<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 18 Jul 2026 07:47:21 +0000</lastBuildDate><item><title>சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி: சப்தர்ஜங் ஊழியர்களுடன் அவரது மனைவி வாக்குவாதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-hospitalised</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-hospitalised#comments</comments><guid isPermaLink="false">b6cac199-773f-4071-a998-3c7b4a3e1879</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:09:00 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:09:00.022Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,delhi,கீதாஞ்சலி,சோனம் வாங்சுக்,டெல்லி,GitanjaliJAngmo</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/yfcn9brr/sonam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sonam Wangchuk]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/yfcn9brr/sonam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 21 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல்நிலை நலிவடைந்ததை அடுத்து டெல்லி போலீசாரால் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். </p><p>இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலிக்கும், அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>மொபைல் போனுக்கு தடை:</strong> </h2><p>மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக்கை காண்பதற்காக அவரது மனைவி கீதாஞ்சலி ஜே.ஆங்மோ சென்றார். அப்போது, அவசரப் பிரிவுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல அங்கிருந்த பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.</p><p>இதனால் ஆத்திரமடைந்த கீதாஞ்சலி, "ஏன் என்னால் எனது கைப்பேசியை உள்ளே கொண்டு செல்ல முடியாது?" என்று அங்கிருந்த ஊழியர்களிடம் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். இந்த வாய்மொழித் தகராறு தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.</p><h2><strong>மருத்துவ அறிக்கை தர மறுப்பா?</strong></h2><p>பரவி வரும் அந்த வீடியோவில், கீதாஞ்சலியுடன் வந்த மற்றொரு பெண்ணும் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது. சோனம் வாங்சுக்கின் தற்போதைய உடல்நிலை குறித்த மருத்துவப் பரிசோதனை அறிக்கையின் நகலை தங்களுக்கு வழங்காதது ஏன் என்றும் அவர்கள் அங்குள்ள அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p>முன்னதாக, தனது கணவருக்கு தங்களின் அல்லது தங்களை கண்காணித்து வந்த மருத்துவர்களின் அனுமதியின்றி எந்தவொரு வாய்வழி மருந்தையோ அல்லது குளுக்கோஸ் மூலமான சிகிச்சையையோ அளிக்கக் கூடாது என கீதாஞ்சலி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>சோனம் வாங்சுக்கின் தற்போதைய உடல்நிலை:</strong></h2><p>சப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, நீண்ட நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால் சோனம் வாங்சுக் உடல் மிகவும் பலவீனமடைந்து, நீர்ச்சத்து குறைபாட்டுடன் காணப்படுகிறார்.</p><p>அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு மற்றும் ரத்த சர்க்கரை குறைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அவரது இதயத் துடிப்பு மற்றும் இசிஜி பரிசோதனை முடிவுகள் சீராக உள்ளன. அவர் தற்போது சுயநினைவுடன் உள்ளார்.</p><p>டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படியும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரிலுமே சோனம் வாங்சுக் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக டெல்லி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1</title><link>https://www.maalaimalar.com/news/national/india-first-private-rocket-vikram-1-successfully-launched</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-first-private-rocket-vikram-1-successfully-launched#comments</comments><guid isPermaLink="false">b7908e4e-b021-4e94-8d2b-4b33d250653c</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:41:03 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:41:03.922Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,ராக்கெட்,Rocket,Rocket Vikram 1,ராக்கெட் விக்ரம் 1</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/6uv92bfd/rocket.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rocket Vikram-1]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/6uv92bfd/rocket.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பறக்கும் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.</p><h2>தனியார் ராக்கெட்</h2><p>தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது.</p><p>இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விக்ரம்-1 விண்ணில் ஏவப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 11.30 மணிக்கு ஏவப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகியது.</p><p>உடனடியாக தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதையடுத்து 20 நிமிட கவுண்டவுன் மீண்டும் தொடங்கியது. 12.05-க்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. </p><p>இந்நிலையில் இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விக்ரம்-1  நண்பகல் 12.05-க்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விக்ரம்-1  வெற்றிகரமாக சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.</p> <h2>விக்ரம்-1</h2><p>விக்ரம்-1 ஆனது கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்டின் சொந்த ஸ்கோப் ஆகியவற்றிலிருந்து தொழில்நுட்ப விளக்க ஆய்வு கருவிகளை எடுத்துச் செல்கிறது. அத்துடன், காஸ்மோஸ் டயமண்ட்ஸின் கலைப்படைப்பான 'காஸ்மிக் புளூம்' மற்றும் ஒரு மைக்ரோ-ஆர்ட் பீஸ் கொண்டு செல்கிறது.</p><h2>கார்பன் கலவை அமைப்பு</h2><p>விக்ரம்-1 என்பது 7 அடுக்கு உயரமான, பல நிலை சுற்றுப்பாதை ஏவுகணை வாகனமாகும். இது அனைத்து கார்பன் கலவை அமைப்புடன் கட்டப்பட்டது மற்றும் 3டி-அச்சிடப்பட்ட எந்திரங்கள் மற்றும் உயர் உந்துதல் திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் உந்துவிசை அமைப்புகளால் இயக்கப்படுகிறது.</p><p>350 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் முதல் சோதனை விமானம் 60 டிகிரி சாய்வில் 450 கிமீ சுற்றுப்பாதையை இலக்காகக் கொண்டுள்ளது. </p><h2>இஸ்ரோ</h2><p>இந்தவகை ராக்கெட் மூலம் சில நூறு கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய வகை ராக்கெட்டாகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Andhra Pradesh: India&#39;s first privately developed orbital-class rocket, Vikram-1, launched from the Satish Dhawan Space Centre in Sriharikota<br><br>Built by Hyderabad-based Skyroot Aerospace, Vikram-1 is powered by three solid-fuel stages and a liquid orbital adjustment… <a href="https://t.co/QQC9CPjcxH">pic.twitter.com/QQC9CPjcxH</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2078368358353768853?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தொழில்நுட்ப கோளாறு - தனியார் ராக்கெட் விக்ரம்-1 புறப்பாடு தாமதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/technical-glitch-launch-of-private-rocket-vikram-1-delayed</link><comments>https://www.maalaimalar.com/news/national/technical-glitch-launch-of-private-rocket-vikram-1-delayed#comments</comments><guid isPermaLink="false">f48dea31-2cc2-475e-93ea-d7d9b8d81dc0</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:16:29 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:16:29.383Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,ராக்கெட்,Rocket,Rocket Vikram 1,ராக்கெட் விக்ரம் 1</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/dnuo8rhl/isro.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vikram-1 Rocket]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/dnuo8rhl/isro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பறக்கும் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1-ல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.</p><h2>தனியார் ராக்கெட்</h2><p>தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது.</p><h2>தொழில்நுட்ப கோளாறு</h2><p>இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விக்ரம்-1 விண்ணில் ஏவப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 11.30 மணிக்கு ஏவப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகி உள்ளது.</p><p>இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதையடுத்து 20 நிமிட கவுண்டவுன் மீண்டும் தொடங்கியது. 12.05-க்கு ராக்கெட் விக்ரம்-1 விண்ணில் ஏவப்படுகிறது.</p><h2>விக்ரம்-1</h2><p>விக்ரம்-1 ஆனது கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்டின் சொந்த ஸ்கோப் ஆகியவற்றிலிருந்து தொழில்நுட்ப விளக்க ஆய்வு கருவிகளை எடுத்துச் செல்கிறது. அத்துடன், காஸ்மோஸ் டயமண்ட்ஸின் கலைப்படைப்பான 'காஸ்மிக் புளூம்' மற்றும் ஒரு மைக்ரோ-ஆர்ட் பீஸ் கொண்டு செல்கிறது.</p> <h2>கார்பன் கலவை அமைப்பு</h2><p>விக்ரம்-1 என்பது 7 அடுக்கு உயரமான, பல நிலை சுற்றுப்பாதை ஏவுகணை வாகனமாகும். இது அனைத்து கார்பன் கலவை அமைப்புடன் கட்டப்பட்டது மற்றும் 3டி-அச்சிடப்பட்ட எந்திரங்கள் மற்றும் உயர் உந்துதல் திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் உந்துவிசை அமைப்புகளால் இயக்கப்படுகிறது.</p><p>350 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் முதல் சோதனை விமானம் 60 டிகிரி சாய்வில் 450 கிமீ சுற்றுப்பாதையை இலக்காகக் கொண்டுள்ளது. </p><p>இந்தவகை ராக்கெட் மூலம் சில நூறு கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய வகை ராக்கெட்டாகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.</p> ]]></content:encoded></item><item><title>21 நாள் தொடர் உண்ணாவிரதம்: சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-removed-from-jantar-mantar-taken-to-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-removed-from-jantar-mantar-taken-to-hospital#comments</comments><guid isPermaLink="false">bd6cd2b5-8e69-4401-b72a-8870b3f84178</guid><pubDate>Sat, 18 Jul 2026 02:52:11 +0000</pubDate><atom:updated>2026-07-18T02:52:11.251Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,Cockroach Janta Party,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/jbxkpby6/sonamwangchuk1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sonam wangchuk]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/jbxkpby6/sonamwangchuk1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் <a href="https://www.maalaimalar.com/topic/cockroach-janta-party">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ள சமூக ஆர்வலர் <a href="https://www.maalaimalar.com/news/national/i-will-remain-alive-until-july-20-otherwise-i-will-return-as-a-ghost-sonam-wangchuk">சோனம் வாங்சுக்</a>கின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.</p><p>இந்த போராட்டக்குழுவினர் வருகிற 20-ந்தேதி நாடாளுமன்றத்துக்கு பேரணியாக சென்று மனு கொடுக்க திட்டமிட்டுள்ள நிலையில், அதுவரை தான் எப்படியும் உயிருடன் இருப்பேன் என வாங்சுக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து தனது ஆதரவாளர்களுடன் அவர் பேசும்போது, 'நான் உடல் ரீதியாக பல வீனமாக இருக்கிறேன், ஆனால் மனரீதியாக மிகுந்த வலிமையுடன் உள்ளேன். 20-ந்தேதி அமைதியான முறையில் பேரணியாக சென்று நாடாளுமன்றத்தில் நமது மனுவை அளிக்க வேண்டும். அதில் அதிக எண்ணிக்கையில் நீங்கள் பங்கேற்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.</p><p>அதற்காக நான் என்ன விலை கொடுத்தாவது 20-ந்தேதி வரை உயிரோடு இருப்பேன் எனக்கூறிய அவர், அப்படி நீங்கள் வராமலோ அல்லது அந்த நிகழ்வு வெற்றிகரமாக அமையாமலோ போனால், நான் ஒரு பேயாகவும் திரும்பி வருவேன் என்று நகைச்சுவையாகவும் தெரிவித்து இருந்தார்.</p><h2>மருத்துவமனையில் அனுமதி</h2><p>இந்நிலையில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்</p><p>கடந்த 21 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமானதால் அவர் காவல் துறையினரால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: Activist Sonam Wangchuk, who was sitting on a hunger strike from last 20 days at Jantar Mantar, taken to the hospital by the police. <br><br>More details awaited. <a href="https://t.co/81DTO3cyh4">pic.twitter.com/81DTO3cyh4</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2078299071337619958?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கிருஷ்ணஜென்மபூமி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/hc-adjourns-hearing-in-krishna-janmabhumi-shahi-idgah-mosque-dispute</link><comments>https://www.maalaimalar.com/news/national/hc-adjourns-hearing-in-krishna-janmabhumi-shahi-idgah-mosque-dispute#comments</comments><guid isPermaLink="false">4bb3e4f1-307e-48f0-9525-bb1f00f080f0</guid><pubDate>Fri, 17 Jul 2026 22:14:50 +0000</pubDate><atom:updated>2026-07-17T22:14:50.360Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Krishna Janmabhumi,Shahi Idgah mosque,கிருஷ்ண ஜென்மபூமி,ஷாஹி இத்கா மசூதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/cf1y8ndl/hc.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/cf1y8ndl/hc.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரா கிருஷ்ண ஜென்மபூமி - ஷாஹி இத்கா மசூதி தொடர்பான சர்ச்சையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை ஒத்திவைத்தது.</p><p>மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக சமரச பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் விடுத்த கூட்டு கோரிக்கையை ஏற்று இந்த ஒத்திவைப்பு மேற்கொள்ளப்பட்டது.</p><p><strong>ஒத்திவைப்பு:</strong></p><p>நீதிபதி அவனிஷ் சக்சேனா இதுகுறித்து குறிப்பிடுகையில், "மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் சமரச பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தரப்பினர் கூட்டாக தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தால் லோக் அதாலத் பணிகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட அடுத்த தேதிகள் ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 23, 2026 வரை ஆகும். எனவே, கோரப்பட்டதற்கிணங்க வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது," என்று கூறினார்.</p><p>பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான கூட்டங்கள், கார்ய சேவா அல்லது பிற நிகழ்ச்சிகளை நடத்த, வழக்குக்குரிய இடத்திற்குள் எவரும் அல்லது எந்த குழுவும் நுழைவதை தடுக்குமாறு மாநில அரசு மற்றும் நிர்வாகத்திற்கு உத்தரவிட கோரி, மனுதாரர்களில் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.</p><p><strong>18 வழக்குகள்:</strong></p><p>இந்த மனு மீதான ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கேட்டுக்கொண்டது.</p><p>நிலத்தை கையகப்படுத்துதல், ஷாஹி இத்கா மசூதி கட்டமைப்பை அகற்றுதல், அத்துடன் கோயிலை 'மீண்டும் அமைத்தல்' மற்றும் நிரந்தர தடை உத்தரவு பெறுதல் ஆகியவற்றுக்காக இந்து தரப்பினர் 18 வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.</p><p>இந்த சர்ச்சை மதுராவில் உள்ள முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் காலத்து ஷாஹி இத்கா மசூதி தொடர்பானது; பகவான் கிருஷ்ணரின் பிறந்த இடத்தில் இருந்த கோயிலை இடித்துவிட்டு இந்த மசூதி கட்டப்பட்டதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வினாத்தாள் கசிவு விவகாரம்: கல்வி நிறுவனங்கள் மீது அரசியல் ஆதிக்கம் இருக்கக்கூடாது - ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/no-party-should-have-hold-on-edu-institutes-rahul-gandhi-blames-entire-system-for-paper-leaks</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-party-should-have-hold-on-edu-institutes-rahul-gandhi-blames-entire-system-for-paper-leaks#comments</comments><guid isPermaLink="false">2512aae3-3a92-423c-82d2-be35448f0ecc</guid><pubDate>Fri, 17 Jul 2026 18:22:46 +0000</pubDate><atom:updated>2026-07-17T18:22:46.252Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,paper leaks,வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/ljtym4tb/R-G-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/ljtym4tb/R-G-2.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கல்வி நிறுவனங்கள் மீது எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். மேலும், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அரசியல் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்றும், இது அனைவரின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p><strong>குற்றச்சாட்டு:</strong></p><p>இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்) பேரணியில் உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையிலான ஒட்டுமொத்த கல்வி அமைப்பும் ஈடுபட்டுள்ளது என்றும், இதனால் இதுவரை 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார்.