<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 27 Jul 2026 21:12:22 +0000</lastBuildDate><item><title>அசாம் வெள்ளம்: 6 மாவட்டங்களில் 4.4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-flood-over-44-lakh-people-affected-in-6-districts-toll-remains-at-68</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-flood-over-44-lakh-people-affected-in-6-districts-toll-remains-at-68#comments</comments><guid isPermaLink="false">4746f381-0b0b-4f24-8d66-1a6778a01cd9</guid><pubDate>Mon, 27 Jul 2026 19:49:27 +0000</pubDate><atom:updated>2026-07-27T19:49:27.666Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death toll,Assam Flood,அசாம் வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/vn7eovdp/Assam-Floods.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/vn7eovdp/Assam-Floods.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் வெள்ள சூழல் சற்று சீரடைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், ஆறு மாவட்டங்களில் 4.45 லட்சம் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. </p><p>அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) தகவலின்படி, சிவசாகர், கோலாகாட், சாரைடியோ, ஜோர்ஹாட், நாகான் மற்றும் காம்ரூப் (பெருநகரம்) ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 4,45,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை வரை மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் 5.24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.</p><h2>வெள்ள பாதிப்பு:</h2><p>கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை; இதனால் இந்த ஆண்டு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆகவே நீடிக்கிறது என்று ASDMA அறிக்கை கூறியது. சாரைடியோ மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது; அங்கு 1,88,404 பேர் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து சிவசாகர் (1,44,461) மற்றும் ஜோர்ஹாட் (74,458) மாவட்டங்கள் உள்ளன.</p><p>மொத்தம் 90 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன; அவற்றில் இடம்பெயர்ந்த 28,695 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், 94 நிவாரணப் பொருட்கள் விநியோக மையங்களும் செயல்படுகின்றன.</p><h2>நிவாரண பணிகள்:</h2><p>கோலாகாட் மாவட்டத்தின் நுமாலிகர் பகுதியில் தன்சிரி (தெற்கு) ஆறு அபாயக் குறியீட்டிற்கு மேல் பாய்ந்து வருவதாக ASDMA தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 67 படகுகள் பயன்படுத்தப்பட்டு, NDRF, SDRF மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>37,139.52 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன; அதேவேளையில் 26,679 கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வீடுகள், சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அது மேலும் கூறியது.</p>]]></content:encoded></item><item><title>நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற பீகார் அரசு முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-govt-to-withdraw-cases-lodged-against-protesters-over-neet-paper-leak</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-govt-to-withdraw-cases-lodged-against-protesters-over-neet-paper-leak#comments</comments><guid isPermaLink="false">92a5f44f-9a49-4f2e-a2ca-2066218e3127</guid><pubDate>Mon, 27 Jul 2026 18:06:59 +0000</pubDate><atom:updated>2026-07-27T18:06:59.978Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,neet protest,வினாத்தாள் கசிவு,NEET Paper Leak,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/a60opxu8/bihar-neet-protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Neet Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/a60opxu8/bihar-neet-protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் (NEET) <a href="https://www.maalaimalar.com/topic/paper-leaks">வினாத்தாள் கசிவு</a> விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறவும், சிறையில் உள்ளவர்களை விடுவிக்கவும் பீகார் அரசு முடிவு செய்துள்ளது.</p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவும், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் <a href="https://www.maalaimalar.com/topic/bihar">பீகார் அரசு</a> முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.</p><h2>அதிகாரப்பூர்வ அறிவிப்பு:</h2><p>மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "ஜூலை 26-ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு முன்னதாக நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகள் (FIR), புகார்கள் மற்றும் விளக்கம் கோரும் அறிவிப்புகள் (show-cause notices) ஆகியவை திரும்பப் பெறப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.</p><h2>சி.ஜே.பி. போராட்டம்:</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) சார்பில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகலை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த போராட்டம் நாடு முழுக்க பல மாநிலங்கள் வரை மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.</p><p>அந்த வரிசையில் பீகார் மாநிலத்திலும் மாணவர்கள், மாணவர் அமைப்புகள் சார்பில் போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மாநிலம் முழுக்க நடைபெற்ற போராட்டங்களில் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, பலர் கைது செய்யப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர் உள்ளிட்ட கர்நாடக எம்.பி.க்களுடன் டி.கே. சிவகுமார் ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/national/union-education-minister-pralhad-joshi-joins-dk-shivakumar-for-delhi-talks-on-mekedatu-dam</link><comments>https://www.maalaimalar.com/news/national/union-education-minister-pralhad-joshi-joins-dk-shivakumar-for-delhi-talks-on-mekedatu-dam#comments</comments><guid isPermaLink="false">0bc05179-1710-4433-bf39-057f9e08f309</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:28:36 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:28:36.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,மேகதாது அணை,டிகே சிவக்குமார்,TK Sivakumar,kaveri,காவேரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/jgqd8lmk/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar and Pralhad Joshi Talks about Mekedatu Dam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/jgqd8lmk/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.</p><h3><strong>மேகதாது அணை விவகாரம்:</strong></h3><p>கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்ட அம்மாநில அரசு தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.</p><p>கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு, அம்மாநில அரசு தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.</p><p>தமிழகத்திற்கு திறக்க வேண்டிய காவிரி நீரை, கர்நாடக அரசு திறந்துவிடாமல் இருந்து வருகிறது. கர்நாடகவில் போதுமான மழை பெய்யாமல் வறட்சி நிலவி வருவதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து பெங்களூருவில் டி.கே. சிவக்குமாரை தமிழக முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்துகொள்ள கூடாது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.</p><p>இந்நிலையில் டெல்லியில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தலைமையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.</p><p><strong>டெல்லியில் ஆலோசனை கூட்டம்:</strong></p><p>இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வர், அமைச்சர்கள் ஜார்ஜ், ஈஸ்வர் காந்த்ரே, சரண் பிரகாஷ், கிருஷ்ண பைரே கவுடாம், சதீஷ் ஜார்கிஹோலி, ராம லிங்கரெட்டி ஆகியோர்களும் பங்கேற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.</p><p>இவர்களுடன் கர்நாடகவை சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் மத்திய இணை அமைச்சர் ஷோபா உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பரோடா வங்கி தரவுகள் டார்க் நெட்டில் கசிவு- பயனர்களின் ஏடிஎம், நெட்பேக்கிங், ஆதார் பதிவேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/bank-of-baroda-data-leak-darknet-atm-netbanking-aadhaar</link><comments>https://www.maalaimalar.com/news/national/bank-of-baroda-data-leak-darknet-atm-netbanking-aadhaar#comments</comments><guid isPermaLink="false">0a8c805a-f9b4-4644-a1fd-76451dd2fec4</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:03:34 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:03:34.978Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,Bank of Baroda,இந்திய ரிசர்வ் வங்கி,பேங்க் ஆஃப் பரோடா,darknet,டார்க் நெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/928904ln/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bank of Baroda Data Leak: Customer ATM, netbanking and Aadhaar details on dark net]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/928904ln/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>பேங்க் ஆஃப் பரோடா தரவுகள் கசிவு:</strong></h3><p>பேங்க் ஆஃப் பரோடா தேசிய வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் சுமார் 1,000 ஜிபி டேடா கொண்ட தரவுகள், டார்க் நெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக டார்க் வெப் இன்டெலிஜென்ஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.  </p><p>குஜராத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 1908-ஆம் ஆண்டு, இந்தியாவின் இரண்டாவது பெரிய தேசிய வங்கியான பேங்க் ஆஃப் பரோடா ஆரம்பிக்கப்பட்டது.</p><p>இந்த வங்கி நாடு முழுவதும் எட்டாயிரத்திற்கும் அதிகமான கிளைகளை கொண்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களது பணத்தை வசதியாக எடுத்துக்கொள்ளும் வகையில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்-களையும் கொண்டுள்ளது.</p><p>கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு, பணப்பரிவர்த்தனைகள் பெரும்பாலும் இணையத்தின் மூலமாகவே நடைபெற்று வருகிறது.</p><p>இந்நிலையில் பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கார்ப்பரேட் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள பயனர்களின் தொலைபேசி எண்கள், ஆதார் எண்கள், நெட்பேங்கிங் பயனர் ஐடிகள், கடன் விண்ணப்பங்கள், ஏடிஎம் தொடர்பான பதிவு விவரங்கள் டார்க்நெட்டில் கசிந்துள்ளன.</p><h3><strong>கேஷ்லெஸ் நிறுவனர் குற்றச்சாட்டு:</strong></h3><p>இதுகுறித்து மென்பொருள் பொறியாளரும், கேஷ்லெஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஸ்ரீகாந்த் லட்சுமணன் கூறுகையில், பரோடா வங்கி வாடிக்கையாளர்களின் உண்மையான தகவல்கள் கசிந்துள்ளதாக ஆய்வு செய்து கூறினார்.</p><p>இதுதான் வங்கி கிளை தணிக்கையின் தரம் என்றும் செயற்கை நுண்ணறிவு சைபர் இணையத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யுமாறும், எக்ஸ் தளத்தில் இந்திய ரிசர்வ் வங்கியை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>மேலும், இந்திய ரிசர்வ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இந்த பிரச்சனையை எக்ஸ் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>இந்த தரவுகள் வெளியான பின்னணியில், தரவு மிரட்டல் மற்றும் ரான்சம்வேர் அச்சுறுத்தல் குழுவான ‘டிரிபிள் எக்ஸ்’ இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த குறிப்பிட்ட குழு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தோனேசியாவின் அரசுக்கு சொந்தமான வங்கி ஒன்றின் மீது இணையவழி தாக்குதலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வழக்குகள் வாபஸ் பெறப்படாவிட்டால் மீண்டும் போராட்டம்: மத்திய அரசுக்கு &apos;காக்ரோச் ஜனதா கட்சி&apos; கெடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/if-cases-not-withdrawn-protests-will-return-cockroach-janata-party-deadline-to-centre</link><comments>https://www.maalaimalar.com/news/national/if-cases-not-withdrawn-protests-will-return-cockroach-janata-party-deadline-to-centre#comments</comments><guid isPermaLink="false">80310ffe-be56-456c-b01d-62c50bdfc371</guid><pubDate>Mon, 27 Jul 2026 13:58:22 +0000</pubDate><atom:updated>2026-07-27T13:58:22.080Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி ஜந்தர் மந்தர்,Cockroach Janta Party,abhijeet dipke,அபிஜீத் திப்கே,காக்ரோச் ஜனதா கட்சி,CJPProtest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/aorc3803/cjp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cockroach Janta Party  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/aorc3803/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்களாக நடைபெற்று வந்த மாணவர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்ற நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீதான வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடங்கும் என 'காக்ரோச் ஜனதா கட்சி (CJP)' மத்திய அரசுக்குக் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்களைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அபிஜீத் திப்கே தலைமையிலான காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. </p><p>கடந்த வார இறுதியில் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, மத்திய அரசுடன் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் நல்லெண்ண அடிப்படையில் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.</p><h2><strong>CJP அமைப்பின் குற்றச்சாட்டுகள்:</strong></h2><p>போராட்டத்தைக் கைவிட்ட போதிலும், மத்திய அரசு மற்றும் காவல்துறை அளித்த வாக்குறுதிகளை மீறி வருவதாக CJP குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து, CJP செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, "போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எவ்வித காவல் துறை நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்ற ஒப்பந்தத்தை அரசு மீறியுள்ளது. </p><p>பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட உதவிகளைச் செய்த தன்னார்வலர்கள் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.</p><h2><strong>வழக்குகளை வாபஸ் பெற கோரிக்கை:</strong></h2><p>போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்.ஐ.ஆர் வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்ட மாணவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.</p><p>மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாஜக தலைவர்களான ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரை Tag செய்து வெளியிடப்பட்டுள்ள அந்தப் பதிவில், "நாளைக்குள் இது தொடர்பான எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை வழங்கி, வழக்குகளைத் திரும்பப் பெறாவிட்டால், நாங்கள் மீண்டும் போராட்டக்களத்தில் இறங்க வேண்டியிருக்கும்" எனத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>உச்ச நீதிமன்றத்தின் கருத்து:</strong></h2><p>இதனிடையே, டெல்லியில் ஜூலை 20 அன்று நடைபெற்ற 'சலோ சன்சாத்' பேரணியின் போது காவல்துறை நடத்திய கண்ணீர்ப்புகை தாக்குதல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்து தெரிவித்துள்ளது. "அமைதியான வழியில் போராட்டம் நடத்துவது என்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. வெறும் போராட்டம் நடக்கிறது என்பதற்காகக் காவல்துறையின் வரம்பு மீறிய தடியடியை நியாயப்படுத்த முடியாது"* என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2><strong>பாராளுமன்றத்தில் எதிரொலி:</strong></h2><p>மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை மற்றும் வழக்குகள் தொடரப்படும் விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயலைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்திச் முழக்கங்களை எழுப்பியதால் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன. </p><p>மத்திய அரசு மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் காவல்துறையினர் நாளைக்குள் வழக்கு திரும்பப் பெறுதல் குறித்த தெளிவான முடிவை அறிவிக்காத பட்சத்தில், நாடு தழுவிய அளவில் மீண்டும் மாணவர் போராட்டம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Video: வெல்லம் ஊட்டிய ஆட்டோ ஓட்டுனரை மிதித்து கொன்ற யானை - பாகன் மீது வழக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/national/auto-driver-killed-by-elephant-in-indore-after-feeding-jaggery</link><comments>https://www.maalaimalar.com/news/national/auto-driver-killed-by-elephant-in-indore-after-feeding-jaggery#comments</comments><guid isPermaLink="false">1296eff4-f240-489e-892f-74dc9ebaa986</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:28:24 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:28:24.224Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>indore,CCTVFootage,ElephantAttack,யானைதாக்குதல்,TragicIncident,BNSAct,PublicSafety</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/uk4nsixk/ElephantAttack" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ElephantAttack ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/uk4nsixk/ElephantAttack?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், சாலையில் நின்றிருந்த யானை ஒன்றுக்கு அன்போடு வெல்லம் ஊட்ட முயன்ற ஆட்டோ ஓட்டுநர், அந்த யானையால் கொடூரமாக மிதித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>கடந்த சனிக்கிழமை நகரின் ராஜ் நகர் காவல் நிலையத்திற்கு நேர் எதிரே அரங்கேறிய இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.</p><h2><strong>வெல்லம் ஊட்டியதால் ஆபத்து</strong></h2><p>இறந்துபோன நபர் இந்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய் ஹோல்கர் (49) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சனிக்கிழமையன்று சாலையில் யானை நிற்பதைக் கண்ட அவர், அதற்கு ஏதேனும் உணவளிக்க விரும்பியுள்ளார். </p><p>அதன்படி, கையில் வெல்லக் கட்டிகளுடன் யானையின் அருகில் சென்று அதை ஊட்ட முயன்றுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த யானை திடீரென கோபமடைந்து, தனது தும்பிக்கையால் விஜய் ஹோல்கரை பலமாகத் தள்ளி கீழே வீழ்த்தியது.</p><h2><strong>பாகனின் அஜாக்கிரதை</strong></h2><p>விஜய் ஹோல்கர் கீழே விழுந்ததைக் கண்டு பதற்றமடைந்த யானையின் பாகன் உமேஷ் கோஸ்வாமி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர நினைத்தார். </p><p>ஆனால், அவர் கையாண்ட விதம் நிலைமையை மேலும் மோசமாக்கியது. யானையைத் அமைதிப்படுத்துவதற்குப் பதிலாக, தனது கையில் இருந்த தடியால் யானையின் தலைப்பகுதியில் பலமாக அடித்தார். </p><p>பாகன் அடித்த அடியில் ஏற்பட்ட வலியால் நிலைதடுமாறிய அந்த யானை, முற்றிலும் தனது கட்டுப்பாட்டை இழந்து ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கே சென்றது.</p><h2><strong>தும்பிக்கையால் வீச்சு</strong></h2><p>கட்டுப்பாட்டை இழந்த யானை, கீழே விழுந்து தவித்துக் கொண்டிருந்த விஜய் ஹோல்கரை மீண்டும் தனது தும்பிக்கையால் சுருட்டி காற்றில் தூக்கி வீசியது. </p><p>அத்துடன் நிறுத்தாமல், கீழே விழுந்த அவரது வயிற்றுப் பகுதியின் மீது தனது கால்களால் பலமாக மிதித்துத் துவைத்தது. அங்கிருந்தவர்கள் அலறியடித்தபடி ஓடிவந்து, பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவரை மீட்டனர்.