள சாதிகள் வரிசைப்படுத்தப்பட்டு, அதை மக்கள் தேர்ந்தெடுத்து நிரப்பும் முறை கடைபிடிக்கப்பட்டது. அதன் பயனாக பீகார் மாநில சாதிவாரி சர்வேயில் துல்லியமான விவரங்கள் கிடைத்தன. அதனால் அதே முறையை இந்த கணக்கெடுப்பிலும் பின்பற்றலாம்.</p><p>சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமாக வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள மக்களை எண்ணும் பணியின் போது மத்திய அரசின் சாதிகள் பட்டியலைக் காட்டி, அதிலிருந்து அவர்களின் சாதி மற்றும் எண்ணை பதிவு செய்யும் முறை கடைபிடிக்கும்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகத்திற்கு தாங்கள் அறிவுறுத்தல்களை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிகளை பதிவு செய்யும் பணிகள் இன்னும் இரு வாரங்களில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இதை அவசர கோரிக்கையாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை ஒட்டுமொத்த நாடும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. சமூகநீதியை காப்பதற்காக இதை செய்யும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உத்தரப் பிரதேசத்தில் பசு கோமியம் கொள்முதல் செய்யும் புதிய முன்னோடித் திட்டம் துவக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/new-pilot-scheme-to-purchase-cow-urine-in-uttar-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-pilot-scheme-to-purchase-cow-urine-in-uttar-pradesh#comments</comments><guid isPermaLink="false">8f84554b-280c-468d-9567-6491678bc975</guid><pubDate>Wed, 12 Aug 2026 10:28:13 +0000</pubDate><atom:updated>2026-08-12T10:28:13.547Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,Cow urine,பசு கோமியம்,உத்தரப் பிரதேசம்,Bulandshahr,புலாந்த்சகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/0lsej98z/cow-urine.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cow urine ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/0lsej98z/cow-urine.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலத்தில் பசு பாதுகாப்பை கிராமப்புற பொருளாதாரத்துடனும், இயற்கை விவசாயத்துடனும் இணைக்கும் வகையில் பசு கோமியத்தை அரசே கொள்முதல் செய்யும் புதிய முன்னோடித் திட்டத்தை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தொடங்கியுள்ளது. </p><p>இத்திட்டம் முதற்கட்டமாக அம்மாநிலத்தின் புலாந்த்சகர் மாவட்டத்தில் உள்ள சியானா வட்டத்திற்குட்பட்ட நர்சேனா பகுதியில் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் (FPO) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><h2>லிட்டருக்கு <strong>ரூ.10 கொ</strong>ள்முதல் விலை </h2><p>இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்தும் கால்நடை வளர்ப்போரிடமிருந்தும் ஒரு லிட்டர் பசு கோமியம் 10 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது புலாந்த்சகரைச் சுற்றியுள்ள 15 கிராமங்களை உள்ளடக்கி இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. </p><p>விவசாயிகள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கோமியத்தை எளிதாக ஒப்படைக்கும் வகையில் கிராமங்களில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறப்புச் சேமிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்கள் மூலம் தற்போது நாளொன்றுக்குச் சராசரியாக 500 லிட்டர் கோமியம் சேகரிக்கப்பட்டு வருகிறது.</p><h2>பெண்<strong>கள் அதிகாரம் மற்றும்</strong> வேலைவாய்ப்பு</h2><p>கிராமப்புற பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கோமியம் சேகரிக்கும் பணியில் கிராமப் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் சுமார் 300 பெண்கள் பங்குதாரர்களாக இணைக்கப்பட்டு, சேகரிக்கப்படும் ஒவ்வொரு லிட்டர் கோமியத்திற்கும் 2 ரூபாய் கமிஷனாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் பால் விற்பனை மட்டுமின்றி, கோமியம் மூலமாகவும் விவசாய குடும்பங்களுக்கும் பெண்களுக்கும் கூடுதல் வருமானம் ஈட்டும் வாய்ப்பு உருவாகியுள்ளது.</p><h2>இயற்கை உர<strong>ம் ம</strong>ற்றும் பூச்சிக்கொல்லி தயாரிப்பு</h2><p>சேகரிக்கப்படும் பசு கோமியத்துடன் பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்பட்டு, விவசாய நிலங்களுக்குப் பயன்படும் ரசாயனமற்ற இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் திரவக் கரைசல்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை உள்ளூர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு, ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் வழிவகை செய்கின்றன.</p><h2>மாநில<strong>ம் முழுவதும் விரிவுபடு</strong>த்தத் திட்டம்</h2><p>புலாந்த்சகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றி மற்றும் வரவேற்பைப் பொறுத்து, இத்திட்டம் விரைவில் உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தகட்டமாகப் பசு கோமியத்திற்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு 20 ரூபாயாக உயர்த்தவும் அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஒரே நாளில் 400 கல்யாணங்களா? குருவாயூரில் ஆகஸ்ட் 23-ல் அமையவிருக்கும் மெகா திருமண திருவிழா!</title><link>https://www.maalaimalar.com/news/national/400-weddings-in-a-day-guruvayur-mega-marriage-festival-august-23</link><comments>https://www.maalaimalar.com/news/national/400-weddings-in-a-day-guruvayur-mega-marriage-festival-august-23#comments</comments><guid isPermaLink="false">b437052c-80f7-4c9a-97d9-26461067cf2c</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:56:57 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:56:57.259Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Guruvayur,குருவாயூர் கிருஷ்ணசாமி கோவில்,கேரளம்,Keralam,GuruvayurTemple Wedding,ChingamMonth,சிங்கமாதம்,MegaWeddingDay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/s35lo474/GuruvayurTemple-Wedding" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GuruvayurTemple  Wedding]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/s35lo474/GuruvayurTemple-Wedding?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகப் புகழ்பெற்ற கேரளம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">குருவாயூர்</a> ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 377 திருமணங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p>முன்பதிவுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால், இந்த எண்ணிக்கை 400-ஐத் தாண்டி புதிய உலக சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>ஒரே நாளில் ஏன் இத்தனை கல்யாணங்கள்?</strong></h2><p>புதிய மலையாள மாதமான சிங்கத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இது கேரளாவின் மிக முக்கியமான சுபமுகூர்த்த நாளாக கருதப்படுகிறது. </p><p>இந்த 'சிங்கம்' மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 23-ஆம் தேதி வருகிறது. இந்நாளில் திருமணம் செய்ய இதுவரை 377-க்கும் மேற்பட்ட திருமணங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p>இந்த ஆண்டு திருமணங்களுக்கு மிகவும் உகந்த நாளாக இது கருதப்படுவதால், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான தம்பதிகள் குருவாயூரப்பனின் முன்னிலையில் தங்களின் திருமண வாழ்க்கையைத் தொடங்க போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு செய்துள்ளனர். </p><p>இதுமட்டுமின்றி, அடுத்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் ஏற்கனவே 295 திருமணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.</p><h2><strong>அதிகாலை 4 மணிக்கே தொடங்கும் கெட்டிமேளம்:</strong></h2><p>வழக்கத்திற்கு மாறாகக் குவியவிருக்கும் கூட்டத்தைச் சமாளிக்கவும், அனைத்து திருமணங்களையும் சரியான நேரத்தில் நடத்தி முடிக்கவும் குருவாயூர் தேவஸ்வம் போர்டு அசத்தலான அதிரடி ஏற்பாடுகளைச் செய்துள்ளது. </p><p>ஆகஸ்ட் 23 மற்றும் 30 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருமணச் சடங்குகள் வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே, அதாவது அதிகாலை 4 மணிக்கே தொடங்கப்படவுள்ளன. </p><p>திருமணங்களை தடையின்றி நடத்த கோவிலில் பிரத்யேகமாக 6 திருமண மண்டபங்கள் அமைக்கப்படவுள்ளன. கூடுதல் கோவில் பணியாளர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் கூடுதல் மங்களவாத்தியக் குழுக்கள் சிறப்புப் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.</p><h2><strong>புகைப்படக் கலைஞர்களுக்குக் கட்டுப்பாடு:</strong></h2><p>கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தேவஸ்வம் போர்டு சில கண்டிப்பான விதிகளையும் விதித்துள்ளது. இதன்படி, திருமண மண்டபத்திற்கு அருகில் மணமகன் மற்றும் மணமகளுடன் சேர்த்து, புகைப்படக் கலைஞர்கள் உட்பட மொத்தம் 24 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>கடந்த கால சாதனை முறியடிப்பு:</strong></h2><p>இதற்கு முன்னதாக, கடந்த செப்டம்பர் 8, 2025 அன்று இக்கோயிலில் ஒரே நாளில் மட்டும் 334 திருமணங்கள் நடைபெற்றது தான் மிகப்பெரிய சாதனையாக இருந்தது. </p><p>ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடக்கவிருக்கும் திருமணங்கள் அந்தப் பழைய சாதனையை முறியடித்துள்ளது.</p><p>கோவில் தரிசனம் மற்றும் திருமணச் சடங்குகளைச் சுமூகமாக நடத்துவதற்குப் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு தேவஸ்வம் போர்டு தலைவர் ஏ.வி. கோபிநாத் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இமாச்சல பிரதேசத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது கைம்பெண்-அனாதை கூடுதல் வரி</title><link>https://www.maalaimalar.com/news/national/himachal-govt-imposes-orphan-widow-tax-on-petrol-diesel</link><comments>https://www.maalaimalar.com/news/national/himachal-govt-imposes-orphan-widow-tax-on-petrol-diesel#comments</comments><guid isPermaLink="false">bae6e563-b865-4d71-8f96-f6fe52674bbd</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:49:09 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:49:09.185Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Himachal Pradesh,சுக்விந்தர் சிங் சுகு,Sukhvinder Singh Sukhu,இமாச்சல் பிரதேசம்,orphan and widow cess,அனாதை மற்றும் கூடுதல் வரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/fdzgktvc/Untitled-design-35.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இமாச்சலில் விதவை-அனாதை வரி: பெட்ரோல் டீசலுக்கு கூடுதல் வரி மூலம் நல நிதி ]]></media:title><media:description type="html"><![CDATA[ Himachal Fuel Tax]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/fdzgktvc/Untitled-design-35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இமாச்சல பிரதேச அரசு கைம்பெண்கள்(விதவைகள்) மற்றும் அனாதை குழந்தைகளுக்கான நலத்திட்டங்களுக்கு நிதி திரட்டும் நோக்கத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் மீது லிட்டர் ஒன்றுக்கு 60 பைசா கூடுதல் வரி விதித்துள்ளது.</p><p>இந்த திருத்தத்தின்படி, பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.5 வரை கூடுதல் வரி விதிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.</p><h3><strong>கைம்பெண் மற்றும் அனாதை வரி</strong></h3><p>இதுகுறித்து மாநில வரிகள் மற்றும் கலால் துறை வெளியிட்ட அறிவிப்பில், கைம்பெண் மற்றும் விதவை வரி ஆகஸ்ட் 11ஆம் தேதி (நேற்று) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் அதிவேக (high-speed) டீசல் விற்பனை செய்யப்படும் விற்பனை நிலையத்தில் இந்த கூடுதல் வரி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>செஸ் வரி மூலம் வசூலிக்கப்படும் பணம், கைம்பெண் மற்றும் விதவைகள் நல நிதியில் வரவு வைக்கப்பட்டு, விதைவைகள் மற்றும் அனாதைகளின் நலனுக்கான பயன்படுத்தப்பட உள்ளது.</p><p>இமாச்சல பிரதேச சட்டமன்றத்தால் மார்ச் மாதம், இந்த மதிப்புக்கூட்டு வரி (திருத்த) மசோதா, 2026 நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.</p><p>சட்டமன்றத்தில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோது, பாஜக-வினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.</p><h3><strong>பாஜக வெளிநடப்பு</strong></h3><p>அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஜெய்ராம் தாகூர் கூறுகையில், “கைம்பெண்கள் மற்றும் அனாதைகளின் பெயரில் வரி விதிப்பதன் மூலம், வருவாயைத் திரட்ட அரசு முயல்கிறது.</p><p>இந்த எரிபொருள் விலை உயர்வால், அண்டை மாநிலங்களை விட இமாச்சல பிரதேசத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாகி, எல்லை மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் வேறு இடங்களில் எரிபொருள் வாங்கும் நிலை ஏற்படும்,” என்று அவர் கூறினார்.</p><h3><strong>இமாச்சல் முதலமைச்சர் அறிவிப்பு</strong></h3><p>இந்த மசோதா குறித்து இமாச்சல் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் கூறுகையில், “பொருளாதார ரீதியாக நலிவடைந்த கைம்பெண்கள் மற்றும் அனாதைகளுக்கான நலத்திட்டங்களுக்கு, அரசுக்கு ஒரு நிலையான மற்றும் பிரத்யேகமான வருவாய் ஆதாரம் தேவை.</p><p>ரூ.5 என்பது அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வரம்பாக மட்டுமே உள்ளது. மாநில அரசு இதைவிட மிகக் குறைந்த தொகையை நிர்ணயிக்க முடியும்” என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>முதலைக்கண்ணீர் - ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம் தொடர்பாக ராகுல் காந்தியை சாடிய தர்மேந்திர பிரதான்!</title><link>https://www.maalaimalar.com/news/national/crocodile-tears-dharmendra-pradhan-slams-rahul-gandhi-over-the-jharkhand-student-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/crocodile-tears-dharmendra-pradhan-slams-rahul-gandhi-over-the-jharkhand-student-protest#comments</comments><guid isPermaLink="false">96e2a347-6b9a-48bd-a9fc-a899dbd05b6a</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:14:14 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:14:14.919Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Jharkhand protests,ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/hgut96fd/New-Project-2026-08-12T144344.441.