<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 07 Sep 2026 13:11:46 +0000</lastBuildDate><item><title>நாடு முழுவதும் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/by-elections-announced-for-6-constituencies-in-india</link><comments>https://www.maalaimalar.com/news/national/by-elections-announced-for-6-constituencies-in-india#comments</comments><guid isPermaLink="false">f76319b6-f433-4cb4-8ba6-0d809d7a0069</guid><pubDate>Mon, 07 Sep 2026 12:42:18 +0000</pubDate><atom:updated>2026-09-07T12:42:18.827Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Election Commission of India,bypolls,இந்திய தேர்தல் ஆணையம்,இடைத்தேர்தல்,தமிழ்நாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/dkwns9f5/New-Project-2026-09-07T181151.361.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியாவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/dkwns9f5/New-Project-2026-09-07T181151.361.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் மொத்தம் 6 தொகுதிகளுக்கு அக்.6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><h2>தமிழ்நாடு</h2><p>தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>மதுராந்தகம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து இந்தத் தொகுதிகள் காலியாகின.</p><h2>7 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு</h2><p>தமிழ்நாட்டில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 2 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 9 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தேர்தல் வழக்குகள்</h2><p>திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/no-plan-to-announce-by-elections-for-the-five-vacant-constituencies-in-tamil-nadu-election-commission">தேர்தல் வழக்குகள் </a>நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குகளின் இறுதி தீர்ப்பு வரும் வரை அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது எனத் தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><h2>அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம்</h2><p>தமிழ்நாட்டைத் தொடர்ந்து அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் மாநிலங்களில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, மேற்குவங்கத்தின் நந்திகிராம், ரெஜிநகர், அசாமின் நாகோன் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த ஆறு தொகுதிகளுக்கும் வேட்புமனுத்தாக்கல் செப்.9 தொடங்கும் எனவும், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் செப்.16 எனவும், வேட்புமனுக்களை பரிசீலனை செய்வதற்கான கடைசி நாள் செப்.17 என்றும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்.19 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>வாக்குப்பதிவு அக்.6ம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்.9 நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கொல்கத்தாவில் பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று: சாவின் விழிம்பில் இருந்து காப்பாற்றிய மருத்துவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/baby-girl-born-with-covid-in-kolkata-saved-by-doctors</link><comments>https://www.maalaimalar.com/news/national/baby-girl-born-with-covid-in-kolkata-saved-by-doctors#comments</comments><guid isPermaLink="false">6f2c5659-e114-44b2-a902-fb279849562c</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:58:27 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:58:27.457Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொல்கத்தா,Kolkata,covid,Corona,கோவிட்,கொரோனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/2sce0ex7/Untitled-design-33.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kolkata newborn Covid case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/2sce0ex7/Untitled-design-33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதிதாக பிறந்த ஒரு பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர்.</p><p>இதையடுத்து சீரற்ற இதய துடிப்பு மற்றும் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் உயிருக்கு போராடிய குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காப்பாற்றினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்குவங்க மாநிலம்</a> கொல்கத்தாவில் உள்ள பெல்லி வியூ மருத்துவமனையில், அர்பிதா சாந்த்ரா என்ற கர்ப்பிணி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். </p><p>அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் கருப்பையில் உள்ள குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்ததை கண்டறிந்தனர். </p><h3><strong>பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று</strong></h3><p>இதையடுத்து கொரோனா தொற்றுடன் பிறந்த அந்த பெண் குழந்தை, சுவாசக் கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டது. </p><p>இதற்கிடையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த பெண் குழந்தைக்கு செப்சிஸ் நோய் இருப்பதையும் கண்டறிந்தனர்.</p><p>செப்சிஸ் நோய் காரணமாக பிறந்த குழந்தைக்கு மூச்சுத் திணறலும் அதிகப்படியான இதயத் துடிப்பும் ஏற்பட்டது. </p><p>இதைத்தொடர்ந்து அந்த பச்சிளம் குழந்தைக்கு மருத்துவர்கள் முதலில் தேவையான ஆக்சிஜனை வழங்கினர்.</p><p>குழந்தையின் நிலைமை மேலும் மோசமடைந்ததால், செயற்கை சுவாச உதவியுடன் நுரையீரலுக்குள் காற்றை செலுத்தினர்.</p><p>இதையடுத்து பிறந்த குழந்தைக்கு புரோ-பி.என்.பி மருத்துவ பரிசோதனையை மருத்துவர்கள் செய்தனர். இதன்மூலம் கொரோனா மற்றும் செப்சிஸ் நோய் இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது.</p><h3><strong>மோசமான குழந்தையின் உடல்நிலை</strong></h3><p>அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திலும் குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமாகி காணப்பட்டது. </p><p>மேலும் கொரோனா பரிசோதனை முடிவை பெற ஐந்து நாட்கள் ஆகும் என்பதால், மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சையை தொடர்ந்து அளித்தனர்.</p><p>இதையடுத்து ஐந்து நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சையை தொடர்ந்து, குழந்தையின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.</p><p>இருந்தாலும் குழந்தையின் உடல்நிலை முழுமையாக குணமடையும் வரை, அந்த பெண் குழந்தையை மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தனர்.</p><h3><strong>மருத்துவர் சாந்தனு ரே</strong></h3><p>இதுகுறித்து பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளித்த குழந்தை நல மருத்துவர் சாந்தனு ரே கூறுகையில், “செப்சிஸ் மற்றும் கொரோனா ஆகிய இரண்டு நோய் தொற்றுகளும், உயிருக்கு ஆபத்தானவை என்பதால், நாங்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தோம்.</p><p>எம்.ஐ.எஸ்-என் நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 50 சதவீதமாக உள்ளது. குழந்தையின் உடல்நிலை வேகமாக மோசமடைந்து வந்ததால், நாங்கள் விரைவாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.</p><p>இதன் காரணமாக வைரஸ் மற்றும் பாக்டீரியா ஆகியவற்றிற்கு எதிராக ஆண்டிபாடிகளாக செயல்படும் காமா குளோபுலின் என்ற ரத்த புரதத்தை குழந்தைக்கு செலுத்த முடிவு செய்தோம். ஐந்தாவது நாளில் குழந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.</p><p>இருந்தாலும் பூரண குணமடையும் வரையில், நாங்கள் அந்த பச்சிளம் குழந்தையை தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்தோம்” என மருத்துவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.90 லட்சம் சம்பளத்தை உதறி தள்ளிய இளைஞர் - ரூ.30,000 முதலீட்டில் மாதம் ரூ.12 லட்சம் சம்பாதித்து அசத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/from-30k-investment-to-1-2-million-a-month-after-quitting-9-million-rupee-job</link><comments>https://www.maalaimalar.com/news/national/from-30k-investment-to-1-2-million-a-month-after-quitting-9-million-rupee-job#comments</comments><guid isPermaLink="false">b2df8a10-063e-48df-8ad4-c47a29ac68ae</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:50:16 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:50:16.663Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chandigarh,சண்டிகர்,Mohit Nijhawan,மோஹித் நிஜவான்,Micro greens,மைக்ரோ கிரீன்ஸ்,Vertical Farming,Indoor Farming</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/fm6h9ewr/Micro-greens" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Micro greens ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/fm6h9ewr/Micro-greens?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நம்மில் பலருக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.90 லட்சம் சம்பளம் என்பது ஒரு கனவாகவே இருக்கும். ஆனால், <a href="https://www.maalaimalar.com/topic/chandigarh">சண்டிகரைச் </a>சேர்ந்த மோஹித் நிஜவான் என்று இளைஞருக்கு, அது வெறும் ஆரம்ப புள்ளியாகவே இருந்துள்ளது.</p><p>கணினி அறிவியலில் பி.டெக் பட்டம் பெற்ற மோஹித், தனது கைநிறைய சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலையை கடந்த 2020 ஆண்டு டிசம்பரில் விட்டுவிட்டு, முற்றிலும் மாறுபட்ட துறையான உள் அரங்கு விவசாயத்தில் கால் பதித்து இன்று கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார்.</p><h2>ரூ.30,000 முதலீட்டில் தொடங்கிய சோதனை முயற்சி</h2><p>ஆரம்பத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய விரும்பாத மோஹித், வெறும் ரூ.30,000 முதலீட்டில் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள 100 சதுர அடி சிறிய அறையில் <a href="https://www.greenu.in/mohit-nijhwan-microgreens/">மைக்ரோகிரீன்ஸ் </a>(முளைக்கீரை/இளம் ஊட்டச்சத்து தாவரங்கள்) வளர்க்கத் தொடங்கினார்.</p><p>ஆரம்பக் கட்டத்தில் விவசாயத்தின் நுணுக்கங்கள், உற்பத்தி முறைகள், வாடிக்கையாளர்களைக் கண்டறிதல் மற்றும் ஒரு நிலையான வணிக மாதிரியை உருவாக்குதல் என அனைத்தையும் அவரே சுயமாகக் கற்றுக் கொண்டார். </p><p>இந்த சிறிய சோதனை முயற்சிதான் இன்று ‘கிரீனு மைக்ரோகிரீன்ஸ்’ என்ற மிகப்பெரிய பிராண்டாக உருவெடுத்துள்ளது.</p><h2>அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செங்குத்து விவசாயம்</h2><p>ஆரம்பத்தில் வெறும் மூன்று ரேக்குகள், தட்டுகள், வளர்ப்பு விளக்குகள் மற்றும் விதைகளைக் கொண்டு செங்குத்து உள்ளரங்கு விவசாயத்தை மோஹித் தொடங்கினார். </p><p>முற்றிலும் மரபணு மாற்றப்படாத மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாத இயற்கை முறையில் 21 வகையான ஆர்கானிக் மைக்ரோகிரீன்ஸ் வகைகளை வளர்ப்பதில் அவர் தீவிர கவனம் செலுத்தினார்.</p><p>தற்போது இந்த வணிகம் பல மடங்கு விரிவடைந்துள்ளது. இப்போது 500 சதுர அடி பரப்பளவிலான அதிநவீன வசதிகள் கொண்ட பண்ணையாக இது மாறியுள்ளது. </p><p>இங்கு சுமார் 60 ரேக்குகள் அமைக்கப்பட்டு, மாதத்திற்கு 12,000 தட்டுகள் மைக்ரோகிரீன்ஸ் உற்பத்தி செய்யும் அளவிற்குத் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>மாதம் ரூ.12 லட்சம்... ஆண்டுக்கு ரூ.1.44 கோடி வருவாய்</h2><p>தற்போது 'கிரீனு மைக்ரோகிரீன்ஸ்' நிறுவனம் மூலம் மோஹித் நிஜவனுக்கு மாதத்திற்கு சுமார் ரூ.12 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஆண்டு வருமானமாக தோராயமாக ரூ.1.44 கோடியை பெற்று வருகிறார். </p><p>இது குறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் இவரது வீடியோ காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது: ஊழியர்களின் அச்சத்தைப் போக்கி இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் திட்டவட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/isro-not-to-be-privatised-isro-chief-v-narayanan-assures-employees</link><comments>https://www.maalaimalar.com/news/national/isro-not-to-be-privatised-isro-chief-v-narayanan-assures-employees#comments</comments><guid isPermaLink="false">ee0b6c5c-37d8-4716-be64-56226eb6cb96</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:28:02 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:28:02.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,V.Narayanan,Bengaluru Space Expo,வி.நாராயணன்,இன்ஸ்பேஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/cvj1lfb8/FFD.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  V.Narayanan  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/cvj1lfb8/FFD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> "எதிர்காலத்தில் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்புப் பணிகளைத் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளும்" என்று ‘இன்ஸ்பேஸ்’ தலைவர் பவன் கோயங்கா பேசியதாகச் செய்திகள் வெளியாயின. </p><p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ தனியார்மயமாக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன் விரிவான விளக்கம் அளித்துள்ளார். இந்திய விண்வெளித் துறை ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்றும், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் நலன்களும் கவலைகளும் முழுமையாக கேட்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><p>பெங்களூருவில் நடைபெற்று வரும் ‘பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போ’ நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன், "கடந்த 2020-ஆம் ஆண்டே விண்வெளித் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. தனியார் துறையினருக்கு வாய்ப்பளித்து, இந்தியாவின் ஒட்டுமொத்த விண்வெளித் தொழில்நுட்பக் கட்டமைப்பை விரிவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதற்காக இஸ்ரோ தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது என்பது முற்றிலும் தவறான செய்தி" என்று தெளிவுபடுத்தினார்.</p><p>மேலும், விண்கலன்கள் மற்றும் செயற்கைக்கோள்களை தயாரிக்கும் பணியில் பல நூற்றுக்கணக்கான இந்தியத் தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே இஸ்ரோவுக்குப் பெரும் உதவிகளை வழங்கி வருகின்றன என்பதையும், இது பல தசாப்தங்களாகத் தொடரும் நடைமுறைதான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>சமீபத்தில் விண்வெளித் துறை கட்டுப்பாட்டு அமைப்பான ‘இன்ஸ்பேஸ்’ தலைவர் பவன் கோயங்கா, "எதிர்காலத்தில் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்புப் பணிகளைத் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளும்" என்று பேசியதாகச் செய்திகள் வெளியாயின. இதைத் தொடர்ந்து, இஸ்ரோ அமைப்பைச் சேர்ந்த 9 ஊழியர் சங்கங்கள் இணைந்து தலைவர் வி.நாராயணனுக்கு செப்டம்பர் 4 அன்று 5 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதின.</p><p>அந்தக் கடிதத்தில், இஸ்ரோவின் உற்பத்திப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால் அமைப்பின் முக்கியத்துவம் குறையுமா, பணி நியமனங்கள் பாதிக்கப்படுமா மற்றும் ஊழியர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் கோரியிருந்தனர். இந்தச் சூழலில்தான் இஸ்ரோ தலைவர் இதற்கான பதிலை அளித்துள்ளார்.</p><p>இஸ்ரோ வெளியிட்ட தகவல்களின்படி, வழக்கமான ராக்கெட் தயாரிப்பு மற்றும் செயற்கைக்கோள் உற்பத்திப் பணிகளைத் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும். இதனால் இஸ்ரோ தனது கவனத்தை அதிநவீன ஆராய்ச்சி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களில் முழுமையாகச் செலுத்த முடியும்.</p><p>குறிப்பாக, 2035-க்குள் இந்திய விண்வெளி மையம் அமைத்தல், 2040-க்குள் நிலவுக்கு இந்தியர்களை அனுப்பும் திட்டம், மீண்டும் பயன்படுத்தக்கூடிய நவீன ராக்கெட்டுகளை உருவாக்குதல் மற்றும் ஆழமான விண்வெளி ஆராய்ச்சிகள் போன்ற முக்கிய தொலைநோக்கு இலக்குகளை நோக்கி இஸ்ரோ மிக தீவிரமாகச் செயல்பட உள்ளது.</p><p>எனவே, தேசிய பாதுகாப்பு சார்ந்த முக்கிய உள்கட்டமைப்புகளும் முதன்மை விண்வெளி ஆராய்ச்சி உரிமைகளும் எப்போதும் இந்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும், இஸ்ரோவின் முக்கியத்துவம் எக்காலத்திலும் குறையாது என்றும் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதலீடு செய்யும் பணத்திற்கு தினமும் 1% வட்டி: நூதன முறையில் ரூ.7 கோடி மோசடி</title><link>https://www.maalaimalar.com/news/national/daily-1-percent-return-investment-7-crore-fraud</link><comments>https://www.maalaimalar.com/news/national/daily-1-percent-return-investment-7-crore-fraud#comments</comments><guid isPermaLink="false">5c060fa5-ee8e-40d1-9404-3cd4657dc9b5</guid><pubDate>Mon, 07 Sep 2026 10:26:20 +0000</pubDate><atom:updated>2026-09-07T10:26:20.062Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,மோசடி,scam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/pfyd1hp0/Untitled-design-31.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Maharashtra investment fraud]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/pfyd1hp0/Untitled-design-31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் பொதுமக்களிடம் தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு தினமும் 1% திருப்பி தருவதாக கூறி, 67 முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 7 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட பிரசாந்த் அங்னே என்பவர் மீது டோம்பிவ்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE">மகராஷ்டிராவில்</a> உள்ள டோம்பிவ்லி பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு, பிரசாந்த் அங்னே மற்றும் அவரது மனைவி பல்லவி ஆகியோர் இணைந்து ‘கன்கன்ஸ்மார்ட் ஷேர்ஸ் அண்ட் ஸ்டாக் புரோக்கர் பிரைவேட் லிமிடெட்’ என்ற முதலீட்டு நிறுவனத்தை ஆரம்பித்தனர்.</p><p>இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களிடம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து 52 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ. 2.77 கோடிக்கும் அதிகமாக ஏமாற்றியதாக, மும்பை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நிறுவனர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.  </p><p>இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.