<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 11 Aug 2026 13:42:29 +0000</lastBuildDate><item><title>வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை: உத்தரகாண்டில் மேகவெடிப்பால் இரும்புப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது - 16 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/cloudburst-in-uttarakhand-iron-bridge-swept-away-heavy-rain-alert-for-16-states</link><comments>https://www.maalaimalar.com/news/national/cloudburst-in-uttarakhand-iron-bridge-swept-away-heavy-rain-alert-for-16-states#comments</comments><guid isPermaLink="false">a3a65c7a-99c0-4e3a-97fd-18f17a68cac1</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:27:10 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:27:10.758Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உத்தரகாண்ட்,Madhyapradesh,monsoon,மேகவெடிப்பு,Uttarakhand Flood,NorthIndiaRain,Uttarakhand Cloudburst,MadhyaPradeshFloods,BridgeWashedAway</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/ldqhzh2j/Uttarakhand-Cloudburst" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Uttarakhand Cloudburst ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/ldqhzh2j/Uttarakhand-Cloudburst?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் அதிகனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளதோடு, உள்கட்டமைப்புகளும் பெருமளவில் சேதமடைந்துள்ளன.</p><h2>உத்தரகாண்டில் மேகவெடிப்பு - பாலம் அடித்துச் செல்லப்பட்டது:</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">உத்தரகாண்ட் </a>மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், இந்தியா - சீனா எல்லை அருகே திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் கொட்டித்தீர்த்த கனமழையால் நீர்நிலைகளில் அபாயகரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>அங்குள்ள நிதி பள்ளத்தாக்கில் பாய்ந்து வந்த பெருவெள்ளம், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இரும்புப் பாலத்தை அடித்துச் சென்றது. இந்த விபத்தின்போது அப்பகுதியில் நின்றிருந்த ஒரு நபரும், ஒரு வாகனமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். </p><p>மேலும், தமக் பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆப்பிள் மரங்கள் அனைத்தும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன.</p><h2><strong>மத்திய பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை முடக்கம்:</strong></h2><p>மத்திய பிரதேச மாநிலத்திலும் கனமழை நீடித்து வருகிறது. தலைநகர் போபாலில் பெய்த மழையால் நிஷாத்புரா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக 106 முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>16 மாநிலங்களுக்குக் கனமழை எச்சரிக்கை:</strong></h2><p>மறுபுறம், பீகாரின் தென்மேற்கு மாவட்டங்களுக்குக் கனமழைக்கான 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்திய வானிலை ஆய்வு மையம், நாடு முழுவதும் மொத்தம் 16 மாநிலங்களில் இன்று மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளதால், மீட்புக் குழுவினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>டவுசர் பனியனுடன் மக்களின் புகார்களை பெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.: வீடியோ வெளியான நிலையில் முதல்வரின் பதில்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/wear-proper-clothes-rekha-gupta-tells-aap-mla-after-video-in-undergarments</link><comments>https://www.maalaimalar.com/news/national/wear-proper-clothes-rekha-gupta-tells-aap-mla-after-video-in-undergarments#comments</comments><guid isPermaLink="false">c1ab8c96-99ae-47a4-a282-89f601068796</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:17:44 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:17:44.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆம் ஆத்மி,ரேகா குப்தா,Rekha Gupta,AAP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/e5lkg1tz/RekhaGupta0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AAP MLA- Rekha Gupta]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/e5lkg1tz/RekhaGupta0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வடமேற்கு டெல்லியில் உள்ள கிராரி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனில் ஜா வாட்ஸ். அவர் மக்களை சந்தித்து, அவர்கள் கேட்டுக்கொண்டபடி விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு வழங்கினார். அப்போது டவுசர் மற்றும் பனியனை அணிந்து கொண்டு ஒரு சேரில் அமர்ந்து கொண்டு மனுக்களை கையெழுத்திட்டு உதவியாளரிடம் வழங்குவார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.</p><p>இந்த நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-வை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக ரேகா குப்தா கூறியதாவது:-</p><p>ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-வின் செயல்பாடு வெட்கக்கேடானது. உங்களிடம் பெண்கள் கையெழுத்திற்காக வரும்போது, நீங்கள் முறையான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Meet Aam Aadmi Party&#39;s MLA : Anil Jha Vats!!<br><br>&gt; MLA from Kirari Assembly <br><br>&gt; Wears Kacha and Baniyan <br><br>&gt; Sits outside his home <br><br>&gt; Signs documents without even reading them<br><br>&gt; Claims to be an MLA from Padhi-Likhi Political Party!! <a href="https://t.co/xYozn5liVH">pic.twitter.com/xYozn5liVH</a></p>&mdash; Rohit (@Iam_Rohit_G) <a href="https://x.com/Iam_Rohit_G/status/2086764846276866394?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>இதுபோன்ற நடத்தையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடைய சட்டசபை உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்பட வேண்டும்.</p><p>இவ்வாறு ரேகா குப்தா தெரிவித்தார்.</p><p>அதேவேளையில் அந்த எம்.எல்.ஏ. "நான் ஏதேனும் தவறான சைகைகளைச் செய்திருந்தால், அதற்கான காணொளியை அவர் காட்ட வேண்டும். மக்களுடைய பிரச்சனைகளுக்கு அவரிடம் தீர்வுகள் இல்லை. அதனால்தான் அவர் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்." என்றார்.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைகள் கண் முன்னே மனைவியை சுட்டுக் கொலை - கணவரின் வெறிச்செயல்! </title><link>https://www.maalaimalar.com/news/national/husband-gun-attack-kills-wife-in-front-of-children</link><comments>https://www.maalaimalar.com/news/national/husband-gun-attack-kills-wife-in-front-of-children#comments</comments><guid isPermaLink="false">e08a716b-38ec-41d8-b307-2fa5f57f6509</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:04:59 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:04:59.583Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime,பீகார்,Bihar,துப்பாக்கிச்சூடு பலி,DomesticViolence,BiharCrime,HusbandArrest,குடும்பத்தகராறு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0aa5rl1m/Bihar-Crime" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Crime ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0aa5rl1m/Bihar-Crime?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகார் </a>மாநிலம் பூர்னியா பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக, பள்ளி ஆசிரியை ஒருவர் அவரது குழந்தைகளின் கண் முன்னாலேயே கணவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>நில முதலீட்டுத் தகராறு:</strong></h2><p>பூர்னியா பகுதியைச் சேர்ந்த ராஜ் குமார் யாதவ் அங்குள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷாலினி (34), அப்பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். </p><p>இவர்கள் இருவரும் இணைந்து கூட்டாக நிலம் ஒன்று வாங்கியுள்ளனர். அந்த நிலத்தில் தான் முதலீடு செய்த பணத்தைத் திருப்பித் தருமாறு ராஜ் குமார் தனது மனைவியிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். </p><p>ஆனால், தன்னால் பணம் தர முடியாது என்று ஷாலினி மறுத்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.</p><h2><strong>குழந்தைகள் முன்னே தாக்குதல்:</strong></h2><p>சம்பவத்தன்று மாலை இருவருக்கும் இடையிலான தகராறு முற்றவே, ராஜ் குமார் தனது மகன்களின் கண் முன்னால் ஷாலினியை கொடூரமாகத் தாக்கியுள்ளார். </p><p>பின்னர் ஆத்திரத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய அவர், இரவு 8 மணியளவில் மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.</p><h2><strong>துப்பாக்கிச் சூடு:</strong></h2><p>இரவு கணவர் வீடு திரும்புகையில், வீட்டில் குழந்தைகள் படித்துக் கொண்டும், மனைவி ஷாலினி சமையல் செய்துகொண்டும் இருந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக ராஜ் குமார் தனது துப்பாக்கியை எடுத்து, மகனின் கண் முன்னே ஷாலினியை நோக்கிச் சுட்டார். </p><p>இதில் குண்டு பாய்ந்து ஷாலினி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப் பார்த்த குழந்தைகள் அலறித் துடித்த நிலையில், ராஜ் குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.</p><h2><strong>வீடியோ காலில் மரண வாக்குமூலம்:</strong></h2><p>பயந்துபோன மூத்த மகன், உடனடியாகத் தனது மாமா விக்ரம் ஆனந்திற்கு செல்போனில் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷாலினி, தனது சகோதரனிடம் "இப்போது நாம் என்ன செய்வோம்? அவர் என்னைச் சுட்டுவிட்டார்" என்று முனகியபடியே பேசியுள்ளார்.</p><p>இதனைத் தொடர்ந்து பதறியடித்து வந்த உறவினர்கள், ஷாலினியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். </p><p>எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய ராஜ் குமாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.13 லட்சம் வேலையைத் துறந்து ஏ.ஐ படிப்பு; அமெரிக்காவில் ரூ.1.5 கோடி சம்பளத்தில் சாதனை படைத்த ஐ.ஐ.டி பட்டதாரி!</title><link>https://www.maalaimalar.com/news/national/quit-13-lakh-job-for-ai-studies-iit-grad-earns-1-5-crore-in-us</link><comments>https://www.maalaimalar.com/news/national/quit-13-lakh-job-for-ai-studies-iit-grad-earns-1-5-crore-in-us#comments</comments><guid isPermaLink="false">797d56e8-5e20-431f-9d01-38285d36ea49</guid><pubDate>Tue, 11 Aug 2026 11:40:38 +0000</pubDate><atom:updated>2026-08-11T11:40:38.344Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>software engineer,AI,aditya,University at Buffalo,மென்பொறியார்,யுனிவர்சிட்டி அட் பஃப்பலோ,ஆதித்யா அரேபல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0vbgdcuu/aditya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Software Engineer  Aditya 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0vbgdcuu/aditya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐ.ஐ.டி-யில் பட்டம் பெற்ற சாய் வெங்கட ஆதித்யா அரேபல்லி, அமெரிக்காவில் உள்ள அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளத்தில் மென்பொறியாளராகப் (Software Engineer) பணியில் சேர்ந்து அசத்தியுள்ளார்.</p><h2>தொட<strong>க்கக் கல்வி</strong> </h2><p>2022-இல் ஐ.ஐ.டி தார்வாடில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.டெக் முடித்த ஆதித்யா, பெங்களூரில் உள்ள 'ரிவர்பெட் டெக்னாலஜி' நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.13 லட்சம் சம்பளத்தில் பணியில் சேர்ந்தார்.</p><h2>ஏ.<strong>ஐ துறையை</strong> நோக்கிய மாற்றம்</h2><p>செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அசுர வளர்ச்சியைக் கண்டு, தனது நிலையான வேலையைத் துறந்து அமெரிக்காவிலுள்ள 'யுனிவர்சிட்டி அட் பஃப்பலோ' பல்கலைக்கழகத்தில் AI பாடப்பிரிவில் எம்.எஸ் பட்டம் பயின்றார்.</p><h2>பயிற்சியும் <strong>வெற்</strong>றியும்</h2><p>மேல்படிப்பின் போது கோடிங், தயாரிப்புகள் உருவாக்கம் மற்றும் சான்றிதழ் பயிற்சிகளில் கவனம் செலுத்திய இவர், படிப்பை முடித்ததும் சீட்டிலில் உள்ள அமேசான் AWS கிளையில் ரூ.1.5 கோடி பேக்கேஜில் வேலை வாய்ப்பைப் பெற்றார்.</p><h2>குடும்பப் <strong>பின்ன</strong>ணி</h2><p>ஒரு புகைப்படக் கலைஞரின் மகனான ஆதித்யாவின் இந்த மகத்தான வெற்றி குறித்து அவரது தந்தை நெகிழ்ச்சியுடன் கூறுகையில், "ஒரு புகைப்படக் கலைஞராக எனது மகனுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்; இன்று என் மகன் என் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டான்" எனக் கூறியுள்ளார். துணிச்சலாக வேலையை விட்டுவிட்டு புதிய தொழில்நுட்பத்தைக் கற்ற ஆதித்யாவின் இந்த சாதனை பயணம் சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனைக்குரிய குற்றம் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/president-murmu-gives-assent-to-bill-criminalising-insult-to-vande-mataram</link><comments>https://www.maalaimalar.com/news/national/president-murmu-gives-assent-to-bill-criminalising-insult-to-vande-mataram#comments</comments><guid isPermaLink="false">da75ec9a-19ca-4bc6-ae9a-b7dce4b33bbf</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:58:55 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:58:55.947Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central govt,வந்தே மாதரம்,Vande Mataram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m1oxlf8y/Murmu11082026.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜனாதிபதி திரவுபதி முர்மு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m1oxlf8y/Murmu11082026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசியப் பாடலான வந்தே மாதம் பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>தேசிய கௌரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026 எனும் மசோதா, மக்களவையில் கடந்த மாதம் 30-ந்தேதி நிறைவேற்றப்பட்டது. அதற்கு முந்தைய நாள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.</p><p>தற்போது ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளதால், தேசிய கீதமான "ஜன கண மன" பாடலுக்கு வழங்கப்படும் கவுரவம், தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலுக்கு கொடுக்கப்படும்.</p><p>அரசு நிகழ்ச்சிகள் உள்ப்ட எந்தவொரு நிகழ்ச்சியிலும் ஜன கண மன பாடல் பாடப்படுவதற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும்.</p><p>வருகிற 15-ந்தேதி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றி உரையாற்ற இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக முழுமையாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு, அதன்பின் ஜன கண மன பாடல் பாடப்படும்.</p><h2>மூன்று ஆண்டுகள் வரை சிறை</h2><p>தேசிய கௌரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026இன்படி, தேசிய சின்னங்களான தேசியக் கொடி, அரசமைப்புச் சட்டம், தேசிய கீதம் உள்ளிட்டவற்றுடன் தேசியப் பாடலான வந்தே மாதரத்தை அவமதிப்பதையும் தண்டனைக்குரிய குற்றமாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேசிய கீதத்துக்கு உள்ள அதே சட்டபூர்வ பாதுகாப்பை தேசியப் பாடலுக்கும் வழங்கும் புதிய மசோதாவின்படி, வந்தே மாதரம் பாடல் பாடுவதைத் தடுப்பது, இடையூறு விளைவிப்பது உள்ளிட்ட செயல்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.</p><p>வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களையும் பாட வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் பெயர் நீக்கம்... வீடியோ வெளியிட்ட பிரகாஷ் ராஜ்!</title><link>https://www.maalaimalar.com/news/national/name-removed-from-sir-operation-prakash-raj-releases-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/name-removed-from-sir-operation-prakash-raj-releases-video#comments</comments><guid isPermaLink="false">d978cb63-ffee-4308-ba7e-e3af33e33d62</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:36:06 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:36:06.932Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Sir,பெங்களூரு,bengaluru,பிரகாஷ் ராஜ்,Actor Prakash Raj,சிறப்பு தீவிரத் திருத்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/inv2b8m7/New-Project-2026-08-11T160532.450.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் பெயர் நீக்கம்... வீடியோ வெளியிட்ட பிரகாஷ் ராஜ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/inv2b8m7/New-Project-2026-08-11T160532.450.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெங்களூரில் நடைபெற்ற சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்குப் பிறகு தனது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ்.,</p><p>“பெங்களூரு தொகுதியில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு பெயர் நீக்கம் செய்யப்பட்ட சுமார் 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன். நான் பிறந்து, வளர்ந்து, படித்து, இதே தொகுதியில் எம்பி வேட்பாளராகவும் போட்டியிட்டேன். அப்படிப்பட்ட எனது பெயர் நீக்கப்பட்டுள்ளது ஒரு நல்ல நகைச்சுவை, இல்லையா?” என வீடியோவில் பேசியுள்ளார். </p><p>2019 மக்களவைத் தேர்தலில், பிரகாஷ் ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார் .</p><p>இதே ஆண்டு பிரகாஷ் ராஜ் கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளதாக பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. </p><p>இந்திய தேர்தல் விதிமுறைகளின்படி ஒரு நபர் ஒரு தொகுதியில் மட்டுமே வாக்காளராக இருக்க முடியும் என்பதால், இந்த வழக்கில் நேரில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக ஜூன் 2026-இல் பிணையில் வரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் ஜூலை மாதம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமின் பெற்றார்.</p><h2>எஸ்ஐஆர் பணிகள்</h2><p>பெங்களூருவில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் ஆகஸ்ட் 17 அன்று முடிவடைகிறது. அதனைத்தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல்கள் ஆகஸ்ட் 24 அன்று வெளியிடப்படும். அதனையடுத்து மீண்டும் பெயர் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.</p><p>இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27 அன்று வெளியிடப்படும்.</p>]]></content:encoded></item><item><title>&apos;கேரளா&apos; இனி &apos;கேரளம்&apos;: மக்களவையில் வரலாற்று சிறப்புமிக்க மசோதா நிறைவேற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-to-keralam-name-change-bill-cleared-in-lok-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-to-keralam-name-change-bill-cleared-in-lok-sabha#comments</comments><guid isPermaLink="false">267d6d02-ae48-45e8-aa60-7764d5ab71e6</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:26:45 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:26:45.395Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,kerala,Lok Sabha,கேரளம்,கேரளா,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/dwpu8oef/lok-sabha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Lok Sabha ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/dwpu8oef/lok-sabha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களவையில் கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026' குரல் வாக்கெடுப்பு மூலம் விவாதமின்றி அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டது.  