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலைக்கண்ணீர் - ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம் தொடர்பாக ராகுல் காந்தியை சாடிய தர்மேந்திர பிரதான்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/hgut96fd/New-Project-2026-08-12T144344.441.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டத்தில் ராகுல் காந்தி முதலைக்கண்ணீர் வடிப்பதாகவும் முன்னாள் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>காங்கிரஸ் மாணவர்களின் நலன்கள் குறித்துத் தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகிறது. ராகுல் காந்தியிடம் உண்மைகள் இல்லை. வழக்கமாகப் பொய்களை மட்டுமேப் பேசும் எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்றத்திற்கு வரவோ அல்லது பதில்களைக் கேட்கவோ விரும்புவதில்லை. அவர்கள் தங்கள் பொய்களைப் பரப்பவும், முதலைக்கண்ணீர் வடிக்கவும் மட்டுமே விரும்புகிறார்கள்.</p><p>உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா மீது ஆதாரமற்ற, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸின் அரசியல் விரக்தியையே வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு விவகாரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.</p><p>ஆனால் காங்கிரஸோ ஜனநாயகத்தின் கோயிலான 'நாடாளுமன்றத்தை' முடக்கி, நாட்டின் மற்றும் இளைஞர்களின் நலன்களைச் சிதைத்து வருகிறது. ஏனெனில், நாட்டின் நலனை விடத் தங்கள் சொந்த நலன்களுக்கே அவர்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள். </p><p>அவையில் விவாதம் நடைபெறும்போதெல்லாம் இவர்கள் வெளியே கூச்சலையும் குழப்பத்தையும் உருவாக்குகிறார்கள். ஏனெனில், அவையில் அளிக்கப்படும் பதில்களைக் கேட்கும் திறன் அவர்களுக்கு இல்லை.</p><p>காங்கிரஸின் ஜனநாயகமும் 'தேர்ந்தெடுக்கப்பட்ட' ஒன்றே. அவர்கள் ஆட்சியில் உள்ள இடங்களில் இளைஞர்களுக்கு எதிரான வன்முறை, அரசியல் ரீதியாகத் தங்களை முன்னிலைப்படுத்த விரும்பும் இடங்களில் பொய்கள் மற்றும் அமளி. </p><p>ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரத்தை நாடே பார்த்தது. ஆனால் கேள்வி என்னவென்றால், ஒவ்வொரு விவகாரத்திலும் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தும் ராகுல் காந்தி, இன்று ஏன் மௌனம் காக்கிறார்? </p><p>காங்கிரஸின் இந்த இரட்டை வேடத் தன்மையை நாட்டின் இளைஞர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளனர். ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்திற்கு இடமில்லை; அவசரநிலைக் கால மனப்பான்மையுடன் செயல்படும் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் இதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><h2>ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம்</h2><p>ஜார்க்கண்டில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலப் போட்டித் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைக் கண்டித்து மாணவர்கள் பெரிய அளவில் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><h2>ராகுல் காந்தியின் இரட்டை நிலைப்பாடு?</h2><p>போராட்டம் நடத்திய மாணவர்கள்மீது அம்மாநில காவல்துறை தடியடி போன்ற அடக்குமுறைகளை மேற்கொண்டது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் மாணவர்கள்மீது தடியடி நடத்தப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரத்தில் அவர் மௌனம் காப்பதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டினர். </p><p>இதனிடையே மாணவர்கள்மீதான தடியடி கண்டிக்கத்தக்கது என ராகுல் காந்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் பெரிதாக அப்போராட்டம் பற்றிப் பேசவில்லை. </p><p>இச்சூழலில் நாடாளுமன்றத்தில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மாணவர் பிரச்சனைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>ஆனால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வேறு சில விவகாரங்களையும் இதனுடன் இணைத்து விவாதிக்க வேண்டும் என பிடிவாதம் பிடிப்பதால் அவையில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. </p><p>இந்நிலையில் இதனைக் குறிப்பிட்டே தர்மேந்திர பிரதான் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன் ராஜினாமா: மீண்டும் தலைவராக தொடர விரும்பவில்லை என அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/tata-sons-chairman-n-chandrasekaran-resigns</link><comments>https://www.maalaimalar.com/news/national/tata-sons-chairman-n-chandrasekaran-resigns#comments</comments><guid isPermaLink="false">c8edb95f-1544-4287-8fb8-56cfa42846d1</guid><pubDate>Wed, 12 Aug 2026 08:38:03 +0000</pubDate><atom:updated>2026-08-12T08:38:03.118Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tata Group,டாடா குழுமம்,டாடா சன்ஸ்,N.Chandrasekaran,Tata Sons Chairman,என்.சந்திரசேகரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/r18qyc3d/tata.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ N.Chandrasekaran ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/r18qyc3d/tata.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாடா குழுமத்தின் முதன்மை நிறுவனமான டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன், தனது பதவிக் காலம் முடிவடைந்த பிறகு மீண்டும் அப்பதவியில் தொடர விரும்பவில்லை எனத் தெரிவித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். ஆகஸ்ட் 18 அன்று நடைபெறவிருக்கும் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக இந்த முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.</p><p>சார் டோரப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகியவை சந்திரசேகரனின் பதவிக் காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒருமனதாக பரிந்துரை செய்தன. ஆனால், கடந்த பிப்ரவரி 24 அன்று டாடா சன்ஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த தீர்மானத்திற்கு, குழுவின் உறுப்பினர் ஒருவர் (நோயல் டாடா என அறிக்கைகள் தெரிவிக்கின்றன) எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. &nbsp; </p><p>நிர்வாகக் குழுவில் முழுமையான ஆதரவு இல்லாத காரணத்தால், இந்த முடிவை சந்திரசேகரன் ஒத்திவைத்தார். கடந்த ஆறு மாதங்களாக இதில் எவ்வித தெளிவான முடிவும் எட்டப்படாத நிலையிலும், பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் அவர் இந்தப் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.</p><h2>சந்திர<strong>சேகரனின் அதிகாரப்பூர்வ</strong> அறிக்கை</h2><p>தனது விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள என்.சந்திரசேகரன், டாடா குழுமத்தில் தனது 40 ஆண்டுகால தொழில்முறை பயணத்தை நிறைவு செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். "டாடா குழுமத்தில் பணியாற்றியது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை. இருப்பினும், 2027 பிப்ரவரி 20 அன்று எனது தற்போதைய பதவிக் காலம் முடிவவடையும் போது, மீண்டும் தலைவர் பதவிக்கு என்னைப் பரிசீலிக்க வேண்டாம் என்று டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவிடம் தெரிவித்துவிட்டேன். நிறுவனப் பணிகளில் தடங்கலின்றி சுமூகமான மாற்றத்தை உறுதி செய்ய, புதிய தலைவரை நிர்வாகக் குழு விரைவில் தேர்வு செய்ய வேண்டும்" எனக் கோரியுள்ளார். &nbsp; </p><h2>சந்தையி<strong>ல் ஏற்பட்ட தாக்</strong>கம்</h2><p>இந்த எதிர்பாராத ராஜினாமா செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தையில் டாடா குழும நிறுவனங்களின் பங்குகள் கணிசமான சரிவைச் சந்தித்தன. குறிப்பாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்கு விலை சுமார் 4 சதவீதம் வரை சரிந்தது. மேலும் டாடா மோட்டார்ஸ், டாடா பவர் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவற்றின் பங்குகளும் சரிவைக் கண்டன.</p>]]></content:encoded></item><item><title>அரிசி கொட்டும் ஏடிஎம்:  சத்தீஸ்கரில் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/chhattisgarh-launches-24x7-ration-atm-for-beneficiaries</link><comments>https://www.maalaimalar.com/news/national/chhattisgarh-launches-24x7-ration-atm-for-beneficiaries#comments</comments><guid isPermaLink="false">37b3f0d0-6b36-414a-8f9c-0ce883e2d3c6</guid><pubDate>Wed, 12 Aug 2026 08:33:51 +0000</pubDate><atom:updated>2026-08-12T08:33:51.087Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சத்தீஸ்கர்,chattisgarh,Rice ATM,ரேஷன் ஏடிஎம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/o29wp7h8/ATM.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ATM]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/o29wp7h8/ATM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சத்தீஸ்கரில் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி வாங்​கு​வதற்கு வசதி​யாக ரேஷன் ஏடிஎம் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.</p><h2>அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்</h2><p>சத்தீஸ்கர் மாநிலத்​தில் பொது​மக்​கள் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி வாங்​கு​வதற்கு வசதி​யாக வங்கி ஏடிஎம் போல செயல்​படும் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்​ளது.</p><p>‘அன்னபூர்த்தி கிரெயின் ஏடிஎம்’ என பெயரிடப்​பட்​டுள்ள இத்திட்டம் தலைநகர் ராய்ப்​பூரின் பிர்​கான் பகு​தி​யில் தொடங்கப்பட்டது. இதன்​மூலம் பயனாளி​கள் 24 மணி நேரமும் தங்​களுக்​கான மாதாந்​திர ரேஷன் அரிசி​யைப் பெற்​றுக்​கொள்ள முடி​யும்.</p><p>ரேஷன் கார்டு எடுத்துச்சென்றால் ஸ்கேன் செய்யவேண்டும். ஸ்கேன் செய்த உடன் ரேஷனில் உள்ள மிஷினில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைக் காட்டும். அதில் உங்கள் பெயரை செலக்ட் செய்து கைரேகை வைக்கவேண்டும்.</p><p>கைரேகை வைத்த உடன் இயந்திரமே அதனை சரிபார்த்துவிடும். சரிபார்ப்பிற்குப் பின், அரிசி மற்றும் உணவுப்பொருட்களை தேர்வு செய்தால் துல்லியமாக அளந்து உணவுப்பொருட்களை உங்களுக்கு விநியோகித்து விடும். </p><p>இந்த ரேஷனில் எடையைக் குறைத்து அளப்பது உள்ளிட்ட மனிதத் தவறுகளுக்கு சாத்தியமே இல்லை.</p><h2>ஏடிஎம் செயல்​படு​வது எப்​படி?</h2><p>பயனாளி​கள் தங்​களது ரேஷன் அட்டை விவரங்​களை உள்​ளிட்​டு, கைரேகை​யைப் பதிவு செய்​ததும், அவர்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட அளவு அரிசி இயந்​திரத்​திலிருந்து வெளியே வரும். இந்த இயந்திரம் சுமார் 2,500 கிலோ அரிசியை சேமித்து வைக்​கும் திறன் கொண்டது.</p><p>அரிசியை இயந்​திரத்​தில் நிரப்​புவதும், பயனாளி​களுக்கு விநியோகிப்​பதும் தானி​யங்கி முறை​யில் நடை​பெறும். இந்​தத் திட்​டத்​துக்கு உலக உணவுத் திட்​டம் ஆதரவு அளித்து வரு​கிறது.</p>]]></content:encoded></item><item><title>வாட்ஸ்அப் ரகசிய குறியீடுகள் மூலம் இயங்கிய மும்பை பிக்பாக்கெட் அடிக்கும் கும்பல் சிக்கியது!</title><link>https://www.maalaimalar.com/news/national/whatsapp-secret-codes-mumbai-pickpocket-gang-busted</link><comments>https://www.maalaimalar.com/news/national/whatsapp-secret-codes-mumbai-pickpocket-gang-busted#comments</comments><guid isPermaLink="false">9e37d7fa-9fdb-4c7f-801b-27f988620214</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:45:16 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:45:16.250Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மும்பை,pickpockets,Dhakka Gang,Mumbai gang,பிக்பாக்கெட் கும்பல்,தக்கா கேங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/qbh3z9ph/picpockets.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pickpockets]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/qbh3z9ph/picpockets.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பையில் 'தக்கா கேங்' என்ற பெயரில் செயல்பட்டு வந்த பாக்கெட் அடிக்கும் திருட்டுக் கும்பலை எம்.ஐ.டி.சி காவல் துறையினர் வெற்றிகரமாகக் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் தங்களது அன்றாட திருட்டுச் சம்பவங்களை நடத்துவதற்கும், காவலர்களிடம் இருந்து தப்பிப்பதற்கும் மிகவும் புதுமையான முறையில் வாட்ஸ்அப் ரகசிய குறியீடுகளைப் பயன்படுத்தி வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>தினமும் <strong>மாறும் ரகசிய கு</strong>றியீடுகள்</h2><p>மேற்கு மண்டல துணை காவல் ஆணையர் தத்தா நளவாடே தலைமையில் நடைபெற்ற விசாரணையில், இக்கும்பலின் தலைவன் தினமும் காலையில் உறுப்பினர்களுக்கு வாட்ஸ்அப் வழியாக ஒரு புதிய குறியீட்டுச் சொல்லை அனுப்புவது வழக்கம் எனத் தெரியவந்துள்ளது. "அங்கிள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்" அல்லது "இன்று வானிலை எப்படி இருக்கிறது?" போன்ற சாதாரண உரையாடல்கள் போல் தோன்றும் சொற்களே இவர்களின் ரகசிய குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.</p><p>இந்தக் குறியீடுகளின் முதன்மை நோக்கம் திருட்டைத் திட்டமிடுவது அல்ல, மாறாகக் கும்பலின் உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா அல்லது யாராவது காவல்துறையிடம் பிடிபட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதே ஆகும். உறுப்பினர்களிடம் இருந்து எந்த ஆபத்தும் இல்லை என்பதற்கான பதில் வந்த பின்னரே, அன்றைய தினம் எந்த வழித்தடப் பேருந்துகளில் திருட வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்.</p><h2>செயல்ப<strong>டும்</strong> முறை </h2><p>இந்தக் கும்பல் 4 முதல் 5 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கியுள்ளது. பேருந்துகளில் ஏறும் இவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளாமல், இரண்டு அல்லது மூன்று பேர் கூட்ட நெரிசலை உருவாக்கி பயணிகளின் கவனத்தைத் திசைதிருப்புவார்கள். அந்த சமயத்தில் "மெஷின்" என்று அழைக்கப்படும் முதன்மைத் திருடன், பயணிகளின் பாக்கெட்டில் இருக்கும் செல்போன்கள் மற்றும் பணப்பைகளை நைசாகத் திருடி விடுவான். திருட்டு முடிந்ததும் அனைவரும் வெவ்வேறு பேருந்து நிறுத்தங்களில் இறங்கி தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.