</p><p>இது குறித்து பேசிய ராகுல் காந்தி, "பயிற்சி மையங்கள், தேர்வு மையங்கள், வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், போக்குவரத்து மற்றும் விநியோகஸ்தர்கள் முதல் தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் உயர்மட்டத்தில் உள்ள கல்வி அமைச்சகம் வரை ஒட்டுமொத்த கட்டமைப்பும் இதில் ஈடுபட்டுள்ளது.</p><p><strong>ஆதிக்கம் கூடாது:</strong></p><p>நமது கல்வி நிறுவனங்கள் சுதந்திரமானவையாக இருக்க வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ நமது கல்வி நிறுவனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது. துணைவேந்தர்கள் ஒரே அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது. அதேபோல் தேசிய தேர்வு முகமையின் பொறுப்பாளர் ஒரு அரசியல் அமைப்பை சேர்ந்தவராக இருக்கக்கூடாது.</p><p>நாம் வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்துவது அனைவரின் பொறுப்பாகும். யாரேனும் வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால், உடனடியாகக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.</p><p><strong>உடனடி மறுதேர்வு:</strong></p><p>வினாத்தாள் கசிவு ஏற்பட்டால், மாணவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்; அத்துடன் உடனடியாக மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்.</p><p>மாணவர்களின் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், நமது தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறையில் நேர்மையை உறுதி செய்வதற்கும் இது கூடிய விரைவில் உறுதி செய்யப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் வெளியீடு: கடந்த ஆண்டைவிட 12 இடங்கள் சரிந்த இந்தியா!</title><link>https://www.maalaimalar.com/news/national/list-of-worlds-most-peaceful-countries-released-india-slips-12-places-compared-to-last-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/list-of-worlds-most-peaceful-countries-released-india-slips-12-places-compared-to-last-year#comments</comments><guid isPermaLink="false">e3cc9bfe-f485-495e-801e-16e763251db0</guid><pubDate>Fri, 17 Jul 2026 16:27:24 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:27:24.133Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Global Peace Index,உலகின் அமைதியான நாடுகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9r8xzexp/New-Project-2026-07-17T215706.661.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் வெளியீடு: கடந்த ஆண்டைவிட 12 இடங்கள் சரிந்த இந்தியா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9r8xzexp/New-Project-2026-07-17T215706.661.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 127வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 12 இடங்கள் பின்னுக்கு சென்றிருக்கிறது. இந்த பட்டியலில் 19 ஆண்டுகளாக ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.</p><p>ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து உலகின் அமைதியான நாடுகள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது.</p><p>நாடுகளின் சமூக பாதுகாப்பு மற்றும் அமைதி, நடந்து வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மோதல்கள், ராணுவமயமாக்கல் ஆகிய 3 முக்கிய பிரிவுகளின்கீழ் 23 காரணிகள் ஆராயப்பட்டு இந்த பட்டியல் வெளியாகிறது.</p><p>அதன்படி, 2026-ம் ஆண்டுக்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் வெளியாகியுள்ளது. 163 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் ஐஸ்லாந்து நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 19-வது ஆண்டாக ஐஸ்லாந்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>இந்தியாவுக்கு 127-வது இடம்</strong></h2><p>இந்தாண்டு இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 127-வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பூட்டான் 16-வது இடத்திலும், இலங்கை 67, நேபாளம் 111-வது இடம், வங்காளதேசம் 117-வது இடங்களில் இருக்கையில் இந்தியா 127-வது இடத்தில் உள்ளது. இதில் பாகிஸ்தானுக்கு 152-வது இடம் கிடைத்திருக்கிறது.</p><p>கடந்த 2025-ம் ஆண்டைவிட 12 இடங்கள் இந்தியா பின்னுக்கு சென்றுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டில் 115-வது இடத்தில் இருந்தது. 2007-ம் ஆண்டில் 109-வது இடத்தில் இருந்த நிலையில், தொடர்ந்து பின்னுக்கு சென்றபடி, கடந்த 2015-ம் ஆண்டில் 143-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. </p><p>பிறகு முன்னேறி வந்து, நடப்பாண்டில் மீண்டும் சறுக்கலை சந்தித்திருக்கிறது. எல்லைப் பதற்றங்கள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு காரணங்களால் இந்தியா பின்னுக்கு சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மணாலியில் பிளிங்கிட்: இருந்தாலும்.., யூடியூப் பிரபலம் வெளியிட்ட வீடியோ வைரல்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/blinkit-delivery-manali-mountain-region-viral-instagram</link><comments>https://www.maalaimalar.com/news/national/blinkit-delivery-manali-mountain-region-viral-instagram#comments</comments><guid isPermaLink="false">67b9ef73-a82a-4629-90a6-e77d25a6db26</guid><pubDate>Fri, 17 Jul 2026 15:34:40 +0000</pubDate><atom:updated>2026-07-17T15:34:40.686Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Manali,Blinkit,பிளிங்கிட்,மணலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/cpp9olvw/Untitled-design-25.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Blinkit Delivery in  Manali ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/cpp9olvw/Untitled-design-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை சில நிமிடங்களில் டெலிவரி செய்யும் சேவையை பிளிங்கிட் நிறுவனம் தற்போது மலைப் பகுதிகளிலும் தொடங்கியுள்ளது.</p><p>ஆனால் அது அவ்வளவு எளிமையானதாகவோ அல்லது வழக்கமானதாகவோ இல்லை என்பதை பிரபல யூடியூபர் துருவ் என்பவர் பகிர்ந்த ஒரு வீடியோவில் உறுதியாகியுள்ளது.</p><p>இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மலைப்பகுதியான மணாலியில் பிளிங்கிட் நிறுவனத்தில் தான் ஆர்டர் செய்த பொருட்கள் எவ்வாறு டெலிவரி வாங்கப்பட்டது என்பதை வீடியோவில் பதிவிட்டுள்ளார்.</p><p>மலைப்பகுதியில் தங்கியிருந்த துருவ் அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்து விட்டதையடுத்து, பிளிங்கிட் செயலி மூலம் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்தார். அப்போது பிளிங்கிட் செயலி, உணவு டெலிவரி செய்ய 25 நிமிடங்கள் ஆகும் என குறுஞ்செய்தி அனுப்பியது. </p><p>இதையடுத்து இருசக்கர வாகனத்தால் மலை மீது பயணிக்க முடியாது என்பதால், பிளிங்கிட் பொருட்களை ஒரு கி.மீ. தூரம் கீழே வந்து வாங்க வேண்டியது ஆயிற்று யூடியூபருக்கு.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DaM3Wery-8B/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DaM3Wery-8B/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DaM3Wery-8B/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Akhil Dhruv (@dhruv_franky)</a></p></div></blockquote>
<script async src="//www.instagram.com/embed.js"></script></figure><p>இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அந்த நபர், “ஒரு டெல்லிவாசியின் பார்வையில் மணாலி வாழ்க்கை” என்று எழுதியிருந்தார்.</p><p>அந்தப் பதிவுக்குப் பதிலளித்த பயனர் ஒருவர், “பிளிங்கிட் இறுதியாக மலைப்பகுதிகளிலும் கிடைப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.</p><p>இது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மணாலியில் ஒரு பல் துலக்கும் பிரஷ் வாங்குவதற்காக, இரவு முழுவதும் காத்திருந்ததை எனக்கு நினைவூட்டியது” என்று குறிப்பிட்டார்.</p><p>இந்தியாவில் அதிகமான டிஜிட்டல் நாடோடிகளும், பயணிகளும் இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற இடங்களில் தங்குவதைத் தேர்ந்தெடுப்பதால், டெலிவரி நிறுவனங்கள் அத்தகைய சுற்றுலா நகரங்களுக்கும் தங்கள் சேவைகளை விரிவுபடுத்தி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>‘புல்லட் ரயில் திட்ட தாமதத்திற்கு இந்திய அதிகாரிகளே காரணம்’ - ஜப்பான் முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/former-japan-minister-says-indian-officials-caused-bullet-train-project-delay</link><comments>https://www.maalaimalar.com/news/national/former-japan-minister-says-indian-officials-caused-bullet-train-project-delay#comments</comments><guid isPermaLink="false">a6f94a8b-2cc0-43c4-a05b-082a8fb3d344</guid><pubDate>Fri, 17 Jul 2026 15:34:01 +0000</pubDate><atom:updated>2026-07-17T15:34:01.569Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>japan,ஜப்பான்,Bullet Train Project,Hideki Makihara,புல்லட் ரயில் திட்டம்,ஹிடேகி மகிஹாரா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/zgb1zfkc/New-Project-2026-07-17T210340.266.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘புல்லட் ரயில் திட்ட தாமதத்திற்கு இந்திய அதிகாரிகளே காரணம்’ - ஜப்பான் முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/zgb1zfkc/New-Project-2026-07-17T210340.266.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பை - அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டதற்கு இந்திய அதிகாரிகளின் அலட்சியப் போக்கும், பொறுப்பற்ற உணர்வும், சுயநலமுமே காரணம் என்று ஜப்பானின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஹிடேகி மகிஹாரா குற்றம் சாட்டியுள்ளார். </p><p>இந்திய அதிகாரிகள் தங்களின் சொந்த நலன்களை மட்டுமே முன்னிறுத்திப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் மீறியதே தாமதத்திற்கு முழுக் காரணம் என்றும் ஹிடேகி மகிஹாரா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான அமைச்சரையும் மகிஹாரா விமர்சித்துள்ளார்.</p><p>இந்தத் திட்டம் ஜப்பானின் அசல் ஷின்கன்சென் மாதிரியிலிருந்தும், சிக்னலிங் முறையிலிருந்தும் கணிசமாக விலகிச் சென்றுவிட்டதாக டோக்கியோவைச் சேர்ந்த செய்தி இணையதளம் ஒன்றில், மூத்த ஜப்பானிய ரயில்வே பொறியாளரும், டெல்லியைச் சேர்ந்த மெட்ரோ வாகன ஆலோசகருமான இசாவோ சுஜிமுரா கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். </p><p>இசாவோ சுஜிமுரா எழுதிய கட்டுரைக்கு பதிலளிக்கும் விதமாக இக்கருத்தை இந்த சமூக வலைதளப் பதிவை முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.</p><p>மகிஹாராவின் இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து காங்கிரஸ், பாஜகவை விமர்சித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளது இந்தியா.</p><h2>ஜப்பான் குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு</h2><p>ஜப்பான் முன்னாள் அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் உண்மைக்கு முற்றிலும் மாறானவை என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.</p><p>இந்தியா - ஜப்பான் இடையேயான பேச்சுவார்த்தைகள் சிறப்பாகவும், திட்டத்தின் கட்டுமானப் பணிகள் திட்டமிட்ட நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கேற்ப வேகமாக முன்னேறி வருவதாகவும், முதல் பகுதியாக சூரத் முதல் பிலிமோரா வரையிலான இயக்கம் 2027ம் ஆண்டிலேயே பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளார்.</p><h2><strong>மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்</strong></h2><p>இந்தியாவில் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை - அகமதாபாத் இடையே அமைக்கப்பட்டு வருகிறது. 508 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தாத்ரா நகர் ஹவேலி ஆகிய பகுதிகள் வழியே மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தை அகமதாபாத்துடன் இணைக்கும். இதற்கிடையில் 12 நிலையங்கள் உள்ளன.</p><p>இந்த புல்லட் ரயில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை சுமார் எட்டு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  </p>]]></content:encoded></item><item><title>வாக்காளர் பட்டியலுக்கான பேரழிவு ஆயுதம் ஞானேஷ் குமார்: ஜெய்ராம் ரமேஷ் விளாசல்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/gyanesh-kumar-a-weapon-of-mass-destruction-for-electoral-rolls-congress-jairam-ramesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/gyanesh-kumar-a-weapon-of-mass-destruction-for-electoral-rolls-congress-jairam-ramesh#comments</comments><guid isPermaLink="false">79ab8170-4500-4ce6-b4cf-cca54f7fa4d2</guid><pubDate>Fri, 17 Jul 2026 15:33:13 +0000</pubDate><atom:updated>2026-07-17T15:33:13.682Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sir,எஸ்ஐஆர்,ஞானேஷ் குமார்,Gyanesh Kumar,election commision of india,இந்திய தேர்தல் ஆணையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/g7cyirob/GyaneshKumar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gyanesh Kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/g7cyirob/GyaneshKumar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலின்போது, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. மேலும், SIR-ன்போது ஏராளமான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியது. பாஜக-வின் ஒரு பிரிவாகவும் செயல்படுவதாக குற்றம்சாட்டியது.</p><p>இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வாக்காளர்கள் பட்டியலுக்கான பேரழிவு ஆயுதம் எனம் குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-</h2><p>ஞானேஷ் குமார் மீதான மிகக் கடுமையான விமர்சனம், UIDAI முதல் தலைமை இயக்குநராகப் பணியாற்றியவரும், கலாசார ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பெயரைக் கொண்டவருமான மூத்த ஐஏஎஸ் (IAS) அதிகாரி ராம் சேவக் சர்மாவிடமிருந்து வந்துள்ளது. SIR (எஸ்.ஐ.ஆர்) தொடர்பான ஒட்டுமொத்த நடவடிக்கையும் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் பேரழிவை விளைவிப்பதாகவும் மாறியுள்ளது என்பதை விவரிக்கும் கட்டுரை ஒன்றை அவர் எழுதியுள்ளார்.</p><figure><img alt="Jairam Ramesh" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/b1asccjj/JairamRamesh0001.jpg" /></figure> <p>எனவே, இது காங்கிரஸ் கட்சியோ அல்லது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியோ கூறுவது மட்டுமல்ல.</p><h2>ஓய்வு பெற்ற அதிகாரி விமர்சனம்</h2><p>அதாவது, இவர் மோடி அரசாங்கத்தில் பணியாற்றிய ஒரு ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இவருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. இப்போது இவர் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல, ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையர்களும் (இதற்கு எதிராக) மிக வெளிப்படையாகவே தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.</p><p>தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்குவதற்கான தீர்மானத்தைக் கொண்டுவருவதற்காக, எதிர்க்கட்சிகள் ஏப்ரல் 24 அன்று நோட்டீஸ் ஒன்றை மாநிலங்களவையில் வழங்கின. உள்துறை அமைச்சர் அமித் ஷா தனக்கு என்ன சொல்கிறாரோ, அதை ஞானேஷ் குமார் செய்து வருகிறார்.</p><p>இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.</p><p>தற்போதைய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (SIR) குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகச் சாடிய சில நாட்களுக்குப் பிறகு ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார். </p><p>SIR பணிகள் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவதிலேயே அதிக கவனம் செலுத்துவதாகவும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இது ஜனநாயகத்தைச் சீர்குலைத்துள்ளது என்றும் குரேஷி விமர்சித்திருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஆளுநரின் ஒற்றை வார்த்தை: விடுதியில் அசைவ உணவை முடிவுக்கு கொண்டு வரும் உ.பி. பல்கலைக்கழகம்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/ban-on-non-vegetarian-food-in-university-soy-paneer-introduced</link><comments>https://www.maalaimalar.com/news/national/ban-on-non-vegetarian-food-in-university-soy-paneer-introduced#comments</comments><guid isPermaLink="false">7d137898-4ddf-4dfe-96c7-a16571eaff3c</guid><pubDate>Fri, 17 Jul 2026 14:59:33 +0000</pubDate><atom:updated>2026-07-17T14:59:33.014Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anandiben Patel,Non Veg Food,Medical University</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/tiap6jao/Untitled-design-24.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UP Medical University bans non-veg in hostels]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/tiap6jao/Untitled-design-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விடுதியில் அசைவ உணவு சமைப்பதற்குத் தடைவிதித்து உத்தர பிரதேச மாநில கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது. </p><p>இதையடுத்து மாணவர்கள் தங்களின் தினசரி புரோட்டீன் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மீல் மேக்கர் (Soya Chunks), பன்னீர் மற்றும் சோயா பன்னீர் (Tofu) போன்ற சைவ உணவுகளை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்த உள்ளது.</p><h3><strong>அசைவ உணவு குறித்து ஆளுநர் ஆனந்திபென் படேல் கவலை:</strong></h3><p>உத்தர பிரதேச மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநர் ஆனந்திபென் படேல், ஜூலை 13 அன்று கே.ஜி.எம்.