<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 18 Sep 2026 20:11:22 +0000</lastBuildDate><item><title>திரிணாமுல் காங்கிரஸ் பெயர் - சின்னம் முடக்கம்.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மம்தா </title><link>https://www.maalaimalar.com/news/national/trinamool-congress-name-and-symbol-frozen-mamata-moves-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/trinamool-congress-name-and-symbol-frozen-mamata-moves-supreme-court#comments</comments><guid isPermaLink="false">5ee7450d-592b-43bb-a99d-a8791c1c6bea</guid><pubDate>Fri, 18 Sep 2026 19:52:40 +0000</pubDate><atom:updated>2026-09-18T19:52:40.310Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,Supreme Court,trinamool congress,உச்சநீதிமன்றம்,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/yf9y4fa7/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மம்தா ]]></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/yf9y4fa7/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கியதை எதிர்த்து, கட்சியின் நிறுவனர் மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p> <p>மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D"> திரிணாமுல் காங்கிரஸ் </a>படுதோல்வியை சந்தித்தது. </p><p>அதன்பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. சுமார் 60 எம்.எல்.ஏ.-க்கள் (மூன்றில் இரண்டு பங்கு) தனியாக செயல்பட முடிவு செய்தனர். இவர்கள் அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்பில் செயல்பட தொடங்கினர்.</p><p>அதேவேளையில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என மம்தா பானர்ஜி தரப்பு கூறி வந்தது. இதற்கிடையே, திரிணாமுல் கட்சி எம்.பி.க்கள் 20 பேர், வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்.</p> <h2>இடைத்தேர்தல்</h2><p>மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தின் முறையிடப்பட்டனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் (இரட்டைப் பூக்கள்) சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.</p>  <h2>மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்</h2><p>இரண்டு தரப்பிலும் பரிந்துரை செய்த கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மம்தா பிரிவுக்கு மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அத்துடன் கால்பந்து வீரர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.</p><h2>ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்</h2><p>அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்புக்கு ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த தரப்புக்கு அஞ்சல் உறை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>மேற்கு வங்கம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட இந்த கட்சியின் பெயரில் இருதரப்பினரும் செயல்படுவார்கள்.</p><p>மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால், கட்சிக்கு உரிமை கொண்டாடும் தரப்பிற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.</p> <h2>உச்சநீதிமன்றம் சென்ற மம்தா</h2><p>இதனிடையே தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளார்.</p><p>தேர்தல் ஆணையத்தின் இந்த இடைக்கால உத்தரவு சட்டவிரோதமானது என்றும், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தும் உரிமையை பறிக்க முடியாது என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவியை மருத்துவமனையில் வைத்தே சரமாரியாக தாக்கிய கணவன்</title><link>https://www.maalaimalar.com/news/national/husband-brutally-assaults-wife-right-at-the-hospital-after-she-gives-birth-to-a-baby-girl</link><comments>https://www.maalaimalar.com/news/national/husband-brutally-assaults-wife-right-at-the-hospital-after-she-gives-birth-to-a-baby-girl#comments</comments><guid isPermaLink="false">a3ba24d1-e8fc-4bd3-ac9a-8741f7713539</guid><pubDate>Fri, 18 Sep 2026 18:47:33 +0000</pubDate><atom:updated>2026-09-18T18:47:33.313Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவன்-மனைவி,husband and wife,பிரசவம்,childbirth,பெண் குழந்தை,Girl child</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/tfcm38fx/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தாக்குதலுக்கு உள்ளான மனைவி ]]></media:title><media:description type="html"><![CDATA[ தாக்குதலுக்கு உள்ளான மனைவி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/tfcm38fx/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தில் பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவியை மருத்துவமனையில் வைத்தே கணவன் சரமாரியாக தாக்கிய கொடூரம் அரங்கேறியுள்ளது.</p> <p>மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கமலா ராஜா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவப் பிரிவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. </p><h2>பிரசவம் </h2><p>35 வயதான அந்தப் பெண் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் ஒரு பெண் - ஒரு ஆண் குழந்தை என <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">இரட்டைக் குழந்தைகளை</a> பெற்றெடுத்தார். </p><p>குழந்தை பிறப்புக்கு பின் மருத்துவமனை மகப்பேறு வார்டுக்குள் வந்த 45 வயது கணவன், </p><p>ஆண் குழந்தையை பெற்ற அதே வேளை  ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததால் மனைவி மீது ஆத்திரம் அடைந்துள்ளார். </p><p>தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அவரைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் அப்பெண்ணின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன.</p> <h2>விசாரணை</h2><p>அப்பெண்ணின் தந்தை, காவல்துறையிடம் அளித்த புகாரில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தியுள்ளார்.</p><p>கூர்மையான ஆயுதத்தால் அப்பெண் தாக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>ஆனால் அவர் தாக்குதலின்போது தனது மனைவியின் வாயை இறுக்கமாக மூடியதாகவும், அப்போது அவரின் மோதிரம் மற்றும் நகங்களால் அப்பெண்ணின் முகத்தைக் கீறியதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இச்சம்பவம் குறித்த விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முகத்தில் கேக் பூசிய  நண்பனை வெட்டிக் கொன்ற இளைஞன் </title><link>https://www.maalaimalar.com/news/national/enraged-after-having-cake-smeared-on-his-face-during-a-birthday-celebration-a-young-man-hacked-his-friend-to-death</link><comments>https://www.maalaimalar.com/news/national/enraged-after-having-cake-smeared-on-his-face-during-a-birthday-celebration-a-young-man-hacked-his-friend-to-death#comments</comments><guid isPermaLink="false">8c750727-d84b-4417-984d-58d6d2b42294</guid><pubDate>Fri, 18 Sep 2026 18:14:41 +0000</pubDate><atom:updated>2026-09-18T18:14:41.864Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜம்மு காஷ்மீர்,Murder,கொலை,BirthDay Celebration,பிறந்தநாள் கொண்டாட்டம்,Jammu &amp; Kashmir</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/o8cem7du/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கொலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கொலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/o8cem7du/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முகத்தில் கேக் பூசப்பட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், நண்பனை இளைஞர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.</p> <p>ஜம்மு காஷ்மீர் ஜானுபூரில் அமைந்துள்ள லோயர் ரூப்நகர் பகுதியில் நேற்று இரவு சாலையோரத்தில் நீரஜ் என்ற 'அன்ஷு' தனது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. </p><p>நீரஜின் சகோதரர் ரிஷு, நண்பர்கள் பவன் நாயர் என்கிற சமீர்,  ஜான் சோத்ரா, கௌரவ் சிங் மற்றும் சுகந்த் பட்டி உள்ளிட்ட நண்பர்கள் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். </p> <p>கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நீரஜ் கேக் வெட்டிக்கொண்டிருந்தபோது, ​​பவன் நாயர் நீரஜின் முகத்தில் கேக்கை பூசினார். இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.</p><p>மற்ற நண்பர்கள் தலையிட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முயன்றபோதிலும், கோபமடைந்த நீரஜ் கத்தியை எடுத்து பவன் நாயரின் கழுத்தை வெட்டினார்.</p> <p>படுகாயமடைந்த பவன், உடனடியாக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.</p><p>ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக நீரஜ் மற்றும் அவரது சகோதரர் ரிஷுவை ஜெயின்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">குற்றத்தில் </a>பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>நந்திகிராம் இடைத்தேர்தல்: மம்தா ஆதரவு தெரிவித்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் அதிரடி கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-nandigram-pick-arrested-after-mamata-banerjee-announces-support</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-nandigram-pick-arrested-after-mamata-banerjee-announces-support#comments</comments><guid isPermaLink="false">87fb0aaf-2fc5-4ad9-a968-5824a0d3bd81</guid><pubDate>Fri, 18 Sep 2026 16:29:50 +0000</pubDate><atom:updated>2026-09-18T16:29:50.941Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,மேற்கு வங்கம்,west bengal,Nandigram,நந்திகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/qgevzmyc/CongressParty001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் வேட்பாளர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/qgevzmyc/CongressParty001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கம் மாநிலம் நந்திகிராம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்துள்ளது. மம்தா பானர்ஜி, மம்தா அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற பெயரில் கட்சியை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.</p><h2>2007-ம் ஆண்டு கொலை வழக்கில் கைது</h2><p>இதற்கிடையே நந்திகிராம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். இவர் தெரிவித்த சில மணி நேரங்களில் நந்திகிராம் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானை போலீசார் கைது செய்துள்ளது. அவர் மீதான பழைய கொலை வழக்கில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளார்.</p><p>2007-ம் ஆண்டு நந்திகிராம் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.</p><p>இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் கூறுகையில் "பாஜக-வின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் 'வென்டிலேட்டர்' உதவியுடன் உயிர்வாழும் நிலையில் உள்ளது. எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியாவை (Opposition-Mukt Bharat) உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நமது மகத்தான அரசியலமைப்பு சார்ந்த ஜனநாயகத்தை ஒரு கேலிக்கூத்தான நாடாக (Banana Republic) மாற்றும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது.</p><h2>ஜனநாயகத்தைக் கைப்பற்ற பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்- காங்கிரஸ்</h2><p>மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்த சில நிமிடங்களிலேயே, 2007-ம் ஆண்டைச் சேர்ந்த, நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த ஒரு வழக்கை கையில் எடுத்து எங்கள் வேட்பாளரை கைது செய்தது, ஜனநாயகத்தைக் கைப்பற்ற பா.ஜ.க. எந்த எல்லைக்கும் செல்லும் என்பதையே காட்டுகிறது. அடக்குமுறை மிக்க ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடி அவர்களை வெளியேற்றிய கட்சி எங்களுடையது. எனவே, அவர்களைப் போலச் செயல்படும் இவர்களின் இத்தகைய மலிவான மிரட்டல் உத்திகள் எங்களை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது. அதிகாரத்தின் இந்த தவறான பயன்பாட்டை எதிர்த்து நாங்கள் உறுதியாக நிற்போம். அத்துடன் பாஜகவின் தோல்வியையும் உறுதி செய்வோம்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>3 கோடி மதிப்பிலான நகைகளை திருடி 5 அடி ஆழத்தில் புதைத்த கொள்ளையர்கள் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/terror-in-delhi-rs-3-crore-jewellery-robbery-3-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/terror-in-delhi-rs-3-crore-jewellery-robbery-3-arrested#comments</comments><guid isPermaLink="false">3a3dac5d-c104-472c-8a8f-8e35c8476e40</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:16:45 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:16:45.610Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொள்ளை,நகை கொள்ளை,delhi,Burglary,Burglary by breaking the lock,டெல்லி</media:keywords><media:content height="225" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/lvv4pax5/sah-l-is-a-vegetable-vendor-from-supaul-kamat-c-is-a-house-servant-from-supaul.avif" width="400"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ delhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/lvv4pax5/sah-l-is-a-vegetable-vendor-from-supaul-kamat-c-is-a-house-servant-from-supaul.avif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2>கொள்ளை சம்பவம் </h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/chinese-president-collapsed-after-suffering-a-stroke-upon-arriving-in-delhi-for-the-brics-summit-news-spreading-like-wildfire">டெல்லி</a> மால் ரோடு பகுதியில் உள்ள ரிவியரா அடுக்குமாடி குடியிருப்பில் உரிமையாளர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருந்த நிலையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.</p><h2>அதிர்ச்சி </h2><p>வீட்டின் உரிமையாளர்  தனது பயணத்தை முடித்துக்கொண்டு வீட்டிற்கு சென்றபோது வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததையும், பீரோக்கள் திறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ.4.3 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.</p><h2>காவல் விசாரணை</h2><p>இந்த கொள்ளை சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வடக்கு மாவட்ட குற்றப்பிரிவு குழுவினர் வீட்டை ஆய்வு செய்தனர். </p><p>வீட்டில் புதிதாக பணியில் சேர்ந்திருந்த 2 வீட்டு வேலைக்காரர்களும் காணாமல் போயிருந்ததுடன், அவர்களின் செல்போன்களும் துண்டிக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.</p><h2>கைது</h2><p>வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள், சுமார் 5 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொள்ளை தொடர்பாக வீட்டு வேலைக்காரர் உள்பட 3 பேரை<a href="https://www.maalaimalar.com/news/puducherry/trafic-cops-fined-puducherry-mla-for-violation"> காவல் துறை</a> கைது செய்துள்ளது.</p><p>கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் 2 பைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. அவர்கள் ஆட்டோ மூலம் ஐ.எஸ்.பி.டி. சென்று, அங்கிருந்து வேறு வாகனத்தில் நியூடெல்லி ரெயில் நிலையத்துக்கு சென்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>கண்காணிப்பு மூலம் பீகார் மாநிலம் சுபால் பகுதியைச் சேர்ந்த அனில் காமத் (22), ஜார்க்கண்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை டெல்லி காவல்துறை  கைது செய்துள்ளது.</p> <h2>நகைகள் மீட்பு </h2><p>இதனிடையே  சந்தேக நபரான அனில் காமத்தின் மாமனார் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது  வீட்டின் மற்றொரு அறையின் தரைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான இடம் இருப்பதை போலீசார் கண்டனர். அந்த இடத்தில் சுமார் 5 அடி ஆழம் தோண்டியபோது, பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொள்ளையடிக்கப்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sivakasi-near-home-robbery-police-inquiry-2">நகைகள் </a>மீட்கப்பட்டன.</p><h2>ஓட்டல் தொடங்க திட்டம்</h2><p>இந்த கொள்ளையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அனில் காமத், கொள்ளையடித்த பணத்தை பயன்படுத்தி நேபாளத்துக்கு தப்பிச் சென்று அங்கு ஓட்டல் அல்லது கஃபே தொடங்க திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><p>அனில் காமத் செப்டம்பர் 16-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரது மாமனார் தேவ் சந்திர சா (49) என்பவரும் கொள்ளை பொருட்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சிவசேனா, என்சிபி வரிசையில் திரிணாமுல்: கட்சி திருட்டு என பாஜகவை சாடிய ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/first-shiv-sena-ncp-now-tmc-rahul-gandhi-sees-ec-bjp-pattern-in-theft-of-parties</link><comments>https://www.maalaimalar.com/news/national/first-shiv-sena-ncp-now-tmc-rahul-gandhi-sees-ec-bjp-pattern-in-theft-of-parties#comments</comments><guid isPermaLink="false">6d4f0dde-6a09-41fe-bc94-67762d4b6c64</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:07:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:07:00.138Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,BJP,பாஜக,தேர்தல் ஆணையம்,Election commision,TMC,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/d9hapwyd/rahul.