<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 20 Aug 2026 21:42:10 +0000</lastBuildDate><item><title>குஜராத் கள்ளச்சாராய விவகாரம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 8-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/national/death-count-rises-to-8-in-gujarat-toxic-liquor-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/death-count-rises-to-8-in-gujarat-toxic-liquor-case#comments</comments><guid isPermaLink="false">701f49c7-0f51-4b60-b025-078e3427ea55</guid><pubDate>Thu, 20 Aug 2026 20:53:10 +0000</pubDate><atom:updated>2026-08-20T20:53:10.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,gujarat,கள்ளச்சாராய வழக்கு,Death Count,Toxic Liquor Case</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/gjbztdyr/Liquor.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/gjbztdyr/Liquor.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">குஜராத்</a> மாநிலத்தின் பவநகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது. மேலும் 39 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 13 <a href="https://www.maalaimalar.com/topic/illicit-liquor">கள்ளச்சாராய</a> வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, ஆகஸ்ட் 31 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.</p><h2>போலி பாட்டில்களில் கள்ளச்சாராயம்:</h2><p>"கள்ளச்சாராய வழக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. மேலும், நகரில் உள்ள அரசின் சர் டி மருத்துவமனை மற்றும் பிற தனியார் மருத்துவமனைகளில் 39 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்," என துணை கோட்ட நீதிபதி அக்சர் வியாஸ் தெரிவித்தார்.</p><p>குஜராத் ஒரு "மதுவிலக்கு" மாநிலம், அங்கு மதுபானம் தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் அருந்துதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. காவல்துறையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்கள் பிரபலமான இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபான (IMFL) பிராண்டின் போலி பாட்டில்களில் அடைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயத்தை அருந்தியுள்ளனர்.</p><p>கள்ளச்சாராய வழக்கின் முக்கிய சூத்திரதாரி என அடையாளம் காணப்பட்ட ரயீஸ் என்பவர், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று மாநில கண்காணிப்பு பிரிவின் (எஸ்.எம்.சி.) காவல் கண்காணிப்பாளர் மயூர்சிங் சாவ்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p><h2>வழக்கு விசாரணை:</h2><p>இந்த வழக்கின் விசாரணை எஸ்.எம்.சி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருமான நரேந்திர யாதவ், தான் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அதே கள்ளச்சாராயத்தைக் குடித்ததால் உயிரிழந்தார் என்று அவர் கூறினார்.</p><p>வர்தேஜ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரக்காடி கிராமத்தில், நச்சுத்தன்மையும் இரசாயனம் கலந்த மதுபானத்தை அருந்தியதால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அதைத் தொடர்ந்து, 21 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்று சாவ்தா கூறினார்.</p><p>கைது செய்யப்பட்ட குற்றவாளியான கௌதம் சோலங்கி என்பவரின் வீட்டில், உயிரிழந்த நபர்களின் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில், கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படும் மெத்தனால், எத்தனால் மற்றும் பிற வேதிப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் அரசு ஏமாற்றிவிட்டது - நீதிமன்ற உத்தரவு குறித்து மாணவர்கள் குமுறல்</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-students-said-government-deceived-them-after-court-stays-exam-cancellation</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-students-said-government-deceived-them-after-court-stays-exam-cancellation#comments</comments><guid isPermaLink="false">b9d5ade5-664d-4acc-b5f8-896d35d1252e</guid><pubDate>Thu, 20 Aug 2026 20:11:13 +0000</pubDate><atom:updated>2026-08-20T20:11:13.609Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நீதிமன்றம்,Students,மாணவர்கள்,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jmuczyt5/Jharkhand-Students.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Students]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jmuczyt5/Jharkhand-Students.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>11-ஆவது மற்றும் 13-ஆவது ஜே.பி.எஸ்.சி. தேர்வுகள் மூலம் நடத்தப்பட்ட நியமனங்களை ரத்து செய்யும் அறிவிப்புகளுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்தக் குழுவின் கீழ் உள்ள மாணவர் தலைவர்கள், <a href="https://www.maalaimalar.com/news/national">ஜார்க்கண்ட்</a> அரசு வேலை தேடுபவர்களை "ஏமாற்றுவதாக" குற்றம் சாட்டினர்.</p><p>ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தனது முடிவை அரசு திறம்பட நியாயப்படுத்த தவறிவிட்டது என்று மாணவர் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.</p><h2>வேலை தேடுபவர்களை ஏமாற்றியுள்ளது:</h2><p>"ஆட்சேர்ப்பு தேர்வுகளை ரத்து செய்த அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த, தலைமை வழக்கறிஞரோ அல்லது எந்தவொரு மூத்த வழக்கறிஞரோ வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆஜராகியிருந்த வழக்கறிஞர்களும் தற்காத்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு பொறி என்பதை தெளிவாக காட்டுகிறது," என்று மன்ச் தலைவர் குணால் பிரதாப் சிங் குற்றம் சாட்டினார்.</p><p>22 ஆட்சேர்ப்புத் தேர்வுகளை ரத்து செய்வதற்கான அரசின் முடிவை தொடர்ந்து, தேர்வர்கள் ராஞ்சியின் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் 26 நாட்கள் போராட்டம் நடத்தி, பின்னர் இரண்டு மாதங்களுக்கு போராட்டத்தை நிறுத்தினர்.</p><p>"ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை கடுமையாக ஒடுக்க அரசு விரும்புகிறது என்று நாங்கள் அதன் நோக்கத்தை நம்பினோம், ஆனால் நாங்கள் தவறாக நினைத்துவிட்டோம். அரசு ஆயிரக்கணக்கான வேலை தேடுபவர்களை ஏமாற்றியுள்ளது," என்று மன்ச் தலைவர் ரவீந்திர பாஸ்வான் கூறினார்.</p><p>வெள்ளிக்கிழமை அன்று அனைத்து 24 மாவட்டங்களிலும் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் உருவ பொம்மைகளை அந்த அமைப்பு எரிக்கும் என்று அவர் அறிவித்தார்.</p><h2>உயர் நீதிமன்றம் தடை:</h2><p>11-ஆவது மற்றும் 13-ஆவது ஜார்க்கண்ட் பொது சேவை ஆணைய (JPSC) தேர்வுகள் மூலம் அரசு ஊழியர்களின் நியமனங்களை ரத்து செய்யும் அறிவிப்புகளின் செயல்பாட்டிற்கு உயர் நீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) தடை விதித்தது. </p><p>மேலும், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் நியமனங்களை ரத்து செய்யும் உத்தரவின் செயல்பாட்டிற்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.</p><p>அரசு அறிவிப்புகளுக்கு எதிரான பல மனுக்களை விசாரித்த நீதிபதி தீபக் ரோஷன், அடுத்த விசாரணை தேதியான செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் மாநில அரசு தனது பதிலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.</p><p>16 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட ஜேஎல்கேஎம் தலைவர் தேவேந்திர நாத் மாத்தோ, 11 முதல் 13 வரையிலான ஜே.பி.எஸ்.சி. குடிமை பணி தேர்வுகளை ரத்து செய்த மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் நியமனத்தை நிறுத்திய அரசின் உத்தரவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை விதித்த நீதிமன்றத்தின் முடிவை மதிப்பதாக கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இமாச்சல் அரசு பள்ளி: ஒரே அறையில் 5 வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/national/himachal-5-classes-take-turns-in-one-room</link><comments>https://www.maalaimalar.com/news/national/himachal-5-classes-take-turns-in-one-room#comments</comments><guid isPermaLink="false">921ede14-4a1e-43b4-b7a7-f7a3956d6ef6</guid><pubDate>Thu, 20 Aug 2026 19:00:18 +0000</pubDate><atom:updated>2026-08-20T19:00:18.713Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இமாச்சல பிரதேசம்,Himachal Pradesh,govt school,அரசு பள்ளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/imalb3z3/Classroom.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic: Classroom]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/imalb3z3/Classroom.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">இமாச்சல பிரதேசம்</a> மாநிலத்தின் காங்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் கட்டிடம் பருவமழை காலத்தில் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்து வகுப்புகளை சேர்ந்த 33 மாணவர்களுக்கான பாடங்கள் ஒரே ஒரு "பாதுகாப்பான அறையில்" நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>உள்ளூர் மக்கள் கவலை:</h2><p>நூர்பூர் துணைப்பிரிவில் உள்ள கைரியான் அரசு ஆரம்ப பள்ளியில் இடப்பற்றாக்குறை காரணமாக, இரண்டு ஆசிரியர்கள் சுழற்சி முறையில் அனைத்து வகுப்புகளையும் நடத்தி வருகின்றனர் என்று அவர்கள் கூறினர். பஞ்சாயத்து பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் கட்டிடத்தின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>பாதுகாப்பான அறையில் ஐந்து வகுப்புகளுக்கும் முறைப்படி பாடங்கள் நடத்தப்படுவதாக தலைமை ஆசிரியர் கேவல் சிங் தெரிவித்தார். குழந்தைகளின் பாதுகாப்பே முதன்மையான கவலை என்று பள்ளி முதல்வர் அஜய் குப்தா கூறினார். கல்வித் துறையை பலமுறை அணுகியும், இதுவரை வெறும் உறுதிமொழிகள் மட்டுமே கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>பள்ளி கட்டிடம் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டு, அது குறித்த அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வட்டாரத் தொடக்கக் கல்வி அதிகாரி வீணா சர்மா தெரிவித்தார். "நிதி கிடைத்தவுடன், பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்படும்," என்று அவர் கூறினார்.</p><h2>பழைய பள்ளி கட்டிடம்:</h2><p>இந்த பள்ளி கட்டிடம் 1954-55 காலகட்டத்தில் கட்டப்பட்டது; காலப்போக்கில் அது பழுதடைந்துள்ளது. தற்போது பாதுகாப்பானதாக கருதப்படும் ஒரே அறையில் ஒரு ஜன்னல் மட்டுமே உள்ளதால், ஐந்து வகுப்புகளை சேர்ந்த மாணவர்களையும் அங்கு அமர வைப்பது கடினமாக இருப்பதாக பள்ளி அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>பள்ளி அமைந்துள்ள நிலத்தின் உரிமை தொடர்பான சிக்கலும் மற்றொரு தடையாக இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறினர். அந்த நிலம் கல்வித் துறைக்கு பதிலாக வனத் துறையின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், புதிய பள்ளி கட்டிடத்திற்கான நிதியை அனுமதிக்கும் வகையில் அந்த நிலத்தை கல்வி துறைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>போலீஸ் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சென்ற ஜே.சி.பி. - கடைசியில் நடந்த டுவிஸ்ட்</title><link>https://www.maalaimalar.com/news/national/man-drives-stolen-jcb-through-police-barricades-in-dramatic-chase</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-drives-stolen-jcb-through-police-barricades-in-dramatic-chase#comments</comments><guid isPermaLink="false">a032d825-bde0-48d3-b76c-8e33ec1febcd</guid><pubDate>Thu, 20 Aug 2026 17:18:28 +0000</pubDate><atom:updated>2026-08-20T17:18:28.169Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>police,காவல் துறை,ஜேசிபி,JCB</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/c8g3r1wp/JCB-in-action.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JCB in action]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/c8g3r1wp/JCB-in-action.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">ஒடிசா</a> மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் திருடப்பட்ட ஜே.சி.பி. இயந்திரம் காவல்துறை தடுப்புகள் மற்றும் நான்கு காவல் நிலைய எல்லைகளைக் கடந்து நீடித்த ஒரு சேசிங் சம்பவம் அரங்கேறியது.</p><p>ஆகஸ்ட் 14-ஆம் தேதியன்று கல்லிக்கோட் காவல் நிலைய பகுதியில் ஒரு ஜே.சி.பி. திருடு போனதாக காவல்துறைக்கு முதலில் தகவல் கிடைத்தது. </p><p>அதனை தொடர்ந்து, திருடப்பட்ட வாகனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில், கல்லிக்கோட், ரம்பா, புருஷோத்தம்பூர் மற்றும் கபிசூர்யநகர் ஆகிய நான்கு வெவ்வேறு காவல் நிலையங்களை சேர்ந்த குழுக்கள் ஒன்றிணைந்து ஒரு நீண்ட தேடுதல் வேட்டையை நடத்தின.</p><h2>மர்ம நபர் அட்டூழிம்:</h2><p>இதனிடையே காணாமல் போன ஜே.சி.பி. இயந்திரத்தை மர்ம நபர் ஓட்டி செல்வதை காவல் துறையினர் கண்டறிந்தனர். ஜே.சி.பி. இயந்திரங்கள் வேகமாக செல்வதற்காக உருவாக்கப்படவில்லை. </p><p>எனினும், அது வாகனத்தை ஓட்டிய சந்தேக நபரை தடுக்கவில்லை. வாகனத்தை நிறுத்தும் முயற்சியில், அதிகாரிகள் வழி நெடுகிலும் பல இடங்களில் தடுப்புகளை அமைத்தனர்.</p><p>ஆனாலும் அந்த நபர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி சென்று, ஒன்றன்பின் ஒன்றாக அந்த தடைகளை உடைத்துக்கொண்டு, அவரை வழிமறிக்க முயன்ற காவல்துறையினரின் முயற்சிகளை மீண்டும் மீண்டும் மீறி தப்பி சென்றார்.</p><p>ஜே.சி.பி. வாகனம் தடுப்புகளை கடந்து அதிவேகமாக செல்லும் காணொளிகள், சமூக ஊடகங்களில் வெளியாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. </p><p>கபிசூர்யநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடியாலியில் அந்த சேசிங் அடைந்தது. அங்கு, சந்தேக நபர் ஒரு விவசாய நிலத்தில் ஜேசிபி இயந்திரத்தை விட்டுவிட்டு, கால்நடையாக அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றார்.</p><h2>தொடரும் விசாரணை:</h2><p>பின்னர் காவல்துறையினர் கைவிடப்பட்ட வாகனத்தை மீட்டு, சந்தேக நபரைத் தேடும் நடவடிக்கையைத் தொடங்கினர். இந்தத் திருட்டு எப்படி நடந்தது என்பது குறித்தும், துரத்தலின் போது நடந்த நிகழ்வுகளின் சரியான வரிசைமுறை குறித்தும் விசாரணை நடைபெற்று வருறது.</p><p>சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக இருப்பதாக புருஷோத்தம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நாயக் உறுதிப்படுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>வீட்டுப் பாடம் செய்யாததால் கன்னத்தில் அறைந்த ஆசிரியர்.. மயங்கி விழுந்து உயிரிழந்த 6 வயது சிறுவன்</title><link>https://www.maalaimalar.com/news/national/teacher-beats-6-year-old-boy-for-not-doing-homework-dies</link><comments>https://www.maalaimalar.com/news/national/teacher-beats-6-year-old-boy-for-not-doing-homework-dies#comments</comments><guid isPermaLink="false">5ca5f5cf-76a7-477e-b453-fc41b6608af7</guid><pubDate>Thu, 20 Aug 2026 16:14:54 +0000</pubDate><atom:updated>2026-08-20T16:14:54.384Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>school boy,teacher,பள்ளி சிறுவன் பலி,vishakapatnam,விசாகப்பட்டினம்,ஆசிரியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jufbai8j/Untitled-design-17.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 6-year-old dies]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jufbai8j/Untitled-design-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆறு வயது சிறுவனை ஆசிரியர் அறைந்தபோது, அந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்தான். ஆசிரியர் அவனை தாக்கியதால் தான் சிறுவன் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><h3><strong>ஆந்திர பிரதேசம் தனியார் பள்ளி</strong></h3><p>ஆந்திர பிரதேசத்தில் உள்ள லிட்டில் கார்டன் தனியார் பள்ளியில் 6 வயதான பிரணய் தேஜா என்ற மாணவன் படித்து வந்துள்ளான். இதையடுத்து வழக்கம்போல பள்ளிக்கு வந்த சிறுவனை வீட்டுப்பாடத்தை செய்யாததற்காக ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ளார். </p><p>அப்போது மயங்கி விழுந்த சிறுவனை, பள்ளி ஊழியர்கள் அருகிலுள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><h3>6 வயது சிறுவனின் தந்தை</h3><p>இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை கூறும்போது, “காலை சுமார் 8 மணியளவில், என் மகன் எழுந்து பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று கூறினான். காலை நல்ல உடல் நலத்துடன் வீட்டிலிருந்து புறப்பட்டான், அவன் பள்ளிக்குச் சென்றே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தான்.</p><p>குழந்தை வீட்டை விட்டு வெளியேறியபோது அவனிடம் எந்த அசாதாரணமும் இல்லை. ஆரம்பத்தில் நாங்கள் அவனை பள்ளிக்கு உடனடியாக அனுப்பவில்லை, ஆனால் தேர்வுகள் நெருங்கியதால், இறுதியில் நாங்கள் சம்மதித்தோம்.</p><p>சரி, விரைவில் தேர்வுகள் வரப்போகின்றன, அதனால் அவனைப் போக விடலாம் என்று நாங்கள் நினைத்தோம். அவனோ, சரி அப்பா, நான் போகிறேன்' என்று சொல்லிவிட்டுப் பள்ளிக்குச் சென்றான்.</p><p>பள்ளியிலிருந்து யாரும் என்னை அழைக்கவில்லை. என் மைத்துனரின் இடத்திற்கு அருகில் வேலை செய்யும் உள்ளூர் சமையல்காரர்கள்தான் அழைத்து எனக்குத் தகவல் தெரிவித்தனர்.</p><p>குழந்தையை கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.</p><p>நாங்கள் பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளைச் சரிபார்த்தபோது, ​​ஆசிரியை அவனை பயமுறுத்தியது அதில் தெரிந்தது. அவர் அவனை கன்னத்தில் அறைந்ததில், அதிர்ச்சி மற்றும் பயத்தின் காரணமாக அவன் அங்கேயே சரிந்து விழுந்தான்.