<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 29 Jul 2026 06:24:35 +0000</lastBuildDate><item><title>இயற்கையோடு இயைந்த கலாச்சாரமே புலிகள் பாதுகாப்பிற்கு காரணம்- பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-nature-aligned-culture-drives-tiger-protection</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-nature-aligned-culture-drives-tiger-protection#comments</comments><guid isPermaLink="false">ea620cbd-1dc2-47ee-ae51-f438a677e804</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:19:47 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:19:47.870Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புலி,tiger,pm modi,பிரதமர் மோடி,Internation tiger day,சர்வதேச புலிகள் தினம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/s6i1adii/Pm-modi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tiger-PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/s6i1adii/Pm-modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">சர்வதேச புலிகள் தினம்</a></h2><p>சர்வதேச புலிகள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 29 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. புலிகளின் பாதுகாப்பு, அவற்றின் வாழிடங்களைப் பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கங்களாக பார்க்கப்படுகிறது.</p><p>கடந்த 2010ம் ஆண்டு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் இந்த தினம் உருவாக்கப்பட்டது.</p><p>புலிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருவதைத் தடுத்து, அவற்றைப் பாதுகாக்க இந்த நாள் கொண்டுவரப்பட்டது.  புலிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருவதைத் தடுத்து, அவற்றைப் பாதுகாக்க இந்த நாள் கொண்டுவரப்பட்டது. உலகில் உள்ள காட்டுப் புலிகளில் 75%-க்கும் அதிகமானவை இந்தியாவில் தான் வாழ்கின்றன. 2022-க்குள் புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என்ற சர்வதேச இலக்கை இந்தியா காலக்கெடுவிற்கு முன்பே சாதித்துக் காட்டியது.</p><p>சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 3,167-க்கும் அதிகமான காட்டுப் புலிகள் உள்ளன.</p><h2>பிரதமர் மோடி</h2><p>இந்நிலையில் சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு <a href="https://www.maalaimalar.com/news/national/pm-thanks-people-for-responses-positive-suggestions-received-for-midnight-video" rel="nofollow">பிரதமர் மோடி</a> தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>புலிப் பாதுகாப்பில் நமது வனத்துறைப் பணியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாவலர்களின் முயற்சிகளும், அர்ப்பணிப்பும் முக்கியப் பங்காற்றியுள்ளன.</p><p>அந்த உணர்வோடு, உள்ளூர் சமூகங்களுக்கு வலுவூட்டுவதிலும், மனித-வனவிலங்கு மோதலைக் குறைப்பதிலும் இந்தியா தனது உறுதிப்பாட்டைத் தொடர்கிறது.</p><p>உலகப் புலி தினத்தை முன்னிட்டு அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் வாழ்த்துக்கள். உலகப் புலி எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70% இந்தியாவில்தான் உள்ளது என்பதில் இந்திய மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.</p><p>இயற்கையோடு இயைந்து வாழும் நமது பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சாரத்தால் உத்வேகம் பெற்று, நமது மக்களின் கூட்டு மனவுறுதியால் இந்தியாவின் புலிப் பாதுகாப்பு முயற்சிகள் உந்தப்படுகின்றன.</p><p>அறிவியல் அடிப்படையிலான பாதுகாப்பு, சமூகப் பங்கேற்பு மற்றும் புலிப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றிற்கான எங்கள் உறுதிப்பாட்டையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இந்தியாவின் முக்கியப் புலி காப்பகங்கள்</h2><p>இந்தியாவில் தற்போது 54-க்கும் மேற்பட்ட புலி காப்பகங்கள் உள்ளன.</p><p>ஜிம் கார்பெட்- உத்தரகாண்ட்</p><p>கான்ஹா- மத்திய பிரதேசம்</p><p>ரந்தம்பூர்- ராஜஸ்தான்</p><p>சுந்தரவனக் காடுகள்- மேற்கு வங்கம்</p><p>பந்திப்பூர்- கர்நாடகா</p>]]></content:encoded></item><item><title>மும்பை பிரபல கிளப்புகளின் உரிமங்கள் ரத்து: சுகாதாரக் குறைபாடு காரணமாக உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/mumbai-popular-clubs-licenses-cancelled-health-violations-food-safety-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/mumbai-popular-clubs-licenses-cancelled-health-violations-food-safety-action#comments</comments><guid isPermaLink="false">6907596f-1c94-43fe-a219-09591bf4796a</guid><pubDate>Wed, 29 Jul 2026 04:51:57 +0000</pubDate><atom:updated>2026-07-29T04:51:57.716Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,Cricket Club of India,The Willingdon Sports Club,FSSAI Licences,தி கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா,தி வில்லிங்டன் ஸ்போர்ட்ஸ் கிளப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/3po6g5pp/mumbai-club.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cricket Club of India  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/3po6g5pp/mumbai-club.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பையிலுள்ள மிகவும் பிரபலமான மற்றும் பழமை வாய்ந்த கிளப்புகளில் நடத்தப்பட்ட சோதனையில், உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிகளில் கடுமையான மீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 5 முன்னணி கிளப்புகளின் உணவு உரிமங்களை ரத்து செய்து மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், முறையான உரிமம் இன்றி செயல்பட்டு வந்த மற்றொரு பிரபல விளையாட்டு கிளப்பின் உணவு விநியோக சேவையை முற்றிலும் நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2><strong>உரிமம் ரத்து செய்யப்பட்ட முக்கிய கிளப்புகள்:</strong></h2><p>கடந்த ஜூலை 27 அன்று மும்பை மாநகர் முழுவதும் உள்ள கிளப்புகள், உணவகங்கள் மற்றும் உணவகக் கூடங்களில்  எஃப்.டி.ஏ அதிகாரிகள் தீவிர ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். இதில், தி கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா, தி வில்லிங்டன் ஸ்போர்ட்ஸ் கிளப், எம்.ஐ.ஜி கிரிக்கெட் கிளப், ஆர்.கே. ஜூஹு ஜிம்கானா, அபர்ணா ஜூஹு ஜிம்கானா ஆகிய 5 புகழ்பெற்ற கிளப்புகளின் உணவு உரிமங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.</p><h2><strong>பூச்சிகள் மற்றும் ஈக்கள் தொல்லை:</strong></h2><p>FDA அதிகாரிகளின் சோதனையின் போது சமையலறை மற்றும் உணவு சேமிப்புப் பகுதிகளில் பல்வேறு தீவிர சுகாதார சீர்கேடுகள் கண்டறியப்பட்டன. உணவுகள் தயாரிக்கப்படும் சமையலறைப் பகுதிகளில் கரப்பான் பூச்சிகள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.</p><h2>சு<strong>காதாரமற்ற பராமரிப்பு:</strong></h2><p>உணவுப் பொருட்களை முறையான வெப்பநிலையில் சேமித்து வைக்காதது மற்றும் சமையலறை உபகரணங்கள் தூய்மையாகப் பராமரிக்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட தூய்மை வழிகாட்டுதல்கள் எதையும் இந்த உயர்முனை கிளப்புகள் முறையாகப் பின்பற்றவில்லை.</p><h2>பி<strong>ற கிளப்புகள் மீதான நடவடிக்கை:</strong></h2><p>மலாடு மேற்கில் செயல்பட்டு வரும் கோரேகாவ் ஸ்போர்ட்ஸ் கிளப் FSSAI உரிமம் எதுவுமின்றி இயங்கி வந்தது தெரியவந்ததை அடுத்து, அங்கு உணவு சேவைகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 7 நிறுவனங்களில், ஒரு உணவகத்திற்குச் சுகாதார நிலையை மேம்படுத்த அவகாசம் வழங்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.</p><h2><strong>உணவு பாதுகாப்புத் துறையின் எச்சரிக்கை:</strong></h2><p>நகரத்தின் உயர்மட்டப் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உறுப்பினர்களாக இருக்கும் முன்னணி கிளப்புகளிலேயே இத்தகைய சுகாதாரச் சீர்கேடுகள் கண்டறியப்பட்டது பொதுமக்கள் மற்றும் உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்பு விதிகளில் எவ்வித சமரசமும் செய்யப்பட மாட்டாது என்றும், அனைத்து குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டு, மறுஆய்வு செய்யப்பட்ட பின்னரே இந்த கிளப்புகளின் உரிமங்களை மீண்டும் புதுப்பிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் FDA அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தபால் கட்டணம் 1-ந் தேதி முதல் மாற்றம்- விரைவு சேவைக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/postal-charges-to-change-from-the-1st</link><comments>https://www.maalaimalar.com/news/national/postal-charges-to-change-from-the-1st#comments</comments><guid isPermaLink="false">85601d3b-6e41-46fb-804c-de1c9f4f11a0</guid><pubDate>Wed, 29 Jul 2026 04:45:56 +0000</pubDate><atom:updated>2026-07-29T04:45:56.454Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Indian posts,இந்திய தபால் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/t9cb0745/indianpost.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indian Post]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/t9cb0745/indianpost.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தபால் கட்டணம் 1-ந்தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது. 24 மணி, 48 மணி நேர விரைவு சேவைக்கு புதிய கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.</aside><h2><strong>ஆவணங்கள்</strong></h2><p>இந்திய தபால் துறை, விரைவு தபால் சேவைகளுக்கான புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது. மேலும், முதல் முறையாக 'ஆவணம்' மற்றும் 'பார்சல்' ஆகியவற்றுக்கு தெளிவான வரையறைகளையும் வெளியிட்டு உள்ளது. இந்த புதிய கட்டணங்கள் வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்த புதிய விதிகளின்படி, மறுவிற்பனை மதிப்பு இல்லாத கடிதங்கள் மற்றும் அச்சிடப்பட்ட ஆவணங்கள் குறைந்த கட்டணத்தில் அனுப்பப்படலாம். </p><p>வணிகப்பொருட்கள் மற்றும் மறுவிற்பனை செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தும் பார்சல் பிரிவில் சேர்க்கப்படும். வங்கி பாஸ்புத்தகம், காசோலை புத்தகம், வங்கி கணக்கு அறிக்கை, பான் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள் “ஆவணம்” பிரிவில் இடம்பெறும். </p><p>அதேபோல், 500 கிராம் வரை எடையுள்ள ராக்கி உறைகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் வணிக மதிப்பு இல்லாத அச்சிடப்பட்ட பொருட்களும் இந்த பிரிவில் சேர்க்கப்படும். இதற்கு அப்பாற்பட்ட அனைத்து பொருட்களும் பார்சல் பிரிவில் வகைப்படுத்தப்படும்.</p><h2><strong>6 நகரங்கள்</strong></h2><p>பொதுமக்கள் மற்றும் மொத்த வாடிக்கையாளர்களுக்காக '24 விரைவு தபால்' மூலம் அனுப்பப்படும் பொருட்கள் 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும். '48 விரைவு தபால்' மூலம் அனுப்பப்படும் பொருட்கள் 48 மணி நேரத்துக்குள் வழங்கப்படும். இந்த சேவைகள் தற்போது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய 6 நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றன.</p><p>24 மணி நேர விரைவு தபால் சேவையில், பொதுமக்களுக்கான கட்டணம் பொருளின் எடை மற்றும் தூரத்தை பொறுத்து ரூ.38 முதல் ரூ.186 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 50 கிராமுக்கும் குறைவான பொருளை உள்ளூர் முகவரிக்கு அனுப்ப ரூ.38, இந்தியாவின் பிற பகுதிகளுக்கு அனுப்ப ரூ.94 வசூலிக்கப்படும். 48 மணி நேர விரைவு தபால் சேவைக்கான கட்டணம் பொதுமக்களுக்கு ரூ.61 முதல் ரூ.121 வரை இருக்கும். மொத்த வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேர ரூ.38 முதல் ரூ.100 வரையும், 48 மணி நேர சேவைக்கான கட்டணம் ரூ.48 முதல் ரூ.72 வரையும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய நடைமுறையால் ஆவணங்கள் மற்றும் பார்சல்களை தனித்தனியாக வகைப்படுத்தி, அதற்கேற்ற கட்டணத்தில் அனுப்பும் வசதி கிடைக்கும் என்று தபால் துறை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு ஊழியர்கள் ஒரு கார் மட்டுமே பயன்படுத்த வேண்டும் - நிதி அமைச்சகம் அரசாணை வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/national/government-employees-must-use-only-one-car-finance-ministry-order</link><comments>https://www.maalaimalar.com/news/national/government-employees-must-use-only-one-car-finance-ministry-order#comments</comments><guid isPermaLink="false">0a5395e7-c53e-4247-9f78-e3befed34f07</guid><pubDate>Wed, 29 Jul 2026 03:35:48 +0000</pubDate><atom:updated>2026-07-29T03:35:48.175Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Govt Staff,Ministry of Finance,நிதி அமைச்சகம்,அரசு ஊழியர்கள்,ஒரு வாகனம்,one vehicle</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pklypqa2/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ One Official One Car Policy]]></media:title><media:description type="html"><![CDATA[ Centre tightens One Official One Car Policy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pklypqa2/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசாங்கத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரி ஒரு அரசு வாகனம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மத்திய அரசு</a>  வெளியிட்டுள்ளது. </p><p>இதன்படி, மூத்த அதிகாரிகள் மற்றொரு அமைச்சகம், துறை, பொதுத்துறை நிறுவனம் அல்லது தன்னாட்சி அமைப்பில் கூடுதல் பொறுப்பு வகித்தாலும், அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அரசு வாகனங்கள் ஒதுக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. </p><p>அரசு வாகனங்களின் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல், பணி இரட்டிப்பை நீக்குதல் மற்றும் பொது வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h3>நிதி அமைச்சகம் உத்தரவு</h3><p>மத்திய அரசு தனது சமீபத்திய அலுவலக அரசாணை ஒன்றில், <a href="https://www.maalaimalar.com/topic/மத்திய-நிதி-அமைச்சகம்">நிதி அமைச்சகத்தின்</a> கீழ் உள்ள செலவினத் துறை, ஊழியர்களின் பயன்பாடு குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களைக் கடுமையாக அமல்படுத்துமாறு அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த உத்தரவானது, மத்திய அரசு முழுவதும் உள்ள அலுவல் வாகனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விதிகளை ஒருங்கிணைத்து, செப்டம்பர் 2022-ல் முதன்முதலில் வெளியிடப்பட்ட விரிவான அறிவுறுத்தல்களை வலுப்படுத்துகிறது.</p><p>கடந்த 2022 செப்டம்பரில் வெளியான அறிவிப்பில், தகுதியுள்ள அதிகாரிகள் தங்களின் வழக்கமான மாதாந்திரப் போக்குவரத்திற்கு அளிக்கப்படும் படியை தவிர்த்து, மாதம் ரூ. 3,000 கட்டணம் செலுத்தி, அரசு வாகனங்களைத் தனிப்பட்ட பயணங்களுக்கு (மாதத்திற்கு 500 கி.மீ. வரை) பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டிருந்தது.</p><h3><strong>ஒரு அரசு அதிகாரிக்கு ஒரு அரசு வாகனம்</strong></h3><p>புதிய விதிமுறைகளின்படி வெளியான அரசாணையில், “ஏற்கனவே அரசுப் பணியாளர் வாகனத்திற்கு உரிமை பெற்ற ஒரு அதிகாரிக்கு, வேறொரு அமைச்சகம், துறை, பொதுத்துறை நிறுவனம் அல்லது தன்னாட்சி அமைப்பின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட காரணத்தால் மட்டும் மற்றொரு அரசு வாகனம் ஒதுக்கப்பட முடியாது.</p><p>மாறாக, அந்த அதிகாரி தமக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணியாளர் வாகனத்தையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.</p><p>அலுவல் பணி நிமித்தமாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுற்றுப்பயணங்களின்போதோ தவிர, பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் அல்லது அரசு சார்ந்த அமைப்புகளுக்குச் சொந்தமான வாகனங்களை மத்திய அரசு அதிகாரிகள் பயன்படுத்துவதையும் இந்த குறிப்பாணை தடை செய்கிறது.</p><p>நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்கும், அரசு வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும், அலுவல் ரீதியான போக்குவரத்தில் தவிர்க்கக்கூடிய செலவினங்களைக் குறைப்பதற்கும், திருத்தப்பட்ட இந்த அறிவுறுத்தல்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன” என்று செலவினத் துறை தெரிவித்துள்ளது.</p><p>‘ஒரு தகுதியுள்ள அதிகாரிக்கு ஒரு அலுவல் வாகனம்(கார்)’ என்ற கொள்கையானது, நிதி சிக்கனத்தை ஊக்குவிப்பதோடு, அமைச்சகங்கள் மற்றும் துறைகள் முழுவதும் பணியாளர்களின் வாகன நிர்வாகத்தைச் சீரமைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>அரசு அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு பயன்படுத்தாமல் வைத்திருக்கும் வாகனங்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் அனைத்து அரசுத் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தாங்கள் பயன்படுத்தும் கார்களின் பயன்பாடு குறித்த, மத்திய அரசின் அறிவுறுத்தல்களை விரிவாக ஆய்வு செய்து கடந்த 2022 செப்டம்பர் 1 ஆம் தேதி, செலவினத் துறை வெளியிட்ட முதன்மை அலுவலகக் குறிப்பாணையைத் தொடர்ந்து இந்த சமீபத்திய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விதிமுறைகளை அனைத்து அமைச்சகங்களும் மற்றும் துறைகளும் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதானுக்கு ஒடிசாவில் பிரம்மாண்ட வரவேற்பு: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-over-neet-gets-rousing-odisha-reception</link><comments>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-over-neet-gets-rousing-odisha-reception#comments</comments><guid isPermaLink="false">1076c486-1341-4fd6-9978-495ed626fe3e</guid><pubDate>Wed, 29 Jul 2026 02:31:32 +0000</pubDate><atom:updated>2026-07-29T02:31:32.727Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒடிசா,Odisha,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,நீட் தேர்வு முறைகேடு,CJPProtest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/e8y3pzgf/pradan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DHARMENDRA PRADAN]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/e8y3pzgf/pradan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு முறைகேடு புகார்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தையடுத்து, தனது மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான், சொந்த மாநிலமான ஒடிசாவிற்குச் சென்றபோது பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் அவருக்கு பதாகைகளை ஏந்தி உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.