<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 21 Jul 2026 08:30:10 +0000</lastBuildDate><item><title>இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு.. டெல்லி நோக்கி வந்த பஞ்சாப் விவசாயிகள் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-us-trade-deal-protest-punjab-farmers-stopped-at-shambhu-border-on-way-to-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-us-trade-deal-protest-punjab-farmers-stopped-at-shambhu-border-on-way-to-delhi#comments</comments><guid isPermaLink="false">96ee06e9-2fb8-4d9b-a00c-50e35c16785d</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:17:03 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:17:03.090Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>farmers,விவசாயிகள்,Shambhu Border,மகாபஞ்சாயத்து,ஷம்பு எல்லை,Mahapanchayat</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/84qa21so/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஷம்பு எல்லை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஷம்பு எல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/84qa21so/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இறுதிக்கட்டத்தில் இருக்கும் <a href="https://www.maalaimalar.com/news/world/india-us-trade-deal-soon-trump-cites-close-ties-with-modi-for-smooth-agreement">இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு</a> எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று விவசாயிகளின் மகாபஞ்சாயத்து கூட்டப்பட்டது. </p><p>தேஷ் பச்சாவ் மோட்சா என்ற அமைப்பின் கீழ் பஞ்சாப், அரியானா மற்றும் இமாச்சல பிரதேச விவசாய அமைப்புகள் ஒன்று திரண்டு இந்த மகாபஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்தன. </p><h2>தடுத்து நிறுத்தம்</h2><p>இதில் பங்கேற்க, பஞ்சாபில் இருந்து ஆயிரக்கணக்கான விவாசாயிகள் தலைநகர் நோக்கி வந்துகொண்டிருந்த நிலையில் பஞ்சாப், அரியானா எல்லையான ஷம்புவில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். </p><p>எல்லையில் இரும்பு முற்கள், பேரிக்கேட்கள் உள்ளிட்டவற்றால் தடுப்பு அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  </p><p>டெல்லி செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், கோபமடைந்த விவசாயிகள் ஷம்பு எல்லையையே போராட்டக் களமாக மாற்றியுள்ளனர்.</p><p>பஞ்சாப் அணிவகுப்பு தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், அரியானாவின் அம்பாலா, குருக்ஷேத்ரா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லி நோக்கிப் பயணித்து வருகின்றனர்.</p> <p>கடந்த ஆண்டு பிப்ரவரியில் இதேபோல டெல்லி நோக்கி செல்ல முற்பட்ட விவசாயிகள் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர்கள் அந்த இடத்தையே போராட்டக்களமாக மாற்றினர். இந்த போராட்டம் நாடு முழுவதும் கவனம் பெற்றது. அதேபோல இம்முறையும் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>டெல்லியில் CJP</h2><p>ஏற்கனவே டெல்லியில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-march-to-parliament-in-delhi-turns-violent-with-lathicharge-tear-gas-178-injured-and-70-arrested">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதன் பின்னணியில் அவர்கள் நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றபோது போலீசாரால் தாக்கப்பட்டனர். </p><p>தடியடி, கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தி அவர்களை போலீசார் கலைத்தனர். இதன்போது ஏற்பட்ட வன்முறையில் 118 போலீசார், 70 போராட்டக்காரர்கள் காயமுற்றனர். 70 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றும் நாடாளுமன்றம் நோக்கி பேரணி தொடரும் என சிஜேபி அறிவித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.</p><p>இந்த சூழலில் டெல்லி நோக்கி வந்த விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.</p> <h2>அமெரிக்கா -  இந்தியா ஒப்பந்தம்</h2><p>இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் ஆரம்பம் முதலே இந்த ஒப்பந்தத்தின் அம்சங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க வேளாண் பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய இந்த ஒப்பந்தத்தில் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இது அமெரிக்க விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என அந்நாட்டு தலைவர்கள் பேசியதும் வைரலானது.</p><p>அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைக்க அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுக்கு வெளிப்படையாக அழுத்தம் கொடுத்து வருகிறது.</p><h2>வாழ்வாதார இழப்பு  </h2><p>சோயாபீன், சோளம், பருத்தி, ஆப்பிள், பாதாம் மற்றும் பால் பொருட்கள் மீதான வரிகள் குறைந்தால், மானியம் பெறும் அமெரிக்கப் பொருட்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்கும். இதனால் இந்தியச் சிறு விவசாயிகள் அமெரிக்கப் பொருட்களுடன் போட்டியிட முடியாமல் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். </p><p>இந்தியாவில் சுமார் 8 கோடி கிராமப்புற குடும்பங்கள் பால் பண்ணைத் தொழிலையே நம்பியுள்ளன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் கிராமப்புற பொருளாதாரம் முற்றிலுமாகச் சீர்குலையும் என்று விவசாய அமைப்புகள் எச்சரிக்கின்றனர்.</p><p>இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு உடனடியாகக் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வணிகர்களிடம் விரிவான கலந்தாய்வு நடத்தாமல் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடக் கூடாது என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு &apos;லோக்மான்ய திலகர் விருது&apos;!</title><link>https://www.maalaimalar.com/news/national/ajit-doval-honoured-with-lokmanya-tilak-national-award</link><comments>https://www.maalaimalar.com/news/national/ajit-doval-honoured-with-lokmanya-tilak-national-award#comments</comments><guid isPermaLink="false">3852d399-dfe6-4174-9752-84583c57eb55</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:53:40 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:53:40.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,Ajit Doval,அஜித் தோவல்,Lokmanya Tilak National Award,லோக்மான்ய திலகர் விருது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/s6w0j5v9/ajith.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ajit Doval]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/s6w0j5v9/ajith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் ஆற்றிய மிகச் சிறந்த பங்களிப்பிற்காக, நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் 'அஜித் தோவல்' இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க 'லோக்மான்ய திலகர் தேசிய விருது' வழங்கப்படவுள்ளது. இந்த முக்கிய அறிவிப்பைத் திலக் ஸ்மாரக் டிரஸ்ட் தலைவரான டாக்டர் ரோஹித் திலக் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.</p><h2><em><strong>விருது வழங்கப்படும் நாள்:</strong></em></h2><p>ஆகஸ்ட் 1 (விடுதலைப் போராட்ட வீரர் லோக்மான்ய பால் கங்காதர திலகரின் 106-வது நினைவு நாள்) அன்று மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கடாரியா உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விருதை அஜித் தோவலுக்கு வழங்குகிறார். இதில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுனேத்ரா பவார் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளனர்.</p><h2><em><strong>நீண்ட காலம் பணியாற்றிய பாதுகாப்பு ஆலோசகர்:</strong></em></h2><p>இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பெருமை 81 வயதான அஜித் தோவலையே சேரும். 2014-ஆம் ஆண்டு முதல் இவர் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.</p><p>இந்தியா-சீனா எல்லைப் பேச்சுவார்த்தைக்கான இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதியாகச் செயல்பட்ட தோவல், 2017-இல் இந்தியா-சீனா இடையே நிலவிய டோக்லாம் எல்லைப் பிரச்சனையை தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியான முறையில் தீர்ப்பதில் முக்கியப் பங்காற்றினார்.</p><h2><em><strong>உளவுத்துறை &amp; முக்கிய ராணுவ நடவடிக்கைகள்:</strong></em></h2><p>1968-ஆம் ஆண்டு கேரளா கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர், உளவுத்துறையில் 3 தசாப்தங்களுக்கும் மேலாகப் பணியாற்றி அதன் இயக்குநராக ஓய்வு பெற்றார். மிசோரம், பஞ்சாப் (ஆபரேஷன் பிளாக் தண்டர்), சிக்கிம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற பதற்றமான பகுதிகளில் உளவுப் பணிகளையும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் திறம்பட கையாண்டுள்ளார்.</p><p>பாலகோட் வான்வழித் தாக்குதல், எல்லைத் தாண்டிய தாக்குதல்கள் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் போன்ற முக்கியமான பாதுகாப்பு வியூகங்களை வகுப்பதில் முதன்மை பங்காற்றியுள்ளார்.</p><h2><em><strong>லோக்மான்ய திலகர் விருதின் வரலாறு:</strong></em></h2><p>சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் நினைவாக 1983-இல் திலக் ஸ்மாரக் டிரஸ்ட்டால் இந்த விருது தொடங்கப்பட்டது. நாட்டின் முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு அபார பங்களிப்பை அளித்த தலைவர்கள் மற்றும் ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி இது வழங்கப்படுகிறது.</p><p>சோசலிசத் தலைவர் 'எஸ்.எம். ஜோஷி'க்கு முதன்முதலில் இந்த விருது வழங்கப்பட்டது. இதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி (2023), முன்னாள் பிரதமர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய், மன்மோகன் சிங், இந்திரா காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மூத்த அரசியல்வாதி சரத் பவார் மற்றும் நிதின் கட்கரி (2025) போன்ற பல பிரபலங்கள் இவ்விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்கள் மீது தாக்குதல், தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் விவாதிக்க  சபாநாயகரிடம்  ராகுல் கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-scam-police-crackdown-rahul-urges-parliament-debate-on-student-assault</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-scam-police-crackdown-rahul-urges-parliament-debate-on-student-assault#comments</comments><guid isPermaLink="false">8e3a5f8f-69f8-4a16-aada-390d8c2b9561</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:41:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:41:51.938Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/s39nyher/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஓம் பிர்லா, ராகுல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஓம் பிர்லா, ராகுல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/s39nyher/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நேற்று பாராளுமன்றம் நோக்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பேரணியின் போது <a href="https://www.maalaimalar.com/news/national/will-the-cockroach-partys-protest-succeed-is-dharmendra-pradhan-set-to-resign">இளைஞர்கள் </a>மீது காவல்துறையால் நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகள் இன்றும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. </p><p>விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் இன்றும் (செவ்வாய்க்கிழமை) கடும் அமளியில் ஈடுபட்டன. </p><h2>மாநிலங்களவையில் கார்கே பேச்சு </h2><p>மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, </p><p> "லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு, அரசு அவர்களின் குரலை ஒடுக்க முயல்கிறது" என்று அவர் குற்றம் சாட்டினார்.</p><p>கார்கே பேசத் தொடங்கியதும் ஆளுங்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். அதற்குப் பதிலடியாக காங்கிரஸ் எம்பிக்களும் முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு, அவையை நடத்த முடியாத சூழல் உருவானது.   </p><p>இதனால் அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையும் அமளியால் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. </p><h2>ராகுல் காந்தி - சபாநாயகர் சந்திப்பு</h2><p>மறுபுறம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி எம்பிக்களுடன் சென்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்துப் பேசினார்.</p><p>சிஜேபி போராட்டத்தின் போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் மற்றும் நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் தேர்வு முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.</p><p>சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:</p><p>"நேற்று தங்கள் எதிர்காலம் குறித்து நியாயமான கேள்விகளை எழுப்பியதற்காக மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p>தேர்வு முறைகேடுகள் குறித்து எந்தப் அக்கறையும் இல்லாத அரசைக் கண்டித்தும், மாணவர் நலன் குறித்தும் நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் என்ற எளிமையான கோரிக்கையைத்தான் நாங்கள் முன்வைத்துள்ளோம்.</p><p>இந்தியாவின் எதிர்காலமான மாணவர்களின் பிரச்சனைகளைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியவில்லை என்றால், இந்த நாடாளுமன்றம் வேறு எதற்காக இயங்குகிறது?</p><p>இந்த விவகாரத்தை சும்மா விட்டுவிடாது. மாணவர்களின் குரல் வீதிகளிலும் ஒலிக்கும், நாடாளுமன்றத்திலும் ஒலிக்கும் என்பதை நாங்கள் உறுதிசெய்வோம்." என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் வினாத்தாள் கசிவு கொடும் பாவச் செயல்.. பிரதமர் மோடி மௌனம் கலைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-pm-modi-breaks-silence-13-arrested-as-youth-protests-intensify</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-pm-modi-breaks-silence-13-arrested-as-youth-protests-intensify#comments</comments><guid isPermaLink="false">ca9c7d59-6f3b-4f07-939f-20fe3e86130f</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:14:42 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:14:42.105Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Sonam Wangchuk,பிரதமர் மோடி,சோனம் வாங்சுக்,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak,சிஜேபி,CJP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vfcblpeg/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vfcblpeg/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் 2 ஆம் நாள் கூட்டம் தொடங்கும் முன்னர் பிரதமர் மோடி என்டிஏ கூட்டணி பாராளுமன்ற எம்.பிக்கள் கூட்டத்தை நடத்தினார். </p><p>இந்த கூட்டத்தில்,  கடந்த மே 3 நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி முதல் முறையாக வாய்திறந்துள்ளார். </p><p>ஜூன் 20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி கட்சியின் தொடர் போராட்டம் இன்றுடன் 23வது நாளை எட்டும் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-sonam-wangchuk-seeks-discharge-activist-asks-hospital-to-allow-him-join-parliament-march">சோனம் வாங்சுக் </a>உண்ணாவிரதம், நேற்றைய சிஜேபி பேரணியில் ஏற்பட்ட வன்முறை உள்ளிட்ட தொடர் அழுத்தங்களை தொடர்ந்து மோடி மௌனம் கலைத்துள்ளார். </p><h2>மோடி</h2><p>கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக பாராளுமன்ற விவகாரங்கள் குழு அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது,</p><p>வினாத்தாள் கசிவு ஒரு கொடிய பாவச் செயல். இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். தவறான பாதையில் செல்வது எளிது. ஆனால் அதிலிருந்து மீண்டும் சரியான பாதைக்கு திரும்புவது மிகவும் கடினம். அவர்களை தூண்டுவிடாமல், சரியான நாம் அவர்களை சரியான பாதைக்கு கொண்டு வர வேண்டும். அது நமது பொறுப்பு. இளைஞர்களின் எதிர்காலமே முக்கியம். இதில் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்" என பேசியுள்ளார்.</p><p>இது அரசுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராடும் இளைஞர்களை குறிப்பிட்டு மோடி பேசியதாக புரிந்துகொள்ளப்படுகிறது.</p> <h2>ரிஜிஜூ</h2><p> தொடர்ந்து கிரண் ரிஜிஜூ பேசுகையில், நீட் வினாத்தாள் கசிவு தெரியவந்ததும் 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும், தேர்வர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் அரசு, மறுதேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு, குறித்த நேரத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவும், எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிரதமர் மோடியின் கறார் உத்தரவிட்டுள்ளார் என கிரண் ரிஜிஜூ மேலும் தெரிவித்தார்.</p> <h2>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</h2><p>நேற்று <a href="https://www.maalaimalar.com/news/national/cjp-leaders-meet-union-minister-jp-nadda-submit-letter-of-demands">கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்</a> பிரதிநிதிகள் இருவர், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.</p><p>அதில், நிர்வாக தோல்விக்கு காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவிநீக்கம் செய்ய வேண்டும், மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக்கை விடுவிக்க வேண்டும், நீட் குளறுபடிகளால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்ட 20 மாணவர்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தது.</p>]]></content:encoded></item><item><title>NEET-UG 2026: போலியான OMR விடைத்தாள்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை-NTA எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026</link><comments>https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026#comments</comments><guid isPermaLink="false">a6e50631-d03c-44ab-8c01-ab7fb08591ca</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:07:01 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:07:01.984Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் ஊழல்,NTA,தேசிய தேர்வு முகமை,NEET-UG 2026,OMR answer sheets,OMR விடைத்தாள்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oman4fr0/omr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ fake omr sheets]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oman4fr0/omr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய தேர்வு முகமை (NTA), நீட் (NEET-UG 2026) தேர்வின் போலியான மற்றும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்ட OMR விடைத்தாள்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதற்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><h2><strong>போலியான விடைத்தாள்கள் வதந்தி:</strong></h2><p>சமூக வலைதளங்களில் சில மாணவர்களின் "சரியான OMR விடைத்தாள்கள்" எனக் கூறி சில படங்கள் வைரலாகி வருகின்றன. ஆனால், அந்த படங்கள் அனைத்தும் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI/OCR) தொழில் நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்டவை என NTA திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><h2><strong>NTA-வின் விளக்கம்:</strong></h2><p>சர்ச்சைக்குரிய மாணவர்களின் தேர்வுப் பதிவேடுகள் மற்றும் அசல் OMR விடைத்தாள்களை ஆய்வு செய்ததில், அவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் முற்றிலும் சரியானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் படங்களில் கூடுதல் விடைகள் குறிக்கப்பட்டது போலவும், வினாத்தாள் விவரங்கள் மற்றும் அறை கண்காணிப்பாளரின் கையொப்ப நேரம் மாற்றப்பட்டது போலவும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. </p><p>அசல் OMR விடைத்தாள்கள் ஏற்கனவே மாணவர்களின் மின்னஞ்சல் மற்றும் அதிகாரப்பூர்வ லாகின் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக NTA தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2><strong>AI &amp; டிஜிட்டல் முறைகேடு கண்டறியப்பட்டது:</strong></h2><p>அசல் OMR விடைத்தாள்கள் குறைந்த தெளிவுத்திறன் கொண்டவை, ஆனால் போலி OMR தாள்கள் உயர் தெளிவுத்திறன் கொண்டவையாகவும், பேனா மை நிறம் கருப்பிலிருந்து நீல-ஊதா நிறமாக மாற்றப்பட்டும் உள்ளன. AI தொழில்நுட்பத்தைக் கொண்டு எழுத்துக்களை மீண்டும் உருவாக்க முயன்றதில், OMR தாளில் உள்ள அச்சிடப்பட்ட வாக்கியங்களில் பிழைகள் ஏற்பட்டுள்ளதை NTA நுணுக்கமாகக் கண்டறிந்துள்ளது.