<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 22 Aug 2026 21:28:06 +0000</lastBuildDate><item><title>அரசுப் பள்ளியில் அத்துமீறி ஆய்வு.. அபிஜித் தீப்கே மீது வழக்குப்பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-school-fir-cjp-founder-booked-for-unauthorized-entry-and-questioning-students-in-government-school</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-school-fir-cjp-founder-booked-for-unauthorized-entry-and-questioning-students-in-government-school#comments</comments><guid isPermaLink="false">bf1f2c53-619b-4e6f-8987-650cfa965fbc</guid><pubDate>Sat, 22 Aug 2026 21:01:29 +0000</pubDate><atom:updated>2026-08-22T21:01:29.547Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிஜேபி,CJP Protest,CJP,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/wigo3xz1/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/wigo3xz1/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் அரசுப் பள்ளிக்குள் அனுமதியின்றி நுழைந்து, மாணவர்களிடம் கேள்வி கேட்டு இடையூறு ஏற்படுத்திய புகாரின் பேரில் கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் <a href="https://www.maalaimalar.com/news/national/abijeet-dipke-warns-of-massive-delhi-jantar-mantar-style-protest-in-jaipur">அபிஜித் திப்கே</a> மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><h2>புகார்</h2><p> புகாரின்படி, ஆகஸ்ட் 20 அன்று பிற்பகல் 1 மணியளவில் அபிஜித் திப்கே மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டம் ஔசா பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர்.  அனுமதியின்றி வகுப்பறைகளுக்குள் சென்ற அவர்கள், மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை அங்கே நேரத்தைச் செலவிட்டுள்ளனர். மேலும் வகுப்பறை நிகழ்வுகளைப் புகைப்படமும் எடுத்துள்ளனர்.</p><h2>வாக்குவாதம்</h2><p>பள்ளியில் முழுமையான வருகைப்பதிவு மற்றும் சிறப்பான சூழல் இருப்பது போலக் காட்டுவதற்காக வேறொரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களை இந்த பள்ளியின் வகுப்பறையில் அமர வைத்தது தொடர்பாக ஆசிரியர்களுக்கும் சிஜேபினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  அப்போது ஆசிரியர்களை அவதூறாகப் பேசி, அவர்களைப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய வைப்பதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. </p><p>பள்ளி ஆசிரியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஔசா காவல் நிலையப் போலிஸார் அபிஜித் திப்கே உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.  </p><h2>நாய்களுக்கு நல்ல வசதி</h2><p>முன்னதாக பள்ளியை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது மாணவர்களின் வாழ்க்கைப் பிரச்சனை. மக்கள் பிரதிநிதிகள் மாணவர்களுக்காக எதுவுமே செய்யப்போவதில்லை என்றால், அவர்களுக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?</p><p>ஹெலிகாப்டரில் மட்டுமே பறப்பதற்காகவா மக்கள் வாக்களிக்கிறார்கள்? மக்கள் தங்கள் குழந்தைகள் எந்தச் சூழ்நிலையில் படிக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.</p><p>இந்த அமைச்சர்களின் நாய்களுக்குக்கூட மாணவர்களை விட சிறந்த வசதிகள் கிடைக்கின்றன.</p><p>சில பள்ளிகளில் மாணவர்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகின்றனர்.</p><p>போதிய வகுப்பறைகள், பெஞ்சுகள், கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பான சாலை வசதிகள் இல்லாத பள்ளிகளின் அவலநிலைக்கு மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர்களுமே பொறுப்பேற்க வேண்டும்.</p><p>கல்விக்காகப் பணியாற்றாத வரை எங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்க வர வேண்டாம் என்று அவர்களிடம் கூறுங்கள்.</p><p>அரசியலுக்காக சாதி, சமூகக் கொடிகளைப் பிடித்துக்கொண்டு நாம் வெளியே வருகிறோம்.</p><p>அதேபோல் நமது குழந்தைகளின் பள்ளிகளுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.</p> <h2>ஆபத்தில் மதம்</h2><p>அரசியல் தலைவர்கள் மதம் ஆபத்தில் உள்ளது என்று தொடர்ச்சியாக கூறுவதை குறிப்பிட்ட அவர், "இத்தனை ஆண்டுகளாக அழியாத மதம், உங்கள் ஆட்சிக் காலத்திலா அழியப் போகிறது? மதம் எங்கும் போய்விடாது.</p><p>ஆனால் நமது குழந்தைகளின் எதிர்காலம் கண்டிப்பாகப் பாதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.</p> <h2>ராஜினாமா செய்</h2><p>தாதா பூசே பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக தொடர வேண்டுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "பள்ளிகளின் அவலநிலையைப் பார்த்தால், கல்வி அமைச்சர் அந்தப் பதவியில் தொடரக்கூடாது என்றே தோன்றுகிறது.</p><p>அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்தால்தான் அங்குள்ள உண்மையான பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முடியும்" என தீப்கே பதிலளித்தார்.</p> <p>பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் ஆளும் அரசு, அரசுப் பள்ளிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரத் தவறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.</p><p>School Thik Karo (பள்ளிகளைச் சரிசெய்) என்ற பெயரில் சிஜேபி கடந்த வாரம் பிரசார இயக்கம் ஒன்றை தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பாஜக புதிய நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து.. ஜென் இசட் இளைஞர்களை கவர தனி குழு அமைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-launches-gen-z-outreach-new-high-level-team-formed-under-modi-and-nitin-naveen-to-woo-youth</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-launches-gen-z-outreach-new-high-level-team-formed-under-modi-and-nitin-naveen-to-woo-youth#comments</comments><guid isPermaLink="false">42c7d364-9939-4954-bdf6-0972b6be2744</guid><pubDate>Sat, 22 Aug 2026 20:20:33 +0000</pubDate><atom:updated>2026-08-22T20:20:33.599Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Prime Minister Modi,ஜென் இசட்,Gen z,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bu9nwjxm/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bu9nwjxm/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற <a href="https://www.maalaimalar.com/news/national/modi-govt-campus-outreach-ministers-to-visit-universities-daily-under-one-day-one-university-campaign-to-engage-gen-z-students">பிரதமர் மோடி</a>, கட்சியின் தலைவர் நிதின் நபின் தலைமையிலான புதிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.</p><h2>புதிய நிர்வாகிகள் </h2><p>பாஜகவின் 65 உறுப்பினர்கள் கொண்ட புதிய நிர்வாகி பட்டியல் ஆகஸ்ட் 17 அன்று அறிவிக்கப்பட்டது. இதில் 51 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p>ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் புதிய அமைப்பில் முக்கியப் பங்காற்ற உள்ளனர். </p> <h2>இளைஞர்களை கவர குழு</h2><p>14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இளைஞர்களை சென்றடையும் வகையில் பெரிய அளவிலான இயக்கத்தை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.</p><p>அந்த வகையில் ஜென் இசட் தலைமுறையினரை சென்றடைவதற்காக சிறப்பு 'ஜென் ஜி அவுட்ரீச் திட்டத்தை' பாஜக கையில் எடுத்துள்ளது.</p><p>இதற்காக தனித்துவமான உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், தேசியப் பொதுச்செயலாளர்களான ஸ்மிருதி இரானி மற்றும் வினோத் தாவ்டே ஆகியோருக்கு இந்த குழுவில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>மேலும், குஜராத் மாநில அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, சத்தீஸ்கர் மாநில அமைச்சர் ஓ.பி. சவுத்ரி உள்ளிட்ட பல முக்கிய இளம் தலைவர்களும் இந்த குழுவில் பணியாற்றவுள்ளனர்.</p> <h2>பாடம் கற்ற பாஜக </h2><p>தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய போராட்டம், தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வழிவகுத்தது.</p><p>இதைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட பிரதமர் மோடி, இன்ஸ்டாகிராமில் மாணவர்களை கவரும் வேலையில் இறங்கியுள்ளார். கட்சியினரையும் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.</p><p>அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றியை தீர்மானிப்பதில் ஜென் இசட் முக்கிய காரணியாக மாறும் சூழலில், அவர்களை கவர பல்வேறு விஷயங்களை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. பாஜகவின் சிந்தாந்த தலைமையாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஜென் இசட் சந்திப்புகளை நடத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஒடிசா அருகே வங்கக்கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் - 2 மாலுமிகள் மீட்பு - 22 பேரை தேடும் பணி தீவிரம்
</title><link>https://www.maalaimalar.com/news/national/cargo-ship-sinks-near-odisha-mv-ocean-winner-goes-down-in-bay-of-bengal-search-on-for-22-missing-crew</link><comments>https://www.maalaimalar.com/news/national/cargo-ship-sinks-near-odisha-mv-ocean-winner-goes-down-in-bay-of-bengal-search-on-for-22-missing-crew#comments</comments><guid isPermaLink="false">5f847ce9-cae5-4c9d-a07a-b17016f322f7</guid><pubDate>Sat, 22 Aug 2026 19:36:29 +0000</pubDate><atom:updated>2026-08-22T19:36:29.824Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒடிசா,Odisha,Indian Navy,இந்திய கடற்படை,cargo ship,சரக்கு கப்பல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/53c50an7/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கப்பல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கப்பல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/53c50an7/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒடிசா அருகே <a href="https://www.maalaimalar.com/news/national/indian-sailors-safe-22-indians-on-two-hijacked-merchant-ships-off-yemen-and-somalia-reported-unharmed">சரக்குக் கப்பல்</a> மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மூழ்கிய கப்பல்</h2><p>நேற்று முன் தினம் ஒடிசா கடற்கரையிலிருந்து சிங்கப்பூருக்கு இரும்புத் தாதை சுமந்து கொண்டு பனாமா நாட்டு கொடியுடன் எம்.வி. ஓஷன் வின்னர் என்ற சரக்கு கப்பல் புறப்பட்டது.</p><p>நேற்று, ஒடிசாவின் பாரதீப் கடற்கரையிலிருந்து சுமார் 240 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றபோது வங்கக்கடலில் கப்பல் மூழ்கியது.</p><p>தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவை இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.</p> <h2>பணியாளர்கள்</h2><p>இக்கப்பலில் 20 சீனா, 3 மியான்மர் மற்றும் 1 வங்கதேசத்தைச் சேர்ந்த மாலுமி என மொத்தம் 24 பணியாளர்கள் இருந்தனர். கடலில் மிதந்த 2 மாலுமிகள் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>எஞ்சிய 22 பணியாளர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் செல்லும் பிற கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தேடுதல் பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடத்தப்பட்ட 2 வணிகக் கப்பல்கள்.. 22 இந்திய மாலுமிகளின் நிலை குறித்து மத்திய அரசு விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-sailors-safe-22-indians-on-two-hijacked-merchant-ships-off-yemen-and-somalia-reported-unharmed</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-sailors-safe-22-indians-on-two-hijacked-merchant-ships-off-yemen-and-somalia-reported-unharmed#comments</comments><guid isPermaLink="false">6c872f7f-a3a5-4e19-bd7b-1d3a223fee11</guid><pubDate>Sat, 22 Aug 2026 18:19:53 +0000</pubDate><atom:updated>2026-08-22T18:19:53.525Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yemen,ஏமன்,கடற்கொள்ளையர்கள்,சோமாலியா,Somalia,Pirates</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/85v512tz/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கப்பல்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ கப்பல்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/85v512tz/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதிகளில் அடுத்தடுத்து <a href="https://www.maalaimalar.com/news/world/indian-crew-hostage-two-merchant-ships-hijacked-off-yemen-and-somalia-22-indians-in-peril">கடற்கொள்ளையர்கள் </a>கடத்திய  2 வணிகக் கப்பல்களில் சிக்கியுள்ள 22 இந்திய மாலுமிகளும் தற்போது பாதுகாப்பாக உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.</p> <h2>கடத்தல்</h2><p>எரித்திரியா நாட்டுக்கு கொடியுடன் எண்ணெய் பொருட்களை ஏற்றிச் சென்ற எம்டி ஷிபு 1 என்ற வணிக கப்பல் 20 பணியாளர்களுடன் ஏமன் கடற்கரைக்கு 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்தபோது ஆயுதமேந்திய 6 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கடற்கொள்ளையர்களால் </a>கடத்தப்பட்டுள்ளது. அதிலிருந்த 20 பணியாளர்களில் 16 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.</p><p>முன்னதாக எம்வி லுடிப் என்ற கேமரூன் கொடியுடன் கூடிய வணிக கப்பல் சோமாலியாவின் பன்ட்லேண்ட் கடற்கரைக்கு அருகே கடந்த திங்களன்று கடத்தப்பட்டுள்ளது.</p> <p>அதில் இருந்த மொத்தம் 10 பணியாளர்களில் 6 பேர் இந்தியர்கள் ஆவர். சோமாலிய அதிகாரி ஒருவரின் கூற்றை மேற்கோள் காட்டி அசோசியேட் பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.</p><p>இந்த கப்பலானது பண்ட்லேண்ட்டில் உள்ள Eyl மாவட்டத்தில் உள்ள மராரையாவுக்கு 3.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் வைத்து கடத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து வடக்கு சோமாலியாவில் உள்ள Nugaal கடற்கரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக அந்த சோமாலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.</p> <p>இந்த கப்பல் போலார் மூவ்மென்ட் ஷிப்பிங் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் சோமாலியாவில் உள்ள துருக்கி ராணுவ பயிற்சி மையத்திற்கு ஆயுதங்கள், பயிற்சி உபகரணங்கள், சேட்டிலைட் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளை கொண்டு சென்று கொண்டிருந்தது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p>கப்பலை 8 கடற்கொள்ளையர்கள் சேர்ந்து கடத்தியதாக நம்பப்படுகிறது. இவர்கள் முன்னதாக கடந்த ஏப்ரலில் எம்வி ஸ்வார்ட் என்ற கப்பலை கடத்தியர்வர்கள் என்று அந்த சோமாலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.</p> <h2>விளக்கம்</h2><p>இதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், "கடத்தப்பட்ட கப்பல்களில் உள்ள அனைத்து இந்திய மாலுமிகளும் காயங்களின்றி பாதுகாப்பாக உள்ளனர். </p><p>அவர்களை பத்திரமாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று உறுதியளித்துள்ளார்.</p> <p>சோமாலிய அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து மாலுமிகளை மீட்பதற்கான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை நைரோபியில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளது.</p><p>கடத்தப்பட்ட கப்பல்களின் நடமாட்டத்தை சர்வதேச கடற்படைக் கப்பல்களும், டிரோன்களும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>ம.பி. மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தீ விபத்து.. பிறந்த குழந்தை பலி - இரு குழந்தைகள்  காயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/infant-dies-after-fire-in-madhya-pradesh-govt-hospital-nicu-cradle-warmer-short-circuit-sparks-blaze-dozens-of-babies-evacuated-safely</link><comments>https://www.maalaimalar.com/news/national/infant-dies-after-fire-in-madhya-pradesh-govt-hospital-nicu-cradle-warmer-short-circuit-sparks-blaze-dozens-of-babies-evacuated-safely#comments</comments><guid isPermaLink="false">147ce48f-def8-4eda-9ca3-63957b7a3f22</guid><pubDate>Sat, 22 Aug 2026 17:17:55 +0000</pubDate><atom:updated>2026-08-22T17:17:55.501Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,அரசு மருத்துவமனை,Government Hospital,Madhya Pradesh,தீவிபத்து,மத்தியப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/jt8w8bit/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ம.பி. மருத்துவமனை தீ விபத்து ]]></media:title><media:description type="html"><![CDATA[ ம.பி. மருத்துவமனை தீ விபத்து ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/jt8w8bit/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/madhya-pradesh">மத்தியப் பிரதேசத்தில்</a> அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81"> தீவிபத்தில் </a>பச்சிளம் குழந்தை பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><h2>அரசு மருத்துவமனை</h2><p>மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்ட அரசு மருத்துவமனையி இன்று அதிகாலை 1:50 மணியளவில் இந்த தீ விபத்து நிகழ்ந்தது.  </p><p>புதிதாக பிறக்கும் குறைந்த எடையுள்ள மற்றும் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் உடல் வெப்பநிலையைப் பராமரிக்கப் பயன்படும் Cradle Warmer இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகத் தீப்பொறி உருவானதாகக் கூறப்படுகிறது.  </p><h2>தீ பரவல்</h2><p>வார்மர் இயந்திரத்தில் பற்றி எரிந்த தீ, அங்கிருந்த படுக்கை விரிப்புகளுக்கும் பரவியது.</p><p>தீ பரவுவதைக் கண்டவுடன் அங்குப் பணியிலிருந்த ஊழியர்கள், எரியும் வார்மர் இயந்திரத்தை மற்ற குழந்தைகளிடமிருந்து தள்ளி நகர்த்தினர்.</p><p>அதே பிரிவில் சிகிச்சையில் இருந்த 33 குழந்தைகளும், அருகிலுள்ள வெளிப்புறப் பிரிவில் இருந்த 30 குழந்தைகளும் பத்திரமாக வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.</p><p>மேலும், தீ மேல் தளத்திலிருந்த மகப்பேறு வார்டுக்குப் பரவாமலும் தடுக்கப்பட்டது.</p><p>இருப்பினும் தீ விபத்து ஏற்பட்ட பிரிவில் ஆக்சிஜன் உதவியுடன் இருந்த 3 குழந்தைகள் தீக்காயமடைந்துள்ளன.</p> <h2>உயிரிழப்பு</h2><p>காயமடைந்த 3 குழந்தைகளும் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.</p><p>அங்கு சிகிச்சையில் இருந்த ஒரு குழந்தை உயிரிழந்தது. எனினும், குழந்தையின் உடற்கூறாய்வு அறிக்கையில் அக்குழந்தை தீக்காயங்களால் இறக்கவில்லை என்றும், பிறப்பிலேயே இருந்த தீவிர சுவாசக் கோளாறு பிரச்சனையாலேயே உயிரிழந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>லேசான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மற்ற இரு குழந்தைகள் தற்போது சீரான உடல்நிலையுடன் உள்ளனர்.