</p><h2>ஐபோ<strong>னை தவிர்த்த கு</strong>ம்பல்</h2><p>காவல்துறையினர் நடத்திய சோதனையில் இக்கும்பலிடமிருந்து ரூ.90,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை மதிப்புள்ள 135 உயர்ரக ஸ்மார்ட்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஐபோன் மாடல்களை அன்லாக் செய்வது மிகவும் கடினம் என்பதாலும், வங்கதேசம் மற்றும் நேபாளப் பகுதி கறுப்புச் சந்தைகளில் அவற்றிற்கு குறைந்த விலையே கிடைப்பதாலும், ஐபோன்களைத் திருடுவதை இவர்கள் திட்டமிட்டுத் தவிர்த்து வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>அந்தேரி பகுதியில் இரண்டு கும்பல் உறுப்பினர்களைக் காவல் துறையினர் கைது செய்த உடனடியாக, எஞ்சிய உறுப்பினர்கள் நவி மும்பையில் உள்ள ஜூய்நகர் பகுதிக்குத் தங்களது இருப்பிடத்தை மாற்றி தலைமறைவாகினர். தற்போது இச்சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மகனைத் தேடிய மூத்த குடிமகனிடம் ரூ.29 லட்சம் மோசடி: கொல்கத்தாவில் அதிர்ச்சி சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/senior-citizen-cheated-of-rs-29-lakh-while-searching-for-missing-son</link><comments>https://www.maalaimalar.com/news/national/senior-citizen-cheated-of-rs-29-lakh-while-searching-for-missing-son#comments</comments><guid isPermaLink="false">7ddf9546-a5fd-44b8-993e-e2d368e6d31b</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:51:35 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:51:35.892Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொல்கத்தா,Kolkata,money laundering,மோசடி புகார்,Kariyahat,காரியாஹாட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wehyfz6l/fraud.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kolkata  Money laundering]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wehyfz6l/fraud.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனது காணாமல் போன மகனைத் தேட உதவி செய்வதாகக் கூறி, மூத்த குடிமகன் ஒருவரிடம் தனியார் புலனாய்வாளர் ஒருவர் ரூ.29 லட்சத்துக்கும் அதிகமான தொகையை ஏமாற்றிப் பறித்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பர்த்வான் பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஓய்வுபெற்ற அரசு அதிகாரி (WBCS) என்பவரின் 29 வயது மகன், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று திடீரென காணாமல் போனார். உள்ளூர் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், கவலையடைந்த தந்தை கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்தை அணுகினார். மகனைக் கண்டுபிடிக்க ரூ.5 லட்சம் கட்டணமாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, முதற்கட்டமாக ரூ. 4.5 லட்சம் செலுத்தப்பட்டது.</p><h2>பணம் <strong>பறிப்</strong>பு</h2><p>அந்தத் தனியார் நிறுவனம் இந்த வழக்கை சாம்ராட் பௌமிக் என்ற நபரிடம் ஒப்படைத்தது. 2025 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், காணாமல் போன இளைஞர் புருலியா-ஜார்க்கண்ட் எல்லைக்கு அருகில் இருப்பதாகவும், அவரைப் பற்றிய முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சாம்ராட் பௌமிக் போலியான வாக்குறுதிகளை அளித்தார்.</p><p>ரகசியத் தகவலாளர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றும், களத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடுதல் நிதி தேவை என்றும் கூறி, தந்தையின் பதற்றத்தைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் பணம் கோரினார். இதை நம்பிய தந்தை, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் ரொக்கம் மூலமாக மொத்தம் ரூ. 25,34,746 வழங்கினார்.</p><h2>மோ<strong>சடி வெளிச்சத்திற்கு வந்த</strong> விதம்</h2><p>தொடர்ந்து பணம் பெற்ற போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த தந்தை 2025 டிசம்பர் 20 அன்று சாம்ராட்டைச் சந்தித்துத் தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டார். அதற்கு சாம்ராட் ரூ.1 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு, தொடர்பைத் துண்டித்ததுடன் அவருக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். இதற்கிடையில், சேவை வழங்காததால் தனியார் புலனாய்வு நிறுவனம் தான் பெற்ற ரூ. 4.5 லட்சத்தை முழுமையாகத் திருப்பி அளித்துவிட்டது.</p><h2>காவ<strong>ல் துறை விசாரணை</strong></h2><p>ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூத்த குடிமகன், ஆகஸ்ட் 8 அன்று காரியாஹாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், முதலமைச்சரின் 'ஜனதார் தர்பார்' நிகழ்விலும் இச்சம்பவம் குறித்து முறையிட்டதைத் தொடர்ந்து, காணாமல் போன மகனைக் கண்டுபிடிக்க குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>தற்போது காரியாஹாட் காவல் துறையினரும் சிஐடியும் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன. சாம்ராட் பௌமிக்கிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளி நிதியில் ரூ.2.66 கோடி சுருட்டல்! 4 ஆண்டுகளாக போக்கு காட்டிய பள்ளி முன்னாள் முதல்வர் அதிரடி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-government-school-fund-scam-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-government-school-fund-scam-arrest#comments</comments><guid isPermaLink="false">6b4e8436-24f6-4b51-a0fe-783596006584</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:15:17 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:15:17.438Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தரப் பிரதேசம்,AshramSchoolScam,EOWArrest,JeetlalPatel,PrayagrajCorruption,GovtFundScam,அரசுபணமோசடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wp72hfs7/GovtFund-Scam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GovtFund Scam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wp72hfs7/GovtFund-Scam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேச</a> மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள அரசு ஆசிரமப் பள்ளி நிதியில், விதிகளை மீறி பல கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த முன்னாள் பொறுப்பு முதல்வர் ஜீத்லால் படேலை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.</p><h2>என்ன நடந்தது?</h2><p>பிரயாக்ராஜ் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் 'ராஜ்கியா ஆசிரம பத்ததி' என்ற அரசு குடியிருப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. </p><p>கடந்த 2018-19 முதல் 2021-22 வரையிலான நிதியாண்டுகளில், இங்குள்ள 4 பள்ளிகளுக்கு அரசு வழங்கிய நிதியில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. </p><p>இதுகுறித்து உத்தரப் பிரதேச அரசின் உள்துறை உத்தரவின் பேரில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.</p><h2>சாமர்த்தியமாக நடந்த ஊழல்:</h2><p>விசாரணையில், சுர்வால் ஷஹ்னி கிளையின் பொறுப்பு முதல்வராக இருந்த ஜிதலால் படேல் மற்றும் சில அதிகாரிகள் சேர்ந்து இந்த ஊழலை அரங்கேற்றியது தெரிய வந்தது. அரசு விதிகளின்படி எந்தவொரு பொருளையும் வாங்க வேண்டுமானால் முறையான டெண்டர் மற்றும் கொட்டேஷன் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். </p><p>ஆனால், இவர்கள் எந்த விதியையும் மதிக்காமல், தங்களுக்கு வேண்டிய தனியார் நபர்களிடம் இருந்து பள்ளிக்குத் தேவையற்ற பொருட்களைக் கூடுதல் விலைக்கு வாங்கியுள்ளனர். </p><p>இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ரூ 2.66 கோடி அரசுப் பணத்தை மோசடி செய்து சுருட்டியுள்ளனர்.</p><h2>போலீஸ் வலைவீச்சு &amp; கைது:</h2><p>இந்த மெகா ஊழல் தொடர்பாக 5 அரசு அதிகாரிகள் மற்றும் 12 தனியார் நபர்கள் மீது கூட்டுச்சதி, நம்பிக்கை துரோகம் மற்றும் ஏமாற்றுதல் (IPC Sections 409, 420, 120-B) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. </p><p>போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்த ஜீத்லால் படேல், கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.</p><p>அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட லக்னோ பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார், ஆகஸ்ட் 10 அன்று பிரயாக்ராஜின் சங்கர்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து அவரை மடக்கிப் பிடித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>உ.பி-ல் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-certificates-lawyers-registered-in-up-case-filed-against-39</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-certificates-lawyers-registered-in-up-case-filed-against-39#comments</comments><guid isPermaLink="false">c3ee49fa-870f-42a8-b6cd-84ff166daf88</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:03:08 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:03:08.881Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வழக்குப்பதிவு,உத்தரபிரதேசம்,uttarpradesh,case filed,fake document,போலி சான்றிதழ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/18alqi3s/fake.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fake document]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/18alqi3s/fake.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அலகாபாத் ஐகோர்ட்டு கடந்த ஜூன் 3-ந் தேதி பரபரப்பு உத்தரவு பிறப்பித்தது. உத்தரபிரதேச பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தவர்களில், யாருடைய பட்டப்படிப்பு சான்றிதழ் போலி என்று தெரிகிறதோ, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறியது.</p><p>இதற்கிடையே, உத்தரபிரதேச பார் கவுன்சில், 105 வக்கீல்களுக்கு எதிராக பிரயாக்ராஜ் நகரில் உள்ள சிவில் லைன்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது.</p><p>பதிவு செய்து, வக்கீலாக பணியாற்றுவதற்கான சான்றிதழ் பெற்று வக்கீல் தொழில் செய்து வருவதாக புகாரில் கூறியுள்ளது.</p><p>புகாரின் அடிப்படையில், கடந்த 3 நாட்களில் 39 வக்கீல்கள் மீது போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இத்தகவலை சிவில் லைன்ஸ் இன்ஸ்பெக்டர் ராமாஷ்ரே யாதவ் தெரிவித்தார்.</p><p>மீதியுள்ள வக்கீல்கள் மீது ஓரிரு நாட்களில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், அதன்பிறகு விசாரணை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தெலங்கானாவில் டேங்கர் லாரி மீது ஆட்டோ மோதி விபத்து- 6 கூலித் தொழிலாளர்கள் பலி!</title><link>https://www.maalaimalar.com/news/national/auto-crash-with-tanker-lorry-in-telangana-kills-six-workers</link><comments>https://www.maalaimalar.com/news/national/auto-crash-with-tanker-lorry-in-telangana-kills-six-workers#comments</comments><guid isPermaLink="false">94f59ff9-3428-4af7-ba84-a4c15571a608</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:37:43 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:37:43.728Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death,Telangana,lorry accident,லாரி விபத்து,தெலங்கானா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8fidlrnc/Accident.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8fidlrnc/Accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி பகுதியில் ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.</p><p>தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் சத்வார் கிராம பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது.</p><p>அப்போது, அந்த வழியாக வந்த டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலும் நசுங்கியது. மேலும் ஆட்டோவில் பயணித்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். </p><h2>கூலித் தொழிலாளர்கள்</h2><p>ஆட்டோவில் இருந்தவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் ராஜகிரி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் இதில் உயிரிழந்தவர்களில் ரேகா, ஸ்ரீதேவி, கவிதா, ரேஷ்மா, நிகிதா மற்றும் தேவதாஸ் ஆகியோர் என்பது தெரியவந்தது. </p><p>வேலை முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 5 பெண்கள் உள்ளிட்ட 6 கூலித் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.</p><p>ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதியதில் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>4-ஆவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்க முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/no-maternity-leave-for-government-employees-expecting-4th-child-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-maternity-leave-for-government-employees-expecting-4th-child-court#comments</comments><guid isPermaLink="false">5b648d28-bba0-44fc-ade8-e50a4709d13f</guid><pubDate>Tue, 11 Aug 2026 22:08:55 +0000</pubDate><atom:updated>2026-08-11T22:08:55.183Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீதிமன்றம்,Maternity leave,Court,Government employee,மகப்பேறு விடுப்பு,அரசு ஊழியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/bklako64/allahabad-high-court.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ allahabad high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/bklako64/allahabad-high-court.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விதிகளின் படி தனக்கு நான்காவது குழந்தை பிறக்க இருப்பதை அடுத்து மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்த அரசு ஊழியரின் மனுவை <a href="https://www.maalaimalar.com/news/national">அலகாபாத்</a> உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.</p><p>சசி குமாரி தாக்கல் செய்த மனுவின் பேரில், நீதிபதி மஞ்சு ராணி சௌஹான் ஆகஸ்ட் 7-ஆம் தேதியன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><h2>மேல் முறையீடு:</h2><p>தனது நான்காவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு கோரிக்கையை நிராகரித்து, சம்பல் (பீம் நகர்) வட்டார கல்வி அலுவலர் ஜூன் 19-ஆம் தேதியன்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அப்பெண் மேல்முறையீடு செய்திருந்தார்.</p><p>சட்டத்தின்படி ஆறு மாத மகப்பேறு விடுப்பை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புக்கு உத்தரவிட வேண்டும் என குமாரி உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.</p><p>விசாரணையின் போது, ​​விதிகளின்படி மனுதாரர் தனது நான்காவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு பெற உரிமை இல்லை என்ற அடிப்படையில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அந்த ரிட் மனுவை எதிர்த்தார்.</p><p>எனவே, எந்தத் தலையீடும் தேவையில்லை என்றும், இந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாதிட்டார்.