search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீக்குளிக்க முயன்ற தொழிலாளியை போலீசார் மீட்டனர்
    X
    தீக்குளிக்க முயன்ற தொழிலாளியை போலீசார் மீட்டனர்

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருப்பூர்:

    திருப்பூர் நல்லூத்துபாளையத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணைகேனை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றார்.

    அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் ஓடிச்சென்று அவரை மீட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இவர் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    எங்களுக்கு 14 செண்ட் நிலம் உள்ளது. இதனை எனது அண்ணன் ஏமாற்றி அவரது பெயருக்கு பட்டா வாங்கி வங்கியில் கடன் பெற்றுள்ளார். மோசடி குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது பங்கு நிலத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதனையடுத்து ஜெயராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×