</p><h3><strong>தினமும் 1 சதவீதம் தருவதாக மோசடி</strong></h3><p>இந்த நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிரசாந்த் தற்போது மீண்டும் பொதுமக்களிடம், தாங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு தினமும் 1 சதவீதம் வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி பணத்தை ஏமாற்றிவிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><h3><strong>உதவி காவல் ஆணையர்</strong></h3><p>இதுகுறித்து டோம்பிவ்லி உதவி காவல் ஆணையர் விஜய் மராத்தே கூறுகையில், மகராஷ்டிராவில் உள்ள மராத்தே, பாண்டுப், டோம்பிவ்லி மற்றும் தானே ஆகிய பகுதிகளில் பிரசாந்த் மீது மூன்று வழக்குகள் உள்ளதாக தெரிவித்தார்.</p><p>மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் அவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து, இந்த வழக்கில் உயர்மட்ட அளவிலான விசாரணையை தொடங்கியுள்ளோம்.</p><p>தற்போது வரையில் 67 முதலீட்டாளர்கள் தாங்கள் ரூ.7 கோடி வரை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். இருப்பினும், முதலீட்டாளர்கள் இதைவிட அதிமான அளவில் பணத்தை இழந்திருக்க வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி விடுதி கட்டிட விபத்து: 7 பேரை பலி கொண்ட கட்டட உரிமையாளர் ராஜஸ்தானில் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-lodge-building-accident-owner-arrested-in-rajasthan</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-lodge-building-accident-owner-arrested-in-rajasthan#comments</comments><guid isPermaLink="false">83411828-23a0-4fc3-a57b-822261597904</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:58:09 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:58:09.614Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,delhi,Delhi Building Collapse,ராஜஸ்தான்,Satya Niketan,சத்ய நிகேதன்,டெல்லி விடுதி கட்டிட விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/h5ig7yro/nn.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi building collapse ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/h5ig7yro/nn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள இந்த 5 அடுக்குக் கட்டிடம், மாணவர்களுக்கான தனியார் விடுதியாகச் செயல்பட்டு வந்தது. </p><p>டெல்லி <a href="https://www.maalaimalar.com/news/national/six-killed-five-storey-building-collapses-in-delhi">சத்ய நிகேதன் </a>பகுதியில் செயல்பட்டு வந்த 5 அடுக்குகள் கொண்ட மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் ஹரிராம் குப்தாவை டெல்லி காவல்துறையினர் ராஜஸ்தான் மாநிலத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.</p><h2>24 மணி நே<strong>ர தீவிர தேடு</strong>தல் வேட்டை</h2><p>விபத்து நடந்ததைத் தொடர்ந்து, கட்டட உரிமையாளர் ஹரிராம் குப்தா சம்பவ இடத்திலிருந்து தலைமறைவானார். இதையடுத்து, டெல்லி காவல்துறை அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் லுக்-அவுட் சுற்றறிக்கை செய்ததுடன், அவரது பாஸ்போர்ட் விவரங்களையும் கைப்பற்றித் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியது. சுமார் 10 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையின் முடிவில், ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதிக்கு அருகில் பதுங்கியிருந்த ஹரிராம் குப்தாவை டெல்லி காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.</p><p>தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள இந்த 5 அடுக்குக் கட்டிடம், மாணவர்களுக்கான தனியார் விடுதியாகச் செயல்பட்டு வந்தது. பழமையான இந்தக் கட்டிடத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், எதிர்பாராதவிதமாக முழு கட்டிடமும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.</p><p>இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், தீயணைப்புத் துறையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இடிபாடுகளிலிருந்து 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தக் கொடூர விபத்தைத் தொடர்ந்து, கட்டிடத்தின் பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் அலட்சியப் போக்கு தொடர்பாக டெல்லி மாநகராட்சி கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய தென் மண்டலத் துணை ஆணையர், நிர்வாகப் பொறியாளர், உதவிப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட பல மாநகராட்சி அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள உரிமையாளர் ஹரிராம் குப்தாவிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வேலைக்கு போக பயந்து AI-யில் போலி புலி வீடியோ... கர்நாடக வாலிபருக்கு வனத்துறை கொடுத்த நூதன தண்டனை!</title><link>https://www.maalaimalar.com/news/national/ai-fake-tiger-video-to-escape-work-karnataka-forest-department-gives-innovative-punishment</link><comments>https://www.maalaimalar.com/news/national/ai-fake-tiger-video-to-escape-work-karnataka-forest-department-gives-innovative-punishment#comments</comments><guid isPermaLink="false">9ebea42e-1da6-4b2a-99ac-421e8f974c82</guid><pubDate>Mon, 07 Sep 2026 08:08:16 +0000</pubDate><atom:updated>2026-09-07T08:08:16.730Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,Forest Department,AI Video,வனத்துறை அதிகாரிகள்,போலி வீடியோ,Koppal,Fake Tiger Video</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zt95q9cg/Fake-Tiger-Video" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fake Tiger Video  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zt95q9cg/Fake-Tiger-Video?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகாவில் </a>சோம்பேறித்தனத்தால் வேலைக்குச் செல்ல பயந்த வாலிபர் ஒருவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புலி வீடியோ ஒன்றை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><h2><strong>சம்பவத்தின் பின்னணி</strong></h2><p>கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தின் டவுன் பகுதியில் உள்ள காவலி கிராமத்தைச் சேர்ந்த 25 வயது வாலிபரான ஈரண்ணாவுக்கு, வனப்பகுதியை ஒட்டியவாறு ஒரு தோட்டம் சொந்தமாக உள்ளது. </p><p>அந்தத் தோட்டத்திற்குச் சென்று வேலை பார்க்குமாறு அவரது குடும்பத்தினர் ஈரண்ணாவைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.</p><p>குடும்பத்தினரின் தொல்லையிலிருந்து தப்பிக்க நினைத்த ஈரண்ணா, தனது தோட்டத்தில் ஒரு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF">புலி </a>உலா வருவது போன்ற காட்சியை ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் போலியாக ஒரு வீடியோவாகத் தயாரித்தார். </p><p>பின்னர் அதைத் தனது குடும்பத்தினரிடம் காட்டி, "தோட்டத்தில் புலி சுற்றுகிறது, என்னால் வேலைக்குச் செல்ல முடியாது" என்று கூறி தப்ப முயன்றுள்ளார். </p><p>மேலும், அந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட, அது காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2><strong>வனத்துறை விசாரணை மற்றும் அம்பலமான உண்மை</strong></h2><p>வீடியோவை உண்மை என்று நம்பிய ஈரண்ணாவின் குடும்பத்தினரும், கிராம மக்களும் உடனடியாக <a href="https://www.maalaimalar.com/topic/forest-officer">வனத்துறை அதிகாரிகளுக்கு</a> அச்சத்துடன் தகவல் தெரிவித்தனர்.</p><p>தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் ஈரண்ணாவின் தோட்டத்திற்கு விரைந்து சென்று தீவிரமாக ஆய்வு செய்தனர்.</p><p>ஆனால், தோட்டம் முழுவதும் தேடியும் புலியின் கால் தடங்கள் எதுவும் சிக்காததால் அதிகாரிகளுக்குச் சந்தேகம் எழுந்தது.</p><p>இதையடுத்து ஈரண்ணாவை நேரில் அழைத்து வனத்துறையினர் தங்களது பாணியில் விசாரித்தனர். </p><p>அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தான் வேலைக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காகவே ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் போலி புலி வீடியோவை உருவாக்கி சமூக வலைதளத்தில் பரப்பியதை ஈரண்ணா ஒப்புக்கொண்டார்.</p><h2><strong>அதிகாரிகளின் நூதன தண்டனை</strong></h2><p>பொய்யான தகவலைப் பரப்பி கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியதற்கும், வனத்துறையினரின் பொன்னான நேரத்தை வீணடித்ததற்கும் ஈரண்ணாவுக்கு ஒரு படிப்பினையான நூதன தண்டனையை அதிகாரிகள் வழங்கினர்.</p><p>ஈரண்ணாவை அவரது தோட்டத்திற்கே அழைத்துச் சென்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">வனத்துறையினர்</a>, அங்கிருந்த கிராம மக்கள் அனைவரின் முன்னிலையிலும் அவரை <strong>50 தோப்புக்கரணம்</strong> போட வைத்தனர்.</p><p>அதோடு நின்றுவிடாமல், இனிமேல் இதுபோன்ற ஆபத்தான மற்றும் போலி வேலைகளில் ஈடுபடக் கூடாது என்று அவரைக் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். </p><p>இந்நிலையில், ஈரண்ணா தோப்புக்கரணம் போடும் அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>இறந்துவிட்டதாக சுடுகாட்டில் தகனம்: 27 மாதங்களுக்கு பின் உயிருடன் வீடு திரும்பிய பெண்: லக்னோவில் அதிர்ச்சித் திருப்பம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/lucknow-woman-cremated-as-dead-returns-home-alive-after-27-months</link><comments>https://www.maalaimalar.com/news/national/lucknow-woman-cremated-as-dead-returns-home-alive-after-27-months#comments</comments><guid isPermaLink="false">a8964055-a950-49f4-bf42-aba2ba3ba806</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:57:49 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:57:49.258Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உத்தரபிரதேசம்,வரதட்சணை கொடுமை,uttarpradesh,லக்னோ,lucknow,DNATest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/29dawgak/vadakki.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Woman returns home alive]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/29dawgak/vadakki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், இறந்துவிட்டதாகக் கருதி குடும்பத்தினரால் இறுதிச்சடங்குகள் செய்து தகனம் செய்யப்பட்ட இளம்பெண் உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shock-in-telangana-midnight-baby-thrown-from-auto">லக்னோவின் </a>பி.கே.டி பகுதிக்கு உட்பட்ட நாவிகோட் நந்தனா கிராமத்தைச் சேர்ந்த ஷிவானி என்ற பெண், கடந்த 2024-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இதைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2024 ஜூலை 16 அன்று ஐ.ஐ.எம் சாலைக்கு பின்புறம் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் இருந்து அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தை காவல்துறை மீட்டது.</p><p>மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அந்த உடலை பார்வையிட்ட ஷிவானியின் குடும்பத்தினர், கையில் கட்டப்பட்டிருந்த காப்பு மற்றும் விரலில் இருந்த மோதிரத்தை வைத்து அது ஷிவானிதான் என அடையாளம் காட்டினர். அதைத் தொடர்ந்து, அந்த உடலைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தினர் பைன்சாகுண்ட் மயானத்தில் தகனமும் செய்தனர்.</p><h2>வரதட்<strong>சணை வழக்கு</strong></h2><p>உடலை அடையாளம் காட்டிய கையோடு, ஷிவானியின் குடும்பத்தினர் அவருடைய கணவர் மற்றும் மாமனார் வீட்டினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஷிவானியை வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்தி கொலை செய்து உடலை வீசிவிட்டதாகக் குற்றம் சாட்டினர். இதன் அடிப்படையில் காவல்துறை வரதட்சணைக் கொடுமை, கடத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது.</p><h2>டி.எ<strong>ன்.ஏ சோதனையில் வெளிவ</strong>ந்த உண்மை</h2><p>அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடலின் அடையாளம் உறுதியாகத் தெரியாததால், உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் சோதனைகளின் ஒரு பகுதியாக டி.என்.ஏ மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதன் முடிவுகள் பின்னரே வெளிவந்தன. அதில், தகனம் செய்யப்பட்ட உடலின் டி.என்.ஏ மாதிரியும், ஷிவானியின் பெற்றோரின் டி.என்.ஏ மாதிரியும் பொருந்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மீட்கப்பட்ட உடல் ஷிவானியுடையது அல்ல என்பது தெரியவந்ததை அடுத்து, வரதட்சணைக்கொடுமை பிரிவுகள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டன.</p><h2>27 மாதங்களு<strong>க்குப் பின் உயி</strong>ருடன் திரும்பிய ஷிவானி</h2><p>இந்நிலையில், காணாமல் போய் 27 மாதங்கள் கழித்து கடந்த சனிக்கிழமை அன்று ஷிவானி திடீரென தனது பெற்றோர் வீட்டிற்கு நேரில் வந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் காவல்துறையினரும் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஷிவானி பரா பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருக்கும் கழிப்பறையை நிர்வகித்து வரும் ஜாவேத் என்பவருடன் தங்கியிருந்தது தெரியவந்தது. பலமுறை வீட்டிற்குத் திரும்புமாறு ஜாவேத் அறிவுறுத்தியும், அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது தனது சொந்த விருப்பத்தின் பேரில் அவர் வீடு திரும்பியுள்ளார்.</p><p>ஷிவானி உயிருடன் திரும்பியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். ஷிவானி தானாகவே வீட்டை விட்டு வெளியேறினாரா அல்லது யாரேனும் அவரைக் கடத்தினார்களா என்பது குறித்து நீதிபதி முன் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p>அதேவேளையில், லக்னோ காவல்துறைக்கு மற்றொரு பெரிய புதிர் எழுந்துள்ளது. ஷிவானி உயிருடன் இருக்கும் பட்சத்தில், கால்வாயில் இருந்து மீட்கப்பட்டு ஷிவானி என நம்பி குடும்பத்தினரால் எரிக்கப்பட்ட அந்த அடையாளம் தெரியாத பெண் யார், அவரைப் படுகொலை செய்தது யார் என்ற கோணத்தில் காவல்துறை தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title> 2029-க்குள் போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது - அமித்ஷா!</title><link>https://www.maalaimalar.com/news/national/special-plan-to-make-india-drug-free-by-2029-says-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/national/special-plan-to-make-india-drug-free-by-2029-says-amit-shah#comments</comments><guid isPermaLink="false">b4bc613b-d4a0-4562-8e07-74681c007632</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:37:48 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:37:48.050Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவா,அமித்ஷா,pmmodi,பிரதமர் மோடி,union minister Amitshah,Goa Visit,போதைப்பொருள் இல்லா இந்தியா,NationalSecurity,Dru gFree India</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/oo6ikdgs/AmitShah" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AmitShah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/oo6ikdgs/AmitShah?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE">மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா</a> கோவாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். </p><p>கோவாவின் தலைநகர் பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.</p><h2>தேசிய பாதுகாப்புக்கான முன்னுரிமை</h2><p>செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா, "போதைப்பொருள் இல்லா இளைஞர் சக்தி இந்தியாவை 2047-ல் வளர்ந்த பாரதமாக மாற்றும் என்பதே<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF"> பிரதமர் மோடியின் </a>உறுதிப்பாடு ஆகும். </p><p>கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆங்காங்கே சிறிய அளவிலேயே நடந்து வந்தன. </p><p>ஆனால், எங்களது தற்போதைய அரசு இந்த போராட்டத்தை தேசிய பாதுகாப்புக்கான முன்னுரிமையுடன் மிகத் தீவிரமாக நடத்தி வருகிறது" என்று குறிப்பிட்டார்.</p><h2><strong>2029-க்குள் போதைப்பொருள் இல்லா இந்தியா</strong></h2><p>மேலும் அவர் பேசுகையில், நாட்டில் <a href="https://www.maalaimalar.com/topic/naxals">நக்சல் </a>பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அரசு எவ்வாறு பணியாற்றியதோ, அதேபோல போதைப்பொருளுக்கு எதிராகவும் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். </p><p>அந்த வகையில், வரும் 2029-ம் ஆண்டுக்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லா நாடாக மாற்றுவதற்கான ஒரு சிறப்புச் செயல் திட்டத்தைப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தயாரித்து வைத்திருக்கிறது என்றும் மந்திரி அமித்ஷா உறுதிபடத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தெலுங்கானாவில் அதிர்ச்சி: நள்ளிரவில் ஆட்டோவில் இருந்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தை-வளர்க்க திரண்ட மக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/shock-in-telangana-midnight-baby-thrown-from-auto</link><comments>https://www.maalaimalar.com/news/national/shock-in-telangana-midnight-baby-thrown-from-auto#comments</comments><guid isPermaLink="false">cf219580-1726-4bfd-9f50-27ebdc069056</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:14:51 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:14:51.377Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Telangana,Humanity,தெலுங்கானா,ChildProtection,Mahabubnagar,மகபூப் நகர்,குழந்தை தத்தெடுப்புச் சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/ekaqb98i/baby.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ChildProtection]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/ekaqb98i/baby.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தை மீட்கப்பட்ட செய்தி அப்பகுதியில் பரவியதும், ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனைக்குத் திரண்டு வந்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bye-bye-dad-young-woman-jumps-from-bridge-with-a-smile-shocking-video-what-happened">தெலுங்கானா மாநிலம்</a> மகபூப் நகரில் உள்ள நியூ டவுன் பகுதியில் நள்ளிரவில் அதிவேகமாக வந்த ஓர் ஆட்டோவில் இருந்த நபர்கள், சால்வை மற்றும் சிறிய மெத்தையில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு பச்சிளம் குழந்தையை  சாலையோரம் தூக்கி வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர். சாலையோரத்தில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டகவே அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் தாமதிக்காமல் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.</p><h2>மருத்துவம<strong>னையி</strong>ல் அனுமதி </h2><p>தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையைப் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர். இதற்கிடையே, குழந்தையை வீசிச் சென்ற மர்ம நபர்களைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p><h2>குழந்<strong>தையை வளர்</strong>க்க மக்கள் விருப்பம்</h2><p>குழந்தை மீட்கப்பட்ட செய்தி அப்பகுதியில் பரவியதும், ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனைக்குத் திரண்டு வந்தனர். மீட்கப்பட்ட அந்தப் பச்சிளம் குழந்தையைத் தாங்களே தத்தெடுத்து வளர்ப்பதாகக் கூறிப் பலரும் விருப்பம் தெரிவித்தனர்.  பொதுமக்களின் இந்த நெகிழ்ச்சியான கோரிக்கையை ஏற்ற மருத்துவர்கள், குழந்தையை நேரடியாகத் தத்துக் கொடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தெளிவுபடுத்தினர். குழந்தை தத்தெடுப்புச் சட்ட நடைமுறைகளின்படி, இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தை  அணுகுமாறு அங்கிருந்த மக்களுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் 5 மாடி கட்டிடம் இடிந்ததில் 6 பேர் பலி: இடிபாடுகளில் சிக்கிய
