<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 23 Jul 2026 10:41:28 +0000</lastBuildDate><item><title>‘நீட் விவகாரத்தில் அரசு பதிலளித்தது... குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்’ - நிர்மலா சீதாராமன்</title><link>https://www.maalaimalar.com/news/national/government-has-responded-to-the-neet-irregularities-the-culprits-have-been-arrested-nirmala-sitharaman</link><comments>https://www.maalaimalar.com/news/national/government-has-responded-to-the-neet-irregularities-the-culprits-have-been-arrested-nirmala-sitharaman#comments</comments><guid isPermaLink="false">3a96aa62-ce50-41dc-8286-7a3900a2a717</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:19:43 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:19:43.306Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்மலா சீதாராமன்,nirmala Sitharaman,நீட் வினாத்தாள் கசிவு,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockraoch Janta Party protest,NEET leak</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/fz0n1w7t/New-Project-2026-07-23T154911.353.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நீட் குளறுபடிகளுக்கு அரசு பதிலளித்தது... குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்’ - நிர்மலா சீதாராமன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/fz0n1w7t/New-Project-2026-07-23T154911.353.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடப்பாண்டு நீட் -யுஜி தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளால் நாடு முழுவதும் வெடித்துள்ளப் போராட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகளாவது;</p><p>“அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களிடத்திலும் சென்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார் எனவும் தெரிவித்துள்ளனர். அரசு முழுமையான விவாதத்தை நடத்தத் தயாராக இருக்கும் நிலையில், மேலும் பல நிபந்தனைகளை விதித்து அவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வது சரியல்ல. நீட் விவகாரத்தையும், இளம் மாணவர்களையும் முன்னிறுத்தி, காங்கிரஸ் கட்சி தனது வழக்கமான பாணியில் அவையை முடக்கப் பார்க்கிறது.</p><p>விவாதம் நடந்தால் உண்மை வெளிவந்துவிடும், அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தெரியவந்துவிடும் என்பதால் விவாதத்தைத் தவிர்க்கிறார்கள். எனவே, அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. அவர்கள் விவாதத்தை விரும்புவதில்லை, அதனால்தான் இடையூறு செய்கிறார்கள். </p><p>காங்கிரஸ் நியாயமான விவாதத்தை விரும்பவில்லை; ஏனெனில் உண்மை வெளிவந்தால், நாட்டின் இளைஞர்கள் சார்ந்த இந்த உணர்வுபூர்வமான விவகாரத்தை அரசியல் ஆக்குவது அவர்கள்தான் என்பது தெரியவந்துவிடும்.</p><p>இப்போதும் கூட, எதிர்க்கட்சிகளிடமும், குறிப்பாக காங்கிரஸ் கட்சியிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்: வாருங்கள், விரிவான விவாதத்தில் ஈடுபடுங்கள், பிரச்சினைகளை இங்கே விவாதியுங்கள். கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்பட்டால் அரசு அதற்கான பதில்களை இங்கே அளிக்கும், ஆனால் முதலில் விவாதியுங்கள். </p><p>பதிலளிக்கத் தயாராக இருக்கும் அமைச்சர்களைக் கூச்சலிட்டுப் பேசவிடாமல் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. அவையின் தலைவர் பேசத் தயாராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் நோக்கம் இடையூறு செய்வது மட்டுமே; அவர்களுக்குத் தீர்வுகள் தேவையில்லை. </p><p>வினாத்தாள் கசிவு என்பது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். அரசு இதில் அக்கறை காட்டாமலோ அல்லது பதில் தெரிவிக்காமலோ இருந்திருந்தால், எதிர்க்கட்சிகள் இத்தகைய கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் வினாத்தாள்களை வெளியே விட்டவர்கள், வாங்கியவர்கள், விற்றவர்கள் என இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நோக்கியிருந்த பெற்றோருக்கு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற நம்பிக்கையை பிரதமரின் அறிவிப்பு அளித்துள்ளது. நாட்டின் இளம் தலைமுறைக்கு எதிராக குற்றம் செய்தவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்றும், இதற்கான விரைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் இன்று அறிவித்துள்ளார்.</p><p>சரியான நேரத்தில் கைது நடவடிக்கைகள், மறுதேர்வு மற்றும் முடிவுகள் அறிவிப்பு ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு அரசு செவிசாய்த்து வருகிறது. அதேவேளையில், உயர்கல்விக்கான நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் கட்டத்தில் உள்ள இளைஞர்களும் இச்சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p>வினாத்தாள் கசிவு முதலில் மனவேதனையை அளித்தாலும், அதைப் பயன்படுத்தி இன்னும் சிறப்பாகத் தயாராகி, சிறந்த தேர்ச்சி பெற்ற இளைஞர்களும் உள்ளனர்; சவால்களை ஏற்றுக்கொண்டு வெற்றிகண்டவர்களும் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசும், பிரதமரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களுக்கு ஆதரவாக மவுன போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே</title><link>https://www.maalaimalar.com/news/national/anna-hazare-silent-protest-supporting-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/anna-hazare-silent-protest-supporting-students#comments</comments><guid isPermaLink="false">76845079-8df8-4efb-a2ec-45d6d8e1562f</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:48:33 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:48:33.502Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,students protest,அன்னா ஹசாரே,Anna Hazare,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/by9lbn4t/hazare.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ anna hazare]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/by9lbn4t/hazare.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><h2>மாணவர்கள் பேரணி</h2><p>இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் ஜூலை 20 அன்று கரப்பான்பூச்சி கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகளை வீசி இளைஞர்களை கலைக்க முயன்றனர். அப்போது, 60 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். 116 போலீசார் காயமுற்றனர். 70 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><p>மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்த பல அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகி, அமைதியான முறையில் பேரணி நடத்திய இளைஞர்கள் மீதான அரசின் அடக்குமுறை குறித்த விமர்சனங்களை எழுப்பியது.</p><h2>பிரபலங்கள் ஆதரவு</h2><p>இதையடுத்து, பிரபலங்கள் உள்பட பலரும் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.</p><p>இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை. மாணவர்களின் நலனைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர் என பதிவிட்டுள்ளார்.</p><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிராகரித்துள்ளது.</p><p>மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டிப்பாக பதவி விலக வேண்டும் என பிரதமரின் எக்ஸ் தள பதிவை குறிப்பிட்டு காக்ரோச் ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.</p><h2>மவுன போராட்டம்</h2><p>இந்நிலையில், சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிராவின் அஹில்யா நகரில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மவுன போராட்டத்தில் ஈடுபட்டார் என அவரது உதவியாளர் தத்தா அவாரி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றமே நேரடியாகத் தலையிடும் என எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-stations-closure-supreme-court-warns-of-direct-intervention</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-stations-closure-supreme-court-warns-of-direct-intervention#comments</comments><guid isPermaLink="false">3dd9f69a-541c-4487-b733-f8895c3703ca</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:43:57 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:43:57.081Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SupremeCourt,Suryakant,தலைமை நீதிபதி சூர்யகாந்த்,டெல்லிமெட்ரோ,DelhiMetro,CJIProtest,MetroStationClosed</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/8mpboo18/SuryaKant" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SuryaKant ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/8mpboo18/SuryaKant?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதால் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் எதிர்கொள்ளும் கடுமையான போக்குவரத்துச் சிக்கல்களுக்கு அதிகாரிகள் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும், தவறினால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் எச்சரித்துள்ளார்.</p><h2>வழக்கறிஞர்கள் சங்கம் முறையீடு:</h2><p>தலைநகர் டெல்லியில் நிலவி வரும் அரசியல் போராட்டத்தின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, உச்ச நீதிமன்றம், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் உள்ளிட்ட 16 முக்கிய மெட்ரோ நிலையங்களை டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளது.</p><p>இதனால் உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு வர முடியாமல் வழக்கறிஞர்களும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர்.</p><p>இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் விகாஸ் சிங், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன் அவசர வழக்காக கொண்டு சென்றார்.</p><p>அப்போது பேசிய அவர், "மெட்ரோ நிலையங்களை ஒட்டுமொத்தமாக மூடுவதற்குப் பதிலாக, உச்ச நீதிமன்ற அடையாள அட்டைகளைச் சரிபார்த்து வழக்கறிஞர்களையும், ஊழியர்களையும் மட்டும் மெட்ரோ நிலையத்திற்குள் அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.</p><h2>தலைமை நீதிபதியின் அதிரடி உத்தரவுகள்:</h2><p>வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>அதில், இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண அதிகாரிகளுக்கு ஏற்கனவே நிர்வாக ரீதியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>அதிகாரிகள் இதற்குச் சரியான தீர்வைக் கொண்டு வராவிட்டால், உச்ச நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு, இந்த வழக்கை சட்ட ரீதியாகக் கையில் எடுத்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என்று தெரிவித்தார்.</p><p>போக்குவரத்து நெரிசல் மற்றும் மெட்ரோ முடக்கம் காரணமாக வழக்கறிஞர்கள் குறித்த நேரத்திற்கு நீதிமன்றத்திற்கு வர முடியாமல் போனால், அவர்களின் வழக்குகளுக்கு எதிராக எந்தவொரு பாதகமான உத்தரவுகளையும் பிறப்பிக்கக் கூடாது என அனைத்து நீதிமன்றங்களுக்கும் நிர்வாகச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.</p><p>மேலும், உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையத்தை மட்டும் முதலில் திறக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி வலியுறுத்தினார்</p><h2>பின்னணி</h2><p>டெல்லியில் தற்போது நடந்து வரும் போராட்டங்கள் காரணமாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>முன்னதாக, போராட்டத்தில் போலீசாரின் அத்துமீறல் நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட அவசரக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் இது தொடர்பான பொதுநல வழக்குகளை விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சோனம் ரகுவன்ஷியின் ஜாமினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-cancellation-of-sonam-raghuvanshis-bail</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-cancellation-of-sonam-raghuvanshis-bail#comments</comments><guid isPermaLink="false">219cc9f0-fdff-4c48-9458-ae0f847664e7</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:31:01 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:31:01.877Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,ஜாமின்,bail,Sonam Raghuvanshi,சோனம் ரகுவன்ஷி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/zr184z9f/New-Project-2026-07-23T150015.563.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் ரகுவன்ஷியின் ஜாமினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/zr184z9f/New-Project-2026-07-23T150015.563.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஆண்டு இந்தியாவையே உலுக்கிய, மேகாலயா தேனிலவு கொலைவழக்கின் முக்கிய குற்றவாளியான சோனம் ரகுவன்ஷிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு, சோனம் மீதான குற்றச்சாட்டுகள் “மிகவும் தீவிரமானவை” என்று குறிப்பிட்டு, விசாரணை நடவடிக்கைகள் முடிவடையவில்லை என்றால், ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து ஜாமினை ரத்து செய்தனர். </p><p>ஜாமின் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சோனம் காவல்துறையிடம் சரணடைவதற்கு 3 வார கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. </p><h2>மேகாலயா தேனிலவு கொலை வழக்கு</h2><p>மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த சோனம் ரகுவன்ஷி மற்றும் ராஜா ரகுவன்ஷிக்கு கடந்த ஆண்டு மே.11ம் தேதி திருமணம் நடைப்பெற்றது. </p><p>இதனைத்தொடர்ந்து மே 20ம் தேதி மேகாலயாவின் சோஹ்ராவிற்கு இருவரும் தேனிலவுக்கு சென்றனர்.</p><p>தேனிலவுக்கு சென்றவர்கள் மே.23அன்று தாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியேறினர். </p><p>ஆனால் வீடு திரும்பாததால் உறவினர்கள், இருவரும் காணவில்லை என போலீசில் புகார் அளித்தனர்.</p><p>புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய போலீசார், ஜூன் 2ம் தேதி 200 அடி பள்ளத்தில் இருந்து ராஜா ரகுவன்ஷியை பிணமாக கண்டறிந்தனர்.</p><p>இதனையடுத்து அவரது மனைவி சோனம் என்ன ஆனார் என கேள்வி எழு, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் தொலைபேசி சிக்னலை வைத்து சோனத்தை உ.பி.யின் காசிபூரில் கண்டறிந்தனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரிக்க முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.</p><p>தொடர் விசாரணையில் தனது காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை அமைத்து ராஜா ரகுவன்ஷியை சோனம் போட்டு தள்ளியது தெரியவந்தது. இதனையடுத்து சோனமும், அவளது காதலர் ராஜ் சிங் குஷ்வாஹாவும் கைது செய்யப்பட்டனர். சுமார் 10 மாதங்கள் நீதிமன்றக் காவலுக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 27ம் தேதி சோனத்திற்கு ஷில்லாங் மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.</p><p>சோனத்தின் கைதுக்கான காரணங்களை புலனாய்வு அமைப்பு சரியாகத் தெரிவிக்கத் தவறிவிட்டது என்று, நடைமுறை குறைபாட்டை சுட்டிக்காட்டி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.</p><p>காவல்துறையின் கைது ஆவணங்களில் கொலைக்கான சட்டப்பிரிவான 103(1)-க்கு பதிலாக 403(1) எனத் தட்டச்சுப் பிழையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் மேகாலயா அரசு இந்த ஜாமினை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.</p><p>ஆனால் உயர் நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து, ஜாமினை உறுதி செய்தது. இதை எதிர்த்து மேகாலயா அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்தார்.</p><p>இம்மாத தொடக்கத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜாமினை ரத்து செய்ய மறுத்து விசாரணையை ஒத்திவைத்தது.</p><p>அதனைத்தொடர்ந்து இந்த வாரத் தொடக்கத்தில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது சரணடைவது அல்லது ஜாமினை ரத்து செய்வது என்ற இரண்டு வாய்ப்புகள் சோனத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய விசாரணையில் ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பெல்லட் துப்பாக்கிகள்.. சீருடையற்ற நபர்கள்.. காலாவதியான கண்ணீர் புகைகுண்டுகள் - இளைஞர்கள் மீதான தாக்குதலில் தொடர் சர்ச்சை 