</p> <h2>விசாரணை</h2><p>இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உமங் சிங்கார், மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உடனடியாக தீவிபத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தணிக்கை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் குறித்த மனுஸ்மிருதியின் விதிமுறை வெட்கக்கேடானது- ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/women-are-not-owned-by-husbands-or-sons-rahul-gandhi-on-manusmriti</link><comments>https://www.maalaimalar.com/news/national/women-are-not-owned-by-husbands-or-sons-rahul-gandhi-on-manusmriti#comments</comments><guid isPermaLink="false">7c0749ae-c81e-4872-a3d5-9169de0ca044</guid><pubDate>Sat, 22 Aug 2026 16:33:17 +0000</pubDate><atom:updated>2026-08-22T16:33:17.692Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,மனுஸ்மிருதி,manusmriti</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/kt3x6te8/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi slams Manusmriti’s control over women]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/kt3x6te8/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெண்கள் தங்களுக்கு தாங்களே சொந்தமானவர்கள் என்றும் தங்கள் தந்தைக்கோ, கணவனுக்கோ அல்லது மகன்களுக்கோ சொந்தமானவர்கள் கிடையாது என்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி</a> கூறினார். </p><p>மேலும், ஒரு பெண் தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆண் உறவினர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்க வேண்டும் என்ற மனுஸ்மிருதியின் விதிமுறை வெட்கக்கேடானது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் நலத் திட்டமான 'சத்ரோன் கி கூஞ்ச்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களவை எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.</p><p>அப்போது அவர் கூறுகையில், “இந்தியப் பெண்களின் 70 கோடி தனித்துவமான பயணங்கள், தனித்துவமான கற்பனைத்திறன், தனித்துவமான கனவுகள் தான் இந்தியாவின் மிகப்பெரிய பலமாக உள்ளது.</p><p>குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் தன் தந்தைக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும், இளமைப் பருவத்தில் அவள் தன் கணவனுக்குச் சொந்தமானவள், அவளது கணவன் இறந்த பிறகு, அவள் தன் மகன்களுக்குச் சொந்தமானவள் என்று மனுஸ்மிருதி தெளிவாகக் கூறுகிறது.</p><p>ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருக்கக்கூடாது. இந்த வார்த்தைகள் வெட்கக்கேடானவை. இந்த வார்த்தைகள் பேசப்பட்டிருக்கவே கூடாது.</p><p>நீங்கள் உங்களைத் தவிர வேறு யாருக்கும் சொந்தமானவர் அல்ல. உங்கள் தந்தை, சகோதரர், கணவர், மகன் ஆகியோருடன் உங்களுக்கு உறவு இருக்கலாம், ஆனால் நீங்கள் அவர்களுக்கு சொந்தமானவர் அல்ல, நீங்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவர்.</p><p>நான் சொற்பொழிவாற்றவோ அல்லது அரசியல் விவாதிக்கவோ இங்கு வரவில்லை; மாறாக, இளைஞர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், கருத்துக்களைக் கலந்துரையாடவும் ஒரு வாய்ப்பை வழங்குவதற்காகவே வந்துள்ளேன்.</p><p>கூண்டைத் தகர்த்தெறியுங்கள் என்ற கூட்டத்தில் பேச எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெண்களாகிய நீங்கள் தனித்துவமானவர், நீங்கள் சிறப்பானவர், நீங்கள் ஒரு தனிநபர், மேலும் உங்களுக்கென சொந்தக் கனவும் தொலைநோக்குப் பார்வையும் உண்டு.</p><p>பெண்கள் இயல்பாகவே ஆண்களை விட அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், மென்மையானவர்கள், கருணையுள்ளவர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் என்பதே எனது வாதம்.</p><p>பெண்கள் பெரும்பாலும் மகள், மனைவி அல்லது தாய் என்ற மூன்று அடையாளங்களுக்குள் முடக்கப்பட்டனர்; இந்த உறவுகளில் தவறொன்றுமில்லை என்றாலும், இவை மட்டுமே அவர்களின் ஒரே அடையாளமாக இருக்க முடியாது.</p><p>பெண்கள் தொழில் வல்லுநர்களாகவும் விளையாட்டு வீராங்கனைகளாகவும் பல்வேறு துறைகளில் தீவிரமாகச் செயல்பட்டாலும், அவர்களின் அடையாளங்கள் பெரும்பாலும் ஆண்களுடனான உறவுகளின் மூலமே வரையறுக்கப்படுகின்றன” என்று ராகுல் காந்தி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட 53 வயது யானைக்கு வந்தாராவில் சிறப்பு சிகிச்சை: விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது</title><link>https://www.maalaimalar.com/news/national/flood-rescued-elephant-joymoti-airlifted-to-vantara-for-specialised-treatment</link><comments>https://www.maalaimalar.com/news/national/flood-rescued-elephant-joymoti-airlifted-to-vantara-for-specialised-treatment#comments</comments><guid isPermaLink="false">17fd6b82-3ba2-454d-8caf-96d74be59be1</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:08:17 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:08:17.622Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Assam Flood,அசாம் வெள்ளம்,Vantara,வந்தாரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/uxiurava/Elephant001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யானை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/uxiurava/Elephant001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாகலாந்து மற்றும் அசாமில் கடந்த மாதம் 2-வது வாரத்தில் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் 53 வயதான பெண் யானை (ஜோய்மோதி) அடித்துச் செல்லப்பட்டது. நாகலாந்து அதிகாரிகள் உள்ளூர் மக்கள் உதவியுடன் இந்த யானையை மீட்டனர்.</p><h2>காயத்துடன் அவதிப்பட்ட யானை</h2><p>ஆனால் யானையின் உடம்பில் பெரும்பாலான இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. ஒரு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு கண்ணீர் வடிந்த வண்ணம் உள்ளது. உள்ளூர் பகுதியில் கால்நடை மருத்துவர்கள் காயங்களுக்கு மருந்து வைத்து கட்டினார்கள். என்றாலும், நீண்ட நேரம் நிற்க முடியாமல் ஜோய்மோதி அவதிப்பட்டது. மேலும், சரியாக உணவு சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டது.</p><p>இதனால் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள அம்பானியின் வந்தாராவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டால் நீண்ட நேரம் ஆகும் என்பதால் வான்வழியாக வந்தாரா கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><h2>வந்தாரா</h2><p>வந்தாரா ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆனந்த் அம்பானி மூலம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தொடங்கப்பட்ட ஒரு பெரிய வனவிலங்கு பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமாகும். காயம்பட்ட, துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மற்றும் ஆபத்தில் உள்ள விலங்குகளுக்கு இது அடைக்கலம் அளிக்கிறது.</p><p>வனவிலங்குகளுக்கான அவசர சிகிச்சையில் உள்ளூர் திறனை வலுப்படுத்தும் நோக்கில், அசாமில் மூன்று வனவிலங்கு கால்நடை மருத்துவப் பராமரிப்பு மையங்களை (அதில் ஒன்று யானைகளுக்கென பிரத்யேகமாக அமைக்கப்படவுள்ளது) நிறுவ 'வந்தாரா' (Vantara) முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்தின்படி, இந்த மையங்கள் அந்தந்த விலங்கினங்களுக்கு ஏற்ற உள்கட்டமைப்பு மற்றும் கால்நடை மருத்துவ வசதிகளைக் கொண்டிருக்கும்; மேலும் இவை அசாம் வனத்துறையால் தன்னாட்சி முறையில் இயக்கப்படும்.</p><p>அசாமில் உள்ள யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கு, அவசரநிலை ஏற்படும் இடங்களுக்கு அருகிலேயே சிறப்பு மருத்துவ சிகிச்சையை வழங்குவதே இம்மையங்களை அமைப்பதன் நோக்கமாகும்; இதன் மூலம் விலங்குகளை நீண்ட தூரம் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் குறையும்.</p>]]></content:encoded></item><item><title>மார்க்கெட்டில் உலாவும் செயற்கை பனீர்: கர்நாடக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-bans-sale-of-analogue-paneer-marketed-as-paneer-for-one-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-bans-sale-of-analogue-paneer-marketed-as-paneer-for-one-year#comments</comments><guid isPermaLink="false">0ec7c8e3-896d-44ef-a1d9-447547e85b99</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:34:18 +0000</pubDate><atom:updated>2026-08-22T14:34:18.968Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Paneer,பனீர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7c08kici/Paneer0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செயற்கை பனீர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7c08kici/Paneer0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புரோட்டீன் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பனீரை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பயன்படுத்தில் பால் அல்லாத தாவர எண்ணெய் போன்ற பொருட்களில் இருந்த போலியாக செயற்கை பனீர் சந்தைகளில் உலாவருகின்றன. இது பொதுமக்களில் சுகாதாரத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மகாராஷ்டிரா அரசு அனலாக பனீர் என அழைக்கப்படும் செயற்கை பனீருக்கு தடைவிதித்திருந்தது. அந்த வகைியல் தற்போது கர்நாடக அரசு ஒரு வருடம் தடைவிதித்துள்ளது.</p> <p>கர்நாடக அரசு உண்மையான பனீருக்கு மாற்றாக தயாரிக்கப்பட்டு பனீர் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் அனலாக் பனீர் அல்லது Non-Dairy Paneer தயாரிப்பு சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனைக்கு மாநிலம் முழுவதும் ஓராண்டு தடை விதித்துள்ளது. பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிட்ட அரசு அறிவிப்பில் இந்தத் தடை குறிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தி, பதப்படுத்துதல், பேக்கிங், சேமிப்பு, போக்குவரத்து, மொத்த மற்றும் சில்லறை விற்பனை, விற்பனைக்காகக் காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை பொருந்தும்.</p><h2>போலி பனீர்</h2><p>பாலில் இருந்து தயாரிக்கப்படும் உண்மையான பனீரில் பால் கொழுப்பு மற்றும் பால் திடப்பொருட்கள் முக்கியமானவை. ஆனால், அனலாக் பனீரில் பால் கொழுப்புக்கு பதிலாக தாவர எண்ணெய், தாவர கொழுப்பு, மாவுச்சத்து, எமல்சிபையர்கள் மற்றும் பிற பால் அல்லாத பொருட்கள் பயன்படுத்தப்படலாம்.</p><p>உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின்படி, இத்தகைய தயாரிப்புகளை ‘பனீர்’ என்ற பெயரில் லேபிள் செய்வது (பொருட்கள் மீது விவரம் அடங்கிய அட்டை அல்லது அச்சிடுதல்), விளம்பரப்படுத்துவது அல்லது விற்பனை செய்வது அனுமதிக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>எனினும், FSSAI தனித்தனி தரநிலைகளை ஏற்கனவே நிர்ணயித்துள்ள Frozen Dessert, Processed Cheese, Mixed Fat Spread போன்ற தயாரிப்புகளுக்கு இந்தத் தடை பொருந்தாது.</p><p>மேலும், உணவுத் தயாரிப்புகளில் அனலாக் பனீரை மூலப்பொருளாகப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறாமல் உணவு நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு: உறவினரை அழைத்து வந்து கணவரை அடித்துக் கொலை செய்த மனைவி</title><link>https://www.maalaimalar.com/news/national/husband-kills-wife-after-dispute-arrests-made</link><comments>https://www.maalaimalar.com/news/national/husband-kills-wife-after-dispute-arrests-made#comments</comments><guid isPermaLink="false">dd9facbe-d79a-41d9-b438-9a1d21188031</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:44:40 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:44:40.632Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மனைவி கைது,Wife Arrested,delhi,software engineer,டெல்லி,மென்பொருள் பொறியாளர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/1bn5boru/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi software engineer murder]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/1bn5boru/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவரை தனது மருமகள் வீட்டார் அடித்து கொலை செய்து விட்டதாக, உயிரிழந்த பொறியாளரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மனைவி உள்பட நான்கு பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.</p><h3><strong>பொறியாளர் வினய் குப்தா</strong></h3><p>வினய் நொய்டாவில் உள்ள அடோப் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்று வந்துள்ளார்.</p><p>இவர், மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரேகா என்பவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.</p><p>டெல்லியில் உள்ள வீட்டில், வினய்-யும் அவரது மனைவியும் மூன்றாவது மாடியிலும், வினய்யின் பெற்றோர்கள் கீழ்தளத்திலும் வசித்து வந்துள்ளனர்.</p><p>இதையடுத்து இன்று காலை வினய் குப்தாவுக்கும் அவரது மனைவி ரேகாவுக்கும் இடையே, தங்கள் குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><p>அப்போது ரேகா வீட்டில் இருந்து வெளியேறி, தனது தந்தை, இரண்டு சகோதரர்கள், மாமா என குடும்ப உறுப்பினர்களை வினய் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.</p><p>இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. அதைத் தொடர்ந்து ரேகாவின் குடும்ப உறுப்பினர்கள் வினயை தாக்க தொடங்கியுள்ளனர்.</p><h3><strong>பொறியாளரின் தாய் குற்றச்சாட்டு</strong></h3><p>இன்று நடந்த சம்பவம் குறித்து வினய்யின் தாய் கூறுகையில், ”மருமகளின் குடும்பத்தினருக்கு தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி வருவதற்காக வெளியே சென்றேன்.</p><p>நான் திரும்பி வந்தபோது, என் மகனை மருமகளின் வீட்டார் தாக்கிக்கொண்டு இருந்தனர். நான் உடனே தாக்குதலை நிறுத்துமாறு அவர்களிடம் கெஞ்சினேன். ஆனால் என் மகன் மீது தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டது.</p><p>மருமகளின் வீட்டார், எனது மகனின் கழுத்தை நெரித்து, மார்பில் உதைத்து தாக்கினர். இந்த சம்பவத்தை முன்கூட்டியே திட்டம் தீட்டி, எனது வீட்டில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ரேகா அணைத்துவிட்டார்” என்று அவர் கூறினார்.</p><p>தாக்குதல் நடந்த சில நிமிடங்களுக்கு பிறகு, வினய்-யின் பக்கத்து வீட்டுக்காரர் உள்ளே வந்து, அவரை தோளில் சுமந்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வினய் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.</p><h3><strong>மனைவி குடும்பத்தார்கள் கைது</strong></h3><p>இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ரேகா, அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் அண்ணி என நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறையில் இருக்கும் ரவுடியுடன் வீடியோ காலில் பேசியபடி ஆடைகளை கழற்றிய இன்ஸ்பெக்டர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/inspector-strips-on-video-call-with-jailed-rowdy</link><comments>https://www.maalaimalar.com/news/national/inspector-strips-on-video-call-with-jailed-rowdy#comments</comments><guid isPermaLink="false">284a5926-5def-470c-b0a6-d1766be09561</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:07:41 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:07:41.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,பெண் இன்ஸ்பெக்டர்,karnataka police,woman inspector,Rowdy Saikumar,Hindalga Jail,ஹிண்டல்கா சிறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/0eqwoyqj/Woman-Inspector" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Woman Inspector]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/0eqwoyqj/Woman-Inspector?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81">பெங்களூரு</a>வில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ சமூக வலை தளங்களில் வெளியானது. அதில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் போனில் பேசிக்கொண்டே தனது ஆடைகளை கழற்றுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. </p><p>இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து அந்த பெண் அதிகாரி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பொதுமக்களிடமும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.</p><h2><strong>பெண் இன்ஸ்பெக்டர்</strong></h2><p>இதனைதொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீடியோவில் இருப்பது கர்நாடக மாநில தொழிலல் துறை பாதுகாப்புப் படையை சேர்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">பெண் இன்ஸ்பெக்டர்</a> என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.</p><h2><strong>புகார் விசாரணை</strong></h2><p>பெண் இன்ஸ்பெக்டர் ஹிண்டல்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தனது நண்பரான ரவுடி சாய்குமார் என்பவருடன் வீடியோ காலில் பேசிய போது ஆடைகளை கழற்றியது தெரியவந்தது. இதையடுத்து பெண் இன்ஸ் பெக்டர், சாய்குமார் மற்றும் சிலர் மீது கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.</p><p>இதையடுத்து போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனைகள் பெற்று வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-</p><p>வீடியோவில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் புகார் அளித்து விட்டு தற்போது விடுமுறையில் சென்று விட்டார். இந்த வீடியோ கடந்த 2024-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ரவுடிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெண் இன்ஸ்பெக்டரின் நண்பரான சாய்குமார் துமகூரு மாவட்டம் குனிகல் பகுதியை சேர்ந்தவர்.</p><h2><strong>சிறை தொடர்பு அம்பலம்</strong></h2><p>இந்த வீடியோ எடுத்த காலக்கட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஹிண்டல்கா மத்திய சிறையில் பணியில் இருந்தார். அந்த சிறையில் தான் சாய்குமாரும் அடைக்கப்பட்டு இருந்தார். </p><p>அவர்சிறையில் இருந்த போது இன்ஸ்பெக்டர், ரவுடி தொடர்பு கொண்டு ஆபாசமான அழைப்புகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சாய்குமார் அந்த அழைப்பை பதிவு செய்து கொண்டு அதை சமீபத்தில் கசிய விட்டுள்ளார்.