</p><h2><strong>ராஜினாமா:</strong></h2><p>மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்கள் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் தீவிர போராட்டம் நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், "தர்மசங்கடமான சூழலைத் தவிர்க்கும் பொருட்டும்" தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி, பிரதமர் நரேந்திர மோடியிடம் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.</p><h2><strong>ஒடிசாவில் உற்சாக வரவேற்பு:</strong></h2><p>பதவி விலகலுக்குப் பிறகு முதன்முறையாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த தர்மேந்திர பிரதானை வரவேற்பதற்காக, பாஜக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியும், "தர்மேந்திர பிரதான் ஜிந்தாபாத்" என கோஷமிட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><h2><strong>பாஜகவின் நிலைப்பாடு:</strong></h2><p>ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி மற்றும் மாநில பாஜக தலைவர்கள், தர்மேந்திர பிரதானின் இந்த ராஜினாமாவை "நேர்மையான மற்றும் நன்னெறி அடிப்படையிலான நடவடிக்கை" எனப் பாராட்டி, அவரை ஒரு முன்மாதிரித் தலைவராகச் சித்திரிக்கின்றனர்.</p><h2><strong>எதிர்க்கட்சிகளின் விமர்சனம்:</strong></h2><p>மாணவர்களின் கடுமையான போராட்டத்துக்குப் பின்னரே அவர் ராஜினாமா செய்த நிலையில், அவருக்கு பாஜகவினர் விழா எடுத்து வரவேற்பு அளிப்பது தவறான முன்மாதிரி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீசார் துப்பாக்கிச் சூடு: 20 பேர் உயிரிழப்பு; 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/police-open-fire-in-pakistan-occupied-kashmir-20-killed-50-injured</link><comments>https://www.maalaimalar.com/news/national/police-open-fire-in-pakistan-occupied-kashmir-20-killed-50-injured#comments</comments><guid isPermaLink="false">cab6d434-52ad-43fa-a999-af5bc18ebf86</guid><pubDate>Wed, 29 Jul 2026 02:12:49 +0000</pubDate><atom:updated>2026-07-29T02:12:49.139Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,காஷ்மீர்,Kashmir,Muzaffarabad,முசாபராபாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/13afvez4/pok.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pakistan-Kashmir ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/13afvez4/pok.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) நிலவி வரும் அரசியல் நெருக்கடிகள், அடிப்படை உரிமைகள் பறிப்பு மற்றும் தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய பேரணியின் மீது பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>அவாமி நடவடிக்கைக் குழுவின் பேரணி:</strong></h2><p>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வரும் 'ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு' என்ற மனித உரிமை மற்றும் சிவில் சமூக அமைப்பு, பிராந்திய மக்களின் உரிமைக்காகவும் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் நீண்டகாலமாகப் போராடி வருகிறது.</p><h2><strong>தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்:</strong></h2><p>ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபைக்கான 53 இடங்களில், 12 இடங்கள் அகதிகளுக்காக (பிராந்தியத்தில் வசிக்காதவர்களுக்காக) ஒதுக்கப்பட்டிருப்பதை நீக்க வேண்டும் என அங்குள்ள மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், இந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணிக்க முடிவெடுத்தனர்.</p><h2><strong>ராவல்கட் முதல் முசாபராபாத் வரை பேரணி:</strong></h2><p>தேர்தல் புறக்கணிப்பைத் தொடர்ந்து, அவாமி நடவடிக்கைக் குழுவின் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் 'ராவல்கட்' நகரிலிருந்து அம்மாநிலத் தலைநகரான 'முசாபராபாத்' நோக்கி அமைதிப் பேரணியாகச் செல்ல முயன்றனர்.</p><h2><strong>துப்பாக்கிச் சூடு சம்பவம்:</strong></h2><p>பேரணியைத் தடுக்க காவல்துறை மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் ராவல்கட்டின் முக்கிய சாலைகளில் கடுமையான தடைகளை ஏற்படுத்தினர். இருப்பினும், தடைகளை மீறிப் பேரணி முன்னேற முயன்றபோது, காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், நேரடித் தோட்டாக்களைப் பயன்படுத்தியும் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.</p><p>சம்பவ இடத்திலும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் 20 பொதுமக்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர்படுகாயமடைந்து ராவல்கட் மற்றும் சுற்றுவட்டார மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>தொடரும் பதற்றம்:</strong></h2><p>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் அடக்குமுறை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு மற்றும் ராணுவத்தின் ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராகக் கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவல்துறையின் இந்த கொடூரத் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பல இடங்களில் தொலைத்தொடர்புச் சேவைகள் முடக்கப்பட்டு, ராணுவத்தின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>ரூ. 1 கோடிக்கும் அதிகமான சன்மானம் அறிவிக்கப்பட்ட முக்கிய மாவோயிஸ்ட் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/top-maoist-misir-besra-carrying-bounty-of-over-rs-1-cr-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/top-maoist-misir-besra-carrying-bounty-of-over-rs-1-cr-arrested#comments</comments><guid isPermaLink="false">95d19661-8f02-43f4-91e2-24a40856f300</guid><pubDate>Tue, 28 Jul 2026 22:56:00 +0000</pubDate><atom:updated>2026-07-28T22:56:00.831Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Maoist,மாவோயிஸ்ட்,Misir Besra,மிசிர்  பிஸ்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/c176h2qk/arrest-4.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/c176h2qk/arrest-4.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் <a href="https://www.maalaimalar.com/topic/maoist">மாவோயிஸ்ட்</a> நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவரும், ரூ. 1 கோடிக்கும் அதிகமான சன்மானம் அறிவிக்கப்பட்டவருமான முக்கிய மாவோயிஸ்ட் மிசிர் பெஸ்ரா, செவ்வாய்க்கிழமை மாலை ஜார்க்கண்டின் தன்வாத் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p>கிரிதி மாவட்டத்தின் ஹர்லாடி பகுதியை சேர்ந்த பெஸ்ரா, தன்வாத் மாவட்டத்தின் பர்வாடா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மனியாடிஹ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.</p><h2>16 பேர் சரண்:</h2><p>இந்த நடவடிக்கையின்போது பெஸ்ராவுடன் மேலும் இரண்டு மாவோயிஸ்டுகளும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஜார்க்கண்ட் காவல்துறையினரிடம் 16 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர்; இவர்களில் ஆறு பேர் மீது மொத்தம் ரூ. 39 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>சரணடைந்தவர்களில், 128 வழக்குகளில் தேடப்பட்டு வந்தவரும், ரூ. 15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டவருமான சந்தோஷ் மஹ்தோ (எ) வாசுதேவ் தா (எ) திலீப் என்பவரும் அடங்குவார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.</p><p>சரணடைந்தவர்களில் இரண்டு 'துணை மண்டலக் குழு' உறுப்பினர்களும், இரண்டு 'பகுதிக் குழு' (area committee) நிர்வாகிகளும் அடங்குவர் என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>NEET UG 2026: வினாத்தாள் கசிவு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/national/cbi-files-charge-sheet-in-neet-ug-2026-paper-leak-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/cbi-files-charge-sheet-in-neet-ug-2026-paper-leak-case#comments</comments><guid isPermaLink="false">552bce6d-c1a2-497b-8716-74cee05770c5</guid><pubDate>Tue, 28 Jul 2026 20:08:03 +0000</pubDate><atom:updated>2026-07-28T20:08:03.460Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,charge sheet,நீட் வினாத்தாள் கசிவு,NEET Paper Leak,குற்றப்பத்திரிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/0c4wgkf5/cbi-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CBI ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/0c4wgkf5/cbi-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் <a href="https://www.maalaimalar.com/topic/paper-leaks">வினாத்தாள் கசிவு</a> வழக்கில், வினாத்தாள் நிபுணர்கள் மூவர், பயிற்சி மையங்களுடன் தொடர்புடைய இருவர், இடைத்தரகர்கள் மற்றும் பலனடைந்த தேர்வர்கள் உட்பட 13 பேர் மீது சி.பி.ஐ. நேற்று (செவ்வாய்க்கிழமை) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையில், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவியல் முறைகேடு மற்றும் பொது தேர்வு சட்டம், 2024-இன் கீழ் உள்ள குற்றச்சாட்டுகளுடன், பி.என்.எஸ். (BNS) சட்டத்தின் கீழ் குற்றவியல் சதி, மோசடி, நம்பிக்கையை மீறுதல் மற்றும் ஆதாரங்களை அழித்தல் போன்ற பிரிவுகளையும் சி.பி.ஐ. சேர்த்துள்ளது.</p><h2>422 ஆவணங்கள்:</h2><p>"இந்தக் குற்றப்பத்திரிகையில் 360 சாட்சிகள், 422 ஆவணங்கள் மற்றும் 43 முக்கிய பொருட்கள் ஆகியவற்றை சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள 13 பேரும் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர்," என்று அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.</p><p>கசிந்த வினாக்கள் தொடர்பான டிஜிட்டல் தடயவியல் பகுப்பாய்வு அறிக்கைகள், கையெழுத்து நிபுணர்களின் கருத்துகள் மற்றும் கல்விசார் நிபுணர்களின் கருத்துகளையும் சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் இணைத்துள்ளது.</p><p>"தேர்வு தேதிக்கு முன்னதாகவே கசிந்த வினாக்களை பரப்பியதில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பங்கை இந்த அறிக்கைகள் உறுதிப்படுத்தின," என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.</p><h2>வினாத்தாள் கசிவு:</h2><p>மே 03-ஆம் தேதியன்று நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் குறித்த விசாரணை மே 12-ஆம் தேதி சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, பின்னர் ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டது.</p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் பெரிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்தது. 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' தலைமையிலான 'Gen Z' குழுவினர் ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர்; இது அப்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதற்கு வழிவகுத்தது.</p><p>முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த பிறகு, சி.பி.ஐ. தீவிர நடவடிக்கையில் இறங்கி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 92 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது.</p><h2>குற்றம் சாட்டப்பட்டவர்கள்:</h2><p>இரண்டு மாத கால விசாரணையின் போது, ​​வினாத்தாள் கசிவு தொடங்கிய இடம் முதல் பலனடைந்த தேர்வர்கள் வரை இருந்த சதியை அது கண்டறிந்து, குற்ற சங்கிலி தொடர்பை அடையாளம் கண்டது. தேசிய தேர்வு முகமையின் பாட நிபுணர்களான பி.வி. குல்கர்னி, மனிஷா குருநாத் மந்தரே மற்றும் மனிஷா சஞ்சய் ஹவல்தார் ஆகிய மூவரையும் இவ்வழக்கில் சி.பி.ஐ. குற்றம் சாட்டப்பட்டவர்களாகப் பெயரிட்டுள்ளது.</p><p>லாத்தூரைச் சேர்ந்த மருத்துவர் மனோஜ் ஷிரூரே, புனேவை சேர்ந்த பயிற்சி மையமான 'டாக்டர் அபங் பிரபு மெடிக்கல் அகாடமி'யின் இயற்பியல் ஆசிரியரான தேஜஸ் ஹர்ஷத்குமார் ஷா மற்றும் லாத்தூரை சேர்ந்த மற்றொரு பயிற்சி மையத்தை சேர்ந்த சிவராஜ் ரகுநாத் மோட்டேகான்கர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>"கசிந்த வினாக்களைத் திரட்டி விநியோகித்த பல இடைத்தரகர்களும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கூறிய நிபுணர்களிடம் இருந்து கசிந்த வினாத்தாள்களை பெற்றதற்காக, பயிற்சி மையங்களுடன் தொடர்புடைய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்று சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பெண் போராட்டக்காரரை அறைந்த காவலரை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/high-court-refuses-to-remove-cop-who-slapped-woman-protester</link><comments>https://www.maalaimalar.com/news/national/high-court-refuses-to-remove-cop-who-slapped-woman-protester#comments</comments><guid isPermaLink="false">97e34bdb-2f90-4866-bdff-4cd1bd1d7ad5</guid><pubDate>Tue, 28 Jul 2026 19:00:59 +0000</pubDate><atom:updated>2026-07-28T19:00:59.571Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>போராட்டம்,உயர்நீதிமன்றம்,High Court,Woman Protester</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/7hatxa8o/Delhi-High-Court.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/7hatxa8o/Delhi-High-Court.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீதிமன்ற உத்தரவின் பேரில் கூடுதல் டி.சி.பி. சந்தீப் லம்பா மேற்கொள்ளும் காவல் துறை விசாரணைக்கு தடை கோரிய மனுவை <a href="https://www.maalaimalar.com/topic/delhi-high-court">டெல்லி உயர்நீதிமன்றம்</a> தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஒரு அதிகாரி மீதான குற்றச்சாட்டை மட்டும் வைத்துக் கொண்டு அவர் பாரபட்சமாக செயல்படுவார் என்று ஊகிக்க முடியாது என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. </p><p>அதிகாரி செய்த எந்தவொரு தவறும் சட்டப்படி கையாளப்பட வேண்டியது என்றாலும், நியாயமான விசாரணைக்கு முன்பே அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் கருதுவது பொருத்தமற்றது என்று <a href="https://www.maalaimalar.com/topic/judge">நீதிபதி</a> கிரீஷ் கத்பாலியா வாய்மொழியாகக் குறிப்பிட்டார்.</p><h2>மனுத்தாக்கல்:</h2><p>"நீங்கள் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். அந்த நிறுவனத்தின் நற்பெயரை குலைப்பதை நிறுத்துங்கள். அந்த நபர் என்ன செய்திருந்தாலும், அதற்கான விளைவுகளை அவர் எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், அதற்காக அந்த பணி முழுவதையும் அவரது மேற்பார்வையில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்று அர்த்தமல்ல," என்று நீதிபதி குறிப்பிட்டார்.</p><p>சமீபத்தில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது சந்தீப் லம்பா ஒரு பெண்ணை ஓங்கி அறைந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதைத் தொடர்ந்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.</p><p>சமீபத்தில் நடந்த சலோ ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது லம்பா ஒரு பெண்ணை அறைந்ததாக கூறப்படும் வீடியோக்கள் வைரலானதை அடுத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது நிர்வாக மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட காவல்துறை விசாரணையில், இந்த சம்பவம் "சார்பு பற்றிய நியாயமான அச்சத்தை" உருவாக்கியுள்ளதாக மனுதாரர் வாதிட்டார்.</p><h2>நீதிபதி காட்டம்:</h2><p>இதற்கு பதிலளித்த நீதிபதி கத்பாலியா, "இன்று ஒட்டுமொத்த டெல்லி காவல்துறையுமே கூண்டில் நிறுத்தப்படுகிறதா? அப்படியானால், அவர்கள் முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பதிவு செய்வதை நிறுத்திவிட வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினார்.</p><p>தொடக்கத்தில், டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், விசாரணை ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாகவும், மனுதாரரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், மேல் நடவடிக்கைக்காக அறிக்கை உரிய அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாகவும் நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.</p><p>இக்கருத்தை பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், இந்த மனு அதன் நோக்கத்தை இழந்துவிட்டதாக கூறி அதனைத் தள்ளுபடி செய்தது.</p><p>நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும், லம்பா தொடர்பான அடுத்தடுத்த நிகழ்வுகள் பாரபட்சம் குறித்த சந்தேகங்களை வலுப்படுத்துவதாக வாதிட்ட மனுதாரரின் வழக்கறிஞர், அவற்றை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இருப்பினும், நீதிமன்றம் அந்த கோரிக்கையை நிராகரித்தது.</p><h2>உரிமை உண்டு:</h2><p>"ஒரு பெண்மணியை அறைவது போன்ற வீடியோ காட்சியில் இவர் சிக்கியிருக்கிறார் என்பதற்காக மட்டும் நாம் இவரை இழிவுபடுத்திவிட முடியாது. ஒருவேளை இறுதியில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டாலும் கூட, அவர் எல்லா வழக்கிலும் நியாயமற்ற முறையில் செயல்படுவார் என்று கருத முடியுமா?" என்று நீதிபதி கத்பாலியா கருத்து தெரிவித்தார்.</p><p>"இந்த காரணத்திற்காக நான் விசாரணையை மாற்றினால்... நான் அவரை இழிவுபடுத்துவதாக ஆகாதா? விசாரணை இல்லாமலேயே அவரை குற்றவாளி என்று முத்திரை குத்துவதாக ஆகாதா? ஒருவருக்கு பாரபட்சம் இருப்பதாக கூறுவதன் மூலம் நீங்கள் அவர் மீது களங்கம் சுமத்துகிறீர்கள். அவருக்கும் நியாயமான விசாரணைக்கான உரிமை உண்டு," என்று நீதிமன்றம் கூறியது.</p><p>லம்பாவின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்து இந்த விசாரணையை விலக்கி, வடகிழக்கு டெல்லிக்கு வெளியே பணியில் உள்ள காவல் துணை ஆணையர் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>“கங்கனா ரனாவத்தை பாஜகவே ஒரு பொருட்டாக எடுத்துக்
கொள்வதில்லை... பின்னர் நாங்கள் மட்டும் ஏன்? - சிஜேபி பதிலடி!</title><link>https://www.maalaimalar.com/news/national/even-the-bjp-itself-does-not-take-kangana-ranaut-seriously-so-why-should-we-cjp-hits-back</link><comments>https://www.maalaimalar.com/news/national/even-the-bjp-itself-does-not-take-kangana-ranaut-seriously-so-why-should-we-cjp-hits-back#comments</comments><guid isPermaLink="false">13e201f0-cca7-4498-9ad6-2c901b2be1e5</guid><pubDate>Tue, 28 Jul 2026 16:09:36 +0000</pubDate><atom:updated>2026-07-28T16:09:36.288Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,Kangana Ranaut,கங்கனா ரனாவத்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Saurav Das,சௌரவ் தாஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/6va4l4op/New-Project-2026-07-28T212258.918.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “கங்கனா ரனாவத்தை பாஜகவே ஒரு பொருட்டாக எடுத்துக்
