<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 03 Sep 2026 13:09:57 +0000</lastBuildDate><item><title>வாட்ஸ்அப்பில் அறிமுகமானது &apos;Bill payment&apos; வசதி: மின்சாரம், எரிவாயு கட்டணங்களை இனி எளிதாகச் செலுத்தலாம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/whatsapp-introduces-bill-payment-feature</link><comments>https://www.maalaimalar.com/news/national/whatsapp-introduces-bill-payment-feature#comments</comments><guid isPermaLink="false">c52944ea-25c3-42cd-acc6-2c183befc9d3</guid><pubDate>Thu, 03 Sep 2026 13:06:39 +0000</pubDate><atom:updated>2026-09-03T13:06:39.149Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,WhatsApp,FASTag,WhatsApp Bill payment,Bill payment,பாரத் கணெக்ட் நெட்வொர்க்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p411oewb/whats.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ WhatsApp Bill payment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p411oewb/whats.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>WhatsApp இந்தியாவில் மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் குடிநீர் போன்ற மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்துவதற்கான புதிய ‘Bill Payments’ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் இனி பிற செயலிகளுக்கு மாறாமல், <a href="https://www.maalaimalar.com/news/national/maharashtra-incident-disabled-man-crosses-tracks-with-walker">வாட்ஸ்அப் </a>தளத்திலேயே தங்களின் அனைத்து வீட்டுக் கட்டணங்களையும் எளிதாகக் கையாள முடியும்.</p><h2><strong>பாரத் கணெக்ட் இணை</strong>ப்பு </h2><p>பாரத் கணெக்ட் நெட்வொர்க் மூலமாகச் செயல்படும் இந்த புதிய வசதி, 30-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் இயங்கும் 22,722-க்கும் அதிகமான சேவை வழங்குநர்களை ஒன்றிணைக்கிறது. மின்சாரம், எரிவாயு, குடிநீர் கட்டணங்கள் தவிர்த்து, பாஸ்டேக் ரீசார்ஜ், காப்பீட்டுத் தவணைகள், கடன் மறுசெலுத்துதல் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் செலுத்தக்கூடிய தகவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>எளிமை<strong>யான பயன்பாட்டு</strong> முறை</h2><p>வாட்ஸ்அப் முகப்புத் திரையின் மேல் பகுதியில் காணப்படும் ரூபாய் (₹) குறியீட்டைத் தொடுவதன் மூலம் பயனர்கள் கட்டணப் பிரிவுக்குச் செல்லலாம். அங்கு தங்களுக்குத் தேவையான சேவை அமைப்பைத் தேர்ந்தெடுத்து, கணக்கு விவரங்களைப் பதிவிட்டால் கட்டணத் தொகை திரையில் தோன்றும். அதனைத் தொடர்ந்து யுபிஐ (UPI), டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலமாகப் பணப் பரிவர்த்தனையை நிறைவு செய்யலாம்.</p><h2>கூடுத<strong>ல் வசதிக</strong>ள் </h2><p>கடந்த காலத்தில் செலுத்திய கட்டண விவரங்கள் மற்றும் வரவிருக்கும் கட்டண நிலுவைகளைக் கண்காணிக்கும் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரே சேவை நிறுவனத்தின் கீழ் வீடு மற்றும் அலுவலகம் எனப் பல கணக்குகளைச் சேர்த்துப் பராமரிக்கும் வசதியும் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ‘Bill Payments’ சேவை தற்போது கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்கும் முழுமையாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>8 மாத குழந்தையின் டயப்பரில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய தந்தை கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/father-held-for-smuggling-rs-1-crore-gold-in-babys-diaper</link><comments>https://www.maalaimalar.com/news/national/father-held-for-smuggling-rs-1-crore-gold-in-babys-diaper#comments</comments><guid isPermaLink="false">61800aff-d7e3-4b53-9565-28b40be531dd</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:41:21 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:41:21.284Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold smuggling,தங்க கடத்தல்,Kozhikode airport,கேரளம்,Keralam,கோழிக்கோடு விமான நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/12t5nydj/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold Smuggling in Diaper]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/12t5nydj/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் எட்டு மாத குழந்தையின் டயப்பருக்குள் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மறைத்து வைத்து, தங்க கடத்தலில் ஈடுபட்ட குழந்தையின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.</p><h3><strong>கோழிக்கோடு விமான நிலையம்</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">கேரளம்</a> மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தனது ஆறு வயது குழந்தை, நான்கு வயது குழந்தை மற்றும் எட்டு மாத குழந்தையுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமாஹ் விமான நிலையத்தில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.</p><p>அப்போது விமான நிலையத்தில் பயணம் செய்யும் நபர் ஒருவர், தங்க கடத்தலில் ஈடுபடுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சந்தேகத்திற்கிடமான அந்த குடும்பத்திடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.</p><h3><strong>அதிகாரிகள் சோதனை</strong></h3><p>விமான நிலையத்திற்கு தந்தை தூக்கிவந்த எட்டு மாத குழந்தையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.</p><p>அப்போது குழந்தையின் டயப்பருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>இதையடுத்து தங்க கடத்தலில் ஈடுபட்ட தந்தையை புலானாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.</p><h3><strong>மனைவி கைது</strong></h3><p>முன்னதாக கைது செய்யப்பட்ட நபரின் மனைவி, தான் அணிந்து வந்த சானிட்டரி நாப்கினில் மறைத்து வைத்திருந்த சுமார் 1.7 கிலோ மதிப்பிலான தங்கத்தை நெடும்பாசேரி விமான நிலையத்தில் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.</p><h3><strong>புலனாய்வுத் துறை அதிகாரிகள்</strong></h3><p>இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் குடும்பத்தினரிடம் சோதனை குறைவாக இருக்கும் என்பதால், விமான நிலைய சோதனையை தவிர்ப்பதற்காக, குழந்தையின் தந்தை இவ்வாறு செயல்பட்டதாக தெரிவித்தனர்.</p><p>மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் தொடர்பாக, கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளும் காணும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இதையடுத்து சர்வதேச வழிகள் மூலமாக இந்தியாவிற்குள் கொண்டுவரப்படும் வெளிநாட்டு தங்கம் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிராவில் விபரீதம்: ரெயில் வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் வாக்கர் உதவியுடன் தண்டவாளத்தைக் கடந்த மாற்றுத்திறனாளி</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-incident-disabled-man-crosses-tracks-with-walker</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-incident-disabled-man-crosses-tracks-with-walker#comments</comments><guid isPermaLink="false">7041ee87-9ae7-4615-bfe1-90522f05159b</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:29:07 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:29:07.067Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,indian railways,இந்தியன் ரெயில்வே,ரெயில்வே நிர்வாகம்,RAILWAY ADMINISTRATION,DisabilityPerson,அம்பர்நாத் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/jf91iu3k/pp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Railway Administration ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/jf91iu3k/pp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர், வாக்கர் உதவியுடன் ரெயில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்ல முயன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>மகாராஷ்டிராவின் அம்பர்நாத் ரெயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ராகுல் பங்கர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், கால்களில் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி ஒருவர் அடுத்த நடைமேடைக்குச் செல்வதற்காகச் சிரமப்பட்டு தண்டவாளத்தில் இறங்கி நடப்பது பதிவாகியுள்ளது.</p><p>ரெயில் நிலையத்திற்குள் ரெயில் வரவிருப்பதை அறிவிக்கும் ஒலி பெருக்கியின் சத்தமும், தூரத்தில் ரெயில் வரும் சத்தமும் கேட்கும் நிலையிலும், அவர் வாக்கரின் ஆதரவோடு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மெதுவாகத் தண்டவாளத்தைக் கடந்து செல்கிறார். </p><p>இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, தண்டவாளங்களைக் கடப்பது எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்தும், ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் எந்த அளவிற்குப் பின்தங்கியுள்ளன என்பது குறித்தும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். </p><p>இருப்பினும், மற்றொரு புறம் இந்திய ரெயில்வே நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் எந்த அளவிற்குப் போதுமானதாக இருக்கின்றன என்ற முக்கியமான விவாதத்தையும் இது கிளப்பியுள்ளது.</p><p>நடைமேடைகளுக்கு இடையே செல்வதற்கு மின்தூக்கி அல்லது சாய்வுப் பாதை வசதிகள் முறையாக இயங்காததே அல்லது இல்லாததே இதுபோன்ற அபாயகரமான முடிவுகளை எடுக்க மக்களைத் தள்ளுகிறது எனப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். ரெயில்வே நிர்வாகம் ஆபத்தான தண்டவாளக் குறுக்கீடுகளைத் தடுப்பதோடு, மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாகப் பயணிக்கத் தேவையான அடிப்படை வசதிகளை அனைத்து நிலையங்களிலும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரஷியா - உக்ரைன் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயார் - அமைச்சர் ஜெய்சங்கர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/ready-to-act-as-a-mediator-between-russia-and-ukraine-minister-jaishankar</link><comments>https://www.maalaimalar.com/news/national/ready-to-act-as-a-mediator-between-russia-and-ukraine-minister-jaishankar#comments</comments><guid isPermaLink="false">17929000-ab86-4d33-aaad-fed4b67d034f</guid><pubDate>Thu, 03 Sep 2026 10:43:55 +0000</pubDate><atom:updated>2026-09-03T10:43:55.310Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Ukraine,Jaishankar,ரஷியா,உக்ரைன்,ஜெய்சங்கர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/14ctkzfw/New-Project-2026-09-03T161330.510.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரஷியா - உக்ரைன் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயார் - அமைச்சர் ஜெய்சங்கர்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/14ctkzfw/New-Project-2026-09-03T161330.510.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/city-got-angry-humanoid-robot-tried-to-attack-after-being-pushed-by-its-owner-in-russia">ரஷியா</a> - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா எந்த வகையிலும் உதவ தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். </p><p>உக்ரைன் தலைநகர் கீவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இன்று உக்ரைன் வெளியுறவுத் அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.</p><h2>மத்தியஸ்தம் செய்யத் தயார்</h2><p>செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியாவால் எந்த வகையிலாவது உதவ முடியும் என்றால், நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம்” என்றுக்கூறி, தேவைப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தராகச் செயல்படவும் இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். </p><h2>உக்ரைன் பயணம்</h2><p>வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது உக்ரைன் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது, ​​அவர் தனது உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் போலந்து துணைப் பிரதமர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி ஆகியோருடன் இருதரப்பு ஆலோசனைகளை நடத்துகிறார்.</p><h2>வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்</h2><p>சமீப நாட்களாக கருங்கடல் பகுதியில் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில் வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் தீவிரமாக விவாதித்தனர்.</p><p>இந்தியர்கள் மற்றும் பிற நாட்டு மாலுமிகளின் பாதுகாப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ள இந்தியா, பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவரவும் வலியுறுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வாரணாசியில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் லக்னோவில் அவசர தரையிறக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/air-india-express-flight-from-varanasi-to-delhi-makes-emergency-landing-in-lucknow</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-india-express-flight-from-varanasi-to-delhi-makes-emergency-landing-in-lucknow#comments</comments><guid isPermaLink="false">f0515a68-9a2a-46d5-bcef-95f0245ffccf</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:48:40 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:48:40.397Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வாரணாசி,varanasi,ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்,Air India Express,delhi,டெல்லி,உத்தரப்பிரதேச மாநிலம்,Cargo Hold</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/puy6re1d/air.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Air India Express  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/puy6re1d/air.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நடுவானில் எழுந்த புகை எச்சரிக்கை காரணமாக லக்னோவில் உள்ள செளத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.</p><p>விமானம் உயரே பறந்து கொண்டிருந்தபோது, அதன் சரக்கு வைக்கும் பகுதியில் புகை வருவதற்கான எச்சரிக்கை மணிகள் ஒலித்துள்ளன. இதையடுத்து எச்சரிக்கையான விமானி, உடனடியாக லக்னோ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, காலை 8:52 மணியளவில் விமானம் லக்னோ விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 155 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் காலை 9:02 மணியளவில் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.</p><p>உடனடியாகச் செயல்பட்ட விமான நிலைய அவசரகால மீட்புக் குழு மற்றும் தீயணைப்புப் படையினர் விமானத்தைச் சோதனையிட்டனர். முதற்கட்ட ஆய்வில் சரக்குப் பகுதியில் புகையோ அல்லது தீப்பிடித்ததற்கான சுவடுகளோ எதுவும் கண்டறியப்படவில்லை. போலியான எச்சரிக்கை மணி ஒழித்ததா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்துப் பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தே விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டதாகத் தெரிவித்துள்ள <a href="https://www.maalaimalar.com/news/world/us-passport-rule-shakeup-parents-must-prove-citizenship-for-kids">ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்</a> நிறுவனம், பயணிகள் டெல்லி செல்வதற்கு மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோவாவில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானம் ஒன்றின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு பயணிகள் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் விமானப் பயணிகள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>போலவரம் கால்வாய் வழியாக வட ஆந்திராவிற்குள் பாயும்  கோதாவரி நீர்...</title><link>https://www.maalaimalar.com/news/topnews/godavari-water-flows-into-north-andhra-through-polavaram-canal</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/godavari-water-flows-into-north-andhra-through-polavaram-canal#comments</comments><guid isPermaLink="false">1fecfd2f-ac5c-4f94-a1a0-ff4de9a6d8ca</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:23:14 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:23:14.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,ChandraBabu Naidu,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,Polavaram project,போலவரம் கால்வாய்,Godavari Water,கோதாவரி நீர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/boac4qo0/Chandrababu-Naidu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chandrababu Naidu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/boac4qo0/Chandrababu-Naidu?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>வட ஆந்திர மக்களின் பல தசாப்த கனவு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக நேற்று நனவாகியுள்ளது. </p><p>போலவரம் இடது பிரதான கால்வாய் மூலமாக உத்தர ஆந்திராவிற்குள் நுழைந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81">கோதாவரி நதிநீரை</a>, ஆந்திர மாநில முதல்-மந்திரி <a href="https://www.maalaimalar.com/topic/chandrababu-naidu">என். சந்திரபாபு நாயுடு</a> அனகாபள்ளி மாவட்டம் பாயகாராவுபேட்டா மண்டலத்தின் சீதாரம்புரத்தில் முறைப்படி ‘ஜல ஹாரத்தி’ எடுத்து மலர் தூவி வரவேற்றார்.</p><h2>பொறியியல் சாதனை: 213 கி.மீ நீளப் பிரம்மாண்ட கால்வாய்</h2><p>கிழக்குத் தொடர்ச்சி மலையின் மிகக் கடினமான நிலப்பரப்புகளைக் கடந்து, சுரங்கப் பாதைகள், நீர் பாலங்கள் மற்றும் ஏலேரு ஆற்றின் அடிவாரத்தில் அமைக்கப்பட்ட பிரத்யேக சைஃபோன் கட்டமைப்பு போன்ற பல கடினமான பொறியியல் சவால்களைக் கடந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த 213 கிலோமீட்டர் நீளமுள்ள இடது பிரதான கால்வாய், பாசனம், குடிநீர் மற்றும் தொழில்துறை தேவைகளுக்காக 23.44 டிஎம்சி கோதாவரி நீரை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டத்திற்காக இதுவரை சுமார் ரூ.4,192 கோடி செலவிடப்பட்டுள்ளது.</p><h2>முதல் கட்டத்தால் பயன்பெறும் மாவட்டங்களும், விவசாய நிலங்களும்</h2><p>இந்த முதற்கட்ட நீர் வெளியீட்டின் மூலம் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5.23 லட்சம் மக்களும், 2.87 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும் நேரடியாகப் பயன்பெறவுள்ளனர்.</p><p>அனகாபள்ளி மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் கிடைக்கும். இந்த நீர் பகிர்வு ஏலேரு கால்வாய் மற்றும் அப்பகுதியில் உள்ள 110 ஏரிகளை நிரப்பப் பயன்படுத்தப்படும். மேலும், ஏலேரு, பம்பா, தாண்டவா, வராஹா, சாரதா ஆகிய நதி அமைப்புகளின் வழியாக இந்த நீர் பயணிக்கும். </p><p>புஷ்கரா பாசன மண்டலத்தின் கீழ் 1.48 லட்சம் ஏக்கர் நிலங்கள் இதனால் ஸ்திரத்தன்மை பெறும். இதில் ஏலேருவின் கீழ் 80,700 ஏக்கர், பம்பா கீழ் 12,000 ஏக்கர், மற்றும் தாண்டவா, வராஹா, மாமிடி கெட்டா மண்டலங்களில் 46,620 ஏக்கர் நிலங்கள் அடங்கும்.