<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 31 Aug 2026 18:28:40 +0000</lastBuildDate><item><title>உ.பி. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு</title><link>https://www.maalaimalar.com/news/national/president-murmu-distressed-loss-of-lives-due-to-up-firecracker-factory-explosion</link><comments>https://www.maalaimalar.com/news/national/president-murmu-distressed-loss-of-lives-due-to-up-firecracker-factory-explosion#comments</comments><guid isPermaLink="false">cf70cba6-f216-4b2f-ad2e-da986254b517</guid><pubDate>Mon, 31 Aug 2026 18:23:06 +0000</pubDate><atom:updated>2026-08-31T18:23:06.489Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UP,திரவுபதி முர்மு,உத்தர பிரதேசம்,President Murmu,வெடிவிபத்து,factory explosion</media:keywords><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">உத்தர பிரதேச</a> மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகுந்த வேதனையளிப்பதாக கூறிய குடியரசு தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/droupadi-murmu">திரவுபதி முர்மு</a>, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.</p><p>உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் திங்கள்கிழமை மதியம் நிகழ்ந்த இந்த பயங்கர வெடிவிபத்தில், பட்டாசு ஆலை கட்டிடம் மற்றும் அருகில் இருந்த ஆறு வீடுகள் தரைமட்டமானதில், எட்டு குழந்தைகள் உட்பட பதினொரு பேர் உயிரிழந்தனர்; மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த ஆலையின் உரிமம் 2024-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டிருந்தது.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>"உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்," என்று திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், பெரிய அளவிலான மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. </p><p>தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), மாநில பேரிடர் மீட்பு படை (SDRF), காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் விமானப்படை பிரிவினர் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த அனைவரும் அந்த ஆலைக்கு அருகிலேயே வசித்து வந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.</p><h2>கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்:</h2><p>கௌசாம்பி மாவட்ட ஆட்சியர் அமித் பால் கூறுகையில், மனோரி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாகவும், அதன் தாக்கத்தால் ஆலைக்கு அருகில் இருந்த ஐந்து முதல் ஆறு வீடுகள் வரை இடிந்து விழுந்ததாகவும் தெரிவித்தார்.</p><p>"இந்த ஆலைக்கு 2019-இல் வெடிபொருள் பயன்பாட்டுக்கான உரிமம் வழங்கப்பட்டது; இது 2026 வரை செல்லுபடியாகும் வகையில் இருந்தது. இருப்பினும், 2024-இல் அந்த உரிமம் ரத்து செய்யப்பட்டது. </p><p>உரிமம் ரத்து செய்யப்பட்ட பிறகும் ஆலை எவ்வாறு தொடர்ந்து இயங்கியது என்பதை கண்டறியவும், ஒவ்வொரு நிலையிலும் பொறுப்பை நிர்ணயிக்கவும் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இணையவசதி இல்லாதவர்களுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை: ஃபீச்சர் போன்களுக்கான ‘UPI 123Pay’ சேவையை அறிமுகம் செய்தது PhonePe!</title><link>https://www.maalaimalar.com/news/national/digital-payments-without-internet-phonepe-launches-upi-123pay-for-feature-phones</link><comments>https://www.maalaimalar.com/news/national/digital-payments-without-internet-phonepe-launches-upi-123pay-for-feature-phones#comments</comments><guid isPermaLink="false">29111c80-8a46-4a65-8f7d-8706eafa31b6</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:10:52 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:10:52.988Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PhonePe,LAVA,Nokia,UPI 123Pay,போன்பே நிறுவனம்,யுபிஐ 123பே,டிஜிட்டல் பரிவர்த்தனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/awx18n8k/pone.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PhonePe  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/awx18n8k/pone.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இணையவசதி இல்லாத Feature Phone பயனர்களும் இனி எளிதாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக, ஃபோன்பே நிறுவனம் '<a href="https://www.maalaimalar.com/news/world/apple-ceo-tim-cook-steps-down-ends-15-year-tenure">யுபிஐ 123பே</a>' என்ற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத நாட்டின் சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதியைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்தச் சேவை முற்றிலும் எஸ்.எம்.எஸ் அடிப்படையிலான தொழில்நுட்பக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பலவீனமான 2ஜி நெட்வொர்க் சிக்னல் இருக்கும் கிராமப்புறங்களிலும், தொலைதூரப் பகுதிகளிலும் கூட எவ்வித தடையுமின்றி பணப்பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பாகவும் விரைவாகவும் செய்ய முடியும்.</p><h2>முன்னணி நிறு<strong>வனங்களுடன்</strong> கூட்டு</h2><p>நோக்கியா, ஹெச்.எம்.டி, லாவா மற்றும் ஐட்டெல் போன்ற பிரபல ஃபீச்சர் போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஃபோன்பே கைகோர்த்துள்ளது. இதன் மூலம் புதிய ஃபீச்சர் போன்களிலேயே இந்தச் சேவை முன்பே நிறுவப்பட்டு பயனர்களுக்குக் கிடைக்கும்.</p><p>இந்தச் சேவையின் மூலம் பயனர்கள் நபர்-க்கு-நபர் மற்றும் வணிகர்களுக்கான கட்டணங்களைச் செலுத்த முடியும். கேமரா வசதி கொண்ட ஃபீச்சர் போன்கள் மூலம் கியூ.ஆர் குறியீடுகளையும் ஸ்கேன் செய்யலாம். மேலும், வங்கிக் கணக்கை நிர்வகித்தல், இருப்புத் தொகையைச் சரிபார்த்தல் மற்றும் பரிவர்த்தனை வரலாற்றைப் பார்த்தல் போன்ற வசதிகளும் இதில் அடங்கும்.</p><p>முதல்முறை பயன்படுத்தும் பயனர்களுக்கு உதவும் வகையில், தமிழ் உட்பட 12 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வழிகாட்டும் குரல்வழி செயற்கை நுண்ணறிவு  உதவி மையமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாகப் பயன்பாட்டுக் கட்டணங்கள் செலுத்துதல் மற்றும் ரீசார்ஜ் செய்யும் வசதிகளும் இதில் சேர்க்கப்படவுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>பாஜக-வில் பசு பாதுகாப்புக்கே முன்னுரிமை: மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மெகபூபா முப்தி சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-prioritises-cow-protection-over-womens-safety-mehbooba-on-delhi-gang-rape-of-16-year-old</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-prioritises-cow-protection-over-womens-safety-mehbooba-on-delhi-gang-rape-of-16-year-old#comments</comments><guid isPermaLink="false">0c4a66cd-c844-4ae0-ba52-f4656c9623bf</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:23:44 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:23:44.052Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mehbooba Mufti,கூட்டுப் பாலியல் வன்கொடுமை,gang rape,minor student</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8ie304eg/Mufti0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெகபூபா முப்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8ie304eg/Mufti0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கவலை தெரிவித்துள்ளார்.</p><h2>சமூக வலைதள பதிவு</h2><p>இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>பாஜகவின் இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பை விட பசுப் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.</p><p>பசுவதை செய்ததாக வெறும் சந்தேகத்தின் பேரிலேயே, மக்கள் கும்பல்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும், கற்பழிப்பு, பாலியல் வன்முறை மற்றும் கொடூரங்களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் விஷயத்தில், தண்டனை பெற்ற குற்றவாளிகள் தொடர்ந்து பரோலில் வெளிவருவதோடு மட்டுமல்லாமல், முழுமையான ஆதரவையும் பெறுகின்றனர்.</p> <p>பசுக்களின் பெயரால் நடக்கும் சட்டவிரோதச் செயல்களுக்குச் செலவிடப்படும் ஆற்றலில் பாதியையாவது பெண்களின் பாதுகாப்பிற்காகச் செலவிட்டால், இந்தியா ஒவ்வொரு மகளுக்கும், சகோதரிக்கும், தாய்க்கும் மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்கும்.</p><p>இவ்வாறு மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார்.</p><p>டெல்லியில் ஓடும் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் 16 வயது பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத்தான் மெகபூபா முப்தி பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/massive-fireworks-factory-explosion-in-uttar-pradesh-5-killed-over-20-injured</link><comments>https://www.maalaimalar.com/news/national/massive-fireworks-factory-explosion-in-uttar-pradesh-5-killed-over-20-injured#comments</comments><guid isPermaLink="false">1f720411-8c12-4b50-97a3-afe28632a5c2</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:07:55 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:07:55.424Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,வெடிவிபத்து,பட்டாசு ஆலை வெடிவிபத்து,firecracker factory,firecracker explosion,உத்தரப்பிரதேச மாநிலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/tgjfc0m1/fire-crack.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ firecracker explosion ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/tgjfc0m1/fire-crack.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/worlds-largest-iceberg-a23a-ends-40-year-history">உத்தரப்பிரதேச மாநிலம்</a> கெளசாம்பி மாவட்டத்தின் பிப்ரி காவல் எல்லைக்குட்பட்ட மனோரி கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு ஆலையில் இன்று காலை சுமார் 11 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தீவிர சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் பிரயாக்ராஜில் உள்ள எஸ்.ஆர்.என் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருடன், அருகிலுள்ள மனோரி விமானப்படை தளத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களும் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிபாடுகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. விபத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p><h2>ரெயில் <strong>போக்குவரத்து</strong> பாதிப்பு</h2><p>வெடிவிபத்தின் அதிர்வால் ஆலையை சுற்றியிருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகின. அருகிலுள்ள டெல்லி-ஹவுரா ரெயில் பாதையில் பாதுகாப்பு கருதி ரெயில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டு, வந்தே பாரத் மற்றும் விரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. உயர் அழுத்த மின் கம்பிகள் சேதமடைந்ததால் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-files-petition-in-supreme-court-seeking-orders-to-withdraw-cases-against-neet-exam-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-files-petition-in-supreme-court-seeking-orders-to-withdraw-cases-against-neet-exam-protesters#comments</comments><guid isPermaLink="false">30edb287-cfea-42a7-88d6-c7378e348c7b</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:41:46 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:41:46.260Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Supreme Court,உச்ச நீதிமன்றம்,Protesters,போராட்டக்காரர்கள்,NEET Paper Leak,நீட் தேர்வு வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/2pop537l/New-Project-2026-08-31T181038.682.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் தேர்வு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/2pop537l/New-Project-2026-08-31T181038.682.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கு எதிராக, காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.</p><p>போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய, தனது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தைக் கோரியுள்ளது. இந்த வழக்கை நாளை (ஆக.31) உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. </p><h2>3 கோரிக்கைகள்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கியது. </p><p>இந்த போராட்டம் நாடுதழுவியதாக மாறிய நிலையில், மத்திய அரசு போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் போராட்டக்குழுவினர் போராட்டத்தை கைவிட மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர். </p><p>அப்போது மத்திய கல்வியமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்யவேண்டும், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கவேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வைத்தது.</p><h2>பேரணி அறிவிப்பு</h2><p>இதில் தர்மேந்திர பிரதான் ராஜினாமா மட்டுமே நிறைவேற்றப்பட்டது. மற்ற இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இதனைத்தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து செப்.5ம் தேதி <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-fails-to-fulfill-promises-cockroach-janata-party-announces-rally-for-september-5">கரப்பான்பூச்சி கட்சி பேரணி</a> அறிவித்துள்ளது. </p><p>இந்நிலையில்  போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கழிவறை இருக்கையின் கீழ் 6 அடி நீள நாகப்பாம்பு: குருகிராமில் பரபரப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/gurugram-home-toilet-six-foot-cobra-rescued</link><comments>https://www.maalaimalar.com/news/national/gurugram-home-toilet-six-foot-cobra-rescued#comments</comments><guid isPermaLink="false">a9254b75-7254-4488-a954-49f7bd548d41</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:39:06 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:39:06.005Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>haryana,குருகிராம்,ஹரியானா,Wild life Rescue,Snake Safety,Monsoon Alert,Cobra In Toilet</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/d8hfgt4n/Cobra-In-Toilet" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cobra In Toilet ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/d8hfgt4n/Cobra-In-Toilet?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு வீட்டின் கழிவறையிலிருந்து வந்த தொடர் சீறல் சத்தத்தை அடுத்து, அங்கு 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் வகை நாகப்பாம்பு மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நடந்தது என்ன?</h2><p>குருகிராமின் கர்ஹௌலி கலான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவறைக்குள் இருந்து நீண்ட நேரமாக விசித்திரமான சீறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், கழிவறைக்குள் தேடியும் முதலில் பாம்பு எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.</p><p>பாம்பு ஏதோ ஒரு இடுக்கில் மறைந்திருப்பதை உணர்ந்த குடும்பத்தினர், உடனடியாக வனவிலங்கு பாதுகாவலரான அனில் காண்டாஸ் என்பவருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.</p><h2>உடைத்து எடுக்கப்பட்ட கழிவறை இருக்கை</h2><p>சம்பவ இடத்திற்கு வந்த அனில் காண்டாஸ், கழிவறை இருக்கையை மெதுவாகத் தட்டிப் பார்த்துள்ளார். </p><p>அப்போது உள்ளே இருந்த பாம்பின் சீறல் சத்தம் மேலும் பலமாக இருந்தது.பாம்பு கழிவறை இருக்கையின் கீழ் உள்ள குறுகிய இடைவெளியில் சிக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.</p><p>இதையடுத்து, வேறு வழியின்றி கழிவறை இருக்கை முழுமையாக உடைக்கப்பட்டது. உள்ளே மறைந்திருந்த ஆக்ரோஷமான, மிகவும் விஷத்தன்மை வாய்ந்த கண்ணாடி விரியன் பாம்பு வெளியே தெரிந்தது. </p><p>மிகவும் சவாலான மற்றும் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, மீட்புக் குழுவினர் அந்தப் பாம்பை பத்திரமாக மீட்டு, குடியிருப்புப் பகுதியிலிருந்து துரமாகக் கொண்டு சென்று விடுவித்தனர்.</p><h2>பாம்புகள் குடியிருப்புக்குள் நுழையக் காரணம் என்ன?</h2><p>அண்மைக் காலமாக குருகிராமில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது குறித்து வனவிலங்கு பாதுகாவலர் அனில் காண்டாஸ் சில முக்கிய காரணங்களைப் பகிர்ந்துள்ளார்.</p><p>இது குறித்து அவர் கூறுகையில்,வேகமாக வளர்ந்து வரும் நகரமயமாக்கல் மற்றும் கட்டுமானப் பணிகள் காரணமாக, காடுகளும் விளைநிலங்களும் வேகமாக அழிந்து வருகின்றன.</p><p>இயற்கை வாழிடங்கள் அழிவதால் பாம்புகளுக்குத் தேவையான இயற்கை உணவுகள் கிடைப்பதில்லை. இதனால், அவை எலிகள் மற்றும் பிற சிறு உயிரினங்களைத் தேடி மனிதர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன. </p><p>குருகிராமில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 70 பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களில் இந்த எண்ணிக்கை 200-ஐத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>பொதுமக்களுக்கான எச்சரிக்கையும் விழிப்புணர்வும்!</h2><p>தற்போது பருவமழைக்காலம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>பாம்புகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அனில் காண்டாஸ் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.</p><p>இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் தரையில் படுத்து உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.