</p><h2><strong>சட்டப்பூர்வ நடவடிக்கை எச்சரிக்கை:</strong></h2><p>போலியான OMR விடைத்தாள்களை உருவாக்குவது, சமூக வலைதளங்களில் பரப்புவது அல்லது முறையீட்டிற்காக சமர்ப்பிப்பது சட்டப்படி குற்றமாகும். இதன் மீது கீழ் கண்ட சட்டங்களின் கீழ் கடுமையாக வழக்குப்பதிவு செய்யப்படும் என NTA எச்சரித்துள்ளது:</p><p>1. பொதுத் தேர்வுகள் (நடைமுறை முறைகேடுகள் தடுப்பு) சட்டம், 2024</p><p>2. பாரதிய நியாய சன்ஹிதா, 2023 </p><p>3. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000</p><h2><strong>மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வேண்டுகோள்:</strong></h2><p> சமூக வலைதளங்களில் பரவும் போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், மதிப்பெண் வேறுபாடுகள் குறித்த புகார்களுக்கு அசல் OMR நகல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் NTA கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வறட்சியால் வாடும் கிராம மக்கள் மழை வேண்டி நடத்திய தவளைத் திருமணம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/villagers-suffering-from-drought-hold-a-frog-wedding-to-pray-for-rain</link><comments>https://www.maalaimalar.com/news/national/villagers-suffering-from-drought-hold-a-frog-wedding-to-pray-for-rain#comments</comments><guid isPermaLink="false">cce69c86-57c0-4546-a672-e41cbf604cc5</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:59:32 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:59:32.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,special worship,சிறப்பு வழிபாடு,தவளை திருமணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/bqjwfx6i/frog.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  கிராம மக்கள் மழை வேண்டி நடத்திய தவளைத் திருமணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/bqjwfx6i/frog.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கர்நாடகா மாநிலத்தில் இரண்டு  தவளைகளுக்கு திருமணம் நடத்தி கிராம மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.</aside><h2><strong>சிறப்பு வழிபாடு</strong></h2><p>வெயிலின் தாக்கம் அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், விவசாயத்தை காக்கவும், கோடை வெப்பத்தைத் தணிக்கவும் மழை வேண்டி பொதுமக்கள் தீவிர வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>நாடு முழுவதும் முக்கிய சிவாலயங்கள் மற்றும் அம்மன் கோவில்களில் 'வருண ஜெபம்' மற்றும் 'மகா வருண யாகங்கள்' நடத்தப்பட்டு வருகின்றன. அர்ச்சகர்கள் கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு, வருண பகவானுக்குரிய மந்திரங்களை ஓதி சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். மேலும், நந்திகேஸ்வரருக்கு நவதானியங்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மழை பொழிய வேண்டி பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன.</p><p>நகரங்களில் யாகங்கள் நடத்தப்படும் வேளையில், கிராமப்புறங்களில் தொன்றுதொட்டு பின்பற்றி வரும் பாரம்பரிய வினோத வழிபாட்டு முறைகளும் அரங்கேறி வருகின்றன. </p><p>இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் இரண்டு  தவளைகளுக்கு திருமணம் நடத்தி கிராம மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். அது குறித்து பார்ப்போம்... </p><h2><strong>கடும் வறட்சி</strong></h2><p>கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவிற்கு உட்பட்ட தபதேஷ்வரா காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.</p><p>தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும், குடிநீருக்காக பெண்கள் தினமும் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை தொடர்கிறது. மக்களும், கால்நடைகளும் குடிநீருக்காக கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.</p><h2><strong>சிறப்பு பிரார்த்தனை</strong></h2><p>இந்த சூழலில், ஊரில் நல்ல மழை பெய்து வறட்சி நீங்க வேண்டும் என்ற நோக்கில் அப்பகுதி பெண்கள் பாரம்பரிய நம்பிக்கையின்படி இரண்டு தவளைகளை பிடித்து வந்து, அவற்றுக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் திருமண சடங்குகளை நடத்தினர். பின்னர், மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடும் பிரார்த்தனையும் மேற்கொண்டனர்.</p><h2><strong>நம்பிக்கை</strong></h2><p>இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், "வறட்சி காலங்களில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது முன்னோர்களிடம் இருந்து வந்த நம்பிக்கை. தற்போது கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவும் இந்த வழிபாட்டை நடத்தினோம்" என்று தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சிக்கிம்: நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 7 பேர் பலி.. ஏனையோரை மீட்கும் பணி தீவிரம் </title><link>https://www.maalaimalar.com/news/national/sikkim-hydropower-tunnel-tragedy-7-workers-dead-after-landslide-and-methane-leak</link><comments>https://www.maalaimalar.com/news/national/sikkim-hydropower-tunnel-tragedy-7-workers-dead-after-landslide-and-methane-leak#comments</comments><guid isPermaLink="false">af1dac4e-58bf-49b2-8866-78ae73722a28</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:34:59 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:34:59.236Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>landslide,Tunnel,sikkim,நிலச்சரிவு,சுரங்கப்பாதை,methane gas leak,மீத்தேன் வாயு கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/kpve6f1d/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Sikkim tragedy]]></media:title><media:description type="html"><![CDATA[ Sikkim tragedy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/kpve6f1d/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிக்கிமில் நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் திடீர் <a href="https://www.maalaimalar.com/news/national/sikkim-tunnel-landslide-rescue-27-workers-trapped-methane-leak-hampers-operations">நிலச்சரிவு </a>காரணமாக உள்ளே சிக்கிய தொழிலாளர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். </p><h2>நிலச்சரிவு</h2><p>சிக்கிம் மாநிலம் நாம்ச்சி மாவட்டத்தில் நேற்று மதியம் Teesta Stage-VI நீர்மின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் சாமர்துங் சுரங்கப்பாதைக்கு வெளியே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.</p><p>கனமழையினால் மலைச்சரிவில் இருந்து பெருமளவில் பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில், சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் முற்றிலும் அடைபட்டது.</p><p>நிலச்சரிவு ஏற்பட்ட போது சுரங்கத்தின் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 27 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.</p><p>நிலச்சரிவைத் தொடர்ந்து சுரங்கப்பாதைக்குள் மீத்தேன் வாயு கசியத் தொடங்கியுள்ளது.</p><p>நிலச்சரிவினால் ஏற்பட்ட பாறை முறிவுகள் மற்றும் நிலத்தடி அடுக்குகளின் அதிர்வு காரணமாகவே இந்த இயற்கை வாயு கசியத் தொடங்கியுள்ளதாக நம்பப்படுகிறது.</p><p>விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை மாநில பேரிடர் மீட்புப் படை மாவட்ட காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p>மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்ட போதிலும், சுரங்கப்பாதையின் உட்பகுதியில் இருந்து ஆபத்தான மீத்தேன் வாயு கசியத் தொடங்கியது மீட்புக் குழுவினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p>வாயு கசிவு காரணமாக உள்ளே செல்ல முயன்ற சில மீட்புப் படை வீரர்களுக்கு தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.</p><p>வாயு கசிவை சமாளிக்கும் வகையில், அதிநவீன வாயு கவசங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய சிறப்புப் பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் பக்கத்து மாநிலமான மேற்கு வங்கத்தில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.</p><p>மீட்புப் படையினர் சிறப்பு மாஸ்க்குகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் நவீன துளையிடும் கருவிகளின் உதவியுடன் அடைபட்டுள்ள நுழைவு வாயிலைத் தோண்டி உள்ளே செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>சுரங்கப்பாதையின் குறுகிய அமைப்பு, புகை மற்றும் வாயு கசிவால் ஏற்பட்டுள்ள மோசமான பார்வைத்திறன்  ஆகியவை மீட்புப் பணியை மிகவும் கடினமாக்கியுள்ளன.</p><p>சுரங்கத்தில் இருந்து வெளியே அழைத்துவரப்படும் தொழிலாளர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ்களும், மருத்துவக் குழுக்களும் சம்பவ இடத்திலேயே தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p> உள்ளே சிக்கிய தொழிலாளர்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. </p><h2>மாவட்ட ஆட்சியர்</h2><p>மாவட்ட ஆட்சியர் அனுபமா தாம்லிங் இது குறித்து தெரிவிக்கையில், </p><p>'சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களின் துல்லியமான எண்ணிக்கை இன்னமும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், அது தற்போதைய மதிப்பீட்டை விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம்.</p><p>தற்போது உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களைப் பத்திரமாக மீட்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>மீட்புப் பணிகள் முடிந்த பிறகு, இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்' என்று தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>&apos;மீண்டும் என்னை தேசவிரோதி என்பார்கள்&apos;: மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தில்ஜித் தோசாஞ்ச்!</title><link>https://www.maalaimalar.com/news/national/diljit-dosanjh-supports-student-protests-despite-anti-national-tag-fears</link><comments>https://www.maalaimalar.com/news/national/diljit-dosanjh-supports-student-protests-despite-anti-national-tag-fears#comments</comments><guid isPermaLink="false">15ea32a7-333e-40d6-8633-37e1ce6d07c1</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:19:02 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:19:02.016Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,டெல்லி,Cockroach Janta Party,சிஜேபி,diljit-dosanjh,தில்ஜித் தோசாஞ்ச்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/h51su07g/cjp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Diljit Dosanjh ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/h51su07g/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட்  தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்விச் சீர்திருத்தங்களை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தி வரும் சிஜேபி போராட்டத்திற்குப் பிரபல பஞ்சாபி பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசாஞ்ச் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். </p><p>மாணவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்துள்ள அவர், மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பதால், தனக்கு மீண்டும் "தேசவிரோதி" என்ற முத்திரை குத்தப்படலாம் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.</p><h3>இதுகுறித்து, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தில்ஜித் தோசாஞ்ச் கூறியுள்ளதாவது:</h3><p>"இன்று நடந்தது மிகவும் தவறானது. மாணவர்களை இப்படி நடத்தியிருக்கக் கூடாது. அவர்களின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகளும் நிர்வாகமும் கவனமாகக் கேட்டுப் பரிசீலிக்க வேண்டும். மக்களின் குரலே கடவுளின் குரல் ."மேலும், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசுவதால் மீண்டும் தன் மீது "தேசவிரோதி" என்ற விமர்சனங்கள் எழக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>போராட்டத்தின் பின்னனி:</strong></h2><p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முடிவுகளில் நடந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், கல்வித் துறையில் உடனடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>டெல்லியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை பலப்பிரயோகம் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தில்ஜித் தோசாஞ்ச் மட்டுமன்றி, பாலிவுட் பிரபலங்களான பூமி பெட்னேகர், ஹுமா குரேஷி உள்ளிட்ட பலரும் மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து, மாணவர்களின் போராட்டத்திற்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><h2><strong>விவசாயிகள் போராட்டம்:</strong></h2><p>இதற்கு முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தின் போதும் தில்ஜித் தோசாஞ்ச் விவசாயிகளுக்கு ஆதரவாக நேரில் சென்று குரல் கொடுத்தார்.</p><p>விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால், தாம் சந்தித்த கடுமையான விமர்சனங்கள், சமூக வலைதளத் தாக்குதல்கள் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்கள் குறித்து இப்போதும் வெளிப்படையாகப் பேச முடியாத நிலை உள்ளதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>615 பழங்கால இந்திய பொருட்கள் மீட்பு - மத்திய அரசு தகவல்
</title><link>https://www.maalaimalar.com/news/national/615-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/615-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">7b2d6fdc-0968-4c25-add2-ad3286cc153d</guid><pubDate>Tue, 21 Jul 2026 03:57:10 +0000</pubDate><atom:updated>2026-07-21T03:57:10.782Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,central government,parliament,பாராளுமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/s9f8nwvm/gajendrasingh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gajendra singh shekhawat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/s9f8nwvm/gajendrasingh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை மத்திய அரசு மீட்டு நாட்டுக்கு கொண்டு வருகிறது. அப்படி கடந்த 5 ஆண்டுகளில் மீட்கப்பட்ட பொருட்களின் விவரங்கள் குறித்து மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு கலாசாரத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத் எழுத்து மூலம் பதிலளித்தார். </p><p>இதில் ஆண்டு வாரியாக மீட்கப்பட்ட பொருட்களின் விவரங்களை அவர் குறிப்பிட்டு இருந்தார். அவர் கூறும்போது. 'பல்வேறு நாடுகளில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடந்த 30-ந்தேதி வரை சிலைகள் உள்பட 615 பழங்கால பொருட்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன' என தெரிவித்தார். அவர் வழங்கிய பட்டியலில் உள்ள கோவில் சிலைகளில் முக்கியமாக, ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோவில் ஒன்றில் இருந்து திருடப்பட்ட நந்தி சிலை, கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள லட்சுமி நரசிம்மா கோவிலில் இருந்து திருடப்பட்ட விநாயகர் சிலை போன்றவை முறையே கடந்த 2021, 2022-ம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டு உள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>இன்றும் பாராளுமன்றம் நோக்கி பேரணி தொடரும் - CJP அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-dharna-continues-protest-march-to-parliament-over-dharmendra-pradhan-resignation-keeps-delhi-on-edge</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-dharna-continues-protest-march-to-parliament-over-dharmendra-pradhan-resignation-keeps-delhi-on-edge#comments</comments><guid isPermaLink="false">7fc1fd80-417d-4f98-86be-1dd210f24501</guid><pubDate>Tue, 21 Jul 2026 03:10:59 +0000</pubDate><atom:updated>2026-07-21T03:10:59.864Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,rally,பேரணி,போராட்டம்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,CJP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xp0ep1la/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ CJP ]]></media:title><media:description type="html"><![CDATA[ CJP ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xp0ep1la/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நேற்று நடத்தப்பட்ட 'நாடாளுமன்ற நோக்கிய பேரணி' இன்றும் தொடரும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ( (<a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-march-to-parliament-in-delhi-turns-violent-with-lathicharge-tear-gas-178-injured-and-70-arrested">CJP</a>) அறிவித்துள்ளது.  </p><p>நேற்று நடந்த பேரணியை தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகை குண்டு வீசியும் போலீசார் கலைத்தனர். </p><p>இன்றும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட்டம் கூட உள்ளதால் இரண்டாவது நாளாக இன்றும் இந்தப் பேரணி தொடரும் என்று சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார்.</p><p>ஜந்தர் மந்தரில் நேற்று இரவு நிலவிய பதற்றமான சூழ்நிலைக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய அபிஜீத் திப்கே, "நாங்கள் இங்கிருந்து நகரப்போவதில்லை. செவ்வாய்க்கிழமையும் நாடாளுமன்றத்தை நோக்கி மீண்டும் பேரணியாகச் செல்வோம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.</p> <h2>வன்முறை</h2><p>நேற்று பேரணியின் போது நடந்த கல்வீச்சு மற்றும் வன்முறையில் 118க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காயமடைந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. 70க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும் இதில் காயமடைந்தனர்.