</p><h2>சட்டத்தின் பார்வையில் தவறானது:</h2><p>குமாரி தனது மற்ற மூன்று குழந்தைகளின் பிறப்பின்போது எந்த விடுப்பும் எடுக்கவில்லை என்றும், அதனால் அவர் இப்போதுதான் முதல் முறையாக விடுப்பு பெற தகுதியுடையவர் என்றும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார். எனவே, கல்வி அதிகாரியின் உத்தரவு தன்னிச்சையானது மற்றும் சட்டத்தின் பார்வையில் தவறானது.</p><p>ரிட் மனுவில் கூறப்பட்டுள்ள ஒரு கூற்றை வலியுறுத்தி, குமாரி ஏற்கனவே மகப்பேறு விடுப்பு எடுத்துவிட்டார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்தார்.</p><p>அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் கூற்றைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி சௌகான், நீதிமன்றத்தின் தலையீடு தேவையில்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழப்பு - பீகாரில் சோகம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/nine-killed-in-lightning-strikes-in-3-districts-of-bihar</link><comments>https://www.maalaimalar.com/news/national/nine-killed-in-lightning-strikes-in-3-districts-of-bihar#comments</comments><guid isPermaLink="false">8a21baf1-4538-4084-98cd-fbba95cc2dcf</guid><pubDate>Tue, 11 Aug 2026 20:13:24 +0000</pubDate><atom:updated>2026-08-11T20:13:24.139Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,பீகார்,Bihar,lightning strike,மின்னல்,Death toll</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/bhsz5x2s/lightning-strike.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ lightning strike]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/bhsz5x2s/lightning-strike.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">பீகார்</a> மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. இந்த உயிரிழப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளன.</p><p>பங்கா மாவட்டத்தில் ஐந்து பேரும், லக்கிசராய் மாவட்டத்தில் மூன்று பேரும், பாட்னா மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்ததாக <a href="https://www.maalaimalar.com/topic/chief-minister">முதலமைச்சர்</a> அலுவலகம் (CMO) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>நிதியுதவி:</h2><p>உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>பங்கா மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த ஐந்து பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களும் அடங்குவர்.</p><p>பங்கா மாவட்டத்தின் பௌசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொராய் கிராமத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த குஷ்மி தேவி (45), ரிங்கு தேவி (35) மற்றும் ரேணு தேவி (38) ஆகியோர் வீட்டின் வெளியே இருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.</p><p>பௌசி வட்டத்தைச் சேர்ந்த சிராய் கிராமவாசியான சுரேஷ் யாதவ், தனது வயலுக்குச் செல்லும் வழியில் குளம் ஒன்றின் அருகே மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><h2>இழப்பீடு:</h2><p>அதே வட்டத்தைச் சேர்ந்த காசி கைரி கிராமத்தில், வயலில் நெல் நடும் தொழிலாளர்களுக்கு காலை உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சுஃபியானா (50) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.</p><p>பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பங்கா கூடுதல் மாவட்ட ஆட்சியர் (ADM) அஜித் குமார் தெரிவித்தார்.</p><p>மோசமான வானிலை நிலவும்போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், அத்துடன் பேரிடர் மேலாண்மைத் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி கேட்டுக்கொண்டதாக முதலமைச்சர் அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>ரெஸ்யூம் கொடுங்க, 10,000 பேருக்கு வேலை கொடுக்கிறேன் - நன்றி தெரிவிக்கும் பயணத்தில் பிரசாந்த் கிஷோர் உறுதி!</title><link>https://www.maalaimalar.com/news/national/prashant-kishor-says-will-deliver-10000-jobs-in-3-months</link><comments>https://www.maalaimalar.com/news/national/prashant-kishor-says-will-deliver-10000-jobs-in-3-months#comments</comments><guid isPermaLink="false">5959bd96-56e3-45a5-b871-ad2330fad1da</guid><pubDate>Tue, 11 Aug 2026 17:25:23 +0000</pubDate><atom:updated>2026-08-11T17:25:23.557Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரசாந்த் கிஷோர்,Prashant Kishor,Jobs,வேலைவாய்ப்பு</media:keywords><media:content height="3480" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/ywue2l6h/Prashant-Kishor" width="4800"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Prashant Kishor]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/ywue2l6h/Prashant-Kishor?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்தல் வியூக நிபுணராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக மாறியிருக்கும் <a href="https://www.maalaimalar.com/topic/prashant-kishor">பிரசாந்த் கிஷோர்</a>, உணவு தானியம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகிய அத்தியாவசிய பிரச்சினைகளை சரிசெய்வதற்காக, தனது <a href="https://www.maalaimalar.com/news/national">பாங்கிபூர்</a> தொகுதியிடம் மூன்று மாத கால அவகாசம் கோரியுள்ளார். </p><p>இன்று தனது "நன்றி தெரிவிக்கும் பயணத்தை" தொடங்கிய கிஷோர், ஒரு பள்ளியில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்தார். ராம் கோவிந்த் சிங் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அவர் மாணவிகளைச் சந்தித்தார். அவருடைய வார்த்தைகள், அவர்களின் பெற்றோரைப் போலவே மாணவிகளுக்கும் பொருந்தின.</p><h2>உறுதியாக நம்பலாம்:</h2><p>"உங்கள் பிள்ளை படித்திருந்தால், அவர்களின் சுயவிவரத் தரவுகளை என் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். இங்கிருந்து குறைந்தபட்சம் 10,000 இளைஞர்களுக்கு நாங்கள் உடனடியாக வேலை வாய்ப்புகளை ஏற்பாடு செய்வோம். பீகாரில் உள்ள எந்தவொரு சட்டமன்ற தொகுதியிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான வேலைகளைப் பெறப்போகிறார்கள் என்றால், அது பாங்கிபூர் பகுதி மக்களாகத்தான் இருப்பார்கள்.</p><p>நான் சொல்வதை குறித்துக் கொள்ளுங்கள் -- நாடு முழுவதும் உள்ள எனது தொடர்பாளர்கள் அனைவரையும் பீகார் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு நான் வலியுறுத்தியுள்ளேன். மேலும், பீகாரில் 'ஜன் சூரஜ்' முறை நிறுவப்பட்டவுடன், உங்கள் பிள்ளைகள் பிழைப்புக்காக வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பதை உறுதியாக நம்பலாம்," என்று அவர் கூறினார்.</p><h2>வாழ்க்கையை மாற்றியமைக்கும்:</h2><p>30 ஆண்டுகளாக பாஜகவுக்கு வாக்களித்து வந்த பா.ஜ.க. தலைவர் நிதின் நவீனின் தொகுதியில், கிஷோர் வெற்றி பெற்றிருப்பது ஒரு எதிர்பாராத தீர்ப்பாகும். தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடந்த மாபெரும் போராட்டங்களை தொடர்ந்து இளைஞர்கள் அளித்த வாக்குகளே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.</p><p>பாங்கிபூர் வாக்காளர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் 30 வயதுக்குட்பட்டவர்கள், அவர்கள் பெரிய கனவுகளைத் துரத்துகிறார்கள். நீட் மற்றும் யு.ஜி.சி. தலைமையிலான கல்வி நிறுவனங்களில் சேர்வது பலருக்கு வழக்கமான இலக்குகளாக உள்ளன.</p><p>யார்பூர் ராஜ்புதானா கோபால் சரண் சிங் பாதையில் பேசிய கிஷோர், தனது வெற்றி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் என்று அவர்கள் நம்புவதாகக் குறிப்பிட்டார். அத்தகைய மாற்றம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் மூலமாக மட்டுமே சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி ஏற்ற வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/modi-urges-people-to-take-developed-india-pledge-on-i-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-urges-people-to-take-developed-india-pledge-on-i-day#comments</comments><guid isPermaLink="false">e4725875-a7c2-4057-9a72-7fa452b2f5f7</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:54:54 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:54:54.443Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>national flag,தேசிய கொடி,Independence Day,சுதந்திர தினம்,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/ve9dygsy/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/ve9dygsy/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுதந்திர தினத்தன்று மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றவேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.</p><p>'ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி' எனப்படும் ,' ஹர் கர் திரங்கா' என்ற இயக்கத்தை மத்திய கலாசார அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.</p><p>இதற்கிடையே, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது இந்தியர்கள் தங்களது வீடுகளில் மூவர்ணக் கொடி ஏற்றி Harghartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடியும் இதனை வலியுறுத்தி இருந்தார்.</p><p>இந்நிலையில், பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.</p><p>அந்த வீடியோவில், நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>ஹர் கர் திரங்கா இயக்கத்தில் உற்சாகத்துடன் பங்கேற்போம். 'விக்சித் பாரத்'தை உருவாக்குவதில் பங்களிக்க நமது கூட்டு உறுதிப்பாட்டைப் புதுப்பிப்போம். இந்த ஆண்டுக்கான முயற்சிகள் 'வந்தே மாதரம்' பாடலுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பதிலும், அதுவும் அப்பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் இது அமைந்திருப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறேன்.</p><p>வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டதன் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையிலும், நாட்டின் பெருமை, ஒற்றுமையைக் கொண்டாடும் வகையிலும் தேசியக் கொடி ஏற்றவேண்டும் என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல்? இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/national/state-of-border-will-reflect-state-of-ties-india-warns-china-on-arunachal</link><comments>https://www.maalaimalar.com/news/national/state-of-border-will-reflect-state-of-ties-india-warns-china-on-arunachal#comments</comments><guid isPermaLink="false">ee82dee6-81f7-4030-8af0-b15be204ce4b</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:52:27 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:52:27.026Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அருணாச்சல பிரதேசம்,arunachala pradesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/xoh3iedq/ArunachalaPradesh001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அருணாச்சல பிரதேசம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/xoh3iedq/ArunachalaPradesh001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அருணாச்சலப் பிரதேசத்தின் அப்பர் சுபான்சிரி மாவட்டத்தில் சீனப் படைகள் அத்துமீறி நுழைந்ததாக வெளியான தகவல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, எல்லை விவகாரங்களின் நிலை இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த இருதரப்பு உறவுகளின் தன்மையை பிரதிபலிக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) எச்சரித்துள்ளது.</p><h2>சீனப்படைகள் ஊடுருவல்</h2><p>உள்ளூர் மக்களை மேற்கோள் காட்டி வெளியான சமீபத்திய செய்திகளின்படி, சீனப் படைகள் உண்மைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (LAC) கடந்து, டாக்ஸிங் (Taksing) வட்டாரத்தில் உள்ள புகார் லா (Pukar La) மற்றும் ஒல்லோ (Ollo) ஆகிய பகுதிகளுக்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>இதுகுறித்து கடந்த வாரம் கேட்கப்பட்டபோது, ​​அருணாச்சலப் பிரதேச முதல்வர் பீமா கண்டு அத்தகவல்களை மறுத்தார். மேலும், உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய ராணுவம் மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் பேசுவதாகவும் அவர் கூறினார்.</p><h2>பீமா கண்டு மறுப்பு</h2><p>ராணுவம் எல்லையைத் திறம்படக் காத்து வருவதாலும், இந்தியப் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வதாலும், அத்தகைய அத்துமீறல் எதுவும் நடைபெறுவதாக தான் கருதவில்லை என்று காண்டு தெரிவித்தார்.</p><p>இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அப்பகுதியில் அமைதியை பேணுவதே மிக முக்கியமானது என்று கூறினார். அத்துடன் எல்லை விவகாரங்கள் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பற்றிய விவரங்களையும் அவர் அளித்தார்.</p><p>"இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப் பகுதிகள் தொடர்பான விவகாரங்களில், இப்பிரச்சனைகளை நாங்கள் மிகவும் தீவிரமானதாகக் கருதுவதாகவும், இப்பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவது மிக முக்கியம் என்றும் சீனத் தரப்புடனான பேச்சுவார்த்தைகளில் நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம்.</p><p>எல்லை விவகாரங்களின் நிலை, எங்களின் பரந்த இருதரப்பு உறவுகளின் தன்மையை பிரதிபலிக்கும் என்றும் நாங்கள் கூறியுள்ளோம்," என்று ஜெய்ஸ்வால் கூறினார்.</p><p>ஆகஸ்ட் 6, 2026 அன்று நடைபெற்ற இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான பணி அமைப்பின் (WMCC) 36-வது கூட்டத்திலும் இது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.</p><p>இக்கூட்டத்தில், இரு தரப்பினரும் வெளிப்படையான விவாதங்களை மேற்கொண்டதுடன், உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு (LAC) நெடுகிலும் நிலவும் சூழலை ஆய்வு செய்தனர். இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவது அவசியம் என்பதை இந்தியத் தரப்பு மீண்டும் வலியுறுத்தியது," என்றும் அவர் மேலும் கூறினார்.</p><p>நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் "தவறான புரிதல்கள் மற்றும் தவறான கணிப்புகளைத் தவிர்ப்பதற்கும்", WMCC மற்றும் உள்ளூர் தளபதி அளவிலான கூட்டங்கள் உள்ளிட்ட ஏற்கனவே உள்ள தூதரக மற்றும் ராணுவ வழிமுறைகளைத் தொடர்ந்து பயன்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.