இந்தியா

ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் உள்ளது: உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு

Published On 2024-04-24 09:13 GMT   |   Update On 2024-04-24 09:13 GMT
  • கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது.
  • கைது எதிராக உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்தபோது, உயர்நீதிமன்றம் மனுதாக்கல் செய்ய வலியுறத்தப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். இவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனுதாக்கல் செய்தார். அப்போது உச்சநீதிமன்றம் முதலில் அம்மாநில உயர்நீதிமன்றத்தை அணுகவும் எனக் கூறியது.

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி கைது செய்யப்பட்ட நிலையில், கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான இறுதிகட்ட விசாரணை பிப்ரவரி 27 மற்றும் 28-ந்தேதிகளில் நடைபெற்றது.

அதன்பின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் உள்ளது. இதுவரை தீர்ப்பு வழங்காத நிலையில் தற்போது ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யுள்ளார்.

ஹேமந்த் சோரனிடம் சுமார் ஏழு மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். கைது செய்வதற்கு முன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்ட நிலையில், நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

Tags:    

Similar News