<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 02 Sep 2026 14:41:57 +0000</lastBuildDate><item><title>வெளிநாடு வாழ் இந்தியர்களின் 100 பில்லியன் டாலர் முதலீடு: வரலாற்று உச்சத்தை தொட்டது இந்திய ரிசர்வ் வங்கி!</title><link>https://www.maalaimalar.com/news/national/100-billion-dollar-fcnr-deposits-boost-indias-forex-reserves</link><comments>https://www.maalaimalar.com/news/national/100-billion-dollar-fcnr-deposits-boost-indias-forex-reserves#comments</comments><guid isPermaLink="false">d4a968fe-53f9-4cc5-8690-10378ab788bc</guid><pubDate>Wed, 02 Sep 2026 14:30:39 +0000</pubDate><atom:updated>2026-09-02T14:30:39.760Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,NRI,இந்திய ரிசர்வ் வங்கி,FCNR,Non-Resident Indians,வெளிநாடு வாழ் இந்தியர்கள்,எஃப்.சி.என்.ஆர்,வைப்புநிதித் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/x8nmbu35/fcnr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ FCNR  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/x8nmbu35/fcnr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், இந்த 100 பில்லியன் டாலர் நிதியோட்டம் இந்திய பொருளாதாரத்திற்குப் பெரும் பலமாக உருவெடுத்துள்ளது. </p><p>வெளிநாடு வாழ் இந்தியர்களைக் கவரும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய 'எஃப்.சி.என்.ஆர்(பி)' வைப்புநிதித் திட்டம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. வெறும் மூன்று மாதங்களில் 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக முதலீடுகள் குவிந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்ட காலக்கெடுவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே இத்திட்டத்தை ரிசர்வ் வங்கி நிறைவு செய்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/india-rs-20000-crore-crypto-fraud-sc-says-extradite-main-accused-subhash-sharma">ரிசர்வ் வங்கியின்</a> இந்த வெளிநாட்டுச் செலாவணி அல்லாத வங்கி வைப்புத் திட்டம் ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டு செப்டம்பர் 30 வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் 80 பில்லியன் டாலர் வரை மட்டுமே முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 31 அன்றே 100 பில்லியன் டாலரைத் தாண்டி சாதனை படைத்தது. அதிகப்படியான நிதியோட்டத்தைக் கையாளவும், எதிர்காலப் பொருளாதார சமநிலையைப் பேணவும் ஆகஸ்ட் 31 தேதியே ரிசர்வ் வங்கி நிறைவு செய்துள்ளது.</p><h2>வரலாறு கா<strong>ணாத கையி</strong>ருப்பு</h2><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், இந்த 100 பில்லியன் டாலர் நிதியோட்டம் இந்திய பொருளாதாரத்திற்குப் பெரும் பலமாக உருவெடுத்துள்ளது. இதன் விளைவாக இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 729.3 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற எக்காலத்தும் இல்லாத வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தை எட்டியுள்ளது.</p><p>எஃப்.சி.என்.ஆர்(பி) திட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது டாலர் சேமிப்புகளை இந்திய வங்கிகளில் வட்டி இழப்பின்றி டெபாசிட் செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்த பிரம்மாண்ட டாலர் வரத்து இந்திய ரிசர்வ் வங்கிக்குச் அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட்டு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தவும், நாட்டின் கணக்கு பற்றாக்குறையைச் சீர்செய்யவும் மிகப்பெரிய பலத்தை வழங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அயோத்தி ராமர் கோயிலின் அறக்கட்டளைக்கு சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல்  ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! </title><link>https://www.maalaimalar.com/news/national/retired-air-marshal-jitendra-mishra-appointed-as-ceo-of-the-ayodhya-ram-temple-trust</link><comments>https://www.maalaimalar.com/news/national/retired-air-marshal-jitendra-mishra-appointed-as-ceo-of-the-ayodhya-ram-temple-trust#comments</comments><guid isPermaLink="false">d9a779de-6e1e-441a-bc16-8790b894b94b</guid><pubDate>Wed, 02 Sep 2026 13:34:44 +0000</pubDate><atom:updated>2026-09-02T13:34:44.901Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>CEO,Ram temple trust,Jeetendra Mishra,ராமர் கோயில் அறக்கட்டளை,தலைமைச் செயல் அதிகாரி,ஜிதேந்திர மிஸ்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/du58lc8r/New-Project-2026-09-02T190425.432.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அயோத்தி ராமர் கோயிலின் அறக்கட்டளைக்கு சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல்  ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/du58lc8r/New-Project-2026-09-02T190425.432.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின்  (ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை) முதல் தலைமைச் செயல் அதிகாரியாக ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தியில் நடைபெற்ற அறக்கட்டளைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இப்பதவிக்காக பெறப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்வுக்குழு இறுதியாக இவரை தேர்வு செய்துள்ளது.</p><p>ஜிதேந்திர மிஸ்ரா இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். </p><p>சமீபத்தில் கோயில் உண்டியல் காணிக்கை மற்றும் நிதி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, நிர்வாக வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க இந்த சிஇஓ பதவி உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>புதிய சிஇஓ கோயிலின் ஒட்டுமொத்த நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகள், கூட்ட நெரிசல் மேலாண்மை, பணியாளர்கள் மற்றும் நிதிச் செயல்பாடுகளைக் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்மீக மற்றும் மத சடங்குகளில் அவர் தலையிட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் அறக்கட்டளையின் இடைக்காலப் பொதுச் செயலாளர் கிருஷ்ண மோகனுக்குப் பதிலாக, தற்போது அதன் பொருளாளராக இருக்கும் கோவிந்த் தேவ் கிரி, பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மகேஷ் பக்சந்த்கா புதிய பொருளாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>எதற்கு இந்த திடீர் நியமனம்?</h2><p>ராமர் கோயில் அறக்கட்டளையின் நன்கொடை கையாடல் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து அதன் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க இந்த பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை எட்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சம்பத் ராய் ராஜினாமா செய்துள்ளார்.</p><p>மேலும் இரண்டு அறங்காவலர்களும் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.</p><p>இந்நிலையில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், சுவாமி கமல்நாயன் தாஸ், தற்காலிக பொதுச் செயலாளர் டாக்டர் கிருஷ்ண மோகன், அறங்காவலர் மஹந்த் தினேந்திர தாஸ், பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி உள்ளிட்டோர் கலந்து ஒரு கூட்டத்தைக் கூட்டி இந்த சிஇஓ பதவியை கொண்டு வந்துள்ளனர். </p><h2>யார் இந்த மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா?</h2><p>உத்தரப் பிரதேசத்தின் தியோரியாவைச் சேர்ந்த மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா பல்வேறு விருதுகளைப் பெற்ற ஒரு ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். 38 ஆண்டுகளாக விமானப்படை பிரிவில் பணியாற்றியுள்ளார்.</p><p>இவர்தான் ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையின் போது இந்தியாவின் மேற்கு விமானப் படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார். </p>]]></content:encoded></item><item><title>தங்கக் கொள்முதல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க பிரதமர் மோடி வலியுறுத்துவது ஏன்? சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/modis-call-to-cut-gold-buying-and-overseas-trips-sridhar-vembu-on-the-economic-reasons</link><comments>https://www.maalaimalar.com/news/national/modis-call-to-cut-gold-buying-and-overseas-trips-sridhar-vembu-on-the-economic-reasons#comments</comments><guid isPermaLink="false">173fdaa3-deef-4963-9a94-1bb1995e1d19</guid><pubDate>Wed, 02 Sep 2026 12:36:57 +0000</pubDate><atom:updated>2026-09-02T12:36:57.250Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,Prime Minister Modi,Sridhar Vembu,ஸ்ரீதர் வேம்பு,ZOHO,GDP,பிரதமர் மோடி,சோஹோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/qlj3bdmq/sri.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sridhar Vembu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/qlj3bdmq/sri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீத என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், நாடு தனது அந்நியச் செலாவணி கையிருப்பை எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது அவசியம் என்று ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) 7.8 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையிலும், தங்கம் வாங்குவது, வெளிநாட்டுச் சுற்றுலா செல்வது மற்றும் வெளிநாடுகளில் திருமணங்களை நடத்துவது ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமரின் இந்த வேண்டுகோளுக்குப் பின்னணியில் உள்ள பொருளாதாரக் காரணங்கள் குறித்து 'சோஹோ' நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விரிவான விளக்கம் அளித்துள்ளார்.</p><p>இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீத என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், நாடு தனது அந்நியச் செலாவணி கையிருப்பை எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது அவசியம் என்று <a href="https://www.maalaimalar.com/news/national/tech-professionals-must-learn-sales-to-succeed-sridhar-vembu">ஸ்ரீதர் வேம்பு</a> சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நாட்டின் பொருளாதாரம் வேகமடையும் போது, இறக்குமதிக்கான தேவையும் கூடவே அதிகரிக்கும். இந்தியா தற்போதும் கணிசமான அளவு எரிசக்தி மற்றும் அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களுக்காக பிற நாடுகளை சார்ந்துள்ளதால், அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>ஜப்பான், தென்கொரியா, தைவான் மற்றும் சீனா ஆகிய கிழக்காசிய நாடுகள் தங்களது அதிவேக வளர்ச்சிக் கட்டத்தில் இருந்தபோது, இதேபோன்று அந்நியச் செலாவணியைச் சேமிப்பதில் மிகக் கடுமையாகச் செயல்பட்டதாக ஸ்ரீதர் வேம்பு நினைவு கூர்ந்துள்ளார். இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்து வந்தாலும், அந்த ஏற்றுமதிப் பொருட்களின் தயாரிப்பிற்குத் தேவையான அதிநவீன இயந்திரங்கள், சிபியு , ஜிபியு மற்றும் மென்பொருட்களை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. எனவே தங்கம் வாங்குதல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக அந்நியச் செலாவணி வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.</p><h2>சுயசார்<strong>பு இலக்கு</strong></h2><p>இந்தியாவின் தற்போதைய சூழ்நிலையை வேகமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனத்துடன் ஒப்பீட்டுப் பேசியுள்ளார் ஸ்ரீதர் வேம்பு. ஒரு நிறுவனம் தனது தொழில் விரிவாக்கத்திற்கு முதலைச் சேமித்து முதலீடு செய்வதைப் போல, இந்தியாவும் தன் வளர்ச்சிக்குத் தேவையான மூலதனத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அதிநவீன தொழில்நுட்பங்களை சொந்தமாக உருவாக்கும் வரை இந்த அந்நியச் செலாவணி பாதுகாப்பு முறை அவசியமானது என்றும், அதற்குச் சில தசாப்தங்கள் ஆகலாம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜாஜர் ரெயில்வே தண்டவாளம் அருகே பறவை ஆர்வலரின் கண்டுபிடிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/discovery-of-red-backed-shrike-near-jhajjar-railway-track</link><comments>https://www.maalaimalar.com/news/national/discovery-of-red-backed-shrike-near-jhajjar-railway-track#comments</comments><guid isPermaLink="false">0f3a809b-c2e7-4c07-80bc-594a61b0a324</guid><pubDate>Wed, 02 Sep 2026 10:46:16 +0000</pubDate><atom:updated>2026-09-02T10:46:16.084Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>haryana,ஹரியானா,Jhajjar Bird,ஜாஜர் பறவை,Red-backed Shrike,ரெட்-பாக்டு ஸ்ட்ரைக்,Siberian Bird,சைபீரிய பறவை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/cp8e21r6/Jhajjar-Bird" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jhajjar Bird]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/cp8e21r6/Jhajjar-Bird?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/haryana">ஹரியானா </a>ஜாஜர் ரெயில் தண்டவாளம் அருகே ராகேஷ் அஹ்லாவத் ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவையை கண்டறிந்தார். இது சைபீரியாவிலிருந்து வழிதவறி வந்த இளம் பறவை என்று கண்டறியப்பட்டது.</p><p>ஹரியானா மாநிலம் ஜாஜர் மாவட்டத்தின் டிகல் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே, பறவை ஆர்வலரான ராகேஷ் அஹ்லாவத் என்பவர் தனது வழக்கமான பறவை கண்காணிப்பு பயணத்தின் போது ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் இந்த அரிய பறவையைக் கண்டறிந்துள்ளார்.</p><p>அங்குள்ள ஒரு புதரின் மீது அமர்ந்திருந்த இந்த பறவையின் தனித்துவமான தோற்றம் அவரை உடனடியாகக் கவர்ந்தது.</p><h2>வித்தியாசமான பறவை</h2><p>இதுகுறித்து ராகேஷ் அஹ்லாவத் கூறுகையில், "பொதுவாக நமது பகுதியில் நாம் காணும் ஸ்ட்ரைக் பறவைகள் நீண்ட வாலையும், பழுப்பு நிற முதுகையும் கொண்டிருக்கும். </p><p>ஆனால், ரெட்-பாக்டு ஸ்ட்ரைக்  பறவை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இதன் மேல் பகுதி பழுப்பு நிறத்திலும், கீழ் பகுதி வெளிறிய நிறத்திலும், உடல் முழுவதும் செதில் போன்ற கருமையான அமைப்புகளையும் கொண்டிருந்தது." என்றார். </p><p>மேலும், இந்தப் பறவை தனது வாலை அடிக்கடி விரித்து மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் அசைத்த விசித்திரமான நடத்தையும் அவரது கவனத்தை ஈர்த்துள்ளது.</p><h2>ரஷ்யாவில் இருந்து வந்த குட்டி வேட்டைக்காரன்</h2><p>இந்த ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவைகள் மத்திய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE">ரஷ்யா </a>மற்றும் சைபீரியா போன்ற குளிர்ந்த பகுதிகளில் இருந்து இலையுதிர்காலமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியாவுக்குப் புலம்பெயர்கின்றன. </p><p>இந்தியாவில் இவை வழக்கமாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத்தின் </a>கட்ச் பகுதியில்தான் அதிகம் காணப்படும்.</p><h2>பறவையின் சிறப்பம்சங்கள்</h2><p>இவை சிறிய அளவிலான வேட்டைப் பறவைகளாகும். முட்கள் நிறைந்த புதர்கள் மற்றும் திறந்தவெளிப் பிரதேசங்களில் அமர்ந்து கொண்டு பெரிய பூச்சிகள், சிறிய பறவைகள் மற்றும் எலிகளை வேட்டையாடும்.</p><p>வேட்டைப் பறவையாக இருந்தாலும், இவை புதர்களில் மிக அமைதியாக அமர்ந்திருக்கக் கூடியவை. இதனால் எளிதில் மனிதர்களின் கண்களுக்குத் தட்டுப்படாது.</p><p>ஜாஜரில் காணப்பட்ட இந்த பறவை இன்னும் முழு வளர்ச்சியடையாத இளம் பறவையாகும். இது தனது வழக்கமான பயணப் பாதையிலிருந்து வழிதவறி ஹரியானாவிற்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.</p><h2>ஹரியானாவின் முதல் அதிகாரப்பூர்வ பதிவு</h2><p>டெல்லி பறவைகள் சங்கத்தின் மூத்த பறவை ஆய்வாளரான பங்கஜ் குப்தா இதுகுறித்து தெரிவிக்கையில், "ஹரியானாவில் ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவை ஆவணப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்பதால், இது பறவையியல் துறையில் ஒரு மிக முக்கியமான பதிவாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>ரெயில்வே தண்டவாளத்தின் ஓரங்களில் உள்ள முள் புதர்கள் மற்றும் திறந்தவெளிகள் இந்த பறவைகள் வேட்டையாடுவதற்கு ஏற்ற சூழலை வழங்கியதால், இது தற்காலிகமாக இங்கு தங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட் மற்றும் ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்த 12-ஆம் வகுப்பு கேரள மாணவர் - ஐஐடியில் பொறியாளராக நியமனம் </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-iit-website-hacked-by-class-12-student-hired-as-iit-engineer</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-iit-website-hacked-by-class-12-student-hired-as-iit-engineer#comments</comments><guid isPermaLink="false">a558adbe-a0ed-44d9-8fa0-3968a13f0e2a</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:51:35 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:51:35.567Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,IIT,JEE Advanced,ஐஐடி,ஜேஇஇ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/t0qr48jn/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IIT Kanpur cyber security hire]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/t0qr48jn/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கேரளாவை சேர்ந்த 16 வயதான இளைஞர் ஒருவர், கடந்த ஜூன் மாதத்தில் நீட் மறுதேர்வு இணையதளத்திலும், ஐஐடி ரூர்க்கி பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஜே.இ.இ அட்வான்ஸ்டு இணையதளத்திலும் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, தற்போது அந்த இளைஞரை ஐஐடி கான்பூர் நிறுவனம் சைபர் பாதுகாப்பு பொறியாளராக பணியில் சேர்த்துள்ளது.</strong></em></p><h3><strong>கேரள இளைஞர்</strong></h3><p>கேரளாவில் உள்ள திருவல்லைக்கு அருகில் உள்ள மன்னாரை பூர்வீகமாக கொண்ட ரைலன் அணில் தற்போது தனது பெற்றோர்களுடன் துபாயில் வசித்து வருகிறார். 16 வயதான அணில் துபாயில் உள்ள சிபிஎஸ்இ தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.</p><p>இவரது தந்தை 1999-இல் துபாய்க்கு குடிபெயர்ந்து, அல்-பூஃட்டைம் என்ற நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அணில் தனது சிறுவயதில் இருந்தே ஹாலிவுட் படங்களான ‘தி மேட்ரிக்ஸ்’ மற்றும் ‘மிஸ்டர் ரோபோட்’ ஆகிய கதைகளில் வரும் ஹேக்கர்களால் ஈர்க்கப்பட்டுள்ளார்.</p><p>இதன் காரணமாக இவர் 8-ஆம் வகுப்பு முதலே ஹேக்கிங்-இல் தீவிரமாக ஆர்வம் கொண்டு, அதனை கற்க தொடங்கினார். இதையடுத்து இவர் 10-ஆம் வகுப்பில் Grubby.ai என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள குறைகளை கண்டறிந்து, அதுகுறித்து புகார் அளித்தார்.</p><p>இந்த அனுபவத்தின் மூலம் அவர் ஹேக்கிங் துறையில் மிக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து இவர் கடந்த ஜூன் மாதத்தில் நடந்த <a href="https://www.maalaimalar.com/topic/நீட்-தேர்வு">நீட்</a> மறுதேர்வு இணையதளத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்தார்.