<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>இந்தியா</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/national-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 08 Sep 2026 15:23:39 +0000</lastBuildDate><item><title>பண மோசடி வழக்கு: பினராயி விஜயன், அவரது மகள் மீது FIR பதிவு செய்ய கேரளம் டிஜபி-க்கு ED கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/cmrl-case-ed-writes-to-keralam-dgp-seeking-fir-against-ex-cm-vijayan-daughter-and-son-in-law</link><comments>https://www.maalaimalar.com/news/national/cmrl-case-ed-writes-to-keralam-dgp-seeking-fir-against-ex-cm-vijayan-daughter-and-son-in-law#comments</comments><guid isPermaLink="false">f5ac964d-deb9-47c3-b3e8-5f09e6175b88</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:40:13 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:40:13.026Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பினராயி விஜயன்,Pinarayi Vijayan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/bnf0svei/Pinarayivijayan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வீணா- பினராயி விஜயன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/bnf0svei/Pinarayivijayan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன். இவரது மகள் வீணா. இவரது ஆட்சிக் காலத்தில் கேரளாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனமான கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் (CMRL), தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் என்ற பெயரில் வீணாவின் நிறுவனமான எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் (Exalogic Solutions) நிறுவனத்திற்கு 2.78 கோடி ரூபாய் மதிப்பிலான முறையற்ற பணப் பரிமாற்றங்களை செய்ததாக அமலாக்கத் துறை (ED) குற்றம் சாட்டியுள்ளது.</p><h2>FIR பதிவு செய்ய டிஜிபிக்கு கடிதம்</h2><p>வீணாவின் நிறுவனம், போலியான பண பரிமாற்றங்களை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு கார்ப்பரேட் கருவி (corporate vehicle) என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலையில் விசாரணை அடிப்படையில் பணமோசடி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதனால் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் உள்பட 13 பேர் மீது FIR பதிவு செய்ய வேண்டும் என கேரளம் DGP-க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.</p><p>கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் நிறுவனத்திற்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் வழங்கியது எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம். இதற்காக CMRL நிறுவனத்தில் இருந்து 2.78 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் (தற்போது இல்லை) பினராயி விஜயன் மகள் வீணா தொடங்கியது. அரசு பணத்தை முறைகேடாக பெறுவதற்காக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட பணம், முறைகேடாக துபாய்க்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.</p><p>இது தொடர்பாக அமலாக்கத்துறை பல இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது பண மோசடிக்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தது. அதேவேளையில், தங்கள் கைகள் சுத்தமானவை என்று கேரளம் முதல்வர் பினராயி விஜய் தெரிவித்திருந்தார்.</p><p>FIR பதிவு செய்ய அமலாக்கத்துறை DGP-க்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், "எங்கள் தரப்பில் எந்த தவறும் நடக்கவில்லை. எந்த வகையான விசாரணையையும் நடத்தலாம் என்று சிபிஐ(எம்) தலைவர் பி.ஏ. முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் போலி அடையாள அட்டை, துப்பாக்கியுடன் வந்த வாலிபர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-id-gun-youth-arrested-at-pm-modi-event</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-id-gun-youth-arrested-at-pm-modi-event#comments</comments><guid isPermaLink="false">663fc79d-cca8-43b9-8341-f6abd8c91605</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:07:21 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:07:21.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,Prime Minister Modi,mumbai,பிரதமர் மோடி.,Bandra Kurla,மகாராஷ்டிர மாநிலம்,மும்பை பாந்த்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y4sbyvs8/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Prime Minister Modi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y4sbyvs8/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி, துப்பாக்கியுடன் நுழைய முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p><p>மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/people-of-manipur-suffering-both-within-and-outside-state-under-modi-sarkar-kharge">நீதா முகேஷ் அம்பானி</a> கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதமர் வருகையை முன்னிட்டு அந்தப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும், தீவிரக் கண்காணிப்பும் போடப்பட்டிருந்தது.</p><h2>போ<strong>லி அடையாள அட்</strong>டை</h2><p>நிகழ்ச்சி வளாகத்தின் நுழைவுப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிரச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, 24 வயதான ரோஹன் பாரேக் என்ற இளைஞர் உள்ளே செல்ல முயன்றார். அவர் தன்னை 'பிரதமர் அலுவலக அதிகாரி' என அறிமுகப்படுத்திக் கொண்டு அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார். ஆனால், சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரது அடையாள அட்டையைத் தீவிரமாகப் பரிசோதித்தபோது, அது முற்றிலும் போலி என்பது தெரியவந்தது.</p><h2>துப்பாக்கி<strong>யுடன் சிக்கிய</strong> பாதுகாவலர்</h2><p>ரோஹன் பாரேக் தனியாக வரவில்லை; அவருடன் ஒரு தனியார் பாதுகாவலரும் வந்திருந்தார். சோதனையின் போது அந்தப் பாதுகாவலரிடமிருந்து ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரையும் உடனடியாகக் கைது செய்த காவல்துறையினர், அவர்களை பாந்த்ரா குர்லா வளாக காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.</p><h2>போலீசார் தீ<strong>விர விசார</strong>ணை</h2><p>பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி, துப்பாக்கியுடன் நுழைய முயன்றதன் பின்னணியில் என்ன திட்டம் இருந்தது என்பது குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் போர், புதிய அணுமின் நிலையம், ஆயுதம் கொள்முதல்: புதின்- பிரதமர் மோடி பேசப்போவது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/russia-will-welcome-indias-efforts-toward-peaceful-resolution-of-ukraine-conflict-peskov</link><comments>https://www.maalaimalar.com/news/national/russia-will-welcome-indias-efforts-toward-peaceful-resolution-of-ukraine-conflict-peskov#comments</comments><guid isPermaLink="false">60e73132-cbfe-4979-9065-6502bd35cba3</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:42:36 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:42:36.056Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Putin,புதின்,உக்ரைன் ரஷியா போர்,ukraine russia war,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/us7f9ts2/PutinModi001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரஷிய அதிபர் புதின்- பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/us7f9ts2/PutinModi001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>இந்தியாவில் வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 18-வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு பாரத் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொள்கிறார். மாநாட்டிற்கிடையே, இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.</p><p>இது தொடர்பாக ரஷிய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தெரியும். அது பெருமளவுக்கு எங்கள் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. ஏனெனில், உக்ரைன் விவகாரத்திற்கு அமைதியான வழிகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம்.</p><h2>புதிய அணுமின் நிலையம்</h2><p>புதிய அணுமின் நிலையங்களை அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா காத்திருக்கிறது. Su-57 ரக விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதும் நிகழ்ச்சி நிரலில் உள்ளது.</p><p>இவ்வாறு பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்கா 100 சதவீதம் வரி எச்சரிக்கை</h2><p>மேலும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, அமெரிக்காவின் அறிவிப்பு சட்டவிரோதம் மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சபாநாயகருக்கு எதிராக இழிவான பேச்சு: இரண்டு எம்.எல்.ஏ.-க்கள் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/two-brs-mlcs-held-over-alleged-remarks-against-telangana-assembly-speaker</link><comments>https://www.maalaimalar.com/news/national/two-brs-mlcs-held-over-alleged-remarks-against-telangana-assembly-speaker#comments</comments><guid isPermaLink="false">bd0b34b2-f2e6-405f-94a8-35cf1f479757</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:59:21 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:59:21.047Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Telangana,தெலங்கானா,சபாநாயகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/1kia4hs0/Telangana001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தெலங்கானா சபாநாயகர் கதம் பிரசாத் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/1kia4hs0/Telangana001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநில சட்டசபைக்குள் நேற்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.-க்கள் நுழைய முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பி.ஆர்.எஸ். மேலவை எம்.எல்.ஏ.-க்கள் தத்தா மதுசூதன் மற்றும் நவீன் குமார், சபாநாயகர் கதம் பிரசாத் குமாருக்கு எதிராக இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக தெரிகிறது.</p><p>இது தொடர்பாக சட்டசபை சபாநாயகருக்கான சிறப்புப் பணி ஆதிகாரி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் இரண்டு எம்.எல்.ஏ.-க்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p>அவர்கள் (இரண்டு BRS சட்டமன்ற உறுப்பினர்கள்) சபாநாயகரின் நேர்மை, அதிகாரம் மற்றும் அரசியலமைப்பு ரீதியான நடத்தையை பகிரங்கமாக கேள்விக்குட்படுத்தியுள்ளனர். சமூகப் பின்னணி மற்றும் அரசியலமைப்புப் பாத்திரத்தின் காரணமாக அவரை அவமானப்படுத்தவும், இழிவுபடுத்தவும், தரக்குறைவாக நடத்தவும், அவரது தனிப்பட்ட மற்றும் சமூக அந்தஸ்தைக் குறைக்கவும் திட்டமிட்ட சொற்களை வேண்டுமென்றே பயன்படுத்தினர் என புகாரில் கூறப்பட்டிருந்தது.</p><h2>சபாநாயகர் கதம் பிரசாத் குமார்</h2><p>நேற்று தலித் தலைவரான சபாநாயகர் கதம் பிரசாத் குமாருக்கு எதிராக இருவரும் இழிவுப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது பெரிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இரண்டு பேரின் கருத்து 4 கோடி மக்களை இழிவுப்படுத்துவதாகும் என்றார். என்றாலும், இருவரும் சபாநாயருக்கு எதிராக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்று தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடியின் இயலாமையால் மணிப்பூர் மக்கள் மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவதிப்படுகிறார்கள்: கார்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/people-of-manipur-suffering-both-within-and-outside-state-under-modi-sarkar-kharge</link><comments>https://www.maalaimalar.com/news/national/people-of-manipur-suffering-both-within-and-outside-state-under-modi-sarkar-kharge#comments</comments><guid isPermaLink="false">a55dc196-cc8d-49db-b062-acaffe35197b</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:36:51 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:36:51.376Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கார்கே,Kharge,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/n2o7uggc/Kharge001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கார்கே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/n2o7uggc/Kharge001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மணிப்பூரை சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் சோங்தம் விக்ரம் சிங், டெல்லியில் ஒரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான கார்கே, பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.</p><p>இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவியில் கூறியிருப்பதாவது:-</p><p>மோடி அரசின் "இயலாமை" காரணமாக மணிப்பூர் மக்கள் மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் துன்பத்திற்கு ஆளாகியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார். </p><h2>மணிப்பூர் இசைக்கலைஞர் கொலை</h2><p>மணிப்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் சோங்தம் விக்ரம் சிங் ஒரு கும்பலால் இரக்கமின்றி அடித்துக் கொல்லப்பட்டது, பாஜக ஆட்சியின் கீழ் நிலவும் முழுமையான சட்டமின்மையை நினைவூட்டும் மற்றொரு அதிர்ச்சிகரமான நிகழ்வாகும்.</p><p>மாணவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். பெண்கள் தினமும் கொடுமைகளை எதிர்கொள்கின்றனர். வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த மக்கள் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர்.</p><h2>டெல்லி குற்றங்களின் தலைநகராக மாறியுள்ளது</h2><p>உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கண்காணிப்பில், டெல்லி குற்றங்களின் தலைநகராக மாறியுள்ளது. தேசிய தலைநகரில் குற்றங்கள் மிக அதிக அளவில் நடைபெறுவதை என்சிஆர்பி (NCRB) ஆண்டுதோறும் பதிவு செய்து வருகிறது.</p><p>அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மோடி அரசின் இயலாமை காரணமாக மணிப்பூர் மக்கள் தங்கள் மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவதிப்படுகின்றனர்.</p><p>இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்</p><p>டெல்லியில் வீட்டிற்கு வெளியே மது அருந்தியபடி சத்தம் எழுப்பியதை தட்டிக்கேட்டதால் மணிப்பூர் இசைக்களைஞர் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் குரல் அல்ல, பொய்களின் சூழ்ச்சி: காங்கிரசை கிண்டல் செய்த பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-mocks-congress-chhatron-ki-goonj-campaign-dubs-it-jooth-ki-goonj</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-mocks-congress-chhatron-ki-goonj-campaign-dubs-it-jooth-ki-goonj#comments</comments><guid isPermaLink="false">65a39026-bb1b-4ae9-bd84-44dfeafcd82e</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:56:26 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:56:26.963Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/8vbefhg0/RahulGandhi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi- PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/8vbefhg0/RahulGandhi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலம் வதோதராவில் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பல்வேறு திட்டங்களை திறந்து வைத்ததுடன், அடிக்கல் நாட்டினார்.</p><h2>அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-</h2><p>எல்லா இடங்களிலும் பொய்யான சூழ்ச்சி மூலம் உங்களை திசை திருப்ப முயற்சிக்கும் மனிதர்களைக் காண்பீர்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் உண்மையின் பக்கம் நிற்பார்கள்.</p><p>நாட்டின் இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் நிபுணர்களாக மாற வேண்டும். அவர்கள் இத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.</p><p>சூரிய சக்தி, காற்றாலை, நீர் மின்சாரம் மற்றும் அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுவதில் அரசாங்கம் எவ்வளவு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்பதை இளைஞர்களால் காண முடிகிறது.</p><p>இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.</p><h2>ராகுல் காந்தியின் மாணவர்கள் குரல் பிரசாரம்</h2><p>காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மாணவர்களின் குரல் (Chhatron Ki Goonj) என்ற பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். வினாத்தாள் கசிவு, மாநில வேலைவாய்ப்பு தேர்வில் உள்ள முறைகேடு தொடர்பாக முக்கிய நகரங்களில் உள்ள இளைஞர்களை சந்தித்து உரையாடி வருகிறார்.</p><p>இந்த நிலையில்தான் பிரதமர் மோடி இவ்வாறு கிண்டல் செய்துள்ளார். அதேவேளையில் ராகுல் காந்தியின் முன்னெடுப்பை கண்டு பாஜக அஞ்சுகிறது என்று காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: சத்தம் எழுப்பியதை தட்டிக்கேட்ட பிரபல மணிப்பூர் இசைக்கலைஞர் டெல்லியில் அடித்துக் கொலை - 8 பேர் கைது 