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/d9hapwyd/rahul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலில் சிவசேனா, பிறகு தேசியவாத காங்கிரஸ், இப்போது திரிணாமுல் காங்கிரஸ் என பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தைச் சாடியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.</strong></em></p><p>மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தின் முறையிடப்பட்டனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் (இரட்டைப் பூக்கள்) சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.</p><p>தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ராகுல் காந்தி</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>முதலில் சிவசேனா, பிறகு தேசியவாத காங்கிரஸ், இப்போது திரிணாமுல் காங்கிரஸ்.</p><p>ஒவ்வொரு முறையும் அதே பாணிதான். ஒரு கட்சியைப் பிளவுபடுத்த பா.ஜ.க.வும் தேர்தல் ஆணையமும் கைகோர்க்கின்றன. பின்னர், அக்கட்சியின் தேர்தல் சின்னம் பறிக்கப்படுகிறது.</p><p>ஒரு முழு கட்சியையே அபகரிக்க முடியும் என்றால், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குகளும் திருடப்படக்கூடும் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.</p><p>வாக்குத் திருட்டு, அரசுத் திருட்டு. இப்போது கட்சித் திருட்டு. இவை அனைத்தும் நமது ஜனநாயக சரிவின் அடையாளங்களாக மாறிவிட்டன.</p><p>மக்களின் தீர்ப்பை பாதுகாப்பதே தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு சார்ந்த கடமை. ஆனால் அதற்கு மாறாக, மக்களின் தீர்ப்பை தலைகீழாக மாற்றும் சக்திகளுக்கே அது துணை நிற்கிறது.</p><p>இந்தப் போராட்டம் மம்தா பானர்ஜியுடையது மட்டுமல்ல. சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை விரும்பும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு வாக்காளருக்குமான போராட்டம் இது என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மம்தா பானர்ஜி தரப்புக்கு புதிய கட்சி பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் அங்கீகாரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/football-vs-envelope-mamata-banerjee-party-rebels-get-new-name-symbol</link><comments>https://www.maalaimalar.com/news/national/football-vs-envelope-mamata-banerjee-party-rebels-get-new-name-symbol#comments</comments><guid isPermaLink="false">7fadf310-195c-4dd0-801d-b373d01a759a</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:46:13 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:46:13.074Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,Trinamool Congress Party,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/0i0pgvku/Mamata0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா பானர்ஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/0i0pgvku/Mamata0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் <a href="https://www.maalaimalar.com/news/national/ec-bars-rival-tmc-factions-from-using-party-name-symbol-in-west-bengal-bypolls">திரிணாமுல் காங்கிரஸ்</a> படுதோல்வியை சந்தித்தது. அதன்பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. சுமார் 60 எம்.எல்.ஏ.-க்கள் (மூன்றில் இரண்டு பங்கு) தனியாக செயல்பட முடிவு செய்தனர். இவர்கள் அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்பில் செயல்பட தொடங்கினர்.</p><p>அதேவேளையில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என மம்தா பானர்ஜி தரப்பு கூறி வந்தது. இதற்கிடையே, திரிணாமுல் கட்சி எம்.பி.க்கள் 20 பேர், வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தின் முறையிடப்பட்டனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் (இரட்டைப் பூக்கள்) சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.</p><h2>மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்</h2><p>இந்த நிலையில் இரண்டு தரப்பிலும் பரிந்துரை செய்த கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மம்தா பிரிவுக்கு மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அத்துடன் கால்பந்து வீரர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.</p><h2>ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்</h2><p>அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்புக்கு ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த தரப்புக்கு அஞ்சல் உறை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>மேற்கு வங்கம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட இந்த கட்சியின் பெயரில் இருதரப்பினரும் செயல்படுவார்கள்.</p><p>மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால், கட்சிக்கு உரிமை கொண்டாடும் தரப்பிற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாதிக்க எதுவும் தடையில்லை: 45 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மாற்றுத்திறனாளி தாய்</title><link>https://www.maalaimalar.com/news/national/at-45-speech-and-hearing-impaired-jammu-woman-clears-class-10-exam-with-82-percent</link><comments>https://www.maalaimalar.com/news/national/at-45-speech-and-hearing-impaired-jammu-woman-clears-class-10-exam-with-82-percent#comments</comments><guid isPermaLink="false">c17c3d74-db8e-4879-94e5-3ba190f51d67</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:53:41 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:53:41.228Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Class 10,பத்தாம் வகுப்பு,jammu women,renu hans,naman kaul,ஜம்மு பெண்மணி,ரேணு ஹான்ஸ்,நமன் கவுல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rl2lij02/naman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Renu, Naman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rl2lij02/naman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சாதனைக்கு வயதோ, உடலோ எதுவும் தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் ஜம்முவைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி பெண்.</strong></em></p><p>ஜம்முவைச் சேர்ந்த 45 வயதுடைய் பேசும் மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி பெண்மணி ஒருவர், தனது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 82 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.</p><p>ஜம்முவின் ரூப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணு ஹான்ஸ் (45). பேசும் மற்றும் கேட்கும் திறனற்றவர்.</p><p>கடந்த 2002-ம் ஆண்டு தனது 10-ம் வகுப்பு தேர்வை எழுதினார். எதிர்பாரா விதமாக கணிதத்தில் தோல்வி அடைந்தார். அதன்பின், திருமணம், குடும்பம், குழந்தைகள் என அவரது கல்விப் பயணம் முடங்கியது.</p><p>ஆனாலும், எப்படியாவது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் ஆழமாக இருந்தது.</p><h2>தாய்க்கு ஆசிரியரான மகன்</h2><p>ரேணுவின் கனவை நனவாக்க அவரது 12-ம் வகுப்பு படிக்கும் மகன் நமன் கவுல் முன்வந்தார். சைகை மொழியை நன்கறிந்த நமன், தனது தாய்க்கு தானே ஆசிரியராக மாறினார்.</p><p>மாலையில் பள்ளி முடிந்து வந்ததும், நமன் தனது தாய்க்கு பாடங்களை சைகை மொழி மூலம் பொறுமையுடன் கற்றுக் கொடுத்தார். </p><p>கேட்கும் திறனற்ற ஒருவருக்கு கடினமான அறிவியல் மற்றும் கணிதக் கோட்பாடுகளைப் புரிய வைப்பது கடும் சவாலாக இருந்தது.</p><h2>82 சதவீதத்துடன் தேர்ச்சி</h2><p>ஜம்மு காஷ்மீர் திறந்தநிலைப் பள்ளி மூலம் கடந்த ஏப்ரல் மாதம் ரேணு ஹான்ஸ் தேர்வு எழுதினார். தேர்வு மையத்துக்குச் சென்ற ரேணுவுக்கு கொஞ்சம் டென்ஷனாகவே இருந்திருக்கிறது.</p><p>தன்னைவிட மிகவும் இளைய மாணவர்களும், வயதானவர்களும் அங்கு இருந்ததைப் பார்த்து முதலில் தயங்கினார். அவரது மகன் கொடுத்த ஊக்கத்தினால் தேர்வு எழுதினார்.</p><p>கடந்த 10-ம் தேதி அன்று வெளியான தேர்வு முடிவுகளில் அவர் 500-க்கு 410 மதிப்பெண்கள் (82 சதவீதம்) பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்.</p><h2>கனவு நனவானது</h2><p>இதுதொடர்பாக ரேணு ஹான்ஸ் கூறுகையில், இன்று என் கனவு நனவாகி உள்ளது. என் மகனால்தான் இவை அனைத்தும் சாத்தியமானது என பெருமிதத்துடன் தெரிவித்தார்.</p><p>மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கேற்ப முறையான வழிகாட்டுதலும், தளராத நம்பிக்கையும் இருந்தால் மாற்றுத் திறனாளிகளாலும் எந்த சாதனையையும் படைக்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்த ரேணு ஹான்சுக்கு நாமும் ஒரு வாழ்த்து சொல்லலாமே.</p>]]></content:encoded></item><item><title>அழகு நிலையத்தில் போதைப்பொருள் விற்பனை - பேராசிரியை உள்பட 4 பேர் கைது
</title><link>https://www.maalaimalar.com/news/national/drug-sales-beauty-parlour-4-arrested-near-keralam</link><comments>https://www.maalaimalar.com/news/national/drug-sales-beauty-parlour-4-arrested-near-keralam#comments</comments><guid isPermaLink="false">b20d43c2-c29a-4584-a839-4304ba157deb</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:27:43 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:27:43.269Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>beauty parlour,போதைப்பொருள் பறிமுதல்,drug seized,அழகு நிலையம்,கேரளம்,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rxjtly8d/arrested1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rxjtly8d/arrested1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலத்தில் அழகு நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர். </p> <p>கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் செயல்பட்டு வந்த ஒரு அழகு நிலையத்தில் போதை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குறிப்பிட்ட அழகு நிலையத்தை நிலம்பூர் போலீசாரும், போதைத் தடுப்பு போலீசாரும் ரகசியமாக கண்காணித்தனர்.</p><p>இதில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவது உறுதியாகவே அதிரடியாக அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கியிருந்த எம்.டி.எம்.ஏ. போதைப் பொருளை போலீசார் கைப்பற்றினர். அதனை விற்றதாக அழகு நிலைய உரிமையாளர் சுப்பிரமணியன் (வயது 38), சுஹைல் பெரிங்கோடன் (31), பத்திரியலைச் சேர்ந்த டி.என். ரீனா மற்றும் கல்லெம்படத்தை சேர்ந்த விவேக் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.</p>  <p>தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சுப்ரமணியன் தான் சுஹைல், விவேக் மற்றும் ரீனா ஆகியோருக்கு தொடர்ந்து எம்.டி.எம்.ஏ.வை வழங்கியிருப்பது தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்ட சுஹைல் பெரிங்கோடன், கல்லூரி பேராசிரியர் என்பதும், இவர் மாணவர்களுக்கு போதைப் பொருளை விற்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது. அவர், கடந்த 3 ஆண்டுகளாக இதனை செயல்படுத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மகிஷாசுரனை வதம் செய்த சாமுண்டேஸ்வரி தேவி: மைசூர் தசரா திருவிழா வரலாறு</title><link>https://www.maalaimalar.com/news/national/goddess-chamundeshwari-slays-mahishasura-mysore-dasara-history</link><comments>https://www.maalaimalar.com/news/national/goddess-chamundeshwari-slays-mahishasura-mysore-dasara-history#comments</comments><guid isPermaLink="false">c4392bee-0b16-4ea9-a419-1a41d6db039f</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:25:12 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:25:12.672Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,தசரா திருவிழா,மைசூர்,Mysore,Dasara</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/wqsscxxy/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mysuru Dasara]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/wqsscxxy/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் மகிஷாசுரன் என்ற எருமை அரக்கனை சாமுண்டேஸ்வரி தேவி மலையில் வைத்து கொன்ற நிகழ்வை அடுத்து, ராஜா உடையார் என்பவர் தசரா பண்டிகையை பாரம்பரியமாக கொண்டாட தொடங்கினார்.</p><h3><strong>விஜயநகரப் பேரரசு</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகாவில்</a> தசரா விழாவானது தீமையை நன்மையால் வென்ற நிகழ்வை கொண்டாடும் ஒரு அரச திருவிழாவாக பார்க்கப்படுகிறது. இந்த விழா அம்மாநிலத்தில் ‘நாதஹப்பா’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.</p><p>விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சிக்கு பிறகு 1610 ஆம் ஆண்டு ராஜா உடையார் தசரா பண்டிகையை பாரம்பரியமாக நிறுவினார். </p><h3><strong>சாமுண்டேஸ்வரி தேவி</strong></h3><p>இந்த விழாவானது முதலில் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கொண்டாடப்பட்டது. இதையடுத்து மைசூர் தலைநகராக அறிவிக்கப்பட்டபோது, தசரா மைசூரில் கொண்டாடப்பட ஆரம்பித்தது.</p><p>மகிஷாசுரன் என்ற எருமை அரக்கனை சாமுண்டேஸ்வரி தேவி மலையில் வைத்து கொன்ற நிகழ்வை அடுத்து, ‘மைசூரு’ என்ற நகரின் பெயர் உருவானது.</p><p>இதையடுத்து ராஜா உடையார், சாமுண்டேஸ்வரியை குலதெய்வமாக ஆக்கி, தசராவை மைசூரில் கொண்டாட தொடங்கினார்.</p><h3><strong>மைசூர் தசரா</strong></h3><p>தசரா என்பது விஜயதசமியன்று முடிவடையும் ஒரு 10 நாள் திருவிழாவாகும். இந்த நாள் அதற்கு முந்தைய ஒன்பது நாட்களின் வெற்றியை குறிப்பதாக அமைந்துள்ளது.</p><p>நவராத்திரியின் முந்தைய ஒன்பது நாட்களுக்கான கொண்டாட்டங்கள், ஆறு நாட்களுக்குப் பிறகே தொடங்குகின்றன. ஆறாம் நாள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.</p><p>இதையடுத்து எட்டாம் நாள் துர்கா தேவிக்கும், ஒன்பதாம் நாள் செல்வத்தின் தேவியான லட்சுமிக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. பத்தாம் நாளில், மைசூர் அரண்மனையிலிருந்து தொடங்கி மணிமண்டபத்தில் முடிவடையும் ஒரு பிரம்மாண்டமான ஊர்வலம் நடைபெறுகிறது.</p><h3><strong>ஜம்போ சவாரி</strong></h3><p>பத்தாம் நாளான விஜயதசமி அன்று, 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீதுள்ள தங்க தொட்டிலில் சாமுண்டேஸ்வரி தேவியின் சிலை வைக்கப்பட்டு, மைசூர் அரண்மனையில் இருந்து மணிமண்டபம் வரை ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.</p><p>மேலும் மகாநவமி அன்று மன்னனின் வாள், யானைகள் மற்றும் குதிரைகளுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வழிபடப்படுகிறது.</p><p>இதைத்தொடர்ந்து அடுத்த நாள் மாலை, அந்த சிலை அம்பா விலாஸ் அரண்மனையில் இருந்து புறப்பட்டு, ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மணிமண்டபத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.</p><p>அங்கு பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு சமிக்குள் மறைத்து வைத்து, இந்த நாளில் அவற்றை மீண்டும் எடுத்ததை நினைவுகூறும் வகையில் கெளரவிக்கப்படுகிறது.</p><p>இந்த தசரா திருவிழாவில் 12 தசரா யானைகள், மைசூர் அரண்மனையிலிருந்து மண்டபம் வரையிலான ஊர்வலப் பாதையில் தினமும் இருமுறை அணிவகுத்துச் செல்கின்றன.</p><p>பத்து நாட்கள் இரவு நடைபெறும் ஜம்போ சவாரி மற்றும் குதிரைப்படை வீரர்கள் தீப்பந்தங்களை ஊர்வலமாக எடுத்து செல்லும் பஞ்சின கவசத்துடன் தசரா திருவிழா முடிவடைகிறது.</p><h3><strong>2026 தசரா பண்டிகை</strong></h3><p>இந்த நிலையில் இந்த ஆண்டு கொண்டாடப்படும் தசரா திருவிழாவானது, அக்டோபர் மாதம் 11ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21 அன்று வரை நடைபெறவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மருந்து கடைகளில் கண்காணிப்பு கேமரா- மத்திய அமைச்சகம் பரிந்துரை</title><link>https://www.maalaimalar.com/news/national/health-ministry-proposes-cctv-in-medical-shops-to-monitor-prescription-drug-sales</link><comments>https://www.maalaimalar.com/news/national/health-ministry-proposes-cctv-in-medical-shops-to-monitor-prescription-drug-sales#comments</comments><guid isPermaLink="false">44bab348-e49c-458f-909e-47f8c0d42c2e</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:29:53 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:29:53.370Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Union Ministry,மத்திய அமைச்சகம்,சிசிடிவி கேமரா,CCTV camera,மருந்து கடை,pharmacies</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jkvvzudv/CCTV.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CCTV Camera]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jkvvzudv/CCTV.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மருந்து விதிகள் 1945-ல் பல்வேறு திருத்தங்களை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த திருத்தங்களுடன் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.</p><p>இதில் முக்கியமாக சரியான மருந்துச்சீட்டுகள் அல்லது டாக்டரின் பரிந்துரைச்சீட்டு இன்றி அட்டவணை எச்., எச்.1 மற்றும் எக்ஸ் பட்டியலில் உள்ள மருந்துகளை பெறுவதையும், விற்பனை செய்வதையும் தடுப்பதை இந்த திருத்தம் நோக்கமாக கொண்டுள்ளது.