</p><p>தூங்கும் போது கட்டாயம் கொசுவலைகளைப் பயன்படுத்த வேண்டும் வீட்டில் இருக்கும் உணவுகளை எப்போதும் பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். </p><p>உணவுப் பொருட்கள் சிதறிக் கிடந்தால் எலிகள் வரும், எலிகளைத் தேடி பாம்புகளும் வீட்டிற்குள் நுழையும். ஒருவேளை பாம்பு கடித்துவிட்டால், எவ்வித நாட்டு வைத்தியத்தையோ அல்லது வீட்டு வைத்தியத்தையோ நம்பி நேரத்தை வீணடிக்கக் கூடாது. </p><p>உடனடியாகப் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பாம்பு விஷமுறிவு மருந்து செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘சட்டவிரோத நடுவர் மன்றம்’: சிந்து நதி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நிராகரித்தது இந்தியா!</title><link>https://www.maalaimalar.com/news/national/illegal-tribunal-india-rejects-the-verdict-of-the-indus-waters-tribunal</link><comments>https://www.maalaimalar.com/news/national/illegal-tribunal-india-rejects-the-verdict-of-the-indus-waters-tribunal#comments</comments><guid isPermaLink="false">f1b7ced9-e53a-4d1f-9c77-9cd03af0c70d</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:16:06 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:16:06.188Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,indus waters treaty,சிந்து நதிநீர் ஒப்பந்தம்,World Banks Court of Arbitration,உலக வங்கியின் நடுவர் மன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/5gd7oxlt/New-Project-2026-08-31T171300.106.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சட்டவிரோத நடுவர் மன்றம்’: சிந்து நதி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நிராகரித்தது இந்தியா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/5gd7oxlt/New-Project-2026-08-31T171300.106.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்தியா அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது. </p><p>மேலும், 1960 ஆம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிகளை மீறி உலக வங்கியால் இந்த நீதிமன்றம் “சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது” என்றும், அதன் தீர்ப்புகள் எதற்கும் சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h2>திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்</h2><p>ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி உலக வங்கியால் இந்த 'நடுவர் மன்றம்' அமைக்கப்பட்டது. </p><p>சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இந்த அமைப்பு இதற்கு முன் வெளியிட்ட அனைத்து அறிவிப்புகளையும் இந்தியா எவ்வாறு உறுதியாக நிராகரித்ததோ, அதேபோலவே தற்போதைய தீர்ப்பையும் இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><h2>எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது</h2><p>இந்தியாவின் இறையாண்மை சார்ந்த முடிவுகள் குறித்துத் தீர்ப்பளிக்க இந்த 'நடுவர் மன்றத்திற்கு' எவ்வித அதிகார வரம்பும் இல்லை. இதன் தற்போதைய அல்லது எதிர்கால அறிவிப்புகள், இந்தியா மேற்கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. என இந்தியா தெரிவித்துள்ளது. </p><h2>ஒப்பந்தம் இடைநிறுத்தம்</h2><p>பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, எல்லையோரப் பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவைக் கண்டித்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. </p><p>பாகிஸ்தான் பயங்கரவாதத்தை முற்றிலுமாக நிறுத்தும் வரை, இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடமைகளை நிறைவேற்ற இந்தியா கடமைப்படவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.</p><p>இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் சிந்து நதிநீர் தீர்ப்பாயத்தை நாடியது.</p><h2>நடுவர் நீதிமன்றம் கூறியது என்ன?</h2><p>பஹல்காம் தாக்குதலை காரணம் காட்டி சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதை ஏற்க முடியாது என நடுவர் நீதிமன்றம் தெரிவித்தது. </p><p>எந்த காரணத்தாலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதையோ அல்லது ரத்து செய்வதையோ நியாயப்படுத்த முடியாது என்று கூறிய நடுவர் நீதிமன்றம், இந்தியா ஒப்பந்தத்தின் கீழ் உள்ள தனது கடமைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.</p><p>மேலும் மேற்கு நதிகளில், அதாவது ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியா கட்டி வரும் நீர்மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட வரம்பிற்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.</p><p>அணைக்கட்டுகளில் தண்ணீரைத் தேக்கி வைக்கும் இந்தியாவின் அதிகபட்ச கொள்ளளவு மற்றும் வடிவமைப்புகள் பாகிஸ்தானின் நீர் உரிமைகளைப் பாதிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. </p><h2>2027 ஜூலையில் நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை</h2><p>மேலும் இந்தியாவின் இந்தத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வுசெய்ய நிபுணர் குழு ஒன்றையும் நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. </p><p>உலக வங்கியால் நியமிக்கப்படும் இந்த நடுநிலை நிபுணர் குழு, இந்தியாவின் இந்த நீர்மின் திட்டங்களின் தொழில்நுட்ப வடிவமைப்பு ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டுத்தான் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும்.</p><p>இந்த ஆய்வின் இறுதி அறிக்கை மற்றும் முடிவுகள் சூலை 2027-க்குள் வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.</p><h2>எந்த மாற்றமும் இல்லை</h2><p>தீர்ப்பாயத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, சிந்து நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்த <a href="https://www.maalaimalar.com/news/world/indus-waters-treaty-india-rules-out-return-to-status-quo-links-future-to-pakistans-anti-terror-action">இந்தியாவின் முடிவு தொடர்ந்து அமலில் இருக்கும்</a> என இந்தியா தெரிவித்தது.</p><h2>சிந்து நதிநீர் தீர்ப்பாயம்</h2><p>சிந்து நதிநீர் தீர்ப்பாயம் என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 1960-ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்காக நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பாகும்.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும் சாதனை: முதல் காலாண்டில் இந்திய ஜிடிபி 7.8% வளர்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-gdp-surges-7-8-first-quarter-amid-global-challenges</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-gdp-surges-7-8-first-quarter-amid-global-challenges#comments</comments><guid isPermaLink="false">804597e9-8124-4525-88ed-cb34bebea5e2</guid><pubDate>Mon, 31 Aug 2026 11:25:22 +0000</pubDate><atom:updated>2026-08-31T11:25:22.121Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,Crude oil,கச்சா எண்ணெய்,,India&apos;s GDP grow,Reuters,இந்திய ஜிடிபி,மூலதனச் சந்தை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/x5mqh7bt/GDP.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India's GDP grow ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/x5mqh7bt/GDP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகளாவிய பொருளாதார மந்தநிலை, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8 சதவீதமாக உயர்ந்து அசத்தியுள்ளது. இது பொருளாதார நிபுணர்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்புகளை விட மிக அதிகம்.</p><h2>எதிர்பார்ப்புகளை மிஞ்<strong>சிய வளர்ச்சி விகி</strong>தம்</h2><p>பொருளாதார நிபுணர்கள் மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/world/trump-says-canadian-companies-face-no-tariffs-in-us">ராய்ட்டர்ஸ் </a>கருத்துக் கணிப்புகள் இக்காலகட்டத்தில் வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என்றே கணித்திருந்தன. கடந்த 2025-26 நிதியாண்டின் இதே ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி 6.9 சதவீதமாக மட்டுமே இருந்தது. தற்போது பதிவாகியுள்ள 7.8 சதவீத உயர்வு, இந்திய பொருளாதாரம் வலுவான வேகத்தில் இயங்கி வருவதை உறுதி செய்துள்ளது.</p><p>சர்வதேச அளவில் நிலவும் வணிக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், உள்நாட்டு நுகர்வு தேவைகள் வலுவாக இருந்தது இந்த வளர்ச்சிக்கு முக்கிய தூணாக அமைந்தது. மேலும், அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு மூலதனச் செலவினங்கள், உற்பத்தித்துறை மற்றும் கட்டுமானத்துறை ஆகியவற்றில் காணப்பட்ட வேகமான வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த உதவியது. </p><p>வங்கி கடன் தேவை மற்றும் மூலதனச் சந்தையின் எழுச்சி காரணமாக இத்துறை 12.1% என்ற இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்து முன்னணியில் உள்ளது. உள்நாட்டு தேவை அதிகரிப்பால் உற்பத்தித் துறை 9.2% வளர்ச்சியடைந்துள்ளது. பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், விவசாயம் மற்றும் சார்ந்த துறைகள் 3.6% நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.</p><p>இந்த சாதனை தொடக்கமானது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. இருப்பினும், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்க அழுத்தம் மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலவும் போர்ப் பதற்றங்கள் ஆகியவை வரும் காலாண்டுகளில் கவனிக்கப்பட வேண்டிய சவால்களாக இருக்கும். தனியார் முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், இந்த வேகமான பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைக்க முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>ராஜஸ்தானில் சோகம்: கோயில் குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/rajasthan-dholpur-temple-pond-drowning-four-family-members-dead</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajasthan-dholpur-temple-pond-drowning-four-family-members-dead#comments</comments><guid isPermaLink="false">f94e0050-3245-44b3-adaf-a85585c48450</guid><pubDate>Mon, 31 Aug 2026 11:02:29 +0000</pubDate><atom:updated>2026-08-31T11:02:29.527Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,dholpur,Dholpur Temple tank,Hiraman Baba pond,ராஜஸ்தான் மாநிலம்,தோல்ப்பூர்,ஹிராமன் பாபா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/dbpo4pje/RAJASTHAN.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dholpur Temple tank]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/dbpo4pje/RAJASTHAN.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் மாநிலம் தோல்ப்பூர் மாவட்டத்தில் புனித நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/chris-gayle-pays-floral-tribute-at-oommen-chandys-grave-in-kerala">தோல்ப்பூர் மாவட்டம்</a> நாதூவாபுரா கிராமத்தைச் சேர்ந்த ரவி குமார் (21), அவரது சகோதரிகள் மனோரமா (22), போட்டோ (25) மற்றும் அவர்களின் உறவினர் பெண் நிஷா (18) ஆகிய நால்வரும் பிர்ஜா கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஹிராமன் பாபா திருக்கோயிலுக்குச் சென்றிருந்தனர். ரக்ஷா பந்தனை முன்னிட்டு சனிக்கிழமை இரவு (ஆகஸ்ட் 29) நடைபெற்ற சிறப்பு கோயில் வழிபாடுகள் மற்றும் திருவிழா நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இவர்கள் அங்கு சென்றுள்ளனர்.</p><h2>நீரில் மூ<strong>ழ்கிய சோகம்</strong></h2><p>நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் கோயில் வளாகத்தை ஒட்டியுள்ள ஹிராமன் பாபா குளத்தில் பக்தர்கள் நீராடத் தொடங்கினர். அப்போது ரவி குமார் எதிர்பாராதவிதமாக குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கத் தொடங்கினார். கரை ஓரத்தில் நீராடிக்கொண்டிருந்த அவரது சகோதரிகளும் உறவினரும் ரவி தவிப்பதைக் கண்டு, அவரைக் காப்பாற்ற உடனடியாக ஆழமான பகுதிக்குக் குதித்தனர். ஆனால், நீரின் ஆழம் மற்றும் வேகம் காரணமாக நால்வராலும் கரை திரும்ப முடியாமல் நீரில் மூழ்கினர்.</p><p>சம்பவ இடத்திலிருந்த பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் உடனடியாக மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர். அங்காய் காவல் நிலைய அதிகாரி கிருபால் சிங் தலைமையிலான காவல் துறையினரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.கிராமவாசிகளின் உதவியோடு சில மணி நேரத்திலேயே மனோரமா, போட்டோ மற்றும் நிஷா ஆகிய மூன்று பெண்களின் உடல்களும் குளத்திலிருந்து மீட்கப்பட்டன.</p><p>நீரில் மூழ்கிய ரவி குமாரின் உடலை மீட்க சுமார் 6 மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது. இதேபோல நீரில் மூழ்கி தவித்த மேலும் நான்கு பக்தர்களை கிராம மக்கள் சமயோசிதமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.</p><p>மீட்கப்பட்ட நான்கு பேரின் உடல்களும் உடனடியாக சர்மாத்துரா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்குப் பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பண்டிகை நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உயிர்கள் பறிபோனது நாதூவாபுரா கிராம மக்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பஞ்சாபில் காதலித்து கரம்பிடித்த இளைஞர் ஆணவக்கொலை- பெண் வீட்டார் வெறியாட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/honour-killing-in-punjab-young-man-murdered-for-love</link><comments>https://www.maalaimalar.com/news/national/honour-killing-in-punjab-young-man-murdered-for-love#comments</comments><guid isPermaLink="false">7b1bbd71-96e3-4004-94b5-08bff9104a5d</guid><pubDate>Mon, 31 Aug 2026 10:08:28 +0000</pubDate><atom:updated>2026-08-31T10:08:28.847Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Punjab,ஆணவக்கொலை,Honor killing in Punjab,Tarn Taran,Rampage,பஞ்சாப் மாநிலம்,தார்ன் தரான் பகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ms3jgrma/HONOUR.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Honor killing in Punjab]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ms3jgrma/HONOUR.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தன் தங்கையை அழைத்துச் சென்ற ஆத்திரத்தில் இருந்த பெண் வீட்டார், ஜக்ஜீத் சிங்கை பழிவாங்கத் திட்டம் தீட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shock-in-delhi-newborn-baby-rescued-from-roadside">பஞ்சாப் மாநிலம்</a> தார்ன் தரான் பகுதியில் 22 வயதான ஜக்ஜீத் சிங் எனும் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>காதல் <strong>திருமணம்</strong> </h2><p>கொல்லப்பட்ட ஜக்ஜீத் சிங், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தன் காதலியை வீட்டை விட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், இவர்களது திருமணத்திற்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தன் தங்கையை அழைத்துச் சென்ற ஆத்திரத்தில் இருந்த பெண் வீட்டார், ஜக்ஜீத் சிங்கை பழிவாங்கத் திட்டம் தீட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.</p><h2>கத்திகளுடன் பா<strong>ய்ந்த அண்ணன்க</strong>ள்</h2><p>நேற்று ஜக்ஜீத் சிங் பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தபோது, பெண்ணின் சகோதரர்களான ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் ஹர்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் திடீரென கத்திகளுடன் பாய்ந்து தாக்குதல் நடத்தினர். சரமாரியாக வெட்டப்பட்டதில் பலத்த காயமடைந்த ஜக்ஜீத் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசா<strong>ர் வழக்குப் பதி</strong>வு</h2><p>தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை அதிகாரி, ஜக்ஜீத் சிங்கின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய சகோதரர்களான ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் ஹர்ப்ரீத் சிங்கை தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆணவக்கொலை கோணத்தில் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் ஓடும் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் 16 வயது பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை! </title><link>https://www.maalaimalar.com/news/national/16-year-old-schoolgirl-gang-raped-on-a-sleeper-bus-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/16-year-old-schoolgirl-gang-raped-on-a-sleeper-bus-in-delhi#comments</comments><guid isPermaLink="false">d2dd2a7f-3fd0-4fce-9c6f-215150470ab9</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:58:04 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:58:04.522Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பள்ளி மாணவி,கூட்டுப் பாலியல் வன்கொடுமை,gang rape,டெல்லி காவல்துறை,Sleeper Bus,minor student,படுக்கை வசதி கொண்ட பேருந்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8g80mwxf/New-Project-2026-08-31T145042.553.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லியில் ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் 16 வயது பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8g80mwxf/New-Project-2026-08-31T145042.553.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் ஸ்லீப்பர் பேருந்தில் (படுக்கை வசதி கொண்ட பேருந்து) 16 வயது மாணவி ஓட்டுநர் மற்றும் நடத்துநரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>ஆக.4ம் தேதி உத்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி கருத்து வேறுபாடு காரணமாக, தனது குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி, நொய்டாவில் உள்ள தனது உறவினரைப் பார்க்கச் சென்றுள்ளார். </p><p>அப்போது கனமழை மற்றும் இருள் காரணமாக கிரேட்டர் நொய்டாவில் பாரி சௌக் என்ற இடத்தில் இறங்கியுள்ளார். அப்போது இந்த படுக்கை வசதிக் கொண்ட பேருந்து காலியாக அப்பகுதி வழியாக சென்றுள்ளது.