</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-manipuri-musician-beaten-to-death-after-objecting-to-noise-8-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-manipuri-musician-beaten-to-death-after-objecting-to-noise-8-arrested#comments</comments><guid isPermaLink="false">291a463a-9576-4776-bf06-f35f99997efa</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:43:06 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:43:06.243Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை,இசைக்கலைஞர்,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/0ng51qin/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விக்ரம் சிங்]]></media:title><media:description type="html"><![CDATA[ விக்ரம் சிங்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/0ng51qin/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் மணிப்பூரை சேர்ந்த கிட்ட்டார் இசைக்கலைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/manipur">மணிப்பூரை  </a>சேர்ந்த 55 வயது விக்ரம் சிங், கடந்த 17 ஆண்டுகளாக டெல்லியில் தங்கித் இசை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். </p><p>தென்கிழக்கு <a href="https://www.maalaimalar.com/news/national/1133-buildings-collapsed-and-98-people-lost-their-lives-in-delhi-over-three-years-residents-living-in-fear">டெல்லியின் </a>கிலோகரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 3வது தளத்தில் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். </p><p>நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11:30 மணியளவில் குப்பைகளை கொட்டுவதற்காக விக்ரம் சிங் வீட்டின் 3ஆம் தளத்திலிருந்து கீழே இறங்கியுள்ளார். </p> <h2>தாக்குதல்</h2><p>அப்போது அருகில் உள்ள தாபா உணவகங்களில் பணியாற்றும் சிலர் அவர் குடியிருக்கும் கட்டிடத்தின் வெளியே உரக்கச் சத்தமிட்டு குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர்.</p><p>அவர்களின் இந்த செயலை விக்ரம் சிங் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் அவருடன் தகராறில் ஈடுபட்டது.</p><p>அவர்கள் தாக்க முயன்றதால் பயந்துபோன விக்ரம் சிங் தனது வீட்டை நோக்கி ஓடியபோது, அக்கும்பல் அவரை 3வது தளம் வரை துரத்திச் சென்று, காரிடாரில் வைத்து சரமாரியாக தாக்கிவிட்டுத் தப்பியோடியது.</p><h2>உயிரிழப்பு</h2><p>காயமடைந்த விக்ரம் சிங்கை அவருடைய குடும்பத்தினர் ஓக்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><p>ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்தார்.</p> <h2>கைது</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட பரத் குமார் (19), பிரமோத் (26), ரம்ஜான் கான் (22), விஜய் (36), தீபன்ஷு (21), மோகன் விஸ்வகர்மா (32), மன்னு (26) ஆகிய 7 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஒரு 15 வயது சிறுவனும் பிடிபட்டுள்ளான்.</p> <h2>போராட்டம்</h2><p>இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் டெல்லியில் வாழும் நூற்றுக்கணக்கான வடகிழக்கு மாநில மக்கள் கிலோகரி பகுதியில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் நடத்தினர்.</p> <p>மணிப்பூர் முன்னாள் முதல்வர் பைரன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், "இசைக்கலைஞர் விக்ரம் சிங்கின் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>டெல்லி காவல்துறை இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டுத் தீவிர விசாரணை நடத்தி, விரைந்து நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Deeply saddened by the tragic passing of renowned Manipuri guitarist and Western music pioneer, Shri Chongtham Vikram Singh, and deeply concerned by the incident in which he was allegedly assaulted near his residence in southeast Delhi. <br><br>Shri Vikram Singh’s invaluable… <a href="https://t.co/MH49Pcdh8A">pic.twitter.com/MH49Pcdh8A</a></p>&mdash; N. Biren Singh (@NBirenSingh) <a href="https://x.com/NBirenSingh/status/2096952980566376849?ref_src=twsrc%5Etfw">September 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>யார் இந்த விக்ரம் சிங்?</h2><p>மணிப்பூரின் இம்பால் மேற்குப் பகுதியை சேர்ந்த விக்ரம் சிங், மணிப்பூரின் பல முன்னணி இசைக்குழுக்களில் முதன்மை கிட்டார் கலைஞராகப் பணியாற்றியுள்ளார்.</p><p>கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லிக்கு இடம்பெயர்ந்த அவர், அங்குத் தனியாக இசைப்பள்ளி ஒன்றை நிறுவி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார். </p> <p>பல இசைக்கச்சேரிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.</p><p>விக்ரம் சிங் பாரம்பரியமான கலைக் குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரது தாயார் 86 வயதான சொங்தாம் ஓங்பி கமலா தேவி மணிப்பூரின் புகழ்பெற்ற பாரம்பரிய பாடகி ஆவார்.</p><p>விக்ரம் சிங், இந்தியாவின் முதல் BAFTA விருதை வென்ற Boong திரைப்படத்தின் இயக்குநர் லக்ஷ்மிபிரியா தேவியின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.</p><p>விக்ரம் சிங்கிற்கு ஜோத்சனா (54) என்ற மனைவியும், யைபாபா (20) என்ற மகனும் உள்ளனர். மகன் யைபாபா சட்டம் பயின்று வரும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நகர்ப்புற போக்குவரத்தில் புதிய மைல்கல்: மெட்ரோ ரெயில் சேவையில் அமெரிக்காவை முந்தி உலகளவில் 2-வது இடத்தை பிடிக்கும் இந்தியா</title><link>https://www.maalaimalar.com/news/national/india-to-overtake-us-in-global-metro-network-second-largest</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-to-overtake-us-in-global-metro-network-second-largest#comments</comments><guid isPermaLink="false">e8500717-8ea2-4665-9be2-c7068178155e</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:34:06 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:34:06.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,China,சீனா,அமெரிக்கா,America,மெட்ரோ ரெயில்,metro rail services,urban transport</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ab1850nv/metro.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ metro rail services  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ab1850nv/metro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவைகள் பயன்பாட்டில் இருந்தன. </p><p>இந்தியாவின் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் பொது போக்குவரத்துத் துறை மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, மெட்ரோ ரெயில் திட்டங்கள் விரிவாக்கப்பட்டு வரும் வேகமானது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய மெட்ரோ ரெயில் நெட்வொர்க்கைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா விரைவில் இரண்டாம் இடத்திற்கு முன்னேற உள்ளது.</p><p>தற்போது சர்வதேச அளவில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. இருப்பினும், அமெரிக்காவை விட மிக குறைந்த இடைவெளியிலேயே <a href="https://www.maalaimalar.com/news/national/isro-not-to-be-privatised-isro-chief-v-narayanan-assures-employees">இந்தியா</a> பின் தங்கியிருப்பதாலும், நாடு முழுவதும் பெருமளவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாலும், விரைவில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாம் இடத்தை உறுதியாகக் கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது.</p><p>உலகளாவிய மெட்ரோ ரெயில் நெட்வொர்க்கில் சீனா 11,000 கிலோமீட்டருக்கும் அதிகமான வழித்தடங்களுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.</p><p>*சீனா: 11,000 கி.மீ. (முதலிடம்)</p><p>*அமெரிக்கா: 1,386 கி.மீ. (இரண்டாம் இடம்)</p><p>*இந்தியா: 1,170 கி.மீ. (மூன்றாம் இடம்)</p><p>தற்போது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வேறுபாடு வெறும் 216 கிலோமீட்டர் மட்டுமே. இந்தியாவில் நகர்ப்புற போக்குவரத்து தேவைகள் அதிகரித்து வருவதால், இந்த இடைவெளி மிக விரைவாகக் குறைந்து வருகிறது.</p><h2>பிரமா<strong>ண்ட வளர்ச்</strong>சி</h2><p>கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவைகள் பயன்பாட்டில் இருந்தன. அப்போது ஒட்டுமொத்த மெட்ரோ வழித்தடத்தின் நீளம் 245 கிலோமீட்டராக மட்டுமே இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர உள்கட்டமைப்பு மேம்பாடுகள் காரணமாக, தற்போது நாட்டின் 26 முக்கிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வழித்தடத்தின் நீளம் 1,170 கிலோமீட்டராகப் பன்மடங்கு உயர்ந்துள்ளது.</p><h2>கட்டுமா<strong>னப் பணிகள்</strong> தீவிரம் </h2><p>இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு நகரங்களில் தற்போது சுமார் 900 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் கட்டுமானப் பணிகள் பல்வேறு கட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது கட்டுமானத்தில் உள்ள இந்த 900 கி.மீ. வழித்தடத்தில் ஒரு சிறிய பகுதி நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்தாலே, இந்தியா மிக எளிதாக 1,386 கி.மீ. கொண்ட அமெரிக்காவை முந்தி சர்வதேச தரவரிசையில் இரண்டாம் இடத்தைச் சென்றடையும்.</p><h2>பொருளாதார <strong>தாக்</strong>கம்</h2><p>மெட்ரோ ரெயில் சேவைகளின் விரிவாக்கம் வெறும் போக்குவரத்து வசதியை மட்டும் வழங்காமல், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது. தனிநபர் வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் நகரங்களில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு கணிசமாகக் குறைகிறது. விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதால், வேலைக்குச் செல்வோர் மற்றும் வணிகச் செயல்பாடுகளுக்கான நேர விரயம் குறைக்கப்பட்டு நகர்ப்புறப் பொருளாதாரம் புதிய வேகத்தைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கியாஸ் சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக  குறைப்பு 
</title><link>https://www.maalaimalar.com/news/national/gas-cylinder-booking-interval-fixed-at-25-days</link><comments>https://www.maalaimalar.com/news/national/gas-cylinder-booking-interval-fixed-at-25-days#comments</comments><guid isPermaLink="false">79d89a85-34e5-4107-b929-c13d482ade64</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:40:26 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:40:26.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்பிஜி,கியாஸ் சிலிண்டர்,சமையல் எரிவாயு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/id2xp2ay/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிலிண்டர் முன்பதிவு ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிலிண்டர் முன்பதிவு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/id2xp2ay/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எரிபொருள் வினியோக நிலைமை மேம்பட்டுள்ளதால் கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறை தான் சமையல் எரிவாயு முன்பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-pilot-killed-in-iran-war-compensation-dispute">ஈரான் - அமெரிக்கா போர்</a> காரணமான வளைகுடா நாடுகளில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ஹார்முஸ் ஜலசந்தி</a> வழியாக ஏற்றுமதி தடைபட்டு உலக அளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவிலும் இதன் தாக்கம் இருந்தது. </p> <p>போர் தொடர்ந்தபோதிலும் அண்மை காலமாக எரிபொருள் தட்டுப்பாடு இன்றி சீராக கிடைக்கத் தொடங்கியுள்ளது.</p><p>எனவே வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவில் விதித்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி வருகிறது.</p><p>அந்த வகையில் கிராமம், நகரப்பகுதிகள் என வேறுபாடின்றி ஒரே சீராக கியாஸ் சிலிண்டர் மறு நிரப்பலுக்கான (ரீபில்) முன்பதிவு இடைவெளிக் காலம் 25 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p> <h2>தளர்வு</h2><p>முன்னதாக நெருக்கடியால் நகர்ப்புறங்களில் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் நிர்ணயிக்கப்பட்டது.</p><p>தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால் கிராமங்களுக்கும் மறுநிரப்பலுக்கான இடைவெளிக்காலம் 45 இல் இருந்து 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது.</p><p>இதை நடைமுறைப்படுத்த கியாஸ் விநியோக நிறுவனங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.</p> <p>இந்த தளர்வு குறித்த தகவலை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.</p><p>வினியோக நிலை மேம்பட்டு இருப்பதாலும், மறு நிரப்பல் நிலுவை கணிசமாக குறைந்து இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்</p><p>இதனால் கிராமப்புறங்களில் வசிப்போர் பதற்றம் தணிந்து நிம்மதியடைந்துள்ளனர் </p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் விசித்திரம்: பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் அகற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/bizarre-case-in-andhra-14-pens-5-wooden-spoons-removed-from-womans-stomach</link><comments>https://www.maalaimalar.com/news/national/bizarre-case-in-andhra-14-pens-5-wooden-spoons-removed-from-womans-stomach#comments</comments><guid isPermaLink="false">962f78fd-234f-4725-af22-0abed24d62b6</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:55:02 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:55:02.589Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra,ஆந்திரா,Laparoscopic procedure,Wooden Spoons,Pica Syndrome,பல்நாடு மாவட்டம்,நரசராவ்பேட்டை,லாப்ரோஸ்கோபி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uh81jcl6/ccc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bizarre incident in Andhra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uh81jcl6/ccc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அப்பெண் இவ்வளவு பொருட்களை எவ்வாறு விழுங்கினார் என்பது குறித்து ஆராய்ந்தபோது, அவர் கடந்த 10 ஆண்டுகளாகப் மனநலப் பாதிப்பினால் சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்தது. </p><p>ஆந்திரப் பிரதேசம், பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பெட்லூரிவாரிபாலெம் கிராமத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், கடந்த சில நாட்களாகக் கடுமையான நெஞ்சு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வலியின் தாக்கம் அதிகரித்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை நரசராவ்பேட்டையில் உள்ள மாதாஸ்ரீ என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.</p><h2>ஸ்கேனி<strong>ங் பரிசோதனை</strong>யில் அதிர்ச்சி</h2><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்குக் முதல்கட்டப் பரிசோதனைகள் மற்றும் வயிற்றுப்பகுதி ஸ்கேனிங் செய்யப்பட்டது. ஸ்கேன் அறிக்கையைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஏராளமான அநாவசியப் பொருட்கள் உள்கொள்ளப்பட்டுச் சிக்கியிருப்பது தெரியவந்தது.</p><h2>லாப்ரோ<strong>ஸ்கோபி சிகிச்சை</strong></h2><p>மருத்துவர் பி.ராமசந்திர ரெட்டி தலைமையிலான நிபுணர் குழுவினர், பெண்ணுக்கு உடனடியாக '<a href="https://www.maalaimalar.com/news/national/father-held-for-smuggling-rs-1-crore-gold-in-babys-diaper">லாப்ரோஸ்கோபி</a>' எனும் நுண் துளை அறுவை சிகிச்சையைத் தொடங்கினர். வயிற்றுப் பகுதியில் சிறிய துளையிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையின் மூலம், பெண்ணின் வயிற்றிலிருந்து மொத்தம் 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் மற்றும் 1 மெழுகுவர்த்தி ஆகிய 20 பொருட்கள் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டன.</p><p>வெளியே எடுக்கப்பட்ட பேனாக்களில் ஒன்றின் மூடி கழன்ற நிலையில் இருந்தது. அந்தப் பேனாவின் கூர்மையான பகுதி பெண்ணின் வயிற்றின் உட்புறச் சுவரில் குத்தியதால் தான் அவருக்குத் தாங்க முடியாத அளவு கடுமையான வலியும் அசௌகரியமும் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அப்பெண் நலமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறார்.</p><p>அப்பெண் இவ்வளவு பொருட்களை எவ்வாறு விழுங்கினார் என்பது குறித்து ஆராய்ந்தபோது, அவர் கடந்த 10 ஆண்டுகளாகப் மனநலப் பாதிப்பினால் சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அவரது கணவர் அவரை விவாகரத்து செய்துள்ளார். உணவு அல்லாத பிற தேவையற்ற பொருட்களை உண்ணும் ‘பைகா சின்ட்ரோம்’ அல்லது தீவிர மன அழுத்தப் பாதிப்பே பெண்ணின் இந்தச் செயலுக்குக் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கணித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில்  3 ஆண்டுகளில் 1,133  கட்டிடங்கள் சரிந்து விழுந்து 98 பேர் உயிரிழப்பு - அச்சத்தில் வாழும் மக்கள் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/1133-buildings-collapsed-and-98-people-lost-their-lives-in-delhi-over-three-years-residents-living-in-fear</link><comments>https://www.maalaimalar.com/news/national/1133-buildings-collapsed-and-98-people-lost-their-lives-in-delhi-over-three-years-residents-living-in-fear#comments</comments><guid isPermaLink="false">a82c87b0-652d-45b2-8566-85a5be4dd571</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:12:44 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:12:44.501Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கட்டிட விபத்து,Building Collapse,hostel,தங்கும் விடுதி,delhi,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ocw1o5i3/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ocw1o5i3/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,133 கட்டிடச் சரிந்து விழுந்து அதில் மொத்தம் 98 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லியில் </a>சத்ய நிகேதன் பகுதியில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 50 பேர் தங்கியிருந்த தனியார் விடுதி கட்டிடம் கடந்த ஞாயிறன்று இடிந்து விழுந்ததில் 7 பேர் கொல்லபட்டனர்.</p><p>இந்த சம்பவம் தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஏற்கனவே டெல்லியில் நிகழ்ந்த பல்வேறு கட்டிட விபத்து சம்பவங்கள் கவனம் பெற்று வருகின்றன.</p><p>இந்த விபத்து வெறும் தனிப்பட்ட சம்பவமாக அல்லாமல் தலைநகர் டெல்லி முழுவதிலும் உள்ள கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்வி எழுந்துள்ளது.</p> <h2>முறைகேடு</h2><p>இந்த <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-lodge-building-accident-owner-arrested-in-rajasthan">விடுதி கட்டிட விபத்து</a> சமபவத்தில் டெல்லி மாநகராட்சி நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>வெறும் 165 அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த 5 மாடிக் கட்டிடத்திற்கு மாநகராட்சியின் அனுமதி பெற்ற வரைபடம் எதுவும் இல்லை.</p><p>மேலும், கட்டிடத்தின் அடித்தளத்தில்உரிய அனுமதியின்றி புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்ததும், அனுமதிக்கப்பட்ட அவளை 5வது தளம் கட்டப்பட்டதும் தெரியவந்துள்ளது.</p><p>விதிகளின்படி 9 மீட்டருக்கு மேல் உயரமும், 20க்கும் மேற்பட்ட மாணவர்களும் தங்கும் விடுதிகளுக்கு தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் கட்டாயம். ஆனால், இந்த விடுதிக்கு எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை.</p> <h2>நடவடிக்கை</h2><p>விபத்தைத் தொடர்ந்து கட்டிடத்தின் உரிமையாளர் ஹரிராம் குப்தா, அவருடைய மனைவி ஊர்மிளா மற்றும் மகன் மகேஷ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அதேபோல, சட்டவிரோத கட்டுமானத்தைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாக டெல்லி மாநகராட்சியின்5 அதிகாரிகள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.</p> <h2>அதிர்ச்சி புள்ளிவிவரம்</h2><p>இதனிடையே தான் டெல்லி தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் டெல்லியில் கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.</p><p>டெல்லியில் 2022ஆம் ஆண்டில் 349 கட்டிடச் சரிவு சம்பவங்கள் பதிவாகியுன. இதில் 43 பேர் உயிரிழந்தனர்.</p><p>2023இல் 371 கட்டிட சரிவு சம்பவங்களில் 23 பேரும், 2024 இல் 413 கட்டிட சரிவு சம்பவங்களில் 32 பேரும் பலியாகினர்.</p><p>ஒட்டுமொத்தமாக 2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,133 கட்டிடச் சரிவு சம்பவங்கள் பதிவாகி, மொத்தம் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் (ஜனவரி முதல் ஜூலை வரை) 233 கட்டிடச் சரிவு அழைப்புகள் பெறப்பட்டு, அதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்; 101 பேர் காயமடைந்துள்ளனர்.</p><h2>சத்ய நிகேதன் சோதனை</h2><p>சத்ய நிகேதன் பகுதி, தொடக்கத்தில் குறைந்த குடியிருப்புகளை கொண்ட பகுதியாகவே இருந்துள்ளது. ஆனால் டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் இங்கு அமைந்துள்ளதால் சிக்கல் எழுந்தது.</p><p>பல்கலைக்கழக விடுதிகளில் போதிய இடமில்லாமல், மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி, குடியிருப்பு வீடுகள் அனைத்தும் அனுமதி இன்றி பல மாடி தனியார் விடுதிகளாகவும் உணவகங்களாகவும் மாற்றப்பட்டன.</p><p>ஒரு சதுர கிலோமீட்டருக்கு 11,320 பேர் வாழும் அடர்த்தியான டெல்லியில், இது போன்ற கட்டுப்பாடற்ற மற்றும் சட்டவிரோதக் கட்டிட மாற்றங்களே தொடர் விபத்துக்களுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன.</p>]]></content:encoded></item><item><title>&quot;படித்தவர்கள் வாழும் பகுதிகளை விட ரெட் லைட் பகுதிகளில் இருந்தே எனக்கு அதிக வாக்குகள் கிடைக்கின்றன&quot; - நிதின் கட்கரி பெருமிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/i-receive-more-votes-from-red-light-areas-than-from-localities-where-educated-people-live-nitin-gadkari-says-with-pride</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-receive-more-votes-from-red-light-areas-than-from-localities-where-educated-people-live-nitin-gadkari-says-with-pride#comments</comments><guid isPermaLink="false">46b31a34-83d9-4999-8ef7-23b5230c60b6</guid><pubDate>Tue, 08 Sep 2026 03:02:56 +0000</pubDate><atom:updated>2026-09-08T03:02:56.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,nagpur,Nitin gadkari,நிதின் கட்கரி,நாக்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/n8esd8nr/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிதின் கட்கரி ]]></media:title><media:description type="html"><![CDATA[ நிதின் கட்கரி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/n8esd8nr/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>படித்த மக்கள் வாழும் பகுதிகளை விடக் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மற்றும் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ள இடங்களில் இருந்தே தனக்கு அதிக வாக்குகள் கிடைப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.</p><p>மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக உள்ள <a href="https://www.maalaimalar.com/topic/nitin-gadkari">நிதின் கட்கரி </a>நேற்று ராஜாஸ்தான் மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். </p><p>அப்போது அவர், நாக்பூரில் உள்ள மிகவும் படித்த மக்கள் வாழும் பகுதிகளில் தனக்கு 70% முதல் 75% வரை மட்டுமே வாக்குகள் கிடைத்ததாகவும், அதே நேரத்தில் குற்றப் பின்னணி (Underworld), பாதாள உலகத் தொடர்புகள் மற்றும் சிவப்பு விளக்கு பகுதிகள் நிறைந்த இடங்களில் 92% வாக்குகள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.</p><h2>காரணம்</h2><p>அதற்கான காரணத்தை விலக்கிய அவர், "நான் அரசியலில் நல்லவை, கெட்டவை என அனைத்தையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டேன்.</p><p>அப்பகுதிகளுக்குச் சாலை வசதிகளை அமைத்துத் தந்து, பல்வேறு சமூக நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டதால் தான் மக்கள் வாக்களித்தார்களே தவிர, நான் குற்றச்செயல்களுக்கு ஆதரவளிப்பதாக இதன் பொருள் அல்ல" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.</p> <h2>இலவசம்</h2><p>"வாக்காளர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் இலவசங்களைப் பெற்றுக்கொண்டாலும், தங்களுக்கு யார் உண்மையாக வேலை செய்வார்கள் என்பதைப் புரிந்து கொண்டுதான் வாக்களிப்பார்கள்" என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>கடந்த காலத்தில் தேர்தலில் போட்டியிட்டபோது வாக்காளர்களுக்கு தலா 1 கிலோ ஆட்டிறைச்சி வழங்கியதாகவும், ஆனால் அந்தத் தேர்தலில் தான் தோல்வியடைந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.</p> <p>சில நாட்களுக்கு முன்பு மற்றொரு நிகழ்வில் பேசிய கட்கரி, "என்னால் இனி பழையபடி தீவிரமாகப் பணியாற்ற முடியாது. பொறுப்புகளைப் புதிய தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>கடந்த 2024 மக்களவை தேர்தலில் நாக்பூர் தொகுதியில் நிதின் கட்கரி தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விகாஸ் தாக்கரேவை விட சுமார் 1 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>72 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை.. தேசிய திரைப்பட விருது விழா டெல்லியில் இருந்து குஜராத்துக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/for-the-first-time-in-its-72-year-history-national-film-awards-ceremony-shifting-from-delhi-to-gujarat</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/for-the-first-time-in-its-72-year-history-national-film-awards-ceremony-shifting-from-delhi-to-gujarat#comments</comments><guid isPermaLink="false">d03f364d-b682-432b-adbd-01407abd6f92</guid><pubDate>Tue, 08 Sep 2026 02:26:46 +0000</pubDate><atom:updated>2026-09-08T02:26:46.156Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,தேசிய திரைப்பட விருதுகள்,தனுஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jjhfbk7d/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தேசிய திரைப்பட விருது விழா]]></media:title><media:description type="html"><![CDATA[ தேசிய திரைப்பட விருது விழா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jjhfbk7d/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>72வது தேசிய திரைப்பட விருதுகள் விழா  டெல்லிக்கு பதிலாக குஜராத்தில் நடைபெற உள்ளது.</p><p>இந்தியத் திரைப்படத்துறையின் மிக உயரிய விருதாக மத்திய அரசு வழங்கும் தேசிய திரைப்பட விருதுகள்  இருக்கிறது. </p><p>இந்நிலையில் 72வது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81">தேசிய திரைப்பட விருதுகள்</a> வழங்கும் விழா வரும் செப்டம்பர் 22 அன்று, குஜராத் மாநிலத்தில் உள்ள ஏக்தா நகரில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  </p><p>குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கவுள்ளார். </p> <h2>டெல்லி டூ குஜராத்</h2><p>1954-இல் தொடங்கப்பட்ட தேசிய திரைப்பட விருது விழாக்கள், 72 ஆண்டு காலமாக தலைநகர் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன.</p><p>தற்போது முதன்முறையாக இந்த மரபு உடைக்கப்பட்டு தலைநகருக்கு வெளியே குஜராத்தில் நடைபெறுகிறது.</p><p>1974 முதல் 2022 வரை திரைப்பட விழாக்கள் இயக்ககத்தால் (DFF) நடத்தப்பட்டு வந்த இந்த விழா, 2022 முதல் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (NFDC) மூலம் நடத்தப்பட்டு வருகிறது.</p> <h2>விருதுகள்</h2><p>2024ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கு இவ்வாண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுப் பட்டியல் கடந்த ஜூலை மாதம் டெல்லியில் அறிவிக்கப்பட்டது.</p><p>அதன்படி, சிறந்த திரைப்படமாக 'ஆர்ட்டிகிள் 370' படம் இவ்வாண்டு விருதுக்கு தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகையாக 'ஆர்ட்டிகிள் 370' படத்தில் நடித்ததற்காக யாமி கௌதம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.</p><p>'பிரம்மயுகம்' படத்தில் நடித்த மம்முட்டி மற்றும் 'சந்து சேம்பியன்' படத்தில் நடித்த கார்த்திக் ஆர்யன் ஆகியோருக்கு சிறந்த நடிகர் விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.</p> <p>சிறந்த அறிமுக இயக்குநர் விருதுக்கு 'வீர் சவார்க்கர்' படத்தை இயக்கிய ரந்தீப் ஹூடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.</p><p>சிறந்த ஜனரஞ்சகப் படமாக பிரபாஸின் கல்கி 2898 ஏ.டி தேர்வாகியுள்ளது.</p><p>தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புள்ள சிறந்த படம் என்ற பிரிவில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/mammoottys-mass-introduction-video-from-the-dhanush-starrer-om-chapter-1">தனுஷ் </a>நடித்த 'கேப்டன் மில்லர்' தேர்வாகியுள்ளது.</p><p>தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ. 1.10 லட்சம் கோடியில் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/govt-clears-rs-110-lakh-crore-proposals-to-buy-military-hardware</link><comments>https://www.maalaimalar.com/news/national/govt-clears-rs-110-lakh-crore-proposals-to-buy-military-hardware#comments</comments><guid isPermaLink="false">b0e57e3f-37b3-4a0c-b60b-d812c16fb971</guid><pubDate>Mon, 07 Sep 2026 23:46:36 +0000</pubDate><atom:updated>2026-09-07T23:46:36.950Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,ராஜ்நாத் சிங்,Military hardware,ராணுவம் தளவாடங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zwuhc3df/Rajnath-Singh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajnath Singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zwuhc3df/Rajnath-Singh.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/rajnath-singh">ராஜ்நாத் சிங்</a> தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், முப்படைகளுக்கான ராணுவ தளவாடங்களை வாங்குவதற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியது. </p><p>இதில், போர் விமானங்களை நவீனமயமாக்குதல் மற்றும் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி உளவு வாகனங்கள், ரேடார்கள், பால அமைப்புகள் மற்றும் கண்ணிவெடிகளை இடும் கருவிகள் உள்ளிட்டவை ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்படுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/defence">பாதுகாப்பு துறை</a> ஒப்புதல்களின் ஒரு முக்கிய அம்சம், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்து, உள்நாட்டு கொள்முதலை ஊக்குவிப்பதும், அரசின் 'ஆத்மநிர்பர் பாரத்' முயற்சிக்கு ஊக்கமளிப்பதுமாகும்.</p><p>இது குறித்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "வழங்கப்பட்ட மொத்த தேவை ஏற்பில், ஏறத்தாழ 98 சதவீத கொள்முதல்கள் இந்திய தொழில்துறையில் இருந்தே செய்யப்படும். இது, இந்தியாவில் ஒரு வலுவான பாதுகாப்பு தொழில்துறை தளத்தை உருவாக்குவதில் எங்களது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது," என்றார்.</p><h2>அதிநவீன வாகனங்கள் கொள்முதல்:</h2><p>ராணுவத்தைப் பொறுத்தவரை, CBRN உளவு வாகனங்கள், அதிவேக வாகனங்கள் (HMVகள்), தானாக இயங்கும் இயந்திரக் கண்ணிவெடி இடும் வாகனங்கள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் (ALHகள்), இழுவை டாங்கிகள் மற்றும் சர்வத்ரா பால அமைப்பு ஆகியவற்றைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>CBRN உளவு வாகனங்கள், CBRN நச்சுப் பொருட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிதல், அடையாளம் காணுதல், கண்காணித்தல் மற்றும் குறித்தல் ஆகிய திறன்களை கொண்டிருக்கும் அதே வேளையில், இழுவை டாங்கிகள் என்பவை, எதிரி கண்ணிவெடிகளில் இருந்து பாதையைத் தெளிவுபடுத்துவதற்காக நிலக்கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்ய வடிவமைக்கப்பட்ட முன்பக்க அமைப்புடன் கூடிய சிறப்பு இராணுவப் போர் வாகனங்களாகும்.</p><p>கனரக வாகனங்கள் சவாலான நிலப்பரப்புகளில் செயல்பாட்டுத் திறன்கள், தளவாட ஆதரவு மற்றும் இயங்குதிறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. "இந்த ஏஎல்ஹெச் வாகனங்கள், ராணுவம் மற்றும் இந்திய விமானப்படைக்காக அனைத்து நிலப்பரப்புகளிலும் மற்றும் செயல்பாட்டுச் சூழ்நிலைகளிலும் சிக்கலான பணிகளை நிறைவேற்றும்," என்று அது கூறியது.</p>]]></content:encoded></item><item><title>பீகார் வெள்ள பாதிப்பு: தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/tejashwi-urges-pm-to-declare-bihar-floods-national-disaster</link><comments>https://www.maalaimalar.com/news/national/tejashwi-urges-pm-to-declare-bihar-floods-national-disaster#comments</comments><guid isPermaLink="false">3c10c01d-aacb-438f-a5dc-8929d643b556</guid><pubDate>Mon, 07 Sep 2026 23:16:44 +0000</pubDate><atom:updated>2026-09-07T23:16:44.490Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tejashwi Yadav,pm modi,Bihar floods,பீகார் வெள்ளம்,பிரதமர் மோடி,s, தேஜஸ்வி யாதவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/0wulh9iq/bihar-floods.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/0wulh9iq/bihar-floods.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரின் வெள்ள பாதிப்பை “தேசியப் பேரிடராக” அறிவித்து, நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக ரூ.5,000 கோடி மத்திய உதவித் தொகுப்பை வழங்க வேண்டும் என <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர்</a> நரேந்திர மோடியை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் வலியுறுத்தினார்.</p><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தியாரா பகுதிகளை பார்வையிட்ட பிறகு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், உயர்ந்து வரும் நதி நீர்மட்டம் மற்றும் பரவலான <a href="https://www.maalaimalar.com/topic/bihar-floods">வெள்ளப்பெருக்கு</a> ஆகியவை மில்லியன் கணக்கான மக்களை பாதித்து, இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து, பொது உள்கட்டமைப்பை சேதப்படுத்தியுள்ளதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.</p><h2>மீட்புப் பணிகள் போதுமானதாக இல்லை:</h2><p>நெருக்கடியின் தீவிரத்தோடு ஒப்பிடும் போது மாநில அரசின் நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் போதுமானதாக இல்லை என்றும், கூடுதல் உதவிக்காக மத்திய அரசை வலியுறுத்த தவறியதாக மாநில என்.டி.ஏ. தலைவர்களையும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு, பாதுகாப்பான குடிநீர், மருந்துகள், மின்சாரம், கால்நடை தீவனம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை பெறுவதற்கு போராடி வருவதாக தேஜஸ்வி யாதவ் கூறினார்.</p><p>துண்டிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் படகுகளையும் மீட்பு வளங்களையும் உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ராணுவம் மற்றும் விமானப்படை ஹெலிகாப்டர்களின் உதவியை அவர் கோரினார்.</p><p>பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் போதுமான உணவு, குடிநீர், மருந்துகள், கால்நடைத் தீவனம் மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தேஜஸ்வி கோரிக்கை விடுத்தார். வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், கால்நடை உரிமையாளர்கள் மற்றும் பிறருக்கு சிறப்பு நிதியுதவி வழங்க அவர் அழைப்பு விடுத்தார்.</p><h2>சுதந்திரமான ஆய்வு நடத்த வேண்டும்:</h2><p>நீண்டகால நடவடிக்கைகளை நாடி, அவர் பீகாருக்கான வெள்ள தடுப்பு திட்டத்தை முன்மொழிந்தார். இத்திட்டம், ஆறு மற்றும் கரை மேலாண்மை, வடிகால் மேம்பாடு, நீர்நிலைகளை புனரமைத்தல் மற்றும் நவீன வெள்ள முன்னறிவிப்பு அமைப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.</p><p>மேலும், நேபாளம் மற்றும் பிற அண்டை நாடுகளுடன் வலுவான நீர் மேலாண்மை ஒருங்கிணைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். பீகாரின் பேரிடர் மேலாண்மைத் தயார்நிலை மற்றும் அவசரகால நிதிகளின் பயன்பாடு குறித்து ஒரு சுதந்திரமான ஆய்வு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கோரினார்.</p>]]></content:encoded></item><item><title>அச்சுறுத்தல்களுக்கு தீர்க்கமாக பதிலளிக்க ஆயுத படைகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது: ராஜ்நாத் சிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-said-armed-forces-given-freedom-resources-to-respond-decisively-to-threats</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-said-armed-forces-given-freedom-resources-to-respond-decisively-to-threats#comments</comments><guid isPermaLink="false">c0ce0db8-18a0-41ed-989e-fe2b803d039a</guid><pubDate>Mon, 07 Sep 2026 20:29:31 +0000</pubDate><atom:updated>2026-09-07T20:29:31.957Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,armed forces,ஆயுத படை,ராஜ்நாத் சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/9wkmt9fj/Rajnath-Singh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajnath Singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/9wkmt9fj/Rajnath-Singh.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எதிரிகளின் எல்லைக்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு தீர்க்கமாக பதிலளிப்பதற்கான "சுதந்திரமும் வளங்களும்" இந்திய ஆயுத படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  தெரிவித்தார். </p><p>இங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா அமைதியை விரும்புவதாகவும், போரையோ அல்லது எந்தவொரு நாட்டின் நிலப்பகுதியையும் ஆக்கிரமிப்பதையோ அது விரும்பவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தினார். </p><p>இருப்பினும், அமைதிக்கும் பலவீனத்திற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>பேச்சுவார்த்தைக்கு இடமிருக்காது:</h2><p>"போர் குறித்த அச்சத்தால் ஏற்படும் அமைதி கண்டிக்கத்தக்கது; அதேவேளையில், அமைதிக்காக நடத்தப்படும் போர் போற்றுதலுக்குரியது. இந்தியாவுக்கு எதிராக ஏதேனும் ஒரு நாடு பயங்கரவாதத்தை ஊக்குவித்தால், பேச்சுவார்த்தைக்கு இடமிருக்காது; மாறாக, நமது பாதுகாப்பு படைகள் தகுந்த பதிலடியை கொடுக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்," என்று அவர் கூறினார்.