<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 09 Sep 2026 16:15:51 +0000</lastBuildDate><item><title>மதிய உணவு வழங்குவதில் தகராறு: தலைமை ஆசிரியரை அடித்து உதைத்த மாணவர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">bf69ddd9-b72d-4a01-bdd6-a6366aa6c6c6</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:43:40 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:43:40.971Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,west bengal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/e1bs0d6p/Students0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேற்கு வங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/e1bs0d6p/Students0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி 150 ஆண்டு கால பழமையான பள்ளிக் கூடம் உள்ளது. இந்த பள்ளிக் கூடத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆசிரியர் தினத்தன்று சிறப்பு மதிய உணவு வழங்கப்படும்.</p><p>அதன்படி நேற்று உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது போதுமான சாப்பாடு மற்றும் சிக்கன் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் மாணவர்கள் கோபம் அடைந்தனர்.</p><p>அப்போது சாப்பாடு வழங்கும் இடத்திற்கு தலைமை ஆசிரியர் வந்துள்ளார். அவருக்கும் மாணவர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தலைமை ஆசிரியரை கீழே தள்ளிவிட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.</p><p>அதோடு மட்டுமல்லாமல் தலைமை ஆசிரியர் அறை, உணவு தயார் செய்யப்படும் அறை ஆகியவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க, உடனடியாக அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p>இது தொடர்பாக மாவட்ட பள்ளிகள் ஆய்வாளர் தலைமை ஆசிரியர் அறை, மதிய உணவு தயார் செய்யப்பட்ட இடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்துள்ளார்.</p><p>இது பள்ளிக் கூடத்தின் உள் விவகாரம். விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது இதுகுறித்து சொல்ல முடியாது என்றார்.</p><p>இந்த பள்ளிக்கூடம் 1876-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் தீபக் பர்மன், பள்ளிக்கூடம் சென்று ஆய்வு செய்வார் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரக்கோணம்- ரேணிகுண்டா இடையே 3, 4 ரெயில் வழித்தடத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!</title><link>https://www.maalaimalar.com/news/national/approval-for-arakkonam-renigunta-3rd-4th-rail-line</link><comments>https://www.maalaimalar.com/news/national/approval-for-arakkonam-renigunta-3rd-4th-rail-line#comments</comments><guid isPermaLink="false">0f3d7eaf-103b-461b-aa7b-a2b5263ce33d</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:18:28 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:18:28.048Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில்,indian railways,Ministry of Railways,அஸ்வினி வைஷ்ணவி,அரக்கோணம் ரேணிகுண்டா</media:keywords><media:content height="423" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/5vhqaj6y/images-3.jfif" width="723"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arakkonam – Renigunta ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/5vhqaj6y/images-3.jfif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2>ஒப்புதல் </h2><p>தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள 17 மாவட்டங்களை உள்ளடக்கிய ஐந்து பல்தடத் திட்டங்களுக்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்திய ரெயில்வேயின் தற்போதைய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/5-passenger-train-including-chennai-central-sulurpet-cancelled">ரெயில் </a>பாதை வலையமைப்பு சுமார் 540 கி.மீ. அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திட்டம் </h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/har-ghar-tiranga-campaign-pm-narendra-modi-appeal-to-nation">நரேந்திர மோடி</a> தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் ரெயில்வே அமைச்சகத்தின் சுமார் ரூ. 10,021 கோடி மொத்த மதிப்பிலான ஐந்து திட்டங்களுக்கு இன்று ஒப்புதலை வழங்கியுள்ளது </p><p>அதன்படி அரக்கோணம் – ரேணிகுண்டா 3வது மற்றும் 4வது வழித்தடம் – 77 கி.மீ.</p><p>வைட்ஃபீல்ட் – பங்காரப்பேட்டை 3வது மற்றும் 4வது வழித்தடம் – 47 கி.மீ.</p><p>ஓசூர் – ஓமலூர் இரட்டிப்புப் பாதை – 147 கி.மீ.</p><p>சேலம் - கரூர் - திண்டுக்கல் இரட்டிப்பு - 159 கி.மீ ஆகிய வழித்தடங்களுக்கு ஒப்புதலானது வழங்கப்பட்டுள்ளது </p> <h2>தற்சார்பு </h2><p>இந்த புதிய வழித்திட்டங்கள் மூலம் முறையான செயல்பாடுகளை செயல்படுத்தவும், நெரிசலை குறைக்கவும், இந்த புதிய திட்டமானது பிரதமர் மோடியின் புதிய இந்தியா <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-hails-visionary-budget">தொலைநோக்கு</a> பார்வைக்கு இணங்க அமைந்துள்ளன. இந்த வழித்தடங்கள் அமைவதன் மூலம் அப்பகுதிகளில் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில்  வாய்ப்புகளை உருவாக்கி தற்சார்பு நிலையை இது உருவாக்குகிறது.</p><h2>மேம்பாடு </h2><p>குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 17 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த ஐந்து திட்டங்களுக்கான அறிவிப்பானது  இந்திய ரெயில்வேயின் தற்போதைய வலையமைப்பை சுமார் 540 கி.மீ. அளவுக்கு அதிகரிக்கும். </p><p>மேலும் அங்கீகரிக்கப்பட்ட இந்த பலவழித் திட்டங்கள், சுமார் 52 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஏறத்தாழ 2,121 கிராமங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும். </p><h2>வழித்தடம் </h2><p>இந்த புதிய வழித்தடங்கள் அமைவதன் மூலம், திருப்பதி, சுப்பிரமணிய சுவாமி கோயில் (திருத்தணி), ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கோயில் (திருச்சானூர்), கோட்டிலிங்கேஸ்வர தேவாலயம், ஸ்ரீ சீதி பைரவேஸ்வர சுவாமி கோயில், பங்காரு திருப்பதி, </p><p>கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ், ஹோகன்னக்கல் ஃபார்டால்ஸ், ஹோகன்னக்கல், ஹோகன்னக்கல் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு ரெயில் இணைப்பை மேம்படுத்த வழிவகை செய்கிறது. </p><p>மலைகள், சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், நாமக்கல் கோட்டை, கல்யாண பசுபதேஸ்வரர் கோவில், யாதகிரிகுட்டா கோவில், போங்கீர் கோட்டை, சுரேந்திரபுரி, ஸ்வர்ணகிரி கோவில் மற்றும் நிலக்கரி, சிமெண்ட், இரும்பு மற்றும் எஃகு, கொள்கலன்கள், வாகனங்கள், உணவு தானியங்கள், பெட்ரோலியப் பொருட்கள், உரங்கள் போன்ற சரக்குகளின் போக்குவரத்திற்கு இந்த புதிய வழித்தடமானது முக்கியமான ஒன்றாக அமைய இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சரிவை சந்தித்த பங்குச்சந்தை: ஐ.டி., நிதிச்சேவை நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி..!</title><link>https://www.maalaimalar.com/news/national/sensex-tumbles-813-points-to-3-month-low-amid-escalating-tensions-in-west-asia-oil-price-surge</link><comments>https://www.maalaimalar.com/news/national/sensex-tumbles-813-points-to-3-month-low-amid-escalating-tensions-in-west-asia-oil-price-surge#comments</comments><guid isPermaLink="false">d0cbe68f-de38-4704-8f0a-2c6772e46fb6</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:00:46 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:00:46.106Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>share market,NIFTY,BSE Sensex</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/91cuz68r/Sharemarket0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பங்குச் சந்தை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/91cuz68r/Sharemarket0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் சென்செக்ஸ் 813 புள்ளிகள் சரிந்து கடந்த 3 மாதங்களில் குறைந்த புள்ளிகளை எட்டின.</p><p>மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது. இதன் தாக்கத்தாலும், தகவல் தொழில்நுட்பம் (IT), நுகர்வோர் பொருட்கள் (FMCG), நிதிச் சேவைகள் மற்றும் எண்ணெய் &amp; எரிவாயு துறைப் பங்குகள் மீதான விற்பனை அழுத்தத்தாலும், முக்கிய பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிந்து, 813 புள்ளிகள் குறைந்து மூன்று மாதக் குறைந்தபட்ச நிலையை அடைந்தது. நிஃப்டி குறியீடு 23,450-க்குக் கீழே சென்று நிறைவடைந்தது.</p><p>30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 813.35 புள்ளிகள் அல்லது 1.08 சதவீதம் சரிந்து, இன்றைய குறைந்தபட்ச அளவான 74,764.23-ல் முடிவடைந்தது. இது கடந்த மூன்று மாதங்களில் மிகக் குறைந்த நிறைவு நிலையாகும். கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி 73832 புள்ளியாக இருந்தது.</p><h2>நிஃப்டி</h2><p>50 பங்குகளைக் கொண்ட என்எஸ்இ (NSE) நிஃப்டி 203.60 புள்ளிகள் அல்லது 0.86 சதவீதம் சரிந்து, மூன்று மாதக் குறைந்தபட்ச அளவான 23,431.50-ல் முடிவடைந்தது. இக்குறியீடு இதற்கு முன் ஜூன் 11 அன்று இதே அளவை ஒட்டிய நிலையில் முடிவடைந்திருந்தது.</p><p>சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில், ஹெச்.சி.எல். டெக் (HCL Tech) அதிகபட்சமாக 4.55 சதவீதம் சரிந்தது. இன்ஃபோசிஸ் (Infosys) 4.43 சதவீதமும், டெக் மஹிந்திரா (Tech Mahindra) 3.87 சதவீதமும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) 2.26 சதவீதமும் சரிந்தன. HDFC வங்கி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவையும் சரிவைச் சந்தித்த முக்கிய நிறுவனங்களாகும்.</p><h2>அதானி போர்ட்ஸ்</h2><p>அதானி போர்ட்ஸ் (Adani Ports) 3.67 சதவீதம் உயர்ந்து அதிக லாபம் ஈட்டிய நிறுவனமாகத் திகழ்ந்தது. டாடா ஸ்டீல், ட்ரெண்ட் (Trent) மற்றும் என்டிபிசி (NTPC) ஆகியவையும் லாபம் ஈட்டிய நிறுவனங்கள் ஆகும்.</p><p>உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அளவுகோலான ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 2.67 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 100.5 அமெரிக்க டாலராக அதிகரித்தது.</p><p>சந்தை தரவுகளின்படி, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) செவ்வாயன்று ரூ. 123.19 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றனர்.</p><p>நேற்று சென்செக்ஸ் 555.23 புள்ளிகள் (0.73 சதவீதம்) சரிந்து 75,577.58 புள்ளிகளில் நிலைபெற்றது. நிஃப்டி 144.05 புள்ளிகள் (0.61 சதவீதம்) சரிந்து 23,635.10 புள்ளிகளில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தலின்போது பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பெற்ற நிதி எவ்வளவு?</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-received-rs-1473-crore-during-last-5-state-polls-over-7-times-more-than-congress</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-received-rs-1473-crore-during-last-5-state-polls-over-7-times-more-than-congress#comments</comments><guid isPermaLink="false">7b85257b-2a2a-4d70-b822-98ace2b5a168</guid><pubDate>Wed, 09 Sep 2026 11:28:19 +0000</pubDate><atom:updated>2026-09-09T11:28:19.840Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,Election Commission of India</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/38xezqrp/BJPCogress.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/38xezqrp/BJPCogress.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தலின்போது, கட்சி நிதி (நன்கொடை) பெறுவது உண்டு. இந்த பணம் கட்சிகளுக்கு அக்கவுண்ட் மன்றும் நக்கொடை பத்திரம் மூலமாகவும் வழங்கப்படுகிறது. கடைசியாக தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.</p><h2>பாஜக 1473 கோடி ரூபாய்</h2><p>அப்போது பாஜக தேர்தல் நிதியாக 1473 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இந்த தொகை அனைத்தும் மத்திய தலைமையகத்திற்கு வந்துள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சிக்கு 207 கோடி ரூபாய் மட்டுமே தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள தேர்தல் வரவு செலவு கணக்கு அறிக்கையின் மூலம் இந்த தரவு கிடைக்கப்பெற்றுள்ளது.</p><h2>காங்கிரஸ் கட்சிக்கு 207.17 கோடி ரூபாய்</h2><p>காங்கிரஸ் கட்சிக்கு 207.17 கோடி ரூபாய் கிடைக்கப் பெற்ற நிலையில், 248.55 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. மார்ச் 15-ந்தேதியில் இருந்து மே 15-ந்தேதி வரையிலான தேர்தல் காலத்தின் வரவு செலவை இது காட்டுகின்றன.</p><p>கேரளம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் கட்சிகள் செலவழித்துள்ள தொகை எவ்வளவு என்று பாஜக இன்னும்  வெளியிடவில்லை.</p><h2>பாஜக-வின் கையிருப்பு அதிகரிப்பு</h2><p>பா.ஜ.க. செலவு செய்தாலும், மார்ச் 15-ந்தேதி 6,722.6 கோடி ரூபாயாக இருந்த கையிருப்பு, தேர்தலுக்கு பின் மார்ச் 6-ந்தேதி 7627.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.</p><p>காங்கிரஸ் கட்சியின் கணக்கில் 169.06 (கையிருப்பு 22.9 கோடி ரூபாய், வங்கி கணக்கில் 146.1 கோடி ரூபாய்) இருந்தது. தேர்தல் முடிவடைந்த பிறகு அந்த தொகை 103.2 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.</p><h2>தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம்</h2><p>தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநில தேர்தலுக்காக பா.ஜ.க. 159.7 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. பொதுவான கட்சி பிரச்சாரத்திற்கு மட்டும் 130.4 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. மீதமுள்ளவை வேட்பாளர்கள் மற்றும் அது தொடர்பான செலவினங்களாகும்.</p><p>அசாம் மாநிலத்திற்கு மட்டும் 96.27 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. பொதுவான கட்சிப் பிரச்சாரத்திற்கு மட்டும் 76.73 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. 19.54 கோடி ரூபாய் வேட்பாளர்கள் மற்றும் அது தொடர்பான செலவினங்களாகும்.</p><p>விளம்பரைம் மற்றும் நட்சத்திர வேட்பாளர்களின் டிராவல் ஆகியவற்றிற்கு அதிகப்பட்டியாக செலவினம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>தமிழ்நாடு</h2><p>தமிழ்நாட்டில் பாஜக 51.56 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதில் 44.51 கோடி ரூபாய் பொது பிரசாரம், 7.05 கோடி ரூபாய் வேட்பாளர்கள் செலவினம் ஆகும்.</p><p>புதுச்சேரியில் பாஜக 11.90 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. இதில் 9.19 கோடி ரூபாய் பொது பிரசாரம், 2.71 கோடி ரூபாய் வேட்பாளர்கள் செலவினம் ஆகும்.</p><p>ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பொது பிரசாரம் என்ற வகையில் 143 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது, வேட்பாளர்கள் செலவினம் என 105.55 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.</p><p>காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைமையகம் 40.52 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. மாநில காங்கிரஸ் சார்பில் 102.49 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் தீவிரமடையும் உணவுப் பாதுகாப்பு சோதனைகள்: வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மைகள்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-food-safety-crackdown-shocking-findings</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-food-safety-crackdown-shocking-findings#comments</comments><guid isPermaLink="false">be12144b-b7c4-4b61-a041-9cd039c90d26</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:15:20 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:15:20.057Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,FSSAI,பாமாயில்,Food Safety,warning labels,லண்டன் சந்தை,மேகி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/tuvoh0zo/food.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Food Safety  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/tuvoh0zo/food.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாக்கெட்டின் முன்பகுதியில் சர்க்கரை அல்லது கொழுப்பு அளவு குறித்த எச்சரிக்கை லேபிள்களை ஒட்டுவதற்கு உணவு உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். </p><p>இந்தியாவில் பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனைத் துறை $100 பில்லியனுக்கும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ள நிலையில், அதனைக் கண்காணிக்கும் ஒழுங்குமுறை அமைப்புகளின் செயல்பாடுகளையும் மீறி பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவது அண்மைய சோதனைகளில் தெரியவந்துள்ளது. </p><p>நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவுப் பாதுகாப்புத் துறை சோதனைகளில், காலாவதி தேதிகளை மாற்றி அமைத்தல், நுகர்வோரை திசை திருப்பும் பொய்யான லேபிள்கள் மற்றும் சுத்தமின்மை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><h2>இ<strong>ரட்டை நிலைக</strong>ள்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/fake-currency-worth-rs-17-29-crore-seized-at-punjab-national-bank-manager-arrested">இந்தியாவில் </a>விற்பனை செய்யப்படும் பிரபல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள், வெளிநாடுகளில் விற்கப்படும் அதே தயாரிப்புகளோடு ஒப்பிடும்போது ஊட்டச்சத்து அளவிலும் தயாரிப்பு முறையிலும் பெருமளவு வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, லண்டன் சந்தையில் விற்கப்படும் 'பாண்டா' பானத்தைக் காட்டிலும் இந்தியாவில் விற்கப்படும் பானத்தில் சுமார் மூன்று மடங்கு கூடுதல் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. </p><p>அதேபோல், பிரித்தானியாவில் விற்பனையாகும் 'மேகி' நூடுல்ஸ் தயாரிப்பில் சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்தப்பட்டு, அட்டையின் முன்பகுதியில் எச்சரிக்கை குறியீடுகளும் இடம்பெறுகின்றன. ஆனால், இந்திய பதிப்பில் பாமாயில் பயன்படுத்தப்படுவதோடு, எவ்வித முன்பக்க எச்சரிக்கைக் குறியீடுகளும் இடம்பெறுவதில்லை.