</p><p>எனவே டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து விற்பதை கண்காணிக்க மருந்து கடைகளில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE" rel="nofollow">கண்காணிப்பு கேமரா</a> வைக்க சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது. </p><p>இந்த நடவடிக்கை பொது சுகாதாரத்துக்கான ஒழுங்குமுறை மேற்பார்வை மற்றும் பாதுகாப்புகளை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதி என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>6 மாத குழந்தையை கடித்த பிட்புல் நாய்: அரியானாவில் கொடூரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/pitbull-dog-bites-6-month-old-baby-walking-on-road</link><comments>https://www.maalaimalar.com/news/national/pitbull-dog-bites-6-month-old-baby-walking-on-road#comments</comments><guid isPermaLink="false">9699ebf0-031a-4334-a4ca-b03b1047de8e</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:05:09 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:05:09.345Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Pitbull,haryana,அரியானா,dog bite,நாய் கடி,பிட்புல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ib241ttf/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pitbull Attack in Haryana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ib241ttf/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரியானாவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணையும் அவருடன் இருந்த ஆறு மாத குழந்தையையும் பிட்புல் நாய் ஒன்று கடித்ததை அடுத்து, படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE">அரியானாவின்</a> சோனிபட் பகுதியில் ஆறு மாத குழந்தையுடன், அவரின் அத்தை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் இருந்த வீட்டு உரிமையாளரின் பிட்புல் நாய் ஒன்று அவிழ்த்து வெளியே விடப்பட்டிருந்தது. </p><p>இதையடுத்து குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை, திடீரென பார்த்து பிட்புல் நாய் ஆக்ரோஷமாக குரைக்க ஆரம்பித்தது.</p><p>இதனால் பதற்றம் அடைந்த அந்த பெண்மணி, அங்கிருந்து செல்ல முயன்றபோது, அந்த நாய் அவர்கள் மேலே தாவியது.</p><p>அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த பெண்ணை, பிட்புல் நாய் கை மற்றும் கால்களில் கடித்தது. இதையடுத்து அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், நாயை விரட்டிவிட்டு படுகாயமடைந்த பெண்ணையும், குழந்தையையும் ரோத்தக் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><h3><strong>சிறுவனின் காதை கடித்த பிட்புல் நாய்</strong></h3><p>இதேபோன்று டெல்லியின் வினய் என்கிளேவ் பகுதியில் ஆறு வயது சிறுவனின் வலது காதின் ஒரு பகுதியை பிட்புல் நாய் கடித்து குதறியது.</p><p>இதையடுத்து ஆக்ரோஷமான நாயை கட்டி வைக்காமல் அலட்சியமாக செயல்பட்ட நாய் உரிமையாளர் மீது, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Pitbull pet attacks 6 month old kid in Sonipat Haryana.<br><br>Check how relaxed is the Pitbull owner, sorry parent, while the dog was brutally attacking the kid.<br><br>Kid is severely injured, in hospital.<br><br>But Dog Lovers will still defend it. Justify it by saying dog must be hungry,… <a href="https://t.co/K2LSXf8tUK">pic.twitter.com/K2LSXf8tUK</a></p>&mdash; Ankur Singh (@AnkurSingh) <a href="https://x.com/AnkurSingh/status/2100638076108521967?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இதைத்தொடர்ந்து நாய் உரிமையாளர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.</p><h3><strong>சமூக ஆர்வலர்கள் கோரிக்கை</strong></h3><p>இந்த நிலையில் இந்தியாவில் காசியாபாத், சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்ரோஷமான நாய் இனத்தை சேர்ந்த பிட்புல் மற்றும் ராட்வீலர் உள்ளிட்ட சில நாய்கள், வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பஞ்சாப்பில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/police-officer-on-duty-shot-dead-in-punjab</link><comments>https://www.maalaimalar.com/news/national/police-officer-on-duty-shot-dead-in-punjab#comments</comments><guid isPermaLink="false">3fd40481-5ae6-4e15-94ad-3782f78b8aba</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:04:51 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:04:51.923Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுட்டுக்கொலை,gun shot,பஞ்சாப்,Punjab,போலீஸ் அதிகாரி,Police officer</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y9jwgver/punjab.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sub inspector ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y9jwgver/punjab.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பஞ்சாப்பில் பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஹர்ஜித் சிங் (வயது 50). இவர் இன்று அதிகாலை அம்ரித்சரின் கேட் ஹகிமா பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தார்.</p><h2>சுட்டுக்கொலை</h2><p>அப்போது, துப்பாக்கியுடன் பைக்கில் வந்த இருவர் போலீஸ் அதிகாரி ஹர்ஜித் சிங் மீது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81" rel="nofollow">துப்பாக்கி சூடு</a> நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.</p><p>இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஹர்ஜித் சிங்கை மீட்ட சக போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். </p><p>அங்கு ஹர்ஜித் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றவர்களை தேடி வருகின்றனர். மேலும், இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>அதேவேளை, சுட்டுக்கொல்லப்பட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங்கின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய விமானப்படைக்கு புதிய LCA Mk-1A ரக போர் விமானம் - ஆண்டு இறுதிக்குள் வழங்க ஹிந்துஸ்தான் முடிவு </title><link>https://www.maalaimalar.com/news/national/india-air-force-new-lca-mk-1a-fighter-by-year-end</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-air-force-new-lca-mk-1a-fighter-by-year-end#comments</comments><guid isPermaLink="false">caaf3f92-1f75-4e27-aadd-841a841a89d1</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:57:48 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:57:48.370Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போர் விமானம்,Aircraft,Indian Air Force,HAL,இந்திய விமான படை,ஹிந்துஸ்தான் நிறுவனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/7u0h3gbt/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ LCA Mk-1A Delivery]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/7u0h3gbt/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய விமானப்படைக்கு இலகுரக LCA Mk-1A ரக போர் விமானத்தை வழங்கும் என அதன் இயக்குநர் கே. ரவி தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">இந்திய விமானப்படை</a> ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் 83 போர் விமானங்களை வாங்குவதற்கு முதல் கட்டமாக ஒப்பந்தம் செய்தது. </p><h3><strong>ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பில் ஒப்பந்தம்</strong></h3><p>அதைத்தொடர்ந்து செப்டம்பர் 2025-இல் 97 போர் விமானங்களை வாங்குவதற்கு இரண்டாவது கட்டமாக ஒப்பந்தம் செய்தது. மொத்தம் 180 எம்.கே-1ஏ ரக போர் விமானங்கள் ரூபாய் 1.1 லட்சம் கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டன.</p><p>இதையடுத்து 2021-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட விமானங்களை, 2024-இல் ஹிந்துஸ்தான் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.</p><p>ஆனால் அமெரிக்க நிறுவனமான GE ஏரோஸ்பேஸ், F404-IN20 என்ஜின்களை உரிய நேரத்தில் வழங்க தவறியதால், போர் விமானங்கள் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டது.</p><p>இந்த நிலையில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இயக்குநர் கே.ரவி, போர் விமானத்தில் சரி செய்யவேண்டிய ரேடார் உள்ளிட்ட சில சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் இறுதிகட்ட ஆயுத ஒருங்கிணைப்பு சோதனை நிலுவையில் உள்ளதாகவும், சுமார் ஒரு மாதத்திற்குள் இந்த சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு, விமானம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.</p><h3><strong>ஹிந்துஸ்தான் தலைமை நிர்வாகி</strong></h3><p>இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “GE ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து 10 என்ஜின்கள் பெறப்பட்டுள்ளன; மேலும் 27 LCA Mk-1A விமானக் கட்டமைப்புகள் தயாராக உள்ளன.</p><p>எங்களால் நிச்சயமாக 10 விமானங்களை வழங்க முடியும். ஆண்டுக்கு 24 Mk-1A ரக விமானங்களை உற்பத்தி செய்யும் எங்கள் திறனைக் கருத்தில் கொண்டு, அந்தக் காலக்கெடுவுக்குள் எங்களால் அவற்றை வழங்க முடியும்.</p><p>என்ஜின்கள் கிடைப்பதை பொருட்படுத்தாமல் நாங்கள் உற்பத்தியை நிறுத்தப் போவதில்லை. என்ஜின்கள் வந்தவுடன் விமானங்களைத் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யும் வகையில், நாங்கள் விமானக் கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறோம்.</p><p>97 Mk-1A ரக விமானங்களில், உத்தம் AESA (செயல்திறன் மிக்க மின்னணு முறையில் ஸ்கேன் செய்யப்படும் வரிசை) ரேடார் மற்றும் ஸ்வயம் ரக்ஷா கவச் (மின்னணுப் போர் அமைப்பு) உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு அமைப்புகள் இருக்கும்.</p><p>இரண்டாவது ஒப்பந்தத்தை நாங்கள் செயல்படுத்தும்போது, முதல் 83 விமானங்களில் உள்ள சுமார் 40 இறக்குமதி செய்யப்பட்ட அமைப்புகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்.</p><p>விமானத்தின் உடற்பகுதிகள் இணைக்கப்பட்டு, விமானத்தின் கட்டமைப்பு தயாராக உள்ளது. 2027 மார்ச் மாதத்திற்குள் முதல் தரை சோதனையை நடத்த இலக்கு வைத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: சிறார்கள் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/16-year-old-girl-raped-and-murdered-in-delhi-minors-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/16-year-old-girl-raped-and-murdered-in-delhi-minors-arrested#comments</comments><guid isPermaLink="false">20bc33b5-9be7-4de3-a696-d968ef7ce761</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:06:57 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:06:57.437Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,சிறுமி கொலை,gang rape,delhi,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ljd3357p/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi minor girl rape-murder case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ljd3357p/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவரை மூன்று சிறார்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், சிறார்கள் உட்பட 19 வயது இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லி</a> ஸ்வரூப் நகரில் உள்ள குஷக் சாலைக்கு அருகில் உள்ள ஒரு வயல் பகுதியில் சிறுமி ஒருவரின் சடலம் கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. </p><p>இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தின் வலது கை காணாமல் போயிருந்ததையும், முகம் மற்றும் வயிறு பகுதிகள் சிதைந்து இருந்ததையும் கண்டறிந்தனர்.</p><p>இதுகுறுத்து காவல்துறையினர் அதிகாரிகள் கூறுகையில், “சிறுமி இறந்து இரண்டு நாட்களே ஆகியிருந்தபோதிலும், அந்த உடல் மிக வேகமாக சிதைந்து கொண்டிருந்தது.</p><p>இது பெரும்பாலும் இயற்கை சீற்றங்களுக்கு உள்ளானதால் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. சிறுமியின் முகத்தை அடையாளம் காண முடியவில்லை.</p><p>மருத்துவ அறிக்கை பாலியல் வன்புணர்வை உறுதி செய்ததுடன், அவரது உடலில் எட்டு இடங்களில் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>மேலும் உயிரிழந்த சிறுமி பலமுறை கத்தியால் குத்தப்பட்டிருந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.</p><p>இதையடுத்து கூடுதல் துணை காவல் ஆணையர் லோகேஸ்வரன் மற்றும் உதவி காவல் ஆணையர் ரவீந்தர் ஆகியோர் தலைமையிலான குழுவினர், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.</p><p>அப்போது சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டபோது, லாரி ஓட்டுநர் ஒருவரை விசாரணை செய்தனர். இதையடுத்து அந்த ஓட்டுநர் தனது 17 வயது தம்பி அந்த வாகனத்தை அடிக்கடி பயன்படுத்தி வருவதாக கூறினார்.</p><p>இதையடுத்து லாரியின் சிசிடிவி காட்சிகளை காவல் ஆணையர் ஷோபித் சக்ஸேனா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அந்த லாரிக்குள் நான்கு சிறுவர்கள் இருந்தது தெரியவந்தது.</p><p>இதைத்தொடர்ந்து 19 வயதான சிவம் கணேஷ் மற்றும் 18 வயதுக்கு கீழ் இருந்த மூன்று சிறார்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, கொலைக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தெலுங்கானாவில் 3 ஏ.டி.எம் எந்திரங்கள் எரிந்து சேதம் </title><link>https://www.maalaimalar.com/news/national/three-atm-machines-damaged-by-fire-in-telangana</link><comments>https://www.maalaimalar.com/news/national/three-atm-machines-damaged-by-fire-in-telangana#comments</comments><guid isPermaLink="false">8e5cfa35-021c-44c3-ad3a-1b0bc8bb2667</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:22:34 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:22:34.525Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,ஏடிஎம்,ATM,ATM Machines,தீவிபத்து,ஏடிஎம் எந்திரங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/h8nflo63/ATM.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஏ.டி.எம் எந்திரங்கள் எரிந்து சேதம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏ.டி.எம் எந்திரங்கள் எரிந்து சேதம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/h8nflo63/ATM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>போலீசார் தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து சமூக விரோதிகள் யாராவது ஏ.டி.எம் எந்திரங்களுக்கு தீ வைத்தார்களா? அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.</strong></em></p><p>தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் ஜோகி பேட்டை காய்கறி மார்க்கெட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்று இரவு ஏ.டி.எம் எந்திரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.</p><p>தீ மளமளவென அருகில் இருந்த ஏ.டி.எம் எந்திரத்திற்கும் பரவியது. ஏ.டி.எம் எந்திரம் தீப்பிடித்து எரிந்ததால் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த பாதுகாப்பு அலாரம் அடித்தது. சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர். ஏ.டி.எம் எந்திரங்கள் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.</p><p>தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் 2 ஏ.டி.எம் எந்திரங்களும் முழுமையாக எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து வங்கி அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஏடிஎம் மையத்தில் எவ்வளவு பணம் எரிந்து போனது என சோதனை செய்து வருகின்றனர். </p><p>போலீசார் தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து சமூக விரோதிகள் யாராவது ஏ.டி.எம் எந்திரங்களுக்கு தீ வைத்தார்களா? அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருடி தின்றால் அதிர்ஷடம் என பரவும் வதந்தி- விநாயகர் பந்தல்களில் லட்டுகள் திருட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/rumors-spread-that-stealing-and-eating-the-offerings-brings-good-luck-laddoos-stolen-from-vinayagar-pandals</link><comments>https://www.maalaimalar.com/news/national/rumors-spread-that-stealing-and-eating-the-offerings-brings-good-luck-laddoos-stolen-from-vinayagar-pandals#comments</comments><guid isPermaLink="false">58a772eb-eeb0-40a3-9221-085016a66987</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:36:35 +0000</pubDate><atom:updated>2026-09-18T04:36:35.095Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Theft,விநாயகர் சதுர்த்தி,vinayagar,Vinayagar Chadurti,விநாயகர்,திருட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/frlop5g0/vinayagar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ள பந்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/frlop5g0/vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விநாயகர் பந்தல்களில் லட்டுகளை திருடி தின்றால் அதிர்ஷ்டம் எனும் மூடநம்பிக்கையை பயன்படுத்தி மர்ம கும்பல் இரவு நேரங்களில் லட்டுகள், உண்டியல் தொகை, விழா அமைப்பாளர்களின் செல்போன்களை கொள்ளையடிக்கிறது. பகல் நேரங்களில் வரிசையில் நிற்கும் பக்தர்களிடம் பிக்பாக்கெட் கும்பல்கள் நகை, பணம், செல்போன்களை பறிப்பதால், போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</strong></em></p><p>தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் விநாயகர் சதுர்த்தி விழாக் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். </p><p>அவர்கள் நள்ளிரவிற்கு பிறகு அயர்ந்து தூங்கி விடுகின்றனர். இதனை பயன்படுத்தி மர்ம கும்பல் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். மேலும் <a href="https://www.maalaimalar.com/topic/விநாயகர்-சதுர்த்தி">விநாயகர்</a> பந்தலில் அமைக்கப்பட்டுள்ள லட்டுகளை திருடி தின்றால் அதிர்ஷடம் என வதந்தி பரவி வருகிறது. </p><p>கடந்த 2 நாட்களாக நள்ளிரவு நேரங்களில் விநாயகர் பந்தல்களில் மர்ம கும்பல் திருடி வருகின்றனர். அங்குள்ள லட்டுகள், உண்டியல் பணம், விழா அமைப்பாளர்களின் செல்போன்களை திருடி சென்றுவிட்டனர்.