</p><p>எதிரிகளின் எல்லைக்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு தீர்க்கமாக பதிலளிக்க ஆயுத படைகளுக்கு சுதந்திரமும் வளங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழலிலும், இந்தியா தனது சுயமான முடிவெடுக்கும் திறன் மற்றும் மூலோபாய சுதந்திரத்துடன் முன்னேறி வருகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது உரையில் வலியுறுத்தினார்.</p><h2>பாதுகாப்பை எதிரிகள் முயற்சி:</h2><p>ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லுதல், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்தல், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை பரப்புதல் மற்றும் சமூகத்தில் பிளவுகளை உருவாக்க முயற்சித்தல் உள்ளிட்ட அனைத்து தீய வழிகளிலும் இந்தியாவின் பாதுகாப்பை குலைக்க எதிரிகள் முயற்சித்ததாக சிங் கூறினார்.</p><p>தவறான பாதையில் சென்ற இளைஞர்களை மீண்டும் நல்வழிக்கு கொண்டு வருதல், மறுவாழ்வு மற்றும் தீவிரவாத சிந்தனைகளை அகற்றும் முயற்சிகளை மேற்கொள்ளுதல், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம், இத்தகைய தீய திட்டங்களை முறியடித்து அனைத்து முனைகளிலும் அரசு பதிலடி கொடுத்துள்ளது என்று அவர் உறுதியாகக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கடந்த 6 மாதத்தில் 60,000 சிறார் பிரசவங்கள்: அரசு நலத்திட்டம் ரத்து செய்யப்படும் என சுவேந்து அதிகாரி எச்சரிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-records-60000-minor-deliveries-in-six-months-government-warns-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-records-60000-minor-deliveries-in-six-months-government-warns-action#comments</comments><guid isPermaLink="false">bf08fc95-6807-47b9-9121-7e95b5e8b494</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:40:31 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:40:31.741Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,சுவேந்து அதிகாரி,child marriage,குழந்தை திருமணம்,west bengal,suvendhu adhikari</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rttacz94/Untitled-design-37.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar child marriage]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rttacz94/Untitled-design-37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் குழந்தை திருமணம் செய்து கொள்பவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, அவருக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் திரும்ப பெறப்படும் என அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகார்</a> மாநிலத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை, 18 வயது குறைந்த சிறுமிகளுக்கு சுமார் 60,000 பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெற்றதாக மாநில சுகாதார துறை ஒரு அறிக்கை வெளியிட்டது. </p><p>இந்த நிலையில் நபான்னாவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மேற்கு வங்கத்தின் முதல்வர் சுவேந்து அதிகாரி செய்தியாளர்களை சந்தித்தார்.  </p><h3><strong>குழந்தை திருமணத்தில் முதலிடம்</strong></h3><p>அப்போது அவர் கூறுகையில், “ஆறு மாத காலப்பகுதியில், முர்ஷிதாபாத்தில் 12,847 சிறுமிகள் மருத்துவமனைகளில் பிரசவித்ததன் மூலம் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது.</p><p>தெற்கு பர்கானாஸ் பகுதி 4,178 வழக்குகளுடன் அடுத்த இடத்தில் உள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் குழந்தை திருமணங்கள் மற்றும் பிரசவங்களில் மேற்கு வங்கம் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது.</p><p>18 வயதுக்குட்பட்ட சிறுமி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு கர்ப்பம் மற்றும் பிரசவ வழக்கும் பதிவு செய்யப்பட வேண்டும்.</p><p>சந்தேகத்திற்கிடமான குழந்தை திருமணங்களைக் கண்டறியவும், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் சுகாதாரப் பதிவேடுகளைப் பயன்படுத்துவார்கள்.</p><h3><strong>வயது சரிபார்க்கப்படும்</strong></h3><p>சிறுவயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் கணவர்களுக்கு விளக்கம் கோரும் அறிவிப்புகள் வழங்கப்பட்டு, மனைவியின் வயதுக்கான சரியான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.</p><p>வயதுக்கான சரியான ஆதாரத்தை அவர்கள் வழங்கத் தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>இந்த அதிரடி நடவடிக்கையின் போது கண்டறியப்படும் வழக்குகளில், காவல்துறை குற்றவியல் நடவடிக்கையைத் தொடங்கி, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.</p><p>குழந்தை திருமணங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டவர்களிடம் இருந்து நலத்திட்டங்கள் மற்றும் இதர திட்டங்களின் பலன்கள் திரும்பப் பெறப்படும்.</p><p>சிறுவர் திருமணங்களை நடத்தி வைக்கும் அல்லது அதற்கு வழிவகுக்கும் மதகுருக்கள் மற்றும் இதில் ஈடுபடுபவர்களுக்கு சட்டப்படி சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்” என்று அவர் கூறினார்.</p><h3><strong>கடுமையான போக்சோ சட்டம்</strong></h3><p>மேலும், 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன், அவர் திருமணமானவரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் பாலியல் உறவு கொள்வது குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய சுவேந்து அதிகாரி, போக்சோ சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று கூறினார்.</p><p>18 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் உடல் உறவு கொள்வது போக்சோ சட்டத்தின் பிரிவுகளுக்கு உட்பட்டது என்றும், அதற்கான சிறைத் தண்டனை 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலும், சில சூழ்நிலைகளில் மரண தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.</p><p>சிறார் கர்ப்பம் தொடர்பான வழக்குகள் குறிப்பாகக் கடுமையான விசாரணைக்கும் நடவடிக்கைக்கும் உள்ளாகும் என்று மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே ஆண்டில் 4 முறை இடமாற்றம்: தவறுகளை சுட்டிக்காட்டினால் இப்படித்தானா?- ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/national/i-was-removed-for-pointing-out-mistakes-ias-officer-transferred-fourth-time-in-a-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-was-removed-for-pointing-out-mistakes-ias-officer-transferred-fourth-time-in-a-year#comments</comments><guid isPermaLink="false">2de29b0b-a2fa-4e10-923a-5aefd78ced98</guid><pubDate>Mon, 07 Sep 2026 15:05:38 +0000</pubDate><atom:updated>2026-09-07T15:05:38.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐஏஎஸ் அதிகாரி,IAS,Madhyapradesh,Transfer,பணியிட மாற்றம்,மத்தியப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rswgmn60/Untitled-design-34.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IAS officer Neha Marwya]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rswgmn60/Untitled-design-34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய பிரேதசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அரசு அதிகாரி ஒருவர், கடந்த ஓராண்டில் தொடர்ந்து நான்காவது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, தன்னுடைய உயர் அதிகாரிகள் தன்னை ஒரு கிள்ளுக்கு இரையாக பார்ப்பதாக ஐ.ஏ.எஸ் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.</p><p>2011 பேட்ச் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D">ஐ.ஏ.எஸ் அதிகாரியான</a> நேஹா மார்வ்யா கடந்த 2017-இல் சிவ்புரி மாவட்ட பஞ்சாயத்து தலைமை அதிகாரியாக பணி அமர்த்தப்பட்டார். </p><p>அப்போது இவருக்கு வாகன கட்டணங்கள் தொடர்பாக அப்போதைய ஆட்சியர் ஓ.பி. ஸ்ரீவஸ்தவா உடன் மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உயர் அதிகாரிகள் அந்த பணியில் இருந்து வேறு இடத்திற்கு மாறுதல் செய்தனர்.</p><p>இதையடுத்து 2022-ல் வருவாய் துறையில் பணியாற்றிய அவர், தனது பதவியை பொறுப்பேற்க முதன்மை செயலாளர் மனிஷ் ரஸ்தோகி தன்னை உள்ளே அனுமதிக்க மறுத்ததாக குற்றம்சாட்டினார்.</p><p>இதைத்தொடர்ந்து நேஹா கடந்த ஜனவரி 2025-ல் திண்டோரி பகுதியில் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற எட்டு மாதங்களுக்கு பிறகு உயர் அதிகாரிகள் அவரை ஆட்சியர் பதவியில் இருந்து நீக்கினர்.</p><p>நேஹா மத்தியப் பிரதேச பட்டியல் பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.</p><p>இந்த நிலையில் நேஹா, பழங்குடியினர் பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநராக பொறுப்பேற்று இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. ஆனால் அவர் வெளியிட்ட அரசு அறிவிப்புகளை தொடர்ந்து, ஊழியர்கள் அவருக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்தினர்.</p><p>இதன் காரணமாக தொடர்ந்து ஓராண்டில் நான்காவது முறையாக அதிகாரிகள் அவரை பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளனர்.</p><p><strong>ஐஏஎஸ் சங்கத்திற்கு கடிதம்</strong></p><p>இந்த நிலையில் தான் பணியில் சேர்ந்த 50 நாட்களுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐஏஎஸ் சங்கத்திற்கு நேஹா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், “நான் எப்போதும் உத்தரவுகளை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வேன். ஆனால் இந்த முறை நான் ஊக்கம் இழந்துவிட்டேன்.</p><p>கீழ்ப்படியாமை மற்றும் கோப்புகளை பதுக்கி வைத்திருப்பது குறித்து நான் புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக நான் நீக்கப்பட்டேன்.</p><p>கீழ்நிலை அதிகாரிகள் இடமாற்றங்களை தீர்மானிக்கும் அளவுக்கு, ஒரு ஐஏஎஸ் அதிகாரி பலவீனமாக இருக்க முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை.</p><p>இந்த பணியிட மாறுதலை அனுபவிக்க ஒரு மாதத்திற்குள் தான் என்ன செய்துவிட்டேன் என்று எனக்கு தெரியவில்லை.</p><p>ஒரு அதிகாரியால் ஒரு மாதத்தில் வேலையை புரிந்துகொள்வது என்பது அரிது. ஆனாலும், இந்த இடமாற்றத்தால் நான் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன்.</p><h3><strong>கீழ்நிலை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள்</strong></h3><p>தொடர்ச்சியான குறுகிய கால பதவிக் காலங்கள் தன்னை மனச்சோர்வடையச் செய்துவிட்டது. </p><p>நிலைமை மேம்படும் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக நான் பொறுமையாக இருந்தேன், ஆனால் இப்போது கீழ்நிலை அதிகாரிகள் என்னை மிரட்டத் தொடங்கியுள்ளனர்.</p><p>எப்போதும் சதிகாரர்களே வெற்றி பெறுகிறார்கள், நான் தோற்கிறேன்.</p><p>இந்த அமைப்பு என்னை கைவிட்டுவிட்டது. இன்று நான், நாளை மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி இலக்காக இருப்பார்,” என்று அவர் ஐஏஎஸ் சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொடர் கொலையாளிகள் அதிகம் உள்ள நாடுகள் - 6வது இடத்தில் இந்தியா!</title><link>https://www.maalaimalar.com/news/national/countries-with-the-highest-number-of-serial-killers-india-ranks-6th</link><comments>https://www.maalaimalar.com/news/national/countries-with-the-highest-number-of-serial-killers-india-ranks-6th#comments</comments><guid isPermaLink="false">2b759265-d5a5-4180-ad49-019724b5b955</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:59:31 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:59:31.029Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,அமெரிக்கா,United States,Serial Killers,தொடர் கொலையாளிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/xmgamguc/New-Project-2026-09-07T202250.138.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொடர் கொலையாளிகள் அதிகம் உள்ள நாடுகள் - 6வது இடத்தில் இந்தியா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/xmgamguc/New-Project-2026-09-07T202250.138.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> உலகம் முழுவதும் 1900 ஆண்டுமுதல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில்,  அதிக அளவிலான தொடர் கொலையாளிகள் ஆவணப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.</p><p>சமீபத்திய 2026 ராட்ஃபோர்ட்/எஃப்.ஜி.சி.யு (Radford/FGCU) அறிக்கையின்படி, 1900 ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட தொடர் கொலையாளிகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>விசாரணை முறை</h2><p>இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த எண்கள் அந்தந்த நாடுகளின் ஒட்டுமொத்த பாதுகாப்பு குறைபாட்டை மட்டும் குறிப்பதில்லை; மாறாக, அங்குள்ள குற்றவியல் விசாரணை முறைகள், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்றுப் பதிவுகளின் வெளிப்படைத்தன்மையையும் காட்டுகின்றன.</p><h2>அமெரிக்கா முதலிடம்</h2><p>இந்த பட்டியலில் அமெரிக்கா 3,803 கொலையாளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இது இரண்டாம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கையான 188-ஐ விட 20 மடங்குக்கும் அதிகமாகும்.</p><p>ரஷ்யா 172 பேருடன் மூன்றாம் இடத்திலும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா (153) மற்றும் ஜப்பான் (145) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. 135 கொலையாளிகளுடன் <a href="https://www.maalaimalar.com/news/national/india-said-no-to-the-press-conference-trump-initially-agreed-but-later-changed-his-tune-an-incident-at-the-g7-summit">இந்தியா</a> 6வது இடத்தில் உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>புதிய காரை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க, வீட்டின் மொட்டை மாடியில் பார்க்கிங் செய்த நபர்</title><link>https://www.maalaimalar.com/news/national/man-parks-new-car-on-rooftop-to-prevent-theft</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-parks-new-car-on-rooftop-to-prevent-theft#comments</comments><guid isPermaLink="false">c2e7723a-e72c-4aec-96ef-28c9521c1363</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:48:51 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:48:51.888Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,மஹிந்திரா கார்,Mahindra Scorpio</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1e491dtb/Untitled-design-35.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rooftop Parking to Prevent Car Theft]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1e491dtb/Untitled-design-35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரை சேர்ந்த நபர் ஒருவர், தான் புதிதாக வாங்கிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரை, இரவு நேரத்தில் திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக வீட்டின் மொட்டை மாடிக்கு, கிரேன் மூலம் கொண்டு சென்று பார்க்கிங் செய்த காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகார்</a> மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவர் சமீபத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரை வாங்கி உள்ளார்.</p><h3><strong>வெளிநாட்டிற்கு சென்ற கார் உரிமையாளர்</strong></h3><p>இதையடுத்து இவருக்கு இஸ்ரேல் நாட்டில் வேலை கிடைத்து விட்டதால், தனது வாகனத்தை பீகாரில் ஒரு ஓட்டுநரிடம் கொடுத்துவிட்டு, அவர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்.</p><p>இதற்கிடையில் சிறிது காலம் கழித்து, அந்த ஓட்டுநர் பணியில் இருந்து சென்று விட்ட நிலையில், தனது கார் திருடப்பட்டு விடுமோ என்று யாதவுக்கு கவலை எழுந்துள்ளது.</p><p>இதைத்தொடர்ந்து திருட்டில் இருந்து காரை பாதுகாப்பதற்காக, யாதவ் குடும்பத்தினர் மஹிந்திரா வாகனத்தை வீட்டின் மொட்டை மாடிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.</p><h3><strong>மொட்டை மாடியில் பார்க்கிங்</strong></h3><p>பின்னர் அவர்கள், அந்த வாகனத்தை ஒரு கிரேன் மூலம் வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள மாடிக்கு தூக்கி சென்று பார்க்கிங் செய்தனர்.</p><figure><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1072908068927705%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></figure><p>இந்த காட்சியை பார்த்த உள்ளூர் கிராம மக்கள், அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர்.</p><p>கார் திருடப்படுவதில் இருந்து பாதுகாப்பதற்காக, கார் உரிமையாளர் வீட்டின் மொட்டை பார்க்கிங் செய்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாடு முழுவதும் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/by-elections-announced-for-6-constituencies-in-india</link><comments>https://www.maalaimalar.com/news/national/by-elections-announced-for-6-constituencies-in-india#comments</comments><guid isPermaLink="false">f76319b6-f433-4cb4-8ba6-0d809d7a0069</guid><pubDate>Mon, 07 Sep 2026 12:42:18 +0000</pubDate><atom:updated>2026-09-07T12:42:18.827Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Election Commission of India,bypolls,இந்திய தேர்தல் ஆணையம்,இடைத்தேர்தல்,தமிழ்நாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/dkwns9f5/New-Project-2026-09-07T181151.361.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியாவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/dkwns9f5/New-Project-2026-09-07T181151.361.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் மொத்தம் 6 தொகுதிகளுக்கு அக்.6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><h2>தமிழ்நாடு</h2><p>தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>மதுராந்தகம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து இந்தத் தொகுதிகள் காலியாகின.