<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 07 Aug 2026 19:42:20 +0000</lastBuildDate><item><title>ஜார்க்கண்ட் அரசுடன் பேச்சுவார்த்தை நிறைவு: கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர மாணவர்கள் முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/students-to-continue-agitation-despite-talks-with-jharkhand-govt</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-to-continue-agitation-despite-talks-with-jharkhand-govt#comments</comments><guid isPermaLink="false">038701dc-5e0f-439f-b596-8c8bb64c4a6a</guid><pubDate>Fri, 07 Aug 2026 18:20:05 +0000</pubDate><atom:updated>2026-08-07T18:20:05.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Jharkhand,போராட்டம்,ஜார்க்கண்ட்,Students,மாணவர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/kfwgmmh7/Ranchi-Students-Protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ranchi Students Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/kfwgmmh7/Ranchi-Students-Protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/jharkhand">ஜார்க்கண்ட்</a> பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் தங்கள் போராட்டத்தை தொடரப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/student-protest">மாணவர்கள்</a> தெரிவித்தனர். </p><p>14-ஆவது JPSC தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்றும் அவர்கள் கூறினர். ஞாயிற்றுக்கிழமைக்குள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாநில சட்டமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.</p><h2>போராட்டம் தொடரும்:</h2><p>அரசுக்கும், 'JPSC/JSSC சீர்திருத்த மன்றத்தின்' 10 பேர் கொண்ட குழுவுக்கும் இடையிலான முதல் கட்டப் பேச்சுவார்த்தை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது.</p><p>"ஜார்க்கண்ட் அரசுடனான கூட்டம் சுமூகமான சூழலில் நடைபெற்றது. எங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அரசு உறுதியளித்தது. இருப்பினும், 14-ஆவது JPSC தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளோம்," என்று கூட்டத்திற்குப் பிறகு 'JPSC/JSSC சீர்திருத்த மன்றத்தின்' தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார்.</p><h2>விரைவில் தீர்வு:</h2><p>மாணவர்களின் கவலைகள் குறித்து அரசு உணர்வுப்பூர்வமாக செயல்படுவதாக மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி துறை அமைச்சர் சுதிவ்யா குமார் தெரிவித்தார்.</p><p>"போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் குழுவை நாங்கள் சந்தித்தோம். அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு உணர்வுப்பூர்வமாக உள்ளது மற்றும் அவற்றை அனுதாபத்துடன் பரிசீலிக்க தயாராக உள்ளது. இதற்கான தீர்வு விரைவில் தெரியவரும்," என்று குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.</p><p>மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் குழுவினர் எடுத்துரைத்துள்ளதாக அமைச்சர் தீபிகா பாண்டே சிங் தெரிவித்தார்.</p><h2>சுதந்திர விசாரணை:</h2><p>"முதலமைச்சர் மாணவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளார், விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும்," என்று அவர் கூறினார்.</p><p>இதற்கிடையில், கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தேவேந்திர மஹ்தோ தலைமையிலான மற்றொரு போராட்ட குழு, பேச்சுவார்த்தைக்காக அரசிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாக தெரிவித்தது.</p><p>பேச்சுவார்த்தைக்காக எட்டு பேர் கொண்ட குழுவின் பெயர்களை அரசுக்கு அளித்துள்ளதாக மஹ்தோ தலைமையிலான குழு கூறியது. 14-ஆவது JPSC தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ. அல்லது மாநிலத்திற்கு வெளியேயுள்ள ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை கொண்டு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.</p><p>ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையத்தின் (JPSC) பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான போராட்டம் வெள்ளிக்கிழமையுடன் 14-வது நாளை எட்டியது; இதில் ஆறு போராட்டக்காரர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 பைசா உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/national/rupee-settles-with-5-paise-gain-at-95-point-17-against-us-dollar</link><comments>https://www.maalaimalar.com/news/national/rupee-settles-with-5-paise-gain-at-95-point-17-against-us-dollar#comments</comments><guid isPermaLink="false">34411ebc-11cc-4d9e-8c1a-0038a48c6b6f</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:49:57 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:49:57.185Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்க டாலர்,இந்திய ரூபாய் மதிப்பு,Indian Rupee Value,US dollar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/2ekev7bv/IndianRupee001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய ரூபாயின் மதிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/2ekev7bv/IndianRupee001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறை வர்த்தக சூழல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு வரவு ஆகியவற்றின் ஆதரவால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா உயர்ந்து, ஒரு டாலருக்கு ₹95.17 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.</p><p>அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் சற்று வலுவான நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. நாள் முழுவதும் டாலருக்கு எதிராக ரூபாய் குறுகிய வரம்பில் ஏற்ற, இறக்கத்துடன் நகர்ந்தாலும், இறுதியில் முந்தைய வர்த்தக நாளை விட 5 பைசா உயர்வுடன் முடிவடைந்தது.</p><h2>ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள்</h2><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மாற்றம், அமெரிக்க டாலரின் வலிமை, உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் முதலீட்டாளர்களின் வர்த்தக மனநிலை ஆகியவை ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக உள்ளன. அதே நேரத்தில், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் காணப்பட்ட உற்சாகமான வர்த்தகம் மற்றும் சில வெளிநாட்டு முதலீட்டு வரவுகள் ரூபாயின் மதிப்பை ஆதரித்ததாக நாணய சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.</p><p>இருப்பினும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் கொள்கை குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் சர்வதேச நிதிச் சந்தைகளின் போக்கு ஆகியவை வரும் நாட்களில் ரூபாயின் நகர்வை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும் என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சிகளை குறிவைத்து ரிஜிஜு பேசிய கருத்துகள் மக்களவைக் குறிப்பில் இருந்து நீக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/remarks-made-by-rijiju-in-ls-targeting-opposition-expunged</link><comments>https://www.maalaimalar.com/news/national/remarks-made-by-rijiju-in-ls-targeting-opposition-expunged#comments</comments><guid isPermaLink="false">855700a4-39e1-49b2-8223-a3b5423bccfe</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:09:24 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:09:24.785Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,Amit Shah,அமித் ஷா,Kiren Rijiju,கிரண் ரிஜிஜு,parliament</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/9fo0reur/KirenRijiju0708.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிரண் ரிஜிஜு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/9fo0reur/KirenRijiju0708.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களவையில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியபோது, எதிர்க்கட்சிகளை விமர்சித்து தெரிவித்த சில கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவை நடவடிக்கைகளின் போது, அரசின் செயல்பாடுகள் மற்றும் மசோதாக்கள் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ரிஜிஜு, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது.</p><p>இதையடுத்து, ரிஜிஜுவின் சில கருத்துகள் அவை விதிமுறைகளுக்கு முரணானவை என்றும், அவை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மக்களவைத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவை மரபுகளுக்கும் விதிகளுக்கும் ஒவ்வாத சில வார்த்தைகள் மற்றும் குறிப்புகளை அதிகாரப்பூர்வ பதிவிலிருந்து நீக்க உத்தரவிட்டார்.</p><h2>அவைக்கு வராத அமித் ஷா</h2><p>நாடாளுமன்ற நடைமுறைகளின்படி, அவையில் பேசப்படும் கருத்துகள் அவதூறாகவோ, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாகவோ அல்லது அவையின் கண்ணியத்தை பாதிக்கும் வகையிலோ இருந்தால், அவற்றை பதிவிலிருந்து நீக்குவதற்கு மக்களவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. நீக்கப்பட்ட கருத்துகள் அதிகாரப்பூர்வ அவைக் குறிப்பில் இடம்பெறாது.</p><p>இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், நாடாளுமன்ற விவாதங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற வேண்டும் என்பதையும், அவை மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டியது அவசியம் என்பதையும் இந்த நடவடிக்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.</p><h2>தகாத வார்த்தையை பயன்படுத்திய கிரண் ரிஜிஜு</h2><p>உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவை மற்றும் மாநிலங்களைவக்கு வராதது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு நாடளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் ரிஜிஜு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், எந்த அமைச்சர் அவைக்கு வர வேண்டும் என்பதை எதிர்க்கட்சியால் தீர்மானிக்க முடியாது என்று ரிஜிஜு என்றார். அப்போது சில வார்த்தைகளை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.</p><p>அமித் ஷா தினந்தோறும் நாடாளுமன்றத்திற்கு வருகை தருகிறார். நள்ளிரவு வரை அங்கேயே இருக்கிறார் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது, இரவு நேரத்தில் போனில் அழைக்கக் கூடாது: வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-threats-no-late-night-calls-rbi-issues-new-rules-for-loan-recovery</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-threats-no-late-night-calls-rbi-issues-new-rules-for-loan-recovery#comments</comments><guid isPermaLink="false">e1143381-cfe8-4b80-8081-bd8eea8152cf</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:44:37 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:44:37.583Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,வங்கி கடன்,Bank loan,ஆர்பிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/yq6wplxz/RBI0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RBI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/yq6wplxz/RBI0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடன் வசூல் நடவடிக்கைகளில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் தொல்லைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளன. கடன் வசூல் நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், மனிதநேயத்துடனும் நடைபெற வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.</p><h2>இரவு நேரங்களில் போனில் அழைக்கக் கூடாது</h2><p>புதிய விதிகளின்படி, கடன் வசூல் முகவர்கள் கடன் வாங்கியவர்களை மிரட்டவோ, அவமதிக்கவோ, தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தவோ கூடாது. அதிகாலை அல்லது இரவு நேரங்களில் தொடர்ந்து அழைத்து தொந்தரவு செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து வசூல் அழைப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், வசூல் முகவர்கள் தங்களது அடையாளத்தை தெளிவாக தெரிவிக்க வேண்டும். அவர்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். கடன் வாங்கியவரின் தனியுரிமையை மதித்து, தொழில்முறை முறையில் மட்டுமே நடந்து கொள்ள வேண்டும் என RBI வலியுறுத்தியுள்ளது. அடமானச் சொத்துகளை கைப்பற்றுவதற்கும் தெளிவான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.</p><h2>கடன் வசூல் நடவடிக்கைகள் நியாயமானதாக இருக்க வேண்டும்</h2><p>இந்த புதிய விதிகள் மூலம் கடன் வாங்கியவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வசூல் நடைமுறைகளும் ஒழுங்குபடுத்தப்படும் என்று RBI தெரிவித்துள்ளது. இதனால் கடன் வசூல் நடவடிக்கைகள் நியாயமான, வெளிப்படையான மற்றும் மரியாதையான முறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஏன் ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடக்கூடாது? - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆலோசனை!</title><link>https://www.maalaimalar.com/news/national/why-shouldnt-the-jantar-mantar-protest-site-be-closed-delhi-high-court-suggests-to-the-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/national/why-shouldnt-the-jantar-mantar-protest-site-be-closed-delhi-high-court-suggests-to-the-central-government#comments</comments><guid isPermaLink="false">377c946f-a425-497d-84ff-7664e43b0e0d</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:40:49 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:40:49.746Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Centre,Delhi High Court,Jantar Mantar,டெல்லி உயர் நீதிமன்றம்,ஜந்தர் மந்தர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/a9ua8oyk/New-Project-2026-08-07T201024.121.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஏன் ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடக்கூடாது? - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆலோசனை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/a9ua8oyk/New-Project-2026-08-07T201024.121.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை ஏன் மூடக்கூடாது எனவும், அதனை ஏன் பரிசீலிக்கவில்லை எனவும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி, கேள்வியும் எழுப்பியுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.</p><p>போராட்டங்கள் மூலம் ஒட்டுமொத்த தேசிய தலைநகரையும் “முன்னெச்சரிக்கையின்றி முடக்குவது அல்லது பணயக்கைதியாக மாற்றுவது” ஏன் அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி அமித் மகாஜன் கேள்வி எழுப்பியுள்ளார். </p><h2>வழக்கு</h2><p>ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது டெல்லி காவல்துறை பதிலளிக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய தலித் கிறிஸ்தவ உரிமைகள் பாதுகாப்புக் குழு தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது நீதிபதி மகாஜன் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் கோஸ் , காவல்துறை தங்கள் மனுவை நிராகரிக்கவும் இல்லை, போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவும் இல்லை, கிடப்பில் போட்டுள்ளது என தெரிவித்தார். </p><p>இதற்கு,“என் கருத்துப்படி, நீங்கள் ஏன் இதை மூடிவிடக் கூடாது? இது டெல்லிக்குள் நடக்கக் கூடாது” என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மாவிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். </p><p>அதற்கு, டெல்லியில் எந்தவிதமான போராட்டங்களும் நடைபெறக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடா என்று கோஸ் கேள்வி எழுப்பினார்.</p><p>அதற்கு பதிலளித்த நீதிபதி மகாஜன், “அதை காவல்துறையினர்தான் முடிவு செய்ய வேண்டும். நகரத்திற்குள் போராட்டங்களை நடத்த அனுமதிக்கும் வசதி அல்லது சூழல் அவர்களுக்கு இல்லை என்றால் முடிவு அவர்களுடையது” என்றார்.</p><p>உடனே, “சரி, டெல்லியில் ஜனநாயகப்பூர்வமான, அமைதியான போராட்டங்கள் நடத்தப்படாது என்று அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கட்டும். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.” என கோஸ் பதிலளித்தார்.  </p><p>இந்தப் போராட்டங்கள் ஜனநாயகமானவையா அல்லது ஜனநாயகமற்றவையா என்பதைப் பற்றித் தாம் பேசவில்லை என்றும், மாறாக "நகரம் ஏன் பணயக் கைதியாக வைக்கப்பட வேண்டும்?" என்பதைப் பற்றியே பேசுவதாகவும் நீதிபதி மகாஜன் கூறினார்.</p><p>இதற்கிடையில், அப்பகுதியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 அமலில் உள்ளதாகவும், ஆகஸ்ட் 15 நெருங்கி வருவதாகவும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சர்மா தெரிவித்தார்.</p><p>“பாதுகாப்புப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. 75 பேர் எப்போது 75,000 பேராக மாறுவார்கள் என்று எங்களுக்குத் தெரியாது” என்றும் ஷர்மா கூறினார்.</p><p>தொடர்ந்து “தனிப்பட்ட முறையில் நீங்கள் என்னிடம் கேட்டால், எனக்கு வேறுபட்ட கருத்து உள்ளது. ஆம்புலன்ஸ்கள் ஆகட்டும் அல்லது வேறு எதுவாகட்டும், நகரம் முழுவதும் முடங்கிக் கிடக்கும்போது, ​​போராட்டம் ஏன் நகரத்தில் நடக்க வேண்டும்?” என்று நீதிபதி மகாஜன் மீண்டும் வலியுறுத்தினார். </p><p>இறுதியாக, மனுமீது நாளைக்குள் (ஆக.8) முடிவெடுக்குமாறு உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய - சீன எல்லைப் பிரச்னைகள்: தூதரக மற்றும் ராணுவ பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண இருநாடுகளும் ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-china-border-issues-both-nations-agree-to-seek-a-resolution-through-diplomatic-and-military-talks</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-china-border-issues-both-nations-agree-to-seek-a-resolution-through-diplomatic-and-military-talks#comments</comments><guid isPermaLink="false">64484378-c931-45ef-8502-f5fcca7ab39e</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:23:05 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:23:05.616Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,China,சீனா,border issues,எல்லைப் பிரச்னைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/xewecfl0/New-Project-2026-08-07T171716.651.