<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 04 Aug 2026 11:41:26 +0000</lastBuildDate><item><title>ராமர் கோவில் நன்கொடை திருட்டு, மாணவர்கள் விவகாரம்: விவாதிக்க பயப்படும் பிரதமர், அமித் ஷா- கார்கே குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/kharge-says-pm-modi-shah-scared-insulting-parliament-by-evading-answers-on-donation-theft-students-issue</link><comments>https://www.maalaimalar.com/news/national/kharge-says-pm-modi-shah-scared-insulting-parliament-by-evading-answers-on-donation-theft-students-issue#comments</comments><guid isPermaLink="false">3b21ade8-252f-45e6-a711-3086322f9269</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:25:55 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:25:55.857Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,கார்கே,Kharge,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/l5m6hztf/Kharge0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி, அமித் ஷா- கார்கே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/l5m6hztf/Kharge0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம் மற்றும் ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை குறித்து பதிலளிக்காமல் தவிர்ப்பதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் "பயத்தில்" உள்ளனர் அல்லது நாடாளுமன்றத்தை அவமதிக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.</p><p>எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் இந்த விவகாரம் தொடர்பாகப் போராட்டம் நடத்தி வருவதோடு, நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் முடக்கியுள்ளனர்.</p><p>மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள கார்கே, அவையில் இந்த விஷயத்தை எழுப்ப முயன்றாலும் அவருக்குப் பேச அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தை எழுப்பிய அவர், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாகம், நிலம் வாங்குதல், பண நன்கொடைகள் மற்றும் மதிப்புமிக்க காணிக்கைகளை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><h2>மேலும், இது தொடர்பாக கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</h2><p>ராமர் கோவில் நன்கொடை திருட்டு விவகாரம் கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம்.  ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. பிரதமர் மோடியே நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட முறையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.</p><p>மத்திய அரசு 70 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை இந்த அறக்கட்டளையிடம் ஒப்படைத்தார். பூமி பூஜை முதல் கும்பாபிஷேக விழா வரையிலான ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும் மோடி பங்கேற்றார்.</p><h2>பிரதமர் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது</h2><p>இத்தகைய சூழலில், காணிக்கைகள் திருடப்பட்டது உள்ளிட்ட தீவிரமான குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. அமலாக்கத்துறை (ED), சிபிஐ (CBI), வருமான வரித்துறை மற்றும் பிற புலனாய்வு அமைப்புகள் எங்கே உள்ளன என்பதை அவர் அவையில் விளக்க வேண்டும்.</p><p>ராமர் பெயரில் கொள்ளையடிப்பவர்கள் ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் நாட்டைத் தவறாக வழி நடத்துவதை நிறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு கார்கே தெரிவித்திருந்தார்.</p><h2>பயப்படும் பிரதமர் மோடி, அமித் ஷா</h2><p>பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, நாடாளுமன்றம் சுமூகமாகச் செயல்பட மோடியும் ஷாவும் அவைக்கு வர வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்று கூறினார்.</p><p>நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம். இரு அவைகளிலும் விவாதம் நடத்த அவைத் தலைவரும் (மாநிலங்களவை) சபாநாயகரும் (மக்களவை) அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ராமர் கோயில் நன்கொடை திருட்டு மற்றும் மாணவர்கள் மீதான வன்முறை குறித்து விவாதம் நடந்தால் உண்மை தானாகவே வெளிவரும். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அரசு பீதியடைந்திருப்பதாகத் தெரிகிறது.</p><p>அதோடு மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவைக்கு வரவில்லை. அவர்கள் பயப்படுகிறார்கள் அல்லது இங்கு வராததன் மூலம் நாடாளுமன்றத்தை அவமதிக்க விரும்புகிறார்கள்" என்றார்.</p><p>காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அந்த இரண்டு விவகாரங்கள் குறித்தும் பதிலளிக்கக் கோரி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பின.</p>]]></content:encoded></item><item><title>E20 போராட்டம் மூலம் அரசியல் தோல்வியை உயிர்ப்பிக்க முயற்சிக்கும் கெஜ்ரிவால்: பாஜக விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/kejriwal-trying-to-revive-his-failed-politics-through-e20-protest-bjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/kejriwal-trying-to-revive-his-failed-politics-through-e20-protest-bjp#comments</comments><guid isPermaLink="false">acbedea6-eebc-4bef-aa12-972ee18fd759</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:56:12 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:56:12.659Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,எத்தனால் கலந்த எரிபொருள்,E20 fuel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/f3mzdjxm/KejriwalTarun0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கெஜ்ரிவால்- தருண் சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/f3mzdjxm/KejriwalTarun0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>E20 எரிபொருளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை நோக்கிப் பேரணி நடத்த முயன்ற ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தேசிய ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/aap-agitation-against-e20-fuel-to-continue-people-must-join-protest-kejriwal">அரவிந்த் கெஜ்ரிவாலை</a> பாஜக கடுமையாக கடுமையாக சாடியுள்ளது. கெஜ்ரிவால் இந்திய விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும், தனது தோல்வியடைந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.</p><h2>கெஜ்ரிவால் பேரணி</h2><p>தொடர்பான 2.30 லட்சத்திற்கும் அதிகமான மனுக்களைச் சமர்ப்பிப்பதற்காக கெஜ்ரிவால் சுமார் 100 பேருடன் இந்தப் பேரணியை மேற்கொண்டிருந்தார். பிரதமரின் இல்லத்தை நோக்கிப் பேரணியாகச் சென்ற கெஜ்ரிவால் மற்றும் அவருடன் சென்றவர்களை டெல்லி காவல்துறை ஃபெரோஸ் ஷா சாலையில் தடுத்து நிறுத்தியது.</p><h2>இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் கூறியதாவது:-</h2><p>அரவிந்த் கெஜ்ரிவாலின் பேரணி அபத்தமானது, பொறுப்பற்றது மற்றும் அர்த்தமற்றது. அனைத்தும் அறிவியல் பூர்வமான முறையிலேயே செய்யப்பட்டுள்ளன. இச்செயல்முறை முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. யாரும் எந்தப் புகாரையும் எழுப்பவில்லை.</p><p>கெஜ்ரிவாலின் பிரசாரம் இந்தியாவின் விவசாயிகளுக்கு எதிரானது. கெஜ்ரிவால் அவர்களே, நீங்கள் விவசாயிகளின் வருமானத்தைப் பறிக்க முயற்சிக்கிறீர்கள். மக்காச்சோளம், கரும்பு மற்றும் பிற விவசாய விளைபொருட்களிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது.</p><p>உலகம் முழுவதும் பல நாடுகளில் பல தசாப்தங்களாக எத்தனால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதன் பயன்பாடு அறிவியல் பூர்வமான முறையிலேயே செயல்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>சர்ச்சையை உருவாக்க முயலும் கெஜ்ரிவால்</h2><p>ஆனால் கெஜ்ரிவால் தேவையற்ற சர்ச்சையை உருவாக்கவே விரும்புகிறார். எப்படியாவது அரசியல் செய்யவே அவர் விரும்புகிறார். தேசமோ, வாகனங்களோ அல்லது மக்களின் பிரச்சினைகளோ அவருக்கு முக்கியமல்ல. அவர் தனது தோல்வியடைந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பிக்கவே முயற்சிக்கிறார். அவரது வாதங்களுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை.</p><p>பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாஜக தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. ஒரு வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது.</p><p>இவ்வாறு தருண் சுக் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>E20 எரிபொருளுக்கு எதிரான AAP-யின் போராட்டம் தொடரும்: மக்கள் இதில் இணைய வேண்டும்: கெஜ்ரிவால்</title><link>https://www.maalaimalar.com/news/national/aap-agitation-against-e20-fuel-to-continue-people-must-join-protest-kejriwal</link><comments>https://www.maalaimalar.com/news/national/aap-agitation-against-e20-fuel-to-continue-people-must-join-protest-kejriwal#comments</comments><guid isPermaLink="false">7e5571ea-8de6-4676-b1d2-91378159dd04</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:16:22 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:16:22.448Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,ஆம் ஆத்மி,AAP,எத்தனால் கலந்த எரிபொருள்,E20 fuel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a5hwau5d/arvindKejriwal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a5hwau5d/arvindKejriwal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/some-degree-of-damage-is-possible-central-governments-reply-in-parliament-regarding-ethanol-blended-petrol">E20</a> எரிபொருளுக்கு எதிரான தங்கள் கட்சியின் பிரசாரம் தொடரும் என்றும், இதன் அமலாக்கத்தை மக்கள் தடுக்க விரும்பினால் பெருமளவில் இந்தப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சியின்  தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.</p><h2>E20 எரிபொருள்</h2><p>E20 எரிபொருளுக்கு எதிரான 2.30 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களைச் சமர்ப்பிக்க, சுமார் 100 பேருடன் பிரதமர் இல்லத்தை நோக்கிச் செல்ல முயன்ற கெஜ்ரிவால் மற்றும் பிற கட்சித் தலைவர்களை டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதனால் அவர்கள் ஃபிரோஸ் ஷா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>அப்போது கெஜ்ரிவால் கூறியதாவது:-</h2><p>தங்கள் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள மாநிலங்களிலும் இக்கொள்கையை அமல்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்போம்.</p><p>கோவா மற்றும் குஜராத்தில் எங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அங்கே E20 நடைமுறைக்கு வருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைகளில் இதை எதிர்ப்பார்கள்.</p><h2>மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்</h2><p>இன்று நடைபெற்ற பேரணியில் சுமார் 100 பேர் மட்டுமே பங்கேற்றாலும், சமூக ஊடகங்களில் விமர்சனங்களையும் கேலிப் பேச்சுகளையும் எதிர்கொண்ட போதிலும் அவர்கள் துணிச்சலுடன் பங்கேற்றனர்.</p><p>மக்கள் E20-லிருந்து விடுபட விரும்பினால், அவர்கள் பெருமளவில் வீதிகளுக்கு வந்து போராட வேண்டும்.</p><p>எத்தனால் உற்பத்தியால் இந்திய விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைக்காது என்றும், மாறாக இக்கொள்கை அமெரிக்க விவசாயிகளுக்கே பயனளிக்கும். இந்திய விவசாயிகளை விட வெளிநாட்டு நலன்களுக்கே இக்கொள்கை முன்னுரிமை அளிப்பதாக உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தை எதிர்த்து நின்று அமெரிக்காவிலிருந்து எத்தனால் இறக்குமதி செய்வதை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.</p> <h2>சஞ்சய் சிங் எம்.பி.</h2><p>நாடாளுமன்றத்தில் தான் இந்த விவகாரத்தை எழுப்பியதாகவும், E20-ஐ அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதை உணர்த்தும் வகையிலான பதிலை பெற்றதாகவும் ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.</p><p>இது தொடர்பாக சஞ்சய் சிங் கூறுகையில் "இன்று நாடாளுமன்றத்தில் நான் இந்தக் கேள்வியை எழுப்பினேன். அரசு E20-ஐ அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்பதை அந்தப் பதில் தெளிவுபடுத்துகிறது" என்றார்.</p><p>எத்தனால் கலந்த பெட்ரோலால் மைலேஜ் குறைவாக கிடைப்பதாகவும், என்ஜின் பராமரிப்பு செலவு கூடுவதாகவும் வாகன ஒட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவையில் பிறப்பு-இறப்பு பதிவுகள் (திருத்தம்) மசோதா தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-passes-the-registration-of-births-and-deaths-amendment-bill-2026-amid-sloganeering-by-opposition</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-passes-the-registration-of-births-and-deaths-amendment-bill-2026-amid-sloganeering-by-opposition#comments</comments><guid isPermaLink="false">29ed327f-41c0-4775-9a33-c4ad060b33a0</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:55:59 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:55:59.055Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாநிலங்களவை,rajya sabha,opposition parties,நாடாளுமன்றம்,parliment,எதிர்க்கட்சிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/kz7a30ro/rajya-sabha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rajya sabha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/kz7a30ro/rajya-sabha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கிய முதல் நாள் முதலே எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்து வருகிறது.</p><p>இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 12-வது நாளான இன்று நீட் முறைகேடு விவகாரம், மாணவர் போராட்டங்கள் மீதான போலீஸ் நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பினர்.</p><p>மேலும், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தொடக்கத்திலேயே ஏற்பட்ட அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோஷங்களால் அவை பாதிக்கப்பட்டது. தொடர் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இதற்கிடையே, மாநிலங்களவையில் பிறப்பு-இறப்பு பதிவுகள் (திருத்தம்) மசோதா 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின், எதிர்க்கட்சியினரின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.</p><p>கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிறப்பு-இறப்பு பதிவுகள் (திருத்தம்) மசோதா 2026 தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p>நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால், அவையில் தொடர்ந்து அமளி நீடித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ராமர் கோவில் நன்கொடை திருட்டு, மாணவர்கள் போராட்டம்தான் பாஜக-வின் இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம்: சஞ்சய் ராவத்</title><link>https://www.maalaimalar.com/news/national/sanjay-raut-ayodhya-temple-loot-police-action-on-student-protesters-cost-bjp-bankipur-seat</link><comments>https://www.maalaimalar.com/news/national/sanjay-raut-ayodhya-temple-loot-police-action-on-student-protesters-cost-bjp-bankipur-seat#comments</comments><guid isPermaLink="false">ca688ec4-03e1-4925-b23e-9836fff5230b</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:52:43 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:52:43.306Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரசாந்த் கிஷோர்,Prashant Kishor,ஜன் சுராஜ் கட்சி,சஞ்சய் ராவத்,Sanjay Raut,Jan Suraaj Party</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s8l3oyjv/SanjayRaut0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சஞ்சய் ராவத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s8l3oyjv/SanjayRaut0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயோத்தி கோவில் விவகாரத்தில் நடந்த கொள்ளை மற்றும் மாணவர் போராட்டக்காரர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை ஆகியவை பாங்கிபூர் தொகுதியில் பாஜக-வின் தோல்விக்குக் காரணமாக அமைந்தன என்ற சிவசேனா (UBT) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.</p><h2>பாங்கிபூர் இடைத்தேர்தல்</h2><p>பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் பாஜக கட்சியின் தேசிய தலைவராக பதவி ஏற்றதால், பாங்கிபூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.</p><p>தேர்தல் வியூகம் அமைப்பாளரான பிரசாந்த் கிஷோர், தனது கட்சியான ஜன் சுராஜ் சார்பில் போட்டியிட்டார். இதில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார். பீகார் மாநில சட்டசபை தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.</p><h2>இந்த நிலையில் சிவசேனா (UBT) கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-</h2><p>ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் மற்றும் இளம் போராட்டக்காரர்கள் மீது காவல் துறை எடுத்த நடவடிக்கை, அயோத்தி ராமர் கோவிலில் நடந்ததாகக் கூறப்படும் நன்கொடை திருட்டு ஆகியவை குறித்து பாஜக தலைமை மௌனம் காத்தது ஆகியவை பாஜக-வின் கோட்டையான பாங்கிபூரில் அதன் தோல்விக்குக் காரணங்களாக அமைந்தன.</p><p>லக்னோவில் கட்சித் தலைவர் நிதின் நபினை வரவேற்கும் நிகழ்வின்போது, ​​இந்து கடவுளான அனுமன் வேடமணிந்த ஒருவர் பாஜக கொடியை அசைத்து நடனமாடிய வீடியோ மக்களின் மனதைப் புண்படுத்தியது.</p><h2>எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை அதிகரிப்பு</h2><p>இந்த இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 1988-ல் நடிகர் அமிதாப் பச்சன் பதவி விலகியதால் அலகாபாத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வி.பி. சிங் வெற்றி பெற்றார். அவரது வெற்றி நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியின் தொடக்கமாக அமைந்தது.</p><p>உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஐந்து முறை வென்ற கோரக்பூர் மக்களவைத் தொகுதியை, 2018-ல் நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சியிடம் பாஜக இழந்தது.</p><h2>Gen Z</h2><p>மும்பையில் உள்ள நீடா அம்பானி கலாச்சார மையத்தில் (NMACC) இந்த வாரம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 'ஜென்-இசட்' (Gen Z) தலைமுறையினருடன் மேற்கொள்ளவிருக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள், பாஜக தலைவர்கள் அல்லது சங்கத்தின் பிரதிநிதிகளின் பிள்ளைகள் அல்லது பேரக்குழந்தைகளாகவே இருப்பார்கள்.</p><p>அங்கு வேறு யார் செல்வார்கள்? அதில் பங்கேற்பவர்கள் ஜென்-இசட் (Gen Z) தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்கள், கண்ணீர்ப்புகை மற்றும் தடியடியை எதிர்கொண்டவர்கள் ஆகியோரே 'ஜென்-இசட்' தலைமுறையினர். ஆர்எஸ்எஸ் (RSS) தலைவரின் நிகழ்ச்சிக்கு அவர்களே அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.</p><p>இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும்: அதிருப்தி எம்.எல்.ஏ.-க்களுக்கு டி.