கொள்வதில்லை... பின்னர் நாங்கள் மட்டும் ஏன்? - சிஜேபி பதிலடி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/6va4l4op/New-Project-2026-07-28T212258.918.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்தின் கருத்துக்களை அவரது சொந்தக் கட்சியினரே ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத போது, நாங்கள் ஏன் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும் என, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அவரை சாடியுள்ளது.</p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சாக்கடை என்றும், மேலும் பெண்களை இன்னும் மோசமாகவும் கங்கனா ரனாவத் விமர்சித்திருந்தார். </p><p>இந்நிலையில் சிஜேபியின் தலைமை செய்தித்தொடர்பாளர்  சௌரவ் தாஸிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், </p><p>“அவருடைய சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே கங்கனா ரனாவத்தை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை அல்லது அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, அப்படியிருக்க நாம் ஏன் கொடுக்க வேண்டும்?” என தெரிவித்துள்ளார். </p><p>மேலும் தற்போதைய 'ஜென் சி' (Gen Z) அல்லது 'ஜென் ஆல்ஃபா' (Gen Alpha) தலைமுறை இளைஞர்கள் யாரும் கங்கனாவை ஒரு தீவிரமான அரசியல்வாதியாகப் பார்ப்பதோ அல்லது அவரது கருத்துக்களைக் கேட்பதோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார். </p><p>தொடர்ந்து, கங்கனா தனது மண்டி தொகுதிக்குச் சென்றபோது, எம்பி பதவிக்கு இவ்வளவு வேலை இருக்கும் என்று தான் நினைக்கவில்லை எனக் கூறிய வீடியோவைச் சுட்டிக்காட்டிய சௌரவ் தாஸ், இதுவே அவரது பொதுப்பணியின் மீதான அலட்சியத்தைக் காட்டுகிறது எனவும் விமர்சித்தார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: On Supreme Court orders and protesters&#39; demands, Cockroach Janta Party Chief Spokesperson Saurav Das says, “If the Supreme Court is acting in the interest of the youth, we welcome such orders or judgments… We, on the other hand, have been active on the ground for… <a href="https://t.co/wb4LGFg2cF">pic.twitter.com/wb4LGFg2cF</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2082063443126022639?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஆம் ஆத்மியின் பி டீம்தான் CJP: ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/swati-maliwal-attacks-kejriwal-over-alleged-paper-leak-in-punjab-calls-cjp-aaps-b-team</link><comments>https://www.maalaimalar.com/news/national/swati-maliwal-attacks-kejriwal-over-alleged-paper-leak-in-punjab-calls-cjp-aaps-b-team#comments</comments><guid isPermaLink="false">6445d474-478a-413e-8224-8b929fc9d888</guid><pubDate>Tue, 28 Jul 2026 14:19:43 +0000</pubDate><atom:updated>2026-07-28T14:19:43.072Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கெஜ்ரிவால்,Swati Maliwal,aravind kejriwal,ஸ்வாதி மாலிவால்,சிஜேபி,CJP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/lcwl4m22/swathi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ swati maliwal, kejriwal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/lcwl4m22/swathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கெஜ்ரிவாலின் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பை ஆம் ஆத்மி கட்சியின் பி டீம் என பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக, பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><h2>5 ஆண்டுகளில் 6 முக்கிய தேர்வு வினாத்தாள் கசிவு</h2><p>பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 6 முக்கிய தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதுமட்டுமின்றி பல தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன.</p><p>ஜூலை 19-ம் தேதி அன்று நடந்த மருந்தியல் தேர்விலும் கூட மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது.</p><p>அரவிந்த் கெஜ்ரிவால் தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை உருவாக்கினார். ஆனால் பொறுப்புக் கூறல் குறித்து கேள்விகள் எழும்போது இருவரும் மவுனமாகி விடுகிறார்கள். சிஜேபி அவரது 'பி டீம்’ ஆகும். ஏனெனில், அவரது ஆதரவாளர்களால், அவரது பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது.</p><p>சமூக ஊடகங்களில் சி.ஜே.பி.க்காக ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய அளவிலான கட்டண விளம்பர பிரசாரத்தை மேற்கொண்டது.</p><p>ஒருபுறம் அவர்கள் இதையெல்லாம் செய்கிறார்கள், மறுபுறம் தங்கள் சொந்தப் பொறுப்புக் கூறல் என்று வரும்போது, ​மவுனமாகி மறைந்து விடுகிறார்கள்.</p><p>பஞ்சாபில் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து சி.ஜே.பி.யோ, கெஜ்ரிவாலோ பேசுவதில்லை. அவர்கள் அதிலிருந்து தப்பி ஓடுகிறார்கள்.</p><p>மக்கள் வீதிகளுக்கு வரவேண்டும். டெல்லியும் நேபாளத்தைப் போல மாறவேண்டும் எனக்கூறி கெஜ்ரிவால் தினமும் காணொலிகளை வெளியிடுகிறார்.</p><h2>பஞ்சாப் கல்வி மந்திரி பதவி விலகவேண்டும்</h2><p>பஞ்சாப் முதல் மந்திரி தொடர்பற்ற மற்றும் தெளிவற்ற கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இது முற்றிலும் தவறானது. இத்தகைய இரட்டை நிலைப்பாடுகள் இருக்கக் கூடாது. பஞ்சாப் கல்வி மந்திரி உடனே பதவி விலக வேண்டும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>‘பிரதானை நீக்கி பிரதான் மந்திரியை காப்பாற்றியுள்ளீர்கள்’ - நாடாளுமன்றத்தில் அகிலேஷ் யாதவ் கிண்டல் பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/national/by-removing-the-pradhan-you-have-saved-the-prime-minister-akhilesh-yadavs-sarcastic-remark-in-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/national/by-removing-the-pradhan-you-have-saved-the-prime-minister-akhilesh-yadavs-sarcastic-remark-in-parliament#comments</comments><guid isPermaLink="false">f4e3b7cd-e775-4395-ae29-45f70a8b9482</guid><pubDate>Tue, 28 Jul 2026 13:13:39 +0000</pubDate><atom:updated>2026-07-28T13:13:39.692Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,அகிலேஷ் யாதவ்,Akhilesh Yadav,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/lq1qu852/New-Project-2026-07-28T182813.527.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பிரதானை நீக்கியதன் மூலம் பிரதான மந்திரியை காப்பாற்றியுள்ளீர்கள்’ - நாடாளுமன்றத்தில் அகிலேஷ் யாதவ் கிண்டல் பேச்சு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/lq1qu852/New-Project-2026-07-28T182813.527.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மக்களவையில் இன்று வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதாமீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ்,</p><p>“முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்திற்கு வந்தபோது அவருக்கு வெளியே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் எங்களுக்கு எந்தப் புகாரும் இல்லை. ஆனால், இதன் மூலம் ஆளும்கட்சி உறுப்பினர்கள் எவ்வளவு பெரிய நெருக்கடியிலிருந்து தப்பித்தோம் என்று நிம்மதி அடைந்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள்.</p><p>பிரதானை பதவியிலிருந்து நீக்கியதன் மூலம், நீங்கள் உங்களுடைய 'பிரதான் மந்திரி'யை சாமர்த்தியமாகக் காப்பாற்றிவிட்டீர்கள். </p><p>அரசைப் பணிய வைத்த இளைஞர்களின் மன உறுதிக்கும், ஒற்றுமைக்கும் நான் தலைவணங்குகிறேன். அரசு தன்னை வெல்ல முடியாதது என்று நினைத்தது. ஆனால், பணிய வைக்க ஆள் இருந்தால் அரசாங்கமும் பணியும் என்பதை புதிய தலைமுறை இளைஞர்கள் தங்களின் போராட்டத்தின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.</p><p>பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கல்வி, தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழகங்களை ஒரே நிறத்தில் வர்ணம் பூசி அழிக்க முயன்று வருகிறது. இது மாணவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே, உலகின் மிகப்பெரிய கட்சியான பாஜக பின்வாங்க வேண்டிய அளவுக்குப் போராட்டங்கள் மாபெரும் அளவில் வெடித்தன. இந்த அணுகுமுறை மாற வேண்டும்.</p><p>இளைஞர்கள் எழுப்பிய கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன். கேலிக்கூத்தாகத் தொடங்கும் ஒரு கட்சி கூட ஒரு பெரிய சக்தியாக மாற முடியும் என்பதை அரசாங்கம் உணர்ந்திருக்க வேண்டும். </p><p>சட்டம் இயற்றுவது மட்டும் முக்கியமல்ல; அரசின் நோக்கம் நேர்மையாக இருக்க வேண்டும். உங்கள் நோக்கம் நேர்மையாகும் போது மட்டுமே தேர்வு முறைகள் சுத்தமாகும்.” என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>‘சாக்கடை தலைமுறையினர்... குடும்பம் நடத்துவதற்கும் லாய்க்கில்லதவர்கள்’ - போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குறித்து கங்கனா சர்ச்சை பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/national/a-gutter-generation-unfit-to-run-a-family-kanganas-controversial-remarks-about-the-women-involved-in-the-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/a-gutter-generation-unfit-to-run-a-family-kanganas-controversial-remarks-about-the-women-involved-in-the-protest#comments</comments><guid isPermaLink="false">e1ececab-fc18-41f7-93d5-d6b968e9c154</guid><pubDate>Tue, 28 Jul 2026 12:39:28 +0000</pubDate><atom:updated>2026-07-28T12:39:28.168Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Kangana Ranaut,கங்கனா ரனாவத்,Gen Z protesters,ஜென் இசட் தலைமுறையினர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/wm4itw9v/New-Project-2026-07-28T172449.637.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சாக்கடை தலைமுறையினர்... குடும்பம் நடத்துவதற்கும் லாய்க்கில்லதாவர்கள்’ - போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குறித்து கங்கனா சர்ச்சை பேச்சு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/wm4itw9v/New-Project-2026-07-28T172449.637.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ஜ.க. எம்பியும், நடிகையுமான கங்கனா ரணாவத், டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்ட வீடியோக்களைக் குறிப்பிட்டு, தற்போதைய ஜென் இசட் இளம் தலைமுறையினரை “சாக்கடைத் தலைமுறை” என்று கடுமையாக விமர்சித்துள்ளது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. </p><p>மேலும் போராட்டங்களின் போது, இளைஞர்கள் பயன்படுத்திய மொழி மற்றும் அவர்களின் செயல்பாடுகள் தனக்கு வாந்தி வருவது போல் இருந்ததாகவும், இளைய தலைமுறையினர் வளர்ப்பு முறை பற்றியும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். </p><p>ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் தொடர்பான வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, அதில் கீழ்வரும் கருத்துகளை குறிப்பிட்டுள்ளார். </p><p>“என் வாழ்நாளில் ஒரே இடத்தில் இவ்வளவு அசிங்கத்தை நான் கண்டதில்லை. ஜென் Z தலைமுறையின் போராட்டக் காட்சிகள் வாந்தி வரவைப்பவையாக உள்ளன. அவர்கள் பேசும் விதமும், பயன்படுத்தும் மொழியும்... என் வாழ்நாளில், ஒவ்வொரு காட்சியிலும் உள்ள அனைத்தும் ஒரே நேரத்தில் இவ்வளவு உறுத்தலாகவும், இவ்வளவு அநாகரிகமாகவும் இருப்பதை நான் கண்டதில்லை.</p><p>இந்தியா என்பது நேர்த்தியால் போர்த்தப்பட்ட, பண்பாட்டு நுட்பத்தில் வேரூன்றிய, பலதரப்பட்ட அழகான மக்கள் வாழும் ஒரு நாடு. நீங்கள் உங்களைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைத்துக்கொள்கிறீர்கள், மேலும் அவற்றைப் போலவே தோற்றமளித்து, நடந்து கொள்கிறீர்கள். இதில் எந்த முரண்பாடோ அல்லது எதிர்நிலையோ இல்லை; வெறுமனே உங்கள் அழுக்கு, குப்பை மற்றும் அசிங்கத்தை இந்த உலகின் மீது திணிக்கிறீர்கள்.</p><p>இந்த வீடியோக்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது. எனக்குச் சிறிது ஆறுதல் தேவை, டிஜிட்டல் டிடாக்ஸ்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><p>மேலும் பெண்கள் குறித்துப் பேசியுள்ள அவர்,</p><p>“இங்கே மேற்கத்தியமயமாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு புதிய தலைமுறை இந்தியப் பெண்கள் இருக்கிறார்கள். நான் அவர்களை 'சாக்கடைத் தலைமுறை' என்று அழைக்கிறேன். </p><p>இவர்களில் சிலருக்கு இந்த சமூகத்திற்கு வழங்குவதற்கு எதுவுமில்லை, படிப்பிலும் சிறந்து விளங்குவதில்லை. ஆனால் அவர்கள் மிகவும் மோசமானவர்களாகவும், ஒழுக்கக்கேடானவர்களாகவும் இருப்பதால் அவர்களால் இல்லத்தரசிகளாகவும் இருக்க முடியாது.</p><p>ஆனால், போதைப்பொருள் பயன்படுத்துவதற்கும், மது அருந்துவதற்கும் அல்லது எல்லையற்ற உடலுறவுத் துணைகளைக் கொண்டிருப்பதற்கும் தங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை பெருமையாக கூறிக்கொள்கிறார்கள்.</p><p>மேலும் வெட்கமில்லாமல் தங்கள் பெற்றோரின் வருமானத்தில் வாழ்கிறார்கள். உண்மையில் சுயசார்பு இல்லாமல், சுதந்திரமான வாழ்க்கை வாழ்வதற்காகத் தொடர்ந்து போராடுகிறார்கள்.</p><p>ஒரு கனிவான நினைவூட்டல்: சுதந்திரமான வாழ்க்கை என்பது உழைப்பால் சம்பாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பொறுப்புக்கூறல் (பொறுப்புணர்வு) இல்லாமல் நீங்கள் சுதந்திரமாக வாழ முயன்றால், நீங்கள் வெறும் சீரழிந்த வடிவமே. சாக்கடை நபர்.”எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பங்கிபூர் இடைத்தேர்தலில் தோல்வி உறுதி என்பதால் பிரதமர் பயணம் ரத்து: சாடிய தேஜஸ்வி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-cancelled-bihar-tour-realising-bjp-will-lose-bankipur-bypoll-tejashwi</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-cancelled-bihar-tour-realising-bjp-will-lose-bankipur-bypoll-tejashwi#comments</comments><guid isPermaLink="false">6c37fa4b-10f9-4f75-bfb0-d0a4fdb7061a</guid><pubDate>Tue, 28 Jul 2026 12:28:25 +0000</pubDate><atom:updated>2026-07-28T12:28:25.354Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேஜஸ்வி யாதவ்,Tejaswi Yadav,pm modi,பீகார் இடைத்தேர்தல்,பிரதமர் மோடி,bihar bypoll</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/608u2xfb/yadav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tejaswi yadav]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/608u2xfb/yadav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநிலத்தின் பங்கிபூர் எம்.எல்.ஏ.வான நிதின் நபின் சமீபத்தில் பா.ஜ.க. தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தாடியா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மோசடி வழக்கில் தண்டனை பெற்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.</p><p>குஜராத்தின் மன்சல்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. யோகேஷ்பாய் நரந்தாஸ் படேல் காலமானதால் அவரது தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.</p><h2>ஜூலை 30-ம் தேதி இடைத்தேர்தல்</h2><p>இதற்கிடையே, காலியாக உள்ள இந்த 3 மாநில சட்டசபை தொகுதிகளுக்கு ஜூலை 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், அன்று பதிவாகும் வாக்குகள் ஆகஸ்ட் 3-ம் தேதி எண்ணப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.</p><p>தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அந்தத் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.</p><p>இந்நிலையில், பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டிரீய ஜனதா தளகட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><h2>பிரதமர் பயணம் ரத்து</h2><p>ஒரு பாலத்தைத் திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி மாநிலத்திற்கு வரத் திட்டமிட்டிருந்தார்.</p><p>பிரதமரின் பயணம் குறித்து மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. அரசிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை.</p><p>மாணவர் போராட்டங்களும், தனது அரசின் 'பெருகிவரும் மக்கள் செல்வாக்கு இழப்பும்' பா.ஜ.க.வின் தோல்விக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்ததால், பிரதமர் நரேந்திர மோடி தனது பீகார் பயணத்தை ரத்து செய்துள்ளார் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பொதுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு திருத்த மசோதா: மக்களவையில் பட்டாசாக வெடித்த பிரியங்கா காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/priyanka-gandhi-why-are-you-scared-of-youths-of-this-country-who-gave-you-right-to-suppress-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/priyanka-gandhi-why-are-you-scared-of-youths-of-this-country-who-gave-you-right-to-suppress-students#comments</comments><guid isPermaLink="false">979ee58d-6cf1-4f9a-a1a7-a2e11b0deed5</guid><pubDate>Tue, 28 Jul 2026 12:25:21 +0000</pubDate><atom:updated>2026-07-28T12:25:21.019Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>parliament,Priyanka gandhi,பாராளுமன்றம்,பிரியங்கா காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/695xqn6c/PriyankaGandhi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Priyanka Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/695xqn6c/PriyankaGandhi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் லீக் விவகாரத்தில் மத்திய அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக போராட்டம் வெடிக்க தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>வினாத்தாள் லீக்கை தடுக்கும் வகையில் மத்திய அரசு பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026-ஐ மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. வினாத்தாள் கசிவுகள், தேர்வு முறைகேடுகளுக்கு தண்டனையை அதிகரிக்கும் விதமாக சட்ட விதிமுறைகளை கடுமையாகும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><h2>மசோதாவின் அம்சங்கள்</h2><p>முறைகேட்டின் தீவிரத்தை பொறுத்து 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படும். திட்டமிட்டு குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை மற்றும ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். மேல் முறையீடு வழக்குகள் மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும். தவறு செய்யும் நிறுவனங்கள் பொதுத்தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் தடைக்காலம் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படும் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளிட்ட மசோதாவில் இடம் பெற்றுள்ளன.