என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
பிரேசிலில் லாரி- மினி பேருந்து மோதி கோர விபத்து: 25 பேர் பலி
Byமாலை மலர்9 Jan 2024 2:04 AM GMT
- சுற்றுலா சென்ற 30-க்கும் மேற்பட்டோர் மினி பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
- முந்திச் செல்லும்போது விபத்து ஏற்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பிரேசில் நாட்டின் வடகிழக்கு மாநிலம் பாஹியா. இந்த மாநிலத்தின் வடக்கு கடற்கரை நகரான குவாராஜூபாவில் உள்ள கடற்கரைக்கு ஒரு மினி பேருந்தில் பலர் சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஜாக்கோபினா நகருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
சயோ ஜோஸ் டோ ஜேக்குயூப் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மினி பேருந்து வந்து கொண்டிருக்கும்போது, லாரி ஒன்று திடீரென மினி பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 25 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஜாக்கோபினா நகராட்சி மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
முந்திச் செல்லும்போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X