</p><p>நேற்று நடந்த மோதலின் போது ஜந்தர் மந்தரில் இருந்த போராட்ட மேடைகளை டெல்லி காவல்துறை அகற்றியிருந்தது.</p><p>இருப்பினும், இரவு மழை பெய்து கொண்டிருந்த போதிலும், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் மீண்டும் ஜந்தர் மந்தருக்குத் திரும்பி, தற்காலிகக் கூடாரங்களையும் மேடைகளையும் அமைத்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.</p><p>மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை இந்த அமைதிப் போராட்டம் ஓயாது என்றும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் சிஜேபி நிர்வாகிகள் தெரிவித்தனர்.</p> <h2>பேச்சுவார்த்தை</h2><p>சிஜேபி அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை இருமுறை சந்தித்துப் பேசினர்.</p><p>காலை நடந்த முதல் சந்திப்பில் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.</p><p>மாலை இரண்டாம் சந்திப்பில் சிஜேபி பிரதிநிதிகள் தங்கள் 3 முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜே.பி. நட்டாவிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.</p> <h2>இன்றும் பேரணி</h2><p>இன்று மீண்டும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், ஜந்தர் மந்தர் பகுதியைச் சுற்றிலும் மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்பும், தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.</p><p>ஜந்தர் மந்தர் பகுதியில் இணையதளச் சேவைகள் முடக்கப்பட்ட நிலையிலும், மழைக்கு இடையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும் நூற்றுக்கணக்கான போலீசாரும் அங்கு குவிந்துள்ளதால் தலைநகரில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>CJP பேரணி மோதல்: 118 போலீசார், 60 போராட்டக்காரர்கள் காயம்.. 70 பேர் கைது </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-march-to-parliament-in-delhi-turns-violent-with-lathicharge-tear-gas-178-injured-and-70-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-march-to-parliament-in-delhi-turns-violent-with-lathicharge-tear-gas-178-injured-and-70-arrested#comments</comments><guid isPermaLink="false">2bd3b9bc-d74f-4dec-b5c4-f56cd44cf819</guid><pubDate>Tue, 21 Jul 2026 01:57:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T01:57:04.717Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,போராட்டம்,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/m9utb31r/cjp.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ CJP RALLY]]></media:title><media:description type="html"><![CDATA[ CJP RALLY]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/m9utb31r/cjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி:</p><p>நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் ஜந்தர் மந்தரில் ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வந்த கரப்பான்பூச்சி கட்சியை (சிஜேபி) சேர்ந்தவர்களும், நாடு முழுவதும் இருந்து வந்திருந்த பெருமளவிலான இளைஞர்களும்  நாடாளுமன்ற கட்டிடம் நோக்கி <a href="https://www.maalaimalar.com/news/national/most-anti-youth-pm-says-rahul-as-oppn-slams-govt-over-crackdown-on-protesters">பேரணி </a>செல்ல முயன்றனர். </p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இந்த போராட்டம், பேரணி நடைபெற்றது. </p><p>ஜந்தர் மந்தரில் தொடங்கிய பேரணி, மத்திய டெல்லியின் முக்கியச் சாலைகளுக்கு பரவியதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.</p> <h2>தடியடி, கண்ணீர் புகை</h2><p>டெல்லி போலீசார் மற்றும் மத்திய படையினர் தடுப்புகளை மீறி முன்னேறும் அவர்களை தடுத்து நிறுத்த தடியடி நடத்தியும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் கலைக்க முயன்றனர். மேலும் அவர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தால் அவர்களை சுட்டுத் தள்ள மத்திய படையினர் துப்பாக்கியை தூக்கி குறிபார்த்தாவாறு நின்றிருந்தனர்.</p><p>தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சுக்கு மத்தியில் போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.</p>  <h2>காயம் - கைது</h2><p>நாள் முடிவில் கிடைத்த தகவலின்படி, போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 118 காவல் துறையினரும், போலீசாரின் தடியடியில் 60 போராட்டக்காரர்களும் காயமடைந்துள்ளனர்.</p><p>வன்முறையில் ஈடுபட்டதாக 70 பேரை காவல்துறையினர் கைது செய்துதுள்ளனர்.</p><p>பொதுச்சொத்துக்களுக்குசேதம் விளைவித்தல், அரசு ஊழியர்களைத் தாக்குதல் மற்றும் கலவரத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p> <h2>நட்டாவுடன் பேச்சுவார்த்தை</h2><p>போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், சிஜேபி அமைப்பின் பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் <a href="https://www.maalaimalar.com/news/national/nadda-assures-protesting-cjp-that-govt-will-consider-its-demands-including-pradhans-resignation">பேச்சுவார்த்தை </a>நடத்தினர்.</p><p>இதன் பின்னர், ஜந்தர் மந்தருக்குத் திரும்புமாறு போராட்டக்காரர்களுக்கு சிஜேபி தலைமை அறிவுறுத்தியது. அதற்குள் ஜந்தர் மந்தரில் அமைக்கப்பட்டிருந்த போராட்ட மேடைகள் அகற்றப்பட்டிருந்தன. இருப்பினும் சிஜேபியினர் மற்றும் இளைஞர்கள் தங்கள் போராட்டத்தை ஜந்தர் மந்தரில் தொடர்ந்து வருகின்றனர்.</p><h2> உண்ணாவிரதம் </h2><p>இந்த போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், மூத்த பாலிவுட் நடிகை ஷாபனா அஸ்மி உள்ளிட்ட பிரபலன்களும் சமூக செயல்பாட்டாளர்களும் இளைஞர்களுக்கு பக்க பலமாக பங்கேற்றுள்ளனர். </p><p>இவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த 23 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த அகில இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 3 மாணவர்கள் நேற்று தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர். </p><p>இந்த போராட்டத்திற்கு ஆதரவாக மருத்துவமனையில் இருந்தபடி கல்வியாளர் சோனம் வாங்சுக் தன் உண்ணாவிரதத்தை 23வது நாளாக தொடர்ந்து வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>Sikkim: நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் 27 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு - மீத்தேன் வாயு கசிவால் மீட்பதில் சிக்கல் </title><link>https://www.maalaimalar.com/news/national/sikkim-tunnel-landslide-rescue-27-workers-trapped-methane-leak-hampers-operations</link><comments>https://www.maalaimalar.com/news/national/sikkim-tunnel-landslide-rescue-27-workers-trapped-methane-leak-hampers-operations#comments</comments><guid isPermaLink="false">9841c0d4-5d6f-4381-b096-fb55277764b3</guid><pubDate>Tue, 21 Jul 2026 01:03:45 +0000</pubDate><atom:updated>2026-07-21T01:03:45.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>landslide,சிக்கிம்,Tunnel,sikkim,நிலச்சரிவு,சுரங்கப்பாதை,methane gas leak</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/q0ujss4g/sikkim-landlslide-tunnel-collapse.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Sikkim tunnel ]]></media:title><media:description type="html"><![CDATA[ Sikkim tunnel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/q0ujss4g/sikkim-landlslide-tunnel-collapse.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/sikkim-becomes-fully-literate-state-5th-in-the-country">சிக்கிமில் </a>நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் திடீர் நிலச்சரிவு காரணமாக 27 தொழிலாளர்கள் உள்ளே சிக்கித் தவிக்கின்றனர். மீத்தேன் வாயு கசிவால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. </p><h2>நிலச்சரிவு </h2><p>சிக்கிம் மாநிலம் நாம்ச்சி மாவட்டத்தில் நேற்று மதியம் Teesta Stage-VI நீர்மின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் சாமர்துங் சுரங்கப்பாதைக்கு வெளியே திடீரென <a href="https://www.maalaimalar.com/amp/story/news/national/disaster-8-killed-and-15-houses-destroyed-after-heavy-rain-and-flash-floods">நிலச்சரிவு </a>ஏற்பட்டது.</p><p>கனமழையினால் மலைச்சரிவில் இருந்து பெருமளவில் பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில், சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் முற்றிலும் அடைபட்டது. </p><p>நிலச்சரிவு ஏற்பட்ட போது சுரங்கத்தின் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 27 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.</p> <h2>மீட்பு முயற்சி</h2><p>விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை மாநில பேரிடர் மீட்புப் படை மாவட்ட காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p>மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்ட போதிலும், சுரங்கப்பாதையின் உட்பகுதியில் இருந்து ஆபத்தான மீத்தேன் வாயு கசியத் தொடங்கியுள்ளது மீட்புக் குழுவினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p>வாயு கசிவு காரணமாக உள்ளே செல்ல முயன்ற சில மீட்புப் படை வீரர்களுக்கு தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.</p><p>இதனால் மீட்புப் பணிகள் மிகவும் கவனத்துடன் உச்சக்கட்ட எச்சரிக்கையுடனும் மெதுவாக நடத்தப்பட்டு வருகின்றன. வாயுவின் அளவுதொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.</p> <h2>சிறப்பு படை</h2><p>வாயு கசிவை சமாளிக்கும் வகையில், அதிநவீன வாயு கவசங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய சிறப்புப் பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் பக்கத்து மாநிலமான மேற்கு வங்கத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.</p><p>மீட்புப் படையினர் சிறப்பு மாஸ்க்குகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் நவீன துளையிடும் கருவிகளின் உதவியுடன் அடைபட்டுள்ள நுழைவு வாயிலைத் தோண்டி உள்ளே செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.</p> <h2>தயார் நிலை</h2><p>சுரங்கத்தில் இருந்து வெளியே அழைத்துவரப்படும் தொழிலாளர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ்களும், மருத்துவக் குழுக்களும் சம்பவ இடத்திலேயே தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>உள்ளே சிக்கியுள்ள 27 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக நிர்வாகம் உறுதியளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>CJP கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும்... ஜே.பி. நட்டா உறுதி</title><link>https://www.maalaimalar.com/news/national/nadda-assures-protesting-cjp-that-govt-will-consider-its-demands-including-pradhans-resignation</link><comments>https://www.maalaimalar.com/news/national/nadda-assures-protesting-cjp-that-govt-will-consider-its-demands-including-pradhans-resignation#comments</comments><guid isPermaLink="false">27708fdb-1052-4ed5-8695-e1b737299ac1</guid><pubDate>Mon, 20 Jul 2026 22:58:24 +0000</pubDate><atom:updated>2026-07-20T22:58:24.907Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>JP Nadda,ஜே.பி. நட்டா,CJP Protest,CJP,காக்ரோச் ஜந்தா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4qv98vo2/jp-n.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JP Nadda with CJP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4qv98vo2/jp-n.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போராட்டத்தில் ஈடுபட்டுள்ள CJP அமைப்பிற்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற முதல் நேரடிப் பேச்சுவார்த்தையில், மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா அந்த அமைப்பின் இரண்டு பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்று காவல்துறையினரால் தடுக்கப்பட்ட நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசின் உயர்மட்ட தலைவர்களுடன் உள்விவாதங்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். </p><p>தேர்வு முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, CJP அமைப்பின் செய்தி தொடர்பாளர்களான அசுதோஷ் ரன்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் அமைச்சரின் இல்லத்தில் இரண்டு மணி நேரத்திற்குள் இருமுறை அவரை சந்தித்து மனுவை அளித்தனர். அதன் பின்னரே இந்த உறுதிமொழி கிடைத்தது என்று CJP அமைப்பு தெரிவித்தது.</p><p>"அவர் தலைவர்களுடன் பேசி, அதன் முடிவுகளை தெரிவிப்பார் என்பது மட்டுமே எங்களுக்கு கிடைத்த ஒரே உறுதிமொழி," என்று ரன்கா பி.டி.ஐ. (PTI) வீடியோக்களிடம் கூறினார்.</p><p><strong>பேச்சுவார்த்தை:</strong></p><p>நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்வதைத் தடுக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் தடியடியை பயன்படுத்தி போராட்டக்காரர்களை ஒடுக்கிய அதே நாளில், அரசுக்கும் இளைஞர்கள் தலைமையிலான CJP அமைப்பிற்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.</p><p>போராட்டக்காரர்கள் முன்னதாகவே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்ததை தொடர்ந்து, காலை 11.50 மணி முதல் அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் நட்டா ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.</p><p>"இச்சந்திப்பு சுமூகமான சூழலில் நடைபெற்றது. அவர்களின் பிரதிநிதி குழுவுடன் விரிவான ஆரம்பகட்ட வாய்மொழி விவாதம் நடைபெற்றது. மேலும் அவர்கள் மாலை 4 மணியளவில் என்னிடம் எழுத்துப்பூர்வமான மனுவை அளித்தனர்," என்று அவர் கூறினார்.</p><p>போராட்டக்காரர்கள் அனைவரும் தங்கள் அமர் போராட்டத்தைக் கைவிட்டு, இயல்பு நிலையை மீட்டெடுக்க நிர்வாகத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.</p><p><strong>வாக்குறுதி அளிக்கப்படவில்லை:</strong></p><p>"இது குறித்து உரிய மட்டத்தில் விவாதிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். இருப்பினும், இதுவரை எந்த உறுதியான வாக்குறுதிகளும் அளிக்கப்படவில்லை. கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அமைதியான முறையில் போராடும் நாங்கள் ஓயமாட்டோம்," என்று இச்சந்திப்பிற்குப் பிறகு 'எக்ஸ்' தளத்தில் சௌரவ் தாஸ் பதிவிட்டார்.</p><p>CJP போராட்ட விவகாரம் குறித்து அரசுக்குள் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிற்பகலில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்தில் அவரை சந்தித்தார்.</p><p>நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அப்பகுதியில் அதிகரித்ததால் நாடாளுமன்ற வளாகத்தின் சில முக்கிய நுழைவு வாயில்கள் மூடப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் பிரதான் பல மணிநேரம் ஷாவின் அலுவலகத்திலேயே இருந்தார். பின்னர் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரும் அவர்களுடன் இணைந்தனர்.</p><p>இருப்பினும், இச்சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. ஜந்தர் மந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இனி எந்தவிதமான கெடுபிடி நடவடிக்கைகளும் இருக்காது என்று ஜே.பி. நட்டா உறுதியளித்ததாக தாஸ் கூறினார்; இருப்பினும், காவல் துறை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதற்கான எந்தத் தகவலும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>நட்டாவின் இல்லத்திற்கு நண்பகல் வாக்கில் சென்றடைந்த பிறகு, அந்த குழு அவரை இருமுறை சந்தித்ததாக ரங்கா தெரிவித்தார்.</p><p><strong>மூன்று கோரிக்கைகள்:</strong></p><p>"எங்களுக்கு மூன்று கோரிக்கைகள் உள்ளன: சோனம் வாங்சுக் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர் ஒரு காணொளிச் செய்தியைப் பகிர விரும்புகிறார், அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட வேண்டும். தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்; மேலும், நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.</p><p>"அமைதியான முறையில் போராடுபவர்கள்" மீதான காவல் துறை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் தாங்கள் வலியுறுத்தியதாக சிஜேபி (CJP) அமைப்பு தெரிவித்தது.</p><p>நட்டாவிடம் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில், நீட் 2026 வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ (CBSE) 12-ஆம் வகுப்பு இணையதள சிக்கல்கள் மற்றும் சியுஇடி (CUET) தேர்வு நடத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள் உள்ளிட்ட பொதுத் தேர்வுகளை நடத்துவதில் தொடர்ந்து தோல்விகள் ஏற்படுவதாக சிஜேபி குற்றம் சாட்டியது. மேலும், போராட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்குவதே தங்கள் முக்கிய கோரிக்கையாக இருந்து வருவதாகவும் அது கூறியது.</p>]]></content:encoded></item><item><title>போராட்டத்தில் தாக்கப்பட்ட மாணவர்கள்: பிரதமர் மோடியை கடுமையாக சாடிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/most-anti-youth-pm-says-rahul-as-oppn-slams-govt-over-crackdown-on-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/most-anti-youth-pm-says-rahul-as-oppn-slams-govt-over-crackdown-on-protesters#comments</comments><guid isPermaLink="false">d5676497-dd3e-45f7-80ac-cf23de04b8a9</guid><pubDate>Mon, 20 Jul 2026 20:36:32 +0000</pubDate><atom:updated>2026-07-20T20:36:32.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,protest,போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/vffwpam3/dp-rg.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போராட்டம் - ராகுல் காந்தி