</p><h2>7 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு</h2><p>தமிழ்நாட்டில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 2 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 9 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தேர்தல் வழக்குகள்</h2><p>திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/no-plan-to-announce-by-elections-for-the-five-vacant-constituencies-in-tamil-nadu-election-commission">தேர்தல் வழக்குகள் </a>நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குகளின் இறுதி தீர்ப்பு வரும் வரை அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது எனத் தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><h2>அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம்</h2><p>தமிழ்நாட்டைத் தொடர்ந்து அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் மாநிலங்களில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, மேற்குவங்கத்தின் நந்திகிராம், ரெஜிநகர், அசாமின் நாகோன் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த ஆறு தொகுதிகளுக்கும் வேட்புமனுத்தாக்கல் செப்.9 தொடங்கும் எனவும், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் செப்.16 எனவும், வேட்புமனுக்களை பரிசீலனை செய்வதற்கான கடைசி நாள் செப்.17 என்றும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்.19 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>வாக்குப்பதிவு அக்.6ம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்.9 நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கொல்கத்தாவில் பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று: சாவின் விழிம்பில் இருந்து காப்பாற்றிய மருத்துவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/baby-girl-born-with-covid-in-kolkata-saved-by-doctors</link><comments>https://www.maalaimalar.com/news/national/baby-girl-born-with-covid-in-kolkata-saved-by-doctors#comments</comments><guid isPermaLink="false">6f2c5659-e114-44b2-a902-fb279849562c</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:58:27 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:58:27.457Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொல்கத்தா,Kolkata,covid,Corona,கோவிட்,கொரோனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/2sce0ex7/Untitled-design-33.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kolkata newborn Covid case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/2sce0ex7/Untitled-design-33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதிதாக பிறந்த ஒரு பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர்.</p><p>இதையடுத்து சீரற்ற இதய துடிப்பு மற்றும் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் உயிருக்கு போராடிய குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காப்பாற்றினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்குவங்க மாநிலம்</a> கொல்கத்தாவில் உள்ள பெல்லி வியூ மருத்துவமனையில், அர்பிதா சாந்த்ரா என்ற கர்ப்பிணி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். </p><p>அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் கருப்பையில் உள்ள குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்ததை கண்டறிந்தனர். </p><h3><strong>பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று</strong></h3><p>இதையடுத்து கொரோனா தொற்றுடன் பிறந்த அந்த பெண் குழந்தை, சுவாசக் கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டது. </p><p>இதற்கிடையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த பெண் குழந்தைக்கு செப்சிஸ் நோய் இருப்பதையும் கண்டறிந்தனர்.</p><p>செப்சிஸ் நோய் காரணமாக பிறந்த குழந்தைக்கு மூச்சுத் திணறலும் அதிகப்படியான இதயத் துடிப்பும் ஏற்பட்டது. </p><p>இதைத்தொடர்ந்து அந்த பச்சிளம் குழந்தைக்கு மருத்துவர்கள் முதலில் தேவையான ஆக்சிஜனை வழங்கினர்.</p><p>குழந்தையின் நிலைமை மேலும் மோசமடைந்ததால், செயற்கை சுவாச உதவியுடன் நுரையீரலுக்குள் காற்றை செலுத்தினர்.</p><p>இதையடுத்து பிறந்த குழந்தைக்கு புரோ-பி.என்.பி மருத்துவ பரிசோதனையை மருத்துவர்கள் செய்தனர். இதன்மூலம் கொரோனா மற்றும் செப்சிஸ் நோய் இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது.</p><h3><strong>மோசமான குழந்தையின் உடல்நிலை</strong></h3><p>அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திலும் குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமாகி காணப்பட்டது. </p><p>மேலும் கொரோனா பரிசோதனை முடிவை பெற ஐந்து நாட்கள் ஆகும் என்பதால், மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சையை தொடர்ந்து அளித்தனர்.</p><p>இதையடுத்து ஐந்து நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சையை தொடர்ந்து, குழந்தையின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.</p><p>இருந்தாலும் குழந்தையின் உடல்நிலை முழுமையாக குணமடையும் வரை, அந்த பெண் குழந்தையை மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தனர்.</p><h3><strong>மருத்துவர் சாந்தனு ரே</strong></h3><p>இதுகுறித்து பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளித்த குழந்தை நல மருத்துவர் சாந்தனு ரே கூறுகையில், “செப்சிஸ் மற்றும் கொரோனா ஆகிய இரண்டு நோய் தொற்றுகளும், உயிருக்கு ஆபத்தானவை என்பதால், நாங்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தோம்.</p><p>எம்.ஐ.எஸ்-என் நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 50 சதவீதமாக உள்ளது. குழந்தையின் உடல்நிலை வேகமாக மோசமடைந்து வந்ததால், நாங்கள் விரைவாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.</p><p>இதன் காரணமாக வைரஸ் மற்றும் பாக்டீரியா ஆகியவற்றிற்கு எதிராக ஆண்டிபாடிகளாக செயல்படும் காமா குளோபுலின் என்ற ரத்த புரதத்தை குழந்தைக்கு செலுத்த முடிவு செய்தோம். ஐந்தாவது நாளில் குழந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.</p><p>இருந்தாலும் பூரண குணமடையும் வரையில், நாங்கள் அந்த பச்சிளம் குழந்தையை தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்தோம்” என மருத்துவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.90 லட்சம் சம்பளத்தை உதறி தள்ளிய இளைஞர் - ரூ.30,000 முதலீட்டில் மாதம் ரூ.12 லட்சம் சம்பாதித்து அசத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/from-30k-investment-to-1-2-million-a-month-after-quitting-9-million-rupee-job</link><comments>https://www.maalaimalar.com/news/national/from-30k-investment-to-1-2-million-a-month-after-quitting-9-million-rupee-job#comments</comments><guid isPermaLink="false">b2df8a10-063e-48df-8ad4-c47a29ac68ae</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:50:16 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:50:16.663Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chandigarh,சண்டிகர்,Mohit Nijhawan,மோஹித் நிஜவான்,Micro greens,மைக்ரோ கிரீன்ஸ்,Vertical Farming,Indoor Farming</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/fm6h9ewr/Micro-greens" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Micro greens ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/fm6h9ewr/Micro-greens?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நம்மில் பலருக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.90 லட்சம் சம்பளம் என்பது ஒரு கனவாகவே இருக்கும். ஆனால், <a href="https://www.maalaimalar.com/topic/chandigarh">சண்டிகரைச் </a>சேர்ந்த மோஹித் நிஜவான் என்று இளைஞருக்கு, அது வெறும் ஆரம்ப புள்ளியாகவே இருந்துள்ளது.</p><p>கணினி அறிவியலில் பி.டெக் பட்டம் பெற்ற மோஹித், தனது கைநிறைய சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலையை கடந்த 2020 ஆண்டு டிசம்பரில் விட்டுவிட்டு, முற்றிலும் மாறுபட்ட துறையான உள் அரங்கு விவசாயத்தில் கால் பதித்து இன்று கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார்.</p><h2>ரூ.30,000 முதலீட்டில் தொடங்கிய சோதனை முயற்சி</h2><p>ஆரம்பத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய விரும்பாத மோஹித், வெறும் ரூ.30,000 முதலீட்டில் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள 100 சதுர அடி சிறிய அறையில் <a href="https://www.greenu.in/mohit-nijhwan-microgreens/">மைக்ரோகிரீன்ஸ் </a>(முளைக்கீரை/இளம் ஊட்டச்சத்து தாவரங்கள்) வளர்க்கத் தொடங்கினார்.</p><p>ஆரம்பக் கட்டத்தில் விவசாயத்தின் நுணுக்கங்கள், உற்பத்தி முறைகள், வாடிக்கையாளர்களைக் கண்டறிதல் மற்றும் ஒரு நிலையான வணிக மாதிரியை உருவாக்குதல் என அனைத்தையும் அவரே சுயமாகக் கற்றுக் கொண்டார். </p><p>இந்த சிறிய சோதனை முயற்சிதான் இன்று ‘கிரீனு மைக்ரோகிரீன்ஸ்’ என்ற மிகப்பெரிய பிராண்டாக உருவெடுத்துள்ளது.</p><h2>அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செங்குத்து விவசாயம்</h2><p>ஆரம்பத்தில் வெறும் மூன்று ரேக்குகள், தட்டுகள், வளர்ப்பு விளக்குகள் மற்றும் விதைகளைக் கொண்டு செங்குத்து உள்ளரங்கு விவசாயத்தை மோஹித் தொடங்கினார். </p><p>முற்றிலும் மரபணு மாற்றப்படாத மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாத இயற்கை முறையில் 21 வகையான ஆர்கானிக் மைக்ரோகிரீன்ஸ் வகைகளை வளர்ப்பதில் அவர் தீவிர கவனம் செலுத்தினார்.</p><p>தற்போது இந்த வணிகம் பல மடங்கு விரிவடைந்துள்ளது. இப்போது 500 சதுர அடி பரப்பளவிலான அதிநவீன வசதிகள் கொண்ட பண்ணையாக இது மாறியுள்ளது. </p><p>இங்கு சுமார் 60 ரேக்குகள் அமைக்கப்பட்டு, மாதத்திற்கு 12,000 தட்டுகள் மைக்ரோகிரீன்ஸ் உற்பத்தி செய்யும் அளவிற்குத் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>மாதம் ரூ.12 லட்சம்... ஆண்டுக்கு ரூ.1.44 கோடி வருவாய்</h2><p>தற்போது 'கிரீனு மைக்ரோகிரீன்ஸ்' நிறுவனம் மூலம் மோஹித் நிஜவனுக்கு மாதத்திற்கு சுமார் ரூ.12 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஆண்டு வருமானமாக தோராயமாக ரூ.1.44 கோடியை பெற்று வருகிறார். </p><p>இது குறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் இவரது வீடியோ காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது: ஊழியர்களின் அச்சத்தைப் போக்கி இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் திட்டவட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/isro-not-to-be-privatised-isro-chief-v-narayanan-assures-employees</link><comments>https://www.maalaimalar.com/news/national/isro-not-to-be-privatised-isro-chief-v-narayanan-assures-employees#comments</comments><guid isPermaLink="false">ee0b6c5c-37d8-4716-be64-56226eb6cb96</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:28:02 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:28:02.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,V.Narayanan,Bengaluru Space Expo,வி.நாராயணன்,இன்ஸ்பேஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/cvj1lfb8/FFD.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  V.Narayanan  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/cvj1lfb8/FFD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> "எதிர்காலத்தில் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்புப் பணிகளைத் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளும்" என்று ‘இன்ஸ்பேஸ்’ தலைவர் பவன் கோயங்கா பேசியதாகச் செய்திகள் வெளியாயின. </p><p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ தனியார்மயமாக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன் விரிவான விளக்கம் அளித்துள்ளார். இந்திய விண்வெளித் துறை ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்றும், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் நலன்களும் கவலைகளும் முழுமையாக கேட்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><p>பெங்களூருவில் நடைபெற்று வரும் ‘பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போ’ நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன், "கடந்த 2020-ஆம் ஆண்டே விண்வெளித் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. தனியார் துறையினருக்கு வாய்ப்பளித்து, இந்தியாவின் ஒட்டுமொத்த விண்வெளித் தொழில்நுட்பக் கட்டமைப்பை விரிவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதற்காக இஸ்ரோ தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது என்பது முற்றிலும் தவறான செய்தி" என்று தெளிவுபடுத்தினார்.</p><p>மேலும், விண்கலன்கள் மற்றும் செயற்கைக்கோள்களை தயாரிக்கும் பணியில் பல நூற்றுக்கணக்கான இந்தியத் தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே இஸ்ரோவுக்குப் பெரும் உதவிகளை வழங்கி வருகின்றன என்பதையும், இது பல தசாப்தங்களாகத் தொடரும் நடைமுறைதான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>சமீபத்தில் விண்வெளித் துறை கட்டுப்பாட்டு அமைப்பான ‘இன்ஸ்பேஸ்’ தலைவர் பவன் கோயங்கா, "எதிர்காலத்தில் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்புப் பணிகளைத் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளும்" என்று பேசியதாகச் செய்திகள் வெளியாயின. இதைத் தொடர்ந்து, இஸ்ரோ அமைப்பைச் சேர்ந்த 9 ஊழியர் சங்கங்கள் இணைந்து தலைவர் வி.நாராயணனுக்கு செப்டம்பர் 4 அன்று 5 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதின.</p><p>அந்தக் கடிதத்தில், இஸ்ரோவின் உற்பத்திப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால் அமைப்பின் முக்கியத்துவம் குறையுமா, பணி நியமனங்கள் பாதிக்கப்படுமா மற்றும் ஊழியர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் கோரியிருந்தனர். இந்தச் சூழலில்தான் இஸ்ரோ தலைவர் இதற்கான பதிலை அளித்துள்ளார்.</p><p>இஸ்ரோ வெளியிட்ட தகவல்களின்படி, வழக்கமான ராக்கெட் தயாரிப்பு மற்றும் செயற்கைக்கோள் உற்பத்திப் பணிகளைத் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும். இதனால் இஸ்ரோ தனது கவனத்தை அதிநவீன ஆராய்ச்சி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களில் முழுமையாகச் செலுத்த முடியும்.</p><p>குறிப்பாக, 2035-க்குள் இந்திய விண்வெளி மையம் அமைத்தல், 2040-க்குள் நிலவுக்கு இந்தியர்களை அனுப்பும் திட்டம், மீண்டும் பயன்படுத்தக்கூடிய நவீன ராக்கெட்டுகளை உருவாக்குதல் மற்றும் ஆழமான விண்வெளி ஆராய்ச்சிகள் போன்ற முக்கிய தொலைநோக்கு இலக்குகளை நோக்கி இஸ்ரோ மிக தீவிரமாகச் செயல்பட உள்ளது.</p><p>எனவே, தேசிய பாதுகாப்பு சார்ந்த முக்கிய உள்கட்டமைப்புகளும் முதன்மை விண்வெளி ஆராய்ச்சி உரிமைகளும் எப்போதும் இந்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும், இஸ்ரோவின் முக்கியத்துவம் எக்காலத்திலும் குறையாது என்றும் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதலீடு செய்யும் பணத்திற்கு தினமும் 1% வட்டி: நூதன முறையில் ரூ.7 கோடி மோசடி</title><link>https://www.maalaimalar.com/news/national/daily-1-percent-return-investment-7-crore-fraud</link><comments>https://www.maalaimalar.com/news/national/daily-1-percent-return-investment-7-crore-fraud#comments</comments><guid isPermaLink="false">5c060fa5-ee8e-40d1-9404-3cd4657dc9b5</guid><pubDate>Mon, 07 Sep 2026 10:26:20 +0000</pubDate><atom:updated>2026-09-07T10:26:20.062Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,மோசடி,scam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/pfyd1hp0/Untitled-design-31.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Maharashtra investment fraud]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/pfyd1hp0/Untitled-design-31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் பொதுமக்களிடம் தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு தினமும் 1% திருப்பி தருவதாக கூறி, 67 முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 7 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட பிரசாந்த் அங்னே என்பவர் மீது டோம்பிவ்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE">மகராஷ்டிராவில்</a> உள்ள டோம்பிவ்லி பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு, பிரசாந்த் அங்னே மற்றும் அவரது மனைவி பல்லவி ஆகியோர் இணைந்து ‘கன்கன்ஸ்மார்ட் ஷேர்ஸ் அண்ட் ஸ்டாக் புரோக்கர் பிரைவேட் லிமிடெட்’ என்ற முதலீட்டு நிறுவனத்தை ஆரம்பித்தனர்.</p><p>இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களிடம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து 52 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ. 2.77 கோடிக்கும் அதிகமாக ஏமாற்றியதாக, மும்பை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நிறுவனர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.  </p><p>இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.</p><h3><strong>தினமும் 1 சதவீதம் தருவதாக மோசடி</strong></h3><p>இந்த நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிரசாந்த் தற்போது மீண்டும் பொதுமக்களிடம், தாங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு தினமும் 1 சதவீதம் வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி பணத்தை ஏமாற்றிவிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><h3><strong>உதவி காவல் ஆணையர்</strong></h3><p>இதுகுறித்து டோம்பிவ்லி உதவி காவல் ஆணையர் விஜய் மராத்தே கூறுகையில், மகராஷ்டிராவில் உள்ள மராத்தே, பாண்டுப், டோம்பிவ்லி மற்றும் தானே ஆகிய பகுதிகளில் பிரசாந்த் மீது மூன்று வழக்குகள் உள்ளதாக தெரிவித்தார்.</p><p>மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் அவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து, இந்த வழக்கில் உயர்மட்ட அளவிலான விசாரணையை தொடங்கியுள்ளோம்.</p><p>தற்போது வரையில் 67 முதலீட்டாளர்கள் தாங்கள் ரூ.7 கோடி வரை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். இருப்பினும், முதலீட்டாளர்கள் இதைவிட அதிமான அளவில் பணத்தை இழந்திருக்க வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி விடுதி கட்டிட விபத்து: 7 பேரை பலி கொண்ட கட்டட உரிமையாளர் ராஜஸ்தானில் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-lodge-building-accident-owner-arrested-in-rajasthan</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-lodge-building-accident-owner-arrested-in-rajasthan#comments</comments><guid isPermaLink="false">83411828-23a0-4fc3-a57b-822261597904</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:58:09 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:58:09.614Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,delhi,Delhi Building Collapse,ராஜஸ்தான்,Satya Niketan,சத்ய நிகேதன்,டெல்லி விடுதி கட்டிட விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/h5ig7yro/nn.