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குப் பதிலாக, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் இந்த மசோதாவை மக்களவையில் கொண்டு வந்தார். எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் எதிர்ப்புகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.</p><h2>சட்டம<strong>ன்றத் தீர்மான</strong>ம்</h2><p>மலையாள மொழியில் இந்த மாநிலம் எப்போதுமே 'கேரளம்' என்றே அழைக்கப்படுகிறது. இதையேற்கும் வகையில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று கேரள சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.</p><h2>அரசியல<strong>மைப்புத் திரு</strong>த்தம்</h2><p>இந்திய அரசியலமைப்பின் உறுப்பு 3 விதிகளின்படி, மாநிலங்களின் பெயரை மாற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. இதன் கீழ், அரசியலமைப்பின் முதலாவது அட்டவணையில் 'கேரளா' என்றிருப்பதை 'கேரளம்' என திருத்த இம்மசோதா வழிவகை செய்கிறது.</p><h2>மத்திய <strong>கேபின</strong>ட் ஒப்புதல்</h2><p>2026 பிப்ரவரி மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்தது. உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இம்மசோதாவை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியினரின் தொடர் அமளி மற்றும் கூச்சல்-குழப்பத்திற்கு இடையே எவ்வித விவாதமும் இன்றி இம்மசோதா நிறைவேறியது.</p><p>அடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அதன்பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றவுடன் பெயர் மாற்றம் அதிகாரப்பூர்வமாக அரசாங்க இதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வரும்.</p>]]></content:encoded></item><item><title>மழைக் காலத்தில் பரவும் &apos;பன்றிக் காய்ச்சல்&apos;.. யார் யாருக்கு பாதிப்பு அதிகம்? மருத்துவர்கள் தரும் பகீர் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/swine-flu-surges-in-delhi-during-monsoon-who-is-most-at-risk</link><comments>https://www.maalaimalar.com/news/national/swine-flu-surges-in-delhi-during-monsoon-who-is-most-at-risk#comments</comments><guid isPermaLink="false">a18c39de-dd90-48bf-9849-d313aa09412f</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:34:42 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:34:42.111Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dengue,swine flu,Covid-19,கோவிட்-19,டெங்கு,H1N1,பன்றிக் காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0qtzfl94/swine-flu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Swine flu-H1N1 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0qtzfl94/swine-flu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பிராந்தியங்களில் H1N1 இன்ஃப்ளூயன்சா (பன்றிக் காய்ச்சல்) பாதிப்பு இந்த பருவமழைக் காலத்தில் வழக்கத்திற்கு மாறாக மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வெறும் 229 ஆக இருந்த H1N1 பாதிப்புகள், இந்த ஆண்டு '1,344' ஆக உயர்ந்து கிட்டத்தட்ட 6 மடங்கு அதிகரித்துள்ளது. டெல்லியின் முன்னணி மருத்துவமனைகளின் வெளிநோயாளிகள் பிரிவில் தினமும் 7 முதல் 10 நோயாளிகள் வரை H1N1 அறிகுறிகளுடன் சேர்க்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>திடீர் உ<strong>யர்வுக்குக் காரணம் என்ன?</strong> </h2><p>மழைக்காலத்தில் ஏற்படும் திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் காற்றில் அதிகரிக்கும் ஈரப்பதம் வைரஸ் கிருமிகள் வேகமாகப் பரவுவதற்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றன. கடந்த ஆண்டு டெல்லியில் H3N2 வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு H1N1 டைப்-ஏ (Influenza A) வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. டெங்கு, கோவிட்-19 மற்றும் வழக்கமான சளி-காய்ச்சல் அறிகுறிகளும் H1N1 அறிகுறிகளும் ஒரே மாதிரியாக இருப்பதால், தொடக்கத்தில் பலர் இதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.</p><h2><strong>அறிகுறிக</strong>ள்</h2><p>வைரஸ் தொற்று ஏற்பட்ட 1 முதல் 4 நாட்களுக்குள் பின்வரும் அறிகுறிகள் தென்படத் தொடங்கும்.</p><p>*திடீர் அதிக காய்ச்சல்: தணியாத காய்ச்சல் மற்றும் நடுக்கத்துடன் கூடிய குளிர்.</p><p>*சுவாசப் பிரச்சனைகள்: தொடர் வறட்டு இருமல், தொண்டை வலி, மூக்கு அடைப்பு மற்றும் மூக்கு ஒழுகுதல்.</p><p>*உடல் உபாதைகள்: கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, மிகுந்த உடல் சோர்வு.</p><p>*செரிமான பிரச்சனைகள்: குறிப்பாக குழந்தைகளிடம் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு.</p><h2>அதிக ஆ<strong>பத்து உள்ளவர்</strong>கள் </h2><p>பெரும்பாலோருக்கு இந்நோய் 3 முதல் 5 நாட்களில் தானாகவே சரியாகிவிட்டாலும், பின்வரும் பிரிவினருக்கு இந்நோய் நுரையீரல் அழற்சி அல்லது தீவிர மூச்சுத்திணறலாக மாற வாய்ப்புள்ளது.</p><p>•முதியவர்கள் &amp; குழந்தைகள்: 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட சிறு குழந்தைகள்.</p><p>•நாட்பட்ட நோயாளிகள்: நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதயம் மற்றும் சிறுநீரக நோயாளிகள்.</p><p>•கர்ப்பிணிப் பெண்கள்: கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மாறுபடுவதால் இவர்களுக்கு ஆபத்து அதிகம்.</p><p>•குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள்: புற்றுநோய் சிகிச்சை பெறுவோர் அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள்.</p><h2>உடனடி மரு<strong>த்துவ உதவி</strong> </h2><p>கீழ்க்கண்ட தீவிர அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவமனையை அணுக வேண்டும்:</p><p>* மூச்சு விடுவதில் சிரமம் அல்லது கஷ்டப்பட்டு மூச்சு வாங்குதல்.</p><p>* நெஞ்சுப் பகுதியில் தொடர்ச்சியான வலி அல்லது அழுத்தம்.</p><p>* உதடுகள், நகங்கள் அல்லது சர்மம் நீல நிறமாக மாறுதல் (ஆக்ஸிஜன் குறைபாடு).</p><p>* சளியில் ரத்தம் வருதல் அல்லது காய்ச்சல் குறையாமல் 5 நாட்களுக்கு மேல் நீடித்தல்.</p><p>* அதிகப்படியான மயக்கம் அல்லது குழப்பமான நிலை.</p><h2>த<strong>டுப்பு முறைக</strong>ள் </h2><p>•சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு குறைந்தது 20 வினாடிகள் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்.</p><p>•இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் 2-3 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கும்.</p><p>• மருத்துவரின் பரிந்துரை இன்றி தானாக ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது; ஏனெனில் H1N1 என்பது ஒரு வைரஸ் தொற்று.</p><p>•ஆபத்து பிரிவில் உள்ளவர்கள் ஆண்டுதோறும் போடும் 'Flu Vaccine' தடுப்பூசியை எடுத்துக்கொள்வது தீவிர பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமருக்கு புதிய இல்லம் கட்ட முடியும் என்றால் கிராமங்களில் புதிய பள்ளிகளைக் கட்ட முடியாதா?.. CJPயின் அடுத்த நகர்வை அறிவித்த அபிஜித் தீப்கே </title><link>https://www.maalaimalar.com/news/national/rural-govt-schools-campaign-cjp-launches-national-drive-to-improve-village-school-infrastructure</link><comments>https://www.maalaimalar.com/news/national/rural-govt-schools-campaign-cjp-launches-national-drive-to-improve-village-school-infrastructure#comments</comments><guid isPermaLink="false">60b61cf6-f2e9-4e2f-acb4-1d27c6757b8b</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:33:01 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:33:01.162Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசுப் பள்ளிகள்,government schools,CJP Protest,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/v1x07ijl/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே ]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/v1x07ijl/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிராமப்புற அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்காக 'காக்ரோச் ஜனதா கட்சி' (சிஜேபி) மற்றும் அதன் நிறுவனர் அபிஜித் திப்கே அறிவித்துள்ள தேசிய அளவிலான பிரச்சாரத்தின் முக்கியச் செய்திகள் தமிழில் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:  </p><p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள், மாணவர்களை ஒன்றுதிரட்டி கரப்பான் பூச்சி கட்சி ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்திய போராட்டம் மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததன் மூலம் வெற்றி பெற்றது. </p><p>இதைதொர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">சிஜேபியின் </a>அடுத்தகட்ட நகர்வு என்ன என எதிர்பார்க்கப்பட்டது. மகாராஷ்டிராவின் சத்திரபதி சாம்பாஜி நகரில் தன் வீட்டில் இருந்தபடி  சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே அமைப்பின் அடுத்தகட்ட செயல்திட்டத்தை தீட்டி வருகிறார். </p> <h2>ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு</h2><p>ஜார்கண்டில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நேற்று சட்டமன்றம் நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தடியடி நடத்தியும் அடக்குமுறையில் ஈடுபடத்தை அவர் கண்டித்துள்ளார்.</p><p>மேலும் முறைகேடு நடைபெற்ற ஜார்க்கண்ட் அரசு தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து நேற்று பேரணியில் காயம்பட்ட தலைவர் தேவேந்திரநாத் மாதோவுடன் வீடியோ காலில் அபிஜித் தீப்கே பேசினார்.</p> <h2>புதிய பிரச்சாரம்</h2><p>இந்நிலையில் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் அவலநிலையைப் போக்கவும், அவற்றின் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் சிஜேபி சார்பில் ல் ஆகஸ்ட் 15 முதல் தேசிய அளவிலான பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது.</p><p>வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில், கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி மற்றும் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பஞ்சாயத்து தலைவர்களும்பெற்றோர்களும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று அபிஜித் திப்கே கேட்டுக்கொண்டுள்ளார்.</p><h2> பிரதமர் இல்லம் </h2><p>மேலும் அவர் இதுகுறித்து தீப்கே தெரிவிக்கையில், "கடந்த 80 ஆண்டுகளாக கிராமப்புறப் பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.</p><p>புதிய நாடாளுமன்றக் கட்டடமும், பிரதமருக்கு புதிய இல்லமும் கட்ட முடிந்தது என்றால், கிராமப்புற விவசாயிகளின் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக புதிய பள்ளிகளைக் கட்ட முடியாதா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>கிராமப்புற பள்ளிகள்</h2><p>தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவின் ஹிங்கோலியில் உள்ள அரசுப் பள்ளியைச் சீரமைக்க உள்ளூர் பஞ்சாயத்து தலைவரிடம் கோரிக்கை வைக்கப் போவதாகத் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>பள்ளிகளைச் சிறப்பாக மேம்படுத்தும் பஞ்சாயத்து தலைவர்களின் புகைப்படங்களை சிஜேபியின் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு கௌரவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மின்சாரம், குடிநீர், கழிப்பறை மற்றும் சத்தான மதிய உணவு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>வசதிகள் இல்லாத பட்சத்தில் வீடியோ பதிவு செய்து, சிஜேபி வழங்கும் படிவத்தைப் பூர்த்தி செய்து contact@cockroachjantaparty.org என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி ஏழுமலையான் கோவில்: ரூ.900 கோடி திட்டங்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைக்கிறார்!</title><link>https://www.maalaimalar.com/news/national/chandrababu-naidu-to-open-rs-900-crore-projects-at-tirupati-seven-hills-temple</link><comments>https://www.maalaimalar.com/news/national/chandrababu-naidu-to-open-rs-900-crore-projects-at-tirupati-seven-hills-temple#comments</comments><guid isPermaLink="false">95c14bca-1c5b-4a5a-976c-ae5f4d903ead</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:16:26 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:16:26.196Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பதி,Tirumala M Tirupathi,mukesh ambani,ChandraBabu Naidu,andhrapradesh,Venkateswara Museum,AnantAmbani,Reliance Donation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/mhdxw92k/Chandrababu-Naidu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chandrababu Naidu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/mhdxw92k/Chandrababu-Naidu?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாகத் தொடங்க உள்ளது. </p><p>விழாவின் முதல் நாளன்று ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களைச் சமர்ப்பிக்கிறார். </p><p>இந்த வருகையின் போது, திருப்பதி மலையில் ரூ.900 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு புதிய அதிநவீன கட்டிடங்கள் மற்றும் வசதிகளை அவர் திறந்து வைக்க உள்ளார்.</p><h2><strong>திருப்பதி வெங்கடேஸ்வரா அருங்காட்சியகம்:</strong></h2><p>டி.சி.எஸ் நிறுவனத்தின் ₹145 கோடி நிதி மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புடன், உலகளாவிய பக்தர்களைக் கவரும் வகையில் அதிநவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது. </p><p>அதே வேளையில், உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டு தயாரிக்கத் தொடங்கி 310 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு லட்டு திருவிழாவில், ஆந்திர மாநில முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு அவர்கள் ஒரு சிறப்பு தங்க நாணயத்தை வெளியிடுகிறார்.</p><h2><strong>ஒரே நேரத்தில் 10,000 பக்தர்கள் தங்கும் பிரம்மாண்ட விடுதி!</strong></h2><p>திருப்பதிக்கு வரும் சாதாரண பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் சுமார் ரூ.600 கோடி இமாலய நிதிச் செலவில், ஒரே நேரத்தில் 10,000 பக்தர்கள் தங்கும் வகையிலான பிரம்மாண்ட புதிய விடுதிகள் வளாகம் திருமலையில் கட்டப்பட்டுள்ளது. </p><p>இந்த மாபெரும் விடுதி திறக்கப்படுவதன் மூலம் திருப்பதி மலையில் நிலவி வரும் தங்கும் அறைகளுக்கான தட்டுப்பாடு இனி பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆன்மீக நிதியுதவிகள்!</strong></h2><p>ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் ரூ.120 கோடி நிதியுதவியுடன் திருப்பதியில் ஒருங்கிணைந்த உயர் தொழில்நுட்ப சமையலறைகள் கட்டப்பட்டுள்ளதுடன், அவரது மகன் ஆனந்த் அம்பானி ரூ.27.5 கோடி மதிப்பில் நவீன மின்சார பஸ்களை திருமலைக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். </p><p>இந்த மின்சார பஸ்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ள நிலையில், இவற்றை இயக்குவதற்காக 50 புதிய பஸ் டிரைவர்கள் நியமிக்கப்பட்டு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன.</p><h2><strong>திருப்பதி உண்டியல் விவரம்:</strong></h2><p>திருப்பதி திருமலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 81,064 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ள நிலையில், இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் டோக்கன் பெற்று சுமார் 18 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்துள்ளனர். </p><p>மேலும் நேற்று 33,136 பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்தியுள்ளனர், பக்தர்களின் காணிக்கை மூலம் உண்டியல் வருவாயாக ரூ. 5.36 கோடி வசூலாகியுள்ளதுடன், சாதனை அளவாக 4.09 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>செங்கோட்டையில் எதிரொலிக்கும் &apos;வந்தே மாதரம்&apos;: 80-வது சுதந்திர தின விழாவில் அரங்கேறும் புதிய வரலாறு!</title><link>https://www.maalaimalar.com/news/national/red-fort-to-echo-vande-mataram-on-indias-80th-independence-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/red-fort-to-echo-vande-mataram-on-indias-80th-independence-day#comments</comments><guid isPermaLink="false">70c05b1d-cf11-4815-b57b-bbb5bdaa275c</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:06:48 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:06:48.881Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,Delhi Red Fort,செங்கோட்டை,பிரதமர் நரேந்திர மோடி,narendra  modi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/2abnbxlj/RED-FORT.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi Red Fort ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/2abnbxlj/RED-FORT.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் 80-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15, 2026 அன்று டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இவ்வாண்டு சுதந்திர தின விழாவில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களும் புதிய அம்சங்களும் இடம்பெறவுள்ளன.</p><h2>வந்தே மாத<strong>ரம் பாடலின் 150-</strong>வது ஆண்டு</h2><p>பங்கிம் சந்திர சட்டோபாத்யாயால் இயற்றப்பட்டு, இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு எழுச்சியூட்டிய 'வந்தே மாதரம்' தேசிய பாடல் உருவாக்கப்பட்டதன் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், வரலாற்றிலேயே முதன்முறையாக செங்கோட்டை மேடையில் இப்பாடல் முழுமையாகப் பாடப்படவுள்ளது.</p><h2>நிகழ்<strong>ச்சி நிரல்</strong></h2><p>பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டைக்கு வருகை தந்தவுடன் 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்படும். அதைத் தொடர்ந்து அவர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். உரைக்குப்பின் NCC மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மீண்டும் பாடலையும், தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாடுவர்.</p><h2><strong>மையக்கருத்து</strong> </h2><p>இந்த ஆண்டின் முக்கியக் கருப்பொருளாக 'வந்தே மாதரம் 150 ஆண்டுகள்' மற்றும் 'விகசித் பாரத் 2047-க்கான யுவ சக்தி' ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>வான்வெளி</strong> அணிவகுப்பு</h2><p>இந்திய விமானப்படையின் Mi-17 ஹெலிகாப்டர் 'வந்தே மாதரம் 150' என்ற பதாகையை ஏந்தி வந்து, விழா மைதானத்தில் உள்ள மக்கள் மீது பூக்களைத் தூவும். செங்கோட்டைக்கு எதிரே உள்ள ஞான்பாத் பகுதியில் 2,500 தேசிய மாணவர் படை மற்றும் 'மை பாரத்' தன்னார்வலர்கள் 'வந்தே மாதரம்' என்ற வார்த்தை வடிவில் நின்று சிறப்பிப்பர். வருகை தருபவர்கள் அனைவரும் உடன் சேர்ந்து பாடும் வகையில், அழைப்பிதழில் வந்தே மாதரம் பாடலின் வரிகள் முழுமையாக அச்சிடப்பட்டுள்ளன. </p><p>மேலும், 'சேவா தீர்த்தம்' மற்றும் 'தர்ம சக்கரம்' படங்களும் இடம்பெற்றுள்ளன. VIP கலாச்சாரத்தைக் குறைக்கவும், நீர் வளப் பாதுகாப்பை வலியுறுத்தவும், விருந்தினர்கள் அமரும் பகுதிகள் இந்தியாவின் முக்கிய ஏரிகளின் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.