</p><h2>இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சி எம்.பி. பிரியங்கா காந்தி பேசியதாவது:-</h2><p>* பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஷா ஆகியோரிடம் நான் கேட்க விரும்புகிறேன், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசவும், மாணவர்கள் மீது தடியடி நடத்தவும், பெல்லட் துப்பாக்கிகள், ஏகே-47 பயன்படுத்தவும் என்ன தேவை இருந்தது?</p><p>* பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் நான் கேட்க விரும்புகிறேன், மாணவர்கள் பயங்கரவாதிகளா?</p><h2>இளைஞர்களைக் கண்டு ஏன் பயம்</h2><p>* போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது பெல்லட் பயன்படுத்த யார் அதிகாரம் அளித்தது என்பதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டும்.</p><p>* மாணவர்கள் போராட்டங்கள் மூலம் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தங்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினர்.</p><p>* நாட்டின் இளைஞர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள். மாணவர்களை அடக்குவதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?</p><p>* தேர்வு முறை தோல்வியடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 152 வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன. ஆனால் ஒரு மாஃபியா கும்பல் கூட தண்டிக்கப்படவில்லை.</p><h2>பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்</h2><p>* 2024 வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதிலிருந்து, ஒரு தண்டனை கூட வழங்கப்படவில்லை</p><p>* விரைவு நீதிமன்றங்களின் செயல்பாடு மோசமாக உள்ளது. முதல் விசாரணையின்போது சிபிஐ வழக்கறிஞர் ஆஜராகவில்லை</p><p>* Gen Z தலைமுறையினரின் நம்பிக்கையை மீண்டும் பெற விரும்பினால், வெவ்வேறு கேமரா கோணங்களில் இருந்து வீடியோக்களை எடுப்பது பலனளிக்காது (மறைமுகமாக பிரதமரை சாடினார்).</p><p>* உங்கள் அரசின் கீழ் இளைஞர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும்.</p><p>* மாணவர்களை வீதிகளிலிருந்து அகற்றலாம், ஆனால் அவர்களின் கேள்விகளை அகற்ற முடியாது.</p><p>இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2500: டெல்லி அமைச்சரவையில் ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-cabinet-approves-lakshmi-yojana-to-provide-monthly-rs-2500-to-women</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-cabinet-approves-lakshmi-yojana-to-provide-monthly-rs-2500-to-women#comments</comments><guid isPermaLink="false">a8655f95-dc74-4381-856c-3fb2a92fb0e1</guid><pubDate>Tue, 28 Jul 2026 11:44:48 +0000</pubDate><atom:updated>2026-07-28T11:44:48.779Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேகா குப்தா,Rekha Gupta,Lakshmi Yojana,லட்சுமி யோஜனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uipjb4wa/RekhaGupta2807.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rekha Gupta]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uipjb4wa/RekhaGupta2807.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் வசிக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கும் லட்சுமி திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.</p><h2>பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி</h2><p>டெல்லி சட்டசபை தேர்தலின்போது பா.ஜ.க. தனது பரப்புரையின்போது, ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் பெண்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆம் ஆத்மி ஆட்சியை விழ்த்தி பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றார்.</p><p>இந்த நிலையில், லட்சுமி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு டெல்லி மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான இணையதளம் வருகிற 1-ந்தேதி (ஆகஸ்ட்) வெளியிடப்படும் என்று டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.</p><p>ஆகஸ்ட் 28-ந்தேதி ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் 5100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.</p><h2>17 லட்சம் பெண்கள் பயனடைவர்</h2><p>டெல்லி மாநிலம் முழுவதும் சுமார் 17 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைவார்கள் எனத் தெரிகிறது.</p><h2>தகுதி வரையறை</h2><p>இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க 21 வயது முதல் 60 வயதுடைய பெண்கள் மட்டுமே தகுதியுடைவர்கள் ஆவார்கள். ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.</p><h2>ஒரு வீட்டில் ஒரு பெண் மட்டுமே இந்த பயனை அடைய முடியும்.</h2><p>பயன்பெறும் நபர் அல்லது குடும்பத்தினர் மீது கிரிமினல் ரெக்கார்டு இருக்கக் கூடாது. அரசு ஊழியர்கள் இருக்கக் கூடாது. வருமான வரி செலுத்துபவர்கள் இருக்கக்கூடாது. பென்சன் பெறுபவர்கள் இருக்கக் கூடாது. நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கக் கூடாது.</p><p>பயனாளி அல்லது அவரது குடும்பத்தினர் டெல்லியில் 10 வருடம் வசித்திருக்க வேண்டும்.</p><h2>பா.ஜ.க. வாக்குறுதியின் முக்கியமானவை</h2><p>கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகையாக 21 ஆயிரம் ரூபாய், ஊட்டச்சத்து அடங்கிய 6 பெட்டகங்கள், ஏழைக்குடும்ப பெண்களுக்கு 500 ரூபாயில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். அத்துடன் வருடத்திற்கு 2 இலவசமாக வழங்கப்படும். </p><p>ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரையில் இலவசமாக மருத்துவம் வழங்கப்படும். வயது மூத்தோருக்கான பென்சனை (60 வயது முதல் 70 வயது) 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 70 வயதிற்கு மேல் உடையவர்களுகு்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களுக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெறுக: கேரள மாநில முதல்வர் சதீசனுக்கு பினராயி விஜய் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/vijayan-urges-kerala-govt-to-withdraw-cases-against-neet-protest-supporters</link><comments>https://www.maalaimalar.com/news/national/vijayan-urges-kerala-govt-to-withdraw-cases-against-neet-protest-supporters#comments</comments><guid isPermaLink="false">04406cd5-b3c2-42d6-8522-8b55e390081a</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:51:20 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:51:20.060Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பினராயி விஜயன்,Pinarayi Vijayan,VD Satheesan,விடி சதீசன்,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/z3q84swr/PinarayiVijayan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ VD Satheesan- Pinarayi Vijayan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/z3q84swr/PinarayiVijayan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று பினராயி விஜயன் கேரள மாநிலம் முதல்வர் சதீசனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.</p><h2>கேரளாவில் 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு</h2><p>கேரள மாநில முதல்வர் வி.டி. சதீசனுக்கு பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள், மாணவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டம் தொடர்பாக போலீசார் சுமார் 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>வழக்குகளை வாபஸ் பெற மத்திய அரசு சம்மதம்</h2><p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கும் மத்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக மத்திய அரசு மாணவர்களுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்வதாக உறுதி அளித்துள்ளது. ஆனால், கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான UDF அரசு இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.</p><p>அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை, தண்ணீர் பீய்ச்சி அடித்தல், தடியடி மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஜனநாயகத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p>ஒற்றுமையை தெரிவிக்கும் வகையிலும், டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் இணைந்தீர்கள். அதேவேளையில் கேரளாவில் மாணவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள். இது என்ன நியாயம்?.</p><h2>வேடன் மீது வழக்குப்பதிவு</h2><p>எர்ணாகுளத்தில் பாடகர் வேடன் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்ய மத்திய அரசு ஒப்புக் கொண்ட நிலையில், கேரளாவில் நிபந்தனையற்ற வகையில் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.</p><p>இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.</p><p>18 வயதிற்கு உட்பட்டோரை கிரிமினல் ரெக்கார்டு இல்லாமல் விடுவிக்க வேண்டும். போராட்டம் தொடர்பான வீடியோக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று <a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-free-probe-no-harsh-action-against-minors-in-neet-protest-cases">உச்சநீதிமன்றம்</a> உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>மத்திய அரசிடம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி மட்டுமல்லாமல் பாஜக ஆளும் பீகார், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் மாணவர்களுக்கு எதிரான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கையை மத்திய ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/plastic-rupee-notes-to-be-introduced-soon-in-india-union-government-approves-rbi-proposal</link><comments>https://www.maalaimalar.com/news/national/plastic-rupee-notes-to-be-introduced-soon-in-india-union-government-approves-rbi-proposal#comments</comments><guid isPermaLink="false">0f49bd8f-83fa-4ef2-98d1-65273144bcbc</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:14:01 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:14:01.349Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>reserve bank of india,ரிசர்வ் வங்கி,plastic currency,polymer currency,பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்,பாலிமர் ரூபாய் நோட்டுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/z3i9li6v/plastic-currecy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Plastic currency  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/z3i9li6v/plastic-currecy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய 'பாலிமர்' எனப்படும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைச் புழக்கத்தில் விடுவதற்கான ரிசர்வ் வங்கியின் (RBI) பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பாலிமர் நோட்டுகளைச் சோதனை முறையில் அச்சடித்து வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><h2><strong>ரூ.100 கோடிக்கு பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சடிப்பு:</strong></h2><p>சோதனை முயற்சியாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகள் தலா '100 கோடி' வரை அச்சடிக்கப்பட உள்ளன. இந்தச் சோதனை முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில், பாலிமர் நோட்டுகள் வழக்கமான பயன்பாட்டிற்கு முழுமையாகக் கொண்டுவரப்படும் என நாடாளுமன்ற மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.</p><h2><strong>பழைய காகித நோட்டுகள் செல்லாதா?</strong></h2><p>பழைய காகித ரூபாய் நோட்டுகள் உடனடியாகத் தடை செய்யப்பட மாட்டாது. காகித நோட்டுகளுடன் சேர்ந்து பிளாஸ்டிக் நோட்டுகளும் இணையாகப் புழக்கத்தில் இருக்கும். காகித நோட்டுகளை முழுமையாகத் திரும்பப் பெறும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2><strong>பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளின் நன்மைகள்:</strong></h2><p>•காகித நோட்டுகளை விட பாலிமர் நோட்டுகள் பல மடங்கு கூடுதல் ஆயுட்காலம் கொண்டவை.</p><p>• தண்ணீரில் நனையாது, எளிதில் கிழியாது மற்றும் அழுக்கடையாது.</p><p>•இவற்றில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை எளிதாகச் சேர்க்க முடியும் என்பதால், போலி நோட்டுகளை அச்சடிப்பது மிகவும் கடினம்.</p><p>ரூ.10, ரூ.20 போன்ற குறைந்த மதிப்பு கொண்ட காகித நோட்டுகள் மக்களிடையே அதிகளவில் கைமாறுவதால் விரைவில் சேதமடைந்து பயன்பாட்டிற்கு ஒவ்வாமல் போகின்றன. இதனால் ரிசர்வ் வங்கிக்கு இவற்றை அடிக்கடி புதிதாக அச்சடிக்கும் செலவு அதிகரிக்கிறது. </p><p>இதைக் கட்டுப்படுத்தவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற உலகின் பல நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் பண முறையை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>போராட்டத்தில் கைதான 18 வயதுக்கு உட்பட்டோரை விடுவிக்க வேண்டும்.. போலீஸ் அடக்குமுறை மீது விசாரணை உண்டு - உச்சநீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-free-probe-no-harsh-action-against-minors-in-neet-protest-cases</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-free-probe-no-harsh-action-against-minors-in-neet-protest-cases#comments</comments><guid isPermaLink="false">4353eac1-ddfe-40ad-ab94-e056bf359036</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:23:57 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:23:57.015Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சூர்யகாந்த்,உச்சநீதிமன்றம்,Surya Kant,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/m1zp1pa7/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ போராட்டம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ போராட்டம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/m1zp1pa7/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators">போராட்டத்தின்</a>போது கைது செய்யப்பட்ட 18 வயதுக்கு உட்பட சிறுவர்களை விடுவிக்க  வேண்டும் என மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. </p><h2>விசாரணை </h2><p>ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி சென்ற இளைஞர்கள் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் இளைஞர்கள் மீதான போலீஸ் அடக்குமுறை குறித்த மனுக்கள் , பீகாரில் ஏகே 47 துப்பாக்கியால் போராட்டக்காரர்களை சுட்ட காவல் அதிகாரி மீதான ஆர்ஜேடி எம்.பி மனோஜ் ஜா உடைய மனு ஆகியவற்றை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. </p> <h2>நடவடிக்கை கூடாது</h2><p>இதன்போது, டெல்லியின் ஜந்தர் மந்தர் மற்றும் பிற மாநிலங்களில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் நடந்த போராட்டங்களில் பங்கெடுத்த மாணவர்கள் மீது பதியப்பட்ட எப்ஐஆர்களை வைத்து எந்த கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது. கைது செய்யப்பட்ட 18 வயதுக்கு உட்பட சிறுவர்களை விடுவிக்க வேண்டும். </p><p>அதேநேரம் குற்றப்பின்னணி உடையவர்கள் மீதான நடவடிக்கைக்கு எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p> <h2>போலீஸ் அடக்குமுறை</h2><p>மேலும்,டெல்லியில் மாணவர்கள் மீதான போலீசாரின் மிதமிஞ்சிய பலப்பிரயோகம் குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்படலாம் என்ற வகையிலும் உச்சநீதிமன்றம் மறைமுகமாக தெரிவித்துள்ளது. </p><p>தாக்குதலை ஈடுபட்டதாக காவல் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுதொடர்பாக போராட்டங்கள் அதிகம் ஒடுக்கப்பட்ட, மகாராஷ்டிரா, பீகார், அசாம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.</p> <p>தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில், " இதில் நிச்சயமாக முற்றிலும் சுதந்திரமான ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும். யாரெல்லாம் சட்டத்தை கையில் எடுத்து அத்துமீறி செயல்பட்டார்களோ அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் விசாரணை வீண்" என தெரிவித்தார்.</p><p>இதற்காக, சிசிடிவி காட்சிகள், டிரோன் காட்சிகள், பாடி கேமராவில் பதிவான காட்சிகள், தொலைத்தொடர்பு கருவிகள், போராட்டத்துடன் தொடர்புடைய பிசிஆர் பதிவுகள் உள்ளிட்டவை பாதுகாப்பட வேண்டும் என்றும், காவல்துறை தன்வசம் வைத்துள்ள போராட்டம் நடத்தியவர்கள் குறித்த அடையாளத்தை பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரதமரின் செல்ஃபி வீடியோ முடக்கம்: தொழில்நுட்பக் கோளாறு எனக் கூறி மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனம் !</title><link>https://www.maalaimalar.com/news/national/prime-ministers-selfie-video-blocked-meta-apologises-over-technical-glitch</link><comments>https://www.maalaimalar.com/news/national/prime-ministers-selfie-video-blocked-meta-apologises-over-technical-glitch#comments</comments><guid isPermaLink="false">a0f37744-603d-4612-be72-a99866a37ba2</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:27:12 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:27:12.735Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,Meta,மெட்டா நிறுவனம்,இந்திய பிரதமர் நரேந்திர மோடி,Modi selfie video,மோடி செல்ஃபி வீடியோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/a1wxjryw/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Modi selfie video]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/a1wxjryw/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் நரேந்திர மோடி தனது பேஸ்புக் (Facebook) பக்கத்தில் வெளியிட்ட செல்ஃபி வீடியோ ஒன்று, தளத்தில் திடீரெனத் தடை செய்யப்பட்டு முடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளித்துள்ள மெட்டா நிறுவனம், "தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே தவறுதலாக வீடியோ நீக்கப்பட்டது" எனக் கூறி மன்னிப்பு கேட்டுள்ளதுடன், அந்த வீடியோவை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.</p><h2><strong>என்ன நடந்தது?</strong></h2><p>தேர்வுத் தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து, நாட்டின் இளைஞர்கள் மற்றும் Gen-Z தலைமுறையினரை நோக்கி பிரதமர் நரேந்திர மோடி செல்ஃபி வடிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ குறுகிய நேரத்திலேயே மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்று வைரலானது. </p><p>ஆனால், திடீரென அந்த வீடியோ பேஸ்புக் பக்கத்தில் முடக்கப்பட்டு, "சட்டப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் இந்த பதிவு இந்தியாவில் இடைநிறுத்தப்பட்டுள்ளது" என்ற அறிவிப்புத் திரையில் தோன்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><h2><strong>மெட்டா அளித்துள்ள விளக்கம்:</strong></h2><p>இதுகுறித்து மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "இந்த வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டது. தற்போது அந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, வீடியோ மீண்டும் பேஸ்புக்கில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது" என்று கூறி அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்.</p><h2><strong>ஒன்றிய அரசின் அதிரடி உத்தரவு:</strong></h2><p>ஜனநாயக நாட்டின் பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடியோவே தவறுதலாக முடக்கப்பட்ட விவகாரத்தை இந்திய அரசு மிகக் கடுமையான விஷயமாக எடுத்துக்கொண்டுள்ளது. இது குறித்து நேரில் ஆஜராகி விரிவான விளக்கம் அளிக்குமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய கொள்கைத் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2><strong>வீடியோவில் பிரதமர் கூறியது என்ன?</strong></h2><p>பேப்பர் லீக் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பேசிய பிரதமர், "தேர்வுத் தாள் கசிவு என்பது மிகக் கடுமையானப் பிரச்சனை. இதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தனிச் சட்டமும், விரைவு நீதிமன்றங்களும் அமைக்கப்படும்" என உறுதியளித்திருந்தார்.</p><p>பிரதமரின் இந்த வீடியோ சட்டப்பூர்வக் கோரிக்கை காரணமாக முடக்கப்பட்டதாகத் திரையில் காட்டியது, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், மெட்டாவின் விளக்கம் மற்றும் அரசின் சம்மன் நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மீது தாக்குதல் விவகாரம்.. அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு 