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi building collapse ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/h5ig7yro/nn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள இந்த 5 அடுக்குக் கட்டிடம், மாணவர்களுக்கான தனியார் விடுதியாகச் செயல்பட்டு வந்தது. </p><p>டெல்லி <a href="https://www.maalaimalar.com/news/national/six-killed-five-storey-building-collapses-in-delhi">சத்ய நிகேதன் </a>பகுதியில் செயல்பட்டு வந்த 5 அடுக்குகள் கொண்ட மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் ஹரிராம் குப்தாவை டெல்லி காவல்துறையினர் ராஜஸ்தான் மாநிலத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.</p><h2>24 மணி நே<strong>ர தீவிர தேடு</strong>தல் வேட்டை</h2><p>விபத்து நடந்ததைத் தொடர்ந்து, கட்டட உரிமையாளர் ஹரிராம் குப்தா சம்பவ இடத்திலிருந்து தலைமறைவானார். இதையடுத்து, டெல்லி காவல்துறை அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் லுக்-அவுட் சுற்றறிக்கை செய்ததுடன், அவரது பாஸ்போர்ட் விவரங்களையும் கைப்பற்றித் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியது. சுமார் 10 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையின் முடிவில், ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதிக்கு அருகில் பதுங்கியிருந்த ஹரிராம் குப்தாவை டெல்லி காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.</p><p>தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள இந்த 5 அடுக்குக் கட்டிடம், மாணவர்களுக்கான தனியார் விடுதியாகச் செயல்பட்டு வந்தது. பழமையான இந்தக் கட்டிடத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், எதிர்பாராதவிதமாக முழு கட்டிடமும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.</p><p>இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், தீயணைப்புத் துறையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இடிபாடுகளிலிருந்து 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தக் கொடூர விபத்தைத் தொடர்ந்து, கட்டிடத்தின் பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் அலட்சியப் போக்கு தொடர்பாக டெல்லி மாநகராட்சி கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய தென் மண்டலத் துணை ஆணையர், நிர்வாகப் பொறியாளர், உதவிப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட பல மாநகராட்சி அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள உரிமையாளர் ஹரிராம் குப்தாவிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வேலைக்கு போக பயந்து AI-யில் போலி புலி வீடியோ... கர்நாடக வாலிபருக்கு வனத்துறை கொடுத்த நூதன தண்டனை!</title><link>https://www.maalaimalar.com/news/national/ai-fake-tiger-video-to-escape-work-karnataka-forest-department-gives-innovative-punishment</link><comments>https://www.maalaimalar.com/news/national/ai-fake-tiger-video-to-escape-work-karnataka-forest-department-gives-innovative-punishment#comments</comments><guid isPermaLink="false">9ebea42e-1da6-4b2a-99ac-421e8f974c82</guid><pubDate>Mon, 07 Sep 2026 08:08:16 +0000</pubDate><atom:updated>2026-09-07T08:08:16.730Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,Forest Department,AI Video,வனத்துறை அதிகாரிகள்,போலி வீடியோ,Koppal,Fake Tiger Video</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zt95q9cg/Fake-Tiger-Video" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fake Tiger Video  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zt95q9cg/Fake-Tiger-Video?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகாவில் </a>சோம்பேறித்தனத்தால் வேலைக்குச் செல்ல பயந்த வாலிபர் ஒருவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புலி வீடியோ ஒன்றை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><h2><strong>சம்பவத்தின் பின்னணி</strong></h2><p>கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தின் டவுன் பகுதியில் உள்ள காவலி கிராமத்தைச் சேர்ந்த 25 வயது வாலிபரான ஈரண்ணாவுக்கு, வனப்பகுதியை ஒட்டியவாறு ஒரு தோட்டம் சொந்தமாக உள்ளது. </p><p>அந்தத் தோட்டத்திற்குச் சென்று வேலை பார்க்குமாறு அவரது குடும்பத்தினர் ஈரண்ணாவைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.</p><p>குடும்பத்தினரின் தொல்லையிலிருந்து தப்பிக்க நினைத்த ஈரண்ணா, தனது தோட்டத்தில் ஒரு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF">புலி </a>உலா வருவது போன்ற காட்சியை ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் போலியாக ஒரு வீடியோவாகத் தயாரித்தார். </p><p>பின்னர் அதைத் தனது குடும்பத்தினரிடம் காட்டி, "தோட்டத்தில் புலி சுற்றுகிறது, என்னால் வேலைக்குச் செல்ல முடியாது" என்று கூறி தப்ப முயன்றுள்ளார். </p><p>மேலும், அந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட, அது காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2><strong>வனத்துறை விசாரணை மற்றும் அம்பலமான உண்மை</strong></h2><p>வீடியோவை உண்மை என்று நம்பிய ஈரண்ணாவின் குடும்பத்தினரும், கிராம மக்களும் உடனடியாக <a href="https://www.maalaimalar.com/topic/forest-officer">வனத்துறை அதிகாரிகளுக்கு</a> அச்சத்துடன் தகவல் தெரிவித்தனர்.</p><p>தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் ஈரண்ணாவின் தோட்டத்திற்கு விரைந்து சென்று தீவிரமாக ஆய்வு செய்தனர்.</p><p>ஆனால், தோட்டம் முழுவதும் தேடியும் புலியின் கால் தடங்கள் எதுவும் சிக்காததால் அதிகாரிகளுக்குச் சந்தேகம் எழுந்தது.</p><p>இதையடுத்து ஈரண்ணாவை நேரில் அழைத்து வனத்துறையினர் தங்களது பாணியில் விசாரித்தனர். </p><p>அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தான் வேலைக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காகவே ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் போலி புலி வீடியோவை உருவாக்கி சமூக வலைதளத்தில் பரப்பியதை ஈரண்ணா ஒப்புக்கொண்டார்.</p><h2><strong>அதிகாரிகளின் நூதன தண்டனை</strong></h2><p>பொய்யான தகவலைப் பரப்பி கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியதற்கும், வனத்துறையினரின் பொன்னான நேரத்தை வீணடித்ததற்கும் ஈரண்ணாவுக்கு ஒரு படிப்பினையான நூதன தண்டனையை அதிகாரிகள் வழங்கினர்.</p><p>ஈரண்ணாவை அவரது தோட்டத்திற்கே அழைத்துச் சென்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">வனத்துறையினர்</a>, அங்கிருந்த கிராம மக்கள் அனைவரின் முன்னிலையிலும் அவரை <strong>50 தோப்புக்கரணம்</strong> போட வைத்தனர்.</p><p>அதோடு நின்றுவிடாமல், இனிமேல் இதுபோன்ற ஆபத்தான மற்றும் போலி வேலைகளில் ஈடுபடக் கூடாது என்று அவரைக் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். </p><p>இந்நிலையில், ஈரண்ணா தோப்புக்கரணம் போடும் அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>இறந்துவிட்டதாக சுடுகாட்டில் தகனம்: 27 மாதங்களுக்கு பின் உயிருடன் வீடு திரும்பிய பெண்: லக்னோவில் அதிர்ச்சித் திருப்பம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/lucknow-woman-cremated-as-dead-returns-home-alive-after-27-months</link><comments>https://www.maalaimalar.com/news/national/lucknow-woman-cremated-as-dead-returns-home-alive-after-27-months#comments</comments><guid isPermaLink="false">a8964055-a950-49f4-bf42-aba2ba3ba806</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:57:49 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:57:49.258Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உத்தரபிரதேசம்,வரதட்சணை கொடுமை,uttarpradesh,லக்னோ,lucknow,DNATest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/29dawgak/vadakki.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Woman returns home alive]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/29dawgak/vadakki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், இறந்துவிட்டதாகக் கருதி குடும்பத்தினரால் இறுதிச்சடங்குகள் செய்து தகனம் செய்யப்பட்ட இளம்பெண் உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shock-in-telangana-midnight-baby-thrown-from-auto">லக்னோவின் </a>பி.கே.டி பகுதிக்கு உட்பட்ட நாவிகோட் நந்தனா கிராமத்தைச் சேர்ந்த ஷிவானி என்ற பெண், கடந்த 2024-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இதைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2024 ஜூலை 16 அன்று ஐ.ஐ.எம் சாலைக்கு பின்புறம் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் இருந்து அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தை காவல்துறை மீட்டது.</p><p>மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அந்த உடலை பார்வையிட்ட ஷிவானியின் குடும்பத்தினர், கையில் கட்டப்பட்டிருந்த காப்பு மற்றும் விரலில் இருந்த மோதிரத்தை வைத்து அது ஷிவானிதான் என அடையாளம் காட்டினர். அதைத் தொடர்ந்து, அந்த உடலைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தினர் பைன்சாகுண்ட் மயானத்தில் தகனமும் செய்தனர்.</p><h2>வரதட்<strong>சணை வழக்கு</strong></h2><p>உடலை அடையாளம் காட்டிய கையோடு, ஷிவானியின் குடும்பத்தினர் அவருடைய கணவர் மற்றும் மாமனார் வீட்டினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஷிவானியை வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்தி கொலை செய்து உடலை வீசிவிட்டதாகக் குற்றம் சாட்டினர். இதன் அடிப்படையில் காவல்துறை வரதட்சணைக் கொடுமை, கடத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது.</p><h2>டி.எ<strong>ன்.ஏ சோதனையில் வெளிவ</strong>ந்த உண்மை</h2><p>அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடலின் அடையாளம் உறுதியாகத் தெரியாததால், உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் சோதனைகளின் ஒரு பகுதியாக டி.என்.ஏ மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதன் முடிவுகள் பின்னரே வெளிவந்தன. அதில், தகனம் செய்யப்பட்ட உடலின் டி.என்.ஏ மாதிரியும், ஷிவானியின் பெற்றோரின் டி.என்.ஏ மாதிரியும் பொருந்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மீட்கப்பட்ட உடல் ஷிவானியுடையது அல்ல என்பது தெரியவந்ததை அடுத்து, வரதட்சணைக்கொடுமை பிரிவுகள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டன.</p><h2>27 மாதங்களு<strong>க்குப் பின் உயி</strong>ருடன் திரும்பிய ஷிவானி</h2><p>இந்நிலையில், காணாமல் போய் 27 மாதங்கள் கழித்து கடந்த சனிக்கிழமை அன்று ஷிவானி திடீரென தனது பெற்றோர் வீட்டிற்கு நேரில் வந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் காவல்துறையினரும் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஷிவானி பரா பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருக்கும் கழிப்பறையை நிர்வகித்து வரும் ஜாவேத் என்பவருடன் தங்கியிருந்தது தெரியவந்தது. பலமுறை வீட்டிற்குத் திரும்புமாறு ஜாவேத் அறிவுறுத்தியும், அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது தனது சொந்த விருப்பத்தின் பேரில் அவர் வீடு திரும்பியுள்ளார்.</p><p>ஷிவானி உயிருடன் திரும்பியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். ஷிவானி தானாகவே வீட்டை விட்டு வெளியேறினாரா அல்லது யாரேனும் அவரைக் கடத்தினார்களா என்பது குறித்து நீதிபதி முன் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p>அதேவேளையில், லக்னோ காவல்துறைக்கு மற்றொரு பெரிய புதிர் எழுந்துள்ளது. ஷிவானி உயிருடன் இருக்கும் பட்சத்தில், கால்வாயில் இருந்து மீட்கப்பட்டு ஷிவானி என நம்பி குடும்பத்தினரால் எரிக்கப்பட்ட அந்த அடையாளம் தெரியாத பெண் யார், அவரைப் படுகொலை செய்தது யார் என்ற கோணத்தில் காவல்துறை தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title> 2029-க்குள் போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது - அமித்ஷா!</title><link>https://www.maalaimalar.com/news/national/special-plan-to-make-india-drug-free-by-2029-says-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/national/special-plan-to-make-india-drug-free-by-2029-says-amit-shah#comments</comments><guid isPermaLink="false">b4bc613b-d4a0-4562-8e07-74681c007632</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:37:48 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:37:48.050Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவா,அமித்ஷா,pmmodi,பிரதமர் மோடி,union minister Amitshah,Goa Visit,போதைப்பொருள் இல்லா இந்தியா,NationalSecurity,Dru gFree India</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/oo6ikdgs/AmitShah" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AmitShah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/oo6ikdgs/AmitShah?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE">மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா</a> கோவாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். </p><p>கோவாவின் தலைநகர் பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.</p><h2>தேசிய பாதுகாப்புக்கான முன்னுரிமை</h2><p>செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா, "போதைப்பொருள் இல்லா இளைஞர் சக்தி இந்தியாவை 2047-ல் வளர்ந்த பாரதமாக மாற்றும் என்பதே<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF"> பிரதமர் மோடியின் </a>உறுதிப்பாடு ஆகும். </p><p>கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆங்காங்கே சிறிய அளவிலேயே நடந்து வந்தன. </p><p>ஆனால், எங்களது தற்போதைய அரசு இந்த போராட்டத்தை தேசிய பாதுகாப்புக்கான முன்னுரிமையுடன் மிகத் தீவிரமாக நடத்தி வருகிறது" என்று குறிப்பிட்டார்.</p><h2><strong>2029-க்குள் போதைப்பொருள் இல்லா இந்தியா</strong></h2><p>மேலும் அவர் பேசுகையில், நாட்டில் <a href="https://www.maalaimalar.com/topic/naxals">நக்சல் </a>பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அரசு எவ்வாறு பணியாற்றியதோ, அதேபோல போதைப்பொருளுக்கு எதிராகவும் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். </p><p>அந்த வகையில், வரும் 2029-ம் ஆண்டுக்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லா நாடாக மாற்றுவதற்கான ஒரு சிறப்புச் செயல் திட்டத்தைப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தயாரித்து வைத்திருக்கிறது என்றும் மந்திரி அமித்ஷா உறுதிபடத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தெலுங்கானாவில் அதிர்ச்சி: நள்ளிரவில் ஆட்டோவில் இருந்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தை-வளர்க்க திரண்ட மக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/shock-in-telangana-midnight-baby-thrown-from-auto</link><comments>https://www.maalaimalar.com/news/national/shock-in-telangana-midnight-baby-thrown-from-auto#comments</comments><guid isPermaLink="false">cf219580-1726-4bfd-9f50-27ebdc069056</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:14:51 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:14:51.377Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Telangana,Humanity,தெலுங்கானா,ChildProtection,Mahabubnagar,மகபூப் நகர்,குழந்தை தத்தெடுப்புச் சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/ekaqb98i/baby.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ChildProtection]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/ekaqb98i/baby.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தை மீட்கப்பட்ட செய்தி அப்பகுதியில் பரவியதும், ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனைக்குத் திரண்டு வந்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bye-bye-dad-young-woman-jumps-from-bridge-with-a-smile-shocking-video-what-happened">தெலுங்கானா மாநிலம்</a> மகபூப் நகரில் உள்ள நியூ டவுன் பகுதியில் நள்ளிரவில் அதிவேகமாக வந்த ஓர் ஆட்டோவில் இருந்த நபர்கள், சால்வை மற்றும் சிறிய மெத்தையில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு பச்சிளம் குழந்தையை  சாலையோரம் தூக்கி வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர். சாலையோரத்தில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டகவே அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் தாமதிக்காமல் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.</p><h2>மருத்துவம<strong>னையி</strong>ல் அனுமதி </h2><p>தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையைப் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர். இதற்கிடையே, குழந்தையை வீசிச் சென்ற மர்ம நபர்களைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p><h2>குழந்<strong>தையை வளர்</strong>க்க மக்கள் விருப்பம்</h2><p>குழந்தை மீட்கப்பட்ட செய்தி அப்பகுதியில் பரவியதும், ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனைக்குத் திரண்டு வந்தனர். மீட்கப்பட்ட அந்தப் பச்சிளம் குழந்தையைத் தாங்களே தத்தெடுத்து வளர்ப்பதாகக் கூறிப் பலரும் விருப்பம் தெரிவித்தனர்.  பொதுமக்களின் இந்த நெகிழ்ச்சியான கோரிக்கையை ஏற்ற மருத்துவர்கள், குழந்தையை நேரடியாகத் தத்துக் கொடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தெளிவுபடுத்தினர். குழந்தை தத்தெடுப்புச் சட்ட நடைமுறைகளின்படி, இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தை  அணுகுமாறு அங்கிருந்த மக்களுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் 5 மாடி கட்டிடம் இடிந்ததில் 6 பேர் பலி: இடிபாடுகளில் சிக்கிய
