<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 15 Aug 2026 23:23:03 +0000</lastBuildDate><item><title>உத்தரப் பிரதேசம்: சுதந்திர தின நிகழ்ச்சியில் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு
</title><link>https://www.maalaimalar.com/news/national/independence-day-tragedy-boy-killed-as-school-roof-collapses-during-flag-event-in-uttar-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/independence-day-tragedy-boy-killed-as-school-roof-collapses-during-flag-event-in-uttar-pradesh#comments</comments><guid isPermaLink="false">c1bee7e1-73fe-46d2-8cd0-7606e7e7b0bc</guid><pubDate>Sat, 15 Aug 2026 23:19:00 +0000</pubDate><atom:updated>2026-08-15T23:19:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,சுதந்திர தினம்,accident,Independence Day Event,விபத்து,உத்தரப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/g5f15rix/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உத்தரப் பிரதேசம்]]></media:title><media:description type="html"><![CDATA[ உத்தரப் பிரதேசம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/g5f15rix/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேசத்தில்</a> சுதந்திர தின விழாவில் பள்ளிச் சுவர் இடிந்துவிழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><p>நேற்று நாடு முழுவதும் 80வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில், மடலா பதேபூர் கிராமத்தில் உள்ள அல் ஹசன் பள்ளியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-pakistan-border-ceremony-attari-wagah-marks-80th-independence-day-with-grand-flag-lowering-and-cultural-events?utm_source=website&amp;utm_medium=related-stories">கொடியேற்றம் </a>முடிந்து, மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தனர்.</p> <h2>விபத்து</h2><p>கலை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக அருகில் இருந்த வீடுகளை சேர்ந்த சிறுவர்கள் சிலர் பள்ளியின் நுழைவு வாயிலின் கான்கிரீட் சுவர்க் கூரை மீது ஏறியுள்ளனர்.</p><p>அப்போது எதிர்பாராதவிதமாக அந்தக் கூரை திடீரென இடிந்து விழுந்தது. கூரை இடிந்து விழுந்ததில் அதன் இடிபாடுகளுக்குள் 3 சிறுவர்கள் சிக்கிக்கொண்டனர்.</p><p>இதில் நயீம் என்பவரின் 8 வயது மகனான நிஜாம் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.</p> <h2>காயம்</h2><p>மேலும் சேப் அலி மற்றும் ஷைதான் ஆகிய இரு சிறுவர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><h2>ஆய்வு</h2><p>இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சம்பல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கணகாணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் சம்பவம் குறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>பெங்களூரு: மனைவியை தலையணையால் அமுக்கி கொன்றுவிட்டு தற்கொலை செய்த சிவில் இன்ஜினீயர் கணவன் </title><link>https://www.maalaimalar.com/news/national/bengaluru-murder-suicide-husband-smothers-wife-with-pillow-then-hangs-himself</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengaluru-murder-suicide-husband-smothers-wife-with-pillow-then-hangs-himself#comments</comments><guid isPermaLink="false">3b7de40d-d1f7-4a2a-9966-d30d4791fd33</guid><pubDate>Sat, 15 Aug 2026 22:09:00 +0000</pubDate><atom:updated>2026-08-15T22:09:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,கொலை,கணவன்-மனைவி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/w2atbwk4/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பத்மாவதி, சுமாந்த் ஜெயின் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பத்மாவதி ,சுமாந்த் ஜெயின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/w2atbwk4/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மனைவியை தலையணையால் அமுக்கிக் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-three-people-including-plus-two-student-brutally-killed-two-arrested">கொன்றுவிட்டு </a>கணவன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தற்கொலை </a>செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. </p> <h2>பெங்களூரு</h2><p>கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ராஜகோபால் நகர் அருகே சுமாந்த் ஜெயின் எனபவர் சிவில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.</p><p>அவரது மனைவி பத்மாவதி மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.</p> <h2>கொலை</h2><p>கடந்த புதன்கிழமை இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவர் சுமாந்த் ஜெயின், மனைவி பத்மாவதியின் முகத்தில் தாக்கி அவரை தலையணையால் அமுக்கி மூச்சுத் திணரச் செய்துள்ளார்.</p><p>மனைவி மூச்சு பேச்சின்றி இருந்ததை உணர்ந்த சுமாந்த் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.</p> <h2>தற்கொலை</h2><p>தற்கொலை முடிவுக்கு வந்த சுமாந்த், பதற்றத்தில் தனது தாயாருக்கு விவரத்தை கூறி மெசேஜ் அனுப்பியுள்ளார்.</p><p>மெசேஜைப் பார்த்த தாயார் உடனடியாக வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டுள்ளார்.</p><p>உரிமையாளர் வீட்டைத் திறந்து பார்த்தபோது, ஹாலில் உள்ள மின்விசிறியில் சுமாந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்துள்ளார். பத்மாவதி சடலமாக கிடந்துள்ளார்.</p> <h2>விசாரணை</h2><p>இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ராஜகோபால் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றினர்.</p><p>இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இருவரின் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் மற்றும் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தலைகீழாக தேசியக் கொடி.. பேச்சில் தடுமாற்றம் - விமர்சனத்துக்கு உள்ளாகும் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை</title><link>https://www.maalaimalar.com/news/national/modi-speech-error-and-flag-row-ev-sales-misquote-and-inverted-tricolour-spark-controversy-at-independence-day-event</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-speech-error-and-flag-row-ev-sales-misquote-and-inverted-tricolour-spark-controversy-at-independence-day-event#comments</comments><guid isPermaLink="false">f03269a4-4d56-403b-9c2c-220d8f47431f</guid><pubDate>Sat, 15 Aug 2026 20:32:39 +0000</pubDate><atom:updated>2026-08-15T20:32:39.985Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,national flag,Independence Day,சுதந்திர தினம்,பிரதமர் மோடி,தேசியக் கொடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/j2c4n8du/tn-14.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/j2c4n8du/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி செங்கோட்டையில் நேற்று  நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a>யின் தோற்றமும் உரையில் ஏற்பட்ட தடுமாற்றமும்  விவாதப்பொருளாகி வருகிறது.  </p> <h2>பேச்சில் தடுமாற்றம்</h2><p>இந்தியாவில் 2009-10 ஆம் நிதியாண்டில் 25 லட்சம் மின்சார வாகனங்கள் விற்கப்பட்டதாக முதலில் தவறாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, உடனடியாக தன்னை திருத்திக் கொண்டு, அது 1.5 லட்சம் என்று கூறினார்.</p><p>தொடர்ந்து, 2025-26 ஆம் ஆண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை 25 லட்சமாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார்.</p><p>ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் தளப் பதிவில், "நம்பிக்கையற்ற, பதற்றமான மற்றும் நடுங்கும் நிலையில் உள்ள ஒரு பிரதமராக மோடி காட்சியளிக்கிறார்" என குறிப்பிட்டுள்ளார்.</p> <h2>பாக்கெட்டில் தேசியக் கொடி</h2><p>பிரதமரின் பேச்சு மட்டுமின்றி, அவரது சட்டை பாக்கெட் மீது சதுர வடிவ துணியில் தேசிய கொடியானது தலைகீழாக (இதில் இடமிருந்து வலமாக) இடம்பெற்றிருந்தது. முதலில் இருக்க வேண்டிய ஆரஞ்சு வண்ணம் கடைசியிலும், கடைசியில் இருக்க வேண்டிய பச்சை வண்ணம் முதலிலும் உள்ளது. </p><p>இது அயர்லாந்து தேசியக் கொடியை ஒத்ததாக இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சித்துள்ளது.</p> <p>காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா தனது எக்ஸ் பதிவில், " பிரதமர் உருது மொழியில் மூவர்ணக் கொடியை அணிந்திருப்பது போல் தெரிகிறது.</p><p>அல்லது இந்தியாவுக்குப் பதிலாக அயர்லாந்தின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறாரா எனத் தெரியவில்லை." என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். உருது மொழி இடமிருந்து வலமாக எழுதப்படுவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: அட்டாரி - வாகா எல்லையில் கோலாகலமாக நடந்த கொடியிறக்க நிகழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-border-ceremony-attari-wagah-marks-80th-independence-day-with-grand-flag-lowering-and-cultural-events</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-border-ceremony-attari-wagah-marks-80th-independence-day-with-grand-flag-lowering-and-cultural-events#comments</comments><guid isPermaLink="false">b68bd6c2-e037-46cb-ad2d-fa7fae0f18f3</guid><pubDate>Sat, 15 Aug 2026 16:58:20 +0000</pubDate><atom:updated>2026-08-15T16:58:20.566Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுதந்திர தினம்,அட்டாரி வாகா எல்லை,பிஎஸ்எப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/0z3rrskb/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொடியிறக்க நிகழ்ச்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ கொடியிறக்க நிகழ்ச்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/0z3rrskb/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின்  <a href="https://www.maalaimalar.com/news/national/andhara-police-si-unfurls-100-metre-tricolour-atop-mount-elbrus-on-independece-day">80வது சுதந்திர தினம்</a> நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. </p><p>பஞ்சாப்பில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அட்டாரி-வாகாவில் இன்று மாலை கொடியிறக்க நிகழ்வு இனிதே நடைபெற்று முடிந்துள்ளது. </p> <h2>கலை நிகழ்ச்சிகள்</h2><p>கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.</p><p>பஞ்சாபி பாரம்பரிய நடனமாடி ஆண் மற்றும் பெண் கலைஞர்கள் அசத்தினர்</p><p>மாணவர்களின் ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசங்கள், தற்காப்புக் கலைக் அரங்கேற்றம் ஆகியவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Punjab: Beating retreat ceremony at the Attari-Wagah border in Amritsar on Independence Day today. <a href="https://t.co/FVTvyM1SGS">pic.twitter.com/FVTvyM1SGS</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088583262004519394?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> पंजाब: आज स्वतंत्रता दिवस के अवसर पर अमृतसर में अटारी-वाघा बॉर्डर पर बीटिंग रिट्रीट समारोह अत्यंत उत्साह के साथ आयोजित किया गया। <a href="https://t.co/rEQJOBKnvt">pic.twitter.com/rEQJOBKnvt</a></p>&mdash; ANI_HindiNews (@AHindinews) <a href="https://x.com/AHindinews/status/2088596401295126827?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>பிஎஸ்எப்</h2><p>சிறப்பு விருந்தினராக எல்லை பாதுகாப்பு படையான பிஎஸ்எப் டி.ஐ.ஜி எஸ்.எஸ். சண்டேல் கலந்துகொண்டார்.</p><p>எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் வழக்கமான கம்பீரமான அணிவகுப்பு விழாவுக்கு அணி சேர்த்தது.</p> <p>வீரர்கள் மிடுக்குடன் அணிவகுத்துச் செல்ல இவ்வாண்டு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சுதந்திர தின நிறைவை </a>உணர்த்தும் விதமாக தேசியக்கொடி இறக்கும் நிகழ்வு நடைபெற்றது.</p><p>இந்த விழாவின் போது, அட்டாரி சோதனைச் சாவடியில் புதிதாக அமைக்கப்பட்ட டிஜிட்டல் வீடியோ திரைச் சுவர் திறக்கப்பட்டது.</p><p>இதேபோல் நாட்டின் பிற எல்லைகளிலும் கொடியிறக்க நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>5 நிமிடம் லேட்: டெலிவரி செய்ய வந்த நபரை சரமாரி தாக்கிய வாலிபர்- வைரலான வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/delivery-agent-thrashed-by-man-for-arriving-5-minutes-late-assault-caught-on-cctv</link><comments>https://www.maalaimalar.com/news/national/delivery-agent-thrashed-by-man-for-arriving-5-minutes-late-assault-caught-on-cctv#comments</comments><guid isPermaLink="false">587f65d9-f42d-492c-9e88-cee2dfe86814</guid><pubDate>Sat, 15 Aug 2026 14:37:06 +0000</pubDate><atom:updated>2026-08-15T14:37:06.794Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Meerut,மீரட் நகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wt7a2r1o/Delivery0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாக்குதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wt7a2r1o/Delivery0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், பிளிங்கிட் நிறுவத்தின் டெலிவரி செய்யும் நபர் (Delivery agent), பொருள் ஒன்றை ஒரு வீட்டில் டெலிவரி செய்வதற்காக கொண்டு செல்கிறார். அவர் பெல்லை அழுத்தியதும், வீட்டில் இருந்து வாலிபர் ஒருவர் வருகிறார். இவர் டெலிவரி நபருடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பின்னர் திடீரென டெலிவரி செய்ய வந்த நபரின் செல்போனை பறித்துக் கொள்கிறார். அதோடு சரமாரியாக தாக்குகிறார்.</p><h2>வீட்டிற்குள் இழுத்துச் சென்று தாக்குதல்</h2><p>அப்போது, அதேவீட்டில் இருந்து பெண் ஒருவர் வெளியே வருகிறார். அவர் இருவரையும் சமாதானம் செய்யும் எந்த வகையிலான முயற்சியிலும் ஈடுபடவில்லை. பின்னர், அந்த நபரை வாலிபர் அவரை வீட்டிற்குள் இழுத்துச் சென்று அடித்து உதைக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The couple assaulted the poor delivery guy because of the delay, and is now on the run after the FIR. <br><br>Delivery agents work 12-15 hrs daily for just ₹15-20k in harsh conditions.  Delayed order? There could be traffic, rain, or system issues. Assaulting them shows zero humanity.… <a href="https://t.co/1Yk5FTQbrS">pic.twitter.com/1Yk5FTQbrS</a></p>&mdash; Mr. Rana  (@RanaBharatiye) <a href="https://x.com/RanaBharatiye/status/2088543810745954475?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>இந்த வீடியோ காவல்துறையின் பார்வைக்கு எட்ட, இது குறித்து விசாரணை நடத்தி டெலிவரி செய்ய வந்த நபர், மற்றும் வாலிபர் யார் என்பதை கண்டுபிடித்தனர். பின்னர், டெலிவரி செய்ய வந்த நபர் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க, போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>டெலிவரி செய்யும் நபர்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டு, சொற்ப வருமானத்திற்காக கஷ்டப்பட்டு வருகின்றனர். 5 நிமிடம், 10 நிமிடம் லேட்டிற்காக தாக்குதல் நடத்தினால் அது மோசமான செயலாகும் என இணையதள வாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஐரோப்பாவின் உயரமான சிகரத்தில் 100மீ இந்திய தேசியக்கொடியை ஏற்றிய ஆந்திர சப்-இன்ஸ்பெக்டர்</title><link>https://www.maalaimalar.com/news/national/andhara-police-si-unfurls-100-metre-tricolour-atop-mount-elbrus-on-independece-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/andhara-police-si-unfurls-100-metre-tricolour-atop-mount-elbrus-on-independece-day#comments</comments><guid isPermaLink="false">1d365d54-a233-40f6-984e-c5a90d85e0b7</guid><pubDate>Sat, 15 Aug 2026 13:29:09 +0000</pubDate><atom:updated>2026-08-15T13:29:09.235Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/6y83yki2/IndependenceDay001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய தேசியக் கொடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/6y83yki2/IndependenceDay001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் 80-வது <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-hoists-national-flag-red-fort-delhi">சுதந்திர தின விழா</a> கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் மீது வைத்துள்ள தேச பக்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.</p><p>அந்த வகையில் ஆந்திர மாநிலம் எலூரு புறநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் வி. வெங்கடேஸ்வர ராவ் ஐரோப்பியாவின் மிக உயரமான சிகரத்தில் 100மீ தேசியக் கொடியை இன்று காலை ஏற்றியுள்ளார்.</p><p>ஐரோப்பியாவின் மிக உயரமான சிகரம் ரஷியாவில் உள்ள மவுண்ட் எல்ப்ரஸ் ஆகும். இதன் உயரம் 5642 மீட்டர் ஆகும். இந்த சிகரத்தில் வெங்கடேஷ்வர ராவ் பல நாட்களாக ஏறி இன்று காலை உச்சியை அடைத்து தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளார்.</p><p>அப்போது தேசிய கீதம் பாடி தனது தேசப்பற்றை வெளிப்படுத்தினார். தனது சாதனையை, பணியின்போது உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு அவர் அர்ப்பணித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சோனியா காந்தி வந்தே மாதரம் பாடலை நிறுத்த சொன்னதாக பாஜக குற்றச்சாட்டு: மறுத்தது காங்கிரஸ்- நடந்தது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-claims-sonia-gandhi-tried-to-stop-singing-of-vande-mataram-congress-denies</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-claims-sonia-gandhi-tried-to-stop-singing-of-vande-mataram-congress-denies#comments</comments><guid isPermaLink="false">6ac94525-3bb2-477d-946d-9c2d8c59c5a2</guid><pubDate>Sat, 15 Aug 2026 12:58:55 +0000</pubDate><atom:updated>2026-08-15T12:58:55.606Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,சுதந்திர தினம்,Indepndence day,sonia gandhi,சோனியா காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wywka2bi/SoniaGandhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wywka2bi/SoniaGandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் 80-வது சுதந்திர தினம் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருட சுதந்திர தினம் வந்தே மாதரம் பாடலுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும். பின்னர் கொடி ஏற்றிய பின் தேசிய கீதம் பாடல் பாடப்பட வேண்டும். இன்று டெல்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டப் பிறகு பிரதமர் மோடி கொடி ஏற்றினார்.