<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 27 Jul 2026 08:57:26 +0000</lastBuildDate><item><title>VIDEO: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய உணவகத்தின் செயல்</title><link>https://www.maalaimalar.com/news/national/woman-orders-cheesy-momos-gets-rs-20-refund-and-thoughtful-note-after-restaurant-runs-out-of-item</link><comments>https://www.maalaimalar.com/news/national/woman-orders-cheesy-momos-gets-rs-20-refund-and-thoughtful-note-after-restaurant-runs-out-of-item#comments</comments><guid isPermaLink="false">8a85a3f9-f897-4865-b9fd-442b9213b6b0</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:57:15 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:57:15.042Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>social media,video viral,சமூக வலைத்தளம்,வீடியோ வைரல்,உணவகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/33yh5cc6/order.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/33yh5cc6/order.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>வேறு உணவு வகையை அனுப்பியதோடு, அதனுடன் அனுப்பிய குறிப்பு மற்றும் உணவுக்காக வித்தியாச தொகை குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. </aside><h2><strong>உணவு ஆர்டர்</strong></h2><p>தங்களுக்கு பிடித்த  உணவுகளை ஓட்டல்களில் ஆர்டர் செய்து வீட்டிற்கு வரவழைத்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் ஆர்டர் செய்த உணவுக்கு பதிலாக வேறு வகை உணவுகள் கொண்டு வரப்படுவதும், இதுதொடர்பாக வாடிக்கையாளருக்கும், உணவு வினியோக நிறுவன ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி இருந்தன. </p><p>அதற்கு மாறாக வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த உணவு, காலியான நிலையில் உணவகத்தில் இருந்த வேறு உணவு வகையை அனுப்பியதோடு, அதனுடன் அனுப்பிய குறிப்பு மற்றும் உணவுக்காக வித்தியாச தொகை குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. </p><h2><strong>வீடியோ</strong></h2><p>வீடியோவில்  ஷிரியா என்பவர் தான் ஒரு தட்டு சீஸி மோமோஸ் ஆர்டர் செய்ததாக கூறுகிறார். ஆனால், ஆர்டர் தயாராகும் நேரத்தில் அந்த உணவு வகை தீர்ந்துவிட்டது. ஆர்டரை ரத்து செய்வதற்கோ அல்லது அவருக்குத் தெரிவிக்காமல் வேறொன்றை மாற்றி வைப்பதற்கோ பதிலாக, உணவகம் சாதாரண 'க்ரஞ்சி மோமோஸ்'  வகையை பேக் செய்து, விலை வித்தியாசத்திற்காக 20 ரூபாயை திரும்ப அளித்தது. பார்சலை  பிரித்தபோது, ​​அதனுடன் இணைக்கப்பட்டிருந்த கையால் எழுதப்பட்ட குறிப்பை ஷ்ரியா கண்டார். அதில், "சீஸி மோமோஸ் கையிருப்பில் இல்லை, அதனால் சாதாரண க்ரஞ்சி மோமோஸை அனுப்பி உள்ளோம். விலை வித்தியாசத்திற்கான 20 ரூபாய் பார்சலுக்குள் வைக்கப்பட்டுள்ளது. நன்றி" என்று எழுதப்பட்டிருந்தது. </p><p>திரும்ப அளிக்கப்பட்ட தொகை சிறியதாக இருந்தாலும், அந்த செயலுக்குப் பின்னால் இருந்த நேர்மையே முக்கியமானது. இது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டனர்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbLFyxWt32Z/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbLFyxWt32Z/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>VIDEO: பீகாரில் போராடிய மாணவர்களை ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட காவலர் சஸ்பெண்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-shooting-bihar-cop-suspended-for-firing-ak-47-at-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-shooting-bihar-cop-suspended-for-firing-ak-47-at-students#comments</comments><guid isPermaLink="false">bd3d4c12-5f40-4db5-b937-d357d6795ae0</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:24:04 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:24:04.022Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,பீகார்,Bihar,shooting,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/0jdmviah/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஷேக் படேல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஷேக் படேல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/0jdmviah/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டத்தின் போது, மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பீகார் பந்த்</h2><p>டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான நடந்த CJP <a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march">போராட்டத்திற்கு </a>ஆதரவாக ஜூலை 25 அன்று பீகாரில், 'பீகார் பந்த்' போராட்டம் நடைபெற்றது. </p><p>இதில் மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பல இளைஞர்கள் கலந்துகொண்டனர். மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இப்போராட்டம் அன்றைய தினம் நடந்தது. </p><p>இதன்போது பல இடங்களில் போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பல இடங்களில் கல்வீச்சுகள் பதிவாகின. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். </p> <h2>துப்பாக்கிச்சூடு</h2><p>இதில் குறிப்பாக சீவானில் நடந்த போராட்டத்தில் அபிஷேக் படேல் என்ற காவலர், போராட்டக்காரர்களை நோக்கிப் பாய்ந்து சென்று மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கியால் சுடும் காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது.</p><p>வைரலாகி வரும் வீடியோவில், நீல ஹெல்மெட், போலீஸ் உடுப்பு அணிந்து அபிஷேக் படேல் ஏகே 47 துப்பாக்கியால் போராட்டக்காரர்களை நோக்கி சுடுவது இடம்பெற்றுள்ளது.</p><p>வீடியோவில் ஒரே ஒரு தோட்டா மட்டுமே சுடப்பட்ட காட்சி இடம்பெற்றிருந்த போதிலும், குறைந்தபட்சம் 4 முதல் 5 சுற்றுகள் வரை சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>சீவான் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூன்று போராட்டக்காரர்கள் பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>இதில் 15 வயது சிறுவன் முகமது ஆரிப் கழுத்தில் குண்டடிபட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் தோட்டா அகற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Siwan, Bihar: SIT team member Abhishek Patel, who fired shots from an AK-47 in Siwan, has been suspended <br><br>(Visuals from the spot, July 25) <a href="https://t.co/1pTl9RyLLe">pic.twitter.com/1pTl9RyLLe</a></p>&mdash; IANS (@ians_india) <a href="https://x.com/ians_india/status/2081591725244764174?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>வழக்கு</h2><p>இச்சம்பவம் குறித்து மாநிலங்களவை எம்.பி மனோஜ் குமார் ஜா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.</p><p>இதனிடையே அபிஷேக் படேல் ஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.</p><p>துறை ரீதியான விசாரணை தொடங்கியுள்ளதாகவும், காவல்துறை நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>கண்டனம் </h2><p>பீகார் எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>E20 எத்தனால் விவகாரம்: பொய் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் நிதின் கட்கரி வழக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/national/e20-ethanol-row-nitin-gadkari-moves-bombay-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/e20-ethanol-row-nitin-gadkari-moves-bombay-high-court#comments</comments><guid isPermaLink="false">c9a00177-ce44-4588-8cba-d0cf42efe026</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:04:22 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:04:22.991Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nitin gadkari,நிதின் கட்கரி,மும்பை உயர் நீதிமன்றம்,E20 Ethanol,Mumbai  High Court,E20 எத்தனால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/pnf2tz73/nitin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Nitin Gadkari]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/pnf2tz73/nitin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசின் E20 எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் மூலம் தானும் தனது குடும்பத்தினரும் பெருமளவில் லாபம் அடைவதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் அவதூறு வீடியோக்கள் மற்றும் 'டீப்ஃபேக்' (Deepfake) உள்ளடக்கங்களுக்கு எதிராக மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மும்பை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளார்.</p><h2><strong>நீதிமன்ற அனுமதி:</strong></h2><p>இந்த அவதூறு உள்ளடக்கங்களை வெளியிட்ட நபர்கள் மற்றும் தளங்கள் நீதிமன்ற எல்லைக்கு வெளியே இருப்பதால், அவர்கள் மீது வழக்குத் தொடுக்க அனுமதி கோரி நிதின் கட்கரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அபய் அஹுஜா, மெட்டா, கூகுள் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு தொடர கட்கரிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.</p><h2><strong>அவதூறு குற்றச்சாட்டுகள்:</strong></h2><p>சமீபகாலமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் E20 பெட்ரோல் பயன்பாட்டினால் வாகனங்களின் என்ஜின் பழுதடைவதாகவும், மைலேஜ் குறைவதாகவும் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. </p><p>அதோடு, இந்த எத்தனால் கொள்கையின் மூலம் அமைச்சர் நிதின் கட்கரியும் அவரது குடும்பத்தினரும் நிதி ரீதியாகப் பயனடைகிறார்கள் என்ற தவறான செய்திகளும், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான 'டீப்ஃபேக்' வீடியோக்களும் பரப்பப்பட்டு வருகின்றன.</p><h2><strong>நிதின் கட்கரி தரப்பு விளக்கம்:</strong></h2><p>எத்தனால் கலப்பு தொடர்பான E20 கொள்கை மற்றும் அதன் நிர்வாகம் முழுமையாக 'மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்' கட்டுப்பாட்டில்தான் வருகிறது. சாலை போக்குவரத்து அமைச்சகத்திற்கும் இதற்கும் நேரடியாகத் தொடர்பு இல்லை.</p><p>தனது குடும்பத்தினரின் வணிக வருவாயில் எத்தனால் உற்பத்தி மூலம் கிடைக்கும் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்றும், இதன் மூலம் தனிப்பட்ட முறையிலோ அல்லது குடும்பத்தின் மூலமாகவோ பெருமளவு லாபம் அடைவதாகக் கூறுவது முற்றிலும் ஆதாரமற்ற பொய் என்றும் கட்கரி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.</p><p>முன்னதாக, தவறான தகவல்களைப் பரப்பியதாக யூடியூபர் மணீஷ் காஷ்யப் உட்பட சில சமூக வலைதளப் பிரபலங்கள் மீது நாக்பூர் சைபர் பிரிவு போலீஸார் BNS சட்டப் பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் FIR பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் E20 திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எனினும், இது தொடர்பான சர்ச்சைகள் தொடரும் நிலையில், தன் மீதான அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமைச்சர் நிதின் கட்கரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;ஏவுகணை நாயகனின் கனவுகள் இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டுகின்றன&quot; - கலாமுக்கு தலைவர்கள் புகழஞ்சலி!</title><link>https://www.maalaimalar.com/news/national/dr-apj-abdul-kalam-11th-death-anniversary-leaders-pay-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/national/dr-apj-abdul-kalam-11th-death-anniversary-leaders-pay-tribute#comments</comments><guid isPermaLink="false">f8d0471b-730c-40c4-bc6a-c53a0c1c3ff3</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:50:01 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:50:01.339Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அப்துல்கலாம்,AbdulKalam,PeoplesPresident,DrAPJAbdulKalam,MissileManOfIndia,ஏவுகணைமனிதர்,July27,இளைஞர்களின்வழிகாட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/7bpqlhtr/APJAbdulKalam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ APJAbdulKalam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/7bpqlhtr/APJAbdulKalam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நாட்டிற்கு அவரது பங்களிப்பை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.</p><h2><strong>மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா</strong></h2><p>மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த விஞ்ஞானியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான டாக்டர் ஏ.பி.ஜே. <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">அப்துல் கலாம் </a>அவர்களின் நினைவு நாளில் அவருக்கு மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன்.</p><p> 'ஏவுகணை நாயகன்' என்று போற்றப்படும் டாக்டர் கலாம், வளர்ந்த, தன்னிறைவு பெற்ற மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தார். </p><p>உள்நாட்டு ஏவுகணை மற்றும் விண்வெளித் திட்டங்களை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வதில் அவர் ஆற்றிய பங்களிப்பு, இந்திய அறிவியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. </p><p>அறிவு, ஒழுக்கம், எளிமை மற்றும் தேச சேவை ஆகியவற்றைத் தனது வாழ்வின் அடித்தளமாகக் கொண்ட அவர், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களிடையே தன்னம்பிக்கை, புதுமை மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் உணர்வை ஊட்டினார். </p><p>"கனவு என்பது தூக்கத்தில் வருவதல்ல; உங்களைத் தூங்க விடாமல் செய்வதே கனவு" - டாக்டர் கலாமின் இத்தகைய சிந்தனைகள், இன்றும் ஒவ்வொரு இளைஞரும் தங்கள் இலக்குகளில் உறுதியுடன் இருக்க ஊக்கமளித்து வருகின்றன" என்று தனது உறுக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.</p><h2><strong>மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா</strong></h2><p>"இந்தியாவின் விண்வெளி மற்றும் ஏவுகணைத் திட்டங்களின் சிற்பியும் தொலைநோக்குச் சிந்தனையாளருமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். </p><p>அறிவியல் துறையில் டாக்டர் கலாம் அவர்களின் சிறப்பான பங்களிப்பு, இந்தியா ஒரு வலிமையான உத்திசார் சக்தியாக உருவெடுப்பதற்கான பாதையை வகுத்துத் தந்தது; அதேவேளையில், அவரது ஞானம் லட்சக்கணக்கானோரைச் சிறந்த சாதனைகளைப் புரியத் தூண்டி, அவர்களின் வாழ்வை ஒளிமயமாக்கியது. </p><p>'மக்களின் ஜனாதிபதி'யான டாக்டர் கலாம் அவர்கள், தேசபக்தர்களுக்கு என்றும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்வார்" என்று அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>தர்மேந்திர பிரதான்</strong></h2><p>டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளான இன்று சமூக வலைதளப் பதிவு வெளியிட்டுள்ள முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் எங்களின் மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறோம். </p><p>கல்வி, புத்தாக்கம் மற்றும் இளைஞர்களின் ஆற்றல் மீதான அவரது அசைக்க முடியாத நம்பிக்கை, வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.</p><h2><strong>என். சந்திரபாபு நாயுடு</strong></h2><p>ஆந்திர முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "நாட்டிற்குப் பல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வெற்றிகளைப் பெற்றுத் தந்து, 'ஏவுகணை நாயகன்' என்று போற்றப்பட்ட பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாளில் எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். </p><p>எளிமை, நேர்மை மற்றும் மனிதாபிமானப் பார்வை போன்ற தனித்துவமான பண்புகளால், கலாம் அவர்கள் 'மக்களின் ஜனாதிபதி'யாகத் திகழ்ந்தார். அந்த மகத்தான ஆளுமையின் நினைவு நாளில், அவருக்கு எனது அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன்.</p><p>கல்வி, புத்தாக்கம் மற்றும் இளைஞர்களின் ஆற்றல் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, வளர்ந்த நாடாக இந்தியா மேற்கொள்ளும் பயணத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது" என்று கூறியுள்ளார்.</p><h2><strong>ராஜ்நாத் சிங்</strong></h2><p>மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் புண்ணியதிதியில், அவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைச் செலுத்துகிறேன். </p><p>அவரது எளிமை, நேர்மை மற்றும் தேசத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்க்கை, தலைமுறைகள் பெரிய கனவுகளைக் காணவும், அச்சமின்றிப் புதுமைகளைப் புகுத்தவும், தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் நாட்டிற்குச் சேவை செய்யவும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. </p><p>கல்வி, புதுமை மற்றும் இளைஞர்களின் ஆற்றல் மீதான அவரது அசைக்க முடியாத நம்பிக்கை, இந்தியா ஒரு வளர்ந்த தேசத்தை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்து ஒளிரச் செய்கிறது" என்று தெரிவித்துள்ளார்.</p><h2><strong>டாக்டர் ஜித்தேந்திர சிங்</strong></h2><p>மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தனது எக்ஸ் தள பதிவில், "மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் அவருக்குப் பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறேன். </p><p>டாக்டர் கலாமுடன் தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்தது ஒரு பெரும் பேறாகும்.</p><p>எளிமை, நேர்மை மற்றும் நாட்டின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நிறைந்த அவரது வாழ்க்கை, பெரிய கனவுகளைக் காணவும், அச்சமின்றிப் புதுமைகளைப் படைக்கவும், சுயநலமற்ற ஈடுபாட்டுடன் நாட்டிற்குச் சேவையாற்றவும் பல தலைமுறையினரைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. </p><p>கல்வி, புத்தாக்கம் மற்றும் இளைஞர்களின் ஆற்றல் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, வளர்ந்த நாடாக இந்தியா மேற்கொள்ளும் பயணத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது" என்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கடும் அமளிக்கு மத்தியில் &apos;தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா&apos; மக்களவையில் தாக்கல்.. அம்சங்கள் என்ன? </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-government-introduces-strict-exam-malpractice-prevention-bill-in-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-government-introduces-strict-exam-malpractice-prevention-bill-in-parliament#comments</comments><guid isPermaLink="false">de8f33c4-69ef-4e65-9161-06581d3f9c4d</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:25:43 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:25:43.019Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bill,மக்களவை,Lok Sabha,question paper leak,வினாத்தாள் கசிவு,மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ldzryqsr/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மக்களவை ]]></media:title><media:description type="html"><![CDATA[ மக்களவை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ldzryqsr/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரண்டாம் கட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி வந்த <a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march">மாணவர்கள் மீதான தாக்குதல்</a> குறித்து உடனே விவாதகிக்க இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதைத்தொடர்ந்து இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மீண்டும் இரு அவைகளும் கூடின. </p><h2>மசோதா தாக்கல்</h2><p>மக்களவை மீண்டும் கூடிய உடனே,  'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கால் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>வினாத்தாள் கசிவுகள், தேர்வு முறைகேடுகளுக்கு தண்டனையை அதிகரிக்கும் விதமாக சட்ட விதிமுறைகளை கடுமையாகும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><h2>மசோதாவின் அம்சங்கள்</h2><p>முறைகேட்டின் தீவிரத்தை பொறுத்து 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படும். திட்டமிட்டு குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை; ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.