<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 03 Aug 2026 15:42:22 +0000</lastBuildDate><item><title>பங்கிபூர் மக்கள் பாஜக தலைமைக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர்: இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரசாந்த் கிஷோர்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-leadership-gets-message-from-panchipura-people-prashant-kishor</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-leadership-gets-message-from-panchipura-people-prashant-kishor#comments</comments><guid isPermaLink="false">cc1187dd-69d9-488d-baf7-b85cace85a50</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:12:49 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:12:49.562Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரசாந்த் கிஷோர்,prashanth Kihsore,bihar election,Bankipur</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/530d08r5/Untitled-design-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Bihar By-election Message: Prashant Kishor wins Pangaibour, voters urge BJP to appoint a clean CM.]]></media:title><media:description type="html"><![CDATA[ Prashant Kishor]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/530d08r5/Untitled-design-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் பங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனது முதல் வெற்றியை பெற்ற, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர், பீகார் ஒரே இரவில் பெங்களூராக மாறிவிடாது என்றும் ஆனால் மக்கள் கண்கூடாக பார்க்கும் மாற்றங்கள் வரவிருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>பீகார் மாநிலத்தில் பங்கிபூர் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது இத்தொகுதியில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் 64,151 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். </p><p>இதன் மூலம், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹாவை விட 19,324 வாக்குகள் அதிகம் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றார்.</p><h3><strong>பிரசாந்த் கிஷோர் பேட்டி</strong></h3><p>இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதால் பங்கிபூர் பெங்களூருவாக மாறிவிடாது, ஆனால் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் இங்கு சில முன்னேற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.</p><p>மக்கள் என்மேல் வைத்த நம்பிக்கையை காப்பாற்றி, பங்கிபூரை மேம்படுத்துவதே எனது முதல் பணியாக இருக்கும். அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் நீங்கள் மாற்றங்களைக் காண்பீர்கள். நான் பெரிய தற்பெருமை பேச விரும்பவில்லை.</p><p>இந்தப் போராட்டம் தனிப்பட்டதல்ல, சாம்ராட் சௌத்ரியின் நடத்தை, குணம் மற்றும் முகம் ஆகியவை பொதுவெளியில் உள்ளன. ஒரு குற்றவாளியை பீகாரின் முதலமைச்சராக ஆக்கினால், பீகார் முன்னேற முடியாது.</p><p>எங்கள் போராட்டம் எந்தவொரு தனிநபருடனும் கிடையாது. பெரும்பான்மையினர் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள், எனவே முதலமைச்சர் பதவி அவர்களுக்கே கிடைக்கும்.</p><p>பீகார் முன்னேறவும், மக்கள் பீகாரியாக இருப்பதில் பெருமை கொள்ளவும், திறமையான, நல்ல குணநலன்கள் கொண்ட ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று நாங்கள் மோடிஜியிடம் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இந்த தேர்தல் பங்கிபூரின் தெருக்கள் மற்றும் வடிகால்களுக்காக நடத்தப்படவில்லை. பீகாரை யார் வழிநடத்த வேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்டது. பங்கிபூர் மக்கள் பாஜக தலைமைக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர். ஒரு நல்ல மனிதரை முதலமைச்சராக்குங்கள்,” என்று அவர் கூறினார்.</p><h3><strong>பீகார் முதல்வர் வாழ்த்து</strong></h3><p>இதையடுத்து பீகார் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி, மக்களின் தீர்ப்பை மதிப்பதாகக் கூறி, கிஷோரின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.</p><p>மேலும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழாவான பாங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில், மக்கள் ஜன் சுராஜைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.</p><p>மக்களின் முடிவை மதித்து, பிரசாந்த் கிஷோர் அவர்களின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று சௌத்ரி பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எனக்கும் ஒருமுறை அமைச்சர் பதவி கை நழுவியது!-அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் சமாதானம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-recalls-losing-minister-post-urges-patience-amid-karnataka-cabinet-expansion-anger</link><comments>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-recalls-losing-minister-post-urges-patience-amid-karnataka-cabinet-expansion-anger#comments</comments><guid isPermaLink="false">c7b009fc-af1f-4c58-955b-5cfb24fb463e</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:39:11 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:39:11.821Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,டி.கே.சிவகுமார்,Karnataka Cabinet,D.K.Shivakumar,கர்நாடகா அமைச்சரவை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/hk8la167/karnataka.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ D.K.Shivakumar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/hk8la167/karnataka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். இருப்பினும், புதிய அமைச்சரவையில் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் காங்கிரஸின் மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற முதல்வர் டி.கே.சிவகுமார், "அனைவருக்கும் ஒரே நேரத்தில் வாய்ப்பளிக்க முடியாது, பொறுமை காக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><h2><strong>டி.கே.சிவகுமார் சமாதானம்:</strong></h2><p>அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கட்சியில் பல எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஒரே நேரத்தில் அனைவரும் அமைச்சரவையில் இடம்பெறுவது சாத்தியமற்றது. கடந்த காலத்தில் சித்தராமையாவின் அமைச்சரவையில் எனக்கும் கூட அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது நினைவிருக்கலாம். </p><p>ஆனால், அதற்குப் பிறகு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையா? அதேபோலத் தான், இப்போது வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் எதிர்காலத்தில் நிச்சயம் உரிய வாய்ப்புகள் வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்றார்.</p><h2><strong>19 புதிய அமைச்சர்கள்:</strong></h2><p>டி.கே. சிவகுமார் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 19 புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.</p><h2><strong>காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா:</strong></h2><p>அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் கடும் அதிர்ச்சியடைந்த இண்டி தொகுதி எம்.எல்.ஏ யஷவந்தராயகவுடா பாட்டீல் மற்றும் சாகர் தொகுதி எம்.எல்.ஏ பேலூர் கோபாலகிருஷ்ணா ஆகிய இரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.</p><p>வாய்ப்பு மறுக்கப்பட்ட மூத்த தலைவர்களான டி.பி.ஜெயச்சந்திரா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோரின் ஆதரவாளர்கள் பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். டி.பி. ஜெயச்சந்திராவின் இல்லத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அவசர ஆலோசனையிலும் ஈடுபட்டனர். </p><p>இறுதி நேரத்தில் ஏற்பட்ட குழப்பங்களால் எம்.எல்.சி காயத்ரி சாந்தேகவுடா பதவியேற்காததால், விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த அமைச்சரவையில் பெண் அமைச்சர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>கட்சியின் நிலைப்பாடு:</strong></h2><p>எம்.எல்.ஏ.க்களின் வெளிப்படையான எதிர்ப்பும் ராஜினாமாவும் சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு அரசியல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. இருப்பினும், அதிருப்தியில் உள்ள தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும், வாரியப் பதவிகள் மற்றும் பிற பொறுப்புகளை வழங்கி அவர்களைச் சமாதானப்படுத்தவும் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் நிறைவேறியது!</title><link>https://www.maalaimalar.com/news/national/the-bill-to-increase-the-number-of-supreme-court-judges-to-38-has-been-passed-in-the-lok-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-bill-to-increase-the-number-of-supreme-court-judges-to-38-has-been-passed-in-the-lok-sabha#comments</comments><guid isPermaLink="false">e33d60f3-835b-4199-ab85-80b955bdbed9</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:27:31 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:27:31.773Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,Lok Sabha,Supreme Court Bill,உச்ச நீதிமன்ற மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/whjve5am/New-Project-2026-08-03T195710.887.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் நிறைவேறியது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/whjve5am/New-Project-2026-08-03T195710.887.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திருத்த மசோதா இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா, உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்துகிறது.</p><p>மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர்  அர்ஜுன் ராம் மேக்வால் முன்மொழிந்த இந்த மசோதா, 1956-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற சட்டத்தை மாற்றியமைக்கிறது.</p><p>வழக்குகளை விரைவில் முடிக்கவேண்டும் என்ற முக்கிய காரணத்திற்காக இந்த மசோதாவை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்த கூடுதல் நீதிபதிகளுக்கான ஆண்டுச் செலவு ரூ.10.57 கோடி எனவும், அவர்களுக்கு வழங்கப்படும் அலுவல் இல்லங்கள் மற்றும் கார் என ஒருமுறை செலவு ரூ.3.47 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>1950-ல் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டபோது, ​​தலைமை நீதிபதி உட்பட 8 நீதிபதிகள் இருந்தனர். இந்த எண்ணிக்கை 1956-ல் 11 ஆகவும், 1960-ல் 14 ஆகவும், 1977-ல் 18 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. 1979-ஆம் ஆண்டின் இறுதி வரை அமைச்சரவையால் நீதிபதிகளின் எண்ணிக்கை 15 ஆகக் கட்டுப்படுத்தப்பட்டது. </p><p>பின்னர், அப்போதைய தலைமை நீதிபதியின் வேண்டுகோளின் பேரில் அந்தக் கட்டுப்பாடு விலக்கிக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, 1986-ல் 18-லிருந்து 26 ஆகவும், 2009-ல் 26-லிருந்து 31 ஆகவும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் வழக்குகளில் தொடர்புடைய 112 அரசு அதிகாரிகள் இன்னும் பணியில் உள்ளனர்: RTI-ல் அதிர்ச்சி தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/rti-revelation-112-corruption-accused-officials-still-on-duty</link><comments>https://www.maalaimalar.com/news/national/rti-revelation-112-corruption-accused-officials-still-on-duty#comments</comments><guid isPermaLink="false">a87b2fdb-2c51-4f16-86c3-1d86bbd07ede</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:25:24 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:25:24.576Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,RTI Act,மும்பை மாநகராட்சி,ஆர்.டி.ஐ. தகவல்,Brihanmumbai Municipal Corporation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/dpq1vslq/Untitled-design-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Mumbai Corruption Cases Shock: 112 accused officials still in service]]></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai municipal corporation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/dpq1vslq/Untitled-design-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>தகவல் அறியும் உரிமை சட்டம்</strong></h3><p>மும்பை மாநகராட்சியைச் சேர்ந்த 207 அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புப் பணியகத்தின் தகவல் அறியும் உரிமை ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.</p><p>மேலும் அவர்களில், 112 பேர் இன்னும் பணியில் உள்ளதாகவும், 68 பேர் தங்கள் வழக்குகளுக்கு இறுதித் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><h3><strong>மும்பை மாநகராட்சி</strong></h3><p>மகராஷ்டிராவில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளின் சுயவிவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2026 ஏப்ரல் 30 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.</p><p>அரசு பணிகளில் ஊழியர்களில் 207 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் 27 அதிகாரிகள் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தெரிவித்துள்ளது.</p><p>இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் சுமார் 87 சதவீதம் பேர், விசாரணை முடிவடையாத நிலையில் இன்னும் பணியில் உள்ளதாகவும், சில நபர்கள் ஓய்வு பெற்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>சமூக ஆர்வலர்</strong></h3><p>இதுகுறித்து தி யங் விசிலோப்ளவர்ஸ் ஃபவுண்டேஷன் அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜீதேந்திர கட்கே கூறுகையில், “ஒவ்வொரு ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கையும் முடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடு இருக்க வேண்டும். ஊழல் வழக்குத் தொடர அனுமதிப்பது தொடர்பான முடிவுகள் உடனடியாக எடுக்கப்பட்டு, மேலும் ஊழல் வழக்குகளில் எடுக்கப்படும் நடவடிக்கை முற்றிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும்,” என்று கூறினார்.</p><p>மேலும், “ஊழல் தடுப்புப் பிரிவால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், விசாரணைகள் ஏன் இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன என்பது குறித்து மகாராஷ்டிர அரசும் சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளும் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.</p><p>தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கண்டுபிடிப்புகளின்படி, மும்பை மாநகராட்சி பொறியியல் துறைதான் ஊழல் வழக்குகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>அரசு ஊழியர்கள்</strong></h3><p>மேலும் அதில், 33 துணைப் பொறியாளர்கள், 13 உதவிப் பொறியாளர்கள், 13 இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் பல மூத்த பொறியியல் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குகளில் நான்காம் நிலை ஊழியர்களான 48 துப்புரவுப் பணியாளர்கள், 24 கூலியாட்கள், 6 மேற்பார்வையாளர்கள், 6 பியூன்கள் மற்றும் பல களப் பணியாளர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p>இந்தியா முழுவதும் நிலுவையில் உள்ள மிகப் பழமையான ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கு 2005-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. மேலும், சில சமயங்களில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகியும் இறுதித் தீர்ப்பு எதுவும் எட்டப்படாமல் உள்ளது.</p><p>இது வெறும் தனிப்பட்ட லஞ்ச சம்பவங்களை மட்டுமல்ல, புலனாய்வு அமைப்பின் ஒரு கடுமையான தோல்வியையே பிரதிபலிக்கிறது என ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்கள் வாதிட்டு வருகின்றனர்.</p><p>இவர்கள் மீது ஊழல் வழக்குத் தொடர அனுமதி இல்லாமல் குற்றவியல் நடவடிக்கைகளைத் திறம்பட முன்னெடுத்துச் செல்ல முடியாது. இந்த நிர்வாகத் தாமதங்களால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது அடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.</p><p>கொரோனா பெருந்தொற்று காலத்தில், தனிமைப்படுத்தல் மையங்களுக்கும் அவசர சேவைகளுக்கும் பணியாளர்கள் தேவைப்படுவதைக் காரணம் காட்டி, முன்னர் இடைநீக்கம் செய்யப்பட்ட 43 அரசு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தி உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டி.கே. சிவக்குமார் தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் எம்.எல்.ஏ. ராஜினாமா</title><link>https://www.maalaimalar.com/news/national/karntaka-cabinet-congress-mla-yashavantaraya-gouda-patil-resigns</link><comments>https://www.maalaimalar.com/news/national/karntaka-cabinet-congress-mla-yashavantaraya-gouda-patil-resigns#comments</comments><guid isPermaLink="false">19951f68-ea2d-4623-ae69-41d532546605</guid><pubDate>Mon, 03 Aug 2026 13:07:41 +0000</pubDate><atom:updated>2026-08-03T13:07:41.315Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,DK Shivakumar,டிகே சிவக்குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/g5oerw4m/DKShivakumar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டி.கே. சிவக்குமார்- யஷ்வந்தராயகௌடா பாட்டீல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/g5oerw4m/DKShivakumar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநில மந்திரி சபை விரிவாக்கத்தில் இடம் கிடைக்காததால், அதிருப்தி அடைந்த யஷ்வந்தராய கௌடா பாட்டீல் என்ற எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><h2>யஷ்வந்தராய கௌடா பாட்டீல்</h2><p>கர்நாடக மாநில முதல்வராக <a href="https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-cm-requests-karnataka-cm-dk-shivakumar-to-release-9-9-tmc-water-in-cauvery">டி.கே. சிவக்குமார்</a> பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இன்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. இதில் புதிதாக 20 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.</p><p>இந்த நிலையில் அமைச்சரவை பட்டியலில் இடம் இல்லாத குறித்தும், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது குறித்தும் யஷ்வந்தராயகௌடா பாட்டீல் கூறியதாவது:-</p><p>இன்று காலை வரை அமைச்சரவைக்கான பட்டியலில் தனது பெயர் இருந்தது. தனக்கு அது குறித்த தகவல் கூட வந்திருந்தது. ஆனால் கட்சி வெளியிட்ட இறுதிப் பட்டியலில் தனது பெயர் இடம்பெறவில்லை.</p><p>கட்சிக்குள் நடக்கும் நிகழ்வுகளை நான் கவனித்து வருகிறேன். இறுதியில், இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, ​​நமது தலைமை அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டது. எனவே, வேறு வழியின்றி நான் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டேன்.</p><p>இது என் மனசாட்சிக்கு ஏற்புடையதல்ல. விஜயபுரா மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் விசுவாசத்திற்கும் நேர்மைக்கும் மதிப்பில்லை என்ற சூழலே நிலவுகிறது. எனக்கு வேறு வழியில்லை. எனது ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுடன் பேசி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன்.</p><h2>அமைச்சர் பதவி தருவதாக உறுதி</h2><p>2023 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே எனக்கு அமைச்சர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அரசு அமைக்கப்பட்டபோது, ​​இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும் அவர்கள் அந்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டனர். எனக்கு வேறு வழியில்லை. நான் கட்சியிலிருந்து விலகவில்லை, ஆனால் என்னை ராஜினாமா செய்யத் தூண்டும் சூழலை அவர்களே உருவாக்கிவிட்டனர்.