</p><h2>காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்</h2><p>டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p><p>வந்தே மாதரம் பாடல் பாடியபோது, சோனியா காந்தி ஆட்சேபிக்கும் வகையில் செய்கை காட்டினார். அவர் வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திக்குப்பின் உள்ள பத்திகள் பாடப்படுவதை நிறுத்த முயன்றதாக பாஜக சார்பில் விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால், காங்கிரஸ் இதை மறுத்துள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவுக்காக நாற்காலி (Chair) கேட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.</p><h2>இது தொடர்பாக பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி கூறியதாவது:-</h2><p>பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான நிலைப்பாடு மற்றும் கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், வந்தே மாதரம்' பாடல் முழுமையாகப் பாடப்பட்ட முதல் சுதந்திர தினம் இதுவாகும்.</p><p>இருப்பினும் மிகவும் விசித்திரமான, முரண்பாடான மற்றும் துரதிர்ஷ்டவசமான ஒரு காட்சி அங்கு அரங்கேறியது. காங்கிரஸ் அலுவலகத்தில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டுக் கொண்டிருந்தபோது, ​​அக்கட்சியின் உயர்மட்ட தலைவரான சோனியா காந்தி, சூப்பர்-தலைவர் ராகுல் காந்தி மற்றும் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களுக்குள் பேசிக்கொண்டும், யாரையோ விசித்திரமான மற்றும் ஆட்சேபனைக்குரிய, மரியாதையற்ற விதத்தில் சைகை செய்து அழைத்துக் கொண்டும் இருந்தனர்.</p><p>காங்கிரஸ் கட்சியால் வந்தே மாதரம் என்ற தேசியப் பாடலை ஒருவேளை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையே இது உணர்த்துகிறது.</p><p>இவ்வாறு பாஜக எம்.பி. விமர்சித்துள்ளார்.</p><h2>பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறியதாவது:-</h2><p>வந்தே மாதரம் பாடலின் ஆரம்பப் பகுதிகள் பாடப்பட்ட நிலையில், சோனியா காந்தி சற்றே பதற்றமடைந்து, அப்பாடலை முழுமையாக இசைப்பதற்குப் பதிலாக அதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். ராகுல் காந்தியும் அப்பாடலை முடித்துவிடுமாறு சைகை செய்வது போல் காணப்பட்டார். இருப்பினும், அப்பாடலைத் தொடர்ந்து இசைக்குமாறு அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">For the first time, the entire ‘Vande Mataram’ was sung at the Congress headquarters on Independence Day.<br><br>After the initial stanzas of Vande Mataram were sung, Sonia Gandhi became agitated and asked for the rendition to be stopped rather than played in full. Rahul Gandhi too… <a href="https://t.co/ITgkkBvStG">pic.twitter.com/ITgkkBvStG</a></p>&mdash; Amit Malviya (@amitmalviya) <a href="https://x.com/amitmalviya/status/2088526437225783323?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>இதிலுள்ள செய்தி தெளிவாக இருந்தது. அது, புதிய சட்டக் கட்டமைப்பின் கீழ் தேசியப் பாடலை முழுமையாக மதித்து நடக்க வேண்டும். வேண்டுமென்றே அதற்குத் தடையையோ அல்லது இடையூறையோ ஏற்படுத்தினால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.</p><p>இறுதியில் அவர்கள் இணங்கி வந்தனர். வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட்டது. கலாசார ரீதியாகத் தன்னம்பிக்கை கொண்ட, நாகரிக வேர்களை ஆழமாகக் கொண்ட ஒரு இந்தியாவைக் குறித்த கருத்தாக்கத்துடன், காந்தி குடும்பத்தினரும் காங்கிரஸ் கட்சியினரும் பல தசாப்தங்களாக ஒருவித சங்கடமான உறவையே கொண்டிருந்துள்ளனர். வேடிக்கை என்னவென்றால், சுதந்திர தினத்தன்று அந்தச் சங்கடமான நிலை வெளிப்படையாகத் தெரிந்தது.</p><p>இவ்வாறு அமித் மால்வியா தெரிவித்தார்.</p><h2>பாடல் வரிகள் குறித்த விவாதம்</h2><p>1875-ஆம் ஆண்டில் பங்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்ட வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே 1937-ல் தேசியப் பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்து பெண் தெய்வங்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருந்த மற்ற நான்கு பத்திகள் இதில் சேர்க்கப்படவில்லை. இதற்கு சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து அந்த வரிகளை பாடாமல் புறக்கணித்து வந்தனர்.</p><p>இதற்கிடையே பொதுக் கூட்டங்கள், பள்ளிகள் மற்றும் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இடங்களில் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது.</p><p>மேலும், வந்தே மாதரம் பாடலைப் பாடுவதை வேண்டுமென்றே தடுத்தாலோ, இடையூறு செய்தாலோ அல்லது பாடுவதைத் தடுத்தாலோ அது குற்றச்செயல் என்று அறிவிக்கும் மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாநில அந்தஸ்தை பறிக்காமல் இருந்திருந்தால், PoK மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் இணைய கிளர்ந்து எழுந்திருப்பார்கள்- உமர் அப்துல்லா</title><link>https://www.maalaimalar.com/news/national/pok-would-have-joined-jammu-and-kashmir-if-omar-abdullah-on-special-status</link><comments>https://www.maalaimalar.com/news/national/pok-would-have-joined-jammu-and-kashmir-if-omar-abdullah-on-special-status#comments</comments><guid isPermaLink="false">f46f0ee3-1db3-4d8b-842e-9711e4bba273</guid><pubDate>Sat, 15 Aug 2026 12:13:35 +0000</pubDate><atom:updated>2026-08-15T12:13:35.375Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜம்மு காஷ்மீர்,Jammu and Kashmir,omar abdullah,உமர் அப்துல்லா,PoK</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/nf5my0g4/OmarAbdullah001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உமர் அப்துல்லா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/nf5my0g4/OmarAbdullah001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநில அந்தஸ்து பறிக்கப்படாமல் இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் இணையக் கிளர்ந்தெழுந்திருப்பார்கள் என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.</p><p>ஸ்ரீநகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உமர் அப்துல்லா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>1947-ல் பாகிஸ்தானிலிருந்து வந்த பழங்குடியின ஊடுருவல்காரர்களை எதிர்த்துப் போராடி, இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க தீர்மானித்த காஷ்மீர் மக்களின் முடிவை PoK-ல் நிலவும் தற்போதைய சூழல் நியாயப்படுத்தியுள்ளது. ஜனநாயக உரிமைகளைக் கோரியதற்காக பலர் கொல்லப்பட்டும், ஏராளமானோர் காயமடைந்தும், சிறையில் அடைக்கப்பட்டும் உள்ள PoK-ன் நிலைமை தனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.</p><h2>ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து</h2><p>எல்லையின் மறுபுறம் நிலவும் சூழலைப் பார்க்கும்போது, ​​ஹம்லாவர் கபர்தார், ஹம் காஷ்மீரி ஹைன் தயார் (தாக்குதல் நடத்துபவர்களே எச்சரிக்கை, நாங்கள் காஷ்மீரிகள் தயாராக இருக்கிறோம்) என்று கூறிய நமது முன்னோர்கள் சொன்னது சரிதான் என்பதை நான் உணர்கிறேன்.</p><p>PoK-ல் நிலவும் சூழலைக் கண்டு நான் வேதனை அடைகிறேன். 2019-ல் <a href="https://www.maalaimalar.com/news/world/nyt-india-protests-pakistani-kashmir-reference-in-nyt-report">ஜம்மு-காஷ்மீரின்</a> மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால், இன்று PoK மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் மீண்டும் இணைவதற்காகக் கிளர்ந்தெழுந்திருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.</p><p>என்றாவது ஒரு நாள் அந்த இடங்கள் நிரப்பப்படும் என்ற நம்பிக்கையில், சட்டப்பேரவையில் அந்தப் பகுதிக்கான இடங்களை நாங்கள் காலியாக வைத்துள்ளோம்.</p><p>மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதங்களை மீட்டெடுப்பதற்கும், ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும் எங்கள் அரசு உறுதியுடன் உள்ளது. இந்த இலக்குகளை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுவோம்</p><p>இவ்வாறு உமர் அப்துல்லா பேசினார்.</p><p>முன்னதாக, 1947-ல் இந்திய ராணுவம் காஷ்மீருக்கு வருவதற்கு முன்பே, பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை எதிர்த்துப் போராடவும் தங்கள் தாயகத்தைக் காக்கவும் காஷ்மீர் மக்களுக்குத் தலைமை தாங்கிய தனது தாத்தாவும், ஜம்மு-காஷ்மீரின் முதல் பிரதமருமான ஷேக் முகமது அப்துல்லாவுக்கு உமர்அப்துல்லா அஞ்சலி செலுத்தினார்.</p><p>இதற்கிடையே உமர் அப்துல்லாவின் கருத்துகள் பொறுப்பற்றவை என்று கூறி பாஜக பதிலடி கொடுத்தது.</p><p>"இது முதல்வரின் பொறுப்பற்ற பேச்சு. நமது தேசியக் கொடியைக் கொண்டாடும் இந்தத் தேசிய நாளில் அவர் அரசியல் செய்கிறார். தனது செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேச இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இதை அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொண்டார்." என்று ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான சுனில் சர்மா கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>எந்த சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றீர்கள்? ஆர்.எஸ்.எஸ். நோக்கி கேள்வி எழுப்பிய பிரியங்க் கார்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/priyank-kharge-says-my-only-question-to-the-rss-is-this-tell-us-which-freedom-struggle-you-participated</link><comments>https://www.maalaimalar.com/news/national/priyank-kharge-says-my-only-question-to-the-rss-is-this-tell-us-which-freedom-struggle-you-participated#comments</comments><guid isPermaLink="false">2b4134f4-7b3b-4aa9-acd4-629c40944e95</guid><pubDate>Sat, 15 Aug 2026 11:15:35 +0000</pubDate><atom:updated>2026-08-15T11:15:35.244Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RSS,ஆர்எஸ்எஸ்,Priyank Kharge,பிரியங்க் கார்கே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/kh9l81zc/PriyankKharge001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரியங்க் கார்கே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/kh9l81zc/PriyankKharge001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும், கர்நாடக மாநில உள்துறை அமைச்சருமான பிரியங்க் கார்கே அரசு வளாகங்கள் மற்றும் பொதுச் சொத்துகளின் பயன்பாட்டைக் ஒழுங்குபடுத்துவதற்கான கர்நாடக மசோதா 2026 கூறியதாவது:-</p><p>பா.ஜ.க.வினர் ஏன் இப்போது இந்த மசோதாவைக் கண்டு இவ்வளவு அஞ்சுகிறார்கள்? அவர்கள் இந்த மசோதாவைப் பார்த்திருக்கிறார்களா? உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளவற்றையே நாங்கள் இந்த மசோதாவில் நடைமுறைப்படுத்துகிறோம். அந்த மசோதாவில் எங்காவது ஏதேனும் அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா? ஏதேனும் சங்கத்தின் பெயர் உள்ளதா? ஏதேனும் நிறுவனத்தின் பெயர் உள்ளதா? அல்லது ஏதேனும் அரசியல் கட்சியின் பெயர் உள்ளதா?</p><h2>பா.ஜ.க.வுக்கு என்ன பிரச்சனை?</h2><p>நீதிமன்றங்களின் உத்தரவுகளைச் சட்டமாக்கினால், அதில் பா.ஜ.க.வுக்கு என்ன பிரச்சனை? ஒழுங்குபடுத்தும் பொறுப்பைக் கொண்ட மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நான்தான். பல நேரங்களில், உங்கள் வீட்டின் முன் பெரிய விழாவோ அல்லது ஊர்வலமோ நடக்கும்போது, ​யாருடைய அனுமதியுடன் இது நடக்கிறது? இது என்ன? என்று நீங்களே எங்களை அழைத்து கேட்பதில்லையா?.</p><p>அது ஒரு பொது இடம். நீங்கள் எதைச் செய்ய விரும்பினாலும் உங்கள் வீட்டு வளாகத்திலோ அல்லது அலுவலக வளாகத்திலோ செய்துகொள்ளுங்கள். யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. இது ஒரு தடை என்று மசோதாவில் எங்கே சொல்லியிருக்கிறோம்?</p><h2>ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் கேட்கும் ஒரு கேள்வி இதுதான்...</h2><p>ஆர்.எஸ்.எஸ். (RSS) அமைப்பிடம் நான் கேட்கும் ஒரே கேள்வி, எந்தச் சுதந்திரப் போராட்டத்தில் நீங்கள் பங்கேற்றீர்கள்? என்பதுதான். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அதில் இணைந்து போராடினார்கள். அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? தியாகிகளான 500 காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் பட்டியலை நான் தருகிறேன். அவர்கள் குறைந்தது 50 பேரின் பட்டியலையாவது தரட்டும்.</p><p>இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பல மதக் கலவரங்கள் நடந்தபோது, ​​எந்தக் கலவரத்திலாவது நீங்கள் மக்களைப் பாதுகாத்தீர்களா? சொல்லப்போனால், மதக் கலவரங்கள் உங்களால்தான் ஏற்பட்டன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தடை செய்ய முடியாது. சந்தோஷ் மற்றும் மோகன் பகவத் கூறியது உண்மைதான். அவர்களைத் தடை செய்ய முடியாது. அதற்குக் காரணம், அவர்கள் முறையாகப் பதிவு கூட செய்யப்படவில்லை என்பதுதான். உங்கள் அமைப்பை நான் தடை செய்ய வேண்டுமானால், முதலில் நீங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டாமா? நீங்கள் பதிவு கூட செய்யப்படாமல் எப்படி உங்கள் செயல்பாடுகளை நடத்தி வருகிறீர்கள்?</p><p>முன்னேற்பாட்டுப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு (Advance Security Liaison) பாதுகாப்பு யாருக்குக் கிடைக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்தியாவின் உள்துறை அமைச்சர் மற்றும் இந்தியப் பிரதமர் ஆகியோருக்கு அது வழங்கப்படுகிறது. மோகன் பகவத் விஷயத்திலும் அது உள்ளது. அதற்கான செலவு உங்கள் வரிப்பணத்திலிருந்தே மேற்கொள்ளப்படுகிறது.</p><h2>ஆர்எஸ்எஸ் அம்பேத்கர், மகாத்மா காந்தியை விட்டுவைக்கவில்லை</h2><p>எனவே நான் கேட்பது என்னவென்றால், இன்று கலபுரகி (குல்பர்கா) மக்களின் வரிப்பணம் மோகன் பகவத்தின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. எந்த அடிப்படையில் நீங்கள் அதைச் செய்கிறீர்கள்? இந்த அமைப்பைச் சேர்ந்த 20 லட்சம் பேர் அணிவகுப்பு (route march) நடத்தும்போது கர்நாடகக் காவல்துறை அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.</p><p>பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் நாம் உறவு வைத்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கு அவர்கள் யார்? பிரியங்க் கார்கே ஏதாவது பேசினால், அவர் வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி பார்த்துக் கொள்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் நேற்று கூறியதை நான் பார்த்தேன். ஏன்? ஆர்எஸ்எஸ் என்ன செய்யப்போகிறது, என்னைச் சுட்டுக் கொல்லப்போகிறதா? நீங்கள் அம்பேத்கரை விட்டுவைக்கவில்லை. காந்தியடிகளையும் விட்டுவைக்கவில்லை. என்னை மட்டும் விட்டுவைப்பீர்களா? ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு என்ற எனது கருத்தை அவரகள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லையா?</p><p>இவ்வாறு பிரியங்க் கார்கே தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தினத்தில் சிஜேபியின் அதிகாரப்பூர்வ கணக்கு முடக்கம்.. கோழைகள் என சிஜேபி பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/cjps-official-account-suspended-on-independence-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjps-official-account-suspended-on-independence-day#comments</comments><guid isPermaLink="false">09b50f0e-f2dd-4f1b-82b9-2a1a22d22700</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:26:56 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:26:56.216Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுதந்திர தினம்,Independance Day,CJP,சிஜேபி போராட்டம்,account blocked,கணக்கு முடக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ra0xuppz/Untitled-design-60.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Instagram]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ra0xuppz/Untitled-design-60.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுதந்திர தினமான இன்று தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு காலையில் முடக்கப்பட்ட நிலையில், தற்போது அது மீண்டும் சரி செய்யப்பட்டுள்ளதாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கரப்பான்பூச்சி கட்சி</a> (சிஜேபி) தெரிவித்துள்ளது.</p><p>நாடு சுதந்திரம் அடைந்து 80 ஆணடுகள் ஆன நிலையில், ஆகஸ்ட் 15 அன்று எங்கள் கணக்கு முடக்கப்படுவது, சுதந்திர தினத்தன்று எங்கள் குரலை ஒடுக்கும் முயற்சியாக உள்ளது என சிஜேபி கட்சி தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து சிஜேபி வெளியிட்ட பதிவில், “காக்ரோச் ஜனதா கட்சியை எதிர்ப்பவர்கள் எங்கள் குரலை ஒடுக்க முயற்சிப்பதற்காக நினைக்கிறார்கள். இந்தியாவின் சுதந்திர தினமான இன்று காக்ரோச் ஜனதா கட்சியை அமைதியாக்க முயற்சிப்பது வெட்கக்கேடானது.</p><p>எங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ள கோழைத்தனமான செயல்களை கண்டு, நாங்கள் அஞ்சமாட்டோம்,”என்று தெரிவித்துள்ளது.</p><p>இந்த முடக்கம் குறித்து சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே கூறுகையில், “அவர்கள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கியுள்ளனர், கோழைகள்!” என்று கூறியுள்ளார்.</p><p>இதையடுத்து இன்றைய தினம் பிற்பகுதியில் தங்கள் கணக்கு மீட்டெடுக்கப்பட்டதாக சிஜேபி தெரிவித்துள்ளது.