</p><h2><strong>ரவுடியின் லஞ்ச புகார்</strong></h2><p>மேலும் ரவுடி சாய்குமாரும், பெண் இன்ஸ்பெக்டர் மீது புகார் அளித்து உள்ளார். அதில் சிறைக்குள் தன்னிடம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம் </a>பெற்றுக்கொண்டு தொலைபேசிகள், மது பானம் மற்றும் பிற ஆடம்பர பொருட்களை அவர் வழங்கியதாக குற்றம் சாட்டி உள்ளார். அதே கைபேசி தான் வீடியோ அழைப்புகளை பதிவு செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>சிறையில் நடக்கும் முறை கேடுகளை அம்பலப்படுத்துபவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படும் என மிரட்டப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><h2><strong>பெண் இன்ஸ்பெக்டர் சர்ச்சை</strong></h2><p>அவரது புகாரின் அடிப்படையில் பெண் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான விசாரணை நடை பெற்று வருகிறது. இதற்கிடையே சிறை அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளுடன் ஒரு வீடியோ இன்ஸ்டா கிராமில் பகிரப்பட்டது.</p><p>அந்த பதிவை தொடர்ந்து சிறை அதிகாரிகள் பெலகாவி சிஇஎன் போலீசில் நிலையத்தில் புகார் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பெண் போலீஸ் வீடியோ வேகமாக பரவி வருவதால் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகா</a>வில் பரபரப்பு நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>நாக்பூரில்  36 டன் தாய் கெளுத்தி மீன்கள் அழிப்பு: காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/11-ponds-raided-36-tonnes-of-banned-thai-mangur-destroyed-in-nagpur</link><comments>https://www.maalaimalar.com/news/national/11-ponds-raided-36-tonnes-of-banned-thai-mangur-destroyed-in-nagpur#comments</comments><guid isPermaLink="false">ab21c3d0-c9c3-4bea-aff8-c96b7922996e</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:43:18 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:43:18.635Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மகாராஷ்டிரா,நாக்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/0rxwuzsf/CatFish001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கெளுத்தி மீன்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/0rxwuzsf/CatFish001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் மீன்வளத்துறை சார்பில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்கள் குளங்கள் அமைத்து தாய் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>அப்போது 11 குளங்களில் வளர்க்கப்பட்டு வந்த சுமார் 36 டன்கள் தாய் கெளுத்தி (தாய் மங்கூர்) மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதை லாரிகள் ஏற்று, சுற்றுச்சூழல் பாதிப்படையாக இடத்தில் பெரிய பள்ளம் தோண்டி, அதில் கொட்டி மூடினர்.</p><p>அதிகாரிகளுக்கு வந்த புகார் அடிப்படையில் பர்ஷிவ்னி தாலுகாவில் உள்ள சிசோலி-மகதுலா பகுதியில் குளங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">11 Ponds Raided, 36 Tonnes Of Banned Thai Mangur Destroyed In Nagpur<a href="https://t.co/uXenI0Aa0G">https://t.co/uXenI0Aa0G</a> <a href="https://t.co/zSGf2zFFCZ">pic.twitter.com/zSGf2zFFCZ</a></p>&mdash; NDTV (@ndtv) <a href="https://x.com/ndtv/status/2090700292941889635?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>உள்ளூரைச் சேர்ந்த 25 மீனவர்கள் உதவியுடன் இந்த மீன்கள் குளத்தில் இருந்து அகற்றப்பட்டன. கடந்த 3 மாதங்களில் 51 டன் மீன்கள் அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அழிக்கப்பட்டது மிகப்பெரிய அளவிலானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த வகை தாய் கெளுத்தி மீன்கள் சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதால், இந்தியாவில் இவற்றை வளர்க்க அரசாங்கம் தடை விதித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவல்துறையில் ஓய்வுபெற்ற நாய்களை இனிமேல் தத்தெடுக்க அனுமதி கிடையாது: தேவேந்திர பட்னாவிஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/retired-police-dogs-no-longer-allowed-for-adoption-devendra-fadnavis</link><comments>https://www.maalaimalar.com/news/national/retired-police-dogs-no-longer-allowed-for-adoption-devendra-fadnavis#comments</comments><guid isPermaLink="false">c01902b7-9d2d-47b0-9c0d-49c219587c31</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:32:00 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:32:00.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,தேவேந்திர பட்னாவிஸ்,devendra fadnavis,police dog,காவல் நாய்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/c1hy9e6c/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Maharashtra Police Retired Dogs Adoption Ban]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/c1hy9e6c/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற காவல் நாய்கள் இனி மூன்றாம் தரப்பினருக்கு தத்தெடுப்புக்காக வழங்கப்படாது என அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று அறிவித்தார்.</p><p>காவல்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற நாய்கள், தங்கள் பணியை நிறைவு செய்த பிறகு பொதுவாக தத்தெடுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்த வகையான காவல் நாய்களுக்கு, தங்கள் பராமரிப்பாளர்களிடம் இருந்தும், வழக்கமான பழக்கவழக்கங்களில் இருந்தும் திடீரென பிரிவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியது.</p><p>இதன் விளைவாக, பல நாய்கள் மன அதிர்ச்சிக்கு உள்ளாகி, தங்களின் புதிய சூழல்களில் உணவை உண்பதற்கு மறுத்து வந்தன.</p><p>இந்த நிலையில், பணி ஓய்வு பெற்ற காவல் நாய்களின் நலன் குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் புதிய அறிவிப்பை பிறப்பித்துள்ளார்.</p><h3><strong>மகாராஷ்டிர முதலமைச்சர்</strong></h3><p>அவர் அந்த அறிவிப்பில், மகாராஷ்டிர காவல்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு நாய், தனது பணி ஓய்வுக்கு பிறகு துன்பப்படக்கூடாது. அத்தகைய விலங்குகள் நன்கு பராமரிக்கப்பட்டு, தங்கள் வாழ்நாளின் எஞ்சிய காலத்தை வசதியாக வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.</p><p>பணி ஓய்வு பெற்ற நாய்கள், தங்களின் நீண்டகால பொறுப்பாளர்களுடன் காவல் துறையிலேயே தொடர்ந்து பணியாற்றும், அவர்களது வாழ்க்கை மற்றும் மருத்துவ செலவுகள் அனைத்தும் உள்துறை அமைச்சகத்தால் முழுமையாக நிதியளிக்கப்படும் என்றார்.</p><h3><strong>ஓய்வுபெற்ற காவல் நாய்கள்</strong></h3><p>இதன்படி காவல் நாய்கள் 10 வருட சேவைக்கு பிறகு, செயல்பாட்டு பணிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறும், ஆனால் அவற்றின் எஞ்சிய ஆண்டுகளை கழிப்பதற்காக படையில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.</p><p>பத்தாண்டு கால சேவையின் போது காவல் நாய்களுக்கும் அதன் பயிற்றுவிப்பாளருக்கும் இடையில் உருவான வலுவான பிணைப்பு தடையின்றி நீடிப்பதை இந்த கொள்கை உறுதி செய்கிறது.</p><p>ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை தேவைகள் உள்ளிட்ட ஓய்வுக்கு பிந்தைய அனைத்து செலவுகளுக்கும் மகாராஷ்டிர உள்துறை நேரடியாக நிதியளிக்க உள்ளது.</p><p>பணி ஓய்வு பெற்ற நாய்கள் முழுமையான அரசு ஆதரவுடனான வாழ்நாள் பராமரிப்புக்கு மாறுவதன் மூலம், அந்த நாய்கள் தங்கள் சேவையை நிறைவு செய்தபிறகு, அவற்றுக்கு தேவையான ஆறுதலும் பழக்கமான சூழலும் பெறுவது உறுதி செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஈக்கள், கரப்பான்பூச்சிகள்: மகாராஷ்டிராவில் மெக்டொனால்டு உள்பட 12 முக்கிய உணவகங்களின் லைசென்ஸ் ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-fda-suspends-licences-of-mcdonalds-12-others-after-flies-cockroaches-found</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-fda-suspends-licences-of-mcdonalds-12-others-after-flies-cockroaches-found#comments</comments><guid isPermaLink="false">f6d782c5-2eb9-4969-9acd-055e31f3fb2b</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:20:15 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:20:15.085Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>McDonald,மெக்டொனால்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/l8k4ikjz/FDA0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுகாதாரமற்ற உணவு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/l8k4ikjz/FDA0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்மாநிலத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) பல்வேறு இடங்களில் உள்ள முக்கியமான உணவகங்கள், பேக்கரிகள், கிளப்கள் போன்றவற்றில் உணவு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். கடந்த சில நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு உணவகங்களில் தூய்மை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>இதனால் தூய்மை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மேம்படுத்துமாறு 71 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், 13 கடைகளின் உணவகங்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மறு உத்தரவு வரும் வரை உணவுகள் விநியோகம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>கடந்த 19-ந்தேதி பாம்பே பிரசிடென்சி ரேடியோ கிளப்பில் சோதனை நடத்தப்பட்டது. இதில் விதிமுறையை 47 சதவீதம் வரை கூட கடைபிடிக்கவில்லை என தெரியவந்தது. இதனால் இந்த கிளப் உணவு விநியோகம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ரேடியோ கிளப்</h2><p>சமையலறையில் ஏராளமான ஈக்கள் பறந்து கொண்டிருந்ததாகவும், செத்துப்போன கரப்பான்பூச்சிகள் ஆங்காங்கே காணப்பட்டதாகவும் FDA இன்ஸ்பெக்டர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் உணவு தயாரிக்கும் இடங்களுக்கு மேலே உள்ள கூரையில் வண்ணப்பூச்சு மற்றும் சாந்து உதிர்ந்து இருப்பதையும், உணவுக்கு அருகில் சலவைத்தூள் மற்றும் பிற ரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதையும், உணவுப் பொருட்கள் நேரடியாகத் தரையில் வைக்கப்பட்டிருப்பதையும், அசைவ உணவுகளுக்காக பயன்படுத்தப்பட்ட தூய்மையற்ற குளிர்சாதன பெட்டிகள் இருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>மேலும் பூச்சிகளும் அசுத்தங்களும் உள்ளே நுழையக்கூடிய வகையில் சமையலறைக் கதவு சரியாக மூடப்படாமல் இருந்ததையும், சமையல் அடுப்புகளுக்கு அருகில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்ததையும், வளாகத்தில் எச்சில் துப்பியதற்கான தடயங்களையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><h2>மெக்டொனால்டு கிளை</h2><p>ஹார்ட்கஸில் ரெஸ்டாரண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Hardcastle Restaurants Pvt Ltd) நிறுவனத்தால் இயக்கப்படும் கொலாபாவில் உள்ள மெட்ரோ ஹவுஸ் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் FSSAI உரிமம் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.</p><p>ஆகஸ்ட் 19-ந்தேதி நடத்தப்பட்ட மறுஆய்வின் போது, ​​முன்னதாக வழங்கப்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த 20 குறைபாடுகளில் 18 குறைபாடுகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்று FDA தெரிவித்துள்ளது.</p><p>இந்த ஆய்வின்போது, ​​சரியாக அளவீடு செய்யப்படாத குளிரூட்டும் சாதனங்கள், உயிருள்ள கரப்பான் பூச்சிகள், பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பொறிகள் இல்லாமை, சமையலறைத் தரையில் அழுகிய உணவுக்கழிவுகள், அழுக்கான துப்புரவுத் துணிகள் மற்றும் பாதுகாப்பு உறைகள் இல்லாத தூசி படிந்த விளக்குகள் ஆகியவை கண்டறியப்பட்டன. மேலும், அழுக்கான காலணிகள் மற்றும் துப்புரவுத் துணிகளைத் தொட்ட பிறகு கைகளைக் கழுவாமல், உடனடியாக உண்ணக்கூடிய உணவை ஊழியர்கள் கையாண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இந்த உணவகம் ஆகஸ்ட் 12 அன்று 148 பக்கங்கள் கொண்ட விதிமுறை இணக்க அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.  இருப்பினும், மறுஆய்வின் போது பெரும்பாலான தீவிரமான குறைபாடுகள் இன்னும் சரிசெய்யப்படாமல் இருந்ததாக FDA கூறியது.</p><p>உண்மையான சீஸ் மற்றும் பனீர் (paneer) பயன்படுத்தப்படுவதாக வாடிக்கையாளர்களிடம் கூறப்பட்டிருந்தாலும், "GO Cheese SAUCE" எனப்படும் பதப்படுத்தப்பட்ட பால் அல்லாத அல்லது அனலாக் (மாற்று) தயாரிப்பு பயன்படுத்தப்பட்டதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.</p><p>மெக்டொனால்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெளியிட்ட அறிக்கையில், உணவுப் பாதுகாப்பு விவகாரங்களில் நிறுவனம் 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' (zero-tolerance) கொள்கையைக் கொண்டிருப்பதாகவும், ஒழுங்குமுறை நடைமுறைகளை மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகவும், உண்மையான சீஸ் மற்றும் பனீர் பயன்பாடு உட்பட உணவுத் தரம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான கடுமையான தரநிலைகளைத் தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராஜஸ்தானில் 611 அரசுப் பள்ளிகளுக்குச் சொந்தக் கட்டடங்கள் இல்லை: பேரவையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/611-government-schools-in-rajasthan-lack-own-buildings-shocking-revelation-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/national/611-government-schools-in-rajasthan-lack-own-buildings-shocking-revelation-in-assembly#comments</comments><guid isPermaLink="false">a6e99a06-bb80-4c3c-8e45-40d93b5c3591</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:36:03 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:36:03.088Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜெய்ப்பூர்,jaipur,Rajasthan schools,Rajasthan BJP,ராஜஸ்தான்,CJP,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/jgxqae5x/raja.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajasthan schools ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/jgxqae5x/raja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 611 அரசுப் பள்ளிகள் சொந்தக் கட்டடங்கள் இன்றி இயங்கி வருவதாக அம்மாநில அரசு சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் டீகா ராம் ஜூலி எழுப்பிய கேள்விக்கு, 2025-26ஆம் ஆண்டிற்கான UDISE தரவுகளின் அடிப்படையில் கல்வித் துறை இந்த அதிர்ச்சிப் பதிலளித்துள்ளது.</p><h2>CJ<strong>P ஆய்வு</strong></h2><p>இளைஞர் மற்றும் குடிமக்கள் அமைப்பான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP), "ஸ்கூல் தீக் கரோ" (பள்ளிகளைச் சீரமைப்போம்) என்ற பிரசாரத்தின் கீழ் மாநிலம் தழுவிய கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ஜெய்ப்பூர் அருகே பகரூ பகுதியில், பழுதடைந்த பள்ளி கட்டடத்திற்குப் பதிலாக மாணவர்கள் மாட்டுக்கொட்டகையில் அமரவைக்கப்பட்டுப் பாடம் நடத்தப்படுவதாக எழுந்த புகாரை ஆய்வு செய்யச் சென்ற CJP குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>அடிப்படை வச<strong>திகளற்ற பள்ளி</strong>கள்</h2><p> மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் 38 பள்ளிகளும், ஜாலாவார் மாவட்டத்தின் அக்லேரா பகுதியில் அதிகபட்சமாக 23 பள்ளிகளும் கட்டடமின்றி இயங்குகின்றன. சொந்தக் கட்டடம் கொண்ட 64,484 பள்ளிகளில், 2,047 பள்ளிகளில் கழிப்பறைகளும் 1,049 பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியும் இல்லை. பான்ஸ்வாரா மாவட்டத்தில் அதிகபட்சமாக 188 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை.</p><h2>எதிர்க்கட்சி <strong>குற்றச்சாட்டு</strong></h2><p>மாநிலத்தில் 3,768 அரசுப் பள்ளிக் கட்டடங்களும் 83,000-க்கும் மேற்பட்ட வகுப்பறைகளும் மிகவும் அபாயகரமான நிலையில் இருப்பதாகக் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், அரசிடம் முறையான திட்டமிடல் இல்லை எனக் குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலளித்த அரசு, பள்ளிகளைப் பராமரிக்க ரூ.550 கோடியும், புதிய கட்டடங்கள் கட்ட ரூ.450 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு நிதிகள் மூலம் ஆண்டுதோறும் ரூ.2,500 கோடி கல்வி உள்கட்டமைப்பிற்குப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>சபரிமலை கோவில் தங்கம் திருட்டு வழக்கு: TDB முன்னாள் தலைவருக்கு ஜாமின் மறுப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/sabarimala-gold-loss-case-prasanth-denied-bail-former-tdb-member-ajikumar-gets-relief</link><comments>https://www.maalaimalar.com/news/national/sabarimala-gold-loss-case-prasanth-denied-bail-former-tdb-member-ajikumar-gets-relief#comments</comments><guid isPermaLink="false">c7c93e55-a1f6-43cb-85e6-249b09fcbe89</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:22:52 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:22:52.791Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TDB,திருவாங்கூர் தேவசம்போர்டு,ayyappan gold theft,ஐயப்பன் கோவில் நகை திருடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/5suzx1o0/Sabarimala.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சபரிமலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/5suzx1o0/Sabarimala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சபரிமலை கோவில் துவார பாலகர்கள் சிலைகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டதில் தங்கம் மாயமான வழக்கில் கடந்த ஜூலை மாதம் இருவர் கைது செய்யப்பட்டனர்.</p><p>கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் கவசம், நிலைக்கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிடப்பட்டது. அப்போது 4.54 கிலோ தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது.</p><p>இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் பத்மகுமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னிகிருஷ்ணன், தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சபரிமலை அய்யப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரு-வும் கைது செய்யப்பட்டார்.</p><p>TDB முன்னாள் தலைவர்</p><p>இவ்வழக்கு விசாரணை கொல்லம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 17-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் திருவாங்கூர் தேவஸ்தம் போர்டு முன்னாள் தலைவர் பி.எஸ். பிரசாந்த் ஆவார். 18-வது குற்றவாளியாக அஜித் குமார் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><p>இருவரும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது TDB-யின் முன்னாள் உறுப்பினர் அஜித்குமாருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆனால் TDB முன்னாள் தலைவர் வி.பிஎஸ். பிரசாந்திற்கு நீதுிபதி மோகித் ஜாமின் வழங்க மறுத்துவிட்டார். அஜித்குமாருக்க உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்கப்படடுள்ளது.</p><p>பிரசாந்த் 2023ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு வரை திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவராக இருந்தார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (மார்க்சிஸ்ட்) இணைவதற்கு முன்பு அவர் ஒரு காங்கிரஸ் தலைவராக இருந்தார்.