search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க அதிபர் டிரம்ப்"

    வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் இன்று சந்தித்துப் பேசினர். #KimJongUn #DonaldTrump #VietnamSummit
    ஹனோய்:

    வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் டிரம்ப் - கிம் ஆகியோர் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.



    இதையடுத்து, இருநாட்டு தலைவர்களும் மீண்டும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது. பல கட்ட ஆலோசனைக்கு பிறகு வியட்நாம் தலைநகர் ஹனோயில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் இன்று இரவு சந்தித்தனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இரவு விருந்தில் பங்கேற்றனர்.

    டிரம்ப்-கிம் வருகையை முன்னிட்டு வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய ராணுவமும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். #KimJongUn #DonaldTrump #VietnamSummit
    வியட்நாம் வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #TrumpKimSummit
    ஹனோய்:

    வடகொரியா ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்தி வந்தது. அதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் ஏற்பட்டது.
     
    இதைத்தணிக்கும் விதமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அணு ஆயுதங்களை அழிக்கவும், ஏவுகணை சோதனை நடத்துவதை நிறுத்தவும் வடகொரியா ஒப்புக் கொண்டது. இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்பட்டது.

    இதையடுத்து, இருநாட்டு தலைவர்களும் மீண்டும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது. பல கட்ட ஆலோசனைக்கு பிறகு வியட்நாம் தலைநகர் ஹனோயில் நாளை (27-ம் தேதி) மற்றும் நாளை மறுதினமும் (28-ம் தேதி) சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, பியாங் யாங்கில் இருந்து தனி ரெயில் மூலம் அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வியட்நாம் தலைநகர் ஹனோய் வந்தடைந்தார். வியட்நாம் வந்த வடகொரிய அதிபர் கிம்முக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. கிம் வருகையையொட்டி டாங் டாங் நகரில் இருந்து ஹனோய் வரை 170 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமானப்படை விமானத்தின் மூலம் புறப்பட்டு இன்று இரவு ஹனோய் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த சந்திப்பு குறித்து டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், கிம்முடன் ஆன 2-வது சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்ப்பதாக பதிவிட்டுள்ளார்.

    டிரம்ப்-கிம் வருகையை முன்னிட்டு வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய ராணுவமும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #TrumpKimSummit
    அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவருக்கும் இடையேயான 2-வது சந்திப்பு அடுத்த மாதம் இறுதியில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகின. #KimJongUn #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சந்திப்புக்கு பின்னர் இரு நாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. இதனிடையே மீண்டும் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேச டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் பரஸ்பர விருப்பம் தெரிவித்தனர்.



    அதன்படி இருநாட்டு தலைவர்கள் இடையேயான 2-வது சந்திப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதியில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகின. உச்சி மாநாட்டுக்கான தேதி மற்றும் இடம் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில், அமெரிக்கா வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தலைநகர் வாஷிங்டன்னில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் டிரம்ப்-கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது அவர், “இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு அடுத்த 2 மாதங்களில் நடக்கும்” என தெரிவித்தார். #KimJongUn #DonaldTrump
    வெளிநாட்டினர் ஊடுருவலை தடுக்க மெக்சிகோ எல்லையில் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். #Trump #MexicoBorder
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவி சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டிரம்ப் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    பெரும்பாலான வெளிநாட்டினர் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுருவுகின்றனர்.

    அதை தடுக்க மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக எல்லை நெடுகிலும் ராணுவத்தை நிறுத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி கடந்த 31-ந்தேதி (புதன்கிழமை) 5200 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் எல்லையில் மேலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட உள்ளனர்.

    மொத்தம் 15 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டு அவர்கள் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே 5200 வீரர்கள் அனுப்பப்பட்ட நிலையில் மேலும் 8 ஆயிரம் வீரர்கள் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மெக்சிகோ எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அவர்கள் அங்கு பணியில் இருக்கும் சுங்க இலாகா மற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு துணையாக செயல்படுவார்கள். இவர்கள் தவிர மீதமுள்ளவர்கள் படிப்படியாக அனுப்பப்படுவார்கள் என ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

    இது ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களை விட அதிகம் என்றும் அரசியல் லாபத்துக்காக டிரம்ப் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அதை ராணுவ மந்திரி ஜிம் மாத்தீஸ் மறுத்துள்ளார். #Trump #MexicoBorder
    இந்தியா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இனி மானியங்கள் உள்ளிட்ட நிதியுதவிகளை அளிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். #Trumptostopsubsidies #IndiaChinagrowingeconomies
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வடக்கு டக்கோட்டா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மிகப்பெரிய பொருளாதார சக்தியாக சீனா மாறியதற்கு இந்த அமைப்பின் நடவடிக்கைதான் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது:-

    நீண்ட காலமாக தீமைகளில் இருந்து பல நாடுகளை ராணுவரீதியாக நாம் பாதுகாத்து வருகிறோம். இதற்காக நாம் உலகம் முழுவதும் என்ன நடக்கிறது? என்று கண்காணித்தும் வருகிறோம். அவர்கள் நல்ல எதிர்காலத்தை அமைத்து கொள்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ராணுவ செலவினங்கள் மிகவும் குறைவு.