</p><p>முன்னதாக வேலையின்மை, கல்வி மற்றும் இளைஞர்களிடையே உள்ள கவலைகள் குறித்த கேள்விகளை எழுப்பி, பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் நாட்டின் இளைஞர்களை சந்தித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தி தனது பிரச்சாரத்தை தொடங்கியிருந்தார்.</p><p>இதைத்தொடர்ந்து தங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக சிஜேபி தெரிவித்துள்ளது.</p><p>மேலும், அரசு மற்றும் கிராம பள்ளிகளின் நிலை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மாணவர்கள் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினைகள் குறித்த போராட்டங்கள் உள்ளிட்ட, சமீப வாரங்களில் சி.ஜே.பி. நடத்தி வரும் தொடர் பிரச்சாரங்களுக்கு மத்தியில் இந்த வகையிலான முடக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சிஜேபி தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு</title><link>https://www.maalaimalar.com/spirituality/sabariimala-temple-opening-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/spirituality/sabariimala-temple-opening-tomorrow#comments</comments><guid isPermaLink="false">5c651f84-11ed-4fe4-a51c-74d95eb8a887</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:15:26 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:15:26.460Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sabarimalai,சபரிமலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/e4dxsnkf/sabarimala.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சபரிமலை கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபரிமலை கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/e4dxsnkf/sabarimala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், அதனைத்தெடர்ந்து நெய் அபிஷேகம், அஷ்டாபிஷேகம், உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளும் நடத்தப்படும்.</strong></em>  </p><p><a href="https://www.maalaimalar.com/topic/சபரிமலை">சபரிமலை</a> ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் மட்டுமின்றி, மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அந்த நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி ஆவணி மாத பூஜைகளுக்காக நாளை (16-ந்தேதி) மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. கோவிலின் தலைமை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி, நடையை திறக்கிறார்.</p><p>நாளை மாலை நடை திறக்கப்பட்ட பிறகு சிறப்பு பூஜைகள் எதுவும் நடக்காது. நாளை மறுநாள்(17-ந்தேதி) மாதாந்திர பூஜை தொடங்குகிறது. அன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். </p><p>தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், அதனைத்தெடர்ந்து நெய் அபிஷேகம், அஷ்டாபிஷேகம், உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளும் நடத்தப்படும்.  </p><p>இந்த பூஜைகள் அனைத்திலும் பக்தர்கள் கலந்துகொள்ளலாம் என்பதால் மாதாந்திர பூஜையின் போதும், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து வரவேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.</p><p>முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே மாதாந்திர பூஜையில் பங்கேற்க முடியும். ஆவணி மாத மாதாந்திர பூஜை 21-ந்தேதி முடிவடைகிறது. அன்றைய தினம் இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் நிறைவடைந்ததும் அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடைசாத்தப்படும். </p><p>இதையடுத்து ஓணம் பண்டிகைக்காக வருகிற 24-ந்தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. வருகிற 25-ந்தேதி ஓணம் பூஜைகள் நடக்கின்றன. மறுநாள் (26-ந்தேதி)திருவேணம் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஓணம் பண்டிகைக்காக வருகிற 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும். </p><p>மாதாந்திர பூஜை மற்றும் ஓணம் பண்டிகையில் பங்கேற்க பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், நாளை(16-ந்தேதி) முதல் வருகிற 28-ந்தேதி வரை கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருவனந்தபுரம், செங்கன்னூர், பத்தினம் திட்டா, கொட்டாரக்கரை, எருமேலி, புனலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. </p>]]></content:encoded></item><item><title>ரூ.13,000 கோடி போதைப்பொருள் வழக்கு: ஐக்கிய அமீரகத்தில் பிடிப்பட்ட கடத்தல் மன்னன்</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-13000-crore-drug-trafficking-case-indian-officials-arrest-accused-in-uae</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-13000-crore-drug-trafficking-case-indian-officials-arrest-accused-in-uae#comments</comments><guid isPermaLink="false">57bbcbe2-8513-49b7-94bd-fb92a47b6c4b</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:26:51 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:26:51.785Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போதைப்பொருள் கடத்தல்,narcotics control bureau,virendra singh basoya,வீரேந்திர சிங் பசோயா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/2ze7bb55/Untitled-design-58.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரூ.13,000 கோடி போதைப்பொருள் மன்னன் UAE-யில் கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ 13,000 Crore Drug Kingpin Arrested in UAE]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/2ze7bb55/Untitled-design-58.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த வீரேந்திர சிங் பசோயாவை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">போதைப்பொருள் கடத்தல்</a> கட்டுப்பாட்டு பிரிவினர் இந்தியாவிற்கு அழைத்து கொண்டு வந்தனர்.</p><p>இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சந்தைகளுக்கு பெருமளவு போதைப்பொருள் கடத்திய சம்பவத்தில் பசோயாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.</p><h3><strong>ரூ.13,000 கோடி போதைப்பொருள் வழக்கு</strong></h3><p>கடந்த 2024 பிப்ரவரி 21 அன்று, புனே காவல்துறை டெல்லியில் திவேஷ் சரண்ஜித் பூட்டானி மற்றும் சந்தீப் குமார் ராஜ்பால் பசோயா ஆகியோரை கைது செய்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த சுமார் 970 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தது.</p><p>இதுகுறித்து புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், “சர்வதேச சந்தையில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சரக்கு, லண்டனுக்கு அனுப்பி விற்பனை செய்யப்பட இருந்தது. </p><p>வீரேந்திர பசோயாவின் தலைமையில் பூட்டானி மற்றும் சந்தீப் குமார் ராஜ்பால் பசோயா ஆகியோர், இந்த போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.</p><p>சுமார் ரூ.13,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, பசோயா என்பவரை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு தேடி வந்தனர்.</p><p>மேலும் அவருடைய மகன் ரிஷப் பசோயாவுக்கு எதிராகவும் இண்டர்போல் அதிகாரிகள் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தனர்.</p><p>இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் டெல்டா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சந்தீப் ஹனுமான்சிங் யாதவ் மற்றும் நிறுவன மேலாளர் தேவேந்திர ராம்ஃபுல் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருளை ஒரு வழக்கமான வர்த்தக சரக்கு போல் மாற்றி, பாதுகாப்பு சோதனைகளில் மாட்டிக் கொள்ளாதவாறு ஏற்றுமதி செய்தது தெரியவந்தது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h3><strong>மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா</strong></h3><p>இந்த பசோயாவின் கைது நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மோடி அரசு, வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை இடைவிடாமல் தேடிப்பிடித்து, அவர்களை முழுமையாக அழித்து வருகிறது.</p><p>போதைப்பொருட்களுக்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற கொள்கையில் ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தப்பியோடிய போதைப்பொருள் மன்னன் வீரேந்தர் சிங் பசோயாவை அதிகாரிகள் என்சிபி மீட்டுள்ளது.</p><p>குற்றவாளியை முழுமையாக பின்தொடர்ந்ததன் மூலம், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எங்கு ஒளிந்திருந்தாலும், இந்திய சட்டத்தின் கரத்திலிருந்து அவர்களால் தப்பிக்க முடியாது என்பதை நமது அமைப்புகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டிஜிட்டல் ஊடகங்களுக்கு இணையான சமவாய்ப்பு: டிவியின் 12 நிமிட விளம்பரக் கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/national/equal-opportunity-for-digital-media-centre-removes-12-minute-tv-ad-cap</link><comments>https://www.maalaimalar.com/news/national/equal-opportunity-for-digital-media-centre-removes-12-minute-tv-ad-cap#comments</comments><guid isPermaLink="false">b8427785-59e0-4ae9-8916-1769af845aa7</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:00:27 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:00:27.701Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>central government,digital media,advertising cap,டிஜிட்டல் ஊடகங்கள்,டிவி விளம்பரம்,டிஜிட்டல் மீடியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/voa7i20a/TV.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ advertising cap ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/voa7i20a/TV.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொலைக்காட்சி சேனல்கள் ஒரு மணி நேரத்திற்கு 10 நிமிடங்கள் வணிக விளம்பரம் மற்றும் 2 நிமிடங்கள் சுய விளம்பரம் என மொத்தம் 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரம் ஒளிபரப்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருந்தது. 2006-ஆம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/news/national/national-flag-delivered-by-drone-to-post-office-har-ghar-tiranga-himachal">கேபிள் தொலைக்காட்சி</a> நெட்வொர்க் விதிகளின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த விளம்பரக் கட்டுப்பாட்டை தளர்வு செய்து நீக்குவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><h2>டிஜிட்டல் ஊட<strong>கங்களுக்கு இணை</strong>யான சமவாய்ப்பு</h2><p>தற்போதுள்ள காலகட்டத்தில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்களில் விளம்பரங்களுக்கு எந்தவித கால வரம்பும் கிடையாது. இதனால் பாரம்பரிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கடும் வருவாய் இழப்பும் சமமற்ற போட்டியும் ஏற்பட்டு வந்தது. இந்த இடைவெளியைக் குறைத்து, தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் டிஜிட்டல் தளங்களுக்கு இணையான சமமான வாய்ப்பை வழங்குவதற்காகவும், தொழில் நடத்துவதை எளிதாக்குவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தொலைக்காட்சி<strong>த் துறையின் அப</strong>ரிமிதமான வளர்ச்சி</h2><p>கடந்த 2006-ஆம் ஆண்டு இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட போது இந்தியாவில் வெறும் 62 தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே இயங்கி வந்தன. ஆனால் தற்போது 900-க்கும் மேற்பட்ட சேனல்கள் செயல்பட்டு வருகின்றன. </p><p>மேலும், கேபிள் டிவி, DTH, HITS மற்றும் IPTV போன்ற நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றங்களால் நேயர்களுக்கு பல நூற்றுக்கணக்கான சேனல்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தையில் போதிய போட்டி நிலவுவதால், இனி சந்தை விதிகளே விளம்பர நேரத்தைத் தீர்மானிக்கும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2>உடனடியாக அம<strong>லுக்கு வரு</strong>கிறதா?</h2><p>மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் எடுத்துள்ள இந்த முடிவு, கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதிகள், 1994 திருத்தம் செய்யப்பட்டு மத்திய அரசின் அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் நாளில் இருந்து நடைமுறைக்கு வரும்.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த கார்கே, ராகுல் - காரணம் இதுதான்!</title><link>https://www.maalaimalar.com/news/national/mallikarjun-kharge-rahul-gandhi-skip-independence-day-event-for-2nd-second-consecutive-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/mallikarjun-kharge-rahul-gandhi-skip-independence-day-event-for-2nd-second-consecutive-year#comments</comments><guid isPermaLink="false">af4513c7-a6db-4020-9f49-3b36e55dfd8f</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:29:07 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:29:07.354Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,mallikarjun kharge,மல்லிகார்ஜூன கார்கே,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/u02tozgh/rahulgandhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi - Mallikarjun Kharge]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/u02tozgh/rahulgandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும், கார்கேவும் தொடர்ந்து 2-வது ஆண்டாக சுதந்திர தின விழாவில் பங்கேற்கவில்லை.</strong></em></p><h2>பிரதமர் மோடி</h2><p>டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-hoists-national-flag-red-fort-delhi">பிரதமர் மோடி</a> தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து 2-வது ஆண்டாக சுதந்திர தின விழாவை புறக்கணித்தனர்.</p> <h2>சுதந்திர தின விழா</h2><p>2024-ம் ஆண்டு நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சுதந்திர தின விழா</a>வின்போது சர்ச்சை எழுந்தது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி மத்திய மந்திரிக்கு இணையான அந்தஸ்து கொண்டவர் ஆவார். செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் வழக்கமான மரபு மற்றும் நெறிமுறைகளுக்கு மாறாக கடைசி வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.</p> <p>ராகுல்காந்திக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கியது மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அதே நேரத்தில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு இடம் அளிக்கும் வகையில் இருக்கை அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டதாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்து இருந்தது.</p> <h2>எதிர்க்கட்சி தலைவர்</h2><p>அரசின் நெறிமுறைகளின்படி இத்தகைய முக்கிய விழாக்களின்போது எதிர்க்கட்சி தலைவர் முன்வரிசையில் அமர வைக்கப்பட வேண்டும் என்பது வழக்கமாகும். இதன் காரணமாகவே ராகுல்காந்தியும், கார்கேவும் தொடர்ந்து 2-வது ஆண்டாக சுதந்திர தின விழாவில் பங்கேற்கவில்லை.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தான் கைக்கு சென்ற சிந்து, பஞ்சாப் மாகாணம் -  காங்கிரஸை குற்றம்சாட்டிய யோகி ஆதித்யநாத் </title><link>https://www.maalaimalar.com/news/national/pakistan-kaikku-sendra-sindhu-panjab-maganam-kangirasai-kutramsattiya-yogi-adityanath</link><comments>https://www.maalaimalar.com/news/national/pakistan-kaikku-sendra-sindhu-panjab-maganam-kangirasai-kutramsattiya-yogi-adityanath#comments</comments><guid isPermaLink="false">e9e67a81-b576-4516-908a-aa30061caaf9</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:16:47 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:16:47.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Yogi Adityanath,சுதந்திர தினம்,Independance Day,யோகி ஆதித்யநாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/o0se0n7t/Untitled-design-56.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ யோகி ஆதித்யநாத்]]></media:title><media:description type="html"><![CDATA[ Yogi Adityanath]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/o0se0n7t/Untitled-design-56.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் பிரிவினைக்கு காரணமாக காங்கிரஸ் இருந்தது என்றும், நாடு சுதந்திரம் பெற்ற நேரத்தில் நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால், இந்தியா பிரிவினையை சந்தித்திருக்காது என்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். </p><h3><strong>முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்</strong></h3><p>உத்தரப் பிரதேசத்தில் ‘பிரிவினை கொடுமைகள் நினைவு நாள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசினார்.</p><p>அப்போது அவர் கூறுகையில், “சுதந்திரத்தின் போது நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருந்திருந்தால், நாட்டிற்கு தீங்கு விளைவிக்க யாரும் துணிந்திருக்க மாட்டார்கள். </p><p>காங்கிரஸ் பிரிவினைய எதிர்த்து துணிந்து போராட தவறியதால், நாடு ஒரு பெரிய விலையை கொடுக்க வேண்டியிருந்தது. பஞ்சாபிலோ அல்லது வங்காளத்திலோ பாகிஸ்தான் ஒருபோதும் கேட்காத நிலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.</p><h3><strong>பாகிஸ்தான் கைக்கு சென்ற இந்திய மாகாணங்கள்</strong></h3><p>பாகிஸ்தான் மாகாணமான சிந்துவில் ஒரு காலத்தில் சிந்துக்களும் இந்துக்களும் பெரும்பான்மையாக இருந்தனர். ஆனால், அது வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.</p><p>அதேபோல் பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் பஞ்சாபிகளும் வங்காளிகளும் பெரும்பான்மையாக இருந்தனர். ஆனால் அந்த பகுதிகளும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.</p><p>நமது நாடு காங்கிரஸை நம்பியது. ஆனால் காங்கிரஸ் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது.</p><p>1947-ல் பிரிவினையின்போது மெளனம் காத்தவர்கள், இன்றும் அதே மனப்பான்மையை கொண்டிருக்கின்றனர்.