என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எந்த வழக்கையும் சந்திக்க தயார்: நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி சவால்
Byமாலை மலர்27 Sep 2017 4:16 AM GMT (Updated: 27 Sep 2017 4:16 AM GMT)
என் மீது வழக்கு தொடரப்படும் என முதல்வர் கூறியது குறித்து எந்த கவலையும் இல்லை. நான் எந்த வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி கூறி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையிலான மோதல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
புதுவை அரசையும், அமைச்சர்களையும் பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பும் கவர்னர் கிரண்பேடி மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
கவர்னர் கிரண்பேடி மீது வழக்கு தொடருவது தொடர்பாக டெல்லியில் சட்ட வல்லுனர்களுடன் நாராயணசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் டெல்லி சென்றிருந்த கவர்னர் கிரண்பேடி நேற்று புதுவை திரும்பினார்.
தனியார் அமைப்பு சார்பில் ஏழை பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்லும் நிகழ்ச்சியின் வழியனுப்பு விழா ராஜ் நிவாசில் நடந்தது. இதில் கலந்து கொண்டு மாணவர்களை வழியனுப்பி வைத்த கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையின் முன்னேற்றத்திற்கு எந்த ஆலோசனையையும் ஏற்க தயாராக இருக்கிறேன். இந்த ஆளுநர் மாளிகை மக்களுக்கான மாளிகை இது மக்களுக்கு மட்டுமின்றி முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் திறந்தே உள்ளது. அவர்களது கருத்துக்கள் எப்போதும் ஏற்கப்படும்.
என்மீது வழக்கு தொடரப்படும் என முதல்வர் கூறியது குறித்து எந்த கவலையும் இல்லை. நான் எந்த வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு கிரண்பேடி கூறினார்.
புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையிலான மோதல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
புதுவை அரசையும், அமைச்சர்களையும் பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பும் கவர்னர் கிரண்பேடி மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
கவர்னர் கிரண்பேடி மீது வழக்கு தொடருவது தொடர்பாக டெல்லியில் சட்ட வல்லுனர்களுடன் நாராயணசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் டெல்லி சென்றிருந்த கவர்னர் கிரண்பேடி நேற்று புதுவை திரும்பினார்.
தனியார் அமைப்பு சார்பில் ஏழை பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்லும் நிகழ்ச்சியின் வழியனுப்பு விழா ராஜ் நிவாசில் நடந்தது. இதில் கலந்து கொண்டு மாணவர்களை வழியனுப்பி வைத்த கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையின் முன்னேற்றத்திற்கு எந்த ஆலோசனையையும் ஏற்க தயாராக இருக்கிறேன். இந்த ஆளுநர் மாளிகை மக்களுக்கான மாளிகை இது மக்களுக்கு மட்டுமின்றி முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் திறந்தே உள்ளது. அவர்களது கருத்துக்கள் எப்போதும் ஏற்கப்படும்.
என்மீது வழக்கு தொடரப்படும் என முதல்வர் கூறியது குறித்து எந்த கவலையும் இல்லை. நான் எந்த வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு கிரண்பேடி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X