</p><p>கனமழையில் சிக்கிக்கொண்ட மாணவி உதவிக்காக சைகை காட்டி பேருந்தை நிறுத்தியுள்ளார். பேருந்தும் நிறுத்தப்பட்டு, நொய்டா செக்டர்-63க்குச் செல்வதாகக் கூறி, ஓட்டுநரும் நடத்துநரும் மாணவியை ஏற்றிச் சென்றுள்ளனர். </p><p>பேருந்தில் ஏறிய சிறிதுநேரத்திலேயே நடத்துநர் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். உடனே மாணவி கூச்சலிட அவரை கொலைசெய்து விடுவதாக மிரட்டி இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். </p><p>பின்னர் மாணவியை நள்ளிரவில் காஷ்மீர் கேட் பேருந்து முனையத்திற்கு அருகிலுள்ள ரிங் ரோட்டில் இறக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அச்சமடைந்த மாணவி காஷ்மீர் கேட் காவல் நிலையத்தை தொடர்புகொண்டு புகாரித்துள்ளார். </p><p>மாணவியின் புகாரை வைத்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறை திமர்பூரில் உள்ள ஒரு பேருந்து நிறுத்துமிடத்தில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்துள்ளனர். </p><p>மேலும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட படுக்கை வசதி கொண்ட பேருந்தையும் பறிமுதல் செய்து, தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.</p><p>அந்தப் பேருந்து பரி சௌக்கிலிருந்து காஷ்மீர் கேட் வரை சுமார் 47 கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளது. பேருந்தில் ஸ்கீரின் போடப்பட்டிருந்ததால் உள்ளே நடந்தவற்றை அவ்வழியே சென்றவர்களால் பார்க்க முடியவில்லை. இதனால் மாணவி கூச்சலிட்டதும் வெளியே சென்றவர்களுக்கு கேட்கவில்லை.</p><p>தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கேரளாவில் உம்மன் சாண்டியின் கல்லறையில் மலர் அஞ்சலி செலுத்திய கிறிஸ் கெய்ல்</title><link>https://www.maalaimalar.com/news/national/chris-gayle-pays-floral-tribute-at-oommen-chandys-grave-in-kerala</link><comments>https://www.maalaimalar.com/news/national/chris-gayle-pays-floral-tribute-at-oommen-chandys-grave-in-kerala#comments</comments><guid isPermaLink="false">6a7970c9-78a9-4843-b611-7ecf17283300</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:34:09 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:34:09.063Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chris Gayle,கிறிஸ் கெய்ல்,Oommen Chandy,kottayam,உம்மன் சாண்டி,கோட்டயம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/6ng7vau4/Untitled-design-10.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chris Gayle]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/6ng7vau4/Untitled-design-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் புதுப்பள்ளியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் நினைவிடத்தில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் மலர் அஞ்சலி செலுத்தினார். </p><h3><strong>கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி</strong></h3><p>கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி கடந்த 2023-ஆம் ஆண்டு மறைந்ததை அடுத்து, அவரது சொந்த ஊரான கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளியில் பாதிரியார்களுக்கான பிரத்தியேகமான சாமதியில் அவருக்கு சிறப்பு கல்லறை கட்டப்பட்டது.</p><p>இந்த கல்லறை அனைத்து மதங்கள் மற்றும் அரசியல் சார்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் வகையில் ஒரு முக்கிய நினைவிடமாக பார்க்கப்படுகிறது.</p><p>மேலும் இந்த நினைவிடத்தில் பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், இந்த கல்லறைக்கு வந்து மனுக்களையும், கடிதங்களையும் விட்டு செல்கின்றனர்.</p><h3><strong>கோட்டயம் வருகை</strong></h3><p>இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கிறிஸ் கெய்ல் ஹெலிகாப்டர் மூலம் கோட்டயம் வந்து மதியம் சுமார் 12:25 மணியளவில் புதுப்பள்ளியில் தரையிரங்கினார்.</p><p>இதையடுத்து கேரள முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டியின் கல்லறைக்கு வந்த அவர் மலரஞ்சலி செலுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>கரப்பான்பூச்சி கட்சியின் டெல்லி பேரணி விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-refuses-to-intervene-in-the-cockroach-partys-delhi-rally-issue</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-refuses-to-intervene-in-the-cockroach-partys-delhi-rally-issue#comments</comments><guid isPermaLink="false">af577e16-8813-4a74-902f-43ea30635043</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:17:51 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:17:51.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,Protest march,Cockroach Janta Party,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,போராட்டப் பேரணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/iq3txrg4/New-Project-2026-08-31T143941.466.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரப்பான்பூச்சி கட்சியின் டெல்லி பேரணி விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/iq3txrg4/New-Project-2026-08-31T143941.466.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள இந்தியா நுழைவாயிலில் இருந்து டெல்லி தலைமை காவல் செயலகம் வரை செப்.5ம் தேதி <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-fails-to-fulfill-promises-cockroach-janata-party-announces-rally-for-september-5">போராட்டப் பேரணி </a>அறிவித்துள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. </p><p>நீட் போராட்டத்தின்போது அரசால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து, இந்தப் பேரணியை அந்த அமைப்பு அறிவித்துள்ளது. </p><p>இந்நிலையில் இந்தப் பேரணி விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.</p><p>சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஏற்பாடுகள் குறித்து மத்திய மற்றும் டெல்லி அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. </p><p>லூதியன்ஸ் டெல்லி, இந்திய நுழைவாயில், மத்திய அரசு வளாகம் உள்ளிட்ட பாதுகாப்பு உணர்திறன்மிக்க பகுதிகளில் போராட்டங்கள், பெரிய அளவிலான மக்கள் திரள்வு உள்ளிட்டவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கோரி சிவம் உபாத்யாய் மற்றும் ஓய்வுபெற்ற டெல்லி காவல்துறை அதிகாரி ராஜேந்திர சிங் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது.</p><p> செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாடு முடியும் வரை, கரப்பான்பூச்சி கட்சியின் இந்த பேரணிக்கு தடைவிதிக்க வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. </p><p>இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு விசாரணைக்கு வந்தநிலையில்.,</p><p>“போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் சட்டப்படியும், அமைதியான முறையிலும் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம் எனக் கூறி, பேரணியைத் தடுக்க எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” எனத் தெரிவித்தது.</p><p>மேலும் இதற்கு மாறாக எதையும் அனுமானிக்கவோ அல்லது ஊகிக்கவோ எங்களுக்கு முன் வலுவான சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டது. </p><p>தொடர்ந்து “இது வேறு ஒரு தரப்பில் பரிசீலிக்கப்பட வேண்டும். இதில் நாங்கள் தலையிட வேண்டியதில்லை. இவை சட்டம் மற்றும் ஒழுங்கு ஆணையத்தால் பரிசீலிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள். </p><p>எது சட்டப்பூர்வமானது, எது சட்டவிரோதமானது என்று கூறுவது அந்த ஆணையத்தின் பொறுப்பாகும். இரு தரப்பினரும் சட்டக் கட்டமைப்பிற்கு இணங்கவும், சட்டப்பூர்வமாகவும், நியாயமாகவும் செயல்படுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்து, </p><p>இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளே முடிவெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு விசாரணையை செப்.10ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஹரியானா பாடகர் அங்கித் பாலியன் கொலை வழக்கு: குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த உத்தரப்பிரதேச போலீஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/national/haryana-singer-ankit-balyan-murder-case-uttar-pradesh-police-encountered-accused</link><comments>https://www.maalaimalar.com/news/national/haryana-singer-ankit-balyan-murder-case-uttar-pradesh-police-encountered-accused#comments</comments><guid isPermaLink="false">b59080cb-2218-4b4e-8a0f-622fdde11448</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:50:45 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:50:45.769Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>uttarpradesh,உத்தர பிரதேசம்,encounter,Haryanvi Singer,Ankit Balyan,அங்கித் பாலியன்,Sharp shooters Killed</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/pnyobi9u/Ankit-Balyan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ankit Balyan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/pnyobi9u/Ankit-Balyan?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹரியானாவைச் சேர்ந்த பிரபல பாடகரும் யூடியூபருமான அங்கித் பாலியன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மோஹித் மற்றும் சுமித் ஆகிய இரண்டு பயங்கர ஷார்ப்ஷூட்டர்கள்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D"> உத்தரப்பிரதேசத்தின்</a> ஷாம்லியில் இன்று போலீசாருடன் நடந்த அதிரடி சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.</p><h2>கைரானா சாலையில் நடந்த அதிரடி என்கவுண்டர்</h2><p>ஷாம்லி போலீசார் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, கைரானா சாலையில் உள்ள இந்தியன் கேஸ் கிடங்கு அருகே சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.</p><p>அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, ஹரியானாவின் சோனிபட் பகுதியைச் சேர்ந்த மோஹித் (22) மற்றும் சுமித் (24) ஆகியோரை வளைத்துப் பிடித்தனர்.</p><p>அப்போது அவர்கள் தப்பியோட முயன்று போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்குப் பதிலடியாக போலீசார் நடத்திய தற்காப்புத் துப்பாக்கிச் சூட்டில் இருவரும் பலத்த காயமடைந்தனர். </p><p>உடனடியாக அவர்கள் ஷாம்லி மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.</p><h2>பாடகர் அங்கித் பாலியன் கொலைப் பின்னணி</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/singer-ankit-balyan">பிரபல ஹரியான்வி பாடகரும்</a> யூடியூபருமான அங்கித் பாலியன், கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி மாலை 6:45 மணியளவில் ஷாம்லியின் கோத்வாலி பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வெளியே வந்தார்.</p><p>அப்போது தனது காரை நோக்கி நடந்து சென்றபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு ஆயுதமேந்திய கும்பல் அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.</p><p>இதில் படுகாயமடைந்த அவர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். </p><p>அங்கித் பாலியன் உடலில் ஐந்து துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததாகவும், அதில் இரண்டு குண்டுகள் அவரது தலையிலேயே பாய்ந்ததாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியது.</p><p>இந்தத் தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், முதன்மைக் குற்றவாளிகள் இருவரை இன்று போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர்.</p><p>கொல்லப்பட்ட இருவர் மீதும் தலா 50,000 ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் அதிர்ச்சி: வீதியோரம் மீட்கப்பட்ட புதிதாகப் பிறந்த பிஞ்சுக் குழந்தை!</title><link>https://www.maalaimalar.com/news/national/shock-in-delhi-newborn-baby-rescued-from-roadside</link><comments>https://www.maalaimalar.com/news/national/shock-in-delhi-newborn-baby-rescued-from-roadside#comments</comments><guid isPermaLink="false">61706df7-20f1-4c57-bed5-243350238493</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:48:34 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:48:34.428Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எய்ம்ஸ் மருத்துவமனை,Delhi Police,Delhi AIIMS,டெல்லி,Newborn baby rescued,Aali Mode,பிஞ்சு குழந்தை மீட்பு,ஆலி மோட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/77o62f6p/mew-born.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Newborn baby rescued]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/77o62f6p/mew-born.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தையைக் கண்டெடுத்த உடனடியாக, காவல்துறையினர் தாமதிக்காமல் எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் அவசரப் பிரிவுக்குக் கொண்டு சென்றனர். </p><p>தென்கிழக்கு டெல்லியின் சரிதா விஹார் பகுதிக்கு உட்பட்ட ஆலி மோட் அருகே வீதியோரத்தில் ஆதரவற்ற நிலையில் அழுகுரலுடன் கிடந்த புதிதாகப் பிறந்த பெண் குழந்தையை <a href="https://www.maalaimalar.com/news/world/mother-tattoos-keyboard-on-arm-for-autistic-son">டெல்லி காவல்துறை</a> ரோந்துப் படையினர் மீட்டுள்ளனர். சுமார் ஆறு முதல் ஏழு நாட்களே ஆன அந்தப் பிஞ்சு குழந்தை, ஆபத்தான சூழ்நிலையில் சாலையோரத்தில் கைவிடப்பட்டுக் கிடந்ததை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல் துறையினர் மீட்டெடுத்தனர்.</p><h2>அவச<strong>ர மருத்துவச் சிகிச்சை</strong> </h2><p>குழந்தையைக் கண்டெடுத்த உடனடியாக, காவல்துறையினர் தாமதிக்காமல் எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் அவசரப் பிரிவுக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவக் குழுவினர் குழந்தைக்குத் தேவையான அவசர முதலுதவி மற்றும் மருத்துவச் சிகிச்சைகளை உடனடியாக வழங்கி கண்காணித்து வருகின்றனர். காவல்துறையினரின் விரைவான தலையீடே குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முக்கியக் காரணமாக அமைந்தது என மருத்துவர்கள் பாராட்டினர். தற்போது குழந்தை மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் பாதுகாப்பாக உள்ளது.</p><h2>காவல்து<strong>றையின் தீவிர விசாரணை</strong></h2><p>இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குழந்தையைக் கைவிட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்தும், எந்த சூழ்நிலையில் இச்சம்பவம் நடந்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆலி மோட் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி, குழந்தையின் பெற்றோரையோ அல்லது சம்பந்தப்பட்ட நபர்களையோ அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு 3 வார கால அவகாசம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/mekedatu-dam-case-three-weeks-time-for-tamil-nadu-government</link><comments>https://www.maalaimalar.com/news/national/mekedatu-dam-case-three-weeks-time-for-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">92c7d4f1-cf2b-4649-8e63-df4b8fdcb6ef</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:19:01 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:19:01.420Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,காவிரி விவகாரம்,Mekedatu issue,மேகதாது அணை திட்டம்,Cauver\WateDispute,TNvsKarnataka</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/qrxq5wcv/Supreme-Court" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/qrxq5wcv/Supreme-Court?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a> விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மூன்று வார கால அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்</p><h2>அணை எதிர்ப்பு</h2><p>மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எந்தவித அனுமதியும் வழங்க கூடாது என உத்தரவிடக்கோரியும், காவிரியில் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், மதிப்பிடுவதற்கும் அனுமதி வழங்கும் வகையில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு</a> வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பான சுற்றறிக்கை ரத்து செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.</p><h2>தமிழக அரசின் வாதம்</h2><p>இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் உமாபதி ஆஜராகி, காவிரியின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு அனுமதி உள்ளிட்டவை வழங்குவதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பான விஷயத்தை எதிர்த்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளோம்.</p><h2>வழக்கு ஒத்திவைப்பு</h2><p>அதேநேரத்தில் இந்த வழக்கில் கூடுதலாக சில ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால் வழக்கை மூன்று வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். </p><p>தமிழக அரசு தரப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆவணங்களை தாக்கல் செய்ய மூன்றுக்கு வார கால அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் பங்கீடு: உச்சநீதிமன்றத்தில் தமிழகம் - கர்நாடகா காரசார வாதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/cauvery-water-sharing-tamil-nadu-karnataka-arguments-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/cauvery-water-sharing-tamil-nadu-karnataka-arguments-supreme-court#comments</comments><guid isPermaLink="false">9437a8bc-c15e-42eb-87d7-c3b5b9f08483</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:04:59 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:04:59.578Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,mekedatu dam,SupremeCourt,Cauvery,உச்சநீதிமன்றம்,காவிரி,CWMA,Water Dispute</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/mym5361c/Cauvery-WaterDispute" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cauvery WaterDispute  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/mym5361c/Cauvery-WaterDispute?