9 பேர் உயிருடன் மீட்பு - மாணவர்கள்  போராட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/six-killed-five-storey-building-collapses-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/six-killed-five-storey-building-collapses-in-delhi#comments</comments><guid isPermaLink="false">0d3a8978-f25d-4d19-88ee-f30c6afcbeff</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:53:44 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:53:44.370Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>student protest,கட்டிட விபத்து,Building Collapse,ரேகா குப்தா,Rekha Gupta,delhi university,delhi,டெல்லி,Satya Niketan,சத்ய நிகேதன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4o55fk3o/University-Student-Protest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ University Student Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4o55fk3o/University-Student-Protest?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லி </a>தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சத்ய நிகேதன் மண்டலத்தில், மாணவர்கள் தங்கியிருந்த ‘ஹாஸ்டல் டேஸ்’ என்ற 5 மாடி விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. </p><p>இக்கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>கட்டுமான பணி</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">டெல்லி பல்கலைக்கழக</a> தெற்கு வளாகத்தின் அருகே அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் மண் தோண்டும் பணிகளும், கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.</p><p>மேல்பகுதியை வலுப்படுத்திய போதிலும், கீழிருந்த தூண்கள் பலவீனமாக இருந்ததே <a href="https://www.maalaimalar.com/news/national/death-toll-rises-to-6-in-delhi-student-hostel-collapse-cctv-footage-of-the-incident-released">கட்டிடம் இடிந்து</a> விழக் காரணம் என அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர். சுமார்</p><p>40 முதல் 50 ஆண்டுகள் மட்டுமே பழமையான இந்த கட்டிடம் 100 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்ததாகவும், வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஆபத்தான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.</p><p>நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டது. விடுமுறை நாள் என்பதால் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது அறைகளிலேயே தங்கியிருந்தனர்.</p><h2>9 பேர் மீட்பு</h2><p>கட்டிடம் இடிந்து விழுந்த அதிர்ச்சியில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிலர், தங்களது தொலைபேசி மூலம் உறவினர்கள் மற்றும் மீட்பு குழுவினரை தொடர்பு கொண்டு உதவி கோரியது நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.</p><p>சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தேசிய<a href="https://www.maalaimalar.com/topic/disaster-response-force"> பேரிடர் மீட்புப் படையினர்</a>, தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.</p><p>இதுவரை 9 பேர் மீட்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>இடிந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த மற்றொரு கட்டிடமும் சேதமடையும் அபாயம் ஏற்பட்டதால், டெல்லி முதல்-அமைச்சர் ரேகா குப்தாவின் உத்தரவின் பேரில் அங்கு தங்கியிருந்த அனைவரும் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.</p><h2>மாணவர்கள் போராட்டம்</h2><p>மேலும் விபத்தில் தொடர்புடைய விடுதியின் உரிமையாளரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>இதனிடையே டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான தனியார் விடுதிகளில் போதிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றும், வணிக நோக்கத்திற்காக குறைந்த வசதிகளுடன் மாணவர்களின் உயிரோடு விளையாடுவதாகவும் கூறி மாணவர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.</p><p>இந்திய தேசிய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்பினரும், டெல்லி பல்கலைக்கழக மாணவர்களும் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை மற்றும் தீவிரப் போராட்ட ங்களில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும், கட்டிட உரிமையாளர் மற்றும் அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மேலும் டெல்லி முழுவதும் உள்ள அனைத்து தனியார் விடுதிகளிலும் உடனடியாக பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">மாணவர்கள் போராட்டத்தில்</a> ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>Bye Bye அப்பா.. சிரித்தபடி பாலத்தில் இருந்து குதித்த இளம்பெண் - அதிரவைத்த வீடியோ - என்ன நடந்தது? </title><link>https://www.maalaimalar.com/news/national/bye-bye-dad-young-woman-jumps-from-bridge-with-a-smile-shocking-video-what-happened</link><comments>https://www.maalaimalar.com/news/national/bye-bye-dad-young-woman-jumps-from-bridge-with-a-smile-shocking-video-what-happened#comments</comments><guid isPermaLink="false">48b0d31e-adb9-4883-9f42-4233e43ef3c6</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:37:25 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:37:25.344Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>young woman,ஜம்மு காஷ்மீர்,Suicide attempt,தற்கொலை முயற்சி,Jammu &amp; Kashmir,இளம்பெண்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/d9db0g14/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வீடியோ ]]></media:title><media:description type="html"><![CDATA[ வீடியோ ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/d9db0g14/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போனில் தனது தந்தையிடம் "பை, பை அப்பா" என சிரித்தபடி கூறியவாறு 21 வயது இளம்பெண் நதியில் குதித்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/jammu-and-kashmir">ஜம்மு காஷ்மீர்</a> தோதா மாவட்டத்தில்  பிரேம் நகர் அருகே உள்ள சிவா தால்  பாலத்தில் இருந்து நேற்று முன் தினம் நண்பகல் பாயல் தேவி  என்ற அப்பெண் செனாப் நதியில் குதித்துள்ளார். </p> <h2>என்ன நடந்தது?</h2><p>நேற்று முன் தினம் காலை உள்ளூர் திருவிழாவிற்கு சென்ற அவர், உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனை சென்று வருவதாக தனது தந்தை கிருஷண லாலுக்கு போன் செய்து கூறியுள்ளார்.</p><p>ஆனால் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் அவர் தனது கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.</p> <p>அப்போது எதிர்பாராதவிதமாக பாயலின் துப்பட்டா பைக்கின் சக்கரத்தில் சிக்கியுள்ளது.</p><p>இதனால் அந்த நபர் வண்டியை நிறுத்தி துப்பட்டாவை எடுக்க முயன்றுள்ளார். அதேநேரம் பாயல் திடீரென,  "நான் <a href="https://www.maalaimalar.com/topic/suicide">தற்கொலை </a>செய்து கொள்ளப் போறேன்" என கத்தியபடி அருகில் இருந்த பாலத்தை நோக்கி ஓடியுள்ளார்.</p><p>அங்கிருந்தவர்கள் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து அவரை சமாதானப்படுத்த முயன்றனர்</p> <h2>பை பை அப்பா</h2><p>பாயலை அழைத்து வந்த நபர் தந்தை கிருஷ்ண லாலுக்கு போன் செய்து உங்கள் மகள் பாலத்தில் இருந்து கீழே குதிக்க முயற்சிப்பதாகதெரிவித்துள்ளார்.</p><p>பதறிய தந்தை கிருஷ்ண லால், மகளிளின் போனுக்கு கால் அடித்துள்ளார். பாயல் போனை எடுக்க அவரிடம், "என்ன ஆச்சு, யாராவது உன்னை ஏதவாது செய்தார்களா?" என கிருஷண லால் கேட்டுள்ளார்.</p><p>அதற்குப் பாயல் தேவி, " அதெல்லாம் இல்ல அப்பா. இது என் வாழ்க்கை, எனக்கு இப்படிப் போக வேண்டும் என்று தோன்றுகிறது. பை பை அப்பா" எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.</p><p>அதன்பின்னர் அவர் அங்கிருந்தவர்களுக்கு பை பை சொல்லியபடி நதியில் குதித்துள்ளார்.</p><p>பாயல் பாலத்தில் நின்றிருந்த காட்சிகளும், சிரித்தபடி அவர் பை, பை சொன்னதும், அங்கிருந்தவர்கள் அவரைத் தடுக்க முயல்வதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.</p><p>பாயல் நதியில் குதித்த செய்தி அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறை செனாப் நதியில் இறங்கி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இதுவரை அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை.</p><p>மருத்துவரைப் பார்க்கச் சென்ற பெண்ணுக்கு பாலத்திற்கு வருவதற்குள் என்ன நடந்தது? என்பது குறித்துகாவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">She Called Her Father to Say Goodbye... He Didn&#39;t Know It Was the Last Time.<br><br>A 21-year-old girl, Payal Devi, lost her life after jumping into the Chenab River.<br><br>It is heartbreaking to think about the pain she must have been carrying silently. <a href="https://t.co/fKl9O5Vs6T">pic.twitter.com/fKl9O5Vs6T</a></p>&mdash; زماں (@Delhiite_) <a href="https://x.com/Delhiite_/status/2096555025363579005?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராய பலி 12 ஆக உயர்வு- 14 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/11-killed-liquor-in-madhya-pradesh-case-14-people-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/national/11-killed-liquor-in-madhya-pradesh-case-14-people-arrest#comments</comments><guid isPermaLink="false">5cd74302-3fd8-49ff-9b61-43efceeb9bac</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:31:12 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:31:12.656Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய பிரதேசம்,liquor,கள்ளச்சாராயம்,சாராயம்,Madhya Pradeshs</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/blnoxslv/madhyapradeshs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madhya Pradesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/blnoxslv/madhyapradeshs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.</p><p>மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பண்டா தாலுகா உள்ளது. இதன் அருகே உள்ள 4 கிராமத்தை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனர். இதில் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><h2><strong>கள்ளச்சாராயம்</strong></h2><p>நேற்று 11 பேர் கள்ளச்சாராயத்திற்கு பலியாகி இருந்தனர். 54 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 30-க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் ஆஸ்பத்திரியில் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.</p><h2><strong>கைது</strong></h2><p>இது தொடர்பாக போலீசார் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு தனியார்மயமாக்கல் கிடையாது  - இஸ்ரோ விளக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/national/contribution-of-private-companies-no-privatization-isro-clarification</link><comments>https://www.maalaimalar.com/news/national/contribution-of-private-companies-no-privatization-isro-clarification#comments</comments><guid isPermaLink="false">3a9a8189-84b4-4b03-8aa5-51dc25a0b894</guid><pubDate>Mon, 07 Sep 2026 03:04:10 +0000</pubDate><atom:updated>2026-09-07T03:04:10.431Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரோ,தனியார்மயமாக்கல்,விண்வெளித் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/s6jn0s78/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இஸ்ரோ]]></media:title><media:description type="html"><![CDATA[ இஸ்ரோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/s6jn0s78/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு தனியார்மயமாக்கல் கிடையாது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மறுத்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/isro">இஸ்ரோவின் </a>உற்பத்தி மற்றும் செயல்பாட்டு பொறுப்புகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து இஸ்ரோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. </p> <h2>அறிக்கை</h2><p>அதில், இது முற்றிலும் ஆதாரமற்ற தவறான செய்திகள் என்றும், இஸ்ரோவை தனியார்மயமாக்கும் எண்ணமோ அல்லது அதன் முக்கியத்துவத்தை குறைக்கும் திட்டமோ இல்லை என தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>மேலும், "இந்தியாவின் முதன்மை விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனமாக இஸ்ரோவே தொடர்ந்து செயல்படும்.</p><p>தேசிய அளவிலான விண்வெளி திட்டங்கள், விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுப் பணிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இஸ்ரோவின் முக்கியப் பங்கு தொடரும்.</p><p>விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்களிப்பை வரவேற்பது இஸ்ரோவின் பொறுப்புகளைக் குறைப்பதற்காக அல்ல.</p> <p>மாறாக இந்தியாவின் அடுத்தகட்ட விண்வெளி இலக்குகளில் இஸ்ரோ அதிக கவனம் செலுத்துவதற்காகவே ஆகும்.</p><p>ஏற்கனவே வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்பாட்டுத் திறன்களை மேலும் விரிவுபடுத்துவதில் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும்.</p><p>இதனால் இஸ்ரோவின் முக்கியத்துவம் மாறவில்லை. மாறாக இந்தியாவின் விண்வெளித் துறையின் அளவும் கட்டமைப்பும் விரிவடைகிறது.</p><p>தற்போதைய சீர்திருத்தங்களை தனியார்மயமாக்கலாகப் பார்க்காமல், விண்வெளித் துறையின் திறன் மேம்பாடாகவே பார்க்க வேண்டும்" என இஸ்ரோ விளக்கியுள்ளது.</p> <h2>கடிதம்</h2><p>முன்னதாக, உற்பத்தி மற்றும் செயல்பாட்டுப் பொறுப்புகள் சில தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான செய்திகளின் பின்னணியில் இஸ்ரோ ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய 9 தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த செப்டம்பர் 4 அன்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணனுக்குக் கடிதம் எழுதியிருந்தன.</p><p>அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் இஸ்ரோவின் எதிர்காலப் பங்கு குறித்து தெளிவுபடுத்துமாறு அந்த அமைப்புகள் கோரியிருந்த நிலையில், தற்போது இஸ்ரோ இந்த விளக்கத்தை அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில்  64 % பேர் ஊதியமின்றி கூடுதல் நேரம் வேலை செய்கின்றனர் - ஆய்வில் ஷாக் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/64-of-people-in-india-work-unpaid-overtime-shocking-study</link><comments>https://www.maalaimalar.com/news/national/64-of-people-in-india-work-unpaid-overtime-shocking-study#comments</comments><guid isPermaLink="false">d0d0842a-ce19-4157-82bc-f321a7d8f9a0</guid><pubDate>Mon, 07 Sep 2026 02:48:32 +0000</pubDate><atom:updated>2026-09-07T02:48:32.584Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Work pressure,workload,வேலை,work,பணி அழுத்தம்,பணிச்ச்சுமை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rygg4hj6/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Overtime work]]></media:title><media:description type="html"><![CDATA[ Overtime work]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rygg4hj6/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் 64 சதவீதம் பேர் ஊதியம் இன்றி பணி நேரத்தை தாண்டி வேலை செய்கின்றனர் என தெரியவந்துள்ளது.</p> <p>ஏடிபி ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள 'பீப்பிள் அட் வொர்க் 2026' என்ற ஆய்வறிக்கையில் இது தெரியவந்துள்ளது. </p><p>36 உலக நாடுகளைச் சேர்ந்த 39,000க்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன.</p> <h2>இந்தியா</h2><p>இந்தியாவில் <a href="https://www.maalaimalar.com/news/world/why-do-astronauts-struggle-to-defecate-in-space-what-happens-to-the-body-a-study-reveals-the-answer">ஆய்வு </a>செய்யப்பட்ட பணியாளர்களில் 24% பேர் வாரத்திற்கு 16 மணிநேரம் அல்லது அதற்கு மேலாக எந்தவிதக் கூடுதல் ஊதியமும் இன்றி பணிபுரிகின்றனர்.</p><p>மேலும் 40% பணியாளர்கள் வாரத்திற்கு 6 முதல் 15 மணிநேரம் வரை ஊதியமின்றி வேலை செய்கின்றனர்.</p> <p>இதன் மூலம் இந்தியாவில் சுமார் 64% பணியாளர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 6 மணிநேரமாவது கூடுதல் ஊதியமின்றி உழைப்பது தெரியவந்துள்ளது.</p><p>மதிய உணவு இடைவேளையில் வேலை பார்ப்பது, பணி நேரம் முடிந்த பிறகும் தாமதமாக அலுவலகத்தில் தங்குவது போன்றவற்றை 'ஊதியமில்லா வேலை' என ஆய்வு வரையறுக்கிறது.</p> <h2>உலகச் சராசரி</h2><p>உலக அளவில் 62% பணியாளர்கள் வாரத்திற்கு 5 மணிநேரம் வரை ஊதியமின்றிப் பணியாற்றுகின்றனர். 12% பேர் மட்டுமே 16 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்கின்றனர்.</p><p>ஊதியமின்றி 16 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்வதில் இந்தியாவுட் ( 24 %) அடுத்தபடியாக துருக்கி (23%), ஆஸ்திரியா (21%) மற்றும் அமெரிக்கா (20%) ஆகியவை உள்ளன.</p> <p>செக் குடியரசில் வெறும் 4% பணியாளர்களும், சீனா, தைவான் மற்றும் ஜப்பானில் தலா 6% பணியாளர்களும் மட்டுமே வாரத்திற்கு 16 மணிநேரத்திற்கு மேல் ஊதியமின்றி வேலை செய்கின்றனர்.</p><p>சாதாரணப் பணியாளர்களை விட <a href="https://www.maalaimalar.com/news/national/new-employee-resigns-in-6-hours-manager-linkedin-post">உயர் பதவிகளில் </a>உள்ளவர்களே 50% பேர் கூடுதல் நேரம் வேலை செய்கின்றனர்.