</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-allegations-youth-march-faces-harsh-police-crackdown-and-expired-tear-gas</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-protest-pellet-gun-allegations-youth-march-faces-harsh-police-crackdown-and-expired-tear-gas#comments</comments><guid isPermaLink="false">a5440d6d-6dbf-4200-a803-04ba0d415258</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:31:03 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:31:03.200Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,டெல்லி,சிஜேபி,CJP Protest,CJP,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2guwfaxp/tn-29.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ CJP]]></media:title><media:description type="html"><![CDATA[ CJP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2guwfaxp/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் ஜூலை 20 அன்று கரப்பான்பூச்சி கட்சியின் முன்னெடுப்பில் நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் நடத்திய பேரணியில் போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். </p><p>கண்ணீர் புகைகுண்டுகளை வீசி இளைஞர்களை கலைக்க முயன்றனர். இதன்போது 60 போராட்டக்காரர்கள் காயமுற்றனர். 116 போலீசாரும் காயமுற்றனர்.  70 பேர் கைது செய்யப்பட்டனர். </p><p>காயமுற்ற இளைஞர்களில் ஒரு இளம்பெண் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீரடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>ஜூலை 20 தாக்குதல் குறித்த பல அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகி அமைதியான முறையில் பேரணி நடத்திய இளைஞர்கள் மீதான அரசின் அடக்குமுறை குறித்த விமர்சனங்களை எழுப்பியது. </p><p>பலர் களத்தில், தாங்களும் உங்கள் மகன் - மகள்களின் வயதுடையவர்கள்தான், எங்களை எப்படி உங்களால் மனசாட்சியின்றி தாக்க முடிகிறது என போலீசாரையும் மத்திய படையினரையும் பார்த்து இளைஞர்கள் கேள்வி எழுப்பிய வீடியோக்களும் வைரலாகின. </p><h2>சீருடையற்ற நபர்கள்</h2><p>சீருடையில் இல்லாதவர்களும் கையில் தடிகளுடன் இளைஞர்களை தாக்கியது சர்ச்சையாகி வருகிறது. அவர்கள் மத்திய பாஜக அரசு மற்றும் ஆர்எஸ்எஸ்-ஆல் ஏவிவிடப்பட்ட குண்டர்களா என எதிர்க்கட்சி தரப்பினர் பலர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.</p><p>சீருடை இன்றி வந்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த நபர்களே மாணவிகள் உட்படப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கொடூரமாகத் தாக்கியதாக சிஜேபி தலைவர் அபிஜீத் திப்கேவும் குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2>பெல்லட் துப்பாக்கிகள் </h2><p>ஜூலை 20 போராட்டத்தின்போது இளைஞர்களை Pellet guns எனப்படும் துப்பாக்கிகளை கொண்டு போலீசார் மற்றும் ஆர்ஏஎப் உள்ளிட்ட மத்திய படையினர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>தொடக்கத்தில் டெல்லி காவல்துறை இக்குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்திருந்த போதிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த போராட்டக்காரர்களை உடலிலிருந்து பெல்லட் குண்டுகள் அகற்றப்பட்டதாக மருத்துவ அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p>டெல்லி லேடி ஹார்டிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் படுகாயமடைந்த ஷேக் இர்ஷாத் மன்சூரி என்ற போராட்டக்காரரின் உடலில் இருந்து பெல்லட் குண்டுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதை அமைச்சர் ஜே.பி. நட்டா நேரில் பார்த்ததாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>ஏர் கன் எனப்படும் விசைத் துப்பாக்கி மூலம் ஒருமுறை சுட்டால் நூற்றுக்கணக்கான Lead pellets குண்டுகள் உடலில் பாயும்.</p><p>இதனால் சுடப்பட்ட நபர் உடலில் புள்ளி புள்ளிகளாக காயங்கள் ஏற்படும். இதுபோன்று அன்றைய பேரணியில் காயமுற்றவர்கள் புகைப்படங்கள் பலவும் வெளியாகியுள்ளன.</p><p>பெல்லட் குண்டுகளால் பார்வை மற்றும் கேட்கும் திறனை பறிபோகும் அபாயமும் உண்டு.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/dn0iom5v/tn-28.jpg" /></figure><h2>காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகள்</h2><p>போராட்டக்காரர்களை கலைக்க, கடந்த டிசம்பர் மாதமே காலாவதியான நச்சுத் தன்மை கொண்ட கண்ணீர்ப்புகை குண்டுகளைக் காவல்துறையினர் பயன்படுத்தியுள்ளனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகளின் உடைந்த பாகங்களைச் ஆதாரமாக காட்டிய சிஜேபி அமைப்பினர், மாணவர்களுக்கு கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தவே இத்தகைய குண்டுகள் திட்டமிட்டு வீசப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><h2>ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகள்</h2><p>ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகளைப் பயன்படுத்தியதை போலீஸ் மறுத்த நிலையில், விஷால் தோமர் என்ற காவலர் ஆணி பொறிக்கப்பட்ட லத்தியுடன் நிற்பதை மாணவர்களே மடக்கிப் பிடித்துக் கேள்வி கேட்கும் வீடியோவை சிஜேபி வெளியிட்டது.</p><p>மற்றும் Shock batons எனப்படும் உடலில் மின்சார அதிர்வை ஏற்படுத்தும் லத்திகளும் அன்றை தினம் இளைஞர்கள் மீது பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><h2>பெண்கள் மீது தாக்குதல்</h2><p>ஜூலை 20 சம்பவத்தில் இளம் பெண் போராட்டக்காரர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.</p><p>போராட்டம் நடந்த இடத்திலிருந்து வெளியேற முயன்ற ஒரு பெண்ணின் பின்புறத்தில் காவலர் ஒருவர் லத்தியால் குத்தும் வீடியோ வைரலானது.</p><p>"பெண்களின் உணர்வுப்பூர்வமான உடற்பகுதிகளில் தாக்குதல் நடத்த இவர்களுக்கு எப்படித் தைரியம் வந்தது?" என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் கேள்வி எழுப்பியிருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-delhi-violence-raf-woman-officers-cockroach-remark-sparks-outrage">போராட்டத்தில்12 வயது சிறுமி</a> ஒருவரும் போலீஸ் தாக்குதலில் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  </p><h2>போலி வீடியோக்கள்</h2><p>டெல்லி போராட்டத்தில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுப்பட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது போல சித்தரிக்கும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகின. </p><p>இவை நாட்டின் பிற பகுதிகளில் முன்பு நடந்த வன்முறைகளின் பழைய வீடியோக்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>வெகு மக்களின் கோபத்தை போராட்டக்காரர்கள் மீது திருப்ப, பாஜக செய்யும் தந்திரம் இதுவென, ஜந்தர் மந்தர் போராட்டக்காரர்களும் எதிர்கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.</p><p>மற்றொரு வீடியோவில், காவல்துறையினரே தங்களது சொந்த வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவற்றின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படவில்லை.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் நலனில் என்றுமே சமரசம் கிடையாது!-  நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/national/nainar-nagendran-vows-student-welfare-priority</link><comments>https://www.maalaimalar.com/news/national/nainar-nagendran-vows-student-welfare-priority#comments</comments><guid isPermaLink="false">cdeb689e-bd77-4fc8-a2ed-d1cc965afbff</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:00:38 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:00:38.916Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,pm modi,neet protest,பிரதமர் மோடி,நீட் போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/617z3u66/Nainar-nagendran.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar Nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/617z3u66/Nainar-nagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>நீட் போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><p>இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p><p>கடந்த 20-ந் தேதி இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது.</p><p>போலீஸ் தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்த பிறகும் ஜந்தர் மந்தரில் இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>பிரதமர் மோடி</h2><p>டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டார்.</p><p>அந்த பதவில் அவர்,</p><p>* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.</p><p>* மாணவர்களின் நலனை பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>* தேர்வுத்தாள் கசிவில் தொடர்புடையோருக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2>நயினார் நாகேந்திரன்</h2><p>பிரதமர் மோடியின் இந்த பதிவை குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>மாணவர்கள் நலனில் என்றுமே சமரசம் கிடையாது!</p><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களில் ஒருவர் கூட, சட்டத்தின் பார்வையில் இருந்து தப்ப முடியாது என நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உறுதியளித்துவிட்டார்.</p><p>எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகளைத் தடுக்க, அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் தேர்வுகள் அனைத்தும், முழுக்க முழுக்க “Computer-Based Test” முறையில் நடக்கும் என நமது மாண்புமிகு மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்துள்ளார். </p><p>ஆனால், கரப்பான் பூச்சி கூட்டத்துடன் இணைந்து இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலவரமாக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. தேசப் பாதுகாப்பிற்கு ஆபத்தானது.</p><p>எனவே, தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக, தேசத்தின் இளைஞர் சக்தியை தவறான வழியில் காங்கிரஸ் கட்சி வழிநடத்தக் கூடாது!</p><p>இளைஞர்களுக்கான வளமான எதிர்காலத்தை உருவாக்க, அரசியல் நிலைப்பாடுகளை தாண்டி அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும்!</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று - 32 பேர் பாதிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/rising-covid-19-infections-in-andhra-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/rising-covid-19-infections-in-andhra-pradesh#comments</comments><guid isPermaLink="false">1404eebb-5d42-4839-9a80-89c7c19e4385</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:41:43 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:41:43.079Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,ஆந்திர பிரதேசம்,கொரோனா வைரஸ்,Covid 19</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2fxfe3k7/covid19.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Covid-19]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2fxfe3k7/covid19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆந்திரா மாநிலம் முழுவதும் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</strong></em> </p><h2>கொரோனா தொற்று</h2><p>ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் கடும் காய்ச்சல், சளி, இருமல் தொற்று பாதிப்புக்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தனர். சிகிச்சைக்கு வந்தவர்களின் சளி மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வில் அவர்களுக்கு ஓமிக்கிரான் ஆர்.எப் 5 வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது.</p> <h2>மக்கள் அச்சம்</h2><p>இதேபோல் சிகிச்சைக்கு வந்த 19 பேருக்கு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81">கொரோனா தொற்று</a> இருப்பது தெரிய வந்தது. மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுக்கு கொரோனா வார்டுகளை தயார் செய்ய வேண்டும். முக கவசம், சானிடைசர் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டது. கொரோனா தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்த 4 பேர் இறந்தனர். </p> <h2>கொரோனா பாதிப்பு உயர்வு</h2><p>இந்த நிலையில் விசாகப்பட்டினம் மற்றும் ராஜ முந்திரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் முழுவதும் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>30 வருடங்கள் முன் வினாத்தாள் கசிவை எதிர்த்துப் போராடி போலீஸ் தாக்குதலில் காயமுற்ற தர்மேந்திர பிரதான்.. இன்று அதே சர்ச்சையில்! </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-students-demand-resignation-of-dharmendra-pradhan-over-exam-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-students-demand-resignation-of-dharmendra-pradhan-over-exam-scam#comments</comments><guid isPermaLink="false">36a90374-deaa-4e1f-b80d-486e5a3bd9ae</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:02:52 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:02:52.314Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,question paper leak,வினாத்தாள் கசிவு,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/umtm0rnp/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான்]]></media:title><media:description type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/umtm0rnp/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தொடர் தேர்வு முறைகேடுகளால் நிர்வாக தோல்விக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லியில்<a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-fast-track-court-plan-opposed-by-cockroach-janata-party"> சிஜேபி </a>கட்சி தலைமையில் இளைஞர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். </p><p>கல்வியாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் 25வது நாளை எட்டியுள்ளது. கடந்த ஜூலை 20 பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்ற இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் அடக்குமுறையில் ஈடுபட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சுமார் 60 போராட்டக்காரர்கள் காயமுற்றனர். </p><p>இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில் தர்மேந்திர பிரதானே ஒரு காலத்தில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடி காவல்துறை தாக்குதலில் காயமுற்றவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  </p> <h2>போராட்டம்</h2><p>1990களில் பாஜகவின் மாணவர் அமைப்பான பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் மாணவர் தலைவராக தர்மேந்திர பிரதான் இருந்தார்.</p><p>1994 முதல் 1997 வரை அவர் இரண்டு முறை ஏபிவிபி அமைப்பின் தேசியச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.</p><p>1997 இல் ஒடிசாவில் ஜானகி வல்லப் பட்நாயக் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது.</p><p>அங்குள்ள உயர்கல்வித் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. அதை எதிர்த்து மாநில தலைமைச் செயலகம் மற்றும் முதலமைச்சர் இல்லம் அருகே நடைபெற்ற பிரம்மாண்ட மாணவர் போராட்டத்தில் தர்மேந்திர பிரதான் முன்னின்று பங்கேற்றார்.</p><p>புவனேஸ்வரில் உள்ள RMD கல்லூரியின் தற்போதைய முதல்வரும், அன்று தர்மேந்திர பிரதானின் ஜூனியராகப் போராட்டத்தில் பங்கேற்றவருமான ராவ் என்பவர் அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.</p> <p>அவர் கூறுகையில், "அன்று ஒடிசா அரசுக்கு எதிராகப் போராட நாங்கள் தலைமைச் செயலகத்திற்குச் சென்றோம். எங்களுடன் சுமார் 1,500 மாணவர்கள் திரண்டனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய எங்கள் மீது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தினார்கள். அந்தத் தடியடியில் தர்மேந்திர பிரதானும் காயமடைந்தார்." என்று தெரிவித்தார்.</p><p>அன்று வினாத்தாள் கசிவை எதிர்த்துத் தடியடி வாங்கிய மாணவர் தலைவரான தர்மேந்திர பிரதான், இன்று நாட்டின் கல்வி அமைச்சராகப் பொறுப்பில் இருக்கும் போது அதே வினாத்தாள் கசிவுப் புகாரில் அவருக்கு எதிராகவே போராட்டம் நடைபெறுவது நகைமுரணமாக பார்க்கப்படுகிறது.</p><p>ஒரு காலத்தில் தான் எதற்காகப் போராடினாரோ, இன்று அதே விவகாரத்தில் பொறுப்பேற்காமல் அவர் இருந்து வருவதும் பலராலும் ஒப்பப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடியின் அறிவிப்பை நிராகரித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-fast-track-court-plan-opposed-by-cockroach-janata-party</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-fast-track-court-plan-opposed-by-cockroach-janata-party#comments</comments><guid isPermaLink="false">8aea37bb-d966-4a55-860f-2b4b12cea2f7</guid><pubDate>Thu, 23 Jul 2026 05:51:02 +0000</pubDate><atom:updated>2026-07-23T05:51:02.486Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,Cockroach Janata Party,சிஜேபி,CJP,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/4idzxnr8/CJP.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/4idzxnr8/CJP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வினாத்தாள் கசிவு விவகாரத்தை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிராகரித்துள்ளது.</p><h2>போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><p>இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p><p>கடந்த 20-ந் தேதி இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது.</p><p>போலீஸ் தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்த பிறகும் ஜந்தர் மந்தரில் இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>பிரதமர் மோடி</h2><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF" rel="nofollow">பிரதமர் மோடி</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.