</p><h3><strong>நீட் இணையதளம்</strong></h3><p>அந்த இணையதளத்தில் நீட் தேர்வு மையங்களை நிர்வகிப்பது மற்றும் பார்வையாளர்கள் தொடர்பான தகவல்களை அணுகுவது உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட தகவல்கள் இருந்ததை அவர் கண்டறிந்தார்.</p><h3><strong>ஜேஇஇ அட்வான்ஸ்டு இணையதளம்</strong></h3><p>மேலும் ஐஐடி ரூர்க்கி பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தளத்துடன் தொடர்புடைய கிளவுட் சேமிப்பில் இருந்த குறைபாடுகளையும் அவர் கண்டறிந்தார்.</p><p>ஜேஇஇ இணையதளத்தில் தேர்வர்களின் அனுமதி அட்டைகளை (ஹால் டிக்கெட்) மற்றும் தேர்வு முடிவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை பாதுகாப்பற்ற முறையில் இருந்தது அவருக்கு தெரியவந்தது</p><p>இதையடுத்து இணையதளத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து, அவர் உரிய நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து அதற்கு உரிய பதில் கிடைக்காததால், அதில் இருந்த குறைபாடுகளை பொதுவெளியில் தெரிவித்தார்.</p><p>இதற்கிடையில் அவர் பொதுவெளியில் தெரிவித்த சில நாட்களுக்குள், இணையதளத்தில் இருந்த குறைபாடுகள் சரி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.</p><h3><strong>ஐஐடி ரூர்க்கி</strong></h3><p>இதுகுறித்து ஐஐடி ரூர்க்கி கூறுகையில், இணையதளத்தில் உள்ள சேமிப்பகம் படிக்க மட்டுமே முடியும் என்றும், அதன் தரவுகளை மாற்றவோ அல்லது நீக்கவோ முடியாது என்று பதிலளித்தது.</p><p>இந்த நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள ஐஐடி கான்பூர் பல்கலைக்கழகம், 16 வயது இளைஞர் அணிலை அணுகி, அதன் சைபர் பாதுகாப்பு புத்தாக்க மையமான C31Hub-இல் இளநிலை சைபர் பாதுகாப்பு பொறியாளராக பணி அமர்த்தியுள்ளது.</p><h3><strong>ஐஐடி கான்பூர் இயக்குநர்</strong></h3><p>இதுகுறித்து ஐஐடி கான்பூர் இயக்குநர் மனிந்திர அகர்வால் கூறுகையில், “அனிலின் பணியையும் திறமைகளையும் கண்ட பிறகு, ஐஐடி கான்பூர் குழு அவரை அணுகியது. எங்கள் பொறியாளர்கள் அவருடன் கலந்துரையாடியபோது, சைபர் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான துறைகளில் அவருக்கு வலுவான திறன்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.</p><p>அதைத் தொடர்ந்து, அவரைப் பணியில் அமர்த்த முடிவு செய்தோம். அவர் துபாயில் வசிப்பதாலும், தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வருவதாலும், ஆலோசகராகத் தொலைவிலிருந்து பணிபுரிகிறார். அவரால் முழுநேரமாகப் பணியாற்ற முடியாது. பல்வேறு இணையதளங்களின் பாதுகாப்பு பகுப்பாய்வு செய்வதே அவரது முதன்மை பொறுப்பாகும்.</p><p>அனில் ஒரு சிறுவன் என்பதால், இந்த ஒப்பந்தம் நிறைவடைய கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது. அவரது தந்தை அனில் ஆபிரகாம், அவனது பாதுகாவலராகவும் இணைப் பொறுப்பாளர் உள்ளிட்ட கடமைகளை உள்ளடக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.</p><p>அவரது பணிகள், மேற்பார்வையிடப்பட்ட, அபாயமற்ற கல்வி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.</p><p>ஐஐடி-க்களில் இதுவரையில் பணியமர்த்தப்பட்டவர்களில் மிக இளைய வயதுடையவர் இவர்தான்” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிராவில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்: தொடரும் கடத்தல் கும்பல் வேட்டை</title><link>https://www.maalaimalar.com/news/national/whale-ambergris-worth-rs-4-5-crore-seized-in-maharashtra</link><comments>https://www.maalaimalar.com/news/national/whale-ambergris-worth-rs-4-5-crore-seized-in-maharashtra#comments</comments><guid isPermaLink="false">dd3e25c1-1e00-44a9-86b9-58412962f646</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:03:46 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:03:46.101Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,ambergris,Whale Vomit,smuggling gangs,திமிங்கல எச்சம்,கடத்தல் கும்பல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/5qodjnjw/whale.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Whale Vomit ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/5qodjnjw/whale.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு மகாராஷ்டிர மாநிலத்தின் சாங்க்லி மாவட்டத்தில்  ரூ.4.5 கோடி மதிப்புள்ள ஆம்பர்ஹ்ரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை காவல் துறையினரும் வனத்துறையினரும் இணைந்து பறிமுதல் செய்துள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/india-rs-20000-crore-crypto-fraud-sc-says-extradite-main-accused-subhash-sharma">மகாராஷ்டிரா மாநிலம்</a> சாங்லி கிராமப்புற எல்லைக்குட்பட்ட காஸ்பே திக்ராஜ் பகுதியில், சாங்லி கிராமப்புற காவல் துறையினரும் வனத்துறையினரும் இணைந்து நடத்திய தீவிர ரோந்து பணியின் போது ரூ.4.5 கோடி மதிப்பிலான ஆம்பர்ஹ்ரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். சம்பவ இடத்தில் இரு பெட்டிகளில் இந்த விலையுயர்ந்த கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.</p><p>இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கோல்ஹாபூர் மாவட்டத்தின் குன்கி கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான அமோல் சித் என்பவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தொடர் விசாரணையில், சிந்துதுர்க் மாவட்டத்தின் மால்வன் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மூலம் இந்த திமிங்கல எச்சம் விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய அந்த முக்கிய நபரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>மும்பை<strong>-புனே சந்தைகள் இல</strong>க்கு</h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட இந்த திமிங்கல எச்சம் மும்பை மற்றும் புனே போன்ற பெருநகரங்களின் சட்டவிரோத சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தப்படவிருந்தது அம்பலமாகியுள்ளது.</p><h2>தொடரு<strong>ம் சோதனைக</strong>ள் </h2><p>இந்த நடவடிக்கைக்கு ஒரு நாளுக்கு முன்பாக, சிந்துதுர்க் மாவட்டம் குடால் பகுதியில் ரூ.2.4 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்திருந்தனர். இரண்டு நாட்களில் மட்டும் மேற்கு மகாராஷ்டிர பகுதியில் சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>ஸ்பெர்ம் திமிங்கலங்களின் செரிமான மண்டலத்தில் உருவாகும் இந்த மெழுகு போன்ற ஆம்பர்ஹ்ரிஸ் பொருள், விலையுயர்ந்த வாசனை திரவியங்களின் நறுமணம் நீண்ட நேரம் நிலைத்திருக்கப் பயன்படுகிறது. மேலும் சில நாடுகளில் நரம்பு மண்டலம் மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கான பாரம்பரிய மருந்துகளிலும் இது முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவதால் சர்வதேச சந்தையில் இதற்கு பெரும் தேவை நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய முதியவருக்கு நேர்ந்த கொடூரம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/elderly-man-back-from-america-cheated-in-india</link><comments>https://www.maalaimalar.com/news/national/elderly-man-back-from-america-cheated-in-india#comments</comments><guid isPermaLink="false">8a8166d2-fa7a-4cd3-9f52-cf71c18169be</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:02:58 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:02:58.212Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சைபர் மோசடி,Digital Arrest,Online Fraud,ஆன்லைன் மோசடி,வங்கி மோசடி,Mumbai Police,cyber scam,Senior Citizen Safety</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bg5283kt/Cyber-Scam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cyber Scam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bg5283kt/Cyber-Scam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத் </a>மாநிலம் சூரத் மாவட்டத்தின் பார்தோலி நகரைச் சேர்ந்தவர் பிரபுபாய் படேல் (82). இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்று மிசிசிப்பி மாகாணத்தில் குடியேறினார். </p><p>அங்கு பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு, கடந்த 2007 ஆம் ஆண்டு தனது முதல் மனைவியுடன் பார்தோலி நகரில் வசித்து வருகிறார்கள். இவர்களது மூன்று பிள்ளைகளும் தற்போது அமெரிக்காவிலேயே வசித்து வருகின்றனர்.</p><p>கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி, பிரபுபாய் படேலின் வாட்ஸ்அப் எண்ணிற்கு "மும்பை காவல்துறை தலைமையகம்" என்ற பெயரில் ஒரு செய்தி வந்துள்ளது. அதைத் தொடர்ந்து அதே எண்ணில் இருந்து ஒரு அழைப்பும் வந்துள்ளது.</p><h2>ரூ.122 கோடி மோசடி புகார் என மிரட்டல்</h2><p>அழைப்பில் பேசிய ஒரு பெண், தான் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பை </a>காவல்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். </p><p>பிரபுபாயின் ஆதார் விபரங்களைப் பயன்படுத்தி ஒரு வங்கி கணக்கு தொடங்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் ரூ.122 கோடி அளவிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறி பிரபுபாயை மிரட்டியுள்ளார்.</p><p>மேலும், அவர் 'டிஜிட்டல் கைது' செய்யப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினரின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்படுவதாகவும்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF"> சைபர் குற்றவாளிகள்</a> பயமுறுத்தியுள்ளனர். </p><p>காவல்துறைக்கு ஒத்துழைக்க மறுத்தால் அவரது வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.</p><p>பின்னர், மற்றொரு நபர் தன்னை மும்பை உயர்காவல்துறை அதிகாரி என்று கூறிக்கொண்டு, "வழக்கில் இருந்து தப்பிக்க உடனடியாக பணத்தை ஏற்பாடு செய்யுங்கள். </p><p>விசாரணை முடிந்ததும் இந்த பணம் உங்களுக்கே திருப்பித் தரப்படும்" என்று நம்பும்படி பேசியுள்ளார்.</p><h3>11 நாட்களில் ரூ.2.96 கோடி பரிமாற்றம்</h3><p>பயந்துபோன பிரபுபாய் படேல், மோசடி கும்பல் கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட 11 நாட்களில் மொத்தம் ரூ.2 கோடியே 96 லட்சம் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார்.</p><p>ஆகஸ்ட் 31 ஆம் தேதி, பிரபுபாய் அமெரிக்காவில் இருக்கும் தனது மகன்களிடம் இந்த விபரங்களை போனில் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மகன்கள், இது சைபர் மோசடி என்பதை உணர்ந்து உடனடியாக காவல்துறையை அணுகுமாறு தந்தைக்கு அறிவுறுத்தினர்.</p><h2>தீவிர விசாரணையில் சைபர் கிரைம் போலீஸ்</h2><p>பார்தோலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வி.ஏ. செங்கல் தலைமையிலான போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். </p><p>சைபர் கிரைம் சிறப்புப் பிரிவினரும் இந்த விசாரணையில் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><h2>சைபர் நிபுணர்களின் எச்சரிக்கை</h2><p>இதுகுறித்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">சைபர் குற்றப்பிரிவு நிபுணர்</a> பேராசிரியர் திரிவேணி சிங் கூறுகையில்:</p><p>"சட்ட அமலாக்க அமைப்புகளின் மீதான பயம் மற்றும் சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் முதியவர்களே இவர்களின் முக்கிய இலக்காக மாறுகிறார்கள். </p><p>எந்தவொரு அரசு அல்லது காவல் துறையும் போன் மூலம் யாரையும் கைது செய்யாது, விசாரணையின் பெயரில் பணத்தையும் கோராது. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக இணைப்பைத் துண்டித்துவிட்டு காவல்துறையைத் தொடர்பு கொள்ள வேண்டும்." என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.20,000 கோடி கிரிப்டோகரன்சி மோசடி: துபாயில் தலைமறைவாக உள்ள சுபாஷ் சர்மாவை நாடு கடத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/india-rs-20000-crore-crypto-fraud-sc-says-extradite-main-accused-subhash-sharma</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/india-rs-20000-crore-crypto-fraud-sc-says-extradite-main-accused-subhash-sharma#comments</comments><guid isPermaLink="false">2d6ebebb-68e1-4894-af92-12896fb254dd</guid><pubDate>Wed, 02 Sep 2026 08:46:46 +0000</pubDate><atom:updated>2026-09-02T08:46:46.922Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>cryptocurrency scam,கிரிப்டோகரன்சி மோசடி,cryptocurrency fraud,உச்சநீதிமன்றம்,Subhash Sharma,Corvio Coin,கிரிப்டோகரன்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/pppb5n3q/crypto.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cryptocurrency scam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/pppb5n3q/crypto.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய ரூ.20,000 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி மோசடி வழக்கில் முதன்மை குற்றவாளியான சுபாஷ் சர்மாவை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு, சிபிஐ மற்றும் இமாச்சல பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>2.5 லட்<strong>சம் முதலீட்டாளர்க</strong>ளை ஏமாற்றி துபாயில் தஞ்சம்</h2><p>இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சுபாஷ் சர்மா, 'கோர்வியோ காயின்'  உள்ளிட்ட போலி டிஜிட்டல் நாணயங்கள் மற்றும் பொன்சி திட்டங்கள் மூலம் சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டார். 2023-ஆம் ஆண்டு இந்த மோசடி தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்ததை அறிந்த முதன்மை குற்றவாளி <a href="https://www.maalaimalar.com/news/national/sco-summit-centre-for-security-threats-among-key-decisions-as-india-highlights">சுபாஷ் சர்மா</a>, உடனடியாக இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பாதுகாப்பாகத் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.</p><h2>சொத்துக<strong>ள் பறிமுதல்</strong> </h2><p>இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்டிவாலா மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள்</p><p>*வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் சுபாஷ் சர்மாவை உடனடியாகக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சகம், சிபிஐ மற்றும் மாநில அரசு இணைந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>*குற்றவாளி சுபாஷ் சர்மா மற்றும் அவருடைய உறவினர்களின் பெயர்களில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் அனைத்தையும் உடனடியாகப் பறிமுதல் செய்து முடக்க வேண்டும்.</p><p>*இந்த பிரம்மாண்ட நிதி மோசடி வழக்கை விரைவாகவும் பிரத்யேகமாகவும் விசாரித்து முடிக்க இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்.</p><p>இந்த கிரிப்டோகரன்சி மோசடி வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் கடந்த 2025-ஆம் ஆண்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவரின் ஜாமீன் மனுவை விசாரித்த போதே, தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சுபாஷ் சர்மாவை நாடு கடத்த உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-மந்திரி, பிரதமர் பதவியில் 25 ஆண்டுகள்: மோடியின் பிறந்தநாளை ஒரு மாதம் கொண்டாட பாஜக-வினர் திட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/25-years-as-prime-minister-one-month-nationwide-modi-birthday-celebrations</link><comments>https://www.maalaimalar.com/news/national/25-years-as-prime-minister-one-month-nationwide-modi-birthday-celebrations#comments</comments><guid isPermaLink="false">5fb2b9b4-b4c6-4a50-acd7-904078629891</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:26:18 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:26:18.207Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,pm modi,பிரதமர் மோடி,Vadnagar Varanasi Yatra,வாட்நகர் வாரணாசி யாத்திரை,Seva Jyothi Yatra,சேவா ஜோதி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/jw6tj4fx/PM-Modi" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/jw6tj4fx/PM-Modi?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி </a>தொடர்ச்சியாக 3-வது முறையாக பிரதமர் பதவி வகித்து வருகிறார்.</p><p>மத்தியில் காங்கிரசுக்கு எதிராக அசுர பலம் பெற்று அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில கட்சிகளோடு இணைந்தும், தனியாகவும் பாஜக வெற்றி பெற்று வருகிறது.</p><p>இதன் காரணமாகவும் பிரதமரின் தனிப்பட்ட செல்வாக்காலும் தொடர்ந்து பாஜக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது.</p><h2>25 ஆண்டுகள்</h2><p>2001-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை குஜராத் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ள பிரதமர் மோடி 12 ஆண்டுகள் அந்த மாநிலத்தில் அசைக்க முடியாத தலைவராக திகழ்ந்தார்.</p><p>இதன் பின்னர் தேசிய அரசியலில் கால் பதித்த மோடி 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.</p><p>இதன் பின்னர் நடைபெற்ற 2 தேர்தல்களிலும் பா.ஜனதா வெற்றிவாகை சூடியதை தொடர்ந்து பிரதமர் பதவியையும் அவர் தொடர்ச்சியாக வகித்து வருகிறார்.</p><p>இதன் மூலம் 12 ஆண்டுகளை கடந்து அவர் பிரதமர் பதவியில் நீடிக்கிறார். </p><p>இப்படி முதல்-மந்திரி மற்றும் பிரதமர் பதவியில் 25 ஆண்டுகள் பணியாற்றியதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடியின் பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95">பாஜக </a>திட்டமிட்டுள்ளது.</p><h2>கால் நூற்றாண்டு</h2><p>நாட்டின் உயரிய பதவிகளில் கால் நூற்றாண்டு காலமாக பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டு உலக அரங்கிலும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார்.</p><p>இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் நலத்திட்ட உதவிகள் மற்றும் யாத்திரைகள் நடத்தவும் பாரதீய ஜனதா தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.</p><h2>ஆலோசனை</h2><p>இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா நிர்வாகிகள் திருச்சியில் இன்று ஆலோசனை நடத்தினார்கள். சமயபுரம் சுங்கச்சாவடி அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்துக்கு மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தலைமை தாங்கினார்.</p><p>தமிழக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.</p><p>முன்னதாக திருச்சி மாவட்ட தலைவர்கள் ஒண்டிமுத்து, அஞ்சாநெஞ்சன் ஆகியோர் வரவேற்றனர்.</p><p>இந்த கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள், பிரதமர் பிறந்தநாள் விழாவுக்காக பிரத்யேகமாக மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.</p><h2>அக்டோபர் 17-ந்தேதி வரை</h2><p>வருகிற 17-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 17-ந்தேதி வரை பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. அப்போது ரத்ததான முகாம்கள், தூய்மை பணிகள் ஆகியவையும் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><p>பிரதமர் மோடியின் பிறந்த ஊரான குஜராத் மாநிலம் வாட்நகரில் இருந்து அவர் வெற்றி பெற்ற வாரணாசி தொகுதி வரை மோட்டார்சைக்கிள் பேரணி மற்றும் சேவா ஜோதி யாத்திரை ஆகியவை நடைபெற உள்ளது. இதற்காக 10 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><p>பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நாடு தழுவிய அளவில் ஓவிய போட்டிகள், பேச்சு போட்டிகள் ஆகிய வையும் நடத்தப்பட உள்ளன.