</p><p>நான் எட்டுத் தேர்தல்களைச் சந்தித்த ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதி. நான் எடுத்த முடிவுகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை. இது எனது தொகுதி வாக்காளர்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை.</p><p>இவ்வாறு யஷ்வந்தராயகௌடா வி. பாட்டீல் தெரிவித்தார்.</p><p>யஷ்வந்தராயகௌடா வி. பாட்டீல் தனது ராஜினாமா கடிதத்தை பெங்களூருவில் உள்ள விதான சௌதாவில் சட்டமன்ற துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானியிடம் சமர்ப்பித்தார்.</p><p>இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>பீகாரில் தகர்ந்த பாஜக கோட்டை... மூன்று மாநில இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/news/national/bjps-stronghold-crumbles-in-bihar-results-of-by-elections-in-three-states</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjps-stronghold-crumbles-in-bihar-results-of-by-elections-in-three-states#comments</comments><guid isPermaLink="false">13c47371-9c70-43e4-80e8-f5a978aedb4b</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:59:26 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:59:26.946Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரசாந்த் கிஷோர்,Prashant Kishor,Assembly Constituencies,bye election,இடைத்தேர்தல்,சட்டமன்ற தொகுதிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/7jlg9m10/New-Project-2026-08-03T180849.900.jpg" width="1501"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பீகாரில் தகர்ந்த பாஜக கோட்டை... மூன்று மாநில இடைத்தேர்தல் முடிவுகள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/7jlg9m10/New-Project-2026-08-03T180849.900.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜினாமா, தகுதி நீக்கம், மரணம் உள்ளிட்ட காரணங்களால் பீகார், ம.பி., குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டமன்ற தொகுதி காலியானது. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினின் ராஜினாமாவைத் தொடர்ந்து பீகாரின் பாங்கிபூர் சட்டமன்ற தொகுதி காலியானது.</p><p>மத்தியப் பிரதேசத்தில், ராஜேந்திர பாரதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ததியா தொகுதி காலியானது. குஜராத்தில், யோகேஷ்பாய் நரந்தாஸ் படேலின் மரணத்தால் மஞ்சள்பூர் காலியானது.</p><p>இந்த மூன்று தொகுதிகளுக்கும் ஜூலை 30ம் தேதி வாக்குப்பதிவும், இன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.</p><p>இந்நிலையில் பீகாரில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் கட்சியும், குஜராத்தில் பாஜகவும்,  ம.பி.யில் காங்கிரஸும் வெற்றிப் பெற்றுள்ளன.</p><h2>பிரசாந்த் கிஷோர் வெற்றி</h2><p>பீகாரில் பாஜக வேட்பாளர் நீரஜ்குமாரை 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் பிரசாந்த் கிஷோர். இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.</p><p>காரணம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் பாங்கிபூர் தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வந்தது. இந்த இடைத்தேர்தலில் அந்தக் கோட்டை தகர்த்தப்பட்டு, பாஜகவிற்கு பெரும் இடியாக இறங்கியுள்ளது. </p><p>கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் பொதுத்தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தைக் கூட வெல்லாமல் படுதோல்வி அடைந்திருந்தது. அதன் பின், பிரசாந்த் கிஷோர் நேரடியாகக் களம் கண்ட முதல் தேர்தல் இதுவாகும். இத்தேர்தலில் வென்றதன் மூலம் அவர் முதல்முறையாக பீகார் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார். </p><p>இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பீகாரின் பாட்னாவில் உள்ள ஜன் சுராஜ் கட்சித் தலைமையகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கிப் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>குஜராத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் என இருதரப்பு மட்டுமே போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பிக்காபாய் ரபாரியை 30,630 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சதேந்திர பாய் படேல் தோற்கடித்துள்ளார்.</p><p>ம.பி.யில் 6016 வாக்குகள் அதிகம்பெற்று பாஜக வேட்பாளர் அஷுதோஷ் திவாரியை தோற்கடித்துள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங். </p>]]></content:encoded></item><item><title>பீகாரில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து: 3 பெட்டிகள் எரிந்து சேதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/fire-accident-on-passenger-train-in-bihar-3-coaches-damaged</link><comments>https://www.maalaimalar.com/news/national/fire-accident-on-passenger-train-in-bihar-3-coaches-damaged#comments</comments><guid isPermaLink="false">5942529a-8cc6-49e0-93f0-53ff60d2f376</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:13:07 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:13:07.390Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Train,fire accident,பீகார்,Bihar,தீ விபத்து,ரெயில் தீ விபத்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4fkpn86f/train.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Train fire accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4fkpn86f/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர்- சஹர்சா இடையே பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று அதிகாலை 3 மணியளவில் சஹர்சா மாவட்டத்தில் உள்ள சிம்ரி பக்தியார்பூர் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது என்ஜின் பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது.</p><p>சிறிது நேரத்தில் என்ஜினுடன் இணைக்கப்பட்ட மற்ற பெட்டிகளுக்கும் தீ பரவியது. இதையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக ரெயிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-</p><p>பயணிகள் ரெயில் சிம்ரி பக்தியார்பூர் நிலையத்தை அடைந்தபோது, ​​அதன் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. திடீரென்று தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தீ விரைவாக அதனுடன் இணைக்கப்பட்டு இருந்த 3 பெட்டிகளுக்கும் பரவியது. தீ விபத்து நடந்த போது பெரும்பாலான பய ணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.</p><p>தீப்பிடித்து எரிவது பற்றிய தகவல் கிடைத்தவுடன், ரெயிலுக்குள் பீதி ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக ரெயிலில் இருந்து இறங்கி ஓடினார்கள். அனைத்து பயணிகளும் உரிய நேரத்தில் ரெயிலில் இருந்து வெளியேறிவிட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.</p><p>ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததும், ரெயில்வே பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். </p><p>சுமார் 2½ மணி நேரம் போராடிய பிறகு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து சிம்ரி பக்தியார்பூர் ரெயில் நிலையத்தில் காலை 6 மணிக்கு பிறகு மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>ராஞ்சியில் தொடரும் மாணவர்கள் போராட்டம்: &apos;ஸ்விகி,சொமேட்டோ&apos; மூலம் உணவளித்து ஆதரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/students-protest-continues-in-ranchi-swiggy-zomato-orders-show-support</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-protest-continues-in-ranchi-swiggy-zomato-orders-show-support#comments</comments><guid isPermaLink="false">46b90850-3b7f-486d-86c7-4d3dacb1fd9c</guid><pubDate>Mon, 03 Aug 2026 11:38:57 +0000</pubDate><atom:updated>2026-08-03T11:38:57.816Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,Zomato,சொமேட்டோ,ராஞ்சி,Ranchi protests,Student protests</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/th8t2gv5/raanchi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ranchi protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/th8t2gv5/raanchi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்ட் மாநில பொதுச்சேவை ஆணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வு ஆணையம் (JSSC) நடத்திய அரசு வேலைவாய்ப்புப் தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு நடந்துள்ளதாகக் கூறி, ஆயிரக்கணக்கான தேர்வர்களும் மாணவர்களும் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் கடந்த பல நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இப்போராட்டம் தற்போது இந்தியா முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், முன்பின் தெரியாத மனிதர்கள் காட்டும் 'டிஜிட்டல் மனிதநேயம்' புதிய சமூகப் புரட்சியாக மாறியுள்ளது.</p><h2><strong>'ஸ்விகி, சொமேட்டோ' மூலம் குவியும் உணவுப் பொட்டலங்கள்</strong></h2><p>டெல்லியில் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, அதே போன்ற ஒரு நெகிழ்ச்சியான ஆதரவு அலை தற்போது ராஞ்சியிலும் வீசத் தொடங்கியுள்ளது.</p><h2><strong>அநாமதேயக் கொடையாளர்கள்:</strong></h2><p>மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட தொலைதூர நகரங்களில் வாழும் பொதுமக்கள், ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளான 'Swiggy' மற்றும் 'Zomato' மூலம் உணவுகளை ஆர்டர் செய்து ராஞ்சி போராட்டக் களத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். உணவை ஆர்டர் செய்யும் நபர்கள், "ராஞ்சி மைதானத்தில் பசியுடன் போராடும் மாணவர்களுக்கு இதை வழங்கவும்" எனக் குறிப்பு எழுதி உணவை அனுப்பி வைக்கின்றனர்.</p><h2><strong>நள்ளிரவிலும் தொடரும் சேவை:</strong></h2><p>மெக்டொனால்ட்ஸ் உணவு பொட்டலங்கள் முதல் சூடான இந்திய உணவுகள் வரை தினமும் நூற்றுக்கணக்கான டெலிவரி முகவர்கள் மைதானத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.</p><h2><strong>மாணவர்களின் கோரிக்கைகள் என்ன?</strong></h2><p>ஜார்க்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ள மாநில குற்றப்பிரிவு விசாரணையில் திருப்தியில்லை என்றும், CBI மற்றும் அமலாக்கத்துறை மூலம் நடுநிலையான மத்திய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் 14-வது JPSC முதன்மைத் தேர்வு மற்றும் JSSC-CGL தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டி, தேர்வு வாரியங்களின் உயர் அதிகாரிகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.</p><h2><strong>சட்டமன்ற முற்றுகை எச்சரிக்கை:</strong></h2><p>போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மழை மற்றும் கடுமையான வெப்பத்திற்கு இடையே குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதிகள் போன்றவை போராட்டக் களத்தில் பெரும் சவாலாக உள்ளன. அரசு தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகச் செவிசாய்க்காவிட்டால், மாநிலச் சட்டமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்போவதாக 'Gen Z' இளைஞர்கள் எச்சரித்துள்ளனர். </p><h2><strong>பாதுகாப்பு பலப்படுத்துதல்:</strong></h2><p>மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, ராஞ்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள ரெயில் நிலையங்கள், முக்கியப் பகுதிகளில் காவல்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது.  இளைஞர்களின் நீதிக்கான இப்போராட்டத்தில், உணவோ இருப்பிடமோ தடையாக இருக்கக் கூடாது என்பதில் இணைய வழியில் ஒன்றுபட்ட இந்திய மக்கள் உறுதியாக உள்ளனர். 'ஸ்விகி - சொமேட்டோ' போன்ற வர்த்தக தளங்கள், மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு கரங்கள் நீட்டும் புதிய வடிவிலான டிஜிட்டல் தளமாக மாறியுள்ளது சமூக வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விதிகளை மீறிய ஓல்ட் மங்க், மெக்டொவல்ஸ், ராயல் சேலஞ்ச் மதுபான நிறுவனங்கள்: FSSAI குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/old-monk-mcdowells-royal-challenge-liquor-firms-accused-of-rule-violations-fssai</link><comments>https://www.maalaimalar.com/news/national/old-monk-mcdowells-royal-challenge-liquor-firms-accused-of-rule-violations-fssai#comments</comments><guid isPermaLink="false">7e523a95-b7fd-487f-8c07-4776c75429ed</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:52:31 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:52:31.733Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>alcohol,FSSAI,விஸ்கி,மதுபானம்,Whisky,உணவு பாதுகாப்பு துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/by38zocp/Untitled-design-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ FSSAI Crackdown on Liquor Firms: Illegal Flavouring and Misleading Age Claims Exposed]]></media:title><media:description type="html"><![CDATA[ Liquor Firms]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/by38zocp/Untitled-design-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுபான உற்பத்தி நிறுவனங்கள் அனுமதிக்கப்படாத சுவையூட்டும் முறைகளைப் பயன்படுத்தியதாகவும், வயது தொடர்பான தவறான தகவல்களைக் கூறியதாகவும் குற்றம் சாட்டி, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அமலாக்க நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. </p><p>ஓல்ட் மங்க், மெக்டொவல்ஸ், பேக்பைப்பர், ஆன்டிகுவிட்டி ப்ளூ, ராயல் சேலஞ்ச் உள்ளிட்ட பல மதுபான உற்பத்தி நிறுவனங்கள், தற்போதுள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் லேபிளிங் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் அது கூறியுள்ளது. </p><p>மூலப்பொருட்கள், நொதித்தல், காய்ச்சி வடிகட்டுதல் மற்றும் முதிர்ச்சியடைதல் ஆகியவற்றின் மூலம் அதன் தனித்துவமான சுவையும் நறுமணமும் இயற்கையாக உருவாக அனுமதிப்பதற்குப் பதிலாக,</p><p>சில உற்பத்தியாளர்கள் ரம்மில் வெளிப்புறமாக "ரம் சுவையையும்" விஸ்கியில் "விஸ்கி சுவையையும்" சேர்ப்பது ஆய்வுகள் மற்றும் ஆய்வகப் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டதாக உணவு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.</p><h3><strong>மதுபான நிறுவனங்கள் மீது FSSAI குற்றச்சாட்டு</strong></h3><p>இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், “இத்தகைய தயாரிப்புகள் பிரதானமாக நடுநிலை ஆல்கஹால் அல்லது கூடுதல் நடுநிலை ஆல்கஹாலில் இருந்து தயாரிக்கப்பட்டிருந்தாலும், அவை சாதாரண ரம் அல்லது விஸ்கி என்று சந்தைப்படுத்தப்படுகின்றன. </p><p>இந்த ஆல்கஹாலில், அந்தப் பானங்களின் உள்ளார்ந்த சுவை அம்சம் இருப்பதில்லை. அவற்றின் தன்மையைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில், இந்தத் தயாரிப்புகளுக்குப் பதிலாக "ரம் சுவையூட்டப்பட்ட ஸ்பிரிட்" அல்லது "விஸ்கி சுவையூட்டப்பட்ட ஸ்பிரிட்" என்று பெயரிடப்பட வேண்டும்.</p><p>சில உற்பத்தியாளர்கள், பொருளின் உள்ளார்ந்த நறுமணத்தையும் சுவையையும் போலியாகக் காட்டும் வகையில் வெளிப்புறமாகச் சுவையூட்டியைச் சேர்த்து, அதை ஒரு தரமான பொருளாக விற்பனை செய்வதன் மூலம் நுகர்வோரைத் தவறாக வழிநடத்துகின்றனர்.</p><p>இத்தகைய சுவையூட்டியைச் சேர்க்க வேண்டியதன் சாத்தியமான தேவை, தற்போதுள்ள ஒரு முறைகேட்டின் காரணமாகக் காணப்படுகிறது.</p><p>இதில் உற்பத்தியாளர்கள், இயற்கையாகவே சுவையை வளர்ப்பதற்காக வெல்லப்பாகு, மால்ட் அல்லது திராட்சை போன்ற மூலப்பொருட்களிலிருந்தும் மற்றும்</p><p>அவற்றை பக்குவப்படுத்துதலின் மூலமும் பொருட்களை உருவாக்குவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட சுவை இல்லாத ஸ்பிரிட் ஆல்கஹாலை முதன்மையாகப் பயன்படுத்தி, வெளிப்புறமாகச் சுவையூட்டியைச் சேர்க்கின்றனர்.</p><p>இத்தகைய தயாரிப்புகள் தரம் குறைந்தவையாக இருப்பது மட்டுமல்ல, வழக்கமான வகைகளின் பெயர்களை பயன்படுத்தி தவறாகவும் சித்திரிக்கப்படுகின்றன.</p><p>மேலும், அந்த பாட்டிலின் முன்பக்கம் தயாரிப்பின் உண்மையான தன்மையை முற்றிலுமாக வெளிப்படுத்த தவறுகிறது.</p><p>ஓல்ட் மங்க் XXX ரம் வகையின் லேபிளில் உள்ள 7 ஆண்டுகள் பழமையான கலவை என்ற கூற்றும் தவறாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இந்த ரம் மதுபானத்தில் பக்குவப்பட்ட ரம் ஸ்பிரிட் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இது தற்போதுள்ள விதிமுறைகளின் தெளிவான மீறலாகும்.</p><p>ஏனெனில் FSS விதிமுறைகள், 2018-இன் படி ஸ்பிரிட் வயது குறிப்பானது கவலையில் உள்ள புதிய ஸ்பிரிடில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்,” என்று ஒரு அறிக்கையில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையம் கூறியது.</p><h3><strong>மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு தடை</strong></h3><p>இதன் அடிப்படையில் மோகன் ராக்கி ஸ்பிரிங்வாட்டர் (ஓல்ட் மங்க் வகைகள்), யுனைடெட் ஸ்பிரிட்ஸ் (மெக் டொவல்ஸ் நம்பர் 1 ரம்), இன்ப்ரூ பெவரேஜஸ் மற்றும் அசோசியேட்ஸ் ஆல்கஹால் மற்றும் ப்ரூவரீஸ் ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட தயாரிப்புகளின் விற்பனைக்கு FSSAI தடைவிதித்துள்ளது.</p><p>இந்த ஒழுங்கு நடவடிக்கை ஒட்டுமொத்த மதுபான தொழிலையும் குறிவைக்கவில்லை என்றும், பல உற்பத்தியாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட தர நிலைகளுக்கு முழுமையாக இணங்கி மதுபானங்களை தொடர்ந்து உற்பத்தி செய்து வருவதாகவும் ஆணையம் தெரிவித்தது.</p><p>மேலும் மதுபான பாட்டிலின் முன்பக்க லேபிளில் கலவையின் உண்மையான தன்மையை தெளிவாக வெளிப்படுத்திய பின்னரே, தற்போதுள்ள இருப்பை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.</p><p>மதுபான உற்பத்தி நிறுவனங்கள் எதிர்காலத்தில், இதே போன்ற சுவை ஊட்டிகளை பயன்படுத்துவதை நிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: 20 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு-சபாநாயகராக ஜி.எஸ்.பாட்டீல் தேர்வு!</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-cabinet-expansion-20-new-ministers-take-oath-today-gs-patil-elected-speaker</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-cabinet-expansion-20-new-ministers-take-oath-today-gs-patil-elected-speaker#comments</comments><guid isPermaLink="false">0300b89e-9d56-424d-a63b-41f1bf77c8e1</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:23:38 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:23:38.404Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka Cabinet,கர்நாடக அமைச்சரவை,டி.கே.சிவகுமார்,,G.S.Patil,D.K.Shivakumar,ஜி.எஸ்.பாட்டீல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/iwhw9poc/dk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ G.S.Patil-D.K.Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/iwhw9poc/dk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரின் அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், மாநில சட்டமன்றத்தின் அடுத்த சபாநாயகராக ஜி.எஸ்.பாட்டீலின் பெயரையும் கட்சித் தலைமை அங்கீகரித்துள்ளது.