</p><p>வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து, காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் மவுனம் காத்து வருகின்றனர்.</p><p>தங்களுக்கு வாக்கு வங்கியை திருப்திபடுத்துவதும், அதிகாரத்தை கைப்பற்றுவதுமே தங்களின் முன்னுரிமை என்பதால், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் எதிர்காலத்திலும் அமைதியாகவே இருக்கும்” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>24 மணி நேர உபவாசம்: காந்திஜி ஆகஸ்ட் 15, 1947 அன்று டெல்லியை விடுத்து கல்கத்தாவில் இருந்தது ஏன்?</title><link>https://www.maalaimalar.com/news/national/24-hour-fast-why-gandhi-stayed-in-calcutta-not-delhi-on-august-15-1947</link><comments>https://www.maalaimalar.com/news/national/24-hour-fast-why-gandhi-stayed-in-calcutta-not-delhi-on-august-15-1947#comments</comments><guid isPermaLink="false">2f49b301-3618-44c4-91cb-9ad9517b1d62</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:10:52 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:10:52.769Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்,கல்கத்தா,calcutta,டெல்லி,Gandhiji,காந்திஜி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/qlj0ysu8/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gandhiji ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/qlj0ysu8/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் முதல் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, 1947 அன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் அரசமைப்பு பேரவையில் கொண்டாட்டங்கள் கலைகட்டின. லார்ட் மவுண்ட்பேட்டன் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றார். </p><p>டெல்லி முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, "மகாத்மா காந்தி வாழ்க" என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. ஆனால், இந்தியாவின் விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட அண்ணல் காந்திஜி அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் போது டெல்லியில் இருக்கவில்லை.</p><h2>வன்முறை<strong>யும் பிரிவினை</strong>யும்</h2><p>சுதந்திர தினத்திற்கு இரு வாரங்களுக்கு முன்பாகவே டெல்லியிலிருந்து புறப்பட்ட காந்திஜி, காஷ்மீர் பயணத்திற்குப் பிறகு கல்கத்தா(அப்போதைய பெயர்) நகரத்தை அடைந்தார். அப்பகுதியில் மதக் கலவரங்கள் உக்கிரமாக நடந்து வந்தன. கல்கத்தாவில் தொடங்கி கிராமப்புறங்களுக்கும், பீகார் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கும் பரவியிருந்த வன்முறை காரணமாக எண்ணற்ற மக்கள் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து தவித்தனர். </p><p>ஆகஸ்ட் 13 அன்று கல்கத்தாவின் பெலியாகாட்டா பகுதிக்கு வந்தடைந்த காந்திஜி, அங்குள்ள 'ஹைதாரி ஹவுஸ்' என்னும் கட்டிடத்தில் தங்கினார். கல்கத்தாவில் அமைதியையும் சகிப்புத்தன்மையையும் மீட்டெடுப்பதே அவரது முதன்மை நோக்கமாகும்.</p><h2>எதிர்ப்பு<strong>களும் காந்தி</strong>ஜியின் உறுதியும்</h2><p>ஆரம்பத்தில் காந்திஜியின் வருகைக்கு அங்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். எனினும், தான் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பினருக்குமே சேவை செய்ய வந்துள்ளதாகக் கூறிய காந்திஜி, வன்முறை மீண்டும் தொடர்ந்தால் தான் உயிருடன் இருக்க மாட்டேன் என எச்சரித்தார். கல்கத்தாவில் மத நல்லிணக்கம் திரும்பினால் மட்டுமே பஞ்சாப் மற்றும் நாட்டின் பிற பகுதிகளையும் காப்பாற்ற முடியும் என்று அவர் தீர்க்கமாக நம்பினார்.</p><h2>பிரார்த்த<strong>னையும் உப</strong>வாசமும்</h2><p>சுதந்திர தினத்தைக் எவ்வாறு கொண்டாடுவது என்று தன்னிடம் கேட்டவர்களிடம், "சுற்றிலும் மனிதர்கள் பசியாலும் வன்முறையாலும் மடிந்து கொண்டிருக்கும் போது, நாம் எப்படி கொண்டாட்டங்களில் ஈடுபட முடியும்?" என்று காந்திஜி கேள்வி எழுப்பினார். சர்வதேச ஊடகங்கள் அவரிடம் சுதந்திர தினச் செய்தியைக் கேட்டபோது, "என் மனதில் வார்த்தைகள் வற்றிவிட்டன" என்று கூறி, ஜவாஹர்லால் நேருவைப் தொடர்பு கொள்ளுமாறு வழிகாட்டினார்.</p><p>நாடு விடுதலை அடைந்த போதிலும், அது பிரிவினையோடும் பேரழிவோடும் வந்தடைந்ததை எண்ணி காந்திஜி வேதனை அடைந்தார். இதனால், ஆகஸ்ட் 15, 1947 அன்று எந்தவித கொண்டாட்டத்திலும் பங்கேற்காமல் 24 மணி நேர உபவாசம் இருந்தார். அத்துடன் பிரார்த்தனையிலும் கைராட்டையில் நூல் நூற்பதிலும் தன் பொழுதைச் செலவிட்டார்.</p><h2>நம்பிக்<strong>கையளித்த நல்லி</strong>ணக்கத்தின் உதயம்</h2><p>இருப்பினும், சுதந்திர தினத்தின் காலைப் பொழுதில் சில மாற்றங்கள் காந்திஜிக்கு நம்பிக்கையளித்தன. கல்கத்தாவில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து வீதிகளில் "ஜெய் ஹிந்த்" என முழக்கமிட்டபடி ஊர்வலம் சென்றனர். மாலையில் பெலியாகாட்டாவில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய காந்திஜி, மக்களிடையே ஏற்பட்ட இந்த நல்லிணக்கம் தற்காலிகமானதாக இல்லாமல், இதயப்பூர்வமானதாக நீடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>12 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டி உள்ளது - பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/indians-dreams-must-always-be-big-pm-modi-speech-hoisting-national-flag</link><comments>https://www.maalaimalar.com/news/national/indians-dreams-must-always-be-big-pm-modi-speech-hoisting-national-flag#comments</comments><guid isPermaLink="false">459acb81-2d65-4636-ae07-d66507662bab</guid><pubDate>Sat, 15 Aug 2026 02:51:57 +0000</pubDate><atom:updated>2026-08-15T02:51:57.458Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Modi,national flag,தேசிய கொடி,சுதந்திர தினம்,Independance Day,மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/qh8jhx4n/Untitled-design-55.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/qh8jhx4n/Untitled-design-55.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.</p><p>நாட்டின் 80வது சுதந்திர தினத்தையொடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.</p><p>இதையடுத்து பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.</p><p>இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. இதையடுத்து தொடர்ச்சியாக 13வது தேசிய கோடியை பிரதமர் மோடி ஏற்றிவைத்தார்.இதையடுத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். </p><p>அப்போது அவர் கூறுகையில்:-</p><p>இந்தியர்களின் ஒவ்வொருவரின் மனதிலும் வந்தே மாதரம் இன்று எதிரொலித்து கொண்டு வருகிறது.</p><p>இந்தியர்களின் கனவு எப்போதும் பெரிதாக இருக்க வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நாம் நினைவு கூர வேண்டும்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: From the ramparts of the Red Fort, Prime Minister Narendra Modi says, &quot;... Nuclear energy is a major means of energy security. We have paved the way towards a new goal by passing the &#39;Peace Act&#39; in Parliament. By 2047, we are moving forward with the target of 100… <a href="https://t.co/yqkfEASmeP">pic.twitter.com/yqkfEASmeP</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088459446959952198?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure> <p>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை இந்தியா கண்டு கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரது இல்லங்களிலும் இன்று மூவர்ண கொடி பறந்து கொண்டிருக்கிறது.</p><p>வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை அனைவரும் கொண்டாடி கொண்டிருக்கிறோம். நாட்டின் விடுதலைக்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.</p><p>கனவுகள் உயர்வாக இருக்கும்போது தான் திறன்களும் உயர்ந்ததாக இருக்கும். நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் தான் தற்போது நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது.</p><p>நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலகம் இன்று நம்மை பார்க்கும் விதம் மாறி உள்ளது.</p><p>நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி 7 மடங்கு உயர்ந்துள்ளது. தேசத்தின் அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர்.</p><p>12 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டி உள்ளது. </p><p>நமது வாழ்வில் பெரிதாக சாதிக்க வேண்டும் எனில் ஒவ்வொரு இந்தியரும் கனவு காண வேண்டும்.</p><p>இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது.</p><p>கடந்த சில நாட்களாக நிலச் சரிவுகள் மற்றும் பெருமழைகளை எதிர்கொண்டுள்ளோம். </p><p>2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ந்த நாடாக திகழ வேண்டும். செங்கோட்டையில் வந்தே மாதரம் என்பது ஒரு சரித்திர நிகழ்வாக உள்ளது.</p><p>இந்தியாவின் முன்னேற்றத்திற்கு 140 கோடி மக்களும் உழைக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டங்களின் விரிவாக்கம் தேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்வதாக உள்ளது.</p><p>இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-hoists-national-flag-red-fort-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-hoists-national-flag-red-fort-delhi#comments</comments><guid isPermaLink="false">3099f532-c949-41ba-b091-60d2f863a804</guid><pubDate>Sat, 15 Aug 2026 02:23:24 +0000</pubDate><atom:updated>2026-08-15T02:23:24.030Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,நரேந்திர மோடி,national flag,தேசிய கொடி,சுதந்திர தினம்,Independance Day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/20p4dr6d/Untitled-design-54.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/20p4dr6d/Untitled-design-54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் 80வது சுதந்திர தினத்தையொடி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.</p><p>இதனை தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.</p><p>இன்று முன்னதாக, 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜ்காட்டில் தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். </p><p>மேலும், அவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார்.</p><p>இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், விக்ஸித் பாரதத்தை உருவாக்கும் நோக்கில் நாடு செயல்பட்டு வரும் வேளையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகள் தொடர்ந்து நாட்டிற்கு உத்வேகம் அளித்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.</p><p>இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் மேலும் வேகமான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.</p><p>2026 ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு நிறைவையும் குறிக்கின்றன.</p><p>சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், மாணவர்களை இந்தியாவின் எதிர்காலத்தின் சிற்பிகள் என்று குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை</title><link>https://www.maalaimalar.com/news/national/modi-pays-tribute-at-gandhi-memorial</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-pays-tribute-at-gandhi-memorial#comments</comments><guid isPermaLink="false">e9f1035a-dca0-44d6-aa07-5004bf735d97</guid><pubDate>Sat, 15 Aug 2026 02:02:57 +0000</pubDate><atom:updated>2026-08-15T02:02:57.795Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,நரேந்திர மோடி,சுதந்திர தினம்,independance  day,gandhi memorial,காந்தி நினைவிடம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/dehps4xa/Untitled-design-53.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/dehps4xa/Untitled-design-53.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று இறையாண்மை அடைந்து 79 ஆண்டுகள் ஆன நிலையில், தனது 80வது சுதந்திர தினத்தை இன்று (ஆகஸ்ட் 15, 2026) கொண்டாடுகிறது.</p><p>புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் தேசிய நினைவு கூட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார்.</p><p>சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் முதல் முறையாக, அதன் நீடித்த பாரம்பரியத்தின் 150 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், 'வந்தே மாதரம்' என்ற தேசிய கீதம் செங்கோட்டையில் முறைப்படி பாடப்பட உள்ளது.</p><p>மேலும், "2047-ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதில் 'யுவ சக்தி'யின் ஆற்றல் மற்றும் முக்கிய பங்களிப்பை கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்வு அமையவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>இந்நிலையில் நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றுகிறார்.</p><p>அதனைத் தொடர்ந்து, அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றுவார்.</p><p>இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் பாரம்பரியமாக மலர்களைத் தூவும் நிகழ்வைத் தொடர்ந்து, அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.</p><p>அதன்பின், 2,500 என்.சி.சி. மாணவர்களும் 'மை பாரத்' தொண்டர்களும் 'வந்தே மாதரம்' பாடலைப் பாடுவார்கள். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படும்.</p><p>இந்த கொண்டாட்டங்களை காண, பிரதம மந்திரி முத்ரா யோஜனா தொழில்முனைவோர் மற்றும் பிரதம மந்திரி ஸ்வநிதி தெருவோர வியாபாரிகள் உட்பட சுமார் 5,000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.</p><h3><strong>காந்தி நினைவிடம்</strong></h3><p>இந்த நிலையில் இன்று காலையில், டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.</p><p>இதனை தொடர்ந்து செங்கோட்டையில் தேசியக்கொடியை பிரதமர் மோடி ஏற்றுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>ட்ரோன் மூலம் அஞ்சல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட தேசிய கொடி.. இமாச்சலில் ஹர் கர் திரங்கா... </title><link>https://www.maalaimalar.com/news/national/national-flag-delivered-by-drone-to-post-office-har-ghar-tiranga-himachal</link><comments>https://www.maalaimalar.com/news/national/national-flag-delivered-by-drone-to-post-office-har-ghar-tiranga-himachal#comments</comments><guid isPermaLink="false">5636c8c5-b505-4ab7-8a77-811867421865</guid><pubDate>Sat, 15 Aug 2026 02:01:13 +0000</pubDate><atom:updated>2026-08-15T02:01:13.164Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுதந்திர தினம்,Independance Day,Har Ghar Tiranga,ஹர் கர் திரங்கா,india post,இந்திய அஞ்சல் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/q44wj7v5/Untitled-design-51.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ட்ரோன் மூலம் தேசிய கொடி விநியோகம், இமாச்சலில் அஞ்சல் துறையின் புதுமை]]></media:title><media:description type="html"><![CDATA[ Har Ghar Tiranga - India post]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/q44wj7v5/Untitled-design-51.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா தனது 80வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடும் நிலையில், இமாச்சல பிரதேசத்தின் மண்டி நகரில் இருந்து ரெஹர்தார் பகுதிக்கு ட்ரோன்  மூலம் தேசிய கொடி செல்லப்பட்டது.</p><h3><strong>ஹர் கர் திரங்கா</strong></h3><p>இந்திய அஞ்சல் துறை, ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்திற்கு பங்களிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு தேசிய கொடியை விநியோகம் செய்து வருகிறது.</p><p>இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தேசிய கொடியை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.</p><h3><strong>இந்திய அஞ்சல் துறை</strong></h3><p>இமாச்சல பிரதேச மாநிலத்தில் தேசிய கொடியுடன் மண்டி நகரில் இருந்து புறப்பட்ட ட்ரோன் ஒன்று, ரெஹர்தாரில் உள்ள கிளை அஞ்சல் அலுவலகத்தில் தரை இறங்கியது.</p><p>அங்கு, மூவர்ண கொடியை பெற்று கொண்ட அஞ்சல் குழுவினர், அதனை முறைப்படி ஒரு ராணுவ அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.</p><h3><strong>அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா</strong></h3><p>இந்த நிகழ்வை வடகிழக்கு மண்டலத்தின் மத்திய தகவல் தொடர்பு மற்றும் அபிவிருத்தி துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.</p><p>இதுகுறித்து அமைச்சர் சிந்தியா கூறுகையில், “புவியியல் தடைகளை தாண்டி ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைய உறுதியுடன் இருக்கும் ஒரு புதிய இந்தியாவின் உணர்வை, இமாச்சல பிரதேசத்தில் ‘திரங்கா’ மேற்கொண்ட பயணம் பிரதிபலிக்கிறது,” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தினம்: குடியரசு தலைவரின் உரைக்கு பிரதமர் மோடி பாராட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-praise-speech-of-president-droupadi-murmu-on-independence-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-praise-speech-of-president-droupadi-murmu-on-independence-day#comments</comments><guid isPermaLink="false">ae028ba0-9ca1-41d3-8a40-c2802c5e0292</guid><pubDate>Fri, 14 Aug 2026 23:09:01 +0000</pubDate><atom:updated>2026-08-14T23:09:01.802Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திரவுபதி முர்மு,Independence Day,சுதந்திர தினம்,pm modi,பிரதமர் மோடி,Droupadi Murmu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/3bsfnggr/PM-Modi-and-Prez-Droupadi-Murmu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi and President Droupadi Murmu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/3bsfnggr/PM-Modi-and-Prez-Droupadi-Murmu.