கே. சிவக்குமார் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-cong-mlas-party-is-important-resignations-will-be-accepted</link><comments>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-cong-mlas-party-is-important-resignations-will-be-accepted#comments</comments><guid isPermaLink="false">611a59ae-11f5-420c-8636-b82329fc3c0c</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:26:10 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:26:10.923Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,கர்நாடகா,Karnataka,DK Shivakumar,டிகே சிவக்குமார்,​​Congress</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7573bbpj/19072026Shivakumar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7573bbpj/19072026Shivakumar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் கிடைக்காததால் ராஜினாமா செய்வதாக மிரட்டும் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்குக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். அத்துடன் கட்சியே முக்கியம், அவர்கள் ராஜினாமா செய்தால் சில நிமிடங்களிலேயே அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.</p><p>டி.கே. சிவக்குமார் கர்நாடக மாநில முதல்வராக பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 19 அமைச்சர்களைச் சேர்த்துத் தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார்.</p><h2>அதிருப்தி எம்.எல்.ஏ.-க்கள் ராஜினாமா மிரட்டல்</h2><p>நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் இறுதியாக நடந்தேறிய நிலையில், அது ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அமைச்சர் பதவி கிடைக்காத சிலர் ராஜினாமா செய்வதாகத் தெரிவித்தனர்.</p><p>இண்டி (Indi) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான யஷ்வந்தராயகௌடா வி. பாட்டீல், திங்களன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.</p> <p>அமைச்சரவையில் இடம்பெற விரும்பும் பலரின் ஆதரவாளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர். முதலமைச்சர் உட்பட கர்நாடக அமைச்சரவையின் அனுமதிக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 34 ஆகும். திங்களன்று மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து, தற்போது அதில் ஒரு அமைச்சர் பதவி காலியாக உள்ளது.</p><h2>அதிருப்தி எம்.எல்.ஏ.-க்கள் விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-</h2><p>நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். அரசியலில் ராஜினாமாக்கள் நிகழ்வது இயல்பு. ராஜினாமா செய்பவர்களை யாரும் தடுக்க முடியாது. கட்சி மற்றும் தங்கள் எதிர்காலம் முக்கியம் என்று கருதினால், கட்சிதான் முதன்மையானது. கட்சி இருந்தால்தான் மற்ற அனைத்தும் சாத்தியம்.</p><p>தரம் சிங் மற்றும் சித்தராமையா ஆகியோர் முதல்வராக இருந்தபோது எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அப்போதே நானும் ராஜினாமா செய்திருக்கலாமே? பரமேஸ்வரா (துணை முதல்வர்) மற்றும் நான் பொறுமை காக்கவில்லையா? வீரேந்திர பாட்டீல் முதல்வராக இருந்தபோது பங்காரப்பா, கார்கே (ஏஐசிசி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே) மற்றும் தரம் சிங் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஆனால், பின்னர் பங்காரப்பா மற்றும் சிங் முதல்வர்களாகவில்லையா? ஒருவருக்குப் பொறுமை அவசியம்.</p><h2>ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும்</h2><p>யாராவது ராஜினாமா செய்தால், சில நிமிடங்களிலேயே அதை ஏற்றுக்கொள்வேன். முன்பு வாரியங்கள் மற்றும் கழகங்களின் உறுப்பினர்களாகவும் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களிடம், அவர்களின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே என்று கூறப்பட்டிருந்தது.</p><p>ஏற்கனவே இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதலில் அந்தப் பதவிகளில் இருப்பவர்களை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு, புதியவர்களை நியமிப்பேன். அதன் பிறகு எம்.எல்.ஏ-க்களுடன் தனித்தனியாகப் பேசுவேன்.</p><p>இவ்வாறு டி.கே. சிவக்குமார் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>FSSAI அதிரடி: டாபர் நிறுவனத்தின் 100% தூய்மை விளம்பரங்களுக்குத் தடை!</title><link>https://www.maalaimalar.com/news/national/fssai-crackdown-ban-on-dabur-100-percent-purity-ads</link><comments>https://www.maalaimalar.com/news/national/fssai-crackdown-ban-on-dabur-100-percent-purity-ads#comments</comments><guid isPermaLink="false">6abac9e7-2574-4d36-b92e-f3a0a82ef725</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:52:17 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:52:17.068Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FSSAI,Dabur India Limited,டாபர்,DaburHoney,FoodSafety,Misleading Ads,Consumer Rights,Organic Food</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qbph1n8l/FSSAI-Dabur" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ FSSAI - Dabur]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qbph1n8l/FSSAI-Dabur?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாபர் நிறுவனம் தனது தயாரிப்புகளான தேன், நெய், எண்ணெய் மற்றும் வினிகர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் '100 சதவீதம் தூய்மையானது' என்று விளம்பரம் செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.</p><h2>விவகாரம் என்ன?</h2><p>டாபர் நிறுவனம் தனது இணையதளத்திலும், தயாரிப்பு லேபிள்களிலும் "100% இயற்கை", "100% ஆர்கானிக்", "100% தூய்மைக்கு உத்திரவாதம்" போன்ற வாசகங்களைப் பயன்படுத்தி வந்தது. </p><p>இந்த '100%' என்ற வார்த்தை நுகர்வோரை திசைதிருப்பும் வகையிலும், சட்டவிதிகளுக்குப் புறம்பாகவும் இருப்பதாக FSSAI தெரிவித்துள்ளது.</p><h2>முக்கியக் காரணங்கள்:</h2><p>எந்தவொரு உணவுப் பொருளையும் '100% தூய்மையானது' என்று முழுமையாக நிரூபிக்க முடியாது என்பதால், இந்த வாசகங்கள் மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளன. </p><p>டாபரின் ஆர்கானிக் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவற்றில், உரிய அனுமதியின்றி 'ஜெவிக் பாரத்' என்ற ஆர்கானிக் முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. </p><p>கடந்த 2020 மே மாதமே இது போன்ற '100% விளம்பரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒட்டுமொத்த உணவு நிறுவங்களுக்கும் FSSAI எச்சரிக்கை விடுத்திருந்தது. </p><p>டாபர் நிறுவனத்திற்குத் தனியாக நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>தயாரிப்புகள் ஆபத்தானவையா?</h2><p>டாபர் நிறுவனத்தின் இந்த பொருட்கள் தரமற்றவை என்றோ அல்லது சாப்பிடப் பாதுகாப்பற்றவை என்றோ FSSAI கூறவில்லை. </p><p>இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க அவர்கள் லேபிளிங் செய்த விதம் மற்றும் தவறான விளம்பர உத்திக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அடுத்தகட்ட நடவடிக்கை:</h2><p>குறிப்பிட்ட அந்த தயாரிப்புகளைச் சந்தையில் விற்பனை செய்வதை டாபர் நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் FSSAI உத்தரவிட்டுள்ளது. </p><p>டாபர் நிறுவனம் இந்த நோட்டீசை ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு வங்கம் , பீகாரின் முன்னாள் ஆளுநர் டி. ஒய். பாட்டீல் காலமானார்</title><link>https://www.maalaimalar.com/news/national/dy-patil-passes-away-educationist-and-former-bihar-governor-dies-in-kolhapur</link><comments>https://www.maalaimalar.com/news/national/dy-patil-passes-away-educationist-and-former-bihar-governor-dies-in-kolhapur#comments</comments><guid isPermaLink="false">bcf36ac0-2dd1-4262-b2b5-3927e70be9aa</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:56:56 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:56:56.605Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,DY Patil,டி.ஒய். பாட்டீல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/cvgjk1gq/D-Y-Patil.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ D Y Patil]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/cvgjk1gq/D-Y-Patil.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கல்வியாளரும் முன்னாள் ஆளுநருமான டி.ஒய். பாட்டீல், <a href="https://www.maalaimalar.com/topic/maharashtra">மகாராஷ்டிரா</a> மாநிலத்தின் கோலாப்பூரில் தனது 90வது வயதில் காலமானார்.</p><p>பாட்டீல் 2009 முதல் 2013 வரை திரிபுராவின் ஆளுநராகவும், 2013 முதல் 2014 வரை பீகாரின் ஆளுநராகவும் பணியாற்றினார், மேலும் 2014-இல் சிறிது காலம் மேற்கு வங்க ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.</p><p>1991-இல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், மும்பை, நவி மும்பை, புனே மற்றும் கோலாப்பூர் ஆகிய இடங்களில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உட்பட 150-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் டி.ஒய். பாட்டீல் குழுமத்தின் நிறுவனராகப் பரவலாக அறியப்பட்டார்.</p><h2>அரசியலில் பாட்டீல்:</h2><p>1935 அக்டோபர் 22-ஆம் தேதியன்று கோலாப்பூரில் பிறந்த பாட்டீல், மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கி, பின்னர் கல்வி மற்றும் அறப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். </p><p>முன்னதாக காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடையவராக இருந்த அவர், பின்னர் 2018-ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.</p><h2>இரங்கல்:</h2><p>காங்கிரஸ் தலைவர் டாக்டர் நிதின் ராவத் எகஸ் தள பதிவில், கல்வித்துறை "ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட சிற்பியை" இழந்துவிட்டது என்றும், பாட்டீலின் மரணம் "கல்வி, சமூக சேவை மற்றும் பொது வாழ்க்கைக்கு ஒரு பெரும் இழப்பு" என்றும், அவரது பணிகள் "பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்" என்றும் குறிப்பிட்டார்.</p><p>திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹாவும் பாட்டிலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவரை "ஒரு தலைசிறந்த கல்வியாளர், திரிபுரா மற்றும் பீகாரின் முன்னாள் ஆளுநர்" என்றும், "ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட நிறுவனங்களை உருவாக்கியவர், கொடையாளர் மற்றும் மதிக்கப்படும் பொது ஆளுமை" என்றும், "கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுச் சேவைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளின் மூலம் ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டு</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 87-ஆக உயர்வு, சுமார் 1.3 லட்சம் பேர் பாதிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-flood-toll-rises-to-87-with-2-more-deaths</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-flood-toll-rises-to-87-with-2-more-deaths#comments</comments><guid isPermaLink="false">8f0360f6-399c-4aef-b338-a5ce4da0e26b</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:09:51 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:09:51.788Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அசாம்,Assam,அசாம் வெள்ளம்,Assam Floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/8y3om06t/Guwahati-Floods-Rescue.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guwahati Floods Rescue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/8y3om06t/Guwahati-Floods-Rescue.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் மேலும் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 87-ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/assam-floods">வெள்ளம்</a> சூழ்ந்த பெரும்பாலான பகுதிகளில் நீர்மட்டம் குறைந்து வந்தாலும், இன்னும் சுமார் 1.3 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இருப்பினும், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயாவில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மிக <a href="https://www.maalaimalar.com/topic/heavy-rain">கனமழை</a> பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது; இது அம்மாநிலங்களின் எல்லையை ஒட்டியுள்ள அசாமின் பல மாவட்டங்களை பாதிக்கக்கூடும்.</p><h2>கனமழை எச்சரிக்கை:</h2><p>"மேகாலயாவின் கிழக்கு காசி மலைகள், மேற்கு ஜெயின்டியா மலைகள் மற்றும் கிழக்கு ஜெயின்டியா மலைகள் ஆகிய பகுதிகள் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பாபும்பரே, குருங் குமே, கிழக்கு காமெங், கிழக்கு சியாங், லோஹித் மற்றும் சாங்லாங் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை (ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கைகள்) பெய்யக்கூடும். இது அசாமின் அண்டை மாவட்டங்களை பாதிக்கலாம்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>நாகாலாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' (கண்காணிப்பு) விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அசாமின் சாரைடியோ, சிவசாகர், ஜோர்ஹாட் மற்றும் கோலாகாட் மாவட்டங்களை பாதிக்கக்கூடும் என்றும் அது கூறியது.</p><p>நேற்று (திங்கள்கிழமை) இரவு வெளியிடப்பட்ட அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) அறிக்கைப்படி, கடந்த 24 மணி நேரத்தில் சிவசாகர் மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளுடன், இந்த ஆண்டு வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87-ஐ எட்டியுள்ளது.</p><h2>நீர்மட்டம் குறைவு:</h2><p>"வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேல் அசாம் மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் இரவு நேரத்தில் மழை பெய்ததாகத் தகவல்கள் வந்தாலும், வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் கிராம மக்களுக்குச் சற்று நிம்மதி கிடைத்துள்ளது" என்று ASDMA அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>மொத்தம் ஆறு மாவட்டங்களில் 1,28,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிவசாகர் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது அதை தொடர்ந்து சாரைடியோ மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்கள் உள்ளன.</p><p>ஐந்து மாவட்டங்களில் 55 நிவாரண முகாம்கள் மற்றும் நிவாரண விநியோக மையங்களை நிர்வாகம் நடத்தி வருவதாகவும், தற்போது 11,250 பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ASDMA தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு வெள்ள நிவாரண பணிகளுக்காக, மருத்துவ மற்றும் கால்நடை மருத்துவ குழுக்கள் உட்பட பல அமைப்புகள் களமிறக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>அரியானாவில் பயங்கரம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை 27 முறை குத்திக் கொலை!</title><link>https://www.maalaimalar.com/news/national/horror-in-haryana-teacher-stabbed-27-times-on-school-campus</link><comments>https://www.maalaimalar.com/news/national/horror-in-haryana-teacher-stabbed-27-times-on-school-campus#comments</comments><guid isPermaLink="false">bcc8f0fc-a32a-4d96-ba62-47ee0647eaa9</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:05:01 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:05:01.194Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>haryana,Teacher Murder,ஆசிரியை கொலை,ஹரியானா,Sikrona,பரிதாபாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/pgf1mfzi/murder.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Haryana Teacher murder ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/pgf1mfzi/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில், 29 வயது ஆசிரியை ஒருவர் முகமூடி அணிந்த நபரால் 27 முறை கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக 21 வயது இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது.</p><p>சந்தியா (29) என்ற இளம்பெண் ஃபரிதாபாத்தின் சிக்ரோனா கிராமத்தில் உள்ள சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம்போல் காலை 9:30 மணியளவில் ஆசிரியை சந்தியா பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது, முகத்தை வெள்ளைத் துணியால் மூடியபடி வந்த ஒரு நபர், அவரைப் பார்க்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.</p><h2><strong>கொலைச் சம்பவம்:</strong></h2><p>பள்ளி ஊழியர்கள் தகவலளித்ததை அடுத்து, ஆசிரியை முதன்மை வாயில் அருகே வந்தபோது, மறைந்திருந்த அந்த நபர் திடீரென அவர் மீது பாய்ந்து, இழுத்துச் சென்று கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இக்கொடூரத் தாக்குதல் முழுவதும் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, ஆசிரியையின் முகம், கழுத்து, நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் 27 முறை கத்திக் குத்துகள் விழுந்துள்ளதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அமித்(21)  என்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில் இக்கொலை பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக, அமித் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஆசிரியை சந்தியா காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அமித், பழிவாங்கும் நோக்கத்துடன் திட்டமிட்டுப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.</p><p>சம்பவம் நடந்த அடுத்த 2 மணி நேரத்திற்குள் குற்றவாளி அமித்தை ஃபரிதாபாத் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகப் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பாடங்களை சேர்க்கும் மகாராஷ்டிரா - முதலமைச்சர் பட்னாவிஸ் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/fadnavis-orders-anti-drug-lessons-in-maharashtra-school-curriculum</link><comments>https://www.maalaimalar.com/news/national/fadnavis-orders-anti-drug-lessons-in-maharashtra-school-curriculum#comments</comments><guid isPermaLink="false">c75c96b4-9c89-4632-942d-cfd7e5c00b35</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:21:39 +0000</pubDate><atom:updated>2026-08-04T04:21:39.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,தேவேந்திர பட்னாவிஸ்,devendra fadnavis,school curriculum,பள்ளி பாடத்திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/kfksu7w3/devendra-fadnavis.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Devendra Fadnavis]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/kfksu7w3/devendra-fadnavis.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநில பள்ளி பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் போதை மீட்பு தொடர்பான பாடங்களை சேர்க்க அம்மாநில முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/devendra-fadnavis">தேவேந்திர பட்னாவிஸ்</a> அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>பள்ளிக் கல்வியில் நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக <a href="https://www.maalaimalar.com/topic/maharashtra">மகாராஷ்டிரா</a> தொடர்ந்து திகழ்கிறது என்றும், கல்வித் தரம், மராத்தி மொழியை ஊக்குவித்தல், வரலாற்றை பாதுகாத்தல் மற்றும் நவீன வசதிகள் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை பேணுவதன் மூலம் மாணவர்-மையக் கல்வி முறையை மாநிலம் வலுப்படுத்தி வருகிறது என்றும் பட்னாவிஸ் தெரிவித்தார்.</p><p>பள்ளிக் கல்வித் துறையின் ஆய்வு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அவர், போதைப்பொருள் தடுப்பு மற்றும் மீட்பு தொடர்பான பாடங்களை பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்கும் செயல்முறையை தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.