search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்துவட்டி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
    X

    கந்துவட்டி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

    கந்துவட்டி விவகாரம் காரணமாக தேனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தேனி:

    தேனி மாரியம்மன்கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சிலமலையைச் சேர்ந்த சுருளிராஜன் என்பவரிடம் வட்டிக்கு ரூ.3.5 லட்சம் பணம் வாங்கி உள்ளார். இந்த கடன் தொகைக்கு வட்டிமேல் வட்டி சேர்ந்து 9 லட்சம் ரூபாய் வரை தர வேண்டும் என சுருளிராஜன் கூறியதாகவும், பணத்தை விரைவில் கொடுக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்துள்ளார்.

    ஆனால் கடனைச் செலுத்த வழியில்லாமல் தவித்த சரவணன் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி சரவணன், அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் அனைவரும் இன்று விஷம் குடித்துள்ளனர். உடனடியாக அவர்கள் அனைவரும் தேனியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சுருளிராஜன் கந்துவட்டி கேட்டு மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக சரவணன் கூறியிருக்கிறார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுருளிராஜனைத் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×