]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/vffwpam3/dp-rg.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக 'சலோ சன்சத்' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தின்போது CJP அமைப்பினர் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. </p><p>காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை நாட்டின் வரலாற்றிலேயே "இளைஞர்களுக்கு எதிரான மிக மோசமான" பிரதமர் என்று சாடினார். </p><p><strong>மாணவர்கள் காயம்:</strong></p><p>நாடாளுமன்றத்தை அடைவதை தடுப்பதற்காக போராட்டக்காரர்கள் மீது டெல்லி காவல்துறை அதிகப்படியான பலப்பிரயோகம் செய்ததாக 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) குற்றம் சாட்டியது. இதில் பல மாணவர்கள் காயமடைந்ததாகவும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. ஆங்மோ தள்ளப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.</p><p>இருப்பினும், ஆங்மோ தாக்கப்பட்டதாக கூறப்படுவதை டெல்லி காவல்துறை மறுத்தது. அத்தகவல்கள் "முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறானவை. எந்தவொரு தனிநபரும் குறிவைத்து தாக்கப்படவில்லை" என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி விவாதத்திற்கு வலியுறுத்தியதால், மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அவை நடவடிக்கைகள் முடங்கின.</p><p><strong>எக்ஸ் தள பதிவு:</strong></p><p>மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி 'எக்ஸ்' தள பிதிவில், "பிரதமர் மோடி இந்திய வரலாற்றிலேயே 'இளைஞர்களுக்கு எதிரான மிக மோசமான' பிரதமர் ஆவார். அவர் எந்தளவுக்கு இளைஞர்களுக்கு எதிரானவர் என்றால், தோல்வியடைந்த கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை கூட அவரால் பெற முடியவில்லை.</p><p>152 முறை வினாத்தாள் கசிவு நடந்துள்ளது. 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குற்றவாளி என ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. தண்டனை யாருக்குக் கிடைத்தது? கடினமாக உழைக்கும் இளைஞர்களுக்குத்தான்," என குறிப்பிட்டு இருந்தார்.</p><p>தனது பதிவில் ஒரு காணொளி செய்தியையும் அவர் இணைத்திருந்தார். அதில் அரசாங்கத்தையும் காவல்துறையையும் விமர்சித்த ராகுல் காந்தி, போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் "நியாயமானவை" என்று குறிப்பிட்டார். அமைதியான முறையில் போராடுவது ஒரு "மீற முடியாத அடிப்படை உரிமை" என்று காந்தி கூறினார். போராட்டக்காரர்களான மாணவர்கள் காவல்துறையினரால் தாக்கப்படும் காட்சிகளும் அந்த காணொளியில் இடம்பெற்றிருந்தன.</p><p>காவல்துறை வட்டாரங்களின்படி, CJP போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசியதை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 50-க்கும் மேற்பட்ட காவலர்களும், அதே எண்ணிக்கையிலான போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். இதை தொடர்ந்து காவல்துறை தடியடி நடத்தியது.</p><p>100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டு, டெல்லியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.</p><p><strong>எதிர்க்கட்சிகள் கண்டனம்:</strong></p><p>சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, டி.எம்.சி. தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா (யுபிடி) தலைவர் ஆதித்யா தாக்கரே மற்றும் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரும் பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தனர்.</p><p>கல்வி தொடர்பான நியாயமான கேள்விகளை மாணவர்கள் எழுப்பும்போது, ​​அவர்களுக்கு பதிலாக தடியடியும் சிறைபிடிப்பும் மட்டுமே கிடைப்பதாக காந்தி கூறினார்.</p><p>"தேர்வு வினாத்தாள்களை கசியவிட்ட குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். ஆனால் நியாயமான பிரச்சினைகளை எழுப்பும் மாணவர்கள் இழுத்து செல்லப்பட்டு தாக்கப்படுகிறார்கள். இந்த அரசு இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பது மட்டுமல்லாமல், அவர்கள் மீது பாய்ந்து தாக்குதலையும் நடத்துகிறது," என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.</p><p><strong>மாணவர்களுக்கு ஆதரவு:</strong></p><p>ஜனநாயக ரீதியான கருத்து வேறுபாடுகளை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஒடுக்குவதாக இடதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டின. அத்துடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையையும் மீண்டும் வலியுறுத்தின.</p><p>தேர்வு முறைகேடுகள் தொடர்பான விவகாரத்தில் பொறுப்புக்கூறலை வலியுறுத்திப் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் சி.பி.ஐ. (எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, பிருந்தா காரத் மற்றும் பொலிட்பீரோ உறுப்பினர்களான விஜூ கிருஷ்ணன், அருண் குமார், மரியம் தவலே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>போராட்டக்களத்தில் வன்முறை... பல்வேறு உயர்மட்ட கூட்டங்களை நடத்திய டெல்லி காவல் துறை..!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-police-holds-high-level-meetings-after-protest-violence</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-police-holds-high-level-meetings-after-protest-violence#comments</comments><guid isPermaLink="false">f3d5b8e8-2c4d-41f9-b60e-9f70a4f37121</guid><pubDate>Mon, 20 Jul 2026 17:31:05 +0000</pubDate><atom:updated>2026-07-20T17:31:05.907Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போராட்டம்,Delhi Police,CJP Protest,டெல்லி காவல் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/hyb9du4i/dl-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி காவல் துறை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/hyb9du4i/dl-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களை தொடர்ந்து, சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக <a href="https://www.maalaimalar.com/topic/delhi-police">டெல்லி காவல்துறை</a> பல உயர்மட்டக் கூட்டங்களை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><strong>முக்கிய கூட்டம்:</strong></p><p>தகவல்களின்படி, போராட்டங்களுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க காலையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய இடங்கள், பாதுகாப்பு படையினரின் நிலைநிறுத்தம் மற்றும் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.</p><p>"கூட்டத்தின்போது, ​​கூட்டத்தைக் கையாளுதல், பாதுகாப்பு படையினரின் நடமாட்டம், போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் அவசரக்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட பாதுகாப்பு திட்டத்தின் அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டன," என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.</p><p><strong>மூத்த அதிகாரிகள் ஆலோசனை:</strong></p><p>பின்னர், வன்முறைக்குப் பிந்தைய நிலவரத்தை மதிப்பிடுவதற்கும், மோதல்கள் குறித்த விசாரணையை ஆய்வு செய்வதற்கும் டெல்லி காவல் துணை ஆணையர் (DCP) அலுவலகத்தில் மற்றொரு உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றதாக அவர்கள் கூறினர்.</p><p>நிகழ்வுகளின் வரிசைமுறை, மோதலின்போது பாதுகாப்பு படையினர் நிலைநிறுத்தப்பட்ட விதம், பொது சொத்துக்கள் மற்றும் காவல் வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதம், மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுபவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகள் விவாதித்தனர்.</p><p><strong>கூடுதல் நடவடிக்கை:</strong></p><p>நிலவரம் குறித்து ஆலோசிக்கவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவும் டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள் டெல்லி காவல் துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>மேலும், பதற்றம் நிறைந்த பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டதோடு, தலைநகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>பீகாரில் புதிதாக திறக்கப்பட்ட 551 பள்ளிகளுக்கு காவி சாயம்: மதத்தை அரசு ஊக்குவிப்பதாக AIMIM குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/saffron-painting-of-551-new-schools-in-bihar-aimim-alleges-religious-push-by-government</link><comments>https://www.maalaimalar.com/news/national/saffron-painting-of-551-new-schools-in-bihar-aimim-alleges-religious-push-by-government#comments</comments><guid isPermaLink="false">e426c9d0-28bb-4fb3-9003-094a35d81996</guid><pubDate>Mon, 20 Jul 2026 15:28:17 +0000</pubDate><atom:updated>2026-07-20T15:28:17.626Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,government schools,AIMIM,அரசு பள்ளி,காவி வண்ணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/0cbr1kc8/Untitled-design-42.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AIMIM slams saffron paint on 551 new model schools in bihar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/0cbr1kc8/Untitled-design-42.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>பீகார் அரசு பள்ளிகளில் காவி வண்ணம்:</strong></h3><p>பீகாரில் புதிதாகத் திறக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட மாதிரிப் பள்ளிகளுக்குக் காவி வண்ணம் பூச பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளதை அடுத்து, அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. </p><p>பீகார் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி, நேற்று 551 மாதிரிப் பள்ளிகளைத் திறந்து வைத்தார். அப்போது சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிகள் அனைத்திற்கும்  வழக்கமான வண்ணங்களுக்குப் பதிலாக காவி வண்ணம் பூசப்பட்டு இருந்தது.</p><h3><strong>ஏஐஎம்ஐஎம் குற்றச்சாட்டு:</strong></h3><p>இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட என்டிஏ கூட்டணிக் கட்சிகள் இந்த நடவடிக்கையை ஆதரித்த நிலையில், இது “காவிமயமாக்கல்” முயற்சி என்று ஏஐஎம்ஐஎம் குற்றம் சாட்டியது.</p><p>வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட மதத்தை அரசு ஊக்குவிக்க முயற்சிப்பதாகவும் மாநில AIMIM தலைவர் அக்தருல் இமான் குற்றம் சாட்டினார்.</p><p>இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த அரசாங்கம் பள்ளிகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தையுமே காவிமயமாக்குகிறது.</p><p>அது மசூதிகளை இடித்து, மசூதிகள் மற்றும் கோயில்களின் பெயரால் மக்களிடையே பகைமையைத் தூண்டிவிடுகிறது.</p><p>இது ஜனநாயகத்தின் ஆடையைக் களைவதற்கு வழிவகுத்துள்ளது. இந்த நடவடிக்கை நாட்டின் சமூகக் கட்டமைப்பையும் ஜனநாயக விழுமியங்களையும் பாதிக்கும்.</p><p>நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது. முன்பு நிலவிய சமூக ஒற்றுமையும் அன்பும் புதிய தலைமுறையினரிடம் காணப்படவில்லை.</p><p>இது ஜனநாயகத்திற்கோ அல்லது எந்தவொரு நாகரிக சமூகத்திற்கோ நல்ல அறிகுறி அல்ல,” என்று அவர் கூறினார்.</p><h3><strong>பாஜக பதில்:</strong></h3><p>இதையடுத்து மாநில கல்வி அமைச்சர் மிதிலேஷ் திவாரி இந்த விமர்சனத்தை நிராகரித்ததோடு, வண்ணங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சர்ச்சையை உருவாக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.</p><p>இதுகுறித்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான அசோக் சௌத்ரி கூறுகையில், “நிறங்களின் அடிப்படையில் நாம் பிளவுகளை உருவாக்கக் கூடாது. இன்று, குழந்தைகளுக்கு மத பேதமின்றி, உயர் தொழில்நுட்பக் கல்விக்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம்.</p><p>இருப்பினும், இது எதிர்க்கட்சிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. காவி நிறம் சரஸ்வதி தேவியையும் செழிப்பையும் குறிக்கிறது. கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.</p><p>பள்ளி கட்டிடங்களின் நிறம் குறித்து ஆட்சேபனை தெரிவிப்பதை விடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இருபது ஆண்டு கால ஆட்சியில் கல்வியின் தரம் மேம்பட்டுள்ளதா என்பதில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்” என்று  கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நான் 56 வயது இளைஞர்களை பற்றி பேசவில்லை: ராகுல் காந்தியை மறைமுகமாக கிண்டல் செய்த பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-dig-at-56-year-old-youth-rahul-gandhi-ahead-of-monsoon-session</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-dig-at-56-year-old-youth-rahul-gandhi-ahead-of-monsoon-session#comments</comments><guid isPermaLink="false">ea4bdf6c-77da-4a9b-a239-b3afbebf75dc</guid><pubDate>Mon, 20 Jul 2026 15:07:38 +0000</pubDate><atom:updated>2026-07-20T15:07:38.240Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/cpwol7w1/RahulgandhiPMmodi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi- PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/cpwol7w1/RahulgandhiPMmodi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது அவர் "இந்தியாவின் இளைஞர்கள் விண்ணிற்கு புதிய ராக்கெட்டை செலுத்தியுள்ளனர். இது ஒரு அபாரமான வெற்றி. ராக்கெட்டை ஏவிய தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து இளைஞர்களின் வயது சராசரி 28 வயதாகும். நான் 56 வயது இளைஞர்களை பற்றி பேசிக் கொண்டிருக்கவில்லை" என்றார்.</p><p>மேலும், 56 வயது குறித்து மிகப்பெரிய அளவில் பிரதமர் மோடி பேசாமல் ""விண்வெளியில் இந்தியாவின் கொடியை நாட்டியுள்ள சராசரி வயது 28 கொண்ட இந்த இளைஞர்களுக்கு நிச்சயமாகப் பாராட்டுகள் உரித்தாக வேண்டும். இத்தகைய சாதனைகளே இந்தியாவுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கின்றன" என்றார்.</p><h2>காங்கிரஸ் எம்.பி. ரஞ்ஜீத் ரஞ்சன் கண்டனம்</h2><p>காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு 56 வயதாகிறது. கடந்த ஜூன் மாதம்தான் அவருடைய பிறந்த நாள். ராகுல் காந்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரை இளம் தலைவர் என காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்கள் அழைத்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் வகையில் மோடி மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.</p><p>இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ரஞ்ஜீத் ரஞ்சன் கூறுகையில் "இது வெட்கக்கேடான விஷயம். ராகுல் காந்தி உங்களிடம் வேலை கேட்கவில்லை. அவர் ஒரு 56 வயது இளைஞரைப் பற்றியும் பேசவில்லை. அவர், 20, 22, 25, அல்லது 26 வயதுடைய இளைஞர்களைப் பற்றிப் பேசுகிறார். அவர்கள் அரசு வேலைகளைப் பெற முடியாமல், வேலையில்லாமல் நம் நாட்டில் அலைந்து திரிகிறார்கள். தங்கள் நிலங்களை விற்றுத் தயாரானாலும், தேர்வுத் தாள்கள் கசிந்துவிடுகின்றன.</p><p>மொத்தம் 4 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டின் உயரம் 24 மீட்டர் ஆகும். 350 கிலோ வரையிலான செயற்கைகோள்களை சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்ட இந்த ராக்கெட்டின் என்ஜின்கள் முப்பரிமாண அச்சு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை.</p><p>ஸ்கைரூட் நிறுவனம் கூறும்போது, "இந்தியாவின் அறிவியல் மற்றும் விண்வெளி பயணத்தை வடிவமைத்த 3 தொலைநோக்கர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் முன்னோடியான க்ரம் சாராபாய், விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோரின் நுண் சிற்பங்களை கொண்ட் சிறிய பேலோடு உருவாக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பணிகளில் ‘பெங்காலி’ கட்டாயம்: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/bengali-mandatory-for-all-state-government-work-in-west-bengal-from-september-1-suvendu-adhikari</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengali-mandatory-for-all-state-government-work-in-west-bengal-from-september-1-suvendu-adhikari#comments</comments><guid isPermaLink="false">2e0f0a35-749e-40e1-a473-711c031fed5c</guid><pubDate>Mon, 20 Jul 2026 13:15:12 +0000</pubDate><atom:updated>2026-07-20T13:15:12.062Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,Bengali,suvendhu adhikari</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/06tnl06u/Untitled-design-39.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bengali made mandatory across all state government services from September 1]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/06tnl06u/Untitled-design-39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>மேற்கு வங்கத்தில் பெங்காலி கட்டாயம்:</strong></h3><p>மேற்கு வங்கத்தில் தாய்மொழியான பெங்காலி மொழியை செப்டம்பர் 1 முதல் அனைத்து மாநில அரசு பணிகளுக்கும் கட்டாயமாக்க போவதாக இன்று முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.</p><p>குடிமக்கள் சேவைகள், டிஜிட்டல் அமைப்புகள், விண்ணப்பப் படிவங்கள், சான்றிதழ்கள், இணையதளங்கள், மொபைல் செயலிகள், பொது அறிவிப்புப் பலகைகள், பத்திரிக்கை வெளியீடுகள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகள் உள்ளிட்ட அனைத்து பொதுத் தகவல்தொடர்பு வழிகளிலும் செப்டம்பர் 1 முதல் பெங்காலி பயன்பாட்டை அரசு கட்டாயமாக்க போவதாக கூறினார்.</p><p>மேலும் முதல் தகவல் அறிக்கைகள் (FIR), குறைதீர்ப்பு, குடிமக்கள் தரவு மற்றும் பாதுகாப்பு, பொது விழிப்புணர்வு செய்திகள் போன்ற காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பொது சேவைகளிலும் பெங்காலி பயன்பாடு உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.</p><p>மேற்கு வங்க நிர்வாகத்தில் வங்காள மொழியைப் பரவலாகப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனக்குக் கடிதம் எழுதி பரிந்துரை செய்ததாகவும் சுவேந்து அதிகாரி கூறினார்.</p><h3><strong>சுவேந்து அதிகாரி அறிவிப்பு:</strong></h3><p>இந்த அறிவிப்பு குறித்து மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி கூறுகையில், “இந்தியாவின் மாபெரும் கல்வியாளரும், அரசியல்வாதியும், ஆழ்ந்த சிந்தனையாளருமான டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாள் இந்த ஆண்டில் வருகிறது.</p><p>டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, இந்திய மொழிகளைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் பரவலாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.</p><p>நிர்வாகம், கல்வி மற்றும் பொது வாழ்வில் இந்திய மொழிகளுக்கு உரிய இடம் கிடைக்க வேண்டும் என்பது அவரது உறுதியான நம்பிக்கையாக இருந்தது.</p><p>மேற்கு வங்க அரசாங்கத்தின் சார்பாக மத்திய உள்துறை அமைச்சர் வழங்கிய ஆலோசனையை ஏற்று, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் செப்டம்பர் 1, 2026 முதல் நமது தாய்மொழியான வங்காள மொழியைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.</p><p>2011-ல் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அமைக்கப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி சுசாந்தா சாட்டர்ஜி தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையைப் பொதுமக்கள் முன்னிலையில் நான் வெளியிடுவேன்.</p><p>திரிணாமூல் காங்கிரஸ் அரசின் ஆட்சிக் காலத்தில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தாலும், அது ஒருபோதும் வெளியிடப்படவில்லை.</p><p>செப்டம்பர் 1, 2026 முதல், மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து நிர்வாக மட்டங்களிலும் வங்காள மொழி கட்டாயமாக்கப்படும்.</p><p> இந்த காலகட்டத்தில், எங்கள் அரசாங்கம் மொழிபெயர்ப்பாளர்களையும் மற்ற அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்யும்.</p><p>இந்திய அரசுடன் அலுவல் ரீதியான தகவல்களுக்கு, வெளிநாட்டு மொழிக்குப் பதிலாக வங்காளம் மற்றும் அலுவல் மொழியான இந்தியைப் பயன்படுத்தலாம்” என்று முதலமைச்சர் சுவேந்து அதிகாரி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ராமர் கோவில் நன்கொடை திருட்டு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி</title><link>https://www.maalaimalar.com/news/national/ram-temple-donation-theft-case-do-not-politicise-issue-chief-justice-surya-kant</link><comments>https://www.maalaimalar.com/news/national/ram-temple-donation-theft-case-do-not-politicise-issue-chief-justice-surya-kant#comments</comments><guid isPermaLink="false">503c92a4-2666-45c7-a61d-f5778335541a</guid><pubDate>Mon, 20 Jul 2026 12:55:12 +0000</pubDate><atom:updated>2026-07-20T12:55:12.199Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,ராமர் கோவில்  நன்கொடை,உச்சநீதிமன்றம்,Surya Kant,தலைமை நீதிபதி சூர்யகாந்த்,Ram temple donation case</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1xuu5pnx/SupremeCourtRamTemple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ram Temple Donation Theft Case