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய - சீன எல்லைப் பிரச்னைகள்: தூதரக மற்றும் ராணுவ பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண இருநாடுகளும் ஒப்புதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/xewecfl0/New-Project-2026-08-07T171716.651.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே இருக்கும் தீர்க்கமுடியாத எல்லைப் பிரச்னைகளை களைய தூதரக மற்றும் ராணுவ ரீதியிலான வழிமுறைகளை தொடர்ந்து மேற்கொள்ள இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. </p><p>டெல்லியில் நேற்று (ஆக.6) நடைபெற்ற இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் குறித்த ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயற்குழுவின் 36வது கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. </p><p>கூட்டத்தில் எல்லை நிர்ணயம், எல்லை மேலாண்மை, எல்லைத் தாண்டிய ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தியக் குழுவிற்கு வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜித் கோஷ் தலைமை தாங்கினார். அதே சமயம் சீனத் தரப்பிற்கு சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல்சார் விவகாரங்கள் துறையின் தலைமை இயக்குநர் ஹூ யான்சி தலைமை தாங்கினார்.</p><p>எல்லை தாண்டிய ஆறுகள் தொடர்பான நிபுணர் மட்டக் குழுவின் கூட்டம் விரைவில் நடைபெற வேண்டியதன் அவசியமும், மேல்நிலைத் திட்டங்கள் தொடர்பான தொழில்நுட்ப விவரங்களைப் பகிர்ந்துகொள்ளவும் இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது. </p><h2>35வது WMCC சந்திப்பு</h2><p>முன்னதாக 35வது மேற்கு ஆசிய ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டம் மே 27 அன்று பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில், இரு தரப்பினரும் இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்ததுடன், எல்லைப் பகுதிகளில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மூன்று நாட்கள் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்: காங்கிரஸ் கொறடா உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-issues-whip-to-its-mps-in-rs-ls-asks-them-to-be-present-on-aug-10-to-12</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-issues-whip-to-its-mps-in-rs-ls-asks-them-to-be-present-on-aug-10-to-12#comments</comments><guid isPermaLink="false">2cd471a7-7ac9-42e9-998f-89e8bf4735c3</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:17:48 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:17:48.945Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,நாடாளுமன்றம்,parliament,தொகுதி மறுவரையறை மசோதா,Delimitation Bill</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/aq0aoqma/Parliament0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாடாளுமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/aq0aoqma/Parliament0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மிக முக்கியமான விவகாரங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதால், மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள தங்கள் கட்சி உறுப்பினர்கள் ஆகஸ்ட் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அவையில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கொறடாக்கள் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இந்த மூன்று நாட்களிலும் தங்கள் கட்சி உறுப்பினர்கள் அவையில் இருப்பதை உறுதி செய்யுமாறு இந்தியா (INDIA) கூட்டணியில் உள்ள அனைத்துக் கூட்டணி கட்சிகளிடமும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>தொகுதி வரையறை மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு</h2><p>சர்ச்சைக்குரிய வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 (FCRA Bill) அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கும் நிறைவேற்றத்திற்கும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என்ற தகவல்களுக்கு மத்தியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாவையும் அரசு பரிசீலித்து வருவதாகப் பேசப்படுகிறது.</p><p>மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா (Chief Whip) ஜெய்ராம் ரமேஷ் பிறப்பித்த three-line உத்தரவில், "திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (அதாவது ஆகஸ்ட் 10, 11 மற்றும் 12 தேதிகளில்) மாநிலங்களவையில் மிக முக்கியமான விவகாரங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.</p><p>மாநிலங்களவையில் உள்ள காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அனைவரும், ஆகஸ்ட் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் (திங்கள், செவ்வாய் மற்றும் புதன்) காலை 11 மணி முதல் அவை ஒத்திவைக்கப்படும் வரை தவறாமல் அவையில் இருக்கவும், கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிக முக்கியமான விஷயமாகக் கருதப்பட வேண்டும்," என்று ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதேபோன்றதொரு உத்தரவை மக்களவையில் உள்ள கட்சி உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா கே. சுரேஷ் பிறப்பித்தார்.</p><h2>தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற 3-ல் 2 பங்கு ஆதரவு தேவை</h2><p>அடுத்த வாரத்திற்கான அரசின் தற்காலிக அலுவல் பட்டியலை குறிப்பிடும்போது, ​​பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், FCRA மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்துவதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.</p><p>FCRA மசோதாவை நிறைவேற்ற எளிய பெரும்பான்மை போதுமானது. ஆனால் அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை இந்தக் கூட்டத்தொடரில் கொண்டுவராவிட்டால் அடுத்த கூட்டத்தொடரில் கொண்டுவரலாம் என்றும், அப்படியிருந்தாலும் 2029 மக்களவைத் தேர்தலுக்குள் அதைச் செயல்படுத்தப் போதுமான நேரம் இருக்கும் என்றும் அரசாங்கத் தரப்பில் ஒரு கருத்து நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>‘காங்கிரஸ்தான் என்னை விலகுமாறு கேட்டுக்கொண்டது’ -  கர்நாடகா சட்டசபை மேலவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பசவராஜ் ஹொரட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/national/it-was-the-congress-that-asked-me-to-step-down-basavaraj-horatti-who-resigned-as-karnataka-legislative-council-chairman</link><comments>https://www.maalaimalar.com/news/national/it-was-the-congress-that-asked-me-to-step-down-basavaraj-horatti-who-resigned-as-karnataka-legislative-council-chairman#comments</comments><guid isPermaLink="false">d60d128d-a22a-4752-bd84-45ef5d9c4973</guid><pubDate>Fri, 07 Aug 2026 09:23:53 +0000</pubDate><atom:updated>2026-08-07T09:23:53.220Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,கர்நாடகா,Karnataka,Basavaraj Horatti,பசவராஜ் ஹொரட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/6uw452rz/New-Project-2026-08-07T143703.962.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘என்னை ஏன் காங்கிரஸ் விலகச்சொன்னது எனத் தெரியவில்லை’ - சட்டசபைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பசவராஜ் ஹொரட்டி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/6uw452rz/New-Project-2026-08-07T143703.962.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளை ஏற்று, கர்நாடக சட்டசபை மேலவைத் தலைவர் பதவியை பசவராஜ் ஹொரட்டி ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்.,</p><p>“ஆளும் கட்சி நான் பதவி விலக வேண்டும் என விரும்புகிறது. முதலமைச்சர் (டி.கே.சிவகுமார்) என்னிடம் தொலைபேசியில் இரண்டு முறை பேசினார். நேற்று, அவர் என்னை நேரில் சந்தித்து, நான் பதவி விலகுமாறு கூறும்படி கட்சியின் மேலிடம் தனக்கு உத்தரவிட்டதாகத் தெரிவித்தார். </p><p>நான் பதவி விலகாவிட்டால், எனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என்றும் அவர் கூறினார்.” என தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், தாம் ‘மரியாதையுடன்’ பதவி விலக விரும்புவதாகவும், ஆகஸ்ட் 14  அன்று ராஜினாமா செய்ய இருந்ததாகவும், இந்த நிகழ்வுகளால் தான் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் சட்டசபை மேலவைத் தலைவரையும், சட்டமன்ற சபாநாயகரையும் தேர்ந்தெடுப்பது சபையின் தனிப்பட்ட உரிமை என்றும், கட்சியின் மேலவைத் தலைமையின் உரிமையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். </p>]]></content:encoded></item><item><title>மேகவெடிப்பால் கடும்பாதிப்பு: பிரதமர் மோடியை சந்தித்து நிவாரண தொகுப்பு கேட்பேன்- உமர் அப்துல்லா</title><link>https://www.maalaimalar.com/news/national/cm-omar-to-personally-take-flood-package-for-rajouri-poonch-with-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/cm-omar-to-personally-take-flood-package-for-rajouri-poonch-with-pm-modi#comments</comments><guid isPermaLink="false">6fe65dc1-f493-4274-abbd-bdd0083639cd</guid><pubDate>Fri, 07 Aug 2026 09:21:31 +0000</pubDate><atom:updated>2026-08-07T09:21:31.266Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜம்மு காஷ்மீர்,jammu kashmir,omar abdullah,உமர் அப்துல்லா,heavy rains,pm modi,பிரதமர் மோடி,கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/el0vcs0y/Omar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உமர் அப்துல்லா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/el0vcs0y/Omar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதோடு மேகவெடிப்பு (cloudbursts) ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் பலர் உயிரிழந்தனர். வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.</p><p>இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பாதிக்கப்பட்ட இடத்தை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். பின்னர், சேதமதிப்புகளை மதிப்பிட்டு, சிறப்பு நிதி வழங்கும்படி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.</p><p>வெள்ள பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம், மறுவாழ்வு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தபின், செய்தியாளர்களை சந்தித்தார்.</p><h2>அப்போது உமர் அப்துல்லா கூறியதாவது:-</h2><p>சில விஷயங்களை நம்மால் சுயமாக சமாளிக்க முடியும் என்றாலும், சீரமைப்பு பணிகளுக்கான முழுச் செலவையும் ஏற்கும் நிதித்திறன் ஜம்மு காஷ்மீரிடம் இல்லை என்பதே யதார்த்தம். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு, ஜம்மு காஷ்மீருக்காக மத்திய அரசு சுமார் 1400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத் தொகுப்பிற்கு ஒப்புதல் அளித்தது. இந்த முறையும், நாங்கள் ஒரு விரிவான திட்டத் தொகுப்பைத் தயாரித்து, மத்திய அரசின் உதவியைக் கோருவோம்.</p><h2>பிரதமரை நேரில் சென்று சந்திப்பேன்- உமர் அப்துல்லா</h2><p>வெள்ளம், திடீர் வெள்ளம் மற்றும் மேகவெடிப்பு ஆகியவை இயற்கை பேரிடர்களாகக் கருதப்படுகின்றன. எனவே, மத்திய அரசின் உதவியைக் கோருவதற்கு முன்னதாக இவை குறித்து தனியாக அறிவிப்பு ஏதும் வெளியிடத் தேவையில்லை. மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு தேவையான நிதியுதவியைக் கோரும் வகையிலான முன்மொழிவு தயாரானதும், அதை நானே நேரில் சென்று பிரதமரிடம் சமர்ப்பிப்பேன்.</p><p>ஜூலை 19-ந்தேதி கனமழை ஏற்பட்டது நிவாரணம், மறுவாழ்வு மற்றும் சீரமைப்பு ஆகிய 3 வடிவுகளில் மீட்புப் பணி நடைபெற்றது. மனித உயிரிழப்புகளை குறைப்பதே எங்களின் முதல் முன்னுரிமையாக இருந்தது. இந்த மாவட்டத்தில் நான்கு விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானதை எண்ணி வருந்துகிறோம். மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் இரவோடு இரவாக உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கக் கூடும்.</p><p>உயிரிழப்புகளை குறைப்பதே முதல் முன்னுரிமையாக இருந்தது. அதன்பிறகு, காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டறிவதன் மூலம் அவர்களை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது நாங்கள் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்புப் பணிக்கான கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறோம். இக்கட்டத்தில், தற்காலிக மற்றும் நிரந்தர நடவடிக்கைகள் மூலம் சேதமடைந்த உள்கட்டமைப்புகளும் வாழ்வாதாரங்களும் சீரமைக்கப்படும்.</p><h2>SDRF நிவாரணத் தொகையை உயர்த்த முடிவு</h2><p>தற்போதைய SDRF இழப்பீட்டு விகிதங்கள் ஏழு முதல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டவை. அதன்பிறகு, பணவீக்கம் மற்றும் கட்டுமானச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மிகவும் யதார்த்தமான இழப்பீடு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், SDRF நிவாரணத் தொகையை உயர்த்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.</p><p>இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>விபத்தில் எலும்பு முறிவு.. அட்டைப் பெட்டியில் கட்டுப் போட்டு பீகார் அரசு மருத்துவமனை நூதன வைத்தியம் </title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-govt-hospital-row-cardboard-used-instead-of-plaster-for-fractured-leg-sparks-probe</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-govt-hospital-row-cardboard-used-instead-of-plaster-for-fractured-leg-sparks-probe#comments</comments><guid isPermaLink="false">dfea8937-59e8-4621-8c84-14e8e6341bf7</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:13:36 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:13:36.679Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மருத்துவமனை,Government Hospital,பீகார்,Bihar,வைரல்,viral</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/duo9ub4e/tn-35.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பீகார் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பீகார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/duo9ub4e/tn-35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் அரசு மருத்துவமனையில் முறிந்த காலிற்கு பிளாஸ்டருக்குப் பதிலாக அட்டைப் பெட்டி வைத்துக் கட்டுப் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>விபத்து </h2><p>பீகார் மாநிலம் பெகுசராய்  மாவட்டத்தில் நவ்கோதி காவல் எல்லைக்குட்பட்ட மகேஷ்வரா கிராமத்தைச் சேர்ந்த குணால் குமார் என்பவர், ஆகஸ்ட் 3 மாலை நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்தார். </p><p>அவரது கால் முறிந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மஞ்சவுல்<a href="https://www.maalaimalar.com/topic/government-hospital"> அரசு மருத்துவமனையில்</a> சேர்த்தனர்.</p> <h2>சிகிச்சை</h2><p>மருத்துவமனை ஊழியர்கள் அவரது முறிந்த காலின் இருபுறமும் மருந்துப் பொட்டலங்களை வைக்க பயன்படுத்தப்படும் அட்டைப் பெட்டித் துண்டுகளை வைத்து, கயிறு மற்றும் பேண்டேஜ் துணியால் இறுக்கமாகக் கட்டினர்.</p><p>பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை பெகுசராய் சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>விளக்கம்</h2><p>இச்சம்பவம் குறித்துப் பேசிய மருத்துவமனையின் பொறுப்பு அதிகாரி டாக்டர் அபினவ் பிரியதர்ஷி, ஊழியர்களின் நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளார்.</p><p>எலும்பு முறியும்போது அப்பகுதி அசையாமல் இருக்க வேண்டியது அவசியம் என்றும், அன்றைய தினம் மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரோ அல்லது பிளாஸ்டர் போடும் வசதியோ இல்லாததால், நோயாளிக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்கு அனுப்பவே அங்கு கிடைத்த அட்டைப் பெட்டியைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.</p> <h2>விசாரணை</h2><p>பெகுசராய் சிவில் சர்ஜன் டாக்டர் அசோக் குமார் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>எந்தச் சூழலில் அட்டைப் பெட்டி பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து ஆராய்ந்து தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மாற்றியமைக்க தமிழக அரசு கோரவில்லை- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/centre-says-tamil-nadu-has-not-sought-changes-to-parandur-green-airport-plan</link><comments>https://www.maalaimalar.com/news/national/centre-says-tamil-nadu-has-not-sought-changes-to-parandur-green-airport-plan#comments</comments><guid isPermaLink="false">8ba3612d-d12a-4920-84d3-bceedb473d4a</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:00:52 +0000</pubDate><atom:updated>2026-08-07T03:00:52.628Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Union Minister,நாடாளுமன்றம்,Parandhur Airport,parliament,பரந்தூர் விமான நிலைய திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/prpsr9a9/Dhayanithi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dhayanithi maran- Murlidhar Mohol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/prpsr9a9/Dhayanithi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரந்தூர் விமான நிலையத்தை மாற்றியமைக்க தமிழக அரசு கோரவில்லை என விமான நிலையம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.</p><h2>பரந்தூர் விமான நிலையம்</h2><p>நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், பரந்தூர் பசுமை விமான நிலையத்தை தொடர்வது, அதில் மாற்றங்கள் செய்வது அல்லது அதை திரும்பப் பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு ஏதேனும் கடிதம் வரப்பெற்றதா? என கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதில் அளித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் முரளிதர் மோகல் கூறியதாவது:-</p><h2>கடிதம் வரவில்லை</h2><p>'<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">பரந்தூர்</a> பசுமை விமான நிலையத்தை மாற்றியமைப்பது அல்லது திரும்பப் பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு கடிதம் எதுவும் வரவில்லை.</p><p>7.4.2025 அன்று பரந்தூரில் பசுமை விமான நிலையத்தை அமைப்பதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்தது.