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்திற்கான நீரை உறுதி செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணை</p><h2><strong>நீர் மறுப்பு</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">உச்ச நீதிமன்ற </a>அறிவுரை திறன் அடிப்படையில் தமிழகத்திற்கு கூடுதல் நீரை திறந்து விடக் கோரி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் முறையீடு வைத்தோம் ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.</p><p> தமிழகத்திற்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் மட்டுமே 15 நாட்களுக்கு திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது அந்த உத்தரவையும் கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்துவதில்லை.</p><h2><strong>கர்நாடகா விளக்கம்</strong></h2><p>நீதிபதிகள் ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்துகிறதா கர்நாடக அரசு, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரி நீர்</a> மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் காவிரியில் நீர் திறந்து விடப்படுகிறது.</p><p> குறிப்பாக கடந்த சில நாட்களாக காவிரியில் வினாடிக்கு ஒன்பதாயிரம் கன அடிக்கும் அதிகமாகவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது மேலும் கர்நாடகத்தில் இருக்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்து கூடுதலாக நீர் திறப்பதற்கும் நாங்கள் முயற்சி எடுப்போம்.</p><p>தற்போது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகாவில் </a>அதிக வறட்சி நிலவு காரணமாக அதிக அளவிலான தண்ணீரை திறந்து விட முடியாத ஒரு சூழல் உள்ளது என்று கர்நாடக அரசு விளக்கமளித்துள்ளது.</p><h2><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழக அரசின்</a> குற்றச்சாட்டு</strong></h2><p>கர்நாடக அரசு ஆணைய உத்தரவை பின்பற்றவில்லை உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்தரவின் படியும் தண்ணீர் திறக்க வேண்டிய உத்தரவை அவர்கள் பின்பற்றவில்லை கர்நாடகம் தண்ணீர் திறக்காமல் இருப்பதன் காரணமாக சுமார் 24 லட்சம் ஏக்கருக்கு மேலாக சாகுபடி செய்ய முடியாமல் தமிழகம் பாதிப்படைந்துள்ளது. </p><p>அதே வேளையில் கர்நாடகம் 20 டிஎம்சி நீருக்கு மேலாக மடை மாற்றம் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தி உள்ளனர் கர்நாடக அணிகளில் சுமார் 73 டிஎம்சி நீர் இருக்கும் நிலையிலும் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க மறுக்கின்றனர்.</p><p> இவ்வாறு தொடர்ச்சியாக நீர் வழங்க மறுப்பதால் தமிழகத்தில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.</p><h2><strong>உடனடி நிவாரணம்</strong></h2><p>தமிழகத்திற்கு தர வேண்டிய பற்றாக்குறை நீரை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் 15 நாட்களுக்குப் பிறகுதான் காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் கூட உள்ளது.</p><p> ஆனால் இந்த வாரமே மீண்டும் ஆணையம் ஆலோசனை நடத்தி எங்களது கருத்துக்களை கேட்டு கூடுதல் தண்ணீரை திறக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் இதற்காக உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.</p><h2><strong>பாசன முரண்பாடு</strong></h2><p>காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதாக கர்நாடகா சொல்கிறார்கள் ஆனால் அதை அவர்களது பாசன பயன்பாட்டிற்கு தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.</p><p>கர்நாடக அரசு அதிகாரிகள் கொடுத்த தகவல்கள் படி பார்த்தாலே அவர்களுடைய விவசாய நிலங்களில் 52 சதவிகித நிலங்களுக்கு தேவையான தண்ணீரை ஏற்கனவே கர்நாடக அரசு திறந்து விட்டுவிட்டது. </p><p>ஆனால் தமிழ்நாடு இன்னமும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு கூட தண்ணீர் திறக்க முடியாத சூழல் நிலவுகிறது.</p><h2><strong>வழக்கு ஒத்திவைப்பு</strong></h2><p>நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு இந்த வழக்கை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். செப்டம்பர் 15 ஆம் தேதி என்ற தேதிக்கு முன்பே வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் குறிப்பாக அடுத்த வாரமே மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.</p><p>ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை காவிரி மேலாண்மை ஆணையம் கூடி முக்கியமான உத்தரவுகளை பிறப்பிக்கிறார்கள் அதில் நாங்கள் ஏன் தலையிட வேண்டும் அடுத்த விசாரணையின் போது தற்போதைய நிலவரம் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெட்ரோலில் எத்தனால் கலப்பு விவகாரம்: நிபுணர் குழு அமைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-dismisses-plea-on-ethanol-blend-in-petrol</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-dismisses-plea-on-ethanol-blend-in-petrol#comments</comments><guid isPermaLink="false">b1a82377-7966-4ded-ad7e-c11d63b3193b</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:35:39 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:35:39.997Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்சநீதிமன்றம் விசாரணை,வாகன பராமரிப்பு,Consumer Rights,EthanolBlending,மனு தள்ளுபடி,Vehicle Maintenance,Petrol Pump Receipts</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/r6lk1gvl/Supreme-Court" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ E20 Petrol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/r6lk1gvl/Supreme-Court?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரசீதுகளில் எத்தனால் கலவை சதவீதத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் மற்றும் வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் எனக் கோரிய பொதுநல மனுவை <strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">உச்ச நீதிமன்றம்</a> தள்ளுபடி செய்துள்ளது</strong>.</p><p>வழக்கறிஞர் நரேந்திர கோஸ்வாமி தாக்கல் செய்த இந்த மனுவை, நீதிபதிகள் <strong>எம்.எம். சுந்தரேஷ்</strong> மற்றும் <strong>பி.பி. வரலே</strong> ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை செய்தது.</p><h2><strong>மனுதாரரின் முக்கியக் கோரிக்கைகள்</strong></h2><p>பெட்ரோல் விநியோகிக்கும் குழாய்கள் மற்றும் வாடிக்கையாளர் ரசீதுகளில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D">எத்தனால் கலவை</a> அளவை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.</p><p>எத்தனால் கலப்பினால் வாகனங்களின் மைலேஜ், என்ஜின் ஆயுட்காலம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யச் சுதந்திரமான நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.</p><p>எந்தெந்த வாகன மாடல்களுக்கு இந்த பெட்ரோல் ஏற்றது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்திருந்தனர்.</p><h2><strong>நீதிமன்றத்தின் உத்தரவு</strong></h2><p>விசாரணையின் போது, நுகர்வோருக்குத் தாங்கள் வாங்கும் எரிபொருளின் கலவையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் உரிமை உள்ளது என மனுதாரர் வாதிட்டார்.</p><p>இருப்பினும், இந்த விவகாரத்திற்காக நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகியதை கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தையோ அல்லது உரிய அதிகாரிகளையோ அணுகுமாறு அறிவுறுத்தி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் சைபர் மோசடியில் ரூ.558 கோடியை இழந்த மக்கள் - வெறும் ரூ.1.9 கோடி மட்டுமே மீட்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-lost-rs-558-crore-to-cyber-fraud-only-rs-1-9-crore-recovered</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-lost-rs-558-crore-to-cyber-fraud-only-rs-1-9-crore-recovered#comments</comments><guid isPermaLink="false">51742a19-ab58-44f6-aa3c-d12d7dcb6ea9</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:55:52 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:55:52.712Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,சைபர் மோசடி,cyber fraud,Priyank Kharge,Cybercrime,online scam,Financial Loss</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/6lcggrkf/Online-Scam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Online Scam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/6lcggrkf/Online-Scam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/karnataka">கர்நாடக </a>மாநிலத்தில் நடப்பு 2026-ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாதங்களில் மட்டும் பொதுமக்கள் சைபர் குற்றவாளிகளிடம் 558 கோடி ரூபாயை பறிகொடுத்துள்ளனர்.</p><p>ஆனால், இதில் அதிர்ச்சியூட்டும் விதமாக வெறும் 1.9 கோடி ரூபாய் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்குத் திரும்பக் கிடைத்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.</p><h2>மீட்புப் பணியில் தொய்வு: புள்ளிவிவரங்கள்</h2><p>ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/cyber-fraud">சைபர் குற்றங்களால் </a>இழந்த மொத்த தொகை ரூ.558 கோடி ஆகும்.</p><p>இதில் மோசடி நடந்த கணக்குகளில் இருந்து போலீசாரால் முடக்கப்பட்ட தொகை ரூ. 35.9 கோடி என்றாலும், பாதிக்கப்பட்ட மக்களிடம் இதுவரை வெறும் ரூ.1.9 கோடி மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலம் மீட்பு விகிதம் என்பது முடக்கப்பட்ட தொகையில் வெறும் 5% ஆகவும், இழந்த மொத்த தொகையில் மிகக் குறைந்த அளவாக வெறும் 0.4% ஆகவும் மட்டுமே உள்ளதால் மீட்புப் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த ஆண்டில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் மக்கள் ஒரு வழக்கிற்கு சராசரியாக ரூ.11.8 லட்சம் வரை தங்களது பணத்தை இழந்துள்ளனர்.</p><h2>ஆள் பற்றாக்குறை</h2><p>சைபர் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து வரும் போதிலும், அதனைக் கையாள்வதில் காவல் துறையில் நிலவும் கடுமையான ஆள் பற்றாக்குறை காரணமாக மாநிலம் முழுவதும் சைபர் கிரைம் பிரிவில் 320 பணியிடங்கள் காலியாக உள்ள சூழலில், குறிப்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள முதன்மை சைபர் கிரைம் காவல் நிலையத்திலேயே 200 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளதே பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணம் திரும்பக் கிடைப்பதில் ஏற்படும் தாமதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.</p><h2>கடந்த ஆண்டுகளின் ஒப்பீடு (2024 - 2026)</h2><p>கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்திருந்தாலும் மக்கள் இழக்கும் சராசரித் தொகை அதிகமாகவே உள்ளது. </p><p>2024-இல் 17,890 வழக்குகளில் ரூ.1,841 கோடி இழக்கப்பட்டு ரூ.183.6 கோடியும், 2025-இல் 10,703 வழக்குகளில் ரூ.1,756.6 கோடி இழக்கப்பட்டு ரூ.76.7 கோடியும் மீட்கப்பட்ட சூழலில், 2026-ஆம் ஆண்டில் இதுவரை ரூ.558 கோடி இழக்கப்பட்டு வெறும் ரூ.1.9 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளதால், கடந்த மூன்று ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக கர்நாடக மக்கள் ரூ.3,932 கோடியை சைபர் மோசடியில் இழந்துள்ளதும் அதில் இதுவரை வெறும் ரூ.262 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.</p><h2>அரசின் அதிரடி நடவடிக்கை மற்றும் தீர்வு</h2><p>இந்த விவகாரம் குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/priyank-kharge">பிரியங்க் கார்கே</a> சட்டமன்றத்தில் பேசுகையில், சைபர் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க அரசு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் கூறியதுடன், சைபர் பிரிவு, வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு முகமைகளுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பு பலப்படுத்தப்பட்டு விசாரணைக்குத் தேவையான ஆவணங்கள் தாமதமின்றிப் பெறப்படும் என்றும், சட்ட நடைமுறைகளை எளிதாக்கி முடக்கப்பட்ட பணத்தை நீதிமன்ற அனுமதியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை மறுஆய்வு செய்து அவற்றை முன்னுரிமை அடிப்படையில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>விண்ணில் பாய்கிறது பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்!- இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எப்-17 திட்டம் தயார்</title><link>https://www.maalaimalar.com/news/national/earth-observation-satellite-set-to-soar-into-the-sky-isros-gslv-f-17-mission-is-ready</link><comments>https://www.maalaimalar.com/news/national/earth-observation-satellite-set-to-soar-into-the-sky-isros-gslv-f-17-mission-is-ready#comments</comments><guid isPermaLink="false">5fd69504-d78d-4fb4-9949-cabf8e027427</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:45:16 +0000</pubDate><atom:updated>2026-08-31T03:45:16.702Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,இஸ்ரோ விஞ்ஞானிகள்,GSLV F17,ஜிஎஸ்எல்வி எப்17</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/yp4ltrix/GSLV.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜிஎஸ்எல்வி எப்17]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜிஎஸ்எல்வி எப்17]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/yp4ltrix/GSLV.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்டில் பொருத்தி வருகிற 4-ந்தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.</strong></em></p><h2><strong>பூமிக் கண்காணிப்புப் பணி</strong></h2><p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B">இஸ்ரோ</a>) தனது மிகவும் லட்சியமிக்க 'ஜூசாட்-1 ஏ என்று அழைக்கப்பட்ட 'இ.ஒ.எஸ். 5' என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்டில் பொருத்தி வருகிற (அதாவது செப்டம்பர்) 4-ந்தேதி அதிகாலை 2.55 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவுகிறது.</p><p>இது வழக்கமான குறைந்த புவிச் சுற்றுப்பாதைக்கு மாறாக, சுமார் 36 ஆயிரம் கி.மீ உயரத்தில் உள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/research-center-on-the-moon-nasa-invites-isro">புவி</a> நிலைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.</p><p>இந்தியத் துணைக்கண்டத்தின் மீது எப்போதும் நிலைத்திருப்பதால், இது இந்தியாவின் நிலப்பரப்பைத் தொடர்ச்சியாகவும், நிகழ்நேரத்திற்கு அருகிலும் படம்பிடித்துக் கண்காணிக்கும். இதில் மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் வகை அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் இது 19-வது ராக்கெட்டாகும்.</p><h2><strong>பேரிடர் மேலாண்மை</strong></h2><p>பேரிடர் மேலாண்மை குறிப்பாக வெள்ளம், புயல், நிலச்சரிவு மற்றும் காட்டுத்தீ போன்ற இயற்கை பேரிடர்களை உடனுக்குடன் கண்காணித்து தகவல்களை வழங்கும். பயிர் வளர்ச்சி, காடுகளின் பரப்பளவு மாற்றம் மற்றும் நீர்நிலைகளின் நிலவரத்தை கண்காணிக்க உதவும்.</p><p>இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவை கண்காணிக்கும் நாட்டின் முதல் ‘இமேஜிங்’ செயற்கைக்கோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். </p>]]></content:encoded></item><item><title>ஹல்த்வானி &apos;சுத்திகரிப்பு&apos; கருத்து தொடர்பாக ராகுல் காந்தி மீது FIR</title><link>https://www.maalaimalar.com/news/national/fir-registered-against-rahul-gandhi-over-haldwani-purification-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/national/fir-registered-against-rahul-gandhi-over-haldwani-purification-remarks#comments</comments><guid isPermaLink="false">be24500a-0bc6-4486-9478-54cc649007d8</guid><pubDate>Sun, 30 Aug 2026 20:46:03 +0000</pubDate><atom:updated>2026-08-30T20:46:03.187Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,FIR,வழக்குப் பதிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/a5q7sa8t/Rahul-Gandhi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/a5q7sa8t/Rahul-Gandhi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) தலைவர் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் நடத்தப்பட்ட ஒரு மத சடங்கிற்கு, காங்கிரஸ் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/rahul-gandhi">ராகுல் காந்தி</a> சாதிய சாயம் பூசியதாக வால்மீகி சமூகத்தை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. </p><p>குழுக்களுக்கு இடையே பகையை தூண்டுதல் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யப்படும் செயல்கள் தொடர்பான 'பாரதிய நியாய சன்ஹிதா' (BNS) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த <a href="https://www.maalaimalar.com/topic/fir">FIR</a> பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>மேலும், 'பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம், 1989'-இன் பிரிவுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியது.</p><h2>குற்றச்சாட்டு:</h2><p>ஜவஹர் நகரை சேர்ந்தவரும், 'ஸ்ரீ ராம் சேனா தர்மார்த் சேவா நியாஸ்' அமைப்பின் உறுப்பினருமான அமித் குமார், ஹல்த்வானி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அந்த "சடங்கு மற்றும் தூய்மை பணி"யின் போது தான் அங்கிருந்ததாகவும், ஆகஸ்ட் 29-ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் தங்கள் சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.</p><p>அந்தச் சடங்கில் ஈடுபட்டவர்களை "தீண்டாமையை கடைப்பிடிப்பவர்கள்" மற்றும் "தலித் விரோதிகள்" போல காந்தி சித்தரித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.