</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-chaos-house-adjourned-amid-demand-to-debate-exam-scams-and-student-protest-assault</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-chaos-house-adjourned-amid-demand-to-debate-exam-scams-and-student-protest-assault#comments</comments><guid isPermaLink="false">dba27ef7-78fa-4bc7-b482-2c512c940650</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:24:47 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:24:47.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,மழைக்கால கூட்டத்தொடர்,பிரியங்கா காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/3s32l87o/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மக்களவை ]]></media:title><media:description type="html"><![CDATA[ மக்களவை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/3s32l87o/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரண்டாம் கட்ட நாடாளுமன்ற <a href="https://www.maalaimalar.com/news/national/nda-meet-under-modi-20-dissident-tmc-mps-join-ncpi-and-attend-alliance-meeting">மழைக்கால கூட்டத்தொடர் </a>நேற்று தொடங்கியது. நேற்றைய தினமே, பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026-ஐ மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தாக்கல் செய்தார். </p><p>இன்று அதன் மீதான விவாதம் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்றை போலவே இன்றும் இரு அவைகளிலும்,  தேர்வு முறைகேடுகள், ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்திய மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க கோரி கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். </p><h2>ஒத்திவைப்பு </h2><p>இதனால் காலை 11 மணிக்கு தொடங்கிய சொற்ப நேரத்திலேயே இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.</p><p>மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், "சபை நடந்தால் தான் விவாதமும் கலந்துரையாடலும் நடைபெறும், அனைவரின் கருத்துக்களையும் வெளிப்படுத்த முடியும். அப்போது தான் அந்த செய்தி நாடு முழுவதும் சென்று சேரும் எனக் குறிப்பிட்டார். </p>  <h2>அவை நடவடிக்கைகள்</h2><p>தொடர் தொடங்கியதில் இருந்து தினமும் ஒத்திவைப்புகள் நடந்து வருவதால் அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>முதற்கட்டத்தில் தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற அமளி நீடித்தது. சிஜேபி தலைமையில் இளைஞர்களின் 1 மாத போராட்டத்தின் பின் அவர் பதவி விலகிய நிலையில், தற்போது மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளனர்.</p> <h2>வெட்கமாக இல்லையா?</h2><p>இதனிடையே காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி பேசுகையில், நேற்று தர்மேந்திர பிரதானுக்கு தலைப்பாகை, சால்வை அணிவித்து என்டிஏ எம்.பிக்கள் வரவேற்றத்தை விமர்சித்தார். </p><p>அவர் கூறியதாவது, " உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவர் எதன் பின்னணியில் பதவி விலகினார் என்பதை யோசித்து பாருங்கள். ஆனாலும் அவர் சூப்பர்ஸ்டாரை போல வரவேற்கபடுகிறார். </p><p>இன்றைக்கும் கூட மாணவர்கள் துன்புறுத்தப்பட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்ஸ்ட்டாகிராமில் பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு, அவர்கள் இதைச்  செய்தார்கள், அதைச் செய்தார்கள் என தரக்குறைவாக பேசி வருகிறார்கள். நீங்கள் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கும் முன்வரவில்லை, இந்த பிரச்னையை சுமூகமாக தீர்க்கமும் விரும்பவில்லை.  நீங்கள் மாணவர்களை இப்போதும் கூட அடக்கி ஒடுக்க முயல்கிறீர்கள்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய 20 அதிருப்தி எம்.பிக்கள் பங்கேற்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/nda-meet-under-modi-20-dissident-tmc-mps-join-ncpi-and-attend-alliance-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/national/nda-meet-under-modi-20-dissident-tmc-mps-join-ncpi-and-attend-alliance-meeting#comments</comments><guid isPermaLink="false">02594e5b-7dbb-49ae-a8bc-f15e8d32fb24</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:46:19 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:46:19.454Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trinamool congress,என்டிஏ கூட்டணி,NDA Alliance,monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/2wc1kero/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ என்டிஏ எம்பிக்கள் கூட்டம் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ என்டிஏ எம்பிக்கள் கூட்டம் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/2wc1kero/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>என்டிஏ கூட்டம் </h2><p>இன்று நாடாளுமன்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">மழைக்கால கூட்டத்தொடர்</a> கூட்டத்தை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி  மற்றும் மூத்த மத்திய அமைச்சர்கள் தலைமையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.  </p><p>இக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி, தேசியவாதக் குடிமக்கள் கட்சியில் இணைந்த 20 எம்பிக்களும் முதன்முறையாக அதிகாரப்பூர்வ அழைப்பாளராகப் பங்கேற்றனர்.  </p> <h2>சயோனி கோஷ்</h2><p>கூட்டத்தில் பங்கேற்ற பின் பேசிய அதிருப்தி எம்.பி. சயோனி கோஷ், "பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டம் மிகவும் பயனுள்ளதாகவும், புதிய தகவல்களைத் தருவதாகவும் இருந்தது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து இதில் விரிவாகவும் நேர்மறையாகவும் விவாதிக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.</p><p>மேலும், அன்று பிற்பகலில் விவாதத்திற்கு வரவுள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-government-introduces-strict-exam-malpractice-prevention-bill-in-parliament">பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026</a>க்கு அனைவரும் கட்சி வேறுபாடின்றி ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>என்டிஏ கூட்டத்தில் பங்கேற்றது குறித்துப் பேசிய NCPI தலைவர் காகோலி கோஷ் தஸ்திதார், "வரலாற்றிலேயே முதன்முறையாக NCPI எம்பிக்களான எங்களுக்கு என்டிஏ-வின் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.</p> <h2>திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி பின்னணி</h2><p>மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. சுவேந்து அதிகாரி தலைமையில் மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக அரசு அமைந்தது.</p><p>இதனிடையே தோல்வியால் திரிணாமுல் காங்கிரசில் பலர் அதிருப்தி அடைந்தனர். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற 80 பேரில் 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து ரிதர்ப்பா பானர்ஜி தலைமையில் செயல்பட்டு வருகின்றனர். ரிதர்பாவையே அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சபாநாயகர் அங்கீகரித்தார்.</p><p>இதனிடையே எம்எல்ஏ மட்டத்தில் இருந்த அதிருப்தி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களையும் பீடித்தது. அடுத்தடுத்து பலர் விலகிய நிலையில் 20 திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பிக்கள் கட்சித் தாவல் தடைச் சட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக தேசியவாத குடிமக்கள் கட்சியில் (NCPI) என்ற பிராந்திய கட்சி ஒன்றில் சேர்ந்து பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு ஆத்ராவளித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>வெற்றி எப்போதும் அடக்கத்துடன் சேர்ந்தே வர வேண்டும் - CJP கொண்டாட்டங்களை கண்டித்த சோனம் வாங்சுக்?</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-celebration-row-viral-cjap-dance-videos-after-pradhan-resignation-draw-criticism-wangchuk-urges-humble-victory</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-celebration-row-viral-cjap-dance-videos-after-pradhan-resignation-draw-criticism-wangchuk-urges-humble-victory#comments</comments><guid isPermaLink="false">b305073f-96be-473a-ba0b-ef748a46d4b8</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:21:34 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:21:34.928Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைரல் வீடியோ,Sonam Wangchuk,viral video,சோனம் வாங்சுக்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uccayyid/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிஜேபி கொண்டாட்டம், சோனம் வாங்சுக் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ சிஜேபி கொண்டாட்டம், சோனம் வாங்சுக் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uccayyid/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து போராட்டத்தை முடித்துக்கொண்ட <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-violence-report-ai-identifies-2873-attackers-989-with-serious-criminal-records-in-student-march">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> (CJP) முக்கிய நிர்வாகிகள் நடனமாடி கொண்டாட்டங்களில் ஈடுபட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். </p><h2>வாங்சுக் போராட்டம்</h2><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக், மாணவர் போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது மற்றும் உயிரிழந்த நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து ஜூலை 23 அன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.</p><p>நேற்று மருத்துவமனையில் இருந்து டிசார்ச்ஜ் ஆன வாங்சுக், காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.</p> <h2>வாங்சுக் கருத்து </h2><p>இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாங்சுக், "வெற்றி எப்போதும் அடக்கத்துடன் சேர்ந்தே வர வேண்டும்," எனத் தெரிவித்தார்.  </p><p>மேலும் தனது ஆதரவாளர்கள் அனைவரும் "கண்ணியம், கட்டுப்பாடு மற்றும் பொறுப்புணர்வுடன்" தங்களின் வெற்றியைக் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  </p><p>வெற்றி பெறுவதைப் போலவே, மரியாதையையும் அடக்கத்தையும் பேணிப் பாதுகாப்பதும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார். </p><h2> </h2><h2>விமர்சனம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவால் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சோகமும், பல மாநிலங்களில் போராட்டக்காரர்கள் கைது நடவடிக்கைகளைச் சந்தித்து வரும் வேளையில், தலைவர்கள் இவ்வாறு கொண்டாடுவது சரியல்ல என இணையத்தில் விமர்சனம் எழுந்தது. </p><p>மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி போன்றோர், போராட்டக் குழுவினர் 5 நட்சத்திர ஹோட்டலில் வெற்றி விழா கொண்டாடுவதாகக் குற்றம் சாட்டினர். </p> <h2>சிஜேபி விளக்கம்</h2><p>விமர்சனங்களுக்குப் பதிலளித்த சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், "நாங்கள் சாலையில் அமர்ந்தும் போராடுவோம்; நடனமாடிக்கொண்டே எதிர்ப்பையும் பதிவு செய்வோம். இதுவே ஜென் இசட் தலைமுறையின் குணம்" என்று தெரிவித்தார். </p><p>மேலும், அது 5 நட்சத்திர ஹோட்டல் அல்ல, சாதாரண 2 அல்லது 3 நட்சத்திர ஹோட்டலின் அடித்தளக்கூடம் மட்டுமே என்றும், நாடு முழுவதும் சென்று போராட்டங்களை நடத்திவிட்டு டெல்லி திரும்பியுள்ள 200-300 தன்னார்வலர்களைக் கௌரவிப்பதற்காகவே அந்தச் சந்திப்பு நடத்தப்பட்டது என்றும் விளக்கம் அளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கொலை, கொள்ளை.. ஜூலை 20 பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் 989 பேருக்கு குற்றப் பின்னணி - டெல்லி காவல்துறை</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-violence-report-ai-identifies-2873-attackers-989-with-serious-criminal-records-in-student-march</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-violence-report-ai-identifies-2873-attackers-989-with-serious-criminal-records-in-student-march#comments</comments><guid isPermaLink="false">e6783bf8-1975-49b2-bbd2-ae0701b6b33b</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:45:36 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:45:36.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி காவல்துறை,குற்றப் பின்னணி,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/kkpk03iu/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ July 20 rally violence - Delhi]]></media:title><media:description type="html"><![CDATA[ July 20 rally violence - Delhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/kkpk03iu/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜூலை 20 அன்று டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள்  நடத்திய  <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators">பேரணியின்</a>போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக, டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.   </p><p>அதில், காவல்துறையினரைத் தாக்கியது மற்றும் அரசு வாகனங்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட வன்முறைச் செயல்களில் ஈடுக்கப்பட்டவர்கள் குற்றப்பின்னணி கொண்டவர் என கண்டறிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். </p><h2>ஏஐ தொழில்நுட்பத்தால் ஆய்வு</h2><p>கேமராக்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் பொதுமக்கள் எடுத்த வீடியோக்களை ஏஐ தொழில்நுட்பத்தால் ஆய்வு செய்து போலீசார் மற்றும் வாகனங்களை தாக்கிய 2,873 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் , 989 நபர்கள் கொடூரமான  குற்றப் பின்னணி கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது. </p><h2>குற்றப் பின்னணி</h2><p>அதன்படி, பேரணியில் வன்முறையில் ஈடுபட்ட 101 பேர் மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 284 பேர் மீது கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன.</p><p>61 பேர் மீது பாலியல் வன்கொடுமை, 25 பேர் மீது பெண்களைத் துன்புறுத்துதல் 6 பேர் பேர் மீது மற்றும் போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளன.</p><p>229 பேர் ஆயுத சட்டம் வழக்குகளிலும், 135 பேர் செயின் பறிப்பு வழக்குகளிலும், 19 பேர் கடத்தல் வழக்குகளிலும், 67 பேர் போதைப்பொருள் வழக்குகளும் உள்ளன." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பலப்பிரயோகம்</h2><p>மேலும், ஜந்தர் மந்தரில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தடுப்புகளை உடைத்து நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறியதாலும், தொடர்ந்து எச்சரிக்கைகளை மீறியதாலுமே பலப்பிரயோகம் செய்யப்பட்டது.  </p><p>தீவிரக் குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரும் என்றும், மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என  என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>ஜூலை 20 தாக்குதல்</h2><p>ஜூலை 20, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சிஜேபி தலைமையில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர்.</p><p>அப்போது அவர்கள் மீது டெல்லி காவல்துறை, ஆர்ஏஎப் மத்திய படையினர் லத்திகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகுகள் வீசப்பட்டன.