என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெங்கு காய்ச்சல் சிகிச்சை: காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்19 Oct 2017 10:15 AM GMT (Updated: 19 Oct 2017 10:15 AM GMT)
டெங்கு காய்ச்சல் பாதித்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா சந்தித்து ஆறுதல் கூறினார்.
காஞ்சீபுரம் :
தமிழகத்தை டெங்கு காய்ச்சல் நோய் மிரட்டி வருகிறது. தினந்தோறும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு அதிகரித்து வருகின்றன.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. காய்ச்சலை முற்றிலும் தடுக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் ஈடுபட்டு உள்ளது.
இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பாதித்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் ஆஸ்பத்திரி முழுவதும் ஆய்வு செய்து நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.
அப்போது மருத்துவ மனை கண்காணிப்பாளர் டாக்டர் சசிகலா மற்றும் நிலைய மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும் போது, “காஞ்சீபுரம் அரசுப் பொது மருத்துவ மனைகளில் டெங்கு பாதிப்பில் 7 பேர்அனுமதிக் கப்பட்டு இருந்தனர். இதுவரை சிகிச்சை முடிந்து 4 பேர் வீடு திரும்பியுள்ளனர். மீதம் உள்ள 3 பேர் விரைவில் வீடு திரும்புவார்கள்” என தெரிவித்தனர்.
தமிழகத்தை டெங்கு காய்ச்சல் நோய் மிரட்டி வருகிறது. தினந்தோறும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு அதிகரித்து வருகின்றன.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. காய்ச்சலை முற்றிலும் தடுக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் ஈடுபட்டு உள்ளது.
இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பாதித்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் ஆஸ்பத்திரி முழுவதும் ஆய்வு செய்து நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.
அப்போது மருத்துவ மனை கண்காணிப்பாளர் டாக்டர் சசிகலா மற்றும் நிலைய மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும் போது, “காஞ்சீபுரம் அரசுப் பொது மருத்துவ மனைகளில் டெங்கு பாதிப்பில் 7 பேர்அனுமதிக் கப்பட்டு இருந்தனர். இதுவரை சிகிச்சை முடிந்து 4 பேர் வீடு திரும்பியுள்ளனர். மீதம் உள்ள 3 பேர் விரைவில் வீடு திரும்புவார்கள்” என தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X