9 பேர் உயிருடன் மீட்பு - மாணவர்கள்  போராட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/six-killed-five-storey-building-collapses-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/six-killed-five-storey-building-collapses-in-delhi#comments</comments><guid isPermaLink="false">0d3a8978-f25d-4d19-88ee-f30c6afcbeff</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:53:44 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:53:44.370Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>student protest,கட்டிட விபத்து,Building Collapse,ரேகா குப்தா,Rekha Gupta,delhi university,delhi,டெல்லி,Satya Niketan,சத்ய நிகேதன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4o55fk3o/University-Student-Protest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ University Student Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4o55fk3o/University-Student-Protest?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லி </a>தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சத்ய நிகேதன் மண்டலத்தில், மாணவர்கள் தங்கியிருந்த ‘ஹாஸ்டல் டேஸ்’ என்ற 5 மாடி விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. </p><p>இக்கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>கட்டுமான பணி</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">டெல்லி பல்கலைக்கழக</a> தெற்கு வளாகத்தின் அருகே அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் மண் தோண்டும் பணிகளும், கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.</p><p>மேல்பகுதியை வலுப்படுத்திய போதிலும், கீழிருந்த தூண்கள் பலவீனமாக இருந்ததே <a href="https://www.maalaimalar.com/news/national/death-toll-rises-to-6-in-delhi-student-hostel-collapse-cctv-footage-of-the-incident-released">கட்டிடம் இடிந்து</a> விழக் காரணம் என அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர். சுமார்</p><p>40 முதல் 50 ஆண்டுகள் மட்டுமே பழமையான இந்த கட்டிடம் 100 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்ததாகவும், வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஆபத்தான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.</p><p>நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டது. விடுமுறை நாள் என்பதால் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது அறைகளிலேயே தங்கியிருந்தனர்.</p><h2>9 பேர் மீட்பு</h2><p>கட்டிடம் இடிந்து விழுந்த அதிர்ச்சியில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிலர், தங்களது தொலைபேசி மூலம் உறவினர்கள் மற்றும் மீட்பு குழுவினரை தொடர்பு கொண்டு உதவி கோரியது நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.</p><p>சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தேசிய<a href="https://www.maalaimalar.com/topic/disaster-response-force"> பேரிடர் மீட்புப் படையினர்</a>, தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.</p><p>இதுவரை 9 பேர் மீட்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>இடிந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த மற்றொரு கட்டிடமும் சேதமடையும் அபாயம் ஏற்பட்டதால், டெல்லி முதல்-அமைச்சர் ரேகா குப்தாவின் உத்தரவின் பேரில் அங்கு தங்கியிருந்த அனைவரும் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.</p><h2>மாணவர்கள் போராட்டம்</h2><p>மேலும் விபத்தில் தொடர்புடைய விடுதியின் உரிமையாளரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>இதனிடையே டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான தனியார் விடுதிகளில் போதிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றும், வணிக நோக்கத்திற்காக குறைந்த வசதிகளுடன் மாணவர்களின் உயிரோடு விளையாடுவதாகவும் கூறி மாணவர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.</p><p>இந்திய தேசிய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்பினரும், டெல்லி பல்கலைக்கழக மாணவர்களும் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை மற்றும் தீவிரப் போராட்ட ங்களில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும், கட்டிட உரிமையாளர் மற்றும் அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மேலும் டெல்லி முழுவதும் உள்ள அனைத்து தனியார் விடுதிகளிலும் உடனடியாக பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">மாணவர்கள் போராட்டத்தில்</a> ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>Bye Bye அப்பா.. சிரித்தபடி பாலத்தில் இருந்து குதித்த இளம்பெண் - அதிரவைத்த வீடியோ - என்ன நடந்தது? </title><link>https://www.maalaimalar.com/news/national/bye-bye-dad-young-woman-jumps-from-bridge-with-a-smile-shocking-video-what-happened</link><comments>https://www.maalaimalar.com/news/national/bye-bye-dad-young-woman-jumps-from-bridge-with-a-smile-shocking-video-what-happened#comments</comments><guid isPermaLink="false">48b0d31e-adb9-4883-9f42-4233e43ef3c6</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:37:25 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:37:25.344Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>young woman,ஜம்மு காஷ்மீர்,Suicide attempt,தற்கொலை முயற்சி,Jammu &amp; Kashmir,இளம்பெண்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/d9db0g14/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வீடியோ ]]></media:title><media:description type="html"><![CDATA[ வீடியோ ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/d9db0g14/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போனில் தனது தந்தையிடம் "பை, பை அப்பா" என சிரித்தபடி கூறியவாறு 21 வயது இளம்பெண் நதியில் குதித்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/jammu-and-kashmir">ஜம்மு காஷ்மீர்</a> தோதா மாவட்டத்தில்  பிரேம் நகர் அருகே உள்ள சிவா தால்  பாலத்தில் இருந்து நேற்று முன் தினம் நண்பகல் பாயல் தேவி  என்ற அப்பெண் செனாப் நதியில் குதித்துள்ளார். </p> <h2>என்ன நடந்தது?</h2><p>நேற்று முன் தினம் காலை உள்ளூர் திருவிழாவிற்கு சென்ற அவர், உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனை சென்று வருவதாக தனது தந்தை கிருஷண லாலுக்கு போன் செய்து கூறியுள்ளார்.</p><p>ஆனால் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் அவர் தனது கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.</p> <p>அப்போது எதிர்பாராதவிதமாக பாயலின் துப்பட்டா பைக்கின் சக்கரத்தில் சிக்கியுள்ளது.</p><p>இதனால் அந்த நபர் வண்டியை நிறுத்தி துப்பட்டாவை எடுக்க முயன்றுள்ளார். அதேநேரம் பாயல் திடீரென,  "நான் <a href="https://www.maalaimalar.com/topic/suicide">தற்கொலை </a>செய்து கொள்ளப் போறேன்" என கத்தியபடி அருகில் இருந்த பாலத்தை நோக்கி ஓடியுள்ளார்.</p><p>அங்கிருந்தவர்கள் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து அவரை சமாதானப்படுத்த முயன்றனர்</p> <h2>பை பை அப்பா</h2><p>பாயலை அழைத்து வந்த நபர் தந்தை கிருஷ்ண லாலுக்கு போன் செய்து உங்கள் மகள் பாலத்தில் இருந்து கீழே குதிக்க முயற்சிப்பதாகதெரிவித்துள்ளார்.</p><p>பதறிய தந்தை கிருஷ்ண லால், மகளிளின் போனுக்கு கால் அடித்துள்ளார். பாயல் போனை எடுக்க அவரிடம், "என்ன ஆச்சு, யாராவது உன்னை ஏதவாது செய்தார்களா?" என கிருஷண லால் கேட்டுள்ளார்.</p><p>அதற்குப் பாயல் தேவி, " அதெல்லாம் இல்ல அப்பா. இது என் வாழ்க்கை, எனக்கு இப்படிப் போக வேண்டும் என்று தோன்றுகிறது. பை பை அப்பா" எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.</p><p>அதன்பின்னர் அவர் அங்கிருந்தவர்களுக்கு பை பை சொல்லியபடி நதியில் குதித்துள்ளார்.</p><p>பாயல் பாலத்தில் நின்றிருந்த காட்சிகளும், சிரித்தபடி அவர் பை, பை சொன்னதும், அங்கிருந்தவர்கள் அவரைத் தடுக்க முயல்வதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.</p><p>பாயல் நதியில் குதித்த செய்தி அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறை செனாப் நதியில் இறங்கி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இதுவரை அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை.</p><p>மருத்துவரைப் பார்க்கச் சென்ற பெண்ணுக்கு பாலத்திற்கு வருவதற்குள் என்ன நடந்தது? என்பது குறித்துகாவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">She Called Her Father to Say Goodbye... He Didn&#39;t Know It Was the Last Time.<br><br>A 21-year-old girl, Payal Devi, lost her life after jumping into the Chenab River.<br><br>It is heartbreaking to think about the pain she must have been carrying silently. <a href="https://t.co/fKl9O5Vs6T">pic.twitter.com/fKl9O5Vs6T</a></p>&mdash; زماں (@Delhiite_) <a href="https://x.com/Delhiite_/status/2096555025363579005?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராய பலி 12 ஆக உயர்வு- 14 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/11-killed-liquor-in-madhya-pradesh-case-14-people-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/national/11-killed-liquor-in-madhya-pradesh-case-14-people-arrest#comments</comments><guid isPermaLink="false">5cd74302-3fd8-49ff-9b61-43efceeb9bac</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:31:12 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:31:12.656Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய பிரதேசம்,liquor,கள்ளச்சாராயம்,சாராயம்,Madhya Pradeshs</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/blnoxslv/madhyapradeshs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madhya Pradesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/blnoxslv/madhyapradeshs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.</p><p>மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பண்டா தாலுகா உள்ளது. இதன் அருகே உள்ள 4 கிராமத்தை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனர். இதில் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><h2><strong>கள்ளச்சாராயம்</strong></h2><p>நேற்று 11 பேர் கள்ளச்சாராயத்திற்கு பலியாகி இருந்தனர். 54 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 30-க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் ஆஸ்பத்திரியில் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.</p><h2><strong>கைது</strong></h2><p>இது தொடர்பாக போலீசார் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு தனியார்மயமாக்கல் கிடையாது  - இஸ்ரோ விளக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/national/contribution-of-private-companies-no-privatization-isro-clarification</link><comments>https://www.maalaimalar.com/news/national/contribution-of-private-companies-no-privatization-isro-clarification#comments</comments><guid isPermaLink="false">3a9a8189-84b4-4b03-8aa5-51dc25a0b894</guid><pubDate>Mon, 07 Sep 2026 03:04:10 +0000</pubDate><atom:updated>2026-09-07T03:04:10.431Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரோ,தனியார்மயமாக்கல்,விண்வெளித் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/s6jn0s78/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இஸ்ரோ]]></media:title><media:description type="html"><![CDATA[ இஸ்ரோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/s6jn0s78/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு தனியார்மயமாக்கல் கிடையாது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மறுத்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/isro">இஸ்ரோவின் </a>உற்பத்தி மற்றும் செயல்பாட்டு பொறுப்புகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து இஸ்ரோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. </p> <h2>அறிக்கை</h2><p>அதில், இது முற்றிலும் ஆதாரமற்ற தவறான செய்திகள் என்றும், இஸ்ரோவை தனியார்மயமாக்கும் எண்ணமோ அல்லது அதன் முக்கியத்துவத்தை குறைக்கும் திட்டமோ இல்லை என தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>மேலும், "இந்தியாவின் முதன்மை விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனமாக இஸ்ரோவே தொடர்ந்து செயல்படும்.</p><p>தேசிய அளவிலான விண்வெளி திட்டங்கள், விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுப் பணிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இஸ்ரோவின் முக்கியப் பங்கு தொடரும்.</p><p>விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்களிப்பை வரவேற்பது இஸ்ரோவின் பொறுப்புகளைக் குறைப்பதற்காக அல்ல.</p> <p>மாறாக இந்தியாவின் அடுத்தகட்ட விண்வெளி இலக்குகளில் இஸ்ரோ அதிக கவனம் செலுத்துவதற்காகவே ஆகும்.</p><p>ஏற்கனவே வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்பாட்டுத் திறன்களை மேலும் விரிவுபடுத்துவதில் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும்.</p><p>இதனால் இஸ்ரோவின் முக்கியத்துவம் மாறவில்லை. மாறாக இந்தியாவின் விண்வெளித் துறையின் அளவும் கட்டமைப்பும் விரிவடைகிறது.</p><p>தற்போதைய சீர்திருத்தங்களை தனியார்மயமாக்கலாகப் பார்க்காமல், விண்வெளித் துறையின் திறன் மேம்பாடாகவே பார்க்க வேண்டும்" என இஸ்ரோ விளக்கியுள்ளது.</p> <h2>கடிதம்</h2><p>முன்னதாக, உற்பத்தி மற்றும் செயல்பாட்டுப் பொறுப்புகள் சில தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான செய்திகளின் பின்னணியில் இஸ்ரோ ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய 9 தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த செப்டம்பர் 4 அன்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணனுக்குக் கடிதம் எழுதியிருந்தன.</p><p>அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் இஸ்ரோவின் எதிர்காலப் பங்கு குறித்து தெளிவுபடுத்துமாறு அந்த அமைப்புகள் கோரியிருந்த நிலையில், தற்போது இஸ்ரோ இந்த விளக்கத்தை அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில்  64 % பேர் ஊதியமின்றி கூடுதல் நேரம் வேலை செய்கின்றனர் - ஆய்வில் ஷாக் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/64-of-people-in-india-work-unpaid-overtime-shocking-study</link><comments>https://www.maalaimalar.com/news/national/64-of-people-in-india-work-unpaid-overtime-shocking-study#comments</comments><guid isPermaLink="false">d0d0842a-ce19-4157-82bc-f321a7d8f9a0</guid><pubDate>Mon, 07 Sep 2026 02:48:32 +0000</pubDate><atom:updated>2026-09-07T02:48:32.584Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Work pressure,workload,வேலை,work,பணி அழுத்தம்,பணிச்ச்சுமை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rygg4hj6/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Overtime work]]></media:title><media:description type="html"><![CDATA[ Overtime work]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rygg4hj6/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் 64 சதவீதம் பேர் ஊதியம் இன்றி பணி நேரத்தை தாண்டி வேலை செய்கின்றனர் என தெரியவந்துள்ளது.</p> <p>ஏடிபி ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள 'பீப்பிள் அட் வொர்க் 2026' என்ற ஆய்வறிக்கையில் இது தெரியவந்துள்ளது. </p><p>36 உலக நாடுகளைச் சேர்ந்த 39,000க்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன.</p> <h2>இந்தியா</h2><p>இந்தியாவில் <a href="https://www.maalaimalar.com/news/world/why-do-astronauts-struggle-to-defecate-in-space-what-happens-to-the-body-a-study-reveals-the-answer">ஆய்வு </a>செய்யப்பட்ட பணியாளர்களில் 24% பேர் வாரத்திற்கு 16 மணிநேரம் அல்லது அதற்கு மேலாக எந்தவிதக் கூடுதல் ஊதியமும் இன்றி பணிபுரிகின்றனர்.</p><p>மேலும் 40% பணியாளர்கள் வாரத்திற்கு 6 முதல் 15 மணிநேரம் வரை ஊதியமின்றி வேலை செய்கின்றனர்.</p> <p>இதன் மூலம் இந்தியாவில் சுமார் 64% பணியாளர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 6 மணிநேரமாவது கூடுதல் ஊதியமின்றி உழைப்பது தெரியவந்துள்ளது.</p><p>மதிய உணவு இடைவேளையில் வேலை பார்ப்பது, பணி நேரம் முடிந்த பிறகும் தாமதமாக அலுவலகத்தில் தங்குவது போன்றவற்றை 'ஊதியமில்லா வேலை' என ஆய்வு வரையறுக்கிறது.</p> <h2>உலகச் சராசரி</h2><p>உலக அளவில் 62% பணியாளர்கள் வாரத்திற்கு 5 மணிநேரம் வரை ஊதியமின்றிப் பணியாற்றுகின்றனர். 12% பேர் மட்டுமே 16 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்கின்றனர்.</p><p>ஊதியமின்றி 16 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்வதில் இந்தியாவுட் ( 24 %) அடுத்தபடியாக துருக்கி (23%), ஆஸ்திரியா (21%) மற்றும் அமெரிக்கா (20%) ஆகியவை உள்ளன.</p> <p>செக் குடியரசில் வெறும் 4% பணியாளர்களும், சீனா, தைவான் மற்றும் ஜப்பானில் தலா 6% பணியாளர்களும் மட்டுமே வாரத்திற்கு 16 மணிநேரத்திற்கு மேல் ஊதியமின்றி வேலை செய்கின்றனர்.</p><p>சாதாரணப் பணியாளர்களை விட <a href="https://www.maalaimalar.com/news/national/new-employee-resigns-in-6-hours-manager-linkedin-post">உயர் பதவிகளில் </a>உள்ளவர்களே 50% பேர் கூடுதல் நேரம் வேலை செய்கின்றனர்.</p><p>அலுவலகம் வந்து பணிபுரிபவர்களை (12%) விட, வீட்டிலிருந்தே பணிபுரிபவர்களே (13%) வாரத்திற்கு 16 மணிநேரத்திற்கும் மேல் ஊதியமின்றி அதிக நேரம் வேலை செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.</p> <h2>மன அழுத்தம்</h2><p>கூடுதல் நேரம் ஊதியமின்றி வேலை செய்வது வேலை உற்பத்தித் திறனை அதிகரிக்கவில்லை என்றும், மாறாக அது பணியாளர்களிடையே அதிக மன அழுத்தத்தையும் சோர்வையும் உருவாக்குகிறது என்றும் அறிக்கை எச்சரிக்கிறது.