</p><h2>போதை இல்லா பள்ளி:</h2><p>பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக்கான குழுக்களை அமைக்கவும், "போதைப்பொருள் இல்லாத பள்ளி" (Drug-Free School) என்ற பிரச்சாரத்தை தொடங்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.</p><p>பள்ளி பாதுகாப்பை வலுப்படுத்தவும், மாணவர்களிடையே இணையவழி மோசடிகள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.</p><p>மாநில அரசின் முயற்சிகளை தொடர்ந்து, என்.சி.இ.ஆர்.டி. (NCERT) பாடப்புத்தகங்களில் 17-ஆம் நூற்றாண்டின் வீர மன்னரான சத்ரபதி சிவாஜி மகாராஜின் வரலாறுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று பட்னாவிஸ் சுட்டிக்காட்டினார். புகழ்பெற்ற மராட்டிய மன்னரின் வரலாற்றையும் சாதனைகளையும் பரவலாக உள்ளடக்கும் வகையில் பாடத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.</p><h2>புதுமையான முன்னெடுப்புகள்:</h2><p>மாநிலம் முழுவதும் உள்ள எஸ்.எஸ்.சி. (SSC), சி.பி.எஸ்.இ. (CBSE), ஐ.சி.எஸ்.இ. (ICSE) மற்றும் ஐ.பி. (IB) வாரியங்களின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழியை கற்பிப்பதும், அம்மொழியிலேயே தேர்வுகள் நடத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்தனர்.</p><p>பள்ளிக் கல்விக்கான தேசிய செயல்திறன் தரவரிசை குறியீட்டில் (PGI 2.0) மகாராஷ்டிராா தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது என்று கூறிய பட்னாவிஸ், 'பி.எம். ஸ்ரீ' (PM SHRI) பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் புதுமையான முன்னெடுப்புகளை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.</p><p>பள்ளி மாணவர்களின் ஆதார் சரிபார்ப்பு, கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் 35 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விச் சலுகைகள், 'பவித்ரா' (Pavitra) ஆசிரியர் பணி நியமன இணையதளம் மற்றும் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 உள்ளிட்ட முக்கியத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.</p><h2>அதிகாரிகள் விளக்கம்:</h2><p>கூட்டத்தில் அளிக்கப்பட்ட விளக்கக் காட்சியின்படி, நாட்டின் மொத்த பள்ளிகளில் 9.34 சதவீதமும், ஆசிரியர்களில் 8.84 சதவீதமும், மாணவர்களில் 7.69 சதவீதமும் மகாராஷ்டிராவில் உள்ளனர். இம்மாநிலத்தில் 1,08,065 பள்ளிகள் உள்ளன; இவற்றில் 2,20,48,443 மாணவர்கள் பயில்கின்றனர், மேலும் மாணவர்-ஆசிரியர் விகிதம் 28:1 ஆகப் பராமரிக்கப்படுகிறது.</p><p>இப்பள்ளிகளில் 64,341 அரசு பள்ளிகள் மற்றும் 29,486 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உள்ளன; மீதமுள்ளவை சுயநிதி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு பள்ளிகளாகும்.</p><p>பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்காக 'நிபுண் மகாராஷ்டிரா இயக்கம்' (Nipun Maharashtra Mission), 'ராஷ்ட்ரிய பிரதம்' (Rashtriya Pratham) பிரச்சாரம், "மாஜி ஷாலா சுந்தர் ஷாலா" (எனது பள்ளி, அழகான பள்ளி) திட்டம் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களை தாக்கும்போது எங்கே போனீர்கள்?.. ஜென் இசட் சந்திப்பு நடத்தும் ஆர்எஸ்எஸ் தலைவரிடம் ஆதித்யா தாக்கரே நறுக்</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protests-rss-plans-outreach-to-gen-z-and-gen-alpha-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protests-rss-plans-outreach-to-gen-z-and-gen-alpha-students#comments</comments><guid isPermaLink="false">78173dff-0c44-4e49-b4c1-ae816b0a0168</guid><pubDate>Tue, 04 Aug 2026 00:40:44 +0000</pubDate><atom:updated>2026-08-04T00:40:44.245Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RSS,ஆர்எஸ்எஸ்,ஜென் இசட்,Gen z,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/lyfkmu46/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆதித்யா தாக்கரே, மோகன் பகவத்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதித்யா தாக்கரே, மோகன் பகவத்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/lyfkmu46/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி தலைமையில் <a href="https://www.maalaimalar.com/news/national/modi-apology-row-cjp-founder-demands-pm-apologise-for-police-assault-on-12-year-old-girls">இளைஞர்கள் நடத்திய போராட்டம்</a>, தர்மேந்திர பிரதான், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வழிவகுத்தது. </p><p>இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவு. எனவே இளைஞர்கள், மாணவர்களை கரும் முயற்சியில் பாஜக மற்றும் இந்துத்துவா வலதுசாரிகள் மெனக்கிட்டு வருகின்றனர். பாஜகவினர் இன்ஸ்டாவில் தீவிரமாக செயல்படும்படி கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். அவரும் தினம் தினம் இன்ஸ்டாவில் செல்பி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். </p><p>இந்நிலையில் பாஜகவின் சித்தாந்த தலைமையாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இளைய தலைமுறையை கவரும் முயற்சியில் இறங்கியுள்ளது. </p> <h2>சந்திப்பு</h2><p>ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகஸ்ட் 6 அன்று நாடு முழுவதும் உள்ள ஜென் இசட் மற்றும் ஜென் ஆல்பா மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.</p><p>மும்பையில் உள்ள நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.</p><p>India's International Movement to Unite Nations என்ற அமைப்பின் 15வது ஆண்டு நிறைவு மாநாட்டின் தொடக்க விழாவில் இது நடைபெறுகிறது</p><p>15 முதல் 19 வயதுக்குட்பட்ட 2,000க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் நேரடியாகப் பங்கேற்கின்றனர்.</p><p>"உலகை ஒன்றிணைப்பதில் இளைஞர்களின் பங்கு - இந்திய வழி" என்ற பொருண்மையில் இது நடக்கிறது.</p> <h2>எங்கே போனீரகள்?</h2><p>மாணவர் போராட்டங்களுக்கு பிறகு திடீரென தலைவர்கள் ஜென் இசட் இளைஞர்களுடன் கலந்துரையாட ஆர்வம் காட்டுவதை சிவ சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே கிண்டல் செய்துள்ளார்.</p><p>"திடீரென்று அனைவரும் ஜென் இசட் மற்றும் ஜென் ஆல்பா இளைஞர்களுடன் கலந்துரையாட விரும்புகிறார்கள்.</p><p>சமூக வலைதளங்களில் அவர்களுக்கு பண்பாட்டைக் கற்றுக்கொடுக்க வருகிறார்கள். அவர்களுக்கு நான் கேட்கும் எளிய கேள்வி ஒன்றுதான்.</p><p>அமைதியான முறையில் போராட்டம் நடத்திய அந்த மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர்ப்புகை, கைது நடவடிக்கைகள் பாய்ந்த போதும், பெண்கள் தரக்குறைவாக நடத்தப்பட்ட போதும் நீங்கள் எங்கே போனீர்கள்?</p><p>அவர்களைக் காப்பாற்ற ஏன் அப்போது தலையிடவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க மார்க் ஜூக்கர்பெர்க் சதி.. நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் - நிஷிகாந்த் தூபே</title><link>https://www.maalaimalar.com/news/national/meta-pm-video-removal-row-bjp-mp-demands-direct-apology-from-zuckerberg-warns-it-act-safe-harbour-withdrawal</link><comments>https://www.maalaimalar.com/news/national/meta-pm-video-removal-row-bjp-mp-demands-direct-apology-from-zuckerberg-warns-it-act-safe-harbour-withdrawal#comments</comments><guid isPermaLink="false">962c0455-7dc7-48d7-8aac-610b1a2c4525</guid><pubDate>Mon, 03 Aug 2026 21:27:00 +0000</pubDate><atom:updated>2026-08-03T21:27:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mark Zuckerberg,Nishikant Dubey,மார்க் ஜுக்கர்பெர்க்,நிஷிகாந்த் தூபே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/0sywo86a/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிஷிகாந்த் தூபே, மோடி, மார்க் ஜூக்கர்பெர்க் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நிஷிகாந்த் தூபே, மோடி, மார்க் ஜூக்கர்பெர்க் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/0sywo86a/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர் மோடியின் </a>வீடியோ பேஸ்புக்கில்  தற்காலிகமாக நீக்கப்பட்டது தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்.பியும் நாடாளுமன்ற  தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பக் குழுத் தலைவர் நிஷிகாந்த் துபே எச்சரித்துள்ளார்.</p> <h2>பிரதமர் வீடியோ நீக்கம்</h2><p>தேர்வு வினாத்தாள் கசிவு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பேசிய வீடியோ, பேஸ்புக் பக்கத்தில் இருந்து சுமார் 5 மணி நேரம் நீக்கப்பட்டிருந்தது. தொழில்நுட்பக் கோளாறால் இது நடந்ததாக மெட்டா விளக்கம் அளித்தது.</p><p>நாடாளுமன்றக் குழு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மெட்டா, யூடியூப், எக்ஸ், ஸ்னாப்சாட், கூகுள் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும், மத்திய உள்துறை மற்றும் ஐடி அமைச்சக அதிகாரிகளும் பங்கேற்றனர்.</p><p>இச்சம்பவம் தொடர்பாக 10 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p> <h2>துபே எச்சரிக்கை</h2><p>இச்சம்பவத்திற்காக மெட்டா பிரதிநிதிகள் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகக் கூறியபோதிலும், இந்த மன்னிப்பை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்கே நேரடியாக கேட்க வேண்டும் என நிஷிகாந்த் துபே வலியுறுத்தியுள்ளார்.</p><p>ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்கத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79ன் கீழ் சமூக ஊடகங்களுக்கு அளிக்கப்படும் 'பாதுகாப்பு அந்தஸ்து' திரும்பப் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த அந்தஸ்து இருந்தால் மட்டுமே பயனாளர்களின் பதிவுகளுக்குத் தளம் சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்கத் தேவையில்லை எனும் விலக்கு அந்த நிறுவனத்திற்கு கிடைக்கும்.</p> <p>அமைதியை சீர்குலைக்க சதி </p><p>தூபே இதுகுறித்து பேசுகையில், "2024 இந்திய தேர்தல் முடிவுகள் குறித்து கடந்த ஜனவரியில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து பின்னர் மன்னிப்பு கேட்ட ஜுக்கர்பெர்க், தற்போது பிரதமரின் வீடியோவை நீக்கியுள்ளது இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தையே காட்டுகிறது" என்று சாடியுள்ளார்.</p><p>மேலும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் மொத்த Viewership, 23 மில்லியனாக மட்டுமே இருக்கும் நிலையில், பதிவு செய்யப்படாத அமைப்புகள் மற்றும் புதிய கணக்குகளின் பார்வைகள் 27 மில்லியனாக செயற்கையாக உயர்த்தப்படுவதாக மெட்டா, யூடியூப் மற்றும் எக்ஸ் தளங்களின் அல்காரிதம் மீது குற்றம் சாட்டினார்.</p> ]]></content:encoded></item><item><title>ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்.. EPF ஊதிய உச்சவரம்பை ரூ.25,000 ஆக உயர்த்த  மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/epfo-pf-wage-ceiling-hiked-mandatory-pf-for-employees-earning-up-to-rs-25000</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/epfo-pf-wage-ceiling-hiked-mandatory-pf-for-employees-earning-up-to-rs-25000#comments</comments><guid isPermaLink="false">765aefe8-69bd-4898-953e-6cb16c5fa221</guid><pubDate>Mon, 03 Aug 2026 18:12:08 +0000</pubDate><atom:updated>2026-08-03T18:12:08.625Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊழியர்கள்,ஓய்வூதியம்,வருங்கால வைப்பு நிதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/82kefnc7/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ EPFO]]></media:title><media:description type="html"><![CDATA[ EPFO]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/82kefnc7/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (<a href="https://www.maalaimalar.com/topic/epfo">EPFO</a>)இன் கீழ், ஊழியர்களுக்கு ஓய்வூதியம் (EPF) பணம் பிடித்தத்திற்கான அடிப்படை சம்பள உச்சவரம்பை மாதம் ரூ.15,000 லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது</p><p>மத்திய அமைச்சரவையின் இறுதி ஒப்புதல் பெற்ற பிறகு இது அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வர உள்ளது. ஏப்ரல் 1, 2027 முதல் அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <h2>வரம்பு உயர்வு</h2><p>2014இல் இந்த சம்பள வரம்பு ரூ.6,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது.</p><p>இதன்படி, தற்போது மாதம் ரூ.15,000 வரை அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மட்டுமே PF பிடித்தம் செய்யும் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p>12 ஆண்டுகளுக்குப் பின், இந்த வரம்பை ரூ.30,000 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்டு நிலையில் தற்போது ரூ.25,000 ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.</p> <h2>நடைமுறை என்ன?</h2><p>தற்போது, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.15,000 மற்றும் அதற்கும் கீழ் இருந்தால் அந்த ஊழியர்கள் கட்டாயமாக EPF திட்டத்தில் சேர வேண்டும்.</p><p>இதன் மூலம் சம்பளத்தில் ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணம் பணி ஓய்வின் போது மொத்த தொகையாக கிடைக்கும்.</p><p>இந்த வரம்பை 25,000 ரூபாயாக உயர்த்துவதால், மாத அடிப்படை சம்பளம் 25,000 ரூபாய் வரை கொண்டிருக்கும் அனைத்து ஊழியர்களுக்கு பிஎப் பிடித்தம் கட்டாயம் ஆகும்.</p><h2>பயன் என்ன?</h2><p>தனியார் துறையில் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை அடிப்படை சம்பளம் வாங்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள் கட்டாய EPFO மற்றும் ஓய்வூதிய சமூக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.</p><p>ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்கிற்கு நிறுவனத்தின் 8.33% பங்களிப்புடன் மத்திய அரசும் 1.16% தொகையை வழங்கி வருகிறது.</p><p>இந்த வரம்பு உயர்வால் அரசுக்கு நிதிப் சுமை அதிகரிக்கும். 2026-27 நிதியாண்டில் ஓய்வூதியத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.11,144 கோடி ஒதுக்கியுள்ளது.</p><p>20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு பிஎப் பங்களிப்பு கட்டாயமாகும். 20க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் விருப்பத்தின்பேரில் EPFO தளத்தில் பதிவு செய்து பிஎப் திட்டத்தில் ஊழியர்களை இணைக்கலாம்</p> ]]></content:encoded></item><item><title>முதல் வெற்றியை சுவைத்த பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/national/prashant-kishor-wins-purnia-bypoll-with-big-margin-as-stalin-hails-jan-suraj-partys-maiden-victory</link><comments>https://www.maalaimalar.com/news/national/prashant-kishor-wins-purnia-bypoll-with-big-margin-as-stalin-hails-jan-suraj-partys-maiden-victory#comments</comments><guid isPermaLink="false">01ddc5f7-addc-41bc-9d3a-ae45216b442e</guid><pubDate>Mon, 03 Aug 2026 17:06:34 +0000</pubDate><atom:updated>2026-08-03T17:06:34.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,மு.க. ஸ்டாலின்,பிரசாந்த் கிஷோர்,ஜன் சுராஜ்,Prashant Kishor,Jan suraaj,M.k. stalin</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/xhe0s5kx/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/xhe0s5kx/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநிலத்தில் பங்கிபூர் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது இத்தொகுதியில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் 64,151 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.</p><p>இதன் மூலம், பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹாவை விட 19,324 வாக்குகள் அதிகம் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றார்.</p> <h2>ஸ்டாலின் வாழ்த்து</h2><p>இந்நிலையில் அவருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தனது எக்ஸ் தள பதிவில், "பங்கிப்பூர் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு வாழ்த்துகள். இது ஜன் சுராஜ் கட்சியின் முதல் தேர்தல் வெற்றி.</p><p>பங்கிப்பூர் தொகுதி மக்களுக்கும் பிகார் மாநில மக்களுக்கும் அவர் ஆற்றும் சேவையில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.</p> <h2>பிரசாந்த் கிஷோர் பேட்டி</h2><p>இதனிடையே தனது வெற்றி குறித்து<a href="https://www.maalaimalar.com/news/national/purnia-bypoll-prashant-kishor-leads-bjp-candidate-in-early-counting-rounds"> பிரசாந்த் கிஷோர்</a> இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதால் பங்கிபூர் பெங்களூருவாக மாறிவிடாது, ஆனால் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் இங்கு சில முன்னேற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.</p><p>மக்கள் என்மேல் வைத்த நம்பிக்கையை காப்பாற்றி, பங்கிபூரை மேம்படுத்துவதே எனது முதல் பணியாக இருக்கும். அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் நீங்கள் மாற்றங்களைக் காண்பீர்கள். நான் பெரிய தற்பெருமை பேச விரும்பவில்லை.</p><p>இந்தப் போராட்டம் தனிப்பட்டதல்ல, சாம்ராட் சௌத்ரியின் நடத்தை, குணம் மற்றும் முகம் ஆகியவை பொதுவெளியில் உள்ளன. ஒரு குற்றவாளியை பீகாரின் முதலமைச்சராக ஆக்கினால், பீகார் முன்னேற முடியாது.</p> <p>எங்கள் போராட்டம் எந்தவொரு தனிநபருடனும் கிடையாது. பெரும்பான்மையினர் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள், எனவே முதலமைச்சர் பதவி அவர்களுக்கே கிடைக்கும்.</p><p>பீகார் முன்னேறவும், மக்கள் பீகாரியாக இருப்பதில் பெருமை கொள்ளவும், திறமையான, நல்ல குணநலன்கள் கொண்ட ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று நாங்கள் மோடிஜியிடம் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இந்த தேர்தல் பங்கிபூரின் தெருக்கள் மற்றும் வடிகால்களுக்காக நடத்தப்படவில்லை. பீகாரை யார் வழிநடத்த வேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்டது. பங்கிபூர் மக்கள் பாஜக தலைமைக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர். ஒரு நல்ல மனிதரை முதலமைச்சராக்குங்கள்” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ரெயில்களில் உணவுத் தரம் குறித்த புகாரில் ரூ.5.13 கோடி அபராதம்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-5-13-crore-fine-over-poor-food-quality-in-trains-says-minister-ashwini-vaishnaw</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-5-13-crore-fine-over-poor-food-quality-in-trains-says-minister-ashwini-vaishnaw#comments</comments><guid isPermaLink="false">1066b5fd-7ec6-46d7-86b2-0380e7f03461</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:54:56 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:54:56.259Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில்வே,Ashwini Vaishnaw,IRCTC,ஐஆர்சிடிசி,அஷ்வினி வைஷ்ணவ்,Railway</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/2eh55leo/Untitled-design-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Indian Railways Food Quality Penalty: ₹5.13 crore fine imposed on firms over poor onboard meals]]></media:title><media:description type="html"><![CDATA[ Indian Railways]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/2eh55leo/Untitled-design-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய ரெயில்வேயில் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படும் உணவின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக புகார்கள் வந்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, ரெயில்களில் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு, இந்திய ரெயில்வே ரூ.5.13 கோடி அபராதம் விதித்துள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.