</p><p>மருத்துவமனைக்கு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே அவன் இறந்துவிட்டதாக மருத்துவர் எங்களிடம் கூறினார்.</p><p>என் மகனுக்கு வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் என எந்தப் பிரச்சினையும் இல்லை. நேற்று இரவு அவன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தான், இன்று காலையும் நலமாகவே எழுந்தான்.</p><p>அவனுக்கு வைரஸ் காய்ச்சலோ அல்லது வேறு எந்த உடல்நலப் பிரச்சினைகளோ இருக்கவில்லை” என்று அவர் கூறினார்.</p> <figure><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=315&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1627304149048485%2F&show_text=false&width=560&t=0" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></figure> <h3><strong>கோரிக்கை</strong></h3><p>குழந்தையின் மரணச் செய்தியை அறிந்ததும் குடும்பத்தினரும் உறவினர்களும் மருத்துவமனையில் கூடி, இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.</p><p>இது ஒரு தனிப்பட்ட உடல்ரீதியான தண்டனைச் செயல் அல்ல என்றும், மற்ற குழந்தைகளும் தாக்கப்பட்டதாகவும் அக்குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், வருவாய் கோட்ட அதிகாரி திலீப் சக்கரவர்த்தி மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாதி வார்த்தைகளை பயன்படுத்துவது SC/ST சட்டத்தின் கீழ் குற்றமாகாது: அலகாபாத் உயர் நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/using-caste-words-not-offence-under-sc-st-act-allahabad-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/using-caste-words-not-offence-under-sc-st-act-allahabad-high-court#comments</comments><guid isPermaLink="false">a3934d35-88b7-4ce8-a6af-5d42f68000fc</guid><pubDate>Thu, 20 Aug 2026 16:08:43 +0000</pubDate><atom:updated>2026-08-20T16:08:43.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Allahabad High Court,SC ST ACT,பட்டியல் மற்றும் பழங்குடியினர்,அலாகாபாத் உயர்நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/leis3q0w/Untitled-design-16.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SC/ST Act - Allahabad High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/leis3q0w/Untitled-design-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சாதிய வசை சொற்களை பயன்படுத்துவது மட்டுமே பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் (SC/ST Act) கீழ் குற்றமாகாது என்று அலகாபாத் <a href="https://www.maalaimalar.com/topic/உயர்-நீதிமன்றம்">உயர் நீதிமன்றம்</a> கூறியுள்ளது.</p><p>பாதிக்கப்பட்டவரை அவமதிக்கும் நோக்கத்திற்காக அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன என்பது நிரூபிக்கப்பட்டால் மட்டுமன்றி, ஒருவரை அவரது சாதியை குறிப்பிட்டு அழைப்பது மட்டும் இந்த சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்று நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.</p><h3><strong>அலகாபாத் உயர் நீதிமன்றம்</strong></h3><p>அலாகாபாத்தில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் கீழான ஒரு வழக்கு பரேலி மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ராய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது பாதிக்கப்பட்ட நபரை குறிப்பிடுவதற்கு ‘சாமர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக வெக்ராஜ் மற்றும் தெளலத் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.</p><p>மேலும், அவர்கள் தன்னை திட்டியதாகவும், சாமர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் கூறினார்.</p><h3><strong>நீதிபதி அமர்வு</strong></h3><p>இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “சாமர் என்ற வார்த்தையை வெறுமனே பயன்படுத்தியதன் அடிப்படையில் மட்டுமே, மேல்முறையீட்டாளர்கள், பாதிக்கப்பட்டவரை பட்டியல் சாதி அல்லது பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அவமதிக்கும் நோக்கத்தில், அந்த வார்த்தையை பயன்படுத்தினார்கள் என்று அர்த்தமாகாது,” என்று கூறினர்.</p><p>மேலும், துஷ்பிரயோகம் மற்றும் குற்றவியல் மிரட்டல் குற்றச்சாட்டுகளை பொறுத்தவரை, மனுதாரர்கள் இருவருக்கும் குறிப்பிட்ட பங்கு என எதுவும் கூறப்படவில்லை.</p><p>பாலியல் வன்கொடுமை மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான முக்கிய குற்றச்சாட்டுகள் வெக்ரஜ் என்பவரின் மகனான மற்றொரு குற்றவாளியான ஹிம்மத் சிங்கு மீது ஏற்கனவே உள்ளன.</p><p>எனவே, பதிவில் உள்ள ஆதாரங்கள் தற்போதைய மேல்முறையீட்டாளர்களான வெக்ராஜ் மற்றும் தெளலத் ஆகியோருக்கு எதிராக எந்தவொரு குறிப்பிட்ட போதுமான பங்கையும் வெளிப்படுத்தவில்லை,” என்று நீதிமன்றம் கூறியது.</p>]]></content:encoded></item><item><title>பணியில் சேர்ந்த நபர் 6 மணி நேரத்தில் ராஜினாமா.. சமூக வலைதளத்தில் அதிருப்தியை வெளிப்படுத்திய மேலாளர்</title><link>https://www.maalaimalar.com/news/national/new-employee-resigns-in-6-hours-manager-linkedin-post</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-employee-resigns-in-6-hours-manager-linkedin-post#comments</comments><guid isPermaLink="false">7c2e6711-af29-4b17-b665-3d165a0a9c7e</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:28:44 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:28:44.810Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>manager,Resignation,Employee,ராஜினாமா,ஊழியர்,மேலாளர்,job frustration</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/eggcysrn/Untitled-design-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ லிங்க்ட்இன் பதிவு]]></media:title><media:description type="html"><![CDATA[ LinkedIn hiring story]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/eggcysrn/Untitled-design-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் மேலாளர், தனது ஊழியர் பணியை விட்டு விலகுவதாக தெரிவித்ததையடுத்து, அவருக்கு பதிலாக புதிய பணியாளரை நியமித்துவிட்டு செல்லுமாறு தெரிவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h3><strong>டெல்லி நிறுவனம்</strong></h3><p>டெல்லியில் ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா என்பவர் ஹையரிங் இன்சைடர் என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அவரிடம் பணிபுரிந்த ஒரு ஊழியர், தான் பணியை விட்டு செல்வதாக கூறியுள்ளார்.</p><p>அப்போது நிறுவனர் <a href="https://www.maalaimalar.com/topic/ஊழியர்">ஊழியரிடம்</a>, தங்களின் பதவிக்கு வேறொரு பணியாளரை நியமித்துவிட்டு செல்லுமாறு மேலாளர் கூறியுள்ளார். </p><p>இதையடுத்து அந்த நபர், தான் வேலை பார்த்த பணிக்கு வேறு நபரை தேர்வு செய்து, அவரை நிறுவனத்திற்கு அழைத்து வந்து பணிக்கு தேவையான அனைத்தையும் கற்றுகொடுத்துள்ளார்.</p><p>மேலும் தான் புதியதாக தேர்ந்தெடுத்த நபருக்கு, நிறுவனத்தின் பணிச்சுமை, காலக்கெடு மற்றும் நிறுவனத்தின் கொள்கைகள் ஆகிய அனைத்தையும் முதல் நாளே கற்றுக் கொடுத்துள்ளார்.</p><h3><strong>பணி குறித்து விளக்கம்</strong></h3><p>புதியதாக வேலையில் சேர்ந்த நபரிடம், நேர்காணல் முடிந்த பிறகு, உண்மையில் பணி எப்படி இருக்கும் என்பதை அவர் பல மணி நேரமாகவும் விளக்கியுள்ளார்.</p><p>பணி குறித்து மிகைப்படுத்தாமல், உண்மையான பணி குறித்து தெளிவாக கூறியுள்ளார். இதையடுத்து புதியதாக பணியில் சேர்ந்தவர் மேல், பலவிதமான பொறுப்புகள் திடீரென திணிக்கப்பட்டதால், அந்த நபர் பதற்றமடைந்துள்ளார்.</p><h3><strong>ராஜினாமா</strong></h3><p>இதைத்தொடர்ந்து புதிதாக வேலைக்கு சேர்ந்த நபர் 6 மணி நேரம் கழித்து நிறுவனத்தின் மேலாளரிடம் சென்று தான் வேலையை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார்.</p><p>இதைக்கேட்ட மேலாளர் கோபமடைந்து, பழைய ஊழியரை அழைத்து, அவரிடம் என்ன சொன்னாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ஊழியர், நீங்கள் அவருக்கு கற்றுக் கொடுக்க சொன்ன அனைத்தையும் சென்னேன் என்று கூறியுள்ளார்.</p><p>ஒரு வேலையின் யதார்த்தத்தை பார்த்த பிறகும், புதிதாக இணைந்தவர் ஏன் பணியை விட்டு விலகினார் என்பதை நிறுவனத்தின் மேலாளரால் புரிந்து கொள்ள முடியவில்லை.</p><h3><strong>சமூக வலைதள பதிவு</strong></h3><p>இந்த சம்பவத்தை லிங்க்ட்இன் வலைதளத்தில் பதிவிட்ட நிறுவனத்தின் மேலாளர் ஸ்ரீவஸ்தவா, அந்த புதிய பணியாளரிடம் நிறுவனம் முதலில் வைத்த எதிர்பார்ப்புகளும், உண்மையில் அவர் செய்ய வேண்டிய வேலையும் முற்றிலும் மாறுபட்டிருந்ததாக பதிவிட்டார்.</p><p>சமூக வலைதளத்தில் நிறுவனத்தின் மேலாளர் வெளியிட்ட இந்த பதிவுக்கு, பல்வேறு பயனர்கள் பதிலளித்து கருத்து தெரிவித்தனர். </p><h3><strong>கருத்துக்களை பதிவிட்ட பயனர்கள்</strong></h3><p>இந்த பதிவிற்கு ஒரு பயனர், ஆட்சேர்ப்பில் வெளிப்படைத்தன்மை ஏன் முக்கியம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு வலிமையான நினைவூட்டலாகும் என பதிவிட்டார்.</p><p>மேலும், நேர்த்தியான நேர்காணல் ஒரு புதிய ஊழியரை கவரலாம், ஆனால் அந்த பணியின் உண்மைத் தன்மை தான் அவரை வேலையில் தக்க வைப்பதாக கூறினார்.</p><p>மற்றொரு நபர், ஆட்சேர்ப்பில் சொல்லப்படும் ஒரு விலை உயர்ந்த பொய் என்னவென்றால், உண்மைக்கு புறம்பான வேலை குறித்து வாக்குறுதி அளிப்பதுதான் என்று கூறினார்.</p><p>மேலும், புதிய ஊழியர் பணியில் சேரும்போது உண்மையான வேலையை குறித்து தெரிந்துகொண்டு, பணியின் செயல்முறை தோல்வியில் முடிகிறது என்று பதிவிட்டார்.</p><p>நிறுவன மேலாளர் பகிர்ந்த இந்த பதிவிற்கு, சமூக வலைதளத்தின் பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மேகாலயா பைக் பேரணியில் வன்முறை- காசி மாணவர் சங்கத்தை சேர்ந்த 3 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/violence-at-meghalaya-bike-rally-three-student-leaders-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/violence-at-meghalaya-bike-rally-three-student-leaders-arrested#comments</comments><guid isPermaLink="false">a2035356-40e9-4d52-acf1-995b1ea581d0</guid><pubDate>Thu, 20 Aug 2026 11:39:32 +0000</pubDate><atom:updated>2026-08-20T11:39:32.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Meghalaya,மேகாலயா,shillong,khasi students union,ஷில்லாங்,காசி மாணவர் சங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/wjyad7a8/Untitled-design-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மேகாலயா காசி மாணவர் சங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ Meghalaya Khasi Students’ Union]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/wjyad7a8/Untitled-design-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE">மேகாலயாவில்</a> காசி மாணவர் சங்கம் (KSU) நடத்திய கருப்புக் கொடி இருசக்கர வாகன பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, மாணவர் சங்கத்தை சேர்ந்த மூன்று மூத்த தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p>மேகாலயா அரசுக்கு காசி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மாணவர் சங்கம்</a> விடுத்திருந்த 15 நாள் காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து, ஷில்லாங் முழுவதும் கருப்புக் கொடி ஏந்தி இருசக்கர வாகனப் பேரணியில் மாணவர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.</p><h3><strong>வாகனப் பேரணி</strong></h3><p>இந்த பேரணி ஜெயா பகுதியில் உள்ள கே.எஸ்.யு அலுவலகத்தில் இருந்து தொடங்கி பல பகுதிகளில் நடத்தப்பட்டது.</p><p>மாணவர் சங்கம் வைத்த கோரிக்கையில், “கிழக்கு ஜெயிண்டியா மலைப்பகுதியில் முன்மொழியப்பட்ட புதிய தனியார் சிமெண்ட் ஆலை திட்டத்திற்கான ஜூலை 31 பொது விசாரணையை ரத்து செய்ய வேண்டும் எனவும்,</p><p>அந்த விசாரணையை நடத்தியதற்கு பொறுப்பானவர்கள் எனக் கூறப்படும் கிழக்கு ஜெயிண்டியா துணை ஆணையர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் மேகாலயா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் பேரணி நடத்தப்பட்டது.</p><h3><strong>கோரிக்கைகள்</strong></h3><p>மேலும், மேகாலயா குடியிருப்போர் பாதுகாப்பு சட்டம் (MRSSA), 2016-ஐ அமல்படுத்துதல், புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான திருத்தங்களை அமல்படுத்துதல், கிரேடு சி மற்றும் டி பதவிகளுக்கான நேர்காணல்களை நீக்குதல் உள்ளிட்ட அரசு பணி நியமன மாற்றங்கள் மற்றும் மேகாலாயாவில் வசிப்பவர்களுக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு ஆகியவற்றையும் மாணவர் சங்கம் வலியுறுத்தியது.</p><h3><strong>வன்முறை</strong></h3><p>இந்த பேரணியின் போது, வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும் போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. அதேவேளையில் போராட்டங்களுக்கு மத்தியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.</p><h3><strong>மூவர் கைது</strong></h3><p>இதையடுத்து KSU தலைவர் ரேமண்ட் கர்ஜனா, ரூபன் நஜியார் மற்றும் பிங்க்மென்லாங் சான்மியட் ஆகியோர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p>பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மூவர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.</p><p>இந்த கைது நடவடிக்கை குறித்து மாணவர் சங்கம் கூறுகையில், எதிர்மறை சக்திகளால் வன்முறை ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சிறையில் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/ex-congress-mp-sajjan-kumar-convicted-in-1984-anti-sikh-riots-case-dies-sajjan</link><comments>https://www.maalaimalar.com/news/national/ex-congress-mp-sajjan-kumar-convicted-in-1984-anti-sikh-riots-case-dies-sajjan#comments</comments><guid isPermaLink="false">c0ff4249-fabe-4ac5-b554-fe36e8bb570a</guid><pubDate>Thu, 20 Aug 2026 11:26:59 +0000</pubDate><atom:updated>2026-08-20T11:26:59.354Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Sajjan Kumar,சஜ்ஜன் குமார்,anti sikh riot case,சீக்கியர் கலவரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/sbhzjc86/sajjan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sajjan kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/sbhzjc86/sajjan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் மரணம் அடைந்தார். </p><p>முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தின்போது டெல்லி பாலம் காலனி பகுதியில் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு டெல்லி ஐகோர்ட் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து, அவர் திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்.</p><p>இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. மேலும், 1984-ம் ஆண்டு கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கிலும், 2025-ம் ஆண்டு சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. டெல்லி சரஸ்வதி விஹார் பகுதியில் ஜஸ்வந்த் சிங், அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பாக இந்த தண்டனை வழங்கப்பட்டது.</p><p>இந்நிலையில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஜ்ஜன் குமார் உடல்நிலை இன்று திடீரென மோசமடைந்தது. இதையடுத்து அவர் சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு நலத்திட்டங்களைப் பரப்பும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்கு ரூ.10,000 வழங்கிட பீகார் அரசு ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-government-approves-rs-10000-for-social-media-creators-promoting-welfare-schemes</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-government-approves-rs-10000-for-social-media-creators-promoting-welfare-schemes#comments</comments><guid isPermaLink="false">16bcb9a9-fcf8-44b7-94d4-4f80fe932467</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:18:42 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:18:42.594Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாம்ராட் சவுத்ரி,SamratChoudhary,SocialMediaIncentive,ContentCreators,BiharGovernment,பீகார்அரசு,டிஜிட்டல்செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/1myj2cp3/samrat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Samrat Choudhary  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/1myj2cp3/samrat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநில அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் சாதனை வீடியோக்களைப் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/world/historic-crisis-in-us-economy-us-national-debt-hits-40-trillion">சாம்ராட் சவுத்ரி</a> தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் "பீகார் சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஆன்லைன் ஊடக (திருத்த) விதிகள் 2026"-ன் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது.</p><h2>தொ<strong>கைக் க</strong>ணக்கீடு</h2><p>அரசின் அதிகாரப்பூர்வ பட்டியலின் கீழ் பதிவு செய்துள்ள கிரியேட்டர்களுக்கு, அவர்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவிற்கும் பெறப்படும் 1 லட்சம் வியூஸ்களுக்கு ரூ.10,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒரு தனிப்பட்ட வீடியோவிற்கு அளிக்கப்படும் அதிகபட்ச ஊக்கத்தொகை ரூ.1,00,000 வரை வரம்பு செய்யப்பட்டுள்ளது.