</p><h2>யாத்திரை தொடக்கம்</h2><p>ஒரே நாளில் வாட்நகர் மற்றும் வாரணாசி ஆகிய 2 இடங்களில் இருந்தும் ஒரே நாளில் 10 குழுவினர் இந்த யாத்திரை பயணத்தைத் தொடங்குகின்றனர்.</p><p>இந்த குழுக்களில் இடம் பெற்று இருப்பவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு ஒரு மாதத்திற்கு பிறகு வாட்நகரை வந்து அடைவார்கள். அதே நேரத்தில் புறப்படும் குழு ஒரு மாத காலம் பயணம் மேற்கொண்டு வாரணாசியை சென்று அடையும்.</p><h2>100 கிலோ மீட்டர்</h2><p>வெளி மாநிலங்களுக்கு செல்லும் குழுவினர் தினமும் சுமார் 100 கி.மீ. பயணம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. </p><p>இந்த பயணத்தின் போது மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்துகளில் சென்று பிரதமர் மோடியின் சாதனைகளை பாஜக -வினர் மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்து இருக்கிறார்கள்.</p><p>மத்திய அரசு மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் செயல்பாடுகள் ஆகியவற்றை பொதுமக்களோடு கலந்துரையாடு வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.</p><p>இதன் மூலம் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா தலைவர்கள் பிரதமர் மோடியின் ஒரு மாத பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை தீவிரமாக தொடங்கி இருக்கிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>ஷாங்காய் உச்சி மாநாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மையம் அமைப்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன்வைத்த இந்தியா</title><link>https://www.maalaimalar.com/news/national/sco-summit-centre-for-security-threats-among-key-decisions-as-india-highlights</link><comments>https://www.maalaimalar.com/news/national/sco-summit-centre-for-security-threats-among-key-decisions-as-india-highlights#comments</comments><guid isPermaLink="false">b53228f9-f48f-4fcf-b762-2d1a71d02615</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:05:52 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:05:52.829Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Shanghai Cooperation Organisation,pm modi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/xsy6t3op/PMModiSCO0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/xsy6t3op/PMModiSCO0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.</p><p>இந்த மாநாடு முடிவடைந்த நிலையில், SCO உறுப்பு நாடுகளின் பாதுகாப்பிற்கு எதிரான சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான உலகளாவிய மையம் உள்ளிட்ட 13 முக்கிய கோரிக்கைகளை இந்தியா முன்வைத்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து்ளளது.</p><p>இந்த மையத்தின் முக்கிய நோக்கம் பயங்கரவாதம், தீவிரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற நாடு கடந்த அச்சுறுத்தல்களை கையாள்வதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பகிர்வைச் சாத்தியமாக்குவதாகும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>SCO சாசனத்தில் திருத்தங்கள் மற்றும் சேர்த்தல்கள் தொடர்பான ஒரு நெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இது, அந்த அமைப்பின் வளர்ந்து வரும் நிறுவனக் கட்டமைப்பை வடிவமைப்பதில் இந்தியா பங்கேற்க வழிவகை செய்வதோடு, SCO கட்டமைப்பிற்குள் ஆங்கிலத்தைச் சேர்க்கும் முடிவும் ஒன்றாகும்.</p><p>SCO என்பது 2001-ல் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளால் நிறுவப்பட்ட ஒரு அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு அமைப்பாகும். அதன் பின்னர், இந்தியா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளை முழு உறுப்பினர்களாகச் சேர்த்து இது விரிவடைந்துள்ளது. மேலும் பல நாடுகள் பார்வையாளர் அல்லது உரையாடல்-பங்குதாரர் அந்தஸ்தைப் பெற்றுள்ளன.</p><p>SCO கட்டமைப்பு என்பது அடிப்படையில் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, மற்றும் பொருளாதார, அரசியல் ஒத்துழைப்புகளில் கவனம் செலுத்தும் ஒரு நிரந்தரமான யூரேசிய அரசுகளுக்கிடையேயான மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பாகும்.</p><p>எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பயங்கரவாதத்திற்கு எதிராக உறுப்பு நாடுகளிடையே நெருக்கமான ஒருங்கிணைப்பைச் சாத்தியமாக்கும் வகையில், SCO-வின் போதைப்பொருள் தடுப்பு மையத்தின் நிர்வாகக் குழுவிற்கான விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் முடிவும் ஒன்றாகும்.</p><h2>பிரதமர் மோடி</h2><p>இந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி பேசியதாவது:-</p><p>பயங்கரவாதம், மனித குலம் முழுவதற்கும் பலத்த சவாலாக உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், நாம் செயல்- பதிலடி என்ற அணுகுமுறையிலேயே தொடர்ந்து மூழ்கி இருக்க முடியாது.</p><p>பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்தல், ஆள்தேர்வு செய்தல், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் அளித்தல், மூளைச்சலவை செய்தல் போன்ற பயங்கரவாத கட்டமைப்பை முழுமையாக தகர்தெறிய நாம் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்.</p><h2>இரட்டை நிலைப்பாடு</h2><p>பயங்கரவாதம் என்ற தீவிர பிரச்சினையில் இரட்டை நிலைப்பாட்டுக்கு இடமில்லை என்று ஒரே குரலில் பேசி, நாம் தெளிவுபடுத்த வேண்டும்.</p><p>பயங்கரவாதத்தை கொள்கை ஆயுதமாக பயன்படுத்தி, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு நாம் வலிமையான செய்தி விடுக்க வேண்டும். பயங்கரவாதம் யாருடைய வியூக சொத்தாகவும் இருக்க முடியாது என்று கூற வேண்டும்.</p><p>இன்றைய உலகம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. ஒரு பிராந்தியத்தில் நடக்கும் மோதல், அந்த பிராந்தியத்து டன் அடங்கி விடாது, உலகம் முழுவதும் அதன் தாக்கம் உணரப்படும் என்பதை மேற்கு ஆசிய பிரச்சினையில் பார்த்தோம்.</p><h2>போர்க்களத்தில் தீர்க்கக்கூடாது</h2><p>எரிசக்தி பாதுகாப்பு, கடல்சார் வர்த்தகம், வினியோக சங்கிலித்தொடர் ஆகியவற்றை பாதித்ததை கவனித்தோம். தெற்குலக நாடுகள்தான் பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொண்டன.</p><p>எனவேதான், அனைத்து பதற்றங்களும், மோதல்களும் போர்க்களத்தில் அல்லாமல், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.</p><p>இணைப்பு வசதிகளை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை இந்தியா உணர்ந்துள்ளது. சந்தைகள் இணைப்பு, வர்த்தகம், வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் ஆகியவற்றை இந்தியா ஆதரிக்கிறது. அதே சமயத்தில், அத்தகைய முயற்சிகள் அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பது அவசியம்.</p><h2>இதயம்</h2><p>ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஒத்துழைப்பு, மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும். மக்களிடையிலான பிணைப்புதான் நமது மாபெரும் பலம்.</p><p>இந்தியாவைப் பொறுத்தவரை மாபெரும் நாகரிகங்கள், கலாசாரங்கள், சிந்தனைகள் ஆகியவற்றின் கலவைதான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. அடுத்த 25 ஆண்டுகள், மக்களுக்கும், மக்களுக்கும் இடையிலான தொடர்பு, நமது ஒத்துழைப்பின் இதயமாக இருக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் மலேரியா எதிர்ப்பு மாத்திரை உட்கொண்ட 2-ம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு: 50 பேருக்கு சிகிச்சை</title><link>https://www.maalaimalar.com/news/national/andhra-student-dies-after-taking-anti-malaria-tablet-over-50-hospitalised</link><comments>https://www.maalaimalar.com/news/national/andhra-student-dies-after-taking-anti-malaria-tablet-over-50-hospitalised#comments</comments><guid isPermaLink="false">25c1a6f7-d4f1-4f22-90c8-9896cb199978</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:22:19 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:22:19.769Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மலேரியா மருந்து,ஆந்திரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bah96t9t/Andhra001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிகிச்சை பெறும் கிராமவாசிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bah96t9t/Andhra001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குளோரோகுயின் (Chloroquine) என்பது ஒரு ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தாகும். இது மலேரியா ஒட்டுண்ணிக்கு நச்சுத்தன்மை வாய்ந்த ஹீம் (heme) எனும் பொருளின் அளவை ரத்தத்தில் அதிகரிப்பதன் மூலம் மலேரியாவைக் குணப்படுத்துகிறது. இது ஒட்டுண்ணியை அழித்து, தொற்று பரவுவதைத் தடுக்கிறது.</p><p>ஆந்திரா- தெலுங்கானா மாநில எல்லையில் உள்ள போலவரத்தில் உள்ளது கொல்லகுப்பா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள 71 பேருக்கு மலேரியா எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டது. மாத்திரை உட்கொண்டவர்களில் பலருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அதாவது காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.</p><h2>53 பேர் மருத்துவமனையில் அனுமதி</h2><p>இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் சுமார் 29 பேரை தெலுங்கானாவில் உள்ள மருத்துவமனையிலும், 24 பேரை உள்ளூர் சுகாதார மையத்திலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.</p><p>இதில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாதிவி ஜமுனா என்ற 7 வயது மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிகிச்சை பெற்று வரும் மற்றவர்கள் நிலை சீராக உள்ளது. இது தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.</p><p>மாவட்ட நிர்வாகம் மூன்று குழந்தைகள் நல மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுக்களைப் பணியமர்த்தியுள்ளது. இவர்கள் சிகிச்சை பெற்று வரும் நபர்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.</p><h2>சந்திரபாபு நாயுடு உத்தரவு</h2><p>சிறப்பான சிகிச்சை அளிக்க ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.</p><p>மேலும், சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் சம்பவம் தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தார்.</p><p>காக்கிநாடா அரசு பொது மருத்துவமனையைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு அந்த கிராமத்தை வந்தடைந்துள்ளது. விஜயவாடா, ராஜமகேந்திரவரம் மற்றும் காக்கிநாடாவிலிருந்து மேலும் மூன்று குழுக்கள் அவர்களுடன் இணையவுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி கோவிலில் ஆகஸ்டு மாதம் ரூ.137.44 கோடி உண்டியல் காணிக்கை</title><link>https://www.maalaimalar.com/spirituality/tirupati-temple-receives-rs-137-44-crore-in-hundi-offerings-in-august-month</link><comments>https://www.maalaimalar.com/spirituality/tirupati-temple-receives-rs-137-44-crore-in-hundi-offerings-in-august-month#comments</comments><guid isPermaLink="false">5270ee49-b03d-4374-871a-46a7b97387cf</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:19:12 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:19:12.536Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupati temple,திருப்பதி கோவில்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/1bxm9okl/tirupati.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திருப்பதி கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பதி கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/1bxm9okl/tirupati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆகஸ்டு மாதம் மட்டும் 24.56 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கையாக ரூ.137.44 கோடி வசூலானது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/திருப்பதி-கோவில்">திருப்பதி</a> ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் திரளான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர்.</p><h2><strong>ரூ.137.44 கோடி</strong></h2><p>பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததன் காரணமாக கடந்த மாதம் 10 நாட்கள் இலவச தரிசன டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்பட்டது. இதனால் தொலை தூரங்களில் இருந்து தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சிரமத்தை சந்தித்தனர். </p><p>ஆகஸ்டு மாதம் மட்டும் 24.56 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கையாக ரூ.137.44 கோடி வசூலானது. இந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க கூடும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.</p><h2><strong>தரிசன டோக்கன் ரத்து</strong></h2><p>இந்த நிலையில் நேற்று அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதனால் திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம், ஸ்ரீதேவி பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட 3 இடங்களில் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவது இன்று ரத்து செய்யப்பட்டது. தரிசன டிக்கெட் வாங்குவதற்காக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திருப்பதி மலைக்கு சென்றனர். நாளை மறுநாள் தரிசனத்திற்கான நேர ஒதுக்கீட்டு இலவச தரிசனம் டிக்கெட் நாளை முதல் வழக்கம் போல் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2><strong>12 மணி நேரம்</strong></h2><p>திருப்பதியில் நேற்று 78, 310  பேர் தரிசனம் செய்தனர். 34,573 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.38 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. </p><p>4.14 லட்சம் லாட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தால் பீகாரில் புதுவகையான மீன்கள் -  நச்சுத்தன்மையுள்ள மீன்களை சாப்பிட வேண்டாம் என அரசு எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-warning-on-fish-as-nepal-floodwaters-surge-into-india</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-warning-on-fish-as-nepal-floodwaters-surge-into-india#comments</comments><guid isPermaLink="false">f974d43e-7e9f-4219-a685-a039aa57b6f0</guid><pubDate>Wed, 02 Sep 2026 02:27:06 +0000</pubDate><atom:updated>2026-09-02T02:27:06.698Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,fish,மீன்கள்,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/iqrsct75/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar fish]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/iqrsct75/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில்</a> உள்ள கோசி மற்றும் கண்டக் ஆறுகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, அந்த வெள்ள நீரால் பீகார் மாநிலத்திற்குள் அடித்து கொண்டு வரப்பட்ட மீன்களை உண்ண வேண்டாம் என பீகார் மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h3><strong>நிலத்தடி நீரில் நச்சுத்தன்மை கலப்பு</strong></h3><p>நேபாளத்தின் மேற்கு சம்பாரன், கிழக்கு சம்பாரன், சீதாமர்ஹி, கிஷன்கஞ்ச், பூர்ணியா மற்றும் அராரியா உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீரில், பாதுகாப்பான வரம்பை தாண்டி நச்சுத்தன்மை கொண்ட ஆர்சனிக் காணப்படுகிறது.</p><p>கங்கை நதி ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் ஆர்சனிக் அமிலத்தின் அளவு (நச்சுத்தன்மை) மிக அதிகமாக கண்டறியப்பட்டுள்ளன.</p><p>மேலும் நேபாள எல்லையை ஒட்டியுள்ள ஏழு மாவட்டங்களில், ஆற்று நீரில் அதிக இரும்புச்சத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இதனால், நீர் துவர்ப்புச் சுவையைக் கொண்டிருப்பதுடன், பாத்திரங்கள் மற்றும் ஆடைகளில் சிவப்பு-மஞ்சள் கறைகளையும் ஏற்படுத்துகிறது.</p><p>நேபாளத்தில் தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து, டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா நோய்களுடன், தோல் மற்றும் கண் நோய்த்தொற்றுகளின் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம், இதேபோன்ற எச்சரிக்கை ஒன்றை நேபாள காவல்துறை விடுத்துள்ளது.</p><h3><strong>பீகாரில் பாயும் ஆற்று நீர்</strong></h3><p>இந்த நிலையில் நேபாளத்தின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நீர்வழிகளான கண்டக் மற்றும் கோசி ஆறுகள் வழியாக திரிசூலி ஆறு பீகார் மாநிலத்திற்குள் பாய்ந்து வருகிறது.</p><p>பீகாரில் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய வகையிலான மீன்கள் ஆற்றில் காணப்படுகின்றன. </p><p>அந்த வகையான மீன்களை சாப்பிட்ட சில நபர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறிப்பாக, கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் ஆற்று நீரில் இயல்பை விடப் பல மடங்கு அதிகமான அளவு இரும்புச்சத்து பதிவாகியுள்ளது.</p><p>வெள்ள நீரால் பீகாரின் எல்லை மாவட்டங்கள் முழுவதும் உள்ள விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், மாநிலத்தில் தானியங்கள் மற்றும் காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.</p><h3><strong>பீகார் ஆற்று நீர் மாசுபாடு</strong></h3><p>பீகார் வெள்ள நீரில் பிடிக்கப்பட்ட மீன்களில் கழிவு நீர் மாசுபாடு, பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நோய்கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளதால், அந்த மீன்களை வாங்கவோ, விற்கவோ, உட்கொள்ளவோ வேண்டாம் என விலங்கு மற்றும் மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.</p> <h2>எச்சரிக்கை</h2><p>பீகாரின் பால், மீன்வளம் மற்றும் கால்நடை வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெள்ள நீர் வடிகால்கள் மாசடைந்து இறந்த விலங்குகள் மற்றும் பிற நச்சுத் தன்மையுடன் தொடர்ந்து நீடித்து வருவதால், இந்த மீன்கள் உண்பதற்குப் பாதுகாப்பற்றவை என்றும், சுற்றுச்சூழல் நிலைமைகள் சீராகும் வரை வெள்ள நீரில் பிடிக்கப்பட்ட மீன்களை மக்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிருப்தி எம்.பி. சாயோனி கோஷ்</title><link>https://www.maalaimalar.com/news/national/saayoni-ghosh-met-vijay-at-his-office</link><comments>https://www.maalaimalar.com/news/national/saayoni-ghosh-met-vijay-at-his-office#comments</comments><guid isPermaLink="false">ea6c7543-6efb-4592-a2fc-9333ace5cd2e</guid><pubDate>Tue, 01 Sep 2026 22:59:25 +0000</pubDate><atom:updated>2026-09-01T22:59:25.769Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Saayoni Ghosh,சயோனி கோஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/g5hap4oh/Saayoni-Ghosh-met-Vijay.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Saayoni Ghosh met Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/g5hap4oh/Saayoni-Ghosh-met-Vijay.