யு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, சில விடுதி உணவகங்களில் அசைவ உணவு பரிமாறப்படுவதாகக் கவலை தெரிவித்தார். </p><p>அவரது கருத்துக்கள், அனைத்து விடுதிகளிலும் அசைவ உணவு தயாரிப்பதற்குத் தடை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகத்தைத் தூண்டியதுடன், அரசியல் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.</p><h3><strong>கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் நடவடிக்கை:</strong></h3><p>இதையடுத்து பல்கலைக்கழகத்தில் உள்ள 18 விடுதி உணவகங்களுக்கும் புரதச்சத்து நிறைந்த சைவ உணவைப் பரிமாற அறிவுறுத்தியுள்ளதாக கே.ஜி.எம்.யு. செய்தித் தொடர்பாளர் கே.கே. சிங் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக பல்கலைக்கழக செய்தி தொடர்பாளர் கே.கே. சிங் வெளியிட்ட அறிவிப்பில், “சராசரியாக சைவ உணவு உண்ணும், வயது வந்தோருக்கான தினசரி புரதத் தேவை 100 கிராம் ஆகும்.</p><p>அசைவ உணவு உண்பவர்களுக்கும் புரதச்சத்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>மேலும், பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளும் அளவைப் பூர்த்தி செய்வதற்காக, விடுதி உணவகங்கள் இனி மீல் மேக்கர் (Soya Chunks), பன்னீர் மற்றும் சோயா பன்னீர் (Tofu) மற்றும் பிற சைவ புரதச்சத்து நிறைந்த உணவுகளை இனி வழங்கும்” என்று கூறினார்.</p><p>இதையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சோனியா நித்யானந்த் கூறுகையில், “நமது நாட்டில் அதிக வெப்பமும் ஈரப்பதமும் நிலவுகிறது. எனவே, அசைவ உணவை, குறிப்பாகப் பெருமளவில் தயாரிக்கும்போது சுகாதாரத்தைப் பேணுவது கடினம்.</p><p>இது மிகவும் ஆரோக்கியமான ஒரு தேர்வாக இருப்பதாலும், இரைப்பை குடல், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு என்பதாலும், தற்போது உலகம் முழுவதும் அதிகமான மக்கள் சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறுவதை நாம் காண்கிறோம்.</p><p>அசைவ உணவு குறித்த ஆளுநரின் பரிந்துரை மிகவும் நேர்மறையானது” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திமுக-பாஜக கூட்டணி உண்மையா?: ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/jairam-ramesh-explains-dmk-bjp-alliance-claims</link><comments>https://www.maalaimalar.com/news/national/jairam-ramesh-explains-dmk-bjp-alliance-claims#comments</comments><guid isPermaLink="false">cd006d5f-6fec-452b-bd85-32479ccd7d20</guid><pubDate>Fri, 17 Jul 2026 13:35:32 +0000</pubDate><atom:updated>2026-07-17T13:35:32.230Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Congress,காங்கிரஸ்,ஜெய்ராம் ரமேஷ்,Jairam Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/njv3e892/jairam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ jairam ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/njv3e892/jairam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் கடந்தமுறை தாக்கல் செய்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தாலும், மீண்டும் தாக்கல் செய்ய மத்திய ஆலோசித்து வருகிறது.</p><p>இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் தி.மு.க. ஒருபோதும் இடம்பெறாது.</p><p>இரு கட்சிகளின் கொள்கைகளும் வெவ்வேறானவை என்பதால் அவை ஒன்றிணைய வாய்ப்பில்லை.</p><p>கடந்த 8-ம் தேதி நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பதும், நாங்கள் தவெகவை ஆதரிக்கிறோம் என்பதும் உண்மைதான்.</p><p>தவெக அரசில் எங்கள் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். எனினும், நாங்கள் தொடர்ந்து திமுக எம்பிக்களுடன் தொடர்பில் இருக்கிறோம்.</p><p>திமுகவுடன் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. திமுக இன்னும் ஒரு எதிர்க்கட்சியாகவே உள்ளது. அது (மத்தியில்) ஆளும் கட்சியாகவோ அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாகவோ மாறவில்லை.</p><p>ஸ்டாலின் கூறி இருப்பதைப் படித்தேன். பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையே உடன்பாடு இல்லை என்பது அதில் இருந்து தெளிவாகிறது.</p><p>தொகுதி மறுவரையறை மசோதா வரும்போது திமுக அதற்கு எதிராக நிற்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>‘ஜூலை.20 வரை உயிருடன் இருப்பேன்... இல்லையென்றால் பேயாக திரும்பி வருவேன்’ - சோனம் வாங்சுக்</title><link>https://www.maalaimalar.com/news/national/i-will-remain-alive-until-july-20-otherwise-i-will-return-as-a-ghost-sonam-wangchuk</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-will-remain-alive-until-july-20-otherwise-i-will-return-as-a-ghost-sonam-wangchuk#comments</comments><guid isPermaLink="false">54e691f1-0371-452e-bf27-b6c0f40612e7</guid><pubDate>Fri, 17 Jul 2026 13:11:02 +0000</pubDate><atom:updated>2026-07-17T13:11:02.828Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,Sonam Wangchuk,parliament,சோனம் வாங்சுக்,Cockroach Janta Party,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/0yhz8vaq/New-Project-2026-07-17T175224.816.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஜூலை.20 வரை உயிருடன் இருப்பேன்... இல்லையென்றால் பேயாக திரும்பி வருவேன்’ - சோனம் வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/0yhz8vaq/New-Project-2026-07-17T175224.816.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மத்திய அரசின் குளறுபடிகளை கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன்.28 முதல், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் இணைந்து சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.</p><p>பல்வேறு தரப்பினரும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று டெல்லியில் திரண்டிருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சோனம் வாங்சுக், “உங்கள் அனைவருடனும் சேர்ந்து நாடாளுமன்றத்திற்குப் பேரணி செல்வதற்காக, ஜூலை 20 வரை நான் எப்படியாவது உயிரோடு இருப்பேன். </p><p>அப்படி இல்லையெனில், அன்று நடத்தப்படும் நமது பேரணி வெற்றி பெறவில்லை என்றால், நான் ஒரு பேயாகத் திரும்பி வருவேன்," என தெரிவித்துள்ளார்.</p><h2>9 கிலோ குறைந்த சோனம் வாங்சுக்</h2><p>கடந்த 20 நாட்களாக சோனம் வாங்சுக் உணவு எடுத்துக் கொள்ளாததால், சுமார் 9.5 கிலோ வரை உடல் எடை குறைந்து, தற்போது 56.55 கிலோவாக உள்ளார் என நேற்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அவரது இந்த உண்ணாவிரதம் தொடர்ந்தால் அவரது முக்கிய உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை மத்திய அரசு தினந்தோறும் தீவிரமாகக் கண்காணித்து, தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை பூங்கா உள்பட.. மறுசீரமைக்கப்பட்ட 75 ரெயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-inaugurates-three-redeveloped-railway-stations-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-inaugurates-three-redeveloped-railway-stations-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">58d7359e-20b7-4415-bda3-26c811047319</guid><pubDate>Fri, 17 Jul 2026 11:54:10 +0000</pubDate><atom:updated>2026-07-17T11:54:10.011Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Railway Station,pm modi,பிரதமர் மோடி,ரெயில் நிலையங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/p5au4ziq/PM-Modi1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/p5au4ziq/PM-Modi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட 75 ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதில், தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை பூங்கா ரெயில் நிலையத்தை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.</p><h2>சென்னை பூங்கா, குன்னூர், சின்னசேலம்</h2><p>மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏற்கனவே 261 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக மேலும் 75 ரெயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.</p><h2>75 ரெயில் நிலையங்கள்</h2><p>அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த 75 ரெயில் நிலையங்களையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பத்தார்.</p><p>இந்த 75 ரெயில் நிலையங்களில் தமிழகத்தை சேர்ந்த 3 ரெயில் நிலையங்களும் இடம்பெற்றுள்ளன. சென்னை பூங்கா, சின்ன சேலம், குன்னூர் ஆகிய ரெயில் நிலையங்களும் புதுப்பொலிவுடன் இன்று திறக்கப்பட்டுள்ளன.</p><p>பயணிகளுக்கான வசதியை மேம்படுத்தும் வகையிலும், அடுத்த 40 முதல் 50 ஆண்டுகால தேவையை நிறைவு செய்யும் வகையிலும் இந்த ரெயில் நிலையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.</p><h2>திறந்து வைத்தார்</h2><p>நகர்ப்புற போக்குவரத்து மற்றும் பயணிகள் வசதியை மேம்படுத்தும் வகையில், ரூ.14.79 கோடி செலவில் சென்னை பூங்கா ரெயில் நிலையம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. சின்ன சேலம் ரெயில் நிலையம் ரூ.15.14 கோடியிலும், குன்னூர் ரெயில் நிலையம் ரூ.12.18 கோடியிலும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ளன. கேரளாவில் 9 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.</p><p>பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இன்று பிற்பகலில் நடைபெற்ற விழாவில் சென்னை பூங்கா, சின்னசேலம், குன்னூர் உள்ளிட்ட 75 மறுசீரமைக் கப்பட்ட ரெயில் நிலையங்களையும் பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்து வைத்தார்.</p><h2>குன்னூர்</h2><p>நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான நீலகிரி மலை ரெயில் பாதை கடந்த 1899-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த ரெயில் நிலையம் அங்கு வரும் பயணிகளின் ஈர்ப்பு மையமாக உள்ளது. குன்னூர் ரெயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>குன்னூர் ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் ஆர்ச், செல்பி ஸ்பாட், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளது. ரெயில் நிலைய வளாக சுவர்களில் நீலகிரி மாவட்டத்தின் இயற்கை சூழலை பிரதிபலிக்கும் வகையில், பறவைகள், வன விலங்குகளின் ஓவியங்கள் தீட்டப்பட்டு, ஒட்டுமொத்த ரெயில் நிலையமும் தற்போது வன விலங்குகள் சரணாலயம் போன்று ரம்மியமாக காட்சி அளிக்கிறது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Punjab: Prime Minister Narendra Modi arrives at Jalandhar Cantt Railway Station to inspect it. <br><br>75 redeveloped railway stations from all over India are being dedicated to the nation under the Amrit Bharat Station Scheme. <br><br>(Video: DD) <a href="https://t.co/F49l7SgF5C">pic.twitter.com/F49l7SgF5C</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2078067818864705561?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>விழிஞ்சம் துறைமுகத்திற்கு உம்மன் சாண்டி பெயர் சூட்டப்பட வேண்டும்: காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-leader-seeks-oommen-chandy-name-for-vizhinjam-port-ahead-of-third-death-anniversary</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-leader-seeks-oommen-chandy-name-for-vizhinjam-port-ahead-of-third-death-anniversary#comments</comments><guid isPermaLink="false">2cf0c96f-e407-4a0b-aeb3-ce8276250c3d</guid><pubDate>Fri, 17 Jul 2026 11:12:15 +0000</pubDate><atom:updated>2026-07-17T11:12:15.360Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Oommen Chandy,விழிஞ்சம் துறைமுகம்,உம்மன் சாண்டி,Vizhinjam Port</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/zhlkjfvd/OommenChandy001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உம்மன் சாண்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/zhlkjfvd/OommenChandy001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் உம்மன் சாண்டி. இருவர் இரண்டு முறை முதல்வராக இருந்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 18-ந்தேதி, புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், காலமானார். 79 வயதில் காலமானார். அவரது 3-வது அண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.</p><p>அவரது 3-வது நினைவு தினத்தை அனுசரிக்கும் நாளில், விழிஞ்சம் துறைமுகத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் காங்கிரஸ் தலைவர் தாம்பனூர் ரவி வலியுறுத்தியுள்ளார்.</p><h2>இது தொடர்பாக தம்பனூர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</h2><p>விழிஞ்சம் துறைமுகத்திற்கு உம்மன் சாண்டி பெயர் சூட்டினால், அது பொருத்தமான அஞ்சலியாக இருக்கும். இதுவரை பார்த்திரா வகையில் விழிஞ்சம் கேரளா மாநிலத்தின் மிகப்பெரிய வளர்ச்சி திட்டமாக உயர்ந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் நினைவு தினத்தை அர்த்தமுள்ளதாக்கும் வகையில், அந்த துறைமுகத்திற்கு அதன் வடிவமைப்பாளரான அவரது பெயரே சூட்டப்பட வேண்டும்.</p><h2>விழிஞ்சம் துறைமுகம்</h2><p>விழிஞ்சம் துறைமுகம் தொடர்பாக தங்களுக்கு நற்பெயர் கிடைக்க பலர் முயற்சி செய்து வருகிறார்கள்.</p><blockquote>விழிஞ்சியத்தில் துறைமுகம் கொண்டு வர உம்மன் சாண்டியின் பங்களிப்பு யதார்த்தத்தை முந்தைய பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு புறந்தள்ளியது.</blockquote><p>பெயர் சூட்டும் முடிவை வி.டி. சதீசன் தலைமையிலான UDF அரசு காலம் தாழ்த்தக் கூடாது. இந்த திட்டத்தை சர்ச்சைக்குள் தள்ளக்கூடாது.</p><p>உம்மன் சாண்டி கேரளாவே கண்டிராத மிகவும் பிரபலமான தலைவர் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட முதலமைச்சர். மறைந்த அந்த தலைவருக்கு ஒரு நினைவிடம் அமைப்பது மக்களின் விருப்பம்</p><p>உம்மன் சாண்டி மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வரவேற்கிறேன். இது அவருக்கு மிகச் சிறந்த அஞ்சலியாக அமையும்.</p><h2>உம்மன் சாண்டிக்கு நினைவிடம்</h2><p>முன்னாள் அமைச்சர் கே.ஆர். கௌரி அம்மா மற்றும் நடிகர் சலீம் குமார் ஆகியோருக்கு நினைவிடங்கள் அமைப்பதற்கான முன்மொழிவை வரவேற்கிறேன். உம்மன் சாண்டியின் விசயத்திலும் இதேபோன்ற ஆக்கபூர்வமான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும். தனது பொதுவாழ்வு மற்றும் அரசியல் பணிகளை மேற்கொண்ட தலைநகரிலேயே, உம்மன் சாண்டிக்கு நினைவிடம் ஒன்று தாமதமின்றி அமைக்கப்பட வேண்டும்</p><p>இவ்வாறு தம்பனூர் ரவி வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>E20 பெட்ரோலால் கார் பழுது? நுகர்வோர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாருதி சுசுகி மேல்முறையீடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/car-damage-due-to-e20-petrol-maruti-suzuki-appeals-against-consumer-court-order</link><comments>https://www.maalaimalar.com/news/national/car-damage-due-to-e20-petrol-maruti-suzuki-appeals-against-consumer-court-order#comments</comments><guid isPermaLink="false">7ff65f24-431a-41a6-966c-bc1abcfc9d8f</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:51:31 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:51:31.419Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Maruti Suzuki,மாருதி சுசுகி,Consumer Court,நுகர்வோர் நீதிமன்றம்,எத்தனால் பெட்ரோல்,E20 fuel</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/8h50kh1d/New-Project-2026-07-17T151800.513.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ E20 பெட்ரோலால் கார் பழுது? நுகர்வோர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாருதி சுசுகி மேல்முறையீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/8h50kh1d/New-Project-2026-07-17T151800.513.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எத்தனால் பெட்ரோலால் பழுதடைந்த காருக்குப் பதிலாக புதுக்காரை வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்க உத்தரவிட்ட ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, மாருதி சுசுகி நிறுவனம் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. </p><p>கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.20 லட்சத்திற்கு, ராய்ப்பூரைச் சேர்ந்த  சிறுநீரக மருத்துவர் ஒருவர் மாருதி கிராண்ட் விட்டாரா ஆல்ஃபா இன்டெலிஜென்ட் எலக்ட்ரிக் ஸ்ட்ராங் ஹைப்ரிட் காரை வாங்கியுள்ளார். </p><p>சுமார் 21,913 கி.மீ. ஓடியபிறகு, நவம்பர் மாதமே, இன்ஜின் கோளாறாகி ஓடாமல் பாதியிலேயே நின்றுள்ளது. இதனையடுத்து ஷோரூம் சர்வீஸ்க்கு காரை விட்டுள்ளார். அங்கு கலப்பட பெட்ரோலே காரணம் எனக்கூறி, பெட்ரோல் டேங்கை சுத்தம் செய்து தந்துள்ளனர். இருப்பினும் அடுத்தடுத்து தொடர்ந்து கார் பழுதாகி வந்துள்ளது.</p><p>மாருதி நிறுவனமும் வாரண்டி காலம் முடியும்வரை பழுதுபார்த்துள்ளது. ஆனால் பழுதுபார்க்கும் செலவு ரூ.5 லட்சத்தை எட்டியநிலையில், இதற்கு மேல் சர்வீஸ் செய்யமுடியாது என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>ஆனால் காருக்கு 2029 ஆம் ஆண்டு வரை அல்லது 1 லட்சம் கி.மீ. ஓடும் வரை சர்வீஸ் செய்து தரப்படும் என கார் நிறுவனம் தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டதாக மருத்துவர், நிறுவனத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்படி சர்வீஸ் செய்யமுடியாதெனில் காரை மாற்றித் தரவேண்டும் அல்லது முழுப் பணத்தையும் தருமாறும், அதற்கு நஷ்ட ஈடும் கொடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். </p><p>இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக மருத்துவர் ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர, நீதிமன்றம் அவருக்கு புதுக்காரையும், கூடுதலாக நஷ்ட ஈடும் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><h2>மாருதிக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவிட்டது ஏன்?