</p><p>அதாவது, 10 லட்சம் வியூஸ்கள் அல்லது அதற்கு மேல் பெறும் வீடியோக்களுக்கு முழு தொகையான ரூ.1 லட்சம் கிடைக்கும். வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் நிறைவடைந்த பின்னரே அதற்கான வியூஸ்கள் சரிபார்க்கப்பட்டு தொகைக் கணக்கிடப்படும்.</p><h2>பதிவு <strong>செய்தல் அவசி</strong>யம்</h2><p>இத்திட்டம் அனைத்து சோஷியல் மீடியா பயனர்களுக்கும் நேரடியாகப் பொருந்தாது. கிரியேட்டர்கள், பக்கங்கள் மற்றும் சேனல்கள் பீகார் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் முறையாகப் பதிவு செய்து எம்பேனல் செய்யப்பட்டிருக்க வேண்டும். போலி கணக்குகள், பாட் கணக்குகள் மற்றும் செயற்கையான வியூஸ்களைத் தடுப்பதற்காகக் கிரியேட்டர்களின் சேனல் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கையை அரசுத் துறை குறிப்பிட்ட இடைவெளியில் தணிக்கை செய்து சரிபார்க்கும். இதற்கான விரிவான தகுதி வரம்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை விரைவில் வெளியிடும்.</p>]]></content:encoded></item><item><title>முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாடே அணையைக் கட்டலாம்; கேரளம் முழு செலவையும் ஏற்கும் - முதலமைச்சர் சதீசன்!</title><link>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-itself-can-build-the-dam-across-the-mullaperiyar-river-kerala-will-bear-the-entire-cost-chief-minister-saseeshan</link><comments>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-itself-can-build-the-dam-across-the-mullaperiyar-river-kerala-will-bear-the-entire-cost-chief-minister-saseeshan#comments</comments><guid isPermaLink="false">634856fc-d462-48b1-af0c-8fbe11b098b9</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:17:40 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:17:40.117Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Mullaperiyar Dam,முல்லைப் பெரியாறு அணை,CM Satheesan,முதலமைச்சர் சதீசன்,SOUTHERN ZONAL COUNCIL,தென்மண்டல கவுன்சில் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/4wd1381t/New-Project-2026-08-20T152301.193.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாடே அணையைக் கட்டலாம்; கேரளம் முழு செலவையும் ஏற்கும் - முதலமைச்சர் சதீசன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/4wd1381t/New-Project-2026-08-20T152301.193.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மண்டல கவுன்சிலின் 31வது கூட்டம் இன்று தமிழ்நாட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை தவிர்த்து மற்ற தென்மாநில  முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.</p><p>இக்கூட்டத்திற்கு துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் செயல்பட்டார். கூட்டத்தில் காவிரி விவகாரம் முதல் நீட், தொகுதி மறுவரையறை என பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசினார். </p><p>அந்தவகையில் தங்கள் தரப்புப் பிரச்னைகளை முன்வைத்து கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் பேசினார். அதில் முல்லைப் பெரியாறு அணை விவகாரமும் அடங்கும். முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாக பேசியுள்ள சதீஷன் அணையின் அமைவிடம், வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடே மேற்கொள்ளலாம் என்றும், அதற்கான செலவுகளை கேரளா ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் அணைக்கட்டியப் பிறகு தமிழ்நாட்டிற்கு உரிய முழுப்பங்கு நீரையும் கேரளம் திறக்கும் என்றும் தெரிவித்துள்ளார். </p><p>பழைய அணையின் பாதுகாப்பு குறித்த கேரள மக்களின் அச்சத்தைப் போக்க, இரு மாநிலங்களும் இணைந்து கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘உங்களையும், அப்பாவையும் கடைசியாக ஒன்றாகப் பார்த்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டது’ - தாய் சோனியா குறித்து ராகுல் காந்தி உருக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/it-has-been-35-years-since-i-last-saw-you-and-father-together-rahul-gandhis-emotional-words-about-his-mother-sonia</link><comments>https://www.maalaimalar.com/news/national/it-has-been-35-years-since-i-last-saw-you-and-father-together-rahul-gandhis-emotional-words-about-his-mother-sonia#comments</comments><guid isPermaLink="false">bdafe733-7602-4a06-9f69-bf8de78e6b18</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:10:20 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:10:20.838Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,ராஜீவ் காந்தி,sonia gandhi,சோனியா காந்தி,Belonging: A Journey of Love</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/lj9snx1b/New-Project-2026-08-20T143952.649.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘உங்களையும், அப்பாவையும் கடைசியாக ஒன்றாகப் பார்த்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டது’ - தாய் சோனியா குறித்து ராகுல் காந்தி உருக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/lj9snx1b/New-Project-2026-08-20T143952.649.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கைப் பயணத்தை விவரித்து உருவாகியுள்ள சுயசரிதைப் புத்தகம் “பிலாங்கிங்: தி ஜர்னி ஆஃப் லவ்” (Belonging: A Journey of Love).</p><p>சோனியா காந்தி இத்தாலியின் ஒரு சிறிய நகரில் கழித்த தனது குழந்தைப் பருவம் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை நினைவுகள், ராஜீவ் காந்தி உடனான திருமணம், அவரது இழப்பு என தனது வாழ்வின் முக்கிய அங்கங்களை இதில் பகிர்ந்துள்ளார். </p><p>இப்புத்தக்கம் நவம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் புத்தகம் தொடர்பாகவும், தனது தந்தையின் பிறந்தநாளான இன்று தனது தாய் சோனியா குறித்து உருக்கமானப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.</p><p>தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்.,</p><p>“அம்மா,</p><p>உங்களையும், அப்பாவையும் ஒன்றாக நான் கடைசியாகப் பார்த்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அப்பா நம்மை விட்டுச் சென்ற நாளிலிருந்து, வாழ்க்கை உங்கள் முன் நிறுத்திய சவால்கள் அனைத்தையும் நீங்கள் எத்தகைய அளப்பரிய துணிச்சலுடனும், கண்ணியத்துடனும் எதிர்கொண்டீர்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். </p><p>நீங்கள் எத்தகைய சூழல்களைக் கடந்து வந்தீர்கள் என்பதையும், அப்பாவுக்குப் பிந்தைய உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும் பிரியங்காவும் நானும் மட்டுமே முழுமையாக அறிவோம்.</p><p>உங்களை நேசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், உங்கள் கதையான "Belonging: A Journey of Love"-ஐ வாசிக்கப்போகிறார்கள் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். </p><p>இயல்பிலேயே தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பாத ஒருவரான நீங்கள், உங்கள் அழகான கதையை உலகிற்குச் சொல்வதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும்.</p><p>இன்று, அவருடைய பிறந்தநாளில், அப்பா புன்னகைத்தபடியே, பெருமையுடன் தன் அழகான சோனியாவைப் பார்த்துக் கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது.</p><p>அன்புடன்,</p><p>ராகுல்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உங்களின் போதனைகளே எனது பலம்.. ராஜீவ் காந்தி ஜெயந்தி  -  மகன் ராகுல் அஞ்சலி 
</title><link>https://www.maalaimalar.com/news/national/rajiv-gandhi-jayanti-rahul-sonia-pay-tribute-at-veer-bhumi-memorial-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajiv-gandhi-jayanti-rahul-sonia-pay-tribute-at-veer-bhumi-memorial-in-delhi#comments</comments><guid isPermaLink="false">25633218-f42d-4bc6-b0c7-ec5b0e6f603c</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:46:09 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:46:09.546Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,ராஜீவ் காந்தி ஜெயந்தி,Rajiv Gandhi Jayanti</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/ogokdrse/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/ogokdrse/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தியின்  82வது பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 20). </p><h2>அஞ்சலி </h2> <p>ராஜீவ் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் உள்ள வீர் பூமி நினைவிடத்தில் அவரின் மனைவி சோனியா காந்தி, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான <a href="https://www.maalaimalar.com/topic/rahul-gandhi">ராகுல் காந்தி </a>மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.</p><h2>ராகுல்</h2><p>தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இந்தியர்களிடையே நல்லிணக்கம், ஒவ்வொரு இதயத்திலும் கருணை, ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி மற்றும் ஜனநாயகத்தில் சமமான உரிமைகள்...</p><p>அப்பா, உங்களின் போதனைகளே எனது பலம். உங்களின் நினைவுகளே எனது தைரியம். நீங்கள் கண்ட இந்தியாவின் கனவை நனவாக்கும் எனது உறுதிப்பாடு எப்போதும் என்னை வழிநடத்தும்." என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கல்லூரி மாணவர்களுக்கு கூகுளின் மெகா சலுகை: ரூ.4,000 மதிப்பிலான கூகுள் AI பிளஸ் சேவை 1 வருடத்திற்கு இலவசம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/google-mega-offer-for-college-students-rs-4000-worth-google-ai-plus-free-for-1-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/google-mega-offer-for-college-students-rs-4000-worth-google-ai-plus-free-for-1-year#comments</comments><guid isPermaLink="false">bad46caf-8f01-4c53-99ac-4d67bf5e2048</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:43:28 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:43:28.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செயற்கை நுண்ணறிவு,கூகுள் ஜெமினி,GoogleGemini,CollegeStudents,GoogleAIPlus,TechNews,இந்திய கல்லூரி மாணவர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/z9g3cguy/ai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Google Gemini ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/z9g3cguy/ai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியக் கல்லூரி மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் https://gemini.google/students ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீடு செய்துள்ளது. வழக்கமாக ஆண்டிற்கு ரூ.4,000 கட்டணத்தில் வழங்கப்படும் <a href="https://www.maalaimalar.com/news/world/ai-solutions-most-diseases-next-10-years-anthropic-ceo-dario-amodei-prediction">கூகுள் AI பிளஸ் </a>சேவையை, தகுதிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு 1 ஆண்டிற்கு முற்றிலும் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>இலவச <strong>கூகுள் AI பிளஸ் திட்டம்</strong></h2><p>மாணவர்கள் தங்களது கல்லூரி பாடத்திட்டங்களை எளிதாகப் புரிந்து கொள்ளவும், ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் இந்த சிறப்புச் சலுகை பெரிதும் உதவியாக இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் பற்றி பார்க்கலாம்.</p><p>*கூகுளின் அதிநவீன AI மாடலான Gemini Omni-ஐப் பயன்படுத்தும் வசதி.</p><p>*மாணவர்களின் கல்லூரி ஆவணங்கள் மற்றும் திட்டங்களைச் சேமிக்க 400 GB சேமிப்பகம்.</p><p>*சாதாரண பயனர்களை விட 2 மடங்கு கூடுதல் பயன்பாட்டு வரம்புகள்</p><p>*வகுப்புக் குறிப்புகளைப் பதிவேற்றி, தனிப்பயனாக்கப்பட்ட படிப்பு வழிகாட்டிகள் மற்றும் மாதிரி வினாடி வினாக்களை உருவாக்கும் வசதி.</p><p>* AI உடன் நேரடி குரல்வழியில் உரையாடி பாடங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும் அம்சம்.</p><h2>மாணவர்க<strong>ள் இச்சலுகையைப் பெறுவது</strong> எப்படி?</h2><p>18 முதல் 24 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் https://gemini.google/students என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று, தங்களது மாணவர் அடையாளச் சான்றை உறுதிசெய்வதன் மூலம் இந்த 1 வருட இலவசச் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.</p>]]></content:encoded></item><item><title>மகன்கள் கைவிட்டனர்: சிறுநீரகம் தானம் செய்த தாயை பராமரிக்கும் மகளுக்கு அரசு வேலை- ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sons-abandoned-mother-daughter-who-donated-kidney-gets-government-job-jharkhand-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/sons-abandoned-mother-daughter-who-donated-kidney-gets-government-job-jharkhand-high-court#comments</comments><guid isPermaLink="false">5ee7cab7-0f8f-4089-86f0-32845a176bbd</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:44:57 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:44:57.727Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>JharkhandHighCourt,WomenRights,GenderEquality,ஜார்க்கண்ட்உயர்நீதிமன்றம்,நீதிமன்றதீர்ப்பு,மகளிர்உரிமை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/ssurthj9/kidney.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand HighCourt ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/ssurthj9/kidney.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நிலக்கரிச் சுரங்கத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த அர்ஜுன் பிரசாத், கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று பணியில் இருக்கும்போதே உயிரிழந்தார். அவருக்கு மனைவி, இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அர்ஜுன் பிரசாத் உயிருடன் இருந்தபோது, அவருக்கு ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பிற்காக அவரது மனைவியே தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கி உயிரைக் காப்பாற்றினார்.</p><p>தந்தையின் மறைவுக்குப் பின், குடும்பத்தைப் பராமரிக்க அவரது மனைவிக்கு வேலை செய்யக்கூடிய உடல் தகுதி இல்லை. வயது முதிர்வு மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/national/telangana-school-murder-two-class-10-students-stab-principal-roopa-reddy-27-times-for-cash">சிறுநீரக தான</a> அறுவை சிகிச்சை காரணங்களால் அவரால் கடினப் பணிகளைச் செய்ய இயலவில்லை. இதனிடையே, அவரது இரு மகன்களும் தாயைப் பராமரிக்க மறுத்துவிட்டுத் தனித்தனியாகச் சென்றுவிட்டனர்.</p><h2>மக<strong>ளின் தியா</strong>கம் </h2><p>தாயையும் தனது குழந்தைகளையும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட திருமணமான மகள், தனது கணவரின் மிகக் குறைந்த வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இதனால், தந்தையின் மறைவுக்குப் பின் காலியாக உள்ள பணியிடத்தில் கருணை அடிப்படையில் தன் மகளுக்கு வேலை வழங்குமாறு தாய் நிலக்கரிச் சுரங்க நிர்வாகத்திடம் மனு அளித்தார்.</p><p>ஆனால், 2017-ஆம் ஆண்டு நிலக்கரிச் சுரங்க பிராவிடன்ட் பண்ட் அமைப்பு, "மகள் திருமணமானவர்" என்ற ஒரே காரணத்தைக் கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது. இதை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் அளிக்கப்பட்ட மனுவையும் 2024 பிப்ரவரியில் நிர்வாகம் மீண்டும் நிராகரித்தது.</p><h2>திருமண நிலை <strong>மட்டும் உரி</strong>மையைப் பறிக்காது</h2><p>இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் ரோஷன் உத்தரவில், ஒரு பெண் திருமணமானவர் என்பதால் மட்டுமே தந்தையைச் சார்ந்திருக்கவில்லை என்று முடிவு செய்ய முடியாது என்று தெளிவுபடுத்தினார். கணவருக்குச் சொற்ப வருமானம் இருப்பதனால், அப்பெண் தன் தந்தையின் நிதி ஆதரவைச் சார்ந்திருக்கவில்லை என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.</p><p>மகன்கள் தாயைக் கைவிட்ட நிலையில், சிறுநீரக தானம் அளித்த முதிய தாயையும் குடும்பத்தையும் காப்பாற்றத் தயாராக இருக்கும் மகளுக்கு முழு தகுதியும் உள்ளது. திருமண நிலை மட்டுமே கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு உரிமையை ரத்து செய்ய முடியாது. எனவே, எட்டு வாரங்களுக்குள் மறைந்த ஊழியரின் மகளுக்குப் பொருத்தமான வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என நிலக்கரிச் சுரங்க அமைப்பிற்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எல்லை தாண்டிய காதல்: குருவாயூர் கோவிலில் மலையாளி பெண்ணை கரம்பிடித்த ஸ்காட்லாந்து எம்பி!</title><link>https://www.maalaimalar.com/news/national/scottish-mp-ties-the-knot-with-malayali-woman-at-guruvayur-temple</link><comments>https://www.maalaimalar.com/news/national/scottish-mp-ties-the-knot-with-malayali-woman-at-guruvayur-temple#comments</comments><guid isPermaLink="false">2414fbd0-6909-4986-a93e-5de23bfc19da</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:39:47 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:39:47.