</p><h2><strong>சிகிச்சை பலனின்றி மரணம்</strong></h2><p>கடுமையான காயங்களுடன் கிடந்த விஜய் ஹோல்கர் உடனடியாக அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். </p><p>அங்கு அவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட போதிலும், நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவசரப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். </p><p>அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜய் ஹோல்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>யானையின் மிதியால் அவரது உடலின் முக்கிய உட்புற உறுப்புகள் கடுமையாகச் சிதைந்து, கடுமையான காயங்கள் ஏற்பட்டதே மரணத்திற்குக் காரணம் என்று பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் .</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/MlskmA4WdTk"></iframe></figure><h2><strong>காவல்துறை விசாரணை மற்றும் வழக்குப்பதிவு</strong></h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சில ஆன்மீகத் துறவிகள் தங்களது சமூக நிகழ்ச்சி ஒன்றிற்காக இந்த யானையை நகருக்குள் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. </p><p>அந்த யானையை நகரின் பல்வேறு தெருக்களுக்குக் கூட்டிச் சென்று, மக்களிடம் யாசகம் பெற வைத்துள்ளனர்.</p><p>பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெரிசல் மிகுந்த நகர்ப்புற பகுதிக்கு யானையை அழைத்து வருவதற்கு முன்பாக, வனத்துறையிடமிருந்து முறையான அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>இதற்கிடையில், யானையைச் சரியாகப் பராமரிக்காமல் அஜாக்கிரதையாகச் செயல்பட்டு ஒருவரின் மரணத்திற்குக் காரணமான பாகன் உமேஷ் கோஸ்வாமி மீது காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் 106 மற்றும் 291 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாட்டில் போராட்டத்தை உருவாக்க முயற்சிப்பதே, ராகுல் காந்தியின் ஒரே குறிக்கோளாக உள்ளது: பா.ஜ.க</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-s-only-goal-is-to-create-protests-in-the-country-bjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-s-only-goal-is-to-create-protests-in-the-country-bjp#comments</comments><guid isPermaLink="false">06656907-8e6d-4fc8-8026-c759d3c95446</guid><pubDate>Mon, 27 Jul 2026 11:13:42 +0000</pubDate><atom:updated>2026-07-27T11:13:42.474Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Bihar Bandh,பீகார் பந்த்,AK 47,ஏகே 47</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/30qutxj2/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BJP Slams Rahul Gandhi over AK-47 claims in Bihar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/30qutxj2/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க ஏ.கே 47 ரக துப்பாக்கியை காவலர் ஒருவர் பயன்படுத்தியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், அவருக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  </p><h3><strong>பீகார் பந்த:</strong></h3><p>பீகாரில் மாநிலம் தழுவிய பந்த் (முழு அடைப்பு) போராட்டம் நடைபெற்றது. அப்போது மாணவர் அமைப்புகள் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. </p><p>இதையடுத்து போராட்டாத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது காவலர் ஒருவர், ஏகே-47 துப்பாக்கியை பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இணையத்தில் பரவின. </p><p>இதைதொடர்ந்து துப்பாக்கியை பயன்படுத்திய காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். </p><h3><strong>ஏகே-47 பயன்படுத்தியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு:</strong></h3><p>இந்த சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.</p><p>மேலும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கொலை செய்வதற்கு, யார் அதிகாரம் கொடுத்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.</p><p>இந்நிலையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளரும், மக்களவை உறுப்பினருமான சம்பித் பத்ரா, ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்கட்சித் தலைவர் மிகுந்த பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்தி இருப்பது வெட்கக்கேடான செயல் என்றும் அவர் கூறினார்.</p><h3><strong>பாஜக கண்டனம்:</strong></h3><p>இதுகுறித்து சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியாவில் எதிர்கட்சி தலைவர் பதவியில் இருக்கும் ஒருவரால், இத்தகைய பொய் பரப்பப்படுவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.</p><p>இந்த நாட்டில் காவல்துறை எப்போதாவது போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஏகே-47 துப்பாக்கிகளை பயன்படுத்தி இருக்கிறதா?</p><p>அந்த மாதிரி சம்பவம் எப்போதாவது நடந்திருக்கிறதா? ஏகே-47 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக ராகுல் காந்தியால் எப்படி கூற முடியும்?</p><p>இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற அவதூறுகளையும் பொய்களையும் பரப்பியதற்காக ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>இதுபோன்ற பிரச்சாரங்களை செய்து, தவறான தகவல்களை பரப்புவதன் மூலம், ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் நாடு முழுவதும் பீதியையும், குழப்பத்தையும், அராஜகச் சூழலையும் உருவாக்க விரும்புகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.</p><p>ராகுல் காந்தி ஒரு பொறுப்பான எதிர்கட்சி தலைவராக நடந்துகொண்டு, இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பியதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>இயற்கையாகவே பிரச்சனைகளை தீர்ப்பது ராகுல் காந்தியின் நோக்கம் அல்ல. அமளியை தூண்டிவிட்டு, செயற்கையான கோபத்தை உருவாக்கி ஒரு போராட்டத்தை உருவாக்க முயற்சிப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக அராஜகத்தை உருவாக்க முயற்சிப்பது ஆகியவையே ராகுல் காந்தியின் ஒரே குறிக்கோளாக உள்ளது,” என்று பத்ரா கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை! - உத்தரப்பிரதேசத்தில் பயங்கரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-play-school-teacher-accused-of-burning-childs-private-parts</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-play-school-teacher-accused-of-burning-childs-private-parts#comments</comments><guid isPermaLink="false">adc59bfe-486c-4913-b8ff-4b605d4641f1</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:26:09 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:26:09.689Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,வாரணாசி,playschool,physically assaulted,உத்தரப் பிரதேச மாநிலம்,பிளேஸ்கூல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/bqp9ug6c/up.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Horrific Incident in UP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/bqp9ug6c/up.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், வகுப்பறையில் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமல் பேண்ட்டிலேயே கழித்த 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் பிளேஸ்கூல் ஆசிரியை ஒருவர் பழுக்கக் காய்ச்சிய கத்தியால் சூடு வைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>வகுப்பறையில் நடந்த அநியாயம்:</strong></h2><p>வாரணாசியில் உள்ள அகதா பகுதியில் இயங்கி வரும் 'சீரீன் சோனி பிளேஸ்கூல்' என்ற தனியார் பள்ளியில், வழக்கறிஞர் ஒருவரின் 5 வயது சிறுவன் நர்சரி படித்து வருகிறான். சம்பவத்தன்று வகுப்பில் இருந்த சிறுவன், இயற்கை உபாதையைக் கழிக்க ஆசிரியையிடம் அனுமதி கேட்டுள்ளான். ஆனால், ஆசிரியை அனுமதி மறுத்ததால், சிறுவனால் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமல் பேண்ட்டிலேயே கழித்துவிட்டான்.</p><h2><strong>பழுக்கக் காய்ச்சிய கத்தியால் சித்திரவதை:</strong></h2><p>இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, சிறுவனை மற்றொரு அறைக்கு இழுத்துச் சென்றுள்ளார். அங்கு இருந்த கேஸ் ஸ்டவ்வை பற்றவைத்து, அதில் கத்தியை பழுக்கக் காய்ச்சிய ஆசிரியை, அச்சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து வெளியில் யாருடனாவது சொன்னால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அச்சிறுவனைத் தாக்கி மிரட்டியும் உள்ளார்.</p><h2><strong>தாயிடம் கண்ணீருடன் கூறிய சிறுவன்:</strong></h2><p>வீட்டிற்குத் திரும்பிய சிறுவன், வலியால் கதறி அழுது நடந்த கொடுமைகளைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனின் உடலில் கொப்புளம் இருப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆசிரியையைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.</p><p>இதையடுத்து பள்ளி முதல்வர் ஹேமலதா சிங் மற்றும் மேலாளரிடம் புகார் தெரிவிக்க நேரில் சென்றபோது, அவர்கள் சிறுவனின் பெற்றோருக்கு ஆதரவாகச் செயல்படாமல் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.பள்ளி நிர்வாகத்தின் இந்த போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த பெற்றோர், லால்பூர்-பாண்டேபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். </p><p>புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் பாதுகாப்புடன் படிக்க வேண்டிய 5 வயதுக் குழந்தைக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: வரவேற்பை பெற்ற ஆசிரியையின் வரவேற்பு பலகை</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-teachers-matchbox-attendance-board-is-a-lesson-in-responsibility</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-teachers-matchbox-attendance-board-is-a-lesson-in-responsibility#comments</comments><guid isPermaLink="false">75b6da72-c488-4279-86cb-8663a33eb1f5</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:13:22 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:13:22.881Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>social media,video viral,சமூக வலைத்தளம்,Students,மாணவர்கள்,teacher,வீடியோ வைரல்,ஆசிரியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/vad6gyeg/delhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/vad6gyeg/delhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>வீடியோவில், ஆசிரியை தங்கள் பெயர்களை அழைக்கும் வரை காத்திருக்காமல், மாணவர்கள் கையால் செய்யப்பட்ட பலகையை  பயன்படுத்தி உற்சாகமாகத் தங்கள் வருகையைப் பதிவு செய்யும் காட்சிகள் உள்ளது.</aside><h2><strong>வருகை பதிவு</strong></h2><p>பள்ளிகளில் முதல் வகுப்பு தொடங்குவதற்கு முன்பாகவே மாணவ, மாணவிகளின் வருகை பதிவு செய்யப்படும். வகுப்பு ஆசிரியர் ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் பெயர்களின் பெயரை சொல்லி அவர்களின் வருகையை பதிவு செய்வது வழக்கம். அதன்பிறகு தான் பாடங்கள் நடத்துவார். </p><p>இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ஆசிரியை ஒருவர், கையால் செய்யப்பட்ட தீப்பெட்டி பலகையைப் பயன்படுத்தி, வருகைப்பதிவை மாணவர்களே முன்னின்று நடத்தும் ஒரு செயல்பாடாக மாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. </p><p>"என் சின்னஞ்சிறு குழந்தைகள், பொறுப்பேற்கிறார்கள்" என்ற தலைப்புடன் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஆசிரியை தங்கள் பெயர்களை அழைக்கும் வரை காத்திருக்காமல், மாணவர்கள் கையால் செய்யப்பட்ட பலகையை  பயன்படுத்தி உற்சாகமாகத் தங்கள் வருகையைப் பதிவு செய்யும் காட்சிகள் உள்ளது.</p><h2><strong>வீடியோ</strong></h2><p> ஆசிரியை வகுப்பறைக்குள் நுழைவதில் இருந்து வீடியோ தொடங்குகிறது. அவரைத் தொடர்ந்து வரும் குழந்தைகள், சுவரில் பொருத்தப்பட்டிருந்த வண்ணமயமான, சுயமாக செய்யப்பட்ட வருகை  பலகையை நோக்கி நேராகச் செல்கின்றனர். பலகையில் சிறிய தீப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொன்றிலும் ஒரு மாணவரின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது. </p><p>ஒவ்வொரு தீப்பெட்டிக்குள்ளும் இரண்டு எழுத்துக்கள் உள்ளன: 'A' என்பது வருகையின்மையையும், 'P' என்பது வருகையையும் குறிக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் வகுப்பறைக்குள் நுழையும்போது, அவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்வதற்கு முன், தங்கள் தீப்பெட்டியைத் திறந்து 'P' என்ற எழுத்தை வெளிப்படுத்தி, தாங்கள் வந்திருப்பதை அமைதியாக  குறித்துக்கொள்கிறார்கள். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் , அன்றாடப் பணியை அர்த்தமுள்ள கற்றல் அனுபவமாக மாற்றியதற்காக   ஆசிரியையை பாராட்டி பதிவிட்டனர்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbLdbCsTpyZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbLdbCsTpyZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>‘தேர்தலுக்கு பின் அழுது பிரயோஜனமில்லை... சமாஜ்வாதியுடன் கூட்டணிக்கு தயார்’ - ஓவைசி அழைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/no-use-crying-after-the-election-ready-for-an-alliance-with-samajwadi-owaisis-call</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-use-crying-after-the-election-ready-for-an-alliance-with-samajwadi-owaisis-call#comments</comments><guid isPermaLink="false">3c7a8f91-683c-45a5-9f99-3174a600763e</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:42:21 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:42:21.459Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அகிலேஷ் யாதவ்,Akhilesh Yadav,asaduddin owaisi,AIMIM,UP Polls,உ.பி. தேர்தல்,அசாதுதீன் ஓவைசி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/3yrde59v/New-Project-2026-07-27T145125.953.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/3yrde59v/New-Project-2026-07-27T145125.953.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயார் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார்.</p><p>பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் நீடிப்பதை தான் விரும்பவில்லை என்றும், ஓட்டுகள் பிரிவதை தவிர்ப்பதற்காகவே சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக மொராதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஓவைசி.,</p><p>“இதை நான் முன்பே கூறியுள்ளேன், மீண்டும் கூறுகிறேன்: உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை மஜ்லிஸ் விரும்பவில்லை. நான் கைகோர்க்கத் தயார். நான் கூட்டணி அமைக்கத் தயார். பேசுவதற்கான நேரம் இது. தேர்தல் முடிந்த பிறகு அழ வேண்டாம். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை.</p><p>ஓவைசி போட்டியிடுவது நமக்குத் தீங்கு விளைவிக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நான் உங்களுடன் இணைந்து போராடத் தயார். எங்கள் போராட்டம் எங்கள் கௌரவத்திற்கான போராட்டம். எங்கள் போராட்டம் நீதிக்கான போராட்டம். இப்போது நாங்கள் சும்மா உட்கார்ந்திருக்க விரும்பவில்லை. இப்போது எங்களுக்கு சமத்துவம் வேண்டும்.</p><p>அகிலேஷ் ஒரு நாற்காலியில் அமர்ந்தால், ஓவைசி அந்த நாற்காலிக்கு முன்னால் சம்மணமிட்டு அமர்ந்து உரிமைகள் மற்றும் நீதி பற்றிப் பேசுவார்.” என்று கூறினார்.</p><p>ஓவைசியின் இந்த அழைப்பு விமர்சித்துள்ள பாஜக, இருவரும் நாணயத்தின் இரு பக்கங்கள். அகிலேஷ் யாதவும், ஓவைசியும் ஒருவரையொருவர் திருப்திப்படுத்துவதில் போட்டியிடுகிறார்கள். இன்று அவர்கள், 'யார் பெரிய அண்ணா?' என்ற போட்டியை ஒதுக்கிவிட்டு, 'அண்ணா கூட்டணி அமைப்போம்' என்கிறார்கள். </p><p>ஓவைசி, அகிலேஷ் யாதவ்வுக்கு ஃபிரண்ட் ரிக்வஸ்ட் கொடுத்துள்ளார் என விமர்சித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>குஜராத்தில் இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர் முறை அறிமுகம்: புகார்களை வீட்டில் இருந்தபடியே பதிவு செய்யலாம்</title><link>https://www.maalaimalar.com/news/national/e-zero-fir-system-introduced-in-gujarat-online-complaints-from-home</link><comments>https://www.maalaimalar.com/news/national/e-zero-fir-system-introduced-in-gujarat-online-complaints-from-home#comments</comments><guid isPermaLink="false">33cb09fb-7fb7-4112-b5f4-a9ff25e1ae0d</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:20:08 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:20:08.704Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FIR,குஜராத்,gujarat,e-zero FIR,எஃப்.அப்.ஆர்,இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/4v4qhucx/Untitled-design-86.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gujarat launched e-Zero FIR System]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/4v4qhucx/Untitled-design-86.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலத்தில் இணையவழி நிதி மோசடி தொடர்பான புகார்களுக்கு, பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு செல்லாமலேயே சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்க, இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>குஜராத் துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்வி, காந்தி நகரில் சைபர் நிதி மோசடி இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர் சேவையை இன்று தொடங்கி வைத்தார்.</p><h3><strong>குஜராத்தில் இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர் அறிமுகம்:</strong> </h3><p>இதன் தொடக்க விழாவில் பேசிய ஹர்ஷ் சங்வி, “இ-ஜீரோ முதல் தகவல் அறிக்கை ( e-Zero FIR) அமைப்பு மூலம், இணையவழி மோசடியால் பாதிக்கப்படவர்கள் தங்கள் விடுகளில் இருந்தபடியே வசதியாக புகார்களை பதிவு செய்ய முடியும்.</p><p>மேலும் உரிய நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை, மோசடி செய்யப்பட்ட தொகையை மீட்பதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்” என்று கூறினார்.</p><p>இந்த விழாவில் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் குமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.</p><h3><strong>புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை:</strong></h3><p>காவல்துறை தலைமை இயக்குநர் ஞானேந்திர சிங் மாலிக் கூறுகையில், அனைத்து களப் பிரிவுகளும் இதுபோன்ற புகார்களை தீவிரமாகவும், கவனமாகவும் கையாள வேண்டும் என்று கூறினார்.</p><p>மேலும் புதிய அமைப்பை திறம்பட செயல்படுத்துவதன் மூலம் புகார்தாரர்களுக்கு விரைவான நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.</p><p>சைபர் சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் அமைப்பின் தலைவர் பிபின் அஹிரா கூறுகையில், “இ-ஜீரோ முதல் தகவல் அறிக்கை செயல்முறையானது 14C உடன் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>இணையவழி நிதி மோசடி புகார் எண்:</strong></h3><p>1930 என்ற உதவி எண் மூலம் பெறப்படும் இணையவழி நிதி மோசடி தொடர்பான புகார்கள், தானாகவே பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கையாக (Zero FIR) உருவாக்கப்பட்டு, பின்னர் அது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பப்படும்.