</p><p>மேல் முறையீடு வழக்குகள் மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும். தவறு செய்யும் நிறுவனங்கள் பொதுத்தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் தடை காலம் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படும் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளிட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ளன</p><h2>அவையில் அமளி</h2><p>மசோதா அறிமுகத்தின்போதும் அதை தொடர்ந்தும், ஜூலை 20 அன்று மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க கோரி, எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p> <h2>ஜூலை 20 தாக்குதல்</h2><p>ஜூலை 20, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சிஜேபி தலைமையில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர்.</p><p>அப்போது அவர்கள் மீது டெல்லி காவல்துறை, ஆர்ஏஎப் மத்திய படையினர் லத்திகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகுகள் வீசப்பட்டன.</p><p>ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளும் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 60 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>போராட்டம் நடத்தினாலே தடியடியா? மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march#comments</comments><guid isPermaLink="false">84b89d0c-f779-4b02-862c-b7c3307a9d6c</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:52:05 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:52:05.524Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,Delhi Police,டெல்லி காவல்துறை,உச்சநீதிமன்றம்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ziofnyz9/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜூலை 20 தாக்குதல் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜூலை 20 தாக்குதல் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ziofnyz9/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமைதியான போராட்டத்தில் லத்திகளால் தடியடி நடத்தியிருக்க கூடாது என ஜூலை 20 அன்று டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற இளைஞர்கள் மீதான தாக்குதல் குறித்த மனுக்கள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. </p><h2>ஜூலை 20 தாக்குதல் </h2><p>ஜூலை 20, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சிஜேபி தலைமையில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். </p><p>அப்போது அவர்கள் மீது <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah">டெல்லி காவல்துறை, ஆர்ஏஎப் மத்திய படையினர் </a>லத்திகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகுகள் வீசப்பட்டன.</p><p>ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளும் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 60 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். </p><p>இந்த விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில் இன்று தொடங்கிய நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டம் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. </p> <h2>உச்சநீதிமன்றம் குட்டு</h2><p>இதனிடையே ஜூலை 20 அன்று பேரணி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான மிதமிஞ்சிய தாக்குதலை விசாரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.</p><p>இதன்போது பேசிய தலைமை நீதிபதி சூரியகாந்தி போராட்டம் நடத்தினார்கள் என்பதற்காகவே அவர்கள் மீது போலீசார் லத்திகளால் தாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்த முடியாது என தெரிவித்தார்.</p><p>அவர் கூறியதாவது, "சமூக விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில், அமைதியான போராட்டத்திற்கு வழிவகை செய்யும் வகையிலான நாடு தழுவிய ஒரே மாதிரியான வழிமுறையை வரையறுக்க வேண்டியது அவசியம்.</p><p>அமைதியான முறையில் போராடுவதற்கு அரசியலமைப்பு அனுமதி அளிக்கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அவை மறுக்கப்பட கூடாது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது என்பதற்காக போலீசார் எல்லைமீறி மிதமிஞ்சிய தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது.</p> <h2>போராட்டம் நடத்தினாலே தடியடி</h2><p>போராட்டம் நடத்தினாலே தடியடி  நடத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. போராட்டம் என்பது வன்முறை என்று அர்த்தமாகாது. அப்படி அத்துமீறப்பட்ட சம்பவங்கள் விசாரிக்கப்பட வேண்டும்.</p><p>அமைதியான போராட்டங்களை நடத்த முறையான இடம் ஒதுக்கீடு செய்து தருவது உள்ளிட்ட சில நெறிமுறைகள் அவசியமானது. இத்தகைய தருணங்களில் சுய கட்டுப்பாடு மிக முக்கியமானது" என தெரிவித்தார்.</p><p>அமர்வில் இடம்பெற்ற நீதிபதி ஜோய்மாலா பேசுகையில், "போராட்டங்களின் போது காவல்துறையினர் தாக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியது அரசின் கடமை" என தெரிவித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து விசாரணை நாளை (செவ்வாய்க்கிழமைக்கு) ஒத்திவைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>&quot;மக்கள் ஜனாதிபதி&quot; டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு  நினைவு அஞ்சலி!</title><link>https://www.maalaimalar.com/news/national/11th-death-anniversary-of-peoples-president-dr-apj-abdul-kalam</link><comments>https://www.maalaimalar.com/news/national/11th-death-anniversary-of-peoples-president-dr-apj-abdul-kalam#comments</comments><guid isPermaLink="false">c31c5bd9-723f-42c9-bd53-0c0ee6be1ddd</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:30:34 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:30:34.432Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அப்துல்கலாம்,APJAbdulKalam,AbdulKalam11thDeathAnniversary,ஏவுகணைமனிதன்,MissileMan,PeoplesPresident,Inspiration</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ku3h7oz3/APJAbdulKalam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ APJAbdulKalam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ku3h7oz3/APJAbdulKalam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய வரலாற்றில் தங்களது சுயநலமற்ற சேவையால் மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த தலைவர்கள் பலருண்டு. அவர்களுள் முதன்மையானவர் டாக்டர் ஏ.பி.ஜே. <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">அப்துல் கலாம்</a>. ராமேஸ்வரத்தின் எளிய வீதிகளில் பிறந்து, இந்தியாவின் மிக உயரிய குடியரசுத் தலைவர் மாளிகை வரை உயர்ந்த இவரது வாழ்க்கை ஒரு தற்காலக் காவியம். </p><p>ஒரு சிறந்த விஞ்ஞானியாக நாட்டை அணுஆயுத மற்றும் ஏவுகணை வல்லரசாக மாற்றியதோடு மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான இளைஞர்களின் நெஞ்சில் சாதிக்கும் உத்வேகத்தை விதைத்த மாபெரும் வழிகாட்டியாகத் திகழ்கிறார். இன்று அவருடைய 11-ம் ஆண்டு நினைவு நாள்.</p><h2><strong>தொடக்கமும் கல்விப் பயணமும்</strong></h2><p>இராமேஸ்வரத்தில் 1931 அக்டோபர் 15 அன்று ஜெயினுலாப்தீன் - ஆஷியம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், ஏழ்மையான குடும்பச் சூழ்நிலை காரணமாகச் சிறு வயதில் செய்தித்தாள்களை விநியோகம் செய்து தனது பள்ளிப் படிப்பிற்கான கட்டணத்தைச் செலுத்தினார்.</p><p>பின்னர் தனது உயர்கல்வியைத் தொடர்ந்த இவர், திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டமும், சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் விண்வெளிப் பொறியியல் படிப்பையும் முடித்தார்.</p><h2><strong>ஏவுகணை மனிதன்</strong></h2><p>இஸ்ரோவின் பங்களிப்பாக இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் ஏவுகணையான SLV-III திட்ட இயக்குநராகச் செயல்பட்டு 'ரோகிணி' செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இவர், டிஆர்டிஓ அமைப்பில் இணைந்து இந்தியாவின் பாதுகாப்பு அரணாக விளங்கும் அக்னி மற்றும் பிருத்வி ஏவுகணைகளை உருவாக்கியதன் மூலம் 'இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்று அழைக்கப்பட்டார். </p><p>மேலும், 1998-ல் நடந்த பொக்ரான்-II அணு ஆயுத சோதனையில் முதன்மைத் திட்ட ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு, இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக உலகிற்குப் பிரகடனப்படுத்தினார்.</p><h2><strong>மக்களின் குடியரசுத் தலைவர்</strong></h2><p>2002 ஆம் ஆண்டு இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற இவர், குடியரசுத் தலைவர் மாளிகையின் கதவுகளைச் சாதாரண மக்களுக்காக, குறிப்பாக மாணவர்களுக்காகத் திறந்து வைத்ததன் மூலம் 'மக்களின் குடியரசுத் தலைவர்' என்று அன்போடு அழைக்கப்பட்டார். </p><p>எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்து, லட்சக்கணக்கான இளைஞர்களுடனும் பள்ளி மாணவர்களுடனும் கலந்துரையாடி அவர்களுக்குள் கனவுகளை விதைத்த இவர், கல்வி, அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு 2020-க்குள் இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற உன்னத இலக்கை தொலைநோக்குத் திட்டமாக முன்வைத்து நாட்டிற்குப் பெரும் எழுச்சியூட்டினார்.</p><h2><strong>விருதுகளும் கௌரவங்களும்</strong></h2><p>இந்திய அரசு இவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா (1997), பத்ம விபூஷண் (1990) மற்றும் பத்ம பூஷண் (1981) ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்ததோடு மட்டுமல்லாமல், சர்வதேச அங்கீகாரமாக இவரது பிறந்த நாளான அக்டோபர் 15-ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை 'உலக மாணவர்கள் தினமாக' அறிவித்துக் கொண்டாடி வருகிறது.</p><h2><strong>இறுதிப் பயணம்</strong></h2><p>தனது பதவிக்காலத்திற்குப் பின், ஐஐஎம் ஷில்லாங், அகமதாபாத் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றி மாணவர்களுக்குத் தொடர்ந்து கற்பித்த இவர், இறுதிவரை மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்தார். </p><p>அதற்கேற்ப கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று ஷில்லாங்கில் மாணவர்களிடையே 'வாழக்கூடிய தகுதியான பூமியை உருவாக்குவது' என்ற தலைப்பில் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். </p><p>லட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கும் அஞ்சலிக்கும் இடையே அவரது உடல், சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. </p><p>பிற்காலத்தில் அவரது நினைவாக அவ்விடத்தில் 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய நினைவகம்' அமைக்கப்பட்டு, அவரது வாழ்க்கைச் சுவடுகளும் ஏவுகணை மாதிரிகளும் பொதுமக்களின் பார்வைக்காக இன்றும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.</p><h2><strong>11 ஆண்டுகள் நிறைவு</strong></h2><p>டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வெறும் அறிவியல் விஞ்ஞானியாகவோ அல்லது நாட்டின் தலைவராகவோ மட்டும் வாழவில்லை; அவர் ஒரு சகாப்தமாக வாழ்ந்தார். </p><p>எளிய பின்புலத்தில் இருந்து வந்த எவராலும் அரிய சிகரங்களை எட்ட முடியும் என்பதற்கு அவரே மிகச்சிறந்த உதாரணம். "கனவு காணுங்கள்; அந்த கனவு தூக்கத்தில் வருவதல்ல, உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு" என்ற அவரது பொன்மொழிகள், இன்றும் நாளையும் இந்திய இளைஞர்களை தங்களது இலக்குகளை நோக்கி அர்ப்பணிப்புடன் பயணிக்கத் தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும். </p><p>அவரது பாதையில் பயணித்து தற்சார்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபடுவதே நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதானுக்கு ராஜ வரவேற்பு.. மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி - அவைகள் ஒத்திவைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-disruption-both-houses-adjourned-as-opposition-demands-debate-on-neet-leak-and-student-assault</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-disruption-both-houses-adjourned-as-opposition-demands-debate-on-neet-leak-and-student-assault#comments</comments><guid isPermaLink="false">30494f7e-dcaf-4a48-9560-8a2bdcefdefa</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:18:54 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:18:54.361Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lok Sabha,மல்லிகார்ஜுன கார்கே,mallikarjun kharge,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,parliament session,மழைக்காக கூட்டத்தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/u7tlz4cj/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இடது - காங்கிரஸ் போராட்டம், வலது - தர்மேந்திர பிரதானை வரவேற்கும் எம்.பிக்கள் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ இடது - காங்கிரஸ் போராட்டம், வலது - தர்மேந்திர பிரதானை வரவேற்கும் எம்.பிக்கள் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/u7tlz4cj/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால  கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது. இன்றைய நாளில் தொடங்கிய <a href="https://www.maalaimalar.com/news/national/neet-ban-student-assault-row-dmk-congress-push-for-heated-debate-in-parliament">இரு அவைகளும்</a> சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. </p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், ஜூலை 20 நாடாளுமன்றம் நோக்கி பேரணி வந்த மாணவர்கள் மீது தாக்குதல், அயோத்தி ராமர் கோவில் வன்கொடுமை திருட்டு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுப்பட்டதால் இரு அவைகளிலும் அவை நடவடிக்கைகள் பாதித்தன. </p><h2>மல்லிகார்ஜுன கார்கே</h2><p>மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவையில் பேசுகையில், மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது மிகவும் தீவிரமான விஷயம் என்பதால்  விதி 267-ஐ பயன்படுத்தி அவையின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை ஒத்திவைத்து இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். </p><h2>ஒத்திவைப்பு </h2><p>தொடர்ந்து மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பிக்கள், நீட் பிரச்சனை, மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து விவாதத்தை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.  இதனால் அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. </p><p>மக்களவையிலும் நீட் பிரச்சனை, மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோஷம் எழுப்பியதால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. </p><p>முன்னதாக நீட் தேர்வை தடை செய்வது குறித்தும் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்தும் விவாதிக்க மக்களவை திமுக குழு தலைவர் டிஆர்பாலுவும், மாநிலங்களவை திமுக எம்.பி திருச்சி சிவாவும் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது. </p> <h2>வினாத்தாள் கசிவை தடுக்கும் மசோதா</h2><p>இதனிடையே வினாத்தாள் கசிவு உள்பட அரசுத் தோ்வு முறைகேடுகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சிஜேபி தலைமையில் இளைஞர்களின் 1 மதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து அண்மையில் பிரதமர் மோடி மௌனம் களைத்து, இந்த மசோதா குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று மதியம் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.</p> <h2>தர்மேந்திர பிரதான்</h2><p>இளைஞர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மக்களவை எம்.பி.யாக இன்று அவைக்கு வருகை புரிந்தார். அவரை என்டிஏ கூட்டணி எம்.பிக்கள் பாரம்பரிய தலைப்பாகை அணிவித்து, சால்வை அணிவித்து வரவேற்று ஆறுதல்படுத்தினர்.</p> <h2>போராட்டம்</h2><p>இதனிடையே, ஜூலை 20 அன்று இளைஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.</p> ]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு தடை, மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க தி.மு.க நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-ban-student-assault-row-dmk-congress-push-for-heated-debate-in-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-ban-student-assault-row-dmk-congress-push-for-heated-debate-in-parliament#comments</comments><guid isPermaLink="false">cf1c3c0e-1440-470b-a124-bd71567cc939</guid><pubDate>Mon, 27 Jul 2026 04:45:06 +0000</pubDate><atom:updated>2026-07-27T04:45:06.471Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மழைக்கால கூட்டத்தொடர்,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/gtinjbfa/tn-35.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாணவர்கள் மீதான தாக்குதல், அமித் ஷா
]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணவர்கள் மீதான தாக்குதல், அமித் ஷா
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/gtinjbfa/tn-35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது. </p><p>சிஜேபி போராட்டத்தின்போது <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah">மாணவர்கள் மீதான தாக்குதல்</a>, மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டு ஆகியவை குறித்து இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலுவான குரல் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>திமுக நோட்டீஸ் </h2><p>அந்த வகையில் இன்று மக்களவையில், நீட் தேர்வை தடை செய்வது தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி திமுக மக்களவை முழு தலைவர் எம்.பி. டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.</p><p>அந்த நோட்டீஸில், நீட் தேர்வுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீது கொடூர ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று டி.ஆர். பாலு வலியுறுத்தி உள்ளார்.</p><p>இதேபோல திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, 267ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.</p><p>அதில், “நாட்டின் மருத்துவக் கல்வி கனவோடு உள்ள மாணவர்களின் அவல நிலை, நீட் தேர்வால் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் மாணவர்களின் தொடர்ச்சியான தற்கொலைகள் குறித்து விவாதிக்க வேண்டும்” என்று  திருச்சி சிவா வலியுறுத்தி உள்ளார். </p><h2>காங்கிரஸ் நோட்டீஸ்</h2><p>இதேபோல விருதுநகர் காங்கிரஸ் எம்.பியும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான மாணிக்கம் தாகூர்</p><p>மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் ஒன்றை வழங்கியுள்ளார். அதில், டெல்லி போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதா கூறி, அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>மாணவர்கள் மீது தாக்குதல்</p><p>ஜூலை 20, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சிஜேபி தலைமையில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். அப்போது அவர்கள் மீது டெல்லி காவல்துறை, ஆர்ஏஎப் மத்திய படையினர் லத்திகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகுகள் வீசப்பட்டன.</p><p>ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளும் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 60 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>தேர்வு அமைப்பை சீர்செய்யும் உயர்மட்ட குழுவில் இடம்பெற்றவர்கள் முழு விவரம்.. தலைவர் நந்தன் நிலேகணி யார்?
