என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2030-ம் ஆண்டிற்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும்: ராஜ்நாத்சிங்
Byமாலை மலர்9 Oct 2017 9:01 AM GMT (Updated: 9 Oct 2017 9:01 AM GMT)
2030-ம் ஆண்டிற்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும் என்று மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கூறினார்.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த நகரி குப்பத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தெற்கு மண்டல பயிற்சி மையத்தில் (சி.ஐ.எஸ்.எப்.) பயிற்சி முடித்த 31-வது பிரிவு துணை கமாண்டண்டுகள், 43-வது பிரிவு உதவி ஆய்வாளர்கள், 8-வது பிரிவு துணை உதவி ஆய்வாளர்கள் ஆகியோரின் பயிற்சி நிறைவு விழா இன்று நடந்தது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ் நாத்சிங், சிறப்பு விமானம் மூலம் நேற்று மாலை டெல்லியில் இருந்து அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்துக்கு வந்தார்.
அவரை, ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தள கமாண்டிங் அதிகாரி பிஷரோடி, கலெக்டர் ராமன், டி.ஐ.ஜி. வனிதா, எஸ்.பி. பகலவன் மற்றும் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து, ராஜ்நாத்சிங், மத்திய தொழில் பாதுகாப்புப் படை தெற்கு மண்டல பயிற்சி மையத்துக்கு காரில் புறப்பட்டார். அங்கு அவரை டி.ஐ.ஜி.யும், பயிற்சி மைய முதல்வருமான காமு உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
இரவு நகரிகுப்பத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கிய மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், இன்று காலை அலுவலர்கள் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்று பேசினார். சிறப்பாக பயிற்சி முடித்த 120 பெண்கள் உள்பட 1043 வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
உலக நாடுகளுக்கெல்லாம் தீவிரவாதம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அன்னிய சக்திகள் பொருளாதார வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாத செயல்களுக்கு எதிராக, உலக அரங்கில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
சைபர் தீவிரவாத அச்சுறுத்தல், உலக நாடுகளுக்கு மற்றொரு சவலாக உருவாகி வருகிறது.
சைபர் அச்சுறுத்தலை முழுமையாக தடுக்க வேண்டும். 2030-ம் ஆண்டிற்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும்.
பயங்கரவாதம், தீவிரவாதத்தை ஒழிக்க வீரர்களுக்கு பயம் இருக்க கூடாது. சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு பணிபுரிய வேண்டும்.
அணுஉலை, விமான நிலையம் உள்பட தொழிற்சாலைகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது. இதனை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் முறியடிக்க வேண்டும்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையை, தொழில்நுட்ப ரீதியாக வலுசேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து ராஜ்நாத்சிங், மதிய உணவுக்கு பிறகு சாலை மார்க்கமாக அரக்கோணம் வந்து, சிறப்பு விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
ராஜ்நாத்சிங் வருகையை யொட்டி, அரக்கோணத்தில் இருந்து நகரிகுப்பம் வரை 400-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரக்கோணம் அடுத்த நகரி குப்பத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தெற்கு மண்டல பயிற்சி மையத்தில் (சி.ஐ.எஸ்.எப்.) பயிற்சி முடித்த 31-வது பிரிவு துணை கமாண்டண்டுகள், 43-வது பிரிவு உதவி ஆய்வாளர்கள், 8-வது பிரிவு துணை உதவி ஆய்வாளர்கள் ஆகியோரின் பயிற்சி நிறைவு விழா இன்று நடந்தது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ் நாத்சிங், சிறப்பு விமானம் மூலம் நேற்று மாலை டெல்லியில் இருந்து அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்துக்கு வந்தார்.
அவரை, ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தள கமாண்டிங் அதிகாரி பிஷரோடி, கலெக்டர் ராமன், டி.ஐ.ஜி. வனிதா, எஸ்.பி. பகலவன் மற்றும் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து, ராஜ்நாத்சிங், மத்திய தொழில் பாதுகாப்புப் படை தெற்கு மண்டல பயிற்சி மையத்துக்கு காரில் புறப்பட்டார். அங்கு அவரை டி.ஐ.ஜி.யும், பயிற்சி மைய முதல்வருமான காமு உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
இரவு நகரிகுப்பத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கிய மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், இன்று காலை அலுவலர்கள் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்று பேசினார். சிறப்பாக பயிற்சி முடித்த 120 பெண்கள் உள்பட 1043 வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
உலக நாடுகளுக்கெல்லாம் தீவிரவாதம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அன்னிய சக்திகள் பொருளாதார வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாத செயல்களுக்கு எதிராக, உலக அரங்கில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
சைபர் தீவிரவாத அச்சுறுத்தல், உலக நாடுகளுக்கு மற்றொரு சவலாக உருவாகி வருகிறது.
சைபர் அச்சுறுத்தலை முழுமையாக தடுக்க வேண்டும். 2030-ம் ஆண்டிற்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும்.
பயங்கரவாதம், தீவிரவாதத்தை ஒழிக்க வீரர்களுக்கு பயம் இருக்க கூடாது. சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு பணிபுரிய வேண்டும்.
அணுஉலை, விமான நிலையம் உள்பட தொழிற்சாலைகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது. இதனை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் முறியடிக்க வேண்டும்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையை, தொழில்நுட்ப ரீதியாக வலுசேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து ராஜ்நாத்சிங், மதிய உணவுக்கு பிறகு சாலை மார்க்கமாக அரக்கோணம் வந்து, சிறப்பு விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
ராஜ்நாத்சிங் வருகையை யொட்டி, அரக்கோணத்தில் இருந்து நகரிகுப்பம் வரை 400-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X