</p><p>* மாணவர்களின் நலனை பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>* தேர்வுத்தாள் கசிவில் தொடர்புடையோருக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டிப்பாக பதவி விலக வேண்டும் என பிரதமரின் எக்ஸ் தள பதிவை குறிப்பிட்டு காக்ரோஜ் ஜனதா தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஐதராபாத்தில் தலை ஒட்டி பிறந்த சகோதரிகள் வங்கி தேர்வு எழுதுவதில் சிக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/national/hyderabad-conjoined-twins-face-hurdles-in-taking-bank-exam</link><comments>https://www.maalaimalar.com/news/national/hyderabad-conjoined-twins-face-hurdles-in-taking-bank-exam#comments</comments><guid isPermaLink="false">094e778d-7ed3-4624-9528-8cc00c1baa6b</guid><pubDate>Thu, 23 Jul 2026 05:21:36 +0000</pubDate><atom:updated>2026-07-23T05:21:36.597Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SBI,twins,பாரத ஸ்டேட் வங்கி,இரட்டையர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/9kv1r9q3/twins.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ twins veena and vani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/9kv1r9q3/twins.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>பாரத ஸ்டேட் வங்கியின் பயிற்சி அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பித்துள்ள தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு ஒரே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அறைகள் வேறு ஒதுக்கப்பட்டுள்ளன.</em></p><p>தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் வீணா, வாணி. தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். இவர்கள் அமீர்பேட்டை அருகே உள்ள சிசு விஹார் என்ற அரசு இல்லத்தில் வசித்து வருகின்றனர். </p><p>அவர்கள் கடந்த ஆண்டு பி.காம் வணிகப் பகுப்பாய்வுப் படிப்பை சிறப்புத் தகுதியுடன் முடித்தனர். </p> <p>தற்போது பாரத ஸ்டேட் வங்கியின் பயிற்சி அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 1-ந்தேதி நடைபெற உள்ளது. அவர்கள் தங்களது தேர்வு நுழைவுச் சீட்டுகளையும் பெற்றுள்ளனர். </p><p>அவர்கள் அப்துல்லாபூர்மெட்டில் உள்ள டி.சி.எஸ் அயான் டிஜிட்டல் மையத்தில் தேர்வு எழுத வேண்டும். அவர்களுக்கு ஒரே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அறைகள் வெவ்வேறாக ஒதுக்கப்பட்டுள்ளன. </p><p>தலை ஒட்டி உள்ளதால் அவர்களால் தனித்தனியாக அமர்ந்து தேர்வு எழுத முடியாது. எனவே ஒரே அறையில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>இளைஞர்களின் எதிர்காலத்தை மிக அதிகமாக சீர்குலைத்தவர் பிரதமர் மோடி..!- ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-slams-pm-modi-for-ruining-youths-future</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-slams-pm-modi-for-ruining-youths-future#comments</comments><guid isPermaLink="false">2e1175c7-c29a-4f0e-bc87-c2a06da1761a</guid><pubDate>Thu, 23 Jul 2026 05:21:34 +0000</pubDate><atom:updated>2026-07-23T05:21:34.669Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,சிஜேபி,CJP</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xu4astp4/RG.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi - Rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xu4astp4/RG.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இளைஞர்களின் எதிர்காலத்தை மிக அதிகமாக சீர்குலைத்தவர் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.</p><p>இளைஞர் எதிர்காலத்தை சீரழிக்க முயன்றோர் தப்ப முடியாது என பிரதமர் மோடி பதிவிட்ட நிலையில் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.</p><p>கல்வி முறையை அழிப்பவர்களை பாதுகாத்து அவர்களை ஊக்குவித்தவர் பிரதமர் மோடி.</p><p>மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p><p>இளைஞர் எதிர்காலத்தை சீர்குலைத்ததற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><h2>போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p><p>கடந்த 20-ந் தேதி இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. </p><p>இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது.</p><p>போலீஸ் தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்த பிறகும் ஜந்தர் மந்தரில் இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>ராகுல் காந்தி பதிலடி</h2><p>இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>இளைஞர்களின் எதிர்காலத்தை மிகவும் சீர்குலைத்தவர் நீங்கள்தான்.</p><p>எங்கள் கல்வி முறையை முழுமையாகக் கைப்பற்றி அழிப்பதை நீங்கள் அனுமதித்து ஊக்குவித்தீர்கள் - மேலும் அதற்குக் காரணமான ஒவ்வொருவரையும் பாதுகாத்தீர்கள்.</p><p><strong>மாணவர்களின் கோரிக்கைகள் தெளிவாக உள்ளன:</strong></p><p>1. தர்மேந்திர பிரதானைப் பதவியிலிருந்து நீக்குங்கள்.</p><p>2. மாணவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்.</p><p>3. அவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பிரதமர் மோடி பதிவு</h2><p>முன்னதாக, பிரதமர் மோடி போராட்டம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.</p><p>* மாணவர்களின் நலனை பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>* தேர்வுத்தாள் கசிவில் தொடர்புடையோருக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் ராஜினாமா செய்வதால் அரசு பலவீனமடையாது - பிரதமர் மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம்   
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-anna-hazare-urges-pm-modi-seeks-ministerial-accountability</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-anna-hazare-urges-pm-modi-seeks-ministerial-accountability#comments</comments><guid isPermaLink="false">b2c3a096-9d34-4cf5-9592-7ebe10b37f4f</guid><pubDate>Thu, 23 Jul 2026 04:49:51 +0000</pubDate><atom:updated>2026-07-23T04:49:51.940Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anna Hazare,pm modi,neet protest,CJP Protest,சிஜேபி போராட்டம்,அண்ணா ஹசாரே,NEET Protest Updates</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/0xgh8ksi/Modi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி, அண்ணா ஹசாரே ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி, அண்ணா ஹசாரே ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/0xgh8ksi/Modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு   வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாக டெல்லியில் சிஜேபி தலைமையில் இளைஞர்களின் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-delhi-violence-raf-woman-officers-cockroach-remark-sparks-outrage">போராட்டம்</a> தீவிரமடைந்துள்ளது. </p><p>அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. </p><p>கடந்த ஜூலை 20 அன்று பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது காவல்துறை மற்றும் மத்திய படையினர் நடத்திய தாக்குதல் கண்டனத்தை குவித்து வருகிறது. </p><p>இந்நிலையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். </p><p>அன்னா ஹசாரே தனது கடிதத்தில், </p><h2>அமைச்சர் ராஜினாமா செய்தால் அரசு பலவீனமடையாது: </h2><p>வழக்கமாக ஏதேனும் ஊழல் அல்லது முறைகேடு நடந்தால் கீழ்மட்ட அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், ஒரு துறையின் ஒட்டுமொத்தத் தோல்விக்கு அதன் உயர் தலைமையே இறுதிப் பொறுப்பேற்க வேண்டும்.</p><p>தவறு நடக்கும் போது சம்பந்தப்பட்ட அமைச்சர் பொறுப்பேற்று ராஜினாமா செய்தால் அரசு பலவீனமடையாது.  </p><p>மாறாக, நிர்வாகத்தில் பொறுப்புக்கூறல் அதிகரிக்கும். இது மற்ற அமைச்சர்களுக்கும் ஒரு தெளிவான எச்சரிக்கையாக அமைந்து, அரசின் செயல்பாட்டை மேலும் பொறுப்புமிக்கதாக மாற்றும்.</p> <h2>22 மாணவர்கள்  தற்கொலை </h2><p>2024இல் நீட் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தன. அதே நிலை இந்த ஆண்டும் தொடர்வதால் சுமார் 22 லட்சம் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>தேர்வுகள் ரத்து செய்யப்படுவது மற்றும் மறுதேர்வு குறித்த நிச்சயமற்ற தன்மையால் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.</p><p>ஊடக அறிக்கைகளின்படி, இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>அரசு வேலைவாய்ப்புகளில் ஏற்படும் தாமதம், வினாத்தாள் கசிவுகள் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் நாட்டின் இளைஞர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.</p><p>இதனை வெறும் சட்டஒழுங்கு பிரச்சனையாக அரசு அணுகக் கூடாது.</p> <h2>சோனம் வாங்சுக்</h2><p>டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் மீது காவல்துறை நடத்திய பலப்பிரயோகம், அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய விதம் வேதனையளிக்கிறது.</p><p>அடக்குமுறையைக் கையாளாமல், அரசின் பிரதிநிதிகளை அனுப்பி அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும்.</p><p>ஜனநாயக மற்றும் காந்திய வழியில் போராடும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளைப் பொறுமையுடன் கேட்டு, பரஸ்பர நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும்" என பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>போராடும் இளைஞர்களை கிண்டலடித்த அதிரடிப்படை பெண் அதிகாரிக்கு குவியும் கண்டனம்.. பெண்கள் மீதான தாக்குதலை எப்படி நியாயப்படுத்தலாம்? என கேள்வி </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-delhi-violence-raf-woman-officers-cockroach-remark-sparks-outrage</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-delhi-violence-raf-woman-officers-cockroach-remark-sparks-outrage#comments</comments><guid isPermaLink="false">cb2d2d5c-21f0-4019-a3ad-c2927eec25a3</guid><pubDate>Thu, 23 Jul 2026 04:28:41 +0000</pubDate><atom:updated>2026-07-23T04:28:41.133Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CJP Protest,அபிஜித் தீப்கே,Abhijit Dipke,சிஜேபி போராட்டம்,ஆர்ஏஎப்,RAF</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/eokfhyyz/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இடது - சோனியா செஹ்ராவத்]]></media:title><media:description type="html"><![CDATA[ இடது - சோனியா செஹ்ராவத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/eokfhyyz/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கட்சி தலைமையில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஒரு மாதத்தை கடந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. </p><p>கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற இளைஞர்கள் மீது டெல்லி போலீசார், ரேபிட் ஆக்சன் போர்ஸ் (ஆர்ஏஎப்) அதிரடிப் படை  உள்ளிட்ட மத்திய படையினர் லத்திகளால் <a href="https://www.maalaimalar.com/amp/story/news/national/neet-protest-clashes-tear-gas-injuries-and-internet-suspension-in-central-delhi">சரமாரியாக தாக்குதல் </a>நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். பெல்லட் துப்பாக்கியும் பய்னபடுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. </p><p>அமைதியான முறையில் அணிவகுத்து வந்த இளைஞர்கள் மீதான இந்த கோர தாக்குதல்  பல தரப்பில் இருந்தும் கண்டனங்களை குவித்து வருகிறது. </p><p>இதனிடையே இந்த தாக்குதலில் அங்கம் வகித்த ஆர்ஏஎப்  அதிரடிப்படை பெண் அதிகாரி சோனியா செஹ்ராவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட் பதிவு பெரும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>"தங்களைத்தானே திருத்திக்கொள்ள முடியாது; அவர்கள் நாட்டைத் திருத்த வருகிறார்களாம்!"  என ஒரு இறந்த கரப்பான்பூச்சியின் படத்துடன் அவர் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.</p><figure><img alt="சோனியா செஹ்ராவத் பதிவு " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/u6ulww70/tn-22.jpg" /><figcaption>சோனியா செஹ்ராவத் பதிவு </figcaption></figure><h2>கண்டனம்</h2><p>போராட்டக்காரர்களை இழிவுபடுத்துவதாகவும், காவல்துறையின் கொடூரத் தாக்குதலை நியாயப்படுத்துவதாகவும் இது அமைந்துள்ளதாக சிஜேபி குற்றம் சாட்டியுள்ளது.</p><p>"அவர் எங்களைக் கரப்பான் பூச்சிகளாகப் பார்க்கிறார்; ஆனால் கரப்பான் பூச்சிகள் ஒருபோதும் அழிவதில்லை" என்று எக்ஸ் தளத்தில் அவ்வமைப்பு பதிவிட்டுள்ளது.</p><p>திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா இந்த பதவியை பகிர்ந்து, "எங்கள் குழந்தைகளைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைக்கும் இந்த அதிகாரி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.</p> <h2>தீப்கே கேள்வி</h2><p>ஜூலை 20 பேரணியின் போது, ஒரு வாகனத்தின் மீது நின்ற சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே, அதிகாரி சோனியா செஹ்ராவத்திடம்,</p><p>"ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, பெண் போராட்டக்காரர்கள் மீது ஆண்கள் நடத்தும் கொடூரத் தாக்குதலை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? ஒரு பெண் போராட்டக்காரரின் நெஞ்சில் தாக்கியதாகக் கூறுகிறாரே, இது நியாயமா?" என்று கேள்வி எழுப்பினார்.</p><p>இருப்பினும், மற்ற அதிகாரிகளைப் போலல்லாமல், சோனியா செஹ்ராவத் தனது கருத்துகளை மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் கேட்டதாக அபிஜீத் திப்கே பாராட்டு தெரிவித்தார்.</p> <h2>சோனியா செஹ்ராவத் மறுப்பு</h2><p>தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளித்த சோனியா செஹ்ராவத்,</p><p>"எனது கட்டுப்பாட்டில் உள்ள வீரர்கள் யாருமே வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ பெண் போராட்டக்காரர்களைத் தாக்கவில்லை. அவர்கள் பெண்களைப் பாதுகாக்கும் வகையில் பயிற்சி பெற்றவர்கள்.</p><p>கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, இடைவெளி விட்டு நிற்குமாறு நான் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் கூட்டத்திற்குப் பின்னால் இருந்தவர்கள் தள்ளியதால் மூன்று பெண்கள் கீழே விழுந்தனர். நெரிசலில் தான் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டதே தவிர, எனது வீரர்கள் அவர்களைத் தாக்கவில்லை."</p><p>போராட்டக்காரர்கள் கற்களையும் காலணிகளையும் வீசியதில் நானும் எனது வீரர்களும் காயமடைந்தோம். எனது தலைக்கவசத்தைக் கழற்றி வீசினர்; ஒரு வீரரைக் கூட்டத்திற்குள் இழுத்துச் சென்றனர்.</p><p>அத்தகைய சூழலில் தற்காப்புக்காகவே நாங்கள் செயல்பட வேண்டியிருந்தது. 12 வயது சிறுமியைக் கூடப் பாதுகாப்பற்ற முறையில் போராட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர்; அந்தச் சிறுமியை மீட்பதே எங்களுக்கு முதன்மைப் பணியாக இருந்தது" என்றார்.</p> <h2>யார் இந்த சோனியா செஹ்ராவத்?</h2><p>சிஆர்பிஎப் - மத்திய காவல் படையின் கீழ் இயங்கும் ஆர்ஏஎப் திரடிப் படையில் உதவி கமாண்டன்ட்டாகப் பணியாற்றும் சோனியா செஹ்ராவத், சமூக வலைத்தளங்களில் மிகவும் புகழ்பெற்றவர்.</p><p>இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6.21 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள இவர், தனது உடற்பயிற்சி வீடியோக்கள், நடன ரீல்ஸ்கள் மற்றும் ராணுவப் பயிற்சி தொடர்பான பதிவுகளைத் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>வினாத்தாள் கசிவு விவகாரம்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் - பிரதமர் மோடி