</p><h2><strong>கார்கே-ராகுல் காந்தி சந்திப்பு:</strong></h2><p>இந்தப் பட்டியலில், ஜமீர் அகமது கான் மற்றும் சந்தோஷ் லாட் போன்ற சில தற்போதைய அமைச்சர்களின் பெயர்கள் உட்பட 20 பெயர்கள் உள்ளன. கார்கே மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோருக்கு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, இது முதலமைச்சர் சிவகுமாரிடம் பகிரப்பட்டது. நெறிமுறையின்படி, அமைச்சர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு முன்பு, முதலமைச்சர் இந்தப் பட்டியலை ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் பகிர வேண்டும்</p><p>இதில், பட்கல் சட்டமன்ற உறுப்பினர் மங்கல் வைத்யாவின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி அவரது பெயரை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக எஸ்.எஸ். மல்லிகார்ஜுனின் பெயரைச் சேர்த்தது. இந்தச் சம்பவத்திற்குக் காரணம் தட்டச்சுப் பிழை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.</p><h2><strong>புதிய</strong> சபாநாயகராக ஜி.எஸ்.பாட்டீல்:</h2><p>மேலும், ஜி.எஸ்.பாட்டீல் சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்படுவார். இந்தப் பதவியை முன்னதாக வகித்த யூ.டி. காதர், கடந்த ஜூன் மாதம் சிவகுமார் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்றார். அமைச்சர் வேட்பாளர்களுக்கான பதவியேற்பு விழா மாலை 4.05 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக, பட்டியலை இறுதி செய்யும் போது காங்கிரஸ் தலைமை சாதி, மதம் மற்றும் பிராந்திய சமன்பாடுகளை கவனமாக மதிப்பீடு செய்து வருவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.</p><p>பல்வேறு சமூகக் குழுக்கள் மற்றும் பிராந்தியங்களிடையே சமநிலையை ஏற்படுத்த கட்சித் தலைமை முயற்சி செய்து வருவதாக, அந்த செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. நிலுவையில் இருந்த அமைச்சரவை விரிவாக்கம் முன்னதாக ஜூலை 31, வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் டெல்லியில் கட்சித் தலைமை நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.</p><h2><strong>காலியாகவுள்ள 20 இடங்கள்:</strong></h2><p>ஜூன் 3-ஆம் தேதி சிவகுமார் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, இது பல வாரங்களாக விவாதத்தில் இருந்து வருகிறது. தற்போது, ​​கர்நாடகாவில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 34 அமைச்சர்களுக்கு எதிராக, முதலமைச்சர் உட்பட 14 அமைச்சர்களே உள்ளனர். இதனால், அமைச்சரவையில் 20 இடங்கள் காலியாக உள்ளன.</p><p>கார்கே, காந்தி மற்றும் முதல்வர் சிவகுமார் ஆகியோரைத் தவிர, முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கர்நாடகப் பொறுப்பு ஏ.ஐ.சி. பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் காங்கிரஸ் கர்நாடகத் தலைவர் பி.கே. ஹரிபிரசாத் ஆகியோரும் அமைச்சரவை விரிவாக்கத்திற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க கல்வி சர்ச்சை: உங்கள் டிகிரி சர்டிபிக்கேட்டை காட்டத் தயாரா?-பிரதமர் மோடிக்கு CJP நிறுவனர் அபிஜீத் திப்கே கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/national/american-education-row-will-you-show-your-degree-certificate-cjp-founder-abhijit-dipke-questions-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/american-education-row-will-you-show-your-degree-certificate-cjp-founder-abhijit-dipke-questions-pm-modi#comments</comments><guid isPermaLink="false">98a4afe1-dcaf-4bd1-a190-5677ef12aac8</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:47:39 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:47:39.988Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி.,pm modi,Cockroach Janta Party,அபிஜீத் திப்கே,Abhijit Dipke,காக்ரோச் ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/emzqqpfn/MODI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Abhijit Dipke-PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/emzqqpfn/MODI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே தனது அமெரிக்கக் கல்விச் செலவுகள் குறித்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போஸ்டன் பல்கலைக்கழகத்தின் உதவித்தொகை கடிதம் மற்றும் கல்விக்கடனை ஆதாரமாக வெளியிட்டுள்ளார்.</p><p>சூரத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட (RTI) ஆர்வலர் அமித் திவாரி என்பவர், அபிஜீத் திப்கேயின் தந்தை பகவான்ராவ் திப்கே மீது மகாராஷ்டிர அரசிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். மகாராஷ்டிர தொழில் வளர்ச்சி கழகத்தில் (MIDC) இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அவரது மாதச் சம்பளம் சுமார் ரூ.60,000 முதல் ரூ.65,000 வரை மட்டுமே இருந்த நிலையில், தனது மகனை எப்படி அமெரிக்காவில் உயர் கல்வி படிக்க வைக்க முடிந்தது என கேள்வி எழுப்பினார்.</p><h2><strong>அபிஜீத் திப்கே அளித்த விளக்கம்:</strong></h2><p>இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மூத்த பத்திரிகையாளர் பார்கா தத்துடனான நேர்காணலில் விளக்கமளித்த அபிஜீத் திப்கே,"எனது அமெரிக்கப் படிப்பிற்கு குடும்பச் சொத்துகள் பயன்படுத்தப்படவில்லை. போஸ்டன் பல்கலைக்கழகம் வழங்கிய உதவித்தொகை மற்றும் நான் பெற்ற கல்விக்கடன் மூலமே எனது கல்வி செலவுகள் பூர்த்தி செய்யப்பட்டன. </p><p>இந்தக் கடனை நான் இன்னமும் திரும்பச் செலுத்த வேண்டி உள்ளது" எனது கல்வி உதவித்தொகை மற்றும் வங்கி கடன் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளிப்படையாக வெளியிட நான் தயார் என்று கூறி பல்கலைக்கழக சேர்க்கை மற்றும் உதவித்தொகை கடிதத்தையும் வெளியிட்டார்.</p><h2><strong>பிரதமர் மோடிக்கு் சவால்:</strong></h2><p>"நான் எனது கல்விச் சான்றிதழ்கள் மற்றும் கடன் ஆவணங்களைக் காட்டத் தயார். அதேபோல், நாட்டின் பேரரசராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியும் தனது கல்லூரி டிகிரி சான்றிதழைக் காட்டத் தயாரா?" என்று காட்டமாகச் சவால் விடுத்துள்ளார்.</p><h2><strong>தேர்தல் ஆணையத்தில் புகார்:</strong></h2><p>CJP கட்சி பதிவு செய்யப்பட்ட அமைப்பா, இல்லையா என்பதை ஆய்வு செய்யக் கோரியும், கபில் சிபல் அறிவித்த நிதிக்கு ஜி.எஸ்.டி வரம்புகள் பொருந்துமா எனக் கோரியும் RTI ஆர்வலர் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளார். இதற்கிடையில், இந்த விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், தனிநபரின் கல்விக் கட்டணத்தை சர்ச்சையாக்குவது தேவையற்றது என்றும் CJP கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைஷ்ணவி கவுர் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>பொதுமக்களின் ஆதரவு நிதி:</strong></h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் பிரம்மாண்ட மாணவர் போராட்டங்களை நடத்தி புகழ்பெற்றவர் அபிஜீத் திப்கே.  CJP கட்சியின் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் போராட்டங்களுக்கான நிதியை, முழு வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களிடமிருந்தே திரட்டத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். CJP அமைப்பின் சட்டபூர்வ நிலை மற்றும் கபில் சிபல் அறிவித்த ரூ.1 கோடி வழக்கு நிதி உதவி குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய மறைமுக வரிகள் வாரியத்திடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சிஜேபி மாணவர்கள் இயக்கம் ஒரே இரவில் எப்படி அரசியல் இயக்கமாக மாறியது?: ஆர்எஸ்எஸ் தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/how-did-cjp-student-movement-turn-political-overnight-rss-chief</link><comments>https://www.maalaimalar.com/news/national/how-did-cjp-student-movement-turn-political-overnight-rss-chief#comments</comments><guid isPermaLink="false">9a4b7fc8-c60b-4633-b927-bd4896d8ba72</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:28:05 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:28:05.007Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RSS,ஆர்.எஸ்.எஸ்,neet protest,சிஜேபி,CJP,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/93hxdqsh/Untitled-design-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ CJP student movement turns political: RSS leader Atul Limaye questions sudden shift]]></media:title><media:description type="html"><![CDATA[ RSS leader Atul Limaye]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/93hxdqsh/Untitled-design-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) இணைப் பொதுச் செயலாளர் அதுல் லிமாயே, முன்னாள் அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுக்கு காரணமான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குறித்து ஆழமான கள ஆய்வு நடத்துமாறு நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>மேலும் அவர் தற்போதுள்ள காலகட்டத்தில் தேசிய கண்ணோட்டத்துடன் செயல்படும் அமைப்புகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகிவிட்டது என்றும் குறிப்பிட்டார்.</p><p><strong>ஆர்.எஸ்.எஸ் இணைப் பொதுச் செயலாளர் </strong></p><p>மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நிகழ்ச்சி நடைபெற்றது.</p><p>இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதுல் லிமாயே, டெல்லியில் நடைபெற்ற சிஜேபி கட்சியின் போராட்டம் குறித்து பேசினார்.</p><p>அப்போது அவர், “தற்போது டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வுகள், தேசிய கண்ணோட்டம் கொண்ட அமைப்புகள் இளைஞர்கள் மத்தியில் தடம் பதிப்பது எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.</p><p>சிஜேபி கட்சி முதன்மையாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் வழி நடத்தப்பட்ட ஒரு இயக்கம் என்பதால், அகில இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் கூட்டமைப்பு போன்ற பல இடதுசாரி மாணவர் அமைப்புகள் இதில் தீவிரமாக ஈடுபட்டன.</p><p>மனித உரிமைகள், பழங்குடியினர் பிரச்சனைகள், பெண்கள் உரிமைகள், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமூகங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள், பத்திரிக்கை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றுடன் தொடர்புடைய ஏராளமான அமைப்புகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கேற்றன.</p><p>சில மேடைகளில் இருந்து இந்துக்களுக்கு எதிரான குரல்கள் எவ்வாறு எழுப்பப்பட்டன? சர்ச்சைக்குரிய மற்றும் தேசவிரோத முழக்கங்களை எழுப்பிய அல்லது ஆதரித்த நபர்கள் அங்கு ஏன் இருந்தனர்?</p><p>இயக்கத்திற்குள் இடதுசாரி சித்தாந்தம் கொண்ட செல்வாக்கு திடீரென எப்படி அதிகரித்தது? பல்வேறு அரசியல் கட்சிகளும் அவற்றின் நலன்களும் அதனுடன் எப்படி ஒன்று சேர்ந்தது?</p><p>முற்றிலும் மாணவர்களால் வழி நடத்தப்பட்ட ஒரு இயக்கம், ஒரே இரவில் எவ்வாறு அரசியல் இயக்கமாக மாறியது? நாடு முழுவதும் ஒரே மாதிரியான செயல்பாடுகளும் போராட்டங்களும் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டன? இந்த இயக்கம் வெளிநாடுகளிலும் கூட எப்படி விரிவடைந்து ஆதரவை திரட்டியது?</p><p>இந்த மனநிலையின் கீழ், கருத்து சுதந்திரம் மற்றும் உள்ளிருப்பு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் உரிமை போன்ற ஜனநாயகத்தால் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை பயன்படுத்துவதன் மூலம், ஜனநாயக அமைப்புக்கே சவால் விடுக்கப்படுகிறது.</p><p>எதிர்கால ஜனநாயகம் என்பது நாடாளுமன்றம் மற்றும் தேர்தல்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. அவை தெருக்களாலும், எதிர்ப்பாலும் தீர்மானிக்கப்படும்.</p><p>இந்த வகையான போராட்டங்கள் பொதுவாக வரையறுக்கப்பட்ட சில கட்டங்களை உள்ளடக்கியுள்ளது. முதலாவது, பல்வேறு கல்வி மற்றும் சமூக நிறுவனங்களில் கருத்தியல் ரீதியாக ஊடுருவுவதை உள்ளடக்கியது.</p><p>இரண்டாவதாக, நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலப்பு கட்டமைப்புகளின் நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாகும்.</p><p>மூன்றாவது, கல்வி, இலக்கியம், ஊடகம், சினிமா மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் ஒரு மாற்று மன நிலையை வளர்த்து, ஒரு கருத்துகளை கொண்டு போர் நடத்துவதாகும்.</p><p>இறுதியில் வெகுஜன இயக்கங்கள் மூலம் அரசாங்கம் மற்றும் சமூகத்தின் மீது அழுத்தம் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.</p><p>சுதந்திர இந்தியாவில் அரசியலமைப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை அம்பேத்கர் வலியுறுத்தி இருந்தார்.</p><p>அரசியலைப்பிற்கு எதிரான அல்லது வன்முறை இயக்கங்களுக்கு எதிராக எச்சரித்த அம்பேத்கர், அவற்றை அராஜகத்தின் இலக்கணம் என்று குறிப்பிட்டிருந்தார்.</p><p>இத்தகைய இயக்கங்களுக்கு மிகவும் பயனுள்ள பதில் என்பது வெறும் எதிர்ப்போ அல்லது விமர்சனமோ கிடையாது, மாறாக இளைஞர்களுடன் தொடர்ச்சியான, நேர்மறையான உரையாடலை பேணுவதிலும், தேசியவாத உணர்வை வளர்ப்பதிலும் அடங்கியுள்ளது” என்று ஆர்.எஸ்.எஸ் இணைப் பொதுச் செயலாளர் அதுல் லிமாயே கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு
</title><link>https://www.maalaimalar.com/news/national/cauvery-issue-tn-government-files-case-in-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/cauvery-issue-tn-government-files-case-in-supreme-court#comments</comments><guid isPermaLink="false">093efff7-d6a8-400a-bf40-413482f47da5</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:09:45 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:09:45.739Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN Government,Supreme Court,சுப்ரீம் கோர்ட்,Cauvery Issue,காவிரி விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/q9iumpi4/tngovernment.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cauvery water - Supreme court - TN government]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/q9iumpi4/tngovernment.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜயின் அறிவுறுத்தலின்படி உச்சநீதிமன்றத்தில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழ்நாடு அரசு</a> வழக்கு தொடர்ந்தது.</p><p>தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவில்,</p><p>* விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடகம் அளிக்க தவறி விட்டது. </p><p>* 26.954 டி.எம்.சி. நீரை <a href="https://www.maalaimalar.com/news/national/the-mekedatu-project-is-the-only-solution-to-the-cauvery-issue-dk-shivakumar">கர்நாடகம்</a> தமிழகத்திற்கு தந்திருக்க வேண்டும்.</p> <p>* தமிழகத்திற்கு உரிய நேரத்தில் காவிரியில் கர்நாடக அரசு நீரை திறந்து விடவில்லை.</p><p>* காவிரி மேலாண்மை ஆணையம் உத்தவிட்ட பிறகும் பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு அதிகபட்சமாக 550 கனஅடி நீர் தான் வருகிறது.</p><p>* ஆக.3 நிலவரப்படி கேஆர்எஸ் அணையில் 23 டிஎம்சியும், கபினி அணையில் 18.6 டிஎம்சியும், ஹாரங்கியில் 7.8 டிஎம்சியும், ஹேமாவதி அணையில் 28 டிஎம்சி என மொத்தம் 77.53 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.</p> <p>* 77.53 டிஎம்சி தண்ணீர் உள்ளதால் விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதில் கர்நாடகாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை.</p><p>* காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 3500 கன அடி நீர் திறக்க கர்நாடகாவிற்கு மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.</p><p>* காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு அதிகபட்சமாக 550 கனஅடி நீர் தான் வருகிறது.</p><p>* தமிழ்நாட்டிற்கு விகிதாச்சாரப்படி கிடைக்கவேண்டிய நீர் 26.954 டிஎம்சி.</p><p>* உரிய நேரத்தில் தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பிரிஜ்பூஷன் சிங் விடுவிப்பு: மேல்முறையீடு செய்வோம்..!- வினேஷ் போகத்</title><link>https://www.maalaimalar.com/news/national/vinesh-phogat-on-brijbhushan-singh-acquittal-we-will-appeal</link><comments>https://www.maalaimalar.com/news/national/vinesh-phogat-on-brijbhushan-singh-acquittal-we-will-appeal#comments</comments><guid isPermaLink="false">3da77da5-1342-436c-a075-48bff7336e39</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:31:42 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:31:42.173Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வினேஷ் போகத்,பாலியல் குற்றச்சாட்டு,பிரிஜ் பூஷன் சரண் சிங்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/xbz63khs/vinesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Brij Bhushan singh- Vinesh phogat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/xbz63khs/vinesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ஜ.க முன்னாள் எம்.பி.யான பிரிஜ்பூஷன் சரண்சிங் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தார்.</p><h2>பாலியல் புகார்</h2><p>கடந்த 2023-ம் ஆண்டு 6 மல்யுத்த வீராங்கனைகள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்கள். முன்னணி வீராங்கனைகள் பிரிஜ்பூஷன் மீது செக்ஸ் புகார் கூறி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக வீராங்கனைகள் போராட்டமும் நடத்தினார்கள்.</p><p>இதை தொடர்ந்து 6 முறை எம்.பி.யாக இருந்த அவர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து விலகினார்.</p><h2>குற்றப்பத்திரிகை</h2><p>மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் குறித்த வழக்கு டெல்லி சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. கடந்த 2024-ம் ஆண்டு பிரிஜ்பூஷன் சிங் மீது குற்றவியல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டை பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.</p><h2>கடந்த ஜூன் மாதம் </h2><p>15-ந்தேதி டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 354 (பெண்ணின் கண்ணியத்திற்கு ஊறுவிளைவிக்கும் நோக்கத்துடன் தாக்குதல்), 54ஏ (பாலியல் துன்புறுத்தல்), 354டி (பின் தொடர்தல், தொல்லை கொடுத்தல்), 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்து இருந்தது.</p><h2>போக்சோ பிரிவு ரத்து</h2><p>புகார் அளித்த வீராங்கனைகளில் ஒருவர் மைனர் பெண் என்பதால்  போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறுமிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பொய்யான புகார் அளிக்கப்பட்டதாக அவரது தந்தை திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.</p><p>இதையடுத்து அந்த புகாரை ரத்து செய்யக்கோரி டெல்லி போலீசார் அளித்த பரிந்துரையை ஏற்று  பிரிஜ்பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டில் இருந்து போக்சோ பிரிவை கோர்ட்டு ரத்து செய்தது.</p><h2>விடுவிப்பு</h2><p>இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஜூலை 2-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு ஆகஸ்டு 3-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.</p><p>அதன்படி மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல்  துன்புறுத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ்பூஷன் சிங், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் இணை செயலாளர் வினோத் தோமர் ஆகியோரை கோர்ட்டு விடுவித்தது.</p><p>கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு அஸ்வினி  பன்வார் ஆதாரம் இல்லாததால் இருவரையும் விடுவிப்பதாக உத்தரவில் தெரிவித்தார்.</p><h2>மேல்முறையீடு முடிவு</h2><p>பிரிஜ் பூஷண் சிங் விடுதலை செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பங்கிபூர் இடைத்தேர்தல்: பா.ஜ.க-வை முந்தி பிரசாந்த் கிஷோர் அதிரடி முன்னிலை!