</p><p>ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைக்கு தகடு பதிக்க கடந்த 2024-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கும் முடிவை எடுத்த குழுவில் பிரசாந்த், அஜித்குமார் மற்றும் ஜி. சுந்தரேசன் ஆகியோர் இருந்தனர். இருவரும் கடந்த மாதம் 23-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>என் கைகள் சுத்தமானவை..! ஹவாலா பரிவர்த்தனை குற்றச்சாட்டை மறுத்த பினராயி விஜயன்</title><link>https://www.maalaimalar.com/news/national/former-cm-pinarayi-vijayan-says-his-hands-clean-denies-hawala-dealings</link><comments>https://www.maalaimalar.com/news/national/former-cm-pinarayi-vijayan-says-his-hands-clean-denies-hawala-dealings#comments</comments><guid isPermaLink="false">76a2ca83-72a4-46fe-b890-76346628c1d4</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:45:37 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:45:37.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வீணா,பினராயி விஜயன்,Pinarayi Vijayan,Enforcement Directorate,Veena,அமலாக்கத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ulw814xj/PinarayiVijayan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pinarayi Vijayan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ulw814xj/PinarayiVijayan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நான், என்னுடைய மகள் (வீணா) மற்றும் குடும்பத்தினர் எந்தவொரு ஹவாலா டீலிங்கில் (பண பரிவர்த்தனை) ஈடுபடவில்லை என்று கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.</p><h2>எங்கள் கைது தூய்மையானது</h2><p>இதுகுறித்து கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியதாவது:-</p><p>நானோ, எனது மகளோ, என்னுடைய குடும்பத்தினரோ எந்தவொரு ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபடவில்லை. இதில் நான் முழுமையாக உறுதியாக இருக்கிறேன். இந்த கைகள் தூய்மையானவை. எப்போதும் தூய்மையாக இருக்கும். </p><p>வீணா என்னுடைய மகள் என்பதனால் ஏராளமான விசயங்கள் எழுப்பப்பட்டன. ஏராளமான சொத்துகளுக்கு வீணா உரிமையாளர் கிடையாது. பேசப்படும் பணத்தின் அளவும் பெரியதல்ல.</p><p>இந்த விவகாரத்தில் ஒரு செய்தி குறிப்பு (press release) வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் எனது பெயர் பி. விஜயன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் முன்னாள் முதலமைச்சர் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. அவ்வாறு குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?.</p><p>வீணா பணத்தை முகமது ரியாஸின் கணக்கிற்கு மாற்றினார் என்ற செய்தி எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டது? பினராயி விஜயனுக்கு எதிராக இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர்கள் நினைக்கிறார்களா?</p><p>வீணா விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளார். எதிர்காலத்திலும் அந்த அமைப்பிற்கு தகவல்களை வழங்குவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இருக்காது.</p><p>இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.</p><h2>அமலாக்காத்துறை வழக்கு விவரம்</h2><p>அமலாக்கத் துறையின் (ED) இந்த பணமோசடி வழக்கு, கேரளாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனமான கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் (CMRL) மற்றும் வீணா என்பவரால் தொடங்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் இல்லாத எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தொடர்பானது. எந்தவொரு சேவையையும் பெறாமலேயே, எக்ஸாலஜிக்' நிறுவனத்திற்கு CMRL நிறுவனம் ரூ. 2.78 கோடியை வழங்கியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது.</p><p>துபாய்க்கு மேற்கொள்ளப்பட்ட சில நிதிப் பரிமாற்றங்கள் குறித்த விவரங்கள் அடங்கியதாகக் கூறப்படும் கையெழுத்துப் பிரதிகள், கடந்த மே மாதம் வீணாவின் (Veena) வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை (ED) ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு பனராயி விஜயன் இவ்வாறு தெரிவித்துள்ளார். </p><p>விசாரணையின் ஒரு பகுதியாக, வீணா மற்றும் CMRL வாரிய உறுப்பினர்களிடம் அந்த அமைப்பு அண்மையில் பலமுறை விசாரணை நடத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்ட சீக்கியர்கள்: காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/sikhs-protest-outside-rahul-gandhis-residence-against-cong-leaders-calling-sajjan-kumar-hero</link><comments>https://www.maalaimalar.com/news/national/sikhs-protest-outside-rahul-gandhis-residence-against-cong-leaders-calling-sajjan-kumar-hero#comments</comments><guid isPermaLink="false">0a38b1b0-9ff1-4e8d-be56-af6ab3bca17d</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:21:00 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:21:00.047Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,Anti Sikh Riots</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/uefuzw2q/SikhProtest001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீக்கியர்கள் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/uefuzw2q/SikhProtest001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியின் வீட்டு முன் (வெளியே) இன்று ஏராளமான சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதில் பல சீக்கிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சி தலைவர் சஜ்ஜன் குமார் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். இவர் கடந்த வியாழக்கிழமை காலமானார். இவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஹீரோ மற்றும் ரோல் மாடல் எனக் கூறியுள்ளனர்.</p><p>இது சீக்கியரகளுக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சஜ்ஜன் குமாரை ஹீரோ மற்றும் ரோல் மாடல் என அழைத்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுத்தினர்.</p><h2>ராகுல் காந்தி வீட்டுக்கு வெளியே போராட்டம்</h2><p>இது தொடர்பாக இன்று டெல்லியில் உள்ள சீக்கிய குர்த்வாரா நிர்வாக கமிட்டி (DSGMC) தலைவர் ஹர்மீத சிங் கல்கா, பொதுச் செயலாளர் ஜெகதீப் சிங் கலோன் ஆகியோர் தலைமையில் ஏராளமானவர்கள் ராகுல் காந்தி வீட்டை நோக்கி சென்றனர். இதனால் சுனேரி பாக் சாலையில் உள்ள ராகுல் காந்தி வீட்டின் முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.</p><p>அவர்கள் தடுப்புகள் அமைத்து போராட்டக்காரர்கள் முன்னோக்கி செல்லாதவாறு தடுத்து நிறுத்த தயார் நிலையில் இருந்தனர்.</p><p>1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்குகளில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட குமாரை, காங்கிரஸ் கட்சி ஒரு நாயகனாக கருதுகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று DSGMC-யின் தலைவர் தெரிவித்தார்.</p><h2>ராகுல் காந்தி, காங்கிரஸ்காரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்</h2><p>மேலும், சஜ்ஜன் குமாரின் மறைவுக்குப் பிறகு, அவர் தங்கள் நாயகன் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள் ஆட்சேபனைக்குரியவை. சஜ்ஜன் குமார் தங்கள் நாயகனா என்பது குறித்து ராகுல் காந்தி இன்று தெளிவுபடுத்த வேண்டும் எனறார்.</p><p>போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராகுல் காந்தி மற்றும் மற்ற காங்கிரஸ்காரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.</p><p>இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் : எஃகு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-iron-and-steel-plant-horror-fire-3-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-iron-and-steel-plant-horror-fire-3-killed#comments</comments><guid isPermaLink="false">2c510564-eac6-45f6-9772-4a57816d7cc3</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:12:46 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:12:46.343Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,ஜார்கண்ட்,Jharkhand,தீ விபத்து,steel industry,எஃகு தொழிற்சாலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/5u90tlr1/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜார்கண்ட் எஃகு தொழிற்சாலை தீ விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Steel Plant Fire]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/5u90tlr1/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">ஜார்க்கண்ட்</a> மாநிலத்தில் உள்ள எஃகு தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், உடல் முழுவதும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று ஊழியர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h3><strong>எஃகு தொழிற்சாலையில் தீ விபத்து</strong></h3><p>ஜார்க்கண்ட்டின் ராம்கர் மாவட்டத்தில் உள்ள ஹெலால் பகுதியில் மா சின்னமஸ்திகா இஸ்பாட் எஃகு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இயங்கி வந்த மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவில் தீ விபத்து ஏற்பட்டது.</p><p>இதையடுத்து தொழிற்சாலை ஊழியர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு விரைந்த வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.</p><p>இந்த தீ விபத்தில் இதுவரையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பல ஊழியர்கள் தொழிற்சாலையின் உள்ளே சிக்கி கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>இந்த விபத்து குறித்து ராம்கர் காவல் கண்காணிப்பாளர் முகேஷ் குமார் லுனாயத் கூறுகையில், “இந்த தீ விபத்தில் நான்கு ஊழியர்கள் உடல் முழுவதும் ஏற்பட்ட பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.</p><p>தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை. அதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்” என்று கூறினார்.</p><h3><strong>மூன்று ஊழியர்கள்</strong></h3><p>எஃகு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பர்கானா காவல் நிலைய பொறுப்பாளர் உமா சங்கர் வர்மா கூறுகையில், இறந்தவர்கள் சஞ்சீவ், வினீத் மற்றும் அபிஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.</p><p>ஜார்க்கண்ட் மாவட்டத்தில் இயங்கி வரும் தொழிற்சாலையின் தலைமை தொழிற்சாலை ஆய்வாளர் மனிஷ் சின்ஹா கூறும்போது, தொழிற்சாலை ஆய்வாளர் மற்றும் சோட்டாநாக்பூர் துணைத் தலைமை ஆய்வாளர் அடங்கிய இரண்டு பேர் கொண்ட குழு, விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வந்தே மாதரம் சர்ச்சை: சர்மிளா தாகூரின் கருத்துக்கு கங்கனா ரணாவத் எம்பி கடும் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-controversy-kangana-ranaut-slams-sharmila-tagore</link><comments>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-controversy-kangana-ranaut-slams-sharmila-tagore#comments</comments><guid isPermaLink="false">e07268e4-00f6-4700-8bb3-016d23297523</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:33:29 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:33:29.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>KanganaRanaut,SharmilaTagore,VandeMataramRow,NationalSong,வந்தேமாதரம்,கங்கனாரணாவத்,சர்மிளாதாகூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/luebw2ij/kangana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ KanganaRanaut-SharmilaTagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/luebw2ij/kangana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் குறிப்பிட்ட வரிகளைப் பாடுவது தொடர்பாக பாலிவுட் மூத்த நடிகை சர்மிளா தாகூர் தெரிவித்த கருத்துகளும், அதற்குப் பதிலடியாக நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்துகளும் தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.</p><h2>சர்மிளா தாகூ<strong>ரின் கருத்துக</strong>ள்</h2><p>அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய மூத்த நடிகை சர்மிளா தாகூர், 'வந்தே மாதரம்' பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டும் பாடுவதே நாட்டின் பன்முகத்தன்மைக்கு உகந்தது எனக் குறிப்பிட்டார்.<a href="https://www.maalaimalar.com/news/national/abijeet-dipke-warns-of-massive-delhi-jantar-mantar-style-protest-in-jaipur"> இந்தியா</a>வில் ஒரே கடவுளை வழிபடும் ஓரிறைக் கொள்கை கொண்ட பல்வேறு மதத்தினர் வாழ்கின்றனர். </p><p>பாடலின் பிந்தைய சரணங்களில் துர்க்கை, காளி போன்ற இந்து பெண் தெய்வங்களின் பெயர்கள் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், பிற மதத்தினர் அதை முழுமையாகப் பாடுவதில் சிரமம் இருக்கலாம் என்றும், அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்ல முதல் இரண்டு வரிகளே சிறந்தது என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><h2>கங்கனா <strong>ரணாவத்</strong>தின் பதிலடி</h2><p>சர்மிளா தாகூரின் இந்தப் பேச்சுக்குத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்த எம்பி கங்கனா ரணாவத், ஒரு மூத்த கலைஞரின் பார்வை இவ்வளவு குறுகியதாக இருப்பது தனக்கு அதிர்ச்சியளிப்பதாகக் கூறினார். பாடல்களிலோ கவிதைகளிலோ பயன்படுத்தப்படும் வார்த்தைகள் உருவகங்களே என்றும், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய இப்பாடல் சுதந்திரப் போராட்டத்தின் ஆன்மாவாகவும் தேசத்தின் உள்ளாற்றலை (சக்தி) விழிப்படையச் செய்யும் படைப்பாகவுமே பார்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.</p><p>"நாம் ஒரே கடவுளை நம்பினாலும், இந்து-முஸ்லிம் மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள். மருத்துவர்களும் சக்தியை 'சக்தி' என்றுதான் அழைக்கிறார்கள். ஒருவரையொருவர் நம் சொந்தம் போல அரவணைப்போம். நான் உங்களை மனதார நேசிக்கிறேன், நீங்கள் எப்போதும் கொடுப்பது போன்ற ஒரு இறுக்கமான அணைப்பை நான் பொருட்படுத்துவதில்லை," என்று கங்கனா கடுமையாகக் விமர்சித்துள்ளார்.</p><h2>அர<strong>சியல் மோ</strong>தல்</h2><p>இந்த விவாதம் வெறும் கலை சார்ந்த ஒன்றாக இல்லாமல், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பெரிய அரசியல் மோதலாகவும் மாறியுள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்தில் 1937-இல் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தைப் பின்பற்றி, தங்கள் கட்சியின் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவது என காங்கிரஸ் செயற்குழு அண்மையில் முடிவு செய்தது. ஆனால், மத்திய அரசு பள்ளிகளிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் அனைத்து சரணங்களையும் பாட வலியுறுத்துவதாகவும், காங்கிரஸின் இந்த நடவடிக்கை தேசப்பற்றைக் குறைத்து மதிப்பிடும் செயல் என்றும் பாஜக குற்றம் சாட்டி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி ஜந்தர் மந்தர் பாணியில் ஜெய்ப்பூரில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் - அபிஜீத் திப்கே எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/abijeet-dipke-warns-of-massive-delhi-jantar-mantar-style-protest-in-jaipur</link><comments>https://www.maalaimalar.com/news/national/abijeet-dipke-warns-of-massive-delhi-jantar-mantar-style-protest-in-jaipur#comments</comments><guid isPermaLink="false">6fdbdc8b-a748-4bc6-be4a-a6585231b6aa</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:13:13 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:13:13.954Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>abhijeet dipke,அபிஜீத் திப்கே,Ashutosh Ranka,Jaipur Protest,BJPvsCJP,Protest In Jaipur,Rajasthan Govt School,மாட்டுத்தொழுவப்பள்ளி,Cowshed school</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/6pg8y66l/Abhijeet-Dipke" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Abhijeet Dipke  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/6pg8y66l/Abhijeet-Dipke?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் மாநிலம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">ஜெய்ப்பூர் </a>அருகே மாட்டுத் தொழுவத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியை ஆய்வு செய்யச் சென்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">காக்ரோச் ஜனதா கட்சி</a> தொண்டர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><p>தாக்குதல் நடத்திய பா.ஜ.க குண்டர்களை 48 மணி நேரத்திற்குள் கைது செய்யாவிட்டால், ஜெய்ப்பூரில் மிகப்பெரிய அளவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என சி.ஜே.பி நிறுவனத் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87">அபிஜீத் திப்கே</a> எச்சரித்துள்ளார்.</p><h2>தொழுவத்தில் இயங்கும் பள்ளி</h2><p>சி.ஜே.பி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரான்கா தலைமையில், தன்னார்வலர்கள் ஜெய்ப்பூரின் பக்ரு தொகுதிக்குட்பட்ட ராம்பூரா கன்வர்புரா கிராமத்திற்குச் சென்றனர். </p><p>அங்குள்ள அரசு முதன்மைப் பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால், கடந்த சில ஆண்டுகளாக மாட்டுத் தொழுவத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கட்சியின் ‘ஸ்கூல் திக் கரோ’ பள்ளிகளைச் சீரமைப்போம் பிரச்சாரத்தின் கீழ் இப்பள்ளியை ஆய்வு செய்ய அவர்கள் முற்பட்டனர்.</p><h2>கொடூர வன்முறை</h2><p>பள்ளிக்குள் நுழைய முயன்ற சி.ஜே.பி குழுவினரை ஒரு கும்பல் வழிமறித்து கற்களை வீசித் தாக்கியது. "அர்பன் நக்சல்கள், தேசவிரோதிகள், பாகிஸ்தானியர்கள்" என முழக்கமிட்ட அசுதோஷ் ரான்காவின் சட்டை கிழிக்கப்பட்டதுடன், வாகனங்களின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன. </p><p>இந்த வன்முறையில் பெண் தொண்டர் ஒருவர் உட்பட பலர் காயமடைந்தனர், ஒருவருக்குக் கை முறிவு ஏற்பட்டது.</p><p>இதுகுறித்து அசுதோஷ் ரான்கா பேசுகையில், "கிராம மக்கள் அழைப்பின் பேரில் தான் நாங்கள் சென்றோம், ஆனால் கல்வி அமைச்சர் மதன் திலாவரின் தூண்டுதலின் பேரில் பா.ஜ.க குண்டர்கள் திட்டமிட்டு எங்கள் மீது வன்முறையை ஏவியுள்ளனர்"என்று கூறினார்.</p><h2>அபிஜீத் திப்கேவின் அதிரடி எச்சரிக்கை:</h2><p>இச்சம்பவம் குறித்து சி.ஜே.பி தலைவர் அபிஜீத் திப்கே எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "ராஜஸ்தானில் என்ன அராஜகம் நடக்கிறது? பா.ஜ.க குண்டர்கள் எங்கள் தொண்டர்களின் இரத்தத்தை குடிக்க அலைகிறார்கள். </p><p>பள்ளிகள் மாட்டுத் தொழுவத்தில் நடப்பது பற்றி கவலைப்படாத காவல்துறை, அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது" என்று சாடினார்.