</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-fast-track-courts-to-ensure-swift-and-stringent-punishment-for-those-involved-in-paper-leaks</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-fast-track-courts-to-ensure-swift-and-stringent-punishment-for-those-involved-in-paper-leaks#comments</comments><guid isPermaLink="false">a2e2949b-1cd7-4cb5-8c03-f092023c46a4</guid><pubDate>Thu, 23 Jul 2026 04:08:50 +0000</pubDate><atom:updated>2026-07-23T04:08:50.116Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Neet exam,pm modi,பிரதமர் மோடி,நீட் வினாத்தாள் கசிவு,CJP Protest,விரைவு நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/9dkmu47a/modi1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/9dkmu47a/modi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.</strong></em> </p><h2>போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p> <p>கடந்த 20-ந் தேதி இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-clashes-tear-gas-injuries-and-internet-suspension-in-central-delhi">போராட்டம்</a> பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது. போலீஸ் தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்த பிறகும் ஜந்தர் மந்தரில் இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p> <p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.</p><p>* மாணவர்களின் நலனை பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>* தேர்வுத்தாள் கசிவில் தொடர்புடையோருக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.</p> <p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜம்மு காஷ்மீர்: பரபரப்பான சந்தையில் காவலரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதி - அதிர்ச்சி  சிசிடிவி காட்சி </title><link>https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-terror-attack-head-constable-shot-dead-in-anantnag-lal-chowk-cctv-footage-surfaces</link><comments>https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-terror-attack-head-constable-shot-dead-in-anantnag-lal-chowk-cctv-footage-surfaces#comments</comments><guid isPermaLink="false">a5de8cab-8683-4f13-af19-4c415c75d78c</guid><pubDate>Thu, 23 Jul 2026 02:40:50 +0000</pubDate><atom:updated>2026-07-23T02:40:50.846Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜம்மு காஷ்மீர்,Terrorist attack,பயங்கரவாத தாக்குதல்,CCTV,சிசிடிவி,Jammu  Kashmir</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/84i1a46s/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிசிடிவி காட்சி ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிசிடிவி காட்சி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/84i1a46s/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் லால் சௌக் என்ற பரபரப்பான சந்தையில் பணியில் இருந்த காவலர் பயங்கரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்டதன சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.  </p><h2> சம்பவம் </h2><p>நேற்று மதியம் 12:30 மணியளவில் அனந்த்நாக் லால் சௌக் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு  நடந்து வந்த பயங்கரவாதி ஒருவன், காவலரின் மிக அருகில் வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு, சந்தைக் கூட்டத்திற்குள் புகுந்து தப்பி ஓடினான். </p><p>தாக்குதலில் படுகாயமடைந்த ஆஷிக் ஹுசைன் குரேஷி (35) என்ற ஹெட் கான்ஸ்டபிள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  </p> <h2>பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு</h2><p>இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக <a href="https://www.maalaimalar.com/news/world/indus-waters-treaty-india-rules-out-return-to-status-quo-links-future-to-pakistans-anti-terror-action">பாகிஸ்தானை </a>தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. </p><h2>தேடுதல் வேட்டை</h2><p>தாக்குதலைத் தொடர்ந்து அனந்த்நாக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பாதுகாப்புப் படையினர் உடனடியாகத் தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.</p><p>தப்பிச் சென்ற பயங்கரவாதியைப் பிடிக்க அப்பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு, பிரதான சாலைகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>தாக்குதலின் கொடூரமான சிசிடிவி காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என்றும், தடையை மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது.</p><p>ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதன்பின்னர் வெளிப்படையாக நடத்தப்பட்ட முதல் தாக்குதலும் அதனால் நேரும் உயிரிழப்பும் இதுவாகும். </p><h2>உமர் அப்துல்லா கண்டனம்</h2><p>அமர்நாத் யாத்திரை நடைபெற்று வரும் சூழலில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p>"இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நாம் பயந்துவிட மாட்டோம். மனிதநேயத்திற்கு எதிரான இத்தகைய செயல்களுக்குப் பலமாகப் பதிலடி கொடுக்கப்படும்" என்று உமர் அப்துல்லா சூளுரைத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் காவல்துறை - போராட்டக்காரர்கள்  இடையே நள்ளிரவில் மீண்டும் மோதல் - கண்ணீர் புகைகுண்டு வீச்சு
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-clashes-tear-gas-injuries-and-internet-suspension-in-central-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-clashes-tear-gas-injuries-and-internet-suspension-in-central-delhi#comments</comments><guid isPermaLink="false">bcb046ac-49ef-4301-a3c6-2a22fd7a777d</guid><pubDate>Thu, 23 Jul 2026 01:17:40 +0000</pubDate><atom:updated>2026-07-23T01:17:40.384Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மோதல்,clash,delhi,டெல்லி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/t7i7qy6o/cjp.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ delhi protest]]></media:title><media:description type="html"><![CDATA[ delhi protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/t7i7qy6o/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் காவலர்கள், போராட்டக்காரர்கள் இடையே நேற்று நள்ளிரவு மீண்டும் வெடிதுள்ளது. </p><h2>போராட்டம் </h2><p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலமையில் கடந்த ஜுன் 20 முதல் இளைங்கர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன்ர். </p><p>இதில் கல்வியாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/wangchuk-says-will-end-fast-if-centre-promises-no-action-against-protesters">சோனம் வாங்சுக் </a>கடந்த 25 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த சனிக்கிழமை அவர் டெல்லி போலீசாரால் வலுகட்டாயமாக தூக்கிச் செல்லபட்டு மருத்துவமனையில் அனுமதிகபட்டார். </p><p>இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான கடந்த ஜுலை 20, திங்கள்கிழமை, நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் நடத்திய பேரணியை கலைக்க போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தினர். </p><p>இதில் போராட்டகாரர்கள் 60 பேர் காயமடைந்தனர். குறிப்பாக இளம் பெண் ஒருவர் வென்டிலேட்டர் சிகிச்சை பெறும் சூழல் ஏற்பட்டது. அவர் உடல்நிலை தற்போது சீரடைந்து வருவதாக மருதுவர்கள் தெரிவிதுள்ளனர்.  </p> <h2>புதிய தாக்குதல்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/ready-to-hold-a-debate-in-parliament-on-the-neet-issue-jp-nadda">சிஜேபி போராட்டம்</a> ஜந்தர் மந்தரில் தொடர்ந்து வரும் சூழலில் அருகில் உள்ள சன்சத் மார்க்மற்றும் கனாட் பிளேஸ் பகுதிகளில் நேற்று இரவு போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.</p><p>சன்சத் மார்க்கில் உள்ள பார்க் ஹோட்டல் அருகே திரண்ட போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.</p><p>கோபமடைந்த போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதுடன், கனாட் பிளேஸ் பிரதான சாலை வரை அவர்களைத் துரத்திச் சென்றனர்.</p><p>இந்த வன்முறையில் 2 உதவி ஆணையர்கள், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் என மொத்தம் 5 காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவிதுள்ளது.</p> <h2>இணைய சேவை துண்டிப்பு</h2><p>பதற்றத்தைத் தணிக்க மத்திய டெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.</p><p>அரசின் உத்தரவுப்படி, ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள 1.5 கிலோமீட்டர் சுற்றளவில் நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணி முதல் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி வரை இணையச் சேவைகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டன.</p><p>நாடளுமன்றம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே மத்திய படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.</p> <h2>சிஜேபி வேண்டுகோள்</h2><p>போராட்டம் வன்முறையாக மாறுவதைத் தடுக்க, சிஜேபி அமைப்பின் தன்னார்வலர்கள் காவல்துறையின் பேருந்துகளின் மீது நின்று ஒலிபெருக்கி மூலம் போராட்டக்காரர்களிடம் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.</p><p>மேலும், போராட்டம் நடக்கும் பாதைகளில் கிடந்த கற்களைப் போராட்டக்காரர்கள் எடுத்து வீசாதவாறு, சிஜேபி தொண்டர்களே சாலைகளில் கிடந்த கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.</p> <h2>சோனம் வாங்சுக் வீடியோ</h2><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளசோனம் வாங்சுக் வெளியிட்ட புதிய வீடியோவில், "போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது அரசு எந்தவித சட்டப்பூர்வ அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்காது என உறுதியளித்தால், நான் எனது உண்ணாவிரதத்தை உடனடியாக முடித்துக் கொள்ளத் தயார்" எனக் கூறியுள்ளார்.</p> <h2>நடிகை ஆயிஷா கான் கைது</h2><p>இதனிடயே இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மும்பையில் போராட்டம் நடைபெற்ற இடதிற்கு சென்று குரல் எழுப்பிய நடிகை ஆயிஷா கானை மும்பை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிச் சென்று காவலில் எடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளம்: ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு, மொத்தம் 6.53 லட்சம் பேர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-flood-10-people-die-in-one-day-over-653-lakh-affected</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-flood-10-people-die-in-one-day-over-653-lakh-affected#comments</comments><guid isPermaLink="false">c8886d39-def0-4b68-9054-aed560eb5004</guid><pubDate>Thu, 23 Jul 2026 00:29:47 +0000</pubDate><atom:updated>2026-07-23T00:29:47.398Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death toll,Assam Flood,அசாம் வெள்ளம்</media:keywords><media:content height="2700" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/i6aoxf3k/PTI07222026000337B.jpg" width="4800"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/i6aoxf3k/PTI07222026000337B.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தின் 11 மாவட்டங்களை <a href="https://www.maalaimalar.com/topic/assam-floods">வெள்ளம் </a>கடுமையாக பாதித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்ததுடன், 6.53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு மேலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், நிலைமை சீரடைவதற்கான அறிகுறிகள் குறைந்துள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/assam">அசாம் </a>மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) தகவலின்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து, இந்த ஆண்டு வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 41-ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக குவஹாத்தியில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.</p><p>சிவசாகர் மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்களில் தலா மூன்று பேரும், சாரைடியோவில் இருவர், கார்பி ஆங்லாங் மற்றும் தேமாஜியில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. </p><h2>ஆரஞ்சு எச்சரிக்கை:</h2><p>இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று கனமழைக்கான 'ஆரஞ்சு எச்சரிக்கை' விடுத்து, மக்களை பேரிடருக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியது. மேலும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.</p><p>சிவசாகர், சாரைடியோ, தேமாஜி, திப்ருகர், கோலாகாட், ஹோஜாய், ஜோர்ஹாட், காம்ரூப், காம்ரூப் பெருநகரம், கார்பி ஆங்லாங் மற்றும் நாகான் ஆகிய மாவட்டங்களில் 6,53,100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தினசரி வெள்ள அறிக்கை தெரிவிக்கிறது.</p><h2>மொத்த பாதிப்பு:</h2><p>சிவசாகர் மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது; அங்கு சுமார் நான்கு லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாரைடியோவில் சுமார் 1.11 லட்சம் பேரும், ஜோர்ஹாட்டில் 97,000-க்கும் மேற்பட்டோரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>செவ்வாய்க்கிழமை வரை, 12 மாவட்டங்களில் சுமார் 5.65 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்.</p><p>அறிக்கையின்படி, அசாம் முழுவதும் 939 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன; 24,897.27 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. மாநில நிர்வாகம் 10 மாவட்டங்களில் 487 தங்குமிடங்கள் மற்றும் நிவாரண விநியோக மையங்களை இயக்கி வருவதாகவும், இதன் மூலம் 24,418 பேருக்குப் பராமரிப்பு மற்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p>ராணுவம், NDRF, SDRF, தீயணைப்பு மற்றும் அவசரச் சேவைப் பிரிவு, காவல்துறை மற்றும் சிவில் அமைப்புகள் ஆகியவை சாரைடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், கார்பி ஆங்லாங் மற்றும் சிவசாகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8,500-க்கும் மேற்பட்ட மக்களை மீட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என அரசு உறுதியளித்தால் உண்ணாவிரதத்தை முடிக்கிறேன் - வாங்சுக்</title><link>https://www.maalaimalar.com/news/national/wangchuk-says-will-end-fast-if-centre-promises-no-action-against-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/wangchuk-says-will-end-fast-if-centre-promises-no-action-against-protesters#comments</comments><guid isPermaLink="false">c114e3c0-b75b-46e9-b9d7-3d2ae2bf0487</guid><pubDate>Wed, 22 Jul 2026 22:25:18 +0000</pubDate><atom:updated>2026-07-22T22:25:18.125Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போராட்டம்,CJP Protest,Wangchuk,வாங்சுக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/nf0t4lju/wangchuk.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/nf0t4lju/wangchuk.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது எந்தவிதமான வன்முறையோ அல்லது காவல்துறையின் பலப்பிரயோகமோ மேற்கொள்ளப்படாது என்றும், அவர்கள் மீது எந்தவிதமான வழக்குகளோ (FIR) அல்லது தண்டனை நடவடிக்கைகளோ எடுக்கப்படாது என்றும் மத்திய அரசு உறுதியளித்தால், தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தெரிவித்தார். </p><p>உண்ணாவிரதத்தின் போது சுமார் 11 கிலோ எடை குறைந்திருந்தாலும், தான் மீண்டும் தனது பணிகளை தொடர விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். </p><p>குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட காணொளி செய்தியில், உடல்நலிவுற்ற நிலையில் காணப்பட்ட வாங்சுக் கூறும் போது: "நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். இது எனது உண்ணாவிரதத்தின் 25-வது நாள். நான் சுமார் 11 கிலோ எடையை இழந்துவிட்டேன்; தசை வலிமையும் குறைந்துள்ளது. ஆனால் நான் நலமாகவே இருக்கிறேன்." </p><h2>அரசுக்கு வலியுறுத்தல்:</h2><p>"நான் எனது பணிகளை தொடங்க விரும்புகிறேன்; ஆனால் மாணவர்கள் மீது மீண்டும் வன்முறையை பிரயோகிக்கவோ, அவர்கள் மீது குற்றச்சாட்டுகளையோ அல்லது வழக்குகளையோ (FIR) பதிவு செய்யவோ வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். அதற்கான உறுதிமொழி எனக்கு தேவை. அந்த உறுதிமொழி கிடைத்தால், நான் இன்றே எனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வேன். இல்லையெனில், அதை தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படும்," என்று அவர் கூறினார்.</p><p>'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) ஏற்பாடு செய்திருந்த 'சலோ சன்சத்' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தின் போது, ​​திங்களன்று போராட்டக்காரர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து, தனது உண்ணாவிரதத்தைத் தொடர முடிவு செய்துள்ளதாக வாங்சுக் தெரிவித்தார்.</p><p><strong>மாணவர்களுக்கு பாராட்டு:</strong></p><p>இது குறித்து பேசிய அவர், "அந்த தாக்குதல் மிகவும் கொடூரமாக இருந்ததால், நான் உண்ணாவிரதத்தைத் தொடர முடிவு செய்தேன். ஆத்திரமூட்டப்பட்ட நிலையிலும், கல்வீச்சு நடத்துவதற்காகவே சிலர் வரவழைக்கப்பட்டிருந்த போதிலும், காவல்துறையின் தடியடிக்கு ஆளானாலும் பதிலுக்கு தாக்குதல் நடத்தாத அனைத்து மாணவர்களையும் நான் பாராட்ட விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.</p><p>மத்திய அமைச்சர்கள் மற்றும் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்படப் பல அரசியல் தலைவர்கள், தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு தன்னை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><h2>அமைச்சர்களுக்கு கடிதம்:</h2><p>முன்னதாக, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் வாங்சுக் குறிப்பிட்டதாவது: செவ்வாய்க்கிழமை இரவு மருத்துவமனையில் தன்னைச் சந்தித்த அமைச்சர்கள், நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்குவது குறித்தும், தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்கும் வகையில் நாடாளுமன்றத்தில் அர்த்தமுள்ள விவாதத்தை நடத்துவது (மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது குறித்தும் பரிசீலிப்பது உட்பட) குறித்தும் மத்திய அரசு சாதகமாகப் பரிசீலிக்கும் என்று உறுதியளித்தனர்.</p><p>மேலும், தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதற்கான உறுதியையும் அவர் கோரினார்.