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ScotlandMP,GuruvayurTemple,InternationalCouple,loveCrossesBorders,ஸ்காட்லாந்துஎம்பி,குருவாயூர்கோவில்,எல்லைதாண்டியகாதல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/kidjcn2q/mp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ScotlandMP Wedding]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/kidjcn2q/mp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே, கேரளாவைச் சேர்ந்த நிதிஷா (நிதிச் சந்த்) என்பவரைப் புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.</p><h2>சந்திப்பும் கா<strong>தல் மலர்ச்</strong>சியும்</h2><p>எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் பகுதியை சேர்ந்த நிதிச் சந்த், 2008-ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அங்கு கல்வி பயின்ற போது, விசா விதிமுறை மாற்றங்களால் ஏற்பட்ட சிக்கல்களை எதிர்த்து நாடாளுமன்றக் குழுக்கள் முன் தீவிரமாகப் போராடினார். அந்தச் சமயத்தில் தான் அன்றைய இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரான மார்ட்டின் டேவை அவர் சந்தித்தார். ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கிய இவர்களது பந்தம், 2016-ஆம் ஆண்டு காதலாக மாறியது.</p><h2>10 ஆண்டு கா<strong>ல நீண்ட காத்திருப்</strong>பு</h2><p>2016-ஆம் ஆண்டிலேயே சட்டப்பூர்வமாக இங்கிலாந்தில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/avadi-man-marries-transgender-woman-who-acted-in-films"> பதிவுத் திருமணம்</a> செய்து கொண்ட போதிலும், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் சந்நிதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே நிதிச் சந்தின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஆனால் 2018 கேரள வெள்ளப்பெருக்கு, கோவிட் பெருந்தொற்று மற்றும் குடும்பச் சூழல் காரணமாக இந்த நிகழ்வு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.</p><h2>குருவாயூரில் ந<strong>டைபெற்ற கோலாகல</strong> விழா</h2><p>நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மார்ட்டின் டே கேரளா வந்தடைந்து, தனது மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றினார். வேஷ்டி அனிந்து கேரளா பாரம்பரிய உடையில் மாப்பிள்ளையாக மார்ட்டின் டே மிளிர, நிதிச் சந்த் கசவு புடவையில் காட்சியளித்தார். இந்த திருமண விழாவில் நிதிச் சந்தின் 22 வயது மகன் வேதிக் சங்கர் உட்பட நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டனர்.</p><p>தற்போது நிதிச் சந்த் மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார், மார்ட்டின் டே ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் (SNP) முக்கிய தலைவராக மக்கள் பணியாற்றி வருகிறார். இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வாழ்த்துகளைப் பெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>27 முறை கத்திக்குத்து.. பணத்துக்காக பள்ளித் தலைமை ஆசிரியை கொலை - 10ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/telangana-school-murder-two-class-10-students-stab-principal-roopa-reddy-27-times-for-cash</link><comments>https://www.maalaimalar.com/news/national/telangana-school-murder-two-class-10-students-stab-principal-roopa-reddy-27-times-for-cash#comments</comments><guid isPermaLink="false">09010f24-841a-4067-9022-b8df904005e1</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:25:24 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:25:24.349Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Murder,கொலை,Telangana,Headmaster,தலைமையாசிரியர்,தெலுங்கானா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/6yrumy71/tn-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தெலுங்கானா]]></media:title><media:description type="html"><![CDATA[ தெலுங்கானா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/6yrumy71/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானாவில் பள்ளி தலைமை ஆசிரியரை மாணவர்கள் காசுக்காக கத்தியால் குத்திப் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88">படுகொலை </a>செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பள்ளியின் </a>தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரூபா ரெட்டி. </p><p>கடந்த ஆகஸ்ட் 11 அன்று அவரது வீட்டில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். </p> <h2>விசாரணை</h2><p>உடலைக் கைப்பற்றி இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 5 தனிப்படைள் அமைத்து விசாரணையை செய்து வந்தனர்.</p><p>இந்நிலையில் இந்த கொலையை செய்தது அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் இரு சிறுவர்கள் என கண்டுபிடித்துள்ளனர்.</p> <h2>சிக்கியது எப்படி?</h2><p>ரூபா ரெட்டி கொல்லப்படுவதற்கு முன்பு தனது அத்தையிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவர் யாரையோ பார்த்து 'பாபு' என்று அழைத்துள்ளார்.</p><p>அவர் பள்ளியில் மாணவர்களை அழைப்பதற்கு வழக்கமாகப் பயன்படுத்தும் சொல் இது என்பதை அறிந்த போலிசார், கொலை நடந்த காலகட்டத்தில் பள்ளிக்கு வராத மாணவர்கள் மீது கவனத்தைத் திருப்பினர்.</p><p>சம்பவம் நடந்து 4 நாட்களுக்குப் பிறகு பள்ளி மீண்டும் திறக்கப்பட்டபோது, பள்ளிக்கு வராத 13 மாணவர்களைப் போலிசார் கண்டறிந்து விசாரணை நடத்தினர்.</p> <p>அந்த 13 பேரில் 10ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் கையில் அதிக அளவில் பணத்தை வைத்துக்கொண்டு ஆடம்பரமாக செலவு செய்து வந்தது போலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.</p><h2>ரத்தக் கறை ரூபாய்</h2><p>போலிசார் நடத்திய சோதனையில், ஒரு சிறுவனிடமிருந்து ரத்தக் கறை படிந்த ரூ. 1.54 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.</p> <p>தடம் அறிவியல் சோதனையில் ரூபாய் நோட்டுகளில் ரூபா ரெட்டியின் ரத்தம் என்பது உறுதி செய்யப்பட்டது.</p><p>மேலுக்கும் 70 சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் அவர்களே கொலையை செய்தது உறுதியான நிலையில் அவர்களை போலீசார் கைது செய்த்தனர்.</p> <h2>காரணம்</h2><p>கைதான மாணவர்களில் ஒருவன் முன்பு பள்ளி விடுதியில் தங்கிப் படித்துள்ளான். </p><p>மதுப் பழக்கம், மோட்டார் சைக்கிள்கள் மீது மோகம் கொண்ட அவனது பையில் இருந்து கைபேசி மற்றும் பணத்தை ரூபா ரெட்டி கைப்பற்றியுள்ளார்.</p><p>அவனைக் கண்டித்ததோடு, விடுதியிலிருந்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இது அந்த மாணவனுக்கு அவர் மீது பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>கொலை நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு கோவா சென்று வந்த அந்த மாணவன், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளான்.</p><p>பள்ளிக் கட்டண பணம் ரூபா ரெட்டியின் வீட்டில் தான் இருக்கும் என்பதை அறிந்து, கொலை நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டை நோட்டம் பார்த்துள்ளான். கொலைக்கு தன் நண்பனையும் கூட்டு சேர்த்துள்ளான்.  </p><h2>கொலை</h2><p>ஆகஸ்ட் 11 அன்று, ரூபா ரெட்டி பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும், முகமூடி அணிந்த இரு சிறுவர்களும் சுவரேறி குதித்து வீட்டிற்குள் நுழைந்து அவரைத் தாக்கியுள்ளனர்.</p><p>தாக்குதலின் போது ஒருவனின் முகமூடி விலகியதால், ரூபா ரெட்டி அவனைக் அடையாளம் கண்டுகொண்டார்.</p> <p>மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில், அந்தச் சிறுவர்கள் ரூபா ரெட்டியை கத்தியால் 27 முறை கொடூரமாகக் குத்திக் கொலை செய்துள்ளனர்.</p><p>பின்னர் வீட்டிலிருந்த ரூ. 1.54 லட்சம் பணம், ஒரு ஐபோன் மற்றும் ரூபா ரெட்டியின் கைபேசி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பியோடினர்.</p><p>கொலையாளிகள் இருவரும் சிறுவர்கள் என்பதால், போலிசார் அவர்களைச் சிறுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆத்மநிர்பார் பாரத் புதிய உச்சம்: ரூ.3,070 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் சுதேசிமயமாக்கல்-பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/aatmanirbhar-bharat-new-milestone-rs-3070-crore-indigenisation-defence-ministry-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/national/aatmanirbhar-bharat-new-milestone-rs-3070-crore-indigenisation-defence-ministry-announcement#comments</comments><guid isPermaLink="false">5ef57d52-010a-439f-be9d-9b9cfab89f1c</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:19:08 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:19:08.144Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>AatmanirbharBharat,IndianDefence,இந்தியராணுவம்,IndianArmedForces,DefenceMinistry,பாதுகாப்புஅமைச்சகம்,ஆத்மநிர்பார்பாரத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/zwmpean3/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indian Armed Forces]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/zwmpean3/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய பாதுகாப்புத் துறை உற்பத்தியை மேம்படுத்தவும், வெளிநாட்டு இறக்குமதியைக் குறைத்து சுயசார்பை எட்டவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு உற்பத்தித் துறை 6-வது 'நேர்மறை உள்நாட்டுமயமாக்கல் பட்டியலை'  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய பட்டியலில் 405 உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ உபகரணங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.3,070 கோடி மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகள் உருவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.</p><h2>எந்தெந்த ராணு<strong>வ தளவாடங்களுக்</strong>கு இந்தத் தடை</h2><p>இந்த ஆறாவது பட்டியலில் 389 உபகரணங்கள் பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களுக்கும், 16 உபகரணங்கள் இந்திய கடலோரக் காவல்படைக்கும் உரியவை ஆகும். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், <a href="https://www.maalaimalar.com/news/national/us-envoy-affirms-jammu-kashmir-integral-part-of-india">போர்க்கப்பல்கள் </a>மற்றும் கனரகப் போர் வாகனங்களுக்குத் தேவையான முக்கிய உதிரிப்பாகங்கள், துணை அமைப்புகள் மற்றும் மூலப்பொருட்கள் இதில் அடங்கும்.</p><p>அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர், லைட் யுட்டிலிட்டி ஹெலிகாப்டர், சுகோய் Su-30MKI, தேஜஸ் லைட் காம்பாட் ஏர்கிராப்ட் மற்றும் AL-31FP இன்ஜின் உதிரிப்பாகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. தரைப்படை வாகனங்களான T-72, T-90 போர் டாங்கிகள் மற்றும் BMP-II காலாட்படை போர் வாகனங்களின் பாகங்களும் இதில் அடங்கும்.</p><p>மேலும் கான்ஹர்-எம், இன்வார், எம்.ஆர்.எஸ்.ஏ.எம் ஏவுகணை அமைப்புகள், அதிநவீன டேங்க் எதிர்ப்பு வெடிமருந்துகள், ராடார் அமைப்புகள், சோனார் உபகரணங்கள், ஃபயர் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சாதனங்கள் எனப் பல அதிநவீன அமைப்புகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.</p><h2>ஸ்ரீஜன் தளம் மூலம் <strong>குறு, சிறு நிறுவனங்க</strong>ளுக்குப் பெரு வாய்ப்பு</h2><p>இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பொருட்களும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தியாவில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும். தயாரிப்பு வெற்றி அடைந்த பிறகு, அவை இந்தியத் தொழில் நிறுவனங்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்படும். இதற்கான முழு விவரங்களும், காலக்கெடுவும் 'ஸ்ரீஜன்' இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் புதுமைத் தொடக்க நிறுவனங்கள் 'Make' நடைமுறைகள் மூலம் பெருமளவில் பயன்பெறும்.</p><h2>ரூ.<strong>9,000 கோடி இறக்குமதி</strong> செலவு மிச்சம்</h2><p>2020 ஆகஸ்ட் மாதம் ஸ்ரீஜன் இணையதளம் தொடங்கப்பட்டதிலிருந்து 33,000-க்கும் மேற்பட்ட ராணுவப் பொருட்கள் உள்நாட்டு உற்பத்திக்காக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை வெளியிடப்பட்ட முதல் 5 பட்டியல்கள் மூலம் 15,700-க்கும் மேற்பட்ட பொருட்கள் வெற்றிகரமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.9,000 கோடி மதிப்பிலான வெளிநாட்டு இறக்குமதி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>மேலும், இந்திய நிறுவனங்களுக்கு சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான கொள்முதல் ஆர்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் இந்திய பாதுகாப்பு உற்பத்திக் கட்டமைப்பை பலப்படுத்துவதோடு, உள்நாட்டு முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>&quot;வந்தே மாதரம்&quot; முதல் இரண்டு அடிகள் மட்டுமே பாடப்படும் - 1937 தீர்மானத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் திட்டவட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-policy-congress-restricts-party-events-to-first-two-stanzas-of-national-song</link><comments>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-policy-congress-restricts-party-events-to-first-two-stanzas-of-national-song#comments</comments><guid isPermaLink="false">2acd640d-b5a4-4131-a073-70ce14117619</guid><pubDate>Thu, 20 Aug 2026 04:14:04 +0000</pubDate><atom:updated>2026-08-20T04:14:04.606Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,வந்தே மாதரம்,Vande Mataram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/0ykol55d/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கார்கே, சோனியா காந்தி ]]></media:title><media:description type="html"><![CDATA[ கார்கே, சோனியா காந்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/0ykol55d/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">வந்தே மாதரம்</a> தேசியப் பாடலின் முதல் இரண்டு அடிகள் மட்டுமே கட்சி நிகழ்வுகளில் பாடப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. </p> <h2>சர்ச்சை</h2><p>அனைத்து அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் இசைக்க வேண்டும் என மத்திய பாஜக அரசு நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றி சட்டமாக்கியது.</p><p>6 அடி கொண்ட 3 நிமிடம் 10 வினாடிகள் நீளமுள்ள வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.</p><p>கடந்த வாரம் நடந்த 80வது சுதந்திரத்தினவிழாவில் காங்கிரஸ் தலைமையகத்தில் வந்தே மாதரம் இசைக்கும்போது அதை பாதியில் நிறுத்துமாறு சோனியா காந்தி சைகை செய்ததாக <a href="https://www.maalaimalar.com/news/national/vande-mataram-row-amit-shah-slams-sonia-gandhi-over-gesture-during-anthem">பாஜக குற்றம்சாட்டியது.</a></p><p>ஆனால் மூத்த தலைவர் கார்கே அமர நாற்காலி எடுத்து வரவே சோனியா சைகை செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.</p><h2>முடிவு</h2><p>நேற்று டெல்லியில் நடைபெற்ற நான்கு மணி நேரத்திற்கும் மேலான செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் ஜெயராம் ரமேஷ் ஆகியோர் இத்தகவலைத் தெரிவித்தனர்.</p><p>1937ஆம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழு தீர்மானத்தை மீண்டும் உறுதி செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.</p> <h2>வரலாற்று பின்னணி</h2><p>அக்டோபர் 28, 1937 அன்று மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் மௌலானா அசாத் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் செயற்குழு முதல் முறையாக இத்தீர்மானத்தை நிறைவேற்றியது.</p><p>பங்கிம் சந்திரர் எழுதிய 'ஆனந்தமடம்' நாவலில் இடம்பெற்ற வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் தாய்நாட்டைப் போற்றுவதாகவும், பிந்தைய சரணங்கள் குறிப்பிட்ட மத மற்றும் புராண குறியீடுகளைகொண்டிருப்பதாகவும் அமைந்துள்ளன.</p> <p>எனவே, அனைத்துத் தரப்பு மக்களும் இணையும் தேசிய நிகழ்வுகளுக்கு முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பொருத்தமானவை என ரவீந்திரநாத் தாகூர் ஜவஹர்லால் நேருவுக்குக் கடிதம் மூலம் ஆலோசன வழங்கினார்.</p><p>சுதந்திரத்தின் பின் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அறிவித்தபடி, 'ஜன கண மன' தேசிய கீதமாகவும், 'வந்தே மாதரம்' தேசியப் பாடலாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>மத்திய அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும் - &apos;ஜென் Z&apos;களை கவர பிரதமர் மோடி பிளான்</title><link>https://www.maalaimalar.com/news/national/modi-govt-campus-outreach-ministers-to-visit-universities-daily-under-one-day-one-university-campaign-to-engage-gen-z-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-govt-campus-outreach-ministers-to-visit-universities-daily-under-one-day-one-university-campaign-to-engage-gen-z-students#comments</comments><guid isPermaLink="false">33ab427a-bc3c-42ff-a600-d30611c8b62c</guid><pubDate>Thu, 20 Aug 2026 02:40:08 +0000</pubDate><atom:updated>2026-08-20T02:40:08.322Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,ஜென் இசட்,Gen z,பிரதமர் மோடி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/ovwi8oxs/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/ovwi8oxs/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய <a href="https://www.google.