</p><p>இந்த கொள்கையின்படி, விமான நிலைய திட்டங்களை செயல்படுத்துவதற்கான பொறுப்பு (மாநில அரசு திட்டத்தை முன்மொழிந்தவராக இருக்கும் பட்சத்தில்) சம்பந்தப்பட்ட மாநில அரசு உள்பட சம்பந்தப்பட்ட விமான நிலைய அமைப்பாளரையே சாரும்.</p><p>விமான நிலைய கட்டுமானத்துக்கான காலக்கெடு நிலம் கையகப்படுத்துதல். கட்டாய அனுமதிகள் பெறுதல், நிதி ஒருங்கிணைப்பு போன்ற பல காரணிகளைச் சார்ந்தே அமையும்' என பதில் அளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>5 ஆண்டுகளில் 262 சிஆர்பிஎப் வீரர்கள் தற்கொலை.. பணியின்போது மட்டும் 202 பேர் - காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/crpf-suicides-surge-262-personnel-die-by-suicide-in-5-years-majority-constables</link><comments>https://www.maalaimalar.com/news/national/crpf-suicides-surge-262-personnel-die-by-suicide-in-5-years-majority-constables#comments</comments><guid isPermaLink="false">148b30ee-0b8b-4ad3-87ee-abe7a9588826</guid><pubDate>Fri, 07 Aug 2026 02:17:37 +0000</pubDate><atom:updated>2026-08-07T02:17:37.214Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,suicide,crpf,சிஆர்பிஎப்,சிஆர்பிஎப் வீரர்கள்,CRPF personnel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zusgshc0/tn-32.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிஆர்பிஎப் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிஆர்பிஎப் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zusgshc0/tn-32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் மிகப்பெரிய மத்திய ஆயுதக் காவல் படையான மத்திய ரிசர்வ் போலீஸ் படையில்  (<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D">சிஆர்பிஎப்</a>) கடந்த  5 ஆண்டுகளில் 262 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது. </p><p>இவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் கான்ஸ்டபிள் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் நிலைகளில் உள்ள கீழ்நிலை வீரர்கள் ஆவர்.</p><p>இதில் 2025ஆம் ஆண்டில் மட்டும் 59 அதிகபட்சமாக வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.</p><h2>புள்ளிவிவரங்கள்</h2><p>அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் படி, 2021 முதல் 2025 வரை மொத்தம் 262 சிஆர்பிஎப் வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.</p><p>இதில் 202 வீரர்கள் (77%-க்கும் மேல்) பணியில் இருந்த போதே உயிரிழந்துள்ளனர். எஞ்சியவர்கள் விடுமுறையில் சென்றிருந்த போது தற்கொலை செய்துள்ளனர்.</p><p>2021 இல் 57 வீரர்கள், 2022 இல் 43 வீரர்கள், 2023 இல் 57 வீரர்கள், 2024 இல் 46 வீரர்கள், 2025 இல் 59 வீரர்கள், 2026 ஜூலை வரையிலான 19 சம்பவங்களையும் சேர்த்துக் கொண்டால்  281 பேர் தற்கொலை மூலம் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. </p><p>உயிரிழந்த 281 வீரர்களில் 237 பேர் (84%) , கான்ஸ்டபிள், ஹெட்கான்ஸ்டபிள் உள்ளிட்ட கீழ்நிலை வீரர்கள் 43 பேர் எஸ்ஐ, ஏஎஸ்ஐ உள்ளிட்ட உதவி அதிகாரிகள், ஒருவர் உயர் அதிகாரி</p><h2>தற்கொலைக்கான காரணங்கள்</h2><p>பெரும்பாலான தற்கொலை வழக்குகள் குடும்பப் பிரச்சினைகளுடன் தொடர்புடையவை என்றும், கடுமையான பணிச்சுமை மற்றும் ஓய்வில்லாத கடினமான காவல் பணிகளும் இதற்கு முதன்மை காரணங்களாக அமைகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>சுமார் 3.25 லட்சம் வீரர்களைக் கொண்ட சிஆர்பிஎப் படையில், எந்த நேரத்திலும் 95% முதல் 97% வரையிலான வீரர்கள் பயங்கரவாத எதிர்ப்பு, தீவிரவாத ஒழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.</p><p>வீரர்களின் உடல் மற்றும் மன நலனை உறுதி செய்யப் பல சிறப்பு நடவடிக்கைகளை CRPF நிர்வாகம் தொடங்கித் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஒரே ஆண்டில் 23 நாடுகளுக்கு பயணம்..! பிரதமர் மோடியின் பயணச்செலவு எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-foreign-visits-cost-details</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-foreign-visits-cost-details#comments</comments><guid isPermaLink="false">178aeb7e-6925-4102-8409-3b2368ae35e2</guid><pubDate>Fri, 07 Aug 2026 02:11:08 +0000</pubDate><atom:updated>2026-08-07T02:11:08.873Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,நாடாளுமன்றம்,pm modi,central government,parliament,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/vjyd54yf/modi1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/vjyd54yf/modi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பிரதமர் மோடி கடந்த 2025-ம் ஆண்டு பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று வந்த பயணச்செலவு ரூ.187 கோடி என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-asks-people-to-buy-handloom-products-share-get-ready-with-me-videos">பிரதமர் மோடியின்</a> வெளிநாட்டு பயணச்செலவினம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் பல்வேறு கேள்வி எழுப்பினர்.</p> <h2>வெளிநாட்டு பயணங்கள்</h2><p>குறிப்பாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் பிரதமர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அவற்றுக்கான ஆண்டு செலவின விவரங்களை சஞ்சய் சிங், சிவதாசன் ஆகிய எம்.பி.க்கள் கேட்டிருந்தனர்.</p><p>உறுப்பினர்களின் இந்த கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை இணை மந்திரி பபித்ரா மார்கரீட்டா எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் பிரதமரின் வெளிநாட்டு பயனா விவரங்கள் மற்றும் அவற்றுக்கான செலவினங்களை குறிப்பிட்டு இருந்தார்.</p> <h2>அமெரிக்கா, சீனா, பிரான்ஸ்</h2><p>அதன்படி, பிரதமர் மோடி கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரான்ஸ் உள்பட 23 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்கு ஆன மொத்த செலவு ரூ.187 கோடி ஆகும்.</p><p>இதில் முக்கிய நாடுகளுக்கான தனித்தனி செலவுகளை பொறுத்தவரை பிரான்ஸ் (ரூ.25.59 கோடி), அமெரிக்கா (ரூ.16.54 கோடி), சவுதி அரேபியா (ரூ.15.54 கோடி), பிரேசில் (ரூ.17.72 கோடி), சீனா (ரூ.10.59 கோடி), இங்கிலாந்து (ரூ.9.91 கோடி) ஆகும்.</p> <p>மேலும் இந்த ஆண்டு இதுவரை பிரதமர் மோடியின் பயணச்செலவு ரூ.74.58 கோடி என மந்திரி அளித்த பதிலில் கூறியுள்ளார். இது கடந்த மாதம் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மேற்கொண்ட பயணத்துக்கான செலவும் சேர்க்கப்பட்டு உள்ளது என கூறப்பட்டு உள்ளது.</p><h2>4 ஆண்டுகளில் ரூ.295 கோடி</h2><p>முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதேபோன்று மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடியின் (2021-2024) வெளிநாட்டு பயணச் செலவுகளை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மத்திய அரசு</a> வெளியிட்டு இருந்தது.</p> <p>அதன்படி கடந்த 2021-2024 வரையிலான 4 ஆண்டு காலத்துக்கான பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு ரூ.295 கோடி என குறிப்பிடப்பட்டு இருந்தது.</p><p>இதில் 2021-ம் ஆண்டு செலவு ரூ.36 கோடி, 2022-ம் ஆண்டு செலவு ரூ.55.82 கோடி, 2023-ம் ஆண்டு செலவு ரூ.93 கோடி, 2024-ம் ஆண்டு செலவு ரூ.109 கோடி என ஆண்டு வாரியான செலவு விவரங்களையும் மத்திய அரசு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அவற்றையும் மந்திரி சுட்டிக்காட்டினார்.</p> <h2>இருதரப்பு ஒப்பந்தங்கள்</h2><p>பிரதமரின் வெளிநாட்டு பயணச்செலவு மட்டுமின்றி இந்த பயணங்களின்போது ஏற்படுத்தப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பலன் விவரங்கள் குறித்தும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.</p><p>எனவே அது தொடர்பான பட்டியல்களையும் தனது 35 பக்க எழுத்துப்பூர்வ பதிலில் வெளியுறவுத்துறை இணை மந்திரி பபித்ரா மார்கரீட்டா இணைத்து இருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>இனி இலவசம் கிடையாது.. UPI பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம்  - மக்களவையில் மசோதா நிறைவேற்றம் </title><link>https://www.maalaimalar.com/news/national/upi-mdr-charges-lok-sabha-passes-bill-empowering-centre-to-levy-fees-on-digital-payments</link><comments>https://www.maalaimalar.com/news/national/upi-mdr-charges-lok-sabha-passes-bill-empowering-centre-to-levy-fees-on-digital-payments#comments</comments><guid isPermaLink="false">82e9269e-9118-45cc-982c-907bd6bce35b</guid><pubDate>Fri, 07 Aug 2026 01:01:09 +0000</pubDate><atom:updated>2026-08-07T01:01:09.655Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bill,UPI,யுபிஐ,மசோதா,ஆன்லைன் பணப்பரிவர்த்தனை,Online money transaction</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/wsr1q2j6/tn-30.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மக்களவை]]></media:title><media:description type="html"><![CDATA[ மக்களவை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/wsr1q2j6/tn-30.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் <a href="https://www.maalaimalar.com/topic/upi">UPI </a>பணப்பரிவர்த்தனைகளுக்கு MDR எனும் சேவைக்கட்டணத்தை விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் 'வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா' மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.</p><p>2007ஆம் ஆண்டின் 'Payment and Settlement Systems Act' சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த இம்மசோதா விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. </p> <h2>புதிய சேவைக் கட்டணம்</h2><p>டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்புகளைப் பராமரிப்பதற்காக, வங்கிகள் அல்லது கட்டண சேவை நிறுவனங்கள் வியாபாரிகளிடமிருந்து வசூலிக்கும் கட்டணமே Merchant Discount Rate (MDR) ஆகும்.</p><p>2020 ஜனவரி முதல் யு.பி.ஐ மற்றும் RuPay கார்டு பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் முழுமையாக விலக்களிக்கப்பட்டிருந்தது.</p><p>இலவச சேவை முறையை நிதி ரீதியாகத் தொடர்ந்து நடத்துவது கடினம் என இந்திய ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது.</p><p>மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், தேவையான கட்டங்களில் வங்கிகள் மற்றும் சேவை நிறுவனங்கள் MDR கட்டணத்தைச் சேகரிக்க அனுமதி அளிக்கும் சட்டப்பூர்வ அதிகாரம் இனி மத்திய அரசிடம் இருக்கும்.</p> <h2>வாடிக்கையாளர்களுக்கு நிதிச்சுமை</h2><p>அதிகத் தொகை கொண்ட யு.பி.ஐ பரிவர்த்தனைகளுக்கோ அல்லது வணிகர்களின் வருடாந்திர வருவாயை அடிப்படையாகக் கொண்டோ எதிர்காலத்தில் சேவைக்கட்டணம் விதிக்கப்படலாம்.</p><p>தற்போது வணிகர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்றாலும், MDR அறிமுகப்படுத்தப்பட்டால் இந்த நிதிச்சுமை சிறுகச் சிறுகக் கடைசியில் வாடிக்கையாளர்களைச் சென்றடைய வாய்ப்புள்ளது.</p><h2>MDR</h2><p>தற்போது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு சராசரியாக 1.5% மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 0.9% MDR கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p><p>மேலும், RTGS மற்றும் NEFT போன்ற பிற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஏற்கனவே சேவைக்கட்டணம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் போராட்டம்: அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 11 பேர் குழு அமைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-stir-enters-13th-day-6-on-fast</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-stir-enters-13th-day-6-on-fast#comments</comments><guid isPermaLink="false">2ee8fd8c-78d9-4fd6-b522-7b33ae9d8082</guid><pubDate>Thu, 06 Aug 2026 23:10:18 +0000</pubDate><atom:updated>2026-08-06T23:10:18.946Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Jharkhand,போராட்டம்,ஜார்க்கண்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/uzdf4rbd/Jharkhand-Protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Protest

]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/uzdf4rbd/Jharkhand-Protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/jharkhand">ஜார்க்கண்ட்</a> மாநிலத்தில் ஆள்சேர்ப்பு தேர்வுகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிரான <a href="https://www.maalaimalar.com/topic/protest">போராட்டம்</a> 13-வது நாளை எட்டியது. </p><p>இதில் ஆறு போராட்டக்காரர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்; அதேவேளையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் 11 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர். </p><p>மாலை வரை அரசிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்று மாணவர் தலைவர்கள் கூறியதால், இந்தப் போராட்டம் தொடர்பான இழுபறி நிலை நீடிக்கிறது. </p><h2>11-பேர் குழு:</h2><p>ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் 'JPSC-JSSC சீர்திருத்த மன்றம்' (JPSC-JSSC Reforms Manch) என்ற அமைப்பின் கீழ் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம், சமீப காலங்களில் மாநிலத்தில் மாணவர்கள் முன்னெடுத்த மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.</p><p>"போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அரசு விடுத்த அழைப்பை ஏற்று, எட்டு மாணவர்கள், இரண்டு நிபுணர்கள் மற்றும் ஒரு வழக்கறிஞர் அடங்கிய 11 பேர் கொண்ட குழுவை நாங்கள் அமைத்துள்ளோம்," என்று JPSC-JSSC சீர்திருத்த மன்றத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.</p><p>போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தங்கள் அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என்று முதல்வர் ஹேமந்த் சோரன் கூறிய மறுநாளே, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இந்த முடிவு எடுக்கப்பட்டது.</p><h2>சந்திப்பு:</h2><p>அமைச்சர்கள் தீபிகா பாண்டே சிங் மற்றும் சுதிவ்யா குமார் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட அரசு குழுவினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>ராஞ்சி துணைப் பிரிவு அதிகாரி குமார் ரஜத் மற்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் (சட்டம்-ஒழுங்கு) தனஞ்சய் குமார் ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) இரவு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சந்தித்தனர்.</p><p>"எங்கள் தம்பிமார்களுடன் உரையாடுவதற்கும், அவர்களின் நலம் விசாரிப்பதற்கும் நாங்கள் இங்கு வந்தோம்," என்று துணைப் பிரிவு அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார். மாணவர் குழுவுடன் ஏதேனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்று கேட்டதற்கு, "இல்லை" என்பதே அவரது பதிலாக இருந்தது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் கோரிக்கையை அரசுகள் கேட்டறிய வேண்டும் - ராஞ்சி போராட்டக்காரர்களுக்கு ராகுல் காந்தி ஆதரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-backs-ranchi-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-backs-ranchi-protesters#comments</comments><guid isPermaLink="false">3d4628c1-7990-4f44-bb37-03f45a5b3dcb</guid><pubDate>Thu, 06 Aug 2026 20:17:40 +0000</pubDate><atom:updated>2026-08-06T20:17:40.001Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,protest,Students,மாணவர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ol4pqkuq/Rahul-Gandhi-3.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ol4pqkuq/Rahul-Gandhi-3.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக ராஞ்சியில் போராட்டம் நடத்தும் இளைஞர்களுக்குத் துணை நிற்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. மேலும், ஒவ்வொரு அரசும் மாணவர்கள் கூறுவதை கேட்டு, கல்வி முறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.</p><p>ஜார்க்கண்டில் ஜே.எம்.எம். தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், மாணவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், அவர்களுக்கு நீதி கிடைக்க உதவவும் தொடர்ந்து போராடும் என்று கூறியுள்ளது.</p><p>இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் நடைபெற்ற 'என்னிடம் எதையும் கேளுங்கள்' அமர்வின்போது, ​​ஜார்க்கண்டில் நடக்கும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு காந்தியிடம் கூறப்பட்டது.</p><p>ராகுல் காந்தி வலியுறுத்தல்:</p><p>இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "நாட்டில் நடைபெறும் மாணவர் போராட்டங்கள் கல்வி முறைக்கு எதிரானவை. இதை நான் கோட்டாவிலும் டேராடூனிலும் தெளிவாக கூறியுள்ளேன், அலகாபாத்திலும் கூறுவேன்: நமது கல்வி முறை சீர்குலைந்துவிட்டது; அது கட்டுப்படியாகாததாகவும், ஒடுக்குமுறையானதாகவும் உள்ளது.</p><p>மத்திய அரசாக இருந்தாலும் சரி, ஜார்க்கண்ட் அரசாக இருந்தாலும் சரி, அல்லது காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு அரசும் மாணவர்கள் கூறுவதைக் கேட்டு, கல்வி முறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறினார்.</p><p>கட்சி துணை நிற்கும்:</p><p>கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் சரி, ஆட்சியில் இருக்கும் போட்டியாளராக இருந்தாலும் சரி, மாணவர்களின் நலனுக்காகத் தங்கள் கட்சி துணை நிற்கும் என்றும், மாநில அரசுக்குக் கடிதம் எழுதும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.</p><p>"ஜார்க்கண்ட், பஞ்சாப், டெல்லி அல்லது வேறு எங்கு இருந்தாலும், நாங்களும் மாணவர்களுடன் இருக்கிறோம். நாங்கள் தவறு செய்துவிட்டோமா என்றும், அது ஏன் நடந்தது என்றும் கேட்போம். நாங்கள் அரசுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறோம்," என்று அவர் கூறினார்.