</p><p>"நியாயமான மற்றும் பொறுப்புணர்வுள்ள கல்வி முறைக்காக தங்கள் குரலை எழுப்பியது மட்டுமே அவர்கள் செய்த 'குற்றம்' ஆகும்," என்று அமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில் வாங்சுக் குறிப்பிட்டார். அந்த கடிதத்தை 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்துகொண்ட அவர், "எனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வது தொடர்பாக அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்... அரசிடமிருந்து உறுதிமொழி கிடைத்ததும், அமைதியான முறையில் போராடி வரும் மாணவர்களிடமும், தற்போதைக்கு இந்தப் போராட்டத்தை நிறுத்திவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு நான் கேட்டுக்கொள்வேன்," என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி: சரத் பவார்</title><link>https://www.maalaimalar.com/news/national/sharad-pawar-supriya-sule-meet-pm-modi-discuss-neet-paper-leak</link><comments>https://www.maalaimalar.com/news/national/sharad-pawar-supriya-sule-meet-pm-modi-discuss-neet-paper-leak#comments</comments><guid isPermaLink="false">e2de3421-4cc8-4da3-a954-7a071f4d491a</guid><pubDate>Wed, 22 Jul 2026 20:22:48 +0000</pubDate><atom:updated>2026-07-22T20:22:48.024Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supriya Sule,Sharad Pawar,சரத் பவார்,pm modi,பிரதமர் மோடி,சுப்ரியா சுலே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/4rtvsf7x/pmo.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sharad Pawar, Supriya Sule with PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/4rtvsf7x/pmo.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப் பிறகு, நீட் தேர்வுத்தாள் கசிவு தொடர்பான மாணவர்களின் கோரிக்கைகள், விவசாயிகளின் பிரச்சினைகள், நீர் மேலாண்மை மற்றும் கல்வி துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமருடன் தானும் சுலேவும் விவாதித்ததாக சரத் பவார் கூறினார்.</p><p>பிரதமர் அலுவலகத்தின் எக்ஸ் தள பதிவில், "மாநிலங்களவை எம்.பி. திரு சரத் பவார், லோக்சபா எம்.பி. திருமதி. சுப்ரியா சுலே அவர்களும் இன்று காலை நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்தனர்," என குறிப்பிடப்பட்டு இருந்தது. </p><h2>நடவடிக்கை உறுதி:</h2><p>"இந்த அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நேர்மறையான மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாண்புமிகு பிரதமர் உறுதியளித்தார்," என்று சரத் பவார் எக்ஸ் தளத்தில் மராத்தி மொழியில் பதிவிட்டுள்ளார்.</p><p>சரத் ​​பவார் தலைமையிலான ஒரு பிரிவும், மறைந்த அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் தலைமையிலான மற்றொரு பிரிவும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவுகளும் ஒரே அமைப்பாக ஒன்றிணைக்கப்பட்டு, அந்த ஒருங்கிணைந்த கட்சியானது பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கும் என்று ஊகங்கள் பரவி வருகின்றன.</p><h2>அஞ்சலி:</h2><p>சுனேத்ரா பவார் தலைமையிலான என்.சி.பி. பிரிவு ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. மேலும், சுனேத்ரா பவார் மகாராஷ்டிராவின் என்.டி.ஏ. அரசாங்கத்தில் உள்ள துணை முதலமைச்சர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.</p><p>புதன்கிழமை அஜித் பவாரின் பிறந்தநாள் என்பதால், மறைந்த தலைவருக்கு சுலே நெகிழ்ச்சியான அஞ்சலி செலுத்தினார்.</p><p>"உங்கள் இழப்பை மகாராஷ்டிராவும், எங்கள் குடும்பம் முழுமையும் என்றென்றும் உணரும். தாதா, உங்களை பற்றிய ஒவ்வொரு நினைவும் எங்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும். நீங்கள் இன்னும் எங்களுடன் இருப்பது போலவே உணர்கிறோம். உங்களை இழந்து வாடுகிறோம், தாதா," என்று அவர் எக்ஸ் தளத்தில் மராத்தி மொழியில் பதிவிட்டிருந்தார்.</p><h2>எக்ஸ் பதிவு:</h2><p>என்.சி.பி. (சரத்சந்திர பவார்) தற்போது எதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.</p><p>சுவாரஸ்யமாக, சுலே தனது தாயார் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.</p><p>அந்த பதிவில், "மாண்புமிகு சோனியா காந்தி அவர்களும் என் தாயாரும். வலிமையான, கருணையுள்ள, உண்மையிலேயே கண்ணியமிக்க இரு மகத்தான பெண்கள். அவர்களின் மனவுறுதி, ஞானம் மற்றும் அசைக்க முடியாத குணம் அவர்களை அறிந்த அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது. பாதுகாத்து வைக்க வேண்டிய ஒரு தருணம்... இதை நான் எடுத்தேன்," என்று சுலே கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்! பீகார் காங்கிரஸ் சார்பில் மெழுகவர்த்தி பேரணி</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-congress-leaders-hold-candlelight-march-demanding-dharmendra-pradhans-resignation</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-congress-leaders-hold-candlelight-march-demanding-dharmendra-pradhans-resignation#comments</comments><guid isPermaLink="false">341082b2-1dc1-49e2-8595-1219ed8d18d2</guid><pubDate>Wed, 22 Jul 2026 19:13:01 +0000</pubDate><atom:updated>2026-07-22T19:13:01.389Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/issskn3r/candle.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/issskn3r/candle.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கல்வி அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/dharmendra-pradhan">தர்மேந்திர பிரதான்</a> பதவி விலகக் கோரி, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மெழுகுவர்த்தி பேரணியை நடத்தினர்.</p><p>நாடு முழுவதும் 120 நகரங்களில் காங்கிரஸ் முன்னெடுத்துள்ள 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மாநில தலைநகரான பாட்னாவில் பாட்னா கல்லூரியில் இருந்து கார்கில் சவுக் வரை இந்த பேரணி நடைபெற்றது. </p><p>நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு லட்சக்கணக்கான மாணவர்களின் கனவுகளை சிதைத்துவிட்டதாகவும், விரக்தியடைந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும் <a href="https://www.maalaimalar.com/topic/congress">காங்கிரஸ்</a> தேசிய செய்தித் தொடர்பாளர் ராகினி நாயக் கூறினார். </p><h2>அஞ்சலி:</h2><p>இது குறித்து பேசிய அவர், "சமீபத்திய நீட் வினாத்தாள் கசிவால் ஏற்பட்ட ஏமாற்றத்தை தொடர்ந்து 22 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே இந்த மெழுகுவர்த்தி பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அடையாள பேரணியின் மூலம், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்த விரும்புகிறோம்: அவர்களின் போராட்டத்தில் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் உறுதியாக அவர்களுடன் நிற்கிறார்கள்," என்று அவர் கூறினார்.</p><p>ஜந்தர் மந்தரில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது கொடூரமான காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும், முன்னாள் DUSU தலைவருமான நீது வர்மா சோயின் குற்றம் சாட்டினார்.</p><p>இது குறித்து பேசிய அவர், "விவசாயிகள் போராடும்போது அவர்கள் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். பெண் மல்யுத்த வீரர்கள் போராடும்போது அவர்கள் தாக்கப்படுகிறார்கள். இப்போது கல்வி அமைப்பில் உள்ள குளறுபடிகள் மற்றும் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக குரல் கொடுக்கும் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது, அவர்கள் தாக்கப்படுகிறார்கள் மற்றும் மோசமாக நடத்தப்படுகிறார்கள்," என்று தெரிவித்தார்.</p><h2>அரசு முழக்கத்திற்கு முரணானது:</h2><p>மாணவிகளிடம் காவல்துறை அநாகரிகமாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் தலைவர் சோயின், இது அரசின் 'பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்' (பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம்) என்ற முழக்கத்திற்கு முரணானது என்று கூறினார்.</p><p>எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை அரசு கையாண்ட விதத்தையும் அவர் விமர்சித்தார்; தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் கவலைகளை எழுப்புவதில் இருந்து தடுக்கப்பட்டதாகவும், தெருவில் இழுத்து செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.</p><p>"அரசின் சர்வாதிகார போக்குக்கு எதிரான தனது பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடர்ந்து முன்னெடுக்கும்," என்று சோயின் கூறினார்.</p><p>ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை (FIR) திரும்பப் பெற வேண்டும் என்றும் சோயின் வலியுறுத்தினார்; அத்துடன் பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கட்சியின் கோரிக்கையையும் மீண்டும் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆபாச தரவுகளை ஒளிபரப்பிய 50 ஓ.டி.டி. தளங்கள் முடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/50-ott-apps-banned-in-two-years-for-broadcasting-vulgar-content</link><comments>https://www.maalaimalar.com/news/national/50-ott-apps-banned-in-two-years-for-broadcasting-vulgar-content#comments</comments><guid isPermaLink="false">7f813259-6834-4c75-b4ad-3ce3821b55cd</guid><pubDate>Wed, 22 Jul 2026 18:39:15 +0000</pubDate><atom:updated>2026-07-22T18:39:15.588Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>OTT Apps,ஓடிடி செயலிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/wo2g79a1/ott.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ OTT]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/wo2g79a1/ott.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பல்வேறு சட்டங்களை மீறி ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்கங்களை வழங்கியதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் 50 ஓடிடி (OTT) ஸ்ட்ரீமிங் தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.</p><p>நாசிக் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபாவு பராக் பிரகாஷ் வாஜே எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தகவல், ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் இந்த தகவலை வெளியிட்டார்.</p><p>டிஜிட்டல் தளங்களுக்கு எதிரான புகார்களை தொடர்ந்தும், தகவல் தொழில்நுட்ப சட்டம், பாரதிய நியாய சம்ஹிதா (பி.என்.எஸ்.) மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் சித்தரிப்பு (தடை) சட்டம் ஆகிய விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><h2>விதிமீறல்:</h2><p>அரசின் கூற்றுப்படி, முடக்கப்பட்ட தளங்கள், மின்னணு வடிவில் ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியாக வெளிப்படையான உள்ளடக்கத்தை வெளியிடுவது அல்லது பரப்புவது தொடர்பான தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000-இன் 67 மற்றும் 67A பிரிவுகளை மீறியிருப்பது கண்டறியப்பட்டது.</p><p>மேலும், அவை ஆபாசமான செயல்கள் மற்றும் உள்ளடக்கம் தொடர்பான பாரதிய நியாய சம்ஹிதாவின் (பி.என்.எஸ்) 294-வது பிரிவையும், பெண்களை அநாகரிகமாக சித்தரிப்பதை தடுக்கும் சட்டம், 1986-இன் 4-வது பிரிவையும் மீறியுள்ளன. சட்டவிரோத உள்ளடக்கத்தைப் பரப்பும் டிஜிட்டல் தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த சட்ட விதிகள் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கின்றன என்று அரசாங்கம் கூறியது.</p><h2>தகவல் தொழில்நுட்ப சட்டம்:</h2><p>டிஜிட்டல் உள்ளடக்கம் தொடர்பான புகார்களைத் தவறாமல் ஆய்வு செய்து, மீறல்கள் கண்டறியப்படும் இடங்களில் நடவடிக்கை எடுப்பதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79(3)(b)-இன் கீழ், உரிய அரசாங்க அதிகாரியால் அறிவிக்கப்பட்ட பிறகு, சட்டவிரோத உள்ளடக்கத்தை அகற்றவோ அல்லது பொது அணுகலை முடக்கவோ இடைத்தரகர்களுக்கு உத்தரவிடப்படலாம்.</p><p>இந்த விதிமுறை, இந்தியாவின் டிஜிட்டல் சூழலில் இடைத்தரகர்களின் பொறுப்பு மற்றும் இணக்கத்தை நிர்வகிக்கும் விரிவான கட்டமைப்பின் ஒரு பகுதியாக அமைகிறது.</p>]]></content:encoded></item><item><title>நீட் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார்: ஜே.பி. நட்டா</title><link>https://www.maalaimalar.com/news/national/ready-to-hold-a-debate-in-parliament-on-the-neet-issue-jp-nadda</link><comments>https://www.maalaimalar.com/news/national/ready-to-hold-a-debate-in-parliament-on-the-neet-issue-jp-nadda#comments</comments><guid isPermaLink="false">41ae285d-65b6-425b-9fa5-68b8df99a81f</guid><pubDate>Wed, 22 Jul 2026 16:13:22 +0000</pubDate><atom:updated>2026-07-22T16:13:22.900Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>JP Nadda,ஜே.பி. நட்டா,NEET Paper Leak,சிஜேபி போராட்டம்,நீட் தேர்வு வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/2i31n729/New-Project-2026-07-22T214122.212.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார்: ஜே.பி. நட்டா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/2i31n729/New-Project-2026-07-22T214122.212.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,</p><p>“ராகுல் காந்தியிடம் நான் கேட்க விரும்புவது என்னவென்றால், நீங்கள் ஏன் இவ்வளவு பாரபட்சமாக நடந்து கொள்கிறீர்கள்? காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அரசுகள் ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு தொடர்பாக ராகுல் காந்தி பேசாதது ஏன்? </p><p>மாணவர்களின் நலனோ அல்லது கல்வியின் தரத்தை மேம்படுத்துவதோ உங்கள் நோக்கம் அல்ல என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. இதிலிருந்து அரசியல் ஆதாயம் தேடவே முயற்சிக்கிறீர்கள். </p><p>இந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அது குறுகிய நேர விவாதமாக இருந்தாலும் சரி, நீண்ட நேர விவாதமாக இருந்தாலும் சரி, எவ்வளவு நேர விவாதம் என்பதை எதிர்க்கட்சியே தீர்மானிக்கலாம். 12 மணி நேரம் வேண்டுமானால், நாங்கள் தயாராக இருக்கிறோம். 18 மணி நேரம் வேண்டுமானால், அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.</p><p>குழந்தைகள் நம் அனைவருக்கும் சொந்தமானவர்கள். அவர்கள்தான் நாட்டின் எதிர்காலம். அரசும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட்டு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பது இரு தரப்பினரின் பொறுப்பாகும்.</p><p>சிஜேபி கட்சியினரின் கருத்துக்களை மிகவும் நிதானமாகக் கேட்டோம். அவர்களின் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்குமாறு நான் பரிந்துரைத்தேன், அவர்களும் அவ்வாறே செய்துள்ளனர். மேலும், அவர்கள் விரும்பும் போதெல்லாம் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர்களிடம் கூறியுள்ளேன்.” என தெரிவித்தார். </p><p>இதற்கு முன்னதாக இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, </p><p>கடந்த பத்தாண்டுகளில் 152 வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதனால் 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் இந்தியக் குடும்பங்கள் ஆண்டுதோறும் தேர்வுகளுக்காக 1.32 லட்சம் கோடி ரூபாய் செலவிடுகின்றன என்றும் தெரிவித்திருந்தார். </p>]]></content:encoded></item><item><title>சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-stations-closed-due-to-the-cjp-protest-have-reopened</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-stations-closed-due-to-the-cjp-protest-have-reopened#comments</comments><guid isPermaLink="false">0bff91cc-2e52-4d45-bb81-d3b9e724fb39</guid><pubDate>Wed, 22 Jul 2026 15:57:24 +0000</pubDate><atom:updated>2026-07-22T15:57:24.498Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi Metro,டெல்லி மெட்ரோ,Delhi Metro Station,DelhiMetro,சிஜேபி போராட்டம்,CJP protests</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/x5atdr6h/New-Project-2026-07-22T211928.300.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/x5atdr6h/New-Project-2026-07-22T211928.300.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரப்பான்பூச்சி கட்சியின் தொடர் போராட்டங்கள் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்த டெல்லியின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. </p><p>டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம், மூடப்பட்ட 17 மெட்ரோ நிலையங்களும் பயணிகளின் சேவைக்காக மீண்டும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. </p><h2>போராட்டத்தின் பின்னணி</h2><p>நீட் தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி கட்சியினர் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.</p><p>நேற்று முன்தினம் நாடாளுமன்றம் நோக்கி திடீர் பேரணி சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை போலீசார் தடியால் தாக்கி பேரணியை கலைத்தனர். இச்சூழலில் நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக டெல்லியில் போராட்டத்தில் அதிகமானோர் கலந்துகொண்டு வருகின்றனர். </p><p>இதனால் பாதுகாப்பு காரணங்களுக்கான மெட்ரோ நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>16 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா திரும்பும் லலித் மோடி!</title><link>https://www.maalaimalar.com/news/national/lalit-modi-returns-to-india-after-16-years</link><comments>https://www.maalaimalar.com/news/national/lalit-modi-returns-to-india-after-16-years#comments</comments><guid isPermaLink="false">b3e325c1-28a7-4362-9840-506f3d5be977</guid><pubDate>Wed, 22 Jul 2026 15:20:26 +0000</pubDate><atom:updated>2026-07-22T15:20:26.311Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Lalit Modi,லலித் மோடி,IPL founder,SAFEMA,ஐபிஎல் நிறுவனர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/e9l1fly6/New-Project-2026-07-22T205002.573.