</p><p>இது ஒரு புறம் இருக்க பகல் நேரங்களில் விநாயகர் பந்தல் இருக்கும் இடங்களில் பிக்பாக்கெட் திருட்டு சம்பவங்களும் நடந்து வருகிறது. வரிசையில் நிற்கும் பக்தர்களிடம் நகை, பணம், செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.</p><p>இதுகுறித்து தொடர்ந்து போலீசில் புகார் அளித்து வருகின்றனர். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த பொருட்கள் திருடு போனாலும் புகார் அளிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு வங்க இடைத்தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை</title><link>https://www.maalaimalar.com/news/national/ec-bars-rival-tmc-factions-from-using-party-name-symbol-in-west-bengal-bypolls</link><comments>https://www.maalaimalar.com/news/national/ec-bars-rival-tmc-factions-from-using-party-name-symbol-in-west-bengal-bypolls#comments</comments><guid isPermaLink="false">1713c9c9-dcdb-4d19-bbc3-02700e4df29c</guid><pubDate>Thu, 17 Sep 2026 23:12:17 +0000</pubDate><atom:updated>2026-09-17T23:12:17.800Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்தல் ஆணையம்,west bengal,TMC Party,திரிணாமுல் காங்கிரஸ் கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7iiofoe9/mamata-banerjee-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mamata banerjee]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7iiofoe9/mamata-banerjee-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க இடைத்தேர்தலின் போது, ​​அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் (AITC) பெயர் மற்றும் "பூக்கள் மற்றும் புல்" (Flowers and Grass) சின்னத்தை பயன்படுத்த வேண்டாம் என்று அக்கட்சியின் இரு போட்டி பிரிவுகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது; மேலும், அவர்கள் விரும்பும் பெயர்கள் மற்றும் சின்னங்களை வெள்ளிக்கிழமை காலைக்குள் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/mamata-banerjee">மம்தா பானர்ஜி</a> மற்றும் அரூப் ராய் ஆகியோரின் தலைமையிலான இரு பிரிவுகளின் தலைவர்களிடமும் கருத்துகளை கேட்டறிந்த பிறகு, நேற்று (வியாழக்கிழமை) இரவு வெளியிடப்பட்ட இடைக்கால உத்தரவில், 'தேர்தல் சின்னங்கள் ஆணை 1968'-இன் விதிகளின் கீழ் இந்த சிக்கல் குறித்து <a href="https://www.maalaimalar.com/topic/election-commission">தேர்தல் ஆணையம்</a> ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது என்று ஆணையம் கூறியது.</p><h2>முக்கிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது:</h2><p>"பதிவில் உள்ள அனைத்துத் தகவல்களையும் முறையாக பரிசீலித்த பிறகு... அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஒரு பிரிவு மற்றும் அரூப் ராய் தலைமையிலான மற்றொரு பிரிவு என இரு போட்டி பிரிவுகள் உள்ளன என்று ஆணையம் கருதுகிறது," என்று அந்த இடைக்கால உத்தரவு தெரிவித்தது.</p><p>"ஒவ்வொரு பிரிவும் இப்போது தாங்களே உண்மையான கட்சி என்று உரிமை கோருவதால், 'தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்களிப்பு) ஆணை 1968'-இன் பிரிவு 15-ன் கீழ் ஆணையம் இது குறித்து ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது," என்றும் அது கூறியது.</p><h2>கட்சி பெயரை பயன்படுத்த அனுமதி இல்லை:</h2><p>அதன்படி, இரு போட்டிப் பிரிவுகளையும் சம நிலையில் வைப்பதற்கும், அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதற்கும், மற்றும் கடந்தகால நடைமுறைகளை கருத்தில் கொண்டும், தற்போதைய இடைத்தேர்தல் நோக்கத்திற்காகவும், இச்சிக்கல் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அமலில் இருக்கும் வகையிலும் இந்த இடைக்கால உத்தரவை ஆணையம் பிறப்பித்துள்ளது.</p><p>"திரு. அரூப் ராய் (மனுதாரர்) மற்றும் செல்வி மம்தா பானர்ஜி (எதிர்மனுதாரர்) ஆகியோரின் தலைமையில் உள்ள இரு குழுக்களும் 'அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்' என்ற கட்சியின் பெயரைப் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது.</p><p>'அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்' கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 'பூக்கள் மற்றும் புல்' சின்னத்தைப் பயன்படுத்தவும் இவ்விரு குழுக்களும் அனுமதிக்கப்படமாட்டாது என்று ஆணையம் கூறியது.</p><p>இரு குழுக்களும் தங்கள் குழுக்களுக்குத் தாங்கள் விரும்பும் பெயர்களை வைத்துக்கொள்ளலாம் என்றும், தற்போதைய இடைத்தேர்தல்களுக்காக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 'ஒதுக்கப்படாத சின்னங்களின்' பட்டியலில் இருந்து தாங்கள் விரும்பும் வெவ்வேறு சின்னங்களை தேர்வு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>புதிய அரசியல் கூட்டணி? கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியுடன் தி.மு.க. எம்.பி. கனிமொழி ரகசிய ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/national/kanimozhi-holds-closed-door-meeting-with-mamata-in-kolkata</link><comments>https://www.maalaimalar.com/news/national/kanimozhi-holds-closed-door-meeting-with-mamata-in-kolkata#comments</comments><guid isPermaLink="false">a502fe64-63b9-40e6-a8d4-b8120b43fba7</guid><pubDate>Thu, 17 Sep 2026 21:41:51 +0000</pubDate><atom:updated>2026-09-17T21:41:51.259Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanimozhi,கனிமொழி,மம்தா பானர்ஜி,Mamata Banerjee</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/myuoanhn/Kanimozhi-mamata-banerjee.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi - Mamata Banerjee]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/myuoanhn/Kanimozhi-mamata-banerjee.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மூத்த தி.மு.க. தலைவரான <a href="https://www.maalaimalar.com/topic/kanimozhi">கனிமொழி</a>, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்தார். தெற்கு கொல்கத்தாவின் காளிகாட்டில் உள்ள மம்தா பானர்ஜியின் இல்லத்தில் மக்களவை உறுப்பினர் கனிமொழி அவரை சந்தித்ததாக <a href="https://www.maalaimalar.com/topic/trinamool-congress">திரிணாமுல் காங்கிரஸ்</a> (TMC) தலைவர் ஒருவர் தெரிவித்தார்.</p><p>"கனிமொழி, மம்தா பானர்ஜியின் இல்லத்தில் அவருடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது," என்று அவர் கூறினார்; ஆனால், அந்த விவாதத்தின் விவரங்களை அவர் வெளியிடவில்லை. </p><p>மும்பையில் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் டெல்லியில் என்சிபி (SP) தலைவர் சரத் பவார் ஆகியோருடன் கனிமொழி ஆலோசனை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. </p><p>தி.மு.க.-காங்கிரஸ் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் மற்றும் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் உள்ள பல்வேறு பிராந்திய கட்சிகளிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், கனிமொழியின் இந்த சந்திப்புகள் கவனத்தை ஈர்த்துள்ளன. </p><h2>மேற்கு வங்கத்தில் மோதல் போக்கு:</h2><p>தேசிய அளவில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியும் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மேற்கு வங்கத்தில் அவற்றின் உறவு மோதல் போக்குடனேயே இருந்து வருகிறது. அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தல் விவகாரத்தில் சமீபகாலமாக இவ்விரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது.</p><p>நந்திகிராம் தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மத்தியத் தலைமையிடம் முன்மொழிந்ததாக மாநில காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது; ஆனால், மம்தா பானர்ஜி தலைமையிலான அந்த கட்சி இந்த கூற்றை மறுத்தது.</p><p>தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகும் தி.மு.க.-காங்கிரஸ் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நடிகரும், அரசியல்வாதியுமான ஜோசப் விஜய்யின் த.வெ.க. தலைமையிலான ஆளும் கூட்டணியில் காங்கிரஸ் தற்போது அங்கம் வகிக்கிறது; அதேவேளையில் தி.மு.க. .எதிர்க்கட்சியாக உள்ளது.</p><h2>புதிய அரசியல் கூட்டணி:</h2><p>மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸும் அரசியல் ரீதியாக சவாலான காலகட்டத்தை கடந்து வருகிறது. அக்கட்சி மாநில சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்திலும் உட்கட்சி அதிருப்தியை எதிர்கொண்டு வருகிறது; இது மம்தா பானர்ஜிக்கு கூடுதல் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஜூன் மாதம் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கவில்லை; அதன்பிறகு காங்கிரஸ் மீது அக்கட்சி சற்று மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.</p><p>இத்தகைய சூழலில், காங்கிரஸ் தலைமையிலான கட்டமைப்புக்கு வெளியே உள்ள கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்த ஊகங்களை கனிமொழியின் சந்திப்புகள் கிளப்பியுள்ளன. இருப்பினும், புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் நோக்கில் இந்த விவாதங்கள் நடைபெற்றதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிகுறியும் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>பிறந்தநாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modis-thank-you-note-for-birthday-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modis-thank-you-note-for-birthday-wishes#comments</comments><guid isPermaLink="false">fb14398b-de2f-41b3-add8-78bcb3e2c975</guid><pubDate>Thu, 17 Sep 2026 21:00:00 +0000</pubDate><atom:updated>2026-09-17T21:00:00.755Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>birthday wish,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/05/25/2332512-pm1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/05/25/2332512-pm1.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a>, தனது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதிலும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் தமக்கு அளித்த அபரிமிதமான வாழ்த்துக்கள், அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.</p><p>சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு செய்தியில், ஒவ்வொரு அன்பான வார்த்தையும் தன்னை ஆழமாக நெகிழ செய்ததாகவும், <a href="https://www.maalaimalar.com/news/national">இந்திய</a> மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய தனக்கு புது வலிமையை அளித்ததாகவும் பிரதமர் கூறினார். </p><h2>சமூக வலைத்தள பதிவு:</h2><p>"எல்லா இடங்களில் இருந்தும் பொங்கி வழியும் வாழ்த்துகள், அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். ஒவ்வொரு அன்பான வார்த்தையும் ஆழ்ந்து போற்றப்படுகிறது, மேலும் அது நமது மக்களுக்கு சேவை செய்ய எனக்கு புது வலிமையை தருகிறது," என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.</p><p>நாள் முழுவதும் சேவா நடவடிக்கைகளில் பங்கேற்ற எண்ணற்ற குடிமக்களின் முயற்சிகளையும் பிரதமர் பாராட்டினார். தன்னலமற்ற சேவை செயல்கள் தேசத்தின் உணர்வின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக அமைந்து, சமூக கட்டமைப்பை வலுப்படுத்த பங்களிக்கின்றன என்பதையும் அவர் வலியுறுத்தினார்.</p><p>பரந்த தேசிய இலக்கை முன்னிலைப்படுத்திய பிரதமர் மோடி, வளர்ச்சி பெற்ற இந்தியாவை நோக்கிய பயணத்தில் குடிமக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். "2047-ஆம் ஆண்டுக்குள் செழிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தன்னிறைவு பெற்ற தேசத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையை மீண்டும் வலியுறுத்திய அவர், 'நாம் அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சி பெற்ற பாரதத்தை தொடர்ந்து உருவாக்குவோம்' என்று கூறினார்.</p><h2>சேவை செய்ய அழைப்பு:</h2><p>பிரதமரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், முறைசார்ந்த நிகழ்வுகளுக்கு பதிலாக பெரிய அளவிலான தன்னார்வ முன்னெடுப்புகளால் அதிகளவில் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.</p><p>மாநிலங்கள் முழுவதும், தன்னார்வலர்கள் இரத்த தான முகாம்கள், தூய்மை பணிகள், மரம் நடும் திட்டங்கள், இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தேவைப்படுவோருக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் போன்றவற்றை ஏற்பாடு செய்தனர். </p><p>சேவைக்கான பிரதமரின் அழைப்புக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக, இதுபோன்ற பல செயல்பாடுகள் உள்ளூர் அமைப்புகள், இளைஞர் குழுக்கள் மற்றும் கட்சி தொண்டர்களால் ஒருங்கிணைக்கப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>போட்டி போட்டுக்கொண்டு லட்டு சாப்பிட்ட இளைஞர்கள் - 30 நிமிடங்களில் 28 லட்டுகளை சாப்பிட்ட நபர்.. வைரல் வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/man-eats-28-laddus-in-30-minutes-in-gujarat-viral-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-eats-28-laddus-in-30-minutes-in-gujarat-viral-video#comments</comments><guid isPermaLink="false">a957da83-49a1-4284-8122-46f86769b246</guid><pubDate>Thu, 17 Sep 2026 16:02:02 +0000</pubDate><atom:updated>2026-09-17T16:02:02.105Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,gujarat,Laddu,லட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/5k2jesmi/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gujarat Ladoo Eating Contest Viral]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/5k2jesmi/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற உள்ளூர் விழா ஒன்றில் 30 நிமிடங்களில் 28 லட்டுகளை சாப்பிட்ட நபரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத்தில்</a> உள்ள தர்னேதர் என்ற கிராமத்தில் உள்ளுர் மக்களிடம் லட்டு உண்ணும் போட்டி நடைபெற்றது. </p><p>அப்போது அந்த போட்டியில் மொத்தம் 28 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். </p><p>இந்த போட்டியானது விளையாட்டு, இளைஞர் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் துறை, குஜராத் விளையாட்டு ஆணையம் மற்றும் மாவட்டப் பயிற்சி மையம் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p>ஜலாவார் பகுதியின் நாட்டுப்புறக் கலாச்சாரத்தில் வேரூன்றிய இந்த போட்டியைக் காண உள்ளூர் கிராம மக்கள் திரண்டனர்.</p><p>25 முதல் 75 வயதுக்குட்பட்ட 28 போட்டியாளர்கள், பருப்பு மற்றும் சர்க்கரை தூவப்பட்ட கடலை மாவு லட்டுகளை 30 நிமிடங்களுக்குள் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.</p><p>இதையடுத்து போட்டி தொடங்கியதும், போட்டியாளர்கள் தங்களால் இயன்ற அளவு லட்டுகளை வேக வேகமாக சாப்பிட தொடங்கினர். </p><p>இதற்கைடையில் போட்டியின் போது சராசரியாக 15 லட்டுகளை சாப்பிட்ட பிறகு, முதல் 15 நிமிடங்களுக்குள் பல போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.</p><figure><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1766460144559224%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></figure><p>இறுதிச் சுற்றில், ஐந்து போட்டியாளர்கள் முதலிடத்திற்காக போட்டியிட்டதால், போட்டி மேலும் தீவிரமடைந்தது.</p><p>போட்டியாளர்கள் 22, 24 மற்றும் 26 லட்டுகளை எட்டியபோது, பார்வையாளர்கள் பலத்த கைதட்டி ஆரவாரம் செய்தனர்.</p><p>பட்டத்தை வெல்வதற்கான தங்களது முயற்சிகளை போட்டியாளர்கள் தொடர்ந்ததால், இறுதி நிமிடங்களில் பரபரப்பு அதிகரித்தது.</p><p>இறுதியில், ராகவானி என்ற இளைஞர் 30 நிமிடங்களில் 28 லட்டுகளை சாப்பிட்டு முதலிடம் பிடித்தார், மேலும் அவருக்கு ரூ. 2,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>டாடா குழுமத் தலைவர் பதவியில் மீண்டும் சந்திரசேகரன் நியமனம்: டாடா டிரஸ்ட் கடும் எதிர்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/tata-group-chairman-chandrasekaran-reappointed-amid-trust-opposition</link><comments>https://www.maalaimalar.com/news/national/tata-group-chairman-chandrasekaran-reappointed-amid-trust-opposition#comments</comments><guid isPermaLink="false">86d75590-ff5a-4741-aed5-e1117b204867</guid><pubDate>Thu, 17 Sep 2026 15:02:46 +0000</pubDate><atom:updated>2026-09-17T15:02:46.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TATA,டாடா,டாடா குழுமம்,Tata Trusts,டாடா அறக்கட்டளை,N.Chandrasekaran,என்.சந்திரசேகரன்</media:keywords><media:content height="225" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/62hu51mm/n-chandrasekaran.avif" width="400"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ N.Chandrasekaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/62hu51mm/n-chandrasekaran.avif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>நியமனம் </h2><p>டாடா குழுமத்தின் தலைமை நிறுவனமான <a href="https://www.maalaimalar.com/news/world/leave-kenya-president-issues-stern-order-to-tata-chemicals-what-is-the-issue">டாடா</a> சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரனை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அதே பதவியில் மீண்டும் தொடர்வார் என்று  டாடா நிர்வாக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>டாடா அறக்கட்டளைகள் எதிர்ப்பு </h2><p>டாடா குழுமத் தலைவராக 2017ஆம் ஆண்டு பதவியேற்ற சந்திரசேகரனின் பதவிகாலம் வருகிற 2027 பிப்ரவரியுடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே இவரின் பதவி நீட்டிப்புக்கு முன்பே டாடா சன்ஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தனது பதவியை ராஜினாம செய்வதாக சந்திரசேகரன் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.