</p><p>அலுவலகம் வந்து பணிபுரிபவர்களை (12%) விட, வீட்டிலிருந்தே பணிபுரிபவர்களே (13%) வாரத்திற்கு 16 மணிநேரத்திற்கும் மேல் ஊதியமின்றி அதிக நேரம் வேலை செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.</p> <h2>மன அழுத்தம்</h2><p>கூடுதல் நேரம் ஊதியமின்றி வேலை செய்வது வேலை உற்பத்தித் திறனை அதிகரிக்கவில்லை என்றும், மாறாக அது பணியாளர்களிடையே அதிக மன அழுத்தத்தையும் சோர்வையும் உருவாக்குகிறது என்றும் அறிக்கை எச்சரிக்கிறது.</p><p>குறிப்பாக, உயர் பதவிகளில் அதிக நேரம் ஊதியமின்றி உழைக்கும் அதிகாரிகளே மன அழுத்தம் காரணமாக வேறு வேலைகளை தேடத் தொடங்குவதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. </p> ]]></content:encoded></item><item><title>டெல்லி மாணவர் விடுதி இடிந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. சம்பவத்தின் சிசிடிவி காட்சி   வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/national/death-toll-rises-to-6-in-delhi-student-hostel-collapse-cctv-footage-of-the-incident-released</link><comments>https://www.maalaimalar.com/news/national/death-toll-rises-to-6-in-delhi-student-hostel-collapse-cctv-footage-of-the-incident-released#comments</comments><guid isPermaLink="false">94a53359-b730-4ec6-9e93-5e8624e96a3e</guid><pubDate>Mon, 07 Sep 2026 02:13:51 +0000</pubDate><atom:updated>2026-09-07T02:13:51.488Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கட்டிட விபத்து,Building Collapse,டெல்லி பல்கலைக்கழகம்,delhi university,delhi,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/cksxunni/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி ]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/cksxunni/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் மாணவர்கள் தங்கியிருந்த 5 மாடி விடுதி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.</p> <p>தெற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் அருகே 5 மாடிகளை கொண்ட தனியார் மாணவர் பிஜி தங்கும் விடுதி செயல்பட்டு வந்துள்ளது. </p><p>இதில் டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்தனர். </p><h2>விபத்து </h2><p>இந்நிலையில் நேற்று மதியம் விடுதி கட்டிடம் இடிந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த மாணவர்கள் மற்றும் பிறர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினர். </p><p>இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர், சிக்கியுள்ளவர்களைத் தேடி வருகின்றனர்.  </p><p>தேசிய பேரிடர் மீட்புப் படை, டெல்லி தீயணைப்புத் துறை, காவல்துறை இணைந்து இடிபாடுகளை அகற்றி தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.  </p> <p>இரவு நேர மீட்புப் பணியின் போது மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. 10 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>இன்னும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த கட்டிடம் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. விடுதியின் உரிமையாளரை கைது செய்து டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.</p> <h2>வழக்குப்பதிவு</h2><p>இந்த விபத்து தொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.</p><p>கட்டிட உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.</p><p>ரேகா குப்தா நேற்று சம்பவ இடத்தை ஆய்வு செய்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சென்று சந்தித்தார்.</p> <p>தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>4 மற்றும் அதற்கு மேற்பட்ட தளங்களைக் கொண்ட சட்டவிரோதக் கட்டிடங்கள் மீது டெல்லி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.</p> <p>பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: CCTV footage from the building collapse site in Satya Niketan of Delhi&#39;s South-West district. Six people have lost their lives.<br><br>(Source: Local Resident) <a href="https://t.co/7MtDbb3pJF">pic.twitter.com/7MtDbb3pJF</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2096754562766119144?ref_src=twsrc%5Etfw">September 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>இந்தியா-பிரான்ஸ் உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன: பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-said-india-france-relations-have-reached-new-heights</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-said-india-france-relations-have-reached-new-heights#comments</comments><guid isPermaLink="false">c8cf67a8-eacf-492c-a000-e7b57405eacf</guid><pubDate>Sun, 06 Sep 2026 20:22:55 +0000</pubDate><atom:updated>2026-09-06T20:22:55.540Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,பிரான்ஸ்,France,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/b26pxomp/pm-modi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/b26pxomp/pm-modi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா - <a href="https://www.maalaimalar.com/news/world">பிரான்ஸ்</a> உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன என்றும், நீண்டகால கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளின் வலுவான அடித்தளத்தில் அமைந்துள்ளதால் இந்த உத்திசார் கூட்டாண்மை மிகவும் சிறப்பானது என்றும் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> தெரிவித்தார். </p><p>பாரிஸில் உள்ள சுவாமிநாராயண் கோயிலின் திறப்பு விழாவில் காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, பாரிஸில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான கோயில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் வாய்ப்புகளின் அடையாளமாக பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். </p><h2>உத்திசார் கூட்டாண்மை:</h2><p>"சமீப காலங்களில், இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான உறவுகள் புதிய உயரங்களை எட்டியுள்ளன. எனது நண்பரான அதிபர் மேக்ரானுடன் இணைந்து, இரு நாடுகளும் ஒரு சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையை உருவாக்கி வருகின்றன," என்றார்.</p><p>தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பாதுகாப்புத் துறை முதல் விண்வெளி மற்றும் பருவநிலை நடவடிக்கை வரை, இந்தியாவும் பிரான்ஸும் புதிய உத்வேகம் மற்றும் ஆற்றலுடன் இணைந்து முன்னேறி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.</p><h2>புத்தாக்க ஆண்டு:</h2><p>தொடர்ந்து பேசும் போது, "நாங்கள் 2026-ஆம் ஆண்டை 'இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டாக' கொண்டாடவுள்ளோம். நீண்டகால கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளின் வலுவான அடித்தளத்தில் அமைந்துள்ளதால் இந்த உத்திசார் கூட்டாண்மை மிகவும் சிறப்பானது.</p><p>சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்துவதில் பிரெஞ்சு அறிஞர்கள் ஆற்றிய முக்கிய பங்கை மொழி ஆர்வலர்கள் அறிவார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தர் குறித்த ரோமன் ரோலண்டின் எழுத்துக்கள் நமது சமூகங்களை ஒன்றிணைத்தன.</p><p>இன்று, யோகா நமது நாடுகளுக்கு இடையிலான மக்களுக்கு தொடர்புகளுக்கான ஒரு பாலமாக மாறியுள்ளது. சர்வதேச யோகா தினத்தில் ஈபிள் கோபுரத்தில் இருந்து வெளியான காட்சிகள், பிரான்ஸில் யோகாவுக்கு உள்ள அபாரமான பிரபலத்தை வெளிப்படுத்துகின்றன," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தால்  மிகுந்த வேதனை அடைகிறேன் - குடியரசு தலைவர் திரவுபதி முர்மு</title><link>https://www.maalaimalar.com/news/national/president-murmu-condoles-deaths-in-delhi-building-collapse</link><comments>https://www.maalaimalar.com/news/national/president-murmu-condoles-deaths-in-delhi-building-collapse#comments</comments><guid isPermaLink="false">975cf681-e0fd-438b-8c4d-51be2878169e</guid><pubDate>Sun, 06 Sep 2026 19:29:54 +0000</pubDate><atom:updated>2026-09-06T19:29:54.448Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திரவுபதி முர்மு,டெல்லி பல்கலைக்கழகம்,Delhi Building Collapse,Droupadi Murmu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/hccjcj6h/droupadi-murmu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Droupadi Murmu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/hccjcj6h/droupadi-murmu.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த துயரம் தெரிவித்துள்ள குடியரசு தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/droupadi-murmu">திரவுபதி முர்மு</a>, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். </p><p>தெற்கு <a href="https://www.maalaimalar.com/news/national">டெல்லியின்</a> சத்யா நிகேதன் பகுதியில் மாணவர்களுக்கான தங்கும் விடுதியாக செயல்பட்டு வந்த ஐந்து மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். </p><p>இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சுமார் 15 முதல் 20 பேரை மீட்கும் பணி இரவு வரை பல அமைப்புகளின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><h2>எக்ஸ் தளத்தில் இரங்கல்:</h2><p>"டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து குறித்து நான் மிகவும் வேதனை அடைகிறேன். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்," என்று ஜனாதிபதி முர்மு 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><h2>பிரதமர் இரங்கல்:</h2><p>முன்னதாக இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, எக்ஸ் தள பதிவில், "டெல்லி சத்ய நிகேதனில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இதில் தங்களது அன்பிற்குரியவரை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.</p><p>காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகள் சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மிகுந்த வேதனையளிக்கிறது.. டெல்லி மாணவர் விடுதி இடிந்த விபத்தில் 3 பேர் பலி -  பிரதமர் மோடி இரங்கல்</title><link>https://www.maalaimalar.com/news/national/deeply-distressing-pm-modi-condoles-the-collapse-of-a-student-hostel-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/deeply-distressing-pm-modi-condoles-the-collapse-of-a-student-hostel-in-delhi#comments</comments><guid isPermaLink="false">b2e77ba9-c6b9-4faa-a697-480957982375</guid><pubDate>Sun, 06 Sep 2026 15:31:19 +0000</pubDate><atom:updated>2026-09-06T15:31:19.329Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி பல்கலைக்கழகம்,பிரதமர் மோடி,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/tjdkk2zg/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி விபத்து, பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி விபத்து, பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/tjdkk2zg/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.</p> <p>டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள 'ஹாஸ்டல் டேஸ்' என்ற 5 மாடி மாணவர்கள் தங்கும் தனியார் பிஜி விடுதி கட்டிடம் இன்று மதியம் 1:30 மணியளவில் திடீரென <a href="https://www.maalaimalar.com/news/national/one-person-died-in-the-collapse-of-the-delhi-student-hostel-3-people-are-worried-will-pm-modi-explain-this-deepak-question">இடிந்து விழுந்து விபத்து</a>க்குள்ளானது.</p><p>டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் உள்ள இந்த விடுதியில் தங்கியிருந்த சுமார் 50 டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p> <h2>மீட்பு</h2><p>தேசிய பேரிடர் மீட்புப் படை டெல்லி தீயணைப்புத் துறை இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மூன்று பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p>இடிபாடுகளிலிருந்து 9 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.</p> <p>அதில் 5 மாணவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>சுமார் 20 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததே விபத்திற்குக் காரணம் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>கட்டிடத்தின் உரிமையாளரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.</p> <h2>பிரதமர் இரங்கல்</h2><p>இந்நிலையில் இந்த விபத்துக்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><p>அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "டெல்லி சத்ய நிகேதனில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இதில் தங்களது அன்பிற்குரியவரை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.</p><p>காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகள் சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.</p>  <h2>முதலமைச்சர் ரேகா குப்தா ஆய்வு</h2><p>விபத்து நடந்த இடத்தையும் நிலைமையையும் ஆய்வு செய்த டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, தவறு செய்தவர்கள் தப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.</p><p>செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இதுவரை 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>இடிபாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களின் உயிரைக் காப்பாற்றுவதே எங்களது முன்னுரிமை.</p> <p>இந்தக் கட்டிடம் மிகவும் பழமையானது. அடித்தளத்தில்சில தோண்டும் மற்றும் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. அதன் காரணமாகத் தூண் ஒன்று சரிந்து மொத்த கட்டிடமும் இடிந்து விழுந்துள்ளது" என்றார். </p><p>இந்த விபத்திற்கு காரணமான கட்டிடத்தின் உரிமையாளராக இருந்தாலும் சரி அல்லது அரசு அதிகாரியாக இருந்தாலும் சரி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாகத் தப்ப முடியாது" என்று தெரிவித்தார்.</p> <h2>காங்கிரஸ்</h2><p>விபத்து குறித்துக் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் டேனிஷ் அலி, "பாஜகவின் ஊழலால் டெல்லி மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.</p><p>நேற்று தான் பிரதமர் மோடி டெல்லி பல்கலைக்கழகத்திற்கு வந்து சென்றார்.</p><p>ஆனால் அவர் நாட்டின் கல்வி முறை குறித்தோ அல்லது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்தோ பேசவில்லை, மாறாக அரசியல் பேசி, கேள்வி கேட்பவர்களை 'திமாகி நக்சல்கள்' என அழைத்தார்.</p><p>பிரதமரே, இந்த நாட்டிற்கு நீங்கள் எத்தகைய ஆட்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி மாணவர் விடுதி இடிந்த விபத்தில் ஒருவர் பலி.. 3 பேர் கவலைக்கிடம் - பிரதமர் மோடி இதற்கு விளக்கம் தருவாரா? -  தீப்கே கேள்வி </title><link>https://www.maalaimalar.com/news/national/one-person-died-in-the-collapse-of-the-delhi-student-hostel-3-people-are-worried-will-pm-modi-explain-this-deepak-question</link><comments>https://www.maalaimalar.com/news/national/one-person-died-in-the-collapse-of-the-delhi-student-hostel-3-people-are-worried-will-pm-modi-explain-this-deepak-question#comments</comments><guid isPermaLink="false">c08ef2f6-925a-405f-a42a-93f8029bf9a6</guid><pubDate>Sun, 06 Sep 2026 14:42:53 +0000</pubDate><atom:updated>2026-09-06T14:42:53.851Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,டெல்லி பல்கலைக்கழகம்,delhi university,delhi,பிரதமர் மோடி,டெல்லி,அபிஜித் தீப்கே,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/0bevlmwd/tn-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தீப்கே, விபத்து, மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ தீப்கே, விபத்து, மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/0bevlmwd/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிப்பாரா என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே கேள்வி எழுப்பியுள்ளார். </p> <p><a href="https://www.google.com/search?q=டெல்லி+maalaimalar&amp;oq=டெல்லி++ma&amp;gs_lcrp=EgZjaHJvbWUqCAgBEEUYJxg7MgYIABBFGDkyCAgBEEUYJxg7MggIAhAAGBYYHjIICAMQABgWGB4yCAgEEAAYFhgeMgYIBRBFGDwyBggGEEUYPDIGCAcQRRg80gEIMjE3NGowajmoAgCwAgA&amp;sourceid=chrome&amp;source=chrome.ob&amp;ie=UTF-8">டெல்லியின் </a>சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள 'ஹாஸ்டல் டேஸ்' என்ற 5 மாடி மாணவர்கள் தங்கும் தனியார் பிஜி விடுதி கட்டிடம் இன்று மதியம் 1:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.</p><p>டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் உள்ள இந்த விடுதியில் தங்கியிருந்த சுமார் 50 டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p> <h2>மீட்பு</h2><p>தேசிய பேரிடர் மீட்புப் படை டெல்லி தீயணைப்புத் துறை இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதுவரை ஒரு உயிரழப்பு பதிவாகியுள்ளது.</p><p>இடிபாடுகளிலிருந்து 6 முதல் 7 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.</p> <p>அதில் எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 மாணவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>சுமார் 20 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததே விபத்திற்குக் காரணம் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>கட்டிடத்தின் உரிமையாளரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.</p> <h2>விமர்சனம்</h2><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீபகே பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>அபிஜித் தீபகே வெளியிட்ட எக்ஸ் பதிவில், "<a href="https://www.maalaimalar.com/news/national/for-them-the-glass-is-never-half-full-prime-minister-modi-hits-back-at-criticisms-regarding-gdp">நேற்று பிரதமர் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு</a> வந்து அரசியல் உரையாற்றினார். 'திமாகி நக்சல்' (அறிவுஜீவி நக்சல்) என்ற வார்த்தையை பயன்படுத்தி அரசியல் விமர்சனம் செய்தார்.</p><p>ஆனால் நமது கல்வி உள்கட்டமைப்பின் நிலை குறித்து மிகக் குறைவாகவே பேசினார். </p><p>இன்று தெற்கு வளாகத்தில் உள்ள விடுதி கட்டிடம் இடிந்து விழுந்து, மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.</p> <p>சீரழிந்து வரும் உள்கட்டமைப்பு மற்றும் அரசின் அலட்சியப் போக்கிற்கு இந்த நாட்டின் மாணவர்கள் இன்னும் எவ்வளவு காலம் விலைகொடுக்க வேண்டும்?