</p><h2>"உத்தர ஆந்திரா இனி வளர்ச்சி மையம்" - முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேச்சு</h2><p>பாயகாராவுபேட்டாவில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்:</p><p>இந்த இடது பிரதான கால்வாய் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, 'உத்தராந்திர சுஜல ஸ்ரவந்தி' திட்டத்துடன் இணைக்கப்படும். இதன் மூலம் அனகாபள்ளி, விசாகப்பட்டினம், விஜயநகரம், பார்வதிபுரம் மன்யம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டங்களின் மேட்டுப்பாங்கான பகுதிகளுக்கும் கோதாவரி நீர் கொண்டு செல்லப்படும்.</p><p>"இனி வாழ்வாதாரத்திற்காக மக்கள் உத்தர ஆந்திராவை விட்டு வெளியேற மாட்டார்கள், மாறாக மற்ற பகுதிகளில் இருந்து மக்கள் உத்தர ஆந்திராவை நோக்கி வேலை தேடி புலம்பெயர்ந்து வருவார்கள்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். </p><p>கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நீர்ப்பாசனத்திற்காக அரசு ரூ. 25,000 கோடி செலவிட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி செலவில் 36 முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்கள் முழுமையாக நிறைவு செய்யப்படும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசுத் துறைகளில் 70,584 ஊழல் புகார்: வங்கி மற்றும் ரெயில்வே துறைகள் முதலிடம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/70584-corruption-complaints-against-central-government-departments-banks-and-railways-top-list</link><comments>https://www.maalaimalar.com/news/national/70584-corruption-complaints-against-central-government-departments-banks-and-railways-top-list#comments</comments><guid isPermaLink="false">c8a6a4a5-4efd-46aa-bd84-45217ca53c88</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:18:06 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:18:06.987Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,central government,Corruption,ஊழல் புகார்கள்,Delhi administration,Railway sectors,ரெயில்வே துறைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/plrry401/CURRUPTI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Corruption]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/plrry401/CURRUPTI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரெயில்வே துறை ஆகியவை அதிக அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-gdp-growth-claims-challenged-ex-finance-secretary-subhash-chandra-garg-says-real-growth-below-2-5-percent">மத்திய ஊழல் கண்காணிப்பு </a>ஆணையத்தின் (CVC) 2025-ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் 70,584 ஊழல் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரெயில்வே துறை ஆகியவை அதிக அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளன. பெறப்பட்ட மொத்த புகார்களில் வங்கித் துறை தொடர்பாக 9,933 புகார்களும், ரெயில்வே துறை தொடர்பாக 9,381 புகார்களும் பதிவாகி முதலிடத்தில் உள்ளன. இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மீது 6,531 புகார்களும், உள்ளாட்சி அமைப்புகள் மீது 4,834 புகார்களும், நிலக்கரித் துறை பணியாளர்கள் மீது 4,118 புகார்களும், நிதித் துறை மீது 3,107 புகார்களும் பதிவாகியுள்ளன.</p><p>டெல்லி நிர்வாகத்திற்கு எதிராக 2,804 புகார்களும, பெட்ரோலிய அமைச்சகத்திற்கு எதிராக 2,722 புகார்களும் வந்துள்ளன. டெல்லி காவல்துறையினருக்கு எதிராக 2,633 புகார்கள் பெறப்பட்ட வேளையில், மத்திய உள்துறை அமைச்சகம் (டெல்லி காவல்துறை நீங்கலாக) தொடர்பாக 2,036 புகார்கள் பதிவாகியுள்ளன.</p><p>கூடுதலாக, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மீது 2,139 புகார்கள், மனிதவள மேம்பாட்டுத் துறை மீது 2,030 புகார்கள், தொழிலாளர் நல அமைச்சகம் மீது 1,894 புகார்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மீது 1,536 புகார்கள் மற்றும் தொலைத்தொடர்புத் துறை மீது 1,469 புகார்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்புத் துறை (1,410), நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத் துறை (1,123), எஃகு துறை (1,023) மற்றும் அஞ்சல் துறை (1,003) ஆகியவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.</p><h2>புகார்<strong>கள் மீதான நட</strong>வடிக்கை </h2><p>பதிவு செய்யப்பட்ட 70,584 புகார்களில், டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி 64,905 புகார்கள் பரிசீலிக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5,679 புகார்கள் தற்போது விரிவான விசாரணையில் உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. பொதுவாக, ஊழல் தொடர்பான புகார்கள் மீது மூன்று மாதங்களுக்குள் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;சுத்திகரிப்பு&apos; சடங்கு செய்தவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.. ஜே.பி நட்டாவுக்கு கார்கே கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-action-has-been-taken-yet-against-those-who-performed-the-purification-ritual-kharge-writes-to-jp-nadda</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-action-has-been-taken-yet-against-those-who-performed-the-purification-ritual-kharge-writes-to-jp-nadda#comments</comments><guid isPermaLink="false">5cefd9ae-1746-4073-9a73-71a8808de9ee</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:44:59 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:44:59.777Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,மல்லிகார்ஜுன கார்கே,mallikarjun kharge,ஜேபி நட்டா,JP Nadda</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/wovwf945/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜே.பி நட்டா, கார்கே ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜே.பி நட்டா, கார்கே ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/wovwf945/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தான் பேசிச்சென்ற இடத்தை சுத்தம் செய்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களவை தலைவர் ஜே.பி நட்டாவுக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.</p><h2></h2><h2>மல்லிகார்ஜூன கார்கே </h2><p>உத்​த​ராகண்ட் மாநிலம் ஹல்த்​வானி​யில் உள்ள ராம்​லீலா மைதானத்​தில் கடந்த 8ந் தேதி நடை​பெற்ற  பொதுக்​கூட்​டத்​தில் காங்​கிரஸ்  தலை​வர் <a href="https://www.maalaimalar.com/topic/mallikarjuna-kharge">மல்​லி​கார்​ஜுன கார்கே</a> பங்​கேற்​றார்.</p><p>அதனைத் தொடர்ந்​து 10ந் தேதி அந்த மைதானத்​தில் வலது​சாரி அமைப்​பினர் மற்​றும் பா.ஜ.க. - ஆர்​.எஸ்.​எஸ். ஆதர​வாளர்​கள் ‘சுத்​தி​கரிப்​பு’ (புனிதப்​படுத்​தும்) சடங்​கு​களை மேற்​கொண்​ட​தாக குற்​றச்​சாட்டு  எழுந்தது.</p><p>இந்த விவ​காரத்தை காங்​கிரஸ் செயற்​குழு கூட்​டத்​தி​லும், பாராளுமன்றத்திலும் கார்​கேவே நேரடி​யாக எழுப்​பி தனது ஆதங்​கத்​தைப் பதிவு செய்து இருந்​தார்.</p><p>இதுதொடர்பாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அவர் மீது உத்தரகாண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். </p> <h2>கடிதம்</h2><p>இந்த நிலையில் மல்லிகார்ஜூன கார்கே, மாநிலங்களவை தலைவரும் மத்திய மந்திரியுமான ஜே.பி. நட்டாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.</p><p>அதில் புனிதப்படுத்தும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.</p> <h2>பதிவு</h2><p>இது தொடர்பாக கார்கே தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது,</p><p>"ஹல்த்வானியில் நான் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு பிறகு ராம்லீலா மைதானத்தில் மேற் கொள்ளப்பட்ட புனிதப்படுத்துதல் நடவடிக்கை தொடர்பான விவகாரம் குறித்து மேல் சபையின் அவைத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு நான் ஒரு கடிதம் எழுதியுள்ளேன்.</p><p>அவையில் அவர் அளித்து இருந்த உறுதியை அவருக்கு நினைவூட்டியதுடன் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளேன்.</p> <h2>பாடம் புகட்டுவது அவசியம்</h2><p>24 நாட்கள் ஆன பிறகும் இந்த இழிவான செயலுக்கு காரணமானவர்கள் மற்றும் அமைப்புகள் மீது இதுவரை எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் ( எப். ஐ. ஆர்.) பதிவு செய்யப்படவில்லை.</p><p>அந்தக் கடிதத்தில், இந்த விவகாரம் என்னையோ அல்லது காங்கிரசின் தலைவராக எனது பதவியையோ மட்டும் சார்ந்ததல்ல.</p> <p>ஒவ்வொரு நாளும் இத்தகைய கொடூரமான யதார்த்தத்தை எதிர்கொள்ளும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுடன் பரந்த அளவில் இது தொடர்புடையது. இத்தகைய தவறு செய்பவர்களுக்கு பாடம் புகட்டுவது அவசியமாகும்.</p><p>இந்த உண்மைகள் மற்றும் மேல் சபையில் அளிக்கப்பட்ட உறுதியின் அடிப்படை யில் ஹல்த்வானியில் எனது பொதுக்கூட்டத்திற்கு பிறகு ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ‘சுத்திகரிப்பு’ சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரகண்ட் முதல்வருக்கு ஜேபி நட்டா அறிவுறுத்த வேண்டும்" என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வான்வெளியில் நாட்டைக் காத்த போர் நாயகன் இனி பயணிகள் விமானியாக பயணம்: விங் கமாண்டர் அபினந்தனின் புதிய அத்தியாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/air-hero-who-guarded-nation-in-sky-now-flies-as-commercial-pilot-abhinandans-new-chapter</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-hero-who-guarded-nation-in-sky-now-flies-as-commercial-pilot-abhinandans-new-chapter#comments</comments><guid isPermaLink="false">90135768-df83-4f59-83b1-c3512a0d9875</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:04:42 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:04:42.745Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய விமானப்படை,Wing Commander Abhinandan,Vir Chakra,wing commander abhinandan varthman,MiG-21 Bison,விங் கமாண்டர் அபினந்தன்,வீர சக்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/l7izbow3/abinandhan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Wing Commander Abhinandan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/l7izbow3/abinandhan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வீர சக்ரா விருதாளர் குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான் தனியார் பயணிகள் விமானத்தின் விமானியாக இணைந்தார்.</p><p>கடந்த 2019-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி நாட்டிற்கே பெருமை சேர்த்த இந்திய விமானப்படையின் வீர சக்ரா விருதாளர் குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான், இந்திய விமானப்படைப் பணியில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தனியார் பயணிகள் விமான நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார். &nbsp;</p><p>சுமார் 22 ஆண்டுகாலம் இந்திய விமானப்படையில் தீவிர சேவைக்கு பின், கடந்த மார்ச் மாதத்தில் ஓய்வு பெற்ற இவர், தற்போது கோவாவை தளமாகக் கொண்டு இயங்கும் 'FLY91' என்ற பிராந்திய பயணிகள் விமான நிறுவனத்தில் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2><strong>பாகிஸ்தான் சிறைப்பிடிப்பு</strong></h2><p>பிப்ரவரி 2019-ல் நடைபெற்ற புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, <a href="https://www.maalaimalar.com/news/national/retired-air-marshal-jitendra-mishra-appointed-as-ceo-of-the-ayodhya-ram-temple-trust">இந்திய விமானப்படை</a> பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து மறுநாள் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியப் படை எதிர்த்துத் தாக்கியது. &nbsp; </p><p>அப்போது ஸ்ரீநகர் விமானப்படை தளத்திலிருந்து மிஃக்-21 பைசன் போர் விமானத்தில் புறப்பட்ட அப்போதைய விங் கமாண்டர் அபினந்தன் வர்த்தமான், தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி ராணுவ வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். &nbsp; </p><p>இருப்பினும், இந்த வான்வழி மோதலின் போது இவரது விமானமும் எதிரி படையின் ஏவுகணையால் தாக்கப்பட்டு சேதமடைந்ததால், அபினந்தன் விமானத்தில் இருந்து அவசரமாக வெளியேறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தார். அங்கிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்ட அவர், கடுமையான விசாரணைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நடுவிலும் காட்டிய மனவுறுதியும் தைரியமும் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் நெகிழ வைத்தது. இந்தியாவின் தீவிர அழுத்தத்தை அடுத்து சுமார் 60 மணி நேரத்திற்குப் பின் பாகிஸ்தான் அவரை தாயகம் திருப்பி அனுப்பியது. </p><h2>தாயக மரி<strong>யாதை</strong></h2><p>தாயகம் திரும்பிய அவருக்கு, எதிரியின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் காட்டிய இணையற்ற வீரத்திற்காக இந்தியாவின் மூன்றாவது உயரிய போர் விருதான 'வீர சக்ரா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர், இந்திய விமானப்படை அவருக்கு 'குரூப் கேப்டன்' என்ற உயரிய பதவி உயர்வை அளித்தது. &nbsp; </p><h2>ப<strong>யணிகள்</strong> விமானத்தில் புதிய அத்தியாயம்</h2><p>விமானப்படையில் இருந்து முறைப்படி ஓய்வுபெற்ற 43 வயதான அபினந்தன், ஃப்ளை91 நிறுவனத்தின் ஏடிஆர் 72-600 (ATR 72-600) ரக பயணிகள் விமானங்களை இயக்குவதற்காக சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 2024 மார்ச் முதல் செயல்பட்டு வரும் இந்த தனியார் நிறுவனம், கோவா மற்றும் ஐதராபாத்தை முக்கிய மையங்களாகக் கொண்டு நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே விமான சேவைகளை வழங்கி வருகிறது. வான்வெளியில் நாட்டைக் காத்த நாயகன் தற்போது பயணிகள் விமானத்தின் மூலம் சிவிலியன் சேவையில் தடம் பதித்திருப்பது நாடு முழுவதிலும் உள்ள மக்களுக்குப் பெருமகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் வரவழைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சொத்தை விற்றதால் ஆத்திரம்:  பெற்றோரை வீதியில் வைத்து தடியால் தாக்கிய மகன்கள்- புனேயில் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/sons-beat-elderly-parents-on-street-over-land-sale-in-pune</link><comments>https://www.maalaimalar.com/news/national/sons-beat-elderly-parents-on-street-over-land-sale-in-pune#comments</comments><guid isPermaLink="false">f1e95ed9-a16f-41a7-ba8c-a52d1d352574</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:47:26 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:47:26.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,புனே,Pune,property dispute,மகாராஷ்டிரா மாநிலம்,இந்தாப்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p0pwfgjq/onsters.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sons attack parents ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p0pwfgjq/onsters.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் நில விற்பனை தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், வயதான பெற்றோரையே வீதியில் வைத்து இரண்டு மகன்கள் தடியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>புனே மாவட்டம் இந்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த 65 வயதான துகாராம் கிசான் ராவத் என்பவரும், அவரது மனைவி அஞ்சனாவும் வழக்கம்போல் மாலை நேரத்தில் வீதியின் வழியே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த அவர்களின் மகன்களான சஞ்சய் மற்றும் ராஜேந்திர ராவத் ஆகியோர், பெற்றோரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>தனது மனைவியின் பெயரில் இருந்த நிலத்தை துகாராம் விற்பனை செய்ததே இந்த மோதலுக்குக் காரணம் எனத் தெரிகிறது. நிலத்தை விற்றதால் ஆத்திரமடைந்த மகன்கள் இருவரும், பெற்றோரிடம் தகாத வார்த்தைகளால் பேசி, உடனடியாக அந்த நிலப் பரிவர்த்தனையை ரத்து செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.</p><p>விவாதம் முற்றிய நிலையில், தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த மரத்தடிகளால் <a href="https://www.maalaimalar.com/news/national/barefoot-mother-wins-marathon-to-fund-daughters-studies">பெற்றோர் </a>இருவரையும் மகன்கள் இரக்கமின்றி சரமாரியாகத் தாக்கினர். இந்த கொடூரத் தாக்குதலில் துகாராமின் முதுகு, முகம், தொடைகள் மற்றும் இடது தோள்பட்டையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும் அவரது மனைவி அஞ்சனாவுக்கு மணிக்கட்டு மற்றும் இடுப்புப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p>இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த காவலர்கள் காயமடைந்த தம்பதிய மீட்டெடுத்து, சிகிச்சைக்காக இந்தாப்பூர் துணை மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.</p><p>பாதிக்கப்பட்ட துகாராம் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மகன்கள் சஞ்சய் மற்றும் ராஜேந்திர ராவத் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் பெற்றோரையே மகன்கள் தடியால் தாக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>6 நாட்கள் இடைவெளி.. 14வது மாடியிலிருந்து விழுந்து பலி - சுஷாந்த் சிங் மேலாளர் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/a-gap-of-six-days-death-after-a-fall-from-the-14th-floor-sushant-singhs-managers-death-case-transferred-to-the-cbi</link><comments>https://www.maalaimalar.com/news/national/a-gap-of-six-days-death-after-a-fall-from-the-14th-floor-sushant-singhs-managers-death-case-transferred-to-the-cbi#comments</comments><guid isPermaLink="false">d54d4e34-87e1-413f-9b8b-01c064a3ec31</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:23:51 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:23:51.381Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sushanth Singh Rajput,சிபிஐ,cbi,பாலிவுட்,Bollywood,சுஷாந்த் சிங் ராஜ்புத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p62rnz8x/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திஷா சாலியன், சுஷாந்த் சிங் ராஜ்புத் ]]></media:title><media:description type="html"><![CDATA[ திஷா சாலியன், சுஷாந்த் சிங் ராஜ்புத் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p62rnz8x/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மறைந்த நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/sushant-singh-rajput">சுஷாந்த் சிங் ராஜ்புத்தின்</a> மேலாளர் திஷா சாலியன் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p> <p>2020ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி இரவு மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து விழுந்து திஷா சாலியன் உயிரிழந்தார்.  </p> <h2>சுஷாந்த் தற்கொலை</h2><p>தீஷா உயிரிழந்த 6 நாட்களுக்கு பிறகு நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்ராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தற்கொலை செய்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.