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி.யான சயோனி கோஷ், நேற்று (செவ்வாய்க்கிழமை) <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை சந்தித்தார். அப்போது, ​​மாநிலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வாய்ப்புகள் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றுக்கான விஜய்யின் தொலைநோக்கு பார்வையை அவர் பாராட்டினார்.</p><p>இந்த சந்திப்புக்கு பிறகு, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">மேற்கு வங்கம்</a> குறித்தும், அதன் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் மீதான தனது விருப்பம் குறித்தும் விஜய் அன்புடன் பேசியதாக கோஷ் தெரிவித்தார்.</p><p>"தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய்யைச் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது," என்று கோஷ் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>இதுகுறித்த பதிவில், "தமிழ்நாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வாய்ப்புகள், நல்லாட்சி ஆகியவற்றில் வேரூன்றிய அதன் எதிர்காலம் குறித்த தனது கருத்துகளை பகிர்ந்துகொண்ட அதே வேளையில், மேற்கு வங்கம் மற்றும் அதன் செழுமையான கலாச்சாரம், பாரம்பரியங்கள் மீதான தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.</p><p>அவரது அன்பான உபசரிப்புக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். தனது மாநிலத்திற்கான தொலைநோக்கு பார்வையை நனவாக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்," என்றும் அவர் மேலும் கூறினார்.</p><h2>திரைத்துறை சார்ந்த எம்.பி.:</h2><p>2021-இல் அரசியலில் நுழைந்த நடிகையும், பாடகியுமான கோஷ், ஜூன் 2026-இல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து (TMC) மற்ற அதிருப்தி எம்.பி.க்களுடன் வெளியேறிய பிறகு, தற்போது 'நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா' (NCPI) கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.யாக உள்ளார்.</p><p>அதிருப்தி குழுவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவர் திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.</p><p>கோஷ் பிப்ரவரி 2021-இல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்; அந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் ஆசன்சோல் தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். பா.ஜ.க. வேட்பாளர் அக்னிமித்ரா பாலிடம் அவர் தோல்வியடைந்தாலும், பின்னர் கட்சியின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார்.</p><h2>அபார வெற்றி:</h2><p>2024 மக்களவைத் தேர்தலில், திரிணாமுல் சார்பில் ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்ட கோஷ், 2.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். </p><p>ஒரு காலத்தில் திரிணாமுல் தலைமைக்கு நெருக்கமான முக்கிய இளம் தலைவராகக் கருதப்பட்ட அவர், 2026 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் கட்சி அடைந்த படுதோல்விக்கு பிறகு அதிருப்தி அடைந்து விலகினார்.</p><p>2011 முதல் மேற்கு வங்கத்தை தொடர்ந்து ஆட்சி செய்து வந்த திரிணாமுல் காங்கிரஸ், 294 இடங்களை கொண்ட சட்டமன்றத்தில் 80 இடங்களுக்கு சுருங்கியது. பா.ஜ.க. 207 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றதுடன், மாநிலத்தில் தனது முதல் அரசாங்கத்தையும் அமைத்தது.</p>]]></content:encoded></item><item><title>சிறுமியுடன் பாலியல் உறவு: முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்தாலும் போக்சோ பொருந்தும் - நீதிமன்றம் அதிரடி</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-hc-said-muslim-marriage-doesnt-shield-man-from-pocso-for-sex-with-17yo</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-hc-said-muslim-marriage-doesnt-shield-man-from-pocso-for-sex-with-17yo#comments</comments><guid isPermaLink="false">b9ae3a4f-bb0f-4f9d-b614-599057c97df1</guid><pubDate>Tue, 01 Sep 2026 17:57:33 +0000</pubDate><atom:updated>2026-09-01T17:57:33.330Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kerala HC,POCSO,கேரளா உயர்நீதிமன்றம்,போக்சோ,Muslim marriage,முஸ்லிம் திருமணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/d2dtezil/KL-HC.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kerala High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/d2dtezil/KL-HC.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>17 வயது சிறுமியிடம் தொடர்ச்சியாக பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய <a href="https://www.maalaimalar.com/news/national">கேரள</a> உயர் நீதிமன்றம் அதிரடியாக மறுத்தது. </p><p>முஸ்லிம் மத சடங்குகளின்படி திருமணம் நடைபெற்று இருந்தாலும், அது அவரை POCSO சட்டத்தின் (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம்) கீழ் வரும் குற்றப் பொறுப்பில் இருந்து காப்பாற்றாது என்று நீதிமன்றம் கூறியது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/keralam">மன்னார்க்காடு</a> காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நபர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜோபின் செபாஸ்டியன் தள்ளுபடி செய்தார். இவ்வழக்கு பட்டாம்பியில் உள்ள விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.</p><h2>பாலியல் குற்றத்திற்காக தண்டிக்கப்படலாம்:</h2><p>'இன்டிபென்டன்ட் தாட்' (Independent Thought) வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்த சட்டத்தை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், 18 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ளும் நபர், பாதிக்கப்பட்டவர் தனது மனைவியாக இருந்து, அவரது வயது 15 முதல் 18-க்குள் இருந்தாலும், இந்திய தண்டனை சட்டம் (IPC) பிரிவு 376-இன் கீழ் பாலியல் வன்முறை குற்றத்திற்காக தண்டிக்கப்படக்கூடியவர் என்று கூறியது.</p><p>"எனவே, இந்த வழக்கில், IPC பிரிவு 375-இன் விதிவிலக்கு 2-இன் உதவியுடன் குற்றவாளி சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது" என்று ஆகஸ்ட் 19 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்தது.</p><h2>பாலியல் குற்ற தடுப்பு சட்டம்:</h2><p>பாதிக்கப்பட்ட சிறுமி தனது சட்டப்பூர்வமான மனைவி என்றும், இஸ்லாமிய மதச் சடங்குகளின்படி அவருக்கு 17 வயது ஒரு மாதம் ஆனபோது திருமணம் செய்துகொண்டதாகவும் குற்றவாளியின் வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் நிராகரித்தது.</p><p>தனிநபர் சட்டத்தின்படி திருமணம் செல்லுபடியாகுமா என்பது ஒருபுறம் இருக்க, திருமணத்தில் ஈடுபடும் தரப்பினரில் ஒருவர் மைனராக (சிறுவர்/சிறுமியாக) இருக்கும்போது, ​​குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம் (POCSO) பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியது.</p><p>திருமண உறவை சாக்காக கொண்டு குற்றவாளி சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. </p><p>வாதத்திற்காக, இஸ்லாமிய மத சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின்படி திருமணம் நடைபெற்றதாக கொண்டாலும், அது மனுதாரர் மீதான குற்றவியல் பொறுப்பை நீக்காது. குறிப்பாக, அந்த திருமணம் மற்றும் அதை தொடர்ந்த பாலியல் செயல்களின் போது அப்பெண்ணுக்கு 17 வயது மட்டுமே இருந்ததால் இது பொருந்தும்.</p><h2>சட்டத்தின் விதிகள் பொருந்தும்:</h2><p>"தனிநபர் சட்டத்தின் கீழ் திருமணம் செல்லுபடியாகுமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, திருமணத்தில் ஈடுபடும் தரப்பினரில் ஒருவர் சிறாராக இருந்தால், போக்சோ சட்டத்தின் விதிகள் பொருந்தும் என்பது மறுக்க முடியாத உண்மை," என்று நீதிமன்றம் கூறியது.</p><p>பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023-இன் பிரிவு 528-இன் கீழ் இந்த வழக்கு நடவடிக்கைகளை ரத்து செய்யுமாறு குற்றம் சாட்டப்பட்டவர் கோரியிருந்தார். </p><p>குற்றச்சாட்டு தரப்பின்படி, அக்டோபர் 23, 2021 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர் அப்பெண்ணை காரில் தனது வீட்டிற்கு அழைத்து சென்று, அக்டோபர் 23 முதல் 26 வரையிலான காலகட்டத்தில் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரஷிய ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய இந்தியர்களில் 51 பேர் உயிரிழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/51-indians-who-joined-and-served-in-the-russian-army-have-lost-their-lives</link><comments>https://www.maalaimalar.com/news/national/51-indians-who-joined-and-served-in-the-russian-army-have-lost-their-lives#comments</comments><guid isPermaLink="false">fe1b9dd3-ec7f-4c36-a008-e39bd4a70167</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:36:58 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:36:58.567Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>indians,ரஷிய ராணுவம்,Russian Army,Ministry of External Affairs,இந்தியர்கள்,இந்திய வெளியுறவுத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/h42lt8j2/New-Project-2026-09-01T220637.698.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரஷிய ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய இந்தியர்களில் 51 பேர் உயிரிழப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/h42lt8j2/New-Project-2026-09-01T220637.698.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 227 இந்தியர்களில் 51 பேர் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 139 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக ரஷிய தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். கிர்கிஸ்தானில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்ரி.,</p><p>இந்தியக் குடிமக்களை விடுவிப்பது மற்றும் தாயகம் திரும்ப அனுப்புவது தொடர்பான இந்த நிலைமையை மாஸ்கோவில் உள்ள எங்கள் தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.</p><p>எஞ்சியிருக்கும் நோயாளிகள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதை உறுதி செய்வதற்காகவும், அதன் மூலம் இவர்களை விரைவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்காகவும், நாங்கள் ரஷியத் தரப்புடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.” என தெரிவித்தார்.</p><p>ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்த சிறிது நேரத்திலேயே மிஸ்ரியின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்தன.</p><p>சமையல்காரர்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட, ரஷிய ராணுவப் பிரிவுகளில் துணைப் பணியாளர்களாகப் பணியாற்றி வரும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்குமாறு ரஷியாவிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வாலும் தெரிவித்துள்ளார். </p><p>ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இன்னும் ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும், அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இந்தியா தெரிவித்திருந்தது.</p><p>இதற்கிடையில், ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை குடும்பத்தினருடன் ஒருங்கிணைப்பதற்காக, வெளியுறவு அமைச்சகத்தில் ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.</p><h2>ஏமாற்றப்பட்ட இளைஞர்கள்</h2><p>பெரும்பாலான இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகவர்கள் மூலம் கட்டுமானப் பணி, உணவகப் பணி போன்ற பொதுவான வேலைகளுக்காகவே ரஷியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><h2>கட்டாய ஒப்பந்தம்</h2><p>ரஷியா சென்றடைந்தவுடன் அவர்களது கடவுச்சீட்டுகள் பறிக்கப்பட்டு, போதிய ராணுவப் பயிற்சியின்றி கட்டாயமாக உக்ரைன் எல்லைப் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.</p><h2>அரசு எச்சரிக்கை</h2><p>இது போன்ற போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், ஆபத்தான சூழல் நிலவும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ராஜஸ்தான்: ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/rajasthan-boy-who-accidentally-fell-into-a-borewell-rescued-safely-after-a-5-hour-operation</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajasthan-boy-who-accidentally-fell-into-a-borewell-rescued-safely-after-a-5-hour-operation#comments</comments><guid isPermaLink="false">d21a0bc2-738e-4a39-9260-815690840e85</guid><pubDate>Tue, 01 Sep 2026 14:21:15 +0000</pubDate><atom:updated>2026-09-01T14:21:15.953Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,Borewell,ராஜஸ்தான்,ஆழ்துளைக் கிணறு</media:keywords><media:content height="1913" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/x96s0jkj/New-Project-2026-09-01T184337.668.jpg" width="3402"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராஜஸ்தான்: ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/x96s0jkj/New-Project-2026-09-01T184337.668.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் 300 அடி ஆழமுள்ள திறந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 9 வயது சிறுவன், 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். </p><p>அல்வார் மாவட்டத்தின் ராம்நகர் பகுதியிலுள்ள புடோலி கிராமத்தில் பானு குர்ஜார் என்ற சிறுவன் நேற்று (ஆக.31) மாலை பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்துள்ளான். பட்டத்தை பிடிக்க முயன்று கீழே பார்க்காமல், மேலே பார்த்தவாறு ஓடியுள்ளான். </p><p>அப்போது அப்பகுதியில் இருந்த ஆழ்துளைக் கிணற்றை மூடியிருந்த கல்லின் மீது சிறுவன் கால் வைத்து, தவறி உள்ளே விழுந்துள்ளான். சுமார் 50 முதல் 55 அடியில் சிக்கியிருந்த சிறுவனை மீட்க அப்பகுதி மக்கள் முயற்சித்துள்ளனர்.</p><p>தொடர்ந்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.</p><p>சுமார் ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 11.30 மணிக்கு மீட்கப்பட்டுள்ளார். உடனே மருத்துவ பரிசோதனைக்காக அருகில் இருந்த அல்வார் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பெயரில் நூதன மோசடி: மத்திய பிரதேசத்தில் லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த பொதுமக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-chief-minister-vijay-name-used-in-sophisticated-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-chief-minister-vijay-name-used-in-sophisticated-scam#comments</comments><guid isPermaLink="false">297f8d9a-ee2e-4fe6-a433-c81a6921faec</guid><pubDate>Tue, 01 Sep 2026 11:49:20 +0000</pubDate><atom:updated>2026-09-01T11:49:20.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madhya Pradesh,Cyber Crime,இந்தூர்,மோசடி கும்பல்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,மத்திய பிரதேச மாநிலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/uwfmr9l0/cm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/uwfmr9l0/cm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் ஒரு கும்பல், தங்களை தமிழக முதல்வர் விஜய்யின் அறக்கட்டளை நிர்வாகிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் பேசியுள்ளனர். </p><p>மத்திய பிரதேச மாநிலத்தில் தமிழ்நாடு  முதலமைச்சர் விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி, ஏழை எளிய மக்களிடம் நிதியுதவி மற்றும் கடன் வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   </p><h2>முதல்வர் விஜய் <strong>பெயரில் போலி</strong> அறக்கட்டளை   </h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/digital-payments-without-internet-phonepe-launches-upi-123pay-for-feature-phones">மத்திய பிரதேச மாநிலம் </a>இந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் ஒரு கும்பல், தங்களை தமிழக முதல்வர் விஜய்யின் அறக்கட்டளை நிர்வாகிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் பேசியுள்ளனர். தமிழக முதல்வர் விஜய் மூலம் சிறு தொழில் தொடங்குவதற்கான மானியக் கடன், இலவச நிதியுதவி, கல்வி நிதியுதவி மற்றும் வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக ஆசை வார்த்தைகள் கூறி மக்களை நம்ப வைத்துள்ளனர்.  </p><h2>நூதன <strong>முறையிலான பண</strong>ப்பறிப்பு   </h2><p>இந்த போலி அறக்கட்டளை மூலமாக ரூ.10 லட்சம் வரை மானியம் மற்றும் நிதி உதவி பெற முடியும் எனக் கூறி மக்களைத் தொடர்புகொண்ட அந்த கும்பல், அதற்கான நடைமுறைகளுக்காக பணம் பறித்துள்ளது. விண்ணப்பப் பதிவு, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் வங்கி கணக்கு தொடங்குவதற்கான கட்டணம் என்ற பெயரில் தலா ரூ.1,000 முதல் ரூ.50,000 வரை ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.   </p><h2>காவல்துறையி<strong>ல் குவிந்த</strong> புகார்கள்   </h2><p>பணம் செலுத்திய பிறகு குறிப்பிட்ட நபர்களைத் தொடர்புகொள்ள முடியாமலும், எவ்வித நிதியுதவியும் கிடைக்காமலும் போனதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல்நிலையத்தை நாடினர். கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் இந்தூர் குற்றத்தடுப்புப் பிரிவில் இந்த மோசடி தொடர்பாக 6 அதிகாரப்பூர்வ புகார்கள் பதிவாகியுள்ளன.   </p><h2>சைபர் கிரைம் <strong>போலீஸ் தீவிர</strong> விசாரணை   </h2><p>பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்தூர் குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு சைபர் குற்றவாளிகளைப் பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அடையாளம் தெரியாத போலி நபர்கள் மற்றும் அறக்கட்டளைகளின் பெயரில் வரும் அழைப்புகளை நம்பி முன்பணம் செலுத்த வேண்டாம் என மக்களுக்குக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேற்குவங்கம்: மம்தா பானர்ஜியின் மருமகள், வீட்டில் இருந்து சடலமாக மீட்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-mamata-banerjees-daughter-in-law-found-dead-at-her-home</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-mamata-banerjees-daughter-in-law-found-dead-at-her-home#comments</comments><guid isPermaLink="false">cbf9494f-2b14-49d7-82e2-45df2f17769d</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:48:30 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:48:30.071Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,மேற்குவங்கம்,west bengal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/2j9510id/New-Project-2026-09-01T161529.092.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேற்குவங்கம்: மம்தா பானர்ஜியின் மருமகள் வீட்டில் இருந்து சடலமாக மீட்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/2j9510id/New-Project-2026-09-01T161529.092.