search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் எங்கள் பக்கம் வருவார்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ
    X

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் எங்கள் பக்கம் வருவார்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எங்கள் பக்கம் வருவார்கள், இதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
    மதுரை:

    மதுரை பழங்காநத்தத்தில் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி இருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்ததாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தற்போது எங்களுடன் ஒன்று சேர்ந்துள்ளனர். அதுபோல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எங்கள் பக்கம் வருவார்கள். இதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்தும் நல்லபடியே நடக்கும்.



    கட்சியின் அனைத்து வி‌ஷயங்களையும் ஒருங்கிணைத்து செல்லக்கூடிய ஆற்றல் படைத்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஒருங்கிணைத்து செல்லும் ஆற்றலை அம்மாவிடம் நல்லமுறையில் அவர் பயிற்சி எடுத்துள்ளார். எல்லாமே நல்லப்படியாக நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×