</p><h3><strong>காங்கிரஸ் எம்.பி. சந்திரகாந்த் ஹண்டோர் கேள்வி</strong></h3><p>மத்திய ரெயில்வே அமைச்சர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்திய ரெயில்வே ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 58 கோடி எண்ணிக்கை உணவுகளை வழங்குகிறது என்றும், அவற்றில் சராசரியாக 0.0008 சதவீத புகார்கள் மட்டுமே பெறப்படுகின்றன என்றும் கூறினார்.</p><p>கடந்த மூன்று ஆண்டுகளில் பிரீமியம் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மோசமான உணவுத் தரம், சுகாதாரமற்ற சமையலறைப் பெட்டிகள் மற்றும் உபசரிப்புக் குறைபாடுகள் தொடர்பாகப் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை குறித்தும்,</p><p>அதிகக் கட்டணம் வசூலித்தல், தரமற்ற உணவு வழங்குதல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அளவை விடக் குறைவாக வழங்குதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட ஐ.ஆர்.சி.டி.சி உரிமைதாரர்கள் மீது எடுக்கப்பட்ட சட்டரீதியான நடவடிக்கை குறித்தும் காங்கிரஸ் எம்.பி. சந்திரகாந்த் ஹண்டோர் விவரங்களைக் கோரியிருந்தார்.</p><h3><strong>அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்</strong></h3><p>பிரீமியம் ரெயில்களில் உணவின் தரம் குறித்துக் கவலை தெரிவித்திருந்த காங்கிரஸ் எம்.பி. ஹண்டோரின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார்.</p><p>இதுகுறித்து அமைச்சர் வைஷ்ணவ் கூறுகையில், “கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தப் புகார்கள் மீதான விசாரணையின் அடிப்படையில், ரூ. 5.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி பயணிகளுக்கு நல்ல தரமான மற்றும் சுகாதாரமான உணவுப் பொருட்களை வழங்க ரெயில்வே தொடர்ந்து முயன்று வருகின்றது. அதை உறுதி செய்வதற்காக அவ்வப்போது தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரப்படுகிறது.</p><p>ரெயில்களில் வழங்கப்படும் உணவின் தரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட சமையலறைகளில் இருந்து உணவை வழங்குதல்,</p><p>அடையாளம் காணப்பட்ட இடங்களில் நவீன அடிப்படை புதிய சமையலறைகளை அமைத்தல், மற்றும் உணவுத் தயாரிப்பை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதற்காக சமையலறைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.</p><p>ரெயில்களில் மின்னணு கட்டண முறை மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்படும். டிஜிட்டல் கட்டண முறை மற்றும் பணமில்லாப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக,</p><p>சமையலறை பெட்டிகளில் பாயிண்ட் ஆஃப் சேல் (POS) இயந்திரங்களை நிறுவுவது, அத்துடன் UPI, QR குறியீடுகள் மற்றும் ஸ்வைப் இயந்திரங்கள் போன்ற பல விருப்பங்களும் இதில் அடங்கும்” என்று பதிலளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>LIC-யின் 6.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/govt-to-sell-up-to-6-point-5-pc-stake-in-life-insurance-corporation-at-floor-price-of-rs-382-share</link><comments>https://www.maalaimalar.com/news/national/govt-to-sell-up-to-6-point-5-pc-stake-in-life-insurance-corporation-at-floor-price-of-rs-382-share#comments</comments><guid isPermaLink="false">48d03b9b-34c5-4aaf-84fb-0cb38422d152</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:46:39 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:46:39.980Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,share market,பங்குச் சந்தை,LIC,எல்ஐசி பங்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/uyks9gyb/LIC0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ LIC]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/uyks9gyb/LIC0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் மிகப்பெரிய பொது நிறுவனங்களில் ஒன்று லைஃப் இன்சூரன்ஸ் ஆஃப் இந்தியா (LIC). இந்த நிறுவனத்தின் மார்க்கெட் மூலதனத்தின் மதிப்பு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் ஆகும். எல்.ஐ.சி. நிறுவனத்தின் 96.50 சதவீதம் பங்குகளை இந்திய அரசு வைத்துள்ளது.</p><h2>பொதுமக்களிடம் 2.06 சதவீதம் பங்கு</h2><p>வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 0.44 சதவீதம் பங்குகளையும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 0.99 சதவீதம் பங்குகளையும், பொதுமக்கள் 2.06 பங்குகளையும் வைத்துள்ளனர்.</p><p>இந்த நிலையில் மத்திய அரசு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதிதிரட்டும் வகையில் 1.5 சதவீதம் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியானது.</p><h2>ஒரு பங்கின் விலை 382 ரூபாய்</h2><p>இந்த நிலையில் 6.5 சதவீதம் வரை பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரு பங்கின் விலையை 382 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இரண்டு நாட்கள் என்ற அடிப்படையில் பங்குகளை விற்பனை செய்கிறது.</p><p>மார்க்கெட் மூலதனத்தின் மதிப்பு அடிப்படையில் 1 சதவீதம் என்றாலே 6 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். 6.5 சதவீதம் என்றால் சுமார் 40 கோடி ரூபாய் ஆகும்.</p><p>இன்றைய நிலவரப்படி எல்.ஐ.சி.யின் ஒரு பங்கு 424.40 ரூபாயாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பங்கிபூர் மக்கள் பாஜக தலைமைக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர்: இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரசாந்த் கிஷோர்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-leadership-gets-message-from-panchipura-people-prashant-kishor</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-leadership-gets-message-from-panchipura-people-prashant-kishor#comments</comments><guid isPermaLink="false">cc1187dd-69d9-488d-baf7-b85cace85a50</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:12:49 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:12:49.562Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரசாந்த் கிஷோர்,prashanth Kihsore,bihar election,Bankipur</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/530d08r5/Untitled-design-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Bihar By-election Message: Prashant Kishor wins Pangaibour, voters urge BJP to appoint a clean CM.]]></media:title><media:description type="html"><![CDATA[ Prashant Kishor]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/530d08r5/Untitled-design-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் பங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனது முதல் வெற்றியை பெற்ற, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர், பீகார் ஒரே இரவில் பெங்களூராக மாறிவிடாது என்றும் ஆனால் மக்கள் கண்கூடாக பார்க்கும் மாற்றங்கள் வரவிருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>பீகார் மாநிலத்தில் பங்கிபூர் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது இத்தொகுதியில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் 64,151 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். </p><p>இதன் மூலம், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹாவை விட 19,324 வாக்குகள் அதிகம் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றார்.</p><h3><strong>பிரசாந்த் கிஷோர் பேட்டி</strong></h3><p>இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதால் பங்கிபூர் பெங்களூருவாக மாறிவிடாது, ஆனால் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் இங்கு சில முன்னேற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.</p><p>மக்கள் என்மேல் வைத்த நம்பிக்கையை காப்பாற்றி, பங்கிபூரை மேம்படுத்துவதே எனது முதல் பணியாக இருக்கும். அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் நீங்கள் மாற்றங்களைக் காண்பீர்கள். நான் பெரிய தற்பெருமை பேச விரும்பவில்லை.</p><p>இந்தப் போராட்டம் தனிப்பட்டதல்ல, சாம்ராட் சௌத்ரியின் நடத்தை, குணம் மற்றும் முகம் ஆகியவை பொதுவெளியில் உள்ளன. ஒரு குற்றவாளியை பீகாரின் முதலமைச்சராக ஆக்கினால், பீகார் முன்னேற முடியாது.</p><p>எங்கள் போராட்டம் எந்தவொரு தனிநபருடனும் கிடையாது. பெரும்பான்மையினர் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள், எனவே முதலமைச்சர் பதவி அவர்களுக்கே கிடைக்கும்.</p><p>பீகார் முன்னேறவும், மக்கள் பீகாரியாக இருப்பதில் பெருமை கொள்ளவும், திறமையான, நல்ல குணநலன்கள் கொண்ட ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று நாங்கள் மோடிஜியிடம் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இந்த தேர்தல் பங்கிபூரின் தெருக்கள் மற்றும் வடிகால்களுக்காக நடத்தப்படவில்லை. பீகாரை யார் வழிநடத்த வேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்டது. பங்கிபூர் மக்கள் பாஜக தலைமைக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர். ஒரு நல்ல மனிதரை முதலமைச்சராக்குங்கள்,” என்று அவர் கூறினார்.</p><h3><strong>பீகார் முதல்வர் வாழ்த்து</strong></h3><p>இதையடுத்து பீகார் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி, மக்களின் தீர்ப்பை மதிப்பதாகக் கூறி, கிஷோரின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.</p><p>மேலும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழாவான பாங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில், மக்கள் ஜன் சுராஜைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.</p><p>மக்களின் முடிவை மதித்து, பிரசாந்த் கிஷோர் அவர்களின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று சௌத்ரி பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எனக்கும் ஒருமுறை அமைச்சர் பதவி கை நழுவியது!-அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் சமாதானம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-recalls-losing-minister-post-urges-patience-amid-karnataka-cabinet-expansion-anger</link><comments>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-recalls-losing-minister-post-urges-patience-amid-karnataka-cabinet-expansion-anger#comments</comments><guid isPermaLink="false">c7b009fc-af1f-4c58-955b-5cfb24fb463e</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:39:11 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:39:11.821Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,டி.கே.சிவகுமார்,Karnataka Cabinet,D.K.Shivakumar,கர்நாடகா அமைச்சரவை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/hk8la167/karnataka.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ D.K.Shivakumar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/hk8la167/karnataka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். இருப்பினும், புதிய அமைச்சரவையில் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் காங்கிரஸின் மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற முதல்வர் டி.கே.சிவகுமார், "அனைவருக்கும் ஒரே நேரத்தில் வாய்ப்பளிக்க முடியாது, பொறுமை காக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><h2><strong>டி.கே.சிவகுமார் சமாதானம்:</strong></h2><p>அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கட்சியில் பல எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஒரே நேரத்தில் அனைவரும் அமைச்சரவையில் இடம்பெறுவது சாத்தியமற்றது. கடந்த காலத்தில் சித்தராமையாவின் அமைச்சரவையில் எனக்கும் கூட அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது நினைவிருக்கலாம். </p><p>ஆனால், அதற்குப் பிறகு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையா? அதேபோலத் தான், இப்போது வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் எதிர்காலத்தில் நிச்சயம் உரிய வாய்ப்புகள் வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்றார்.</p><h2><strong>19 புதிய அமைச்சர்கள்:</strong></h2><p>டி.கே. சிவகுமார் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 19 புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.</p><h2><strong>காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா:</strong></h2><p>அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் கடும் அதிர்ச்சியடைந்த இண்டி தொகுதி எம்.எல்.ஏ யஷவந்தராயகவுடா பாட்டீல் மற்றும் சாகர் தொகுதி எம்.எல்.ஏ பேலூர் கோபாலகிருஷ்ணா ஆகிய இரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.</p><p>வாய்ப்பு மறுக்கப்பட்ட மூத்த தலைவர்களான டி.பி.ஜெயச்சந்திரா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோரின் ஆதரவாளர்கள் பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். டி.பி. ஜெயச்சந்திராவின் இல்லத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அவசர ஆலோசனையிலும் ஈடுபட்டனர். </p><p>இறுதி நேரத்தில் ஏற்பட்ட குழப்பங்களால் எம்.எல்.சி காயத்ரி சாந்தேகவுடா பதவியேற்காததால், விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த அமைச்சரவையில் பெண் அமைச்சர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>கட்சியின் நிலைப்பாடு:</strong></h2><p>எம்.எல்.ஏ.க்களின் வெளிப்படையான எதிர்ப்பும் ராஜினாமாவும் சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு அரசியல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. இருப்பினும், அதிருப்தியில் உள்ள தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும், வாரியப் பதவிகள் மற்றும் பிற பொறுப்புகளை வழங்கி அவர்களைச் சமாதானப்படுத்தவும் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் நிறைவேறியது!</title><link>https://www.maalaimalar.com/news/national/the-bill-to-increase-the-number-of-supreme-court-judges-to-38-has-been-passed-in-the-lok-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-bill-to-increase-the-number-of-supreme-court-judges-to-38-has-been-passed-in-the-lok-sabha#comments</comments><guid isPermaLink="false">e33d60f3-835b-4199-ab85-80b955bdbed9</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:27:31 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:27:31.773Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,Lok Sabha,Supreme Court Bill,உச்ச நீதிமன்ற மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/whjve5am/New-Project-2026-08-03T195710.887.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் நிறைவேறியது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/whjve5am/New-Project-2026-08-03T195710.887.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திருத்த மசோதா இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா, உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்துகிறது.</p><p>மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர்  அர்ஜுன் ராம் மேக்வால் முன்மொழிந்த இந்த மசோதா, 1956-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற சட்டத்தை மாற்றியமைக்கிறது.</p><p>வழக்குகளை விரைவில் முடிக்கவேண்டும் என்ற முக்கிய காரணத்திற்காக இந்த மசோதாவை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்த கூடுதல் நீதிபதிகளுக்கான ஆண்டுச் செலவு ரூ.10.57 கோடி எனவும், அவர்களுக்கு வழங்கப்படும் அலுவல் இல்லங்கள் மற்றும் கார் என ஒருமுறை செலவு ரூ.3.47 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>1950-ல் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டபோது, ​​தலைமை நீதிபதி உட்பட 8 நீதிபதிகள் இருந்தனர். இந்த எண்ணிக்கை 1956-ல் 11 ஆகவும், 1960-ல் 14 ஆகவும், 1977-ல் 18 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. 1979-ஆம் ஆண்டின் இறுதி வரை அமைச்சரவையால் நீதிபதிகளின் எண்ணிக்கை 15 ஆகக் கட்டுப்படுத்தப்பட்டது. </p><p>பின்னர், அப்போதைய தலைமை நீதிபதியின் வேண்டுகோளின் பேரில் அந்தக் கட்டுப்பாடு விலக்கிக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, 1986-ல் 18-லிருந்து 26 ஆகவும், 2009-ல் 26-லிருந்து 31 ஆகவும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் வழக்குகளில் தொடர்புடைய 112 அரசு அதிகாரிகள் இன்னும் பணியில் உள்ளனர்: RTI-ல் அதிர்ச்சி தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/rti-revelation-112-corruption-accused-officials-still-on-duty</link><comments>https://www.maalaimalar.com/news/national/rti-revelation-112-corruption-accused-officials-still-on-duty#comments</comments><guid isPermaLink="false">a87b2fdb-2c51-4f16-86c3-1d86bbd07ede</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:25:24 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:25:24.576Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,RTI Act,மும்பை மாநகராட்சி,ஆர்.டி.ஐ. தகவல்,Brihanmumbai Municipal Corporation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/dpq1vslq/Untitled-design-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Mumbai Corruption Cases Shock: 112 accused officials still in service]]></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai municipal corporation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/dpq1vslq/Untitled-design-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>தகவல் அறியும் உரிமை சட்டம்</strong></h3><p>மும்பை மாநகராட்சியைச் சேர்ந்த 207 அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புப் பணியகத்தின் தகவல் அறியும் உரிமை ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.</p><p>மேலும் அவர்களில், 112 பேர் இன்னும் பணியில் உள்ளதாகவும், 68 பேர் தங்கள் வழக்குகளுக்கு இறுதித் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><h3><strong>மும்பை மாநகராட்சி</strong></h3><p>மகராஷ்டிராவில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளின் சுயவிவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2026 ஏப்ரல் 30 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.</p><p>அரசு பணிகளில் ஊழியர்களில் 207 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் 27 அதிகாரிகள் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தெரிவித்துள்ளது.</p><p>இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் சுமார் 87 சதவீதம் பேர், விசாரணை முடிவடையாத நிலையில் இன்னும் பணியில் உள்ளதாகவும், சில நபர்கள் ஓய்வு பெற்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>சமூக ஆர்வலர்</strong></h3><p>இதுகுறித்து தி யங் விசிலோப்ளவர்ஸ் ஃபவுண்டேஷன் அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜீதேந்திர கட்கே கூறுகையில், “ஒவ்வொரு ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கையும் முடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடு இருக்க வேண்டும். ஊழல் வழக்குத் தொடர அனுமதிப்பது தொடர்பான முடிவுகள் உடனடியாக எடுக்கப்பட்டு, மேலும் ஊழல் வழக்குகளில் எடுக்கப்படும் நடவடிக்கை முற்றிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும்,” என்று கூறினார்.