</title><link>https://www.maalaimalar.com/news/national/purnia-bypoll-prashant-kishor-leads-bjp-candidate-in-early-counting-rounds</link><comments>https://www.maalaimalar.com/news/national/purnia-bypoll-prashant-kishor-leads-bjp-candidate-in-early-counting-rounds#comments</comments><guid isPermaLink="false">a7a61430-b708-47f0-ae96-df66463bc6d6</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:19:49 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:19:49.351Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரசாந்த் கிஷோர்,Prashant Kishor,bankipur bypoll,Bankipur,பங்கிபூர்,BJPBihar,NeerajKumar Sinha,பங்கிபூர் இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4ofplele/Prashant-Kishor" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Prashant Kishor  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4ofplele/Prashant-Kishor?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநிலத்தின் பங்கிபூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், 'ஜன சுராஜ் கட்சி' நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தனது எதிர்தரப்பான பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை விடத் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.</p><h2>4-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்</h2><p>பங்கிபூர் தொகுதியில் மொத்தம் திட்டமிடப்பட்டுள்ள 31 சுற்று வாக்கு எண்ணிக்கைகளில், 4 சுற்றுகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்படி, ஜன சுராஜ் கட்சியின் பிரசாந்த் கிஷோர் 6,269 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். </p><p>பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹா 5,124 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் ரேகா குமாரி 884 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.</p><p>பா.ஜ.க வேட்பாளரை விட 1,145 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் இருக்கிறார்.</p><h2>பிரசாந்த் கிஷோரின் முதல் தேர்தல் களம்</h2><p>கடந்த ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்ற இந்த இடைத்தேர்தல், தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோரின் முதல் நேரடித் தேர்தல் களம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>பா.ஜ.க-வின் பாரம்பரியமான மிக வலுவான கோட்டையாகக் கருதப்படும் இந்த பங்கிபூர் தொகுதி, அங்கு எம்.எல்.ஏ-வாக இருந்த பா.ஜ.க தலைவர் நிதின் நபின் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து காலியானது குறிப்பிடத்தக்கது.</p><p>பாட்னாவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பல அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தற்போது வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் 27 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை எஞ்சியுள்ளது.</p> <h2>பாதுகாப்பான தொகுதியை நான் தேடவில்லை - பிரசாந்த் கிஷோர்</h2><p>முன்னதாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பிரசாந்த் கிஷோர், ' அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்களுக்குப் பாதுகாப்பான தொகுதிகளைத் தேடுவார்கள். ஆனால், நான் அதற்கு நேர்மாறாகச் செய்கிறேன். </p><p>பீகார் மக்கள் சாதி, மதங்களைக் கடந்து வாக்களிக்க வேண்டும் என்ற செய்தியைச் சொல்லவே பாஜக -வின் கோட்டையான பங்கிப்பூரைத் தேர்ந்தெடுத்தேன். </p><p>லாலு பிரசாத் யாதவ் மீதான பயத்தால் பாஜக -விற்கும், பாஜக மீதான பயத்தால் லாலுவிற்கும் மக்கள் வாக்களிப்பதை நிறுத்த வேண்டும்' என்று தனது அரசியல் நோக்கத்தை விளக்கியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: தொடர் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/monsoon-session-of-parliament-both-houses-adjourned-amid-continued-uproar</link><comments>https://www.maalaimalar.com/news/national/monsoon-session-of-parliament-both-houses-adjourned-amid-continued-uproar#comments</comments><guid isPermaLink="false">d8c59191-1c9f-47a8-bf1e-5bdc87f30424</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:47:33 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:47:33.156Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Loksabha,அமளி,parliament,rajyasabha mp,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்,அவை ஒத்திவைப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/6qrx0a2t/parliament.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Parliament]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/6qrx0a2t/parliament.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கிய முதல் நாள் முதலே எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்து வருகிறது.</p><p>இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 11வது நாளான இன்று நீட் முறைகேடு விவகாரம், மாணவர் போராட்டங்கள் மீதான போலீஸ் நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பினர்.</p><p>அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்ள் முழக்கமிட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.  தொடக்கத்திலேயே ஏற்பட்ட அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோஷங்களால் அவை பாதிக்கப்பட்டது. தொடர் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, இன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.</p><p>மக்களவையில் இந்திய புள்ளியியல் நிறுவனம் மசோதா, 2026 மற்றும் வங்கியாளர்களின் ஆவண சான்று மசோதா, 2026 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன.</p><p>மாநிலங்களவையில் பிறப்பு-இறப்பு பதிவுகள் (திருத்தம்) மசோதா, 2026 மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை (திருத்தம்) மசோதா, 2026 ஆகியவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.</p><p>மேலும், வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை (FCRA) திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு இன்னும் சில வேலை நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அவையில் தொடர்ந்து அமளி நீடித்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>​​திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு: இத்தனை நாட்கள் என்ன செய்தீர்கள்?- தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/national/thiruparankundram-deepam-case-supreme-court-ask-question-tn-govt</link><comments>https://www.maalaimalar.com/news/national/thiruparankundram-deepam-case-supreme-court-ask-question-tn-govt#comments</comments><guid isPermaLink="false">b29f3fc5-7de3-4c2f-8f98-df88ad84d874</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:38:42 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:38:42.187Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,Supreme Court,சுப்ரீம் கோர்ட்,திருப்பரங்குன்றம் முருகன் கோவில்,திருப்பரங்குன்றம் தீபம்,Thiruparankundram Deepam Case,திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/jnb5c0yg/supremecourt.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ​​திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு]]></media:title><media:description type="html"><![CDATA[ ​​திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/jnb5c0yg/supremecourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி கோவில் செயல் அதிகாரி உள்ளிட்ட அனைத்து எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும்.</aside><p>திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கடந்​த ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந்தேதி தீபம் ஏற்​றக்கோரி மதுரையைச் சேர்ந்த ராமரவி​கு​மார் உள்​ளிட்​டோர் உயர்நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத்தாக்​கல் செய்தனர். அந்த மனுக்​களை விசா​ரித்த சென்னை உயர்நீ​தி​மன்ற தனி நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், தீபத்​தூணில் கார்த்திகை திரு​நாள் அன்று தீபம் ஏற்ற வேண்​டுமென கடந்த டிச.1-ந்தேதி உத்​தர​விட்டார்.</p><p>ஆனால், இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத நிலை​யில், மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணை​யர் மற்​றும் கோவில் செயல் அலு​வலர் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இதையடுத்து ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், செயல் அலு​வலர் ஆகியோர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்​றாததற்​காக வருத்​தம் தெரிவித்தனர்.</p><p>இதனைதொடர்ந்​து, தனி நீதிபதி உத்​தரவை எதிர்த்து தமிழ்​நாடு அரசும், அவம​திப்பு நடவடிக்​கையை எதிர்த்து அதி​காரி​களும் உயர் ​நீ​தி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீடு செய்​தனர். அந்த மேல்​முறை​யீட்டு மனுக்​களை விசா​ரித்த மதுரை அமர்வு, அதி​காரிகளுக்கு எதி​ரான நீதி​மன்ற நடவடிக்​கைக்கு தடை​வி​தித்து உத்​தர​விட்​டது. அதே வேளை​யில், ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை திரு​நாளன்று திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்​தது.</p><p>இதனையடுத்​து, தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்து மதுரை அமர்வு பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக கோவில் நிர்​வாகம் தரப்​பில் <a href="https://www.maalaimalar.com/topic/சுப்ரீம்-கோர்ட்">சுப்ரீம் கோர்ட்டில்</a> மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இதேபோல் தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் பி.கருணாகரனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும், அந்தத் தீர்ப்புக்கு முன்பு பின்பற்றப்பட்ட நடைமுறையின்படியே கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அரவிந்த் குமார், வி.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:-</p><p>அறநிலையத்துறை தரப்பு:- உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் ஒரு புதிய நடைமுறையை புகுத்த பார்க்கிறார்கள்.</p><p>நீதிபதிகள்:-  கார்த்திகை தீபம் என்று அந்த தீப தூணில் விளக்கேற்றும் நடைமுறை முன்பு இருந்ததா? </p><p>அறநிலையத்துறை ஆணையர்:- தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நடைமுறை முன்னர் இல்லை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து புதிய ஒரு நடைமுறையை புகுத்த பார்க்கிறது. நடைமுறையில் இல்லாத ஒரு விஷயத்தை எப்படி உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் செயல்படுத்த முடியும்? ஏற்கனவே நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு மனுவை விசாரித்து நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.</p><p>நீதிபதிகள்:- தற்போதைய நிலையில் எந்த ஒரு தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. வழக்கை முழுமையாக விசாரித்து அதன் பின்பே உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.</p><p>எதிர்மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு:- சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்திருந்த நிலையில் தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போதும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதாக கூறி வழக்கை இழுத்து அடித்து வருகிறார்கள்.</p><p>நீதிபதிகள்:- சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி மாதம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில் இத்தனை நாட்கள் தமிழக அரசு என்ன செய்து கொண்டு இருந்தது? </p><p>அறநிலையத்துறை தரப்பு:- பல்வேறு ஆவணங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டியதிருந்ததால்தான் காலதாமதம் ஏற்பட்டது. நாங்கள் அனைத்தையும் தற்போது நீதிமன்றத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறோம்.</p><p>நீதிபதிகள்:- இந்த விவகாரம் தொடர்பாக ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி கோவில் செயல் அதிகாரி உள்ளிட்ட அனைத்து எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும். மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற மனுதார்கள் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. வழக்கு 8 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா - இத்தாலி நட்புறவை கொண்டாட பார்லேயின் புதிய &apos;மெலோடி டிராமிசு&apos; அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/parle-launches-melody-tiramisu-to-celebrate-india-italy-friendship</link><comments>https://www.maalaimalar.com/news/national/parle-launches-melody-tiramisu-to-celebrate-india-italy-friendship#comments</comments><guid isPermaLink="false">0664e36c-e216-42f7-9540-da0074150472</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:47:40 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:47:40.475Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Blinkit,பிளிங்கிட்,Melodi,Parle Melody,பார்லே மெலடி,Melody Tiramisu,மெலடிடிராமிசு,India Italy Friendship,புதிய சாக்லேட்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/iwc3ouc8/Parle-Melody-Tiramisu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Parle Melody Tiramisu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/iwc3ouc8/Parle-Melody-Tiramisu?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமீபத்தில் இணையதளத்தில் வைரலான பிரதமர் மோடி மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் 'மெலோடி' தருணங்களை குறிக்கும் வகையில், பார்லே நிறுவனம் தனது புகழ்பெற்ற மெலோடி டாப்பியில் ஒரு புதிய சுவை கொண்ட சாக்லேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. </p><p>'மெலோடி டிராமிசு' என்ற பெயரில் வந்துள்ள இந்த சாக்லேட் பாக்கெட்டில் 'இந்தியா - இத்தாலி நட்புறவைக் கொண்டாடுகிறோம்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.</p><h2>மெலோடியின் பின்னணி</h2><p>கடந்த மே மாதம் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக இத்தாலி சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்தியாவின் பாரம்பரிய மெலோடி சாக்லேட்டுகளை பரிசாக வழங்கினார். </p><p>இந்த பரிசைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மெலோனி, 'பிரதமர் மோடி தங்களுக்கு மிகவும் சுவையான மெலடி சாக்லேட்டை பரிசாக தந்துள்ளார்' என்று நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். </p><p>இந்த வீடியோ உலகம் முழுவதும் பரவி டிரெண்டிங்காக மாறியது. ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் இவர்களது நட்பை இருவரின் பெயரையும் இணைத்து 'மோடி + மெலோனி' என்ற பெயரை சேர்த்து மெலோடி என்ற ஹாஷ்டேகை பயன்படுத்தி வருகின்றனர். </p><p>இப்போது அது உண்மையாகவே ஒரு சாக்லேட் வடிவில் உருவெடுத்துள்ளது.</p><h2><strong>'மெலடி டிராமிசு'</strong></h2><p>இத்தாலியின் புகழ்பெற்ற காபி கலந்த இனிப்பு வகையான 'டிராமிசு' சுவையில் இந்த புதிய மெலோடி தயாரிக்கப்பட்டுள்ளது. பாக்கெட்டின் முகப்பிலேயே இந்தியா - இத்தாலி நாட்டின் நட்புறவை போற்றும் வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலம் ஒரு சாதாரண மிட்டாய், சர்வதேச ராஜதந்திர உறவின் அடையாளமாக மாறியுள்ளது.</p><h2><strong>எங்கே, எப்படி வாங்கலாம்?</strong></h2><p>இந்த சாக்லேட், விரைவுப் பொருள் விநியோக தளம் ஒன்றில் மட்டுமே பிரத்தியேகமாக கிடைக்கிறது. வேறு எந்த கடைகளிலும் தற்போதைக்கு கிடைக்காது. </p><p>180 கிராம் எடையுள்ள பாக்கெட்டாக, காபி கேண்டி பிரிவின் கீழ் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. </p><p>மேலும் இந்த சாக்லேட் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு லிமிடெட் எடிஷன் தயாரிப்பாகும்.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் குற்றச்சாட்டு- பிரிஜ் பூஷண் சிங்கை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/sexual-assault-case-court-acquits-brij-bhushan-singh</link><comments>https://www.maalaimalar.com/news/national/sexual-assault-case-court-acquits-brij-bhushan-singh#comments</comments><guid isPermaLink="false">2e03cbf5-c018-4d3d-9f98-2156974758cd</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:00:19 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:00:19.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi court,பாலியல் குற்றச்சாட்டு,நீதிமன்றம் உத்தரவு,Sexual Harassment,Brij Bhushan Sharan Singh,பிரிஜ் பூஷண் சிங்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/2ib5tnzj/brij.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ brij bhushan singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/2ib5tnzj/brij.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்  தொடர்பான வழக்கில், பாஜக மூத்த தலைவரும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்  முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங்கை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விடுவித்துள்ளது.</p><p>நீதிபதி அஷ்வினி பன்வார் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை இன்-கேமரா முறையில் நடைபெற்றது.</p><p>கடந்த 2023-ஆம் ஆண்டு முன்னணி மகளிர் மல்யுத்த வீராங்கனைகள், பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. உச்சநீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு டெல்லி போலீஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்து, பின்னர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.</p><p>பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் தொல்லை, பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் பலவந்தமாக நடந்துகொண்டது, மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. </p><p>பின்னர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவரை நீதிமன்றம் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கேரளத்தில் மழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-rains-landslide-death-toll-rises-to-9</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-rains-landslide-death-toll-rises-to-9#comments</comments><guid isPermaLink="false">2f63d3f8-b8c9-4fc8-8388-dc72cde2ecef</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:27:24 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:27:24.834Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,landslide,மழை,பலி எண்ணிக்கை உயர்வு,Death toll,கேரளா,நிலச்சரிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/tygbndx7/kerala2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kerala landslide]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/tygbndx7/kerala2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளத்தில் மழை, நிலச்சரிவால் இதுவரை 9 பேர் இறந்துள்ளதாக முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.</p><h2>மழை பாதிப்பு</h2><p>கேரளத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பை சந்தித்துள்ளது. பூஞ்ஞார், அடூர் மலை போன்ற மலையோர பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது.</p><p>பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பத்தனம்திட்டா, ஆலப்புழை போன்ற மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு, வடியாமல் இருக்கிறது. இது அங்குள்ள மக்களை வெகுவாக பாதித்துள்ளது.</p><h2>9 பேர் பலி</h2><p>மேலும் மழை பாதிப்பு தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20" rel="nofollow">கேரளம் முதலமைச்சர் </a>வி.