</p><p>முன்னதாக இன்று, ஜார்க்கண்ட் மாநில அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் கே. ராஜு, தானும் மாநில கட்சி தலைவர்களும் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை சந்தித்து, மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பான மனுவை அவரிடம் அளித்ததாக கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கைத்தறித் தயாரிப்புகளை வாங்கவும், &apos;Get Ready With Me&apos; வீடியோ பகிருங்கள் - பிரதமர் மோடி கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-asks-people-to-buy-handloom-products-share-get-ready-with-me-videos</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-asks-people-to-buy-handloom-products-share-get-ready-with-me-videos#comments</comments><guid isPermaLink="false">a0e4d061-0ddd-4467-a025-d6d278c3a3b1</guid><pubDate>Thu, 06 Aug 2026 18:30:01 +0000</pubDate><atom:updated>2026-08-06T18:30:01.503Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,Handloom,பிரதமர் மோடி,கைத்தறித் தயாரிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/09alvqpy/PM-Modi-18.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/09alvqpy/PM-Modi-18.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கைத்தறித் தயாரிப்புகளை வாங்கவும், அவற்றின் மீது உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் வகையில் வீடியோக்களை உருவாக்கவும் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.</p><p>கைத்தறி தினத்தை முன்னிட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, இத்தினத்தைக் கொண்டாடுவது நாட்டின் நெசவாளர்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் ஒரு கைகொடுக்கும் செயலாக அமையும் என்று கூறினார்.</p><h2>பிரதமர் வேண்டுகோள்:</h2><p>"ஆகஸ்ட் 7; அன்று நாம் தேசிய கைத்தறி தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்தியாவின் கைத்தறித் துறையின் பன்முகத்தன்மையை நாம் பிரபலப்படுத்துவோம். உங்களுக்கு பிடித்தமான கைத்தறி தயாரிப்புகளைக் கொண்டு, 'Get Ready With Me' போன்ற வீடியோக்களை உருவாக்கி, அவற்றை சமூக ஊடகங்களில் பகிருங்கள்," என்று அவர் கூறினார்.</p><p>ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டதும், நாட்டின் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்ததும் 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதியில்தான் என்பதை பிரதமர் மக்களுக்கு நினைவூட்டினார்.</p><p>"கடந்த வாரம்தான் நீங்கள் அனைவரும் நண்பர்கள் தினத்தை கொண்டாடினீர்கள். ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரும் கைத்தறி தினத்தையும் அதே உற்சாகத்துடன் கொண்டாடுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.</p><h2>நோக்கம்:</h2><p>உலகெங்கிலும் உள்ள மக்களை கைத்தறி தயாரிப்புகளின் பக்கம் ஈர்க்கும் வகையில் அனைவரும் குறும் வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் பகிருமாறு வலியுறுத்திய மோடி, இந்தியாவின் சுயசார்பை உறுதி செய்வதும், நெசவாளர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி ரீதியாக உதவுவதும் இதன் நோக்கம் என்று கூறினார்.</p><p>"நெசவாளர்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் உதவும் வகையில் கைத்தறி தயாரிப்புகளை வாங்குவோம் மற்றும் வீடியோக்களை உருவாக்குவோம்," என்று அவர் கூறினார்.</p><p>"தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே நமது இலக்கு. அதற்காக, மிகச்சிறிய மற்றும் ஏழ்மையான குடும்பங்கள் கூட பொருளாதார ரீதியாக வளம் பெற வேண்டும்," என்று கூறிய பிரதமர், ஒவ்வொரு கைத்தறி பொருள் வாங்குதலும் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும், கைவினை கலைஞர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கும் பங்களிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>ரொம்ப வேதனையா இருக்கு! அசாம் வெள்ள பாதிப்புக்கு ரூ. 3 கோடி வழங்கிய ஜார்க்கண்ட்: ஹேமந்த் சோரன்</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-contributed-rs-3-cr-to-cm-relief-fund-in-ne-state-hemant-soren</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-contributed-rs-3-cr-to-cm-relief-fund-in-ne-state-hemant-soren#comments</comments><guid isPermaLink="false">90551296-88d5-4482-80ca-3403b4f2c2ce</guid><pubDate>Thu, 06 Aug 2026 17:49:16 +0000</pubDate><atom:updated>2026-08-06T17:49:16.917Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜார்கண்ட்,Jharkhand,Hemant Soren,ஹேமந்த் சோரன்,அசாம் வெள்ளம்,Assam Floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/mdwhsaud/Assam-Floods-and-Hemant-Soren.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam Floods and Hemant Soren]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/mdwhsaud/Assam-Floods-and-Hemant-Soren.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாமில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தால் வேதனை தெரிவித்த ஜார்க்கண்ட் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/hemant-soren">ஹேமந்த் சோரன்</a>, அம்மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தனது அரசு ரூ. 3 கோடி வழங்கியுள்ளதாக தெரிவித்தார். </p><p>இந்த நெருக்கடியான நேரத்தில் தனது அரசும் ஜார்க்கண்ட் மக்களும் அசாம் மாநிலத்திற்கு உறுதுணையாக நிற்பதாக கூறி, <a href="https://www.maalaimalar.com/topic/assam-floods">அசாம்</a> முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு அவர் கடிதம் எழுதினார். </p><h2>சோரென் வேண்டுகோள்:</h2><p>அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு தனது மாநில குடிமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் சோரன் வேண்டுகோள் விடுத்தார்.</p><p>"இந்த நெருக்கடியான நேரத்தில், ஜார்க்கண்ட் அரசும் மாநில மக்களும் அசாமிற்கு உறுதுணையாக நிற்கிறோம். நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளில் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், அசாம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஜார்க்கண்ட் அரசு ரூ. 3 கோடி வழங்கியுள்ளது," என்று சோரன் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார்.</p><p>"அசாமில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தால் உருவான இக்கட்டான சூழலை கண்டு நான் ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இந்த பேரிடரில் ஈடுசெய்ய முடியாத உயிர் மற்றும் உடைமை இழப்புகளை சந்தித்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ஜார்க்கண்ட் மக்களின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்," என்று முதலமைச்சர் கூறினார்.</p><h2>அதிகரிக்கும் உயிரிழப்புகள்:</h2><p>அசாம் வெள்ளத்தில் மேலும் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது. மேலும் 15 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.68 லட்சமாக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>"ஜார்க்கண்டின் வசதி படைத்த குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் அனைவரும் முன்வந்து, அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்றவரை உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் ஒருவருக்கொருவர் கைகொடுத்து உதவுவதே நமது மிகப்பெரிய கடமையாகும்," என்று சோரன் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டார்.</p><p>அசாம் மக்களின் பொறுமை, தைரியம் மற்றும் சேவை மனப்பான்மையையும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் பாராட்டினார்.</p><p>"அசாம் இந்த இயற்கை பேரிடரிலிருந்து விரைவாக மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்று மா காமாக்யாவிடம் பிரார்த்திக்கிறேன்," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>7 ஆண்டுகளில் மலக்கழிவு தொட்டிகளை சுத்தம் செய்த 498 தொழிலாளர்கள் உயிரிழப்பு: ராகுல் காந்தியின் கேள்விக்கு ராம்தாஸ் அதாவலே பதில்</title><link>https://www.maalaimalar.com/news/national/498-sanitation-workers-deaths-india-ramdas-athawale</link><comments>https://www.maalaimalar.com/news/national/498-sanitation-workers-deaths-india-ramdas-athawale#comments</comments><guid isPermaLink="false">8b664573-12a1-4281-87fd-60ca7eb98612</guid><pubDate>Thu, 06 Aug 2026 16:40:43 +0000</pubDate><atom:updated>2026-08-06T16:40:43.334Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Ramdas Athawale,septic tank cleaning,தூய்மை பணியாளர்கள்,ராம்தாஸ் அத்வாலே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/wo6hjcm0/Untitled-design-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Rahul Gandhi - Ramdas Athawale]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி - ராம்தாஸ் அத்வாலே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/wo6hjcm0/Untitled-design-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும் கழிவுநீர் கால்வாய்களையும் மலக்கழிவுத் தொட்டிகளையும் சுத்தம் செய்தபோது சுமார் 500 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>2019 ஜனவரி 1 முதல் 2026 ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில், கழிவுநீர் மற்றும் மலக்கழிவுத் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணிகளின்போது 498 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசாங்க தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.</p><p>காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தப் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.</p><h3><strong>அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%87">ராம்தாஸ் அதாவலே</a> அறிக்கை</strong></h3><p>இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “2019-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 132 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். </p><p>2020-ல் மேலும் 34 இறப்புகளும், அதனைத் தொடர்ந்து 2021-ல் 62 இறப்புகளும், 2022-ல் 88 இறப்புகளும் பதிவாகியுள்ளன.</p><p>2023-ல் இந்த எண்ணிக்கை 65 ஆகவும், 2024-ல் 54 ஆகவும், 2025-ல் 47 ஆகவும் இருந்தது. 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பதினாறு இறப்புகள் பதிவாகி, மொத்த இறப்பு எண்ணிக்கை 498-ஆக உயர்ந்தது.</p><p>மேலும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எந்த மரணமும் பதிவாகவில்லை என்று அரசாங்கம் கூறியுள்ளது”.</p><h3><strong>மனிதக் கழிவு அகற்றுதல்</strong></h3><p>மனிதக் கழிவு அகற்றுதல் குறித்து அரசாங்கம் மேற்கோள் காட்டிய வரையறையில், மனிதக் கழிவுகள் முழுமையாக மட்குவதற்கு முன்னர், சுகாதாரமற்ற கழிப்பறைகள், திறந்த வடிகால்கள், குழிகள், ரெயில் தண்டவாளங்கள் அல்லது அறிவிக்கப்பட்ட பிற இடங்களிலிருந்து அவற்றை கையால் சுத்தம் செய்வதைக் குறிக்கிறது.</p><p>அதே சமயம், அபாயகரமான சுத்தம் செய்தல் என்பது, பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், சுத்தம் செய்யும் கருவிகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இல்லாமல், ஒரு கழிவுநீர்க் குழாய் அல்லது மலத் தொட்டியை கைமுறையாக சுத்தம் செய்வதைக் குறிக்கிறது.</p><p>எனவே அந்த அறிக்கையில், மனிதக் கழிவுகளை அகற்றும் பணியால் ஏற்பட்ட மரணங்களாக அல்லாமல், அபாயகரமான கழிவுநீர் மற்றும் மலக்கழிவுத் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் போது ஏற்பட்ட மரணங்களாக அந்த 498 உயிரிழப்புகளையும் குறிப்பிட்டுள்ளது.</p><p>2024-25 ஆம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் ஒருவர்கூட மனிதக் கழிவுகளை அகற்றுபவர் என அடையாளம் காணப்படவில்லை என்றும் அந்தப் பதிலில் கூறப்பட்டுள்ளது.</p><h3><strong>உத்தரப் பிரதேசத்தில் தூய்மை பணியாளர்கள்</strong></h3><p>இந்த பணியில் ஈடுபட்டு வரும் பாதிக்கும் மேற்பட்டோர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் மொத்தம் 32,473 பேர் இருந்ததாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>மகாராஷ்டிராவில் 6,325, உத்தரகாண்டில் 4,988 மற்றும் அசாமில் 3,921 பேர் இருந்தனர்.</p><p>மேலும், கழிவுநீர் மற்றும் மலக்கழிவுத் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் போது நிகழ்ந்த 498 மரண வழக்குகளில் வழங்கப்பட்ட இழப்பீடு குறித்த விவரங்களையும் அரசாங்கம் வழங்கியுள்ளது.</p><h3><strong>நிவாரணம்</strong></h3><p>2023 அக்டோபரில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டதாக அது தெரிவித்தது.</p><p>அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 345 வழக்குகள் ரூ. 10 லட்சம் செலுத்தும் பிரிவிலும், 75 வழக்குகள் ரூ. 30 லட்சம் செலுத்தும் பிரிவிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>22 வழக்குகளில் பகுதி இழப்பீடு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதேசமயம் 56 வழக்குகளில் பணம் செலுத்தப்பட்டதை உறுதிப்படுத்த முடியவில்லை.</p><p>2025-ல் பதிவான 47 மரணங்களில் 20-க்கான இழப்பீடு உறுதிசெய்யப்படவில்லை. ஜூன் 30 வரை பதிவான 16 வழக்குகளில், 2026-ஆம் ஆண்டிற்கான ரூ. 30 லட்சம் தொகையும் ஆறு வழக்குகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>மீதமுள்ள 10 வழக்குகளின் இழப்பீட்டு நிலை குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை. இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதாரச் சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (NAMASTE) திட்டத்தின் கீழ் 89,915 தூய்மை பணியாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><p>இத்திட்டம், இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார இயந்திரங்களுக்காகப் பாதுகாப்பு உபகரணங்கள், பயிற்சி, மருத்துவக் காப்பீடு மற்றும் நிதி உதவியை வழங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>கச்சா எண்ணெய்க்கு மாற்றாக உயிரி எரிவாயு - ரூ.23,731 கோடி கோபர்தன் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/biogas-alternative-to-crude-oil-rs-23731-crore-gobardhan-scheme-gets-cabinet-nod</link><comments>https://www.maalaimalar.com/news/national/biogas-alternative-to-crude-oil-rs-23731-crore-gobardhan-scheme-gets-cabinet-nod#comments</comments><guid isPermaLink="false">87dcc139-1ecd-4410-88a9-af4e332e2ffa</guid><pubDate>Thu, 06 Aug 2026 16:22:10 +0000</pubDate><atom:updated>2026-08-06T16:22:10.494Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>LNG,gobardhan scheme,bio gas,கோபர்தன் திட்டம்,திரவ இயற்கை எரிவாயு,உயிரி எரிவாயு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/3capvi6x/Untitled-design-29.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Gobardhan scheme]]></media:title><media:description type="html"><![CDATA[ Bio Gas Energy Push: Cabinet clears ₹23,731 crore Gobardhan scheme to boost CBG production]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/3capvi6x/Untitled-design-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டில் உயிரிவாயு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ரூ.23,731 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த உயிரி எரிசக்தித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை மற்றும் பொருளாதார அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உள்நாட்டு சிபிஜி உற்பத்தியை கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகரிக்கும் நோக்கத்துடன், கோபர்தன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.</p><p>ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து நீடித்து வரும் போர் பதற்றம் மற்றும் இடையூறு காரணமாக, இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதியில் 55 முதல் 60 சதவீதம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.</p><p>இதன் காரணமாக அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவை ஒரு உள்நாட்டுத் தீர்வாக மத்திய அரசாங்கம் கருதுகிறது.</p><h3><strong>கோபர்தன் திட்டம் குறித்து அமைச்சர் அஸ்வினி  வைஷ்ணவ்</strong></h3><p>இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ”கோபர்தன் திட்டம் 2026-27 முதல் 2035-36 வரை செயல்படுத்தப்பட்டு, அழுத்தப்பட்ட உயிரிவாயுவை இந்தியாவின் எதிர்கால எரிசக்தி கலவையின் ஒரு முக்கிய தூணாக நிலைநிறுத்தும்.</p><p>மேலும் இந்த திட்டம், நாட்டில் உள்ள விவசாயக் கழிவுகள், கால்நடைச் சாணம், சர்க்கரை ஆலை கழிவு, நகராட்சி கரிமக் கழிவுகள் மற்றும் பிற உயிரிவள ஆதாரங்களை தூய்மையான எரிபொருள், இயற்கை உரம், கிராமப்புற வருமானம் மற்றும் தேசியப் பொருளாதார மதிப்பாக மாற்றுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p>உறுதிசெய்யப்பட்ட தேவை, லாபகரமான மற்றும் நிலையான விலை நிர்ணயம், மூலதன உதவி, குழாய்வழி உள்கட்டமைப்பு, கடன் ஆதரவு மற்றும் தொழில்நுட்ப புதியம்பாடு ஆகியவற்றின் மூலம், </p><p>இந்தியாவின் அழுத்தப்பட்ட உயிரிவாயு (CBG) துறையை தேசிய அளவில் கொண்டு செல்வதற்கு தேவையான வலுவான கட்டமைப்பை கோபர்தன் திட்டம் வழங்கும்” என்று தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>க்யா போல்டி பப்ளிக்: நாடு முழுவதும் மக்கள் பிரச்னைகளை கேட்கவிருக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!</title><link>https://www.maalaimalar.com/news/national/what-the-public-says-the-cockroach-janata-party-is-campaigning-across-the-country</link><comments>https://www.maalaimalar.com/news/national/what-the-public-says-the-cockroach-janata-party-is-campaigning-across-the-country#comments</comments><guid isPermaLink="false">1fd62836-e37e-469c-8970-835a79f74e3b</guid><pubDate>Thu, 06 Aug 2026 14:47:11 +0000</pubDate><atom:updated>2026-08-06T14:47:11.900Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,abhijeet dipke,அபிஜீத் தீப்கே,CJP,Kya Bolti Public,மக்கள் என்ன சொல்கிறார்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/9ldemnv0/New-Project-2026-08-06T192619.876.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ க்யா போல்டி பப்ளிக்: நாடு முழுவதும் மக்கள் பிரச்னைகளை கேட்கவிருக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/9ldemnv0/New-Project-2026-08-06T192619.876.