</p><p>இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தற்போதைய விதிகளின்படி, பாக்கெட்டின் பின்பகுதியில் சிறிய எழுத்துக்களில் பொருட்களின் பட்டியலை அச்சிட்டால் போதுமானது. பாக்கெட்டின் முன்பகுதியில் சர்க்கரை அல்லது கொழுப்பு அளவு குறித்த எச்சரிக்கை லேபிள்களை ஒட்டுவதற்கு உணவு உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும், பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2026-இல் உணவு பாக்கெட்டுகளின் முன்பகுதியிலேயே ஊட்டச்சத்து எச்சரிக்கை லேபிள்களைக் கட்டாயமாக்கும் புதிய முன்மொழிவை அரசு கொண்டுவந்தது.</p><p>மகாராஷ்டிர மாநிலத்தில் உணவுப் பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டே தலைமையிலான குழு, மே மாதத்தில் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளது. மும்பை கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த உணவுப் பொருட்களில் போலி ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலான ஊட்டச்சத்து லேபிள்களும், தவறான காலாவதி தேதிகளும் ஒட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, கனடா நாட்டின் உணவு ஆய்வு முகமையும் இதன் பின்னணியைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.</p><h2><strong>நுகர்வோர் பாதுகாப்</strong>பு  </h2><p>2020-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு ஆய்வுகளில், பரிசோதிக்கப்பட்ட 1,00,000-க்கும் மேற்பட்ட உணவு மாதிரிகளில் சுமார் 20 சதவீதம் பாதுகாப்பற்றவையாகவும், தரம் குறைந்தவையாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், விரைவு விநியோக முறையில் செயல்படும் வணிகச் சேவைகளின் சேமிப்புக் கிடங்குகளில் கரப்பான் பூச்சிகள், எலிகள் மற்றும் அழுகிய காய்கறிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அத்துறையின் மீதும் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. </p><p>உணவு சந்தை அதிவேகமாக விரிவடைந்து வரும் சூழலில், நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உணவுப் பாதுகாப்புத் துறை இன்னும் கடுமையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>6 ஆண்டுகளுக்கு பிறகு லிபுலேக் கணவாய் திறப்பு :இந்தியா திபெத் இடையே மீண்டும் வர்த்தகம் தொடக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/six-years-lipulekh-pass-reopens-india-tibet-trade</link><comments>https://www.maalaimalar.com/news/national/six-years-lipulekh-pass-reopens-india-tibet-trade#comments</comments><guid isPermaLink="false">bf22dbf0-6f4d-46c6-aacc-49e446e25585</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:01:50 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:01:50.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,Trade,திபெத்,வணிகம்,லிபுலேக் கண்வாய்,Lipulekh</media:keywords><media:content height="480" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/romf7lng/newindianexpress2026-09-0818p30b9g131448417.avif" width="640"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India-Tibet border ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/romf7lng/newindianexpress2026-09-0818p30b9g131448417.avif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2>திறப்பு </h2><p>இந்தியா <a href="https://www.maalaimalar.com/news/world/tibet-glacier-collapse-disaster-chinese-researchers-shocking-report">திபெத் </a>இடையே லிபுலேக் கணவாய் வழியாக  வர்த்தகமானது மீண்டும் தொடங்கியுள்ளது. லிபுலேக் கணவாயானது 17,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் அமைந்திருக்கும் ஒரு வர்த்தகப்பாதை ஆகும். </p><h2>லிபுலேக் </h2><p>லிபுலேக் கணவாயானது 1962-ஆம் ஆண்டு இந்தியா-சீனா போருக்குப் பிறகு மூடப்பட்டது. அதன்பின்னர் 1992-ல் வர்த்தகம் மீண்டும் தொடங்கியது, பிறகு கோவிட் <a href="https://www.maalaimalar.com/news/world/man-who-plotted-to-hide-covid-pandemic-records-appears-in-us-court">பெருந்தொற்று </a>காரணமாக 2019-ல் மீண்டும் இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லை தாண்டிய வர்த்தகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. </p><h2>தக்லகோட்</h2><p>இந்த வழித்தடமானது திறக்கப்பட்டதை அடுத்து ஒன்பது  வர்த்தகர்கள் மற்றும் எட்டு உதவியாளர்கள் உட்பட 17 பேர் கொண்ட குழு தக்லகோட் பகுதிக்கு வரத்த்கத்திற்காக சென்றுள்ளது. குறிப்பாக தக்லகோட் பாரம்பரியமாகவே இமயமலையில் உள்ள வர்த்தக சமூகங்களை இணைக்கும் ஒரு முக்கிய  வணிக சந்தையாகும். இந்த  நிலையில் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வர்த்தகமானது மீண்டும் தொடங்கியுள்ளது.</p><h2>இறக்குமதி </h2><p>இந்திய வர்த்தகர்கள் பெரும்பாலும் மசாலாப் பொருட்கள், தேயிலை, வெல்லம், சர்க்கரை மிட்டாய், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றனர். </p><p>மேலும் கம்பளி, பஷ்மினா, யாக் முடி, ஆடைகள், காலணிகள் மற்றும் பிற உள்ளூர் தயாரிப்புகளை இறக்குமதி செய்து வருகின்றனர்.</p><h2>வாழ்வாதாரம் </h2><p>இந்த வழித்தடமானது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் தார்ச்சுலா மற்றும் அதன் அருகில் உள்ள எல்லை கிராமங்கள் புத்துயிர் பெறுவதோடு மட்டுமல்லாமல் வணிகர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், சுமைத்தூக்கும் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதரத்திற்கு இந்த வழித்தடதிறப்பு ஆதரவளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.17.29 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் - வங்கி மேலாளர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-currency-worth-rs-17-29-crore-seized-at-punjab-national-bank-manager-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-currency-worth-rs-17-29-crore-seized-at-punjab-national-bank-manager-arrested#comments</comments><guid isPermaLink="false">19aedd30-9f85-4002-bf38-4d1697a7d063</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:53:10 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:53:10.711Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fake currency,பஞ்சாப் நேஷனல் வங்கி,கள்ள நோட்டுகள்,Punjab National Bank</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/75d6z4bi/Untitled-design-44.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PNB fake currency racket]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/75d6z4bi/Untitled-design-44.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூபாய் 17.29 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை புலனாய்வு துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து அந்த வங்கியின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான மூன்று வங்கி ஊழியர்களுக்கு எதிராக அதிகாரிகள் தேடுதல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேசம்</a> மாநிலம் சஹாரன்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூபாய் 17.29 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். </p><p>இந்த விசாரணையில் கடந்த ஜூலை 6 அன்று, பணப் பரிமாற்ற வலையமைப்பு மூலம் சஹாரன்பூரிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கியின் ஜெய்ப்பூர் அலுவலகத்திற்கு ரூபாய் 111 கோடி ரொக்கம் அனுப்பப்பட்டுள்ளது. </p><h3>வங்கி மேலாளர் கைது</h3><p>பணத்தில் ரூ. 500 கள்ள நோட்டுகளைக் கொண்ட 1,900 கட்டுகளும், ரூ. 200 கள்ள நோட்டுகளைக் கொண்ட 800 கட்டுகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p>இந்த வழக்கில் பி.என்.பி வங்கியின் ஜகத்ரி கிளை மேலாளரான அமித் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.</p><p>இதைத்தொடர்ந்து சிரேஷ்ட கோட்ட மேலாளர் ரவி குமார் கான்சே மற்றும் சோபியா மார்க்கெட் பணப் பெட்டக மேலாளர் சுஷில் குமார் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</p><h3>அதிகாரிகள் சோதனை</h3><p>அதனைத் தொடர்ந்து, புலனாய்வுக் குழு அதிகாரிகள் மூன்று வங்கியின் மேலாளர்களின் இல்லங்களில் சோதனை நடத்தி, மின்னணு சாதனங்களையும் ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.</p><p>நேபாள எல்லைக்கு அருகிலோ அல்லது எல்லையை கடந்தோ செயல்படும் குழுக்களுடன், வங்கி மேலாளர்கள் மூவருக்கும் தொடர்பு இருந்ததா என்பதை அறிவதற்காக, அவர்களின் தொடர்புகளையும் நடமாட்டங்களையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.</p><h3><strong>வங்கி மேலாளர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்</strong></h3><p>இந்த நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட வங்கி மேலாளர்கள் நேபாளத்திற்கு தப்பி செல்லக்கூடும் என்பதால், அவர்களுக்கு எதிராக புலனாய்வு துறை அதிகாரிகள் தேடுதல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.</p><p>வங்கியின் பணப் பெட்டிக்குள் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள் எவ்வாறு புழக்கத்திற்குள் வந்தன என்பது குறித்தும், அவற்றில் சில பின்னர் முறையான வங்கி வழிமுறைகள் வழியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்க முடியுமா என்பது குறித்தும் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.9,825 கோடி நிதி திரட்டும் அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனம்: உலகளாவிய முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/adani-airports-raises-rs-9825-crore</link><comments>https://www.maalaimalar.com/news/national/adani-airports-raises-rs-9825-crore#comments</comments><guid isPermaLink="false">05d6bd69-7896-4d3a-8bcf-ac5f6a75022c</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:30:12 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:30:12.430Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமான நிலையம்,Adani Airports,அதானி ஏர்போர்ட்ஸ்,Airport Infrastructure,Adani Enterprises Ltd</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/1qxi83qt/Adani-Airports" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Adani Airports ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/1qxi83qt/Adani-Airports?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத் </a>மாநிலம் அகமதாபாத்தில் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், சர்வதேச மற்றும் உள்நாட்டு முன்னணி முதலீட்டாளர்களிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 9,825 கோடி) நிதியை முதன்மைப் பங்குகள் மூலம் திரட்டுவதற்கான இறுதி ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.</p><p>இந்த முதலீட்டாளரின் மூலம், அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>முதலீடு செய்யும் முன்னணி நிறுவனங்கள்</h2><p>டெமாசெக், பிளாக்ராக், ஆல்ஃபா வேவ் குளோபல் மற்றும் பிரேம்ஜி இன்வெஸ்ட் ஆகிய முக்கிய நிறுவனங்கள் அடங்கிய ஒரு முதலீட்டுக் கூட்டமைப்பு, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF">அதானி </a>ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தில் மூன்று கட்டங்களாக புதிய பங்குகளைப் பெறவுள்ளது. </p><p>இந்த முதலீட்டின் இறுதி கட்டம் ஜூலை 2027க்குள் நிறைவடைய உள்ள நிலையில், இதன் மூலம் அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தில் இந்த கூட்டமைப்பிற்கு மொத்தம் 5.54 சதவீத பங்குகள் கிடைக்கும்.</p><h2>இந்த நிதி எதற்காகப் பயன்படுத்தப்படும்?</h2><p>இதில் திரட்டப்படும் ரூ.9,825 கோடி நிதி மூன்று முக்கிய திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளது.</p><p> முதலாவதாக, ஆண்டுக்கு கிட்டத்தட்ட 20 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் விமான நிலைய உள்கட்டமைப்பை நவீனப்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் செய்தல்.</p><p>இரண்டாவதாக, <a href="https://www.maalaimalar.com/topic/international-airport">விமான நிலையங்களை</a> ஒட்டியுள்ள பகுதிகளில் முதற்கட்டமாக 22 மில்லியன் சதுர அடி பரப்பளவில் வணிக மற்றும் குடியிருப்பு பயன்பாட்டு இடங்களை உள்ளடக்கிய பிரம்மாண்ட அதானி ஏர்போர்ட் சிட்டி ரியல் எஸ்டேட் வளாகங்களை உருவாக்குதல்.</p><p>மூன்றாவதாக, தரைவழி கையாளுதல் மற்றும் விமானப் போக்குவரத்து அல்லாத இதர வணிக செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக இந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படும்.</p><h2>நிறுவனத்தின் முக்கியப் புள்ளிகள் கூறுவது என்ன?</h2><p>"இந்தக் கூட்டுத்தொழில் அதானி ஏர்போர்ட்ஸ் தளத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய மைல்கல். </p><p>இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை, நாட்டின் GDP வளர்ச்சிக்கு மிக முக்கியமான உந்துசக்தியாக உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் உலகின் முன்னணி ஒருங்கிணைந்த விமான நிலைய தளமாக நாங்கள் உருவெடுப்போம்."</p><p>"இந்திய நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்து வரும் வேளையிலும், நாட்டின் முக்கிய நகரங்களில் எங்களது நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தி வரும் சூழலிலும், அதானி ஏர்போர்ட்ஸை உலகின் மிகப்பெரிய விமான நிலைய தளமாக மாற்றுவதே எங்களது இலக்கு" என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் பன்சால் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீதிமன்ற உத்தரவை மீற எவ்வளவு தைரியம்?- கிரேட்டர் நொய்டா நீதிபதிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-raps-greater-noida-judge-for-defying-order-on-student-arrests</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-raps-greater-noida-judge-for-defying-order-on-student-arrests#comments</comments><guid isPermaLink="false">d843bc4a-a9e0-4e06-9a6c-2c94a0d4436f</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:28:20 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:28:20.563Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,Greater Noida,CJP,உச்சநீதிமன்ற நீதிபதி,Chief Justice Surya Kanth,கிரேட்டர் நொய்டா,தலைமை நீதிபதி சூரிய காந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/10h18cor/surya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Justice Surya Kanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/10h18cor/surya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இது தொடர்பாகக் கௌதம புத்தா நகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாக நீதிபதியிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.</p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்களுக்கு எதிராக எந்தவொரு கடுமையான அல்லது பிடியாணை நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் 1-ம் தேதி தெளிவான உத்தரவைப் பிறப்பித்திருந்தது. </p><p>இந்நிலையில், கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம புத்தா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவர் அக்ஷத் திரிபாதிக்கு ரூ.5 லட்சம் பிணைப்பத்திரம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தெளிவான உத்தரவையும் மீறிச் செயல்பட்ட கிரேட்டர் நொய்டா நிர்வாக நீதிபதியின் இந்த நடவடிக்கைக்கு இந்திய தலைமை நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வு மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><h2>நீதிமன்றத்<strong>தின் தடையை</strong>யும் மீறி அனுப்பப்பட்ட நோட்டீஸ்</h2><p>கௌதம புத்தா பல்கலைக்கழக மாணவர் அக்ஷத் திரிபாதி, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற 'காக்ரோச் ஜனதா கட்சி' அமைப்பின் போராட்டத்தில் மாணவர்களைப் பங்கேற்கத் தூண்டியதாகவும், அரசுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பியதாகவும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-pay-panel-consultation-over-3-5-million-central-govt-staff-may-benefit">நொய்டா </a>காவல்துறையினர் அறிக்கை அளித்திருந்தனர். இதன் அடிப்படையில், கிரேட்டர் நொய்டா நிர்வாக நீதிபதி செப்டம்பர் 4 அன்று நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அதில், அமைதியை நிலைநாட்ட ரூ.5 லட்சத்திற்கான தனிப்பட்ட பிணைப்பத்திரத்தையும், தலா ரூ.5 லட்சத்திற்கு இரு நபர் உத்தரவாதத்தையும் ஏன் வழங்கக் கூடாது என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.</p><p>இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஏற்கனவே அமலில் இருந்ததாலும், நொய்டா காவல்துறையின் விசாரணையில் அந்தத் தகவல் தவறானது என்றும், நோட்டீஸ் அனுப்பப்பட்ட காலத்தில் மாணவர் விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரில் இருந்தார் என்றும் தெரியவந்ததையடுத்து, அந்த நோட்டீஸ் அடுத்தநாளே திரும்பப் பெறப்பட்டது.</p><h2>தலைமை நீதி<strong>பதியின்</strong> சீற்றம்</h2><p>இந்த விவகாரத்தை மூத்த வழக்கறிஞர் பிஸ்வஜித் பட்டாச்சார்யா, தலைமை நீதிபதி சூரிய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் முறையிட்டார். மாணவர்கள் மீது எந்தவிதக் கட்டுப்பாடோ அல்லது சட்ட நடவடிக்கையோ எடுக்கக் கூடாது என்று செப்டம்பர் 1-ல் அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்ததை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர், இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்துவதோடு நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் வாதிட்டார்.</p><p>முறையீட்டைக் கேட்ட தலைமை நீதிபதி சூரிய காந்த், "எங்கள் உத்தரவை மீறி நோட்டீஸ் அனுப்ப ஒரு நீதிபதிக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? எந்தவொரு மாணவருக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நாங்கள் மிகத் தெளிவாகக் கூறியிருந்தோம். உச்சநீதிமன்ற உத்தரவை மீற எந்தவொரு நீதிபதிக்கும் அதிகாரமில்லை" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.