என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
17 கோடி டாலர் தேசிய அடையாள அட்டை ஊழல்: இந்தோனேசியா பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
Byமாலை மலர்11 Dec 2017 1:32 PM GMT (Updated: 11 Dec 2017 1:32 PM GMT)
இந்தோனேசியாவில் தேசிய அடையாள அட்டைகள் தயாரிப்பில் நடந்த 17 கோடி அமெரிக்க டாலர் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாராளுமன்ற சபாநாயகர் செட்யா நோவான்ட்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜகர்தா:
இந்தோனேசியா நாட்டில் தேசிய மின்னியல் அடையாள அட்டை திட்டத்தின் மூலம் அரசுக்கு 170 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் பாராளுமன்ற சபாநாயகர் செட்யா நோவான்ட்டோவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்நாட்டின் ஊழல் ஒழிப்பு வாரிய அதிகாரிகளால் கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
ஊழல் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், பாராளுமன்ற சபாநாயகராக தொடர்ந்து பதவி வகிக்க அனுமதிக்குமாறும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அவர் கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற சபாநாயகர் செட்யா நோவான்ட்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான உலகளாவிய ஊழல் பட்டியலில் 176 நாடுகளில் 90-வது நாடாக இந்தோனேசியா அறிவிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் அதிக ஊழல் நிறைந்திருப்பதாக சர்வதேச ஊழல் தடுப்பு கண்காணிப்பு மையம் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
இந்தோனேசியா நாட்டில் தேசிய மின்னியல் அடையாள அட்டை திட்டத்தின் மூலம் அரசுக்கு 170 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் பாராளுமன்ற சபாநாயகர் செட்யா நோவான்ட்டோவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்நாட்டின் ஊழல் ஒழிப்பு வாரிய அதிகாரிகளால் கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
ஊழல் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், பாராளுமன்ற சபாநாயகராக தொடர்ந்து பதவி வகிக்க அனுமதிக்குமாறும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அவர் கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற சபாநாயகர் செட்யா நோவான்ட்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான உலகளாவிய ஊழல் பட்டியலில் 176 நாடுகளில் 90-வது நாடாக இந்தோனேசியா அறிவிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் அதிக ஊழல் நிறைந்திருப்பதாக சர்வதேச ஊழல் தடுப்பு கண்காணிப்பு மையம் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X