</p><p>பழங்குடியின பகுதிகளில் போதிய பராமரிப்பு இல்லாததால் மாணவர்கள் உயிரிழந்து வரும் நிலையில் நாட்டின் தலைநகரில் படிக்கும் மாணவர்களுக்கே பாதுகாப்பு இல்லை.</p><p>மாணவர்களுக்குப் பாதுகாப்பான வகுப்பறைகளும், பாதுகாப்பான விடுதிகளும், அடிப்படை கண்ணியமும் தேவை.</p> <p>இது மிகவும் அதிகமான கோரிக்கையா? பிரதமர் மீண்டும் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு வந்து இது எப்படி நடந்தது என்று விளக்கம் அளிப்பாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>டெல்லி மாநகராட்சியின் கட்டிடத் துறையில் நிர்வாகப் பொறியாளர் பணிமாற்றத்திற்கு ரூ. 1.25 கோடி லஞ்சம் பெறப்படுவதாகக் குற்றம் சாட்டிய ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ், இத்தகைய ஊழல்களே தொடர் விபத்துகளுக்குக் காரணம் என்றார்.</p><p>போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>இறுதிச்சடங்கு முடிந்து 15 நாட்களுக்கு பின் &apos;இறந்த&apos; மகன் ஜெயிலில் இருப்பதாக வந்த போன் கால்.. ஆடிப்போன பெற்றோர் </title><link>https://www.maalaimalar.com/news/national/parents-discover-their-son-is-alive-15-days-after-his-funerala-dramatic-turn-of-events-triggered-by-a-single-phone-call</link><comments>https://www.maalaimalar.com/news/national/parents-discover-their-son-is-alive-15-days-after-his-funerala-dramatic-turn-of-events-triggered-by-a-single-phone-call#comments</comments><guid isPermaLink="false">5d4945b3-debd-463e-b4ed-5a9b956afe0a</guid><pubDate>Sun, 06 Sep 2026 11:36:02 +0000</pubDate><atom:updated>2026-09-06T11:36:02.821Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இளைஞர்,பஞ்சாப்,Punjab,funeral,youth,இறுதிச்சடங்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/eba835ow/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Missing youth ]]></media:title><media:description type="html"><![CDATA[ Missing youth ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/eba835ow/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இறந்ததாகக் கருதி இறுதிச் சடங்கு செய்த 15 நாட்களுக்குப் பின் இளைஞர் உயிருடன் வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/35-years-how-sir-reunited-brothers-in-haryana">பஞ்சாப்</a> மாநிலம் கபூர்தலா பகுதியை சேர்ந்த ரவி குமார் என்ற இளைஞன் ஆகஸ்ட் 5 அன்று வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் திரும்பவில்லை. </p><p>குடும்பத்தினர் அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஆகஸ்ட் 11 அன்று கபூர்தலா நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.</p><p>புகார் அளிக்கப்பட்ட சில நாட்களில், எரிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர்.</p> <h2>இறுதிச் சடங்கு</h2><p>சடலத்தின் புகைப்படங்களை பார்த்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், இறந்தது ரவி குமார் தான் எனத் தவறாக அடையாளம் காட்டினர்.</p><p>தன் மகன் இறந்துவிட்டதாக நம்பிய குடும்பத்தினர், ஆகஸ்ட் 13 அன்று அந்த உடலுக்கு முறைப்படி தகனம் செய்து இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தனர்.</p> <h2>திருப்பம்</h2><p>இறுதிச் சடங்குகள் முடிந்து குடும்பத்தினர் துக்கத்தில் இருந்த நிலையில், செப்டம்பர் 2 அன்று கபூர்தலா மத்திய சிறை ஊழியரிடமிருந்து குடும்பத்தினருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.</p><p>ரவி குமார் என்ற நபர் தங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்த ஊழியர் தெரிவித்தார்.</p><h2>பின்னணி</h2><p>சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்ததால் ஜலந்தர் காவல்துறையினரால் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே ரவி குமார் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிக்கிறார்.</p><p>இந்தத் தகவலால் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்த குடும்பத்தினர், மறுநாள் சிறைக்கு சென்று ரவி குமார் அங்கிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.</p><p>ரவி குமார் என நினைத்து குடும்பத்தினர் எப் பிணத்தைத் தகனம் செய்தனர் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளதால், அது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்- ராகுல்காந்தி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">0d59c2f8-7b97-4ca8-8d60-9fc247538d79</guid><pubDate>Sun, 06 Sep 2026 11:19:54 +0000</pubDate><atom:updated>2026-09-06T11:19:54.808Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Rahul Gandhi,போராட்டம்,உண்ணாவிரதப் போராட்டம்,central government</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-14/ce8zelqt/RahulGAndhi00001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-14/ce8zelqt/RahulGAndhi00001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>உண்ணாவிரதப் போராட்டம்</strong></h2><p>மராட்டியத்தில் பழங்குடியின மாணவர்களுக்கான அரசு விடுதிகளில் ஏற்பட்ட மாணவர்களின் உயிரிழப்புகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து நாசிக் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பழங்குடியின மாணவர்கள், மாணவ அமைப்புகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>இந்த போராட்டத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 3-ந்தேதி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.  </p><h2><strong>இந்த நிலையில் இன்று ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-</strong></h2><p>மராட்டியத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அமைதியான முறையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் ஏதோ ஒரு குறிப்பிட்ட தேர்வு அல்லது பணி நியமனம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த அமைப்பின் மீதான நம்பிக்கையே தகர்க்கப்பட்டிருப்பதுதான் காரணம்.</p><h2><strong>மத்திய அரசு</strong></h2><p>மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, பா.ஜனதா ஆட்சியின் கீழ் ஒவ்வொரு மாணவரும் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.</p><h2><strong>வினாத்தாள் கசிவு</strong></h2><p>வினாத்தாள் கசிவு, முடக்கப்பட்ட பணி நியமனங்கள், தாங்க முடியாத கல்விச் செலவு, விடுதிகளில் நிலவும் மனிதாபிமானமற்ற சூழல், நச்சுத்தன்மை வாய்ந்த உணவு, நேரடிப் பணப் பரிமாற்றத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் எனப் பட்டியல் நீள்கிறது. தங்கள் வெற்றிகரமான எதிர்காலத்திற்காக மாணவர்கள் முன்வைக்கும் ஒவ்வொரு கோரிக்கையும் நியாயமானதே. அரசு அவர்களின் குரலுக்குச் செவிசாய்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நீதி கிடைக்கும் வரை மாணவர்களின் இந்தக் குரல் மேலும் வலுத்துக்கொண்டே செல்லும்.</p><p>இவ்வாறு ராகுல்காந்தி கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜீ நிறுவனர் சுபாஷ் சந்திரா ரூ.1,322 கோடி கடன் முறைகேடு- சிபிஐ வழக்குப்பதிவு  </title><link>https://www.maalaimalar.com/news/national/cbi-registers-case-against-zee-founder-subhash-chandra-over-rs-1322-crore-loan</link><comments>https://www.maalaimalar.com/news/national/cbi-registers-case-against-zee-founder-subhash-chandra-over-rs-1322-crore-loan#comments</comments><guid isPermaLink="false">60774d1c-3f46-4cbe-b6dc-f7cbd4e1b131</guid><pubDate>Sun, 06 Sep 2026 11:05:02 +0000</pubDate><atom:updated>2026-09-06T11:05:02.617Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,LIC,எல்.ஐ.சி.,subash chandra,சுபாஷ் சந்திரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/gt0pcxnf/Untitled-design-30.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ZEEL founder Subhash Chandra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/gt0pcxnf/Untitled-design-30.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனரான சுபாஷ் சந்திரா, எல்ஐசி ஹவுசிங் ஃபை-னான்ஸ் லிமிடெட் (LICHFL) நிறுவனத்திடமிருந்து ரூ.1,322 கோடி கடனை முறைகேடாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சிபிஐ அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF">எல்.ஐ.சி</a> நிறுவனத்திடம் இருந்து 2018 மார்ச் 28 அன்று, வசந்த் சாகர் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பான் இந்தியா இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ரூ.500 கோடியை கடனாக பெற்றது. </p><p>இந்த கடன் தொகைக்கு உத்தரவாதமாக ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) மற்றும் எசெல் குழுமத்தின் நிறுவனரான சுபாஷ் சந்திரா, 2017 மார்ச் 31 நிலவரப்படி தன்னிடம் ரூ.59,113.21 கோடி மதிப்பிலான நிகர சொத்துகள் உள்ளதாக  DJM &amp; Co., வழங்கிய சான்றிதழை எல்.ஐ.சி நிறுவனத்திடம் சமர்ப்பித்தார்.  </p><p>மேலும், இதைத்தொடர்ந்து எல்.ஐ.சி நிறுவனத்திடம் இருந்து, டிஜிட்டல் சப்ஸ்கிரைபர் மேனேஜ்மென்ட் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்பிரிட் இன்ஃப்ராபவர் அண்ட் மல்டிவென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ரூ.480 கோடியை கடனாக பெற்றது.</p><p>இந்த கடன் தொகைக்கு உத்தரவாதமாக சுபாஷ் சந்திரா தன்னிடம் ரூ. 40,562 கோடி மதிப்பிலான நிகர சொத்துக்கள் உள்ளதாக MPJ &amp; Co. வழங்கிய சான்றிதழை எல்.ஐ.சி நிறுவனத்திடம் சான்றிதழை சமர்ப்பித்தார்.</p><p>சுபாஷ் சந்திராவிடம் இருந்து ஆகஸ்ட் 10, 2018 பெறப்பட்ட கடிதத்தின் உத்தரவாதம் அடிப்படையில் எல்.ஐ.சி நிறுவனம், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் கடன் தொகையை வழங்கியது.</p><p>இதையடுத்து கடன் வாங்கிய வசந்த் சாகர் மற்றும் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் தங்களது கடன் தவணைகளை செலுத்தாமல் போயின.</p><p>இதைத்தொடர்ந்து எல்.ஐ.சி நிறுவனம் சிபிஐ-யில் தாக்கல் செய்த வழக்கில், 2016 ஆம் ஆண்டின் திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டத்தின் கீழ், கடன்களுக்கு ஒப்புதல் பெறுவதற்காக LICHFL நிறுவனத்திடம் சந்திரா சமர்ப்பித்த சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டிருந்த நிகர சொத்து மதிப்பின் தவறானது என்று குற்றம்சாட்டியது.</p><p>மேலும் சந்திரா, கடன் வாங்கியவர்களான வசந்த் சாகர் பிராப்-பர்டீஸ், பான் இந்தியா இன்ஃப்ராப்ராஜெக்ட்ஸ், டிஜிட்டல் சப்ஸ்கிரைபர் மேனேஜ்மென்ட், ஸ்பிரிட் இன்ஃப்ராபவர் மற்றும் மல்டிவென்ச்சர்ஸ் ஆகியோருடனும், அவர்களின் அதிகாரிகள் மற்றும் இயக்குநர்களுடனும் இணைந்து கூட்டுச்சதி செய்து, எல்.ஐ.சி. எச்.எஃப்.எல் நிறுவனத்திடம் இருந்து கடன்களை முறைகேடாகப் பெற்றுள்ளதாக சிபிஐ-யில் புகார் அளிக்கப்பட்டது.</p><p>கடன் வாங்கியவர்களுக்கு நிதியை வழங்குமாறு LICHFL நிறுவனத்தை ஏமாற்றும் நோக்கில், அவர் தனது நிகர சொத்து மதிப்பை மிகைப்படுத்தி போலி ஆவணங்களை உருவாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.</p><p>மேலும் 2024-ஆம் ஆண்டில் சந்திராவின் நிகர சொத்து மதிப்பு ரூ. 31.79 கோடியாக இருந்ததாகவும் சிபிஐ-யில் எல்.சி.சி. எஃப்.எஃப்.எல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>13 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் இணைந்த இளைஞர்- கேரளா சென்ற ஜார்க்கண்ட் சிறுவனின் நெகிழ்ச்சிச் சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-youth-reunites-with-family-after-13-years-in-jharkhand</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-youth-reunites-with-family-after-13-years-in-jharkhand#comments</comments><guid isPermaLink="false">dcf10142-ebd7-48f1-beef-76d5961d2a77</guid><pubDate>Sun, 06 Sep 2026 10:53:05 +0000</pubDate><atom:updated>2026-09-06T10:53:05.175Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,ஜார்க்கண்ட்,reunited,கேரளம்,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/aq30vk02/Untitled-design-29.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Missing Boy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/aq30vk02/Untitled-design-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 6 வயதான சிறுவன் ஒருவன் தனது தந்தையை ரெயில் நிலையத்தில் தொலைத்துவிட்டு, வழி தவறி கேரளா செல்லும் ரெயிலில் ஏறியதை தொடர்ந்து, தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">ஜார்க்கண்ட்</a> மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ஹரிமாரா கிராமத்தில் 6 வயதான ராஜா கோப் என்கிற சிறுவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அப்போது ஒரு நாள் கோப், தனது தந்தையுடன் மேற்கு வங்கத்தில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்காக சென்றார். </p><p>பின்னர், கோப் வழி தவறி தனது தந்தையை தொலைத்துவிட்டு, ஜார்க்கண்ட் ரெயிலில் ஏறுவதற்கு பதிலாக, கேரளம் செல்லும் ரெயிலில் மாறி ஏறினார். </p><h3><strong>வழிதவறிய 6 வயது சிறுவன்</strong></h3><p>இதையடுத்து அவர் எர்ணாகுளத்தில் இறங்கியபோது, குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் சிறுவனை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.</p><p>6 வயதான கோப், தனது பெற்றோர்களின் பெயரையும், ஜார்க்கண்ட் பெயரையும் மட்டுமே நினைகூர முடிந்தது. அந்த தகவலை வைத்துக் கொண்டு, அவனது குடும்பத்தை கண்டுபிடிப்பது குழந்தை உரிமை ஆர்வலர்களுக்கு கடினமாக இருந்தது.</p><h3><strong>திருச்சூர் குழந்தைகள் நல குழு</strong></h3><p>கேரளாவின் திருச்சூரில் உள்ள குழந்தைகள் நல குழு, தங்களிடம் இருக்கும் சிறுவன் தன்னை ஜார்கண்டின் சாய் வாசா பகுதியை சேர்ந்தவர் என கூறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தது.</p><p>கோப், ஒரு குன்றின் அருகே உள்ள பள்ளிக்கு அருகில் தனது வீடு அமைந்திருந்தது என்பதை மட்டுமே நினைவு கூர்ந்து விவரிக்க முடிந்தது.</p><p>இதைதொடர்ந்து, தற்போது 19 வயதாகும் கோப், கேரளாவில் கால்பந்தை மையமாக கொண்டு தனது வாழ்க்கையை அமைத்து கொண்டார்.</p><p>கோப் வழங்கிய பெயர்கள் மற்றும் பிற தகவல்களை வைத்து கேரள காவல் நிலைய அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்க்க தொடங்கினர்.</p><h3><strong>காவல் நிலையத்தில் தகவல்</strong></h3><p>மேலும், காவல்துறையினர் இளைஞரின் அடையாளம் மற்றும் பிற தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பினர். இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, இந்த தகவலை வைத்துக் கொண்டு, ஒரு குடும்பம் தங்களது மகனை தொலைத்து விட்டதாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தது.</p><p>இதைத்தொடர்ந்து ஜார்க்கண்டை சேர்ந்த சிறப்பு காவல் குழுவினர், கேரளாவில் உள்ள திருச்சூருக்கு வந்து ஆவணங்களை சரிபார்த்து, கோப்பை ஜார்க்கண்டிற்கு அழைத்து சென்றனர்.</p><h3>சொந்த ஊர் திரும்பிய இளைஞர்</h3><p>கோப் இறுதியாக தனது கிராமத்திற்கு திரும்பியபோது, ஒட்டுமொத்த கிராம மக்களும் ஒன்றாக வந்து அவரை வரவேற்றனர். மேலும், இளைஞரின் பள்ளி நண்பர்களும் ஒரு ஊர்வலத்தை ஏற்பாடு செய்தனர்.</p><p>இதையடுத்து பழங்குடியின பெண்கள் பாரம்பரிய நடனமாடி கோப்பை வரவேற்றனர். 13 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை சந்தித்த அவனின் தாயும், நான்கு சகோதரிகளும் ஆரத்தழுவி அவரை கட்டிக்கொண்டனர்.</p><h3><strong>கோப் தாயார்</strong></h3><p>இந்த நிகழ்வு குறித்து கோப்பின் தாயார் கூறுகையில், "தனது மகன் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். </p><p>இருந்தாலும் கோப்பிற்கு கேரளாவில் கால்பந்து போட்டிகள் இருப்பதாலும், அவன் தனது பள்ளி படிப்பை நிறைவு செய்ய இருப்பதாலும், தனது மகனை தடுக்க போவதில்லை" என தாயார் கூறினார்.</p><h3><strong>இளைஞர் நெகிழ்ச்சி</strong></h3><p>கோப்பிற்கு தனது ‘ஹோ’ என்ற பழங்குடியின மொழி மறந்துவிட்டதாகவும், தற்போது அவருக்கு மலையாளம் மற்றும் இந்தி மொழிகள் மட்டுமே தெரியும் என்றும் கூறினார்.</p><p>மேலும், தனது தந்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், நல்ல வேலைக்கு சென்றுவிட்டு தனது தாயையும், சகோதரிகளையும் கேரளாவிற்கு அழைத்து செல்ல உள்ளதாக கோப் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: டெல்லியில் PG விடுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு - இடிபாடுகளுக்கு அடியில் பல மாணவர்கள் சிக்கித் தவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/horrific-accident-in-delhi-pg-hostel-collapses-many-students-trapped-under-the-debris</link><comments>https://www.maalaimalar.com/news/national/horrific-accident-in-delhi-pg-hostel-collapses-many-students-trapped-under-the-debris#comments</comments><guid isPermaLink="false">0964eec3-bf79-47da-b571-6dd12c6e4ebc</guid><pubDate>Sun, 06 Sep 2026 09:41:38 +0000</pubDate><atom:updated>2026-09-06T09:41:38.819Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கட்டிட விபத்து,Building Collapse,தங்கும் விடுதி,delhi,PG,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/11j5h3qz/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி விடுதி விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி விடுதி விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/11j5h3qz/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைநகர் டெல்லியில் சத்ய நிகேதன் பகுதியில் விடுதி கட்டிடம் ஒன்று இடிந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லி </a>சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள அந்த கட்டிடம் PG (Paying guest) தங்கும் விடுதியாக செயல்பட்டு வந்துள்ளது. அங்கு சுமார் 50 மாணவர்கள் வரை தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. </p><p>இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணி சுமாருக்கு கட்டிடமானது இடிந்து விழுந்துள்ளது. இதில் உள்ளே தங்கியிருந்த பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர். </p> <h2>மீட்பு</h2><p>தகவலறிந்து விரைந்த <a href="https://www.maalaimalar.com/news/world/i-was-chanting-hare-krishna-for-9-days-worker-rescued-from-tunnel">மீட்பு படை</a>யினர் உடனடியாக மீட்பு பணிகளை தொடங்கினர். இதுவரை ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனையோரை மீட்கும் பணிகள் தீவிர கதியில் நடந்து வருகின்றது.