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்னைகளை புரிந்துகொள்வதற்கு நாடு முழுவதும் 'க்யா போல்டி பப்ளிக்' என்ற பிரசாரத்தை அடுத்த மாதம் முன்னெடுக்க உள்ளதாக கரப்பான்பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். </p><p>மகாராஷ்டிராவில் உள்ள தனது இல்லத்தில் இன்று நடைபெற்ற கரப்பான்பூச்சி கட்சியின் முக்கியக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். </p><p>இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள், குறைகள் மற்றும் அவர்கள் விரும்பும் அரசியல் மாற்றங்கள் குறித்துக் கேட்டறிவதே இந்த பிரசாரத்தின் முக்கிய நோக்கம் என்று தீப்கே தெரிவித்துள்ளார். </p><p>சமீபத்தில் நடைபெற்ற நீட் முறைகேடு தொடர்பான போராட்டத்தில் வேலையில்லாத இளைஞர்கள் அதிகம் கலந்துகொண்டதாகவும், இதனை வைத்து வேலையில்லாத் திண்டாட்டம், கல்வித்துறை வணிகமயமாக்கல், அரசு நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறைவு போன்ற விவகாரங்களை மையமாகக் கொண்டு இப்பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். </p><p>“மக்கள் இனி வீதிகளில் இறங்குவார்கள். இன்று அவர்கள் ஒருவரின் ராஜினாமாவைக் கோரியுள்ளனர்; நாளை மற்றவர்களின் ராஜினாமாவையும் கோருவார்கள். வளர்ந்த இந்தியாவுக்கான பாபாசாகேப் அம்பேத்கர், மகாத்மா காந்தி மற்றும் பண்டிட் நேரு ஆகியோரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப சி.ஜே.பி. செயல்படும். </p><p>எங்கள் சித்தாந்தம் இந்திய அரசியலமைப்பின் சித்தாந்தத்தைப் போன்றதே” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சத்தீஸ்கரை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் செயற்கை பன்னீருக்கு தடை</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-bans-analogue-paneer-violators-face-6-months-jail-rs-1-lakh-fine</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-bans-analogue-paneer-violators-face-6-months-jail-rs-1-lakh-fine#comments</comments><guid isPermaLink="false">52eb1ab0-7fe6-4410-99df-6a7b0b5f9ef4</guid><pubDate>Thu, 06 Aug 2026 14:04:40 +0000</pubDate><atom:updated>2026-08-06T14:04:40.158Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,ban,தடை,analaog paneer,செயற்கை பன்னீர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/htc8cemk/paneer.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ paneer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/htc8cemk/paneer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் அனலாக் பன்னீர் எனப்படும் செயற்கை பன்னீரின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது.</p><p>மகாராஷ்டிர மாநிலத்தில் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.</p><h2>தரமற்ற பன்னீர்</h2><p>அங்குள்ள உணவகங்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்கள் இந்த செயற்கை பன்னீரை நுகர்வோருக்குத் தெரியாமல் உண்மையான பன்னீராகப் பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை நடத்திய ஆய்வில் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 35 சதவீதத்திற்கும் அதிகமானவை தரமற்றவை என தெரிய வந்தது.</p><p>இந்தத் தடையை மீறுபவர்களுக்கு 6 மாதங்கள் முதல் ஆயுள் சிறைத்தண்டனை வரை விதிக்கப்படலாம். மேலும், 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.</p><p>இதுதொடர்பாக, மகாராஷ்டிர மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:</p><p>மாநிலம் முழுதும் பெரும்பாலான உணவு விடுதிகள், ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்காமல், பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் எனக்கூறி, அனலாக் பன்னீரை வழங்குவதாக எங்களுக்கு தொடர்ச்சியாக புகார்கள் வருகின்றன.</p><h2>ஓராண்டு தடை</h2><p>இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். அனலாக் பன்னீரில் புரதச்சத்து மிகக் குறைவு. உடல் நலனுக்கும் கேடு. எனவே, அடுத்த ஓராண்டுக்கு அனலாக் பன்னீரை உற்பத்தி செய்யவும், பதப்படுத்தவும், தயாரிக்கவும், வினியோகிக்கவும், மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் விற்கவும் ஓராண்டு தடை விதிக்கப்படுகிறது.</p><p>இதை மீறுவோருக்கு விளைவுகளின் தீவிரத்தைப் பொறுத்து தண்டனை வழங்கப்படும். குறைந்தபட்சம், 6 மாத சிறை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மரணத்தை விளைவிக்கும் சந்தர்ப்பங்களில் ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p>ஏற்கனவே சத்தீஸ்கரில் செயற்கை பன்னீருக்கான தடை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>‘அனுசரித்துப் போ’ என
மகள்களிடம் கூறாதீர்கள்... அவர்களின் புகார்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் - அலகாபாத் உயர் நீதிமன்றம்  </title><link>https://www.maalaimalar.com/news/national/do-not-dismiss-your-daughters-take-their-complaints-seriously-allahabad-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/do-not-dismiss-your-daughters-take-their-complaints-seriously-allahabad-high-court#comments</comments><guid isPermaLink="false">4b34c8f6-1b46-4983-87d5-68d03aa3f442</guid><pubDate>Thu, 06 Aug 2026 12:48:38 +0000</pubDate><atom:updated>2026-08-06T12:48:38.056Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அலகாபாத் உயர் நீதிமன்றம்,திருமணமான பெண்,Allahabad HC,Adjust,married woman,அனுசரித்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/amgpymgh/New-Project-2026-08-06T181815.717.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மகள்களிடம் கூறாதீர்கள்... அவர்களின் புகார்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் - அலகாபாத் உயர் நீதிமன்றம்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/amgpymgh/New-Project-2026-08-06T181815.717.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குடும்பத்தில் ‘அனுசரித்து செல், இணங்கிப் போ’ என மகள்களிடம் கூறாதீர்கள். அவர்களது பிரச்னைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் என பெற்றோர்களுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. </p><p>மேலும் இத்தகைய அறிவுரை, உங்களை அறியாமலேயே குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்து, இறுதியில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய தொடர்ச்சியான வன்முறைக்குப் பெண்களை ஆளாக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது. </p><p>நீதிபதி ராஜேஷ் சிங் சௌஹான் மற்றும் நீதிபதி அப்தேஷ் குமார் சௌத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வின் இந்தக் கருத்து பலரிடமும் பரவலான பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.</p><p>வரதட்சணைக் கொடுமையால் 25 வயது இளம்பெண்ணும், அவரது கைக்குழந்தையும் கொலை செய்யப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுவிசாரணையில் உயர் நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது.</p><h2>வழக்கின் பின்னணி </h2><p>இந்த வழக்கு, 25 வயதான மீனா தேவி மற்றும் அவரது 15 மாதக் குழந்தை கடந்த 2011ம் ஆண்டு, வரதட்சணைக் கொடுமையால் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பானது. </p><p>மீனாவின் திருமணத்தின்போது அவரது குடும்பத்தினர் ரூ.2.26 லட்சம் மாப்பிள்ளை வீட்டிற்கு கொடுத்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, கணவர் தினேஷ் குமார், அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இணைந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் கூடுதலாகக் கேட்டு மீனாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளனர்.</p><p>தனக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து மீனா பலமுறை போன் மூலமாகவும், நேரிலும் பெற்றோர் மற்றும் சகோதரர்களிடத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் மீனாவின் பெற்றோர் தரப்பு இது சாதாரணப் பிரச்னை நாளடைவில் சரியாகிவிடும் எனக் கூறி சமாதானப்படுத்தி வந்துள்ளனர். </p><p>இதன் விளைவு, மீனா மற்றும் அவரது 15 மாதக் குழந்தை இருவரும், தினேஷ் வீட்டில் உடலில் காயங்களுடன் உயிரிழந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், மீனாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.</p><p>இந்த ஆயுள் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் இந்த தண்டனையை உறுதிசெய்து இந்தக் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.</p><h2>நீதிமன்றத்தின் முக்கிய கருத்துகள்</h2><p>மகள்களின் தொடர்ச்சியான புகார்களை, கணவன்-மனைவிக்கு இடையேயான சாதாரண கருத்து வேறுபாடுகள் என கருதக்கூடாது. மாறாக, அவை உதவி, பாதுகாப்பு மற்றும் தலையீட்டிற்கான கோரிக்கைகள் என்பதனை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். </p><p>பயம், அவமானம் அல்லது துன்புறுத்தல் குறித்துத் தனது பெற்றோரையோ அல்லது உறவினர்களையோ மீண்டும் மீண்டும் அணுகும் ஒரு பெண்ணின் குரல், பரிவுடனும், உடனடியாகவும் கேட்கப்பட வேண்டும். </p><p>அத்தகைய பெண்ணுக்கு ஆதரவளிப்பதும், அவரது பாதுகாப்பையும், கண்ணியத்தையும் பேணுவதும் குடும்பத்தின் தார்மீக மற்றும் சமூகப் பொறுப்பாகும்.  பெண்கள் அமைதியாகத் துன்பப்பட நிர்பந்திக்கப்படுவதில்லை என்பதை சமூகங்களும் உறுதி செய்ய வேண்டும். </p><p>“தாமதமான வருத்தமும், நீதிமன்ற வழக்குகளும் இழந்த ஒரு உயிரை மீண்டும் கொண்டு வர முடியாது”. சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் தலையீடு ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தவிர்க்க உதவும். என தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62-ஆக உயர்த்த மனு - மாநிலங்கள் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/petition-to-raise-judges-retirement-age-to-62-supreme-court-directs-states</link><comments>https://www.maalaimalar.com/news/national/petition-to-raise-judges-retirement-age-to-62-supreme-court-directs-states#comments</comments><guid isPermaLink="false">61ad6970-80d6-4a88-8a7f-3e5bacb2f0d0</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:40:11 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:40:11.073Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,நீதிபதிகள் ஓய்வு வயது,judges retirement</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/1v6eqhln/Untitled-design-28.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Supreme Court asks states to reconsider raising judicial officers’ retirement age to 62]]></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/1v6eqhln/Untitled-design-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 60 வயதுக்கு மேல் உயர்த்துவதை எதிர்க்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தங்கள் நிலைப்பாட்டை செப்டம்பர் இரண்டாம் தேதிக்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>அகில இந்திய நீதிபதிகள் சங்கம் (AIJA) தாக்கல் செய்த மனு, இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய் மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. </p><h3><strong>உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்</strong></h3><p>அப்போது அந்த அமர்வு, நீதித்துறை தீர்ப்புக்குப் பதிலாக, மாநில அரசுகளே சுயமாக முடிவெடுப்பது சிறப்பாக இருக்கும் என்று கூறியது. விசாரணை நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 1992-ஆம் ஆண்டிலிருந்து இரட்டிப்பாகி, சுமார் 10,000-லிருந்து தற்போது 20,000-க்கும் அதிகமாக உள்ளது. </p><p>உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 1992-ல் 568-ஆக இருந்தது, தற்போது அது 1,114-ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தது.</p><p>இதையடுத்து இந்த வழக்கில் மாநிலங்கள் வாதிடுகையில், அரசு ஊழியர்களுக்கான சலுகைகளைப் போலவே, சில மாநிலங்கள் நீதித்துறை அதிகாரிகளுக்கான ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 61-ஆக உயர்த்தியுள்ளன.</p><p>மேலும், நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 62-ஆக உயர்த்துவது, அரசு ஊழியர்களிடையே ஏற்றத்தாழ்வையும் அதிருப்தியையும் உருவாக்கும் என்றும், அவர்களும் இதேபோன்ற சலுகைகளைக் கோருவார்கள் என்றும், இது அரசுக்கு ஒரு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் கூறியது.</p><p><strong>நீதிபதிகள் அமர்வு</strong></p><p>இதையடுத்து நீதிமன்ற அமர்வு கூறும்போது, “இந்த இரண்டு ஆட்சேபனைகளும் நிராகரிக்கப்படுகின்றன. ஒரு நீதித்துறை அதிகாரி ஓய்வு பெறும்போது, அரசு அவருக்கு ஒரு தொகையையும், அவர் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஓய்வூதியத்தையும் வழங்குகிறது.</p><p>காலி இடத்தை நிரப்பும்போது, புதிதாக நியமிக்கப்படுபவருக்கு அரசு சம்பளம் வழங்குகிறது. அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான நீதித்துறை அதிகாரிகளை தக்கவைத்துக் கொள்வது மாநிலத்திற்கும் நீதித்துறைக்கும் நிதி ரீதியாகப் பயனளிக்கும்.</p><p>ஆனால், மாநிலங்களின் நிர்வாக முடிவுகள் மூலம் இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க முடியும் என்று நாங்கள் கருதுகிறோம்.</p><p>அரசு ஊழியர்களின் தற்போதைய ஓய்வு வயதை பொருட்படுத்தாமல், நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு வயதை உயர்த்துவது தொடர்பான பிரச்சினையை மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.</p><p>நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்துவதற்கு ஆதரவாக இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றங்கள், மாநில அரசுகளுக்கு வலு சேர்க்க வேண்டும்” என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.</p>]]></content:encoded></item><item><title>இங்கிலாந்தில் உள்ள வாக்தேவி அம்மன் சிலையை மீட்க மத்தியப்பிரதேசம் கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-government-requests-return-of-vagdevi-amma-statue-from-england</link><comments>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-government-requests-return-of-vagdevi-amma-statue-from-england#comments</comments><guid isPermaLink="false">0a3d3de8-88fa-4daa-a5bb-a5621d8f49b2</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:30:10 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:30:10.011Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இங்கிலாந்து அருங்காட்சியகம்,போஜ்சாலா தளம்,goddess vagdevi,bhojsala,england museum,வாக்தேவி அம்மன் சிலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/oj1wtbdk/Untitled-design-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ India Seeks Return of Vagdevi Idol from British Museum]]></media:title><media:description type="html"><![CDATA[ Vagdevi Idol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/oj1wtbdk/Untitled-design-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப்பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் இருந்து வாக்தேவி சிலை இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஒர் நூற்றாண்டை கடந்துள்ள நிலையில், அதனை திரும்ப கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p>போபாலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் கலாச்சார பணிக்குழு மற்றும் கலாச்சார அமைச்சர்கள் கூட்டங்களில், காலனித்துவ காலத்தில் திருடப்பட்டு இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிலையை தாயகம் திரும்ப கொண்டு வருவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.</p><p>மேலும் பிரிக்ஸ் நடுகளிடையே ஒரு வலுவான ஒத்துழைப்பை வலியுறுத்துவதற்காக, இந்தியா இந்த நான்கு நாட்கள் நடைபெறும் கலந்தாய்வுகளை பயன்படுத்தி கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><strong>மத்திய கலாச்சார அமைச்சகம்</strong></p><p>இதுகுறித்து மத்திய கலாச்சார அமைச்சகத்தில் செயலாளராக உள்ள விவேக் அகர்வால் கூறுகையில், “மத்திய கலாச்சார அமச்சகத்தில் நான் செயலாளராக பொறுப்பேற்ற உடனேயே, பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ள வாக்தேவி அம்மன் சிலையை திருப்பி அனுப்பக்கோரி, மத்தியப் பிரதேச அரசு எங்களுக்கு கடிதம் எழுதியது.</p><p>அன்று முதல், நாங்கள் தூதரக வழிமுறைகள் மூலமாகவும், அருங்காட்சியக மட்டத்திலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்” என்று கூறினார்.</p><p><strong>உயர் நீதிமன்றம் தீர்ப்பு</strong></p><p>கடந்த மே மாதம், போஜசாலா-கமல் மௌலா மசூதி வளாகம் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் என்று மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த இடத்தில் பல நூற்றாண்டுகளாக இந்து வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறிய நீதிமன்றம், பிரத்தியேக இந்து வழிபாட்டு உரிமைகளுக்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.</p><p>மேலும், அந்த வளாகத்தில் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி அளித்திருந்த இந்திய தொல்லியல் துறையின் 2003 ஏப்ரல் 7 ஆம் தேதியிட்ட உத்தரவையும் அது ரத்து செய்தது.</p><p>நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன்னர், தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகள், இந்திய தொல்லியல் துறையின் (ASI) அறிவிப்புகள், அதன் அறிவியல் ஆய்வின் கண்டுபிடிப்புகள் மற்றும் தொடர்புடைய சட்ட விதிகளை ஆய்வு செய்தது.</p><p><strong>வாக்தேவி சிலை</strong></p><p>பரமாரா காலத்தை சேர்ந்த இந்த வெள்ளை பளிங்கு சிற்பம், 11ஆம் நூற்றாண்டில் தார் நகரை இணைக்கும் ஒரு கல்வெட்டை கொண்டுள்ளது.</p><p>இது சுமார் 1.28 மீட்டர் உயரமும், 250 கிலோகிராம் எடையும் கொண்டதாக அறியப்படுகிறது. மேஜர் ஜெனரல் வில்லியம் கின்கெயிட் என்பவரிடம் இருந்து இது பெறப்பட்டதாகவும், 1909ஆம் ஆண்டில் இது முறையாக தனது சேகரிப்பில் சேர்க்கப்பட்டதாகவும் அருங்காட்சியகம் பதிவு செய்துள்ளது.</p><p><strong>மீட்கப்பட்ட தொல்பொருட்கள்</strong></p><p>சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா சென்ற போது, தமிழகத்தை சேர்ந்த ஒரு கல் நந்தி, பத்ரகாளி உருவம் பொறிக்கப்பட்ட உலோக திரிசூலம் மற்றும் ஆறு தலை கொண்ட கல் கார்த்திக்கேயன் ஆகிய மூன்று தொல்பொருட்களை ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து திரும்ப தருவதற்கு ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வீட்டை விட்டு வெளியேறி நிலத்தடியில் வீடு கட்டி வாழும் வாலிபர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/underground-house-in-field-young-man-lives-alone</link><comments>https://www.maalaimalar.com/news/national/underground-house-in-field-young-man-lives-alone#comments</comments><guid isPermaLink="false">eb828912-a16c-4a6e-afc0-422b03d857a2</guid><pubDate>Thu, 06 Aug 2026 09:54:12 +0000</pubDate><atom:updated>2026-08-06T09:54:12.103Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய பிரதேசம்,Madhya Pradesh,UndergroundHouse,நிலத்தடி வீடு,மண் வீடு,Jhabua,UniqueHome</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/hhc7l2u2/MadhyaPradesh-UndergroundHouse" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MadhyaPradesh UndergroundHouse ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/hhc7l2u2/MadhyaPradesh-UndergroundHouse?