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் தாய்வழியிலான ஒன்றுவிட்ட சகோதரரின் மகள் பிரிஷ்டி முகர்ஜி, இன்று அவரது வீட்டில் இருந்து தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். </p><p>பீர்பூம் மாவட்டம், ராம்பூர்ஹாட்டின் குசும்பா கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் இருந்து 31 வயதான பிரிஷ்டி முகர்ஜி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். </p><p>கடந்த சில ஆண்டுகளாகவே பிரிஷ்டி மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பிரிஷ்டி முகர்ஜி தனது வேலையை இழந்திருந்தாகவும், மேலும், அவருக்கு விவாகரத்து வழக்கு நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>தொடர்ந்து காவல்துறை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராம்பூர்ஹாட் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். </p><p>இது தற்கொலையாக இருக்கலாம் என்றும், எனினும் மரணத்திற்கான முழுமையான காரணம் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்; போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-question-paper-leak-protest-supreme-court-issues-a-bold-order-quashing-cases-against-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-question-paper-leak-protest-supreme-court-issues-a-bold-order-quashing-cases-against-protesters#comments</comments><guid isPermaLink="false">bdfeef31-629f-4b31-91a4-7e1b03ec42ad</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:24:08 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:24:08.391Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,FIR,Protesters,போராட்டக்காரர்கள்,NEET Paper Leak,நீட் தேர்வு வினாத்தாள் கசிவு,முதல் தகவல் அறிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/hrt7fddv/New-Project-2026-09-01T155057.462.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்; போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/hrt7fddv/New-Project-2026-09-01T155057.462.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142-ன்கீழ் தங்களுக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><h2>வழக்குகள் ரத்து</h2><p>ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>இருப்பினும் போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும், மேலும் முன்னரே வழக்குகளை கொண்டுள்ள 2,873 நபர்களுக்கு இந்த ரத்து உத்தரவு பொருந்தாது, அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>மனுத்தாக்கல்</h2><p>இந்தியா முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கு எதிராக, காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி நேற்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><h2>போராட்டம் வாபஸ்</h2><p>மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் போராட்டக்காரர்களுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற மனு அளித்து, நீதிமன்றமும் அதனை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 5-ஆம் தேதி டெல்லியில் நடத்தத் திட்டமிட்டிருந்த மாபெரும் <a href="https://www.maalaimalar.com/news/national/cockroach-janata-party-withdraws-announcement-for-september-5-rally">போராட்டப் பேரணி</a>யை வாபஸ் பெறுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செப்டம்பரில் குறையும் மழை: 1901-க்குப் பிறகு மிக வெப்பமான ஆகஸ்ட் மாதத்தைத் தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/rainfall-to-decrease-in-september</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/rainfall-to-decrease-in-september#comments</comments><guid isPermaLink="false">4e1294b6-4f30-4d69-9e34-ef9bf459d7fb</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:17:37 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:17:37.666Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,Meteorological Department,மழைப்பொழிவு,rainfall,எல் நினோ,El Nino</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/1pbpyxb1/el-nino.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ El Nino]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/1pbpyxb1/el-nino.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் 1901-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக அதிக வெப்பமண்டல மாதமாக மாறியுள்ள நிலையில், வரவிருக்கும் செப்டம்பர் மாதத்திலும் வழக்கத்தை விடக் குறைவான மழையே பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  கணித்துள்ளது</p><h2>செப்<strong>டம்பர் மாத மழைப்</strong>பொழிவு கணிப்பு</h2><p>இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மாதாந்திர அறிக்கையின்படி, செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் பெய்யும் மழையின் அளவு நீண்டகால சராசரியில் 91 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. 1971 முதல் 2020 வரையிலான தரவுகளின் அடிப்படையில், செப்டம்பர் மாதத்திற்கான நீண்டகால சராசரி மழைப்பொழிவு 167.9 மி.மீ ஆகும். மேலும், நாடு முழுவதும் வழக்கத்தை விட அதிகபட்ச வெப்பநிலையும் தொடர வாய்ப்புள்ளது.</p><h2><strong>எல் நினோ தாக்க</strong>ம்</h2><p>பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் எல் நினோ நிலவரம் பலமடைந்து வருவதே இந்த மழைப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. எல் நினோ வலுவடைந்து வருவதால், தென்மேற்கு பருவமழையின் இறுதிப் பகுதியிலும் மழைப்பொழிவு பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்ஜய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.</p><h2>வரலா<strong>ற்றுச் சாதனை</strong> </h2><p>கடந்த ஆகஸ்ட் மாதத்தின் சராசரி வெப்பநிலை 28.01 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இது வழக்கமான சராசரி வெப்பநிலையான 27.34 டிகிரி செல்சியஸை விட அதிகம். அதேபோல, இரவிலும் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 24.36 டிகிரி செல்சியஸாக உயர்ந்து, 1901-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக அதிகபட்ச வெப்பமண்டல ஆகஸ்ட் மாதமாக இது அமைந்துள்ளது.</p><h2>மழைப் <strong>பற்றாக்குறையின் தற்போதை</strong>ய நிலை</h2><p>ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 213.3 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது 2001-க்குப் பிறகு பதிவான ஏழாவது குறைந்தபட்ச மழைப்பொழிவாகும். இம்மாதத்தில் நான்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி, சுமார் 26 நாட்கள் நீடித்தபோதிலும், அவற்றின் தாக்கம் பெரும்பாலும் இந்தோ-கங்கை சமவெளிப் பகுதிகளில் மட்டுமே மையம் கொண்டிருந்தது. இதனால் நாட்டின் பிற பகுதிகள் கடுமையான மழைப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>செப். 5 பேரணி அறிவிப்பை திரும்பப் பெற்றது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!</title><link>https://www.maalaimalar.com/news/national/cockroach-janata-party-withdraws-announcement-for-september-5-rally</link><comments>https://www.maalaimalar.com/news/national/cockroach-janata-party-withdraws-announcement-for-september-5-rally#comments</comments><guid isPermaLink="false">9b29b21e-26bf-416a-b32c-04d034b74566</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:05:59 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:05:59.320Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,CJP,அமைதிப் பேரணி,India Gate march</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/4zbjx1ve/New-Project-2026-09-01T145945.505.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செப். 5 பேரணி அறிவிப்பை திரும்பப் பெற்றது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/4zbjx1ve/New-Project-2026-09-01T145945.505.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, செப்டம்பர் 5-ஆம் தேதி நடத்தவிருந்த டெல்லி போராட்டப் பேரணி அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. </p><p>டெல்லியில் உள்ள இந்தியா நுழைவாயிலில் இருந்து மாநில காவல் தலைமையகம் வரை இந்தப் பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது.</p><h2>எதற்காக பேரணி?</h2><p>கரப்பான்பூச்சி கட்சியினரால் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கைவிட மத்திய அரசு மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தது. </p><p>தர்மேந்திர பிரதான் பதவி விலகல், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி, போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தல் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதியளித்தது. </p><h2>நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்</h2><p>மத்திய அரசு அளித்த மூன்று வாக்குறுதிகளில் ஒன்று மட்டுமே, அதாவது தர்மேந்திர பிரதான் பதவி விலகல் கோரிக்கை மட்டுமே நிறைவேற்றப்பட்டது. மற்ற இரண்டு வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனைக் கண்டித்து செப்.5ம் தேதி போராட்டப் பேரணியை அறிவித்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.</p><h2>உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு</h2><p>இதனிடையே இந்தப் பேரணிக்கு தடைவிதிக்க அல்ல பேரணியை ஒத்திவைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த <a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-refuses-to-intervene-in-the-cockroach-partys-delhi-rally-issue">விவகாரத்தில் தலையிட மறுத்தது. </a></p><p>மத்திய மற்றும் மாநில அரசுகளே இதில் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி செப்.10ம் தேதி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது. </p><h2>மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்</h2><p>மேற்குறிப்பிட்டிருந்த மனு விசாரணையைத் தொடர்ந்து மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில்<a href="https://www.maalaimalar.com/news/national/central-government-files-petition-in-supreme-court-seeking-orders-to-withdraw-cases-against-neet-exam-protesters"> நீட் தேர்வு குளறுபடி</a>க்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக் கோரியிருந்தது. </p><p>இந்த மனுத்தாக்கலைத் தொடர்ந்து, நீட் போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 13 வழக்குகளை இனியும் தொடர விரும்பவில்லை என டெல்லி காவல்துறை திங்கள்கிழமை (ஆக.31) மாலை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><p>இந்நிலையில் இன்று மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உயிரை மாய்த்துக்கொண்ட நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார். </p><p>இந்த வாக்குறுதிகளைத் தொடர்ந்து பேரணி அறிவிப்பை திரும்பப் பெறுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வெள்ளத்தில் சிக்கிய வாலிபர்: துப்பட்டாவை வீசி காப்பாற்றிய புதுமணப் பெண்கள்- வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/couple-uses-dupatta-to-save-biker-from-flash-flood</link><comments>https://www.maalaimalar.com/news/national/couple-uses-dupatta-to-save-biker-from-flash-flood#comments</comments><guid isPermaLink="false">a3531751-eb7c-43af-aaae-f4b4a3e8309c</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:03:14 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:03:14.294Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இமாச்சல பிரதேசம்,Himachal Pradesh,வெள்ளப் பெருக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/3vd1mlpj/Himachal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வெள்ளத்தில் சிக்கிய வாலிபர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/3vd1mlpj/Himachal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>இமாச்சல பிரதேச மாநிலம் பார்முலா பகுதியில் காகியரா-தனுஹாட்டி சாலையில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் சிக்கிக் கொண்டார். இரு சக்கர வாகனத்துடன் பள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் நிலையில் தவித்துக் கொண்டிருந்தார்.</p><p>அப்போது அந்த வழியாக காரில் இரு புதுமணத் தம்பதிகள் வந்தனர். அவர்கள் அந்த வாலிபர் சிக்கிக் கொண்டதை பார்த்து காரை நிறுத்தினர். அவர்கள் காரில் கயிறு போன்ற ஏதும் இல்லை. அந்த நேரத்தில் இரண்டு புதுமணப் பெண்களுக்கு சாதுர்யமான யோசனை வந்தது. அவர்கள் அணிந்திருந்த துப்பாட்டாவை கழற்றி இரண்டையும் ஒன்றாக கட்டி அந்த வாலிபரை நோக்கி வீசினர். ஒருபக்கத்தை பலமாக பிடித்துக் கொண்டனர். மறுமுனையில் அந்த வாலிபர் துப்பட்டாவை பிடித்துக் கொண்டார்.</p><p>அதனைத் தொடர்ந்து வாலிபர் அந்த துப்பாட்வை பிடித்து பாதுகாப்பாக வெள்ளத்தில் இருந்து தப்பித்தார். இந்த வீடியோ வெளியாகி வைரலானது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Best video to start the day ❤️A newly married couple in Bhatiyat, Chamba, risked their own safety to save a young biker who was stuck in a flash flood. It was literally a matter of seconds before he could have been swept away.The newlywed bride gave her dupatta, and together the… <a href="https://t.co/xcfTk69HHz">pic.twitter.com/xcfTk69HHz</a></p>&mdash; Nikhil saini (@iNikhilsaini) <a href="https://x.com/iNikhilsaini/status/2094633885892239661?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>இந்த வீடியோவைப் பார்த்து இரு பெண்களை இணையதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>போராட்டக்காரர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது மனித உரிமை மீறல் அல்ல - சிஆர்பிஎஃப்!</title><link>https://www.maalaimalar.com/news/national/use-of-pellet-guns-on-protesters-is-not-a-human-rights-violation-crpf</link><comments>https://www.maalaimalar.com/news/national/use-of-pellet-guns-on-protesters-is-not-a-human-rights-violation-crpf#comments</comments><guid isPermaLink="false">99e04a67-1c88-4f90-bab0-36daab99dc53</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:27:24 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:27:24.220Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>crpf,DELHI PROTEST,சிஆர்பிஎஃப்,டெல்லி போராட்டம்,pellet gun,பெல்லட் துப்பாக்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/j2abjb6y/New-Project-2026-09-01T145609.736.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போராட்டக்காரர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது மனித உரிமை மீறல் அல்ல - சிஆர்பிஎஃப்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/j2abjb6y/New-Project-2026-09-01T145609.736.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது மனித உரிமை மீறல் அல்ல என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய ரிசர்வ் காவல்படை பதிலளித்துள்ளது. </p><h2>டெல்லி போராட்டம்</h2><p>கடந்த ஜூலை 20 அன்று, டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் ஒருபகுதியாக, நாடாளுமன்றம் நோக்கி பேரணி முன்னெடுக்கப்பட்டது. </p><p>அப்போது போராட்டக்காரர்கள்மீது பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தியது குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே தகவல் கோரியிருந்தார். </p><p>அவர் எழுப்பியிருந்த கேள்விக்கு சிஆர்பிஎஃப் இந்தப் பதிலை அளித்துள்ளது. </p><h2>விலக்கு</h2><p>சிஆர்பிஎஃப் அமைப்பிற்கு பொதுவாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஊழல் அல்லது மனித உரிமை மீறல் தொடர்பான புகார்களுக்கு மட்டுமே விதிவிலக்கு உண்டு. </p><p>ஆனால், இச்சம்பவத்தில் மனித உரிமை மீறல் எதுவும் நடக்கவில்லை என்று கூறி அதுகுறித்த விரிவான தகவல்களைத் தர சிஆர்பிஎஃப் மறுத்துள்ளது.</p><p>இந்த விவகாரத்தில் முதலில் டெல்லி காவல்துறையும், அரசும் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என மறுத்தது. பின்னர் பெல்லட் துப்பாகி பயன்பாடு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானதும், மருத்துவமனை தரவுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றதும் உறுதியானது. </p><p>தொடர்ந்து பெல்லட் குண்டால் பாதிக்கப்பட்டு, வலது கண்பார்வையை இழந்த சாகில் லோச்சாப் இதுதொடர்பாக டெல்லி காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். </p> <p>ஆனால் பெயர் குறிப்பிடாமல் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, அதுவும்<a href="https://www.maalaimalar.com/news/national/delhi-police-register-case-over-pellet-gun-attack-on-rahul-gandhi-during-sit-in-protest"> ராகுல் காந்தி</a>யின் தலையீட்டால்.</p><p>இந்நிலையில் சாகேட் கோகலே எழுப்பிய கேள்விக்கு சிஆர்பிஎஃப் இந்த அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">SHOCKING:<br><br>CRPF claims use of pellet guns on protestors in Delhi is NOT a human rights violation <br><br>I’d filed an RTI with Rapid Action Force (which is a part of CRPF) asking for information related to the use of pellet guns on unarmed protestors on 20th July during the Jantar… <a href="https://t.co/0Xv0laN4tA">pic.twitter.com/0Xv0laN4tA</a></p>&mdash; Saket Gokhale (@SaketGokhale) <a href="https://x.com/SaketGokhale/status/2094263102225465648?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>&apos;பயங்கரவாதம் யாருக்கும் உத்தி சார்ந்த சொத்து அல்ல&apos;: பிக்பேக்கில் பாகிஸ்தான் பிரதமர் முன்பாக பிரதமர் மோடி பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/national/terrorism-is-not-anyones-strategic-asset-pm-modi-addresses-sco-summit-in-bishkek</link><comments>https://www.maalaimalar.com/news/national/terrorism-is-not-anyones-strategic-asset-pm-modi-addresses-sco-summit-in-bishkek#comments</comments><guid isPermaLink="false">be6194f1-a83e-4b9d-b329-2e84845719c2</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:22:30 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:22:30.524Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Pakistan,பயங்கரவாதம்,Terrorism,shehbaz sharif,ஷாங்காய் உச்சி மாநாடு,BRICS Summit,pm modi,பிரதமர் மோடி,கிர்கிஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/k5o83dpy/mooo.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/k5o83dpy/mooo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பேண அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.</p><p>கிர்கிஸ்தான் நாட்டின் பிக்பேக் நகரில் நடைபெற்று வரும் 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-instagram-reel-7-8-percent-gdp-growth-countering-rahul-gandhi-claims">பிரதமர் நரேந்திர மோடி</a> கலந்துகொண்டு உரையாற்றினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் உலகத் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் ஒரே குரலில் பேச வேண்டும் என்று வலியுறுத்தினார். </p><p>பயங்கரவாத விவகாரத்தில் எந்தவொரு நாட்டிற்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது என்றும், இந்த அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.