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-reforms-pm-modi-announces-nandan-nilekani-led-high-level-panel-after-protests</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-reforms-pm-modi-announces-nandan-nilekani-led-high-level-panel-after-protests#comments</comments><guid isPermaLink="false">94e74e96-9ddb-48fd-8888-f013cba0de54</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:32:02 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:32:02.650Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,question paper leak,பிரதமர் மோடி,வினாத்தாள் கசிவு,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/vex89daq/tn-33.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உயர்மட்ட குழு]]></media:title><media:description type="html"><![CDATA[ உயர்மட்ட குழு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/vex89daq/tn-33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் 1 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தியதன் விளைவாக நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலைத்துள்ளார். </p><p>நேற்று முன் தினம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததன் மூலம் சிஜேபி போராட்டம் வெற்றி பெற்று முடிவுக்கு வந்தது. </p><h2>இன்ஸ்டாகிராம் வீடியோவில் மோடி  </h2><p>தேர்வு முறைகேடு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம், வினாத்தாள் கசிவை  தடுக்க சிறப்பு மசோதா, தேர்வு முறையைச் சீரமைக்க  <a href="https://www.maalaimalar.com/news/national/panel-formed-to-restore-prime-ministers-tainted-image-jairam-ramesh">உயர்மட்டக் குழு</a> உள்ளிட்ட அறிவிப்புகளை கடந்த சில நாட்களில் பிரதமர் மோடி அடுத்தடுத்து வெளியிட்டுள்ளார். </p><p>குறிப்பாக நேற்று வினாத்தாள் கசிவுச் சம்பவங்களைத் தடுத்து, தேர்வு முறையை முற்றிலும் நவீனமயமாக்கிச் சீரமைக்க இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் உயர்மட்ட குழுவை அமைப்பதாக இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் மோடி அறிவித்தார். </p> <h2>உயர்மட்ட குழு</h2><p>இந்த குழுவில் வெவ்வேறு துறைகளை சேர்ந்த 6 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் விவரங்கள் கீழ் வருமாறு,</p><h3>குழு தலைவர் - நந்தன் நிலேகணி</h3><p>இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர், இந்தியாவின் ஆதார் கார்டு திட்டத்தின் முக்கிய வடிவமைப்பாளராகக் கருதப்படுபவர்.</p><p>வினாத்தாள் தயாரிப்பு, தேர்வு மையப் பாதுகாப்பு, தேர்வர் சரிபார்ப்பு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியீடு என அனைத்துக் கட்டங்களிலும் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்ப தீர்வுகளை பயன்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கி குழுவை வழிநடத்த உள்ளார்.</p><h3>டாக்டர் எஸ். சோமநாத்</h3><p>2022–2025 வரை இஸ்ரோவின் தலைவராக இருந்தவரும் விண்வெளித் துறை முன்னாள் செயலாளருமான சோமநாத், ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் பெரிய அளவிலான அமைப்புகளை திட்டமிடுவதில் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.</p><h3>தபன் குமார் தேகா</h3><p>2022–2026 வரை இந்திய உளவுத்துறையின் இயக்குநராக இருந்த தேகா, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தேசியப் பாதுகாப்பில் நீண்ட அனுபவம் கொண்ட முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார்.</p><p>இவர் தேர்வு மையங்களின் பாதுகாப்பு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் பாதுகாப்பு நெறிமுறைகளை பலப்படுத்துவதில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h3>பேராசிரியர் வி. காமகோடி</h3><p>ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநரான இவர், கணினி கட்டமைப்பு மற்றும் சைபர் பாதுகாப்பில் நிபுணர்.</p><p>கல்வித்துறை சார்ந்த ஆலோசனைகள் மற்றும் தேர்வு முறையில் கணினி சார்ந்த பாதுகாப்பை உறுதி செய்யும் நுட்பங்களை புகுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>சென்னையில் கடந்த ஆண்டு மாட்டுப் பொங்கல் விழாவில் பேசிய காமகோடி, மாட்டின் கோமியம் மற்றும் சாணத்தில் மருத்துவ குணம் உள்ளதாக பேசி விமர்சனத்துக்கு ஆளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. </p><h3>அனிதா கர்வால்</h3><p>2017–2026 வரை சிபிஎஸ்சியின் தலைவராகவும், பள்ளி இடைநிலைக் கல்வித்துறை செயலாளராகவும் பணியாற்றிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அனிதா கர்வால். தேசியக் கல்விக் கொள்கை 2020உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர்.</p><h3>அம்ரித் லால் மீனா</h3><p>2024–2025 வரை பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலாளராகவும், நிலக்கரித் துறை செயலாளராகவும் பணியாற்றிய அம்ரித் லால் மீனா 1989 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். நிர்வாகம் மற்றும் தளவாடப் போக்குவரத்தை சீரமைப்பதில் அனுபவம் வாய்ந்தவர் இவர்.</p> <h2>தேசிய தேர்வு முகமை மறுசீரமைப்பு</h2><p>இந்த உயர்மட்டக் குழு, தேசிய தேர்வு முகமையை பலப்படுத்துவதுடன், போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கத் தேவையான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கும்.</p><p>குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வு முறையில் பெரிய அளவிலான தொழில்நுட்ப சீர்திருத்தங்களை அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;அப்பா தான் அம்மாவை வெட்டுனாரு..&quot; 8 மாத கர்ப்பிணி தாயை கொன்ற தந்தையை காட்டிக்கொடுத்த 5 வயது மகன்</title><link>https://www.maalaimalar.com/news/national/up-pregnant-wife-murder-husband-held-after-5-year-old-sons-testimony</link><comments>https://www.maalaimalar.com/news/national/up-pregnant-wife-murder-husband-held-after-5-year-old-sons-testimony#comments</comments><guid isPermaLink="false">ca38754e-4d5a-486d-8948-a547e2ed0aec</guid><pubDate>Mon, 27 Jul 2026 01:50:17 +0000</pubDate><atom:updated>2026-07-27T01:50:17.170Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை வழக்கு,Murder case,Uttar Pradesh,கணவன்-மனைவி,husband and wife,உத்தரப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/88zt30pr/tn-28.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/88zt30pr/tn-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உ.பியில் 8 மாத கர்ப்பிணி மனைவியை கணவன் குடிபோதையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/boyfriend-arrested-for-illegal-girlfriend-murder">கொலை </a>செய்த நிலையில் அவரை 5 வயது மகனினே போலீசில் சிக்கவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.   </p><h2>மது - சூது </h2><p>உத்தரப் பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில் உள்ள பாஜ்ராரி கிராமத்தை சேர்ந்த ஹனீப் மன்சூரி மதுப்பழக்கம் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர்.</p><p>தனது பழக்கங்களுக்காகத் தன் நிலத்தின் பெரும் பகுதியை ஏற்கனவே விற்றுவிட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு அதிகளவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.</p><p>கணவர் மீண்டும் மது அருந்துவதைத் த தடுக்க மனைவி மனிஷா முயன்றபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. </p> <h2>கொலை</h2><p>இதில் ஆத்திரமடைந்த ஹனீப், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து 8 மாதக் கர்ப்பிணியான மனைவியை அவரது தலை, உடல் மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்தார்.</p><p>இந்தக் கொடூரச் சம்பவத்தை அவர்களின் 5 வயது மகனும், 2 வயது மகளும் நேரில் பார்த்து உறைந்து போயினர்.</p><p>கொலையை மறைக்க எண்ணிய ஹனீப், தானே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து ஒரு பொய் கதையைக் கூறித் தப்ப முயன்றார்.</p> <h2>மகன் வாக்குமூலம்</h2><p>ஆனால், 5 வயது மகன், காவல்துறையினரிடம் தந்தை தான் அம்மாவை வெட்டிக் கொன்றார் என்றும் தான் அதை நேரில் பார்த்ததை வாக்குமூலமாகக் கூறினான்.</p><p>இதையடுத்து, பன்வாரியிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.</p><p>2 மற்றும் 5 வயதுக் குழந்தைகளின் கண் முன்னே 8 மாதக் கர்ப்பிணியை கணவன் வெட்டிக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தூக்கு தண்டனை </h2><p>மனிஷாவுக்கு 2021இல் திருமணமான நிலையில், கணவர் ஹனீப் சந்தேகப் புத்தியால் அடிக்கடி அவரை அடித்துத் துன்புறுத்தி வந்ததாகவும், பலமுறை வீட்டை விட்டுத் துரத்தியபோதும் குடும்பத்திற்காக மனிஷா பொறுத்துக்கொண்டு வாழ்ந்து வந்ததாகவும் அவரது சகோதரர் நசீம் மன்சூரி தெரிவித்தார்.</p><p>ஹனீபின் தந்தை பேசுகையில், "என் மகன் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்துவிட்டான். அவனுக்கு தூக்கு தண்டனை அளித்தாலும் தகும்" எனக் கூறினார். </p><p>மேலும் தாய் இழந்த இரண்டு பேரக் குழந்தைகளையும் தானே வளர்க்கப்போவதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>எனக்காக எல்லா தியாகமும் செய்த உங்கள் ஆசையை  நிறைவேற்ற முடியவில்லை.. &quot;நீட்&quot; அழுத்தத்தால் மாணவி தற்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-aspirant-suicide-low-score-and-pressure-over-medical-dream-leads-to-tragic-death-in-maharashtra</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-aspirant-suicide-low-score-and-pressure-over-medical-dream-leads-to-tragic-death-in-maharashtra#comments</comments><guid isPermaLink="false">12f0b46a-f662-4591-88f5-05316921473f</guid><pubDate>Mon, 27 Jul 2026 00:49:39 +0000</pubDate><atom:updated>2026-07-27T00:49:39.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Neet exam,மாணவி தற்கொலை,student suicide,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/2pzgsgxi/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாணவி தற்கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணவி தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/2pzgsgxi/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மன உளைச்சலுக்கு ஆளான மேலும் ஒரு மாணவி  </p><p>தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தற்கொலை</h2><p>மகாராஷ்டிராவின் அகில்யாநகர் மாவட்டத்தில் உள்ள ஜலால்பூர் கிராமத்தை அங்கிதா சாங்லே என்ற அந்த மாணவி நேற்று முன் தினம்  மாலை சுமார் 4.30 மணியளவில் தனது அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>நடந்து முடிந்த நீட் மறுதேர்வில் அங்கிதா 166 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் கனவை நிறைவேற்ற முடியவில்லையே என்ற மன அழுத்தத்தில் அவர் இருந்து வந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.</p><p>சம்பவ இடத்தில் இருந்து மாணவியின் தற்கொலை கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். </p> <h2>தற்கொலை கடிதம் </h2><p>அதில் அவர் எழுதியிருப்பதாவது,</p><p>"நீங்கள் என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தீர்கள், ஆனால் உங்களின் ஒரு ஆசையைக் கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை.</p><p>அம்மா, ஒவ்வொரு கஷ்டத்திலும் ஒரு தோழியைப் போல எனக்கு ஆதரவாக இருந்தீர்கள். அண்ணா, நீங்களும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தீர்கள். அம்மா, அப்பாவை விட நீங்கள் என் மீது அதிக அன்பு காட்டினீர்கள். என் தற்கொலைக்கு நீங்கள் யாரும் பொறுப்பல்ல.</p><p>நான் நீட் தேர்வுக்குப் படித்தபோதும் கூட எனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தீர்கள். ஆனால் நான் தோற்றுவிட்டேன்; உங்கள் ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.</p><p>அண்ணா, அம்மா மற்றும் அப்பாவை தயவுசெய்து நன்றாகப் பார்த்துக்கொள். அவர்களுக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக்கொள்." என எழுதியுள்ளார்.</p><p>இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>கல்வி அமைச்சர் ராஜினாமா</h2><p>மே 3 நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டு இந்த மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே ஏற்பட்ட மன அழுத்தத்தில் நாடு முழுவதும் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். </p><p>தேர்வு முறைகேடுகளை தடுக்கத் தவறிய நிர்வாக தோல்விக்கு பொறுப்பேற்குமாறு டெல்லியில் <a href="https://www.maalaimalar.com/news/national/third-round-talks-with-central-government-conclude">சிஜேபி </a>தலைமையில் இளைஞர்களின் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று முன் தினம் ராஜினாமா செய்தார். </p><h2>உதவி எண்கள்</h2><p>மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் தோன்றினால், உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்:</p><p>சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரம்)</p><p>மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம்)</p><p>சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019</p>]]></content:encoded></item><item><title>10 ஆண்டுகள் சிறை, ரூ. 10 கோடி வரை அபராதம்... தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/government-to-introduce-exam-irregularities-bill-lok-sabha-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/government-to-introduce-exam-irregularities-bill-lok-sabha-today#comments</comments><guid isPermaLink="false">de3a8103-98c2-435f-b98b-ddc8d13d14ac</guid><pubDate>Mon, 27 Jul 2026 00:28:12 +0000</pubDate><atom:updated>2026-07-27T00:28:12.736Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>paper leak,neet protest,வினாத்தாள் கசிவு,நீட் போராட்டம்,public examinations bill,பொதுத் தேர்வுகள் மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/9xhwzmu5/parliment.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Parliment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/9xhwzmu5/parliment.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வினாத்தாள் கசிவு உள்பட அரசுத் தேர்வு முறைகேடுகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் இன்று (ஜூலை 27) தாக்கல் செய்யப்பட உள்ளது.</p><p>டெல்லியில் சில தினங்களுக்கு முன் சி.ஜே.பி. (கரப்பான் பூச்சி ஜனதா கட்சி) போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. அப்போது, '<a href="https://www.maalaimalar.com/topic/paper-leaks">வினாத்தாள் கசிவு</a> வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்; இந்த முறைகேட்டுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்படும்' என மாணவர்களை சமாதானப்படுத்தும் வகையிலான அறிவிப்புகளை <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர் மோடி</a> வெளியிட்டார்.</p><h2>சட்ட திருத்த மசோதா:</h2><p>அவரது இந்த உறுதிமொழியின்படி, அரசு தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், "தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா-2026", மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. அறிமுகம் -பரிசீலனை-நிறைவேற்றம் ஆகிய அலுவல்களுக்காக மசோதா பட்டியலிடப்பட்டுள்ளது.</p><p>இந்த சட்ட திருத்தத்தின்படி, வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இதுதவிர முறைகேடு கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.</p><p>வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.</p><h2>சி.ஜே.பி. போராட்டம்:</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக செய்வதே போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.</p><p>இந்த போராட்டத்திற்கு நாடு முழுக்க ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆதரவு தெரிவித்து கண்டன போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக நாடு முழுக்க பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அமளிகளால் தினந்தோரும் ஒத்திவைக்கப்பட்டன.</p><p>நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>மோசமான வானிலை: லக்னோவில் அவசரமாக தரையிறங்கிய சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம்</title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">102dff4f-2ebf-4b13-836d-51da4b24bee4</guid><pubDate>Sun, 26 Jul 2026 23:15:32 +0000</pubDate><atom:updated>2026-07-26T23:15:32.617Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானம்,Southern Airlines,Flight diverted,சதர்ன் ஏர்லைன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/j8vjcqq8/c-s-a.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ China Southern airlines Flight]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/j8vjcqq8/c-s-a.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காத்மாண்டுவில் மோசமான வானிலை காரணமாக சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் லக்னோவுக்குத் திருப்பி விடப்பட்டது</p><p>காத்மாண்டு விமான நிலையத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) லக்னோவுக்குத் திருப்பி விடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>தரையிறக்கம்:</h2><p>"காத்மாண்டுவில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, இரவு 10.57 மணிக்கு சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் CZ 3067 (ஏர்பஸ் A320neo) லக்னோவுக்குத் திருப்பி விடப்பட்டது. இந்த விமானம் இரவு 11.18 மணிக்கு லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கியது" என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>சீனாவின் குவாங்சூவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், நேபாள தலைநகரில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது என்று அவர்கள் கூறினர். இவ்விமானத்தில் 159 பயணிகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>விமானம் மாயம்:</h2><p>முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த, பாகிஸ்தானிய சரக்கு விமானம் காணாமல் போன சம்பவம் அரங்கேறியது. இதனை பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்து இருந்தது. காணாமல் போன விமானத்தில் ஐந்து பேர் இருந்தனர்.</p><p>காணாமல் போன விமானத்தைக் கண்டறிய பல்வேறு அமைப்புகள் மூலம் கடலில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.</p><p>மேலும், இதுகுறித்த எக்ஸ் தள பதிவில், ஷார்ஜாவில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த K2 ஏர்வேஸ் நிறுவனத்தின் B737 சரக்கு விமானத்தில் செவ்வாய் கிழமை இரவு 9.18 மணிக்கு நேவிகேஷன் சிஸ்டமில் கோளாறு ஏற்பட்டதாகவும், கராச்சி பகுதி கட்டுப்பாட்டு மையம் (ACC) உடனடியாக அதற்கு வழிகாட்டியதாகவும் ஆணையம் தெரிவித்து இருந்தது.</p>]]></content:encoded></item><item><title>&quot;மகத்தான அத்தியாயம்!&quot; தங்க மங்கை மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-narendra-modis-special-praise-for-mirabai-chanu-after-historic-cwg-2026-gold</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-narendra-modis-special-praise-for-mirabai-chanu-after-historic-cwg-2026-gold#comments</comments><guid isPermaLink="false">f5b4f57c-8b36-4ba2-a0d2-78e60a05779e</guid><pubDate>Sun, 26 Jul 2026 17:16:02 +0000</pubDate><atom:updated>2026-07-26T17:16:02.951Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mirabai Chanu,pm modi,பிரதமர் மோடி,காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,மீராபாய் சாணு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/jl8wa7d3/Mirabai-Chanu-and-PM-Modi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mirabai Chanu and PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/jl8wa7d3/Mirabai-Chanu-and-PM-Modi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிளாஸ்கோ 2026 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி, தனது மூன்றாவது தொடர்ச்சியான தங்க பதக்கத்தை வென்று, இந்தியாவிற்கு முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்த இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவை பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> பாராட்டினார். </p><p>ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், ஆண்களுக்கான 60 கிலோ எடை பிரிவில் சக நாட்டு வீரரான ரிஷிகாந்த சிங் வெள்ளி பதக்கம் வென்றதை தொடர்ந்து சானு தங்க பதக்கம் வென்றுள்ளார்.  இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். </p><p>அதில், தங்கப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவரது நிலைத்தன்மையை பாராட்டி, தனது புகழ்பெற்ற விளையாட்டு வாழ்க்கையில் மற்றொரு காமன்வெல்த் பதக்கத்தை சேர்த்ததன் மூலம் அவர் ஒரு உத்வேகம் அளிப்பவர் என்றும் குறிப்பிட்டார்.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், "இந்திய பளுதூக்குதலில் மற்றுமொரு மகத்தான அத்தியாயம்! திறமையான மீராபாய் சானு, காமன்வெல்த் போட்டிகளில் 48 கிலோ எடை பிரிவில் அசத்தலான செயல்திறனை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை தங்க பதக்கம் வென்று தனது திறமையை நிரூபித்துள்ளார்.</p><p>தொடர்ச்சியாக இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் மற்றும் தனது பெயரில் நான்காவது காமன்வெல்த் பதக்கத்துடன், அவர் ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகமாக திகழ்கிறார். அவருக்கு வாழ்த்துகள்! அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள். #CWG2026,” என்று அவர் கூறினார்.