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் என்ற வாலிபர், பெற்றோரால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கிராமத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் தனக்கென ஒரு நிலத்தடி வீட்டை உருவாக்கி வசித்து வருகிறார்.</p><h2><strong>கதவு, ஜன்னல் இல்லாத மண் வீடு:</strong></h2><p>அர்ஜுன் என்ற வாலிபர் தனக்கு வசிப்பிடம் இல்லாததால் தரையைத் தோண்டி இந்தச் சிறிய நிலத்தடி வீட்டை உருவாக்கியுள்ளார். </p><p>இந்த வீட்டிற்கு முறையான முன் கதவோ அல்லது காற்றோட்டத்திற்கான ஜன்னல்களோ இல்லை. முற்றிலும் மண்ணுக்குள்ளேயே இந்த வீடு செதுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>நவீன வசதிகளுடன் கூடிய எளிய கட்டமைப்பு:</strong></h2><p>மிகவும் குறுகிய மற்றும் எளிமையான அமைப்பைக் கொண்ட இந்த வீட்டிற்குள் அர்ஜுன் வாழத் தேவையான பல வசதிகளைச் செய்துள்ளார். </p><p>தூங்குவதற்காக மண்ணிலேயே ஒரு மேடை போன்ற அமைப்பை உருவாக்கி, அதன் மேல் பாயும் படுக்கை விரிப்பும் போடப்பட்டுள்ளது. </p><p>மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வீட்டின் மேற்பகுதியில் தார்பாய் கொண்டு கூரை அமைக்கப்பட்டுள்ளது. மண் வீட்டிற்குள் சீரியல் பல்புகளையும், லேப்டாப் பயன்படுத்துவதும், செல்போன் சார்ஜ் செய்வதற்கான வசதிகளையும் செய்துள்ளார். </p><p>ஆனால் இதற்கு மின்சாரம் எவ்வாறு கிடைக்கிறது என்பது இன்னும் தெளிவாக கிடைக்கவில்லை. நவீன வசதிகளுடன் கூடிய இந்த எளிய கட்டமைப்புகளை வடிவமைத்து வாழ்ந்து வருகிறார்.</p><h2><strong>வியப்பில் நெட்டிசன்கள்:</strong></h2><p>இவரின் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், "இந்தக் குறுகிய இடத்தில் மூச்சுமுட்டுவது போல் உள்ளது, இதற்குள் எப்படி மணிக்கணக்கில் வசதியாக இருக்க முடிகிறது?" என்று ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர். </p><p>அதே வேளையில், அர்ஜுனின் இந்தத் தனித்துவமான முயற்சியைப் பாராட்டியும் பலர் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/rbi-to-roll-out-plastic-rs-10-rs-20-notes</link><comments>https://www.maalaimalar.com/news/national/rbi-to-roll-out-plastic-rs-10-rs-20-notes#comments</comments><guid isPermaLink="false">c3f5a2dc-f509-42d5-9365-733aba587b4c</guid><pubDate>Thu, 06 Aug 2026 09:34:53 +0000</pubDate><atom:updated>2026-08-06T09:34:53.592Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,Sanjay Malhotra,சஞ்சய் மல்ஹோத்ரா,ரிசர்வ் வங்கி,பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்,plastic rupees note</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/z3i9li6v/plastic-currecy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Plastic currency  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/z3i9li6v/plastic-currecy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக நீண்ட காலம் உழைக்கக்கூடிய 'பாலிமர்' எனப்படும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதற்கான ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.</p><p>முதல்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பாலிமர் நோட்டுகளைச் சோதனை முறையில் அச்சடித்து வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் பாலிமர் நோட்டுகள் வழக்கமான பயன்பாட்டிற்கு முழுமையாக கொண்டு வரப்படும் என மக்களவையில் நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.</p><h2>பழைய காகித நோட்டுகள் செல்லாதா?</h2><p>பழைய காகித ரூபாய் நோட்டுகள் உடனடியாகத் தடை செய்யப்பட மாட்டாது. காகித நோட்டுகளுடன் சேர்ந்து பிளாஸ்டிக் நோட்டுகளும் இணையாகப் புழக்கத்தில் இருக்கும். காகித நோட்டுகளை முழுமையாகத் திரும்பப் பெறும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும் அரசு தெளிவுபடுத்தியது.</p><p>இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p><h2>ஏப்ரலில் அறிமுகம்</h2><p>வருகிற ஏப்ரல் மாதம்  நீடித்து உழைக்கும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.</p><p>ஒரு முன்னோட்டத் திட்டமாக ரிசர்வ் வங்கி ரூ.10 மற்றும் ரூ.20 பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை முதலில் வெளியிட உள்ளது.</p><p>அதன் பயன்பாடு அடிப்படையில் கூடுதல் மதிப்புகளில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.</p><p>காகித நோட்டுகளுடன் பிளாஸ்டிக் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும். முதல் கட்டமாக ரூ.100 கோடி மதிப்புள்ள ரூ.10 மற்றும் ரூ.20 பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என தெரிவித்தார்.</p><h2>பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளின் நன்மைகள்</h2><p>காகித நோட்டுகளை விட பாலிமர் நோட்டுகள் பல மடங்கு கூடுதல் ஆயுட்காலம் கொண்டவை.</p><p>தண்ணீரில் நனையாது, எளிதில் கிழியாது மற்றும் அழுக்கடையாது.</p><p>இவற்றில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை எளிதாகச் சேர்க்க முடியும் என்பதால், போலி நோட்டுகளை அச்சடிப்பது மிகவும் கடினம்.</p><p>ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் பண முறையை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் வன்கொடுமை வழக்கில் மூத்த பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/tarun-tejpal-convicted-of-sexual-assault-bombay-high-court-overturns-2021-acquittal</link><comments>https://www.maalaimalar.com/news/national/tarun-tejpal-convicted-of-sexual-assault-bombay-high-court-overturns-2021-acquittal#comments</comments><guid isPermaLink="false">4257d50f-c47f-4c22-a0a4-9e5d5905a8b6</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:24:25 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:24:25.134Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,Sexual assault,உயர்நீதிமன்றம்,High Court,Journalist,பத்திரிகையாளர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/z010yyr6/tn-29.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தருண் தேஜ்பால்]]></media:title><media:description type="html"><![CDATA[ தருண் தேஜ்பால்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/z010yyr6/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2013 இல் இளம் பெண் பத்திரிகையாளரை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை</a> செய்த வழக்கில் 'தெஹல்கா' பத்திரிகையின் நிறுவனரும் முன்னாள் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான தருண் தேஜ்பால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p>2013  நவம்பர் 7 அன்று நிகழ்வொன்றின்போது கோவாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் லிப்டில் வைத்து தன்னை தருண் தேஜ்பால் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெஹல்கா பத்திரிகையில் பணியாற்றிய இளம் பெண் பத்திரிகையாளர் புகார் அளித்தார். </p><p>ஆனால் போதிய சான்றுகள் இல்லை எனக் கூறி, சந்தேகத்தின் பலனைத் தருண் தேஜ்பாலுக்கு வழங்கி 2021ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. </p><p>பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.</p> <h2>மேல்முறையீடு</h2><p>இத்தீர்ப்பை எதிர்த்து கோவா காவல் துறையும் அரசுத் தரப்பும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.</p><p>கோவாவுக்கு என்று தனி உயர்நீதிமன்றம் கிடையாது. பம்பாய் உய்ரநீதிமன்றத்தின் கோவா அமர்வு இந்த மேல்முறையீட்டை விசாரித்து வந்தது.</p> <h2>தீர்ப்பு</h2><p>இந்த வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்றம் தவறாகக் கையாண்டதாகவும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் வாதிட்டார்.</p><p>இந்நிலையில் விசாரணை முடிவில் இன்று(ஆகஸ்ட் 6) 2021ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் வழங்கிய விடுதலை உத்தரவை ரத்து செய்த பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நீலா கோகலே மற்றும் அமித் ஜாம்சந்தேகர் அடங்கிய கோவா அமர்வு தருண் தேஜ்பால் குற்றவாளி என அதிரடியாக தீர்ப்பளித்தது.</p> <h2>உச்சநீதிமன்றம்</h2><p>தருண் தேஜ்பால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கான தண்டனை விவரங்களை உயர் நீதிமன்றம் விரைவில் அறிவிக்கவுள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாக தருண் தேஜ்பால் தரப்பு தெரிவித்துள்ளது.</p><p>முன்னதாக இன்றைய அமர்வில், தனக்கு 61 வயதாகிறது என்றும், ஒரு மனைவி இருப்பதாகவும் தானே இதில் பாதிக்கப்பட்டவன் எனவும் கூறி, தனக்கு கருணை காட்டுமாறு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>தேஜ்பால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக, இந்த உத்தரவை எட்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்குறமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>பாஜகவுக்கு ஷாக்.. திரிணாமுல் காங்கிரசுக்கு திரும்பும் 3 அதிருப்தி எம்.பிக்கள்?</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-ncpi-mps-shift-three-muslim-mps-likely-to-return-to-mamatas-trinamool-congress</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-ncpi-mps-shift-three-muslim-mps-likely-to-return-to-mamatas-trinamool-congress#comments</comments><guid isPermaLink="false">a787a731-049a-454c-877d-cdcddb4f3ef6</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:51:37 +0000</pubDate><atom:updated>2026-08-06T03:51:37.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,திரிணாமுல் காங்கிரஸ்,எம்.பி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/c88oo1nq/tn-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மம்தா ]]></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/c88oo1nq/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மம்தாவின் திரிணமுல் ணாமுல் காங்கிரஸ் பாஜகவிடம் தோற்று ஆட்சியை இழந்தது. வெற்றி பெற்ற 80 திரிணாமுல் எம்எல்ஏக்களில் 50க்கும் மேற்பட்டோர் தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அவர்களையே எதிர்க்கட்சியாக சபாநாயகர் அங்கீகரித்துள்ளார். </p><p>இதனிடையே அதிருப்தியால் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த 20 எம்.பி.க்கள், பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு வழங்கும் வகையில் 'தேசியவாதக் குடிமக்கள் கட்சி' (NCPI) என்ற பிராந்திய கட்சியில் இணைந்தனர் </p><p>இந்த 20 எம்.பி.களில்  உள்ள 3 முஸ்லிம் எம்பிக்கள் மீண்டும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF">மம்தா பானர்ஜியின்</a> திரிணமுல் காங்கிரஸ் பக்கமே திரும்பக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. </p><h2>புறக்கணித்த எம்.பி.க்கள்</h2><p>முர்ஷிதாபாத் தொகுதி எம்பி அபூ தாஹிர் கான், ஜங்கிபூர் தொகுதி எம்பி கலிலூர் ரஹ்மான், பஹரம்பூர் தொகுதி எம்பி யூசுப் பதான் ஆகியோரே அந்த மூவர் ஆவர்.</p><p>பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற என்டிஏ எம்பிக்களின் கூட்டத்திற்கு NCPI அணியின் 17 எம்பிக்கள் மட்டுமே சென்றிருந்த நிலையில், இந்த 3 எம்பிக்களும் இரண்டாவது முறையும் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.</p> <h2>முஸ்லிம் நலன்  </h2><p>இதனிடையே நாடாளுமன்றத்தில் குடிமக்கள் அவர்களில் ஒருவரான அபூ தாஹிர் கான், "முஸ்லிம்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் எந்தவொரு மசோதாவையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். நாங்கள் பாஜகவில் இணையவோ, என்டிஏ கூட்டணியில் தொடரவோ மாட்டோம்" என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். </p><p>திரிணமுல் காங்கிரஸின் மூத்த எம்பியான சௌகதா ராய் மற்றும் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர்களுடன் இந்த 3 எம்பிக்களும் தொடர்ந்து பேசி வருவதாகவும், அவர்கள் மீண்டும் மம்தா பானர்ஜி தலைமைக்கே திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p> <h2>பலம்</h2><p>திரிணமுல் காங்கிரஸிலிருந்து பிரிந்த 20 எம்பிக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயாமல் இருக்க, மூன்றில் இரண்டு பங்கு (குறைந்தது 19 எம்பிக்கள்) எண்ணிக்கை பலம் தேவையாக உள்ளது. </p><p>இந்த 3 எம்பிக்களும் விலகி விட்டால் NCPI அணியின் எண்ணிக்கை 17 ஆகக் குறையும். இதனால் அவர்களின் எம்பி பதவிக்குச் சட்டரீதியான சிக்கல் எழக்கூடும்.</p><p>எனவே பாஜக மற்றும் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஆகியோர் மற்ற எம்பிக்களைத் தக்கவைக்கவும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தவும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஐந்தே நிமிடத்தில்.. கொடுத்த வாக்கை மீறிய மத்திய அமைச்சர்கள் - சோனம் வாங்சுக் ஆதங்கம்  </title><link>https://www.maalaimalar.com/news/national/photos-released-in-just-five-minutes-union-ministers-broke-their-promise-sonam-wangchuk</link><comments>https://www.maalaimalar.com/news/national/photos-released-in-just-five-minutes-union-ministers-broke-their-promise-sonam-wangchuk#comments</comments><guid isPermaLink="false">8ab5f05f-d0ee-4463-aa64-348c6bd3bfa0</guid><pubDate>Thu, 06 Aug 2026 02:31:35 +0000</pubDate><atom:updated>2026-08-06T02:31:35.737Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,சோனம் வாங்சுக்,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/hlqfq34y/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சோனம் வாங்சுக் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் வாங்சுக் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/hlqfq34y/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக போராடிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ஜந்தர் மாந்தர் போராட்டத்தின் வெற்றி முக்கிய காரணம் கல்வியாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/i-will-end-the-hunger-strike-if-this-single-promise-is-made-sonam-wangchuk">சோனம் வாங்சுக்.  </a></p><p>போராட்டத்திற்கு ஆதரவாக 26 நாட்கள் அவர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். ஜூலை 20 நாடாளுமன்றம் நோக்கி பேரணிக்கு 2 நாட்கள் முன்னர் ஜந்தர் மந்தரில் இருந்து வலுக்கட்டாயமாக அவர் டெல்லி போலீசாரால் தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்தபடி அவர் தன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். </p><p>பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு கண்டனங்கள் குவிந்த நிலையில் அழுத்தத்தின் பேரில் ஜூலை 24 அன்று மத்திய அமைச்சர் ஜேபி நட்டா, இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் அடங்கிய குழு அவரை மருத்துவமனையில் சென்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. </p><p>ஜூலை 20 பேரணி சென்று கைதான மாணவர்களை விடுவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்பட்டதால் சோனம் வாங்சுக் தனது 26 நாட்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். ஆனால் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும்வரை போராட்டம் தொடரும் என சிஜேபி உறுதியாக இருந்தது. போராட்டம் நாடு முழுவதும் விரிவடைந்ததை தொடர்ந்து பிரதான் ராஜினாமா செய்தார். </p> <h2>சோனம் வாங்சுக் குற்றச்சாட்டு</h2><p>அண்மையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிய சோனம் வாங்சுக், தன்னை சந்தித்த மத்திய அமைச்சர்கள் கொடுத்த வாக்கை மீறியதாக குற்றம்சாட்டடியுள்ளார்.</p><p>நேற்று செய்தி நிறுவன நேர்காணலில் அவர் கூறியதாவது, "சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மாணவர் பிரதிநிதிகளை இணைத்து கூட்டு அறிவிப்பாக வெளியிடும் வரை ஊடகங்களுக்கு வெளியிடக் கூடாது என அமைச்சர்களிடமும், உடன் இருந்த உளவுத்துறை அதிகாரிகளிடமும் தெளிவாகக் கூறியிருந்தேன். அவர்களும் அதற்கு சம்மதித்து வாக்குறுதி அளித்தனர்.</p><p>ஆனால், ஐந்து நிமிடங்களுக்குள் மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் ஓடிவந்து, இந்த புகைப்படங்கள் ஏற்கனவே செய்தித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகத் தொடங்கிவிட்டதாகக் கூறினார்" என அவர் தனது ஏமாற்றத்தைப் பதிவு செய்தார்.</p><p>அமைச்சர்கள் தனது நம்பிக்கையை உடைத்துவிட்டதாகவும், இதனால் அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கையையும் தான் இழந்துவிட்டதாகவும் சோனம் வாங்சுக் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.</p> <h2>ரகசிய ஒப்பந்தம்?</h2><p>அரசுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், "என்னை கல்வி அமைச்சராக்குங்கள் என்று கூடக் கேட்டிருக்கலாம். எனக்கு பல வாய்ப்புகள் இருந்தன. </p><p>எனக்கு ஒப்பந்தம் போடும் எண்ணம் இருந்திருந்தால் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை." என்று கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>ரூ.140-க்கு உடலை விற்கிறேன் என கொச்சைப்படுத்துகின்றனர்.. இணையவழி துன்புறுத்தல்கள் குறித்து மாணவிகள் குமுறல் </title><link>https://www.maalaimalar.com/news/national/student-protest-cyber-harassment-female-students-opposing-exam-irregularities-face-online-threats-and-police-inaction</link><comments>https://www.maalaimalar.com/news/national/student-protest-cyber-harassment-female-students-opposing-exam-irregularities-face-online-threats-and-police-inaction#comments</comments><guid isPermaLink="false">eea32227-1958-408d-a01a-1f4f0400f4e3</guid><pubDate>Thu, 06 Aug 2026 01:57:16 +0000</pubDate><atom:updated>2026-08-06T01:57:16.404Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,மாணவிகள்,Female Students,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/8jvcmqg8/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரியா ஆஹிர்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரியா ஆஹிர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/8jvcmqg8/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான <a href="https://www.maalaimalar.com/news/national/modi-apology-row-cjp-founder-demands-pm-apologise-for-police-assault-on-12-year-old-girls">மாணவர் போராட்டத்தில் </a>பங்கேற்றதற்காக இணைவழி துன்புறுத்தல்களை எதிர்க்கொள்ளும் மாணவிகள் சிலருடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.