</h2><p>கார் என்ஜின் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு ஏற்றதல்ல என்பதை நிறுவனம் தெளிவுப்படுத்த தவறியது என்றும், 2023ல் தயாரிக்கப்பட்ட கார், 2024ல் அதே நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கே விற்பனை செய்யப்பட்டது. அதாவது, 17 மாதங்கள் பழமையான காரை புதிய வாகனத்தின் விலைக்கே விற்றது, உத்தரவாதம் அளித்தவாறு காரை மாற்றித் தராமல் இருந்தது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு நீதிமன்றம் புதுகாரை வழங்க உத்தரவிட்டது. </p><h2>உத்தரவில் நீதிமன்றம் கூறியது என்ன?</h2><p>கிராண்ட் விட்டாரா காரைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அதே மாடலில் E20 எரிபொருளை தாங்கும் திறன் கொண்ட புதிய வாகனத்தை 45 நாட்களுக்குள் வழங்குமாறு மாருதி சுசுகிக்கு உத்தரவிட்டது.</p><p>அவ்வாறு செய்யத் தவறினால் கார் வாங்க அவர் செய்த மொத்த செலவான ரூ.20,50,494-ஐ திருப்பி செலுத்த வேண்டும். மேலும் மன உளைச்சலுக்கான இழப்பீடாக ரூ. 1 லட்சமும், வழக்குச் செலவாக ரூ. 10,000-மும் செலுத்த வேண்டும். அதுவும் 45 நாட்களுக்குகள் இந்த தொகை செலுத்தப்படாவிட்டால், ஆண்டுக்கு 7% வட்டி விதிக்கப்படும் என தெரிவித்தது.</p><h2>மேல்முறையீடு செய்யும் மாருதி</h2><p>இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது மாருதி நிறுவனம். அந்த வாகனம் எத்தனால் பெட்ரோலுக்கு உகந்ததுதான் என்றும், பெட்ரோலில்தான் கலப்படம் இருந்தது என்றும், அதற்கான ஆதாரமும் உள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>சட்டப்படி, ஆட்சேபிக்கப்பட்ட இந்த உத்தரவை உரிய உயர் மன்றத்தில் எதிர்த்து மாருதி சுசுகி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வந்தே மாதரம் பாடலுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை அளிக்கும் மசோதாவை எதிர்ப்பதா? காங்கிரசை சாடிய பாஜக</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-slams-cong-for-opposing-bill-giving-statutory-protection-to-vande-mataram</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-slams-cong-for-opposing-bill-giving-statutory-protection-to-vande-mataram#comments</comments><guid isPermaLink="false">22e4c9e0-751f-468c-8753-9896ad053ed3</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:42:59 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:42:59.227Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,வந்தே மாதரம்,Vande Mataram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/mqm7ophc/CongressandBJP0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vandematharam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/mqm7ophc/CongressandBJP0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய பாரளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்கப்பட இருக்கிறது. இதில் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கும் வகையில், தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>காங்கிரஸ் எதிர்ப்பு</h2><p>இதற்கு காங்கிரஸ் கட்சி, அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாகப் பாடுவதை அவமதிப்பவர்களுக்கோ அல்லது அதற்குத் தடையை ஏற்படுத்துபவர்களுக்கோ தண்டனை வழங்கும் மசோதாவை வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதற்கான மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளது.</p><p>இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, பாராளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டு அதன்பின் நிறைவேற்றப்பட்ட பின், ஜனாதிபதி ஒப்புதலுக்குப்பின் சட்டமானால், வந்தே மாதரம் பாடலை உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைப்படி படிக்கவில்லை என்றால் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். குறிப்பாக அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும். இதில் 6 பத்திகள் உள்ளன. அதில் இரண்டு பத்திகளுக்குப் பின் இந்து மத கடவுகளை போற்றி வருவதாக உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவிக்கின்றன.</p><p>இந்த நிலையில் வந்தே மாதரம் மசோதாவை விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சியை பாஜக சாடியுள்ளது. </p><h2>இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா கூறியதாவது:-</h2><p>காங்கிரசும் அதன் ஆதரவு வட்டாரமும் வந்தே மாதரம் பாடலை வெறுக்கின்றன. தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு அளிக்கப்படும் அதே மரியாதையை தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலுக்கும் அளிக்கும் வகையில், தேசிய கவுரவ அவமதிப்புத் தடுப்பு சட்டத்தில் (Prevention of Insults to National Honour Act) அரசு திருத்தம் கொண்டு வருகிறது. ஆனால், இதை வரவேற்பதற்குப் பதிலாகவும், வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்குப் பதிலாகவும், காங்கிரஸ் இதில் அதிருப்தி கொண்டுள்ளது.</p><h2>வந்தே பாரதம் பாடலை இரண்டு பகுதிகளாக பிரித்தார் நேரு</h2><p>நேருஜி வந்தே பாரதம் பாடலை இரண்டு பகுதிகளாகப் பிரித்தார். முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே இருந்தபோதே, காங்கிரஸும் அதன் பல தலைவர்களும் வந்தே மாதரம் பாடலை இசைக்க மறுத்துவிட்டனர்.</p><figure><img alt="ஷேசாத் பூனவாலா" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/vp27sqve/ShehzadPoonawalla.jpg" /></figure><p>சித்தராமையாவாக இருக்கட்டும், மத்தியப் பிரதேச காங்கிரஸாக இருக்கட்டும் அல்லது சோனியா காந்தியாக இருக்கட்டும். வந்தே மாதரம் மீது அவர்களுக்கு ஒரு வெறுப்புணர்வு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.</p><h2>INC இல்ல ANC</h2><p>இப்போதும் கூட அவர்கள் வந்தே மாதரம் பாடலை வெறுக்கிறார்கள். இது அவர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. அவர்களால் ஹித்மாவை (Hidma) புகழ்ந்து பேசவும், நக்ஸல்கள் தியாகிகள் என்று கூறவும் முடிகிறது. அஃப்சல் மற்றும் யாகூப் போன்ற பயங்கரவாதிகள் மீது மென்மையான போக்கைக் கொண்டிருக்கவும் அவர்களால் முடிகிறது. </p><blockquote>அக்காலத்தில், முஸ்லிம் லீக்கின் அழுத்தத்திற்குப் பணிந்து வந்தே மாதரம் பாடலை எதிர்த்தனர். இன்றும் கூட, கேரளாவில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அமைத்துள்ள காரணத்தாலேயே வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ்காரர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்</blockquote> <p>ஆனால் பாரத மாதா மற்றும் வந்தே மாதரம் என்று வரும்போது மட்டும் அவர்களுக்குப் பிரச்சனை ஏற்படுகிறது. இது INC (இந்திய தேசிய காங்கிரஸ்) அல்ல, மாறாக ANC (தேச எதிர்ப்புக் காங்கிரஸ்) என்பதைத்தான் காட்டுகிறது.</p><p>இவ்வாறு ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.</p><p>தற்போது மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய கீதத்திற்கு முன் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும். ஒருவேளை மாநில பாடல்கள் இருந்தால், அது இசைக்கப்பட்ட பின், வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் என இருக்க வேண்டும். வந்தே மாதரம் பாடலின் 6 வரிகளையும் முழுமையாக பாடப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் இலவசங்களுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-refuses-urgent-hearing-case-against-election-freebies</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-refuses-urgent-hearing-case-against-election-freebies#comments</comments><guid isPermaLink="false">aea3111f-55be-412e-81f6-728062303055</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:28:10 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:28:10.147Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சுப்ரீம் கோர்ட்,தேர்தல் இலவசங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/06/10/1895651-supreme-court.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/06/10/1895651-supreme-court.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பா.ஜ.க. நிர்வாகியும் வக்கீலுமான அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2022-ம் ஆண்டு தொடுத்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்த கோரி, மனுதாரர் அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பு முறையிட்டார். குறிப்பாக, இந்த வழக்கு நீண்ட நாளாக நிலுவையில் இருக்கிறது. </p><p>எனவே வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். மேலும் இலவசங்கள் அறிவிப்பு குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிடுவது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். அதற்கு எதிர் மனுதாரர்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்தார்.</p><p>அப்போது பல்வேறு கட்சிகள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், ‘குழு அமைத்து ஆய்வு செய்யும் விவகாரத்தில் எதிர்ப்பு இல்லை’ என்று கூறினார். ஆனால் தலைமை நீதிபதி, முக்கியமான வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. எனவே இந்த வழக்கை விசாரிப்பது தொடர்பாக பின்னர் பரிசீலிப்பதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரெயில்- நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-flags-off-india-made-hydrogen-train</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-flags-off-india-made-hydrogen-train#comments</comments><guid isPermaLink="false">7b67659d-b49c-4591-a252-ecfe44f1785d</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:10:16 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:10:16.434Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hydrogen train,pm modi,பிரதமர் மோடி,ஹைட்ரஜன் ரெயில்,ஹைட்ரஜன்,Hydrogen</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/t6qgu16w/PM-Modi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/t6qgu16w/PM-Modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் முதலாவது, உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் எரிபொருள் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><p>பிரதமர் நரேந்திர மோடி இன்று அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அவர் சுமார் ரூ.26 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.</p><h2>ஹைட்ரஜன் ரெயில்</h2><p>இதில் முதல் நிகழ்ச்சியாக இந்தியாவின் முதலா​வது ஹைட்​ரஜன் பயணிகள் ரெயிலை பிரதமர் நரேந்​திர மோடி தொடங்கி வைத்தார்.</p><p>இந்​தி​யா​வில் ஹைட்​ரஜன் எரிபொருளில் இயங்​கும் ரெயில் என்​ஜினை தயாரிப்பதற்காக கடந்த 2021-ம் ஆண்டு முயற்​சிகள் தொடங்​கின. ரூ.136 கோடி மதிப்​பீட்​டில் வடக்கு மண்டல ரெயில்வே இந்த திட்​டத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் தொடங்கியது. இந்த திட்​டத்​துக்​கான டெண்​டர் ஐத​ரா​பாத்​தை சேர்ந்த மேதா நிறுவனத்துக்கு வழங்​கப்​பட்​டது. இந்த ​நிறு​வனம் ​தான் எரிபொருட்​களை சப்ளை செய்​கிறது.</p><h2>தொடங்கி வைத்தார்</h2><p>ஹைட்​ரஜன் ரெயிலை வடிவ​மைக்​கும் பணி​கள் சென்னை பெரம்​பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்​சாலை​யில் நடைபெற்றது. ரெயில் வடிவமைப்பு பணி​கள் முடிவடைந்ததை தொடர்ந்து சோதனை ஓட்​டங்​களும் நடை​பெற்​றன. இதையடுத்​து, ஹைட்ரஜன் பயணிகள் ரெயிலை அறி​முகப்படுத்த கடந்த மே 22-ந்தேதி ரெயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்தது.</p><p>இந்த நிலையில் அரியானா மாநிலம் ஜிந்த் ரெயில் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் இந்தியாவின் முதலாவது ஹைட்​ரஜன் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் தூய எரிசக்திக்கு மாறும் இந்தியாவின் லட்சிய பயணம் மற்றும் நிலையான - பசுமையான ரெயில் போக்குவரத்துக்கான புதிய அத்தியாயம் தொடங்கியது.</p><h2>ஐ.சி.எப். தொழிற்​சாலை</h2><p>ஜெர்​மனி​யில் முதன்​முதலாக உலகின் முதல் ஹைட்​ரஜன் பயணி​கள் ரெயில் கடந்த 2018-ம் ஆண்​டு இயக்​கப்​பட்​டது. பின்னர் ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்​கள் நாடு​களில் தயாரிக்​கப்பட்ட ஹைட்ரஜன் ரெயிலை இயக்​கின. தமிழகத்துக்கு பெருமை சேர்க்​கும் வித​மாக, இந்த வரலாற்​று சிறப்​புமிக்க முதல் ஹைட்​ரஜன் ரெயில், சென்னை பெரம்​பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்​சாலை​யில் முழு​மை​யாக வடிவமைக்​கப்​பட்டு தயாரிக்கப்பட்டு உள்ளது.</p><p>இந்த ரெயில் சுற்​றுச்​சூழலுக்கு கேடு விளைவிக்​காத வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை கொண்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியும் குறையும்.</p><h2>குறைந்த கட்டணம்</h2><p>பன்முக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த ரெயில் அரியானா மாநிலத்தில் மின்​மய​மாக்​கப்​ப​டாத 89 கி.மீ. நீள​முள்ள ஜிந்த் - சோனிபட் வழித்​தடத்​தில் உள்ள 12 ரெயில் நிலை​யங்​களை இணைக்கும் வகை​யில் இயக்​கப்​படுகிறது. இந்த ரெயில், உலகின் மிக நீளமான, அதிக திறன் கொண்ட ஹைட்ரஜன் ரெயில் திட்டங்களில் ஒன்றாகும்.</p><p>இந்த ரெயில் தின​மும் 2 முறை இரு​மார்க்​கங்​களி​லும் இயக்​கப்படும். ஏழை, நடுத்தர மக்​கள் பயன்​பெறும் வகை​யில் இதன் பயண கட்​ட​ணம் மிக குறை​வாக ரூ.5 முதல் அதி​கபட்​ச​மாக ரூ.25 வரை நிர்​ண​யம் செய்யப்​பட்​டுள்​ளது.</p><h2>நவீன தொழில்நுட்பம்</h2><p>மேல்நிலை கம்பிகளில் இருந்து மின்சாரத்தை பெறும் வழக்கமான மின்சார ரெயில்களை போல் அல்லாமல் ஹைட்ரஜன் ரெயிலானது ஹைட்ரஜன் - ஆக்சிஜன் வேதிவினை மூலம் ரெயிலுக்கு உள்ளேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தும். </p><p>1200 கிலோ​வாட் திறன்கொண்ட ஹைட்​ரஜன் எரிபொருள் மின்கல உந்து விசை அமைப்பின் நவீன தொழில்நுட்பத்தில் இந்த ரெயில் இயங்​கு​கிறது. ரெயில் வேகம் எடுக்​கும்​போது உந்​துதலை தர லித்​தி​யம் பெரோ பாஸ்பேட் பேட்டரி​களும், ரெயில் வேகம் குறை​யும் போது பேட்​டரியை தானாகவே ரீசார்ஜ் செய்​யும் மறு உரு​வாக்க தொழில்​நுட்​ப​மும் இணைக்கப்​பட்​டுள்​ளன.</p><h2>10 பெட்டிகள்</h2><p>பிரதமர் மோடிதொடங்கி வைத்துள்ள ஹைட்ரஜன் ரெயில் 2 டிரைவர் பெட்​டிகள், 8 பயணி​யர் பெட்​டிகள் என 10 பெட்​டிகளை கொண்​டது. ஒரே நேரத்​தில் 2,600-க்​கும் மேற்பட்ட பயணி​களை ஏற்​றி செல்​லும் திறன் கொண்​டது.</p><p>சோதனை​யின்போது இந்த ரெயில் அதிகபட்​ச​மாக மணிக்கு 120 கி.மீ. வேகத்தை தொட்​டது. ஆனாலும், பாது​காப்​பான, வழக்கமான இயக்​கத்துக்​காக மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் மட்​டுமே இயக்​கப்​பட உள்​ளது. இந்த ரெயில் ஜிந்த் - சோனிபட் நகரங்களுக்கு இடையிலான 89 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்தில் கடக்கும்.</p><h2>பாதுகாப்பு அமைப்பு</h2><p>ஹைட்ரஜன் கசிவுகள், வெப்பம், தீப்பிழம்புகள், புகையை முன்கூட்டியே கண்டறியும் பன்முக பாதுகாப்பு அமைப்புகளுடன் பாதுகாப்பான ரெயில் என்ற சிறப்பையும் ஹைட்ரஜன் ரெயில் கொண்டுள்ளது.</p><p>இந்தியாவில் தற்போது 99 சதவீதத்துக்கும் மேற்பட்ட அகல ரெயில் பாதை வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மாசில்லா ரெயில் இயக்கத்துக்கான அடுத்த கட்ட பாய்ச்சலை இந்திய ரெயில்வே முன்னெடுத்து உள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Jind, Haryana: Prime Minister Narendra Modi flags off the country&#39;s first hydrogen-powered train from Jind to Sonipat<br><br>(Video source: DD) <a href="https://t.co/kMQv2nBhOZ">pic.twitter.com/kMQv2nBhOZ</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2077995283028595080?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>Day 20: மரணப் படுக்கையில் சோனம் வாங்சுக்.. உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-sonam-wangchuk-on-critical-indefinite-fast-as-centre-stays-silent</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-sonam-wangchuk-on-critical-indefinite-fast-as-centre-stays-silent#comments</comments><guid isPermaLink="false">faabdadf-17be-43be-941c-360941049953</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:10:11 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:10:11.025Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>hunger strike,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,உண்ணாவிரதம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/fkmoxg4y/sonam-wangchuk.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/fkmoxg4y/sonam-wangchuk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்த போராட்டத்தில் ஜூன் 28 இல் வந்து இணைந்த லடாக் மாநில உரிமை செயல்பாட்டாளர் மற்றும் கல்வியாளர், விஞ்ஞானி என பன்முகம் கொண்ட சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். </p><h2>மரணப் படுக்கை</h2><p>இந்த உண்ணாவிரதம் இன்று (ஜூலை 17) 20வது நாளை எட்டியுள்ளது. 59 வயதான சோனம் வாங்சுக் இந்த உண்ணாவிரததால் ஏற்கனவே  9 கிலோவுக்கு மேல் குறைந்துள்ளார். அவரின் எடை தற்போது  56.9 கிலோவாக உள்ளது. </p><p>அவரின் உடலின் நீரேற்றம், ரத்த சர்க்கரை அளவு, ஆக்சிஜன் அளவு தொடர்ந்து சீரற்றதாகி வருகிறது. </p><p>"நான் இதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் சோனம் வாங்சுக் தன் மரணப் படுக்கையில் உள்ளார்" என சிஜேபி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே உருக்கமாக தெரிவித்துள்ளார். </p><p>முன்னதாக நேற்று வெளியான வீடியோவில் சோனம் வாங்சுக் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்க்க முடிந்தது. நேற்று மட்டும் கழிவறை செல்லும்போது 2 முறை அவர் கீழே விழப் பார்த்தார் என தீப்கே தெரிவித்துள்ளார். அந்த அளவு அவரின் உடல் பலவீனமடைந்துள்ளது. </p><p>நேற்றைய அந்த வீடியோவில், தன் தளர்ந்த நடையில் வாங்சுக் ஆதரவாளர்களின் உதவியுடன் கழிவறை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்து நடந்து சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</p><h2>மெல்லிய புன்னகை</h2><p>இத்தகு சூழலிலும் அவரின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையையும், பெரும்பாலும் மாணவர்களை உள்ளடக்கிய ஆதரவாளர்களை நோக்கி அவர் கையசைத்தார். அந்த மாணவர்களில் பலர் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் அவரது போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி வந்தவர்கள் ஆவர்.