</p><h2>27 இடங்களின் நிலையான பெயர்களை இந்தியா அறிவித்தது</h2><p>அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்ற சீனா மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்கொள்ளும் வகையில், கடந்த வாரம் இந்தியா அம்மாநிலத்திலுள்ள 27 இடங்கள் மற்றும் அம்சங்களை அதிகாரப்பூர்வ இந்திய வரைபடத்தில் அவற்றின் 'நிலையான பெயர்கள்' (standard names) மூலம் குறிப்பிட்டிருந்தது.</p><p>சீனா இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அருணாச்சலப் பிரதேசத்தை அங்கீகரிக்கவில்லை என்றும் கூறியது.</p><p>"சீனா நீண்ட காலமாகப் பயன்படுத்தி வரும் பெயர்களுக்குப் பதிலாக, இந்தியா தனது 'நிலையான பெயர்கள்' என்று கூறப்படுபவற்றை மாற்ற முயற்சிப்பது சட்டவிரோதமானது மற்றும் செல்லுபடியாகாதது," என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறினார்.</p><p>இந்தியா வலுவான மறுப்பைத் தெரிவித்தது. அருணாச்சலப் பிரதேசம் நாட்டின் "பிரிக்க முடியாத பகுதி" என்ற தனது நிலைப்பாட்டை ஜெய்ஸ்வால் மீண்டும் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>நிலவில் ஆராய்ச்சி மையம்... இஸ்ரோவிற்கு அழைப்பு விடுத்த நாசா!</title><link>https://www.maalaimalar.com/news/national/research-center-on-the-moon-nasa-invites-isro</link><comments>https://www.maalaimalar.com/news/national/research-center-on-the-moon-nasa-invites-isro#comments</comments><guid isPermaLink="false">df9f0911-1c05-456e-ad1e-4c2671e54ac6</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:15:51 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:15:51.968Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,நாசா,nasa,Moon Base program,நிலாவில் ஆராய்ச்சி மையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m8vdon1j/New-Project-2026-08-11T192633.786.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நிலவில் ஆராய்ச்சி மையம்... இஸ்ரோவிற்கு அழைப்பு விடுத்த நாசா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m8vdon1j/New-Project-2026-08-11T192633.786.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நிலவில் ஆய்வு தளம் அமைக்கும் தனது பிரம்மாண்ட திட்டத்தில் இணைய இஸ்ரோவிற்கு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா அழைப்பு விடுத்துள்ளது. </p><p>ஆக.5 மற்றும் 6ம் தேதிகளில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் நடைபெற்ற 9-வது இந்தியா - அமெரிக்கா சிவில் விண்வெளி கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. </p><h2>அமெரிக்காவின் மூன் பேஸ் திட்டம்  </h2><p>நாசா, நிலவின் தென் துருவத்தில் மனிதர்கள் தங்கி நீண்ட காலம் ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு நிரந்தர ஆராய்ச்சி மையத்தை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. இது மனிதகுலத்தின் அடுத்த மாபெரும் விண்வெளி பாய்ச்சலாகக் கருதப்படுகிறது.</p><h2>ஏன் இஸ்ரோவுக்கு அழைப்பு?</h2><p>நிலவின் தென்துருவத்தில் வெற்றிக்கரமான கால்பதித்த முதல் நாடு இந்தியா. குறைந்த செலவில் துல்லியமாக விண்கலங்களை ஏவும் இஸ்ரோவின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள நாசா விரும்புகிறது. </p><p>இந்தியா ஏற்கனவே 2023-ல் அமெரிக்காவின் 'ஆர்டெமிஸ் ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இந்த மூன் பேஸ் திட்டத்தின் மூலம் இரு நாடுகளின் விண்வெளி உறவு அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை: உத்தரகாண்டில் மேகவெடிப்பால் இரும்புப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது - 16 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/cloudburst-in-uttarakhand-iron-bridge-swept-away-heavy-rain-alert-for-16-states</link><comments>https://www.maalaimalar.com/news/national/cloudburst-in-uttarakhand-iron-bridge-swept-away-heavy-rain-alert-for-16-states#comments</comments><guid isPermaLink="false">a3a65c7a-99c0-4e3a-97fd-18f17a68cac1</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:27:10 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:27:10.758Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உத்தரகாண்ட்,Madhyapradesh,monsoon,மேகவெடிப்பு,Uttarakhand Flood,NorthIndiaRain,Uttarakhand Cloudburst,MadhyaPradeshFloods,BridgeWashedAway</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/ldqhzh2j/Uttarakhand-Cloudburst" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Uttarakhand Cloudburst ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/ldqhzh2j/Uttarakhand-Cloudburst?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் அதிகனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளதோடு, உள்கட்டமைப்புகளும் பெருமளவில் சேதமடைந்துள்ளன.</p><h2>உத்தரகாண்டில் மேகவெடிப்பு - பாலம் அடித்துச் செல்லப்பட்டது:</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">உத்தரகாண்ட் </a>மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், இந்தியா - சீனா எல்லை அருகே திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் கொட்டித்தீர்த்த கனமழையால் நீர்நிலைகளில் அபாயகரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>அங்குள்ள நிதி பள்ளத்தாக்கில் பாய்ந்து வந்த பெருவெள்ளம், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இரும்புப் பாலத்தை அடித்துச் சென்றது. இந்த விபத்தின்போது அப்பகுதியில் நின்றிருந்த ஒரு நபரும், ஒரு வாகனமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். </p><p>மேலும், தமக் பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆப்பிள் மரங்கள் அனைத்தும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன.</p><h2><strong>மத்திய பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை முடக்கம்:</strong></h2><p>மத்திய பிரதேச மாநிலத்திலும் கனமழை நீடித்து வருகிறது. தலைநகர் போபாலில் பெய்த மழையால் நிஷாத்புரா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக 106 முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>16 மாநிலங்களுக்குக் கனமழை எச்சரிக்கை:</strong></h2><p>மறுபுறம், பீகாரின் தென்மேற்கு மாவட்டங்களுக்குக் கனமழைக்கான 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்திய வானிலை ஆய்வு மையம், நாடு முழுவதும் மொத்தம் 16 மாநிலங்களில் இன்று மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளதால், மீட்புக் குழுவினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>டவுசர் பனியனுடன் மக்களின் புகார்களை பெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.: வீடியோ வெளியான நிலையில் முதல்வரின் பதில்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/wear-proper-clothes-rekha-gupta-tells-aap-mla-after-video-in-undergarments</link><comments>https://www.maalaimalar.com/news/national/wear-proper-clothes-rekha-gupta-tells-aap-mla-after-video-in-undergarments#comments</comments><guid isPermaLink="false">c1ab8c96-99ae-47a4-a282-89f601068796</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:17:44 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:17:44.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆம் ஆத்மி,ரேகா குப்தா,Rekha Gupta,AAP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/e5lkg1tz/RekhaGupta0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AAP MLA- Rekha Gupta]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/e5lkg1tz/RekhaGupta0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வடமேற்கு டெல்லியில் உள்ள கிராரி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனில் ஜா வாட்ஸ். அவர் மக்களை சந்தித்து, அவர்கள் கேட்டுக்கொண்டபடி விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு வழங்கினார். அப்போது டவுசர் மற்றும் பனியனை அணிந்து கொண்டு ஒரு சேரில் அமர்ந்து கொண்டு மனுக்களை கையெழுத்திட்டு உதவியாளரிடம் வழங்குவார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.</p><p>இந்த நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-வை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக ரேகா குப்தா கூறியதாவது:-</p><p>ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-வின் செயல்பாடு வெட்கக்கேடானது. உங்களிடம் பெண்கள் கையெழுத்திற்காக வரும்போது, நீங்கள் முறையான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Meet Aam Aadmi Party&#39;s MLA : Anil Jha Vats!!<br><br>&gt; MLA from Kirari Assembly <br><br>&gt; Wears Kacha and Baniyan <br><br>&gt; Sits outside his home <br><br>&gt; Signs documents without even reading them<br><br>&gt; Claims to be an MLA from Padhi-Likhi Political Party!! <a href="https://t.co/xYozn5liVH">pic.twitter.com/xYozn5liVH</a></p>&mdash; Rohit (@Iam_Rohit_G) <a href="https://x.com/Iam_Rohit_G/status/2086764846276866394?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>இதுபோன்ற நடத்தையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடைய சட்டசபை உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்பட வேண்டும்.</p><p>இவ்வாறு ரேகா குப்தா தெரிவித்தார்.</p><p>அதேவேளையில் அந்த எம்.எல்.ஏ. "நான் ஏதேனும் தவறான சைகைகளைச் செய்திருந்தால், அதற்கான காணொளியை அவர் காட்ட வேண்டும். மக்களுடைய பிரச்சனைகளுக்கு அவரிடம் தீர்வுகள் இல்லை. அதனால்தான் அவர் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்." என்றார்.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைகள் கண் முன்னே மனைவி சுட்டுக் கொலை - கணவரின் வெறிச்செயல்! </title><link>https://www.maalaimalar.com/news/national/husband-gun-attack-kills-wife-in-front-of-children</link><comments>https://www.maalaimalar.com/news/national/husband-gun-attack-kills-wife-in-front-of-children#comments</comments><guid isPermaLink="false">e08a716b-38ec-41d8-b307-2fa5f57f6509</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:04:59 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:04:59.583Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime,பீகார்,Bihar,துப்பாக்கிச்சூடு பலி,DomesticViolence,BiharCrime,HusbandArrest,குடும்பத்தகராறு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0aa5rl1m/Bihar-Crime" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Crime ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0aa5rl1m/Bihar-Crime?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகார் </a>மாநிலம் பூர்னியா பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக, பள்ளி ஆசிரியை ஒருவர் அவரது குழந்தைகளின் கண் முன்னாலேயே கணவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>நில முதலீட்டுத் தகராறு:</strong></h2><p>பூர்னியா பகுதியைச் சேர்ந்த ராஜ் குமார் யாதவ் அங்குள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷாலினி (34), அப்பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். </p><p>இவர்கள் இருவரும் இணைந்து கூட்டாக நிலம் ஒன்று வாங்கியுள்ளனர். அந்த நிலத்தில் தான் முதலீடு செய்த பணத்தைத் திருப்பித் தருமாறு ராஜ் குமார் தனது மனைவியிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். </p><p>ஆனால், தன்னால் பணம் தர முடியாது என்று ஷாலினி மறுத்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.</p><h2><strong>குழந்தைகள் முன்னே தாக்குதல்:</strong></h2><p>சம்பவத்தன்று மாலை இருவருக்கும் இடையிலான தகராறு முற்றவே, ராஜ் குமார் தனது மகன்களின் கண் முன்னால் ஷாலினியை கொடூரமாகத் தாக்கியுள்ளார். </p><p>பின்னர் ஆத்திரத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய அவர், இரவு 8 மணியளவில் மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.</p><h2><strong>துப்பாக்கிச் சூடு:</strong></h2><p>இரவு கணவர் வீடு திரும்புகையில், வீட்டில் குழந்தைகள் படித்துக் கொண்டும், மனைவி ஷாலினி சமையல் செய்துகொண்டும் இருந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக ராஜ் குமார் தனது துப்பாக்கியை எடுத்து, மகனின் கண் முன்னே ஷாலினியை நோக்கிச் சுட்டார். </p><p>இதில் குண்டு பாய்ந்து ஷாலினி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப் பார்த்த குழந்தைகள் அலறித் துடித்த நிலையில், ராஜ் குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.</p><h2><strong>வீடியோ காலில் மரண வாக்குமூலம்:</strong></h2><p>பயந்துபோன மூத்த மகன், உடனடியாகத் தனது மாமா விக்ரம் ஆனந்திற்கு செல்போனில் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷாலினி, தனது சகோதரனிடம் "இப்போது நாம் என்ன செய்வோம்? அவர் என்னைச் சுட்டுவிட்டார்" என்று முனகியபடியே பேசியுள்ளார்.</p><p>இதனைத் தொடர்ந்து பதறியடித்து வந்த உறவினர்கள், ஷாலினியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். </p><p>எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய ராஜ் குமாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.13 லட்சம் வேலையைத் துறந்து AI படிப்பு; அமெரிக்காவில் ரூ.1.5 கோடி சம்பளத்தில் சாதனை படைத்த ஐ.ஐ.டி பட்டதாரி!</title><link>https://www.maalaimalar.com/news/national/quit-13-lakh-job-for-ai-studies-iit-grad-earns-1-5-crore-in-us</link><comments>https://www.maalaimalar.com/news/national/quit-13-lakh-job-for-ai-studies-iit-grad-earns-1-5-crore-in-us#comments</comments><guid isPermaLink="false">797d56e8-5e20-431f-9d01-38285d36ea49</guid><pubDate>Tue, 11 Aug 2026 11:40:38 +0000</pubDate><atom:updated>2026-08-11T11:40:38.344Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>software engineer,AI,aditya,University at Buffalo,மென்பொறியார்,யுனிவர்சிட்டி அட் பஃப்பலோ,ஆதித்யா அரேபல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0vbgdcuu/aditya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Software Engineer  Aditya 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0vbgdcuu/aditya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐ.ஐ.டி-யில் பட்டம் பெற்ற சாய் வெங்கட ஆதித்யா அரேபல்லி, அமெரிக்காவில் உள்ள அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளத்தில் மென்பொறியாளராகப் (Software Engineer) பணியில் சேர்ந்து அசத்தியுள்ளார்.