<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 17 Sep 2026 10:12:26 +0000</lastBuildDate><item><title>பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட அழகுசாதன கிரீமை பயன்படுத்திய 18 பெண்களுக்கு சிறுநீரக கோளாறு: இந்திய மருத்துவர்கள் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/kidney-disorder-in-18-women-after-using-pakistani-cosmetic-cream-indian-doctors-warn</link><comments>https://www.maalaimalar.com/news/national/kidney-disorder-in-18-women-after-using-pakistani-cosmetic-cream-indian-doctors-warn#comments</comments><guid isPermaLink="false">1bf3a402-db57-459d-b629-67235c3534f2</guid><pubDate>Thu, 17 Sep 2026 09:45:10 +0000</pubDate><atom:updated>2026-09-17T09:45:10.854Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Skin Care,kidney disorder,skin whitening,சிறுநீரக கோளாறு,சாந்தினி ஒயிட்னிங் கிரீம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7kaoaqjc/Untitled-design-62.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pakistan cosmetic cream kidney damage alert]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7kaoaqjc/Untitled-design-62.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட அழகு சாதன பொருட்களை பயன்படுத்திய நபர்களுக்கு சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டு புரதம் வெளியேறியதை தொடர்ந்து, அந்த பொருட்களை இந்தியாவில் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டாம் என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE">மகாராஷ்டிரா</a> மாநிலம் நாக்பூரில் உள்ள அழகு சாதன விற்பனை மையங்களில், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கோரி பியூட்டி கிரீம், சாந்தினி ஒயிட்டனிங் கிரீம் ஆகியவை உரிய அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தன. </p><p>இதையடுத்து மருத்துவர் பரிந்துரை இல்லாமல் அந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்திய 18 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சிறுநீரகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><h3><strong>உடம்பில் பாதரசம்</strong></h3><p>இவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அழகு சாதன பொருட்களை பயன்படுத்தியவர்கள் உடம்பில் அளவுக்கு அதிகமாக சுமார் 100 முதல் 105 மடங்கு நச்சுத்தன்மை கொண்ட ‘பாதரசம்’ (mercury) இருப்பது கண்டறியப்பட்டது.</p><p>இதையடுத்து பாதிக்கப்படவர்களின் சிறுநீரகத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்களுக்கு மெம்ப்ரேனஸ் நெஃப்ரோபதி (Membranous Nephropathy) என்ற பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர்.</p><h3><strong>சிறுநீரக கோளாறு</strong></h3><p>இந்த வகையான சிறுநீரக பாதிப்பின் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து அதிகளவிலான புரதம் சிறுநீர் வழியாக வெளியேறி கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.</p><p>மேலும் அவர்களுக்கு புரத ஆண்டிஜென் ஆன NELL-1 தொற்று இருப்பதும் பரிசோதனையின் முடிவில் கண்டறியப்பட்டது.</p><h3><strong>சிறுநீரக மருத்துவர்</strong></h3><p>இதுகுறித்து நாக்பூரை சேர்ந்த சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் மோனாலி சாஹூ கூறுகையில், “பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட அழகு சாதன பொருட்களை பரிசோதித்ததில், பாதரசத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பான அளவை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது” என்று கூறினார்.</p><p>இந்த சம்பவம் குறித்து பேசிய நாக்பூர் போலீசார், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு அழகுசாதன பொருள் நுகர்வோரை எப்படி சென்றடைந்தது என்பது கேள்விகளை எழுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.</p><p>மேலும் இந்த பொருட்கள் மருத்துவரின் பருந்துரைச்சீட்டு இல்லாமல் உள்ளூர் கடைகள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h3><strong>மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை</strong></h3><p>இந்த நிலையில் கோரி பியூட்டி கிரீம் மற்றும் சாந்தினி ஒயிட்டனிங் கிரீம், இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் அங்கீகரிக்கப்படாதவை என்றும், அவற்றில் அதிகளவில் நச்சுத்தன்மை கொண்ட உலோகங்கள் உள்ளதாகவும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) தெரிவித்துள்ளது.</p><p>மேலும் இந்த வகையான அழகு சாதன பொருட்களை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டாம் எனவும், முன்னதாக அவற்றை வாங்கி பயன்படுத்தியவர்கள் தங்கள் உடல்களில் ஏற்படும், முகம் அல்லது கால் வீக்கம், வழக்கத்திற்கு மாறான நுரைத்த சிறுநீர், சோர்வு போன்ற நோய் அறிகுறிகளை புறக்கணிக்க கூடாது என்றும் சிடிஎஸ்சிஓ எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>மேலும் இந்த பொருட்கள் மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் உள்ளூர் கடைகள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.</p>]]></content:encoded></item><item><title>அந்த மனசு தான் கடவுள்.. 10 வயதிலிருந்து தினமும் கிராமத்தின் சாலைகளை எதிர்பார்ப்பின்றி சுத்தம் செய்யும் 80 வயது முதியவர் </title><link>https://www.maalaimalar.com/news/national/an-80-year-old-man-who-has-been-cleaning-village-roads-daily-without-any-expectation-since-the-age-of-10</link><comments>https://www.maalaimalar.com/news/national/an-80-year-old-man-who-has-been-cleaning-village-roads-daily-without-any-expectation-since-the-age-of-10#comments</comments><guid isPermaLink="false">45a43685-e64f-4f58-b29f-b31b9d336bf9</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:28:56 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:28:56.087Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,social activist,சமூக ஆர்வலர்,west bengal,தூய்மைப் பணி,Sanitation Work</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/8mq0malh/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அசோக் தாதா]]></media:title><media:description type="html"><![CDATA[ அசோக் தாதா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/8mq0malh/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தை சேர்ந்த 80 வயது அசோக் தாதா பற்றிய கதை இது.</p> <p>படிப்பறிவும் பகுத்தறிவும் மிக்கதாக சொல்லிக்கொள்பவர்களே தாங்கள் செல்லும் சாலையிலும் பொது இடங்களிலும் குப்பைகளை வீச கூசுவதில்லை. </p><p>அப்படியிருக்க, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்கத்தை </a>சேர்ந்த 80 வயது அசோக் தாதா செய்து வரும் வேலைக்கு முனைவர் பட்டமே கொடுக்கலாம். (வங்காளத்தில் தாதா என்றால் பெரிய அண்ணன் என பொருள்). </p><p>தினமும் காலை எழுந்தவுடன் காபி குடித்து செல்போனில் சஞ்சரிப்பது பலருக்கு பழக்கமான ஒன்றாகிவிட்டது. அப்படி அசோக் தாதாவுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.</p> <p>கடந்த 70 ஆண்டுகளாக நாள் தவறாமல் தினமும் காலையில் எழுந்து பன்குராவில் உள்ள தனது கிராமத்தின் சாலைகளை விளக்குமாறால் பெருக்குகிறார் தாதா. இது அவரின் கடமை கிடையாது. மாறாக கடந்த 70 ஆண்டுகளாக அது அவருக்கு ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது.</p><p>10 வயதில் அவரின் இந்த தன்னார்வ சேவை தொடங்கியது. தன்னார்வ பணி என்பதை பலரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் சேர்ந்தால் மட்டுமே செய்யக்கூடிய பணி என நினைத்துக்கொள்கின்றனர். ஒரு தனி மனிதன் சமூக அக்கறையுடன் தன்னிச்சையாக முன்வந்து செய்யும் சிறு விஷயமும் தன்னார்வ பணியே.</p> <h2>எப்படி தொடங்கியது?</h2><p>அப்படியொரு தனிமனிதன் தன்னெழுச்சியாக 10 வயதில் எப்படி உருவாகியிருக்க முடியும் என கேள்வி வரலாம். அசோக் தாதா பள்ளியில் பிரைட் ஸ்டூடன்ட் ஆக இருந்துள்ளார். ஆனால் குடும்பத்தின் ஏழ்மை நிலை 4 ஆம் வகுப்போடு அவரை பள்ளியில் இருந்து துரத்தி அடித்தது. ஆனால் 4 ஆம் வகுப்பு டிராப் அவுட்க்கு, படித்த "மேதைகள்"களுக்குக்கு கூட வராத அக்கறை - சமூக அக்கறை 10 வயதில் வந்துள்ளது.</p><p>கையில் விளக்குமாற்றை எடுத்து தெருவை சுத்தம் செய்யத் தொடங்கினார். யாரிடமும் பணத்தை எதிர்பார்த்தோ, உணவை எதிர்பார்த்தோ அவர் இதை செய்யவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆண்டுகள் கடந்து அவர் இந்த பணியை செய்து வருகிறார்.</p><p>தினமும் காலை எழுந்து 2 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம சாலைகளை பெருக்குகிறார் அசோக் தாதா. எந்தவித நிலையான சம்பளமோ, மாத முடிவில் அப்ரைஸல் - சம்பள உயர்வோ அவருக்கு இல்லை!</p> <h2>எப்படி தொடர்கிறது?</h2><p>அவர் செய்வதை அவரை சுற்றி இருப்பவர்களாலேயே புரிந்து கொள்ளமுடியவில்லை. அவர் வினோதமான ஆள் என்றே ஊர் மக்கள் கருதினர். அவரின் வாழ்க்கையின் பெரும்பகுதியை இவ்வாறு சம்பளமற்ற தூய்மைப்பணியிலேயே கழித்துள்ளார். நாளின் மற்ற நேரங்களில் வயிற்றுப் பிழைப்புக்காக வெவ்வேறு வேலைகளை செய்து வந்துள்ளார். </p><p>அவருக்கு திருமணமான பின்னர் அவரது மனைவி, இந்த சுத்தம் செய்யும் வேலையை நிறுத்தும்படி எவ்வளோ கேட்டுள்ளார். ஆனால் அசோக் தாதா கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் அவரை மனைவி புரிந்துகொண்டு பின்னர் அவருக்கு பிடித்ததை செய்வதை தடுக்கவில்லை. இந்த தம்பதி தினக்கூலி பணிகள் மூலம் மாதம் ரூ.3000 த்தில் குடும்பம் நடத்தி வருகிறது.</p> <p>உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் தாதா காலையில் எழுந்து தெருக்களை பெருக்கும் பணியை நிறுத்துவதில்லை. தினமும் இவ்வாறு தொடர்ந்து வெயிலின் கீழ் சாலைகளை பெருக்குவது அவரின் உடல்நலனிலும் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இல்லை. சில வருடங்கள் முன் அவருக்கு தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்.</p><p>நாம் ஒரு காய்ச்சலில் விழுந்தாலே வேலைகளுக்கு முழுக்கு போட்டு விடுகிறோம். ஆனால் தாதா மரணத்தின் அருகே சென்று குணமாகி திரும்ப வந்து இந்த தள்ளாத வயதிலும் தனது சேவையை தொடர்கிறார். </p> <p>அது சுவாசிப்பதை போல, பார்ப்பதை போல, தூங்கி எழுவதை போல அவரின் வாழ்க்கையோடு ஒரு அங்கமாக மாறிவிட்டது. அவரை பொறுத்தவரை தெருக்களை கூட்டுவது வெறுமனே தூசியை அகற்றுவது மட்டும்மல்ல. மக்கள் நடந்துபோக ஒரு தூய்மையான பாதையை உருவாக்க வேண்டும் என்பதே அவரின் விளைவு.</p><p>அசோக் தாதாவின் பணி ஒன்றை நமக்கு முகத்தில் அறைந்தாற்போல உணர்த்துகிறது. சமூக சேவை என்பது படாடோபமான அமைப்புகளில் இணைந்துதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. கையில் ஒரு விளக்ககுமாற்றை எடுத்து நாம் இருக்கும் பகுதியை தூய்மைப்படுத்துவதும் சமூக சேவையே. அதுகூட வேண்டாம், குறைந்தபட்சம் நமது குப்பைகளை கீழே போடாமல் அதற்கான குப்பைத்தொட்டியில் போடுவதே நாம் இந்த சமூகத்திற்கு செய்யும் மிகப்பெரிய சமூக சேவைதான்!.</p>]]></content:encoded></item><item><title>தெருநாய்கள் தொல்லையால் ஆத்திரம்: அதிகாரி மேஜையில் நாய்க்குட்டிகளை விட்டு யுவசேனா வினோத போராட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/stray-dogs-anger-yuvasena-protest-puppies-on-officer-desk</link><comments>https://www.maalaimalar.com/news/national/stray-dogs-anger-yuvasena-protest-puppies-on-officer-desk#comments</comments><guid isPermaLink="false">fc4c0b25-68a5-4f82-9785-f862414b8d83</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:27:21 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:27:21.017Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>stray dogs,maharashtra state,தெருநாய்கள்,நாசிக்,தெருநாய்கள் கருத்தடை,Yuva Sena,Nashik District,யுவசேனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/6c2gxcj1/GRH.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ stray dogs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/6c2gxcj1/GRH.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாசிக் மாவட்டத்தில் உள்ள நிஃபாட் நகர் பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்து ரூபாய் நோட்டு மாலையுடன் போராட்டம் நடைபெற்றது.</p><p>மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் நிஃபாட் நகர்ப் பகுதியில் கடந்த சில நாட்களாகத் தெருநாய்களின் தொல்லை கடுமையாக அதிகரித்து வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். </p><p>நாய்கள் கடித்து பலர் காயமடைந்துள்ள நிலையில், தற்போதைய கணபதி விசர்ஜன விழாக் காலத்திலும் மக்கள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து நிஃபாட் நகர் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.</p><h2>வி<strong>னோத போராட்டம்</strong></h2><p>அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் ஆத்திரமடைந்த சிவசேனாவின் இளைஞர் அமைப்பான <a href="https://www.maalaimalar.com/news/national/pile-of-torn-currency-notes-found-in-park-trader-discarded-them-out-of-fear-of-his-wife">யுவசேனாவின் </a>நாசிக் மாவட்டத் தலைவர் விக்ரம் ரந்தாவே தலைமையில் நிர்வாகிகள் வினோத போராட்டத்தைக் கையிலெடுத்தனர். நிஃபாட் நகர் பஞ்சாயத்து முதன்மை அதிகாரி தீரஜ் பாம்ரேவின் அலுவலகத்திற்குச் சென்ற போராட்டக்காரர்கள், தாங்கள் சாக்கில் அடைத்து எடுத்து வந்த இரண்டு தெருநாய்க்குட்டிகளைப் பிரித்து, அதிகாரியின் அலுவலக மேஜை மீதே திறந்து விட்டனர். திடீரென மேஜை மீது விடப்பட்ட நாய்க்குட்டிகள் அங்குமிங்கும் ஓடி பதற்றத்துடன் காணப்பட்டன.</p><h2>ரூபாய் நோ<strong>ட்டு மாலையுடன் கண்டன</strong> குரல்</h2><p>நாய்க்குட்டிகளை மேஜை மீது விட்டதோடு நிறுத்தாமல், அதிகாரி தீரஜ் பாம்ரேவின் மேஜை மீது ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை ஒன்றையும் வைத்து யுவசேனா தொண்டர்கள் தங்களுக்கெதிரான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். நகராட்சிக் கட்டுப்பாடு இல்லாதது குறித்தும், வெறும் டெண்டர் நடைமுறைகளில் மட்டுமே கவனம் செலுத்தி மக்கள் பிரச்சனைகளைப் புறக்கணிக்கும் நிர்வாகப் போக்கை கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.</p><h2>போ<strong>ராட்டம் எச்சரிக்</strong>கை</h2><p>தெருநாய்களைக் கட்டுப்படுத்த உடனடி கருத்தடை முகாம்களை நடத்த வேண்டும், நாய்களைப் பிடிக்கும் முறையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்களைத் திரட்டி மீண்டும் அதிகாரியின் அறையிலேயே தெருநாய்களை விட்டுப் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுப்போம் என்று விக்ரம் ரந்தாவே எச்சரித்துள்ளார். அரசு அலுவலகத்தில் தெருநாய்களை விட்டு அரங்கேறிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>700 வயது.. இந்தியாவில்  உள்ள உலகின் மிக வயதான ஆலமரம் பற்றி தெரியுமா? </title><link>https://www.maalaimalar.com/news/national/700-years-old-do-you-know-about-the-oldest-banyan-tree-in-indiaand-the-world</link><comments>https://www.maalaimalar.com/news/national/700-years-old-do-you-know-about-the-oldest-banyan-tree-in-indiaand-the-world#comments</comments><guid isPermaLink="false">27c55c2c-c8fa-4e2d-83b8-3f5c06a0d286</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:13:27 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:13:27.287Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,banyan tree,study,ஆய்வு,ஆலமரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/avcxre87/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆலமரம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆலமரம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/avcxre87/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் 700 ஆண்டுகால ஆலமரம் உலகத்திலேயே தற்போதுள்ள மிக வயதான ஆலமரம் என்ற பெருமையை பெற்றுள்ளது.</p> <p>மரங்கள் மனித வரலாறை சுமந்து நிற்கும் தூபிகள். தலைமுறைகளின் நினைவை சுமக்கும் கலன்கள். </p><p>மரங்கள் வெவ்வேறு வகையாக மனிதனுக்கும் இயற்கை சமநிலைக்கும் உதவுகின்றன. குறிப்பாக கிராமங்களில் அவை மனிதர்களுடன் ஆழ்ந்த பிணைப்பை கொண்டுள்ளன.</p><p>பீகாரின் முங்கர் மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த ஒரு <a href="https://www.maalaimalar.com/health/aalamaram-help-health">ஆலமரம் </a>பண்டைய காலம் முதல் இருப்பதாக மக்கள் நம்பி வந்தனர். </p> <p>இந்நிலையில் அந்த மரம் 700 வருட காலம் பழமையானது என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன்மூலம் உலகின் மிக வயதான ஆலமரம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆலமரம்</h2><p>ஒரு குடும்பம் தலமைமுறை தலைமுறையாக தழைப்பதை, ஆலமரம் விழுது விடுவதற்கு ஒப்பாக பேசுவர். </p><p>இந்தியாவில் உள்ள மரங்களில் சாதரணமாக எங்கும் தென்படுவன ஆலமரம். ஆழாமாக அகலமாக வேர் விடும் ஆலமரங்கள் அதன் விழுதுகள் மற்றும் அகன்ற தோற்றத்தின் கீழ் பலருக்கு நிழல் தருகின்றன.</p><p>இந்த தன்மையால் கிராமங்களில் மக்கள் ஒன்றுகூடுவதும் இந்த ஆலமரங்களின் கீழேயாம். அதன் கலாச்சர முக்கியத்துவம் ஒருபுறம் இருந்தாலும், ஆலமரங்களில் அதன் வயதை கண்டறிய உதவும் வளையங்கள் உருவாவதில்லை.</p><p>மரங்களின் வயதை கண்டறிய அவற்றில் உருவாகும் வளையங்களின் எண்ணிக்கையை வைத்து கணிப்பது டென்ட்ரோக்ரோனாலஜி எனும் அறிவியல் முறை ஆகும். ஆனால் ஆலமரங்களில் அவ்வாறான வளையங்கள் உருவாவதில்லை என்பதால் அதன் வயதை கணக்கிடுவது சவாலாக உள்ளது.</p> <h2>எப்படி சாத்தியமானது?</h2><p>லக்னோவில் இயங்கி வரும் பீர்பால் சஹானி பேலோசைன்ஸ் கல்வி நிறுவனத்தில் பணிபுரியர்க் முனவைர் த்ரினா போஸிடம் பீகார் வனத்துறை ஒரு கோரிக்கையுடன் சென்றது. </p><p>மக்கள் பண்டைய காலத்தை சேர்ந்தது எனக் கருதும் அந்த ஆலமரத்தின் உண்மையான வயது என்ன என்பதை கண்டறிய ஒரு தனித்துவமான அறிவியல் முறைமை தேவையாக இருந்தது.</p><p>முனைவர் மாயங் சேகர், முனைவர் அகிலேஷ் யாதவ் உடன் இணைந்து முனைவர் த்ரினா போஸ் ஆராய்ச்சியில் இறங்கினார். அந்த மரத்தின் உள் மையத்தில் உள்ள ஆல்பா செலுலோஸ் (தாவர செல் சுவர்களில் காணப்படும்) ஐ சேகரித்த அவரின் குழு அதை ஆய்வுக்கு உட்படுத்தியது. ஏனெனில் pith எனும் உள் மையம் தான் அந்த மரம் உருவாக தொடங்கிய உயிரியல் புள்ளி. அங்கு தான் அந்த மரம் ஆரம்பத்தில் உருவாக்கிய மரக்கட்டை இருக்கும். </p> <p>இந்த மாதிரிகள் அறிவியல் ரீதியாக நவீன முறையில் ஆராயப்பட்டு அதன் வயது 700 ஆக இருக்கும் கண்டறியப்பட்டது.</p><p>அந்த மரத்தில் அருகில் 300 முதல் 350 ஆண்டுகளாக பழமையான பரோ பங்களா என்ற காலனிய கால மாளிகை உள்ளது. அந்த சமயத்தில் அந்த ஆலமரம் நடப்பட்டிருக்கலாம் என்று சில ஊகங்கள் இருந்தன. ஆனால் அந்த மரம் 700 ஆண்டுகள் முந்தையது என்றும் அந்த மரத்தை ஒட்டி தான் பங்களா கட்டப்பட்டது என்பதும் தற்போது ஊர்ஜிதமாகியுள்ளது.