</p><p>மேலும், “ஊழல் தடுப்புப் பிரிவால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், விசாரணைகள் ஏன் இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன என்பது குறித்து மகாராஷ்டிர அரசும் சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளும் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.</p><p>தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கண்டுபிடிப்புகளின்படி, மும்பை மாநகராட்சி பொறியியல் துறைதான் ஊழல் வழக்குகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>அரசு ஊழியர்கள்</strong></h3><p>மேலும் அதில், 33 துணைப் பொறியாளர்கள், 13 உதவிப் பொறியாளர்கள், 13 இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் பல மூத்த பொறியியல் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குகளில் நான்காம் நிலை ஊழியர்களான 48 துப்புரவுப் பணியாளர்கள், 24 கூலியாட்கள், 6 மேற்பார்வையாளர்கள், 6 பியூன்கள் மற்றும் பல களப் பணியாளர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p>இந்தியா முழுவதும் நிலுவையில் உள்ள மிகப் பழமையான ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கு 2005-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. மேலும், சில சமயங்களில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகியும் இறுதித் தீர்ப்பு எதுவும் எட்டப்படாமல் உள்ளது.</p><p>இது வெறும் தனிப்பட்ட லஞ்ச சம்பவங்களை மட்டுமல்ல, புலனாய்வு அமைப்பின் ஒரு கடுமையான தோல்வியையே பிரதிபலிக்கிறது என ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்கள் வாதிட்டு வருகின்றனர்.</p><p>இவர்கள் மீது ஊழல் வழக்குத் தொடர அனுமதி இல்லாமல் குற்றவியல் நடவடிக்கைகளைத் திறம்பட முன்னெடுத்துச் செல்ல முடியாது. இந்த நிர்வாகத் தாமதங்களால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது அடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.</p><p>கொரோனா பெருந்தொற்று காலத்தில், தனிமைப்படுத்தல் மையங்களுக்கும் அவசர சேவைகளுக்கும் பணியாளர்கள் தேவைப்படுவதைக் காரணம் காட்டி, முன்னர் இடைநீக்கம் செய்யப்பட்ட 43 அரசு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தி உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டி.கே. சிவக்குமார் தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் எம்.எல்.ஏ. ராஜினாமா</title><link>https://www.maalaimalar.com/news/national/karntaka-cabinet-congress-mla-yashavantaraya-gouda-patil-resigns</link><comments>https://www.maalaimalar.com/news/national/karntaka-cabinet-congress-mla-yashavantaraya-gouda-patil-resigns#comments</comments><guid isPermaLink="false">19951f68-ea2d-4623-ae69-41d532546605</guid><pubDate>Mon, 03 Aug 2026 13:07:41 +0000</pubDate><atom:updated>2026-08-03T13:07:41.315Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,DK Shivakumar,டிகே சிவக்குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/g5oerw4m/DKShivakumar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டி.கே. சிவக்குமார்- யஷ்வந்தராயகௌடா பாட்டீல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/g5oerw4m/DKShivakumar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநில மந்திரி சபை விரிவாக்கத்தில் இடம் கிடைக்காததால், அதிருப்தி அடைந்த யஷ்வந்தராய கௌடா பாட்டீல் என்ற எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><h2>யஷ்வந்தராய கௌடா பாட்டீல்</h2><p>கர்நாடக மாநில முதல்வராக <a href="https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-cm-requests-karnataka-cm-dk-shivakumar-to-release-9-9-tmc-water-in-cauvery">டி.கே. சிவக்குமார்</a> பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இன்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. இதில் புதிதாக 20 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.</p><p>இந்த நிலையில் அமைச்சரவை பட்டியலில் இடம் இல்லாத குறித்தும், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது குறித்தும் யஷ்வந்தராயகௌடா பாட்டீல் கூறியதாவது:-</p><p>இன்று காலை வரை அமைச்சரவைக்கான பட்டியலில் தனது பெயர் இருந்தது. தனக்கு அது குறித்த தகவல் கூட வந்திருந்தது. ஆனால் கட்சி வெளியிட்ட இறுதிப் பட்டியலில் தனது பெயர் இடம்பெறவில்லை.</p><p>கட்சிக்குள் நடக்கும் நிகழ்வுகளை நான் கவனித்து வருகிறேன். இறுதியில், இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, ​​நமது தலைமை அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டது. எனவே, வேறு வழியின்றி நான் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டேன்.</p><p>இது என் மனசாட்சிக்கு ஏற்புடையதல்ல. விஜயபுரா மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் விசுவாசத்திற்கும் நேர்மைக்கும் மதிப்பில்லை என்ற சூழலே நிலவுகிறது. எனக்கு வேறு வழியில்லை. எனது ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுடன் பேசி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன்.</p><h2>அமைச்சர் பதவி தருவதாக உறுதி</h2><p>2023 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே எனக்கு அமைச்சர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அரசு அமைக்கப்பட்டபோது, ​​இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும் அவர்கள் அந்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டனர். எனக்கு வேறு வழியில்லை. நான் கட்சியிலிருந்து விலகவில்லை, ஆனால் என்னை ராஜினாமா செய்யத் தூண்டும் சூழலை அவர்களே உருவாக்கிவிட்டனர்.</p><p>நான் எட்டுத் தேர்தல்களைச் சந்தித்த ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதி. நான் எடுத்த முடிவுகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை. இது எனது தொகுதி வாக்காளர்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை.</p><p>இவ்வாறு யஷ்வந்தராயகௌடா வி. பாட்டீல் தெரிவித்தார்.</p><p>யஷ்வந்தராயகௌடா வி. பாட்டீல் தனது ராஜினாமா கடிதத்தை பெங்களூருவில் உள்ள விதான சௌதாவில் சட்டமன்ற துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானியிடம் சமர்ப்பித்தார்.</p><p>இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>பீகாரில் தகர்ந்த பாஜக கோட்டை... மூன்று மாநில இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/news/national/bjps-stronghold-crumbles-in-bihar-results-of-by-elections-in-three-states</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjps-stronghold-crumbles-in-bihar-results-of-by-elections-in-three-states#comments</comments><guid isPermaLink="false">13c47371-9c70-43e4-80e8-f5a978aedb4b</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:59:26 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:59:26.946Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரசாந்த் கிஷோர்,Prashant Kishor,Assembly Constituencies,bye election,இடைத்தேர்தல்,சட்டமன்ற தொகுதிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/7jlg9m10/New-Project-2026-08-03T180849.900.jpg" width="1501"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பீகாரில் தகர்ந்த பாஜக கோட்டை... மூன்று மாநில இடைத்தேர்தல் முடிவுகள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/7jlg9m10/New-Project-2026-08-03T180849.900.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜினாமா, தகுதி நீக்கம், மரணம் உள்ளிட்ட காரணங்களால் பீகார், ம.பி., குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டமன்ற தொகுதி காலியானது. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினின் ராஜினாமாவைத் தொடர்ந்து பீகாரின் பாங்கிபூர் சட்டமன்ற தொகுதி காலியானது.</p><p>மத்தியப் பிரதேசத்தில், ராஜேந்திர பாரதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ததியா தொகுதி காலியானது. குஜராத்தில், யோகேஷ்பாய் நரந்தாஸ் படேலின் மரணத்தால் மஞ்சள்பூர் காலியானது.</p><p>இந்த மூன்று தொகுதிகளுக்கும் ஜூலை 30ம் தேதி வாக்குப்பதிவும், இன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.</p><p>இந்நிலையில் பீகாரில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் கட்சியும், குஜராத்தில் பாஜகவும்,  ம.பி.யில் காங்கிரஸும் வெற்றிப் பெற்றுள்ளன.</p><h2>பிரசாந்த் கிஷோர் வெற்றி</h2><p>பீகாரில் பாஜக வேட்பாளர் நீரஜ்குமாரை 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் பிரசாந்த் கிஷோர். இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.</p><p>காரணம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் பாங்கிபூர் தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வந்தது. இந்த இடைத்தேர்தலில் அந்தக் கோட்டை தகர்த்தப்பட்டு, பாஜகவிற்கு பெரும் இடியாக இறங்கியுள்ளது. </p><p>கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் பொதுத்தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தைக் கூட வெல்லாமல் படுதோல்வி அடைந்திருந்தது. அதன் பின், பிரசாந்த் கிஷோர் நேரடியாகக் களம் கண்ட முதல் தேர்தல் இதுவாகும். இத்தேர்தலில் வென்றதன் மூலம் அவர் முதல்முறையாக பீகார் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார். </p><p>இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பீகாரின் பாட்னாவில் உள்ள ஜன் சுராஜ் கட்சித் தலைமையகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கிப் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>குஜராத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் என இருதரப்பு மட்டுமே போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பிக்காபாய் ரபாரியை 30,630 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சதேந்திர பாய் படேல் தோற்கடித்துள்ளார்.</p><p>ம.பி.யில் 6016 வாக்குகள் அதிகம்பெற்று பாஜக வேட்பாளர் அஷுதோஷ் திவாரியை தோற்கடித்துள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங். </p>]]></content:encoded></item><item><title>பீகாரில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து: 3 பெட்டிகள் எரிந்து சேதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/fire-accident-on-passenger-train-in-bihar-3-coaches-damaged</link><comments>https://www.maalaimalar.com/news/national/fire-accident-on-passenger-train-in-bihar-3-coaches-damaged#comments</comments><guid isPermaLink="false">5942529a-8cc6-49e0-93f0-53ff60d2f376</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:13:07 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:13:07.390Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Train,fire accident,பீகார்,Bihar,தீ விபத்து,ரெயில் தீ விபத்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4fkpn86f/train.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Train fire accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4fkpn86f/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர்- சஹர்சா இடையே பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று அதிகாலை 3 மணியளவில் சஹர்சா மாவட்டத்தில் உள்ள சிம்ரி பக்தியார்பூர் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது என்ஜின் பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது.</p><p>சிறிது நேரத்தில் என்ஜினுடன் இணைக்கப்பட்ட மற்ற பெட்டிகளுக்கும் தீ பரவியது. இதையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக ரெயிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-</p><p>பயணிகள் ரெயில் சிம்ரி பக்தியார்பூர் நிலையத்தை அடைந்தபோது, ​​அதன் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. திடீரென்று தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தீ விரைவாக அதனுடன் இணைக்கப்பட்டு இருந்த 3 பெட்டிகளுக்கும் பரவியது. தீ விபத்து நடந்த போது பெரும்பாலான பய ணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.</p><p>தீப்பிடித்து எரிவது பற்றிய தகவல் கிடைத்தவுடன், ரெயிலுக்குள் பீதி ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக ரெயிலில் இருந்து இறங்கி ஓடினார்கள். அனைத்து பயணிகளும் உரிய நேரத்தில் ரெயிலில் இருந்து வெளியேறிவிட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.</p><p>ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததும், ரெயில்வே பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். </p><p>சுமார் 2½ மணி நேரம் போராடிய பிறகு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து சிம்ரி பக்தியார்பூர் ரெயில் நிலையத்தில் காலை 6 மணிக்கு பிறகு மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>ராஞ்சியில் தொடரும் மாணவர்கள் போராட்டம்: &apos;ஸ்விகி,சொமேட்டோ&apos; மூலம் உணவளித்து ஆதரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/students-protest-continues-in-ranchi-swiggy-zomato-orders-show-support</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-protest-continues-in-ranchi-swiggy-zomato-orders-show-support#comments</comments><guid isPermaLink="false">46b90850-3b7f-486d-86c7-4d3dacb1fd9c</guid><pubDate>Mon, 03 Aug 2026 11:38:57 +0000</pubDate><atom:updated>2026-08-03T11:38:57.816Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,Zomato,சொமேட்டோ,ராஞ்சி,Ranchi protests,Student protests</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/th8t2gv5/raanchi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ranchi protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/th8t2gv5/raanchi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்ட் மாநில பொதுச்சேவை ஆணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வு ஆணையம் (JSSC) நடத்திய அரசு வேலைவாய்ப்புப் தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு நடந்துள்ளதாகக் கூறி, ஆயிரக்கணக்கான தேர்வர்களும் மாணவர்களும் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் கடந்த பல நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இப்போராட்டம் தற்போது இந்தியா முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், முன்பின் தெரியாத மனிதர்கள் காட்டும் 'டிஜிட்டல் மனிதநேயம்' புதிய சமூகப் புரட்சியாக மாறியுள்ளது.</p><h2><strong>'ஸ்விகி, சொமேட்டோ' மூலம் குவியும் உணவுப் பொட்டலங்கள்</strong></h2><p>டெல்லியில் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, அதே போன்ற ஒரு நெகிழ்ச்சியான ஆதரவு அலை தற்போது ராஞ்சியிலும் வீசத் தொடங்கியுள்ளது.</p><h2><strong>அநாமதேயக் கொடையாளர்கள்:</strong></h2><p>மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட தொலைதூர நகரங்களில் வாழும் பொதுமக்கள், ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளான 'Swiggy' மற்றும் 'Zomato' மூலம் உணவுகளை ஆர்டர் செய்து ராஞ்சி போராட்டக் களத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். உணவை ஆர்டர் செய்யும் நபர்கள், "ராஞ்சி மைதானத்தில் பசியுடன் போராடும் மாணவர்களுக்கு இதை வழங்கவும்" எனக் குறிப்பு எழுதி உணவை அனுப்பி வைக்கின்றனர்.</p><h2><strong>நள்ளிரவிலும் தொடரும் சேவை:</strong></h2><p>மெக்டொனால்ட்ஸ் உணவு பொட்டலங்கள் முதல் சூடான இந்திய உணவுகள் வரை தினமும் நூற்றுக்கணக்கான டெலிவரி முகவர்கள் மைதானத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.</p><h2><strong>மாணவர்களின் கோரிக்கைகள் என்ன?</strong></h2><p>ஜார்க்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ள மாநில குற்றப்பிரிவு விசாரணையில் திருப்தியில்லை என்றும், CBI மற்றும் அமலாக்கத்துறை மூலம் நடுநிலையான மத்திய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் 14-வது JPSC முதன்மைத் தேர்வு மற்றும் JSSC-CGL தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டி, தேர்வு வாரியங்களின் உயர் அதிகாரிகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.</p><h2><strong>சட்டமன்ற முற்றுகை எச்சரிக்கை:</strong></h2><p>போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மழை மற்றும் கடுமையான வெப்பத்திற்கு இடையே குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதிகள் போன்றவை போராட்டக் களத்தில் பெரும் சவாலாக உள்ளன. அரசு தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகச் செவிசாய்க்காவிட்டால், மாநிலச் சட்டமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்போவதாக 'Gen Z' இளைஞர்கள் எச்சரித்துள்ளனர். </p><h2><strong>பாதுகாப்பு பலப்படுத்துதல்:</strong></h2><p>மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, ராஞ்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள ரெயில் நிலையங்கள், முக்கியப் பகுதிகளில் காவல்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது.  இளைஞர்களின் நீதிக்கான இப்போராட்டத்தில், உணவோ இருப்பிடமோ தடையாக இருக்கக் கூடாது என்பதில் இணைய வழியில் ஒன்றுபட்ட இந்திய மக்கள் உறுதியாக உள்ளனர். 'ஸ்விகி - சொமேட்டோ' போன்ற வர்த்தக தளங்கள், மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு கரங்கள் நீட்டும் புதிய வடிவிலான டிஜிட்டல் தளமாக மாறியுள்ளது சமூக வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விதிகளை மீறிய ஓல்ட் மங்க், மெக்டொவல்ஸ், ராயல் சேலஞ்ச் மதுபான நிறுவனங்கள்: FSSAI குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/old-monk-mcdowells-royal-challenge-liquor-firms-accused-of-rule-violations-fssai</link><comments>https://www.maalaimalar.com/news/national/old-monk-mcdowells-royal-challenge-liquor-firms-accused-of-rule-violations-fssai#comments</comments><guid isPermaLink="false">7e523a95-b7fd-487f-8c07-4776c75429ed</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:52:31 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:52:31.733Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>alcohol,FSSAI,விஸ்கி,மதுபானம்,Whisky,உணவு பாதுகாப்பு துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/by38zocp/Untitled-design-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ FSSAI Crackdown on Liquor Firms: Illegal Flavouring and Misleading Age Claims Exposed]]></media:title><media:description type="html"><![CDATA[ Liquor Firms]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/by38zocp/Untitled-design-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுபான உற்பத்தி நிறுவனங்கள் அனுமதிக்கப்படாத சுவையூட்டும் முறைகளைப் பயன்படுத்தியதாகவும், வயது தொடர்பான தவறான தகவல்களைக் கூறியதாகவும் குற்றம் சாட்டி, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அமலாக்க நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. </p><p>ஓல்ட் மங்க், மெக்டொவல்ஸ், பேக்பைப்பர், ஆன்டிகுவிட்டி ப்ளூ, ராயல் சேலஞ்ச் உள்ளிட்ட பல மதுபான உற்பத்தி நிறுவனங்கள், தற்போதுள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் லேபிளிங் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் அது கூறியுள்ளது. </p><p>மூலப்பொருட்கள், நொதித்தல், காய்ச்சி வடிகட்டுதல் மற்றும் முதிர்ச்சியடைதல் ஆகியவற்றின் மூலம் அதன் தனித்துவமான சுவையும் நறுமணமும் இயற்கையாக உருவாக அனுமதிப்பதற்குப் பதிலாக,</p><p>சில உற்பத்தியாளர்கள் ரம்மில் வெளிப்புறமாக "ரம் சுவையையும்" விஸ்கியில் "விஸ்கி சுவையையும்" சேர்ப்பது ஆய்வுகள் மற்றும் ஆய்வகப் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டதாக உணவு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.