</p><p>அப்போது அம்மாணவிகள் தங்களை குறிவைத்து இணையத்தில் பரவும் கொச்சையான விமர்சனங்கள், மிரட்டல்கள் மற்றும் காவல்துறையின் பாராமுகம் குறித்து தங்கள் வேதனையை பகிர்ந்துகொண்டனர்.</p> <h2>மாணவிகள் குமுறல்</h2><p>மும்பையை சேர்ந்த ரியா ஆஹிர் என்ற மாணவி கூறுகையில், "மத்திய மும்பையின் சிவாஜி பூங்காவில் நடைபெற்ற போராட்டத்தின் போது, 20 மாணவர்களை சட்டவிரோதமாக கைது செய்வதை தடுக்க நான் போலீஸ் வாகனத்தின் முன் நின்றேன். அதற்காக தற்போது எனக்கு எதிரான இணையவழி மிரட்டல்களும் துன்புறுத்தல்களும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. </p><p>இது வெறும் டிரோலிங் அல்ல, குற்றம். இணையவாசிகள் மட்டுமின்றி அரசியல் கட்சித் தொண்டர்களும் எனக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.</p><p>நான் ரூ.140-க்கு உடலை விற்கிறேன் என்றெல்லாம் கொச்சையான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள். ஜூலை 27 அன்றே காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை." என்று வேதனை தெரிவித்தார்.</p><p>உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஃபரா நாஸ் என்ற மாணவி கூறுகையில், " டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராடிய எங்களை காவல்துறை கொடூரமாகத் தாக்கியது.</p><p>மூன்று மணி நேரம் பேருந்தில் அடைத்து வைத்து, 'நீ முஸ்லிம், உனக்குத் தனி பட்டியல் தயாராகும், நீ தேசத்துரோகி' என்றனர்.</p><p>'பாரத் மாதா கி ஜெய்' மற்றும் 'வந்தே மாதரம்' என முழக்கமிட கட்டாயப்படுத்தினர். அதன்பின்னரும் எங்களை தேசத்துரோகிகளாக சித்தரித்தனர்." என்றார்.</p><p>ஜார்கண்டடை சேர்ந்த நூதன் தாபோ என்ற மாணவி பேசுகையில், " ஜூலை 20 நாடாளுமன்றம் பேரணி சென்ற போது என் மீது 'பெல்லட் துப்பாக்கி' குறிவைக்கப்பட்டது. நான் திரும்பி நடக்கும் போது பின்புறமாகச் சுட்டதில் என் காதில் பலத்த காயம் ஏற்பட்டது." என்றார்.</p><p>டெல்லியை சேர்ந்த முஸ்கான் சர்மா, "விதிகளை மீறி காவல்துறையினர் லத்தியால் எங்களது உடலின் கீழ் பகுதிகளில் தாக்கினர். இதற்குக் காரணமான அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும்." என்றார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/xj1i9mdt/tn-16.jpg" /></figure><h2>ராகுல் காந்தி</h2><p>செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, மாணவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், நாட்டின் எதிர்காலம், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே அவர்கள் போராடியுள்ளனர் என்றும் கூறினார்.</p><p>15 வயது சிறுமியின் வீட்டிற்கு 'குண்டர்களை' அனுப்பி மன்னிப்பு கேட்க வற்புறுத்தியதாகக் குற்றம்சாட்டிய அவர், நியாயமான கல்வி முறை, வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி மற்றும் மாணவர்களின் எதிர்காலத்திற்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசின் சித்தாந்தத்துடன் உடன்படுபவர் மட்டுமே நீதிபதிகளாக நியமனம் - இந்தியாவின் முதல் LGBTQ+ எம்.பி  பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/national/judiciary-diversity-row-menaka-guruswamy-alleges-govt-appoints-only-ideologically-aligned-judges</link><comments>https://www.maalaimalar.com/news/national/judiciary-diversity-row-menaka-guruswamy-alleges-govt-appoints-only-ideologically-aligned-judges#comments</comments><guid isPermaLink="false">de79b5ae-4d9c-432c-84fd-40f1ba170779</guid><pubDate>Thu, 06 Aug 2026 00:59:53 +0000</pubDate><atom:updated>2026-08-06T00:59:53.747Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,Rajya Sabha MP,LGBTQ+,உச்சநீதிமன்றம்,மேனகா குருசுவாமி,மாநிலங்களவை எம்.பி,Menaka Guruswamy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/2mimn3pv/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மேனகா குருசுவாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ மேனகா குருசுவாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/2mimn3pv/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு தனது கொள்கை மற்றும் சித்தாந்தத்திற்கு உடன்படுபவர்களை மட்டுமே நீதிபதிகளாக நியமித்து வருவதாகவும் பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மூன்றாம் பாலின வழக்கறிஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக  மேனகா குருசுவாமி குற்றம்சாட்டியுள்ளார். </p><p>உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான மேனகா குருசுவாமி இந்தியாவின் முதல் LGBTQ+ பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். </p> <h2>கன்னிப் பேச்சு </h2><p>தன்னை வெளிப்படையாக ஓரினச்சேர்க்கையாளர் என அறிவித்த மேனகா நேற்று மாநிலங்களவையில் தனது கன்னிப் பேச்சை நிகழ்த்தினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/the-bill-to-increase-the-number-of-supreme-court-judges-to-38-has-been-passed-in-the-lok-sabha">உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 33ல் இருந்து 37 ஆக உயர்த்தும் மசோதா</a> மீதான விவாதத்தில் பேசிய அவர் "நான் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக சில அனுபவங்களுடன் பேசுகிறேன். அவசரச் சட்டம் பிறப்பித்து உச்ச நீதிமன்றத்தில் மேலும் 4 நீதிபதிகளை அதிகரிப்பதன் மூலம் மட்டும் நீதித்துறையின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது.</p><p>நீதித்துறையில் பெண்களை மத்திய அரசு நியமிக்காது; ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களை நியமிக்காது; மதச் சிறுபான்மையினரை நியமிக்காது; தன்பாலினத்தவர்களை நீதித்துறையில் நியமிக்காது.</p> <p>உங்கள் கருத்தியலோடு ஒத்துப்போபவர்களை மட்டுமே நீங்கள் நீதிபதிகளாக நியமிக்கிறீர்கள், அதுவே இங்குள்ள பிரச்சினை.</p><p>உயர் நீதிமன்றங்களில் 30 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளில் பெண்கள் 14 சதவீதம் மட்டுமே உள்ளனர்.</p><p>பட்டியலினத்தவர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் பெண்கள் அனைவரும் சேர்த்து நீதித்துறையில் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர்.</p><p>2018 முதல் 2026 வரை, இந்த அரசு 3 சதவீத பட்டியலின நீதிபதிகளையும், 2 சதவீத பழங்குடியினநீதிபதிகளையும், 12 சதவீத OBC நீதிபதிகளையுமே நியமித்துள்ளது.</p><p>இது மேலும் நான்கு நீதிபதிகளைக் கொண்டுவருவதைப் பற்றியது அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின் வழிமுறைகளின்படி செயல்படும் போதே நீங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்." என்றார்.</p> <h2>யார் இந்த மேனகா குருசாமி?</h2><p>2018-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 ( இயற்கைக்கு மாறான உறவு) என்பதில் இருந்து தன்பாலின சேர்க்கையை நீக்கி உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.</p><p>இந்த தீர்ப்பின் மூலமே, இந்தியாவில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள்உறவு சட்டப்பூர்வமானதாக மாறியது.</p><p>இந்த வழக்கில் மனு மானுதாரருக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர்களில் மேனகாவும் ஒருவர்.</p><p>இந்த தீர்ப்பிற்கு பிறகு, தனது சக பெண் வழக்கறிஞர் அருந்ததி கட்ஜுவுடனான தனது உறவை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.</p><p>தன்பாலின திருமண அங்கீகாரம் தொடர்பான பல வழக்குகளிலும் அவர் வாதிட்டுள்ளார்.</p><p>ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் தனது எல்.எல்.எம். முடித்த மேனகா குருசாமி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ரோட்ஸ் ஸ்காலர் ஆவார்.</p><p>2019 ஆம் ஆண்டு டைம் பத்திரிகை அறிவித்த உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இவரும் ஒருவர்.</p> ]]></content:encoded></item><item><title>மூன்று நாட்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் - அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-special-session-from-aug-16-18-for-womens-reservation</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-special-session-from-aug-16-18-for-womens-reservation#comments</comments><guid isPermaLink="false">55275c1b-2e5c-48d8-85e0-fa7f842210c9</guid><pubDate>Wed, 05 Aug 2026 18:19:37 +0000</pubDate><atom:updated>2026-08-05T18:19:37.479Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>parliament session,பாராளுமன்ற கூட்டம்,மகளிர் இடஒதுக்கீடு,Womens Reservation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/lvybt9r7/Kiren-Rijiju.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிரண் ரிஜிஜு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/lvybt9r7/Kiren-Rijiju.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவற்றை விவாதிப்பதற்காக, ஆகஸ்ட் 16 முதல் 18 வரை மூன்று நாட்கள் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை மத்திய அரசு கூட்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%81">கிரண் ரிஜிஜு</a> தெரிவித்தார்.</p><p>"நாடாளுமன்ற கூட்டத்தொடரின் தேதிகளை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை. மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீதான சிறப்பு கூட்டத்தொடர் ஆகஸ்ட் 16 முதல் 18 வரை நடைபெறும்," என ரிஜிஜு ஊடகங்களிடம் தெரிவித்தார். </p><h2>வாக்கெடுப்பு:</h2><p>2029 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிய அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா, 2026, மக்களவையில் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற தவறிய சில நாட்களுக்கு பிறகு இந்த விளக்கம் வந்துள்ளது.</p><p>மசோதாவுக்கு ஆதரவாக அரசாங்கம் 298 வாக்குகளை பெற்றது, அதே நேரத்தில் 230 உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் 528 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், இந்த சட்டம் நிறைவேற 352 வாக்குகள் தேவைப்பட்டன.</p><p>அரசியலமைப்பு திருத்த மசோதாவின்படி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை தொடர்ந்து, 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, மக்களவை இடங்கள் தற்போதைய 543-இல் இருந்து அதிகபட்சமாக 850 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.</p><h2>இரண்டு மசோதாக்கள்:</h2><p>மசோதாவின் தோல்வியை தொடர்ந்து, தொகுதி மறுவரையறை மற்றும் மக்களவையின் பலத்தை அதிகரிப்பது உள்ளிட்ட, அது தொடர்பான இரண்டு சட்ட மசோதாக்கள் வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.</p><p>முன்மொழியப்பட்ட திருத்தங்கள், புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக காத்திருக்காமல் தொகுதி மறுவரையறைக்கு அனுமதிப்பதன் மூலம், 2029 பொது தேர்தலுக்கு முன்னர் நரி சக்தி வந்தன் அதினியத்தின் விதிகளை செயல்படுத்த முற்படுகின்றன. மேலும், இட ஒதுக்கீட்டு கட்டமைப்பிற்கு இடமளிக்கும் வகையில், மக்களவையின் தற்போதைய 543 இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதையும் அவை பரிந்துரைக்கின்றன.</p><p>வியாழக்கிழமை இரவு வரை நீடித்து, வெள்ளிக்கிழமையும் தொடர்ந்த விவாதத்தின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி, இந்த சட்டத்தை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல் தேசிய நலன் கருதி ஆதரிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தினார்.</p><p>தென்னிந்திய மாநிலங்களில் தொகுதி மறுபங்கீட்டின் தாக்கம் குறித்த கவலைகளுக்கு பதிலளித்த மோடி, மக்களவையின் பலம் அதிகரிக்கப்பட்டால் அப்பகுதிக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று தாம் தனிப்பட்ட முறையில் சபையில் உறுதியளித்ததாக கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய விவகாரம்: மன்னிப்பு கேட்டது மெட்டா</title><link>https://www.maalaimalar.com/news/national/meta-apologises-over-error-restricting-pm-modi-post</link><comments>https://www.maalaimalar.com/news/national/meta-apologises-over-error-restricting-pm-modi-post#comments</comments><guid isPermaLink="false">ca69f6c7-9584-4811-a1d0-c09b9233a1bc</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:25:57 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:25:57.314Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பேஸ்புக்,Meta,மெட்டா,Facebook,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/1lankq6r/Meta00001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெட்டா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/1lankq6r/Meta00001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) நிறுவனத்தின் மூத்த அதிகாரியா உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் ஜோயல் கப்லான் இந்திய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ​​பிரதமர் நரேந்திர மோடியின் காணொளிச் செய்தி ஒன்று ஃபேஸ்புக்கிலிருந்து ஐந்து மணி நேரம் நீக்கப்பட்டிருந்ததற்காக அவர் மன்னிப்பு கோரினார்.</p><h2>மெட்டாவின் உயர் அதிகாரி ஜோயல் கப்லான்</h2><p>​​மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மெட்டா நிறுவனத்தின் தலைமை உலகளாவிய அதிகாரி ஜோயல் கப்லான் (Joel Kaplan) இந்த மன்னிப்பைத் தெரிவித்தார். பிரதமர் மோடியின் பதிவைக் கட்டுப்படுத்திய தவறுக்காக மெட்டா நிறுவனம் சார்பில் நான் அமைச்சரிடம் மன்னிப்பு கோரினேன் என்று கபிலன் கூறியதாக மெட்டா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யுமான நிஷிகாந்த் துபே, பிரதமர் மோடியின் காணொளி நீக்கப்பட்ட விவகாரத்தில் மன்னிப்பு கோர மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு மூன்று நாட்கள் அவகாசம் அளித்து, அவ்வாறு செய்யாவிட்டால் சட்டப்பூர்வமான பாதுகாப்பு (statutory immunity) ரத்து செய்யப்படும் என்று எச்சரித்ததைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பும் மன்னிப்பு கோரும் நிகழ்வும் நடைபெற்றுள்ளன.</p><h2>பிரதமர் மோடி வீடியோ 5 மணி நேரம் நீக்கம்</h2><p>ஜூலை 28 அன்று இந்திய இளைஞர்களை உரையாற்றி, வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து மோடி பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவு, அந்தத் தளத்தில் சிறிது நேரம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு மெட்டாவின் உயர்மட்ட உலகளாவிய நிர்வாகிகளை வரவழைத்திருந்தது. அந்தப் பதிவு நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை கிடைக்கவில்லை என்று துபே கூறியிருந்தார்.</p><h2>தொழில் நுட்பக்கோளாறு எனக் கூறியது பேஸ்புக்</h2><p>பரவலான மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சர்ச்சை எழுந்தது.</p><p>அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த சமூக ஊடக நிறுவனம், இந்தச் சம்பவத்திற்குக் காரணம் ஒரு தொழில்நுட்பக் கோளாறு என்று கூறி மன்னிப்புக் கோரிய நிலையில், அந்த விளக்கம் "போதுமானதாக இல்லை" என்று மெய்ட்டி (MeitY) கூறியது. ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான அந்த நிறுவனம், அந்த உள்ளடக்கம் "தவறுதலாக" அகற்றப்பட்டு, பின்னர் தளத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டதாகக் கூறியது.</p>]]></content:encoded></item><item><title>சில நேரங்களில் மக்களை ரகசியமாக சந்திக்க வேண்டியுள்ளது: கேரள முதல்வர் சதீசன்</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-cm-on-meeting-investors-in-kochi-sometimes-people-have-to-be-met-in-secret</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-cm-on-meeting-investors-in-kochi-sometimes-people-have-to-be-met-in-secret#comments</comments><guid isPermaLink="false">a524fe2b-e218-4a12-b084-9f6b0b645656</guid><pubDate>Wed, 05 Aug 2026 13:11:56 +0000</pubDate><atom:updated>2026-08-05T13:11:56.485Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,VD Satheesan,விடி சதீசன்,கேரளா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/m5jpxriq/VDSatheesan0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ VD Satheesan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/m5jpxriq/VDSatheesan0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரள அரசுப் பணத்தில் ஹெலிகாப்டரை வாடகை எடுத்து கொச்சியில் உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வுரும் மாமனாரை (father-in-law) பார்ப்பதற்காக கொச்சி சென்றதாக வி.டி. சதீசன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், சில நேரங்களில் மக்களை ரகசியமாக சந்திக்க வேண்டியுள்ளது என்று சதீசன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சதீசன் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு வி.டி. சதீசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எர்ணாகுளம் சென்று முதலீட்டாளர்களை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><h2>எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு</h2><p>எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்த வி.டி. சதீசன் "சமீபத்தில் நான் மேற்கொண்ட பயணம் எதிர்கால முதலீட்டாளர்கள் குரூப்பை சந்திப்பதற்கானது. சில சமயம் மக்களை ரகசியமாக சந்திக்க வேண்டியுள்ளது. சில சமயம் வெளிப்படையா சந்திக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் அவர்கள் முதலமைச்சரை சந்திக்க இங்கே வருகிறார்கள்" என்றார்.</p><p>முதலமைச்சர் முதலீட்டாளர்களை சந்திதார் என்றார், அது தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளார்.