செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வேலூர் தொகுதியில் நாளை எடப்பாடி பழனிசாமி 2-வது கட்ட பிரசாரம்

Published On 2019-08-01 07:38 GMT   |   Update On 2019-08-01 07:38 GMT
வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை 2-வது கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
வேலூர்:

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு 5-ந்தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் பிரசாரம் செய்திருந்தனர்.

இப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வேலூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்கிறார்.

நாளை மாலை 5 மணிக்கு (2-ந் தேதி) அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

இந்த கூட்டம் முடிந்ததும் மாலை 6 மணிக்கு வேலூர் சென்று அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் வாக்கு கேட்டு பேசுகிறார்.

2 பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழிகளில் கூடி நிற்கும் பொது மக்களை பார்த்தும் எடப்பாடி பழனிசாமி வாக்கு கேட்கிறார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூரில் முகாமிட்டுள்ள நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளருக்காக 2-வது கட்ட பிரசாரத்துக்கு செல்வதால் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் 2-வது கட்ட பிரசாரத்துக்கு செல்வதற்கு பிரசார வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News