</p><p>மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டாலும், சம்பந்தப்பட்ட பள்ளியைச் சீரமைக்கும் பணியைத் அரசாங்கம் தொடங்காவிட்டாலும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D">டெல்லி ஜந்தர் மந்தர்</a> பாணியில் ஜெய்ப்பூரில் மிகப்பெரிய தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்றும், அதில் பொதுமக்கள் பெருமளவில் பங்கெடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I will go to Jaipur if the school repair work doesn’t begin and the BJP goons are not arrested within the next 48 hours.<a href="https://x.com/AshutoshRanka?ref_src=twsrc%5Etfw">@AshutoshRanka</a> <a href="https://t.co/jYXRUKKY45">pic.twitter.com/jYXRUKKY45</a></p>&mdash; Abhijeet Dipke (@abhijeet_dipke) <a href="https://x.com/abhijeet_dipke/status/2090752763131281485?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிராவில் பெரும் துயரம்: ஐபோன் கேட்டு பிடிவாதம் பிடித்த 19 வயது மகனால் மொத்த குடும்பமும் பரிதாபமாக பலி!</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-iphone-row-ends-in-triple-death-of-19-year-old-and-parents</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-iphone-row-ends-in-triple-death-of-19-year-old-and-parents#comments</comments><guid isPermaLink="false">c7f6ed74-b186-47c5-89b0-37fb3296206a</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:05:38 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:05:38.241Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,ஐபோன்,iPhoneTragedy,FamilyTragedy,சம்பாஜிநகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/u2jf8mgf/Untitled-10.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Maharashtra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/u2jf8mgf/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள சால்டா ஃபாடா பகுதியைச் சேர்ந்தவர் முரளிதர் சாந்த்குடே(48). ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவருக்கு குணால் (19) என்ற மகன் இருந்தார். வறுமையான சூழலிலும், குணால் தனது பெற்றோரிடம் புதிதாக ஐபோன் வாங்கித் தருமாறு கேட்டுத் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.</p><p>குடும்பத்தின் நிதி நிலைமை காரணமாகத் தந்தை போனை வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த குணால், நேற்று காலை 10 மணியளவில் அருகில் இருந்த சுமார் 400-500 அடி உயரமுள்ள கவ்டா மலைக்குச் சென்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancherry-woman-murder-case-police-investigation">தற்கொலை </a>செய்வதாக மிரட்டினார்.</p><h2>மகனைக் கா<strong>ப்பாற்ற முயன்ற</strong> தந்தை பலி</h2><p>தகவலறிந்த தீயணைப்புத் துறையினரும், வாளுஜ் எம்பிசி காவல்துறையினரும், கிராம மக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மலையின் கீழே பாதுகாப்பு வலைகளை அமைத்து குணாலைக் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால், மீட்புக் குழுவினரைக் கண்ட குணால் மலையின் விளிம்பிலேயே தனது இடங்களை மாற்றிக் கொண்டே இருந்தார்.</p><p>சுமார் 3 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின், மதியம் 1 மணியளவில் தந்தை முரளிதர் மகனைச் சமாதானப்படுத்தி மீட்க அருகில் சென்றார். அப்போது குணால் மலையிலிருந்து குதிக்க, அவரைப் பிடிக்க முயன்ற தந்தை முரளிதரும் நிலைதடுமாறி மகனுடன் சேர்த்து மலையிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.</p><h2>தாங்க முடியா<strong>த தாய் உயிரை</strong> மாய்த்துக் கொண்டார்</h2><p>கண்முன்னே கணவனும் மகனும் 500 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலியான கோரக் காட்சியைக் கண்டு கதறிய தாய் சங்கீதா, கடுமையான மன உளைச்சலில் அதே இடத்தில் இருந்து மலையிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். நொடிப் பொழுதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உடல்களைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரஷிய எண்ணெய்க் கப்பல் விவகாரத்தில் இந்திய கேப்டன் கைது: &quot;என் கணவரைப் பலிகடா ஆக்கிவிட்டார்கள்&quot; என மனைவி கண்ணீர் </title><link>https://www.maalaimalar.com/news/national/wife-says-husband-made-scapegoat-in-russian-oil-tanker-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/wife-says-husband-made-scapegoat-in-russian-oil-tanker-case#comments</comments><guid isPermaLink="false">2e726460-8be2-4a65-8c8e-5f4a0455f4d4</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:44:01 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:44:01.304Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரஷியா,IndianNavy,RussianOil,Ajay Pant,Smyrtos,இந்தியகேப்டன்,அஜய் பாந்த்,ஸ்மிர்டோஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/864y6kqc/navy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ajay Pant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/864y6kqc/navy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரஷியா மீது மேலைநாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மீறி கச்சா எண்ணெய் கடத்தியதாகக் கூறி, பிரிட்டிஷ் கடற்படை கமாண்டோக்களால் கைது செய்யப்பட்டுள்ள இந்தியக் கப்பல் கேப்டன் அஜய் பாந்த்(38) பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக அவருடைய மனைவி ரிது பாந்த் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கேப்டன் அஜய் பாந்த் மீது இங்கிலாந்து அரசு தடைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.</p><h2>ஆங்கி<strong>லக் கால்வாயில் அரங்கே</strong>றிய ஆபரேஷன்</h2><p>கடந்த ஜூன் 14 அன்று, ரஷ்யாவின் உஸ்ட்-லுகா துறைமுகத்திலிருந்து சுமார் 98,000 டன் கச்சா எண்ணெயுடன் எகிப்து நோக்கிச் சென்று கொண்டிருந்த '<a href="https://www.maalaimalar.com/news/world/us-canada-trade-talks-fail-canada-to-impose-retaliatory-tariffs">ஸ்மிர்டோஸ்</a>' என்ற எண்ணெய் தாங்கி கப்பலை பிரிட்டிஷ் கடற்படை கமாண்டோக்கள் ஹெலிகாப்டர் மூலம் வழிமறித்து அதிரடியாகக் கைப்பற்றினர். ரஷியாவின் பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க இயங்கும் 'நிழல் கப்பல் படை' நெட்வொர்க்கில் இந்தச் சரக்குக் கப்பல் செயல்பட்டு வந்ததாக இங்கிலாந்து குற்றம் சாட்டுகிறது.</p><h2>தவறான நேரத்<strong>தில் தவறான இடத்</strong>தில் இருந்தார்</h2><p>ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் ரிது பாந்த், "எனது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் கறையற்ற முறையில் கப்பல் துறையில் பணியாற்றி வருகிறார். அவர் கப்பலின் உரிமையாளர் மற்றும் நிறுவனத்தின் உத்தரவுகளை மட்டுமே செயல்படுத்தினார். சரக்குகளின் சட்டப்பூர்வ பின்னணி அல்லது தடைகள் குறித்து ஒரு கேப்டனுக்கு எந்த அதிகார அதிகாரமும் இருக்காது. அவர் தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்ததால் இப்போது பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.</p><h2>10 ஆண்<strong>டுகள் சிறை தண்டனை</strong> அபாயம்</h2><p>கப்பலில் இருந்த 24 மாலுமிகளில் கேப்டன் அஜய் பாந்த் மட்டுமே தனிப்பட்ட முறையில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், வழக்கு விசாரணை வரவிருக்கும் டிசம்பர் 15 அன்று தொடங்கவுள்ளது.</p><h2>சர்வதேச <strong>மாலுமிகளுக்கு எழுந்துள்</strong>ள அச்சம்</h2><p>ஒரு கப்பலின் நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பணியில் இருக்கும் இந்திய கேப்டன் மீது இங்கிலாந்து அரசு குற்றவியல் நடவடிக்கை எடுத்திருப்பது சர்வதேச கடல்சார் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் 3,20,000-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகளின் பாதுகாப்பிற்கு இந்தச் சம்பவம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக கடல்சார் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் லண்டனில் உள்ள தூதரகம் மூலம் அஜய் பாந்திற்குத் தேவையான தூதரக உதவிகளைச் செய்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தரில் இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் கைது: டெல்லி போலீசார் அதிரடி</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-police-detain-anti-reservation-protesters-at-jantar-mantar</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-police-detain-anti-reservation-protesters-at-jantar-mantar#comments</comments><guid isPermaLink="false">6a02ead3-a5a6-4406-92c4-68017a1eb0d6</guid><pubDate>Sat, 22 Aug 2026 00:27:09 +0000</pubDate><atom:updated>2026-08-22T00:27:09.183Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Protesters,போராட்டக்காரர்கள்,Delhi Police,Jantar Mantar,டெல்லி காவல்துறை,ஜந்தர் மந்தர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/setm57jc/Protesors-Arrested.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Protesors Arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/setm57jc/Protesors-Arrested.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இட ஒதுக்கீட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்காக ஜந்தர் மந்தரில் கூடியிருந்த பலரை <a href="https://www.maalaimalar.com/news/national">டெல்லி</a> காவல்துறை வெள்ளிக்கிழமை கைது செய்ததாகவும், பெருந்திரளான மக்கள் திரண்டிருந்ததால் போராட்ட இடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு, பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் காவிக்கொடிகளை ஏந்தியபடி ஏராளமான மக்கள் அந்த இடத்தில் கூடியிருந்தபோது, ​​அவர்களில் பெரும்பான்மையானோர் ஆண்களாக இருந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.</p><h2>போராட்டம் நடத்த தடையில்லா சான்றிதழ்:</h2><p>அரசு உதவி மற்றும் இட ஒதுக்கீட்டிற்கான தகுதியை நிர்ணயிப்பதில், சாதியை விட பொருளாதார அளவுகோல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கோரி, போராட்டக்காரர்கள் சமூக ஊடகங்கள் மூலம் இந்த ஆர்ப்பாட்டத்திற்காகத் திரட்டப்பட்டனர்.</p><p>போராட்டத்திற்கு முன்னதாக அப்பகுதியின் முக்கிய இடங்களில் காவல்துறையினரையும் துணை ராணுவப் படையினரையும் நிலைநிறுத்தி, ஜந்தர் மந்தரை நோக்கி மக்கள் செல்வதை கட்டுப்படுத்த தடுப்புகளை அமைத்தது.</p><p>ஜந்தர் மந்தரில் எந்தவொரு போராட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் அல்லது கூட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>இருப்பினும், மத்திய மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நேற்று (வெள்ளிக்கிழமை) ராம்லீலா மைதானம் என்ற வேறு ஒரு இடத்தில் "இட ஒதுக்கீடு ஒழிப்பு இயக்கம்" என்ற பதாகையின் கீழ் அமைதியான போராட்டம் நடத்துவதற்கு தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்கப்பட்டுள்ளது.</p><h2>5.6 மில்லியன் பின்தொடர்பாளர்கள்:</h2><p>சட்டம் மற்றும் ஒழுங்கு கண்ணோட்டத்தில் ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்கு தங்களுக்கு "எந்த ஆட்சேபனையும் இல்லை" என்று காவல்துறை தெரிவித்த நிலையில், மாலை 4 மணி வரை ராம்லீலா மைதானத்தில் அதிகபட்சமாக 500 பேர் கூடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.</p><p>இந்தப் போராட்ட இயக்கத்தை 'ரிசர்வேஷன் ஹடாவோ அந்தோலன்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் முன்னெடுத்தது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 21 அன்று ஜந்தர் மந்தரில் நடைபெறும் நேரடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அப்பக்கம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. இன்ஸ்டாகிராமில் அப்பக்கத்திற்கு 5.6 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.</p><p>கல்வி, பயிற்சி மற்றும் இதர தேவைகளுக்கான உதவிகள் உட்பட, யாருக்கு அரசாங்க ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும்போது பொருளாதார நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் ஒளிமயமான புள்ளியாகத் திகழ்கிறது: பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/india-bright-spot-of-growth-hope-said-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-bright-spot-of-growth-hope-said-pm-modi#comments</comments><guid isPermaLink="false">4025dbd1-b496-49e5-ba0c-cac921d15d52</guid><pubDate>Fri, 21 Aug 2026 18:53:14 +0000</pubDate><atom:updated>2026-08-21T18:53:14.453Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/cvz4h1ox/PM-Modi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/cvz4h1ox/PM-Modi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மையும் கொள்கை தொடர்ச்சியும் நிலவுவதாகவும், உலகம் இந்தியாவை வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் ஒளிமயமான புள்ளியாக பார்ப்பதாக பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> தெரிவித்தார்.</p><p>எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, வளர்ச்சி குறித்து இன்று பல கவலைகள் இருப்பதாகவும், வளங்கள் ஆயுதங்களாக பயன்படுத்தப்படும் மிக கடுமையான சூழலை <a href="https://www.maalaimalar.com/news/world">உலகம்</a> தற்போது கண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.</p><h2>சீர்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றம்:</h2><p>"இந்த நம்பிக்கையற்ற சூழல் உலகிற்கு பல புதிய சவால்களை கொண்டுவருகிறது. இத்தகைய சூழலிலும், உலகம் இந்தியாவை வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் ஒளிமயமான புள்ளியாகவே பார்க்கிறது.</p><p>நாங்கள் மக்கள் நலன் மற்றும் வளர்ச்சியை மையமாக கொண்ட கொள்கைகளை உருவாக்கி வருகிறோம். எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு மத்தியிலும் கூட, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாங்கள் சீர்திருத்த மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறோம்.</p><p>நாங்கள் நிர்வாகம் மற்றும் மக்களின் வாழ்க்கை சூழலை எளிதாக்குதல் ஆகியவற்றில் சீர்திருத்தங்களை செய்து வருகிறோம். சீர்திருத்தம் என்பது எங்களுக்கு ஒரு கட்டாயம் அல்ல; அது எங்கள் உறுதிப்பாடு மற்றும் ஆழ்ந்த நம்பிக்கை. மக்களின் வாழ்க்கை சூழலை எளிதாக்குவதற்கான கூடுதல் சீர்திருத்தங்களை நான் உறுதியளிக்கிறேன்," என்று அவர் கூறினார்.</p><h2>விதிமுறைகளை மட்டும் மாற்றவில்லை:</h2><p>தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "அதிக உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் எங்கள் அரசு ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறது. நாங்கள் வெறும் விதிமுறைகளை மட்டும் மாற்றவில்லை, விதிமுறைகள் தொடர்பான ஒட்டுமொத்த கொள்கையையுமே மாற்றுகிறோம். </p><p>ஒரு சட்டத்தின் கீழ் வெளிப்படையாகத் தடை செய்யப்படாத செயல்களை செய்வதற்கு எந்தவித கட்டுப்பாடும் இருக்கக்கூடாது என்பதே எங்கள் அரசின் நம்பிக்கை," என்று அவர் கூறினார்.</p><p>மேலும், "இன்று 'மேக் இன் இந்தியா' மற்றும் 'ஆத்மநிர்பர் பாரத்' ஆகியவற்றை ஏளனம் செய்பவர்கள், தங்கள் முன்னோர்களின் அதே மனநிலையைத்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அணுகுமுறைக்கு பின்னால் ஒருவிதமான திரிபுபட்ட சிந்தனை இருந்தது," என்று அவர் கூறினார்.</p><p>ஒரு உதாரணத்தை குறிப்பிட்ட பிரதமர், முன்பு வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் இந்தியாவை வரைபடமாக்க முடிந்தாலும், அனுமதி இல்லாமல் யாரும் இந்தியாவின் வரைபடத்தை உருவாக்க முடியாது என்ற நிலை இருந்தது; ஆனால் தனது அரசு இந்த முறையை மாற்றியுள்ளது என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் போராட்டம்: முதல்வர் ஹேமந்த் சோரன் உருவ பொம்மை எரிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/clashes-erupt-as-jharkhand-protesters-attempt-to-burn-hemant-sorens-effigy</link><comments>https://www.maalaimalar.com/news/national/clashes-erupt-as-jharkhand-protesters-attempt-to-burn-hemant-sorens-effigy#comments</comments><guid isPermaLink="false">d922bc27-6af6-448a-86c4-4045cfda7d23</guid><pubDate>Fri, 21 Aug 2026 18:14:26 +0000</pubDate><atom:updated>2026-08-21T18:14:26.535Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hemant Soren,ஹேமந்த் சோரன்,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/o444t67w/Ranchi-Demonstrators.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ranchi Demonstrators]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/o444t67w/Ranchi-Demonstrators.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஞ்சியில் <a href="https://www.maalaimalar.com/topic/jharkhand-protest">ஜார்க்கண்ட்</a> ஆட்சேர்ப்பு தேர்வில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/hemant-soren">ஹேமந்த் சோரன்</a> மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் உருவ பொம்மைகளை எரிக்க முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>11வது மற்றும் 13வது JPSC தேர்வுகள் மற்றும் JSSC-CGL தேர்வுகள் மூலமான நியமனங்களை ரத்து செய்யும் சில அறிவிப்புகளுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து, 'JPSC-JSSC சீர்திருத்த குழு'வின் கீழ் உள்ள மாணவர் தலைவர்கள், ஜார்க்கண்ட் அரசு வேலை தேடுபவர்களை "ஏமாற்றுவதாகவும்" "துரோகம் செய்வதாகவும்" குற்றம் சாட்டினர்.</p><h2>போராட்டக் களத்தில் மோதல்:</h2><p>"முதல்வர் சோரன் மற்றும் ராகுல் காந்தியின் உருவ பொம்மைகளை எரிப்பதற்காக, அவர்கள் புகழ்பெற்ற ஆல்பர்ட் சௌக்கில் பெருமளவில் கூடினர். காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்த முயன்றபோது, ​​கைகலப்பு ஏற்பட்டது. ஜே.எம்.எம். தொண்டர்களும் அந்த இடத்தில் இருந்தனர்," என்று ஓர் அதிகாரி கூறினார்.</p><p>ஹசாரிபாக் மற்றும் கிரிதிஹ் பகுதிகளிலும் இதேபோன்ற கைகலப்புகள் பதிவாகியுள்ளன; அங்கு சோரனின் உருவ பொம்மைகளை எரிக்க முயன்ற மாணவர்களுடன் ஜே.எம்.எம். தொண்டர்கள் மோதிக்கொண்டனர்.</p><h2>முதல்வருக்கு கண்டனம்:</h2><p>11-ஆவது மற்றும் 13-ஆவது ஜே.பி.எஸ்.சி. தேர்வுகள் மூலம் நடத்தப்பட்ட நியமனங்களை ரத்து செய்யும் அறிவிப்புகளுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்தக் குழுவின் கீழ் உள்ள மாணவர் தலைவர்கள், ஜார்க்கண்ட் அரசு வேலை தேடுபவர்களை "ஏமாற்றுவதாக" குற்றம் சாட்டினர்.</p><p>"ஆட்சேர்ப்பு தேர்வுகளை ரத்து செய்த அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த, தலைமை வழக்கறிஞரோ அல்லது எந்தவொரு மூத்த வழக்கறிஞரோ வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆஜராகியிருந்த வழக்கறிஞர்களும் தற்காத்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு பொறி என்பதை தெளிவாக காட்டுகிறது," என்று மன்ச் தலைவர் குணால் பிரதாப் சிங் குற்றம் சாட்டினார்.