</p><h2>தொட<strong>க்கக் கல்வி</strong> </h2><p>2022-இல் ஐ.ஐ.டி தார்வாடில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.டெக் முடித்த ஆதித்யா, பெங்களூரில் உள்ள 'ரிவர்பெட் டெக்னாலஜி' நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.13 லட்சம் சம்பளத்தில் பணியில் சேர்ந்தார்.</p><h2>ஏ.<strong>ஐ துறையை</strong> நோக்கிய மாற்றம்</h2><p>செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அசுர வளர்ச்சியைக் கண்டு, தனது நிலையான வேலையைத் துறந்து அமெரிக்காவிலுள்ள 'யுனிவர்சிட்டி அட் பஃப்பலோ' பல்கலைக்கழகத்தில் AI பாடப்பிரிவில் எம்.எஸ் பட்டம் பயின்றார்.</p><h2>பயிற்சியும் <strong>வெற்</strong>றியும்</h2><p>மேல்படிப்பின் போது கோடிங், தயாரிப்புகள் உருவாக்கம் மற்றும் சான்றிதழ் பயிற்சிகளில் கவனம் செலுத்திய இவர், படிப்பை முடித்ததும் சீட்டிலில் உள்ள அமேசான் AWS கிளையில் ரூ.1.5 கோடி பேக்கேஜில் வேலை வாய்ப்பைப் பெற்றார்.</p><h2>குடும்பப் <strong>பின்ன</strong>ணி</h2><p>ஒரு புகைப்படக் கலைஞரின் மகனான ஆதித்யாவின் இந்த மகத்தான வெற்றி குறித்து அவரது தந்தை நெகிழ்ச்சியுடன் கூறுகையில், "ஒரு புகைப்படக் கலைஞராக எனது மகனுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்; இன்று என் மகன் என் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டான்" எனக் கூறியுள்ளார். துணிச்சலாக வேலையை விட்டுவிட்டு புதிய தொழில்நுட்பத்தைக் கற்ற ஆதித்யாவின் இந்த சாதனை பயணம் சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனைக்குரிய குற்றம் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/president-murmu-gives-assent-to-bill-criminalising-insult-to-vande-mataram</link><comments>https://www.maalaimalar.com/news/national/president-murmu-gives-assent-to-bill-criminalising-insult-to-vande-mataram#comments</comments><guid isPermaLink="false">da75ec9a-19ca-4bc6-ae9a-b7dce4b33bbf</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:58:55 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:58:55.947Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central govt,வந்தே மாதரம்,Vande Mataram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m1oxlf8y/Murmu11082026.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜனாதிபதி திரவுபதி முர்மு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m1oxlf8y/Murmu11082026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசியப் பாடலான வந்தே மாதம் பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>தேசிய கௌரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026 எனும் மசோதா, மக்களவையில் கடந்த மாதம் 30-ந்தேதி நிறைவேற்றப்பட்டது. அதற்கு முந்தைய நாள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.</p><p>தற்போது ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளதால், தேசிய கீதமான "ஜன கண மன" பாடலுக்கு வழங்கப்படும் கவுரவம், தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலுக்கு கொடுக்கப்படும்.</p><p>அரசு நிகழ்ச்சிகள் உள்ப்ட எந்தவொரு நிகழ்ச்சியிலும் ஜன கண மன பாடல் பாடப்படுவதற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும்.</p><p>வருகிற 15-ந்தேதி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றி உரையாற்ற இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக முழுமையாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு, அதன்பின் ஜன கண மன பாடல் பாடப்படும்.</p><h2>மூன்று ஆண்டுகள் வரை சிறை</h2><p>தேசிய கௌரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026இன்படி, தேசிய சின்னங்களான தேசியக் கொடி, அரசமைப்புச் சட்டம், தேசிய கீதம் உள்ளிட்டவற்றுடன் தேசியப் பாடலான வந்தே மாதரத்தை அவமதிப்பதையும் தண்டனைக்குரிய குற்றமாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேசிய கீதத்துக்கு உள்ள அதே சட்டபூர்வ பாதுகாப்பை தேசியப் பாடலுக்கும் வழங்கும் புதிய மசோதாவின்படி, வந்தே மாதரம் பாடல் பாடுவதைத் தடுப்பது, இடையூறு விளைவிப்பது உள்ளிட்ட செயல்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.</p><p>வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களையும் பாட வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் பெயர் நீக்கம்... வீடியோ வெளியிட்ட பிரகாஷ் ராஜ்!</title><link>https://www.maalaimalar.com/news/national/name-removed-from-sir-operation-prakash-raj-releases-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/name-removed-from-sir-operation-prakash-raj-releases-video#comments</comments><guid isPermaLink="false">d978cb63-ffee-4308-ba7e-e3af33e33d62</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:36:06 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:36:06.932Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Sir,பெங்களூரு,bengaluru,பிரகாஷ் ராஜ்,Actor Prakash Raj,சிறப்பு தீவிரத் திருத்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/inv2b8m7/New-Project-2026-08-11T160532.450.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் பெயர் நீக்கம்... வீடியோ வெளியிட்ட பிரகாஷ் ராஜ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/inv2b8m7/New-Project-2026-08-11T160532.450.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெங்களூரில் நடைபெற்ற சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்குப் பிறகு தனது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ்.,</p><p>“பெங்களூரு தொகுதியில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு பெயர் நீக்கம் செய்யப்பட்ட சுமார் 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன். நான் பிறந்து, வளர்ந்து, படித்து, இதே தொகுதியில் எம்பி வேட்பாளராகவும் போட்டியிட்டேன். அப்படிப்பட்ட எனது பெயர் நீக்கப்பட்டுள்ளது ஒரு நல்ல நகைச்சுவை, இல்லையா?” என வீடியோவில் பேசியுள்ளார். </p><p>2019 மக்களவைத் தேர்தலில், பிரகாஷ் ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார் .</p><p>இதே ஆண்டு பிரகாஷ் ராஜ் கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளதாக பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. </p><p>இந்திய தேர்தல் விதிமுறைகளின்படி ஒரு நபர் ஒரு தொகுதியில் மட்டுமே வாக்காளராக இருக்க முடியும் என்பதால், இந்த வழக்கில் நேரில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக ஜூன் 2026-இல் பிணையில் வரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் ஜூலை மாதம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமின் பெற்றார்.</p><h2>எஸ்ஐஆர் பணிகள்</h2><p>பெங்களூருவில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் ஆகஸ்ட் 17 அன்று முடிவடைகிறது. அதனைத்தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல்கள் ஆகஸ்ட் 24 அன்று வெளியிடப்படும். அதனையடுத்து மீண்டும் பெயர் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.</p><p>இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27 அன்று வெளியிடப்படும்.</p>]]></content:encoded></item><item><title>&apos;கேரளா&apos; இனி &apos;கேரளம்&apos;: மக்களவையில் வரலாற்று சிறப்புமிக்க மசோதா நிறைவேற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-to-keralam-name-change-bill-cleared-in-lok-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-to-keralam-name-change-bill-cleared-in-lok-sabha#comments</comments><guid isPermaLink="false">267d6d02-ae48-45e8-aa60-7764d5ab71e6</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:26:45 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:26:45.395Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,kerala,Lok Sabha,கேரளம்,கேரளா,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/dwpu8oef/lok-sabha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Lok Sabha ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/dwpu8oef/lok-sabha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களவையில் கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026' குரல் வாக்கெடுப்பு மூலம் விவாதமின்றி அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டது.  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குப் பதிலாக, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் இந்த மசோதாவை மக்களவையில் கொண்டு வந்தார். எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் எதிர்ப்புகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.</p><h2>சட்டம<strong>ன்றத் தீர்மான</strong>ம்</h2><p>மலையாள மொழியில் இந்த மாநிலம் எப்போதுமே 'கேரளம்' என்றே அழைக்கப்படுகிறது. இதையேற்கும் வகையில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று கேரள சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.</p><h2>அரசியல<strong>மைப்புத் திரு</strong>த்தம்</h2><p>இந்திய அரசியலமைப்பின் உறுப்பு 3 விதிகளின்படி, மாநிலங்களின் பெயரை மாற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. இதன் கீழ், அரசியலமைப்பின் முதலாவது அட்டவணையில் 'கேரளா' என்றிருப்பதை 'கேரளம்' என திருத்த இம்மசோதா வழிவகை செய்கிறது.</p><h2>மத்திய <strong>கேபின</strong>ட் ஒப்புதல்</h2><p>2026 பிப்ரவரி மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்தது. உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இம்மசோதாவை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியினரின் தொடர் அமளி மற்றும் கூச்சல்-குழப்பத்திற்கு இடையே எவ்வித விவாதமும் இன்றி இம்மசோதா நிறைவேறியது.</p><p>அடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அதன்பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றவுடன் பெயர் மாற்றம் அதிகாரப்பூர்வமாக அரசாங்க இதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வரும்.</p>]]></content:encoded></item><item><title>மழைக் காலத்தில் பரவும் &apos;பன்றிக் காய்ச்சல்&apos;.. யார் யாருக்கு பாதிப்பு அதிகம்? மருத்துவர்கள் தரும் பகீர் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/swine-flu-surges-in-delhi-during-monsoon-who-is-most-at-risk</link><comments>https://www.maalaimalar.com/news/national/swine-flu-surges-in-delhi-during-monsoon-who-is-most-at-risk#comments</comments><guid isPermaLink="false">a18c39de-dd90-48bf-9849-d313aa09412f</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:34:42 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:34:42.111Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dengue,swine flu,Covid-19,கோவிட்-19,டெங்கு,H1N1,பன்றிக் காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0qtzfl94/swine-flu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Swine flu-H1N1 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0qtzfl94/swine-flu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பிராந்தியங்களில் H1N1 இன்ஃப்ளூயன்சா (பன்றிக் காய்ச்சல்) பாதிப்பு இந்த பருவமழைக் காலத்தில் வழக்கத்திற்கு மாறாக மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வெறும் 229 ஆக இருந்த H1N1 பாதிப்புகள், இந்த ஆண்டு '1,344' ஆக உயர்ந்து கிட்டத்தட்ட 6 மடங்கு அதிகரித்துள்ளது. டெல்லியின் முன்னணி மருத்துவமனைகளின் வெளிநோயாளிகள் பிரிவில் தினமும் 7 முதல் 10 நோயாளிகள் வரை H1N1 அறிகுறிகளுடன் சேர்க்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>திடீர் உ<strong>யர்வுக்குக் காரணம் என்ன?</strong> </h2><p>மழைக்காலத்தில் ஏற்படும் திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் காற்றில் அதிகரிக்கும் ஈரப்பதம் வைரஸ் கிருமிகள் வேகமாகப் பரவுவதற்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றன. கடந்த ஆண்டு டெல்லியில் H3N2 வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு H1N1 டைப்-ஏ (Influenza A) வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. டெங்கு, கோவிட்-19 மற்றும் வழக்கமான சளி-காய்ச்சல் அறிகுறிகளும் H1N1 அறிகுறிகளும் ஒரே மாதிரியாக இருப்பதால், தொடக்கத்தில் பலர் இதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.</p><h2><strong>அறிகுறிக</strong>ள்</h2><p>வைரஸ் தொற்று ஏற்பட்ட 1 முதல் 4 நாட்களுக்குள் பின்வரும் அறிகுறிகள் தென்படத் தொடங்கும்.</p><p>*திடீர் அதிக காய்ச்சல்: தணியாத காய்ச்சல் மற்றும் நடுக்கத்துடன் கூடிய குளிர்.</p><p>*சுவாசப் பிரச்சனைகள்: தொடர் வறட்டு இருமல், தொண்டை வலி, மூக்கு அடைப்பு மற்றும் மூக்கு ஒழுகுதல்.</p><p>*உடல் உபாதைகள்: கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, மிகுந்த உடல் சோர்வு.</p><p>*செரிமான பிரச்சனைகள்: குறிப்பாக குழந்தைகளிடம் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு.</p><h2>அதிக ஆ<strong>பத்து உள்ளவர்</strong>கள் </h2><p>பெரும்பாலோருக்கு இந்நோய் 3 முதல் 5 நாட்களில் தானாகவே சரியாகிவிட்டாலும், பின்வரும் பிரிவினருக்கு இந்நோய் நுரையீரல் அழற்சி அல்லது தீவிர மூச்சுத்திணறலாக மாற வாய்ப்புள்ளது.</p><p>•முதியவர்கள் &amp; குழந்தைகள்: 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட சிறு குழந்தைகள்.</p><p>•நாட்பட்ட நோயாளிகள்: நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதயம் மற்றும் சிறுநீரக நோயாளிகள்.</p><p>•கர்ப்பிணிப் பெண்கள்: கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மாறுபடுவதால் இவர்களுக்கு ஆபத்து அதிகம்.</p><p>•குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள்: புற்றுநோய் சிகிச்சை பெறுவோர் அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள்.</p><h2>உடனடி மரு<strong>த்துவ உதவி</strong> </h2><p>கீழ்க்கண்ட தீவிர அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவமனையை அணுக வேண்டும்:</p><p>* மூச்சு விடுவதில் சிரமம் அல்லது கஷ்டப்பட்டு மூச்சு வாங்குதல்.</p><p>* நெஞ்சுப் பகுதியில் தொடர்ச்சியான வலி அல்லது அழுத்தம்.</p><p>* உதடுகள், நகங்கள் அல்லது சர்மம் நீல நிறமாக மாறுதல் (ஆக்ஸிஜன் குறைபாடு).</p><p>* சளியில் ரத்தம் வருதல் அல்லது காய்ச்சல் குறையாமல் 5 நாட்களுக்கு மேல் நீடித்தல்.