</p><h2>விளக்கம் <strong>கேட்க உச்சநீதிமன்</strong>றம் முடிவு</h2><p>மாணவர் மீதான நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தெளிவாக இருந்தும் மாநில நிர்வாகம் இவ்வாறு செயல்பட்டது குறித்து அதிருப்தி வெளியிட்ட நீதிபதிகள், இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளனர். இது தொடர்பாகக் கௌதம புத்தா நகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாக நீதிபதியிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் நோட்டீஸின் நகலை நீதிமன்றப் பதிவேட்டில் தாக்கல் செய்யுமாறு மனுதாரரின் வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>5 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் 11-ம்தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/national/bank-employees-nationwide-strike-on-11th-demanding-five-day-workweek-and-various-demands</link><comments>https://www.maalaimalar.com/news/national/bank-employees-nationwide-strike-on-11th-demanding-five-day-workweek-and-various-demands#comments</comments><guid isPermaLink="false">e98000c2-3b38-4ec3-be7b-2e64b573e360</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:31:21 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:31:21.979Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வங்கி ஊழியர்கள்,Bank employees,Bank Employees Strike,வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்,Indian Banks&apos; Association,National Pension System</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/d0uobwc2/bank.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bank employees strike  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/d0uobwc2/bank.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. </p><p>வங்கிகளின் கூட்டமைப்பான 'யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்' (UFBU), வாரத்தில் 5 நாட்கள் வேலை மற்றும் ஊதிய சீரமைப்பு உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பர் 11-ம் தேதி நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தொழிலாளர் நலத்துறை மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடைபெற்ற சமரசப் பேச்சுகளி‌ல் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்த வங்கி ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.</p><h2>5 நாள் வ<strong>ங்கி வேலைத்திட்டம்</strong></h2><p>திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணியாற்றுவதற்கு ஊழியர்கள் ஒப்புக்கொண்ட நிலைகளிலும், அனைத்து சனிக்கிழமைகளுக்கும் விடுமுறை அளிக்கும் 5 நாள் <a href="https://www.maalaimalar.com/news/national/andhra-government-appoints-chiranjeevi-daughter-to-key-post">வங்கி வேலை</a> கோரிக்கை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.</p><h2>ஊக்கத்<strong>தொகை சீர</strong>மைப்பு</h2><p>அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் சமமான ஊக்கத்தொகை வழங்கும் பழைய முறையை மாற்றி, உயர் அதிகாரிகளுக்கு மட்டும் அதிக ஊக்கத்தொகை அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட பாகுபாடான புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. பயனாளிகளின் ஓய்வூதியத் தொகையை தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப உயர்த்துவதுடன், தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><h2>ஊக்க<strong>த்தொகை இடை</strong>நிறுத்தம்</h2><p>வங்கி சங்கங்களின் தொடர் எதிர்ப்பை அடுத்து, பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படவிருந்த செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை அறிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து வரவிருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ள போதிலும், 5 நாள் வேலை உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளில் தெளிவான அறிவிப்பு வராததால் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற போரட்டம் அழைப்பு விடுத்த அமைப்புகள் மறுத்துவிட்டன.</p><p>செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் செப்டம்பர் 28 முதல் 30 வரை தொடர்ந்து 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தமும், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் வார இறுதி விடுமுறை நாட்களால், பொதுத்துறை வங்கிகளில் காசோலை பரிவர்த்தனை மற்றும் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட நேரடி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டாவில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் விளம்பரங்கள்- மெட்டாவுக்கு சம்மன்</title><link>https://www.maalaimalar.com/news/national/instagram-child-sexual-abuse-ads-meta-summoned</link><comments>https://www.maalaimalar.com/news/national/instagram-child-sexual-abuse-ads-meta-summoned#comments</comments><guid isPermaLink="false">f6c50ab0-324d-4882-9d21-1584e9c7469a</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:26:42 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:26:42.056Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Instagram,Meta,Child abuse,பாலியல் துஷ்பிரயோகம்,இன்ஸ்டாகிராம்,மெட்டா சம்மன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/gv30dbmc/insta.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ META CEO (INDIA)]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/gv30dbmc/insta.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மெட்டா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் இன்று (புதன்கிழமை) நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.</p><p>இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தை உள்ளடக்கியதாக கூறப்படும் விளம்பரங்கள் தொடர்பாக மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் பெறுமாறு மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%8D" rel="nofollow">அஸ்வினி வைஷ்ணவ்</a> அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.</p><p>இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக மெட்டா நிறுவனத்திடம் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது.</p><p>இந்த விவகாரத்தில் மெட்டா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் இன்று (புதன்கிழமை) நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.</p><p>ஆன்லைன் தளங்கள் மூலம் குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் கிடைப்பதாகவும், அவை விளம்பரப்படுத்தப்படுவதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசு ஏற்கனவே மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கோரியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திர அரசாங்கத்தில் நடிகர் சிரஞ்சீவியின் மகளுக்கு கிடைத்த உயரிய பொறுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/andhra-government-appoints-chiranjeevi-daughter-to-key-post</link><comments>https://www.maalaimalar.com/news/national/andhra-government-appoints-chiranjeevi-daughter-to-key-post#comments</comments><guid isPermaLink="false">3c0b926b-f86d-4334-878e-f80c532901cd</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:55:22 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:55:22.234Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பவன் கல்யாண்,Chiranjeevi,ஆந்திர அரசு,நடிகர் சிரஞ்சீவி,ChandraBabu Naidu,Andhra Government,Konidela Sushmita,கொனிடெலா சுஷ்மிதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/bu57lmrj/cheeran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chiranjeevi-Konidela Sushmita ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/bu57lmrj/cheeran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல திரைப்பட நடிகரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான சிரஞ்சீவியின் மகளும் திரைப்பட தயாரிப்பாளருமான கொனிடெலா சுஷ்மிதாவுக்கு ஆந்திரப் பிரதேச அரசு முக்கியமான புதிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது.</p><p>விஜயவாடா இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சுவாமி வர்லா தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக சுஷ்மிதா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஆந்திர மாநில தேவாலய மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் கே.கன்ன பாபு இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>இந்த நியமனத்தின் மூலம் தேவஸ்தானத்தின் மேம்பாட்டுப் பணிகளிலும், பக்தர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் சுஷ்மிதா முக்கியப் பங்கு வகிப்பார். மேலும், கோயில் அறங்காவலர் குழுவிற்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் தனது அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனைகளை வழங்குவார். தொடர்ந்து, நவராத்திரி மற்றும் முக்கிய திருவிழாக்கள், ஜாத்திரை காலங்களில் கோயிலின் நிர்வாக நடவடிக்கைகளுக்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்கி உதவுவார்.</p><h2><strong>நன்றி தெரிவித்த </strong>சு<strong>ஷ்மிதா</strong></h2><p>தனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுஷ்மிதா, முதல்வர் <a href="https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-said-sri-lanka-a-close-friend-india-stands-by-it">என்.சந்திரபாபு நாயுடு</a> மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். கனக துர்க்கை அம்மனின் சேவையில் மிகுந்த பக்தியுடனும் நேர்மையுடனும் பணியாற்றுவேன் என அவர் உறுதி அளித்துள்ளார்.</p><h2>சிரஞ்<strong>சீவி குடும்பத்தி</strong>ன் ஆதிக்கம்</h2><p>சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திரைப்படத் துறை மட்டுமன்றி தெலுங்கு மாநிலங்களின் ஆன்மீக மற்றும் அரசியல் தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகின்றனர். சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். மற்றொரு சகோதரர் நாகபாபு சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார். </p><p>சிரஞ்சீவியின் மனைவி சுரேகா கொனிடெலா, சமீபத்தில் தெலங்கானாவில் உள்ள புகழ்பெற்ற யாதகிரி குட்டா லக்ஷ்மி நரசிம்ம சுவாமி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். திரைத்துறையில் ஆடை வடிவமைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றி நடைபோடும் சுஷ்மிதா கொனிடெலா, தற்போது ஆந்திர அரசு வழங்கியுள்ள இந்த ஆன்மீகப் பொறுப்பின் மூலம் பொதுவாழ்விலும் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமேசானில் மாதத்திற்கு சுமார் ரூ.4 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த பொறியாளர்</title><link>https://www.maalaimalar.com/news/national/engineer-quits-rs-4-lakh-amazon-job-joins-indian-army</link><comments>https://www.maalaimalar.com/news/national/engineer-quits-rs-4-lakh-amazon-job-joins-indian-army#comments</comments><guid isPermaLink="false">1fa84c6d-77af-4b5e-90fd-6b1d8c43f531</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:46:55 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:46:55.731Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமேசான்,Amazon,software engineer,Indian Army officer,இந்திய ராணுவ அதிகாரி,பொறியாளர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/v7j8s2uk/Untitled-design-41.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Engineer Tiwari joined Indian Army]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/v7j8s2uk/Untitled-design-41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர், அமேசான் நிறுவனத்தில் மாதம் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கி கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த வேலையை விட்டுவிட்டு இந்திய ராணுவ பணியில் சேர்ந்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேசம்</a> மாநிலம் லக்னோவை பூர்வீகமாக கொண்ட 27 வயதான திவாரி தனது பள்ளிப்படிப்பை கேந்திரியா வித்யாலயாவில் முடித்துவிட்டு, பின்னர் சண்டிகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். </p><p>இதையடுத்து வருடத்திற்கு சுமார் 46 லட்சம் ரூபாய் சம்பளத்தில் அமேசான் கிளவுட் நிறுவனத்தில் அவர் பொறியாளராக பணியில் சேர்ந்தார். </p><h3><strong>திவாரியின் தந்தை</strong></h3><p>திவாரியின் தந்தையான ராஜ் குமார் திவாரி, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">இந்திய ராணுவத்தில்</a> 36 ஆண்டுகள் பணியாற்றினார். சிறுவயதில் இருந்தே தனது தந்தையை பார்த்து வளர்ந்த திவாரிக்கு, ஆயுத படையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.</p><p>திவாரியை பொறுத்தவரை அதிக வருமான தரும் ஒரு பணியை விட, ஒழுக்கம், தியாகம் மற்றும் சேவை ஆகியவற்றில் ஈடுபடும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணமே அதிகாக இருந்துள்ளது.</p><p>இதன்காரணமாக இவர் தனது பொறியாளர் வேலையை விட்டுவிட்டு, விண்வெளி துறையின் முன்னணி நிறுவனமான ஏர்பஸ்ஸால்-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p>இருப்பினும் இந்திய ராணுவத்திற்கு அதிகாரியாக சேர்வதற்காக, திவாரி மேற்கொண்ட முயற்சிகள் முதலில் தோல்வியடைந்தன.</p><h3>பீகார் அதிகாரிகள் பயிற்சி மையம்</h3><p>இறுதியில் பீகார் மாநிலம் கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில், திவாரி ராணுவ அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மூத்த துணை அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார்.</p><p>திவாரியை பொறுத்தவரையில் வெற்றி என்பது எப்போதுமே சம்பளத்தின் அளவை கொண்டு அளவிடப்படாமல், உண்மையிலேயே தனது மனது விரும்பும் ஒன்றை துரத்திச் செல்வதில் தான் இருக்கிறது என்பதை உணர்த்துவதாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒடிசா வனப்பகுதியில் 5 அரிய வகை ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு: வனவிலங்கு கடத்தல் கும்பலின் சதியா?</title><link>https://www.maalaimalar.com/news/topnews/odisha-forest-rescue-raises-orangutan-trafficking-suspicions</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/odisha-forest-rescue-raises-orangutan-trafficking-suspicions#comments</comments><guid isPermaLink="false">04e987cb-32e1-4b0b-8cd0-9fb9592f708f</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:06:02 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:06:02.394Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,orangutan infants,Orangutans,Odisha forest,ஒடிசா வனப்பகுதி,ஒராங்குட்டான்,ஒராங்குட்டான் குட்டிகள்,பாலசோர் மாவட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/rpzk2cqq/korangu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ orangutan infants]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/rpzk2cqq/korangu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>வனத்துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சட்டவிரோத சர்வதேச கடத்தல் கும்பல் மூலம் கப்பல் அல்லது வாகனங்கள் வாயிலாக இவை கொல்கத்தா வழியே கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. </p><p>ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் போகராய் பகுதியில் உள்ள ரணகதா வனப்பகுதியில், மரக்கிளைகளில் ஐந்து சிறிய விலங்குகள் தாவி விளையாடுவதை அப்பகுதி கிராம மக்கள் கண்டனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. </p><p>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், மீட்புப் பணிகளை மேற்கொண்டு அந்த 5 விலங்குகளையும் பாதுகாப்பாக மீட்டனர். அப்போதுதான் மீட்புக் குழுவினருக்கு அந்த பேரதிர்ச்சி காத்திருந்தது. மீட்கப்பட்ட ஐந்து விலங்குகளும் இந்திய காடுகளில் காணப்படாத அரிய வகை '<a href="https://www.maalaimalar.com/news/national/corporations-new-initiative-free-distribution-of-133-lakh-clay-idols">ஒராங்குட்டான்</a>' குட்டிகள் என்பது தெரியவந்தது.</p><h2>தென்கி<strong>ழக்கு ஆசியா</strong>வின் பூர்வீகம்</h2><p>ஒராங்குட்டான்கள் இந்தியாவில் இயற்கையாக வாழும் உயிரினம் அல்ல. இவை இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அடர்ந்த மழைக்காடுகளை மட்டுமே பூர்வீகமாகக் கொண்டவை. இவை தானாக வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைய எவ்வித இயற்கை வழியோ அல்லது வனப்பாதை இணைப்போ கிடையாது. சர்வதேச அளவில் மிகக் கடுமையாக அழிவின் விளிம்பில் உள்ள இந்த உயிரினங்கள், சர்வதேச வனவிலங்கு கடத்தல் கும்பல் மூலம் கடல் வழியாகக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பலமான சந்தேகம் எழுந்துள்ளது.</p><h2>போலீஸ் சோ<strong>தனைக்கு அஞ்சி</strong> கைவிடப்பட்டதா</h2><p>வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், சட்டவிரோத சர்வதேச கடத்தல் கும்பல் மூலம் கப்பல் அல்லது வாகனங்கள் வாயிலாக இவை கொல்கத்தா வழியே கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. </p><p>தேசிய நெடுஞ்சாலை 16-க்கு அருகே இவை மீட்கப்பட்டுள்ளதால், சோதனைச் சாவடிகள் அல்லது காவல்துறையின் தீவிர ரோந்து பணிக்கு அஞ்சிய கடத்தல்காரர்கள், பிடிபடாமல் தப்பிப்பதற்காக இந்த குட்டிகளை வனப்பகுதியில் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பன்னாட்டுச் சந்தையில் ஒரு ஒராங்குட்டான் குட்டியின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்பதால், பெரிய அளவிலான சட்டவிரோத நெட்வொர்க் இதன்பின்னால் இயங்கி வரலாம்.</p><h2>நந்தன்கானன் உ<strong>யிரியல் பூங்கா</strong>வுக்கு மாற்றம்</h2><p>மீட்கப்பட்ட 5 ஒராங்குட்டான் குட்டிகளில் 2 பெண் மற்றும் 3 ஆண் குட்டிகள் அடங்கும். வனத்துறை கால்நடை மருத்துவக் குழு உடனடியாக அவற்றுக்கு உடல் பரிசோதனை மேற்கொண்டு, பழங்கள் மற்றும் நீர்ச்சத்து பானங்களை வழங்கி பராமரித்து வருகிறது. நான்கு குட்டிகள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள நிலையில், ஒரு குட்டிக்கு நீர்ச்சத்து குறைபாடு காரணமாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்காலிகப் பராமரிப்பிற்குப் பிறகு, இந்த ஐந்து குட்டிகளும் புபனேஸ்வரில் உள்ள புகழ்பெற்ற 'நந்தன்கானன் உயிரியல் பூங்காவிற்கு' கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் வைக்கப்பட உள்ளன.