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 16 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா திரும்பும் லலித் மோடி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/e9l1fly6/New-Project-2026-07-22T205002.573.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐபிஎல் தொடரின் நிறுவனரும், முன்னாள் தலைவருமான லலித் மோடி, 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.</p><p>2009-ல் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடந்ததால், ஐபிஎல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டன. இதற்கு ரிசர்வ் வங்கியின் முறையான அனுமதி இன்றி வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த வழக்கில் இருந்து தப்பிக்க 2010 ஆம் ஆண்டு அவர் லண்டனுக்குச் சென்றார்.</p><p>இந்நிலையில் இந்த வழக்கில் லலித் மோடிக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், அவர் ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக மட்டுமே செயல்பட்டார் என்றும் கூறி SAFEMA மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளது.</p><p>இதனைத்தொடர்ந்து, 16 வருடங்களாக நான் கூறி வந்த உண்மை இறுதியாக வென்றுள்ளது. இந்த நீண்ட சட்ட அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளதால், நான் விரைவில் இந்தியா திரும்ப ஆவலோடு காத்திருக்கிறேன் என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் லலித் மோடி.</p><p>வரும் அக்டோபர் மாதம் தனது மகளுக்கு குழந்தை பிறக்க உள்ளதாகவும், அதன்பிறகு இந்தியா வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு அவர் வந்து செல்லவிருந்தாலும், அவரது நிரந்தர வசிப்பிடம் லண்டனாகவே தொடரும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஊழல், சமரச அரசியல்: மம்தா மற்றும் அபிஷேக் பானர்ஜியை விளாசிய சுவேந்து அதிகாரி</title><link>https://www.maalaimalar.com/news/national/suvendu-attacks-mamata-abhishek-over-appeasement-politics-corruption</link><comments>https://www.maalaimalar.com/news/national/suvendu-attacks-mamata-abhishek-over-appeasement-politics-corruption#comments</comments><guid isPermaLink="false">ecc08e14-58e4-4111-a8e3-406991ec47fb</guid><pubDate>Wed, 22 Jul 2026 12:40:27 +0000</pubDate><atom:updated>2026-07-22T12:40:27.281Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,சுவேந்து அதிகாரி,Suvendu Adhikari,TMC,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/5r5brlsh/SuvenduAdhikari002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Suvendu Adhikari]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/5r5brlsh/SuvenduAdhikari002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநில சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வரும், நிதியமைச்சருமான சுவேந்தி அதிகாரி பேசினார். அப்போது முந்தைய மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் சமரசம் அரசியல், ஊழல் அரசியல், காவல்துறையை அரசியல் மயமாக்குதலை செய்ததாக மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.</p><h2>இது தொடர்பாக சுவேந்து அதிகாரி சட்டசபையில் பேசியதாவது:-</h2><p>முத்திரை குத்தப்பட்ட ஒரு திருடர் (அபிஷேக் பார்னஜி எம்.பி.) நமக்கு பாடம் எடுக்கிறார். நீங்கள் உள்ளே இருப்பீர்களா அல்லது வெளியே இருப்பீர்களா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் நிலைமை ஃபால்டா சட்டமன்ற இடைத்தேர்தலின்போது போட்டியிலிருந்து விலகி ஓடிய அக்கட்சியின் செல்வாக்குமிக்க தலைவரான ஜஹாங்கீர் கானை (இவர் தன்னைத்தானே 'புஷ்பா' என்று அழைத்துக்கொண்டவர்) விட மோசமாக இருக்கும்.</p><h2>திருடன் என நிரூபிப்பேன்</h2><p>இந்து மதத்தை தவறாகப் பயன்படுத்தி நீங்கள் (மம்தா) மேற்கொண்ட அந்த வகையான சமரசம் செய்து கொள்ளும் அரசியல், அடிப்படைவாதிகளின் அரசியலை விடவும் மோசமானது. உங்கள் உண்மையான முகத்தை நான் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துவிட்டேன். நீங்கள் ஒரு திருடன் என்பதை உங்கள் வாழ்நாளிலேயே நான் நிரூபிப்பேன்.</p><p>டிஎம்சி (TMC) ஆட்சியின் போது, ​​கட்சியின் நலன்களுக்குப் பணியாற்றும் வகையில் காவல் துறை அரசியல்மயமாக்கப்பட்டது. அத்தகைய முயற்சிகளுக்கு நாங்கள் எதிரானவர்கள்.</p><h2>முட்டைகள் வீசுவதற்கு எதிர்ப்பு</h2><p>பொதுமக்களின் குறைகள் தொடர்பாக டிஎம்சி (TMC) தலைவர்கள் மீது முட்டைகளை வீசுவதை நான் எதிர்க்கிறேன். ஆனால், பா.ஜ.க. தலைவர்கள் மீது கற்களை வீசியது டிஎம்சி-யினர்தான்.</p><p>அகதிகளை நாங்கள் வரவேற்போம். ஆனால் ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவோம். 26,000 காவலர்கள் பணியில் சேர்க்கப்பட உள்ளனர். அவர்களில் 16,000 பேர் துர்கா பூஜைக்கு முன்பாகவே நியமிக்கப்படுவார்கள்.</p><p>இவ்வாறு சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர செய்ய வேண்டியது இதுதான்: ராகுல் காந்தி விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/how-to-end-students-protest-rahul-gandhi-clarifies</link><comments>https://www.maalaimalar.com/news/national/how-to-end-students-protest-rahul-gandhi-clarifies#comments</comments><guid isPermaLink="false">45d78368-b835-4c19-882f-6fb06748f4b3</guid><pubDate>Wed, 22 Jul 2026 11:39:21 +0000</pubDate><atom:updated>2026-07-22T11:39:21.083Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/zty8zse8/rahul.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/zty8zse8/rahul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>நீட் தேர்வு போராட்டம்</h2><p>நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.</p><p>இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>மாணவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><h2>கல்வி முறை கடந்த 10 ஆண்டுகளில் சீரழிந்து விட்டது</h2><p>நாட்டின் கல்வி முறை கடந்த 10 ஆண்டுகளில் சீரழிந்து விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு தேர்வுகளில் 152 முறை வினாத்தாள் கசிந்துள்ளன.</p><p>தேர்வுகளில் நடைபெறும் மோசாடிகளால் இளைஞர்கள் எதிர்காலத்தைத் தொலைக்கின்றனர். நீட் தேர்வில் ஓராண்டுக்கு 1.32 லட்சம் கோடி புழங்குகிறது.</p><p>வினாத்தாள் கசிவு காரண்மாக மறு தேர்வு எழுதும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். டெல்லியில் மாணவர்களை தாக்கிய போலீசாரை அந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்க செய்ய வேண்டும்.</p><h2>மாணவர்களின் 3 வலியுறுத்தல்</h2><p>மாணவர்களின் முக்கிய மூன்று வலியுறுத்தல்களை ஏற்றால் போராட்டம் முடிவுக்கு வரும்.</p><p>முதல் கோரிக்கை முற்றிலும் நியாயமானது. கல்வி அமைச்சராக தோல்வி அடைந்தவரும், ஊழல்வாதி என அறியப்பட்டவருமான தர்மேந்திர பிரதான், தனது பதவியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.</p><p>இது 100 சதவீதம் நியாயமான கோரிக்கை. இதில் எந்தத் தவறும் இல்லை. இந்த அமைப்பை நடத்துவதற்குத் தகுதியற்றவர் என்பதை அவர் இந்தியாவுக்கும் உலகிற்கும் காட்டியுள்ளார். </p><p>இரண்டாவது கோரிக்கை என்னவென்றால், நமது மாணவர்கள் மீது கை நீட்டிய ஒவ்வொரு நபரும் பொறுப்பேற்க வைக்கப்பட வேண்டும்.</p><p>மூன்றாவது விஷயம் என்னவென்றால், இந்த முழு அமைப்பையும் நடத்தி வரும், இறுதியாக இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டிய அந்த மனிதர், நடந்தவற்றுக்காக மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் கண்ணியத்தைக் கொண்டிருக்க வேண்டும்.</p><p>எனவே, இந்தக் கோரிக்கைகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம், தெருக்களில் இருக்கும் ஒவ்வொரு மாணவரையும் நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/opposition-uproar-both-houses-adjourned-all-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/opposition-uproar-both-houses-adjourned-all-day#comments</comments><guid isPermaLink="false">214e5b4e-995f-4c1d-bb8a-3d1900c32fa5</guid><pubDate>Wed, 22 Jul 2026 10:17:38 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:17:38.511Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>winter session,நாடாளுமன்றம்,parliment,adjourned,மழைக்காலக் கூட்டத்தொடர்,ஒத்திவைப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/r2vnzj7e/loksabha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ loksabha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/r2vnzj7e/loksabha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு, ராமர் கோவில் நன்கொடை முறைகேடு, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் கடந்த 2 தினங்களாக நாடாளுமன்றத்தில் அலுவல் எதுவும் நடைபெறாமல் முடங்கியது.</p><h2>எதிர்க்கட்சிகள் 3-வது நாளாக அமளி</h2><p>நாடாளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. </p><p>மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் ராமர் கோவில் நன்கொடை தொடர்பான முறைகேடு மற்றும் நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.</p><h2>சபாநாயகர்</h2><p>இதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா, இது கேள்வி நேரம். முக்கியமானது. கேள்வி நேரம் முடிந்த பிறகு நீங்கள் கொடுத்த விவகாரங்கள் பற்றி விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் விரும்பும் வரை விவாதிக்கலாம். ஆனால் திட்டமிட்டு அவையின் நடவடிக்கைக்கு இடையூறு செய்வது நல்லதல்ல என்றார். ஆனால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார்.</p><h2>விவாதிக்க தயார்</h2><p>12 மணிக்கு சபை கூடியதும் நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கூறியதாவது:</p><p>விவாதம் எவ்வளவு நேரம் நடைபெறும், எந்த விதியின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த முடிவை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும். </p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க அரசு முழுமையாக தயாராக உள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் அனைவரும் இணைந்து அர்த்தமுள்ள விவாதத்தை நடத்தவேண்டும் என்பதே அரசின் விருப்பம் ஆகும் என தெரிவித்தார்.</p><p>ஆனால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. </p><h2>மேல்சபை</h2><p>மேல்சபையிலும் நீட் விவகாரம் தொடர்பாக மாணவர்கள் மீதான தடியடியைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தப் பிரச்சனையை பேசினார். இதற்கு ஆளும் கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>கார்கேவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். இதனால் அவையில் கூச்சல்-அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஏற்பட்ட அமளியால் மேல் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>சக பெண் எம்.பி.க்களுடன் மோதல் - கல்யாண் பானர்ஜி மக்களவையில் இருந்து நீக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/clash-with-fellow-female-mps-kalyan-banerjee-removed-from-the-lok-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/clash-with-fellow-female-mps-kalyan-banerjee-removed-from-the-lok-sabha#comments</comments><guid isPermaLink="false">e6173b12-af48-408c-a899-55b2e284d308</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:55:49 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:55:49.252Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,Lok Sabha,trinamool congress,Kalyan Banerjee,திரிணாமுல் காங்கிரஸ்,கல்யாண் பானர்ஜி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/2had6tig/New-Project-2026-07-22T152147.766.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சக பெண் எம்.பி.க்களுடன் மோதல் - கல்யாண் பானர்ஜி மக்களவையில் இருந்து நீக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/2had6tig/New-Project-2026-07-22T152147.766.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களுக்கு எதிராக அவதூறான மற்றும் நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி. கல்யாண் பானர்ஜி, மக்களவையில் இருந்து நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் பிற பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டுக் கொண்டிருந்த வேளையில், குரல் வாக்கெடுப்பு மூலம் இவரது இடைநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><p>நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு இடையே அவை ஒத்திவைக்கப்பட்டபோது, கல்யாண் பானர்ஜிக்கும், அவரது முன்னாள் கட்சி சகாக்களுக்கும்  (NCPI) இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p>இந்த மோதலின் போது, கல்யாண் பானர்ஜி தன்னை 'சோர்' (திருடன்) என்று அழைத்ததாகவும், அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் கூறி, மிட்டாலி பாக், சதாப்தி ராய் மற்றும் ககோலி கோஷ் தஸ்திதார் ஆகிய பெண் எம்பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் முறைப்படி புகார் அளித்தனர்.</p><p>பெண் எம்பிக்களின் புகாரைத் தொடர்ந்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், கல்யாண் பானர்ஜியை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.</p><p>தீர்மானம் நிறைவேறிய நிலையில், கூட்டத்தொடரின் மீதமுள்ள நாட்களுக்கு அவர் அவைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு, உடனடியாக நாடாளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது.</p><p>பருவமழைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் கோபத்தை பார்த்த ‘தீய சக்திகள்’ கூடுதல் நேரம் வேலை செய்ய தொடங்கிவிட்டன: ப்ரீத்தி ஜிந்தா</title><link>https://www.maalaimalar.com/news/national/evil-forces-working-overtime-student-anger-preity-zinta</link><comments>https://www.maalaimalar.com/news/national/evil-forces-working-overtime-student-anger-preity-zinta#comments</comments><guid isPermaLink="false">66017b5b-55f8-4b0a-897f-bb112aa92437</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:44:55 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:44:55.670Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Preity Zinta,NEET exams,ப்ரீத்தி ஜிந்தா,Cockroach Janata Party,காக்ரோச் ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/yd9osn0z/Untitled-design-51.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/yd9osn0z/Untitled-design-51.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காக்ரோச் ஜனதா கட்சி தலைமையிலான போராட்டங்களுக்கு நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இந்த இயக்கம் தேசவிரோத சக்திகளால் கைப்பற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியமான ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக காக்ரோச் ஜனதா கட்சியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இந்த போராட்டம் தற்போது நாடு முழுவதும் விரிவடைந்து வரும் சூழலில், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவாக, நடிகையும் தொழிலபதிருமான ப்ரீத்தி ஜிந்தா எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.</p><h3><strong>நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்திற்கு ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு:</strong></h3><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நமது மாணவர்களுக்கு ஆதரவளிப்பதும், நமது இளைஞர்களின் எதிர்காலத்தில் நேர்ம்றையான தாக்கத்தை ஏற்படுத்தும் கல்வி சீர்திருத்தங்களை கோருவதும் முக்கியம் என்றாலும், </p><p>மாணவர்களின் அமைதியான போராட்டங்கள், குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் போராட்டத்தின் தன்மையை மாற்றுவதற்கும் தேசவிரோத சக்திகளால் திசை திருப்பப்படாமல் இருப்பதும் மிகவும் முக்கியம்.</p><p>இணையத்தில் இவ்வளவு வெறுப்பையும் பிளவுகளையும் காணும்போது, நமது நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தீய சக்திகள், நமது மாணவர்கள் உணரும் கோபத்தையும் விரக்தியையும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காகக் கூடுதல் நேரம் வேலை செய்யத் தொடங்கிவிட்டனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.</p><p>கடின உழைப்பு, சமத்துவம் மற்றும் சிறந்து விளங்குதல் ஆகியவற்றில் நான் எப்போதுமே நம்பிக்கை கொண்டுள்ளேன். </p><p>அதில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. நமது ஜனநாயகத்தின் மீதும் மற்றும் சட்டம் ஒழுங்கின் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது.</p><p>எனவே, இரு தரப்பினரும் அர்த்தமுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபட்டு, இந்தப் போராட்டம் மற்றும் உரையாடலில் இருந்து எந்தவொரு தீய சக்திகளையும் நோக்கங்களையும் களைவார்கள் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.</p><p>அதன் மூலம் நமது இளைஞர்களுக்கும் நமது ஜனநாயகத்திற்கும் எதிர்காலம் பிரகாசமாக அமையும்.</p><p>சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மேலும் மோசமடையாமல் இருக்க, நமது அரசு சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் அமைப்புகளுடன் ஒரு அர்த்தமுள்ள உரையாடலைத் தொடங்கும் என்று நம்புகிறேன்.