</p><h2>கடுமை<strong>யான எச்சரிக்கை</strong></h2><p>பயங்கரவாதத்தைக் கொள்கை அளவிலான ஒரு கருவியாகப் பயன்படுத்தும் நாடுகளுக்கும், பயங்கரவாதிகளுக்குப் புகலிடமும் ஆதரவும் அளிக்கும் அமைப்புகளுக்கும் உலக நாடுகள் தெளிவான செய்தியைச் சொல்ல வேண்டும் என்று பிரதமர் கூறினார். பயங்கரவாதம் என்பது எந்தவொரு நாட்டிற்கும் உத்தி சார்ந்த சொத்தாக மாற முடியாது என்பதை சுட்டிக்காட்டிய அவர், பயங்கரவாத கட்டமைப்புகளை ஒட்டுமொத்தமாகத் தகர்க்க வேண்டியது தற்போதைய காலகட்டத்தின் அவசரத் தேவை என்று குறிப்பிட்டார்.</p><h2>அமைதியை மு<strong>ன்னிறுத்திய பே</strong>ச்சு</h2><p>பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பேண அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். சர்வதேச அளவில் நிலவும் சவால்களுக்கு மத்தியிலும், அமைதியையும் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்ல உறுதியான கொள்கை முடிவுகள் அவசியம் என்பதை இந்த உச்சிமாநாட்டு உரையின் மூலம் இந்தியா மீண்டும் நிலைநாட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கல்வி முழக்கத்தை இழந்ததா ஆம் ஆத்மி?: அபிஜித் தீப்கே &apos;சிஜேபி&apos; அமைப்பின் B-டீமாக மாறியதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது விமர்சனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/did-aap-lose-its-education-slogan-arvind-kejriwal-slammed-for-making-abhijit-deepkes-cjp-b-team</link><comments>https://www.maalaimalar.com/news/national/did-aap-lose-its-education-slogan-arvind-kejriwal-slammed-for-making-abhijit-deepkes-cjp-b-team#comments</comments><guid isPermaLink="false">e0535337-8785-4a87-8e5d-0cd814cd2e3d</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:03:42 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:03:42.467Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,Aam Aadmi Party,ஆம் ஆத்மி கட்சி,சிஜேபி,CJP,அபிஜித் தீப்கே,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/zclmopn4/abiu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Arvind Kejriwal-Abhijit Deepke]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/zclmopn4/abiu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிஜேபி அமைப்பின் நிறுவனரான அபிஜித் தீப்கே மற்றும் அதன் முக்கியப் பொறுப்பாளர்கள் முன்பு ஆம் ஆத்மி கட்சியின் ஊடகப் பிரிவிலும், டெல்லி அரசின் கல்வித்துறை ஆலோசனைப் பிரிவிலும் தீவிரமாகப் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய அரசியல் அடையாளமாகவும், தேர்தல் வெற்றிகளுக்கான முதன்மை ஆயுதமாகவும் இருந்தது அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்கள் ஆகும். ஆனால், சமீபகாலமாக <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-files-petition-in-supreme-court-seeking-orders-to-withdraw-cases-against-neet-exam-protesters">ஆம் ஆத்மி கட்சி</a> சந்தித்து வரும் அரசியல் பின்னடைவுகள் மற்றும் தலைமை மீதான நம்பகத்தன்மை கேள்விகளால், கட்சி தனது முதன்மை முகவரியான கல்வி சார்ந்த முழக்கங்களை இழந்து வருவதாக அரசியல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>இந்தச் சூழலில், அபிஜித் தீப்கே தலைமையிலான 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) என்ற இளைஞர் அமைப்பு, அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக முன்னெடுக்கும் தொடர் போராட்டங்கள் மற்றும் ஆய்வுகள் மூலம் தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p><h2>சிஜேபிக்<strong>கு ஆம் ஆத்மியின்</strong> தொடர் ஆதரவு</h2><p>சமீபத்தில் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி சார்பில் நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாகப் பங்கேற்று தனது ஆதரவைத் தெரிவித்தார். களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் சிஜேபி அமைப்பின் கோரிக்கைகளுக்காக ஆம் ஆத்மி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். </p><p>கல்வித் துறையை மையமாகக் கொண்டு ஆம் ஆத்மி எழுப்பி வந்த குரலை தற்போது சிஜேபி அமைப்பு கையில் எடுத்து முன்னெடுத்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தனது அரசியல் மேடை மற்றும் முக்கியத்துவத்தை அந்த அமைப்பிடம் ஒப்படைத்துவிட்டு அதன் பி-டீமாக செயல்படுகிறதா என்ற விவாதம் வலுத்துள்ளது.</p><p>சிஜேபி அமைப்பின் நிறுவனரான அபிஜித் தீப்கே மற்றும் அதன் முக்கியப் பொறுப்பாளர்கள் முன்பு ஆம் ஆத்மி கட்சியின் ஊடகப் பிரிவிலும், டெல்லி அரசின் கல்வித்துறை ஆலோசனைப் பிரிவிலும் தீவிரமாகப் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் பழைய நிர்வாகிகளின் தலைமையில் இயங்கும் இந்த இளைஞர் இயக்கம் தற்போது நாடு முழுவதும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியர் காலியிடங்கள் மற்றும் மாணவர் நலன் குறித்து கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த முழக்கங்களையே பிறிதொரு அமைப்பின் மூலம் ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மகள் கல்விக்காக வெறும் காலில் ஓடி மாரத்தான் வென்ற தாய்: மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/barefoot-mother-wins-marathon-to-fund-daughters-studies</link><comments>https://www.maalaimalar.com/news/national/barefoot-mother-wins-marathon-to-fund-daughters-studies#comments</comments><guid isPermaLink="false">a52881ba-351f-4001-86fa-e03a91196c7d</guid><pubDate>Tue, 01 Sep 2026 05:22:25 +0000</pubDate><atom:updated>2026-09-01T05:22:25.060Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,women empowerment,நெகிழ்ச்சி சம்பவம்,Inspirational Story,Ramabai Ranveer,ரமாபாய் ரன்வீர்,Marathon Winner</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/61l2fb6f/Marathon" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Marathon]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/61l2fb6f/Marathon?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனது மகள்களின் உயர் கல்விச் செலவிற்காக 47 வயது தாய் ஒருவர், காலணிகள் இன்றி வெறும் கால்களுடன் ஓடி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">மாரத்தான்</a> போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். </p><p>வறுமைக்கு மத்தியிலும் மகள்களின் கனவை நனவாக்கப் போராடும் இந்த தாயின் விடாமுயற்சி, அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.</p><h2><strong>கணவரை இழந்த நிலையிலும் தளராத நம்பிக்கை</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE">மகாராஷ்டிராவின் </a>பீட் மாவட்டம், அம்பாஜோகை பகுதியைச் சேர்ந்தவர் ரமாபாய் ரன்வீர் (47). மும்பையில் நேரிட்ட விபத்து ஒன்றில் இவரது கணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனது இரண்டு மகள்களை வளர்க்கும் பொறுப்பு ரமாபாயின் தோள்களில் விழுந்தது. </p><p>ஆரம்பத்தில் விவசாயக் கூலி வேலை செய்து வந்த அவர், தனது மகள்கள் இருவரும் படித்து பெரிய அதிகாரிகளாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.</p><p>இதற்காக, தனது மூத்த மகளை அம்பாஜோகையில் உள்ள ஒரு போட்டித் தேர்வு பயிற்சி அகாடமியில் சேர்த்த ரமாபாய், மகளின் கல்விக்கு உதவ அதே அகாடமியிலேயே சமையல் வேலைக்கும் சேர்ந்தார். </p><p>அங்கு தினமும் மாணவர்களுக்கு சமையல் செய்து கொண்டே, போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் தனது மகள்களையும் கவனித்து வந்தார்.</p><h2><strong>புடவையுடன் வெறும் காலில் ஓடிய தாய்</strong></h2><p>இந்நிலையில், அப்பகுதியில் உள்ள உள்ளூர் அமைப்பு ஒன்று 'அமிர்த தௌட்' என்ற பெயரில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">மாரத்தான் </a>போட்டி ஒன்றை நடத்தியது. </p><p>இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 3,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மகள்களுக்குப் படிக்கப் புத்தகங்கள் வாங்க இந்த பணம் உதவும் என எண்ணிய ரமாபாய், போட்டியில் பங்கேற்கத் துணிந்தார்.</p><p>போட்டித் தினத்தன்று, விளையாட்டு ஆடைகளுடன் வந்திருந்த இளம் வயது வீராங்கனைகளுக்கு மத்தியில், ரமாபாய் ஒரு சாதாரண புடவை அணிந்து களமிறங்கினார். </p><p>போட்டி தொடங்கியதும் அவர் அணிந்திருந்த செருப்புகள் நழுவத் தொடங்கின. சற்றும் யோசிக்காத அவர், செருப்புகளைக் கழற்றி கையிலேயே பிடித்துக் கொண்டு, கற்கள் நிறைந்த குளிர்ந்த சாலையில் வெறும் கால்களோடு ஓடத் தொடங்கினார்.</p><p>ஒரு கையால் புடவையைச் சரிசெய்து கொண்டு, மற்ற அனைத்து வீராங்கனைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ரமாபாய் முதலிடத்தைப் பிடித்து எல்லையைக் கடந்தார். </p><p>இதைப் பார்த்த அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் வியந்து அவருக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.</p><h2><strong>இரண்டாம் இடம் பிடித்த மகள்</strong></h2><p>நெகிழ்ச்சியில் உச்சமாக, ரமாபாயின் மகள் பூஜாவும் இந்த போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை வென்றார். </p><p>தனது தாயை போட்டியில் பங்கேற்க வற்புறுத்திய பூஜா, 'கடினமான சூழ்நிலையிலும் எங்களை வளர்க்க என் தாய் ஒரு போதும் எங்களை கைவிட்டதில்லை. அவர் முதலிடம் பிடிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை' என்று பெருமிதத்துடன் கூறினார்.</p><p>பூஜா தற்போது காவல்துறை பணிக்கான தேர்விற்கும், அவரது சகோதரி வங்கித் தேர்வுகளுக்கும் தயாராகி வருகின்றனர். </p><p>பூஜாவின் அர்பணிப்பைக் கண்டு, அவர் படிக்கும் அகாடமியின் இயக்குனர் அவரது பயிற்சிக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>மகள்களின் எதிர்காலம் மட்டுமே கண்ணில் தெரிந்தது</strong></h2><p>வெற்றிக்குப் பின் பேசிய ரமாபாய் ரன்வீர், <em>"போட்டியில் பல பெண்கள் பங்கேற்றனர், ஆனால் எப்படியாவது நான் இந்த பரிசை வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். </em></p><p><em>நான் ஓடும்போது என் மகள்களின் எதிர்காலம் மட்டுமே என் கண் முன்னால் தெரிந்தது. இந்த ரூ. 3,000 பரிசுத்தொகையை வைத்து அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்குவேன்"</em> என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p><p>சமையலறையில் கஷ்டப்பட்டு உழைக்கும் ஒரு தாய், தனது மகள்களின் படிப்புக்காக ஓட்டப்பந்தயக் களத்திலும் சாதித்துக் காட்டியிருப்பது பலருக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.8%: இறக்குமதி தங்கத்தை தவிர்த்து உள்நாட்டிலேயே திருமணம் செய்ய பிரதமர் மோடி அழைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-instagram-reel-7-8-percent-gdp-growth-countering-rahul-gandhi-claims</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-instagram-reel-7-8-percent-gdp-growth-countering-rahul-gandhi-claims#comments</comments><guid isPermaLink="false">ffae8f5a-2a1c-4b9a-8082-8a7d652fe5be</guid><pubDate>Tue, 01 Sep 2026 05:15:53 +0000</pubDate><atom:updated>2026-09-01T05:15:53.986Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,INDIA,GDP,pm modi,பிரதமர் மோடி,ஜிடிபி சாதனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/k4v1p9x9/mdi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Narendra modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/k4v1p9x9/mdi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொய்களாலும் போலி குற்றச்சாட்டுகளாலும் நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சியை மறைத்துவிட முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><p>உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் உள்நாட்டின் விமர்சனங்களுக்கு இடையே, <a href="https://www.maalaimalar.com/news/national/india-gdp-surges-7-8-first-quarter-amid-global-challenges">இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி </a>வீதம் 7.8 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரங்களை வளர்ச்சி புள்ளிவிவரங்கள் தகர்த்தெறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">7.8% growth. <br><br>Strong numbers. <br><br>Even stronger confidence. <a href="https://t.co/ZVPpnAXrVU">pic.twitter.com/ZVPpnAXrVU</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2094629917514400111?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>பிரதமர் மோ<strong>டியின் இன்</strong>ஸ்டா ரீல்ஸ்</h2><p>தற்போது பிஷ்கெக் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், "7.8 சதவீத வளர்ச்சி என்பது வெறும் எண்கள் மட்டுமல்ல; நாட்டின் உழைப்பிற்கும் ஒட்டுமொத்த மக்களின் உறுதிப்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பொய் எதி<strong>ரொலி விமர்சனம்</strong></h2><p>காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்து வரும் 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்) என்ற பிரசாரத்தைக் குறிப்பிட்ட பிரதமர், "நாட்டின் முன்னேற்றத்தைக் கண்டு பொறுக்க முடியாமல் சிலர் 'பொய் எதிரொலி'களை பரப்பி விரக்தியை விதைக் முற்படுகிறார்கள்" என சாடினார். பொய்களாலும் போலி குற்றச்சாட்டுகளாலும் நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சியை மறைத்துவிட முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.</p><h2>இந்தியா ப<strong>டைத்த சாதனை</strong></h2><p>உலகளவில் உக்ரைன்-ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல், சர்வதேச விநியோகச் சங்கிலி முடக்கம், கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதாரப் பின்னடைவு ஆகிய பெரும் சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதாரம் அதிவேகத்தில் வளர்ந்து வருகிறது. ரிசர்வ் வங்கி கணித்த 7 சதவீதத்தை விட ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் உறுதியான செயல்பாட்டைப் பிரதிபலிக்கிறது.</p><h2>சுதேசி கொள்கை</h2><p>நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் கனவுகளை நனவாக்க 'சுதேசி' கொள்கையைக் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பேசிய பிரதமர், நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த மக்கள் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான மோகத்தைக் குறைக்க வேண்டும் என்றும், சுதேசிப் பொருட்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். </p><p>மேலும், இந்தியர்கள் தங்களது குடும்பத் திருமண நிகழ்வுகளை வெளிநாடுகளில் நடத்தாமல், உள்நாட்டிலேயே நடத்தும் 'வெட் இன் இந்தியா' முயற்சியை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆடம்பர செலவுகளையும் தேவையற்ற இறக்குமதிகளையும் குறைத்து, உள்ளூர் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகமெடுக்கும் என்று பிரதமர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>உடல்நிலை மோசடைந்ததால் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/national/anna-hazare-admitted-to-icu-in-mumbai-due-to-viral-infection</link><comments>https://www.maalaimalar.com/news/national/anna-hazare-admitted-to-icu-in-mumbai-due-to-viral-infection#comments</comments><guid isPermaLink="false">c76c9a10-6f6e-4504-8249-b7ddbd2efd4b</guid><pubDate>Mon, 31 Aug 2026 20:02:26 +0000</pubDate><atom:updated>2026-08-31T20:02:26.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐசியூ,Anna Hazare,ICU,Viral infection,வைரஸ் தொற்று,அண்ணா ஹசாரே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ox7ezpy5/Anna-Hazare.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anna Hazare]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ox7ezpy5/Anna-Hazare.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புகழ்பெற்ற சமூக ஆர்வலர் <a href="https://www.maalaimalar.com/topic/anna-hazare">அண்ணா ஹசாரே</a> உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் திங்களன்று பம்பாய் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார்.</p><p>மருத்துவ வட்டாரங்களின்படி, 87 வயதான அண்ணா ஹசாரே ஆரம்பத்தில் தனது சொந்த கிராமமான ரலேகன் சித்திக்கு அருகிலுள்ள ஒரு மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். </p><p>இருப்பினும், கடுமையான <a href="https://www.maalaimalar.com/topic/viral-infection">வைரஸ் தொற்று</a>, நீரிழப்பு மற்றும் சிறுநீரகச் செயல்பாட்டு பரிசோதனைகள் தொடர்பான சிக்கல்களை தொடர்ந்து, மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக அவர் மும்பைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார்.</p><h2>தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பு:</h2><p>ஹசாரே தற்போது கௌதம் பன்சாலியின் பராமரிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் கண்காணிப்பில் உள்ளார். மருத்துவ நிபுணர்கள் விரிவான நோயறிதல் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் அறிக்கைகளின் அடிப்படையில் சிகிச்சைத் திட்டம் முடிவு செய்யப்படும். அவரது முக்கிய உடல் அறிகுறிகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.</p><p>நாடு முழுவதிலும் இருந்து ஆதரவாளர்களும் நலம் விரும்பிகளும் கவலை தெரிவித்துள்ளனர், மேலும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். முழுமையான மருத்துவ பரிசோதனைகள் முடிந்தவுடன், அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>சமூக சீர்திருத்தவாதி:</h2><p>ஹசாரே இந்தியாவின் மிக முக்கியமான ஊழல் எதிர்ப்புப் போராளிகளில் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர். நீர்வள மேம்பாடு, காடு வளர்ப்பு, கிராமப்புற தன்னிறைவு மற்றும் போதை ஒழிப்பு ஆகியவற்றில் முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டு, மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த கிராமமான ரலேகன் சித்தியை ஒரு முன்மாதிரி கிராமமாக மாற்றியதற்காக அவர் அங்கீகாரம் பெற்றார்.</p><p>தனது உண்ணாவிரத போராட்டங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மற்றும் ஜன லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதற்காக வாதிட்ட இயக்கங்கள் மூலம் அவர் தேசிய அளவில் புகழ் பெற்றார். </p><p>சமூகத்திற்கும் கிராமப்புற மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய சேவையை பாராட்டி, இந்திய அரசு அவருக்கு 1992-இல் பத்ம பூஷன் விருதையும், மகாராஷ்டிர பூஷன் உட்பட எண்ணற்ற விருதுகளையும் வழங்கி கௌரவித்தது.