என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5 ஆண்டுகளில் பாகிஸ்தானில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை
Byமாலை மலர்21 Aug 2017 12:57 AM GMT (Updated: 21 Aug 2017 12:57 AM GMT)
கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தானில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கியது தொடர்பாக அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் உறுப்பினர் ஷேக் ரொஹைல் அஸ்கார் கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
அந்த பதிலில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்:-
* கடந்த 5 ஆண்டுகளில், அதாவது 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு, ஏப்ரல் 14-ந் தேதி வரையில் பாகிஸ்தானில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
* 2012-ம் ஆண்டு, இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்து வந்த 48 பேருக்கு குடியுரிமை அளிக்கப்பட்டது.
* 2013-ம் ஆண்டு 75 இந்தியர்களுக்கும், 2014-ம் ஆண்டு 76 இந்தியர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.
* 2015-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்து வந்த 15 பேருக்கும், 2016-ம் ஆண்டு 69 பேருக்கும், இந்த ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி வரையில் 15 பேருக்கும் பாகிஸ்தான் குடியுரிமை தந்துள்ளது.
* கணவர் இறந்து விட்ட நிலையில் இந்திய பெண் ஒருவருக்கு முன்னாள் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான் உத்தரவின்பேரில் குடியுரிமை வழங்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கியது தொடர்பாக அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் உறுப்பினர் ஷேக் ரொஹைல் அஸ்கார் கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
அந்த பதிலில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்:-
* கடந்த 5 ஆண்டுகளில், அதாவது 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு, ஏப்ரல் 14-ந் தேதி வரையில் பாகிஸ்தானில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
* 2012-ம் ஆண்டு, இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்து வந்த 48 பேருக்கு குடியுரிமை அளிக்கப்பட்டது.
* 2013-ம் ஆண்டு 75 இந்தியர்களுக்கும், 2014-ம் ஆண்டு 76 இந்தியர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.
* 2015-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்து வந்த 15 பேருக்கும், 2016-ம் ஆண்டு 69 பேருக்கும், இந்த ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி வரையில் 15 பேருக்கும் பாகிஸ்தான் குடியுரிமை தந்துள்ளது.
* கணவர் இறந்து விட்ட நிலையில் இந்திய பெண் ஒருவருக்கு முன்னாள் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான் உத்தரவின்பேரில் குடியுரிமை வழங்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X