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1xuu5pnx/SupremeCourtRamTemple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு தொடர்பான விசாரணையின்போது, இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார்.</p><h2>ராமர் கோவில் நன்கொடை திருட்டு</h2><p>உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடை பணம், பொருட்கள் திருடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடிக்கணக்கில் பணம் திருடப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ஜூன் 25-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத்ராயின் முன்னாள் ஓட்டுநர் ராமஷங்கர் மிஸ்ராவும் அடங்குவார். இவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சம்பத் ராய் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>நன்கொடை திருட்டு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவிட்டது. சிறப்பு விசாரணைக்குழு (SIT) விசாரணை நடத்தி வருகிறது.</p><p>இதற்கிடையே இந்த வழக்கை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் கண்காணிக்கும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த் இந்த விவகாரத்தை அரசியலாக்குவதற்கு எதிராக மனுதாரர்களை எச்சரித்தார். மேலும், இவ்வழக்கில் ஆரம்பக்கட்ட விசாரணையை மேற்கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) மறுசீரமைக்க முடியுமா? என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரப் பிரதேச அரசிடம் கேட்டுள்ளது.</p><h2>சிபிஐ விசாரணை</h2><p>மனுதாரர்கள் உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை வேண்டும். ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டு்ம என்று கேட்டுக்கொண்டனர்.</p><p>இந்த விசாரணையின்போது உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "ராமர் கோவில் நன்கொடை திருட்டு தொடர்பான நிலை அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார். அத்துடன் இதற்கு மேல் விரிவாக என்றால் கூற இயலாது என்றார்.</p><p>நிலை அறிக்கையை நீதிபதிகள் ஆய்வு செய்தபோது, ​​சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மூலம் விசாரணை நடைபெறுகிறதா என்று நீதிபதி சூர்ய காந்த் வினவினார்.</p><p>அதற்குப் பதிலளித்த மேத்தா, ஆரம்பக்கட்டப் பரிசீலனை சிறப்பு புலனாய்வுக் குழுவால் மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது இவ்வழக்கை காவல்துறை விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.</p><p>மேலும், "உண்மையை கண்டறியவே ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையிலான குற்றம் (cognizable offence) நிகழ்ந்துள்ளதாக அக்குழு கண்டறிந்துள்ளது" என்றார்.</p><p>இதையடுத்து, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணையை மேற்கொள்ளலாம் என்று கூறிய நீதிபதிகள் அமர்வு, ஒரு மூத்த அதிகாரியின் தலைமையில் அக்குழுவை மறுசீரமைக்க முடியுமா என்றும் கேட்டனர்.</p><p>அத்துடன் "நாங்கள் ஒரு எச்சரிக்கையை மட்டுமே விடுக்கிறோம். இப்பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம். விசாரணை நேர்மையான முறையில் நடைபெற்று, தர்க்கரீதியான முடிவை எட்ட வேண்டும்" என்றார் தலைமை நீதிபதி சூர்ய காந்த்.</p><p>நிலை அறிக்கையை பரிசீலிக்க மூன்றிலிருந்து நான்கு நாட்கள் தேவைப்படும் என்று கூறிய நீதிபதிகள் அமர்வு, அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. "அப்போது சில உத்தரவுகளைப் பிறப்பிப்போம்" என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.</p><p>இன்றைய வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜெய்மல்யா பாக்சி, வி. மோகனா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.</p>]]></content:encoded></item><item><title>வெற்றியடையும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்? பதவி விலகும் தர்மேந்திர பிரதான்?</title><link>https://www.maalaimalar.com/news/national/will-the-cockroach-partys-protest-succeed-is-dharmendra-pradhan-set-to-resign</link><comments>https://www.maalaimalar.com/news/national/will-the-cockroach-partys-protest-succeed-is-dharmendra-pradhan-set-to-resign#comments</comments><guid isPermaLink="false">c5f6a41e-c1e2-4f88-9b83-73fd19bb5047</guid><pubDate>Mon, 20 Jul 2026 12:44:13 +0000</pubDate><atom:updated>2026-07-20T12:44:13.628Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித்ஷா,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Cockroach Janata Party,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/bf0fk8xq/New-Project-2026-07-20T181354.111.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வெற்றியடையும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்? பதவி விலகும் தர்மேந்திர பிரதான்?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/bf0fk8xq/New-Project-2026-07-20T181354.111.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற கூட்டத்தொடர், எதிர்க்கட்சிகளின் அமளி; கரப்பான்பூச்சி கட்சியினரின் பேரணி, போலீசாரின் தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சு உள்ளிட்ட சலசலப்புகளுக்கு மத்தியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்தார். </p><p>சுமார் 4 மணிநேரத்திற்கு அதிகமாக நடைபெற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து, தர்மேந்திர பிரதான் பதவி விலகுகிறாரா என்ற கேள்வி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.</p><p>நீட் குளறுபடி உள்ளிட்ட கல்வித்துறையில் நிகழ்ந்த தவறுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என ஜூன்.20 முதல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறது. </p><p>இதில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இணைய போராட்டம் மேலும் கவனம் ஈர்த்தது. அதிலும் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். டெல்லியை உலுக்கிய இந்த தொடர் போராட்டத்தின் விளைவாக, மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>இதில் அவர்கள் மூன்று கோரிக்கைகளை நட்டாவிடம் வைத்துள்ளனர். தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும், நீட் தேர்வால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம், கல்வித்துறையில் சீர்த்திருத்தங்களை கொண்டுவருவது என மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். </p><p>இதனிடையே அமித்ஷாவும் பதவி விலகல் விவகாரம் தொடர்பாகவே பிரதானை அழைத்துப் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவர் பதவி விலகல் உறுதியாகிறதா என்ற கேள்விகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே கைது?</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-cockroach-janata-party-chief-held</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-cockroach-janata-party-chief-held#comments</comments><guid isPermaLink="false">e90098e3-46ca-41a6-8404-c15f86b73ba2</guid><pubDate>Mon, 20 Jul 2026 12:07:04 +0000</pubDate><atom:updated>2026-07-20T12:07:04.847Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DelhiProtest,AbhijeetDipke,அபிஜித்தீப்கே,CockroachJantaParty,NEETProtest,டெல்லிபோராட்டம்,ChaloSansad</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1w9lsa16/DelhiProtestAbhijeetDipke" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DelhiProtestAbhijeetDipke ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1w9lsa16/DelhiProtestAbhijeetDipke?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அபிஜித் தீப்கேவை இன்று டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>போராட்டக் களத்தில் தடியடி:</strong></h2><p>நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி கட்சி சார்பில் இன்று 'சலோ சன்சாத்' என்ற பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p>டெல்லி போலீசார் விதித்திருந்த 163 தடை உத்தரவையும் மீறி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் ஜன்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி முன்னேற முயன்றனர்.</p><p>போலீசார் அமைத்திருந்த பல அடுக்கு இரும்புத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் முன்னேறியதால், அங்கு நிலைமை மோசமடைந்தது. மேலும் கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடியையும் நடத்தினர்.</p><h2><strong>சிஜேபி கட்சியின் குற்றச்சாட்டு:</strong></h2><p>இந்த தடியடியின் போது, உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் இருந்த தங்களது கட்சித் தலைவர் அபிஜித் தீப்கேவை போலீசார் கைது செய்துள்ளதாக அக்கட்சி தொண்டர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். </p><p>போலீசார் தங்களது மாணவர்களை வெறியோடு தாக்கியதாகவும் இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக குரல் கொடுக்க வேண்டும் என்றும் சிஜேபி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>இருப்பினும், போலீசார் தரப்பில் வன்முறைக் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ளதோடு, தடையை மீறியதால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்த CJP தலைவர்கள்: முன்வைத்த முக்கிய 3 கோரிக்கைகள்</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-leaders-meet-union-minister-jp-nadda-submit-letter-of-demands</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-leaders-meet-union-minister-jp-nadda-submit-letter-of-demands#comments</comments><guid isPermaLink="false">75e74841-cde1-481d-b1a3-734922df4772</guid><pubDate>Mon, 20 Jul 2026 11:30:49 +0000</pubDate><atom:updated>2026-07-20T11:30:49.281Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,JP Nadda,parliament,CJP Protest,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/c99mr7jp/CJPProtest001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Leaders Meets JP Nadda]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/c99mr7jp/CJPProtest001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போராட்டத்தை கைவிட வேண்டுமென்றால் எங்களின் 3 முக்கிய கோரிக்கைகளை கைவிட வேண்டும் என்று கராப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) செய்தி தொடர்பாளர்கள் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் தெரிவித்துள்ளனர்.</p><p>நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரியும், கல்வி முறையில் சீர்திருத்தம் செய்யக்கோரியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (CJP) டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p><h2>முற்றுகை போராட்டம்</h2><p>பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் பாராளுமன்றத்தை நோக்கி இன்று பேரணியாக சென்று முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் அறிவித்து இருந்தனர். இதையடுத்து, நாடு முழுவதும் இருந்து 20 ஆயிரத் திற்கும் மேற்பட்டவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் குவிந்தனர்.</p><h2>பிரகாஷ்ராஜ் ஆதரவு</h2><p>இந்த போராட்டத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை ஷபானா ஆஸ்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.</p><p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் பேரணிக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. டெல்லிக்கு வெளியில் இருந்து வருவோரை தடுக்கும் வகையில் முக்கிய நுழைவு வாயில்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.</p><h2>துணை ராணுவம்</h2><p>ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க விரைவு அதிரடிப்படையினரும் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டனர். ஜந்தர் மந்தரில் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு இருந்தனர். டெல்லியில் இணைய தள சேவையும் துண்டிக்கப்பட்டது.</p><p>இதற்கிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே கூறுகையில், "அமைதியான முறையில், பாராளுமன்றம் நோக்கி நாங்கள் பேரணி செல்ல திட்டமிட்டுள்ளோம். ஆனால், எங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க காவல் துறை திட்டமிட்டுள்ளது என்று தெரியவில்லை. ஜந்தர் மந்தர் அருகே கற்கள் நிரப்பப்பட்ட லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது" என்று தெரிவித் துள்ளார்.</p><h2>தடியடி</h2><p>இந்த நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இன்று காலையில் ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்டு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனால் அவர்கள் தடுப்புகளை மீறி செல்ல முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p>ஆனாலும் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால் கரப்பான் பூச்சி கட்சி தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதையடுத்து அவர்கள் கலைந்து ஓடினார்கள். சிலர் தடியடியையும் மீறி அங்கிருந்து பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். சிலரை கைது செய்தனர்.</p><p>இதற்கிடையே பேரணியில் ஈடுபட்ட சிலர் பாராளுமன்றம் அருகே வந்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். மேலும் அவர்கள் பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைய முடியாமல் தடுக்க பாராளுமன்றத்தின் வடக்கு நுழைவு வாயிலை மூடினார்கள். மேலும் பாராளுமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது.</p><h2>ஜே.பி. நட்டாவை சந்தித்த CJP செய்தி தொடர்பாளர்கள்</h2><p>இந்த நிலையில் கராப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர்களான சவுரவ் தாஸ் மற்றும் அஷுடோஷ் ரங்கா ஆகியோர் மத்திய அமைச்சரை சந்தித்தனர்.</p><p>அப்போது அமைச்சர் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. அதற்கு இவர்கள் எங்களுடைய 3 கோரிக்கைகளை நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிட தயார் என்று தெரிவித்துள்ளனர்.</p><p>நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும். நீட் தேர்வால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி வழங்க வேண்டும். சீரழிந்த உயர் கல்வித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கைகள் என்று அவர்கள் நட்டாவிடம் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சி.ஜே.பி போராட்டம், பாராளுமன்றத்தில் அமளி: அமித் ஷாவை சந்தித்த தர்மேந்திர பிரதான்</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-porattam-parliament-tension-dharmendra-pradhan-amit-shah-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-porattam-parliament-tension-dharmendra-pradhan-amit-shah-meeting#comments</comments><guid isPermaLink="false">cb25e034-77a8-4317-b0a4-1090672d329a</guid><pubDate>Mon, 20 Jul 2026 10:50:06 +0000</pubDate><atom:updated>2026-07-20T10:50:06.660Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித் ஷா,தர்மேந்திர பிரதான்,parliment session,சி.ஜே.பி போராட்டம்</media:keywords><media:content height="720" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/u59z4x7u/Dharmendra-Pradhan-meet-Amit-Shah.webp" width="1280"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  தர்மேந்திர பிரதான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/u59z4x7u/Dharmendra-Pradhan-meet-Amit-Shah.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><h2>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்</h2><p>இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, சுப்ரீம் கோர்ட்டு (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகள் (திருத்தம்) மசோதா, தேசிய கவுரவத்துக்கு அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா (வந்தே மாதரத்துக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை விதிக்கும் மசோதா). சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி (திருத்தம்) மசோதா ஆகிய 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது.</p><h2>தீவிரமடைந்த போராட்டம்</h2><p>இந்நிலையில் நாடாளுமன்றம் நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் குவியத் தொடங்கியுள்ளதால் அங்கு பதற்றம் நிலவியது. ஜந்தர் மந்தரை தவிர டெல்லியின் மற்ற இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடைவிதிக்கப்பட்டது. பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படடுத்தப்பட்டது.</p><p>முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்ற வடக்கு வாயில் மூடப்பட்ட‌து. நாடாளுமன்ற வளாகத்தில் துணை ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களின் பேரணி தடையை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி வந்தனர். அப்போது நாடாளுமன்றத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர். மேலும் பலத்த பாதுகாப்பு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டது.</p><h2>அமைச்சர்களின் சந்திப்பு</h2><p>இந்நிலையில், புது டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இருப்பினும் நாடாளுமன்றத்தில் நிலவி வரும் தீவிர அரசியல் நடவடிக்கைகள், போராட்டங்கள் மற்றும் பல்வேறு தேசிய பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்ற நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p>]]></content:encoded></item><item><title>கேரளத்தில் தாய்-மகன் கொலை வழக்கு: முதியவருக்கு மரண தண்டனை விதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-mother-son-murder-case-elderly-man-sentenced-to-death</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-mother-son-murder-case-elderly-man-sentenced-to-death#comments</comments><guid isPermaLink="false">b2b1699c-1640-483f-97d9-7887f5314b14</guid><pubDate>Mon, 20 Jul 2026 10:27:05 +0000</pubDate><atom:updated>2026-07-20T10:27:05.728Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை வழக்கு,Murder case,kerala,மரண தண்டனை,death sentence,கேரளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/855lw4ea/Death.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kerala Double Murder]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/855lw4ea/Death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் நென்னமாரா அருகே உள்ள பொத்துண்டியைச் சேர்ந்தவர் சுதாகரன். இவரது தாயார் லட்சுமி. இவர்கள் இருவரும் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.</p><p>இந்த கொலைகள் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செந்தாமரை (வயது 61) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், சுதாகரனின் மனைவி சஜீதாவை கொலை செய்தவர் என்பதும், அதற்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற அவர், ஜாமீனில் வெளிவந்தபோது தான் சுதாகரன் மற்றும் லட்சுமியை கொலை செய்தி ருப்பதும் உறுதியானது.</p><p>இதுதொடர்பான வழக்கு பாலக்காடு கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அப்போது திட்டமிட்ட பழிவாங்கும் செயலாக கொலைகள் நடந்திருப்பதாக அரசு தரப்பில் கோர்ட்டில் வாதிடப்பட்டது.</p><p>கடந்த 2026-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி முதல் விசாரணை நடைபெற்ற நிலையில், இந்த வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த வாரம் நிறைவடைந்தன. அதன்பிறகு செந்தாமரை குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட செந்தாமரைக்கு மரண தண்டதை விதித்து தீர்ப்பு வழங்கினார்.