search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோஜா இதழ் ஃபேஸ் பேக்"

    • உடல்நல கோளாறுகளுக்கு ரோஜா இதழ்கள் அருமருந்தாக இருக்கிறது.
    • ரோஜா இதழ்களில் தேநீர் போட்டு குடிப்பதால் ஏராளமான நன்மை கிடைக்கும்.

    மருத்துவ குணம் கொண்ட ரோஜா மலர்கள் எடை இழப்பு, மன அழுத்தம், மாதவிடாய் பிரச்சனை, செரிமான பிரச்சனை, நீரிழிவு நோய் பிரச்சனை குடல் புண் உள்ளிட்ட பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு ரோஜா இதழ்கள் அருமருந்தாக இருக்கிறது. ரோஜா இதழ்களை பச்சையாகவோ அல்லது உலர வைத்து தேநீர் போட்டு குடிப்பதால் ஏராளமான நன்மை கிடைக்கும்.

    ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். ரோஜாவில் இருந்து எடுக்கப்படும் தைலம் காது வலி, காது குத்தல், காது புண், காது ரோகம் ஆகியவற்றை குணமாக்கும். ரோஜா குல்கந்தை சாப்பிட்டால் ரத்தம் சுத்தம் அடைந்து சருமம் பளபளப்பாகும்.

    ரோஜா சர்பத்தை அருகினால் மூலச்சூடு, மலச்சிக்கல், குடலில் புண் குணமாகும். ரோஜா இதழ்களை ஆய்ந்து ஒரு கையளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அதில் பாதியை எடுத்து சர்க்கரையை சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் மலச்சிக்கல் விலகும்.

     பித்தம் காரணமாக மயக்கம், குமட்டல், வாந்தி, நெஞ்சு எரிச்சல் மற்றும் பித்தக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதித்ததும் வடிகட்டி காலை, மாலை இருவேளை ஒரு டம்ளர் வீதம் குடிக்க வேண்டும். இவ்வாறு ஏழு நாட்கள் குடித்து வந்தால் பித்தம் அறவே நீங்கிவிடும்.

    ரோஜா இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். ரோஜா பூ கஷாயத்துடன் கருஞ்சீரகத்தை சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகர்ந்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தால் ஏற்படக்கூடிய பல்வேறு வகை கோளாறுகள் அகலும்.

    ரோஜாப்பூ நிறைய கிடைக்கும்போது ரோஜா பூவை நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதை கஷாயம் போட்டு சாப்பிட்டால் உடம்பிற்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் தண்ணீரில் உலர்ந்த ரோஜாக்களை போட்டு பாதி அளவுக்கு சுண்டும்படி காய்ச்சி இறக்கி ஆறவைத்து வடிகட்டி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் போதும். வேண்டுமென்றால் கொஞ்சம் பாலையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் வாய்ப்புண் சரியாகும் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சிறுநீர் தாராளமாகப் போகும்.

     சூரிய கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்க ஒரு சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் அரைத்த ரோஜா இதழ்களை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து இந்த கலவையை சருமத்தில் தடவி இருபது நிமிடங்களுக்குப் பிறகு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சருமம் பளபளப்பாகக் காணப்படும்.

    • கிரீம்களில் இந்த ரோஜா இதழ்கள் பயன் படுத்துவார்கள்.
    • ரோஜா இதழ்களில் பல வகையான சத்துகள் உள்ளது.

    இயற்கையாகப் பயன்படுத்தும் அனைத்து க்ரீம்களில் இந்த ரோஜா இதழ்கள் பயன்படுத்துவார்கள். அந்த ரோஜா இதழ்கள் பயன்படுத்தி தனியாக பவுடர் செய்தால் எப்படி இருக்கும். ரோஜா இதழ்களில் பல வகையான சத்துகள் உள்ளது.

    தேவையான பொருள்கள்:

    எலுமிச்சை பழம் – 1

    வெள்ளை வினிகர் -2 ஸ்பூன்

    ரோஜா பூ இதழ்கள் – 1கப்

    புதினா இலைகள் – 1கப்

    செய்முறை:

    * முதலில் ஓரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி அதில் உள்ள விதைகளை எடுத்து விட்டு நன்றாகப் பிழியவும்.

    * அதில் வரும் சாற்றை இரண்டு ஸ்பூன் அளவிற்கு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். ரோஜா இதழ்கள் மற்றும் புதினா இலைகள் இரண்டையும் வெயிலில் காய வைத்து அரைக்க வேண்டும்.

    * அரைத்த பிறகு, அதை ரோஜா இதழ்கள் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். அதில் புதினா இலைகளை அரைத்து ஒரு கப் அளவிற்கு அதில் சேர்க்கவும்.

    * அதில் பிழிந்து வைத்த எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலக்கினால் முகம் மற்றும் உடலுக்குப் பயன்படுத்த பேஸ்ட் தயார்.

    * எலுமிச்சை சாறு சிலருக்குச் சேராமல் உடலில் அரிப்புகள் மற்றும் அலர்ஜிகள் வரும். அப்படி வந்தால் எலுமிச்சை சாற்றுக்குப் பதிலாக வெள்ளை வினிகர் கூட சேர்த்துப் பயன்படுத்தலாம்.

    * இதை உடல் மற்றும் முகம் முழுவதுமாக அப்ளை செய்து ஒரு அரை மணி நேரம் உலர விடவும். அதற்குப் பின், தண்ணீரில் குளிக்கலாம். இதை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை செய்யலாம். பெண்கள் பயன்படுத்தும் போது இதனுடன் மஞ்சள் சேர்த்துக் குளிக்கலாம்.

    ரோஜா இதழ்கள் பயன்கள்

    ரோஜா இதழ்கள் பல இயற்கையாகத் தயாரிக்கும் க்ரிம்களில் இது கண்டிப்பாக இருக்கும் அதற்குக் காரணம். இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீக்கி அழகாகவும் மற்றும் மிருதுவாகவும் மாற்றித் தரும். இது சருமத்தில் உள்ள ஈரப்பதம் குறையாமல் மற்றும் வறட்சியான சருமம் ஆக இருந்தால் இது ஈரப்பதம் ஆக மாற்றித் தரும்.

    இந்த ரோஜா இதழைச் சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு மற்றும் சீதபேதி போன்ற பிரச்சினைகளைச் சரி செய்யும். உடலுக்குக் குளிர்ச்சி தன்மை அதிகரிக்கும். இது சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

    ×