</p><p>பட வாய்ப்புகள் இல்லாமல் போனது அவரது தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்டது. அதேநேரம் சுஷாந்தின் முன்னாள் காதலி மற்றும் நடிகை <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sushant-singhs-suicide-girlfriend-rhea-chakraborty-has-no-connection-cbi-final-report-794276">ரியா சக்கரபர்த்தி </a>அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் பணத்தை கையாடல் செய்ததாவும் குற்றச்சாட்டு எழுந்தது.</p><p>இதுகுறித்து சிபிஐ நடத்திய 5 ஆண்டு விசாரணைக்கு பின் ரியா நிரபராதி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p> <h2>திஷா சாலியன் சர்ச்சை</h2><p>இதனிடையே சுஷாந்த் தற்கொலை செய்துகொள்வதற்கு 6 நாட்களுக்கு முன் 26 வயதான அவரின் மேலாளர் திஷா சாலியன் 14 வது மாடியில் இருந்து விழுந்து இறந்ததன் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பின.</p><p>அவர் தற்கொலை செய்ததாக மும்பை போலீஸ் தனது விசாரணைக்கு பின் தெரிவித்தது.</p> <p>ஆனால் திஷாவின் தந்தை சதீஷ் சாலியன் தன் மகள் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டி, அவரது தந்தை கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த மனு மீதான முந்தைய விசாரணையில் திஷா சாலியன் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும், அவரது குடும்பத்தினருக்கு உடற்கூறாய்வு அறிக்கை நகல்கள் வழங்கப்படாததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். </p><p>மேலும் பெற்றோர் முன்வைத்த கொலை குற்றச்சாட்டு தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படாதது குறித்தும் காவல்துறையை கண்டித்தனர்.</p> <h2>சிபிஐ விசாரணை</h2><p>இதைதொடர்ந்து நேற்று நடந்த விசாரணையில் நீதிபதிகள் சாரங் கோட்வால் மற்றும் ரஞ்சித்சிங் ராஜா போன்ஸ்லே ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது, திஷா சாலியன் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.</p><p>எப்ஐஆர் பதிவு செய்து அதிகாரியை நியமித்து விசாரணையை தொங்க சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் சதீஷ் சாலியனின் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது</p><p>மேலும் எந்தவொரு நபர் மீதும் போதுமான ஆதாரங்களை விசாரணை அதிகாரி கண்டறியும் வரை, யாரையும் குற்றவாளியாகக் கருதக்கூடாது என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியினர்.</p>]]></content:encoded></item><item><title>பழிவாங்குறாங்க.. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் - பஞ்சாப் அரசு மீது ராகவ் சதா பாய்ச்சல்</title><link>https://www.maalaimalar.com/news/national/controversy-over-names-removed-from-punjab-voters-list-raghav-chadha-levels-allegations-against-the-aam-aadmi-government</link><comments>https://www.maalaimalar.com/news/national/controversy-over-names-removed-from-punjab-voters-list-raghav-chadha-levels-allegations-against-the-aam-aadmi-government#comments</comments><guid isPermaLink="false">f319897b-7420-4050-95d8-7827896cc1a2</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:25:55 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:25:55.049Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sir,எஸ்ஐஆர்,பஞ்சாப்,Punjab,ஆம் ஆத்மி,Raghav Chadha,ராகவ் சதா,Aam Aadmi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/vm8gibkb/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகவ் சதா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகவ் சதா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/vm8gibkb/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாஜக மாநிலங்களவை எம்.பி ராகவ் சதா பெயர் பஞ்சாப் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>கடந்த ஏப்ரலில் ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு தாவியவர் மாநிலங்களவை எம்.பி ராகவ் சதா. பஞ்சாபை சேர்ந்தவர் இவர்.</p><p>அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வரும் நிலையில்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE"> ராகவ் சதாவின் </a>பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p> <h2>ராகவ் சதா தாவல்</h2><p>2022 இல் ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாபில் இருந்து மாநிலங்களவைக்கு ராகவ் சதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/aam-aadmi">ஆம் ஆத்மியில்</a> இருந்தபோது ராகவ் சதா கட்சியின் நிலைப்பாட்டை அவையில் எதிரொலிக்கவில்லை என கூறி அவரின் மாநிலங்களவை எம்.பிக்கள் குழு துணை தலைவர் பதவியை பறித்தது ஆம் ஆத்மி.</p><p>எனவே அதிருப்தி அடைந்த அவரும் ஸ்வாதி மலிவால் உள்ளிட்ட மேலும் 6 ஆம் ஆத்மி அதிருப்தி எம்பிக்களும் பாஜகவில் இணைந்தனர்.</p><p>ஒரு காலத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை தீவிரமாக விமர்சித்து வந்த ராகவ் சதா தற்போது தலைகீழாக ஆதரித்து வருகிறார்.</p><h2>பெயர் நீக்கம்</h2><p>பஞ்சாபில் வாக்களர் பட்டியல் தீவிர திருத்த பணி நடந்து வரும் சூழலில், அவர் பஞ்சாபில் இருந்து நிரந்தரமாக குடிபெயர்ந்து சென்றுவிட்டதாக கூறி அவரின் பெயரானது நீக்கப்பட்டுள்ளது</p><p>கடந்த ஆகஸ்ட் 13 வெளியான வரைவு பட்டியலில் இடம்பெயர்ந்தவர்கள் லிஸ்டில் அவர் பெயர் உள்ளது. நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர் என அவரின் பெயர் நீக்கத்திற்கு காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>அவருடன் 20.66 லட்சம் பேரின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சிறப்பு தீவிர திருத்தம் மூலம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது பஞ்சாப் மொத்தம் வாக்காளர்கள் சதவீதத்தில் 9.7 சதவீதம் ஆகும்.</p><h2>ராகவ் சதா குற்றச்சாட்டு</h2><p>பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடந்து வரும் நிலையில் வரைவு பட்டியலில் தனது பெயர் நீக்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி மீது ராகவ் சதா குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட ராகவ் சதா, "இது சாதராண அலுவல் பிழையாக தெரியவில்லை. இது அரசியல் பழிவாங்கல். </p><p>ஊழல் நிறைந்த ஆம் ஆத்மியில் இருந்து நான் விலகியதில் இருந்தே என்மீது அதன் தலைமை ஆத்திரத்தால் வயிறெரிந்துகொண்டிருக்கிறது. </p><p>கட்சியில் இருந்து விலகியவர்களை பழிவாங்க தனக்கு இருக்கும் மாநில அரசு நிர்வாக அதிகாரத்தை ஆம் ஆத்மி பயன்படுத்தி வருகிறது" என குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>தனது பெயர் பஞ்சாபின் மொஹாலி தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்ததாவும், மக்கள் பிரதிநிதிகளுக்கு எஸ்ஐஆர் விதிமுறைகளில் வழங்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p> <p>இது வரைவு பட்டியல் மட்டுமே ஆகும். இதில் ஆட்சேபனை தெரிவிக்க செப்டம்பர் 12 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தவறை சரிசெய்ய ஆவன செய்ய உள்ளதாக ராகவ் சதா மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள பஞ்சாபில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும்.</p>]]></content:encoded></item><item><title>கல்வி என்பது சலுகையல்ல, ஒவ்வொரு மாணவரின் உரிமை - ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-meets-delegation-of-tribal-students-in-nashik</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-meets-delegation-of-tribal-students-in-nashik#comments</comments><guid isPermaLink="false">5b29904a-e9e4-403f-92a8-4f649d4cbf5d</guid><pubDate>Thu, 03 Sep 2026 00:09:12 +0000</pubDate><atom:updated>2026-09-03T00:09:12.873Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Nashik,Tribal Students,நாசிக்,பழங்குடி மாணவர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/sdjy931s/Rahul-Gandhi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi with Students]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/sdjy931s/Rahul-Gandhi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">மகாராஷ்டிரா</a> மாநிலத்தின் நாசிக் நகருக்கு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பழங்குடியின மாணவர் குழுவொன்றை சந்தித்து பேசினார். இக்குழுவில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களும் அடங்குவர். </p><p>அப்போது பேசிய அவர், கல்வி என்பது ஒரு சலுகை அல்ல, மாறாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவரின் உரிமை என்று குறிப்பிட்டார். மேலும், விளிம்புநிலை சமூகங்களைசேர்ந்த மாணவர்கள் நிர்வாக அமைப்பால் புறக்கணிக்கப்பட கூடாது என்றும் அவர் கூறினார்.</p><p>மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான <a href="https://www.maalaimalar.com/topic/rahul-gandhi">ராகுல் காந்தி</a>, ஒவ்வொரு மாணவருக்கும் கண்ணியமான, பாதுகாப்பான மற்றும் கல்விக்கு உகந்த சூழலில் படிப்பதற்கான உரிமை உண்டு என்று கூறினார். </p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "இன்று மகாராஷ்டிராவின் நாசிக்கில், பழங்குடியின மாணவர் குழுவொன்றை சந்தித்தேன்; இதில் தங்கள் கோரிக்கைகளுக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களும் அடங்குவர். அவர்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் நான் கவனமாகக் கேட்டறிந்தேன்.</p><p>விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிர்வாக அமைப்பால் புறக்கணிக்கப்பட கூடாது; அவர்களுக்கு அமைப்பின் ஆதரவும் சாத்தியமான அனைத்து உதவிகளும் தேவை," என்று காந்தி குறிப்பிட்டார்.</p><h2>கல்வி ஒவ்வொரு மாணவரின் உரிமை:</h2><p>கல்வி என்பது சலுகையல்ல; அது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவரின் உரிமை என்றும் அவர் மேலும் கூறினார்.</p><p>பழங்குடியினருக்கான ஆசிரம பள்ளிகளின் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.</p><p>நேற்று (புதன்கிழமைய) நாசிக்கில் இருந்த ராகுல் காந்தி, மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அளவிலான தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ​​கட்சியின் கொள்கைகளில் உறுதியாக நிற்கவும், மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவும் அவர் அவர்களை வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதம் அல்ல, நடப்பு விலையில் 2.5 சதவீதத்திற்கும் குறைவு: முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் குற்றச்சாட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-gdp-growth-claims-challenged-ex-finance-secretary-subhash-chandra-garg-says-real-growth-below-2-5-percent</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-gdp-growth-claims-challenged-ex-finance-secretary-subhash-chandra-garg-says-real-growth-below-2-5-percent#comments</comments><guid isPermaLink="false">75ae1f00-656b-4ac2-8289-866df011e835</guid><pubDate>Wed, 02 Sep 2026 15:19:43 +0000</pubDate><atom:updated>2026-09-02T15:19:43.298Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,ஜிடிபி வளர்ச்சி,GDP,GDP Growth,மோடி,Subhash Chandra,சுபாஷ் சந்திர கார்க்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bvcctfq5/suba.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Subhash Chandra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bvcctfq5/suba.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து விளக்கிய சுபாஷ் சந்திர கார்க், கடந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான நடப்பு விலை ஜிடிபி தரவுகளை அரசு பெருமளவில் மாற்றியமைத்து திருத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். </p><p>இந்தியாவின் <a href="https://www.maalaimalar.com/news/national/100-billion-dollar-fcnr-deposits-boost-indias-forex-reserves">உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி</a> (GDP) முதல் காலாண்டில் 7.8 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் முதல் பார்வையில் ஈர்க்கக்கூடியதாகத் தெரிந்தாலும், உண்மையான பொருளாதார நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது என்று நாட்டின் முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் கூறியுள்ளார். மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த புள்ளிவிவரங்களின் பின்னணியில் உள்ள கணக்கீடுகள் குறித்து தீவிரமாக ஆராய வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2><strong>'ஜிடிபி' மாயாஜாலம்</strong></h2><p>ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து விளக்கிய சுபாஷ் சந்திர கார்க், கடந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான நடப்பு விலை ஜிடிபி தரவுகளை அரசு பெருமளவில் மாற்றியமைத்து திருத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். முந்தைய ஆண்டின் ஜிடிபி மதிப்பில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் வரை குறைக்கப்பட்டதால், நடப்பு ஆண்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் செயற்கையாக அதிகரித்து 10.3 சதவீத நாமினல் வளர்ச்சியாகக் காட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.</p><h2>உண்<strong>மையான வளர்</strong>ச்சி 2.5 சதவீதத்திற்கும் குறைவு</h2><p>மத்திய அரசு முந்தைய ஆண்டின் ஜிடிபி எண்களை கீழ்நோக்கி மாற்றியமைக்காமல் இருந்திருந்தால், நடப்பு விலையில் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதம் வெறும் 2.5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்திருக்கும் என கார்க் கணக்கிட்டுக் காட்டியுள்ளார். அடிப்படை எண்களை மாற்றியமைத்ததன் மூலமே 7.8 சதவீத உண்மை வளர்ச்சி சாத்தியமானது போல் தோற்றம் அளிப்பதாகவும், எனவே இந்த 7.8 சதவீத வளர்ச்சி எண் உண்மையான பொருளாதார நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கிறதா என்பதில் தமக்கு வலுவான சந்தேகம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>மத்திய அ<strong>ரசைத் தாக்கும் எதிர்க்கட்சி</strong>கள்</h2><p>முன்னாள் நிதிச் செயலாளரின் இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மத்திய மோடி அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. விளம்பரங்கள் மூலம் புள்ளிவிவரப் படத்தை வேண்டுமானால் அழகாக்க முடியுமே தவிர, நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை மாற்ற முடியாது என்று காங்கிரஸ் தலைவர்கள் சாடியுள்ளனர். எனினும், இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள மத்திய புள்ளியியல் அமைச்சகம், புதிய அடிப்படை ஆண்டு மாற்றங்களின் அடிப்படையிலேயே கணக்கீடுகள் முறைப்படி செய்யப்பட்டுள்ளதாகவும், 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சி முற்றிலும் சரியானது என்றும் விளக்கமளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வெளிநாடு வாழ் இந்தியர்களின் 100 பில்லியன் டாலர் முதலீடு: வரலாற்று உச்சத்தை தொட்டது இந்திய ரிசர்வ் வங்கி!</title><link>https://www.maalaimalar.com/news/national/100-billion-dollar-fcnr-deposits-boost-indias-forex-reserves</link><comments>https://www.maalaimalar.com/news/national/100-billion-dollar-fcnr-deposits-boost-indias-forex-reserves#comments</comments><guid isPermaLink="false">d4a968fe-53f9-4cc5-8690-10378ab788bc</guid><pubDate>Wed, 02 Sep 2026 14:30:39 +0000</pubDate><atom:updated>2026-09-02T14:30:39.760Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,NRI,இந்திய ரிசர்வ் வங்கி,FCNR,Non-Resident Indians,வெளிநாடு வாழ் இந்தியர்கள்,எஃப்.சி.என்.ஆர்,வைப்புநிதித் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/x8nmbu35/fcnr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ FCNR  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/x8nmbu35/fcnr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், இந்த 100 பில்லியன் டாலர் நிதியோட்டம் இந்திய பொருளாதாரத்திற்குப் பெரும் பலமாக உருவெடுத்துள்ளது. </p><p>வெளிநாடு வாழ் இந்தியர்களைக் கவரும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய 'எஃப்.சி.என்.ஆர்(பி)' வைப்புநிதித் திட்டம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. வெறும் மூன்று மாதங்களில் 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக முதலீடுகள் குவிந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்ட காலக்கெடுவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே இத்திட்டத்தை ரிசர்வ் வங்கி நிறைவு செய்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/india-rs-20000-crore-crypto-fraud-sc-says-extradite-main-accused-subhash-sharma">ரிசர்வ் வங்கியின்</a> இந்த வெளிநாட்டுச் செலாவணி அல்லாத வங்கி வைப்புத் திட்டம் ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டு செப்டம்பர் 30 வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் 80 பில்லியன் டாலர் வரை மட்டுமே முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 31 அன்றே 100 பில்லியன் டாலரைத் தாண்டி சாதனை படைத்தது. அதிகப்படியான நிதியோட்டத்தைக் கையாளவும், எதிர்காலப் பொருளாதார சமநிலையைப் பேணவும் ஆகஸ்ட் 31 தேதியே ரிசர்வ் வங்கி நிறைவு செய்துள்ளது.</p><h2>வரலாறு கா<strong>ணாத கையி</strong>ருப்பு</h2><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், இந்த 100 பில்லியன் டாலர் நிதியோட்டம் இந்திய பொருளாதாரத்திற்குப் பெரும் பலமாக உருவெடுத்துள்ளது. இதன் விளைவாக இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 729.3 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற எக்காலத்தும் இல்லாத வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தை எட்டியுள்ளது.</p><p>எஃப்.சி.என்.ஆர்(பி) திட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது டாலர் சேமிப்புகளை இந்திய வங்கிகளில் வட்டி இழப்பின்றி டெபாசிட் செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்த பிரம்மாண்ட டாலர் வரத்து இந்திய ரிசர்வ் வங்கிக்குச் அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட்டு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தவும், நாட்டின் கணக்கு பற்றாக்குறையைச் சீர்செய்யவும் மிகப்பெரிய பலத்தை வழங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளைக்கு சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல்  ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! </title><link>https://www.maalaimalar.com/news/national/retired-air-marshal-jitendra-mishra-appointed-as-ceo-of-the-ayodhya-ram-temple-trust</link><comments>https://www.maalaimalar.com/news/national/retired-air-marshal-jitendra-mishra-appointed-as-ceo-of-the-ayodhya-ram-temple-trust#comments</comments><guid isPermaLink="false">d9a779de-6e1e-441a-bc16-8790b894b94b</guid><pubDate>Wed, 02 Sep 2026 13:34:44 +0000</pubDate><atom:updated>2026-09-02T13:34:44.901Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>CEO,Ram temple trust,Jeetendra Mishra,ராமர் கோயில் அறக்கட்டளை,தலைமைச் செயல் அதிகாரி,ஜிதேந்திர மிஸ்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/du58lc8r/New-Project-2026-09-02T190425.432.