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+maalaimalar&amp;oq=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+maalaimalar&amp;gs_lcrp=EgZjaHJvbWUyCAgAEEUYJxg5MgYIARBFGDzSAQg2ODc2ajBqOagCBrACAfEFEUcb3hwEigg&amp;sourceid=chrome&amp;source=chrome.ob&amp;ie=UTF-8">போராட்டம்</a>, தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வழிவகுத்தது. </p><p>இதைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட பிரதமர் மோடி, இன்ஸ்டாகிராமில் மாணவர்களை கவரும் வேலையில் இறங்கியுள்ளார். கட்சியினரையும் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். </p><p>அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றியை தீர்மானிப்பதில் ஜென் இசட் முக்கிய காரணியாக மாறும் சூழலில், அவர்களை கவர பல்வேறு விஷயங்களை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. பாஜகவின் சிந்தாந்த தலைமையாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் <a href="https://www.maalaimalar.com/news/national/the-experiences-of-a-gen-z-youth-who-left-city-life-for-a-mountain-village">ஜென் இசட்</a> சந்திப்புகளை நடத்தி வருகிறது. </p> <h2>புதிய திட்டம்</h2><p>இதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுடன் நேரடியாக உரையாடுவதற்காக மோடி அரசு ஒரு புதிய தேசிய அளவிலான பிரச்சாரத்தைத் திட்டமிட்டுள்ளது.</p><p>'ஒரு நாள், ஒரு பல்கலைக்கழகம்' என்ற இந்த திட்டத்தின்படி, மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று மாணவர்களுடன் உரையாடுவார்கள்.</p> <h2>உரையாடல் </h2><p>இளைஞர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதோடு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் நலன் தொடர்பான மத்திய அரசின் திட்டங்களை விளக்குவதே அவர்களின் பணி.</p><p>அமைச்சர்கள் மாணவர்களுடன் உரையாடுவதோடு, மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைப்பார்கள்.</p> <h2>நோக்கம்</h2><p>இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகள் தொடர்பான கவலைகளை நேரடியாகக் கேட்டறிவதற்கான ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>ஜென் இசட் தலைமுறையினருடன் நேரடித் தொடர்பை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.</p><p>மேலும், அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மாணவர்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்ப்பதும் இதன் ஒரு பகுதியாகும். இவற்றில் எது முக்கிய நோக்கம் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி - அமெரிக்க தூதர் திட்டவட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/national/us-envoy-affirms-jammu-kashmir-integral-part-of-india</link><comments>https://www.maalaimalar.com/news/national/us-envoy-affirms-jammu-kashmir-integral-part-of-india#comments</comments><guid isPermaLink="false">427ffeba-a272-45c3-a4c4-19133a015764</guid><pubDate>Thu, 20 Aug 2026 02:03:05 +0000</pubDate><atom:updated>2026-08-20T02:03:05.007Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜம்மு காஷ்மீர்,ladakh,அமெரிக்க தூதர்,லடாக்,Jammu &amp; Kashmir,Sergio Gor,செர்ஜியோ கோர்,US Envoy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/50dkhgrg/tn-17.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/50dkhgrg/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/jammu-and-kashmir">ஜம்மு காஷ்மீர்</a> இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். </p><p>அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு சென்றுள்ளார். </p><p>சந்திப்பு</p><p>நேற்று ஸ்ரீநகர் சென்றடைந்ததும் முதல்வர் உமர் அப்துல்லாவை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.</p><p>ஸ்ரீநகரில் முதல்வர் உமர் அப்துல்லாவுடன் <a href="https://www.maalaimalar.com/news/world/sergio-gore-sworn-in-as-us-ambassador-to-india-trump-talks-about-tax-cuts-796890">செர்ஜியோ கோர் </a>நேற்று செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். </p> <h2>இந்தியாவின் பகுதி</h2><p>அப்போது ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் மிக முக்கியமான பகுதி என்றும், இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதிக்கு வர ஏராளமான அமெரிக்கர்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.</p><p>மத்திய அரசும் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் அப்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக செர்ஜியோ கோர் பாராட்டினார்.</p><h2></h2><h2>மறுபரிசீலனை</h2><p>மேலும், "அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்குப் பயண எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. இந்த எச்சரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து மறுபரிசீலனை செய்து வருகிறோம்.</p><p>பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ள சூழலில், ஜம்மு காஷ்மீருக்கு அமெரிக்க பயணிகள் வருகை தர தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் எச்சரிக்கைகளை அமெரிக்க அரசு மறுபரிசீலனை செய்யும் என்றார்.</p><p>மிகச் சுமூகமாகவும் நட்புறவோடும் இந்தச் சந்திப்பு அமைந்ததாகவும், வாஷிங்டன் மற்றும் டெல்லி திரும்பிய பிறகு இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த இந்தப் பயணம் உதவும் என்றும் அவர் கூறினார்.</p><p>ஜம்மு காஷ்மீருக்கு 2019 இல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு அமெரிக்க தூதர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும்.</p> <h2>உமர் அப்துல்லா</h2><p>இந்தச் பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று கூறிய முதல்வர் உமர் அப்துல்லா, இந்தியா - அமெரிக்கா இருதரப்பு உறவுகள் குறித்தும், குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு அமெரிக்கா எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>புது ரெயில்வே திட்டங்கள் சரக்கு போக்குவரத்தை வலுப்படுத்தும்  - பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-hails-new-railway-highway-projects</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-hails-new-railway-highway-projects#comments</comments><guid isPermaLink="false">7c30e5f8-841d-4218-89f4-92798bbd4ea6</guid><pubDate>Wed, 19 Aug 2026 19:17:40 +0000</pubDate><atom:updated>2026-08-19T19:17:40.645Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,railway projects,ரெயில்வே திட்டங்கள்,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/es9ry3jd/pm-modi" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/es9ry3jd/pm-modi?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் நான்கு ரெயில்வே திட்டங்கள் மற்றும் நான்கு வழி நெடுஞ்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை பிரதமர்<a href="https://www.maalaimalar.com/topic/pm-modi"> நரேந்திர மோடி</a> பாராட்டினார். மேலும், இந்த முயற்சிகள் போக்குவரத்து இணைப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.</p><p>ஆந்திர பிரதேசம், ஒடிசா, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> மற்றும் மேற்கு வங்கம் முழுவதும் ரயில் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்புக்கு பெரும் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>இது குறித்த எக்ஸ் தள பதிவில் பிரதமர் மோடி, "இந்திய ரெயில்வே நெட்வொர்க்கிற்கு முக்கியமான திறனை சேர்த்து, லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டங்கள் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை வலுப்படுத்துதல், நெரிசலை குறைத்தல், சிறந்த இணைப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா போன்ற பல நன்மைகளை கொண்டிருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>பீகாரின் முழுமையான வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு, இணைப்பு வசதிகளை விரைவாக விரிவுபடுத்துவது முற்றிலும் அவசியம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.</p><p>இந்த திசையில், தேசிய நெடுஞ்சாலை 22-இன் முசாஃபர்பூர்-சீதாமர்ஹி-சோன்பர்சா பிரிவில் 4 வழிச்சாலை அமைக்க இன்று எங்கள் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலம் முழுவதற்கும் உயிர்நாடியாக அமையவிருக்கும் இந்த திட்டம், முன்னேற்றத்தின் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்க உள்ளது. இது பயண நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாவையும் மேம்படுத்தும், என்று அவர் கூறினார்.</p><p>முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, சுமார் ரூ. 9,450 கோடி மொத்த மதிப்பிலான ரயில்வே அமைச்சகத்தின் நான்கு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.</p><h2>திட்ட விவரங்கள்:</h2><p>இந்தத் திட்டங்களில், மேற்கு வங்கத்தின் கரக்பூருக்கும் ஒடிசாவின் பத்ரக் பகுதிக்கும் இடையே 173 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்காவது வழித்தடம் அமைப்பதும், பத்ரக்கிற்கும் ஒடிசாவின் ஹரிதாஸ்பூருக்கும் இடையே 75 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்காவது வழித்தடம் அமைப்பதும் அடங்கும்.</p><p>பீகாரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 22-இன் முசாஃபர்பூர்-சீதாமர்ஹி-சோன்பர்சா பகுதியை ரூ. 3,590.73 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாகத் தரம் உயர்த்துவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>முசாஃபர்பூர்-சீதாமர்ஹி-சோன்பர்சா வழித்தடமானது, தேசிய சரக்குப் போக்குவரத்து கட்டமைப்புடன் தடையற்ற இணைப்பை உறுதி செய்வதோடு, குறிப்பிடத்தக்க மூலோபாய மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாளை தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு - தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆப்சென்ட்! </title><link>https://www.maalaimalar.com/news/national/south-indian-chief-ministers-conference-tomorrow-telangana-chief-minister-revanth-reddy-absent</link><comments>https://www.maalaimalar.com/news/national/south-indian-chief-ministers-conference-tomorrow-telangana-chief-minister-revanth-reddy-absent#comments</comments><guid isPermaLink="false">841d038e-7528-435a-92cd-b01be63c157e</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:28:51 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:28:51.861Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி,CM Revanth Reddy,Southern Zonal Council meeting,தென்மண்டல கவுன்சில் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/63s5lusr/New-Project-2026-08-19T205829.039.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு - தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆப்சென்ட்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/63s5lusr/New-Project-2026-08-19T205829.039.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, நாளை நடைபெறவுள்ள தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. </p><p>பிரிட்டன் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு 10 நாட்கள் முதலீட்டுப் பயணம் மேற்கொள்வதால் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p><p>முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இல்லாததால், அம்மாநில துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமார்கா அல்லது மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் நாளை (ஆகஸ்ட் 20) தென்மண்டல கவுன்சில் குழு மாநாடு நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், ஆந்திர முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். </p>]]></content:encoded></item><item><title>“மனிதர்கள் ஏமாற்றுகிறார்கள்... நாங்கள் மாட்டிக் கொள்கிறோம்” - ம.பி.யில் மனுவில் ஒலித்த தெருநாய்களின் வேதனை!</title><link>https://www.maalaimalar.com/news/national/despite-sterilization-i-have-six-pups-humans-deceive-and-we-get-caught-the-anguish-of-stray-dogs-voiced-in-a-petition-from-madhya-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/despite-sterilization-i-have-six-pups-humans-deceive-and-we-get-caught-the-anguish-of-stray-dogs-voiced-in-a-petition-from-madhya-pradesh#comments</comments><guid isPermaLink="false">6c614fd2-8619-4c59-a7f6-6af74c6a85d9</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:58:54 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:58:54.090Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,stray dog ​​sterilization,தெருநாய்கள் கருத்தடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/45wssmgo/New-Project-2026-08-19T194444.809.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “இவர்கள் ஏமாற்றுகிறார்கள்... நாங்கள் மாட்டிக் கொள்கிறோம்” - ம.பி.யில் மனுவில் ஒலித்த தெருநாய்களின் வேதனை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/45wssmgo/New-Project-2026-08-19T194444.809.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாய் முகமூடி அணிந்து மனு அளிக்க சென்ற நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. </p><p>மாநகராட்சி பகுதியில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதில் குறைபாடு இருப்பதாகக் கூறி அலுவலகத்திற்கு மனு அளிக்கச் சென்றவர் இந்த நூதன ஆர்ப்பாட்டை முன்னெடுத்துள்ளார். </p><p>ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, வேடிக்கையாக அதே சமயம் அதிகாரிகளைச் சாடும் வகையிலான புகாரை அளித்த அந்த நபர்., “நாங்கள் அவர்களைக் கடிப்பதாக மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அதில் எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. முன்பு எங்களுக்குச் சாப்பிட ஏதாவது கிடைக்கும், ஆனால் இப்போது அது நடப்பதில்லை. அதனால், நாங்கள் நிச்சயமாக மக்களைத் துரத்திச் செல்வோம். </p><p>மாவட்ட ஆட்சியரிடம் இருந்து நாங்கள் நீதியைக் கோருகிறோம். எங்கள் பெயரில் நிதியைத் திருடி, எங்களுக்கு அவதூறு பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டேன் என்பது எனக்குத் தெரியும். எனக்கு நீதி கிடைக்கும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” என தெரிவித்தார்.</p><p>மேலும் நாய்களுக்கு முறையான அறுவை சிகிச்சை செய்யாமல், அதிகாரிகள் போலியான ரசீதுகளை மட்டும் தயாரித்து ஊழல் செய்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.</p><p>இவருக்கு துணையாக மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் தீபக் முல்லு ரத்தோரும் சென்றுள்ளார். </p><h2>ரூ. 40 லட்சம் ஊழல் குற்றச்சாட்டு </h2><p>மாநகராட்சி பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், அவற்றுக்குக் கருத்தடை சிகிச்சை செய்யவும் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ. 40 லட்சம் வரை செலவிடப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது.</p><p>ஆனால் அதே காலகட்டத்தில், 13,225 நாய் கடி வழக்குகள் பதிவு செய்யப்பட்ட்டுள்ளன.</p><p>மறுபுறம் மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர் சஞ்சய் சுக்லா, ஊழல் குற்றச்சாட்டை மறுத்தார். கருத்தடைத் திட்டம் தொடர்பான பதிவுகளும், தரவுகளும் வழங்கப்படும் என்றும் கூறினார்.</p><p>மேலும் இவ்விவகாரம் நகராட்சி ஆணையருடன் விவாதிக்கப்பட்டதாகவும், விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பெற்ற மகளையே சீரழித்த கொடூர தந்தை: போலி ஆதாரைப் பயன்படுத்தி குழந்தையை விற்ற அத்தை உள்பட 8 பேர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/cruel-father-abused-his-own-daughter</link><comments>https://www.maalaimalar.com/news/national/cruel-father-abused-his-own-daughter#comments</comments><guid isPermaLink="false">ad9cf8cd-d02f-461e-8bd7-c82b41f94435</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:41:50 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:41:50.139Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>POCSO,Raipur,போக்சோ,ChildTrafficking,AadhaarForgery,ராய்பூர்,ராய்பூர்கொடூரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/6kwcsfz3/rape.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Child Trafficking]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/6kwcsfz3/rape.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரில் மனிதநேயமற்ற, நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 16 வயதுடைய பெற்ற மகளையே சொந்தத் தந்தை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.</p><h2>கட்டாய க<strong>ருக்கலைப்பு</strong></h2><p>கடந்த 2023-ஆம் ஆண்டு பெற்ற தாய், தந்தையை விட்டுப் பிரிந்து சென்றதைத் தொடர்ந்து, மூத்த மகளான இந்த சிறுமியைத் தந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துத் தொடர்ந்து அச்சுறுத்தி <a href="https://www.maalaimalar.com/news/national/atrocity-against-14-year-old-girl-by-instagram-friend-in-mumbai">பாலியல் துன்புறுத்தலுக்கு </a>உள்ளாக்கியுள்ளார். இதனால் சிறுமி முதன்முறையாகக் கர்ப்பமடைந்தபோது, அவரது அத்தையும் தந்தையும் இணைந்து சட்டவிரோதமாகக் மாத்திரைகள் வழங்கி கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளனர்.