</p><p>முன்னதாக ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ எடையை தூக்கி காமன்வெல்த் சாதனை படைத்திருந்த சானு, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவை தொடங்கும் போது 82 கிலோ எடையை தூக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.</p><h2>புதிய சாதனை:</h2><p>அவர் தனது இரண்டாவது முயற்சியில் 82 கிலோ எடையை வெற்றிகரமாக தூக்கினார். அதனை தொடர்ந்து, தனது மூன்றாவது முயற்சியில் 85 கிலோ எடையை தூக்கி, புதிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் சாதனையை நிகழ்த்தி மற்றொரு பிரமிக்க வைக்கும் செயல்திறனை வெளிப்படுத்தினார்.</p><p>பின்னர் சானு 105 கிலோ எடையை தூக்கி, அதனை வெற்றிகரமாக தன் தலைக்கு மேலே உயர்த்தி, தங்க பதக்கத்தை உறுதிசெய்ததோடு, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தனது ஹாட்ரிக் தங்க பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தார்.</p><p>இந்த வெற்றியின் மூலம், 2018 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் காமன்வெல்த் போட்டிகளில் தான் வென்றிருந்த வெற்றிகளுடன் சானு மேலும் ஒரு தங்கப் பதக்கத்தைச் சேர்த்துள்ளார். மேலும், கிளாஸ்கோ 2026 போட்டிகளில் இந்தியா தனது முதல் தங்க பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரதமரின் களங்கப்பட்ட பிம்பத்தைச் சரிசெய்யவே புதிய உயர்மட்ட குழு..!- ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/panel-formed-to-restore-prime-ministers-tainted-image-jairam-ramesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/panel-formed-to-restore-prime-ministers-tainted-image-jairam-ramesh#comments</comments><guid isPermaLink="false">9e4189bd-be13-4b14-93fb-4de3d0a89238</guid><pubDate>Sun, 26 Jul 2026 16:24:37 +0000</pubDate><atom:updated>2026-07-26T16:24:37.400Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜெய்ராம் ரமேஷ்,Jairam Ramesh,pm modi,உயர்மட்ட குழு,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/9d9ojdd9/jairam-ramesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi- Jairam ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/9d9ojdd9/jairam-ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் மத்தியில் வெடித்த போராட்டத்தின் எதிரொலியாக, இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்ட குழு அமைத்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.</p><p>இக்குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோம்நாத், உளவுத்துறை முன்னாள் இயக்குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அனிதா கர்வால் மற்றும் அம்ரித் லால் மீனா இடம்பெற்றுள்ளனர்.</p><h2>பிரதமர் மோடி வீடியோ வெளியீடு</h2><p>பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>தேர்வு முறையை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றும் வகையில் நந்தன் நிலேகனிக தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>நந்தன் நிலேகனி குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>நாடு முழுவதும் நடைபெறும் போட்டித் தேர்வுகளின் வெளிப்படைத்தன்மையை உயர்மட்ட பணிக்குழு உறுதி செய்யும்.</p><p>வினாத்தாள் தயாரிப்பு முதல் முடிவுகள் வெளியிடப்படும் வரை ஆய்வு செய்து உயர்மட்ட பணிக்குழு பரிந்துரை செய்யும்.</p><p>வினாத்தாள் கசிவைத் தடுக்க தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்புகளை பணிக்குழு உருவாக்கும்.</p><p>தேர்வுகளின்போது தொழில்நுட்ப பாதுகாப்பு, நம்பகத்தன்மை, சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை அளிக்கும். மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடிய யாரும் தப்ப முடியாது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">HIGH POWERED TASK FORCE on examination reforms under the leadership of Shri Nandan Nilekani constituted.<a href="https://x.com/NandanNilekani?ref_src=twsrc%5Etfw">@NandanNilekani</a> <a href="https://t.co/mMpmPdIEL5">pic.twitter.com/mMpmPdIEL5</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2081371118188028277?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>ஜெய்ராம் ரமேஷ்</h2><p>பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>நண்பர்களே, கடந்த ஜூன் 2024-ல், நீட்-யுஜி (NEET-UG) உள்ளிட்ட பல தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததைத் தொடர்ந்து, தேர்வுகள் வெளிப்படையாகவும், சுமுகமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் மோடி அரசு ஒரு உயர்மட்ட நிபுணர் குழுவை அமைத்தது.</p><p>ஜூலை 2026-ல், நீட்-யுஜி மற்றும் பிற தேர்வுகளில் மீண்டும் முறைகேடுகள் நடந்ததைத் தொடர்ந்து, தேர்வு சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவதற்காக மோடி அரசு ஒரு "உயர்மட்டப் பணிக்குழுவை" அமைத்துள்ளது.</p><p>டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் குழுவின் 101 பரிந்துரைகளை மோடி அரசு இன்னும் முழுமையாகச் செயல்படுத்தவில்லை. மாறாக, 2024 முதல் 2026 வரையிலான கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, தேசிய தேர்வு முகமைக்கு (NTA) ஒரு முழுநேர தலைமை இயக்குநரைக்கூட அது நியமிக்கவில்லை.</p><p>இறுதியில், இவை அனைத்தும் பிரதமரின் சரிசெய்ய முடியாத அளவுக்குக் களங்கப்பட்ட பிம்பத்தைச் சரிசெய்வதற்கான ஒரு உயர்மட்ட முயற்சியைத் தவிர வேறொன்றுமில்லை.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">Friends, जून 2024 में, NEET-UG सहित कई परीक्षाओं में गड़बड़ी करने के बाद मोदी सरकार ने परीक्षाओं का &quot;पारदर्शी, सुचारु और निष्पक्ष संचालन सुनिश्चित करने&quot; के लिए ISRO के पूर्व अध्यक्ष डॉ. के. राधाकृष्णन की अगुवाई में एक उच्चस्तरीय विशेषज्ञ समिति का गठन किया था।<br><br>जुलाई 2026 में,… <a href="https://t.co/Fe5d1by8SK">https://t.co/Fe5d1by8SK</a></p>&mdash; Jairam Ramesh (@Jairam_Ramesh) <a href="https://x.com/Jairam_Ramesh/status/2081390539627438367?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>விரைவில் அடுத்தகட்ட வியூகம் அறிவிப்பு.. போராடிய மாணவர்கள் மீது எப்ஐஆர் பதியக்கூடாது - அபிஜித் தீப்கே பேட்டி </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-cjp-plans-next-strategy-demands-fir-withdrawal-for-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-cjp-plans-next-strategy-demands-fir-withdrawal-for-students#comments</comments><guid isPermaLink="false">a01c2b4e-e267-4d23-9c26-62ba55a21595</guid><pubDate>Sun, 26 Jul 2026 16:23:59 +0000</pubDate><atom:updated>2026-07-26T16:23:59.655Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>question paper leak,வினாத்தாள் கசிவு,CJP Protest,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/n5popzx6/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே ]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/n5popzx6/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்வு குளறுபடிகளுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) யின் அடுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து அதன் நிறுவனர் அபிஜீத் தீப்கே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். </p><p>நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜூன் 20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah">சிஜேபி நடத்திய போராட்டம்</a> நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா மூலம் வெற்றி பெற்று முடிவுக்கு வந்தது. </p><h2>அபிஜீத் தீப்கே </h2><p>இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அபிஜீத் தீப்கே, </p><p>"நாங்கள் எங்களது எதிர்கால வியூகத்தை விரைவில் அறிவிப்போம். நேற்றுதான் டெல்லி போராட்டம் நிறைவடைந்தது.  தயவுசெய்து எங்களுக்குச் சிறிது நேரம் கொடுங்கள். </p><p>போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் வழக்குகள் குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எந்தவொரு மாணவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்." என தெரிவித்தார்.   </p><p>பஞ்சாப் விவகாரத்தையும் நாங்கள் கையில் எடுப்போம், அதற்கான திட்டமிடலில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். </p><p>ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய அவர், "அந்தப் பிரச்சனையையும் நாங்கள் கையில் எடுப்போம். அதற்காக ஏற்கனவே திட்டமிட்டு வருகிறோம்" என்றார்.</p> <h2>பஞ்சாப் வினாத்தாள் கசிவு</h2><p>பஞ்சாப் ஆசிரியர் தகுதித் தேர்வு 12ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு மற்றும் பார்மசி ஆபிசர் தேர்வு உட்பட 6 வெவ்வேறு தேர்வுகளின் வினாத்தாள் கசிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>அம்மாநிலத்தின் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஷிரோமணி அகாலி தள் கட்சியும் வினாத்தாள் கசிவுகளால் மாநிலத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் பைன்ஸின் ராஜினாமா செய்யக்கோரி வருகின்றனர்.</p><h2>பாஜக</h2><p>குறிப்பாக பாஜக செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறுகையில், "பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் எப்போது ராஜினாமா செய்யப் போகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் அவரை ராஜினாமா செய்ய சொல்வாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உதயமானது &apos;E20 ஜனதா கட்சி..&apos; எத்தனால் திணிப்புக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி பேரணி!</title><link>https://www.maalaimalar.com/news/national/e20-petrol-policy-row-new-e20-janata-party-questions-ethanol-blending-and-demands-fuel-choice-freedom</link><comments>https://www.maalaimalar.com/news/national/e20-petrol-policy-row-new-e20-janata-party-questions-ethanol-blending-and-demands-fuel-choice-freedom#comments</comments><guid isPermaLink="false">b5753591-7afb-4b8b-92c1-965d59a619ee</guid><pubDate>Sun, 26 Jul 2026 15:31:36 +0000</pubDate><atom:updated>2026-07-26T15:31:36.878Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எத்தனால்,நிதின் கட்கரி,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/f1m937s1/tn-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ E20 ஜனதா கட்சி எக்ஸ் பக்கம், நிதின் கட்கரி 
]]></media:title><media:description type="html"><![CDATA[ E20 ஜனதா கட்சி எக்ஸ் பக்கம், நிதின் கட்கரி 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/f1m937s1/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி <a href="https://www.maalaimalar.com/news/national/gen-z-youth-cockroach-party-delhi-neet-exam-scandal">போராட்டம் வெற்றி</a> அடைந்துள்ள நிலையில் தற்போது  'E20 ஜனதா கட்சி' என்ற புதிய இயக்கம் உருவாகியுள்ளது.</p><p>பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் மத்திய அரசின் கொள்கைக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு நிலவி வரும் சூழலில் அந்த எதிர்ப்பை ஒருங்கிணைக்க தொடங்கப்பட்டுள்ள E20 ஜனதா கட்சி, எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில்  வைரலாகி வருகிறது.</p><h2>கோரிக்கைகள் </h2><p>தங்கள் அமைப்பை ஒரு 'அரசியல்சாரா நுகர்வோர் உரிமை இயக்கம்' என்று குறிப்பிடும்  E20 ஜனதா கட்சியினர், E20 பெட்ரோலை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என கோரவில்லை. </p><p>மாறாக 100% தூய்மையான பெட்ரோலும் பங்குகளில் கிடைக்க வேண்டும் என்றும் எதை தேர்ந்தெடுக்க வேண்டு வாகன உரிமையாளர்களே தீமானிக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். </p><p>மேலும் எத்தனால் கலப்பால் வாகனத்தின் மைலேஜ், என்ஜின் செயல்திறன் மற்றும் பராமரிப்புச் செலவு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிவியல் பூர்வ ஆய்வுகளை நடத்த வேண்டும் அரசு தரவுகளை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். </p> <h2>நிதின் கட்கரி சர்ச்சை</h2><p>கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை தொடர்ந்து, தற்போது மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை இலக்கு வைத்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.</p><p>எத்தனால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள Cian Agro என்ற நிறுவனத்தை நிதின் கட்கரியின் மகன் நிகில் கட்கரி நடத்தி வருகிறார்.</p><p>பெட்ரோலில் எத்தனால் கலக்கும் கொள்கை அமலுக்கு வந்தபோது, வெறும் ரூ.40 ஆக இருந்த இந்நிறுவனத்தின் பங்கு விலை, ஒன்றரை ஆண்டுகளில் ரூ.3,600 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலால் என்ஜின்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள், மைலேஜ் குறைவு மற்றும் பராமரிப்புச் செலவு அதிகரிப்பதாக வாகன உரிமையாளர்கள் மற்றும் டாக்ஸி சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.</p><p>இதன் காரணமாக, 'டெல்லி டாக்ஸி மற்றும் டிரான்ஸ்போர்ட்டர்ஸ் சங்கம்' சார்பில் ஆகஸ்ட் 4 அன்று நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>மத்திய அரசு விளக்கம்</h2><p>E20 பெட்ரோலால் வாகனங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு எந்தவிதமான அறிவியல் பூர்வமான சான்றுகளும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.</p><p>இருப்பினும், கடந்த ஜூலை 22 அன்று மாநிலங்களவையில் பதிலளித்த பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி, E10 எரிபொருளுக்காக வடிவமைக்கப்பட்ட பழைய வாகனங்களில் E20 பெட்ரோலைப் பயன்படுத்தும்போது 3% முதல் 5% வரை மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது என்பதை ஒப்புக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - தற்கொலை செய்த மாணவியின் தாயார் வேண்டுகோள்  </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-outrage-education-minister-resigns-as-students-mother-demands-death-penalty-for-culprits</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-outrage-education-minister-resigns-as-students-mother-demands-death-penalty-for-culprits#comments</comments><guid isPermaLink="false">8808222b-a5b3-4437-a6ab-fd4dcc44b9b5</guid><pubDate>Sun, 26 Jul 2026 14:50:13 +0000</pubDate><atom:updated>2026-07-26T14:50:13.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,மாணவி தற்கொலை,student suicide,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/d0myzvwe/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 
கையில் மகள் ஆகான்ஷாவின் படத்துடன் தாய் நீலம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கையில் மகள் ஆகான்ஷாவின் படத்துடன் தாய் நீலம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/d0myzvwe/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் ஏற்பட்ட கொந்தளிப்பை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career">தர்மேந்திர பிரதான்</a> தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். </p><p>இருப்பினும், இது மட்டும் போதாது என்றும் வினாத்தாள் கசிவுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று நீட் தேர்வு மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.</p> <h2>தற்கொலை</h2><p>மகாராஷ்டிராவின் நாக்பூரில் படித்து வந்த 18 வயது மாணவி அகான்ஷா சதுர்வேதி, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பால் மன உளைச்சலடைந்து கடந்த மே 20 அன்று தற்கொலை செய்துகொண்டார்.</p><p>இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அகான்ஷாவின் தாயார் நீலம் சதுர்வேதி,</p><p>"எந்த ஒரு நடவடிக்கையும் என் மகளை மீண்டும் கொண்டு வரப்போவதில்லை. கல்வி அமைச்சரின் ராஜினாமாவில் எங்களுக்கு எந்தத் திருப்தியும் இல்லை.</p><p>மாணவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், ஒரு அமைச்சர் ராஜினாமா செய்வதால் மட்டும் அவரது பொறுப்பு முடிந்துவிடாது. வினாத்தாள் கசிவில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை மட்டுமே வழங்கப்பட வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.</p> <h2>குடும்பம்</h2><p>மத்திய பிரதேசத்தை ஆகான்ஷாவின் குடும்பம் மகளின் மருத்துவக் கனவுக்காக நாக்பூருக்குக் குடிபெயர்ந்தது. தந்தை ஒரு சிறிய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டே, மகளின் பயிற்சி வகுப்புக் கட்டணத்திற்காக நாக்பூரில் சமையல் வேலையும் செய்து வந்தார்.</p><p>மகளின் மறைவுக்குப் பிறகு, அவரது தந்தைக்கு இருமுறை மாரடைப்பு ஏற்பட்டுத் தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.</p><p>இதுகுறித்து பேசியுள்ள நீளம், "என் மகள் உயிருடன் இருந்திருந்தால் குடும்பத்தை அவளே காப்பாற்றியிருப்பாள். இனி எங்களை யார் கவனிப்பார்?" என கண்ணீர் வடித்துள்ளார்.</p> <h2>தற்கொலைக் குறிப்பு</h2><p>நீட் தேர்வில் 650-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறுவேன் என்று நம்பிக்கையுடன் இருந்த அகான்ஷா, தேர்வு ரத்து செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.</p><p>அவரது தற்கொலை குறிப்பில்,</p><p>"அம்மா, அப்பா, உங்கள் மகள் நன்றாகப் படித்து டாக்டர் ஆவாவாள் என்று நீங்கள் நம்பினீர்கள். ஆனால் மீண்டும் நீட் தேர்வு எழுத எனக்குத் தைரியம் இல்லை.</p><p>முதல் முறையில் நான் நல்ல மதிப்பெண்கள் எடுத்திப்பேன், ஆனால் மறுத்தேர்வில் மீண்டும் என்னால் சிறப்பாகச் செய்ய முடியுமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.</p><p>என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, அப்பா... நான் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டேன்" என்று எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மறுதேர்வு அழுத்தத்தால் இதுவரை நாடு முழுவதும் 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>தேர்வு சீர்த்திருத்தம்: இன்போசிஸ் இணை நிறுவனர் தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு- பிரதமர் மோடி வீடியோ வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/national/modi-announces-high-level-panel-for-exam-reforms</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-announces-high-level-panel-for-exam-reforms#comments</comments><guid isPermaLink="false">46c25e4b-4fd5-45db-9120-f1afa0b1196a</guid><pubDate>Sun, 26 Jul 2026 14:10:54 +0000</pubDate><atom:updated>2026-07-26T14:10:54.592Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,நீட் முறைகேடு,பிரதமர் மோடி,தேர்வு சீர்த்திருத்தம்,high level panel,exam reforms</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/8xpnvs39/Modi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/8xpnvs39/Modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் மத்தியில் வெடித்த போராட்டத்தின் எதிரொலியாக, </p><p>இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.</p><p>இக்குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோம்நாத், உளவுத்துறை முன்னாள் இயக்குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அனிதா கர்வால் மற்றும் அம்ரித் லால் மீனா இடம்பெற்றுள்ளனர்.</p><p>இதுகுறித்து அவர் பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.</p><p>அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>தேர்வு முறையை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றும் வகையில் நந்தன் நிலேகனிக தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>நந்தன் நிலேகனி குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>நாடு முழுவதும் நடைபெறும் போட்டித் தேர்வுகளின் வெளிப்படைத்தன்மையை உயர்மட்ட பணிக்குழு உறுதி செய்யும்.</p><p>வினாத்தாள் தயாரிப்பு முதல் முடிவுகள் வெளியிடப்படும் வரை ஆய்வு செய்து உயர்மட்ட பணிக்குழு பரிந்துரை செய்யும்.</p><p>வினாத்தாள் கசிவைத் தடுக்க தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்புகளை பணிக்குழு உருவாக்கும்.</p><p>தேர்வுகளின்போது தொழில்நுட்ப பாதுகாப்பு, நம்பகத்தன்மை, சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை அளிக்கும். மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடிய யாரும் தப்ப முடியாது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் திங்களன்று பொதுத்தேர்வுகள் சீர்த்திருத்த மசோதா தாக்கலாகும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">HIGH POWERED TASK FORCE on examination reforms under the leadership of Shri Nandan Nilekani constituted.