</p><p>இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஒடிசா மாநில வனத்துறை மத்திய வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டுப் பிரிவின் உதவியை நாடியுள்ளது. மாநில வனத்துறையின் சிறப்புப் படையும், WCCB அதிகாரிகளும் இணைந்து சர்வதேச கடத்தல் கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் வேறு ஏதேனும் அரிய வகை விலங்குகள் கைவிடப்பட்டுள்ளதா என்பதை அறிய வனப்பகுதியில் தேடுதல் வேட்டையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>1.33 லட்சம் களிமண் சிலைகள் இலவசமாக விநியோகம்- மாநகராட்சி புதிய முயற்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/corporations-new-initiative-free-distribution-of-133-lakh-clay-idols</link><comments>https://www.maalaimalar.com/news/national/corporations-new-initiative-free-distribution-of-133-lakh-clay-idols#comments</comments><guid isPermaLink="false">f3ae0987-4736-4786-b6e9-294e7117a9e5</guid><pubDate>Wed, 09 Sep 2026 04:36:57 +0000</pubDate><atom:updated>2026-09-09T04:36:57.833Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,Vinayagar statue,விநாயகர் சிலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/c2xr0yh8/vinayagar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ களிமண் சிலைகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ களிமண் சிலைகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/c2xr0yh8/vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>1.33 லட்சம் களிமண் சிலைகளில், 53,000 சிலைகள் ஒரு அடி உயரமும், 80 ஆயிரம் சிலைகள் 8 அங்குல உயரமும் கொண்டவை.</strong></em> </p><p>நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/விநாயகர்-சதுர்த்தி">விநாயகர் சதுர்த்தி</a> பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஐதராபாத் மாநகரப் பகுதியில் நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் ஐதராபாத் மாநகரப் பகுதியில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) மற்றும் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளுக்குப் பதிலாக, களிமண் சிலைகளை நிறுவ வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><h2><strong>இலவசமாக விநியோகம்</strong></h2><p>இதன் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் நலன் கருதி இன்று முதல் மாநகரவாசிகளுக்கு 1.33 லட்சம் களிமண் விநாயகர் சிலைகள் இலவசமாக விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>களிமண் விநாயகர் சிலைகளை விநியோகிப்பதற்காக, நகரம் முழுவதும் 34 பகுதிகளில் அதிகாரிகள் சிறப்பு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p>1.33 லட்சம் களிமண் சிலைகளில், 53,000 சிலைகள் ஒரு அடி உயரமும், 80 ஆயிரம் சிலைகள் 8 அங்குல உயரமும் கொண்டவை. களிமண் சிலைகள் இலவசமாக விநியோகிக்கப்படுவதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இலங்கை நெருக்கமான நட்பு நாடு, இந்தியா அதற்கு துணை நிற்கிறது - அமைச்சர் ராஜ்நாத் சிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-said-sri-lanka-a-close-friend-india-stands-by-it</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-said-sri-lanka-a-close-friend-india-stands-by-it#comments</comments><guid isPermaLink="false">6426cda7-6d03-4e85-a1cf-bbd676f774a1</guid><pubDate>Tue, 08 Sep 2026 23:47:26 +0000</pubDate><atom:updated>2026-09-08T23:47:26.541Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,இலங்கை,Sri Lanka,Rajnath Singh,ராஜ்நாத் சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/cwurrsrm/Rajnath-Singh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajnath Singh ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/cwurrsrm/Rajnath-Singh.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய நண்பர்கள் என்றும், அந்தத் தீவு நாடு நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா எப்போதும் இலங்கையுடன் உறுதியாக நிற்கும் என்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/rajnath-singh">ராஜ்நாத் சிங்</a> கொழும்பில் தெரிவித்தார்.</p><p>இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ராஜ்நாத் சிங், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு பாதுகாப்பு மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்காக <a href="https://www.maalaimalar.com/topic/sri-lanka">இலங்கை</a> சென்ற முதல் இந்திய பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 1988-இல் இதுபோன்ற பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கை சென்ற பாதுகாப்பு அமைச்சர் கே.சி. பந்த் ஆவார். </p><h2>உறுதியுடன் இருக்கிறோம்:</h2><p>"இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, பகிரப்பட்ட வரலாறு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம், மேலும் இரு நாடுகளின் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியுடன் இருக்கிறோம்," என்று ராஜ்நாத் சிங் கூறினார்.</p><p>இரு நாடுகளும் நெருங்கிய கலாச்சார மற்றும் நாகரிகப் பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், அவை இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளன என்றும் அவர் கூறினார். வலுவான பிராந்திய கூட்டணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், "இங்கு வந்த பிறகு நான் ஒரு சொந்த உணர்வை அனுபவிக்கிறேன்," என்றார்.</p><p>இந்தியாவின் விரிவடைந்து வரும் உலகளாவிய செல்வாக்கையும் பொருளாதார வலிமையையும் அவர் எடுத்துரைத்ததோடு, புலம்பெயர்ந்த இந்தியர்கள் ஆற்றிய பணிகளையும் பாராட்டினார்.</p><p>கொழும்பு புறப்படுவதற்கு முன்பு, ராஜ்நாத் சிங் எக்ஸ் தளத்தில், "எங்களின் நீண்டகாலக் கூட்டாண்மை மற்றும் ஆழமான வரலாற்று, நாகரிக தொடர்புகளுக்கு அப்பால், 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' மற்றும் 'மகாசாகர்' ஆகிய முன்னெடுப்புகளின் கீழ் இலங்கை எங்களின் மிக முக்கியமான பங்காளிகளில் ஒன்றாகும்" என்று பதிவிட்டார்.</p><h2>இந்திய பொருளாதார வளர்ச்சி:</h2><p>வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே உரையாற்றிய ராஜ்நாத் சிங், இந்தியாவின் விரைவான பொருளாதார மாற்றத்தை எடுத்துரைத்து, உலகின் அதிவேகமாக வளரும் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும், உலகளாவிய வளர்ச்சிக்கு 16% க்கும் அதிகமாகப் பங்களிப்பதாகவும் கூறினார்.</p><p>2014-இல் 2 டிரில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் பொருளாதாரம், கடந்த பத்தாண்டுகளில் இரட்டிப்பாகி, 4 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா தற்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/former-delhi-chief-secretary-rakesh-mehta-commits-suicide</link><comments>https://www.maalaimalar.com/news/national/former-delhi-chief-secretary-rakesh-mehta-commits-suicide#comments</comments><guid isPermaLink="false">8a8d3e9c-2ead-4579-ab75-0238951bc92e</guid><pubDate>Tue, 08 Sep 2026 17:07:41 +0000</pubDate><atom:updated>2026-09-08T17:07:41.671Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,suicide,delhi,டெல்லி,Rakesh Mehta,ராகேஷ் மேத்தா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/zlfo3pkg/rakesh-mehta.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rakesh Mehta]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/zlfo3pkg/rakesh-mehta.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் ஆட்சிக்காலத்தில் பணியாற்றிய டெல்லியின் முன்னாள் தலைமை செயலாளர் ராகேஷ் மேத்தா, நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>1975-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராகேஷ் மேத்தா, தான் எடுத்த இந்த தீவிர முடிவுக்கு "மனநலம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள்" தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்த தற்கொலை குறிப்பு ஒன்றை <a href="https://www.maalaimalar.com/news/national">நொய்டா</a> போலீஸார் கைப்பற்றினர். </p><h2>முக்கிய திட்டங்களில் ராகேஷ் மேத்தா பங்கு:</h2><p>செப்டம்பர் 6-ஆம் தேதி நொய்டாவின் செக்டார் 82-ல் உள்ள அவரது இல்லத்தில், அவர் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.</p><p>74 வயதான மேத்தா, தீட்சித்தின் பதவிக்காலத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக டெல்லியின் தலைமை செயலாளராக பணியாற்றினார். இவரது பதவிக்காலத்தில் தான் 2010-இல் டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.</p><h2>டெல்லி மாநகராட்சி ஆணையராக ராகேஷ் மேத்தா:</h2><p>நகரின் முக்கிய போக்குவரத்து, மின்சாரம் மற்றும் குடிமை உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தியதில் மேத்தாவுக்கு முக்கிய பங்கு இருந்தது.</p><p>டெல்லி அரசில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், டெல்லி மாநகராட்சியின் (MCD) ஆணையராகவும் பணியாற்றியதாக அவரது முன்னாள் சக ஊழியர்கள் தெரிவித்தனர். இவர் 2007-இல் தலைமை செயலாளராக பொறுப்பேற்று, 2010 நவம்பரில் ஓய்வு பெற்றார். திங்களன்று லோதி சாலை தகன மையத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>பண மோசடி வழக்கு: பினராயி விஜயன், அவரது மகள் மீது FIR பதிவு செய்ய கேரளம் டிஜபி-க்கு ED கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/cmrl-case-ed-writes-to-keralam-dgp-seeking-fir-against-ex-cm-vijayan-daughter-and-son-in-law</link><comments>https://www.maalaimalar.com/news/national/cmrl-case-ed-writes-to-keralam-dgp-seeking-fir-against-ex-cm-vijayan-daughter-and-son-in-law#comments</comments><guid isPermaLink="false">f5ac964d-deb9-47c3-b3e8-5f09e6175b88</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:40:13 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:40:13.026Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பினராயி விஜயன்,Pinarayi Vijayan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/bnf0svei/Pinarayivijayan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வீணா- பினராயி விஜயன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/bnf0svei/Pinarayivijayan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன். இவரது மகள் வீணா. இவரது ஆட்சிக் காலத்தில் கேரளாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனமான கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் (CMRL), தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் என்ற பெயரில் வீணாவின் நிறுவனமான எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் (Exalogic Solutions) நிறுவனத்திற்கு 2.78 கோடி ரூபாய் மதிப்பிலான முறையற்ற பணப் பரிமாற்றங்களை செய்ததாக அமலாக்கத் துறை (ED) குற்றம் சாட்டியுள்ளது.</p><h2>FIR பதிவு செய்ய டிஜிபிக்கு கடிதம்</h2><p>வீணாவின் நிறுவனம், போலியான பண பரிமாற்றங்களை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு கார்ப்பரேட் கருவி (corporate vehicle) என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலையில் விசாரணை அடிப்படையில் பணமோசடி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதனால் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் உள்பட 13 பேர் மீது FIR பதிவு செய்ய வேண்டும் என கேரளம் DGP-க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.</p><p>கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் நிறுவனத்திற்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் வழங்கியது எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம். இதற்காக CMRL நிறுவனத்தில் இருந்து 2.78 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் (தற்போது இல்லை) பினராயி விஜயன் மகள் வீணா தொடங்கியது. அரசு பணத்தை முறைகேடாக பெறுவதற்காக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட பணம், முறைகேடாக துபாய்க்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.</p><p>இது தொடர்பாக அமலாக்கத்துறை பல இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது பண மோசடிக்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தது. அதேவேளையில், தங்கள் கைகள் சுத்தமானவை என்று கேரளம் முதல்வர் பினராயி விஜய் தெரிவித்திருந்தார்.</p><p>FIR பதிவு செய்ய அமலாக்கத்துறை DGP-க்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், "எங்கள் தரப்பில் எந்த தவறும் நடக்கவில்லை. எந்த வகையான விசாரணையையும் நடத்தலாம் என்று சிபிஐ(எம்) தலைவர் பி.ஏ. முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் போலி அடையாள அட்டை, துப்பாக்கியுடன் வந்த வாலிபர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-id-gun-youth-arrested-at-pm-modi-event</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-id-gun-youth-arrested-at-pm-modi-event#comments</comments><guid isPermaLink="false">663fc79d-cca8-43b9-8341-f6abd8c91605</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:07:21 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:07:21.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,Prime Minister Modi,mumbai,பிரதமர் மோடி.,Bandra Kurla,மகாராஷ்டிர மாநிலம்,மும்பை பாந்த்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y4sbyvs8/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Prime Minister Modi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y4sbyvs8/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி, துப்பாக்கியுடன் நுழைய முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p><p>மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/people-of-manipur-suffering-both-within-and-outside-state-under-modi-sarkar-kharge">நீதா முகேஷ் அம்பானி</a> கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதமர் வருகையை முன்னிட்டு அந்தப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும், தீவிரக் கண்காணிப்பும் போடப்பட்டிருந்தது.</p><h2>போ<strong>லி அடையாள அட்</strong>டை</h2><p>நிகழ்ச்சி வளாகத்தின் நுழைவுப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிரச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, 24 வயதான ரோஹன் பாரேக் என்ற இளைஞர் உள்ளே செல்ல முயன்றார். அவர் தன்னை 'பிரதமர் அலுவலக அதிகாரி' என அறிமுகப்படுத்திக் கொண்டு அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார். ஆனால், சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரது அடையாள அட்டையைத் தீவிரமாகப் பரிசோதித்தபோது, அது முற்றிலும் போலி என்பது தெரியவந்தது.</p><h2>துப்பாக்கி<strong>யுடன் சிக்கிய</strong> பாதுகாவலர்</h2><p>ரோஹன் பாரேக் தனியாக வரவில்லை; அவருடன் ஒரு தனியார் பாதுகாவலரும் வந்திருந்தார். சோதனையின் போது அந்தப் பாதுகாவலரிடமிருந்து ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரையும் உடனடியாகக் கைது செய்த காவல்துறையினர், அவர்களை பாந்த்ரா குர்லா வளாக காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.</p><h2>போலீசார் தீ<strong>விர விசார</strong>ணை</h2><p>பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி, துப்பாக்கியுடன் நுழைய முயன்றதன் பின்னணியில் என்ன திட்டம் இருந்தது என்பது குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் போர், புதிய அணுமின் நிலையம், ஆயுதம் கொள்முதல்: புதின்- பிரதமர் மோடி பேசப்போவது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/russia-will-welcome-indias-efforts-toward-peaceful-resolution-of-ukraine-conflict-peskov</link><comments>https://www.maalaimalar.com/news/national/russia-will-welcome-indias-efforts-toward-peaceful-resolution-of-ukraine-conflict-peskov#comments</comments><guid isPermaLink="false">60e73132-cbfe-4979-9065-6502bd35cba3</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:42:36 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:42:36.056Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Putin,புதின்,உக்ரைன் ரஷியா போர்,ukraine russia war,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/us7f9ts2/PutinModi001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரஷிய அதிபர் புதின்- பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/us7f9ts2/PutinModi001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>இந்தியாவில் வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 18-வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு பாரத் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொள்கிறார். மாநாட்டிற்கிடையே, இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.</p><p>இது தொடர்பாக ரஷிய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தெரியும். அது பெருமளவுக்கு எங்கள் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. ஏனெனில், உக்ரைன் விவகாரத்திற்கு அமைதியான வழிகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம்.</p><h2>புதிய அணுமின் நிலையம்</h2><p>புதிய அணுமின் நிலையங்களை அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா காத்திருக்கிறது. Su-57 ரக விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதும் நிகழ்ச்சி நிரலில் உள்ளது.</p><p>இவ்வாறு பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்கா 100 சதவீதம் வரி எச்சரிக்கை</h2><p>மேலும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, அமெரிக்காவின் அறிவிப்பு சட்டவிரோதம் மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சபாநாயகருக்கு எதிராக இழிவான பேச்சு: இரண்டு எம்.எல்.ஏ.-க்கள் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/two-brs-mlcs-held-over-alleged-remarks-against-telangana-assembly-speaker</link><comments>https://www.maalaimalar.com/news/national/two-brs-mlcs-held-over-alleged-remarks-against-telangana-assembly-speaker#comments</comments><guid isPermaLink="false">bd0b34b2-f2e6-405f-94a8-35cf1f479757</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:59:21 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:59:21.047Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Telangana,தெலங்கானா,சபாநாயகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/1kia4hs0/Telangana001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தெலங்கானா சபாநாயகர் கதம் பிரசாத் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/1kia4hs0/Telangana001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநில சட்டசபைக்குள் நேற்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.-க்கள் நுழைய முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பி.ஆர்.எஸ். மேலவை எம்.