</p><p>* அதிகப்படியான மயக்கம் அல்லது குழப்பமான நிலை.</p><h2>த<strong>டுப்பு முறைக</strong>ள் </h2><p>•சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு குறைந்தது 20 வினாடிகள் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்.</p><p>•இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் 2-3 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கும்.</p><p>• மருத்துவரின் பரிந்துரை இன்றி தானாக ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது; ஏனெனில் H1N1 என்பது ஒரு வைரஸ் தொற்று.</p><p>•ஆபத்து பிரிவில் உள்ளவர்கள் ஆண்டுதோறும் போடும் 'Flu Vaccine' தடுப்பூசியை எடுத்துக்கொள்வது தீவிர பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமருக்கு புதிய இல்லம் கட்ட முடியும் என்றால் கிராமங்களில் புதிய பள்ளிகளைக் கட்ட முடியாதா?.. CJPயின் அடுத்த நகர்வை அறிவித்த அபிஜித் தீப்கே </title><link>https://www.maalaimalar.com/news/national/rural-govt-schools-campaign-cjp-launches-national-drive-to-improve-village-school-infrastructure</link><comments>https://www.maalaimalar.com/news/national/rural-govt-schools-campaign-cjp-launches-national-drive-to-improve-village-school-infrastructure#comments</comments><guid isPermaLink="false">60b61cf6-f2e9-4e2f-acb4-1d27c6757b8b</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:33:01 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:33:01.162Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசுப் பள்ளிகள்,government schools,CJP Protest,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/v1x07ijl/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே ]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/v1x07ijl/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிராமப்புற அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்காக 'காக்ரோச் ஜனதா கட்சி' (சிஜேபி) மற்றும் அதன் நிறுவனர் அபிஜித் திப்கே அறிவித்துள்ள தேசிய அளவிலான பிரச்சாரத்தின் முக்கியச் செய்திகள் தமிழில் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:  </p><p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள், மாணவர்களை ஒன்றுதிரட்டி கரப்பான் பூச்சி கட்சி ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்திய போராட்டம் மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததன் மூலம் வெற்றி பெற்றது. </p><p>இதைதொர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">சிஜேபியின் </a>அடுத்தகட்ட நகர்வு என்ன என எதிர்பார்க்கப்பட்டது. மகாராஷ்டிராவின் சத்திரபதி சாம்பாஜி நகரில் தன் வீட்டில் இருந்தபடி  சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே அமைப்பின் அடுத்தகட்ட செயல்திட்டத்தை தீட்டி வருகிறார். </p> <h2>ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு</h2><p>ஜார்கண்டில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நேற்று சட்டமன்றம் நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தடியடி நடத்தியும் அடக்குமுறையில் ஈடுபடத்தை அவர் கண்டித்துள்ளார்.</p><p>மேலும் முறைகேடு நடைபெற்ற ஜார்க்கண்ட் அரசு தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து நேற்று பேரணியில் காயம்பட்ட தலைவர் தேவேந்திரநாத் மாதோவுடன் வீடியோ காலில் அபிஜித் தீப்கே பேசினார்.</p> <h2>புதிய பிரச்சாரம்</h2><p>இந்நிலையில் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் அவலநிலையைப் போக்கவும், அவற்றின் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் சிஜேபி சார்பில் ல் ஆகஸ்ட் 15 முதல் தேசிய அளவிலான பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது.</p><p>வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில், கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி மற்றும் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பஞ்சாயத்து தலைவர்களும்பெற்றோர்களும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று அபிஜித் திப்கே கேட்டுக்கொண்டுள்ளார்.</p><h2> பிரதமர் இல்லம் </h2><p>மேலும் அவர் இதுகுறித்து தீப்கே தெரிவிக்கையில், "கடந்த 80 ஆண்டுகளாக கிராமப்புறப் பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.</p><p>புதிய நாடாளுமன்றக் கட்டடமும், பிரதமருக்கு புதிய இல்லமும் கட்ட முடிந்தது என்றால், கிராமப்புற விவசாயிகளின் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக புதிய பள்ளிகளைக் கட்ட முடியாதா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>கிராமப்புற பள்ளிகள்</h2><p>தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவின் ஹிங்கோலியில் உள்ள அரசுப் பள்ளியைச் சீரமைக்க உள்ளூர் பஞ்சாயத்து தலைவரிடம் கோரிக்கை வைக்கப் போவதாகத் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>பள்ளிகளைச் சிறப்பாக மேம்படுத்தும் பஞ்சாயத்து தலைவர்களின் புகைப்படங்களை சிஜேபியின் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு கௌரவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மின்சாரம், குடிநீர், கழிப்பறை மற்றும் சத்தான மதிய உணவு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>வசதிகள் இல்லாத பட்சத்தில் வீடியோ பதிவு செய்து, சிஜேபி வழங்கும் படிவத்தைப் பூர்த்தி செய்து contact@cockroachjantaparty.org என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி ஏழுமலையான் கோவில்: ரூ.900 கோடி திட்டங்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைக்கிறார்!</title><link>https://www.maalaimalar.com/news/national/chandrababu-naidu-to-open-rs-900-crore-projects-at-tirupati-seven-hills-temple</link><comments>https://www.maalaimalar.com/news/national/chandrababu-naidu-to-open-rs-900-crore-projects-at-tirupati-seven-hills-temple#comments</comments><guid isPermaLink="false">95c14bca-1c5b-4a5a-976c-ae5f4d903ead</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:16:26 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:16:26.196Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பதி,Tirumala M Tirupathi,mukesh ambani,ChandraBabu Naidu,andhrapradesh,Venkateswara Museum,AnantAmbani,Reliance Donation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/mhdxw92k/Chandrababu-Naidu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chandrababu Naidu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/mhdxw92k/Chandrababu-Naidu?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாகத் தொடங்க உள்ளது. </p><p>விழாவின் முதல் நாளன்று ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களைச் சமர்ப்பிக்கிறார். </p><p>இந்த வருகையின் போது, திருப்பதி மலையில் ரூ.900 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு புதிய அதிநவீன கட்டிடங்கள் மற்றும் வசதிகளை அவர் திறந்து வைக்க உள்ளார்.</p><h2><strong>திருப்பதி வெங்கடேஸ்வரா அருங்காட்சியகம்:</strong></h2><p>டி.சி.எஸ் நிறுவனத்தின் ₹145 கோடி நிதி மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புடன், உலகளாவிய பக்தர்களைக் கவரும் வகையில் அதிநவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது. </p><p>அதே வேளையில், உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டு தயாரிக்கத் தொடங்கி 310 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு லட்டு திருவிழாவில், ஆந்திர மாநில முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு அவர்கள் ஒரு சிறப்பு தங்க நாணயத்தை வெளியிடுகிறார்.</p><h2><strong>ஒரே நேரத்தில் 10,000 பக்தர்கள் தங்கும் பிரம்மாண்ட விடுதி!</strong></h2><p>திருப்பதிக்கு வரும் சாதாரண பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் சுமார் ரூ.600 கோடி இமாலய நிதிச் செலவில், ஒரே நேரத்தில் 10,000 பக்தர்கள் தங்கும் வகையிலான பிரம்மாண்ட புதிய விடுதிகள் வளாகம் திருமலையில் கட்டப்பட்டுள்ளது. </p><p>இந்த மாபெரும் விடுதி திறக்கப்படுவதன் மூலம் திருப்பதி மலையில் நிலவி வரும் தங்கும் அறைகளுக்கான தட்டுப்பாடு இனி பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆன்மீக நிதியுதவிகள்!</strong></h2><p>ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் ரூ.120 கோடி நிதியுதவியுடன் திருப்பதியில் ஒருங்கிணைந்த உயர் தொழில்நுட்ப சமையலறைகள் கட்டப்பட்டுள்ளதுடன், அவரது மகன் ஆனந்த் அம்பானி ரூ.27.5 கோடி மதிப்பில் நவீன மின்சார பஸ்களை திருமலைக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். </p><p>இந்த மின்சார பஸ்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ள நிலையில், இவற்றை இயக்குவதற்காக 50 புதிய பஸ் டிரைவர்கள் நியமிக்கப்பட்டு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன.</p><h2><strong>திருப்பதி உண்டியல் விவரம்:</strong></h2><p>திருப்பதி திருமலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 81,064 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ள நிலையில், இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் டோக்கன் பெற்று சுமார் 18 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்துள்ளனர். </p><p>மேலும் நேற்று 33,136 பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்தியுள்ளனர், பக்தர்களின் காணிக்கை மூலம் உண்டியல் வருவாயாக ரூ. 5.36 கோடி வசூலாகியுள்ளதுடன், சாதனை அளவாக 4.09 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>செங்கோட்டையில் எதிரொலிக்கும் &apos;வந்தே மாதரம்&apos;: 80-வது சுதந்திர தின விழாவில் அரங்கேறும் புதிய வரலாறு!</title><link>https://www.maalaimalar.com/news/national/red-fort-to-echo-vande-mataram-on-indias-80th-independence-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/red-fort-to-echo-vande-mataram-on-indias-80th-independence-day#comments</comments><guid isPermaLink="false">70c05b1d-cf11-4815-b57b-bbb5bdaa275c</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:06:48 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:06:48.881Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,Delhi Red Fort,செங்கோட்டை,பிரதமர் நரேந்திர மோடி,narendra  modi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/2abnbxlj/RED-FORT.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi Red Fort ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/2abnbxlj/RED-FORT.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் 80-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15, 2026 அன்று டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இவ்வாண்டு சுதந்திர தின விழாவில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களும் புதிய அம்சங்களும் இடம்பெறவுள்ளன.</p><h2>வந்தே மாத<strong>ரம் பாடலின் 150-</strong>வது ஆண்டு</h2><p>பங்கிம் சந்திர சட்டோபாத்யாயால் இயற்றப்பட்டு, இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு எழுச்சியூட்டிய 'வந்தே மாதரம்' தேசிய பாடல் உருவாக்கப்பட்டதன் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், வரலாற்றிலேயே முதன்முறையாக செங்கோட்டை மேடையில் இப்பாடல் முழுமையாகப் பாடப்படவுள்ளது.</p><h2>நிகழ்<strong>ச்சி நிரல்</strong></h2><p>பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டைக்கு வருகை தந்தவுடன் 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்படும். அதைத் தொடர்ந்து அவர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். உரைக்குப்பின் NCC மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மீண்டும் பாடலையும், தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாடுவர்.</p><h2><strong>மையக்கருத்து</strong> </h2><p>இந்த ஆண்டின் முக்கியக் கருப்பொருளாக 'வந்தே மாதரம் 150 ஆண்டுகள்' மற்றும் 'விகசித் பாரத் 2047-க்கான யுவ சக்தி' ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>வான்வெளி</strong> அணிவகுப்பு</h2><p>இந்திய விமானப்படையின் Mi-17 ஹெலிகாப்டர் 'வந்தே மாதரம் 150' என்ற பதாகையை ஏந்தி வந்து, விழா மைதானத்தில் உள்ள மக்கள் மீது பூக்களைத் தூவும். செங்கோட்டைக்கு எதிரே உள்ள ஞான்பாத் பகுதியில் 2,500 தேசிய மாணவர் படை மற்றும் 'மை பாரத்' தன்னார்வலர்கள் 'வந்தே மாதரம்' என்ற வார்த்தை வடிவில் நின்று சிறப்பிப்பர். வருகை தருபவர்கள் அனைவரும் உடன் சேர்ந்து பாடும் வகையில், அழைப்பிதழில் வந்தே மாதரம் பாடலின் வரிகள் முழுமையாக அச்சிடப்பட்டுள்ளன. </p><p>மேலும், 'சேவா தீர்த்தம்' மற்றும் 'தர்ம சக்கரம்' படங்களும் இடம்பெற்றுள்ளன. VIP கலாச்சாரத்தைக் குறைக்கவும், நீர் வளப் பாதுகாப்பை வலியுறுத்தவும், விருந்தினர்கள் அமரும் பகுதிகள் இந்தியாவின் முக்கிய ஏரிகளின் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.</p><h2>சிறப்<strong>பு விருந்தி</strong>னர்கள்</h2><p>சர்வதேச கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஒலிம்பியாட் 2026 போட்டிகளில் பதக்கம் வென்ற 19 மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக முதன்மை மேடையில் அமர வைக்கப்படுகின்றனர். இவர்களுடன் இளம் தொழில்முனைவோர்கள், 'ஸ்டார்ட்-அப்' அமைப்பாளர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள் உட்பட சுமார் 5,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர். </p><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஆகஸ்ட் 8 முதல் 15 வரை 343 இடங்களில் முப்படை மற்றும் பாதுகாப்புப் படைகளின் இசைக்குழுக்களின் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.5 லட்சம் பணத்தை வயலில் புதைத்துவிட்டு, எங்கு புதைத்தோம் என்பதை மறந்த விவசாயி.