</p><p>ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளும் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 60 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 118 போலீசாரும் காயமுற்றனர். </p>]]></content:encoded></item><item><title>போராடிய மாணவர்களின் சட்ட உதவிக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்த கபில் சிபல்</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-legal-aid-kapil-sibal-pledges-1-crore-to-cjp-fund-for-students-facing-cases</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-legal-aid-kapil-sibal-pledges-1-crore-to-cjp-fund-for-students-facing-cases#comments</comments><guid isPermaLink="false">fd513a3d-0b28-47cc-9d9a-1bb0e0e8b49c</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:20:17 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:20:17.877Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வழக்கு,Case,கபில் சிபில்,Kapil Sibal,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/t7bnwzxr/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கபில் சிபல், சௌரவ் தாஸ்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ கபில் சிபல், சௌரவ் தாஸ்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/t7bnwzxr/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ரூ. 1 கோடி</h2><p> கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி)  அமைத்துள்ள மாணவர் சட்ட உதவி நிதியத்திற்குத் தனது பங்களிப்பாக ரூ.1 கோடி வழங்குவதாக மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் அறிவித்துள்ளார்.</p><p>போராட்டங்களில் பங்கேற்று சட்டரீதியான வழக்குகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவ சிஜேபி, இந்த நிதியத்தை உருவாக்கியுள்ளது.</p><p>நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் இந்த நிதியத்திற்குப் பங்களிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p> <h2>சட்ட உதவிக்கு சிறப்பு இணையதளம்</h2><p>டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிஜேபி தலைவர்கள் அசுதோஷ் ரான்கா, சௌரவ் தாஸ் மற்றும் வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர் பங்கேற்றனர்.</p><p>அதில், பீகார், அசாம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா என அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு உதவ உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் இணைந்து ஒரு சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators">எப்.ஐ.ஆர் </a>பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் தங்கள் வழக்கு விவரங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில்புதிய போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது.</p><p>இலவசமாகச் சேவை செய்ய விரும்பும் வழக்கறிஞர்களும் இந்த இணையதளம் மூலம் இணையலாம் என தெரிவிக்கப்பட்டது.</p> <h2>மீண்டும் போராட்டம்</h2><p>மேலும், கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்படாமலும், காவல்துறை நடவடிக்கைகள் நிறுத்தப்படாமலும் இருந்தால் மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவோம் என சிஜேபி எச்சரித்துள்ளது.</p><p>அரசு தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டதாகவும், பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பொய்யான வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சௌரவ் தாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>அதேவேளையில், ஜூலை 26 மாலை 6 மணிக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பீகார் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.</p> <h2>சிஜேபி போராட்டம் </h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி.) சார்பில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகலை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த போராட்டம் நாடு முழுக்க பல மாநிலங்கள் வரை மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.</p><p>அந்த வரிசையில் பீகார் மாநிலத்திலும் மாணவர்கள், மாணவர் அமைப்புகள் சார்பில் போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மாநிலம் முழுக்க நடைபெற்ற போராட்டங்களில் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, பலர் கைது செய்யப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 1 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய டோக்கன்- நெரிசலை குறைக்க ரெயில்வே நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/tatkal-booking-new-rules-process-coming-august-1st</link><comments>https://www.maalaimalar.com/news/national/tatkal-booking-new-rules-process-coming-august-1st#comments</comments><guid isPermaLink="false">b994f996-dad7-4b66-b206-f7ca61bea8ad</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:57:33 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:57:33.692Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Indian Railway,இந்திய ரெயில்வே,Tatkal,தட்கல்,தட்கல் ரெயில் டிக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/rl2qzk4i/tatkal.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/rl2qzk4i/tatkal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய நீங்கள் முன்பதிவு மையத்திற்குச் சென்றால், ஆதார் அட்டை அல்லது பிற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.</aside><p>ரெயில் பயணிகள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு மையங்களில் எளிதாகவும், நெரிசலின்றியும் பெறுவதற்காக <a href="https://www.maalaimalar.com/topic/இந்திய-ரெயில்வே">இந்திய ரெயில்வே</a> ஒரு புதிய டோக்கன் முறையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக மேற்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில் அறிமுகம் செய்யப்படும் இந்த புதிய நடைமுறை, வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.</p><h2><strong>கூட்ட நெரிசல்</strong></h2><p>வழக்கமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நேரங்களில், ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் கடுமையான கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, தட்கல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வரும் பயணிகளுக்கு முதலில் ஒரு டோக்கன் வழங்கப்படும். பின்னர், அந்த டோக்கன் வரிசை எண்களின் அடிப்படையில் அவர்களின் முறை ஒதுக்கப்பட்டு, பயணச்சீட்டுகள் தடையின்றி முன்பதிவு செய்யப்படும்.</p><p>இதனால், கவுண்டரில் ஏற்படும் தள்ளுமுள்ளு மற்றும் நீண்ட வரிசைகளால் ஏற்படும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>ஆவணங்கள்</strong></h2><p>தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய நீங்கள் முன்பதிவு மையத்திற்குச் சென்றால், ஆதார் அட்டை அல்லது பிற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். </p><p>மேலும், பயணிகளின் பெயர்கள், வயதுகள் மற்றும் பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும். இது டிக்கெட் முன்பதிவு செயல்முறையை விரைவுபடுத்த உதவும்.</p><p>புதிய நடைமுறை வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>CJP PROTEST: போலீஸ் வேனை மறித்த புகழ்பெற்ற மாடல் அழகி மும்பை போலீசில் புகார்!</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-famous-model-files-complaint-mumbai-police</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-famous-model-files-complaint-mumbai-police#comments</comments><guid isPermaLink="false">463bdfea-8d1a-458e-879b-ac5fdee5c8da</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:27:19 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:27:19.190Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட் ஊழல்,CJP Protest,காக்ரோச் ஜனதா கட்சி,Rhiya Yadav,ரியா யாதவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/urgf3nlq/rhiya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rhiya Yadav]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/urgf3nlq/rhiya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஏற்றிச் சென்ற காவல் துறை வாகனத்தை மறித்து சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்த 27 வயதான மாடல் அழகி 'ரியா யாதவ்', தனக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இணையவழி அவதூறு மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக மும்பை எம்பிடிசி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.</p><h2><strong>சம்பவத்தின் பின்புலம்:</strong></h2><p>கடந்த ஜூலை 22 அன்று, மும்பை சிவாஜி பார்க் பகுதியில் நீட் தேர்வு முறைக்கேடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, கைது செய்யப்பட்ட இளைஞர்களை ஏற்றிச் சென்ற போலிஸ் வேனை ரியா யாதவ் தனது கைகளை விரித்து நின்று மறித்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அவருக்குப் பரவலான ஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது.</p><h2><strong>இணையவழித் தாக்குதல்:</strong></h2><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் அவருக்கு எதிராகத் தொடர் அவதூறுகளையும் மனரீதியான தாக்குதல்களையும் தொடுக்கத் தொடங்கினர். அதில், ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ஆபாச உள்ளடக்கங்களை விற்று லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாகச் சிலர் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டனர்.</p><p>மேலும், அவரது புகைப்படங்களை மங்கலாக்கி வீடியோக்களாக வெளியிட்டு, தவறானத் தகவல்களைப் பரப்பி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது பெற்றோர் இதனால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், இந்த அநீதிக்கு எதிராக நிற்க வேண்டும் என்பதற்காகவும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.</p><h2><strong>காவல் துறை நடவடிக்கை:</strong></h2><p>கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிரா சைபர் செல்லில் ஆன்லைன் மூலம் புகார் அளித்த ரியா, நேற்று MIDC காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சாட்சியங்களைச் சமர்ப்பித்தார். காவல் நிலையத்தில் திரையிடப்பட்ட வீடியோ ஆதாரங்கள், டிஜிட்டல் சான்றுகள் மற்றும் ஸ்கிரீன் ரெக்கார்டிங்குகளை அதிகாரிகளிடம் வழங்கினார். </p><p>இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "காவல் துறையினர் மிகவும் ஒத்துழைப்புடனும் விரைவாகவும் செயல்பட்டனர். நடைமுறைகளை அவர்கள் துரிதப்படுத்தியதால், திட்டமிட்டபடி மூத்த சைபர் செல் அதிகாரியைச் சந்திக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை" எனக் குறிப்பிட்டார்.</p><p>இப்புகார் தொடர்பாக ரியா யாதவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாகவும், டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்த பின் விரைவில் FIR பதிவு செய்யப்படும் என்றும் MIDC காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும் போராடுவோம் என எச்சரித்த CJP.. பீகார், அசாம், ராஜஸ்தானில் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்! </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators#comments</comments><guid isPermaLink="false">63342384-47df-4c51-8348-953a93f15516</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:17:35 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:17:35.704Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,student protest,வழக்கு,Case,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uj30euq1/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ CJP]]></media:title><media:description type="html"><![CDATA[ CJP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uj30euq1/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீதான வழக்குகளை பெறப்போவதாக அசாம் அரசு அறிவித்துள்ளது.</p><h2>அசாம் </h2><p>அசாம் அரசின் உள்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி, </p><p>ஜூலை 26 மாலை 6 மணிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் மற்றும் கைது செய்யப்பட்ட 13 பேர் மீதான சட்ட நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும். </p><p>இந்த விவகாரம் தொடர்பான எந்தவொரு எதிர்கால சட்ட நடவடிக்கையும் இல்லாமல் வழக்குகள் முடித்து வைக்கப்படும்.</p><p>கைது செய்யப்பட்டவர்களை விரைவாக விடுதலை செய்யும் பணிகளும், வழக்குகளைத் திரும்பப் பெறும் சட்ட நடைமுறைகளும் உடனடியாகத் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <h2>பீகார் - ராஜஸ்தான்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/bihar-govt-to-withdraw-cases-lodged-against-protesters-over-neet-paper-leak">பீகாரில் </a>ஜூலை 25 அன்று நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 694 பேர் உட்பட அனைவர் மீதான வழக்குகளையும் ரத்து செய்து பீகார் அரசு ஏற்கனவே முழுமையான பொதுமன்னிப்பு அறிவித்திருந்தது.</p><p>ராஜஸ்தானிலும் போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்தவொரு எப்ஐஆரும்பதிவு செய்யப்படாது என்றும், போராட்டக்காரர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக சிஜேபி தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.</p> <h2>சௌரவ் தாஸ்</h2><p>அரசுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பிற்குப் பிறகு சௌரவ் தாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,</p><p>"மத்திய அரசு மற்றும் பிற என்டிஏ ஆளும் மாநிலங்கள் சார்பிலும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வது மற்றும் வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்த உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு இளைஞரையும் தனித்து விடமாட்டோம்."</p><p>முன்னதாக, தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜூலை 25 அன்று போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.</p><h2>சிஜேபி நிபந்தனை</h2><p>சிஜேபி மற்றும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆகியோருடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், வழக்குகளைத் திரும்பப் பெறவும், வினாத்தாள் கசிவு எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவரவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது.</p><p>போராடிய மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறுவது உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என சிஜேபி எச்சரித்திருந்த நிலையில் பீகார், அசாம், ராஜஸ்தான் அரசின் முடிவுகள் வந்துள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>மதம் மாறிய மறு கணமே பட்டியலின அந்தஸ்து முடிவுக்கு வந்துவிடும் - உச்சநீதிமன்றம் </title><link>https://www.maalaimalar.com/news/national/sc-status-cancelled-on-conversion-supreme-court-upholds-ap-hc-ruling-on-reservation-and-certificates</link><comments>https://www.maalaimalar.com/news/national/sc-status-cancelled-on-conversion-supreme-court-upholds-ap-hc-ruling-on-reservation-and-certificates#comments</comments><guid isPermaLink="false">00e3847c-73f6-40b6-bf30-ee48c4248a1f</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:00:38 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:00:38.401Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,மதமாற்றம்,Religious Conversion,உச்சநீதிமன்றம்,பட்டியலின அந்தஸ்து,Scheduled Caste status</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/rn4p3zwe/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/rn4p3zwe/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டியலின  வகுப்பைச் சேர்ந்த ஒருவர் வேறு மதத்திற்கு மாறினால், அவரின் பட்டியலின  (SC) அந்தஸ்து உடனடியாக ரத்து செய்யப்படும் என்று <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்ச நீதிமன்றம்</a> தெரிவித்துள்ளது.</p><p>இந்து, சீக்கியம் மற்றும் பௌத்த மதங்களை தவிர்த்து, கிறித்தவம் அல்லது பிற மதங்களைத் தழுவிய நபர்களுக்கு எஸ்சி இடஒதுக்கீடு மற்றும் சான்றிதழ்கள் செல்லாது என்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் முன்பு அளித்த தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்தபோது உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்தது. </p>  <h2>விசாரணை</h2><p>நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனது விசாரணையில்,</p><p>பட்டியலின வகுப்பினர் குறித்த 1950ஆம் ஆண்டின் அரசியலமைப்புஉத்தரவின்படி, இந்து, சீக்கியர் மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எஸ்சி அந்தஸ்திற்குத் தகுதியானவர்கள் என்று தெரிவித்தது.</p><p>பட்டியலின வகுப்பை சேர்ந்த ஒரு நபர் மதம் மாறிய மறு கணமே, அவரின் எஸ்சி அந்தஸ்தும் அதன் அடிப்படையிலான சலுகைகளும் முடிவுக்கு வந்துவிடும். உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் எந்தத் தவறும் இல்லை.</p> <h2>3 நிபந்தனைகள்</h2><p>மதம் மாறிய ஒருவர் மீண்டும் தனது பழைய எஸ்சி அந்தஸ்தைப் பெற வேண்டுமென்றால், பிறப்பால் அவர் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். </p><p>சுயவிருப்பத்தின் பேரில் மீண்டும் தனது சொந்த மதத்திற்கு (இந்து, சீக்கியம் அல்லது பௌத்தம்) திரும்ப வேண்டும். அவரது மூல சாதி சமூகம் அவரை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.</p><p>அரசியலமைப்பு நிர்ணயித்துள்ள இந்த 3 முக்கிய நிபந்தனைகளுக்கு உட்பட்டால் மட்டுமே அவருக்கு மீண்டும் எஸ்சி அந்தஸ்து கிடைக்கும்" என தெரிவித்த அமர்வு, மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.</p>]]></content:encoded></item><item><title>காதலை கைவிட மறுத்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய்</title><link>https://www.maalaimalar.com/news/national/mother-killed-daughter-for-refusing-to-give-up-her-love</link><comments>https://www.maalaimalar.com/news/national/mother-killed-daughter-for-refusing-to-give-up-her-love#comments</comments><guid isPermaLink="false">aa5f9dd9-33e2-40e5-8dd2-107bf048d6ca</guid><pubDate>Tue, 28 Jul 2026 02:46:20 +0000</pubDate><atom:updated>2026-07-28T02:46:20.973Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மகாராஷ்டிரா,Maharastra,தாய் கைது,காதல் விவகாரம்,Mother arrested,மகள் கொலை,Daughter Murder,Love issue</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/fblrc1i2/death.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/fblrc1i2/death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உல்லாஸ்நகரில் காதலை கைவிட மறுத்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.