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அயோத்தி ராமர் கோவிலின் அறக்கட்டளைக்கு சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல்  ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/du58lc8r/New-Project-2026-09-02T190425.432.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின்  (ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை) முதல் தலைமைச் செயல் அதிகாரியாக ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தியில் நடைபெற்ற அறக்கட்டளைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இப்பதவிக்காக பெறப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்வுக்குழு இறுதியாக இவரை தேர்வு செய்துள்ளது.</p><p>ஜிதேந்திர மிஸ்ரா இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். </p><p>சமீபத்தில் கோவில் உண்டியல் காணிக்கை மற்றும் நிதி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, நிர்வாக வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க இந்த சிஇஓ பதவி உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>புதிய சிஇஓ கோவிலின் ஒட்டுமொத்த நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகள், கூட்ட நெரிசல் மேலாண்மை, பணியாளர்கள் மற்றும் நிதிச் செயல்பாடுகளைக் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்மீக மற்றும் மத சடங்குகளில் அவர் தலையிட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் அறக்கட்டளையின் இடைக்காலப் பொதுச் செயலாளர் கிருஷ்ண மோகனுக்குப் பதிலாக, தற்போது அதன் பொருளாளராக இருக்கும் கோவிந்த் தேவ் கிரி, பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மகேஷ் பக்சந்த்கா புதிய பொருளாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>எதற்கு இந்த திடீர் நியமனம்?</h2><p>ராமர் கோவில் அறக்கட்டளையின் நன்கொடை கையாடல் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து அதன் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க இந்த பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை எட்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சம்பத் ராய் ராஜினாமா செய்துள்ளார்.</p><p>மேலும் இரண்டு அறங்காவலர்களும் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.</p><p>இந்நிலையில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், சுவாமி கமல்நாயன் தாஸ், தற்காலிக பொதுச் செயலாளர் டாக்டர் கிருஷ்ண மோகன், அறங்காவலர் மஹந்த் தினேந்திர தாஸ், பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி உள்ளிட்டோர் கலந்து ஒரு கூட்டத்தைக் கூட்டி இந்த சிஇஓ பதவியை கொண்டு வந்துள்ளனர். </p><h2>யார் இந்த மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா?</h2><p>உத்தரப் பிரதேசத்தின் தியோரியாவைச் சேர்ந்த மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா பல்வேறு விருதுகளைப் பெற்ற ஒரு ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். 38 ஆண்டுகளாக விமானப்படை பிரிவில் பணியாற்றியுள்ளார்.</p><p>இவர்தான் ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையின் போது இந்தியாவின் மேற்கு விமானப் படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார். </p>]]></content:encoded></item><item><title>தங்கக் கொள்முதல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க பிரதமர் மோடி வலியுறுத்துவது ஏன்? சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/modis-call-to-cut-gold-buying-and-overseas-trips-sridhar-vembu-on-the-economic-reasons</link><comments>https://www.maalaimalar.com/news/national/modis-call-to-cut-gold-buying-and-overseas-trips-sridhar-vembu-on-the-economic-reasons#comments</comments><guid isPermaLink="false">173fdaa3-deef-4963-9a94-1bb1995e1d19</guid><pubDate>Wed, 02 Sep 2026 12:36:57 +0000</pubDate><atom:updated>2026-09-02T12:36:57.250Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,Prime Minister Modi,Sridhar Vembu,ஸ்ரீதர் வேம்பு,ZOHO,GDP,பிரதமர் மோடி,சோஹோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/qlj3bdmq/sri.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sridhar Vembu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/qlj3bdmq/sri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீத என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், நாடு தனது அந்நியச் செலாவணி கையிருப்பை எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது அவசியம் என்று ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) 7.8 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையிலும், தங்கம் வாங்குவது, வெளிநாட்டுச் சுற்றுலா செல்வது மற்றும் வெளிநாடுகளில் திருமணங்களை நடத்துவது ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமரின் இந்த வேண்டுகோளுக்குப் பின்னணியில் உள்ள பொருளாதாரக் காரணங்கள் குறித்து 'சோஹோ' நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விரிவான விளக்கம் அளித்துள்ளார்.</p><p>இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீத என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், நாடு தனது அந்நியச் செலாவணி கையிருப்பை எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது அவசியம் என்று <a href="https://www.maalaimalar.com/news/national/tech-professionals-must-learn-sales-to-succeed-sridhar-vembu">ஸ்ரீதர் வேம்பு</a> சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நாட்டின் பொருளாதாரம் வேகமடையும் போது, இறக்குமதிக்கான தேவையும் கூடவே அதிகரிக்கும். இந்தியா தற்போதும் கணிசமான அளவு எரிசக்தி மற்றும் அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களுக்காக பிற நாடுகளை சார்ந்துள்ளதால், அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>ஜப்பான், தென்கொரியா, தைவான் மற்றும் சீனா ஆகிய கிழக்காசிய நாடுகள் தங்களது அதிவேக வளர்ச்சிக் கட்டத்தில் இருந்தபோது, இதேபோன்று அந்நியச் செலாவணியைச் சேமிப்பதில் மிகக் கடுமையாகச் செயல்பட்டதாக ஸ்ரீதர் வேம்பு நினைவு கூர்ந்துள்ளார். இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்து வந்தாலும், அந்த ஏற்றுமதிப் பொருட்களின் தயாரிப்பிற்குத் தேவையான அதிநவீன இயந்திரங்கள், சிபியு , ஜிபியு மற்றும் மென்பொருட்களை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. எனவே தங்கம் வாங்குதல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக அந்நியச் செலாவணி வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.</p><h2>சுயசார்<strong>பு இலக்கு</strong></h2><p>இந்தியாவின் தற்போதைய சூழ்நிலையை வேகமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனத்துடன் ஒப்பீட்டுப் பேசியுள்ளார் ஸ்ரீதர் வேம்பு. ஒரு நிறுவனம் தனது தொழில் விரிவாக்கத்திற்கு முதலைச் சேமித்து முதலீடு செய்வதைப் போல, இந்தியாவும் தன் வளர்ச்சிக்குத் தேவையான மூலதனத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அதிநவீன தொழில்நுட்பங்களை சொந்தமாக உருவாக்கும் வரை இந்த அந்நியச் செலாவணி பாதுகாப்பு முறை அவசியமானது என்றும், அதற்குச் சில தசாப்தங்கள் ஆகலாம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜாஜர் ரெயில்வே தண்டவாளம் அருகே பறவை ஆர்வலரின் கண்டுபிடிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/discovery-of-red-backed-shrike-near-jhajjar-railway-track</link><comments>https://www.maalaimalar.com/news/national/discovery-of-red-backed-shrike-near-jhajjar-railway-track#comments</comments><guid isPermaLink="false">0f3a809b-c2e7-4c07-80bc-594a61b0a324</guid><pubDate>Wed, 02 Sep 2026 10:46:16 +0000</pubDate><atom:updated>2026-09-02T10:46:16.084Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>haryana,ஹரியானா,Jhajjar Bird,ஜாஜர் பறவை,Red-backed Shrike,ரெட்-பாக்டு ஸ்ட்ரைக்,Siberian Bird,சைபீரிய பறவை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/cp8e21r6/Jhajjar-Bird" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jhajjar Bird]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/cp8e21r6/Jhajjar-Bird?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/haryana">ஹரியானா </a>ஜாஜர் ரெயில் தண்டவாளம் அருகே ராகேஷ் அஹ்லாவத் ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவையை கண்டறிந்தார். இது சைபீரியாவிலிருந்து வழிதவறி வந்த இளம் பறவை என்று கண்டறியப்பட்டது.</p><p>ஹரியானா மாநிலம் ஜாஜர் மாவட்டத்தின் டிகல் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே, பறவை ஆர்வலரான ராகேஷ் அஹ்லாவத் என்பவர் தனது வழக்கமான பறவை கண்காணிப்பு பயணத்தின் போது ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் இந்த அரிய பறவையைக் கண்டறிந்துள்ளார்.</p><p>அங்குள்ள ஒரு புதரின் மீது அமர்ந்திருந்த இந்த பறவையின் தனித்துவமான தோற்றம் அவரை உடனடியாகக் கவர்ந்தது.</p><h2>வித்தியாசமான பறவை</h2><p>இதுகுறித்து ராகேஷ் அஹ்லாவத் கூறுகையில், "பொதுவாக நமது பகுதியில் நாம் காணும் ஸ்ட்ரைக் பறவைகள் நீண்ட வாலையும், பழுப்பு நிற முதுகையும் கொண்டிருக்கும். </p><p>ஆனால், ரெட்-பாக்டு ஸ்ட்ரைக்  பறவை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இதன் மேல் பகுதி பழுப்பு நிறத்திலும், கீழ் பகுதி வெளிறிய நிறத்திலும், உடல் முழுவதும் செதில் போன்ற கருமையான அமைப்புகளையும் கொண்டிருந்தது." என்றார். </p><p>மேலும், இந்தப் பறவை தனது வாலை அடிக்கடி விரித்து மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் அசைத்த விசித்திரமான நடத்தையும் அவரது கவனத்தை ஈர்த்துள்ளது.</p><h2>ரஷ்யாவில் இருந்து வந்த குட்டி வேட்டைக்காரன்</h2><p>இந்த ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவைகள் மத்திய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE">ரஷ்யா </a>மற்றும் சைபீரியா போன்ற குளிர்ந்த பகுதிகளில் இருந்து இலையுதிர்காலமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியாவுக்குப் புலம்பெயர்கின்றன. </p><p>இந்தியாவில் இவை வழக்கமாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத்தின் </a>கட்ச் பகுதியில்தான் அதிகம் காணப்படும்.</p><h2>பறவையின் சிறப்பம்சங்கள்</h2><p>இவை சிறிய அளவிலான வேட்டைப் பறவைகளாகும். முட்கள் நிறைந்த புதர்கள் மற்றும் திறந்தவெளிப் பிரதேசங்களில் அமர்ந்து கொண்டு பெரிய பூச்சிகள், சிறிய பறவைகள் மற்றும் எலிகளை வேட்டையாடும்.</p><p>வேட்டைப் பறவையாக இருந்தாலும், இவை புதர்களில் மிக அமைதியாக அமர்ந்திருக்கக் கூடியவை. இதனால் எளிதில் மனிதர்களின் கண்களுக்குத் தட்டுப்படாது.</p><p>ஜாஜரில் காணப்பட்ட இந்த பறவை இன்னும் முழு வளர்ச்சியடையாத இளம் பறவையாகும். இது தனது வழக்கமான பயணப் பாதையிலிருந்து வழிதவறி ஹரியானாவிற்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.</p><h2>ஹரியானாவின் முதல் அதிகாரப்பூர்வ பதிவு</h2><p>டெல்லி பறவைகள் சங்கத்தின் மூத்த பறவை ஆய்வாளரான பங்கஜ் குப்தா இதுகுறித்து தெரிவிக்கையில், "ஹரியானாவில் ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவை ஆவணப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்பதால், இது பறவையியல் துறையில் ஒரு மிக முக்கியமான பதிவாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>ரெயில்வே தண்டவாளத்தின் ஓரங்களில் உள்ள முள் புதர்கள் மற்றும் திறந்தவெளிகள் இந்த பறவைகள் வேட்டையாடுவதற்கு ஏற்ற சூழலை வழங்கியதால், இது தற்காலிகமாக இங்கு தங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட் மற்றும் ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்த 12-ஆம் வகுப்பு கேரள மாணவர் - ஐஐடியில் பொறியாளராக நியமனம் </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-iit-website-hacked-by-class-12-student-hired-as-iit-engineer</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-iit-website-hacked-by-class-12-student-hired-as-iit-engineer#comments</comments><guid isPermaLink="false">a558adbe-a0ed-44d9-8fa0-3968a13f0e2a</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:51:35 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:51:35.567Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,IIT,JEE Advanced,ஐஐடி,ஜேஇஇ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/t0qr48jn/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IIT Kanpur cyber security hire]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/t0qr48jn/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கேரளாவை சேர்ந்த 16 வயதான இளைஞர் ஒருவர், கடந்த ஜூன் மாதத்தில் நீட் மறுதேர்வு இணையதளத்திலும், ஐஐடி ரூர்க்கி பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஜே.இ.இ அட்வான்ஸ்டு இணையதளத்திலும் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, தற்போது அந்த இளைஞரை ஐஐடி கான்பூர் நிறுவனம் சைபர் பாதுகாப்பு பொறியாளராக பணியில் சேர்த்துள்ளது.</strong></em></p><h3><strong>கேரள இளைஞர்</strong></h3><p>கேரளாவில் உள்ள திருவல்லைக்கு அருகில் உள்ள மன்னாரை பூர்வீகமாக கொண்ட ரைலன் அணில் தற்போது தனது பெற்றோர்களுடன் துபாயில் வசித்து வருகிறார். 16 வயதான அணில் துபாயில் உள்ள சிபிஎஸ்இ தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.</p><p>இவரது தந்தை 1999-இல் துபாய்க்கு குடிபெயர்ந்து, அல்-பூஃட்டைம் என்ற நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அணில் தனது சிறுவயதில் இருந்தே ஹாலிவுட் படங்களான ‘தி மேட்ரிக்ஸ்’ மற்றும் ‘மிஸ்டர் ரோபோட்’ ஆகிய கதைகளில் வரும் ஹேக்கர்களால் ஈர்க்கப்பட்டுள்ளார்.</p><p>இதன் காரணமாக இவர் 8-ஆம் வகுப்பு முதலே ஹேக்கிங்-இல் தீவிரமாக ஆர்வம் கொண்டு, அதனை கற்க தொடங்கினார். இதையடுத்து இவர் 10-ஆம் வகுப்பில் Grubby.ai என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள குறைகளை கண்டறிந்து, அதுகுறித்து புகார் அளித்தார்.</p><p>இந்த அனுபவத்தின் மூலம் அவர் ஹேக்கிங் துறையில் மிக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து இவர் கடந்த ஜூன் மாதத்தில் நடந்த <a href="https://www.maalaimalar.com/topic/நீட்-தேர்வு">நீட்</a> மறுதேர்வு இணையதளத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்தார்.</p><h3><strong>நீட் இணையதளம்</strong></h3><p>அந்த இணையதளத்தில் நீட் தேர்வு மையங்களை நிர்வகிப்பது மற்றும் பார்வையாளர்கள் தொடர்பான தகவல்களை அணுகுவது உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட தகவல்கள் இருந்ததை அவர் கண்டறிந்தார்.</p><h3><strong>ஜேஇஇ அட்வான்ஸ்டு இணையதளம்</strong></h3><p>மேலும் ஐஐடி ரூர்க்கி பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தளத்துடன் தொடர்புடைய கிளவுட் சேமிப்பில் இருந்த குறைபாடுகளையும் அவர் கண்டறிந்தார்.</p><p>ஜேஇஇ இணையதளத்தில் தேர்வர்களின் அனுமதி அட்டைகளை (ஹால் டிக்கெட்) மற்றும் தேர்வு முடிவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை பாதுகாப்பற்ற முறையில் இருந்தது அவருக்கு தெரியவந்தது</p><p>இதையடுத்து இணையதளத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து, அவர் உரிய நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து அதற்கு உரிய பதில் கிடைக்காததால், அதில் இருந்த குறைபாடுகளை பொதுவெளியில் தெரிவித்தார்.</p><p>இதற்கிடையில் அவர் பொதுவெளியில் தெரிவித்த சில நாட்களுக்குள், இணையதளத்தில் இருந்த குறைபாடுகள் சரி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.</p><h3><strong>ஐஐடி ரூர்க்கி</strong></h3><p>இதுகுறித்து ஐஐடி ரூர்க்கி கூறுகையில், இணையதளத்தில் உள்ள சேமிப்பகம் படிக்க மட்டுமே முடியும் என்றும், அதன் தரவுகளை மாற்றவோ அல்லது நீக்கவோ முடியாது என்று பதிலளித்தது.</p><p>இந்த நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள ஐஐடி கான்பூர் பல்கலைக்கழகம், 16 வயது இளைஞர் அணிலை அணுகி, அதன் சைபர் பாதுகாப்பு புத்தாக்க மையமான C31Hub-இல் இளநிலை சைபர் பாதுகாப்பு பொறியாளராக பணி அமர்த்தியுள்ளது.</p><h3><strong>ஐஐடி கான்பூர் இயக்குநர்</strong></h3><p>இதுகுறித்து ஐஐடி கான்பூர் இயக்குநர் மனிந்திர அகர்வால் கூறுகையில், “அனிலின் பணியையும் திறமைகளையும் கண்ட பிறகு, ஐஐடி கான்பூர் குழு அவரை அணுகியது. எங்கள் பொறியாளர்கள் அவருடன் கலந்துரையாடியபோது, சைபர் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான துறைகளில் அவருக்கு வலுவான திறன்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.</p><p>அதைத் தொடர்ந்து, அவரைப் பணியில் அமர்த்த முடிவு செய்தோம். அவர் துபாயில் வசிப்பதாலும், தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வருவதாலும், ஆலோசகராகத் தொலைவிலிருந்து பணிபுரிகிறார். அவரால் முழுநேரமாகப் பணியாற்ற முடியாது. பல்வேறு இணையதளங்களின் பாதுகாப்பு பகுப்பாய்வு செய்வதே அவரது முதன்மை பொறுப்பாகும்.</p><p>அனில் ஒரு சிறுவன் என்பதால், இந்த ஒப்பந்தம் நிறைவடைய கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது. அவரது தந்தை அனில் ஆபிரகாம், அவனது பாதுகாவலராகவும் இணைப் பொறுப்பாளர் உள்ளிட்ட கடமைகளை உள்ளடக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.</p><p>அவரது பணிகள், மேற்பார்வையிடப்பட்ட, அபாயமற்ற கல்வி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.</p><p>ஐஐடி-க்களில் இதுவரையில் பணியமர்த்தப்பட்டவர்களில் மிக இளைய வயதுடையவர் இவர்தான்” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிராவில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்: தொடரும் கடத்தல் கும்பல் வேட்டை</title><link>https://www.maalaimalar.com/news/national/whale-ambergris-worth-rs-4-5-crore-seized-in-maharashtra</link><comments>https://www.maalaimalar.com/news/national/whale-ambergris-worth-rs-4-5-crore-seized-in-maharashtra#comments</comments><guid isPermaLink="false">dd3e25c1-1e00-44a9-86b9-58412962f646</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:03:46 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:03:46.101Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,ambergris,Whale Vomit,smuggling gangs,திமிங்கல எச்சம்,கடத்தல் கும்பல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/5qodjnjw/whale.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Whale Vomit ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/5qodjnjw/whale.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு மகாராஷ்டிர மாநிலத்தின் சாங்க்லி மாவட்டத்தில்  ரூ.4.5 கோடி மதிப்புள்ள ஆம்பர்ஹ்ரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை காவல் துறையினரும் வனத்துறையினரும் இணைந்து பறிமுதல் செய்துள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/india-rs-20000-crore-crypto-fraud-sc-says-extradite-main-accused-subhash-sharma">மகாராஷ்டிரா மாநிலம்</a> சாங்லி கிராமப்புற எல்லைக்குட்பட்ட காஸ்பே திக்ராஜ் பகுதியில், சாங்லி கிராமப்புற காவல் துறையினரும் வனத்துறையினரும் இணைந்து நடத்திய தீவிர ரோந்து பணியின் போது ரூ.4.5 கோடி மதிப்பிலான ஆம்பர்ஹ்ரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். சம்பவ இடத்தில் இரு பெட்டிகளில் இந்த விலையுயர்ந்த கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.