என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அல்ஜீரியா: ஐரோப்பாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 286 அகதிகள் தடுத்து நிறுத்தம்
Byமாலை மலர்19 Nov 2017 10:42 PM GMT (Updated: 19 Nov 2017 10:42 PM GMT)
மெடிட்டேரியன் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 286 அகதிகளை அல்ஜீரியா கடற்படையினர் மடக்கி பிடித்துள்ளனர்.
அல்ஜீயர்ஸ்:
மெடிட்டேரியன் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 286 அகதிகளை அல்ஜீரியா கடற்படையினர் மடக்கி பிடித்துள்ளனர்.
வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பதவிவெறி பிடித்த போராளிக் குழுக்களின மோதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வறுமை நிலையில் வாடும் மக்களில் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி செல்கின்றனர்.
மேலும், உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர். இதனால் தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், மெடிட்டேரியன் கடல் வழியாக ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற அகதிகளை அல்ஜீரியா கடற்படையினர் மடக்கி பிடித்தனர்.
இதுதொடர்பாக அல்ஜீரியாவின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை மெடிட்டேரியன் கடலில் சோதனையில் ஈடுபட்டோம். அப்போது ஆவணங்கள் இன்றி ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 286 பேரை மடக்கிப் பிடித்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
மெடிட்டேரியன் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 286 அகதிகளை அல்ஜீரியா கடற்படையினர் மடக்கி பிடித்துள்ளனர்.
வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பதவிவெறி பிடித்த போராளிக் குழுக்களின மோதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வறுமை நிலையில் வாடும் மக்களில் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி செல்கின்றனர்.
மேலும், உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர். இதனால் தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், மெடிட்டேரியன் கடல் வழியாக ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற அகதிகளை அல்ஜீரியா கடற்படையினர் மடக்கி பிடித்தனர்.
இதுதொடர்பாக அல்ஜீரியாவின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை மெடிட்டேரியன் கடலில் சோதனையில் ஈடுபட்டோம். அப்போது ஆவணங்கள் இன்றி ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 286 பேரை மடக்கிப் பிடித்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X