</p><p>நேற்றும் தீப்கே, வாங்சுகை உண்ணாவிரதத்தை கைவிட சொல்லி வலியுறுத்தினார். ஆனால் வாங்சுக் ஒருவித தீர்க்கத்துடன் அதை மறுத்திவிட்டார்.</p><p>சிஜேபியின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் "நீ பேசாம இரு. என்னை உண்ணாவிரதத்தை கைவிட சொல்லி கேக்காத. அரசாங்கம் ஏன் நம்ம சொல்றதை கவனிக்க மாட்டேங்குதுன்னு கேளு" என வாங்சுக் தீப்கேயை கண்டிப்பது இடம்பெற்றுள்ளது.</p><h2>மருத்துவர்கள் எச்சரிக்கை</h2><p>வாங்சுக் தற்போது ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், இந்த உண்ணாவிரதம் தொடர்ந்தால் அவரின் உடல் உறுப்புக்கள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே அவருக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு நேற்று விசாரணைக்கு வந்தது.</p><h2><a href="https://www.maalaimalar.com/amp/story/news/national/neet-ugc-protest-sonam-wangchuk-on-19th-day-of-fast-with-deteriorating-health">தேவைப்பட்டால்</a></h2><p>அப்போது நீதிபதிகள், ஒவ்வொரு குடிமகனின் உயிரும் முக்கியம், வாங்சுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மத்திய அரசும், மருத்துவர்கள் ஆலோசனைப்படி, <a href="https://www.maalaimalar.com/amp/story/news/national/neet-ugc-protest-sonam-wangchuk-on-19th-day-of-fast-with-deteriorating-health">தேவைப்பட்டால் </a>தாங்கள் தலையிடுவோம் என தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுவரை மத்திய அரசு தரப்பில் இருந்து ஒரு துரும்பும் அசையவில்லை.</p><h2>ஜூலை 20 அழைப்பு</h2><p>இதனிடையே, வரும் 20 ஆம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத் தொடரின்போது பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல நாடு முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்ட மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கு வாங்சுக் தன் தளர்ந்த குரலில் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று ஆம் ஆத்மி தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-fears-sonam-wangchuk-kejriwals-criticism">அரவிந்த் கெஜ்ரிவால் சோனம் வாங்சுக்கை சென்று சந்தித்ததும் </a>குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>மேற்கு வங்கம்: பள்ளிக் குழந்தைகள் சென்ற வாகனம் மீது ரெயில் மோதி விபத்து - 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி </title><link>https://www.maalaimalar.com/news/national/school-van-hit-by-train-three-including-two-children-killed-at-murshidabad-govindpur-crossing-as-suburban-train-rams-vehicle-on-open-railway-track</link><comments>https://www.maalaimalar.com/news/national/school-van-hit-by-train-three-including-two-children-killed-at-murshidabad-govindpur-crossing-as-suburban-train-rams-vehicle-on-open-railway-track#comments</comments><guid isPermaLink="false">831a3c6d-3d61-47fb-960b-ad9b9dcfa0d2</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:26:49 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:26:49.603Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>train accident,ரெயில் விபத்து,மேற்கு வங்கம்,School Children,west bengal,பள்ளிக் குழந்தைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/b35mdk1h/west-bengal.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரெயில் விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/b35mdk1h/west-bengal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பள்ளி வாகனம் மீது ரெயில் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.</p><p>முர்ஷிதாபாத்தில் உள்ள கோவிந்த்பூர் ரெயில்வே கிராசிங்கில், இன்று காலை 7 மணியளவில் பலர் அமரும் காரில் குழந்தைகள் பள்ளி சென்று கொண்டிருந்தனர். </p><p>திறந்திருந்த ரெயில் தண்டவாளத்தை வாகனம் கடக்க முயன்றபோது புறநகர் ரெயில் மோதியதில் இந்த <a href="https://www.maalaimalar.com/topic/train-accident">விபத்து </a>நிகழ்ந்தது. </p><h2>உயிரிழப்பு - காயம்</h2><p>இதில் உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு முதியவர் அடங்குவர்.</p><p>மேலும் வாகனத்தில் இருந்த மற்ற பல குழந்தைகளும் பலத்த காயமடைந்தனர். ஒரு சைக்கிள் ஓட்டுநரும் மோதப்பட்டு காயமடைந்தார்.</p><p>உள்ளூர் மக்கள் உடனடியாக செயல்பட்டு, காயமடைந்த குழந்தைகளையும், நபரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.</p><p>காயமடைந்த குழந்தைகள் பெர்ஹாம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><h2>விசாரணை</h2><p>விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், ரெயில்வே காவல்துறையினரும் உள்ளூர் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p>ரெயில்வே கிராசிங்கைக் கடக்கும்போது விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை காவல்துறையினர் கண்டறிய முயன்று வருகின்றனர்.</p> <p>10 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து ரெயில்வே டிவிஷனல் மானேஜர் உத்தரவிட்டுள்ளார். அலட்சியமாக செயல்பட்டதாக கேட்மேன் மற்றும் சூப்பர்வைசர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அவர்கள் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.</p><p>பள்ளிக்குழந்தைகள் விபத்தில் சிக்கியுள்ளது பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!</title><link>https://www.maalaimalar.com/news/national/indias-first-private-orbital-rocket-vikram-1-to-launch-on-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/national/indias-first-private-orbital-rocket-vikram-1-to-launch-on-tomorrow#comments</comments><guid isPermaLink="false">fa52a01f-f477-4aba-99c0-bedd5db41db4</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:30:53 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:30:53.805Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,ராக்கெட்,Rocket,Rocket Vikram 1,ராக்கெட் விக்ரம் 1</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/hj0ux9gj/rocket.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை விண்ணில் பாய உள்ள தனியார் ராக்கெட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/hj0ux9gj/rocket.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>'ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பறக்கும் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 நாளை (சனிக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.</aside><h2><strong>தனியார் ராக்கெட்</strong></h2><p>தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து நாளை (சனிக்கிழமை) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.</p><p>விக்ரம்-1 ஆனது கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்டின் சொந்த ஸ்கோப் ஆகியவற்றிலிருந்து தொழில்நுட்ப விளக்க ஆய்வு கருவிகளை எடுத்துச் செல்கிறது. அத்துடன், காஸ்மோஸ் டயமண்ட்ஸின் கலைப்படைப்பான 'காஸ்மிக் புளூம்' மற்றும் ஒரு மைக்ரோ-ஆர்ட் பீஸ் கொண்டு செல்கிறது.</p><h2><strong>கார்பன் கலவை அமைப்பு</strong></h2><p>விக்ரம்-1 என்பது 7 அடுக்கு உயரமான, பல நிலை சுற்றுப்பாதை ஏவுகணை வாகனமாகும். இது அனைத்து கார்பன் கலவை அமைப்புடன் கட்டப்பட்டது மற்றும் 3டி-அச்சிடப்பட்ட எந்திரங்கள் மற்றும் உயர் உந்துதல் திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் உந்துவிசை அமைப்புகளால் இயக்கப்படுகிறது.</p><p>350 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் முதல் சோதனை விமானம் 60 டிகிரி சாய்வில் 450 கிமீ சுற்றுப்பாதையை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தவகை ராக்கெட் மூலம் சில நூறு கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய வகை ராக்கெட்டாகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>மகப்பேறு விடுப்பு - கோர்ட்டுக்கு சென்று உரிமையை நிலைநாட்டிய பேராசிரியை 
</title><link>https://www.maalaimalar.com/news/national/maternity-leave-professor-asserts-her-right-by-going-to-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/maternity-leave-professor-asserts-her-right-by-going-to-court#comments</comments><guid isPermaLink="false">0ac766f5-a7f1-4dab-933c-daced17e4626</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:29:17 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:29:17.770Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Telangana,Professor,pregnant woman,தெலுங்கானா,பேராசிரியை,தெலுங்கானா ஐகோர்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/m39e5zmu/pregnantwoman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pregnant woman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/m39e5zmu/pregnantwoman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகப்பேறு விடுப்பு தொடர்பாக, ஐகோர்ட்டுக்கு சென்று தனக்கான உரிமையை பேராசிரியை ஒருவர் நிலை நாட்டியுள்ளார்.</p><h2>இரட்டை குழந்தைகள்</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE">தெலுங்கானா</a> மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்வரூப ராணி (வயது 35), அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்தநிலையில் 2-வது முறையாக ஸ்வரூப ராணி கடந்த ஏப்ரல் மாதத்தில் கர்ப்பமானார்.</p> <figure><img alt="Twins" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/6a7yh298/twins.jpg" /></figure> <p>இதையடுத்து தனக்கு மகப்பேறு விடுப்பு வேண்டி அவர் கல்லூரி நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார். ஆனால், அரசு விதிகளின் படி “இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் மகப்பேறு விடுப்பு கிடையாது" என்ற விதியைக் காட்டி அதிகாரிகள் அவரது விண்ணப்பத்தை அதிரடியாக நிராகரித்தனர்.</p><h2>தெலுங்கானா ஐகோர்ட்டில் வழக்கு</h2><p>அதிகாரிகளின் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்வரூப ராணி தெலுங்கானா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், "முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறப்பது என்பது இயற்கையான உயிரியல் நிகழ்வு. அதை இரண்டு தனித்தனி பிரசவங்களாகக் கருதக் கூடாது. எனவே எனக்கு விடுப்பு மறுப்பது சட்டவிரோதம்" என்று குறிப்பிட்டிருந்தார்.</p> <p>இந்த வழக்கை தெலுங்கானா ஐகோர்ட்டு நீதிபதி கே.சரத் விசாரணை நடத்தினார். வழக்கு விசாரணையில் பரபரப்பு தீர்ப்பு அளித்து உத்தரவிட்டார். அந்த உத்தரவில், மகப்பேறு விடுப்பு என்பது பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், அவர்கள் தொடர்ந்து பணியில் நீடிப்பதற்கும் கொண்டு வரப்பட்ட நலத்திட்டமாகும். விதிகளை எந்திரத்தனமாகப் பார்க்காமல் மனிதநேயத்தோடு அணுக வேண்டும். முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தால், அதை ஒரே ஒரு பிரசவமாகத்தான் கருத வேண்டும். இரண்டு குழந்தைகளாக கணக்கிட்டு மகப்பேறு விடுப்பை மறுக்கக் கூடாது.</p><h2>அதிரடி தீர்ப்பு</h2><p>சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து, முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலும் அடுத்த பிரசவத்திற்கு விடுப்பு வழங்கலாம் என தமிழ்நாடு அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இதனை நாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, மனுதாரருக்கு ஏப்ரல் 14, 2026 முதல் அக்டோபர் 11, 2026 வரையிலான 180 நாட்களுக்கு முழு சம்பளம் மற்றும் இதர படிகளுடன் கூடிய மகப்பேறு விடுப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று தெலுங்கானா அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். தெலுங்கானா ஐகோர்ட்டின் இந்த அதிரடி தீர்ப்பு அரசு பெண் ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை பூங்கா, குன்னூர் உள்பட 75 ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-inaugurate-75-railway-stations-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-inaugurate-75-railway-stations-today#comments</comments><guid isPermaLink="false">2d2e973f-e581-4441-b3e2-4ae1a7610f40</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:44:01 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:44:01.357Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>railway stations,pm modi,பிரதமர் மோடி,ரெயில் நிலையங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/05/22/13232361-modi0.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/05/22/13232361-modi0.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 75 ரெயில் நிலையங்களை <a href="https://www.maalaimalar.com/news/national/looking-forward-to-being-among-people-of-haryana-chandigarh-punjab-said-pm-modi">பிரதமர் மோடி </a>இன்று திறந்து வைக்கிறார்</p><p>'அம்ரித் பாரத்' ரெயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏராளமான ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் ரூ.1,570 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 75 ரெயில் நிலையங்கள் திறப்புவிழாவுக்கு தயாராகி உள்ளன. அவை இன்று பிற்பகல் 3.40 மணிக்கு<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF"> பிரதமர் மோடி</a>யால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்படுகிறது.</p><p>இதில் தமிழகத்தில் உள்ள சென்னை பூங்கா மற்றும் குன்னூர், சின்னசேலம் ரெயில் நிலையங்களும் அடக்கம். மத்திய பிரதேசத்தில் உள்ள சாஞ்சி, விதிஷா, அசோக்நகர், சிவ்புரி உள்ளிட்ட 13 ரெயில் நிலையங்களும் திறக்கப்படுகின்றன. நவீன பயணிகள் வசதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் மற்றும் அந்தந்த பகுதியின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விலகிய எம்.பி.க்கு மிக்க நன்றி.. போகிறவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள் - கெடு விதித்த மம்தா</title><link>https://www.maalaimalar.com/news/national/mamata-faces-tmc-split-over-50-mlas-and-20-mps-quit-as-she-urges-rebels-to-leave-before-july-21</link><comments>https://www.maalaimalar.com/news/national/mamata-faces-tmc-split-over-50-mlas-and-20-mps-quit-as-she-urges-rebels-to-leave-before-july-21#comments</comments><guid isPermaLink="false">eccce6af-3bd2-4c70-80fd-2b210f6f8f60</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:12:18 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:12:18.758Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,மேற்கு வங்கம்,trinamool congress,west bengal,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/8a6oxw7e/tn-45.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மம்தா, கோயல் மல்லிக்]]></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா, கோயல் மல்லிக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/8a6oxw7e/tn-45.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF">மம்தா பானர்ஜி</a>யின் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. 80 எம்எல்ஏக்களில் 50க்கும் மேற்பட்டோர் தனி அணியாக பிரிந்துள்ளனர். அவர்களுக்கே பாஜகவை சேர்ந்த சட்டமன்ற சபாநாயகர் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கியுள்ளார். </p><p>மறுபுறம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் 20க்கும் மேற்பட்டோர் விலகியது மம்தாவுக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. தொடர்ந்து பல முக்கிய தலைவர்கள், மம்தாவுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தவர்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து <a href="https://www.maalaimalar.com/news/national/mamata-banerjee-loses-cool-slaps-tmc-worker-amid-post-rally-chaos">விலகி </a>வருகின்றனர். </p><p>இந்த சூழலில் நேற்று பேஸ்புக் லைவில் மம்தா பானர்ஜி பேசியுள்ளார். </p><p>அதில், </p><p>"பாஜக, காவல்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, சிஐடி உள்ளிட்டவற்றின் அழுத்தம் காரணமாகவோ அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாகவோ யாராவது கட்சியை விட்டு வெளியேற விரும்பினால், கைகூப்பி வேண்டுகிறேன், தயவுசெய்து ஜூலை 21க்கு முன்பே வெளியேறிவிடுங்கள். </p><p>நாம் கட்டியெழுப்பிய கட்சியின் பெயரைக் கெடுக்க வேண்டாம். நீங்கள் தாராளமாக வெளியேறலாம், இதனால் எங்கள் கட்சி பலவீனமடையாது.</p> <p>யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பது முக்கியமல்ல. கட்சியில் நீடிப்பவர்களே எங்களின் உண்மையான பலம்.</p><p>ஜூலை 21க்குப் பிறகு நாங்கள் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.</p><h2>கோயல் மல்லிக்</h2><p>பிரபல நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான கோயல் மல்லிக் தனது மாநிலங்களவை எம்பி பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.</p><p>தன் பின்னர் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பூபேந்தர் யாதவைச் சந்தித்துப் பேசியுள்ளார். இது அவர் பாஜகவில் இணையப் போகிறார் என்ற ஊகங்களை வலுப்படுத்தியுள்ளது.