</p><p>மீட்பு பணியாளர்களுடன் உள்ளூர் மக்களும் இணைந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இடிந்து விழுந்த கான்கிரீட் கூரையின் கீழ் நபர் ஒருவர் சிக்கிய நிலையில், அவரை மீட்பு பணியாளர்கள் மீட்க போராடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: A building has collapsed near Satya Niketan in South-West Delhi. The fire department received an alert around 1:30 PM. The rescue operation is underway. More details are awaited: Delhi police <a href="https://t.co/lqq8qFIUfE">pic.twitter.com/lqq8qFIUfE</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2096519944762696057?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>சத்ய நிகேதன்</h2><p>சத்ய நிகேதன் பகுதியில் பல கல்லூரிகள் அமைந்துள்ளதால் அதனை சுற்றிய பகுதியில் மாணவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.</p><p>எனவே அங்கு பல பிஜிக்கள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் அதுபோன்றதொரு பிஜி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.</p><p>தற்போதைய சம்பத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அருகில் இருக்கும் கட்டிடங்களில் வசித்து வருபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/11-killed-liquor-in-madhya-pradeshs</link><comments>https://www.maalaimalar.com/news/national/11-killed-liquor-in-madhya-pradeshs#comments</comments><guid isPermaLink="false">cd7748f2-45d0-4596-b2a2-23589716d843</guid><pubDate>Sun, 06 Sep 2026 08:52:39 +0000</pubDate><atom:updated>2026-09-06T08:52:39.895Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய பிரதேசம்,liquor,கள்ளச்சாராயம்,சாராயம்,Madhya Pradeshs</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/e5q47qxf/mayth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/e5q47qxf/mayth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து கள்ளச்சாராயம் விற்றவர்களை தேடி வருகின்றனர். </p><p>மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பண்டா தாலுகா உள்ளது. இதன் அருகே உள்ள 4 கிராமத்தை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனர். இதில் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><h2><strong>மருத்துவமனையில் சிகிச்சை</strong></h2><p>ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 11 பேர் பலியானார்கள். 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>கள்ளச்சாராயம்</strong></h2><p>கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் கவ்கர், நவ்ராஜ் மற்றும் பராஜ் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 4 கிராமங்களை சேர்ந்தவர்களிடமும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.</p><h2><strong>போலீசார் வழக்குப் பதிவு</strong></h2><p>இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கள்ளச்சாராயம் விற்றவர்களை தேடி வருகிறார்கள். இதுகுறித்து மாநில அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பஞ்சாப்பில் நெகிழ்ச்சி: சான்றிதழ் சரிபார்ப்பில் 35 ஆண்டுக்கு பின் ஒன்றுசேர்ந்த அண்ணன்-தம்பி</title><link>https://www.maalaimalar.com/news/national/35-years-how-sir-reunited-brothers-in-haryana</link><comments>https://www.maalaimalar.com/news/national/35-years-how-sir-reunited-brothers-in-haryana#comments</comments><guid isPermaLink="false">929b928b-6601-4b38-ae8b-31f5f475c77b</guid><pubDate>Sun, 06 Sep 2026 07:15:49 +0000</pubDate><atom:updated>2026-09-06T07:15:49.940Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வாக்காளர் பட்டியல்,haryana,பஞ்சாப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/3fcize5v/Haryana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Haryana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/3fcize5v/Haryana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>பஞ்சாப்</strong></h2><p>பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சீதாராம். மாற்றுத்திறனாளியான இவர், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வாதாரம் தேடி ஹரியானாவில் உள்ள தனது சொந்த ஊரிலிருந்து பஞ்சாப்பிற்கு இடம்பெயர்ந்தார். அங்கு தீவிர முயற்சிக்குப் பிறகு, பஞ்சாப் மாநில அரசுப் பணியில் 'டி' பிரிவில் அவருக்கு வேலை கிடைத்தது. தமக்குக் கிடைத்த வேலையை சார்ந்து, பஞ்சாப்பிலேயே தங்கி தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் சீதாராம். ஆனால், காலப்போக்கில் சொந்த ஊரில் இருந்த குடும்பத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தம்பி எங்கு இருக்கிறார், உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற விபரம் தெரியாமல் அண்ணன் குடும்பமும், தங்களது அண்ணனை மீண்டும் காண்போமா என்ற ஏக்கத்தில் சீதாராமும் பல ஆண்டுகள் தவித்து வந்தனர்.</p><h2><strong>பள்ளி சான்றிதழ்</strong></h2><p>இந்த நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஆர்.ஜே.) நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வந்தது. இதற்காக தனது பழைய பள்ளி சான்றிதழ் தேவைப்பட்டதால், சீதாராம் சமீபத்தில் ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான மனோகர்பூருக்கு பயணமானார். அங்குள்ள அரசு பள்ளிக்கு சென்று தனது சான்றிதழை கோரியபோது, பள்ளி ஊழியர்கள் பழைய ஆவணங்களை தீவிரமாக தேடினர். அப்போது, சீதாராமின் பழைய குடும்ப விவரங்கள் மற்றும் முகவரி தகவல்கள் ஆவணங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.</p><h2><strong>வாக்காளர் பதிவு</strong></h2><p>உடனடியாக செயல்பட்ட பள்ளி ஊழியர்கள், ஆவணத்தில் இருந்த தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி, சீதாராமின் மூத்த சகோதரரான கிருஷ்ணாவை தொடர்பு கொண்டனர். "உங்கள் தம்பி சீதாராம் இங்கு சான்றிதழ் வாங்க வந்திருக்கிறார்..." என்று அலைபேசியில் கேட்ட அந்த ஒரு வார்த்தை, அண்ணன் கிருஷ்ணாவை உறைய செய்தது. இத்தனை ஆண்டுகள் கழித்து தம்பி உயிரோடு இருக்கிறான் என்ற செய்தி, கிருஷ்ணா குடும்பத்தினரை ஆனந்தக் கண்ணீரில் மூழ்கடித்தது. தகவலறிந்த கிருஷ்ணா, சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக அங்குள்ள வாக்காளர் பதிவு அதிகாரியை தொடர்பு கொண்டார்.</p><h2><strong>வாக்காளர் பட்டியல்</strong> </h2><p>செய்தி அறிந்த கிருஷ்ணாவின் மனைவி, குழந்தைகள் என அனைவரும் ஓடோடி வந்து, 35 ஆண்டுகளுக்கு பிறகு தம் கண்முன்னே நிற்கும் சீதாராமை கட்டித்தழுவி அழுது, தங்களது பாசத்தை பொழிந்தனர். இதனைத்தொடர்ந்து, சகோதரர்கள் இருவரும் ஒரே வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர். 35 வருட இடைவெளிக்கு  பிறகு பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், தற்போது சமூக வலை தளங்களில் பரவி பலரையும் நெகிழச் செய்துள்ளது. </p><h2><strong>கூடுதல் உதவி தேர்தல் பதிவு அதிகாரி</strong></h2><p>இதுகுறித்து கூடுதல் உதவி தேர்தல் பதிவு அதிகாரி (ஏ.இ.ஆர்.ஓ.) டாக்டர் ரமேஷ் குமார் கூறுகையில், "தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கை, வெறும் அதிகாரப்பூர்வப் பணி மட்டுமல்ல; அது 35 ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓர் அண்ணன்-தம்பியை மீண்டும் இணைக்கும் பாசப் பாலமாகவும் மாறியுள்ளது. வாழ்க்கையில் திசைமாறிபோன ஒரு குடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்த்ததில் எங்கள் களப்பணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறோம்,"என்று உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிராவில் தயிர் பானை உடைக்கும் போட்டியில் 7 வயது சிறுவன் உட்பட 2 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/seven-year-old-boy-woman-killed-yogurt-pot-competition-maharashtra</link><comments>https://www.maalaimalar.com/news/national/seven-year-old-boy-woman-killed-yogurt-pot-competition-maharashtra#comments</comments><guid isPermaLink="false">ef19204c-de84-47b4-af1f-f0f99b104d1c</guid><pubDate>Sun, 06 Sep 2026 02:44:42 +0000</pubDate><atom:updated>2026-09-06T02:44:42.161Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,கிருஷ்ண ஜெயந்தி,krishna jayanthi,Dahi Handi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/d5q16utj/Untitled-design-25.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Maharashtra Dahi Handi Accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/d5q16utj/Untitled-design-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக தயிர் பானை உடைக்கும் போட்டி நடைபெற்றது. அப்போது போட்டியை காண்பதற்காக  கூட்டத்தில் நின்று கொண்டிருந்த இருந்த ஏழு வயது சிறுவன் மற்றும் ஒரு பெண் மீது தூண் சரிந்து விழுந்ததில் இருவரும் உயிரிழந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பை</a> மலாட் பகுதியை இளைஞர் குழுவினர், கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக முன் அனுமதியின்றி தாங்களாகவே திருவிழா ஒன்றை நேற்று கொண்டாடினர். அப்போது அந்த திருவிழாவில் தயிர் பானை உடைக்கும் போட்டி நடைபெற்றது. </p><h3><strong>மும்பை மலாட் பகுதி</strong></h3><p>இந்த போட்டியை காண்பதற்காக மலாட் கிராமத்தில் திரளான மக்கள் ஒன்றாக கூடினர். அப்போது இளைஞர்கள் ஒன்றாக பிரமிட் வடிவத்தில் நின்று, கயிற்றில் தொங்கவிடப்பட்டிருந்த பானையை உடைக்க முயன்றனர்.</p><p>இந்த போட்டியை காண்பதற்காக அந்த கூட்டத்தில் ஏழு வயது சிறுவன் நின்று கொண்டிருந்தான்.</p><h3><strong>தயிர் பானை உடைக்கும் போட்டி</strong></h3><p>தயிர் பானையை தாங்கி கொண்டிருந்த கயிறு, ஒரு மரத்திற்கும் தரைத்தள கட்டிடத்தின் செங்கல் தூணுக்கும் இடையில் கட்டப்பட்டு இருந்தது.</p><p>அந்த சமயத்தில் இளைஞர்கள் பானையை உடைக்க முயன்றபோது, அங்கே இருந்த தூண் ஒன்று சரிந்து கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மேல் விழுந்தது.</p><p>இதையடுத்து தூண் சரிந்து கூட்டத்தில் நின்று கொண்டிருந்த சிறுவனின் தலை மீது விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு, மால்வானி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.</p><p>இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.</p><h3><strong>புனே பகுதி</strong></h3><p>இதேபோன்று மகராஷ்டிராவில் உள்ள புனே நகரத்தில் நடைபெற்ற தயிர் பானை உடைக்கும் போட்டியில், ஒரு இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில், சல்மா சலாவுதீன் பதான் என்ற பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார்.</p><h3><strong>மகராஷ்டிரா துணை முதலமைச்சர்</strong></h3><p>இந்த துயர சம்பவம் குறித்து மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், மனித பிரமிடுகளை அமைக்கும் போது, போட்டியில் கலந்துகொள்பவர்கள் அரசாங்கத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ம.பி.யில் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி.. பல லட்ச ரூபாய் சுருட்டிய பெண் - ஒரே வீடியோவில் குட்டு அம்பலம் </title><link>https://www.maalaimalar.com/news/national/fake-ias-officer-caught-in-mp-woman-who-swindled-lakhs-of-rupees-kuttu-ambalam-in-one-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-ias-officer-caught-in-mp-woman-who-swindled-lakhs-of-rupees-kuttu-ambalam-in-one-video#comments</comments><guid isPermaLink="false">2f9c4f17-c7ef-464b-952c-214fcb412667</guid><pubDate>Sat, 05 Sep 2026 23:37:24 +0000</pubDate><atom:updated>2026-09-05T23:37:24.709Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madhya Pradesh,மோசடி,Fraud,fake IAS officer,மத்தியப் பிரதேசம்,போலி ஐஏஎஸ் அதிகாரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/s2vm89ft/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருப்தி ]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/s2vm89ft/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து லட்சக்கணக்கில் மோசடி செய்த இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>மத்தியப் பிரதேசத்தில் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும் சுற்றுலாத் துறையின் கூடுதல் இயக்குநர் என்றும் பொய் கூறி திருப்தி சிங் ராஜ்புத் என்ற 30 வயது பெண் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">மோசடியில் </a>ஈடுபட்டு வந்துள்ளார்.</p><h2>வீடியோ வைரல் </h2><p>சமீபத்தில் சிவப்பு நிறப் புடவைகளில் மூன்று பெண்கள் தோன்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் இருவர் திருப்தி சிங். </p><p>அந்த வீடியோவில், "நாங்கள் மத்தியப் பிரதேச சட்டசபை வளாகத்தில் இருக்கிறோம். எங்கள் சேட்டைகளைப் பார்த்தால் நாங்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்று யாருக்கும் தெரியாது" என்று கூறிச் சிரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.</p><p>போபால் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த வீடியோ சட்டசபையில் எடுக்கப்படவில்லை என்றும், அது மானுடவியல் அருங்காட்சியக வளாகம் ஒன்றில் படமாக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.</p><h2></h2><figure><img alt="திருப்தி " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/7p2c6hip/tn-10.jpg" /><figcaption>திருப்தி </figcaption></figure><h2>வாக்குமூலம்</h2><p>வீடியோவில் இடம்பெற்ற மற்ற இரு பெண்களிடம் விசாரித்தபோது, சிவப்புச் சேலை அணிந்த திருப்தி சிங் ராஜ்புத் தான் தங்களை ஐஏஎஸ் அதிகாரிகள் போல நடிக்கச் சொன்னதாக தெரிவித்தனர்.</p><p>தங்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக்குவதாக நம்ப வைத்து, தலா ரூ. 3 லட்சம் வரை திருப்தி சிங் வாங்கியதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.</p><p>சுற்றுலாத் துறை சொத்துகளை குத்தகைக்கு விடுவதாகவும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி பலரிடம் திருப்தி சிங் ராஜ்புத் பணம் பறித்து தெரியவந்தது.</p> <p>திருப்தி மீது அசோக் நகர் மற்றும் போபால் காவல் நிலையங்களில் 3 எப்.ஐ.ஆர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>2025 ஏப்ரல் மாதம் சந்தேரியில் உள்ள அரசு ஹோட்டலில் தங்கி, 4 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 9.80 லட்சம் மற்றும் ஒரிஜினல் ஆவணங்களை பெற்று ஏமாற்றியதுதான் இவருக்கு எதிராகப் பதிவான முதல் வழக்காகும்.</p> <h2>சோதனை</h2><p>போபாலில் உள்ள திருப்தி சிங்கின் வீட்டில் காவல்துறை நடத்திய சோதனையில், அரசுத் துறைகளின் போலி அடையாள அட்டைகள், லெட்டர் ஹெட்கள், பணி நியமன ஆணைகள், கேடயங்கள், நினைவுப் பரிசுகள், இந்திய அரசு ன்ற வாசகம் பொறிக்கப்பட்ட டொயோட்டா இன்னோவா கார், போலி சி.பி.ஐ அடையாள அட்டை ஆகியவை சிக்கின.</p> <h2>கைது</h2><p>திருப்தியுடன் சேர்த்து அவருக்கு உதவியாக இருந்த அவரது சகோதரர் சுதான்ஷு சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>போலி <a href="https://www.maalaimalar.com/topic/ias">ஐ.ஏ.எஸ் அதிகாரி </a>என்ற பிம்பத்தை நம்பியே திருப்தியை திருமணம் செய்து கொண்டதாக திருப்தியின் கணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.</p><p>கைது செய்யப்படுவதற்கு முன்பாகத் திருப்தி தனது மடிக்கணினியிலிருந்தபல ஆவணங்களை அழித்துள்ளதை போலிசார் கண்டறிந்துள்ளனர்.</p><p>திருப்திக்கு போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்த நபர்களைக் கண்டறிந்துள்ளதாகவும், இதில் வேறு யாரேனும் பின்னணியில் உள்ளனரா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அவர்களுக்கு பாதி கிளாஸ் என்றுமே காலியாக தான் தெரியும்.. GDP குறித்த விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலடி
</title><link>https://www.maalaimalar.com/news/national/for-them-the-glass-is-never-half-full-prime-minister-modi-hits-back-at-criticisms-regarding-gdp</link><comments>https://www.maalaimalar.com/news/national/for-them-the-glass-is-never-half-full-prime-minister-modi-hits-back-at-criticisms-regarding-gdp#comments</comments><guid isPermaLink="false">03b4cb95-7c50-4bbc-9442-5585a41f3494</guid><pubDate>Sat, 05 Sep 2026 22:24:18 +0000</pubDate><atom:updated>2026-09-05T22:24:18.012Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Economic growth,பொருளாதார வளர்ச்சி,Employment,பிரதமர் மோடி,வேலைவாய்ப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/wqwv72j7/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[  பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/wqwv72j7/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். </p><p>டெல்லியில் உள்ள ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் நேற்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a> உரையாற்றினார்.</p><p>அவர் பேசியதாவது, "ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியா பதிவு செய்துள்ள 7.8 சதவீத GDP வளர்ச்சி விகிதம், மேற்காசிய போர் மற்றும் உலகளாவிய வர்த்தக பாதிப்புகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தின் உறுதியை வெளிப்படுத்துகிறது.</p><p>இந்தியா வளர்வது மட்டுமல்லாமல், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது</p><p>முன்பு இந்தியாவை மிகவும் பலவீனமான ஐந்து பொருளாதாரங்களில் ஒன்று என்ற நிலைக்கு தள்ளியவர்களால், இன்று இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளதை சகித்துக் கொள்ள முடியவில்லை" என்றார்.</p><h2>பாதி கிளாஸ்</h2><p>தொடர்ந்து 2013 தான் பேசிய 'பாதி கிளாஸ்" உதாரணத்தை நினைவுகூர்ந்த அவர், "சிலர் ஒரு கிளாஸைப் பாதி நிரம்பியுள்ளதாகவும், சிலர் பாதி காலியாக உள்ளதாகவும் பார்க்கின்றனர். ஆனால் நான் அந்த கிளாஸ் பாதி நீராலும் பாதி காற்றாலும் முழுமையாக நிரம்பியுள்ளதாக கருதுகிறேன்.</p> <p>2013இல் நாட்டின் நிலைமையை எதிர்மறையாகப் பார்த்தவர்கள் இன்றும் அதே கண்ணோட்டத்திலேயே நாட்டைக் காண்கிறார்கள்.</p><p>அவர்களைப் பொறுத்தவரை, அந்த கிளாஸ் எப்போதும் பாதி காலியாகவே இருக்கும். நான் கிளாஸைப் பற்றிப் பேசுகிறேன் வேறெதுவும் காலியாக இருப்பது குறித்துப் பேசவில்லை." என்றார் </p><h2>ரிப்போர்ட் கார்டு</h2><p>தொடர்ந்து பேசிய அவர், " நான் எனது ரிப்போர்ட் கார்டுடன் உங்கள் முன் வந்துள்ளேன். உண்மையின் கர்ஜனைக்கு முன்னால் பொய்களின் எதிரொலி நிற்க முடியாது.</p> <p>2013இல் நான் மேக் இன் இந்தியா குறித்துப் பேசியபோது பலர் அதைக் கேலி செய்தனர். இன்று அதன் பிராண்ட் மதிப்பை உலகம் காண்கிறது.</p><p>2014இல் பெரும்பாலான செல்போன்களை இறக்குமதி செய்த இந்தியா, இன்று ரூ. 2.5 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள கைப்பேசிகளையும் ஏற்றுமதி செய்து வருகிறது.