</p><p>மேலும், இதனை தொடர்ந்து காவல்துறையினர் புகார்தாரரை தொடர்புகொண்டு, தேவையான தகவல்களை பெற்று, சட்ட நடைமுறைகளின்படி முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்து, உடனடியாக விசாரணையை தொடங்குவார்கள்” என்று பிபின் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய உணவகத்தின் செயல்</title><link>https://www.maalaimalar.com/news/national/woman-orders-cheesy-momos-gets-rs-20-refund-and-thoughtful-note-after-restaurant-runs-out-of-item</link><comments>https://www.maalaimalar.com/news/national/woman-orders-cheesy-momos-gets-rs-20-refund-and-thoughtful-note-after-restaurant-runs-out-of-item#comments</comments><guid isPermaLink="false">8a85a3f9-f897-4865-b9fd-442b9213b6b0</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:57:15 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:57:15.042Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>social media,video viral,சமூக வலைத்தளம்,வீடியோ வைரல்,உணவகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/33yh5cc6/order.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/33yh5cc6/order.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>வேறு உணவு வகையை அனுப்பியதோடு, அதனுடன் அனுப்பிய குறிப்பு மற்றும் உணவுக்காக வித்தியாச தொகை குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. </aside><h2><strong>உணவு ஆர்டர்</strong></h2><p>தங்களுக்கு பிடித்த  உணவுகளை ஓட்டல்களில் ஆர்டர் செய்து வீட்டிற்கு வரவழைத்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் ஆர்டர் செய்த உணவுக்கு பதிலாக வேறு வகை உணவுகள் கொண்டு வரப்படுவதும், இதுதொடர்பாக வாடிக்கையாளருக்கும், உணவு வினியோக நிறுவன ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி இருந்தன. </p><p>அதற்கு மாறாக வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த உணவு, காலியான நிலையில் உணவகத்தில் இருந்த வேறு உணவு வகையை அனுப்பியதோடு, அதனுடன் அனுப்பிய குறிப்பு மற்றும் உணவுக்காக வித்தியாச தொகை குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. </p><h2><strong>வீடியோ</strong></h2><p>வீடியோவில்  ஷிரியா என்பவர் தான் ஒரு தட்டு சீஸி மோமோஸ் ஆர்டர் செய்ததாக கூறுகிறார். ஆனால், ஆர்டர் தயாராகும் நேரத்தில் அந்த உணவு வகை தீர்ந்துவிட்டது. ஆர்டரை ரத்து செய்வதற்கோ அல்லது அவருக்குத் தெரிவிக்காமல் வேறொன்றை மாற்றி வைப்பதற்கோ பதிலாக, உணவகம் சாதாரண 'க்ரஞ்சி மோமோஸ்'  வகையை பேக் செய்து, விலை வித்தியாசத்திற்காக 20 ரூபாயை திரும்ப அளித்தது. பார்சலை  பிரித்தபோது, ​​அதனுடன் இணைக்கப்பட்டிருந்த கையால் எழுதப்பட்ட குறிப்பை ஷ்ரியா கண்டார். அதில், "சீஸி மோமோஸ் கையிருப்பில் இல்லை, அதனால் சாதாரண க்ரஞ்சி மோமோஸை அனுப்பி உள்ளோம். விலை வித்தியாசத்திற்கான 20 ரூபாய் பார்சலுக்குள் வைக்கப்பட்டுள்ளது. நன்றி" என்று எழுதப்பட்டிருந்தது. </p><p>திரும்ப அளிக்கப்பட்ட தொகை சிறியதாக இருந்தாலும், அந்த செயலுக்குப் பின்னால் இருந்த நேர்மையே முக்கியமானது. இது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டனர்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbLFyxWt32Z/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbLFyxWt32Z/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>VIDEO: பீகாரில் போராடிய மாணவர்களை ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட காவலர் சஸ்பெண்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-shooting-bihar-cop-suspended-for-firing-ak-47-at-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-shooting-bihar-cop-suspended-for-firing-ak-47-at-students#comments</comments><guid isPermaLink="false">bd3d4c12-5f40-4db5-b937-d357d6795ae0</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:24:04 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:24:04.022Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,பீகார்,Bihar,shooting,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/0jdmviah/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஷேக் படேல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஷேக் படேல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/0jdmviah/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டத்தின் போது, மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பீகார் பந்த்</h2><p>டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான நடந்த CJP <a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march">போராட்டத்திற்கு </a>ஆதரவாக ஜூலை 25 அன்று பீகாரில், 'பீகார் பந்த்' போராட்டம் நடைபெற்றது. </p><p>இதில் மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பல இளைஞர்கள் கலந்துகொண்டனர். மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இப்போராட்டம் அன்றைய தினம் நடந்தது. </p><p>இதன்போது பல இடங்களில் போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பல இடங்களில் கல்வீச்சுகள் பதிவாகின. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். </p> <h2>துப்பாக்கிச்சூடு</h2><p>இதில் குறிப்பாக சீவானில் நடந்த போராட்டத்தில் அபிஷேக் படேல் என்ற காவலர், போராட்டக்காரர்களை நோக்கிப் பாய்ந்து சென்று மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கியால் சுடும் காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது.</p><p>வைரலாகி வரும் வீடியோவில், நீல ஹெல்மெட், போலீஸ் உடுப்பு அணிந்து அபிஷேக் படேல் ஏகே 47 துப்பாக்கியால் போராட்டக்காரர்களை நோக்கி சுடுவது இடம்பெற்றுள்ளது.</p><p>வீடியோவில் ஒரே ஒரு தோட்டா மட்டுமே சுடப்பட்ட காட்சி இடம்பெற்றிருந்த போதிலும், குறைந்தபட்சம் 4 முதல் 5 சுற்றுகள் வரை சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>சீவான் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூன்று போராட்டக்காரர்கள் பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>இதில் 15 வயது சிறுவன் முகமது ஆரிப் கழுத்தில் குண்டடிபட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் தோட்டா அகற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Siwan, Bihar: SIT team member Abhishek Patel, who fired shots from an AK-47 in Siwan, has been suspended <br><br>(Visuals from the spot, July 25) <a href="https://t.co/1pTl9RyLLe">pic.twitter.com/1pTl9RyLLe</a></p>&mdash; IANS (@ians_india) <a href="https://x.com/ians_india/status/2081591725244764174?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>வழக்கு</h2><p>இச்சம்பவம் குறித்து மாநிலங்களவை எம்.பி மனோஜ் குமார் ஜா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.</p><p>இதனிடையே அபிஷேக் படேல் ஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.</p><p>துறை ரீதியான விசாரணை தொடங்கியுள்ளதாகவும், காவல்துறை நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>கண்டனம் </h2><p>பீகார் எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>E20 எத்தனால் விவகாரம்: பொய் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் நிதின் கட்கரி வழக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/national/e20-ethanol-row-nitin-gadkari-moves-bombay-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/e20-ethanol-row-nitin-gadkari-moves-bombay-high-court#comments</comments><guid isPermaLink="false">c9a00177-ce44-4588-8cba-d0cf42efe026</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:04:22 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:04:22.991Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nitin gadkari,நிதின் கட்கரி,மும்பை உயர் நீதிமன்றம்,E20 Ethanol,Mumbai  High Court,E20 எத்தனால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/pnf2tz73/nitin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Nitin Gadkari]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/pnf2tz73/nitin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசின் E20 எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் மூலம் தானும் தனது குடும்பத்தினரும் பெருமளவில் லாபம் அடைவதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் அவதூறு வீடியோக்கள் மற்றும் 'டீப்ஃபேக்' (Deepfake) உள்ளடக்கங்களுக்கு எதிராக மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மும்பை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளார்.</p><h2><strong>நீதிமன்ற அனுமதி:</strong></h2><p>இந்த அவதூறு உள்ளடக்கங்களை வெளியிட்ட நபர்கள் மற்றும் தளங்கள் நீதிமன்ற எல்லைக்கு வெளியே இருப்பதால், அவர்கள் மீது வழக்குத் தொடுக்க அனுமதி கோரி நிதின் கட்கரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அபய் அஹுஜா, மெட்டா, கூகுள் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு தொடர கட்கரிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.</p><h2><strong>அவதூறு குற்றச்சாட்டுகள்:</strong></h2><p>சமீபகாலமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் E20 பெட்ரோல் பயன்பாட்டினால் வாகனங்களின் என்ஜின் பழுதடைவதாகவும், மைலேஜ் குறைவதாகவும் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. </p><p>அதோடு, இந்த எத்தனால் கொள்கையின் மூலம் அமைச்சர் நிதின் கட்கரியும் அவரது குடும்பத்தினரும் நிதி ரீதியாகப் பயனடைகிறார்கள் என்ற தவறான செய்திகளும், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான 'டீப்ஃபேக்' வீடியோக்களும் பரப்பப்பட்டு வருகின்றன.</p><h2><strong>நிதின் கட்கரி தரப்பு விளக்கம்:</strong></h2><p>எத்தனால் கலப்பு தொடர்பான E20 கொள்கை மற்றும் அதன் நிர்வாகம் முழுமையாக 'மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்' கட்டுப்பாட்டில்தான் வருகிறது. சாலை போக்குவரத்து அமைச்சகத்திற்கும் இதற்கும் நேரடியாகத் தொடர்பு இல்லை.</p><p>தனது குடும்பத்தினரின் வணிக வருவாயில் எத்தனால் உற்பத்தி மூலம் கிடைக்கும் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்றும், இதன் மூலம் தனிப்பட்ட முறையிலோ அல்லது குடும்பத்தின் மூலமாகவோ பெருமளவு லாபம் அடைவதாகக் கூறுவது முற்றிலும் ஆதாரமற்ற பொய் என்றும் கட்கரி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.</p><p>முன்னதாக, தவறான தகவல்களைப் பரப்பியதாக யூடியூபர் மணீஷ் காஷ்யப் உட்பட சில சமூக வலைதளப் பிரபலங்கள் மீது நாக்பூர் சைபர் பிரிவு போலீஸார் BNS சட்டப் பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் FIR பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் E20 திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எனினும், இது தொடர்பான சர்ச்சைகள் தொடரும் நிலையில், தன் மீதான அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமைச்சர் நிதின் கட்கரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;ஏவுகணை நாயகனின் கனவுகள் இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டுகின்றன&quot; - கலாமுக்கு தலைவர்கள் புகழஞ்சலி!</title><link>https://www.maalaimalar.com/news/national/dr-apj-abdul-kalam-11th-death-anniversary-leaders-pay-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/national/dr-apj-abdul-kalam-11th-death-anniversary-leaders-pay-tribute#comments</comments><guid isPermaLink="false">f8d0471b-730c-40c4-bc6a-c53a0c1c3ff3</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:50:01 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:50:01.339Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அப்துல்கலாம்,AbdulKalam,PeoplesPresident,DrAPJAbdulKalam,MissileManOfIndia,ஏவுகணைமனிதர்,July27,இளைஞர்களின்வழிகாட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/7bpqlhtr/APJAbdulKalam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ APJAbdulKalam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/7bpqlhtr/APJAbdulKalam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நாட்டிற்கு அவரது பங்களிப்பை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.</p><h2><strong>மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா</strong></h2><p>மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த விஞ்ஞானியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான டாக்டர் ஏ.பி.ஜே. <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">அப்துல் கலாம் </a>அவர்களின் நினைவு நாளில் அவருக்கு மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன்.</p><p> 'ஏவுகணை நாயகன்' என்று போற்றப்படும் டாக்டர் கலாம், வளர்ந்த, தன்னிறைவு பெற்ற மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தார். </p><p>உள்நாட்டு ஏவுகணை மற்றும் விண்வெளித் திட்டங்களை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வதில் அவர் ஆற்றிய பங்களிப்பு, இந்திய அறிவியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. </p><p>அறிவு, ஒழுக்கம், எளிமை மற்றும் தேச சேவை ஆகியவற்றைத் தனது வாழ்வின் அடித்தளமாகக் கொண்ட அவர், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களிடையே தன்னம்பிக்கை, புதுமை மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் உணர்வை ஊட்டினார். </p><p>"கனவு என்பது தூக்கத்தில் வருவதல்ல; உங்களைத் தூங்க விடாமல் செய்வதே கனவு" - டாக்டர் கலாமின் இத்தகைய சிந்தனைகள், இன்றும் ஒவ்வொரு இளைஞரும் தங்கள் இலக்குகளில் உறுதியுடன் இருக்க ஊக்கமளித்து வருகின்றன" என்று தனது உறுக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.</p><h2><strong>மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா</strong></h2><p>"இந்தியாவின் விண்வெளி மற்றும் ஏவுகணைத் திட்டங்களின் சிற்பியும் தொலைநோக்குச் சிந்தனையாளருமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். </p><p>அறிவியல் துறையில் டாக்டர் கலாம் அவர்களின் சிறப்பான பங்களிப்பு, இந்தியா ஒரு வலிமையான உத்திசார் சக்தியாக உருவெடுப்பதற்கான பாதையை வகுத்துத் தந்தது; அதேவேளையில், அவரது ஞானம் லட்சக்கணக்கானோரைச் சிறந்த சாதனைகளைப் புரியத் தூண்டி, அவர்களின் வாழ்வை ஒளிமயமாக்கியது. </p><p>'மக்களின் ஜனாதிபதி'யான டாக்டர் கலாம் அவர்கள், தேசபக்தர்களுக்கு என்றும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்வார்" என்று அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>தர்மேந்திர பிரதான்</strong></h2><p>டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளான இன்று சமூக வலைதளப் பதிவு வெளியிட்டுள்ள முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் எங்களின் மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறோம். </p><p>கல்வி, புத்தாக்கம் மற்றும் இளைஞர்களின் ஆற்றல் மீதான அவரது அசைக்க முடியாத நம்பிக்கை, வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.</p><h2><strong>என். சந்திரபாபு நாயுடு</strong></h2><p>ஆந்திர முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "நாட்டிற்குப் பல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வெற்றிகளைப் பெற்றுத் தந்து, 'ஏவுகணை நாயகன்' என்று போற்றப்பட்ட பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாளில் எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். </p><p>எளிமை, நேர்மை மற்றும் மனிதாபிமானப் பார்வை போன்ற தனித்துவமான பண்புகளால், கலாம் அவர்கள் 'மக்களின் ஜனாதிபதி'யாகத் திகழ்ந்தார். அந்த மகத்தான ஆளுமையின் நினைவு நாளில், அவருக்கு எனது அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன்.</p><p>கல்வி, புத்தாக்கம் மற்றும் இளைஞர்களின் ஆற்றல் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, வளர்ந்த நாடாக இந்தியா மேற்கொள்ளும் பயணத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது" என்று கூறியுள்ளார்.</p><h2><strong>ராஜ்நாத் சிங்</strong></h2><p>மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் புண்ணியதிதியில், அவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைச் செலுத்துகிறேன். </p><p>அவரது எளிமை, நேர்மை மற்றும் தேசத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்க்கை, தலைமுறைகள் பெரிய கனவுகளைக் காணவும், அச்சமின்றிப் புதுமைகளைப் புகுத்தவும், தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் நாட்டிற்குச் சேவை செய்யவும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. </p><p>கல்வி, புதுமை மற்றும் இளைஞர்களின் ஆற்றல் மீதான அவரது அசைக்க முடியாத நம்பிக்கை, இந்தியா ஒரு வளர்ந்த தேசத்தை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்து ஒளிரச் செய்கிறது" என்று தெரிவித்துள்ளார்.</p><h2><strong>டாக்டர் ஜித்தேந்திர சிங்</strong></h2><p>மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தனது எக்ஸ் தள பதிவில், "மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் அவருக்குப் பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறேன். </p><p>டாக்டர் கலாமுடன் தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்தது ஒரு பெரும் பேறாகும்.</p><p>எளிமை, நேர்மை மற்றும் நாட்டின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நிறைந்த அவரது வாழ்க்கை, பெரிய கனவுகளைக் காணவும், அச்சமின்றிப் புதுமைகளைப் படைக்கவும், சுயநலமற்ற ஈடுபாட்டுடன் நாட்டிற்குச் சேவையாற்றவும் பல தலைமுறையினரைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. </p><p>கல்வி, புத்தாக்கம் மற்றும் இளைஞர்களின் ஆற்றல் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, வளர்ந்த நாடாக இந்தியா மேற்கொள்ளும் பயணத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது" என்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கடும் அமளிக்கு மத்தியில் &apos;தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா&apos; மக்களவையில் தாக்கல்.. அம்சங்கள் என்ன? </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-government-introduces-strict-exam-malpractice-prevention-bill-in-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-government-introduces-strict-exam-malpractice-prevention-bill-in-parliament#comments</comments><guid isPermaLink="false">de8f33c4-69ef-4e65-9161-06581d3f9c4d</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:25:43 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:25:43.019Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bill,மக்களவை,Lok Sabha,question paper leak,வினாத்தாள் கசிவு,மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ldzryqsr/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மக்களவை ]]></media:title><media:description type="html"><![CDATA[ மக்களவை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ldzryqsr/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரண்டாம் கட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி வந்த <a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march">மாணவர்கள் மீதான தாக்குதல்</a> குறித்து உடனே விவாதகிக்க இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதைத்தொடர்ந்து இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மீண்டும் இரு அவைகளும் கூடின. </p><h2>மசோதா தாக்கல்</h2><p>மக்களவை மீண்டும் கூடிய உடனே,  'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கால் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>வினாத்தாள் கசிவுகள், தேர்வு முறைகேடுகளுக்கு தண்டனையை அதிகரிக்கும் விதமாக சட்ட விதிமுறைகளை கடுமையாகும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><h2>மசோதாவின் அம்சங்கள்</h2><p>முறைகேட்டின் தீவிரத்தை பொறுத்து 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படும். திட்டமிட்டு குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை; ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.