</p><p>"ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை கடுமையாக ஒடுக்க அரசு விரும்புகிறது என்று நாங்கள் அதன் நோக்கத்தை நம்பினோம், ஆனால் நாங்கள் தவறாக நினைத்துவிட்டோம். அரசு ஆயிரக்கணக்கான வேலை தேடுபவர்களை ஏமாற்றியுள்ளது," என்று மன்ச் தலைவர் ரவீந்திர பாஸ்வான் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு கர்நாடக முதலமைச்சர் இரங்கல்</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-cm-condoles-veteran-actress-sowcar-janakis-death</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-cm-condoles-veteran-actress-sowcar-janakis-death#comments</comments><guid isPermaLink="false">5f37782d-2337-468d-b67b-cfab7c7f5e92</guid><pubDate>Fri, 21 Aug 2026 17:21:23 +0000</pubDate><atom:updated>2026-08-21T17:21:23.683Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DK Shivakumar,டிகே சிவகுமார்,sowcar janaki,சௌகார் ஜானகி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/u3ngxiod/sowcar-janaki-and-dk-shivakumar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sowcar janaki and dk shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/u3ngxiod/sowcar-janaki-and-dk-shivakumar.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் பல மொழிகளில் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்ற மூத்த நடிகையும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான '<a href="https://www.maalaimalar.com/topic/sowcar-janaki">சௌகார் ஜானகி</a>' மறைவுக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் இரங்கல் தெரிவித்தார்.</p><p>தனது இரங்கல் செய்தியில், <a href="https://www.maalaimalar.com/topic/dk-shivakumar">சிவகுமார்</a> கூறுகையில், நடிகை சௌகார் ஜானகியின் மறைவு செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக குறிப்பிட்டார். </p><h2>முதலமைச்சர் இரங்கல்:</h2><p>"'சௌகார் ஜானகி' கலை ஆர்வலர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருப்பார். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட நாடகங்களில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்," என்று அவர் கூறினார்.</p><p>இந்திய திரையுலகின் மிகவும் மதிக்கப்படும் மூத்த கலைஞர்களில் ஒருவரான ஜானகி, வயது முதிர்வு தொடர்பான உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 94. அவர் பிற்பகல் 1.59 மணிக்கு உயிர் பிரிந்தார்.</p><p>அவரது மறைவால் இந்தியத் திரையுலகின் ஒரு முக்கிய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று சிவகுமார் கூறினார். மறைந்த அவரது ஆன்மாவுக்கு இறைவன் நித்திய அமைதியை அருளவும், இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை அவரது குடும்பத்தினருக்கும் நெருங்கியவர்களுக்கும் வழங்கவும் அவர் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.</p><h2>உடல்நலக்குறைவு:</h2><p>கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சௌகார் ஜானகிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. </p><p>அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.</p><p>இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகை சௌகார் ஜானகி காலமானார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அடுத்த 48 மணி நேரத்திற்குள் எங்களை தாக்கிய பாஜக-வினரை கைது செய்ய வேண்டும்: சி.ஜே.பி. எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/within-48-hours-bjp-attackers-must-be-arrested-warns-cjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/within-48-hours-bjp-attackers-must-be-arrested-warns-cjp#comments</comments><guid isPermaLink="false">77f2f69e-2a59-4490-8780-2adc6554cb60</guid><pubDate>Fri, 21 Aug 2026 16:32:40 +0000</pubDate><atom:updated>2026-08-21T16:32:40.963Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,Education Minister,கல்வி அமைச்சர்,ராஜஸ்தான்,சிஜேபி,CJP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/ounmfjoi/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP warns statewide stir]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/ounmfjoi/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜெய்ப்பூரில் பள்ளி ஆய்வின்போது தங்களது தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபர்களைக் கைது செய்ய, ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவருக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி 48 மணி நேரம் அவகாசம் அளித்துள்ளது. </p><p>இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டத்தைத் தொடங்கி, அவரது ராஜினாமாவைக் கோருவோம் என்றும் சிஜேபி எச்சரித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF">சிஜேபி</a> இணை ஒருங்கிணைப்பாளர் அஷுதோஷ் ரங்கா, அரசுப் பள்ளி பல ஆண்டுகளாக எருமைத் தொழுவத்தில் இருந்து இயங்கி வருவதாகவும், அதை ஆய்வு செய்யச் சென்றபோது கட்சியின் குழுவினர் தாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.</p><p>இதுகுறித்து அஷுதோஷ் கூறுகையில், “நாங்கள் ராம்புரா-கன்வர்புரா கிராமத்தில் உள்ள பள்ளியை ஆய்வு செய்யச் சென்றிருந்தோம். கடந்த பல ஆண்டுகளாக, அந்தப் பள்ளி ஒரு எருமைத் தொழுவத்தில் இயங்கி வருகிறது.</p><p>அப்போது நாங்கள் அங்கு சென்றபோது, எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எங்கள் மீது தாக்குதல் நடத்திய பாஜக- வினரை 48 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும்.</p><p>இல்லையென்றால் நாங்கள் ராஜஸ்தான் முழுவதும் மாநில அளவிலான போராட்டத்தைத் தொடங்குவோம்.</p><p>மேலும் இந்த முறை, இது பள்ளிகளைப் பற்றியதாக மட்டும் இருக்காது. இந்த முறை, நாங்கள் ராஜஸ்தான் பள்ளி கல்வி அமைச்சரான மதன் திலாவரின் ராஜினாமாவைக் கோருவோம்"என்று அவர் கூறினார்.</p><p>ராஜஸ்தானில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த சிஜேபி-யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் தீப்கே கூறுகையில், “இந்த சம்பவம் ராஜஸ்தானின் ஜனநாயக வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக உள்ளது</p><p>பள்ளியில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படாமலும், அடுத்த 48 மணி நேரத்திற்குள் எங்களை தாக்கிய பாஜக-வை சேர்ந்த நபர்கள் கைது செய்யப்படாமலும் இருந்தால், ஜந்தர் மந்தரில் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தைப் போலவே ஜெய்ப்பூருக்குச் சென்று தர்ணா போராட்டம் நடத்துவோம்,” என்று அவர் கூறினார்.</p><p>இந்த நிலையில், ஜெய்ப்பூரில் சி.ஜே.பி. குழு மீது தங்கள் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது.</p><p>சி.ஜே.பி.யின் பின்னணியில் காங்கிரஸ் தொண்டர்கள் செயல்படுவதாக ராஜஸ்தான் பாஜக அமைச்சர் ஜவஹர் சிங் பெதாம் குற்றம் சாட்டினார்.</p><p>மேலும் அவர், “காங்கிரஸ் கட்சியினர் வெவ்வேறு முகமூடிகளை அணிந்துகொண்டு, கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள அமைதியைக் குலைக்க விரும்புகிறார்கள். மக்கள் அவர்களுக்குப் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.</p><p>காங்கிரஸ் கட்சியினர் இந்த சி.ஜே.பி. முகமூடியை அணிந்துள்ளனர். காங்கிரஸைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை, அதனால் அவர்கள் வேறு ஒருவரின் முகமூடியை அணிந்துள்ளனர்” என்று அமைச்சர் பெதாம் கூறினார்.</p><p>இதையடுத்து ராஜஸ்தான் பாஜக அமைச்சர் அவினாஷ் கெலாட் கூறுகையில், சிஜேபி ஒரு அராஜக சக்திகளின் கட்சி என்று கூறினார்.</p><p>மேலும் அவர், இது அராஜக சக்திகளின் கட்சியாக மாறிவிட்டது. அவர்கள் பள்ளியைச் சீரமைக்கவில்லை, மாறாக அராஜகத்தைப் பரப்புகிறார்கள்,” என்று கெலாட் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தர்ணாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி - பெல்லட் குண்டு தாக்குதலுக்கு வழக்குப்பதிவு செய்தது டெல்லி காவல்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-police-register-case-over-pellet-gun-attack-on-rahul-gandhi-during-sit-in-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-police-register-case-over-pellet-gun-attack-on-rahul-gandhi-during-sit-in-protest#comments</comments><guid isPermaLink="false">ca2ec6d9-ee46-442f-b1a3-3294fd7b7ba6</guid><pubDate>Fri, 21 Aug 2026 16:07:31 +0000</pubDate><atom:updated>2026-08-21T16:07:31.761Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,pellet gun,பெல்லட் துப்பாக்கி தாக்குதல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/ixdffk25/New-Project-2026-08-21T213607.115.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தர்ணாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி - பெல்லட் குண்டு தாக்குதலுக்கு வழக்குப்பதிவு செய்தது டெல்லி காவல்துறை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/ixdffk25/New-Project-2026-08-21T213607.115.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜாந்தர் மந்தர் பகுதியில் நடந்த மாணவர் போராட்டத்தின் போது, காவல்துறையினரால் தாக்கப்பட்டு பெல்லட் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சாஹில் லோச்சப் என்ற 19 வயது இளைஞரின் புகாரை ஏற்று டெல்லி காவல்துறை முறைப்படி வழக்குப்பதிவு செய்துள்ளது.</p><p>ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட காவலர்களின் பெயரை குறிப்பிடாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்திய போலீசார்மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, இன்று டெல்லி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தின் முன்பாக பல மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.</p><p>காவல்துறை முதலில் வழக்குப்பதிவு செய்ய மறுத்த நிலையில், ராகுல் காந்தியின் தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் அவர் தனது தர்ணாவை வாபஸ் பெற்றார். </p><h2>போராட்டம்</h2><p>டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் ஒருபகுதியாக ஜூலை.20ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளன்று போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர். </p><p>இந்த போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாகத் தடியடி நடத்தியதோடல்லாமல், பெல்லட் ரக துப்பாக்கிகளையும் பயன்படுத்தினர்.  இதில் சாஹில் லோச்சப் என்ற 19 வயது மாணவனின் கண், தோள்பட்டை மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.</p><p>மேலும் பல மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பான வீடியோக்களும் அப்போது வைரல் ஆனது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தநிலையில், காவல்துறை அதனை ஏற்க மறுத்துள்ளது.</p><p>இதனையறிந்த ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது தாயாரை நேரில் அழைத்துக் கொண்டு நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்குச் சென்றார். அவருடன் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.</p><h2>காவல்துறை நடவடிக்கை</h2><p>ராகுல் காந்தியின் போராட்டத்தைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை முறைப்படி வழக்குப்பதிவு செய்தது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட நகல் கிடைத்ததும், ராகுல் காந்தி தனது தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>ரேவந்த் ரெட்டி அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-denies-permission-for-revanth-reddy-to-visit-the-us</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-denies-permission-for-revanth-reddy-to-visit-the-us#comments</comments><guid isPermaLink="false">036d2a15-d489-4b88-b2c3-16eeb4acb719</guid><pubDate>Fri, 21 Aug 2026 15:40:29 +0000</pubDate><atom:updated>2026-08-21T15:40:29.603Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,Central,us,Telangana CM Revanth Reddy,தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/zq9r8ddy/New-Project-2026-08-21T211003.443.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரேவந்த் ரெட்டி அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/zq9r8ddy/New-Project-2026-08-21T211003.443.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அமெரிக்கா செல்வதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.</p><p>இது தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, “அரசியல் ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனால் தனது அமெரிக்க பயணத்தை ரேவந்த் ரெட்டி ரத்து செய்துள்ளார்.</p><p>தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணம் காரணமாகவே நேற்று தென்மண்டல கவுன்சில் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.</p><p>தற்போது லண்டனில் உள்ளார். லண்டனிலிருந்து நியூயார்க் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆக.30ம் தேதி இந்தியா திரும்ப இருந்த ரேவந்த் ரெட்டி, ஆக.23ம் தேதியே இந்தியா திரும்புகிறார். </p><h2>ரேவந்த் ரெட்டி எதிரொலி</h2><p>மத்திய அரசின் இந்த முடிவை ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார். “தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் என்று வரும்போது, நாம் அரசியல் மற்றும் தேர்தல்களுக்கு அப்பால் சிந்திக்க வேண்டும்” என்று அவர் சாடியுள்ளார். </p><p>இருப்பினும், தான் மத்திய அரசின் முடிவை ஏற்பதாகவும், ஆனால் தன்னுடன் வந்த தெலங்கானா அதிகாரிகள் குழு திட்டமிட்டபடி அமெரிக்கா சென்று அங்குள்ள கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை இறுதி செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிச்சைக்காரர் வேடம் அணிந்து ரூ.4,000 சம்பாதித்த பிரபல யூடியூபர் - வைரலான வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/youtuber-beggar-experiment-earns-4000-rupees</link><comments>https://www.maalaimalar.com/news/national/youtuber-beggar-experiment-earns-4000-rupees#comments</comments><guid isPermaLink="false">f944b462-5738-44a1-9b34-b7dce2bd79c0</guid><pubDate>Fri, 21 Aug 2026 15:16:38 +0000</pubDate><atom:updated>2026-08-21T15:16:38.037Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Beggar,யூடியூபர்,youtuber,Haridwar,ஹரித்வார்,பிச்சைக்காரர் வேடம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/uvsv77e5/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ YouTuber’s Begging Experiment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/uvsv77e5/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/உத்தரகாண்ட்">உத்தரகாண்டில்</a> உள்ள காவத் மேளா விழாவில் பிரபல யூடியூபர் தனது நண்பருடன் சேர்ந்து பிச்சை எடுத்து, ஒரு நாள் முடிவில் சுமார் 4,000 ரூபாயை சம்பாதித்துள்ளதாக கூறினார். மேலும் இந்த நிகழ்வு தங்களை மனதளவில் மிகவும் சோர்வடையச் செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.</p><p>ஹரித்வாரில் பிரபல யூடியூபர் புரோஷோத்தம் வசிஷ்ட்டும் அவரது நண்பர் சச்சினும் மக்கள் கூட்டம் அதிகள் உள்ள பகுதிகளில் பிச்சை எடுத்து பணம் சம்பாதிப்பது குறித்து ஒரு ஆய்வை செய்ய முயன்றனர். இதற்காக சச்சின் என்பவர் ஒரு பிச்சைக்காரர் போல மாறுவேடம் அணிந்தார்.</p><p>சச்சின் தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி, கிழிந்த ஆடைகளை அணிந்து, முகத்தில் அழுக்கைப் பூசி, ஒரு பிச்சைக்காரனைப் போல தோற்றமளிக்க ஒரு சிறிய கிண்ணத்தை ஏந்தியபடி அந்த சோதனையைத் தொடங்கினார்.</p><p>மேலும், கூட்டம் நிறைந்த அந்த மேளாவிற்குள் செல்வதற்கு முன்பு, அவர் தனது கழுத்தில் ஒரு UPI QR குறியீட்டையும் தொங்கவிட்டார்.</p><p>இந்த வீடியோவை பதிவு செய்த அவர்கள், பிச்சை சோதனையின் போது சச்சின் சுமார் 1,000 அல்லது 2,000 ரூபாய் சம்பாதிப்பார் என்று தாங்கள் எதிர்பார்த்ததாக தெரிவித்தனர்.</p><p>இதையடுத்து அவர் பிச்சை எடுக்க ஆரம்பித்தபோது, முதல் சில மணிநேரங்களுக்கு வருமானம் குறைவாகவே இருந்தது. சச்சின் பக்தர்களை அணுகியபோது, அவர்களில் பலர், "இல்லை என்று சொன்னேனே” என்று பதிலளித்ததால், அவர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார்.</p><p>இருப்பினும் அந்த நபரிடம் இருந்து சச்சின் சுமார் 130 ரூபாய் வசூலித்தார். மற்ற நபர்களோ கனிவுடன் அவருக்கு உதவினர்.</p><p>திருவிழா முழுவதும் தொடர்ந்து நடந்து சென்றபோது, சச்சின் கடைக்காரர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் உரையாடத் தொடங்கினார்.</p><p>ஒரு சன்கிளாஸ் விற்பனையாளர் அவருக்கு ஒரு ஜோடியைப் பரிசாகக் கொடுத்தார். இதனால் சச்சின், தன்னை ஒரு "தொழில்முறை பிச்சைக்காரர்" என்று வேடிக்கையாக அழைத்துக்கொண்டார்.</p><p>இதற்கிடையில், அவரது கழுத்தில் இருந்த கியூஆர் குறியீடு மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வாயிலாக சுமார் 40 ரூபாய் கிடைத்தது.</p><p>ஒரு கட்டத்தில், சச்சின் ஒரு உண்மையான பிச்சைக்காரரின் அருகில் அமர்ந்தார். அப்போது அந்தப் பிச்சைக்காரர், தனக்குத் தன் பெயரோ அல்லது தான் முன்பு வசித்த இடமோ நினைவில் இல்லை என்று அவரிடம் கூறினார்.</p><p>நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, சச்சின் 800 ரூபாயை எண்ணினார். இதையடுத்து தொடர்து நடந்த அந்த சோதனையின் போது, அந்த இரண்டு பேரையும் காவலர்கள் விரட்டியடித்தனர். இடைவிடாத மழையும், பல மணி நேர நடையும் அந்த அனுபவத்தை மேலும் மேலும் சோர்வடையச் செய்தன.</p><p>சோதனையின் முடிவில், வசிஷ்ட்டும் சச்சினும் சுமார் 4,000 ரூபாய் சேகரித்ததாகக் கூறினர். தினமும் இதே அளவு சம்பாதிக்கும் ஒருவர், ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 1.2 லட்சம் ரூபாய் ஈட்ட முடியும் என்றும் அவர்கள் கணக்கிட்டனர்.</p><p>காணொளியின் முடிவில், அந்தப் பணத்திற்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் விலை கொடுக்க வேண்டியிருந்தது என்பதையும் அந்த இருவரும் ஒப்புக்கொண்டனர்.</p><p>பிச்சை எடுப்பது மிகவும் சோர்வான செயல் என்றும், நாள் முழுவதும் மக்களை அணுகுவதற்கான ஆற்றலைத் தக்கவைத்துக்கொள்வது கடினம் என்றும் அவர்கள் விவரித்தனர்.</p><p>பிச்சை எடுப்பதை விடுத்து, நேர்மையான உழைப்பின் மூலம் சம்பாதிக்குமாறு பார்வையாளர்களை வலியுறுத்தி அவர்கள் அந்தச் சோதனையை முடித்தனர்.</p><p>இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்த பயனர்கள், மத மற்றும் சுற்றுலாத் தலங்களில் பிச்சை எடுப்பது, ஒரு வாழ்வாதாரமாகவோ அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாகவோ பெருகிவிட்டதா என்று கேள்வி எழுப்பினர்.