search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    இன்று ஆடி சஷ்டி:  விரதம் இருந்து வழிபட்டால் கஷ்டமெல்லாம் தீர்ப்பான் கந்தவேலன்
    X

    இன்று ஆடி சஷ்டி: விரதம் இருந்து வழிபட்டால் கஷ்டமெல்லாம் தீர்ப்பான் கந்தவேலன்

    • கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.
    • கஷ்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும்.

    சஷ்டி விரதம் மிகவும் விசேஷம். அதிலும் ஆடி மாத சஷ்டி அற்புதமான நன்னாள். இந்தநாளில், கந்தபெருமானை வழிபடுவோம். கவலைகளையெல்லாம் தீர்த்து வைப்பான்

    பொதுவாகவே, சஷ்டி என்பது முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுவதற்கு உரிய அற்புதமான நாள். மாதந்தோறும் வருகிற சஷ்டி திதியில், முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பார்கள் பக்தர்கள். சஷ்டி கவசம் பாராயணம் செய்து முருகனைப் போற்றுவார்கள்.

    செவ்வாய்க்கிழமை என்பதும் கந்தனை வழிபடுவதற்கு உரிய அருமையான நாள்.

    ஆடி மாத சஷ்டி தினமான இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வழிபடுவது விசேஷம்.

    விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானைத் துதிக்கும் பாடல்களைப் பாராயணம் செய்யுங்கள். கந்தசஷ்டி கவசம் படியுங்கள். எதிர்ப்புகள் விலகும். கஷ்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும். வேண்டியது அனைத்தையும் தந்தருள்வான் வேலவன்.

    இன்னும் இயலுமெனில், இந்த சஷ்டி நாளில், நான்குபேருக்கேனும் எலுமிச்சை சாதம் அல்லது தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். நமக்கு வந்த தடைகளையெல்லாம் தகர்த்துவிடுவான் வேலவன். கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் எதிர்ப்புகளையும் விரட்டி அருள்வான் முருகப்பெருமான்!

    Next Story
    ×