    ஆனால், உலகிலேயே ராணுவத்துக்கு அதிகமாக செலவிடுபவர்களாக நாம் இருக்கிறோம். இதில் பெரும்பகுதி வெளிநாடுகளை பாதுகாப்பதற்காக செலவாகிறது, அவர்களில் சிலருக்கு நம்மை பிடிக்கவில்லை என்றாலும் நாம் செலவு செய்து வருகிறோம்.

    அந்த நாடுகள் நம்மை மதிக்க வேண்டும். ஆனால், அவர்கள் மதிப்பதில்லை. எனவே, நாம் அவர்களுக்காக ராணுவத்துக்கு செலவிடும் தொகையை அவர்கள் தர வேண்டும். இப்போது இல்லையென்றாலும் அவர்கள் வசதியாக வந்த பின்னர் நமக்கானதை அவர்கள் தர வேண்டும்.

    சில நாடுகளை நாம் வளரும் பொருளாதாரமாக பார்க்கிறோம். சில நாடுகள் இன்னும் பொருளாதார ரீதியாக முதிர்ச்சி அடையாமல் இருப்பதையும் பார்க்கிறோம், அதனால் அவர்களுக்கு மானியங்களை அளித்து வருகிறோம். இது எல்லாமே கேலிக்கூத்தானது. இந்தியாவாகட்டும், சீனாவாகட்டும் அவர்கள் வளர்ந்து வருவதாக நாம் சொல்கிறோம்.

    தங்களை வளர்ந்த நாடுகளாக  அழைத்து கொள்வதற்காகவே அவர்கள் நம்மிடமிருந்து மானியங்களை பெறுகிறார்கள். நாமும் பணம் கொடுத்து வருகிறோம். இவை அனைத்துமே வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், நாம் இதை எல்லாம் நிறுத்தப் போகிறோம். நாம் நிறுத்தியும் விட்டோம்.

    நாமும் வளரும் நாடுதானே? ஆம், நாமும் வளர்ந்து வருகிறோம். என்னைப்பொருத்தவரை நாமும் வளரும் நாடு என்பதால் இந்த மானியங்களை எல்லாம் நிறுத்திவிட்டு இனி மற்ற நாடுகளைவிட நாம் வேகமாக வளரப்போகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #Trumptostopsubsidies #IndiaChinagrowingeconomies 
    மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வரும்படி ரஷிய அதிபர் புதினுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். #Trump #Putin #Meeting
    வாஷிங்டன்:

    பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்து பேசினர். அதன் பின்னர் இருநாட்டு தலைவர்களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

    அப்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இல்லை என்று பொருள் தரும் வகையில் டிரம்ப் பதில் அளித்தார். இது அமெரிக்காவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    இதை தொடர்ந்து அவர் தனது கருத்தை மாற்றிக் கொண்டு “ஒரு வார்த்தை மாறிவிட்டது” என்றார். அமெரிக்க தேர்தலில் தலையிட்டது வேறு யாராவது கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

    இந்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வரும்படி புதினுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

    அதில், ரஷியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மக்களின் உண்மையான எதிரிகளை தவிர, போலி செய்தி வெளியிடும் பத்திரிகைகளை தவிர, மற்றவர்களுக்கு அந்த பேச்சுவார்த்தை பெரும் வெற்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.

    2-வது பேச்சு வார்த்தையில் பயங்கரவாதத்தை நிறுத்துவது, இஸ்ரேலுக்கு பாதுகாப்பு, அணுஆயுதம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



    இதற்கிடையே டிரம்பின் இந்த அறிவிப்புக்கு எதிர் கட்சியான ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர் சக் ஷூம்மர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    ஹெல்சின்கியில் நடந்த 2 மணி நேர சந்திப்பில் என்ன நடந்தது என்பதை பற்றி நாம் அறியும் முன்பாக புதினும், டிரம்பும் சந்தித்து பேசக்கூடாது என்றார். டிரம்புக்கு அமெரிக்காவின் தேசிய உளவுப்பிரிவு இயக்குனர் பான் கோட்சு ஆதரவு தெரிவித்துள்ளார். #Trump #Putin #Meeting
    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி நகரை வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். #TrumpPutinmeeting #Helsinkimeeting
    அஸ்டோரியா:

    அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை. ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாகவும் பேசி இருக்கின்றனர்.