எல்.ஏ.-க்கள் தத்தா மதுசூதன் மற்றும் நவீன் குமார், சபாநாயகர் கதம் பிரசாத் குமாருக்கு எதிராக இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக தெரிகிறது.</p><p>இது தொடர்பாக சட்டசபை சபாநாயகருக்கான சிறப்புப் பணி ஆதிகாரி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் இரண்டு எம்.எல்.ஏ.-க்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p>அவர்கள் (இரண்டு BRS சட்டமன்ற உறுப்பினர்கள்) சபாநாயகரின் நேர்மை, அதிகாரம் மற்றும் அரசியலமைப்பு ரீதியான நடத்தையை பகிரங்கமாக கேள்விக்குட்படுத்தியுள்ளனர். சமூகப் பின்னணி மற்றும் அரசியலமைப்புப் பாத்திரத்தின் காரணமாக அவரை அவமானப்படுத்தவும், இழிவுபடுத்தவும், தரக்குறைவாக நடத்தவும், அவரது தனிப்பட்ட மற்றும் சமூக அந்தஸ்தைக் குறைக்கவும் திட்டமிட்ட சொற்களை வேண்டுமென்றே பயன்படுத்தினர் என புகாரில் கூறப்பட்டிருந்தது.</p><h2>சபாநாயகர் கதம் பிரசாத் குமார்</h2><p>நேற்று தலித் தலைவரான சபாநாயகர் கதம் பிரசாத் குமாருக்கு எதிராக இருவரும் இழிவுப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது பெரிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இரண்டு பேரின் கருத்து 4 கோடி மக்களை இழிவுப்படுத்துவதாகும் என்றார். என்றாலும், இருவரும் சபாநாயருக்கு எதிராக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்று தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடியின் இயலாமையால் மணிப்பூர் மக்கள் மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவதிப்படுகிறார்கள்: கார்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/people-of-manipur-suffering-both-within-and-outside-state-under-modi-sarkar-kharge</link><comments>https://www.maalaimalar.com/news/national/people-of-manipur-suffering-both-within-and-outside-state-under-modi-sarkar-kharge#comments</comments><guid isPermaLink="false">a55dc196-cc8d-49db-b062-acaffe35197b</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:36:51 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:36:51.376Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கார்கே,Kharge,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/n2o7uggc/Kharge001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கார்கே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/n2o7uggc/Kharge001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மணிப்பூரை சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் சோங்தம் விக்ரம் சிங், டெல்லியில் ஒரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான கார்கே, பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.</p><p>இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவியில் கூறியிருப்பதாவது:-</p><p>மோடி அரசின் "இயலாமை" காரணமாக மணிப்பூர் மக்கள் மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் துன்பத்திற்கு ஆளாகியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார். </p><h2>மணிப்பூர் இசைக்கலைஞர் கொலை</h2><p>மணிப்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் சோங்தம் விக்ரம் சிங் ஒரு கும்பலால் இரக்கமின்றி அடித்துக் கொல்லப்பட்டது, பாஜக ஆட்சியின் கீழ் நிலவும் முழுமையான சட்டமின்மையை நினைவூட்டும் மற்றொரு அதிர்ச்சிகரமான நிகழ்வாகும்.</p><p>மாணவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். பெண்கள் தினமும் கொடுமைகளை எதிர்கொள்கின்றனர். வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த மக்கள் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர்.</p><h2>டெல்லி குற்றங்களின் தலைநகராக மாறியுள்ளது</h2><p>உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கண்காணிப்பில், டெல்லி குற்றங்களின் தலைநகராக மாறியுள்ளது. தேசிய தலைநகரில் குற்றங்கள் மிக அதிக அளவில் நடைபெறுவதை என்சிஆர்பி (NCRB) ஆண்டுதோறும் பதிவு செய்து வருகிறது.</p><p>அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மோடி அரசின் இயலாமை காரணமாக மணிப்பூர் மக்கள் தங்கள் மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவதிப்படுகின்றனர்.</p><p>இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்</p><p>டெல்லியில் வீட்டிற்கு வெளியே மது அருந்தியபடி சத்தம் எழுப்பியதை தட்டிக்கேட்டதால் மணிப்பூர் இசைக்களைஞர் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் குரல் அல்ல, பொய்களின் சூழ்ச்சி: காங்கிரசை கிண்டல் செய்த பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-mocks-congress-chhatron-ki-goonj-campaign-dubs-it-jooth-ki-goonj</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-mocks-congress-chhatron-ki-goonj-campaign-dubs-it-jooth-ki-goonj#comments</comments><guid isPermaLink="false">65a39026-bb1b-4ae9-bd84-44dfeafcd82e</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:56:26 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:56:26.963Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/8vbefhg0/RahulGandhi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi- PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/8vbefhg0/RahulGandhi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலம் வதோதராவில் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பல்வேறு திட்டங்களை திறந்து வைத்ததுடன், அடிக்கல் நாட்டினார்.</p><h2>அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-</h2><p>எல்லா இடங்களிலும் பொய்யான சூழ்ச்சி மூலம் உங்களை திசை திருப்ப முயற்சிக்கும் மனிதர்களைக் காண்பீர்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் உண்மையின் பக்கம் நிற்பார்கள்.</p><p>நாட்டின் இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் நிபுணர்களாக மாற வேண்டும். அவர்கள் இத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.</p><p>சூரிய சக்தி, காற்றாலை, நீர் மின்சாரம் மற்றும் அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுவதில் அரசாங்கம் எவ்வளவு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்பதை இளைஞர்களால் காண முடிகிறது.</p><p>இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.</p><h2>ராகுல் காந்தியின் மாணவர்கள் குரல் பிரசாரம்</h2><p>காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மாணவர்களின் குரல் (Chhatron Ki Goonj) என்ற பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். வினாத்தாள் கசிவு, மாநில வேலைவாய்ப்பு தேர்வில் உள்ள முறைகேடு தொடர்பாக முக்கிய நகரங்களில் உள்ள இளைஞர்களை சந்தித்து உரையாடி வருகிறார்.</p><p>இந்த நிலையில்தான் பிரதமர் மோடி இவ்வாறு கிண்டல் செய்துள்ளார். அதேவேளையில் ராகுல் காந்தியின் முன்னெடுப்பை கண்டு பாஜக அஞ்சுகிறது என்று காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: சத்தம் எழுப்பியதை தட்டிக்கேட்ட பிரபல மணிப்பூர் இசைக்கலைஞர் டெல்லியில் அடித்துக் கொலை - 8 பேர் கைது 
</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-manipuri-musician-beaten-to-death-after-objecting-to-noise-8-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-manipuri-musician-beaten-to-death-after-objecting-to-noise-8-arrested#comments</comments><guid isPermaLink="false">291a463a-9576-4776-bf06-f35f99997efa</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:43:06 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:43:06.243Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை,இசைக்கலைஞர்,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/0ng51qin/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விக்ரம் சிங்]]></media:title><media:description type="html"><![CDATA[ விக்ரம் சிங்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/0ng51qin/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் மணிப்பூரை சேர்ந்த கிட்ட்டார் இசைக்கலைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/manipur">மணிப்பூரை  </a>சேர்ந்த 55 வயது விக்ரம் சிங், கடந்த 17 ஆண்டுகளாக டெல்லியில் தங்கித் இசை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். </p><p>தென்கிழக்கு <a href="https://www.maalaimalar.com/news/national/1133-buildings-collapsed-and-98-people-lost-their-lives-in-delhi-over-three-years-residents-living-in-fear">டெல்லியின் </a>கிலோகரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 3வது தளத்தில் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். </p><p>நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11:30 மணியளவில் குப்பைகளை கொட்டுவதற்காக விக்ரம் சிங் வீட்டின் 3ஆம் தளத்திலிருந்து கீழே இறங்கியுள்ளார். </p> <h2>தாக்குதல்</h2><p>அப்போது அருகில் உள்ள தாபா உணவகங்களில் பணியாற்றும் சிலர் அவர் குடியிருக்கும் கட்டிடத்தின் வெளியே உரக்கச் சத்தமிட்டு குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர்.</p><p>அவர்களின் இந்த செயலை விக்ரம் சிங் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் அவருடன் தகராறில் ஈடுபட்டது.</p><p>அவர்கள் தாக்க முயன்றதால் பயந்துபோன விக்ரம் சிங் தனது வீட்டை நோக்கி ஓடியபோது, அக்கும்பல் அவரை 3வது தளம் வரை துரத்திச் சென்று, காரிடாரில் வைத்து சரமாரியாக தாக்கிவிட்டுத் தப்பியோடியது.</p><h2>உயிரிழப்பு</h2><p>காயமடைந்த விக்ரம் சிங்கை அவருடைய குடும்பத்தினர் ஓக்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><p>ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்தார்.</p> <h2>கைது</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட பரத் குமார் (19), பிரமோத் (26), ரம்ஜான் கான் (22), விஜய் (36), தீபன்ஷு (21), மோகன் விஸ்வகர்மா (32), மன்னு (26) ஆகிய 7 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஒரு 15 வயது சிறுவனும் பிடிபட்டுள்ளான்.</p> <h2>போராட்டம்</h2><p>இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் டெல்லியில் வாழும் நூற்றுக்கணக்கான வடகிழக்கு மாநில மக்கள் கிலோகரி பகுதியில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் நடத்தினர்.</p> <p>மணிப்பூர் முன்னாள் முதல்வர் பைரன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், "இசைக்கலைஞர் விக்ரம் சிங்கின் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>டெல்லி காவல்துறை இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டுத் தீவிர விசாரணை நடத்தி, விரைந்து நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Deeply saddened by the tragic passing of renowned Manipuri guitarist and Western music pioneer, Shri Chongtham Vikram Singh, and deeply concerned by the incident in which he was allegedly assaulted near his residence in southeast Delhi. <br><br>Shri Vikram Singh’s invaluable… <a href="https://t.co/MH49Pcdh8A">pic.twitter.com/MH49Pcdh8A</a></p>&mdash; N. Biren Singh (@NBirenSingh) <a href="https://x.com/NBirenSingh/status/2096952980566376849?ref_src=twsrc%5Etfw">September 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>யார் இந்த விக்ரம் சிங்?</h2><p>மணிப்பூரின் இம்பால் மேற்குப் பகுதியை சேர்ந்த விக்ரம் சிங், மணிப்பூரின் பல முன்னணி இசைக்குழுக்களில் முதன்மை கிட்டார் கலைஞராகப் பணியாற்றியுள்ளார்.</p><p>கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லிக்கு இடம்பெயர்ந்த அவர், அங்குத் தனியாக இசைப்பள்ளி ஒன்றை நிறுவி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார். </p> <p>பல இசைக்கச்சேரிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.</p><p>விக்ரம் சிங் பாரம்பரியமான கலைக் குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரது தாயார் 86 வயதான சொங்தாம் ஓங்பி கமலா தேவி மணிப்பூரின் புகழ்பெற்ற பாரம்பரிய பாடகி ஆவார்.</p><p>விக்ரம் சிங், இந்தியாவின் முதல் BAFTA விருதை வென்ற Boong திரைப்படத்தின் இயக்குநர் லக்ஷ்மிபிரியா தேவியின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.</p><p>விக்ரம் சிங்கிற்கு ஜோத்சனா (54) என்ற மனைவியும், யைபாபா (20) என்ற மகனும் உள்ளனர். மகன் யைபாபா சட்டம் பயின்று வரும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நகர்ப்புற போக்குவரத்தில் புதிய மைல்கல்: மெட்ரோ ரெயில் சேவையில் அமெரிக்காவை முந்தி உலகளவில் 2-வது இடத்தை பிடிக்கும் இந்தியா</title><link>https://www.maalaimalar.com/news/national/india-to-overtake-us-in-global-metro-network-second-largest</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-to-overtake-us-in-global-metro-network-second-largest#comments</comments><guid isPermaLink="false">e8500717-8ea2-4665-9be2-c7068178155e</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:34:06 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:34:06.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,China,சீனா,அமெரிக்கா,America,மெட்ரோ ரெயில்,metro rail services,urban transport</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ab1850nv/metro.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ metro rail services  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ab1850nv/metro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவைகள் பயன்பாட்டில் இருந்தன. </p><p>இந்தியாவின் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் பொது போக்குவரத்துத் துறை மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, மெட்ரோ ரெயில் திட்டங்கள் விரிவாக்கப்பட்டு வரும் வேகமானது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய மெட்ரோ ரெயில் நெட்வொர்க்கைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா விரைவில் இரண்டாம் இடத்திற்கு முன்னேற உள்ளது.</p><p>தற்போது சர்வதேச அளவில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. இருப்பினும், அமெரிக்காவை விட மிக குறைந்த இடைவெளியிலேயே <a href="https://www.maalaimalar.com/news/national/isro-not-to-be-privatised-isro-chief-v-narayanan-assures-employees">இந்தியா</a> பின் தங்கியிருப்பதாலும், நாடு முழுவதும் பெருமளவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாலும், விரைவில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாம் இடத்தை உறுதியாகக் கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது.</p><p>உலகளாவிய மெட்ரோ ரெயில் நெட்வொர்க்கில் சீனா 11,000 கிலோமீட்டருக்கும் அதிகமான வழித்தடங்களுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.</p><p>*சீனா: 11,000 கி.மீ. (முதலிடம்)</p><p>*அமெரிக்கா: 1,386 கி.மீ. (இரண்டாம் இடம்)</p><p>*இந்தியா: 1,170 கி.மீ. (மூன்றாம் இடம்)</p><p>தற்போது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வேறுபாடு வெறும் 216 கிலோமீட்டர் மட்டுமே. இந்தியாவில் நகர்ப்புற போக்குவரத்து தேவைகள் அதிகரித்து வருவதால், இந்த இடைவெளி மிக விரைவாகக் குறைந்து வருகிறது.</p><h2>பிரமா<strong>ண்ட வளர்ச்</strong>சி</h2><p>கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவைகள் பயன்பாட்டில் இருந்தன. அப்போது ஒட்டுமொத்த மெட்ரோ வழித்தடத்தின் நீளம் 245 கிலோமீட்டராக மட்டுமே இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர உள்கட்டமைப்பு மேம்பாடுகள் காரணமாக, தற்போது நாட்டின் 26 முக்கிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வழித்தடத்தின் நீளம் 1,170 கிலோமீட்டராகப் பன்மடங்கு உயர்ந்துள்ளது.</p><h2>கட்டுமா<strong>னப் பணிகள்</strong> தீவிரம் </h2><p>இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு நகரங்களில் தற்போது சுமார் 900 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் கட்டுமானப் பணிகள் பல்வேறு கட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது கட்டுமானத்தில் உள்ள இந்த 900 கி.மீ. வழித்தடத்தில் ஒரு சிறிய பகுதி நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்தாலே, இந்தியா மிக எளிதாக 1,386 கி.மீ. கொண்ட அமெரிக்காவை முந்தி சர்வதேச தரவரிசையில் இரண்டாம் இடத்தைச் சென்றடையும்.</p><h2>பொருளாதார <strong>தாக்</strong>கம்</h2><p>மெட்ரோ ரெயில் சேவைகளின் விரிவாக்கம் வெறும் போக்குவரத்து வசதியை மட்டும் வழங்காமல், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது. தனிநபர் வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் நகரங்களில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு கணிசமாகக் குறைகிறது. விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதால், வேலைக்குச் செல்வோர் மற்றும் வணிகச் செயல்பாடுகளுக்கான நேர விரயம் குறைக்கப்பட்டு நகர்ப்புறப் பொருளாதாரம் புதிய வேகத்தைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கியாஸ் சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக  குறைப்பு 