</p><h2>மீண்டும் ஒப்புதல்</h2><p>இந்த நிலையில் டாடா சன்ஸ் குழும நிர்வாக கூட்டத்தில் சந்திரசேகரனை மேலும் 5 ஆண்டுகளுக்கு தலைவராக மறுநியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.</p> <h2>சர்ச்சை </h2><p> சந்திரசேகரனை மீண்டும் தலைவராக நியமிக்க டாடா சன்ஸ் இயக்குனர் குழு எடுத்த முடிவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த மறுநியமன தீர்மானத்துக்கு , நான்கு இயக்குநர்கள் ஆதரவாகவும் ,டாடா சன்ஸ் நிறுவனத்தின் அறக்கட்டளை சார்பிலான இயக்குனர்களில் ஒருவருமான <a href="https://www.maalaimalar.com/news/national/can-noel-tata-chairman-of-tata-trust-head-tata-sons-743016">நோயல் டாடா </a>எதிராகவும் வாக்களித்தார்.</p><h2>டாடா டிரஸ்ட்</h2><p>டாடா சன்ஸ் நிறுவனத்தின் விதிமுறைகளின்படி, தலைவரை நியமிப்பதற்கும் மறுநியமிப்பதற்கும் அறக்கட்டளைகளின் பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர்களின் பெரும்பான்மை ஆதரவு தேவை என்று டாடா அறக்கட்டளைகள் கூறியுள்ளன.</p><p>மேலும், அந்த இரு இயக்குனர்களும் கூட்டத்தில் பங்கேற்று, இருவரும் ஆதரவாக வாக்களித்தால்தான் தலைவர் நியமனம் தொடர்பான தீர்மானம் செல்லுபடியாகும் என்றும் டாடா டிர்ஸ்ட தெரிவித்துள்ளது.</p> <p>நோயல் டாடா எதிராக வாக்களித்துள்ளதால், சந்திரசேகரனின் மறுநியமன <a href="http://maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-resolution-to-safeguard-obc-rights">தீர்மானம்</a> சட்டரீதியாக செல்லாது என்று டாடா அறக்கட்டளைகள் தெரிவித்துள்ளன.</p><p>இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வழங்கிய சட்டக் கருத்தையும் நோயல் டாடா இயக்குனர் குழுவிடம் சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>மோதல் </h2><p>சந்திரசேகரன் மீண்டும் பதவியேற்பது தொடர்பான பிரச்சினை தற்போது சட்ட மற்றும் நிர்வாக ரீதியான மோதலாக மாறியுள்ளது.சந்திரசேகரனுக்கு பதிலாக புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியை தொடங்கியிருந்ததாக டாடா அறக்கட்டளைகள் தெரிவித்துள்ளன. </p><p>அந்த பட்டியலில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டி.வி.நரேந்திரன், டாடா சன்ஸ் நிறுவனத்தின் குழும தலைமை நிதி அதிகாரி சவுரப் அகர்வால், தேசிய பங்குச்சந்தை தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ் சவுகான் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன</p><p>தற்போதைய சூழலில், சந்திரசேகரனின் மறுநியமன விவகாரத்தில் டாடா சன்ஸ் இயக்குனர் குழுவுக்கும் டாடா அறக்கட்டளைகளுக்கும் இடையேயான ஒரு மோதல் சூழலலானது ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணி - மம்தாவை சந்தித்த கனிமொழி எம்.பி </title><link>https://www.maalaimalar.com/news/national/new-alliance-under-cjp-as-alternative-to-congress-bjp-kanimozhi-meets-mamata</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-alliance-under-cjp-as-alternative-to-congress-bjp-kanimozhi-meets-mamata#comments</comments><guid isPermaLink="false">8a3bfbd7-8583-48d6-932d-3311f2087925</guid><pubDate>Thu, 17 Sep 2026 14:22:08 +0000</pubDate><atom:updated>2026-09-17T14:22:08.848Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,கனிமொழி எம்பி,Mamta Banerjee,Kanimozhi MP,சிஜேபி,CJP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/nnrspi5z/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mamata-Kanimozhi meeting]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/nnrspi5z/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ் கட்சி</a> வெளியேறியது. இதையடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இது இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் எழுப்பியது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF">இந்தியா கூட்டணியிலிருந்து</a> திமுக விலகிவிட்டதாகவும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல பிராந்திய கட்சிகள் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.</p><p>இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையில், தேசிய அளவில் மூன்றாவது அரசியல் முன்னணியை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக இந்த விவாதங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.</p><p>தேசிய அளவில், தற்போது இரண்டு முக்கிய அரசியல் கூட்டணிகளாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (NDA), காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் உள்ளன.</p><h3><strong>2029 மக்களவை தேர்தல்</strong></h3><p>இந்தச் சூழ்நிலையில், 2029 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பிராந்திய கட்சிகளின் தலைமையில் ஒரு புதிய தேசிய அளவிலான கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறு குறித்து அரசியல் வட்டாரங்கள் விவாதித்து வருவதாக கூறப்படுறது.</p><p>அத்தகைய ஒரு கூட்டணியில் இடம்பெற வாய்ப்புள்ள தலைவர்களாக மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் பேச்சுவார்த்தையில் உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>மேலும் கடந்த வாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.</p><p>இந்த சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் தமிழகத்தில் காங்கிரஸின் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியா கூட்டமைப்பின் எதிர்காலம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>இந்தப் பின்னணியில்தான் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை, கனிமொழி எம்.பி சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. வரும் நாட்களில் மேலும் கலந்துரையாடல்களும் சந்திப்புகளும் நடைபெறக்கூடும் என்றும் அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>யூடியூப் சேனல் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் - லாரி டிரைவரின் நெகிழ்ச்சி பயணம்</title><link>https://www.maalaimalar.com/news/national/earning-lakhs-through-youtube-channel-truck-drivers-touching-journey</link><comments>https://www.maalaimalar.com/news/national/earning-lakhs-through-youtube-channel-truck-drivers-touching-journey#comments</comments><guid isPermaLink="false">c07253f7-9a2b-41de-bcd5-7de51d9aacd8</guid><pubDate>Thu, 17 Sep 2026 11:48:13 +0000</pubDate><atom:updated>2026-09-17T11:48:13.756Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>யூடியூப் சேனல்,YouTube Channel,lorry driver,லாரி டிரைவர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mfexmyr7/Untitled-design-63.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand truck driver Rajesh Rawani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mfexmyr7/Untitled-design-63.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்டில் சரக்கு லாரி ஓட்டுநர் ஒருவர், தனது நீண்ட தூர பயணங்களின் போது சாலைகளில் வாகனத்தை நிறுத்தி சமைப்பதை வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவிட்டதை தொடர்ந்து, தற்போது மாதத்திற்கு சுமார் 5 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் ஈட்டி வருகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">ஜார்க்கண்டின்</a> ஜம்தாரா மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் ரவானி என்பவர், தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சரக்கு லாரியை ஓட்டி வந்தார். </p><p>இதையடுத்து இவர் தனது நீண்ட தூர பயணங்களின் போது வாகனத்தை நிறுத்தி சமைத்துவிட்டு, பின்னர் அதை புகைப்படம் எடுத்து தனது குடும்பத்திற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார். </p><h3><strong>யூடியூப் சேனல்</strong></h3><p>இந்த வீடியோக்கள் சிறப்பாக இருந்ததால் ஓட்டுநர் ராஜேஷின் மகனான சாகர் ரவானி, அவற்றை தொகுத்து யூடியூப்பில் பதிவேற்ற தொடங்கி, 2021-இல் ‘ஆர் ராஜேஷ் வ்லாக்ஸ்’ என்ற சேனலையும் தொடங்கினார்.</p><p>மேலும் அவர் இந்த புகைப்படங்களை முதலில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். அப்போது பயனர்கள் அவரிடம், தாங்கள் சமைக்கும் மட்டன், சிக்கன், மீன் மற்றும் பன்னீர் போன்ற உணவுகளின் தயாரிக்கும் முறைகளை வீடியோவாக எடுத்து பதிவிடுமாறு கூறினர்.</p><h3><strong>வைரல் வீடியோ</strong></h3><p>இதையடுத்து சாலையோரங்களில் தான் சமைப்பதை முழுநீள வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ பதிவிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சுமார் 4,50,000 பார்வைகளை பெற்றது.</p><p>மேலும் உணவு சமைக்கும் வீடியோக்கள் பயனர்களிடம் அதிகளவில் பார்வையாளர்களைப் பெற்று, யூடியூப்பில் ராஜேஷ் வ்லாக்ஸ் சேனலை வளர்ச்சிப் பாதையில் செலுத்தியது.</p><h3><strong>மாத வருமானம்</strong></h3><p>இதுகுறித்து ராஜேஷ் அளித்த நேர்காணல் ஒன்றில், தனது ஓட்டுநர் பணியில் மாதத்திற்கு சுமார் 25,000 முதல் 30,000 ரூபாய் வரை சம்பாதித்ததாக கூறினார்.</p><p>ஆனால் தற்போது யூடியூப் மூலம் அவரின் மாத வருமானம் சுமார் 4 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையில் உயர்ந்து, சில சமயங்களில் ஒரே மாதத்தில் 18 லட்சம் ரூபாய் என்ற உச்சத்தையும் தொட்டது.</p><h3><strong>ஆனந்த் மஹிந்திரா பாராட்டு</strong></h3><p>ராஜேஷ் வ்லாக்ஸ் சேனலானது பிரபல இந்திய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தையும் பெற்றது. மேலும் ஓட்டுநர் ராஜேஷை, விடாமுயற்சி மற்றும் அன்றாட உத்வேகத்தின் உண்மையான சின்னம் என ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளத்தில் பாராட்டினார்.</p><p>ராஜேஷ் யூடியூப் மூலம் கிடைத்த வருமானம் மூலம், தற்போது தனது கனரக வாகனத்தை குளிரூட்டப்பட்ட அதிநவீன சொகுசு வாகனமாக மாற்றியுள்ளார்.</p><p>யூடியூப்பில் ‘ஆர் ராஜேஷ் வ்லாக்ஸ்’ சேனலை கிட்டத்தட்ட 30 லட்சம் பயனர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். மேலும் இன்ஸ்டாகிராமில் அவரது கணக்கை சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உயிரைப் பணயம் வைத்து நீரில் மூழ்கிய பெண்ணை மீட்ட  இரு பள்ளி மாணவர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/teenage-boys-rescue-woman-jumping-into-canal</link><comments>https://www.maalaimalar.com/news/national/teenage-boys-rescue-woman-jumping-into-canal#comments</comments><guid isPermaLink="false">f60a1261-5646-43d7-98d4-3b67998e1234</guid><pubDate>Thu, 17 Sep 2026 11:45:50 +0000</pubDate><atom:updated>2026-09-17T11:45:50.967Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,Rescue Mission,உத்தரப் பிரதேசம்,Bravery Award,Teen Heroes,உயிர்காத்த மாணவர்கள்,Humanity Still Exists,மனிதாபிமானம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/a2aswfiq/Bravery-Award" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bravery Award ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/a2aswfiq/Bravery-Award?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/uttar-pradesh">உத்தரப் பிரதேசத்தின்</a> மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக வேகமாக ஓடும் ஆற்று வாய்க்காலில் குதித்த ஒரு பெண்ணை, இரண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவர்களின் இந்தத் துணிச்சலான செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p><p>இந்தச் சம்பவம் நிச்லால் பகுதியில் உள்ள நாராயணி ஆற்றின் தியோரியா கிளை வாய்க்கால் பாலத்தில் நடைபெற்றுள்ளது.</p><h2>குடும்பத் தகராறில் நேர்ந்த விபரீதம்</h2><p>நேரடி சாட்சியங்களின்படி, சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பாலத்தின் மீது நின்று கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. </p><p>தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த அந்தப் பெண் தனது மொபைல் போனை சாலையில் தூக்கி வீசிவிட்டு, வேகமாக வாய்க்காலை நோக்கி ஓடியுள்ளார்.</p><p>குடும்பத்தினர் சுதாரிப்பதற்குள், அவர் பாலத்திலிருந்து வாய்க்காலில் குதித்துவிட்டார்.</p><p>ஆற்றின் நீர்வரத்து மிக வேகமாக இருந்ததால், அந்தப் பெண் நொடிப் பொழுதில் நீரோட்டத்தோடு அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அலறியடித்தனர்.</p><p> பலர் பாலத்தின் அருகில் திரண்ட போதிலும், நீரோட்டம் மிகவும் உக்கிரமாக இருந்ததால் ஆற்றில் இறங்கி அவரைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.</p><h2>மீட்பில் இறங்கிய 16 வயது சிறுவர்கள்</h2><p>அந்த இக்கட்டான சூழ்நிலையில், 'மசிஹ் சேவாஷ்ரம் இன்டர் காலேஜ்' பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவர்களான கிருஷ்ணா குப்தா மற்றும் சதாம் உசேன் இருவரும் உடனடியாக வாய்க்காலில் குதித்தனர்.</p><p>வேகமாகப் பாய்ந்த நீரோட்டத்துடன் கடுமையாகப் போராடி நீந்திய அந்த இரு சிறுவர்களும், ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை நெருங்கி, அவர் நீரில் மூழ்காதவாறு பிடித்துக்கொண்டனர். </p><p>நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்தப் பெண்ணை பத்திரமாக ஆற்றின் கரைக்கு இழுத்து வந்தனர். அப்போது கரையில் இருந்த பொதுமக்களும் கைகோர்த்து அந்தப் பெண்ணை மேலே தூக்க உதவினர்.</p><h2>குவியும் பாராட்டுகளும் பரிசுகளும்</h2><p>மாணவர்கள் அந்தப் பெண்ணை மீட்பதை அங்கிருந்த ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, மாணவர்களின் புத்திக்கும் வீரத்திற்கும் நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p><p>மாணவர்களின் இந்த மனிதாபிமான செயலைப் பாராட்டி, மகாராஜ்கஞ்ச் எஸ்பி சக்தி மோகன் அவஸ்தி இரு மாணவர்களையும் நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார்.</p><p>மேலும், பள்ளி முதல்வர் ஃபாதர் பிரவீன் புலிந்தநாதனும் தங்களது பள்ளி சார்பில் மாணவர்களுக்குச் சிறப்புப் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.</p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தப் பெண் தற்கொலை முயற்சி எடுத்ததற்கான குடும்பக் பின்னணி குறித்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">தீவிர விசாரணை</a> நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட அழகுசாதன கிரீமை பயன்படுத்திய 18 பெண்களுக்கு சிறுநீரக கோளாறு: இந்திய மருத்துவர்கள் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/kidney-disorder-in-18-women-after-using-pakistani-cosmetic-cream-indian-doctors-warn</link><comments>https://www.maalaimalar.com/news/national/kidney-disorder-in-18-women-after-using-pakistani-cosmetic-cream-indian-doctors-warn#comments</comments><guid isPermaLink="false">1bf3a402-db57-459d-b629-67235c3534f2</guid><pubDate>Thu, 17 Sep 2026 09:45:10 +0000</pubDate><atom:updated>2026-09-17T09:45:10.854Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Skin Care,kidney disorder,skin whitening,சிறுநீரக கோளாறு,சாந்தினி ஒயிட்னிங் கிரீம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7kaoaqjc/Untitled-design-62.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pakistan cosmetic cream kidney damage alert]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7kaoaqjc/Untitled-design-62.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட அழகு சாதன பொருட்களை பயன்படுத்திய நபர்களுக்கு சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டு புரதம் வெளியேறியதை தொடர்ந்து, அந்த பொருட்களை இந்தியாவில் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டாம் என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE">மகாராஷ்டிரா</a> மாநிலம் நாக்பூரில் உள்ள அழகு சாதன விற்பனை மையங்களில், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கோரி பியூட்டி கிரீம், சாந்தினி ஒயிட்டனிங் கிரீம் ஆகியவை உரிய அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தன. </p><p>இதையடுத்து மருத்துவர் பரிந்துரை இல்லாமல் அந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்திய 18 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சிறுநீரகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><h3><strong>உடம்பில் பாதரசம்</strong></h3><p>இவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அழகு சாதன பொருட்களை பயன்படுத்தியவர்கள் உடம்பில் அளவுக்கு அதிகமாக சுமார் 100 முதல் 105 மடங்கு நச்சுத்தன்மை கொண்ட ‘பாதரசம்’ (mercury) இருப்பது கண்டறியப்பட்டது.</p><p>இதையடுத்து பாதிக்கப்படவர்களின் சிறுநீரகத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்களுக்கு மெம்ப்ரேனஸ் நெஃப்ரோபதி (Membranous Nephropathy) என்ற பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர்.</p><h3><strong>சிறுநீரக கோளாறு</strong></h3><p>இந்த வகையான சிறுநீரக பாதிப்பின் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து அதிகளவிலான புரதம் சிறுநீர் வழியாக வெளியேறி கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.