</p><p>தாங்கள் பட்டியல் சாதி சமூகத்தை சேர்ந்தவர் என்றும், பட்டியல் சாதியினர் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் அந்த சடங்கில் ஈடுபட்டதாகவும் குமார் தனது புகாரில் தெரிவித்தார். மேலும், அந்த சடங்கிற்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சாதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.</p><h2>சுத்திகரிப்பு யாகம்:</h2><p>ஆகஸ்ட் 8 அன்று ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அதை தொடர்ந்து, ஆகஸ்ட் 11 அன்று அங்கு சிலர் 'சுத்திகரிப்பு யாகம்' நடத்தியதாக கூறப்பட்டதை தொடர்ந்து அரசியல் சர்ச்சை வெடித்தது.</p><p>இந்தச் சம்பவத்தை பா.ஜ.க.வின் தலித் விரோத மனப்பான்மையின் வெளிப்பாடு என்று காங்கிரஸ் விமர்சித்த நிலையில், பா.ஜ.க. தனது செயலை நியாயப்படுத்தியது. கார்கேவின் பேரணிக்குப் பிறகு அந்த இடம் குப்பைகள் நிறைந்ததாக இருந்ததாகவும், மத வழிபாட்டு தலத்திற்கு பொருத்தமற்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகவும் பா.ஜ.க. தரப்பில் கூறப்பட்டது.</p><p>ஆகஸ்ட் 29 அன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், காந்தி இந்த சம்பவத்தைக் கடுமையாக விமர்சித்ததுடன், அந்த "சுத்திகரிப்பு" நடவடிக்கைக்கு பொறுப்பானவர்கள் மீது SC/ST சட்டத்தின் கீழ் FIR பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>5 பில்லியன் டாலர் வர்த்தகம், யுரேனிய விநியோகம் : இந்தியா, உஸ்பெகிஸ்தான் இடையே எட்டப்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/5-billion-trade-uranium-supply-key-agreements-reached-between-india-and-uzbekistan</link><comments>https://www.maalaimalar.com/news/national/5-billion-trade-uranium-supply-key-agreements-reached-between-india-and-uzbekistan#comments</comments><guid isPermaLink="false">7305b888-4213-450d-8d57-2aaa6984f3ed</guid><pubDate>Sun, 30 Aug 2026 16:08:34 +0000</pubDate><atom:updated>2026-08-30T16:08:34.184Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,uzbekistan,pm modi,பிரதமர் மோடி,உஸ்பெகிஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/hmeotic7/New-Project-2026-08-30T211702.209.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 5 மில்லியன் டாலர் வர்த்தகம், யுரேனியம் விநியோக ஒப்பந்தம்: இந்தியா, உஸ்பெகிஸ்தான் இடையே எட்டப்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/hmeotic7/New-Project-2026-08-30T211702.209.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.</p><h2>5 பில்லியன் டாலர் வர்த்தகம்</h2><p>அதன்படி இருநாடுகளும் 2030ம் ஆண்டுக்குள் 5 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளன. மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு, விரிவான உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் புதிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படவுள்ளது. தற்போதுள்ள கூட்டுக் குழு செயலாளர் மட்டத்திலிருந்து அமைச்சர் மட்டத்திற்கு தரம் உயர்த்தப்படும்.</p><h2>யுரேனியம் விநியோக ஒப்பந்தம்</h2><p>இந்தியாவின் அணுமின் உற்பத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உஸ்பெகிஸ்தானில் இருந்து நீண்ட கால அடிப்படையில் யுரேனியம் இறக்குமதி செய்ய வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. </p><p>இதுதொடர்பாக இரு நாடுகளும்  ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தருவாயில் இருக்கின்றன என்று வெளியுறவு அமைச்சகத்தின் மேற்குப் பிராந்தியச் செயலாளர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார். </p><p>மேலும் இந்தியாவின் யு.பி.ஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை உஸ்பெகிஸ்தானிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.</p><h2>கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை</h2><p>தங்கம், தாமிரம், யுரேனியம் மற்றும் அரிய வகை பூமி கனிமங்கள் உள்ளிட்ட சுரங்கம் மற்றும் கனிம வளங்கள் பிரிவில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. </p><p>இது மட்டுமின்றி பாதுகாப்பு, ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம், மருந்துகள், சுகாதாரம், விவசாயம், சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ள பாதிப்பு: 4 விமானங்கள் மூலம் 68.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா!</title><link>https://www.maalaimalar.com/news/national/nepal-flood-crisis-india-sends-685-tonnes-of-relief-materials-via-four-aircraft</link><comments>https://www.maalaimalar.com/news/national/nepal-flood-crisis-india-sends-685-tonnes-of-relief-materials-via-four-aircraft#comments</comments><guid isPermaLink="false">932cdc14-4039-4863-ad8b-424a80deea8c</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:32:14 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:32:14.504Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,நேபாளம்,nepal,நிவாரணப் பொருட்கள்,relief materials</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/f3eswfqz/New-Project-2026-08-30T205452.412.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளப் பாதிப்பு: 4 விமானங்கள் மூலம் 68.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/f3eswfqz/New-Project-2026-08-30T205452.412.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான நேபாளத்திற்கு இந்தியா இதுவரை 4 ராணுவ விமானங்கள் மூலம் 68.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளது. </p><p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயும் உள்ள நிலையில், ஆக.26 முதல் தேவையான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. </p><p>இதில் தார்பாய்கள், கூடாரங்கள், போர்வைகள், மற்றும் சுகாதாரக் கருவிகள், மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை தேவைக்கான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.</p><p>நிவாரணப் பொருட்கள் மட்டுமின்றி தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக தொழில்நுட்பக் குழுக்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் உபகரணங்களையும் அனுப்பியுள்ளது.</p><p>நீர்மின் நிலைய சுரங்கங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க, அதிநவீன உபகரணங்களுடன் கூடிய பிரத்யேகச் சுரங்கத் தொழில்நுட்பக் குழு அனுப்பப்பட்டுள்ளது. </p><p>இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளும் நேபாளத்திற்கு பல்வேறு உதவிகளை அறிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மனதின் குரல்: அவகோடா பயிரிட்டு லாபம் ஈட்டும் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/voice-of-the-mind-pm-modi-praises-avocado-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/national/voice-of-the-mind-pm-modi-praises-avocado-farmers#comments</comments><guid isPermaLink="false">a3e96dbf-e332-43a5-88fe-4ceb75ddce60</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:11:16 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:11:16.636Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Agriculture,மனதின் குரல்,பிரதமர் மோடி.,pm modi,Mannki Baat,tamilnadu farmers,Avocado Farming,அவகோடா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/sovz83dc/Avocado-Farming" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Avocado Farming ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/sovz83dc/Avocado-Farming?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆற்றிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியின்</a> 137-வது பதிப்பில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் புதுமையான முயற்சிகள் மற்றும் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துப் பேசினார்.</p><p>அப்போது, தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல சுற்றுலாத் தலமான கொடைக்கானலைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் என்பவரின் சாதனையை பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.</p><h2><strong>அவகோடா பழங்களின் தேவை</strong></h2><p>இதுகுறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி </a>பேசியதாவது:</p><p><br>என் அன்பு நாட்டு மக்களே, தற்போது இந்திய நகரங்களில் அவகோடா மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஒரு காலத்தில் இந்த பழத்தைப் பற்றி பலருக்கும் தெரியாது, அதற்கான தேவையும் சந்தை மதிப்பும் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் இன்று, ஆரோக்கியம் மற்றும் பிரீமியம் சந்தைகளில் இது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதோடு, பலரது உணவு மேஜைகளிலும் தவறாமல் இடம் பெறத் தொடங்கியுள்ளது என்று கூறினார்.</p><h2><strong>கொடைக்கானல் விவசாயியின் சாதனை</strong></h2><p>தொடர்ந்து பேசிய பிரதமர், இந்த புதிய பயிர் வாய்ப்பைப் பயன்படுத்தி தென்னிந்திய விவசாயிகள் எப்படித் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணங்களைச் சுட்டிக்காட்டினார்.</p><p>"தமிழ்நாடு, கொடைக்கானலைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் அவர்கள் தனது அரை ஹெக்டேர் நிலத்தில் அவகோடா பழங்களைப் பயிரிடத் தொடங்கினார். </p><p>தற்போதைய சந்தையில் இப்பழங்களுக்குக் கிடைக்கும் நல்ல விலையின் காரணமாக, அவருக்குப் பெரிய அளவில் லாபம் கிடைத்துள்ளதுடன், அவரது வருமானமும் பல மடங்கு அதிகரித்துள்ளது" என்று பிரதமர் குறிப்பிட்டார்.</p><h2><strong>பிற மாநில விவசாயிகளின் உத்வேகம்</strong></h2><p>தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநில விவசாயிகளின் உழைப்பையும் பிரதமர் பாராட்டிப் பேசினார். </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">ஆந்திர பிரதேசம்</a> கடப்பாவைச் சேர்ந்த வரதராஜ் என்ற விவசாயி, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இதுவரை சுமார் 4 டன் அவகோடா பழங்களை உற்பத்தி செய்து, இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக உள்ளூர் கடைகளுக்கு விற்று நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.</p><p><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகா </a>மாநிலம் </strong>சிக்மகளூரு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது காபித் தோட்டங்களுக்கு நடுவே அவகோடா மரங்களை ஊடுபயிராக நட்டு, காபி மற்றும் மிளகுடன் சேர்த்து உபரி வருமானமும் ஈட்டி சாதனை படைத்து வருகின்றனர் மேலும் அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை கூறினார்.</p><h2><strong>இந்திய <a href="https://www.maalaimalar.com/news/district/avocado-prices-have-fallen-in-kodaikanal-515722">அவகோடா</a></strong></h2><p>"நகரத்து உணவகங்களில் அவகோடா டோஸ்ட் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால், இதே <a href="https://www.maalaimalar.com/news/district/avocado-prices-have-fallen-in-kodaikanal-515722">அவகோடா </a>மூலம் நமது நாட்டின் புதுமைப்பித்த விவசாயிகளும் வருமானம் ஈட்டுவதற்கான ஒரு புதிய வழியைக் கண்டறிந்துள்ளனர். </p><p>சுருக்கமாகச் சொன்னால், நமது நாட்டின் மண்ணில் விளைந்த அவகோடா, வாடிக்கையாளர்களின் உணவைச் சுவையாக்குவதோடு, மறுபுறம் இந்திய விவசாயிகளின் வருமானத்தையும் கணிசமாக உயர்த்தியுள்ளது" எனப் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-wife-and-lover-arrested-for-husband-murder</link><comments>https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-wife-and-lover-arrested-for-husband-murder#comments</comments><guid isPermaLink="false">e2e93aaa-1fd6-42c2-9214-9d1842716b75</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:37:58 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:37:58.951Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Murder case,Andhra Pradesh,husband murder,Wife Arrested,ஆந்திர பிரேதசம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/d525zt7e/Murder-Case" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murder Case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/d525zt7e/Murder-Case?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில், குடும்பத் தகராறு மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரைக் கொலை செய்து உடலைக் கிணற்றில் வீசியதாக ஒரு பெண்ணையும் அவரது கள்ளக் காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>குடும்பத் தகராறு</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">ஆந்திர மாநிலம்</a>, அன்னமய்யா மாவட்டம் நீலகண்டராவ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணா. இவரது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரபி என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. </p><p>இதனைப் பாலகிருஷ்ணா கண்டித்ததால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.</p><h2>கொலைச் சம்பவம்</h2><p>கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பாலகிருஷ்ணா தனது விவசாய நிலத்திற்குச் சென்றபோது, அங்கு வந்த அவரது மனைவி மற்றும் ரபி ஆகிய இருவரும் சேர்ந்து அவரைத் தாக்கி கொலை செய்துள்ளனர். </p><p>பின்னர் கொலையை மறைப்பதற்காகப் பாலகிருஷ்ணாவின் உடலை ஒரு கோணிப்பையில் கட்டி அருகில் உள்ள கிணற்றில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.</p><h2>விசாரணை மற்றும் கைது</h2><p>மறுநாள் காலை கிணற்றில் உடல் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p>இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய தீவிர <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணையில்</a>, பாலகிருஷ்ணாவின் மனைவி மற்றும் ரபி ஆகியோர் இணைந்து இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.</p><p>தற்போது போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை </a>நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>போதையில்லா இந்தியாவை உருவாக்குவோம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-urges-youth-to-build-drug-free-india-in-mann-ki-baat</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-urges-youth-to-build-drug-free-india-in-mann-ki-baat#comments</comments><guid isPermaLink="false">d55938de-b3da-44e5-8d13-d09a9feda988</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:52:17 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:52:17.176Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மனதின் குரல்,Swachh Bharat,pm modi,Mannki Baat,பிரதமர் மோடி,Drug Free India,SVA Nidhi Scheme</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/iwd9zbs7/MannKi-Baat" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MannKi Baat  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/iwd9zbs7/MannKi-Baat?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a> ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். இன்று தனது 137-வது பதிவில் பிரதமர் மக்களின் நலன் கருதி பேசியுள்ளார்.</p><h2>உள்நாட்டு பொருட்கள்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மனதின் குரல் நிகழ்ச்சியை</a> பல்வேறு மாநில முதல்வர்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். வரலாறு தொடர்பாக விவரங்களை எளிதாக பெற இணைய தளம் உருவாக்கப்பட்டது. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், சேர ராஜ்ஜியம் குறித்து இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>பண்டிகை நாட்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும். உள்நாட்டு பொருட்கள் குறித்து நாம் பெருமைபட வேண்டும்.</p><h2>மகளிருக்கு உதவி</h2><p>தெருவோர வியாபாரிகளுக்கான நலத்திட்டமான பிரமதரின் சுவனதி திட்டம் மகளிருக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்தி மகளிர் சுய தொழில்களை வளர்க்கிறார்கள்.</p><p>இந்த திட்டம் மூலம் லட்சக்கணக்கான தாய்மார்களும், சகோதரிகளும் புதிய வலிமையை பெறுகிறார்கள்.</p><p>இந்த திட்டத்தின் பயனாளிகளில் 46 சதவீதம் பேர் பெண்கள். அதாவது நாடு சுமார் 35 லட்சம் பெண்கள் தங்கள் தொழிலை மேம்படுத்த இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.</p><p>தூய்மை இந்தியா திட்டம் இளைஞர்களின் முன்னெடுப்பால் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளது. அமர்நாத் யாத்திரையிலும் தூய்மை பணிகள் முக்கிய இடம் பிடித்தது.</p><p> உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் மாணவிகள் செயற்கைகோள் தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்தனர்.</p><h2>போதை பொருள் இல்லாத நாடு</h2><p>இந்தியாவை போதை பொருள் இல்லாத நாடாக மாற்ற மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். </p><p>போதை பொருள் பயன்பாட்டு அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிக்கவும், இளைஞர்களுக்கு வலுவான எதிர்காலத்தை உருவாக்கவும் ஒன்றிணைய வேண்டும்.</p><p>‘வளர்ந்த இந்தியாவுக்கான போதை பொருள் இல்லாத இளைஞர்கள்’ என்ற பிரசாரம் நாடு முழுவதும் வேகம் பெற்று வருகிறது. இதன் நோக்கம் தெளிவானது. </p><p>போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சி, போதை பொருள் தேவையை குறைப்பதற்கான தேசிய செயல்திட்டத்தின் கீழ் 2020 ஆகஸ்டு 15-ந் தேதி அன்று தொடங்கப்பட்ட அரசின் ஒரு முக்கிய முன் முயற்சியாகும்.