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> பாராட்டினார்.</p><p>நாட்டின் 80-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/independence-day">சுதந்திர தினம்</a> இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து குடியரசுத் தலைவர் முர்மு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சிறப்புரை ஆற்றினார்.</p><p>நாட்டின் வளர்ச்சி, பெண்களின் முன்னேற்றம், பொது தேர்வுகளை சீரமைக்கும் நடவடிக்கை, ஆபரேஷன் சிந்தூர், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து குடியரசுத் தலைவர் முர்மு ஆற்றிய உரை ஆழமான சிந்தனைகளை உள்ளடக்கி இருந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>இதுபகுறித்து பிரதமர் மோடி, வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை ஊக்கமளிப்பதுடன், ஆழ்ந்த சிந்தனைகளை உள்ளடக்கியதாக இருந்தது.</p><p>அவரது கருத்துகள் நம் நாட்டின் வலிமையையும், ஒவ்வொரு இந்தியரின் கனவுகளையும் வெளிக்காட்டுகின்றன. வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி உறுதியுடன் செயல்பட அவரது செய்திகள் ஊக்கமளிக்கின்றன" எனக் கூறியுள்ளார்.</p><h2>சுதந்திர தின கொண்டாட்டம்:</h2><p>இந்தியாவின் 80-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டை வளாகத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது, ​​முதல் முறையாக 'வந்தே மாதரம்' தேசிய கீதம் இசைக்கப்படவுள்ளது.</p><p>மாநில தலைநகரங்களிலும், நாடு முழுவதும் உள்ள பிற நகரங்கள் மற்றும் ஊர்களிலும் விழா நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கொடியேற்றம் மற்றும் அதைத் தொடர்ந்த கலாச்சார நிகழ்ச்சிகள் அடங்கும். பிரதான நிகழ்ச்சி செங்கோட்டை வளாகத்தில் நடைபெறும், மேலும் பிரதமர் மோடி கொண்டாட்டங்களுக்குத் தலைமை தாங்குவார்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/man-arrested-for-allegedly-threatening-to-kill-jharkhand-cm</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-arrested-for-allegedly-threatening-to-kill-jharkhand-cm#comments</comments><guid isPermaLink="false">b17a1a42-fdce-4a62-8b62-aa3500605e30</guid><pubDate>Fri, 14 Aug 2026 22:39:58 +0000</pubDate><atom:updated>2026-08-14T22:39:58.222Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Jharkhand,ஜார்க்கண்ட்,man</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/cmjk4khw/Hemant-Soren.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/cmjk4khw/Hemant-Soren.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஞ்சியில் நடைபெற்ற பணி நியமன தேர்வு முறைகேடுகள் தொடர்பான போராட்டத்தின்போது, ​​<a href="https://www.maalaimalar.com/topic/hemant-soren">ஜார்க்கண்ட்</a> முதல்வர் ஹேமந்த் சோரனை கொலை செய்வதாக மிரட்டியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p>போகாரோ மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வஜீத் குமார் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், கோட்வாலி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக அவர்கள் கூறினர். </p><p>"போராட்டக்காரர்களைத் தூண்டிவிட்டதாகவும், முதல்வருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது பி.என்.எஸ். (BNS) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று கோட்வாலி காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சனோஜ் சவுத்ரி தெரிவித்தார்.</p><p>பணி நியமனத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக வேலை தேடுபவர்கள் போராட்டம் நடத்தி வரும் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், சோரனுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை அந்த நபர் தெரிவித்ததாக அவர் கூறினார்.</p><h2>போராட்டம்:</h2><p>ஜார்க்கண்ட் மாநிலத்தின் பணி நியமனத் தேர்வு நடைமுறைகளில் சீர்திருத்தங்களை கோரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று (சனிக்கிழமை) 22-ஆவது நாளை எட்டியது. சுதந்திர தினத்தை ஒட்டி 'தேசிய கொடி பேரணி' நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், அதிகாரிகள் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் போராட்டக்காரர்களை சந்தித்து பேசினர்.</p><p>அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், இன்று நடைபெறவுள்ள பேரணிக்கான திட்டமிடப்பட்ட வழித்தடம் குறித்தும் விவரங்களை கேட்டறிந்தனர். இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமலேயே நிறைவடைந்தன.</p><p>அரசு அழைப்பு விடுக்கும் போதெல்லாம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக 'ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்த மன்றம்' அமைப்பின் தலைவர் ரவீந்திர பாஸ்வான் தெரிவித்தார்.</p><h2>தேசியக் கொடி யாத்திரை:</h2><p>சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 15 அன்று 'தேசிய கொடி பேரணி' நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சி பணி நியமன தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை வலியுறுத்தும் இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.</p><p>மாணவர்கள் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் இருந்து ஆல்பர்ட் எக்கா சவுக் வரை பேரணி நடத்தினர்; அப்போது "கல்வி மாஃபியா" மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர்.</p><p>பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் பொறுப்பானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற செய்தியை வெளிப்படுத்துவதே இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்று பாஸ்வான் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>80-ஆவது சுதந்திர தினம்: செங்கோட்டையில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-80th-independence-day-pm-modi-to-address-nation-from-red-fort</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-80th-independence-day-pm-modi-to-address-nation-from-red-fort#comments</comments><guid isPermaLink="false">75315852-c7e9-4854-a56f-d6980aeaffd1</guid><pubDate>Fri, 14 Aug 2026 19:49:36 +0000</pubDate><atom:updated>2026-08-14T19:49:36.166Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Independence Day,சுதந்திர தினம்,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/kmad8dxw/red-fort.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Red Fort]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/kmad8dxw/red-fort.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் 80-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/independence-day">சுதந்திர தினம்</a> இன்று கொண்டாடப்படுகிறது. தேசபக்தி உணர்வு மற்றும் பல அடுக்கு பாதுகாப்புக்கு மத்தியில், செங்கோட்டை வளாகத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> தலைமை தாங்க உள்ளார். செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது, ​​முதல் முறையாக 'வந்தே மாதரம்' தேசிய கீதம் இசைக்கப்படவுள்ளது.</p><p>மாநில தலைநகரங்களிலும், நாடு முழுவதும் உள்ள பிற நகரங்கள் மற்றும் ஊர்களிலும் விழா நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கொடியேற்றம் மற்றும் அதைத் தொடர்ந்த கலாச்சார நிகழ்ச்சிகள் அடங்கும். பிரதான நிகழ்ச்சி செங்கோட்டை வளாகத்தில் நடைபெறும், மேலும் பிரதமர் மோடி கொண்டாட்டங்களுக்குத் தலைமை தாங்குவார்.</p><h2>வந்தே மாதரம் 150 ஆண்டுகள்:</h2><p>150 ஆண்டுகள் பாம்பரியம் மிக்க 'வந்தே மாதரம்' கீதத்தை நினைவுகூரும் வகையிலும், "2047-ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தை முன்னெடுத்து செல்வதில் 'யுவ சக்தி'யின் ஆற்றல் மற்றும் முக்கிய பங்களிப்பை கொண்டாடும் வகையிலும்" இந்த மாபெரும் விழா நடைபெற உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.</p><p>செங்கோட்டைக்கு பிரதமர் மோடி வந்தடையும் போது, ​​அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், துணை அமைச்சர் சஞ்சய் சேத் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் வரவேற்பார்கள். பாதுகாப்பு செயலாளர், டெல்லி பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் சேத்தியை பிரதமருக்கு அறிமுகம் செய்வார்.</p><p>பின்னர், தளபதி பிரதமரை மரியாதை செலுத்தும் தளத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கு, முப்படைகள் மற்றும் டெல்லி காவல்துறையின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படையினர் பிரதமர் மோடிக்கு பொது மரியாதை செலுத்துவார்கள். அதன்பிறகு, பிரதமர் மரியாதை காவலர்களை ஆய்வு செய்வார் என்று அமைச்சகம் முன்னதாக ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.</p><h2>தேசிய கொடியேற்றம்:</h2><p>மரியாதை அணிவகுப்பை ஆய்வு செய்த பின்னர், பிரதமர் செங்கோட்டையின் கொத்தளங்களுக்குச் செல்வார். தேசியக் கொடியை ஏற்றுவதற்காக, டெல்லி பகுதி தளபதி பிரதமரை கொத்தளங்களில் உள்ள மேடைக்கு அழைத்துச் செல்வார்.</p><p>"தேசியக் கொடியை ஏற்றுவதில் கேப்டன் சோனியா சிங் சௌஹான் பிரதமருக்கு உதவுவார். இது, 1721 ஃபீல்ட் பேட்டரி (செரிமோனியல்) பிரிவின் வீரமிக்க பீரங்கி வீரர்களின் 21 குண்டுகள் முழங்கும் மரியாதையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுவிடும்," என அந்த அறிக்கை தெரிவித்தது.</p><h2>ராஷ்ட்ரிய வணக்கம்:</h2><p>மூவர்ணக் கொடி ஏற்றப்பட்ட பிறகு, அதற்கு 'ராஷ்ட்ரிய வணக்கம்' செலுத்தப்படும். பிரதமர் தேசியக் கொடியை ஏற்றியவுடன், இந்திய விமானப்படையின் இரண்டு எம்.ஐ.17 ஹெலிகாப்டர்கள் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மலர் இதழ்கள் தூவப்படும். அவற்றில் ஒன்று தேசிய கொடியை ஏந்தியபடியும், மற்றொன்று 'வந்தே மாதரம்' சித்தரிக்கப்பட்ட கொடியை ஏந்தியபடியும் செல்லும்.</p><p>அந்த ஹெலிகாப்டர்களின் தலைவர்களாக விங் கமாண்டர் ரஜத் மற்றும் ஸ்குவாட்ரன் லீடர் அங்கித் வர்ஷ்னி ஆகியோர் இருப்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மலர் இதழ்கள் தூவிய பிறகு, பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அவரது உரையின் முடிவில், 2,500 தேசிய மாணவர் படை (NCC) மாணவர்களும், மை பாரத் தன்னார்வலர்களும் இணைந்து 'வந்தே மாதரம்' என்ற தேசியப் பாடலையும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாடுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் போராட்டம்: சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி பேரணி மேற்கொள்ள மாணவர்கள் திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-protesting-students-to-take-out-tiranga-yatra-on-aug-15</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-protesting-students-to-take-out-tiranga-yatra-on-aug-15#comments</comments><guid isPermaLink="false">780fec16-c83c-467f-9c71-2406ae31728f</guid><pubDate>Fri, 14 Aug 2026 17:54:31 +0000</pubDate><atom:updated>2026-08-14T17:54:31.456Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Students,மாணவர்கள்,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்,Tiranga Yatra</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/5eu3inrt/Jharkhand-Protest-.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/5eu3inrt/Jharkhand-Protest-.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">ஜார்க்கண்ட்</a> மாநிலத்தின் பணி நியமனத் தேர்வு நடைமுறைகளில் சீர்திருத்தங்களை கோரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 21-ஆவது நாளை எட்டியது. சுதந்திர தினத்தன்று 'தேசிய கொடி பேரணி' நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், அதிகாரிகள் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் போராட்டக்காரர்களை சந்தித்து பேசினர்.</p><p>அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள பேரணிக்கான திட்டமிடப்பட்ட வழித்தடம் குறித்தும் விவரங்களை கேட்டறிந்தனர். இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமலேயே நிறைவடைந்தன.</p><p>அரசு அழைப்பு விடுக்கும் போதெல்லாம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக 'ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்த மன்றம்' அமைப்பின் தலைவர் ரவீந்திர பாஸ்வான் தெரிவித்தார். </p><h2>தேசிய கொடி பேரணி:</h2><p>சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 15 அன்று 'தேசிய கொடி பேரணி' நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சி பணி நியமன தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை வலியுறுத்தும் இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.</p><p>மாணவர்கள் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் இருந்து ஆல்பர்ட் எக்கா சவுக் வரை பேரணி நடத்தினர்; அப்போது "கல்வி மாஃபியா" மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர்.</p><p>பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் பொறுப்பானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற செய்தியை வெளிப்படுத்துவதே இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்று பாஸ்வான் கூறினார்.</p><p>'ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்த மன்றத்தின்' கீழ் போராடும் மாணவர்கள், பணி நியமன தேர்வுகளில் கூடுதல் வெளிப்படைத்தன்மை, பல தேர்வுகளை ரத்து செய்தல் மற்றும் சி.பி.ஐ. அல்லது ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வெளியேயுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவின் மூலம் சுதந்திரமான விசாரணை ஆகியவற்றை வலியுறுத்தி வருகின்றனர்.</p><h2>வழக்குப் பதிவு:</h2><p>ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR) குறித்தும் போராட்டக்காரர்கள் ராஞ்சி மாவட்ட நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.</p><p>தடை உத்தரவுகளை மீறியது, அரசு சொத்துக்களுக்குசேதம் விளைவித்தது மற்றும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், அடையாளம் தெரியாத சுமார் 300 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>இதுவரை யாரும் கைது செய்யப்படவோ அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்படவோ இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இத்தாலியுடன் ஆழமான மற்றும் வலுவான பிணைப்பு: ராகுல் காந்தி கிண்டல் செய்த நிலையில் MEA பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/share-deep-and-strong-ties-with-italy-centre-on-congress-meloni-jibe</link><comments>https://www.maalaimalar.com/news/national/share-deep-and-strong-ties-with-italy-centre-on-congress-meloni-jibe#comments</comments><guid isPermaLink="false">8ec2f7a6-a3f2-48b9-8861-c8a66a3cbf74</guid><pubDate>Fri, 14 Aug 2026 15:38:06 +0000</pubDate><atom:updated>2026-08-14T15:38:06.803Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/yn112gmz/RahulGandhiPMMOdi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/yn112gmz/RahulGandhiPMMOdi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இத்தாலி பிரதமர் மெலோனி குறித்து காங்கிரஸ் தேசிய மாநாட்டில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.</p><p>அதில் "இத்தாலியுடன் நாங்கள் ஆழமான மற்றும் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளோம். இந்த உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இரு நாடுகளுக்கு இடையிலான நட்பு மற்றும் இருதரப்பு உறவுகளைப் பொறுத்தவரை, அவை பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் அடிப்படையில் பேணப்படுவது முக்கியமாகும்" எனக் குறிப்பிட்டுள்ளது.</p><h2>காங்கிரஸ் தேசிய மாநாட்டில் நடந்தது என்ன?</h2><p>பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்நாட்டு தலைவர்களை அடிக்கடி கட்டிப்பிடிப்பதை விமர்சித்த ராகுல் காந்தி, "பிரதமர் மோடிக்கு இந்த யோசனை எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. மனிதர்களின் மண்டைக்குள் விசித்திரமான எண்ணங்கள் வருகின்றன. இதையே அவர் 'வெளியுறவுக் கொள்கை' என்று நினைக்கிறார்" என்கிறார்.</p><p>மேலும் ஒரு படி மேலே சென்று மேடையிலிருந்த காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டிப்பிடித்தார். உடனே சந்தீப் தீட்சித் நகைக்சுவையாக, "என்னை மெலோனி (இத்தாலி பிரதமர்) என்று நினைத்து கட்டிப்பிடிக்கவில்லையே?" என்று கேட்க, ராகுல் காந்தி சிரித்தபடியே "நான் இன்னும் அந்த அளவுக்குப் போகவில்லை" என்று பதிலளித்தார்.</p><p>அதே கூட்டத்தில் ராகுல் காந்தி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை கோமாளிகள் கூட்டம் என்றும் அவர்கள் அதானி மற்றும் அம்பானி போன்ற பெரிய முதலாளிகளின் கர சேவகர்களாக மாறிவிட்டதாகவும் விமர்சித்தார்.</p><p>ராகுல் காந்தி தனது உரையின் முடிவில், "பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் ராஜினாமா செய்யும் வரை நாங்கள் அவர்களைத் தூங்க விடமாட்டோம். வெறுப்போ வன்முறையோ இன்றி, அன்பினாலும் அகிம்சையினாலும் இந்த போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்" என தெரிவித்தார்.</p><h2>பாஜகவின் கண்டனம்</h2><p>ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கள் மிகவும் அருவருப்பான, தரமற்ற ஒன்று என்றும் ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு இது அழகல்ல என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சு வர்மா சாடியுள்ளார்.</p><h2>காங்கிரஸ் விளக்கம்</h2><p>இதற்கு விளக்கம் அளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷமா முகமது பேசுகையில், "ராகுல் காந்தி மெலோனியின் பெயரைப் பயன்படுத்தவே இல்லை. அவர் தனது கட்சியின் தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டியணைத்தார், இதில் எந்தத் தவறும் இல்லை" என்று தெரிவித்தார்.