என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெர்மனியர்கள் ரொம்ப மோசம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்தால் சலசலப்பு
Byமாலை மலர்26 May 2017 2:13 PM GMT (Updated: 26 May 2017 2:13 PM GMT)
ஜெர்மனியர்கள் மிகவும் மோசமானவர்கள் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று பிரஸ்சல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் ஜெர்மனியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக ஜெர்மன் வார இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
‘ஜெர்மனியர்கள் மிகவும் மோசமானவர்கள். அமெரிக்காவில் எண்ணற்ற கார்களை விற்பனை செய்து கொள்ளை வருமானம் ஈட்டுகின்றனர். இதனை தடுத்து நிறுத்துவோம்’ என டிரம்ப் பேசியதாக தெரிகிறது.
அப்போது, குறுக்கிட்ட ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜங்கர், தடையற்ற வர்த்தகத்தால் ஒவ்வொருவரும் பயனடையத்தான் செய்வார்கள் என ஜெர்மனிக்கு ஆதரவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
தேர்தலுக்கு முன்புகூட ஜெர்மனியையும், அந்நாட்டின் சான்சலர் ஏஞ்சலா மெர்கலையும் டிரம்ப் தாக்கிப் பேசினார்.
இத்தாலியில் இன்று நடைபெற உள்ள ஜி7 மாநாட்டின்போது ஏஞ்சலா மெர்கலை டிரம்ப் சந்திக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘ஜெர்மனியர்கள் மிகவும் மோசமானவர்கள். அமெரிக்காவில் எண்ணற்ற கார்களை விற்பனை செய்து கொள்ளை வருமானம் ஈட்டுகின்றனர். இதனை தடுத்து நிறுத்துவோம்’ என டிரம்ப் பேசியதாக தெரிகிறது.
அப்போது, குறுக்கிட்ட ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜங்கர், தடையற்ற வர்த்தகத்தால் ஒவ்வொருவரும் பயனடையத்தான் செய்வார்கள் என ஜெர்மனிக்கு ஆதரவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
தேர்தலுக்கு முன்புகூட ஜெர்மனியையும், அந்நாட்டின் சான்சலர் ஏஞ்சலா மெர்கலையும் டிரம்ப் தாக்கிப் பேசினார்.
இத்தாலியில் இன்று நடைபெற உள்ள ஜி7 மாநாட்டின்போது ஏஞ்சலா மெர்கலை டிரம்ப் சந்திக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X