search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kulambu Recipe"

    • கொள்ளு ஊறவைத்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும்.
    • ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.

    கொள்ளு பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.

    இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும்.

    அனைவரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதற்கு கொள்ளினை முளைகட்டி குழம்பு வைத்து உண்ணலாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்களின் உடலில் உள்ள வேண்டாத கொழுப்பு கரைந்து உடல் எடை எளிதில் குறையும்.

    தேவையான பொருட்கள் :

    முளைக்கட்டிய கொள்ளு - 200 கிராம்

    சின்ன வெங்காயம் - 2

    தக்காளி - 3

    வரமிளகாய் - 5

    மல்லித்தூள்- ஒரு ஸ்பூன்

    சீரகம் - சிறிதளவு

    தேங்காய் துருவல் - சிறிதளவு

    செய்முறை:

    கொள்ளினை 10 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த கொள்ளினை எடுத்து கழுவி வடிகட்டிவிட்டு அதனை ஒரு துணியில் வைத்து கட்டி இரவு முழுவதும் விட வேண்டும். காலையில் எடுத்து பார்த்தால் கொள்ளு சிறிது முளைகட்டி இருக்கும்.

    முளைகட்டிய கொள்ளினை பாத்திரத்தில் கொட்டி வேக வைக்க வேண்டும்.

    ஒரு வாணொலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், பூண்டு, சீரகம், வர மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தேங்காய், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் வேக வைத்த கொள்ளு சிறிதளவு சேர்த்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த மசாலா கலவையினை வேகவைத்த கொள்ளுவில் சேர்க்க வேண்டும். மசாலா கொதித்து வரும்போது தாளிப்பு சேர்க்கலாம்.

    அதற்காக மீண்டும் வாணொலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை தாளித்து கொள்ளு குழம்பில் சேர்த்து கிளறினால் சுவையான கொள்ளு குழம்பு தயார்.

     

    • உடலில் இருக்கும் கொழுப்புக்கள் கரைந்து எடை குறையும்.
    • குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்தால் எலும்புகள் வலுவடையும்.

    கொள்ளு உடலுக்கு மிகவும் வலிமையைத் தரும் உணவுப் பொருட்களில் ஒன்று. அத்தகைய கொள்ளுவை அடிக்கடி சாப்பிட்டால், உடலில் இருக்கும் கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை குறையும். அதிலும் குழந்தைகளுக்கு அதிகம் செய்து கொடுத்தால், அவர்களது எலும்புகள் வலுவடையும். மேலும் கொள்ளுவை வைத்து இதுவரை ரசம் தான் செய்திருப்போம். ஆனால் இப்போது அந்த கொள்ளுவை வைத்து ஒரு குருமா செய்யலாம். அந்த கொள்ளு குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    கொள்ளு - 1 கப்

    வெங்காயம் - 2

    உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    அரைப்பதற்கு

    வெங்காயம் - 1

    தக்காளி - 3

    வரமிளகாய் - 6

    மல்லி - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    இஞ்சி - 1 நீளத்துண்டு

    பூண்டு - 7 பல்லு

    தேங்காய் - 1/2 மூடி (துருவியது)

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    கசகசா - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் மிக்சியில் வெங்காயம், தக்காளி, மல்லி, சீரகம், இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல், கசகசா, வரமிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்து, அதனை நறுக்கிக் கொள்ளவும். பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    அதன்பிறகுகொள்ளுவை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை குக்கரில் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி, வேக வைத்து, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விட வேண்டும்.

    அடுப்பில் குக்கரை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை தொடர்ந்து வதக்க வேண்டும். வாசனை நன்கு வரும் போது, அத்துடன் உருளைக்கிழங்கு, வேகவைத்த கொள்ளு மற்றும் உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்

    இப்போது சுவையான கொள்ளு குருமா ரெடி. இதன் மேல் கொத்தமல்லியை தூவி, சாதத்துடன் பரிமாறலாம்.

    ×