</p><p>மேலும் உண்மையில் பிச்சை எடுப்பதையே நம்பி வாழும் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை ஒரு நாள் சோதனையால் முழுமையாகப் பிரதிபலிக்க முடியாது என்றும் பயனர்கள் சுட்டிக்காட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவிடம் மீண்டும் அனுமதி கேட்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்</title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">41c117fb-3b19-4ee0-a942-978f05d90465</guid><pubDate>Fri, 21 Aug 2026 14:58:16 +0000</pubDate><atom:updated>2026-08-21T14:58:16.074Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Elon Musk,Starlink</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/hpxzvxfc/ElonMusk001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எலான் மஸ்க்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/hpxzvxfc/ElonMusk001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சில ஆண்டுகளுக்கு முன் செயற்கைக்கோள் இணைய சேவை தொகுதிப்பிற்கு இந்தியா அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது.</p><p>தனது Gen 2 செயற்கைக்கோள் தொகுப்பிற்கு (constellation) ஒப்புதல் கோரி, இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்திடம் (IN-SPACe) மீண்டும் விண்ணப்பித்துள்ளது.</p><p>இந்த புதிய அமைப்பு பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் (LEO) 340-615 கி.மீ உயரத்தில் செயல்படும். மேலும், இது நேரடி-சாதன இணைப்பு (Direct-to-Device-D2D) வசதியை வழங்கும். இந்த வசதி போதிய சேவை கிடைக்காத சமூகங்களைச் சென்றடைவதற்கு மிக முக்கியமானது என்று மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இந்தியாவில் ஸ்டார்லிங்க் அறிமுகம் குறித்து எலான் மஸ்க் கூறியது என்ன?</h2><p>இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில், மிகக் குறைந்த அளவே சேவை பெறும் மக்களுக்கு ஸ்டார்லிங்க் உதவும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.</p><h2>முந்தைய நிராகரிப்புக்குப் பிறகு ஸ்டார்லிங்கின் இரண்டாவது முயற்சி</h2><p>சில ஆண்டுகளுக்கு முன்பு 30,000 செயற்கைக்கோள்களை கொண்ட இணைய சேவை தொகுப்பை அமைப்பதற்காக எலான் மஸ்க்கிற்கு சொந்தமான இந்நிறுவனம் சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தை IN-SPACe நிராகரித்திருந்தது. சில தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அலைக்கற்றை (spectrum) வரம்புகள் விதிமுறைகளுக்கு இணங்காததே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. </p><p>SpaceX நிறுவனத்தால் இயக்கப்படும் ஸ்டார்லிங்க், உலகின் மிகப்பெரிய LEO செயற்கைக்கோள் சேவை நிறுவனமாகும். இந்தியாவின் செயற்கைக்கோள் தகவல் தொடர்புச் சந்தை இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் பெரும் ஆற்றலை கொண்டுள்ளது என்று துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.</p><p>இந்நிலையில், இச்சந்தையில் ஸ்டார்லிங்க் நிறுவனம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. இந்நிறுவனம் முதலில் இந்தியாவில் சேவையைத் தொடங்க 'Gen 1' மற்றும் 'Gen 2' ஆகிய இரு தொகுப்புகளுக்கும் விண்ணப்பித்திருந்தது. ஆனால், பாரம்பரிய பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும் 4,408 LEO செயற்கைக்கோள்களைக் கொண்ட 'Gen 1' தொகுப்பிற்கு மட்டுமே IN-SPACe ஒப்புதல் அளித்தது.ன்று வலியுறுத்தியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>கிடுகிடுவென உயர்ந்த சர்க்கரை விலை: வரியில்லாமல் 1 மில்லியன் டன் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/national/india-allows-duty-free-import-of-1-million-tonnes-of-raw-sugar-to-cool-prices</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-allows-duty-free-import-of-1-million-tonnes-of-raw-sugar-to-cool-prices#comments</comments><guid isPermaLink="false">2a7bf8c2-8fcd-4d2b-b9fc-b7b84bce8f38</guid><pubDate>Fri, 21 Aug 2026 13:43:17 +0000</pubDate><atom:updated>2026-08-21T13:43:17.457Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>sugar,சர்க்கரை விலை உயர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/ei43jawf/Sugar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சர்க்கரை விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/ei43jawf/Sugar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பண்டிகை காலம் வரவிருப்பதால் அக்டோபர் 31-ந்தேதி வரை சர்க்கரை இறக்குமதிக்கு வரி விதிக்கப்படாது என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வெகுவாக குறைந்த நிலையில், சர்க்கரை விலை கடந்த இரண்டு மாதங்களில் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. வரும் மாதங்களில் பல்வேறு பண்டிகை வர இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 31-ந்தேதி ஒரு லட்சம் டன் சர்க்கரை இறக்குமதி செய்ய வரி தளர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வர்த்தக அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p><p>விலை உயர்ந்து வருவதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா இறக்குமதி செய்ய இருக்கும் நிலையில், லண்டன் மற்றும் நியூயார்க்கில் அடிப்படை விலையில் உயர்வு ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>Firebase தளத்தில் போலி செயலி, இணையதளங்கள்: நீக்கக்கோரி கூகுள் நிறுவனத்திற்கு இந்தியா உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-banks-financial-fraud-india-pressures-google</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-banks-financial-fraud-india-pressures-google#comments</comments><guid isPermaLink="false">4f925751-4e72-4a6d-92fe-74df4e916cc7</guid><pubDate>Fri, 21 Aug 2026 13:35:24 +0000</pubDate><atom:updated>2026-08-21T13:35:24.300Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Google,கூகுள்,firebase,14c,ஃபயர்பேஸ்,14சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/4xzftsex/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Google Firebase]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/4xzftsex/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை மற்றும் முக்கிய வங்கிகளை போல் ஆள்மாறாட்டம் செய்து, பொதுமக்களின் போன்களை ஹேக் செய்து அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்யும் ஃபயர்பேஸ்-ல் (firebase) கணக்கு வைத்துள்ள நூற்றுக்கணக்கான கணக்குகளை முடக்குமாறு கூகுள் நிறுவனத்திடம் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.</p><h3><strong>ஃபயர்பேஸ் மோசடி</strong></h3><p>செயலிகளை உருவாக்கவும் இணையதளங்களை ஹோஸ்ட் செய்யவும் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான டெவலப்பர்களால் ஃபயர்பேஸ் பயன்படுத்தப்படுகிறது. இது கூகுளின் கிளவுட் வணிகத்தின் ஒரு பகுதியாகும். இது சமீபத்திய காலாண்டில் கிட்டத்தட்ட 25 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது.</p><p>இந்த ஃபயர்பேஸ் தளத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள் (செயலி, இணையதளம் உருவாக்கியுள்ளவர்கள்), ஆண்ட்ராய்டு அடிப்படையிலான வங்கி சேவைகள் போல் வேடமிட்டு, குறிப்பாக கடன் அட்டைகளை (credit card) கொண்ட ஆண்ட்ராய்டு பயனர்களைக் குறிவைக்கின்றனர்.</p><p>புதிய கடன் அட்டைகள், வெகுமதிப் பெறுதல்கள் அல்லது கடன் வரம்பு மேம்படுத்தல்கள் போன்ற சலுகைகளை விளம்பரப்படுத்தி மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஈர்த்துள்ளதாக இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) தெரிவித்துள்ளது.</p><p>இணையவழி மோசடிகள் இந்தியாவின் மிக முக்கியமான சட்ட அமலாக்க சவால்களில் ஒன்றாக மாறியுள்ளன. அரசுத் தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் இணையவழி மோசடிகள் எனக் கூறப்படும் சம்பவங்களால் இந்தியர்கள் கிட்டத்தட்ட 2.4 பில்லியன் டாலர்களை இழந்துள்ளனர்.</p><p>இதன் காரணமாக, மோசடி செய்பவர்களின் இணையதளங்களை அகற்றுமாறு 14C வலியுறுத்தியுள்ளது.</p><p>ஃபயர்பேஸில் உள்ள 57 வலைத்தளங்களும் தரவுத்தளங்களும் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் கைபேசிகளிலிருந்து முக்கியமான நிதி தகவல்களைத் திரட்டியதாக இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்தது.</p><p>இதுகுறித்து ஆல்பபெட் நிறுவனத்திற்கு சொந்தமான கூகுள் கூறுகையில், ஃபிஷிங், மால்வேர் மற்றும் நிதி மோசடிக்காக எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை தடைசெய்யும் கடுமையான கொள்கைகளை எங்கள் நிறுவனம் கொண்டுள்ளது.</p><p>இந்த சம்பவம் குறித்து மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுக்க I4C உள்ளிட்ட சட்ட அமலாக்கத் துறைகளுடன் இணைந்து செயல்பட கூகுள் தாயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளது.</p><p>மார்ச் 2026-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் நிகழ்நேரப் பணப்பரிவர்த்தனை அமைப்பு மூலமாக மட்டுமே கிட்டத்தட்ட 242 பில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்பட்டன. இது இந்தியாவை உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைச் சந்தைகளில் ஒன்றாக ஆக்குகிறது.</p><h3><strong>போலி அரசாங்க சேவைகள்</strong></h3><p>அகற்றப்படக் கோரப்பட்ட 57 இணையதளங்கள் மற்றும் தரவுத்தளங்களில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி வங்கிகளைப் போல போலியாக உருவாக்கி ஃபயர்பேஸ் மோசடியில் ஈடுபட்டுள்ளது.</p><p>மேலும் மத்திய அரசின் திட்டமான பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் சிறு விவசாயிகளுக்கு ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் சுமார் 2,000 இந்திய ரூபாய் வழங்கப்படுகிறது.</p><p>இதை நோட்டம் விட்ட ஃபயர்பேஸ், அதனை பயன்படுத்தும் பயனர்கள், பணம் பெறுபவர்களுக்கு அவர்களின் பணத்தைப் பெறுவதற்கு உதவுவதாக இணையதளங்களின் மூலம் உறுதியளித்து, பின்னர் பணத்தை பெருவதற்காக ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளது.</p><p>இதையடுத்து அந்த மோசடி செயலியை பயனர்கள் பதிவிறக்கம் செய்தபோது, அவர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கைபேசி ஹேக் செய்யப்பட்டு, மோசடிக்காரர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மற்ற செயலிகளை அணுகி, வாடிக்கையாளர்களின் நிதி மோசடி செய்ய வழிவகை செய்கிறது.</p><h3><strong>இந்தியா அறிக்கை</strong></h3><p>இதுகுறித்து இந்திய அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பில், ஃபயர்பேஸ் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடாமல், பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசிகள் மீது ஏறக்குறைய முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் "ஆண்ட்ராய்டு காட் மோடு" என இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களால் பரவலாக அழைக்கப்படும் இதுபோன்ற மோசடி சேவைகளை குறித்து கவலைகளை எழுப்பியிருந்தது.</p><p>மேலும் இந்த விதமான தீங்கிழைக்கும் செயலிகள் பெரும்பாலும் வங்கி, அரசு மற்றும் பொதுப் பயன்பாட்டுத் தளங்கள் போன்ற நம்பகமான சேவைகளைப் போல் நடித்து, இணைப்புகள் மூலம் பயனர்களை ஏமாற்றி அவற்றை நிறுவச் செய்கின்றன,” எனவும் இந்திய அரசாங்கத்தின் ஆலோசனைக் குறிப்பு தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் துணிகரம்: ஜெய்ப்பூர் வியாபாரியின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான நகை அபேஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/thieves-smash-jaipur-trader-car-window-in-delhi-steal-rs-2-crore-jewellery</link><comments>https://www.maalaimalar.com/news/national/thieves-smash-jaipur-trader-car-window-in-delhi-steal-rs-2-crore-jewellery#comments</comments><guid isPermaLink="false">eb3a9fbe-4220-4732-9517-b8dc6f7f11a5</guid><pubDate>Fri, 21 Aug 2026 12:28:31 +0000</pubDate><atom:updated>2026-08-21T12:28:31.656Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>robbery,நகை கொள்ளை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/0nugmmiw/CarGlass0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கார் கண்ணாடி உடைப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/0nugmmiw/CarGlass0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்த நகை வியாபாரி கணையா லால். இவர் கடையும் நடத்தி வருகிறார். இவர் மார்க்கெட்டிங் தொடர்பான வேலையாக கடந்த 18-ந்தேதி டெல்லி சென்றுள்ளார்.</p><p>தன்னுடைய மகன் மற்றும் ஸ்டாஃப் ஒருவரையும் அழைத்துச் சென்றுள்ளார். மூன்று பேரும் நகைகள் அடங்கிய இரண்டு பேக் மற்றும் துணிகள் அடங்கிய சூட்கேஸ் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளனர். இரண்டு பேக்குகளிலும் தங்கம் மற்றும் டைமண்ட் ஆபரணங்கள் இருந்துள்ளன. அத்துடன் லேப்டாப் மற்றும் ஆதார் கார்டு போன்றவைகளும் இருந்துள்ளன.</p><p>கடந்த 19-ந்தேதி வியாபாரம் தொடர்பாக கிரேட்டர் கைலாஷில் உள்ள எம். பிளாக் மார்க்கெட்டில் வியாபாரம் தொடர்பாக பல தொழில் அதிபர்களை சந்தித்துள்ளார்.</p><p>பின்னர் கரோல் பாக்கில் உள்ள கனரா வங்கிக்கு எதிராக உள்ள ஆர்யா சமாஜ் சாலையில் உள்ள பார்க்கில் காரை நிறுத்திவிட்டு ஒரு கடையில் சாப்பிட சென்றுள்ளனர்.</p><p>கார் கண்ணாடியை உடைத்து நகை திருட்டு</p><p>அப்போது, பேக்குகள் மற்றும் சூட்கேசை காரிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் திரும்பி வரும்போது, காரின் பின் கண்ணாடி உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டது.</p><p>இது தொடர்பாக கணையா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் இரண்டு பேர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கரவாகனத்தில் வந்து கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பாதுகாப்பு படை வீரர்களிடம் Gen Z எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண் - வைரலாகும் சர்ச்சை வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/women-gen-z-tourists-ladakh-security-controversy</link><comments>https://www.maalaimalar.com/news/national/women-gen-z-tourists-ladakh-security-controversy#comments</comments><guid isPermaLink="false">86aab4ac-a79a-4c4e-bde0-2d8b78921873</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:36:29 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:36:29.166Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gen z,ladakh,omar abdullah,Indian soldiers,ஓமர் அப்துல்லா,லடாக்,இந்திய ராணுவம்,ஜென் சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/3joqsitz/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ladakh Gen Z Controversy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/3joqsitz/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லடாக் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப் படை வீரர்களிடம், சுற்றுலா சென்ற பெண்கள் ‘நாங்கள் ஜென் சி தலைமைறையினர்’ என்று கூறி மரியாதையில்லாமல் பேசியது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><h3><strong>லடாக் சோதனைச் சாவடி</strong></h3><p>லடாக் பகுதியில் உள்ள மினிமார்க் சோதனைச் சாவடியில், சுற்றுலா சென்ற பயணிகளின் வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு படை வீரர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது தங்களின் வாகனம் பல மணி நேரமாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டதாக, அங்கு இருந்த இரண்டு பெண்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><h3><strong>சர்ச்சை பேச்சு</strong></h3><p>அந்த சமயத்தில் ஒரு பெண் பாதுகாப்பு அதிகாரியிடம், ‘நாங்கள் ஜென் சி தலைமுறையினர், இந்த முட்டாள்தனத்தை நாங்கள் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை’ என்று கூறினார்.</p><p>மேலும், பாதுகாப்பு படை வீரர்களின் கட்டுப்பாடுகளை கேள்விக்குள்ளாக்கியதோடு, மற்ற சுற்றுலா பயணிகளையும் அங்கிருந்து வெளியேறுமாறு அந்த பெண் கூறினார்.</p><p>மேலும் அந்த பெண், நமது வரிப் பணத்தால் அனைவருக்கும் சம்பளம் கிடைக்கிறது. அவர் இப்போது நமக்கு மேல் போய் விடுவாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.</p><p>பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்ட சம்பவம் இணையத்தில் பரவி வைரலானது. இந்த பதிவிற்கு சமூக வலைதள பயனர்கள், அந்த பெண்ணின் நடத்தை மோசமானது மற்றும் மிகவும் அருவருப்பானது என்று கூறினர்.</p><p>இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, தான் சொன்ன வார்த்தைகளுக்காக தன்னை மன்னித்து கொள்ளும்படி, அந்த பெண் பதிவிட்டுள்ளார்.</p><h3><strong>மன்னிப்பு</strong></h3><p>அவர் அந்த வீடியோவில், “எங்களுடைய தேசத்தின் பாதுகாவலனாக உள்ள சகோதரரே, தயவு செய்து என்னை மன்னித்து கொள்ளுங்கள்” என்று பதிவிட்டார்.</p><p>நாங்கள் விரக்தியின் காரணமாகவே அப்படி பேசுகிறோம். ஆனால் நாங்கள் வைத்த விமர்சனத்திற்கு நீங்கள் ஒருபோதும் பதிலுக்கு எதுவும் சொல்வதில்லை. என்னை உங்களின் ஒரு சிறு தங்கையாக கருதி மன்னித்து கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.</p><h3><strong>கண்டனம்</strong></h3><p>இதையடுத்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, அந்த பெண் கூறிய இந்த கருத்திற்கு தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர், ஜென் Z என்ற அடையாளத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது, பழைய என் அப்பா யார் என்று தெரியாது என்ற மனப்பான்மையை போல் ஆகிவிட்டது என்று கூறினார்.</p><p>பாதுகாப்பு படை வீரர்கள் மீதான விமர்சனத்திற்கு முன்னாள் ராணுவ அதிகாரி கே.ஜே.எஸ். தில்லனும், அந்த சுற்றுலா பயணியின் நடத்தையை விமர்சித்தார்.</p><p>லெப்டினண்ட் ஜெனரல் டி.பி. பாண்டே கூறுகையில், இந்த சம்பவம் ஜென் Z தலைமுறையினரை மிகவும் எதிர்மறையாக சித்தரித்துள்ளது என்று கூறினார்.</p><p>இதற்கிடையில் லெப்டினண்ட் ஜெனெரல் சதீஷ் துவா, ராணுவ சம்பளங்கள் குறித்ததாக கூறப்பட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தடோடு, லடாக் பிராந்தியத்தின் பாதுகாப்பு சார்ந்த முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>அராஜக அரசியலில் ஈடுபடுகிறார் ராகுல் காந்தி: பாஜக எம்.