</p><p>இருப்பினும், கோயல் மல்லிக்கின் இந்த முடிவு குறித்து பேசிய மம்தா பானர்ஜி, அவருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p>  <p>மேலும், "1993, ஜூலை 21, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் குடும்பத்தினர் கூட மிரட்டப்பட்டு பாஜகவிற்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கேள்விப்பட்டேன். அவர்கள் போகலாம், ஆனால் அவர்களின் இதயம் எப்போதும் நம்முடன்தான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும்." என தெரிவித்துள்ளார்.</p><h2>ஜூலை 21 - தியாகிகள் தினம்</h2><p>1993ல் மேற்கு வங்காளத்தில் ஜோதி பாசு தலைமையிலான இடதுசாரி அரசை எதிர்த்து அப்போது காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவியாக இருந்த மம்தா பானர்ஜி மாபெரும் பேரணி நடத்தினார்.</p><p>அப்போதைய தேர்தலில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தலைமைச் செயலகம் நோக்கி இந்த பேரணி நடந்தது.</p><p>ஜூலை 21 அன்று கொல்கத்தாவின் வீதிகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். போராட்டம் தீவிரமடைந்தபோது, கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காங்கிரசை சேர்ந்த 13 தொண்டர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மமதா பானர்ஜியும் இதில் காயமடைந்தார்.</p><p>இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் இடதுசாரி அரசுக்கு எதிரான மம்தா பானர்ஜியின் போராட்டம் மாநிலம் தழுவிய அளவில் தீவிரமடைந்தது. பிற்காலத்தில் அவர் காங்கிரஸிலிருந்து பிரிந்து 1998 ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்க இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவமே அடித்தளமாக அமைந்தது.</p> ]]></content:encoded></item><item><title>கொரோனா பாதிப்புக்கு ஒரே மாதத்தில் 4 பேர் உயிரிழப்பு... ஆந்திர சுகாதார ஆணையர் அதிர்ச்சி தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-reports-4-covid-19-deaths-12-cases-in-less-than-a-month</link><comments>https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-reports-4-covid-19-deaths-12-cases-in-less-than-a-month#comments</comments><guid isPermaLink="false">a0188026-01c9-4251-8226-7f1154761bde</guid><pubDate>Fri, 17 Jul 2026 00:33:50 +0000</pubDate><atom:updated>2026-07-17T00:33:50.057Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,ஆந்திர பிரதேசம்,கொரோனா வைரஸ்,Covid-19</media:keywords><media:content height="512" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/29w3fe5t/Coronavirus.webp" width="767"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/29w3fe5t/Coronavirus.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை மாநிலம் முழுவதும் 12 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டது என்றும், அவர்களில் இணை நோய்கள் இருந்த நான்கு பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர் என்று ஆந்திர பிரதேச மாநில சுகாதார ஆணையர் ஜி. வீரபாண்டியன் தெரிவித்தார்.</p><p>இறந்தவர்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் பிற நோய்கள் போன்ற கடுமையான இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.</p><p><strong>4 உயிரிழப்புகள்:</strong></p><p>"மாநிலத்தில் ஆங்காங்கே கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை, 12 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டது, அவர்களில் நான்கு பேர் உயிரிழந்தனர்," என்று வீரபாண்டியன் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.</p><p>நான்கு மரணங்களில், மூன்று கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர்களும், ஒன்று காக்கிநாடாவை சேர்ந்தவரும் ஆவர் என்று அவர் கூறினார்.</p><p>ஆணையரின் கூற்றுப்படி, ஆந்திர பிரதேச மாநிலத்தின் 2026-ஆம் ஆண்டின் முதல் கோவிட்-19 தொற்று கடப்பா மாவட்டத்தில் ஜூன் 26 அன்று பதிவானதுடன், ஜூலை 1 முதல் 16-ஆம் தேதிக்குள் மேலும் 11 தொற்றுகள் பதிவாகியுள்ளன.</p><p><strong>நோய் தொற்று:</strong></p><p>நோய்த்தொற்று உள்ளவர்களுடன் நெருக்கமாக பழகிய பின்னர் இருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக கடப்பா மாவட்டத்தில் எட்டு பேரும், அதைத் தொடர்ந்து குண்டூரில் இரண்டு பேரும், விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடாவில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>"இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே இடத்திலிருந்து ஏற்பட்ட ஒரு கொத்தாக அல்லாமல், வெவ்வேறு மண்டலங்களில் இருந்து பதிவாகியுள்ளன," என்று வீரபாண்டியன் கூறினார்.</p><p>மேலும், ஜூன் 26 முதல் ஜூலை 15 வரை தென்னிந்திய மாநிலத்தில் 67 கோவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவற்றில் 11 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும், 12-வது தொற்று தமிழகத்தின் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி) கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>புரி ரத யாத்திரையில் 2 பேர் உயிரிழப்பு... கூட்ட நெரிசல் குறித்து ஒடிசா அரசு விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/odisha-government-confirms-2-deaths-denies-stampede-at-puri-rath-yatra</link><comments>https://www.maalaimalar.com/news/national/odisha-government-confirms-2-deaths-denies-stampede-at-puri-rath-yatra#comments</comments><guid isPermaLink="false">240d36ae-0b73-432a-a1cf-0998d761a581</guid><pubDate>Thu, 16 Jul 2026 23:38:28 +0000</pubDate><atom:updated>2026-07-16T23:38:28.505Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒடிசா,Odisha,stampede,கூட்ட நெரிசல்,Puri Rath Yatra,புரி ரத யாத்திரை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/a8p79wgp/puri.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/a8p79wgp/puri.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலம், நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான யாத்ரீகர்களின் பங்கேற்புடன், புனித கடற்கரை நகரமான புரியில் தொடங்கிய வருடாந்திர ரத யாத்திரை விழாவின் போது, ​​இரண்டு பக்தர்கள் உயிரிழந்ததை ஒடிசா அரசு உறுதி செய்துள்ளது; ஆனால், கூட்ட நெரிசல் போன்ற சம்பவம் எதுவும் நடந்ததாக வெளியான செய்திகளை அது மறுத்துள்ளது.</p><p>முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, மகாபிரபு ஸ்ரீ ஜெகந்நாத், மகாபிரபு பாலபத்ரா, தேவி சுபத்ரா மற்றும் சக்ரராஜ் சுதர்சனன் ஆகியோரின் உலகப் புகழ்பெற்ற ரத யாத்திரை 2026, வியாழக்கிழமை புரியில் மிகுந்த மத உணர்வு, பக்தி மற்றும் முன்மாதிரியான நிர்வாக ஒருங்கிணைப்புடன் கொண்டாடப்பட்டது.</p><p><strong>ஒன்பது லட்சம் பக்தர்கள்:</strong></p><p>மேலும், நாள் முழுவதும் தொடர் மழை மற்றும் மோசமான வானிலை நிலவியபோதிலும், சுமார் எட்டு முதல் ஒன்பது லட்சம் பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டது, தெய்வங்கள் மீது பக்தர்கள் கொண்டுள்ள இணையற்ற நம்பிக்கையை பிரதிபலிப்பதாக அது மேலும் தெரிவித்தது.</p><p>மூன்று தேர்களை இழுப்பது உட்பட, திருவிழா தொடர்பான அனைத்து புனித சடங்குகளும் திட்டமிட்டபடி சுமுகமாக நடத்தப்பட்டன. கோவர்தன பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியாரும் தேர்களுக்கு வந்து பிரார்த்தனை செய்தார். திருவிழாவை வெற்றிகரமாக நடத்துவதற்காக மாநில அரசு விரிவான மற்றும் பல அடுக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தது," என்று முதலமைச்சர் அலுவலகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>காவல்துறை, சுகாதாரம், தீயணைப்புத் துறை, ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படை (ODRAF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), போக்குவரத்து, நகராட்சி நிர்வாகம், பொது சுகாதார பொறியியல், எரிசக்தி மற்றும் பிற துறை சார்ந்த அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி, முன்கூட்டியே விரிவான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டதாக மாநில அரசு மேலும் தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சரவை விரிவாக்கம்: காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-cm-siddaramaiah-discuss-cabinet-expansion-with-top-cong-leaders</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-cm-siddaramaiah-discuss-cabinet-expansion-with-top-cong-leaders#comments</comments><guid isPermaLink="false">90943c4a-81e4-4fd3-94ee-0c9228b93da5</guid><pubDate>Thu, 16 Jul 2026 19:06:23 +0000</pubDate><atom:updated>2026-07-16T19:06:23.185Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சித்தராமையா,கர்நாடகா,Siddaramaiah,Karnataka</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/y56bib4t/ka-cm.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/y56bib4t/ka-cm.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும்  முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர், மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த விரிவாக்கம் அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாகவே நடைபெற வாய்ப்புள்ளது.</p><p>இந்த இரு தலைவர்களும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்ததுடன், மாநிலத்திற்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலாவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.</p><p><strong>அமைச்சரவை விரிவாக்கம்:</strong></p><p>இருப்பினும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவசரமாக கர்நாடகாவுக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவரால் சிவகுமார் மற்றும் சித்தராமையாவை சந்திக்க முடியவில்லை.</p><p>"ஆலோசனைகள் இப்போது தான் தொடங்கியுள்ளன. இவை ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் தான். விரைவில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும். கர்நாடக அமைச்சரவையில், சட்டமன்ற சபாநாயகர் பதவி தவிர, 20 இடங்கள் காலியாக உள்ளன. அனைத்து காலி இடங்களையும் நிரப்ப முயற்சி மேற்கொள்ளப்படும்," என்று கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் சுர்ஜேவாலா கூறினார்.</p><p><strong>ஆலோசனை:</strong></p><p>விரிவாக்கம் எப்போது நடைபெறும் என்று கேட்டதற்கு, ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாகவே அது நடைபெற வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.</p><p>கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.கே. ஹரிபிரசாத் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். காங்கிரஸ் தலைவர் கார்கே அவசரமாக பெங்களூருவுக்கு செல்ல வேண்டியிருந்ததால், ஓரிரு நாட்களில் ஆலோசனைகள் மீண்டும் தொடரும் என்று அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.</p><p>காங்கிரஸ் தலைவர் திரும்பியதும், மாநில காங்கிரஸ் தலைவர்கள் மேலும் ஆலோசனை நடத்துவார்கள் என்று ஹரிபிரசாத் தெரிவித்தார்.</p><p>ராகுல் காந்தியுடனான சந்திப்புக்குப் பிறகு, சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் சுர்ஜேவாலாவைச் சந்தித்து, அமைச்சரவையில் சேர்க்கப்படக்கூடிய வேட்பாளர்கள் குறித்து விவாதித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>NEET-UG results: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு- 19 பேர் 720-க்கு 700 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-ug-results-out-now-19-candidates-score-700-out-of-720</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-ug-results-out-now-19-candidates-score-700-out-of-720#comments</comments><guid isPermaLink="false">3f74cdf4-5716-4ca9-857b-3dd8d3d6a075</guid><pubDate>Thu, 16 Jul 2026 17:21:04 +0000</pubDate><atom:updated>2026-07-16T17:21:04.735Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Neet exam,நீட் தேர்வு முடிவுகள்,NEET-UG results</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-22/1c57vjb8/tn-17.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ நீட் தேர்வு]]></media:title><media:description type="html"><![CDATA[ நீட் தேர்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-22/1c57vjb8/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசியத் தேர்வுகள் முகமை (NTA) இன்று (வியாழக்கிழமை) நீட் இளநிலை (NEET UG 2026) தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில் நாடு முழுவதும் உள்ள இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் (AYUSH) மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கு 11.21 லட்சம் தேர்வர்கள் தகுதி பெற்றுள்ளனர். </p><p>மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை மற்றும் கலந்தாய்வு அட்டவணை திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதியவர்கள் இப்போது neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தங்கள் மதிப்பெண் பட்டியல்களை (scorecards) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். </p><p><strong>முழு பட்டியல்:</strong></p><p>அகில இந்திய தரவரிசை பெற்றவர்கள், மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள், பிரிவு வாரியாக முதலிடம் பிடித்தவர்கள், தகுதி பெறுவதற்கான கட்-ஆஃப் (cut-off) மதிப்பெண்கள் மற்றும் மொழி வாரியான பங்கேற்பு விவரங்கள் அடங்கிய பட்டியல்களையும் NTA வெளியிட்டுள்ளது.</p><p>ஜூன் 21-ஆம் தேதியன்று நடைபெற்ற நீட் 2026 மறுதேர்வில், நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களில் அமைக்கப்பட்ட 5,440 தேர்வு மையங்களில் சுமார் 20 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர்.</p><p><strong>பெண்கள் ஆதிக்கம்:</strong></p><p>இத்தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்டது. தகுதி பெற்றவர்களில் 58 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர்; ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் தகுதி பெற்றுள்ளனர்.</p><p><strong>சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள்:</strong></p><p>பஞ்சாப்பை சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவை சேர்ந்த பன்சுல் பன்சால் ஆகியோர் 720-க்கு 715 மதிப்பெண்களை பெற்று கூட்டாக முதலிடத்தைப் பிடித்தனர்.</p><p><strong>NTA-வின் தகவலின்படி:</strong></p><ul><li><p>19 தேர்வர்கள் 700-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்</p></li><li><p>138 தேர்வர்கள் 690-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்</p></li><li><p>1,492 தேர்வர்கள் 650 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களை பெற்றுள்ளனர்</p></li><li><p>10,160 தேர்வர்கள் 600 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களை பெற்றுள்ளனர்</p></li><li><p>90,780 தேர்வர்கள் 500 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களை பெற்றுள்ளனர்</p></li></ul>]]></content:encoded></item><item><title>ஹரியானா, சண்டிகர் மக்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் - பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/looking-forward-to-being-among-people-of-haryana-chandigarh-punjab-said-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/looking-forward-to-being-among-people-of-haryana-chandigarh-punjab-said-pm-modi#comments</comments><guid isPermaLink="false">a1f16cc5-9391-4ad6-9c59-73fbeeccec86</guid><pubDate>Thu, 16 Jul 2026 17:12:26 +0000</pubDate><atom:updated>2026-07-16T17:12:26.962Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-21/fzdjthpk/PMModi0001.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-21/fzdjthpk/PMModi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரெயில்வே, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் கல்வி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை (வெள்ளிக்கிழமை) ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களுக்கு செல்ல ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த திட்டங்கள் மக்களின், குறிப்பாக இளைஞர்களின் வாழ்க்கையில் மிக சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p>இந்த பயணத்தின்போது, ​​26,000 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் மற்றும் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.</p><p>அத்துடன் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலையும் கொடியசைத்து தொடங்கி வைப்பார். மேலும், சண்டிகர் மற்றும் ஹரியானாவின் ஜிந்த் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் உரையாற்றுகிறார். </p><p><strong>எக்ஸ் பதிவு:</strong></p><p>"ரெயில்வே, சுகாதாரம், கலாச்சாரம், போக்குவரத்து, கல்வி மற்றும் பல துறைகள் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் மக்களின் மத்தியில் இருக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். </p><p>இத்திட்டங்கள் மக்களின், குறிப்பாக நமது 'யுவ சக்தி'யின் (இளைஞர் சக்தியின்) வாழ்க்கையில் மிக சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>ஜிந்த் நகரிலிருந்து, ஜிந்த் மற்றும் சோனிபட் ஆகியவற்றை இணைக்கும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.</p><p><strong>ஹைட்ரஜன் ரெயில்:</strong></p><p>"இத்தகைய ரெயில்களை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைகிறது. ரெயில்வே துறையில் தூய்மையான தொழில்நுட்பத்தை இந்தியா ஏற்றுக்கொள்வதை உறுதி செய்வதில் இது முக்கிய பங்காற்றும்," என்று அவர் கூறினார்.