</p><p>தயவுசெய்து உங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள் சோனம். இந்தப் போராட்டத்தைப் போலவே உங்கள் உடல்நிலையும் முக்கியமானது.</p><p>நீங்களும் மாணவர்களும் இந்தியாவின் எதிர்காலத்திற்காகவும் நமது இளைஞர்களுக்காகவும் போராடுகிறீர்கள்.</p><p>நமது கல்வி முறையை உயர்த்தி மேம்படுத்துவதற்கான இந்தப் போராட்டத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் சோனமுக்கும் எனது மனமார்ந்த மற்றும் அசைக்க முடியாத ஆதரவு உண்டு.</p><p>உங்கள் அனைவருக்கும் மேலும் சக்தி கிடைக்கட்டும். ஜெய் ஹிந்த்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>போராட்டக்காரர்கள் மீதான தடியடி - விசாரணைக்கோரி பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கடிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/lathi-charge-on-protesters-supreme-court-bar-association-president-writes-to-pm-modi-and-amit-shah-seeking-an-inquiry</link><comments>https://www.maalaimalar.com/news/national/lathi-charge-on-protesters-supreme-court-bar-association-president-writes-to-pm-modi-and-amit-shah-seeking-an-inquiry#comments</comments><guid isPermaLink="false">da541e6f-7002-4492-94ba-2fd5121f0be5</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:32:55 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:32:55.348Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,பிரதமர் மோடி,CJP Protest,Vikas Singh,விகாஸ் சிங்,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/hixslenq/New-Project-2026-07-22T150238.638.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போராட்டக்காரர்கள் மீதான தடியடி - விசாரணைக்கோரி பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கடிதம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/hixslenq/New-Project-2026-07-22T150238.638.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் சமீபத்தில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என கரப்பான் பூச்சி கட்சி ஜூன்.20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவருகிறது. </p><p>இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான்று (ஜூலை.20), "சலோ சன்சத்" என்ற பெயரில் பேரணியை நாடாளுமன்றம் நோக்கி முன்னெடுத்தனர். போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நுழைவதை தடுத்து நிறுத்த எண்ணற்ற காவலர்கள் அதன் வளாகம் மற்றும் வெளிப்பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர். </p><p>மாணவர்கள் தொடர்ந்து நாடாளுமன்றப் பகுதியை நெருங்கியநிலையில் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். காவலர் சீருடைகள் அணியாத பலரும் கையில் தடியுடன் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகைகுண்டு, பெல்லாட் துப்பாக்கி போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இதில் காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் விகாஸ் சிங் கடிதம் எழுதியுள்ளார். </p><p>அதில், டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் சன்சத் மார்க் பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது, காவல்துறையினர் எவ்வித தூண்டுதலும் இன்றி நடத்திய தடியடி குறித்து முறையான நீதி விசாரணை நடத்த வேண்டும் என விகாஸ் சிங் கோரியுள்ளார்.</p><p>உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலும், நாட்டின் ஒரு பொறுப்புள்ள குடிமகனாகவும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>டெல்லி போராட்டக்களத்தில் காயமடைந்த மாணவி நலமுடன் உள்ளார்-மருத்துவர்கள் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/student-injured-in-delhi-protest-is-stable-say-doctors</link><comments>https://www.maalaimalar.com/news/national/student-injured-in-delhi-protest-is-stable-say-doctors#comments</comments><guid isPermaLink="false">808a02b9-2f1b-4a69-b27c-5d29106deba9</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:10:09 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:10:09.443Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,ஜே.பி. நட்டா,நீட் தேர்வு முறைகேடு,JPNadda,CJP Protest,காக்ரோச் ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/87y0dzai/delhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ The female student injured in the Delhi protest ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/87y0dzai/delhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' சார்பில் நடைபெற்ற 'சான்சத் சலோ' (பாராளுமன்ற முற்றுகை) பேரணியின் போது, காவல்துறையினரின் நடவடிக்கையில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 21 வயது இளம் பெண், தற்போது செயற்கை சுவாசக் கருவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். </p><p>அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக அவரைப் பராமரித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து, டெல்லியில் உள்ள புகழ்பெற்ற 'ராம் மனோஹர் லோகியா' மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவக் குறிப்பில்  உத்தம் நகர் பகுதியைச் சேர்ந்த சாக்ஷி (21) என்ற அம்மாணவி, தற்போது முழு சுயநினைவுடன் உள்ளார். </p><p>அவர் மருத்துவர்களின் வழிகாட்டுதல்களுக்குச் சரியாகப் பதிலளிப்பதுடன், செயற்கை சுவாசக் கருவியின் உதவியின்றி சுயமாகச் சுவாசித்து வருகிறார். அவரது மூளை மற்றும் தண்டுவடம் சார்ந்த எம்.ஆர்.ஐ பரிசோதனை முடிவுகள் அனைத்தும் இயல்பாகவே வந்துள்ளன.</p><h2><strong>தொடர் கண்காணிப்பு:</strong></h2><p>கடந்த திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே அவரது உடல்நிலையில் தொடர்ச்சியான முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது. இருப்பினும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அவர் இன்னும் சில நாட்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் தேர்வாணையச் சீர்திருத்தங்கள் கோரி CJP அமைப்பினர் நடத்திய பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போராட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையின் போது அம்மாணவிக்குத் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. </p><p>உடனடியாக அவர் RML மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. இச்சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும், 118 காவல் துறையினரும் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>முன்னதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் 'ஜே.பி. நட்டா'  RML மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சையில் இருந்த மாணவியைச் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்திருந்தார். தற்போது மாணவி ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பது அவரது குடும்பத்தினருக்கும் சக மாணவர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தீவிரமடையும் போராட்டம் - இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கிய தர்மேந்திர பிரதான் மகள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/protest-intensifies-dharmendra-pradhans-daughter-deactivates-instagram-account</link><comments>https://www.maalaimalar.com/news/national/protest-intensifies-dharmendra-pradhans-daughter-deactivates-instagram-account#comments</comments><guid isPermaLink="false">a6159846-e489-461e-b5c5-537ca4d4d0e3</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:09:45 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:09:45.610Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,CJP Protest,Naimisha Pradhan,நைமிசா பிரதான்,கரப்பான்பூச்சி கட்சி போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/dikoixh5/New-Project-2026-07-22T143922.191.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தீவிரமடையும் போராட்டம் - இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கிய தர்மேந்திர பிரதான் மகள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/dikoixh5/New-Project-2026-07-22T143922.191.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து கரப்பான்பூச்சி கட்சி டெல்லியில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் வெடித்துள்ளது. இந்த போராட்டம் காவல்துறையின் செயல்முறைகளால் கலவராமாக வெடிக்கும் சூழல் உருவாகி வரும் நிலையில், உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் இதில் தலையிட மறுப்பு தெரிவித்துள்ளன.</p><p>இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான், தனது இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கியுள்ளார். கல்வித்துறையில் ஏற்பட்ட குளறுபடிக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை மையமாக கொண்டே போராட்டம் தொடங்கியது.</p><p>ஆனால் தற்போதுவரை அவர் எந்தவொரு பொறுப்புக்கூறலையும் எடுத்துக்கொள்ளாத நிலையில், அவரது மகளின் இணைய கணக்கு முகவரியை டேக் செய்து இணையவாசிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். </p><p>நைமிஷா, அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் பிளெட்சர் சட்டம் மற்றும் தூதரகப் பள்ளியில் தனது உயர்கல்வி பட்டப்படிப்பை முடித்தார். </p><p>இந்தியாவில் லட்சக்கணக்கான நடுத்தரக் குடும்ப மாணவர்கள் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி அமைச்சரின் மகள் வெளிநாட்டில் பயின்றதைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்தனர். </p><p>மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குவிந்த கடுமையான எதிர்ப்பு மற்றும் அவரது தந்தையை பதவி விலகக் கோரிய கமெண்டுகள் காரணமாக, தனது இன்ஸ்டாகிராம் கணக்கை நைமிஷா முடக்கியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் - சுப்ரீம் கோர்ட் சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/national/dont-waste-our-time-supreme-court-refuses-urgent-listing-petiton-against-police-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/dont-waste-our-time-supreme-court-refuses-urgent-listing-petiton-against-police-action#comments</comments><guid isPermaLink="false">29f9d01c-9610-4450-a2be-1012487d3c21</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:52:36 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:52:36.942Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சுப்ரீம் கோர்ட்,நீட் தேர்வு,Neet exam,CJP Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-25/w52xur9e/SC.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சுப்ரீம் கோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ supreme court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-25/w52xur9e/SC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-security-concerns-students-protest-16-key-metro-stations-closed">'நீட்' தேர்வில்</a> நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். </p> <p>இந்நிலையில், டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரின் வக்கீல் கேட்டுக் கொண்டார். </p><p>ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார். எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் நேரத்தையும் வீணாக்காதீர்கள் என்று அவர் தெரிவித்தார். தாக்குதல் காணொளிகளை எங்களுக்கு பார்க்க ஆர்வமும், நேரமும் இல்லை என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். </p><p>முன்னதாக நேற்று இதே போன்ற ஒரு விவகாரத்தை அவசரமாக விசாரிக்க டெல்லி ஐகோர்ட்டும் மறுத்து, ‘நீதிமன்றத்தை இதில் இழுக்காதீர்கள்’ என்று கூறி இருந்தது.</p>]]></content:encoded></item><item><title>தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - டெல்லியில் 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-security-concerns-students-protest-16-key-metro-stations-closed</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-security-concerns-students-protest-16-key-metro-stations-closed#comments</comments><guid isPermaLink="false">1aa2f303-9741-43c8-848e-4d497d7c944c</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:17:53 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:17:53.656Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி,டெல்லிமெட்ரோ,DelhiMetro,MetroClosed,InterchangeFacility,PublicNotice</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/odjnkqqd/DelhiMetroClosed" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DelhiMetroClosed]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/odjnkqqd/DelhiMetroClosed?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய தலைநகர் டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் மற்றும் சிஜேபி அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியின் போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. </p><p>இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், சட்டம் ஒழுங்கு அசம்பாவிதங்களை தவிர்க்கவும் டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் மத்திய டெல்லியில் உள்ள 16 முக்கிய மெட்ரோ நிலையங்களை தற்காலிகமாக மூடி உத்தரவிட்டுள்ளது.</p><h2><strong>16 மெட்ரோ நிலையங்கள்</strong></h2><p>டெல்லியில் நிலவி வரும் பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செகரட்டரியேட் உள்ளிட்ட 16 முக்கிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் மறு உத்தரவு வரும் வரை அதிரடியாக மூடப்படுவதாக டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p>இதன் காரணமாக, ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செகரட்டரியேட், படேல் சௌக், ஜன்பத், டெல்லி கேட், ஐ.டி.ஓ, சுப்ரீம் கோர்ட், லோக் கல்யாண் மார்க், ராமகிருஷ்ணா ஆஸ்ரமம் மார்க், பாரகம்பா ரோடு, சேவா தீர்த், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக் மற்றும் சிவாஜி ஸ்டேடியம் ஆகிய மெட்ரோ நிலையங்களின் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.</p><h2>பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு:</h2><p>எனினும், பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செகரட்டரியேட் ஆகிய சந்திப்பு நிலையங்களில் ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்கு மாறுவதற்கான இணைப்பு ரெயில் வசதிகள் மட்டுமே தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு- நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் விநியோகம் ரத்து </title><link>https://www.maalaimalar.com/spirituality/increase-in-pilgrim-arrivals-at-tirupati-distribution-of-time-slot-darshan-tickets-cancelled</link><comments>https://www.maalaimalar.com/spirituality/increase-in-pilgrim-arrivals-at-tirupati-distribution-of-time-slot-darshan-tickets-cancelled#comments</comments><guid isPermaLink="false">185e13f8-edb7-46af-8270-ad95aeff3c19</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:46:48 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:46:48.795Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>devotees,Tirupati temple,திருப்பதி,Tirupati,திருப்பதி கோவில்,பக்தர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/9enkhs2q/tirupati.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திருப்பதி கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பதி கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/9enkhs2q/tirupati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>திருப்பதியில் நேற்று 82,105 பேர் தரிசனம் செய்தனர். 34,484 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.</aside><p><a href="https://www.maalaimalar.com/topic/திருப்பதி-கோவில்">திருப்பதி ஏழுமலையான் கோவிலில்</a> தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அவதி அடையாமல் இருக்க திருப்பதியில் 3 இடங்களில் நேர ஒதுக்கீடு சர்வ தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. </p><h2><strong>தரிசன டோக்கன் ரத்து</strong></h2><p>வார இறுதி விடுமுறை நாட்களில் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக அனைத்து நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது.</p> <p>இன்றைய தரிசனத்திற்கான 10 ஆயிரம் சர்வ தரிசன டிக்கெட்டுகள் நேற்று அதிகாலை 5 மணிக்கு வழங்கப்பட்டது. சர்வ தரிசன டிக்கெட் 1 மணி நேரத்தில் தீர்ந்து போனதால் தொலைதூரத்தில் இருந்து அதிக செலவு செய்து தாமதமாக வந்த பக்தர்கள் தரிசன டிக்கெட் கிடைக்காமல் அவதி அடைந்தனர்.