பி. சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-mp-ravi-shankar-prasad-condemn-rahul-gandhi-dharna</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-mp-ravi-shankar-prasad-condemn-rahul-gandhi-dharna#comments</comments><guid isPermaLink="false">b8fb861d-1d03-43b9-9408-ddecd5cfbac2</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:02:06 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:02:06.744Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Ravi Shankar Prasad,dharna,ரவிசங்கர் பிரசாத்,தர்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/epy8ttlq/ravi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ravishankar prasad, rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/epy8ttlq/ravi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைநகர் டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்டு வரும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ராகுல் காந்தி</a> அராஜக அரசியலில் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமானது என்றார் பா.ஜ.க. எம்.பி.</p><h2>மாணவர்கள் போராட்டம்</h2><p>நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகக் கோரி சிஜேபி தலைமையில் டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது.</p><p>ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். அவர்கள்மீது காவல்துறை மற்றும் ஆர்ஏஎப் மத்திய படையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்கினர்.</p><p>ஆர்.ஏ.எப். படையினர் மாணவர்கள்மீது ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சுட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் உடலில் பெல்லட் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தது மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதற்கிடையே, பெல்லட் துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்த 19 வயது இளைஞர் சாஹில் லோசப் என்ற இளைஞருடன் இன்று டெல்லி நாடாளுமன்ற தெரு காவல்நிலையத்திற்கு சென்ற அவர், இவ்விவகாரத்தில் எப்.ஐ.ஆர். பதிவுசெய்யும்படி காவலர்களைக் கோரினார்.</p><h2>ராகுல் காந்தி தர்ணா</h2><p>ஆனால், காவலர்கள் எப்.ஐ.ஆர். பதிய மறுப்பு தெரிவிக்கவே, காவல்நிலையத்தில் வெளியே அமர்ந்து ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டார்.</p><p>இந்நிலையில், ராகுல் காந்தி தர்ணா குறித்து பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:</p><p>எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அராஜக அரசியலில் ஈடுபடுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.</p><p>தற்போது ​​எவ்வித அனுமதியோ அல்லது முன் அறிவிப்போ இன்றி நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல்நிலையத்தில் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><p>அவர் குறிப்பிடும் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே FIR பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என காவல்துறையினர் அவருக்குத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளது.</p><h2>சட்டத்தை மதிக்காத ராகுல் காந்தி</h2><p>ராகுல் காந்தி அவர்களே, நீங்கள் எந்தச் சட்டத்தையும் மதிக்க விரும்பவில்லையா? 'வந்தே மாதரம்' என்ற தேசியப் பாடல் விவகாரத்தில் காங்கிரஸ் எடுத்துள்ள நிலைப்பாட்டாலேயே அக்கட்சி தற்போது இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம், குற்றம் சாட்டுகிறோம்.</p><p>ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தற்போது செய்து வரும் செயலை நாங்கள் கண்டிக்கிறோம் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சர்க்கரை விலை உயர்வு: நீரிழிவு நோயை குறிப்பிட்டு விசித்திரமான பதில் அளித்த பீகார் அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-ministers-bizarre-diabetes-logic-over-sugar-price-hike</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-ministers-bizarre-diabetes-logic-over-sugar-price-hike#comments</comments><guid isPermaLink="false">9ee7501e-482d-4bd7-ac27-bffb7725a284</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:43:57 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:43:57.567Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,சர்க்கரை விலை உயர்வு,Sugar Rate</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/bh9pwbhs/ShravanKumar001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சர்க்கரை விலை உயர்வு- ஷ்ரவன் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/bh9pwbhs/ShravanKumar001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/bihar-government-approves-rs-10000-for-social-media-creators-promoting-welfare-schemes">பீகார்</a> மாநிலத்தில் சர்க்கரை விலை அதிக அளவில் உயர்ந்தது குறித்த கேள்விக்கு அமைச்சர் ஷ்ரவன் குமார், இப்போதெல்லாம் யார் ஸ்வீட்ஸ் சாப்பிடுகிறார்கள்? சர்க்கரை விலை உயர்வால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை என்று தெரிவித்துள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சர்க்கரை விலை உயர்வு</h2><p>இந்தியாவில் உற்பத்தி திறன் குறைவு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதால் சர்க்கரை விலை அதிகரித்துள்ளது. பீகாரில் சில்லறை விலையில் ஒரு கிலோ சர்க்கரை 48 ரூபாய் 50 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. தற்போது 65 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.</p><p>இது தொடர்பாக பீகார் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் அளித்த பதில் விசித்திரமாக இருந்தது.</p><h2>இது தொடர்பாக பீகார் அமைச்சர் ஷ்ரவன் குமார் கூறியதாவது:-</h2><p>எப்படியும் மக்கள் இப்போது குறைவான அளவிலேயே சர்க்கரையை உட்கொள்கிறார்கள். எல்லோரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போதெல்லாம் யார் ஸ்வீட்ஸ் சாப்பிடுகிறார்கள்? சர்க்கரை விலை உயர்வால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை என்றே நான் கருதுகிறேன். எனவே, இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை.</p><p>இவ்வாறு ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.</p><h2>மற்றொரு அமைச்சர் விஜய் குமார் கூறியதாவது:-</h2><p>சர்க்கரையின் விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை ஆராய வேண்டும். சர்க்கரை உற்பத்திக்கு என ஒரு அமைச்சர் உள்ளார். இது குறித்து நாங்கள் விவரங்களைக் கேட்போம். எனது விவசாயிகளின் விளைபொருட்களின் விலை உயரும்போது நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியடைகிறேன்.</p><p>இவ்வாறு அமைச்சர் விஜய் குமார் தெரிவித்தார்.</p><h2>அமைச்சர் ஷ்ரவன் குமார் கருத்துக்கு பப்பு யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பப்பு யாதவ் இதுகுறித்து கூறியதாவது:-</h2><p>மாட்டுச் சாணத்தின் மீது எவ்வளவு நெய் ஊற்றினாலும், அது மாட்டுச் சாணத்தின் சுவையையே கொண்டிருக்கும். அத்தகைய அமைச்சரிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? சமையல் எரிவாயு மற்றும் தக்காளி விலை உயர்ந்தபோது, ​​ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கேள்விகளை எழுப்பினர். ஆனால் இன்று சர்க்கரை விலை உயரும்போது, ​​அவர்கள் நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) பற்றி பேசுகிறார்கள். உண்மையில், அரசாங்கமே மிகப்பெரிய நீரிழிவு நோயாக உள்ளது.</p><p>இவ்வாறு பப்பு யாதவ் கடுமையாக சாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் அரங்கேறும் தேச விரோத செயல்கள்... மாணவர் வன்முறையை தொடர்ந்து அமைச்சர் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/jadavpur-campus-clash-abvp-and-left-student-groups-in-violent-confrontation-arson-and-anti-national-allegations</link><comments>https://www.maalaimalar.com/news/national/jadavpur-campus-clash-abvp-and-left-student-groups-in-violent-confrontation-arson-and-anti-national-allegations#comments</comments><guid isPermaLink="false">4717b8ac-741d-49e8-974a-8cf9cf8255f6</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:24:14 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:24:14.414Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,கொல்கத்தா,Kolkata,west bengal,jadavpur university,ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1q446hln/tn-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1q446hln/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்க</a> தலைநகர் கொல்கத்தாவில் அரசு நடத்தி வரும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. </p><h2>மோதல் </h2><p>ஆர்எஸ்எஸ் உடன் இணைந்த வலதுசாரி மாணவர்கள் அமைப்பான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF">ஏபிவிபியை </a>சேர்ந்த மாணவர்களுக்கும் இடதுசாரி மாணவர்கள் அமைப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே நேற்று காலை பல்கலைக்ககழக வளாகத்தில் மோதல் ஏற்பட்டது. </p><p>இதில் பல மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தெற்கு கொல்கத்தாவில் உள்ள பலக்லைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் பல இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.</p><p>முன்னதாக நேற்று முன் தினம் நடந்த 'இன்ஜீனியர்கிங் அண்ட் டெக்னாலஜி யூனியன்' மீட்டிங்கில் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதன் பின்னணியில் நேற்று இந்த கைகலப்பு நடந்துள்ளது.</p> <p>மாணவர்கள் அல்லாதோரை வெளியில் இருந்து அழைத்து வந்து தங்களை தாக்கியதாக இரு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>இந்த விவகாரம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜகவை சேர்ந்த அம்மாநில அமைச்சர் திலீப் கோஸ் இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><h2>தேச விரோத செயல்கள்</h2><p>அவர் கூறுகையில், "ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் சில குழுக்கள் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. தேசத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்புவது உள்ளிட்டவற்றில் அவை ஈடுபட்டு வருகின்றன. </p><p>மரியாதைக்குரிய ஆளுனரிடத்திலும் அவமரியாதையாக நடந்துகொண்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.</p><p>ஒரு கல்வி நிறுவனத்தில் இதுபோன்ற தேசவிரோத, சமூக விரோத செயல்கள் அனுமதிக்கப்படாது. அவை நிறுத்தப்பட வேண்டும்.</p><p>மாணவர் அரசியல் என்பது எப்போதுமே இதுபோன்ற பதற்றங்களை ஏற்படுத்துகிறது. நேற்று நடந்த வன்முறை குறித்த உண்மைகளை காவல்துறை கண்டறியும். </p><p>பல்கலைகழக வளாகத்தில் நடப்பட்டவற்றுக்கு பல்கலைக்கழக துணை வேந்தரும் பொறுப்பேற்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் அமைதியும், ஒழுங்கும் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.</p> <h2>துணை வேந்தர்</h2><p>இதனிடையே இந்த விவகாரம் குறித்தும் வெளியாட்கள் வந்தனரா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக துணை வேந்தர் சிரஞ்சிப் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். </p><p>பொழுது சாய்ந்த பிறகு வெளியாட்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெல்லட் துப்பாக்கி சர்ச்சை: நேராக டெல்லி காவல் நிலையம் சென்ற ராகுல் காந்தி.. எப்ஐஆர் பதிய கோரி தர்ணா!</title><link>https://www.maalaimalar.com/news/national/pellet-gun-controversy-rahul-gandhi-stages-dharna-over-injured-student-demands-fir</link><comments>https://www.maalaimalar.com/news/national/pellet-gun-controversy-rahul-gandhi-stages-dharna-over-injured-student-demands-fir#comments</comments><guid isPermaLink="false">254cbc7b-013d-4fbe-b985-0a9b33217747</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:50:54 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:50:54.317Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,delhi,டெல்லி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/3iadf041/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/3iadf041/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களவை எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/rahul-gandhi">ராகுல் காந்தி</a>, ஜூலை 20 நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக வந்த மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். </p><h2>தர்ணா</h2><p>பெல்லட் துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்த 19 வயது இளைஞர் சாஹில் லோசப் என்ற இளைஞருடன் இன்று டெல்லி நாடாளுமன்ற தெரு காவல் நிலையத்திற்கு சென்ற அவர், இவ்விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்யும்படி காவலர்களை கோரினார்.</p><p>ஆனால் காவலர்கள் எப்ஐஆர் பதிய மறுப்பு தெரிவிக்கவே, காவல்நிலையத்தில் வெளியே அமர்ந்து ராகுல் தர்ணாவில் ஈடுபட்டார்.</p><h2>ஜூலை 20 தாக்குதல்</h2><p>தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக கோரி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">சிஜேபி </a>தலைமையில் டெல்லியில் ஒரு மாதத்திற்கும் போராட்டம் நடைபெற்றது.</p><p>ஜூலை 20 நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் தொடங்கிய முதல் நாளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். அவர்கள் மீது காவல்துறை மற்றும் ஆர்ஏஎப் மத்திய படையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்கினர்.</p><p>மேலும் ஆர்ஏஎப் படையினர் மாணவர்கள் மீது ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தி சுட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. </p><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் உடலில் பெல்லட் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தது மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.</p><h2>சாஹில்</h2><p>குறிப்பாக சாஹில், உடலில் கடுமையான காயங்கள் இருந்ததன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அவரின் ஒரு பக்க கண் பார்வை பரிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.</p><p>அவருடன் ஏற்கனவே ஒரு முறை செய்தியாளர்களை சந்தித்து இவ்விவகாரத்தை எழுப்பிய ராகுல் இன்று அவருடன் காவல்நிலையம் சென்று எப்ஐஆர் பதிய வலியுறுத்தியதும் அதற்கு போலீஸ் மறுத்ததால் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பெல்லட்</h2><p>பெல்லட் துப்பாக்கிகளில் இருந்து ஒரே நேரத்தில் ரப்பர் அல்லது ஈயத்தால் ஆன சிறு குண்டுகளை சுட முடியும். அது உடலில் புள்ளி புள்ளியான காயங்களை ஏற்படுத்தும். </p><p>இதை பயன்படுத்த மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. </p><p>அவ்வாறிருக்க அமைதியான முறையில் பேரணி சென்ற இளைஞர்கள் மீது இவை பயன்படுத்தப்பட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அமைச்சர்களின் நாய்களுக்கு கூட நல்ல வசதி உள்ளது.. அரசுப் பள்ளிகளின் அவல நிலை - மகாராஷ்டிர கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் - அபிஜித் தீப்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-minister-urged-to-resign-over-poor-government-school-infrastructure-and-student-conditions</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-minister-urged-to-resign-over-poor-government-school-infrastructure-and-student-conditions#comments</comments><guid isPermaLink="false">e04b7ab1-bf31-4f56-84a4-555ca2a8d320</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:15:29 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:15:29.722Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,அரசுப் பள்ளிகள்,government schools,CJP Protest,அபிஜித் தீப்கே,Abhijit Dipke,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1sxh9i8c/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1sxh9i8c/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் சீர்குலைவுக்கு பொறுப்பேற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தாதா பூசே பதவி விலக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87">அபிஜித் தீப்கே </a>வலியுறுத்தியுள்ளார். </p><p>மகாராஷ்டிரா மாநிலம், லத்தூர் மாவட்டத்தில் உள்ள அவுசா தாலுகாவில் உஜானி என்ற கிராமம் அமைந்துள்ளது. </p><p>இங்குள்ள அரசுப் பள்ளியை நேற்று பார்வையிட்ட பிறகு தீப்கே செய்தியாளர்களை சந்தித்தார். </p> <h2>நாய்களுக்கு நல்ல வசதி </h2><p>அப்போது பேசிய அவர், "இது மாணவர்களின் வாழ்க்கைப் பிரச்சனை. மக்கள் பிரதிநிதிகள் மாணவர்களுக்காக எதுவுமே செய்யப்போவதில்லை என்றால், அவர்களுக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?</p><p>ஹெலிகாப்டரில் மட்டுமே பறப்பதற்காகவா மக்கள் வாக்களிக்கிறார்கள்? மக்கள் தங்கள் குழந்தைகள் எந்தச் சூழ்நிலையில் படிக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.</p><p>இந்த அமைச்சர்களின் நாய்களுக்குக்கூட மாணவர்களை விட சிறந்த வசதிகள் கிடைக்கின்றன.</p> <p>சில பள்ளிகளில் மாணவர்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகின்றனர்.</p><p>போதிய வகுப்பறைகள், பெஞ்சுகள், கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பான சாலை வசதிகள் இல்லாத பள்ளிகளின் அவலநிலைக்கு மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர்களுமே பொறுப்பேற்க வேண்டும்.</p><p>கல்விக்காகப் பணியாற்றாத வரை எங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்க வர வேண்டாம் என்று அவர்களிடம் கூறுங்கள். </p><p>அரசியலுக்காக சாதி, சமூகக் கொடிகளைப் பிடித்துக்கொண்டு நாம் வெளியே வருகிறோம். </p><p>அதேபோல் நமது குழந்தைகளின் பள்ளிகளுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.</p> <h2>ஆபத்தில் மதம்</h2><p>அரசியல் தலைவர்கள் மதம் ஆபத்தில் உள்ளது என்று தொடர்ச்சியாக கூறுவதை குறிப்பிட்ட அவர், "இத்தனை ஆண்டுகளாக அழியாத மதம், உங்கள் ஆட்சிக் காலத்திலா அழியப் போகிறது? மதம் எங்கும் போய்விடாது. </p><p>ஆனால் நமது குழந்தைகளின் எதிர்காலம் கண்டிப்பாகப் பாதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.</p> <h2>ராஜினாமா செய்</h2><p>தாதா பூசே பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக தொடர வேண்டுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "பள்ளிகளின் அவலநிலையைப் பார்த்தால், கல்வி அமைச்சர் அந்தப் பதவியில் தொடரக்கூடாது என்றே தோன்றுகிறது.</p><p>அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்தால்தான் அங்குள்ள உண்மையான பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முடியும்" என தீப்கே பதிலளித்தார்.</p> <p>பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் ஆளும் அரசு, அரசுப் பள்ளிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரத் தவறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.</p><p>School Thik Karo (பள்ளிகளைச் சரிசெய்) என்ற பெயரில்<a href="https://www.maalaimalar.com/topic/cjp-protest"> சிஜேபி </a>கடந்த வாரம் பிரசார இயக்கம் ஒன்றை தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item></channel></rss>