என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கார் கவிழ்ந்து யூனியன் அலுவலக பெண் ஊழியர் உள்பட 2 பேர் பலி
- காயம் அடைந்த கோபி, கண்ணன் ஆகிய 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை:
திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 57). இவரது மனைவி விஜயலட்சுமி(51). இவர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓவர் சியராக வேலை பார்த்து வருகிறார். இவரது சகோதரர் கண்ணன் (47).
இவர்கள் 3 பேரும் ஒரு காரில் சிவகாசியில் நடைபெறும் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக இன்று காலை புறப்பட்டு சென்றனர். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சியை அடுத்த யாகபுரம் அருகே கார் சென்றபோது திடீரென கார் கட்டுபாட்டை இழந்தது.
எதிர்பாராத விதமாக கார் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோபி, கண்ணன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த கோபி, கண்ணன் ஆகிய 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கண்ணன் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. கோபிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து விஜயலட்சுமி, கண்ணன் ஆகிய 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்