</p><h3><strong>மதுபான நிறுவனங்கள் மீது FSSAI குற்றச்சாட்டு</strong></h3><p>இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், “இத்தகைய தயாரிப்புகள் பிரதானமாக நடுநிலை ஆல்கஹால் அல்லது கூடுதல் நடுநிலை ஆல்கஹாலில் இருந்து தயாரிக்கப்பட்டிருந்தாலும், அவை சாதாரண ரம் அல்லது விஸ்கி என்று சந்தைப்படுத்தப்படுகின்றன. </p><p>இந்த ஆல்கஹாலில், அந்தப் பானங்களின் உள்ளார்ந்த சுவை அம்சம் இருப்பதில்லை. அவற்றின் தன்மையைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில், இந்தத் தயாரிப்புகளுக்குப் பதிலாக "ரம் சுவையூட்டப்பட்ட ஸ்பிரிட்" அல்லது "விஸ்கி சுவையூட்டப்பட்ட ஸ்பிரிட்" என்று பெயரிடப்பட வேண்டும்.</p><p>சில உற்பத்தியாளர்கள், பொருளின் உள்ளார்ந்த நறுமணத்தையும் சுவையையும் போலியாகக் காட்டும் வகையில் வெளிப்புறமாகச் சுவையூட்டியைச் சேர்த்து, அதை ஒரு தரமான பொருளாக விற்பனை செய்வதன் மூலம் நுகர்வோரைத் தவறாக வழிநடத்துகின்றனர்.</p><p>இத்தகைய சுவையூட்டியைச் சேர்க்க வேண்டியதன் சாத்தியமான தேவை, தற்போதுள்ள ஒரு முறைகேட்டின் காரணமாகக் காணப்படுகிறது.</p><p>இதில் உற்பத்தியாளர்கள், இயற்கையாகவே சுவையை வளர்ப்பதற்காக வெல்லப்பாகு, மால்ட் அல்லது திராட்சை போன்ற மூலப்பொருட்களிலிருந்தும் மற்றும்</p><p>அவற்றை பக்குவப்படுத்துதலின் மூலமும் பொருட்களை உருவாக்குவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட சுவை இல்லாத ஸ்பிரிட் ஆல்கஹாலை முதன்மையாகப் பயன்படுத்தி, வெளிப்புறமாகச் சுவையூட்டியைச் சேர்க்கின்றனர்.</p><p>இத்தகைய தயாரிப்புகள் தரம் குறைந்தவையாக இருப்பது மட்டுமல்ல, வழக்கமான வகைகளின் பெயர்களை பயன்படுத்தி தவறாகவும் சித்திரிக்கப்படுகின்றன.</p><p>மேலும், அந்த பாட்டிலின் முன்பக்கம் தயாரிப்பின் உண்மையான தன்மையை முற்றிலுமாக வெளிப்படுத்த தவறுகிறது.</p><p>ஓல்ட் மங்க் XXX ரம் வகையின் லேபிளில் உள்ள 7 ஆண்டுகள் பழமையான கலவை என்ற கூற்றும் தவறாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இந்த ரம் மதுபானத்தில் பக்குவப்பட்ட ரம் ஸ்பிரிட் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இது தற்போதுள்ள விதிமுறைகளின் தெளிவான மீறலாகும்.</p><p>ஏனெனில் FSS விதிமுறைகள், 2018-இன் படி ஸ்பிரிட் வயது குறிப்பானது கவலையில் உள்ள புதிய ஸ்பிரிடில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்,” என்று ஒரு அறிக்கையில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையம் கூறியது.</p><h3><strong>மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு தடை</strong></h3><p>இதன் அடிப்படையில் மோகன் ராக்கி ஸ்பிரிங்வாட்டர் (ஓல்ட் மங்க் வகைகள்), யுனைடெட் ஸ்பிரிட்ஸ் (மெக் டொவல்ஸ் நம்பர் 1 ரம்), இன்ப்ரூ பெவரேஜஸ் மற்றும் அசோசியேட்ஸ் ஆல்கஹால் மற்றும் ப்ரூவரீஸ் ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட தயாரிப்புகளின் விற்பனைக்கு FSSAI தடைவிதித்துள்ளது.</p><p>இந்த ஒழுங்கு நடவடிக்கை ஒட்டுமொத்த மதுபான தொழிலையும் குறிவைக்கவில்லை என்றும், பல உற்பத்தியாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட தர நிலைகளுக்கு முழுமையாக இணங்கி மதுபானங்களை தொடர்ந்து உற்பத்தி செய்து வருவதாகவும் ஆணையம் தெரிவித்தது.</p><p>மேலும் மதுபான பாட்டிலின் முன்பக்க லேபிளில் கலவையின் உண்மையான தன்மையை தெளிவாக வெளிப்படுத்திய பின்னரே, தற்போதுள்ள இருப்பை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.</p><p>மதுபான உற்பத்தி நிறுவனங்கள் எதிர்காலத்தில், இதே போன்ற சுவை ஊட்டிகளை பயன்படுத்துவதை நிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: 20 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு-சபாநாயகராக ஜி.எஸ்.பாட்டீல் தேர்வு!</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-cabinet-expansion-20-new-ministers-take-oath-today-gs-patil-elected-speaker</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-cabinet-expansion-20-new-ministers-take-oath-today-gs-patil-elected-speaker#comments</comments><guid isPermaLink="false">0300b89e-9d56-424d-a63b-41f1bf77c8e1</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:23:38 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:23:38.404Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka Cabinet,கர்நாடக அமைச்சரவை,டி.கே.சிவகுமார்,,G.S.Patil,D.K.Shivakumar,ஜி.எஸ்.பாட்டீல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/iwhw9poc/dk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ G.S.Patil-D.K.Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/iwhw9poc/dk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரின் அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், மாநில சட்டமன்றத்தின் அடுத்த சபாநாயகராக ஜி.எஸ்.பாட்டீலின் பெயரையும் கட்சித் தலைமை அங்கீகரித்துள்ளது.</p><h2><strong>கார்கே-ராகுல் காந்தி சந்திப்பு:</strong></h2><p>இந்தப் பட்டியலில், ஜமீர் அகமது கான் மற்றும் சந்தோஷ் லாட் போன்ற சில தற்போதைய அமைச்சர்களின் பெயர்கள் உட்பட 20 பெயர்கள் உள்ளன. கார்கே மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோருக்கு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, இது முதலமைச்சர் சிவகுமாரிடம் பகிரப்பட்டது. நெறிமுறையின்படி, அமைச்சர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு முன்பு, முதலமைச்சர் இந்தப் பட்டியலை ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் பகிர வேண்டும்</p><p>இதில், பட்கல் சட்டமன்ற உறுப்பினர் மங்கல் வைத்யாவின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி அவரது பெயரை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக எஸ்.எஸ். மல்லிகார்ஜுனின் பெயரைச் சேர்த்தது. இந்தச் சம்பவத்திற்குக் காரணம் தட்டச்சுப் பிழை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.</p><h2><strong>புதிய</strong> சபாநாயகராக ஜி.எஸ்.பாட்டீல்:</h2><p>மேலும், ஜி.எஸ்.பாட்டீல் சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்படுவார். இந்தப் பதவியை முன்னதாக வகித்த யூ.டி. காதர், கடந்த ஜூன் மாதம் சிவகுமார் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்றார். அமைச்சர் வேட்பாளர்களுக்கான பதவியேற்பு விழா மாலை 4.05 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக, பட்டியலை இறுதி செய்யும் போது காங்கிரஸ் தலைமை சாதி, மதம் மற்றும் பிராந்திய சமன்பாடுகளை கவனமாக மதிப்பீடு செய்து வருவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.</p><p>பல்வேறு சமூகக் குழுக்கள் மற்றும் பிராந்தியங்களிடையே சமநிலையை ஏற்படுத்த கட்சித் தலைமை முயற்சி செய்து வருவதாக, அந்த செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. நிலுவையில் இருந்த அமைச்சரவை விரிவாக்கம் முன்னதாக ஜூலை 31, வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் டெல்லியில் கட்சித் தலைமை நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.</p><h2><strong>காலியாகவுள்ள 20 இடங்கள்:</strong></h2><p>ஜூன் 3-ஆம் தேதி சிவகுமார் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, இது பல வாரங்களாக விவாதத்தில் இருந்து வருகிறது. தற்போது, ​​கர்நாடகாவில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 34 அமைச்சர்களுக்கு எதிராக, முதலமைச்சர் உட்பட 14 அமைச்சர்களே உள்ளனர். இதனால், அமைச்சரவையில் 20 இடங்கள் காலியாக உள்ளன.</p><p>கார்கே, காந்தி மற்றும் முதல்வர் சிவகுமார் ஆகியோரைத் தவிர, முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கர்நாடகப் பொறுப்பு ஏ.ஐ.சி. பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் காங்கிரஸ் கர்நாடகத் தலைவர் பி.கே. ஹரிபிரசாத் ஆகியோரும் அமைச்சரவை விரிவாக்கத்திற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க கல்வி சர்ச்சை: உங்கள் டிகிரி சர்டிபிக்கேட்டை காட்டத் தயாரா?-பிரதமர் மோடிக்கு CJP நிறுவனர் அபிஜீத் திப்கே கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/national/american-education-row-will-you-show-your-degree-certificate-cjp-founder-abhijit-dipke-questions-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/american-education-row-will-you-show-your-degree-certificate-cjp-founder-abhijit-dipke-questions-pm-modi#comments</comments><guid isPermaLink="false">98a4afe1-dcaf-4bd1-a190-5677ef12aac8</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:47:39 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:47:39.988Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி.,pm modi,Cockroach Janta Party,அபிஜீத் திப்கே,Abhijit Dipke,காக்ரோச் ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/emzqqpfn/MODI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Abhijit Dipke-PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/emzqqpfn/MODI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே தனது அமெரிக்கக் கல்விச் செலவுகள் குறித்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போஸ்டன் பல்கலைக்கழகத்தின் உதவித்தொகை கடிதம் மற்றும் கல்விக்கடனை ஆதாரமாக வெளியிட்டுள்ளார்.</p><p>சூரத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட (RTI) ஆர்வலர் அமித் திவாரி என்பவர், அபிஜீத் திப்கேயின் தந்தை பகவான்ராவ் திப்கே மீது மகாராஷ்டிர அரசிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். மகாராஷ்டிர தொழில் வளர்ச்சி கழகத்தில் (MIDC) இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அவரது மாதச் சம்பளம் சுமார் ரூ.60,000 முதல் ரூ.65,000 வரை மட்டுமே இருந்த நிலையில், தனது மகனை எப்படி அமெரிக்காவில் உயர் கல்வி படிக்க வைக்க முடிந்தது என கேள்வி எழுப்பினார்.</p><h2><strong>அபிஜீத் திப்கே அளித்த விளக்கம்:</strong></h2><p>இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மூத்த பத்திரிகையாளர் பார்கா தத்துடனான நேர்காணலில் விளக்கமளித்த அபிஜீத் திப்கே,"எனது அமெரிக்கப் படிப்பிற்கு குடும்பச் சொத்துகள் பயன்படுத்தப்படவில்லை. போஸ்டன் பல்கலைக்கழகம் வழங்கிய உதவித்தொகை மற்றும் நான் பெற்ற கல்விக்கடன் மூலமே எனது கல்வி செலவுகள் பூர்த்தி செய்யப்பட்டன. </p><p>இந்தக் கடனை நான் இன்னமும் திரும்பச் செலுத்த வேண்டி உள்ளது" எனது கல்வி உதவித்தொகை மற்றும் வங்கி கடன் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளிப்படையாக வெளியிட நான் தயார் என்று கூறி பல்கலைக்கழக சேர்க்கை மற்றும் உதவித்தொகை கடிதத்தையும் வெளியிட்டார்.</p><h2><strong>பிரதமர் மோடிக்கு் சவால்:</strong></h2><p>"நான் எனது கல்விச் சான்றிதழ்கள் மற்றும் கடன் ஆவணங்களைக் காட்டத் தயார். அதேபோல், நாட்டின் பேரரசராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியும் தனது கல்லூரி டிகிரி சான்றிதழைக் காட்டத் தயாரா?" என்று காட்டமாகச் சவால் விடுத்துள்ளார்.</p><h2><strong>தேர்தல் ஆணையத்தில் புகார்:</strong></h2><p>CJP கட்சி பதிவு செய்யப்பட்ட அமைப்பா, இல்லையா என்பதை ஆய்வு செய்யக் கோரியும், கபில் சிபல் அறிவித்த நிதிக்கு ஜி.எஸ்.டி வரம்புகள் பொருந்துமா எனக் கோரியும் RTI ஆர்வலர் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளார். இதற்கிடையில், இந்த விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், தனிநபரின் கல்விக் கட்டணத்தை சர்ச்சையாக்குவது தேவையற்றது என்றும் CJP கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைஷ்ணவி கவுர் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>பொதுமக்களின் ஆதரவு நிதி:</strong></h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் பிரம்மாண்ட மாணவர் போராட்டங்களை நடத்தி புகழ்பெற்றவர் அபிஜீத் திப்கே.  CJP கட்சியின் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் போராட்டங்களுக்கான நிதியை, முழு வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களிடமிருந்தே திரட்டத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். CJP அமைப்பின் சட்டபூர்வ நிலை மற்றும் கபில் சிபல் அறிவித்த ரூ.1 கோடி வழக்கு நிதி உதவி குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய மறைமுக வரிகள் வாரியத்திடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சிஜேபி மாணவர்கள் இயக்கம் ஒரே இரவில் எப்படி அரசியல் இயக்கமாக மாறியது?: ஆர்எஸ்எஸ் தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/how-did-cjp-student-movement-turn-political-overnight-rss-chief</link><comments>https://www.maalaimalar.com/news/national/how-did-cjp-student-movement-turn-political-overnight-rss-chief#comments</comments><guid isPermaLink="false">9a4b7fc8-c60b-4633-b927-bd4896d8ba72</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:28:05 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:28:05.007Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RSS,ஆர்.எஸ்.எஸ்,neet protest,சிஜேபி,CJP,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/93hxdqsh/Untitled-design-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ CJP student movement turns political: RSS leader Atul Limaye questions sudden shift]]></media:title><media:description type="html"><![CDATA[ RSS leader Atul Limaye]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/93hxdqsh/Untitled-design-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) இணைப் பொதுச் செயலாளர் அதுல் லிமாயே, முன்னாள் அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுக்கு காரணமான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குறித்து ஆழமான கள ஆய்வு நடத்துமாறு நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>மேலும் அவர் தற்போதுள்ள காலகட்டத்தில் தேசிய கண்ணோட்டத்துடன் செயல்படும் அமைப்புகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகிவிட்டது என்றும் குறிப்பிட்டார்.</p><p><strong>ஆர்.எஸ்.எஸ் இணைப் பொதுச் செயலாளர் </strong></p><p>மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நிகழ்ச்சி நடைபெற்றது.</p><p>இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதுல் லிமாயே, டெல்லியில் நடைபெற்ற சிஜேபி கட்சியின் போராட்டம் குறித்து பேசினார்.</p><p>அப்போது அவர், “தற்போது டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வுகள், தேசிய கண்ணோட்டம் கொண்ட அமைப்புகள் இளைஞர்கள் மத்தியில் தடம் பதிப்பது எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.</p><p>சிஜேபி கட்சி முதன்மையாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் வழி நடத்தப்பட்ட ஒரு இயக்கம் என்பதால், அகில இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் கூட்டமைப்பு போன்ற பல இடதுசாரி மாணவர் அமைப்புகள் இதில் தீவிரமாக ஈடுபட்டன.</p><p>மனித உரிமைகள், பழங்குடியினர் பிரச்சனைகள், பெண்கள் உரிமைகள், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமூகங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள், பத்திரிக்கை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றுடன் தொடர்புடைய ஏராளமான அமைப்புகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கேற்றன.</p><p>சில மேடைகளில் இருந்து இந்துக்களுக்கு எதிரான குரல்கள் எவ்வாறு எழுப்பப்பட்டன? சர்ச்சைக்குரிய மற்றும் தேசவிரோத முழக்கங்களை எழுப்பிய அல்லது ஆதரித்த நபர்கள் அங்கு ஏன் இருந்தனர்?</p><p>இயக்கத்திற்குள் இடதுசாரி சித்தாந்தம் கொண்ட செல்வாக்கு திடீரென எப்படி அதிகரித்தது? பல்வேறு அரசியல் கட்சிகளும் அவற்றின் நலன்களும் அதனுடன் எப்படி ஒன்று சேர்ந்தது?</p><p>முற்றிலும் மாணவர்களால் வழி நடத்தப்பட்ட ஒரு இயக்கம், ஒரே இரவில் எவ்வாறு அரசியல் இயக்கமாக மாறியது? நாடு முழுவதும் ஒரே மாதிரியான செயல்பாடுகளும் போராட்டங்களும் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டன? இந்த இயக்கம் வெளிநாடுகளிலும் கூட எப்படி விரிவடைந்து ஆதரவை திரட்டியது?</p><p>இந்த மனநிலையின் கீழ், கருத்து சுதந்திரம் மற்றும் உள்ளிருப்பு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் உரிமை போன்ற ஜனநாயகத்தால் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை பயன்படுத்துவதன் மூலம், ஜனநாயக அமைப்புக்கே சவால் விடுக்கப்படுகிறது.</p><p>எதிர்கால ஜனநாயகம் என்பது நாடாளுமன்றம் மற்றும் தேர்தல்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. அவை தெருக்களாலும், எதிர்ப்பாலும் தீர்மானிக்கப்படும்.</p><p>இந்த வகையான போராட்டங்கள் பொதுவாக வரையறுக்கப்பட்ட சில கட்டங்களை உள்ளடக்கியுள்ளது. முதலாவது, பல்வேறு கல்வி மற்றும் சமூக நிறுவனங்களில் கருத்தியல் ரீதியாக ஊடுருவுவதை உள்ளடக்கியது.</p><p>இரண்டாவதாக, நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலப்பு கட்டமைப்புகளின் நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாகும்.</p><p>மூன்றாவது, கல்வி, இலக்கியம், ஊடகம், சினிமா மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் ஒரு மாற்று மன நிலையை வளர்த்து, ஒரு கருத்துகளை கொண்டு போர் நடத்துவதாகும்.</p><p>இறுதியில் வெகுஜன இயக்கங்கள் மூலம் அரசாங்கம் மற்றும் சமூகத்தின் மீது அழுத்தம் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.</p><p>சுதந்திர இந்தியாவில் அரசியலமைப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை அம்பேத்கர் வலியுறுத்தி இருந்தார்.</p><p>அரசியலைப்பிற்கு எதிரான அல்லது வன்முறை இயக்கங்களுக்கு எதிராக எச்சரித்த அம்பேத்கர், அவற்றை அராஜகத்தின் இலக்கணம் என்று குறிப்பிட்டிருந்தார்.</p><p>இத்தகைய இயக்கங்களுக்கு மிகவும் பயனுள்ள பதில் என்பது வெறும் எதிர்ப்போ அல்லது விமர்சனமோ கிடையாது, மாறாக இளைஞர்களுடன் தொடர்ச்சியான, நேர்மறையான உரையாடலை பேணுவதிலும், தேசியவாத உணர்வை வளர்ப்பதிலும் அடங்கியுள்ளது” என்று ஆர்.எஸ்.எஸ் இணைப் பொதுச் செயலாளர் அதுல் லிமாயே கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு
</title><link>https://www.maalaimalar.com/news/national/cauvery-issue-tn-government-files-case-in-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/cauvery-issue-tn-government-files-case-in-supreme-court#comments</comments><guid isPermaLink="false">093efff7-d6a8-400a-bf40-413482f47da5</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:09:45 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:09:45.739Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN Government,Supreme Court,சுப்ரீம் கோர்ட்,Cauvery Issue,காவிரி விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/q9iumpi4/tngovernment.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cauvery water - Supreme court - TN government]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/q9iumpi4/tngovernment.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜயின் அறிவுறுத்தலின்படி உச்சநீதிமன்றத்தில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழ்நாடு அரசு</a> வழக்கு தொடர்ந்தது.</p><p>தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவில்,</p><p>* விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடகம் அளிக்க தவறி விட்டது. </p><p>* 26.954 டி.எம்.சி. நீரை <a href="https://www.maalaimalar.com/news/national/the-mekedatu-project-is-the-only-solution-to-the-cauvery-issue-dk-shivakumar">கர்நாடகம்</a> தமிழகத்திற்கு தந்திருக்க வேண்டும்.</p> <p>* தமிழகத்திற்கு உரிய நேரத்தில் காவிரியில் கர்நாடக அரசு நீரை திறந்து விடவில்லை.</p><p>* காவிரி மேலாண்மை ஆணையம் உத்தவிட்ட பிறகும் பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு அதிகபட்சமாக 550 கனஅடி நீர் தான் வருகிறது.</p><p>* ஆக.3 நிலவரப்படி கேஆர்எஸ் அணையில் 23 டிஎம்சியும், கபினி அணையில் 18.6 டிஎம்சியும், ஹாரங்கியில் 7.8 டிஎம்சியும், ஹேமாவதி அணையில் 28 டிஎம்சி என மொத்தம் 77.53 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.</p> <p>* 77.53 டிஎம்சி தண்ணீர் உள்ளதால் விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதில் கர்நாடகாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை.</p><p>* காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 3500 கன அடி நீர் திறக்க கர்நாடகாவிற்கு மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.</p><p>* காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு அதிகபட்சமாக 550 கனஅடி நீர் தான் வருகிறது.</p><p>* தமிழ்நாட்டிற்கு விகிதாச்சாரப்படி கிடைக்கவேண்டிய நீர் 26.954 டிஎம்சி.</p><p>* உரிய நேரத்தில் தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பிரிஜ்பூஷன் சிங் விடுவிப்பு: மேல்முறையீடு செய்வோம்..!- வினேஷ் போகத்</title><link>https://www.maalaimalar.com/news/national/vinesh-phogat-on-brijbhushan-singh-acquittal-we-will-appeal</link><comments>https://www.maalaimalar.com/news/national/vinesh-phogat-on-brijbhushan-singh-acquittal-we-will-appeal#comments</comments><guid isPermaLink="false">3da77da5-1342-436c-a075-48bff7336e39</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:31:42 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:31:42.173Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வினேஷ் போகத்,பாலியல் குற்றச்சாட்டு,பிரிஜ் பூஷன் சரண் சிங்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/xbz63khs/vinesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Brij Bhushan singh- Vinesh phogat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/xbz63khs/vinesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ஜ.க முன்னாள் எம்.பி.யான பிரிஜ்பூஷன் சரண்சிங் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தார்.</p><h2>பாலியல் புகார்</h2><p>கடந்த 2023-ம் ஆண்டு 6 மல்யுத்த வீராங்கனைகள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்கள். முன்னணி வீராங்கனைகள் பிரிஜ்பூஷன் மீது செக்ஸ் புகார் கூறி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக வீராங்கனைகள் போராட்டமும் நடத்தினார்கள்.</p><p>இதை தொடர்ந்து 6 முறை எம்.பி.யாக இருந்த அவர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து விலகினார்.</p><h2>குற்றப்பத்திரிகை</h2><p>மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் குறித்த வழக்கு டெல்லி சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. கடந்த 2024-ம் ஆண்டு பிரிஜ்பூஷன் சிங் மீது குற்றவியல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டை பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.</p><h2>கடந்த ஜூன் மாதம் </h2><p>15-ந்தேதி டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 354 (பெண்ணின் கண்ணியத்திற்கு ஊறுவிளைவிக்கும் நோக்கத்துடன் தாக்குதல்), 54ஏ (பாலியல் துன்புறுத்தல்), 354டி (பின் தொடர்தல், தொல்லை கொடுத்தல்), 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்து இருந்தது.</p><h2>போக்சோ பிரிவு ரத்து</h2><p>புகார் அளித்த வீராங்கனைகளில் ஒருவர் மைனர் பெண் என்பதால்  போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறுமிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பொய்யான புகார் அளிக்கப்பட்டதாக அவரது தந்தை திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.</p><p>இதையடுத்து அந்த புகாரை ரத்து செய்யக்கோரி டெல்லி போலீசார் அளித்த பரிந்துரையை ஏற்று  பிரிஜ்பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டில் இருந்து போக்சோ பிரிவை கோர்ட்டு ரத்து செய்தது.</p><h2>விடுவிப்பு</h2><p>இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஜூலை 2-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு ஆகஸ்டு 3-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.</p><p>அதன்படி மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல்  துன்புறுத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ்பூஷன் சிங், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் இணை செயலாளர் வினோத் தோமர் ஆகியோரை கோர்ட்டு விடுவித்தது.</p><p>கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு அஸ்வினி  பன்வார் ஆதாரம் இல்லாததால் இருவரையும் விடுவிப்பதாக உத்தரவில் தெரிவித்தார்.</p><h2>மேல்முறையீடு முடிவு</h2><p>பிரிஜ் பூஷண் சிங் விடுதலை செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பங்கிபூர் இடைத்தேர்தல்: பா.ஜ.க-வை முந்தி பிரசாந்த் கிஷோர் அதிரடி முன்னிலை!</title><link>https://www.maalaimalar.com/news/national/purnia-bypoll-prashant-kishor-leads-bjp-candidate-in-early-counting-rounds</link><comments>https://www.maalaimalar.com/news/national/purnia-bypoll-prashant-kishor-leads-bjp-candidate-in-early-counting-rounds#comments</comments><guid isPermaLink="false">a7a61430-b708-47f0-ae96-df66463bc6d6</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:19:49 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:19:49.351Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரசாந்த் கிஷோர்,Prashant Kishor,bankipur bypoll,Bankipur,பங்கிபூர்,BJPBihar,NeerajKumar Sinha,பங்கிபூர் இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4ofplele/Prashant-Kishor" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Prashant Kishor  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4ofplele/Prashant-Kishor?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநிலத்தின் பங்கிபூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், 'ஜன சுராஜ் கட்சி' நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தனது எதிர்தரப்பான பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை விடத் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.</p><h2>4-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்</h2><p>பங்கிபூர் தொகுதியில் மொத்தம் திட்டமிடப்பட்டுள்ள 31 சுற்று வாக்கு எண்ணிக்கைகளில், 4 சுற்றுகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்படி, ஜன சுராஜ் கட்சியின் பிரசாந்த் கிஷோர் 6,269 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். </p><p>பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹா 5,124 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் ரேகா குமாரி 884 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.</p><p>பா.ஜ.க வேட்பாளரை விட 1,145 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் இருக்கிறார்.</p><h2>பிரசாந்த் கிஷோரின் முதல் தேர்தல் களம்</h2><p>கடந்த ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்ற இந்த இடைத்தேர்தல், தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோரின் முதல் நேரடித் தேர்தல் களம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>பா.ஜ.க-வின் பாரம்பரியமான மிக வலுவான கோட்டையாகக் கருதப்படும் இந்த பங்கிபூர் தொகுதி, அங்கு எம்.எல்.ஏ-வாக இருந்த பா.ஜ.க தலைவர் நிதின் நபின் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து காலியானது குறிப்பிடத்தக்கது.</p><p>பாட்னாவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பல அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தற்போது வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் 27 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை எஞ்சியுள்ளது.</p> <h2>பாதுகாப்பான தொகுதியை நான் தேடவில்லை - பிரசாந்த் கிஷோர்</h2><p>முன்னதாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பிரசாந்த் கிஷோர், ' அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்களுக்குப் பாதுகாப்பான தொகுதிகளைத் தேடுவார்கள். ஆனால், நான் அதற்கு நேர்மாறாகச் செய்கிறேன். </p><p>பீகார் மக்கள் சாதி, மதங்களைக் கடந்து வாக்களிக்க வேண்டும் என்ற செய்தியைச் சொல்லவே பாஜக -வின் கோட்டையான பங்கிப்பூரைத் தேர்ந்தெடுத்தேன். </p><p>லாலு பிரசாத் யாதவ் மீதான பயத்தால் பாஜக -விற்கும், பாஜக மீதான பயத்தால் லாலுவிற்கும் மக்கள் வாக்களிப்பதை நிறுத்த வேண்டும்' என்று தனது அரசியல் நோக்கத்தை விளக்கியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: தொடர் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/monsoon-session-of-parliament-both-houses-adjourned-amid-continued-uproar</link><comments>https://www.maalaimalar.com/news/national/monsoon-session-of-parliament-both-houses-adjourned-amid-continued-uproar#comments</comments><guid isPermaLink="false">d8c59191-1c9f-47a8-bf1e-5bdc87f30424</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:47:33 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:47:33.156Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Loksabha,அமளி,parliament,rajyasabha mp,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்,அவை ஒத்திவைப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/6qrx0a2t/parliament.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Parliament]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/6qrx0a2t/parliament.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கிய முதல் நாள் முதலே எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்து வருகிறது.</p><p>இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 11வது நாளான இன்று நீட் முறைகேடு விவகாரம், மாணவர் போராட்டங்கள் மீதான போலீஸ் நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பினர்.</p><p>அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்ள் முழக்கமிட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.  தொடக்கத்திலேயே ஏற்பட்ட அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோஷங்களால் அவை பாதிக்கப்பட்டது. தொடர் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, இன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.</p><p>மக்களவையில் இந்திய புள்ளியியல் நிறுவனம் மசோதா, 2026 மற்றும் வங்கியாளர்களின் ஆவண சான்று மசோதா, 2026 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன.</p><p>மாநிலங்களவையில் பிறப்பு-இறப்பு பதிவுகள் (திருத்தம்) மசோதா, 2026 மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை (திருத்தம்) மசோதா, 2026 ஆகியவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.</p><p>மேலும், வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை (FCRA) திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு இன்னும் சில வேலை நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அவையில் தொடர்ந்து அமளி நீடித்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>​​திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு: இத்தனை நாட்கள் என்ன செய்தீர்கள்?- தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/national/thiruparankundram-deepam-case-supreme-court-ask-question-tn-govt</link><comments>https://www.maalaimalar.com/news/national/thiruparankundram-deepam-case-supreme-court-ask-question-tn-govt#comments</comments><guid isPermaLink="false">b29f3fc5-7de3-4c2f-8f98-df88ad84d874</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:38:42 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:38:42.187Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,Supreme Court,சுப்ரீம் கோர்ட்,திருப்பரங்குன்றம் முருகன் கோவில்,திருப்பரங்குன்றம் தீபம்,Thiruparankundram Deepam Case,திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/jnb5c0yg/supremecourt.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ​​திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு]]></media:title><media:description type="html"><![CDATA[ ​​திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/jnb5c0yg/supremecourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி கோவில் செயல் அதிகாரி உள்ளிட்ட அனைத்து எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும்.</aside><p>திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கடந்​த ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந்தேதி தீபம் ஏற்​றக்கோரி மதுரையைச் சேர்ந்த ராமரவி​கு​மார் உள்​ளிட்​டோர் உயர்நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத்தாக்​கல் செய்தனர். அந்த மனுக்​களை விசா​ரித்த சென்னை உயர்நீ​தி​மன்ற தனி நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், தீபத்​தூணில் கார்த்திகை திரு​நாள் அன்று தீபம் ஏற்ற வேண்​டுமென கடந்த டிச.1-ந்தேதி உத்​தர​விட்டார்.</p><p>ஆனால், இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத நிலை​யில், மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணை​யர் மற்​றும் கோவில் செயல் அலு​வலர் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இதையடுத்து ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், செயல் அலு​வலர் ஆகியோர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்​றாததற்​காக வருத்​தம் தெரிவித்தனர்.</p><p>இதனைதொடர்ந்​து, தனி நீதிபதி உத்​தரவை எதிர்த்து தமிழ்​நாடு அரசும், அவம​திப்பு நடவடிக்​கையை எதிர்த்து அதி​காரி​களும் உயர் ​நீ​தி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீடு செய்​தனர். அந்த மேல்​முறை​யீட்டு மனுக்​களை விசா​ரித்த மதுரை அமர்வு, அதி​காரிகளுக்கு எதி​ரான நீதி​மன்ற நடவடிக்​கைக்கு தடை​வி​தித்து உத்​தர​விட்​டது. அதே வேளை​யில், ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை திரு​நாளன்று திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்​தது.</p><p>இதனையடுத்​து, தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்து மதுரை அமர்வு பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக கோவில் நிர்​வாகம் தரப்​பில் <a href="https://www.maalaimalar.com/topic/சுப்ரீம்-கோர்ட்">சுப்ரீம் கோர்ட்டில்</a> மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இதேபோல் தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் பி.கருணாகரனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும், அந்தத் தீர்ப்புக்கு முன்பு பின்பற்றப்பட்ட நடைமுறையின்படியே கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அரவிந்த் குமார், வி.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:-</p><p>அறநிலையத்துறை தரப்பு:- உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் ஒரு புதிய நடைமுறையை புகுத்த பார்க்கிறார்கள்.</p><p>நீதிபதிகள்:-  கார்த்திகை தீபம் என்று அந்த தீப தூணில் விளக்கேற்றும் நடைமுறை முன்பு இருந்ததா? </p><p>அறநிலையத்துறை ஆணையர்:- தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நடைமுறை முன்னர் இல்லை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து புதிய ஒரு நடைமுறையை புகுத்த பார்க்கிறது. நடைமுறையில் இல்லாத ஒரு விஷயத்தை எப்படி உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் செயல்படுத்த முடியும்? ஏற்கனவே நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு மனுவை விசாரித்து நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.</p><p>நீதிபதிகள்:- தற்போதைய நிலையில் எந்த ஒரு தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. வழக்கை முழுமையாக விசாரித்து அதன் பின்பே உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.</p><p>எதிர்மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு:- சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்திருந்த நிலையில் தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போதும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதாக கூறி வழக்கை இழுத்து அடித்து வருகிறார்கள்.</p><p>நீதிபதிகள்:- சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி மாதம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில் இத்தனை நாட்கள் தமிழக அரசு என்ன செய்து கொண்டு இருந்தது? </p><p>அறநிலையத்துறை தரப்பு:- பல்வேறு ஆவணங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டியதிருந்ததால்தான் காலதாமதம் ஏற்பட்டது. நாங்கள் அனைத்தையும் தற்போது நீதிமன்றத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறோம்.</p><p>நீதிபதிகள்:- இந்த விவகாரம் தொடர்பாக ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி கோவில் செயல் அதிகாரி உள்ளிட்ட அனைத்து எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும். மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற மனுதார்கள் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. வழக்கு 8 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா - இத்தாலி நட்புறவை கொண்டாட பார்லேயின் புதிய &apos;மெலோடி டிராமிசு&apos; அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/parle-launches-melody-tiramisu-to-celebrate-india-italy-friendship</link><comments>https://www.maalaimalar.com/news/national/parle-launches-melody-tiramisu-to-celebrate-india-italy-friendship#comments</comments><guid isPermaLink="false">0664e36c-e216-42f7-9540-da0074150472</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:47:40 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:47:40.475Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Blinkit,பிளிங்கிட்,Melodi,Parle Melody,பார்லே மெலடி,Melody Tiramisu,மெலடிடிராமிசு,India Italy Friendship,புதிய சாக்லேட்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/iwc3ouc8/Parle-Melody-Tiramisu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Parle Melody Tiramisu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/iwc3ouc8/Parle-Melody-Tiramisu?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமீபத்தில் இணையதளத்தில் வைரலான பிரதமர் மோடி மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் 'மெலோடி' தருணங்களை குறிக்கும் வகையில், பார்லே நிறுவனம் தனது புகழ்பெற்ற மெலோடி டாப்பியில் ஒரு புதிய சுவை கொண்ட சாக்லேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. </p><p>'மெலோடி டிராமிசு' என்ற பெயரில் வந்துள்ள இந்த சாக்லேட் பாக்கெட்டில் 'இந்தியா - இத்தாலி நட்புறவைக் கொண்டாடுகிறோம்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.