<a href="https://x.com/NandanNilekani?ref_src=twsrc%5Etfw">@NandanNilekani</a> <a href="https://t.co/mMpmPdIEL5">pic.twitter.com/mMpmPdIEL5</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2081371118188028277?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>முன்பே ராஜினாமா செய்ய இரு முறை முன்வந்த தர்மேந்திர பிரதான்.. மறுத்த தலைமை - தகவல்  </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-dharmendra-pradhan-quits-as-education-minister-after-cjbp-agitation-success</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-dharmendra-pradhan-quits-as-education-minister-after-cjbp-agitation-success#comments</comments><guid isPermaLink="false">92d5b7b9-6621-4d4d-8eb1-042a66630637</guid><pubDate>Sun, 26 Jul 2026 13:53:48 +0000</pubDate><atom:updated>2026-07-26T13:53:48.146Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/jc8m9fyd/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான், மோடி, அமித் ஷா]]></media:title><media:description type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான், மோடி, அமித் ஷா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/jc8m9fyd/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு முறைகேடு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 20 அன்று போராட்டம் தொடங்கியது. இதில் ஜூன் 28 முதல் கல்வியாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தார். </p><h2>வெற்றி </h2><p>இந்நிலையில் தொடர் அழுத்தத்தின் பேரில், நேற்று தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதன் மூலம் 1 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்திய சிஜேபி தனது இலக்கை அடைந்துள்ளது. </p><p>இடையில் ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah">இளைஞர்கள் மீதான தாக்குதல்</a> நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இப்போராட்டத்திற்கு ஆதரவை அதிகரிக்க செய்தது குறிப்பிடத்தக்கது. </p><p>முதலில் போராட்டத்திற்கு செவிசாய்க்காத அரசு, கடந்த சில நாட்களில் எழுந்த கடும் அழுத்தத்தின் பேரில் சிஜேபி பிரதிநிதிகளுடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. </p><p>இந்த சூழலில் முன்னரே, நீட் கசிவுக்காக தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினமா செய்ய ஏற்கனவே 2 முறை முன்வந்ததாகவும், ஆனால் தலைமை அதை மறுத்துவிட்டதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. </p><h2>முன்வந்த பிரதான்</h2><p>போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே தன் பதவியை ராஜினாமா செய்ய பிரதான் முன்வந்ததாகவும் தலைமை அதை மறுத்ததாகவும் மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஜயவர்கியா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p><p>மேலும் அரசு வட்டாரங்களின்படி ஜூலை 20 நடந்த மூத்த அமைச்சர் கூட்டத்தில், தன் பதவியை ராஜினாமா செய்ய பிரதான் முன்வந்தும், அவரை அப்பதவியிலேயே தொடர தலைமை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.</p><p>அமைச்சர் ராஜினாமா என்பது பொறுப்புகளில் இருந்து விலகிச் செல்வது, ஆனால் பிரச்சனைகளை தீர்க்காமல் பொறுப்புகளில் இருந்து விலகிச் செல்வது சரியன்று என தலைமை கருத்தியதாகவும் அரசின் வட்டாரங்கள் கூறுகின்றன.</p> <h2>மாறிய காட்சி</h2><p>ஆனால் ஜூலை 20 நடந்த 'நாடாளுமன்றம் நோக்கி' பேரணி போல மீண்டும் ஒரு பேரணியை நடத்த உள்ளதாக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது சிஜேபி கூறியதால் அரசின் நிலைப்பாடு மாறியதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தர்மேந்திர பிரதான் நேற்று ராஜினாமா செய்த நிலையில்   அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>ஜனாதிபதி இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று கல்வி அமைச்சராக பொறுப்பேற்று அத்துறை அதிகாரிகளுடன் ஜோஷி ஆலோசனை கூட்டம் நடத்தி அடுத்தகட்ட சீர்திருத்தங்கள் குறித்து விவாதித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற அசாம் அமைச்சர் மகள்.. முதல்வர் ஹிமாந்தா ரியாக்ஷன் இதுதான் </title><link>https://www.maalaimalar.com/news/national/assam-ministers-daughter-joins-neet-protest-bjp-supporters-slam-her-anti-modi-slogans</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-ministers-daughter-joins-neet-protest-bjp-supporters-slam-her-anti-modi-slogans#comments</comments><guid isPermaLink="false">4a86a873-625f-4236-8dd6-241ff8cf111c</guid><pubDate>Sun, 26 Jul 2026 13:26:50 +0000</pubDate><atom:updated>2026-07-26T13:26:50.722Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,அசாம்,ஹிமாந்தா பிஸ்வா சர்மா,biopic,autobiography,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/bjeoov8t/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  திபிஷா, ஹிமாந்தா ]]></media:title><media:description type="html"><![CDATA[  திபிஷா, ஹிமாந்தா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/bjeoov8t/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஐந்தரில் மந்தரில் ஒரு மாதத்திற்கும் சிஜேபி நடத்தி வந்த போராட்டம், நேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததன் மூலம் வெற்றி பெற்றது. </p><p>டெல்லியில் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதிலும் மாண்வர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2>அசாம்</h2><p>அந்த வகையில் அசாம் தலைநகர் கௌஹாத்தியிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதில் அசாம் பாஜக அரசில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக உள்ள கேஷப் மஹான்தா உடைய  மகள் திபிஷா இந்த போராட்டத்தில் பங்கேற்றார். </p><p>சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ ஒன்றில், போராட்டக்களத்தில் திபீஷா, பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வலியுறுத்தியது இடம்பெற்றிருந்தது. </p><p>அமைச்சரின் மகள் பாஜக அரசுக்கு எதிராக போராடியது அக்கட்சி ஆதரவாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் திபிஷாவையும், அமைச்சர் கேஷப் மஹான்தாவைக்கும் சமூக வலைத்தளங்களில் அக்கட்சி ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர். </p><h2>அசாம் முதல்வர்</h2><p>இந்த விவகாரம் குறித்து அறிந்த அசாம் முதல்வர்<a href="https://www.maalaimalar.com/news/national/assam-cm-oath-himanta-biswa-sarma-sworn-in-as-chief-minister-again-after-bjp-alliance-wins-102-of-126-seats"> ஹிமாந்தா பிஸ்வா சர்மா</a>, கேஷப் மஹான்தாவை விமர்சிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.</p><p>அவர் கூறியதாவது, "அவரின் மகள் போராட்டத்தில் பங்கெடுத்தார் என்பதற்காக கேஷப் மஹந்தாவை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை.</p><p>அவரின் மகள் தந்தையின் அரசியல் சிந்தாந்தத்தை பின்பற்ற வேண்டும் என்று இல்லை. வயதுவந்த பிள்ளைகள், பெற்றோர் கொண்டிருக்கும் கருத்தில் இருந்து மாறுபட்ட அரசியல் கருத்தை கொண்டிருக்கலாம்.</p><p>வயதுவந்த பிள்ளைகள் தேர்ந்தெடுக்கும் அரசியலுக்காக அவர்களின் பெற்றோரை சாடுவது சரியில்லை.</p><p>நாளை என் மகன் வக்கீல் ஆனால், எனக்கு பிடிக்காத ஒருவருக்கு கூட ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகலாம்" என தெரிவித்தார்.</p><p>அதேநேரம், போராட்டத்தில் திபிஷா எழுப்பிய முழக்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஹிமாந்தா, " அப்பெண் எழுப்பிய முழக்கங்களுடன் நான் உடன்படவில்லை. அடுத்த முறை நான் அவரை சந்திக்கும்போது, அவர் சொன்னது சரியில்லை என்பதை அவருக்கு நான் பேசி புரிய வைக்க முயல்வேன்" என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அசாம், குஜராத் உள்பட வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் மழை- 939 கிராமங்கள் மூழ்கின</title><link>https://www.maalaimalar.com/news/national/heavy-rains-flood-939-villages-in-assam-and-gujarat</link><comments>https://www.maalaimalar.com/news/national/heavy-rains-flood-939-villages-in-assam-and-gujarat#comments</comments><guid isPermaLink="false">ebb8aa8e-ee6b-47d2-be4c-41c6007d3f53</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:57:23 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:57:23.758Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,அசாம்,கனமழை,வடமாநிலங்களில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ckg33ftk/rain1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Heavy rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ckg33ftk/rain1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மேற்குப் பருவமழை காரணமாக வட மாநிலங்க ளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.  கன மழை யால் அசாமில் வெள்ளப் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழைக்கு 14 பேர் உயிரிழந்தனர்.</p><h2>61 பேர் பலி</h2><p>அசாம் மாநிலத்தில் இதுவரை மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 12 மாவட்டங்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் வீடுகள், சாலைகள் மற்றும் விவசாய நிலங்கள் மூழ்கியுள்ளன. நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>சிவசாகர், சராதியோ, கோலாகாட் மற்றும் ஜோர் ஹாட் ஆகிய மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. </p><h2>939 கிராமங்கள் மூழ்கின</h2><p>இந்த மாவட்டங்களில் உள்ள 939 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. 24 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் வெள் ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அசாமின் சிவ சாகர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் திக்கோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.</p><p>பெருக்கெடுத்து ஓடிய  வெள்ள நீரில் கார்கள்  அடித்து செல்லப் பட்டன. அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாவை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து, தற்போதைய வெள்ள நிலவரம் குறித்து விசாரித்தார்.</p><p>இது தொடர்பாக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா  எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் வழங்கும் என்று பிரதமர் அசாம் மக்களுக்கு உறுதியளித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>குஜராத்தில் கனமழையால் ஆறுகள், நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை 40,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். </p><p>கனமழைக்கு குஜராத் மாநிலத்தில் 5 பேர் உயிரிழந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அகமதாபாத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. வாவ்த்ராட் மாவட்டத்தில் உள்ள பாபர் பகுதியில் 287 மி.மீ மழை பதிவாகியுள்ளது. </p><p>பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 18 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்களும், 32 மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்களும் அனுப்பப் பட்டுள்ளன. பல இடங்களில் துணை ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. குஜராத்தின் பல பகுதிகளில் இன்று 204.5 மி.மீ-க்கு மேல் மழை பெய்யக்கூடும் என எச்சரித்து, வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2>ஆறுகளில் வெள்ளம்</h2><p>இமாச்சலப் பிரதேசத்தில், தொடர் கனமழை, நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக 134 சாலைகள் மூடப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பீகாரில் 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. </p><p>உத்தரப் பிரதேசத்தில் கங்கை மற்றும் யமுனா உட்பட 10 ஆறுகளில் பெருக் டுத்து ஓடுகிறது. காக்ரா மற்றும் ஷார்தா உட்பட 4 ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்லியாவில், சரயு ஆற்றில் ஒரு அரசுப் பள்ளியும் ஒரு வீடும் அடித்துச் செல்லப்பட்டன. அதேசமயம் கோண்டாவில் 100 ஏக்கருக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கின.</p>]]></content:encoded></item><item><title>கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா?.. இந்தியாவில் சுதந்திரம் சுருங்கி வருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை  </title><link>https://www.maalaimalar.com/news/national/india-democratic-space-shrinking-justice-ujjal-bhuyan-warns-of-curbs-on-dissent</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-democratic-space-shrinking-justice-ujjal-bhuyan-warns-of-curbs-on-dissent#comments</comments><guid isPermaLink="false">d0e900a1-a3e9-4f78-b4c3-33ce577d9531</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:53:38 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:53:38.451Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர்நீதிமன்றம்,High Court,Supreme Court Judge,உச்சநீதிமன்றம்,உச்சநீதிமன்ற நீதிபதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mnwtgymx/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உஜ்ஜல் புயான்]]></media:title><media:description type="html"><![CDATA[ உஜ்ஜல் புயான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mnwtgymx/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளுக்கான இடம் படிப்படியாக சுருங்கி வருவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கவலை தெரிவித்துள்ளார். </p><p>போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவன பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசினார். </p><p>முதலாவதாக, "கங்கை நதியில் படகில் வைத்து அசைவம் சாப்பிடுவது சட்டப்படி குற்றமில்லை. ஆனால் மத்தியப் பிரதேச பாஜக அரசின் காவல்துறை, புனித நதியை அசுத்தம் செய்வதாக கூறி 14 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது. அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு  3 மாதம் சிறையில் கழித்தனர்.  </p><p>இந்த சம்பவம் தேசத்தின் குடிமக்கள் அரசியலமைப்பு தங்களுக்கு வழங்கிய சட்டபூர்வ உரிமையின் கீழ் செயல்படும்போதும் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் தொடர்ச்சியான ஒரு போக்கை காட்டுகிறது. </p><p> இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளுக்கான இடம் படிப்படியாக சுருங்கி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருவரின் பார்வையை பகிர்ந்து கொள்ளவும், அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தற்கான சுதந்திரம் உள்ளது. விவாதமும், மாற்றுக்கருத்தும் தான் ஜனநாயகத்தின் சாரம். துரதிஷ்டவசமாக அது குற்றமாக மாற்றப்பட்டு வருகிறது. " என தெரிவித்தார். </p><h2>மும்பை உயர் நீதிமன்றம் மீது விமர்சனம் </h2><p>மும்பையில் காசா மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த அனுமதி கோரியபோது, "இந்தியாவில் உங்களுக்குப் பிரச்சனைகளே இல்லையா? காசாவுக்காக போராடுவது தேசபக்தி அல்ல" என்று மும்பை <a href="https://www.maalaimalar.com/topic/high-court">உயர் நீதிமன்றம்</a> கூறியதையும்   உஜ்ஜல் புயான் சுட்டிக்காட்டி விமர்சித்தார். </p><p>அமைதியான முறையில் மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதும் ஜனநாயக உரிமையே என்றும், நீதிமன்றங்கள் இதுபோன்ற கருத்துச் சுதந்திரத்தைக் முடக்கும் வகையில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.</p> <h2>ஜாமீன் தாமதம்</h2><p>சாதாரணப் போராட்டங்கள், சமூக வலைத்தளப் பதிவுகள் மற்றும் மீம்களுக்குக்கூட கடுமையான குற்றவியல் சட்டங்களைப் பயன்படுத்துவது தனிநபர் சுதந்திரத்தைப் பறிப்பதாகும்.</p><p>நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கினாலும், அது நீண்டகாலச் சிறைவாசத்திற்கு பிறகே கிடைக்கிறது.</p><p>மேலும் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தக் கூடாது என்ற ஜாமீன் நிபந்தனைகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மறைமுகமாக முடக்குகின்றன.</p><p>நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மற்றும் போக்கை வழக்கறிஞர்களும் சட்ட மாணவர்களும் நடுநிலையோடு விமர்சன கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்.</p><p>நம்மை நாமே புகழ்ந்துகொள்வதை விட அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்புகளைக் காப்பாற்றுவதே நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை உயர்த்தும்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Video: ஜந்தர் மாந்தர் போராட்டத்தில் இந்துத்துவா தேசியவாத தலைவர் மாணவர்களைத் திட்டி, தாக்கும் காட்சி வைரல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/hindutva-leader-satyam-pandit-caught-on-video-assaulting-neet-protest-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/hindutva-leader-satyam-pandit-caught-on-video-assaulting-neet-protest-students#comments</comments><guid isPermaLink="false">59a43b94-3f35-4ce9-986a-9a976341847d</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:17:18 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:17:18.062Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DharmendraPradhan,NEETProtest,SatyamPandit,சத்யம்பண்டிட்,MahuaMoitra,மஹுவாமொய்த்ரா,PralhadJoshi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/pj7b1o8x/SatyamPandit" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SatyamPandit ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/pj7b1o8x/SatyamPandit?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது சத்யம் பண்டிட் என்ற இந்துத்துவா தலைவர் வன்முறைத் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>காவி துண்டு அணிந்த நபர் மாணவர்களைத் தாக்கி, மிரட்டி, கேமரா முன்னிலையில் மன்னிப்புக் கேட்க வைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயை பரவி வருகிறது.</p><h2><strong>மாணவர்களிடம் மிரட்டல்</strong></h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி,'காக்ரோச் ஜனதா கட்சி' ஜன்தர் மந்தரில் 36 நாட்களாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தியது. </p><p>இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்ட மறுநாளில் இந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவில் வெள்ளை குர்தா மட்டும் காவித் துண்டு அணிந்த சத்யம் பண்டிட், இரண்டு மாணவர்களை வழிமறித்து அவர்களின் பெயர் மற்றும் எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்று மிரட்டும் தொனியில் கேள்வி எழுப்புகிறார்.</p><h2><strong>தாக்குதல் மற்றும் கேமரா முன் மன்னிப்பு</strong></h2><p>மாணவர்கள் தாங்கள் 'இந்துக்கள்' என்று பதிலளித்த போதும், 'அப்படியென்றால் தேசவிரோத மாணவர்களை உருவாக்கும் இந்தத் தரப்புக்கு ஏன் ஆதரவு தருகிறீர்கள்?' என்று கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டுயுள்ளார். </p><p>அதோடு நிறுத்தாமல், ஒரு மாணவனின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கொடூரமாகக் தாக்கியுள்ளார். </p><p>மேலும், அந்த மாணவனைப் பலவந்தமாக கேமராவைப் பார்க்க வைத்து மன்னிப்புக் கேட்கச் செய்ததோடு, 'இனிமேல் இந்த பக்கம் உன்னைப் பார்த்தால் அவ்வளவுதான், அடித்துத் துவம்சம் செய்துவிடுவேன்' என்று கொடூரமாக மிரட்டியுள்ளார்.</p><p>இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">इसका नाम Satyam Pandit है ... <br><br>जंतर मंतर पर आंदोलन में आए छात्रों को मारपीटकर गाली गलौज देकर, उन्हें हिन्दू मुस्लिम मतभेद करके, डरा धमकाके भगा रहा है !<br><br>खुद वीडियो रील बनाकर व्यूज से डॉलर कमा रहा है ! <a href="https://t.co/mnBAt5c0UR">pic.twitter.com/mnBAt5c0UR</a></p>&mdash; pk मौर्यवंश की बेटी ⛩️☸️ (@speak000000) <a href="https://x.com/speak000000/status/2081027442953912513?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்</strong></h2><p>இந்த வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், 'பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளின் அநாகரிகமான வன்முறைக்கு இதே சாட்சி. </p><p>இளைஞர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை பாஜகவினர் மீண்டும் ஒருமுறை துரோகம் மூலம் உடைத்தெறிந்துள்ளனர்' என்று சாடியுள்ளார். </p><p>இதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, "சத்யம் பண்டிட் என்ற இந்த வன்முறை நபரை டெல்லி போலீசார் உடனடியாகக் கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் நாங்களே எப்ஐஆர் பதிவு செய்வோம்" என்று எச்சரித்துள்ளார்.