என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மோடியின் பொய் வாக்குறுதிகளை கேட்டு மக்கள் சோர்ந்துவிட்டனர்- தேஜஸ்வி யாதவ் கடும் தாக்கு
- பீகார் மக்களுக்காக அவர்கள் ஏதும் செய்யவில்லை. இந்த முறை பா.ஜனதாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
- மோடியின் பொய் வாக்குறுதிகளை கேட்டு மக்கள் சோர்ந்துவிட்டனர். அவர்கள் உண்மையை பேசுமாறு கேட்கிறார்கள்.
பிரதமர் மோடி இளவரசர் எனக் குறிப்பிட்டுள்ள நிலையில் ராஷ்டிரிய கட்சி தலைவரும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பதில் அளித்து கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி பீகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் டெல்லி மற்றும் பீகாரின் இளவரசர் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் பிரதமர். அவரால் எதையும் சொல்ல முடியும். அவர் எங்களுடைய மூத்த நபர். நாங்கள் சிறிய மக்கள். அவர் என்ன விரும்புகிறாரோ, அதை பேச அவருக்கு உரிமை உண்டு.
அவர் பிர்ஜாடா (pirzada). ஆனால் உண்மையை விட பொய்களைத்தான் நிறைய பேசுகிறார். அவர் தர்பங்காவிற்கு வந்திருக்கிறார். அதனால் பயனுள்ள விசயங்களை பேச வேண்டும். மித்திலா மக்கள் அறிவுஜீவிகள். அவர்கள் பயனுள்ள விசயங்களை கேட்க விரும்புவார்கள். பயனற்ற விசயங்களை கேட்க விரும்பமாட்டார்கள்.
இங்குள்ள மக்களுக்காக அவர்கள் ஏதும் செய்யவில்லை. இந்த முறை பா.ஜனதாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மோடியின் பொய் வாக்குறுதிகளை கேட்டு மக்கள் சோர்ந்துவிட்டனர். அவர்கள் உண்மையை பேசுமாறு கேட்கிறார்கள். பீகாரை அவர்கள் மாற்றாந்தாய் பிள்ளையாகவே பார்க்கிறார்கள். பீகாருக்காக எதையும் செய்யவில்லை. பா.ஜனதாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
பெரிய பொய்யர் கட்சியைச் (Badka Jhootha Party) சேர்ந்தவர்களை தோற்கடித்து, மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க பீகார் மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்