</p><h2>காதலுக்கு எதிர்ப்பு</h2><p>மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் உல்லாஸ்நகர் பையாசாகேப் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தத்தா காவத். இவருடைய மனைவி ஆஷா (வயது40). இவர்களது மகள் அம்ருதா (19). அம்ருதா அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இந்த காதலுக்கு அவரது தாய் ஆஷா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். </p> <h2>தாய் - மகள் வாக்குவாதம்</h2><p>இந்தநிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் வீட்டில் இருந்த அம்ருதாவிடம், அவரது தாய் ஆஷா காதலை மீண்டும் கண்டித்துள்ளார். அந்த வாலிபருடனான தொடர்பை உடனடியாக துண்டித்து கொள்ளுமாறு மகளை வற்புறுத்தினார். ஆனால், அம்ருதா தனது காதலை கைவிட மறுத்து தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.</p><h2>மகள் உயிரிழப்பு</h2><p>இதனால் ஆத்திரமடைந்த ஆஷா, மகளின் கழுத்தில் கிடந்த துப்பட்டாவை எடுத்து அவரது கழுத்தை இறுக்கினார். இதில் மூச்சுத்திணறி அம்ருதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். </p> <h2>தந்தை புகார்</h2><p>இதுகுறித்து அம்ருதாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், உல்லாஸ்நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, தாய் ஆஷாவை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>மகள் என்றும் பாராமல் பெற்ற தாயே அவளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளம்: 6 மாவட்டங்களில் 4.4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-flood-over-44-lakh-people-affected-in-6-districts-toll-remains-at-68</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-flood-over-44-lakh-people-affected-in-6-districts-toll-remains-at-68#comments</comments><guid isPermaLink="false">4746f381-0b0b-4f24-8d66-1a6778a01cd9</guid><pubDate>Mon, 27 Jul 2026 19:49:27 +0000</pubDate><atom:updated>2026-07-27T19:49:27.666Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death toll,Assam Flood,அசாம் வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/vn7eovdp/Assam-Floods.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/vn7eovdp/Assam-Floods.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் வெள்ள சூழல் சற்று சீரடைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், ஆறு மாவட்டங்களில் 4.45 லட்சம் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. </p><p>அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) தகவலின்படி, சிவசாகர், கோலாகாட், சாரைடியோ, ஜோர்ஹாட், நாகான் மற்றும் காம்ரூப் (பெருநகரம்) ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 4,45,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை வரை மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் 5.24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.</p><h2>வெள்ள பாதிப்பு:</h2><p>கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை; இதனால் இந்த ஆண்டு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆகவே நீடிக்கிறது என்று ASDMA அறிக்கை கூறியது. சாரைடியோ மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது; அங்கு 1,88,404 பேர் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து சிவசாகர் (1,44,461) மற்றும் ஜோர்ஹாட் (74,458) மாவட்டங்கள் உள்ளன.</p><p>மொத்தம் 90 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன; அவற்றில் இடம்பெயர்ந்த 28,695 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், 94 நிவாரணப் பொருட்கள் விநியோக மையங்களும் செயல்படுகின்றன.</p><h2>நிவாரண பணிகள்:</h2><p>கோலாகாட் மாவட்டத்தின் நுமாலிகர் பகுதியில் தன்சிரி (தெற்கு) ஆறு அபாயக் குறியீட்டிற்கு மேல் பாய்ந்து வருவதாக ASDMA தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 67 படகுகள் பயன்படுத்தப்பட்டு, NDRF, SDRF மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>37,139.52 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன; அதேவேளையில் 26,679 கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வீடுகள், சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அது மேலும் கூறியது.</p>]]></content:encoded></item><item><title>நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற பீகார் அரசு முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-govt-to-withdraw-cases-lodged-against-protesters-over-neet-paper-leak</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-govt-to-withdraw-cases-lodged-against-protesters-over-neet-paper-leak#comments</comments><guid isPermaLink="false">92a5f44f-9a49-4f2e-a2ca-2066218e3127</guid><pubDate>Mon, 27 Jul 2026 18:06:59 +0000</pubDate><atom:updated>2026-07-27T18:06:59.978Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,neet protest,வினாத்தாள் கசிவு,NEET Paper Leak,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/a60opxu8/bihar-neet-protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Neet Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/a60opxu8/bihar-neet-protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் (NEET) <a href="https://www.maalaimalar.com/topic/paper-leaks">வினாத்தாள் கசிவு</a> விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறவும், சிறையில் உள்ளவர்களை விடுவிக்கவும் பீகார் அரசு முடிவு செய்துள்ளது.</p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவும், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் <a href="https://www.maalaimalar.com/topic/bihar">பீகார் அரசு</a> முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.</p><h2>அதிகாரப்பூர்வ அறிவிப்பு:</h2><p>மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "ஜூலை 26-ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு முன்னதாக நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகள் (FIR), புகார்கள் மற்றும் விளக்கம் கோரும் அறிவிப்புகள் (show-cause notices) ஆகியவை திரும்பப் பெறப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.</p><h2>சி.ஜே.பி. போராட்டம்:</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) சார்பில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகலை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த போராட்டம் நாடு முழுக்க பல மாநிலங்கள் வரை மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.</p><p>அந்த வரிசையில் பீகார் மாநிலத்திலும் மாணவர்கள், மாணவர் அமைப்புகள் சார்பில் போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மாநிலம் முழுக்க நடைபெற்ற போராட்டங்களில் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, பலர் கைது செய்யப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர் உள்ளிட்ட கர்நாடக எம்.பி.க்களுடன் டி.கே. சிவகுமார் ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/national/union-education-minister-pralhad-joshi-joins-dk-shivakumar-for-delhi-talks-on-mekedatu-dam</link><comments>https://www.maalaimalar.com/news/national/union-education-minister-pralhad-joshi-joins-dk-shivakumar-for-delhi-talks-on-mekedatu-dam#comments</comments><guid isPermaLink="false">0bc05179-1710-4433-bf39-057f9e08f309</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:28:36 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:28:36.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,மேகதாது அணை,டிகே சிவக்குமார்,TK Sivakumar,kaveri,காவேரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/jgqd8lmk/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar and Pralhad Joshi Talks about Mekedatu Dam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/jgqd8lmk/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.</p><h3><strong>மேகதாது அணை விவகாரம்:</strong></h3><p>கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்ட அம்மாநில அரசு தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.</p><p>கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு, அம்மாநில அரசு தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.</p><p>தமிழகத்திற்கு திறக்க வேண்டிய காவிரி நீரை, கர்நாடக அரசு திறந்துவிடாமல் இருந்து வருகிறது. கர்நாடகவில் போதுமான மழை பெய்யாமல் வறட்சி நிலவி வருவதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து பெங்களூருவில் டி.கே. சிவக்குமாரை தமிழக முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்துகொள்ள கூடாது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.</p><p>இந்நிலையில் டெல்லியில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தலைமையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.</p><p><strong>டெல்லியில் ஆலோசனை கூட்டம்:</strong></p><p>இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வர், அமைச்சர்கள் ஜார்ஜ், ஈஸ்வர் காந்த்ரே, சரண் பிரகாஷ், கிருஷ்ண பைரே கவுடாம், சதீஷ் ஜார்கிஹோலி, ராம லிங்கரெட்டி ஆகியோர்களும் பங்கேற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.</p><p>இவர்களுடன் கர்நாடகவை சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் மத்திய இணை அமைச்சர் ஷோபா உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பரோடா வங்கி தரவுகள் டார்க் நெட்டில் கசிவு- பயனர்களின் ஏடிஎம், நெட்பேக்கிங், ஆதார் பதிவேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/bank-of-baroda-data-leak-darknet-atm-netbanking-aadhaar</link><comments>https://www.maalaimalar.com/news/national/bank-of-baroda-data-leak-darknet-atm-netbanking-aadhaar#comments</comments><guid isPermaLink="false">0a8c805a-f9b4-4644-a1fd-76451dd2fec4</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:03:34 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:03:34.978Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,Bank of Baroda,இந்திய ரிசர்வ் வங்கி,பேங்க் ஆஃப் பரோடா,darknet,டார்க் நெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/928904ln/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bank of Baroda Data Leak: Customer ATM, netbanking and Aadhaar details on dark net]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/928904ln/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>பேங்க் ஆஃப் பரோடா தரவுகள் கசிவு:</strong></h3><p>பேங்க் ஆஃப் பரோடா தேசிய வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் சுமார் 1,000 ஜிபி டேடா கொண்ட தரவுகள், டார்க் நெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக டார்க் வெப் இன்டெலிஜென்ஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.  </p><p>குஜராத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 1908-ஆம் ஆண்டு, இந்தியாவின் இரண்டாவது பெரிய தேசிய வங்கியான பேங்க் ஆஃப் பரோடா ஆரம்பிக்கப்பட்டது.</p><p>இந்த வங்கி நாடு முழுவதும் எட்டாயிரத்திற்கும் அதிகமான கிளைகளை கொண்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களது பணத்தை வசதியாக எடுத்துக்கொள்ளும் வகையில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்-களையும் கொண்டுள்ளது.</p><p>கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு, பணப்பரிவர்த்தனைகள் பெரும்பாலும் இணையத்தின் மூலமாகவே நடைபெற்று வருகிறது.</p><p>இந்நிலையில் பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கார்ப்பரேட் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள பயனர்களின் தொலைபேசி எண்கள், ஆதார் எண்கள், நெட்பேங்கிங் பயனர் ஐடிகள், கடன் விண்ணப்பங்கள், ஏடிஎம் தொடர்பான பதிவு விவரங்கள் டார்க்நெட்டில் கசிந்துள்ளன.</p><h3><strong>கேஷ்லெஸ் நிறுவனர் குற்றச்சாட்டு:</strong></h3><p>இதுகுறித்து மென்பொருள் பொறியாளரும், கேஷ்லெஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஸ்ரீகாந்த் லட்சுமணன் கூறுகையில், பரோடா வங்கி வாடிக்கையாளர்களின் உண்மையான தகவல்கள் கசிந்துள்ளதாக ஆய்வு செய்து கூறினார்.</p><p>இதுதான் வங்கி கிளை தணிக்கையின் தரம் என்றும் செயற்கை நுண்ணறிவு சைபர் இணையத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யுமாறும், எக்ஸ் தளத்தில் இந்திய ரிசர்வ் வங்கியை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>மேலும், இந்திய ரிசர்வ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இந்த பிரச்சனையை எக்ஸ் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>இந்த தரவுகள் வெளியான பின்னணியில், தரவு மிரட்டல் மற்றும் ரான்சம்வேர் அச்சுறுத்தல் குழுவான ‘டிரிபிள் எக்ஸ்’ இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த குறிப்பிட்ட குழு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தோனேசியாவின் அரசுக்கு சொந்தமான வங்கி ஒன்றின் மீது இணையவழி தாக்குதலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வழக்குகள் வாபஸ் பெறப்படாவிட்டால் மீண்டும் போராட்டம்: மத்திய அரசுக்கு &apos;காக்ரோச் ஜனதா கட்சி&apos; கெடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/if-cases-not-withdrawn-protests-will-return-cockroach-janata-party-deadline-to-centre</link><comments>https://www.maalaimalar.com/news/national/if-cases-not-withdrawn-protests-will-return-cockroach-janata-party-deadline-to-centre#comments</comments><guid isPermaLink="false">80310ffe-be56-456c-b01d-62c50bdfc371</guid><pubDate>Mon, 27 Jul 2026 13:58:22 +0000</pubDate><atom:updated>2026-07-27T13:58:22.080Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி ஜந்தர் மந்தர்,Cockroach Janta Party,abhijeet dipke,அபிஜீத் திப்கே,காக்ரோச் ஜனதா கட்சி,CJPProtest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/aorc3803/cjp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cockroach Janta Party  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/aorc3803/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்களாக நடைபெற்று வந்த மாணவர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்ற நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீதான வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடங்கும் என 'காக்ரோச் ஜனதா கட்சி (CJP)' மத்திய அரசுக்குக் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்களைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அபிஜீத் திப்கே தலைமையிலான காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. </p><p>கடந்த வார இறுதியில் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, மத்திய அரசுடன் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் நல்லெண்ண அடிப்படையில் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.</p><h2><strong>CJP அமைப்பின் குற்றச்சாட்டுகள்:</strong></h2><p>போராட்டத்தைக் கைவிட்ட போதிலும், மத்திய அரசு மற்றும் காவல்துறை அளித்த வாக்குறுதிகளை மீறி வருவதாக CJP குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து, CJP செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, "போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எவ்வித காவல் துறை நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்ற ஒப்பந்தத்தை அரசு மீறியுள்ளது. </p><p>பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட உதவிகளைச் செய்த தன்னார்வலர்கள் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.</p><h2><strong>வழக்குகளை வாபஸ் பெற கோரிக்கை:</strong></h2><p>போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்.ஐ.ஆர் வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்ட மாணவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.</p><p>மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாஜக தலைவர்களான ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரை Tag செய்து வெளியிடப்பட்டுள்ள அந்தப் பதிவில், "நாளைக்குள் இது தொடர்பான எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை வழங்கி, வழக்குகளைத் திரும்பப் பெறாவிட்டால், நாங்கள் மீண்டும் போராட்டக்களத்தில் இறங்க வேண்டியிருக்கும்" எனத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>உச்ச நீதிமன்றத்தின் கருத்து:</strong></h2><p>இதனிடையே, டெல்லியில் ஜூலை 20 அன்று நடைபெற்ற 'சலோ சன்சாத்' பேரணியின் போது காவல்துறை நடத்திய கண்ணீர்ப்புகை தாக்குதல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்து தெரிவித்துள்ளது. "அமைதியான வழியில் போராட்டம் நடத்துவது என்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. வெறும் போராட்டம் நடக்கிறது என்பதற்காகக் காவல்துறையின் வரம்பு மீறிய தடியடியை நியாயப்படுத்த முடியாது"* என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2><strong>பாராளுமன்றத்தில் எதிரொலி:</strong></h2><p>மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை மற்றும் வழக்குகள் தொடரப்படும் விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயலைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்திச் முழக்கங்களை எழுப்பியதால் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன. </p><p>மத்திய அரசு மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் காவல்துறையினர் நாளைக்குள் வழக்கு திரும்பப் பெறுதல் குறித்த தெளிவான முடிவை அறிவிக்காத பட்சத்தில், நாடு தழுவிய அளவில் மீண்டும் மாணவர் போராட்டம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Video: வெல்லம் ஊட்டிய ஆட்டோ ஓட்டுனரை மிதித்து கொன்ற யானை - பாகன் மீது வழக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/national/auto-driver-killed-by-elephant-in-indore-after-feeding-jaggery</link><comments>https://www.maalaimalar.com/news/national/auto-driver-killed-by-elephant-in-indore-after-feeding-jaggery#comments</comments><guid isPermaLink="false">1296eff4-f240-489e-892f-74dc9ebaa986</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:28:24 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:28:24.224Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>indore,CCTVFootage,ElephantAttack,யானைதாக்குதல்,TragicIncident,BNSAct,PublicSafety</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/uk4nsixk/ElephantAttack" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ElephantAttack ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/uk4nsixk/ElephantAttack?