</p><h2>பிரசாரம்</h2><p>இந்த பிரசாரமானது விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சமூக பங்கேற்பு, சிகிச்சை மறுவாழ்வு, தொடர் பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் போதை பொருள் பயன்பாட்டை தடுப்பதையும், அதற்கு எதிரான நாடு தழுவிய இயக்கத்தை வளர்ப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது என்று பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வார்த்தைகளை விட செயல்களே பேசப்பட வேண்டும்: மோகன் பகவத் உரைக்கு கபில் சிபில் எதிர்வினை</title><link>https://www.maalaimalar.com/news/national/kapil-sibal-criticises-mohan-bhagwat-over-unity-in-diversity-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/national/kapil-sibal-criticises-mohan-bhagwat-over-unity-in-diversity-remarks#comments</comments><guid isPermaLink="false">02624ca0-be87-4231-b7db-a4fb1d33d01f</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:39:01 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:39:01.795Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mohan Bhagwat,RSS,மோகன் பகவத்,ஆர்.எஸ்.எஸ்,கபில் சிபில்,Kapil Sibal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/crhck41u/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kapil Sibal slams Mohan Bhagwat’s US speech]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/crhck41u/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D">மோகன் பகவத்</a> பேசிய வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்துக்கு இந்தியாவின் மூத்த வழக்கறிஞரான கபில் சிபில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் வழக்கறிஞர் கபில் சிபில், வார்த்தைகள் ஒரு பொருட்டல்ல என்றும் செயல்களே பேசப்பட வேண்டும் என்றும் மோகன் பகவத் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ளார்.</p><p>வெளிநாட்டில் ஞானமான வார்த்தைகளை பேசுவது ஒரு பொருட்டல்ல என்றும், நமது வார்த்தைகளை விட நமது செயல்களே பேச வேண்டும் என்றும் கூறினார்.</p><p>நியூயார்க்கில் புகழ்பெற்ற மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா உலகளாவிய மக்கள் தொடர்புத் திட்டத்தின் கூட்டம் நடைபெற்றது. </p><p>'ஒரே உலகம் ஒரே மனிதநேயம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.</p><p>அப்போது மோகன் பகவத் தனது ஒரு மணி நேர உரையில், பன்முகத்தன்மை கொண்டாடப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.</p><p>மேலும் அவர், “இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என நினைப்பவர்கள் உண்மையான இந்துவாக இருக்க முடியாது. உண்மையறிந்தவர்கள், கற்றறிந்த அறிஞராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, அனைவரையும் சமமாகவே பார்க்கிறார்கள்.</p><p>இந்த வெளித்தோற்ற வேறுபாடுகள் இயற்கையை மட்டுமே அலங்கரிக்கின்றன, அவ்வளவுதான். அன்றாட வாழ்வில் நாம் அவற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தாலும், நாம் அனைவரும் ஒன்று என்பதே அடிப்படை உண்மை.</p><p>பிரிவினையின் மாயைகள் நீடிக்கலாம், ஒரு குறிப்பிட்ட காலம் வரை செழிக்கவும் கூடும், ஆனால் இறுதியில் அவை மங்கிவிடும்; புதிய மாயைகள் அவற்றின் இடத்தைப் பிடித்துக்கொள்ளும்.</p><p>மதங்கள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் மனிதநேயம் ஒன்றுதான் என்று பாரம்பரியமாகக் கூறும் ஒரு சமூகத்தில் நான் பணியாற்றுகிறேன். நான் ஒரு மத அறிஞரோ, மத அதிகாரியோ அல்ல” என்று கூறினார்.</p><p>இந்த நிலையில் மோகன் பகவத்தின் கருத்து குறித்து கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர் கபில் சிபில் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,  'பன்முகத்தன்மை என்பது நமது இயல்பான ஒற்றுமையின் ஓர் அணிகலன்; அது பாதுகாக்கப்பட வேண்டும்'. வெளிநாட்டில் ஞானம் பொதிந்த வார்த்தைகள், ஆனால் உள்நாட்டிலோ மௌனம். வெறும் வார்த்தைகள் முக்கியமல்ல, செயல்களே பேச வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வெள்ளத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண நேபாளம் புறப்பட்டது குஜராத் தடயவியல் குழு</title><link>https://www.maalaimalar.com/news/national/gujarat-forensic-team-to-nepal-to-identify-flood-victims</link><comments>https://www.maalaimalar.com/news/national/gujarat-forensic-team-to-nepal-to-identify-flood-victims#comments</comments><guid isPermaLink="false">9618943d-ac10-43c6-bc8b-2978dc9bbe95</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:24:05 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:24:05.687Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Forensic Team,nepal flood,தடயவியல் ஆய்வு,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/vwd94nic/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gujarat National Forensic Science University team travels to Nepal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/vwd94nic/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/நேபாள்">நேபாளத்தில்</a> ஏற்பட்ட பெருவெள்ள விபத்தில் உயிரிழந்த மக்களை அடையாளம் காண்பதற்காக, குஜராத்தை தளமாக கொண்ட தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு என்று நேற்று மாலை நேபாளத்திற்கு புறப்பட்டது.</p><p>இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும் இந்த திட்டம், பேரிடரால் உயிரழந்தவர்களை நேரடியாக அடையாளம் காணும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது.</p><p>தேசிய தடவியல் அறிவியல் பல்கலைக்கழகம் கடந்த ஜூன் 12, 2025 அன்று நடந்த AI-171 விமான விபத்தில் உயிரிழந்த நபர்களின் டி.என்.ஏ.வை கண்டறியும் செயல்முறையை 10 நாட்களில் முடித்தது.</p><p>இதன்மூலம் மேம்படுத்தப்பட்ட தடயவியல் அறிவியல் திறன்கள், சர்வதேச பாதுகாப்பு அமைப்புகளின் பாராட்டுகளையும், தேசிய எல்லைகளை கடந்து குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தையும் பெற்றது.</p><p>மேலும் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள், இரண்டாம் உலகப் போரின்போது இந்தியாவில் காணாமல் போன, அமெரிக்க படை வீரர்களை கண்டறிய அமெரிக்க பாதுகாப்பு துறையுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில் டி.என்.ஏ தடயவியல் சிறப்பு மையத்தின் தலைவர் டாக்டர் பார்கவ் படேல் தலைமையிலான குழுவினர், நேபாள வெள்ளத்தில் இறந்துபோனவர்களை அடையாளம் காண்பதற்காக டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து அடையாளம் காண உள்ளனர்.</p><p>இந்த குழுவினரின் பணி, காணாமல் போன குடும்ப உறுப்பினர்களை தேடும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>என்னை கொன்று விடுவார்கள் என்று கதறிய கர்ப்பிணி - பிரசவத்திற்கு பின்பு தாயும், குழந்தையும் உயிரிழந்த சோகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/pregnant-woman-pleaded-they-will-kill-me-dies-with-baby-after-delivery</link><comments>https://www.maalaimalar.com/news/national/pregnant-woman-pleaded-they-will-kill-me-dies-with-baby-after-delivery#comments</comments><guid isPermaLink="false">173f9c91-460e-498b-9a8f-4d0e84ab06c3</guid><pubDate>Sun, 30 Aug 2026 04:26:35 +0000</pubDate><atom:updated>2026-08-30T04:26:35.332Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மருத்துவமனை,Government Hospital,மத்திய பிரதேசம்,Madhyapradesh,கர்ப்பிணி,pegnant women</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ysgfqynz/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pregnant Woman and Newborn Die]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ysgfqynz/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/மத்திய-பிரதேசம்">மத்திய பிரதேசத்தில்</a> உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 25 வயதான கர்ப்பிணி ஒருவர், தனக்கு மருத்துவமனை ஊழியர்கள் சரியாக மருத்துவம் பார்க்காமல் கொன்றுவிடுவார்கள்; </p><p>அதனால் தன்னை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்லுமாறு கூறியதை அடுத்து, குழந்தையை பெற்ற சிறிது நேரத்திலேயே அந்த பெண்மணியும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h3><strong>அரசு மருத்துவமனை</strong></h3><p>மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரேவா மாவட்டம் ஹட்வா பகுதியை சேர்ந்த கல்பனா என்ற 25 வயது கர்ப்பிணி ஒருவர், தனது முதல் குழந்தையை பிரசவிப்பதற்காக, அந்த பகுதியில் உள்ள ஒரு சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.</p><p>அப்போது அவர், “நான் பிழைக்க மாட்டேன், தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள், என் உயிருக்கு ஆபத்து” என்று கூறிய வீடியோ ஒன்று வெளியானது.</p><p>மேலும் அவர், “என்னை இப்படி நடத்துவது தொடர்ந்தால், மருத்துவமனை ஊழியர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்” என்று கூறுவதும் அந்த வீடியோவில் பதிவானது.</p><p>இதையடுத்து சில மணி நேரங்கள் கழித்து பிரசவித்த பச்சிளம் குழந்தையும், அந்த பெண்ணும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.</p><h3><strong>கர்ப்பிணியின் காணொளி</strong></h3><p>இந்த நிலையில் கல்பனா இறப்பதற்கு முன்பு பதிவு செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அந்த வீடியோவில், அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதும், பிரசவ வார்டுக்குள் அழுதுகொண்டு, அங்கிருந்து வெளியேற முயற்சிப்பதும் பதிவாகியுள்ளது.</p><p>மேலும் அந்த பெண்மணி தனது உறவினர்களை தொடர்பு கொள்ள முயல்வதும், அவரை செவிலியர்கள் கட்டுப்படுத்தி, அங்கேயே இருக்குமாறு சமாதானப்படுத்த முயற்சிப்பதும் பதிவானது.</p><p>ஒரு கட்டத்தில், ஒரு ஊழியர் அந்த பெண்ணிடம், “உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?" என்று கேட்கும்போது, கர்ப்பிணி தொடர்ந்து தனது குடும்பத்தினரை நோக்கிச் சென்று, தனக்கு முறையான சிகிச்சை கிடைக்கவில்லை என்று அழுதுகொண்டே குற்றம் சாட்டுவது பதிவானது.</p><h3><strong>தந்தை கோரிக்கை</strong></h3><p>கர்ப்பிணி கல்பனா உயிரிழந்தது குறித்து அவருடைய தந்தை ராம்ஷரன் மிஸ்ரா கூறுகையில், “கல்பனா எனது ஒரே மகள்; அவளது திருமணத்திற்காக 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்றிருந்தேன்.</p><p>இன்று அவள் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டாள். இந்த அலட்சியத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும்.</p><p>பணியில் இருந்த மருத்துவரையும் ஊழியர்களையும் இடைநீக்கம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், பிரேதப் பரிசோதனை நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்று அவர் கூறினார்.</p><p>மேலும் கல்பனாவின் குடும்பத்தினர் கூறுகையில், மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பிறகு கல்பனாவுக்கு சுயநினைவு திரும்பவில்லை. அதிகப்படியான மருந்தளவு அவரது மரணத்திற்கு காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.</p><h3><strong>மருத்துவமனை நிர்வாகம்</strong></h3><p>இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், மருத்துவ நெறிமுறைகளின்படி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மருத்துவர்கள் தரப்பில் எந்தவிதமான அலட்சியமும் இல்லை என்றும் தெரிவித்தது.</p><p>இதையடுத்து கர்ப்பிணி மற்றும் அவரது குழந்தை உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க, ஒரு உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்படும் என்றும், இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் உறுதியளித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஐதராபாத் நில ஏலத்தில் புதிய வரலாறு: ரூ.1,447 கோடிக்கு விற்பனையான பிளாட்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/hyderabad-land-auction-sets-new-record-plot-sold-for-rs-1447-crore</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/hyderabad-land-auction-sets-new-record-plot-sold-for-rs-1447-crore#comments</comments><guid isPermaLink="false">206994a2-c711-40f3-8246-81263264765b</guid><pubDate>Sun, 30 Aug 2026 03:55:42 +0000</pubDate><atom:updated>2026-08-30T03:55:42.628Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hyderabad,Telangana,ஐதராபாத்,தெலுங்கானா,Hyderabad land auction,ஐதராபாத் நில ஏலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/qnnedfvd/hydra.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hyderabad land auction]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/qnnedfvd/hydra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் முக்கிய வணிக மையமான ராய்துர்க் பகுதியில் நடத்தப்பட்ட மின்னணு நில ஏலத்தில் 5.38 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிளாட் பி2, ரூ.1,447.22 கோடிக்கு விற்பனையாகி மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தெலுங்கானா தொழில்முறை உள்கட்டமைப்பு கழகம் நடத்திய இந்த ஏலத்தில், ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ரூ.269 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.</p><h2>ஒரே வார<strong>த்தில் உடைந்த</strong> முந்தைய சாதனை</h2><p>ராய்துர்க் நாலேஜ் சிட்டி பகுதியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட மற்றொரு ஏலத்தில் 5.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிளாட் பி1, ஏக்கருக்கு ரூ.264 கோடி வீதம் ரூ.1,386 கோடிக்கு விற்பனையானது. அந்த சாதனை படைக்கப்பட்டு ஒரே வாரத்திற்குள் தற்போது ஏக்கருக்கு ரூ.5 கோடி அதிகரித்து, புதிய வரலாற்று சாதனையை இந்த பிளாட் பி2 ஏலம் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் ஏக்கருக்கு ரூ.237 கோடியாகவும், ஜூன் மாதம் ரூ.204 கோடியாகவும் இருந்த நிலத்தின் மதிப்பு, தற்போது மிக குறுகிய காலத்தில் ரூ.269 கோடியாக உயர்ந்துள்ளது.</p><p>கடந்த இரு வாரங்களில் நடத்தப்பட்ட இந்த இரு ஏலங்கள் மூலம் 10.63 ஏக்கர் நிலத்திலிருந்து தெலுங்கானா அரசுக்கு மொத்தம் ரூ.2,833.22 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த மின் ஏலம் எம்.எஸ்.டி.சி தளம் வழியாகவும், ஜே.எல்.எல் நிறுவனத்தின் ஆலோசனையுடனும் வெளிப்படையாக நடத்தப்பட்டது. ஐதராபாத்தின் நவீன உள்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தொழிலாளர் சாதகமான சூழல் ஆகியவை சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை பெருமளவில் ஈர்த்து வருவதை இந்த ஏலத்தின் வெற்றி வெளிப்படுத்துகிறது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: இதுவரை 108 இந்தியர்கள் மீட்பு - வெளியுறவுத்துறை அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/108-indian-nationals-rescued-from-flood-hit-nepal</link><comments>https://www.maalaimalar.com/news/national/108-indian-nationals-rescued-from-flood-hit-nepal#comments</comments><guid isPermaLink="false">9d498017-e4e8-4fce-a6c3-d44f0810e4c7</guid><pubDate>Sun, 30 Aug 2026 00:26:43 +0000</pubDate><atom:updated>2026-08-30T00:26:43.413Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>indians,மீட்பு பணிகள்,Rescue operations,Nepal Floods,இந்தியர்கள்,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/yg8eogcj/IAF-Plane.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IAF Plane]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/yg8eogcj/IAF-Plane.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பேரழிவுகரமான 'போட் கோஷி' ஆற்று வெள்ளத்தை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதில் <a href="https://www.maalaimalar.com/news/national">இந்தியா</a> தரைவழி மற்றும் வான்வழி உதவிகளை அதிகரித்துள்ளது.</p><p>தற்போதைய நிவாரண நடவடிக்கைகளில், சிக்கி தவித்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை நேபாளத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 108 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><h2>108 இந்தியர்கள் மீட்பு:</h2><p>சூழ்நிலை குறித்த தகவலை பகிர்ந்துகொண்ட வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நேற்று (சனிக்கிழமை) இரவு 10:30 மணி நிலவரப்படி 108 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.</p><p>மேலும், 40 இந்தியர்களுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதேவேளையில் 598 இந்தியர்கள் சீனாவில் இருந்து நேபாளத்திற்குள் பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளதாக உள்ளூர் அரசு தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>அப்பகுதியில் உள்ள மற்றவர்களின் நிலை குறித்து பேசிய ஜெய்ஸ்வால், சுமார் 900 இந்தியர்கள் தற்போது சீனாவில் இருந்து வெளியேற காத்திருப்பதாக தெரிவித்தார்.</p><h2>275 இந்தியர்கள் மாயம்:</h2><p>அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார். இருப்பினும், காணாமல் போனதாக கருதப்படும் 275 இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 128 நபர்களை கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>'எக்ஸ்' தளத்தில் மற்றொரு பதிவில், நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பது தொடர்பான நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் செய்திக்குறிப்பை அவர் பகிர்ந்துகொண்டார். அதில் உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை வழங்கப்பட்டிருந்தன.</p><h2>வலுசேர்க்கும் இந்தியா:</h2><p>மீட்பு பணிகளுக்கு வலுசேர்க்கும் வகையில், 11 டன் அவசர உதவிகளை ஏற்றி செல்லும் இந்திய விமானப்படையின் நான்காவது விமானம் காத்மாண்டுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அறிவித்தார்.</p><p>இந்தியாவின் வலுவான உள்கட்டமைப்பு ஆதரவை சுட்டிக்காட்டிய டாக்டர் ஜெய்சங்கர், 230 அடி நீளமுள்ள ஒற்றை பாதை கொண்ட 'மாடுலர் ஸ்டீல்' பாலத்திற்கான உபகரணங்களை ஏற்றி செல்லும் 16 லாரிகள் ஏற்கனவே நேபாளத்தை சென்றடைந்துள்ளதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;டிஜிட்டல் கைது&apos; போன்ற புது மோசடிகளுக்கு நீதித்துறை முன்கூட்டியே நடவடிக்கை எடுத்துள்ளது: தலைமை நீதிபதி</title><link>https://www.maalaimalar.com/news/national/judiciary-proactively-responded-to-emerging-fraudulent-schemes-like-digital-arrest-cji</link><comments>https://www.maalaimalar.com/news/national/judiciary-proactively-responded-to-emerging-fraudulent-schemes-like-digital-arrest-cji#comments</comments><guid isPermaLink="false">fdba859f-8864-4a78-8b86-66d8f40e6d05</guid><pubDate>Sat, 29 Aug 2026 22:08:05 +0000</pubDate><atom:updated>2026-08-29T22:08:05.261Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஜிட்டல் கைது,Digital Arrest,மோசடி,judiciary,நீதித்துறை,fraudulent scheme</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/vj4sd6kz/cji-surya-kant.