</p><h2>மீண்<strong>டும் கர்ப்பம் அடைந்த சி</strong>றுமி</h2><p>அதன் பின்னரும் தொடர்ந்த கொடுமையால், அச்சிறுமி மீண்டும் 2025-இல் கர்ப்பமடைந்தார். இம்முறை இக்குற்றத்தை மறைப்பதற்காக, செவிலியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் சிலருடன் இணைந்து தந்தை சதித்திட்டம் தீட்டினார். சிறுமியின் உண்மையான வயதை மறைத்து, போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைத் தயாரித்து, அவருக்குத் திருமணமாகிவிட்டதாகப் பொய் சித்திரத்தை உருவாக்கியுள்ளனர்.</p><h2>குழ<strong>ந்தை விற்பனை</strong></h2><p>இதனைப் பயன்படுத்தி ஒரு தனியார் மருத்துவமனையில் அச்சிறுமியை அனுமதித்து, அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறக்க வைத்துள்ளனர். குழந்தை பிறந்தவுடனேயே, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்களின் உதவியோடு அக்குழந்தை வேறொரு நபருக்கு விற்பனை செய்துள்ளனர்.</p><h2>அத்தை உள்<strong>பட 8 பேர் கை</strong>து</h2><p>சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலமாகத் தன் தாயைத் தொடர்புகொண்ட சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை அழுது விவரித்துள்ளார். உடனடியாகத் தாய் அளித்த புகாரின் பேரில், நியூ ராஜேந்திர நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றத்தில் ஈடுபட்ட தந்தை, அத்தை, போலியான ஆவணங்களை உருவாக்க உதவிய செவிலியர்கள் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய நபர் உட்பட 8 பேரை காவல்துறையினர் போக்சோ, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் சிறுவர் நீதிச் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பழைய வாகனங்களுக்கு மீண்டும் E10 பெட்ரோல் வழங்க மத்திய அரசு ஆலோசனை!</title><link>https://www.maalaimalar.com/news/national/old-vehicles-e10-petrol-return-central-government-consideration</link><comments>https://www.maalaimalar.com/news/national/old-vehicles-e10-petrol-return-central-government-consideration#comments</comments><guid isPermaLink="false">ae2d3802-f670-4212-a5d0-1ba9be11614b</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:52:13 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:52:13.383Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>E10Petrol,E20Petrol,EthanolBlending,மத்தியஅரசு,E10 பெட்ரோல்,E20 பெட்ரோல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/4mo1b20q/e10.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ E10Petrol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/4mo1b20q/e10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் இயங்கும் பழைய வாகனங்களின் நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் E10 பெட்ரோலை வழங்குவது குறித்து மத்திய அரசின் மட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் மற்றும் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.</p><h2>எ<strong>த்தனால் கலப்பால் ஏற்ப</strong>டும் சவால்கள்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-ug-counseling-2026-round-1-seat-allotment-results-how-to-check-mbbs-bds-list">இந்தியாவில்</a> தற்போது 20% எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும், நாட்டின் சாலைகளில் இயங்கும் சுமார் 7.5 கோடி முதல் 8 கோடி பழைய இருசக்கர வாகனங்கள் 'கார்புரேட்டர்' தொழில்நுட்பம் கொண்டவை. இந்த பழைய என்ஜின்களால் E20 பெட்ரோலில் உள்ள கூடுதல் ஆக்சிஜனைச் சீரமைக்க முடிவதில்லை. இதனால் என்ஜின் விரைவில் சூடாவதோடு, பழைய ரப்பர் பாகங்களும் சேதமடைவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.</p><h2>பொ<strong>ருளாதார ஆலோசகரின் பரிந்து</strong>ரை</h2><p>மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தனது அறிக்கையில், பழைய வாகனங்களின் என்ஜின் ஆயுளைப் பாதுகாக்கவும், நுகர்வோரின் கவலையைப் போக்கவும் E10 பெட்ரோலையும் ஒரு விருப்பமாக பெட்ரோல் பங்குகளில் மீண்டும் வழங்க பரிசீலிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளார்.</p><h2>மத்திய <strong>அரசின் ப</strong>ரிசீலனை</h2><p>E20 பெட்ரோலுக்கு பொருந்தாத பழைய வாகன உரிமையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், உணவு உற்பத்தி மற்றும் எத்தனால் பயன்பாட்டிற்கு இடையேயான சமநிலையைப் பேணும் வகையிலும், மீண்டும் E10 பெட்ரோலை வழங்குவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு விரிவாக ஆலோசித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி: லாரியின் எரிவாயு தொட்டி வெடித்து விபத்து - ஒருவர் பலி... 6 பேர் கவலைக்கிடம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-truck-gas-tank-explodes-one-dead-six-critically-injured</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-truck-gas-tank-explodes-one-dead-six-critically-injured#comments</comments><guid isPermaLink="false">d1a5b2d8-d684-42c1-bf07-515bfa29a2ba</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:23:22 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:23:22.951Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,டெல்லி,CNG Cylinder Explosion,சிஎன்ஜி சிலிண்டர் வெடிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/0yp2mfy1/New-Project-2026-08-19T174621.646.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி: லாரியின் எரிவாயு தொட்டி வெடித்து விபத்து - ஒருவர் பலி... 6 பேர் படுகாயம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/0yp2mfy1/New-Project-2026-08-19T174621.646.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியின் புறநகர் பகுதியான திக்ரி கலானில் உள்ள ஒரு சிஎன்ஜி நிலையத்திற்கு லாரி ஒன்று எரிவாயு நிரப்ப வந்துள்ளது. லாரியின் எரிபொருள் தொட்டியில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக எரிபொருள் தொட்டி வெடித்துள்ளது. </p><p>இந்த விபத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த மணீஷ் (25) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வெடிவிபத்து நடந்த நேரத்தில் அருகில் நின்றுகொண்டிருந்த மேலும் ஆறு பேர் காயமடைந்ததாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.</p><p>விபத்து தொடர்பாக 3.37 மணிக்கு தங்களுக்கு தகவல் கிடைத்ததாக டெல்லி தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.</p><p>வெடிவிபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கேரளாவில் துணிகரம்: ஐபோனுக்காக தாத்தாவை கொன்ற பேத்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-teen-plots-grandfathers-murder-watches-him-suffocate-on-video-call</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-teen-plots-grandfathers-murder-watches-him-suffocate-on-video-call#comments</comments><guid isPermaLink="false">0107f92b-099d-42bc-b7e6-58db550d01b1</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:17:44 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:17:44.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>grandfather,தாத்தா,I Phone,grand daughter,ஐபோன்,பேத்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/724p6rru/sivan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sivan kutty]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/724p6rru/sivan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐபோனுக்காக தனது நண்பர்கள் உதவியுடன் தாத்தாவைக் கொலை செய்த பேத்தியின் செயல் கேரளாவில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.</p><p>கேரளம் மாநிலத்தின் ஆலப்புழாவில் சிவன்குட்டி என்ற முதியவர் (67), கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், ஒரு துணியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.</p><p>அவர் அணிந்திருந்த தங்க செயின், மோதிரம் உள்ளிட்டவை காணாமல் போயிருந்ததால் இந்த வழக்கை கொலை மற்றும் கொள்ளை வழக்காகக் கருதி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிவன்குட்டியின் பேத்தியான 13 வயது சிறுமி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.</p><p>போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்களின் விவரம் வருமாறு:</p><p>தனது காதலனான 17 வயது சிறுவன் மற்றும் அவனது நண்பர்களான 17 வயது சிறுவர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேர் சேர்ந்து சிவன்குட்டியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.</p><p>ஐபோன் மற்றும் பைக் வாங்குவதற்காக சிவன்குட்டியை கொலை செய்ததாக போலீசாரிடம் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். </p><p>சிறுமியின் காதலன், அவனது நண்பர்கள் ஆகியோர் இணைந்து கொலையை செய்ததாகவும், சிறுமி காணொலி அழைப்பில் இருந்தபடி சம்பவத்தை ஒருங்கிணைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். </p><p>மேலும், பாதிக்கப்பட்ட முதியவர் வீட்டில் தனியாக இருந்ததும், ​​ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு இந்தக் கொடூர கொலை நடந்ததும் தெரிய வந்தது. </p><p>அதற்கு முந்தைய தினம் முதியவரின் இளைய மகள் பிரசவத்திற்காக ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அவருக்கு துணையாக இருக்க முதியவரின் மனைவியும் அங்கு சென்றதும் தெரியவந்தது.</p><p>ஐபோனுக்காக தாத்தாவை பேத்தியே கொன்ற சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>1-ந்தேதி வந்து விட்டால் வாடகை செலுத்த வேண்டும்: பாஜக-வில் இருந்து வெளியேறிய ஷேசாத் பூனவாலா சொல்கிறார்</title><link>https://www.maalaimalar.com/news/national/1-%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/1-%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">9d1da023-e650-41de-b7c3-0b1dad461a89</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:01:12 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:01:12.125Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ksmbkfyw/ShehzadPoonawalla001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஷேசாத் பூனவாலா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ksmbkfyw/ShehzadPoonawalla001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ஜ.க. கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான ஷேசாத் பூனவாலா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் வெளியேறியுள்ளார்.</p><p>இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷேசாத் பூனவாலா அவசரமான நிதி மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக ஷேசாத் பூனவாலா கூறியதாவது:-</p><p>எனக்கு வாடகை செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நான் பா.ஜ.க.-வில் இருப்பதற்கான, வீட்டு உரிமையாளர் வாடகை கேட்காமல் இருப்பது இல்லை. 1-ந்தேதியன்று என்னிடம் வாடகை கேட்டுவிடுவார். அரசியல் கட்சிகள் தொண்டர்களுக்கு பணம் வழங்குவதில்லை.</p><p>என்னையோ அல்லது வேறு எந்தவொரு தொண்டரையோ வாழ்வாதார ரீதியாக காப்பாற்றுவது பா.ஜ.க.-வின் பணி அல்ல. ஒரு அரசியல் இயக்கத்தில் இணையும்போது, ​​அது வெறும் வேலையாக இருப்பதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு கொள்கை மீதான ஈர்ப்பு, ஒரு தனிநபர் மீதான பற்று அல்லது அந்த அமைப்பு மீதான ஈடுபாடு ஆகியவற்றின் காரணமாகவே ஒருவர் தொண்டராக மாறுகிறார். அந்த மூன்று அம்சங்களும் இப்போதும் என்னிடம் அப்படியே உள்ளன.</p><p>இவ்வாறு ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த மேற்குவங்க நீதிமன்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-court-issues-arrest-warrant-against-trinamool-congress-mp-mahua-moitra</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-court-issues-arrest-warrant-against-trinamool-congress-mp-mahua-moitra#comments</comments><guid isPermaLink="false">2b74cb62-3a5e-47ab-b65d-be42e4b7e826</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:53:54 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:53:54.089Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Bengal court,MP Mahua Moitra,மேற்கு வங்க நீதிமன்றம்,எம்.பி. மஹூவா மொய்த்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8dqxyda4/New-Project-2026-08-19T172254.693.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த மேற்குவங்க நீதிமன்றம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8dqxyda4/New-Project-2026-08-19T172254.693.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்ட நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. </p><p>மொய்த்ரா கைது செய்யப்பட்டது தொடர்பான உத்தரவு நிறைவேற்ற அறிக்கையை ஆக.28ம் தேதி நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் கிருஷ்ணாநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>என்ன வழக்கு?</h2><p>துளசி மாலை மற்றும் இந்து மத நம்பிக்கைகள் குறித்து மொய்த்ரா பேசிய சில கருத்துக்கள் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக மேற்கு வங்கத்தின் கூர்னி பகுதியைச் சேர்ந்த 6 பெண்கள் மற்றும் பாஜகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் இந்திய ஆயுதப் படை மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, மஹுவா மொய்த்ராவுக்கு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுகளை அவமதிப்பாக கூறி கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>மஹுவா மொய்த்ரா தரப்பு விளக்கம்</h2><p>நீதிமன்றத்திற்கு வெளியே அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மஹுவா மொய்த்ரா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அவர் நீதிமன்றத்திற்கு வந்தால் கூட்டமாகச் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், அவர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. </p><p>ஆனால், நீதிமன்றம் முதலில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது.</p>]]></content:encoded></item><item><title>கும்மிடிப்பூண்டி - கூடூர் இடையே புதிய ரெயில் வழித்தடம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/kummidippundi-koodur-between-new-rail-route-union-cabinet-approval</link><comments>https://www.maalaimalar.com/news/national/kummidippundi-koodur-between-new-rail-route-union-cabinet-approval#comments</comments><guid isPermaLink="false">de831405-60d0-4e0b-8393-8802aac1dc44</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:48:21 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:48:21.448Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Union Ministry,மத்திய அமைச்சரவை ஒப்புதல்,Gummudipoondi,புதிய ரெயில் பாதை,கும்மிடிப்பூண்டி,New train track</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/gxc5ikuo/Ashwini-vaishnaw.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Union Ministry Aswini Vaishnaw]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/gxc5ikuo/Ashwini-vaishnaw.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் 410 கி.மீ தூரத்திற்கு புதிய ரெயில் பாதைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>அதன்படி, ஹவுரா- சென்னை பல்வழித்தட திட்டத்தின்கீழ் கும்மிடிப்பூண்டி முதல் கூடூர் வரை மூன்றாவது மற்றும் 4வது ரெயில்வே வழித்தடங்கள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>கும்மிடிப்பூண்டி- கூடூர் தடத்தில் ரெயில் பாதை அமைப்பதன் மூலம் தென் மாநிலங்கள், வட மாநிலங்களுக்கு இடையே பயணம் விரைவாகும்.</p><p>ரூ.2,229 கோடியில் புதிய வழித்தடங்கள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.</p><p>ரூ.13,041 கோடி மதிப்பில் 5 ரெயில்வே வழித்தட பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெண்டர் மோசடி வழக்கு - ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/tender-fraud-case-former-aam-aadmi-party-minister-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/tender-fraud-case-former-aam-aadmi-party-minister-arrested#comments</comments><guid isPermaLink="false">23132ed9-e758-49e1-a626-4821dd8b8ff0</guid><pubDate>Wed, 19 Aug 2026 09:01:31 +0000</pubDate><atom:updated>2026-08-19T09:01:31.029Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Aam Aadmi Party,ஆம் ஆத்மி கட்சி,satyendar jain,tender scam case,சத்யேந்திர ஜெயின்,டெல்லி குடிநீர் வாரியம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/cvuq7qfg/New-Project-2026-08-19T140852.117.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெண்டர் மோசடி வழக்கு - ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் கைது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/cvuq7qfg/New-Project-2026-08-19T140852.117.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி குடிநீர் வாரிய டெண்டர் ஊழல் வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உட்பட 6 பேரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்துள்ளனர்.