டி.சதீசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>கேரளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்திற்கு இதுவரை 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். 13 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.</p><p>8 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மாநிலத்தில் இதுவரை 27 வீடுகள் முற்றிலுமாகவும், 196 வீடுகள் சிறிய அளவிலும் சேதம் அடைந்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட 5,792 பேர் 209 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2>மீனவர் உடல் மீட்பு</h2><p>இதற்கிடையே கடலில் மீன்பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்து மாயமான மீனவர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அதாவது திருவனந்தபுரம் அருகே உள்ள முதலப்பொழி முகத்துவாரப் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 4 மீனவர்கள் ஒரு படகில் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.</p><p>அப்போது ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் ஜோஸ், ஸ்மித் ஆகிய 2 மீனவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். பிரீமன் (வயது 28), ஷிஜின் (32) ஆகியோர் மாயமானார்கள். இதில் நேற்று பிரீமன் பிணமாக மீட்கப்பட்டார். மாயமான ஷிஜினை தொடர்ந்து தேடி வரும் பணி நடக்கிறது.</p><h2>தேடும் பணி தீவிரம்</h2><p>இந்தநிலையில் நேற்று முன்தினம் விழிஞ்ஞம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடி படகு கவிழ்ந்தது. இதில், மாயமான புல்லுவிளையைச் சேர்ந்த ஜான் (54), கொட்டுக்காலைச் சேர்ந்த ஆண்டனி (63) ஆகியோரையும் விழிஞ்ஞம் கடலோர காவல் குழும போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>அந்த இருவரும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>2030 காமன்வெல்த் போட்டிகளுக்காக உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் தயாராகும் அகமதாபாத் - குஜராத் துணை முதல்வர்</title><link>https://www.maalaimalar.com/news/national/ahmedabad-is-preparing-world-class-infrastructure-for-2030-cwg-gujarat-deputy-cm-harsh-sanghavi</link><comments>https://www.maalaimalar.com/news/national/ahmedabad-is-preparing-world-class-infrastructure-for-2030-cwg-gujarat-deputy-cm-harsh-sanghavi#comments</comments><guid isPermaLink="false">a580956a-ca57-4e12-9690-c9687404e6ce</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:26:52 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:26:52.116Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ahmedabad,காமன்வெல்த் போட்டிகள்,CWG 2030,Harsh Sanghavi,ஆமதாபாத்,ஹர்ஷ் சங்கவி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/0bnr1uey/Harsh-Sanghavi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Harsh Sanghavi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/0bnr1uey/Harsh-Sanghavi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விளையாட்டு மேம்பாட்டிற்காக பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> தொடர்ந்து மேற்கொண்டு வரும் உந்துதலைப் பாராட்டிய குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் மீதான அரசின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக கூறினார். </p><p>மேலும், கிளாஸ்கோ <a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்று வரும் வேளையில், நாட்டின் விளையாட்டு சூழலை வலுப்படுத்த மத்திய அரசு விளையாட்டுக்கான பட்ஜெட்டை எட்டு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>பிரதமருக்கு நன்றி:</h2><p>"பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். ஒருபுறம், 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நமது நாட்டின் வீரர்கள் பதக்கங்களுக்கு மேல் பதக்கங்களை வென்று வந்தனர். மறுபுறம், பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களுக்கான பட்ஜெட்டை எட்டு மடங்கு அதிகரித்துள்ளார். இது அவரது அர்ப்பணிப்பை தெளிவாகக் காட்டுகிறது," என்று ஹர்ஷ் சங்கவி கூறினார்.</p><p>2030-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்காக அகமதாபாத் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பை வேகமாக உருவாக்கி வருவதாகவும், இந்த வசதிகள் குஜராத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்து வரும் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கும் பயனளிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.</p><h2>சர்வதேச தரம்:</h2><p>இதுகுறித்து பேசிய அவர், "இந்திய இளைஞர்கள் அனைவரின் கனவுகளையும் நனவாக்கும் வகையில், உலகத் தரம் வாய்ந்த, சர்வதேச தரத்திலான விளையாட்டு உள்கட்டமைப்பை அகமதாபாத் முழுமையாக தயார் செய்து வருகிறது. இந்த உள்கட்டமைப்பு அகமதாபாத் அல்லது குஜராத் மாநிலத்திற்குள் மட்டும் கட்டுப்படுத்தப்படாது. நாடு முழுவதிலும் இருந்து ஒவ்வொரு இளம் விளையாட்டு வீரரும் தங்கள் கனவுகளை அடைய அகமதாபாத்தை தங்கள் இல்லமாகக் கருதலாம்," என்று சங்கவி கூறினார்.</p><p>2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை அகமதாபாத்தில் நடத்துவதற்கு இந்தியா தயாராகி வரும் வேளையில் அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இப்போட்டிகளின் நூற்றாண்டு பதிப்பிற்காக, சர்வதேச தரத்திற்கு இணையான விளையாட்டு அரங்குகள் மற்றும் விளையாட்டு வீரர்களை மையமாக கொண்ட வசதிகளை உருவாக்கும் பணிகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.</p><p>பல்வேறு பிரிவுகளில் இந்தியா தனது மிகச்சிறந்த செயல்பாடுகளில் ஒன்றை வெளிப்படுத்திய கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் போது, ​​குஜராத் துணை முதலமைச்சர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><h2>உறுதியான பாரம்பரியம்:</h2><p>2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை அகமதாபாத் நடத்த இருக்கிறது. குஜராத் அரசு, இந்த நகரத்தை ஒரு உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு தலமாக நிலைநிறுத்தி வருகிறது. இந்த போட்டிகளுக்காக உருவாக்கப்பட்டு வரும் உள்கட்டமைப்பானது, சர்வதேச தரத்திற்கு இணையாக இருக்கும்.</p><p>உயர் செயல்திறன் பயிற்சி வசதிகள மற்றும் விளையாட்டு அரங்கங்களை உருவாக்குவதன் மூலம் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு நீடித்த பலன்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது, இந்த பல்நோக்கு விளையாட்டு நிகழ்வுக்கு பிறகும் நீடித்து நிலைக்கும் ஒரு பாரம்பரியத்தை உறுதி செய்கிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியர்கள் அதிக நேரத்தை செலவிடும் செயலி - ஆய்வில் புதிய தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/indians-spend-most-time-app</link><comments>https://www.maalaimalar.com/news/national/indians-spend-most-time-app#comments</comments><guid isPermaLink="false">23f48111-dc1c-4c00-9d6a-6670a2e1336f</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:25:33 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:25:33.884Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>YouTube,Instagram,indians,smartphone,CELLPHONES,செல்போன்,இந்தியர்கள்,இன்ஸ்டாகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/r8blba5o/socialmedia.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/r8blba5o/socialmedia.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்தியர்கள் எந்தெந்த செயலிகளில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்? என்பது குறித்த ஆய்வில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.</strong></em></p><h2>செயலிகள்</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">செல்போன்</a> உலகில் இன்று அனைவரும் மூழ்கிப் போய்த்தான் கிடக்கிறோம். இதில் யாரும் மாற்று கருத்தை சொல்ல முடியாது. ஒருவர் வீட்டில் இருந்து வெளியில் புறப்படுவதற்கு முன்பு எந்த பொருளை எடுக்க மறக்கிறாரோ? இல்லையோ? முதலில் கையில் எடுப்பது செல்போனாகத்தான் இருக்கும். அந்தவகையில் நம்முடைய அன்றாட வாழ்வில் முக்கிய அங்கமாகவே அது மாறிவிட்டது.</p> <h2>ஸ்மார்ட்போன்</h2><p>இந்த நிலையில் இந்தியாவில் '<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">ஸ்மார்ட்போன்</a>' பயன்படுத்தும் பயனாளர்கள் எந்த செயலியில் (அப்ளி கேஷன்ஸ்) அதிக நேரம் செலவிடுகிறார்கள்? என்பது குறித்து 'பேங்க் ஆப் அமெரிக்காவின்' நிதிச் சந்தை ஆராய்ச்சி பிரிவு ஆய்வு நடத்தியுள்ளது. அதில் ஒரு மாதத்தில் எவ்வளவு நேரம் அந்த செயலிகளில் நேரத்தை செலவிடுகிறார்கள் என்ற புள்ளிவிவரங்களுடன் ஆய்வை வெளியிட்டுள்ளது.</p> <h2>சமூக வலைதளங்கள்</h2><p>அதில், ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இந்தியர்கள் சராசரியாக இன்ஸ்டாகிராம் செயலிக்கு 49 மணி நேரம் 42 நிமிடமும், யூ-டியூப் செயலிக்கு 47 மணி நேரம் 23 நிமிடமும் செலவிடுகிறார்கள். அதாவது நாளொன்றுக்கு சுமார் 16 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்துகிறார்கள். அதற்கடுத்தபடியாக முகநூலில் 24 மணி நேரம் 45 நிமிடமும், 'எக்ஸ்' தளத்தில் 13 மணி நேரம் 30 நிமிடமும் கழிக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>சமூக வலைத்தளங்களை தவிர, ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு (பிரீ பயர்) இளைஞர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதற்கு மட்டும் மாதத்துக்கு 41 மணி நேரம் 12 நிமிடம் செலவிடுகிறார்கள். இதேபோல், லுடோ கிங், கேரம் ஆகிய கேமிங் செயலிகளுக்கு முறையே சுமார் 13 மணி நேரம் செலவு செய்கிறார்கள்.</p> <h2>வாட்ஸ்-அப்...</h2><p>சமூக வலைத்தளங்கள். கேமிங் செயலிகளை போல, ஓ.டி.டி தளங்களிலும் நீண்ட நேரம் நேரத்தை செலவிடுகிறார்கள். அதில் பிரபல நிறுவனங்களின் ஓ.டி.டி. தளங்களை அதிகபட்சமாக மாதத்துக்கு இந்தியர்கள் சராசரியாக 10 மணி நேரம் முதல் 22 மணி நேரம் வரை பயன்படுத்துகிறார்கள்.</p><p>இதுதவிர வாட்ஸ்-அப் செயலியில் மாதத்துக்கு 18 மணி நேரம் 49 நிமிடம் சராசரியாக இந்தியர்கள் செலவிடுவதும் இந்த புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.</p> <p>இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணங்கள் குறைவாக இருப்பதும், மலிவான ஸ்மார்ட்போன்கள் பரவலாக கிடைப்பதும் மக்கள் தங்களின் பெரும்பகுதி நேரத்தை பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் சமூக வலைத்தளங்களில் செலவிட வழிவகுத்துள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் அசுர வளர்ச்சியை காட்டுவதாக சொல்லப்பட்டிருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>வங்கிக்கடன் வட்டியில் மாற்றம் வருமா? - ரிசர்வ் வங்கி இன்று முதல் ஆலோசனை </title><link>https://www.maalaimalar.com/news/national/reserve-bank-begins-consultations-today-will-there-be-a-change-in-bank-loan-interest-rates</link><comments>https://www.maalaimalar.com/news/national/reserve-bank-begins-consultations-today-will-there-be-a-change-in-bank-loan-interest-rates#comments</comments><guid isPermaLink="false">bc800ef4-79c0-4fe5-9835-8db109fe38c2</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:15:33 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:15:33.093Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,ரெப்போ வட்டி,Repo,ரிசர்வ் வங்கி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/fma9yx71/RBI.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரிசர்வ் வங்கி]]></media:title><media:description type="html"><![CDATA[ ரிசர்வ் வங்கி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/fma9yx71/RBI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது. இந்த தடவை, வங்கிக்கடன் வட்டி விகிதம் மாற்றம் வருமா என்பது 5-ந்தேதி தெரியும்.</aside><h2><strong>3 நாட்கள் ஆலோசனை</strong></h2><p>வங்கிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">ரிசர்வ் வங்கி</a> வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 'ரெப்போ ரேட்' என்று அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் தீர்மானிக்கின்றன.</p><p>2 மாதங்களுக்கு ஒருதடவை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, ரெப்போ ரேட்டை மாற்றியமைப்பது பற்றி ஆலோசனை நடத்துவது வழக்கம். அதுபோல், இம்முறைக்கான இக்கூட்டம் இன்று மும்பையில் தொடங்குகிறது. 5-ந்தேதி வரை ஆலோசனை நடைபெறுகிறது.</p><h2><strong>மாற்றம் இருக்காது</strong></h2><p>ரெப்போ ரேட்டை மாற்றியமைப்பது பற்றி முடிவு செய்து, 5-ந் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பார். ரெப்போ ரேட் மாற்றப்படுமா என்பது குறித்து 10 பொருளாதார நிபுணர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், பெரும்பாலான நிபுணர்கள், ரிசர்வ் வங்கி, தற்போதைய வங்கிக்கடன் வட்டியான 5.25 சதவீதத்தில் மாற்றம் செய்யாது என்று கருத்து தெரிவித்தனர்.</p><p>அவர்கள் கூறியதாவது:-</p><p>மேற்கு ஆசிய பதற்றம் காரணமாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. பருவமழையும் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது.</p><h2><strong>காரணம் என்ன?</strong></h2><p>இருப்பினும், <a href="https://www.maalaimalar.com/news/national/plastic-rupee-notes-to-be-introduced-soon-in-india-union-government-approves-rbi-proposal">ரிசர்வ் வங்கி</a> 'காத்திருந்து பார்க்கும்' அணுகுமுறையை பின்பற்றும் என்று எதிர்பார்க்கிறோம். பண வீக்கம் தீங்கற்ற நிலையில்தான் இருக்கிறது. எனவே தற்போதைய நிலையே தொடர வாய்ப்புள்ளது.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர். </p><p>கடந்த ஆண்டு பல தவணைகளாக ‘ரெப்போ ரேட்’ 1.5 சதவீதம் குறைக்கப்பட்டது. தற்போது 5.25 சதவீதமாக உள்ளது. இதே வட்டிவிகிதம் மாற்றமின்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட்: காவல் துறையுடனான மோதலில் குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர் சுட்டுக் கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/man-accused-of-criminal-activities-shot-dead-in-police-encounter-in-jharkhand</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-accused-of-criminal-activities-shot-dead-in-police-encounter-in-jharkhand#comments</comments><guid isPermaLink="false">10b634db-5e07-4fbc-9d7f-b8999339a93e</guid><pubDate>Mon, 03 Aug 2026 01:55:59 +0000</pubDate><atom:updated>2026-08-03T01:55:59.691Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜார்கண்ட்,Jharkhand,என்கவுண்டர்,police encounter</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/vxvqeo1e/Jamtara-SP-Shambhi-Kumar-Singh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/vxvqeo1e/Jamtara-SP-Shambhi-Kumar-Singh.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சாஹிப்கஞ்ச் சிறையில் இருந்து தன்பாத் சிறைக்கு மாற்றப்பட்டு கொண்டிருந்தபோது, ​​ஜம்தாரா மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை நடைபெற்ற போலீஸ் மோதலில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சுஜித் சின்ஹா ​​கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/jharkhand">ஜார்க்கண்ட்</a> காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p><p>இதுகுறித்து காவல் துறையினர் அளித்த தகவலின்படி, கைதிகளை ஏற்றி சென்ற வாகனம் பயணத்தின்போது விபத்துக்குள்ளானதை தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து நடந்த மோதலில் சின்ஹா ​​கொல்லப்பட்டார்.</p><h2>தீவிர விசாரணை:</h2><p>மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்; அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடயவியல் குழுவும் வரவழைக்கப்பட்டது. அதேவேளையில், அனைத்து சட்ட மற்றும் நடைமுறை விதிமுறைகளும் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் ஒரு மாஜிஸ்திரேட் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.</p><p>இந்த மோதலுக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் முழு வரிசையையும் கண்டறிய விசாரணையும் தடயவியல் ஆய்வும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>காவல் துறை விளக்கம்:</h2><p>இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜம்தாரா மாவட்டகாவல் கண்காணிப்பாளர் (SP) ஷாம்பி குமார் சிங், "சுஜித் சின்ஹா ​​சாஹிப்கஞ்ச் சிறையில் இருந்து தன்பாத் சிறைக்கு மாற்றப்பட்டு கொண்டிருந்தார். பயணத்தின்போது வாகனம் விபத்துக்குள்ளானது.</p><p>அதைத் தொடர்ந்து போலீஸ் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாங்கள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். தடயவியல் குழு வரவழைக்கப்பட்டுள்ளது, மேலும் மாஜிஸ்திரேட்டும் சம்பவ இடத்தில் உள்ளார்," என்று கூறினார்.</p><h2>தடயவியல் ஆய்வு:</h2><p>தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) வழிகாட்டுதல்களின்படி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்படும் தடயவியல் ஆய்வு மோதல் தொடர்பான துல்லியமான சூழலை தீர்மானிக்க உதவும் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.</p><p>"நாங்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக பின்பற்றி வருகிறோம். மாஜிஸ்திரேட் முன்னிலையில் சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்படும் முழுமையான ஆய்வு, மீதமுள்ள அம்சங்களை தெளிவுபடுத்த உதவும்," என்று காவல் கண்காணிப்பாளர் மேலும் கூறினார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அடுத்தகட்ட நகர்வு.. ஆகஸ்ட் 5 அறிவிக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி 
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-fallout-dharmendra-pradhan-quits-cjb-to-decide-next-political-moves</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-fallout-dharmendra-pradhan-quits-cjb-to-decide-next-political-moves#comments</comments><guid isPermaLink="false">360fd072-3fb0-4fe1-b7e6-33faca764e78</guid><pubDate>Sun, 02 Aug 2026 23:51:18 +0000</pubDate><atom:updated>2026-08-02T23:51:18.147Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party,CJP Protest,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/9weqp9ql/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கரப்பான்பூச்சி ஜனதா கட்சி 