</p><p>மேலும் அவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த நீதிபதி, அதனை இறந்த சுதாகரனின் குழந்தை களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். கொலை நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.</p><p>பிஎன்எஸ் சட்டத்தின் 103(1) மற்றும் 126(2) பிரிவுகளின் கீழ் செந்தாமரா குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறிந்தது. குற்றம் சாட்டபபட்டவர் சமூகத்திற்குப் பிரச்சனையாக இருந்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்று பல்வேறு உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. அதன் அடிப்படையில் இந்த தீர்ப்பு அளிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>டெல்லியில் பரபரப்பு: நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தால் 163 தடை உத்தரவு அமல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-parliament-siege-protest-section-163-restrictions</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-parliament-siege-protest-section-163-restrictions#comments</comments><guid isPermaLink="false">a6876ac9-2aa7-4b16-be14-903a6fa0cdca</guid><pubDate>Mon, 20 Jul 2026 10:04:27 +0000</pubDate><atom:updated>2026-07-20T10:04:27.649Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DelhiProtest,SonamWangchuk,Section163,NEETControversy,CJPProtest,நீட்தேர்வுமுறைகேடு,சோனம்வாங்சுக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/p5kp2whg/DelhiProtest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DelhiProtest  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/p5kp2whg/DelhiProtest?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், டெல்லியின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக ‘பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா’ பிரிவு 163 ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>போராட்டத்திற்கான காரணம்..</strong></h2><p>'காக்ரோச் ஜனதா கட்சி' அமைப்பு, நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் இன்று ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி</p><p>'சலோ சன்சாத்' என்ற பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.</p><h2>அனுமதி மறுப்பு &amp; கட்டுப்பாடுகள்:</h2><p>இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது குறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் சச்சின் சர்மா தனது சமூக வலைத்தள பக்கத்தில், "இந்த போராட்டத்திற்கு எந்த அனுமதியும் கோரப்படவும் இல்லை, வழங்கப்படவும் இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>கட்டுப்பாடுகள்..</strong></h2><p>உதவி போலீஸ் கமிஷனர் அஜய் சர்மா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, நாடாளுமன்ற வீதிக்கு உட்பட்ட பகுதிகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>ஜந்தர் மந்தர் தவிர மற்ற பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடவோ, பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தவோ அனுமதி இல்லை என்று தெரிவித்தது.</p><p>போராட்டக்காரர்கள் லத்திகள், கம்புகள், பதாகைகள் அல்லது எந்த விதமான ஆயுதங்களையும் எடுத்துச் செல்ல கூடாது என்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கோஷங்களை எழுப்பவோ, உரையாற்றவோ கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது 'பாரதிய நியாய சன்ஹிதா' பிரிவு 223-ன் கீழ் உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>குவியும் மக்கள் - பலத்த பாதுகாப்பு:</strong></h2><p>மறுபுறம், நீட் விவகாரத்திற்காக உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவிக்க ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டுள்ளனர்.</p><p>இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்க டெல்லி போலீசார், துணை ராணுவப் படையினர் மற்றும் அதிரடிப்படையினர் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை</title><link>https://www.maalaimalar.com/news/national/dog-saves-family-from-snake-treatment-at-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/national/dog-saves-family-from-snake-treatment-at-hospital#comments</comments><guid isPermaLink="false">8afaeafc-f03c-48d7-b701-f6a3c6062e0e</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:37:38 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:37:38.027Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dog,snake,ஆந்திர பிரதேசம்,AP,பாம்பு,நாய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mdh5c8im/dog.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dog - Snake]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mdh5c8im/dog.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்த நாயை  பாம்பு கடித்ததால் உடலில் விஷம் ஏறியது.</p><p>ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், பிதாபுரம் அடுத்த கோத்த பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். இவர் பாக்சர் இன நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.</p><p>நேற்று முன்தினம் மாலை பக்கத்து காலி மனையில் இருந்து நாகப்பாம்பு ஒன்று ஸ்ரீனிவாஸ் வீட்டிற்குள் வந்தது. இதனைக் கண்ட ஸ்ரீனிவாஸ் குடும்பத்தினர் அலறினர். அப்போது பாம்பை கண்ட நாய் உடனடியாக உஷார் ஆனது. பாம்பை மேலும் வீட்டிற்கு நுழைய விடாமல் தடுத்தது.</p><h2>நாய் - பாம்பு சண்டை</h2><p>அப்போது நாய்க்கும், பாம்புக்கும் இடையே சிறிது நேரம் சண்டை ஏற்பட்டது. பாம்பு ஆக்ரோஷத்துடன் படம் எடுத்து நாயை கடிக்க முயன்றது. ஆனால் நாய் எதிர்பாராத விதமாக பாம்பின் தலையை கவ்வி கடித்தது. இதில் பாம்பு பரிதாபமாக இறந்தது. </p><p>பாம்பின் தலையை கடித்ததால் நாயின் உடலில் விஷம் ஏறி நிலைகுலைந்தது. செல்ல நாயை காக்கிநாடாவில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. </p>]]></content:encoded></item><item><title>திரிபுரா டிஜிபி மர்ம மரணம்... காவல்துறை விசாரணை!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/mysterious-death-of-tripura-dgp-police-investigation-underway</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/mysterious-death-of-tripura-dgp-police-investigation-underway#comments</comments><guid isPermaLink="false">cd31fccb-a62b-4f29-8f98-93883be413dc</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:29:50 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:29:50.882Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anurag Dhankar,Tripura DGP,அனுராக் தங்கர்,திரிபுரா டிஜிபி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/zbqqbo6l/New-Project-2026-07-20T144520.209.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திரிபுரா டிஜிபி மர்ம மரணம்... காவல்துறை விசாரணை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/zbqqbo6l/New-Project-2026-07-20T144520.209.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>திரிபுரா மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குநர் அனுராக் தங்கர், காவல்துறை தலைமையகத்தில் உள்ள தனது அலுவலக குளியலறையில் இருந்து இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். </p><p>உடனே போலீசார் அவரை அகர்தலா கோவிந்த் பல்லப் பந்த் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனைத்தொடர்ந்து அனுராக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர். மேலும் போலீசாரும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். </p><p>இந்தச் செய்தியைத் தொடர்ந்து, முதலமைச்சரும் மற்ற மூத்த அரசு அதிகாரிகளும் டிஜிபி அலுவலகத்திற்கு விரைந்தனர். மாநிலத்தின் உயர்மட்ட காவல் அதிகாரியின் மரணம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>அனுராக் தங்கர்</h2><p>1994-ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த இவர், திரிபுரா காவல்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார். கடந்தாண்டு மே மாதம் காவல்துறையின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் மாநிலத்தின் புலனாய்வுத் துறை தலைமை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.</p><p>மேலும் சிபிஐ, பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் மற்றும் கொசோவோவில் உள்ள ஐ.நா. அமைதி காக்கும் படையிலும் பணியாற்றியுள்ளார். சிபிஐ-யில் பணியாற்றிய காலத்தில், மோசடிக் குற்றவாளியான நீரவ் மோடி தொடர்பான விசாரணையை  வழிநடத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெங்கு காய்ச்சல் தடுப்பூசி: 4 முதல் 60 வயது வரை போடலாம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-approves-first-dengue-vaccine-qdenga</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-approves-first-dengue-vaccine-qdenga#comments</comments><guid isPermaLink="false">c844a166-94f0-497e-b207-dee752da00a1</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:29:30 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:29:30.682Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>dengue vaccine,டெங்கு தடுப்பூசி,Qdenga,DCGI,டெங்கு காய்ச்சல்,Takeda QDENGA dengue vaccine</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/uyrr8k5a/Untitled-design-38.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Drug regulator clears India's first Dengue Vaccine]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/uyrr8k5a/Untitled-design-38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>டெங்கு தடுப்பூசிக்கு இந்தியா அங்கீகாரம்:</strong></h3><p>இந்தியாவில் முதன் முறையாக டெங்கு காய்ச்சலுக்கு தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளது.</p><p>டகேடா பயோ பார்மசூட்கல்ஸ் என்ற இந்திய நிறுவனம் டெங்கு காய்ச்சலுக்கான க்யூடெங்கா என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.</p><p>இந்த தடுப்பூசி 4 முதல் 60 வயது வரையிலான நபர்களுக்கு செலுத்தும் வகையில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளது.</p><p>மேலும் கடந்த காலங்களில் டெங்கு நோய்த் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருந்தாலும், இந்த தடுப்பூசியை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சில டெங்கு தடுப்பூசிகளை போல் அல்லாமல், தற்போது உருவாக்கப்பட்டுள்ள கியூடெங்கா தடுப்பூசிக்கு, முன் பரிசோதனை தேவையில்லை.</p><p>இதன்மூலம் தகுதியுள்ள நபர்கள், தங்களுக்கு முன்பு டெங்கு தொற்று இருந்ததா என முதலில் பரிசோதிப்பதற்கு முன்பு, இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.</p><h3><strong>டெங்கு பரிசோதனை:</strong></h3><p>இதுகுறித்து மருந்து சந்தைகளின் தலைவர் மகேந்தர் நாயக் கூறுகையில், “க்யூடெங்கா தடுப்பூசி 2022-இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, 43 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு, உலகளவில் 32 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. </p><p>இந்த அங்கீகாரம் இந்தியாவில் டெங்கு தடுப்பை வலுப்படுத்துவதில், ஒரு முக்கிய முன்னேற்றத்தை குறிக்கிறது.</p><p>ஏழு ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட நீண்டகால தரவுகளின்படி, இந்த தடுப்பூசியானது நான்கு டெங்கு வைரஸ் வகைகளால் ஏற்படும் டெங்கு தொற்றால் பாதிக்கப்படாதவாறு பாதுகாக்கிறது.</p><p>டெங்கு பரவலாக உள்ள நாடுகள் மற்றும் மற்ற பிராந்தியங்களில், 28,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 19 முதற்கட்ட, இரண்டாம் மற்றும் மூன்றாம் மருத்துவ பசிசோதனைகளுக்கு பின்பு, இந்தியாவில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.</p><p>4 முதல் 60 வயது வரையிலான மக்களிடம் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மதிப்பீடு செய்வதற்காக, இந்தியாவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட DEN-302 மருத்துவ பரிசோதனையின் முடிவுகளும் இந்த முடிவை ஆதரித்துள்ளன.</p><h3><strong>உலக சுகாதார அமைப்பு அனுமதி:</strong></h3><p>டெங்கு காய்ச்சலுக்கு எதிரான இந்த தடுப்பூசியானது, மூன்று மாத இடைவெளியில் தோலுக்கு கீழே 0.5 மில்லி லிட்டர் அளவுள்ள இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட உள்ளது.</p><p>QDENGA தடுப்பூசியானது, உலக சுகாதார அமைப்பின் (WHO) முன் தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளது.</p><p>மேலும் UNICEF மற்றும் பான் அமெரிக்க சுகாதார அமைப்பு (PAHO) போன்ற உலகளாவிய முகமைகளில் இந்த தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பணிக்காக 50 முறை தேர்வு எழுதிய பட்டதாரி தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது</title><link>https://www.maalaimalar.com/news/national/b-tech-gold-medallist-suicide</link><comments>https://www.maalaimalar.com/news/national/b-tech-gold-medallist-suicide#comments</comments><guid isPermaLink="false">ac9077f0-4b73-4f46-bb2f-8469dc418ed4</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:06:57 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:06:57.766Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,இளைஞர் தற்கொலை,youngman suicide</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/jquxnzvn/suicide.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/jquxnzvn/suicide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு பணிக்காக 50 முறை தேர்வு எழுதிய பட்டதாரி இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.</p><p>பீகார் மாநிலம், பக்ஸாரைச் சேர்ந்தவர் ஆனந்த் குமார், 2024-ம் ஆண்டு கான்பூரில் உள்ள ஒரு முன்னணி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியலில் தனது பி.டெக் பட்டப்படிப்பை முடித்தார். </p><h2>தற்கொலை</h2><p>ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, அவர் தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். 50-க்கும் மேற்பட்ட அரசுப் பணி நியமனத் தேர்வுகளில் எழுதியும், அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், குஜ்ரன்வாலாவில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.</p><h2>மன்னிப்பு கடிதம்</h2><p>போலீசார் அவரது உடலை கைப்பற்றினர். அப்போது அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் தனது தந்தையிடம் பலமுறை மன்னிப்புக் கோரியுள்ள அந்தக் கடிதத்தில், “மன்னிக்கவும், அப்பா... நான் ஒரு அரசு வேலைக்காக 50 முறை முயற்சி செய்தேன். ஆனால் என்னால் வெற்றி பெற முடியவில்லை. தயவு செய்து என்னை மன்னியுங்கள்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>மாநிலங்களவையில் எதிரொலித்த CJP போராட்டம்.. போராட்டக் களத்தில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protests-police-lathicharge-and-tear-gas-on-students-at-jantar-mantar</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protests-police-lathicharge-and-tear-gas-on-students-at-jantar-mantar#comments</comments><guid isPermaLink="false">1cb43aff-8acd-465e-b970-b406ec103fb1</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:25:42 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:25:42.556Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rally,பேரணி,மாநிலங்களவை,rajya sabha,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mev746gb/tn-26.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ CJP PROTEST]]></media:title><media:description type="html"><![CDATA[ CJP PROTEST]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mev746gb/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த கல்வியாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-sonam-wangchuk-seeks-discharge-activist-asks-hospital-to-allow-him-join-parliament-march">சோனம் வாங்சுக்</a> நேற்று முன் தினம் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். </p> <h2>பேரணி</h2><p>இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். பேரணிக்கு தடை விதித்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p>இன்று காலை தடுப்புகளை தாண்ட முயன்றவர்கள் மீது போலீசார் மற்றும் மத்திய படையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.</p> <h2>பலத்த பாதுகாப்பு</h2><p>போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் குவியத் தொடங்கியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.</p><p>ஜந்தர் மந்தரை தவிர டெல்லியின் மற்ற இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படடுத்தப்பட்டுள்ளது.</p><p>முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்ற வடக்கு வாயில் மூடப்பட்ட‌து. நாடாளுமன்ற வளாகத்தில் துணை ராணுவம், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். </p><h2>கண்ணீர் புகைகுண்டு</h2><p>இதனிடையே ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி அவர்களை கலைக்க முயன்றனர்.</p> <h2>உண்ணாவிரதம்</h2><p>இந்த போராட்டத்தில் 23 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வந்த இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த இரு மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர். நடிகர் பிரகாஷ் ராஜ், மூத்த பாலிவுட் நடிகை ஷாபனா அஸ்மி உள்ளிட்டோர் அடைய குழு நேரில் சென்று மேற்கொண்ட சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர சம்மதம் தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும் பேரணி தொடங்க உள்ள நிலையில் சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கேயும் தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.</p><p>சோனம் வாங்சுக், தன் கோரிக்கைகள் நிறைவேறும்வரை உண்ணாவிரதத்தை நிறுத்த மாட்டேன் என மருத்துவனையில் இருந்து கடிதம் எழுதியுள்ளார். மேலும் தான் நலமாக உள்ளதாகவும், பேரணியில் பங்கேற்க தன்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யுமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.</p> <h2>பேச்சுவார்த்தை</h2><p>பேச்சுவார்த்தை சிஜேபி தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் காவல்துறையினரால் துணை ஆணையர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.</p><h2>மாநிலங்களவை</h2><p>சிஜேபி போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் மாநிலங்களவை தலைவர் ஜேபி நாட்டவை தனியே சந்திக்க திட்டமிட்டுள்ளனர். சிஜேபி போராட்டம் குறித்து எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி முழக்கமிட்டதால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>அவையில் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான மல்லிகார்ஜுன கார்கே தங்களுக்கு ஆதரவாக பேசியதற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