</p><h2>சிறப்<strong>பு விருந்தி</strong>னர்கள்</h2><p>சர்வதேச கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஒலிம்பியாட் 2026 போட்டிகளில் பதக்கம் வென்ற 19 மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக முதன்மை மேடையில் அமர வைக்கப்படுகின்றனர். இவர்களுடன் இளம் தொழில்முனைவோர்கள், 'ஸ்டார்ட்-அப்' அமைப்பாளர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள் உட்பட சுமார் 5,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர். </p><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஆகஸ்ட் 8 முதல் 15 வரை 343 இடங்களில் முப்படை மற்றும் பாதுகாப்புப் படைகளின் இசைக்குழுக்களின் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.5 லட்சம் பணத்தை வயலில் புதைத்துவிட்டு, எங்கு புதைத்தோம் என்பதை மறந்த விவசாயி.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/buried-cash-destroyed-by-termites-rajasthan-farmer-loses-5-lakh-as-banks-refuse-to-accept-damaged-notes</link><comments>https://www.maalaimalar.com/news/national/buried-cash-destroyed-by-termites-rajasthan-farmer-loses-5-lakh-as-banks-refuse-to-accept-damaged-notes#comments</comments><guid isPermaLink="false">23b3dc48-12b0-4249-9836-09c97ca8cb6b</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:12:46 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:12:46.473Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயி,Farmer,வைரல்,viral,bank,வங்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/dlj04xnt/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விவசாயி]]></media:title><media:description type="html"><![CDATA[ விவசாயி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/dlj04xnt/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருடர்கள் பயத்தால் பணத்தை வீட்டில் வைக்க முடியாமல் வயலில் புதைத்து வைத்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விவசாயி </a>ஒருவருக்குப் பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. </p><h2>விவசாயி</h2><p> ராஜஸ்தானை சேர்ந்த ஒரு விவசாயி, ஒரு வருடத்திற்கு முன்பு தனது நிலத்தை விற்றதன் மூலம் ரூ. 5 லட்சம் கிடைத்தது.</p><p>அந்தப் பணத்தைக் கொண்டு வீடு கட்ட நினைத்த அவர், வீட்டில் வைத்தால் திருடு போய்விடும் என்ற பயத்திலும், வீண் செலவு ஆகக் கூடாது என்பதற்காகவும் அப்பணத்தை அப்போதே ஒரு பாலிதீன் பையில் சுற்றி வயலில் குழிதோண்டிப் புதைத்து வைத்தார்.</p><p>ஒரு வருடத்திற்கு பின் பணத்தை  மீண்டும் எடுக்க நினைத்த அவர், மதுப் பழக்கம் மற்றும் ஞாபக மறதி காரணமாக எந்த இடத்தில் பணத்தை புதைத்து வைத்தோம் என்பதை அந்த விவசாயி மறந்துவிட்டார். </p><p>வயலில் பலமுறை தேடியும் பணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.</p><p>இறுதியில் தனது மனைவி மற்றும் மகனிடம் விஷயத்தைக் கூறவே, அவர்களும் வயலின் பல இடங்களில் தோண்டித் தேடிப் பார்த்தனர். இருப்பினும் பணம் கிடைக்கவில்லை.</p> <h2>கிடைத்தது எப்படி?</h2><p>சமீபத்தில் மழைக்கால சாகுபடி பணிகளுக்காக வயலைத் தயார் செய்து, வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, விவசாயியின் மனைவிக்கும் மகனுக்கும் அந்தப் பாலிதீன் பை கிடைத்தது.</p> <h2>அடுத்த அதிர்ச்சி</h2><p>பையைத் திறந்து பார்த்த போது, உள்ளிருந்த ரூபாய் நோட்டுகள் முழுவதையும் கரையான்கள் அரித்துச் சின்னா பின்னமாக்கியிருந்தன.</p><p>சேதமடைந்த நோட்டுகளையாவது மாற்றிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில், உள்ளூரில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு சென்றுள்ளார்.</p><p>ஆனால், நோட்டுகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், அவற்றைப் பெற்றுக் கொள்ள வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.</p><p>அதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை வங்கி கிளையை அணுகியும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.</p>]]></content:encoded></item><item><title>அசாம் - அருணாச்சல பிரதேச எல்லைப் பிரச்சனை.. துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் காயம் - நால்வர் கவலைக்கிடம்</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-arunachal-border-firing-18-injured-and-4-critical-in-land-dispute-clash</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-arunachal-border-firing-18-injured-and-4-critical-in-land-dispute-clash#comments</comments><guid isPermaLink="false">2f50362f-9136-4770-9cc4-e16cc35ce989</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:57:15 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:57:15.960Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,அசாம்,Assam,அருணாச்சல பிரதேசம்,Arunachal Pradesh,shooting incident</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/kuceq0lo/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அசாம் - அருணாச்சல பிரதேச எல்லை]]></media:title><media:description type="html"><![CDATA[ அசாம் - அருணாச்சல பிரதேச எல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/kuceq0lo/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/assam">அசாமின் </a>தேமாஜி மாவட்டம்  அருணாச்சலப் பிரதேச எல்லையில் அமைந்துள்ளது. </p><p>தேமாஜி மாவட்டத்தில் கோகாமுக் வருவாய் வட்டத்திற்குட்பட்ட மின்மாங் படாட்டி என்ற பகுதியில், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக இரு மாநில எல்லைக் கிராம மக்களுக்கு இடையே நீண்டகாலமாக தகராறு இருந்து வந்தது.</p><h2>துப்பாக்கிச்சூடு </h2><p>இந்நிலையில் நேற்று அருணாச்சலப் பிரதேச பகுதியிலிருந்து வந்த மர்ம நபர்கள், அசாம் கிராம மக்களை நோக்கிக் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.</p><p>இந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 18 பேரும் உடனடியாக கோகாமுக் கிராமப்புற மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.  இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. </p><p>அவர்கள் மேல் சிகிச்சைக்காக திப்ரூகரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p> <h2>அசாம் முதல்வர் விளக்கம்</h2><p>இச்சம்பவத்திற்கு பிறகு பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "அசாம் எல்லைப் பகுதியில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>அசாமின் ஒரு அங்குல நிலத்தைக் கூட இழக்கக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இரு மாநிலத் தலைமைச் செயலாளர்களும், டிஜிபிக்களும் பேசிச் சூழலைத் தணித்து வருகின்றனர்" என்றார்.</p><p>அசாம் கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு அருணாச்சலப் பிரதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பப்பட்டுள்ளார்.</p> <h2>எல்லைப் பிரச்சினை</h2><p>அசாம் - அருணாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே 804 கி.மீ நீளமுள்ள எல்லைப் பகுதி உள்ளது.</p><p>சுதந்திரத்திற்குப் பின் வடகிழக்கு மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்ட போது இந்த எல்லைப் பிரச்சினை தொடங்கியது.</p><p>அருணாச்சலப் பிரதேசம் 1987இல் தனி மாநில அந்தஸ்து பெற்ற பிறகு, முத்தரப்புக் குழு அளித்த பரிந்துரைகளை அசாம் ஏற்க மறுத்ததால், இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.</p> <p>ஜூலை 29 அன்று அசாம் சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட தகவலின்படி, அசாமின் 7 மாவட்டங்களில் உள்ள 16,144 ஹெக்டேர் நிலம் அருணாச்சலப் பிரதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.</p><p>அதேவேளையில் அருணாச்சலப் பிரதேசமும் 858 சதுர கி.மீ நிலத்திற்கு உரிமை கோரி வருகிறது.</p><p>இச்சிக்கலை தீர்க்க ஜூலை 15, 2022 அன்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா கண்டும் 'நாம்சாய் பிரகடனத்தில்' கையெழுத்திட்டபோதிலும் சிக்கல் தீரவில்லை.</p>]]></content:encoded></item><item><title>9 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த தலைவர் மருத்துவமனையில் அனுமதி - மாணவர்கள் மீது அடக்குமுறை - ஜார்க்கண்டில் போராட்டம் 
தீவிரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-protest-intensifies-jlkm-chief-hospitalized-after-hunger-strike-over-jpsc-jssc-paper-leak</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-protest-intensifies-jlkm-chief-hospitalized-after-hunger-strike-over-jpsc-jssc-paper-leak#comments</comments><guid isPermaLink="false">4a6ade6e-369a-4c9f-8cdf-e5407388c29a</guid><pubDate>Tue, 11 Aug 2026 01:03:40 +0000</pubDate><atom:updated>2026-08-11T01:03:40.283Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜார்கண்ட்,Jharkhand,மாணவர்கள் போராட்டம்,student protest,question paper leak,வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/o53dckej/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தேவேந்திர நாத் மஹதோ]]></media:title><media:description type="html"><![CDATA[ தேவேந்திர நாத் மஹதோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/o53dckej/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்ட் மாநில அரசின் JPSC, JSSC  தேர்வாணைய வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை  கண்டித்து நடந்து வரும் <a href="https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-row-student-protests-escalate-ed-launches-probe">மாணவர் போராட்டம்</a> தீவிரமடைந்துள்ளது. </p><h2>மருத்துவமனையில் அனுமதி </h2><p>இந்நிலையில் ராஞ்சியில் விளையாட்டு மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் JLKM என்ற அரசியல் கட்சியின் தலைவர் தேவேந்திர நாத் மஹதோ 9 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்திற்கு  பின் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p> <h2>சட்டமன்றம் நோக்கி பேரணி</h2><p>முன்னதாக நேற்று பழைய சட்டமன்றக் கட்டிடத்திலிருந்து புதிய சட்டமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியில் பங்கேற்ற போது, தேவேந்திர நாத் மஹதோவின் இரத்த சர்க்கரை அளவு திடீரெனக் கடுமையாகக் குறைந்ததால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.</p><p>தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேரணியின் போது காவல்துறையினர் நடத்திய தடிஅடியிலும் அவர் காயமடைந்துள்ளதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.</p><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் பேசிய மஹதோ, "அரசு தடிகள் மற்றும் துப்பாக்கிகள் மூலம் ஆட்சியை நடத்த முடியாது. மாணவர்களின் குரலை ஒடுக்க நினைத்தாலும் இந்த போராட்டம் தொடரும்" எனக் கூறினார்.</p> <h2>தடிஅடி</h2><p>பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சட்டமன்றத்தின் 1-வது கேட் வரை சென்று அமர்வில் ஈடுபட்டனர்.</p><p>அவர்களை கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகள், தண்ணீர் பீரங்கிகள் மற்றும் தடிஅடியைப் பயன்படுத்தினர். இதில் பல பெண் மாணவர்கள் உட்படப் போராட்டக்காரர்கள் சிலர் காயமடைந்தனர்.</p><p>அதேசமயம், போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதில் 4 காவலர்களும் காயமடைந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>கோரிக்கைகள்</h2><p>JPSC மற்றும் JSSC தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ அல்லது ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். முறைகேடு நடந்த அனைத்துத் தேர்வுகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதில் பேச்சுவார்த்தைக்கு பின் JPSC நடத்திய தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்ட நிலையில் JSSC-CGL தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.</p><h2>கைது</h2><p>இதனிடையே ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் JPSC தலைவர் எல். கியாங்டேவை ஜார்க்கண்ட் சி.ஐ.டி. கைது செய்துள்ளதாக மாநில புலனாய்வு அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p>  ]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: அமலாக்கத்துறை விசாரணை தொடக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-row-student-protests-escalate-ed-launches-probe</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-row-student-protests-escalate-ed-launches-probe#comments</comments><guid isPermaLink="false">6e22e6c6-c0bd-499c-b339-d470fecf8e9e</guid><pubDate>Mon, 10 Aug 2026 23:14:21 +0000</pubDate><atom:updated>2026-08-10T23:14:21.987Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Jharkhand,போராட்டம்,ஜார்க்கண்ட்,ED,அமலாக்கத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mthxawa2/Jharkhand-Protest-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mthxawa2/Jharkhand-Protest-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">ஜார்க்கண்ட்</a> தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று (திங்கள்கிழமை) தீவிரமடைந்தது.</p><p>மாணவர்கள் சட்டமன்றத்தை நோக்கி பேரணி செல்வதை தடுக்க, காவல்துறையினர் நீரை பீய்த்து அடித்தும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை தடுத்தனர். அதேவேளையில், இந்த "முறைகேடுகள்" தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/topic/ed">அமலாக்கத்துறை</a> பணமோசடி விசாரணையையும் தொடங்கியுள்ளது.</p><p>ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் ஜே.பி.எஸ்.சி. தலைவர் எல். கியாங்டேவை ஜார்க்கண்ட் சி.ஐ.டி. கைது செய்துள்ளதாக மாநில புலனாய்வு அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><h2>மோதல்:</h2><p>மாநிலத் தலைநகர் ராஞ்சியில், மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வந்த சட்டமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கான வேலை தேடுபவர்கள் பேரணியாக சென்றபோது, ​​பல தடுப்புகளை மீறிச் சென்றதால், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>காவல்துறை நடவடிக்கையில் பெண்கள் உட்பட பல மாணவர்கள் காயமடைந்ததாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். அதே நேரத்தில், கல் வீச்சில் 14 அதிகாரிகள் காயமடைந்ததாகவும், "அமைதியான" போராட்டங்களை கலைத்த சமூக விரோதிகளை அடையாளம் காண சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு செய்யப்படும் என்றும் ராஞ்சி எஸ்எஸ்பி கூறினார்.</p><h2>முதல்வர் வேண்டுகோள்:</h2><p>ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்கள் குறைகளை "பேச்சுவார்த்தை மற்றும் நம்பிக்கையின்" மூலம் தீர்க்க வேண்டும் என நேற்று (திங்கள் கிழமை) மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். மேலும், அரசியல் ஆதாயங்களுக்காக போராட்டக்காரர்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சியான பா.ஜ.க. முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p>சட்டமன்றத்தை நோக்கிய பேரணி தொடங்குவதற்கு முன்பு சோரனின் வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க., மாணவர்களுக்கு எதிரான "வன்முறை பிரயோகத்தைக்" கண்டித்து இன்று (செவ்வாய் கிழமை) மாநிலம் தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.</p><p>அமைதியான போராட்டங்கள் வன்முறையால் எதிர்கொள்ளப்படக்கூடாது என்று கூறிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்தார். ஜார்க்கண்டில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியின் கூட்டாளியாக காங்கிரஸ் உள்ளது.</p><p>"அமைதியான முறையில் போராட்டம் நடத்த மாணவர்களுக்கு உரிமை உண்டு, பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வுகளைக் கொண்டுவரும்" என்று கூறிய காங்கிரஸ் தலைவர், மாணவர்களின் குறைகளை விரைவில் தீர்க்குமாறு ஜார்க்கண்ட் அரசை வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>சௌரவ் கங்குலி மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல்; காவல்துறை விசாரணை தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/national/sourav-ganguly-wife-receive-death-threats-police-begin-probe</link><comments>https://www.maalaimalar.com/news/national/sourav-ganguly-wife-receive-death-threats-police-begin-probe#comments</comments><guid isPermaLink="false">b9f57aa1-c472-455c-bce2-ff51b50abb63</guid><pubDate>Mon, 10 Aug 2026 20:01:27 +0000</pubDate><atom:updated>2026-08-10T20:01:27.079Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>police,கொலை மிரட்டல்,Death threat,Sourav Ganguly,காவல் துறை,சௌரவ் கங்குலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/0e37vq0d/sourav-ganguly.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sourav ganguly]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/0e37vq0d/sourav-ganguly.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் <a href="https://www.maalaimalar.com/topic/sourav-ganguly">சௌரவ் கங்குலி</a> மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சௌரவ் கங்குலிக்கு கடந்த சில மாதங்களாக பல மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன என்றும், அவற்றில் ஒன்று தன்னையும் தனது மனைவி டோனா கங்குலியையும் கொன்றுவிடுவதாக எச்சரித்திருந்தது என்றும் அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். இந்த கடிதங்களை அனுப்பியது யார் என்பதை கண்டறிய <a href="https://www.maalaimalar.com/topic/police">காவல்துறை</a> விசாரணையை தொடங்கியுள்ளது.</p><h2>மிரட்டல் கடிதம்:</h2><p>தற்போது வங்காள கிரிக்கெட் சங்கத்தின் (CAB) தலைவராக இருக்கும் கங்குலி, திங்கள்கிழமை தனது அலுவலகத்திற்கு வந்த சமீபத்திய கடிதத்தை தொடர்ந்து, தெற்கு கொல்கத்தாவில் உள்ள தாக்கூர் புகுர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமான புகாரை அளித்துள்ளார் என்று காவல் துறை அதிகாரி கூறினார்.</p><p>முன்னாள் பி.சி.சி.ஐ. (BCCI) தலைவரான சௌரவ் கங்குலி பெயருக்கு கடந்த ஆறு மாதங்களாகவே இத்தகைய கடிதங்கள் வந்து கொண்டிருந்ததாகவும், ஆனால் ஆரம்பத்தில் அவை பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><p>திங்கள்கிழமை அவரது அலுவலகத்திற்கு வந்த இரண்டு கடிதங்களில், கங்குலி மற்றும் அவரது மனைவியை கொல்லவும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கு தீங்கு விளைவிக்கவும் வெளிப்படையான மிரட்டல்கள் இருந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரரின் மேலாளர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தீவிர விசாரணை:</h2><p>கடிதங்களின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்து வருவதாகவும், அவற்றை அனுப்பியவரின் அடையாளம் மற்றும் நோக்கத்தை கண்டறிய முயற்சிப்பதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.