]]></media:title><media:description type="html"><![CDATA[ கரப்பான்பூச்சி ஜனதா கட்சி 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/9weqp9ql/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான், கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கடந்த ஜூன் 20 முதல் 1 மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது. </p><p>இதன் விளைவாக கடந்த வாரம் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் தேர்வு முறைகேடுகளை தடுக்க சிறப்பு மசோதா, விரைவு நீதிமன்றங்கள், உயர்மட்ட குழு உள்ளிட்ட அறிவிப்புகளை பல மாத மௌனத்தை கலைத்து பிரதமர் மோடி அடுத்தடுத்து வெளியிட்டார். </p><p>இந்த போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்த சிஜேபி கட்சி தனது அடுத்த செயல்திட்டத்தை குறித்து முடிவெடுக்க உள்ளது. </p><p>போராட்டத்திற்குப் பிறகு, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.</p> <p>இந்நிலையில் மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் சிஜேபி நிறுவனர் <a href="https://www.maalaimalar.com/news/national/trouble-for-the-cockroach-party-founder-where-did-the-money-for-us-studies-come-from-new-petition-seeks-rti-inquiry">அபிஜித் தீப்கே</a> வீட்டில், முக்கிய நிர்வாகிகள் வரும் ஆகஸ்ட் 5 அன்று இதுகுறித்து ஆலோசிக்க கூடுகின்றனர்.</p><h2>ஆலோசனை </h2><p>நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் மற்றும் தொண்டர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, ஆகஸ்ட் 5 ஆலோசனைக் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>இதில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>ஆகஸ்ட் 5 அன்று நடைபெறும் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்துத் தங்களது அடுத்தகட்ட முடிவுகளை சிஜேபி அறிவிக்கவுள்ளது.</p><p>இதனிடையே, தனது இல்லத்தில் அப்பகுதி மாணவர்களை சந்தித்த அபிஜித் தீப்கே நேற்று நண்பர்கள் தினத்தை கொண்டாடினார்.</p> <h2>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</h2><p>உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேலையற்ற இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என அழைத்தன் எதிர்வினையாக இணையத்தில் தொடங்கப்பட்ட சிஜேபி இயக்கத்துக்கு இளைஞர்களும் மற்றும் ஜென் இசட் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது. </p><p>தொடர்ந்து நாட்டில் நடைபெற்ற நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளை கையில் எடுத்த சிஜேபி தெருக்களுக்கு வந்தது. கல்வியாளர் சோனம் வாங்சுக் இப்போராட்டத்தில் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது சிஜேபி வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தது. </p><p>தங்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் நோக்கம் இல்லை என அதன் நிர்வாகிகள் முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>எம்.பி. பப்பு யாதவ் மீது செய்தியாளர் சந்திப்பில் காலணி வீச்சு.. குற்றவாளியிடம் இருந்து கத்தி பறிமுதல்  </title><link>https://www.maalaimalar.com/news/national/ayodhya-donation-row-independent-mp-pappu-yadav-faces-shoe-attack-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/ayodhya-donation-row-independent-mp-pappu-yadav-faces-shoe-attack-in-delhi#comments</comments><guid isPermaLink="false">82d58c46-6971-4cce-8245-6c019dedc16c</guid><pubDate>Sun, 02 Aug 2026 17:03:56 +0000</pubDate><atom:updated>2026-08-02T17:03:56.263Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பப்பு யாதவ்,டெல்லி,அயோத்தி ராமர் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xazqname/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பப்பு யாதவ், அமித் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பப்பு யாதவ், அமித் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xazqname/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநிலத்தை சேர்ந்த சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டை விமர்சிக்கும் விதமாக கடந்த பாராளுமன்ற கூட்டத்தின்போது சாமியார் வேடத்தில் உண்டியலுடன் வந்திருந்தார். </p><p>அவருடன், நன்கொடை திருட்டை கண்டித்து எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற வளாகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national/pappu-yadav-stages-unique-protest-in-parliament-over-ram-temple-donation-row">நூதன போராட்டம் </a>நடத்தின. </p> <h2>காலணி வீச்சு</h2><p>இதற்காக பப்பு யாதவ், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பப்பு யாதவ் சனாதன தர்மத்தை அவமதித்ததாக கண்டனம் எழுந்தது.</p><p>இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது பப்பு யாதவ் மீது நபர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>தாக்குதல் நடத்திய நபர் உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரைச் சேர்ந்த சுமித் என கண்டறியப்பட்டது. அவர் அங்கிருந்தவர்களால் உடனடியாக பிடிக்கப்பட்டு டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.</p><p>தாக்குதல் நடத்தியவர் தன்னைக் கத்தியால் குத்திக் கொல்லத் திட்டமிட்டு வந்ததாகப் பப்பு யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>அமித் இடம் இருந்த கத்தி கைப்பற்றப்பட்டு காவல்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.</p> <h2>குற்றச்சாட்டு</h2><p>பப்பு யாதவுக்குத் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் இருந்தும், டெல்லி காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், தாக்குதலின் போது மெத்தனமாகச் செயல்பட்டதாகவு காங்கிரஸ் தலைவர் பவன் கேரா ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறை, தாக்குதலின் பின்னணி குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <h2>ராமர் கோவில் திருட்டு </h2><p>உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம், தங்கம் உள்ளிட்டவை கோடிக்கணக்கில் சுருட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.</p><p>விசாரணையில் அங்குள்ள ஊழியர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 77 லட்சம் ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டது.</p><p>இந்த முறைகேடுகளுக்கு தார்மிக பொறுப்பேற்று, ராம ஜென்ம பூமி ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த சம்பத் ராயிடமும், போலீசார் விசாரணை நடத்தினர்.</p><p>ராமர் கோவில் நன்கொடை திருட்டுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>போதைப் பொருள் பயன்படுத்துவதில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் - விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/national/youth-must-stay-away-from-drug-abuse-pm-modi-speaks-after-launching-an-awareness-campaign</link><comments>https://www.maalaimalar.com/news/national/youth-must-stay-away-from-drug-abuse-pm-modi-speaks-after-launching-an-awareness-campaign#comments</comments><guid isPermaLink="false">d7a6d022-ef40-4741-aeba-d24dde13a7ec</guid><pubDate>Sun, 02 Aug 2026 16:05:26 +0000</pubDate><atom:updated>2026-08-02T16:05:26.127Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,Drug-Free Youth,போதைப்பொருள் இல்லாத இளையோர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xd9f9wlu/New-Project-2026-08-02T213222.327.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போதைப் பொருள் பயன்படுத்துவதில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் - விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xd9f9wlu/New-Project-2026-08-02T213222.327.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான போதைப் பொருள் இல்லாத இளைஞர் விழிப்புணர்வு இயக்கத்தை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. </p><h2>பிரதமர் மோடி</h2><p>அதன்படி போதைப் பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கம் என்ற திட்டத்தை பிரதமர் மோடி இன்று காலை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.  </p><p>போதைப் பொருட்கள் புழக்கம் இல்லாத இந்தியா என்ற இலக்கை முன்நிறுத்தி நாடு முழுவதும் விழிப்பு ணர்வு ஏற்படுத்த இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. போதையின் பிடியில் சிக்கிய இளைஞர்களை மீட்பதுடன், அதில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த விழிப்புணர்வு  செய்யப்படுகிறது.</p><h2>100 வாரங்கள்</h2><p>பள்ளி, கல்லூரிகள்,  பல்கலைக் கழகங்கள், தன்னார்வலர்கள் போன்ற 125-க்கும் மேற்பட்ட அமைப்புகளை இணைத்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், வீதி நாடகங்கள் மூலமும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.</p><p>நாடு முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் ஒரே நேரத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகின்றன. இதில் 1 கோடிக்கு அதிகமான இளைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த உறுதிமொழி இயக்கம் 100 வாரங்களுக்கு தொடரும் மக்கள் இயக்கமாகும். </p><p>இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகள், நடைபயணங்கள் நடத்தப்படும். </p><p>போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள் இயக்கத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-</p><h2>விலகி இருக்க வேண்டும்</h2><p>இன்று நாம் காணும் இந்த இயக்கம் தனிநபர் மற்றும் சமூகத்திற்கானது. எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டிற்கானது. அடுத்த 100 ஞாயிற்றுக்கிழமைகளும் போதை பொருள் இல்லாத இந்தியாவை நோக்கிய வலுவான நடவடிக்கைகளாக அமையும்.</p><p>வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய இளைஞர்கள் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும். நாட்டு மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட இந்த இயக்கத்துடன் 125-க்கும் மேற்பட்ட ஆன்மீக அமைப்புகள் எங்களுடன் இணைந்து உள்ளன.</p><h2>உறுதிமொழி</h2><p>போதைப்பொருள் இல்லா இளைஞர்களுக்கான இயக்கம் இன்று நாடு முழுவதும் தொடங்கப்படுகிறது. கூட்டு நடவடிக்கையில் அளப்பறிய ஆற்றல் உள்ளது. இந்த இயக்கம் ஒவ்வொரு இளைஞர்களின் மனதை சென்றடைய உள்ளது.</p><p>நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போதைப் பொருட்களில் இருந்து விலகி இருப்பதற்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இன்று எடுக்கப்பட்ட இந்த உறுதி மொழி அடுத்த 100 வாரங்களுக்கு  தொடர்ந்து உறுதியுடன் முன்னெடுத்து செல்லப்படும்.</p><h2>லட்சியங்கள் பாதிப்பு</h2><p>போதைப் பொருள் பயன்பாடு கவனத்தை சிதறடித்து, உங்களை உங்கள் கனவு களில் இருந்து விலக்குகிறது. ஒரு இளைஞன் போதை பொருளுக்கு அடிமையா னால் அவனது லட்சியங்கள் பாதிக்கப்படுகின்றன. குடும்பங்கள் சிதைகிறது. </p><p>போதைப் பொருட்கள் விநியோகிப்பதன் மூலம் இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது எதிரி நாடுகளின் பயங்கரவாத திட்டத்தின் ஒரு பகுதியாகும்.” </p><p>இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த விளையாட்டுப் பொருளை விழுங்கி 5 வயது சிறுவன் பரிதாப பலி!</title><link>https://www.maalaimalar.com/news/national/five-year-old-boy-chokes-on-free-toy-in-chips-packet-mysuru</link><comments>https://www.maalaimalar.com/news/national/five-year-old-boy-chokes-on-free-toy-in-chips-packet-mysuru#comments</comments><guid isPermaLink="false">70a011d1-f71e-49bd-88be-7ee8fd14bfbc</guid><pubDate>Sun, 02 Aug 2026 12:06:44 +0000</pubDate><atom:updated>2026-08-02T12:06:44.523Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,Child safety,ChokingHazard,HunsurPolice,ChipsPacket Toy,குழந்தை பாதுகாப்பு,Karnataka Tragedy</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/vszcxdxn/Karnataka-Choking-Hazard" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karnataka Choking Hazard ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/vszcxdxn/Karnataka-Choking-Hazard?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில், சிப்ஸ் பாக்கெட்டுக்குள் பரிசாகக் கிடைத்த சிறிய பிளாஸ்டிக் பொம்மை பந்தை விளையாட்டாக வாயில் போட்ட 5 வயது சிறுவன், அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>விளையாட்டாக தொடங்கிய விபரீதம்:</strong></h2><p> மைசூரு மாவட்டம் ஹுன்சூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த சிறுவன் முகுந்த் மயூர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>சிறுவன் முன்னாள் கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் கௌரம்மா - சங்கர் நாயக் தம்பதியின் பேரனும், சந்தோஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் ஒரே மகனும் ஆவார்.</p><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, சிறுவன் கடையில் வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டைத் திறந்து சாப்பிட்டுள்ளார். அப்போது அந்தப் பாக்கெட்டுக்குள் குழந்தைகளுக்குப் பரிசாக வழங்கப்படும் சிறிய அளவிலான பிளாஸ்டிக் பந்து ஒன்று இருந்துள்ளது. </p><p>அதை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், எதிர்பாராதவிதமாக அந்தப் பந்தை வாயில் போட்டு விழுங்கியதாகக் கூறப்படுகிறது.</p><h2>தொண்டையில் சிக்கிய பந்து:</h2><p>சிறுவன் விழுங்கிய அந்தப் பிளாஸ்டிக் பந்து அவரது தொண்டைப் பகுதியில் பலமாகச் சிக்கிக் கொண்டது. இதனால் சிறுவனுக்குக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. </p><p>உடனே பதறிப்போன குடும்பத்தினர் சிக்கிய சிறு பந்தை எடுக்க முயன்றும், துரதிர்ஷ்டவசமாகச் சிறுவன் மூச்சுதிணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். </p><p>இச்சம்பவம் குறித்து ஹுன்சூர் ஊரகக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>தொடரும் சோகங்கள்: </h2><p>மைசூருவின் ஹுன்சூர் பகுதியில் இதுபோன்ற அஜாக்கிரதை மற்றும் எதிர்பாராத விபத்துகளால் குழந்தைகள் உயிரிழப்பது இது முதல் முறையல்ல. </p><p>கடந்த மார்ச் மாதம், இதே தாலுகாவில் உள்ள தொட்டஹெஜ்ஜூர் கிராமத்தில் 6 மாதக் குழந்தை ஒன்று பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த காய்ந்த செம்பருத்திப் பூவை விழுங்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>சின்மய் கவுடா என்ற அந்த ஆண் குழந்தை, தனது மூத்த சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வாசலில் இருந்த காய்ந்த பூவை வாயில் வைத்துள்ளது. </p><p>அதை மூத்த சகோதரன் பிடுங்க முயன்றபோது குழந்தை அதை அவசரமாக விழுங்கியதால், தொண்டையில் சிக்கிச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.</p><h2>சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை:</h2><p>திருமணங்கள், விழாக்கள் மற்றும் பலகாரப் பாக்கெட்டுகளில் வரும் சிறிய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் விளையாட்டுப் பொம்மைகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது பெற்றோர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>“காவிரி விவகாரத்தில் மேகதாது திட்டம்தான் ஒரே தீர்வு” - டி.கே. சிவகுமார்</title><link>https://www.maalaimalar.com/news/national/the-mekedatu-project-is-the-only-solution-to-the-cauvery-issue-dk-shivakumar</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-mekedatu-project-is-the-only-solution-to-the-cauvery-issue-dk-shivakumar#comments</comments><guid isPermaLink="false">c346bcf6-d647-4734-83c9-3489fcd73b76</guid><pubDate>Sun, 02 Aug 2026 11:00:23 +0000</pubDate><atom:updated>2026-08-02T11:00:23.637Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DK Shivakumar,டி.கே.சிவகுமார்,Mekedatu project,Cauvery Issue,மேகதாது திட்டம்,காவேரி விவகாரம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/dgnnrjgk/New-Project-2026-08-02T160900.711.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “காவிரி விவகாரத்தில் மேகதாது திட்டம்தான் ஒரேத் தீர்வு” - டி.கே. சிவகுமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/dgnnrjgk/New-Project-2026-08-02T160900.711.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே இருக்கும் தண்ணீர் பிரச்னைக்கு மேகதாது திட்டம்தான் ஒரே நிரந்தர தீர்வு என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். </p><p>அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பின் பேசிய அவர்.,</p><p>“எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகப் பயணத்தை ஒத்திவைத்துள்ளார். இந்தப் பிரச்னையைத் தீர்க்க நாம் அனைவரும் முழு ஒத்துழைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் அரசின் நிலைப்பாடாகும். </p><p>எங்கள் அமைச்சர்கள் அனைவரும் ஏற்கனவே தங்கள் பொறுப்பிலுள்ள மாவட்டங்களுக்குச் சென்று கள நிலவரத்தை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். அடுத்தடுத்த நாட்களை தொடர்ந்து விவசாயிகளை சந்தித்துப் பேசி கிராமங்களில் உள்ள யதார்த்த நிலைகுறித்து அறிக்கை சமர்பிப்பார்கள். </p><p>அதன் பிறகு, வருவாய்த்துறை அமைச்சர் தொழில்நுட்ப அம்சங்கள், அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் இந்திய அரசின் விதிமுறைகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு நிலைமையை மதிப்பீடு செய்வார். அந்த மதிப்பீட்டின் அடிப்படையில், அரசு தனது முடிவுகளையும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் அறிவிக்கும்.</p><p>பிரச்னைகளுக்கு மேகதாது திட்டம்தான் ஒரு நிரந்தரத் தீர்வு. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தனது தீர்ப்பை வழங்கிவிட்டது, மத்திய அரசும் தனது பதிலை அளித்துள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, நாம் இனியும் நேரத்தை வீணாக்காமல் அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.</p><p>இது தமிழ்நாட்டிற்கு அதிகம் கிடைப்பதோ அல்லது கர்நாடகாவிற்கு குறைவாகக் கிடைப்பதை பற்றியது அல்ல. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, சுமூகமான முறையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.</p><p>இம்முயற்சியில் அனைவரின் ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>கரப்பான்பூச்சி கட்சி நிறுவனருக்கு சிக்கல்... அமெரிக்காவில் படிக்க பணம் ஏது? விசாரணைக்கோரும் புதிய மனு!</title><link>https://www.maalaimalar.com/news/national/trouble-for-the-cockroach-party-founder-where-did-the-money-for-us-studies-come-from-new-petition-seeks-rti-inquiry</link><comments>https://www.maalaimalar.com/news/national/trouble-for-the-cockroach-party-founder-where-did-the-money-for-us-studies-come-from-new-petition-seeks-rti-inquiry#comments</comments><guid isPermaLink="false">a65a2d7b-2890-41c6-a51b-1230c68f4e1b</guid><pubDate>Sun, 02 Aug 2026 10:00:05 +0000</pubDate><atom:updated>2026-08-02T10:00:05.778Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>abhijeet dipke,அபிஜீத் தீப்கே,RTI activist,ஆர்டிஐ ஆர்வலர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/e1l2dodo/New-Project-2026-08-02T145807.377.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரப்பான்பூச்சி கட்சி நிறுவனருக்கு சிக்கல்... அமெரிக்காவில் படிக்க பணம் ஏது? ஆர்டிஐ விசாரணைக்கோரும் புதிய மனு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/e1l2dodo/New-Project-2026-08-02T145807.377.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவின் அமெரிக்க கல்வி செலவு தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி சூரத்தைச் சேர்ந்த அமித் திவாரி என்ற தகவல் அறியும் உரிமை செயற்பாட்டாளர் மனு அளித்துள்ளார்.</p><p>அதாவது அபிஜீத் தீப்கேவின் தந்தை பகவான்ராவ் தீப்கே ஒரு ஓய்வுபெற்ற அரசு ஊழியர். அவர் பணியில் இருந்தபோது அவரது மாதச் சம்பளம் சுமார் ரூ.60,000 முதல் ரூ.65,000 வரை மட்டுமே இருந்திருக்கும். </p><p>அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பதற்கு சராசரி ஆண்டிற்கு ரூ.30  லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ஆகும். அப்படி இருக்கும்போது, அவரால் அமெரிக்காவில் படித்த தன் பிள்ளைகளின் கல்விச் செலவை எப்படி ஏற்க முடிந்தது? இது விசாரிக்கப்பட வேண்டும்.