இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் விமானப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாத தாக்குதல்

Published On 2024-05-04 17:27 GMT   |   Update On 2024-05-05 01:41 GMT
  • விமானப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்.
  • பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுரன்கோட் பகுதியில் விமானப்படை வீரர்களை ஏற்றிக் கொண்டு வாகனம் சென்று கொண்டிருந்தது. இரண்டு வாகனங்கள் சென்றபோது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உதம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியை பாதுகாப்புப்படையினர் சுற்றி வளைத்துள்ளனர். தீவிரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பகுதியாக செல்லும் வாகனங்களை மறித்து போலீசார், பாதுகாப்புப்படை வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Similar News