</p><p>மேலும் பேசிய அவர், "நான் ஒரு வெளிநாட்டவரைத் திருமணம் செய்து கொண்டவள். பொதுவாக வெளிநாட்டவர்கள் கை குலுக்குவதையே விரும்புவர். எடுத்தவுடனே கட்டிப்பிடிப்பதை விரும்புவதில்லை" என்று பிரதமர் மோடியின் செய்கையை விமர்சித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளி உணவகத்தில் சாப்பிட்ட 12-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு: பள்ளி நடத்துநர், நிர்வாகி கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/student-dies-mysteriously-after-eating-school-canteen-food</link><comments>https://www.maalaimalar.com/news/national/student-dies-mysteriously-after-eating-school-canteen-food#comments</comments><guid isPermaLink="false">6b095986-8cd8-4109-a243-d85a41b02d6c</guid><pubDate>Fri, 14 Aug 2026 15:00:29 +0000</pubDate><atom:updated>2026-08-14T15:00:29.374Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>School Student death,Prince Soni,Jaipur school,பள்ளி மாணவர் உயிரிழப்பு,பிரின்ஸ் சோனி,ஜெய்ப்பூர் பள்ளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/poy6ut15/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜெய்ப்பூர் தனியார் பள்ளி உணவகத்தில் கட்லெட் சாப்பிட்ட 12ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ School Student death]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/poy6ut15/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் மாநிலம் ஜோத்வாரா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், பள்ளி உணவகத்தில் வாங்கிய உணவை சாப்பிட்ட 12-ஆம் வகுப்பு மாணவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, பள்ளி நடத்துநர் மற்றும் நிர்வாகியை விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.</p><p><strong>12ஆம் வகுப்பு பள்ளி மாணவர் உயிரிழப்பு</strong></p><p>ஜெய்ப்பூரில் உள்ள மகாராணா பிரதாப்பில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது பிரின்ஸ் சோனி என்ற மாணவர் பயின்று வந்துள்ளார்.</p><p>சம்பவத்தன்று அந்த மாணவர், 11 மணியளவில் மதிய உணவு இடைவெளியின் போது, பள்ளி உணவகத்தில் இருந்து கட்லெட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார்.</p><p>இதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மாணவரின் உடல் நிலை மோசமடைந்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மாணவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்ப்பட்ட நிலையில், மாணவரின் தந்தையான அமித் சோனி பள்ளிக்கு வந்துள்ளார்.</p><p>பின்னர் தனது மகனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள், மனிபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.</p><p>இதைத்தொடர்ந்து மனிபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.</p><p><strong>உறவினர்கள் குற்றச்சாட்டு</strong></p><p>இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து மாணவரின் உறவினரான ரவிக்குமார் கூறுகையில், “பள்ளி உணவகத்தில் இருந்து கெட்டுப்போன மற்றும் எண்ணெய்ப் பசையுள்ள கட்லெட்டை பிரின்ஸ் சாப்பிட்டபோது, அது அவனது தொண்டையில் சிக்கிக்கொண்டுள்ளது.</p><p>எங்கள் குடும்பத்தினர் காலை சுமார் 11:45 மணியளவில் பள்ளிக்கு வந்து, பிரின்ஸ் இன்னும் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படவில்லை என்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதற்குப் பதிலாக, நிர்வாகம் எங்கள் குடும்பத்தினரை ஒரு நான்கு சக்கர வாகனத்தை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டது.</p><p>சுமார் 100 மீட்டர் தொலைவில் மருத்துவ வசதி இருந்தபோதிலும், பள்ளி நிர்வாகம் பிரின்ஸை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. பள்ளியில் போதுமான முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகளும் இல்லை.</p><p>பள்ளி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஊழியர்கள் மாணவர் மீது பெரும் அலட்சியமாக இருந்துள்ளனர். பிரின்ஸை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தாலோ அல்லது 108 ஆம்புலன்ஸை அழைத்திருந்தாலோ அவரது உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்” என்று அவர் கூறினார்.</p><p><strong>பள்ளி நிர்வாகி கைது</strong></p><p>இதையடுத்து பிரின்ஸின் உடலை பிரேத பரிசோதனைக்காக கன்வாடியா மருத்துவமனைக்கு ஜோத்வாரா போலீசார் அனுப்பி வைத்தனர்.</p><p>இந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து அப்பகுதியில் போராட்டங்கள் வெடித்து, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.</p><p>இதைத்தொடர்ந்து அலட்சியம் குறித்த குற்றச்சாட்டுகள் பேரில் பள்ளி நடத்துநர் அமித் குமாவத் மற்றும் நிர்வாகி ராஜேந்திர குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மிக இளம் வயதில் மாவட்ட கலெக்டர்: மணிப்பூரில் தமிழ் பெண் சாதனை</title><link>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-woman-angeline-renita-history-manipur-young-collector</link><comments>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-woman-angeline-renita-history-manipur-young-collector#comments</comments><guid isPermaLink="false">06a032ee-a753-4048-a6d1-80211deefb52</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:26:57 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:26:57.244Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/vh6txglx/AngelineRenita0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஏஞ்சலின் ரெனிட்டா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/vh6txglx/AngelineRenita0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மணிப்பூர் மாநிலத்தின் காக்சிங் மாவட்ட கலெக்டராக (துணைக் கமிஷனர்) தமிழ்நாட்டை சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏஞ்சலின் ரெனிட்டா பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தின் மிக இளம் வயது மாவட்ட கலெக்டர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>தமிழ் வழியில் படித்து சாதனை</h2><p>தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆர். ஏஞ்சலின் ரெனிட்டா (வயது 28). இவர் தனது பள்ளி படிப்பை தமிழ் வழி கல்வியில் பயின்றார். பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பிரிவில் படித்து தங்க பதக்கம் வென்று அசத்தினார்.</p><h2>முதலாவது முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ்.</h2><p>சிறு வயது முதலே ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த ஏஞ்சலின் ரெனிட்டா, இதற்காக கடுமையாக உழைத்து படித்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு நடந்த மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமை பணிகள் தேர்வில், தனது முதலாவது முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 338-வது இடம் பிடித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனார். இதையடுத்து அவர் மணிப்பூர் மாநில கேடருக்கு தேர்வு செய்யப்பட்டு அங்கு தனது பணியை தொடங்கினார்.</p><h2>குவியும் வாழ்த்து</h2><p>மணிப்பூரில் உள்நாட்டு துறை இணை செயலாளர், லம்பேல் துணைப் பிரிவு அதிகாரி மற்றும் மணிப்பூர் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளில் ஏஞ்சலின் ரெனிட்டா திறம்பட பணியாற்றினார். அவரது சிறப்பான நிர்வாக திறமையை பாராட்டி, மணிப்பூர் அரசு தற்போது அவரை காக்சிங் மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.</p><p>தமிழ் வழியில் படித்து, மிக இளம் வயதிலேயே மணிப்பூரின் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள தஞ்சை மண் பெற்றெடுத்த இந்த 'தமிழச்சிக்கு' சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>ஜனாதிபதி மாளிகையில் பூந்தோட்டம் திறப்பு - ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை இலவச அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/national/presidents-house-amrit-udyan-free-visit-aug-16-to-sept-15</link><comments>https://www.maalaimalar.com/news/national/presidents-house-amrit-udyan-free-visit-aug-16-to-sept-15#comments</comments><guid isPermaLink="false">f6181650-2348-49a5-9dcd-fff0d71e8d0a</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:18:30 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:18:30.080Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rashtrapati Bhavan,Draupadi Murmu,திரெளபதி முர்மு,amrit udyan,அம்ரித் உத்யான்,ராஷ்டிரபதி பவன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/3aw50gf1/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அம்ரித் உத்யான் திட்டத்தின் கீழ் குடியரசுத் தலைவர் இல்ல தோட்டம் பொதுமக்களுக்கு திறப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ Rashtrapathi bhavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/3aw50gf1/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற புகழ்பெற்ற அமிர்த உத்யானத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு, கண்கவர் வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை பார்வையிட்டார்.</p><p><strong>அம்ரித் உத்யான்</strong></p><p>அம்ரித் உத்யான் என்பது டெல்லியில் உள்ள இந்திய குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் (ராஷ்டிரபதி பவன்) வளாகத்திற்குள் அமைந்திருக்கும் ஒரு அழகான தோட்டமாகும்.</p><p>பால்சம்/குல்-மெஹந்தி, அபராஜிதா, ருக்மிணி, பர்ஷா பூல், லால் சாக் மற்றும் நாக்பானா உள்ளிட்ட பூர்வீகத் தாவரங்கள் அடங்கிய இந்த தோட்டம், இந்தியாவின் வளமான மலர் பாரம்பரியத்தை வெளிக்காட்டுவதோடு, தோட்டங்களின் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் மேம்படுத்துகிறது. </p><p><strong>அனுமதி காலம்</strong></p><p>வருடந்தோறும் மலர்த்தோட்டம் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படும. அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இங்கு வரும் பொதுமக்களுக்கு கடைசி பதிவு மாலை 5 மணிக்கு பின்பு நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தோட்ட பராமரிப்பு பணிகளுக்காக வார விடுமுறையாக ஒவ்வொரு திங்களட்கிழமையும், இந்த தோட்டம் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p><strong>முன்பதிவு</strong></p><p>ராஷ்டிரபதி பவனுக்கு வரும் பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் முற்றிலும் இலவசம் என்றும், இதற்கான முன்பதிவு அதிகாரப்பூர்வ இணையதளமான visit.rashtrapatibhavan.gov.in மூலமாக ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>பொதுமக்களின் கண்கவர் வண்ணங்களுக்கும் சூழலியல் முக்கியத்துவத்திற்கும் பெயர் பெற்ற, பூர்வீக மற்றும் உள்ளூர் பூக்கும் தாவரங்களே இந்த முறை உத்யானத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைய உள்ளது.</p><p><strong>பிரத்யேக அனுமதி</strong></p><p>ராஷ்டிரபதி பவனுக்கு வரும், விளையாட்டு வீரர்களுக்கு தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29-ஆம் தேதியும், ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்றும், அம்ரித் உத்யானில் பிரத்யேக அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை, ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியில், மத்திய செயலக மெட்ரோ நிலையத்திலிருந்து அம்ரித் உத்யானத்தின் நுழைவாயில் வரை ‘அம்ரித் உத்யானத்திற்கான பேருந்து சேவை’ என்ற பேனருடன் கூடிய இரண்டு இடத்திற்கும் இடையிலான இணைப்பு பேருந்து சேவையும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><strong>குடியரசுத் தலைவர் பதிவு</strong></p><p>இந்த நிகழ்வு குறித்து குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற அம்ரித் உத்யான் சம்மர் ஆனுவல்ஸ் 2026 தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு சிறப்பித்தார்,” என்று பதிவிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்: 15 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/yellow-alert-kerala-karnataka-15-states-heavy-rain</link><comments>https://www.maalaimalar.com/news/national/yellow-alert-kerala-karnataka-15-states-heavy-rain#comments</comments><guid isPermaLink="false">6a5bf025-2796-4904-b768-3c47c3dbe3b8</guid><pubDate>Fri, 14 Aug 2026 12:29:22 +0000</pubDate><atom:updated>2026-08-14T12:29:22.549Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>IMD,இந்திய வானிலை ஆய்வு மையம்,bay of bengal,Yellow alert,மஞ்சள் எச்சரிக்கை,வங்காள விரிகுடா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/for1a2w3/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வங்காள விரிகுடா குறைந்த காற்றழுத்தம் காரணமாக 15 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை]]></media:title><media:description type="html"><![CDATA[ IMD weather forecast]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/for1a2w3/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்காள விரிகுடாவில் வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக பல மாநிலங்களில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த குறைந்த காற்றழுத்தம் காரணமாக, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h3><strong>வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்</strong></h3><p>வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் வேகமாக வலுப்பெற்று வருவதால், இந்தியாவின் பல பகுதிகளில் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த மாற்றம் வரும் நாட்களில் கிழக்கு, மத்திய மற்றும் வட இந்தியாவில் மிதமான முதல் மிக கனமான மழையை கொண்டுவரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.</p><p>தற்போது, இந்த மாற்றம் வடமேற்கு திசையில் மேற்கு வங்க கடற்கரை மற்றும் அண்டை நாடான வங்கதேசத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. </p><p>அடுத்த சில மணிநேரங்களில் இது கங்கை சமவெளி மற்றும் ஜார்க்கண்ட் நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.</p><p>குறைந்த காற்றழுத்தம் மேலும் தீவிரமடைவதால், வானிலை ஆய்வு மையம் பல மாநிலங்களை உயர் எச்சரிக்கை நிலையில் வைத்துள்ளது.</p><p>மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நிலைமை தீவிரமடையக்கூடும் என்பதால், அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் ஜார்க்கண்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கங்கைச் சமவெளி மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் 204.5 மி.மீ-க்கு மேல் மிகக் கனமான மழை பெய்யக்கூடும்.</p><p>அதே நேரத்தில், ஜார்க்கண்டில் 115.6 மி.மீ முதல் 204.4 மி.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படவும், சாலைகள் நீரில் மூழ்கவும், ஆற்று நீர்மட்டம் அபாயகரமாக உயரவும் வாய்ப்புள்ளது.</p><h3><strong>15 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை</strong></h3><p>இதன் காரணமாக கிழக்கு இந்தியா மற்றும் 15 மாநிலங்களுக்கு தற்போது மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.</p><p>இவற்றில் அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, கிழக்கு உத்தர பிரதேசம், குஜராத், இமாச்சல பிரதேசம், ஜம்மு &amp; காஷ்மீர், லடாக், கேரளா, கொங்கன்-கோவா, மகாராஷ்டிரா, ராஜஸ்தானின் சில பகுதிகள், கர்நாடகா, உத்தரகாண்ட், விதர்பா (மகாராஷ்டிரா) மற்றும் மேற்கு மத்திய பிரதேசம் ஆகியவை அடங்கும்.</p><p>இந்த பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும்; மேலும் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.</p><p>தெலங்கானாவின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><p>ஹைதராபாத் மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில், நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஆதிலாபாத், நிஜாமாபாத், கரீம்நகர் மற்றும் கம்மம் ஆகிய பகுதிகளில் பிற்பகல் அல்லது மாலையில் குறுகிய நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும்.</p><p>ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வட கடலோர ஆந்திரா, தென் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h3><strong>பொதுமக்களுக்கு எச்சரிக்கை</strong></h3><p>கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம் இருப்பதால், அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீட்டிற்குள் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மழை மற்றும் மின்னலின் போது மரங்களின் கீழோ, மின் கம்பங்களுக்கு அருகிலோ அல்லது பலவீனமான கட்டிடங்களுக்கு அருகிலோ நிற்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>விவசாயிகள் தங்கள் விளைபொருட்கள் நனையாமல் இருக்க, அவற்றை பாதுகாப்பான, உலர்ந்த இடங்களில் சேமித்து வைக்கவும்; கால்நடைகளின் பாதுகாப்பிற்காக அவற்றை உயரமான இடங்களுக்கு நகர்த்துமாறும் வானிலை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>உத்தரகாண்ட் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/national/uttarakand-tunnel-accident-death-toll-rises-to-9</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttarakand-tunnel-accident-death-toll-rises-to-9#comments</comments><guid isPermaLink="false">a7de9d51-0906-4b8f-a1bf-1dd570e3e403</guid><pubDate>Fri, 14 Aug 2026 12:10:58 +0000</pubDate><atom:updated>2026-08-14T12:10:58.668Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உத்தரகாண்ட்,பலி எண்ணிக்கை உயர்வு,சுரங்க விபத்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/1scioqmi/Uttarakhand.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Uttarakhand CM]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/1scioqmi/Uttarakhand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மாயாபூர் பிப்பல் கோட்டி பகுதியில்  ‘விஷ்ணு காட்-பிப்பல்கோட்டி’ நீர்மின் நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பெரிய அளவிலான சுரங்கம் தோண்டப்பட்டு பணிகள் நடக்கிறது.