</p><p>வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டிருந்தால் அதுகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என மகாராஷ்டிரா அரசு, வருமான வரித்துறை, இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு அமித் திவாரி மனு எழுதியுள்ளார். </p><p>மேலும் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல், நீட் போராட்டத்தில் ஈடுபட்டு டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நிதி வழங்குவதாக அறிவித்தார். இதுகுறித்தும் விசாரணை நடத்தக் கோரியுள்ளார். </p><p>“கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்பது பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பு, ஆனால் அது ஒரு அரசியல் கட்சியாகச் செயல்பட்டு வருகிறது. சட்டப் பாதுகாப்பு நிதியாக அதற்கு&nbsp;ரூ.1 கோடி கொடுக்கப்பட்டிருந்தால், சிஜேபி 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 29A பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தேர்தல் ஆணையம் சரிபார்க்க வேண்டும்” எனக் கோரியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் மழை தீவிரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மண்ணில் புதைந்து உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-monsoon-intensifies-three-family-members-killed-in-landslide</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-monsoon-intensifies-three-family-members-killed-in-landslide#comments</comments><guid isPermaLink="false">7b99246d-6636-4a84-99e1-c17cac7f44bc</guid><pubDate>Sun, 02 Aug 2026 09:23:56 +0000</pubDate><atom:updated>2026-08-02T09:23:56.052Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,உயிரிழப்பு,Heavy Rain,dead,மழை தீவிரம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/ay2ji1jg/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Heavy rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/ay2ji1jg/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மலை மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. </p><p>இதே போல் கொப்பல் மாவட்டம் கங்காவதி பகுதியிலும் கடந்த2 நாட்களாக இடைவிடாமல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.</p><p>இந்தநிலையில் இன்று அதிகாலை 2.30 மணிளவில் கங்காவதி அடுத்த கொக்கரேகரு என்ற கிராமத்தில் மண்சரிவு ஏற்பட்டு அருகில் இருந்த ஒரு வீட்டின் மீது விழுந்தது.</p><p>இதில் அந்த வீட்டில் இருந்த மல்லிகார்ஜூனா (35), அவரது மனைவி நாகவேணி (28). அவர்களது 3 வயது குழந்தை சந்தோஷ் ஆகியோர் மண்ணில் புதைந்து பலியானார்கள்.</p><p>இதுப்பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையின் அங்கு  விரைந்து சென்று மண்ணில் புதைந்து பலியான 3 பேரின் உடல்களையும் மீட்கும் பணயில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக அணைகளில் 57 டிஎம்சி நீர் உள்ளது: அனைத்து கட்சி கூட்டத்தில் டி.கே. சிவகுமார் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-cm-requests-karnataka-cm-dk-shivakumar-to-release-9-9-tmc-water-in-cauvery</link><comments>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-cm-requests-karnataka-cm-dk-shivakumar-to-release-9-9-tmc-water-in-cauvery#comments</comments><guid isPermaLink="false">1e68608a-6bbc-44a6-b3ff-60b76e22c7d3</guid><pubDate>Sun, 02 Aug 2026 09:21:08 +0000</pubDate><atom:updated>2026-08-02T09:21:08.080Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,DK Shivakumar,டிகே சிவகுமார்,Cauvery Issue,காவேரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/k228rxe9/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/k228rxe9/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.</p><p>கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவகுமாரின் இல்லத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், வீரப்ப மொய்லி (காங்கிரஸ்), சித்தராமையா (காங்கிரஸ்), பி.எஸ். எடியூரப்பா (பாஜக), ஹெச்.டி. குமாரசாமி (மதச்சார்பற்ற ஜனதா தளம்), டி.வி. சதானந்த கௌடா (பாஜக) மற்றும் பசவராஜ் பொம்மை (பாஜக) உள்ளிட்ட ஆறு முன்னாள் முதல்வர்கள் உட்பட, கட்சி வேறுபாடின்றி பல மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.</p><p>கர்நாடகாவில் அணைகள் நிரம்பி வழிகிறது என்றும் நீரை தேக்கி வைப்பது சாத்தியமில்லை என்றும் அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.</p><h3><strong>கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம்</strong></h3><p>மேலும் இந்த கூட்டத்தில் பேசும்போது அவர் கூறியதாவது:-</p><p>பதினைந்து நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி காவிரி நீரை திறந்துவிட காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு உத்தரவிட்டது. அந்த உத்தரவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்தது.</p><p>தற்போது குடகு நல்ல மழையை பெற்றிருக்கிறது. இதையடுத்து அணைகளில் 57 டி.எம்.சி. நீர் உள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிக்க உள்ளது.</p><p>விவசாயிகள் ஏற்கனவே பயிரிட்ட பயிர்களை பாதுகாப்பதற்காக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி கால்வாய்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது.</p><p>கர்நாடகாவில் வெவ்வேறு கட்சிகள் இருந்தாலும், காவிரி நதிநீர் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.</p><p>இந்த முறை வறட்சி ஏற்படும் என ஏற்கனவே மத்திய அரசு எச்சரித்திருந்ததால், அதன்படி குடிநீருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது.</p><p>காவிரி நீர் ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களுக்கு முன்பு, அரசாங்கம் மத்திய அமைச்சர்களையும், மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்புகொண்டது.</p><p>இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு கட்சி வேறுபாடின்றி வந்து அனைவரும் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.</p><p>கிருஷ்ண சாகர் நீர் பிரச்சனையிலும், அனைத்து நிலையிலும் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் சிறந்த ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது இந்தியா-சீனா எல்லை வர்த்தகம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-china-border-trade-resumes-after-6-years</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-china-border-trade-resumes-after-6-years#comments</comments><guid isPermaLink="false">075b5098-17d2-4e8b-b4dd-36cc2d8ac338</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:44:06 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:44:06.998Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,China,சீனா,India-China border trade,இந்தியா-சீனா எல்லை வர்த்தகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/113q7go0/border-trade.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India-China border trade]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/113q7go0/border-trade.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த 'இந்தியா-சீனா' இடையிலான எல்லை வர்த்தகம், சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.</p><h2><strong>நாதுலா மற்றும் ஷிப்கி லா கணவாய்கள்:</strong></h2><p>சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாதுலா கணவாய் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக இரு நாடுகளுக்கு இடையேயான பருவகால எல்லை வர்த்தகம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.</p><h2>ப<strong>ண்டைய பட்டுப் பாதை புத்துயிர்:</strong></h2><p>கடல் மட்டத்திலிருந்து சுமார் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ள நாதுலா கணவாய், பண்டைய பட்டுப் பாதையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வணிகப் பாதையாகத் திகழ்கிறது.</p><h2><strong>அனுமதிக்கப்பட்ட பொருட்கள்:</strong></h2><p>மத்திய வணிக அமைச்சகம் மற்றும் சுங்கத்துறை வரைமுறைப்படுத்தியப் பட்டியலின்படி, கைவினைப் பொருட்கள், கைத்தறி ஆடைகள், பாரம்பரியப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், அரிசி, சர்க்கரை மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட 36 வகைப் பொருட்கள் வர்த்தகத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>பலத்த பாதுகாப்பு:</strong></h2><p>இந்த வர்த்தகப் பாதையில் இந்தோ-திபெத்திய எல்லைப் போலீஸ் படையினர் தீவிர பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். முதல் முறையாக நாதுலா எல்லைப் பகுதியில் ITBP பெண் படைப்பிரிவும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த எல்லை வர்த்தகம் ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நவம்பர் மாதம் வரை மட்டுமே நடைபெறும். வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை வர்த்தகர்கள் எல்லை கடந்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>உள்ளூர் வாழ்வாதாரம் மீட்பு:</strong></h2><p>கடந்த 6 ஆண்டுகளாக வர்த்தகம் முடங்கியதால் வாழ்வாதாரத்தை இழந்த எல்லைப்புறப் பகுதி வர்த்தகர்கள், போக்குவரத்து உரிமையாளர்கள் மற்றும் சிறு தொழிலதிபர்களுக்கு இது பெரிய நிம்மதியை அளித்துள்ளது.</p><h2><strong>இருதரப்பு உறவில் முன்னேற்றம்:</strong></h2><p>எல்லைப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கிலும், இருதரப்புப் பொருளாதார உறவை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.</p><p>1962 இந்திய-சீனப் போருக்குப் பிறகு 44 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த நாதுலா கணவாய் வர்த்தகம், கடந்த 2006-இல் மீண்டும் திறக்கப்பட்டது. பின்னர் 2020-இல் மீண்டும் முடங்கிய நிலையில், தற்போது இரு நாட்டு தூதரகப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவை நேசிப்பவர்கள் ஏன் துபாயில் குடியேற வேண்டும்? - விவேக் ஒபராய் மற்றும் ஆர். மாதவனை விமர்ச்சித்த ராஜ் தாக்கரே!</title><link>https://www.maalaimalar.com/news/national/why-should-people-who-love-india-settle-in-dubai</link><comments>https://www.maalaimalar.com/news/national/why-should-people-who-love-india-settle-in-dubai#comments</comments><guid isPermaLink="false">91cf02fd-598a-40a6-af1d-c5b54b61bca2</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:59:14 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:59:14.586Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஜ் தாக்கரே,Vivek Oberoi,விவேக் ஓபராய்,mns,RajThackeray,R Madhavan,ஆர் மாதவன்,NEETPaperLeak,CJPProtests</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/35s0avra/RajThackeray" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Raj Thackeray  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/35s0avra/RajThackeray?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியா மிகச்சிறப்பாக வளர்ந்து வருவதாகப் புகழும் நடிகர்கள் விவேக் ஒபராய்மற்றும் ஆர். மாதவன் ஆகியோர், ஏன் இந்தியாவை விட்டுவிட்டு துபாயில் குடியேறியுள்ளனர் என்று மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற MNS கட்சியின் மாணவர் பிரிவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராஜ் தாக்கரே, மத்திய பாஜக அரசின் கொள்கைகளையும், நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையையும் கடுமையாக விமர்சித்தார்.</p><h2>துபாயில் குடியேறியது ஏன்?</h2><p>கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "2019 ஆண்டு மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் மோடியாக நடித்த நடிகர் விவேக் ஒபராய், இப்போது துபாயில் வசிக்கச் சென்றுவிட்டார். அதேபோல் பிரதமர் மோடியைப் பாராட்டிப் பேசும் நடிகர் ஆர். மாதவனும் துபாயில்தான் தன் குடும்பத்துடன் வாழ்கிறார். </p><p>பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசாக்குகிறார் என்றும், இங்கு எல்லாம் சிறப்பாக இருக்கிறது என்றும் இவர்கள் நம்பினால், ஏன் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வாழ வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.</p><p>மேலும், இவர்கள் இந்தியாவுக்கு வந்து பிரபலமான திரைப்படங்களில் நடித்துவிட்டு, சம்பாதித்த பணத்துடன் மீண்டும் துபாய்க்கே சென்றுவிடுவதாகக் குற்றம் சாட்டினார். </p><p>நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் ஏற்கனவே தங்கள் தொழில்களை மூடிவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>நடிகர்களின் விளக்கம்?</h2><p>ராஜ் தாக்கரேவின் இந்த விமர்சனங்களுக்கு நடிகர்கள் தரப்பில் ஏற்கனவே காரணங்கள் கூறப்பட்டுள்ளன.</p><p>கோவிட்-19 பொதுமுடக்கக் காலத்தில், தனது மகனின் நீச்சல் விளையாட்டுப் பயிற்சிக்காக துபாய்க்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்ததாக ஆர். மாதவன் குறிப்பிட்டிருந்தார்.</p><p>அங்கு தனது புதிய தொழில் மற்றும் வணிக முயற்சிகளைத் தொடங்குவதற்காகவே துபாயில் குடியேறியதாக விவேக் ஓபராய் தெரிவித்திருந்தனர்.</p><h2>அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு குறித்து பேச்சு</h2><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற 'காக்ரோச் ஜனதா கட்சி' போராட்டங்களில் ஈடுபட்டபோது பிரதமர் மோடிக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட தரம் தாழ்ந்த மொழிகள் தவறானவை என்று ராஜ் தாக்கரே ஒப்புக்கொண்டார்.</p><p>மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி முதல் தாக்கரே குடும்பத்தினர் வரை அனைவரையும் பாஜாகவின் 'டிரோல்'குழுக்கள் மிக மோசமாக விமர்சிப்பதாகக் கூறினார். "எதை விதைக்கிறீர்களோ, அதையே அறுவடை செய்வீர்கள். </p><p>பாஜாகவினர் முதலில் தங்களது ஆதரவாளர்களை மற்றவர்களைப் பற்றி அவதூறாகப் பேசுவதை நிறுத்தச் சொல்ல வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.</p><h2>நீட் தேர்வு விவகாரம்</h2><p>நீட் தேர்வுத் தாள் கசிவு விவகாரம் என்பது மாணவர் போராட்டத்திற்கு ஒரு தூண்டுதல் மட்டுமே என்றும், கடந்த பல ஆண்டுகளாக மக்கள் மனதில் சேர்ந்த ஏமாற்றங்களின் வெளிப்பாடே இந்தப் போராட்டம் என்றும் ராஜ் தாக்கரே தனது உரையில் சுட்டிக்காட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>வந்தே பாரத் ரெயிலில் பறந்து வந்த இதயம்: சாதித்து காட்டிய இந்திய ரெயில்வே</title><link>https://www.maalaimalar.com/news/national/250-km-in-2-hours-donor-heart-races-via-vande-bharat-to-save-life</link><comments>https://www.maalaimalar.com/news/national/250-km-in-2-hours-donor-heart-races-via-vande-bharat-to-save-life#comments</comments><guid isPermaLink="false">9ecbf8d2-bd20-401d-bf95-1e6071e6cdb5</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:37:25 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:37:25.171Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vande Bharat,heart,இதயம்,இந்தியன் ரெயில்வே,வந்தே பாரத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/bowcatk2/train.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vande bharat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/bowcatk2/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உறுப்பு மாற்று சிகிச்சைக்காக தானம் பெறப்பட்ட இதயம் வந்தே பாரத் ரெயில் மூலம் 2 மணி நேரத்தில் 250 கி.மீ தூரம் பயணித்து வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.</p><h2>இதய மாற்று அறுவைச்சிகிச்சை</h2><p>குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத் நகரில் உள்ள யுஎன் மேத்தா இதய​வியல் ஆராய்ச்சி மையத்​தில் நோயாளி ஒரு​வருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்​ட​மிடப்​பட்​டது.</p><p>சூரத் நகரில் உள்ள ஒருவரிடம் இருந்து இதயம் தானமாகப் பெறப்பட்டது. அந்த இதயத்தை சுமார் 250 கிலோமீட்டர் தூரமுள்ள அகம​தா​பாத்​துக்கு வந்தே பாரத் ரெயி​லில் விரை​வாக கொண்டு செல்ல திட்​ட​மிடப்​பட்​டது.</p><p>இதற்காக அகம​தா​பாத் ரெயில் நிலை​யத்​தில் இருந்து மேத்தா இதய​வியல் ஆராய்ச்சி மையத்​துக்கு கொண்டு செல்​ல சிறப்பு வழித்தடம் உரு​வாக்​கப்​பட்​டது.</p><p>இதற்​கான ஏற்​பாடு​களில் மருத்​து​வக் குழு​வினர், ரயில்வே துறை​யினர், ரயில்வே பாது​காப்பு படை போலீசார், குஜ​ராத் போலீ​சார் ஆகியோர் ஈடு​பட்​டனர்.</p><p>இந்த வந்தே பாரத் ரெயில் சூரத் நகரில் இருந்து புறப்​பட்டு அகம​தா​பாத்​துக்கு 2 மணி நேரத்தில் ஜெட் வேகத்தில் வந்தடைந்தது.</p><p>அகமதா​பாத் ரெயில் ​நிலை​யத்​தின் முதல் நடைமேடையி​ல் தானம் பெறப்​பட்ட அந்த இதயம், உடனடி​யாக யுஎன் மேத்தா இதய​வியல் ஆராய்ச்சி மையத்​துக்கு கொண்டு செல்​லப்​பட்டு இதய மாற்று அறுவைச்சிகிச்சை மேற்​கொண்​ட​வருக்கு வெற்​றிகர​மாக பொருத்தப்​பட்​டது.</p><p>வழக்​க​மாக சூரத் நகரில் இருந்து புறப்​படும் வந்தே பாரத் ரெயில் இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகே அகம​தா​பாத் ரெயில் நிலையம் வந்தடை​யும் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>வரலாற்​றுச் சிறப்​புமிக்க நிகழ்​வு</h2><p>இந்​திய ரெயில்வேயின் ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க நிகழ்​வு இது என்றும், இச்​சம்​பவம் சேவை​யின் தனித்​து​வ​மான உதா​ரணம் என்றும் குஜராத் முதல் மந்திரி பூபேந்​திர படேல் தெரி​வித்​துள்​ளார்.</p><p>இது இந்​திய ரெயில்​வேக்கு ஒரு பெருமை மற்​றும் மனநிறைவை அளித்த தருணம். இந்​திய ரெயில்வே வரலாறு படைத்​துள்​ளது. முதல் ​முறை​யாக மும்பை சென்ட்ரல் - ​காந்​திநகர் வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரெயில் தான​மாகப் பெறப்​பட்ட ஒரு இதயத்​தை சூரத்​தில் இருந்து அகம​தா​பாத்​திற்கு வெற்​றிகரமாகக்​ கொண்​டு சேர்த்​துள்​ளது என அகம​தா​பாத் ரயில்வே கோட்ட மேலா​ளர் வேத் பிர​காஷ் எக்ஸ் தளத்​தில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம்: ஹிருத்திக் ரோஷனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா ரனாவத்</title><link>https://www.maalaimalar.com/news/national/eriyum-neruppil-ennai-ootra-ventaam-hrithik-roshankku-pathiladi-kodutha-kangana-ranavath</link><comments>https://www.maalaimalar.com/news/national/eriyum-neruppil-ennai-ootra-ventaam-hrithik-roshankku-pathiladi-kodutha-kangana-ranavath#comments</comments><guid isPermaLink="false">15c2d355-d5fe-4c42-a00f-ef192239b943</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:42:50 +0000</pubDate><atom:updated>2026-08-02T04:42:50.399Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kangana Ranaut,கங்கனா ரனாவத்,hrithik roshan,ஹிரித்திக் ரோஷன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/w09oql5i/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Kangana Ranaut slams Hrithik Roshan: warns him not to fuel ongoing social media fire]]></media:title><media:description type="html"><![CDATA[ Kangana Ranaut slams Hrithik Roshan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/w09oql5i/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூக வலைத்தளத்தில் பழைய விவகாரங்களை குறித்து பதிவிடுவதற்கு கண்டனம் தெரிவிக்காததற்காக ஹிருத்திக் ரோஷன் மீது கங்கனா ரனாவத் சாடியுள்ளார்.</p><h3><strong>சாரி ஹிருத்திக் ரோஷன் என்ற ஹேஷ்டேக்</strong></h3><p>சாரி ஹிருத்திக் ரோஷன் என்ற டிரெண்டிங் ஹேஷ்டேக்கில் தனக்கு எதிராக மோசமான கருத்துகளுக்கு கண்டனம் தெரிவிக்காமல், ஆமோதிக்கும் வகையில் கருத்து பதிவிடுவது சரியான அல்ல என ஹிருத்திக் ரோஷனுக்கு கங்கனா ரனாவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சராக இருந்து தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. </p><p>போராட்டம் காரணமாக தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினமா செய்தார். இதனால் சிஜேபி தனது போராட்டத்தை முடித்துக் கொண்டது.