</p><p>மேலும் அவர்களுக்கு புரத ஆண்டிஜென் ஆன NELL-1 தொற்று இருப்பதும் பரிசோதனையின் முடிவில் கண்டறியப்பட்டது.</p><h3><strong>சிறுநீரக மருத்துவர்</strong></h3><p>இதுகுறித்து நாக்பூரை சேர்ந்த சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் மோனாலி சாஹூ கூறுகையில், “பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட அழகு சாதன பொருட்களை பரிசோதித்ததில், பாதரசத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பான அளவை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது” என்று கூறினார்.</p><p>இந்த சம்பவம் குறித்து பேசிய நாக்பூர் போலீசார், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு அழகுசாதன பொருள் நுகர்வோரை எப்படி சென்றடைந்தது என்பது கேள்விகளை எழுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.</p><p>மேலும் இந்த பொருட்கள் மருத்துவரின் பருந்துரைச்சீட்டு இல்லாமல் உள்ளூர் கடைகள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h3><strong>மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை</strong></h3><p>இந்த நிலையில் கோரி பியூட்டி கிரீம் மற்றும் சாந்தினி ஒயிட்டனிங் கிரீம், இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் அங்கீகரிக்கப்படாதவை என்றும், அவற்றில் அதிகளவில் நச்சுத்தன்மை கொண்ட உலோகங்கள் உள்ளதாகவும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) தெரிவித்துள்ளது.</p><p>மேலும் இந்த வகையான அழகு சாதன பொருட்களை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டாம் எனவும், முன்னதாக அவற்றை வாங்கி பயன்படுத்தியவர்கள் தங்கள் உடல்களில் ஏற்படும், முகம் அல்லது கால் வீக்கம், வழக்கத்திற்கு மாறான நுரைத்த சிறுநீர், சோர்வு போன்ற நோய் அறிகுறிகளை புறக்கணிக்க கூடாது என்றும் சிடிஎஸ்சிஓ எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>மேலும் இந்த பொருட்கள் மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் உள்ளூர் கடைகள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.</p>]]></content:encoded></item><item><title>அந்த மனசு தான் கடவுள்.. 10 வயதிலிருந்து தினமும் கிராமத்தின் சாலைகளை எதிர்பார்ப்பின்றி சுத்தம் செய்யும் 80 வயது முதியவர் </title><link>https://www.maalaimalar.com/news/national/an-80-year-old-man-who-has-been-cleaning-village-roads-daily-without-any-expectation-since-the-age-of-10</link><comments>https://www.maalaimalar.com/news/national/an-80-year-old-man-who-has-been-cleaning-village-roads-daily-without-any-expectation-since-the-age-of-10#comments</comments><guid isPermaLink="false">45a43685-e64f-4f58-b29f-b31b9d336bf9</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:28:56 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:28:56.087Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,social activist,சமூக ஆர்வலர்,west bengal,தூய்மைப் பணி,Sanitation Work</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/8mq0malh/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அசோக் தாதா]]></media:title><media:description type="html"><![CDATA[ அசோக் தாதா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/8mq0malh/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தை சேர்ந்த 80 வயது அசோக் தாதா பற்றிய கதை இது.</p> <p>படிப்பறிவும் பகுத்தறிவும் மிக்கதாக சொல்லிக்கொள்பவர்களே தாங்கள் செல்லும் சாலையிலும் பொது இடங்களிலும் குப்பைகளை வீச கூசுவதில்லை. </p><p>அப்படியிருக்க, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்கத்தை </a>சேர்ந்த 80 வயது அசோக் தாதா செய்து வரும் வேலைக்கு முனைவர் பட்டமே கொடுக்கலாம். (வங்காளத்தில் தாதா என்றால் பெரிய அண்ணன் என பொருள்). </p><p>தினமும் காலை எழுந்தவுடன் காபி குடித்து செல்போனில் சஞ்சரிப்பது பலருக்கு பழக்கமான ஒன்றாகிவிட்டது. அப்படி அசோக் தாதாவுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.</p> <p>கடந்த 70 ஆண்டுகளாக நாள் தவறாமல் தினமும் காலையில் எழுந்து பன்குராவில் உள்ள தனது கிராமத்தின் சாலைகளை விளக்குமாறால் பெருக்குகிறார் தாதா. இது அவரின் கடமை கிடையாது. மாறாக கடந்த 70 ஆண்டுகளாக அது அவருக்கு ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது.</p><p>10 வயதில் அவரின் இந்த தன்னார்வ சேவை தொடங்கியது. தன்னார்வ பணி என்பதை பலரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் சேர்ந்தால் மட்டுமே செய்யக்கூடிய பணி என நினைத்துக்கொள்கின்றனர். ஒரு தனி மனிதன் சமூக அக்கறையுடன் தன்னிச்சையாக முன்வந்து செய்யும் சிறு விஷயமும் தன்னார்வ பணியே.</p> <h2>எப்படி தொடங்கியது?</h2><p>அப்படியொரு தனிமனிதன் தன்னெழுச்சியாக 10 வயதில் எப்படி உருவாகியிருக்க முடியும் என கேள்வி வரலாம். அசோக் தாதா பள்ளியில் பிரைட் ஸ்டூடன்ட் ஆக இருந்துள்ளார். ஆனால் குடும்பத்தின் ஏழ்மை நிலை 4 ஆம் வகுப்போடு அவரை பள்ளியில் இருந்து துரத்தி அடித்தது. ஆனால் 4 ஆம் வகுப்பு டிராப் அவுட்க்கு, படித்த "மேதைகள்"களுக்குக்கு கூட வராத அக்கறை - சமூக அக்கறை 10 வயதில் வந்துள்ளது.</p><p>கையில் விளக்குமாற்றை எடுத்து தெருவை சுத்தம் செய்யத் தொடங்கினார். யாரிடமும் பணத்தை எதிர்பார்த்தோ, உணவை எதிர்பார்த்தோ அவர் இதை செய்யவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆண்டுகள் கடந்து அவர் இந்த பணியை செய்து வருகிறார்.</p><p>தினமும் காலை எழுந்து 2 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம சாலைகளை பெருக்குகிறார் அசோக் தாதா. எந்தவித நிலையான சம்பளமோ, மாத முடிவில் அப்ரைஸல் - சம்பள உயர்வோ அவருக்கு இல்லை!</p> <h2>எப்படி தொடர்கிறது?</h2><p>அவர் செய்வதை அவரை சுற்றி இருப்பவர்களாலேயே புரிந்து கொள்ளமுடியவில்லை. அவர் வினோதமான ஆள் என்றே ஊர் மக்கள் கருதினர். அவரின் வாழ்க்கையின் பெரும்பகுதியை இவ்வாறு சம்பளமற்ற தூய்மைப்பணியிலேயே கழித்துள்ளார். நாளின் மற்ற நேரங்களில் வயிற்றுப் பிழைப்புக்காக வெவ்வேறு வேலைகளை செய்து வந்துள்ளார். </p><p>அவருக்கு திருமணமான பின்னர் அவரது மனைவி, இந்த சுத்தம் செய்யும் வேலையை நிறுத்தும்படி எவ்வளோ கேட்டுள்ளார். ஆனால் அசோக் தாதா கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் அவரை மனைவி புரிந்துகொண்டு பின்னர் அவருக்கு பிடித்ததை செய்வதை தடுக்கவில்லை. இந்த தம்பதி தினக்கூலி பணிகள் மூலம் மாதம் ரூ.3000 த்தில் குடும்பம் நடத்தி வருகிறது.</p> <p>உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் தாதா காலையில் எழுந்து தெருக்களை பெருக்கும் பணியை நிறுத்துவதில்லை. தினமும் இவ்வாறு தொடர்ந்து வெயிலின் கீழ் சாலைகளை பெருக்குவது அவரின் உடல்நலனிலும் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இல்லை. சில வருடங்கள் முன் அவருக்கு தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்.</p><p>நாம் ஒரு காய்ச்சலில் விழுந்தாலே வேலைகளுக்கு முழுக்கு போட்டு விடுகிறோம். ஆனால் தாதா மரணத்தின் அருகே சென்று குணமாகி திரும்ப வந்து இந்த தள்ளாத வயதிலும் தனது சேவையை தொடர்கிறார். </p> <p>அது சுவாசிப்பதை போல, பார்ப்பதை போல, தூங்கி எழுவதை போல அவரின் வாழ்க்கையோடு ஒரு அங்கமாக மாறிவிட்டது. அவரை பொறுத்தவரை தெருக்களை கூட்டுவது வெறுமனே தூசியை அகற்றுவது மட்டும்மல்ல. மக்கள் நடந்துபோக ஒரு தூய்மையான பாதையை உருவாக்க வேண்டும் என்பதே அவரின் விளைவு.</p><p>அசோக் தாதாவின் பணி ஒன்றை நமக்கு முகத்தில் அறைந்தாற்போல உணர்த்துகிறது. சமூக சேவை என்பது படாடோபமான அமைப்புகளில் இணைந்துதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. கையில் ஒரு விளக்ககுமாற்றை எடுத்து நாம் இருக்கும் பகுதியை தூய்மைப்படுத்துவதும் சமூக சேவையே. அதுகூட வேண்டாம், குறைந்தபட்சம் நமது குப்பைகளை கீழே போடாமல் அதற்கான குப்பைத்தொட்டியில் போடுவதே நாம் இந்த சமூகத்திற்கு செய்யும் மிகப்பெரிய சமூக சேவைதான்!.</p>]]></content:encoded></item><item><title>தெருநாய்கள் தொல்லையால் ஆத்திரம்: அதிகாரி மேஜையில் நாய்க்குட்டிகளை விட்டு யுவசேனா வினோத போராட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/stray-dogs-anger-yuvasena-protest-puppies-on-officer-desk</link><comments>https://www.maalaimalar.com/news/national/stray-dogs-anger-yuvasena-protest-puppies-on-officer-desk#comments</comments><guid isPermaLink="false">fc4c0b25-68a5-4f82-9785-f862414b8d83</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:27:21 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:27:21.017Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>stray dogs,maharashtra state,தெருநாய்கள்,நாசிக்,தெருநாய்கள் கருத்தடை,Yuva Sena,Nashik District,யுவசேனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/6c2gxcj1/GRH.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ stray dogs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/6c2gxcj1/GRH.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாசிக் மாவட்டத்தில் உள்ள நிஃபாட் நகர் பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்து ரூபாய் நோட்டு மாலையுடன் போராட்டம் நடைபெற்றது.</p><p>மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் நிஃபாட் நகர்ப் பகுதியில் கடந்த சில நாட்களாகத் தெருநாய்களின் தொல்லை கடுமையாக அதிகரித்து வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். </p><p>நாய்கள் கடித்து பலர் காயமடைந்துள்ள நிலையில், தற்போதைய கணபதி விசர்ஜன விழாக் காலத்திலும் மக்கள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து நிஃபாட் நகர் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.</p><h2>வி<strong>னோத போராட்டம்</strong></h2><p>அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் ஆத்திரமடைந்த சிவசேனாவின் இளைஞர் அமைப்பான <a href="https://www.maalaimalar.com/news/national/pile-of-torn-currency-notes-found-in-park-trader-discarded-them-out-of-fear-of-his-wife">யுவசேனாவின் </a>நாசிக் மாவட்டத் தலைவர் விக்ரம் ரந்தாவே தலைமையில் நிர்வாகிகள் வினோத போராட்டத்தைக் கையிலெடுத்தனர். நிஃபாட் நகர் பஞ்சாயத்து முதன்மை அதிகாரி தீரஜ் பாம்ரேவின் அலுவலகத்திற்குச் சென்ற போராட்டக்காரர்கள், தாங்கள் சாக்கில் அடைத்து எடுத்து வந்த இரண்டு தெருநாய்க்குட்டிகளைப் பிரித்து, அதிகாரியின் அலுவலக மேஜை மீதே திறந்து விட்டனர். திடீரென மேஜை மீது விடப்பட்ட நாய்க்குட்டிகள் அங்குமிங்கும் ஓடி பதற்றத்துடன் காணப்பட்டன.</p><h2>ரூபாய் நோ<strong>ட்டு மாலையுடன் கண்டன</strong> குரல்</h2><p>நாய்க்குட்டிகளை மேஜை மீது விட்டதோடு நிறுத்தாமல், அதிகாரி தீரஜ் பாம்ரேவின் மேஜை மீது ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை ஒன்றையும் வைத்து யுவசேனா தொண்டர்கள் தங்களுக்கெதிரான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். நகராட்சிக் கட்டுப்பாடு இல்லாதது குறித்தும், வெறும் டெண்டர் நடைமுறைகளில் மட்டுமே கவனம் செலுத்தி மக்கள் பிரச்சனைகளைப் புறக்கணிக்கும் நிர்வாகப் போக்கை கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.</p><h2>போ<strong>ராட்டம் எச்சரிக்</strong>கை</h2><p>தெருநாய்களைக் கட்டுப்படுத்த உடனடி கருத்தடை முகாம்களை நடத்த வேண்டும், நாய்களைப் பிடிக்கும் முறையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்களைத் திரட்டி மீண்டும் அதிகாரியின் அறையிலேயே தெருநாய்களை விட்டுப் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுப்போம் என்று விக்ரம் ரந்தாவே எச்சரித்துள்ளார். அரசு அலுவலகத்தில் தெருநாய்களை விட்டு அரங்கேறிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>700 வயது.. இந்தியாவில்  உள்ள உலகின் மிக வயதான ஆலமரம் பற்றி தெரியுமா? </title><link>https://www.maalaimalar.com/news/national/700-years-old-do-you-know-about-the-oldest-banyan-tree-in-indiaand-the-world</link><comments>https://www.maalaimalar.com/news/national/700-years-old-do-you-know-about-the-oldest-banyan-tree-in-indiaand-the-world#comments</comments><guid isPermaLink="false">27c55c2c-c8fa-4e2d-83b8-3f5c06a0d286</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:13:27 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:13:27.287Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,banyan tree,study,ஆய்வு,ஆலமரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/avcxre87/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆலமரம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆலமரம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/avcxre87/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் 700 ஆண்டுகால ஆலமரம் உலகத்திலேயே தற்போதுள்ள மிக வயதான ஆலமரம் என்ற பெருமையை பெற்றுள்ளது.</p> <p>மரங்கள் மனித வரலாறை சுமந்து நிற்கும் தூபிகள். தலைமுறைகளின் நினைவை சுமக்கும் கலன்கள். </p><p>மரங்கள் வெவ்வேறு வகையாக மனிதனுக்கும் இயற்கை சமநிலைக்கும் உதவுகின்றன. குறிப்பாக கிராமங்களில் அவை மனிதர்களுடன் ஆழ்ந்த பிணைப்பை கொண்டுள்ளன.</p><p>பீகாரின் முங்கர் மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த ஒரு <a href="https://www.maalaimalar.com/health/aalamaram-help-health">ஆலமரம் </a>பண்டைய காலம் முதல் இருப்பதாக மக்கள் நம்பி வந்தனர். </p> <p>இந்நிலையில் அந்த மரம் 700 வருட காலம் பழமையானது என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன்மூலம் உலகின் மிக வயதான ஆலமரம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆலமரம்</h2><p>ஒரு குடும்பம் தலமைமுறை தலைமுறையாக தழைப்பதை, ஆலமரம் விழுது விடுவதற்கு ஒப்பாக பேசுவர். </p><p>இந்தியாவில் உள்ள மரங்களில் சாதரணமாக எங்கும் தென்படுவன ஆலமரம். ஆழாமாக அகலமாக வேர் விடும் ஆலமரங்கள் அதன் விழுதுகள் மற்றும் அகன்ற தோற்றத்தின் கீழ் பலருக்கு நிழல் தருகின்றன.</p><p>இந்த தன்மையால் கிராமங்களில் மக்கள் ஒன்றுகூடுவதும் இந்த ஆலமரங்களின் கீழேயாம். அதன் கலாச்சர முக்கியத்துவம் ஒருபுறம் இருந்தாலும், ஆலமரங்களில் அதன் வயதை கண்டறிய உதவும் வளையங்கள் உருவாவதில்லை.</p><p>மரங்களின் வயதை கண்டறிய அவற்றில் உருவாகும் வளையங்களின் எண்ணிக்கையை வைத்து கணிப்பது டென்ட்ரோக்ரோனாலஜி எனும் அறிவியல் முறை ஆகும். ஆனால் ஆலமரங்களில் அவ்வாறான வளையங்கள் உருவாவதில்லை என்பதால் அதன் வயதை கணக்கிடுவது சவாலாக உள்ளது.</p> <h2>எப்படி சாத்தியமானது?</h2><p>லக்னோவில் இயங்கி வரும் பீர்பால் சஹானி பேலோசைன்ஸ் கல்வி நிறுவனத்தில் பணிபுரியர்க் முனவைர் த்ரினா போஸிடம் பீகார் வனத்துறை ஒரு கோரிக்கையுடன் சென்றது. </p><p>மக்கள் பண்டைய காலத்தை சேர்ந்தது எனக் கருதும் அந்த ஆலமரத்தின் உண்மையான வயது என்ன என்பதை கண்டறிய ஒரு தனித்துவமான அறிவியல் முறைமை தேவையாக இருந்தது.</p><p>முனைவர் மாயங் சேகர், முனைவர் அகிலேஷ் யாதவ் உடன் இணைந்து முனைவர் த்ரினா போஸ் ஆராய்ச்சியில் இறங்கினார். அந்த மரத்தின் உள் மையத்தில் உள்ள ஆல்பா செலுலோஸ் (தாவர செல் சுவர்களில் காணப்படும்) ஐ சேகரித்த அவரின் குழு அதை ஆய்வுக்கு உட்படுத்தியது. ஏனெனில் pith எனும் உள் மையம் தான் அந்த மரம் உருவாக தொடங்கிய உயிரியல் புள்ளி. அங்கு தான் அந்த மரம் ஆரம்பத்தில் உருவாக்கிய மரக்கட்டை இருக்கும். </p> <p>இந்த மாதிரிகள் அறிவியல் ரீதியாக நவீன முறையில் ஆராயப்பட்டு அதன் வயது 700 ஆக இருக்கும் கண்டறியப்பட்டது.</p><p>அந்த மரத்தில் அருகில் 300 முதல் 350 ஆண்டுகளாக பழமையான பரோ பங்களா என்ற காலனிய கால மாளிகை உள்ளது. அந்த சமயத்தில் அந்த ஆலமரம் நடப்பட்டிருக்கலாம் என்று சில ஊகங்கள் இருந்தன. ஆனால் அந்த மரம் 700 ஆண்டுகள் முந்தையது என்றும் அந்த மரத்தை ஒட்டி தான் பங்களா கட்டப்பட்டது என்பதும் தற்போது ஊர்ஜிதமாகியுள்ளது.</p><p>இந்த ஆய்வு இந்த மரத்தின் வயதை கண்டுபிடித்ததோடு நில்லாமல் உலகெங்கிலும் பழமையான மரத்தின் வயதை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஒடிசாவில் விநாயகர் சிலைகளை கரைக்கும்போது நீரில் மூழ்கி 9 பேர் உயிரிழப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/9-people-drown-while-immersing-ganesha-idols-in-odisha</link><comments>https://www.maalaimalar.com/news/national/9-people-drown-while-immersing-ganesha-idols-in-odisha#comments</comments><guid isPermaLink="false">5d8ad1e6-63f7-40a3-95b6-7da9d2fe3ba2</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:56:22 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:56:22.836Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒடிசா,Odisha,விநாயகர் சதுர்த்தி,நீரில் மூழ்கி பலி,drowned,Vinayaka Chaturthi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/im48rf1s/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விநாயகர் சிலை கரைப்பு ]]></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சிலை கரைப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/im48rf1s/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒடிசாவில் விநாயகர் சிலைகளை கரைக்கும்போது நீரில் மூழ்கி 9 பேர் உயிரிழந்தள்ளனர்.