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், சாலையில் நின்றிருந்த யானை ஒன்றுக்கு அன்போடு வெல்லம் ஊட்ட முயன்ற ஆட்டோ ஓட்டுநர், அந்த யானையால் கொடூரமாக மிதித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>கடந்த சனிக்கிழமை நகரின் ராஜ் நகர் காவல் நிலையத்திற்கு நேர் எதிரே அரங்கேறிய இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.</p><h2><strong>வெல்லம் ஊட்டியதால் ஆபத்து</strong></h2><p>இறந்துபோன நபர் இந்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய் ஹோல்கர் (49) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சனிக்கிழமையன்று சாலையில் யானை நிற்பதைக் கண்ட அவர், அதற்கு ஏதேனும் உணவளிக்க விரும்பியுள்ளார். </p><p>அதன்படி, கையில் வெல்லக் கட்டிகளுடன் யானையின் அருகில் சென்று அதை ஊட்ட முயன்றுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த யானை திடீரென கோபமடைந்து, தனது தும்பிக்கையால் விஜய் ஹோல்கரை பலமாகத் தள்ளி கீழே வீழ்த்தியது.</p><h2><strong>பாகனின் அஜாக்கிரதை</strong></h2><p>விஜய் ஹோல்கர் கீழே விழுந்ததைக் கண்டு பதற்றமடைந்த யானையின் பாகன் உமேஷ் கோஸ்வாமி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர நினைத்தார். </p><p>ஆனால், அவர் கையாண்ட விதம் நிலைமையை மேலும் மோசமாக்கியது. யானையைத் அமைதிப்படுத்துவதற்குப் பதிலாக, தனது கையில் இருந்த தடியால் யானையின் தலைப்பகுதியில் பலமாக அடித்தார். </p><p>பாகன் அடித்த அடியில் ஏற்பட்ட வலியால் நிலைதடுமாறிய அந்த யானை, முற்றிலும் தனது கட்டுப்பாட்டை இழந்து ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கே சென்றது.</p><h2><strong>தும்பிக்கையால் வீச்சு</strong></h2><p>கட்டுப்பாட்டை இழந்த யானை, கீழே விழுந்து தவித்துக் கொண்டிருந்த விஜய் ஹோல்கரை மீண்டும் தனது தும்பிக்கையால் சுருட்டி காற்றில் தூக்கி வீசியது. </p><p>அத்துடன் நிறுத்தாமல், கீழே விழுந்த அவரது வயிற்றுப் பகுதியின் மீது தனது கால்களால் பலமாக மிதித்துத் துவைத்தது. அங்கிருந்தவர்கள் அலறியடித்தபடி ஓடிவந்து, பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவரை மீட்டனர்.</p><h2><strong>சிகிச்சை பலனின்றி மரணம்</strong></h2><p>கடுமையான காயங்களுடன் கிடந்த விஜய் ஹோல்கர் உடனடியாக அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். </p><p>அங்கு அவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட போதிலும், நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவசரப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். </p><p>அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜய் ஹோல்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>யானையின் மிதியால் அவரது உடலின் முக்கிய உட்புற உறுப்புகள் கடுமையாகச் சிதைந்து, கடுமையான காயங்கள் ஏற்பட்டதே மரணத்திற்குக் காரணம் என்று பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் .</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/MlskmA4WdTk"></iframe></figure><h2><strong>காவல்துறை விசாரணை மற்றும் வழக்குப்பதிவு</strong></h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சில ஆன்மீகத் துறவிகள் தங்களது சமூக நிகழ்ச்சி ஒன்றிற்காக இந்த யானையை நகருக்குள் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. </p><p>அந்த யானையை நகரின் பல்வேறு தெருக்களுக்குக் கூட்டிச் சென்று, மக்களிடம் யாசகம் பெற வைத்துள்ளனர்.</p><p>பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெரிசல் மிகுந்த நகர்ப்புற பகுதிக்கு யானையை அழைத்து வருவதற்கு முன்பாக, வனத்துறையிடமிருந்து முறையான அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>இதற்கிடையில், யானையைச் சரியாகப் பராமரிக்காமல் அஜாக்கிரதையாகச் செயல்பட்டு ஒருவரின் மரணத்திற்குக் காரணமான பாகன் உமேஷ் கோஸ்வாமி மீது காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் 106 மற்றும் 291 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாட்டில் போராட்டத்தை உருவாக்க முயற்சிப்பதே, ராகுல் காந்தியின் ஒரே குறிக்கோளாக உள்ளது: பா.ஜ.க</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-s-only-goal-is-to-create-protests-in-the-country-bjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-s-only-goal-is-to-create-protests-in-the-country-bjp#comments</comments><guid isPermaLink="false">06656907-8e6d-4fc8-8026-c759d3c95446</guid><pubDate>Mon, 27 Jul 2026 11:13:42 +0000</pubDate><atom:updated>2026-07-27T11:13:42.474Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Bihar Bandh,பீகார் பந்த்,AK 47,ஏகே 47</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/30qutxj2/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BJP Slams Rahul Gandhi over AK-47 claims in Bihar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/30qutxj2/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க ஏ.கே 47 ரக துப்பாக்கியை காவலர் ஒருவர் பயன்படுத்தியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், அவருக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  </p><h3><strong>பீகார் பந்த:</strong></h3><p>பீகாரில் மாநிலம் தழுவிய பந்த் (முழு அடைப்பு) போராட்டம் நடைபெற்றது. அப்போது மாணவர் அமைப்புகள் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. </p><p>இதையடுத்து போராட்டாத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது காவலர் ஒருவர், ஏகே-47 துப்பாக்கியை பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இணையத்தில் பரவின. </p><p>இதைதொடர்ந்து துப்பாக்கியை பயன்படுத்திய காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். </p><h3><strong>ஏகே-47 பயன்படுத்தியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு:</strong></h3><p>இந்த சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.</p><p>மேலும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கொலை செய்வதற்கு, யார் அதிகாரம் கொடுத்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.</p><p>இந்நிலையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளரும், மக்களவை உறுப்பினருமான சம்பித் பத்ரா, ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்கட்சித் தலைவர் மிகுந்த பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்தி இருப்பது வெட்கக்கேடான செயல் என்றும் அவர் கூறினார்.</p><h3><strong>பாஜக கண்டனம்:</strong></h3><p>இதுகுறித்து சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியாவில் எதிர்கட்சி தலைவர் பதவியில் இருக்கும் ஒருவரால், இத்தகைய பொய் பரப்பப்படுவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.</p><p>இந்த நாட்டில் காவல்துறை எப்போதாவது போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஏகே-47 துப்பாக்கிகளை பயன்படுத்தி இருக்கிறதா?</p><p>அந்த மாதிரி சம்பவம் எப்போதாவது நடந்திருக்கிறதா? ஏகே-47 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக ராகுல் காந்தியால் எப்படி கூற முடியும்?</p><p>இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற அவதூறுகளையும் பொய்களையும் பரப்பியதற்காக ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>இதுபோன்ற பிரச்சாரங்களை செய்து, தவறான தகவல்களை பரப்புவதன் மூலம், ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் நாடு முழுவதும் பீதியையும், குழப்பத்தையும், அராஜகச் சூழலையும் உருவாக்க விரும்புகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.</p><p>ராகுல் காந்தி ஒரு பொறுப்பான எதிர்கட்சி தலைவராக நடந்துகொண்டு, இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பியதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>இயற்கையாகவே பிரச்சனைகளை தீர்ப்பது ராகுல் காந்தியின் நோக்கம் அல்ல. அமளியை தூண்டிவிட்டு, செயற்கையான கோபத்தை உருவாக்கி ஒரு போராட்டத்தை உருவாக்க முயற்சிப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக அராஜகத்தை உருவாக்க முயற்சிப்பது ஆகியவையே ராகுல் காந்தியின் ஒரே குறிக்கோளாக உள்ளது,” என்று பத்ரா கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை! - உத்தரப்பிரதேசத்தில் பயங்கரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-play-school-teacher-accused-of-burning-childs-private-parts</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-play-school-teacher-accused-of-burning-childs-private-parts#comments</comments><guid isPermaLink="false">adc59bfe-486c-4913-b8ff-4b605d4641f1</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:26:09 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:26:09.689Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,வாரணாசி,playschool,physically assaulted,உத்தரப் பிரதேச மாநிலம்,பிளேஸ்கூல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/bqp9ug6c/up.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Horrific Incident in UP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/bqp9ug6c/up.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், வகுப்பறையில் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமல் பேண்ட்டிலேயே கழித்த 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் பிளேஸ்கூல் ஆசிரியை ஒருவர் பழுக்கக் காய்ச்சிய கத்தியால் சூடு வைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>வகுப்பறையில் நடந்த அநியாயம்:</strong></h2><p>வாரணாசியில் உள்ள அகதா பகுதியில் இயங்கி வரும் 'சீரீன் சோனி பிளேஸ்கூல்' என்ற தனியார் பள்ளியில், வழக்கறிஞர் ஒருவரின் 5 வயது சிறுவன் நர்சரி படித்து வருகிறான். சம்பவத்தன்று வகுப்பில் இருந்த சிறுவன், இயற்கை உபாதையைக் கழிக்க ஆசிரியையிடம் அனுமதி கேட்டுள்ளான். ஆனால், ஆசிரியை அனுமதி மறுத்ததால், சிறுவனால் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமல் பேண்ட்டிலேயே கழித்துவிட்டான்.</p><h2><strong>பழுக்கக் காய்ச்சிய கத்தியால் சித்திரவதை:</strong></h2><p>இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, சிறுவனை மற்றொரு அறைக்கு இழுத்துச் சென்றுள்ளார். அங்கு இருந்த கேஸ் ஸ்டவ்வை பற்றவைத்து, அதில் கத்தியை பழுக்கக் காய்ச்சிய ஆசிரியை, அச்சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து வெளியில் யாருடனாவது சொன்னால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அச்சிறுவனைத் தாக்கி மிரட்டியும் உள்ளார்.</p><h2><strong>தாயிடம் கண்ணீருடன் கூறிய சிறுவன்:</strong></h2><p>வீட்டிற்குத் திரும்பிய சிறுவன், வலியால் கதறி அழுது நடந்த கொடுமைகளைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனின் உடலில் கொப்புளம் இருப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆசிரியையைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.</p><p>இதையடுத்து பள்ளி முதல்வர் ஹேமலதா சிங் மற்றும் மேலாளரிடம் புகார் தெரிவிக்க நேரில் சென்றபோது, அவர்கள் சிறுவனின் பெற்றோருக்கு ஆதரவாகச் செயல்படாமல் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.பள்ளி நிர்வாகத்தின் இந்த போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த பெற்றோர், லால்பூர்-பாண்டேபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். </p><p>புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் பாதுகாப்புடன் படிக்க வேண்டிய 5 வயதுக் குழந்தைக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: வரவேற்பை பெற்ற ஆசிரியையின் வரவேற்பு பலகை</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-teachers-matchbox-attendance-board-is-a-lesson-in-responsibility</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-teachers-matchbox-attendance-board-is-a-lesson-in-responsibility#comments</comments><guid isPermaLink="false">75b6da72-c488-4279-86cb-8663a33eb1f5</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:13:22 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:13:22.881Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>social media,video viral,சமூக வலைத்தளம்,Students,மாணவர்கள்,teacher,வீடியோ வைரல்,ஆசிரியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/vad6gyeg/delhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/vad6gyeg/delhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>வீடியோவில், ஆசிரியை தங்கள் பெயர்களை அழைக்கும் வரை காத்திருக்காமல், மாணவர்கள் கையால் செய்யப்பட்ட பலகையை  பயன்படுத்தி உற்சாகமாகத் தங்கள் வருகையைப் பதிவு செய்யும் காட்சிகள் உள்ளது.</aside><h2><strong>வருகை பதிவு</strong></h2><p>பள்ளிகளில் முதல் வகுப்பு தொடங்குவதற்கு முன்பாகவே மாணவ, மாணவிகளின் வருகை பதிவு செய்யப்படும். வகுப்பு ஆசிரியர் ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் பெயர்களின் பெயரை சொல்லி அவர்களின் வருகையை பதிவு செய்வது வழக்கம். அதன்பிறகு தான் பாடங்கள் நடத்துவார். </p><p>இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ஆசிரியை ஒருவர், கையால் செய்யப்பட்ட தீப்பெட்டி பலகையைப் பயன்படுத்தி, வருகைப்பதிவை மாணவர்களே முன்னின்று நடத்தும் ஒரு செயல்பாடாக மாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. </p><p>"என் சின்னஞ்சிறு குழந்தைகள், பொறுப்பேற்கிறார்கள்" என்ற தலைப்புடன் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஆசிரியை தங்கள் பெயர்களை அழைக்கும் வரை காத்திருக்காமல், மாணவர்கள் கையால் செய்யப்பட்ட பலகையை  பயன்படுத்தி உற்சாகமாகத் தங்கள் வருகையைப் பதிவு செய்யும் காட்சிகள் உள்ளது.</p><h2><strong>வீடியோ</strong></h2><p> ஆசிரியை வகுப்பறைக்குள் நுழைவதில் இருந்து வீடியோ தொடங்குகிறது. அவரைத் தொடர்ந்து வரும் குழந்தைகள், சுவரில் பொருத்தப்பட்டிருந்த வண்ணமயமான, சுயமாக செய்யப்பட்ட வருகை  பலகையை நோக்கி நேராகச் செல்கின்றனர். பலகையில் சிறிய தீப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொன்றிலும் ஒரு மாணவரின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது. </p><p>ஒவ்வொரு தீப்பெட்டிக்குள்ளும் இரண்டு எழுத்துக்கள் உள்ளன: 'A' என்பது வருகையின்மையையும், 'P' என்பது வருகையையும் குறிக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் வகுப்பறைக்குள் நுழையும்போது, அவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்வதற்கு முன், தங்கள் தீப்பெட்டியைத் திறந்து 'P' என்ற எழுத்தை வெளிப்படுத்தி, தாங்கள் வந்திருப்பதை அமைதியாக  குறித்துக்கொள்கிறார்கள். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் , அன்றாடப் பணியை அர்த்தமுள்ள கற்றல் அனுபவமாக மாற்றியதற்காக   ஆசிரியையை பாராட்டி பதிவிட்டனர்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbLdbCsTpyZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbLdbCsTpyZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>‘தேர்தலுக்கு பின் அழுது பிரயோஜனமில்லை... சமாஜ்வாதியுடன் கூட்டணிக்கு தயார்’ - ஓவைசி அழைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/no-use-crying-after-the-election-ready-for-an-alliance-with-samajwadi-owaisis-call</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-use-crying-after-the-election-ready-for-an-alliance-with-samajwadi-owaisis-call#comments</comments><guid isPermaLink="false">3c7a8f91-683c-45a5-9f99-3174a600763e</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:42:21 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:42:21.459Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அகிலேஷ் யாதவ்,Akhilesh Yadav,asaduddin owaisi,AIMIM,UP Polls,உ.பி. தேர்தல்,அசாதுதீன் ஓவைசி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/3yrde59v/New-Project-2026-07-27T145125.953.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/3yrde59v/New-Project-2026-07-27T145125.953.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயார் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார்.</p><p>பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் நீடிப்பதை தான் விரும்பவில்லை என்றும், ஓட்டுகள் பிரிவதை தவிர்ப்பதற்காகவே சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக மொராதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஓவைசி.,</p><p>“இதை நான் முன்பே கூறியுள்ளேன், மீண்டும் கூறுகிறேன்: உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை மஜ்லிஸ் விரும்பவில்லை. நான் கைகோர்க்கத் தயார். நான் கூட்டணி அமைக்கத் தயார். பேசுவதற்கான நேரம் இது. தேர்தல் முடிந்த பிறகு அழ வேண்டாம். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை.</p><p>ஓவைசி போட்டியிடுவது நமக்குத் தீங்கு விளைவிக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நான் உங்களுடன் இணைந்து போராடத் தயார். எங்கள் போராட்டம் எங்கள் கௌரவத்திற்கான போராட்டம். எங்கள் போராட்டம் நீதிக்கான போராட்டம். இப்போது நாங்கள் சும்மா உட்கார்ந்திருக்க விரும்பவில்லை. இப்போது எங்களுக்கு சமத்துவம் வேண்டும்.</p><p>அகிலேஷ் ஒரு நாற்காலியில் அமர்ந்தால், ஓவைசி அந்த நாற்காலிக்கு முன்னால் சம்மணமிட்டு அமர்ந்து உரிமைகள் மற்றும் நீதி பற்றிப் பேசுவார்.” என்று கூறினார்.</p><p>ஓவைசியின் இந்த அழைப்பு விமர்சித்துள்ள பாஜக, இருவரும் நாணயத்தின் இரு பக்கங்கள். அகிலேஷ் யாதவும், ஓவைசியும் ஒருவரையொருவர் திருப்திப்படுத்துவதில் போட்டியிடுகிறார்கள். இன்று அவர்கள், 'யார் பெரிய அண்ணா?' என்ற போட்டியை ஒதுக்கிவிட்டு, 'அண்ணா கூட்டணி அமைப்போம்' என்கிறார்கள். </p><p>ஓவைசி, அகிலேஷ் யாதவ்வுக்கு ஃபிரண்ட் ரிக்வஸ்ட் கொடுத்துள்ளார் என விமர்சித்துள்ளது. </p>]]></content:encoded></item></channel></rss>