</p><p>இந்த ஆய்வு இந்த மரத்தின் வயதை கண்டுபிடித்ததோடு நில்லாமல் உலகெங்கிலும் பழமையான மரத்தின் வயதை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஒடிசாவில் விநாயகர் சிலைகளை கரைக்கும்போது நீரில் மூழ்கி 9 பேர் உயிரிழப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/9-people-drown-while-immersing-ganesha-idols-in-odisha</link><comments>https://www.maalaimalar.com/news/national/9-people-drown-while-immersing-ganesha-idols-in-odisha#comments</comments><guid isPermaLink="false">5d8ad1e6-63f7-40a3-95b6-7da9d2fe3ba2</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:56:22 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:56:22.836Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒடிசா,Odisha,விநாயகர் சதுர்த்தி,நீரில் மூழ்கி பலி,drowned,Vinayaka Chaturthi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/im48rf1s/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விநாயகர் சிலை கரைப்பு ]]></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சிலை கரைப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/im48rf1s/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒடிசாவில் விநாயகர் சிலைகளை கரைக்கும்போது நீரில் மூழ்கி 9 பேர் உயிரிழந்தள்ளனர்.</p><p>நாடு முழுவதும் கடந்த திங்களன்று <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/rs-59000-crore-business-during-vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தி </a>விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து பண்டிகையின் ஒரு பகுதியாக செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கும் சடங்குகள் நடந்து வருகின்றன. </p><p>அந்த வகையில் வடகிழக்கு மாநிலமான ஒடிசாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியின்போது பல உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. </p> <h2>உயிரிழப்புகள்</h2><p>கடந்த 24 மணி நேரத்தில் ஒடிசாவில் நடைபெற்ற வெவ்வேறு சிலை கரைப்பு நிகழ்வுகளில் மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>ஒடிசாவின் கஞ்சம், சுந்தர்கார், பத்ரக், கோரபுட் மற்றும் காலஹண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த இறப்புகள் பதிவாகி உள்ளன.</p><p>ஒடிசா தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைக்கான துறையினர் வெளியிட்ட தகவலின்படி, ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் எர்சாமா நகரில் உள்ள கோபால்பூர் பகுதியில் ஒடானலா என்ற இடத்தில் ஆற்றில் மூழ்கிய 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் காணாமல் போயுள்ளனர்.</p> <p>இதுதவிர பல்வேறு பகுதிகளிலும் பலர் பலியாகியும், காணாமல் போயும் உள்ளனர். மொத்தம் 9 பேர் சடலங்களாகவும், 7 உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.</p><p>இந்த சம்பவங்களுக்கு ஒடிசா முதல்வர் மோகன் சரண், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பூங்காவில் கிழிந்த ரூபாய் நோட்டு குவியல்: மனைவிக்கு பயந்து வீசிய வியாபாரி</title><link>https://www.maalaimalar.com/news/national/pile-of-torn-currency-notes-found-in-park-trader-discarded-them-out-of-fear-of-his-wife</link><comments>https://www.maalaimalar.com/news/national/pile-of-torn-currency-notes-found-in-park-trader-discarded-them-out-of-fear-of-his-wife#comments</comments><guid isPermaLink="false">e0cef5d6-e17f-4e23-8415-1b3af2e4f6c7</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:49:49 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:49:49.525Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரூபாய் நோட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/v3cv8buh/currencynote.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கிழிந்த ரூபாய் நோட்டு குவியல்]]></media:title><media:description type="html"><![CDATA[ கிழிந்த ரூபாய் நோட்டு குவியல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/v3cv8buh/currencynote.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துவாரகநகர் சிட்டி சென்ட்ரல் பூங்காவில் மரத்தின் அடியில் கிழிந்த ரூ.500, ரூ.50, ரூ.20, ரூ.10 நோட்டுகள், ஒரு பெண்ணின் பான் கார்டு, பழைய எல்.ஐ.சி ஆவணங்கள் கிடந்தன. பொதுமக்கள் தகவலின்பேரில் போலீசார் சிசிடிவி மூலம் கே.ஜி.எச் டவுன் வியாபாரி ஆதிமூலபு சூர்ய ராவை கண்டறிந்து, அவர் மனைவிக்கு பயந்து சேதமடைந்த நோட்டுகளை கிழித்து வீசியது தெரியவந்தது.</strong></em></p><h2><strong>கிழிந்த ரூபாய் நோட்டுகள்</strong></h2><p>ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் துவாரகநகர் ஆர்.டி.சி வளாகத்திற்கு அருகிலுள்ள சிட்டி சென்ட்ரல் பூங்காவில் ஒரு மரத்தின் அடியில் கிழிந்த <a href="https://www.maalaimalar.com/topic/ரூபாய்-நோட்டு">ரூபாய் நோட்டுகள்</a> கிடந்தன.</p><p>நடைப்பயிற்சிக்கு வந்த மக்கள் இந்த நோட்டுகளைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கிழக்கு உதவி ஆணையர் கே.லட்சுமண மூர்த்தி மற்றும் டூ டவுன் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று நோட்டுகளை ஆய்வு செய்தனர். </p><p>கிழிந்த மற்றும் சேதமடைந்த ரூ.500 நோட்டுகள், அத்துடன் ரூ.50, ரூ.20 மற்றும் ரூ.10 நோட்டுகளும் அதில் இருந்தன. மேலும், ஒரு பெண்ணின் பான் கார்டு மற்றும் பழைய எல்.ஐ.சி பத்திர ஆவணங்களும் அதில் இருந்தன. </p><h2><strong>போலீசார் விசாரணை</strong></h2><p>போலீசார் அவற்றைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில், கே.ஜி.எச் டவுனில் உள்ள தாடி விதியைச் சேர்ந்த வியாபாரி ஆதிமூலபு சூர்ய ராவ் என்பவர்தான் இந்த நோட்டுகளைக் கொட்டியுள்ளார் என்பது தெரியவந்தது. </p><p>அவரிடம் விசாரித்த போது, ​​ புதிய ரூபாய் நோட்டுகளை குடும்பத்தினருக்கு தெரியாமல்  மறைத்து வைத்திருந்தேன். பல நாட்களாக பெட்டியிலேயே விடப்பட்டிருந்ததால் ரூபாய் நோட்டுகள் அழுக்காகி சேதமடைந்துவிட்டதாக அவர் கூறினார். மனைவி, குடும்பத்தினர் திட்டிவிடுவார்கள் என்ற பயத்தில் அவற்றைக் கிழித்து எறிந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.</p><p>இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>பெங்களூருவில் பரபரப்பு: காதல் மனைவியை கடத்திய ராஜஸ்தான் குடும்பம்- சினிமா பாணியில் கார் சேஸிங், 6 பேர் படுகாயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/love-marriage-kidnap-drama-in-bengaluru-rajasthan-family-car-chase-ends-in-accident</link><comments>https://www.maalaimalar.com/news/national/love-marriage-kidnap-drama-in-bengaluru-rajasthan-family-car-chase-ends-in-accident#comments</comments><guid isPermaLink="false">83601813-1cee-46a5-9881-0d3b7fed24a3</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:18:14 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:18:14.219Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,bengaluru,Rajasthan,woman rescued,ராஜஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/z28emmdm/car.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajasthan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/z28emmdm/car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெற்றோருக்குத் தெரியாமல் தப்பி வந்த இளம் தம்பதியினர், பெங்களூருவில் உள்ள அக்ரஹாரா தசராஹள்ளி பகுதியில் வீடு எடுத்து அமைதியாக வசித்து வந்தனர்.</p><p>பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனைத் திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வசித்து வந்த 21 வயது இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினர் ஆட்களை அனுப்பி கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல்காரர்களின் காரை பொதுமக்கள் விரட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்துகளில் 6 பேர் படுகாயமடைந்தனர்.</p><h2>காதல் திரு<strong>மணம்</strong> </h2><p><a href="https://www.maalaimalar.com/sports/womens-t20-cricket-rankings-indias-srisarani-tops-icc-bowling-charts">ராஜஸ்தான் </a>மாநிலத்தைச் சேர்ந்த பூஜா(21) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஓம் பிரகாஷ்(23) என்பவரும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பூஜாவின் குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பெற்றோருக்குத் தெரியாமல் தப்பி வந்த இளம் தம்பதியினர், பெங்களூருவில் உள்ள அக்ரஹாரா தசராஹள்ளி பகுதியில் வீடு எடுத்து அமைதியாக வசித்து வந்தனர்.</p><h2>கடத்தல் ச<strong>ம்பவம்</strong></h2><p>இந்நிலையில், நேற்று மாலை பூஜாவின் குடும்பத்தினரால் அனுப்பப்பட்ட நான்கு பேர் கொண்ட கும்பல், தம்பதியினரின் வீட்டிற்குள் புகுந்தது. ஓம் பிரகாஷை மிரட்டிய அக்கும்பல், பூஜாவை பலவந்தமாக இழுத்துச் சென்று காரில் ஏற்றி கடத்த முயன்றது. பூஜாவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் ்கத்தினர், உடனடியாக காரை மறிக்க முயன்றனர். ஆனால், கடத்தல்காரர்கள் காரை அதிவேகமாக இயக்கித் தப்பியோடினர்.</p><h2>சினி<strong>மா பாணி சே</strong>ஸிங்</h2><p>சுதாரித்துக் கொண்ட பகுதி மக்கள், தங்கள் வாகனங்களில் கடத்தல் காரரை சினிமா பாணியில் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். இதனால் பீதியடைந்த காரை ஓட்டிச் சென்ற நபர், சாலையில் சென்ற பிற வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக மோதினார். இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2><strong>3 பேர் கை</strong>து</h2><p>காரை நிறுத்த முயன்ற பொதுமக்களை கடத்தல்காரர்கள் வெட்டுக்கத்தியால் தாக்க முயன்றதாகவும், கல்வீச்சு தாக்குதலுக்குப் பிறகே கார் நிறுத்தப்பட்டதாகவும் சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இறுதியில் பொதுமக்கள் காரைச் சூழ்ந்து பூஜாவை பத்திரமாக மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து விஜயநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், ராஜஸ்தானைச் சேர்ந்த ராகேஷ் (31), கரண் (25) மற்றும் அயான் (18) ஆகிய மூவரைக் கைது செய்துள்ளனர். தப்பியோடிய கார் டிரைவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நாடு முழுவதும் சிலைகள் பிரதிஷ்டை: விநாயகர் சதுர்த்தியில் ரூ.59 ஆயிரம் கோடி வர்த்தகம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/rs-59000-crore-business-during-vinayagar-chaturthi</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/rs-59000-crore-business-during-vinayagar-chaturthi#comments</comments><guid isPermaLink="false">64a1f469-f48a-440f-81e9-472630d44484</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:05:06 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:05:06.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,விநாயகர் சிலைகள்,Vinayagar statue</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/2t4x1vnj/vinayagar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விநாயகர் சிலைகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சிலைகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/2t4x1vnj/vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியின் போது ரூ.45,000 முதல் 59,000 கோடி வரை வர்த்தகம் நடந்துள்ளது. இதில் ஐதராபாத்தின் பங்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அது சுமார் ரூ.10,000 கோடியாக இருக்கலாம் என்று வர்த்தக வட்டாரங்கள் மதிப்பிட்டுள்ளன.</strong></em> </p><h2><strong>விநாயக சதுர்த்தி விழா</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/விநாயகர்-சதுர்த்தி">விநாயக சதுர்த்தி</a> விழா நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.  மூலைமுடுக்குகளிலெல்லாம் விநாயகப் பெருமான் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.</p><p>அவரை அலங்கரிப்பதற்கும் வழிபடுவதற்கும் மண்டபங்கள், விளக்குகள், டிஜேக்கள், இசைக்குழுக்கள், கூடாரங்கள், மலர்கள், பழங்கள், பிரசாதங்கள் போன்றவை அவசியமாகின்றன. கணேஷ் ஆகமத்துடன் தொடங்கும் கொண்டாட்டங்கள், விசர்ஜனம் வரை தொடர்கின்றன. </p><p>அவை நகரத்தின் பொருளாதாரத்திற்குப் புத்துணர்வை அளிக்கின்றன. மங்களகரமான நிகழ்வுகள் அல்லது வர்த்தகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமல்லாமல், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கூடாரங்களை நடத்துபவர்களுக்கும் இவை பெரும் பலனை தந்துள்ளன.</p><p>மகாராஷ்டிராவிற்குப் பிறகு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள்தான் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாகக் கொண்டாடி உள்ளனர்.</p><h2><strong>வர்த்தகம்</strong></h2><p>சில சந்தை மதிப்பீடுகளின்படி, நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியின் போது ரூ.45,000 முதல் 59,000 கோடி வரை வர்த்தகம் நடந்துள்ளது. இதில் ஐதராபாத்தின் பங்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அது சுமார் ரூ.10,000 கோடியாக இருக்கலாம் என்று வர்த்தக வட்டாரங்கள் மதிப்பிட்டுள்ளன. </p><p>நாம் பக்தியுடன் விநாயகப் பெருமானுக்குச் செலவிடும் ஒவ்வொரு ரூபாயும், அது நமக்கு நேரடியாக மன மகிழ்ச்சியைத் தந்தாலும் சரி, மறைமுகமாக சில லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது என்பது உண்மையே. </p><p>இந்த விநாயகர் சதுர்த்தியின் போது, ​​இரண்டு லட்சம் பேர் நேரடியாகவும், நான்கு லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.</p><p>விநாயகர் சதுர்த்தி என்பது ஒரு பக்திக் கொண்டாட்டம் மட்டுமல்ல, ஒரு பெரிய வணிக வாய்ப்பும் கூட என்றும் தெரியவந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜம்மு காஷ்மீர் உதம்பூரில் இரவு முழுவதும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/two-terrorists-killed-in-overnight-gunfight-in-udhampur-jammu-and-kashmir</link><comments>https://www.maalaimalar.com/news/national/two-terrorists-killed-in-overnight-gunfight-in-udhampur-jammu-and-kashmir#comments</comments><guid isPermaLink="false">0129d010-da1b-4029-bbcb-2f80de419547</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:42:49 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:42:49.906Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>terrorists,ஜம்மு காஷ்மீர்,jammu kashmir,பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை,crpf,Udhampur,உதம்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/xgogpnhi/hg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gun battle in Udhampur]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/xgogpnhi/hg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று அதிகாலை வரை நீடித்த இந்த கடுமையான துப்பாக்கிச்சூட்டின் முடிவில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். </p><p>ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று இரவு நடந்த கடுமையான மோதலில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.</p><h2>நள்<strong>ளிரவு மோத</strong>ல்</h2><p>உதம்பூர் மாவட்டத்தின் மஜால்தா எல்லைக்குட்பட்ட சோஹன் மற்றும் அதனை சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், இந்திய ராணுவம், <a href="https://www.maalaimalar.com/news/national/pakistan-vessel-collides-with-indian-navy-ship-india-summons-diplomat-and-lodges-protest">ஜம்மு காஷ்மீர் </a>காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எஃப் ஆகிய படைகள் இணைந்து அந்தப் பகுதியை முழுமையாக வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கின.</p><p>வளைத்து பிடிக்க முயன்றபோது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாகப் பதில் தாக்குதலில் ஈடுபட்ட வீரர்கள், தீவிரவாதிகளின் தப்பிச் செல்லும் முயற்சியை முறியடித்து நள்ளிரவு முழுவதும் தீவிர எதிர்தாக்குதலைத் தொடர்ந்தனர்.</p><h2>தீவிர தே<strong>டுதல் வே</strong>ட்டை</h2><p>இன்று அதிகாலை வரை நீடித்த இந்த கடுமையான துப்பாக்கிச்சூட்டின் முடிவில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து பயங்கரவாதிகள் பயன்படுத்திய நவீன ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களின் துல்லியமான அடையாளங்களைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p>மேலும் அப்பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் ஒளிந்திருக்கின்றனரா என்பதை உறுதி செய்ய பாதுகாப்புப் படையினர் கூடுதல் வீரர்களை வரவழைத்து, பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பிறந்தநாள்: பாஜகவின் &apos;சேவா சங்கல்ப் அபியான்&apos; தொடக்கம்- குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-birthday-bjp-seva-sankalp-abhiyan-launch-president-murmu-greetings</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-birthday-bjp-seva-sankalp-abhiyan-launch-president-murmu-greetings#comments</comments><guid isPermaLink="false">6c57fc06-55a8-4ace-8c79-684c483d928c</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:25:24 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:25:24.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,President Murmu,பிரதமர் மோடி பிறந்தநாள்,குடியரசுத் தலைவர் முர்மு,PM Modi&apos;s Birthday,Seva Sankalp Abhiyan,சேவா சங்கல்ப் அபியான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/hhm5v7da/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi's Birthday  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/hhm5v7da/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்தியா உலகளவில் முன்னணி பொருளாதார சக்தியாகத் திகழ்கிறது.</p><p>பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு நாட்டின் உயர் பதவிகளில் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அவரது 25 ஆண்டுகால பொதுச்சேவையை கொண்டாடும் வகையில் நாடு தழுவிய ஒரு மாத சேவை பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.</p><h2>தலை<strong>வர்கள் வாழ்</strong>த்து</h2><p>இந்தியப் <a href="https://www.maalaimalar.com/news/national/more-than-88-lakh-lamps-to-be-lit-on-modis-birthday-in-gujarat">பிரதமர் நரேந்திர மோடி</a> இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், குஜராத்தின் முதலமைச்சராகவும் பின்னர் நாட்டின் பிரதமராகவும் கடந்த 25 ஆண்டுகளாகப் பிரதமர் மோடி ஆற்றிவரும் இணையற்ற பொதுச்சேவையையும், தேசக் கட்டுமானப் பணிகளையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். நல்ஆளுமைக்கு அவர் பல புதிய இலக்கணங்களை உருவாக்கியுள்ளதோடு, நாட்டின் பாரம்பரியத்தையும் நவீன வளர்ச்சியையும் சமநிலையில் கொண்டு செல்லும் அவருக்கு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்க இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p>அதேபோல், துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்தில், பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்தியா உலகளவில் முன்னணி பொருளாதார சக்தியாகத் திகழ்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய டிஜிட்டல் புரட்சி, உள்கட்டமைப்பு மற்றும் விண்வெளித் துறையில் இந்தியா அடைந்துள்ள அபார வளர்ச்சியை அவர் பட்டியலிட்டுப் பாராட்டியுள்ளார்.</p><h2>'சேவா சங்கல்<strong>ப் அபியான்' பி</strong>ரசாரம்</h2><p>பிரதமரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 முதல் அவர் முதன்முதலில் குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்ற அக்டோபர் 7-ஐத் தாண்டி, அக்டோபர் 17 வரை ஒரு மாத காலத்திற்கு 'சேவா சங்கல்ப் அபியான்' (சேவை உறுதிமொழிப் பிரசாரம்) என்ற சிறப்பு இயக்கத்தை பாரதிய ஜனதா கட்சி தொடங்கியுள்ளது. இதில், நாடு முழுவதும் இலவச மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள் மற்றும் தூய்மைப் பணிகள் நடத்தப்படும். இன்று மாலை பொதுமக்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்ற பயனாளிகள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. </p><p>ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக சென்றடைவதை உறுதி செய்ய 'சேவை சேது' முகாம்களும், இளைஞர்களை ஒருங்கிணைக்கும் 'சேவை யாத்திரைகளும்' நடத்தப்படவுள்ளன. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா மற்றும் பல மாநில முதலமைச்சர்கள் இந்த சேவை இயக்கத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கி வைத்துள்ளனர். மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல முக்கியத் தலைவர்களும் பிரதமருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மஹுவா மொய்த்ரா மீது பாஜகவினர் முட்டை வீச்சு.. பாதுகாப்பு வழங்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிக்கு  வீடியோ மெசேஜ் </title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-members-hurl-eggs-at-mahua-moitra-video-message-sent-to-supreme-court-judge-who-refused-to-grant-security</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-members-hurl-eggs-at-mahua-moitra-video-message-sent-to-supreme-court-judge-who-refused-to-grant-security#comments</comments><guid isPermaLink="false">0fe2916e-3d38-4bf0-99f2-80c47943dfab</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:07:31 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:07:31.334Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,trinamool congress,மஹுவா மொய்த்ரா,Mahua Moitra,west bengal,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/t4c49oyr/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மஹுவா மொய்த்ரா]]></media:title><media:description type="html"><![CDATA[ மஹுவா மொய்த்ரா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/t4c49oyr/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களை எம்பி மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><h2></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்கத்தின்</a> நாடியா மாவட்டத்தில் உள்ள தனது தொகுதியான கிரிஷ்ணராஜ சகாரில் நேற்று நடந்த அரசியல் கூட்டத்திற்கு மஹுவா சென்றுள்ளார். கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த மஹுவாவை அங்கு கூடிய பாஜக தொண்டர்கள் கருப்பு கொடி காட்டி  "திரும்பிப் போ" என கோஷம் எழுப்பி அமளி செய்துள்ளனர். </p> <p>அவர்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட கைகலப்பு மூண்டது. இந்த பரபரப்பில் தனது காருக்கே திரும்பிச் சென்று ஏற முயன்ற மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீசப்பட்டுள்ளது.</p> <h2>வீடியோ</h2><p>இந்த சம்பவத்தை தொடர்ந்து காரில் அமர்ந்தபடியே முட்டை வீசப்பட்ட கோலத்தில் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்ட மொய்த்ரா, இந்த தாக்குதல் நடக்கும் என தனக்கு முன்னரே போலீசார் தகவல் தந்ததாகவும், இந்த தாக்குதலே போலீஸ் உதவியுடன் தான் நடந்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.</p><p>முன்னதாக ஏற்கனவே ஒரு முறை அவரது தொகுதியில் வைத்தே அவர் மீது முட்டை வீசப்பட்டது. இதனை தொடர்ந்து தனக்கு பாதுகாப்பு வேண்டி அவர் கல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் அங்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்காததால் உச்சநீதிமன்றத்தை அணுகிறார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Big shout out to Hon’ble Justice Dipankar Datta ! MiLord - I came to my constituency for a mtng informing <a href="https://x.com/WBPolice?ref_src=twsrc%5Etfw">@WBPolice</a> &amp; BJP workers with their help pelted eggs on me. True to your advice I faced them as a freedom fighter faced bullets. <a href="https://t.co/CxO3ApzjPL">pic.twitter.com/CxO3ApzjPL</a></p>&mdash; Mahua Moitra (@MahuaMoitra) <a href="https://x.com/MahuaMoitra/status/2100176610045640808?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>உச்சநீதிமன்ற நீதிபதி</h2><p>அவர் மனு மீதான விசாரணையில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா, மஹுவாவின் பாதுகாப்பு குறித்து கிண்டலாக, "இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டுக்காக துப்பாக்கி குண்டுகளை எதிர்கொண்டனர், இந்த சின்ன தாக்குதலுக்கு பயந்து பாதுகாப்பு வேண்டி உச்சநீதிமன்றத்தை அணுகுவது சரியல்ல" என கூறினார்.</p><p>இதனை குறிப்பிட்டு தற்போதைய முட்டை வீச்சுக்கு பின் பேசிய வீடியோவில் மஹுவா, "நீதிபதி அவர்களே, உங்கள் அறிவுரைப்படி நான் ஒரு சுதந்திர போராட்ட வீரர் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொண்டது போல நான் என் மீதான தாக்குதலை எதிர்கொண்டேன்" என பகடியாக தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>இந்திய கடற்படை கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் கப்பல் - தூதரக அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/pakistan-vessel-collides-with-indian-navy-ship-india-summons-diplomat-and-lodges-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/pakistan-vessel-collides-with-indian-navy-ship-india-summons-diplomat-and-lodges-protest#comments</comments><guid isPermaLink="false">2ad3c9f4-c055-4a42-8399-7802cca714c8</guid><pubDate>Thu, 17 Sep 2026 00:50:31 +0000</pubDate><atom:updated>2026-09-17T00:50:31.286Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,Ministry of External Affairs,INDIAN ARMY,இந்திய ராணுவம்,வெளியுறவு அமைச்சகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mj65gtur/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கப்பல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கப்பல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mj65gtur/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தான் கடற்படையை சேர்ந்த கப்பல் இந்திய கடற்படை கப்பலை மோதிய சம்பவத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.</p> <p>கடந்த செப்டம்பர் 15, அரபிக் கடலின் வடக்கே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">இந்​தி​ய கடற்​படை​யின்</a> போர்க் கப்​பல்  கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. </p><p>சா்வதேச நீா்பரப்பில் இந்​தி​ய கடற்​படை​ போர்க் கப்​பலை நோக்கி பாகிஸ்​தான் கடற்​படைக் கப்​பல் அதிக வேகத்​தில் மோதி​யது. இதில் பெரிய சேதம் ஏற்படவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சகம் முன்னதாக தெரிவித்திருந்தது. </p> <h2>கண்டனம்</h2><p>ஆயினும் பாகிஸ்​தான் கடற்​படைக் கப்​பல் மோதி​யது தொடர்​பாக, இந்​தி​யா​வுக்​கான பாகிஸ்​தான் தூதரக பொறுப்பு அதி​காரி சாத் வார்​ரைச்-ஐ, வெளி​யுறவுத்​துறை அமைச்​சகதுக்கு நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கடலில் பாகிஸ்​தான் கடற்​படை செய்தது ஏற்​றுக்​கொள்ள முடி​யாத ​ தொழில்​முறையற்ற நடவடிக்கை ஆகும்.</p> <p>இது, 1991 ஏப்​ரல் மாதம் இந்​தி​யா-​பாகிஸ்​தான் இடையே போடப்பட்ட ராணுவ நடவடிக்​கைகள் மற்​றும் படை நகர்​வு​கள் குறித்த முன்​கூட்​டிய தகவல் அளிக்​கும் ஒப்​பந்​தத்​தின் 10வது பிரிவுக்கு முரணானது என்று வெளி​யுறவு அமைச்​சகம் அவரிடம் தெரி​வித்​தது.</p><p>இது​போன்ற சம்​பவங்​கள் மீண்​டும் நடை​பெறாமல் தடுக்​கும் வகை​யில், இருநாட்டு ஒப்​பந்​த விதி​களை மதித்து, உரிய கவனத்​துடன் செயல்பட ​​பாகிஸ்​தான் அதி​காரி​களிடம் தெரிவிக்​கு​மாறு அந்​நாட்டு பொறுப்பு அதி​காரி​யிடம் இந்​தியா அறி​வுறுத்​தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>113 சலான்கள், ரூ. 10.68 லட்சம் அபராதம் நிலுவையில் இருந்த இருசக்கர வாகனம் பறிமுதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/gurugram-traffic-police-impounds-bike-with-113-pending-challans-worth-rs-1068-lakh</link><comments>https://www.maalaimalar.com/news/national/gurugram-traffic-police-impounds-bike-with-113-pending-challans-worth-rs-1068-lakh#comments</comments><guid isPermaLink="false">87ceb66d-ecf7-40f4-8e32-60e762835230</guid><pubDate>Wed, 16 Sep 2026 20:04:14 +0000</pubDate><atom:updated>2026-09-16T20:04:14.639Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Traffic Police,போக்குவரத்து காவல் துறை,gurugram,குருகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/96fnvd39/gurugram-traffic-police.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic: குருகிராம்போக்குவரத்து காவல் துறை

]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/96fnvd39/gurugram-traffic-police.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/gurugram">குருகிராம்</a> போக்குவரத்து காவல்  துறையினர் எம்.டி.ஐ. சௌக் (MDI Chowk) பகுதியில் நடத்திய வாகன சோதனையின்போது, ​​மொத்தம் ரூ. 10.68 லட்சம் மதிப்பிலான 113 நிலுவை சலான்களை (போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள்) கொண்ட ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.</p><p>90 நாட்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்தாத வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மூத்த போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். </p><h2>ஆவணங்கள் இல்லை:</h2><p>எம்.டி.ஐ. சௌக் பகுதியில் பணியில் இருந்த மண்டல அதிகாரியான ASI பிரவீன் குமார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ​​அவரது குழுவினர் ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்தனர். அப்போது வாகன ஓட்டி அதற்கான எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தவறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>"சரிபார்த்ததில், அந்த இருசக்கர வாகனத்தின் மீது 1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகன சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 113 சலான்கள் நிலுவையில் இருப்பதும், அதற்கான மொத்த அபராத தொகை சுமார் ரூ. 10.68 லட்சம் இருப்பதும் தெரியவந்தது.</p><h2>இருசக்கர வாகனம் பறிமுதல்:</h2><p>"தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது, மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் மற்றும் காப்பீடு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக இந்த சலான்கள் பெரும்பாலும் விதிக்கப்பட்டிருந்தன. போலீஸார் அந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்," என்று மூத்த போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.</p><p>போக்குவரத்து விதிகளை பின்பற்றவும், வாகனத்திற்கான அத்தியாவசிய ஆவணங்களை புதுப்பித்து வைத்திருக்கவும், நிலுவையில் உள்ள அபராத தொகையை உரிய நேரத்தில் செலுத்தவும் அனைத்து வாகன ஓட்டிகளையும் குருகிராம் போக்குவரத்து காவல் துறை செய்தி தொடர்பாளர் கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பிறந்தநாள்: குஜராத்தில் 88 லட்சத்திற்கும் அதிகமான விளக்குகள் ஏற்ற சிறப்பு ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/national/more-than-88-lakh-lamps-to-be-lit-on-modis-birthday-in-gujarat</link><comments>https://www.maalaimalar.com/news/national/more-than-88-lakh-lamps-to-be-lit-on-modis-birthday-in-gujarat#comments</comments><guid isPermaLink="false">c3a1a907-457e-40ba-8c8e-6db25dcbc5f9</guid><pubDate>Wed, 16 Sep 2026 18:05:04 +0000</pubDate><atom:updated>2026-09-16T18:05:04.389Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/39vszacu/PM-Modi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/39vszacu/PM-Modi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலம் முழுவதும் 18,500 இடங்களில் 88 லட்சத்திற்கும் அதிகமான மண் அகல் விளக்குகளை ஏற்றுதல், வத் நகரில் இருந்து வாரணாசிக்கு இருசக்கர வாகன பேரணி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆரத்திகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன், நாளை (செப்டம்பர் 17) பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> பிறந்தநாளும், அவரது 25 ஆண்டுகால பொதுவாழ்வு பணியும் கொண்டாடப்பட உள்ளன.</p><p>மாலை 7 மணிக்கு மாவட்டங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் என மாநிலம் முழுவதும் 'ஆசீர்வாத் நோ திவ்டோ' (ஆசீர்வாதத்தின் விளக்கு) நிகழ்ச்சி நடைபெறும். <a href="https://www.maalaimalar.com/news/national">குஜராத்</a> அரசு மற்றும் பா.ஜ.க. வெளியிட்ட தகவல்களின்படி, மாலை 6 மணி முதல் பக்தி இசை, சத்சங்கம் (ஆன்மீகச் சொற்பொழிவுகள்) மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் தொடங்கும். </p><h2>88 லட்சம் அகல் விளக்குகள்:</h2><p>"பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நீண்ட ஆயுளுடனும் நாட்டிற்கு தொடர்ந்து சேவையாற்றவும் வேண்டி, 18,500-க்கும் மேற்பட்ட இடங்களில் 88 லட்சத்திற்கும் அதிகமான மண் அகல் விளக்குகள் ஏற்றப்படும்," என்று மாநில அரசு செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான ஜிது வகானி தெரிவித்தார்.</p><p>மோடி பொதுவாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 7 வரை மாநிலம் தழுவிய 'சேவா சங்கல்ப் அபியான்' (சேவை உறுதிமொழி இயக்கம்) என்ற நிகழ்ச்சியை பா.ஜ.க. முன்னெடுக்கவுள்ளது.</p><h2>இருசக்கர வாகன பேரணி:</h2><p>பா.ஜ.க.வின் 'சேவா சங்கல்ப் அபியான்' இயக்கத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி பிறந்த ஊரான வத் நகரில் இருந்து வாரணாசிக்கு இருசக்கர வாகன பேரணி வியாழக்கிழமை காலை தொடங்கவுள்ளது; இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்.</p><p>மோடி 2001 அக்டோபர் 7 முதல் 2014 மே 22 வரை குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பணியாற்றினார். அவர் தற்போது வாரணாசி மக்களவை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.</p><p>இந்நிகழ்ச்சிகளில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மாநில பா.ஜ.க. தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா, மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தாதா சாகேப் பால்கே விருது பெறும் ஆனந்த் நாக்: பிரதமர் மோடி வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-congratulates-anant-nag-ji-on-being-conferred-dadasaheb-phalke-award</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-congratulates-anant-nag-ji-on-being-conferred-dadasaheb-phalke-award#comments</comments><guid isPermaLink="false">24e736fe-22ce-4eed-ab5f-28589662eacb</guid><pubDate>Wed, 16 Sep 2026 14:58:02 +0000</pubDate><atom:updated>2026-09-16T14:58:02.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆனந்த் நாக்,தாதா சாகேப் பால்கே விருது,Dadasaheb Phalke Award,pm modi,பிரதமர் மோடி,anant nag</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/fpnwj100/pm-modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/fpnwj100/pm-modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தாதாசாகேப் பால்கே விருது பெறவுள்ள நடிகர் அனந்த் நாக்-க்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இந்தியத் திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.</p><h2>தாதா சாகேப் பால்கே விருது</h2><p>2024-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது கன்னட நடிகர் ஆனந்த் நாக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த பங்களிப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குஜராத் மாநிலம் கெவாடியாவில் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த உயரிய விருது நடிகர் அனந்த் நாக்கிற்கு வழங்கப்படவுள்ளது.</p><p>கடந்த ஆண்டு கேரளாவின் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்நிலையில், தாதாசாகேப் பால்கே விருது பெறவுள்ள நடிகர் ஆனந்த் நாக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><h2>பிரதமர் மோடி வாழ்த்து</h2><p>இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:</p><p>தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற கலைஞர் ஆனந்த் நாக் அவர்களுக்கு வாழ்த்துகள்.</p><p>அவரது இயல்பான நடிப்பு, பன்முகத்தன்மை மற்றும் அபாரத் திறமை ஆகியவை இந்தியத் திரையுலகிலும், கன்னடத் திரையுலகிலும் ஆழமான முத்திரையைப் பதித்துள்ளன.</p><p>அவரைப் போன்ற மிகச் சிறந்த கலைஞருக்கு இது மிகவும் தகுதியான ஒரு கவுரவமாகும் என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மெஸ்சி நிகழ்ச்சி சர்ச்சை: கேரளம் செய்தி சேனல் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை- எதிர்க்கட்சிகள் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/messi-event-row-police-raid-reporter-tv-office-promoters-homes-cm-defends-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/messi-event-row-police-raid-reporter-tv-office-promoters-homes-cm-defends-action#comments</comments><guid isPermaLink="false">4257d383-2132-4bc6-a458-aeaa89e97adc</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:36:29 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:36:29.103Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Messi,மெஸ்சி,VD Satheesan,கேரளம்,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/imf7gv0p/PoliceRaid.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போலீஸ் சோதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/imf7gv0p/PoliceRaid.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அர்ஜென்டினா அணியும், மெஸ்சியும் கேரளம் மாநிலம் வருகை தந்து விளையாடுவதாக இருந்தது. இது தொடர்பாக அர்ஜென்டினா அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர், அர்ஜென்டினா அணி கேரளா வரவில்லை. இது தொடர்பாக பண முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.</p><p>இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதல் தகவல் அறிக்கையின்படி (FIR), RBC பிரைவேட் லிமிடெட், அதன் நிர்வாக இயக்குநர் ஆண்டோ அகஸ்டின் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் கேரள அரசு மற்றும் பொதுமக்களை ஏமாற்றி தங்களுக்கு முறையற்ற ஆதாயத்தை அடையும் நோக்கத்துடன் அர்ஜென்டினா கால்பந்து சங்கத்துடனான (டிசம்பர் 20, 2024 தேதியிட்ட) ஒப்பந்தத்தில் சட்ட விரோதமான மற்றும் பொய்யான அம்சங்களை சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>கிரேட்டர் கொச்சி மேம்பாட்டு ஆணையத்தின் (Greater Cochin Development Authority) கட்டுப்பாட்டில் உள்ள, கலூரில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான ஜவஹர்லால் நேரு சர்வதேச விளையாட்டு அரங்கத்தை RBC-யிடம் ஒப்படைப்பதற்கும், 5 கோடி ரூபாய் பிணைத் தொகையை (security deposit) தள்ளுபடி செய்வதற்கும் செப்டம்பர் 26, 2025 அன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>RBC நிறுவனம் மெஸ்சி மற்றும் அர்ஜென்டினா அணி விளையாட வருவதற்கு ஸ்பான்சராக செயல்பட முன்வந்துள்ளது. இந்த நிறுவனம் ரிப்போர்ட்டர் டி.வி. என்ற செய்தி சேனலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரிப்போர்ட்டர் டி.