</p><h2>நீர் புகுந்து நிலச்சரிவு</h2><p>நேற்று இந்த பணியில் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 22-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை திடீரென்று சுரங்கத்தில் பலத்த சத்தத்துடன் தண்ணீர் புகுந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.</p><p>சுரங்கப்பாதையின் நுழைவு வாயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய-திபெத் எல்லைக் காவல் படை, ராணுவம் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுரங்கத்திற்குள் பெருக்கெடுத்து ஓடும் நீரை கடக்க மீட்பு குழுவினர் சிறப்புப் படகுகளைப் பயன்படுத்தினர்.</p><h2>9 பேர் பலி</h2><p>சுரங்கப்பாதையில் அதிக அளவு தண்ணீர் நிரம்பியிருந்ததாலும், பக்கவாட்டிலும் தண்ணீர் கசிந்ததாலும் மீட்புப் பணி சவாலாக இருந்தது. சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, தண்ணீரில் சிக்கியவர்களைக் குழுவினர் மீட்டனர்.</p><p>முதற்கட்ட மீட்புப் பணிகளுக்குப் பிறகு, பல தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். எனினும் இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர். மேலும் சில தொழிலாளர்களைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><p>மீட்கப்பட்ட 14 தொழிலாளர்கள் படுகாயத்துடன் உடனடியாக அருகில் உள்ள கோபேஷ்வர் மற்றும் பிப்பல்கோட்டி மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>பலியானவர்கள் டெஹ்ரியைச் சேர்ந்த பிரதீப் சிங் பவார், சமோலியைச் சேர்ந்த முகேஷ், பீகாரைச் சேர்ந்த துர்லப் சர்மா, ஜார்க்கண்டைச் சேர்ந்த விஜய், ஜிதேந்திரா, லோகேஷ்வர், புவனேஸ்வர் உள்ளிட்டோர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><h2>மீட்பு எந்திரம் சிக்கியது</h2><p>மீட்பு பணியின்போது அதில் ஈடுபட்ட ஒரு எந்திரம் சிக்கி சேதம் அடைந்தது. இதையடுத்து மாற்று வழிகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்றன. சமோலி மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாகவே விபத்து நடந்து உள்ளது. </p><p>உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டுத் தீவிரப்படுத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அம்மாநில முதலமைச்சர்களுடன் தொலைபேசியில் பேசி நிலைமைகளை விளக்கி உள்ளார்.</p><h2>முதலமைச்சர் நேரில் பார்வை</h2><p>மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் காணொளிக் காட்சி மூலம் நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களின் நலம் விசாரித்தார். மாநில அரசு அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்றும், அவர்களின் சிகிச்சை மற்றும் மறுவாழ்விற்காக உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் அவர்களுக்கு உறுதி உளித்தார். மேலும் விபத்து நடந்த சுரங்கத்தை இன்று முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>நிச்சயம் முடிந்த சில வாரங்களில் வங்கி பெண் ஊழியர் தற்கொலை! ஆணும் சடலமாக மீட்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/engaged-bank-couple-die-hours-apart-in-kerala-karnataka</link><comments>https://www.maalaimalar.com/news/national/engaged-bank-couple-die-hours-apart-in-kerala-karnataka#comments</comments><guid isPermaLink="false">1f6e9abe-fde3-4d15-a78d-eeab3bec7d46</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:42:21 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:42:21.220Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,Police Investigation,கொச்சி,KeralaTragedy,BankEmployees,Engaged Couple,TragicDeath</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/zlii2asz/Kerala-Tragedy" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kerala Tragedy ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/zlii2asz/Kerala-Tragedy?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி வந்த இளம் ஜோடிகள் <a href="https://www.maalaimalar.com/topic/kerala">கேரளா </a>மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகா</a>வில் அடுத்தடுத்து சில மணிநேர இடைவெளியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பின்னணி விவரங்கள்</h2><p>கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த பி. அனுஸ்ரீ (25) மற்றும் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த வி. அமல் என்ற ஜோடி ஒரே வங்கியில் பணியாற்றி வந்தனர். </p><p>இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் முடிவடைந்தது. வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடக்கவிருந்தது.</p><h2>நடந்த மரணங்கள்</h2><p>கர்நாடகாவின் ஹன்சூர் பகுதியில் உள்ள வங்கிக் கிளையில் பணியாற்றி வந்த அனுஸ்ரீ, அங்குள்ள தனது தங்குமிடத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் காசர்கோட்டிற்கு கொண்டு வரப்பட்டு புதன்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.</p><p>கொச்சியின் எர்ணாகுளம் கிளையில் பணியாற்றி வந்த அமல், தனது காதலி அனுஸ்ரீயின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். </p><p>இதனால் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கிய அவர், அங்குத் தற்கொலை செய்து கொண்டதாகப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என எர்ணாகுளம் வடக்கு போலீசார் தெரிவித்துள்ளனர். </p><p>இவர்களின் மரணத்திற்கான துல்லியமான காரணம் மற்றும் பின்னணி குறித்து அறிய அமலின் மொபைல் போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அமலின் உடலுக்கான பிரேதப் பரிசோதனை இன்று நடைபெற உள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>66 ஆண்டுகள் நகம் வளர்த்து உலக சாதனை: 29 அடி நீள நகங்களுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இந்தியர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-man-sets-world-record-with-29-foot-long-fingernails</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-man-sets-world-record-with-29-foot-long-fingernails#comments</comments><guid isPermaLink="false">8b61eb91-cb3d-4498-8263-4ff2f43ebf79</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:36:19 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:36:19.343Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புனே,Pune,Guinness WorldRecord,கின்னஸ்சாதனை,Shridhar Chillal,ஸ்ரீதர்சில்லால்,Longest Fingernails,66YearsChallenge</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/88i1st7t/Longest-Fingernails" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Longest Fingernails ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/88i1st7t/Longest-Fingernails?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவை சேர்ந்த ஸ்ரீதர் சில்லால் என்ற முதியவர், தனது ஒரே கையில் மிகவும் நீளமான நகங்களை வளர்த்து கின்னஸ் உலக சாதனை படைத்து வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். </p><p>மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் இடது கை 5 நகங்களின் மொத்த நீளம் 909.6 சென்டிமீட்டர், அதாவது கிட்டத்தட்ட 29 அடி 10 அங்குலம் ஆகும்.</p><h2>நகங்களின் தனித்தனி நீள விவரங்கள்:</h2><p>ஸ்ரீதரின் இடது கை நகங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக அளவிடப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுண்டுவிரல் நகத்தின் நீளம் 179.1 செ.மீ, மோதிர விரல் 181.6 செ.மீ, நடுவிரல் 186.6 செ.மீ, ஆள்காட்டி விரல் 164.5 செ.மீ பெருவிரல் 197.8 செ.மீ ஆகும்.</p><h2>66 ஆண்டு காலப் பயணமும் பின்னணியும்:</h2><p>கடந்த 1952 ஆம் ஆண்டு, ஸ்ரீதருக்கு 16 வயதாக இருந்தபோது பள்ளியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. இவரது நண்பர் ஒருவர் எதிர்பாராதவிதமாகத் தங்களது ஆசிரியரின் நீண்ட நகம் ஒன்றை உடைத்துவிட்டார். </p><p>இதனால் கோபமடைந்த ஆசிரியர், "நீங்களாக நகம் வளர்த்துப் பார்த்தால் தான், அதை உடைக்காமல் பராமரிப்பது எவ்வளவு கடினம் என்று உங்களுக்குப் புரியும்" எனச் சவால் விடுத்தார்.</p><p>ஆசிரியரின் அந்த வார்த்தைகளை ஒரு சவாலாக எடுத்துக் கொண்ட ஸ்ரீதர், அன்றிலிருந்து தனது நகங்களை வெட்டுவதை நிறுத்தினார்.</p><h2>தினசரி வாழ்க்கையில் சந்தித்த சவால்கள்:</h2><p>நகங்கள் வளர வளர அவரது அன்றாட வாழ்க்கையில் பல கடுமையான சிரமங்கள் ஏற்பட்டன. தூங்கும் போதும், நடக்கும் போதும் நகங்கள் உடைந்துவிடக் கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தினார். </p><p>இருந்தபோதிலும், அவர் ஒரு வெற்றிகரமான புகைப்படக் கலைஞராக மாறினார். தனது நீண்ட நகங்களுக்கு இடையூறு இல்லாதவாறு, கேமராவில் ஒரு சிறப்புப் பிடியை வடிவமைத்துப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்து வந்தார்.</p><p>இவரது பெருவிரல் நகம் மட்டுமே ஒரு சாதாரண வீட்டு வாசலின் உயரத்திற்கு இணையாகச் சுருண்டு வளர்ந்து, உலகிலேயே "மிக நீளமான ஒற்றை நகம்" என்ற தனிப் பட்டத்தை இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஈரான் அதிபர்</title><link>https://www.maalaimalar.com/news/national/iran-president-to-come-to-delhi-for-brics-summit</link><comments>https://www.maalaimalar.com/news/national/iran-president-to-come-to-delhi-for-brics-summit#comments</comments><guid isPermaLink="false">6887b041-7e2d-4af9-8148-b91678ba13fd</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:03:45 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:03:45.880Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BRICS Summit,பிரிக்ஸ் உச்சி மாநாடு,Iran President,ஈரான் அதிபர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/xhtvk69l/iran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Masoud Pezeshkian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/xhtvk69l/iran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியானது.</p><h2>பிரிக்ஸ் உச்சி மாநாடு</h2><p>பிரிக்ஸ் அமைப்பில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கடந்த 2024-ம் ஆண்டில் முழு உறுப்பினர்களாக இணைந்தன. இதனைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டில் இந்தோனேசியாவும் இணைந்ததால் முழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.</p><p>இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு, 'மீள்தன்மை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு' என்ற கருப்பொருளின் கீழ் டெல்லியில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.</p><h2>ஈரான் அதிபர் இந்தியா வருகை</h2><p>இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த வருகையின்போது இரு நாடுகளின் உறவு மற்றும் போர்நிறுத்தம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>கடந்த ஜூன் மாதம் நடந்த வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தியா வருகை தந்தார். அப்போது, அமெரிக்காவுடனான போர்நிறுத்த விவகாரத்தில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என கூறி அவர், ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து தொடர்பாக உறுதியும் வழங்கினார்.</p><p>அமெரிக்கா உடனான போர் தொடர்ந்து வரும் நிலையில், ஈரான் அதிபரின் இந்தியா வருகை உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விமான நிலையத்தில் இலவச புத்தக சேவை- ஃப்ளைபிரரி திட்டம் குறித்து அமைச்சர் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/free-book-service-at-airports-flybrary-scheme-explained-by-minister</link><comments>https://www.maalaimalar.com/news/national/free-book-service-at-airports-flybrary-scheme-explained-by-minister#comments</comments><guid isPermaLink="false">aba5f99a-fb7c-4e8d-b8b1-eaca2a4b8521</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:32:54 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:32:54.331Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Indian airports,விமான நிலையங்கள்,Flybrary,Airport library,ஃப்ளைபிரரி,இலவச புத்தக சேவை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/wdd3dyxa/Untitled-design-50.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஃப்ளைபிரரி திட்டம் மூலம் 68 இந்திய விமான நிலையங்களில் இலவச நூலகம் திறப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ Flybrary service]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/wdd3dyxa/Untitled-design-50.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் தங்களின் காத்திருப்பு நேரத்தை பயனுள்ளதாக செலவிடும் வகையில் ‘ஃப்ளைபிரரி’ என்ற திட்டத்தை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் தொடங்கியுள்ளது.</p><p>இந்த திட்டத்தின்படி விமான நிலையத்தில் தங்கள் விமானத்திற்காக காத்திருக்கும் பயணிகள், ஒரு புத்தகத்தை இலவசமாக பெற்று, பின் அதை திருப்பி கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><strong>ஃப்ளைபிரரி திட்டம்</strong></p><p>ஃப்ளைபிரரி திட்டம் என்பது விமான நிலையத்திற்குள் இருக்கும் ஒரு இலவச நூலக சேவையாகும். விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அங்குள்ள அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களில், தங்களுக்கு பிடித்தமான ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.  </p><p>அந்த புத்தகத்தை விமான நிலையத்தில் காத்திருக்கும் போதும் அல்லது பயணிகள் தாங்கள் பயணம் செய்யும் விமானத்திலும் எடுத்து சென்று படிக்கலாம்.</p><p>புத்தகத்தை எடுத்து கொண்டு விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள், தாங்கள் சென்று சேரும் இடத்தை அடைந்தவுடன், அங்குள்ள ஃப்ளைபிரரி புத்தக நிலையத்தில் புத்தகத்தை திருப்பி கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும் சில விமான நிலையங்களில் பயணிகள் தாங்கள் எடுத்த புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து சென்று, பின்னர் தாங்கள் அடுத்ததாக விமான நிலையத்திற்கு வரும்போது திருப்பி கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஃப்ளைபிரரி திட்டத்திற்கு, பயணிகள் தங்களின் சொந்த புத்தகங்களையும் நன்கொடையாக வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><strong>ஃப்ளைபிரரி திட்டம் அறிமுகம்</strong></p><p>பக்குல் அறக்கட்டளையின் நிறுவனர் சுஜித் மகாபாத்ரா, இந்திய விமான நிலையத்துடன் இணைந்து ஃப்ளைபிரரி திட்டத்தை, 2025ஆம் ஆண்டு புவனேஷ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகம் செய்தார்.</p><p>இதையடுத்து இந்த திட்டம் தற்போது இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விரிவடைந்து, புவனேஷ்வர், ராஞ்சி, புஜ், தர்பங்கா, கஜுராஹோ, குலு-மனாலி, மங்களூரு, டையூ மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட 68 விமான நிலையங்களில் பயன்பாட்டில் உள்ளது.</p><p><strong>போக்குவரத்துத் துறை அமைச்சர்</strong></p><p>இந்த ஃப்ளைபிரரி திட்டம் குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகம் நாயுடு கிஞ்சரபு கூறுகையில், பயணிகள் ஃப்ளைபிரரி திட்டத்தை வரவேற்பதை கண்டு தான் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.</p><p>மேலும் குழந்தைகள் விளையாட்டு அம்சங்கள், இலவச வைஃபை மற்றும் சுய உதவிக் குழு விற்பனை நிலையங்கள் ஆகியவற்றுடன், ஃப்ளைபிரரி திட்டமும் பயணிகளின் நலன்களை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஏடிஎம் வாகன கொள்ளை.. பீகாரில் பக்தர்கள் போல வேடமிட்டு குற்றவாளிகளை பிடித்த கர்நாடக போலீஸ் </title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-bank-heist-arrest-guard-killing-robbers-who-stole-98-lakh-nabbed-in-bihar</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-bank-heist-arrest-guard-killing-robbers-who-stole-98-lakh-nabbed-in-bihar#comments</comments><guid isPermaLink="false">176ebed4-e856-44f7-a0fe-c2b04a8edd58</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:33:39 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:33:39.749Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,பீகார்,Bihar,ஏடிஎம் வாகன கொள்ளை,ATM cash van robbery</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/osgdh365/tn-29.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஏடிஎம் வாகன கொள்ளை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏடிஎம் வாகன கொள்ளை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/osgdh365/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் கடந்த ஆண்டு காவலரை கொன்றுவிட்டு வங்கி ஏடிஎம் பணம் ஏற்றிச் சென்ற வாகனத்தை <a href="https://www.maalaimalar.com/news/national/rs711-crore-bengaluru-atm-vehicle-robbery-constable-who-masterminded-it-three-arrested-how-was-it-caught-798755">கொள்ளையடித்த </a>குற்றவாளிகள் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><h2>கொள்ளை </h2><p>2025, ஜனவரி 16 அன்று கர்நாடக மாநிலம் பிடாரில் உள்ள சிவாஜி சௌக் பகுதியில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த வாகனத்தை இலக்கு வைத்து துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் முகமூடியுடன் வந்த இருவர் தாக்குதல் நடத்தினர்.</p><p>மிளகாய் பொடியை பொடியைத் தூவி, துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டுச் சுமார் ரூ.98 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.</p><p>இந்தத் தாக்குதலில் கிரி வெங்கடேஷ் என்ற பாதுகாப்பு காவலர் உயிரிழந்தார். சிவகுமார்  என்ற மற்றொரு காவலர் காயமடைந்தார். </p><p>கொள்ளைச் சம்பவம் நடந்த அதே நாளில் மாலையில், ஐதராபாத்தில் பேருந்து ஏற முயன்றபோது சந்தேகமடைந்த டிராவல்ஸ் மேனேஜர் ஜஹாங்கீர் என்பவரையும் இவர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியுள்ளனர்.</p><p>கர்நாடக போலீசார் சிறப்பு படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். </p> <h2>கைது</h2><p>இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பீகாரின் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த அமன் குமார் மற்றும் அவரது கூட்டாளி அலோக் குமார் என போலீசார் கண்டறிந்தனர்.