    இதற்கிடையே, இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும், ரஷியாவின் கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தன. இதன் விளைவாக 3-வது நாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டின் தலைநகரான ஹெல்சின்கி நகரில் ஜூலை 16-ம் தேதி இந்த பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முதலில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பின்லாந்து தலைநகரான ஹெல்சின்கி நகரை வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
    உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு எனது வாழ்த்துக்கள். மேலும், உலக கோப்பை கால்பந்து தொடரை சிறப்பாக நடத்திய ரஷியாவுக்கும், அதிபர் புதினுக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். #TrumpPutinmeeting #Helsinkimeeting 
    அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் சந்திப்பு உலகளவில் நிலவி வரும் பதட்டத்தை தணிக்க உதவும் என ரஷியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். #TrumpPutinMeet #JonHuntsman
    வாஷிங்டன்:

    உலகின் வல்லரசு நாடுகளாக திகழ்வது அமெரிக்கா மற்றும் ரஷ்யா. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இரு நாட்டு அதிபர்கள் இடையிலான முதல் சந்திப்பு ஜூலை 16-ல் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் நடக்க உள்ளது என வெள்ளை மாளிகை கடந்த மாதம் அறிவித்தது.

    அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜான் பால்டன், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், இந்த சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு, சிரியா, உக்ரைன் உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் சந்திப்பு உலகளவில் நிலவி வரும் பதட்டத்தை தணிக்க உதவும் என ரஷியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஹெல்சின்கியில் நடக்கவுள்ள டிரம்ப்-புடின் சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டத்தை குறைக்கும். அத்துடன், உலகளவிலும் நிலவி வரும் பெரும் பதட்டத்தை தணிக்க உதவும் என தெரிவித்துள்ளார். 
    #TrumpPutinMeet #JonHuntsman
    அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ ஜூலை 5-ம் தேதி வடகொரியா சென்று அந்நாட்டு அதிபரை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. #KimJongUn #MikePompeo
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது. அப்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேசினர். இதையடுத்து,  வடகொரிய அதிபர் தங்களது நாட்டில் செயல்பட்டு வந்த அணு சோதனை மையங்களை மூடினார்.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ ஜூலை 5-ம் தேதி வடகொரியா சென்று அந்நாட்டு அதிபரை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரியாவுடன் அதிபர் கிம் ஜாங் அன்னுடன் போட்ட ஒப்பந்தம் குறித்தும், அணு சோதனை மையங்களை அழிப்பது தொடர்பாகவும் பேசுவதற்காக அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக்  பாம்பியோ ஜூலை 5-ம் தேதி வடகொரியா செல்ல உள்ளார் என தெரிவித்துள்ளது .#KimJongUn #MikePompeo 
    சிங்கப்பூர் கேபெல்லா ஓட்டலில் நடைபெற்று வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது பேச்சுவார்த்தை முடிவடைந்தது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    சிங்கப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது.

    டிரம்பும், கிம்மும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். இவர்கள் தங்களது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேச உள்ளனர்.

    இதையடுத்து, இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு நாட்டு தலைவர்களும் சுமார் 45 நிமிடம் பேசினர்.

    சந்திப்பு முடிந்து வெளியே வந்ததும் இரு நாட்டு தலைவர்களும் ஓட்டலின் பால்கனியில் நின்றபடி செய்தியாளர்களை பார்த்து கையசைத்தனர்.



    இந்த பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் கூறுகையில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான பேச்சுவார்த்தை நன்றாக அமைந்தது என தெரிவித்தார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பை உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் ஏராளமானோர் கண்டுகளித்தனர். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    சிங்கப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது.

    டிரம்பும், கிம்மும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். இவர்கள் தங்களது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேச உள்ளனர்.

    சிங்கப்பூரில் குறிப்பிட்ட ஓட்டலை சுற்றி பல்வேறு பெரிய திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமானோர் இந்த சந்திப்பை கண்டனர்.



    தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் அந்நாட்டு மக்கள் இருவரது சந்திப்பையும் பார்த்தனர். இதேபோல், உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் டிரம்ப் - கிம் சந்திப்பை பார்த்து ரசித்தனர்.

    வடகொரியா உருவான பின்னர், வடகொரியா மற்றும் அமெரிக்க அதிபர்கள் சந்தித்திக் கொள்வது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    சிங்கப்பூர் செண்டோசா தீவில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் சந்தித்தனர் #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    சிங்கப்பூர்:

    வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.

    இதற்கிடையே, டிரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரில் 12-ம் தேதி நடைபெறும் என்றும், இவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

    இதையடுத்து, டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவே சிங்கப்பூர் வந்தடைந்தனர். இருவரது பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளது என சிங்கப்பூர் அரசும் தெரிவித்துள்ளது.



    இந்நிலையில், சந்திப்பு நடக்கவுள்ள ஓட்டலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் சென்றடைந்தார். அவரை சந்திக்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

    இதைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்தனர். இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கினர். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    ×