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cji surya kant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/vj4sd6kz/cji-surya-kant.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்காமல், 'டிஜிட்டல் கைது' போன்ற புதிய <a href="https://www.maalaimalar.com/topic/digital-arrest">மோசடி</a> முறைகளுக்கு இந்திய நீதித்துறை முன்கூட்டியே மற்றும் தீவிரமாக பதிலளித்து வருவதாக இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த் தெரிவித்தார்.</p><p>லண்டனில் நடைபெற்ற பொருளாதார குற்றங்கள் குறித்த 43-ஆவது சர்வதேச கருத்தரங்கின் நிறைவுரையில் பேசிய அவர், குடிமக்களை ஏமாற்றுவதற்காக காணொளி அழைப்புகள் மூலம் காவல்துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளை போல மோசடிக்காரர்கள் வேடமணிந்து மேற்கொள்ளும் 'டிஜிட்டல் கைது' மோசடி விவகாரத்தை <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்ச நீதிமன்றம்</a> சமீபத்தில் தாமாகவே முன்வந்து கவனத்தில் கொண்டதாக குறிப்பிட்டார்.</p><h2>தனிப்பட்ட குற்றப்பிரிவு:</h2><p>"இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த பிரச்சினையின் தீவிரத்தை மதிப்பிடுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இதனால் ஏற்படும் பாதிப்புக்கு ஏற்ற தண்டனைகளுடன் கூடிய ஒரு தனிப்பட்ட குற்றப்பிரிவை உருவாக்கவும் வலியுறுத்தியுள்ளது," என்று அவர் கூறினார்.</p><p>"நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்காமல், புதிய மோசடி முறைகளுக்கு இந்திய நீதித்துறை முன்கூட்டியே பதிலளிக்கும் பரந்த செயல்பாட்டு முறைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்," என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.</p><p>பொருளாதாரக் குற்றங்களுக்கு எதிரான இந்தியாவின் நவீன அணுகுமுறையைப் பார்க்கும்போது, ​​அதை ஒரு தனிச் சட்டமாகப் பார்க்காமல், பல தசாப்தங்களாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு அடுக்கு கட்டமைப்பாக புரிந்துகொள்வதே சிறந்தது என்று அவர் கூறினார். </p><p>இக்கட்டமைப்பில் சட்டங்கள், நிறுவனங்கள் மற்றும் நீதித்துறை கோட்பாடுகள் ஆகியவை ஒவ்வொன்றும் தனித்தனி பணிகளை செய்கின்றன.</p><h2>நீதித்துறை தலையிட்டுள்ளது:</h2><p>'பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002' மற்றும் 'தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம், 2018' ஆகியவற்றைத் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.</p><p>"இவை குறைபாடுகள் இல்லாத வழிமுறைகள் அல்ல என்பதையும் நான் குறிப்பிட வேண்டும். புலனாய்வு அமைப்புகள் பணமோசடி தடுப்புச் சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>குறிப்பாக, தெளிவான காரணங்கள் கூறப்படாமல் கைது செய்யப்படுதல் மற்றும் கிடைக்கப்பெற்ற உண்மைகளின் அடிப்படையில் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு காவல் நீட்டிப்பு செய்யப்படுதல் போன்ற புகார்கள் இதில் அடங்கும். இத்தகைய ஒவ்வொரு நிகழ்விலும், நிலைமையைச் சரிசெய்ய நீதித்துறை தலையிட்டுள்ளது," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>உ.பி. இலவச பேருந்து பயணம்: இரண்டு நாட்களில் 80 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்</title><link>https://www.maalaimalar.com/news/national/up-free-bus-ride-80-lakh-benefit-in-two-days</link><comments>https://www.maalaimalar.com/news/national/up-free-bus-ride-80-lakh-benefit-in-two-days#comments</comments><guid isPermaLink="false">6ead0b94-5188-4141-8055-0f6b9918428a</guid><pubDate>Sat, 29 Aug 2026 21:12:53 +0000</pubDate><atom:updated>2026-08-29T21:12:53.818Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UP,உத்தர பிரதேசம்,raksha bandhan,Free bus,இலவச பேருந்து,ரக்ஷா பந்தன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/fgucthbt/UP-Free-Bus.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UP Free Bus]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/fgucthbt/UP-Free-Bus.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் 49.96 லட்சம் பயணிகள் என்ற பெரும் எண்ணிக்கையிலான வருகைக்கு பிறகு, சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 80 லட்சம் பெண்களும் அவர்களுடன் வந்த ஒரு பயணியும் உத்தர பிரதேச அரசின் இலவச பேருந்து பயண வசதியை பயன்படுத்திக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>யோகி ஆதித்யநாத் அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம், பண்டிகை கால பயணத்தை எளிதாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் கட்டணமில்லா பயண வசதியை வழங்கியது; நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு வரை இதற்கான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததாக அவர்கள் கூறினர்.</p><h2>இரண்டு நாட்களுக்கு இலவசம்:</h2><p>உத்தர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழக (UPSRTC) பேருந்துகளில் பெண்கள் தங்கள் துணையுடன் (ஒருவருடன்) இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்தத் திட்டம் ஆகஸ்ட் 27-ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 29-ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருந்தது என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது.</p><p>உ.பி. மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் தகவல்படி, ஆகஸ்ட் 27-ஆம் தேதியன்று 9.26 லட்சத்திற்கும் அதிகமான பெண்களும் அவர்களுடன் வந்தவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். இதில் 6.03 லட்சத்திற்கும் அதிகமான பெண்களும், 3.22 லட்சத்திற்கும் அதிகமான உடன் வந்த பயணிகளும் அடங்குவர்.</p><h2>59.23 லட்சம் பயணிகள்:</h2><p>ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளின் தரவுகளை ஒருங்கிணைத்து பார்க்கையில், இரண்டு நாட்களில் 59.23 லட்சத்திற்கும் அதிகமான பயண சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இந்த எண்ணிக்கையில் 38.51 லட்சத்திற்கும் அதிகமான பெண்களும், 20.71 லட்சத்திற்கும் அதிகமான உடன் வந்த பயணிகளும் அடங்குவர்.</p> <p>பயணிகள் இந்த நடவடிக்கையை வரவேற்றனர்; இலவச பேருந்து பயண திட்டம் பண்டிகை காலத்தில் பல குடும்பங்களுக்கு நிதி ரீதியான நிவாரணம் அளித்தது மட்டுமின்றி, சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு 'ராக்கி' கட்டுவதற்காக பயணம் செய்வதையும் எளிதாக்கியது என்று அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>ஊர்வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து 120 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/awareness-campaign-announced-to-protect-living-beings</link><comments>https://www.maalaimalar.com/news/national/awareness-campaign-announced-to-protect-living-beings#comments</comments><guid isPermaLink="false">509044ad-c2d3-4c47-95b0-8a16cec1c2d2</guid><pubDate>Sat, 29 Aug 2026 18:50:48 +0000</pubDate><atom:updated>2026-08-29T18:50:48.469Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரினங்கள்,awareness campaign,விழிப்புணர்வு பிரச்சாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/y87v42er/awareness-campaign.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ awareness campaign]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/y87v42er/awareness-campaign.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/chennai">சென்னை</a> அருகே செயல்பட்டு வரும் மெட்ராஸ் முதலை வங்கி தனது பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, 50-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.</p><p>கடந்த 49 ஆண்டுகளாக ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பணியில் மெட்ராஸ் முதலை வங்கி செயல்பட்டு வருகிறது. 50-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மூன்று முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.</p><h2>மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள்:</h2><p>அதன்படி, ஆகஸ்ட் 2026 முதல் ஆகஸ்ட் 2027 வரை, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை மெட்ராஸ் முதலை வங்கிக்கு வருகை தரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது. இதேபோல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சார்பில் குழுவாக வருகை தரும் மாணவர்களுக்கு சிறப்பு கட்டண சலுகைகளும் வழங்கப்படவுள்ளன.</p><p>இதனுடன், இந்தியாவிலேயே முதல்முறையாக ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து நாடு தழுவிய மிகப்பெரிய விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மெட்ராஸ் முதலை வங்கி அறிவித்துள்ளது. மெட்ராஸ் முதலை வங்கி மற்றும் The Reptile Conservancy Alliance இணைந்து ‘Save The Reptiles’ என்ற பெயரில் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளன.</p><p>இந்த விழிப்புணர்வு பயணம் டிசம்பர் 2026 வரை சுமார் 120 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயணத்தில் 22 மாநிலங்கள் வழியாக சுமார் 15,000 கிலோமீட்டர் தூரம் கடக்கப்படவுள்ளது.</p><h2>நாடு தழுவிய விழிப்புணர்வு:</h2><p>பயணத்தின் போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாநில வனத்துறை அதிகாரிகள், வன உயிரின ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து, ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.</p><p>50-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த சிறப்புமிக்க தருணத்தில், ‘Save The Reptiles’ நாடு தழுவிய விழிப்புணர்வு தொடங்குவதில் மெட்ராஸ் முதலை வங்கி மகிழ்ச்சி தெரிவித்தது.</p><p>49 ஆண்டுகால அர்ப்பணிப்பான பயணத்தை நிறைவு செய்து 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மெட்ராஸ் முதலை வங்கி, ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பில் தனது அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘Save The Reptiles’ மூலம் நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மிகப்பெரிய பயணத்தையும் முன்னெடுக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>கார் கதவை திறந்தபோது, பின்னால் வந்து மோதிய பைக்: தூக்கி வீசப்பட்ட நபர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/car-door-opened-bike-crash-man-thrown-dies</link><comments>https://www.maalaimalar.com/news/national/car-door-opened-bike-crash-man-thrown-dies#comments</comments><guid isPermaLink="false">24cb971e-a470-4100-94a1-b9a70876c0a3</guid><pubDate>Sat, 29 Aug 2026 15:51:50 +0000</pubDate><atom:updated>2026-08-29T15:51:50.573Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கார் விபத்து,Car accident,குஜராத்,gujarat,bike accident,பைக் விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/mwwmvhvn/25-08-2026-131421.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gujarat road accident news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/mwwmvhvn/25-08-2026-131421.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத்தில்</a> சாலையோரம் நின்று கொண்டிருந்த காரில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் கார் கதவை திறந்தபோது, காருக்கு பின்னால் பைக்கில் வந்த நபர் மீது, காரின் கதவு பலமாக மோதியதில், பைக்கில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p>குஜராத்தின் சூரத் பகுதியில் 56 வயதான முகமது அமீன் உஸ்மான் கனி என்பவர் அந்த பகுதியில் உள்ள ரிவர் பார்க் அபார்ட்மெண்ட்ஸில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இதையடுத்து சம்பவம் நடந்த அன்று கடைக்கு செல்வதற்காக அந்த நபர் பைக்கில் சாலையில் வந்து கொண்டிருந்தார்.</p><p>அங்கு சாலை ஓரத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரில் பின்புறம் அமர்ந்திருந்த ஒரு பெண், திடீரென கார் கதவை திறந்தார்.</p><p>அப்போது பைக்கில் அந்த வழியாக வந்து கொண்டிருந்த முகமது அமீன், கார் கதவின் மீது வேகமாக வந்து மோதினார்.</p><p>இதையடுத்து முகமது அமீன் தனது பைக்கில் இருந்து தூக்கி எறியப்பட்டு சாலையில் விழுந்தார். இதற்கிடையில் காரில் வந்த குடும்பத்தினர் சாலையில் மயங்கி கிடப்பவரை பார்த்துவிட்டு, தாங்கள் வந்த காரில் அந்த இடத்தை விட்டு சென்றனர்.</p><p>பின்னர் அவரது தலையிலிருந்து ரத்தம் வழிந்து, சாலையில் மயங்கி விழுந்தார். சாலையில் மயங்கி விழுந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><p>இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர், நான்கு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இன்று உயிரிழந்தார்.</p><p>இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக, காரில் இருந்த நபர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;குழந்தைகளின் உடல் பருமனுக்கு செக்!&quot; - பாக்கெட் உணவுகளில் இனி &apos;சிவப்பு எச்சரிக்கை லேபிள்&apos; கட்டாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-moves-to-tackle-child-obesity-with-red-warning-labels-on-junk-food</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-moves-to-tackle-child-obesity-with-red-warning-labels-on-junk-food#comments</comments><guid isPermaLink="false">f1b5af0c-5780-4371-9630-3f85248018ad</guid><pubDate>Sat, 29 Aug 2026 13:39:19 +0000</pubDate><atom:updated>2026-08-29T13:39:19.193Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Food,FSSAI,பாக்கெட்,உணவு,சிவப்பு எச்சரிக்கை,Snakcs,Packets,red label,ரெட் லேபிள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/fzw9t0ts/Packets-Red-label" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Packets Red label ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/fzw9t0ts/Packets-Red-label?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தைகளிடையே வேகமாக அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு உள்ள பாக்கெட் உணவுகளில் கட்டாயமாக 'சிவப்பு எச்சரிக்கை லேபிள்' இடம்பெற வேண்டும் என்று <a href="https://www.maalaimalar.com/topic/fssai">இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்</a> அதிரடி உத்தரவை முன்மொழிந்துள்ளது.</p><p>மாறிவரும் இன்றைய உணவுப் பழக்கவழக்கங்களால் சிறுவர்கள் மத்தியில் உடல் பருமன் ஆபத்தான அளவில் உயர்ந்து வருகிறது. நுகர்வோர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>சிவப்பு நிற அறுங்கோண எச்சரிக்கை</strong></h2><p>இந்த புதிய திட்டத்தின் படி, அதிக சர்க்கரை, அதிக உப்பு அல்லது அதிக கொழுப்பு உள்ள பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்திலேயே பொதுமக்கள் எளிதாக பார்த்து உடனடியாகத் தெரிந்துகொள்ளும் வகையில், பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்ட சிவப்பு <strong>நிற அறுகோண வடிவ எச்சரிக்கை லேபிள் கட்டாயமாக ஒட்டப்பட வேண்டும்</strong>.</p><h2><strong>FSSAI-ன் அதிரடி</strong></h2><p>இந்தியாவில் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் ஆரோக்கியக் குறைபாடுகள் குறித்து சமீபத்தில் <strong>உச்சநீதிமன்றம் கடுமையான கவலையை</strong> எழுப்பியிருந்தது.</p><p>இதனைத் தொடர்ந்தே, <a href="https://www.maalaimalar.com/topic/fssai">இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் </a>இந்த எச்சரிக்கை லேபிள் திட்டத்தை மிகத் தீவிரமாக ஆலோசித்து, தற்போது நடைமுறைப்படுத்தப் பெரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>&quot;4.6 கிலோ எடை... ஆச்சரியப்படுத்திய சுகப்பிரசவம்!&quot; ஆந்திராவில் பிறந்த &apos;பாலபீமன்&apos;!</title><link>https://www.maalaimalar.com/news/national/4-6-kg-baby-surprises-doctors-in-andhra</link><comments>https://www.maalaimalar.com/news/national/4-6-kg-baby-surprises-doctors-in-andhra#comments</comments><guid isPermaLink="false">0d986714-dc0a-4c3d-b283-b2cb6f066d85</guid><pubDate>Sat, 29 Aug 2026 13:23:32 +0000</pubDate><atom:updated>2026-08-29T13:23:32.723Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆண் குழந்தை,Andhra Pradesh,delivery,ஆந்திரா,New born baby,கர்ப்பிணி சுகப்பிரசவம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/gnzu4zkb/New-born-baby" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ New born baby ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/gnzu4zkb/New-born-baby?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/andhra-pradesh">ஆந்திர மாநிலத்தில்</a> 4.6 கிலோவுக்கும் அதிக எடையுடன் ஆண் குழந்தை ஒன்று சுகப்பிரசவத்தில் பிறந்துள்ள அபூர்வ நிகழ்வு மருத்துவர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பொதுவாக 3.5 கிலோவிற்கு மேல் எடையுள்ள குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலமே பிரசவிக்க முடியும் என்ற மருத்துவ விதியை உடைத்து, இந்த சுகப்பிரசவம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.</p><h2><strong>அரசு மருத்துவமனையில் நடந்த அதிசயம்</strong></h2><p>ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம் துனி நகர அரசு மருத்துவமனைக்கு, சீதாராம்புரம் பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.