</p><p>"நாங்கள் இந்த புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளோம். இந்த கடிதங்கள், அவற்றின் மூலம் மற்றும் கூரியர் சேவை விவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, இதற்கு பொறுப்பான நபரை கண்டறிய முயற்சிக்கிறோம்," என்று அந்த அதிகாரி கூறினார்.</p><p>வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பெல்காரியாவை சேர்ந்த ஒரு நபர், கூரியர் சேவை மூலம் இந்த கடிதங்களை அனுப்பியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.</p><h2>காவல் துறை விளக்கம்:</h2><p>அனுப்பியவர் பயன்படுத்தியதாக கூறப்படும் சிம் கார்டின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளதாகவும், பார்சல் விவரங்களை சேகரிக்க சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>"நாங்கள் கூரியர் சேவையை சேர்ந்தவர்களிடம் பேசியுள்ளோம் மற்றும் ஒரு மொபைல் எண்ணை கண்டறிந்துள்ளோம். அந்த எண்ணின் இருப்பிடத்தை கண்டறிய முயற்சிக்கிறோம்," என்று அவர் கூறினார்.</p><p>அனைத்து கடிதங்களும் ஒரே நபரால்தான் அனுப்பப்பட்டனவா என்பதையும், இந்த மிரட்டல்களுக்கான காரணம் என்ன என்பதையும் கொல்கத்தா காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட்: போராடும் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதைக் கண்டித்து பாஜக பந்த்-க்கு அழைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-row-bjp-calls-for-bandh-on-aug-11-over-police-lathi-charge-on-protesting-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-row-bjp-calls-for-bandh-on-aug-11-over-police-lathi-charge-on-protesting-students#comments</comments><guid isPermaLink="false">8db2aba4-7c4d-4a22-b98a-1a77748a5c7e</guid><pubDate>Mon, 10 Aug 2026 19:11:41 +0000</pubDate><atom:updated>2026-08-10T19:11:41.363Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,protest,Jharkhand,போராட்டம்,ஜார்க்கண்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/5tjuaqkg/BJP-Aditya-Sahu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BJP Aditya Sahu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/5tjuaqkg/BJP-Aditya-Sahu.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலத்தில் பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் "காவல்துறையின் அத்துமீறல்களை" கண்டித்து, எதிர்க்கட்சியான பா.ஜ.க. <a href="https://www.maalaimalar.com/news/national">ஜார்க்கண்ட்</a> பந்த்-க்கு அழைப்பு விடுத்துள்ளது. காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை இந்த பந்த் அமலில் இருக்கும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் ஆதித்யா சாஹு தெரிவித்தார். </p><p>"இது மாநிலம் தழுவிய பந்த் ஆகும். இருப்பினும், அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் இந்த அடைப்பு நடவடிக்கையில் இருந்து விலக்கப்பட்டுள்ளன," என்று <a href="https://www.maalaimalar.com/topic/bjp">பா.ஜ.க.</a> தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சாஹு கூறினார்.</p><h2>கடும் தாக்குதல்:</h2><p>சட்டமன்றத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்றபோது அவர்கள் குற்றவாளிகளை போல நடத்தப்பட்டதாக பாஜக தலைவர் குற்றம் சாட்டினார்.</p><p>"காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர், நீர்ப்பீச்சிகளை பயன்படுத்தினர் மற்றும் தடியடி நடத்தினர். மாலை வேளையிலும் கூட போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இது ஒரு சர்வாதிகார அரசு," என்று சாஹு கூறினார்.</p><p>மாணவர்களை ஏமாற்றியதாக ஜே.எம்.எம். (JMM) தலைமையிலான கூட்டணி அரசை அவர் குற்றம் சாட்டியதுடன், "மாணவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை" நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p><h2>மோதல்:</h2><p>பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி போராடிய வேலை தேடுபவர்கள் மீது காவல்துறையினர் நீர்ப்பீச்சிகள், கண்ணீர்ப்புகை மற்றும் தடியடியை பயன்படுத்தியதால், நேற்று (திங்கள் கிழமை) ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு அருகே ஏற்பட்ட மோதலில் பல போராட்டக்காரர்களும் நான்கு காவலர்களும் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த பல தடுப்புகளை போராட்டக்காரர்கள் மீறியதை தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டது.</p><p>காவல்துறையின் நடவடிக்கையில் பெண்கள் உட்பட பலர் காயமடைந்ததாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டிய நிலையில், போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் நான்கு காவலர்கள் காயமடைந்ததாக ராஞ்சி நகர காவல் கண்காணிப்பாளர் (SP) பரஸ் ரானா தெரிவித்தார்.</p><p>ஜே.எஸ்.எஸ்.சி. (JSSC) அல்லது ஜே.பி.எஸ்.சி. (JPSC) என எந்த அமைப்பாக இருந்தாலும், கடந்த ஆறு ஆண்டுகளாக வேலைகளை விற்பனை செய்வதிலேயே அவை ஈடுபட்டுள்ளன என்றும், அதே வேளையில் மாணவர்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி குற்றம் சாட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>109 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அரசுக்கு ரூ.35,000 கடன் வழங்கிய இந்தியர்: திருப்பி கேட்கும் பேரன்கள்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-businessman-loan-to-british-government-109-years-ago</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-businessman-loan-to-british-government-109-years-ago#comments</comments><guid isPermaLink="false">bd2766d1-b23c-4420-bb3a-9d5f165cf05f</guid><pubDate>Mon, 10 Aug 2026 16:14:40 +0000</pubDate><atom:updated>2026-08-10T16:14:40.006Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>England,Madhyapradesh,மத்தியப் பிரதேசம்,கடன்,இங்கிலாந்து,war loan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/8k57k5vl/Untitled-design-34.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இந்திய தொழிலதிபர் கொடுத்த 35,000 ரூபாய் கடனுக்கு 109 ஆண்டுகள் கழித்து பேரன்கள் கோரிக்கை]]></media:title><media:description type="html"><![CDATA[ British Loan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/8k57k5vl/Untitled-design-34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் முதலாம் உலகப் போரின்போது, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ரூ.35,000 கடனாக வழங்கி இருந்தார். தற்போது ஓர் நூற்றாண்டுக்கும் மேலான நிலையில், அந்த கடனைத் திருப்பிச் செலுத்திமாறு தொழிலதிபரின் பேரன்கள் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.</p><p>மேலும் தங்களது கோரிக்கையை பரிசீலிக்க, இங்கிலாந்து அதிகாரிகள் பதிலளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.</p><h3><strong>1937இல் இங்கிலாந்து வாங்கிய கடன்</strong></h3><p>செஹோர் நகரில் தொழிலதிபரின் பேரன்கள், வினய் மற்றும் விவேக் ருத்தியா செய்தியார்களுக்கு பேட்டி அளித்தனர். </p><p>அப்போது அவர்கள் கூறுகையில், “1937-ல் இறந்து போன எங்கள் தாத்தா சேத் ஜும்மா லால் ருத்தியா, தான் விட்டுச்சென்ற ஆவணங்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களின் அடிப்படையில், எங்களது சட்ட ஆலோசகர் பிப்ரவரி மாதம் இங்கிலாந்து கடன் மேலாண்மை அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்.</p><p>இதையடுத்து நாங்கள் அனுப்பிய கோரிக்கையை பரிசீலிக்க இங்கிலாந்து அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. </p><p>முன்னதாக முதலாம் உலகப் போரின்போது, ஏராளமான இந்திய வீரர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்தனர்.</p><p>அப்போது உணவு, தண்ணீர் மற்றும் இதர போர் செலவுகளுக்கு நிதியளிப்பதற்காக அரசாங்கம் இந்தியாவிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாயைத் திரட்டியது.</p><p>அந்த நேரத்தில், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு 35,000 ரூபாயை எங்கள் தாத்தா கடனாக வழங்கினார். 109 ஆண்டுகள் பழமையான அந்த கடனுக்கான ஆவணங்கள் பதிவேடுகளில் கண்டெடுக்கப்பட்டு எங்களிடம் உள்ளது.</p><p>அந்த ஆவணத்தில், சேத் ஜும்மா லால் ருத்தியா, இந்திய போர் கடனுக்காக 35,000 ரூபாய் செலுத்தி, அதன் மூலம் அரசாங்கத்திற்கும் பேரரசிற்கும் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>ஜூன் 4, 1917 தேதியிட்ட அந்த ஆவணத்தில், போபாலில் உள்ள ஒரு அரசியல் முகவரின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது.</p><h3><strong>இங்கிலாந்திற்கு கடிதம்</strong></h3><p>இதையடுத்து எனது வழக்கறிஞர் ஸ்ரீயான்ஷ் ரணிவால் மூலம், இங்கிலாந்து அரசாங்கத்தின் கடன் மேலாண்மை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மற்றும் அச்சுப் பிரதி வழியாக ஒரு சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்பினோம்.</p><p>சமீபத்தில், எனது வழக்கறிஞருக்கு இங்கிலாந்து கடன் மேலாண்மை அலுவலகத்திடமிருந்து ஒரு பதில் கிடைத்தது.</p><p>அதில், உங்கள் கட்சிக்காரருக்கு உரிமை கோரப்படாத பணம் கிடைக்க உரிமை உண்டு என்று நீங்கள் நம்பினால், சம்பந்தப்பட்ட சொத்துப் பங்கீடு தொடர்பான உங்களிடம் உள்ள தகவல்களை அளித்து, அரசுப் பத்திரப் பதிவாளரான கம்ப்யூட்டர்ஷேர் இன்வெஸ்டர் சர்வீசஸ் பிஎல்சி-யைத் தொடர்பு கொள்ளும்படி பதில் அனுப்பியது.</p><p>மேலும் இந்த ஆவணங்களுடன் வேறு ஏதேனும் சான்றிதழ்கள் மற்றும் கடிதப் போக்குவரத்துகள் உள்ளிட்ட ஆவண சான்றுகளின் நகல்களை நீங்கள் வழங்கினால் அது உதவியாக இருக்கும்,” என்று இங்கிலாந்து அரசு எங்களுக்கு கடிதம் அனுப்பியது.</p><p>மேலும், “ஒரு நூற்றாண்டுக்கும் மேலான இதன் மதிப்பு, வட்டியையும் சேர்த்து, இன்று பல கோடிகளாக இருக்கும். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இந்த தொகையைக் கடனாக கொடுத்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 1937-ல் எனது தாத்தா சேத் ஜும்மா லால் இறந்துவிட்டார்.</p><h3><strong>கடனை திருப்பித் தர கோரிக்கை</strong></h3><p>போபால் மாநிலத்தின் நிர்வாகத்தை சீரமைப்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த பணத்தை எங்கள் தாத்தாவிடம் இருந்து கடனாகப் பெற்றது.</p><p>மேலும், சர்வதேச சட்டத்தின்படி, ஒரு இறையாண்மை கொண்ட நாடு கொள்கையளவில் தனது பழைய கடன்களை திருப்பி செலுத்த சட்டப்பூர்வமாக கடமைப்பட்டுள்ளது” என்று விவேக் ருத்தியா கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்: ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-behaving-irresponsibly-deliberately-disrupting-parliament-nadda</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-behaving-irresponsibly-deliberately-disrupting-parliament-nadda#comments</comments><guid isPermaLink="false">63be20a5-9aec-41dc-becf-640066cf5838</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:42:32 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:42:32.882Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,நாடாளுமன்றம்,ஜேபி நட்டா,JP Nadda,parliament</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3ta5crrm/RahulGandhiJPNadda.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி- ஜே.பி. நட்டா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3ta5crrm/RahulGandhiJPNadda.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்று, நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு ஒப்புக்கொண்ட போதிலும், காங்கிரஸ் தலைவர் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருந்ததாக மத்திய அமைச்சர் நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>இது தொடர்பாக ஜே.பி. நட்டா கூறியதாவது:-</h2><p>ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார். உள்துறை அமைச்சர் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டபோது, ​​காங்கிரஸ் தலைவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ராமர் கோயில் நன்கொடை தொடர்பான முறைகேடு புகார்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரத் தொடங்கினார்.</p><h2>விவாதிக்க நாங்கள் தயார்</h2><p>அவர்கள் ஏன் விவாதத்திலிருந்து ஓடுகிறார்கள்? நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன் ராகுல் காந்தி அவர்களே, விவாதத்திலிருந்து ஓடாதீர்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம். அவைக்குள் எந்தவொரு விவகாரம் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஓடாதீர்கள்.</p><p>அவையின் செயல்பாட்டைத் தடுப்பதே அவரது நோக்கம் போலத் தெரிகிறது. அவை செயல்படுவதை அவர் விரும்பவில்லை. அதனால்தான் கடந்த 15 நாட்களாக அவர் நடவடிக்கைகளைச் சீர்குலைத்து வருகிறார்.</p><h2>பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார் ராகுல் காந்தி</h2><p>ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறார். எதிர்மறையான அரசியலில் ஈடுபடுகிறார். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் ராகுல் காந்திக்குச் சவால் விடுகிறேன். அவைக்கு வாருங்கள், நாங்கள் விவாதத்திற்குத் தயாராக இருக்கிறோம். மேலும் சொல்கிறேன், உங்களுக்குத் தகுந்த பதில் கிடைக்கும்.</p><p>தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள். ஜந்தர் மந்தரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை, அங்கு துப்பாக்கிச் சூடு நடத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.</p><p>இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மழை பெய்தும் மாறாத நிலை... இந்தியாவில் தொடரும் பருவமழை பற்றாக்குறை!</title><link>https://www.maalaimalar.com/news/national/monsoon-deficit-continues-in-india-despite-recent-rains</link><comments>https://www.maalaimalar.com/news/national/monsoon-deficit-continues-in-india-despite-recent-rains#comments</comments><guid isPermaLink="false">3360cdb2-c29f-4102-be80-1485895cb988</guid><pubDate>Mon, 10 Aug 2026 14:50:26 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:50:26.797Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,பருவமழை,monsoon,Monsoon deficit,பருவமழை பற்றாக்குறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2xgrdkq7/monsoon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Monsoon deficit  India]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2xgrdkq7/monsoon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி, ஹரியானா மற்றும் கிழக்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் கடந்த வாரத்தில் பெய்த நல்ல மழை, அப்பகுதிகளில் நிலவி வந்த மழைப் பற்றாக்குறையைச் போக்க உதவிய போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த பருவமழைப் பற்றாக்குறையில் இது பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்களின் அடிப்படையில் நாட்டின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:</p><h2>மழை ப<strong>ற்றாக்கு</strong>றை நிலவரம்</h2><p>கடந்த 2-ஆம் தேதி நிலவரப்படி '12%' ஆக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த பருவமழை பற்றாக்குறை, நேற்று (ஆகஸ்ட் 9) '11%' ஆக மட்டுமே குறைந்துள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அதிகபட்சமாக '25%' மழை பற்றாக்குறை பதிவாகியுள்ளது. தெற்கு தீபகற்ப இந்தியாவில் '17%' மற்றும் வடமேற்கு இந்தியாவில் '11%' பற்றாக்குறை பதிவாகியுள்ளது. பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் 20% மற்றும் அதற்கு மேற்பட்ட கடுமையான மழை பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.</p><h2>விவசாய<strong>த்தில் இதன்</strong> தாக்கம்</h2><p>* நாட்டின் மொத்த விவசாயப் பரப்பளவில் சுமார் '88%' பகுதிகளில் கரீஃப் பருவச் சாகுபடி/விதைப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்டது.</p><p>* இதனால், கடந்த வார மழை விதைப்பு பரப்பளவில் நிலவிய பற்றாக்குறையை 1% மட்டுமே குறைக்க உதவியுள்ளது.</p><p>* நாட்டின் முக்கிய கரீஃப் பயிரான 'நெல் சாகுபடி பரப்பு', கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இன்னமும் 4% குறைவாகவே உள்ளது. பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நெல் மற்றும் சோளம் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>அணை <strong>நீர்மட்டம் &amp; மின் உ</strong>ற்பத்தி</h2><p>இம்மாதத்தில் பெய்து வரும் இந்த மழை, நாட்டின் முக்கிய அணைகள் மற்றும் நீர்நிலைகளின் நீர் இருப்பை உயர்த்த உதவும். இது நீர்மின் உற்பத்திக்கும் மற்றும் அடுத்த சாகுபடி பருவத்திற்கும் சாதகமான சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>வானிலை <strong>முன்னறிவிப்பு</strong></h2><p>வங்காளதேசம் மற்றும் வட வங்கக்கடலோரப் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஆகஸ்ட் 13 முதல் மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் மழை மீண்டும் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்டில் சட்டசபையை நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது தவறானது: ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-speaks-onjharkhand-protest-crackdown-use-of-force-against-students-is-wrong</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-speaks-onjharkhand-protest-crackdown-use-of-force-against-students-is-wrong#comments</comments><guid isPermaLink="false">4d879c93-f0c4-4557-a397-3f5ff9d92837</guid><pubDate>Mon, 10 Aug 2026 14:46:19 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:46:19.587Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Jharkhand,மாணவர்கள் போராட்டம்,ஜார்க்கண்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/o6htc9yw/RahulGandhi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/o6htc9yw/RahulGandhi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேலை வாய்ப்புக்கான அம்மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியது. இதனால் ஜார்க்கண்ட் மாநில அரசு பல்வேறு கட்டங்களாக மாணவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.</p><p>இதற்கிடையே பல அதிகாரிகளை அரசு நீக்கியது. இருந்தபோதிலும் போராட்டத்தை மாணவர்கள் கைவிடவில்லை. இன்று ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தொடங்கியது. மாணவர்கள் சட்டமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர்.</p><h2>போலீசார் தடியடி</h2><p>காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை மீறி மாணவர்கள் முன்னேறிச் சென்றனர். இதனால் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர். இந்த நிலையில் மாணவர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவியது தவறானது என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்க பதிவில் "ஜார்க்கண்ட் அரசு தொடர்ந்து மாணவர்களின் குறைகளை கேட்டு, அதை உடனடியாக தீர்க்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பாஜக மீது அமைச்சர் குற்றச்சாட்டு</h2><p>இன்று காலை ஜார்க்கண்ட் சட்டசபை கூட்டம் தொடங்கியது. போராட்டம் குறித்து அமளி ஏற்பட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அமைச்சர் சுதிவ்யா குமார், மாணவர்களின் போராட்டத்தை எதிர்க்கட்சியான பாஜக கைப்பற்றிக் கொண்டதாக குறு்றம்சாட்டினார்.