வி. அலுவலகம் மற்றும் அகஸ்டின் சகோதரர்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர்களுடைய பூர்வீக வீடு ஆகியவற்றில் SIT போலீசார் இன்று சோதனை நடத்தினர். கொச்சி மற்றும் வயநாடுகளில் உள்ள 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்து.</p><p>செய்திப் பிரிவு செயல்பட்டு வரும் ஆர்.பி.சி. அலுவலகத்தில் சோதனை நடத்திய போலீசார், செய்திப் பிரிவு இடத்திற்கு சென்று செய்தியாளர்களின் செல்போன்கள் மற்றும் பணிபுரிபவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்ததாகவும், செய்தி வெளியிடுவதற்கு இடையூறாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.</p><h2>சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி விளக்கம்</h2><p>இது தொடர்பாக SIT தலைவரும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியுமான பி. விஜயன் கூறுகையில் "எந்த இடத்தில் சோதனை நடத்த சென்றாலும், அங்குள்ளவர்களிடம் போனை பயன்படுத்தக்கூடாது என சொல்லி வாங்கி வைத்து விடுவோம். நாங்கள் ஒரு போனைக் கூட பறிமுதல் செய்யவில்லை. செய்தி ரூமுக்குள் இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செல்லவில்லை. ஆவணங்களை சேகரிப்பதே எங்களுடைய நோக்கம். டிஜிட்டல் லாக்கர்களில் ஏற்பட்ட அணுகல் சிக்கல் காரணமாக, தேடுதலுக்கு அதிக நேரம் பிடித்தது. இந்த நடவடிக்கைகள் வீடியோவும் பதிவு செய்யப்பட்டன. </p><p>சோதனைப் பதிவேட்டின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட நபர்களின் கையொப்பங்களைப் பெறுகிறோம். அந்தப் பதிவேட்டைப் பார்த்து, ஏதேனும் பத்திரிகையாளர்களின் அலைபேசிகளை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோமா என்று பாருங்கள்" என்றார்.</p><h2>முதல்வர் வி.டி. சதீசன்</h2><p>இந்த சோதனையை கேரளம் மாநில முதல்வர் வி.டி. சதீசன் நியாயப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக வி.டி. சதீசன் கூறுகையில் "இந்தச் சோதனை, சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் காவல்துறை விசாரணையின் ஒரு பகுதியாகும். இதில் அரசு தலையிடாது. SIT முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. வாரண்ட் உடன் தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளது. இது தொடர்பாக ஜிஎஸ்டி துறை விசாரணை நடத்தியுள்ளது. விசாரணை தொடக்கத்தில் ஜி.எஸ்.டி. மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்றார்.</p><h2>விளையாட்டுத்துறை அமைச்சர்</h2><p>அதன் ஸ்பான்சர் யார்? RBC-தான் அந்த ஸ்பான்சர். எனவே, அந்த ஆதரவாளர் தொடர்பான ஒரு விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும்போது, ​​அது வேறு எங்கே நடத்தப்பட முடியும்? அது இயல்பான ஒன்றுதானே?. செய்தி வெளியிட்டதற்காக எந்தவொரு ஊடக நிறுவனம் அல்லது பத்திரிகையாளர் மீதும் அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுத்ததில்லை; இனிமேலும் அவ்வாறு செய்யாது" என்றார்.</p><h2>பினராயி விஜயன் கண்டனம்</h2><p>முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான பினராயி விஜயன், செய்தி நிறுவனத்திற்குள் சென்ற பத்திரிகையாளர்களின் போன்களை பறிமுதல் செய்தது தொடர்பாக விமர்சனம் செய்திருந்திருந்தார். இதுபோன்ற சோதனை கேரளம் மாநிலத்தில் இதுவரை இல்லாதது. முதலமைச்சரின் நேர வற்புறுத்தலின் போரில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று குற்றம்சாட்டியிருந்தார்.</p><h2>RBC நிர்வாக இயக்குநர் சொன்னது என்ன?</h2><p>ஆண்டோ அகஸ்டின் டி.வி.யின் நிர்வாக இயக்குநர் இது தொடர்பாக கூறுகையில் "போலீசார் மெஸ்சி நிகழ்ச்சி தொர்பாக எந்த கேள்வியும் கேட்கவில்லை" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- வேறு பெண்ணுடன் இருந்ததை தட்டிக் கேட்ட காதலியை காரால் மோதி இழுத்துச் சென்ற காதலன்- லக்னோவில் பரபரப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/video-lucknow-anamika-car-attack-shanawaz</link><comments>https://www.maalaimalar.com/news/national/video-lucknow-anamika-car-attack-shanawaz#comments</comments><guid isPermaLink="false">8cc9ca0f-aa3b-4a5c-87f5-a60aaa4f86d5</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:29:01 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:29:01.463Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தரபிரதேச மாநிலம்,லக்னோ,lucknow,LucknowCrime,லக்னோசம்பவம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/66x3x413/gfd.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ drags girlfriend with his car]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/66x3x413/gfd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஷாநவாஸ் தனது உண்மையான பெயர் மற்றும் அடையாளத்தை மறைத்து ஏமாற்றியதை அனாமிகா கண்டறிந்துள்ளார். </p><p>உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், தனது உண்மையான அடையாளத்தை மறைத்து காதலித்து வந்த நபர் ஒருவர், தட்டிக் கேட்ட காதலியை காரால் மோதி, காரின் முன்பகுதியில் (போனட்) வைத்து இழுத்துச் சென்று ஏற்றி இறக்கிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="hi" dir="ltr">लखनऊ में अपने प्रेमी को नई गर्लफ्रेंड के साथ देख भड़की युवती. कार के सामने आई तो युवक ने किया हिट एंड रन का प्रयास...! <a href="https://t.co/a8qU6egytR">pic.twitter.com/a8qU6egytR</a></p>&mdash; Rupesh Mishra (@rupeshmishramp) <a href="https://x.com/rupeshmishramp/status/2100194257479053318?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>உண்மை<strong>யை கண்டுபிடித்த காத</strong>லி</h2><p>லக்னோவைச் சேர்ந்த அனாமிகா என்ற பெண், 'யஷ் தாகூர்' என்ற பெயரில் அறிமுகமான ஷாநவாஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், ஷாநவாஸ் தனது உண்மையான பெயர் மற்றும் அடையாளத்தை மறைத்து ஏமாற்றியதை அனாமிகா கண்டறிந்துள்ளார். மேலும், இன்று காலை பூங்கா ஒன்றின் அருகே ஷாநவாஸ் வேறு ஒரு பெண்ணுடன் டீ கடையில் நின்று கொண்டிருந்தபோது அனாமிகா அவரை நேரில் பார்த்துப் பிடித்துள்ளார்.</p><h2>காரால் மோதி <strong>கொடூரத் தாக்குதல்</strong></h2><p>தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனாமிகா, ஷாநவாஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அங்கிருந்து செல்லவிடாமல் தடுக்க முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த ஷாநவாஸ், காரை வேகமாக இயக்கி அனாமிகா மீது மோதியுள்ளார். இதனால் அனாமிகா காரின் போனட் மீது விழுந்தநிலையிலும், காரை நிறுத்தாமல் ஷாநவாஸ் முன்னோக்கிச் சென்றுள்ளார். சற்று தூரத்தில் அனாமிகா காரில் இருந்து கீழே விழுந்தபோது, இரக்கமின்றி கார் சக்கரத்தை அவர் மீது ஏற்றிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் அனாமிகாவிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><h2>வைரல் வீ<strong>டியோ</strong></h2><p>இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வீடியோவில் அனாமிகா "காரை நிறுத்து" என்று கதறியும் ஷாநவாஸ் காரை நிறுத்தாமல் ஏற்றிச் செல்வது பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட அனாமிகா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த லக்னோ காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஷாநவாஸை தீவிரமாகத் தேடி கைது செய்துள்ளனர். பெயர் மற்றும் மத அடையாளத்தை மறைத்து காதலித்த விவகாரம் மற்றும் கொலை முயற்சி கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>UPI கட்டணம்: டிரம்ப் முன் அடிபணிய பிரதமர் முடிவு செய்துள்ளார்- ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-has-decided-to-prostrate-before-trump-rahul-on-upi-tax</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-has-decided-to-prostrate-before-trump-rahul-on-upi-tax#comments</comments><guid isPermaLink="false">9b1928d5-89d4-4ea2-aaad-dbaf4ccb94ce</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:33:10 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:33:10.032Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,pm modi,பிரதமர் மோடி,UPI payment</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/rkq9ghf0/RahulGandhi00002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UPI- Rahul Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/rkq9ghf0/RahulGandhi00002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன் மண்டியிடவும் (அடி பணியவும்), அமெரிக்காவிற்குப் பெருந்தொகையை வழங்கவும் பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, <a href="https://www.maalaimalar.com/news/national/american-crisis-upi-fee-row-centre-clarifies">UPI</a> பரிவர்த்தனைகள் மீது கட்டணம் விதிக்கும் அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><h2>UPI கட்டணம் அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் அமல்</h2><p>வங்கிக் கணக்கை பயன்படுத்தாமல் பண பரிமாற்றம் செய்ய மத்திய அரசு UPI என்ற நடைமுறையை கொண்டு வந்தது. இதை பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை ஒரு விநாடியில் செலுத்த முடியும். இதன்மூலம் சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை UPI பயன்படுத்தி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில்தான் வணிக நோக்கத்திற்காக 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணி பரிவர்த்தனை செய்தால், வணிக நிறுவனம் 0.4 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு நேற்று தெரிவித்தது. அக்டோபர் 15-ந்தேதியில் இருந்து இது அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி அடுத்த மாதம் 15-ந்தேதியில் இருந்து ஒரு வணிக நிறுவனத்தில் நுகர்வோர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்து, UPI மூலம் பணம் செலுத்தினால் அந்த வணிக நிறுவனம், 0.4 சதவீதம் என்ற அடிப்படையில் கட்டணம் வங்கிக்கு செலுத்த வேண்டும். அதேவேளையில் தனிநபர் ஒருவர் மற்றொருவருக்கு பணம் பரிமாற்றம் செய்தால் கட்டணம் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அத்துடன் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.</p><h2>ராகுல் காந்தி குற்றச்சாட்டு</h2><p>இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன் பிரதமர் மோடி மண்டியிட முடிவு செய்துள்ளார் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-</p><p>முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஜியிடம் ஒருமுறை அவர் இடதுசாரி கொள்கை கொண்டவரா அல்லது வலதுசாரி கொள்கை கொண்டவரா என்று கேட்கப்பட்டபோது, ​​நான் இடதுபுறமோ அல்லது வலதுபுறமோ சாய்வதில்லை. நான் நேராக நிற்கிறேன் என்று பதிலளித்தார். ஆனால் மோடி ஜியின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டது. அவர் இடதுசாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல. அவர் டொனால்டு டிரம்ப் முன் நேராகப் படுத்துக்கொண்டு மண்டியிட (சாஷ்டாங்கமாகப் பணிய) முடிவு செய்துள்ளார்.</p><p>UPI-க்கு வரி விதிப்பதன் மூலமும், அமெரிக்காவிற்குப் பெருந்தொகையை வழங்குவதன் மூலமும் ஒவ்வொரு இந்தியர் மீதும் அவர் (மோடி) வரியை சுமத்தியுள்ளார். மோடி ஜி, இப்போதே UPI வரியை திரும்பப் பெறுங்கள்.</p><p>இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.</p><h2>காங்கிரஸ் குற்றச்சாட்டு</h2><p>இதற்கு முன்னதாக காங்கிரஸ், ஜீரோ MDR (வணிகர் தள்ளுபடி விகிதம்) முறையை நீக்கிவிட்டு UPI-க்குக் கட்டணம் விதிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு அரசு பணிந்து விட்டது. பிரதமர் மோடி, NOTA (நோட்டா)வை நரேந்திராவின் தொடர்ச்சியான டிரம்ப் சமாதான நடவடிக்கை (Narendra's Ongoing Trump Appeasement) என்று வரையறுத்துள்ளார் எனத் தெரிவித்திருந்தது.</p><p>பிரதமர் மோடி அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து சமரசம் செய்து கொண்டுள்ளார். மீண்டும் ஒருமுறை சரணடைகிறார். ராகுல் காந்தி முன்னதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.</p><p>இதற்குப் பதிலடி கொடுத்த பாஜக, காங்கிரஸ் போலிச் செய்திகளை பரப்புவதாகக் குற்றம் சாட்டியதுடன், நுகர்வோர் மீது MDR கட்டணங்கள் விதிக்கப்படாது என்பதை அரசு மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளதாகவும் கூறியது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க நெருக்கடியா? UPI கட்டண விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/american-crisis-upi-fee-row-centre-clarifies</link><comments>https://www.maalaimalar.com/news/national/american-crisis-upi-fee-row-centre-clarifies#comments</comments><guid isPermaLink="false">31908eb3-3dd8-4cdb-9bc0-7e17cf7e0095</guid><pubDate>Wed, 16 Sep 2026 10:59:13 +0000</pubDate><atom:updated>2026-09-16T10:59:13.600Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,அமெரிக்கா,America,pmmodi,central government,மோடி,UPI payment</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/xmaqkoin/UPI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[   PMModi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/xmaqkoin/UPI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனிநபர்களுக்கு இடையேயான பணப்பரிவர்த்தனைகளுக்கும், கடைகளில் QR கோட் மூலம் செய்யப்படும் சாதாரண பரிவர்த்தனைகளுக்கும் எந்தவிதக் கட்டணமும் விதிக்கப்படாது. </p><p>UPI பரிவர்த்தனைகளுக்கு Merchant Discount Rate (MDR) கட்டணம் அமல்படுத்துவது அமெரிக்க நிறுவனங்களுக்கு பயனளிப்பதற்காகவே என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவின் கொள்கை முடிவுகள் முற்றிலும் சுயாதீனமாகவே எடுக்கப்படுகின்றன என்று மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>மத்திய அரசு அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. <a href="https://www.maalaimalar.com/news/national/upi-charges-to-be-04-for-some-payments-above-rs-2000-free-for-consumers">UPI</a> மற்றும் RuPay தளங்களின் வளர்ச்சியால் Visa மற்றும் Mastercard போன்ற அமெரிக்க நிறுவனங்கள் சந்தையில் பெரும் பின்னடைவை சந்தித்ததாகவும், அவற்றை ஊக்குவிக்கவே இந்த கட்டணம் கொண்டுவரப்படுவதாகவும் காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் சாடினார்.</p><h2>மத்திய நிதி <strong>அமைச்சக</strong>த்தின் விளக்கம்</h2><p>இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சகம், "UPI தொடர்பான முடிவுகள் அனைத்தும் நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பை மேலும் வலுப்படுத்தவும், நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கவும் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இதில் எவ்வித வெளிநாட்டு தலையீடும் இல்லை" எனத் தெரிவித்தது.</p><h2>புதிய <strong>UPI கட்டண விதி</strong>முறைகள்</h2><p>*தனிநபர்களுக்கு இடையேயான (Person-to-Person) பணப்பரிவர்த்தனைகளுக்கும், கடைகளில் QR கோட் மூலம் செய்யப்படும் சாதாரண பரிவர்த்தனைகளுக்கும் எந்தவிதக் கட்டணமும் விதிக்கப்படாது. இவை எப்போதும் போல் முற்றிலும் இலவசமாகவே தொடரும்.</p><p>*அக்டோபர் 15 முதல், ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR கட்டணம் விதிக்கப்படும். ஒரு மாதத்திற்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக UPI மூலம் பணம் பெறும் வணிகர்கள் மட்டுமே இந்த வரம்பிற்குள் வருவார்கள்.</p><p>*இந்த கட்டணம் பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 95 சதவீதத்திற்கும் அதிகமான வணிகப் பரிவர்த்தனைகள் ரூ.2,000-க்கு குறைவாகவே இருப்பதால், சாதாரணக் கடைக்காரர்களோ அல்லது நுகர்வோரோ இதன் மூலம் பாதிக்கப்பட மாட்டார்கள்.</p><p>*இந்த MDR கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது வணிகர்கள் சுமத்தக்கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.</p><h2><strong>கட்டணம் வசூலிப்பதன் நோக்</strong>கம்</h2><p>இந்தக் கட்டணம் அரசுக்கோ அல்லது UPI அமைப்பை இயக்கும் NPCI நிறுவனத்திற்கோ செல்லும் வரி அல்ல என்றும் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. UPI கட்டமைப்பு, தொழில்நுட்ப பராமரிப்பு மற்றும் வங்கிகளின் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டவே இந்த நிதி பயன்பாட்டுப் பங்கேற்பாளர்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருமணத்திற்கு முன்பு உல்லாசம்: காதலன் கொடுத்த கருத்தடை மாத்திரை தின்ற இளம்பெண் பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/boy-friend-arrested-for-young-woman-dies-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/boy-friend-arrested-for-young-woman-dies-case#comments</comments><guid isPermaLink="false">eaaca8c9-4b16-4caf-bb61-dec9572231c4</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:31:43 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:31:43.119Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,போலீசார் விசாரணை,இளம்பெண் பலி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/rhoqpnny/dead.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மரணம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மரணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/rhoqpnny/dead.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஐதராபாத் அருகே பணிபுரிந்த இளம்பெண், காதலன் நாகசாயுடன் உறவில் இருந்து கர்ப்பமானார். குடும்பத்துக்கு தெரியாமல் இருக்க அவர் கொடுத்த கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டதால் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நிஜாம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டும் உயிர் பிழைக்க முடியவில்லை. உறவினர்கள் புகாரின் அடிப்படையில் கேபிஹெச்பி போலீசார் நாகசாயை கைது செய்தனர்.</strong></em></p><p>தெலுங்கானா மாநிலம் ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஐதராபாத் அருகே உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தார். </p><h2><strong>கர்ப்பம்</strong></h2><p>இவருக்கு கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நாகசாய் என்பவர் அறிமுகமானார். இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனிமையில் சந்தித்தனர். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்தனர். இதனால் இளம்பெண் கர்ப்பமானார். தனது குடும்பத்தினருக்கு தெரிந்தால் பிரச்சனை ஏற்படும் என காதலனிடம் தெரிவித்தார்.  </p><p>இதனைத் தொடர்ந்து கர்ப்பமான அந்த இளம் பெண்ணுக்கு நாகசாய் கருத்தடை மாத்திரைகளைக் கொடுத்தார். அந்த மாத்திரைகளை உட்கொண்ட பிறகு இளம்பெண் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். </p><h2><strong>உடல்நிலை மோசம்</strong></h2><p>அவரது நண்பர்கள் அவரை நிஜாம்பேட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பிறகு, அந்த <a href="https://www.maalaimalar.com/topic/இளம்பெண்-பலி">இளம்பெண்ணின்</a> உடல்நிலை மோசமடைந்ததால், அவரது குடும்பத்தினர் அவரை காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றினர். </p><p>அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண் இறந்தார். </p><p>இளம்பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கேபிஹெச்பி போலீசார்  நாகசாயை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நண்பனின் காதலியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் கொலை:  2 வாலிபர்கள் வெறிச்செயல்</title><link>https://www.maalaimalar.com/news/national/2-youths-arrested-for-murder-case-in-andhra</link><comments>https://www.maalaimalar.com/news/national/2-youths-arrested-for-murder-case-in-andhra#comments</comments><guid isPermaLink="false">1052fcff-21bf-45c3-bb63-7c68c0eea2e5</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:42:13 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:42:13.528Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Police Investigation,போலீசார் விசாரணை,Murder,கொலை,ஆபாச படம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6e5wz8xm/murder.