</p><p>இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கோல்ஹாபூர் மாவட்டத்தின் குன்கி கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான அமோல் சித் என்பவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தொடர் விசாரணையில், சிந்துதுர்க் மாவட்டத்தின் மால்வன் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மூலம் இந்த திமிங்கல எச்சம் விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய அந்த முக்கிய நபரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>மும்பை<strong>-புனே சந்தைகள் இல</strong>க்கு</h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட இந்த திமிங்கல எச்சம் மும்பை மற்றும் புனே போன்ற பெருநகரங்களின் சட்டவிரோத சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தப்படவிருந்தது அம்பலமாகியுள்ளது.</p><h2>தொடரு<strong>ம் சோதனைக</strong>ள் </h2><p>இந்த நடவடிக்கைக்கு ஒரு நாளுக்கு முன்பாக, சிந்துதுர்க் மாவட்டம் குடால் பகுதியில் ரூ.2.4 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்திருந்தனர். இரண்டு நாட்களில் மட்டும் மேற்கு மகாராஷ்டிர பகுதியில் சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>ஸ்பெர்ம் திமிங்கலங்களின் செரிமான மண்டலத்தில் உருவாகும் இந்த மெழுகு போன்ற ஆம்பர்ஹ்ரிஸ் பொருள், விலையுயர்ந்த வாசனை திரவியங்களின் நறுமணம் நீண்ட நேரம் நிலைத்திருக்கப் பயன்படுகிறது. மேலும் சில நாடுகளில் நரம்பு மண்டலம் மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கான பாரம்பரிய மருந்துகளிலும் இது முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவதால் சர்வதேச சந்தையில் இதற்கு பெரும் தேவை நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய முதியவருக்கு நேர்ந்த கொடூரம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/elderly-man-back-from-america-cheated-in-india</link><comments>https://www.maalaimalar.com/news/national/elderly-man-back-from-america-cheated-in-india#comments</comments><guid isPermaLink="false">8a8166d2-fa7a-4cd3-9f52-cf71c18169be</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:02:58 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:02:58.212Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சைபர் மோசடி,Digital Arrest,Online Fraud,ஆன்லைன் மோசடி,வங்கி மோசடி,Mumbai Police,cyber scam,Senior Citizen Safety</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bg5283kt/Cyber-Scam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cyber Scam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bg5283kt/Cyber-Scam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத் </a>மாநிலம் சூரத் மாவட்டத்தின் பார்தோலி நகரைச் சேர்ந்தவர் பிரபுபாய் படேல் (82). இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்று மிசிசிப்பி மாகாணத்தில் குடியேறினார். </p><p>அங்கு பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு, கடந்த 2007 ஆம் ஆண்டு தனது முதல் மனைவியுடன் பார்தோலி நகரில் வசித்து வருகிறார்கள். இவர்களது மூன்று பிள்ளைகளும் தற்போது அமெரிக்காவிலேயே வசித்து வருகின்றனர்.</p><p>கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி, பிரபுபாய் படேலின் வாட்ஸ்அப் எண்ணிற்கு "மும்பை காவல்துறை தலைமையகம்" என்ற பெயரில் ஒரு செய்தி வந்துள்ளது. அதைத் தொடர்ந்து அதே எண்ணில் இருந்து ஒரு அழைப்பும் வந்துள்ளது.</p><h2>ரூ.122 கோடி மோசடி புகார் என மிரட்டல்</h2><p>அழைப்பில் பேசிய ஒரு பெண், தான் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பை </a>காவல்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். </p><p>பிரபுபாயின் ஆதார் விபரங்களைப் பயன்படுத்தி ஒரு வங்கி கணக்கு தொடங்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் ரூ.122 கோடி அளவிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறி பிரபுபாயை மிரட்டியுள்ளார்.</p><p>மேலும், அவர் 'டிஜிட்டல் கைது' செய்யப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினரின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்படுவதாகவும்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF"> சைபர் குற்றவாளிகள்</a> பயமுறுத்தியுள்ளனர். </p><p>காவல்துறைக்கு ஒத்துழைக்க மறுத்தால் அவரது வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.</p><p>பின்னர், மற்றொரு நபர் தன்னை மும்பை உயர்காவல்துறை அதிகாரி என்று கூறிக்கொண்டு, "வழக்கில் இருந்து தப்பிக்க உடனடியாக பணத்தை ஏற்பாடு செய்யுங்கள். </p><p>விசாரணை முடிந்ததும் இந்த பணம் உங்களுக்கே திருப்பித் தரப்படும்" என்று நம்பும்படி பேசியுள்ளார்.</p><h3>11 நாட்களில் ரூ.2.96 கோடி பரிமாற்றம்</h3><p>பயந்துபோன பிரபுபாய் படேல், மோசடி கும்பல் கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட 11 நாட்களில் மொத்தம் ரூ.2 கோடியே 96 லட்சம் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார்.</p><p>ஆகஸ்ட் 31 ஆம் தேதி, பிரபுபாய் அமெரிக்காவில் இருக்கும் தனது மகன்களிடம் இந்த விபரங்களை போனில் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மகன்கள், இது சைபர் மோசடி என்பதை உணர்ந்து உடனடியாக காவல்துறையை அணுகுமாறு தந்தைக்கு அறிவுறுத்தினர்.</p><h2>தீவிர விசாரணையில் சைபர் கிரைம் போலீஸ்</h2><p>பார்தோலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வி.ஏ. செங்கல் தலைமையிலான போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். </p><p>சைபர் கிரைம் சிறப்புப் பிரிவினரும் இந்த விசாரணையில் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><h2>சைபர் நிபுணர்களின் எச்சரிக்கை</h2><p>இதுகுறித்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">சைபர் குற்றப்பிரிவு நிபுணர்</a> பேராசிரியர் திரிவேணி சிங் கூறுகையில்:</p><p>"சட்ட அமலாக்க அமைப்புகளின் மீதான பயம் மற்றும் சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் முதியவர்களே இவர்களின் முக்கிய இலக்காக மாறுகிறார்கள். </p><p>எந்தவொரு அரசு அல்லது காவல் துறையும் போன் மூலம் யாரையும் கைது செய்யாது, விசாரணையின் பெயரில் பணத்தையும் கோராது. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக இணைப்பைத் துண்டித்துவிட்டு காவல்துறையைத் தொடர்பு கொள்ள வேண்டும்." என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.20,000 கோடி கிரிப்டோகரன்சி மோசடி: துபாயில் தலைமறைவாக உள்ள சுபாஷ் சர்மாவை நாடு கடத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/india-rs-20000-crore-crypto-fraud-sc-says-extradite-main-accused-subhash-sharma</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/india-rs-20000-crore-crypto-fraud-sc-says-extradite-main-accused-subhash-sharma#comments</comments><guid isPermaLink="false">2d6ebebb-68e1-4894-af92-12896fb254dd</guid><pubDate>Wed, 02 Sep 2026 08:46:46 +0000</pubDate><atom:updated>2026-09-02T08:46:46.922Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>cryptocurrency scam,கிரிப்டோகரன்சி மோசடி,cryptocurrency fraud,உச்சநீதிமன்றம்,Subhash Sharma,Corvio Coin,கிரிப்டோகரன்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/pppb5n3q/crypto.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cryptocurrency scam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/pppb5n3q/crypto.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய ரூ.20,000 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி மோசடி வழக்கில் முதன்மை குற்றவாளியான சுபாஷ் சர்மாவை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு, சிபிஐ மற்றும் இமாச்சல பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>2.5 லட்<strong>சம் முதலீட்டாளர்க</strong>ளை ஏமாற்றி துபாயில் தஞ்சம்</h2><p>இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சுபாஷ் சர்மா, 'கோர்வியோ காயின்'  உள்ளிட்ட போலி டிஜிட்டல் நாணயங்கள் மற்றும் பொன்சி திட்டங்கள் மூலம் சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டார். 2023-ஆம் ஆண்டு இந்த மோசடி தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்ததை அறிந்த முதன்மை குற்றவாளி <a href="https://www.maalaimalar.com/news/national/sco-summit-centre-for-security-threats-among-key-decisions-as-india-highlights">சுபாஷ் சர்மா</a>, உடனடியாக இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பாதுகாப்பாகத் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.</p><h2>சொத்துக<strong>ள் பறிமுதல்</strong> </h2><p>இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்டிவாலா மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள்</p><p>*வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் சுபாஷ் சர்மாவை உடனடியாகக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சகம், சிபிஐ மற்றும் மாநில அரசு இணைந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>*குற்றவாளி சுபாஷ் சர்மா மற்றும் அவருடைய உறவினர்களின் பெயர்களில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் அனைத்தையும் உடனடியாகப் பறிமுதல் செய்து முடக்க வேண்டும்.</p><p>*இந்த பிரம்மாண்ட நிதி மோசடி வழக்கை விரைவாகவும் பிரத்யேகமாகவும் விசாரித்து முடிக்க இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்.</p><p>இந்த கிரிப்டோகரன்சி மோசடி வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் கடந்த 2025-ஆம் ஆண்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவரின் ஜாமீன் மனுவை விசாரித்த போதே, தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சுபாஷ் சர்மாவை நாடு கடத்த உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-மந்திரி, பிரதமர் பதவியில் 25 ஆண்டுகள்: மோடியின் பிறந்தநாளை ஒரு மாதம் கொண்டாட பாஜக-வினர் திட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/25-years-as-prime-minister-one-month-nationwide-modi-birthday-celebrations</link><comments>https://www.maalaimalar.com/news/national/25-years-as-prime-minister-one-month-nationwide-modi-birthday-celebrations#comments</comments><guid isPermaLink="false">5fb2b9b4-b4c6-4a50-acd7-904078629891</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:26:18 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:26:18.207Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,pm modi,பிரதமர் மோடி,Vadnagar Varanasi Yatra,வாட்நகர் வாரணாசி யாத்திரை,Seva Jyothi Yatra,சேவா ஜோதி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/jw6tj4fx/PM-Modi" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/jw6tj4fx/PM-Modi?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி </a>தொடர்ச்சியாக 3-வது முறையாக பிரதமர் பதவி வகித்து வருகிறார்.</p><p>மத்தியில் காங்கிரசுக்கு எதிராக அசுர பலம் பெற்று அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில கட்சிகளோடு இணைந்தும், தனியாகவும் பாஜக வெற்றி பெற்று வருகிறது.</p><p>இதன் காரணமாகவும் பிரதமரின் தனிப்பட்ட செல்வாக்காலும் தொடர்ந்து பாஜக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது.</p><h2>25 ஆண்டுகள்</h2><p>2001-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை குஜராத் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ள பிரதமர் மோடி 12 ஆண்டுகள் அந்த மாநிலத்தில் அசைக்க முடியாத தலைவராக திகழ்ந்தார்.</p><p>இதன் பின்னர் தேசிய அரசியலில் கால் பதித்த மோடி 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.</p><p>இதன் பின்னர் நடைபெற்ற 2 தேர்தல்களிலும் பா.ஜனதா வெற்றிவாகை சூடியதை தொடர்ந்து பிரதமர் பதவியையும் அவர் தொடர்ச்சியாக வகித்து வருகிறார்.</p><p>இதன் மூலம் 12 ஆண்டுகளை கடந்து அவர் பிரதமர் பதவியில் நீடிக்கிறார். </p><p>இப்படி முதல்-மந்திரி மற்றும் பிரதமர் பதவியில் 25 ஆண்டுகள் பணியாற்றியதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடியின் பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95">பாஜக </a>திட்டமிட்டுள்ளது.</p><h2>கால் நூற்றாண்டு</h2><p>நாட்டின் உயரிய பதவிகளில் கால் நூற்றாண்டு காலமாக பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டு உலக அரங்கிலும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார்.</p><p>இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் நலத்திட்ட உதவிகள் மற்றும் யாத்திரைகள் நடத்தவும் பாரதீய ஜனதா தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.</p><h2>ஆலோசனை</h2><p>இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா நிர்வாகிகள் திருச்சியில் இன்று ஆலோசனை நடத்தினார்கள். சமயபுரம் சுங்கச்சாவடி அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்துக்கு மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தலைமை தாங்கினார்.</p><p>தமிழக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.</p><p>முன்னதாக திருச்சி மாவட்ட தலைவர்கள் ஒண்டிமுத்து, அஞ்சாநெஞ்சன் ஆகியோர் வரவேற்றனர்.</p><p>இந்த கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள், பிரதமர் பிறந்தநாள் விழாவுக்காக பிரத்யேகமாக மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.</p><h2>அக்டோபர் 17-ந்தேதி வரை</h2><p>வருகிற 17-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 17-ந்தேதி வரை பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. அப்போது ரத்ததான முகாம்கள், தூய்மை பணிகள் ஆகியவையும் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><p>பிரதமர் மோடியின் பிறந்த ஊரான குஜராத் மாநிலம் வாட்நகரில் இருந்து அவர் வெற்றி பெற்ற வாரணாசி தொகுதி வரை மோட்டார்சைக்கிள் பேரணி மற்றும் சேவா ஜோதி யாத்திரை ஆகியவை நடைபெற உள்ளது. இதற்காக 10 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><p>பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நாடு தழுவிய அளவில் ஓவிய போட்டிகள், பேச்சு போட்டிகள் ஆகிய வையும் நடத்தப்பட உள்ளன.</p><h2>யாத்திரை தொடக்கம்</h2><p>ஒரே நாளில் வாட்நகர் மற்றும் வாரணாசி ஆகிய 2 இடங்களில் இருந்தும் ஒரே நாளில் 10 குழுவினர் இந்த யாத்திரை பயணத்தைத் தொடங்குகின்றனர்.</p><p>இந்த குழுக்களில் இடம் பெற்று இருப்பவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு ஒரு மாதத்திற்கு பிறகு வாட்நகரை வந்து அடைவார்கள். அதே நேரத்தில் புறப்படும் குழு ஒரு மாத காலம் பயணம் மேற்கொண்டு வாரணாசியை சென்று அடையும்.</p><h2>100 கிலோ மீட்டர்</h2><p>வெளி மாநிலங்களுக்கு செல்லும் குழுவினர் தினமும் சுமார் 100 கி.மீ. பயணம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. </p><p>இந்த பயணத்தின் போது மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்துகளில் சென்று பிரதமர் மோடியின் சாதனைகளை பாஜக -வினர் மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்து இருக்கிறார்கள்.</p><p>மத்திய அரசு மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் செயல்பாடுகள் ஆகியவற்றை பொதுமக்களோடு கலந்துரையாடு வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.</p><p>இதன் மூலம் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா தலைவர்கள் பிரதமர் மோடியின் ஒரு மாத பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை தீவிரமாக தொடங்கி இருக்கிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>ஷாங்காய் உச்சி மாநாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மையம் அமைப்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன்வைத்த இந்தியா</title><link>https://www.maalaimalar.com/news/national/sco-summit-centre-for-security-threats-among-key-decisions-as-india-highlights</link><comments>https://www.maalaimalar.com/news/national/sco-summit-centre-for-security-threats-among-key-decisions-as-india-highlights#comments</comments><guid isPermaLink="false">b53228f9-f48f-4fcf-b762-2d1a71d02615</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:05:52 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:05:52.829Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Shanghai Cooperation Organisation,pm modi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/xsy6t3op/PMModiSCO0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/xsy6t3op/PMModiSCO0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.</p><p>இந்த மாநாடு முடிவடைந்த நிலையில், SCO உறுப்பு நாடுகளின் பாதுகாப்பிற்கு எதிரான சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான உலகளாவிய மையம் உள்ளிட்ட 13 முக்கிய கோரிக்கைகளை இந்தியா முன்வைத்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து்ளளது.</p><p>இந்த மையத்தின் முக்கிய நோக்கம் பயங்கரவாதம், தீவிரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற நாடு கடந்த அச்சுறுத்தல்களை கையாள்வதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பகிர்வைச் சாத்தியமாக்குவதாகும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>SCO சாசனத்தில் திருத்தங்கள் மற்றும் சேர்த்தல்கள் தொடர்பான ஒரு நெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இது, அந்த அமைப்பின் வளர்ந்து வரும் நிறுவனக் கட்டமைப்பை வடிவமைப்பதில் இந்தியா பங்கேற்க வழிவகை செய்வதோடு, SCO கட்டமைப்பிற்குள் ஆங்கிலத்தைச் சேர்க்கும் முடிவும் ஒன்றாகும்.</p><p>SCO என்பது 2001-ல் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளால் நிறுவப்பட்ட ஒரு அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு அமைப்பாகும். அதன் பின்னர், இந்தியா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளை முழு உறுப்பினர்களாகச் சேர்த்து இது விரிவடைந்துள்ளது. மேலும் பல நாடுகள் பார்வையாளர் அல்லது உரையாடல்-பங்குதாரர் அந்தஸ்தைப் பெற்றுள்ளன.</p><p>SCO கட்டமைப்பு என்பது அடிப்படையில் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, மற்றும் பொருளாதார, அரசியல் ஒத்துழைப்புகளில் கவனம் செலுத்தும் ஒரு நிரந்தரமான யூரேசிய அரசுகளுக்கிடையேயான மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பாகும்.</p><p>எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பயங்கரவாதத்திற்கு எதிராக உறுப்பு நாடுகளிடையே நெருக்கமான ஒருங்கிணைப்பைச் சாத்தியமாக்கும் வகையில், SCO-வின் போதைப்பொருள் தடுப்பு மையத்தின் நிர்வாகக் குழுவிற்கான விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் முடிவும் ஒன்றாகும்.