</p><p>மேல் முறையீடு வழக்குகள் மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும். தவறு செய்யும் நிறுவனங்கள் பொதுத்தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் தடை காலம் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படும் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளிட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ளன</p><h2>அவையில் அமளி</h2><p>மசோதா அறிமுகத்தின்போதும் அதை தொடர்ந்தும், ஜூலை 20 அன்று மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க கோரி, எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p> <h2>ஜூலை 20 தாக்குதல்</h2><p>ஜூலை 20, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சிஜேபி தலைமையில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர்.</p><p>அப்போது அவர்கள் மீது டெல்லி காவல்துறை, ஆர்ஏஎப் மத்திய படையினர் லத்திகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகுகள் வீசப்பட்டன.</p><p>ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளும் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 60 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>போராட்டம் நடத்தினாலே தடியடியா? மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march#comments</comments><guid isPermaLink="false">84b89d0c-f779-4b02-862c-b7c3307a9d6c</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:52:05 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:52:05.524Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,Delhi Police,டெல்லி காவல்துறை,உச்சநீதிமன்றம்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ziofnyz9/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜூலை 20 தாக்குதல் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜூலை 20 தாக்குதல் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ziofnyz9/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமைதியான போராட்டத்தில் லத்திகளால் தடியடி நடத்தியிருக்க கூடாது என ஜூலை 20 அன்று டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற இளைஞர்கள் மீதான தாக்குதல் குறித்த மனுக்கள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. </p><h2>ஜூலை 20 தாக்குதல் </h2><p>ஜூலை 20, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சிஜேபி தலைமையில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். </p><p>அப்போது அவர்கள் மீது <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah">டெல்லி காவல்துறை, ஆர்ஏஎப் மத்திய படையினர் </a>லத்திகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகுகள் வீசப்பட்டன.</p><p>ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளும் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 60 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். </p><p>இந்த விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில் இன்று தொடங்கிய நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டம் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. </p> <h2>உச்சநீதிமன்றம் குட்டு</h2><p>இதனிடையே ஜூலை 20 அன்று பேரணி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான மிதமிஞ்சிய தாக்குதலை விசாரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.</p><p>இதன்போது பேசிய தலைமை நீதிபதி சூரியகாந்தி போராட்டம் நடத்தினார்கள் என்பதற்காகவே அவர்கள் மீது போலீசார் லத்திகளால் தாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்த முடியாது என தெரிவித்தார்.</p><p>அவர் கூறியதாவது, "சமூக விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில், அமைதியான போராட்டத்திற்கு வழிவகை செய்யும் வகையிலான நாடு தழுவிய ஒரே மாதிரியான வழிமுறையை வரையறுக்க வேண்டியது அவசியம்.</p><p>அமைதியான முறையில் போராடுவதற்கு அரசியலமைப்பு அனுமதி அளிக்கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அவை மறுக்கப்பட கூடாது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது என்பதற்காக போலீசார் எல்லைமீறி மிதமிஞ்சிய தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது.</p> <h2>போராட்டம் நடத்தினாலே தடியடி</h2><p>போராட்டம் நடத்தினாலே தடியடி  நடத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. போராட்டம் என்பது வன்முறை என்று அர்த்தமாகாது. அப்படி அத்துமீறப்பட்ட சம்பவங்கள் விசாரிக்கப்பட வேண்டும்.</p><p>அமைதியான போராட்டங்களை நடத்த முறையான இடம் ஒதுக்கீடு செய்து தருவது உள்ளிட்ட சில நெறிமுறைகள் அவசியமானது. இத்தகைய தருணங்களில் சுய கட்டுப்பாடு மிக முக்கியமானது" என தெரிவித்தார்.</p><p>அமர்வில் இடம்பெற்ற நீதிபதி ஜோய்மாலா பேசுகையில், "போராட்டங்களின் போது காவல்துறையினர் தாக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியது அரசின் கடமை" என தெரிவித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து விசாரணை நாளை (செவ்வாய்க்கிழமைக்கு) ஒத்திவைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>&quot;மக்கள் ஜனாதிபதி&quot; டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு  நினைவு அஞ்சலி!</title><link>https://www.maalaimalar.com/news/national/11th-death-anniversary-of-peoples-president-dr-apj-abdul-kalam</link><comments>https://www.maalaimalar.com/news/national/11th-death-anniversary-of-peoples-president-dr-apj-abdul-kalam#comments</comments><guid isPermaLink="false">c31c5bd9-723f-42c9-bd53-0c0ee6be1ddd</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:30:34 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:30:34.432Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அப்துல்கலாம்,APJAbdulKalam,AbdulKalam11thDeathAnniversary,ஏவுகணைமனிதன்,MissileMan,PeoplesPresident,Inspiration</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ku3h7oz3/APJAbdulKalam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ APJAbdulKalam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ku3h7oz3/APJAbdulKalam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய வரலாற்றில் தங்களது சுயநலமற்ற சேவையால் மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த தலைவர்கள் பலருண்டு. அவர்களுள் முதன்மையானவர் டாக்டர் ஏ.பி.ஜே. <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">அப்துல் கலாம்</a>. ராமேஸ்வரத்தின் எளிய வீதிகளில் பிறந்து, இந்தியாவின் மிக உயரிய குடியரசுத் தலைவர் மாளிகை வரை உயர்ந்த இவரது வாழ்க்கை ஒரு தற்காலக் காவியம். </p><p>ஒரு சிறந்த விஞ்ஞானியாக நாட்டை அணுஆயுத மற்றும் ஏவுகணை வல்லரசாக மாற்றியதோடு மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான இளைஞர்களின் நெஞ்சில் சாதிக்கும் உத்வேகத்தை விதைத்த மாபெரும் வழிகாட்டியாகத் திகழ்கிறார். இன்று அவருடைய 11-ம் ஆண்டு நினைவு நாள்.</p><h2><strong>தொடக்கமும் கல்விப் பயணமும்</strong></h2><p>இராமேஸ்வரத்தில் 1931 அக்டோபர் 15 அன்று ஜெயினுலாப்தீன் - ஆஷியம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், ஏழ்மையான குடும்பச் சூழ்நிலை காரணமாகச் சிறு வயதில் செய்தித்தாள்களை விநியோகம் செய்து தனது பள்ளிப் படிப்பிற்கான கட்டணத்தைச் செலுத்தினார்.</p><p>பின்னர் தனது உயர்கல்வியைத் தொடர்ந்த இவர், திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டமும், சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் விண்வெளிப் பொறியியல் படிப்பையும் முடித்தார்.</p><h2><strong>ஏவுகணை மனிதன்</strong></h2><p>இஸ்ரோவின் பங்களிப்பாக இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் ஏவுகணையான SLV-III திட்ட இயக்குநராகச் செயல்பட்டு 'ரோகிணி' செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இவர், டிஆர்டிஓ அமைப்பில் இணைந்து இந்தியாவின் பாதுகாப்பு அரணாக விளங்கும் அக்னி மற்றும் பிருத்வி ஏவுகணைகளை உருவாக்கியதன் மூலம் 'இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்று அழைக்கப்பட்டார். </p><p>மேலும், 1998-ல் நடந்த பொக்ரான்-II அணு ஆயுத சோதனையில் முதன்மைத் திட்ட ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு, இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக உலகிற்குப் பிரகடனப்படுத்தினார்.</p><h2><strong>மக்களின் குடியரசுத் தலைவர்</strong></h2><p>2002 ஆம் ஆண்டு இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற இவர், குடியரசுத் தலைவர் மாளிகையின் கதவுகளைச் சாதாரண மக்களுக்காக, குறிப்பாக மாணவர்களுக்காகத் திறந்து வைத்ததன் மூலம் 'மக்களின் குடியரசுத் தலைவர்' என்று அன்போடு அழைக்கப்பட்டார். </p><p>எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்து, லட்சக்கணக்கான இளைஞர்களுடனும் பள்ளி மாணவர்களுடனும் கலந்துரையாடி அவர்களுக்குள் கனவுகளை விதைத்த இவர், கல்வி, அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு 2020-க்குள் இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற உன்னத இலக்கை தொலைநோக்குத் திட்டமாக முன்வைத்து நாட்டிற்குப் பெரும் எழுச்சியூட்டினார்.</p><h2><strong>விருதுகளும் கௌரவங்களும்</strong></h2><p>இந்திய அரசு இவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா (1997), பத்ம விபூஷண் (1990) மற்றும் பத்ம பூஷண் (1981) ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்ததோடு மட்டுமல்லாமல், சர்வதேச அங்கீகாரமாக இவரது பிறந்த நாளான அக்டோபர் 15-ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை 'உலக மாணவர்கள் தினமாக' அறிவித்துக் கொண்டாடி வருகிறது.</p><h2><strong>இறுதிப் பயணம்</strong></h2><p>தனது பதவிக்காலத்திற்குப் பின், ஐஐஎம் ஷில்லாங், அகமதாபாத் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றி மாணவர்களுக்குத் தொடர்ந்து கற்பித்த இவர், இறுதிவரை மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்தார். </p><p>அதற்கேற்ப கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று ஷில்லாங்கில் மாணவர்களிடையே 'வாழக்கூடிய தகுதியான பூமியை உருவாக்குவது' என்ற தலைப்பில் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். </p><p>லட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கும் அஞ்சலிக்கும் இடையே அவரது உடல், சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. </p><p>பிற்காலத்தில் அவரது நினைவாக அவ்விடத்தில் 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய நினைவகம்' அமைக்கப்பட்டு, அவரது வாழ்க்கைச் சுவடுகளும் ஏவுகணை மாதிரிகளும் பொதுமக்களின் பார்வைக்காக இன்றும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.</p><h2><strong>11 ஆண்டுகள் நிறைவு</strong></h2><p>டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வெறும் அறிவியல் விஞ்ஞானியாகவோ அல்லது நாட்டின் தலைவராகவோ மட்டும் வாழவில்லை; அவர் ஒரு சகாப்தமாக வாழ்ந்தார். </p><p>எளிய பின்புலத்தில் இருந்து வந்த எவராலும் அரிய சிகரங்களை எட்ட முடியும் என்பதற்கு அவரே மிகச்சிறந்த உதாரணம். "கனவு காணுங்கள்; அந்த கனவு தூக்கத்தில் வருவதல்ல, உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு" என்ற அவரது பொன்மொழிகள், இன்றும் நாளையும் இந்திய இளைஞர்களை தங்களது இலக்குகளை நோக்கி அர்ப்பணிப்புடன் பயணிக்கத் தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும். </p><p>அவரது பாதையில் பயணித்து தற்சார்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபடுவதே நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதானுக்கு ராஜ வரவேற்பு.. மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி - அவைகள் ஒத்திவைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-disruption-both-houses-adjourned-as-opposition-demands-debate-on-neet-leak-and-student-assault</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-disruption-both-houses-adjourned-as-opposition-demands-debate-on-neet-leak-and-student-assault#comments</comments><guid isPermaLink="false">30494f7e-dcaf-4a48-9560-8a2bdcefdefa</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:18:54 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:18:54.361Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lok Sabha,மல்லிகார்ஜுன கார்கே,mallikarjun kharge,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,parliament session,மழைக்காக கூட்டத்தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/u7tlz4cj/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இடது - காங்கிரஸ் போராட்டம், வலது - தர்மேந்திர பிரதானை வரவேற்கும் எம்.பிக்கள் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ இடது - காங்கிரஸ் போராட்டம், வலது - தர்மேந்திர பிரதானை வரவேற்கும் எம்.பிக்கள் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/u7tlz4cj/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால  கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது. இன்றைய நாளில் தொடங்கிய <a href="https://www.maalaimalar.com/news/national/neet-ban-student-assault-row-dmk-congress-push-for-heated-debate-in-parliament">இரு அவைகளும்</a> சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. </p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், ஜூலை 20 நாடாளுமன்றம் நோக்கி பேரணி வந்த மாணவர்கள் மீது தாக்குதல், அயோத்தி ராமர் கோவில் வன்கொடுமை திருட்டு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுப்பட்டதால் இரு அவைகளிலும் அவை நடவடிக்கைகள் பாதித்தன. </p><h2>மல்லிகார்ஜுன கார்கே</h2><p>மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவையில் பேசுகையில், மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது மிகவும் தீவிரமான விஷயம் என்பதால்  விதி 267-ஐ பயன்படுத்தி அவையின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை ஒத்திவைத்து இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். </p><h2>ஒத்திவைப்பு </h2><p>தொடர்ந்து மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பிக்கள், நீட் பிரச்சனை, மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து விவாதத்தை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.  இதனால் அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. </p><p>மக்களவையிலும் நீட் பிரச்சனை, மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோஷம் எழுப்பியதால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. </p><p>முன்னதாக நீட் தேர்வை தடை செய்வது குறித்தும் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்தும் விவாதிக்க மக்களவை திமுக குழு தலைவர் டிஆர்பாலுவும், மாநிலங்களவை திமுக எம்.பி திருச்சி சிவாவும் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது. </p> <h2>வினாத்தாள் கசிவை தடுக்கும் மசோதா</h2><p>இதனிடையே வினாத்தாள் கசிவு உள்பட அரசுத் தோ்வு முறைகேடுகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சிஜேபி தலைமையில் இளைஞர்களின் 1 மதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து அண்மையில் பிரதமர் மோடி மௌனம் களைத்து, இந்த மசோதா குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று மதியம் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.</p> <h2>தர்மேந்திர பிரதான்</h2><p>இளைஞர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மக்களவை எம்.பி.யாக இன்று அவைக்கு வருகை புரிந்தார். அவரை என்டிஏ கூட்டணி எம்.பிக்கள் பாரம்பரிய தலைப்பாகை அணிவித்து, சால்வை அணிவித்து வரவேற்று ஆறுதல்படுத்தினர்.</p> <h2>போராட்டம்</h2><p>இதனிடையே, ஜூலை 20 அன்று இளைஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.</p> ]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு தடை, மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க தி.மு.க நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-ban-student-assault-row-dmk-congress-push-for-heated-debate-in-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-ban-student-assault-row-dmk-congress-push-for-heated-debate-in-parliament#comments</comments><guid isPermaLink="false">cf1c3c0e-1440-470b-a124-bd71567cc939</guid><pubDate>Mon, 27 Jul 2026 04:45:06 +0000</pubDate><atom:updated>2026-07-27T04:45:06.471Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மழைக்கால கூட்டத்தொடர்,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/gtinjbfa/tn-35.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாணவர்கள் மீதான தாக்குதல், அமித் ஷா
]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணவர்கள் மீதான தாக்குதல், அமித் ஷா
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/gtinjbfa/tn-35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது. </p><p>சிஜேபி போராட்டத்தின்போது <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah">மாணவர்கள் மீதான தாக்குதல்</a>, மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டு ஆகியவை குறித்து இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலுவான குரல் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>திமுக நோட்டீஸ் </h2><p>அந்த வகையில் இன்று மக்களவையில், நீட் தேர்வை தடை செய்வது தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி திமுக மக்களவை முழு தலைவர் எம்.பி. டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.</p><p>அந்த நோட்டீஸில், நீட் தேர்வுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீது கொடூர ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று டி.ஆர். பாலு வலியுறுத்தி உள்ளார்.</p><p>இதேபோல திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, 267ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.</p><p>அதில், “நாட்டின் மருத்துவக் கல்வி கனவோடு உள்ள மாணவர்களின் அவல நிலை, நீட் தேர்வால் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் மாணவர்களின் தொடர்ச்சியான தற்கொலைகள் குறித்து விவாதிக்க வேண்டும்” என்று  திருச்சி சிவா வலியுறுத்தி உள்ளார். </p><h2>காங்கிரஸ் நோட்டீஸ்</h2><p>இதேபோல விருதுநகர் காங்கிரஸ் எம்.பியும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான மாணிக்கம் தாகூர்</p><p>மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் ஒன்றை வழங்கியுள்ளார். அதில், டெல்லி போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதா கூறி, அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>மாணவர்கள் மீது தாக்குதல்</p><p>ஜூலை 20, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சிஜேபி தலைமையில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். அப்போது அவர்கள் மீது டெல்லி காவல்துறை, ஆர்ஏஎப் மத்திய படையினர் லத்திகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகுகள் வீசப்பட்டன.</p><p>ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளும் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 60 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>தேர்வு அமைப்பை சீர்செய்யும் உயர்மட்ட குழுவில் இடம்பெற்றவர்கள் முழு விவரம்.. தலைவர் நந்தன் நிலேகணி யார்?