</p><h2>மெலோடியின் பின்னணி</h2><p>கடந்த மே மாதம் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக இத்தாலி சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்தியாவின் பாரம்பரிய மெலோடி சாக்லேட்டுகளை பரிசாக வழங்கினார். </p><p>இந்த பரிசைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மெலோனி, 'பிரதமர் மோடி தங்களுக்கு மிகவும் சுவையான மெலடி சாக்லேட்டை பரிசாக தந்துள்ளார்' என்று நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். </p><p>இந்த வீடியோ உலகம் முழுவதும் பரவி டிரெண்டிங்காக மாறியது. ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் இவர்களது நட்பை இருவரின் பெயரையும் இணைத்து 'மோடி + மெலோனி' என்ற பெயரை சேர்த்து மெலோடி என்ற ஹாஷ்டேகை பயன்படுத்தி வருகின்றனர். </p><p>இப்போது அது உண்மையாகவே ஒரு சாக்லேட் வடிவில் உருவெடுத்துள்ளது.</p><h2><strong>'மெலடி டிராமிசு'</strong></h2><p>இத்தாலியின் புகழ்பெற்ற காபி கலந்த இனிப்பு வகையான 'டிராமிசு' சுவையில் இந்த புதிய மெலோடி தயாரிக்கப்பட்டுள்ளது. பாக்கெட்டின் முகப்பிலேயே இந்தியா - இத்தாலி நாட்டின் நட்புறவை போற்றும் வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலம் ஒரு சாதாரண மிட்டாய், சர்வதேச ராஜதந்திர உறவின் அடையாளமாக மாறியுள்ளது.</p><h2><strong>எங்கே, எப்படி வாங்கலாம்?</strong></h2><p>இந்த சாக்லேட், விரைவுப் பொருள் விநியோக தளம் ஒன்றில் மட்டுமே பிரத்தியேகமாக கிடைக்கிறது. வேறு எந்த கடைகளிலும் தற்போதைக்கு கிடைக்காது. </p><p>180 கிராம் எடையுள்ள பாக்கெட்டாக, காபி கேண்டி பிரிவின் கீழ் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. </p><p>மேலும் இந்த சாக்லேட் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு லிமிடெட் எடிஷன் தயாரிப்பாகும்.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் குற்றச்சாட்டு- பிரிஜ் பூஷண் சிங்கை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/sexual-assault-case-court-acquits-brij-bhushan-singh</link><comments>https://www.maalaimalar.com/news/national/sexual-assault-case-court-acquits-brij-bhushan-singh#comments</comments><guid isPermaLink="false">2e03cbf5-c018-4d3d-9f98-2156974758cd</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:00:19 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:00:19.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi court,பாலியல் குற்றச்சாட்டு,நீதிமன்றம் உத்தரவு,Sexual Harassment,Brij Bhushan Sharan Singh,பிரிஜ் பூஷண் சிங்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/2ib5tnzj/brij.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ brij bhushan singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/2ib5tnzj/brij.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்  தொடர்பான வழக்கில், பாஜக மூத்த தலைவரும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்  முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங்கை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விடுவித்துள்ளது.</p><p>நீதிபதி அஷ்வினி பன்வார் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை இன்-கேமரா முறையில் நடைபெற்றது.</p><p>கடந்த 2023-ஆம் ஆண்டு முன்னணி மகளிர் மல்யுத்த வீராங்கனைகள், பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. உச்சநீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு டெல்லி போலீஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்து, பின்னர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.</p><p>பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் தொல்லை, பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் பலவந்தமாக நடந்துகொண்டது, மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. </p><p>பின்னர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவரை நீதிமன்றம் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கேரளத்தில் மழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-rains-landslide-death-toll-rises-to-9</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-rains-landslide-death-toll-rises-to-9#comments</comments><guid isPermaLink="false">2f63d3f8-b8c9-4fc8-8388-dc72cde2ecef</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:27:24 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:27:24.834Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,landslide,மழை,பலி எண்ணிக்கை உயர்வு,Death toll,கேரளா,நிலச்சரிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/tygbndx7/kerala2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kerala landslide]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/tygbndx7/kerala2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளத்தில் மழை, நிலச்சரிவால் இதுவரை 9 பேர் இறந்துள்ளதாக முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.</p><h2>மழை பாதிப்பு</h2><p>கேரளத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பை சந்தித்துள்ளது. பூஞ்ஞார், அடூர் மலை போன்ற மலையோர பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது.</p><p>பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பத்தனம்திட்டா, ஆலப்புழை போன்ற மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு, வடியாமல் இருக்கிறது. இது அங்குள்ள மக்களை வெகுவாக பாதித்துள்ளது.</p><h2>9 பேர் பலி</h2><p>மேலும் மழை பாதிப்பு தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20" rel="nofollow">கேரளம் முதலமைச்சர் </a>வி.டி.சதீசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>கேரளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்திற்கு இதுவரை 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். 13 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.</p><p>8 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மாநிலத்தில் இதுவரை 27 வீடுகள் முற்றிலுமாகவும், 196 வீடுகள் சிறிய அளவிலும் சேதம் அடைந்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட 5,792 பேர் 209 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2>மீனவர் உடல் மீட்பு</h2><p>இதற்கிடையே கடலில் மீன்பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்து மாயமான மீனவர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அதாவது திருவனந்தபுரம் அருகே உள்ள முதலப்பொழி முகத்துவாரப் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 4 மீனவர்கள் ஒரு படகில் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.</p><p>அப்போது ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் ஜோஸ், ஸ்மித் ஆகிய 2 மீனவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். பிரீமன் (வயது 28), ஷிஜின் (32) ஆகியோர் மாயமானார்கள். இதில் நேற்று பிரீமன் பிணமாக மீட்கப்பட்டார். மாயமான ஷிஜினை தொடர்ந்து தேடி வரும் பணி நடக்கிறது.</p><h2>தேடும் பணி தீவிரம்</h2><p>இந்தநிலையில் நேற்று முன்தினம் விழிஞ்ஞம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடி படகு கவிழ்ந்தது. இதில், மாயமான புல்லுவிளையைச் சேர்ந்த ஜான் (54), கொட்டுக்காலைச் சேர்ந்த ஆண்டனி (63) ஆகியோரையும் விழிஞ்ஞம் கடலோர காவல் குழும போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>அந்த இருவரும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>2030 காமன்வெல்த் போட்டிகளுக்காக உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் தயாராகும் அகமதாபாத் - குஜராத் துணை முதல்வர்</title><link>https://www.maalaimalar.com/news/national/ahmedabad-is-preparing-world-class-infrastructure-for-2030-cwg-gujarat-deputy-cm-harsh-sanghavi</link><comments>https://www.maalaimalar.com/news/national/ahmedabad-is-preparing-world-class-infrastructure-for-2030-cwg-gujarat-deputy-cm-harsh-sanghavi#comments</comments><guid isPermaLink="false">a580956a-ca57-4e12-9690-c9687404e6ce</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:26:52 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:26:52.116Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ahmedabad,காமன்வெல்த் போட்டிகள்,CWG 2030,Harsh Sanghavi,ஆமதாபாத்,ஹர்ஷ் சங்கவி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/0bnr1uey/Harsh-Sanghavi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Harsh Sanghavi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/0bnr1uey/Harsh-Sanghavi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விளையாட்டு மேம்பாட்டிற்காக பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> தொடர்ந்து மேற்கொண்டு வரும் உந்துதலைப் பாராட்டிய குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் மீதான அரசின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக கூறினார். </p><p>மேலும், கிளாஸ்கோ <a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்று வரும் வேளையில், நாட்டின் விளையாட்டு சூழலை வலுப்படுத்த மத்திய அரசு விளையாட்டுக்கான பட்ஜெட்டை எட்டு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>பிரதமருக்கு நன்றி:</h2><p>"பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். ஒருபுறம், 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நமது நாட்டின் வீரர்கள் பதக்கங்களுக்கு மேல் பதக்கங்களை வென்று வந்தனர். மறுபுறம், பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களுக்கான பட்ஜெட்டை எட்டு மடங்கு அதிகரித்துள்ளார். இது அவரது அர்ப்பணிப்பை தெளிவாகக் காட்டுகிறது," என்று ஹர்ஷ் சங்கவி கூறினார்.</p><p>2030-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்காக அகமதாபாத் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பை வேகமாக உருவாக்கி வருவதாகவும், இந்த வசதிகள் குஜராத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்து வரும் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கும் பயனளிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.</p><h2>சர்வதேச தரம்:</h2><p>இதுகுறித்து பேசிய அவர், "இந்திய இளைஞர்கள் அனைவரின் கனவுகளையும் நனவாக்கும் வகையில், உலகத் தரம் வாய்ந்த, சர்வதேச தரத்திலான விளையாட்டு உள்கட்டமைப்பை அகமதாபாத் முழுமையாக தயார் செய்து வருகிறது. இந்த உள்கட்டமைப்பு அகமதாபாத் அல்லது குஜராத் மாநிலத்திற்குள் மட்டும் கட்டுப்படுத்தப்படாது. நாடு முழுவதிலும் இருந்து ஒவ்வொரு இளம் விளையாட்டு வீரரும் தங்கள் கனவுகளை அடைய அகமதாபாத்தை தங்கள் இல்லமாகக் கருதலாம்," என்று சங்கவி கூறினார்.</p><p>2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை அகமதாபாத்தில் நடத்துவதற்கு இந்தியா தயாராகி வரும் வேளையில் அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இப்போட்டிகளின் நூற்றாண்டு பதிப்பிற்காக, சர்வதேச தரத்திற்கு இணையான விளையாட்டு அரங்குகள் மற்றும் விளையாட்டு வீரர்களை மையமாக கொண்ட வசதிகளை உருவாக்கும் பணிகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.</p><p>பல்வேறு பிரிவுகளில் இந்தியா தனது மிகச்சிறந்த செயல்பாடுகளில் ஒன்றை வெளிப்படுத்திய கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் போது, ​​குஜராத் துணை முதலமைச்சர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><h2>உறுதியான பாரம்பரியம்:</h2><p>2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை அகமதாபாத் நடத்த இருக்கிறது. குஜராத் அரசு, இந்த நகரத்தை ஒரு உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு தலமாக நிலைநிறுத்தி வருகிறது. இந்த போட்டிகளுக்காக உருவாக்கப்பட்டு வரும் உள்கட்டமைப்பானது, சர்வதேச தரத்திற்கு இணையாக இருக்கும்.</p><p>உயர் செயல்திறன் பயிற்சி வசதிகள மற்றும் விளையாட்டு அரங்கங்களை உருவாக்குவதன் மூலம் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு நீடித்த பலன்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது, இந்த பல்நோக்கு விளையாட்டு நிகழ்வுக்கு பிறகும் நீடித்து நிலைக்கும் ஒரு பாரம்பரியத்தை உறுதி செய்கிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியர்கள் அதிக நேரத்தை செலவிடும் செயலி - ஆய்வில் புதிய தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/indians-spend-most-time-app</link><comments>https://www.maalaimalar.com/news/national/indians-spend-most-time-app#comments</comments><guid isPermaLink="false">23f48111-dc1c-4c00-9d6a-6670a2e1336f</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:25:33 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:25:33.884Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>YouTube,Instagram,indians,smartphone,CELLPHONES,செல்போன்,இந்தியர்கள்,இன்ஸ்டாகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/r8blba5o/socialmedia.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/r8blba5o/socialmedia.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்தியர்கள் எந்தெந்த செயலிகளில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்? என்பது குறித்த ஆய்வில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.</strong></em></p><h2>செயலிகள்</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">செல்போன்</a> உலகில் இன்று அனைவரும் மூழ்கிப் போய்த்தான் கிடக்கிறோம். இதில் யாரும் மாற்று கருத்தை சொல்ல முடியாது. ஒருவர் வீட்டில் இருந்து வெளியில் புறப்படுவதற்கு முன்பு எந்த பொருளை எடுக்க மறக்கிறாரோ? இல்லையோ? முதலில் கையில் எடுப்பது செல்போனாகத்தான் இருக்கும். அந்தவகையில் நம்முடைய அன்றாட வாழ்வில் முக்கிய அங்கமாகவே அது மாறிவிட்டது.</p> <h2>ஸ்மார்ட்போன்</h2><p>இந்த நிலையில் இந்தியாவில் '<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">ஸ்மார்ட்போன்</a>' பயன்படுத்தும் பயனாளர்கள் எந்த செயலியில் (அப்ளி கேஷன்ஸ்) அதிக நேரம் செலவிடுகிறார்கள்? என்பது குறித்து 'பேங்க் ஆப் அமெரிக்காவின்' நிதிச் சந்தை ஆராய்ச்சி பிரிவு ஆய்வு நடத்தியுள்ளது. அதில் ஒரு மாதத்தில் எவ்வளவு நேரம் அந்த செயலிகளில் நேரத்தை செலவிடுகிறார்கள் என்ற புள்ளிவிவரங்களுடன் ஆய்வை வெளியிட்டுள்ளது.</p> <h2>சமூக வலைதளங்கள்</h2><p>அதில், ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இந்தியர்கள் சராசரியாக இன்ஸ்டாகிராம் செயலிக்கு 49 மணி நேரம் 42 நிமிடமும், யூ-டியூப் செயலிக்கு 47 மணி நேரம் 23 நிமிடமும் செலவிடுகிறார்கள். அதாவது நாளொன்றுக்கு சுமார் 16 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்துகிறார்கள். அதற்கடுத்தபடியாக முகநூலில் 24 மணி நேரம் 45 நிமிடமும், 'எக்ஸ்' தளத்தில் 13 மணி நேரம் 30 நிமிடமும் கழிக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>சமூக வலைத்தளங்களை தவிர, ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு (பிரீ பயர்) இளைஞர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதற்கு மட்டும் மாதத்துக்கு 41 மணி நேரம் 12 நிமிடம் செலவிடுகிறார்கள். இதேபோல், லுடோ கிங், கேரம் ஆகிய கேமிங் செயலிகளுக்கு முறையே சுமார் 13 மணி நேரம் செலவு செய்கிறார்கள்.</p> <h2>வாட்ஸ்-அப்...</h2><p>சமூக வலைத்தளங்கள். கேமிங் செயலிகளை போல, ஓ.டி.டி தளங்களிலும் நீண்ட நேரம் நேரத்தை செலவிடுகிறார்கள். அதில் பிரபல நிறுவனங்களின் ஓ.டி.டி. தளங்களை அதிகபட்சமாக மாதத்துக்கு இந்தியர்கள் சராசரியாக 10 மணி நேரம் முதல் 22 மணி நேரம் வரை பயன்படுத்துகிறார்கள்.</p><p>இதுதவிர வாட்ஸ்-அப் செயலியில் மாதத்துக்கு 18 மணி நேரம் 49 நிமிடம் சராசரியாக இந்தியர்கள் செலவிடுவதும் இந்த புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.</p> <p>இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணங்கள் குறைவாக இருப்பதும், மலிவான ஸ்மார்ட்போன்கள் பரவலாக கிடைப்பதும் மக்கள் தங்களின் பெரும்பகுதி நேரத்தை பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் சமூக வலைத்தளங்களில் செலவிட வழிவகுத்துள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் அசுர வளர்ச்சியை காட்டுவதாக சொல்லப்பட்டிருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>வங்கிக்கடன் வட்டியில் மாற்றம் வருமா? - ரிசர்வ் வங்கி இன்று முதல் ஆலோசனை </title><link>https://www.maalaimalar.com/news/national/reserve-bank-begins-consultations-today-will-there-be-a-change-in-bank-loan-interest-rates</link><comments>https://www.maalaimalar.com/news/national/reserve-bank-begins-consultations-today-will-there-be-a-change-in-bank-loan-interest-rates#comments</comments><guid isPermaLink="false">bc800ef4-79c0-4fe5-9835-8db109fe38c2</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:15:33 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:15:33.093Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,ரெப்போ வட்டி,Repo,ரிசர்வ் வங்கி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/fma9yx71/RBI.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரிசர்வ் வங்கி]]></media:title><media:description type="html"><![CDATA[ ரிசர்வ் வங்கி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/fma9yx71/RBI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது. இந்த தடவை, வங்கிக்கடன் வட்டி விகிதம் மாற்றம் வருமா என்பது 5-ந்தேதி தெரியும்.</aside><h2><strong>3 நாட்கள் ஆலோசனை</strong></h2><p>வங்கிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">ரிசர்வ் வங்கி</a> வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 'ரெப்போ ரேட்' என்று அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் தீர்மானிக்கின்றன.</p><p>2 மாதங்களுக்கு ஒருதடவை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, ரெப்போ ரேட்டை மாற்றியமைப்பது பற்றி ஆலோசனை நடத்துவது வழக்கம். அதுபோல், இம்முறைக்கான இக்கூட்டம் இன்று மும்பையில் தொடங்குகிறது. 5-ந்தேதி வரை ஆலோசனை நடைபெறுகிறது.</p><h2><strong>மாற்றம் இருக்காது</strong></h2><p>ரெப்போ ரேட்டை மாற்றியமைப்பது பற்றி முடிவு செய்து, 5-ந் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பார். ரெப்போ ரேட் மாற்றப்படுமா என்பது குறித்து 10 பொருளாதார நிபுணர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், பெரும்பாலான நிபுணர்கள், ரிசர்வ் வங்கி, தற்போதைய வங்கிக்கடன் வட்டியான 5.25 சதவீதத்தில் மாற்றம் செய்யாது என்று கருத்து தெரிவித்தனர்.</p><p>அவர்கள் கூறியதாவது:-</p><p>மேற்கு ஆசிய பதற்றம் காரணமாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. பருவமழையும் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது.</p><h2><strong>காரணம் என்ன?</strong></h2><p>இருப்பினும், <a href="https://www.maalaimalar.com/news/national/plastic-rupee-notes-to-be-introduced-soon-in-india-union-government-approves-rbi-proposal">ரிசர்வ் வங்கி</a> 'காத்திருந்து பார்க்கும்' அணுகுமுறையை பின்பற்றும் என்று எதிர்பார்க்கிறோம். பண வீக்கம் தீங்கற்ற நிலையில்தான் இருக்கிறது. எனவே தற்போதைய நிலையே தொடர வாய்ப்புள்ளது.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர். </p><p>கடந்த ஆண்டு பல தவணைகளாக ‘ரெப்போ ரேட்’ 1.5 சதவீதம் குறைக்கப்பட்டது. தற்போது 5.25 சதவீதமாக உள்ளது. இதே வட்டிவிகிதம் மாற்றமின்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item></channel></rss>