</p><h2>பிரதமர் மோடி</h2><p>இந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி பேசியதாவது:-</p><p>பயங்கரவாதம், மனித குலம் முழுவதற்கும் பலத்த சவாலாக உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், நாம் செயல்- பதிலடி என்ற அணுகுமுறையிலேயே தொடர்ந்து மூழ்கி இருக்க முடியாது.</p><p>பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்தல், ஆள்தேர்வு செய்தல், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் அளித்தல், மூளைச்சலவை செய்தல் போன்ற பயங்கரவாத கட்டமைப்பை முழுமையாக தகர்தெறிய நாம் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்.</p><h2>இரட்டை நிலைப்பாடு</h2><p>பயங்கரவாதம் என்ற தீவிர பிரச்சினையில் இரட்டை நிலைப்பாட்டுக்கு இடமில்லை என்று ஒரே குரலில் பேசி, நாம் தெளிவுபடுத்த வேண்டும்.</p><p>பயங்கரவாதத்தை கொள்கை ஆயுதமாக பயன்படுத்தி, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு நாம் வலிமையான செய்தி விடுக்க வேண்டும். பயங்கரவாதம் யாருடைய வியூக சொத்தாகவும் இருக்க முடியாது என்று கூற வேண்டும்.</p><p>இன்றைய உலகம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. ஒரு பிராந்தியத்தில் நடக்கும் மோதல், அந்த பிராந்தியத்து டன் அடங்கி விடாது, உலகம் முழுவதும் அதன் தாக்கம் உணரப்படும் என்பதை மேற்கு ஆசிய பிரச்சினையில் பார்த்தோம்.</p><h2>போர்க்களத்தில் தீர்க்கக்கூடாது</h2><p>எரிசக்தி பாதுகாப்பு, கடல்சார் வர்த்தகம், வினியோக சங்கிலித்தொடர் ஆகியவற்றை பாதித்ததை கவனித்தோம். தெற்குலக நாடுகள்தான் பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொண்டன.</p><p>எனவேதான், அனைத்து பதற்றங்களும், மோதல்களும் போர்க்களத்தில் அல்லாமல், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.</p><p>இணைப்பு வசதிகளை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை இந்தியா உணர்ந்துள்ளது. சந்தைகள் இணைப்பு, வர்த்தகம், வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் ஆகியவற்றை இந்தியா ஆதரிக்கிறது. அதே சமயத்தில், அத்தகைய முயற்சிகள் அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பது அவசியம்.</p><h2>இதயம்</h2><p>ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஒத்துழைப்பு, மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும். மக்களிடையிலான பிணைப்புதான் நமது மாபெரும் பலம்.</p><p>இந்தியாவைப் பொறுத்தவரை மாபெரும் நாகரிகங்கள், கலாசாரங்கள், சிந்தனைகள் ஆகியவற்றின் கலவைதான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. அடுத்த 25 ஆண்டுகள், மக்களுக்கும், மக்களுக்கும் இடையிலான தொடர்பு, நமது ஒத்துழைப்பின் இதயமாக இருக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் மலேரியா எதிர்ப்பு மாத்திரை உட்கொண்ட 2-ம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு: 50 பேருக்கு சிகிச்சை</title><link>https://www.maalaimalar.com/news/national/andhra-student-dies-after-taking-anti-malaria-tablet-over-50-hospitalised</link><comments>https://www.maalaimalar.com/news/national/andhra-student-dies-after-taking-anti-malaria-tablet-over-50-hospitalised#comments</comments><guid isPermaLink="false">25c1a6f7-d4f1-4f22-90c8-9896cb199978</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:22:19 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:22:19.769Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மலேரியா மருந்து,ஆந்திரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bah96t9t/Andhra001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிகிச்சை பெறும் கிராமவாசிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bah96t9t/Andhra001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குளோரோகுயின் (Chloroquine) என்பது ஒரு ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தாகும். இது மலேரியா ஒட்டுண்ணிக்கு நச்சுத்தன்மை வாய்ந்த ஹீம் (heme) எனும் பொருளின் அளவை ரத்தத்தில் அதிகரிப்பதன் மூலம் மலேரியாவைக் குணப்படுத்துகிறது. இது ஒட்டுண்ணியை அழித்து, தொற்று பரவுவதைத் தடுக்கிறது.</p><p>ஆந்திரா- தெலுங்கானா மாநில எல்லையில் உள்ள போலவரத்தில் உள்ளது கொல்லகுப்பா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள 71 பேருக்கு மலேரியா எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டது. மாத்திரை உட்கொண்டவர்களில் பலருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அதாவது காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.</p><h2>53 பேர் மருத்துவமனையில் அனுமதி</h2><p>இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் சுமார் 29 பேரை தெலுங்கானாவில் உள்ள மருத்துவமனையிலும், 24 பேரை உள்ளூர் சுகாதார மையத்திலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.</p><p>இதில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாதிவி ஜமுனா என்ற 7 வயது மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிகிச்சை பெற்று வரும் மற்றவர்கள் நிலை சீராக உள்ளது. இது தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.</p><p>மாவட்ட நிர்வாகம் மூன்று குழந்தைகள் நல மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுக்களைப் பணியமர்த்தியுள்ளது. இவர்கள் சிகிச்சை பெற்று வரும் நபர்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.</p><h2>சந்திரபாபு நாயுடு உத்தரவு</h2><p>சிறப்பான சிகிச்சை அளிக்க ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.</p><p>மேலும், சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் சம்பவம் தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தார்.</p><p>காக்கிநாடா அரசு பொது மருத்துவமனையைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு அந்த கிராமத்தை வந்தடைந்துள்ளது. விஜயவாடா, ராஜமகேந்திரவரம் மற்றும் காக்கிநாடாவிலிருந்து மேலும் மூன்று குழுக்கள் அவர்களுடன் இணையவுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி கோவிலில் ஆகஸ்டு மாதம் ரூ.137.44 கோடி உண்டியல் காணிக்கை</title><link>https://www.maalaimalar.com/spirituality/tirupati-temple-receives-rs-137-44-crore-in-hundi-offerings-in-august-month</link><comments>https://www.maalaimalar.com/spirituality/tirupati-temple-receives-rs-137-44-crore-in-hundi-offerings-in-august-month#comments</comments><guid isPermaLink="false">5270ee49-b03d-4374-871a-46a7b97387cf</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:19:12 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:19:12.536Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupati temple,திருப்பதி கோவில்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/1bxm9okl/tirupati.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திருப்பதி கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பதி கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/1bxm9okl/tirupati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆகஸ்டு மாதம் மட்டும் 24.56 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கையாக ரூ.137.44 கோடி வசூலானது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/திருப்பதி-கோவில்">திருப்பதி</a> ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் திரளான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர்.</p><h2><strong>ரூ.137.44 கோடி</strong></h2><p>பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததன் காரணமாக கடந்த மாதம் 10 நாட்கள் இலவச தரிசன டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்பட்டது. இதனால் தொலை தூரங்களில் இருந்து தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சிரமத்தை சந்தித்தனர். </p><p>ஆகஸ்டு மாதம் மட்டும் 24.56 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கையாக ரூ.137.44 கோடி வசூலானது. இந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க கூடும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.</p><h2><strong>தரிசன டோக்கன் ரத்து</strong></h2><p>இந்த நிலையில் நேற்று அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதனால் திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம், ஸ்ரீதேவி பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட 3 இடங்களில் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவது இன்று ரத்து செய்யப்பட்டது. தரிசன டிக்கெட் வாங்குவதற்காக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திருப்பதி மலைக்கு சென்றனர். நாளை மறுநாள் தரிசனத்திற்கான நேர ஒதுக்கீட்டு இலவச தரிசனம் டிக்கெட் நாளை முதல் வழக்கம் போல் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2><strong>12 மணி நேரம்</strong></h2><p>திருப்பதியில் நேற்று 78, 310  பேர் தரிசனம் செய்தனர். 34,573 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.38 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. </p><p>4.14 லட்சம் லாட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தால் பீகாரில் புதுவகையான மீன்கள் -  நச்சுத்தன்மையுள்ள மீன்களை சாப்பிட வேண்டாம் என அரசு எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-warning-on-fish-as-nepal-floodwaters-surge-into-india</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-warning-on-fish-as-nepal-floodwaters-surge-into-india#comments</comments><guid isPermaLink="false">f974d43e-7e9f-4219-a685-a039aa57b6f0</guid><pubDate>Wed, 02 Sep 2026 02:27:06 +0000</pubDate><atom:updated>2026-09-02T02:27:06.698Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,fish,மீன்கள்,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/iqrsct75/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar fish]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/iqrsct75/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில்</a> உள்ள கோசி மற்றும் கண்டக் ஆறுகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, அந்த வெள்ள நீரால் பீகார் மாநிலத்திற்குள் அடித்து கொண்டு வரப்பட்ட மீன்களை உண்ண வேண்டாம் என பீகார் மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h3><strong>நிலத்தடி நீரில் நச்சுத்தன்மை கலப்பு</strong></h3><p>நேபாளத்தின் மேற்கு சம்பாரன், கிழக்கு சம்பாரன், சீதாமர்ஹி, கிஷன்கஞ்ச், பூர்ணியா மற்றும் அராரியா உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீரில், பாதுகாப்பான வரம்பை தாண்டி நச்சுத்தன்மை கொண்ட ஆர்சனிக் காணப்படுகிறது.</p><p>கங்கை நதி ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் ஆர்சனிக் அமிலத்தின் அளவு (நச்சுத்தன்மை) மிக அதிகமாக கண்டறியப்பட்டுள்ளன.</p><p>மேலும் நேபாள எல்லையை ஒட்டியுள்ள ஏழு மாவட்டங்களில், ஆற்று நீரில் அதிக இரும்புச்சத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இதனால், நீர் துவர்ப்புச் சுவையைக் கொண்டிருப்பதுடன், பாத்திரங்கள் மற்றும் ஆடைகளில் சிவப்பு-மஞ்சள் கறைகளையும் ஏற்படுத்துகிறது.</p><p>நேபாளத்தில் தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து, டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா நோய்களுடன், தோல் மற்றும் கண் நோய்த்தொற்றுகளின் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம், இதேபோன்ற எச்சரிக்கை ஒன்றை நேபாள காவல்துறை விடுத்துள்ளது.</p><h3><strong>பீகாரில் பாயும் ஆற்று நீர்</strong></h3><p>இந்த நிலையில் நேபாளத்தின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நீர்வழிகளான கண்டக் மற்றும் கோசி ஆறுகள் வழியாக திரிசூலி ஆறு பீகார் மாநிலத்திற்குள் பாய்ந்து வருகிறது.</p><p>பீகாரில் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய வகையிலான மீன்கள் ஆற்றில் காணப்படுகின்றன. </p><p>அந்த வகையான மீன்களை சாப்பிட்ட சில நபர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறிப்பாக, கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் ஆற்று நீரில் இயல்பை விடப் பல மடங்கு அதிகமான அளவு இரும்புச்சத்து பதிவாகியுள்ளது.</p><p>வெள்ள நீரால் பீகாரின் எல்லை மாவட்டங்கள் முழுவதும் உள்ள விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், மாநிலத்தில் தானியங்கள் மற்றும் காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.</p><h3><strong>பீகார் ஆற்று நீர் மாசுபாடு</strong></h3><p>பீகார் வெள்ள நீரில் பிடிக்கப்பட்ட மீன்களில் கழிவு நீர் மாசுபாடு, பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நோய்கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளதால், அந்த மீன்களை வாங்கவோ, விற்கவோ, உட்கொள்ளவோ வேண்டாம் என விலங்கு மற்றும் மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.</p> <h2>எச்சரிக்கை</h2><p>பீகாரின் பால், மீன்வளம் மற்றும் கால்நடை வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெள்ள நீர் வடிகால்கள் மாசடைந்து இறந்த விலங்குகள் மற்றும் பிற நச்சுத் தன்மையுடன் தொடர்ந்து நீடித்து வருவதால், இந்த மீன்கள் உண்பதற்குப் பாதுகாப்பற்றவை என்றும், சுற்றுச்சூழல் நிலைமைகள் சீராகும் வரை வெள்ள நீரில் பிடிக்கப்பட்ட மீன்களை மக்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிருப்தி எம்.பி. சாயோனி கோஷ்</title><link>https://www.maalaimalar.com/news/national/saayoni-ghosh-met-vijay-at-his-office</link><comments>https://www.maalaimalar.com/news/national/saayoni-ghosh-met-vijay-at-his-office#comments</comments><guid isPermaLink="false">ea6c7543-6efb-4592-a2fc-9333ace5cd2e</guid><pubDate>Tue, 01 Sep 2026 22:59:25 +0000</pubDate><atom:updated>2026-09-01T22:59:25.769Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Saayoni Ghosh,சயோனி கோஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/g5hap4oh/Saayoni-Ghosh-met-Vijay.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Saayoni Ghosh met Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/g5hap4oh/Saayoni-Ghosh-met-Vijay.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி.யான சயோனி கோஷ், நேற்று (செவ்வாய்க்கிழமை) <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை சந்தித்தார். அப்போது, ​​மாநிலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வாய்ப்புகள் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றுக்கான விஜய்யின் தொலைநோக்கு பார்வையை அவர் பாராட்டினார்.</p><p>இந்த சந்திப்புக்கு பிறகு, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">மேற்கு வங்கம்</a> குறித்தும், அதன் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் மீதான தனது விருப்பம் குறித்தும் விஜய் அன்புடன் பேசியதாக கோஷ் தெரிவித்தார்.</p><p>"தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய்யைச் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது," என்று கோஷ் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>இதுகுறித்த பதிவில், "தமிழ்நாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வாய்ப்புகள், நல்லாட்சி ஆகியவற்றில் வேரூன்றிய அதன் எதிர்காலம் குறித்த தனது கருத்துகளை பகிர்ந்துகொண்ட அதே வேளையில், மேற்கு வங்கம் மற்றும் அதன் செழுமையான கலாச்சாரம், பாரம்பரியங்கள் மீதான தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.</p><p>அவரது அன்பான உபசரிப்புக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். தனது மாநிலத்திற்கான தொலைநோக்கு பார்வையை நனவாக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்," என்றும் அவர் மேலும் கூறினார்.</p><h2>திரைத்துறை சார்ந்த எம்.பி.:</h2><p>2021-இல் அரசியலில் நுழைந்த நடிகையும், பாடகியுமான கோஷ், ஜூன் 2026-இல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து (TMC) மற்ற அதிருப்தி எம்.பி.க்களுடன் வெளியேறிய பிறகு, தற்போது 'நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா' (NCPI) கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.யாக உள்ளார்.</p><p>அதிருப்தி குழுவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவர் திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.</p><p>கோஷ் பிப்ரவரி 2021-இல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்; அந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் ஆசன்சோல் தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். பா.ஜ.க. வேட்பாளர் அக்னிமித்ரா பாலிடம் அவர் தோல்வியடைந்தாலும், பின்னர் கட்சியின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார்.</p><h2>அபார வெற்றி:</h2><p>2024 மக்களவைத் தேர்தலில், திரிணாமுல் சார்பில் ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்ட கோஷ், 2.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். </p><p>ஒரு காலத்தில் திரிணாமுல் தலைமைக்கு நெருக்கமான முக்கிய இளம் தலைவராகக் கருதப்பட்ட அவர், 2026 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் கட்சி அடைந்த படுதோல்விக்கு பிறகு அதிருப்தி அடைந்து விலகினார்.</p><p>2011 முதல் மேற்கு வங்கத்தை தொடர்ந்து ஆட்சி செய்து வந்த திரிணாமுல் காங்கிரஸ், 294 இடங்களை கொண்ட சட்டமன்றத்தில் 80 இடங்களுக்கு சுருங்கியது. பா.ஜ.க. 207 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றதுடன், மாநிலத்தில் தனது முதல் அரசாங்கத்தையும் அமைத்தது.</p>]]></content:encoded></item><item><title>சிறுமியுடன் பாலியல் உறவு: முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்தாலும் போக்சோ பொருந்தும் - நீதிமன்றம் அதிரடி</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-hc-said-muslim-marriage-doesnt-shield-man-from-pocso-for-sex-with-17yo</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-hc-said-muslim-marriage-doesnt-shield-man-from-pocso-for-sex-with-17yo#comments</comments><guid isPermaLink="false">b9ae3a4f-bb0f-4f9d-b614-599057c97df1</guid><pubDate>Tue, 01 Sep 2026 17:57:33 +0000</pubDate><atom:updated>2026-09-01T17:57:33.330Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kerala HC,POCSO,கேரளா உயர்நீதிமன்றம்,போக்சோ,Muslim marriage,முஸ்லிம் திருமணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/d2dtezil/KL-HC.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kerala High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/d2dtezil/KL-HC.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>17 வயது சிறுமியிடம் தொடர்ச்சியாக பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய <a href="https://www.maalaimalar.com/news/national">கேரள</a> உயர் நீதிமன்றம் அதிரடியாக மறுத்தது. </p><p>முஸ்லிம் மத சடங்குகளின்படி திருமணம் நடைபெற்று இருந்தாலும், அது அவரை POCSO சட்டத்தின் (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம்) கீழ் வரும் குற்றப் பொறுப்பில் இருந்து காப்பாற்றாது என்று நீதிமன்றம் கூறியது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/keralam">மன்னார்க்காடு</a> காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நபர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜோபின் செபாஸ்டியன் தள்ளுபடி செய்தார். இவ்வழக்கு பட்டாம்பியில் உள்ள விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.