நலமாக உள்ளேன்.. பேரணியில் பங்கேற்க என்னை டிஸ்சார்ஜ் செய்யுங்கள் - மருத்துவ அறிக்கைக்கு இடையில் வாங்சுக் வேண்டுகோள் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-sonam-wangchuk-seeks-discharge-activist-asks-hospital-to-allow-him-join-parliament-march</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-sonam-wangchuk-seeks-discharge-activist-asks-hospital-to-allow-him-join-parliament-march#comments</comments><guid isPermaLink="false">06fdd6cb-ef0d-4c7b-a9b8-bfad79c1d376</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:34:05 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:34:05.600Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>hunger strike,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party,உண்ணாவிரதம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/vzg6xcfu/tn-25.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/vzg6xcfu/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்டவற்றால் நாட்டின் கல்வித் துறையை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்ற நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி நாடு முழுவதும் குரல்கள் வலுத்து வருகின்றன.</p><p>இதனை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி கட்சியினர் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் அமைப்புகளாகவும், தன்னிச்சையாகவும் வந்து கலந்துகொண்டு 1 மாத காலமாக போராடி வருகின்றனர்.</p><p>குறிப்பாக இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் நேற்று முன் தினம் டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.</p><h2>பேரணி</h2><p>இதனையே இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள சூழலில் ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.</p><p>ஆனால் இந்த பேரணிக்கு நேற்றே தடை விதிக்கப்பட்டு அங்கு போலீசார் மற்றும் மத்திய படையினர் குவிக்கப்பட்டனர்.</p><p>பாராளுமன்றம் நோக்கி பேரணியை தொடங்க முனைப்பு காட்டி  டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி முன்னேற முயன்றதால், கூட்டத்தைக் கலைக்க போலீசார் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-youth-march-to-parliament-stopped-with-lathicharge-in-delhi">தடியடி </a>நடத்தினர்.</p><p>டெல்லி காவல்துறை ஜந்தர் மந்தரைத் தவிர பிற பகுதிகளில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், பேரணிகள் நடத்துவதற்கும் தடை விதித்து, பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. </p><p>மேலும் நகரின் 5 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் வேலைகளுக்கு செல்வோர் ரெயில் கிடைக்காமல் அவதியுற்றனர். </p><p>தடைகள் இருந்தபோதிலும் ஜந்தர் மந்தரில் அதிகளவில் கூடியுள்ள இளைஞர்கள் பேரணியை தொடங்க மும்முரம் காட்டி வருகின்றனர்.</p> <h2>சோனம் வாங்சுக் உடல்நிலை</h2><p>இன்று காலை 10 மணிக்கு சப்தர்ஜங் அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், <a href="https://www.maalaimalar.com/topic/sonam-wangchuk">சோனம் வாங்சுக் </a>உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளது. அவரின் உடல்நிலை சிறப்பு மருத்தவ நிபுணர் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.</p><h2>சோனம் வாங்சுக் ஆர்வம்</h2><p>தான் நலமாக உள்ளதாகவும் நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் தான் பங்கேற்க ஏதுவாக தன்னை டிஸ்சார்ஜ் செய்ய சோனம் வாங்சுக் கோரியுள்ளார்.</p><p>அவர் தன் எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில்,</p><p>"இன்று எனது உடல்நிலை மிகவும் சீராக, நலமாக உள்ளது. எனவே, இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் நான் கலந்துகொள்ளும் வகையில், தற்காலிகமாகவாவது என்னை மருத்துவமனையை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.</p> <h2>பேச்சுவார்த்தை</h2><p>போராட்டத்திற்கு இடையே, சிஜேபி தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் காவல்துறையினரால் துணை ஆணையர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>இது குறித்துப் பேசிய சௌரவ் தாஸ், "கல்வித் துறை சீர்திருத்தங்கள் குறித்த எங்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.</p><p>நிர்வாகத் தரப்பிலிருந்து இந்த அழைப்பு மிகவும் தாமதமாக வந்திருந்தாலும், கல்வி முறையில் உள்ள சீர்கேடுகளை தடுக்க நாங்கள் விவாதத்திற்குத் தயாராக உள்ளோம்" என்று கூறினார்.</p><h2>உண்ணாவிரதம் தொடரும்</h2><p>இதனிடையே மத்திய அரசு தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்கும் வரையோ, அல்லது இன்று தொடங்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வித் துறை குறித்து விவாதிப்போம் என்று உறுதியளிக்கும் வரையோ தனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று சோனம் வாங்சுக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>நீட், ராமர் கோவில் முறைகேடு.. எதிர்க்கட்சி அமளியால் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-lok-sabha-adjourned-amid-opposition-protests-over-neet-and-ayodhya-ram-temple-trust-funds</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-lok-sabha-adjourned-amid-opposition-protests-over-neet-and-ayodhya-ram-temple-trust-funds#comments</comments><guid isPermaLink="false">04774660-0332-4384-b7fe-ffffc97c38d6</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:14:25 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:14:25.385Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,பாராளுமன்ற கூட்டத்தொடர்,சபாநாயகர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/j5rgjnq7/tn-24.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ நாடாளுமன்றம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நாடாளுமன்றம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/j5rgjnq7/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-begin-today">நாடாளுமன்ற மழைக்காக கூட்டத்தொடர்</a> இன்று தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் மக்களவை கடும் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. </p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை முன்னிருத்தி போர்க்கோலம் பூண்டது. </p><p>இன்று அவை கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கங்கள் மற்றும் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை  நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. </p><h2>ஒத்திவைப்பு</h2><p>நீட் தேர்வு சர்ச்சை மற்றும் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை நிதி முறைகேடு புகார் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் இந்தச் சலசலப்பில் ஈடுபட்டன.</p><p>மக்களவை தொடங்கியதும், சபாநாயகர் ஓம் பிர்லா முன்னாள் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.</p><p>இரங்கல் குறிப்புகள் வாசித்து முடிக்கப்பட்ட உடனே, நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் அயோத்தி ராம ஜன்மபூமி அறக்கட்டளையின் நிதி மோசடிப் புகார் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.</p><p>அவையின் அமளிக்கு இடையே, சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்களை அமைதி காக்குமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தார்.</p><p>எனினும், முழக்கங்கள் தொடர்ந்ததால் சபாநாயகர் அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதேபோல மாநிலங்களவையும்  ஒத்திவைக்கப்பட்டது.</p><h2>காங்கிரஸ் குற்றச்சாட்டு</h2><p>இது குறித்துசெய்திலாயர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகோய், "மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இல்லை என்பது கடந்த சில நாட்களாகவே தெளிவாக புலப்படுகிறது.</p><p>ராமர் கோவில் விவகாரமோ அல்லது நீட் விவகாரமோ நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா என்பதை அவர்களால் இதுவரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.</p><p>இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முக்கியப் பிரச்சினைகள் இவைதான் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும், ஆனால் அரசிடம் முறையான திட்டம் இல்லை" என்று குற்றம் சாட்டினார்.</p><p>முன்னதாக, காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால், ராமர் கோவில் அறக்கட்டளையின் நிதி மோசடிப் புகார் குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியிருந்தார்.</p><p>அதேபோல், பல எதிர்க்கட்சித் தலைவர்களும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் குறித்து விவாதிக்கக் கோரி நோட்டீஸ் அளித்திருந்தனர்.</p><h2>ஜந்தர் மந்தரில் குழப்பம்</h2><p>இதனையே இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ள சூழலில் ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.</p><p>ஆனால் இந்த பேரணிக்கு நேற்றே தடை விதிக்கப்பட்டு அங்கு போலீசார் மற்றும் மத்திய படையினர் குவிக்கப்பட்டனர்.</p><p>இந்த சூழலில் பாராளுமன்றம் நோக்கி பேரணியை தொடங்க முனைப்பு காட்டிய டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீசார் மற்றும் மத்திய படையினர் தடியடி நடத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பயிற்சி ஐபிஎஸ் பெண் அதிகாரிக்கு ஆபாச படம் அனுப்பி பாலியல் தொல்லை- பயிற்சியாளர் மீது வழக்கு பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/female-ips-officer-sexually-harassed-via-obscene-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/female-ips-officer-sexually-harassed-via-obscene-video#comments</comments><guid isPermaLink="false">1f020b77-21f4-4eec-8f8b-53921d479fdd</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:51:32 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:51:32.442Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Harassment,case filed,பாலியல் தொல்லை,வழக்கு பதிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/c03bmetw/case.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வழக்கு பதிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/c03bmetw/case.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>பயிற்சி ஐபிஎஸ் பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. </aside><h2><strong>போலீஸ் அகாடமி பயிற்சி பள்ளி</strong></h2><p>கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் சிவராம் பள்ளியில் உள்ள தேசிய போலீஸ் அகாடமி பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார்.</p><p>இந்த பயிற்சி பள்ளியில் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், வூல்ல பாலத்தை சேர்ந்த உதய கிருஷ்ணா ரெட்டி என்பவர் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். </p><h2><strong>பாலியல் தொல்லை</strong></h2><p>கடந்த மாதம் 23-ந்தேதி பெண் பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு உதய கிருஷ்ணா ரெட்டி ஆபாச படங்களை அனுப்பி வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். தொடர்ந்து அகாடமியில் அவரது நண்பர்கள் முன்னிலையில் அவரது கண்ணியத்தை கெடுக்கும் வகையில் தெலுங்கில் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.</p><p>வேறு ஒருவருடன் கள்ளக்காதல் உள்ளதாகவும் கூறியுள்ளார். அவரது செல்போனை வலுக்கட்டாயமாக பறித்து தனிப்பட்ட தகவலை பார்த்தார். </p><h2><strong>புகார்</strong></h2><p>பெண் அதிகாரியின் தனிப்பட்ட வீடியோக்களை எடுத்து அவரது கணவருக்கு அனுப்பி வைத்தார். பயிற்சி அதிகாரியின் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்ததால் பயிற்சி ஐபிஎஸ் பெண் அதிகாரி அட்டாப்பூர் போலீசில் புகார் செய்தார். </p><p>போலீசார் முதற்கட்டமாக விசாரணை நடத்தியதில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>VIDEO: பாராளுமன்றம் நோக்கி பேரணிக்கு ஆயத்தம்.. ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மீது தடியடி </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-youth-march-to-parliament-stopped-with-lathicharge-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-youth-march-to-parliament-stopped-with-lathicharge-in-delhi#comments</comments><guid isPermaLink="false">7128e287-4e58-4a06-b295-7271896099ab</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:32:41 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:32:41.795Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>hunger strike,monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party,உண்ணாவிரதம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/bxq4zjpf/tn-23.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஜந்தர் மந்தரில் தடியடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜந்தர் மந்தரில் தடியடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/bxq4zjpf/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்டவற்றால் நாட்டின் கல்வித் துறையை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்ற நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி நாடு முழுவதும் குரல்கள் வலுத்து வருகின்றன. </p><p>இதனை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி கட்சியினர் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் அமைப்புகளாகவும், தன்னிச்சையாகவும் வந்து கலந்துகொண்டு 1 மாத காலமாக போராடி வருகின்றனர். </p><p>குறிப்பாக இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் நேற்று முன் தினம் டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். </p><h2>போலீஸ் குவிப்பு</h2><p>இதனையே இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள சூழலில் ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.</p><p>ஆனால் இந்த பேரணிக்கு நேற்றே தடை விதிக்கப்பட்டு அங்கு போலீசார்  மற்றும் மத்திய படையினர் குவிக்கப்பட்டனர்.</p><p>சற்று நேரத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி, தொடரின் முன் பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம், தொடரை ஆக்கபூர்வமாக நடத்த எதிர்கட்சியினரை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.</p><p>இந்த சூழலில் பாராளுமன்றம் நோக்கி பேரணியை தொடங்க முனைப்பு காட்டிய டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீசார் மற்றும் மத்திய படையினர் தடியடி நடத்தியுள்ளனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">LATEST: as feared, lathi charge, instances of stone pelting and total chaos at Jantar Mantar. In a democracy, the streets should never become a battlefield! Dialogue is being defeated by disorder sadly. Or is this designed to discredit what was a remarkably peaceful and organic… <a href="https://t.co/mpZs5RZTnU">pic.twitter.com/mpZs5RZTnU</a></p>&mdash; Rajdeep Sardesai (@sardesairajdeep) <a href="https://x.com/sardesairajdeep/status/2079070975715606732?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>பேரணிக்கு பெருகும் ஆதரவு</h2><p>தடைகள் இருந்தபோதிலும் ஜந்தர் மந்தரில் அதிகளவில் கூடியுள்ள இளைஞர்கள் பேரணியை தொடங்க மும்முரம் காட்டி வருகின்றனர்.</p><p>எதனாலும் கரப்பான்பூச்சிகளை தடுக்க முடியாது என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>பேரணிக்காக மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் தனது வாழ்த்துக்களை தெரிவித்தனுப்பியுள்ளார்.</p><p>இந்த பேரணியில் பங்கேற்க நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் ஜந்தர் மந்தர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>இதனிடையே பேரணியை அமைதியான முறையில் நடத்துமாறு சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ அழைப்பு விடுத்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Delhi: Protesters were stopped near Kerala House while attempting to proceed towards the designated protest site at Jantar Mantar <a href="https://t.co/FIkcw8aqjC">pic.twitter.com/FIkcw8aqjC</a></p>&mdash; IANS (@ians_india) <a href="https://x.com/ians_india/status/2079070558990590267?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4l9rfjwx/janthar-manthar.jpg" /></figure><h2>உண்ணாவிரதம் நிறைவு</h2><p>சோனம் வாங்சுகை போல இந்த போராட்டத்தில் கடந்த 23 நாட்களாக அகில இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த 3 மாணவ செயல்பாட்டார்கள் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் இன்று தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.</p><p>அவர்களின் உடல்நிலையும் மோசமடைந்த நிலையில் இன்று போராட்ட களத்திற்கு வந்த நடிகர் பிரகாஷ் ராஜ், பாலிவுட் மூத்த நடிகை ஷாபனா அஸ்மி, எம்.பி. மனோஜ் ஜா, அரசியல் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினர் நீண்ட அறிவுறுத்தலின் பேரில் அம்மாணவர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.</p><p>தனது நிபந்தனைகளை ஏற்றால் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக சோனம் வாங்சுக் முன்னதாக மருத்துவமனையில் இருந்து செய்தி அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு 2 ஆண்டுகளில் ரூ.261 கோடி செலவு: RTI-யில் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/261-crore-spent-on-rajya-sabha-mps-in-two-years-rti-reply</link><comments>https://www.maalaimalar.com/news/national/261-crore-spent-on-rajya-sabha-mps-in-two-years-rti-reply#comments</comments><guid isPermaLink="false">e5ab64bf-f201-41ca-8550-d9577780d25d</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:22:45 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:22:45.864Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாநிலங்களவை எம்பி,ஆர்டிஐ,rti,rajyasabha mp,செலவினம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/l9alwnys/Rajyasabha-MP.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajyasabha MPs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/l9alwnys/Rajyasabha-MP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலங்களவை எம்.பி.க்களின் சம்பளம், படிகள் மற்றும் பல்வேறு வசதிகளுக்காக கடந்த 2 நிதியாண்டுகளில் ரூ.261 கோடிக்கும் அதிகமாக அரசு செலவிட்டு உள்ளது.</p><h2>தகவல் அறியும் உரிமை சட்டம்</h2><p>மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்தர் சேகர் கவுர் என்பவர் நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் மாநிலங்களவையில் எம்.பி.க்களுக்கு செய்யப்பட்ட செலவுகள் குறித்த தகவல்களை கேட்டிருந்தார். அவருக்கு கிடைத்த பதில்களில் தெரியவந்த விவரங்கள் வருமாறு:-</p><h2>ரூ.261 கோடி</h2><p>2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களின் சம்பளம், படிகள் மற்றும் பல்வேறு வசதிகளுக்காக ரூ.261 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டு உள்ளது.</p><p>படி மற்றும் வசதிகளுக்காக 2024-25 நிதியாண்டில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக ரூ.98 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகை 2025-26 நிதியாண்டில் கணிசமாக உயர்ந்து ரூ.163 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ.65 கோடி கூடுதலாகும்.