</p><p>அவருக்குப்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D"> பிரசவ வலி</a> ஏற்பட்டபோது, குழந்தையின் எடை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். </p><p>இருப்பினும், அறுவை சிகிச்சைக்கு அவசரப்படாமல், சிறப்பு மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு இயல்பான பிரசவம் பார்க்க முடிவு செய்யப்பட்டது.</p><h2><strong>துணிச்சலான பிரசவம்... 'பாலபீமன்' வருகை!</strong></h2><p>மருத்துவர்களின் தீவிர முயற்சிக்குப் பின், அனிதாவிற்கு <strong>4.615 கிலோ கிராம்</strong> எடையில் ஆரோக்கியமான ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது.</p><p>சாதாரண <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">பிரசவ </a>எடை வரம்பை விட இரண்டு மடங்கு எடையுடன் பிறந்த இந்தக் குழந்தையை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆச்சரியத்துடன் <strong>'பாலபீமன்'</strong> என்று அன்போடு பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.</p><h2><strong>மருத்துவமனை வரலாற்றில் புதிய சாதனை</strong></h2><p>இதுகுறித்து துனி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">அரசு மருத்துவமனை</a> மருத்துவர்கள் கூறுகையில், "எங்கள் மருத்துவமனையின் வரலாற்றிலேயே இவ்வளவு அதிக எடையுடன், அதுவும் சுகப்பிரசவத்தில் ஒரு குழந்தை பிறப்பது இதுவே முதல் முறை" எனப் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.</p><p>தற்போது தாயும் சேயும் நலமாக உள்ள நிலையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குழந்தை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இடஒதுக்கீடு விவகாரம்: இரண்டு மத்திய அமைச்சர்களுக்கு இடையில் வெடித்த மோதல்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/minister-vs-minister-chirag-paswan-asks-jitan-manjhi-to-resign-amid-quota-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/minister-vs-minister-chirag-paswan-asks-jitan-manjhi-to-resign-amid-quota-row#comments</comments><guid isPermaLink="false">f625ce3a-465b-4689-b3ec-eb04ca605cbb</guid><pubDate>Sat, 29 Aug 2026 12:49:27 +0000</pubDate><atom:updated>2026-08-29T12:49:27.742Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிராக் பஸ்வான்,Chirag Paswan,Manjhi,ஜித்தன் ராம் மான்ஜி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/vifylxdy/ChiragPaswan0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜித்தன் ராம் மான்ஜி- சிராக் பஸ்வான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/vifylxdy/ChiragPaswan0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இடஒதுக்கீடு தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சிராக் பஸ்வான்- ஜித்தன் ராம் மான்ஜி இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், உள்ஒதுக்கீடு கேட்டால் மான்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சிராக் பஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.</p><p>பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பீகாரைச் சேர்ந்த சிராக் பஸ்வான் மற்றும் ஜித்தன் ராம் மான்ஜி ஆகியோர் அமைச்சராக உள்ளனர். சிராக் பஸ்வான் LJP (ராம் விலாஸ்) கட்சித் தலைவர் ஆவார். ஜித்தன் ராம் மான்ஜி HAM(S) கட்சித் தலைவர் ஆவார்.</p><p>இடஒதுக்கீட்டிற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று ஜித்தன் ராம் மான்ஜி வலியுறுத்தியுள்ளார். அதேவேளையில் உள்ஒதுக்கீட்டிற்கு சிராக் பஸ்வான் எதிர்ப்பாக உள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>உள்ஒதுக்கீடு கேட்கும் ஜித்தன் ராம் மான்ஜி தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவரது மகன் பீகார் மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேபண்டுமு் என்று சிராக் பஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>HAM (S) கோரிக்கை என்ன?</h2><p>பீகாரைச் சேர்ந்த இந்த இரு தலைவர்களுக்கும் இடையிலான மோதல் இந்த வாரத் தொடக்கத்தில் தொடங்கியது. அப்போது, ​​தற்போதுள்ள இடஒதுக்கீட்டு முறைக்குள் SC மற்றும் ST பிரிவினருக்கான உள்-இடஒதுக்கீடு (sub-quota) முறைக்கு ஜித்தம் ராம் மான்ஜியின் HAM (S) கட்சி ஆதரவு தெரிவித்தது. இடஒதுக்கீட்டின் பலன்கள் மிகவும் பின்தங்கிய மற்றும் வரலாற்று ரீதியாக விளிம்பு நிலைப்படுத்தப்பட்ட சமூகங்களைச் சென்றடைவதை உறுதி செய்ய மறுபரிசீலனை அவசியம் என்று மான்ஜியின் மகனும் பீகார் அமைச்சருமான சந்தோஷ் குமார் சுமன் கூறினார்.</p><p>நாங்கள் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றிப் பேசவில்லை. இடஒதுக்கீட்டை இன்னும் நியாயமானதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவது குறித்தும், அது உண்மையில் உரிமையற்றவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வது குறித்தும் தான் பேசுகிறோம், என்றார்.</p><h2>இந்த சர்ச்சை எதைப் பற்றியது?</h2><p>பாஸ்வானின் LJP (ராம் விலாஸ்) மற்றும் HAM (S) ஆகிய இரு கட்சிகளும் பீகாரிலும் மத்தியிலும் NDA கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. மான்ஜி, மிகவும் பின்தங்கிய தலித் பிரிவுகளில் ஒன்றான முஷாஹர் சமூகத்தைச் சேர்ந்தவர்.</p><p>தலித் இடஒதுக்கீட்டின் பலன்கள் பஸ்வான் மற்றும் ரவிதாஸ் உள்ளிட்ட சில சமூகங்களிடமே குவிந்துள்ளதாகவும், அதே வேளையில் பல சமூகங்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்றும் HAM கட்சி கூறியுள்ளது. தனது முஷாஹர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இதுவரை IAS அதிகாரியாகவில்லை என்பதை சுமன் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>இந்த சர்ச்சையின் பின்னணியில் 2024-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உள்ளது. அந்த ஆண்டில் வழங்கப்பட்ட ஒரு முக்கிய தீர்ப்பில், SC மற்றும் ST பிரிவுகளில் உள்ள மிகவும் பின்தங்கிய சாதிகளுக்கு இடஒதுக்கீட்டு பலன்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அந்தப் பிரிவுகளை உட்பிரிவுகளாகப் பிரிக்க (sub-classify) மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.</p><p>கடந்த மாதம், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிய தனிநபர்களை இடஒதுக்கீட்டுப் பலன்களிலிருந்து விலக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. SC மற்றும் ST பிரிவுகளுக்குள் உள்ள வசதி படைத்த குடும்பங்கள் இடஒதுக்கீட்டுப் பலன்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. 2024-ம் ஆண்டு தீர்ப்பை மேற்கோள் காட்டி, அரசியலமைப்பு அமர்வில் உள்ள ஏழு நீதிபதிகளில் நான்கு பேர் இந்த குழுக்களுக்கும் 'கிரீமி லேயர்' கொள்கையை விரிவுபடுத்த பரிந்துரைத்ததாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கிரீமிலேயர் என்ற கருத்தை பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினருக்கு (ST) விரிவுபடுத்த முடியாது என்று கூறியுள்ளது. இந்தக் கொள்கை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p><h2>ஜிதன் ராம் மன்ஜி முதலில் ராஜினாமா செய்ய வேண்டும்</h2><p>HAM (S) கட்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டிற்குள் துணை ஒதுக்கீடுகளையும் 'கிரீமி லேயரையும்' அக்கட்சி விரும்பினால், அமைச்சர்களாக இருக்கும் மான்ஜியும் அவரது மகன் சுமனும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சிராக் பாஸ்வான் வலியுறுத்தினார்.</p><p>ஏன் கிரீமிலேயர் இருக்கக்கூடாது என்று கேட்பவர்கள், முதலில் இட ஒதுக்கீட்டின் பலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும். ஜித்தன் ராம் மான்ஜி 'கிரீமி லேயர்' கருத்தை நம்பினால், அவர் முதலில் ராஜினாமா செய்ய வேண்டும். அவருடைய மகனும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.</p><p>மேலும், துணை இட ஒதுக்கீட்டை எப்போதும் எதிர்த்து வரும் பஸ்வான், பட்டியல் சாதியினருக்குள் உள்ள அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக இருந்து வருகிறது. பொருளாதார அடிப்படையில் பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்க அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்யவில்லை. பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டிற்குள் துணை இட ஒதுக்கீட்டையோ அல்லது ஒரு 'கிரீமிலேயரை'யோ அறிமுகப்படுத்துவது சமூக நீதியின் நோக்கத்தையே சிதைத்துவிடும்.</p><p>சமூகம் பிளவுபடும் விதத்தால், சமூக நீதிக்கான போராட்டம் அதன் அர்த்தத்தை இழந்துவிடும். தலித்துகள் தொடர்ந்து பாகுபாட்டை எதிர்கொள்வார்கள். பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் ஒரு கிரீமிலேயரை அவர்கள் இன்னும் விரும்பினால், அவர் (மன்ஜி) தான் முதலில் விலக வேண்டும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு வேலைதான் வேண்டும் - பீகார் இளைஞர்களின் பிடிவாதத்துக்கு என்ன காரணம்?</title><link>https://www.maalaimalar.com/news/national/why-bihar-youth-insist-on-government-jobs</link><comments>https://www.maalaimalar.com/news/national/why-bihar-youth-insist-on-government-jobs#comments</comments><guid isPermaLink="false">38db3e44-d066-4ad8-85a5-e2967e142764</guid><pubDate>Sat, 29 Aug 2026 11:48:53 +0000</pubDate><atom:updated>2026-08-29T11:48:53.656Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,unemployment rate,government jobs,BPSC Exams,Labour Force LFPR,Job Market Trends</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/uwndsxxg/Job-Market-Trends" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BiharJob Market Trends ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/uwndsxxg/Job-Market-Trends?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகாரில் </a>பிபிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணித் தேர்வுகளில் நிலவும் குளறுபடிகள், காலிப்பணியிடங்கள் மற்றும் தேர்வு செயல்முறைகளுக்கு எதிராக இளைஞர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்த போராட்டங்கள், பீகார் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">இளைஞர்கள் </a>மத்தியில் அரசு வேலைகளுக்கான தேவை எவ்வளவு வலுவாக உள்ளது என்பதை உணர்த்தும் அதே வேளையில், அம்மாநிலத்தின் வேலைவாய்ப்புச் சந்தையில் மற்றொரு அதிர்ச்சிகரமான உண்மையும் வெளிவந்துள்ளது.</p><h2>பிபிஎஸ்சி தேர்வுகளில் கடுமையான போட்டி</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகாரில் </a>அரசுப் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டாலும், அதற்காகப் போட்டியிடும் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறையவில்லை.</p><p>இதற்குச் சான்றாக, 67-வது BPSC தேர்வில் 802 பணியிடங்களுக்கு சுமார் 4.8 லட்சம் பேரும், 68-வது BPSC தேர்வில் 324 பணியிடங்களுக்கு சுமார் 2.6 லட்சம் பேரும், 69-வது BPSC தேர்வில் 475 பணியிடங்களுக்கு சுமார் 1.9 லட்சம் பேரும், 70-வது BPSC தேர்வில் 2,035 பணியிடங்களுக்கு சுமார் 3.3 லட்சம் பேரும், 71-வது BPSC தேர்வில் 1,298 பணியிடங்களுக்கு சுமார் 3.2 லட்சம் பேரும் என லட்சக்கணக்கானோர் கடுமையான போட்டியில் பங்கேற்றுள்ளனர்.</p><h2>வேலை தேடாத இளைஞர்கள்</h2><p>பீகாரின் வேலைவாய்ப்புப் பிரச்சனை என்பது வெறும் வேலையில்லாத் திண்டாட்டம் மட்டுமே சார்ந்தது அல்ல. </p><p>சமீபத்திய காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் பீகாரின் இளைஞர் வேலையின்மை விகிதம் 12.1% ஆக இருந்தது.</p><p>ஆனால், அதைவிட கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், பீகாரின் தொழிலாளர் படை பங்கேற்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. </p><p>2025 தரவுகளின்படி, இந்தியாவில் 15-29 வயதுக்குட்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">இளைஞர்களின் </a>ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கை 46% ஆக உள்ள நிலையில், பீகாரில் வெறும் 34.3% இளைஞர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இது தேசிய சராசரியை விட 11.7% குறைவாகும்.</p><h2>ஆண்டுவாரி பணியாளர் விகிதம்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகாரின் </a>ஆண்டுவாரி பணியாளர் விகிதம் 2017-18 ஆம் ஆண்டில் 24.4% ஆகவும், 2018-19 இல் 27.6% ஆகவும் இருந்த நிலையில், 2020-21 இல் 25.7% ஆகச் சரிவடைந்து, பின்னர் 2023-24 இல் 34.6% ஆக உயர்ந்ததுடன், தற்போது 2025 ஆம் ஆண்டில் 34.3% ஆகத் தொடர்கிறது.</p><p>இதன் மூலம், பீகாரில் பல இளைஞர்கள் புதிய வேலைகளைத் தேடவோ அல்லது வேலைவாய்ப்புச் சந்தைக்குள் நுழையவோ ஆர்வம் காட்டாமல், தங்களை முழுமையாகத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதும் தெளிவாக இருக்கிறது. </p><p>அரசுப் பணிகள் மட்டுமே நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும், பீகாரில் பரந்த அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்புகள் மற்றும் இதர தொழில் வாய்ப்புகள் இளைஞர்களைக் கவராததே அவர்கள் வேலைச் சந்தையை விட்டு ஒதுங்கியிருக்க முதன்மை காரணமாக பார்க்கப்படுகிறது என்றும் கூறி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>44 வயது ஆணை &apos;மிகவும் வயதானவர்&apos; என 40 வயது பெண் நிராகரித்த விவகாரம்: இணையத்தில் வெடித்த விவாதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/44-year-old-man-rejected-as-too-old-by-40-year-old-woman-sparks-online-debate</link><comments>https://www.maalaimalar.com/news/national/44-year-old-man-rejected-as-too-old-by-40-year-old-woman-sparks-online-debate#comments</comments><guid isPermaLink="false">4ea63332-7a67-4fd7-b7ff-738ef49ea2eb</guid><pubDate>Sat, 29 Aug 2026 11:35:33 +0000</pubDate><atom:updated>2026-08-29T11:35:33.823Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Match making,மேட்ச்மேக்கிங்,Age Gap Debate,வயது வித்தியாசம்,Modern Dating,Women Independence,Internet Divided,இணைய விவாதம்,Relationship Goals</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/b9ykbdl2/Age-Gap-Debate" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Age Gap Debate ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/b9ykbdl2/Age-Gap-Debate?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நவீன திருமணத் தேடல்களில் வயது என்பது ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப்பட்டாலும், அதுவே தகுதியான வாழ்க்கைத்துணை அமைவதைத் தடுக்கும் முட்டுக் கட்டையாகவும் மாறிவிடுகிறது என்ற விவாதம் தற்போது இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.</p><p>பிரபல மேட்ச்மேக்கரும் நிறுவனருமான ஓந்த்ரிலா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு உண்மைச் சம்பவம், நெட்டிசன்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் கலந்த பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.</p><h2>மேட்ச்மேக்கர் பகிர்ந்த உண்மைச் சம்பவம்</h2><p>தனது 6 ஆண்டுகால மேட்ச்மேக்கிங் அனுபவத்தை முன்வைத்து ஓந்த்ரிலா கபூர் பகிர்ந்துள்ளார்.</p><p>ஓந்த்ரிலாவிடம் வரன் தேடி வந்த 40 வயது பெண் ஒருவர் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் சம்பாதிக்கிறார். ஆனால், வரன் தேடும்போது வயது விஷியத்தில் மிகவும் பிடிவாதமாக உள்ளார். </p><p>தனக்கு வரும் வரன் 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். அண்மையில் வந்த 44 வயது வரன் ஒருவரை, "அவர் மிகவும் வயதானவர்; எங்களுக்குள் தலைமுறை இடைவெளி இருக்கும்" எனக் கூறி நிராகரித்துள்ளார்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcQVMGAocsP/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcQVMGAocsP/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure><h2>திருமணச் சந்தையின் முரண்பாடு</h2><p>இந்த பிடிவாதத்தில் உள்ள ஒரு முக்கிய முரண்பாட்டை ஓந்த்ரிலா சுட்டிக்காட்டியுள்ளார். 38 முதல் 42 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெரும்பாலும் 35 வயதிற்குட்பட்ட பெண்களையே தங்களுக்குத் துணையாகத் தேடுகிறார்கள். </p><p>அதே நேரத்தில், 35 வயதிற்குட்பட்ட இளம்பெண்கள் தங்களை விட மிகவும் மூத்த வயதுடைய ஆண்களைத் திருமணம் செய்ய விரும்புவதில்லை. </p><p>இதனால், திருமணச் சந்தையில் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஒருவரை நோக்கி விரல் நீட்டுகிறார்கள், ஆனால் அவர்கள் தேடும் நபர் இவர்களைத் தேடுவதில்லை. இது ஒரு வட்டத்திற்குள் ஒருவரையொருவர் துரத்தும் முடிவற்ற கதையாக முடிகிறது.</p><p>வயது என்பது வாழ்க்கை முறை, ஆரோக்கியம், குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டமிடல் ஆகியவற்றிற்கு முக்கியமாக இருந்தாலும், இருவருக்கிடையேயான புரிதலுக்கு வயது மட்டுமே தகுதி கிடையாது என்று ஓந்த்ரிலா கூறுகிறார்.</p><h2>இணையவாசிகள் கருத்து</h2><p>இந்தப் பதிவு வெளியானதில் இருந்து சமூக வலைத்தளங்களில் விவாதம் இரு பிரிவாகப் பிரிந்துள்ளது.</p><h2><strong>பெண்களுக்கு ஆதரவான குரல்கள்: </strong></h2><p>"ஆண்கள் தங்களுக்கு வரன் தேடும்போது அதை 'விருப்பம்' என்கிறார்கள், ஆனால் பெண்கள் தங்களுக்குப் பிடித்ததைத் தேடினால் மட்டும் அதை 'பிடிவாதம்' என்று முத்திரை குத்துகிறார்கள். ஏன்?".</p><p> "பெண்கள் இப்போது பொருளாதார ரீதியாகத் தற்சார்பு அடைந்துவிட்டனர். தங்களுக்குப் பிடிக்காத ஒருவரைத் திருமணம் செய்து சமரசம் செய்துகொள்வதற்குப் பதிலாக, அவர்கள் வாழ்நாள் முழுக்க தனிமையாக வாழவே விரும்புகிறார்கள். </p><p>இதில் எந்தத் தவறும் இல்லை" என்று பலர் ஆதரவளித்துள்ளனர்.</p><h2>மாற்று கருத்துக்கள்: </h2><p>"40 வயதிற்கு மேற்பட்ட பல பெண்கள் 35 வயதிற்குட்பட்ட பெண்களை விட மிகவும் ஃபிட்டாகவும் அழகாகவும் இருக்கிறார்கள். ஆண்கள் எப்போதுமே வெளிப்புறத் தோற்றத்திற்கே முக்கியத்துவம் தருகிறார்கள்", "வயது என்பது வெறும் வடிகட்டி அல்ல; அது ஒருவருடைய பாதுகாப்பிற்கான எல்லையா அல்லது வாய்ப்புகளைக் குறைக்கும் பிடிவாதமா என்பதைத் தேடுபவர்கள் சிந்திக்க வேண்டும்" எனப் பலதரப்பட்ட கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.</p>]]></content:encoded></item></channel></rss>