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-reforms-pm-modi-announces-nandan-nilekani-led-high-level-panel-after-protests</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-reforms-pm-modi-announces-nandan-nilekani-led-high-level-panel-after-protests#comments</comments><guid isPermaLink="false">94e74e96-9ddb-48fd-8888-f013cba0de54</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:32:02 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:32:02.650Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,question paper leak,பிரதமர் மோடி,வினாத்தாள் கசிவு,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/vex89daq/tn-33.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உயர்மட்ட குழு]]></media:title><media:description type="html"><![CDATA[ உயர்மட்ட குழு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/vex89daq/tn-33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் 1 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தியதன் விளைவாக நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலைத்துள்ளார். </p><p>நேற்று முன் தினம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததன் மூலம் சிஜேபி போராட்டம் வெற்றி பெற்று முடிவுக்கு வந்தது. </p><h2>இன்ஸ்டாகிராம் வீடியோவில் மோடி  </h2><p>தேர்வு முறைகேடு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம், வினாத்தாள் கசிவை  தடுக்க சிறப்பு மசோதா, தேர்வு முறையைச் சீரமைக்க  <a href="https://www.maalaimalar.com/news/national/panel-formed-to-restore-prime-ministers-tainted-image-jairam-ramesh">உயர்மட்டக் குழு</a> உள்ளிட்ட அறிவிப்புகளை கடந்த சில நாட்களில் பிரதமர் மோடி அடுத்தடுத்து வெளியிட்டுள்ளார். </p><p>குறிப்பாக நேற்று வினாத்தாள் கசிவுச் சம்பவங்களைத் தடுத்து, தேர்வு முறையை முற்றிலும் நவீனமயமாக்கிச் சீரமைக்க இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் உயர்மட்ட குழுவை அமைப்பதாக இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் மோடி அறிவித்தார். </p> <h2>உயர்மட்ட குழு</h2><p>இந்த குழுவில் வெவ்வேறு துறைகளை சேர்ந்த 6 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் விவரங்கள் கீழ் வருமாறு,</p><h3>குழு தலைவர் - நந்தன் நிலேகணி</h3><p>இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர், இந்தியாவின் ஆதார் கார்டு திட்டத்தின் முக்கிய வடிவமைப்பாளராகக் கருதப்படுபவர்.</p><p>வினாத்தாள் தயாரிப்பு, தேர்வு மையப் பாதுகாப்பு, தேர்வர் சரிபார்ப்பு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியீடு என அனைத்துக் கட்டங்களிலும் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்ப தீர்வுகளை பயன்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கி குழுவை வழிநடத்த உள்ளார்.</p><h3>டாக்டர் எஸ். சோமநாத்</h3><p>2022–2025 வரை இஸ்ரோவின் தலைவராக இருந்தவரும் விண்வெளித் துறை முன்னாள் செயலாளருமான சோமநாத், ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் பெரிய அளவிலான அமைப்புகளை திட்டமிடுவதில் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.</p><h3>தபன் குமார் தேகா</h3><p>2022–2026 வரை இந்திய உளவுத்துறையின் இயக்குநராக இருந்த தேகா, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தேசியப் பாதுகாப்பில் நீண்ட அனுபவம் கொண்ட முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார்.</p><p>இவர் தேர்வு மையங்களின் பாதுகாப்பு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் பாதுகாப்பு நெறிமுறைகளை பலப்படுத்துவதில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h3>பேராசிரியர் வி. காமகோடி</h3><p>ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநரான இவர், கணினி கட்டமைப்பு மற்றும் சைபர் பாதுகாப்பில் நிபுணர்.</p><p>கல்வித்துறை சார்ந்த ஆலோசனைகள் மற்றும் தேர்வு முறையில் கணினி சார்ந்த பாதுகாப்பை உறுதி செய்யும் நுட்பங்களை புகுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>சென்னையில் கடந்த ஆண்டு மாட்டுப் பொங்கல் விழாவில் பேசிய காமகோடி, மாட்டின் கோமியம் மற்றும் சாணத்தில் மருத்துவ குணம் உள்ளதாக பேசி விமர்சனத்துக்கு ஆளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. </p><h3>அனிதா கர்வால்</h3><p>2017–2026 வரை சிபிஎஸ்சியின் தலைவராகவும், பள்ளி இடைநிலைக் கல்வித்துறை செயலாளராகவும் பணியாற்றிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அனிதா கர்வால். தேசியக் கல்விக் கொள்கை 2020உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர்.</p><h3>அம்ரித் லால் மீனா</h3><p>2024–2025 வரை பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலாளராகவும், நிலக்கரித் துறை செயலாளராகவும் பணியாற்றிய அம்ரித் லால் மீனா 1989 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். நிர்வாகம் மற்றும் தளவாடப் போக்குவரத்தை சீரமைப்பதில் அனுபவம் வாய்ந்தவர் இவர்.</p> <h2>தேசிய தேர்வு முகமை மறுசீரமைப்பு</h2><p>இந்த உயர்மட்டக் குழு, தேசிய தேர்வு முகமையை பலப்படுத்துவதுடன், போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கத் தேவையான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கும்.</p><p>குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வு முறையில் பெரிய அளவிலான தொழில்நுட்ப சீர்திருத்தங்களை அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;அப்பா தான் அம்மாவை வெட்டுனாரு..&quot; 8 மாத கர்ப்பிணி தாயை கொன்ற தந்தையை காட்டிக்கொடுத்த 5 வயது மகன்</title><link>https://www.maalaimalar.com/news/national/up-pregnant-wife-murder-husband-held-after-5-year-old-sons-testimony</link><comments>https://www.maalaimalar.com/news/national/up-pregnant-wife-murder-husband-held-after-5-year-old-sons-testimony#comments</comments><guid isPermaLink="false">ca38754e-4d5a-486d-8948-a547e2ed0aec</guid><pubDate>Mon, 27 Jul 2026 01:50:17 +0000</pubDate><atom:updated>2026-07-27T01:50:17.170Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை வழக்கு,Murder case,Uttar Pradesh,கணவன்-மனைவி,husband and wife,உத்தரப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/88zt30pr/tn-28.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/88zt30pr/tn-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உ.பியில் 8 மாத கர்ப்பிணி மனைவியை கணவன் குடிபோதையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/boyfriend-arrested-for-illegal-girlfriend-murder">கொலை </a>செய்த நிலையில் அவரை 5 வயது மகனினே போலீசில் சிக்கவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.   </p><h2>மது - சூது </h2><p>உத்தரப் பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில் உள்ள பாஜ்ராரி கிராமத்தை சேர்ந்த ஹனீப் மன்சூரி மதுப்பழக்கம் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர்.</p><p>தனது பழக்கங்களுக்காகத் தன் நிலத்தின் பெரும் பகுதியை ஏற்கனவே விற்றுவிட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு அதிகளவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.</p><p>கணவர் மீண்டும் மது அருந்துவதைத் த தடுக்க மனைவி மனிஷா முயன்றபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. </p> <h2>கொலை</h2><p>இதில் ஆத்திரமடைந்த ஹனீப், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து 8 மாதக் கர்ப்பிணியான மனைவியை அவரது தலை, உடல் மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்தார்.</p><p>இந்தக் கொடூரச் சம்பவத்தை அவர்களின் 5 வயது மகனும், 2 வயது மகளும் நேரில் பார்த்து உறைந்து போயினர்.</p><p>கொலையை மறைக்க எண்ணிய ஹனீப், தானே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து ஒரு பொய் கதையைக் கூறித் தப்ப முயன்றார்.</p> <h2>மகன் வாக்குமூலம்</h2><p>ஆனால், 5 வயது மகன், காவல்துறையினரிடம் தந்தை தான் அம்மாவை வெட்டிக் கொன்றார் என்றும் தான் அதை நேரில் பார்த்ததை வாக்குமூலமாகக் கூறினான்.</p><p>இதையடுத்து, பன்வாரியிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.</p><p>2 மற்றும் 5 வயதுக் குழந்தைகளின் கண் முன்னே 8 மாதக் கர்ப்பிணியை கணவன் வெட்டிக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தூக்கு தண்டனை </h2><p>மனிஷாவுக்கு 2021இல் திருமணமான நிலையில், கணவர் ஹனீப் சந்தேகப் புத்தியால் அடிக்கடி அவரை அடித்துத் துன்புறுத்தி வந்ததாகவும், பலமுறை வீட்டை விட்டுத் துரத்தியபோதும் குடும்பத்திற்காக மனிஷா பொறுத்துக்கொண்டு வாழ்ந்து வந்ததாகவும் அவரது சகோதரர் நசீம் மன்சூரி தெரிவித்தார்.</p><p>ஹனீபின் தந்தை பேசுகையில், "என் மகன் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்துவிட்டான். அவனுக்கு தூக்கு தண்டனை அளித்தாலும் தகும்" எனக் கூறினார். </p><p>மேலும் தாய் இழந்த இரண்டு பேரக் குழந்தைகளையும் தானே வளர்க்கப்போவதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>எனக்காக எல்லா தியாகமும் செய்த உங்கள் ஆசையை  நிறைவேற்ற முடியவில்லை.. &quot;நீட்&quot; அழுத்தத்தால் மாணவி தற்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-aspirant-suicide-low-score-and-pressure-over-medical-dream-leads-to-tragic-death-in-maharashtra</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-aspirant-suicide-low-score-and-pressure-over-medical-dream-leads-to-tragic-death-in-maharashtra#comments</comments><guid isPermaLink="false">12f0b46a-f662-4591-88f5-05316921473f</guid><pubDate>Mon, 27 Jul 2026 00:49:39 +0000</pubDate><atom:updated>2026-07-27T00:49:39.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Neet exam,மாணவி தற்கொலை,student suicide,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/2pzgsgxi/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாணவி தற்கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணவி தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/2pzgsgxi/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மன உளைச்சலுக்கு ஆளான மேலும் ஒரு மாணவி  </p><p>தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தற்கொலை</h2><p>மகாராஷ்டிராவின் அகில்யாநகர் மாவட்டத்தில் உள்ள ஜலால்பூர் கிராமத்தை அங்கிதா சாங்லே என்ற அந்த மாணவி நேற்று முன் தினம்  மாலை சுமார் 4.30 மணியளவில் தனது அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>நடந்து முடிந்த நீட் மறுதேர்வில் அங்கிதா 166 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் கனவை நிறைவேற்ற முடியவில்லையே என்ற மன அழுத்தத்தில் அவர் இருந்து வந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.</p><p>சம்பவ இடத்தில் இருந்து மாணவியின் தற்கொலை கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். </p> <h2>தற்கொலை கடிதம் </h2><p>அதில் அவர் எழுதியிருப்பதாவது,</p><p>"நீங்கள் என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தீர்கள், ஆனால் உங்களின் ஒரு ஆசையைக் கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை.</p><p>அம்மா, ஒவ்வொரு கஷ்டத்திலும் ஒரு தோழியைப் போல எனக்கு ஆதரவாக இருந்தீர்கள். அண்ணா, நீங்களும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தீர்கள். அம்மா, அப்பாவை விட நீங்கள் என் மீது அதிக அன்பு காட்டினீர்கள். என் தற்கொலைக்கு நீங்கள் யாரும் பொறுப்பல்ல.</p><p>நான் நீட் தேர்வுக்குப் படித்தபோதும் கூட எனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தீர்கள். ஆனால் நான் தோற்றுவிட்டேன்; உங்கள் ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.</p><p>அண்ணா, அம்மா மற்றும் அப்பாவை தயவுசெய்து நன்றாகப் பார்த்துக்கொள். அவர்களுக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக்கொள்." என எழுதியுள்ளார்.</p><p>இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>கல்வி அமைச்சர் ராஜினாமா</h2><p>மே 3 நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டு இந்த மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே ஏற்பட்ட மன அழுத்தத்தில் நாடு முழுவதும் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். </p><p>தேர்வு முறைகேடுகளை தடுக்கத் தவறிய நிர்வாக தோல்விக்கு பொறுப்பேற்குமாறு டெல்லியில் <a href="https://www.maalaimalar.com/news/national/third-round-talks-with-central-government-conclude">சிஜேபி </a>தலைமையில் இளைஞர்களின் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று முன் தினம் ராஜினாமா செய்தார். </p><h2>உதவி எண்கள்</h2><p>மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் தோன்றினால், உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்:</p><p>சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரம்)</p><p>மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம்)</p><p>சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019</p>]]></content:encoded></item><item><title>10 ஆண்டுகள் சிறை, ரூ. 10 கோடி வரை அபராதம்... தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/government-to-introduce-exam-irregularities-bill-lok-sabha-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/government-to-introduce-exam-irregularities-bill-lok-sabha-today#comments</comments><guid isPermaLink="false">de3a8103-98c2-435f-b98b-ddc8d13d14ac</guid><pubDate>Mon, 27 Jul 2026 00:28:12 +0000</pubDate><atom:updated>2026-07-27T00:28:12.736Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>paper leak,neet protest,வினாத்தாள் கசிவு,நீட் போராட்டம்,public examinations bill,பொதுத் தேர்வுகள் மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/9xhwzmu5/parliment.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Parliment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/9xhwzmu5/parliment.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வினாத்தாள் கசிவு உள்பட அரசுத் தேர்வு முறைகேடுகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் இன்று (ஜூலை 27) தாக்கல் செய்யப்பட உள்ளது.</p><p>டெல்லியில் சில தினங்களுக்கு முன் சி.ஜே.பி. (கரப்பான் பூச்சி ஜனதா கட்சி) போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. அப்போது, '<a href="https://www.maalaimalar.com/topic/paper-leaks">வினாத்தாள் கசிவு</a> வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்; இந்த முறைகேட்டுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்படும்' என மாணவர்களை சமாதானப்படுத்தும் வகையிலான அறிவிப்புகளை <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர் மோடி</a> வெளியிட்டார்.</p><h2>சட்ட திருத்த மசோதா:</h2><p>அவரது இந்த உறுதிமொழியின்படி, அரசு தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், "தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா-2026", மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. அறிமுகம் -பரிசீலனை-நிறைவேற்றம் ஆகிய அலுவல்களுக்காக மசோதா பட்டியலிடப்பட்டுள்ளது.</p><p>இந்த சட்ட திருத்தத்தின்படி, வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இதுதவிர முறைகேடு கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.</p><p>வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.</p><h2>சி.ஜே.பி. போராட்டம்:</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக செய்வதே போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.</p><p>இந்த போராட்டத்திற்கு நாடு முழுக்க ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆதரவு தெரிவித்து கண்டன போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக நாடு முழுக்க பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அமளிகளால் தினந்தோரும் ஒத்திவைக்கப்பட்டன.</p><p>நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>மோசமான வானிலை: லக்னோவில் அவசரமாக தரையிறங்கிய சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம்</title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">102dff4f-2ebf-4b13-836d-51da4b24bee4</guid><pubDate>Sun, 26 Jul 2026 23:15:32 +0000</pubDate><atom:updated>2026-07-26T23:15:32.617Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானம்,Southern Airlines,Flight diverted,சதர்ன் ஏர்லைன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/j8vjcqq8/c-s-a.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ China Southern airlines Flight]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/j8vjcqq8/c-s-a.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காத்மாண்டுவில் மோசமான வானிலை காரணமாக சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் லக்னோவுக்குத் திருப்பி விடப்பட்டது</p><p>காத்மாண்டு விமான நிலையத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) லக்னோவுக்குத் திருப்பி விடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>தரையிறக்கம்:</h2><p>"காத்மாண்டுவில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, இரவு 10.57 மணிக்கு சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் CZ 3067 (ஏர்பஸ் A320neo) லக்னோவுக்குத் திருப்பி விடப்பட்டது. இந்த விமானம் இரவு 11.18 மணிக்கு லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கியது" என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>சீனாவின் குவாங்சூவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், நேபாள தலைநகரில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது என்று அவர்கள் கூறினர். இவ்விமானத்தில் 159 பயணிகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>விமானம் மாயம்:</h2><p>முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த, பாகிஸ்தானிய சரக்கு விமானம் காணாமல் போன சம்பவம் அரங்கேறியது. இதனை பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்து இருந்தது. காணாமல் போன விமானத்தில் ஐந்து பேர் இருந்தனர்.</p><p>காணாமல் போன விமானத்தைக் கண்டறிய பல்வேறு அமைப்புகள் மூலம் கடலில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.</p><p>மேலும், இதுகுறித்த எக்ஸ் தள பதிவில், ஷார்ஜாவில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த K2 ஏர்வேஸ் நிறுவனத்தின் B737 சரக்கு விமானத்தில் செவ்வாய் கிழமை இரவு 9.18 மணிக்கு நேவிகேஷன் சிஸ்டமில் கோளாறு ஏற்பட்டதாகவும், கராச்சி பகுதி கட்டுப்பாட்டு மையம் (ACC) உடனடியாக அதற்கு வழிகாட்டியதாகவும் ஆணையம் தெரிவித்து இருந்தது.</p>]]></content:encoded></item><item><title>&quot;மகத்தான அத்தியாயம்!&quot; தங்க மங்கை மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-narendra-modis-special-praise-for-mirabai-chanu-after-historic-cwg-2026-gold</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-narendra-modis-special-praise-for-mirabai-chanu-after-historic-cwg-2026-gold#comments</comments><guid isPermaLink="false">f5b4f57c-8b36-4ba2-a0d2-78e60a05779e</guid><pubDate>Sun, 26 Jul 2026 17:16:02 +0000</pubDate><atom:updated>2026-07-26T17:16:02.951Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mirabai Chanu,pm modi,பிரதமர் மோடி,காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,மீராபாய் சாணு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/jl8wa7d3/Mirabai-Chanu-and-PM-Modi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mirabai Chanu and PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/jl8wa7d3/Mirabai-Chanu-and-PM-Modi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிளாஸ்கோ 2026 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி, தனது மூன்றாவது தொடர்ச்சியான தங்க பதக்கத்தை வென்று, இந்தியாவிற்கு முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்த இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவை பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> பாராட்டினார். </p><p>ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், ஆண்களுக்கான 60 கிலோ எடை பிரிவில் சக நாட்டு வீரரான ரிஷிகாந்த சிங் வெள்ளி பதக்கம் வென்றதை தொடர்ந்து சானு தங்க பதக்கம் வென்றுள்ளார்.  இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். </p><p>அதில், தங்கப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவரது நிலைத்தன்மையை பாராட்டி, தனது புகழ்பெற்ற விளையாட்டு வாழ்க்கையில் மற்றொரு காமன்வெல்த் பதக்கத்தை சேர்த்ததன் மூலம் அவர் ஒரு உத்வேகம் அளிப்பவர் என்றும் குறிப்பிட்டார்.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், "இந்திய பளுதூக்குதலில் மற்றுமொரு மகத்தான அத்தியாயம்! திறமையான மீராபாய் சானு, காமன்வெல்த் போட்டிகளில் 48 கிலோ எடை பிரிவில் அசத்தலான செயல்திறனை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை தங்க பதக்கம் வென்று தனது திறமையை நிரூபித்துள்ளார்.</p><p>தொடர்ச்சியாக இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் மற்றும் தனது பெயரில் நான்காவது காமன்வெல்த் பதக்கத்துடன், அவர் ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகமாக திகழ்கிறார். அவருக்கு வாழ்த்துகள்! அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள். #CWG2026,” என்று அவர் கூறினார்.</p><p>முன்னதாக ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ எடையை தூக்கி காமன்வெல்த் சாதனை படைத்திருந்த சானு, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவை தொடங்கும் போது 82 கிலோ எடையை தூக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.</p><h2>புதிய சாதனை:</h2><p>அவர் தனது இரண்டாவது முயற்சியில் 82 கிலோ எடையை வெற்றிகரமாக தூக்கினார். அதனை தொடர்ந்து, தனது மூன்றாவது முயற்சியில் 85 கிலோ எடையை தூக்கி, புதிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் சாதனையை நிகழ்த்தி மற்றொரு பிரமிக்க வைக்கும் செயல்திறனை வெளிப்படுத்தினார்.</p><p>பின்னர் சானு 105 கிலோ எடையை தூக்கி, அதனை வெற்றிகரமாக தன் தலைக்கு மேலே உயர்த்தி, தங்க பதக்கத்தை உறுதிசெய்ததோடு, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தனது ஹாட்ரிக் தங்க பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தார்.</p><p>இந்த வெற்றியின் மூலம், 2018 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் காமன்வெல்த் போட்டிகளில் தான் வென்றிருந்த வெற்றிகளுடன் சானு மேலும் ஒரு தங்கப் பதக்கத்தைச் சேர்த்துள்ளார். மேலும், கிளாஸ்கோ 2026 போட்டிகளில் இந்தியா தனது முதல் தங்க பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரதமரின் களங்கப்பட்ட பிம்பத்தைச் சரிசெய்யவே புதிய உயர்மட்ட குழு..!- ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/panel-formed-to-restore-prime-ministers-tainted-image-jairam-ramesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/panel-formed-to-restore-prime-ministers-tainted-image-jairam-ramesh#comments</comments><guid isPermaLink="false">9e4189bd-be13-4b14-93fb-4de3d0a89238</guid><pubDate>Sun, 26 Jul 2026 16:24:37 +0000</pubDate><atom:updated>2026-07-26T16:24:37.400Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜெய்ராம் ரமேஷ்,Jairam Ramesh,pm modi,உயர்மட்ட குழு,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/9d9ojdd9/jairam-ramesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi- Jairam ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/9d9ojdd9/jairam-ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் மத்தியில் வெடித்த போராட்டத்தின் எதிரொலியாக, இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்ட குழு அமைத்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.</p><p>இக்குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோம்நாத், உளவுத்துறை முன்னாள் இயக்குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அனிதா கர்வால் மற்றும் அம்ரித் லால் மீனா இடம்பெற்றுள்ளனர்.</p><h2>பிரதமர் மோடி வீடியோ வெளியீடு</h2><p>பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>தேர்வு முறையை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றும் வகையில் நந்தன் நிலேகனிக தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>நந்தன் நிலேகனி குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>நாடு முழுவதும் நடைபெறும் போட்டித் தேர்வுகளின் வெளிப்படைத்தன்மையை உயர்மட்ட பணிக்குழு உறுதி செய்யும்.</p><p>வினாத்தாள் தயாரிப்பு முதல் முடிவுகள் வெளியிடப்படும் வரை ஆய்வு செய்து உயர்மட்ட பணிக்குழு பரிந்துரை செய்யும்.</p><p>வினாத்தாள் கசிவைத் தடுக்க தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்புகளை பணிக்குழு உருவாக்கும்.</p><p>தேர்வுகளின்போது தொழில்நுட்ப பாதுகாப்பு, நம்பகத்தன்மை, சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை அளிக்கும். மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடிய யாரும் தப்ப முடியாது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">HIGH POWERED TASK FORCE on examination reforms under the leadership of Shri Nandan Nilekani constituted.<a href="https://x.com/NandanNilekani?ref_src=twsrc%5Etfw">@NandanNilekani</a> <a href="https://t.co/mMpmPdIEL5">pic.twitter.com/mMpmPdIEL5</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2081371118188028277?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>ஜெய்ராம் ரமேஷ்</h2><p>பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>நண்பர்களே, கடந்த ஜூன் 2024-ல், நீட்-யுஜி (NEET-UG) உள்ளிட்ட பல தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததைத் தொடர்ந்து, தேர்வுகள் வெளிப்படையாகவும், சுமுகமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் மோடி அரசு ஒரு உயர்மட்ட நிபுணர் குழுவை அமைத்தது.</p><p>ஜூலை 2026-ல், நீட்-யுஜி மற்றும் பிற தேர்வுகளில் மீண்டும் முறைகேடுகள் நடந்ததைத் தொடர்ந்து, தேர்வு சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவதற்காக மோடி அரசு ஒரு "உயர்மட்டப் பணிக்குழுவை" அமைத்துள்ளது.</p><p>டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் குழுவின் 101 பரிந்துரைகளை மோடி அரசு இன்னும் முழுமையாகச் செயல்படுத்தவில்லை. மாறாக, 2024 முதல் 2026 வரையிலான கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, தேசிய தேர்வு முகமைக்கு (NTA) ஒரு முழுநேர தலைமை இயக்குநரைக்கூட அது நியமிக்கவில்லை.</p><p>இறுதியில், இவை அனைத்தும் பிரதமரின் சரிசெய்ய முடியாத அளவுக்குக் களங்கப்பட்ட பிம்பத்தைச் சரிசெய்வதற்கான ஒரு உயர்மட்ட முயற்சியைத் தவிர வேறொன்றுமில்லை.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">Friends, जून 2024 में, NEET-UG सहित कई परीक्षाओं में गड़बड़ी करने के बाद मोदी सरकार ने परीक्षाओं का &quot;पारदर्शी, सुचारु और निष्पक्ष संचालन सुनिश्चित करने&quot; के लिए ISRO के पूर्व अध्यक्ष डॉ. के. राधाकृष्णन की अगुवाई में एक उच्चस्तरीय विशेषज्ञ समिति का गठन किया था।<br><br>जुलाई 2026 में,… <a href="https://t.co/Fe5d1by8SK">https://t.co/Fe5d1by8SK</a></p>&mdash; Jairam Ramesh (@Jairam_Ramesh) <a href="https://x.com/Jairam_Ramesh/status/2081390539627438367?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>விரைவில் அடுத்தகட்ட வியூகம் அறிவிப்பு.. போராடிய மாணவர்கள் மீது எப்ஐஆர் பதியக்கூடாது - அபிஜித் தீப்கே பேட்டி </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-cjp-plans-next-strategy-demands-fir-withdrawal-for-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-cjp-plans-next-strategy-demands-fir-withdrawal-for-students#comments</comments><guid isPermaLink="false">a01c2b4e-e267-4d23-9c26-62ba55a21595</guid><pubDate>Sun, 26 Jul 2026 16:23:59 +0000</pubDate><atom:updated>2026-07-26T16:23:59.655Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>question paper leak,வினாத்தாள் கசிவு,CJP Protest,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/n5popzx6/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே ]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/n5popzx6/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்வு குளறுபடிகளுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) யின் அடுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து அதன் நிறுவனர் அபிஜீத் தீப்கே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். </p><p>நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜூன் 20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah">சிஜேபி நடத்திய போராட்டம்</a> நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா மூலம் வெற்றி பெற்று முடிவுக்கு வந்தது. </p><h2>அபிஜீத் தீப்கே </h2><p>இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அபிஜீத் தீப்கே, </p><p>"நாங்கள் எங்களது எதிர்கால வியூகத்தை விரைவில் அறிவிப்போம். நேற்றுதான் டெல்லி போராட்டம் நிறைவடைந்தது.  தயவுசெய்து எங்களுக்குச் சிறிது நேரம் கொடுங்கள். </p><p>போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் வழக்குகள் குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எந்தவொரு மாணவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்." என தெரிவித்தார்.   </p><p>பஞ்சாப் விவகாரத்தையும் நாங்கள் கையில் எடுப்போம், அதற்கான திட்டமிடலில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். </p><p>ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய அவர், "அந்தப் பிரச்சனையையும் நாங்கள் கையில் எடுப்போம். அதற்காக ஏற்கனவே திட்டமிட்டு வருகிறோம்" என்றார்.</p> <h2>பஞ்சாப் வினாத்தாள் கசிவு</h2><p>பஞ்சாப் ஆசிரியர் தகுதித் தேர்வு 12ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு மற்றும் பார்மசி ஆபிசர் தேர்வு உட்பட 6 வெவ்வேறு தேர்வுகளின் வினாத்தாள் கசிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>அம்மாநிலத்தின் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஷிரோமணி அகாலி தள் கட்சியும் வினாத்தாள் கசிவுகளால் மாநிலத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் பைன்ஸின் ராஜினாமா செய்யக்கோரி வருகின்றனர்.</p><h2>பாஜக</h2><p>குறிப்பாக பாஜக செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறுகையில், "பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் எப்போது ராஜினாமா செய்யப் போகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் அவரை ராஜினாமா செய்ய சொல்வாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உதயமானது &apos;E20 ஜனதா கட்சி..&apos; எத்தனால் திணிப்புக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி பேரணி!</title><link>https://www.maalaimalar.com/news/national/e20-petrol-policy-row-new-e20-janata-party-questions-ethanol-blending-and-demands-fuel-choice-freedom</link><comments>https://www.maalaimalar.com/news/national/e20-petrol-policy-row-new-e20-janata-party-questions-ethanol-blending-and-demands-fuel-choice-freedom#comments</comments><guid isPermaLink="false">b5753591-7afb-4b8b-92c1-965d59a619ee</guid><pubDate>Sun, 26 Jul 2026 15:31:36 +0000</pubDate><atom:updated>2026-07-26T15:31:36.878Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எத்தனால்,நிதின் கட்கரி,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/f1m937s1/tn-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ E20 ஜனதா கட்சி எக்ஸ் பக்கம், நிதின் கட்கரி 
]]></media:title><media:description type="html"><![CDATA[ E20 ஜனதா கட்சி எக்ஸ் பக்கம், நிதின் கட்கரி 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/f1m937s1/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி <a href="https://www.maalaimalar.com/news/national/gen-z-youth-cockroach-party-delhi-neet-exam-scandal">போராட்டம் வெற்றி</a> அடைந்துள்ள நிலையில் தற்போது  'E20 ஜனதா கட்சி' என்ற புதிய இயக்கம் உருவாகியுள்ளது.</p><p>பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் மத்திய அரசின் கொள்கைக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு நிலவி வரும் சூழலில் அந்த எதிர்ப்பை ஒருங்கிணைக்க தொடங்கப்பட்டுள்ள E20 ஜனதா கட்சி, எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில்  வைரலாகி வருகிறது.</p><h2>கோரிக்கைகள் </h2><p>தங்கள் அமைப்பை ஒரு 'அரசியல்சாரா நுகர்வோர் உரிமை இயக்கம்' என்று குறிப்பிடும்  E20 ஜனதா கட்சியினர், E20 பெட்ரோலை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என கோரவில்லை. </p><p>மாறாக 100% தூய்மையான பெட்ரோலும் பங்குகளில் கிடைக்க வேண்டும் என்றும் எதை தேர்ந்தெடுக்க வேண்டு வாகன உரிமையாளர்களே தீமானிக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். </p><p>மேலும் எத்தனால் கலப்பால் வாகனத்தின் மைலேஜ், என்ஜின் செயல்திறன் மற்றும் பராமரிப்புச் செலவு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிவியல் பூர்வ ஆய்வுகளை நடத்த வேண்டும் அரசு தரவுகளை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். </p> <h2>நிதின் கட்கரி சர்ச்சை</h2><p>கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை தொடர்ந்து, தற்போது மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை இலக்கு வைத்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.</p><p>எத்தனால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள Cian Agro என்ற நிறுவனத்தை நிதின் கட்கரியின் மகன் நிகில் கட்கரி நடத்தி வருகிறார்.</p><p>பெட்ரோலில் எத்தனால் கலக்கும் கொள்கை அமலுக்கு வந்தபோது, வெறும் ரூ.40 ஆக இருந்த இந்நிறுவனத்தின் பங்கு விலை, ஒன்றரை ஆண்டுகளில் ரூ.3,600 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலால் என்ஜின்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள், மைலேஜ் குறைவு மற்றும் பராமரிப்புச் செலவு அதிகரிப்பதாக வாகன உரிமையாளர்கள் மற்றும் டாக்ஸி சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.</p><p>இதன் காரணமாக, 'டெல்லி டாக்ஸி மற்றும் டிரான்ஸ்போர்ட்டர்ஸ் சங்கம்' சார்பில் ஆகஸ்ட் 4 அன்று நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>மத்திய அரசு விளக்கம்</h2><p>E20 பெட்ரோலால் வாகனங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு எந்தவிதமான அறிவியல் பூர்வமான சான்றுகளும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.</p><p>இருப்பினும், கடந்த ஜூலை 22 அன்று மாநிலங்களவையில் பதிலளித்த பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி, E10 எரிபொருளுக்காக வடிவமைக்கப்பட்ட பழைய வாகனங்களில் E20 பெட்ரோலைப் பயன்படுத்தும்போது 3% முதல் 5% வரை மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது என்பதை ஒப்புக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - தற்கொலை செய்த மாணவியின் தாயார் வேண்டுகோள்  </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-outrage-education-minister-resigns-as-students-mother-demands-death-penalty-for-culprits</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-outrage-education-minister-resigns-as-students-mother-demands-death-penalty-for-culprits#comments</comments><guid isPermaLink="false">8808222b-a5b3-4437-a6ab-fd4dcc44b9b5</guid><pubDate>Sun, 26 Jul 2026 14:50:13 +0000</pubDate><atom:updated>2026-07-26T14:50:13.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,மாணவி தற்கொலை,student suicide,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/d0myzvwe/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 
கையில் மகள் ஆகான்ஷாவின் படத்துடன் தாய் நீலம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கையில் மகள் ஆகான்ஷாவின் படத்துடன் தாய் நீலம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/d0myzvwe/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் ஏற்பட்ட கொந்தளிப்பை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career">தர்மேந்திர பிரதான்</a> தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். </p><p>இருப்பினும், இது மட்டும் போதாது என்றும் வினாத்தாள் கசிவுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று நீட் தேர்வு மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.</p> <h2>தற்கொலை</h2><p>மகாராஷ்டிராவின் நாக்பூரில் படித்து வந்த 18 வயது மாணவி அகான்ஷா சதுர்வேதி, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பால் மன உளைச்சலடைந்து கடந்த மே 20 அன்று தற்கொலை செய்துகொண்டார்.</p><p>இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அகான்ஷாவின் தாயார் நீலம் சதுர்வேதி,</p><p>"எந்த ஒரு நடவடிக்கையும் என் மகளை மீண்டும் கொண்டு வரப்போவதில்லை. கல்வி அமைச்சரின் ராஜினாமாவில் எங்களுக்கு எந்தத் திருப்தியும் இல்லை.</p><p>மாணவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், ஒரு அமைச்சர் ராஜினாமா செய்வதால் மட்டும் அவரது பொறுப்பு முடிந்துவிடாது. வினாத்தாள் கசிவில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை மட்டுமே வழங்கப்பட வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.</p> <h2>குடும்பம்</h2><p>மத்திய பிரதேசத்தை ஆகான்ஷாவின் குடும்பம் மகளின் மருத்துவக் கனவுக்காக நாக்பூருக்குக் குடிபெயர்ந்தது. தந்தை ஒரு சிறிய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டே, மகளின் பயிற்சி வகுப்புக் கட்டணத்திற்காக நாக்பூரில் சமையல் வேலையும் செய்து வந்தார்.</p><p>மகளின் மறைவுக்குப் பிறகு, அவரது தந்தைக்கு இருமுறை மாரடைப்பு ஏற்பட்டுத் தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.</p><p>இதுகுறித்து பேசியுள்ள நீளம், "என் மகள் உயிருடன் இருந்திருந்தால் குடும்பத்தை அவளே காப்பாற்றியிருப்பாள். இனி எங்களை யார் கவனிப்பார்?" என கண்ணீர் வடித்துள்ளார்.</p> <h2>தற்கொலைக் குறிப்பு</h2><p>நீட் தேர்வில் 650-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறுவேன் என்று நம்பிக்கையுடன் இருந்த அகான்ஷா, தேர்வு ரத்து செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.</p><p>அவரது தற்கொலை குறிப்பில்,</p><p>"அம்மா, அப்பா, உங்கள் மகள் நன்றாகப் படித்து டாக்டர் ஆவாவாள் என்று நீங்கள் நம்பினீர்கள். ஆனால் மீண்டும் நீட் தேர்வு எழுத எனக்குத் தைரியம் இல்லை.</p><p>முதல் முறையில் நான் நல்ல மதிப்பெண்கள் எடுத்திப்பேன், ஆனால் மறுத்தேர்வில் மீண்டும் என்னால் சிறப்பாகச் செய்ய முடியுமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.