</p><h2>சம்பள செலவு</h2><p>2024-25-ல் எம்.பி.க்களின் சம்பளத்துக்காக ரூ.25.71 கோடிக்கும் அதிகமாகவும், மருத்துவச் செலவுகளுக்கு ரூ.8.2 கோடியும், சுற்றுப்பயணச் செலவுகளுக்கு ரூ.24.99 கோடியும், படிகளுக்காக ரூ.33.33 கோடிக்கும் அதிகமாகவும் செலவிடப்பட்டு உள்ளது.</p><p>அதேபோல், 2025-26-ல் சம்பளச் செலவு ரூ.44.6 கோடியாகவும். மருத்துவச் செலவு ரூ.9.6 கோடியாகவும், பயணச் செலவு ரூ.36 கோடியாகவும். படிகள் ரூ.58.78 கோடிக்கும் அதிகமாகவும் இருந்துள்ளது.</p><h2>என்னென்ன வசதிகளுக்கு அனுமதி</h2><p>மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு சம்பளம். படிகள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணம். மருத்துவ வசதி. அலுவலக செலவுகள் உள்ளிட்ட 21 வகை யான செலவுத் தலைப்புகளின் கீழ் அரசு வசதிகளை வழங்குகிறது. அச்சிடுதல், டிஜிட்டல் சாதனங்கள், எரிபொருள், பராமரிப்பு மற்றும் பிற நிர்வாகச் செலவு களும் இதில் அடங்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விண்வெளி துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது -  பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-india-has-achieved-soaring-growth-in-space-sector</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-india-has-achieved-soaring-growth-in-space-sector#comments</comments><guid isPermaLink="false">86db5eea-b71a-48ff-b13e-a8cb62e6892e</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:19:07 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:19:07.760Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,pm modi,parliament,பிரதமர் மோடி,பாராளுமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/aysa5dbo/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/aysa5dbo/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.</p><p>இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, சுப்ரீம் கோர்ட்டு (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகள் (திருத்தம்) மசோதா, தேசிய கவுரவத் துக்கு அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா (வந்தே மாதரத்துக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை விதிக்கும் மசோதா), சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி (திருத்தம்) மசோதா ஆகிய 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>இதில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா கடுமையான அரசியல் விவாதங்களை தூண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p>இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-congratulates-pv-sindhu-on-historic-japan-open-title">பிரதமர் மோடி</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் தாக்கலாக உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடி கூறியதாவது:</p><p>* நாடாளுமன்ற கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்.</p><p>* நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என நம்புகிறேன்.</p><p>* நாட்டின் வளர்ச்சிக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் அவசியமானது.</p><p>* விண்வெளித்துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது.</p> <p>* விக்ரம் 1 ராக்கெட் வெற்றியை அடுத்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பாராட்டுகள்.</p><p>* இந்திய இளைஞர்களின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.</p><p>* சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரெயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது.</p><p>* உலகின் எந்த போர்களும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது.</p><p>* நாட்டில் 3-வது செமி கண்டக்டர் ஆலை அமைய உள்ளது.</p><p>* <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">நாடாளுமன்ற</a> கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்.</p><p>* இந்தியாவில் இது இளைஞர்களுக்கான காலம். 56 வயது இளைஞர் என கூறி கொள்பவருக்கான காலம் இது இல்லை என ராகுலை மறைமுகமாக பிரதமர் மோடி விமர்சித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>இன்றே உண்ணாவிரதத்தை கைவிட தயார்.. மூன்று நிபந்தனைகள் விதித்த சோனம் வாங்சுக்!</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-sonam-wangchuk-hunger-strike-at-jantar-mantar-with-three-key-demands</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-sonam-wangchuk-hunger-strike-at-jantar-mantar-with-three-key-demands#comments</comments><guid isPermaLink="false">224c70ca-64cb-4990-b91f-cfc48a23f5d2</guid><pubDate>Mon, 20 Jul 2026 03:12:03 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:12:03.838Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,சோனம் வாங்சுக்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/sabhj1p2/tn-18.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ Sonam Wangchuk ]]></media:title><media:description type="html"><![CDATA[ Sonam Wangchuk ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/sabhj1p2/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பெற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>இதில் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த லடாக்கை சேர்ந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் நேற்று முன் தினம் போலீசாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். </p><p>அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வேண்டி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-refuses-to-transfer-sonam-wangchuk-to-a-private-hospital">நிராகரித்தது</a>. </p><h2>பேரணி</h2><p>இன்று நாடாளுமன்றம் நோக்கி போராட்டக்காரர்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டு அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ், மூத்த பாலிவுட் நடிகை சாபனா அஸ்மி ஆகியோர் ஜந்தர் மந்தர் சென்றுள்ளனர். </p><p>மருத்துவமனையில் உண்ணாவிரதத்தை தொடரும் சோனம் வாங்சுக் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறார். </p><h2>நிபந்தனைகள்</h2><p>இந்நிலையில் தனது <a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuks-father-undertook-a-five-day-fast-indira-gandhi-herself-traveled-to-ladakh-to-pacify-him-historical-background">உண்ணாவிரதத்தை </a>கைவிட வேண்டுமானால் தன் மூன்று நிபந்தனைகளை அரசு ஏற்க வேண்டும் என கோரியுள்ளார்.</p><p>ஒரு துண்டு காகிதத்தில் போலீஸ் கட்டுப்பாட்டை மீறி ரகசியமாக சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில்,</p> <p>நிபந்தனை 1:</p><p>இந்தியக் கல்வி முறையில் அண்மையில் நடந்துள்ள தொடர் தோல்விகளுக்கும், குறிப்பாக நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கும் மத்திய அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். அப்படி அரசு முறைப்படி பொறுப்பேற்று நடவடிக்கை எடுத்தால் நான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வேன்.</p><p>நிபந்தனை 2</p><p>ஒருவேளை மத்திய அரசு அதற்கு மறுக்கும் பட்சத்தில், எனக்கும் சிஜேபி கட்சி தலைமைப் பொறுப்பாளர்களுக்கும் நாடாளுமன்றத்தின் வாயில் வரை சென்று எங்களது கோரிக்கைகளை நேரடியாகச் சமர்ப்பிக்க அனுமதி வழங்க வேண்டும். அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எங்களது கோரிக்கைகளை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எழுப்புவோம் என்று நேரில் உறுதியளிக்க வேண்டும்.</p><p>நிபந்தனை 3</p><p>என்னுடைய மோசமடைந்து வரும் உடல்நிலையோ அல்லது பிற காரணங்களோ எங்களை நாடாளுமன்றம் நோக்கிச் செல்ல அனுமதிக்கவில்லை என்றால், மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நான் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனைக்கே நேரில் வந்து, கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்ற மேற்சொன்ன உறுதியை எனக்கு வழங்க வேண்டும்.</p><p>இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதால், இந்த மூன்று நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று நிறைவேற்றப்பட்டால், இன்றைய தினமே தான் உண்ணாவிரதத்தை முறித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.</p> <h2>சட்டவிரோத காவல்</h2><p>மேலும், சப்தர்ஜங் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருப்பதை 'சட்டவிரோத காவல்' என்று அவர் சாடியுள்ளார்.</p><p>தனது கடிதத்தின் முடிவில், "என்னுடைய நடமாடும் சுதந்திரம், பேச்சுரிமை மற்றும் அனைத்துத் தகவல் தொடர்பு வசதிகளும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையின் சட்டவிரோதக் காவலில் இருந்து..." என்று கையெழுத்திட்டு சோனம் வாங்சுக் தனது குறிப்பை நிறைவு செய்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-begin-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-begin-today#comments</comments><guid isPermaLink="false">7824cb9d-6d11-4fb8-8b69-3182b2e561f0</guid><pubDate>Mon, 20 Jul 2026 03:06:52 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:06:52.252Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,parliament,பாராளுமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-12/t1to0308/parliment.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ parliment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-12/t1to0308/parliment.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு, <a href="https://www.maalaimalar.com/news/national/ayodhya-ram-temple-donation-scam-pm-silence-unacceptable-rahul-kharge-letter">அயோத்தி ராமர் கோவில்</a> காணிக்கை திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் நாட்டையே உலுக்கியுள்ளன.</p><h2>நாடாளுமன்றம் கூடுகிறது</h2><p>இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.</p><p>இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, சுப்ரீம் கோர்ட்டு (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகள் (திருத்தம்) மசோதா, தேசிய கவுரவத் துக்கு அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா (வந்தே மாதரத்துக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை விதிக்கும் மசோதா). சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி (திருத்தம்) மசோதா ஆகிய 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>இதில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா கடுமையான அரசியல் விவாதங்களை தூண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>போர்க்கோலம்</h2><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை முன்னிருத்தி போர்க்கோலம் பூண்டுள்ளது.</p><p>எனவே நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்போது இது கடுமையாக எதிரொலிக்கும். காரசார விவாதங்களால் நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title> மத்தியப் பிரதேசத்தில்  பொது சிவில் சட்டம்.. அமைச்சரவை ஒப்புதல் - இன்று சட்டமன்றத்தில் தாக்கல் </title><link>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-ucc-bill-womens-rights-fixed-marriage-age-and-mandatory-registration-of-marriages-and-live-in-relationships</link><comments>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-ucc-bill-womens-rights-fixed-marriage-age-and-mandatory-registration-of-marriages-and-live-in-relationships#comments</comments><guid isPermaLink="false">44c7459f-2679-4b16-a8a1-ec3118c9c686</guid><pubDate>Mon, 20 Jul 2026 01:17:19 +0000</pubDate><atom:updated>2026-07-20T01:17:19.122Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madhya Pradesh,மோகன் யாதவ்,Mohan Yadav,Uniform Civil Code,பொது சிவில் சட்டம்,மத்தியப் பிரதேசம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/rx4lz5dg/ucc.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ucc]]></media:title><media:description type="html"><![CDATA[ ucc]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/rx4lz5dg/ucc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">பொது சிவில் சட்ட </a>மசோதாவின் வரைவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>மத்தியப் பிரதேச மாநிலத்திற்கான இந்த பொது சிவில் சட்ட வரைவை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான உயர்மட்டக் குழு தயாரித்துள்ளது.</p><p>இன்று (திங்கட்கிழமை) தொடங்கவுள்ள சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக முதல்வர் மோகன் யாதவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.</p><h2>மோகன் யாதவ் </h2><p>ஜகதீஷ்பூரில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய  <a href="https://www.maalaimalar.com/news/national/ujjain-land-scam-row-bjp-releases-mp-cm-family-property-details-amid-illegal-land-grab-charges">மோகன் யாதவ்</a>, இந்த மசோதா பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சமூக சமத்துவத்தை ஏற்படுத்துவதிலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p> இந்தச் சட்டத்தின்படி, ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>மாநிலத்தில் நடக்கும் அனைத்து திருமணங்களையும் முறைப்படி பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.</p><p>வழக்கமான திருமணங்கள் மட்டுமின்றி, லிவ்-இன் ரிலேஷன்ஷிப், தத்தெடுத்தல், வாடகைத் தாய் முறை மற்றும் ஏஆர்டி மருத்துவ முறை மூலமாகப் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான சட்டப்பூர்வ உரிமைகளை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.</p> <h2>முஸ்லிம்கள்</h2><p>இந்தச் சட்டத்திற்கு பொதுமக்களிடையே, குறிப்பாக சிறுபான்மையினர் மத்தியில் பெரும் ஆதரவு இருப்பதாக முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.</p><p>அவர் கூறுகையில், "முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 80 சதவீதப் பெண்களும், 40 சதவீத ஆண்களும் இந்த பொது சிவில் சட்ட மசோதாவை முழுமையாக ஆதரிக்கின்றனர்.</p><p>சமூக நல்லிணக்கம், பெண் மேம்பாடு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதாவிற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது அரசியல் லாபங்களைக் கடந்து ஆதரவு அளிக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.</p><h2>காங்கிரஸ்</h2><p>இந்த விவகாரத்தை வெறும் 'இந்து-முஸ்லிம்' மதக் கண்ணோட்டத்திலும், வாக்கு வங்கி அரசியலாகவும் மட்டுமே பார்ப்பதாக காங்கிரசை முதல்வர் மோகன் யாதவ் சாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் வாரிசு.. ஏபிவிபி முதல் மத்திய கல்வி அமைச்சர் வரை - யார் இந்த தர்மேந்திர பிரதான்? </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-growing-demand-for-dharmendra-pradhans-resignation</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-growing-demand-for-dharmendra-pradhans-resignation#comments</comments><guid isPermaLink="false">fe0a269a-1cda-445e-b499-709ac75736de</guid><pubDate>Sun, 19 Jul 2026 15:56:36 +0000</pubDate><atom:updated>2026-07-19T15:56:36.249Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,நீட் வினாத்தாள் கசிவு,த சோனம் வாங்சுக்,Sonam Wangchuck,NEET Question Paper Leaked</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/06b9fln7/tn-10.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான்]]></media:title><media:description type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/06b9fln7/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கல்வி அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">தர்மேந்திர பிரதான்</a> அண்மையில் நடந்து முடிந்த நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய அழுத்தம் அதிகரித்து வருகிறது. </p><p>குறிப்பாக, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டது தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. </p><p>இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நேற்று போலீசாரால் தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். </p><p>தொடர்ந்து அழுத்தம் இருந்தபோதிலும் தர்மேந்திர பிரதான் தொடர்ந்து கல்வி அமைச்சராக நீடித்து வருகிறார். இந்த சூழலில் பாஜக அவருக்கு அளிக்கும் முக்கியத்துவத்தின் பின்னணி குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. </p> <h2>தர்மேந்திர பிரதான்</h2><p>1969, ஜூன் 26 அன்று ஒடிசாவின் தால்செர் பகுதியில் பிறந்த தர்மேந்திர பிரதான், முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரதானின் மகன் ஆவார்.</p><p>பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஏபிவிபி மூலமாக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.</p> <h2>அரசியல் பயணம்</h2><p>2004ம் ஆண்டு ஒடிசாவின் தியோகர் தொகுதியிலிருந்து முதன்முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p>பின்னர், 2012ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.</p><p>2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்திய ஆட்சியை பொறுப்பேற்றதிலிருந்து, தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சரவையில் முக்கியமான தூணாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.</p><p>2014 - 2021 வரையிலான காலகட்டத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சராக பணியாற்றினார்.</p><p>சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே அந்த துறையில் நீண்டகாலம் அமைச்சராக பதவி வகித்த பெருமை இவருக்கு உண்டு. இக்காலகட்டத்தில் எக்குத் துறையின் கூடுதல் பொறுப்பையும் அவர் கவனித்துக்கொண்டார்.</p> <h2>கல்வி அமைச்சர்</h2><p>2021 ஜூலை மாதம் மத்திய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2024 தேர்தலில் ஒடிசாவின் சம்பல்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரான அவர் மீண்டும் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்று தற்போது வரை அந்த பதவியில் நீடித்து வருகிறார்.</p><p>தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்க அழுத்தம் கொடுக்கும் வகையில் மத்திய அரசு கல்வி நிதியை முடக்கியது. இந்த சமயத்தில் தர்மேந்திர பிரதான், திமுக அரசு, அரசியலுக்காக மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறது என கூறி தொடர் வார்தைப்போரில் ஈடுபட்டார்.</p> <h2>பேரணி</h2><p>நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி என பல்வேறு தேர்வு குளறுபடிகள் இவரின் நிர்வாக தோல்வியால் நடந்தவை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வந்தபோதிலும் தர்மேந்திர பிரதான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><p>நாளை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்த இருந்த பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் ஒட்டுமொத்த இந்தியக் கல்வித் துறையையும் உலுக்கியுள்ள நிலையில் தேசிய தேர்வு முகமையை முறையாகக் கண்காணிக்கத் தவறியதாகக் கூறி தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.</p>]]></content:encoded></item></channel></rss>