</p><p>கர்நாடகா தவிரத் தெலங்கானா, பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களிலும் இவர்கள் மீது கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p> <p>இதைத்தொடர்ந்து கர்நாடகக் காவல் துறையைச் சேர்ந்த சிறப்புக் குழுவினர் பீகாரில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் முகாமமிட்டனர்.</p><p>சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க சில அதிகாரிகள் யாத்திரை செல்லும் பக்தர்கள் வேடத்தில் அப்பகுதியில் 20 நாட்களுக்கும் மேலாக உலா வந்து தீவிரமாகக் கண்காணித்தனர்.</p><p>நேற்று முன் தினம் (புதன்கிழமை) அன்று தாமோதர்பூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் காவல் துறையினர் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு 18 மணி நேரம் ஆகிறது</title><link>https://www.maalaimalar.com/news/national/18-hours-for-darshan-tirupati-temple</link><comments>https://www.maalaimalar.com/news/national/18-hours-for-darshan-tirupati-temple#comments</comments><guid isPermaLink="false">e91a49fa-e63e-4f92-8252-0ff37371fd3e</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:20:56 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:20:56.191Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupati temple,Free Darshan,திருப்பதி கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/s911b42e/tirupati.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tirupati temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/s911b42e/tirupati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.</strong></em></p><h2>திருப்பதி ஏழுமலையான் கோவில்</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருப்பதி ஏழுமலையான் கோவிலில்</a> கடந்த சில நாட்களாக கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று காலை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.</p><p>ரூ.300 சிறப்பு தரிசனத்தில் வந்த பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்களை வைகுந்தம் அறைகளில் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைத்தனர். </p> <h2>இலவச தரிசனம்</h2><p>திருப்பதியில் நேற்று 69,082 பேர் தரிசனம் செய்தனர். 26,671 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.09 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது 4.05 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தேசப் பிரிவினை எனும் கருப்பு சரித்திரம்.. நினைவு தினத்தில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்  </title><link>https://www.maalaimalar.com/news/national/partition-horrors-remembrance-day-india-pakistan-division-victims-honoured-and-national-unity-stressed</link><comments>https://www.maalaimalar.com/news/national/partition-horrors-remembrance-day-india-pakistan-division-victims-honoured-and-national-unity-stressed#comments</comments><guid isPermaLink="false">6b62221a-9257-4791-9768-a6df9df77d5f</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:16:45 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:16:45.124Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Independence Day,சுதந்திர தினம்,பிரதமர் மோடி,இந்திய பிரிவினை,Partition of India</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/jq35m68k/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/jq35m68k/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒருங்கிணைந்த இந்தியா சுதந்திரத்தின் போது, இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிந்தது. </p><p>இந்த பிரிவினையின் போது துயருற்று  தங்களது வாழ்வையும் உயிரையும் இழந்த மக்களின்  நினைவாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14 (இன்று) பிரிவினை கொடுமைகள் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.</p> <h2>பிரிவினை</h2><p>வரலாற்று ஆய்வுகளின்படி, இந்தியா - பாகிஸ்தான் எல்லை வகுக்கப்பட்டபோது சுமார் 1.5 கோடி மக்கள் தங்களது சொந்த வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக இடம்பெயர நேரிட்டது.</p><p>மேற்கு பாகிஸ்தான் (தற்போதைய பாகிஸ்தான்) எல்லையான பஞ்சாபிலும், கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய வங்கதேசம்) எல்லையான மேற்கு வங்கத்திலும் மதக்கலவரங்கள் மூண்டன.</p><p>கொலை, பாலியல் வன்கொடுமை என பல்வேறு சொல்லொணா துயரங்கள் அரங்கேறின. இதன்போது ஏற்பட்ட மத வன்முறைகளில் தோராயமாக 2 லட்சம் முதல் 20 லட்சம் மக்கள் உயிரிழந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.</p> <h2>பிரிவினை தினம்</h2><p>ஆகஸ்ட் 14 இத்தினம் அனுசகரிக்கப்படும் என 2021 பிரதமர் மோடி அறிவித்திருந்தார். எதிர்கால சந்ததியினருக்கு நாட்டின் பிரிவினையின் பின்னால் இருக்கும் துயரங்களை அரியச் செய்வதே இத்தினத்தின் நோக்கம்.</p><p>ஆகஸ்ட் 15 நாடு <a href="https://www.maalaimalar.com/topic/independence-day">சுதந்திர தினத்தை </a>கொண்டாடுவதற்கு பின்னால் இப்படியோரு கருப்பு சரித்திரமும் இருப்பதை நினைவுக்கூற இந்நாள் அவசியமாகிறது.</p> <h2>மோடி</h2><p>இவ்வாண்டு பிரிவினை கொடுமைகள் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரிவினையில் இன்னுயிரை இழந்தவர்களுக்கும் அத்தகு கொடூரமான காலகட்டத்தில் இருந்து மீண்டு வந்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டோருக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், "மக்களின் துணிச்சலும் பலமும், எப்பேர்ப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் இலக்குகளை அடைய முடியும் என்பதை நிருபித்துள்ளது. தேசிய ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் நாம் மேலும் வலுப்படுத்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் வார்னிங் - மே 2025-ஐ விட பலமாக பதிலடி கொடுப்போம் என மிரட்டல்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-tensions-shehbaz-sharif-warns-of-stronger-response-over-security-sovereignty-and-water-rights</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-tensions-shehbaz-sharif-warns-of-stronger-response-over-security-sovereignty-and-water-rights#comments</comments><guid isPermaLink="false">6b99899f-0be5-4a66-895b-b4ef66674100</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:22:40 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:22:40.473Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,ஆபரேஷன் சிந்தூர்,shehbaz sharif,Independence Day,ஷெபாஸ் ஷெரீப்,Operation Sindhur,pakistan independence</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/34lachie/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஷெபாஸ் ஷெரீப்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஷெபாஸ் ஷெரீப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/34lachie/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நீர் உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்தால், மே 2025 இல் கொடுத்ததை விட பலமான பதிலடியை கொடுப்போம் என இந்தியாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/news/world/pakistan-court-grants-bail-to-pm-shehbazs-daughter-and-her-husband-in-graft-case-2">ஷெபாஸ் ஷெரீப்</a> எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>இந்தியா ஆகஸ்ட் 15 (நாளை) சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது போல, பாகிஸ்தான் இன்று (ஆகஸ்ட் 14) தனது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. </p> <h2>நினைவிடம்</h2><p>கடந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காமில் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக இந்தியா மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. 2 நாட்கள் நீடித்த இந்த மோதல் மே 9 அன்று முடிவுக்கு வந்தது.</p><p>இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 13) தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த ஆண்டு இந்தியாவுடன் நிகழ்ந்த மோதல் மற்றும் அதில் சண்டையிட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கான யாதிர் ஐ பதா (வெற்றி நினைவிடத்தை) திறந்து வைக்கும் நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, பீல்டுக்கு மார்ஷல் அசிம் முனீர் மற்றும் முப்படை தளபதிகள் கலந்துகொண்டனர்.</p> <h2>புகழாரம்</h2><p>இங்கு கடந்த ஆண்டு தாக்குதலின் புகைப்படங்கள் காட்சியப்படுத்தப்பட்டுள்ளன. மோதலில் பாகிஸ்தானே வென்றதாக அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் ஷெரீப், "யாதிர் ஐ பதா என்பது நமது உறுதிப்பாடு, விடாமுயற்சி மற்றும் எதிரிகள் மீதான நமது ஆயுத படைகளின் ஆதிக்கத்தை பிரதிபலிக்கிறது. நாட்டை காக்கும் சண்டையில் உயிரிழந்த நமது வீரர்களுக்கும், நமது பெருமித்திதிற்குமான நினைவுச்ச்சின்னம் இது " என்றார்.</p> <h2>இந்தியாவுக்கு வார்னிங்</h2><p>"பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. ஆனால் அமைதியை விரும்புவதை பலவீனமாக எடுத்துக்கொள்ள கூடாது. </p><p>கண்ணியத்துடனும் உறுதியுடனும் நாம் அமைதியை நாடுகிறோம். இந்த பிராந்தியத்தில் பாகிஸ்தான் அமைதிக்கான உத்தரவாதமாக விளங்குகிறது.</p><p>ஆனால் பாகிஸ்தானின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நீர் உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்தால், மே 2025 இல் கொடுத்ததை விட பலமான பதிலடியை கொடுப்போம்" என எச்சரித்துள்ளார்.</p><p>பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய இந்தியா, ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் செல்லும் நீரை கணிசமாக குறைத்துள்ளது. </p><p>இந்த நீரை விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் பாகிஸ்தான் பெருமளவில் நம்பியுள்ளதால், நீரை திறந்துவிடும்படி இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்.. நாட்டு மக்களுக்கு சோனம் வாங்சுக் அழைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/india-second-freedom-struggle-sonam-wangchuk-calls-for-peaceful-political-reform</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-second-freedom-struggle-sonam-wangchuk-calls-for-peaceful-political-reform#comments</comments><guid isPermaLink="false">8249749b-bd8a-4007-935a-8a91705d4f03</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:44:03 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:44:03.217Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,Independence Day,சுதந்திர தினம்,சோனம் வாங்சுக்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/b9u5ecgb/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/b9u5ecgb/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாளை நாட்டின் 80வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி கல்வியாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/i-will-end-the-hunger-strike-if-this-single-promise-is-made-sonam-wangchuk">சோனம் வாங்சுக்</a> லடாக்கில் இருந்தபடி வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். </p><p>எக்ஸ் பக்கத்தில் வெளியான அவ்வீடியோவில் பேசும் அவர், அரசியல் சீர்திருத்தத்தித்தை மேற்கொள்ள இந்தியாவின் இரண்டாம் சுதந்திர போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.  </p><p>சுயநலமற்ற, பயமில்லாத நற்பண்புகளுடையவர்களை தலைவர்களாக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். </p> <h2>புரட்சி</h2><p>"இந்த சுதந்திர தினத்தில், எனக்கு உங்களின் உதவி வேண்டும். இந்தியாவுக்கு ஒரு அமைதியான புரட்சி தேவை. 2047 ஆம் ஆண்டுக்குள் ஒரு மதிப்புமிக்க நாடாக மாறுவதற்கு நாட்டின் தலைவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுப்படுகிறார்கள் என்பதில் அந்த புரட்சி நிகழ வேண்டும்" என அவர் பேசியுள்ளார்.</p> <h2>குற்ற வழக்குகள்</h2><p>தொடர்ந்து பேசிய அவர், "குற்ற வழக்குகளை கொண்ட அரசியல்வாதிகள் நாட்டின் நம்பகத்தன்மையை இழந்துவருகிறார்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதி பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் கால் வாசி பேர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் வழக்குகள் உள்ளன. நம்பிக்கை பற்றாக்குறை தான் நாட்டின் மிகப்பெரிய பற்றாக்குறையாக மாறியுள்ளதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.</p> <h2>அழைப்பு</h2><p>நாடு நெடுகிலும் உள்ள மக்களுடன் இதுகுறித்து ஆலோசிக்க விரும்புகிறேன். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடியவர்களாக யார் யாரை அவர்கள் கருதுவதாகவும் நான் கேட்டறிய விரும்புகிறேன்.</p><p>இங்கே லடாக்கின் தொலைதூரத்தில் அமர்ந்துகொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட தகுதியானவர்கள் யார், அவர்களை எப்படி கண்டறிவது என்பது எனக்கு தெரியவில்லை.</p><p>எனவே மக்கள் தங்கள் பகுதிகளில் அவ்வாறு யாரை மக்கள் பணிக்கு தகுந்தவர்கள் என கருதுகிறீர்களா அவர்களின் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். </p><p>நாம் ஒன்றுசேர்ந்த்து, இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்தை (விடுதலை இயக்கத்தை) தொடங்குவோம். இந்த செய்தியை முடிந்த அளவு மக்கள் தத்தமது மொழிகளில் பெயர்த்து கூடியமட்டும் பரவச் செய்ய வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி தலைமையில் போராடிய மாணவர்கள் - இளைஞர்களுக்கு ஆதரவாக சோனம் வாங்சுக் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர் ஆவார். அவரின் உடல் எடை 10 கிலோவுக்கு மேல் குறைந்தது.</p> <h2>டெல்லி போராட்டம்</h2><p>டெல்லி போலீசாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். </p><p>ஜூலை 20 நாடாளுமன்றம் பேரணி சென்ற மாணவர்கள் மீது வழக்குப்பதிய மாட்டோம் என மத்திய அமைச்சர் ஜேபி நட்டா அவரை மருத்துவமனையில் சென்று சந்தித்து வாக்குறுதி அளித்த பிறகே அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.</p><p>தொடர்ந்து சிஜேபி போராட்டத்தின் அழுத்தத்தால் தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.</p> ]]></content:encoded></item><item><title>ஜென் ஆல்பா போராட்டம் வெற்றி.. பள்ளித் தலைமை ஆசிரியர் இடமாற்றம் ரத்து | Jharkhand</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-gen-alpha-student-protest-headmaster-transfer-order-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-gen-alpha-student-protest-headmaster-transfer-order-cancelled#comments</comments><guid isPermaLink="false">bd08f826-3f1e-4ce9-94e3-7272ef18aa88</guid><pubDate>Fri, 14 Aug 2026 03:13:58 +0000</pubDate><atom:updated>2026-08-14T03:13:58.437Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜார்க்கண்ட்,ஜென் இசட் போராட்டம்,ஜென் ஆல்பா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/4l90o45c/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜென் ஆல்பா போராட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜென் ஆல்பா போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/4l90o45c/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2010 முதல் 2024 இடையில் பிறந்தவர்கள் ஜென் ஆல்பா தலைமுறை ஆவர். தற்போது ஜென் இசட் போராட்டங்கள் கவனம் பெற்று வரும் வேளையில் ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற ஜென் ஆல்பா போராட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா  மாவட்டம் கண்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான மலய் சிங் பணிக்கு வந்த இரண்டே மாதங்களில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.</p><p>சாதி பாகுபாடு மற்றும் உள்ளூர் அரசியல் காரணமாகவே தங்களின் தலைமை ஆசிரியர் மாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டிய ஜென் ஆல்பா பள்ளி மாணவர்கள் அவரை மீண்டும் அதே பள்ளியில் நியமிக்கக் கோரி 3 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p> <h2>வன்முறை</h2><p>நேற்றைய தினம், கொளுத்தும் வெயிலில் மாணவர்கள் வீதியில் இறங்கி சாலை மறியல் செய்ததோடு, இரண்டு பேருந்துகளில் சென்று துணை ஆணையர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.</p><p>உள்ளூர் தலைவர் பிங்கு பாண்டே என்பவர் மாணவர்களை அமைதிப்படுத்த முயன்றபோது வாக்குவாதம் முற்றி அவர் ஒரு மாணவனை அறைந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அவரது வாகனத்தை அடித்து நொறுக்கினர். அவர் பாதுகாப்பு கோரி கண்டி காவல் நிலையத்திற்கு தப்பியோடிய நிலையில், காவல் நிலையத்தின் மீதும் மாணவர்கள் கல்வீச்சு நடத்தினர். இதில் ஒரு காவலர் காயமடைந்தார்.</p> <h2>வெற்றி </h2><p>மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, கண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராகேஷ் சகாய் பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p>மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தலைமை ஆசிரியர் மலய் சிங்கின் இடமாற்ற உத்தரவை அரசு ரத்து செய்து, அவரை மீண்டும் அதே பள்ளியில் பணி அமர்த்தியது.</p><p>ஏற்கனவே ஜார்க்கண்ட் மாநில தேர்வாணைய தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்து தலைநகர் ராஞ்சியில் ஜென் இசட் <a href="https://www.maalaimalar.com/news/national/jharkhand-protest-cases-registered-against-600-people-including-500-unidentified-students">மாணவர்கள் போராட்டம்</a> நடத்தி வருகிறது.</p><p>கடந்த ஆகஸ்ட் 8 அன்று சட்டமன்றம் நோக்கி பேரணி சென்ற அவர்கள் மீது காவல்துறை மற்றும் மத்திய படை தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்கு உள்ளாகியது. </p>]]></content:encoded></item></channel></rss>