</p><p>இந்த போராட்டம் தொடர்பாக சிஜேபிக்கு எதிராக பாஜக எம்.பி. கங்கனா ரனாவத், மாணவர்களுக்கு எதிராக கடுமையான வகையில் வார்த்தையை பயன்படுத்தினார். இதனால் அவருக்கும் சிஜேபி கட்சி செய்தி தொடர்பாளருமான சௌரவ் தாஸ் வார்த்தைப்போர் நடைபெற்றது.</p><p>அப்போது, காக்ரோச் ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் செளரவ் தாஸ் கூறுகையில், “என் நண்பர்கள் என்னிடம், நீங்கள் இளம் ஹிருத்திக் ரோஷன் போல இருக்கிறீர்கள்.</p><p> ஒருவேளை அதனால்தான் கங்கனா உங்களைத் தாக்குகிறார், என்று சொன்னார்கள்” என்று ஜோக்கிற்காக கூறியிருந்தார்.</p><p>இதையடுத்து சமூக வலைதளத்தில் ‘சாரி ஹிருத்திக்’ என்ற ஹேஷ்டேக் வைரலானது. அப்போது பலர் கங்கனா ரனாவத்- ஹரிதிக் ரோஷன் இடையில் 2016-ல் நடைபெற்ற மோதலை குறித்து கருத்து தெரிவித்து வந்தனர். </p><h3><strong>ஹிருத்திக் ரோஷன் வேண்டுகோள்</strong></h3><p>இதனால் மக்கள் சமூக ஊடகக் கருத்துக்களைப் பின்பற்ற வேண்டாம் என்று நடிகர் ஹிருத்திக் ரோஷன் கேட்டுக்கொண்டார்.</p><p>இதற்கிடையே பிரெட்டி பேர்டி (Freddy Birdy) என்பவர் உலகம் ஹிரிதிக் ரோஷனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டிருந்தார்.</p><p>அதற்கு ஹிரிதிக் ரோஷன் “என் நண்பரே, உங்களுக்கு 'B'-ஐ இனி பிடிக்கவில்லை என்பதற்காக 'A'-க்கு ஆதரவளிப்பது என்பது, நமது சமூகத்தைப் பீடித்துள்ள ஒரு பெரிய அமைப்பு ரீதியான பிரச்சினையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே.</p><p>அதற்கான சூழல் சரியானதாகவும், உண்மைகளின் அடிப்படையில் அமைந்ததாகவும் இருக்கும் தருணத்திற்காக நான் காத்திருப்பேன். அது நியாயமாக இருக்கும். ஆனால், இப்போது யார்தான் இதைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்?” என்று பதிவிட்டார்.</p><p>தனது பழைய கதை குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப்படுவதற்கு, எதிர்ப்பு தெரிவிக்காமல் அதற்கு கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் ஹரிதிக் ரோஷன் கருத்து பதிவிட்டுள்ளதாக கங்கனா ரனாவாத் சாடியுள்ளார்.</p><h3><strong>கங்கனா ரனாவத் பதிலடி</strong></h3><p>நடிகர் ஹிருத்திக் ரோஷனின் இந்த பதிவிற்கு கங்கனா வெளியிட்ட பதிவில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்திவிட்டு, உங்கள் துணையை சங்கடப்படுத்துவதை நிறுத்துங்கள் என்று கூறினார்.</p><p>இதுகுறித்து கங்கனா தனது பதிவில், “அன்புள்ள ஹிருத்திக், உங்கள் சரியான துணையான சபா ஆசாத்தை நீங்கள் கண்டறிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்களும் அவரும் ஜோடியாக அழகாக இருக்கிறீர்கள். </p><p>மேலும், இதுபோன்ற கருத்துக்கள் மூலம் என்னை சீண்ட வேண்டாம். ஹிருத்திக் ரோஷனின் கருத்துக்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருக்கிறது.</p><p>நீங்கள் ஒரு உறுதியான உறவில் இருக்கிறீர்கள், இப்படி ஒரு பெண்ணைக் கிண்டல் செய்வது உங்களுக்குப் பொருந்தாது. மாறாக, உங்கள் பெயரைப் பயன்படுத்தி என்னைத் துன்புறுத்தி, கொடுமைப்படுத்தும் அனைவரையும் நீங்கள் கண்டிக்க வேண்டும். </p><p>எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதையும், உங்கள் துணையை அவமானப்படுத்துவதையும் நிறுத்துங்கள். நல்லறிவு மேலோங்கி, நீங்கள் நியாயமற்ற கருத்துக்களை கூறுவதை நிறுத்துவீர்கள் என்று நம்புகிறேன்” என்று கங்கனா பதிவிட்டார்.</p><p>முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு நடிகை கங்கனா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தனது முட்டாள் முன்னாள் காதலன் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் இருவருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. அதன்பின் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மக்களை &apos;எறும்புகள்&apos; என சொல்பவர்கள் எல்லாம் நீதிபதிகள் ஆகிறார்கள் - உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை  </title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88#comments</comments><guid isPermaLink="false">c0a33b4a-f257-4cb8-9147-229c90be4328</guid><pubDate>Sun, 02 Aug 2026 00:16:54 +0000</pubDate><atom:updated>2026-08-02T00:16:54.272Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,judge,Collegium,கொலீஜியம்,உச்சநீதிமன்றம்,நீதிபதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/pq6dvpy3/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  உஜ்ஜல் புயான் ]]></media:title><media:description type="html"><![CDATA[  உஜ்ஜல் புயான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/pq6dvpy3/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீதிபதிகள் நியமனத்தில் பின்பற்றப்படும் கொலீஜியம் முறையை <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்ச நீதிமன்ற</a> நீதிபதி உஜ்ஜல் புயான் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>நீதிபதிகளின் நியமனம் அல்லது பதவி உயர்வுக்கான எந்தவொரு காரணமும் வெளிப்படையாக குறிப்பிடப்படாதது குறித்து அவர் கேள்வி எழுப்பி உள்ளார். </p><p>Vidhi Centre for Legal Policy என்ற சட்ட ஆராய்ச்சி மையம் நடத்திய கலந்துரையாடலில் பேசிய அவர்,  </p><h2>எறும்புகள்</h2><p>"காரணங்களை வெளிப்படையாக அறிவிக்காததால், சிறப்பாகப் பணியாற்றிய தகுதியான நீதிபதிகளின் உழைப்பு அங்கீகரிக்கப்படாமல் போகிறது.</p><p>பொதுமக்களுக்கும் சட்டத் துறைக்கும் ஒரு குறிப்பிட்ட நீதிபதி ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்பதை தெரிந்துகொள்ள உரிமை உள்ளது.</p><p>நியமன நடைமுறையில் தெளிவான காரணங்கள் இல்லாதது, எதிர்காலத்தில் குறிப்பிட்ட சமூக மக்களை 'எறும்புகள்' எனக் குறிப்பிடும் அளவுக்கு பொறுப்பற்ற நபர்கள் நீதித்துறைக்குள் நுழைய வழிவகுக்கும். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கருத்துகளே அவர்களிடம் இருந்து வெளிப்படும். </p><p>பொதுமக்களின் நம்பிக்கையை தொடர்ந்து தக்கவைக்க நியமனங்களில் முறையான விவாதமும் வெளிப்படைத்தன்மையும் அவசியம்." என தெரிவித்தார். </p><p>2024 இல்  அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் சர்ச்சை கருத்தை மறைமுகமாக குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசியுள்ளார். </p> <h2>கொலீஜியம்</h2><p>அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் குறித்த விசாரணையின் போது, நீதிபதிகளே நீதிபதிகளைத் தேர்வு செய்யும் கொலீஜியம் முறை குறித்தும், அதில் அரசின் தலையீடு குறித்தும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் நீதிபதிகள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட்  4, மதியம் 12 மணி.. E20 பெட்ரோல் விவகாரத்தில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி அறிவித்த கெஜ்ரிவால் </title><link>https://www.maalaimalar.com/news/national/e20-petrol-protest-kejriwal-to-lead-august-4-march-to-pm-residence-against-ethanol-blended-fuel-policy</link><comments>https://www.maalaimalar.com/news/national/e20-petrol-protest-kejriwal-to-lead-august-4-march-to-pm-residence-against-ethanol-blended-fuel-policy#comments</comments><guid isPermaLink="false">fb7b468f-3dae-4f5c-935e-f8c10659eb58</guid><pubDate>Sat, 01 Aug 2026 23:11:00 +0000</pubDate><atom:updated>2026-08-01T23:11:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,ethanol,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,ஆம் ஆத்மி,Aam Aadmi,எத்தனால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/w0vwbq64/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கெஜ்ரிவால் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கெஜ்ரிவால் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/w0vwbq64/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எத்தனால் கலந்த <a href="https://www.maalaimalar.com/news/national/e20-fuel-policy-petrol-would-have-hit-rs125-per-litre-during-iran-war-centre">E20 பெட்ரோல் </a>கொள்கையை எதிர்த்து பிரதமர் இல்லம் நோக்கி ஆகஸ்ட் 4இல் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளார் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். </p><p>E20 பெட்ரோலை பயன்படுத்த வேண்டும் என மக்கள் மீதான திணிப்பை எதிர்த்து  ஆம் ஆத்மி ஒருங்கிணைத்த  மக்கள் சந்திப்பு  கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் அருகே நடந்தது. </p><p>இதில் உரையாற்றிய கெஜ்ரிவால், " E20 கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி பிரதமருக்கு அனுப்ப மனுவில் கையெழுத்திடுமாறு ஏற்கனவே கோரியிருந்தேன். </p><p>2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இணையவழியில் கையெழுத்திட்டுள்ளனர். அதன் அச்சு பிரதிகளை எடுத்துள்ளேன். வரும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) மதியம் 12:00 மணிக்கு, பிரதமர் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று இந்த மனுவை வழங்க உள்ளேன்."</p><p>இப்போராட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் தேவையில்லை. காவல்துறையின் தடிஅடிக்கு அஞ்சாத, சிறை செல்லத் தயங்காத 100 தொண்டர்களை மட்டுமே என்னுடன் அழைத்துச் செல்ல உள்ளேன்." என தெரிவித்துள்ளார். </p> <h2>கோரிக்கைகள்</h2><p>E20 பெட்ரோல் திட்டத்திற்கு எதிரான இப்போராட்டத்தில் மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.</p><p>பெட்ரோல் பங்குகளில் E20 பெட்ரோல் அல்லது எத்தனால் கலக்கப்படாத சுத்தமான பெட்ரோல் ஆகிய இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற உரிமையை மக்களுக்கு வழங்க வேண்டும். E20 கலப்பு பெட்ரோலின் விலையைசுத்தமான பெட்ரோலை விடக் குறைவாக நிர்ணயிக்க வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த பெட்ரோல் விலையையும் லிட்டருக்கு ரூ. 84க்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே ஆம் ஆத்மியின் கோரிக்கைகள் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே, "ஒரு அமைச்சகம் E20 நல்லது என்கிறது, மற்றொரு அமைச்சகம் பாதிப்பு என்கிறது. முறையான ஆய்வுகள் இல்லாமல் வாகனங்கள் பழுதடைவதையும், மைலேஜ் குறைவதையும் அரசு மறைக்கிறது" எனவும் அவர் அவர் தெரிவித்தார்.</p><h2>மத்திய அரசு விளக்கம்</h2><p>இதனிடையே, E20 பெட்ரோல் குறித்த புகார்களை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><p>கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு கட்ட ஆய்வுகள் மற்றும் சோதனை ஓட்டங்களுக்குப் பிறகே E20 எரிபொருள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>நாட்டில் தற்போது 20 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், 3 கோடிக்கும் அதிகமான கார்களும் எத்தனால் கலந்த பெட்ரோலில் எவ்வித முறையான இயந்திரப் பழுதுகளுமின்றி இயங்கி வருகின்றன.</p><p>E20 பெட்ரோலால் வாகனங்களின் என்ஜின்கள் பரவலாகப் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு நிரூபிக்கப்பட்ட ஆதாரமும் இல்லை என்று அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>12 வயது சிறுமிகள் தலையில் தாக்கிய போலீஸ்.. பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என அபிஜித் தீப்கே வலியுறுத்தல் </title><link>https://www.maalaimalar.com/news/national/modi-apology-row-cjp-founder-demands-pm-apologise-for-police-assault-on-12-year-old-girls</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-apology-row-cjp-founder-demands-pm-apologise-for-police-assault-on-12-year-old-girls#comments</comments><guid isPermaLink="false">ffdeeb2e-9dfa-4f04-8ab9-56dbf5463da9</guid><pubDate>Sat, 01 Aug 2026 20:03:16 +0000</pubDate><atom:updated>2026-08-01T20:03:16.857Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,பிரதமர் மோடி,CJP,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/3pdnp39l/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/3pdnp39l/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜூலை 20 நாடாளுமன்றம் பேரணியில் கலந்துகொண்டதற்காக 12 வயது சிறுமிகள் மீது கூட போலீசார்  தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோரியாக வேண்டும் என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே வலியுறுத்தியுள்ளார். </p><h2>மோடி வீடியோ </h2><p>ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தமக்கு எதிராகவும், தமது மறைந்த தாயார் குறித்தும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் செல்பி <a href="https://www.maalaimalar.com/news/national/rahul-slams-the-prime-minister-for-offering-an-apology-to-studentsan-apology-that-should-have-been-sought-from-him">வீடியோ </a>ஒன்றை வெளியிட்டார். </p><p>அதில், "எனக்கு எதிராகவும், எனது மறைந்த தாயாருக்கு எதிராகவும் எழுப்பப்பட்ட அவதூறு முழக்கங்கள் என்னை ஆழமாகப் காயப்படுத்தின. இருப்பினும், தவறு செய்யும் இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் தண்டனையைத் தேடாமல், அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், அவர்களைச் சரியான பாதையில் வழிகாட்டவும் சமூகம் வாய்ப்பளிக்க வேண்டும். நான் அந்த மாணவர்களை மன்னிக்கிறேன்," எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.</p> <h2>தீப்கே வீடியோ</h2><p>தன்னை இழிவாக பேசிய மாணவர்களை மன்னிப்பதாக மோடி நேற்று முன்தினம் இரவு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செல்பி வீடியோவை விமர்சித்து நேற்று தீப்கே எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.</p><p>அதில் பேசும் அவர், "நேற்று(நேற்று முன்தினம்) மோடி ஜி வீடியோவில் அவர் சிறுவர்களை மன்னிப்பதாக கூறியிருந்தார் . இன்றிரவு அவர் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு, ஜூலை 20 மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு மன்னிப்பு கேட்பார் என நம்புகிறேன்.</p><p>12 வயது சிறுமிகளின் தலையில் போலீஸ் தாக்கியது. பெண்களின் ஆடைகள் கிழிக்கப்ட்டன. பெண்களின் அந்தரங்க உறுப்புகளையும் போலீசார் தாக்கினர். எனவே மோடி, போலீசாரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p> <h2>ராகுல் பதிவு</h2><p>மாணவர்களை மன்னித்துவிடுவதாக அவர் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அதில் அவர், "பெற்றோர் தனது பிள்ளையின் மறைவினால் படும் துக்கத்தை விட பெரிய வலி வேறேதுமில்லை. தங்கள் குடும்பத்தில் இளம் வயதுடைய ஒருவரை பறிகொடுத்த வலி அவர்களை விட்டு என்றும் நீங்காது. அதோடு சிதைந்த கல்வி முறை குறித்த தீவிரமான கேள்வியும் அவர்களை விட்டு நீங்காதிருக்கிறது.</p><p>வினாத்தாள் கசிவுகள், தேர்வுகள் ரத்து ஆகியவரை பல வருட கடின உழைப்பை ஒரே இரவில் அழிதந்துவிடுகிறது. நியாயமற்ற ஒரு சிஸ்டத்தை வைத்துக்கொண்டு, நமது மாணவர்கள் நியாயமாக உழைக்க வலியுறுத்தப்படுகின்றனர்.</p><p>இதற்கு மத்தியில் நமது பிரதமருக்கு மாணவர்களை மன்னித்துவிடுவதாக நா கூசாமல் சொல்கிறார். தங்கள் பிள்ளையை இழந்த ஒரு பெற்றோரை கூட அவர் இதுநாள்வரை சந்திக்கவில்லை. வினாத்தாள் கசிவால் தங்கள் எதிர்காலத்தை பறிகொடுத்த ஒரு மாணவருடன் கூட அமர்ந்து அவர் பேசவில்லை. இந்தியாவின்</p><p>மாணவச் செல்வங்களுக்கு அவர் மன்னிப்பு வழங்க தேவையில்லை. அவர் தான் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மன்னிப்பு கேட்க வேண்டிய பிரதமர் மாணவர்களை மன்னிப்பதாக கூறுவது... ராகுல் சாடல்   </title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-slams-the-prime-minister-for-offering-an-apology-to-studentsan-apology-that-should-have-been-sought-from-him</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-slams-the-prime-minister-for-offering-an-apology-to-studentsan-apology-that-should-have-been-sought-from-him#comments</comments><guid isPermaLink="false">3a885046-3f43-4807-a7e4-fff9f513c796</guid><pubDate>Sat, 01 Aug 2026 17:08:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T17:08:44.205Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Prime Minister Modi,பிரதமர் மோடி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/k7rpiozm/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர், ராகுல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர், ராகுல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/k7rpiozm/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டங்களின்போது பிரதமர் மோடியை இழிவாக பேசியதாக சில இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. </p><h2>மோடி வீடியோ</h2><p>இதனிடையே நேற்று இன்டாவில் செல்பி வீடியோ மூலம் பேசிய பிரதமர் மோடி, "தன்னைப் பற்றியும் தனது தாயை பற்றியும் தவறாக பேசியவர்களை நான் மன்னிக்கிறேன். அவர்கள் நமது நாட்டின் இளம் தலைமுறையினர். அவர்களின் தவறை திருத்தி நல்வழிப்படுத்துவது நம் கடமை" என பேசியிருந்தார். </p><h2>ராகுல் பதிவு</h2><p>இந்நிலையில் மாணவர்களை மன்னித்துவிடுவதாக அவர் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அதில் அவர், "பெற்றோர் தனது பிள்ளையின் மறைவினால் படும் துக்கத்தை விட பெரிய வலி வேறேதுமில்லை. தங்கள் குடும்பத்தில் இளம் வயதுடைய ஒருவரை பறிகொடுத்த வலி அவர்களை விட்டு என்றும் நீங்காது. அதோடு சிதைந்த கல்வி முறை குறித்த தீவிரமான கேள்வியும் அவர்களை விட்டு நீங்காதிருக்கிறது.</p><p>வினாத்தாள் கசிவுகள், தேர்வுகள் ரத்து ஆகியவரை பல வருட கடின உழைப்பை ஒரே இரவில் அழிதந்துவிடுகிறது. நியாயமற்ற ஒரு சிஸ்டத்தை வைத்துக்கொண்டு, நமது மாணவர்கள் நியாயமாக உழைக்க வலியுறுத்தப்படுகின்றனர்.</p><p>இதற்கு மத்தியில் நமது பிரதமருக்கு மாணவர்களை மன்னித்துவிடுவதாக நா கூசாமல் சொல்கிறார். தங்கள் பிள்ளையை இழந்த ஒரு பெற்றோரை கூட அவர் இதுநாள்வரை சந்திக்கவில்லை. வினாத்தாள் கசிவால் தங்கள் எதிர்காலத்தை பறிகொடுத்த ஒரு மாணவருடன் கூட அமர்ந்து அவர் பேசவில்லை. இந்தியாவின்</p><p>மாணவச் செல்வங்களுக்கு அவர் மன்னிப்பு வழங்க தேவையில்லை. அவர் தான் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Nothing is more painful than seeing a parent grieve their child.<br><br>Behind every young life lost is a family carrying pain that will never leave them - and serious questions about a broken education system. <br><br>Leaked papers. Cancelled exams. Years of preparation destroyed overnight.… <a href="https://t.co/nzQE61zP14">pic.twitter.com/nzQE61zP14</a></p>&mdash; Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://x.com/RahulGandhi/status/2083502109107093610?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>சிறுமி மன்னிப்பு </h2><p>இதனிடையே டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி அவதூறாகவும், அசிங்கமான முழக்கங்களையும் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு உள்ளான 15 வயதுச் சிறுமி, இணையத்தில் ஒரு வீடியோ வெளியீட்டின் மூலம்<a href="https://www.maalaimalar.com/news/national/this-is-my-first-and-last-mistake-15-year-old-girl-apologises-for-remarks-against-pm-modi"> பகிரங்க மன்னிப்பு</a> கேட்டுள்ளார்.</p><p>"எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்த தவறு மன்னிப்புக்கு உரியது அல்ல. நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னால் என்னை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை. இதுவே எனது முதல் மற்றும் கடைசித் தவறாக இருக்கும்," என்று கைகளைக் கூப்பியவாறு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரினார்.</p>]]></content:encoded></item></channel></rss>