</p><p>ஜிந்த் நகரில் உள்ள ஏகலவ்யா மைதானத்தில், சுமார் 14,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, அவற்றை தொடங்கி வைக்கிறார்.</p><p>ஜிந்த் நகரில் பிற பணிகளும் தொடங்கி வைக்கப்படும் என்றும், அவற்றில் டெல்லி-அமிர்தசரஸ், அம்பாலா-கலா ஆம்ப் (Kala Amb), ஜிந்த்-கோஹானா (Gohana) ஆகியவற்றுக்கு இடையேயான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கான சாலை மற்றும் ரெயில்வே திட்டங்கள் அடங்கும் என்றும் மோடி குறிப்பிட்டார்.</p><p><strong>வளர்ச்சிப் பணி:</strong></p><p>சண்டிகரில் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியளிக்கிறது. நாளைய நிகழ்ச்சியின் போது, ​​4,700 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் தொடங்கி வைக்கப்படும் அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்படும்.</p><p>குறிப்பிடத்தக்க பணிகளில், சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PGIMER) மேம்பட்ட தாய்-சேய் நல மையம் மற்றும் மேம்பட்ட நரம்பியல் அறிவியல் மையம் ஆகியவற்றை தொடங்கி வைப்பதும் அடங்கும். </p><p>இந்த சாலை திட்டங்கள் பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றுக்கு இடையேயான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.</p><p><strong>தனித்துப் போட்டி:</strong></p><p>ஜலந்தரில் நடைபெறவுள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பஞ்சாப் மக்களுடன் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார். 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலைத் தனித்துப் போட்டியிட பா.ஜ.க. தயாராகி வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.</p><p>"பஞ்சாப் மாநிலம் பா.ஜ.க.வை நம்பிக்கையுடன் பார்க்கிறது. எங்கள் கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள், பஞ்சாபில் உள்ள எனது சகோதர-சகோதரிகளுக்கு வளமான வாழ்வையும், 'எளிதான வாழ்க்கை முறையையும்' உறுதி செய்யும்," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘சோனம் வாங்சுக்கை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார்’ - கெஜ்ரிவால் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-fears-sonam-wangchuk-kejriwals-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-fears-sonam-wangchuk-kejriwals-criticism#comments</comments><guid isPermaLink="false">a1829475-2dda-489f-aeee-8ae83f083940</guid><pubDate>Thu, 16 Jul 2026 16:15:20 +0000</pubDate><atom:updated>2026-07-16T16:15:20.706Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,Sonam Wangchuk,பிரதமர் மோடி,சோனம் வாங்சுக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/955m4b1a/New-Project-2026-07-16T214303.334.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சோனம் வாங்சுக்கை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார்’ - கெஜ்ரிவால் விமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/955m4b1a/New-Project-2026-07-16T214303.334.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை கண்டு அஞ்சுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். </p><p>டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். </p><p>இந்தப் போராட்டக் களத்திற்கு இன்று நேரில் சென்ற அரவிந்த் கெஜ்ரிவால், வாங்சுக்கிற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். தொடர்ந்து போராட்டக் களத்தில் பேசிய கெஜ்ரிவால் தர்மேந்திரப் பிரதானை நீக்கிவிட்டு, சோனம் வாங்சுக்கை கல்வி அமைச்சராக்க வேண்டும் என தெரிவித்தார்.</p><p>மேலும் வாங்சுக் பேச்சை அரசு கேட்கவேண்டும் என்றும், இல்லையென்றால் 2011-ல் நடத்திய அண்ணா ஹசாரேவுடனான போராட்டத்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட அதே கதியை பாஜக அரசும் சந்திக்கும் என தெரிவித்தார். </p><p>மேலும் வாங்சுக் போன்றவர்கள் கல்வித் துறையில் பெரிய புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்துவிடுவார்கள் என்ற பயத்தின் காரணமாகவே, பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் மௌனம் காப்பதாக குற்றம் சாட்டினார். </p><p>தொடர்ந்து 19 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை கடுமையாக நலிவடைந்துள்ள நிலையில், அவரது உடல்நிலையைத் தினமும் கண்காணிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றமும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், பென் கேமராக்களை தவிர்க்கவும்: எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/lok-sabha-issues-advisory-on-smartwatches-pen-cameras-for-mps-ahead-of-parliament-monsoon-session</link><comments>https://www.maalaimalar.com/news/national/lok-sabha-issues-advisory-on-smartwatches-pen-cameras-for-mps-ahead-of-parliament-monsoon-session#comments</comments><guid isPermaLink="false">3fa0ad24-63e9-464d-93c4-27928bb0e338</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:16:22 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:16:22.947Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>winter session,நாடாளுமன்றம்,குளிர்கால கூட்டத்தொடர்,parliment,ஸ்மார்ட் வாட்ச்,smart watches</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/7ynzp039/parliment.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ parliment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/7ynzp039/parliment.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்றத்திற்கு வரும்போது எம்.பி.க்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிவதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. </p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார் என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.</p><p>5 மாநில சட்டசபைத் தேர்தல்களுக்குப் பிறகு தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பரபரப்பான இந்த அரசியல் சூழலில் மழைக்கால கூட்டத்தொடர் கூட இருப்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p>காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் தானாகவே முதல் மந்திரி, பிரதமர் பதவி பறிபோகும் மசோதா உள்ளிட்டவற்றை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.</p><p>நாட்டில் நிலவும் பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.</p><p>மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் வகையில் வரும் 19-ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><p>இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கு வரும்போது எம்.பி.க்கள் ஸ்மார்ட் வாட்ச் மட்டுமின்றி ஸ்மார்ட் கண்ணாடிகள், கேமரா பேனாக்கள் போன்ற நவீன மின்னணு சாதனங்களை தவிர்க்க வேண்டும் என மக்களவை செயலகம் அறிவுறுத்து உள்ளது.</p><p>இத்தகைய நவீன சாதனங்கள் நாடாளுமன்றத்தின் ரகசியங்கள் மற்றும் உறுப்பினர்களின் தனி உரிமைகளை பாதிக்கக் கூடும் எனவும் மக்களவை செயலகம் எச்சரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.150 கோடி குடும்ப சொத்து தகராறு.. குடிபோதையில் தந்தையை சுட்டுக்கொன்ற மகன்</title><link>https://www.maalaimalar.com/news/national/family-property-dispute-son-shoots-father-dead-over-150-crore-land-and-shop-share-in-uttar-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/family-property-dispute-son-shoots-father-dead-over-150-crore-land-and-shop-share-in-uttar-pradesh#comments</comments><guid isPermaLink="false">a25ec7aa-f75a-4646-9669-359bfd320b91</guid><pubDate>Thu, 16 Jul 2026 13:25:58 +0000</pubDate><atom:updated>2026-07-16T13:25:58.551Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தர பிரதேசம்,சொத்து தகராறு,Hariom,Propery Dispute,ஹரியோம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/27zvn1ke/Untitled-design-17.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Son shoots father dead over 150 crore property dispute in Uttar Pradesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/27zvn1ke/Untitled-design-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தர பிரதேசத்தில் 150 கோடி ரூபாய் குடும்ப சொத்து பிரச்சனையில் தனது தந்தையை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். </p><p>காசியாபாத்தில் உள்ள மோடிநகர் அடுத்த புதானா கிராமத்தை சேர்ந்த 55 வயதான ஹரியாம் என்பவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், நிகில், நிஷூ என இரண்டு மகன்களும் உள்ளனர்.</p><p>ஹரியாமிற்கு தேசிய நெடுஞ்சாலை அருகே சொந்தமாக நிலமும், சந்தையில் சொந்தமாக மூன்று கடைகளும் உள்ளன. இதன் மதிப்பு ரூ.150 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.</p><p>சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹரியாம் இந்த சொத்துக்களை மூன்று பங்காக பிரித்து, தனது மகன்களுக்கு இரண்டு பங்கும், தனது மனைவிக்கு ஒரு பங்குமாக மொத்தம் மூன்று பங்காக பிரித்துள்ளார்.</p><p>இந்த சொத்துக்களை விரைவாக பத்திரம் முடித்து தனது திருமணத்திற்கு முன்பாக தருமாறு தந்தையிடம் நிகில் கூறியுள்ளார்.</p><p>இதையடுத்து சொத்துக்களை விரைவாக பிரித்து கொடுப்பதற்கு ஹரியாம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று குடித்துவிட்டு இரவு 11 மணியளவில் மதுபோதையில் நிகில் வீட்டிற்கு வந்துள்ளார்.</p><p>அப்போது தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தனது தந்தையை மூன்று முறை சுட்டதில், ஹரியாம் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>இந்நிலையில் உயிரிழந்தவரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் தப்பியோடிய குற்றவாளி நிகிலை பிடிக்க ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு, பாரதிய நியாய சம்ஹிதா பிரிவு 103-இன் கீழ் முதல் தகவல் அறிக்கையை மோடிநகர் காவல்துறையினர் பதிவு செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் பணவியல் கொள்கைகளை ஆய்வு செய்ய ரகுராம் ராஜன் உள்ளிட்ட மூன்று இந்தியர்கள்  நியமனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/us-monetary-policy-panel-raghuram-rajan-asha-sharma-and-raj-chetty-join-key-fed-working-groups</link><comments>https://www.maalaimalar.com/news/national/us-monetary-policy-panel-raghuram-rajan-asha-sharma-and-raj-chetty-join-key-fed-working-groups#comments</comments><guid isPermaLink="false">f85888f3-3935-467f-ae9a-d1b817ea97bb</guid><pubDate>Thu, 16 Jul 2026 13:17:19 +0000</pubDate><atom:updated>2026-07-16T13:17:19.053Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரகுராம் ராஜன்,raghuram rajan,US Federal Reserve,Asha Sharma,ஃபெடரல் ரிசர்வ்,ஆஷா ஷர்மா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/ewol9mld/Untitled-design-16.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Raghuram Rajan, Asha Sharma and Raj Chetty ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/ewol9mld/Untitled-design-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மைக்ரோசாப்ட் நிர்வாகி ஆஷா ஷர்மா மற்றும் பொருளாதார நிபுணர் ராஜ் ஷெட்டி ஆகியோர்கள் பணவியல் கொள்கைகளை மறுஆய்வு செய்வதற்காக அமெரிக்க மத்திய வங்கியால் அமைக்கப்பட்ட பணிக்குழுக்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p>புதிதாக நியமிக்கப்பட்ட ஃபெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ், தகவல் தொடர்பு, இருப்பு நிலைக் கொள்கை, தரவு, உற்பத்தித்திறன், வேலைவாய்ப்பு மற்றும் பணவியல் கொள்கைகளை ஆய்வு செய்ய ஐந்து பணிக்குழுகளை அறிவித்தார்.</p><p>இந்த குழுக்கள் ஃபெடரல் திறந்த சந்தை குழுவிற்கு பரிந்துரைகளை வழங்கும் என ஃபெடரல் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.</p><h3><strong>ஃபெடரல் ரிசர்வ் பணிக்குழுவில் ரகுராம் ராஜன் உள்ளிட்ட 3 இந்தியர்கள் நியமனம்:</strong></h3><p>ஹார்வர்ட் பொருளாதார நிபுணர் கரேன் டைனன் மற்றும் முன்னாள் ஃபெடரல் ரிசர்வ் ஆளுநர் ஜெர்மி ஸ்டெய்ன் ஆகியோருடன் ரகுராம் ராஜன் இருப்புநிலை கொள்கை பணிக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பொருளாதார நிபுணர் ராஜ் ஷெட்டி, டக் மெக்மில்லன் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகப் பொருளாதார நிபுணர் கெவின் மர்பி ஆகியோருடன் தரவுப் பணிக்குழுவில் நியமிக்கபட்டார்.</p><p>இதையடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவரும், எக்ஸ்பாக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆஷா ஷர்மா, மார்க் ஆண்ட்ரீசன் மற்று ஸ்டான்போர்ட் பொருளாதார நிபுணர் சார்லஸ் ஐ ஜோன்ஸ் ஆகியோருடன் உற்பத்தித்திறன் மற்றும் வேலைவாய்ப்புப் பணிக்குழுவில் பணியமர்த்தப்பட்டார்.</p><p>இதுகுறித்து ஃபெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ் கூறுகையில், “ஒரு நிறுவனமாக நமது செயல்திறனை மெருகேற்றுவதற்காக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைசிறந்த அறிஞர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டிருப்பது எனக்குப் பெருமையளிக்கிறது.</p><p>இந்த முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நமது நோக்கங்களை அடைவதற்கு ஃபெட் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பயங்கரவாதத்தை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும்- அஜித் தோவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/we-must-continue-to-fight-terrorism-ajit-doval</link><comments>https://www.maalaimalar.com/news/national/we-must-continue-to-fight-terrorism-ajit-doval#comments</comments><guid isPermaLink="false">ac12cd8c-f1be-47dd-928e-54d39b15f193</guid><pubDate>Thu, 16 Jul 2026 12:41:51 +0000</pubDate><atom:updated>2026-07-16T12:41:51.607Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பயங்கரவாதம்,Terrorist,அஜித் தோவல்,Ajith dhoval</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/kuk9i1m1/Ajith.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ajith Dhoval]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/kuk9i1m1/Ajith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா, இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து, நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு பிம்ஸ்டெக் ஆகும். இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளின் 5-வது கூட்டம் டெல்லியில் நடந்தது.</p><p>கூட்டத்துக்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அஜித் தோவல் பேசியதாவது:-</p><p>உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் நமது நாடுகள் அனைத்திற்கும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த சூழலில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உலகின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 22 சதவீதமான 170 கோடி மக்கள் இங்கு வசிக்கின்றனர்.</p><p>வங்காள விரிகுடா நம்மை இணைக்கிறது. இது வெறும் புவியியல் ரீதியான இணைப்பு மட்டுமல்ல, ஆயிரம் ஆண்டுகாலப் பகிர்ந்து கொள்ளப்பட்ட பிணைப்புகளால் உருவான ஆழமான நாகரிக மற்றும் கலாச்சார மரபுகளாலும் இணைக்கப்பட்டுள்ளோம்.</p><p>பயங்கரவாதம், எல்லை தாண்டிய குற்றங்கள் மற்றும் இணைய அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதிலும், கடல்சார் சவால்களை எதிர்கொள்வதிலும் நாம் ஒத்துழைப்பை மேம்படுத்தி வலுப்படுத்தி உள்ளோம்.</p><p>புதிய மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ளவும் நாம் தயாராக உள்ளோம்.</p><p>பிராந்திய பாதுகாப்பு, இணைப்பு வசதி, திறன் மேம்பாடு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு ஆகிய பிம்ஸ்டெக் அமைப்பின் நீண்டகால இலக்குகள் நமது கூட்டு முயற்சிகளைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அஜித்தோவல் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு... 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!</title><link>https://www.maalaimalar.com/news/national/one-person-dies-in-a-stampede-during-the-puri-jagannath-temple-rath-yatra</link><comments>https://www.maalaimalar.com/news/national/one-person-dies-in-a-stampede-during-the-puri-jagannath-temple-rath-yatra#comments</comments><guid isPermaLink="false">2498d337-d3f3-4dcf-97f2-6131cf055b23</guid><pubDate>Thu, 16 Jul 2026 12:37:03 +0000</pubDate><atom:updated>2026-07-16T12:37:03.925Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பூரி ரத யாத்திரை,Puri Rath Yatra,Lord Jagannath temple,ஜெகந்நாதர் கோயில்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/r72aamcb/New-Project-2026-07-16T174337.150.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பூரி ஜெகந்நாதர் கோயில் ரதயாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/r72aamcb/New-Project-2026-07-16T174337.150.