</p><p>மேலும், மாணவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்துக் கொண்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், மாணவர்களின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனினும், போராட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்து பாஜக, அவர்களை தவறாக வழி நடத்துகிறார்கள் சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.</p><h2>எதிர்க்கட்சித் தலைவர் கைது</h2><p>இதனிடையே தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, பாஜகவை சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி ஆகியோர் தலைமையில் பாஜக தொண்டர்கள் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இல்லத்தின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முதல்வர் இல்லத்தின் வெளியே போராட்டம் நடத்திய பாபுலால் மராண்டி உள்ளிட்ட பாஜக தலைவர்களை மாநிலக் காவல்துறை கைது செய்து அப்புறப்படுத்தியது.</p><h2>பாபுலால் குற்றச்சாட்டு</h2><p>மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தீவிரப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஜார்க்கண்ட் அரசு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தேவையின்றி காலந்தாழ்த்தி வருவதாக பாபுலால் மராண்டி சாடினார்.</p><p>JPSC, JSSC மற்றும் CGL தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் முதன்மைக் கோரிக்கையை நிறைவேற்றாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே மாநில அரசு முயல்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>இரு பிரிவினருக்கு இடையேயான மோதலால் பாதிரியார்கள் மீது தாக்குதல்: தேவாலயத்தை பூட்டிய காவல்துறை</title><link>https://www.maalaimalar.com/news/national/clash-between-two-factions-in-church-police-lock-church-after-attack-on-priests</link><comments>https://www.maalaimalar.com/news/national/clash-between-two-factions-in-church-police-lock-church-after-attack-on-priests#comments</comments><guid isPermaLink="false">511bc5d3-78f4-4856-9ac9-a343ee9ec7a3</guid><pubDate>Mon, 10 Aug 2026 14:28:27 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:28:27.032Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,church attack,கேரளா,malankara church,ஆலயம் தாக்குதல்,மலங்காரா ஆலயம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/en5ppc4n/Untitled-design-32.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இரு பிரிவினரின் வாக்குவாதம் வன்முறையாக மாறி பாதிரியார்கள் தாக்கப்பட்டதால் ஆலயத்தை பூட்டிய காவல்துறை ]]></media:title><media:description type="html"><![CDATA[ Kerala Church]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/en5ppc4n/Untitled-design-32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் மூவாற்றுப்புழா அருகே உள்ள பிரமடத்தில் அமைந்துள்ள மலங்கரா ஆலயத்தில் ஆர்த்தடாக்ஸ் மற்றும் ஜேக்கபைட் பிரிவுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆலயத்திற்குள் மோதிக்கொண்டனர்.</p><p><strong>கேரளாவில் ஆலயத்தில் மோதல்</strong></p><p>கொச்சியில் அமைந்துள்ள புனித யோவான் பெத்லகேம் ஆலயம் ஜேக்கபைட் என்ற பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் பாதிரியார்கள் தலைமையிலான ஆர்த்தடாக்ஸ் என்ற பிரிவினர், நீதிமன்ற உத்தரவு தங்களுக்குச் சாதகமாக இருப்பதாக கூறி ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் கூட்டம் நடத்த வந்தனர்.</p><p>அப்போது மற்றொரு ஜேக்கபைட் பிரிவினர் ஆலயத்திற்குள் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தனர். அங்கு வந்த ஆர்த்தடாக்ஸ் பிரிவினர்களிடம் முன்சிப் நீதிமன்றம் தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பளித்துள்ளதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><p>வாய்மொழி வாக்குவாதம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து, இரு தரப்பு பாதிரியார்களும் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், பிரச்சனையை சுமூகமாக தீர்க்கும்படி கூறினர்.</p><p><strong>ஆலயத்தை பூட்டிய காவல்துறை</strong></p><p>ஆனால் பதற்றம் தொடர்ந்து அதிகரித்ததால், காவல்துறை அதிகாரிகள் ஆலயத்தை தற்காலிகமாக பூட்டு போட்டு பூட்டினர். இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை மாலை இருதரப்பை சேர்ந்தவர்களும் மாவட்ட நிர்வாகத்தில்டம் பேச்சுவார்த்தை நடத்தும்படி காவல்துறை கூறியது.</p><p>ஆலயத்தில் நடந்த தாக்குதலில் பாதிரியார்கள் காயமடைந்ததாக இரு தரப்பினரும் குற்றம்சாட்டி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><p><strong>பாதிரியார்கள் குற்றச்சாட்டு</strong></p><p>இதுகுறித்து ஜேக்கபைட் சிரியன் ஆலயத்தின் ஊடகப் பிரிவுத் தலைவர் குரியகோஸ் மோர் கூறுகையில், “தேவாலயத் தகராறு தொடர்பான பிரச்சினைகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதால், ஒரு சுமுகமான தீர்வைக் காண்பதற்காக மாநில அரசு இரு தரப்பினருடனும் மத்தியஸ்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.</p><p>இந்தச் சூழ்நிலையில், ஜேக்கபைட் பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களில் வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்குவதும் பதற்றத்தைத் தூண்டுவதும் அமைதி முயற்சிகளைப் பாதிக்கும்” என்று அவர் கூறினார்.</p><p>இதையடுத்து ஆர்த்தடாக்ஸ் பிரிவர் சேர்ந்த ஊடகப் பிரிவின் தலைவரான யுஹானோன் மோர் கூறுகையில், “புனித குர்பானாவைக் கொண்டாட வந்த பாதிரியார் மற்றும் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் நாங்கள் கண்டிக்கிறோம்.</p><p>சட்டப்படி நியமிக்கப்பட்ட பிரிவினருக்கு இடையூறு செய்யக்கூடாது என்று மூவாற்றுப்புழா துணை நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளது” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஓடும் ரெயிலில் செல்போன் பறிப்பு: தவறி விழுந்து வாலிபர் பரிதாப பலி-குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/mobile-snatching-on-moving-train-youth-dies-after-fall-in-gujarat</link><comments>https://www.maalaimalar.com/news/national/mobile-snatching-on-moving-train-youth-dies-after-fall-in-gujarat#comments</comments><guid isPermaLink="false">9cf7afff-09e9-47a2-8f68-c4c895a0c461</guid><pubDate>Mon, 10 Aug 2026 14:13:48 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:13:48.086Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>train accident,gujarat,குஜராத் மாநிலம்,ராஜஸ்தான்,Panoli,பாணோலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/luqbecxg/train.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gujarat Train accident  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/luqbecxg/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலம் பாணோலி ரெயில் நிலையத்தில், இயங்கிக்கொண்டிருந்த ரெயிலில் இருந்து மர்ம நபர் ஒருவன் செல்போனைப் பறித்ததால், ரெயிலில் இருந்து தவறி விழுந்த 32 வயது இளைஞர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை நடுங்க வைக்கும் இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p> உயிரிழந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் குர்ஜார் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது குடும்பப் வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த 6 ஆம் தேதி அன்று, அசோக் குர்ஜார் ராஜஸ்தானின் சவாய் மாதோபூரிலிருந்து சூரத் நோக்கி ஜெய்ப்பூர் - பாந்த்ரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பொதுப் பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்தார்.</p><h2>திடீர் <strong>தாக்கு</strong>தல்</h2><p>ரெயில் பாணோலி ரெயில் நிலையத்தைக் கடந்து மெதுவாகச் சென்று கொண்டிருந்தபோது, அசோக் ரெயிலின் வாசலுக்கு அருகே அமர்ந்திருந்தார். அப்போது பிளாட்பாரத்தில் இருந்த பெஞ்சில் தூங்குவது போல் நடித்த நபர் ஒருவன், ரெயில் நெருங்கியதும் திடீரென எழுந்து ஓடிவந்து அசோக்கின் கையில் இருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பினான். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைதடுமாறிய அசோக், ரெயிலைப் பிடித்துத் தொங்க முயன்றார். ஆனால் வேகம் காரணமாக சில நொடிகளில் பிடிநழுவி பிளாட்பாரத்தில் பலமாக விழுந்து படுகாயமடைந்தார்.</p><h2>காவ<strong>ல்துறை நடவடிக்கை</strong></h2><p>விபத்துக்குப் பிறகு உடனடியாக மீட்கப்பட்ட அசோக், அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ரெயில்வே காவல்துறை, ரெயில் நிலைய சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் துணிச்சலாகச் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு, ஒருவரின் உயிரிழப்புக்குக் காரணமான அந்த மர்ம நபரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>குஜராத்தில் அரங்கேறியுள்ள இச்சம்பவம், ரெயில் பயணிகளிடையே பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்த வரியும் விதிக்கப்படாது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-tax-will-be-levied-on-upi-transactions-union-minister-nirmala-sitharaman</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-tax-will-be-levied-on-upi-transactions-union-minister-nirmala-sitharaman#comments</comments><guid isPermaLink="false">8db06255-8e77-4c5d-9a6e-adf71badc4e7</guid><pubDate>Mon, 10 Aug 2026 13:58:35 +0000</pubDate><atom:updated>2026-08-10T13:58:35.521Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,நிர்மலா சீதாராமன்,nirmala Sitharaman,UPI transactions,parliament,யுபிஐ பரிவர்த்தனைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/p9xh5wgr/New-Project-2026-08-10T191606.820.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்த வரியும் விதிக்கப்படாது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/p9xh5wgr/New-Project-2026-08-10T191606.820.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா நிறைவேறியது. </p><p>கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, இன்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. </p><p>மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த மசோதா எந்த வரியையும் அல்லது பரிவர்த்தனை கட்டணத்தையும் புதிதாக முன்மொழியவில்லை என தெளிவுப்படுத்தினார். </p><p>“நுகர்வோர் யுபிஐ கட்டணம் ஏதேனும் செலுத்துவார்களா என்றால் இல்லை. யுபிஐ தொடங்கப்பட்டதிலிருந்தே நுகர்வோருக்கு இலவசமாகவே இருந்து வருகிறது. மேலும், ஒவ்வொரு இந்தியரும் எந்தவித பரிவர்த்தனைக் கட்டணமும் செலுத்தாமல் இந்த உடனடி டிஜிட்டல் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்” என தெரிவித்தார்.</p><p>வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026 மூன்று முக்கிய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்கிறது. பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுமுறைகள் சட்டம், 2007, வருமான வரிச் சட்டம், 2025, நிதிச் சட்டம், 2026  ஆகிய மூன்று பிரிவுகளில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.</p><p>பணம் செலுத்துதல் சட்டத்தில் திருத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமோ என பயனர்களிடையே அச்சம் எழுந்துவந்தது. இந்நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். </p><p>எதிர்காலத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டாலும், அந்த சுமை பொதுமக்கள் மீது விழாது. அது பெரிய வணிகர்களிடம் மட்டுமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பெங்களூருவில் பப் மற்றும் ஹோட்டல்களில் அழுகிய, பூஞ்சைகள் சூழ்ந்த இறைச்சிகளால் அதிர்ந்து போன அதிகாரிகள்: பாய்ந்தது நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/45-kg-of-rotten-beef-seized-in-bengaluru-after-star-hotel-raids</link><comments>https://www.maalaimalar.com/news/national/45-kg-of-rotten-beef-seized-in-bengaluru-after-star-hotel-raids#comments</comments><guid isPermaLink="false">9b4f1c03-792a-416b-8a16-b116c8602a85</guid><pubDate>Mon, 10 Aug 2026 13:20:13 +0000</pubDate><atom:updated>2026-08-10T13:20:13.737Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FSSAI,Food Safety Officer,உணவு பாதுகாப்புத் துறை,உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்,rotten meat,அழுகிய இறைச்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/wuqkn19g/Untitled-design-31.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெங்களூரு மதுபான விடுதியில் 45 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்]]></media:title><media:description type="html"><![CDATA[ Bengaluru Food Safety ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/wuqkn19g/Untitled-design-31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் உள்ள பகிர் நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அழுகிய மற்றும் பூஞ்சை பாதித்த இறைச்சிகள், காலாவதியான பால் பொருட்கள் மற்றும் முறையற்ற முறையில் சேமிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டது. </p><p>இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள ஒரு மதுபான விடுதி மூடப்பட்டு, மேலும் பல உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. </p><p>பெங்களுரில் யுபி சிட்டி ஆடம்பர வணிக வளாகத்தில் உள்ள மதுபான விடுதியில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது, சமையலறை சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்படுவது கண்டறியப்பட்டது.</p><p>மேலும் சமையலறையில் அழுகிய நிலையில் இருந்த கோழி மற்றும் மாட்டிறைச்சி கண்டெடுக்கப்பட்டு, அந்த இறைச்சியில் பூஞ்சை வளர்ந்திருந்தது கண்டறியப்பட்டது.</p><h3><strong>காலாவதியான உணவு பொருட்கள்</strong></h3><p>அப்போது சுமார் 10 நாட்கள் காலாவதி தேதி கடந்த பால் மற்றும் தயிர் பொருட்கள், 45 கிலோ அழுகிய கோழி மற்றும் மாட்டிறைச்சி, 6 கிலோ காய்கறிகள், கட்லெட்டுகள் உட்பட மொத்தம் 51 கிலோ உணவுப் பொருட்கள் உண்ணத் தகுதியற்றவை எனக் கண்டறியப்பட்டது. </p><p>மேலும் 15 லிட்டர் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யும் கண்டறியப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டது.</p><h3><strong>உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை</strong></h3><p>முன்னதாக ராயல் செயின் ஹோட்டலில் அதிகாரிகள் 50 கிலோ வாத்துக்கறியையும் 5 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்தனர். மெட்ராஸ் கிச்சனில் 5 கிலோ பச்சை பட்டாணியும், டெஸ்கான் ஹோட்டலில் இருந்து 5 கிலோ காளான்களும் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>சென்செஸ் ஹோட்டலில் அதிகாரிகள் 3 கிலோ மீன்களைப் பறிமுதல் செய்ததோடு, கேக், உருளைக்கிழங்கு மற்றும் டாக்கோஸ் அடங்கிய மேலும் 7 கிலோ உணவுப் பொருட்களை அப்புறப்படுத்தினர்.</p><p>பெங்களூருவில் உள்ள பல புகழ்பெற்ற ஹோட்டல்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் கோல்ட்மேன் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ராதாகிருஷ்ணா ஃபுட்லேண்ட் நிறுவனங்களால் இயக்கப்படும் உணவு சேமிப்பு மற்றும் விநியோக மையங்களும் ஆய்வு செய்யப்பட்டன.</p><p>இந்த ஆலைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்போது, காலாவதி தேதி நெருங்கிய சுமார் 70 கிலோ சோயா சாஸ் மற்றும் பல்வேறு இதர சாஸ்கள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.</p><p>உணவு பாதுகாப்புத் துறை ஐந்து இறைச்சி மாதிரிகளையும், 13 இதர உணவு மாதிரிகளையும் சேகரித்து, அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.</p><p>ஸ்ட்ராபெர்ரி சுவையுடைய பானங்கள் மற்றும் காலாவதி தேதி நெருங்கிய பிற பானங்கள் உட்பட, சுமார் 10 லிட்டர் குளிர்பானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை கூறுகையில், “சேமிப்பு நிலைமைகள், உணவு பொருட்களின் தரம் மற்றும் வளாகங்களில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.</p><p>உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர தேவைகளை மீறுவதாக கண்டறியப்பட்ட உணவு வணிக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/former-chairman-of-the-jharkhand-public-service-commission-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/former-chairman-of-the-jharkhand-public-service-commission-arrested#comments</comments><guid isPermaLink="false">5c79da20-56b4-4fb8-89d1-036569892946</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:25:01 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:25:01.257Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,JPSC chairperson,Khiangte,ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம்,கியாங்டே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/6bl11m4t/New-Project-2026-08-10T155637.464.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவர் கைது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/6bl11m4t/New-Project-2026-08-10T155637.464.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்வு முறைகேடு புகாரில், ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் எல். கியாங்டே, குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>மாநிலத்தின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், கடந்த ஆண்டு பிப்ரவரியில் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜூலை.22ம் தேதி இப்பதவியை ராஜினாமா செய்தார். </p><p>இவ்விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்வதே தனது ராஜினாமாவின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.</p><h2>பிரச்னை என்ன? </h2><p>14-வது ஜார்க்கண்ட் சிவில் சர்வீசஸ் ஆரம்பத் தேர்வு மற்றும் பிற அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. </p><p>அரசுத் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் தலைநகர் ராஞ்சியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.</p><p>போராட்டத்தின் ஒருபகுதியாக மாணவர்கள் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது, போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களைக் கலைத்தனர். </p><p>மாணவர் அமைப்பினர் அரசுடன் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தினாலும் சிஜிஎல் தேர்வை ரத்து செய்ய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இவ்விவகாரம் போராட்டமாக வெடித்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>நரேந்திரா பெயரை வெறுக்கிறேன்: பாகிஸ்தான் வீரர் கூறியதை பிரதமர் மோடியிடம் நினைவு கூர்ந்த இந்திய வீரர்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/i-hate-the-name-narendra-pakistan-boxer-remark-recalled-to-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-hate-the-name-narendra-pakistan-boxer-remark-recalled-to-modi#comments</comments><guid isPermaLink="false">22486426-e5e3-450b-a67f-bd0ff6717c9f</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:18:42 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:18:42.445Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,நரேந்திர மோடி,Jadumani Singh,Narendar berwal,நரேந்திர பெர்வால்,ஜடுமணி சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/vulgzri5/Untitled-design-28.