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/buried-cash-destroyed-by-termites-rajasthan-farmer-loses-5-lakh-as-banks-refuse-to-accept-damaged-notes</link><comments>https://www.maalaimalar.com/news/national/buried-cash-destroyed-by-termites-rajasthan-farmer-loses-5-lakh-as-banks-refuse-to-accept-damaged-notes#comments</comments><guid isPermaLink="false">23b3dc48-12b0-4249-9836-09c97ca8cb6b</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:12:46 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:12:46.473Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயி,Farmer,வைரல்,viral,bank,வங்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/dlj04xnt/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விவசாயி]]></media:title><media:description type="html"><![CDATA[ விவசாயி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/dlj04xnt/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருடர்கள் பயத்தால் பணத்தை வீட்டில் வைக்க முடியாமல் வயலில் புதைத்து வைத்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விவசாயி </a>ஒருவருக்குப் பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. </p><h2>விவசாயி</h2><p> ராஜஸ்தானை சேர்ந்த ஒரு விவசாயி, ஒரு வருடத்திற்கு முன்பு தனது நிலத்தை விற்றதன் மூலம் ரூ. 5 லட்சம் கிடைத்தது.</p><p>அந்தப் பணத்தைக் கொண்டு வீடு கட்ட நினைத்த அவர், வீட்டில் வைத்தால் திருடு போய்விடும் என்ற பயத்திலும், வீண் செலவு ஆகக் கூடாது என்பதற்காகவும் அப்பணத்தை அப்போதே ஒரு பாலிதீன் பையில் சுற்றி வயலில் குழிதோண்டிப் புதைத்து வைத்தார்.</p><p>ஒரு வருடத்திற்கு பின் பணத்தை  மீண்டும் எடுக்க நினைத்த அவர், மதுப் பழக்கம் மற்றும் ஞாபக மறதி காரணமாக எந்த இடத்தில் பணத்தை புதைத்து வைத்தோம் என்பதை அந்த விவசாயி மறந்துவிட்டார். </p><p>வயலில் பலமுறை தேடியும் பணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.</p><p>இறுதியில் தனது மனைவி மற்றும் மகனிடம் விஷயத்தைக் கூறவே, அவர்களும் வயலின் பல இடங்களில் தோண்டித் தேடிப் பார்த்தனர். இருப்பினும் பணம் கிடைக்கவில்லை.</p> <h2>கிடைத்தது எப்படி?</h2><p>சமீபத்தில் மழைக்கால சாகுபடி பணிகளுக்காக வயலைத் தயார் செய்து, வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, விவசாயியின் மனைவிக்கும் மகனுக்கும் அந்தப் பாலிதீன் பை கிடைத்தது.</p> <h2>அடுத்த அதிர்ச்சி</h2><p>பையைத் திறந்து பார்த்த போது, உள்ளிருந்த ரூபாய் நோட்டுகள் முழுவதையும் கரையான்கள் அரித்துச் சின்னா பின்னமாக்கியிருந்தன.</p><p>சேதமடைந்த நோட்டுகளையாவது மாற்றிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில், உள்ளூரில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு சென்றுள்ளார்.</p><p>ஆனால், நோட்டுகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், அவற்றைப் பெற்றுக் கொள்ள வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.</p><p>அதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை வங்கி கிளையை அணுகியும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.</p>]]></content:encoded></item><item><title>அசாம் - அருணாச்சல பிரதேச எல்லைப் பிரச்சனை.. துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் காயம் - நால்வர் கவலைக்கிடம்</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-arunachal-border-firing-18-injured-and-4-critical-in-land-dispute-clash</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-arunachal-border-firing-18-injured-and-4-critical-in-land-dispute-clash#comments</comments><guid isPermaLink="false">2f50362f-9136-4770-9cc4-e16cc35ce989</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:57:15 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:57:15.960Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,அசாம்,Assam,அருணாச்சல பிரதேசம்,Arunachal Pradesh,shooting incident</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/kuceq0lo/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அசாம் - அருணாச்சல பிரதேச எல்லை]]></media:title><media:description type="html"><![CDATA[ அசாம் - அருணாச்சல பிரதேச எல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/kuceq0lo/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/assam">அசாமின் </a>தேமாஜி மாவட்டம்  அருணாச்சலப் பிரதேச எல்லையில் அமைந்துள்ளது. </p><p>தேமாஜி மாவட்டத்தில் கோகாமுக் வருவாய் வட்டத்திற்குட்பட்ட மின்மாங் படாட்டி என்ற பகுதியில், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக இரு மாநில எல்லைக் கிராம மக்களுக்கு இடையே நீண்டகாலமாக தகராறு இருந்து வந்தது.</p><h2>துப்பாக்கிச்சூடு </h2><p>இந்நிலையில் நேற்று அருணாச்சலப் பிரதேச பகுதியிலிருந்து வந்த மர்ம நபர்கள், அசாம் கிராம மக்களை நோக்கிக் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.</p><p>இந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 18 பேரும் உடனடியாக கோகாமுக் கிராமப்புற மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.  இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. </p><p>அவர்கள் மேல் சிகிச்சைக்காக திப்ரூகரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p> <h2>அசாம் முதல்வர் விளக்கம்</h2><p>இச்சம்பவத்திற்கு பிறகு பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "அசாம் எல்லைப் பகுதியில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>அசாமின் ஒரு அங்குல நிலத்தைக் கூட இழக்கக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இரு மாநிலத் தலைமைச் செயலாளர்களும், டிஜிபிக்களும் பேசிச் சூழலைத் தணித்து வருகின்றனர்" என்றார்.</p><p>அசாம் கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு அருணாச்சலப் பிரதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பப்பட்டுள்ளார்.</p> <h2>எல்லைப் பிரச்சினை</h2><p>அசாம் - அருணாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே 804 கி.மீ நீளமுள்ள எல்லைப் பகுதி உள்ளது.</p><p>சுதந்திரத்திற்குப் பின் வடகிழக்கு மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்ட போது இந்த எல்லைப் பிரச்சினை தொடங்கியது.</p><p>அருணாச்சலப் பிரதேசம் 1987இல் தனி மாநில அந்தஸ்து பெற்ற பிறகு, முத்தரப்புக் குழு அளித்த பரிந்துரைகளை அசாம் ஏற்க மறுத்ததால், இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.</p> <p>ஜூலை 29 அன்று அசாம் சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட தகவலின்படி, அசாமின் 7 மாவட்டங்களில் உள்ள 16,144 ஹெக்டேர் நிலம் அருணாச்சலப் பிரதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.</p><p>அதேவேளையில் அருணாச்சலப் பிரதேசமும் 858 சதுர கி.மீ நிலத்திற்கு உரிமை கோரி வருகிறது.</p><p>இச்சிக்கலை தீர்க்க ஜூலை 15, 2022 அன்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா கண்டும் 'நாம்சாய் பிரகடனத்தில்' கையெழுத்திட்டபோதிலும் சிக்கல் தீரவில்லை.</p>]]></content:encoded></item><item><title>9 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த தலைவர் மருத்துவமனையில் அனுமதி - மாணவர்கள் மீது அடக்குமுறை - ஜார்க்கண்டில் போராட்டம் 
தீவிரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-protest-intensifies-jlkm-chief-hospitalized-after-hunger-strike-over-jpsc-jssc-paper-leak</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-protest-intensifies-jlkm-chief-hospitalized-after-hunger-strike-over-jpsc-jssc-paper-leak#comments</comments><guid isPermaLink="false">4a6ade6e-369a-4c9f-8cdf-e5407388c29a</guid><pubDate>Tue, 11 Aug 2026 01:03:40 +0000</pubDate><atom:updated>2026-08-11T01:03:40.283Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜார்கண்ட்,Jharkhand,மாணவர்கள் போராட்டம்,student protest,question paper leak,வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/o53dckej/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தேவேந்திர நாத் மஹதோ]]></media:title><media:description type="html"><![CDATA[ தேவேந்திர நாத் மஹதோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/o53dckej/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்ட் மாநில அரசின் JPSC, JSSC  தேர்வாணைய வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை  கண்டித்து நடந்து வரும் <a href="https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-row-student-protests-escalate-ed-launches-probe">மாணவர் போராட்டம்</a> தீவிரமடைந்துள்ளது. </p><h2>மருத்துவமனையில் அனுமதி </h2><p>இந்நிலையில் ராஞ்சியில் விளையாட்டு மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் JLKM என்ற அரசியல் கட்சியின் தலைவர் தேவேந்திர நாத் மஹதோ 9 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்திற்கு  பின் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p> <h2>சட்டமன்றம் நோக்கி பேரணி</h2><p>முன்னதாக நேற்று பழைய சட்டமன்றக் கட்டிடத்திலிருந்து புதிய சட்டமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியில் பங்கேற்ற போது, தேவேந்திர நாத் மஹதோவின் இரத்த சர்க்கரை அளவு திடீரெனக் கடுமையாகக் குறைந்ததால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.</p><p>தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேரணியின் போது காவல்துறையினர் நடத்திய தடிஅடியிலும் அவர் காயமடைந்துள்ளதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.</p><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் பேசிய மஹதோ, "அரசு தடிகள் மற்றும் துப்பாக்கிகள் மூலம் ஆட்சியை நடத்த முடியாது. மாணவர்களின் குரலை ஒடுக்க நினைத்தாலும் இந்த போராட்டம் தொடரும்" எனக் கூறினார்.</p> <h2>தடிஅடி</h2><p>பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சட்டமன்றத்தின் 1-வது கேட் வரை சென்று அமர்வில் ஈடுபட்டனர்.</p><p>அவர்களை கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகள், தண்ணீர் பீரங்கிகள் மற்றும் தடிஅடியைப் பயன்படுத்தினர். இதில் பல பெண் மாணவர்கள் உட்படப் போராட்டக்காரர்கள் சிலர் காயமடைந்தனர்.</p><p>அதேசமயம், போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதில் 4 காவலர்களும் காயமடைந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>கோரிக்கைகள்</h2><p>JPSC மற்றும் JSSC தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ அல்லது ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். முறைகேடு நடந்த அனைத்துத் தேர்வுகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதில் பேச்சுவார்த்தைக்கு பின் JPSC நடத்திய தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்ட நிலையில் JSSC-CGL தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.</p><h2>கைது</h2><p>இதனிடையே ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் JPSC தலைவர் எல். கியாங்டேவை ஜார்க்கண்ட் சி.ஐ.டி. கைது செய்துள்ளதாக மாநில புலனாய்வு அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p>  ]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: அமலாக்கத்துறை விசாரணை தொடக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-row-student-protests-escalate-ed-launches-probe</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-row-student-protests-escalate-ed-launches-probe#comments</comments><guid isPermaLink="false">6e22e6c6-c0bd-499c-b339-d470fecf8e9e</guid><pubDate>Mon, 10 Aug 2026 23:14:21 +0000</pubDate><atom:updated>2026-08-10T23:14:21.987Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Jharkhand,போராட்டம்,ஜார்க்கண்ட்,ED,அமலாக்கத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mthxawa2/Jharkhand-Protest-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mthxawa2/Jharkhand-Protest-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">ஜார்க்கண்ட்</a> தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று (திங்கள்கிழமை) தீவிரமடைந்தது.</p><p>மாணவர்கள் சட்டமன்றத்தை நோக்கி பேரணி செல்வதை தடுக்க, காவல்துறையினர் நீரை பீய்த்து அடித்தும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை தடுத்தனர். அதேவேளையில், இந்த "முறைகேடுகள்" தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/topic/ed">அமலாக்கத்துறை</a> பணமோசடி விசாரணையையும் தொடங்கியுள்ளது.</p><p>ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் ஜே.பி.எஸ்.சி. தலைவர் எல். கியாங்டேவை ஜார்க்கண்ட் சி.ஐ.டி. கைது செய்துள்ளதாக மாநில புலனாய்வு அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><h2>மோதல்:</h2><p>மாநிலத் தலைநகர் ராஞ்சியில், மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வந்த சட்டமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கான வேலை தேடுபவர்கள் பேரணியாக சென்றபோது, ​​பல தடுப்புகளை மீறிச் சென்றதால், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>காவல்துறை நடவடிக்கையில் பெண்கள் உட்பட பல மாணவர்கள் காயமடைந்ததாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். அதே நேரத்தில், கல் வீச்சில் 14 அதிகாரிகள் காயமடைந்ததாகவும், "அமைதியான" போராட்டங்களை கலைத்த சமூக விரோதிகளை அடையாளம் காண சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு செய்யப்படும் என்றும் ராஞ்சி எஸ்எஸ்பி கூறினார்.</p><h2>முதல்வர் வேண்டுகோள்:</h2><p>ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்கள் குறைகளை "பேச்சுவார்த்தை மற்றும் நம்பிக்கையின்" மூலம் தீர்க்க வேண்டும் என நேற்று (திங்கள் கிழமை) மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். மேலும், அரசியல் ஆதாயங்களுக்காக போராட்டக்காரர்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சியான பா.ஜ.க. முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p>சட்டமன்றத்தை நோக்கிய பேரணி தொடங்குவதற்கு முன்பு சோரனின் வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க., மாணவர்களுக்கு எதிரான "வன்முறை பிரயோகத்தைக்" கண்டித்து இன்று (செவ்வாய் கிழமை) மாநிலம் தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.</p><p>அமைதியான போராட்டங்கள் வன்முறையால் எதிர்கொள்ளப்படக்கூடாது என்று கூறிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்தார். ஜார்க்கண்டில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியின் கூட்டாளியாக காங்கிரஸ் உள்ளது.</p><p>"அமைதியான முறையில் போராட்டம் நடத்த மாணவர்களுக்கு உரிமை உண்டு, பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வுகளைக் கொண்டுவரும்" என்று கூறிய காங்கிரஸ் தலைவர், மாணவர்களின் குறைகளை விரைவில் தீர்க்குமாறு ஜார்க்கண்ட் அரசை வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item></channel></rss>