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒடிசாவின் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 120-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மூச்சுத் திணறல் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>கோயிலின் கிராண்ட் ரோடு பகுதியில் தேரை இழுப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பக்தர் உயிரிழந்துள்ளார். அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிகாரிகள் தற்போது கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><h2>பாதுகாப்பு ஏற்பாடுகள் </h2><p>இன்று காலை, முதலமைச்சர் மோகன் சரண் மாஜி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ததோடு, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட சுமார் 13 ஆயிரம் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். </p><p>இந்தியக் கடற்படை, இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் ஒடிசா காவல் கடல்சார் காவல்நிலையம் ஆகியவை இணைந்து கூட்டாக ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் விரைவு மீட்புக் குழுக்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>500க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறைப் பணியாளர்கள் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளனர். கிராண்ட் ரோடு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைக் கண்காணிக்க 473 செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. </p><h2>பூரி ரத யாத்திரை</h2><p>ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற கடற்கரை நகரமான பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்ற ஒரு ஆன்மீகத் திருவிழாவாகும்.</p><p>இந்தத் தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தின் வளர்பிறை துவிதியை திதியில் (ஜூன் - ஜூலை மாதங்களில்)கோலாகலமாகத் தொடங்குகிறது. </p><p>இந்தத் திருவிழாவின் போது, மூலவர்களான ஜெகநாதர், அவரது மூத்த சகோதரர் பாலபத்ரர் மற்றும் சகோதரி சுபத்ரா ஆகிய மூன்று தெய்வங்களும் தங்களின் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வாங்சுக் உண்ணாவிரதம்: தேவைப்பட்டால் தலையிடுவோம்.. டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-ugc-protest-sonam-wangchuk-on-19th-day-of-fast-with-deteriorating-health</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-ugc-protest-sonam-wangchuk-on-19th-day-of-fast-with-deteriorating-health#comments</comments><guid isPermaLink="false">5337ebe5-9e72-44f8-a4a9-9ba6792d4a9d</guid><pubDate>Thu, 16 Jul 2026 08:20:44 +0000</pubDate><atom:updated>2026-07-16T08:20:44.299Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>hunger strike,டெல்லி உயர்நீதிமன்றம்,Delhi High Court,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,உண்ணாவிரதம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/a2fcm9sq/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/a2fcm9sq/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு குளறுபடி, யுஜிசி குளறுபடி, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி என தொடர் குளறுபடிகளால் கல்வித்துறை திணறி வருகிறது.</p><p>இந்த நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தீப்கேயின் தலைமையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><h2>சோனம் வாங்சுக் உடல்நிலை</h2><p>இதில் லடாக் செயல்பாட்டாளரும், கல்வியாளருமான சோனம் <a href="https://www.maalaimalar.com/news/national/day-19-89-kg-weight-loss-wangchuk-calls-for-the-july-20-rally-in-a-feeble-voice-where-is-rahul?fbclid=IwY2xjawTFa1NleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEe7fmyTMmY_I64G9-1EQLzrXE6q54wSYSAj6ZkNfDkJ-Npa7lfhGoG2lgX4dc_aem_IEua5dkjbIMYmzT78YeTjg">வாங்சுக் </a>நடத்தும் நடத்தும் உண்ணாவிரதம் 19வது நாளை எட்டியுள்ளது.</p><p>அவரது உடல் எடை 8.9 கிலோ குறைந்து தற்போது சுமார் 57 கிலோவாக உள்ளது. 59 வயதான அவரின் உடல் ரத்த அழுத்தம் 105/76 mmHg, சர்க்கரை அளவு 80 mg/dL, ஆக்ஸிஜன் அளவு 97% என்ற மோசமான நிலையில் உள்ளது.</p><p>உண்ணாவிரதத்தை கைவிட கோரி அவரை மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், சர்வதேச ஆளுமைகள் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.</p> <h2>தளர்ந்த குரல்</h2><p>ஆனால் உயிருக்கே ஆபத்தான சூழலிலும் தனது உண்ணாவிரதத்தை சோனம் வாங்சுக் கைவிட மறுத்துள்ளார்.</p><p>வரும் ஜூலை 20ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நாளில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே நேற்று ஜந்தர் மந்தரில் இருந்து வீடியோ மூலம் பேசிய சோனம் வாங்சுக், நான் நல்ல நிலைமையில் இல்லை, அதேநேரம் மோசமான நிலையிலும் இல்லை. என்னை ஆதரிப்பவர்கள் எனது உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்துவதுக்கு பதிலாக ஜூலை 20 அன்று பாராளுமன்றத்தை நோக்கி செல்லும் பேரணியில் வந்து கலந்துகொள்ளுமாறு தன் தளர்ந்த குரலில் அழைப்பு விடுத்துள்ளார்.</p> <h2>பொது நல மனு மீதான விசாரணை</h2><p>இதனிடையே வாங்சுக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுமாறு மத்திய மற்றும் டெல்லி அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, சமூக ஆர்வலர், வழக்கறிஞர் ராகேஷ் குமார் சைனி என்பவர் டெல்லி உயர்நீதிதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் தேவேந்திர குமார் உபாத்யாய் மற்றும் தேஜஸ் காரியா அமர்வில் நடைபெற்றது.</p><p>வாங்சுக் உடைய உடல்நிலையை தினந்தோறும் கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எந்த ஒரு குடிமகன் உயிரும் விலைமதிப்பற்றது என்றும் நீதிபதிகள் மத்திய அரசை வாய்மொழியாக அறிவுறுத்தினர்.</p><p>இன்றைய அமர்வில் மத்திய அரசு சார்பில் ஆஜானாரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வாங்சுக் உடல்நிலை ஏற்கனவே அரசு மருத்துவர்களாலும், மருத்துவ வல்லுநர்களாலும் கண்காணிப்பட்டு வருவதாகவும், உதவி தேவைப்படும் சூழ்நிலை எழும்பட்சத்தில் மருத்துவர்கள் ஆலோசனையின்படி மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிடும் என்றும் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.</p><p>இதன்பின் பேசிய நீதிபதிகள், மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை வரவேற்பதாக கூறி, பொது நல வழக்கை முடித்து வைத்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>குறுகிய காலத்தில் 100-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் விலகல்.. ராஜினாமா விதிகளை கடுமையாக்கிய இஸ்ரோ</title><link>https://www.maalaimalar.com/news/national/isro-scientists-exit-shock-around-120-key-staff-quit-from-gaganyaan-and-major-missions</link><comments>https://www.maalaimalar.com/news/national/isro-scientists-exit-shock-around-120-key-staff-quit-from-gaganyaan-and-major-missions#comments</comments><guid isPermaLink="false">b01923c0-bd85-4253-8f39-6c4c287f0dc3</guid><pubDate>Thu, 16 Jul 2026 06:20:31 +0000</pubDate><atom:updated>2026-07-16T06:20:31.701Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,Resignation,ISRO scientists,ராஜினாமா,இஸ்ரோ விஞ்ஞானிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/6hsqsb2k/isro.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இஸ்ரோ]]></media:title><media:description type="html"><![CDATA[ இஸ்ரோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/6hsqsb2k/isro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான <a href="https://www.maalaimalar.com/topic/isro">இஸ்ரோவில் </a>ஒரே ஆண்டில் 120 விஞ்ஞானிகள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இஸ்ரோ ராஜினமா செய்வதற்கான விதிகளை கடுமையாக்கியுள்ளது. </p><h2>விலகல் </h2><p>தகவல்களின்படி, இஸ்ரோவிலிருந்து கடந்த சில மாதங்களில் மட்டுமே 100 முதல் 120 விஞ்ஞானிகள் வரை விலகிள்ளனர். </p><p>இஸ்ரோவில் உள்ள 14,600க்கும் மேற்பட்டோர் தற்போது பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ராஜினாமாக்களின் எண்ணிக்கை சிறியதாகத் தெரியலாம். </p><p>ஆனால்  ராஜினாமா செய்தவர்கள் அனைவரும் ககன்யான், சந்திராயன் உள்ளிட்ட திட்டங்களில்  முக்கியமான பங்காற்றியவர்கள் என்பதுதான் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. </p><p>இஸ்ரோவின் மிகப்பெரிய மையமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் மட்டும் சுமார் 20 பேர் விலகியுள்ளனர். </p><p>இதில் இந்தியாவின் எல்விஎம்3  ராக்கெட் திட்ட இயக்குநர் விக்டர் ஜோசப் அடங்குவார்.</p><p>யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இங்கிருந்து சுமார் 80 விஞ்ஞானிகள் வரை ராஜினாமா செய்துள்ளனர். </p><p>இதில் விண்வெளித் துறைக்கான 'ஸ்பாடெக்ஸ்' திட்ட இயக்குநர் மற்றும் சந்திரயான்3 திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த இளம் விஞ்ஞானிகள் அடங்குவர்.</p><p>சந்திரயான் 3 விண்கலம் நிலவில் இறங்குவதை கண்காணிக்கும் குழுவின் திட்ட மேலாளராக இருந்த ஆதித்யா ரல்லபள்ளி  என்பவரும் ராஜினாமா செய்துள்ளார். </p><p>இவர் தான் பலகட்ட சோதனைகளை மேற்கொண்டு விண்கலம் தரையிறங்குவதை உறுதி செய்தவர். </p><p>இஸ்ரோவில் 2012 முதல் 2024 வரை சுமார் 700 ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.</p> <h2>இஸ்ரோ நடவடிக்கை</h2><p>விஞ்ஞானிகளின் இந்தத் தொடர் விலகலால் நாட்டின் கௌரவமிக்க விண்வெளித் திட்டங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க இஸ்ரோ, ராஜினாமா விதிகளை மாற்றியமைத்துள்ளது.</p><p>ககன்யான் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் பணியாற்றும் 'குரூப் ஏ' விஞ்ஞானிகளின் விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகளை இனிமேல் வழக்கமான முறையில் ஏற்றுக்கொள்ளக் கூடாது.</p><p>கடந்த 2020 நவம்பரில் கொண்டுவரப்பட்ட விதியின்படி, விஞ்ஞானிகளின் ராஜினாமா கடிதங்களை ஏற்கும் அதிகாரம் இஸ்ரோவின் அந்தந்த மையங்களின் இயக்குநர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது.</p><p>தற்போது அந்த அதிகாரம் பறிக்கப்பட்டு, அனைத்து ராஜினாமா விண்ணப்பங்களும் விண்வெளித் துறையின் (DoS) இறுதி முடிவுக்கே அனுப்பப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>சம்பந்தப்பட்ட திட்டங்கள் முடியும் வரை இயக்குநர்கள் இவர்களின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>இஸ்ரோ தலைவர் பேட்டி</h2><p>இந்தத் தொடர் விலகல்கள் குறித்து இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் அளித்த பேட்டியில்,</p><p>"விஞ்ஞானிகள் விலகுவது என்பது எந்தவொரு நிறுவனத்திலும் நடக்கும் இயல்பான ஒன்றுதான். ஆனால், முக்கியத் திட்டங்கள் இதனால் திடீரெனப் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>யாராவது விலகினாலும், அவர்களுக்குப் பதிலாக வேறு நபர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். இதற்கான மாற்று ஏற்பாடுகளை இஸ்ரோ திறம்படச் செய்து வருகிறது" என்று கூறியுள்ளார்.</p><p>தற்போது இஸ்ரோவின் 2025-26 ஆண்டறிக்கையின்படி, 1,050 புதிய அறிவியல் மற்றும் நிர்வாகப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>19வது நாள்: 8.9  கிலோ எடை இழப்பு.. தளர்ந்த குரலில் ஜூலை 20 பேரணிக்கு வாங்சுக் அழைப்பு - ராகுல் எங்கே?</title><link>https://www.maalaimalar.com/news/national/day-19-89-kg-weight-loss-wangchuk-calls-for-the-july-20-rally-in-a-feeble-voice-where-is-rahul</link><comments>https://www.maalaimalar.com/news/national/day-19-89-kg-weight-loss-wangchuk-calls-for-the-july-20-rally-in-a-feeble-voice-where-is-rahul#comments</comments><guid isPermaLink="false">4791a4ec-6875-44c2-8790-629ff815a629</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:59:19 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:59:19.571Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/pdxp6aoe/sonam.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Sonam wangchuk, rahul gandhi]]></media:title><media:description type="html"><![CDATA[ Sonam wangchuk, rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/pdxp6aoe/sonam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு குளறுபடி, யுஜிசி குளறுபடி, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி என தொடர் குளறுபடிகளால் கல்வித்துறை திணறி வருகிறது. </p><p>இந்த நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தீப்கேயின் தலைமையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><h2>சோனம் வாங்சுக் உடல்நிலை </h2><p>இதில் லடாக் செயல்பாட்டாளரும், கல்வியாளருமான <a href="https://www.maalaimalar.com/news/national/public-interest-litigation-filed-in-the-delhi-high-court-seeking-to-save-social-activist-sonam-wangchuk">சோனம் வாங்சுக்</a> நடத்தும் நடத்தும் உண்ணாவிரதம் 19வது நாளை எட்டியுள்ளது. </p><p>அவரது உடல் எடை 8.9  கிலோ குறைந்து தற்போது  சுமார் 57 கிலோவாக உள்ளது. 59 வயதான அவரின் உடல் ரத்த அழுத்தம் 105/76 mmHg, சர்க்கரை அளவு  80 mg/dL,  ஆக்ஸிஜன் அளவு  97% என்ற மோசமான நிலையில் உள்ளது. </p><p>உண்ணாவிரதத்தை கைவிட கோரி அவரை மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், சர்வதேச ஆளுமைகள் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். </p> <h2>தளர்ந்த குரல்</h2><p>ஆனால் உயிருக்கே ஆபத்தான சூழலிலும் தனது உண்ணாவிரதத்தை சோனம் வாங்சுக் கைவிட மறுத்துள்ளார்.</p><p>வரும் ஜூலை 20ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நாளில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே நேற்று ஜந்தர் மந்தரில் இருந்து வீடியோ மூலம் பேசிய சோனம் வாங்சுக், நான் நல்ல நிலைமையில் இல்லை, அதேநேரம் மோசமான நிலையிலும் இல்லை. என்னை ஆதரிப்பவர்கள் எனது உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்துவதுக்கு பதிலாக ஜூலை 20 அன்று பாராளுமன்றத்தை நோக்கி செல்லும் பேரணியில் வந்து கலந்துகொள்ளுமாறு தன் தளர்ந்த குரலில் அழைப்பு விடுத்துள்ளார்.</p> <h2>ராகுல் மௌனம்</h2><p>மற்ற பிரச்சனைகளுக்கும் விமர்சனங்களுக்கும் மௌனம் காப்பது போல சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் குறித்தும் மத்திய பாஜக அரசு மௌனம் காத்து வருகிறது.</p><p>வழக்காக பிரதமர் மோடி பல்வேறு விஷயங்களில் மௌனம் காப்பதாக விமர்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருகிறார்.</p><p>இந்நேரம் அவர் ஜந்தர் மந்தருக்கு சென்று சோனம் வாங்சுக்கை சந்தித்திருக்க வேண்டும் என பலரும் அபிப்ராயப்பட்டு வருகின்றனர்.</p><p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே கூறுகையில், "எதிர்க்கட்சித் தலைவர்கள் இங்கு வருகிறார்களா இல்லையா என்பது முக்கியமல்ல.</p><p>இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவும் தான் முக்கியக் கேள்விகள்" என்றார்.</p><h2>காங்கிரஸ்</h2><p>ஜந்தர் மந்தர் சர்ச்சை ஒருபுறமிருக்க, ராகுல் காந்தி தனது தேசிய அளவிலான மாணவர்களின் குரல் பிரச்சாரத்தின் அடுத்த கட்டத்திற்காக நாளை டேராடூன் செல்கிறார்.</p><p>ராஜஸ்தானின் கோட்டாவிலிருந்து தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் மூலம், நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறைகளில் உள்ள குறைபாடுகளை குறித்து மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீண்ட நேரம் செல்போனில் பேசிய பெண் கொலை - சந்தேகத்தில் கணவர் வெறிச்செயல் </title><link>https://www.maalaimalar.com/news/national/husband-arrested-for-wife-murder-case-in-andhra</link><comments>https://www.maalaimalar.com/news/national/husband-arrested-for-wife-murder-case-in-andhra#comments</comments><guid isPermaLink="false">b7190ed8-e27b-4abe-9cee-b4ee67e3ca0a</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:14:23 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:14:23.294Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,husband Arrest,கணவர் கைது,Wife murder,மனைவி கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/2t6xrk07/murder.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/2t6xrk07/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி அடுத்த அங்கலக்குடுருவை சேர்ந்தவர் நரேந்திர பாபு. இவரது மனைவி சந்தியா ராணி (வயது 27). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். நரேந்திர பாபு செஞ்சு பேட்டையில் அடகு கடை நடத்தி வந்தார். </p><h2><strong>தகராறு</strong></h2><p>நரேந்திர பாபு மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் பணம் கொடுப்பதில்லை. மாறாக மது குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்தார். </p><p>கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் சந்தியா ராணி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார்.</p><p>மாமியார் வீட்டிற்கு சென்ற நரேந்திர பாபு இனி மனைவியிடம் தகராறு செய்ய மாட்டேன் என பெரியவர்கள் முன்னிலையில் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார். </p><h2><strong>சந்தேகம்</strong></h2><p>கணவர் வீட்டுக்கு வந்த சந்தியா ராணி  செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்தார். இதனால் நரேந்திர பாபுவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி பெரிய கத்தியை வாங்கி வந்து வீட்டில் மறைத்து வைத்து இருந்தார். </p><p>நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த நரேந்திர பாபு மனைவியிடம் யாருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டு இருக்கிறாய் என கேட்டார். </p><h2><strong>கொலை</strong></h2><p>மேலும் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக வெட்டினார். தன்னை கொலை செய்ய வேண்டாம் என மனைவி கெஞ்சியும் ஈவு இரக்கம் இன்றி வெட்டி கொலை செய்தார். பின்னர் போலீசில் சரணடைந்தார். </p><p>போலீசார் நரேந்திர பாபுவை கைது செய்தனர். கொலை நடந்த அன்று காலை சந்தியா ராணி தனது பெற்றோருக்கு வீடியோ கால் செய்து கணவரின் நடத்தை மாறவில்லை. அவர் என்னை கொலை செய்து விடுவாரோ என்று பயமாக உள்ளது என தெரிவித்துள்ளார். </p><p>அவர் பயந்தபடியே அன்று இரவே அவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item></channel></rss>