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6e5wz8xm/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விவேக் காதலியுடன் கிரிதர் உல்லாசமாக இருந்த வீடியோ பார்த்த விவேக், ராமகிருஷ்ணா இருவரும், அந்த ஆபாச காட்சிகளை பெற்றோர்களை மிரட்டி பணம் பறிக்க பயன்படுத்த திட்டமிட்டனர். கிரிதர் மறுத்ததால் கோபமடைந்த இருவரும், கடையில் கத்தி வாங்கி, தூங்கிக் கொண்டிருந்த கிரிதரை வீட்டிலேயே வெட்டி கொலை செய்தனர். பின்னர் அவரது கைரேகையால் செல்போனை திறந்து வீடியோக்களை தங்களது போனில் சேமித்து தப்பினர்.</strong></em></p><p>ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் இந்திரா காலனியை சேர்ந்தவர் கிரிதர். இவர் எம்.பி.ஏ படித்துக் கொண்டு தன்னார்வலராக வேலை செய்து வந்தார். வேலை செய்யும் இடங்களில் பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. </p><h2><strong>உல்லாசம்</strong></h2><p>இதில் சில பெண்களை காதல் வலையில் வீழ்த்தினார். அவர்களை தனிஅறைக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். அதனை கிரிதர் தனது செல்போனில் வீடியோ, போட்டோக்களாக பதிவு செய்து வைத்திருந்தார். </p><p>இந்த நிலையில் கிரிதருக்கு அதே பகுதியை சேர்ந்த விவேக், ராம கிருஷ்ணா ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். பெண்களுடன் உல்லாசமாக இருப்பதில் நான் தான் சிறந்தவர்கள் என 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கிரிதரை நீ அதற்கு சரிபட்டு வரமாட்ட என கூறி கேலி செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிரிதர் அந்த விஷயத்தில் தான் சிறந்தவர் எனக் கூறியபடி அவரது செல்போனில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த போது எடுத்த வீடியோ, போட்டோக்களை நண்பர்களுக்கு காட்டினார். </p><h2><strong>ஆத்திரம்</strong></h2><p>அந்த வீடியோவில் விவேக் காதலித்த பெண்ணுடன் கிரிதர் உல்லாசமாக இருக்கும் வீடியோவும் இருந்தது.  விவேக், ராமகிருஷ்ணா இருவரும் பெண்களின் ஆபாச வீடியோக்களை தங்களுக்கு அனுப்பினால் அவர்களது பெற்றோர்களிடம் வீடியோவை காட்டி பணம் பறிக்கலாம் என தெரிவித்தனர். இதற்கு கிரிதர் எதிர்ப்பு தெரிவித்து வீடியோக்களை தர மறுத்தார்.</p><p>அவர்கள் மீண்டும் ஆபாச வீடியோக்களை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்ன கிரிதர் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆபாச வீடியோக்களை தர மறுப்பு தெரிவித்ததால் கிரிதர் மீது இருவருக்கும் ஆத்திரம் ஏற்பட்டது. </p><p>அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்று கத்தியை வாங்கிக் கொண்டு கிரிதர் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த கிரிதரை சரமாரியாக <a href="https://www.maalaimalar.com/topic/கொலை">வெட்டினர்</a>. இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.</p><p>பின்னர் அவரது விரல் ரேகையை வைத்து கிரிதரின் செல்போனை திறந்து அதிலிருந்து ஆபாச வீடியோ, போட்டோக்களை தங்களது செல்போனுக்கு பரிமாற்றம் செய்து கொண்டனர். </p><p>கிரிதரின் செல்போனில் இருந்த வீடியோ போட்டோக்களை அழித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விவேக், ராமகிருஷ்ணாவை கைது செய்தனர். </p><p>இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ.4.70 கோடி உண்டியல் வசூல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/tiruppati-temple-collects-rs-4-70-crore-in-a-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/tiruppati-temple-collects-rs-4-70-crore-in-a-day#comments</comments><guid isPermaLink="false">c6ca67d5-10e8-4c59-a43f-2fff754bb374</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:36:44 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:36:44.330Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பதி,Tirupati,உண்டியல் காணிக்கை,devotees rush,திருப்பதி கோவில்,Laddu Sales,Donation box collection</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/110lezhu/Tirupati-Temple" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tirupati Temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/110lezhu/Tirupati-Temple?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகப் பிரசித்தி பெற்ற தி<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">ருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு </a>தினந்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். </p><p>இந்நிலையில், நேற்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை, உண்டியல் காணிக்கை மற்றும் லட்டு விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.</p><h2><strong>61 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்</strong></h2><p>திருப்பதி மலையில் பக்தர்களின் வருகை தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வருகிறது. தேவஸ்தான புள்ளிவிவரங்களின்படி, நேற்று ஒரே நாளில் மட்டும் 61,000-க்கும் அதிகமான பக்தர்கள் ஏழுமலையானைக் கண்டு தரிசித்துள்ளனர். </p><p>குறிப்பிட்ட தேதி மற்றும் நேரம் அச்சிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல், வழக்கமான இலவச தர்ம தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்ததாகக் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>தலைமுடி காணிக்கை மற்றும் உண்டியல் வருவாய்</strong></h2><p>ஏழுமலையானுக்குத் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்து 722 பக்தர்கள் தலைமுடி காணிக்கை அளித்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பக்தர்கள் </a>தங்களின் வேண்டுதலாகக் காணிக்கையாகச் செலுத்தியதில், நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ. 4 கோடியே 70 லட்சம் உண்டியல் வருவாயாக வசூலாகியுள்ளதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.</p><h2><strong>லட்டு விற்பனை மற்றும் அன்னப்பிரசாதம்</strong></h2><p>திருப்பதிக்கு வரும் பக்தர்களின் முக்கிய அங்கமான பிரசாத விநியோகமும் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.</p><p>நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 20 ஆயிரம் லட்டுகள் பக்தர்களால் வாங்கப்பட்டு விற்பனையாகின.</p><p>திருமலைக்கு வருகை தந்த பக்தர்களில் 1 லட்சத்து 84 ஆயிரம் பேர் தேவஸ்தானம் வழங்கிய இலவச அன்னப்பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டனர்.</p><p>திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 3,189 பக்தர்கள் அவசர மற்றும் பொதுவான மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுப் பயனடைந்துள்ளனர்.</p><p>தற்போது வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ தினங்கள் இல்லாத போதிலும், ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் சீராகக் காணப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மைசூரு தசரா விழா: தமிழக முதலமைச்சர்  விஜய் பங்கேற்பா?- ஆட்சியர் லட்சுமிகாந்த் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/national/mysuru-dasara-festival-will-tamil-nadu-cm-vijay-attend-collector-lakshmikant-answers</link><comments>https://www.maalaimalar.com/news/national/mysuru-dasara-festival-will-tamil-nadu-cm-vijay-attend-collector-lakshmikant-answers#comments</comments><guid isPermaLink="false">114cab0e-50e0-44a4-bf69-35097fc5e0c2</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:03:59 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:03:59.069Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chief Minister Vijay,Mysuru Dasara Festival,Jamboo Savari,மைசூரு தசரா விழா,முதலமைச்சர்  விஜய்,ஆட்சியர் லட்சுமிகாந்த்,ஜம்பூ சவாரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/sat86ras/cm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/sat86ras/cm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மைசூரு  தசரா ஊர்வலத்திற்கு தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. </p><p>உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில் விழா ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய அம்சமான 'ஜம்பூ சவாரி' எனப்படும் தசரா யானைகள் ஊர்வலம் அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.</p><p>அரண்மனை வளாகத்தில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட ஊர்வலம் மற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பைக் பொதுமக்கள் நேரில் கண்டு ரசிக்க வசதியாக, சிறப்பு 'தங்க அட்டைகள்' விநியோகிக்கப்பட உள்ளன. இதற்கான கட்டணம் ரூ. 2,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மைசூரு மாவட்ட ஆட்சியர் லட்சுமிகாந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.</p><h2>தென்னி<strong>ந்திய முதல்வர்களுக்கு</strong> அழைப்பு?</h2><p>இந்த தசரா ஊர்வலத்திற்குத் தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர் லட்சுமிகாந்த் ரெட்டி, சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பது குறித்துக் கர்நாடக அரசுதான் இறுதி முடிவு எடுக்கும் என்றார்.</p><p>"தசரா விழாவில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-will-chief-minister-vijay-launch-it-in-perambur-on-the-22nd">தமிழக முதல்வர் விஜய்</a> மற்றும் பிற தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்வது குறித்து கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் முடிவெடுப்பார். இது தொடர்பான ஆலோசனைகள் உயர்மட்ட அளவில் நடைபெற்று வருகின்றன. தென்னிந்திய முதல்வர்களின் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தானே வெளியிடுவார்" என்று ஆட்சியர் விளக்கமளித்தார்.</p><h2>விழா <strong>சிறப்புகள்</strong> </h2><p>அடுத்த மாதம் 21-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறும் ஊர்வலத்தில் ரூ. 2,000 மதிப்பிலான தங்க அட்டையைப் பெறுபவர்கள், அரண்மனை வளாகத்தில் சிறப்பு இருக்கைகளில் அமர்ந்து ஊர்வலத்தைக் காணலாம். ஊர்வலத்தில் கர்நாடகத்தின் கலாசாரம் மற்றும் சாதனைகளை விளக்கும் பல்வேறு வண்ணமயமான ஊர்திகள் அணிவகுப்பில் இடம்பெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிவார்கள் என்பதால், மைசூரு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சொந்த மாவட்டத்திலேயே பின்னடைவு: ராஜஸ்தானில் பாஜகவின் நகர்ப்புற கோட்டை தகர்கிறதா?</title><link>https://www.maalaimalar.com/news/national/setback-in-home-district-is-bjps-urban-fortress-crumbling-in-rajasthan</link><comments>https://www.maalaimalar.com/news/national/setback-in-home-district-is-bjps-urban-fortress-crumbling-in-rajasthan#comments</comments><guid isPermaLink="false">fad7960c-af90-468b-86b0-1d5df8bdef90</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:30:38 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:30:38.987Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,Rajasthan,பஜன்லால் சர்மா,Bhajanlal Sharma,ராஜஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/lseh3k3q/n-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bhajanlal Sharma ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/lseh3k3q/n-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையிலான வாக்கு சதவீத வித்தியாசம் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே என்பதால், நகர்ப்புற கோட்டைகளில் பாஜகவின் பிடி தளர்ந்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.</p><p>ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிக வார்டுகளை கைப்பற்றி முதலிடத்தை பிடித்துள்ளது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியுடனான வாக்கு சதவீத இடைவெளி மிகக் குறைவாக இருப்பது மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/national/india-us-joint-military-exercise-yudh-abhyas-gets-underway">பாஜகவின்</a> பாரம்பரியமான நகர்ப்புற வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை கட்சி தலைமைக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.</p><h2>தேர்<strong>தல் முடிவுக</strong>ள் </h2><p>மொத்தம் அறிவிக்கப்பட்ட 10,235 வார்டுகளில், பாஜக 4,179 வார்டுகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 3,613 வார்டுகளை கைப்பற்றி வலுவான போட்டியை அளித்துள்ளது. கடந்த தேர்தல் சுழற்சியுடன் ஒப்பிடுகையில் பாஜகவின் இடங்கள் 35.7 சதவீதத்தில் இருந்து 40.8 சதவீதமாக உயர்ந்துள்ள போதிலும், காங்கிரஸ் 35.3 சதவீத வாக்குகளை பெற்று மிக நெருக்கமாக பின்தொடர்கிறது.</p><p>இந்த தேர்தலின் மிகப்பெரிய பின்னடைவாக, ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மாவின் சொந்த மாவட்டமான பரத்பூரில் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது. இங்குள்ள 65 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் 36 வார்டுகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றனர். ஆளும்கட்சியான பாஜகவால் வெறும் 20 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இது முதலமைச்சரின் சொந்த பகுதியிலேயே கட்சிக்கு உள்ள செல்வாக்கு சரிந்து வருவதை சுட்டிக்காட்டுகிறது.</p><h2>நகர்ப்புற <strong>வாக்கு வங்கியில் பிள</strong>வு</h2><p>பாரம்பரியமாக பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் இந்த முறை அதிருப்தி நிலவுவது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையிலான வாக்கு சதவீத வித்தியாசம் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே என்பதால், நகர்ப்புற கோட்டைகளில் பாஜகவின் பிடி தளர்ந்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.</p><p>பிரதமர் நரேந்திர மோடி இந்த வெற்றியைப் பாராட்டிய போதிலும், கள நிலவரம் பாஜகவிற்கு எச்சரிக்கை மணியாகவே அமைந்துள்ளது. உட்கட்சிப் பூசல், உள்ளூர் வேட்பாளர்கள் மீதான அதிருப்தி மற்றும் சுயேச்சைகளின் ஆதிக்கம் ஆகியவை பாஜகவின் தொடர் வெற்றிகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன. வரவிருக்கும் தேர்தல்களில் இந்த தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால், பாஜக தனது கோட்டைகளை இழக்க நேரிடும் என்ற விவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குழந்தை துஷ்பிரயோக விளம்பரங்கள் தொடர்பாக மெட்டா இந்தியா தலைவருக்கு மூன்றாவது முறையாக சம்மன்</title><link>https://www.maalaimalar.com/news/national/meta-india-head-summoned-for-3rd-time-over-child-abuse-advertisements</link><comments>https://www.maalaimalar.com/news/national/meta-india-head-summoned-for-3rd-time-over-child-abuse-advertisements#comments</comments><guid isPermaLink="false">f9cb11e2-0e15-42d8-95b4-7159e528913a</guid><pubDate>Tue, 15 Sep 2026 23:04:20 +0000</pubDate><atom:updated>2026-09-15T23:04:20.887Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Meta,மெட்டா,Child abuse</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zkkl130s/Meta.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Meta]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zkkl130s/Meta.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தைகள் பாலியல் சீண்டல் மற்றும் துஷ்பிரயோக உள்ளடக்கம் (CSEAM) தொடர்பானதாக கூறப்படும் விளம்பரங்கள் குறித்த தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக, <a href="https://www.maalaimalar.com/topic/meta">மெட்டா</a> இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜராக கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>இந்தியாவில், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வருவதாக பிபிசி ஐ மீடியா (BBC Eye Media) அறிக்கை கூறியதை அடுத்து இந்த வழக்கு எழுந்துள்ளது. </p><p>ஜூலை 3-ஆம் தேதியன்று, தேசிய குழந்தை நல ஆணையர் (NCPCR) இந்த வழக்கை தானாக முன்வந்து கவனத்தில் கொண்டு, அந்த தொழில்நுட்ப நிறுவனத்திடம் விளக்கம் அளிக்குமாறு கேட்டது. மெட்டா நிறுவனம் ஒரு வாரம் கழித்து தனது பதிலை சமர்ப்பித்தது.</p><h2>மெட்டா இந்தியா தலைவருக்கு சம்மன்:</h2><p>இந்த வழக்கின் உண்மைகளையும் சூழ்நிலைகளையும் கண்டறிய, NCPCR ஒரு முறையான விசாரணையை தொடங்க முடிவு செய்துள்ளது. நடைபெற்று வரும் இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, மெட்டா இந்தியா தலைவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது.</p><p>செப்டம்பர் 9 ஆம் தேதி மூத்த அதிகாரிக்கு சம்மன் அனுப்பிய ஒரு வாரத்திற்கு பிறகு இது நிகழ்ந்துள்ளது. இணையதளங்கள் மூலம் குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டும் உள்ளடக்கங்கள் கிடைப்பதாகவும், அவை ஊக்குவிக்கப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில், ஆணையத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.</p><p>சி.எஸ்.இ.ஏ.எம். (CSEAM) விவகாரத்தில் NCPCR தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் விளைவாக, குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை புகாரளிப்பது தொடர்பான தனது கொள்கையை மெட்டா நிறுவனம் திருத்தியமைத்துள்ளது. தற்போது மெட்டா நிறுவனம், இதுபோன்ற வழக்குகளை இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்திற்கும் (I4C) புகாரளிக்கத் தொடங்கியுள்ளது.</p><p>கடந்த ஜூலை மாதம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), இன்ஸ்டாகிராமில் கட்டண விளம்பரங்களில் வரும் CSEAM தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு கடுமையான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மேலும், அதுபோன்ற அனைத்து விளம்பரங்களையும் முடக்குமாறு இன்ஸ்டாகிராமை கேட்டுக்கொண்டிருந்தது.</p><h2>விளம்பர கொள்கைகளில் தடை:</h2><p>இந்தியாவில் இன்ஸ்டாகிராமில், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்கள் இயங்கி வருவதாக பிபிசி ஐ (BBC Eye) புலனாய்வில் குற்றம் சாட்டியுள்ளது. </p><p>அந்த விளம்பரங்கள், பயனர்களை டெலிகிராம் அரட்டை செயலிக்கு வழிநடத்துவதற்காக "கற்பழிப்பு வீடியோ" மற்றும் "குழந்தை வீடியோ" போன்ற சொற்களைப் பயன்படுத்தியதாக அந்த அறிக்கை தெரிவித்தது. அங்கு, பயனர்கள் அத்தகைய வீடியோக்களை ரூ.99 போன்ற குறைந்த விலையில் வாங்க முடிந்தது.</p><p>மெட்டாவின் விளம்பர கொள்கைகள் நிர்வாணம் மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்கத்தை வெளிப்படையாக தடை செய்திருந்தபோதிலும், பேஸ்புக்கில் இதுபோன்ற விளம்பரங்கள் தோன்றியதாக பிபிசி விசாரணையில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>புகை எச்சரிக்கை: டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டதால் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-bound-flight-diverted-to-lucknow-airport-after-smoke-warning</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-bound-flight-diverted-to-lucknow-airport-after-smoke-warning#comments</comments><guid isPermaLink="false">99ffd574-1b9b-4f4e-8a4c-d9f96224e708</guid><pubDate>Tue, 15 Sep 2026 18:47:29 +0000</pubDate><atom:updated>2026-09-15T18:47:29.996Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,lucknow airport,லக்னோ விமான நிலையம்,டெல்லி,Flight diverted</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/r02iuf2i/Indigo-Flight.