</p><h2><strong>தர்மேந்திர பிரதான் ராஜினாமா</strong></h2><p>நீட்-யுஜி வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் 36 நாட்கள் நடத்தப்பட்ட போராட்டத்திற்குப் பின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். </p><p>மாணவர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் அரசியல்: 2028 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - சித்தராமையா அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/corrupt-politics-wont-contest-the-2028-assembly-election-siddaramaiah-announces</link><comments>https://www.maalaimalar.com/news/national/corrupt-politics-wont-contest-the-2028-assembly-election-siddaramaiah-announces#comments</comments><guid isPermaLink="false">738d1a05-23c0-4db4-b1c9-cb1789abc1a7</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:43:35 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:43:35.793Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சித்தராமையா,Siddaramaiah,2028 Assembly elections,2028 சட்டமன்ற தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/bre10qeu/New-Project-2026-07-26T161311.564.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஊழல் அரசியல்: 2028 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - சித்தராமையா அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/bre10qeu/New-Project-2026-07-26T161311.564.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் 2028-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மாண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடர்பாக பேசிய சித்தராமையா கூறியிருப்பதாவது;</p><p>“இன்று அரசியல் களம் சீர்கெட்டுவிட்டதால், 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. இருப்பினும், அரசியலில் தொடர்ந்து செயல்பட்டு, மக்களின் துயரங்கள் மற்றும் மகிழ்ச்சிக்கான குரலாக நான் தொடர்ந்து ஒலிப்பேன்.</p><p>வருணா தொகுதி மக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு என்னை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இனி எந்தத் தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்று நான் முடிவு செய்துவிட்டேன். கடந்த காலங்களில் நான் தேர்தலில் போட்டியிட்டபோது, ​​தொகுதி மக்களே எங்களுக்குத் தேவையான நிதியை வழங்கி எங்கள் வெற்றியை உறுதி செய்தனர்; ஆனால் இன்று அத்தகைய சூழல் இல்லை.</p><p>எனக்கு இப்போது 79 வயதாகிறது. காங்கிரஸ் அரசின் பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது; அதற்குள் எனக்கு 81 அல்லது 82 வயதாகிவிடும். எனது உடல்நிலை முன்பு இருந்ததைப் போல வலுவாக இல்லை. முன்பிருந்த அதே உற்சாகத்துடன் தொடர்ந்து பணியாற்றுவது இனி சாத்தியமில்லை.</p><p>2028-ஆம் ஆண்டில் எனக்கு 82 வயது நிரம்பும். அது எனது அரசியல் வாழ்க்கையின் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் தருணமாக அமையும். 1978-இல் தாலுகா வாரிய உறுப்பினராக எனது அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். நான் வெற்றிகளையும் தோல்விகளையும் கண்டுள்ளேன். </p><p>ஆனால், நான் நம்பிய கொள்கைகளுக்கு முரணாகச் செயல்படாமலும், எனது மனசாட்சிக்குத் துரோகம் இழைக்காமலும் இருந்ததில் எனக்கு மனநிறைவு உண்டு.</p><p>தேர்தலில் போட்டியிடுவதானால் மக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய சூழல் இன்று உருவாகியுள்ளது. இன்றைய அரசியல் முற்றிலும் ஊழல் மயமாகிவிட்டது. நேர்மையான அரசியலுக்கு இன்று இடமில்லாத நிலை காணப்படுகிறது. இத்தகைய சூழலில், இனிவரும் தேர்தல்களில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை நான் எடுத்துள்ளேன்.</p><p>ஐந்து தசாப்தங்களாக, கர்நாடக மக்கள் என்னை தங்களில் ஒருவராகக் கருதி அன்புடன் வழிநடத்தி வந்துள்ளனர். அந்த நன்றிக்கடன் என்மீது உள்ளது. எனவே, எனது எதிர்கால வாழ்க்கையும் பொதுச் சேவைக்கே அர்ப்பணிக்கப்படும்.” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பாதுகாப்பு துறையில் இந்தியா புதிய உச்சம்- &apos;மன்கி பாத்&apos; நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-defence-new-peak-mann-ki-baat-modi-pride</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-defence-new-peak-mann-ki-baat-modi-pride#comments</comments><guid isPermaLink="false">2307e9f6-f01e-4e06-89f3-e07b9a0aac3a</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:44:35 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:44:35.213Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,மனதின் குரல்,pm modi,Maan Ki Baat,மன்கி பாத்,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vjx1b140/maan-ki-baat.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi in Maan ki baat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vjx1b140/maan-ki-baat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ (மன்கிபாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.</p><p>இன்று தனது 136-வது பதிவில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF" rel="nofollow">பிரதமர் மோடி</a> பேசியதாவது:-</p><p>பாதுகாப்பில் புதிய உச்சம் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு ஏற்றுமதி அல்லது நட்பு நாடுகளுடனான அரசியல் ஒத்துழைப்பு என எதுவாக இருந்தாலும்  இந்தியா தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.</p><p>இந்தியா ஒரு நம்பகரமான உலகளாவிய பாதுகாப்புத் துறை கூட்டாளியாக உருவெடுத்து வருகிறது. மேலும் தனது பாதுகாப்பு திறன்களை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் நான் இந்தோனேசியாவில் இருந்தேன்.</p><p>அங்கு பிரம்மோஸ் மற்றும் அஸ்தரா ஏவுகணைகள் தொடர்பான  ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கை வளர்ந்து வருகிறது.</p><h2><a href="https://www.maalaimalar.com/news/world/10-killed-around-100-injured-in-russian-strike-in-ukraines-kyiv" rel="nofollow">ஏவுகணை</a></h2><p>சில நாட்களுக்கு முன்பு ஐ.என்.எஸ். மகேந்திரகிரி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த நவீன போர்க்கப்பல் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் 75 சதவீதத்திற்கு அதிகமானவை உள்நாட்டிலே தயாரிக்கப்பட்டது.</p><p>இந்த மாதத்தில் நீண்ட தூரம் சென்று துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ‘பினாகா’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) வெற்றிக்கரமாக சோதித்தது.</p><p>இந்த வெற்றிக்கு பின்னால் நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கூட்டு உழைப்பு உள்ளது. 2 அல்லது 3 நாட்களுக்கு முன்புதான் டி.ஆர்.டி.ஓ. குஷா ஏவுகணையையும் வெற்றிக்கரமாக சோதித்தது.  </p><h2>சிறப்பான தருணம்</h2><p>கடந்த வாரம்  ‘<a href="https://www.maalaimalar.com/news/national/india-first-private-rocket-vikram-1-successfully-launched" rel="nofollow">விக்ரம் 1</a>’ வெற்றிக்கரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு குடிமகனும் பெருமிதம் அடைந்தனர். இந்தியாவின் விண்வெளி துறையில் நிகழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க தருணம் இதுவாகும்.</p><p>தனியார் துறையால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் இதுவாகும். ஒரு காலத்தில் கற்பனை செய்வதற்கே கடினமாக இருந்த ஒன்றை இன்று சாதித்து உள்ளனர்.</p><p>கார்கில் வெற்றி தினம் நம்மை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது. நமது துணிச்சலான வீரர்களின் அசாதாரண வீரத்தை இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது.</p><h2>மூவர்ண கொடி</h2><p>ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ந் தேதிக்கு முன்னதாக நீங்கள் எனக்கு பல்வேறு விதமான ஆலோசனைகளை அனுப்புகிறீர்கள். இந்த ஆண்டும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.</p><p>கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டிலும் <a href="https://www.maalaimalar.com/news/world/burj-khalifa-illuminated-in-colours-of-the-tricolour-on-independence-day-650270" rel="nofollow">மூவர்ண கொடி</a>  இயக்கம் ஒட்டுமொத்த தேசத்தையும் உணர்வுடன் ஒன்றிணைத்தது. ஒவ்வொரு வீட்டிலும், தெருவிலும் மூவர்ண கொடியை கொண்டாடும் சூழல் காணப்படுகிறது.</p><p>இந்த ஆண்டும் வீடுகளில் மூவர்ண கொடியை மிகுந்த மரியாதையுடன் ஏற்ற வேண்டும். பாரத ரத்னா அப்துல் கலாமின் நினைவுநாள் நாளையாகும். பெரிய கனவுகளை காணுமாறு அவர் இளைஞர்களையும், குழந்தைகளையும் ஊக்குவித்தார்.</p><p>இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்த உத்தரவிட்டது நீங்களா?  - அமித் ஷாவுக்கு ராகுல் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah#comments</comments><guid isPermaLink="false">26b3ff64-eba7-4350-b371-0028b91c9dea</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:37:20 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:37:20.886Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Amit Shah,அமித் ஷா,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/qkiouv1c/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல், சாஹில், அமித் ஷா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல், சாஹில், அமித் ஷா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/qkiouv1c/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜூலை 20 அன்று பாராளுமன்றம் நோக்கி இளைஞர்கள் அமைதியான முறையில் நடத்திய பேரணியில் டெல்லி போலீசாரும், ஆர்ஏஎப் படையினரும் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தினர். தடியடி நடத்தியும், கண்ணர் புகைகுண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். </p><p>சுமார் 60 போராட்டக்காரர்கள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக பலரின் உடலில் பெல்லட் துப்பாக்கி குண்டுகள் துளைத்த புள்ளி புள்ளியான காயம் இருந்தது கண்டறியப்பட்டது. </p><p>இவ்வகை துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏனெனில் இவை சில நேரங்களில் பார்வை, கேட்கும் திறனை இழக்கச் செய்யும். முக்கிய உடல் பாகங்களில் பட்டால் உயிரிழப்பையும் ஏற்படுத்தும். </p><p>இதுமட்டுமின்றி, சீருடையற்ற நபர்கள் அன்றைய தினம் இளைஞர்களை லத்திகளால் தாக்கிய வீடியோக்களும் சர்ச்சையை ஏற்படுத்தின. நச்சுத்தன்மை வாய்ந்த காலாவதியான கண்ணீர் புகை குண்டுகள், ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகள் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்பட்டதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><p>ஜூலை 20 அன்று இளைஞர்கள் மீதான இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. </p><p>மாணவர்களின் பிரதான கோரிக்கையான, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று ராஜினாமா செய்துவிட்டபோதிலும், ஜூலை 20 அன்று மாணவர்களை கொடூரமான முறையில் தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. </p> <h2>ராகுல் கடிதம்</h2><p>இந்த சூழலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இவ்விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர்<a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-made-excellent-arrangements-to-conduct-exams-in-mother-tongue-amit-shah"> அமித் ஷாவுக்கு</a> கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.</p><p>எக்ஸ் தளத்தில் ராகுல் பகிர்ந்துள்ள கடிதத்தின் நகலில், அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது உயிருக்கே ஆபத்து நேரும் அளவுக்குபெல்லட் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்த ஒப்புதல் கொடுத்தவர் யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>அமைதியான போராட்டம் என்பது எந்த ஒரு ஜனநாயகத்துக்கும் இன்றியமையாதது. போராடுபவர்களை பாதுகாத்து அவர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் கேட்டறிந்து அதற்கான தீர்வை காண்பது அரசின் கடமை.</p><p>ஆனால் இந்த கொடூரமான வன்முறை எல்லா நெறிகளையும் உடைத்து நாட்டை கொந்தளிக்க செய்துள்ளது. பதில்களையும், பொறுப்புகூறலையும் கேட்கும் இளைஞர்களும், மாணவர்களும் நாட்டின் எதிர்காலம். அவர்களின் குரல் கேட்கப்பட்டே தீரும்.</p><p>ஜூலை 20 அன்று அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கொலை ஆயுதங்கள் மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தி காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.</p><h2>ஒப்புதல் வழங்கியது யார்?</h2><p>நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். பெண்களும் காவல்துறையினால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அந்தரங்க உறுப்புகளும் திட்டமிட்டு தாக்குதலின்போது குறிவைக்கப்பட்டுள்ளது.</p><p>ஊடக மற்றும் சமூக வலைதள அறிக்கைகள், ஒரு செய்தியாளர் உட்பட மாணவர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. சாஹில் என்ற 19 வயது மாணவர்களை நான் சந்தித்தேன். பெல்லட் குண்டுகளால் அவர் தன் ஒரு பக்க கண்பார்வையை இழந்து மிகுந்த வலியில் உள்ளார்.</p> <p>டெல்லியில் போராட்டத்தை அடக்க அனுப்பட்ட பாதுகாப்பு படைகள் நேரிடியாக உங்களின் கீழ் தான் வருகிறது. உள்துறை அமைச்சர் என்ற முறையில் பெல்லட் துப்பாக்கிகள் உட்பட மாணவர்கள் மீது உயிரை பறிக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த நீங்கள் தான் ஒப்புதல் வழங்கினீர்களா? அல்லது வேறு யார் வழங்கினார்கள்?</p><p>சீருடையின்றி சாதாரண உடையில் மாணவர்களை லத்திகளால் தாக்கியவர்கள் போலீஸ்காரர்களாஅல்லது தன்னார்வலர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>யுனஸ்கோ பாரம்பரிய தலங்கள் பட்டியலில் உ.பி.யின் ‘சாரநாத்’ சேர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/ups-sarnath-included-in-unescos-list-of-heritage-sites</link><comments>https://www.maalaimalar.com/news/national/ups-sarnath-included-in-unescos-list-of-heritage-sites#comments</comments><guid isPermaLink="false">9c34cbb5-2b84-4967-ab38-96ab694e5df6</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:11:07 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:11:07.206Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>UNESCO,Sarnath,Buddhist Site,சாரநாத்,புத்த தலம்,யுனஸ்கோ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/gu0c31u6/New-Project-2026-07-26T144048.932.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யுனஸ்கோ பாரம்பரிய தலங்கள் பட்டியலில் உ.பி.யின் ‘சாரநாத்’ சேர்ப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/gu0c31u6/New-Project-2026-07-26T144048.932.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>யுனஸ்கோவின் உலக பாரம்பரிய தலங்கள் பட்டியலில், இந்தியாவின் பழமையான பௌத்த தலமான, உத்தரப் பிரதேசத்தின் சாரநாத் சேர்க்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் இந்தப் பட்டியலில் இணையும் இந்தியாவின் 45வது தலம் இதுவாகும். </p><h2>புத்தரின் முதல் போதனை தலம்</h2><p>கி.மு.6ம் நூற்றாண்டில் இந்த தலத்தில்தான் புத்தர் தனது முதல் போதனையை வழங்கியதாகவும், அவரது ஆரம்பகால சீடர்களைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>புத்தராலேயே நான்கு முக்கிய பௌத்த யாத்திரை தலங்களில் ஒன்றாக அடையாளம் காட்டப்பட்ட சாரநாத், அரச குடும்பத்தினர், மடாலயங்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவால் பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்தது. இதன் விளைவாக ஏராளமான தூபிகள், கோயில்கள் மற்றும் விகாரங்கள் கட்டப்பட்டன.</p><p>ஒரு முக்கிய பௌத்த மையமாக செழித்தோங்கிய சாரநாத், கி.பி.12-ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்து, 18-ஆம் நூற்றாண்டில் மீண்டும் கண்டறியப்படும் வரை மறைந்து கிடந்தது.</p><p>இன்று இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் இத்தலம், ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகவும், உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்களுக்கான யாத்திரை தலமாகவும் விளங்குகிறது. </p><h2>மத்திய அரசின் பரிந்துரை</h2><p>"2025-26 ஆம் ஆண்டிற்கான உலக பாரம்பரியக் குழுவின் பரிந்துரையில், 'சாரநாத், பழமையான பௌத்த தளம்' என்ற தலைப்பிலான ஆவணக் கோப்பை யுனெஸ்கோவிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளதாக, 2025 ஆகஸ்டில் மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>ஆக்கிரமிப்பு காஷ்மீரை தவிர பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ராஜ்நாத் சிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-talks-with-pakistan-except-on-pok-rajnath-singh-on-kargil-vijay-diwas</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-talks-with-pakistan-except-on-pok-rajnath-singh-on-kargil-vijay-diwas#comments</comments><guid isPermaLink="false">af56b7ea-d3b9-4c8c-9f28-749c6e39f4cc</guid><pubDate>Sun, 26 Jul 2026 07:18:26 +0000</pubDate><atom:updated>2026-07-26T07:18:26.039Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,Kargil Vijay Diwas,கார்கில் வெற்றி தினம்,ராஜ்நாத் சிங்,kargil war memorial,கார்கில் போர் நினைவு சின்னம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vfqnycm1/singh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rajnath singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vfqnycm1/singh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வென்றது. இப்போரில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீராகளை நினைவு கூரும் வகையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">கார்கில் வெற்றி தினம்</a> ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  இன்று கார்கில் போர் வெற்றி தின நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடந்தது.</p><h2>கார்கில் போர் நினைவிடம்</h2><p>லடாக்கின் டிராசில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது அவர் கார்கில் போர் நினைவிடத்திற்கான இணைய வழித்தளத்தை தொடங்கி வைத்தார். அதன்பின், நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:</p><h2>வீரம்-தைரியம்</h2><p>27-வது கார்கில் வெற்றி தினத்தில் நமது வீரர்களுக்கும், அவர்களின் வீரத்திற்கும் தலை வணங்குகிறேன். கார்கில் வெற்றி என்பது வெறும் ராணுவ மற்றும் ராஜதந்திர வெற்றி மட்டுமல்ல, நமது வீரர்கள் அசைக்கமுடியாத தைரியத்தையும், வீரத்தையும் ஒட்டுமொத்த உலகமும் கண்ட தருணம் ஆகும். கார்கில் வெற்றி, பாரத மாதாவின் கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரத்தைப் போன்றது.</p><p>பாகிஸ்தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு தவறான நடவடிக்கைக்கும், அவர்கள் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவுக்குக் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.</p><p>இந்தியா தரவு மையங்களை உருவாக்குகிறது. பாகிஸ்தான் பயங்கரவாத மையங்களை உருவாக்குகிறது. இந்தியா புதுமைகளைப் பின்தொடர்கிறது. பாகிஸ்தான் ஊடுருவலுக்கான புதிய வழிகளைத் தேடுகிறது. </p><p>இந்தியா கப்பல்களை வடிவமைக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளது. இந்தியா ஒரு ஸ்டார்ட்அப் சூழலை உருவாக்கும்போது, ​​பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத சூழலை உருவாக்குகிறது. </p><h2>எல்லை தாண்டி</h2><p>இந்தியா செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும்போது, ​​பாகிஸ்தான் எல்லை தாண்டி பயங்கரவாதிகளை அனுப்புவதில் ஈடுபட்டுள்ளது.</p><p>தற்போது பாகிஸ்தான் பயங்கரவாதத்தைத் தனது அரசு கொள்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளது. அங்கு ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான வேறுபாடு முற்றிலும் மறைந்துவிட்டது. அந்நாட்டு ராணுவம் பயங்கரவாத அமைப்புகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் அவர்களுடன் நெருக்கமாகவும் செயல்படுகிறது. </p><p>எனவே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசுகளையும் இந்தியா இனி தனித்தனியாகப் பார்க்காது என்பதை நாங்கள் உணர்த்தினோம்.  </p><h2>பேச்சுவார்த்தை கிடையாது</h2><p>எங்கள் நோக்கம் தெளிவாக இருக்கிறது. பாகிஸ்தானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறாது. ஒருவேளை பேச்சுவார்த்தை என்று ஒன்று நடந்தால், அது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இருக்கும். </p><p>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர பாகிஸ்தானுடன் வேறு எந்தப் பேச்சுவார்த்தையிலும் இந்தியா ஈடுபடாது என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தேர்வு முறைகேட்டில் ஈடுபடும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/new-bill-to-be-tabled-in-parliament-tomorrow-10-year-jail-rs-10-crore-fine</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-bill-to-be-tabled-in-parliament-tomorrow-10-year-jail-rs-10-crore-fine#comments</comments><guid isPermaLink="false">a255ebb1-1216-47ba-bd2a-7d9bd69f9b11</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:07:00 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:07:00.484Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>paper leak,neet protest,வினாத்தாள் கசிவு,நீட் போராட்டம்,public examinations bill,பொதுத் தேர்வுகள் மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/7nnj8q9f/Untitled-design-77.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ New amendment bill proposes 10-year jail and ₹10 crore fine to curb public exam malpractice]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/7nnj8q9f/Untitled-design-77.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய அளவிலான அரசு போட்டித்தேர்வுகளில் வினாத்தாள் கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டத்திருத்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தாக்கல் செய்ய உள்ளார்.</p><p>கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் கொண்டு வரப்பட்ட பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்கும் வகையில் பழைய சட்டம் திருத்தங்கள் செய்யப்பட உள்ளது.</p><p>இதன்மூலம் பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட உள்ளது.</p><p>டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில், பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்கும் ‘2026 சட்டத்திருத்த மசோதா’ என்ற வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.</p><h3><strong>2026 பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா:</strong></h3><p>இந்த மசோதா மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு எம்.பி.க்களுக்கு மசோதாவின் நகல் நேற்று விநியோகிக்கப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:-</p><p>வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிக பட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.</p><p>தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோருக்கான தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்படும். தனி நபர் குற்றங்க ளுக்கான அபராத தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>வினாத்தாள் கசிவை தொடர்ந்து செய்யும் கும்பல்களுக்கு குறைந்தபட்ச தண்டனை 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தப்படும். இவர்களுக்கான குறைந்தபட்ச அபராதம் ரூ.1 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்.</p><p>தேர்வு நடத்துதல், வினாத்தாள் அச்சிடுதல், கணினி தொழில்நுட்ப ஆதரவு போன்ற பணிகளில் ஈடுபடும் தனியார் ஏஜென்சிகளுக்கு ரூ.5 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.</p><p>அந்நிறுவனம் பொதுத் தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் தடைக்காலம் இரட்டிப்பாக்கப்படும். அதாவது 8 ஆண்டுகள் வரை பொதுத் தேர்வு நடத்த தடை விதிக்கப்படும்.</p><p>நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது உறுதியானால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 கோடி அபராதமும் விதிக்கப்படும்.</p><p>வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் காவல்துறை அல்லது மத்திய புலனாய்வு அமைப்புகள் 2 மாதங்களில் வழக்கை முடிக்க கால வரையறை நிர்ணயிக்கப்படும்.</p><p>வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணையை விரைந்து மேற்கொள்ள வசதியாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.</p><h3><strong>விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரணை:</strong></h3><p>இந்த விரைவு நீதிமன்றங்களில் வழக்கின் மீது உடனடியாக விசாரணையை தொடங்கி, தினசரி அடிப்படையில் மேற்கொள்வதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த 3 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும்.</p><p>வினாத்தாள் கசிவு தேர்வு முறைகேடு குற்றங்களை விரைந்து விசாரிப்பதற்காக எந்தவொரு அமர்வு நீதிமன்றத்தையும் சிறப்பு விரைவு நீதிமன்றமாக மாற்றியமைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்த சட்டத்திருத்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.</p><p>விரைவு நீதிமன்றங்களின் தீர்ப்பை எதிர்த்து, ஐகோர்ட்டின் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல் முறையீடு செய்யலாம். அந்த மேல்முறையீட்டு மனுக்களும் 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மேற்கண்ட சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.</p><p>இவ்வாறு அந்த மசோதா நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாஜகவிற்கு பதவியை விட நாடும், இளைஞர்களுமே முக்கியமானவர்கள்: அமித்ஷா</title><link>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-made-excellent-arrangements-to-conduct-exams-in-mother-tongue-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-made-excellent-arrangements-to-conduct-exams-in-mother-tongue-amit-shah#comments</comments><guid isPermaLink="false">28ac5ac0-73a0-46b8-b0e8-d1ca9feeab13</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:02:10 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:02:10.431Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித்ஷா,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,neet protest,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/85jw4pmk/Untitled-design-80.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amit Shah says BJP values nation and youth above posts]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/85jw4pmk/Untitled-design-80.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். </p><p>இந்த ராஜினாமா குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-</p><h3><strong>பாஜகவிற்கு நாடும், இளைஞர்களுமே முக்கியம்:</strong></h3><p>பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை எந்தவொரு பதவியையும் விட நாடும், நமது இளைஞர்களும், மாணவர்களுமே முக்கியமானவர்கள். </p><p>மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது, இந்த கொள்கைக்கு சிறந்த உதாரணமாகும்.</p><p>மோடி அரசு, இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்தவும் உறுதி பூண்டுள்ளது.</p><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மோடி எடுத்துள்ள முடிவுகள் பாராட்டுக்குரியவை. </p><p>நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இத்தகைய நடவடிக்கைகள் முழுமையான நீதியை உறுதி செய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.</p><h3><strong>தர்மேந்திர பிரதான் செய்த சீர்திருத்தங்கள்:</strong></h3><p>தர்மேந்திர பிரதான் தனது பதவிக்காலத்தில், தேசியக் கல்விக் கொள்கையை  திறம்படச் செயல்படுத்துதல், தாய்மொழியில் தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள், பிஎம் ஸ்ரீ  பள்ளிகளின் விரிவாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டார்.</p><p>மேலும் டிஜிட்டல் கல்வியை ஊக்குவித்தல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறைக்கும், கல்வித்துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் அவர் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். </p><p>தேர்வு முறை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், மாணவர் நலனை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்கான அவரது முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை. </p><p>இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் லட்சியத்தின் மீதான அவரது அர்ப்பணிப்புக்கு, அவரது பதவிக்காலம் ஒரு சான்றாகத் திகழ்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எங்களை சந்தேகித்து விமர்சனம் செய்தவர்களுக்கு நன்றி, இது வெறும் தொடக்கம்தான்: அபிஜீத் தீப்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/thanks-to-critics-this-is-just-the-beginning-abijeet-deepke</link><comments>https://www.maalaimalar.com/news/national/thanks-to-critics-this-is-just-the-beginning-abijeet-deepke#comments</comments><guid isPermaLink="false">eee9ce31-86e4-492c-84c3-f06b118c0d02</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:07:47 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:07:47.455Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>abhijeet dipke,அபிஜீத் தீப்கே,சிஜேபி,CJP Protest,CJP,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/inapr828/Untitled-design-76.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NEET Protest Leader Abhijit Deepke thanks critics]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/inapr828/Untitled-design-76.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்விற்கு எதிராக 37 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவடைந்ததை அடுத்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று ஒரு வீடியோ வெளியிட்டார்.</p><h3><strong>அபிஜீத் தீப்கே வீடியோ பதிவு:</strong></h3><p>அந்த வீடியோவில் அபிஜீத் தீப்கே கூறியிருப்பதாவது:-</p><p>உங்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. உடல்நலக் குறைபாடுகளை காரணம் காட்டி, ஜந்தர் மந்தரில் கூடியிருந்த ஆதரவாளர்களை நேரில் சந்திக்க இயலவில்லை, அதற்காக மன்னித்து கொள்ளுங்கள்.</p><p>நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஜந்தர் மந்தரில் காத்திருந்த அனைவரையும் என்னால் சந்திக்கவோ, அவர்களுக்கு நன்றி சொல்லவோ முடியவில்லை.</p><p>ஏனென்றால், உங்களுக்குத் தெரியும், எனக்கு டைபாய்டு காய்ச்சல் இருந்தது. எனது உடல் வெப்பநிலை 101 டிகிரியாக இருந்தது. அதனால்தான் நான் வீட்டிற்கு வர வேண்டியிருந்தது.</p><p>உங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும். ஜந்தர் மந்தரில் 37 நாட்கள் காத்திருந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.</p><p>இந்த நாட்டிற்காக நீங்கள் செய்ததை நான் மனதாரப் பாராட்டுகிறேன் என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் சல்யூட்.</p><p>எங்களைச் சந்தேகித்தும், விமர்சித்தும், உங்களுக்கு போராடத் தெரியவில்லை என்றும் கேள்வி எழுப்பியவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.</p><p>நீங்கள் எங்களை விமர்சிக்காமலும், கேள்வி எழுப்பாமலும் இருந்திருந்தால், எங்களால் முன்னேறியிருக்க முடியாது.</p><p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக நாங்கள் நீண்ட தூரம் பயணிப்போம். இது வெறும் தொடக்கம்தான். ஜெய் ஹிந்த்” என்று கூறியுள்ளார்.</p><h3><strong>நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்:</strong></h3><p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ-யின் கணினி வழியில் நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், காக்ரோச் ஜனதா கட்சியினர், ஜூன் 20 முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.</p><p>இந்த இயக்கம் நாடு முழுவதிலுமுள்ள மாணவர்களின் ஆதரவைப் பெற்றதுடன், பல எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெற்றது.</p><p>ஜூன் 28 முதல் ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு ஜூலை 18 அன்று காவல்துறையினரால் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.</p><p>இதையடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஜூலை 20 அன்று ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றபோது, இந்தப் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் காவல்துறையினருடன் மோதல்கள் ஏற்பட்டன.</p><h3>தர்மேந்திர பிரதான் ராஜினாமா:</h3><p>அவர்கள் போராட்டக்காரர்களைக் கலைக்கத் தடியடியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் பயன்படுத்தினர். </p><p>அன்றைய தினம் பிற்பகலில், நட்டா தனது இல்லத்தில் சிஜேபி தலைவர்களுடன் முதல் முறையாக சந்திப்பு ஒன்றை நடத்தினார். இது இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் தொடக்கத்தை குறித்தது.</p><p>இதைத்தொடர்ந்து நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து சிஜேபி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.</p><h3><strong>சிஜேபி கோரிக்கை:</strong></h3><p>இந்த நிலையில் நீட் பிரச்சினை தொடர்பாக ஜந்தர் மந்தரில் 36 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நேற்று கைவிட்டது.</p><p>தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல், போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட தங்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டதாக சிஜேபி தெரிவித்தது.</p><p>அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, நாடு முழுவதும் போராட்டம் உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக சிஜேபி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்தார்.</p><p>ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள், ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடனும் புரிதலுடனும் நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என அவர் கூறினார்.</p><h3><strong>மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை:</strong></h3><p>தங்களது கோரிக்கைகள் அடங்கிய வரைவை அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், செவ்வாய்க்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை எதிர்பார்ப்பதாகவும் செளரவ் தாஸ் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நட்டா, போராட்டத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையும், தங்களின் எஞ்சிய கோரிக்கைகளையும் கோடிட்டு காட்டும் எழுத்துப்பூர்வ வரைவை சிஜேபி-யினர் சமர்ப்பித்ததாகக் கூறினார்.</p><p>போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும், தங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் கட்சி உறுதிமொழி கோரியுள்ளதாகவும் நட்டா கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இனி வினாத்தாள் கசிவு இருக்கக் கூடாது: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு மாணவர்கள் கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/students-demand-end-to-exam-paper-leaks-from-new-education-minister-pralhad-joshi</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-demand-end-to-exam-paper-leaks-from-new-education-minister-pralhad-joshi#comments</comments><guid isPermaLink="false">94ecf578-0dec-4718-b958-6f3bf02bb806</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:59:49 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:59:49.583Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Neet exam,பிரகலாத் ஜோஷி,Pralhad Joshi,CJP,காக்ரோச் ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/0w0v5ym5/prahalad.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pralhad Joshi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/0w0v5ym5/prahalad.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக உள்ள 'பிரகலாத் ஜோஷி'க்கு கல்வித் துறையின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில்தான், புதிய கல்வி அமைச்சர் வினாத்தாள் கசிவுகளை முற்றிலுமாகத் தடுத்து, அனைவருக்கும் கட்டுப்படியாகும் வகையில் கல்வியை முறைப்படுத்த வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2><strong>தொடர் போராட்டம்:</strong></h2><p>நீட் மற்றும் யு.ஜி.சி-நெட்  தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) அமைப்பின் தலைமையிலான மாணவ அமைப்பினரும் லட்சக்கணக்கான மாணவர்களும் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். </p><p>போராட்டத்தின் உச்சகட்டமாக, வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்றுத் தர்மேந்திர பிரதான் தனது பதவி விலகல் கடிதத்தைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்தார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.</p><h2><strong>புதிய கல்வி அமைச்சர் நியமனம்:</strong></h2><p>தர்மேந்திர பிரதானின் விலகலைத் தொடர்ந்து, கர்நாடகாவின் தார்வாடு தொகுதியில் இருந்து 5 முறை எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த பாஜக தலைவரும், நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. "மிகுந்த கடமையுணர்வோடும் பணிவோடும் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்" என ஜோஷி அறிவித்துள்ளார்.</p><h2><strong>மாணவர்களின் கோரிக்கைகள்:</strong></h2><p>சி.ஜே.பி போராட்டத்தில் ஈடுபட்ட பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் சார்பில் புதிய அமைச்சருக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி:</strong></h2><p>இனிவரும் எந்தவொரு தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளிலும் வினாத்தாள் கசியாத வண்ணம் 'தேசிய தேர்வுகள் முகமையை' முற்றிலும் சீரமைக்க வேண்டும்.</p><h2><strong>கட்டுப்படியாகும் கல்வி:</strong></h2><p>ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை உறுதிசெய்யும் வகையில் கல்வி அமைப்பைக் குறைந்த செலவில் கிடைக்கச் செய்ய வேண்டும். வினாத்தாள் கசிவில் ஈடுபடும் 'தேர்வு மாஃபியாக்கள்' மீது புதிதாக முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.</p><p>தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் மாணவர்களுக்கான இழப்பீடு, போராட்ட வழக்குகள் வாபஸ் போன்ற மத்திய அரசின் உறுதிமொழிகளைத் தொடர்ந்து, 40 நாட்களுக்கும் மேலாக நீடித்த மாணவர் போராட்டம் தற்காலிகமாகக் திரும்பப் பெறப்பட்டுள்ளது. </p><p>எனினும், புதிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையிலான கல்வித் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்று கல்வியாளர்களும் மாணவர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கார்கில் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை</title><link>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-lays-wreath-at-the-kargil-war-memorial-to-pay-tribute-to-bravehearts-who-laid-down-their-lives-in-kargil-war-in-1999</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-lays-wreath-at-the-kargil-war-memorial-to-pay-tribute-to-bravehearts-who-laid-down-their-lives-in-kargil-war-in-1999#comments</comments><guid isPermaLink="false">1f64be70-bf3f-4295-af0e-cbc30c3d944e</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:45:47 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:45:47.074Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,Kargil Vijay Diwas,கார்கில் வெற்றி தினம்,ராஜ்நாத் சிங்,kargil war memorial,கார்கில் போர் நினைவு சின்னம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vxq2twiq/rajnath.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rajnath singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vxq2twiq/rajnath.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.</p><h2>கார்கில் வெற்றி தினம்</h2><p>போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த கார்கில் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 27-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.</p><p>இன்றைய தினத்தில் போர் நினைவு சின்னத்தில் தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.