</p><p>டெல்லி குடிநீர் வாரியத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், ஐஏஎஸ் அதிகாரியுமான உதித் பிரகாஷ் ராய், முன்னாள் ஒப்பந்த ஆலோசகர் அங்கித் ஸ்ரீவஸ்தவா, ஏஎன் எண்டர்பிரைசஸ் உரிமையாளர் நாகேந்திர யாதவ், யூரோடெக் என்விரான்மென்ட் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் ராஜா குமார் குர்ரா மற்றும் ஸ்ரீஜன்ஹார் உரிமையாளர் பங்கஜ் வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>டெல்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை  மேம்படுத்துதல் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் ரூ.1.52 கோடி லஞ்சம் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சாதகமாக டெண்டர் நிபந்தனைகளில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையால் கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. </p><p>போதிய ஆதாரங்கள் திரட்டப்பட்டதைத் தொடர்ந்து, அனைவரும் கைது செய்யப்பட்டு, டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p>சத்யேந்தர் ஜெயினின் கைதைத் தொடர்ந்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று விமர்சித்துள்ளார். அரசியல் எதிரிகளைக் குறிவைக்க, பாஜக பொய்க் குற்றச்சாட்டுகளையும், கைது நடவடிக்கையையும் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>“பாஜக ஆம் ஆத்மி கட்சிக்கு பயப்படுகிறது என்பதற்கு இன்னும் எத்தனை ஆதாரங்கள் தேவை? அந்த குடிநீர் வாரிய டெண்டர் விடப்பட்ட நேரத்தில், சத்யேந்திரா சிறையில் இருந்தார். சிறையிலிருந்து அவர் எப்படி பொறுப்பேற்றார்? </p><p>உண்மையான காரணம் என்னவென்றால், சத்யேந்திர ஜெயின் பஞ்சாபின் ஆம் ஆத்மி இணைப் பொறுப்பாளராக இருக்கிறார், மேலும் அங்கு தேர்தல்கள் வரவிருக்கின்றன.” என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஊடகப் பொறுப்பாளர் அனுராக் தண்டா எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>NEET UG Counseling 2026: முதல் கட்ட இட ஒதுக்கீடு முடிவுகள் வெளியீடு- MBBS, BDS ஒதுக்கீட்டுப் பட்டியலைப் பெறுவது எப்படி?</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-ug-counseling-2026-round-1-seat-allotment-results-how-to-check-mbbs-bds-list</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-ug-counseling-2026-round-1-seat-allotment-results-how-to-check-mbbs-bds-list#comments</comments><guid isPermaLink="false">aca361a9-d475-45dc-ab64-7f25e456fd3e</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:44:24 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:44:24.318Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இட ஒதுக்கீடு,நீட் 2026,NEETUG2026,MCCResult2026,MBBSAdmissions,MedicalCounselling,மருத்துவக் கலந்தாய்வு,நீட் யுஜி தரவரிசை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/9dbcfoxg/neeeee.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NEET 2026 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/9dbcfoxg/neeeee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>NEET 2026 கலந்தாய்வின் முதல் சுற்று இட ஒதுக்கீட்டு முடிவு mcc.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். NEET UG ஒதுக்கீட்டு முடிவுக்கான நேரம், பதிவிறக்க இணைப்பு, அறிக்கை சமர்ப்பிக்கும் தேதிகள் மற்றும் இட ஒதுக்கீட்டு முடிவைச் சரிபார்க்க வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.</p><p>மருத்துவக் கலந்தாய்வுக் குழு, MCC நீட் 2026 கலந்தாய்வின் முதல் சுற்று இட ஒதுக்கீட்டு முடிவை இன்று, ஆகஸ்ட் 19, 2026 அன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட் யுஜி முதல் சுற்று கலந்தாய்வுச் செயல்பாட்டில் பங்கேற்று , தங்களின் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு விருப்பங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ MCC கலந்தாய்வு இணையதளம் மூலம் தங்களின் ஒதுக்கீட்டு நிலையைச் சரிபார்க்கலாம். </p><p>நீட் யுஜி தரவரிசை, பூர்த்தி செய்யப்பட்ட விருப்பங்கள், பிரிவு, இடங்களின் இருப்பு மற்றும் பிற கலந்தாய்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஒதுக்கப்பட்ட மருத்துவ அல்லது பல் மருத்துவ இடத்தை நீட் 2026 முதல் சுற்று இட ஒதுக்கீட்டு முடிவு எடுத்துக்காட்டும். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/b0sjm2qv/neet.jpg" /></figure><p>முடிவு வெளியான பிறகு, இடம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒதுக்கீட்டுக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து, காலக்கெடுவுக்குள் ஒதுக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும்.</p><p>மருத்துவக் கலந்தாய்வுக் குழு 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட இட ஒதுக்கீட்டு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in, https://mcc.nic.in பக்கத்தில் வெளியிடுகிறது. அகில இந்திய ஒதுக்கீடு, மத்திய பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ், ஜிப்மர்  மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் பி.எஸ்சி நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களின் ஒதுக்கீடு நிலையை உடனடியாகச் சரிபார்க்கலாம்.</p><h2>இட ஒதுக்கீட்<strong>டுப் பட்டியலைச் சரிபா</strong>ர்க்கும் எளிய வழிமுறைகள்</h2><p>அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in, https://mcc.nic.in பக்கத்திற்குச் செல்ல வேண்டும். முகப்புப் பக்கத்தில் உள்ள 'UG Medical Counseling' பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் தோன்றும் '<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-chief-ministers-medical-insurance-coverage-raised-to-rs-25-lakh">NEET UG </a>Round 1 Seat Allotment Result 2026' என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். திரையில் தோன்றும் PDF கோப்பில் உங்களது ரோல் எண் மற்றும் பெற்ற தரவரிசையைத் தேடி ஒதுக்கீட்டை உறுதிசெய்யலாம். அதன்பின், உங்களது உள்நுழைவுத் தகவல்களைப் பயன்படுத்திக் கணக்கில் புகுந்து, அதிகாரப்பூர்வ ஒதுக்கீட்டுக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><h2>சேர்க்கை <strong>நடைமுறைகள்</strong></h2><p>இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ அல்லது பல் மருத்துவக் கல்லூரிகளில் நாளை (ஆகஸ்ட் 20) முதல் ஆகஸ்ட் 25, 2026 வரை நேரில் சென்று சேர வேண்டும். கல்லூரி அறிக்கையின் போது அசல் சான்றிதழ்கள், நீட் மதிப்பெண் சான்றிதழ், நுழைவுச் சீட்டு, அடையாளச் சான்று மற்றும் ஒதுக்கீட்டுக் கடிதம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். முதல் சுற்றில் ஒதுக்கீடு பெற்ற கல்லூரியில் சேர விரும்பாதவர்கள் 'Free Exit' முறையில் அபராதம் இன்றி விலகலாம் அல்லது ஆகஸ்ட் 24 முதல் தொடங்கவுள்ள இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்று உயர் விருப்பக் கல்லூரியைத் தேர்வு செய்ய விண்ணப்பிக்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>பி.எம்.கேர்ஸ் வசூலித்த ரூ.1,162.92 கோடியில் ரூ.16.47 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது: தணிக்கை அறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/only-16-47-crore-spent-from-1162-92-crore-pm-cares-audit-report</link><comments>https://www.maalaimalar.com/news/national/only-16-47-crore-spent-from-1162-92-crore-pm-cares-audit-report#comments</comments><guid isPermaLink="false">7884463b-b696-4de4-909e-adbb8031edba</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:32:43 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:32:43.949Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தணிக்கை அறிக்கை,audit report,pmcares,கொரோனா நிதி,பிஎம் கேர்ஸ் நிதி,Corona Fund</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/y3z86xek/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பி.எம்.கேர்ஸ் தணிக்கை அறிக்கை]]></media:title><media:description type="html"><![CDATA[ PM cares audit report]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/y3z86xek/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">பி.எம். கேர்ஸ்</a> நிதியானது கடந்த 2023-24 மற்றும் 2024-25 ஆகிய நிதியாண்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ரூ.1,162.92 கோடி நன்கொடையாக வசூல் செய்யப்பட்டது. ஆனால் இந்த காலகட்டத்தில் ரூ.16.47 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கைகள் (audit report) தெரிவித்துள்ளன.</p><h3><strong>பி.எம்.கேர்ஸ் நிவாரண முகமை</strong></h3><p>இந்தியாவில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE">கொரோனா</a> தொற்று காரணமாக பி.எம்.கேர்ஸ் (PMcares) என்ற அவசரகால நிவாரண ஆணையம் 27 மார்ச் 2020 அன்று அமைக்கப்பட்டது.</p><p>2022-23 ஆம் ஆண்டில், இந்த முகமையானது நன்கொடைகளாக ரூ. 912.21 கோடியை வசூலித்த நிலையில், ரூ. 439.38 கோடியை செலவிட்டது. இதில், பெருந்தொற்றின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக ரூ. 346 கோடியும், கிட்டத்தட்ட 1 லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகளைக் கொள்முதல் செய்வதற்காக ரூ. 91.87 கோடியும் செலவிட்டது.</p><p>பெருந்தொற்றுக்குப் பிறகு, இந்த நிதிக்கு வரும் நன்கொடைகள் குறைந்துள்ளன. 2020-21 ஆம் ஆண்டில், இந்த நிதியிலிருந்து அதிகபட்சமாக ரூ. 7,678.68 கோடி வசூலானது. மேலும் இந்த நிதியில் இருந்து ரூ. 3,976.17 கோடி செலவிடப்பட்டது.</p><p>2021-22 ஆம் ஆண்டில், செலவினம் ரூ.3,716.29 கோடியாகவும், நன்கொடைகள் ரூ. 1,936.88 கோடியாகவும் இருந்தன. 2024-25 ஆம் ஆண்டில், நன்கொடையாக ரூ. 479.97 கோடியை வசூலித்தது. அதே சமயம் கோவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக வெறும் ரூ. 87.85 லட்சத்தை மட்டுமே செலவிட்டது.</p><p>2023-24 ஆம் ஆண்டில், இது ரூ. 682.94 கோடியை வசூலித்து, ரூ. 15.59 கோடியை செலவிட்டது. 31 மார்ச், 2025 அன்று முடிவடைந்த ஆண்டுக்கான வரவுகள் மற்றும் செலவுகள் கணக்கின்படி, நிதியத்தின் கணக்குகளில் ரூ. 8,452.06 கோடி உள்ளது. இதில், ரூ. 7,846.65 கோடி நிலையான வைப்புத்தொகையில் இருந்தது.</p><h3><strong>நன்கொடைகள்</strong></h3><p>மொத்தத்தில், இந்த நிதியானது மார்ச் 2020-ல் தொடங்கப்பட்டதிலிருந்து நன்கொடையாக ரூ. 14,766.95 கோடியை வசூலித்துள்ளது மற்றும் 2024-25 வரை ரூ. 8,133.29 கோடியை செலவிட்டுள்ளது. இதில் பெரும்பாலான செலவினங்கள் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நிகழ்ந்துள்ளன.</p><h3><strong>தணிக்கை அறிக்கை</strong></h3><p>இந்த நிலையில் பிம் கேர்ஸ் நிதியின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையை (audit report) சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>மேலும் அந்த பதிவில், “கொரோனா காலத்தில் நன்கொடையாக வசூலிக்கப்பட்ட ரூ.8,452 கோடியில் வெறும் 0.01 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மாநில பொருளாதார காப்பக நிதி ஏன் இவ்வளவு பெரிய தொகையை பயன்படுத்தாமல் முடக்கி வைத்துள்ளது.</p><p>இந்த நிதியை வசூலித்த முகமைகள், ரூ.324 கோடியை திருப்பி அளித்துள்ளன (refund). ஆனால் இந்த பணம் எதற்காகவும், ஏன் திருப்பி அளிக்கப்பட்டது என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை. எந்த முகமை பணத்தை திருப்பி அளித்தது? பழுதடைந்த உபகரணங்களுக்கான பொறுப்பில் இருந்து தப்பிக்கவா இந்த பணம் திருப்பி அளிக்கப்பட்டது.</p><p>தணிக்கை அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள குறிப்புகள் ஏன் பதிவேற்றப்படவில்லை. பேரிடர்களின் போது குடிமக்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு முகமை, வெளிநாட்டு ஆதாரங்கள் உட்பட ஆயிரக்கணக்கான கோடிகளை திரட்டியுள்ளது.</p><p>ஆனால் அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. பி.எம்.கேர்ஸ் நிதியானது தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு தகவல்களை தெரிவிக்க மறுப்பதன் மூலம், பொதுமக்களின் பார்வையில் இருந்து தொடர்ந்து தப்பித்து வருகிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எஸ்.பி.ஐ ஏடிஎம் ரூ.1.93 கோடி மோசடி வழக்கு: முன்னாள் வங்கி அதிகாரியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது குஜராத் உயர் நீதிமன்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sbi-atm-rs-1-93-crore-fraud-case-gujarat-high-court-rejects-bail-of-former-bank-officer</link><comments>https://www.maalaimalar.com/news/national/sbi-atm-rs-1-93-crore-fraud-case-gujarat-high-court-rejects-bail-of-former-bank-officer#comments</comments><guid isPermaLink="false">59a0579b-9890-40e8-a729-9c3ee58505ec</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:19:52 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:19:52.198Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cybercrime,GujaratHighCourt,FinancialCrime,CrimeNews,ATMScam,குஜராத்உயர்நீதிமன்றம்,ஏடிஎம்மோசடி,வங்கிமோசடி,நிதிமுறைகேடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/yw68y88s/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GujaratHighCourt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/yw68y88s/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா மாவட்டம் ராஜ்பிப்லா எஸ்பிஐ கிளை ஏடிஎம் மற்றும் வங்கி மென்பொருளில் மோசடி செய்து ரூ.1.93 கோடியை சுருட்டிய வங்கி அதிகாரியின் இரண்டாவது ஜாமீன் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.</p><h2>வங்கி<strong>யில் நடந்த முறைகே</strong>டு </h2><p>குஜராத் ராஜ்பிப்லா <a href="https://www.maalaimalar.com/news/national/103-year-old-woman-donates-life-savings-for-assam-flood-victims">எஸ்பிஐ</a> கிளையில் கேஷ் ஆஃபீசராக பணியாற்றிய பாங்மோய் சக்ரவர்த்தி, வங்கியின் பணக் பெட்டகத்திலிருந்து பணத்தை எடுத்து ஏடிஎம் மற்றும் ரொக்க வைப்பு இயந்திரங்களில் நிரப்பும் பொறுப்பில் இருந்தார். அவர் தனது நிர்வாக அதிகாரப்பூர்வ உள்நுழைவு சான்றுகளைப் பயன்படுத்தி, ஏடிஎம் அமைப்பில் குறைந்தபட்ச இருப்புத் தொகை காட்டுவது போல் மென்பொருளை மாற்றி அமைத்து, பெரும் தொகையை ரகசியமாகத் திருடி வந்துள்ளார். மேலும், இந்த முறைகேட்டை மறைப்பதற்காக வங்கியின் மைய வங்கியியல் அமைப்பில் போலி வைப்புத் தொகைப் பதிவுகளை அவர் உருவாக்கியுள்ளார்.</p><h2>எந்தெந்த ஏ<strong>டிஎம்களில் எவ்வள</strong>வு பணம் கைமாறியது?</h2><p>விசாரணையில் அவர் நான்கு முக்கிய ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.1.93 கோடியைச் சுருட்டியது கண்டறியப்பட்டது, ராஜ்பிப்லா ஸ்டேஷன் ரோட்டில் உள்ள ஏடிஎம்மில் ரூ.39.98 லட்சம், போய்ச்சாவில் உள்ள சுவாமிநாராயண் குருகுல் ஏடிஎம்மில் ரூ.39.92 லட்சம், ஏடிஎம் எண் 465624-ல் இருந்து ரூ.62 லட்சம், சந்தோஷ் சவுக்தி ஏடிஎம் எண் 465625-ல் இருந்து ரூ.51.64 லட்சம் கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>பணப்ப<strong>ரிமாற்றம்</strong></h2><p>சக்ரவர்த்தி திருடிய தொகையை உத்ரபிரதேசம், பீஹார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள தனது உறவினர்களின் வங்கிச் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். அங்கிருந்து UPI, RTGS மற்றும் NEFT மூலமாக ஐசிஐசிஐ வங்கி கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பியுள்ளார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் ரூ.2.34 கோடி மதிப்பிலான பணப்பரிவர்த்தனைகள் சந்தேகத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>அக்டோபர் 17, 2025 அன்று அவர் நஸ்வாடி கிளைக்கு மாற்றப்பட்ட போதிலும், நவம்பர் 6 வரை அவரது கேஷ் ஆஃபீசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் செயல்பாட்டில் இருந்துள்ளது. இதன் மூலம் அக்டோபர் 28, 30 மற்றும் நவம்பர் 3 ஆகிய தேதிகளில் முறைகேடான பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. ஏடிஎம்களில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் அவரது மொபைல் இருப்பிடத் தரவு ஆகியவை குற்றத்தை உறுதிப்படுத்தும் வலுவான ஆதாரங்களாக அமைந்தன.</p><h2>நீதி<strong>மன்றம் உத்தரவு</strong></h2><p>பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நவம்பர் 28, 2025 முதல் சிறையில் இருக்கும் பாங்மோய் சக்ரவர்த்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் கோரினார். ஆனால், நீதிபதி எச்.டி.சுதார் அடங்கிய அமர்வு, "பொருளாதாரக் குற்றங்கள் திட்டமிட்டு நடத்தப்படும் வெள்ளைச் சட்டைக் குற்றங்கள்" என்று சுட்டிக்காட்டியது. மின்னணு மற்றும் நிதி ஆதாரங்கள் இதில் அடங்கியிருப்பதால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது எனக் கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.</p> ]]></content:encoded></item><item><title>போபாலில் &apos;ஜென் ஆல்பா&apos; பள்ளி மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/gen-alpha-students-protest-in-bhopal-over-school-merger-plan</link><comments>https://www.maalaimalar.com/news/national/gen-alpha-students-protest-in-bhopal-over-school-merger-plan#comments</comments><guid isPermaLink="false">0b1ccab4-6c18-4c4b-8612-0cecac126f01</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:14:49 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:14:49.118Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>NCERT,கேந்திரிய வித்யாலயா,Bhopal Protest,போபால் போராட்டம்,Gen Alpha Protest,Kendriya Vidyalaya Merger,DMS Bhopal,மாணவர்கள் எதிர்ப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ifecjnf4/Gen-Alpha-Protest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gen Alpha Protest ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ifecjnf4/Gen-Alpha-Protest?