search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்காலில் கிரண்பேடி 5 நாள் சுற்றுப் பயணம்  - கிராம பகுதிகளை ஆய்வு செய்ய திட்டம்
    X

    காரைக்காலில் கிரண்பேடி 5 நாள் சுற்றுப் பயணம் - கிராம பகுதிகளை ஆய்வு செய்ய திட்டம்

    காரைக்காலில் ஆய்வு பணிகளை செய்வதற்காக கவர்னர் கிரண்பேடி இன்று புறப்பட்டு சென்றார். அவர் அங்கு 5 நாட்கள் தங்கியிருந்து ஒவ்வொரு கிராமமாக சென்று ஆய்வு செய்கிறார்.
    புதுச்சேரி:

    கவர்னர் கிரண்பேடி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவையில் கிராம பகுதிகளுக்கு சென்று வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    இதே போல காரைக்காலில் ஆய்வு பணிகளை செய்வதற்காக கவர்னர் கிரண்பேடி இன்று காரைக்கால் புறப்பட்டு சென்றார்.

    அவர் அங்கு 5 நாட்கள் தங்கியிருந்து ஒவ்வொரு கிராமமாக சென்று ஆய்வு செய்கிறார்.

    இது சம்பந்தமாக கவர்னர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    காரைக்கால் பகுதி மக்கள் கடந்த 15 மாதங்களாக பல்வேறு புகார்களையும், பிரச்சினைகளையும் எனக்கு தெரிவித்து வருகிறார்கள். இது பற்றி கலெக்டருக்கு தகவல்களை அனுப்பி இவற்றுக்கு தீர்வு காண முயற்சி எடுத்துள்ளேன்.

    மேலும் நேரடியாக மக்களோடு இருந்து அவர்கள் கருத்துக்களை அறியும் வகையில் காரைக்கால் செல்கிறேன். இன்று மாலை 4 மணிக்கு அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து முக்கிய இடங்களை பார்வையிட்டு தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×