</p><p>இந்தியா உலகளாவிய உற்பத்தி மையமாகவும், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாகவும் உருவெடுத்து வருகிறது" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ஆட்சி மாறியதால் கடிக்காதே என கொசுக்களிடம் சொல்ல முடியாது.. டெங்கு பரவல் குறித்து மேற்கு வங்க அமைச்சர் கருத்து</title><link>https://www.maalaimalar.com/news/national/you-cannot-tell-mosquitoes-not-to-bite-just-because-the-government-has-changedwest-bengal-ministers-remarks-on-the-spread-of-dengue</link><comments>https://www.maalaimalar.com/news/national/you-cannot-tell-mosquitoes-not-to-bite-just-because-the-government-has-changedwest-bengal-ministers-remarks-on-the-spread-of-dengue#comments</comments><guid isPermaLink="false">28ec3401-d9a2-4e69-a4e9-0f45ba2486ca</guid><pubDate>Sat, 05 Sep 2026 20:51:52 +0000</pubDate><atom:updated>2026-09-05T20:51:52.570Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,சுவேந்து அதிகாரி,Suvendu Adhikari,dengue fever,west bengal,டெங்கு காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/y4p9hr74/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மேற்கு வங்க அமைச்சர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மேற்கு வங்க அமைச்சர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/y4p9hr74/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில் கொசுக்களால் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில அமைச்சர் அக்னிமித்ரா பால் பேசியுள்ள கருத்து விவாதபொறுப்பாகி வருகிறது.</p><p>சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பின் மேற்கு வங்கத்தில் முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/suvendu-adhikari">சுவேந்து அதிகாரி </a>தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக அக்னிமித்ரா பால் உள்ளார்.</p><p>செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அக்னிமித்ரா பால், "அரசாங்கம் மாறிவிட்டது என்பதற்காக மட்டும் கொசுக்களை கடிக்காதே என்று சொல்ல முடியாது" என்றார்.</p><p>கொசுக்களை அடக்க முடியாது என்பதால், இந்தச் சூழ்நிலையை சமாளிக்க அரசாங்கம் வேறு வழிகளில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் மேலும் கூறினார்.</p><h2>டெங்கு பரவல்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்கத்தில்</a> கொசுக்கடி காரணமாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமாக உள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் 4,000 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>நிலைமை கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்றும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p>டெங்கு பரவல் காலத்தில் மாணவர்கள் உடல் முழுவதையும் மூடும் வகையில் ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சரத்வத் முகர்ஜி பள்ளிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.</p> <h2>அக்னிமித்ரா பால் சர்ச்சை</h2><p>கடந்த வாரம், கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் நடைபாதையில் தனது குழந்தைக்குப் பால் சூடாக்கிக் கொண்டிருந்த ஒரு வீடற்ற பெண்ணை அக்னிமித்ரா பால் திட்டும் காணொளி ஒன்று வெளியானது.</p><p>"நடைபாதையில் குழந்தைக்குப் பால் சூடாக்குகிறாயா? பார்க் ஸ்ட்ரீட்டிலா? இங்கே குடும்பம் நடத்த உனக்கு யார் அனுமதி கொடுத்தது?" என்று பால் கேட்பது அந்தக் காணொளியில் இடம்பெற்றிந்தது. பின்னர் கொல்கத்தா காவல்த்துறையினர் அந்த குடும்பத்தினரை அங்கிருந்து விரட்டியதும் விமர்சனத்துக்கு உள்ளானது.</p><p>அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, முதலமைச்சர் சுவேந்து அதிகாரி நேரில் சென்று அந்தப் பெண்ணை சந்தித்து இருப்பிடம் வழங்குவதாக உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மசூதி இடிப்பு - உத்தரப் பிரதேசத்தில் வெடித்த அரசியல் சர்ச்சை</title><link>https://www.maalaimalar.com/news/national/early-morning-stealth-mosque-demolition-political-controversy-erupts-in-uttar-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/early-morning-stealth-mosque-demolition-political-controversy-erupts-in-uttar-pradesh#comments</comments><guid isPermaLink="false">32d4d7df-82cd-42a3-a059-057231a40b83</guid><pubDate>Sat, 05 Sep 2026 19:58:57 +0000</pubDate><atom:updated>2026-09-05T19:58:57.720Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,அகிலேஷ் யாதவ்,Akhilesh Yadav,Yogi Adityanath,உத்தரப் பிரதேசம்,யோகி ஆதித்யநாத்,மசூதி இடிப்பு,Mosque demolition</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/vjnliy94/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அகிலேஷ் யாதவ், மசூதி இடிப்பு, யோகி ]]></media:title><media:description type="html"><![CDATA[ அகிலேஷ் யாதவ், மசூதி இடிப்பு, யோகி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/vjnliy94/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தின் சகாரன்பூரில் நேற்று அதிகாலையில் மசூதி ஒன்று இடிக்கப்பட்ட விவகாரம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேச </a>மாநிலம் சகாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்திருந்த மசூதியை மாவட்ட நிர்வாகம் நேற்று அதிகாலை 5 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்துத் தள்ளியுள்ளது. </p><h2> இடிப்பு </h2><p>சகாரன்பூர் ஆட்சியர் அலுவலகத்தின் 5 பிரதான நுழைவு வாயில்களையும் பூட்டி, யாரையும் உள்ளே அனுமதிக்காமல் அதிகாரிகள் இடிப்புப் பணியை முடித்தனர். </p><p>அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமித்து கட்டடப்பட்டிருந்ததாலேயே  கட்டுமானத்தை அகற்றியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>பின்னணி</h2><p>இந்த மசூதி அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாகக் கூறி 2025-இல் பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் விகாஸ் தியாகி மனுத் தாக்கல் செய்தார்.</p><p>விசாரணைக்குப் பின், ஜூலை 16 அன்று அந்த மசூதி ஆக்கிரமிப்புக் கட்டிடம் என உறுதிசெய்து, அதை இடிக்கச் சகாரன்பூர் நகர மெஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.</p><p>இந்த உத்தரவை எதிர்த்து மசூதி கமிட்டி மாவட்ட நீதிமன்றத்தை அணுகிய நிலையில், செப்டம்பர் 2 அன்று நீதிமன்றம் அவர்களின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.</p> <h2>அவசர அவசரமாக</h2><p>மசூதி கமிட்டி உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறுவதைத் தடுப்பதற்காகவே அரசு அதிகாலையில் இந்த இடிப்பு நடவடிக்கையை அவசர அவசரமாக மேற்கொண்டுள்ளது என எதிர்க்கட்சிகள், யோகி ஆதித்யநாத் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளன.</p> <h2>குற்றச்சாட்டு </h2><p>ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, "பாஜக அரசுக்கு '<a href="https://www.maalaimalar.com/news/national/india-pakistan-diplomatic-row-india-rejects-zardaris-remarks-over-alleged-demolition-of-historic-mosque">மசூதி</a>' என்ற வார்த்தை மீதே வெறுப்பு உள்ளது.</p><p>பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்திற்கு செல்வதைத் தடுக்கவே அதிகாலையில் திருட்டுத்தனமாக இடித்துள்ளனர். மசூதி கமிட்டிக்குத் தேவையான அனைத்துச் சட்ட உதவிகளையும் நாங்கள் வழங்குவோம்." என சாடியுள்ளார்.</p><p>சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ அணுக ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அரசின் உத்தரவுக்கு ஏற்ப அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து நீதியைத் தடுத்துள்ளனர். பிற மதங்களை மதிக்காதவர்கள் ஒருபோதும் சனாதனிகளாக இருக்க முடியாது." என தெரிவித்துள்ளார்.</p> <h2>பதற்றம்</h2><p>இதனிடையே பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சகாரன்பூர் சரக டி.ஐ.ஜி அபிஷேக் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஜம்மு காஷ்மீரில் அதிரடி காட்டிய பாதுகாப்பு படை .. லஷ்கர் இ தொய்பா தளபதி சுட்டுக் கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/encounter-in-jammu-and-kashmir-lashkar-e-taiba-commander-shot-dead</link><comments>https://www.maalaimalar.com/news/national/encounter-in-jammu-and-kashmir-lashkar-e-taiba-commander-shot-dead#comments</comments><guid isPermaLink="false">84a552e0-a989-48ed-b6be-16ad38bb2a39</guid><pubDate>Sat, 05 Sep 2026 17:46:18 +0000</pubDate><atom:updated>2026-09-05T17:46:18.490Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>terrorists,ஜம்மு காஷ்மீர்,Lashkar-e-Taiba,லஷ்கர் இ தொய்பா,Jammu &amp; Kashmir,பயங்கரவாதிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/o6dlo4cn/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ யாசிர்]]></media:title><media:description type="html"><![CDATA[ யாசிர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/o6dlo4cn/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் லஷ்கர் இ தொய்பா தளபதி யாசிர் சுட்டுக்கொல்லப்பட்டான்.</p><h2>யார் இந்த யாசிர்?</h2><p>2025ஆம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/news/national/pahalgam-attack-responsible-will-not-be-spared-says-modi-ajit-doval">பஹல்காமில் </a>நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் முக்கியச் சூத்திரதாரிகளில் ஒருவன் 'ஹாஷிம் மூசா' என்றழைக்கப்படும் சுலைமான் மூசா. இவன் <a href="https://www.maalaimalar.com/news/world/lashkar-commander-qari-saeed-abdul-aziz-dies-mysteriously-in-pakistan-amid-poisoning-suspicions">லஷ்கர் இ தொய்பா </a>அமைப்பின் முக்கியத் தளபதி ஆவான்.</p><p>பஹல்காம் தாக்குதல் நடந்த சில மாதங்களிலேயே, ஸ்ரீநகரின் டாச்சிகாம் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் நடத்திய என்கவுண்டரில் மூசா சுட்டுக்கொல்லப்பட்டான்.</p><p>இந்த சுலைமான் மூசாவுடைய குழுவில் இருந்தவன் யாசிர். சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு அக்குழுவிலிருந்து பிரிந்த யாசிர், தளபதி அந்தஸ்துடன் தனிப்படையாக இயங்கி வந்தான்.</p> <h2>என்கவுண்டர் </h2><p>மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள யூஸ்மார்க் மலைப்பகுதியில் இவனது நடமாட்டம் அதிகரித்துள்ளதை உளவுத்துறை கண்டறிந்தது.</p><p>உளவுத்துறை தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவத்தின் சிறப்புப் படையினர் மற்றும் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படையினர் இன்று அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.</p><p>அப்போது பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் யாசிர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளான்.</p> <h2>விசாரணை</h2><p>காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், யாசிரின் வீழ்ச்சி லஷ்கர் அமைப்புக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.</p><p>கொல்லப்பட்ட யாசிருடன் தொடர்பில் இருந்த பிற பயங்கரவாதிகள், சமீபத்திய பயங்கரவாத சம்பவங்களில் அவனுக்கு இருந்த பங்கு குறித்துப் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>நதியை மீட்டெடுத்த இந்திய இளைஞருக்கு நெதர்லாந்து சி.இ.ஓ அளித்த வேலை வாய்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-youth-who-cleaned-polluted-river-gets-job-offer-from-dutch-ceo</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-youth-who-cleaned-polluted-river-gets-job-offer-from-dutch-ceo#comments</comments><guid isPermaLink="false">06bf141b-6098-4cd8-848b-90a84e3370c8</guid><pubDate>Sat, 05 Sep 2026 11:56:38 +0000</pubDate><atom:updated>2026-09-05T11:56:38.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madhya Pradesh,மத்தியப் பிரதேசம்,Bittu Tabahi,Ajnar River,Surendra Singh Chaudhary,சுரேந்திர சிங் சவுத்ரி,பிட்டு தபாஹி,அஜ்னார் நதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/43b34swv/river.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bittu Tabahi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/43b34swv/river.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேச மாநிலத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பயோரா பகுதியைச் சேர்ந்த 21 வயதான சுரேந்திர சிங் சவுத்ரி, சமூக வலைதளங்களில் 'பிட்டு தபாஹி' என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் தனது பகுதியில் கடுமையாக மாசடைந்திருந்த அஜ்னார் நதியைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் கடந்த ஜனவரி மாதம் முதல் தனியாளாக இறங்கினார். நதியில் தேங்கிக்கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், பாசிகள் மற்றும் பிற குப்பைகளைத் தொடர்ச்சியாக அப்புறப்படுத்தி, சில மாதங்களிலேயே அந்த நதியை முழுமையாகத் தூய்மைப்படுத்தினார்.</p><p>தனது தூய்மைப் பணிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பிட்டு தபாஹி பகிர்ந்து வந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி உலகளவில் கவனம் பெற்றன. இவரின் இந்த அசாதாரண முயற்சியைப் பார்த்த நெதர்லாந்தைச் சேர்ந்த '<a href="https://www.maalaimalar.com/news/national/dont-make-false-promises-to-me-kangana-ranaut-slams-officials">தி ஓஷன் கிளீன்அப்</a>' தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயலதிகாரியுமான போயன் ஸ்லாட், சமூக வலைதளப் பதிவு ஒன்றிற்குப் பதிலளிக்கும் விதமாக "எங்களுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள்" எனப் பகிரங்கமாக வேலை வாய்ப்பு வழங்கி அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>பிட்டு தபாஹியின் இந்த முயற்சிக்கு நெதர்லாந்து நிறுவனத்தின் அழைப்பு மட்டுமன்றி, உள்நாட்டிலும் பலதரப்பட்ட ஆதரவுகள் குவிந்து வருகின்றன. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இவரின் தூய்மைப் பணியைப் பாராட்டியுள்ளார். மேலும், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், பிட்டு தபாஹியைத் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததுடன், 'ஜல் கங்கா சம்வர்தன் அபியான்' என்ற நீர்நிலைகளைப் பாதுகாக்கும் அரசின் திட்டத்திற்கு இவரின் முயற்சி பெரும் ஊக்கமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சுமார் 30,000 ரூபாய் சொந்தப் பணத்தைச் செலவழித்து இந்த நதி மீட்புப் பணியைச் செய்துள்ளதாகக் கூறும் பிட்டு தபாஹி, இத்தகைய விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியான பிறகு பொதுமக்கள் நதியில் குப்பைகளைக் கொட்டுவது கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனி ஒருவனின் விடாமுயற்சி ஒரு நதியை மீட்டெடுத்தது மட்டுமன்றி, சர்வதேச அளவில் அவருக்கு ஒரு புதிய அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>என்னிடம் போலி வாக்குறுதிகளைக் கூறாதீர்கள்: அதிகாரிகளை கடுமையாகச் சாடிய கங்கனா ரணாவத்</title><link>https://www.maalaimalar.com/news/national/dont-make-false-promises-to-me-kangana-ranaut-slams-officials</link><comments>https://www.maalaimalar.com/news/national/dont-make-false-promises-to-me-kangana-ranaut-slams-officials#comments</comments><guid isPermaLink="false">54265f80-e617-42b7-b53e-d129d696d4fa</guid><pubDate>Sat, 05 Sep 2026 11:07:14 +0000</pubDate><atom:updated>2026-09-05T11:07:14.115Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கங்கனா ரனாவத்,Kangana Ranaut,திஷா,Disha,Mandi constituency,MPLADS,மண்டி தொகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/yiaodli6/kangana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kangana Ranaut]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/yiaodli6/kangana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மண்டி தொகுதிக்கான 11 கோடி ரூபாய் நிதியில் 50 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் செயல்பாட்டு அறிக்கை கோரியுள்ளார். </p><p>இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி தொகுதி பாஜக எம்பி கங்கனா ரணாவத், தனது தொகுதிக்கான மேம்பாட்டு நிதி முறையாகப் பயன்படுத்தப்படாதது குறித்து அரசு அதிகாரிகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். மண்டி மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், அதிகாரிகளின் அலட்சியப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.</p><h2>11 கோடியில் <strong>50 லட்சம் ம</strong>ட்டுமே செலவு</h2><p>கூட்டத்தின் போது தொகுதி <a href="https://www.maalaimalar.com/news/national/buy-me-a-bicycle-7-year-old-girl-with-amputated-leg-pleads-to-district-collector">மேம்பாட்டுத் திட்டங்கள் </a>குறித்து ஆய்வு செய்த கங்கனா ரணாவத், தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் 11 கோடி ரூபாய் வரை கைவசம் உள்ளது என்றும், ஆனால் அதில் வெறும் 50 லட்சம் ரூபாய் மட்டுமே இதுவரை செலவிடப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். பெரும்பாலான நிதி பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடப்பது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் அவர் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.</p><h2>போலி வாக்கு<strong>றுதிகளுக்குக் கண்</strong>டனம்</h2><p>முந்தைய கூட்டங்களில் தொகுதி மேம்பாட்டு நிதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் முடிந்துவிட்டதாகவும், எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அதிகாரிகள் தன்னிடம் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக அவர் குற்றம்சாட்டினார். "ஒவ்வொரு திஷா கூட்டத்திலும் என்னிடம் இதுபோன்ற போலி வாக்குறுதிகளை அளிக்காதீர்கள், இனி எனக்கு உண்மையான வேலைகளும் வெளிப்படையான செயல்பாடுகளுமே தேவை" என்று கோபத்துடன் குறிப்பிட்டார்.