என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆதரவாளர்கள் ஐ.எஸ் அமைப்புக்கு மாறியதால் லிபியாவின் முக்கிய தீவிரவாத இயக்கம் கலைப்பு
Byமாலை மலர்28 May 2017 5:04 AM GMT (Updated: 28 May 2017 5:04 AM GMT)
லிபியாவில் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டுவந்த அன்சார்-அல்-ஷாரியா இயக்கத்தின் ஆதரவாளர்கள் ஐ.எஸ் அமைப்புக்கு மாறியதால் அந்த இயக்கம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரிபோலி:
லிபியாவின் முக்கிய நகரமான பென்காஸியில் செயல்பட்டு வந்த அன்சார்-அல்-ஷாரியா தீவிரவாத அமைப்பு கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தூதரக அதிகாரிகளை கொன்றது உள்ளிட்ட பல தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். இதனால், அமெரிக்கா மற்றும் ஐ.நா இந்த இயக்கத்தை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமாக அறிவித்தது.
கடந்த 2014-ம் ஆண்டில் லிபியா அரசுப்படையினருக்கு எதிரான சண்டையின் போது இதன் தலைவராக இருந்த முகம்மது அஸஹாவி கொல்லப்பட்டார். இதனையடுத்து இந்த இயக்கம் தடுமாற ஆரம்பித்தது. பின்னர், ஐ.எஸ் இயக்கம் தலையெடுத்த பின்னர், அன்சார்-அல்-ஷாரியா இயக்கத்திலிருந்த பலர் அங்கு மாறிச் சென்றனர்.
இந்நிலையில், இந்த இயக்கம் கலைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X