</p><p>நாடு முழுவதும் கடந்த திங்களன்று <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/rs-59000-crore-business-during-vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தி </a>விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து பண்டிகையின் ஒரு பகுதியாக செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கும் சடங்குகள் நடந்து வருகின்றன. </p><p>அந்த வகையில் வடகிழக்கு மாநிலமான ஒடிசாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியின்போது பல உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. </p> <h2>உயிரிழப்புகள்</h2><p>கடந்த 24 மணி நேரத்தில் ஒடிசாவில் நடைபெற்ற வெவ்வேறு சிலை கரைப்பு நிகழ்வுகளில் மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>ஒடிசாவின் கஞ்சம், சுந்தர்கார், பத்ரக், கோரபுட் மற்றும் காலஹண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த இறப்புகள் பதிவாகி உள்ளன.</p><p>ஒடிசா தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைக்கான துறையினர் வெளியிட்ட தகவலின்படி, ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் எர்சாமா நகரில் உள்ள கோபால்பூர் பகுதியில் ஒடானலா என்ற இடத்தில் ஆற்றில் மூழ்கிய 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் காணாமல் போயுள்ளனர்.</p> <p>இதுதவிர பல்வேறு பகுதிகளிலும் பலர் பலியாகியும், காணாமல் போயும் உள்ளனர். மொத்தம் 9 பேர் சடலங்களாகவும், 7 உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.</p><p>இந்த சம்பவங்களுக்கு ஒடிசா முதல்வர் மோகன் சரண், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பூங்காவில் கிழிந்த ரூபாய் நோட்டு குவியல்: மனைவிக்கு பயந்து வீசிய வியாபாரி</title><link>https://www.maalaimalar.com/news/national/pile-of-torn-currency-notes-found-in-park-trader-discarded-them-out-of-fear-of-his-wife</link><comments>https://www.maalaimalar.com/news/national/pile-of-torn-currency-notes-found-in-park-trader-discarded-them-out-of-fear-of-his-wife#comments</comments><guid isPermaLink="false">e0cef5d6-e17f-4e23-8415-1b3af2e4f6c7</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:49:49 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:49:49.525Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரூபாய் நோட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/v3cv8buh/currencynote.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கிழிந்த ரூபாய் நோட்டு குவியல்]]></media:title><media:description type="html"><![CDATA[ கிழிந்த ரூபாய் நோட்டு குவியல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/v3cv8buh/currencynote.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துவாரகநகர் சிட்டி சென்ட்ரல் பூங்காவில் மரத்தின் அடியில் கிழிந்த ரூ.500, ரூ.50, ரூ.20, ரூ.10 நோட்டுகள், ஒரு பெண்ணின் பான் கார்டு, பழைய எல்.ஐ.சி ஆவணங்கள் கிடந்தன. பொதுமக்கள் தகவலின்பேரில் போலீசார் சிசிடிவி மூலம் கே.ஜி.எச் டவுன் வியாபாரி ஆதிமூலபு சூர்ய ராவை கண்டறிந்து, அவர் மனைவிக்கு பயந்து சேதமடைந்த நோட்டுகளை கிழித்து வீசியது தெரியவந்தது.</strong></em></p><h2><strong>கிழிந்த ரூபாய் நோட்டுகள்</strong></h2><p>ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் துவாரகநகர் ஆர்.டி.சி வளாகத்திற்கு அருகிலுள்ள சிட்டி சென்ட்ரல் பூங்காவில் ஒரு மரத்தின் அடியில் கிழிந்த <a href="https://www.maalaimalar.com/topic/ரூபாய்-நோட்டு">ரூபாய் நோட்டுகள்</a> கிடந்தன.</p><p>நடைப்பயிற்சிக்கு வந்த மக்கள் இந்த நோட்டுகளைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கிழக்கு உதவி ஆணையர் கே.லட்சுமண மூர்த்தி மற்றும் டூ டவுன் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று நோட்டுகளை ஆய்வு செய்தனர். </p><p>கிழிந்த மற்றும் சேதமடைந்த ரூ.500 நோட்டுகள், அத்துடன் ரூ.50, ரூ.20 மற்றும் ரூ.10 நோட்டுகளும் அதில் இருந்தன. மேலும், ஒரு பெண்ணின் பான் கார்டு மற்றும் பழைய எல்.ஐ.சி பத்திர ஆவணங்களும் அதில் இருந்தன. </p><h2><strong>போலீசார் விசாரணை</strong></h2><p>போலீசார் அவற்றைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில், கே.ஜி.எச் டவுனில் உள்ள தாடி விதியைச் சேர்ந்த வியாபாரி ஆதிமூலபு சூர்ய ராவ் என்பவர்தான் இந்த நோட்டுகளைக் கொட்டியுள்ளார் என்பது தெரியவந்தது. </p><p>அவரிடம் விசாரித்த போது, ​​ புதிய ரூபாய் நோட்டுகளை குடும்பத்தினருக்கு தெரியாமல்  மறைத்து வைத்திருந்தேன். பல நாட்களாக பெட்டியிலேயே விடப்பட்டிருந்ததால் ரூபாய் நோட்டுகள் அழுக்காகி சேதமடைந்துவிட்டதாக அவர் கூறினார். மனைவி, குடும்பத்தினர் திட்டிவிடுவார்கள் என்ற பயத்தில் அவற்றைக் கிழித்து எறிந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.</p><p>இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>பெங்களூருவில் பரபரப்பு: காதல் மனைவியை கடத்திய ராஜஸ்தான் குடும்பம்- சினிமா பாணியில் கார் சேஸிங், 6 பேர் படுகாயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/love-marriage-kidnap-drama-in-bengaluru-rajasthan-family-car-chase-ends-in-accident</link><comments>https://www.maalaimalar.com/news/national/love-marriage-kidnap-drama-in-bengaluru-rajasthan-family-car-chase-ends-in-accident#comments</comments><guid isPermaLink="false">83601813-1cee-46a5-9881-0d3b7fed24a3</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:18:14 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:18:14.219Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,bengaluru,Rajasthan,woman rescued,ராஜஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/z28emmdm/car.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajasthan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/z28emmdm/car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெற்றோருக்குத் தெரியாமல் தப்பி வந்த இளம் தம்பதியினர், பெங்களூருவில் உள்ள அக்ரஹாரா தசராஹள்ளி பகுதியில் வீடு எடுத்து அமைதியாக வசித்து வந்தனர்.</p><p>பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனைத் திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வசித்து வந்த 21 வயது இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினர் ஆட்களை அனுப்பி கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல்காரர்களின் காரை பொதுமக்கள் விரட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்துகளில் 6 பேர் படுகாயமடைந்தனர்.</p><h2>காதல் திரு<strong>மணம்</strong> </h2><p><a href="https://www.maalaimalar.com/sports/womens-t20-cricket-rankings-indias-srisarani-tops-icc-bowling-charts">ராஜஸ்தான் </a>மாநிலத்தைச் சேர்ந்த பூஜா(21) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஓம் பிரகாஷ்(23) என்பவரும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பூஜாவின் குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பெற்றோருக்குத் தெரியாமல் தப்பி வந்த இளம் தம்பதியினர், பெங்களூருவில் உள்ள அக்ரஹாரா தசராஹள்ளி பகுதியில் வீடு எடுத்து அமைதியாக வசித்து வந்தனர்.</p><h2>கடத்தல் ச<strong>ம்பவம்</strong></h2><p>இந்நிலையில், நேற்று மாலை பூஜாவின் குடும்பத்தினரால் அனுப்பப்பட்ட நான்கு பேர் கொண்ட கும்பல், தம்பதியினரின் வீட்டிற்குள் புகுந்தது. ஓம் பிரகாஷை மிரட்டிய அக்கும்பல், பூஜாவை பலவந்தமாக இழுத்துச் சென்று காரில் ஏற்றி கடத்த முயன்றது. பூஜாவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் ்கத்தினர், உடனடியாக காரை மறிக்க முயன்றனர். ஆனால், கடத்தல்காரர்கள் காரை அதிவேகமாக இயக்கித் தப்பியோடினர்.</p><h2>சினி<strong>மா பாணி சே</strong>ஸிங்</h2><p>சுதாரித்துக் கொண்ட பகுதி மக்கள், தங்கள் வாகனங்களில் கடத்தல் காரரை சினிமா பாணியில் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். இதனால் பீதியடைந்த காரை ஓட்டிச் சென்ற நபர், சாலையில் சென்ற பிற வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக மோதினார். இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2><strong>3 பேர் கை</strong>து</h2><p>காரை நிறுத்த முயன்ற பொதுமக்களை கடத்தல்காரர்கள் வெட்டுக்கத்தியால் தாக்க முயன்றதாகவும், கல்வீச்சு தாக்குதலுக்குப் பிறகே கார் நிறுத்தப்பட்டதாகவும் சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இறுதியில் பொதுமக்கள் காரைச் சூழ்ந்து பூஜாவை பத்திரமாக மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து விஜயநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், ராஜஸ்தானைச் சேர்ந்த ராகேஷ் (31), கரண் (25) மற்றும் அயான் (18) ஆகிய மூவரைக் கைது செய்துள்ளனர். தப்பியோடிய கார் டிரைவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நாடு முழுவதும் சிலைகள் பிரதிஷ்டை: விநாயகர் சதுர்த்தியில் ரூ.59 ஆயிரம் கோடி வர்த்தகம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/rs-59000-crore-business-during-vinayagar-chaturthi</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/rs-59000-crore-business-during-vinayagar-chaturthi#comments</comments><guid isPermaLink="false">64a1f469-f48a-440f-81e9-472630d44484</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:05:06 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:05:06.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,விநாயகர் சிலைகள்,Vinayagar statue</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/2t4x1vnj/vinayagar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விநாயகர் சிலைகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சிலைகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/2t4x1vnj/vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியின் போது ரூ.45,000 முதல் 59,000 கோடி வரை வர்த்தகம் நடந்துள்ளது. இதில் ஐதராபாத்தின் பங்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அது சுமார் ரூ.10,000 கோடியாக இருக்கலாம் என்று வர்த்தக வட்டாரங்கள் மதிப்பிட்டுள்ளன.</strong></em> </p><h2><strong>விநாயக சதுர்த்தி விழா</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/விநாயகர்-சதுர்த்தி">விநாயக சதுர்த்தி</a> விழா நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.  மூலைமுடுக்குகளிலெல்லாம் விநாயகப் பெருமான் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.</p><p>அவரை அலங்கரிப்பதற்கும் வழிபடுவதற்கும் மண்டபங்கள், விளக்குகள், டிஜேக்கள், இசைக்குழுக்கள், கூடாரங்கள், மலர்கள், பழங்கள், பிரசாதங்கள் போன்றவை அவசியமாகின்றன. கணேஷ் ஆகமத்துடன் தொடங்கும் கொண்டாட்டங்கள், விசர்ஜனம் வரை தொடர்கின்றன. </p><p>அவை நகரத்தின் பொருளாதாரத்திற்குப் புத்துணர்வை அளிக்கின்றன. மங்களகரமான நிகழ்வுகள் அல்லது வர்த்தகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமல்லாமல், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கூடாரங்களை நடத்துபவர்களுக்கும் இவை பெரும் பலனை தந்துள்ளன.</p><p>மகாராஷ்டிராவிற்குப் பிறகு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள்தான் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாகக் கொண்டாடி உள்ளனர்.</p><h2><strong>வர்த்தகம்</strong></h2><p>சில சந்தை மதிப்பீடுகளின்படி, நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியின் போது ரூ.45,000 முதல் 59,000 கோடி வரை வர்த்தகம் நடந்துள்ளது. இதில் ஐதராபாத்தின் பங்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அது சுமார் ரூ.10,000 கோடியாக இருக்கலாம் என்று வர்த்தக வட்டாரங்கள் மதிப்பிட்டுள்ளன. </p><p>நாம் பக்தியுடன் விநாயகப் பெருமானுக்குச் செலவிடும் ஒவ்வொரு ரூபாயும், அது நமக்கு நேரடியாக மன மகிழ்ச்சியைத் தந்தாலும் சரி, மறைமுகமாக சில லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது என்பது உண்மையே. </p><p>இந்த விநாயகர் சதுர்த்தியின் போது, ​​இரண்டு லட்சம் பேர் நேரடியாகவும், நான்கு லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.</p><p>விநாயகர் சதுர்த்தி என்பது ஒரு பக்திக் கொண்டாட்டம் மட்டுமல்ல, ஒரு பெரிய வணிக வாய்ப்பும் கூட என்றும் தெரியவந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜம்மு காஷ்மீர் உதம்பூரில் இரவு முழுவதும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/two-terrorists-killed-in-overnight-gunfight-in-udhampur-jammu-and-kashmir</link><comments>https://www.maalaimalar.com/news/national/two-terrorists-killed-in-overnight-gunfight-in-udhampur-jammu-and-kashmir#comments</comments><guid isPermaLink="false">0129d010-da1b-4029-bbcb-2f80de419547</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:42:49 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:42:49.906Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>terrorists,ஜம்மு காஷ்மீர்,jammu kashmir,பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை,crpf,Udhampur,உதம்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/xgogpnhi/hg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gun battle in Udhampur]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/xgogpnhi/hg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று அதிகாலை வரை நீடித்த இந்த கடுமையான துப்பாக்கிச்சூட்டின் முடிவில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். </p><p>ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று இரவு நடந்த கடுமையான மோதலில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.</p><h2>நள்<strong>ளிரவு மோத</strong>ல்</h2><p>உதம்பூர் மாவட்டத்தின் மஜால்தா எல்லைக்குட்பட்ட சோஹன் மற்றும் அதனை சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், இந்திய ராணுவம், <a href="https://www.maalaimalar.com/news/national/pakistan-vessel-collides-with-indian-navy-ship-india-summons-diplomat-and-lodges-protest">ஜம்மு காஷ்மீர் </a>காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எஃப் ஆகிய படைகள் இணைந்து அந்தப் பகுதியை முழுமையாக வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கின.</p><p>வளைத்து பிடிக்க முயன்றபோது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாகப் பதில் தாக்குதலில் ஈடுபட்ட வீரர்கள், தீவிரவாதிகளின் தப்பிச் செல்லும் முயற்சியை முறியடித்து நள்ளிரவு முழுவதும் தீவிர எதிர்தாக்குதலைத் தொடர்ந்தனர்.</p><h2>தீவிர தே<strong>டுதல் வே</strong>ட்டை</h2><p>இன்று அதிகாலை வரை நீடித்த இந்த கடுமையான துப்பாக்கிச்சூட்டின் முடிவில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து பயங்கரவாதிகள் பயன்படுத்திய நவீன ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களின் துல்லியமான அடையாளங்களைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p>மேலும் அப்பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் ஒளிந்திருக்கின்றனரா என்பதை உறுதி செய்ய பாதுகாப்புப் படையினர் கூடுதல் வீரர்களை வரவழைத்து, பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பிறந்தநாள்: பாஜகவின் &apos;சேவா சங்கல்ப் அபியான்&apos; தொடக்கம்- குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-birthday-bjp-seva-sankalp-abhiyan-launch-president-murmu-greetings</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-birthday-bjp-seva-sankalp-abhiyan-launch-president-murmu-greetings#comments</comments><guid isPermaLink="false">6c57fc06-55a8-4ace-8c79-684c483d928c</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:25:24 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:25:24.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,President Murmu,பிரதமர் மோடி பிறந்தநாள்,குடியரசுத் தலைவர் முர்மு,PM Modi&apos;s Birthday,Seva Sankalp Abhiyan,சேவா சங்கல்ப் அபியான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/hhm5v7da/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi's Birthday  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/hhm5v7da/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்தியா உலகளவில் முன்னணி பொருளாதார சக்தியாகத் திகழ்கிறது.</p><p>பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு நாட்டின் உயர் பதவிகளில் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அவரது 25 ஆண்டுகால பொதுச்சேவையை கொண்டாடும் வகையில் நாடு தழுவிய ஒரு மாத சேவை பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.</p><h2>தலை<strong>வர்கள் வாழ்</strong>த்து</h2><p>இந்தியப் <a href="https://www.maalaimalar.com/news/national/more-than-88-lakh-lamps-to-be-lit-on-modis-birthday-in-gujarat">பிரதமர் நரேந்திர மோடி</a> இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், குஜராத்தின் முதலமைச்சராகவும் பின்னர் நாட்டின் பிரதமராகவும் கடந்த 25 ஆண்டுகளாகப் பிரதமர் மோடி ஆற்றிவரும் இணையற்ற பொதுச்சேவையையும், தேசக் கட்டுமானப் பணிகளையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். நல்ஆளுமைக்கு அவர் பல புதிய இலக்கணங்களை உருவாக்கியுள்ளதோடு, நாட்டின் பாரம்பரியத்தையும் நவீன வளர்ச்சியையும் சமநிலையில் கொண்டு செல்லும் அவருக்கு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்க இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p>அதேபோல், துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்தில், பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்தியா உலகளவில் முன்னணி பொருளாதார சக்தியாகத் திகழ்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய டிஜிட்டல் புரட்சி, உள்கட்டமைப்பு மற்றும் விண்வெளித் துறையில் இந்தியா அடைந்துள்ள அபார வளர்ச்சியை அவர் பட்டியலிட்டுப் பாராட்டியுள்ளார்.