</p><p>தொகுதி நிதியை விரைவாகப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள வளர்ச்சிப் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிதிச் செலவினங்கள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்த முழுமையான செயல்பாட்டு அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்குக் கெடு விதித்துள்ளார். இக்கூட்டத்தில் கங்கனா ரணாவத் அதிகாரிகளைக் கடிந்துகொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>நீதிபதிகளின் ஓய்வு வயதை 62ஆக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/retirement-age-of-judges-raised-to-62</link><comments>https://www.maalaimalar.com/news/national/retirement-age-of-judges-raised-to-62#comments</comments><guid isPermaLink="false">c376eb78-af7a-4d54-8b56-e6e95ed322c9</guid><pubDate>Sat, 05 Sep 2026 10:48:32 +0000</pubDate><atom:updated>2026-09-05T10:48:32.100Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீதிபதிகள்,உச்சநீதிமன்றம்,தலைமை நீதிபதி சூர்யகாந்த்,ஒய்வு பெறும் வயது</media:keywords><media:content height="186" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/p37dhm2z/images-1.jfif" width="271"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு உட்பட இந்தியாவின் ஏழு மாநிலங்களின் மாவட்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62ஆக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/p37dhm2z/images-1.jfif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஓய்வு பெறும் வயது உயர்வு..</h2><p>மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 60இருந்து 62ஆக முறைப்படி உயர்த்த ஏழு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது, நீதித்துறையில் பல ஆண்டுகளாக  சிறப்புடனும், அனுபவத்துடனும் செயல்படும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fifteen-new-judges-take-oath-at-madras-high-court">நீதிபதிகள்</a> பணியிலிருந்து விலகுவதை  தடுக்கவும், முறைப்படி விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதையும் உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>மாநிலங்களின் ஒப்புதல் </h2><p>இந்த முன்மொழிவை அந்தந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hc-directs-centre-state-to-submit-detailed-report-on-rescue-of-missing-indians-in-nepal-floods">மாநில அரசுகள்</a> ஒப்புக்கொண்டத்தை தொடர்ந்து இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த அமர்வானது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் பிறப்பிக்கப்பட்டது.</p> <h2>சட்ட விதிகளை  திருத்த வேண்டும் </h2><p>நீதிபதிகளின் விசாரணை என்பது வெறும் கண்மூடித்தனமான மாயையாக இல்லாமல், நீதி கிடைப்பதை உறுதி செய்யவே என்றும், மேலும் இரண்டு மாதங்களுக்குள் இந்த விதிகளை திருத்த வேண்டும் என்றும் <a href="https://www.maalaimalar.com/news/national/tarun-tejpal-rape-conviction-supreme-court-orders-surrender-within-two-weeks">உச்சநீதிமன்றம்</a> உத்தரவிட்டுள்ளது. </p><p>நீதிபதிகளின் வயதுவரம்பை உய்ர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ள மாநிலங்கள், சம்பந்தப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் 60 வயதை எட்டும்போது இந்த உத்தரவை கடைப்பிடித்து ஒய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>ஓய்வு பெற முடியாது </h2><p>வழக்கானது நிலுவையில் உள்ள காரணத்தினால், இந்த ஏழு மாநிலங்களில் தற்போது 60 வயதை கடந்த அதிகாரிகள் அந்த வயதில் ஓய்வு பெற மாட்டார்கள் என்றும், இந்த உத்தரவு, மார்ச் 31, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும் பொருந்தும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. </p><p>மேலும் அவர்கள் வேறு பணியில் சேராத பட்சத்தில், நீதித்துறைப் பணிக்குத் திரும்புவதற்கான விருப்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் நீதித்துறை பணிக்கு செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முடிவு மறுபரிசீலனை</h2><p>மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது முடிவை இரண்டு வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>மேலும் இத்த உத்தரவு குறித்தான முடிவை மறுபரிசீலனை செய்து, இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஒரு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம்,அசாம், பீகார்,நாகாலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், டெல்லி , ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்து மாணவர்கள் உதவியுடன் விநாயகர் சிலை செய்து அசத்திய முஸ்லீம் மாணவர்கள்.! 
</title><link>https://www.maalaimalar.com/news/national/matha-nallinakkam-indhu-manavargal-udaviyudan-vinayagar-silai-seithu-asathiya-muslim-manavargal</link><comments>https://www.maalaimalar.com/news/national/matha-nallinakkam-indhu-manavargal-udaviyudan-vinayagar-silai-seithu-asathiya-muslim-manavargal#comments</comments><guid isPermaLink="false">b9563f20-9d2c-477a-bb39-0a3cb1a71799</guid><pubDate>Sat, 05 Sep 2026 10:38:44 +0000</pubDate><atom:updated>2026-09-05T10:38:44.981Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பள்ளி மாணவர்கள்,விநாயகர் சிலை,மதநல்லிணக்கம்,நாக்பூர்</media:keywords><media:content height="225" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/jn28zf7y/ganesh-idolsjpeg.avif" width="399"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாக்பூரில் மத நல்லிணகத்திற்கு சான்றாக , சக முஸ்லீம் மாணவர்களுக்கு இந்து மாணவர்கள் விநாயகர் சிலை வடிவமைக்க கற்று கொடுத்தனர். ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/jn28zf7y/ganesh-idolsjpeg.avif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2>மத நல்லிணக்கம்</h2><p>மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மாநகராட்சியால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மண்ணால் செய்யப்பட்ட சிலை வடிவமைக்கும் நிகழ்வில் , இந்து மாணவர்கள் பலர்,முஸ்லீம் மாணவர்களுக்கு சிலை வடிவமைக்க கற்றுகொடுத்த சம்பவம் நெக்ழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>சிறந்த தோழமை</h2><p><a href="https://www.maalaimalar.com/news/district/ranipettai-news-dmk-saplings-were-planted-on-behalf-of-the-envihttps://www.maalaimalar.com/news/district/ranipettai-news-dmk-saplings-were-planted-on-behalf-of-the-environment-team-682464ronment-team-682464">சுற்றுசூழலுக்கு </a>உகந்த முன்னெடுப்பாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்வில், 76 பள்ளிகளை சேர்ந்த 5000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்து மாணவர்கள் சக மாணவர்களுக்கு விநாயகர் சிலையை வடிவமைக்க கற்று தந்தது சிறந்த தோழமையின் சான்றாக மாறி காண்போரை நெகிழ்சியில் ஆழ்த்தியது</p><h2>மாணவர்கள் கூறியதாவது... </h2><p>இந்த பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறும்போது, தாங்கள் மிகுந்த உற்சாகம் அடைந்ததாகவும், சக மாணவர்களுடன் நேரம் செலவிட  வாய்ப்பு கிடைத்ததாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.</p><p>மேலும் நாங்கள் விநாயகர் சிலை செய்வதில்  மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுத்து கொண்டோம். ஒன்றாக பணியாற்றியது ஒருவருக்கொருவரை புரிந்துகொள்வதற்க்கு உதவியது என்றும் கூறினர்.</p> <h2>நீர் மாசுபாட்டை தடுப்பதற்கான முன்னெடுப்பு </h2><p>கணபதி பப்பா மோரியா என்ற முழக்கங்களுடன் தொடங்கிய இந்த நிகழ்வானது குறிப்பாக ஷாது களிமண் (இயற்கை களிமண்) <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-assembly-action-vinayagar-statue">சிலை</a>களை ஊக்குவிப்பதற்கும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளால்(ஜிப்சம் கனிமத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை வெள்ளை நிறத்தூள்) ஏற்படும் நீர் மாசுபாட்டைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். </p> ]]></content:encoded></item><item><title>ஸ்மார்ட்போன்களுக்குள் ஊடுருவும் ஆபாச செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்- சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/cyber-crime-police-warns-do-not-download-pornographic-apps-that-infiltrate-smartphones</link><comments>https://www.maalaimalar.com/news/national/cyber-crime-police-warns-do-not-download-pornographic-apps-that-infiltrate-smartphones#comments</comments><guid isPermaLink="false">9bfc63f4-1d24-40fa-9f8e-f00fa628daab</guid><pubDate>Sat, 05 Sep 2026 10:29:20 +0000</pubDate><atom:updated>2026-09-05T10:29:20.236Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Cyber Crime Police,சைபர் கிரைம் போலீசார்,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1u0puhp8/cybercrime.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சைபர் கிரைம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சைபர் கிரைம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1u0puhp8/cybercrime.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆபாச செயலிகள் என்ற பெயரில் இயங்கும் ஆபத்தான ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக தேசிய சைபர் கிரைம் அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு எச்சரித்துள்ளது.</strong></em> </p><p>'நைட் பிளே', 'ரிலூப்', 'கிஸ்', 'விமோ', 'ரிவோ', 'நெக்ஸோ' மற்றும் 'விக்சா' போன்ற பெயர்களில்  பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் மூலம் இந்த செயலிகள் முக்கியமாக  பரப்பப்படுகின்றன.</p><p>இந்த விளம்பரங்கள் பயனர்களை ஆபாச உள்ளடக்கங்களை கொண்ட போலி இணைய தளங்களுக்குக் கொண்டு செல்கின்றன. இந்த இணையதளங்கள் பெரும்பாலும் "லைவ்" என்ற முகவரியைக் கொண்டிருக்கின்றன. பயனர்களை கவர்ந்து, கூகுள் பிளே ஸ்டோருக்கு வெளியே இருந்து ஏபிகே கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வைக்கின்றன.</p><h2><strong>மோசடிகளுக்கு வழி வகுக்கிறது</strong></h2><p>செயலியை நிறுவியவுடன், ஆப் அப்டேட் என்ற பெயரில் இரண்டாவது தீங்கிழைக்கும் கோப்பு பதிவிறக்கம் செய்யப்படலாம். முதன்மை செயலிக்கு வழங்கப்பட்ட அனுமதிகளைப் பயன்படுத்தி, 'அணுகல்தன்மை அனுமதி' போன்ற உணர்திறன் மிக்க அனுமதிகளை பெற பயனர்களை செயலி கேட்கிறது. இந்த அனுமதி வழங்கப்பட்டதும், தீம்பொருள் சாதனத்தின் முழு  கட்டுப்பாட்டையும் தன்வசப்படுத்தி, பின்னணியில் தொடர்ந்து இயங்கி, நிதி மோசடிகளுக்கு வழிவகுக்கிறது. </p><p>சில செயலிகள் விபிஎன்ஐ., நிறுவி, இணைய  போக்குவரத்தை தாக்குபவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வர்கள் வழியே திருப்பி விட்டு, தகவல்களை திருடக்கூடும். </p><p>மேலும்  சாதாரண அமைப்புகள் மூலம் பயனர்கள் இந்தச் செயலிகளை நீக்க முடியாதவாறு தடுத்து, சாதனத்தின் கட்டுப்பாட்டை  கைப்பற்றி வங்கி மற்றும் பிற நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்துகின்றன.</p><p>கூகுள் பிளே ஸ்டோர் அல்லது நம்பகமான ஆப் ஸ்டோர்களில் இருந்து மட்டுமே செயலிகளைப் பதிவிறக்க வேண்டும். விளம்பரங்கள், சந்தேகத்திற்கிடமான இணைய தளங்கள் அல்லது இணைப்புகளில் இருந்து ஏபிகே., கோப்புகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது. தெரியாத செயலிகளுக்கு ஒருபோதும் அணுகல்தன்மை அனுமதியை வழங்கக் கூடாது. </p><h2><strong>கண்காணிக்க வேண்டும்</strong></h2><p>ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டுள்ள செயலிகளை  தவறாமல் சரி பார்த்து, அடையாளம் தெரியாதவற்றை நீக்க வேண்டும். கூகுள் பிளே ப்ரொடெக்டிவ்  வசதியை எப்போதுமே இயக்கத்தில் வைத்து, ஆண்ட்ராய்டு சாதனத்தை  தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். மேலும், வங்கி கணக்குகள் மற்றும் யுபிஐ., பரிவர்த்தனைகளில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் உள்ளதா என்பதை  தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/சைபர்-கிரைம்-போலீசார்">கண்காணிக்க</a> வேண்டும்.</p><p>பாதிக்கப்பட்ட செயலியை நீக்க போனின் பவர் பொத்தானை அழுத்தி பிடித்து, பின்னர் 'பவர் ஆப்  விருப்பத்தை அழுத்தி  பிடிப்பதன் மூலம் போனை சேப் மோடில் ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். சேப் மோடு  திரையில் தோன்றும் போது ஓகே அல்லது ரீஸ்டார்ட்  என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சேப் மோடுக்கு  சென்றதும், செட்டிங்க்ஸ் ஆப்ஸ் பகுதிக்கு  சென்று, சந்தேகத்திற்குரிய செயலியை  தேர்ந்தெடுத்து அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும். தெரியாத பிற செயலிகளையும் நீக்கி விட்டு, சாதாரண முறையில் போனை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.</p><p>ஒருவேளை செயலியை நீக்க முடியாவிட்டால், செட்டிங்க்ஸ்-அச்ச ஸ்பிலிடி. இன்ஸ்டால்டு சர்வீசஸ், டவுன்லோ டடுஆப்ஸ்  பகுதிக்குச் சென்று, குறிப்பிட்ட செயலிக்கான அணுகல்தன்மை அனுமதியை முடக்க வேண்டும். பிறகு செட்டிங்க்ஸ், செக்யூரிட்டி பிரைவேசி, டிவைஸ் அட்மின் ஆப்ஸ் சென்று, அந்த செயலிக்கு நிர்வாக அனுமதி இருந்தால் அதைச் செயலிழக்க  செய்ய வேண்டும். பின்னர் ஆப்ஸ் பகுதிக்கு சென்று செயலியை நீக்க வேண்டும். இதன் பிறகும் செயலியை நீக்க முடியாவிட்டாலோ அல்லது போன் ரீஸ்டார்ட் ஆன பிறகு செயலி மீண்டும் வந்தாலோ, முக்கியமான தரவுகளை  பேக்கப்  செய்துவிட்டு  போனை பேக்டரி ரீசெட் செய்ய வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு தடுப்பு நடவடிக்கை: பள்ளி மாணவிகள் பாவாடைக்கு பதிலாக சுடிதார் அணிய மேற்கு வங்க அரசு பரிந்துரை!</title><link>https://www.maalaimalar.com/news/national/dengue-prevention-west-bengal-govt-urges-salwar-kameez</link><comments>https://www.maalaimalar.com/news/national/dengue-prevention-west-bengal-govt-urges-salwar-kameez#comments</comments><guid isPermaLink="false">dcbb3a1e-fc11-4923-8cd6-7dffcdb23532</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:17:14 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:17:14.266Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,Dengue,West Bengal Government,டெங்கு,Sarathwat Mukherjee,மேற்கு வங்க அரசு,சரத்வத் முகர்ஜி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/73a8g8v6/benga.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sarathwat Mukherjee]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/73a8g8v6/benga.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலத்தில் மழைக்காலத்திற்குப் பிந்தைய காலத்தில் டெங்கு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது.</p><p>மேற்கு வங்க மாநிலத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national/2-crore-children-face-online-sexual-abuse-in-a-year">டெங்கு காய்ச்சல் </a>பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பள்ளிகளில் பயிலும் மாணவிகள் சீருடை பாவாடைக்கு பதிலாக உடலை முழுமையாக மூடும் சல்வார் கமீஸ் அல்லது சுடிதார் ஆடைகளை அணிய அனுமதிக்குமாறு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சரத்வத் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><h2>கொசுக்க<strong>டியைத் தவிர்க்க புதிய</strong> நடவடிக்கை</h2><p>மாநிலத்தில் மழைக்காலத்திற்குப் பிந்தைய காலத்தில் டெங்கு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், ஸ்வஸ்த்ய பவன் தலைமையகத்தில் உயர்நில ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சரத்வத் முகர்ஜி, கொசுக்கடியிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எனக் குறிப்பிட்டார்.</p><p>அடுத்த மூன்று மாதங்களுக்கு பள்ளி மாணவர்கள் அனைவரும் முழுக்கை சட்டைகள் மற்றும் முழு நீள பேண்ட் அணிய பள்ளிகள் அனுமதிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும், வழக்கமாக பாவாடை (ஸ்கர்ட்) சீருடை அணியும் மாணவிகள், தங்கள் கால்களை முழுமையாக மூடும் வகையில் சல்வார் சூட்களுக்கு மாற தற்காலிகமாக விலக்கு அளிக்குமாறு பள்ளி நிர்வாகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.</p><h2>பள்ளிகளுக்கு விடுக்கப்<strong>பட்ட வேண்டு</strong>கோள்</h2><p>டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் பகல் நேரத்திலேயே அதிகளவில் கடிக்கும் தன்மையுடையவை என்பதால், பள்ளி நேரங்களில் மாணவர்களின் கை மற்றும் கால்கள் மூடப்பட்டிருப்பது நோய்த்தொற்று அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும். எனவே, அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் இந்தத் தற்காலிக மாற்றத்தை நடைமுறைப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கேரளாவில் கோர விபத்து-  தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-accident-8-tamil-nadu-students-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-accident-8-tamil-nadu-students-killed#comments</comments><guid isPermaLink="false">465d9349-7c0a-49da-b9ee-b11b33e8767b</guid><pubDate>Sat, 05 Sep 2026 02:18:39 +0000</pubDate><atom:updated>2026-09-05T02:18:39.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,சாலை விபத்து,road accident,student death,கேரளா,மாணவர்கள் உயிரிழப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ixbjjnez/accident.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Road Accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ixbjjnez/accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலம் திருச்சூர் அருகே கைப்பமங்கலத்தில் நின்றிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் தமிழர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>கேரளம் மாநிலம் திருச்சூர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>கைப்பமங்கலத்தில் நின்றிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>விபத்தில் உயிரிழந்த 8 பேரில் திண்டுக்கல் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>இதில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வா, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D" rel="nofollow">திண்டுக்கல்</a> மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ், யுவசஞ்சித், மதுரையைச் சேர்ந்த பிரசன்னா ஆகிய 5 பேர் குறித்து தகவல் தெரியவந்துள்ளது.</p><p>சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்சென்றனர்.</p><p>மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>விபத்துக்கான காரணம் என்ன?</h2><p>கேரளம் மாநிலத்தின் பனம்பிக்குன்னு என்ற இடத்தில் சாலை பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>மாற்றுப்பாதையில் வாகனம் திருப்பிவிடப்படுவது குறித்த எச்சரிக்கை பலகை சரியான இடத்தில் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. </p><p>500 மீட்டருக்கு முன்னரே தடுப்பு, எச்சரிக்கை பலகை வைத்திருந்தால் விபத்து நேர்ந்திருக்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>