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indigo Flight]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/r02iuf2i/Indigo-Flight.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அகர்தலாவில் இருந்து டெல்லிக்கு சென்ற <a href="https://www.maalaimalar.com/topic/indigo-flights">இண்டிகோ விமானம்</a> ஒன்றின் சரக்கு பகுதியில் புகை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த விமானம் லக்னோவின் சௌத்ரி சரண் சிங் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது.</p><p>6E6504 என்ற அந்த விமானம், 103 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களுடன் மாலை 6.29 மணிக்கு லக்னோ விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் காரணமாக எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>விமானம், பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, <a href="https://www.maalaimalar.com/news/national">லக்னோ</a> விமான நிலையம் உடனடியாக தனது அவசரகால நெறிமுறைகளை செயல்படுத்தியது. மேலும், தீயணைப்பு மற்றும் மீட்பு குழு, ஆம்புலன்ஸ் மற்றும் முனைய ஆதரவு பணிகளை மேற்கொண்டது.</p><h2>இதேபோன்று முந்தைய சம்பவங்கள்:</h2><p>புகை கண்டறியும் எச்சரிக்கையை தொடர்ந்து, டெல்லி செல்லும் மற்றொரு விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்ட சில நாட்களுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>முன்னதாக கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதியன்று, வாரணாசியில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பின்பக்க சரக்கு பகுதியில் புகை கண்டறியும் எச்சரிக்கை ஒலித்ததை தொடர்ந்து, அந்த விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டது.</p><p>155 பயணிகளை ஏற்றிச் சென்ற IX1253 விமானம், அவசரகால மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பாகத் தரையிறங்கியது. முதற்கட்ட சோதனைகளில், விமானத்தில் புகை அல்லது தீ எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. பின்னர், அந்த விமானம் தொழில்நுட்ப ஆய்வுக்காக ஹேங்கருக்கு கொண்டு செல்லப்பட்டது.</p><h2>வானிலை காரணமாக திருப்பி விடப்பட்ட விமானங்கள்:</h2><p>சமீபத்திய வாரங்களில் வானிலை தொடர்பான காரணங்களால் பல விமானங்கள் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.</p><p>செப்டம்பர் 4-ஆம் தேதியன்று, பலத்த மழை காரணமாக டெல்லி செல்லும் நான்கு விமானங்கள் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டன. மோசமான வானிலை மற்றும் குறைந்த பார்வைத்திறன் காரணமாக, செப்டம்பர் 12-ஆம் தேதியன்று டெல்லியில் இருந்து வாரணாசிக்கு சென்ற இண்டிகோ விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டது.</p><p>செப்டம்பர் 13 அன்று, மோசமான வானிலை காரணமாக மும்பையில் இருந்து டேராடூனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்றும் லக்னோவிற்குத் திருப்பி விடப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி உத்தரகண்ட் மாநிலத்தில் தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-us-joint-military-exercise-yudh-abhyas-gets-underway</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-us-joint-military-exercise-yudh-abhyas-gets-underway#comments</comments><guid isPermaLink="false">ae993ef9-016d-45dd-9ed1-0f2721705cd0</guid><pubDate>Tue, 15 Sep 2026 17:59:06 +0000</pubDate><atom:updated>2026-09-15T17:59:06.160Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>India US military exercise,இந்தியா அமெரிக்கா ராணுவ பயிற்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/94s1r7f0/Yudh-Abhyas.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India - US military exercise

]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/94s1r7f0/Yudh-Abhyas.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரு நாட்டு படைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைந்து செயல்படும் திறனை மேம்படுத்தவும், வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ளவும், அதே வேளையில் இருதரப்பு பாதுகாப்பு உறவை வலுப்படுத்தவும் நோக்கமாக கொண்ட இந்தியா மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்க</a> ராணுவங்களின் கூட்டு பயிற்சியான 'யூத் அப்யாஸ்', தொடங்கியது.</p><p>இப்பயிற்சியின் 22-ஆவது பதிப்பிற்கான தொடக்க விழா உத்தரகண்ட் மாநிலம் அவுலியில் உள்ள 'அவுலி வெளிநாட்டுப் பயிற்சி மையத்தில்' நடைபெற்றது. இப்பயிற்சி அவுலி மற்றும் ராஜஸ்தானில் உள்ள மகாஜன் கள துப்பாக்கி சூடு பயிற்சி மைதானம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்று வருவதாக <a href="https://www.maalaimalar.com/news/national">இந்திய</a> பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><h2>பயிற்சின் நோக்கம் இதுதான்:</h2><p>"மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் 'ஒருங்கிணைந்த போர் அணிகளை' பயன்படுத்துவதற்கான இரு ராணுவங்களின் கூட்டுத் திறனை மேம்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும்; இதில் காலாட்படை சார்ந்த நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது ஒருங்கிணைந்து செயல்படும் திறனை வலுப்படுத்துவதுடன், சிறந்த செயல்பாட்டு நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளவும், கூட்டு திட்டமிடல் மற்றும் செயல்பாட்டை வலுப்படுத்தவும் உதவும்," என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இரு தரப்பில் இருந்தும் தலா 600 வீரர்கள் பங்கேற்கும் இந்தப் பயிற்சியில், 14-ஆவது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அமரேஷ் குஞ்சன் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் 11-ஆவது வான்வழி பிரிவை சேர்ந்த 1-ஆவது காலாட்படை படைப்பிரிவுத் தளபதி கர்னல் பெஞ்சமின் ஜாக்மேன் ஆகியோர் பங்கேற்பாளர்களிடையே உரையாற்றினர் என்று அமைச்சகம் தெரிவித்தது.</p><h2>போர் உத்திகள், நுட்பங்கள் &amp; நடைமுறைகள்:</h2><p>தொழில்நுட்ப பயன்பாடு இதில் முக்கிய கவனம் செலுத்தும் பகுதியாக இருக்கும். கண்காணிப்பு மற்றும் உளவு பணிகளுக்காக டிரோன்கள் மற்றும் தானியங்கி அமைப்புகளை பயன்படுத்துதல் மற்றும் நவீன ஆயுத அமைப்புகளின் செயல்விளக்கம் ஆகியவை இப்பயிற்சியில் அடங்கும்; இவை மகாஜன் கள துப்பாக்கி சூடு பயிற்சி மைதானத்தில் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>"இரு ராணுவங்களை சேர்ந்த துறைசார் நிபுணர்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பல-தள போர்முறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் கருத்துக்களை பரிமாறி கொள்வார்கள்," என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.</p><p>இந்த பயிற்சியானது, இரு ராணுவங்களும் தங்கள் போர் உத்திகள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும், பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் செயல்பாட்டு சூழல்களில் ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனை மேம்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைகள் பாதுகாப்பில் அதிரடி முடிவு: இந்திய சைபர் கிரைம் போர்ட்டலுக்கு நேரடியாக தகவல் தர மெட்டா ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/meta-approves-direct-reporting-to-india-cyber-crime-portal</link><comments>https://www.maalaimalar.com/news/national/meta-approves-direct-reporting-to-india-cyber-crime-portal#comments</comments><guid isPermaLink="false">6e8c063e-88e8-4b67-8164-b595caff7cc9</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:32:26 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:32:26.107Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Meta,மெட்டா,சைபர் கிரைம்,Indian Cybercrime Coordination Centre,I4C</media:keywords><media:content height="387" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/a4tban07/images-11.jfif" width="738"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Meta]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/a4tban07/images-11.jfif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <h2>ஒப்புதல் </h2><p>பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெட்டா, இந்தியாவில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்களை இனி இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) நிர்வகிக்கும் சைபர் கிரைம் போர்ட்டலுக்கு நேரடியாக தெரிவிக்க ஒப்புக்கொண்டுள்ளது</p><h2>மத்திய அரசின் வலியுறுத்தல்</h2><p> மெட்டா நிறுவனம் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்திடம் (NCMEC) முதன்மையாகப் புகாரளித்து வந்தது. </p><p>ஆனால்  தற்போது குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், டீப்ஃபேக்குகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் தொடர்பான புகார்கள் தொடர்பாக மத்திய அரசு வழியுறுத்தலின் அடிப்படையில் மெட்டா இந்த முடிவை அறிவித்துள்ளது.</p><h2>புகார்</h2><p>கடந்த ஜூலை மாதம் இன்ஸ்டாகிராமில் கட்டண விளம்பரங்களில் குழந்தையை பாலியல் ரீதியாக சுரண்டப்படும் மற்றும் துஷ்பிரயோகம் செய்யு உள்ளடக்கம் இருப்பதாக கூறப்பட குற்றச்சாட்டின் பேரில் மின்னணு மற்றும் தகவல்  தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தது. </p><p>அதில் குழந்தைகளை உள்ளடக்கிய பாலியல் ரீதியான வெளிப்படையான உள்ளடக்கங்களைக் கொண்ட டெலிகிராம் சேனல்களின் விளம்பரங்களுடன், இன்ஸ்டாகிராம் பாலியல் ரீதியான ஆபாசத்தை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்களைக் கொண்டிருந்ததாக பிபிசி ஐ நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாக குறிப்பிப்பிட்டிருந்தது.</p><p>மேலும் குழந்தைகளின் இணையதளப் பாதுகாப்பு என்பது இந்தியாவில் செயல்படும் எந்தவொரு சமூகவலைதள நிறுவனத்துக்கும் அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும்; இதில் சமரசத்துக்கு இடமில்லை எனவும் எச்சரித்திருந்தது.</p> <p>இந்த நிலையில் இந்திய சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இதுபோன்ற நேரடி தொடர்பு ஏற்படுத்த முன்வந்துள்ள முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் மெட்டா நிறுவனம் முதலாவதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து மெட்டா நிறுவனத்தின்  செய்தித் தொடர்பாளர் கூறுகையில், குழந்தைகளை பாதுகாப்பது மெட்டா நிறுவனத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றும் என்றும் </p> <p>குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் இந்திய அரசுடன் இணைந்து செயல்படவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் நிறுவனம் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இனிமேல் UPI வணிக பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/upi-charges-to-be-04-for-some-payments-above-rs-2000-free-for-consumers</link><comments>https://www.maalaimalar.com/news/national/upi-charges-to-be-04-for-some-payments-above-rs-2000-free-for-consumers#comments</comments><guid isPermaLink="false">39e33159-7226-4dad-86e0-9a3ea303a7dc</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:25:18 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:25:18.020Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UPI,யுபிஐ,மத்திய நிதி அமைச்சகம்,Finance Ministry,digital money transactions,டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/qt2wk10u/UPI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UPI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/qt2wk10u/UPI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வர்த்தக ரீதியில் 2000 ரூபாய்க்கு மேல் UPI கட்டணம் செலுத்துபவர்களிடம் 0.4 சதவீதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.</strong></em></p><p>ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவை வழங்குநர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2>உத்தரவு</h2><p>மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:</p><p>ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p>குறிப்பிட்ட முறைகள் மூலம் பணம் செலுத்தும் அல்லது பெறும் ஒரு நபரிடம், எந்தவொரு வங்கியும் அல்லது பணம் செலுத்தும் முறைமை வழங்குநரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என தெரிவித்தது.</p><p>2007ன் பிரிவு 10 ஏவில் திருத்தும் செய்து கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026'வின் கீழ் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><h2>ரூ.2000-க்கு மேல் உள்ள பரிவர்த்தனை</h2><p>புதிய விதியின்படி, ரூ. 2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், ரூபே பற்று அட்டைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது.</p><p>இந்நிலையில், வணிக ரீதியில் 2000 ரூபாய்க்கு மேல் UPI கட்டணம் செலுத்துபவர்களிடம் 0.4 சதவீதம் வசூலிக்கப்படும் எனவும், இந்த நடைமுறை அக்டோபர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><h2>0.4 சதவீதம் கட்டணம்</h2><p>UPI வணிக பரிவர்த்தனைக்கு 0.4 சதவீதம் கட்டணம் மூலம் ரூ. 5000-க்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.75,000-க்கு மேல் UPI பரிவர்த்தனை செய்தால் ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும்.</p><p>ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம் விதிக்கப்படும். </p><p>தனி நபர்களுக்கு இடையிலான UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் தயாரிப்பு என போலி விளம்பரம்: பாகிஸ்தான் அழகுசாதன பொருட்களுக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-made-in-india-ads-india-warns-on-pakistan-cosmetics</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-made-in-india-ads-india-warns-on-pakistan-cosmetics#comments</comments><guid isPermaLink="false">db9fc1bb-1f23-4bd7-adfc-a3111f71d4d3</guid><pubDate>Tue, 15 Sep 2026 12:27:04 +0000</pubDate><atom:updated>2026-09-15T12:27:04.482Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Made in India,Pakistani cosmetics,Goree Beauty Cream,Chandni Whitening Cream,மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்,கோரி பியூட்டி கிரீம்,சாந்தினி ஒயிட்னிங் கிரீம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/csmztym0/face.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pakistani cosmetics]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/csmztym0/face.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆய்வகச் சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் ஆபத்தான கன உலோகங்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>இணையவழி வர்த்தக தளங்களில் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ என கூறி விற்கப்பட்டு வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பிரபல அழகுசாதனக் கிரீம்களைப் பொதுமக்கள் வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பொருட்களில் நச்சுத்தன்மை கொண்ட கன உலோகங்கள் அதிகளவில் இருப்பதும், அவசியமான இறக்குமதி உரிமம் இன்றி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>ச<strong>ட்டவிரோத இறக்குமதி</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/again-and-again-oracle-shocks-employees-with-today-is-your-last-day">மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு </a>வெளியிட்டுள்ள பொது சுகாதார அறிவிப்பின்படி, கோரி பியூட்டி கிரீம் மற்றும் சாந்தினி ஒயிட்னிங் கிரீம் ஆகிய இரு தயாரிப்புகளும் தகுதியான அதிகாரிகளிடம் எந்தவொரு இறக்குமதி பதிவுச் சான்றிதழும் பெறாமல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. .</p><p>மேலும், ஆய்வகச் சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் ஆபத்தான கன உலோகங்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கிரீம்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது தோல் நோய்கள் மட்டுமன்றி, உடலில் பல்வேறு தீவிர நச்சு விளைவுகளையும் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் என சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்</p><p>இந்த இரண்டு அழகுசாதனப் பொருட்களையும் வாடிக்கையாளர்கள் உடனடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஏற்கனவே வாங்கி வைத்திருப்பவர்கள் அவற்றை தூக்கி எறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல, வணிக நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மின்-வர்த்தக அமைப்புகள் இந்த ஆபத்தான கிரீம்களை விற்கவோ, விநியோகிக்கவோ அல்லது விளம்பரம் செய்யவோ கூடாது என்று CDSCO கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது. </p><p>அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இத்தகைய பொருட்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதை தீவிரமாகக் கண்காணித்து உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பா.ஜ.க. தலைவர்களின் மார்பை பிளந்து பார்த்தாலும்.., டி.கே. சிவக்குமார் ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-attacks-if-you-cut-open-the-chests-of-bjp-leaders</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-attacks-if-you-cut-open-the-chests-of-bjp-leaders#comments</comments><guid isPermaLink="false">6dd94f37-f5c7-4650-9629-13537ad8bc42</guid><pubDate>Tue, 15 Sep 2026 11:47:19 +0000</pubDate><atom:updated>2026-09-15T11:47:19.699Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,Congress,DK Shivakumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/rr521v5p/DKShivakumar001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/rr521v5p/DKShivakumar001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் நேற்று கொண்ாடப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள டி நரசிபுரா டவுன் காவல் நிலை இன்ஸ்பெக்டர், மசூதிக்கு முன் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். விநாயர் சிலை ஊர்வலத்தின்போது, பட்டாசு வெடிக்கக் கூடாது என்பதா? என பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பேராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் பாஜக தலைவர்களுக்கு மாநிலத்தின் நலன்கள் மீது அக்கறை இல்லை என்று கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-</h2><p>பாஜக தலைவர்களின் மார்பை பிளந்து பார்த்தால், அதில் மாநிலத்தின் நலனைக் காக்கும் அம்சம் எதுவும் இருக்காது. மாநில நலன் சார்ந்த விஷயங்களைப் பற்றி விவாதித்துவிட்டு, அதன்பிறகு அரசியல் செய்யுமாறு அவர்களிடம் கூறினாலும், அவர்களைத் திருத்த முடியாது. நீங்கள் என்ன செய்தாலும், அவர்கள் எல்லாவற்றிலும் குறைதான் காண்பார்கள்.