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாகிஸ்தான் வீரர் குறித்து குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால் கூறியது, மோடியை நீண்ட நேரம் சிரிக்க வைத்தது.]]></media:title><media:description type="html"><![CDATA[ Narendra Modi - Narendra berwal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/vulgzri5/Untitled-design-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தில் சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், இந்தியா சார்பாக கலந்துகொண்டு பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். </p><p>அப்போது, இந்திய குத்துச்சண்டை வீரர், தன்னிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் வீரர் குறித்து ஒரு நகைச்சுவையான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.</p><p>கிளாஸ்கோவில் நடைபெற்ற ஆண்களுக்கான 90+ கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நரேந்தர் பெர்வால், 2015 உலக ராணுவ விளையாட்டுப் போட்டிகளில் (world military games) ஒரு பாகிஸ்தானிய வீரரை தோற்கடித்தபோது நடந்த ஒரு சம்பவத்தை, பிரதமர் மோடியிடம் கூறினார்.</p><h3><strong>குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால்</strong></h3><p>அப்போது தோல்வியடைந்த பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர் என்னிடம் கூறுகையில், “உங்கள் பெயர் நரேந்தர், உங்கள் பயிற்சியாளரின் பெயர் நரேந்தர், உங்களின் பிரதமரின் பெயர் நரேந்திரா. நான் நரேந்திரா என்ற பெயரை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன்” என்று அவர் கூறியதாக பகிர்ந்துகொண்டார்.</p><p>இதை பிரதமர் மோடி கேட்டதும், தனது சிரிப்பை அடக்க முடியாமல் நீண்ட நேரத்திற்கு சிரித்துக் கொண்டே இருந்தார்.</p><h3><strong>கார்கில் வீரர்களுக்கு சமர்ப்பணம்</strong></h3><p>இதையடுத்து 55 கிலோ ஆடவர் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜதுமணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பாகிஸ்தானின் சுமாமா ரஹ்மானை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தார்.</p><p>அப்போது அவர் பிரதமர் மோடியிடம் கூறுகையில், “அது கார்கில் தினம், அன்றுதான் நான் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினேன். இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவன் என்பதால், நான் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன்.</p><p>நான் அவர்களை 5-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, அந்த வெற்றியை நமது இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணித்தேன்,” என்று கூறினார்.</p><h3><strong>பிரதமர் மோடி</strong> பெருமிதம்</h3><p>இதைத்தொடர்ந்து பேசிய மோடி, இந்த வெற்றியின் முக்கியத்துவத்தையும், அது கார்கில் வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதையும் பாராட்டினார்.</p><p>மேலும் அவர், “அதை நினைவுகூர்கையில், குறிப்பாக நீங்களே படைகளைச் சேர்ந்தவர் என்பதால், உங்கள் பதக்கத்தை கார்கில் வெற்றியாளர்களுக்கு அர்ப்பணித்து நீங்கள் வெளிப்படுத்திய உணர்வு, அந்த வெற்றிக்குக் கூடுதல் பெருமையைச் சேர்த்தது என்று நான் உண்மையாகவே நம்புகிறேன்.</p><p>மேலும், நீங்கள் யாரைத் தோற்கடித்தீர்களோ, அவர்களைத்தான் தோற்கடித்தீர்கள்!” என்று மோடி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>போலி அடையாளத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகளை ஏமாற்றிய வாலிபர் - 25 பெண்கள் மோசடி அம்பலமாகி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-identity-marriage-scam-youth-who-wed-bjp-mla-daughter-cheated-25-women</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-identity-marriage-scam-youth-who-wed-bjp-mla-daughter-cheated-25-women#comments</comments><guid isPermaLink="false">ee02c5e1-4997-4e29-9d24-a2084d3ad24a</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:18:08 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:18:08.820Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,உத்தரபிரதேசம்,uttarpradesh,BJPMLA,PrakharTrivedi,GyanTiwari,CheatingWomen,CroreScam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/692ibcdo/BJP-MLA-Daughter-Cheated" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  BJP MLA Daughter Cheated]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/692ibcdo/BJP-MLA-Daughter-Cheated?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரபிரதேசம் சேவதா தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கியான் திவாரியின் மகளை திருமணம் செய்த வாலிபர், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் 25-க்கும் மேற்பட்ட வசதியான பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கோடிக்கணக்கில் பணம் பறித்தது அம்பலமாகியுள்ளது. </p><p>ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என பொய் கூறி நடத்திய இந்த மோசடியில் தற்போது மருமகன் பிரகர் திரிவேதி மற்றும் அவரது தந்தை அனுஜ் திரிவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>போலி அறிமுகத்தில் திருமணம்:</h2><p>உத்தரப் பிரதேசம் மாநிலம்,சேவதா தொகுதி பா.ஜ.கஎம்.எல்.ஏ.வாக இருப்பவர் கியான் திவாரி. இவரது மகள் பிரக்யா. இவர் சீதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அனுஜ் திரிவேதியின் மகன் பிரகர் திரிவேதியை கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். </p><p>திருமணத்திற்கு முன்பு மும்பையில் பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அதிபர் என மனைவியிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவரது குடும்பத்தினருக்கு உள்ளூரில் நல்ல மரியாதை இருப்பதால் கியான் திவாரி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.</p><h2>25 பெண்கள் மோசடி அம்பலம்:</h2><p>சமீபத்தில் தனது மருமகனின் நடவடிக்கைகள் மற்றும் மோசடி தொடர்பான வழக்குகள் வெளிவந்தது. இதனை அறிந்த கியான் திவாரி தனது மருமகனின் கடந்த காலத்தை பற்றி விசாரணை நடத்தினார். </p><p>அதில் மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 25-க்கும் மேற்பட்ட வசதி படைத்த பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரிய வந்தது. </p><p>திருமணத்திற்கு பிறகு அந்தப் பெண்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை பறித்துள்ளார்.</p><h2>எம்.எல்.ஏ. கியான் திவாரியின் வீடியோ பதிவு:</h2><p>இது குறித்து சமூக வலைத்தளங்களில் மருமகனின் நடத்தை குறித்து வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் போலி அட்டைகளை தயார் செய்து தனது மகளை திருமணம் செய்வதற்கு முன்பு பல மாநிலங்களில் 25 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தை பறித்து இருக்கிறார்.</p><p>தற்போது அவர்களது குடும்ப உறவை துண்டித்து விட்டு மகளை வீட்டுக்கு அழைத்து வந்து இருக்கிறேன். பிரகர் திரிவேதி தனது குற்ற பின்னணி மற்றும் வழக்கு களை மறைத்து தனது மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார். </p><p>இதனால் மக்கள் பிரதிநிதிதியாக உள்ள தனது நற்பெயரும் பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீசில் புகார் செய்து இருக்கிறேன் என வீடியோவில் தெரி வித்துள்ளார்.</p><h2>மோசடி வாலிபர் கைது:</h2><p>இது சம்பந்தமாக உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்து அனுஜ் திரிவேதி மற்றும் பிரகர் திரிவேதி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>மகாராஷ்டிராவிலும் பல பெண்கள் புகார் செய்ததால் அந்த மாநில போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் மகளை ஏமாற்றி வாலிபர் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வாட்ஸ்அப்பில் மீடியா ஃபைல்கள் அனுப்ப உலகளவில் சிக்கல்: புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்வதில் தாமதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/whatsapp-users-worldwide-face-problems-sending-media-files</link><comments>https://www.maalaimalar.com/news/national/whatsapp-users-worldwide-face-problems-sending-media-files#comments</comments><guid isPermaLink="false">d3d9ef40-1b57-4f5f-b518-82f90b85e30c</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:14:23 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:14:23.285Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,WhatsApp,Meta,மெட்டா,வாட்ஸ்அப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/5so7as66/whatsapp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ WhatsApp ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/5so7as66/whatsapp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மெட்டா நிறுவனத்தின் முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப்பில் புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் ஜிஃப் உள்ளிட்ட ஊடகக் கோப்புகளைப் (Media Files) பகிர்வதில் உலகளவில் பெரும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதலே, பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் மீடியா ஃபைல்களை அனுப்ப இயலாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.</p><p>பயனர்களுக்கு சாதாரண உரைச் செய்திகள் தடையின்றிச் சென்று சேர்கின்றன. ஆனால், படங்கள், வீடியோக்கள் அல்லது ஸ்டிக்கர்களை அனுப்பும்போது அவை 'அப்லோட்' ஆகாமல் நீண்ட நேரம் நின்றுவிடுகின்றன. இணைய சேவை தடைகளைக் கண்காணிக்கும் டவுன்டெடெக்டர் தளத்தின் தரவுகளின்படி, பதிவான புகார்களில் 41% செய்திகள் அனுப்புவதிலும், 40% செயலியின் இயக்கத்திலும், 13% நோட்டிபிகேஷன் பிரிவிலும் சிக்கல்கள் உள்ளதாகக் காட்டுகின்றன.</p><h2>பாதிக்கப்<strong>பட்ட நாடு</strong>கள்</h2><p>இந்தத் தொழில்நுட்பக் கோளாறு இந்தியா மட்டுமன்றி பிரிட்டன், பிரான்ஸ், பிரேசில், கனடா, மெக்சிகோ, ஸ்பெயின் மற்றும் கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவலாக எதிரொலித்துள்ளது.</p><h2>பயனர்க<strong>ளின் புலம்பல்</strong> </h2><p>பயனர்கள் பலர் தங்களது போன்களை ரீஸ்டார்ட் செய்தல், வைஃபை (Wi-Fi) மற்றும் மொபைல் டேட்டாவை மாற்றி அமைத்தல், செயலியை மீண்டும் இன்ஸ்டால் செய்தல் போன்ற நடைமுறைகளைச் செய்தபோதிலும் இந்த மீடியா பகிர்வு சிக்கல் தீரவில்லை. இதனால், பலரும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மீம்களுடனும் புகார்களுடனும் தங்களது அதிருப்தியைப் பதிவிட்டு வருகின்றனர்.</p><p>இந்தத் திடீர் சேவைத் தடை குறித்து வாட்ஸ்அப் அல்லது மெட்டா நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது அறிக்கை தகவலோ வெளியடப்படவில்லை. இருப்பினும், தொழில்நுட்பக் குழுவினர் இந்தச் சிக்கலைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஜெய்ப்பூரில் திடீரென உள்வாங்கும் சாலை: வீடுகளில் விரிசல்- அச்சத்தில் மக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/jaipur-road-collapse-leaves-residents-in-fear</link><comments>https://www.maalaimalar.com/news/national/jaipur-road-collapse-leaves-residents-in-fear#comments</comments><guid isPermaLink="false">dc7c500e-db7e-4776-8b5d-e1c5df4c8d79</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:22:09 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:22:09.926Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jaipur,Shikariyon Ki Mori,Mohammed Zakariya,ஜெய்பூர்,ஷிகாரியோன் கி மோரி,முகமது ஜக்கரியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mandgf9v/shikariyon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shikariyon Ki Mori ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mandgf9v/shikariyon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜெய்பூர் நகரின் பழைய கோட்டைப் பகுதிக்கு உட்பட்ட போடா நிக்காஸ் சாலையில் அமைந்துள்ள ஷிகாரியோன் கி மோரி பகுதியில், திடீரென சாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாலும், வீடுகளில் விரிசல்கள் விழுந்து வருவதாலும் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.</p><h2>சுவர் இடி<strong>ந்து விழுந்தது</strong></h2><p>அப்பகுதியில் ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்த வீடுகளுக்கு ஜெய்பூர் மாநகராட்சி காலி செய்யக் கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், காலி செய்யப்பட்ட வீடு ஒன்றின் சுவர் நேற்று இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, வீடு முன்கூட்டியே காலி செய்யப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.</p><h2>அதிகாரிகளி<strong>ன் அலட்சிய</strong>ம்</h2><p>சுவர் இடிந்து விழுந்த பிறகும் ஜெய்பூர் மாநகராட்சியின் எந்தவொரு உயர் அதிகாரியோ அல்லது மீட்புக் குழுவினரோ சம்பவ இடத்தைப் பார்வையிட வரவில்லை என்றும், மாநகராட்சியால் நியமிக்கப்பட்ட ஒரு பாதுகாவலர் மட்டுமே அங்கு இருந்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><h2>1000 மணல் <strong>மூட்டைகள் வீ</strong>ண்</h2><p>சுமார் 10 நாட்களுக்கு முன்பு சாலையில் சிறிய பள்ளம் ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளைப் போட்டு அதை அடைக்க முயன்றனர். ஆனால், சமீபத்தில் பெய்த பலத்த மழையால் மணல் அடித்துச் செல்லப்பட்டு பள்ளம் மேலும் பெரிதானது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டும், மழைநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு அருகில் உள்ள மகாதேவ் கோவில் கிணற்றுக்குள் மண் குவிந்து வருகிறது.</p><h2>காலி செ<strong>ய்ய நோட்டீஸ்</strong></h2><p>சாலை தொடர்ந்து உள்வாங்கி வருவதால், இதுவரை 10 முதல் 15 வீடுகளில் பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை 4-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு உடனடியாகக் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் மேலும் பல குடும்பங்கள் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றன.</p><h2>முன்னா<strong>ள் கவுன்சிலரின்</strong> ஆதங்கம்</h2><p>முன்னாள் கவுன்சிலர் முகமது ஜக்கரியா மற்றும் உள்ளூர்வாசிகள் கூறுகையில், "இங்கு எந்தவித சட்டவிரோதக் கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படவில்லை. வடிகால் வசதி சரிவர இல்லாததாலும், மழைநீர் சரியாக வெளியேறாததாலும் தான் சாலை உள்வாங்கி மண் அரிப்பு ஏற்படுகிறது. வெறும் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, பிரச்சனைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும். வீடுகளைக் காலி செய்யச் சொன்னால் நாங்கள் எங்கே செல்வது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p>தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள மேலும் பல வீடுகள் பாழாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அமித் ஷா பதில் அளிக்கும்போது அச்சப்படவோ, அவையில் இருந்து வெளியேறவோ வேண்டாம்: எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரஜிஜு வேண்டுகோள்</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-kiren-rijiju-amit-shah-gives-his-response-congress-party-and-the-opposition-not-to-be-afraid-or-run-away</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-kiren-rijiju-amit-shah-gives-his-response-congress-party-and-the-opposition-not-to-be-afraid-or-run-away#comments</comments><guid isPermaLink="false">fe6dfb46-368c-4724-99a4-12f5ae6317b1</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:18:44 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:18:44.545Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,Amit Shah,அமித் ஷா,Kiren Rijiju,கிரண் ரிஜிஜு,parliament</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/6wlndx8l/Amitshah1008026.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா- கிரண் ரிஜிஜு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/6wlndx8l/Amitshah1008026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் முறைகேடு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/national/students-protest-victory-dharmendra-pradhan-resigns">தர்மேந்திர பிரதான்</a> தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்தனர்.</p><p>இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 20-ந்தேதி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் பேரணி மேற்கொண்டனர். அப்போது அவர்கள் காவல்துறையின் தடுப்புகளை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்றதால் மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார்- மாணவர்களுக்கு இடையிலான மோதல் காரணமாக தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் மற்றும் போலீசார் காயம் அடைந்தனர்.</p><p>மாணவர்களுக்கு எதிராக போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக இரு அவைகளிலும் குரல் எழுப்பினர்.</p><p>இந்த நிலையில்தான் கிரண் ரிஜிஜி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.</p><h2>இது தொடர்பாக கிரண் ரிஜிஜு கூறியதாவது:-</h2><p>காங்கிரஸ் கட்சியினருக்கும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினருக்கும் நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன். மத்திய உள்துறை அமைச்சர் தனது பதிலை நாடாளுமன்றத்தில் வழங்கும்போது, தயவுசெய்து அச்சப்பட வேண்டாம். அவையிலிருந்து வெளியேறவோ வேண்டாம் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.</p><h2>கருத்து வேறுபாடுகளை நேருக்கு நேர் எதிர்கொள்வது</h2><p>ஜனநாயகத்தின் அடிப்படை வலிமை என்பது கருத்து வேறுபாடுகளை நேருக்கு நேர் எதிர்கொள்வதில்தான் உள்ளது. ஆளும் தரப்பு பேசும்போது எதிர்க்கட்சியும் அதைக் கேட்டு, அதில் உள்ள உண்மைகள் என்ன, தவறுகள் என்ன, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் என்ன என்பதை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். பதில் திருப்திகரமாக இல்லாவிட்டால், அதற்குப் பின்னர் வலுவான கேள்விகளையும் ஆதாரங்களையும் முன்வைத்து அரசை பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும்.</p><p>நாடாளுமன்றம் என்பது வெறும் கோஷங்களை எழுப்புவதற்கான இடம் அல்ல. மக்களின் பிரச்சினைகளை விவாதித்து, அரசின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய மிக முக்கியமான ஜனநாயக அமைப்பு. எனவே, உள்துறை அமைச்சர் அளிக்கும் பதிலை முழுமையாகக் கேட்பது எதிர்க்கட்சியின் ஜனநாயகப் பொறுப்பாகும்.</p><h2>விவாதத்தைத் தவிர்ப்பது மக்களுக்கு சரியான செய்தியை அளிக்காது</h2><p>கருத்து வேறுபாடு இருந்தால் அதைக் குரல் கொடுத்து வெளிப்படுத்துங்கள். தவறான தகவல் இருந்தால் உண்மையான தகவல்களுடன் மறுத்துப் பேசுங்கள். அரசின் பதில் போதுமானதாக இல்லை என்றால், அதற்கான விளக்கத்தை கேளுங்கள். ஆனால் விவாதத்தைத் தவிர்ப்பது மக்களுக்கு சரியான செய்தியை அளிக்காது.</p><p>எனவே, காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க்கட்சிகளும் தைரியமாக இருந்து, உள்துறை அமைச்சரின் பதிலை நேரில் எதிர்கொண்டு, ஜனநாயக ரீதியாக தங்களது கருத்துகளையும் கேள்விகளையும் வலுவாக முன்வைக்க வேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள்.