</p><p>நீட் தேர்வு உட்பட, தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் பரவலான போராட்டங்கள் வெடித்ததை தொடர்ந்து, அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரி, ஹசாரே ஜூலை 2026-இல் பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டதுடன், ஒரு முறையான கடிதத்தையும் எழுதினார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் NEET போராட்டக்காரர்கள் மீதான FIR-களை ரத்து செய்ய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது</title><link>https://www.maalaimalar.com/news/national/govt-moves-sc-to-quash-firs-against-neet-protesters-in-delhi-cjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/govt-moves-sc-to-quash-firs-against-neet-protesters-in-delhi-cjp#comments</comments><guid isPermaLink="false">2a14379d-3cd8-40f6-8a6d-968ce8aa2a24</guid><pubDate>Mon, 31 Aug 2026 19:09:39 +0000</pubDate><atom:updated>2026-08-31T19:09:39.852Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,அரசு,Govt,neet protest,உச்சநீதிமன்றம்,CJP,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/7e0rn7ma/Neet-Protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Neet Protest - File Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/7e0rn7ma/Neet-Protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் <a href="https://www.maalaimalar.com/topic/neet-exam">நீட்</a> போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட FIR-களை (முதல் தகவல் அறிக்கைகள்) ரத்து செய்யக் கோரி அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. மேலும், எதிர்காலத்தில் அவர்கள் குறிவைக்கப்படவோ அல்லது துன்புறுத்தப்படவோ மாட்டார்கள் என்றும் உறுதியளித்துள்ளது என்று <a href="https://www.maalaimalar.com/topic/CJP">சி.ஜே.பி.</a> தெரிவித்தது. அதேவேளையில், மற்ற மாநிலங்களில் உள்ள பா.ஜ.க.-என்.டி.ஏ. அரசுகளும் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.</p><p>"டெல்லி தொடர்பான அனைத்து FIR-களையும் ரத்து செய்ய அரசு மனு தாக்கல் செய்துள்ளது; எதிர்காலத்திலும் அவர்கள் குறிவைக்கப்படவோ அல்லது துன்புறுத்தப்படவோ மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம்," என்று சி.ஜே.பி.யின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><h2>உச்சநீதிமன்றம் ஒப்புதல்:</h2><p>டெல்லி காவல்துறை தாக்கல் செய்த இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்களின்போது பதிவு செய்யப்பட்ட 13 FIR-களை ரத்து செய்யவும், வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, போராட்ட இடத்தில் இருந்த 2,873 பேர் மீது புதிய FIR-ஐ பதிவு செய்ய அனுமதி கோரியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த விவகாரம் அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, ​​தானும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மற்றும் பிற சி.ஜே.பி. உறுப்பினர்களும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவோம் என்று தாஸ் கூறினார். மற்ற மாநிலங்களில் உள்ள பாஜக-என்.டி.ஏ. அரசுகளும் இதேபோன்ற மனுக்களை தாக்கல் செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.</p><h2>சி.ஜே.பி. ஆதரவளிக்கும்:</h2><p>நீட் விவகாரத்தைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்தும் முன்னேற்றம் ஏற்படும் என்று சி.ஜே.பி. எதிர்பார்ப்பதாக தாஸ் கூறினார்.</p><p>போராட்டம் தொடர்பான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சி.ஜே.பி. தொடர்ந்து ஆதரவாக நிற்கும் என்று அவர் கூறினார். </p><p>"நாங்கள் அனைத்து இளைஞர்களுக்கும், ஒவ்வொரு மாணவருக்கும் தொடர்ந்து ஆதரவாக நிற்போம். அரசின் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்போது அவர்களை ஒருபோதும் தனித்து விடமாட்டோம்," என்று அவர் கூறினார்.</p><p>கடந்த மூன்று நாட்களில் அரசுப் பிரதிநிதிகள் குழு ஒன்று தன்னைச் சந்தித்து முன்னேற்ற அறிக்கைகளை வழங்க புதுச்சேரிக்கு வந்திருந்ததாக தாஸ் கூறினார். தனது காணொளி அறிக்கையில், அரசுப் பிரதிநிதிகள் குழுவுடனான பேச்சுவார்த்தையில் FIR-கள் மற்றும் இழப்பீடு தொடர்பான விவகாரங்களும் அடங்கும் என்று தாஸ் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>உ.பி. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு</title><link>https://www.maalaimalar.com/news/national/president-murmu-distressed-loss-of-lives-due-to-up-firecracker-factory-explosion</link><comments>https://www.maalaimalar.com/news/national/president-murmu-distressed-loss-of-lives-due-to-up-firecracker-factory-explosion#comments</comments><guid isPermaLink="false">cf70cba6-f216-4b2f-ad2e-da986254b517</guid><pubDate>Mon, 31 Aug 2026 18:23:06 +0000</pubDate><atom:updated>2026-08-31T18:23:06.489Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UP,திரவுபதி முர்மு,உத்தர பிரதேசம்,President Murmu,வெடிவிபத்து,factory explosion</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8gl5ozlp/UP-Explosion-and-Prez.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UP Explosion and Prez]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8gl5ozlp/UP-Explosion-and-Prez.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">உத்தர பிரதேச</a> மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகுந்த வேதனையளிப்பதாக கூறிய குடியரசு தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/droupadi-murmu">திரவுபதி முர்மு</a>, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.</p><p>உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் திங்கள்கிழமை மதியம் நிகழ்ந்த இந்த பயங்கர வெடிவிபத்தில், பட்டாசு ஆலை கட்டிடம் மற்றும் அருகில் இருந்த ஆறு வீடுகள் தரைமட்டமானதில், எட்டு குழந்தைகள் உட்பட பதினொரு பேர் உயிரிழந்தனர்; மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த ஆலையின் உரிமம் 2024-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டிருந்தது.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>"உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்," என்று திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், பெரிய அளவிலான மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. </p><p>தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), மாநில பேரிடர் மீட்பு படை (SDRF), காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் விமானப்படை பிரிவினர் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த அனைவரும் அந்த ஆலைக்கு அருகிலேயே வசித்து வந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.</p><h2>கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்:</h2><p>கௌசாம்பி மாவட்ட ஆட்சியர் அமித் பால் கூறுகையில், மனோரி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாகவும், அதன் தாக்கத்தால் ஆலைக்கு அருகில் இருந்த ஐந்து முதல் ஆறு வீடுகள் வரை இடிந்து விழுந்ததாகவும் தெரிவித்தார்.</p><p>"இந்த ஆலைக்கு 2019-இல் வெடிபொருள் பயன்பாட்டுக்கான உரிமம் வழங்கப்பட்டது; இது 2026 வரை செல்லுபடியாகும் வகையில் இருந்தது. இருப்பினும், 2024-இல் அந்த உரிமம் ரத்து செய்யப்பட்டது. </p><p>உரிமம் ரத்து செய்யப்பட்ட பிறகும் ஆலை எவ்வாறு தொடர்ந்து இயங்கியது என்பதை கண்டறியவும், ஒவ்வொரு நிலையிலும் பொறுப்பை நிர்ணயிக்கவும் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இணையவசதி இல்லாதவர்களுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை: ஃபீச்சர் போன்களுக்கான ‘UPI 123Pay’ சேவையை அறிமுகம் செய்தது PhonePe!</title><link>https://www.maalaimalar.com/news/national/digital-payments-without-internet-phonepe-launches-upi-123pay-for-feature-phones</link><comments>https://www.maalaimalar.com/news/national/digital-payments-without-internet-phonepe-launches-upi-123pay-for-feature-phones#comments</comments><guid isPermaLink="false">29111c80-8a46-4a65-8f7d-8706eafa31b6</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:10:52 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:10:52.988Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PhonePe,LAVA,Nokia,UPI 123Pay,போன்பே நிறுவனம்,யுபிஐ 123பே,டிஜிட்டல் பரிவர்த்தனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/awx18n8k/pone.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PhonePe  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/awx18n8k/pone.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இணையவசதி இல்லாத Feature Phone பயனர்களும் இனி எளிதாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக, ஃபோன்பே நிறுவனம் '<a href="https://www.maalaimalar.com/news/world/apple-ceo-tim-cook-steps-down-ends-15-year-tenure">யுபிஐ 123பே</a>' என்ற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத நாட்டின் சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதியைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்தச் சேவை முற்றிலும் எஸ்.எம்.எஸ் அடிப்படையிலான தொழில்நுட்பக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பலவீனமான 2ஜி நெட்வொர்க் சிக்னல் இருக்கும் கிராமப்புறங்களிலும், தொலைதூரப் பகுதிகளிலும் கூட எவ்வித தடையுமின்றி பணப்பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பாகவும் விரைவாகவும் செய்ய முடியும்.</p><h2>முன்னணி நிறு<strong>வனங்களுடன்</strong> கூட்டு</h2><p>நோக்கியா, ஹெச்.எம்.டி, லாவா மற்றும் ஐட்டெல் போன்ற பிரபல ஃபீச்சர் போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஃபோன்பே கைகோர்த்துள்ளது. இதன் மூலம் புதிய ஃபீச்சர் போன்களிலேயே இந்தச் சேவை முன்பே நிறுவப்பட்டு பயனர்களுக்குக் கிடைக்கும்.</p><p>இந்தச் சேவையின் மூலம் பயனர்கள் நபர்-க்கு-நபர் மற்றும் வணிகர்களுக்கான கட்டணங்களைச் செலுத்த முடியும். கேமரா வசதி கொண்ட ஃபீச்சர் போன்கள் மூலம் கியூ.ஆர் குறியீடுகளையும் ஸ்கேன் செய்யலாம். மேலும், வங்கிக் கணக்கை நிர்வகித்தல், இருப்புத் தொகையைச் சரிபார்த்தல் மற்றும் பரிவர்த்தனை வரலாற்றைப் பார்த்தல் போன்ற வசதிகளும் இதில் அடங்கும்.</p><p>முதல்முறை பயன்படுத்தும் பயனர்களுக்கு உதவும் வகையில், தமிழ் உட்பட 12 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வழிகாட்டும் குரல்வழி செயற்கை நுண்ணறிவு  உதவி மையமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாகப் பயன்பாட்டுக் கட்டணங்கள் செலுத்துதல் மற்றும் ரீசார்ஜ் செய்யும் வசதிகளும் இதில் சேர்க்கப்படவுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>பாஜக-வில் பசு பாதுகாப்புக்கே முன்னுரிமை: மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மெகபூபா முப்தி சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-prioritises-cow-protection-over-womens-safety-mehbooba-on-delhi-gang-rape-of-16-year-old</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-prioritises-cow-protection-over-womens-safety-mehbooba-on-delhi-gang-rape-of-16-year-old#comments</comments><guid isPermaLink="false">0c4a66cd-c844-4ae0-ba52-f4656c9623bf</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:23:44 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:23:44.052Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mehbooba Mufti,கூட்டுப் பாலியல் வன்கொடுமை,gang rape,minor student</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8ie304eg/Mufti0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெகபூபா முப்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8ie304eg/Mufti0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கவலை தெரிவித்துள்ளார்.</p><h2>சமூக வலைதள பதிவு</h2><p>இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>பாஜகவின் இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பை விட பசுப் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.</p><p>பசுவதை செய்ததாக வெறும் சந்தேகத்தின் பேரிலேயே, மக்கள் கும்பல்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும், கற்பழிப்பு, பாலியல் வன்முறை மற்றும் கொடூரங்களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் விஷயத்தில், தண்டனை பெற்ற குற்றவாளிகள் தொடர்ந்து பரோலில் வெளிவருவதோடு மட்டுமல்லாமல், முழுமையான ஆதரவையும் பெறுகின்றனர்.</p> <p>பசுக்களின் பெயரால் நடக்கும் சட்டவிரோதச் செயல்களுக்குச் செலவிடப்படும் ஆற்றலில் பாதியையாவது பெண்களின் பாதுகாப்பிற்காகச் செலவிட்டால், இந்தியா ஒவ்வொரு மகளுக்கும், சகோதரிக்கும், தாய்க்கும் மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்கும்.</p><p>இவ்வாறு மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார்.</p><p>டெல்லியில் ஓடும் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் 16 வயது பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத்தான் மெகபூபா முப்தி பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/massive-fireworks-factory-explosion-in-uttar-pradesh-5-killed-over-20-injured</link><comments>https://www.maalaimalar.com/news/national/massive-fireworks-factory-explosion-in-uttar-pradesh-5-killed-over-20-injured#comments</comments><guid isPermaLink="false">1f720411-8c12-4b50-97a3-afe28632a5c2</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:07:55 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:07:55.424Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,வெடிவிபத்து,பட்டாசு ஆலை வெடிவிபத்து,firecracker factory,firecracker explosion,உத்தரப்பிரதேச மாநிலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/tgjfc0m1/fire-crack.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ firecracker explosion ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/tgjfc0m1/fire-crack.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/worlds-largest-iceberg-a23a-ends-40-year-history">உத்தரப்பிரதேச மாநிலம்</a> கெளசாம்பி மாவட்டத்தின் பிப்ரி காவல் எல்லைக்குட்பட்ட மனோரி கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு ஆலையில் இன்று காலை சுமார் 11 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தீவிர சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் பிரயாக்ராஜில் உள்ள எஸ்.ஆர்.என் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருடன், அருகிலுள்ள மனோரி விமானப்படை தளத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களும் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிபாடுகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. விபத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p><h2>ரெயில் <strong>போக்குவரத்து</strong> பாதிப்பு</h2><p>வெடிவிபத்தின் அதிர்வால் ஆலையை சுற்றியிருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகின. அருகிலுள்ள டெல்லி-ஹவுரா ரெயில் பாதையில் பாதுகாப்பு கருதி ரெயில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டு, வந்தே பாரத் மற்றும் விரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. உயர் அழுத்த மின் கம்பிகள் சேதமடைந்ததால் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-files-petition-in-supreme-court-seeking-orders-to-withdraw-cases-against-neet-exam-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-files-petition-in-supreme-court-seeking-orders-to-withdraw-cases-against-neet-exam-protesters#comments</comments><guid isPermaLink="false">30edb287-cfea-42a7-88d6-c7378e348c7b</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:41:46 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:41:46.260Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Supreme Court,உச்ச நீதிமன்றம்,Protesters,போராட்டக்காரர்கள்,NEET Paper Leak,நீட் தேர்வு வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/2pop537l/New-Project-2026-08-31T181038.682.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் தேர்வு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/2pop537l/New-Project-2026-08-31T181038.682.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கு எதிராக, காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.</p><p>போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய, தனது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தைக் கோரியுள்ளது. இந்த வழக்கை நாளை (ஆக.31) உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. </p><h2>3 கோரிக்கைகள்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கியது. </p><p>இந்த போராட்டம் நாடுதழுவியதாக மாறிய நிலையில், மத்திய அரசு போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் போராட்டக்குழுவினர் போராட்டத்தை கைவிட மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர். </p><p>அப்போது மத்திய கல்வியமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்யவேண்டும், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கவேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வைத்தது.</p><h2>பேரணி அறிவிப்பு</h2><p>இதில் தர்மேந்திர பிரதான் ராஜினாமா மட்டுமே நிறைவேற்றப்பட்டது. மற்ற இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இதனைத்தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து செப்.5ம் தேதி <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-fails-to-fulfill-promises-cockroach-janata-party-announces-rally-for-september-5">கரப்பான்பூச்சி கட்சி பேரணி</a> அறிவித்துள்ளது. </p><p>இந்நிலையில்  போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கழிவறை இருக்கையின் கீழ் 6 அடி நீள நாகப்பாம்பு: குருகிராமில் பரபரப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/gurugram-home-toilet-six-foot-cobra-rescued</link><comments>https://www.maalaimalar.com/news/national/gurugram-home-toilet-six-foot-cobra-rescued#comments</comments><guid isPermaLink="false">a9254b75-7254-4488-a954-49f7bd548d41</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:39:06 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:39:06.005Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>haryana,குருகிராம்,ஹரியானா,Wild life Rescue,Snake Safety,Monsoon Alert,Cobra In Toilet</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/d8hfgt4n/Cobra-In-Toilet" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cobra In Toilet ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/d8hfgt4n/Cobra-In-Toilet?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு வீட்டின் கழிவறையிலிருந்து வந்த தொடர் சீறல் சத்தத்தை அடுத்து, அங்கு 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் வகை நாகப்பாம்பு மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நடந்தது என்ன?