இந்தியா
3-ம் கட்ட வாக்குப்பதிவு: மதியம் 3 மணி நிலவரப்படி 50.71 சதவீத வாக்குகள் பதிவு
- அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்
- உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்
உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இந்நிலையில், மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 50.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மாநில வாரியாக விவரங்கள்:
அசாம் - 63.08 சதவீதம்
பீகார் - 46.69 சதவீதம்
சத்தீஸ்கர் - 58.19 சதவீதம்
கோவா - 61.39 சதவீதம்
குஜராத் - 47.03 சதவீதம்
கர்நாடகா - 54.20 சதவீதம்
மத்தியப் பிரதேசம் - 54.09 சதவீதம்
மகாராஷ்டிரா - 42.63 சதவீதம்
உத்தரப் பிரதேசம் - 46.78 சதவீதம்
மேற்கு வங்காளம் - 63.11 சதவீதம்