என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நைஜர்: தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 போலீசார் பலி
Byமாலை மலர்22 Oct 2017 2:19 AM GMT (Updated: 22 Oct 2017 2:19 AM GMT)
ஆப்ரிக்க நாடான நைஜரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 போலீசார் பலியானதாகவும், 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
நையாமே:
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜர் - மாலி எல்லையோரம் உள்ள அயோரோவ் என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக நைஜர் அரசு தெரிவித்துள்ளது. மாலி நாட்டில் இருந்து சிறிய ரக டிரக் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 15 போலீசார் பலியானதாகவும், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடைபெற்ற கிராமத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் தான் கடந்த 4-ம் தேதி அமெரிக்க வீரர்கள் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், ஐ.எஸ் ஆதரவு இயக்கங்களின் சதிவேலையாக இருக்கலாம் என பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜர் - மாலி எல்லையோரம் உள்ள அயோரோவ் என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக நைஜர் அரசு தெரிவித்துள்ளது. மாலி நாட்டில் இருந்து சிறிய ரக டிரக் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 15 போலீசார் பலியானதாகவும், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடைபெற்ற கிராமத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் தான் கடந்த 4-ம் தேதி அமெரிக்க வீரர்கள் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், ஐ.எஸ் ஆதரவு இயக்கங்களின் சதிவேலையாக இருக்கலாம் என பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X