</p><h2>பிரியதர்ஷினி பேருந்து பயணத் திட்டம் </h2><p>தனியார் பேருந்து உரிமையாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய போக்குவரத்துத்தறை அமைச்சர் "மாநில அரசின் இலவச பிரியதர்ஷினி பேருந்து பயணத் திட்டம் மற்றும் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தும் பெண்கள், தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதையே விரும்புகின்றனர்" எனக் கூறியிருந்தார். இது மாநிலத்தில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் வி.டி. சதீசன், "போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏற்கனவே தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, அக்கூற்றுக்காக வருத்தம் தெரிவித்து விட்டார். எனவே, இது குறித்து சர்ச்சையை உருவாக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் 20 செயற்கைக்கோள்கள் விண்வெளிப் பொருட்களுடன் மோதும் அபாயம்: மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/20-of-22-active-satellites-in-low-earth-orbit-at-higher-risk-of-collision-with-space-objects-govt</link><comments>https://www.maalaimalar.com/news/national/20-of-22-active-satellites-in-low-earth-orbit-at-higher-risk-of-collision-with-space-objects-govt#comments</comments><guid isPermaLink="false">f63e293b-9c03-4562-8354-2cdd9e4ecccd</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:40:28 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:40:28.291Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,செயற்கைக்கோள்,Satellites</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/bu75vq0p/Earth001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ satellites in low earth orbit]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/bu75vq0p/Earth001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குறைந்த புவி சுற்றுப்பாதையில் (Low Earth Orbit) செயல்படும் 22 இந்திய செயற்கைக்கோள்களில் 20 செயற்கைக்கோள்கள் விண்வெளி பொருட்களுடன் மோதும் அதிக அபாயத்தில் உள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.</p><p>மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இப்பகுதியில் விண்வெளிப் பொருட்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதால், குறைந்த புவிப்பாதையில் (2,000 கி.மீ-க்கும் குறைவான உயரத்தில்) இயங்கும் செயற்கைக்கோள்கள் மோதல் அபாயத்திற்கு அதிகம் உள்ளாகின்றன என்று குறிப்பிட்டார்.</p><h2>இது தொடர்பாக அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-</h2><p>2026-ஆம் ஆண்டில் இதுவரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஒன்பது முறை மோதலைத் தவிர்க்கும் நடவடிக்கைகளை (collision avoidance manoeuvres) மேற்கொண்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 20-ஆக இருந்தது.</p><p>மோதலைத் தவிர்க்கும் நடவடிக்கை என்பது மற்றொரு பொருள் அல்லது விண்வெளி குப்பைகளுடன் (space debris) விண்வெளியில் மோதல் ஏற்படுவதைத் தடுக்க, செயற்கைக்கோள் இயக்குபவரால் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதை மாற்றமாகும்.</p><p>விண்வெளி குப்பை மேலாண்மை தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு அமைப்புகளான 'இன்டர்-ஏஜென்சி டெப்ரிஸ் கோஆர்டினேஷன் கமிட்டி' (IADC) மற்றும் 'நீண்ட கால நிலைத்தன்மைக்கான ஐக்கிய நாடுகள் பணிக்குழு' (UN-LTS) ஆகியவற்றில் இந்தியா தீவிரமாகப் பங்கேற்று வருகிறது.</p><p>திருத்தப்பட்ட IADC விண்வெளி குப்பை குறைப்பு வழிகாட்டுதல்களுக்கு இஸ்ரோ கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் தனது கருத்துகளையும் வழங்கியுள்ளது.</p><p>விண்வெளி குப்பைகளைக் குறைப்பதற்கான தனது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, குப்பைகளற்ற விண்வெளிப் பணி (Debris Free Space Mission) முன்னெடுப்பிற்கான இந்தியாவின் நோக்கம் 2024-இல் அறிவிக்கப்பட்டது.</p><p>எதிர்காலத்தில் அரசு மற்றும் தனியார் என அனைத்து இந்தியத் தரப்பினராலும் பூஜ்ஜிய குப்பை (zero debris) என்ற இலக்கை அடைவதே இஸ்ரோவின் நோக்கம்.</p><p>இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.</p><p>4 ஆயிரம் கிலோ எடைகொண்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் ஒரு பகுதி நிலாவில் மோத உள்ளது. இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சராக பதவி ஏற்ற நாகேந்திரா ராஜினாமா செய்யவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம்: பாஜக</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-hits-out-at-cong-for-re-inducting-nagendra-in-karnataka-cabinet-seeks-resignation</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-hits-out-at-cong-for-re-inducting-nagendra-in-karnataka-cabinet-seeks-resignation#comments</comments><guid isPermaLink="false">38769198-dc8e-4927-9cae-4e359b6da2ed</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:21:20 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:21:20.018Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Karnataka congress,கர்நாடக காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/tvovgi9v/BJP00001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாகேந்திரா- சாலவாடி நாராயணசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/tvovgi9v/BJP00001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநில முதல்வராக டி.கே. சிவக்குமார் கடந்த இரணடு மாதங்களுக்கு முன்னதாக பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால் கடந்த 20-ந்தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 20 பேர் புதிதாக அமைச்சரவையில் இடம் பிடித்தனர்.</p><p>அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் பல்லாரி ஊரக காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாகேந்திராவை அமைச்சரவையில் சேர்த்ததற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><h2>89 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை</h2><p>89 கோடி ரூபாய் வால்மீகி பழங்குடியினர் மேம்பாட்டு கார்ப்பரேசன் மோசடி குற்றச்சாட்டில் பி. நாகேந்திரா கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளார். அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தொடர்ந்து பதவியில் தொடர்ந்தால், போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>இது தொடர்பாக கர்நாடக மாநில மேலவை எதிர்கட்சி தலைவரான சாலவாடி நாராயணசாமி, அமைச்சரவையில் இருந்து நாகேந்திரா நீக்கப்படவில்லை என்றால், மாநிலம் தழுவிய போராட்டத்தை பாஜக நடத்தும். ஆகஸ்ட் 13-ந்தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தை சுமூகமாக நடத்த விடமாட்டோம் என்றார்.</p><h2>அமைச்சர் பதவியை ஏலம் விட்ட காங்கிரஸ்</h2><p>அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, அப்பதவியை காங்கிரஸ் கட்சி ஏலம் விட்டது என்ற பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.</p><p>நாகேந்திரா நாராயணசாமி ஊழல் குற்றச்சாட்டு எதிர்கொண்டு வருகிறார். அவர் ஜாமினில் உள்ளார். அவருக்கு அமைச்சரவை பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், காங்கிரஸ் ஊழலுக்கு ஆதரவாக உள்ளது என்று நிரூபனமாகியுள்ளது.</p><p>நாகேந்திரா ராஜினாமா செய்யும் வரைக்கும், நாங்கள் போராட்டத்தை நிறுத்தமாட்டோம். நாகேந்திரா ராஜினாமாவை முதலமைச்சர் சிவக்குமார் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p><h2>ஊழல் குற்றச்சாட்டில் நாகேந்திரா கைது</h2><p>காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடையும் முன்பே, கர்நாடக மகரிஷி வால்மீகி பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டுக்கழக (KMVSTDCL) முறைகேடு விவகாரம் மாநிலத்தையே உலுக்கியது.</p><p>இம்முறைகேட்டிற்கு உடந்தையாக இருக்குமாறு கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி, அக்கழகத்தின் கணக்குப்பிரிவு கண்காணிப்பாளர் பி. சந்திரசேகரன் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.</p><p>இக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் கணக்கு அதிகாரி ஆகியோர் இணைந்து, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் உள்ள கழகத்தின் கணக்கில் ரூ. 187 கோடியைக் குவித்ததாகக் கூறப்படுகிறது. </p><p>போலி காசோலைகள் மற்றும் RTGS பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 89.63 கோடி மோசடியாகத் திசைதிருப்பப்பட்டது. இவ்வாறு திசைதிருப்பப்பட்ட நிதி சுமார் 600 வங்கிக் கணக்குகள் வழியாகப் பல நிலைகளில் மாற்றப்பட்டு, இறுதியில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பயன்பாட்டிற்காகப் பணம், தங்கக் கட்டிகள் மற்றும் ஆடம்பர வாகனங்களாக மாற்றப்பட்டது என்று சிபிஐ (CBI) தனது விசாரணையில் குற்றம் சாட்டியது.</p><p>இக்குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஜூன் 2024-ல் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையிலிருந்து நாகேந்திரா நீக்கப்பட்டார். ஜூலை 12, 2024 அன்று அமலாக்கத் துறையால் (ED) கைது செய்யப்பட்ட நாகேந்திரா, ஜாமின் கிடைக்கும்வரை, அதாவது அக்டோபர் 14, 2024 வரை சிறையில் இருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>கேரளா: தன்னுயிரை துறந்து வெள்ளத்தில் சிக்கிய முதியவரை காப்பாற்றிய நீச்சல் வீரர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-swimmer-saves-elderly-man-trapped-in-floodwaters</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-swimmer-saves-elderly-man-trapped-in-floodwaters#comments</comments><guid isPermaLink="false">2b57e3fc-1497-44ff-8e7b-9cc557747286</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:26:37 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:26:37.325Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,தென்மேற்கு பருவமழை,Southern monsoon,கேரளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/c370em65/New-Project-2026-08-05T142455.929.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கேரளா: தன்னுயிரை நீர்த்து வெள்ளத்தில் சிக்கிய முதியவரை காப்பாற்றிய நீச்சல் வீரர்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/c370em65/New-Project-2026-08-05T142455.929.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்துவருகிறது. கனமழையால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.</p><p>இந்நிலையில் ஆக.1ம் தேதி கண்ணூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், காரியங்கோடு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் பென்னி என்னும் 61 வயது முதியவர் சிக்கியுள்ளார். </p><p>ஆற்றங்கரையிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் சிக்கிக்கொண்டிருந்த பென்னியை மீட்க நீச்சர் வீரர் ராஜேஷ் (36) ஷிபின், ஜிதின் உள்ளிட்டோர் அடங்கிய மீட்புக்குழு சென்றுள்ளது.</p><p>மற்ற இருவரும் ஆற்றில் இறங்கிய பென்னியிடம் கயிற்றை தூக்கி வீசியுள்ளனர். அந்த கயிற்றை அருகிலுள்ள தென்னை மரத்தில் கட்ட முயன்றபோது கயிற்றில் சிக்கி அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ராஜேஷ் நீந்திசென்று முதியவரை அடைந்துள்ளார். </p><p>முதியவரை மீட்டு கரைக்கு அழைத்து வரும்போது, ராஜேஷ் தன்னிடம் இருந்த பாதுகாப்பு ஜாக்கெட்டை அந்த முதியவருக்குக் கொடுத்துள்ளார். </p><p>முதியவரைக் கரையேற்றிய பின்னர், ஆற்றைக் கடக்கப் பயன்படுத்திய கயிற்றிலிருந்து ராஜேஷின் பிடி நழுவியுள்ளது. இதில் ஆற்றின் அலைகளின் வேகம் மற்றும் கடுமையான நீரோட்டம் காரணமாக அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.</p><p>வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ராஜேஷை தீயணைப்புத் துறை, மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மூன்று நாட்களாகத் தீவிரமாக தேடியுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக நேற்று மாலை புலிங்கோம் பாலத்தின் அருகில் ராஜேஷின் உடல் மீட்கப்பட்டது. </p><p>அவரது இறப்பு கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜேஷின் உடலுக்கு கேரள முதலமைச்சர் வி.டி.சுதீஷன் அஞ்சலி செலுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன், பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். </p><h2>யார் இந்த ராஜேஷ்?</h2><p>கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கல்லியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஒரு நீச்சல் மற்றும் ராப்பெல்லிங் பயிற்றுவிப்பாளராக இருந்துவந்தார். கேளராவில் பேரிடர்கள் ஏற்படும் போதெல்லாம் தன்னார்வலராக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். </p><p>2018 கேரள வெள்ளம், 2024 வயநாடு நிலச்சரிவு பேரிடர் காலங்களில் தீவிரமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இவருக்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவரது இறப்பிற்கு கேரள மக்கள், இணையவாசிகள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி</title><link>https://www.maalaimalar.com/news/national/rbi-mpc-meeting-2026-rbi-keeps-repo-rate-steady-at-525-amid-us-iran-war</link><comments>https://www.maalaimalar.com/news/national/rbi-mpc-meeting-2026-rbi-keeps-repo-rate-steady-at-525-amid-us-iran-war#comments</comments><guid isPermaLink="false">fa7f6f00-21d1-44af-8a90-726b91ef8353</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:36:55 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:36:55.007Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,ரெப்போ வட்டி விகிதம்,repo rate,ரிசர்வ் வங்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/flja7ert/RBI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RBI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/flja7ert/RBI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். இதனால் வீடு, வாகனக் கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.</p><p>வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம் என அழைக்கப்படுகிறது.</p><p>நிதிச்சூழலுக்கு ஏற்ப இந்த வட்டி விகிதத்தை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி ஆலோசிக்கும்.</p><p>அந்த வகையில் 2026-27 நிதியாண்டுக்காக ஆகஸ்ட் 3 முதல் 5 வரை மூன்று நாட்கள் நிதிக்குழு கூட்டம் கூட்டப்பட்டது.</p><p>இன்று கூட்டத்தின் பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.</p><p>மேற்காசிய போரால் எரிபொருள், எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய பொருளாதாரத்தின் மீதான பணவீக்க அபாயங்களை உணர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p>நடப்பு 2026-27 நிதி ஆண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதம் ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>இது முன்பு கணிக்கப்பட்ட 6.6 சதவீதத்தை விட சற்று அதிகமாகும்.</p><p>முதல் காலாண்டிற்கான பணவீக்கக் கணிப்பு எதிர்பார்க்கப்பட்டதை விடக் குறைவாக உள்ளது. அதாவது, பணவீக்கம் தற்போது 5 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. இது முன்பு எதிர்பார்க்கப்பட்ட 5.1 சதவீதத்தை விட குறைவானதாகும் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நடுவானில் திடீரென 300 அடிகள் சரிந்த ஏர் இந்தியா விமானம்! மரண பயத்தில் அலறிய பயணிகள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/air-india-flight-ai2379-turbulence-incident-15-injured</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-india-flight-ai2379-turbulence-incident-15-injured#comments</comments><guid isPermaLink="false">aae474b0-db2d-40e1-a444-9a1546662172</guid><pubDate>Wed, 05 Aug 2026 07:44:20 +0000</pubDate><atom:updated>2026-08-05T07:44:20.723Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏர் இந்தியா,Air India,PhuketToDelhi,FlightAI2379,Air Turbulence,DGCA Investigation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/nyxbmrkw/Air-India" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Air India ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/nyxbmrkw/Air-India?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாய்லாந்தின் பூக்கெட்டில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI2379), நடுவானில் திடீரென கடுமையான காற்றுப் கொந்தளிப்பில் (டர்புலன்சில்) சிக்கியதால் 300 அடி உயரத்தை உடனடியாக இழந்தது. </p><p>இந்த எதிர்பாராத விபத்தில், விமானப் பணிப்பெண் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . மொத்தம் 15 பேர் காயமடைந்துள்ளனர்.</p><h2>நடுவானில் நடந்தது என்ன?</h2><p>நேற்று காலை பூக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்த, ஏர்பஸ் A320 என்ற குறுகிய வடிவ விமானம் கடுமையான வான்வழிச் சுழற்சியில் சிக்கியது. </p><p>அப்போது விமானம் தனது கட்டுப்பாட்டைச் சற்றே இழந்து, நொடிப்பொழுதில் 300 அடி கீழே சரிந்தது.</p><p>விமானம் திடீரென சரிந்தபோது, உள்ளே இருந்த சில பயணிகளும், பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களும் விமானத்தின் மேல் கூரையில் பலமாக மோதி தூக்கி வீசப்பட்டனர். இதனால் விமானத்தினுள் பெரும் பதற்றமும் பயமும் ஏற்பட்டது.</p><h2>அவசரத் தரையிறக்கம் மற்றும் முதலுதவி:</h2><p>இப்படிபட்ட இக்கட்டான சூழ்நிலையிலும், விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். </p><p>அதனைத் தொடர்ந்து, காலை 11:30 மணியளவில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.</p><p>விமானம் தரையிறங்குவதற்கு முன்பே அவசர மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். காயமடைந்த அனைவருக்கும் உடனடியாக மருத்துவப் பரிசோதனைகளும் அவசர சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. </p><p>இதில் ஒரு விமானப் பணிப்பெண்ணுக்கு மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>விமானப் போக்குவரத்து அமைச்சகம் விசாரணை:</h2><p>இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்து இந்தியாவின் தலைமை விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான DGCA தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. </p><p>வான்வழிச் சுழற்சி ஏற்படுவதற்கு முன்பாக விமானிகளுக்கு ஏதேனும் எச்சரிக்கை கிடைத்ததா அல்லது இதில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளதா என்ற கோணத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>