</p>]]></content:encoded></item><item><title>போலந்து அகதிகளின் நினைவாக மகராஷ்டிராவில் அருங்காட்சியகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/museum-for-polish-refugees-in-maharashtra-meeting-with-chief-minister</link><comments>https://www.maalaimalar.com/news/national/museum-for-polish-refugees-in-maharashtra-meeting-with-chief-minister#comments</comments><guid isPermaLink="false">23d7f88c-0730-4d71-8f62-265526939eee</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:08:41 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:08:41.839Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போலந்து,Poland,Kolhapur,கோலாப்பூர்,valivade museum,வாலிவாடே அருங்காட்சியகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/4muv5izf/Untitled-design-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோலாப்பூர் வாலிவாடேவில் போலந்து அகதிகள் புகலிடத்தை நினைவுகூரும் மனிதநேய அருங்காட்சியகம் அமைப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ India Poland வரலாற்று நட்பு அருங்காட்சியகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/4muv5izf/Untitled-design-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரண்டாம் உலக போரின்போது போலந்து நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள், புகலிடம் தேடி மகராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரிருக்கு வந்தனர். </p><p>அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட புகலிடத்தை நினைவுகூரும் வகையில், கோலாப்பூருக்கு அருகில் உள்ள வாலிவாடேவில் ஒரு அருங்காட்சியகம் அமைய உள்ளது.</p><p>இது இந்தியாவுக்கும் போலந்துக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பஞ்சகங்கா ஆற்றின் கரையில் அமைந்து, சஹ்யாத்ரி மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ள மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரம், போலந்து நாட்டுடன் மிகவும் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. </p><h3><strong>இரண்டாம் உலகப் போர்</strong></h3><p>ஜெர்மானியப் படையெடுப்பு 1939 செப்டம்பர் 17 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வுகளின் போது, 1939 முதல் 1945 வரை  இரண்டாம் உலக போர் நீடித்தது.</p><p>அதன் விளைவாக ஆயிரக்கணக்கான போலந்து மக்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர். அப்போது முதன்முதலில் குஜராத்தில் சுமார் ஆயிரம் போலந்து நாட்டை சேர்ந்த அனாதை குழந்தைகளுக்கான குடியிறுப்பு ஒன்று நிறுவப்பட்டது.</p><p>பின்னர் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 5,000 மக்களுக்காக, கோலாப்பூருக்கு அருகிலுள்ள வாலிவாடேவில் போலந்து குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டது.</p><h3><strong>மகாராஷ்டிராவில் அருங்காட்சியகம்</strong></h3><p>இந்த நிலையில் போலந்து நாட்டை சேர்ந்த அகதிகளுக்கு வழங்கப்பட்ட புகலிடத்தை நினைவுகூரும் வகையில், வாலிவாடே மனிதநேய அருங்காட்சியகம் கோலாப்பூரில் அமையவிருக்கிறது.</p><p>கடந்த வாரம், போலந்து நாடாளுமன்ற உறுப்பினரும் மற்ற பிரதிநிதிகளும், கோலாப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த யுவராஜ் சம்பாஜி மகாராஜாவுடன் இணைந்து மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்தனர்.</p><h3><strong>கோலாப்பூர் மகாராஜா யுவராஜ் சம்பாஜி</strong></h3><p>இதையடுத்து அரச குடும்பத்தை சேர்ந்த சம்பாஜி மகாராஜா கூறுகையில், “இந்த தனித்துவமான மனிதாபிமான பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் ஆதரவளித்து வரும் மகாராஷ்டிர அரசுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.</p><p>போலந்து பிரதமரும் இந்த பகிரப்பட்ட வரலாற்றை மிகவும் உயர்வாக மதிப்பதோடு, தங்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பயணத்தில் இந்தியாவை ஒரு முக்கிய உத்திசார் நட்பு நாடாகவும் கருதுகின்றனர்.</p><p>மேலும் இந்த அருங்காட்சியகம் அமைதி, கருணை மற்றும் சர்வதேச நட்புறவை ஊக்குவிப்பதோடு, இந்த பகிரப்பட்ட பாரம்பரியத்தை வருங்கால சந்ததியினருக்காக பாதுகாக்கவும் முயல்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஹர் கர் திரங்கா&apos; இயக்கம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/har-ghar-tiranga-campaign-pm-narendra-modi-appeal-to-nation</link><comments>https://www.maalaimalar.com/news/national/har-ghar-tiranga-campaign-pm-narendra-modi-appeal-to-nation#comments</comments><guid isPermaLink="false">f7eda6c2-2751-46e2-ae6f-d991b77cc56c</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:10:22 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:10:22.956Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,narendra modi,நரேந்திர மோடி,Har Ghar Tiranga,ஹர் கர் திரங்கா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/9dbb7dp8/har-tiranga.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Har Ghar Tiranga ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/9dbb7dp8/har-tiranga.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெறும் ‘ஹர் கர் திரங்கா’ (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி) இயக்கத்தில் பொதுமக்கள் அனைவரும் உற்சாகத்துடன் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>பிரதமர் மோடி <strong>பதிவு</strong> </h2><p>இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "நம் நாட்டின் மூவர்ணக் கொடி நமது பெருமையின் அடையாளம். தேசத்திற்காக எப்போதும் நமது சிறந்த பங்களிப்பை வழங்க அது நமக்கு ஊக்கமளிக்கிறது. அனைத்து குடிமக்களும் #HarGharTiranga இயக்கத்தில் பெருமளவில் பங்கேற்று, 'வளர்ச்சியடைந்த பாரதம்' (Viksit Bharat) படைப்பதற்கான கூட்டு திட்டத்தை புதுப்பிக்க வேண்டும்."</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Our Tricolour is our pride and a constant source of inspiration to always give our best for the nation.<br><br>Let us participate enthusiastically in the <a href="https://x.com/hashtag/HarGharTiranga?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#HarGharTiranga</a> movement and renew our collective resolve to contribute towards building a Viksit Bharat. Glad that this year’s… <a href="https://t.co/XH8Z1JI6my">https://t.co/XH8Z1JI6my</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2086418385236324775?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>வந்தே மாதர<strong>ம் பாடலின் 150-வது</strong> ஆண்டு சிறப்பு</h2><p>தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ உருவாக்கப்பட்டதன் 150-வது ஆண்டை நாடு கொண்டாடும் இந்த வேளையில், இந்த ஆண்டுக்கான 'ஹர் கர் திரங்கா' பிரசாரம் 'வந்தே மாதரம்' பாடலுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.</p><h2>பிரசாரத்தின் முக்<strong>கிய அ</strong>ம்சங்கள்</h2><p>நேற்று முதல் 17 வரை நாடு முழுவதும் 'திரங்கா யாத்திரை', பேரணிகள், இசைக்கச்சேரிகள் மற்றும் வந்தே மாதரம் கூட்டுப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பொதுமக்கள் தேசியக் கொடியுடன் தங்களது சுயபடம் எடுத்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் பாலியல் வன்கொடுமையை விரும்புகிறார்கள்.. டெல்லியில் போராடிய மாணவிகள் குறித்த கருத்தால் இந்துத்துவா சித்தாந்தவாதி கைது </title><link>https://www.maalaimalar.com/news/national/hindutva-commentator-arrested-dg-mohandas-held-by-kerala-cyber-crime-for-inflammatory-remarks-on-neet-protest-at-jantar-mantar</link><comments>https://www.maalaimalar.com/news/national/hindutva-commentator-arrested-dg-mohandas-held-by-kerala-cyber-crime-for-inflammatory-remarks-on-neet-protest-at-jantar-mantar#comments</comments><guid isPermaLink="false">0e04ed40-a8ce-4dfd-8b9c-ba96525d6357</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:41:07 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:41:07.976Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வலதுசாரி,CJP Protest,சிஜேபி போராட்டம்,அரசியல் விமர்சகர்,Political commentator,right-winger</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/7k34r9rq/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டி.ஜி.மோகன்தாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.ஜி.மோகன்தாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/7k34r9rq/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவுக்கு  எதிராகப் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் </a>குறித்து அவதூறாகவும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய இந்துத்துவா சித்தாந்தவாதியும் வலதுசாரி அரசியல் விமர்சகருமான  டி.ஜி.மோகன்தாஸ் கேரளா சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  </p><p> பத்ரிகா  என்ற தனது யூடியூப் சேனலில் ஜூலை 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அவர் வெளியிட்ட வீடியோக்களில், ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து மோகன்தாஸ் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டது.  </p><h2>வீடியோ</h2><p>அந்த வீடியோவில், "நான் மட்டும் பொறுப்பில் இருந்திருந்தால், ஜந்தர் மந்தரைச் சுற்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, போராட்டக்காரர்களைக் கலைந்து போக உத்தரவிட்டிருப்பேன். அவர்கள் கேட்காவிட்டால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டு இருப்பேன். சிலர் உயிரிழந்தாலும் சூழல் சில மணிநேரங்களில் அமைதியாகிவிடும்" என்று அவர் பேசியிருந்தார்.</p><p>மேலும், டெல்லியில் மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டம் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு வழிவகுத்திருக்கும் என்றும், ஆனால் "அதுகுறித்து எந்த புகாரும் வந்திருக்காது, ஏனெனில் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் பாலியல் வன்கொடுமையை விரும்புகிறார்கள், அதுமட்டுமின்றி, சில பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை ரசிக்கவும் செய்கிறார்கள்" என வீடியோவில் கொச்சையாக பேசியிருந்தார்.</p><p>இந்த வீடியோக்கள் தொடர்பாக இந்திய மாணவர் சங்கமான எஸ்எப்ஐ மற்றும் அகில இந்திய மாணவர் பெருமன்றம் ஏஐஎஸ்எப் ஆகிய மாணவர் அமைப்புகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.</p> <h2>கைது</h2><p>கொச்சி, மட்டான்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்று மாலையில் கஸ்டடியில் எடுக்கப்பட்ட மோகன்தாஸ், நள்ளிரவில் திருவனந்தபுரம் சைபர் காவல நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டார்.</p><p>வன்முறையைத் தூண்டுதல், பொய்யான தகவல்களைப் பரப்புதல் உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>சமூக வலைதளங்களில் இருந்து அந்தச் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.</p><p>மோகன்தாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கத் திருவனந்தபுரம் சைபர் காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விபி ஜி ராம் ஜி திட்டம்.. அமலான முதல் மாதத்திலேயே மொத்த ஊரக வேலை நாட்கள் பாதியாக சரிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/rural-jobs-fall-workdays-under-new-vpg-ramji-scheme-drop-nearly-50-in-first-month</link><comments>https://www.maalaimalar.com/news/national/rural-jobs-fall-workdays-under-new-vpg-ramji-scheme-drop-nearly-50-in-first-month#comments</comments><guid isPermaLink="false">3ece3f3f-ff97-47cf-9006-39616be5caa4</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:03:59 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:03:59.159Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,central government,MGNREGA Scheme,விபி ஜி ராம் ஜி,VB G Ram G,ஊரக வேலை உறுதித் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/76h003vy/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விபிஜி ராம் ஜி திட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ விபிஜி ராம் ஜி திட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/76h003vy/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNERA) பதிலாக மத்திய அரசு,<a href="https://www.maalaimalar.com/news/national/mgnrega-renamed-as-vpg-ramji-scheme-sparks-bjp-ruled-states-protest-over-higher-state-funding-burden"> விபி ஜி ராம் ஜி</a> திட்டத்தை கொண்டு வந்தது. </p><h2>விபி ஜி ராம் ஜி </h2><p>மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியும், திட்டத்திற்காக மத்திய - மாநில நிதி பங்கீட்டில் மாற்றம் செய்தும்,வேலை நாட்களை 100 இல் இருந்து 125 நாட்களாக உயர்த்தியும் கொண்டுவரப்பட்ட இந்த விபி ஜி ராம் ஜி திட்டம் கடந்த ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது. </p><p>இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ. 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>மகாத்மா காந்தியின் பெயர் நீக்கத்திற்கும் திட்டத்தின் பிற அம்சங்களுக்கும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் முந்தைய திட்டத்தை விட விபி ஜி ராம் ஜி திட்டம் ஊரக வேலைவாய்ப்பு வழங்குவதில் தொய்வை கண்டுள்ளதாக திட்டம் அமலான கடந்த ஜூலை மாதத்திற்கான தரவுகள் தெரிவிக்கின்றன. </p> <h2>சரிவு</h2><p>MGNREGA திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் புதிய சட்டத்தின் கீழ் தடையின்றித் தொடரும் என்றும் மத்திய அரசு உறுதியளித்தபோதும் புதிய திட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாத முடிவில், ஊரக வேலைநாட்கள் பாதியாக சரிந்துள்ளது.</p><p>கடந்த ஆண்டு அமலில் இருந்த MGNREGA இன் கீழ் இதே ஜூலை மாதம் 100 நாள் வேலைத் திட்டத்தில் 15.33 வேலை நாட்களுக்கான பணி மேற்கொள்ளப்பட்டது.</p><p>ஆனால் அதற்கு மாற்றாக இந்த ஆண்டு அமலான விபி ஜி ராம் ஜி-யின் கீழ் மொத்த வேலை நாட்கள் 7.67 கோடியாக சரிந்துள்ளது. ஜூலை மாதத்தில் 68.94 லட்சம் குடும்பங்கள் மட்டுமே வேலை பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டை விட 49.94 சதவீதம் குறைவாகும்.</p>  <h2>மறுப்பு</h2><p>ஆனால் திட்ட மாற்றத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மறுத்துள்ளது. ஜூலை 22 வரை வேலை கோரிய தொழிலாளர்களில் 99.5% பேருக்கு வேலை வழங்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. </p><p>ஆனால் ஜூலை 22 க்கு பின் மாத இறுதியில் வெளியான அதிகாரப்பூர்வ தரவுகள், ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மந்தமடைந்ததை சுட்டிக்காட்டுகின்றன.</p> <h2>மந்தம்</h2><p>அதாவது, திட்டம் தொடங்கப்பட்ட முதல் மாதத்திலேயே, கடந்த ஆண்டை விட சரிபாதி அளவுக்கு வேலை நாட்களின் அளவு சரிந்துள்ளது.</p><p>இந்த வீழ்ச்சி புதிய திட்டத்திற்கு மாறியதால் ஏற்பட்ட தற்காலிகத் தேக்கமா அல்லது கிராமப்புற வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள பொதுவான மந்தநிலையா என்பது வரும் மாதங்களின் தரவுகள் மூலமே தெரியவரும்.</p>]]></content:encoded></item><item><title>விடுதி மாடியில் மாணவியின் கழுத்தை கம்பியால் இறுக்கி பாலியல் வன்கொடுமை : பாதுகாப்பு காவலர் அதிரடி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/sexual-assault-of-student-on-ahmedabad-hostel-terrace-security-guard-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/sexual-assault-of-student-on-ahmedabad-hostel-terrace-security-guard-arrested#comments</comments><guid isPermaLink="false">af0e6024-b0ab-4225-9735-9da44f5b6674</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:25:39 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:25:39.033Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime,பாலியல் வன்கொடுமை,ahmedabad,rape case,women safety,Gujarat:,அகமதாபாத்,CCTVEvidence,PGHostelSafety,PGSecurityGuardArrested</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/8c5384fs/Ahmedabad-Rape-Case" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ahmedabad Rape Case Rape Case ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/8c5384fs/Ahmedabad-Rape-Case?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத் </a>மாநிலம் <a href="https://www.maalaimalar.com/topic/ahmedabad">அகமதாபாத்</a>தில்உள்ள தங்கும் விடுதி ஒன்றின் மொட்டை மாடியில், கல்லூரி மாணவி ஒருவரைப் பாதுகாப்பு காவலர் கம்பியால் கழுத்தை நெரித்து கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>குற்றவாளியான பாதுகாப்பு காவலரை 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்துள்ளனர்.</p><h2><strong>பின்னணி:</strong></h2><p>குஜராத் பல்கலைக்கழகத்தில் இன்டீரியர் டிசைனிங் பயின்று வரும் 23 வயது மாணவி ஒருவர், அகமதாபாத் ஆனந்த்நகர் பகுதியில் உள்ள பேயிங் கெஸ்ட் தங்கும் விடுதியில் தங்கியிருந்த போது, கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் பெரும் பாதிப்புக்குள்ளான அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><h2><strong>மொட்டை மாடியில் நடந்த கொடூரம்</strong></h2><p>மாணவி இரவு நேரத்தில் விடுதியின் மொட்டை மாடிக்கு நடைப்பயிற்சிக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாதுகாப்பு காவலர் தர்மசிங், மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். </p><p>இதனால் பயந்துபோன மாணவி அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்க, காவலர் அவரது கழுத்தில் கம்பியை மாட்டி பலமாக இறுக்கியுள்ளார். </p><p>இதனால் மாணவியால் சத்தம் போட முடியாமல் போனது. அதை சாதகமாக்கிக் கொண்டு அந்த நபர் மாணவியைக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.</p><h2><strong>மீட்பு மற்றும் மருத்துவ சிகிச்சை</strong></h2><p>தாக்குதலுக்குப் பின், குற்றவாளி தப்பியோடியதை அடுத்து மாணவி மாடியில் இருந்து சத்தம் போட்டு கீழே இருந்த குடியிருப்புவாசிகளை உதவிக்கு அழைத்துள்ளார். </p><p>பொதுமக்கள் மற்றும் விடுதி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>10 தனிப்படைகள் மூலம் அதிரடி வேட்டை</strong></h2><p>இந்த சம்பவம் குறித்து ஆனந்த்நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படத்தை அடுத்து, <a href="https://www.maalaimalar.com/topic/ahmedabad">அகமதாபாத்</a> குற்றப்பிரிவு மற்றும் உள்ளூர் போலீசாரும் இணைந்து உடனடியாக 10 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். </p><p>விடுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தபோது, குற்றவாளி லிப்ட் மூலமாக மாடிக்கு செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.</p><h2><strong>குற்றவாளி குறித்த அதிர்ச்சித் தகவல்</strong></h2><p>கைது செய்யப்பட்ட குற்றவாளி தர்மசிங், உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் அந்த தங்கும் விடுதியில் பாதுகாப்பு காவலராகச் பணியில் சேர்ந்து சில நாட்களே ஆகியுள்ளது என்பதும் விசாரணையில் வெளிவந்துள்ளது.