</p><h2>எவ்வித அசம்பாவிதமும் நிகழ்ந்துவிடக் கூடாது</h2><p>காவல்துறையை பற்றிய ஒருவித அச்சமும் இருக்கத்தான் வேண்டும். அந்த காவலர் என்ன தவறு சொன்னார்? எவ்வித அசம்பாவிதமும் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன், காவல்துறைக்கே உரிய பாணியில் அவர் ஒரு எச்சரிக்கையைத்தான் விடுத்தார். ஆனால், பாஜக இந்த விவகாரத்தை வீதிக்குக் கொண்டு வந்துவிட்டது.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் இங்கிருந்து (பெங்களூருவிலிருந்து) அங்கு சென்று, மகாராஜாவையும் (மைசூரு அரச குடும்பத்தின் வாரிசும் பாஜக எம்.பி.யுமான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜா உடையாரைக் குறிப்பிட்டு) தெருவுக்கு அழைத்து வந்து காவல் நிலையத்திற்கு முன் போராட்டம் நடத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் ஒரு அரசியலமைப்பு ரீதியான பதவியை வகிக்கிறார். அவரிடமிருந்து கண்ணியமான அணுகுமுறையை நான் எதிர்பார்க்கிறேன்.</p><h2>செய்யக்கூடாத எதையும் செய்யவில்லை</h2><p>அவர் (காவல் ஆய்வாளர்) செய்யக்கூடாத எதையும் செய்யவில்லை. நான் அவர்களைக் கைவிடமாட்டேன். ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றால், நிச்சயமாக நாங்கள் அதை எடுப்போம். சட்டம்- ஒழுங்கைப் பராமரிப்பது யாருடைய பொறுப்பு? அவர்கள் (பாஜக) மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். அவர்கள் அதை நிறுத்த வேண்டும். எப்படியாவது மாநிலத்தில் அமைதியின்மையை உருவாக்கவே பாஜக விரும்புகிறது.</p><p>மாநிலத்தின் நற்பெயர் நாட்டின் பிம்பத்துடன் தொடர்புடையது என்பதையும், அது இந்தியாவையே பாதிக்கும் என்பதையும் பாஜக தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள பாஜக தலைவர்கள், நாட்டின் மீதான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>அரசியல் செய்யுங்கள், போராட்டங்களை நடத்துங்கள். ஆனால் அமைதியின்மையை உருவாக்கவோ அல்லது மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தவோ வேண்டாம் என்று பாஜக-விடம் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கடும் சரிவுடன் முடிவடைந்த பங்குச்சந்தை..!</title><link>https://www.maalaimalar.com/news/national/sensex-tanks-777points-to-settle-at-74003</link><comments>https://www.maalaimalar.com/news/national/sensex-tanks-777points-to-settle-at-74003#comments</comments><guid isPermaLink="false">26e70cab-25d8-464c-801c-1934511f34b7</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:45:18 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:45:18.054Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>share market,பங்குச் சந்தை,sensex,நிஃப்டி,சென்செக்ஸ்,NSE Nifty 50</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/s2vg5ve3/ShareMarkets0002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பங்குச் சந்தை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/s2vg5ve3/ShareMarkets0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி ஆகியவை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.</p><p>கடந்த வெள்ளக்கிழமை மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 74781.76 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. சனி, ஞாயிறு விடுமுறை. நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.</p><h2>சென்செக்ஸ் 777.94 புள்ளிகள் குறைவு</h2><p>இன்று காலை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 75,369.63 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இறுதியாக 74,003.82 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இது வெள்ளிக்கிழமை வர்த்தக நிறைவைவிட 777.94 புள்ளிகள் சரிவாகும். 1.04 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும் 1725.92 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன. இது 2.28 சதவீதம் ஆகும்.</p><h2>இந்திய பங்குச் சந்தை நிஃப்டி</h2><p>மும்பை பங்குச் சந்தை போன்று, இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டியும் கடும் சரிவை சந்தித்தது. கடந்த வெள்ளிக்கிழமை நிஃப்டி 23398.10 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று 23576.15 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது, என்றாலு் 279.50 புள்ளிகள் சரிந்து 23,118.60 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இது 1.19 சதவீதம் குறைவாகும். கடந்த 5 நாட்களில் 391.40 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன.</p><h2>சரிவை சந்தித்து பங்குகள்</h2><p>HDFC வங்கி, டாடா ஸ்டீல், இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. பாரத் எலக்ட்ரானிக்ஸ், அதானி பவர், கோடன் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், கனரா வங்கி, இந்தியன் ஆயில் கார்பரேசன், ஐசிஐசிஐ வங்கி போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.</p>]]></content:encoded></item><item><title>கூட்டணி கட்சிகளே தயாராக இல்லாத போது..! UCC விவகாரத்தில் அமித் ஷாவுக்கு உமர் அப்துல்லா கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/national/omar-abdullah-if-allies-are-not-ready-how-will-uniform-civil-code-be-implemented</link><comments>https://www.maalaimalar.com/news/national/omar-abdullah-if-allies-are-not-ready-how-will-uniform-civil-code-be-implemented#comments</comments><guid isPermaLink="false">3e51b62a-1f01-434f-8bc2-bef0e9917f3f</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:41:53 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:41:53.150Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,omar abdullah,உமர் அப்துல்லா,Uniform Civil Code,பொது சிவில் சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/8p7mdp9g/AmithshOmarabdhullah.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா- உமர் அப்துல்லா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/8p7mdp9g/AmithshOmarabdhullah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, 2029-ம் ஆண்டுக்குக்குள் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கு, பீகாரில் மாநில கூட்டணி கட்சியான நிதிஷ் குமாரின் <a href="https://www.maalaimalar.com/news/national/absolutely-not-bihar-raises-the-banner-of-revolt-against-the-implementation-of-the-uniform-civil-code">ஐக்கிய ஜனதா தளம்</a> கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது தொடர்பாக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டால் நாடு முழுவதும் சட்டமாகிவிடும். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்த பாஜக முயற்சிக்கிறது.</p><p>இந்த நிலையில் இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியதாவது:-</p><p>இது தொடர்பாக தேசிய மாநாடு (National Conference) கட்சி தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதைச் செய்வது நாடாளுமன்றத்தின் பணி என்று எங்கள் மாநிலங்களவை உறுப்பினர் ஷமி ஓபராய் கூறியுள்ளார். பல்வேறு மாநிலங்கள் மூலமாக இதை ஏன் முன்னெடுக்கிறீர்கள்? என்.டி.ஏ (NDA) கூட்டணியில் உள்ள அனைவரும் இதை ஏற்கவில்லை.</p><h2>பீகாரில் JDU எதிர்ப்பு</h2><p>பீகாரில் இதைச் செயல்படுத்த முடியாது என்று ஜே.டி.யு (JDU) கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. பொது சிவில் சட்டத்தை (UCC) அமல்படுத்த அவர்களது சொந்தக் கூட்டணியினரே தயாராக இல்லாத நிலையில், நாடு முழுவதும் அதைச் செயல்படுத்த வேண்டும் என்று இவர்களால் எப்படிச் சொல்ல முடிகிறது? நாடாளுமன்றத்தில் இவர்களால் இதை நிறைவேற்ற முடியும் என்று நான் கருதவில்லை.</p><p>இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.</p><h2>பொது சிவில் சட்டம்</h2><p>பொது சிவில் சட்டம் (Uniform Civil Code - UCC) என்பது ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, தத்தெடுத்தல் போன்ற குடும்ப விவகாரங்களுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை அமல்படுத்துவதைக் குறிக்கிறது.</p><p>பாலின சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகளை வழங்குதல் இதன் நோக்கமாகும்.</p><h2>எதிர்ப்பு</h2><p>இந்தியாவின் பல கலாச்சாரப் பன்முகத்தன்மை பாதிக்கப்படும் என்றும், சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு இது அச்சுறுத்தலாக அமையும் என்றும் எதிர்க்கப்படுகிறது</p><p>உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவுக்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனையை ரிக்ஷா ஓட்டுநர் ஆக்கிய திருமணமும் கோர எதார்த்தமும்!</title><link>https://www.maalaimalar.com/news/national/the-marriage-that-turned-a-hockey-player-who-played-for-india-into-an-auto-rickshaw-driverand-the-grim-reality-behind-it</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-marriage-that-turned-a-hockey-player-who-played-for-india-into-an-auto-rickshaw-driverand-the-grim-reality-behind-it#comments</comments><guid isPermaLink="false">0f7698c7-a83f-4b71-a6d2-799f0439770c</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:47:09 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:47:09.851Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hockey Player,ஹாக்கி,வீராங்கனை,பெண் ஆட்டோ ஓட்டுநர்,female auto rickshaw driver</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/3xzbyc90/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  மாலதி]]></media:title><media:description type="html"><![CDATA[  மாலதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/3xzbyc90/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசம் </p><p>தற்போது நடுத்தர வயதில் உள்ள மாலதிக்கு ஒரு காலத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/hockey">ஹாக்கி </a>விளையாட்டு தான் எல்லாமுமாக இருந்தது. தனது 6 வயதில் ஹாக்கி விளையாட தொடங்கிய மாலதி பல மாநிலங்களுக்கு பயணப்பட்டு தன் மாநிலத்தையும், 4 முறை சர்வதேச போட்டிகளில் நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். </p><p>லக்னோவில் உள்ள பனாரசி தாஸ் பொறியியல் கல்லூரியில் பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றி உள்ளார். </p><p>ஆனால் கடினமான திருமண வாழ்வு, பொருளாதார நெருக்கடி, மகனை வளர்க்க வேண்டிய பொறுப்பு ஆகியவற்றால் இந்த முன்னாள் ஹாக்கி வீராங்கனையின் வாழ்வு அவரை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராக்கியது. </p><p>2013 முதல் அவரது வாழ்வில் ஏற்பட்ட இந்த திருப்பம் இன்று வரை ஒருவழிபாதையாக தொடர்கிறது. லக்னோவின் முதல் ரிக்ஷா ஓட்டுநர் என ஊடகங்கள் அவருக்களித்த விளம்பரப் பட்டமே அவரது தற்போதைய அடையாளம். </p><p>15 ஆண்டுகளாக லக்னோவின் சாலைகளில் மாலதியின் ஆட்டோ ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த பொருள் ஆதாரத்தை வைத்து தான் அவருக்கும் வண்டி ஓடுகிறது. </p> <h2>காரணம்?..</h2><p>சரி, இவரை பற்றி இப்போது பேச என்ன காரணம்?.. பேசப்படாததே அவரை பற்றி பேச காரணம். மாலதியை போன்று பல பெண்கள், வீராங்கனைகள் இருக்கின்றனர். இவர் சர்வதேச போட்டிகளில் விளையாடித்தால் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் பல வீராங்கனைகளின் தொடக்கம் மாவட்டங்களோடு முடிந்துவிடுகிறது. மாலதி இண்டர்னேஷனல் செல்லும் வரை கிடையாத சுதந்திரம் இங்கு பல பெண்களுக்கு ஆரம்பக்கத்திலேயே பறிக்கப்பட்டு விடுகிறது.</p><p>ஏன் சுற்றி வளைப்பானேன்.. அண்மையில் சோனாலி சிங் என்ற இன்ஸ்டாகிராம் கன்டென்ட் கிரியேட்டர் நமது மாலதியை பேட்டி கண்டிருக்கிறார். அதில் அவர் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.</p> <h2>ஹாக்கியால் நிறைந்த சிறு பிராயம்</h2><p>தன் சிறு பிராயமும் அது ஹாக்கியால் நிறைந்திருந்ததை பற்றியும் பேசியும் மாலதி, " நான் 6 வயதிலேயே விளையாட தொடங்கிவிட்டேன். அதுவே நான் ஆழமான ஆர்வம் கொண்ட விளையாட்டாக இருந்தது. மாநில அளவிலான போட்டியில் விளையாடவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது" என்று நினைவுகூர்கிறார்.</p><p>போட்டிகளுக்காக ஆக்ரா, மத்திய பிரதேசம், ஒரிசா என சுற்றிச் சுழன்ற மாலதி, அதுவே தன் வாழ்வின் "பொன்னான நாட்கள்" என விவரிக்கிறார். அவர் எப்போதும் ஆட்டத்தில் சென்ட்ரல் பார்வேர்ட்டில் தான் விளையாடுவாராம்.</p><p>என முதல் தேசிய அளவிலான போட்டி புவனேஷ்வரில் நடந்தது. இரண்டாவது ஆக்ராவில். நான் விளையாடும் அணி மீது மக்கள் பணம் கட்டி பந்தயம் வைப்பார்கள். அது ஒரே நேரத்தில் பயமாகவும் உற்சாகமூட்டுவதாகவும் இருக்கும். ஆனால் எனது எல்லா கனவுகளும் மிக மிக எழுத்தாக நசுக்கப்பட்டு விட்டன. அதை புரிந்துகொள்வதே எனக்கு கடினமாக உள்ளது" என்கிறார் .</p><p>"என் தந்தை நான் விளையாடுவதை ஆதரிக்கவில்லை. எனக்கு அண்ணன்கள் இல்லை. எனவே எனக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைத்தால் நல்லது என்றே அவர் நினைத்தார்" என்று தற்போது நினைவுகூரும் மாலதிக்கு 2000 ஆம் ஆண்டில் அவரின் 20களின் பாதியில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.</p><h2>திருமணம்</h2><p>"அது மிகவும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை இல்லை. நான் பெரும்பாலான நேரங்களில் துன்புறுத்தப்பட்டேன். ஆனால் நான் செல்ல வேறு இடம் இல்லை. எனவே நான் அங்கேயே இருந்தேன். 2004 இல் எனக்கு மகன் பிறந்தான். அதன் பிறகும் எதுவும் மாறவில்லை. வார்த்தைகளளாலும், உடல் ரீதியாகவும் நான் துன்புறுத்தப்பட்டேன். யாரும் என் மீது இரக்கம் கொண்டு உதவ வரவில்லை.</p><p>என் மகன் பிறந்த 1 மாதத்தில் நான் என் கணவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். என் மகனும் நான் அனுபவிக்கும் கொடுமைகளை அனுபவிக்க வேண்டாம் என்று எண்ணினேன்" என்கிறார். </p><p>தன் பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய மாலதிக்கு இப்போது தன்னையும் தன் குழந்தையையும் காப்பாற்ற ஒரு வேலை தேவையாக இருந்தது.</p><p>தன் பெயரின் பின்னால் இருக்கும் கணவன் பெயரை துறந்த மாலதி "எனக்கு எதுவும் வேண்டாம். நானே சொந்தக் காலில் நிற்பேன். என் மகனையும் நானே வளர்ப்பேன். பின்னர் ஏன் எனக்கு அந்த பெயர்" என கேக்கிறார் மாலதி.</p> <h2>வேலை</h2><p>ஹாக்கி மட்டுமே தான் அறிந்த ஒரே விஷயம் என்பதால் பயிற்சியாளர் வேலை தேட ஆரம்பித்தார். 2005 இல் பாபு பனாரசி தாஸ் கல்லூரியில் பெண்கள் அணி பயிற்சியாளராக அவரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு அவர் வேளைக்கு சேர்ந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக மகனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போக 2 ஆண்டுகளில் அந்த வேலையை விட வேண்டிய கட்டாயம் மாலதிக்கு ஏற்பட்டது.</p><p>2007 இல் பணியை விட்ட பின் செய்வதறியாது இருந்த மாலதி அதன்பின் தேர்ந்தெடுத்தது தான் ஓட்டுநர் பணி. தொண்டு நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று லக்னோவின் தெருக்களில் தான் முதல் நாள் ஆட்டோ ரிக்ஷா ஓட்டிச் சென்ற அனுபவத்தை நினைவு கூறும் மாலதி, " அது நான் உயிர்ப்போடு இருப்பதாக என்னை உணர வைத்தது. அந்த கணத்தில், எல்லாம் என் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக நான் உணர்ந்தேன். </p><p>ஆனால் ஆரம்பத்தில் என்னை பார்த்து எல்லோரும் சிரித்தனர். என் ஆட்டோவில் ஏற மறுத்தனர். ஆனால் நான் விடாப்பிடியாக பணியை தொடர்ந்தேன். காலம் கடக்க, எல்லாம் மாறியது" என்கிறார்.</p> <h2>முதல் ரிக்ஷா ஓட்டுநர்</h2><p>"நான் லக்னோவின் முதல் ரிக்ஷா ஓட்டுநர். முதலில் நான் இ ரிக்ஷா ஓட்டினேன். கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வருகிறேன். நான் ரிக்ஷா ஓட்டிய ஆரம்ப காலங்களில் பலரும் என்னை பற்றி கமெண்ட் அடிப்பார்கள். </p><p>ஆனால் நான் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. நான் சில பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட கற்றும் தந்துள்ளேன். அவர்கள் இப்போது வண்டி ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்."என்கிறார்.</p><p>தன் ஹாக்கி விளையாட்டை விட்டு ஓட்டுநர் ஆக வேண்டிய சூழல் குறித்து பேசிய அவர், " கடினமாக உழைக்கும் ஒரு பெண், இன்று ரிக்ஷா ஓட்டிக் கொண்டிருப்பதை பார்த்து அரசாங்கம் தனக்கு தானே வெட்கப்பட வேண்டும்" என்கிறார்.</p><p>ரிக்ஷா ஓட்ட வேண்டாம் என்று தனது தந்தை அழுததையும், பிறரின் புரணிகளையும் நினைவுகூர்ந்த மாலதி " நான் யாரிடமும் தோற்க விரும்பவில்லை." என தீர்க்கமுடன் கூறுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் சோகம்: பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-tragedy-fridge-blast-fire-claims-four-of-same-family</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-tragedy-fridge-blast-fire-claims-four-of-same-family#comments</comments><guid isPermaLink="false">68d9cdbc-8101-4e49-a2c8-1a420b718bd4</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:44:31 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:44:31.096Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,பெலகாவி,Fridge blast,Short Circuit</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/x24encif/frig.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Refrigerator explosion ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/x24encif/frig.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மின் கசிவு காரணமாக மின் அழுத்தம் அதிகரித்து, குளிர்சாதன பெட்டி வெடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>கர்நாடக மாநிலம் பெலகாவி நகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>பெலகாவி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சவத் காலி எனும் பகுதியில் இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த குளிர்சாதனப் பெட்டி திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் உருவான தீ, நொடிப் பொழுதில் வீடு முழுவதும் பரவியதுடன், அடர்ந்த புகையும் சூழ்ந்து கொண்டது. அந்நேரத்தில் வீட்டிலிருந்தவர்கள் வெளியேற வழி தெரியாமலும், தப்பியோட முடியாமலும் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.</p><h2><strong>4 பேர் உயிரிழப்பு</strong></h2><p>இந்த விபத்தின் காரணமாக மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த இருவரை மீட்புக் குழுவினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>மின் கசிவே காரணம்?</strong></h2><p>மின் கசிவு காரணமாக மின் அழுத்தம் அதிகரித்து, குளிர்சாதன பெட்டி வெடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது!</title><link>https://www.maalaimalar.com/news/national/grand-brahmotsavam-celebrations-begin-in-tirupati</link><comments>https://www.maalaimalar.com/news/national/grand-brahmotsavam-celebrations-begin-in-tirupati#comments</comments><guid isPermaLink="false">624a5e42-c519-48eb-9960-c6832fc11996</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:33:48 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:33:48.723Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பதி,mukesh ambani,Tirupati,tirumala,பிரம்மோற்சவ விழா,ChandraBabu Naidu,திருப்பதி ஏழுமலையான்   கோவில்,brahmotsavam,திருப்பதி கோவில்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zcn5wvv6/Tirupati-Brahmotsavam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tirupati Brahmotsavam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zcn5wvv6/Tirupati-Brahmotsavam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருப்பதி ஏழுமலையான் கோவிலின்</a> வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.