</p><h2>பாலியல் குற்றத்திற்காக தண்டிக்கப்படலாம்:</h2><p>'இன்டிபென்டன்ட் தாட்' (Independent Thought) வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்த சட்டத்தை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், 18 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ளும் நபர், பாதிக்கப்பட்டவர் தனது மனைவியாக இருந்து, அவரது வயது 15 முதல் 18-க்குள் இருந்தாலும், இந்திய தண்டனை சட்டம் (IPC) பிரிவு 376-இன் கீழ் பாலியல் வன்முறை குற்றத்திற்காக தண்டிக்கப்படக்கூடியவர் என்று கூறியது.</p><p>"எனவே, இந்த வழக்கில், IPC பிரிவு 375-இன் விதிவிலக்கு 2-இன் உதவியுடன் குற்றவாளி சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது" என்று ஆகஸ்ட் 19 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்தது.</p><h2>பாலியல் குற்ற தடுப்பு சட்டம்:</h2><p>பாதிக்கப்பட்ட சிறுமி தனது சட்டப்பூர்வமான மனைவி என்றும், இஸ்லாமிய மதச் சடங்குகளின்படி அவருக்கு 17 வயது ஒரு மாதம் ஆனபோது திருமணம் செய்துகொண்டதாகவும் குற்றவாளியின் வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் நிராகரித்தது.</p><p>தனிநபர் சட்டத்தின்படி திருமணம் செல்லுபடியாகுமா என்பது ஒருபுறம் இருக்க, திருமணத்தில் ஈடுபடும் தரப்பினரில் ஒருவர் மைனராக (சிறுவர்/சிறுமியாக) இருக்கும்போது, ​​குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம் (POCSO) பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியது.</p><p>திருமண உறவை சாக்காக கொண்டு குற்றவாளி சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. </p><p>வாதத்திற்காக, இஸ்லாமிய மத சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின்படி திருமணம் நடைபெற்றதாக கொண்டாலும், அது மனுதாரர் மீதான குற்றவியல் பொறுப்பை நீக்காது. குறிப்பாக, அந்த திருமணம் மற்றும் அதை தொடர்ந்த பாலியல் செயல்களின் போது அப்பெண்ணுக்கு 17 வயது மட்டுமே இருந்ததால் இது பொருந்தும்.</p><h2>சட்டத்தின் விதிகள் பொருந்தும்:</h2><p>"தனிநபர் சட்டத்தின் கீழ் திருமணம் செல்லுபடியாகுமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, திருமணத்தில் ஈடுபடும் தரப்பினரில் ஒருவர் சிறாராக இருந்தால், போக்சோ சட்டத்தின் விதிகள் பொருந்தும் என்பது மறுக்க முடியாத உண்மை," என்று நீதிமன்றம் கூறியது.</p><p>பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023-இன் பிரிவு 528-இன் கீழ் இந்த வழக்கு நடவடிக்கைகளை ரத்து செய்யுமாறு குற்றம் சாட்டப்பட்டவர் கோரியிருந்தார். </p><p>குற்றச்சாட்டு தரப்பின்படி, அக்டோபர் 23, 2021 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர் அப்பெண்ணை காரில் தனது வீட்டிற்கு அழைத்து சென்று, அக்டோபர் 23 முதல் 26 வரையிலான காலகட்டத்தில் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரஷிய ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய இந்தியர்களில் 51 பேர் உயிரிழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/51-indians-who-joined-and-served-in-the-russian-army-have-lost-their-lives</link><comments>https://www.maalaimalar.com/news/national/51-indians-who-joined-and-served-in-the-russian-army-have-lost-their-lives#comments</comments><guid isPermaLink="false">fe1b9dd3-ec7f-4c36-a008-e39bd4a70167</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:36:58 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:36:58.567Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>indians,ரஷிய ராணுவம்,Russian Army,Ministry of External Affairs,இந்தியர்கள்,இந்திய வெளியுறவுத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/h42lt8j2/New-Project-2026-09-01T220637.698.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரஷிய ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய இந்தியர்களில் 51 பேர் உயிரிழப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/h42lt8j2/New-Project-2026-09-01T220637.698.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 227 இந்தியர்களில் 51 பேர் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 139 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக ரஷிய தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். கிர்கிஸ்தானில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்ரி.,</p><p>இந்தியக் குடிமக்களை விடுவிப்பது மற்றும் தாயகம் திரும்ப அனுப்புவது தொடர்பான இந்த நிலைமையை மாஸ்கோவில் உள்ள எங்கள் தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.</p><p>எஞ்சியிருக்கும் நோயாளிகள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதை உறுதி செய்வதற்காகவும், அதன் மூலம் இவர்களை விரைவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்காகவும், நாங்கள் ரஷியத் தரப்புடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.” என தெரிவித்தார்.</p><p>ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்த சிறிது நேரத்திலேயே மிஸ்ரியின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்தன.</p><p>சமையல்காரர்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட, ரஷிய ராணுவப் பிரிவுகளில் துணைப் பணியாளர்களாகப் பணியாற்றி வரும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்குமாறு ரஷியாவிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வாலும் தெரிவித்துள்ளார். </p><p>ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இன்னும் ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும், அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இந்தியா தெரிவித்திருந்தது.</p><p>இதற்கிடையில், ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை குடும்பத்தினருடன் ஒருங்கிணைப்பதற்காக, வெளியுறவு அமைச்சகத்தில் ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.</p><h2>ஏமாற்றப்பட்ட இளைஞர்கள்</h2><p>பெரும்பாலான இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகவர்கள் மூலம் கட்டுமானப் பணி, உணவகப் பணி போன்ற பொதுவான வேலைகளுக்காகவே ரஷியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><h2>கட்டாய ஒப்பந்தம்</h2><p>ரஷியா சென்றடைந்தவுடன் அவர்களது கடவுச்சீட்டுகள் பறிக்கப்பட்டு, போதிய ராணுவப் பயிற்சியின்றி கட்டாயமாக உக்ரைன் எல்லைப் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.</p><h2>அரசு எச்சரிக்கை</h2><p>இது போன்ற போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், ஆபத்தான சூழல் நிலவும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ராஜஸ்தான்: ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/rajasthan-boy-who-accidentally-fell-into-a-borewell-rescued-safely-after-a-5-hour-operation</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajasthan-boy-who-accidentally-fell-into-a-borewell-rescued-safely-after-a-5-hour-operation#comments</comments><guid isPermaLink="false">d21a0bc2-738e-4a39-9260-815690840e85</guid><pubDate>Tue, 01 Sep 2026 14:21:15 +0000</pubDate><atom:updated>2026-09-01T14:21:15.953Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,Borewell,ராஜஸ்தான்,ஆழ்துளைக் கிணறு</media:keywords><media:content height="1913" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/x96s0jkj/New-Project-2026-09-01T184337.668.jpg" width="3402"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராஜஸ்தான்: ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/x96s0jkj/New-Project-2026-09-01T184337.668.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் 300 அடி ஆழமுள்ள திறந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 9 வயது சிறுவன், 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். </p><p>அல்வார் மாவட்டத்தின் ராம்நகர் பகுதியிலுள்ள புடோலி கிராமத்தில் பானு குர்ஜார் என்ற சிறுவன் நேற்று (ஆக.31) மாலை பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்துள்ளான். பட்டத்தை பிடிக்க முயன்று கீழே பார்க்காமல், மேலே பார்த்தவாறு ஓடியுள்ளான். </p><p>அப்போது அப்பகுதியில் இருந்த ஆழ்துளைக் கிணற்றை மூடியிருந்த கல்லின் மீது சிறுவன் கால் வைத்து, தவறி உள்ளே விழுந்துள்ளான். சுமார் 50 முதல் 55 அடியில் சிக்கியிருந்த சிறுவனை மீட்க அப்பகுதி மக்கள் முயற்சித்துள்ளனர்.</p><p>தொடர்ந்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.</p><p>சுமார் ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 11.30 மணிக்கு மீட்கப்பட்டுள்ளார். உடனே மருத்துவ பரிசோதனைக்காக அருகில் இருந்த அல்வார் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பெயரில் நூதன மோசடி: மத்திய பிரதேசத்தில் லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த பொதுமக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-chief-minister-vijay-name-used-in-sophisticated-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-chief-minister-vijay-name-used-in-sophisticated-scam#comments</comments><guid isPermaLink="false">297f8d9a-ee2e-4fe6-a433-c81a6921faec</guid><pubDate>Tue, 01 Sep 2026 11:49:20 +0000</pubDate><atom:updated>2026-09-01T11:49:20.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madhya Pradesh,Cyber Crime,இந்தூர்,மோசடி கும்பல்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,மத்திய பிரதேச மாநிலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/uwfmr9l0/cm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/uwfmr9l0/cm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் ஒரு கும்பல், தங்களை தமிழக முதல்வர் விஜய்யின் அறக்கட்டளை நிர்வாகிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் பேசியுள்ளனர். </p><p>மத்திய பிரதேச மாநிலத்தில் தமிழ்நாடு  முதலமைச்சர் விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி, ஏழை எளிய மக்களிடம் நிதியுதவி மற்றும் கடன் வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   </p><h2>முதல்வர் விஜய் <strong>பெயரில் போலி</strong> அறக்கட்டளை   </h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/digital-payments-without-internet-phonepe-launches-upi-123pay-for-feature-phones">மத்திய பிரதேச மாநிலம் </a>இந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் ஒரு கும்பல், தங்களை தமிழக முதல்வர் விஜய்யின் அறக்கட்டளை நிர்வாகிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் பேசியுள்ளனர். தமிழக முதல்வர் விஜய் மூலம் சிறு தொழில் தொடங்குவதற்கான மானியக் கடன், இலவச நிதியுதவி, கல்வி நிதியுதவி மற்றும் வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக ஆசை வார்த்தைகள் கூறி மக்களை நம்ப வைத்துள்ளனர்.  </p><h2>நூதன <strong>முறையிலான பண</strong>ப்பறிப்பு   </h2><p>இந்த போலி அறக்கட்டளை மூலமாக ரூ.10 லட்சம் வரை மானியம் மற்றும் நிதி உதவி பெற முடியும் எனக் கூறி மக்களைத் தொடர்புகொண்ட அந்த கும்பல், அதற்கான நடைமுறைகளுக்காக பணம் பறித்துள்ளது. விண்ணப்பப் பதிவு, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் வங்கி கணக்கு தொடங்குவதற்கான கட்டணம் என்ற பெயரில் தலா ரூ.1,000 முதல் ரூ.50,000 வரை ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.   </p><h2>காவல்துறையி<strong>ல் குவிந்த</strong> புகார்கள்   </h2><p>பணம் செலுத்திய பிறகு குறிப்பிட்ட நபர்களைத் தொடர்புகொள்ள முடியாமலும், எவ்வித நிதியுதவியும் கிடைக்காமலும் போனதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல்நிலையத்தை நாடினர். கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் இந்தூர் குற்றத்தடுப்புப் பிரிவில் இந்த மோசடி தொடர்பாக 6 அதிகாரப்பூர்வ புகார்கள் பதிவாகியுள்ளன.   </p><h2>சைபர் கிரைம் <strong>போலீஸ் தீவிர</strong> விசாரணை   </h2><p>பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்தூர் குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு சைபர் குற்றவாளிகளைப் பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அடையாளம் தெரியாத போலி நபர்கள் மற்றும் அறக்கட்டளைகளின் பெயரில் வரும் அழைப்புகளை நம்பி முன்பணம் செலுத்த வேண்டாம் என மக்களுக்குக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேற்குவங்கம்: மம்தா பானர்ஜியின் மருமகள், வீட்டில் இருந்து சடலமாக மீட்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-mamata-banerjees-daughter-in-law-found-dead-at-her-home</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-mamata-banerjees-daughter-in-law-found-dead-at-her-home#comments</comments><guid isPermaLink="false">cbf9494f-2b14-49d7-82e2-45df2f17769d</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:48:30 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:48:30.071Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,மேற்குவங்கம்,west bengal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/2j9510id/New-Project-2026-09-01T161529.092.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேற்குவங்கம்: மம்தா பானர்ஜியின் மருமகள் வீட்டில் இருந்து சடலமாக மீட்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/2j9510id/New-Project-2026-09-01T161529.092.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் தாய்வழியிலான ஒன்றுவிட்ட சகோதரரின் மகள் பிரிஷ்டி முகர்ஜி, இன்று அவரது வீட்டில் இருந்து தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். </p><p>பீர்பூம் மாவட்டம், ராம்பூர்ஹாட்டின் குசும்பா கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் இருந்து 31 வயதான பிரிஷ்டி முகர்ஜி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். </p><p>கடந்த சில ஆண்டுகளாகவே பிரிஷ்டி மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பிரிஷ்டி முகர்ஜி தனது வேலையை இழந்திருந்தாகவும், மேலும், அவருக்கு விவாகரத்து வழக்கு நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>தொடர்ந்து காவல்துறை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராம்பூர்ஹாட் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். </p><p>இது தற்கொலையாக இருக்கலாம் என்றும், எனினும் மரணத்திற்கான முழுமையான காரணம் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்; போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-question-paper-leak-protest-supreme-court-issues-a-bold-order-quashing-cases-against-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-question-paper-leak-protest-supreme-court-issues-a-bold-order-quashing-cases-against-protesters#comments</comments><guid isPermaLink="false">bdfeef31-629f-4b31-91a4-7e1b03ec42ad</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:24:08 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:24:08.391Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,FIR,Protesters,போராட்டக்காரர்கள்,NEET Paper Leak,நீட் தேர்வு வினாத்தாள் கசிவு,முதல் தகவல் அறிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/hrt7fddv/New-Project-2026-09-01T155057.462.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்; போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/hrt7fddv/New-Project-2026-09-01T155057.462.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142-ன்கீழ் தங்களுக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><h2>வழக்குகள் ரத்து</h2><p>ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>இருப்பினும் போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும், மேலும் முன்னரே வழக்குகளை கொண்டுள்ள 2,873 நபர்களுக்கு இந்த ரத்து உத்தரவு பொருந்தாது, அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>மனுத்தாக்கல்</h2><p>இந்தியா முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கு எதிராக, காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி நேற்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><h2>போராட்டம் வாபஸ்</h2><p>மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் போராட்டக்காரர்களுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற மனு அளித்து, நீதிமன்றமும் அதனை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 5-ஆம் தேதி டெல்லியில் நடத்தத் திட்டமிட்டிருந்த மாபெரும் <a href="https://www.maalaimalar.com/news/national/cockroach-janata-party-withdraws-announcement-for-september-5-rally">போராட்டப் பேரணி</a>யை வாபஸ் பெறுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செப்டம்பரில் குறையும் மழை: 1901-க்குப் பிறகு மிக வெப்பமான ஆகஸ்ட் மாதத்தைத் தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/rainfall-to-decrease-in-september</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/rainfall-to-decrease-in-september#comments</comments><guid isPermaLink="false">4e1294b6-4f30-4d69-9e34-ef9bf459d7fb</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:17:37 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:17:37.666Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,Meteorological Department,மழைப்பொழிவு,rainfall,எல் நினோ,El Nino</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/1pbpyxb1/el-nino.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ El Nino]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/1pbpyxb1/el-nino.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் 1901-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக அதிக வெப்பமண்டல மாதமாக மாறியுள்ள நிலையில், வரவிருக்கும் செப்டம்பர் மாதத்திலும் வழக்கத்தை விடக் குறைவான மழையே பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  கணித்துள்ளது</p><h2>செப்<strong>டம்பர் மாத மழைப்</strong>பொழிவு கணிப்பு</h2><p>இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மாதாந்திர அறிக்கையின்படி, செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் பெய்யும் மழையின் அளவு நீண்டகால சராசரியில் 91 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. 1971 முதல் 2020 வரையிலான தரவுகளின் அடிப்படையில், செப்டம்பர் மாதத்திற்கான நீண்டகால சராசரி மழைப்பொழிவு 167.9 மி.மீ ஆகும். மேலும், நாடு முழுவதும் வழக்கத்தை விட அதிகபட்ச வெப்பநிலையும் தொடர வாய்ப்புள்ளது.