</p><p>இதேபோல் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் 2 ஆயிரம் தரிசனம் டிக்கெட் வழங்கப்பட்டது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் நாளைய தரிசனத்திற்கு வழங்கப்பட இருந்த சர்வ தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டது. </p><p>தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் டிக்கெட் வழங்கும் மையங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய காத்திருந்தனர். </p><p>பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் தரிசன டிக்கெட் வாங்குவது ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பக்தர்கள் நேரடி இலவச தரிசனம் செய்ய திருப்பதி மலைக்கு புறப்பட்டு சென்றனர்.</p><p>நாளை மறுநாள் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வழக்கம்போல் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். </p><h2><strong>18 மணி நேரம்</strong></h2><p>திருப்பதியில் நேற்று 82,105 பேர் தரிசனம் செய்தனர். 34,484 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.</p><p>4.17 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தினமும் சாம்பாரா? போலீஸ் நிலையம் வரை சென்ற ‘சாப்பாட்டு சண்டை’ - பதறிப்போன காவலர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/police-complaint-filed-over-daily-serving-of-sambar-police-left-stunned-by-husband-wife-dispute-over-food</link><comments>https://www.maalaimalar.com/news/national/police-complaint-filed-over-daily-serving-of-sambar-police-left-stunned-by-husband-wife-dispute-over-food#comments</comments><guid isPermaLink="false">8a121e1f-6e74-48a8-81b0-a9d76d3dcc40</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:22:49 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:22:49.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>dispute,தகராறு,police station,போலீஸ் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/bk4z9ujt/sambar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/bk4z9ujt/sambar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>குழம்பு சமைக்கப்பட்ட விதம் குறித்து போலீசாரிடம் புகார் அளிப்பது ஒரு அரிதான சம்பவம் என்பதால், இந்த விஷயம் தற்போது உள்ளூரில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.</aside><h2><strong>தினமும் சாம்பார்</strong></h2><p>உத்தரப் பிரதேச மாநிலம் படௌன் மாவட்டத்தில் வஜீர்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி. இவருக்கு பொறித்த உணவுகள் அதிகம் பிடிக்கும். ஆனால் இவருடைய மனைவி தினமும் சாம்பார் வைத்து உணவு பரிமாறி வந்தார்.</p><p>இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.  </p><h2><strong>தகராறு</strong></h2><p>நேற்று முன்தினம் இரவு சாம்பார் வைத்ததால் தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. நள்ளிரவு வரை கடுமையான வாக்குவாதம் செய்தனர்.</p><p>எவ்வளவு சொல்லியும் மனைவி தன் பேச்சைக் கேட்காததால் கோபமடைந்த கணவர், இறுதியாக 112 என்ற அவசர சேவை எண்ணை அழைத்து போலீசாரிடம் புகார் அளித்தார். </p><h2><strong>கணவர் புகார்</strong></h2><p>குடும்பத்தில் சண்டை நடப்பதாகத் தகவல் கிடைத்ததும், போலீசார் பதறியபடி உடனடியாக கிராமத்திற்கு சென்றனர். கிராமத்திற்கு வந்த போலீசார் உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். தனக்கு தினமும் பொரித்த குழம்பு வேண்டும் என்றும், ஆனால் தன் மனைவி எப்போதும் சாம்பார் போன்றவற்றை செய்து தன்னைப் புறக்கணிப்பதாகவும் கணவர் கூறினார். </p><p>மறுபுறம், மனைவியும் தனது வாதத்தை விளக்கினார். பின்னர், போலீசார் அவர்கள் இருவரையும் அமர வைத்து அமைதியாகப் பேச வைத்தனர். அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடனும் இது குறித்து விவாதித்து, ஒரு சிறிய விஷயத்தைப் பெரிய சண்டையாக மாற்ற வேண்டாம். </p> <h2><strong>போலீசார் அறிவுரை</strong></h2><p>இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும். நடுராத்திரியில் இப்படி பண்றீங்களேம்மா என்று தலையில் அடித்தபடி அறிவுரை கூறினர். </p><p>கணவன்-மனைவி இருவரும் ஒரு சமரசத்திற்கு வந்த பிறகு, போலீசார் புகாரை முடித்து வைத்தனர். குழம்பு சமைக்கப்பட்ட விதம் குறித்து போலீசாரிடம் புகார் அளிப்பது ஒரு அரிதான சம்பவம் என்பதால், இந்த விஷயம் தற்போது உள்ளூரில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த எண்ணெய் பாலாக மாறிய அதிசயம்- பக்தர்கள் பரவசம்</title><link>https://www.maalaimalar.com/news/national/miracle-where-the-oil-used-for-the-abhishekam-of-the-shiva-lingam-turned-into-milk</link><comments>https://www.maalaimalar.com/news/national/miracle-where-the-oil-used-for-the-abhishekam-of-the-shiva-lingam-turned-into-milk#comments</comments><guid isPermaLink="false">eb3d8c89-07d6-4e15-a66e-60544e2ca174</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:27:59 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:27:59.377Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவலிங்கம்,அபிஷேகம்,பக்தர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/gf7q3ot4/tirupati.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த எண்ணெய் பாலாக மாறிய அதிசயம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/gf7q3ot4/tirupati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>எண்ணெய் பால்போல் வழிந்த காட்சியை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். சுற்று வட்டார பொதுமக்கள் கோவிலில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.</aside><h2><strong>எண்ணெய் அபிஷேகம்</strong></h2><p>ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சின்ன வெங்கடாம் பள்ளியில் சிவன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று பூசாரி ஒருவர் சிவலிங்கத்திற்கு எண்ணெய் அபிஷேகம் செய்தார்.</p><h2><strong>பக்தர்கள் பரவசம்</strong></h2><p>சிவலிங்கத்தின் மீது ஊற்றப்பட்ட எண்ணெய் பால் போல் மாறி வழிந்தோடியது. இந்த நிகழ்வு சுற்று வட்டார கிராமங்களில் காட்டுத் தீயாக பரவியது. இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். எண்ணெய் பால்போல் வழிந்த காட்சியை கண்டு பரவசம் அடைந்தனர். சுற்று வட்டார பொதுமக்கள் கோவிலில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>இந்த நிகழ்வுக்கான காரணம் குறித்து அறிவியல் பூர்வ விளக்கமோ அல்லது அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.</p><h2><strong>ஆய்வு செய்ய வேண்டும்</strong></h2><p>பக்தர்கள் தெய்வீக அதிசயமாக கருதும் நிலையில் சிலர் இதன் உண்மை நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>சிக்கிம் சுரங்கப்பாதை நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/20-workers-die-in-sikkim-tunnel-collapse</link><comments>https://www.maalaimalar.com/news/national/20-workers-die-in-sikkim-tunnel-collapse#comments</comments><guid isPermaLink="false">750561a4-b0bc-4a40-8d25-ef9899efe8d0</guid><pubDate>Wed, 22 Jul 2026 00:26:54 +0000</pubDate><atom:updated>2026-07-22T00:26:54.870Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிக்கிம்,sikkim,Tunnel collapse,நிலச்சரிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/bo3ffcw8/sikkim-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/bo3ffcw8/sikkim-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிக்கிமின் நாம்ச்சி மாவட்டத்தில், மீத்தேன் வாயு கசிவு என சந்தேகிக்கப்படும் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் 24 மணி நேரத்திற்கும் மேலாக உள்ளே சிக்கியிருப்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.</p><p>NHPC சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்தினருக்கும் ரூ.4 லட்சமும், காயமடைந்த ஒவ்வொருவருக்கும் ரூ.50,000-மும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் அறிவித்தார்.</p><p><strong>கருணைத் தொகை:</strong></p><p>பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சருடன் தொலைபேசியில் பேசி நிலைமையை ஆய்வு செய்ததோடு, மத்திய அரசின் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவருக்கு உறுதியளித்தார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் கருணைத் தொகையும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.</p><p>திங்கள்கிழமை மதியம் 1 மணிக்கு சற்று பின்னர், சமர்துங்கில் உள்ள NHPC டீஸ்டா ஆறாம் கட்ட நீர்மின் திட்டத்தின் இடிந்து விழுந்த சுரங்கப்பாதைக்குள், சில திட்ட அதிகாரிகள் உட்பட சுமார் 25 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.</p><p>"சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 25 பேரில், 20 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது," என நாம்ச்சி காவல் கண்காணிப்பாளர் (SP) சோனம் டி பூட்டியா தெரிவித்தார்.</p><p><strong>சிறப்புக் குழு:</strong></p><p>பல்வேறு முகமைகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். இதுவரை ஏழு உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மீதமுள்ள உடல்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.</p><p>NHPC அறிக்கையின்படி, பாறைகளுக்குள் சிக்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் மீத்தேன் வாயு திடீரென வெளியேறியதால், அடர்த்தியான புகையும் நச்சு வாயுக்களும் உருவாகி இந்த வெடிப்பு ஏற்பட்டது. சுரங்கப்பாதை இடிந்து விழுவதற்கு காரணமான மீத்தேன் வாயு வெடிப்புக்கான காரணத்தை கண்டறிய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.</p><p>முன்னதாக ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் நிலைமையை ஆய்வு செய்வதற்காக சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். அவர்கள் களத்தில் இருந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி, காயமடைந்த தொழிலாளர்களுக்கு சிறந்த மருத்துவ பராமரிப்பும் ஆதரவும் கிடைப்பதை உறுதிசெய்ய, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தினர்.</p><p>பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு விரைவில் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு, என்.எச்.பி.சி தலைவரும் நிர்வாக இயக்குனருமான பூபேந்தர் குப்தாவிற்கு அவர்கள் உத்தரவிட்டனர்.</p><p><strong>மௌன அஞ்சலி:</strong></p><p>இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காக ரங்போவில் ஒரு பிரத்யேக அமைப்பை நிறுவுமாறும், இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குறிப்பாக பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் ஆளுநரும் முதலமைச்சரும் நாம்ச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.</p><p>சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சிக்கிம் சட்டமன்றம் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இச்சம்பவம் தொடர்பாக தன்னிடம் பேசியதாக முதலமைச்சர் அவையில் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>குருகிராம் மருத்துவமனையில் வாங்சுக்கை சந்தித்தனர் நட்டா மற்றும் ஜிதேந்திர சிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/jp-nadda-jitendra-singh-meet-wangchuk-at-gurugram-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/national/jp-nadda-jitendra-singh-meet-wangchuk-at-gurugram-hospital#comments</comments><guid isPermaLink="false">1786256a-b0d6-4aad-87b3-e7c83d7605b7</guid><pubDate>Tue, 21 Jul 2026 23:44:59 +0000</pubDate><atom:updated>2026-07-21T23:44:59.832Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜேபி நட்டா,JP Nadda,ஜிதேந்திர சிங்,Jitendra Singh,Wangchuk,வாங்சக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/km9iquij/jp-n-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜே.பி. நட்டா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/km9iquij/jp-n-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் குருகிராமில் உள்ள மேடான்டா மருத்துவமனையில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மேல் சிகிச்சைக்காக சஃப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து குருகிராமில் உள்ள மேடான்டா மருத்துவமனைக்கு வாங்சுக் மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>"மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் மருத்துவமனையில் சோனம் வாங்சுக்கை சந்தித்தனர்," என்று ஒரு வட்டாரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.</p><p><strong>தீவிர சிகிச்சை:</strong></p><p>பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் மூலம் வாங்சுக் மேடான்டா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவர் உள் மருத்துவ நிபுணரான டாக்டர் சுஷீலா கட்டாரியாவின் மேற்பார்வையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேடான்டா மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>முன்னதாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி ஐகோர்ட் அனுமதி அளித்ததை அடுத்து நேற்று (ஜூலை 21) மாலை அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.</p><p><strong>தனியார் மருத்துவமனை:</strong></p><p>டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், குருகிராமில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து மேதந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.</p><p>இது தொடர்பாக சப்தர்ஜங் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "டெல்லி ஐகோர்ட் உத்தரவுப்படி, சோனம் வாங்சுக், இன்று மாலை 6:40 மணியளவில் மேல் சிகிச்சைக்காக மேதந்தா மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரது மருத்துவ ஆவணங்கள், பரிசோதனை விவரங்கள், சிகிச்சை ஆவணங்கள் அனைத்தும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது," என கூறப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 21-ஆக உயர்வு, 5.64 லட்சம் பேர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/21-killed-in-a-day-as-flood-situation-worsens-in-assam</link><comments>https://www.maalaimalar.com/news/national/21-killed-in-a-day-as-flood-situation-worsens-in-assam#comments</comments><guid isPermaLink="false">eb41f8de-4bc8-4161-afc3-ccbffb58bcb9</guid><pubDate>Tue, 21 Jul 2026 22:29:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T22:29:04.463Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death,அசாம் வெள்ளம்,Assam Floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vrl9mtmj/asm-flds.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vrl9mtmj/asm-flds.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாமில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்தது; இதில் மேலும் 21 பேர் உயிரிழந்தனர் மற்றும் 16 மாவட்டங்களில் 5.64 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/assam-floods">அசாம்</a> மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மிக மோசமாக பாதிக்கப்பட்ட சிவசாகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன; அதைத் தொடர்ந்து சாரைடியோவில் 5 பேரும், கோலாகாட்டில் 2 பேரும், ஜோர்ஹட்டில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.</p><p><strong>சமூக வலைதள பதிவு:</strong></p><p>இந்த உயிரிழப்புகளுடன் சேர்த்து, மாநிலத்தில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக, மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட இருப்பதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.</p><p>"ஆற்றுப் படுகையின் மேல் பகுதிகளில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக உருவான சமீபத்திய அசாம் வெள்ளம் எங்கள் மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நிவாரண பணிகளை ஆய்வு செய்வதற்காக, சாரைடியோ, நசிரா, சிவசாகர், சோனாரி, ஜோர்ஹட் மற்றும் டியோக் ஆகிய இடங்களில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களை நான் பார்வையிடவுள்ளேன்" என்று அவர் சமூக வலைதள பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.</p><p><strong>5.64 லட்சம் பேர் பாதிப்பு:</strong></p><p>கோலாகாட், காம்ரூப், ஹோஜாய், திப்ருகார், பிஸ்வநாத், தேமாஜி, சோனித்பூர், உதல்குரி, நாகான், சாரைடியோ, காம்ரூப் (மெட்ரோ), ஜோர்ஹட், டின்சுகியா, கார்பி ஆங்லாங், லக்கிம்பூர் மற்றும் சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 5,64,600-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்களன்று 15 மாவட்டங்களில் 3.63 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.</p><p>44 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 872 கிராமங்கள் தொடர்ந்து வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>சிவசாகரில் மொத்தம் 3,59,535 பேரும், அதைத் தொடர்ந்து ஜோர்ஹட்டில் 87,662 பேரும், சாரைடியோவில் 72,646 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><strong>மீட்பு பணிகள்:</strong></p><p>இடம்பெயர்ந்த 12,284 பேர் தங்கியுள்ள 71 நிவாரண முகாம்களும், 202 நிவாரண பொருட்கள் விநியோக மையங்களும் தற்போது செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>ரெயில் தண்டவாளங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததால், தொடர்ந்து இரண்டாவது நாளாக ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item></channel></rss>