</p><p>இந்த வழக்கில் பாதுகாப்பு காவலர்களை வேலைக்கு அமர்த்தும் ஏஜென்சியின் பின்னணி மற்றும் அவர்கள் முறையான பின்னணி சரிபார்ப்பு செய்தார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தேர்வு முறைகேடு: ஜார்க்கண்ட் சட்டமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணி.. முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற எதிர்க்கட்சி தலைவர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-scam-protest-students-march-to-assembly-breaking-barricades-demanding-cbi-probe-into-jpsc-jssc-irregularities</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-scam-protest-students-march-to-assembly-breaking-barricades-demanding-cbi-probe-into-jpsc-jssc-irregularities#comments</comments><guid isPermaLink="false">a177da05-1eed-4f3b-bfa9-2ccc8d37d7ac</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:57:01 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:57:01.759Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,மாணவர்கள் போராட்டம்,ஜார்க்கண்ட்,Hemant Soren,தேர்வு முறைகேடு,Student protests,exam irregularities</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xb1vrbkg/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜார்க்கண்ட் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜார்க்கண்ட் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xb1vrbkg/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/3-jharkhand-psc-members-resign-amid-paper-leak-protests">ஜார்க்கண்ட் அரசு தேர்வாணையம்</a> (JPSC) மற்றும் பணியாளர் தேர்வாணையம் (JSSC) நடத்திய அரசுத் தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அம்மாநில மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><h2>பேரணி </h2><p>இன்று ஜார்க்கண்ட் சட்டமன்றம் கூடும் நிலையில், மாணவர்கள் அறிவித்தபடி சட்டமன்றம் நோக்கி பேரணியை தொடங்கியுள்ளனர். </p><p>மத்திய படையினர், போலீசார் முன்னரே தயார் நிலையில் நிறுத்தப்பட்டு மாணவர்களை தடுக்க பேரிகேட் தடுப்புகள் நிறுவப்பட்டன.  </p><p>இந்நிலையில் ராஞ்சியில் உள்ள பழைய சட்டமன்றக் கட்டிடத்தில் இருந்து புதிய சட்டமன்றக் கட்டிடத்தை நோக்கிப் போராட்டத்தில் ஈடுபட்ட திரளான மாணவர்கள் பேரணியாகச் சென்றனர்.  </p><p>அப்போது காவல்துறை அமைத்திருந்த பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மாணவர்கள் முன்னேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. </p><p>அசம்பாவிதங்களைத் தடுக்கக் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இருப்பினும் மாணவர்கள் தடுப்புகளை தாண்டி பேரணியை தொடரும் முனைப்பில் அணுவகுத்து சென்று கொண்டிருக்கின்றனர். </p> <h2>எதிர்க்கட்சித் தலைவர் கைது</h2><p>இதனிடையே தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, பாஜகவை சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி ஆகியோர் தலைமையில் பாஜக தொண்டர்கள் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இல்லத்தின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதையடுத்து, முதல்வர் இல்லத்தின் வெளியே போராட்டம் நடத்திய பாபுலால் மராண்டி உள்ளிட்ட பாஜக தலைவர்களை மாநிலக் காவல்துறை கைது செய்து அப்புறப்படுத்தியது.</p> <h2>பாபுலால் குற்றச்சாட்டு</h2><p>மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தீவிரப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஜார்க்கண்ட் அரசு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தேவையின்றி காலந்தாழ்த்தி வருவதாக பாபுலால் மராண்டி சாடினார்.</p><p>JPSC, JSSC மற்றும் CGL தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் முதன்மைக் கோரிக்கையை நிறைவேற்றாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே மாநில அரசு முயல்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.</p> <h2>பேச்சுவார்த்தை</h2><p>முன்னதாக போராட்டக்குழு பிரதிநிதிகளுடன் ஜார்கண்டின் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோச்சா அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.</p><p>இதில் சர்ச்சைக்குரிய 14வது JPSC சிவில் சர்வீஸ் தேர்வை ரத்து செய்ய நேற்று உடன்பாடு எட்டப்பட்டது. மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.</p><p>தொடர்ந்து JPSC ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர்.</p> <h2>தொடரும் போராட்டம்</h2><p>அரசு தங்கள் கோரிக்கைகளில் 98 சதவீதத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த போதிலும், மாணவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டனர்.</p><p>மாநில அமைப்புகளின் விசாரணை மீது நம்பிக்கையில்லை என்றும், சிபிஐ மூலமே சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் உறுதியாக உள்ளனர். JSSC-CGL தேர்வில் நடந்த முறைகேடுகளையும் கண்டித்து, அந்தத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் புகார்கள் ஜோடிக்கப்பட்டவையா?.. பிரிஜ் பூஷன் &quot;குற்றமற்றவர்&quot; என விடுவிக்கப்பட்டது எப்படி? - தீர்ப்பின் முழு விவரம் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/national/court-acquits-ex-wfi-chief-delhi-judge-calls-women-wrestlers-sexual-harassment-case-false-and-politically-motivated</link><comments>https://www.maalaimalar.com/news/national/court-acquits-ex-wfi-chief-delhi-judge-calls-women-wrestlers-sexual-harassment-case-false-and-politically-motivated#comments</comments><guid isPermaLink="false">fd418cee-ccc4-4456-b67d-0f841525a7d5</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:59:42 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:59:42.977Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய மல்யுத்த சம்மேளனம்,Wrestling Federation of India,பிரிஜ் பூஷன் சிங்,Brij Bhushan Singh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/rjticb7e/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  பிரிஜ் பூஷன்  சிங் ]]></media:title><media:description type="html"><![CDATA[  பிரிஜ் பூஷன்  சிங் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/rjticb7e/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பாஜக முன்னாள் எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான <a href="https://www.maalaimalar.com/news/national/sexual-assault-case-court-acquits-brij-bhushan-singh">பிரிஜ் பூஷன்  சிங்</a> கடந்த ஆகஸ்ட் 3 அன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தால் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். </p><p>அவருடன் இந்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்யுத்த சம்மேளன முன்னாள் உதவிச் செயலாளர் வினோத் தோமரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். </p><p>வீராங்கனைகள் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் இவ்வழக்கிலிருந்து கூடுதல் முதன்மை தலைமை பெருநகர நீதிபதி அஸ்வினி பன்வார் அவர்களை விடுவித்த நிலையில் அவர் வழங்கிய தீர்ப்பு குறித்த விரிவான விளக்கம் வெளியாகி உள்ளது. </p> <h2>தீர்ப்பில் உள்ளது என்ன?</h2><p>நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு குறித்த விரிவான தகவல்கள் இணையத்தில் தற்போது பதிவேற்றப்பட்டுள்ளன.</p><p>அதில் பிரிஜ் பூஷன் ஏன் விடுவிக்கப்பட்டார், குற்றச்சாட்டுகளை ஏன் நீதிமன்றம் புறக்கணித்தது என்பது குறித்த விரிவான விளக்கங்கள் உள்ளன.</p><p>நீதிபதி அஸ்வினி பன்வார் தனது தீர்ப்பில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் "இந்த வழக்கு பொய்யானது, ஜோடிக்கப்பட்டது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.</p> <h2>குற்றச்சாட்டுகள் போலி?</h2><p>தீர்ப்பில் கூறியுள்ளதாவது, "ஒலிம்பிக் தகுதிச் சுற்றின் போது நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தில், ஒரு வாக்குமூலத்தில் அந்தச் சம்பவம் 2015இல் துருக்கியில் நடந்ததாகக் கூறிய புகார்தாரர், மற்றொரு வாக்குமூலத்தில் அது 2016இல் மங்கோலியாவில் நடந்ததாக கூறியுள்ளார்.</p><p>நாட்டின் பெயர் மற்றும் ஆண்டிலேயே இவ்வளவு பெரிய முரண்பாடு இருக்கிறது.</p><p>அரியானாவை தளமாக கொண்ட மகாதேவ் மல்யுத்த பயிற்சி அகமெடியின் சில பயிற்சியாளர்களாலும் வீராங்கனைகளாலும் பின்னப்பட்டதாக தெரிகிறது</p> <p>2018இல் டெல்லி மைதானத்தில் குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் மற்றும் பிற வீரர்கள் முன்னிலையில் பாலியல் அத்துமீறல் நடந்ததாகக் கூறப்பட்ட போதிலும், எந்தவொரு சுயாதீன சாட்சியும் பிரீஜ் பூஷனுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க வரவில்லை.</p><p>வழக்கில் பாதிக்கப்பட்டவர்களாகக் கூறப்பட்ட 5 பெண்களில் 2 பேர் பிரிஜ் பூஷன் எந்த பாலியல் அத்துமீறலிலும் ஈடுபடவில்லை என்றும் மகாதேவ் அகாடமி பயிற்சியாளர்களின் மிரட்டல் மற்றும் வற்புறுத்தலின் பேரிலேயே தாங்கள் முன்னர் வாக்குமூலம் அளித்ததாகவும் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.</p><p>போராட்டத்தில் உட்காருவதற்கு முன்பாக எந்தவொரு பெண் மல்யுத்த வீரரும் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களையோ வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.</p><p>ஆனால், பின்னர் தேர்வு செய்யப்பட்ட பெண் மல்யுத்த வீரர்கள் முன்னால் வந்து, அலங்காரமாக ஒரே பாணியிலான தயார் செய்யப்பட்ட புகார்களைக் காவல்துறையிடம் அளித்துள்ளனர்.</p><p>அனைத்துப் புகார்களிலும் உள்ள குற்றச்சாட்டுகள் ஒரே மாதிரியாக உள்ளது.</p> <p>பாலியல் அத்துமீறல் நடந்ததாகக் கூறப்படும் காலக்கட்டத்திற்குப் பிறகும், புகாரளித்தவர்கள் பிரிஜ் பூஷனுடன் சுமூகமான உறவைப் பேணி வந்துள்ளனர். பொது நிகழ்ச்சிகளில் அவருடன் இயல்பாகப் பழகியுள்ளனர்.</p><p>நீண்ட காலத்திற்குப் பிறகு அளிக்கப்பட்ட இந்தப் புகார்கள் அனைத்தும் கற்பிக்கப்பட்டவை மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை. அரசுத் தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது.</p><p>இதனால் பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட வினோத் தோமரை நீதிமன்றம் கௌரவமாக விடுவிக்கிறது" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p> <h2>வீராங்கனைகள் போராட்டம் </h2><p>பிரிஜ் பூஷன் சிங் பாஜகவில் மிகவும் சக்திவாய்ந்த தலைவர் ஆவார். 2023 இல் அவர் மீது புகார் அளித்தும் வழக்குப் பதிய டெல்லி போலீஸ் மறுத்தது. வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 2023 ஜனவரி முதல் ஜூன் வரை போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீஸ் அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்து வந்த அழுத்தத்தின் பின் பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. </p><p>அவர் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் வழக்கில் அவர் ஆதிக்கம் செலுத்த முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதன்பின் 2024 இல் நடந்த எம்.பி தேர்தலில் அவருக்கு பதில் அவரின் மகனுக்கு சீட் வழங்கப்பட்டது. </p><p>தொடர்ந்து அவர் மீது வழக்கு நடந்து வந்த நிலையில் தற்போது அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுத்துள்ளது. பிறழ் சாட்சியம் அளிக்க கூறி பாதிக்கப்பட்டவர்களில் 2 வீராங்கனைகள் மிரட்ட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   இந்த தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>ஆர்.ஜி. கர் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு.. புதிய விசாரணைக்கு முதல்வர் சுவேந்து உத்தரவு - 3 திரிணாமுல் தலைவர்கள் மீது குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-doctor-murder-case-cm-orders-fresh-probe-into-rushed-cremation-after-second-anniversary-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-doctor-murder-case-cm-orders-fresh-probe-into-rushed-cremation-after-second-anniversary-tribute#comments</comments><guid isPermaLink="false">0c9f3aab-7670-4a83-bf52-93a650eb3a85</guid><pubDate>Mon, 10 Aug 2026 02:42:15 +0000</pubDate><atom:updated>2026-08-10T02:42:15.946Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,சுவேந்து அதிகாரி,பயிற்சி மருத்துவர் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3wwqzpqp/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதல்வர் சுவேந்து, ரத்னா தேப்நாத் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்வர் சுவேந்து, ரத்னா தேப்நாத் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3wwqzpqp/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது.  </p><h2>அஞ்சலி </h2><p>மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொல்லப்பட்ட மருத்துவருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  </p><p>இச்சம்பவத்தின் நினைவாக நடைபெற்ற கூட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் தாயாரும், பாணிஹாட்டி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான ரத்னா தேப்நாத் கலந்துகொண்டார்.</p><p>"எங்கள் மகளுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்" என அவர் கூட்டத்தில் பேசினார்.</p><p>இந்த வழக்கில் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் சஞ்சய் ராய் என்பவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. </p><p>கடந்த மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இது நடந்த நிலையில் இந்த சம்பவம் மேற்கு வங்க அரசியலில் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. </p><h2>புதிய விசாரணை</h2><p>இந்நிலையில் பெண் மருத்துவர் உடலை அவசர அவசரமாகத் தகனம் செய்தது குறித்து விசாரணை நடத்த மேற்கு வங்க முதல்வர்<a href="https://www.maalaimalar.com/topic/suvendu-adhikari"> சுவேந்து அதிகாரி</a> உத்தரவிட்டுள்ளார்.</p><p>பரேக்பூர் காவல்துறை ஆணையருக்கு முதல்வர் சுவேந்து அதிகாரி இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><p>அதில், ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை சில மணி நேரங்களிலேயே முடிக்கப்பட்டு, அன்றைய தினமே உடல் அவசர அவசரமாகத் தகனம் செய்யப்பட்டது.</p><p>தகனம் செய்ய வேண்டிய உடல்களின் பட்டியலில் அந்த உடல் 3வது இடத்தில் இருந்த நிலையில், அது விதிமுறைகளை மீறி 1வது இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.</p><p>விதிமுறைகளின்படி இறந்தவரின் குடும்பத்தினர் கட்டணம் செலுத்தி ஆவணங்களில் கையொப்பமிட வேண்டும், ஆனால் இங்கு அது நடக்கவில்லை என சுவேந்து குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>மேலும், இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ நிர்மல் கோஷ், பஞ்சாயத்து உறுப்பினர் சோமநாத் டே, உள்ளூர் தலைவர் சஞ்சீவ் முகர்ஜி ஆகிய மூவர் மீதும் குற்றம்சாட்டியுள்ள சுவேந்து அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p>இச்சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையைச் சரியாகக் கையாளாதது மற்றும் பெற்றோருக்குப் பணம் கொடுக்க முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, கொல்கத்தாவின் முன்னாள் காவல் ஆணையர் வினீத் கோயல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளைச் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு இந்த மாத தொடக்கத்தில் பணியிடை நீக்கம் செய்து அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>98 சதவீத கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக அரசு கூறுவது பொய்: ஜார்க்கண்ட் மாணவர் தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/govt-claim-of-accepting-98-pc-demands-full-of-lies-jharkhand-student-leader</link><comments>https://www.maalaimalar.com/news/national/govt-claim-of-accepting-98-pc-demands-full-of-lies-jharkhand-student-leader#comments</comments><guid isPermaLink="false">c45da76f-20a4-4448-bb9b-13fd79da1d55</guid><pubDate>Mon, 10 Aug 2026 00:11:21 +0000</pubDate><atom:updated>2026-08-10T00:11:21.883Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Jharkhand,போராட்டம்,ஜார்க்கண்ட்,JPSC</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/bu4j0d7z/JPSC-Protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/bu4j0d7z/JPSC-Protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்டில் பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி <a href="https://www.maalaimalar.com/topic/students">மாணவர்கள்</a> போராடி வருகின்றனர். மாணவர்களின் 98 சதவீத கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக அரசு அமைத்த குழு அறிவித்த சில மணிநேரங்களிலேயே, போராட்டக்காரர்கள் அரசின் கூற்றை மறுத்துள்ளனர். </p><p>மொத்தம் 13 போட்டி தேர்வுகளில் 3 தேர்வுகளை மட்டுமே ரத்து செய்ய ஒப்புக்கொண்ட <a href="https://www.maalaimalar.com/news/national">அரசு</a>, "பொய்களைப் பரப்புவதாக" அவர்கள் குற்றம் சாட்டினர்.</p><h2>அனுமதிக்க மாட்டோம்:</h2><p>தங்கள் அமைதியான ஜனநாயகப் போராட்டத்திற்கும், இன்று நடைபெறவுள்ள 'சட்டமன்றப் பேரணி'க்கும் (Vidhan Sabha March) ஆதரவளிக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p>இங்கு செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள், சமூக விரோத சக்திகள் தங்கள் ஜனநாயக போராட்டத்தை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர்.</p><h2>பொய் பிரச்சாரம்:</h2><p>"எங்கள் கோரிக்கைகளில் 98 சதவீதத்தை நிறைவேற்றியதாக ஜார்க்கண்ட் அரசு பொய் பிரச்சாரம் செய்கிறது. நாங்கள் கோரிய 13 தேர்வுகளில் 3-ஐ மட்டுமே அரசு ரத்து செய்துள்ளது. மாநிலத்தில் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளிலும் உள்ள முறைகேடுகளை வெளிக்கொண்டுவரும் வகையில் சி.பி.ஐ. (CBI) விசாரணை கோரி இன்று நடைபெறும் 'சட்டமன்றப் பேரணி'யில் ஜார்க்கண்ட் மாணவர்கள் அனைவரும் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று மாணவர் தலைவர் குற்றம் சாட்டினார்.</p><p>மற்றொரு மாணவர் தலைவரான ரவீந்திர பாஸ்வான், "முறைகேடுகளை மூடிமறைப்பதற்குப் பெயர் பெற்ற சி.ஐ.டி. (CID) விசாரணை நடத்த வேண்டும் என்பதில் அரசு பிடிவாதமாக உள்ளது" என்று குற்றம் சாட்டினார்.</p><p>தங்கள் போராட்டம் "அமைதியானதாகவும் ஜனநாயக ரீதியிலானதாகவும்" இருக்கும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.</p><p>"எங்கள் அமைதியான, ஜனநாயக போராட்டத்தை சீர்குலைக்க சமூக விரோத சக்திகளை அனுமதிக்க மாட்டோம்," என்று மற்றொரு மாணவர் தலைவர் கூறினார்.</p><h2>வேண்டுகோள்:</h2><p>இன்று நடைபெறவுள்ள போராட்டத்தை ஒரு "மக்கள் இயக்கமாக" மாற்றுமாறு மக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்; மேலும், எந்தவொரு அரசியல் கொடியும் இன்றி நடைபெறும் தங்கள் பிள்ளைகளின் போராட்டத்திற்குப் பெற்றோர்கள் தார்மீக ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர்.</p><p>"ஜார்க்கண்டில் நிலவும் வேலை விற்பனை முறையை ஒழிக்க விரும்புகிறோம்; எங்கள் போராட்டம் வன்முறையற்றது," என்று போராட்டக்காரர் ஒருவர் கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>