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">மத்திய பிரதேச</a> மாநிலம் போபாலில் உள்ள புகழ்பெற்ற பிராந்திய மாதிரிப் பள்ளியை, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE">கேந்திரிய வித்யாலயா </a>சங்கத்துடன் இணைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக, அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் வீதியில் இறங்கி தங்களின் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.</p><p>மத்திய அரசின் இந்தத் திடீர் முடிவால், பல தசாப்தங்கலாகத் தனித்துவமாகச் செயல்பட்டு வரும் தங்களது நிறுவனத்தின் நோக்கம் முற்றிலும் சிதைந்துவிடும் என்று மாணவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p><h2>முழக்கமிட்ட 'ஜென் ஆல்பா' தலைமுறை:</h2><p>போபாலில் உள்ள 'டெமான்ஸ்ட்ரேஷன் மல்டிபர்ப்பஸ் பள்ளி' வளாகத்திற்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள், கைகளில் பதாகைகளை ஏந்தி, இணைப்புத் திட்டத்திற்கு எதிராக ஆக்ரோஷமாக முழக்கங்களை எழுப்பினர். </p><p>தற்போதைய நவீனத் தலைமுறையைச் சேர்ந்த பள்ளி சிறுவர்கள், தங்களின் கல்வி உரிமைக்காகவும், பள்ளியின் தனித்துவத்திற்காகவும் திரண்டது போபால் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>போராட்டத்திற்கான காரணம் என்ன?</h2><p>மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மூலம் கடந்த 1965ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ரீஜனல் பள்ளிகள் தொடங்கப்பட்டன.</p><p>இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் (போபால், அஜ்மீர், மைசூர் மற்றும் புவனேஸ்வர்) மட்டுமே இத்தகைய மாதிரிப் பள்ளிகள் நிறுவப்பட்டன. வழக்கமான கல்வி முறையைப் பின்பற்றாமல், புதிய கற்பித்தல் முறைகளை உருவாக்குவதற்கும், கல்வியில் புதுமையான ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகளைச் செய்வதற்கும் இந்த ரீஜனல் பள்ளிகள் பிரத்யேகமாகத் தோற்றுவிக்கப்பட்டன. </p><p>தற்போது இந்தப் பள்ளியைப் பொதுவான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுடன் இணைப்பதன் மூலம், இதன் ஆராய்ச்சித் தன்மையும், தனித்துவமான அடையாளமும் முற்றிலும் அழிந்துவிடும் என்று மாணவர்கள் தரப்பில் கூறிவருகின்றனர்.</p><h2>பள்ளி முதல்வரிடம் மனு - தீவிரமடையும் போராட்டம்:</h2><p>போராட்டத்தின் இறுதியாக, மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிராந்தியக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எஸ்.கே. குப்தாவைச் சந்தித்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் அதிகாரப்பூர்வக் கோரிக்கை மனுவை அளித்தனர்.</p><p>அந்த மனுவில், "இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தங்களது பள்ளியை மேலும் வலுப்படுத்தி, கல்வி ஆராய்ச்சி மையமாகவே தொடர அனுமதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.</p><p>மேலும், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் உடனடியாகச் செவிசாய்க்கவில்லை எனில், அடுத்தடுத்த கட்டங்களாகத் தங்களது போராட்டத்தை மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகளை நோக்கித் தீவிரப்படுத்தப் போவதாகவும் பள்ளி மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து.. வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/fire-accident-in-multi-storey-hotel-9-killed-including-bangladeshis</link><comments>https://www.maalaimalar.com/news/national/fire-accident-in-multi-storey-hotel-9-killed-including-bangladeshis#comments</comments><guid isPermaLink="false">c6f27add-2c89-466e-9240-1065efd801ad</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:53:53 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:53:53.066Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,கொல்கத்தா,Kolkata,hotel fire accident,west bengal,தீ விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/tvbtkpha/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ Kolkata Hotel Fire]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/tvbtkpha/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்கத்தில்</a> 5 மாடி ஹோட்டலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வயது குழந்தை உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>கொல்கத்தாவில் தீ விபத்து</strong></h3><p>மேற்கு வங்க மாநிலம் கொல்கதாவில் உள்ள ஹோட்டலில் இன்று அதிகாலை 1:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.</p><p>இதையடுத்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தீ விபத்து</a> ஏற்பட்ட பகுதிக்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு,  காவல்துறையினரும் பேரிடர் மேலாண்மை துறையினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.</p><h3>வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் உயிரிழப்பு</h3><p>இந்த விபத்து குறித்து பேசிய அமைச்சர் கெளஷிக் செளத்ரி, “நாங்கள் இறந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த முயற்சித்து வருகிறோம். விபத்து ஏற்பட்ட இந்த கட்டிடத்தின் நிலை மிக மோசமாக உள்ளது.</p><p>தீ விபத்தில் நமது நாட்டை சேர்ந்தவர்களும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.</p><p>இந்த கட்டிடத்திற்குள் பல ஹோட்டல்கள் உள்ளன. இங்கு என்ன நடக்கிறது என்பதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.</p><p>தீ விபத்திற்கான காரணம் மின்கசிவாக இருக்கலாம். ஆனால் தடயவியல் பரிசோதனை மூலம்தான் தீ விபத்துக்கான தெளிவான காரணம் தெரியவரும்.</p><p>கட்டிட நிர்வாகம் அடிப்படை பாதுகாப்பு மற்றும் கட்டுமான விதிமுறைகளை பின்பற்றவில்லை. ஹோட்டலின் செயல்பாட்டில் பல முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.</p><h3><strong>மீட்பு நடவடிக்கை</strong></h3><p>கொல்கத்தாவில் நடந்த தீ விபத்து குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து 80 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>அடர்த்தியான புகை காரணமாக தீயணைப்பு வீரர்கள் படிக்கட்டுகளில் ஏறி மேல் தளங்களை அடைவது கடினமாக உள்ளது.</p><p>விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. </p><p>சிக்கியவர்களை மீட்பதும், தீ விபத்திற்கான காரணங்களை கண்டறிவதுமே எங்களின் முன்னுரிமையாக உள்ளது.</p><p>கட்டிட உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவருக்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறை தொடங்கி உள்ளது” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>103 வயதில் ரூ.1.54 லட்சம் நிதி உதவி அளித்த மூதாட்டி - தனது வாழ்நாள் சேமிப்பை அப்படியே வழங்கினார்! </title><link>https://www.maalaimalar.com/news/national/103-year-old-woman-donates-life-savings-for-assam-flood-victims</link><comments>https://www.maalaimalar.com/news/national/103-year-old-woman-donates-life-savings-for-assam-flood-victims#comments</comments><guid isPermaLink="false">57656c8e-3f5e-4615-abb8-f5d42b5b2181</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:51:21 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:51:21.129Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நிதியுதவி,Assam Flood,அசாம் வெள்ளம்,kanaklatha das,flood donation,கனக்லதா தாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/zq750yas/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அசாம் வெள்ள நிதியுதவி]]></media:title><media:description type="html"><![CDATA[ Assam Flood Relief]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/zq750yas/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">அசாமில்</a> வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நன்கொடையாக 1.54 லட்சம் ரூபாயை 103 வயது மூதாட்டி அளித்துள்ளார்.</p><h3>கமிஷனர் அலுவலகம் சென்ற மூதாட்டி</h3><p>அசாம் மாநிலம் சிராஜூலியில் உள்ள மஜ்ரோய்மாரி கிராமத்தில் கனக்லதா தாஸ் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். </p><p>சமீபத்தில் கிழக்கு அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து அந்த பகுதி மக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் குறித்து அறிந்து, 264 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கமிஷனர் அலுவலத்திற்கு மூதாட்டி சென்றார்.</p><h3>நிதி உதவி</h3><p>தான் பல ஆண்டுகளாக சேமித்த 1.54 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு கமிஷனர் அலுவலத்திற்கு நேரில் சென்றார்.</p><p>அங்கு, ஆணையர் மிருதுல் யாதவை நேரில் சந்தித்து, தனது வாழ்நாள் சேமிப்பில் இருந்து முழுவதுமாக எடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 77 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2,000 வீதம் நிதி உதவியாக வழங்கினார்.</p><h3><strong>மூதாட்டியிடம் ஆசி பெற்ற மாவட்ட ஆணையர்</strong></h3><p>மூதாட்டி அளித்த இந்த நிதியுதவி குறித்து மாவட்ட ஆணையர் கூறுகையில், “எனது இத்தனை ஆண்டுகால சேவையில், இத்தகைய தூய்மையான மற்றும் தன்னலமற்ற மனிதநேயமிக்க செயலை நான் அரிதாகவே பார்த்துள்ளேன்.</p><p>உண்மையான கருணை மற்றும் குடிமை பொறுப்பு என்றால் என்ன என்பதை கனகலதா தாஸ் எங்களுக்கு கற்று கொடுத்துள்ளார்.</p><p>இன்று எனக்கு இவர் அளித்த ஆசி, நான் பெறக்கூடிய எந்தவொரு கெளரவத்தையும் விட மதிப்பு வாய்ந்தது” என்று ஆணையர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சத்துணவில் உப்புக்கு பதிலாக டிடர்ஜென்ட் பவுடர் - 40 பள்ளி மாணவர்களின் உடல்நலம் பாதிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/detergent-mistaken-for-salt-in-school-meal-40-students-hospitalised</link><comments>https://www.maalaimalar.com/news/national/detergent-mistaken-for-salt-in-school-meal-40-students-hospitalised#comments</comments><guid isPermaLink="false">1b2b3180-62e6-4a7b-b3e3-297cdda77c4b</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:01:43 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:01:43.299Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,food poisoning,MidDay MealHorror,சத்துணவுவிபத்து,NalandaSchool,DetergentInFood,SchoolStudentsIll,மதியஉணவுஅலட்சியம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/m9373txt/Food-Poisoning" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Food Poisoning ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/m9373txt/Food-Poisoning?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகார் </a>மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய சத்துணவில், உப்புக்கு பதிலாக தவறுதலாக டிடர்ஜென்ட் பவுடர் கலக்கப்பட்டதால், உணவை உண்ட 40-க்கும் மேற்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பள்ளி மாணவர்கள்</a> கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>என்ன நடந்தது?</h2><p>நாலந்தா மாவட்டம் நூர்சராய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரசி நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது. அன்றைய தினம் மாணவர்களுக்கு சோயாபீன்ஸ் கூட்டு பரிமாறப்பட்டது.</p><p>உணவை சாப்பிட்ட மாணவர்கள், அதில் உப்பு குறைவாக இருப்பதாக சமையலரிடமும் ஆசிரியர்களிடமும் கூறியுள்ளனர். அப்போது, சமையல் அறையில் இருந்த ஊழியர்கள், உப்புக்கு பதிலாக அங்கிருந்த டிடர்ஜென்ட் பவுடரை தவறுதலாக எடுத்து மாணவர்களுக்குப் பரிமாறியுள்ளனர். </p><p>அது சலவை தூள் என்று தெரியாமல் மாணவர்களும் உணவோடு சேர்த்து அதனைச் சாப்பிட்டுள்ளனர்.</p><h2>மருத்துவமனையில் குவிந்த பெற்றோர்:</h2><p>டிடர்ஜென்ட் பவுடர் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, மாணவர்களுக்கு அடுத்தடுத்து கடுமையான வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 40 மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பள்ளியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.</p><p>உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் அனைத்து மாணவர்களையும் மீட்டு 'பீகார் ஷெரீஃப் மாதிரி மருத்துவமனைக்கு' சிகிச்சைக்காக அவசர அவசரமாக அனுமதித்தனர். </p><p>இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>அமைச்சரின் அதிரடி ஆய்வு மற்றும் எச்சரிக்கை:</h2><p>பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நாலந்தா மாவட்ட சிவில் சர்ஜன் டாக்டர் ஜெய் பிரகாஷ் சிங் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். "தற்போது அனைத்து குழந்தைகளும் ஆபத்து கட்டத்தைத் தாண்டி பாதுகாப்பாக உள்ளனர். தொடர்ந்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று சிவில் சர்ஜன் தெரிவித்துள்ளார்.</p><p>இச்சம்பவம் குறித்து அறிந்த பீகார் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷ்ரவண் குமார் நேரடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று, சிகிச்சை பெற்று வரும் மாணவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.</p><p>செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஷ்ரவண் குமார், "மாணவர்களுக்குத் தரமான சிகிச்சை வழங்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>பள்ளி மதிய உணவு தயாரிப்பிலும், அதனைப் பரிமாறுவதிலும் இவ்வளவு பெரிய அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.</p><h2>கேள்விக்குறியாகும் மாணவர்களின் பாதுகாப்பு:</h2><p>மதிய உணவு சமைக்கும் இடத்தில், உணவுப் பொருட்களுக்கு அருகில் டிடர்ஜென்ட் பவுடர் ஏன் வைக்கப்பட்டது? மற்றும் அதனைச் சோதிக்காமல் மாணவர்களுக்கு எப்படிப் பரிமாறினார்கள் என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் உயிருடன் விளையாடிய இந்த அலட்சியப் போக்கு பீகாரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பேய் பீதியால் அரசு விடுதியை காலி செய்து ஓடிய 600 மாணவர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/national/600-students-flee-maharashtra-ashram-school-amid-ghost-rumours</link><comments>https://www.maalaimalar.com/news/national/600-students-flee-maharashtra-ashram-school-amid-ghost-rumours#comments</comments><guid isPermaLink="false">8e38b867-a9de-4cd7-b185-b0331a24cf69</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:40:00 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:40:00.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள்,அரசு விடுதி,பேய் பீதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/6nbo4gct/ghost.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/6nbo4gct/ghost.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அரசு விடுதியில் பேய் உலாவுவதாக எழுந்த வதந்தியால் ஒரே நாளில் 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.</strong></em></p><h2><strong>நள்ளிரவில் கொலுசு சத்தம்</strong></h2><p>மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்தின் மேல்காட் மலைப்பகுதியில் உள்ள சிகல்தாராவில் டோமா அரசு பழங்குடியின உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவ- மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த மாதம் 22-ந்தேதி முதல், இந்த விடுதியில் தங்கியிருந்த சில மாணவிகள் தங்களுக்கு நள்ளிரவில் விசித்திரமான சத்தங்கள் கேட்பதாக பயத்துடன் காப்பாளரிடம் கூறினர். குறிப்பாக, நள்ளிரவு வேளையில் யாரோ கொலுசு அணிந்து நடப்பது போன்ற சத்தமும். விசித்திரமான முனங்கல்களும் கேட்பதாக தெரிவித்தனர்.</p><p>இந்தநிலையில் சில மாணவிகள் விசித்திரமாக நடந்து கொள்ள தொடங்கினர். சிலர் திடீரென மயங்கி விழுந்தும், சிலர் அழுதுகொண்டே ஆக்ரோஷமாக பயங்கர சத்தத்துடன் சிரிக்கும் விசித்திரமான அறிகுறிகளை வெளிப்படுத்தினர். இதனை நேரில் பார்த்த மற்ற மாணவர்களுக்கும், கிராம மக்களுக்கும் விடுதிக்குள் அமானுஷ்ய சக்தி அல்லது பேய் புகுந்துவிட்டதாக கூறிய வதந்தி காட்டுத்தீயாக பரவியது. எஸ்டேட் பகுதியில் உள்ள மரத்தை வெட்டியதால் தான் பேய் கோபமடைந்துவிட்டது என உள்ளூர் மக்களும் தங்களுக்குள் திகில் கதைகளை கிளப்பினர்.</p><h2><strong>ஒரே நாளில் காலியான விடுதி</strong></h2><p>பயம் உச்சக்கட்டத்தை எட்டியதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பற்ற சூழல் என நினைத்து ஒரே நாளில் அவசரமாக அழைத்துச்சென்றனர். 345 மாணவிகள், 263 மாணவர்கள் என மொத்தம் 608 பேர் தங்களது உடைமைளை தூக்கிக்கொண்டு இரவோடு இரவாக விடுதியை விட்டு வெளியேறி தங்களது சொந்த ஊர்களுக்கு ஓட்டம் பிடித்தனர்.</p><p>600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரே நாளில் மாயமாய் மறைந்து விடுதியே வெறிச்சோடியது மாவட்ட அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><h2><strong>மனநல நிபுணர்கள் விளக்கம்</strong></h2><p>இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து மாவட்ட அரசு பொது மருத்துவமனையின் மனநல மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் உடனடியாக அந்தப்பள்ளிக்கு விரைந்தனர். பாதிக்கப்பட்ட மாணவிகளை தீவிரமாக பரிசோதித்த டாக்டர்கள், அங்கு எந்தவொரு அமானுஷ்ய சக்தியோ அல்லது பேயோ இல்லை என்பதை திட்டவட்டமாக கூறினர். இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், "மாணவிகளுக்கு ஏற்பட்டது பேய் பிடிப்பு அல்ல; இது கடுமையான மனஅழுத்தம் மற்றும் பயத்தினால் உண்டாகும் 'மாஸ் ஹிஸ்டீரியா' (கூட்டு மனப்பிராந்தி) என்ற தற்காலிக மனநல பாதிப்பாகும். ஒருவர் பயப்படுவதை பார்த்து மற்றவர்களும் அதேபோல் கற்பனை செய்துகொண்டு பயப்படும் ஒரு மனநிலை இது" என்று அறிவியல் பூர்வமாக விளக்கினர். </p><p>இதனையடுத்து தற்போது சில மாணவர்கள் மீண்டும் விடுதிக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>