என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் எங்கள் பக்கம் வருவார்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ
Byமாலை மலர்22 Aug 2017 8:10 AM GMT (Updated: 22 Aug 2017 8:10 AM GMT)
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எங்கள் பக்கம் வருவார்கள், இதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை:
மதுரை பழங்காநத்தத்தில் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி இருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்ததாவது:-
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தற்போது எங்களுடன் ஒன்று சேர்ந்துள்ளனர். அதுபோல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எங்கள் பக்கம் வருவார்கள். இதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்தும் நல்லபடியே நடக்கும்.
கட்சியின் அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைத்து செல்லக்கூடிய ஆற்றல் படைத்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஒருங்கிணைத்து செல்லும் ஆற்றலை அம்மாவிடம் நல்லமுறையில் அவர் பயிற்சி எடுத்துள்ளார். எல்லாமே நல்லப்படியாக நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை பழங்காநத்தத்தில் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி இருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்ததாவது:-
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தற்போது எங்களுடன் ஒன்று சேர்ந்துள்ளனர். அதுபோல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எங்கள் பக்கம் வருவார்கள். இதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்தும் நல்லபடியே நடக்கும்.
கட்சியின் அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைத்து செல்லக்கூடிய ஆற்றல் படைத்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஒருங்கிணைத்து செல்லும் ஆற்றலை அம்மாவிடம் நல்லமுறையில் அவர் பயிற்சி எடுத்துள்ளார். எல்லாமே நல்லப்படியாக நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X