</title><link>https://www.maalaimalar.com/news/national/gas-cylinder-booking-interval-fixed-at-25-days</link><comments>https://www.maalaimalar.com/news/national/gas-cylinder-booking-interval-fixed-at-25-days#comments</comments><guid isPermaLink="false">79d89a85-34e5-4107-b929-c13d482ade64</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:40:26 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:40:26.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்பிஜி,கியாஸ் சிலிண்டர்,சமையல் எரிவாயு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/id2xp2ay/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிலிண்டர் முன்பதிவு ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிலிண்டர் முன்பதிவு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/id2xp2ay/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எரிபொருள் வினியோக நிலைமை மேம்பட்டுள்ளதால் கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறை தான் சமையல் எரிவாயு முன்பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-pilot-killed-in-iran-war-compensation-dispute">ஈரான் - அமெரிக்கா போர்</a> காரணமான வளைகுடா நாடுகளில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ஹார்முஸ் ஜலசந்தி</a> வழியாக ஏற்றுமதி தடைபட்டு உலக அளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவிலும் இதன் தாக்கம் இருந்தது. </p> <p>போர் தொடர்ந்தபோதிலும் அண்மை காலமாக எரிபொருள் தட்டுப்பாடு இன்றி சீராக கிடைக்கத் தொடங்கியுள்ளது.</p><p>எனவே வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவில் விதித்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி வருகிறது.</p><p>அந்த வகையில் கிராமம், நகரப்பகுதிகள் என வேறுபாடின்றி ஒரே சீராக கியாஸ் சிலிண்டர் மறு நிரப்பலுக்கான (ரீபில்) முன்பதிவு இடைவெளிக் காலம் 25 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p> <h2>தளர்வு</h2><p>முன்னதாக நெருக்கடியால் நகர்ப்புறங்களில் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் நிர்ணயிக்கப்பட்டது.</p><p>தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால் கிராமங்களுக்கும் மறுநிரப்பலுக்கான இடைவெளிக்காலம் 45 இல் இருந்து 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது.</p><p>இதை நடைமுறைப்படுத்த கியாஸ் விநியோக நிறுவனங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.</p> <p>இந்த தளர்வு குறித்த தகவலை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.</p><p>வினியோக நிலை மேம்பட்டு இருப்பதாலும், மறு நிரப்பல் நிலுவை கணிசமாக குறைந்து இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்</p><p>இதனால் கிராமப்புறங்களில் வசிப்போர் பதற்றம் தணிந்து நிம்மதியடைந்துள்ளனர் </p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் விசித்திரம்: பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் அகற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/bizarre-case-in-andhra-14-pens-5-wooden-spoons-removed-from-womans-stomach</link><comments>https://www.maalaimalar.com/news/national/bizarre-case-in-andhra-14-pens-5-wooden-spoons-removed-from-womans-stomach#comments</comments><guid isPermaLink="false">962f78fd-234f-4725-af22-0abed24d62b6</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:55:02 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:55:02.589Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra,ஆந்திரா,Laparoscopic procedure,Wooden Spoons,Pica Syndrome,பல்நாடு மாவட்டம்,நரசராவ்பேட்டை,லாப்ரோஸ்கோபி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uh81jcl6/ccc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bizarre incident in Andhra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uh81jcl6/ccc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அப்பெண் இவ்வளவு பொருட்களை எவ்வாறு விழுங்கினார் என்பது குறித்து ஆராய்ந்தபோது, அவர் கடந்த 10 ஆண்டுகளாகப் மனநலப் பாதிப்பினால் சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்தது. </p><p>ஆந்திரப் பிரதேசம், பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பெட்லூரிவாரிபாலெம் கிராமத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், கடந்த சில நாட்களாகக் கடுமையான நெஞ்சு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வலியின் தாக்கம் அதிகரித்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை நரசராவ்பேட்டையில் உள்ள மாதாஸ்ரீ என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.</p><h2>ஸ்கேனி<strong>ங் பரிசோதனை</strong>யில் அதிர்ச்சி</h2><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்குக் முதல்கட்டப் பரிசோதனைகள் மற்றும் வயிற்றுப்பகுதி ஸ்கேனிங் செய்யப்பட்டது. ஸ்கேன் அறிக்கையைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஏராளமான அநாவசியப் பொருட்கள் உள்கொள்ளப்பட்டுச் சிக்கியிருப்பது தெரியவந்தது.</p><h2>லாப்ரோ<strong>ஸ்கோபி சிகிச்சை</strong></h2><p>மருத்துவர் பி.ராமசந்திர ரெட்டி தலைமையிலான நிபுணர் குழுவினர், பெண்ணுக்கு உடனடியாக '<a href="https://www.maalaimalar.com/news/national/father-held-for-smuggling-rs-1-crore-gold-in-babys-diaper">லாப்ரோஸ்கோபி</a>' எனும் நுண் துளை அறுவை சிகிச்சையைத் தொடங்கினர். வயிற்றுப் பகுதியில் சிறிய துளையிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையின் மூலம், பெண்ணின் வயிற்றிலிருந்து மொத்தம் 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் மற்றும் 1 மெழுகுவர்த்தி ஆகிய 20 பொருட்கள் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டன.</p><p>வெளியே எடுக்கப்பட்ட பேனாக்களில் ஒன்றின் மூடி கழன்ற நிலையில் இருந்தது. அந்தப் பேனாவின் கூர்மையான பகுதி பெண்ணின் வயிற்றின் உட்புறச் சுவரில் குத்தியதால் தான் அவருக்குத் தாங்க முடியாத அளவு கடுமையான வலியும் அசௌகரியமும் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அப்பெண் நலமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறார்.</p><p>அப்பெண் இவ்வளவு பொருட்களை எவ்வாறு விழுங்கினார் என்பது குறித்து ஆராய்ந்தபோது, அவர் கடந்த 10 ஆண்டுகளாகப் மனநலப் பாதிப்பினால் சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அவரது கணவர் அவரை விவாகரத்து செய்துள்ளார். உணவு அல்லாத பிற தேவையற்ற பொருட்களை உண்ணும் ‘பைகா சின்ட்ரோம்’ அல்லது தீவிர மன அழுத்தப் பாதிப்பே பெண்ணின் இந்தச் செயலுக்குக் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கணித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில்  3 ஆண்டுகளில் 1,133  கட்டிடங்கள் சரிந்து விழுந்து 98 பேர் உயிரிழப்பு - அச்சத்தில் வாழும் மக்கள் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/1133-buildings-collapsed-and-98-people-lost-their-lives-in-delhi-over-three-years-residents-living-in-fear</link><comments>https://www.maalaimalar.com/news/national/1133-buildings-collapsed-and-98-people-lost-their-lives-in-delhi-over-three-years-residents-living-in-fear#comments</comments><guid isPermaLink="false">a82c87b0-652d-45b2-8566-85a5be4dd571</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:12:44 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:12:44.501Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கட்டிட விபத்து,Building Collapse,hostel,தங்கும் விடுதி,delhi,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ocw1o5i3/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ocw1o5i3/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,133 கட்டிடச் சரிந்து விழுந்து அதில் மொத்தம் 98 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லியில் </a>சத்ய நிகேதன் பகுதியில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 50 பேர் தங்கியிருந்த தனியார் விடுதி கட்டிடம் கடந்த ஞாயிறன்று இடிந்து விழுந்ததில் 7 பேர் கொல்லபட்டனர்.</p><p>இந்த சம்பவம் தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஏற்கனவே டெல்லியில் நிகழ்ந்த பல்வேறு கட்டிட விபத்து சம்பவங்கள் கவனம் பெற்று வருகின்றன.</p><p>இந்த விபத்து வெறும் தனிப்பட்ட சம்பவமாக அல்லாமல் தலைநகர் டெல்லி முழுவதிலும் உள்ள கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்வி எழுந்துள்ளது.</p> <h2>முறைகேடு</h2><p>இந்த <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-lodge-building-accident-owner-arrested-in-rajasthan">விடுதி கட்டிட விபத்து</a> சமபவத்தில் டெல்லி மாநகராட்சி நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>வெறும் 165 அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த 5 மாடிக் கட்டிடத்திற்கு மாநகராட்சியின் அனுமதி பெற்ற வரைபடம் எதுவும் இல்லை.</p><p>மேலும், கட்டிடத்தின் அடித்தளத்தில்உரிய அனுமதியின்றி புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்ததும், அனுமதிக்கப்பட்ட அவளை 5வது தளம் கட்டப்பட்டதும் தெரியவந்துள்ளது.</p><p>விதிகளின்படி 9 மீட்டருக்கு மேல் உயரமும், 20க்கும் மேற்பட்ட மாணவர்களும் தங்கும் விடுதிகளுக்கு தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் கட்டாயம். ஆனால், இந்த விடுதிக்கு எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை.</p> <h2>நடவடிக்கை</h2><p>விபத்தைத் தொடர்ந்து கட்டிடத்தின் உரிமையாளர் ஹரிராம் குப்தா, அவருடைய மனைவி ஊர்மிளா மற்றும் மகன் மகேஷ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அதேபோல, சட்டவிரோத கட்டுமானத்தைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாக டெல்லி மாநகராட்சியின்5 அதிகாரிகள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.</p> <h2>அதிர்ச்சி புள்ளிவிவரம்</h2><p>இதனிடையே தான் டெல்லி தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் டெல்லியில் கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.</p><p>டெல்லியில் 2022ஆம் ஆண்டில் 349 கட்டிடச் சரிவு சம்பவங்கள் பதிவாகியுன. இதில் 43 பேர் உயிரிழந்தனர்.</p><p>2023இல் 371 கட்டிட சரிவு சம்பவங்களில் 23 பேரும், 2024 இல் 413 கட்டிட சரிவு சம்பவங்களில் 32 பேரும் பலியாகினர்.</p><p>ஒட்டுமொத்தமாக 2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,133 கட்டிடச் சரிவு சம்பவங்கள் பதிவாகி, மொத்தம் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் (ஜனவரி முதல் ஜூலை வரை) 233 கட்டிடச் சரிவு அழைப்புகள் பெறப்பட்டு, அதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்; 101 பேர் காயமடைந்துள்ளனர்.</p><h2>சத்ய நிகேதன் சோதனை</h2><p>சத்ய நிகேதன் பகுதி, தொடக்கத்தில் குறைந்த குடியிருப்புகளை கொண்ட பகுதியாகவே இருந்துள்ளது. ஆனால் டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் இங்கு அமைந்துள்ளதால் சிக்கல் எழுந்தது.</p><p>பல்கலைக்கழக விடுதிகளில் போதிய இடமில்லாமல், மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி, குடியிருப்பு வீடுகள் அனைத்தும் அனுமதி இன்றி பல மாடி தனியார் விடுதிகளாகவும் உணவகங்களாகவும் மாற்றப்பட்டன.</p><p>ஒரு சதுர கிலோமீட்டருக்கு 11,320 பேர் வாழும் அடர்த்தியான டெல்லியில், இது போன்ற கட்டுப்பாடற்ற மற்றும் சட்டவிரோதக் கட்டிட மாற்றங்களே தொடர் விபத்துக்களுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன.</p>]]></content:encoded></item><item><title>&quot;படித்தவர்கள் வாழும் பகுதிகளை விட ரெட் லைட் பகுதிகளில் இருந்தே எனக்கு அதிக வாக்குகள் கிடைக்கின்றன&quot; - நிதின் கட்கரி பெருமிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/i-receive-more-votes-from-red-light-areas-than-from-localities-where-educated-people-live-nitin-gadkari-says-with-pride</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-receive-more-votes-from-red-light-areas-than-from-localities-where-educated-people-live-nitin-gadkari-says-with-pride#comments</comments><guid isPermaLink="false">46b31a34-83d9-4999-8ef7-23b5230c60b6</guid><pubDate>Tue, 08 Sep 2026 03:02:56 +0000</pubDate><atom:updated>2026-09-08T03:02:56.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,nagpur,Nitin gadkari,நிதின் கட்கரி,நாக்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/n8esd8nr/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிதின் கட்கரி ]]></media:title><media:description type="html"><![CDATA[ நிதின் கட்கரி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/n8esd8nr/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>படித்த மக்கள் வாழும் பகுதிகளை விடக் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மற்றும் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ள இடங்களில் இருந்தே தனக்கு அதிக வாக்குகள் கிடைப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.</p><p>மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக உள்ள <a href="https://www.maalaimalar.com/topic/nitin-gadkari">நிதின் கட்கரி </a>நேற்று ராஜாஸ்தான் மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். </p><p>அப்போது அவர், நாக்பூரில் உள்ள மிகவும் படித்த மக்கள் வாழும் பகுதிகளில் தனக்கு 70% முதல் 75% வரை மட்டுமே வாக்குகள் கிடைத்ததாகவும், அதே நேரத்தில் குற்றப் பின்னணி (Underworld), பாதாள உலகத் தொடர்புகள் மற்றும் சிவப்பு விளக்கு பகுதிகள் நிறைந்த இடங்களில் 92% வாக்குகள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.</p><h2>காரணம்</h2><p>அதற்கான காரணத்தை விலக்கிய அவர், "நான் அரசியலில் நல்லவை, கெட்டவை என அனைத்தையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டேன்.</p><p>அப்பகுதிகளுக்குச் சாலை வசதிகளை அமைத்துத் தந்து, பல்வேறு சமூக நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டதால் தான் மக்கள் வாக்களித்தார்களே தவிர, நான் குற்றச்செயல்களுக்கு ஆதரவளிப்பதாக இதன் பொருள் அல்ல" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.</p> <h2>இலவசம்</h2><p>"வாக்காளர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் இலவசங்களைப் பெற்றுக்கொண்டாலும், தங்களுக்கு யார் உண்மையாக வேலை செய்வார்கள் என்பதைப் புரிந்து கொண்டுதான் வாக்களிப்பார்கள்" என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>கடந்த காலத்தில் தேர்தலில் போட்டியிட்டபோது வாக்காளர்களுக்கு தலா 1 கிலோ ஆட்டிறைச்சி வழங்கியதாகவும், ஆனால் அந்தத் தேர்தலில் தான் தோல்வியடைந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.</p> <p>சில நாட்களுக்கு முன்பு மற்றொரு நிகழ்வில் பேசிய கட்கரி, "என்னால் இனி பழையபடி தீவிரமாகப் பணியாற்ற முடியாது. பொறுப்புகளைப் புதிய தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>கடந்த 2024 மக்களவை தேர்தலில் நாக்பூர் தொகுதியில் நிதின் கட்கரி தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விகாஸ் தாக்கரேவை விட சுமார் 1 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>72 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை.. தேசிய திரைப்பட விருது விழா டெல்லியில் இருந்து குஜராத்துக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/for-the-first-time-in-its-72-year-history-national-film-awards-ceremony-shifting-from-delhi-to-gujarat</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/for-the-first-time-in-its-72-year-history-national-film-awards-ceremony-shifting-from-delhi-to-gujarat#comments</comments><guid isPermaLink="false">d03f364d-b682-432b-adbd-01407abd6f92</guid><pubDate>Tue, 08 Sep 2026 02:26:46 +0000</pubDate><atom:updated>2026-09-08T02:26:46.156Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,தேசிய திரைப்பட விருதுகள்,தனுஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jjhfbk7d/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தேசிய திரைப்பட விருது விழா]]></media:title><media:description type="html"><![CDATA[ தேசிய திரைப்பட விருது விழா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jjhfbk7d/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>72வது தேசிய திரைப்பட விருதுகள் விழா  டெல்லிக்கு பதிலாக குஜராத்தில் நடைபெற உள்ளது.</p><p>இந்தியத் திரைப்படத்துறையின் மிக உயரிய விருதாக மத்திய அரசு வழங்கும் தேசிய திரைப்பட விருதுகள்  இருக்கிறது. </p><p>இந்நிலையில் 72வது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81">தேசிய திரைப்பட விருதுகள்</a> வழங்கும் விழா வரும் செப்டம்பர் 22 அன்று, குஜராத் மாநிலத்தில் உள்ள ஏக்தா நகரில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  </p><p>குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கவுள்ளார். </p> <h2>டெல்லி டூ குஜராத்</h2><p>1954-இல் தொடங்கப்பட்ட தேசிய திரைப்பட விருது விழாக்கள், 72 ஆண்டு காலமாக தலைநகர் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன.</p><p>தற்போது முதன்முறையாக இந்த மரபு உடைக்கப்பட்டு தலைநகருக்கு வெளியே குஜராத்தில் நடைபெறுகிறது.</p><p>1974 முதல் 2022 வரை திரைப்பட விழாக்கள் இயக்ககத்தால் (DFF) நடத்தப்பட்டு வந்த இந்த விழா, 2022 முதல் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (NFDC) மூலம் நடத்தப்பட்டு வருகிறது.</p> <h2>விருதுகள்</h2><p>2024ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கு இவ்வாண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுப் பட்டியல் கடந்த ஜூலை மாதம் டெல்லியில் அறிவிக்கப்பட்டது.</p><p>அதன்படி, சிறந்த திரைப்படமாக 'ஆர்ட்டிகிள் 370' படம் இவ்வாண்டு விருதுக்கு தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகையாக 'ஆர்ட்டிகிள் 370' படத்தில் நடித்ததற்காக யாமி கௌதம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.</p><p>'பிரம்மயுகம்' படத்தில் நடித்த மம்முட்டி மற்றும் 'சந்து சேம்பியன்' படத்தில் நடித்த கார்த்திக் ஆர்யன் ஆகியோருக்கு சிறந்த நடிகர் விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.</p> <p>சிறந்த அறிமுக இயக்குநர் விருதுக்கு 'வீர் சவார்க்கர்' படத்தை இயக்கிய ரந்தீப் ஹூடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.</p><p>சிறந்த ஜனரஞ்சகப் படமாக பிரபாஸின் கல்கி 2898 ஏ.டி தேர்வாகியுள்ளது.</p><p>தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புள்ள சிறந்த படம் என்ற பிரிவில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/mammoottys-mass-introduction-video-from-the-dhanush-starrer-om-chapter-1">தனுஷ் </a>நடித்த 'கேப்டன் மில்லர்' தேர்வாகியுள்ளது.</p><p>தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ. 1.10 லட்சம் கோடியில் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/govt-clears-rs-110-lakh-crore-proposals-to-buy-military-hardware</link><comments>https://www.maalaimalar.com/news/national/govt-clears-rs-110-lakh-crore-proposals-to-buy-military-hardware#comments</comments><guid isPermaLink="false">b0e57e3f-37b3-4a0c-b60b-d812c16fb971</guid><pubDate>Mon, 07 Sep 2026 23:46:36 +0000</pubDate><atom:updated>2026-09-07T23:46:36.950Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,ராஜ்நாத் சிங்,Military hardware,ராணுவம் தளவாடங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zwuhc3df/Rajnath-Singh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajnath Singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zwuhc3df/Rajnath-Singh.