</p><p>என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, அப்பா... நான் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டேன்" என்று எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மறுதேர்வு அழுத்தத்தால் இதுவரை நாடு முழுவதும் 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>தேர்வு சீர்த்திருத்தம்: இன்போசிஸ் இணை நிறுவனர் தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு- பிரதமர் மோடி வீடியோ வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/national/modi-announces-high-level-panel-for-exam-reforms</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-announces-high-level-panel-for-exam-reforms#comments</comments><guid isPermaLink="false">46c25e4b-4fd5-45db-9120-f1afa0b1196a</guid><pubDate>Sun, 26 Jul 2026 14:10:54 +0000</pubDate><atom:updated>2026-07-26T14:10:54.592Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,நீட் முறைகேடு,பிரதமர் மோடி,தேர்வு சீர்த்திருத்தம்,high level panel,exam reforms</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/8xpnvs39/Modi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/8xpnvs39/Modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் மத்தியில் வெடித்த போராட்டத்தின் எதிரொலியாக, </p><p>இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.</p><p>இக்குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோம்நாத், உளவுத்துறை முன்னாள் இயக்குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அனிதா கர்வால் மற்றும் அம்ரித் லால் மீனா இடம்பெற்றுள்ளனர்.</p><p>இதுகுறித்து அவர் பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.</p><p>அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>தேர்வு முறையை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றும் வகையில் நந்தன் நிலேகனிக தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>நந்தன் நிலேகனி குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>நாடு முழுவதும் நடைபெறும் போட்டித் தேர்வுகளின் வெளிப்படைத்தன்மையை உயர்மட்ட பணிக்குழு உறுதி செய்யும்.</p><p>வினாத்தாள் தயாரிப்பு முதல் முடிவுகள் வெளியிடப்படும் வரை ஆய்வு செய்து உயர்மட்ட பணிக்குழு பரிந்துரை செய்யும்.</p><p>வினாத்தாள் கசிவைத் தடுக்க தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்புகளை பணிக்குழு உருவாக்கும்.</p><p>தேர்வுகளின்போது தொழில்நுட்ப பாதுகாப்பு, நம்பகத்தன்மை, சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை அளிக்கும். மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடிய யாரும் தப்ப முடியாது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் திங்களன்று பொதுத்தேர்வுகள் சீர்த்திருத்த மசோதா தாக்கலாகும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">HIGH POWERED TASK FORCE on examination reforms under the leadership of Shri Nandan Nilekani constituted.<a href="https://x.com/NandanNilekani?ref_src=twsrc%5Etfw">@NandanNilekani</a> <a href="https://t.co/mMpmPdIEL5">pic.twitter.com/mMpmPdIEL5</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2081371118188028277?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>முன்பே ராஜினாமா செய்ய இரு முறை முன்வந்த தர்மேந்திர பிரதான்.. மறுத்த தலைமை - தகவல்  </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-dharmendra-pradhan-quits-as-education-minister-after-cjbp-agitation-success</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-dharmendra-pradhan-quits-as-education-minister-after-cjbp-agitation-success#comments</comments><guid isPermaLink="false">92d5b7b9-6621-4d4d-8eb1-042a66630637</guid><pubDate>Sun, 26 Jul 2026 13:53:48 +0000</pubDate><atom:updated>2026-07-26T13:53:48.146Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/jc8m9fyd/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான், மோடி, அமித் ஷா]]></media:title><media:description type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான், மோடி, அமித் ஷா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/jc8m9fyd/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு முறைகேடு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 20 அன்று போராட்டம் தொடங்கியது. இதில் ஜூன் 28 முதல் கல்வியாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தார். </p><h2>வெற்றி </h2><p>இந்நிலையில் தொடர் அழுத்தத்தின் பேரில், நேற்று தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதன் மூலம் 1 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்திய சிஜேபி தனது இலக்கை அடைந்துள்ளது. </p><p>இடையில் ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah">இளைஞர்கள் மீதான தாக்குதல்</a> நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இப்போராட்டத்திற்கு ஆதரவை அதிகரிக்க செய்தது குறிப்பிடத்தக்கது. </p><p>முதலில் போராட்டத்திற்கு செவிசாய்க்காத அரசு, கடந்த சில நாட்களில் எழுந்த கடும் அழுத்தத்தின் பேரில் சிஜேபி பிரதிநிதிகளுடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. </p><p>இந்த சூழலில் முன்னரே, நீட் கசிவுக்காக தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினமா செய்ய ஏற்கனவே 2 முறை முன்வந்ததாகவும், ஆனால் தலைமை அதை மறுத்துவிட்டதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. </p><h2>முன்வந்த பிரதான்</h2><p>போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே தன் பதவியை ராஜினாமா செய்ய பிரதான் முன்வந்ததாகவும் தலைமை அதை மறுத்ததாகவும் மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஜயவர்கியா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p><p>மேலும் அரசு வட்டாரங்களின்படி ஜூலை 20 நடந்த மூத்த அமைச்சர் கூட்டத்தில், தன் பதவியை ராஜினாமா செய்ய பிரதான் முன்வந்தும், அவரை அப்பதவியிலேயே தொடர தலைமை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.</p><p>அமைச்சர் ராஜினாமா என்பது பொறுப்புகளில் இருந்து விலகிச் செல்வது, ஆனால் பிரச்சனைகளை தீர்க்காமல் பொறுப்புகளில் இருந்து விலகிச் செல்வது சரியன்று என தலைமை கருத்தியதாகவும் அரசின் வட்டாரங்கள் கூறுகின்றன.</p> <h2>மாறிய காட்சி</h2><p>ஆனால் ஜூலை 20 நடந்த 'நாடாளுமன்றம் நோக்கி' பேரணி போல மீண்டும் ஒரு பேரணியை நடத்த உள்ளதாக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது சிஜேபி கூறியதால் அரசின் நிலைப்பாடு மாறியதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தர்மேந்திர பிரதான் நேற்று ராஜினாமா செய்த நிலையில்   அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>ஜனாதிபதி இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று கல்வி அமைச்சராக பொறுப்பேற்று அத்துறை அதிகாரிகளுடன் ஜோஷி ஆலோசனை கூட்டம் நடத்தி அடுத்தகட்ட சீர்திருத்தங்கள் குறித்து விவாதித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற அசாம் அமைச்சர் மகள்.. முதல்வர் ஹிமாந்தா ரியாக்ஷன் இதுதான் </title><link>https://www.maalaimalar.com/news/national/assam-ministers-daughter-joins-neet-protest-bjp-supporters-slam-her-anti-modi-slogans</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-ministers-daughter-joins-neet-protest-bjp-supporters-slam-her-anti-modi-slogans#comments</comments><guid isPermaLink="false">4a86a873-625f-4236-8dd6-241ff8cf111c</guid><pubDate>Sun, 26 Jul 2026 13:26:50 +0000</pubDate><atom:updated>2026-07-26T13:26:50.722Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,அசாம்,ஹிமாந்தா பிஸ்வா சர்மா,biopic,autobiography,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/bjeoov8t/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  திபிஷா, ஹிமாந்தா ]]></media:title><media:description type="html"><![CDATA[  திபிஷா, ஹிமாந்தா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/bjeoov8t/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஐந்தரில் மந்தரில் ஒரு மாதத்திற்கும் சிஜேபி நடத்தி வந்த போராட்டம், நேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததன் மூலம் வெற்றி பெற்றது. </p><p>டெல்லியில் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதிலும் மாண்வர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2>அசாம்</h2><p>அந்த வகையில் அசாம் தலைநகர் கௌஹாத்தியிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதில் அசாம் பாஜக அரசில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக உள்ள கேஷப் மஹான்தா உடைய  மகள் திபிஷா இந்த போராட்டத்தில் பங்கேற்றார். </p><p>சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ ஒன்றில், போராட்டக்களத்தில் திபீஷா, பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வலியுறுத்தியது இடம்பெற்றிருந்தது. </p><p>அமைச்சரின் மகள் பாஜக அரசுக்கு எதிராக போராடியது அக்கட்சி ஆதரவாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் திபிஷாவையும், அமைச்சர் கேஷப் மஹான்தாவைக்கும் சமூக வலைத்தளங்களில் அக்கட்சி ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர். </p><h2>அசாம் முதல்வர்</h2><p>இந்த விவகாரம் குறித்து அறிந்த அசாம் முதல்வர்<a href="https://www.maalaimalar.com/news/national/assam-cm-oath-himanta-biswa-sarma-sworn-in-as-chief-minister-again-after-bjp-alliance-wins-102-of-126-seats"> ஹிமாந்தா பிஸ்வா சர்மா</a>, கேஷப் மஹான்தாவை விமர்சிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.</p><p>அவர் கூறியதாவது, "அவரின் மகள் போராட்டத்தில் பங்கெடுத்தார் என்பதற்காக கேஷப் மஹந்தாவை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை.</p><p>அவரின் மகள் தந்தையின் அரசியல் சிந்தாந்தத்தை பின்பற்ற வேண்டும் என்று இல்லை. வயதுவந்த பிள்ளைகள், பெற்றோர் கொண்டிருக்கும் கருத்தில் இருந்து மாறுபட்ட அரசியல் கருத்தை கொண்டிருக்கலாம்.</p><p>வயதுவந்த பிள்ளைகள் தேர்ந்தெடுக்கும் அரசியலுக்காக அவர்களின் பெற்றோரை சாடுவது சரியில்லை.</p><p>நாளை என் மகன் வக்கீல் ஆனால், எனக்கு பிடிக்காத ஒருவருக்கு கூட ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகலாம்" என தெரிவித்தார்.</p><p>அதேநேரம், போராட்டத்தில் திபிஷா எழுப்பிய முழக்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஹிமாந்தா, " அப்பெண் எழுப்பிய முழக்கங்களுடன் நான் உடன்படவில்லை. அடுத்த முறை நான் அவரை சந்திக்கும்போது, அவர் சொன்னது சரியில்லை என்பதை அவருக்கு நான் பேசி புரிய வைக்க முயல்வேன்" என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அசாம், குஜராத் உள்பட வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் மழை- 939 கிராமங்கள் மூழ்கின</title><link>https://www.maalaimalar.com/news/national/heavy-rains-flood-939-villages-in-assam-and-gujarat</link><comments>https://www.maalaimalar.com/news/national/heavy-rains-flood-939-villages-in-assam-and-gujarat#comments</comments><guid isPermaLink="false">ebb8aa8e-ee6b-47d2-be4c-41c6007d3f53</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:57:23 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:57:23.758Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,அசாம்,கனமழை,வடமாநிலங்களில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ckg33ftk/rain1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Heavy rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ckg33ftk/rain1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மேற்குப் பருவமழை காரணமாக வட மாநிலங்க ளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.  கன மழை யால் அசாமில் வெள்ளப் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழைக்கு 14 பேர் உயிரிழந்தனர்.</p><h2>61 பேர் பலி</h2><p>அசாம் மாநிலத்தில் இதுவரை மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 12 மாவட்டங்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் வீடுகள், சாலைகள் மற்றும் விவசாய நிலங்கள் மூழ்கியுள்ளன. நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>சிவசாகர், சராதியோ, கோலாகாட் மற்றும் ஜோர் ஹாட் ஆகிய மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. </p><h2>939 கிராமங்கள் மூழ்கின</h2><p>இந்த மாவட்டங்களில் உள்ள 939 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. 24 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் வெள் ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அசாமின் சிவ சாகர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் திக்கோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.</p><p>பெருக்கெடுத்து ஓடிய  வெள்ள நீரில் கார்கள்  அடித்து செல்லப் பட்டன. அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாவை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து, தற்போதைய வெள்ள நிலவரம் குறித்து விசாரித்தார்.</p><p>இது தொடர்பாக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா  எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் வழங்கும் என்று பிரதமர் அசாம் மக்களுக்கு உறுதியளித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>குஜராத்தில் கனமழையால் ஆறுகள், நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை 40,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். </p><p>கனமழைக்கு குஜராத் மாநிலத்தில் 5 பேர் உயிரிழந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அகமதாபாத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. வாவ்த்ராட் மாவட்டத்தில் உள்ள பாபர் பகுதியில் 287 மி.மீ மழை பதிவாகியுள்ளது. </p><p>பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 18 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்களும், 32 மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்களும் அனுப்பப் பட்டுள்ளன. பல இடங்களில் துணை ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. குஜராத்தின் பல பகுதிகளில் இன்று 204.5 மி.மீ-க்கு மேல் மழை பெய்யக்கூடும் என எச்சரித்து, வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2>ஆறுகளில் வெள்ளம்</h2><p>இமாச்சலப் பிரதேசத்தில், தொடர் கனமழை, நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக 134 சாலைகள் மூடப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பீகாரில் 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. </p><p>உத்தரப் பிரதேசத்தில் கங்கை மற்றும் யமுனா உட்பட 10 ஆறுகளில் பெருக் டுத்து ஓடுகிறது. காக்ரா மற்றும் ஷார்தா உட்பட 4 ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்லியாவில், சரயு ஆற்றில் ஒரு அரசுப் பள்ளியும் ஒரு வீடும் அடித்துச் செல்லப்பட்டன. அதேசமயம் கோண்டாவில் 100 ஏக்கருக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கின.</p>]]></content:encoded></item><item><title>கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா?.. இந்தியாவில் சுதந்திரம் சுருங்கி வருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை  </title><link>https://www.maalaimalar.com/news/national/india-democratic-space-shrinking-justice-ujjal-bhuyan-warns-of-curbs-on-dissent</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-democratic-space-shrinking-justice-ujjal-bhuyan-warns-of-curbs-on-dissent#comments</comments><guid isPermaLink="false">d0e900a1-a3e9-4f78-b4c3-33ce577d9531</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:53:38 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:53:38.451Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர்நீதிமன்றம்,High Court,Supreme Court Judge,உச்சநீதிமன்றம்,உச்சநீதிமன்ற நீதிபதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mnwtgymx/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உஜ்ஜல் புயான்]]></media:title><media:description type="html"><![CDATA[ உஜ்ஜல் புயான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mnwtgymx/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளுக்கான இடம் படிப்படியாக சுருங்கி வருவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கவலை தெரிவித்துள்ளார். </p><p>போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவன பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசினார். </p><p>முதலாவதாக, "கங்கை நதியில் படகில் வைத்து அசைவம் சாப்பிடுவது சட்டப்படி குற்றமில்லை. ஆனால் மத்தியப் பிரதேச பாஜக அரசின் காவல்துறை, புனித நதியை அசுத்தம் செய்வதாக கூறி 14 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது. அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு  3 மாதம் சிறையில் கழித்தனர்.  </p><p>இந்த சம்பவம் தேசத்தின் குடிமக்கள் அரசியலமைப்பு தங்களுக்கு வழங்கிய சட்டபூர்வ உரிமையின் கீழ் செயல்படும்போதும் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் தொடர்ச்சியான ஒரு போக்கை காட்டுகிறது. </p><p> இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளுக்கான இடம் படிப்படியாக சுருங்கி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருவரின் பார்வையை பகிர்ந்து கொள்ளவும், அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தற்கான சுதந்திரம் உள்ளது. விவாதமும், மாற்றுக்கருத்தும் தான் ஜனநாயகத்தின் சாரம். துரதிஷ்டவசமாக அது குற்றமாக மாற்றப்பட்டு வருகிறது. " என தெரிவித்தார். </p><h2>மும்பை உயர் நீதிமன்றம் மீது விமர்சனம் </h2><p>மும்பையில் காசா மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த அனுமதி கோரியபோது, "இந்தியாவில் உங்களுக்குப் பிரச்சனைகளே இல்லையா? காசாவுக்காக போராடுவது தேசபக்தி அல்ல" என்று மும்பை <a href="https://www.maalaimalar.com/topic/high-court">உயர் நீதிமன்றம்</a> கூறியதையும்   உஜ்ஜல் புயான் சுட்டிக்காட்டி விமர்சித்தார். </p><p>அமைதியான முறையில் மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதும் ஜனநாயக உரிமையே என்றும், நீதிமன்றங்கள் இதுபோன்ற கருத்துச் சுதந்திரத்தைக் முடக்கும் வகையில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.</p> <h2>ஜாமீன் தாமதம்</h2><p>சாதாரணப் போராட்டங்கள், சமூக வலைத்தளப் பதிவுகள் மற்றும் மீம்களுக்குக்கூட கடுமையான குற்றவியல் சட்டங்களைப் பயன்படுத்துவது தனிநபர் சுதந்திரத்தைப் பறிப்பதாகும்.</p><p>நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கினாலும், அது நீண்டகாலச் சிறைவாசத்திற்கு பிறகே கிடைக்கிறது.</p><p>மேலும் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தக் கூடாது என்ற ஜாமீன் நிபந்தனைகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மறைமுகமாக முடக்குகின்றன.</p><p>நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மற்றும் போக்கை வழக்கறிஞர்களும் சட்ட மாணவர்களும் நடுநிலையோடு விமர்சன கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்.</p><p>நம்மை நாமே புகழ்ந்துகொள்வதை விட அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்புகளைக் காப்பாற்றுவதே நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை உயர்த்தும்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Video: ஜந்தர் மாந்தர் போராட்டத்தில் இந்துத்துவா தேசியவாத தலைவர் மாணவர்களைத் திட்டி, தாக்கும் காட்சி வைரல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/hindutva-leader-satyam-pandit-caught-on-video-assaulting-neet-protest-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/hindutva-leader-satyam-pandit-caught-on-video-assaulting-neet-protest-students#comments</comments><guid isPermaLink="false">59a43b94-3f35-4ce9-986a-9a976341847d</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:17:18 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:17:18.062Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DharmendraPradhan,NEETProtest,SatyamPandit,சத்யம்பண்டிட்,MahuaMoitra,மஹுவாமொய்த்ரா,PralhadJoshi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/pj7b1o8x/SatyamPandit" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SatyamPandit ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/pj7b1o8x/SatyamPandit?