</p><p>கார்கில் போர் வெற்றி தின கொண்டாட்டங்கள் நாடு முழுக்க களைகட்டின. அரசியல் தலைவர்கள், ராணுவம், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் போரில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.</p><p>இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கார்கில் போர் 27வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் லடாக்கில் உள்ள டிராஸ் பகுதிக்குச் சென்றார்.</p><h2>ராஜ்நாத் சிங் மரியாதை</h2><p>அங்குள்ள போர் நினைவிடத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.</p><p>முன்னதாக, லடாக் யூனியனில் உள்ள கார்கில் பகுதியில் குளிர் காலத்தில் வெப்பநிலை மைனஸ் 48 டிகிரி செல்சியஸ். 1999 ஏப்ரலில் பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகளுடன் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 'ஆபரேஷன் விஜய்' பெயரில் இந்திய ராணுவம் போரிட்டு பாகிஸ்தானை வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விதான் இளைஞர்களின் போராட்டம்: ஜனநாயகத்திற்கான ஆக்சிஜன்- உத்தவ் தாக்கரே</title><link>https://www.maalaimalar.com/news/national/uddhav-thackeray-cjp-protest-failure-of-central-govt-opposition</link><comments>https://www.maalaimalar.com/news/national/uddhav-thackeray-cjp-protest-failure-of-central-govt-opposition#comments</comments><guid isPermaLink="false">a8c844e1-cfdb-43f1-86ad-c770437d4c21</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:39:34 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:39:34.877Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உத்தவ் தாக்கரே,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Uddav thackeray,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mjafyy7g/UddhavThackeray0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Uddhav Thackeray]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mjafyy7g/UddhavThackeray0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஏற்படும் போதெல்லாம் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பார்கள். பின்னர் அந்த பிரச்சினை அப்படியே அடங்கிவிடும்.</p><p>2026-2027-ம் ஆண்டுக்கான UG மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அப்போது வினாத்தாள் லீக் ஆனது. இதனைத் தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.</p><p>இந்த முறை <a href="https://www.maalaimalar.com/news/national/cjp-volunteers-cleaning-the-streets-at-jantar-mantar">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> நீட் கசிவு பிரச்சினையை கையில் எடுத்தது. தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஜூன் 20-ந்தேதி போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் தொடர்பாக நேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வெற்றியாக கருதப்படுகிறது.</p><p>இந்த நிலையில், சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, மாணவர்களின் போராட்டம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விகளை வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:-</p><p>மக்களுக்குச் சிறை அல்லது துப்பாக்கிகளைக் கண்டு அச்சம் இல்லாதிருப்பது பாராட்டுக்குரியது. அதேவேளையில், இது ஆளும் கட்சிக்கு ஆபத்தான ஒன்றாகவும் உள்ளது.</p><h2>ஆளும் கட்சியின் தோல்விகள்</h2><p>இப்போராட்டங்கள், ஏறக்குறைய அழிவின் விளிம்பில் இருந்த ஜனநாயகத்திற்குப் புத்துயிர் அளித்துள்ளன.</p><p>CJP-யின் போராட்டம் என்பது ஆளும் கட்சியின் தோல்வி மட்டுமல்ல, எதிர்க்கட்சியின் தோல்வியும்கூட. இதை நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன். அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையை நாடு இழந்துவிட்டது.</p><p>டெல்லி முதல் மும்பை வரை, மக்கள் அச்சத்தைத் தாண்டி வந்துவிட்டதை நான் உணர்ந்துள்ளேன். இதுவரை துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த மக்கள், இப்போது தங்கள் உயிருக்கு அஞ்சும் நிலையை உதறிவிட்டு வீதிகளில் இறங்கியுள்ளனர்.</p><p>மத்திய அரசு முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது. அவர்கள் நாட்டை முற்றிலுமாகச் சீரழித்துவிட்டனர். இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும்.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமாவைத் தொடர்ந்து மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதியக் கூடாது. உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசு முன் வைக்கப்பட்டது. இதில் வழக்கு பதியப்படாது என்ற கோரிக்கை ஏறு்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தேர்தலில் போட்டியிடும் வயது வரம்பை 21 ஆக குறைக்க வேண்டும்: தெலுங்கானாவில் தீர்மானம் நிறைவேற்ற ரேவந்த் ரெட்டி முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/revanth-reddy-telangana-assembly-lower-minimum-age-to-contest-ls-assembly-polls-to-21</link><comments>https://www.maalaimalar.com/news/national/revanth-reddy-telangana-assembly-lower-minimum-age-to-contest-ls-assembly-polls-to-21#comments</comments><guid isPermaLink="false">b33059e7-c7c0-4323-a5cc-9a9992a9e7e9</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:39:38 +0000</pubDate><atom:updated>2026-07-26T03:39:38.786Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/po1qdyhg/RevanthReddy001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Revanth Reddy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/po1qdyhg/RevanthReddy001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரம் தொடர்பாக தெலுங்கானா மாநிலத்தில் மெழுகுவர்த்தி ஏந்திச் செல்லும் பேரணி நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-</p><p>ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாங்கள் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட இருக்கிறோம். எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் பதவிக்கு போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆக குறைக்கும் வகையில் அரசியலமைப்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக  விவாதம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றுவோம்.</p><h2>Gen Z போராட்டம்</h2><p>Gen Z போராட்டம் 56 இன்ஞ் மார்பு கொண்ட பிரதமர் மோடியை வீழ்த்தியுள்ளது. தர்மேந்திர பிரதானை அவரது பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கச் செய்துள்ளது.</p><p>இந்தியாவில் Gen z-ன் மக்கள் தொகை 30 சதவீதம் ஆகும். ஆனால் மக்களவையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான நபர்களே இருக்கிறார்கள். 21 வயதிற்கு மேற்பட்டோர் அமைச்சராக இருக்கும் நிலை ஏற்பட்டால், நாட்டின் எதிர்காலம் கட்டாயம் மாற்றம் அடையும்.</p><p>அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் 18 வயது இளைஞர்களால் பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக ஆக முடியும். சிங்கப்பூரில் கூட 21 வயதுடையோர் பிரதமராக முடியும்.</p><h2>Gen z குரல் உலகம் முழுவதும் கேட்க வேண்டும்</h2><p>ராகுல் காந்தி பிரதமரானால், Gen Z தலைவர் மத்திய அமைச்சர் ஆக முடியும் என்பதற்கு என்னால் உறுதி அளிக்க முடியும். நான் இந்தியா பிளாக்கிடம் பேசுவேன். ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்திப்பேன். தெருக்களில் குரல் எழுப்பிய பிறகு, வெறுமனே வீட்டிற்கு அவர்கள் திரும்பக்கூடாது. இந்த இளைஞர்கள் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். Gen z குரல் உலகம் முழுவதும் கேட்க வேண்டும்.</p> <h2>ராஜீவ் காந்தி கொண்டு வந்த மாற்றம்</h2><p>21 வயதுடையோர் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், மேயர் பதவிகளுக்கு தகுதிடையவர்கள் ஆவார்கள். ராஜீவ் காந்தி வாக்காளர்களின் வயது வரம்பை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தார். நரசிம்ம ராவ், மேயர் மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிடுபவர்களின் வயதை 21 ஆக நிர்ணயித்தார். மாணவர்களின் கோரிக்கைகளை காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் எழுப்பும்.</p><p>இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தரில் அமைதி திரும்பியது: குப்பைகளை அகற்றிய கரப்பான் பூச்சி கட்சியினர்</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-volunteers-cleaning-the-streets-at-jantar-mantar</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-volunteers-cleaning-the-streets-at-jantar-mantar#comments</comments><guid isPermaLink="false">3552fd91-3792-4067-98de-dd7db5892ca5</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:38:17 +0000</pubDate><atom:updated>2026-07-26T03:38:17.861Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,நீட் தேர்வு,Neet exam,CJP Protest,ஜந்தர் மந்தர்,jandar mandar,கரப்பான் பூச்சி கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ouoqznj8/cjp1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP cleaning]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ouoqznj8/cjp1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஜூன் மாதத் தொடக்கத்தில் அபிஜீத் தீப்கே, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களைத் திரட்டி போராட்டத்தை முன்னெடுத்தார். சிஜேபி கட்சி ஜூன் 20 அன்று காலவரையற்ற போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கியது. </p><h2>தீவிரமடைந்த போராட்டம்</h2><p>கரப்பான்பூச்சி கட்சி இளைஞர்களின் போராட்டம் காரணமாக கடந்த மாதம் 20-ம் தேதியிலிருந்து டெல்லி ஜந்தர் மந்தரில் பரபரப்பு நிலவியது.</p><p>குறிப்பாக, கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் வன்முறை ஏற்பட்ட பிறகு அவ்வப்போது இரவு நேரங்களில் கல் வீச்சு, தடியடி சம்பவங்கள் நடந்தன. இதனால், ஜந்தர் மந்தர் பகுதியே பதற்ற பூமியாக காணப்பட்டது. ஒருபுறம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிய, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இணைய சேவை துண்டிப்பு, மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் என அப்பகுதியை சார்ந்த பொதுமக்களுக்கும் சிக்கல்கள் ஏற்பட்டன.</p><h2>தர்மேந்திர பிரதான் ராஜினாமா</h2><p>இதையடுத்து, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். </p><p>மேலும், நீட் தேர்வு ரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள்மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும் மற்றும் மாணவர்களை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற 2 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தது.</p><p>இதன் அடிப்படையில் டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்களின் போராட்டம் வாபஸ் பெறுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கரப்பான் பூச்சி இளைஞர்களின் 36 நாள் போராட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.</p><h2>ஜந்தர் மந்தரில் மீண்டும் அமைதி</h2><p>இந்நிலையில், சுமார் ஒரு மாத காலத்துக்குப் பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வீடு திரும்பியதால் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் அமைதி திரும்பியது.</p><p>இரவோடு இரவாக பந்தல்களை அகற்றிய கரப்பான் பூச்சி கட்சியினர் அப்பகுதியில் சேர்ந்திருந்த குப்பைகளை எல்லாம் தாங்களே அகற்றினர். மீண்டும் அங்கு கூட்டம் கூடாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கணவன்- மனைவி தகராறுக்கு பழிவாங்க குடும்பத்தினர் மீது வழக்கு போடுவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு கவலை</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-expresses-concern-over-filing-cases-against-family-members-to-exact-revenge-in-husband-wife-disputes</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-expresses-concern-over-filing-cases-against-family-members-to-exact-revenge-in-husband-wife-disputes#comments</comments><guid isPermaLink="false">5b43e4b4-b52c-4f94-9599-fb9b33257ec4</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:27:32 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:27:32.074Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,Divorce case,உச்சநீதிமன்றம்,விவாகரத்து வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/z9uasz4c/SupremeCourt0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/z9uasz4c/SupremeCourt0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கணவன்- மனைவி இடையேயான தகராறுகளுக்கு பழிவாங்க குடும்பத்தினர் மீது வழக்கு போடுவது குறித்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/excluding-married-women-from-their-natal-families-is-unfair-supreme-court">சுப்ரீம் கோர்ட்டு</a> கவலை தெரிவித்து உள்ளது.</p><h2>விவாகரத்து பெற்ற தம்பதி</h2><p>மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த 2023-ம் ஆண்டு பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், இரட்டை பெண் குழந்தைகளும் உள்ளனர். அவர்களை பராமரிப்பது தொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே எழுந்த தகராறு காரணமாக இருவரும் அடுத்தவரின் குடும்பத்தினரை வழக்கில் சிக்க வைத்து உள்ளனர்.</p><p>அந்த வகையில் இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக தாய் மாமன் மீது அந்த கணவன் புகார் அளித்து உள்ளார். அதற்கு பதிலடியாக மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணவரின் சகோதரி மீது அந்த மனைவி புகார் அளித்தார். இந்த புகார்களின்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><h2>போக்சோ வழக்கு தள்ளுபடி</h2><p>இந்த நிலையில் தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யுமாறு சிறுவனின் அத்தை மும்பை ஐகோர்ட்டை நாடினார். ஆனால் அதை விசாரித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்தனர். இதை எதிர்த்து அவர் சுப்ரிம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதை நீதிபதிகள் பர்திவாலா, வினோத் சந்திரன் அமர்வு விசாரித்தது. பின்னர் சிறுவனின் அத்தை மீதான போக்சோ வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது நீதிபதிகள் பல்வேறு கவலைகளையும் வெளியிட்டனர்.</p><p>அவர்கள் கூறியதாவது:-</p><p>பொதுவாக திருமண வாழ்வில் கணவன்- மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் எழும் வழக்குகளில், பழி வாங்குவதற்காக மாமியார்- மாமனாரை இழுத்து வருவது சர்வ சாதாரணம். மேலும், ஒருவரையொருவர் பழிசுமத்துவதற்காகப் பிள்ளைகளும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறார்கள்.</p><h2>அதிர்ச்சி அடைந்தோம்</h2><p>ஆனால் இங்கு, தனது மகன் அவனது தந்தை வழி அத்தையால் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறான் என்று விவாகரத்து பெற்ற தாய் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.</p><h2>பழிவாங்கும் பதிலடி</h2><p>சிறுவனின் இரட்டை சகோதரிக்கு எதிராக தாய்மாமா மீது அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்த தந்தையால் பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு பதிலடியாக இந்த வழக்கானது பதியப்பட்டு உள்ளது. தாய்வழி உறவினர்களுக்கு எதிராக தந்தை வழக்கு பதிவு செய்த பின்னரே இந்த குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. இது குழந்தைகளுக்கு எதிரான உண்மையான குற்றச்சாட்டாக இல்லாமல், குழந்தை பராமரிப்பு உரிமை போராட்டத்தில் இருந்து பிறந்த ஒரு கசப்பான பழிவாங்கும் பதிலடி என்பது அம்பலமாகிறது.</p><p>இவ்வாறு நீதிபதிகள் அதிர்ச்சி மற்றும் கவலையுடன் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சபரிமலையில் புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தன் தேர்வு</title><link>https://www.maalaimalar.com/news/national/kandararu-brahmadathan-to-be-new-sabarimala-tantri</link><comments>https://www.maalaimalar.com/news/national/kandararu-brahmadathan-to-be-new-sabarimala-tantri#comments</comments><guid isPermaLink="false">ba44acd4-ab02-4d5b-87df-039682b5c0ff</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:14:17 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:14:17.341Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sabarimalai,சபரிமலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/5eafj6qi/KandararuBrahmadathan0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kandararu Brahmadathan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/5eafj6qi/KandararuBrahmadathan0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/sabarimala-ayyappa-temple-to-be-opened-this-evening">சபரிமலை</a> அய்யப்பன் கோவிலில் தற்போது தந்திரியாக கண்டரரு மகேஷ் மோகனரு உள்ளார். இவரது பணிக்காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து செங்கன்னூர் தாளமண் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை புதிய தந்திரியாக தேர்வு செய்ய திருவிதாங்கூர் தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.</p><p>இந்த நிலையில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரரு மீதான வழக்கு காரணமாகவும், உடல்நிலையை கருத்தில் கொண்டும் அவர் தந்திரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த போது அவரது மகன் கண்டரரு பிரம்ம தத்தனை நியமிக்க முன் மொழிந்து இருந்தார். இதையடுத்து தந்திரிக்கான அவரது தகுதியை உறுதி செய்ய காளிதாஸ் பட்டதிரிப்பாடு, சர்மன் வாசுவேன் பட்டதிலப்பாடு மற்றும் சுப்ரமணியன் நம் பூதிரி ஆகியோர் அடங்கிய ஆன்மிக பண்டிதர் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.</p><p>அவர்களின் சிபாரிசின் பேரில் சபரிமலை புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தனை நியமிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான தீர்மான அறிக்கையை கேரள ஐகோர்ட்டின் தனி அமர்வுக்கு அனுப்பி வைத்து அதற்கான ஆணை பெறப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.</p><p>புதிய தந்திரி அடுத்த மாதம் 18-ந்தேதி முதல் ஓராண்டு காலத்திற்கு சபரிமலை அய்யப்பன் கோவிலில் தந்திரியாக பணியாற்றுவார்.</p><p>சபரிமலையில் உள்ள காவல் தெய்வம் மற்றும் கதவுகளுக்கு தங்க தகடு பதிக்கப்பட்டபோது தங்கம் திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பலர் கைதானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>கேரள ஐயப்பன் கோவில் நெய் விற்பனை முறைகேடு</h2><p>கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா (ஐயப்பன்) கோவிலில் விற்பனை செய்யப்படும் அபிஷேக நெய்யில், கடந்த நவம்பர் 17, 2025 முதல் டிசம்பர் 27, 2025 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிதி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.</p><p>இந்த கால கட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட 16,628 பாக்கெட் நெய்யில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்கள் 43 பேர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. நெய் பாக்கெட்டின் விற்பனைத் தொகை திருவிதாங்கூர் தேவசம் போர்டு செலுத்தப்படவில்லை என்றும், இதனால் ரூ.17 லட்சத்திற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.</p><p>இதையடுத்து திருவிதாங்கூர் தேவசம் போர்டின் ஊழல் தடுப்புத் துறை அளித்த புகாரின் அடிப்படையில், கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து உடனடி குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டது.</p><h2>நீதிபதிகள் விசாரணை</h2><p>இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதிகள் வி.ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி. ஜெயக்குமார் அமர்வு, “இது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா ஆகியவற்றின் கீழ் குற்றங்களாக பதிவுசெய்யப்படும்.</p><p>குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், தண்டனைக்குரிய குற்றங்கள் ஏதேனும் நிரூபிக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்து, அந்த அறிக்கையை நான்கு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலைகளில் இந்த விவகாரத்தை வெறும் நிர்வாக அலட்சியம் அல்லது குறைபாடுள்ள பதிவேடு என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க முடியாது" என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.</p>]]></content:encoded></item></channel></rss>