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/rajnath-singh">ராஜ்நாத் சிங்</a> தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், முப்படைகளுக்கான ராணுவ தளவாடங்களை வாங்குவதற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியது. </p><p>இதில், போர் விமானங்களை நவீனமயமாக்குதல் மற்றும் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி உளவு வாகனங்கள், ரேடார்கள், பால அமைப்புகள் மற்றும் கண்ணிவெடிகளை இடும் கருவிகள் உள்ளிட்டவை ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்படுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/defence">பாதுகாப்பு துறை</a> ஒப்புதல்களின் ஒரு முக்கிய அம்சம், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்து, உள்நாட்டு கொள்முதலை ஊக்குவிப்பதும், அரசின் 'ஆத்மநிர்பர் பாரத்' முயற்சிக்கு ஊக்கமளிப்பதுமாகும்.</p><p>இது குறித்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "வழங்கப்பட்ட மொத்த தேவை ஏற்பில், ஏறத்தாழ 98 சதவீத கொள்முதல்கள் இந்திய தொழில்துறையில் இருந்தே செய்யப்படும். இது, இந்தியாவில் ஒரு வலுவான பாதுகாப்பு தொழில்துறை தளத்தை உருவாக்குவதில் எங்களது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது," என்றார்.</p><h2>அதிநவீன வாகனங்கள் கொள்முதல்:</h2><p>ராணுவத்தைப் பொறுத்தவரை, CBRN உளவு வாகனங்கள், அதிவேக வாகனங்கள் (HMVகள்), தானாக இயங்கும் இயந்திரக் கண்ணிவெடி இடும் வாகனங்கள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் (ALHகள்), இழுவை டாங்கிகள் மற்றும் சர்வத்ரா பால அமைப்பு ஆகியவற்றைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>CBRN உளவு வாகனங்கள், CBRN நச்சுப் பொருட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிதல், அடையாளம் காணுதல், கண்காணித்தல் மற்றும் குறித்தல் ஆகிய திறன்களை கொண்டிருக்கும் அதே வேளையில், இழுவை டாங்கிகள் என்பவை, எதிரி கண்ணிவெடிகளில் இருந்து பாதையைத் தெளிவுபடுத்துவதற்காக நிலக்கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்ய வடிவமைக்கப்பட்ட முன்பக்க அமைப்புடன் கூடிய சிறப்பு இராணுவப் போர் வாகனங்களாகும்.</p><p>கனரக வாகனங்கள் சவாலான நிலப்பரப்புகளில் செயல்பாட்டுத் திறன்கள், தளவாட ஆதரவு மற்றும் இயங்குதிறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. "இந்த ஏஎல்ஹெச் வாகனங்கள், ராணுவம் மற்றும் இந்திய விமானப்படைக்காக அனைத்து நிலப்பரப்புகளிலும் மற்றும் செயல்பாட்டுச் சூழ்நிலைகளிலும் சிக்கலான பணிகளை நிறைவேற்றும்," என்று அது கூறியது.</p>]]></content:encoded></item><item><title>பீகார் வெள்ள பாதிப்பு: தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/tejashwi-urges-pm-to-declare-bihar-floods-national-disaster</link><comments>https://www.maalaimalar.com/news/national/tejashwi-urges-pm-to-declare-bihar-floods-national-disaster#comments</comments><guid isPermaLink="false">3c10c01d-aacb-438f-a5dc-8929d643b556</guid><pubDate>Mon, 07 Sep 2026 23:16:44 +0000</pubDate><atom:updated>2026-09-07T23:16:44.490Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tejashwi Yadav,pm modi,Bihar floods,பீகார் வெள்ளம்,பிரதமர் மோடி,s, தேஜஸ்வி யாதவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/0wulh9iq/bihar-floods.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/0wulh9iq/bihar-floods.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரின் வெள்ள பாதிப்பை “தேசியப் பேரிடராக” அறிவித்து, நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக ரூ.5,000 கோடி மத்திய உதவித் தொகுப்பை வழங்க வேண்டும் என <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர்</a> நரேந்திர மோடியை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் வலியுறுத்தினார்.</p><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தியாரா பகுதிகளை பார்வையிட்ட பிறகு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், உயர்ந்து வரும் நதி நீர்மட்டம் மற்றும் பரவலான <a href="https://www.maalaimalar.com/topic/bihar-floods">வெள்ளப்பெருக்கு</a> ஆகியவை மில்லியன் கணக்கான மக்களை பாதித்து, இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து, பொது உள்கட்டமைப்பை சேதப்படுத்தியுள்ளதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.</p><h2>மீட்புப் பணிகள் போதுமானதாக இல்லை:</h2><p>நெருக்கடியின் தீவிரத்தோடு ஒப்பிடும் போது மாநில அரசின் நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் போதுமானதாக இல்லை என்றும், கூடுதல் உதவிக்காக மத்திய அரசை வலியுறுத்த தவறியதாக மாநில என்.டி.ஏ. தலைவர்களையும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு, பாதுகாப்பான குடிநீர், மருந்துகள், மின்சாரம், கால்நடை தீவனம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை பெறுவதற்கு போராடி வருவதாக தேஜஸ்வி யாதவ் கூறினார்.</p><p>துண்டிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் படகுகளையும் மீட்பு வளங்களையும் உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ராணுவம் மற்றும் விமானப்படை ஹெலிகாப்டர்களின் உதவியை அவர் கோரினார்.</p><p>பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் போதுமான உணவு, குடிநீர், மருந்துகள், கால்நடைத் தீவனம் மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தேஜஸ்வி கோரிக்கை விடுத்தார். வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், கால்நடை உரிமையாளர்கள் மற்றும் பிறருக்கு சிறப்பு நிதியுதவி வழங்க அவர் அழைப்பு விடுத்தார்.</p><h2>சுதந்திரமான ஆய்வு நடத்த வேண்டும்:</h2><p>நீண்டகால நடவடிக்கைகளை நாடி, அவர் பீகாருக்கான வெள்ள தடுப்பு திட்டத்தை முன்மொழிந்தார். இத்திட்டம், ஆறு மற்றும் கரை மேலாண்மை, வடிகால் மேம்பாடு, நீர்நிலைகளை புனரமைத்தல் மற்றும் நவீன வெள்ள முன்னறிவிப்பு அமைப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.</p><p>மேலும், நேபாளம் மற்றும் பிற அண்டை நாடுகளுடன் வலுவான நீர் மேலாண்மை ஒருங்கிணைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். பீகாரின் பேரிடர் மேலாண்மைத் தயார்நிலை மற்றும் அவசரகால நிதிகளின் பயன்பாடு குறித்து ஒரு சுதந்திரமான ஆய்வு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கோரினார்.</p>]]></content:encoded></item><item><title>அச்சுறுத்தல்களுக்கு தீர்க்கமாக பதிலளிக்க ஆயுத படைகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது: ராஜ்நாத் சிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-said-armed-forces-given-freedom-resources-to-respond-decisively-to-threats</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-said-armed-forces-given-freedom-resources-to-respond-decisively-to-threats#comments</comments><guid isPermaLink="false">c0ce0db8-18a0-41ed-989e-fe2b803d039a</guid><pubDate>Mon, 07 Sep 2026 20:29:31 +0000</pubDate><atom:updated>2026-09-07T20:29:31.957Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,armed forces,ஆயுத படை,ராஜ்நாத் சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/9wkmt9fj/Rajnath-Singh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajnath Singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/9wkmt9fj/Rajnath-Singh.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எதிரிகளின் எல்லைக்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு தீர்க்கமாக பதிலளிப்பதற்கான "சுதந்திரமும் வளங்களும்" இந்திய ஆயுத படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  தெரிவித்தார். </p><p>இங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா அமைதியை விரும்புவதாகவும், போரையோ அல்லது எந்தவொரு நாட்டின் நிலப்பகுதியையும் ஆக்கிரமிப்பதையோ அது விரும்பவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தினார். </p><p>இருப்பினும், அமைதிக்கும் பலவீனத்திற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>பேச்சுவார்த்தைக்கு இடமிருக்காது:</h2><p>"போர் குறித்த அச்சத்தால் ஏற்படும் அமைதி கண்டிக்கத்தக்கது; அதேவேளையில், அமைதிக்காக நடத்தப்படும் போர் போற்றுதலுக்குரியது. இந்தியாவுக்கு எதிராக ஏதேனும் ஒரு நாடு பயங்கரவாதத்தை ஊக்குவித்தால், பேச்சுவார்த்தைக்கு இடமிருக்காது; மாறாக, நமது பாதுகாப்பு படைகள் தகுந்த பதிலடியை கொடுக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்," என்று அவர் கூறினார்.</p><p>எதிரிகளின் எல்லைக்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு தீர்க்கமாக பதிலளிக்க ஆயுத படைகளுக்கு சுதந்திரமும் வளங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழலிலும், இந்தியா தனது சுயமான முடிவெடுக்கும் திறன் மற்றும் மூலோபாய சுதந்திரத்துடன் முன்னேறி வருகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது உரையில் வலியுறுத்தினார்.</p><h2>பாதுகாப்பை எதிரிகள் முயற்சி:</h2><p>ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லுதல், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்தல், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை பரப்புதல் மற்றும் சமூகத்தில் பிளவுகளை உருவாக்க முயற்சித்தல் உள்ளிட்ட அனைத்து தீய வழிகளிலும் இந்தியாவின் பாதுகாப்பை குலைக்க எதிரிகள் முயற்சித்ததாக சிங் கூறினார்.</p><p>தவறான பாதையில் சென்ற இளைஞர்களை மீண்டும் நல்வழிக்கு கொண்டு வருதல், மறுவாழ்வு மற்றும் தீவிரவாத சிந்தனைகளை அகற்றும் முயற்சிகளை மேற்கொள்ளுதல், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம், இத்தகைய தீய திட்டங்களை முறியடித்து அனைத்து முனைகளிலும் அரசு பதிலடி கொடுத்துள்ளது என்று அவர் உறுதியாகக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கடந்த 6 மாதத்தில் 60,000 சிறார் பிரசவங்கள்: அரசு நலத்திட்டம் ரத்து செய்யப்படும் என சுவேந்து அதிகாரி எச்சரிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-records-60000-minor-deliveries-in-six-months-government-warns-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-records-60000-minor-deliveries-in-six-months-government-warns-action#comments</comments><guid isPermaLink="false">bf08fc95-6807-47b9-9121-7e95b5e8b494</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:40:31 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:40:31.741Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,சுவேந்து அதிகாரி,child marriage,குழந்தை திருமணம்,west bengal,suvendhu adhikari</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rttacz94/Untitled-design-37.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar child marriage]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rttacz94/Untitled-design-37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் குழந்தை திருமணம் செய்து கொள்பவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, அவருக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் திரும்ப பெறப்படும் என அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகார்</a> மாநிலத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை, 18 வயது குறைந்த சிறுமிகளுக்கு சுமார் 60,000 பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெற்றதாக மாநில சுகாதார துறை ஒரு அறிக்கை வெளியிட்டது. </p><p>இந்த நிலையில் நபான்னாவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மேற்கு வங்கத்தின் முதல்வர் சுவேந்து அதிகாரி செய்தியாளர்களை சந்தித்தார்.  </p><h3><strong>குழந்தை திருமணத்தில் முதலிடம்</strong></h3><p>அப்போது அவர் கூறுகையில், “ஆறு மாத காலப்பகுதியில், முர்ஷிதாபாத்தில் 12,847 சிறுமிகள் மருத்துவமனைகளில் பிரசவித்ததன் மூலம் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது.</p><p>தெற்கு பர்கானாஸ் பகுதி 4,178 வழக்குகளுடன் அடுத்த இடத்தில் உள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் குழந்தை திருமணங்கள் மற்றும் பிரசவங்களில் மேற்கு வங்கம் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது.</p><p>18 வயதுக்குட்பட்ட சிறுமி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு கர்ப்பம் மற்றும் பிரசவ வழக்கும் பதிவு செய்யப்பட வேண்டும்.</p><p>சந்தேகத்திற்கிடமான குழந்தை திருமணங்களைக் கண்டறியவும், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் சுகாதாரப் பதிவேடுகளைப் பயன்படுத்துவார்கள்.</p><h3><strong>வயது சரிபார்க்கப்படும்</strong></h3><p>சிறுவயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் கணவர்களுக்கு விளக்கம் கோரும் அறிவிப்புகள் வழங்கப்பட்டு, மனைவியின் வயதுக்கான சரியான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.</p><p>வயதுக்கான சரியான ஆதாரத்தை அவர்கள் வழங்கத் தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>இந்த அதிரடி நடவடிக்கையின் போது கண்டறியப்படும் வழக்குகளில், காவல்துறை குற்றவியல் நடவடிக்கையைத் தொடங்கி, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.</p><p>குழந்தை திருமணங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டவர்களிடம் இருந்து நலத்திட்டங்கள் மற்றும் இதர திட்டங்களின் பலன்கள் திரும்பப் பெறப்படும்.</p><p>சிறுவர் திருமணங்களை நடத்தி வைக்கும் அல்லது அதற்கு வழிவகுக்கும் மதகுருக்கள் மற்றும் இதில் ஈடுபடுபவர்களுக்கு சட்டப்படி சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்” என்று அவர் கூறினார்.</p><h3><strong>கடுமையான போக்சோ சட்டம்</strong></h3><p>மேலும், 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன், அவர் திருமணமானவரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் பாலியல் உறவு கொள்வது குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய சுவேந்து அதிகாரி, போக்சோ சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று கூறினார்.</p><p>18 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் உடல் உறவு கொள்வது போக்சோ சட்டத்தின் பிரிவுகளுக்கு உட்பட்டது என்றும், அதற்கான சிறைத் தண்டனை 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலும், சில சூழ்நிலைகளில் மரண தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.</p><p>சிறார் கர்ப்பம் தொடர்பான வழக்குகள் குறிப்பாகக் கடுமையான விசாரணைக்கும் நடவடிக்கைக்கும் உள்ளாகும் என்று மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே ஆண்டில் 4 முறை இடமாற்றம்: தவறுகளை சுட்டிக்காட்டினால் இப்படித்தானா?- ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/national/i-was-removed-for-pointing-out-mistakes-ias-officer-transferred-fourth-time-in-a-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-was-removed-for-pointing-out-mistakes-ias-officer-transferred-fourth-time-in-a-year#comments</comments><guid isPermaLink="false">2de29b0b-a2fa-4e10-923a-5aefd78ced98</guid><pubDate>Mon, 07 Sep 2026 15:05:38 +0000</pubDate><atom:updated>2026-09-07T15:05:38.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐஏஎஸ் அதிகாரி,IAS,Madhyapradesh,Transfer,பணியிட மாற்றம்,மத்தியப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rswgmn60/Untitled-design-34.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IAS officer Neha Marwya]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rswgmn60/Untitled-design-34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய பிரேதசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அரசு அதிகாரி ஒருவர், கடந்த ஓராண்டில் தொடர்ந்து நான்காவது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, தன்னுடைய உயர் அதிகாரிகள் தன்னை ஒரு கிள்ளுக்கு இரையாக பார்ப்பதாக ஐ.ஏ.எஸ் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.</p><p>2011 பேட்ச் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D">ஐ.ஏ.எஸ் அதிகாரியான</a> நேஹா மார்வ்யா கடந்த 2017-இல் சிவ்புரி மாவட்ட பஞ்சாயத்து தலைமை அதிகாரியாக பணி அமர்த்தப்பட்டார். </p><p>அப்போது இவருக்கு வாகன கட்டணங்கள் தொடர்பாக அப்போதைய ஆட்சியர் ஓ.பி. ஸ்ரீவஸ்தவா உடன் மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உயர் அதிகாரிகள் அந்த பணியில் இருந்து வேறு இடத்திற்கு மாறுதல் செய்தனர்.</p><p>இதையடுத்து 2022-ல் வருவாய் துறையில் பணியாற்றிய அவர், தனது பதவியை பொறுப்பேற்க முதன்மை செயலாளர் மனிஷ் ரஸ்தோகி தன்னை உள்ளே அனுமதிக்க மறுத்ததாக குற்றம்சாட்டினார்.</p><p>இதைத்தொடர்ந்து நேஹா கடந்த ஜனவரி 2025-ல் திண்டோரி பகுதியில் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற எட்டு மாதங்களுக்கு பிறகு உயர் அதிகாரிகள் அவரை ஆட்சியர் பதவியில் இருந்து நீக்கினர்.</p><p>நேஹா மத்தியப் பிரதேச பட்டியல் பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.</p><p>இந்த நிலையில் நேஹா, பழங்குடியினர் பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநராக பொறுப்பேற்று இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. ஆனால் அவர் வெளியிட்ட அரசு அறிவிப்புகளை தொடர்ந்து, ஊழியர்கள் அவருக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்தினர்.</p><p>இதன் காரணமாக தொடர்ந்து ஓராண்டில் நான்காவது முறையாக அதிகாரிகள் அவரை பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளனர்.</p><p><strong>ஐஏஎஸ் சங்கத்திற்கு கடிதம்</strong></p><p>இந்த நிலையில் தான் பணியில் சேர்ந்த 50 நாட்களுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐஏஎஸ் சங்கத்திற்கு நேஹா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், “நான் எப்போதும் உத்தரவுகளை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வேன். ஆனால் இந்த முறை நான் ஊக்கம் இழந்துவிட்டேன்.</p><p>கீழ்ப்படியாமை மற்றும் கோப்புகளை பதுக்கி வைத்திருப்பது குறித்து நான் புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக நான் நீக்கப்பட்டேன்.</p><p>கீழ்நிலை அதிகாரிகள் இடமாற்றங்களை தீர்மானிக்கும் அளவுக்கு, ஒரு ஐஏஎஸ் அதிகாரி பலவீனமாக இருக்க முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை.</p><p>இந்த பணியிட மாறுதலை அனுபவிக்க ஒரு மாதத்திற்குள் தான் என்ன செய்துவிட்டேன் என்று எனக்கு தெரியவில்லை.</p><p>ஒரு அதிகாரியால் ஒரு மாதத்தில் வேலையை புரிந்துகொள்வது என்பது அரிது. ஆனாலும், இந்த இடமாற்றத்தால் நான் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன்.</p><h3><strong>கீழ்நிலை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள்</strong></h3><p>தொடர்ச்சியான குறுகிய கால பதவிக் காலங்கள் தன்னை மனச்சோர்வடையச் செய்துவிட்டது. </p><p>நிலைமை மேம்படும் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக நான் பொறுமையாக இருந்தேன், ஆனால் இப்போது கீழ்நிலை அதிகாரிகள் என்னை மிரட்டத் தொடங்கியுள்ளனர்.</p><p>எப்போதும் சதிகாரர்களே வெற்றி பெறுகிறார்கள், நான் தோற்கிறேன்.</p><p>இந்த அமைப்பு என்னை கைவிட்டுவிட்டது. இன்று நான், நாளை மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி இலக்காக இருப்பார்,” என்று அவர் ஐஏஎஸ் சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொடர் கொலையாளிகள் அதிகம் உள்ள நாடுகள் - 6வது இடத்தில் இந்தியா!</title><link>https://www.maalaimalar.com/news/national/countries-with-the-highest-number-of-serial-killers-india-ranks-6th</link><comments>https://www.maalaimalar.com/news/national/countries-with-the-highest-number-of-serial-killers-india-ranks-6th#comments</comments><guid isPermaLink="false">2b759265-d5a5-4180-ad49-019724b5b955</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:59:31 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:59:31.029Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,அமெரிக்கா,United States,Serial Killers,தொடர் கொலையாளிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/xmgamguc/New-Project-2026-09-07T202250.138.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொடர் கொலையாளிகள் அதிகம் உள்ள நாடுகள் - 6வது இடத்தில் இந்தியா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/xmgamguc/New-Project-2026-09-07T202250.138.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> உலகம் முழுவதும் 1900 ஆண்டுமுதல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில்,  அதிக அளவிலான தொடர் கொலையாளிகள் ஆவணப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.</p><p>சமீபத்திய 2026 ராட்ஃபோர்ட்/எஃப்.ஜி.சி.யு (Radford/FGCU) அறிக்கையின்படி, 1900 ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட தொடர் கொலையாளிகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>விசாரணை முறை</h2><p>இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த எண்கள் அந்தந்த நாடுகளின் ஒட்டுமொத்த பாதுகாப்பு குறைபாட்டை மட்டும் குறிப்பதில்லை; மாறாக, அங்குள்ள குற்றவியல் விசாரணை முறைகள், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்றுப் பதிவுகளின் வெளிப்படைத்தன்மையையும் காட்டுகின்றன.</p><h2>அமெரிக்கா முதலிடம்</h2><p>இந்த பட்டியலில் அமெரிக்கா 3,803 கொலையாளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இது இரண்டாம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கையான 188-ஐ விட 20 மடங்குக்கும் அதிகமாகும்.</p><p>ரஷ்யா 172 பேருடன் மூன்றாம் இடத்திலும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா (153) மற்றும் ஜப்பான் (145) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. 135 கொலையாளிகளுடன் <a href="https://www.maalaimalar.com/news/national/india-said-no-to-the-press-conference-trump-initially-agreed-but-later-changed-his-tune-an-incident-at-the-g7-summit">இந்தியா</a> 6வது இடத்தில் உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>புதிய காரை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க, வீட்டின் மொட்டை மாடியில் பார்க்கிங் செய்த நபர்</title><link>https://www.maalaimalar.com/news/national/man-parks-new-car-on-rooftop-to-prevent-theft</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-parks-new-car-on-rooftop-to-prevent-theft#comments</comments><guid isPermaLink="false">c2e7723a-e72c-4aec-96ef-28c9521c1363</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:48:51 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:48:51.888Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,மஹிந்திரா கார்,Mahindra Scorpio</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1e491dtb/Untitled-design-35.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rooftop Parking to Prevent Car Theft]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1e491dtb/Untitled-design-35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரை சேர்ந்த நபர் ஒருவர், தான் புதிதாக வாங்கிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரை, இரவு நேரத்தில் திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக வீட்டின் மொட்டை மாடிக்கு, கிரேன் மூலம் கொண்டு சென்று பார்க்கிங் செய்த காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகார்</a> மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவர் சமீபத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரை வாங்கி உள்ளார்.</p><h3><strong>வெளிநாட்டிற்கு சென்ற கார் உரிமையாளர்</strong></h3><p>இதையடுத்து இவருக்கு இஸ்ரேல் நாட்டில் வேலை கிடைத்து விட்டதால், தனது வாகனத்தை பீகாரில் ஒரு ஓட்டுநரிடம் கொடுத்துவிட்டு, அவர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்.</p><p>இதற்கிடையில் சிறிது காலம் கழித்து, அந்த ஓட்டுநர் பணியில் இருந்து சென்று விட்ட நிலையில், தனது கார் திருடப்பட்டு விடுமோ என்று யாதவுக்கு கவலை எழுந்துள்ளது.</p><p>இதைத்தொடர்ந்து திருட்டில் இருந்து காரை பாதுகாப்பதற்காக, யாதவ் குடும்பத்தினர் மஹிந்திரா வாகனத்தை வீட்டின் மொட்டை மாடிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.</p><h3><strong>மொட்டை மாடியில் பார்க்கிங்</strong></h3><p>பின்னர் அவர்கள், அந்த வாகனத்தை ஒரு கிரேன் மூலம் வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள மாடிக்கு தூக்கி சென்று பார்க்கிங் செய்தனர்.</p><figure><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1072908068927705%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></figure><p>இந்த காட்சியை பார்த்த உள்ளூர் கிராம மக்கள், அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர்.</p><p>கார் திருடப்படுவதில் இருந்து பாதுகாப்பதற்காக, கார் உரிமையாளர் வீட்டின் மொட்டை பார்க்கிங் செய்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாடு முழுவதும் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/by-elections-announced-for-6-constituencies-in-india</link><comments>https://www.maalaimalar.com/news/national/by-elections-announced-for-6-constituencies-in-india#comments</comments><guid isPermaLink="false">f76319b6-f433-4cb4-8ba6-0d809d7a0069</guid><pubDate>Mon, 07 Sep 2026 12:42:18 +0000</pubDate><atom:updated>2026-09-07T12:42:18.827Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Election Commission of India,bypolls,இந்திய தேர்தல் ஆணையம்,இடைத்தேர்தல்,தமிழ்நாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/dkwns9f5/New-Project-2026-09-07T181151.361.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியாவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/dkwns9f5/New-Project-2026-09-07T181151.361.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் மொத்தம் 6 தொகுதிகளுக்கு அக்.6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><h2>தமிழ்நாடு</h2><p>தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>மதுராந்தகம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து இந்தத் தொகுதிகள் காலியாகின.</p><h2>7 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு</h2><p>தமிழ்நாட்டில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 2 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 9 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தேர்தல் வழக்குகள்</h2><p>திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/no-plan-to-announce-by-elections-for-the-five-vacant-constituencies-in-tamil-nadu-election-commission">தேர்தல் வழக்குகள் </a>நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குகளின் இறுதி தீர்ப்பு வரும் வரை அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது எனத் தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><h2>அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம்</h2><p>தமிழ்நாட்டைத் தொடர்ந்து அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் மாநிலங்களில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, மேற்குவங்கத்தின் நந்திகிராம், ரெஜிநகர், அசாமின் நாகோன் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த ஆறு தொகுதிகளுக்கும் வேட்புமனுத்தாக்கல் செப்.9 தொடங்கும் எனவும், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் செப்.16 எனவும், வேட்புமனுக்களை பரிசீலனை செய்வதற்கான கடைசி நாள் செப்.17 என்றும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்.19 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>வாக்குப்பதிவு அக்.6ம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்.9 நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கொல்கத்தாவில் பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று: சாவின் விழிம்பில் இருந்து காப்பாற்றிய மருத்துவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/baby-girl-born-with-covid-in-kolkata-saved-by-doctors</link><comments>https://www.maalaimalar.com/news/national/baby-girl-born-with-covid-in-kolkata-saved-by-doctors#comments</comments><guid isPermaLink="false">6f2c5659-e114-44b2-a902-fb279849562c</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:58:27 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:58:27.457Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொல்கத்தா,Kolkata,covid,Corona,கோவிட்,கொரோனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/2sce0ex7/Untitled-design-33.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kolkata newborn Covid case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/2sce0ex7/Untitled-design-33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதிதாக பிறந்த ஒரு பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர்.</p><p>இதையடுத்து சீரற்ற இதய துடிப்பு மற்றும் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் உயிருக்கு போராடிய குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காப்பாற்றினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்குவங்க மாநிலம்</a> கொல்கத்தாவில் உள்ள பெல்லி வியூ மருத்துவமனையில், அர்பிதா சாந்த்ரா என்ற கர்ப்பிணி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். </p><p>அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் கருப்பையில் உள்ள குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்ததை கண்டறிந்தனர். </p><h3><strong>பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று</strong></h3><p>இதையடுத்து கொரோனா தொற்றுடன் பிறந்த அந்த பெண் குழந்தை, சுவாசக் கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டது. </p><p>இதற்கிடையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த பெண் குழந்தைக்கு செப்சிஸ் நோய் இருப்பதையும் கண்டறிந்தனர்.</p><p>செப்சிஸ் நோய் காரணமாக பிறந்த குழந்தைக்கு மூச்சுத் திணறலும் அதிகப்படியான இதயத் துடிப்பும் ஏற்பட்டது. </p><p>இதைத்தொடர்ந்து அந்த பச்சிளம் குழந்தைக்கு மருத்துவர்கள் முதலில் தேவையான ஆக்சிஜனை வழங்கினர்.</p><p>குழந்தையின் நிலைமை மேலும் மோசமடைந்ததால், செயற்கை சுவாச உதவியுடன் நுரையீரலுக்குள் காற்றை செலுத்தினர்.</p><p>இதையடுத்து பிறந்த குழந்தைக்கு புரோ-பி.என்.பி மருத்துவ பரிசோதனையை மருத்துவர்கள் செய்தனர். இதன்மூலம் கொரோனா மற்றும் செப்சிஸ் நோய் இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது.</p><h3><strong>மோசமான குழந்தையின் உடல்நிலை</strong></h3><p>அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திலும் குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமாகி காணப்பட்டது. </p><p>மேலும் கொரோனா பரிசோதனை முடிவை பெற ஐந்து நாட்கள் ஆகும் என்பதால், மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சையை தொடர்ந்து அளித்தனர்.</p><p>இதையடுத்து ஐந்து நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சையை தொடர்ந்து, குழந்தையின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.</p><p>இருந்தாலும் குழந்தையின் உடல்நிலை முழுமையாக குணமடையும் வரை, அந்த பெண் குழந்தையை மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தனர்.</p><h3><strong>மருத்துவர் சாந்தனு ரே</strong></h3><p>இதுகுறித்து பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளித்த குழந்தை நல மருத்துவர் சாந்தனு ரே கூறுகையில், “செப்சிஸ் மற்றும் கொரோனா ஆகிய இரண்டு நோய் தொற்றுகளும், உயிருக்கு ஆபத்தானவை என்பதால், நாங்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தோம்.</p><p>எம்.ஐ.எஸ்-என் நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 50 சதவீதமாக உள்ளது. குழந்தையின் உடல்நிலை வேகமாக மோசமடைந்து வந்ததால், நாங்கள் விரைவாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.</p><p>இதன் காரணமாக வைரஸ் மற்றும் பாக்டீரியா ஆகியவற்றிற்கு எதிராக ஆண்டிபாடிகளாக செயல்படும் காமா குளோபுலின் என்ற ரத்த புரதத்தை குழந்தைக்கு செலுத்த முடிவு செய்தோம். ஐந்தாவது நாளில் குழந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.</p><p>இருந்தாலும் பூரண குணமடையும் வரையில், நாங்கள் அந்த பச்சிளம் குழந்தையை தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்தோம்” என மருத்துவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.90 லட்சம் சம்பளத்தை உதறி தள்ளிய இளைஞர் - ரூ.30,000 முதலீட்டில் மாதம் ரூ.12 லட்சம் சம்பாதித்து அசத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/from-30k-investment-to-1-2-million-a-month-after-quitting-9-million-rupee-job</link><comments>https://www.maalaimalar.com/news/national/from-30k-investment-to-1-2-million-a-month-after-quitting-9-million-rupee-job#comments</comments><guid isPermaLink="false">b2df8a10-063e-48df-8ad4-c47a29ac68ae</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:50:16 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:50:16.663Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chandigarh,சண்டிகர்,Mohit Nijhawan,மோஹித் நிஜவான்,Micro greens,மைக்ரோ கிரீன்ஸ்,Vertical Farming,Indoor Farming</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/fm6h9ewr/Micro-greens" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Micro greens ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/fm6h9ewr/Micro-greens?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நம்மில் பலருக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.90 லட்சம் சம்பளம் என்பது ஒரு கனவாகவே இருக்கும். ஆனால், <a href="https://www.maalaimalar.com/topic/chandigarh">சண்டிகரைச் </a>சேர்ந்த மோஹித் நிஜவான் என்று இளைஞருக்கு, அது வெறும் ஆரம்ப புள்ளியாகவே இருந்துள்ளது.</p><p>கணினி அறிவியலில் பி.டெக் பட்டம் பெற்ற மோஹித், தனது கைநிறைய சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலையை கடந்த 2020 ஆண்டு டிசம்பரில் விட்டுவிட்டு, முற்றிலும் மாறுபட்ட துறையான உள் அரங்கு விவசாயத்தில் கால் பதித்து இன்று கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார்.</p><h2>ரூ.30,000 முதலீட்டில் தொடங்கிய சோதனை முயற்சி</h2><p>ஆரம்பத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய விரும்பாத மோஹித், வெறும் ரூ.30,000 முதலீட்டில் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள 100 சதுர அடி சிறிய அறையில் <a href="https://www.greenu.in/mohit-nijhwan-microgreens/">மைக்ரோகிரீன்ஸ் </a>(முளைக்கீரை/இளம் ஊட்டச்சத்து தாவரங்கள்) வளர்க்கத் தொடங்கினார்.</p><p>ஆரம்பக் கட்டத்தில் விவசாயத்தின் நுணுக்கங்கள், உற்பத்தி முறைகள், வாடிக்கையாளர்களைக் கண்டறிதல் மற்றும் ஒரு நிலையான வணிக மாதிரியை உருவாக்குதல் என அனைத்தையும் அவரே சுயமாகக் கற்றுக் கொண்டார். </p><p>இந்த சிறிய சோதனை முயற்சிதான் இன்று ‘கிரீனு மைக்ரோகிரீன்ஸ்’ என்ற மிகப்பெரிய பிராண்டாக உருவெடுத்துள்ளது.</p><h2>அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செங்குத்து விவசாயம்</h2><p>ஆரம்பத்தில் வெறும் மூன்று ரேக்குகள், தட்டுகள், வளர்ப்பு விளக்குகள் மற்றும் விதைகளைக் கொண்டு செங்குத்து உள்ளரங்கு விவசாயத்தை மோஹித் தொடங்கினார். </p><p>முற்றிலும் மரபணு மாற்றப்படாத மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாத இயற்கை முறையில் 21 வகையான ஆர்கானிக் மைக்ரோகிரீன்ஸ் வகைகளை வளர்ப்பதில் அவர் தீவிர கவனம் செலுத்தினார்.</p><p>தற்போது இந்த வணிகம் பல மடங்கு விரிவடைந்துள்ளது. இப்போது 500 சதுர அடி பரப்பளவிலான அதிநவீன வசதிகள் கொண்ட பண்ணையாக இது மாறியுள்ளது. </p><p>இங்கு சுமார் 60 ரேக்குகள் அமைக்கப்பட்டு, மாதத்திற்கு 12,000 தட்டுகள் மைக்ரோகிரீன்ஸ் உற்பத்தி செய்யும் அளவிற்குத் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>மாதம் ரூ.12 லட்சம்... ஆண்டுக்கு ரூ.1.44 கோடி வருவாய்</h2><p>தற்போது 'கிரீனு மைக்ரோகிரீன்ஸ்' நிறுவனம் மூலம் மோஹித் நிஜவனுக்கு மாதத்திற்கு சுமார் ரூ.12 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஆண்டு வருமானமாக தோராயமாக ரூ.1.44 கோடியை பெற்று வருகிறார். </p><p>இது குறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் இவரது வீடியோ காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>