</p><h2>பிரம்மோற்சவ விழா</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">பிரம்மோற்சவ விழாவை</a> முன்னிட்டு அலிபிரி சோதனை சாவடியில் இருந்து கோவில் முகத்து வாரம், மற்றும் கோவில் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்காரம் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டன் கணக்கில் மலர்கள் கொண்டுவரப்பட்டு கோவில் உள்பிரகாரம், வெளி பிரகாரம் முழுவதும் மலர் அலங்காரம் மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.</p><p>பிரம்மோற்சவ விழா தொடக்கத்தை முன்னிட்டு ஏழுமலையானின் படைத் தளபதி விஸ்வக்சேனர் நேற்று மாலை சிறப்பு அலங்காரத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் வைபவம் நடந்தது.</p><h2>கொடியேற்றம்</h2><p>விழாவின் ஒரு பகுதியாக பூமி தாய்க்கு யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அங்குரார்பனம் எனும் மண்ணில் விதை நடும் நிகழ்ச்சி நடந்தது. </p><p>இன்று மாலை 6.21 மணி முதல் 6.35 மணிக்குள் மீனலக்கனத்தில் தங்கக் கொடி மரத்தில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">கொடியேற்றம்</a> நடைபெறுகிறது.</p><h2>பட்டு சமர்ப்பணம்</h2><p>அதன் பின்னர் முதல்-மந்திரி <a href="https://www.maalaimalar.com/topic/chandrababu-naidu">சந்திரபாபு நாயுடு</a> தனது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ் ஆகியோருடன் மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.</p><p>தொழிலதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/mukesh-ambani">முகேஷ் அம்பானி</a> சார்பில் வழங்கப்பட்ட 15 மின்சார பஸ்கள் மற்றும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இரவு ஏழுமலையான் சிறப்பு அலங்காரத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம்: ஆயுத குழுக்களின் தாக்குதலால் 4 பேர் பலி; பொதுமக்கள் கடும் பீதி</title><link>https://www.maalaimalar.com/news/national/risk-of-renewed-violence-in-manipur-4-killed-in-armed-group-attacks-civilians-in-panic</link><comments>https://www.maalaimalar.com/news/national/risk-of-renewed-violence-in-manipur-4-killed-in-armed-group-attacks-civilians-in-panic#comments</comments><guid isPermaLink="false">f8cae76d-a36d-4dda-904e-b6a12a1d2bb3</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:16:15 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:16:15.744Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>manipur,மணிப்பூர்,Manipur violence,மணிப்பூர் கலவரம்,Kuki-Zo Council,குகி-சோ கவுன்சில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/u0qnonr9/manu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manipur violence   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/u0qnonr9/manu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மணிப்பூரின் தமெங்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்குள் அண்மையில் புகுந்த ஆயுதமேந்திய நாகா பயங்கரவாத குழுக்கள் அதிரடித் தாக்குதல் நடத்தின. </p><p>மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், பல்வேறு மாவட்டங்களில் ஆயுதமேந்திய குழுக்கள் மீண்டும் தங்களது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தத் தொடர் வன்முறை சம்பவங்கள் அப்பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்கியுள்ளன.</p><h2>கிராமங்<strong>கள் மீது துப்பாக்கி சூடு</strong> </h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-on-rajasthan-civic-poll-results">மணிப்பூரின்</a> தமெங்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்குள் அண்மையில் புகுந்த ஆயுதமேந்திய நாகா பயங்கரவாத குழுக்கள் அதிரடித் தாக்குதல் நடத்தின. இந்தத் திடீர் துப்பாக்கி சூட்டில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இத்தாக்குதலில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.</p><h2>குகி-சோ க<strong>வுன்சில் கடு</strong>ம் கண்டனம்</h2><p>இந்த கொடூர சம்பவத்திற்கு குகி-சோ கவுன்சில் தனது பலத்த கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அம்மாநிலத்தில் இயங்கி வரும் நாகா ஆயுதக் குழுக்களின் எல்லைமீறிய செயல்பாடுகளே வன்முறை மீண்டும் தலைதூக்குவதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 22 குகி பழங்குடியின மக்கள் இந்த ஆயுத குழுக்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளனர்.</p><h2>மத்திய அரசுக்<strong>கு கோ</strong>ரிக்கை</h2><p>ஆயுதமேந்திய குழுக்களின் இத்தகைய தடையற்ற செயல்பாடுகள் மணிப்பூரை மீண்டும் ஒரு பெரிய அளவிலான முழுமையான இனமோதலை நோக்கி தள்ளும் ஆபத்தை கொண்டுள்ளது. எனவே, மத்திய அரசும் பாதுகாப்புப் படைகளும் உடனடியாக தலையிட்டு, பயங்கரவாத குழுக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: மகாராஷ்டிராவில் ஒரு கிலோ ரூ.27 ஆயிரத்துக்கு விற்பனையாகும் &apos;தங்க கொழுக்கட்டை&apos;!</title><link>https://www.maalaimalar.com/news/national/vinayagar-chaturthi-special-golden-modak-worth-rs-27000-per-kg-in-maharashtra</link><comments>https://www.maalaimalar.com/news/national/vinayagar-chaturthi-special-golden-modak-worth-rs-27000-per-kg-in-maharashtra#comments</comments><guid isPermaLink="false">d54ab6db-b8aa-47ab-81bd-adeb19766183</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:32:57 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:32:57.773Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,விநாயகர் சதுர்த்தி,Vinayaka Chaturthi,Gold Modak,Silver Kozhukkattai,Edible Gold Leaf,தங்க கொழுக்கட்டை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/5suizf66/kkk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold Modak]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/5suizf66/kkk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாரம்பரிய சுவையுடன் கூடிய இந்த கொழுக்கட்டை முந்திரி, பாதாம், பிஸ்தா, பாலாடைக்கட்டி (கவா), குங்குமப்பூ மற்றும் தூய்மையான நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. </p><p>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் விற்பனை செய்யப்படும் 24 காரட் 'தங்க கொழுக்கட்டை' (கோல்டன் மோதக்) பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.</p><h2>ஆடம்ப<strong>ர நெய்வேத்திய</strong>ம்</h2><p>நாசிக்கின் வித்யா விகாஸ் சர்க்கிள் பகுதியில் அமைந்திருக்கும் '<a href="https://www.maalaimalar.com/news/topnews/education-is-god-go-study-bro-quirky-ganesha-statue">சாகர் ஸ்வீட்ஸ்</a>' எனும் பிரபல இனிப்பகம் விநாயக பெருமானின் நைவேத்தியத்திற்காக இந்த தங்க முலாம் பூசப்பட்ட சிறப்பு கொழுக்கட்டையைத் தயாரித்துள்ளது. சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையிலும், இந்த கொழுக்கட்டை ஒரு கிலோ ரூ.27,000 என நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தனி கொழுக்கட்டையின் விலை ரூ.540 ஆக உள்ளது.</p><h2>2<strong>4 காரட் தங்க</strong>ம்</h2><p>பாரம்பரிய சுவையுடன் கூடிய இந்த கொழுக்கட்டை முந்திரி, பாதாம், பிஸ்தா, பாலாடைக்கட்டி (கவா), குங்குமப்பூ மற்றும் தூய்மையான நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் வெளிப்புற அலங்காரத்திற்காக 24 காரட் தூய்மையான, சாப்பிடக்கூடிய தங்க தகடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடை உரிமையாளர் தீபக் சவுத்ரி தெரிவிக்கையில், விநாயகர் சதுர்த்தியின் முதல் நாளிலேயே சுமார் 10 கிலோ தங்க கொழுக்கட்டைகள் விற்பனையாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>பொதுமக்களின் பல்வேறு சுவை விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில், இந்த இனிப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட கொழுக்கட்டை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சாதாரண காஜு (முந்திரி) கொழுக்கட்டை ஒரு கிலோ ரூ. 2,000-க்கும், உலர் பழங்கள் (டிரை ஃப்ரூட்ஸ்) மற்றும் அத்திப்பழக் கொழுக்கட்டைகள் கிலோ ரூ. 1,400 முதல் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் வெள்ளி முலாம் பூசப்பட்ட 'சில்வர் கொழுக்கட்டை' கிலோ ரூ. 2,000-க்கு விற்பனையாகிறது.</p><h2>சாப்பிட<strong>க்கூடிய தங்கம்</strong></h2><p>உணவில் பயன்படுத்தப்படும் இந்த தங்கம் 'E-175' எனும் குறியீட்டின் கீழ் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். 23 முதல் 24 காரட் வரையிலான தூய்மையான தங்கம் மனித உடலின் செரிமான அமிலங்களுடன் எந்த வேதியியல் வினையும் புரியாது என்பதால், செரிமான மண்டலத்தின் வழியாக அப்படியே வெளியேறிவிடும். இதனால் இதை உட்கொள்வது பாதுகாப்பானது என கருதப்பட்டாலும், இதில் உடலுக்குத் தேவையான எந்த ஊட்டச்சத்துக்களோ மருத்துவ நன்மைகளோ இல்லை என்பதும், இது வெறும் ஆடம்பர அழகிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு ரூ.1.28 கோடி &apos;டிஜிட்டல் கைது&apos; மோசடி: புனேவில் அதிர்ச்சி சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/digital-arrest-scam-shocks-pune-retired-army-officer-cheated</link><comments>https://www.maalaimalar.com/news/national/digital-arrest-scam-shocks-pune-retired-army-officer-cheated#comments</comments><guid isPermaLink="false">8a4885bb-647c-432c-a6e7-c8bab0ced860</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:15:55 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:15:55.353Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஜிட்டல் கைது,Digital Arrest,புனே,Pune,மகாராஷ்டிரா மாநிலம்,cyber scam,Telecom Headquarters</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/9h403wnp/puu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Digital Arrest   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/9h403wnp/puu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அடுத்தடுத்த வீடியோ அழைப்புகளில், காவல் சீருடையில் தோன்றிய மோசடி கும்பல், சி.பி.ஐ அதிகாரிகள் போல நடித்து அதிகாரியை மேலும் அச்சுறுத்தியது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/mass-scream-event-at-ocean-beach-san-francisco-stress-relief-gathering">மகாராஷ்டிரா மாநிலம்</a> புனேவைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர், 'டிஜிட்டல் கைது' எனப்படும் அதிநவீன ஆன்லைன் சைபர் மோசடியில் சிக்கி தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.1.28 கோடியை இழந்துள்ளார்.</p><h2><strong>போலி அழைப்பு</strong></h2><p>கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி, தொலைத்தொடர்பு தலைமையகத்தில் இருந்து பேசுவதாக கூறி பெண் ஒருவர் ராணுவ அதிகாரியை தொடர்பு கொண்டார். அதிகாரியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து மும்பையில் சட்டவிரோத அழைப்புகளும், ஆபாச வீடியோக்களும் அனுப்பப்படுவதாக அச்ச மூட்டினார். பின்னர், இந்த வழக்கு மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறி, போலி காவல் அதிகாரியிடம் இணைப்பை வழங்கினார்.</p><p>சந்தேக நபர்கள் அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணிற்குப் போலி எஃப்.ஐ.ஆர் நகல் மற்றும் சில ஆபாச படங்களை அனுப்பி பயமுறுத்தினர். மேலும், விசாரணை என்ற பெயரில் அவரது குடும்ப பின்னணி, வங்கி கணக்குகள், நிலையான வைப்புத் தொகைகள் மற்றும் தங்கம் கையிருப்பு குறித்து விரிவான விவரங்களை சேகரித்தனர். மூத்த குடிமகன் என்பதால் நேரில் கைது செய்யாமல் 'டிஜிட்டல் கைது' முறையில் கண்காணிப்பில் வைப்பதாக கூறி மிரட்டினர்.</p><h2>போலி சி.பி.ஐ <strong>அதிகாரிகள்</strong> </h2><p>அடுத்தடுத்த வீடியோ அழைப்புகளில், காவல் சீருடையில் தோன்றிய மோசடி கும்பல், சி.பி.ஐ அதிகாரிகள் போல நடித்து அதிகாரியை மேலும் அச்சுறுத்தியது. கணக்கு சரிபார்ப்பு என்ற பெயரில், அவரது நிலையான வைப்புத் தொகைகளை உடைத்து, அவர்கள் குறிப்பிட்ட பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்புமாறு பணிக்கப்பட்டார். சட்ட நடவடிக்கைக்கும் கைதுக்கும் பயந்த அதிகாரி, ஆகஸ்ட் இறுதி வாரம் முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை பல தவணைகளில் மொத்தம் ரூ.1.28 கோடியை போலி கணக்குகளுக்கு மாற்றினார்.</p><h2>உண்மை<strong>யை அம்பலப்படுத்திய</strong> மகள்</h2><p>அடிக்கடி வெவ்வேறு கணக்குகளுக்கு பணம் அனுப்ப கோரியதால் ராணுவ அதிகாரியின் மனைவியாருக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து அவர் வெளிநாட்டில் வசிக்கும் தனது மகளுக்குத் தகவல் தெரிவித்தார். நிலைமையை உணர்ந்த மகள், பெற்றோரிடம் இது மோசடி என்பதை சுட்டிக்காட்டி உடனடியாகப் பணப்பரிவர்த்தனைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.</p><h2>கா<strong>வல்துறையில் புகா</strong>ர்</h2><p>பாதிக்கப்பட்ட அதிகாரி உடனடியாக புனே சைபர் குற்றப்பிரிவு காவல்துறையையும் உதவி எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பணம் அனுப்பப்பட்ட போலி கணக்குகளை பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையோ அல்லது பிற அரசு அமைப்புகளோ ஒருபோதும் தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் 'டிஜிட்டல் கைது' செய்ய மாட்டார்கள் என்றும், பணமாற்றம் கேட்க மாட்டார்கள் என்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தேசிய பொறியாளர்கள் தினம்: விஸ்வேஸ்வரய்யாவிற்கும் பொறியாளர் தினத்திற்கு என்ன சம்பந்தம்? </title><link>https://www.maalaimalar.com/news/topnews/why-is-visvesvaraya-linked-to-national-engineers-day</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/why-is-visvesvaraya-linked-to-national-engineers-day#comments</comments><guid isPermaLink="false">d3df7cc1-86aa-4c40-8c0c-907cdf192154</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:54:15 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:54:15.777Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>IIT,Digital India,Indian engineers,National Engineers Day,தேசிய பொறியாளர்கள் தினம்,Engineers Day 2026,Mokshagundam Visvesvaraya</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/6m8orumw/Engineers-Day-2026" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Engineers Day 2026 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/6m8orumw/Engineers-Day-2026?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 அன்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">தேசிய பொறியாளர்கள் தினம் </a>மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய வரலாற்றின் மிகச்சிறந்த பொறியாளர், பொருளாதார மேதை, சிறந்த எழுத்தாளர் மற்றும் ராஜதந்திரி எனப் பன்முகத்தன்மை கொண்ட மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளைப் போற்றும் வகையிலும், நாட்டின் வளர்ச்சிக்கு பொறியாளர்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் இந்தத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.</p><h2>நவீன மைசூரின் தந்தை</h2><p>விஸ்வேஸ்வரய்யா 1861 ஆம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகாவில் </a>உள்ள முட்டெனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். தனது உயர்கல்விக்காக சென்னைக்கு இடம்பெயர்ந்த அவர், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">சென்னை பல்கலைக்கழகத்தில்</a> பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர், அறிவியல் துறைக்கு மாறிய அவர், புனேயில் உள்ள அறிவியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்துத் தேர்ந்தார்.</p><p>1912 முதல் 1918 வரை மைசூரின் திவானாகப் பொறுப்பு வகித்த அவர், பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தார். இதன் காரணமாக "நவீன மைசூரின் தந்தை" என்று அவர் போற்றப்படுகிறார்.</p><h2>பொறியியல் சாதனைகள் மற்றும் பாரத ரத்னா</h2><p>விஸ்வேஸ்வரய்யா வெள்ள மேலாண்மை, நீர்ப்பாசனம் மற்றும் பொறியியல் துறையில் செய்த சாதனைகள் இன்றும் போற்றத்தக்கவை.</p><p>1908 ஆம் ஆண்டு மூசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு, உஸ்மான் சாகர் மற்றும் ஹிமாயத் சாகர் ஆகிய நீர்த்தேக்கங்களை வடிவமைத்து வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார்.</p><p>விசாகப்பட்டினம் துறைமுகத்தைக் கடல் அரிப்பிலிருந்து பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றினார்.</p><p>மைசூரின் தலைமைப் பொறியாளராக இருந்தபோது, அந்தப் பிராந்தியத்தின் நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத்திற்கு வாழ்வாதாரமாக விளங்கும் கிருஷ்ண ராஜ சாகர் அணையைக் கட்டுவதில் முக்கியப் பங்காற்றினார். தண்ணீரைச் சீராக ஒழுங்குபடுத்த தானியங்கி மதகுகளை அறிமுகப்படுத்தினார்.</p><p>"Planned Economy for India", "Reconstructing India" மற்றும் "Memoirs of My Working Life" உள்ளிட்ட பல முக்கிய புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.</p><p>தொழில் மற்றும் பொதுப்பணித் துறையில் அவர் ஆற்றிய அசாத்திய பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசு 1955 ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய குடிமை விருதான<a href="https://www.maalaimalar.com/topic/bharat-ratna-award"> பாரத ரத்னா விருதை </a>அவருக்கு வழங்கி கௌரவித்தது.</p><h2><strong>தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளால் இயங்கும் பொறியாளர்களின் தசாப்தம்</strong></h2><p>இந்தியா ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குகிறது. நாட்டின் உள்கட்டமைப்பு, உத்திசார் தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் அமைப்புகளின் வளர்ச்சியில் பொறியாளர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.</p><p>நெடுஞ்சாலைகள், பாலங்கள், மெட்ரோ நெட்வொர்க்குகள், அணைகள் மற்றும் மின் அமைப்புகளில் இவர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆதார் , யுபிஐ மற்றும் டிஜிலாக்கர் போன்ற டிஜிட்டல் தளங்கள் பொறியாளர்களின் பெரும் உழைப்பால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.</p><p>பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி, செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் ஆகிய துறைகளிலும் பொறியாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.</p><p>2026 ஆம் ஆண்டின் நிலவரப்படி, நாட்டின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி முறையின் முக்கிய அங்கமாக 23 இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், 31 தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் 26 இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகங்கள் விளங்குகின்றன.</p><p>உலகளாவிய தொழில்நுட்பம் தற்போது AI, செமிகண்டக்டர்கள், குவாண்டம் கம்ப்யூட்டிங், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் டீப் டெக் ஆகியவற்றை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், 2047 ஆம் ஆண்டிற்குள் 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) என்ற நாட்டின் நீண்டகால இலக்கை அடைவதில் இந்தியப் பொறியாளர்கள் மிக முக்கியப் பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>