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது சத்யம் பண்டிட் என்ற இந்துத்துவா தலைவர் வன்முறைத் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>காவி துண்டு அணிந்த நபர் மாணவர்களைத் தாக்கி, மிரட்டி, கேமரா முன்னிலையில் மன்னிப்புக் கேட்க வைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயை பரவி வருகிறது.</p><h2><strong>மாணவர்களிடம் மிரட்டல்</strong></h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி,'காக்ரோச் ஜனதா கட்சி' ஜன்தர் மந்தரில் 36 நாட்களாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தியது. </p><p>இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்ட மறுநாளில் இந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவில் வெள்ளை குர்தா மட்டும் காவித் துண்டு அணிந்த சத்யம் பண்டிட், இரண்டு மாணவர்களை வழிமறித்து அவர்களின் பெயர் மற்றும் எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்று மிரட்டும் தொனியில் கேள்வி எழுப்புகிறார்.</p><h2><strong>தாக்குதல் மற்றும் கேமரா முன் மன்னிப்பு</strong></h2><p>மாணவர்கள் தாங்கள் 'இந்துக்கள்' என்று பதிலளித்த போதும், 'அப்படியென்றால் தேசவிரோத மாணவர்களை உருவாக்கும் இந்தத் தரப்புக்கு ஏன் ஆதரவு தருகிறீர்கள்?' என்று கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டுயுள்ளார். </p><p>அதோடு நிறுத்தாமல், ஒரு மாணவனின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கொடூரமாகக் தாக்கியுள்ளார். </p><p>மேலும், அந்த மாணவனைப் பலவந்தமாக கேமராவைப் பார்க்க வைத்து மன்னிப்புக் கேட்கச் செய்ததோடு, 'இனிமேல் இந்த பக்கம் உன்னைப் பார்த்தால் அவ்வளவுதான், அடித்துத் துவம்சம் செய்துவிடுவேன்' என்று கொடூரமாக மிரட்டியுள்ளார்.</p><p>இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">इसका नाम Satyam Pandit है ... <br><br>जंतर मंतर पर आंदोलन में आए छात्रों को मारपीटकर गाली गलौज देकर, उन्हें हिन्दू मुस्लिम मतभेद करके, डरा धमकाके भगा रहा है !<br><br>खुद वीडियो रील बनाकर व्यूज से डॉलर कमा रहा है ! <a href="https://t.co/mnBAt5c0UR">pic.twitter.com/mnBAt5c0UR</a></p>&mdash; pk मौर्यवंश की बेटी ⛩️☸️ (@speak000000) <a href="https://x.com/speak000000/status/2081027442953912513?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்</strong></h2><p>இந்த வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், 'பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளின் அநாகரிகமான வன்முறைக்கு இதே சாட்சி. </p><p>இளைஞர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை பாஜகவினர் மீண்டும் ஒருமுறை துரோகம் மூலம் உடைத்தெறிந்துள்ளனர்' என்று சாடியுள்ளார். </p><p>இதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, "சத்யம் பண்டிட் என்ற இந்த வன்முறை நபரை டெல்லி போலீசார் உடனடியாகக் கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் நாங்களே எப்ஐஆர் பதிவு செய்வோம்" என்று எச்சரித்துள்ளார்.</p><h2><strong>தர்மேந்திர பிரதான் ராஜினாமா</strong></h2><p>நீட்-யுஜி வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் 36 நாட்கள் நடத்தப்பட்ட போராட்டத்திற்குப் பின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். </p><p>மாணவர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் அரசியல்: 2028 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - சித்தராமையா அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/corrupt-politics-wont-contest-the-2028-assembly-election-siddaramaiah-announces</link><comments>https://www.maalaimalar.com/news/national/corrupt-politics-wont-contest-the-2028-assembly-election-siddaramaiah-announces#comments</comments><guid isPermaLink="false">738d1a05-23c0-4db4-b1c9-cb1789abc1a7</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:43:35 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:43:35.793Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சித்தராமையா,Siddaramaiah,2028 Assembly elections,2028 சட்டமன்ற தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/bre10qeu/New-Project-2026-07-26T161311.564.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஊழல் அரசியல்: 2028 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - சித்தராமையா அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/bre10qeu/New-Project-2026-07-26T161311.564.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் 2028-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மாண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடர்பாக பேசிய சித்தராமையா கூறியிருப்பதாவது;</p><p>“இன்று அரசியல் களம் சீர்கெட்டுவிட்டதால், 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. இருப்பினும், அரசியலில் தொடர்ந்து செயல்பட்டு, மக்களின் துயரங்கள் மற்றும் மகிழ்ச்சிக்கான குரலாக நான் தொடர்ந்து ஒலிப்பேன்.</p><p>வருணா தொகுதி மக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு என்னை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இனி எந்தத் தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்று நான் முடிவு செய்துவிட்டேன். கடந்த காலங்களில் நான் தேர்தலில் போட்டியிட்டபோது, ​​தொகுதி மக்களே எங்களுக்குத் தேவையான நிதியை வழங்கி எங்கள் வெற்றியை உறுதி செய்தனர்; ஆனால் இன்று அத்தகைய சூழல் இல்லை.</p><p>எனக்கு இப்போது 79 வயதாகிறது. காங்கிரஸ் அரசின் பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது; அதற்குள் எனக்கு 81 அல்லது 82 வயதாகிவிடும். எனது உடல்நிலை முன்பு இருந்ததைப் போல வலுவாக இல்லை. முன்பிருந்த அதே உற்சாகத்துடன் தொடர்ந்து பணியாற்றுவது இனி சாத்தியமில்லை.</p><p>2028-ஆம் ஆண்டில் எனக்கு 82 வயது நிரம்பும். அது எனது அரசியல் வாழ்க்கையின் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் தருணமாக அமையும். 1978-இல் தாலுகா வாரிய உறுப்பினராக எனது அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். நான் வெற்றிகளையும் தோல்விகளையும் கண்டுள்ளேன். </p><p>ஆனால், நான் நம்பிய கொள்கைகளுக்கு முரணாகச் செயல்படாமலும், எனது மனசாட்சிக்குத் துரோகம் இழைக்காமலும் இருந்ததில் எனக்கு மனநிறைவு உண்டு.</p><p>தேர்தலில் போட்டியிடுவதானால் மக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய சூழல் இன்று உருவாகியுள்ளது. இன்றைய அரசியல் முற்றிலும் ஊழல் மயமாகிவிட்டது. நேர்மையான அரசியலுக்கு இன்று இடமில்லாத நிலை காணப்படுகிறது. இத்தகைய சூழலில், இனிவரும் தேர்தல்களில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை நான் எடுத்துள்ளேன்.</p><p>ஐந்து தசாப்தங்களாக, கர்நாடக மக்கள் என்னை தங்களில் ஒருவராகக் கருதி அன்புடன் வழிநடத்தி வந்துள்ளனர். அந்த நன்றிக்கடன் என்மீது உள்ளது. எனவே, எனது எதிர்கால வாழ்க்கையும் பொதுச் சேவைக்கே அர்ப்பணிக்கப்படும்.” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பாதுகாப்பு துறையில் இந்தியா புதிய உச்சம்- &apos;மன்கி பாத்&apos; நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-defence-new-peak-mann-ki-baat-modi-pride</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-defence-new-peak-mann-ki-baat-modi-pride#comments</comments><guid isPermaLink="false">2307e9f6-f01e-4e06-89f3-e07b9a0aac3a</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:44:35 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:44:35.213Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,மனதின் குரல்,pm modi,Maan Ki Baat,மன்கி பாத்,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vjx1b140/maan-ki-baat.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi in Maan ki baat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vjx1b140/maan-ki-baat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ (மன்கிபாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.</p><p>இன்று தனது 136-வது பதிவில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF" rel="nofollow">பிரதமர் மோடி</a> பேசியதாவது:-</p><p>பாதுகாப்பில் புதிய உச்சம் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு ஏற்றுமதி அல்லது நட்பு நாடுகளுடனான அரசியல் ஒத்துழைப்பு என எதுவாக இருந்தாலும்  இந்தியா தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.</p><p>இந்தியா ஒரு நம்பகரமான உலகளாவிய பாதுகாப்புத் துறை கூட்டாளியாக உருவெடுத்து வருகிறது. மேலும் தனது பாதுகாப்பு திறன்களை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் நான் இந்தோனேசியாவில் இருந்தேன்.</p><p>அங்கு பிரம்மோஸ் மற்றும் அஸ்தரா ஏவுகணைகள் தொடர்பான  ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கை வளர்ந்து வருகிறது.</p><h2><a href="https://www.maalaimalar.com/news/world/10-killed-around-100-injured-in-russian-strike-in-ukraines-kyiv" rel="nofollow">ஏவுகணை</a></h2><p>சில நாட்களுக்கு முன்பு ஐ.என்.எஸ். மகேந்திரகிரி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த நவீன போர்க்கப்பல் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் 75 சதவீதத்திற்கு அதிகமானவை உள்நாட்டிலே தயாரிக்கப்பட்டது.</p><p>இந்த மாதத்தில் நீண்ட தூரம் சென்று துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ‘பினாகா’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) வெற்றிக்கரமாக சோதித்தது.</p><p>இந்த வெற்றிக்கு பின்னால் நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கூட்டு உழைப்பு உள்ளது. 2 அல்லது 3 நாட்களுக்கு முன்புதான் டி.ஆர்.டி.ஓ. குஷா ஏவுகணையையும் வெற்றிக்கரமாக சோதித்தது.  </p><h2>சிறப்பான தருணம்</h2><p>கடந்த வாரம்  ‘<a href="https://www.maalaimalar.com/news/national/india-first-private-rocket-vikram-1-successfully-launched" rel="nofollow">விக்ரம் 1</a>’ வெற்றிக்கரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு குடிமகனும் பெருமிதம் அடைந்தனர். இந்தியாவின் விண்வெளி துறையில் நிகழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க தருணம் இதுவாகும்.</p><p>தனியார் துறையால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் இதுவாகும். ஒரு காலத்தில் கற்பனை செய்வதற்கே கடினமாக இருந்த ஒன்றை இன்று சாதித்து உள்ளனர்.</p><p>கார்கில் வெற்றி தினம் நம்மை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது. நமது துணிச்சலான வீரர்களின் அசாதாரண வீரத்தை இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது.</p><h2>மூவர்ண கொடி</h2><p>ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ந் தேதிக்கு முன்னதாக நீங்கள் எனக்கு பல்வேறு விதமான ஆலோசனைகளை அனுப்புகிறீர்கள். இந்த ஆண்டும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.</p><p>கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டிலும் <a href="https://www.maalaimalar.com/news/world/burj-khalifa-illuminated-in-colours-of-the-tricolour-on-independence-day-650270" rel="nofollow">மூவர்ண கொடி</a>  இயக்கம் ஒட்டுமொத்த தேசத்தையும் உணர்வுடன் ஒன்றிணைத்தது. ஒவ்வொரு வீட்டிலும், தெருவிலும் மூவர்ண கொடியை கொண்டாடும் சூழல் காணப்படுகிறது.</p><p>இந்த ஆண்டும் வீடுகளில் மூவர்ண கொடியை மிகுந்த மரியாதையுடன் ஏற்ற வேண்டும். பாரத ரத்னா அப்துல் கலாமின் நினைவுநாள் நாளையாகும். பெரிய கனவுகளை காணுமாறு அவர் இளைஞர்களையும், குழந்தைகளையும் ஊக்குவித்தார்.</p><p>இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்த உத்தரவிட்டது நீங்களா?  - அமித் ஷாவுக்கு ராகுல் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah#comments</comments><guid isPermaLink="false">26b3ff64-eba7-4350-b371-0028b91c9dea</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:37:20 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:37:20.886Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Amit Shah,அமித் ஷா,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/qkiouv1c/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல், சாஹில், அமித் ஷா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல், சாஹில், அமித் ஷா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/qkiouv1c/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜூலை 20 அன்று பாராளுமன்றம் நோக்கி இளைஞர்கள் அமைதியான முறையில் நடத்திய பேரணியில் டெல்லி போலீசாரும், ஆர்ஏஎப் படையினரும் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தினர். தடியடி நடத்தியும், கண்ணர் புகைகுண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். </p><p>சுமார் 60 போராட்டக்காரர்கள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக பலரின் உடலில் பெல்லட் துப்பாக்கி குண்டுகள் துளைத்த புள்ளி புள்ளியான காயம் இருந்தது கண்டறியப்பட்டது. </p><p>இவ்வகை துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏனெனில் இவை சில நேரங்களில் பார்வை, கேட்கும் திறனை இழக்கச் செய்யும். முக்கிய உடல் பாகங்களில் பட்டால் உயிரிழப்பையும் ஏற்படுத்தும். </p><p>இதுமட்டுமின்றி, சீருடையற்ற நபர்கள் அன்றைய தினம் இளைஞர்களை லத்திகளால் தாக்கிய வீடியோக்களும் சர்ச்சையை ஏற்படுத்தின. நச்சுத்தன்மை வாய்ந்த காலாவதியான கண்ணீர் புகை குண்டுகள், ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகள் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்பட்டதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><p>ஜூலை 20 அன்று இளைஞர்கள் மீதான இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. </p><p>மாணவர்களின் பிரதான கோரிக்கையான, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று ராஜினாமா செய்துவிட்டபோதிலும், ஜூலை 20 அன்று மாணவர்களை கொடூரமான முறையில் தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. </p> <h2>ராகுல் கடிதம்</h2><p>இந்த சூழலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இவ்விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர்<a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-made-excellent-arrangements-to-conduct-exams-in-mother-tongue-amit-shah"> அமித் ஷாவுக்கு</a> கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.</p><p>எக்ஸ் தளத்தில் ராகுல் பகிர்ந்துள்ள கடிதத்தின் நகலில், அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது உயிருக்கே ஆபத்து நேரும் அளவுக்குபெல்லட் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்த ஒப்புதல் கொடுத்தவர் யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>அமைதியான போராட்டம் என்பது எந்த ஒரு ஜனநாயகத்துக்கும் இன்றியமையாதது. போராடுபவர்களை பாதுகாத்து அவர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் கேட்டறிந்து அதற்கான தீர்வை காண்பது அரசின் கடமை.</p><p>ஆனால் இந்த கொடூரமான வன்முறை எல்லா நெறிகளையும் உடைத்து நாட்டை கொந்தளிக்க செய்துள்ளது. பதில்களையும், பொறுப்புகூறலையும் கேட்கும் இளைஞர்களும், மாணவர்களும் நாட்டின் எதிர்காலம். அவர்களின் குரல் கேட்கப்பட்டே தீரும்.</p><p>ஜூலை 20 அன்று அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கொலை ஆயுதங்கள் மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தி காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.</p><h2>ஒப்புதல் வழங்கியது யார்?</h2><p>நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். பெண்களும் காவல்துறையினால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அந்தரங்க உறுப்புகளும் திட்டமிட்டு தாக்குதலின்போது குறிவைக்கப்பட்டுள்ளது.</p><p>ஊடக மற்றும் சமூக வலைதள அறிக்கைகள், ஒரு செய்தியாளர் உட்பட மாணவர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. சாஹில் என்ற 19 வயது மாணவர்களை நான் சந்தித்தேன். பெல்லட் குண்டுகளால் அவர் தன் ஒரு பக்க கண்பார்வையை இழந்து மிகுந்த வலியில் உள்ளார்.</p> <p>டெல்லியில் போராட்டத்தை அடக்க அனுப்பட்ட பாதுகாப்பு படைகள் நேரிடியாக உங்களின் கீழ் தான் வருகிறது. உள்துறை அமைச்சர் என்ற முறையில் பெல்லட் துப்பாக்கிகள் உட்பட மாணவர்கள் மீது உயிரை பறிக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த நீங்கள் தான் ஒப்புதல் வழங்கினீர்களா? அல்லது வேறு யார் வழங்கினார்கள்?</p><p>சீருடையின்றி சாதாரண உடையில் மாணவர்களை லத்திகளால் தாக்கியவர்கள் போலீஸ்காரர்களாஅல்லது தன்னார்வலர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>யுனஸ்கோ பாரம்பரிய தலங்கள் பட்டியலில் உ.பி.யின் ‘சாரநாத்’ சேர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/ups-sarnath-included-in-unescos-list-of-heritage-sites</link><comments>https://www.maalaimalar.com/news/national/ups-sarnath-included-in-unescos-list-of-heritage-sites#comments</comments><guid isPermaLink="false">9c34cbb5-2b84-4967-ab38-96ab694e5df6</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:11:07 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:11:07.206Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>UNESCO,Sarnath,Buddhist Site,சாரநாத்,புத்த தலம்,யுனஸ்கோ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/gu0c31u6/New-Project-2026-07-26T144048.932.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யுனஸ்கோ பாரம்பரிய தலங்கள் பட்டியலில் உ.பி.யின் ‘சாரநாத்’ சேர்ப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/gu0c31u6/New-Project-2026-07-26T144048.932.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>யுனஸ்கோவின் உலக பாரம்பரிய தலங்கள் பட்டியலில், இந்தியாவின் பழமையான பௌத்த தலமான, உத்தரப் பிரதேசத்தின் சாரநாத் சேர்க்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் இந்தப் பட்டியலில் இணையும் இந்தியாவின் 45வது தலம் இதுவாகும். </p><h2>புத்தரின் முதல் போதனை தலம்</h2><p>கி.மு.6ம் நூற்றாண்டில் இந்த தலத்தில்தான் புத்தர் தனது முதல் போதனையை வழங்கியதாகவும், அவரது ஆரம்பகால சீடர்களைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>புத்தராலேயே நான்கு முக்கிய பௌத்த யாத்திரை தலங்களில் ஒன்றாக அடையாளம் காட்டப்பட்ட சாரநாத், அரச குடும்பத்தினர், மடாலயங்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவால் பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்தது. இதன் விளைவாக ஏராளமான தூபிகள், கோயில்கள் மற்றும் விகாரங்கள் கட்டப்பட்டன.</p><p>ஒரு முக்கிய பௌத்த மையமாக செழித்தோங்கிய சாரநாத், கி.பி.12-ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்து, 18-ஆம் நூற்றாண்டில் மீண்டும் கண்டறியப்படும் வரை மறைந்து கிடந்தது.</p><p>இன்று இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் இத்தலம், ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகவும், உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்களுக்கான யாத்திரை தலமாகவும் விளங்குகிறது. </p><h2>மத்திய அரசின் பரிந்துரை</h2><p>"2025-26 ஆம் ஆண்டிற்கான உலக பாரம்பரியக் குழுவின் பரிந்துரையில், 'சாரநாத், பழமையான பௌத்த தளம்' என்ற தலைப்பிலான ஆவணக் கோப்பை யுனெஸ்கோவிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளதாக, 2025 ஆகஸ்டில் மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item></channel></rss>