</h2><p>குருகிராமின் கர்ஹௌலி கலான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவறைக்குள் இருந்து நீண்ட நேரமாக விசித்திரமான சீறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், கழிவறைக்குள் தேடியும் முதலில் பாம்பு எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.</p><p>பாம்பு ஏதோ ஒரு இடுக்கில் மறைந்திருப்பதை உணர்ந்த குடும்பத்தினர், உடனடியாக வனவிலங்கு பாதுகாவலரான அனில் காண்டாஸ் என்பவருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.</p><h2>உடைத்து எடுக்கப்பட்ட கழிவறை இருக்கை</h2><p>சம்பவ இடத்திற்கு வந்த அனில் காண்டாஸ், கழிவறை இருக்கையை மெதுவாகத் தட்டிப் பார்த்துள்ளார். </p><p>அப்போது உள்ளே இருந்த பாம்பின் சீறல் சத்தம் மேலும் பலமாக இருந்தது.பாம்பு கழிவறை இருக்கையின் கீழ் உள்ள குறுகிய இடைவெளியில் சிக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.</p><p>இதையடுத்து, வேறு வழியின்றி கழிவறை இருக்கை முழுமையாக உடைக்கப்பட்டது. உள்ளே மறைந்திருந்த ஆக்ரோஷமான, மிகவும் விஷத்தன்மை வாய்ந்த கண்ணாடி விரியன் பாம்பு வெளியே தெரிந்தது. </p><p>மிகவும் சவாலான மற்றும் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, மீட்புக் குழுவினர் அந்தப் பாம்பை பத்திரமாக மீட்டு, குடியிருப்புப் பகுதியிலிருந்து துரமாகக் கொண்டு சென்று விடுவித்தனர்.</p><h2>பாம்புகள் குடியிருப்புக்குள் நுழையக் காரணம் என்ன?</h2><p>அண்மைக் காலமாக குருகிராமில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது குறித்து வனவிலங்கு பாதுகாவலர் அனில் காண்டாஸ் சில முக்கிய காரணங்களைப் பகிர்ந்துள்ளார்.</p><p>இது குறித்து அவர் கூறுகையில்,வேகமாக வளர்ந்து வரும் நகரமயமாக்கல் மற்றும் கட்டுமானப் பணிகள் காரணமாக, காடுகளும் விளைநிலங்களும் வேகமாக அழிந்து வருகின்றன.</p><p>இயற்கை வாழிடங்கள் அழிவதால் பாம்புகளுக்குத் தேவையான இயற்கை உணவுகள் கிடைப்பதில்லை. இதனால், அவை எலிகள் மற்றும் பிற சிறு உயிரினங்களைத் தேடி மனிதர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன. </p><p>குருகிராமில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 70 பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களில் இந்த எண்ணிக்கை 200-ஐத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>பொதுமக்களுக்கான எச்சரிக்கையும் விழிப்புணர்வும்!</h2><p>தற்போது பருவமழைக்காலம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>பாம்புகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அனில் காண்டாஸ் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.</p><p>இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் தரையில் படுத்து உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.</p><p>தூங்கும் போது கட்டாயம் கொசுவலைகளைப் பயன்படுத்த வேண்டும் வீட்டில் இருக்கும் உணவுகளை எப்போதும் பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். </p><p>உணவுப் பொருட்கள் சிதறிக் கிடந்தால் எலிகள் வரும், எலிகளைத் தேடி பாம்புகளும் வீட்டிற்குள் நுழையும். ஒருவேளை பாம்பு கடித்துவிட்டால், எவ்வித நாட்டு வைத்தியத்தையோ அல்லது வீட்டு வைத்தியத்தையோ நம்பி நேரத்தை வீணடிக்கக் கூடாது. </p><p>உடனடியாகப் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பாம்பு விஷமுறிவு மருந்து செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘சட்டவிரோத நடுவர் மன்றம்’: சிந்து நதி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நிராகரித்தது இந்தியா!</title><link>https://www.maalaimalar.com/news/national/illegal-tribunal-india-rejects-the-verdict-of-the-indus-waters-tribunal</link><comments>https://www.maalaimalar.com/news/national/illegal-tribunal-india-rejects-the-verdict-of-the-indus-waters-tribunal#comments</comments><guid isPermaLink="false">f1b7ced9-e53a-4d1f-9c77-9cd03af0c70d</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:16:06 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:16:06.188Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,indus waters treaty,சிந்து நதிநீர் ஒப்பந்தம்,World Banks Court of Arbitration,உலக வங்கியின் நடுவர் மன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/5gd7oxlt/New-Project-2026-08-31T171300.106.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சட்டவிரோத நடுவர் மன்றம்’: சிந்து நதி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நிராகரித்தது இந்தியா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/5gd7oxlt/New-Project-2026-08-31T171300.106.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்தியா அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது. </p><p>மேலும், 1960 ஆம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிகளை மீறி உலக வங்கியால் இந்த நீதிமன்றம் “சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது” என்றும், அதன் தீர்ப்புகள் எதற்கும் சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h2>திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்</h2><p>ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி உலக வங்கியால் இந்த 'நடுவர் மன்றம்' அமைக்கப்பட்டது. </p><p>சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இந்த அமைப்பு இதற்கு முன் வெளியிட்ட அனைத்து அறிவிப்புகளையும் இந்தியா எவ்வாறு உறுதியாக நிராகரித்ததோ, அதேபோலவே தற்போதைய தீர்ப்பையும் இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><h2>எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது</h2><p>இந்தியாவின் இறையாண்மை சார்ந்த முடிவுகள் குறித்துத் தீர்ப்பளிக்க இந்த 'நடுவர் மன்றத்திற்கு' எவ்வித அதிகார வரம்பும் இல்லை. இதன் தற்போதைய அல்லது எதிர்கால அறிவிப்புகள், இந்தியா மேற்கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. என இந்தியா தெரிவித்துள்ளது. </p><h2>ஒப்பந்தம் இடைநிறுத்தம்</h2><p>பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, எல்லையோரப் பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவைக் கண்டித்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. </p><p>பாகிஸ்தான் பயங்கரவாதத்தை முற்றிலுமாக நிறுத்தும் வரை, இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடமைகளை நிறைவேற்ற இந்தியா கடமைப்படவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.</p><p>இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் சிந்து நதிநீர் தீர்ப்பாயத்தை நாடியது.</p><h2>நடுவர் நீதிமன்றம் கூறியது என்ன?</h2><p>பஹல்காம் தாக்குதலை காரணம் காட்டி சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதை ஏற்க முடியாது என நடுவர் நீதிமன்றம் தெரிவித்தது. </p><p>எந்த காரணத்தாலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதையோ அல்லது ரத்து செய்வதையோ நியாயப்படுத்த முடியாது என்று கூறிய நடுவர் நீதிமன்றம், இந்தியா ஒப்பந்தத்தின் கீழ் உள்ள தனது கடமைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.</p><p>மேலும் மேற்கு நதிகளில், அதாவது ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியா கட்டி வரும் நீர்மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட வரம்பிற்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.</p><p>அணைக்கட்டுகளில் தண்ணீரைத் தேக்கி வைக்கும் இந்தியாவின் அதிகபட்ச கொள்ளளவு மற்றும் வடிவமைப்புகள் பாகிஸ்தானின் நீர் உரிமைகளைப் பாதிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. </p><h2>2027 ஜூலையில் நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை</h2><p>மேலும் இந்தியாவின் இந்தத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வுசெய்ய நிபுணர் குழு ஒன்றையும் நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. </p><p>உலக வங்கியால் நியமிக்கப்படும் இந்த நடுநிலை நிபுணர் குழு, இந்தியாவின் இந்த நீர்மின் திட்டங்களின் தொழில்நுட்ப வடிவமைப்பு ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டுத்தான் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும்.</p><p>இந்த ஆய்வின் இறுதி அறிக்கை மற்றும் முடிவுகள் சூலை 2027-க்குள் வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.</p><h2>எந்த மாற்றமும் இல்லை</h2><p>தீர்ப்பாயத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, சிந்து நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்த <a href="https://www.maalaimalar.com/news/world/indus-waters-treaty-india-rules-out-return-to-status-quo-links-future-to-pakistans-anti-terror-action">இந்தியாவின் முடிவு தொடர்ந்து அமலில் இருக்கும்</a> என இந்தியா தெரிவித்தது.</p><h2>சிந்து நதிநீர் தீர்ப்பாயம்</h2><p>சிந்து நதிநீர் தீர்ப்பாயம் என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 1960-ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்காக நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பாகும்.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும் சாதனை: முதல் காலாண்டில் இந்திய ஜிடிபி 7.8% வளர்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-gdp-surges-7-8-first-quarter-amid-global-challenges</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-gdp-surges-7-8-first-quarter-amid-global-challenges#comments</comments><guid isPermaLink="false">804597e9-8124-4525-88ed-cb34bebea5e2</guid><pubDate>Mon, 31 Aug 2026 11:25:22 +0000</pubDate><atom:updated>2026-08-31T11:25:22.121Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,Crude oil,கச்சா எண்ணெய்,,India&apos;s GDP grow,Reuters,இந்திய ஜிடிபி,மூலதனச் சந்தை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/x5mqh7bt/GDP.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India's GDP grow ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/x5mqh7bt/GDP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகளாவிய பொருளாதார மந்தநிலை, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8 சதவீதமாக உயர்ந்து அசத்தியுள்ளது. இது பொருளாதார நிபுணர்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்புகளை விட மிக அதிகம்.</p><h2>எதிர்பார்ப்புகளை மிஞ்<strong>சிய வளர்ச்சி விகி</strong>தம்</h2><p>பொருளாதார நிபுணர்கள் மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/world/trump-says-canadian-companies-face-no-tariffs-in-us">ராய்ட்டர்ஸ் </a>கருத்துக் கணிப்புகள் இக்காலகட்டத்தில் வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என்றே கணித்திருந்தன. கடந்த 2025-26 நிதியாண்டின் இதே ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி 6.9 சதவீதமாக மட்டுமே இருந்தது. தற்போது பதிவாகியுள்ள 7.8 சதவீத உயர்வு, இந்திய பொருளாதாரம் வலுவான வேகத்தில் இயங்கி வருவதை உறுதி செய்துள்ளது.</p><p>சர்வதேச அளவில் நிலவும் வணிக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், உள்நாட்டு நுகர்வு தேவைகள் வலுவாக இருந்தது இந்த வளர்ச்சிக்கு முக்கிய தூணாக அமைந்தது. மேலும், அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு மூலதனச் செலவினங்கள், உற்பத்தித்துறை மற்றும் கட்டுமானத்துறை ஆகியவற்றில் காணப்பட்ட வேகமான வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த உதவியது. </p><p>வங்கி கடன் தேவை மற்றும் மூலதனச் சந்தையின் எழுச்சி காரணமாக இத்துறை 12.1% என்ற இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்து முன்னணியில் உள்ளது. உள்நாட்டு தேவை அதிகரிப்பால் உற்பத்தித் துறை 9.2% வளர்ச்சியடைந்துள்ளது. பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், விவசாயம் மற்றும் சார்ந்த துறைகள் 3.6% நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.</p><p>இந்த சாதனை தொடக்கமானது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. இருப்பினும், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்க அழுத்தம் மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலவும் போர்ப் பதற்றங்கள் ஆகியவை வரும் காலாண்டுகளில் கவனிக்கப்பட வேண்டிய சவால்களாக இருக்கும். தனியார் முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், இந்த வேகமான பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைக்க முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>ராஜஸ்தானில் சோகம்: கோயில் குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/rajasthan-dholpur-temple-pond-drowning-four-family-members-dead</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajasthan-dholpur-temple-pond-drowning-four-family-members-dead#comments</comments><guid isPermaLink="false">f94e0050-3245-44b3-adaf-a85585c48450</guid><pubDate>Mon, 31 Aug 2026 11:02:29 +0000</pubDate><atom:updated>2026-08-31T11:02:29.527Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,dholpur,Dholpur Temple tank,Hiraman Baba pond,ராஜஸ்தான் மாநிலம்,தோல்ப்பூர்,ஹிராமன் பாபா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/dbpo4pje/RAJASTHAN.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dholpur Temple tank]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/dbpo4pje/RAJASTHAN.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் மாநிலம் தோல்ப்பூர் மாவட்டத்தில் புனித நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/chris-gayle-pays-floral-tribute-at-oommen-chandys-grave-in-kerala">தோல்ப்பூர் மாவட்டம்</a> நாதூவாபுரா கிராமத்தைச் சேர்ந்த ரவி குமார் (21), அவரது சகோதரிகள் மனோரமா (22), போட்டோ (25) மற்றும் அவர்களின் உறவினர் பெண் நிஷா (18) ஆகிய நால்வரும் பிர்ஜா கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஹிராமன் பாபா திருக்கோயிலுக்குச் சென்றிருந்தனர். ரக்ஷா பந்தனை முன்னிட்டு சனிக்கிழமை இரவு (ஆகஸ்ட் 29) நடைபெற்ற சிறப்பு கோயில் வழிபாடுகள் மற்றும் திருவிழா நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இவர்கள் அங்கு சென்றுள்ளனர்.</p><h2>நீரில் மூ<strong>ழ்கிய சோகம்</strong></h2><p>நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் கோயில் வளாகத்தை ஒட்டியுள்ள ஹிராமன் பாபா குளத்தில் பக்தர்கள் நீராடத் தொடங்கினர். அப்போது ரவி குமார் எதிர்பாராதவிதமாக குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கத் தொடங்கினார். கரை ஓரத்தில் நீராடிக்கொண்டிருந்த அவரது சகோதரிகளும் உறவினரும் ரவி தவிப்பதைக் கண்டு, அவரைக் காப்பாற்ற உடனடியாக ஆழமான பகுதிக்குக் குதித்தனர். ஆனால், நீரின் ஆழம் மற்றும் வேகம் காரணமாக நால்வராலும் கரை திரும்ப முடியாமல் நீரில் மூழ்கினர்.</p><p>சம்பவ இடத்திலிருந்த பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் உடனடியாக மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர். அங்காய் காவல் நிலைய அதிகாரி கிருபால் சிங் தலைமையிலான காவல் துறையினரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.கிராமவாசிகளின் உதவியோடு சில மணி நேரத்திலேயே மனோரமா, போட்டோ மற்றும் நிஷா ஆகிய மூன்று பெண்களின் உடல்களும் குளத்திலிருந்து மீட்கப்பட்டன.</p><p>நீரில் மூழ்கிய ரவி குமாரின் உடலை மீட்க சுமார் 6 மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது. இதேபோல நீரில் மூழ்கி தவித்த மேலும் நான்கு பக்தர்களை கிராம மக்கள் சமயோசிதமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.</p><p>மீட்கப்பட்ட நான்கு பேரின் உடல்களும் உடனடியாக சர்மாத்துரா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்குப் பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பண்டிகை நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உயிர்கள் பறிபோனது நாதூவாபுரா கிராம மக்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பஞ்சாபில் காதலித்து கரம்பிடித்த இளைஞர் ஆணவக்கொலை- பெண் வீட்டார் வெறியாட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/honour-killing-in-punjab-young-man-murdered-for-love</link><comments>https://www.maalaimalar.com/news/national/honour-killing-in-punjab-young-man-murdered-for-love#comments</comments><guid isPermaLink="false">7b1bbd71-96e3-4004-94b5-08bff9104a5d</guid><pubDate>Mon, 31 Aug 2026 10:08:28 +0000</pubDate><atom:updated>2026-08-31T10:08:28.847Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Punjab,ஆணவக்கொலை,Honor killing in Punjab,Tarn Taran,Rampage,பஞ்சாப் மாநிலம்,தார்ன் தரான் பகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ms3jgrma/HONOUR.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Honor killing in Punjab]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ms3jgrma/HONOUR.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தன் தங்கையை அழைத்துச் சென்ற ஆத்திரத்தில் இருந்த பெண் வீட்டார், ஜக்ஜீத் சிங்கை பழிவாங்கத் திட்டம் தீட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shock-in-delhi-newborn-baby-rescued-from-roadside">பஞ்சாப் மாநிலம்</a> தார்ன் தரான் பகுதியில் 22 வயதான ஜக்ஜீத் சிங் எனும் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>காதல் <strong>திருமணம்</strong> </h2><p>கொல்லப்பட்ட ஜக்ஜீத் சிங், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தன் காதலியை வீட்டை விட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், இவர்களது திருமணத்திற்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தன் தங்கையை அழைத்துச் சென்ற ஆத்திரத்தில் இருந்த பெண் வீட்டார், ஜக்ஜீத் சிங்கை பழிவாங்கத் திட்டம் தீட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.</p><h2>கத்திகளுடன் பா<strong>ய்ந்த அண்ணன்க</strong>ள்</h2><p>நேற்று ஜக்ஜீத் சிங் பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தபோது, பெண்ணின் சகோதரர்களான ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் ஹர்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் திடீரென கத்திகளுடன் பாய்ந்து தாக்குதல் நடத்தினர். சரமாரியாக வெட்டப்பட்டதில் பலத்த காயமடைந்த ஜக்ஜீத் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசா<strong>ர் வழக்குப் பதி</strong>வு</h2><p>தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை அதிகாரி, ஜக்ஜீத் சிங்கின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய சகோதரர்களான ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் ஹர்ப்ரீத் சிங்கை தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆணவக்கொலை கோணத்தில் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>