</p><h2><strong>எல் நினோ தாக்க</strong>ம்</h2><p>பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் எல் நினோ நிலவரம் பலமடைந்து வருவதே இந்த மழைப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. எல் நினோ வலுவடைந்து வருவதால், தென்மேற்கு பருவமழையின் இறுதிப் பகுதியிலும் மழைப்பொழிவு பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்ஜய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.</p><h2>வரலா<strong>ற்றுச் சாதனை</strong> </h2><p>கடந்த ஆகஸ்ட் மாதத்தின் சராசரி வெப்பநிலை 28.01 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இது வழக்கமான சராசரி வெப்பநிலையான 27.34 டிகிரி செல்சியஸை விட அதிகம். அதேபோல, இரவிலும் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 24.36 டிகிரி செல்சியஸாக உயர்ந்து, 1901-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக அதிகபட்ச வெப்பமண்டல ஆகஸ்ட் மாதமாக இது அமைந்துள்ளது.</p><h2>மழைப் <strong>பற்றாக்குறையின் தற்போதை</strong>ய நிலை</h2><p>ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 213.3 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது 2001-க்குப் பிறகு பதிவான ஏழாவது குறைந்தபட்ச மழைப்பொழிவாகும். இம்மாதத்தில் நான்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி, சுமார் 26 நாட்கள் நீடித்தபோதிலும், அவற்றின் தாக்கம் பெரும்பாலும் இந்தோ-கங்கை சமவெளிப் பகுதிகளில் மட்டுமே மையம் கொண்டிருந்தது. இதனால் நாட்டின் பிற பகுதிகள் கடுமையான மழைப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>செப். 5 பேரணி அறிவிப்பை திரும்பப் பெற்றது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!</title><link>https://www.maalaimalar.com/news/national/cockroach-janata-party-withdraws-announcement-for-september-5-rally</link><comments>https://www.maalaimalar.com/news/national/cockroach-janata-party-withdraws-announcement-for-september-5-rally#comments</comments><guid isPermaLink="false">9b29b21e-26bf-416a-b32c-04d034b74566</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:05:59 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:05:59.320Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,CJP,அமைதிப் பேரணி,India Gate march</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/4zbjx1ve/New-Project-2026-09-01T145945.505.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செப். 5 பேரணி அறிவிப்பை திரும்பப் பெற்றது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/4zbjx1ve/New-Project-2026-09-01T145945.505.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, செப்டம்பர் 5-ஆம் தேதி நடத்தவிருந்த டெல்லி போராட்டப் பேரணி அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. </p><p>டெல்லியில் உள்ள இந்தியா நுழைவாயிலில் இருந்து மாநில காவல் தலைமையகம் வரை இந்தப் பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது.</p><h2>எதற்காக பேரணி?</h2><p>கரப்பான்பூச்சி கட்சியினரால் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கைவிட மத்திய அரசு மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தது. </p><p>தர்மேந்திர பிரதான் பதவி விலகல், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி, போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தல் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதியளித்தது. </p><h2>நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்</h2><p>மத்திய அரசு அளித்த மூன்று வாக்குறுதிகளில் ஒன்று மட்டுமே, அதாவது தர்மேந்திர பிரதான் பதவி விலகல் கோரிக்கை மட்டுமே நிறைவேற்றப்பட்டது. மற்ற இரண்டு வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனைக் கண்டித்து செப்.5ம் தேதி போராட்டப் பேரணியை அறிவித்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.</p><h2>உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு</h2><p>இதனிடையே இந்தப் பேரணிக்கு தடைவிதிக்க அல்ல பேரணியை ஒத்திவைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த <a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-refuses-to-intervene-in-the-cockroach-partys-delhi-rally-issue">விவகாரத்தில் தலையிட மறுத்தது. </a></p><p>மத்திய மற்றும் மாநில அரசுகளே இதில் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி செப்.10ம் தேதி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது. </p><h2>மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்</h2><p>மேற்குறிப்பிட்டிருந்த மனு விசாரணையைத் தொடர்ந்து மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில்<a href="https://www.maalaimalar.com/news/national/central-government-files-petition-in-supreme-court-seeking-orders-to-withdraw-cases-against-neet-exam-protesters"> நீட் தேர்வு குளறுபடி</a>க்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக் கோரியிருந்தது. </p><p>இந்த மனுத்தாக்கலைத் தொடர்ந்து, நீட் போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 13 வழக்குகளை இனியும் தொடர விரும்பவில்லை என டெல்லி காவல்துறை திங்கள்கிழமை (ஆக.31) மாலை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><p>இந்நிலையில் இன்று மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உயிரை மாய்த்துக்கொண்ட நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார். </p><p>இந்த வாக்குறுதிகளைத் தொடர்ந்து பேரணி அறிவிப்பை திரும்பப் பெறுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வெள்ளத்தில் சிக்கிய வாலிபர்: துப்பட்டாவை வீசி காப்பாற்றிய புதுமணப் பெண்கள்- வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/couple-uses-dupatta-to-save-biker-from-flash-flood</link><comments>https://www.maalaimalar.com/news/national/couple-uses-dupatta-to-save-biker-from-flash-flood#comments</comments><guid isPermaLink="false">a3531751-eb7c-43af-aaae-f4b4a3e8309c</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:03:14 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:03:14.294Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இமாச்சல பிரதேசம்,Himachal Pradesh,வெள்ளப் பெருக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/3vd1mlpj/Himachal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வெள்ளத்தில் சிக்கிய வாலிபர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/3vd1mlpj/Himachal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>இமாச்சல பிரதேச மாநிலம் பார்முலா பகுதியில் காகியரா-தனுஹாட்டி சாலையில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் சிக்கிக் கொண்டார். இரு சக்கர வாகனத்துடன் பள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் நிலையில் தவித்துக் கொண்டிருந்தார்.</p><p>அப்போது அந்த வழியாக காரில் இரு புதுமணத் தம்பதிகள் வந்தனர். அவர்கள் அந்த வாலிபர் சிக்கிக் கொண்டதை பார்த்து காரை நிறுத்தினர். அவர்கள் காரில் கயிறு போன்ற ஏதும் இல்லை. அந்த நேரத்தில் இரண்டு புதுமணப் பெண்களுக்கு சாதுர்யமான யோசனை வந்தது. அவர்கள் அணிந்திருந்த துப்பாட்டாவை கழற்றி இரண்டையும் ஒன்றாக கட்டி அந்த வாலிபரை நோக்கி வீசினர். ஒருபக்கத்தை பலமாக பிடித்துக் கொண்டனர். மறுமுனையில் அந்த வாலிபர் துப்பட்டாவை பிடித்துக் கொண்டார்.</p><p>அதனைத் தொடர்ந்து வாலிபர் அந்த துப்பாட்வை பிடித்து பாதுகாப்பாக வெள்ளத்தில் இருந்து தப்பித்தார். இந்த வீடியோ வெளியாகி வைரலானது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Best video to start the day ❤️A newly married couple in Bhatiyat, Chamba, risked their own safety to save a young biker who was stuck in a flash flood. It was literally a matter of seconds before he could have been swept away.The newlywed bride gave her dupatta, and together the… <a href="https://t.co/xcfTk69HHz">pic.twitter.com/xcfTk69HHz</a></p>&mdash; Nikhil saini (@iNikhilsaini) <a href="https://x.com/iNikhilsaini/status/2094633885892239661?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>இந்த வீடியோவைப் பார்த்து இரு பெண்களை இணையதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>போராட்டக்காரர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது மனித உரிமை மீறல் அல்ல - சிஆர்பிஎஃப்!</title><link>https://www.maalaimalar.com/news/national/use-of-pellet-guns-on-protesters-is-not-a-human-rights-violation-crpf</link><comments>https://www.maalaimalar.com/news/national/use-of-pellet-guns-on-protesters-is-not-a-human-rights-violation-crpf#comments</comments><guid isPermaLink="false">99e04a67-1c88-4f90-bab0-36daab99dc53</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:27:24 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:27:24.220Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>crpf,DELHI PROTEST,சிஆர்பிஎஃப்,டெல்லி போராட்டம்,pellet gun,பெல்லட் துப்பாக்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/j2abjb6y/New-Project-2026-09-01T145609.736.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போராட்டக்காரர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது மனித உரிமை மீறல் அல்ல - சிஆர்பிஎஃப்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/j2abjb6y/New-Project-2026-09-01T145609.736.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது மனித உரிமை மீறல் அல்ல என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய ரிசர்வ் காவல்படை பதிலளித்துள்ளது. </p><h2>டெல்லி போராட்டம்</h2><p>கடந்த ஜூலை 20 அன்று, டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் ஒருபகுதியாக, நாடாளுமன்றம் நோக்கி பேரணி முன்னெடுக்கப்பட்டது. </p><p>அப்போது போராட்டக்காரர்கள்மீது பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தியது குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே தகவல் கோரியிருந்தார். </p><p>அவர் எழுப்பியிருந்த கேள்விக்கு சிஆர்பிஎஃப் இந்தப் பதிலை அளித்துள்ளது. </p><h2>விலக்கு</h2><p>சிஆர்பிஎஃப் அமைப்பிற்கு பொதுவாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஊழல் அல்லது மனித உரிமை மீறல் தொடர்பான புகார்களுக்கு மட்டுமே விதிவிலக்கு உண்டு. </p><p>ஆனால், இச்சம்பவத்தில் மனித உரிமை மீறல் எதுவும் நடக்கவில்லை என்று கூறி அதுகுறித்த விரிவான தகவல்களைத் தர சிஆர்பிஎஃப் மறுத்துள்ளது.</p><p>இந்த விவகாரத்தில் முதலில் டெல்லி காவல்துறையும், அரசும் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என மறுத்தது. பின்னர் பெல்லட் துப்பாகி பயன்பாடு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானதும், மருத்துவமனை தரவுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றதும் உறுதியானது. </p><p>தொடர்ந்து பெல்லட் குண்டால் பாதிக்கப்பட்டு, வலது கண்பார்வையை இழந்த சாகில் லோச்சாப் இதுதொடர்பாக டெல்லி காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். </p> <p>ஆனால் பெயர் குறிப்பிடாமல் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, அதுவும்<a href="https://www.maalaimalar.com/news/national/delhi-police-register-case-over-pellet-gun-attack-on-rahul-gandhi-during-sit-in-protest"> ராகுல் காந்தி</a>யின் தலையீட்டால்.</p><p>இந்நிலையில் சாகேட் கோகலே எழுப்பிய கேள்விக்கு சிஆர்பிஎஃப் இந்த அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">SHOCKING:<br><br>CRPF claims use of pellet guns on protestors in Delhi is NOT a human rights violation <br><br>I’d filed an RTI with Rapid Action Force (which is a part of CRPF) asking for information related to the use of pellet guns on unarmed protestors on 20th July during the Jantar… <a href="https://t.co/0Xv0laN4tA">pic.twitter.com/0Xv0laN4tA</a></p>&mdash; Saket Gokhale (@SaketGokhale) <a href="https://x.com/SaketGokhale/status/2094263102225465648?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>&apos;பயங்கரவாதம் யாருக்கும் உத்தி சார்ந்த சொத்து அல்ல&apos;: பிக்பேக்கில் பாகிஸ்தான் பிரதமர் முன்பாக பிரதமர் மோடி பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/national/terrorism-is-not-anyones-strategic-asset-pm-modi-addresses-sco-summit-in-bishkek</link><comments>https://www.maalaimalar.com/news/national/terrorism-is-not-anyones-strategic-asset-pm-modi-addresses-sco-summit-in-bishkek#comments</comments><guid isPermaLink="false">be6194f1-a83e-4b9d-b329-2e84845719c2</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:22:30 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:22:30.524Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Pakistan,பயங்கரவாதம்,Terrorism,shehbaz sharif,ஷாங்காய் உச்சி மாநாடு,BRICS Summit,pm modi,பிரதமர் மோடி,கிர்கிஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/k5o83dpy/mooo.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/k5o83dpy/mooo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பேண அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.</p><p>கிர்கிஸ்தான் நாட்டின் பிக்பேக் நகரில் நடைபெற்று வரும் 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-instagram-reel-7-8-percent-gdp-growth-countering-rahul-gandhi-claims">பிரதமர் நரேந்திர மோடி</a> கலந்துகொண்டு உரையாற்றினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் உலகத் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் ஒரே குரலில் பேச வேண்டும் என்று வலியுறுத்தினார். </p><p>பயங்கரவாத விவகாரத்தில் எந்தவொரு நாட்டிற்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது என்றும், இந்த அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.</p><h2>கடுமை<strong>யான எச்சரிக்கை</strong></h2><p>பயங்கரவாதத்தைக் கொள்கை அளவிலான ஒரு கருவியாகப் பயன்படுத்தும் நாடுகளுக்கும், பயங்கரவாதிகளுக்குப் புகலிடமும் ஆதரவும் அளிக்கும் அமைப்புகளுக்கும் உலக நாடுகள் தெளிவான செய்தியைச் சொல்ல வேண்டும் என்று பிரதமர் கூறினார். பயங்கரவாதம் என்பது எந்தவொரு நாட்டிற்கும் உத்தி சார்ந்த சொத்தாக மாற முடியாது என்பதை சுட்டிக்காட்டிய அவர், பயங்கரவாத கட்டமைப்புகளை ஒட்டுமொத்தமாகத் தகர்க்க வேண்டியது தற்போதைய காலகட்டத்தின் அவசரத் தேவை என்று குறிப்பிட்டார்.</p><h2>அமைதியை மு<strong>ன்னிறுத்திய பே</strong>ச்சு</h2><p>பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பேண அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். சர்வதேச அளவில் நிலவும் சவால்களுக்கு மத்தியிலும், அமைதியையும் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்ல உறுதியான கொள்கை முடிவுகள் அவசியம் என்பதை இந்த உச்சிமாநாட்டு உரையின் மூலம் இந்தியா மீண்டும் நிலைநாட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கல்வி முழக்கத்தை இழந்ததா ஆம் ஆத்மி?: அபிஜித் தீப்கே &apos;சிஜேபி&apos; அமைப்பின் B-டீமாக மாறியதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது விமர்சனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/did-aap-lose-its-education-slogan-arvind-kejriwal-slammed-for-making-abhijit-deepkes-cjp-b-team</link><comments>https://www.maalaimalar.com/news/national/did-aap-lose-its-education-slogan-arvind-kejriwal-slammed-for-making-abhijit-deepkes-cjp-b-team#comments</comments><guid isPermaLink="false">e0535337-8785-4a87-8e5d-0cd814cd2e3d</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:03:42 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:03:42.467Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,Aam Aadmi Party,ஆம் ஆத்மி கட்சி,சிஜேபி,CJP,அபிஜித் தீப்கே,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/zclmopn4/abiu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Arvind Kejriwal-Abhijit Deepke]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/zclmopn4/abiu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிஜேபி அமைப்பின் நிறுவனரான அபிஜித் தீப்கே மற்றும் அதன் முக்கியப் பொறுப்பாளர்கள் முன்பு ஆம் ஆத்மி கட்சியின் ஊடகப் பிரிவிலும், டெல்லி அரசின் கல்வித்துறை ஆலோசனைப் பிரிவிலும் தீவிரமாகப் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய அரசியல் அடையாளமாகவும், தேர்தல் வெற்றிகளுக்கான முதன்மை ஆயுதமாகவும் இருந்தது அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்கள் ஆகும். ஆனால், சமீபகாலமாக <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-files-petition-in-supreme-court-seeking-orders-to-withdraw-cases-against-neet-exam-protesters">ஆம் ஆத்மி கட்சி</a> சந்தித்து வரும் அரசியல் பின்னடைவுகள் மற்றும் தலைமை மீதான நம்பகத்தன்மை கேள்விகளால், கட்சி தனது முதன்மை முகவரியான கல்வி சார்ந்த முழக்கங்களை இழந்து வருவதாக அரசியல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>இந்தச் சூழலில், அபிஜித் தீப்கே தலைமையிலான 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) என்ற இளைஞர் அமைப்பு, அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக முன்னெடுக்கும் தொடர் போராட்டங்கள் மற்றும் ஆய்வுகள் மூலம் தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p><h2>சிஜேபிக்<strong>கு ஆம் ஆத்மியின்</strong> தொடர் ஆதரவு</h2><p>சமீபத்தில் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி சார்பில் நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாகப் பங்கேற்று தனது ஆதரவைத் தெரிவித்தார். களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் சிஜேபி அமைப்பின் கோரிக்கைகளுக்காக ஆம் ஆத்மி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். </p><p>கல்வித் துறையை மையமாகக் கொண்டு ஆம் ஆத்மி எழுப்பி வந்த குரலை தற்போது சிஜேபி அமைப்பு கையில் எடுத்து முன்னெடுத்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தனது அரசியல் மேடை மற்றும் முக்கியத்துவத்தை அந்த அமைப்பிடம் ஒப்படைத்துவிட்டு அதன் பி-டீமாக செயல்படுகிறதா என்ற விவாதம் வலுத்துள்ளது.</p><p>சிஜேபி அமைப்பின் நிறுவனரான அபிஜித் தீப்கே மற்றும் அதன் முக்கியப் பொறுப்பாளர்கள் முன்பு ஆம் ஆத்மி கட்சியின் ஊடகப் பிரிவிலும், டெல்லி அரசின் கல்வித்துறை ஆலோசனைப் பிரிவிலும் தீவிரமாகப் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் பழைய நிர்வாகிகளின் தலைமையில் இயங்கும் இந்த இளைஞர் இயக்கம் தற்போது நாடு முழுவதும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியர் காலியிடங்கள் மற்றும் மாணவர் நலன் குறித்து கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த முழக்கங்களையே பிறிதொரு அமைப்பின் மூலம் ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>