</p><h2>'சேவா சங்கல்<strong>ப் அபியான்' பி</strong>ரசாரம்</h2><p>பிரதமரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 முதல் அவர் முதன்முதலில் குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்ற அக்டோபர் 7-ஐத் தாண்டி, அக்டோபர் 17 வரை ஒரு மாத காலத்திற்கு 'சேவா சங்கல்ப் அபியான்' (சேவை உறுதிமொழிப் பிரசாரம்) என்ற சிறப்பு இயக்கத்தை பாரதிய ஜனதா கட்சி தொடங்கியுள்ளது. இதில், நாடு முழுவதும் இலவச மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள் மற்றும் தூய்மைப் பணிகள் நடத்தப்படும். இன்று மாலை பொதுமக்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்ற பயனாளிகள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. </p><p>ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக சென்றடைவதை உறுதி செய்ய 'சேவை சேது' முகாம்களும், இளைஞர்களை ஒருங்கிணைக்கும் 'சேவை யாத்திரைகளும்' நடத்தப்படவுள்ளன. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா மற்றும் பல மாநில முதலமைச்சர்கள் இந்த சேவை இயக்கத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கி வைத்துள்ளனர். மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல முக்கியத் தலைவர்களும் பிரதமருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மஹுவா மொய்த்ரா மீது பாஜகவினர் முட்டை வீச்சு.. பாதுகாப்பு வழங்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிக்கு  வீடியோ மெசேஜ் </title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-members-hurl-eggs-at-mahua-moitra-video-message-sent-to-supreme-court-judge-who-refused-to-grant-security</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-members-hurl-eggs-at-mahua-moitra-video-message-sent-to-supreme-court-judge-who-refused-to-grant-security#comments</comments><guid isPermaLink="false">0fe2916e-3d38-4bf0-99f2-80c47943dfab</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:07:31 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:07:31.334Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,trinamool congress,மஹுவா மொய்த்ரா,Mahua Moitra,west bengal,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/t4c49oyr/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மஹுவா மொய்த்ரா]]></media:title><media:description type="html"><![CDATA[ மஹுவா மொய்த்ரா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/t4c49oyr/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களை எம்பி மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><h2></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்கத்தின்</a> நாடியா மாவட்டத்தில் உள்ள தனது தொகுதியான கிரிஷ்ணராஜ சகாரில் நேற்று நடந்த அரசியல் கூட்டத்திற்கு மஹுவா சென்றுள்ளார். கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த மஹுவாவை அங்கு கூடிய பாஜக தொண்டர்கள் கருப்பு கொடி காட்டி  "திரும்பிப் போ" என கோஷம் எழுப்பி அமளி செய்துள்ளனர். </p> <p>அவர்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட கைகலப்பு மூண்டது. இந்த பரபரப்பில் தனது காருக்கே திரும்பிச் சென்று ஏற முயன்ற மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீசப்பட்டுள்ளது.</p> <h2>வீடியோ</h2><p>இந்த சம்பவத்தை தொடர்ந்து காரில் அமர்ந்தபடியே முட்டை வீசப்பட்ட கோலத்தில் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்ட மொய்த்ரா, இந்த தாக்குதல் நடக்கும் என தனக்கு முன்னரே போலீசார் தகவல் தந்ததாகவும், இந்த தாக்குதலே போலீஸ் உதவியுடன் தான் நடந்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.</p><p>முன்னதாக ஏற்கனவே ஒரு முறை அவரது தொகுதியில் வைத்தே அவர் மீது முட்டை வீசப்பட்டது. இதனை தொடர்ந்து தனக்கு பாதுகாப்பு வேண்டி அவர் கல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் அங்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்காததால் உச்சநீதிமன்றத்தை அணுகிறார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Big shout out to Hon’ble Justice Dipankar Datta ! MiLord - I came to my constituency for a mtng informing <a href="https://x.com/WBPolice?ref_src=twsrc%5Etfw">@WBPolice</a> &amp; BJP workers with their help pelted eggs on me. True to your advice I faced them as a freedom fighter faced bullets. <a href="https://t.co/CxO3ApzjPL">pic.twitter.com/CxO3ApzjPL</a></p>&mdash; Mahua Moitra (@MahuaMoitra) <a href="https://x.com/MahuaMoitra/status/2100176610045640808?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>உச்சநீதிமன்ற நீதிபதி</h2><p>அவர் மனு மீதான விசாரணையில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா, மஹுவாவின் பாதுகாப்பு குறித்து கிண்டலாக, "இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டுக்காக துப்பாக்கி குண்டுகளை எதிர்கொண்டனர், இந்த சின்ன தாக்குதலுக்கு பயந்து பாதுகாப்பு வேண்டி உச்சநீதிமன்றத்தை அணுகுவது சரியல்ல" என கூறினார்.</p><p>இதனை குறிப்பிட்டு தற்போதைய முட்டை வீச்சுக்கு பின் பேசிய வீடியோவில் மஹுவா, "நீதிபதி அவர்களே, உங்கள் அறிவுரைப்படி நான் ஒரு சுதந்திர போராட்ட வீரர் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொண்டது போல நான் என் மீதான தாக்குதலை எதிர்கொண்டேன்" என பகடியாக தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>இந்திய கடற்படை கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் கப்பல் - தூதரக அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/pakistan-vessel-collides-with-indian-navy-ship-india-summons-diplomat-and-lodges-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/pakistan-vessel-collides-with-indian-navy-ship-india-summons-diplomat-and-lodges-protest#comments</comments><guid isPermaLink="false">2ad3c9f4-c055-4a42-8399-7802cca714c8</guid><pubDate>Thu, 17 Sep 2026 00:50:31 +0000</pubDate><atom:updated>2026-09-17T00:50:31.286Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,Ministry of External Affairs,INDIAN ARMY,இந்திய ராணுவம்,வெளியுறவு அமைச்சகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mj65gtur/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கப்பல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கப்பல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mj65gtur/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தான் கடற்படையை சேர்ந்த கப்பல் இந்திய கடற்படை கப்பலை மோதிய சம்பவத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.</p> <p>கடந்த செப்டம்பர் 15, அரபிக் கடலின் வடக்கே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">இந்​தி​ய கடற்​படை​யின்</a> போர்க் கப்​பல்  கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. </p><p>சா்வதேச நீா்பரப்பில் இந்​தி​ய கடற்​படை​ போர்க் கப்​பலை நோக்கி பாகிஸ்​தான் கடற்​படைக் கப்​பல் அதிக வேகத்​தில் மோதி​யது. இதில் பெரிய சேதம் ஏற்படவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சகம் முன்னதாக தெரிவித்திருந்தது. </p> <h2>கண்டனம்</h2><p>ஆயினும் பாகிஸ்​தான் கடற்​படைக் கப்​பல் மோதி​யது தொடர்​பாக, இந்​தி​யா​வுக்​கான பாகிஸ்​தான் தூதரக பொறுப்பு அதி​காரி சாத் வார்​ரைச்-ஐ, வெளி​யுறவுத்​துறை அமைச்​சகதுக்கு நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கடலில் பாகிஸ்​தான் கடற்​படை செய்தது ஏற்​றுக்​கொள்ள முடி​யாத ​ தொழில்​முறையற்ற நடவடிக்கை ஆகும்.</p> <p>இது, 1991 ஏப்​ரல் மாதம் இந்​தி​யா-​பாகிஸ்​தான் இடையே போடப்பட்ட ராணுவ நடவடிக்​கைகள் மற்​றும் படை நகர்​வு​கள் குறித்த முன்​கூட்​டிய தகவல் அளிக்​கும் ஒப்​பந்​தத்​தின் 10வது பிரிவுக்கு முரணானது என்று வெளி​யுறவு அமைச்​சகம் அவரிடம் தெரி​வித்​தது.</p><p>இது​போன்ற சம்​பவங்​கள் மீண்​டும் நடை​பெறாமல் தடுக்​கும் வகை​யில், இருநாட்டு ஒப்​பந்​த விதி​களை மதித்து, உரிய கவனத்​துடன் செயல்பட ​​பாகிஸ்​தான் அதி​காரி​களிடம் தெரிவிக்​கு​மாறு அந்​நாட்டு பொறுப்பு அதி​காரி​யிடம் இந்​தியா அறி​வுறுத்​தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>113 சலான்கள், ரூ. 10.68 லட்சம் அபராதம் நிலுவையில் இருந்த இருசக்கர வாகனம் பறிமுதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/gurugram-traffic-police-impounds-bike-with-113-pending-challans-worth-rs-1068-lakh</link><comments>https://www.maalaimalar.com/news/national/gurugram-traffic-police-impounds-bike-with-113-pending-challans-worth-rs-1068-lakh#comments</comments><guid isPermaLink="false">87ceb66d-ecf7-40f4-8e32-60e762835230</guid><pubDate>Wed, 16 Sep 2026 20:04:14 +0000</pubDate><atom:updated>2026-09-16T20:04:14.639Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Traffic Police,போக்குவரத்து காவல் துறை,gurugram,குருகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/96fnvd39/gurugram-traffic-police.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic: குருகிராம்போக்குவரத்து காவல் துறை

]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/96fnvd39/gurugram-traffic-police.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/gurugram">குருகிராம்</a> போக்குவரத்து காவல்  துறையினர் எம்.டி.ஐ. சௌக் (MDI Chowk) பகுதியில் நடத்திய வாகன சோதனையின்போது, ​​மொத்தம் ரூ. 10.68 லட்சம் மதிப்பிலான 113 நிலுவை சலான்களை (போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள்) கொண்ட ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.</p><p>90 நாட்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்தாத வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மூத்த போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். </p><h2>ஆவணங்கள் இல்லை:</h2><p>எம்.டி.ஐ. சௌக் பகுதியில் பணியில் இருந்த மண்டல அதிகாரியான ASI பிரவீன் குமார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ​​அவரது குழுவினர் ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்தனர். அப்போது வாகன ஓட்டி அதற்கான எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தவறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>"சரிபார்த்ததில், அந்த இருசக்கர வாகனத்தின் மீது 1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகன சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 113 சலான்கள் நிலுவையில் இருப்பதும், அதற்கான மொத்த அபராத தொகை சுமார் ரூ. 10.68 லட்சம் இருப்பதும் தெரியவந்தது.</p><h2>இருசக்கர வாகனம் பறிமுதல்:</h2><p>"தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது, மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் மற்றும் காப்பீடு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக இந்த சலான்கள் பெரும்பாலும் விதிக்கப்பட்டிருந்தன. போலீஸார் அந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்," என்று மூத்த போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.</p><p>போக்குவரத்து விதிகளை பின்பற்றவும், வாகனத்திற்கான அத்தியாவசிய ஆவணங்களை புதுப்பித்து வைத்திருக்கவும், நிலுவையில் உள்ள அபராத தொகையை உரிய நேரத்தில் செலுத்தவும் அனைத்து வாகன ஓட்டிகளையும் குருகிராம் போக்குவரத்து காவல் துறை செய்தி தொடர்பாளர் கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பிறந்தநாள்: குஜராத்தில் 88 லட்சத்திற்கும் அதிகமான விளக்குகள் ஏற்ற சிறப்பு ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/national/more-than-88-lakh-lamps-to-be-lit-on-modis-birthday-in-gujarat</link><comments>https://www.maalaimalar.com/news/national/more-than-88-lakh-lamps-to-be-lit-on-modis-birthday-in-gujarat#comments</comments><guid isPermaLink="false">c3a1a907-457e-40ba-8c8e-6db25dcbc5f9</guid><pubDate>Wed, 16 Sep 2026 18:05:04 +0000</pubDate><atom:updated>2026-09-16T18:05:04.389Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/39vszacu/PM-Modi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/39vszacu/PM-Modi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலம் முழுவதும் 18,500 இடங்களில் 88 லட்சத்திற்கும் அதிகமான மண் அகல் விளக்குகளை ஏற்றுதல், வத் நகரில் இருந்து வாரணாசிக்கு இருசக்கர வாகன பேரணி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆரத்திகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன், நாளை (செப்டம்பர் 17) பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> பிறந்தநாளும், அவரது 25 ஆண்டுகால பொதுவாழ்வு பணியும் கொண்டாடப்பட உள்ளன.</p><p>மாலை 7 மணிக்கு மாவட்டங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் என மாநிலம் முழுவதும் 'ஆசீர்வாத் நோ திவ்டோ' (ஆசீர்வாதத்தின் விளக்கு) நிகழ்ச்சி நடைபெறும். <a href="https://www.maalaimalar.com/news/national">குஜராத்</a> அரசு மற்றும் பா.ஜ.க. வெளியிட்ட தகவல்களின்படி, மாலை 6 மணி முதல் பக்தி இசை, சத்சங்கம் (ஆன்மீகச் சொற்பொழிவுகள்) மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் தொடங்கும். </p><h2>88 லட்சம் அகல் விளக்குகள்:</h2><p>"பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நீண்ட ஆயுளுடனும் நாட்டிற்கு தொடர்ந்து சேவையாற்றவும் வேண்டி, 18,500-க்கும் மேற்பட்ட இடங்களில் 88 லட்சத்திற்கும் அதிகமான மண் அகல் விளக்குகள் ஏற்றப்படும்," என்று மாநில அரசு செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான ஜிது வகானி தெரிவித்தார்.</p><p>மோடி பொதுவாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 7 வரை மாநிலம் தழுவிய 'சேவா சங்கல்ப் அபியான்' (சேவை உறுதிமொழி இயக்கம்) என்ற நிகழ்ச்சியை பா.ஜ.க. முன்னெடுக்கவுள்ளது.</p><h2>இருசக்கர வாகன பேரணி:</h2><p>பா.ஜ.க.வின் 'சேவா சங்கல்ப் அபியான்' இயக்கத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி பிறந்த ஊரான வத் நகரில் இருந்து வாரணாசிக்கு இருசக்கர வாகன பேரணி வியாழக்கிழமை காலை தொடங்கவுள்ளது; இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்.</p><p>மோடி 2001 அக்டோபர் 7 முதல் 2014 மே 22 வரை குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பணியாற்றினார். அவர் தற்போது வாரணாசி மக்களவை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.</p><p>இந்நிகழ்ச்சிகளில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மாநில பா.ஜ.க. தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா, மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தாதா சாகேப் பால்கே விருது பெறும் ஆனந்த் நாக்: பிரதமர் மோடி வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-congratulates-anant-nag-ji-on-being-conferred-dadasaheb-phalke-award</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-congratulates-anant-nag-ji-on-being-conferred-dadasaheb-phalke-award#comments</comments><guid isPermaLink="false">24e736fe-22ce-4eed-ab5f-28589662eacb</guid><pubDate>Wed, 16 Sep 2026 14:58:02 +0000</pubDate><atom:updated>2026-09-16T14:58:02.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆனந்த் நாக்,தாதா சாகேப் பால்கே விருது,Dadasaheb Phalke Award,pm modi,பிரதமர் மோடி,anant nag</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/fpnwj100/pm-modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/fpnwj100/pm-modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தாதாசாகேப் பால்கே விருது பெறவுள்ள நடிகர் அனந்த் நாக்-க்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இந்தியத் திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.</p><h2>தாதா சாகேப் பால்கே விருது</h2><p>2024-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது கன்னட நடிகர் ஆனந்த் நாக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த பங்களிப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குஜராத் மாநிலம் கெவாடியாவில் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த உயரிய விருது நடிகர் அனந்த் நாக்கிற்கு வழங்கப்படவுள்ளது.</p><p>கடந்த ஆண்டு கேரளாவின் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்நிலையில், தாதாசாகேப் பால்கே விருது பெறவுள்ள நடிகர் ஆனந்த் நாக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><h2>பிரதமர் மோடி வாழ்த்து</h2><p>இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:</p><p>தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற கலைஞர் ஆனந்த் நாக் அவர்களுக்கு வாழ்த்துகள்.</p><p>அவரது இயல்பான நடிப்பு, பன்முகத்தன்மை மற்றும் அபாரத் திறமை ஆகியவை இந்தியத் திரையுலகிலும், கன்னடத் திரையுலகிலும் ஆழமான முத்திரையைப் பதித்துள்ளன.</p><p>அவரைப் போன்ற மிகச் சிறந்த கலைஞருக்கு இது மிகவும் தகுதியான ஒரு கவுரவமாகும் என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>