</p><p>குறிப்பாக, உயர் பதவிகளில் அதிக நேரம் ஊதியமின்றி உழைக்கும் அதிகாரிகளே மன அழுத்தம் காரணமாக வேறு வேலைகளை தேடத் தொடங்குவதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. </p> ]]></content:encoded></item><item><title>டெல்லி மாணவர் விடுதி இடிந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. சம்பவத்தின் சிசிடிவி காட்சி   வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/national/death-toll-rises-to-6-in-delhi-student-hostel-collapse-cctv-footage-of-the-incident-released</link><comments>https://www.maalaimalar.com/news/national/death-toll-rises-to-6-in-delhi-student-hostel-collapse-cctv-footage-of-the-incident-released#comments</comments><guid isPermaLink="false">94a53359-b730-4ec6-9e93-5e8624e96a3e</guid><pubDate>Mon, 07 Sep 2026 02:13:51 +0000</pubDate><atom:updated>2026-09-07T02:13:51.488Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கட்டிட விபத்து,Building Collapse,டெல்லி பல்கலைக்கழகம்,delhi university,delhi,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/cksxunni/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி ]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/cksxunni/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் மாணவர்கள் தங்கியிருந்த 5 மாடி விடுதி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.</p> <p>தெற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் அருகே 5 மாடிகளை கொண்ட தனியார் மாணவர் பிஜி தங்கும் விடுதி செயல்பட்டு வந்துள்ளது. </p><p>இதில் டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்தனர். </p><h2>விபத்து </h2><p>இந்நிலையில் நேற்று மதியம் விடுதி கட்டிடம் இடிந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த மாணவர்கள் மற்றும் பிறர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினர். </p><p>இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர், சிக்கியுள்ளவர்களைத் தேடி வருகின்றனர்.  </p><p>தேசிய பேரிடர் மீட்புப் படை, டெல்லி தீயணைப்புத் துறை, காவல்துறை இணைந்து இடிபாடுகளை அகற்றி தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.  </p> <p>இரவு நேர மீட்புப் பணியின் போது மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. 10 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>இன்னும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த கட்டிடம் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. விடுதியின் உரிமையாளரை கைது செய்து டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.</p> <h2>வழக்குப்பதிவு</h2><p>இந்த விபத்து தொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.</p><p>கட்டிட உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.</p><p>ரேகா குப்தா நேற்று சம்பவ இடத்தை ஆய்வு செய்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சென்று சந்தித்தார்.</p> <p>தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>4 மற்றும் அதற்கு மேற்பட்ட தளங்களைக் கொண்ட சட்டவிரோதக் கட்டிடங்கள் மீது டெல்லி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.</p> <p>பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: CCTV footage from the building collapse site in Satya Niketan of Delhi&#39;s South-West district. Six people have lost their lives.<br><br>(Source: Local Resident) <a href="https://t.co/7MtDbb3pJF">pic.twitter.com/7MtDbb3pJF</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2096754562766119144?ref_src=twsrc%5Etfw">September 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>இந்தியா-பிரான்ஸ் உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன: பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-said-india-france-relations-have-reached-new-heights</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-said-india-france-relations-have-reached-new-heights#comments</comments><guid isPermaLink="false">c8cf67a8-eacf-492c-a000-e7b57405eacf</guid><pubDate>Sun, 06 Sep 2026 20:22:55 +0000</pubDate><atom:updated>2026-09-06T20:22:55.540Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,பிரான்ஸ்,France,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/b26pxomp/pm-modi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/b26pxomp/pm-modi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா - <a href="https://www.maalaimalar.com/news/world">பிரான்ஸ்</a> உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன என்றும், நீண்டகால கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளின் வலுவான அடித்தளத்தில் அமைந்துள்ளதால் இந்த உத்திசார் கூட்டாண்மை மிகவும் சிறப்பானது என்றும் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> தெரிவித்தார். </p><p>பாரிஸில் உள்ள சுவாமிநாராயண் கோயிலின் திறப்பு விழாவில் காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, பாரிஸில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான கோயில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் வாய்ப்புகளின் அடையாளமாக பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். </p><h2>உத்திசார் கூட்டாண்மை:</h2><p>"சமீப காலங்களில், இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான உறவுகள் புதிய உயரங்களை எட்டியுள்ளன. எனது நண்பரான அதிபர் மேக்ரானுடன் இணைந்து, இரு நாடுகளும் ஒரு சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையை உருவாக்கி வருகின்றன," என்றார்.</p><p>தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பாதுகாப்புத் துறை முதல் விண்வெளி மற்றும் பருவநிலை நடவடிக்கை வரை, இந்தியாவும் பிரான்ஸும் புதிய உத்வேகம் மற்றும் ஆற்றலுடன் இணைந்து முன்னேறி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.</p><h2>புத்தாக்க ஆண்டு:</h2><p>தொடர்ந்து பேசும் போது, "நாங்கள் 2026-ஆம் ஆண்டை 'இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டாக' கொண்டாடவுள்ளோம். நீண்டகால கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளின் வலுவான அடித்தளத்தில் அமைந்துள்ளதால் இந்த உத்திசார் கூட்டாண்மை மிகவும் சிறப்பானது.</p><p>சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்துவதில் பிரெஞ்சு அறிஞர்கள் ஆற்றிய முக்கிய பங்கை மொழி ஆர்வலர்கள் அறிவார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தர் குறித்த ரோமன் ரோலண்டின் எழுத்துக்கள் நமது சமூகங்களை ஒன்றிணைத்தன.</p><p>இன்று, யோகா நமது நாடுகளுக்கு இடையிலான மக்களுக்கு தொடர்புகளுக்கான ஒரு பாலமாக மாறியுள்ளது. சர்வதேச யோகா தினத்தில் ஈபிள் கோபுரத்தில் இருந்து வெளியான காட்சிகள், பிரான்ஸில் யோகாவுக்கு உள்ள அபாரமான பிரபலத்தை வெளிப்படுத்துகின்றன," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தால்  மிகுந்த வேதனை அடைகிறேன் - குடியரசு தலைவர் திரவுபதி முர்மு</title><link>https://www.maalaimalar.com/news/national/president-murmu-condoles-deaths-in-delhi-building-collapse</link><comments>https://www.maalaimalar.com/news/national/president-murmu-condoles-deaths-in-delhi-building-collapse#comments</comments><guid isPermaLink="false">975cf681-e0fd-438b-8c4d-51be2878169e</guid><pubDate>Sun, 06 Sep 2026 19:29:54 +0000</pubDate><atom:updated>2026-09-06T19:29:54.448Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திரவுபதி முர்மு,டெல்லி பல்கலைக்கழகம்,Delhi Building Collapse,Droupadi Murmu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/hccjcj6h/droupadi-murmu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Droupadi Murmu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/hccjcj6h/droupadi-murmu.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த துயரம் தெரிவித்துள்ள குடியரசு தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/droupadi-murmu">திரவுபதி முர்மு</a>, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். </p><p>தெற்கு <a href="https://www.maalaimalar.com/news/national">டெல்லியின்</a> சத்யா நிகேதன் பகுதியில் மாணவர்களுக்கான தங்கும் விடுதியாக செயல்பட்டு வந்த ஐந்து மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். </p><p>இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சுமார் 15 முதல் 20 பேரை மீட்கும் பணி இரவு வரை பல அமைப்புகளின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><h2>எக்ஸ் தளத்தில் இரங்கல்:</h2><p>"டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து குறித்து நான் மிகவும் வேதனை அடைகிறேன். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்," என்று ஜனாதிபதி முர்மு 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><h2>பிரதமர் இரங்கல்:</h2><p>முன்னதாக இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, எக்ஸ் தள பதிவில், "டெல்லி சத்ய நிகேதனில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இதில் தங்களது அன்பிற்குரியவரை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.</p><p>காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகள் சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மிகுந்த வேதனையளிக்கிறது.. டெல்லி மாணவர் விடுதி இடிந்த விபத்தில் 3 பேர் பலி -  பிரதமர் மோடி இரங்கல்</title><link>https://www.maalaimalar.com/news/national/deeply-distressing-pm-modi-condoles-the-collapse-of-a-student-hostel-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/deeply-distressing-pm-modi-condoles-the-collapse-of-a-student-hostel-in-delhi#comments</comments><guid isPermaLink="false">b2e77ba9-c6b9-4faa-a697-480957982375</guid><pubDate>Sun, 06 Sep 2026 15:31:19 +0000</pubDate><atom:updated>2026-09-06T15:31:19.329Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி பல்கலைக்கழகம்,பிரதமர் மோடி,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/tjdkk2zg/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி விபத்து, பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி விபத்து, பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/tjdkk2zg/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.</p> <p>டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள 'ஹாஸ்டல் டேஸ்' என்ற 5 மாடி மாணவர்கள் தங்கும் தனியார் பிஜி விடுதி கட்டிடம் இன்று மதியம் 1:30 மணியளவில் திடீரென <a href="https://www.maalaimalar.com/news/national/one-person-died-in-the-collapse-of-the-delhi-student-hostel-3-people-are-worried-will-pm-modi-explain-this-deepak-question">இடிந்து விழுந்து விபத்து</a>க்குள்ளானது.</p><p>டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் உள்ள இந்த விடுதியில் தங்கியிருந்த சுமார் 50 டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p> <h2>மீட்பு</h2><p>தேசிய பேரிடர் மீட்புப் படை டெல்லி தீயணைப்புத் துறை இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மூன்று பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p>இடிபாடுகளிலிருந்து 9 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.</p> <p>அதில் 5 மாணவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>சுமார் 20 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததே விபத்திற்குக் காரணம் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>கட்டிடத்தின் உரிமையாளரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.</p> <h2>பிரதமர் இரங்கல்</h2><p>இந்நிலையில் இந்த விபத்துக்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><p>அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "டெல்லி சத்ய நிகேதனில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இதில் தங்களது அன்பிற்குரியவரை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.</p><p>காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகள் சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.</p>  <h2>முதலமைச்சர் ரேகா குப்தா ஆய்வு</h2><p>விபத்து நடந்த இடத்தையும் நிலைமையையும் ஆய்வு செய்த டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, தவறு செய்தவர்கள் தப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.</p><p>செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இதுவரை 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>இடிபாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களின் உயிரைக் காப்பாற்றுவதே எங்களது முன்னுரிமை.</p> <p>இந்தக் கட்டிடம் மிகவும் பழமையானது. அடித்தளத்தில்சில தோண்டும் மற்றும் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. அதன் காரணமாகத் தூண் ஒன்று சரிந்து மொத்த கட்டிடமும் இடிந்து விழுந்துள்ளது" என்றார். </p><p>இந்த விபத்திற்கு காரணமான கட்டிடத்தின் உரிமையாளராக இருந்தாலும் சரி அல்லது அரசு அதிகாரியாக இருந்தாலும் சரி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாகத் தப்ப முடியாது" என்று தெரிவித்தார்.</p> <h2>காங்கிரஸ்</h2><p>விபத்து குறித்துக் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் டேனிஷ் அலி, "பாஜகவின் ஊழலால் டெல்லி மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.</p><p>நேற்று தான் பிரதமர் மோடி டெல்லி பல்கலைக்கழகத்திற்கு வந்து சென்றார்.</p><p>ஆனால் அவர் நாட்டின் கல்வி முறை குறித்தோ அல்லது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்தோ பேசவில்லை, மாறாக அரசியல் பேசி, கேள்வி கேட்பவர்களை 'திமாகி நக்சல்கள்' என அழைத்தார்.</p><p>பிரதமரே, இந்த நாட்டிற்கு நீங்கள் எத்தகைய ஆட்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி மாணவர் விடுதி இடிந்த விபத்தில் ஒருவர் பலி.. 3 பேர் கவலைக்கிடம் - பிரதமர் மோடி இதற்கு விளக்கம் தருவாரா? -  தீப்கே கேள்வி </title><link>https://www.maalaimalar.com/news/national/one-person-died-in-the-collapse-of-the-delhi-student-hostel-3-people-are-worried-will-pm-modi-explain-this-deepak-question</link><comments>https://www.maalaimalar.com/news/national/one-person-died-in-the-collapse-of-the-delhi-student-hostel-3-people-are-worried-will-pm-modi-explain-this-deepak-question#comments</comments><guid isPermaLink="false">c08ef2f6-925a-405f-a42a-93f8029bf9a6</guid><pubDate>Sun, 06 Sep 2026 14:42:53 +0000</pubDate><atom:updated>2026-09-06T14:42:53.851Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,டெல்லி பல்கலைக்கழகம்,delhi university,delhi,பிரதமர் மோடி,டெல்லி,அபிஜித் தீப்கே,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/0bevlmwd/tn-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தீப்கே, விபத்து, மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ தீப்கே, விபத்து, மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/0bevlmwd/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிப்பாரா என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே கேள்வி எழுப்பியுள்ளார். </p> <p><a href="https://www.google.com/search?q=டெல்லி+maalaimalar&amp;oq=டெல்லி++ma&amp;gs_lcrp=EgZjaHJvbWUqCAgBEEUYJxg7MgYIABBFGDkyCAgBEEUYJxg7MggIAhAAGBYYHjIICAMQABgWGB4yCAgEEAAYFhgeMgYIBRBFGDwyBggGEEUYPDIGCAcQRRg80gEIMjE3NGowajmoAgCwAgA&amp;sourceid=chrome&amp;source=chrome.ob&amp;ie=UTF-8">டெல்லியின் </a>சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள 'ஹாஸ்டல் டேஸ்' என்ற 5 மாடி மாணவர்கள் தங்கும் தனியார் பிஜி விடுதி கட்டிடம் இன்று மதியம் 1:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.</p><p>டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் உள்ள இந்த விடுதியில் தங்கியிருந்த சுமார் 50 டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p> <h2>மீட்பு</h2><p>தேசிய பேரிடர் மீட்புப் படை டெல்லி தீயணைப்புத் துறை இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதுவரை ஒரு உயிரழப்பு பதிவாகியுள்ளது.</p><p>இடிபாடுகளிலிருந்து 6 முதல் 7 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.</p> <p>அதில் எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 மாணவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>சுமார் 20 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததே விபத்திற்குக் காரணம் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>கட்டிடத்தின் உரிமையாளரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.</p> <h2>விமர்சனம்</h2><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீபகே பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>அபிஜித் தீபகே வெளியிட்ட எக்ஸ் பதிவில், "<a href="https://www.maalaimalar.com/news/national/for-them-the-glass-is-never-half-full-prime-minister-modi-hits-back-at-criticisms-regarding-gdp">நேற்று பிரதமர் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு</a> வந்து அரசியல் உரையாற்றினார். 'திமாகி நக்சல்' (அறிவுஜீவி நக்சல்) என்ற வார்த்தையை பயன்படுத்தி அரசியல் விமர்சனம் செய்தார்.</p><p>ஆனால் நமது கல்வி உள்கட்டமைப்பின் நிலை குறித்து மிகக் குறைவாகவே பேசினார். </p><p>இன்று தெற்கு வளாகத்தில் உள்ள விடுதி கட்டிடம் இடிந்து விழுந்து, மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.</p> <p>சீரழிந்து வரும் உள்கட்டமைப்பு மற்றும் அரசின் அலட்சியப் போக்கிற்கு இந்த நாட்டின் மாணவர்கள் இன்னும் எவ்வளவு காலம் விலைகொடுக்க வேண்டும்?</p><p>பழங்குடியின பகுதிகளில் போதிய பராமரிப்பு இல்லாததால் மாணவர்கள் உயிரிழந்து வரும் நிலையில் நாட்டின் தலைநகரில் படிக்கும் மாணவர்களுக்கே பாதுகாப்பு இல்லை.</p><p>மாணவர்களுக்குப் பாதுகாப்பான வகுப்பறைகளும், பாதுகாப்பான விடுதிகளும், அடிப்படை கண்ணியமும் தேவை.</p> <p>இது மிகவும் அதிகமான கோரிக்கையா? பிரதமர் மீண்டும் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு வந்து இது எப்படி நடந்தது என்று விளக்கம் அளிப்பாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>டெல்லி மாநகராட்சியின் கட்டிடத் துறையில் நிர்வாகப் பொறியாளர் பணிமாற்றத்திற்கு ரூ. 1.25 கோடி லஞ்சம் பெறப்படுவதாகக் குற்றம் சாட்டிய ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ், இத்தகைய ஊழல்களே தொடர் விபத்துகளுக்குக் காரணம் என்றார்.</p><p>போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item></channel></rss>